சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக கடவுள் கொடுத்த இனிப்பு துளசி! இதில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?
தற்போது இருக்கும் உலகில் பெரும்பாலான வீடுகளில் துளசி வளர்க்கப்பட்டு வருகிறது. இருப்பினும் துளசிகளில் வகைகள் உள்ளது.
அந்த வகையில் நாம் இனிப்பு துளசி உடலுக்கு மிகவும் நல்லது. இதில் இருக்கும் இலைகள், தண்டுகள், சர்கரை போன்று இனிப்பாக இருக்கும். இதில் கலோரீஸ் எதுவும் கிடையாது. இதனால் சர்கரை வியாதியைக் குணப்படுத்த இதை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
இதிலிருந்து மாத்திரைகள் செய்கிறார்கள், எண்ணெய் எடுக்கிறார்கள்.
இனிப்பு துளசி பொடி
இந்த இனிப்பு துளசியை காய வைத்து பொடியாகவும், பச்சை இலையாகவும் பயன்படுத்துகின்றனர்.
இதன் பொடியை காபி, டீ மற்றும் சோடாக்களில் பயன் படுத்திகிறார்கள். இந்த இலை இனிப்பில் சர்கரையைவிட 30 மடங்கு அதிகம். இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் சிறு வியாதிகள் குணமடைகின்றன.
சர்க்கரைக்கு பதில் இனிப்பு துளசி
தினசரி உனவு முறைகளில் சர்க்கரையானது முக்கிய பொருளாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஆனால், கரும்புச்சர்கரையில், அதிகமான கலோரிகள் இருப்பதால், சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்கரையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.
தற்போது இவர்கள் கரும்பு சர்கரைக்கு பதிலாக இனிப்பு துளசி இலை பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்திய சிலர் இது கடவுள் கொடுத்த வரப்பிரப்பிரசாதம் என்று கூறுகின்றனர்.
இயற்கையான குணம்
இனிப்பு துளசி இயற்கையாகவே இனிப்பு தன்மையுடையது. இது கலோரிகளை உருவாக்குவதில்லை. ஆகவே இதனை கரும்பு சர்க்கரைக்கு பதிலாகவும், மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாக பயன்படுத்தலாம்.
இனிப்புத்துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு மற்றும் ரெபடையோசைடு எனும் வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணம் ஆகும்.
இனிப்புத் துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை கரும்பு சர்கரையோடு ஒப்பிட்டு பார்த்தால் கரும்பை விட 30 மடங்கு அதிக இனிப்பு கொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.