காக்கா வலிப்பால் ஓடும் பேருந்தில் சரிந்த ஓட்டுனர்! சமயோஜிதமாக செயல்பட்ட பெண்... வைரல் வீடியோ
இந்தியாவில் பேருந்து ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில் 40 வயதான பெண் சமயோஜிதமாகச் செயல்பட்டதால் அதில் இருந்த பல பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள ஷிரூரில் சுற்றுலாவுக்கு சென்ற பெண்களும் குழந்தைகளும் மினி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பேருந்து ஓட்டுநருக்கு திடீரென காக்கா வலிப்பு ஏற்பட்டதால் சரிந்தார், இதையடுத்து பயணிகள் அனைவரும் அஞ்சி நடுங்கினர்.
அந்த சமயத்தில் பயணிகளில் ஒரு பெண் தாமாக முன்வந்து பேருந்தை இயக்குவதாகச் சொல்லி பேருந்தை ஓட்டியவர் முதலில் அருகே இருந்த மருத்துவமனையில் ஓட்டுநரை அனுமதித்து விட்டு, பின்னர் பிற பயணிகளை அவரவர் நிறுத்தங்களில் கொண்டு சேர்த்திருக்கிறார்.
A 40-year-old woman, #YogitaSatav saves a driver’s life who suffered a seizure. She drove the bus for around 10 Km to take the ailing driver to a hospital. The bus full of women passengers were returning from a trip. pic.twitter.com/f6SzuuLiGI
— Pune Mirror (@ThePuneMirror) January 15, 2022
சுமார் 10 கிலோ மீட்டர் வரையில் பேருந்தை இயக்கிய அந்த பெண்ணின் பெயர் யோகிதா. 40 வயதான அப்பெண்ணுக்கு கார் ஓட்டும் பழக்கம் இருப்பதால் பேருந்தை ஓட்டியிருக்கிறார்.
எந்த அசம்பாவிதமும் ஏற்படுத்தாது அனைவரையும் பாதுகாப்பாக இறக்கிவிட்டதால் பாராட்டை பெற்றுள்ளார் யோகிதா.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.