கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எழுந்து அமர்ந்ததாக அவரின் மகன் சரண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா வைரஸ் காரணமாக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும்,
நுரையீரல் உள்ளிட்ட ஒருசில பாதிப்பு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் எஸ்பிபி உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல் தெரிவித்து வரும் அவரது மகன் எஸ்பிபி சரண் சற்று முன் வெளியிட்டுள்ள வீடியோவில் தந்தையின் உடல்நிலை குறித்து கடந்த 10-ஆம் திகதி தெரிவித்தேன்.
இந்நிலையில் இந்த நான்கு நாட்களில் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவரது நுரையீரலிலும் முன்னேற்றம் அடைந்து இருப்பது எக்ஸ்ரே படங்களில் இருந்து தெரிய வருகிறது.
Today’s update from#SPBCharan about #SPB Sir’s Health#SPbalasubramanyam pic.twitter.com/nuuCuVO9N1
— Diamond Babu (@idiamondbabu) September 14, 2020
மேலும் அவர் 15 முதல் 20 நிமிடம் வரை எழுந்து உட்கார்ந்து இருக்கிறார். பிசியோதெரபி சிகிச்சை மூலம் அவர் நன்றாக தேறி வருகிறார்.
மேலும் அவர் பேசுவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததற்கு ரசிகர்களின் பிரார்த்தனையே காரணம் என்பதால் மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.