பிரபல நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சி வீட்டில் 41 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வந்த இவர், கடந்த 17 ஆம் திகதி புனித வெள்ளியை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் தேவாலயத்திற்கு சென்றிருந்துள்ளார்.
திரும்பி வந்து பார்க்கையில் வீட்டில் இருந்து 41 பவுன் நகை காணாமல்போயுள்ளது. இதுகுறித்து அரும்பாக்கம் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
மேலும் இமான் கூறியதாவது, நான் யாரையும் ஏமாற்றவில்லை, கூடிய சீக்கிரம் எனது பொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என கூறியுள்ளார்.