வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்: குரூப் அட்மின்களுக்கு இனி கொண்டாட்டம் தான்
வாட்ஸ அப் நிறுவனம் தங்களது புதிய அப்டேட்டாக அதன் வாட்ஸ் அப் குழுக்களில் கூடுதலான உறுப்பினர்களை சேர்த்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவால் கையகப்படுத்தப்பட்டதில் இருந்தே பல்வேறு வகையான புதிய அப்டேட்களை அதன் பயனர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கி வருகிறது.
உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டு இருக்கும் வாட்ஸ் அப் நிறுவனம், கடந்த மாதம் அதன் தொலைப்பேசி அழைப்புகளில் 30 பேர் வரை இணைத்து ஒரே நேரத்தில் பேசக்கூடிய வசதியையும், 2ஜிபிகள் வரையிலான கோப்புகளை ஷேர் செய்வதற்கான அனுமதியையும் வழங்கியது.
அத்துடன் வாட்ஸ் குழுக்களில் உள்ள அட்மின்களுக்கு அந்த குழுவில் பகிரப்படும் மெசேஜ்களை நீக்கும் சிறப்பு அதிகாரத்தையும் நிறுவனம் வழங்கியது.
இந்தநிலையில், வாட்ஸ் நிறுவனம் மீண்டும் புதிய அப்டேட் ஒன்றை அதன் பயனர்களுக்கு வழங்கியுள்ளது.
அதில் வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை டபுளாக உயர்த்தியுள்ளது, தற்போது வரை ஒரு குருப்பில் 256 நபர்கள் மட்டுமே சேர்க்கமுடியும் என இருந்த நிலையில், வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் முலம் 512 பேர் வரை இணையும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா யூஸர்களுக்கு மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது இது அனைவருக்குமானதாக மாற்றப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: உயிர் காக்கும் சிகிச்சையை நிறுத்துங்கள்: நீதிமன்ற தீர்ப்பால் உடைந்துபோன 12 வயது சிறுவனின் தாய்!
வாட்ஸ் அப்பின் போட்டி நிறுவனமான டெலிகிராமில் குருப் ஒன்றில் 2 லட்சம் வரை உறுப்பினர்களை சேர்க்க அனுமதியும், பெரிய அளவிலான கோப்புகளை பகிர்ந்துகொள்ளவும் அனுமதியும் முன்னரே வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.