வரலாற்றுப்பிரசித்தி பெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் தீமிதிப்பு வைபவம் நேற்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு ஆலயபூசகர் கு.லோகேஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பெரும் திரளான மக்கள் வருகை தந்து தமது நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்யும் வண்ணம் தீமிதிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இதேவேளை பலர் காவடி மற்றும் தீச்சட்டிகளை ஏந்தி தமது நேர்த்திகடன்களை நிறைவேற்றி இறையருளை பெற்றுக் கொண்டனர்.