கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படாவிட்டால் ஜேர்மனி நீண்டகாலத்திற்கு ஊரடங்கை எதிர்கொள்ளும் என அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் உதவியாளர் Helge Braun எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் உருமாறிய புதுவகை கொரோனா பரவுவதற்கு மத்தியில், மாநில அரசுகள் தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தாவிட்டால், ஜேர்மனி நீண்டகாலத்திற்கு கொரோனா வைரஸ் ஊரடங்கை எதிர்கொள்ள நேரிடும் என Helge Braun எச்சரித்துள்ளார்.
இப்போது தளர்த்தப்படும் ஒவ்வொரு கட்டுப்பாடுகளின் விளைவாக, இன்னும் நீண்ட காலத்திற்கு தேவையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வாய்ப்புள்ளது.
பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே, ஜேர்மனியும் வைரஸின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த போராடுகிறது என Helge Braun தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை ஒரு நாளில் 26,391 அதிகரித்து 1.84 மில்லியனாக அதிகரித்துள்ளது.
மொத்த இறப்பு எண்ணிக்கை 1,070 அதிகரித்து 37,607 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.