தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது குறித்து அணித்தலைவர் மேத்யூஸ் பேசியுள்ளார்.
இலங்கையில் சுற்றுபயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டிக்கு பின்னர் பேசிய இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ், இது எங்களுக்குரிய நாளாக அமையவில்லை. 34.3 ஓவர்களிலேயே ஆல்-அவுட் ஆனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
50 ஓவர்களும் விளையாடி இருந்தால் 230 முதல் 240 ஓட்டங்கள் வரை எடுத்திருப்போம். புதிய பந்தில் நாங்கள் சிறப்பாக பேட் செய்ய வேண்டியது அவசியமாகும் என கூறியுள்ளார்.