<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-19T22:23:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களை தாக்கிய ஹவுதிகள்: பதிலடிகள் தொடரும் என எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthi-attacks-riyadh-and-yanbu-in-saudi-1789854301"></link>
            <id>https://news.lankasri.com/article/houthi-attacks-riyadh-and-yanbu-in-saudi-1789854301</id>
            <summary type="text">சவுதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக அதன் இராணுவ பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். சவுதியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக அதன் இராணுவ பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h3> சவுதியின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்த ஹவுதி</h3><p>
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மற்றும் யான்பு நகரில் உள்ள சவுதி அராம்கோ நிறுவனத்தின் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ஹவுதி படையினர் இராணுவ பேச்சாளர் யஹ்ஹா சரீ தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> இந்த தாக்குதலில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஏராளமான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஏமன் தலைநகர் சனா மீது சவுதி ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக யஹ்ஹா சரீ குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5087c42e-cc0d-4463-8812-278cae157840/26-6aaf025ea6350.webp' /></p><p> பொதுமக்களை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்துவதாக சவுதி குற்றஞ்சாட்டிய நிலையில், அதனை மறுத்த யஹ்ஹா சரீ, குறிவைக்கப்பட்ட ராணுவ இலக்குகளை ஏவுகணைகள் வெற்றிகரமாக அடைந்ததாக தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் சவுதிக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர போவதாகவும் சரீ குறிப்பிட்டுள்ளார்.</p><p> இதற்கிடையில் ஹவுதி படையினர் நடத்திய தாக்குதல் பதற்றம் காரணமாக தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக விமான சேவைகளை இடை நிறுத்தியுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-09-19T21:45:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 ஆண்டுகளாக இந்திய சிறையில் போராடும் பிரித்தானியர்: ஜாமீன் வழங்கிய டெல்லி நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-sikh-jagtar-singh-johal-gets-bail-1789842800"></link>
            <id>https://news.lankasri.com/article/british-sikh-jagtar-singh-johal-gets-bail-1789842800</id>
            <summary type="text">British Sikh Jagtar Singh Johal Gets Bail: இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>British Sikh Jagtar Singh Johal Gets Bail: இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.</p><h2> பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கிய இந்திய நீதிமன்றம்</h2><p>
பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2017 ம் ஆண்டு முதல் ஸ்காட்லாந்தை சேர்ந்த பிரித்தானிய சீக்கியர் ஜக்தார் சிங் ஜோஹல்&nbsp; இந்திய அதிகாரிகளால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.</p><p> தற்போது 39 வயதாகும் ஜக்தார் சிங் ஜோஹல் கடந்த 2017ம் ஆண்டு தன்னுடைய திருமணத்திற்காக இந்தியா வந்து சேர்ந்தார்.</p><p> திருமணம் முடிந்து 3 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஷாப்பிங் மாலில் தன்னுடைய மனைவுடன் இருக்கும் போது ஜக்தார் சிங் ஜோஹல் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் காரில் பலவந்தமாக கடத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eb0b435-7673-4377-be66-03538b104a9b/26-6aaed571938fc.webp' /></p><p></p><h2> ஜக்தார் சிங் ஜோஹல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு</h2><p>
ஜக்தார் சிங் ஜோஹல் பஞ்சாபில் உள்ள காலிஸ்தான் விடுதலை படைகளுக்கு நிதியுதவி செய்து வந்ததாக இந்திய அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.</p><p> இருப்பினும் இது தொடர்பான போதிய ஆதாரங்களை இந்திய அரசு அதிகாரிகள் சமர்ப்பிக்க தவறியதால், ஜக்தார் சிங் ஜோஹல் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தன.</p><p> இந்நிலையில்&nbsp; பல ஆண்டுகளாக இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய சீக்கியர் ஜக்தார் சிங் ஜோஹலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T19:44:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி: புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/missing-13-year-old-girl-lillia-new-cctv-released-1789846974"></link>
            <id>https://news.lankasri.com/article/missing-13-year-old-girl-lillia-new-cctv-released-1789846974</id>
            <summary type="text">Missing 13-Year-Old Girl Lillia New CCTV Released: பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Missing 13-Year-Old Girl Lillia New CCTV Released: பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.</p><h2> காணாமல் போன 13 வயது சிறுமி</h2><p>
கடந்த செப்டம்பர் 11ம் திகதி வெள்ளிக்கிழமை போல்டனைச் சேர்ந்த 13 வயது சிறுமி லில்லியா(Lillia) தன்னுடைய வீட்டில் இருந்து வெளியேறியதை அடுத்து காணாமல் போனார்.</p><p>கடந்த ஒரு வார காலமாக காணாமல் போன 13 வயது சிறுமி லில்லியை கண்டுபிடிக்கும் முயற்சியில் &nbsp; கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f0c5bb-4048-4724-aa1d-1688fa4159bf/26-6aaee5c06a24f.webp' /></p><p> பல மணி நேர தீவிர சிசிடிவி ஆய்வுக்கு பிறகு செப்டம்பர் 14ம் திகதி காலை 10.36 மணிக்கு&nbsp; தேடப்பட்டு வரும் சிறுமி லில்லியா மான்செஸ்டர் பிக்காடில்லி(Piccadilly) பேருந்து நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர்.</p><p></p><p> மேலும் அவர் சால்போர்ட் நகருக்கான நம்பர் 36 பேருந்தில் ஏறிய லில்லியா, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய சில நிமிடத்தில் கேமராவில் பதிவாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c5a307f-e80d-4486-98ad-6482c05215d3/26-6aaee5c12f1ca.webp' /></p><p> இந்நிலையில் அந்த சிசிடிவி காட்சிகளை தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ள காவல்துறை, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய லில்லி எந்த திசையில் சென்றார் அல்லது அவரை பற்றி வேறு ஏதேனும் தகவல் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.</p><p>புதிதாக வெளியான சிசிடிவி காட்சிகளில், காணாமல் போன லில்லி முதுப்பையுடன் கருப்பு நிற உடை அணிந்து இருந்ததும், தலையில் ஹூடி அணிந்து இருந்ததும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T19:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் ஹோட்டலில் நள்ளிரவு பற்றிய தீ: சந்தேகம் எழுப்பும் காவல்துறையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/folkestone-hotel-fire-police-launch-investigation-1789845462"></link>
            <id>https://news.lankasri.com/article/folkestone-hotel-fire-police-launch-investigation-1789845462</id>
            <summary type="text">Folkestone Hotel Fire Police Launch Investigation: போக்ஸ்டோன் ஹோட்டலில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Folkestone Hotel Fire Police Launch Investigation: போக்ஸ்டோன் ஹோட்டலில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><h2>ஹோட்டலில் பரவிய தீ</h2><p>பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் உள்ள பிரபல கிராண்ட் பர்ஸ்டின் ஹோட்டலில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.</p><p> அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் அவசர கால சேவையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்</p><p>கிட்டத்தட்ட 26 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஹோட்டலில் பரவிய தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.</p><p> இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் ஹோட்டலின் அடித்தளத்தில் இருந்து தீயானது பரவியிருக்க கூடும் என்று தெரியவந்துள்ளது.</p><p> ஹோட்டலில் பற்றிய தீயின் நிலவரத்தை சுதாரித்துக் கொண்ட அவசரகால மீட்புக் குழுவினர் அங்கு தங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களை அவசர அவசரமாக வெளியேற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86b34d6f-69fb-4ad5-89b4-8e491654ecd8/26-6aaedfd75ea48.webp' /></p><p></p><p> இந்த தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>திட்டமிட்ட சதியாக இருக்கலாம்</h2><p>ஹோட்டலில் நிகழ்ந்த இந்த தீ விபத்து வேண்டுமென்றே வைக்கப்பட்ட தீ எரிப்பு சம்பவமாக இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</p><p> இந்நிலையில் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்ட போது சந்தேகத்திற்குரிய முறையில் யாரேனும் நடமாடியதை கண்டிருந்தால் உடனடியாக காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p> குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு 10.00 முதல் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி வரையிலான நேரத்தில் பதிவான டாஷ் கேம் காட்சிகளை வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.<br></p>]]></content>
            <updated>2026-09-19T19:19:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியின் ரியாத் விமான நிலையம் அருகே கரும்புகை: குண்டுவெடிப்பு மற்றும் வான்வழி அச்சுறுத்தல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/riyadh-explosions-tension-spike-and-aerial-alerts-1789839467"></link>
            <id>https://news.lankasri.com/article/riyadh-explosions-tension-spike-and-aerial-alerts-1789839467</id>
            <summary type="text">Riyadh Explosions Tension Spike and Aerial Alerts: &amp;nbsp;ரியாத் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென எழுந்த அடர்ந்த கரும்புகை பெரும் பரபரப்பை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Riyadh Explosions Tension Spike and Aerial Alerts: &nbsp;ரியாத் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென எழுந்த அடர்ந்த கரும்புகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>விமான நிலையம் அருகே அடர்ந்த கரும்புகை&nbsp;</h2><p> சனிக்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென அடர்ந்த கரும்புகை எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>இப்பகுதியில் நள்ளிரவில் விடுக்கப்பட்ட திடீர் வான்வழி அச்சுறுத்தல்களை அடுத்து சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களும் அரங்கேறியது.</p><p>ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையினருக்கும், சவுதி ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்களே தற்போதைய பதற்றமான சூழ்நிலைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b39222a-3eaf-4b43-aa65-78b98171728b/26-6aaec86cefcaf.webp' /></p><p> ஹவுதி படையினர் மெக்கா நகரை தாக்க முயற்சி செய்து வருவதாக சவுதி அரேபியா குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை ஹவுதிகள் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.</p><h2> விமான நிலையத்தில் சிக்கல்</h2><p>சவுதி தலைநகரில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு செல்வதற்கான முக்கிய நெடுஞ்சாலையில் பெரும் கரும்புகை திரண்டு எழுவது தொடர்பான புகைப்படங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.</p><p> வெடிப்பு சத்தம் மற்றும் புகை மண்டலம் போன்றவை அசாதாரண சூழ்நிலையை விளக்கினாலும் இது தொடர்பான உண்மையான காரணத்தை சவுதி அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.</p><p> இந்த பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான செயல்பாட்டு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்று FlightRadar24 தெரிவித்துள்ளது.</p><p> மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T17:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ICU அறையில் நடந்த திருமணம் - தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-weds-partner-at-icu-for-moms-wish-1789834822"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-weds-partner-at-icu-for-moms-wish-1789834822</id>
            <summary type="text">Woman weds partner at ICU for mom’s wish: சாகும் தருவாயில் இருந்த தாயின் கடைசி ஆசையை மகள் நிறைவேற்றியுள்ளார்.

தாயின் கடைசி ஆசைஅமெரிக்காவின் புளோரிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman weds partner at ICU for mom’s wish: சாகும் தருவாயில் இருந்த தாயின் கடைசி ஆசையை மகள் நிறைவேற்றியுள்ளார்.
</p><h2>
தாயின் கடைசி ஆசை</h2><p>அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 81 வயதான டோன்னா கம்மிங்ஸ், Stage 4 கல்லீரல் புற்றுநோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.</p><p> அவர் தனது மகள் கேமி கம்மிங்ஸ் அவரது காதலர் சேண்டி ஆடம்ஸை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feab6d48-cf88-4358-b42f-18fb04fee808/26-6aaeb6479ae81.webp' /></p><h2>ICU அறையில் திருமணம்</h2><p>அந்த விருப்பத்தை நிறைவேற்ற, காமி தனது தாயின் ICU படுக்கையருகே திருமணம் செய்து கொண்டார். மருத்துவமனை ஊழியர்கள் ICU அறையை அழகாக அலங்கரித்து, கேக் மற்றும் பானங்களுடன் சிறிய குடும்ப விழாவை ஏற்பாடு செய்தனர்.</p><p>

கேமி, “என் தாயார் எப்போதும் சேண்டியை என் தேவதை என்று அழைத்தார். அவர் நன் திருமணம் செய்து கொண்டதை பார்க்க வேண்டும் என்பதே அவரது ஆசை” என்று கூறினார். </p><p>மேலும், “என் தாயார் எங்கள் குடும்பத்திற்காக பல தியாகங்கள் செய்தார். அவரின் இறுதி நாட்களில் அவரை மகிழ்விக்க இது தான் நான் செய்யக்கூடிய சிறந்த விடயம்” என்று உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce6e590-cc2e-49b8-a173-07510318d099/26-6aaeb64853c16.webp' /></p><p>திருமண விழாவுக்குப் பிறகு, டோன்னா ICU-வில் உயிரிழந்தார். கேமி, “இப்போது என் தாயார் வலியின்றி அமைதியாக இருக்கிறார்” என்று கூறினார்.
</p><p>
கேமி மற்றும் சேண்டி, வரும் ஏப்ரல் மாதத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பெரிய திருமண விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
இந்த நிகழ்வு, தாயின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் மகளின் அன்பை வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான கதையாக உலகம் முழுவதும் பரவிவருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T17:09:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டை மீறிய Google Gemini AI - 3 நிறுவனங்களை ஹேக் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-gemini-ai-hacks-firms-in-test-1789836010"></link>
            <id>https://news.lankasri.com/article/google-gemini-ai-hacks-firms-in-test-1789836010</id>
            <summary type="text">Google நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடல் Gemini குறித்து அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

மே மாதத்தில் நடைபெற்ற சைபர் பாதுகாப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Google நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடல் Gemini குறித்து அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
</p><p>
மே மாதத்தில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு சோதனையின் போது, Gemini தனது கட்டுப்படுத்தப்பட்ட சூழலை விட்டு வெளியேறி, மூன்று உண்மையான நிறுவனங்களின் நெட்வொர்க்கில் நுழைந்ததாக Google தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b148adb0-9af4-44ff-93a8-1b222d90d244/26-6aaebaebf271c.webp' /></p><p>இந்தச் சம்பவம், சோதனை நடத்தும் மூன்றாம் தரப்பு நிறுவனம் தவறுதலாக Gemini-க்கு இணைய அணுகலை வழங்கியதால் ஏற்பட்டது. </p><p>

ஆரம்பத்தில், Gemini ஒரு கற்பனை நிறுவனத்தை தாக்க வேண்டும் என்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் அந்த கற்பனை நிறுவனத்தின் பெயர், உண்மையான நிறுவனத்தின் பெயருடன் பொருந்தியதால், AI தவறுதலாக உண்மையான நிறுவனங்களின் நெட்வொர்க்கில் நுழைந்தது.
</p><p></p><p>Google-ன் அறிக்கையின்படி, இந்த ஹேக்கிங் சம்பவத்தால் எந்த நிறுவனத்திற்கும் சேதம் ஏற்படவில்லை. ஆனால், AI மாடல்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலை விட்டு வெளியேறி, இணையத்தில் சுதந்திரமாக செயல்படக்கூடிய அபாயம் இருப்பதை இது வெளிப்படுத்துகிறது.
</p><p>
இந்தச் சோதனையின் நோக்கம், Gemini எவ்வாறு சைபர் பாதுகாப்பு குறைகளை கண்டறிந்து பயன்படுத்துகிறது என்பதை மதிப்பிடுவதாகும். ஆனால் நிகழ்ந்த தவறுகள், AI-யின் சக்தி மற்றும் அபாயங்களை உலகளவில் விவாதிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன.</p><p>

AI மாடல்கள் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவது எதிர்காலத்தில் பெரிய அபாயமாக மாறக்கூடும். அதனால் சோதனைகள் மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T16:36:49+00:00</updated>
        </entry>
    </feed>
