மூன்றாம் உலகப்போருக்கு இந்திய ஜோதிடர் குறித்த நாள் இன்றுதான்... போர் வெடித்தால் என்ன செய்வது?
இந்திய ஜோதிடர் ஒருவர் மூன்றாம் உலகப்போர் துவங்கும் என்று குறித்த நாள் இன்றுதான். அப்படி ஒருவேளை போர் வெடித்தால் உயிர் பிழைக்க என்ன செய்வது என பிரித்தானிய ஊடகம் ஒன்று செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Geminiயிடம் கேள்வி எழுப்ப, அது கொடுத்த பதில்கள் இவைதான்.
இந்திய நாஸ்ட்ரடாமஸ்
இந்திய நாஸ்ட்ரடாமஸ் அல்லது புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் குஷால் குமார் என்பவர், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 18ஆம் திகதி, அதாவது, இன்று, மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கடந்த மாதம் கூறிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரணம், அவர் வேத ஜோதிட விளக்கப்படத்தைப் பயன்படுத்தி அவர் அதை கணித்துள்ளார். அது, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பைப் பயன்படுத்தி, கர்மாவின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு விடயமாக கருதப்படுகிறது.
மீண்டும் தனது கூற்றை உறுதி செய்யும் ஜோதிடர்
பின்னர், குமார் மீண்டும் தனது கூற்றை உறுதி செய்யும் வகையில், 2024ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 18ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை, மூன்றாம் உலகப்போரை தூண்டுவதற்கான வலுவான கிரக நிலை காணப்படுகிறது என நான்கு நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
Image: Getty Images
போர் வெடித்தால் என்ன செய்வது?
போர் வெடிக்கும் பட்சத்தில், பிரித்தானியர்கள் ஐந்துவிடயங்களைச் செய்யவேண்டும் என்கிறது Gemini.
1. பிரித்தானிய அரசு அளிக்கும் அதிகாரப்பூர்வ அறிவுரைகளைப் பின்பற்றவேண்டும்.
2. அவசரகாலத் தேவைக்கான பொருட்களை சேகரிக்கவேண்டும்.
Image: Getty Images
3. தங்குவதற்கு பாதுகாப்பான ஒரு இடத்தை உருவாக்கவேண்டும்.
4. தகவல் பரிமாற்றத்துக்கான ஏற்பாடுகளை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.
5. பேட்டரிகள் மற்றும் பவர் பேங் போன்றவற்றை தயார் செய்துவைத்துக்கொள்ளவேண்டும்
Image: Getty Images
போர் என்றாலே எல்லோருக்கும் கஷ்டம்தான். ஆக, போர் வரக்கூடாது என்றே விரும்புவோம். என்றாலும், இந்த குஷால் குமார் இன்றுடன் நிறுத்தவில்லை. ஒருவேளை இன்று போர் வெடிக்கவில்லை என்றால், தன் கணிப்புப்படி ஜூன் மாதம் 29ஆம் திகதி கூட போர் துவங்க வாய்ப்புள்ள நாள்தான் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |