இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த நபர்: கைது செய்த மரைன் பொலிஸார்
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்த நபர்
இலங்கையின் மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு இலங்கையர் ஒருவர் சட்ட விரோதமான முறையில் வந்ததை அடுத்து இன்று (13.11.2025) வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மரைன் பொலிஸார் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போது, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருப்பதை பார்த்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தப்பி தனுஷ்கோடி-க்கு அந்த நபர் வந்ததை பொலிஸார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
பின்னர் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் இலங்கை மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் தமிழ்நாட்டிற்கு வந்ததன் நோக்கத்தை மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் அவரை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |