ஒலிம்பிக் பேட்மிண்டன்: அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியை தழுவினார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன தைபே வீராங்கனை TAI Tzu-Ying மோதினார்.
சுமார் 40 நிமிடங்கள் நடந்த அரையிறுதி போட்டியில் 18-21, 12-21 என்ற நேர் செட்களில் பி.வி.சிந்து, TAI Tzu-Ying-யிடம் தோல்வியை தழுவினார்.
நாளை பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெறவிருக்கும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனா வீராங்கனை HE Bing Jiao மோதுகின்றனர்.
தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் சீனா வீராங்கனை CHEN Yu Fei, சீன தைபே வீராங்கனை TAI Tzu-Ying ஆகியோர் மோதுகின்றனர், இதில் தோல்வியடையும் வீராங்கனைக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும்.