<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-17T10:39:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழையால் ஜேர்மனியின் ரைன் நதியில் நீர்மட்டம் உயர்வு: ஆனால்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-rhine-river-water-rises-after-rain-1784283949"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-rhine-river-water-rises-after-rain-1784283949</id>
            <summary type="text">தெற்கு ஜேர்மனியில் பெய்த மழையைத் தொடர்ந்து, ரைன் நதியில் நீர்மட்டம் தற்போது சற்று உயர்ந்துள்ளது. என்றாலும், பிரச்சினைகள் முழுமையாக தீரவில்லை என்கிறார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஜேர்மனியில் பெய்த மழையைத் தொடர்ந்து, ரைன் நதியில் நீர்மட்டம் தற்போது சற்று உயர்ந்துள்ளது. என்றாலும், பிரச்சினைகள் முழுமையாக தீரவில்லை என்கிறார்கள் வர்த்தகர்கள்.
</p><h3>
ரைன் நதியில் நீர்மட்டம் உயர்வு
</h3><p>
ரைன் நதி, ஜேர்மனியின் உள்நாட்டு வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

விடயம் என்னவென்றால், கோடைகால வெப்ப அலை மற்றும் குறைவான மழைப்பொழிவு காரணமாக, நதியில் நீர்மட்டம் குறைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11aa744f-a84e-4c3e-8583-72ca95b4684b/26-6a5a032f24124.webp' /></p><p>
நதியில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், சரக்குக் கப்பல்களால் குறைந்த சரக்குகளுடன் மட்டுமே பயணிக்க முடிகிறது. இது சரக்கு உரிமையாளர்களுக்கான செலவுகளை அதிகரிக்கிறது.
</p><p>
அதாவது, சரக்குகளை பல கப்பல்களில் பிரித்து அனுப்பவேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், அது கூடுதல் செலவை உருவாக்குகிறது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், இந்த வாரம் தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள ஆற்றுப் படுகைப் பகுதிகளில் பெய்த மழையால், நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
</p><p>
அத்துடன், தென்மேற்கு ஜெர்மனியில் வியாழன், வெள்ளி மற்றும் வார இறுதியில் மேலும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது, இது நீர்மட்டத்தை அதிகரிக்க உதவக்கூடும்.
</p><p>
இது ஓரளவு உதவினாலும் அளித்தாலும், பிரச்சினை முழுமையாக தீரவில்லை என்று கூறும் வர்த்தகர் ஒருவர், போக்குவரத்துச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்கிறார்.
</p><p>
கப்பல்களால் பெரும்பாலும் 20 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவான சரக்குடன் மட்டுமே பயணிக்க முடிகிறது, ஆனாலும், சரக்குப் போக்குவரத்து நடந்துகொண்டுதான் இருக்கிறது என்கிறார் அவர்.
</p><p>
ஆக, போக்குவரத்து தொடர்கிறது, ஆனால், குறைவான பொருட்களையே கொண்டு செல்ல முடிவதால்,போக்குவரத்துச் செலவு உயர்ந்துள்ளது என்கிறார்கள் வர்த்தகர்கள்.
</p><p>
ஜேர்மனியைப் பொருத்தவரை, தானியங்கள், கனிமங்கள், தாதுக்கள், நிலக்கரி மற்றும் பெட்ரோல் முதலான எண்ணெய் பொருட்கள் போன்ற சரக்குகளுக்கான ஒரு முக்கியமான கப்பல் போக்குவரத்து வழித்தடமாக ரைன் நதி விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T10:26:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீயிலிருந்து தப்ப மூன்றாவது மாடியிலிருந்து குதித்த இந்தியர்: பேரன் கண்ட திடுக் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/grandson-sees-grandfa-fell-from-3rd-floor-fire-1784266852"></link>
            <id>https://news.lankasri.com/article/grandson-sees-grandfa-fell-from-3rd-floor-fire-1784266852</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வாழ்ந்துவந்த இந்திய தம்பதி, தீவிபத்தில் பலியான விடயம் துயரத்தை உருவாக்கியுள்ளது.

பேரன் கண்ட திடுக் காட்சி

கனடாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வாழ்ந்துவந்த இந்திய தம்பதி, தீவிபத்தில் பலியான விடயம் துயரத்தை உருவாக்கியுள்ளது.
</p><h3>
பேரன் கண்ட திடுக் காட்சி</h3><p>

கனடாவின் எட்மண்டன் நகரில் வாழ்ந்துவரும் லாலி தூர் என்னும் இளைஞர், திங்கட்கிழமை இரவு, தன் குடும்பத்துடன் உணவருந்திக்கொண்டிருந்திருக்கிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c5a594-8a44-4fe2-82fd-41409509389d/26-6a59c0657e976.webp' /></p><p>

அப்போது, தொலைக்காட்சி செய்திகளில், வீடொன்றில் பற்றிய தீயிலிருந்து தப்ப முதியவர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்ததைக் குறித்த செய்தி ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டிருந்திருக்கிறது.
</p><p>
அந்த வீடு தனது தாத்தா, பாட்டியின் வீடு என்பதை அறிந்த தூர், உடனடியாக அங்கு விரைந்துள்ளார்.
</p><p>
தாத்தா வீட்டுக்குச் சென்ற தூர், தன் தாத்தாவின் வீடு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதையும், தீயணைப்பு வீரர்கள் தன் தாத்தாவுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
தூரின் தாத்தாவான மேஜர் சிங் பந்தலும் (85) பாட்டியான சுரிந்தர்ஜித் கவுர் பந்தலும் (82), 30 ஆண்டுகளாக எட்மண்டனில் வாழ்ந்துவந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35ce24a8-5cc6-4b6b-93e3-dc4e6ca68cf9/26-6a59c0662e698.webp' /></p><p>

திங்கட்கிழமை இரவு 9.15 மணியளவில், அவர்கள் வாழ்ந்துவந்த வீட்டின் மீது வாகனம் ஒன்று மோதியுள்ளது.
</p><p>
வாகனம் மோதியதில், அங்கிருந்த எரிவாயுக் குழாய் வெடித்து அந்தக் கட்டிடம் தீப்பற்றியுள்ளது.
</p><p>
வீடு தீப்பிடித்ததை அறிந்த மேஜர் சிங், மூன்றாவது மாடிலிருந்து குதித்துள்ளார். ஆனால், அவர் உயிர் தப்பவில்லை. அதேபோல, வீட்டுக்குள்ளிருந்த அவரது மனைவியான சுரிந்தர்ஜித் கவுர், மறுநாள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.</p><p>

மேஜர் சிங், சுரிந்தர்ஜித் கவுர் தம்பதியருக்கு ஏற்பட்ட துயர முடிவு அவர்களுடைய குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.</p><p>

இந்நிலையில், அவர்கள் வீட்டின் மீது காரை மோதிய 62 வயது நபரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், அந்த கட்டிடத்தில் வாழ்ந்துவந்த ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.</p><p>

இந்த துயர சம்பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T10:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷபானா நிதி அமைச்சரானால் அது ஒரு பேரழிவாக இருக்கும்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/opposition-for-appoint-shabana-mahmood-as-uk-fm-1784283496"></link>
            <id>https://news.lankasri.com/article/opposition-for-appoint-shabana-mahmood-as-uk-fm-1784283496</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமராக கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக இருந்தவரான ஆன்டி பர்னாம் என்பவர், வரும் திங்கட்கிழமை பொறுப்பேற்க இருக்கிறார்.

இந்நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமராக கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக இருந்தவரான ஆன்டி பர்னாம் என்பவர், வரும் திங்கட்கிழமை பொறுப்பேற்க இருக்கிறார்.
</p><p>
இந்நிலையில், பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதுக்கு, பிரித்தானியாவின் நிதி அமைச்சராக பதவி உயர்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.</p><h3>

அடுத்த நிதி அமைச்சர் யார்?
</h3><p>
கடந்த சில வாரங்களாக, பிரித்தானிய எரிசக்தித் துறைச் செயலரான எட் மிலிபேண்ட் என்பவர் அடுத்த நிதி அமைச்சராகக்கூடும் என தகவல்கள் வெளியாகிவந்தன.
</p><p>
ஆனால், தற்போது, பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதுக்கு, பிரித்தானியாவின் நிதி அமைச்சராக பதவி உயர்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b4e81bc-8a7e-4f7c-b0b0-1ad2d1c701e7/26-6a5a016aa13c4.webp' /></p><p>
இந்நிலையில், ஷபானாவுக்கு நிதி அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டால், அது ஆன்டி பர்னாமுக்கு பேரழிவாக அமையக்கூடும் என லேபர் கட்சியினர் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
ஷபானாவுக்கு பொருளாதார பின்னணியும் கிடையாது, பொருளாதாரத்தை எப்படி மீட்டெடுப்பது என்பது குறித்த தெளிவான யோசனையும் கிடையாது, இதில் அபாயங்கள் அதிகம்.
</p><p>
ஷபானா நிதி அமைச்சராவது நடக்குமானால், அது பெரிய தவறாக அமைந்துவிடும் என்கிறார்கள் மூத்த லேபர் கட்சியினர் சிலர்.
</p><p>
இதற்கிடையில், ஷபானா நிதி அமைச்சராவது இறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ள சிலர், வெளியுறவுச் செயலரான யெவட் கூப்பரை நிதி அமைச்சராக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e040317d-dacb-43b1-a893-2168c883a952/26-6a5a0169d9581.webp' /></p><p>
அதேபோல, பொருளாதார நிபுணர்களும், ஷபானா, சர்ச்சைக்குரிய கொள்கைகளை முன்வைப்பவர் என்றும், ஆன்டி பர்னாம் வேலை செய்யும் விதத்துக்கு மாறாக செயல்படுபவர் என்றும், அவருக்கு பொருளாதார தகுதிகளோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லை என்றும், அவர் நிதி அமைச்சரானால், அது கருவூல சுதந்திரத்தையும், சந்தை நம்பகத்தன்மையையும் பாதிக்கும் என்றும் விமர்சனம் முன்வைத்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T10:18:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு - ஆன்லைன் மூலம் எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-to-self-enumeration-population-census-online-1784282962"></link>
            <id>https://news.lankasri.com/article/how-to-self-enumeration-population-census-online-1784282962</id>
            <summary type="text">மக்கள் தொகை சுயகணக்கெடுப்பப்பை எவ்வாறு இணைய வழியில் செய்வது என்பது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். 

மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு


இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் தொகை சுயகணக்கெடுப்பப்பை எவ்வாறு இணைய வழியில் செய்வது என்பது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h3> 

மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு
</h3><p>

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நடத்தப்படும் வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தற்போது நடத்தப்பட்டு வருகிறது. </p><p>

இந்த முறை, புதிதாக டிஜிட்டல் கணக்கெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இணைய வழியில் சுய கணக்கெடுப்பில்(Self Enumeration) கலந்து கொண்டு உங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5beaec62-dd98-44d5-a953-4691a48a996b/26-6a59ff57e081a.webp' /></p><p>

சுயகணக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவர்கள், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வீட்டிற்கு வரும் ஊழியர்களிடம் 33 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். </p><p>

இந்த இணைய வழி சுய கணக்கெடுப்பு ஜூலை 17 ஆம் தேதி தொடங்கி ஜூலை 31 வரை நடைபெற உள்ளது.&nbsp;</p><p></p><h3>

இணைய வழியில் செய்வது எப்படி?
</h3><p>
இந்த சுயகணக்கெடுப்பில் பங்குபெற விரும்புபவர்கள்<a href="https://se.census.gov.in" target="_blank"><b> </b>se.census.gov.in<b> </b></a>என்ற இணையதளத்திற்கு சென்று மாநிலத்தை தேர்வு செய்து, திரையில் தோன்றும் பாதுகாப்பு குறியீட்டை (Captcha) உள்ளிடவேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b1f8f77-3a73-4421-92df-967343b0f5d2/26-6a59ff55cf893.webp' /></p><p>

அதன் பின்னர், குடும்ப தலைவரின் பெயர் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்ட வேண்டும். குடும்ப தலைவரின் பெயராக வீட்டில் உள்ள யார் பெயரை வேண்டுமானாலும் வழங்கலாம். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3df85043-c864-4e14-8240-c8ed2c40847f/26-6a59ff53c83e8.webp' /></p><p>
உங்கள் ஈமெயில் முகவரியும் வழங்கலாம். ஆனால் கட்டாயமில்லை. சுய கணக்கெடுப்பு முடிந்த பின்னர், சுய பதிவேட்டு அடையாள எண் (SE ID) மொபைல் எண், மற்றும் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.</p><p> 

மொபைல் எண்ணிற்கு வரும் OTPயை உள்ளிட்டு, சுயகணக்கெடுப்பை எந்த மொழியில் செய்ய உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/610dd439-0b39-4e8c-a2b9-1586140ba357/26-6a59ff552b67b.webp' /></p><p> 

 அடுத்து மாவட்டத்தை தேர்வு செய்து, உங்கள் பின்கோடை உள்ளிட்டு, அதைத்தொடர்ந்து மேப்பில் உங்கள் வீடு இருக்கும் இடத்துக்கு நகர்த்தி, அதை 'சேவ்' செய்ய வேண்டும்.
</p><p>
அதன் பின்னர், திரையில் தோன்றும் 33 கேள்விகளுக்கு பதில் வழங்க வேண்டும். பெரும்பாலான கேள்விகள் உங்களுடைய வீட்டினை பற்றியதாக இருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c4d7963-dca7-4611-892f-01c7fae22d05/26-6a59ff567f2fa.webp' /></p><p> 

கேள்விகளுக்கு பதிலளித்து முடித்த பின்னர், ஒருமுறை சரிபார்த்து விட்டு Submit கொடுத்தால், உங்கள் மொபைல் எண், மற்றும் ஈமெயில் முகவரிக்கு சுய பதிவேட்டு அடையாள எண் (SE ID) அனுப்பி வைக்கப்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d06e6c8-ec1a-475f-9640-bf2f04666d14/26-6a59ff547b2af.webp' /></p><p>

Submit கொடுத்த பின்னர், இதில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய முடியாது. பெயரை சரியாக குறிப்பிட வேண்டியது அவசியம்.
</p><p>
மற்ற விவரங்கள் தவறாக பதிவு செய்யப்பட்டு விட்டால், வீட்டிற்கு கணக்கெடுக்க வரும் போது அவர்களிடம் தெரிவித்தால் அவர்கள் அவர்களுக்கு திருத்தம் செய்ய அணுகல் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa03736d-0485-4f8d-a479-b652793e48dc/26-6a59ff573ad6a.webp' /></p><p>

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஒவ்வொரு வீடாக வந்து ஊழியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்வார்கள். </p><p>

ஏற்கனவே சுயகணக்கெடுப்பில் விவரங்களை பதிவு செய்தவர்கள், வீட்டிற்கு வரும் ஊழியர்களிடம் 11 இலக்க சுய பதிவேட்டு அடையாள எண்ணை (SE ID) அளித்தால் போதுமானது. 33 கேள்விகளுக்கும் அவர்களிடம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.&nbsp;</p><p>

நீங்கள் சுயகணக்கெடுப்பில் அளித்த விவரங்களை அவர்கள் உங்களிடம் கேட்டு சரிபார்த்து கொள்வார்கள். திருத்தும் செய்ய வேண்டிய தகவல்கள் இருந்தால் அவர்களிடம் தெரிவிக்கலாம்.</p><p> 

2ஆம் கட்ட கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டின் பிப்ரவரியில் நடைபெறும். இதன் முடிவுகள் ஏப்ரலில் வெளியிடப்படும். 

2ஆம் கட்ட கணக்கெடுப்பில், குடும்ப உறுப்பினர்களின் கல்வித் தகுதி, தொழில், இடம்பெயர்வு, சாதிவாரி விவரங்கள் உள்ளிட்ட தரவுகள் சேகரிக்கப்படும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T10:09:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்வீடன் நாட்டு போர் விமானங்களை வாங்கும் உக்ரைன்: நிதியுதவி வழங்கும் பிரித்தானியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-buy-sweden-gripen-jets-uk-offers-300m-1784281710"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-buy-sweden-gripen-jets-uk-offers-300m-1784281710</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்வீடன் நாட்டு போர் விமானங்களை வாங்க உக்ரைனுக்கு பிரித்தானியா 300 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்கியுள்ளது. உக்ரைனுக்கு கிரிப்பன் போர்விமானம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்வீடன் நாட்டு போர் விமானங்களை வாங்க உக்ரைனுக்கு பிரித்தானியா 300 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்கியுள்ளது.</p><h2> உக்ரைனுக்கு கிரிப்பன் போர்விமானம்</h2><p>ரஷ்யாவின் அத்துமீறல்களை சமாளிக்க ஸ்வீடன் நாட்டு தயாரிப்பான கிரிப்பன் ரக போர் விமானங்களை(Gripen jets) உக்ரைன் வாங்குவதற்காக பிரித்தானியா சுமார் 300 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்குவதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.</p><p> தன்னுடைய பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னதாக, பிரதமர் ஸ்டார்மர் மேற்கொண்ட கடைசி அதிகாரப்பூர்வ உக்ரைனிய பயணத்தில் இந்த முக்கியமான நிதியுதவி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efe0df2f-b70d-4aeb-9e89-d509cfdc463c/26-6a59fa70b9cb8.webp' /></p><p> ஸ்வீடன் நாட்டின் SAAB பாதுகாப்பு நிறுவனத்திற்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த மாதம் கையெழுத்தான 2.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதி தான், இந்த நிதியுதவி ஆகும்.</p><p></p><h2>
இரு நாட்டு தலைவர்களின் கருத்து</h2><p>
இந்த சந்திப்பின் போது பதவி விலகல் மற்றும் நீடித்து வரும் போர் சூழ்நிலை குறித்து பிரதமர் ஸ்டார்மரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.</p><p>அதற்கு பதிலளித்த பிரதமர் ஸ்டார்மர், இது தன்னுடைய தனிப்பட்ட விவகாரம் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக சண்டை போட்டு வரும் உக்ரைனின் இறையாண்மை பற்றியது என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8be5b85a-9145-4832-b676-5b8ce9af230c/26-6a59fa7015bf1.webp' /></p><p> உக்ரைனிய பிரதமர் ஜெலென்ஸ்கி பிரித்தானியாவின் தீர்க்கமான ஆதரவை பாராட்டும் வகையில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு Order of Freedom என்ற விருதை வழங்கி கெளரவித்தார்.</p><p> மேலும் உக்ரைனுடன் பிரித்தானியா தொடர்ந்து துணை நின்று வருகிறது, இதனை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-17T09:48:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான நபரை பதவிநீக்கம் செய்த ஜெலென்ஸ்கி: மகிழ்ச்சியில் ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-defense-minister-dismissal-benefit-russia-1784281194"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-defense-minister-dismissal-benefit-russia-1784281194</id>
            <summary type="text">ரஷ்யாவிற்கு ஆபத்தான, உக்ரைனின் இராணுவ தலைமையில் இருந்தவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சாதகமான விடயம் என ரஷ்யாவின் இராணுவ ஆய்வாளர் பதிவிட்டுள்ளார்.&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவிற்கு ஆபத்தான, உக்ரைனின் இராணுவ தலைமையில் இருந்தவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சாதகமான விடயம் என ரஷ்யாவின் இராணுவ ஆய்வாளர் பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><h2>பாதுகாப்பு அமைச்சர்</h2><p>
உக்ரைனின் இராணுவ தலைமை (பாதுகாப்பு அமைச்சர்) பொறுப்பு வகித்தவர் Mykhailo Fedorov.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddaee629-393e-4d5d-bb02-f0224c114af7/26-6a59fa307923f.webp' />&nbsp;</p><p></p><p>இவர் அதிகாரத்துவத்தைக் குறைத்து, ரஷ்யாவிற்கு எதிரான ட்ரோன் விமானப் போரை அதிகரித்ததற்காக பாராட்டப்பட்டார்.</p><p> 

ஆனால், 35 வயதாகும் Mykhailo Fedorov பதவியேற்ற ஆறு மாதங்களில், வியாழக்கிழமை அன்று பதவிநீக்கம் செய்யப்பட்டார்.</p><p> ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ தளவாடங்கள் மீதான தாக்குதல்களை உக்ரைன் கணிசமாக தீவிரப்படுத்தியுள்ள வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த பதவிநீக்கத்தை ரஷ்ய இராணுவ வலைப்பதிவர்கள் பாராட்டியுள்ளனர். இது தங்களுக்கு மட்டுமே பயனளிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.&nbsp;</p><h2>இனி நிலைமை எளிதாகலாம்</h2><p> 

ரஷ்ய இராணுவ ஆய்வாளர் அலெக்ஸி ஜிவோவ், "மொத்தத்தில் ஜெலென்ஸ்கி அவரை (Mykhailo Fedorov) இராணுவத் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கியது மிகவும் நல்லது... இனி நிலைமை எளிதாகலாம்" என்று பதிவிட்டார்.
</p><p>
அதேபோல் Informant என்ற போர்-ஆதரவு டெலிகிராம் ஊடகம், "ரஷ்யாவிற்கு மிகவும் சவாலான மற்றும் ஆபத்தான ஒரு முக்கிய நபரை ஜெலென்ஸ்கி தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கியது மிகவும் சாதகமான விடயம் ஆகும். </p><p>குறிப்பாக, அவரது விலகல் என்பது உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகக் கட்டமைப்பிலிருந்து Mykhailo Fedorov-வின் ஆதரவாளர்கள் நீக்கப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இது முக்கியமானது" என்று கூறியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d00be7e-f912-46fa-b5c9-af8130a96cb3/26-6a59fa314a0c2.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T09:46:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் என்ன? (17-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784280822"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784280822</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (17-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.&amp;nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (17-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,292,822.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 45,610.00.</p><p>

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 364,850.00.</p><p>

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 41,810.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 334,500.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 39,910.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 319,300.00.<br></p>]]></content>
            <updated>2026-07-17T09:33:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா - அதிரடி முடிவெடுத்த இந்திய அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/isro-scientists-mass-resignations-tighten-rules-1784208564"></link>
            <id>https://news.lankasri.com/article/isro-scientists-mass-resignations-tighten-rules-1784208564</id>
            <summary type="text">100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ள நிலையில், விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா

இந்திய விண்வெளி ஆர...</summary>
            <content type="html"><![CDATA[<p>100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ள நிலையில், விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. </p><h3>

இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா
</h3><p>
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் கடந்த சில மாதங்களில், அனுபவம் வாய்ந்த 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb3b72ef-bde2-4e51-9e5d-d3daae1fb33f/26-6a58dcb63665a.webp' /></p><p>

பெங்களூரு யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்திலிருந்து மட்டும் சுமார் 80 விஞ்ஞானிகளும், திருவனந்தபுரம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலிருந்து சுமார்30 விஞ்ஞானிகளும் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p></p><p>

எல்விஎம் 3 (LVM-3) திட்ட இயக்குநர், ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்ட இயக்குநர், சந்திரயான் - 3 திட்டத்தின் உருவகப்படுத்துதல் (simulations) பிரிவு மேலாளர் உள்ளிட்ட பல முக்கிய விஞ்ஞானிகளும் வெளியேறியுள்ளனர். </p><h3> 

என்ன காரணம்?
</h3><p>
இந்தியாவில், 400க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இவை கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 150 மில்லியன் டொலர் முதலீடுகளை ஈர்த்துள்ளன. </p><p>

விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவனங்களின் ஈடுபாட்டை அதிகரிக்க மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்கள் மூத்த விஞ்ஞானிகளை தங்களது நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் நியமிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
</p><p>
இஸ்ரோவில் இருந்து விலகும் விஞ்ஞானிகள் இது போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இணைந்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb4f55db-bef7-4034-9f5f-d9d96f90d881/26-6a58dcb6f0c51.webp' /></p><p> 

சமீபத்தில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் சென்னையை தளமாக கொண்டு இயங்கும் அக்னிகுல் என்று நிறுவனத்தில் இணைந்துள்ளார்.</p><p> 

மூத்த விஞ்ஞானிகளின் தொடர் விலகல்களால் இஸ்ரோவின் ககன்யான் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. </p><p>

இதனால், ககன்யான் போன்ற முக்கிய திட்டங்களில் பணியாற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் தன்னார்வ ஓய்வு (VRS), ராஜினாமா கோரிக்கைகளை அந்த திட்டங்கள் முடியும் வரை இனி வழக்கமான நடைமுறையாக ஏற்கக் கூடாது என்று என்று அனைத்து இஸ்ரோ மைய இயக்குநர்கள் மற்றும் பிரிவு தலைவர்களுக்கும் விண்வெளித் துறை உத்தரவிட்டுள்ளது.
</p><p>
மேலும், விஞ்ஞானி/பொறியாளர்-எஸ்ஜி நிலை வரையிலான அதிகாரிகளின் தன்னார்வ ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை மைய இயக்குநர்களே ஏற்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மாற்றி சம்பந்தப்பட்ட மைய இயக்குநர்களின் பரிந்துரையுடன் இறுதி முடிவுக்காக விண்வெளித் துறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2719ead1-3bc1-4d75-b015-12b607b6a71d/26-6a58dcb7cb298.webp' /></p><p>
இது குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், "பலர் நிறுவனங்களை விட்டு வெளியேறுவது சாதாரணமான ஒன்றுதான். 

இந்த புதிய விதியானது விஞ்ஞானிகளைத் தடுத்து வைப்பதற்காக மட்டுமின்றி, நாட்டின் முக்கியத் திட்டங்கள் திடீரெனத் தொய்வடைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இஸ்ரோ இதனைச் சீராகக் கையாண்டு வருகிறது" என விளக்கமளித்தார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T09:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் காட்டுத்தீ... ஜனாதிபதி மேக்ரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/macron-warns-zero-tolerance-on-wildfire-1784278320"></link>
            <id>https://news.lankasri.com/article/macron-warns-zero-tolerance-on-wildfire-1784278320</id>
            <summary type="text">பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ, காட்டின் 10 சதவிகித பரப்பை கபளீகரம் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ, காட்டின் 10 சதவிகித பரப்பை கபளீகரம் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

இந்நிலையில், காட்டில் தீவைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான மேக்ரான்.
</p><h3>
பிரான்ஸ் காட்டுத்தீ...
</h3><p>
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ 35,000 ஹெக்டேர் சதவிகித காட்டை கபளீகரம் செய்துவிட்ட நிலையில், வேண்டுமென்றேயோ அல்லது தெரியாமலோ தீயை துவக்கிய பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7db919f0-c832-4909-a8cd-34f2bfc9a6bb/26-6a59ed32d7863.webp' /></p><p>
அவர்களில் ஒருவர் தன்னார்வலராக செயல்பட்ட தீயணைப்புவீரர் என்னும் செய்தி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p></p><h3>
ஜனாதிபதி மேக்ரான் கடும் எச்சரிக்கை
</h3><p>
இந்நிலையில், Fontainebleau காட்டில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், இரண்டாம் உலகப்போருக்குப் பின் பிரான்ஸ் இந்த அளவுக்கு பல இடங்களில் காட்டுத்தீயை சந்தித்ததில்லை என்று கூறியுள்ளார்.&nbsp;</p><p>

ஒவ்வொருமுறை காட்டுத்தீ ஏற்படும்போதும், நமது நாடு தாக்குதலுக்குள்ளாகிறது என்பதால், தீவைத்தவர்கள் தப்பவிடப்படமாட்டார்கள் என எச்சரித்துள்ளார் அவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f73db05a-5fba-42d1-905c-d0c3ede7a193/26-6a59ed3232ea0.webp' /></p><p>
இதற்கிடையில், வெப்பம் அதிகரித்துவருவதாலும், காற்று வீசுவதாலும், பல இடங்களில் ஆங்காங்கே இன்னமும் தீ எரிந்துகொண்டிருக்கிறதைக் காணமுடிகிறது என்று கூறியுள்ளார் நகர தீயணைப்புத்துறை தலைவர்.
</p><p>
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி, சுமார் 950 தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T08:52:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை பரிமாறிக் கொண்ட உக்ரைன் -ரஷ்யா: இதுவரை தெரியவராத உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-and-russia-exchange-dead-soldiers-body-1784278170"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-and-russia-exchange-dead-soldiers-body-1784278170</id>
            <summary type="text">போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர். வீரர்களின் உடல் பரிமாற்றம்உக்ரைன் ரஷ்யா இடையிலான போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர்.</p><h2> வீரர்களின் உடல் பரிமாற்றம்</h2><p>உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள்&nbsp; நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>இந்த போர் நடவடிக்கையில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் அவ்வப்போது பரிமாறிக் கொள்ளும் நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை போர்க்களத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் முறைப்படி பரிமாறிக் கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c26c8114-4a92-479f-992e-992dd5f72f00/26-6a59ec9c0fb34.webp' /></p><p> இந்த பரிமாற்றத்தில் கிட்டத்தட்ட 501 வீரர்களின் உடல்களை மீட்டு இருப்பதாக உக்ரைனிய அரசு தரப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.</p><p> அதே நேரத்தில் 31 வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் இருந்து பெற்று இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p></p><p> 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இருநாடுகளும் திரும்ப பெறும் உடல்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab62840-53f4-467e-b15b-0f123a6d8f68/26-6a59ec9cb25a8.webp' /></p><p> உக்ரைனிய அரசு இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 21,000 வீரர்களின் உடல்களை ரஷ்யாவிடம் இருந்து மீட்டுள்ளது.</p><p> ஆனால், இந்த ஆண்டில் ரஷ்யா சுமார் 600 உடல்களை மட்டுமே திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p> கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதே வேளையில் இருநாடுகளும் தங்கள் தரப்பு உயிரிழப்புகள் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவல்களையும் இதுவரை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்துள்ளனர்.</p><p>இதனால் இந்த போரில் ஏற்பட்டுள்ள உண்மையான உயிர் சேதம் குறித்த எந்தவொரு தகவலும் வெளிப்படையாக கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T08:50:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்க்கு திரிஷா போல், எனக்கு இந்த நடிகை - வைரலான நடிகரின் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/actor-dhaya-srinivasan-mocks-vijay-trisha-1784277637"></link>
            <id>https://news.lankasri.com/article/actor-dhaya-srinivasan-mocks-vijay-trisha-1784277637</id>
            <summary type="text">விஜய் த்ரிஷாவை மறைமுகமாக குறிப்பிட்டு நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் பேசியது வைரலாகி வருகிறது.

விஜய் - த்ரிஷா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் த்ரிஷாவை மறைமுகமாக குறிப்பிட்டு நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் பேசியது வைரலாகி வருகிறது.
</p><h3>
விஜய் - த்ரிஷா
</h3><p>
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய், அரசியல் கட்சி தொடங்கி, போட்டியிட்ட முதல் தேர்தலிலே ஆட்சியை கைப்பற்றி முதலமைச்சராகியுள்ளார். </p><p>

தேர்தலுக்கு முன்னதாக விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும், தனது கணவர் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக அந்த மனுவில் குற்றஞ்சாட்டினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0298e30a-62fc-48d2-9f84-bdce18c63e67/26-6a59ea87707f5.webp' /></p><p>

இதனையடுத்து, திருமண விழாவிற்கு விஜய் உடன் த்ரிஷா ஒரே நிற உடையில் ஒன்றாக வருகை தந்தது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது. </p><p>

விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவிலும் த்ரிஷா கலந்து கொண்டு முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9ac7348-fbe8-4f86-a537-bf905fa3dc73/26-6a59ea86bf625.webp' /></p><p>

இந்நிலையில், மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் விஜய் த்ரிஷாவை மறைமுகமாக குறிப்பிட்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><h3> 

 நடிகர் தியான் ஸ்ரீனிவாசன்</h3><p>
நிகழ்வு ஒன்றின் மேடையில் பேசிய அவர், " நான் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது, நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வரானார். அப்போது, அடுத்த 15 ஆண்டுகளுக்குள் நானும் முதலமைச்சராக வேண்டும் என்று முடிவு செய்தேன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5fcb81a-1f1a-4bd6-8890-3927915e7e6f/26-6a59ea88248ce.webp' /></p><p>
அந்தச் வேளையில், அஜு வர்கீஸ் என்னை அழைத்து, முதலில் முதலமைச்சராக முயற்சிக்காதீர்கள்; அம்மா (AMMA) சங்கத்தின் தலைவராவதன் மூலம் முதல் அடியை எடுத்து வையுங்கள் என்று கூறினார். சமூக சேவைகள் செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்ற பிறகு, முதலமைச்சராகலாம் என்று ஆலோசனை கூறினார்.&nbsp;</p><p></p><p>
நான் நவ்யா நாயர் மீதான காதலை ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தினேன். தற்போது அவருக்கு திருமணமாகி, திருமண வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது படத்தில் நாங்கள் இணைத்துள்ளோம்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Mollywood is joking about CM Vijay and Trisha affair 🤦‍♂️ <a href="https://t.co/VDTZWgrWxd">pic.twitter.com/VDTZWgrWxd</a></p>&mdash; Deepu (@deepu_drops) <a href="https://x.com/deepu_drops/status/2077441998865465722?ref_src=twsrc%5Etfw">July 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

நான் முதல்வராகப் பதவியேற்கும்போது நவ்யா முதல் வரிசையில் சேலை அணிந்து அமர வேண்டும் என விரும்புகிறேன். ஆனந்தக் கண்ணீருடன் அவர் பங்கேற்பார் என்று நம்புகிறேன்" என பேசினார். </p><h3>

 நவ்யா நாயர் சொன்ன பதில் </h3><p>

கீழே அமர்ந்து இதனை கேட்டுக் கொண்டிருந்த நவ்யா நாயர், அதனைக் கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார்.
</p><p>
அதன் பின்னர் மேடையேறி இதற்கு பதிலளித்த நவ்யா நாயர், த்யான், கவலைப்படாதீர்கள். நீங்கள் முதலமைச்சராகும்போது, ​​நான் பச்சை நிற பார்டர் கொண்ட வெள்ளைப் புடவையும், வைர மாலையும் அணிந்து முதல் வரிசையில் அமர்வேன். </p><p>

கண்ணீருடன் உங்களுக்கு ஆதரவாக கோஷமிடுவேன். எனக்காக ஒரு இருக்கையை ஒதுக்கி வையுங்கள்" என கூறினார். </p><p>

இதன் பின்னர் பேசிய நடிகர் அஜு வர்கீஸ், "இனிமேல் நான் தமிழ்நாட்டிற்குள் நுழையமுடியாது என்று நினைக்கிறேன். மை டியர் சிஎம் சார், என் நண்பண் கொஞ்சம் பைத்தியம் ஆகிவிட்டான். எங்களை மன்னித்துவிடுங்கள்" என நகைச்சுவையாக கூறினார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T08:40:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் துவக்கம் - கட்டணம் எவ்வளவு? எந்த வழித்தடம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-first-hydrogen-train-to-flagged-off-17-july-1783686562"></link>
            <id>https://news.lankasri.com/article/india-first-hydrogen-train-to-flagged-off-17-july-1783686562</id>
            <summary type="text">இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17 ஆம் திகதி இன்று முதல் இயக்கப்பட உள்ளது.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17 ஆம் திகதி இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
</p><h3>
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்
</h3><p>
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை வரும் இன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b735e38a-0c51-46b9-9abc-0b2e848d84bf/26-6a50e5a4a4407.webp' /></p><p>

சோதனை ஓட்டமாக வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், 10 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரயில் 89 கி.மீ நீளமுள்ள ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் மணிக்கு 75 கி.மீ வேகத்தில் முதல்கட்டமாக இயக்கப்பட உள்ளது. </p><p>

இந்த ரயிலில், 682 இருக்கைகள் உள்ள நிலையில், மொத்தமாக சுமார் 2,600 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். </p><p>

இதன் டிக்கெட் விலைகள் ரூ.5 முதல் ரூ.25 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p></p><p>
இந்த ரயில் அதிகபட்ச பயணிகள் சுமை மற்றும் இயக்க நிலைமைகளின் கீழ், ஒரு நாளைக்கு சுமார் 300 கிலோ ஹைட்ரஜனைப் பயன்படுத்தும். இந்த ரயில் மணிக்கு அதிகபட்சம் 110 கி.மீ வேகத்தை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><h3> 

எப்படி செயல்படும்?
</h3><p>
இது வழக்கமான டீசல் ரயில்களைப் போலல்லாமல், 1,200 கிலோவாட் ஹைட்ரஜன் எரிபொருள் செல் உந்துவிசை அமைப்பால் இயக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5bd0476-39a6-4807-8652-528a75ec9e4e/26-6a50e5a3efda7.webp' /></p><p>

டீசலை எரிப்பதற்குப் பதிலாக, ரயிலில் சேமிக்கப்பட்ட ஹைட்ரஜன், எரிபொருள் செல்லுக்குள் இருக்கும் ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து மின்சாரத்தை உருவாக்குகிறது. இந்த மின்சாரம் ரயிலின் மோட்டார்களை இயக்குகிறது.&nbsp; </p><p>இதனால் இது கார்பனை வெளியேற்றாமல், நீராவியை மட்டும் வெளியிடுவதால் சுற்றுசூழலுக்கு உகந்ததாக உள்ளதோடு, புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. </p><p>

ஹைட்ரஜன் கசிவு மற்றும் தீப்பிழம்பு கண்டறியும் கருவிகள் உள்ளிட்ட சிறப்புப் பாதுகாப்பு அமைப்புகளையும் நிறுவப்பட்டுள்ளது. பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக இவை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.&nbsp;&nbsp;</p><p>இதற்காக ஜிந்தில் ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் வசதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தத் தொழில்நுட்பம் நம்பகமானதாகவும், வணிக ரீதியாக சாத்தியமானதாகவும் இருந்தால் இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.</p><p> 

இந்த முன்னெடுப்பின் மூலம், தூய்மையான ரயில் போக்குவரத்திற்காக ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதை ஆராய்ந்து வரும் ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T08:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்: குழந்தை உட்பட 14 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minibus-plunge-into-a-ravine-14-dead-in-peru-1784275113"></link>
            <id>https://news.lankasri.com/article/minibus-plunge-into-a-ravine-14-dead-in-peru-1784275113</id>
            <summary type="text">வடக்கு பெருவில் சிறிய பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பள்ளத்தில் கவிழ்ந்த சிறிய பேருந்து
வியாழக்கிழமை வடக்கு பெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு பெருவில் சிறிய பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> பள்ளத்தில் கவிழ்ந்த சிறிய பேருந்து</h2><p>
வியாழக்கிழமை வடக்கு பெருவில் உள்ள சான் ஜுவான்(San Juan) மாவட்டத்தில் இருந்து சியுடாட் டி டியோஸ்(Ciudad de Dios) நோக்கிச் சென்ற சிறிய பேருந்து(Mini Bus) கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் கழிந்து விபத்துக்குள்ளானது.</p><p> இந்த கோரமான விபத்தில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 14 பேர் வரை உயிரிழந்து இருப்பதுடன் 5 பேர் வரை காயமடைந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7629a577-d44c-4c69-893c-b602b2ca37ad/26-6a59e0aaadd28.webp' /></p><p> இந்த பேருந்து விபத்தானது பெரு தலைநகர் லிமாவில் இருந்து வடக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கஜமார்கா பகுதியில் நிகழ்ந்துள்ளது.</p><p></p><p> விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக மீட்பு பணிகளை தொடங்கினர்.</p><p> அத்துடன் விபத்துக்கான காரணத்தை கண்டறிய தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை எந்தவொரு துல்லியமான காரணமும் வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ae36a07-646d-426e-bacb-086c1af0bdd1/26-6a59e0ab5df3c.webp' /></p><p> விபத்துக்குள்ளான பேருந்தானது குறுகலான பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் மீட்புப் பணிகள் மிகவும் சவாலானதாக இருப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரி எட்சன் ரோமன் தெரிவித்துள்ளார்.</p><p> விபத்து நடந்த போது பேருந்தில் மொத்தம் 19 பேர் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:58:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[140 ஓட்டங்களுக்கு சுருண்ட மே.தீவுகள்: தட்டித் தூக்கிய சான்ட்னர் படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-zealand-beat-west-indies-in-3rd-odi-2026-1784274226"></link>
            <id>https://news.lankasri.com/article/new-zealand-beat-west-indies-in-3rd-odi-2026-1784274226</id>
            <summary type="text">மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&amp;nbsp;சுருண்ட&amp;nbsp;மேற்கிந்திய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>சுருண்ட&nbsp;மேற்கிந்திய தீவுகள்</h2><p>
மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு 3வது ஒருநாள் ஒருநாள் போட்டி கயானாவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32c6dfd5-e472-42a3-88e7-2db8733e0497/26-6a59de44e88c2.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணிகள் 37.1 ஓவர்களில் 140 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக கேசி கார்ட்டி (Keacy Carty) 48 ஓட்டங்களும், அகஸ்டி மற்றும் ஹெட்மையர் தலா 26 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

ஜேடன் லென்னோக்ஸ் 4 விக்கெட்டுகளும், மிட்செல் சான்ட்னர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47bfa524-d327-4f28-9515-c35577850542/26-6a59de4392e89.webp' /></p><p>
அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி 39.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.</p><h2>

நியூஸிலாந்து&nbsp;வெற்றி </h2><p>டாம் லாதம் 31 ஓட்டங்களும், டேர்ல் மிட்செல் 28 ஓட்டங்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 24 ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p>

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் விட்டல் லாவ்ஸ் 3 விக்கெட்டுகளும், கார்ரி பியெர்ரே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>
ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c684cc9-f5b9-4dfe-9827-e82c891cb5d7/26-6a59de4443723.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/859887fa-e3c0-4528-8e99-022b7c39d15f/26-6a59de42960cc.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:46:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடொன்றில் பாரிய நிலச்சரிவு: மீட்புப் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/massive-land-slide-in-china-chongqing-1784273853"></link>
            <id>https://news.lankasri.com/article/massive-land-slide-in-china-chongqing-1784273853</id>
            <summary type="text">சீனாவில் பாரிய நிலச்சரிவொன்று ஏற்பட்டதில், பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் பாரிய நிலச்சரிவொன்று ஏற்பட்டதில், பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.</p><h3>
சீனாவில் பாரிய நிலச்சரிவு
</h3><p>
சீனாவின் Chongqing நகரில் இன்று காலை 9.08 மணியளவில் பாரிய நிலச்சரிவொன்று நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f74cc44-baa5-4f68-9575-cb1e2e3d0055/26-6a59dbbf1330c.webp' /></p><p>
நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து நொறுங்கியுள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் சுமார் 100 மீட்புக்குழுவினரும் 200 தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.&nbsp;</p><p></p><p>

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 9 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரைக் காணவில்லை என கூறப்படுகிறது.</p><p>

மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:39:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த ராசியில் வக்கிர நிவர்த்தியடையும் புதன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-vakra-nivarthi-1784273530"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-vakra-nivarthi-1784273530</id>
            <summary type="text">நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.</p><p>

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
</p><p>
இந்நிலையில், புதன் தற்போது மிதுன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். 

இ</p><p>தனைத்தொடர்ந்து, புதன் ஜூலை 24ஆம் திகதி தனது சொந்த ராசியான மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். </p><p>

அந்தவகையில், புதனின் இந்த வக்கிர நிவர்த்தி குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நன்மைகளை தரப்போகிறது.</p><p>&nbsp;</p><h2>மேஷம் </h2><ul><li>தைரியம் அதிகரிக்கும்.</li><li> உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.</li><li> தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். </li><li>புதிய தொழிலை தொடங்க வாய்ப்பு தேடி வரும்.</li><li> நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். </li><li>மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். </li><li>பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை தேடி வரும். </li><li>வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d973b9-a422-4aa5-8610-c7fc69e9dee8/26-6a59db6643a0f.webp' /></p><h2>மிதுனம் </h2><ul><li>இந்த காலம் சிறப்பாக இருக்கும். </li><li>குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். </li><li>பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும்.</li><li> வாழ்க்கைத் துணையுடனான உறவு முன்பை விட வலுவடையும். </li><li>தொழிலதிபர்கள் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். </li><li>குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். </li><li>ஐடி துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/963ed5ab-9d9f-43a3-91a0-3590447d35c5/26-6a59db670dbbf.webp' /></p><h2>விருச்சிகம்</h2><ul><li>சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். </li><li>வருமானத்தில் உயர்வு ஏற்படும்.</li><li> புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். </li><li>புதிய தொழிலை தொடங்குவதற்கு சாதகமாக இருக்கும்.</li><li> பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். </li><li>நீண்ட கால பிரச்சனைக்கு இக்காலத்தில் தீர்வு கிடைக்கும். </li><li>மன அழுத்தம் குறைந்து, மன நிம்மதி அதிகரிக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38207e11-6e60-4513-b188-94c76f655e60/26-6a59db67b171a.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T07:36:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/asylum-seekers-applications-fell-in-swiss-1784272709"></link>
            <id>https://news.lankasri.com/article/asylum-seekers-applications-fell-in-swiss-1784272709</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் புகலிடம் கோரியவர்கள் எண்ணிக்கை 16 சதவிகிதம் குறைந்துள்ளது.

புகலிடம் கோருவோர் எண்ணிக்கையில் வீழ்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் புகலிடம் கோரியவர்கள் எண்ணிக்கை 16 சதவிகிதம் குறைந்துள்ளது.</p><h3>

புகலிடம் கோருவோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி
</h3><p>
2026ஆம் ஆண்டின் முதல் பாதியில், 9,734 பேர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 16 சதவிகிதம் குறைவு ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6463b592-f553-46bf-be1b-26f85c90d027/26-6a59d7472394e.webp' /></p><p>
அதேபோல, 2026ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் மட்டும், 1,777 பேர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 20 சதவிகிதம் குறைவு ஆகும்.&nbsp;</p><p></p><p>
இந்த தகவலை, புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் வெளியிட்டுள்ளது.
</p><p>
ஜூன் மாதத்தில் புகலிடம் கோரியுள்ளவர்களில் ஆப்கன் நாட்டவர்கள் 456 பேர், எரித்ரியா நாட்டவர்கள் 222 பேர், அல்ஜீரியா நாட்டவர்கள் 175 பேர், துருக்கி நாட்டவர்கள் 140 பேர் மற்றும் சோமாலியா நாட்டவர்கள் 139 பேர் ஆவர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:19:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தூக்கமில்லாமல் தவிக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் - என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chennai-tops-in-sleep-loss-due-to-night-time-heat-1784272133"></link>
            <id>https://news.lankasri.com/article/chennai-tops-in-sleep-loss-due-to-night-time-heat-1784272133</id>
            <summary type="text">தூக்கமில்லாமல் தவிக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. 


இரவு நேர வெப்பத்தால் தூக்க இழப்பு
உலகளவில் காலநிலை மாற்றம் அதிகரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தூக்கமில்லாமல் தவிக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. </p><h3>


இரவு நேர வெப்பத்தால் தூக்க இழப்பு</h3><p>
உலகளவில் காலநிலை மாற்றம் அதிகரித்து வரும் நிலையில், அதனால் ஏற்பட உள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.</p><p> 

இந்நிலையில், புவி வெப்பமாதல் காரணமாக இரவு நேர வெப்பத்தால் ஏற்படும் தூக்க இழப்புகள் குறித்து கிளைமேட் சென்ட்ரல் என்ற அமைப்பு உலகளவில் ஆய்வு நடத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99283111-3a62-4dff-b092-958e676ce218/26-6a59d50786c4d.webp' /></p><p>

இந்த ஆய்வு குறித்த அறிக்கையை 'காலநிலை மாற்றம் மக்களுக்குச் செலவை ஏற்படுத்துகிறது (2020-2025)' என்று வெளியிட்டுள்ளது.</p><p> 

உலகளவில், 2020 மற்றும் 2025 ஆண்டுக்கு இடையில், இரவு நேர வெப்பம் காரணமாக ஒரு சராசரி நபர் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 56 மணிநேர தூக்கத்தை இழந்துள்ளார். </p><p>

அந்த வருடாந்திர தூக்க இழப்பில், மதிப்பிடப்பட்ட 6 மணிநேரம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பமயமாதலின் காரணமாக ஏற்படுகிறது.&nbsp;</p><p></p><p>

இதில் உலகளவில் மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்கள், அதிக தூக்க இழப்பை எதிர்கொள்கின்றனர். </p><p>

அதிகரித்த இரவு நேர வெப்பநிலையால் ஆண்டுதோறும் 55 முதல் 87 மணிநேர உறக்கத்தை இழந்ததாகவும், இதில் 12 முதல் 16 மணிநேர உறக்க இழப்பு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><h3>தூக்க இழப்பில் சென்னை முதலிடம்</h3><p>

இந்தியாவில், உள்ள பெருநகரங்களில் சென்னை அதிக தூக்க இழப்பை எதிர்கொள்ளும் நகரமாக உள்ளது. 

சென்னையில் வசிப்பவர்கள் ஆண்டுக்குச் சராசரியாக 93 மணிநேரத் தூக்கத்தை இழக்கின்றனர். இதில் 5 மணிநேர இழப்பிற்குக் காலநிலை மாற்றமே நேரடிக் காரணமாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5735cee7-eaa1-4f35-a471-5e45700b604c/26-6a59d5083a35e.webp' /></p><p>
மும்பை 84 மணிநேரமும், கொல்கத்தா 80 மணிநேரமும், ஹைதராபாத் 75 மணிநேரமும், பெங்களூரு 67மணிநேரமும்,டெல்லி 66 மணிநேரமும் தூக்க இழப்பைச் சந்தித்ததாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. </p><p>

தமிழ்நாட்டில் ஒரு நபருக்கு ஆண்டுக்குக் கூடுதலாக 7.9 மணிநேர உறக்க இழப்பு ஏற்பட்டது. இதுவே இந்தியாவில் மிக அதிகமானதாகும்.</p><p> 

கர்நாடகா 7.8 மணிநேர உறக்க இழப்புடனும், ராஜஸ்தான் 7.0 மணிநேர உறக்க இழப்புடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. </p><h3> 

ஏன் தூக்க இழப்பு?
</h3><p>
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதிலிருந்து வெளிவரும் வெப்ப காற்று, நச்சுப் புகை, இரவு நேர வெப்பத்தை அதிகரிக்கிறது.</p><p> 

இதே போல், அதிவேக நகரமயமாக்களால் மரங்கள் அழிக்கப்பட்டு, காங்கிரீட் கட்டடங்களும், தார் சாலைகளும் அதிகரித்து வருகின்றன.</p><p> 

இவை பகல் நேர வெப்பத்தை அப்படியே உறிஞ்சி வைத்துக்கொண்டு, இரவில் மெல்ல வெளியேற்றுகின்றன. இதனால் இரவு நேரக் குளிர்ச்சி என்பதே இல்லாமல் போகிறது.&nbsp;</p><p>

சூரியன் மறைந்த பின்னர் இரவில் நிலவும், மிதமான குளிர்ச்சியான சூழலில் நம் உடலின் வெப்பநிலை குறைந்து, ஆழ்ந்த தூக்கம் வரும்.

ஆனால், இரவில் நிலவும் அதிக வெப்பநிலை, தூக்கதிற்கு இடையூறு ஏற்படுத்தி, பகலில் ஏற்படும் வெப்ப அழுத்தத்திலிருந்து மனித உடல்கள் குளிர்ச்சியடைவதையும் மீள்வதையும் தடுக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31309a30-fa6c-4048-9526-2f32e83bbd0b/26-6a59d506d6375.webp' /></p><p>போதுமான தூக்கமின்மையானது செயல்திறன் குறைபாடு, கடுமையான மன அழுத்தம், சோர்வு, கோபம் மாரடைப்பு, பக்கவாதம், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவற்றுக்கு காரணமாகிறது.
</p><p>
குறைவான மற்றும் தரமற்ற உறக்கமும் ஆயுட்காலத்தைக் குறைத்து, விபத்துகள் மற்றும் காயங்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர தாக்குதலால் சபரிவர்மன் மூச்சுத்திணறி மரணம் - அறிக்கையில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/custodial-death-sabarivarman-postmortem-report-1784265612"></link>
            <id>https://news.lankasri.com/article/custodial-death-sabarivarman-postmortem-report-1784265612</id>
            <summary type="text">விசாரணைக்கைதி சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.

சபரிவர்மன் மரணம்

கன்னியாகுமரி மாவட்டதில் குட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசாரணைக்கைதி சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
</p><h3>
சபரிவர்மன் மரணம்
</h3><p>
கன்னியாகுமரி மாவட்டதில் குட்கா விற்பனை செய்ததாகக் கூறி, கடந்த ஜூலை 9 ஆம் தேதி 35 வயதான சபரிவர்மன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a035ca84-68c0-40ca-95bd-6f1b214d4d62/26-6a59bb8e46faa.webp' /></p><p> 

கடந்த 13 ஆம் தேதி அவருக்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். </p><p>

அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது உடலை பெற குடும்பத்தினர், மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>முதல் தகவல் அறிக்கை ஜூன் 9 ஆம் தேதி உதவி ஆய்வாளர் பிரைட் பிளஸிங், தலைமை காவலர்கள் ஞானபிலிப்பு, சுயம்புலிங்கம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சபரிவர்மனின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் கடையில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்களாம்.</p><p> 

கடையின் உரிமையாளரான சபரிவர்மன் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதுடன், குட்கா பாக்கெட்டுகளை அவரே எடுத்து ஆஜர்படுத்தினாராம். தலா 15 கிராம் எடைகொண்ட புகையிலை 11 பாக்கெட்டுகள் என 192 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றியுள்ளனர்&nbsp;</p><p>
இதன் பின்னர், சபரிவர்மனை தாக்கியதாக சிறை வார்டன்கள் 3 பேர் மற்றும் 8 சிறைக் கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcdb1f92-04ba-4a00-ba46-92d085e906f9/26-6a59bb8d94302.webp' /></p><p>

சபரி வர்மன் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் தற்காலிக அரசுப் பணி ஆணையை வழங்க அமைச்சர்கள் ராஜேஷ்குமார் மற்றும் ஸ்ரீநாத் முன் வந்தனர். </p><p>

இதனை நிராகரித்த குடும்பத்தினர், சபரி வர்மனின் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட வீடியோவை மறு ஆய்வு செய்த பிறகே அவரது உடலை பெறுவோம் என்று தெரிவித்தனர்.
</p><h3>
உடற்கூறாய்வு அறிக்கை</h3><p>
சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில், அவரின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், கொடூரமான தாக்குதலால் அவர் மூச்சுத்திணறி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

அந்த அறிக்கையில், "சபரி வர்மனின் மூக்கிலிருந்து ரத்தம் கலந்த திரவம் வெளியேறியது. தலையின் மேற்பகுதி, கழுத்தின் பின்புற நடுப்பகுதியில் ஆழமான ரத்தக்கட்டுகள், சிராய்ப்பு காயங்கள் இருந்தது 

மூளை, அதன் ரத்த நாளங்களில் வீக்கம் இருந்தது. </p><p>இது பொதுவாக மூச்சு திணறல் அல்லது கடும் போராட்டத்தின் போது ஏற்படும் அறிகுறி.

சபரிவர்மனின் உடல் உறுப்பு மாதிரிகள், திசுக்கள் பகுப்பாய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது. 

அவரது வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு உள்ளது. கை, காலில் தழும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனை கோவிலுக்கு அழைத்துச் சென்ற மனைவி: காதலனை வர சொல்லி தீர்த்துக் கட்டிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wife-and-lover-plot-husband-death-in-chittoor-1784270828"></link>
            <id>https://news.lankasri.com/article/wife-and-lover-plot-husband-death-in-chittoor-1784270828</id>
            <summary type="text">ஆந்திர மாநிலம் சித்தூரில் கோவிலுக்கு அழைத்துச் சென்று கணவனை காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனை கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆந்திர மாநிலம் சித்தூரில் கோவிலுக்கு அழைத்துச் சென்று கணவனை காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி</h2><p>தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த 23 வயது ரமேஷ் என்பவருக்கும், 19 வயது ஹாசினி என்ற பெண்ணுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.</p><p> இதற்கிடையில் ஹாசினிக்கு அவரது நண்பரான யுகந்தருடன்(20) தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் சேர்ந்து ரமேஷை கொல்லவும் திட்டமிட்டு வந்துள்ளனர்.</p><p> இந்நிலையில், அம்மாவாசை நாளான செவ்வாய்க்கிழமை அன்று கணவன் ரமேஷை மல்லப்பா கொண்டையில் உள்ள ஶ்ரீ மல்லேஸ்வர சுவாமி கோவிலுக்கு அழைத்துச் செல்லுமாறு மனைவி ஹாசினி வற்புறுத்தியுள்ளார்.</p><p></p><p> ரமேஷும் அதற்கு சம்மதம் தெரிவித்து கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய வழியில் மனைவி ஹாசினி தன்னுடைய கையில் இருந்த கைப்பையை கீழே போட்டுள்ளார்.</p><p> அதை எடுப்பதற்காக ரமேஷ் பைக்கை நிறுத்திய போது புதருக்குள் மறைந்திருந்த காதலன் யுகந்தர் ரமேஷை சுற்றி வளைத்து காட்டுப் பகுதிக்குள் வைத்து கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1993b568-929d-4d00-8ea5-fb3928441fe6/26-6a59cfed932a0.webp' /></p><h2>கைது நடவடிக்கை</h2><p>
ரமேஷ், ஹாசினி மற்றும் அவர்களது குழந்தை யாரும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தாயார் பொலிஸாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.</p><p> இதனை தொடர்ந்து விசாரணையை தொடங்கிய பொலிஸார், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் ஹாசினியும் ரமேஷும் கோவிலுக்கு வந்ததும், பின்னர் ஹாசினி அதே இருசக்கர வாகனத்தில் ஹாசினி வேறு இரண்டு ஆண்களுடன் செல்வதும் பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/937657f8-3009-45f5-80f1-dc71e300f9fa/26-6a59cfee46ee9.webp' /></p><p> மேலும், ஹாசினியின் செல்போன் அழைப்புகள் மற்றும் இருப்பிட தரவுகளை ஆய்வு செய்து கொலை நடந்த இடத்தையும் ரமேஷின் உடலையும் கண்டுபிடித்தனர்.</p><p> தற்போது கொலை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள 4 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>அதே சமயம் ஹாசினிக்கு திருமணம் நடைபெற்ற போது அவர் ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்துக் கொண்டிருந்ததாகவும், அவர் மைனராக இருந்த போது திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-17T06:47:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[56 பந்துகளில் 121 ஓட்டங்கள் விளாசிய கேப்டன்: ஆனாலும் கடைசி பந்தில் தோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/matthew-short-121-runs-in-56-balls-not-out-1784269495"></link>
            <id>https://news.lankasri.com/article/matthew-short-121-runs-in-56-balls-not-out-1784269495</id>
            <summary type="text">மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டியில், வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸை வீழ்த்தியது.&amp;nbsp;ஆன்ட்ரிஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டியில், வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸை வீழ்த்தியது.&nbsp;</p><h2>ஆன்ட்ரிஸ் கோஸ் 73&nbsp;ஓட்டங்கள் </h2><p>சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகளுக்கு இடையிலான சேலஞ்சர் போட்டி ஆக்லாந்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e998f60-0f4e-4b1a-a4f7-7d27ad8ced81/26-6a59cf7776de7.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய வாஷிங்டம் ஃப்ரீடம் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
ஆன்ட்ரிஸ் கோஸ் 73 (40) ஓட்டங்களும், ஸ்டீவன் ஸ்மித் 43 (20) ஓட்டங்களும் விளாசினர். சேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளும், குலாம் முடஸ்ஸர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><h2>மேத்யூ ஷார்ட்&nbsp;ருத்ரதாண்டவம் </h2><p>

பின்னர் ஆடிய சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய, அணித்தலைவர் மேத்யூ ஷார்ட் தனியாளாக ருத்ரதாண்டவம் ஆடினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/113f97b1-38a9-4c8d-ba75-1ab24ec43634/26-6a59cf76b7bd7.webp' /></p><p>
கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட, சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியால் 14 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.</p><p>

இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் நின்ற மேத்யூ ஷார்ட் (Matthew Short) 56 பந்துகளில் 121 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 8 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f15443e4-9eca-4a6e-aa35-a9c41f374719/26-6a59cf782981e.webp' />&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">There must be something in the water ‼️ Shorty smashes his first MLC century here in Oakland 💯 <a href="https://t.co/kDBeynjiyA">pic.twitter.com/kDBeynjiyA</a></p>&mdash; Cognizant Major League Cricket (@MLCricket) <a href="https://x.com/MLCricket/status/2077987564108025869?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T06:43:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய ரயில்களில் AB பெட்டி என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-railway-ab-coach-meaning-in-tamil-1784269559"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-railway-ab-coach-meaning-in-tamil-1784269559</id>
            <summary type="text">பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் இந்திய ரயில்வே துறை பெரிய பங்கு வகிக்கிறது.

பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் சாமானிய மக்கள் கூட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் இந்திய ரயில்வே துறை பெரிய பங்கு வகிக்கிறது.
</p><p>
பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் சாமானிய மக்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
</p><p>
இந்திய ரயில்வே தினமும் சுமார் 2.5 கோடி மக்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்கிறது.</p><p> 

அதன்படி, இந்திய ரயில்வே, நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து சேவையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/895f1561-aa7f-4c31-8128-0ec63eaaf2c6/26-6a59cafa848a5.webp' /></p><p> 

பயணிகளின் வசதிக்காக ஸ்லீப்பர், ஜெனரல், 3AC, 2AC, 1AC, செகண்ட் சிட்டிங் என பல்வேறு வகையான பெட்டிகள் இயக்கப்படுகின்றன. </p><p>

அந்தவகையில், ரயில் பெட்டிகளில் AB பெட்டி என்பதன் அர்த்தம் குறித்து பார்க்கலாம்.</p><p>

பொதுவாக ஸ்லீப்பர் பெட்டிகள் S என்றும், 3AC பெட்டிகள் B என்றும், 2AC பெட்டிகள் A என்றும் குறிப்பிடப்படுகின்றன.</p><p> 

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6cd05a7-10e7-4f29-95ca-35d770e3157f/26-6a59caf926536.webp' />
</p><p>
AB என்பது ஒரே பெட்டியில் 2AC மற்றும் 3AC ஆகிய இரு வகுப்புகளுக்கான இருக்கைகள் இருக்கும்.</p><p>AB பெட்டியில் சில இருக்கைகள் 2AC வகுப்பிலும், சில இருக்கைகள் 3AC வகுப்பிலும் அமைந்திருக்கும்.</p><p></p><p>

இந்தப் பெட்டிகளில் ஒரே இருக்கை எண் 2AC மற்றும் 3AC ஆகிய இரு பிரிவுகளிலும் இருக்கலாம். 

உதாரணமாக, இருக்கை எண் 3, 2AC பகுதியிலும் 3AC பகுதியிலும் இருக்க வாய்ப்புள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04d3a5fd-8ae9-4876-a11d-8993634031d3/26-6a59caf9d1cb0.webp' /></p><p>3AC டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு நடுப் படுக்கை இருக்கும், 2ACயில் நடுப் படுக்கை இருக்காது. அங்கு கீழ் மற்றும் மேல் படுக்கைகள் மட்டுமே இருக்கும்.</p><p>3AC பெட்டிகளில் ஒவ்வொரு படுக்கைக்கு முன்னால் திரைகள் இருக்காது. ஆனால் 2AC பெட்டிகளில் ஒவ்வொரு படுக்கைக்கு தனித்தனி திரைகள் பொருத்தப்பட்டிருக்கும்.
</p><p>
மேலும், சந்தேகம் இருப்பின் உங்கள் இருக்கை குறித்த துல்லியமான தகவல்களைப் பெற TTEயை தொடர்பு கொள்ளலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T06:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மோதிய ரயில்: 3 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/train-collided-with-a-school-van-in-murshidabad-1784265141"></link>
            <id>https://news.lankasri.com/article/train-collided-with-a-school-van-in-murshidabad-1784265141</id>
            <summary type="text">&amp;nbsp;மேக்கு வங்காளம் மாநிலத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது ரயில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேன் மீது மோதிய ரயில்வெள்ளிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மேக்கு வங்காளம் மாநிலத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது ரயில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> வேன் மீது மோதிய ரயில்</h2><p>வெள்ளிக்கிழமை காலை மேற்கு வங்காள மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p> இந்த கோரமான விபத்தில் 2 மாணவர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பல மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/585b3d5e-bc8d-4e3a-beac-07a91801a359/26-6a59b9b68e5f5.webp' /></p><p> &nbsp;பெர்காம்பூரில் உள்ள கர்ணசுபர்ணா ரயில்வே கேட் பகுதியில் காலை 7 மணியளவில் இந்த மோதல் விபத்தானது நிகழ்ந்துள்ளது.</p><p></p><p> பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது நிம்திதா - கட்வா பயணிகள் ரயில் வேன் மீது மோதியது.&nbsp; மோதலின் தீவிரம் காரணமாக வேன் முற்றிலுமாக சிதைந்தது.</p><p> சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விபத்து தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.</p><p> &nbsp;ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T05:12:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலாவிக்கு பள்ளி சுற்றுலா சென்ற 17 வயது லண்டன் மாணவர்: நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/london-student-drowned-to-dies-during-school-trip-1784264141"></link>
            <id>https://news.lankasri.com/article/london-student-drowned-to-dies-during-school-trip-1784264141</id>
            <summary type="text">மலாவி நாட்டில் லண்டன் பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மாணவர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலாவி நாட்டில் லண்டன் பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> லண்டன் மாணவர் உயிரிழப்பு</h2><p>
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவிக்கு பள்ளி சுற்றுலா சென்ற 17 வயது லண்டன் மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> யூஜின் ஈனோக் குவான்(Eugene Enoch Kwon) என்ற சிறுவன் ரிச்மண்ட அபான் தேம்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஹாம்டன் பள்ளியில் பயின்று வந்த நிலையில் சுற்றுலா சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64601465-920d-410c-86ed-1332147e9a37/26-6a59b5ce99fc6.webp' /></p><p> மலாவி ஏரியில் உள்ள மங்கி பே(Monkey Bay) என்ற பகுதியில் உள்ள ஈனோக் குவான் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார்.</p><p></p><p> இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதன் பிறகு கடலோரக் காவல் படையினரால் ஈனோக் குவான் கண்டெடுக்கப்பட்டார்.</p><p> அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2> ஹாம்டன் பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை</h2><p>
மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஹாம்டன் பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த கஷ்டமான சூழலில், உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>தற்போது மாணவர் குடும்பத்தினருக்கும், பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர்கள் சமூகத்திற்கும் தேவையான உளவியல் பயிற்சிகளை வழங்குவதில் முழு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T04:56:08+00:00</updated>
        </entry>
    </feed>
