ரஷ்யாவால் எகிறும் பீதி... 1,000 பிரித்தானியர்களை திரும்ப அழைக்க திட்டம்
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தீவிரமாக இருப்பதால், 1000 பிரித்தானியர்களை உக்ரைனில் இருந்து அழைத்துவரும் நடவடிக்கை மிக விரைவில் முன்னெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியர்களை மீட்டுவரும் பொருட்டு, 16 வான் தாக்குதல் படையிலிருந்து துருப்புக்களை அனுப்புவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தான் நகரம் தலிபான்களால் கைப்பற்றப்பட்டபோது இதே பிரிவு காபூலில் மீட்புப் பணிக்கு உதவியது.
உக்ரைன் எல்லையில் 100,000 துருப்புகளை ரஷ்யா தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியான நிலையிலேயே பிரித்தானிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
ரஷ்யா படையெடுத்தால், நிலைமை மிக வேகமாக மோசமடையும். பிரித்தானிய குடிமக்கள் அங்கிருந்து தப்பிக்க உதவி தேவைப்படும். பொதுவாக, இவ்வாறான நடவடிக்கைகள் ஒரு படையெடுப்பிற்கு முன் நடக்கும் ஆனால் நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது உக்ரைனில் கூட சூழ்நிலை சரியில்லை என குறிப்பிட்டுள்ள பிரித்தானியர் ஒருவர், நாம் எந்த நேரமும் வெளியேற தயாராக இருப்பது இறுதி நேர பதற்றத்தில் இருந்து விடுபட உதவும் என்கிறார்.
உக்ரைன் நாட்டில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி புடின் எதையோ எதிர்பார்க்கிறார் என குறிப்பிட்டுள்ள அந்த பிரித்தானியர், எல்லையில் அவர் குவித்துள்ள படைகள் உண்மையில் பீதியை அதிகரிக்க செய்வதாக உள்ளது என்றார்.