<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-10T11:27:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் - டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை எப்போது? ரஷ்யா வழங்கியுள்ள முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-says-putin-and-trump-can-talk-anytime-1783682078"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-says-putin-and-trump-can-talk-anytime-1783682078</id>
            <summary type="text">ரஷ்ய ஜனாதிபதி புடினும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் எப்போது வேண்டும் என்றாலும் பேசலாம் என்று ரஷ்யா விளக்கியுள்ளது. புடின் - டிரம்ப் பேச்சுவார்த்தைஎந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய ஜனாதிபதி புடினும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் எப்போது வேண்டும் என்றாலும் பேசலாம் என்று ரஷ்யா விளக்கியுள்ளது.</p><h2> புடின் - டிரம்ப் பேச்சுவார்த்தை</h2><p>எந்தவொரு முன் ஏற்பாடுகளும் இல்லாமல் எப்போது தேவைப்படுகிறதோ அப்போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் பேசிக் கொள்வார்கள் என ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு எந்தவொரு ஏற்பாடுகளும் தேவையில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p> இருதரப்பிற்கும் தேவைப்படும் போது பேச்சுவார்த்தை உடனடியாக திட்டமிட்டு நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c564c5c5-aaf9-4acd-8770-130880389610/26-6a50d41f967cc.webp' /></p><p></p><p> இரு நாட்டு தலைவர்களும் கடைசியாக ஜூலை 4ம் திகதி தொலைபேசி வாயிலாக முக்கிய உரையாடலை நடத்தினர்.</p><p> அந்த அழைப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை மாஸ்கோவிற்கு வருமாறு ரஷ்ய ஜனாதிபதி புடின் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p> &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-10T11:14:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.., இலங்கையில் இன்று எவ்வளவு? (10-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1783680866"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1783680866</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (10-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
&amp;nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (10-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,322,783.00 ஆகும்.</p><p>

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,660.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 373,300.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,780.00.</p><p>

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 342,200.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,830.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 326,650.00.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T10:54:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தை வாட்டும் வெப்பம்: குழாய்களில் தண்ணீர் பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-water-companies-ban-hosepipe-1783675105"></link>
            <id>https://news.lankasri.com/article/england-water-companies-ban-hosepipe-1783675105</id>
            <summary type="text">பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்காக குழாய்கள் மூலம் தண்ணீர் பயன்படுத்துவதை பல நிறுவனங்கள் தடை செய்துள்ளன. இங்கிலாந்தை வாட்டும் வெப்பம்
வெப்ப அலைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்காக குழாய்கள் மூலம் தண்ணீர் பயன்படுத்துவதை பல நிறுவனங்கள் தடை செய்துள்ளன.</p><h2> இங்கிலாந்தை வாட்டும் வெப்பம்</h2><p>
வெப்ப அலைகள் காரணமாக பிரித்தானியாவின் பல பகுதிகள் பல வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. இந்த ஆண்டில் மட்டும் கடந்த வியாழக்கிழமை வரை கிட்டத்தட்ட 8 முறை இங்கிலாந்தின் வெப்பம் 34°C-ஐ தொட்டுள்ளது.</p><p> இது 1976 மற்றும் 2020ம் ஆண்டின் வெப்ப சாதனைகளை சுலபமாக முறியடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/958253db-f7b1-474e-865b-e42a8073a837/26-6a50b8e2b76ff.webp' /></p><h2>தண்ணீர் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள்</h2><p>இந்நிலையில் வெப்ப அலை காரணமாக பிரித்தானியாவில் வறட்சி ஏற்படாமல் தடுக்க நாட்டின் பல நீர் வழங்கல் நிறுவனங்கள் மிக கடுமையான கட்டுப்பாட்டை அறிவித்து வருகின்றனர்.</p><p> தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்கவும், கையிருப்பில் இருக்கும் தண்ணீரை பாதுகாக்கவும் தண்ணீர் பயன்பாட்டிற்கான புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்களுக்கு நீர் வழங்கல் நிறுவனங்கள் விதித்துள்ளன.</p><p></p><p>அதிகப்படியான வெப்பம் காரணமாக தண்ணீரின் தேவை அதிகரித்து இருப்பதால், பல நீர் வழங்கல் நிறுவனங்கள் தற்காலிகமாக குழாய்கள் மூலமாக தண்ணீர் பயன்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளனர்.</p><p> இந்த தடையை ஆங்க்லியன் வாட்டர்(Anglian Water), சதர்ன் வாட்டர்(Southern Water), கேம்பிரிட்ஜ் வாட்டர்(Cambridge Water),சவுத் ஈஸ்ட் வாட்டர்(South East Water) ஆகியவை தங்களின் லட்சக்கணக்கான பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb915ffc-0d56-4b90-bdb6-1b83d39bc768/26-6a50b8e37286c.webp' /></p><p> மேலும் பெரும்பாலான இந்த புதிய கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> வறட்சி எச்சரிக்கை</h2><p>டெவோன், கார்ன்வால் மற்றும் ஈஸ்ட் ஆங்க்லியா என குறிப்பிட்ட பகுதிகளில் வறட்சி ஏற்படும் அபாயம் குறித்தும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T10:45:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளத்தில் தப்பிய 900 பாம்புகள்: விஷ பாம்புகளால் அஞ்சி நடுங்கும் சீன கிராம மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-flood-guangxi-snake-crisis-peak-1783680223"></link>
            <id>https://news.lankasri.com/article/china-flood-guangxi-snake-crisis-peak-1783680223</id>
            <summary type="text">சீனாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பண்ணையில் இருந்து நூற்றுக்கணக்கான பாம்புகள் தப்பியதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தப்பிய ஆயிரக்கணக்கான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பண்ணையில் இருந்து நூற்றுக்கணக்கான பாம்புகள் தப்பியதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.</p><h2> தப்பிய ஆயிரக்கணக்கான பாம்புகள்</h2><p>
சீனாவின் குவாங்சி மாகாணத்தில் பெய்த பெரும் மழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p> துரதிர்ஷ்டவசமாக இந்த வெள்ளத்தில் அப்பகுதியில் செயல்பட்டு வந்த வணிக ரீதியான பாம்பு பண்ணையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="es" dir="ltr">🇨🇳🐍 Las inundaciones desatan una nueva amenaza en China. <br><br>Unas 900 serpientes, incluidas cobras venenosas, escaparon de un criadero tras el paso del tifón.<br><br>⛑️ Equipos de emergencia buscan a los reptiles mientras la población permanece en alerta. Hasta el momento, una persona… <a href="https://t.co/POHQrs1m8U">pic.twitter.com/POHQrs1m8U</a></p>&mdash; Luis Gabriel Velázquez (@soyluisgabriel1) <a href="https://x.com/soyluisgabriel1/status/2075203955903115637?ref_src=twsrc%5Etfw">July 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதனால் பாம்பு பண்ணையில் வளர்க்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புகள் வெள்ள நீரில் தப்பிச் சென்றுள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது.</p><p> தப்பிச் சென்ற பாம்புகளில் கொடிய விஷம் கொண்ட நாகப் பாம்புகளும் அடங்கும் என்பது கூடுதல் பயத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.</p><p>வெளியான தகவல்களின் அடிப்படையில், குறைந்தது 900 பாம்புகள் பண்ணையில் இருந்து தப்பி வெளியேறி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>இந்நிலையில், ஹெங்ஜோ நகரில் பெண் ஒருவர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><p> வெள்ளத்தினால் சாலைகள் சேதமடைந்து இருப்பதால், பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு சரியான நேரத்துக்கு கொண்டு செல்ல முடியவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a46facb0-5b32-426f-8294-fc6264a90f83/26-6a50cce0d884c.webp' /></p><h2> பாம்பு வளர்ப்பை நம்பி இருக்கும் வாழ்வாதாரம்</h2><p>சீனாவின் மிகப்பெரிய பாம்பு வளர்ப்பு மையமாக குவாங்சி மாகாணம் திகழ்கிறது.</p><p> இங்கு பாரம்பரிய உணவுகள், தோல் பொருட்கள் மற்றும் மருத்துவ தேவைகள் என ஆண்டுக்கு கிட்டத்தட்ட 3 கோடி பாம்புகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-10T10:44:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ள பிரெஞ்சு நகரங்கள்: பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-towns-cancel-fireworks-over-wildfires-risk-1783676959"></link>
            <id>https://news.lankasri.com/article/france-towns-cancel-fireworks-over-wildfires-risk-1783676959</id>
            <summary type="text">பிரெஞ்சு நகரங்கள் பல, இம்மாதம், அதாவது ஜூலை மாதம் 14ஆம் திகதி நடைபெற இருந்த வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன.

வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் ரத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரெஞ்சு நகரங்கள் பல, இம்மாதம், அதாவது ஜூலை மாதம் 14ஆம் திகதி நடைபெற இருந்த வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன.</p><h3>

வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் ரத்து
</h3><p>
பிரான்சில், ஜூலை மாதம் 14ஆம் திகதி, Bastille Dayஆக கொண்டாடப்படுகிறது. பிரான்சில் மன்னராட்சிக்கு முடிவு கட்ட காரணமாக இருந்த பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட அந்த நிகழ்வை ஆண்டுதோறும் மக்கள் வாணவேடிக்கைகள் நிகழ்த்திக் கொண்டாடிவருகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b7e6cf9-8bfa-488a-aacf-ec4537323d05/26-6a50c021686ca.webp' /></p><p>
ஆனால், இந்த ஆண்டு, பிரெஞ்சு நகரங்கள் பல அந்த வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன.
</p><p>
அதாவது, பிரான்சில் ஏற்கனவே வெப்பம் சுட்டெரித்துவரும் நிலையில், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தும்போது, பட்டாசுகளால் காட்டுத்தீ உருவாகிவிடும் அபாயம் உள்ளது.&nbsp;</p><p></p><p>
ஆகவே, காட்டுத்தீயைத் தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு Bastille Day கொண்டாட்டங்களின்போது வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்வதென பிரெஞ்சு நகரங்கள் பல முடிவு செய்துள்ளன.
</p><p>
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், இதே ஜூலை 14ஆம் திகதி, Nice நகரில் 2016ஆம் ஆண்டு, Bastille Day கொண்டாட்டங்களின்போது பயங்கரவாதி ஒருவன் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டார்கள், 450 பேர் காயமடைந்தார்கள்.
</p><p>
ஆகவே, பல நகரங்களில் மக்கள் ஜூலை மாதம் 14ஆம் திகதி Nice நகர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுவதால், 13ஆம் திகதி மாலையே Bastille Day கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T09:49:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் பூஸ்டர்- சீனா சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-lands-reusable-rocket-space-race-boost-1783676837"></link>
            <id>https://news.lankasri.com/article/china-lands-reusable-rocket-space-race-boost-1783676837</id>
            <summary type="text">ரொக்கெட் பூஸ்டரை வெற்றிகரமாக தரையிறங்கி தரையிறக்கி சீனா முதல்முறையாக சாதனை படைத்துள்ளது.

சீனாவின் விண்வெளி திட்டத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, Ch...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரொக்கெட் பூஸ்டரை வெற்றிகரமாக தரையிறங்கி தரையிறக்கி சீனா முதல்முறையாக சாதனை படைத்துள்ளது.
</p><p>
சீனாவின் விண்வெளி திட்டத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, China Aerospace Science and Technology Corporation நிறுவனம் Long March 10B ரொக்கெட்டை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த ரொக்கெட், ஹைனான் மாகாணத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 12:15 மணிக்கு ஏவப்பட்டது.

ஏவுதலுக்குப் பிறகு சுமார் ஆறு நிமிடங்களில், ரொக்கெட்டின் புஸ்டர் பகுதி பூமிக்கு நேராக இறங்கி, கடலில் மிதக்கும் மேடையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c071aca-837c-4404-983d-20e6993b8854/26-6a50bfa767826.webp' /></p><p>இது, அமெரிக்காவின் SpaceX மற்றும் Blue Origin நிறுவனங்களின் வெற்றிகரமான முயற்சிகளுக்கு பின், சீனாவும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் தொழில்நுட்பத்தில் முன்னேறியிருப்பதை காட்டுகிறது.</p><p>
</p><p>பொதுவாக ரொக்கெட்டுகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஏவுதலின் போது பல பகுதிகள் அழிக்கப்படுவதால் செலவுகள் அதிகரிக்கின்றன. ஆனால் புஸ்டர் பகுதியை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் செயற்கைக்கோள் ஏவுதல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியின் செலவுகளை குறைக்க முடியும்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d494144-1485-4294-ac43-4f1b6cb911c6/26-6a50bfa6b1cab.webp' /></p><p>SpaceX நிறுவனம் 2015-இல் Falcon-9 ரொக்கெட்டை வெற்றிகரமாக தரையிறக்கியது. தற்போது Falcon-9 வருடத்திற்கு சுமார் 150 முறை ஏவப்படுகிறது. அதேபோல், Blue Origin நிறுவனம் 2025-இல் New Glenn ரொக்கெட்டை தரையிறக்கியது.</p><p>

சீனாவின் Long March 10B ரொக்கெட், குறைந்தபட்சம் 16 மெட்ரிக் டன் பாரங்களை பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. Falcon-9 போல தானாக தரையிறங்காமல், “landing hooks” மூலம் கடலில் உள்ள மேடையில் வலைப்பிடியில் சிக்கி தரையிறங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5715488a-72fb-41a9-91a3-7815e5adb4a3/26-6a50bfa819763.webp' /></p><p>இந்த வெற்றிக்கு பின், சீனாவின் விண்வெளி நிறுவனங்களின் பங்குகள் 10% வரை உயர்ந்துள்ளன. இது, சீனாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது.</p><p>

இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் இதே பூஸ்டரை பயன்படுத்தி மற்றொரு ஏவுதலை மேற்கொள்ளும் திட்டம் சீனாவால் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T09:45:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.., பணத்தை ஈர்க்கபோகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-mahalakshmi-rajayogam-1783676467"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-mahalakshmi-rajayogam-1783676467</id>
            <summary type="text">ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழப்போகின்றன. அதன்படி, ஏற்கனவே குருபகவான் நிலைபெற்றிருக்கும் கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகப்போகிறார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழப்போகின்றன. </p><p>அதன்படி, ஏற்கனவே குருபகவான் நிலைபெற்றிருக்கும் கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகப்போகிறார்.
</p><p>
அந்தவகையில், ஜூலை 16, 2026 அன்று நிகழும் இந்தச் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் என்ற சக்திவாய்ந்த ராஜயோகம் உருவாகிறது.</p><p>

இந்நிலையில், இந்த மகாலட்சுமி ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.&nbsp;</p><p></p><h2>மேஷம் </h2><ul><li>

சாதகமான பலன்களைத் தரும். </li><li> 
ஒட்டுமொத்த வாழ்க்கை தரமும் மேம்படக்கூடும். </li><li>
வாழ்க்கையில் வெற்றியும், முன்னேற்றமும் தேடிவரும். </li><li>
எதிர்பாராத பண வரவு உண்டாகும். </li><li>
வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
</li><li>வேறு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். </li><li>
தடைப்பட்டிருந்த திட்டங்களை மீண்டும் தொடங்கும்.
</li><li>குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
</li><li>முயற்சிகள் நல்ல பலனைத் தரும்.</li><li> 
நிதி நிலைமை உயரும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94a303fc-8a84-4ee4-8ea5-eebe38aedbf6/26-6a50be353c961.webp' /></p><h2>மிதுனம் </h2><ul><li>

நேர்மறையான பலன்களை தரும். </li><li>
நிதி நிலை மேம்படக்கூடும். </li><li>
பூர்வீகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். </li><li>
பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். </li><li>
புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும்.</li><li> 
புதிய வேலையைத் தொடங்க சிறப்பான காலமாக இருக்கும். </li><li>
பயணங்களால் பெரிதும் பயனடையலாம். </li><li>
வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். </li><li>
அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.</li><li> 
சமூகத்தில் அவர்களின் மரியாதை மேம்படும். </li><li>
பணியிடத்தில் முயற்சிகள் பாராட்டப்படும்.
</li><li>உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cdced6d-435f-4313-9f9f-14d6cb61a191/26-6a50be35e256c.webp' /></p><p>
</p><h2>கடகம்</h2><ul><li> 

அற்புதமான பலன்களைக் கொடுக்கும். </li><li>
புதியதாக நல்ல வேலை கிடைக்கக்கூடும்.</li><li>
சமூகத்தில் நற்பெயரும் அங்கீகாரமும் மேம்படும்.</li><li> 
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.</li><li> 
வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
</li><li>தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
</li><li>வியாபாரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
</li><li>பொருளாதார நிலை மேம்படும் வாய்ப்பு கிடைக்கும்.</li><li> 
முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரக்கூடும்.</li><li> 
முடிவெடுக்கும் திறன்கள் சிறப்பாக இருக்கும்.</li></ul><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/746acf4e-7767-4c3f-8068-50a5630735a2/26-6a50be3692d79.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் 
ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. 
(லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது). </p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> 
&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T09:41:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் ரயில் நடத்துனரை தாக்கிக் கொன்ற வெளிநாட்டவர்: 10 ஆண்டுகள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-jailed-for-kills-germany-train-conductor-1783676455"></link>
            <id>https://news.lankasri.com/article/man-jailed-for-kills-germany-train-conductor-1783676455</id>
            <summary type="text">ஜேர்மனியில், ரயில் நடத்துனர் ஒருவர், பயணி ஒருவரிடம் அவரது பயணச்சீட்டைக் காட்டுமாறு கேட்க, பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த அந்த பயணி தாக்கியதில் அந்த நடத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில், ரயில் நடத்துனர் ஒருவர், பயணி ஒருவரிடம் அவரது பயணச்சீட்டைக் காட்டுமாறு கேட்க, பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த அந்த பயணி தாக்கியதில் அந்த நடத்துனர் உயிரிழந்துவிட்டார்.</p><p>

இந்த வழக்கில் அந்த வெளிநாட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
ரயில் நடத்துனரை தாக்கிய வெளிநாட்டவர்
</h3><p>
பிப்ரவரி மாதம் 2ஆம் திகதி, Landstuhl நகருக்கருகில் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்த நிலையில், ரயில் நடத்துனரான சேர்க்கான் கலார் (36) என்பவர், கிரீஸ் நாட்டவரான பயணி ஒருவரிடம் அவரது பயணச்சீட்டைக் காட்டுமாறு கேட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c1d41fd-cbc1-4480-b726-ac7ed7cdcc92/26-6a50be28f19d7.webp' /></p><p>
அந்த 26 வயது நபரிடம் பயணச்சீட்டு இல்லாததால், நடத்துனர் அவரது அடையாள அட்டையைக் கேட்க, அவர் அதற்கும் மறுப்பு தெரிவித்ததால், ரயிலிலிருந்து அவரை இறங்கச் சொல்லியுள்ளார் அந்த நடத்துனர்.</p><p>

தன்னை ஒரு ‘பாக்ஸர்’ எனக்கூறி மிரட்டிய அந்த கிரீஸ் நாட்டவர், சேர்க்கானை முரட்டுத்தனமாக தாக்கியுள்ளார்.
</p><p>
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேர்க்கான், இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துவிட்டார்.
</p><h3>
10 ஆண்டுகள் சிறை
</h3><p>
இந்த வழக்கில் அந்த கிரீஸ் நாட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், அவர் அந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/033ecac9-c78c-4b64-8cd0-9377c05d5147/26-6a50be299e19d.webp' /></p><p>

இந்நிலையில், அவருக்கு 12 ஆண்டுகளுக்குக் குறைந்த தண்டனை வழங்கப்படுமானால், அதை எதிர்த்து தாங்கள் நீதிமன்றம் செல்வோம் என கொல்லப்பட்ட சேர்க்கானின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T09:41:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளத்தில் வீட்டிற்குள் அடித்து வரப்பட்ட பணம் - வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/heavy-rain-flood-leads-cash-washed-in-home-1783675981"></link>
            <id>https://news.lankasri.com/article/heavy-rain-flood-leads-cash-washed-in-home-1783675981</id>
            <summary type="text">&amp;nbsp;மழை வெள்ளத்தில் ஒருவரின் வீட்டிற்குள் பணம் அடித்து வரப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெள்ளத்தில் வீட்டிற்குள் அடித்து வரப்பட்ட பண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மழை வெள்ளத்தில் ஒருவரின் வீட்டிற்குள் பணம் அடித்து வரப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
</p><h3>
வெள்ளத்தில் வீட்டிற்குள் அடித்து வரப்பட்ட பணம்</h3><p>

கடந்த சில நாட்களாக மும்பை உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து நகரங்கள் வெள்ளக்காடாக மாறிவிட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dba17e99-f20b-4e08-9220-223fbcb31e79/26-6a50bc4f51812.webp' /></p><p> 

தெருக்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஓடத்தொடங்கி, பலரின் வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. </p><p>

இதில், ஒருவரின் வீட்டிற்குள் ஏராளமான பணத்தாள்கள் அடித்து வரப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DZad4rBpAAL/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DZad4rBpAAL/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DZad4rBpAAL/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Memeinions (@memeinions.in)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>

கடவுளின் திட்டம் எனப்பெயரிடப்பட்டு பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், “பணம் உங்களைத் தேடி வரும் என்பது நிஜம்”, “பணமழை பொழிகிறது” என பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இந்த சம்பவம் எந்த பகுதியில் நடைபெற்றது எந்த விவரங்கள் அந்த வீடியோவில் குறிப்பிடப்படவில்லை.&nbsp;&nbsp;</p><p></p><p>

இதே போல், ராய்காட் மாவட்டம் சாவ்ணே பகுதியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் எரிவாயு சிலிண்டர் நிரப்பு மையத்தின் பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், வெள்ளத்தில் அங்கிருந்த சுமார் 3000 LPG சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f831e3a1-f02e-4532-a388-f926b14760f5/26-6a50bc4ea0f6a.webp' /></p><p>

ஆற்றங்கரையோரங்களில் மிதந்து வந்த சிலிண்டர்களை பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T09:33:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விக்ரம்-1 ரொக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பப்படும் வைரத் தாமரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indias-diamond-lotus-to-fly-on-vikram-1-1783673564"></link>
            <id>https://news.lankasri.com/article/indias-diamond-lotus-to-fly-on-vikram-1-1783673564</id>
            <summary type="text">இந்தியா தனது தனியார் விண்வெளி முயற்சியில் புதிய வரலாற்றை படைக்கிறது.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம்-1 ரொக்கெட்டில், பெங்களூருவில் தயாரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா தனது தனியார் விண்வெளி முயற்சியில் புதிய வரலாற்றை படைக்கிறது.
</p><p>
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம்-1 ரொக்கெட்டில், பெங்களூருவில் தயாரிக்கப்பட்ட ஆய்வக வைரத்தால் செய்யப்பட்ட தாமரை வடிவ நகை விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது.
</p><p>
இந்த வைரத் தாமரை, இந்தியாவின் கைவினை திறமை, கலாச்சாரம் மற்றும் புதுமையை உலகிற்கு அறிமுகப்படுத்தும் அடையாளமாகக் கருதப்படுகிறது.</p><p>

"காஸ்மோஸ் டையமண்ட்ஸ்" என்ற நகை நிறுவனம் இதனை வடிவமைத்து வழங்கியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/649a0728-2c79-4a3a-b28a-e8e13076e4cc/26-6a50b99008123.webp' /></p><p>தாமரை இந்தியாவின் தேசிய மலராகும். அது புனிதம், படைப்பு மற்றும் அறிவொளியை குறிக்கும் சின்னமாக இந்திய பாரம்பரியத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது.</p><p>

வடிவமைப்பில், தங்கக் கருவில் சுற்றி வைரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பாரம்பரியமாக லட்சுமி, பிரம்மா போன்ற தெய்வங்களின் ஆசனத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p>
விண்வெளி பயணத்தின் கடுமையான அதிர்வுகள் மற்றும் அழுத்தங்களை தாங்கும் வகையில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This is Cosmic Bloom 🪷<br><br>A lab-grown diamond shaped like a lotus - India’s flower, where gods are depicted, where Cosmos began.<br>One of the hardest substances on earth, shaped to survive the journey to space.<br><br>Meaning over beauty. Story over shine. 🚀 <a href="https://t.co/Vaj2D1ECKl">pic.twitter.com/Vaj2D1ECKl</a></p>&mdash; Cosmos Diamonds (@CosmosDiamonds) <a href="https://x.com/CosmosDiamonds/status/2074915497725030607?ref_src=twsrc%5Etfw">July 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்த வைரத் தாமரை அறிவியல் ஆய்வுக்கான பொருள் அல்ல. ஆனால், இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் புதுமையை பிரதிபலிக்கும் ஒரு அடையாளமாக விண்வெளிக்கு அனுப்பப்படுவது, நாட்டின் விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
</p><p>
விக்ரம்-1, இந்தியாவின் முதல் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் ஏவுகணை ரொக்கெட் ஆகும்.&nbsp;&nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f9a414-afdc-4a29-a81d-25ccefbf7e59/26-6a50bad1339d7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T08:51:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு அமோக ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-next-pm-andy-burnham-gets-more-support-1783671251"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-next-pm-andy-burnham-gets-more-support-1783671251</id>
            <summary type="text">பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் முறைப்படி துவங்கியுள்ள நிலையில், பிரதமர் பதவிக்கான போட்டியிலிருக்கும் ஒரே நபருக்கு அமோக ஆத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் முறைப்படி துவங்கியுள்ள நிலையில், பிரதமர் பதவிக்கான போட்டியிலிருக்கும் ஒரே நபருக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
</p><h3>
புதிய பிரதமருக்கு அமோக ஆதரவு</h3><p>

பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஆளுங்கட்சியின் தலைவரே பிரதமராக பொறுப்பேற்பது தற்போதைய நடைமுறையாக உள்ளது.
</p><p>
அவ்வகையில், ஆளும் லேபர் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் துவங்கியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/493685ee-ecf3-4d9c-9056-fe41f21cd5b2/26-6a50a9d475417.webp' /></p><p>
நேற்று, அதாவது, ஜூலை மாதம் 9ஆம் திகதி, லேபர் கட்சித் தலைவருக்கான நாமினேஷன் துவங்கியது.
</p><p>
லேபர் கட்சியின் தலைமைக்கான போட்டியில், கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயரான ஆன்டி பர்னாம் என்பவர் மட்டுமே இருக்கிறார்.&nbsp;</p><p></p><p>
அவருக்கு 322 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். ஆனால், அவருக்கு 323 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.</p><p>

இதற்கிடையில், லேபர் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பின் முதல் கட்ட வாக்கெடுப்பில் நேற்று தங்களால் வாக்களிக்க முடியவில்லை என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

தாங்கள் நாடாளுமன்றம் வந்ததும், ஆன்டி பர்னாமுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க இருப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.
</p><h3>
ஆன்டி பர்னாம் பிரதமராவது எப்போது?
</h3><p>
லேபர் கட்சித் தலைவரை நாமினேட் செய்வதற்கான காலகட்டம் ஜூலை 16ஆம் திகதி முடிவடையும் நிலையில், வேறு யாரும் ஆன்டி பர்னாமை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்றால், 17ஆம் திகதி நடைபெற இருக்கும் லேபர் கட்சி மாநாட்டில் அவர் லேபர் கட்சியின் தலைவராக பதவியேற்பார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9fd227c-9163-4e16-a3ff-df2bb59a2ce1/26-6a50a9d52321f.webp' /></p><p> 
லேபர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரே பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்பார் என்பதால், ஆன்டி பர்னாமை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், அவர் இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 20ஆம் திகதி மன்னர் சார்லசை சந்தித்து, முறைப்படி பிரதமராக பொறுப்பேற்றுக்கொள்வார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T08:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயல்பாட்டு மையத்தை துருக்கிக்கு மாற்றிய ஹமாஸ்: லண்டன் ஊடகம் முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hamas-moved-his-hq-activities-to-turkey-1783671300"></link>
            <id>https://news.lankasri.com/article/hamas-moved-his-hq-activities-to-turkey-1783671300</id>
            <summary type="text">ஹமாஸ் தன்னுடைய தலைமை செயல் அலுவலகத்தை துருக்கிக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை செயல் அலுவலகத்தை துருக்கிக்கு மாற்றிய ஹமாஸ்லண்டனை தளமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹமாஸ் தன்னுடைய தலைமை செயல் அலுவலகத்தை துருக்கிக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> தலைமை செயல் அலுவலகத்தை துருக்கிக்கு மாற்றிய ஹமாஸ்</h2><p>லண்டனை தளமாக கொண்ட அரபு செய்தி ஊடகமான “அஷ்மார்க் அல் அவ்ஸத்” வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில், ஹமாஸ் அமைப்பினர் தங்களது பெரும்பாலான தலைமை செயல் அலுவலகத்தை கத்தாரில் இருந்து துருக்கிக்கு மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக முக்கிய 3 நபர்களை மேற்கோள் காட்டி அரபு செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08116bfa-4f5b-4912-b6a9-08d20d01ac3f/26-6a50aa0637bcf.webp' /></p><p>இதன்படி, ஹமாஸ் அமைப்பினர் நடத்திய சமீபத்திய கூட்டங்கள் அனைத்தும் துருக்கியில் வைத்தே நடத்தியுள்ளது.</p><p></p><p> மேலும் ஹமாஸின் அரசியல் பிரிவு தேர்தல் கூட துருக்கி வைத்தே நடத்தப்பட்டுள்ளது.ஆனால் இதில் எந்தவொரு தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02fd730b-d1d9-4610-a9d2-8b0469be97e5/26-6a50aa06db180.webp' /></p><p> ஹமாஸ் அமைப்பின் இந்த நோக்கத்திற்கு முக்கிய காரணமாக, சிரியா அரசுடன் நெருக்கமான உறவை மேம்படுத்தவே அந்த நாட்டுக்கு அருகில் இருக்க ஹமாஸ் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.</p><p> ஹமாஸ் காசாவில் இருந்த தனது நிர்வாக அமைப்பை சமீபத்தில் கலைத்தை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-10T08:15:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதர்கள் மீது பயங்கர ரசாயன ஆயுதங்களை சோதனை செய்யும் புடின்: திடுக் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-tests-lethal-chemicals-on-humans-1783670647"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-tests-lethal-chemicals-on-humans-1783670647</id>
            <summary type="text">ரஷ்யா, பயங்கர ரசாயன ஆயுதங்களை மனிதர்கள் மீது பிரயோகித்து சோதித்து வருவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

மனிதர்கள் மீது சோதனை

ரஷ்யா, உக்ரைனில் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா, பயங்கர ரசாயன ஆயுதங்களை மனிதர்கள் மீது பிரயோகித்து சோதித்து வருவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
</p><h3>
மனிதர்கள் மீது சோதனை
</h3><p>
ரஷ்யா, உக்ரைனில் பிரயோகிப்பதற்காக, பயங்கர ரசாயன ஆயுதங்களை தயார் செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f62b274f-3922-4250-a3da-208fbbfcc7e7/26-6a50a778e6a05.webp' /></p><p>
ஒரே ஒரு சொட்டு ரசாயனம் கூட ஒரு மனிதனைக் கொல்லும் வகையிலான பயங்கர ரசாயனம் ஒன்றை ரஷ்யா உருவாக்கியுள்ள நிலையில், அதை பரிசோதித்துப் பார்ப்பதற்காக மனிதர்களை பயன்படுத்திக்கொள்வதாக ராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
ரஷ்ய அரசு, பண ஆசை காட்டி, ஏழைகளை இந்த பரிசோதனைகளுக்காக தன் வலையில் சிக்கவைத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T08:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலீசே எங்களை அழைத்து போன நாடகத்தை நம்பிட்டேன் - கரூரில் முதல்வர் விஜய் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-says-i-believed-police-drama-in-karur-1783670245"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-says-i-believed-police-drama-in-karur-1783670245</id>
            <summary type="text">கரூர் போலீசே எங்களை கூட்டிட்டு வந்த அந்த நாடகத்தை நம்பிட்டேன் நம்பிட்டேன் என முதல்வர் விஜய் பேசியுள்ளார். 

கரூரில் முதல்வர் விஜய் பேச்சு 

கரூருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூர் போலீசே எங்களை கூட்டிட்டு வந்த அந்த நாடகத்தை நம்பிட்டேன் நம்பிட்டேன் என முதல்வர் விஜய் பேசியுள்ளார். </p><h3>

கரூரில் முதல்வர் விஜய் பேச்சு </h3><p>

கரூருக்கு சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றியுள்ளார். </p><p>

இதில் பேசிய அவர், "எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் மனதளவில் சில வலிகள் மற்றும் காயங்களை மறக்க முடியாது. எனக்கு அதிக வலியையும் காயத்தையும் தந்தது கரூர் சம்பவம்தான்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74d6296d-0113-49e2-9563-fb1fff8a21d6/26-6a50a5e7ed9a8.webp' /></p><p>

மக்களை சந்திக்க தான் திருச்சி, அரியலூர், கரூர் என சென்றோம். அரியலூரில் கூட்டத்தை முடித்து பெரம்பூர் நோக்கி சென்ற போது, அங்கிருந்த போலீஸ் சார் கூட்டம் அதிகமாகிடுச்சு, வராதீங்க என சொன்னாங்க. </p><p>

போலீஸ் சொன்ன அதை கேட்டு தானே ஆகணும், பெரம்பூர் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மன வலியோட அப்படியே போயிட்டோம். அடுத்து பெரம்பூர் மக்கள் கிட்ட மன்னிப்பும் கேட்டோம். </p><p>

அடுத்து நாமக்கல் முடிச்சுட்டு கரூர் போகும் போது கரூர் போலீஸ் இங்க கூட்டம் அதிகமா இருக்குனு எங்களை அலெர்ட் பண்ணிருக்கலாம்ல, ஏதோ தப்பாக இருக்கு என போலீஸ் நினைத்தால் அந்த கூட்டத்தையே ரத்து செய்யலாம்.&nbsp;</p><p></p><p>

ஆனால் அதையெல்லாம் செய்யாமல் அந்த நெடுஞ்சாலையில் இருந்து போலீசே எங்களை கூட்டிட்டு வந்த அந்த நாடகம் இருக்கு பாருங்க. நம்பிட்டேன், முழுசா நம்பிட்டேன் அந்த கரூர் போலீசை.. </p><p>பேசும் போது நன்றி எல்லாம் சொன்னேன். எனக்கு தெரியாது இப்படி ஒரு நாடகம் நடக்கும்னு.. 

இதுக்கெல்லாம் யார் காரணம்? இதெல்லாம் யார் சொல்லி செஞ்சது? இப்படி பண்ணுங்க, அப்படி பண்ணுங்க. இப்படி நடந்தா அப்படி பண்ணுங்க யார் அந்த அறிவுறுத்தல் கொடுத்தது?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4260566-0c9a-4a9a-9c45-c5e8448fe9b1/26-6a50a5e7487bc.webp' /></p><p> 

நம்ம அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பினு குடும்ப உறவுகள இழந்து அந்த வலியோடு இருக்க என்ன ஏளனமா பேசுவீங்களா.. என் மேல பழிய தூக்கி போடுவீங்களா.. இப்படி நடந்திருச்சேனு அந்த வேதனையோடு, வீட்டில இருந்த என்ன, ஓடி ஒளிஞ்சிட்டானு சொல்றீங்களா. வாய் வாய்னு ஒன்னு இருந்தா என்ன வேணாலும் பேசுவீங்களா?
</p><p>
நம்ம எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது மக்களே... எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.</p><p>பணமா? ஜனமானு கேட்டா.. என் ஜனம்தான் எனக்கு முக்கியம். நான் சொன்னதை போல திமுகவால் சொல்ல முடியுமா..?
</p><p>
நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை இனி வரும் தலைமுறைக்கு தெரியப்படுத்த கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.</p><p> 

கரூர் கம்பெனி ஓனர் ஒருத்தரு,, எங்க இருக்காருன்னு தெரியாமா? ஓடு ஓடு ஓடு.. வர்றான் பாரு வேட்டைக்காரன்.. ஓடினே இருக்காரு.</p><p> 

இன்னொருத்தர் வெளிநாட்டில் போய் ஒளிந்து விட்டார். வெளிநாடுனு சொன்னதும் ஸ்டாலின் சார்னு நினைச்சிட போறிங்க.. எனக்கு எப்போதும் ஸ்டாலின் சார் மீது தனிப்பாசம் உண்டு. </p><p>

இது சிங்கப்பூருக்கு செக்அப்க்கு போனாருல அவரு. இன்னும் தோண்ட தோண்ட எத்தனை பேர் மாட்ட போறாங்களோ.." என பேசியுள்ளார்.<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KJaWIpJhndc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T07:57:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரூரில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வேலை தற்காலிகமே - நீதிமன்றம் சொல்வது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hc-says-govt-job-for-karur-victims-is-temporary-1783668110"></link>
            <id>https://news.lankasri.com/article/hc-says-govt-job-for-karur-victims-is-temporary-1783668110</id>
            <summary type="text">கரூர் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசுபணியே வழங்க வேண்டும் என நீதிபதிகள் இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளனர். 

அரசுப்பணி வழங்க எதிர்த்து வழக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூர் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசுபணியே வழங்க வேண்டும் என நீதிபதிகள் இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளனர். </p><h3>

அரசுப்பணி வழங்க எதிர்த்து வழக்கு </h3><p>

தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்று தனியார் ஆலைக்கு அடிக்கல் நாட்டுவது மக்கள் சந்திப்பு என என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள கரூர் சென்றுள்ளார். </p><p>

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1dab186-7352-48ef-81e6-74c904ea8101/26-6a509d903f452.webp' /></p><p>

இன்று நடைபெறும் நிகழ்வில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு முதல்வர் விஜய் அரசுப்பணிக்கான ஆணையை வழங்க உள்ளார்.</p><p> 

அரசுப்பணி வழங்க, நாம் தமிழர், திமுக, அமமுக, புதிய தமிழகம் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
</p><p>
அரசுப்பணி வழங்க தடை விதிக்கக்கோரிய வழக்கு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.&nbsp;</p><p></p><p> 

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பொருளாதார உதவி தேவைதானே? அரசு பணி வழங்குவதில் என்ன தவறு? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abf81134-fcfa-4b5f-b0e2-1cf319dbf29e/26-6a509d90e0f6d.webp' /></p><p> 

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பிலும் கட்சி சார்பிலும், நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசுப்பணி எதற்கு?</p><p> 

உச்சநீதிமன்றத்தில் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது அரசுப் பணி வழங்குவது சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்பாக அமையும்.</p><p>

எதிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளிலும், இவ்வாறு நடந்தால் அரசுப்பணி கோர வாய்ப்புள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் நடத்த கும்பகோணம் மகாமகம் நிகழ்வு, தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களுக்கு யாருக்கும் அரசுப்பணி வழங்கப்படவில்லை.
</p><p>
கருணை அடிப்படையில் பணி வழங்கும் விதிமுறைகள் எதுவும் இதில் பின்பற்றப்படவில்லை. இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்களுக்கு புதிய விதிகளை உருவாக்க வேண்டும். </p><p>

இவர்களுக்கு அரசுப் பணி வழங்கினால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்வோர், டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு முயற்சிக்கும் போட்டித் தேர்வர்களுக்கு
ஏமாற்றமாக அமையும்" என்ற வாதங்களை முன்வைத்தார். </p><h3>

தற்காலிக பணி நியமனம்</h3><p> 

வாதங்களை கேட்ட நீதிபதி, "முதல்வர் விஜய் தற்போது கரூர் பயணத்தில் இருப்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. பாதிக்கப்பட்டோருக்கு அரசுப் பணி வழங்கலாம். 

ஆனால் அந்த பணி நியமன ஆணை தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும். ஆனால், அந்த பணியின் நிரந்தரதன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது.</p><p>&nbsp; மேலும், டின்பிஎஸ்சியை எதிர் மனுதாரராக சேர்த்து வழக்கின் விசாரணையை ஜூலை 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T07:22:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் வெப்ப அலைக்கு மத்தியில் வேகமாய் பரவும் காட்டுத்தீ: இதுவரை 12 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-wildfire-grows-12-dead-1783668047"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-wildfire-grows-12-dead-1783668047</id>
            <summary type="text">ஸ்பெயினில் தீவிரமான வெப்ப அலைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். வேகமாக பரவும் காட்டுத்தீஸ்பெயினின் தெற்கு பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயினில் தீவிரமான வெப்ப அலைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> வேகமாக பரவும் காட்டுத்தீ</h2><p>ஸ்பெயினின் தெற்கு பகுதியில் நிலவி வரும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் அல்மேரியா(Almeria) மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 12 பேர் வரை உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> வியாழக்கிழமை மாலை பெடார்(Bedar) கிராமத்தில் தொடங்கிய காட்டுத்தீ சம்பவத்தில் முதலில் 6 பேர் வரை உயிரிழந்தனர்.</p><p> இவர்களில் சிலர் காட்டுத்தீயில் இருந்து தப்பிப்பதற்காக காரில் வெளியேற முயன்ற போது அதில் சிக்கி கொண்டு உயிரிழந்துள்ளனர்.</p><p> வெள்ளிக்கிழமை Los Gallardos பகுதியில் பரவி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த மேலும் 6 பேரின் உடலை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1046dd07-b11a-42b2-bd73-31fea459b5c1/26-6a509d50e61bc.webp' /></p><p></p><h2>மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>தீயை கட்டுக்குள் கொண்டு வர 150 தீயணைப்பு வீரர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நவீன தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் இணைந்து செயல்பட்டு வருகிறது.</p><p> மேலும் 150 ராணுவ அவசர கால படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>பொதுமக்கள் உயிர்களை பாதுகாக்கும் பொருட்டு அல்மோகாய்சர், புவென்டே டெல், அல்பாரிகொ, லாஸ் பினோஸ் மற்றும் லா செரீனா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T07:20:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் 27 வணிகக் கப்பல்களை தாக்கிய ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-attacks-27-ships-in-strait-of-hormuz-1783668043"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-attacks-27-ships-in-strait-of-hormuz-1783668043</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஈரான் படைகள் கடந்த மார்ச் 1 முதல் குறைந்தது 27 வணிகக் கப்பல்களை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஈரான் படைகள் கடந்த மார்ச் 1 முதல் குறைந்தது 27 வணிகக் கப்பல்களை தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதில் இந்தியக் கொடி ஏந்திய இரண்டு கப்பல்களும் அடங்கும்.
</p><p>
சமீபத்திய தாக்குதல்கள் அமெரிக்கா-ஈரான் இடையிலான தற்காலிக சமாதான ஒப்பந்தத்தை முறியடித்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a9689e9-bc4a-4722-aac7-88e5a1b894a4/26-6a509d4d3b2ae.webp' /></p><p>உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, சர்வதேச வர்த்தகத்திற்கும், எரிசக்தி விநியோகத்திற்கும் மிக முக்கியமான இடமாகும். இங்கு ஏற்படும் எந்தவொரு தாக்குதலும் உலகளாவிய பொருளாதாரத்தையும், எண்ணெய் விலையையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.</p><p>

இந்த சம்பவம் காரணமாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.</p><p> இந்தியா உட்பட பல நாடுகள் தங்களது கப்பல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

சர்வதேச சமூகம், ஈரான் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும், கடல்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.</p><p>

இந்த சம்பவம், மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T07:19:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் இன்று கனமழை வெளுக்கும்.., எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/heavy-rain-warning-in-tamilnadu-today-1783667714"></link>
            <id>https://news.lankasri.com/article/heavy-rain-warning-in-tamilnadu-today-1783667714</id>
            <summary type="text">கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வானிலை மையம் கூறுகையில்..,

சராசரி கடல் மட்டத்தில், த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
</p><h2>
வானிலை மையம் கூறுகையில்..,</h2><p>

சராசரி கடல் மட்டத்தில், தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. </p><p>

இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
</p><p>
குறிப்பாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் இன்று கனமழை பெய்யக்கூடும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f691690d-61db-4426-a815-302f1f8c6a47/26-6a509c04550bf.webp' /></p><p>அடுத்த 4 நாட்களுக்கு, இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும்.</p><p>

சென்னையை பொறுத்தவரையில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. </p><p>

மேலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும் மீனவர்களை எச்சரித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; &nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T07:15:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவிலேயே முதல் முறையாக... அனைவருக்கும் HPV தடுப்பூசி வழங்கும் சுவிட்சர்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-plans-to-hpv-vaccine-for-all-1783665149"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-plans-to-hpv-vaccine-for-all-1783665149</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்து, தன் நாட்டு மக்களில் 9 முதல் 45 வயது வரையுள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பாவிலேயே முதல் முறையாக சுவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்து, தன் நாட்டு மக்களில் 9 முதல் 45 வயது வரையுள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளது.
</p><p>
ஐரோப்பாவிலேயே முதல் முறையாக சுவிட்சர்லாந்து இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக சுவிஸ் ஊடகங்கள் கூறினாலும், உண்மையில் ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகள் இந்த தடுப்பூசியை வழங்கத் துவங்கிவிட்டன.
</p><h3>
HPV தடுப்பூசி என்பது என்ன?</h3><p>

HPV என்பது, ஹியூமன் பாப்பில்லோமா வைரஸ் (Human Papillomavirus) என்பதன் சுருக்கமாகும்.
</p><p>
இந்த HPV வைரஸ், உடல் ரீதியில் நெருக்கமான உறவு கொள்வோருக்கிடையே பரவக்கூடியதாகும். விடயம் என்னவென்றால், பெரும்பாலும் இந்த வைரஸ் தொற்று அறிகுறிகளை உருவாக்குவதில்லை என்பதால், தனக்கு இந்த தொற்று இருப்பது தெரியாமலே, சிலர் அதை மற்றவர்களுக்கு பரப்பிவிடும் அபாயம் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43c56d8b-f194-4403-b051-57fa05feebf3/26-6a5091ff0c5ca.webp' /></p><p>

இந்த HPV வைரஸ் குடும்பத்தில் பல வைரஸ்கள் உள்ளன. அவற்றில் சில வைரஸ்கள், இனப்பெருக்க உறுப்புகள் முதல், வாய், கழுத்து, தொண்டை, தலை ஆகிய உறுப்புகள் வரை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.&nbsp;</p><p></p><p>

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, இந்த தொண்டை, தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களால் ஆண்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகிவருகிறார்கள்.</p><p>

ஆண்டுதோறும், 1,500 பேருக்கு தலை மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. பாதிக்கப்படுவோரில் அதிகம் பேர் ஆண்கள்.
</p><p>
ஆகவே, சுவிட்சர்லாந்தில் வாழும் 9 முதல் 45 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் இந்த HPV தடுப்பூசியை வழங்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T06:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்முறையாக இங்கிலாந்திடம் T20 தொடரை இழந்த இந்தியா - மோசமான 5 சாதனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-lost-t20-series-vs-england-worst-records-1783664256"></link>
            <id>https://news.lankasri.com/article/india-lost-t20-series-vs-england-worst-records-1783664256</id>
            <summary type="text">இங்கிலாந்திடம் T20 தொடரை இழந்த இந்திய அணி, 5 மோசமான சாதனைகளை படைத்துள்ளது.

இங்கிலாந்திடம் T20 தொடரை இழந்த இந்தியா

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்திடம் T20 தொடரை இழந்த இந்திய அணி, 5 மோசமான சாதனைகளை படைத்துள்ளது.
</p><h3>
இங்கிலாந்திடம் T20 தொடரை இழந்த இந்தியா</h3><p>

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.&nbsp;</p><p></p><p>நேற்று பிரிஸ்டல் நகரில் உள்ள கவுன்டி மைதானத்தில் நடைபெற்ற 4வது டி20 போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.</p><p>

அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ee9dbd5-8947-4b16-9ea6-bdf4c4c51bd0/26-6a508e83815fa.webp' /></p><p>

அதிகபட்சமாக அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 49 பந்துகளில் 80 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
</p><p>
158 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 159 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1ecb9b7-9ac6-45c1-b36a-1f4d7c39ff64/26-6a508e822f6fc.webp' /></p><p>

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் ஹாரி புரூக், 35 பந்துகளில் 79 ஓட்டங்களும், பில் சால்ட் 42 பந்துகளில் 59 ஓட்டங்களும் குவித்தனர். </p><p>

இதன் மூலம், 37 பந்துகள் மீதம் வைத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><p>

முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2, 3 மற்றும் 4ஆவது போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி T20 தொடரை வென்றுள்ளது. </p><h3> 

மோசமான சாதனைகள் </h3><p>

2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இங்கிலாந்திடம் இருதரப்பு தொடரை இழந்துள்ளது. </p><p>

இரு தரப்பு தொடரில், இங்கிலாந்திடம் இந்தியா T20 தொடரை இழப்பது இதுவே முதல்முறை ஆகும். 2014 ஆம் ஆண்டில் ஒரே ஒரு T20 போட்டியில் தோற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e86ad6a-5ab3-4aff-a3bd-10c0ff824387/26-6a508e82cfe76.webp' /></p><p>

சமீபத்தில் அயர்லாந்திடம் தொடரை இழந்த இந்திய அணி, கடந்த 7 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 2 டி20 தொடர்களை இழந்த முதல் நிகழ்வு இதுவாகும்.</p><p> 

தொடர்ச்சியாக 2 தொடர்களை இழந்த இரண்டாவது இந்திய அணித்தலைவர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். 

முன்னதாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 2019 ஆம் ஆண்டில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் 1-2, 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.&nbsp;</p><p>அணித்தலைவராக அறிமுகமானதும் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் நாணய சுழற்சியில் வென்று விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். 

ஆனால் அதில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T06:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வழுக்கையிலும் முடி வளர இந்த ஒரு எண்ணெய் போதும்.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mustard-oil-hair-masks-for-hair-growth-in-tamil-1783664271"></link>
            <id>https://news.lankasri.com/article/mustard-oil-hair-masks-for-hair-growth-in-tamil-1783664271</id>
            <summary type="text">பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.</p><p>

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.</p><p>

அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><p>&nbsp;கடுகு எண்ணெயில் நிறைந்துள்ள ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் முடி வளர்ச்சியைத் தூண்டி, முடியை பளபளப்பாக மாற்றுகின்றன.</p><p></p><p>

</p><h3>1. தேவையான பொருட்கள் </h3><ul><li>

கடுகு எண்ணெய்- 1 கப் </li><li>
கறிவேப்பிலை- 2 கொத்து</li></ul><h3> 

எப்படி பயன்படுத்துவது?
</h3><p>
முதலில் ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை சேர்த்து சூடுபடுத்தி அதில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்கவைத்து பின் குளிர வைக்க வேண்டும்.</p><p> 

பின் அந்த எண்ணெயை வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3467cafb-c36f-495b-ab7f-52d59b569494/26-6a508e91d5c68.webp' /></p><p>அடுத்து இந்த எண்ணெயை உச்சந்தலை முதலில் முடியின் நுனி வரை தடவி ஆயில் மசாஜ் செய்யவும்.
</p><p>
பின்னர் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.</p><p>

இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.</p><h3>

2. தேவையான பொருட்கள்</h3><ul><li> 

கடுகு எண்ணெய்- 1 கப்</li><li> 
வெந்தயம்-&nbsp;2&nbsp;ஸ்பூன் </li></ul><h2> 

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் வெந்தய விதைகளை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து மறுநாள் அதை அரைத்துக் கொள்ள வேண்டும். </p><p>

பின் அத்துடன் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, உச்சந்தலையில் தடவி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.</p><p> </p><p></p><p>அடுத்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். </p><p>

இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் தலைமுடி வலுவடைந்து, புதிய முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T06:18:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு விவகாரம்: திட்டவட்டமாக மறுத்த உக்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-rejects-nord-stream-sabotage-allegation-1783663487"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-rejects-nord-stream-sabotage-allegation-1783663487</id>
            <summary type="text">நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பில் உக்ரைன் அரசுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.நோர்ட் ஸ்ட்ரீம் விவகாரம்
கடந்த 20...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பில் உக்ரைன் அரசுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><h2>நோர்ட் ஸ்ட்ரீம் விவகாரம்</h2><p>
கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு, ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 எரிவாயு குழாய்கள் சந்தேகத்திற்குரிய வகையில் வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டது.</p><p> இது ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு வழங்கும் முக்கிய வழித்தடமாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த வெடிப்பு சம்பவம் அரங்கேறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5febd74-ae51-469c-827b-f56921010961/26-6a508b80dcc79.webp' /></p><p> இந்த விவகாரத்தில் முன்னாள் உக்ரைனிய ராணுவ வீரர் செர்ஹி கே கடந்த ஆண்டு இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் கடந்த நவம்பர் மாதம் ஜேர்மனியிடம் ஒப்படைக்கப்பட்டார்.</p><p> ரஷ்யாவின் போருக்கான நிதி ஆதாரத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியாக சக உக்ரைனிய ராணுவ வீரர்களுடன் இணைந்து நோர்ட் ஸ்ட்ரீம் குழாயை வெடி வைத்து தகர்த்து இருப்பதாக ஜேர்மனி குற்றம்சாட்டியுள்ளது.</p><p></p><p> மேலும் இந்த செயலை உக்ரைனிய அரசு உத்தரவின் பேரில் இதனை செர்ஹி.கே செய்து இருக்கலாம் என்றும் ஜேர்மனி சந்தேகிக்கிறது, ஆனால் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.</p><h2> உக்ரைன் திட்டவட்டமாக மறுப்பு</h2><p>இந்நிலையில், நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பில் உக்ரைன் அரசுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை அந்நாட்டின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7969381-9e16-40bb-96e6-555edf001f0a/26-6a508b818e3d1.webp' /></p><p>இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், உக்ரைனுக்கு அரசுக்கு எந்தவொரு ஆதாரங்களும் கிடைக்கவில்லை, ஆனால் அதே சமயம் விசாரணை இன்னும் முழுமையடையவில்லை. ஆதாரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருவதாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p> மேலும் இதில் ஜேர்மனியுடன் இணைந்து செயல்பட கூட்டு விசாரணை குழுவை அமைக்க உக்ரைன் முன்வந்துள்ளது.</p><p> அத்துடன் ஜேர்மன் அதிகாரிகளுக்கு இது தொடர்பான விசாரணையில் முழு ஒத்துழைப்பு வழங்கவும் உக்ரைன் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-10T06:04:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.., 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-karur-visit-32-people-government-job-1783659821"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-karur-visit-32-people-government-job-1783659821</id>
            <summary type="text">முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இன்று கரூர் செல்லும் விஜய், 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குகிறார்.

கரூர் செல்லும் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இன்று கரூர் செல்லும் விஜய், 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குகிறார்.
</p><h2>
கரூர் செல்லும் முதல்வர் விஜய்
</h2><p>
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இன்று கரூர் செல்கிறார் விஜய்.
</p><p>
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
</p><p>
அந்த சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக கரூர் செல்லும் விஜய், சென்னை இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கரூர் செல்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ddb43b8-2422-4810-97d3-9ba7f089b8bf/26-6a507dd665ab2.webp' /></p><p>நண்பகல் 12 மணியளவில் வெண்ணமலை அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
</p><p>
இந்த நிகழ்ச்சிக்காக 5,000 பேருக்கு மட்டும் QR கோடு கொண்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
</p><h2>
அரசுப் பணி</h2><p>

நிகழ்ச்சிக்கு முன், கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதலமைச்சர் விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்.</p><p>

பின்னர் மக்கள் சந்திப்பை முடித்துவிட்டு கரூர் ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5d54362-ae18-4207-81eb-36635e142d80/26-6a507dd72f20c.webp' /></p><p>மாலை 3 மணியளவில் கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
</p><p>
மேலும், பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்ற 32 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் விஜய் வழங்குகிறார்.</p>]]></content>
            <updated>2026-07-10T05:40:23+00:00</updated>
        </entry>
    </feed>
