தந்தை இறுதி சடங்கு.. விசா கேட்டு சென்ற இந்திய பெண்ணுக்கு நடந்தது என்ன? வைரல் வீடியோ
தந்தை இறுதி சடங்குக்கு செல்ல விசா கேட்ட பெண்ணிடம் அதிகாரி நடந்து கொண்ட முறை குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய பெண் ஒருவர் தனது தந்தையின் இறுதி சடங்குக்கு செல்ல நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் விசாவிற்கு விண்ணப்பிக்க சென்றுள்ளார்.
அப்போது தான் அந்த பெண் சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அதாவது, அங்கிருந்த தூதரக அதிகாரி ஒருவர் அந்த பெண்ணை வெளியே செல்லுங்கள் என்று கோபமாக கூறி வெளியேற்றியுள்ளார்.
இதனால் மிகவும் மனமுடைந்த அந்த பெண் தனது செல்போனில் அங்கு நடந்ததை வீடியோவாக எடுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், அவர் பெயர் விஜய் ஷங்கர் பிரசாத். நியூயார்க்கில் இவர் தான் விசா கொடுக்கும் பொறுப்பில் உள்ளார்.
இத்தகைய பெரிய பதவியில் இருப்பவர்கள் செய்யும் செயலா இது? என்று கேள்வியை எழுப்பியுள்ளார். இந்நிலையில் வீடியோ மூலம் சிலரின் உதவியுடன் அந்த பெண் தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டுள்ளார்.
This is Vijay Shankar Prasad - the visa officer in charge @IndiainNewYork . Is this the representation of India? #AbuseOfPower @IndianEmbassyUS @MEAIndia @meaindia1 @sandiplomat @IndianDiplomacy @nytimes @sidhant @PremBhandariNYC @thevirdas @AmericanKahani @RomieDecosta pic.twitter.com/bsqFUo4Tsz
— Tina (@Tina71699557) November 27, 2021
அதோடு அவர் தனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பில் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இடையே விசாரணை நடைபெற்று வருகின்றது.