எங்களுக்கு முன்பே தெரியும்! தாலிபான்கள் விஷயத்தில் உண்மையை உடைத்த பிரித்தானியா
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்பது முன்கூட்டியே தெரியும் என பிரித்தானியா பாதுகாப்பு ஆலோசகர் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், நாங்கள் இங்கு அனைவருக்கும் கல்வி, பெண்கள் மதிக்கப்படுவர் என்றெல்லாம் கூறினர்.
ஆனால், நாட்கள் கடந்த பின்பு அவர்கள் தற்போது கோரமுகத்தை காட்ட துவங்கியுள்ளனர். பெண்களுக்கு கல்வி மறுப்பு, இதற்கு முந்தைய ஆட்சி காலத்தில் யாரெல்லாம் தாலிபான்களை எதிர்த்தார்களோ அவர்களை எல்லாம் தேடி, தேடி கொலை செய்து வருகின்றனர்.
இதனால் அங்கிருக்கும் மக்கள் பலர் ஒவ்வொரு நாளும் ஒரு நகரத்தில் இருப்பது போன்று உணர்ந்து வருவதாக வேதனையுடன் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிரித்தானியா பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் கூறுகையில், அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற்றபோதே தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்று அறிந்திருந்தோம்.
தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் ஓர் அரசாங்கம் இருக்கும் இறுதியில் அமையும் என்று நாங்கள் மதிப்பீடு செய்திருந்தோம்.
தலிபான்களை ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினாலும் பல உலக நாடுகள் தலிபான்கள் அரசை அங்கீகரிக்கவில்லை என்று கூறியுள்ளார்.