<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-31T16:34:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[67 ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்ற கேப்டன்: 183 ஓட்டங்களுக்கு சுருண்ட நெதர்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scott-edwards-67-vs-namibia-and-netherlands-allout-1785510132"></link>
            <id>https://news.lankasri.com/article/scott-edwards-67-vs-namibia-and-netherlands-allout-1785510132</id>
            <summary type="text">நமீபியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.&amp;nbsp;ஸ்கொட் எட்வர்ட்ஸ்
நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நமீபியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.&nbsp;</p><h2>ஸ்கொட் எட்வர்ட்ஸ்</h2><p>
நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் Utrecht-யில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c88aca2a-843d-41e6-8e07-a7a1fec3aa4b/26-6a6cbaa3a868b.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித், ஜாக் லயன் டக்அவுட் ஆகினர்.</p><p>

பின்னர் மேக்ஸ் ஓ'டௌட் 23 ஓட்டங்களிலும், பாஸ் டி லீட் 27 ஓட்டங்களிலும் வெளியேற அணித்தலைவர் ஸ்கொட் எட்வர்ட்ஸ் நிலைத்து நின்று ஆடினார். </p><p>

மறுமுனையில் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணி 48.5 ஓவர்களில் 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
இறுதிவரை களத்தில் நின்ற ஸ்கொட் எட்வர்ட்ஸ் (Scott Edwards) 85 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் எடுத்தார்.
</p><p>
ரூபென் ட்ரம்ப்பெல்மன், ஜேக் பிரஸ்ஸெல் தலா 3 விக்கெட்டுகளும், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் 2 விக்கெட்டுகளும், எராஸ்மஸ் மற்றும் ஜேஜே ஸ்மித் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T15:07:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இருமுறை புற்றுநோயை வென்ற 61 வயது பெண்: குற்றவாளியால் நேர்ந்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/61-year-old-woman-who-beat-cancer-killed-in-usa-1785506395"></link>
            <id>https://news.lankasri.com/article/61-year-old-woman-who-beat-cancer-killed-in-usa-1785506395</id>
            <summary type="text">அமெரிக்காவில் 61 வயது பெண்ணொருவரை நபர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புற்றுநோயில் இருந்து மீண்ட பெண் அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் 61 வயது பெண்ணொருவரை நபர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> 

புற்றுநோயில் இருந்து மீண்ட பெண் </h2><p>அமெரிக்காவின் அரிஸோனாவைச் சேர்ந்த 61 வயதுப் பெண் சூசன் கெர்கே. இவர் டக்சனில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb4351a9-c455-48db-b4a0-042328e6587f/26-6a6cab2c5bc95.webp' /></p><p>
இவர் இரண்டு முறை புற்றுநோயில் இருந்து மீண்ட பின், தனது ஓய்வுக்கால விழாவை திட்டமிட்டிருந்தார்.
</p><p>
இந்த நிலையில், சூசன் கெர்கே கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது குடியிருப்பிற்கு வெளியே, ஒரு தொடர் குற்றவாளியின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகினார். 

இதில் அவரது செயற்கை பற்கள் கழன்று விழுந்தது படுகாயமடைந்தார். </p><h2>பரிதாப மரணம் </h2><p> இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மூளை இரத்தக் கசிவுக்காக அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.</p><p>ஆனால், செயற்கை சுவாசக் கருவியில் வைக்கப்பட்டிருந்த சூசன் பரிதாபமாக உயிரிழந்தார். 

27 வயதான Dahseir Edward Jefferson என்ற தொடர் குற்றவாளி இந்த கொடூரத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது. </p><p>தனது நண்பருக்கு உதவ சென்றபோது, ஜெபர்சனால் தாக்கப்பட்டு சூசன் உயிரிழந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T14:39:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழைந்த விவகாரம்: பரபரப்பாகும் பிரான்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-to-reinforce-checks-in-spain-border-migrant-1785504020"></link>
            <id>https://news.lankasri.com/article/france-to-reinforce-checks-in-spain-border-migrant-1785504020</id>
            <summary type="text">ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழையும் காட்சிகள் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.

பரபரப்பாகும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழையும் காட்சிகள் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.</p><h3>

பரபரப்பாகும் பிரான்ஸ்</h3><p>

ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான மொராக்கோ நாட்டவர்களான புலம்பெயர்வோர் நுழைந்துள்ள விடயத்தால், அதைச் சுற்றியுள்ள நாடுகள் பரபரப்பாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91064214-a32d-46ea-843b-bc198774f9f8/26-6a6ca1162c1f8.webp' /></p><p>

இத்தாலி பிரதமர் ஸ்பெயினை ஷெங்கன் மண்டத்திலிருந்தே நீக்கவேண்டும் என அறிக்கை விட, மொராக்கோ நாட்டவர்களான புலம்பெயர்வோர் தங்கள் நாடுகளுக்குள் நுழைந்துவிடாமல் தடுப்பதற்காக ஸ்பெயினைச் சுற்றியுள்ள நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்கிவருகின்றன.&nbsp;</p><p></p><p>

பிரான்சைப் பொருத்தவரை, ஸ்பெயினை ஒட்டியுள்ள நாடுகளில் அதுவும் ஒன்று. ஆகவே, பிரான்ஸ் ஸ்பெயின் எல்லையில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த உள்ளது அந்நாடு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f762dd5-c21b-4378-9a41-3cd2a9ef627d/26-6a6ca11579acf.webp' /></p><p>
இது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சரான லாரென்ட் (Laurent Nuñez) கூறும்போது, சியூட்டாவில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஸ்பெயின் எல்லையில் கட்டுப்பாடுகளை உடனடியாக வலுப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T13:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய பகுதியொன்றில் 3வது நாளாக காட்டுத்தீ: மீண்டுவர 25 ஆண்டுகள் ஆகலாம்..நிபுணர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/firefighters-continues-battling-suffolk-wildfire-1785496848"></link>
            <id>https://news.lankasri.com/article/firefighters-continues-battling-suffolk-wildfire-1785496848</id>
            <summary type="text">பிரித்தானியாவின் சஃபோக்கில் ஏற்பட்ட காட்டுத்தீ மூன்றாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.மூன்றாவது நாளாக காட்டுத்தீ 

சஃபோக்கில் ஏற்பட்ட பாரிய காட்டுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் சஃபோக்கில் ஏற்பட்ட காட்டுத்தீ மூன்றாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.</p><h2>மூன்றாவது நாளாக காட்டுத்தீ 
</h2><p>
சஃபோக்கில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீ தொடர்ந்து மூன்றாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f24459b8-ea1c-4469-b8d6-67ab9993b61e/26-6a6c865ab7cbd.webp' /></p><p></p><p>

தீ பரவுவதைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில், ஹெலிகொப்டர்களில் இருந்து ஆயிரக்கணக்கான லிற்றர் கடல்நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. </p><p>

லெஸ்டனுக்கு அருகிலுள்ள டன்விச் ஹீத் பகுதியில், புதன்கிழமை மாலை முதல் தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
லண்டன், எசெக்ஸ் மற்றும் மேற்கு யார்க்ஷயர் போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் தீயணைப்புக் குழுவினர் உள்ளூர், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்துள்ளனர்.</p><h2>25 ஆண்டுகள் ஆகலாம்</h2><p> 

அதேபோல், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் டசின் கணக்கான விவசாயிகள் இணைந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ede2cf-c482-4e5b-9d09-05327581cbb5/26-6a6c865b7493a.webp' />&nbsp;</p><p>அவர்களில் பலர், வயல்வெளித் தீ குறித்த தங்கள் அறிவைப் பகிர்ந்துகொண்டு, தண்ணீர் டேங்கர்களைக் கொண்டு செல்ல தங்கள் டிராக்டர்களைப் பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில் ஏராளமான குடியிருப்பாளர்களும், நூற்றுக்கணக்கான விடுமுறைக்காலப் பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>

சஃபோக் (Suffolk) பகுதிக்கான RSPB மேலாளர் ஆடம் ரோவ்லேண்ட்ஸ் கூறுகையில், "ஆண்டின் இக்காலகட்டத்தில் இப்பகுதி மிகவும் வறண்டு காணப்படுவதால், தீ விபத்திற்கான அபாயம் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். அந்த முதல் தீப்பொறி RSPB நிலப்பகுதியிலிருந்தே உருவானது என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. 

டன்விச் ஹீத் பகுதியைச் சுற்றியுள்ள நிலப்பகுதி மீண்டும் பழைய நிலையை அடைய 25 ஆண்டுகள் ஆகலாம்" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f89c5309-8290-4594-b2d9-8c20be6bc682/26-6a6c87f9948cf.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ee64bb1-d348-4d3f-9663-c6eff93fb816/26-6a6c87f8c4b8e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T13:08:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுக்குள் நுழையும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர்: என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thousands-of-migrants-enters-to-spain-from-morocco-1785503180"></link>
            <id>https://news.lankasri.com/article/thousands-of-migrants-enters-to-spain-from-morocco-1785503180</id>
            <summary type="text">ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழையும் காட்சிகள் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.&amp;nbsp;நடந்தது என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழையும் காட்சிகள் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de4cb772-6c7e-4470-a874-33b41e36fa05/26-6a6c9dcd46e96.webp' /></p><h3>நடந்தது என்ன?
</h3><p>
ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழைவதாக கூறப்பட்டாலும், உண்மையில், வட ஆப்பிரிக்காவிலுள்ள மொராக்கோ நாட்டை ஒட்டியுள்ள, சியூட்டா என்னும் நகரத்துக்குள்தான் புலம்பெயர்வோர் நுழைந்துள்ளார்கள்.
</p><p>
மொராக்கோ நாட்டிலிருந்து, வெறும் ஒரு கோட்டால் பிரிக்கப்படும் நகரம்தான் ஸ்பெயினுக்கு சொந்தமான இந்த சியூட்டா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef6dfeeb-b71a-46d9-be94-142ce850f624/26-6a6c9dcdecbb7.webp' /></p><p>ஆக, மொரக்கோவிலிருந்து, அதை ஒட்டியுள்ள சியூட்டா நகரத்துக்குள்தான் புலம்பெயர்வோர் நுழைந்துள்ளார்கள்.
</p><p>
மொராக்கோ நாட்டவர்கள் அடிக்கடி இப்படி சியூட்டா நகருக்குள் நுழைய முயல்வது உண்டு. விடயம் என்னவென்றால், இம்முறை, சுமார் 49,000 பேர் ஒரே நேரத்தில் சியூட்டாவுக்குள் நுழைந்ததால்தான் அது உலகின் கவனம் ஈர்த்துவிட்டது.&nbsp;</p><p></p><h3>
எதனால் திடீரென புலம்பெயர்வோர் நுழைந்தார்கள்?</h3><p>

முக்கிய விடயம் என்னெவென்றால், மொராக்கோவையும் சியூட்டாவையும் பிரிப்பது ஒரு கோடுதான்.</p><p>

ஆனால், மொராக்கோ மக்கள் அந்தக் கோட்டைத் தாண்டி சியூட்டாவுக்குள் நுழையவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdd002c5-a755-4c47-906d-ab03ee9097fd/26-6a6c9dce9a190.webp' /></p><p>அவர்கள் கடல் வழியாக நீந்தி சியூட்டாவுக்குள் நுழைந்துள்ளார்கள். அப்படி கடலில் நீந்தும்போது சுமார் 18 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
வெறும் ஒரு கோட்டைத் தாண்டி சியூட்டாவுக்குள் நுழையமுடியும்போது, ஏன் இப்படி உயிரைப் பணயம் வைத்து மக்கள் கடல் வழியாக நீந்தி வருகிறார்கள்.</p><p>

அதாவது, சமீபத்தில் ஸ்பெயின் உச்சநீதிமன்றம், புலம்பெயர்தல் தொடர்பான வழக்கொன்றில், கடல் வழியாக சியூட்டாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை திருப்பி அனுப்ப முடியாது என தீர்ப்பு வழங்கியது.
</p><p>
அந்த தீர்ப்பின் தாக்கம்தான் இந்த திடீர் புலம்பெயர்தலின் பின்னணியாக இருக்கக்கூடும் என ஸ்பெயின் பிரதமரான பெட்ரா சான்ச்செஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bdd5c67-1b06-4206-a164-ca23de88e6f4/26-6a6c9dcf48fb7.webp' /></p><p>ஆக, ஸ்பெயினுக்குள், அதாவது, ஸ்பெயினுக்கு சொந்தமான சியூட்டா நகருக்குள் நுழைந்த மொராக்கோ நாட்டவர்களான புலம்பெயர்ந்தோரை தற்காலிகமாக தங்கவைத்துவிட்டு, ஸ்பெயினில் தங்க சட்டப்படி அனுமதி இல்லாதவர்கள் என கருதப்படுவோரை மொராக்கோ நாட்டுக்கே திருப்பி அனுப்ப திட்டமிட்டுவருவதாக ஸ்பெயின் பிரதமரான பெட்ரா சான்ச்செஸ் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T13:06:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[49 வயதில் மிரட்டிய திலகரத்னே தில்ஷன்: சுருண்ட பாகிஸ்தான் பாந்தர்ஸ்..ஆசியன் ஸ்டார்ஸ் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/asian-stars-beat-pakistan-panthers-by-85-runs-1785502286"></link>
            <id>https://news.lankasri.com/article/asian-stars-beat-pakistan-panthers-by-85-runs-1785502286</id>
            <summary type="text">ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக் போட்டியில், ஆசியன் ஸ்டார்ஸ் அணி 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பாந்தர்ஸை வீழ்த்தியது.&amp;nbsp;தேவேந்திர சிங்&amp;nbsp;விளாசல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக் போட்டியில், ஆசியன் ஸ்டார்ஸ் அணி 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பாந்தர்ஸை வீழ்த்தியது.&nbsp;</p><h2>தேவேந்திர சிங்&nbsp;விளாசல்</h2><p>

லூஸாகாவில் நடந்த ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக் போட்டியில், ஆசியன் ஸ்டார்ஸ் மற்றும் பாகிஸ்தான் பாந்தர்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The Asian Stars have posted a formidable 186/6 in 20 overs! 💥<br><br>⭐ Devendra Singh stole the show with a blazing 58 off 21 balls*, while Sandeep Singh added a valuable 33.<br><br>🎯 Target: Pakistan Panthers need 187 runs to secure the win.<a href="https://x.com/hashtag/AsianLegendsLeague?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AsianLegendsLeague</a> <a href="https://x.com/hashtag/ALLT20?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ALLT20</a> <a href="https://x.com/hashtag/CricketLegends?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CricketLegends</a> <a href="https://t.co/G2cdQFgwN3">pic.twitter.com/G2cdQFgwN3</a></p>&mdash; Asian Legends League (@allt20official) <a href="https://x.com/allt20official/status/2083128430170919325?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய ஆசியன் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் குவித்தது.</p><p> 

தேவேந்திர சிங் 21 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்களும், சந்தீப் சிங் 33 ஓட்டங்களும், ராஜீவ் ரிஷி 26 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">FIFTY in just 21 balls. 💥<br> <br>Devendra Singh stayed not out on 58 and took the game away.<br><br>Pure dominance from start to finish.<br><br>Drop a 👏 if that knock gave you goosebumps!<a href="https://x.com/hashtag/halfcentury?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#halfcentury</a> <a href="https://x.com/hashtag/CricketLovers?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CricketLovers</a> <a href="https://x.com/hashtag/T20Cricket?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#T20Cricket</a> <a href="https://x.com/hashtag/CricketLegends?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CricketLegends</a> <a href="https://x.com/hashtag/t20?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#t20</a> <a href="https://t.co/XmpITCpr0p">pic.twitter.com/XmpITCpr0p</a></p>&mdash; Asian Legends League (@allt20official) <a href="https://x.com/allt20official/status/2083129881995391249?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><h2>தில்ஷன்&nbsp;ஆட்டநாயகன் </h2><p>
பின்னர் ஆடிய பாகிஸ்தான் பாந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் ஆசியன் ஸ்டார்ஸ் 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
அதிகபட்சமாக யாசிர் ஷா 34 ஓட்டங்களும், மொஹம்மது இர்பான் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p> திலகரத்னே தில்ஷன் 3 விக்கெட்டுகளும், மெஹ்ரான் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;தில்ஷன் ஆட்டநாயகன் விருது பெற்றார். 
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">That&#39;s how you finish in style! 🔥 <br><br>Asian Stars beat Pakistan Panthers by 85 runs. 🏏<br><br>Complete dominance with bat and ball to seal a big win. <br><br>What did you think of the performance? Drop your reaction below! 👇<a href="https://x.com/hashtag/AsianLegendsLeague?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AsianLegendsLeague</a> <a href="https://x.com/hashtag/ALLT20?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ALLT20</a> <a href="https://x.com/hashtag/CricketLegends?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CricketLegends</a> <a href="https://x.com/hashtag/T20Cricket?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#T20Cricket</a> <a href="https://t.co/ZpXKj42qxB">pic.twitter.com/ZpXKj42qxB</a></p>&mdash; Asian Legends League (@allt20official) <a href="https://x.com/allt20official/status/2083154526639726606?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T13:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pujith-jayasundara-got-death-sentence-easter-1785502222"></link>
            <id>https://news.lankasri.com/article/pujith-jayasundara-got-death-sentence-easter-1785502222</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை

கடந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><h3>

பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை</h3><p>

கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு திருநாள் அன்று கொழும்பு உட்பட 3 இடங்களில் 3 தேவாலயங்கள், 3 ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது.</p><p> 

இதில், 39 வெளிநாட்டவர்கள், 3 காவல்துறையினர் உட்படக் குறைந்தது 253 பேர் உயிரிழந்தனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/499b84a0-f9ec-4980-a5c1-3d7ed7c9874e/26-6a6c9a1025367.webp' /></p><p>

இதில், போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், தாக்குதலை தடுக்க நடவடிக்கை தவறியதாக முன்னாள் காவல்துறைத் தலைவர் புஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றத்தின் விசாரணை அமர்வு இன்று மரண தண்டனை விதித்துள்ளது.&nbsp;</p><p></p><p> 

அவர் மீது சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T12:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகள் விரும்பி உண்ணும் வாழைப்பழ பான்கேக்.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/banana-pancake-recipe-in-tamil-1785501951"></link>
            <id>https://news.lankasri.com/article/banana-pancake-recipe-in-tamil-1785501951</id>
            <summary type="text">&amp;nbsp;தற்போது குழந்தைகளுக்கு பெரும்பாலும் துரித உணவுகள் போன்றவற்றின் மீது ஈர்ப்பு அதிகரித்துவிட்டன.

அந்தவகையில், குழந்தைகள் விருப்பி உண்ணும் சத்தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தற்போது குழந்தைகளுக்கு பெரும்பாலும் துரித உணவுகள் போன்றவற்றின் மீது ஈர்ப்பு அதிகரித்துவிட்டன.</p><p>

அந்தவகையில், குழந்தைகள் விருப்பி உண்ணும் சத்தான வாழைப்பழ பான்கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்
</h2><ul><li>
வாழைப்பழம்- 2</li><li> முட்டை- 1
</li><li>வெல்லம்- 150g</li><li> கோதுமை மாவு- 1 கப்</li><li>
காய்ச்சிய பால்- ½ கப்
</li><li>உப்பு- சிறிதளவு </li><li>
சமையல் சோடா- 1 சிட்டிகை </li><li>
வெண்ணெய்- தேவையான அளவு </li></ul><h2>

செய்முறை</h2><p> 
 
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், முட்டை, வெல்லம் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் அதில் கோதுமை மாவு, காய்ச்சிய பால் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1db8649-996f-4dcd-9d10-1b6fc9847670/26-6a6c990168ace.webp' /></p><p>அடுத்து இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு , சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
</p><p>
இதற்கடுத்து அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் மாவை ஊற்றி வெண்ணெய் சேர்த்து சுட்டு எடுத்தால் சுவையான வாழைப்பழ பான்கேக் தயார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T12:46:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் அதிக கடன், அதிக குற்ற வழக்குகள் உள்ள முதல்வர் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-cm-has-most-liabalities-criminal-case-india-1785501027"></link>
            <id>https://news.lankasri.com/article/which-cm-has-most-liabalities-criminal-case-india-1785501027</id>
            <summary type="text">ADR என்ற அமைப்பு, இந்தியாவில் உள்ள 28 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் தகவல்களை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

இந்த அறிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ADR என்ற அமைப்பு, இந்தியாவில் உள்ள 28 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் தகவல்களை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. </p><p>

இந்த அறிக்கை, முதலமைச்சர்கள் கடைசியாக போட்டியிட்ட தேர்தல்களின் போது வெளியிட்ட பிராமண பத்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுளளது.</p><h3> 

இந்தியாவின் இளம் முதலமைச்சர் </h3><p>

மொத்தமுள்ள 31 முதலமைச்சர்களில், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் ஒரே பெண் முதலமைச்சர் ஆவார்.</p><p> 

வயதின் அடிப்படையில், இந்தியாவின் இளம் முதலமைச்சராக 44 வயதான அருணாச்சலபிரதேச முதல்வர் பெமா காண்டு மற்றும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f561dd4a-887c-4782-95f6-aa5affdecf86/26-6a6c956472db4.webp' /></p><p>

அதிக வயதுடைய முதலமைச்சராக 75 வயதான புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7aae966-f60d-4231-b430-17b14d2d3e29/26-6a6c95652d412.webp' /></p><p> 

41 - 50 வயதில் 8 முதலமைச்சர்களும், 51 - 60 வயதில் 17 முதலமைச்சர்களும், 61 - 70 வயதில் 2 முதலமைச்சர்களும், 71 - 80 வயதில் 4 முதலமைச்சர்களும் உள்ளனர்.&nbsp;</p><p></p><h3> 

அதிக கடன் உள்ள முதல்வர்</h3><p>

சொத்து மதிப்பின் அடிப்படையில், ரூ.1,413 கோடிகளுடன் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இந்தியாவின் பணக்கார முதலமைச்சராக உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efa999b3-b373-4aed-9b4f-15a954cfa79a/26-6a6c9566c48d3.webp' /></p><p>

ரூ.931 கோடிகளுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 2வது இடத்திலும், ரூ.648 கோடிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 3வது இடத்திலும், ரூ.332 கோடிகளுடன் அருணாச்சலபிரதேச முதல்வர் பெமா காண்டு 3வது இடத்திலும் உள்ளனர். </p><p>

இவர்கள் 4 பேரும், ரூ.50 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்துள்ள முதலமைச்சராக உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1abd1aa8-1e39-4b43-8edf-b6678d10e8f8/26-6a6c95677cbfc.webp' /></p><p> 

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா ரூ.55 லட்சம் சொத்து மதிப்புடன் கடைசி இடத்தில் உள்ளார். </p><p> 

இதே போல், அதிக கடன் உள்ள முதல்வராக ரூ.265 கோடி கடனுடன் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் முதலிடத்தில் உள்ளார்.&nbsp;</p><p></p><h3>

அதிக குற்ற வழக்கு உள்ள முதல்வர்</h3><p> 

31 முதலமைச்சர்களில் 14 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2860fcb5-09c0-49be-90fa-db6c5d676715/26-6a6c95682d4e7.webp' /></p><p>
அதிகபட்சமாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது 72 கடுமையான இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் உட்பட 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன. </p><p>

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி 29 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது 19 வழக்குகள் உள்ளது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T12:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுதங்களைக் கைவிட ஹமாஸ் படைகள் ஒப்புதல்: ட்ரம்ப் அளித்த வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gaza-disarmament-agreement-1785496904"></link>
            <id>https://news.lankasri.com/article/gaza-disarmament-agreement-1785496904</id>
            <summary type="text">காஸாவில் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுவதற்கான திட்டத்தை முன்னெடுக்கும் ஆவணம் ஒன்றை ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனக் குழுக்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.மகத்தான முன்னெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸாவில் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுவதற்கான திட்டத்தை முன்னெடுக்கும் ஆவணம் ஒன்றை ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனக் குழுக்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.</p><h2>மகத்தான முன்னெடுப்பு</h2><p>
</p><p>ஹமாஸ் படைகளின் இந்த முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமைதி மற்றும் பாதுகாப்பை நோக்கிய ஒரு மகத்தான முன்னெடுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01656797-03dd-41e9-8309-e7d5a6577fa0/26-6a6c87058fd90.webp' /></p><p>
</p><p>ஆயுதங்களைக் கைவிடுவதற்கான துல்லியமான செயல்வடிவத்தை 14 நாட்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்றும், சர்வதேச சரிபார்ப்பு அமைப்பின் ஒப்புதல் மற்றும் அனைத்துத் தரப்பினரின் உடன்பாட்டுக்கு உட்பட்டு அதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இதனிடையே ஹமாஸ் தரப்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட காஸி ஹமாத் தெரிவிக்கையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் கடினமாகவும் சவாலாகவும் இருந்ததாகவும், சாத்தியமான சிறந்த தீர்வை எட்டுவதற்கு முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். </p><p>இருப்பினும், இஸ்ரேலியப் படைகள் தங்களது கடமைகளை நிறைவேற்றத் தவறினால், ஒப்பந்தத்தின் எந்தப் பகுதியையும் ஹமாஸ் படைகள் செயல்படுத்தாது என்றும் ஹமாத் கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், ஆயுதங்களைக் கைவிடுவது என்பது காஸாவிலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுவதையும், பாலஸ்தீனப் பகுதியில் ஜனாதிபதி ட்ரம்ப் உறுதி அளித்துள்ள மறுசீரமைப்புப் பணிகளில் ஏற்படும் முன்னேற்றத்தையும் பொறுத்தே அமையும் என்றும் ஹமாத் விளக்கமளித்துள்ளார். </p><p>ஆனால், இந்த விவகாரத்தில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் இருந்து எவ்விதக் கருத்தும் வெளியாகவில்லை. இந்த நிலையில் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் குறிப்பிடுகையில், </p><p>பாலஸ்தீன மக்களுக்கு உதவ 'அமைதிக்கான வாரியத்துடன்' (Board of Peace) நெருக்கமாக இணைந்து செயல்படவுள்ள புதிய பாலஸ்தீன அரசாங்கத்தின் கீழ் காஸா நிர்வகிக்கப்படுவதை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15069c09-0176-4282-b890-b41723c16d5e/26-6a6c8704ccf21.webp' /></p><p> </p><p>அதே வேளை, காஸா இனி பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான தளமாகப் பயன்படுத்தப்படாத நிலையில், இஸ்ரேல் தனக்குரிய பாதுகாப்பைப் பெறும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>காஸாவிற்கு ஒரு தேசியக் குழு மற்றும் சர்வதேச நிலைப்படுத்தல் படை ஆகியவை நுழைவதோடு ஆயுதங்களைக் கைவிடும் நடவடிக்கை தொடங்கும்.</p><p> அதன்பின்னர், சர்வதேச சரிபார்ப்புக் குழுவின் கண்காணிப்பிலும் பாலஸ்தீனக் குழுக்களின் பங்கேற்புடனும், பட்டியலிடுதல் மற்றும் சேமித்து வைத்தல் செயல்முறையைத் தேசியக் குழு மேற்பார்வையிடும்.</p><h2>இஸ்ரேலியப் படைகள்</h2><p> </p><p>ஆயுதங்களைக் கைவிடும் செயல்முறையானது, காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படுவதோடும் தொடர்புடையது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/176ba642-8d2a-4059-b5bf-aabb9ea5e04c/26-6a6c870644734.webp' /></p><p> மேலும், இஸ்ரேலிடமோ அல்லது பாலஸ்தீனியர் அல்லாத எந்தவொரு அமைப்பிற்கோ ஆயுதங்கள் எதுவும் ஒப்படைக்கப்படக் கூடாது என்றும், காஸாவில் ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே அமைப்பாக 'தேசியக் குழு' (National Committee) மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>காஸா காவல்துறையினரிடம் உள்ள ஆயுதங்கள் முதலில் ஒப்படைக்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து கனரக ஆயுதங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>இத்திட்டத்தின் கீழ் காஸாவில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்; இருப்பினும், இந்தச் செயல்முறையைச் செயல்படுத்தக் கால அவகாசம் தேவைப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். </p><p>கடந்த அக்டோபர் மாதம் ட்ரம்பின் மத்தியஸ்தத்தில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தாலும், இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ச்சியாக மீறியுள்ளது; அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து 1,200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் படைகள் கொன்றுள்ளது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2835afd7-124a-4c98-81f3-a38754ce4bc8/26-6a6c8706eb37d.webp' /></p><p> </p><p>மேலும் நிலப்பரப்புகளைக் கைப்பற்றி வருவதுடன், காஸாவிற்குள் மற்றும் அங்கிருந்து வெளியே மக்கள் மற்றும் சரக்குகள் செல்வதற்கான கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து விதித்து வருகிறது.
</p><p>இந்த நிலையில், ஆயுதங்களைக் கைவிடுவது முழுமையடைந்ததும், இஸ்ரேல் காஸாவிலிருந்து வெளியேறும் என்றும், அதற்குப் பதிலாக ஒரு புதிய பாலஸ்தீனக் காவல் படையுடன் இணைந்து செயல்படும் சர்வதேச நிலைப்படுத்தல் படை அங்கு அமர்த்தப்படும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T11:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்கரையில் ஒதுங்கிய பைகளில் கட்டுக்கட்டாக பணம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/7-lakhs-euro-cash-bag-wash-up-in-sicily-beach-1785496502"></link>
            <id>https://news.lankasri.com/article/7-lakhs-euro-cash-bag-wash-up-in-sicily-beach-1785496502</id>
            <summary type="text">சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற தீவொன்றில், கடற்கரையில் ஒதுங்கிய பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு உருவானது.

கரையில் ஒது...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற தீவொன்றில், கடற்கரையில் ஒதுங்கிய பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு உருவானது.</p><h3>

கரையில் ஒதுங்கிய பைகளில் கட்டுக்கட்டாக பணம்</h3><p>

இத்தாலிக்கு சொந்தமான சிசிலித் தீவிலுள்ள, Casuzze என்னும் இடத்தில் அமைந்துள்ள கடற்கரை ஒன்றில் பல பைகள் கரையொதுங்கியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/581c6333-e03a-4768-9ce7-e6192324d6d6/26-6a6c83b9211ab.webp' /></p><p>
அதைக் கண்ட மக்கள் அந்த பைகளை சேகரித்து அதில் என்ன உள்ளது என சோதிக்க, அந்தப் பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது.
</p><p>
அதாவது, மால்ட்டா தீவிலிருந்து ஒரு படகு வந்துள்ளது. அதில் மூன்று ஆண்களும் ஒரு சிறுபையனும் இருந்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
வரும் வழியில் எரிபொருள் தீர்ந்துபோகவே, அந்த படகு அலைகளால் கரையை நோக்கி இழுத்துவரப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6522fe58-d130-49f3-920e-c3544ff9ef01/26-6a6c83b857846.webp' /></p><p>
பொலிசார் அவர்களை நெருங்க, பொலிசாரைக் கண்டதும் படகிலிருந்தவர்களில் மூன்று பேர் கடலில் குதிக்க, ஒருவர் படகிலிருந்த பைகளை கடலுக்குள் வீசியுள்ளார். அந்த பைகள்தான் கரையில் ஒதுங்கியுள்ளன!
</p><p>
பொலிசார் அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ள நிலையில், அந்தப் பைகளில் சுமார் 500,000 முதல் 600,000 பவுண்டுகள் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.</p><p>

படகிலிருந்த நால்வரையும் பொலிசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ள நிலையில், அது சட்ட விரோதப் பணமா, அது யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T11:18:53+00:00</updated>
        </entry>
    </feed>
