<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-14T08:39:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய கிரகணத்தைப் பார்த்தவர்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/expert-eye-warning-for-solar-eclipse-watchers-1786696064"></link>
            <id>https://news.lankasri.com/article/expert-eye-warning-for-solar-eclipse-watchers-1786696064</id>
            <summary type="text">முறையான கண்ணாடி இல்லாமல் சூரிய கிரகணத்தைப் பார்த்தவர்களுக்கு சுவிஸ் மருத்துவர்கள் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.


புதன்கிழமையன்று நிகழ்ந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முறையான கண்ணாடி இல்லாமல் சூரிய கிரகணத்தைப் பார்த்தவர்களுக்கு சுவிஸ் மருத்துவர்கள் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.</p><p>


புதன்கிழமையன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க உலக நாடுகள் பலவற்றின் மக்கள் ஆர்வம் காட்டிய நிலையில், அவர்களில் பலர் அதற்கான முறையான கண்னாடி அணியாமலே சூரிய கிரகணத்தைப் பார்த்துள்ளனர்.</p><h3>

ஒரு அவசர எச்சரிக்கை
</h3><p>
இந்நிலையில், அப்படி முறையான கண்ணாடி இல்லாமல் சூரிய கிரகணத்தைப் பார்த்தவர்களுக்கு சுவிஸ் மருத்துவர்கள் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
அதாவது, கண்ணின் பின் புற உள் சுவரிலுள்ள விழித்திரைக்கு வலியை உணரும் திறன் கிடையாது. ஆகவே, விழித்திரைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது உடனடியாக தெரியவராது. பல நாட்களுக்குப் பின்பே விழித்திரை பாதிக்கப்பட்டுள்ளது தெரியவரும்.</p><p>

ஆக, 99 சதவிகித பாதுகாப்பு இருந்தாலும், ஒரு சதவிகித பாதுகாப்புக் குறைவு இருந்தால்கூட, விழித்திரையின் மையத்திலுள்ள macula என்னும் பாகம் விநாடிகளில் சூரியனால் பாதிக்கப்பட்டுவிடக்கூடும் என்கிறது சுவிஸ் ஃபெடரல் பொது சுகாதார அலுவலகம்.&nbsp;</p><p>
கண் பார்வை மங்குதல், பார்வையின் மையத்தில் கரும்புள்ளி அல்லது தெளிவற்ற கோடுகள், வண்ணங்களைக் காண்பதில் பிரச்சினை மற்றும் வெளிச்சத்தைப் பார்த்தால் பயங்கரமாக கண் கூசுதல் ஆகிய அறிகுறிகள் தோன்றுமானால், அவை ஆபத்தான அறிகுறிகள் ஆகும்.&nbsp;</p><p></p><p>
சூரிய கிரகணத்தைப் பார்த்ததால் லேசான பாதிப்பு ஏற்பட்டிருந்தாலே, அது குணமாக ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறும் கண் மருத்துவ நிபுணரான மார்ட்டின் (Martin Zinkernagel) என்பவர், சூரிய கிரகணத்தின்போது அதிக நேரம் சூரிய ஒளியைப் பார்த்திருந்தால் நிரந்தர பார்வை இழப்பு கூட ஏற்படலாம் என எச்சரிக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53de2869-c6cc-4db9-8c69-5c65a3cb9245/26-6a7ed182b6797.webp' /></p><p>
ஆகவே, சூரிய கிரகணத்தைப் பார்த்த யாருக்காவது மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதாவது இருக்குமானால், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
</p><p>
மோசமான செய்தி என்னவென்றால், சேதமடைந்த விழித்திரை செல்களை குணமாக்க எந்த சிகிச்சையும் கிடையாது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T08:29:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் வரி ஏய்ப்பிற்கு உதவிய 40 நாடுகள் பட்டியலில் இந்தியா - அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-flags-india-in-china-tariff-evasion-scam-1786694326"></link>
            <id>https://news.lankasri.com/article/us-flags-india-in-china-tariff-evasion-scam-1786694326</id>
            <summary type="text">US names India in China tariff evasion scam: அமெரிக்கா வெளியிட்ட “Great Transshipment Scam” அறிக்கையில் இந்தியாவின் பெயர் உள்ளது.சீனாவின் வரி ஏய்ப்புஅ...</summary>
            <content type="html"><![CDATA[<p>US names India in China tariff evasion scam: அமெரிக்கா வெளியிட்ட “Great Transshipment Scam” அறிக்கையில் இந்தியாவின் பெயர் உள்ளது.</p><h2>சீனாவின் வரி ஏய்ப்பு</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட “Great Transshipment Scam” என்ற அறிக்கையில், சீனாவின் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவியதாக 40-க்கும் மேற்பட்ட நாடுகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.</p><p>

இதில் இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், தைவான், மெக்சிகோ, ஜப்பான், தென் கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளும் அடங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a15fdfd7-5e5a-4876-880f-1bc3e9324d38/26-6a7ecd4ee98fd.webp' /></p><p>அறிக்கையில், சீனா தனது பொருட்களை நேரடியாக அமெரிக்காவுக்கு அனுப்பாமல், மூன்றாம் நாடுகளின் வழியாக சிறிய மாற்றங்கள் செய்து (புதிய லேபிள், மறுபொதி, மறுவிலைப்பட்டியல்) அனுப்புவதன் மூலம், வேறு நாட்டில் தயாரிக்கப்பட்டது போல காட்டி, அதிக வரிகளை தவிர்த்ததாக கூறப்பட்டுள்ளது.
</p><p>
2018-இல் ட்ரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு எதிராக Section 301 வரிகளை விதித்த பிறகு, இந்த “illegal transshipment” அதிகரித்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.</p><p></p><p>சீனாவின் பொருட்கள் இந்தியாவின் புனே-குஜராத்-சென்னை உற்பத்தி வளையத்தில் பம்புகள், கம்ப்ரசர்கள் போன்ற தொழில்துறை பொருட்களாக மாறி, அமெரிக்காவின் சின்சினாட்டி, டெய்டன், கொலம்பஸ் போன்ற நகரங்களில் உள்ள தொழில்துறை சங்கிலிகளை பாதித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>

303 பில்லியன் அமெரிக்க டொலர் </h2><p>அமெரிக்காவின் மதிப்பீட்டின்படி, இவ்வாறு சட்டவிரோதமாக அனுப்பப்படும் பொருட்களின் ஆண்டு மதிப்பு 40 பில்லியன் முதல் 303 பில்லியன் அமெரிக்க டொலர் வரை இருக்கலாம். </p><p>இதை கண்டறிய, அமெரிக்க சுங்கத்துறையுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான “detective border” அமைப்பை உருவாக்கி வருவதாகவும் அறிக்கை கூறுகிறது.
</p><p>
இந்த நடவடிக்கைகள், சீனாவின் பொருட்களை குறைந்த செலவில், சட்டவிரோதமாக அமெரிக்க சந்தையில் புகுத்த உதவியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T08:07:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே கட்டிடத்தில் வசிக்கும் 20,000 மக்கள்: 675 அடி உயர சீன செங்குத்து நகரம்: சிறப்பு பார்வை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chinas-675-foot-vertical-city-housing-20k-people-1786694178"></link>
            <id>https://news.lankasri.com/article/chinas-675-foot-vertical-city-housing-20k-people-1786694178</id>
            <summary type="text">சீனாவில் ஒரே கட்டிடத்தில் 20,000 மக்கள் வசிக்கும் 675 அடி உயர செங்குத்து நகரம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 675 அடி உயர செங்குத்து நகரம்நீங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் ஒரே கட்டிடத்தில் 20,000 மக்கள் வசிக்கும் 675 அடி உயர செங்குத்து நகரம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.</p><h2> 675 அடி உயர செங்குத்து நகரம்</h2><p>நீங்கள் உங்களுடைய வீட்டு வாசலில் இருந்து இறங்கிய உடனே உங்களுக்கான மளிகை கடை, உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், இன்டர்நெட் காஃபி ஷாப்கள் ஆகியவை இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.</p><p> கேட்பதற்கே ஆச்சரியமாக தோன்றும் இந்த வாழ்க்கையை சீனாவின் ஹாங்சூ(Hangzhou) நகரில் அமைந்துள்ள ரீஜெண்ட் இன்டர்நேஷனல் சென்டரில்(Regent International Center) வசித்து வரும் 20,000 மக்கள் தினம் தினமும் அனுபவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c8b8b7a-48d2-415a-a9ff-e65f6989ffd4/26-6a7eca244bf67.webp' /></p><p> 2013ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த 675 அடி உயர செங்குத்து நகரம் 39 தளங்களை கொண்டுள்ளது.</p><p> இந்த பிரம்மாண்ட கட்டிடம் நவீன கால கட்டடக் கலையின் அடையாளமாக திகழ்வதோடு, நகர்புற மக்கள் தொகையின் எல்லைகளை மீறி தனக்குள்ளே ஒரு நவீன கால நகரமாக செயல்பட்டு வருகிறது.</p><p> இந்த ஜெண்ட் இன்டர்நேஷனல் சென்டர் கட்டிடத்தை சிங்கப்பூரின் புகழ் பெற்ற மரீனா பே சாண்ட்ஸ் கட்டிடத்தை வடிவமைத்த அலிசியா லூ என்பவர் வடிவமைத்துள்ளார்.</p><p> முடி திருத்தும் கடைகள் முதல் திரையரங்கம் வரை இங்கே இருப்பதால் இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய தேவையே இல்லை.</p><p> பல ஆண்டுகளாக இந்த கட்டிடம் ஹாங்சூவின் இன்ஃப்ளூயன்ஸர் கட்டிடம் என்று அழைக்கப்பட்டது. காரணம் இது கன்டென்ட் கிரியேட்டர்களின் முக்கிய மையமாக திகழ்வதே காரணம்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0738aa93-7734-489c-a6a3-fddced3a1915/26-6a7eca25001aa.webp' /></p><h2> குடியிருப்பாளர்களின் கள யதார்த்தம்</h2><p>
அனைத்து வசதிகளும் ஜெண்ட் இன்டர்நேஷனல் சென்டரில் இருந்தாலும், இடவசதி என்பது குடியிருப்பாளர்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p> நடுத்தர அளவிலான இடங்கள் சிறிய தனித்தனி குடியிருப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இது நெரிசலையும், பாதுகாப்பு கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p> ஜெண்ட் இன்டர்நேஷனல் சென்டரில் சிறிய மற்றும் காற்றுப்புகாத ஜன்னல் இல்லாத யூனிட்டுகளின் மாத வாடகை சுமார் 1,500 RMB (சுமார் £167.58) ஆகும்.
அதே வெளிப்புற அழகிய காட்சிகள் கொண்ட பால்கனி யூனிட்டுகளின் மாத வாடகை 4,000 RMB (சுமார் £446.88) ஆகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T07:56:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் கொல்லப்பட்ட இந்தியர்: நீடிக்கும் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-served-in-french-army-killed-in-germany-1786689488"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-served-in-french-army-killed-in-germany-1786689488</id>
            <summary type="text">ஜேர்மனியில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எதனால் அவர் கொல்லப்பட்டார் என்பது குறித்த விடயம் மர்மமாகவே நீடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எதனால் அவர் கொல்லப்பட்டார் என்பது குறித்த விடயம் மர்மமாகவே நீடிக்கின்றது.
</p><p>
ஜேர்மனியில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவரை மர்ம நபர்கள் மூன்று பேர் கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர்.
</p><h3>
ஜேர்மனியில் கொல்லப்பட்ட இந்தியர்</h3><p>

ஹரியானாவைச் சேர்ந்த விஷு ஷர்மா (25), ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட்டில் பொருட்கள் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
</p><p>
செவ்வாயன்று, அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்த மூன்று பேர், விஷுவை வெளியே வரச் சொல்லியிருக்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df59d703-c5a4-4366-9264-f347a029cfff/26-6a7eb7d207555.webp' /></p><p>
அவர் வெளியே வந்ததும், அவர்கள் அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்கள். விஷு படுகாயமடைந்த நிலையில், அவரது அறையில் தங்கியிருக்கும் கௌரவ் என்பவர் நடந்ததைக் கண்டு உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
</p><p>
ஆனால், சிகிச்சை பலனின்றி விஷு உயிரிழந்துவிட்டுள்ளார். மறுநாள் இந்தியாவிலிருக்கும் விஷுவின் பெற்றோரை அழைத்த கௌரவ், அவர்களுடைய பிள்ளை இறந்த செய்தியை அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
</p><p>
விஷு, 2022ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்றுள்ளார். பின் ஓராண்டுக்குப் பின் பிரான்ஸ் சென்ற விஷு, ராணுவப் பயிற்சி பெற்று பிரான்ஸ் ராணுவத்தில் ஓராண்டு பணியாற்றியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
அதன்பின் ஜேர்மனிக்குச் சென்ற விஷு, பொருட்கள் டெலிவரி செய்யும் வேலையைத் துவங்கி, பின் தனக்குக் கீழ் பலர் வேலை செய்யுமளவுக்கு தன் வேலையை விரிவாக்கம் செய்துள்ளார்.
</p><p>
விஷு தீபாவளிக்கு இந்தியா வர இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், பெற்றோரும் உறவினர்களும் அவர் வருவார் என காத்திருக்க, மகன் உயிரற்ற உடலாகத்தான் இந்தியா திரும்புவான் என்னும் செய்தி கேட்டு அந்தக் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், விஷுவைக் கத்தியால் குத்தியது யார், எதற்காக அவர்கள் அவரைத் தாக்கினார்கள் என்பது குறித்த விடயங்கள் மர்மமாகவே நீடிக்கின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T07:25:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 இளம்பெண்களை வீட்டுக்கு வரவழைத்த பிரான்ஸ் தூதர்: பகீர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/french-ambassador-to-car-investigated-host-womens-1786692330"></link>
            <id>https://news.lankasri.com/article/french-ambassador-to-car-investigated-host-womens-1786692330</id>
            <summary type="text">பிரான்ஸ் தூதர் ஒருவர் பெண்களை தவறாக பயன்படுத்திக்கொண்டதாக அவர் மீது பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


பழங்காலத்து மன்னர்கள் இளம்பெண்களை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தூதர் ஒருவர் பெண்களை தவறாக பயன்படுத்திக்கொண்டதாக அவர் மீது பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>

பழங்காலத்து மன்னர்கள் இளம்பெண்களை அந்தப்புரத்துக்கு வரவழைப்பதுபோல நடந்துகொண்டுள்ளார் பிரான்ஸ் தூதர் ஒருவர்.
</p><h3>
30 இளம்பெண்களை...
</h3><p>
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கான பிரான்ஸ் நாட்டு தூதராக இருப்பவர் புரூனோ ஃபவுச்சர் (Bruno Foucher, 65).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fa865ee-ee99-44d0-8a70-2eb3e9f80c01/26-6a7ec2ec3c5ed.webp' /></p><p>
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், 20 முதல் 30 வயது வரையுள்ள சுமார் 30 பெண்களை புரூனோ தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வரவழைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
அவர்களில் சிலர், அவர் வீட்டில் இரவை செலவிட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
தான் அந்தப் பெண்களில் சிலருடன் உடல் ரீதியாக நெருக்கமாக இருந்ததை அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள உண்மைகளைத் தொடர்ந்து, புரூனோ மீது ஒழுங்குமுறை நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T07:25:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுட்டு வீழ்த்தப்பட்ட 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்: இரவோடு இரவாக நடந்த உக்ரைன்-ரஷ்யா மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-intercepts-500-ukraine-drones-overnight-1786692046"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-intercepts-500-ukraine-drones-overnight-1786692046</id>
            <summary type="text">இரவோடு இரவாக கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.சுட்டு வீழ்த்தப்பட்ட 500க்கும் மேற்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரவோடு இரவாக கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.</p><h2>சுட்டு வீழ்த்தப்பட்ட 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்</h2><p>
வெள்ளிக்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், நேற்று இரவு மட்டும் உக்ரைனுடைய 553 ட்ரோன்களை ரஷ்ய படைகள் வெற்றிகரமாக சுட்டி வீழ்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.</p><p> சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைனிய ட்ரோன்களின் பாகங்கள் நாட்டின் பல்வேறு நீர்நிலைகளிலும் பிராந்திய பகுதிகளிலும் விழுந்து இருப்பதாக அமைச்சகத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/786cc559-63bc-4a20-aec5-f6a5dda82341/26-6a7ec1d040c1d.webp' /></p><p></p><h2>பாதிக்கப்பட்ட பகுதிகள்</h2><p>
அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, நவ்கோரோத், குர்ஸ்க், பிரியான்ஸ்க், பெல்கோரோத், காளுகா, ஸ்மோலென்ஸ்க், ரோஸ்தோவ், லெனின்கிராட் மற்றும் மாஸ்கோ ஆகிய மாகாணங்கள் மற்றும் வட்டார பகுதிகளின் மேல் தடுப்பு நடவடிக்கையானது நடைபெற்றுள்ளது.</p><p> தெற்கு பிராந்தியங்களான கிராஸ்னோதார், ஸ்டாவ்ரோபோல், மற்றும் கிரிமியா ஆகிய பகுதிகளின் மேலும் உக்ரைனிய ட்ரோன் தடுப்பு நடவடிக்கையானது நடந்துள்ளது.</p><p> இதைப்போல் கருங்கடல் மற்றும் அசோவ் கடல் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட வான்பரப்பிலும் இந்த தடுப்பு நடவடிக்கையை ரஷ்ய படைகள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.</p><p> சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைனிய ட்ரோன்களின் பாகங்களினால் பொதுமக்கள் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்தவொரு தகவலும் தெரியவரவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T07:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த வங்காளதேச இளம் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tanzid-hasan-record-century-in-australia-1786691926"></link>
            <id>https://news.lankasri.com/article/tanzid-hasan-record-century-in-australia-1786691926</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அணியின் தன்ஸித் ஹசன் சதம் விளாசினார்.

டார்வினில் நடந்து வரும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அணியின் தன்ஸித் ஹசன் சதம் விளாசினார்.
</p><p>
டார்வினில் நடந்து வரும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், வங்காளதேசத்தின் தன்ஸித் ஹசன் சாதனை சதம் விளாசினார்.&nbsp;</p><h2>அவுஸ்திரேலியா ஆல்அவுட்</h2><p>
வங்காளதேச கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் டார்வினில் நேற்று தொடங்கியது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/673eedb5-4a15-4428-918f-6f967d560260/26-6a7ec15a42302.webp' /></p><p></p><p>அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 198 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, முதல் நாள் முடிவில் வங்காளதேசம் 1 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
</p><p>
இன்று இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்காளதேச அணியில் தன்ஸித் ஹசன் தமிம், தனது முதல் டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார். </p><p> 

இதன்மூலம் அவுஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் வங்காளதேச வீரர் எனும் வரலாற்று சாதனையை படைத்தார்.&nbsp;&nbsp;</p><p>197 பந்துகளை எதிர்கொண்ட தன்ஸித் ஹசன் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் எடுத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1edfa6b8-88c3-431c-895b-04616208de06/26-6a7ec1598fb4a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T07:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதலை தவிர்க்க திட்டம் - 3 பில்லியன் டொலர், 2 டன் தங்கம் வழங்கிய UAE]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uae-give-3-billion-2-ton-gold-to-iran-avoid-attack-1786691710"></link>
            <id>https://news.lankasri.com/article/uae-give-3-billion-2-ton-gold-to-iran-avoid-attack-1786691710</id>
            <summary type="text">uae gives gold, billions to iran avoid attack: அமெரிக்கா உடனான மோதலின் போது தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்க ஈரானிற்கு 3 பில்லியன் டொலர் பணம்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>uae gives gold, billions to iran avoid attack: அமெரிக்கா உடனான மோதலின் போது தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்க ஈரானிற்கு 3 பில்லியன் டொலர் பணம், 2 டன் தங்கம், 15 விமானங்கள் ஆகியவற்றை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ளது.
</p><h3>
ஐக்கிய அரபு அமீரகத்தை தாக்கிய ஈரான்</h3><p>

கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. </p><p>

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba013d1d-6fe6-42ac-af6c-d45d2d0e33cd/26-6a7ec0813b567.webp' /></p><p>

இந்த பதில் தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகமும் கடுமையான சேதத்தை சந்தித்தது. 12 பொதுமக்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். துபாய் சர்வதேச விமான நிலையம் சேதமடைந்தது.
</p><p>
தற்போது அமெரிக்காவில் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/875de0ce-2e66-4503-8b3d-d105e25e03c5/26-6a7ec081e1f66.webp' /></p><p>

மீண்டும் அமெரிக்கா தாக்குதலை தொடங்கினால் எங்களை நாட்டை தாக்க வேண்டாம் என ஐக்கிய அரபு அமீரகம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p><p></p><h3> 

ஈரானுக்கு 2 டன் தங்கம், 15 விமானங்களை வழங்கிய UAE</h3><p> 

மேலும், ஐக்கிய அரபு அமீரகம் ஈரானிற்கு 3 பில்லியன் டொலர் பணம், 2 டன் தங்கம் ஆகியவற்றை விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d95ed52d-c0e8-4905-8710-2fdac7baab96/26-6a7ec07fd4291.webp' /></p><p>
அந்த விமானம் ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் அபுதாபியிலிருந்து தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்திற்கும், கராஜின் பயாம் விமான நிலையத்திற்கும் பயணித்து.

ஒவ்வொரு முறையும், அது திரும்புவதற்கு முன்பு சுமார் ஒரு மணி நேரம் அங்கே இருந்துள்ளது. </p><p>

முன்னதாக ஜூன் 8 அன்று அபுதாபியிலிருந்து தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்திற்குப் பறந்து, 3 பில்லியன் டொலர்களைப் பரிமாற்றம் செய்திருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd082cb0-d16d-4a8b-abb7-1fcc62abe683/26-6a7ec08089e37.webp' /></p><p>

மேலும், பயன்படுத்தப்பட்ட 15 பயணிகள் விமானத்தையும் ஈரான் விமான நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், 15 விமானங்களை வழங்க உள்ளது. 2 ஏர்பஸ் ஏ320 விமானங்கள் ஏற்கனவே ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டன.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் அழிக்கப்பட்ட ஈரானின் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் விமானங்களுக்குப் பதிலாக இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
மீண்டும் அமெரிக்கா உடன் மோதல் ஏற்பட்டால் தங்கள் நாட்டை தாக்க வேண்டாம் என சமாதானப்படுத்தும் முயற்சியாக ஐக்கிய அரபு அமீரகம் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T07:16:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கப்பல்களுக்கு வலைப் போட்ட ரஷ்யா: உக்ரைனிய ட்ரோன்களிடம் தப்பிக்க எடுத்த புதிய முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-tankers-adopt-mad-max-defence-1786687798"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-tankers-adopt-mad-max-defence-1786687798</id>
            <summary type="text">உக்ரைனிய ட்ரோன்களிடம் இருந்து தப்பிக்க மேட் மேக்ஸ் திரைப்பட பாணியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு வளையங்களை ரஷ்யா அமைத்துள்ளது.பாதுகாப்பு வளையங்கள் அமைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனிய ட்ரோன்களிடம் இருந்து தப்பிக்க மேட் மேக்ஸ் திரைப்பட பாணியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு வளையங்களை ரஷ்யா அமைத்துள்ளது.</p><h2>பாதுகாப்பு வளையங்கள் அமைக்கும் ரஷ்யா</h2><p>உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் இருந்து கப்பல்களை பாதுகாப்பதற்காக ரஷ்யா புதிய மற்றும் வித்தியாசமான முறையை கையில் எடுத்துள்ளது.</p><p> அந்த வகையில் டிஸ்டோபியன்(அறிவியல் புனைக்கதை) திரைப்பட காட்சிகளை போல, கருங்கடல் மற்றும் அதனை சுற்றிய கடல் பகுதிகளில் பயணிக்க கூடிய கப்பல்களுக்கு ட்ரோன் தடுப்பு வலைகள், இரும்பு கூண்டுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றை ரஷ்யா பொருத்தியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨🇷🇺🚩🚢🛡️ <br><br>A telling adaptation aboard Russia’s shadow fleet.<br><br>The sanctioned Suezmax 🇸🇱 CARUZO (IMO 9137648) was spotted in Istanbul with extensive netting around its superstructure and additional protection around the aft section.<br><br>The apparent purpose: mitigating the threat… <a href="https://t.co/98QMz6Rkmb">pic.twitter.com/98QMz6Rkmb</a></p>&mdash; Russian Forces Spotter (@TiaFarris10) <a href="https://x.com/TiaFarris10/status/2087774650256277934?ref_src=twsrc%5Etfw">August 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதற்கான முக்கிய உதராணமாக, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளின் கீழ் உள்ள 28 ஆண்டுகள் பழமையான கருசோ(Caruzo) என்ற எண்ணெய் கப்பல் இத்தகைய பாதுகாப்போடு வலம் வருகிறது.</p><p></p><h2> உறுதிப்படுத்திய கடல் போக்குவரத்து ஆய்வாளர்</h2><p>கடல் போக்குவரத்து ஆய்வாளர் Yoruk Isik வெளியிட்ட வீடியோ காட்சிகளை சுட்டிக்காட்டி பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், கடந்த செவ்வாய்க்கிழமை பொஸ்பரஸ் ஜலசந்தி வழியாக சென்ற Caruzo டேங்கர் கப்பல் தனது பக்கவாட்டில் ட்ரோன் தடுப்பு வலைகளை தொங்கவிட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; அத்துடன் கப்பலில் பக்கவாட்டில் தண்ணீர் தொட்டிகள் மற்றும் கூண்டு போன்ற அமைப்புகள் பொருத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/307fb4a1-2387-4d46-baf5-db78383641e4/26-6a7eb137b2d65.webp' /></p><p> ரஷ்ய படைகள் தங்களது ராணுவ வாகனங்களில் இத்தகைய இரும்பு வலைகள் மற்றும் தடுப்புகளை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்பட்டாலும், வணிக கப்பல்களில் இத்தகைய கூண்டு அமைப்புகளை பயன்படுத்து இதுவே முதல் முறையாகும்.</p><p>Caruzo போலவே, இஸ்தான்புல்லுக்கு தெற்கே உள்ள மார்மரா கடலில் ரிஸ்வெல்(Rizvel) என்ற பொருளாதார தடைக்கு கீழ் உள்ள மற்றொரு டேங்கர் கப்பலும் இதே போல் வலைகளால் மூடப்பட்டு சென்றதாக Yoruk Isik தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T06:40:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரூர் அரசு வேலை ரத்து - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sc-halt-hc-order-cancel-govt-job-for-karur-victims-1786688757"></link>
            <id>https://news.lankasri.com/article/sc-halt-hc-order-cancel-govt-job-for-karur-victims-1786688757</id>
            <summary type="text">karur government job case: கரூரில் வழங்கப்பட்ட அரசு வேலை செல்லாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  

கரூரில...</summary>
            <content type="html"><![CDATA[<p>karur government job case: கரூரில் வழங்கப்பட்ட அரசு வேலை செல்லாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. </p><h3> 

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை</h3><p>

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
</p><p>
கடந்த ஜூலை 10 ஆம் திகதி கரூர் சென்ற முதல்வர் விஜய், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசுப்பணிக்கான ஆணையை வழங்கினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/535384c6-33f0-427a-84ae-45e11e0f2f8b/26-6a7eb4f71f85f.webp' /></p><p> 

இதற்கு தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை தமிழ்நாடு அரசு மீறியுள்ளது.&nbsp;</p><p></p><p>எனவே கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என தீர்ப்பளித்தது</p><h3> 

உச்சநீதிமன்றம் இடைக்கால தடை </h3><p>

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dceacc5-a047-43e7-8f6f-10e3340eefbb/26-6a7eb4f7cafc2.webp' /></p><p>

இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், "அரசின் கொள்கை முடிவில் உயர்நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்? உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்குகிறது. வழங்க கூடாது என சொல்வதற்கு நீங்கள் யார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p> 

மேலும், "உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் வேலை செய்தவர் ஒரே நபர் என்றால் குடும்பமே பாதிக்கப்படும். அப்படி இருக்கும் போது அரசுப்பணி வழங்குவதில் என்ன தவறு உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளனர்</p><p>
இதனையடுத்து, அரசு வேலை வழங்கியது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T06:26:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்து: 20 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/20-injured-in-uk-train-derails-incident-1786683732"></link>
            <id>https://news.lankasri.com/article/20-injured-in-uk-train-derails-incident-1786683732</id>
            <summary type="text">train derails in uk: இங்கிலாந்தில், ரயில் ஒன்று தடம்புரண்டதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.


இங்கிலாந்திலுள்ள லண்டன் விக்டோரியா ரயில் நிலையத்திலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>train derails in uk: இங்கிலாந்தில், ரயில் ஒன்று தடம்புரண்டதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>

இங்கிலாந்திலுள்ள லண்டன் விக்டோரியா ரயில் நிலையத்திலிருந்து ஈஸ்ட்போர்ன் ரயில் நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று, கிழக்கு சசெக்ஸிலுள்ள லூயிஸ் என்னும் இடத்தினருகே தடம்புரண்டது.
</p><h3>
ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்து</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e054f631-4e6f-40d9-9a0b-2b7518a6b0c1/26-6a7ea1568c4ea.webp' /></p><p>நேற்று மதியம் 3.45 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
2.24க்கு புறப்பட்ட அந்த ரயில், ஈஸ்ட்போர்ன் நிலையத்தை அடைய சிறிது நேரமே இருந்த நிலையில், திடீரென வேகமெடுத்ததாக அந்த ரயிலில் பயணித்த பயணிகள் தெரிவிக்கிறார்கள்.
</p><p>
அடுத்த கணம், ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.&nbsp;</p><p></p><p>
ரயில் மொத்தம் 150 பயணிகள் இருந்த நிலையில், கடைசி பெட்டிகளில் இருந்த 40 பேர் கவிழ்ந்த பெட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd9e945-4222-4e5b-9272-bd388823b650/26-6a7ea15752f03.webp' /></p><p>&nbsp;தகவலறிந்து ரயில்வே பொலிசார், சசெக்ஸ் பொலிசார், தீயணைப்பு வீரர்கள், மீட்புக் குழுவினர் ஆம்புலன்ஸ் சேவை, மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என அனைவரும் சம்பவ இடத்துக்கு விரைய, அதைத் தொடர்ந்து 20 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431bf453-8758-410e-85cb-9df71722573a/26-6a7ea15807b7d.webp' /></p><p>மாலை 6.00 மணி வாக்கில் ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியிருந்த அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக ஒரு உயிர்ச்சேதம் கூட ஏற்படவில்லை என்பது ஆறுதலளிக்கும் செய்தி!
</p><p>
சம்பந்தப்பட்ட ரயில் பாதை மூடப்பட்டுள்ள நிலையில், குறைந்தபட்சம் திங்கட்கிழமை வரை அந்த பாதையில் ரயில்கள் இயங்காது என்றும் மக்கள் பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68092dee-0fd5-4fcf-aed4-a1e84dcd85fd/26-6a7ea158af9c3.webp' /></p><p>இந்நிலையில், ரயில் பாதையில் ஒரு இடத்தில் தண்டவாளம் வளைந்திருப்பதைக் காணமுடிகிறது. அது ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட வளைவா அல்லது தண்டவாளம் வளைந்திருந்ததால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T05:04:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரங்கப் பாதைக்குள் பாய்ந்த வெள்ளப்பெருக்கும் சேறும் : 7 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chamoli-tunnel-accident-7-dead-rescue-going-1786683404"></link>
            <id>https://news.lankasri.com/article/chamoli-tunnel-accident-7-dead-rescue-going-1786683404</id>
            <summary type="text">உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்க பாதைக்குள் நீர் மற்றும் குப்பைகள் புகுந்ததில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.சுரங்கப்பாதை விபத்துவியாழக்கிழமையன்று உத்தராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்க பாதைக்குள் நீர் மற்றும் குப்பைகள் புகுந்ததில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2>சுரங்கப்பாதை விபத்து</h2><p>வியாழக்கிழமையன்று உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள சுரங்கப் பாதைக்குள்&nbsp; திடீரென வெள்ள நீரும், குப்பை மண் சாரலும் புகுந்ததில் குறைந்தது 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p> இதுவரை 18 தொழிலாளர்கள் வரை பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்(SDMA) தகவல் தெரிவித்துள்ளது.</p><p> அத்துடன் சுரங்கத்திற்கு சிக்கி இருப்பதாக நம்பப்படும் 3 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ddccf9a-e775-40e0-b63b-63918e225b09/26-6a7ea00d9c4e7.webp' /></p><p></p><h2> விபத்து எப்படி நடந்தது?</h2><p>
சமோலியின் பிபல்கோட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தெஹ்ரி புனல்மின் கழக திட்ட பகுதியில் இந்த கோர விபத்தானது ஏற்பட்டுள்ளது.</p><p> சுரங்கத்திற்கு கிட்டத்தட்ட 28 பேர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக வெள்ள நீர் புகுந்து பலத்த நீரோட்டம் ஏற்பட்டுள்ளது, இதில் பல தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு வெளியே அடித்து செல்லப்பட்டுள்ளனர்.</p><p> மாலை 6.30 மணியளவில் வெள்ள நீருடன் சேறும் புகுந்ததாக மாவட்ட மாஜிஸ்திரேட் கவுரவ் குமார் தெரிவித்துள்ளார்.</p><p> இந்த விபத்தை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.</p><p> கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதே இந்த கோர சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-14T04:57:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் பணக்கார குடும்ப பட்டியல் - முதல் 10 இடத்தில் 2 தமிழ் குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-tn-familes-in-top-10-india-most-valuable-family-1786541705"></link>
            <id>https://news.lankasri.com/article/2-tn-familes-in-top-10-india-most-valuable-family-1786541705</id>
            <summary type="text">2026 India Most Valuable Family Businesses List : 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலில் 2 தமிழ்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 India Most Valuable Family Businesses List : 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலில் 2 தமிழ்நாடு குடும்பங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது. </p><h3>

இந்தியாவின் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்கள்</h3><p>

பார்க்லேஸ் பிரைவேட் கிளைன்ட்ஸ் ஹுருன் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. </p><p>

இந்த பட்டியலில் உள்ள 300 குடும்ப வணிகங்களின் கூட்டு மதிப்பு தற்போது 1.46 டிரில்லியன் டொலராக (இந்திய மதிப்பில் ரூ.138 லட்சம் கோடி) உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/395fa4d1-09ca-4adb-b6e5-4a6456dd8d68/26-6a7c768b17c35.webp' /></p><p>

2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் இருந்து இந்த வணிகங்களின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. </p><p>அதாவது கடந்த 2 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ. 4,076 கோடி மதிப்பு உயர்விற்குச் சமமாகும்.&nbsp;</p><p></p><p>

இதில் ரிலையன்ஸ் குழும முகேஷ் அம்பானியின் குடும்பம் ரூ. 25.83 லட்சம் கோடி மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. </p><p>ஆதித்யா பிர்லா குழும குமார் மங்கலம் பிர்லா குடும்பம் ரூ. 8.14 லட்சம் கோடி மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளது. </p><p> 

ஜிண்டால் குடும்பம் ரூ. 8.01 லட்சம் கோடி மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளது. </p><p> 

இந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த வெள்ளையன் சுப்பையா தலைமையிலான முருகப்பா குடும்பம், ரூ. 3.06 லட்சம் கோடி மதிப்புடன் 8வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c00b73-1f57-4c45-85be-dc35349f1ca9/26-6a7c768bbe123.webp' /></p><p> 

இதே போல், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஷிவ் நாடார் குடும்பம் ரூ. 2.91 லட்சம் கோடி மதிப்புடன் 9வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a79b494b-778a-4481-a1f7-0adda816ef42/26-6a7c768c703cb.webp' /></p><p>

கௌதம் அதானி குடும்பம் ரூ.19.6 லட்சம் கோடி மதிப்புடன், முதல் தலைமுறை தொழில்முனைவோர் குடும்பங்களில் மிகவும் செல்வந்தர்களாக உள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T04:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் 2 வணிக கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஈரான்: UAE கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-attacks-2-ships-in-hormuz-uae-condemn-1786678816"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-attacks-2-ships-in-hormuz-uae-condemn-1786678816</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 2 வணிக கப்பல்களை ஈரான் தாக்கி இருப்பதாக சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. வணிக கப்பல்கள் மீது தாக்குதல்
ஹார்முஸ் ஜலசந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 2 வணிக கப்பல்களை ஈரான் தாக்கி இருப்பதாக சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது.</p><h2> வணிக கப்பல்கள் மீது தாக்குதல்</h2><p>
ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த தங்களது இரண்டு வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> இதில் கப்பல் சேதமடைந்து இருப்பதாகவும், ஆனால் பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சவுதி தேசிய எண்ணெய் நிறுவனம்(ADNOC) தகவல் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdfba723-04c8-4e6b-88e8-e004dea713c8/26-6a7e8e21a98b3.webp' /></p><p></p><p> ஒரு வார காலத்திற்குள் ADNOC நிறுவனத்தின் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.</p><p>கடந்த சனிக்கிழமை ஹார்முஸில் சவுதி அரசு எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p> இந்நிலையில், தற்போதைய பதற்றமான நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.</p><p>அதே நேரத்தில் ADNOC கப்பல்கள் மீதான தாக்குதல் மிகவும் பகைமையான தாக்குதல் என்று குறிப்பிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T03:40:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[Powerball லொட்டரியில் 1 பில்லியன் டொலர் வென்ற நபர்: உரிமை கோர ஓராண்டு அவகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/someone-won-1-billion-powerball-1786651825"></link>
            <id>https://news.lankasri.com/article/someone-won-1-billion-powerball-1786651825</id>
            <summary type="text">Someone won $1 billion in Powerball: இல்லினாய்ஸில் உள்ள ஒருவர் பவர்பால் லொட்டரியில் 1 பில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.

புதன்கிழமை இரவு நடைபெற்ற 1.0...</summary>
            <content type="html"><![CDATA[<p>Someone won $1 billion in Powerball: இல்லினாய்ஸில் உள்ள ஒருவர் பவர்பால் லொட்டரியில் 1 பில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.
</p><p>
புதன்கிழமை இரவு நடைபெற்ற 1.04 பில்லியன் டொலர் பவர்பால் குலுக்கலுக்கான வெற்றியாளர் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் மாகாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஓராண்டுக்குள்</h2><p>
</p><p>இது கடந்த ஆண்டுக்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய பெரும் பரிசுத்தொகை என லொட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>மேற்கு இல்லினாய்ஸில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்டிலிருந்து மேற்கே சுமார் 100 மைல் தொலைவில் அமைந்துள்ள குவின்சி பகுதியில் ஒரு 'ஹை-வீ' (Hy-Vee) எரிபொருள் நிலையத்தில் இருந்து அந்தச் சீட்டு வாங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfaa94e6-0aa1-4e8d-8af0-962d24bf4dd4/26-6a7e24b381b96.webp' /></p><p> </p><p>இல்லினாய்ஸ் லொட்டரி அமைப்பின் தகவலின்படி, ஜாக்பாட் பரிசை வென்ற சீட்டை விற்பனை செய்ததற்காக Hy-Vee எரிபொருள் நிலையத்திற்கு 500,000 டொலர் ரொக்கப் போனஸ் வழங்கப்படும். </p><p>இல்லினாய்ஸ் மாகாணத்தில் லொட்டரி வெற்றியாளர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமலே இருக்க முடியும் என்பதால், அந்த வெற்றியாளர், 29 ஆண்டுகளில் 30 தவணைகளாக வழங்கப்படும் 1.04 பில்லியன் டொலர் மதிப்பிலான வருடாந்திரத் தவணை முறையிலான பரிசைப் பெறுவதைத் தெரிவு செய்யலாம். </p><p>அல்லது 450.5 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்ட ஒரு தொகையை மொத்தமாகப் பெறலாம். இவ்விரு தொகைகளும் வரிக்கு உட்பட்டவை ஆகும்.</p><p> குலுக்கல் நடைபெற்ற திகதியிலிருந்து ஓராண்டுக்குள் வெற்றியாளர் பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று லொட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
மாசசூசெட்ஸில் விற்கப்பட்ட ஒரு டிக்கெட், பவர் பிளே மல்டிபிளையருடன் ஆறு எண்களில் ஐந்து எண்களைப் பொருத்தி 2 மில்லியன் டொலர்களை வென்றுள்ளது. </p><p>அதே நேரத்தில், அரிசோனா, கலிபோர்னியா, புளோரிடா மற்றும் வட கரோலினா ஆகிய நான்கு மாகாணங்களில் விற்கப்பட்ட ஐந்து டிக்கெட்டுகள் தலா 1 மில்லியன் டொலர்களை வென்றன என்று லொட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆர்கன்சாஸைச் சேர்ந்த ஒருவர் 1.8 பில்லியன் டொலர்களை வென்ற பிறகு, புதன்கிழமை நடந்த குலுக்கல்தான் முதல் பில்லியன் டொலர் பவர்பால் ஜாக்பாட் ஆகும். </p><p>மே 2 அன்று புளோரிடா மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த இருவர் 20 மில்லியன் டொலர் பரிசைப் பகிர்ந்துகொண்ட பிறகு, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒருவர் முதன்மைப் பரிசை வென்றது இதுவே முதல் முறையாகும்.</p><h2>மிகப்பெரிய பவர்பால் பரிசு</h2><p> </p><p>புதன்கிழமை நடந்த ஆட்டம், தற்போதைய ஜாக்பாட் தொடரில் நடைபெற்ற 44வது தொடர்ச்சியான குலுக்கலாகும், மேலும் அதன் பரிசுத்தொகை பவர்பால் வரலாற்றில் எட்டாவது பெரிய பரிசுத்தொகையாகப் பதிவாகியுள்ளது.</p><p> 2016-ல் 1.586 பில்லியன் டொலர் பவர்பால் பரிசைப் பிரித்துக்கொண்டதன் மூலம், புளோரிடா, கலிபோர்னியா மற்றும் டென்னசியைச் சேர்ந்த மூவர் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான ஜாக்பாட்டை வென்ற முதல் நபர்கள் ஆனார்கள். </p><p>பதிவுசெய்யப்பட்டதிலேயே மிகப்பெரிய பவர்பால் பரிசுத் தொகையான 2.04 பில்லியன் டொலர்கள் 2022-ல் கலிபோர்னியாவில் வெல்லப்பட்டது; கடந்த ஆண்டு ஆர்கன்சாஸில் வெல்லப்பட்ட 1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசு இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b418f82-c365-487f-8b3e-06bda943ebef/26-6a7e24b433dea.webp' /></p><p> </p><p>புளோரிடா, டெக்சாஸ் மற்றும் டென்னசி உள்ளிட்ட சில மாகாணங்கள் லொட்டரி பரிசுத்தொகைக்கு வரி விதிப்பதில்லை. பெரும்பாலான பவர்பால் மற்றும் பிற முக்கிய லொட்டரி வெற்றியாளர்கள், ஆண்டுத் தவணைகளை விட மொத்தத் தொகையையே தெரிவு செய்கின்றனர். </p><p>பவர்பால் சீட்டுகள் அமெரிக்காவின் 45 மாகாணங்கள், கொலம்பியா மாவட்டம், புவேர்ட்டோ ரிக்கோ, அமெரிக்க விர்ஜின் தீவுகள் மற்றும் பிரித்தானியா ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகின்றன. </p><p>குலுக்கல்கள் ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:59 மணிக்கு (ET) நடைபெறுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T03:30:09+00:00</updated>
        </entry>
    </feed>
