துபாயில் நாளை நடக்கும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளது.
சென்னை-பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 தொடரின் 44-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது.
இப்போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி வழக்கமான தங்களின் சிவப்பு, கருப்பு நிற ஜெர்சிக்கு பதிலாக நாளை பச்சை நிற ஜெர்சியில் விளையாட உள்ளனர்.
‘சுற்றுச்சூழலைக் காப்போம்’ என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாளை பச்சை நிற ஜெர்சியுடன் பெங்களூரு அணி விளையாட உள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு சீசனிலிருந்து இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை பெங்களூரு அணி செய்து வருகிறது.
Bold Diaries: RCB Go Green Initiative
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 24, 2020
RCB players will sport the Green Jerseys against CSK tomorrow to spread awareness about keeping the planet clean and healthy.#PlayBold #IPL2020 #WeAreChallengers #Dream11IPL pic.twitter.com/jW6rUqWW62
ஏபி டிவில்லியர்ஸ் சனிக்கிழமை பெங்களூருவின் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.