<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-04T23:48:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026-இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்கள் - சிங்கப்பூர் முதலிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/singapore-tops-2026-global-competitiveness-ranking-1788564479"></link>
            <id>https://news.lankasri.com/article/singapore-tops-2026-global-competitiveness-ranking-1788564479</id>
            <summary type="text">Singapore tops 2026 global competitiveness ranking: 2026 இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்களின் தரவரிசையை இங்கே பார்க்கலாம்.

சிங்கப்பூர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Singapore tops 2026 global competitiveness ranking: 2026 இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்களின் தரவரிசையை இங்கே பார்க்கலாம்.</p><h2>

சிங்கப்பூர்&nbsp;முதலிடம்</h2><p>சிங்கப்பூர், 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் மிகப் போட்டித்திறன் வாய்ந்த பொருளாதாரமாக (Most Competitive Economy) தேர்வாகியுள்ளது.</p><p>

IMD World Competitiveness Ranking வெளியிட்ட பட்டியலில், சிங்கப்பூர் 100 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/259fa4da-2bc6-4880-9f49-4af2a4662953/26-6a9b560c0ea16.webp' /></p><p>இரண்டாம் இடத்தில் ஹொங்ஹொங் (95.6), மூன்றாம் இடத்தில் சுவிட்சர்லாந்து (95.3), நான்காம் இடத்தில் தைவான் (94.3), ஐந்தாம் இடத்தில் டென்மார்க் (94.1) ஆகியவை உள்ளன. </p><p>

தொடர்ந்து அயர்லாந்து (94.1), ஐக்கிய அரபு அமீரகம் (94.1), நெதர்லாந்து (90.1), ஸ்வீடன் (88.5) அடுத்ததடுத்த இடங்கைப் பிடித்துள்ளன.
</p><p></p><h2>அமெரிக்கா</h2><p>அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், இந்த பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. இது, பொருளாதாரத்தின் அளவும் போட்டித்திறனும் ஒன்றல்ல என்பதை காட்டுகிறது.
</p><p>
முதல் 10 இடங்களில் 5 இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. இந்தியா இந்த தரவரிசையில் 44-வது இடத்தையே பிடித்துள்ளது.
</p><p>
IMD, போட்டித்திறனை மதிப்பீடு செய்ய 341 அளவுகோல்கள் பயன்படுத்துகிறது. இதில் பொருளாதார செயல்திறன், அரசின் திறன், வணிக திறன், அடிப்படை வசதிகள் ஆகிய நான்கு முக்கிய தூண்கள் அடங்கும்.
</p><p></p><p>சிங்கப்பூர், 2026-இல் வணிக திறன் (Business Efficiency) பிரிவில் முதலிடத்தைப் பெற்றதால், மொத்தத்தில் மீண்டும் உலகின் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசியா இணைந்து 10 இடங்களில் 9 இடங்களை பிடித்துள்ளன. காரணம், திறமையான தொழிலாளர்கள், மேம்பட்ட அடிப்படை வசதிகள், சட்டத்தின் நம்பகத்தன்மை, மற்றும் புதுமை (Innovation) ஆகியவை.
</p><p>
இந்த பட்டியலில் வியட்நாம் முதல் முறையாக இடம் பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 7-வது இடத்தில், சவுதி அரேபியா 13-வது இடத்தில் உள்ளது.

இந்த தரவரிசை, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், நிறுவனங்களின் நீண்டகால முதலீடு மற்றும் போட்டித்திறனை உருவாக்கும் சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T23:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாங்கள் தாக்குதல் நடத்தமாட்டோம் - ரஷ்யாவுடன் தற்காலிக போர்நிறுத்தத்தை முன்மொழிந்த ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-proposes-ceasefire-us-envoys-visit-1788555596"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-proposes-ceasefire-us-envoys-visit-1788555596</id>
            <summary type="text">Zelensky proposes ceasefire amid US envoys visit: ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் செய்ய ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.தற்காலிக&amp;nbsp;போர்நிறுத்தம்உக்ரைன் ஜனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zelensky proposes ceasefire amid US envoys visit: ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் செய்ய ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.</p><h2>தற்காலிக&nbsp;போர்நிறுத்தம்</h2><p>உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடன் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire) செய்ய முன்மொழிந்துள்ளார்.
</p><p>
காரணம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தூதர்கள் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் வார இறுதியில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் செல்ல உள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79b8dc65-1b9c-4d4e-b64a-875783765bb5/26-6a9b31cf11139.webp' /></p><p>ஜெலென்ஸ்கி, “அவர்களின் பயணத்தின் போது எங்கள் பக்கம் வான்வழி தாக்குதல் இருக்காது. அதேபோல் ரஷ்யாவும் தாக்குதலை நிறுத்த வேண்டும். இதனால் பேச்சுவார்த்தைகள் நடைபெற வழி ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>

ரஷ்யா, உக்ரைன் உளவுத்துறை தலைமையகத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது. அந்த தாக்குதல், உளவுத்துறை தலைவரின் அலுவலகத்தை நேரடியாக குறிவைத்ததாக ஜெலன்ஸ்கி கூறினார்.
</p><p></p><p>அமெரிக்க தூதர்கள், மாஸ்கோவில் சனிக்கிழமையும், கீவ் நகரில் ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இது, ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவு காணும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
</p><p>
ஜெலென்ஸ்கி, “நாங்கள் ரஷ்யாவுக்காக அல்ல, தூதர்களின் பாதுகாப்புக்காக கவலைப்படுகிறோம். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர உண்மையான வாய்ப்புகள் தேவை” என்று குறிப்பிட்டார்.
</p><p></p><p>கடந்த சில நாட்களாக ரஷ்யா, கீவ் மற்றும் பிற நகரங்களில் பகல் நேர தாக்குதல்களை அதிகரித்துள்ளது. ஓடெசா பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர். ட்னிப்ரோவில் நடந்த தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
</p><p>
இந்த சூழ்நிலையில், அமெரிக்க தூதர்களின் பயணம், போருக்கு முடிவு காணும் முக்கிய அரசியல் முயற்சி எனக் கருதப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T22:24:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நன்றி, டியர் மோடி - இந்தியா-இத்தாலி உறவை வலுப்படுத்தும் மெலோனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/meloni-thanks-modi-india-italy-ties-stronger-1788550134"></link>
            <id>https://news.lankasri.com/article/meloni-thanks-modi-india-italy-ties-stronger-1788550134</id>
            <summary type="text">Meloni thanks Modi, India-Italy ties stronger: இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறிய வாழ்த்துக்கு மெலோனி நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி, டியர் மோடிஇத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Meloni thanks Modi, India-Italy ties stronger: இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறிய வாழ்த்துக்கு மெலோனி நன்றி தெரிவித்துள்ளார்.
</p><h2>
நன்றி, டியர் மோடி</h2><p>இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இரண்டாம் உலகப்போருக்குப் பின் நீண்ட காலம் தொடர்ந்து பதவி வகித்த பிரதமராக சாதனை படைத்துள்ளார்.

இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். </p><p>அதற்கு பதிலளித்த மெலோனி, “நன்றி, அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி. இன்று இந்தியா-இத்தாலி உறவு இதுவரை இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது” என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/390916ed-7afc-47b4-a09b-a7fbcc76b683/26-6a9b1bf819333.webp' /></p><p>மெலோனி, 2022 அக்டோபர் 22 முதல் பிரதமராக உள்ளார். 1,413 நாட்கள் தொடர்ந்து பதவி வகித்ததால், முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
</p><p>
மெலோனி தனது பதிவில், “நாம் தொடங்கிய சிறப்பு மூலோபாய கூட்டாண்மை (Special Strategic Partnership), இரு நாடுகளின் திறமைகளை இணைத்து புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தையும் (Economic Corridor) இணைந்து வலுப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டார்.
</p><p></p><p>மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “இத்தாலி மக்களின் நம்பிக்கையும் நெருக்கமும் மெலோனியின் தலைமையில் பிரதிபலிக்கிறது. இந்தியா-இத்தாலி உறவை வலுப்படுத்தியதில் அவரது நட்பு முக்கிய பங்கு வகித்துள்ளது” என்று தெரிவித்தார்.
</p><h2>
மெலோனி+மோடி=மெலோடி</h2><p>இரு தலைவர்களின் நட்பு சமூக வலைதளங்களில் “Melodi” என்ற பெயரில் பிரபலமாகியுள்ளது.</p><p>2023-இல் COP28 மாநாட்டில் மெலோனி, மோடியுடன் எடுத்த செல்ஃபியை “Good friends at COP28 #Melodi” எனப் பகிர்ந்தபோது, இந்த ஹாஷ்டேக் வைரலானது. பின்னர் G7 மாநாட்டிலும், ரோமில் நடந்த சந்திப்பிலும் இந்த “Melodi” மீம் மீண்டும் பேசுபொருளானது.</p><p>
இந்தியாவும், இத்தாலியும், மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தி, கண்டங்கள் இடையேயான உறவை மேம்படுத்தும் முயற்சியில் முன்னேறி வருகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T19:25:53+00:00</updated>
        </entry>
    </feed>
