<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-14T07:16:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் 6 கோடி ரூபாய் வேலையை உதறிய நபர்: இப்போது என்ன சொல்கிறார் பாருங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-man-quits-6-cr-content-creation-job-1784012152"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-man-quits-6-cr-content-creation-job-1784012152</id>
            <summary type="text">உலக அளவில் பிரபலமான ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கிடைக்கும் அதிக சம்பளம் தரும் ஒரு வேலை, பலருக்கும் கனவு.

ஆனால், தன் மனதுக்குப் பிடித்த பாதைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக அளவில் பிரபலமான ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கிடைக்கும் அதிக சம்பளம் தரும் ஒரு வேலை, பலருக்கும் கனவு.
</p><p>
ஆனால், தன் மனதுக்குப் பிடித்த பாதையை தொடர்வதற்காக அத்தகைய வேலை ஒன்றை உதறினார் மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர் ஒருவர்.
</p><p>
இந்நிலையில், தான் செய்ததிலேயே அதுதான் முட்டாள்தனமாக செயல் என்று கூறி இப்போது வருந்துகிறார் அவர்!
</p><h3>
6 கோடி ரூபாய் வேலையை உதறிய நபர்</h3><p>

சுவிட்சர்லாந்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு 200,000 டொலர்கள் சம்பாதிக்கும் வேலையில் இருந்தார் கிறிஸ்டியன் ஹார்ம்ஸ்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f89c845d-83f3-4942-a904-4bf17792dce6/26-6a55dd7a5a15e.webp' /></p><p>

200,000 டொலர்கள் என்பது, இலங்கை மதிப்பில் 6,74,84,720.00 ரூபாய் ஆகும்.
</p><p>
தனது 26ஆவது வயதில் மைக்ரோசாஃப்ட் வேலையை விட்டு விட்டு, உள்ளடக்க உருவாக்கத் துறையில் (content creation) தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார் ஹார்ம்ஸ்.
</p><p>
உள்ளடக்கத்தை உருவாக்குவது, பிராண்டுகளுடன் பணியாற்றுவது மற்றும் இணையத்தில் வாய்ப்புகளைக் கண்டறிவது ஆகியவற்றில் கவனம் செலுத்திய நிலையிலும், பல மாத திட்டமிடலும் பரிசோதனைகளும் ஹார்ம்ஸ் எதிர்பார்த்த முடிவுகளைக் கொடுக்கவில்லை.&nbsp;</p><p>
தான் மைக்ரோசாஃப்ட் வேலையை விடுவது தொடர்பில் எடுத்த முடிவைப் பற்றி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ள ஹார்ம்ஸ், அந்த வேலையில் கிடைத்த சம்பளம், நிலைத்தன்மை மற்றும் அடையாளம் முதலான விடயங்களை எண்ணும்போது, மைக்ரோசாஃப்ட்டை விட்டு வெளியேறியதுதான், தான் செய்ததிலேயே மிகவும் முட்டாள்தனமான செயலாக இருக்கக்கூடும் என்று தான் இப்போது கருதுவதாக தெரிவித்துள்ளார்.</p><p>

<blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DZsiiCmzY_Z/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DZsiiCmzY_Z/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DZsiiCmzY_Z/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Christian Harms | Quit Corporate &amp; UGC (@charmsescapes)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
விடயம் என்னவென்றால், அவர் பேசுவதைப் பார்க்கும்போது, தான் எடுத்த முடிவு சரியானதா இல்லையா என்பது அவருக்கே புரியவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.</p><p>
இதற்கிடையில், அவரது கதையைப் படித்த பலரும், அவரை உறசாகப்படுத்துவது போல் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஒருவர், நீ நிச்சயம் அதை அடைந்துவிடுவாய் சகோதரா என்று கூற, மற்றொருவரோ, எனக்கு இது துணிச்சலானதாகத் தெரிகிறது என்கிறார்.
</p><p>
மற்றொருவர், சில நேரங்களில் இதுபோன்ற விடயங்கள் கடினமாகத்தான் இருக்கும். இருந்தாலும், உங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றி நீங்கள் துணிந்து இறங்கியது பாராட்டுக்குரியது என்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:56:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்தநாளை வைத்து தேர்வு செய்த லொட்டரி எண் - ரூ.78 கோடி வென்ற இந்தியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-man-won-78-cr-in-lottery-by-birthdate-1784011557"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-man-won-78-cr-in-lottery-by-birthdate-1784011557</id>
            <summary type="text">பிறந்தநாளை வைத்து லொட்டரி எண் தேர்வு செய்த இந்தியர் ரூ.78 கோடி வென்றுள்ளார்.

ரூ.78 கோடி லொட்டரி 

கேரளாவைச் சேர்ந்த 52 வயதான, சுனில் குமார் சதாசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிறந்தநாளை வைத்து லொட்டரி எண் தேர்வு செய்த இந்தியர் ரூ.78 கோடி வென்றுள்ளார்.
</p><h3>
ரூ.78 கோடி லொட்டரி </h3><p>

கேரளாவைச் சேர்ந்த 52 வயதான, சுனில் குமார் சதாசிவன் அபுதாபியில் பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநரான பணியாற்றி வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/378374f9-1ac7-45c2-b87a-bb1149ff61b1/26-6a55db272487a.webp' /></p><p>

சமீபத்தில் தன்னுடன் லொட்டரி விளையாடத் தொடங்கிய ஒரு நண்பருடன் சேர்ந்து டிக்கெட் வாங்கியதில் அவர்களுக்கு 100 திர்ஹாம் கிடைத்தது.
</p><p>
அந்த வெற்றியால் கிடைத்த நம்பிக்கையில், அடுத்த குலுக்கலுக்காக மற்றொரு டிக்கெட்டை வாங்கி, 30 மில்லியன் திர்ஹாம்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.78 கோடி) ஜாக்பாட்டை வென்றுள்ளார். </p><h3>

பிறந்தநாள் எண் </h3><p>

அந்த லொட்டரி எண்ணை தேர்வு செய்தது குறித்து பேசிய சுனில் குமார், "எனக்கு மிகவும் முக்கியமான தேதிகளை ஏன் பயன்படுத்தக்கூடாது என்று நினைத்தேன். என் மகளின் பிறந்தநாளில் தொடங்கி, பிறகு என்னுடையதைச் சேர்த்து, பின்னர் என் மனைவியின் பிறந்தநாளைச் சேர்த்தேன்" என தெரிவித்தார்.
</p><p>
மேலும், "குலுக்கலுக்குப் பிறகு இரவு 9.45 மணியளவில் என் கைபேசியைப் பார்த்தேன். நான் ஒரு சிறிய பரிசை மட்டுமே எதிர்பார்த்திருந்தேன். வெற்றி எண்களைப் பார்த்தபோது, ​​நான் முழு அதிர்ச்சியில் உறைந்து போனேன்.&nbsp;</p><p></p><p>

நான் கண்டதை என்னால் நம்ப முடியவில்லை, அதனால் மனைவியை அழைப்பதற்கு முன் அந்த டிக்கெட்டை நண்பரிடம் காட்டினேன்.

என் மகளுக்குக் கல்வி கற்பித்து, அவள் ஒரு மருத்துவராவதைப் பார்ப்பதே எனது மிகப்பெரிய கனவு. </p><p>என் மனைவிக்கு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதே அவளுடைய விருப்பமாக எப்போதும் இருந்து வந்துள்ளது. நாங்கள் இந்தத் தொகையை வென்றபோது, ​​'நாம் என்ன செய்வோம்? என்று அவள் கேட்டாள். </p><p>

நாங்கள் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அதனால் மற்றவர்களுக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நம்புகிறோம்.

பணம் கையில் கிடைத்தவுடன், முதலில் என் மகளுக்குப் பரிசு வாங்கச் செல்வேன். வீட்டில் உள்ள பழுதுபார்க்கும் பணிகளை முடிக்க வேண்டும்.</p><p>

நான் சிறு வயதிலிருந்தே உழைத்து வருகிறேன். இப்போது, ​​நான் சிறிது ஓய்வெடுக்கப் போகிறேன். எனக்குத் தெரிந்த சிலருக்கு வீடுகள் இல்லை, அவர்களுக்காக நான் வீடுகளைக் கட்டிக் கொடுக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:46:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 மாதங்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக சுற்றித்திரிந்த அமெரிக்கர்: நேபாள எல்லையில் சிறைப்பிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-man-caught-in-india-without-passport-and-visa-1784008500"></link>
            <id>https://news.lankasri.com/article/us-man-caught-in-india-without-passport-and-visa-1784008500</id>
            <summary type="text">நேபாள நாட்டின் எல்லைக்கு அருகே அமெரிக்க குடிமகன் ஒருவர் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி பிடிபட்டுள்ளார். பிடிபட்ட அமெரிக்க குடிமகன்இந்தியாவின் உத்தரப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள நாட்டின் எல்லைக்கு அருகே அமெரிக்க குடிமகன் ஒருவர் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி பிடிபட்டுள்ளார்.</p><h2> பிடிபட்ட அமெரிக்க குடிமகன்</h2><p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நேபாள நாட்டு எல்லைக்கு அருகில் சுற்றித்திரிந்த 36 வயது அமெரிக்க குடிமகன் ஜோர்டன் பிரவுன்(Jordan Brown)&nbsp;என்ற நபரை “சஷாஸ்த்ர சீமா பல்” (SSB)படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.</p><p> அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஜோர்டன் பிரவுன் ஞாயிற்றுக்கிழமை சோனெளலி காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட நேபாள் எல்லையின் 516 தூண் அருகே SSB-யின் 22வது படைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">अमेरिकी नागरिक Jordan Brown को भारत-नेपाल सीमा पर बिना वैध Travel Documents के नेपाल में घुसने की कोशिश करते हुए गिरफ्तार किया गया। उसने दावा किया कि वह U.S. Navy और Special Forces में काम कर चुका है।पहले भी भारत-म्यांमार सीमा से सटे इलाकों में कई विदेशी नागरिकों को पकड़ा गया है <a href="https://t.co/2z91iXoJHY">pic.twitter.com/2z91iXoJHY</a></p>&mdash; Bimal Sharma (@BimalSharm50754) <a href="https://x.com/BimalSharm50754/status/2076844718915485960?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> பாஸ்போர்ட், விசா போன்ற எந்தவொரு முறையான ஆவணங்களும் அவரிடம் இல்லாத நிலையில், கைது நடவடிக்கையின் போது ஜோர்டன் பிரவுன் தப்பிக்க முயற்சி செய்ததாகவும், இருப்பினும் அவர் சிறைபிடிக்கப்பட்டு உத்தரப் பிரதேச பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2> சட்டவிரோதமாக இந்தியாவிற்கு நுழைந்த பிரவுன்</h2><p>பிரவுனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், அவர் சுற்றுலா விசாவில் தாய்லாந்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை தவறவிட்டுள்ளார்.</p><p> பின்னர் கடல் வழியாக இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, பின்னர் நவம்பர் 2ம் திகதி 2025ம் ஆண்டு கடல் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்.</p><p> கிட்டத்தட்ட 6 மாதங்களாக எந்தவொரு முறையான ஆவணங்களும் இல்லாமல் அவர் இந்தியாவில் தங்கியிருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/000e0280-2fd6-49fb-84ad-07c0f3b4ae89/26-6a55cf3620f61.webp' /></p><p> கோவாலில் இருந்து பெங்களூர் சென்று பின்னர் சோனெளலி எல்லையில் பகுதி வழியாக நேபாளத்திற்குள் நுழைய முயன்ற போது பிடிபட்டுள்ளார்.</p><p> அவரிடம் இருந்து 31,460 ரூபாய் பணமும், இரண்டு தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p> ஜோர்டன் பிரவுன் மீது தற்போது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 21/23 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T05:55:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆட்சிக்கு வரும் முன்பே புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்துள்ள பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-backs-controversial-asylum-bill-1784007064"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-backs-controversial-asylum-bill-1784007064</id>
            <summary type="text">பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதாவுக்கு, பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் ஆன்டி பர்னாம் தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதாவுக்கு, பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் ஆன்டி பர்னாம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
</p><h3>
பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர்
</h3><p>
பிரித்தானிய அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
</p><p>
அதாவது, தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று பிரித்தானியாவின் பிரதமரானார், சர் கெய்ர் ஸ்டார்மர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/881ba8ce-c269-43c3-bfce-9b0b48a5e00e/26-6a55c999cd81b.webp' /></p><p>
ஆனால், அவர் புலம்பெயர்தலை போதுமான அளவுக்கு கட்டுப்படுத்தவில்லை என கருத்து உருவாகவே, அதை பயன்படுத்திக்கொண்டு அவரது பதவியை காலி செய்ய அவரது கட்சிக்குள்ளேயே சிலர் தயாரானார்கள்.</p><p>

அதன்படி, அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய, அவரது இருக்கையில் அமர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளார் ஆன்டி பர்னாம் என்னும் நபர்.&nbsp;</p><p></p><p>
விடயம் என்னவென்றால், அவருக்கு லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அமோக ஆதரவு உள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/984505ed-d4f9-4979-bc86-60712bbb3a49/26-6a55cbb34d6f5.webp' /></p><p>இந்நிலையில், தன் பங்குக்கு தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, புதிய பிரதமர் பதவியேற்கும் முன்பே, அவசர அவசரமாக புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதா ஒன்றை முன்வைத்துள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்!</p><p>
புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதா என அழைக்கப்பட்டாலும், அது புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்தக்கூடிய வகையிலான ஒரு மசோதா ஆகும்.&nbsp;</p><p>

அகதி நிலை வழங்கப்படுவோருக்கான பாதுகாப்பு காலகட்டத்தைக் குறைத்தல், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அரசு வழங்கிய நிதியை திருப்பிச் செலுத்த வைத்தல், குடியமர காத்திருக்கும் காலகட்டம் நீட்டிப்பு, ஆங்கில மொழிப்புலமையின் அவசியம் என பல கடுமையான விதிகள் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
</p><h3>
ஆட்சிக்கு வரும் முன்பே...
</h3><p>
இந்நிலையில், ஷபானா முன்வைத்த புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதாவுக்கு ஆன்டி பர்னாம் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.</p><p>
நேற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழவையில் ஷபானா முன்வைத்த புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 264 பேரும், எதிராக 90 பேரும் வாக்களிக்க, மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
ஆக, முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே, ஆன்டி பர்னாமும், புலம்பெயர்தல் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது தெளிவாகியுள்ளது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T05:40:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த 100க்கும் அதிகமான மருத்துவர்கள் பணியிடை நீக்கம்: துருக்கி அரசு அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkey-suspended-100-doctors-for-caesarean-treatm-1784002344"></link>
            <id>https://news.lankasri.com/article/turkey-suspended-100-doctors-for-caesarean-treatm-1784002344</id>
            <summary type="text">துருக்கியில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் பணிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>துருக்கியில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2> மருத்துவர்கள் பணியிடை நீக்கம்</h2><p>துருக்கியில் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சைக்கான முறையான காரணங்கள் ஏதுவும் இல்லாமல் அதிகமான மகப்பேறு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இதன்படி, சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அபராதம், கட்டாய மறு பயிற்சி மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fbbaf5c-b257-4774-9b4a-7b01f7b23e40/26-6a55b729e1654.webp' /></p><p> கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனியார் மருத்துவமனைகளில் எந்தவொரு முறையான காரணங்கள் இன்றி மகப்பேறு அறுவை சிகிச்சை செய்வதற்கு தடை விதித்து புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p> இந்நிலையில் தான் துருக்கிய அரசின் இந்த சமீபத்திய உத்தரவானது வெளியாகியுள்ளது.</p><p> துருக்கி அரசின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம், 2023ம் ஆண்டு வெளியான தரவுகளின் படி, துருக்கி தான் மகப்பேறு அறுவை சிகிச்சையின் விகிதங்களில் அதிகமாக இருந்தது.</p><p></p><p> ஒவ்வொரு 1000 பிரசவங்களில் 615 அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாட்டில் அறுவை சிகிச்சை எண்ணிக்கையை குறைக்கும் விதமாக அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98ce6c2e-4275-48f1-b75c-9adecc8cddea/26-6a55b72a9837d.webp' /></p><h2>மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு</h2><p>இந்நிலையில் துருக்கிய அரசின் மறு பயிற்சி உத்தரவுக்கு அந்நாட்டு மருத்துவ சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.</p><p> மேலும், சுகப் பிரசவத்திற்கு 12 மணி நேரம் வரை ஆகும் நிலையில், அறுவை சிகிச்சைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.</p><p> அத்துடன் பிரசவ கால சிக்கல்கள் மற்றும் சட்ட பிரச்சினைகளில் இருந்து தவிர்க்கவே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முறைகளை தேர்ந்தெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-14T04:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளின் பழிக்குப் பழி தாக்குதல்: சவுதி சர்வதேச விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-attacked-saudi-international-airport-1784000490"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-attacked-saudi-international-airport-1784000490</id>
            <summary type="text">சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் விமான நிலையம் மீது தாக்குதல்
சமீபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> ஏமன் விமான நிலையம் மீது தாக்குதல்</h2><p>
சமீபத்தில் ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரில் அமைந்துள்ள சனா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p> ஈரானிய விமானம் ஒன்று சனா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்ததை அடுத்து தாக்குதல் நடத்தியதாக ஏமன் அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து அந்த விமானம் ஹுதைதா விமான நிலையத்தில் தரையிறங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3fc8cf-fcb5-4153-b3ee-72dd1466baf5/26-6a55afebd2bb7.webp' /></p><p>ஆனால் இந்த தாக்குதலை சவுதி அரேபியா நடத்தியதாக ஹவுதி அமைப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது.</p><p></p><h2> ஹவுதிகளின் பழிக்குப் பழி தாக்குதல்</h2><p>இந்நிலையில், சனா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிக்குப் பழி வாங்கும் விதமாக சவுதியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹவுதி படையினர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.</p><p> கடந்த 2022ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த போர்நிறுத்த உடன்படிக்கையின் பிறகு, சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b522ae6c-02c6-498b-b7fa-6f27d90640aa/26-6a55afec82b64.webp' /></p><p> இந்த தாக்குதலை ஹவுதிகளின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>டெலிகிராமில் இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், சனா விமான நிலையம் மீதான முற்றுகை நீங்கும் வரை, சவுதி அரேபியாவின் வான்வெளியை சர்வதேச சிவில் விமானங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.</p><p> இதனிடையே ஹவுதிகள் நடத்திய தாக்குதலில், அப்ஹா சர்வதேச விமான நிலையத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T03:41:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை காலம்! 50 ஆண்டுகால மைல்கல் கடந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/record-broken-heatwave-in-uk-after-50-years-1783943559"></link>
            <id>https://news.lankasri.com/article/record-broken-heatwave-in-uk-after-50-years-1783943559</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வரலாற்றிலேயே மிகவும் அதிக வெப்பநிலை கொண்ட காலமாக பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.50 ஆண்டுகளுக்கு முன்பு

1976ஆம் ஆண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வரலாற்றிலேயே மிகவும் அதிக வெப்பநிலை கொண்ட காலமாக பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>50 ஆண்டுகளுக்கு முன்பு</h2><p>

1976ஆம் ஆண்டு பிரித்தானியாவின் வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க கோடைக்காலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14f786f4-b910-4713-bee9-26098f2b1088/26-6a54d2c5283c7.webp' />&nbsp;</p><p></p><p>

அந்த ஆண்டில், அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு 14 நாட்கள் தொடர்ச்சியாக 30 டிகிரி செல்சியஸுக்கும் மேல் இருந்தது.</p><p>


ஆனால், தற்போது 15 நாட்களைக் கடந்து 50 ஆண்டுகால மைல்கல்லை பிரித்தானியா தாண்டியள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

the University of Reading-யின் வானியல் ஆய்வு மையம் 1908ஆம் ஆண்டு முதல் வெப்பநிலை குறித்த தரவுகளை பதிவு செய்து வருகிறது. </p><h2> 

முக்கியமான விடயத்தை நமக்கு உணர்த்துகிறது</h2><p>இதுகுறித்து The University of Reading-ஐ சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ சார்ல்டன்-பெரெஸ் கூறுகையில்,

"அரை நூற்றாண்டு காலமாக, ஒவ்வொரு வெப்பமான கோடைக்காலத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவுகோலாக 1976ஆம் ஆண்டு விளங்கியது. இப்போது அந்த இடத்தை 2026ஆம் ஆண்டு பிடித்துள்ளது.</p><p>1976யில் பதிவான 14 நாட்களை முறியடித்து, இந்த ஆண்டில் இதுவரை 30 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம் நிலவிய 15 நாட்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம்; மேலும் கோடைக்காலம் முடிவடைய இன்னும் ஆறு வாரங்கள் உள்ளன. இது ஒரு முக்கியமான விடயத்தை நமக்கு உணர்த்துகிறது" என்றார்.
</p><p>
 
இந்த வாரமும் வெப்பமான வானிலை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில நாட்களில் புதிய உச்சபட்ச சாதனை ஒன்று பதிவாக வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றன.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5b44a5-8724-459c-a94d-e93b1852c645/26-6a54d5dda7c81.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T03:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்றாவது இரவு தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா... ஹார்முஸ் முற்றுகை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/third-night-of-strikes-on-iran-1783988918"></link>
            <id>https://news.lankasri.com/article/third-night-of-strikes-on-iran-1783988918</id>
            <summary type="text">ஈரான் மீது கடல்வழி முற்றுகையை மீண்டும் அமுல்படுத்தப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே, அமெரிக்கா தொடர்ந்து மூன்றாவது இரவாக அந்நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது கடல்வழி முற்றுகையை மீண்டும் அமுல்படுத்தப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே, அமெரிக்கா தொடர்ந்து மூன்றாவது இரவாக அந்நாட்டின் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><h2>கடுமையாகத் தாக்குவோம்</h2><p>
</p><p>அத்துடன், ஈரான் அறிவித்திருந்த கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை, இனி அமெரிக்கா முன்னெடுத்து, பாதுகாப்பான பயணத்திற்காகக் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b51054d1-41c4-41d3-b660-d3cf18fd55aa/26-6a55836816e80.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், தற்போது முன்னெடுக்கப்படும் இந்தத் தாக்குதலானது ஈரானியப் படைகளுக்குக் கடுமையான இழப்பை ஏற்படுத்தும் என்றும் ஹார்முஸ் நீரிணையில் அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் அவர்களின் திறனைக் குறைக்கும் என்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, இன்று இரவு அவர்களை மிகக் கடுமையாகத் தாக்குவோம், நாளையும் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம், அதைப்பற்றி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
</p><p>பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான போருக்கு முன்னதாக இருந்தது போலவே, ஹார்முஸ் நீரிணை எவ்விதக் கட்டணமும் இன்றி அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா இதுவரை கூறி வந்துள்ளது.</p><p></p><p> </p><p>அமெரிக்காவோ அல்லது ஈரானோ கட்டணம் வசூலிக்க முயற்சிப்பது, கப்பல் போக்குவரத்து சுதந்திரம் குறித்த உலகளாவிய நெறிமுறைகளை மீறுவதோடு, அப்பிராந்தியத்தையும் தாண்டி மேலும் பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. </p><p>இந்த நிலையில், ஈரான் மீது மீண்டும் தாக்குதலை அமெரிக்கா தொடங்கியதை அடுத்து, சர்வதேச அளவுகோலாகக் கருதப்படும் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை திங்களன்று 7.8 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 81.92 டொலராக இருந்தது; இருப்பினும், இது போரின் உச்சக்கட்டத்தில் எட்டப்பட்ட 120 டொலர் விலையை விட மிகவும் குறைவாகவே உள்ளது.
</p><p>முன்னதாக திங்களன்று, ஹார்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகள் மீதும் 20 சதவீத சுங்க வரியை அமெரிக்கா கோரும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.</p><h2>தடை இருக்காது</h2><p> </p><p>மட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ஹார்முஸ் நீரிணையின் பாதுகாவலராக அமெரிக்கா அறியப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இஸ்ரேல் ஆதரவுடன் ஈரானுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து, ​​அடிக்கடி வெற்றி பெற்றதாகக் கூறுவது உட்பட, ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள ஈரான் கெஞ்சுவதாகவும் ட்ரம்ப் பலவிதமான தற்பெருமைகளையும் அச்சுறுத்தல்களையும் முன்வைத்துள்ளார்; அடிப்படையில், இவை எதும் உண்மை அல்ல என்பதும் வெறும் வாய்ச்சவடால் என்றே தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b30ce64e-ebac-4772-97b3-a0d96df0d223/26-6a558368da076.webp' /></p><p> </p><p>இதனிடையே, அமெரிக்கக் கடற்படையின் தலைமையிலான கூட்டு கடல்சார் தகவல் மையம் திங்கள்கிழமை மாலை வெளியிட்ட அறிவிப்பில், ஈரான் மீதான முற்றுகையை, அனைத்துத் துறைமுகங்கள், எண்ணெய் முனையங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் அமெரிக்கா அமுல்படுத்தத் தொடங்கும் என்று தெரிவித்தது. </p><p>மட்டுமின்றி, ஈரான் அல்லாத இடங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் ஹார்முஸ் நீரிணை வழியான நடுநிலையான போக்குவரத்திற்குத் தடை இருக்காது என்றும் அந்த மையம் தெரிவித்தது. ஆனால், நடைமுறையில் அமெரிக்காவின் கடற்படை இதைச் செய்வது எவ்வளவு எளிதாக இருக்கும் என்பது தெளிவாக இல்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T02:34:56+00:00</updated>
        </entry>
    </feed>
