<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-04T05:19:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைக் காப்பாற்றினேன்... ட்ரம்ப் மீண்டும் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-claims-he-saved-the-uk-1788497647"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-claims-he-saved-the-uk-1788497647</id>
            <summary type="text">Donald Trump claims he saved the UK from a nuclear attack: அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைத் தாம் காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப்.ஈரான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Donald Trump claims he saved the UK from a nuclear attack: அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைத் தாம் காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப்.</p><p>ஈரான் மீது போர் தொடுத்ததன் மூலம் பிரித்தானியாவை அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><h2>ஒரு மோசமான நபர்</h2><p>
</p><p>இந்தப் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக களமிறங்க மறுத்ததற்காக பிரித்தானியா மீதான தனது விமர்சனத்தையும் அவர் மீண்டும் முன்வைத்துள்ளார்.</p><p>
பிரித்தானியா ஒரு திருப்புமுனையை எட்டி வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், புலம்பெயர் மக்களால் லண்டனில் மக்கள் பயணப்பட முடியாத பகுதிகள் உருவாகியுள்ளதாகக் கூறி, அந்நகரத்தின் மீது மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea7c964b-5a1e-4538-a199-3e614c607be0/26-6a9a4ef158cc5.webp' /></p><p> </p><p>வியாழக்கிழமையன்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, ​​லண்டன் மேயர் சாதிக் கானை ஒரு மோசமான நபர்&nbsp;என வம்பிழுத்த ஜனாதிபதி ட்ரம்ப், அவருடனான தனது நீண்டகாலப் பகையை மீண்டும் கிளறினார். </p><p>ஆனால் ட்ரம்பால் எங்கள் வெற்றியைப் புரிந்துகொள்ளவே முடியாது என்று மேயர் சாதிக் கானின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஈரானுடனானப் போரை
நியாயப்படுத்திய ஜனாதிபதி ட்ரம்ப், பிரித்தானியாவையும் ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றி வருகிறேன் என்றார்.</p><p> ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அவர்கள் அமெரிக்கா மீது பயன்படுத்துவதை விட ஐரோப்பா மீதே பயன்படுத்த வாய்ப்பு என்றும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
</p><p>மத்திய கிழக்கில் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில், ட்ரம்ப் பிரித்தானியாவைக் காப்பாற்றவும் வேண்டியே போரை முன்னெடுத்து வந்ததாகத் தெரிவித்தார்.
</p><p>அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, ஹார்முஸ் நீரிணை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தது. </p><p>ஆனால், இஸ்ரேல் அழுத்தத்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னர், அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கியது. தற்போது அந்த நீரிணையை மீட்பதற்காக ட்ரம்ப் போராடி வருகிறார்.</p><h2>போர் முடிந்துவிட்டதாக</h2><p> </p><p>வளைகுடாப் பாதையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்கியுள்ள இந்த இடையூறு, பிரித்தானியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பெட்ரோல் விலையிலும் கடும் உயர்வை உருவாக்கியுள்ளது. </p><p>இதனிடையே, GB News ஊடகம் நடத்திய நேர்காணளில், மறந்துவிடாதீர்கள், உங்கள் எண்ணெயில் பெரும் பகுதியை நீங்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகவே பெறுகிறீர்கள்; ஆனால் அமெரிக்காவுக்கு உதவ நீங்கள் மறுத்து விட்டீர்கள் என்று ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe41ad5a-461a-4cc8-b098-72b48687828b/26-6a9a4ef20d525.webp' /></p><p> </p><p>ஈரான் உடனானப் போர் முடிந்துவிட்டதாக அறிவிப்பதா என்பது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி தனது மூத்த உதவியாளர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் கசிந்துள்ள நிலையிலேயே, பிரித்தானியா தமக்கு உதவ முன்வரவில்லை என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பது, இறுதியில் அந்த அரசாங்கம் தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிடவோ அல்லது வீழ்ச்சியடையவோ கட்டாயப்படுத்தும் என்று தான் நம்புவதாக ட்ரம்ப் தனது உதவியாளர்களிடம் கூறியுள்ளார் என்றே தெரிய வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T04:52:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல நாட்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைச் சேமிக்க பிரித்தானியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brits-warned-stock-up-supplies-1788492519"></link>
            <id>https://news.lankasri.com/article/brits-warned-stock-up-supplies-1788492519</id>
            <summary type="text">Brits warned to stock up on days of supplies: எல் நினோ தொடர்பில், பல நாட்களுக்குத் தேவையான பொருட்களைச் சேமித்து வைக்குமாறு பிரித்தானிய மக்கள் எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Brits warned to stock up on days of supplies: எல் நினோ தொடர்பில், பல நாட்களுக்குத் தேவையான பொருட்களைச் சேமித்து வைக்குமாறு பிரித்தானிய மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். </p><p>
மிகப்பெரிய எல் நினோ வரவிருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ள நிலையில், சாத்தியமான தேசிய அவசரநிலைகளுக்குத் தயாராகவும், அத்தியாவசியப் பொருட்களைச் சேத்து வைக்கவும் பிரித்தானிய மக்களை அமைச்சர் ஒருவர் எச்சரித்துள்ளார்.</p><h2>இதுவரை கண்டிராத</h2><p>
</p><p>காலநிலை தொடர்பான பேரிடர் ஏற்பட்டால், சில நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரை இருப்பு வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>இந்தக் கோடைக்காலத்தில் மட்டும் ஐந்து வெப்ப அலைகளை எதிர்கொண்ட நிலையில், பிரித்தானியா கடுமையான குளிர்காலத்தைச் சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேம் ஏஞ்சலா ஈகிள் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faca6fa0-56ec-4fe6-9012-39a8547960e9/26-6a9a3ae950206.webp' /></p><p> </p><p>மேலும், இதுவரை காணப்பட்டதிலேயே மிகப்பெரிய 'எல் நினோ' நிகழ்வை மக்கள் எதிர்கொள்ளவிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதனை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.</p><p>
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ், உலகம் இதுவரை கண்டிராத ஒரு சூழலில் இருப்பதாகக் கூறியதோடு, 'எல் நினோ' நிகழ்வு நம் கண்முன்னே மிகத் தீவிரமடைந்து வருவதாகவும் எச்சரித்ததைத் தொடர்ந்து பிரித்தானிய மக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p> </p><p>உருவாகி வரும் வானிலை மாற்றங்களுக்கு மத்தியில், பிரித்தானியாவைத் தாக்கக்கூடிய சாத்தியமான சுற்றுச்சூழல் அவசரநிலைகளுக்குத் தயாராக இருக்குமாறும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மக்களைக் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுவரை காணப்பட்டதிலேயே மிகப்பெரிய 'எல் நினோ' நிகழ்வை நாம் எதிர்கொள்ளவிருக்கிறோம்; இது நம் நாட்டில் கோடைக்காலங்களில் வறட்சியையும், குளிர்காலங்களில் அதிக மழையையும், அத்துடன் மிகத் தீவிரமான புயல்களையும் உருவாக்கலாம் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டேம் ஏஞ்சலா, </p><p>இது ஆசியாவில் வெள்ளப்பெருக்கின் மூலம் இன்னும் அதிக சேதத்தை ஏற்படுத்தும்; எனவே, நாம் இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன் என்றார். </p><p>மேலும், அவசரகால சேவையினர் உங்களை வந்தடைவதற்கு முன், சிறிது காலத்திற்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய உணவை நீங்கள் சேமித்து வைத்திருந்தால், அதைச் செய்யாதவர்களை விட நீங்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருப்பீர்கள் என்றார்.
</p><p>வெப்பமண்டல கிழக்கு பசிபிக் பகுதியில் கடல் நீர் வெப்பநிலை சராசரியை விட 0.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக உயரும்போது 'எல் நினோ' (El Nino) நிலை அறிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48915053-c72f-4ccb-bd51-87d5e6ed6b57/26-6a9a3aea04337.webp' /></p><p> </p><p>சுமார் 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த வானிலை அமைப்பு, உலகளாவிய மழைப்பொழிவு முறைகள் மற்றும் சராசரி வெப்பநிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. </p><p>பசிபிக் பெருங்கடலில் வழக்கமாக கிழக்கிலிருந்து மேற்காக வீசும் காற்று வலுவிழக்கவோ அல்லது நின்றுவிடவோ கூடும்; இதனால் வெப்பமான நீர் கிழக்கு நோக்கி நகர முடிகிறது. பின்னர், இந்த வெப்பம் கடலிலிருந்து வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்பட்டு, 0.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுக்கும். </p><p>எல் நினோ நிகழ்வால் ஏற்படும் வெப்பம் ஏற்கனவே பல்வேறு பகுதிகளைப் பாதித்துள்ளது; இதன்காரணமாக, இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை சராசரிக்கும் குறைவாகப் பதிவாகியுள்ளதுடன், ஜூலை மாத நடுப்பகுதி முதல் இந்தோனேசியாவின் சில பகுதிகளில் காட்டுத்தீயும் எரிந்து வருகிறது.</p><p> உருவாகியுள்ள எல் நினோ நிகழ்வு 2027-ஆம் ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்றும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்துடன் இணைந்து, அடுத்த ஆண்டு இதுவரை பதிவானதிலேயே மிக வெப்பமான ஆண்டாக அமைவதற்கு மிக அதிக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T03:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கத்தை வாங்கி தொடர்ந்து சேமிக்கும் சீனா., விற்கும் நிலையில் ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-leads-global-gold-buying-in-july-1788476098"></link>
            <id>https://news.lankasri.com/article/china-leads-global-gold-buying-in-july-1788476098</id>
            <summary type="text">China leads global gold buying in July: சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி கையிருப்பை அதிகரித்துவருகிறது.

 சீன&amp;nbsp;மத்திய வங்கிஉலகின் பல மத்திய வங்கிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>China leads global gold buying in July: சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி கையிருப்பை அதிகரித்துவருகிறது.
</p><h2>
 சீன&nbsp;மத்திய வங்கி</h2><p>உலகின் பல மத்திய வங்கிகள், குறிப்பாக சீனாவின் People’s Bank of China (PBoC), ஜூலை மாதத்திலும் தொடர்ந்து தங்கத்தை வாங்கியுள்ளதாக World Gold Council (WGC) தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ce3ee1a-9169-4634-9300-9bf9454d0fec/26-6a99fac3bc987.webp' /></p><h2>&nbsp;20 டன் தங்கம்</h2><p>ஜூலையில் மொத்தமாக 23 டன் தங்கம் வாங்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. அதில் சீனா மட்டும் 20 டன் தங்கம் வாங்கியுள்ளது.
</p><p>
மே 2026 முதல் சீனாவின் தங்க வாங்கும் நடவடிக்கை வேகமடைந்துள்ளது. தொடர்ந்து 21 மாதங்களாக சீனா தங்கத்தை தனது கையிருப்பில் சேர்த்துக் கொண்டிருக்கிறது.
</p><p>
தற்போது, சீனாவின் தங்க கையிருப்பு 2,366 டன்களாக உயர்ந்துள்ளது. இது உலகளவில் ஆறாவது பெரிய கையிருப்பு ஆகும்.</p><p></p><h2>மற்ற நாடுகள்</h2><p>

போலந்து 8 டன் தங்கம் வாங்கி, இந்த ஆண்டில் மொத்தமாக 90 டன் சேர்த்துள்ளது. போலந்து தனது இலக்கான 700 டன் கையிருப்பை அடைய முயற்சிக்கிறது.
</p><p>
மற்ற நாடுகளில், கசகஸ்தான், மலேசியா, போலிவியா ஆகியவை தலா 1 டன் தங்கம் வாங்கியுள்ளன. கசகஸ்தான் தனது மொத்த கையிருப்பில் 75 சதவீதம் தங்கமாக வைத்துள்ளது.
</p><p></p><h2>தொடர்ந்து தங்கத்தை விற்பனை செய்து வரும் ரஷ்யா </h2><p>ஆனால், ரஷ்யா தொடர்ந்து தங்கத்தை விற்பனை செய்து வருகிறது. ஜூலையில் 6 டன் தங்கத்தை விற்றுள்ளது. இதுவரை 2026-இல் 50 டன் தங்கத்தை விற்றுள்ளது. ரஷ்யாவின் மொத்த கையிருப்பு 2,277 டன்களாக குறைந்துள்ளது. </p><p>துருக்கி மற்றும் உஸ்பெகிஸ்தான் தலா 1 டன் தங்கத்தை விற்றுள்ளன.

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் தங்க சந்தையை பாதித்துள்ளன. </p><p>2024 முதல் மத்திய வங்கிகளின் தங்க வாங்குதல் தங்க விலையை உயர்த்தியது. ஆனால், ஈரான் போருக்குப் பிறகு தங்கத்தின் விலை 20 சதவீதம் குறைந்துள்ளது.
</p><p>
ஜூலை மாத இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,444 டொலர் விலையில் விற்பனையாகியது. அமெரிக்கா-ஈரான் மோதல், வட்டி விகித உயர்வு, மற்றும் எரிசக்தி பொருட்களில் முதலீடு ஆகியவை தங்க விலையை பாதித்துள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T01:07:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரழிவு: 2015 நிலநடுக்கத்தை விட அதிக உயிரிழப்பு ஏற்படும் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flood-toll-may-exceed-2015-quake-1788484069"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flood-toll-may-exceed-2015-quake-1788484069</id>
            <summary type="text">Nepal flood toll may exceed 2015 earthquake: நேபாளத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளம் மற்றும் திப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flood toll may exceed 2015 earthquake: நேபாளத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவு, 2015-இல் நடந்த கோர்கா நிலநடுக்கத்தை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d31ef31-eb9a-44a0-bfca-ef9b6bd2c319/26-6a9a1a62681b5.webp' /></p><p>நேபாளத்தின் Trishuli Bazaar பகுதியில், ஹைட்ரோபவர் திட்டங்கள் அமைந்துள்ள இடங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுரங்கங்கள் சேறும் மணலும் நிரம்பி, நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். </p><p>ஆகஸ்ட் 31-ஆம் திகதி கடைசியாக உயிருடன் மீட்கப்பட்டனர்.</p><p>
</p><p></p><p>நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது:

செப்டம்பர் 3-ஆம் திகதி வரை 1,259 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 5,083 பேர் காணாமல் போயுள்ளனர். மொத்தம் 6,342 பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>

சீனாவின் திபெத் பகுதியில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 541 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>இதனால், நேபாளம் மற்றும் திபெத் சேர்த்து 1,280 பேர் உயிரிழப்பு, 5,624 பேர் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வ எண்ணிக்கை உள்ளது.

ஆனால், திபெத் பகுதியில் நிலைமை குறித்து தனிப்பட்ட மதிப்பீடு செய்வது கடினம். </p><p></p><p>Reporters Without Borders அமைப்பு, “திபெத் தகவல் கருப்பு துளை (information black hole)” எனக் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
Independent Power Producers’ Association of Nepal அமைப்பின் செயலாளர் Bijay M Bhattarai கூறியதாவது: “அதிகாரப்பூர்வ பதிவுகள், சுற்றுலா விசா பட்டியல், நிறுவன ஊழியர் பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே உயிரிழப்பு கணக்கிடப்படுகிறது. ஆனால், ஆற்றங்கரையில் வசிக்கும் குடிசை மக்கள், சட்டவிரோத மணல் சுரங்கத் தொழிலாளர்கள், தற்காலிக வாகன ஓட்டிகள் போன்றவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.”
</p><p>
இதனால், உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதை விட அதிகமாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>

2015-இல் நேபாளத்தில் ஏற்பட்ட கோர்கா நிலநடுக்கத்தில் 8,800 பேர் உயிரிழந்தனர். தற்போதைய வெள்ளப் பேரழிவு அதனை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T01:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க கம்பளி போர்வை - விஞ்ஞானிகள் புதிய முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-wool-covers-aim-to-save-glaciers-1788481356"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-wool-covers-aim-to-save-glaciers-1788481356</id>
            <summary type="text">Swiss wool covers to save glaciers: சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss wool covers to save glaciers: சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.</p><p>

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதைத் தடுக்க, அந்நாட்டின் விஞ்ஞானிகள் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க கம்பளி போர்வை!</h2><p>பனிப்பாறைகளின் மேல் ஆட்டின் கம்பளி போர்வைகளை விரித்துவருகின்றனர்.</p><p>“Keep It Wool” எனப்படும் இந்த திட்டம், Tsanfleuron Glacier பகுதியில் நடைமுறைக்கு வந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7de669-dc71-483b-a0d9-ec4a4b5acaa3/26-6a9a106826bc1.webp' /></p><p>University of Lausanne, Summit Foundation மற்றும் Swiss Glacier Monitoring Network ஆகியவை இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.</p><p>

முன்பு, பனிப்பாறைகளை பாதுகாக்க பிளாஸ்டிக் அடிப்படையிலான செயற்கை போர்வைகள் பயன்படுத்தப்பட்டன. அவை சூரிய ஒளியைத் தடுப்பதால் பனி உருகும் வேகம் குறைந்தது. ஆனால், அவை காலப்போக்கில் சிதைந்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை வெளியிடுகின்றன. </p><p>இதற்கு மாற்றாக, இயற்கையான, சிதைவடையும் ஆட்டின் கம்பளி பயன்படுத்தப்படுகிறது.
</p><p></p><h2>ஆய்வு&nbsp;</h2><p>ஜூன் 2026-இல், 100 சதுர மீட்டர் அளவிலான இரண்டு கம்பளி போர்வைகள் பனிப்பாறைகளின் மேல் பரப்பப்பட்டன. அதே அளவிலான செயற்கை போர்வையும் அருகில் அமைக்கப்பட்டு, ஒப்பீட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆரம்ப முடிவுகள், கம்பளி போர்வைகள் செயற்கை போர்வைகளுக்கு இணையான பாதுகாப்பை வழங்கியதாகக் காட்டுகின்றன.
</p><p>
சுவிட்சர்லாந்தில் ஆட்டின் கம்பளி பெரும்பாலும் பயன்பாடின்றி வீணாகிறது. சுமார் 80 சதவீதம் கம்பளி வணிக மதிப்பில்லாமல் கைவிடப்படுகிறது. இந்த முயற்சி, அந்த உள்ளூர் வளத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்தும் வழியைத் திறக்கிறது.</p><p></p><p>
</p><h2>
விஞ்ஞானிகள் எச்சரிக்கை</h2><p> 

ஆனால், இந்த முயற்சி முழு பனிப்பாறைகளை காப்பாற்ற முடியாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். தற்போது, சுவிட்சர்லாந்தின் பனிப்பாறைகளில் 0.02 சதவீதம் மட்டுமே போர்வைகளால் மூடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் கன மீட்டர் பனி உருகுகிறது. போர்வைகள் மூலம் 3 லட்சம் கன மீட்டர் பனியை மட்டுமே காப்பாற்ற முடிகிறது.
</p><p>
இருப்பினும், இந்த முயற்சி, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான புதுமையான தீர்வுகளை ஆராய்வதில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T00:24:19+00:00</updated>
        </entry>
    </feed>
