இந்த மூன்று உணவுகளை தவறுதலாக கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க! ஏன் தெரியுமா?
உணவுப் பொருட்கள், ஸ்நாக்ஸ் என அனைத்தையும் ஃப்ரிட்ஜில் வைத்து விடுகிறோம். கொசுக்கள், பூச்சிகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க ஃப்ரிட்ஜ் பயன்படுகிறது.. அதிலும் கோடைக்காலத்தில் அனைத்து உணவுப் பொருட்களையும் ஃப்ரிட்ஜில் வைப்பதால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
பழங்கள், காய்கறிகள் அல்லது உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் மூலம் அவை பல நாட்களுக்கு புதியதாக இருக்கும். ஆனால் சில பொருட்களை ஃப்ரிட்ஜில் வைப்பது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதுவும் கட்டாயமாக இந்த மூன்று உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது..
- பிரட்டை ஃப்ரிட்ஜில் வைக்க தேவையில்லை.. ஏனெனில் பிரட் அறை வெப்பநிலையிலேயே நன்றாக இருக்கும். நீங்கள் அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அது காய்ந்து கெட்டியாகிவிடும். அது மட்டும் இல்லாமல் அதன் சுவையும் மாறிவிடும். மேலும் பிரட் பாக்கெட்டில் கொடுக்கப்பட்ட காலாவதி தேதியை பார்த்து வாங்குவதால் அதனை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டிய அவசியமில்லை.
- தேன் பல உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. சிலர் தேன் கெட்டுப் போய்விடுமோ என்ற பயத்தில் குளிர்சாதன பெட்டியில் வைப்பார்கள். ஆனால் தேனை குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் மூலம் தேனில் படிகங்கள் உருவாகும். இதனால் தேனின் சுவை மோசமாவதுடன்,அது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
-
பெரும்பாலான மக்கள் உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அவற்றை வெளியில் வைத்தால் அவை விரைவில் கெட்டுப்போய்விடும் என்று நம்புகின்றனர். ஆனால் உலர்ந்த பழங்களை வெளியில் வைத்திருந்தாலும் பல மாதங்களானாலும் அவற்றிற்கு ஒன்று ஆகாது.