சவுந்தர்யாவுக்கு இந்த பிரச்சனை இருந்தது! பிரபல அரசியல்வாதியின் பேத்தி தற்கொலை சம்பவத்தில் அவிழும் முடிச்சுகள்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யாவுக்கு இருந்த பிரச்சினை குறித்து தெரியவந்துள்ளது.
பா.ஜ.கவின் மூத்த தலைவர் எடியூரப்பா. கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான இவருக்கு ராகவேந்திரா, விஜயேந்திரா என்ற மகன்களும், அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி என்ற மகள்களும் உள்ளனர்.
இவர்களில் பத்மாவதியின் மகள் சவுந்தர்யா (30). இவரது கணவர் நீரஜ் ஆவார். சவுந்தர்யாவும், நீரஜும் மருத்துவர்கள் ஆவார்கள். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2 பேரும் பணியாற்றி வந்தனர். நீரஜ், சவுந்தர்யாவுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது. இந்த தம்பதிக்கு 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
ஐகிரவுண்டு பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட வசந்த்நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2½ ஆண்டுகளாக நீரஜும், சவுந்தர்யாவும் வசித்து வந்தனர். அவர்களது வீட்டில் ஒரு மூதாட்டியும், மற்றொரு நபரும் வீட்டு வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் நீரஜ் தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அப்போது தனது 9 மாத குழந்தையுடன் சவுந்தர்யா வீட்டில் இருந்தார். பின்னர் குழந்தையை வீட்டில் வேலை செய்யும் மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு, மற்றொரு அறைக்கு சென்று சவுந்தர்யா உட்புறமாக கதவை பூட்டி கொண்டார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. கதவை திறக்கும்படியும் வேலைக்காரர்கள் பல முறை கூறியும், அவர் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வேலைக்காரர்கள் நீரஜுக்கு தகவல் தெரிவித்தனர். காலை 10.30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு நீரஜ் விரைந்து வந்தார். வீட்டு கதவை சவுந்தர்யா திறக்காததால், கதவை உடைத்து கொண்டு நீரஜ் மற்றும் வேலைக்காரர்கள் உள்ளே சென்றார்கள்.
அப்போது சவுந்தர்யா மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே சவுந்தர்யாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு நீரஜ் உள்ளிட்டோர் கொண்டு சென்றனர். அங்கு சவுந்தர்யாவுக்கு வென்டிலேட்டர் மற்றும் நவீன மருத்துவம் மூலமாக டாக்டர்கள் சிகிச்சை அளித்து பார்த்தார்கள். ஆனால் அவர் ஏற்கனவே உயிர் இழந்தது தெரியவந்தது. இதையடுத்து, சவுந்தர்யா இறந்து விட்டதாக உறுதி செய்தார்கள்.
பொலிசார் விரைந்து வந்து சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டு சவுந்தர்யா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்று சமர்பிக்கப்படவுள்ள்ளது. இதனிடையில் சவுந்தர்யாவுக்கு postpartum depression எனப்படும் மகப்பேறுக்கு பிறகான மன அழுத்தம் மற்றும் மன சோர்வு பிரச்சினை இருந்துள்ளது.
இதற்கான சிகிச்சையை அவர் எடுத்து வந்தார் என கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஜகேந்திரா தெரிவித்துள்ளார். மேலும்சவுந்தர்யாவின் உடல் நலன் பாதிப்பு எங்கள் அனைவருக்குமே நன்றாக தெரியும். இதில் சந்தேகம் எதுவும் இல்லை.
சவுந்தர்யாவும் அவரது கணவரும் நல்ல தம்பதிகளாக தான் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்
இதே விடயத்தை எடியூரப்பாவின் அலுவலகமும் உறுதி செய்துள்ளது.
தொடர்ந்து சவுந்தர்யா இறப்பு தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.