<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-07T06:08:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளம்... நூலிழையில் உயிர் தப்பிய சுவிஸ் பெண்ணின் திகில் அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-woman-escapes-from-nepal-floods-1788760024"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-woman-escapes-from-nepal-floods-1788760024</id>
            <summary type="text">Swiss woman escapes from Nepal floods: சுவிஸ் நாட்டவரான பெண்ணொருவர், நேபாளப் பெருவெள்ளத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.


சுவிஸ் நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss woman escapes from Nepal floods: சுவிஸ் நாட்டவரான பெண்ணொருவர், நேபாளப் பெருவெள்ளத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p>


சுவிஸ் நாட்டவரான நட்டாலியா (Natalia Rjumin-Girardet, 70), வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு சுற்றுலாப்பயணிகளுடன் கைலாச மலைக்கு புனித யாத்திரை சென்றிருந்தார்.
</p><h3>
நூலிழையில் உயிர் தப்பிய அனுபவம்</h3><p>

அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென வழியில் நிற்க, அவர்களுடைய சமையல்காரர் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0be74078-13b4-4f23-b155-b66e60844c21/26-6a9e4fd975e61.webp' /></p><p>
அனைவரும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக வெளியே எட்டிப் பார்க்க, தொலைவில் ஒரு மலையே பெயர்ந்துவருவதை கவனித்துள்ளார் அவர்.</p><p>

அப்போதுதான் நிலச்சரிவு ஏற்படுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்துள்ளது.
</p><p>
உடனடியாக உடைமைகளைக் கூட எடுக்காமல், வேகவேகமாக அனைவரும் பேருந்திலிருந்து இறங்கியுள்ளார்கள்.
</p><p>
சரியாக அவர்களுடைய பேருந்து நின்ற இடத்தின் அருகில் படிக்கட்டுகள் இருக்க, படிக்கட்டுகளில் ஏறி உயரமான ஒரு இடத்தை அடைந்துள்ளார்கள் அனைவரும்.&nbsp;</p><p></p><p>

அங்கிருந்து கீழே பார்க்கும்போது, வீடுகளும், கார்களும், ஏன் பேருந்துகளும் கூட அடித்துச் செல்லப்படும் பயங்கர காட்சிகளை கண்ணால் கண்டதை திகிலுடன் விவரிக்கும் நட்டாலியா, தாங்கள் உயிர் தப்பியது கடவுள் அனுக்கிரகம்தான் என்கிறார்.
</p><p>
ஆம், அன்றைய நிலவரப்படி, 1,100 உடல்களை மீட்புக் குழுக்கள் மீட்டிருந்தன, மேலும் 4,500 பேர் வரை மாயமாகியிருந்தார்கள்.
</p><p>
மலை உச்சியிலிருந்த சேமிப்புக் கிடங்கொன்றில், மழை, குளிருக்கு நடுவே அனைவரும் இரவைக் கழிக்க, மறுநாள் காலை ராணுவம் ஹெலிகொப்டர் ஒன்றின் உதவியுடன் அவர்களை மீட்டு காட்மாண்டுவுக்குக் கொண்டு சென்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47fb8d94-fe2e-4f79-804b-3e60f1069b13/26-6a9e4fda287d4.webp' /></p><p>
நட்டாலியா தனது மொபைலை பேருந்திலேயே தவறவிட்டிருந்ததால், வேறொரு பெண்ணிடம் தனது சகோதரியின் மொபைல் எண் இருக்க, அவரது மொபைல் உதவியுடன் தன் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு, தான் பாதுகாப்பாக இருப்பதை தெரியப்படுத்த அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.</p><p>

ஆகத்து மாதம் 26ஆம் திகதியை மறக்கமுடியாது, அது நான் மறுஜென்மம் எடுத்த நாள் என்கிறார் நட்டாலியா!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T05:47:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காளதேசத்தை தனியாளாக நொறுக்கிய ஹர்ஷிதா: இலங்கை அணி அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-sri-lanka-won-by-4-wickets-asia-cup-2026-1788757813"></link>
            <id>https://news.lankasri.com/article/women-sri-lanka-won-by-4-wickets-asia-cup-2026-1788757813</id>
            <summary type="text">Women sri lanka beat bangladesh by 4 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Women sri lanka beat bangladesh by 4 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
</p><p>
துபாயில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், வங்காளதேசத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.&nbsp;</p><h2>மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டி&nbsp;</h2><p>

இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டி துபாயில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d237fc9a-5035-414d-a09c-bf31e2dbbc8a/26-6a9e48c060f79.webp' /></p><p></p><p>
 முதலில் துடுப்பாடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ஓட்டங்கள் எடுத்தது.
</p><p>
அதிகபட்சமாக சோபனா 34 ஓட்டங்களும், திலரா அக்தர் 26 ஓட்டங்களும் எடுத்தனர். சாமுடி பிரபோதா 3 விக்கெட்டுகளும், சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8761be5-c584-4a44-a67c-b41f8f7f7ca0/26-6a9e48bedb3ea.webp' />&nbsp;</p><h2>ஹர்ஷிதா&nbsp;ஆட்டநாயகி </h2><p>
பின்னர் ஆடிய இலங்கை அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஹர்ஷிதா சமரவிக்ரமா (Harshitha Samarawickrama) அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 48 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசினார்.</p><p>

இதன்மூலம் இலங்கை அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;</p><p>ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்த ஹர்ஷிதா ஆட்டநாயகி விருது பெற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fd8c98a-e625-478b-a876-5b3b4d27340e/26-6a9e4e9771e28.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa111f5f-d895-4d7b-b060-94ac15dccf2f/26-6a9e4e967e984.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aee6a676-4929-4eab-b33a-476a9be6af5d/26-6a9e48bfaa774.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T05:13:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-to-seize-british-company-1788757646"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-to-seize-british-company-1788757646</id>
            <summary type="text">Ukraine seeks to seize water company owned by British billionaire: பிரித்தானிய கோடீஸ்வரருக்குச் சொந்தமான குடிநீர் நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் முயல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukraine seeks to seize water company owned by British billionaire: பிரித்தானிய கோடீஸ்வரருக்குச் சொந்தமான குடிநீர் நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் முயல்கிறது.
</p><p>ரஷ்ய பெரும் கோடீஸ்வரர் ஒருவருடன் இணைந்து தாங்கள் சொந்தமாக வைத்திருக்கும் தண்ணீர் நிறுவனத்தைக் கைப்பற்ற முயலும் உக்ரேனிய அதிகாரிகளுடன், பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பம் கடுமையானப் போராட்டத்தில் சிக்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830d0ff0-6dda-498d-9c75-5566c30d3865/26-6a9e4690e288a.webp' /></p><p>
</p><p>உக்ரைனின் மிகப்பெரிய போத்தல் குடிநீர் பிராண்டுகளைத் தயாரிக்கும் நிறுவனத்தில் படார்கட்சிஷ்விலி குடும்பத்தினர் (டோபி ஜோன்ஸ் மற்றும் மீரா சியால் ஆகியோருடன் இணைந்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பணியாற்றிய லியானா படார்கட்சிஷ்விலி உட்பட) வைத்துள்ள 34 சதவீத பங்குகள் குறித்த விவகாரமே இந்த மோதலுக்கு மையமாக உள்ளது. </p><p>ரஷ்யாவின் ஆல்ஃபா குழுமப் பெருநிறுவனத்தின் நிறுவனர் மிக்கைல் ஃபிரிட்மேன் உட்பட, ரஷ்ய முதலீட்டாளர்கள் IDS உக்ரைன் நிறுவனத்தில் 49 சதவீதப் பங்குகளை வைத்திருப்பதால், 2022-ஆம் ஆண்டில் உக்ரைனிய அதிகாரிகள் அந்நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கினர். </p><p>விளாடிமிர் புடினின் ஆட்சிக்கு ஆதரவளித்ததற்காக அவர் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்த நிலையில், ஜார்ஜிய அரசாங்கத்தையும் மற்ற சிறுபான்மைப் பங்குதாரர்களாகக் கொண்ட அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்குமாறு ஒரு சுதந்திரமான நிர்வாகத்திற்கு அறிவுறுத்தும் பணி, உக்ரைனின் சொத்து மீட்பு மற்றும் மேலாண்மை முகமையான (ஆர்மா) இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>உக்ரேனிய ஆர்மா அமைப்பின் தலைவரான யாரோஸ்லாவா மக்ஸிமென்கோ, தங்கள் சொத்துகளின் மீதான கட்டுப்பாட்டைக் கைவிடப் பங்குதாரர்கள் காட்டிய எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால், தாங்கள் தொடர்ந்து சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான தடைகளைச் சந்திக்க நேர்ந்ததாகக் கூறினார். </p><p>மேலும், நிறுவனத்திற்கு ஒரு சுயாதீன மேலாளரைத் தேடும் முயற்சியின்போது தாங்கள் இணையவழித் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் அந்த முகமை மேலும் கூறுகிறது; இருப்பினும், இதற்கு யார் காரணம் என்பது குறித்த எந்த ஆதாரமும் இல்லை, மட்டுமின்றி படார்கட்சிஷ்விலி குடும்பத்தினர் மீது இதில் சந்தேகம் ஏதுமில்லை. </p><p>இருப்பினும், ஐடிஎஸ் உக்ரைனில் படார்காட்சிஷ்விலியின் முதலீட்டிற்கான நிறுவனமான நியூ வேர்ல்ட் வேல்யூ ஃபண்ட் லிமிடெட், ஆர்மாவின் அதிகாரிகள் மீது ஆதாரமற்ற ஒரு சட்டவிரோத நடத்தை குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும், அது தவறான தகவல் என்றும் மாக்சிமென்கோ கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01ce829d-1c09-486c-b870-a8232c06f989/26-6a9e46919aa84.webp' /></p><p> </p><p>அத்தகைய குற்றச்செயல்கள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ கண்டுபிடிப்புகளும் இல்லை என்றாலும், ஐடிஎஸ் உக்ரைன் நிறுவனம் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்தால், பணமோசடி மற்றும் மதிப்பு சுரண்டல் ஆகியவை நடைபெறக்கூடும் என்று தனது முகமைக்கு கவலைகள் இருப்பதாக மாக்சிமென்கோ கூறியுள்ளார். </p><p>உக்ரைனின் ஊழல் தடுப்பு உயர் நீதிமன்றத்தில் தனிப்பட்ட வழக்கு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன; இதில், போர்க்காலத்தில் அரசாங்கத்தின் சில தரப்பினரால் மிக முக்கியமான உத்திசார் சொத்தாகக் கருதப்படும் 'IDS Ukraine' நிறுவனத்தின் உரிமையின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையையுமோ அரசுடைமையாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அதன் பங்குதாரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். </p><p>இந்த நிலையில், பிப்ரவரி 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து தாங்கள் உக்ரைனின் உறுதியான ஆதரவாளர்களாக இருந்து வருவதாகப் படார்கட்சிஷ்விலி (Patarkatsishvili) குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்; அத்துடன், தங்கள் குடும்பத்தினர் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுவதாகவும், தேவைப்பட்டால் சர்வதேச நீதிமன்றங்களில் நீதி கோரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d754a3f-e6b5-4c2e-a167-c4553f87078a/26-6a9e46925c5d6.webp' /></p><p> சோவியத் ஒன்றியத்தின் சிதைவின்போது பெரும் செல்வம் ஈட்டிய தொழிலதிபரான பத்ரி படார்கட்சிஷ்விலியின் மறைவுக்குப் பிறகு, 2008-ஆம் ஆண்டில் 'IDS Ukraine' நிறுவனத்தில் அவருக்கு இருந்த பங்குரிமை, அவரது சகோதரி லியானா, மற்றொரு சகோதரி ஐயா மற்றும் தாயார் இன்னா ஆகியோருக்குச் சொந்தமானது. </p><p>இதனிடையே, IDS Ukraine-இன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், IDS Ukraine குழும நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகள் முழுவதும், வரி மற்றும் நிதிச் சட்டங்கள் உள்ளிட்ட உக்ரேனியச் சட்டங்களின் தேவைகளுக்கு இணங்கவே செயல்பட்டு வந்துள்ளன; தற்போதும் அவ்வாறே செயல்பட்டு வருகின்றன என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T05:04:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூடப்பட்ட 8 விமான நிலையங்கள்... இந்தோனேசியாவில் சிக்கித் தவிக்கும் 170,000 பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesia-eight-airports-closed-1788753885"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesia-eight-airports-closed-1788753885</id>
            <summary type="text">Indonesia Volcano eruption 170,000 travellers stranded: இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக 170,000 பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
அனக் கிரகடாவ் மலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indonesia Volcano eruption 170,000 travellers stranded: இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக 170,000 பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
</p><p>அனக் கிரகடாவ் மலையில் ஏற்பட்ட எரிமலைச் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவின் இரண்டு விமான நிலையங்கள் உட்பட எட்டு இந்தோனேசிய விமான நிலையங்கள் திங்கள்கிழமை அதிகாலையில் மூடப்பட்டுள்ளது.</p><h2>எப்போது முடிவுக்கு வரும்</h2><p>
</p><p>ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகளுக்கு நடுவில் அமைந்துள்ள அனாக் கிரகடாவ் எரிமலை, வெள்ளிக்கிழமை இரவு வெடித்ததில் இருந்து, அதிலிருந்து பரவிய சாம்பல் ஜகார்த்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளை மூடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ca76ad8-3315-45c8-b518-e6823d11c0d0/26-6a9e37df0e668.webp' /></p><p> </p><p>இதன் காரணமாக, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 170,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>ஜகார்த்தாவின் பிரதான விமான நிலையத்தில் அமுலில் உள்ள தடை, உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என விமான நிலைய நிர்வாகம் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, மாறிவரும் வானிலை காரணமாக இது எப்போது முடிவுக்கு வரும் என்பதை எங்களால் உறுதியாகக் கூற முடியாது என்று போக்குவரத்து அமைச்சர் தத்தி பூர்வா காந்தி தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>அந்த அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில், ஜகார்த்தாவின் அருகிலுள்ள லாம்பங் மற்றும் மேற்கு ஜாவா மாகாணங்களுக்குச் சேவை வழங்கும் விமான நிலையங்கள் உட்பட மற்ற ஏழு விமான நிலையங்களும், குறைந்தபட்சம் காலை 8.59 மணி வரை மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. </p><p>பாதிக்கப்பட்ட எட்டு விமான நிலையங்களில் இதுவரை 1,558 விமானங்கள் தாமதமாகியுள்ளதாகவும், இதனால் 170,000 பயணிகள் சிக்கித் தவிப்பதாகவும் அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. </p><p>பாதிக்கப்பட்ட 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் சோகர்னோ-ஹட்டா விமான நிலையத்திற்கு வந்து சென்றவை அல்லது அங்கிருந்து புறப்பட்டவை என்றே தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இதனிடையே, ஜகார்த்தா முழுவதும் உள்ள பள்ளிகளும் பாதிக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் வகுப்புகள் இணையவழியில் நடத்தப்படுவதாக அந்நகரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது; எனினும், இந்த நடைமுறை எவ்வளவு காலத்திற்கு அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடப்படவில்லை.</p><h2>இன்னும் வெடிப்புகள்</h2><p> சனிக்கிழமையன்று அனாக் கிரகடாவ் எரிமலை வெடித்ததில், சில நூறு கிலோமீட்டர் தொலைவு வரை கேட்கக்கூடிய வகையில் எரிமலைக்குழம்பு நீரூற்றும் பேரொலிகளும் எழுந்ததாக புவியியல் ஆய்வு நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbee0c21-c257-4687-bff7-b9423208600d/26-6a9e37dfb5279.webp' /></p><p> </p><p>ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் பல எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்தன; எரிமலை கண்காணிப்பு அமைப்பின் இணையதளம், மிகச் சமீபத்திய வெடிப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு 8:23 மணிக்கு நிகழ்ந்ததைக் குறிப்பிட்டுள்ளது. </p><p>மேலும், வரும் நாட்களில் இன்னும் வெடிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகமாகவே உள்ளது என அந்த முகமை திங்களன்று எச்சரித்தது. சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வான்வெளியில் எரிமலைச் சாம்பல் கண்டறியப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் விமானச் செயல்பாடுகளை இடைநிறுத்தம் செய்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>சுமாத்ராவின் தென்கோடி முனையில் உள்ள பண்டார் லம்பங் நகரையும் எரிமலைச் சாம்பல் அடைந்து, நிறுத்தப்பட்டிருந்த கார்களையும் சாலை ஓரங்களையும் மூடியது. எரிமலைச் செயல்பாடுகளால் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதால், அந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0ce53fc-a2eb-4f48-94b9-e4d68b87f18f/26-6a9e37e0642c0.webp' /></p><p> </p><p>எரிமலையிலிருந்து 3 கி.மீ. சுற்றளவுள்ள தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது என உள்ளூர் துறைமுக அதிகாரிகள் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். </p><p>1883-ஆம் ஆண்டில் கிரகடாவ் (Krakatau) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து உருவான கால்டெராவில் (caldera), கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கடலிலிருந்து வெளிப்பட்ட இந்த எரிமலை அவ்வப்போது செயல்பட்டு வருகிறது. </p><p>அந்தப் பேரிடர் வரலாற்றிலேயே மிகவும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மற்றும் அதிக அழிவை விளைவித்த பேரிடர்களில் ஒன்றாகும்; இதில் சுமார் 35,000 பேர் மரணமடைந்தனர். </p><p>2018-ஆம் ஆண்டில் அனக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலையின் சில பகுதிகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட சுனாமியில் 429 பேர் மரணமடைந்தனர்; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T04:01:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் ஆதிக்கம்... ஐரோப்பிய ஒன்றியத் தொழிற்சாலைகளில் 300,000 வேலை இழப்பு அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eu-faces-factory-job-cuts-1788751323"></link>
            <id>https://news.lankasri.com/article/eu-faces-factory-job-cuts-1788751323</id>
            <summary type="text">EU faces 300,000 factory job cuts: ஐரோப்பிய ஒன்றியம் 300,000 தொழிற்சாலை வேலைவாய்ப்பு இழப்புகளை எதிர்கொள்கிறது.
சீன உதிரிபாக உற்பத்தியாளர்களால் தொழில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>EU faces 300,000 factory job cuts: ஐரோப்பிய ஒன்றியம் 300,000 தொழிற்சாலை வேலைவாய்ப்பு இழப்புகளை எதிர்கொள்கிறது.
</p><p>சீன உதிரிபாக உற்பத்தியாளர்களால் தொழில்துறை ஆதிக்கம் செலுத்தப்படுவதை பிரஸ்ஸல்ஸ் தடுத்து நிறுத்தாவிட்டால், ஐரோப்பிய ஒன்றிய உற்பத்தித் துறையில் வேலை இழப்புகள் வேகமாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>வேலைவாய்ப்புகள் பறிபோகும்</h2><p>
</p><p>ஐரோப்பிய ஒன்றியத்துடன் நாளொன்றுக்கு 1 பில்லியன் யூரோ என்ற சாதனை அளவிலான வர்த்தக உபரியைக் கொண்டுள்ள சீனாவிலிருந்து அதிகரித்து வரும் போட்டியின் காரணமாக, 2026-ஆம் ஆண்டின் எஞ்சிய காலத்தில் உற்பத்தித் துறையில் 300,000 வேலைவாய்ப்புகள் இழக்கப்படலாம் என்று 'யூரோமெட்டல்' (Eurometal) கணிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1509eeca-5033-4c07-8ce6-a5c90f275bdd/26-6a9e2dddc0eb0.webp' /></p><p> </p><p>மேலும், திங்களன்று, ஐரோப்பிய ஆணையத்தின் தலைமையகத்தைச் சுற்றி 10 குறியீட்டு சவப்பெட்டிகளுடன் பேரணி மற்றும் போராட்டத்தை நடத்தி, பிரஸ்ஸல்ஸில் உள்ள முடிவெடுப்பவர்களிடம் யூரோமெட்டல் (Eurometal) தனது கவலைகளை முன்வைக்கவுள்ளது. </p><p>சவப்பெட்டிகளில் 'ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டித்திறன்', 'தொழில்துறை வேலைவாய்ப்புகள்' மற்றும் 'ஐரோப்பிய தொழிற்சாலைகள்' போன்ற வாசகங்கள் குறிக்கப்பட்டிருக்கும். </p><p>உதிரிபாகங்களின் விற்பனை மூலம் சீனா விநியோகச் சங்கிலிகளில் ஊடுருவி வருவதால், தங்கள் தொழில்கள் நசுங்கிப் போகும் நிலையை ஆணையம் முழுமையாக உணரவில்லை என்று ஐரோப்பிய உற்பத்தியாளர்கள் அஞ்சுகிறார்கள்.</p><p></p><p> </p><p>யூரோமெட்டல் (Eurometal) நிறுவனத்தின் தலைவரான அலெக்சாண்டர் ஜூலியஸ், சீனா தான் செய்து வருவதை மறைக்கவில்லை என்றும், அது அவர்களின் ஐந்தாண்டுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். </p><p>மட்டுமின்றி, உற்பத்தியில் 90 சதவீதம் பயன்படுத்தப்படும் உலோகங்கள் மற்றும் இரசாயனங்கள் உள்ளிட்ட கூறுகள் மட்டத்தில், சீன ஏற்றுமதிகளின் தாக்கத்தை ஆணையம் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். </p><p>ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே 2024-ல் சீன இறக்குமதிகளுக்கு வரி விதிப்பதன் மூலம் மின்சார வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது, மேலும் ஜூன் மாதத்தில் வெளிநாட்டு எஃகு இறக்குமதிகள் மீது அதிக வரிகளை அறிமுகப்படுத்தியது.</p><h2>பேச்சுவார்த்தை</h2><p> </p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையரான மரோஸ் செஃபோவிச் (Maroš Šefčovič), சீனாவுடனான வர்த்தகத்தில் ஆண்டுதோறும் நிலவும் 360 பில்லியன் யூரோ அளவிலான இறக்குமதி-ஏற்றுமதி சமநிலையின்மை நீடித்திருக்கக்கூடியதல்ல என்று கூறியுள்ளார்; வர்த்தகப் போரைத் தவிர்க்கும் முயற்சியாக, அக்டோபர் மாதம் வரை மூன்று மாத காலத்திற்குப் பேச்சுவார்த்தைகளை நடத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. </p><p>ஜேர்மனி போன்ற நாடுகளில் உள்ள தொழில்துறைகளில் அதிகரித்து வரும் வேலை இழப்புகளைப் பாருங்கள். ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அதன் விளைவுகளைப் பார்க்கிறார்கள், ஆனால் அதற்குக் காரணமான வைரஸை அவர்கள் கண்டுகொள்வதில்லை என்றும் ஜூலியஸ் கூறியுள்ளார். </p><p>மட்டுமின்றி, இது ஏன் நிகழ்கிறது என்பதையோ அல்லது நிறுவனங்கள் ஏன் சீனாவுக்கோ இந்தியாவுக்கோ இடம்பெயர்கின்றன அல்லது ஏன் திவாலாகின்றன என்பதையோ அவர்கள் ஆராய்வதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d3dc062-6d12-4545-8c4f-4fefe87b356f/26-6a9e2dde71a6d.webp' /></p><p> </p><p>சீனாவில் தயாரிக்கப்படும் உதிரிபாகங்கள் அத்தகைய வரிகள் எதற்கும் உட்படுத்தப்படுவதில்லை என்று ஜூலியஸ் கூறினார்; அத்துடன், சீன நாணயமான யுவானின் மதிப்பு குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் சேர்ந்து, சீனப் போட்டியாளர்களுடன் போட்டியிடுவதைச் சவாலானதாக ஆக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>அதிகரித்த எரிசக்திச் செலவுகள் மற்றும் உலகளாவிய போட்டி ஆகியவற்றின் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பறிபோகக்கூடும் என்று ஐரோப்பிய ஆணையம் ஜூன் மாதத்தில் மேற்கொண்ட ஆய்வு கணித்துள்ளது; இதில், ஜேர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) கடந்த வாரம் உறுதிப்படுத்திய 1,00,000 வேலைவாய்ப்பு குறைப்புகளும் அடங்கும். </p><p>இதனிடையே, ஐரோப்பா மீது பாதுகாப்புவாதக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக சீனா தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் சீன நிறுவனங்களையோ அல்லது தயாரிப்புகளையோ மேலும் குறிவைத்தால், உறுதியான பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அது எச்சரித்ததாக, அரசுக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது. </p><p>அப்போதிலிருந்து, ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் மூன்று மாத காலப் பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T03:19:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கான முதல் வேளாண்மை AI மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ள Google]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-launches-india-agri-ai-models-1788742853"></link>
            <id>https://news.lankasri.com/article/google-launches-india-agri-ai-models-1788742853</id>
            <summary type="text">Google நிறுவனம், இந்தியாவுக்கான முதல் வேளாண்மை செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Google DeepMind-இன் AnthroKrishi குழு உருவாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Google நிறுவனம், இந்தியாவுக்கான முதல் வேளாண்மை செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
Google DeepMind-இன் AnthroKrishi குழு உருவாக்கிய இந்த மாடல்கள், விவசாய நிலங்களைப் புரிந்துகொள்வதற்கும், பயிர் நிலைமைகளை கண்காணிப்பதற்கும் உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a04e778d-d2cd-46b9-b830-79b0b1ba4006/26-6a9e0cc68a9ce.webp' /></p><p>
</p><h2>
இரண்டு முக்கிய மாடல்கள்</h2><p><b>Agricultural Landscape Understanding (ALU):</b> நிலத் தரவுகளை ஆய்வு செய்து, விவசாய நிலப் படங்களை அடையாளம் காண உதவுகிறது. இது நில வரைபடம், நிலப் பயன்பாடு, டிஜிட்டல் வேளாண்மை போன்ற பயன்பாடுகளுக்கு உதவுகிறது.
</p><p><b>
Agricultural Monitoring and Event Detection (AMED):</b> பயிர் நிலைமைகள், நிலப் பயன்பாட்டில் மாற்றங்கள், விவசாய சம்பவங்களை கண்காணிக்கிறது. ALU-உடன் இணைந்து பயன்படுத்தப்படும் போது, பெரிய அளவில் பயிர் கண்காணிப்பு செய்ய முடிகிறது.
</p><p></p><p>இந்த மாடல்கள், Google Earth-இல் தரவு அடுக்குகளாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவைத் தவிர கென்யா, உகாண்டா, கானா, ருவாண்டா, நைஜீரியா, சாம்பியா போன்ற நாடுகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
</p><h2>
பயன்பாட்டு உதாரணங்கள்</h2><p>CarbonFarm: குறைந்த கார்பன் அரிசி சாகுபடிக்கு ALU API மற்றும் ஜெமினியைப் பயன்படுத்தியுள்ளது, 2030 க்குள் 2 மில்லியன் ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்துள்ளது.
</p><p>
TerraStack (IIT Bombay startup): 140 மில்லியன் ஹெக்டேர் நில வரைபடமாக்க பயன்படுத்தியுள்ளது.
</p><p>
கர்நாடகா நீர்வளத் துறை: 2.6 மில்லியன் ஹெக்டேர் பாசன நிலங்களுக்கு நீர் மேலாண்மை செய்ய பயன்படுத்தியுள்ளது.
</p><p>
Telangana ADeX: டிஜிட்டல் வேளாண்மை சேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த AI மாடல்கள், precision agriculture, irrigation planning, crop monitoring போன்ற துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T00:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரோன்களுக்கு நிதி திரட்ட போர்னோகிராபியை சட்டபூர்வமாக்கும் உக்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-may-legalise-p0rn-for-war-funds-1788741813"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-may-legalise-p0rn-for-war-funds-1788741813</id>
            <summary type="text">உக்ரைன் நாடாளுமன்றத்தில், போர்னோகிராபியை (ஆபாச வீடியோ) சட்டபூர்வமாக்கும் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நாட்டின் அடல்ட் எண்டர்டெயின்மென்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் நாடாளுமன்றத்தில், போர்னோகிராபியை (ஆபாச வீடியோ) சட்டபூர்வமாக்கும் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம், நாட்டின் அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறையை சட்டப்பூர்வமாக்கி, வரி வசூலிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f073b21-9771-4b0f-b8c8-4330fc7f593e/26-6a9e08b73c54e.webp' /></p><p>நாடாளுமன்ற நிதி குழுத் தலைவர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக், இந்தத் துறையை சட்டப்பூர்வமாக்கினால், 25 மில்லியன் டொலர் வரி வருவாய் கிடைக்கும் என மதிப்பிட்டுள்ளார். அந்த தொகை, உக்ரைன் போருக்காக 30,000 ட்ரோன்கள் வாங்க போதுமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

தற்போது, உக்ரைனில் போர்னோகிராபி தயாரித்தல், வைத்திருத்தல், பகிர்தல் அனைத்தும் சட்டவிரோதமாகும். இதற்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இருந்தாலும், இந்தத் துறை குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் ஊழல் உதவியுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.</p><p></p><p>2023-ஆம் ஆண்டு, 7,900 உக்ரைனியர்கள் OnlyFans மூலம் 131 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வரி செலுத்தியவர்கள் கூட பார்ன் வீடியோ சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதால், பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.</p><p>

OnlyFans படைப்பாளர் ஸ்விட்லானா ட்வோர்னிகோவா, “நான் 9 லட்சம் டொலர் வரி செலுத்தியுள்ளேன். அதற்குப் பிறகும் என்னை குற்றவாளியாக நடத்துவது தவறு” எனக் கூறி, ஜெலென்ஸ்கி இணையதளத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு ஒரு வாரத்தில் 25,000 கையெழுத்துகள் கிடைத்தன.</p><p>

இதையடுத்து, ஜெலென்ஸ்கி அரசு, போர்னோகிராபி சட்டபூர்வமாக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் பரிசீலிக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஜூலை மாதத்தில், இந்த மசோதா முதல் வாசிப்பில் நிறைவேற்றப்பட்டு, தற்போது இரண்டாவது வாசிப்புக்காக காத்திருக்கிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T00:41:18+00:00</updated>
        </entry>
    </feed>
