பிரித்தானியாவில் மீண்டும் தீவிரமாகி வரும் கொரோனா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி தெரியுமா?
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் இப்போது உருமாறி, ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் டெல்டா மற்றும் பீட்டா மாறுபாடு வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 29,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபநாட்களில் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரம் புள்ளி விவரங்களை நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, குறைந்துள்ளது. அதுவே கடந்த 7 நாட்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் 36 சதவீதம் வீழ்ச்சியை கொண்டுள்ளது.
இருப்பினும், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண் அளவில் பார்த்தால் இன்னும் அதிகமாகவே உள்ளது. பிரித்தானியா முழுவதும் வைரஸ் இன்னும் பரவி வருவதை இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
சமீபத்திய தடுப்பூசி புள்ளிவிவரங்கள் மேலும் 42,410 பேர் முதல் அளவையும் 180,155 பேர் இரண்டாவது அளவையும் பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்த வயதுவந்த மக்கள்தொகையில் மொத்தம் 71.8 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.