துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ
உக்ரைனின் மெலொடோபோல் நகரில் உள்ள ரஷ்ய ராணுவ தளம் மீது உக்ரைன் படையினர் அதிரடி தாக்குதல் நடத்திய நிலையில் அது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தாக்குதலை தொடங்கிய நிலையில் சண்டையானது ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் மரியுபோல், மெலிடோபோல் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின.
அங்கு தங்களது ராணுவ நிலைகளை அமைத்துள்ளனர். தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷிய படைகள் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யாவின் ராணுவ தளம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது.
ரஷ்யா கைப்பற்றிய மெலிடோபோல் நகரில் தனது துணை ராணுவ தளத்தை அமைத்துள்ளது. இங்கிருந்து உக்ரைனின் மற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ராணுவ தளத்தை குறிவைத்து உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதன்படி ரஷ்ய ராணுவம் தளம் மீது குண்டுகள் வீசி அதிரடியாக தாக்கப்பட்டது. ராணுவ தளத்துக்கு செல்லும் பாலம் முழுமையாக தகர்க்கப்பட்டது.
இதுகுறித்து கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் செர்ஜி கெய்டே கூறுகையில், ரஷ்யாவின் ராணுவ தளம், துல்லியமான தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.