<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-26T01:19:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Google Maps-இல் புதிய அப்டேட்., AI அடிப்படையிலான வழிகாட்டி Navigation, Speedometer]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-maps-ai-navigation-speedometer-1785027496"></link>
            <id>https://news.lankasri.com/article/google-maps-ai-navigation-speedometer-1785027496</id>
            <summary type="text">Google Maps தனது புதிய AI அடிப்படையிலான வழிகாட்டி (Immersive Navigation) மற்றும் வேகக் கணிப்பான் (Speedometer) வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Google Maps தனது புதிய AI அடிப்படையிலான வழிகாட்டி (Immersive Navigation) மற்றும் வேகக் கணிப்பான் (Speedometer) வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

இந்த அப்டேட், பயணிகளுக்கு தெளிவான வழிகாட்டுதலையும், பாதுகாப்பான ஓட்டத்தையும் வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய AI வழிகாட்டி, சாலைகளின் தெளிவான வரைபடங்கள், மேம்பட்ட காட்சிகள் மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வழிமுறைகளை வழங்குகிறது. இதனால், ஓட்டுநர்கள் தங்கள் பயணத்தை எளிதாக திட்டமிட முடியும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2199cc37-0587-4c7d-a17a-926ad1e59440/26-6a655baa51967.webp' /></p><p>ஆரம்பத்தில் சில பயனர்களுக்கே கிடைத்த இந்த வசதி, தற்போது பரவலாக Android மற்றும் iOS பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், Android Auto-வில் வேகக் கணிப்பான் சேர்க்கப்பட்டுள்ளது. </p><p>இது, வாகனத்தின் வேகத்தை நேரடியாகக் காட்டும். குறிப்பாக, டிஜிட்டல் டாஷ்போர்டு இல்லாத வாகனங்களில் பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
</p><p>
Google, இந்த வசதிகளை server-side update மூலம் வழங்குகிறது. அதனால், பயனர்கள் தனியாக update செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், சில பகுதிகளில் மற்றும் சில சாதனங்களில் இந்த வசதி படிப்படியாக கிடைக்கும்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T00:56:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கல்வி அமைச்சராக பிரலாத் ஜோஷி நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pralhad-joshi-named-new-education-minister-1785026933"></link>
            <id>https://news.lankasri.com/article/pralhad-joshi-named-new-education-minister-1785026933</id>
            <summary type="text">புது டெல்லியில், கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>புது டெல்லியில், கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக உள்ள பிரலாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>தர்மேந்திர பிரதான், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்கள் 35 நாட்கள் நீடித்த நிலையில், “மாணவர்களின் நலனுக்காகவும், நாட்டுக்கு எதிரான சக்திகள் இந்த நிலையை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும்” ராஜினாமா செய்ததாக தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd85213b-503e-44f9-acf4-8674ffa4d040/26-6a65597649622.webp' /></p><p>அவரின் ராஜினாமா, கரப்பாண்பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. பிரதான் பதவி விலகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, CJP போராட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது.
</p><p>
பிரலாத் ஜோஷி, “இந்த பொறுப்பை கடமை உணர்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், கல்வி துறையில் முன்னேற்றத்தை உறுதி செய்வேன்” என்று தெரிவித்தார். அவர், தேசிய கல்விக் கொள்கை (NEP) மற்றும் பல முக்கிய முயற்சிகளை முன்னெடுத்த தர்மேந்திர பிரதானின் பங்களிப்பை பாராட்டினார்.
</p><p>மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க அரசு எப்போதும் உறுதியாக இருப்பதாகவும், எந்த விதமான தவறுகளுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜோஷி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T00:47:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையை விட அணு ஆயுதங்களில் அதிக ஆர்வம் காட்டும் கமேனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/irans-mojtaba-pushes-nuclear-ambitions-1785016041"></link>
            <id>https://news.lankasri.com/article/irans-mojtaba-pushes-nuclear-ambitions-1785016041</id>
            <summary type="text">தற்போதைய ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, அவரது தந்தை அயத்துல்லா அலி கமேனியை விட அணு ஆயுதங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் என அமெரிக்க உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, அவரது தந்தை அயத்துல்லா அலி கமேனியை விட அணு ஆயுதங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் என அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அலி கமேனி, 36 ஆண்டுகள் ஈரானை ஆட்சி செய்தவர். அவர், நாட்டின் அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்த போதிலும் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு எதிராக இருந்தார்.</p><p></p><p>
</p><p>ஆனால், பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
</p><p>
அவரது மகன் மொஜ்தபா கமேனி, பொதுவாக அணு ஆயுதங்களை ஆதரிப்பதாக வெளிப்படையாக கூறவில்லை. இருப்பினும், அவரும் புதிய கடுமையான ஈரான் அரசாங்கமும் அணு ஆயுதங்களை உருவாக்க விரும்புவதாக அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2a7e0ae-d2d3-4487-99a6-69e994d04e75/26-6a652eeb1becf.webp' /></p><p>ஈரான் அரசு தற்போது ஹார்முஸ் நீரிணையை கடுமையாகக் கட்டுப்படுத்தி வருகிறது. மேலும், அமெரிக்காவுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் கடினமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
</p><p>
அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போர், ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதை தொடரும் வாய்ப்பை குறைப்பதற்கு பதிலாக, அதனை மேலும் அதிகமாக்கி இருப்பதாக என எச்சரிக்கின்றனர்.
</p><p>
இது உண்மையாக இருந்தால், இது அமெரிக்கா ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை அதிகரிக்க கூடுதல் காரணமாக அமையும்.
</p><p>
தற்போது, ஈரான் தனது அணு திட்டத்தை மீண்டும் தொடங்கவில்லை. ஆனால், அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு, தங்களின் அணு சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சில சென்ட்ரிஃப்யூஜ்களை மத்திய ஈரானில் உள்ள வலுவான நிலத்தடி வளாகத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T23:10:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜினாமா மட்டும் போதாது- CJP போராட்டத்தை முடித்த பிறகு சோனம் வாங்சுக் வெளியிட்ட கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sonam-wangchuk-calls-for-reforms-in-india-1785019568"></link>
            <id>https://news.lankasri.com/article/sonam-wangchuk-calls-for-reforms-in-india-1785019568</id>
            <summary type="text">&amp;nbsp;கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரப்பாண்பூச்சி ஜனதா கட்சி (CJP) தனது போராட்டத்தை முடித்ததாக அறிவித்த பிறகு, சமூக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரப்பாண்பூச்சி ஜனதா கட்சி (CJP) தனது போராட்டத்தை முடித்ததாக அறிவித்த பிறகு, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
</p><p>
வாங்சுக் கூறியதாவது: "அரசாங்கம் மற்றும் தர்மேந்திர பிரதான் எடுத்த நடவடிக்கைகளை நான் வரவேற்று மதிக்கிறேன், நாட்டு மக்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இது இன்று நாம் கண்ட ஜனநாயகத்தின் வெற்றி. இந்த பிரச்சினையை முதலில் எழுப்பிய எங்கள் தலைமை நீதிபதி குழுவையும், அவர்களை ஆதரித்த தன்னார்வலர்களையும், ஜனநாயகத்திற்காக நின்ற நாடு முழுவதிலுமிருந்து வந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களையும் நான் வாழ்த்துகிறேன் மற்றும் நன்றி தெரிவிக்கிறேன்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a441a88c-a234-417a-b896-fbbb2beed00b/26-6a6542af08aca.webp' /></p><p>நான் அவர்கள் அனைவரையும் மதிக்கிறேன், மிக முக்கியமாக, அவர்கள் அமைதி காத்த விதத்தை நான் மதிக்கிறேன். இந்த சமாதானத்தை நாங்கள் பேணுவோம் என்றும், எதிர்காலத்தில் எங்கும் எந்த தவறும் நடக்காது என்றும் நம்புகிறேன். சீர்திருத்தங்களை நோக்கி நாம் பணியாற்ற வேண்டும். ராஜினாமாவால் மட்டும் ஒரு தேசம் கட்டமைக்கப்படுவதில்லை. கல்வியில் சீர்திருத்தம் இருக்க வேண்டும், அதற்கான கூடுதல் பணிகள் செய்யப்பட வேண்டும், "என்று அவர் கூறினார்.
</p><p>
அவரின் கருத்துப்படி, மக்கள் போராட்டம் நடத்துவது முக்கியமானது. ஆனால், அதற்குப் பின் அரசியல் அமைப்பில் நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தங்களே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.</p><p></p><p>சோனம் வாங்சுக், லடாக்கில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்காக போராடி வரும் பிரபல சமூக செயற்பாட்டாளர்.</p><p>

அவர், ஜந்தர் மந்தரில் ஜூன் 6 அன்று தனது போராட்டத்தை தொடங்கினார். பின்னர் ஜூன் 28 அன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த பின்னர் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்தார். 26 நாட்களுக்குப் பிறகு வியாழக்கிழமை இரவு உண்ணாவிரதத்தை முடித்தார்.</p><p>

இப்போது அவர் வலியுறுத்திய இந்த கருத்து, இந்திய அரசியல் சூழலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T23:09:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் வீட்டின் மீது மோதிய சிறிய விமானம்- ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/small-plane-crashes-into-german-house-1785009100"></link>
            <id>https://news.lankasri.com/article/small-plane-crashes-into-german-house-1785009100</id>
            <summary type="text">ஜேர்மனியின் லோயர் சாக்ஸனி மாநிலத்தில் உள்ள கான்டர்கீஸி (Ganderkesee) நகரில், ஒரு சிறிய விமானம் வீட்டின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் லோயர் சாக்ஸனி மாநிலத்தில் உள்ள கான்டர்கீஸி (Ganderkesee) நகரில், ஒரு சிறிய விமானம் வீட்டின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

விமானத்தில் இரண்டு பேர் பயணம் செய்தனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p></p><p>விமானம் திடீரென உயரத்திலிருந்து கீழே சரிந்து, குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரையில் மோதியது. அதிர்ஷ்டவசமாக, அந்த வீட்டில் வசித்தவர்கள் சம்பவ நேரத்தில் இல்லாததால், வேறு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.</p><p>சம்பவ இடத்தில் மீட்பு குழுக்கள் விரைவாக செயல்பட்டு, தீயணைப்பு மற்றும் அவசர உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce2bdb0c-552b-4767-9bfa-196cdb782b66/26-6a6513ce56c10.webp' /></p><p>அருகிலுள்ள 100 மீட்டர் சுற்றளவில் வசித்த மக்கள் பாதுகாப்பு காரணமாக வெளியேற்றப்பட்டனர். மேலும், மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
</p><p>
இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்களுக்கு மனநலம் சார்ந்த உதவி வழங்க 'கிரைசிஸ் இன்டர்வென்ஷன்' குழு அனுப்பப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af010d2b-69ba-4594-92d5-10701cef3c37/26-6a6513cf0d6cd.webp' /></p><p>விமானம் ஏன் உயரத்தை இழந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொழில்நுட்ப கோளாறா அல்லது வானிலை காரணமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T19:49:51+00:00</updated>
        </entry>
    </feed>
