<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-05T00:46:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைரத்தில் மின்சாரம் - ஹொங்ஹொங் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/diamonds-found-to-generate-electricity-in-2026-1788568758"></link>
            <id>https://news.lankasri.com/article/diamonds-found-to-generate-electricity-in-2026-1788568758</id>
            <summary type="text">Scientists discover diamonds can generate electricity: வைரங்களால் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.வைரத்தில் மின்சாரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Scientists discover diamonds can generate electricity: வைரங்களால் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.</p><h2>வைரத்தில் மின்சாரம்</h2><p>வைரம் (Diamond) மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது என்ற நூற்றாண்டு பழைய நம்பிக்கையை ஹொங்ஹொங் பல்கலைக்கழக (HKU) விஞ்ஞானிகள் முறியடித்துள்ளனர்.
</p><p>
அவர்கள் உருவாக்கிய அதிக நெகிழ்வான, மிகச் சிறிய வைரத் தாள் (ultrathin flexible diamond membrane), வளைந்தபோது மின்சார அழுத்தத்தை (Piezoelectric Effect) உருவாக்குவதை நிரூபித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4715f7bc-9334-456f-a7cf-55c6ac93f376/26-6a9b64b853690.webp' /></p><p>இந்த ஆய்வை Professor Zhiqin Chu மற்றும் Professor Yuan Lin தலைமையிலான குழு மேற்கொண்டது. வைரம், அதன் கடினத்தன்மை, வெப்பக் கடத்தல், இரசாயன நிலைத்தன்மை போன்ற காரணங்களால், இதுவரை மற்ற பொருட்களுக்கு ஆதரவாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. </p><h2>வைரமே உற்பத்தி செய்யும் மின்சாரம்&nbsp;</h2><p>ஆனால் இப்போது, வைரமே மின்சாரம் (active electricity) உற்பத்தி செய்யும் பொருளாக மாறியுள்ளது.

ஆய்வாளர்கள், edge exfoliation method என்ற புதிய முறையைப் பயன்படுத்தி, வைரத்தை மிகச் சிறிய தாள்களாக வெட்டி, அதை வளைத்தபோது நிலையான மின்னழுத்தம் உருவாகுவதை கண்டறிந்தனர். </p><p>பல முறை சோதனை செய்தபோதும், ஒரே மாதிரியான மின்சார விளைவுகள் பதிவாகின.

இதற்கான காரணம், வைரத் தாளின் grain boundaries எனப்படும் சிறிய சீரற்ற பகுதிகளில் மின்சார துருவம் (charge polarization) உருவாகுவதால். இதனால் தாளின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் மின்னழுத்த வேறுபாடு ஏற்படுகிறது.
</p><p></p><p>இந்த கண்டுபிடிப்பு, மருத்துவ சாதனங்கள், சிறிய மின்சார அமைப்புகள், தானாக இயங்கும் சென்சார்கள் போன்ற துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும். வைரம், உடலுக்கு பாதிப்பு இல்லாதது, இரசாயன ரீதியாக நிலையானது, நச்சுத்தன்மை இல்லாதது என்பதால், உடலுக்குள் பொருத்தப்படும் மருத்துவ சாதனங்களுக்கு (Implants) சிறந்த தேர்வாகும்.
</p><p>
இனி, வைரம் செயல் மின்சாரம் உற்பத்தி செய்யும் பொருளாக உலகின் மிக நம்பகமான, நீடித்த, பாதுகாப்பான தொழில்நுட்பங்களில் ஒன்றாக மாறும் வாய்ப்பு உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T00:36:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026-இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்கள் - சிங்கப்பூர் முதலிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/singapore-tops-2026-global-competitiveness-ranking-1788564479"></link>
            <id>https://news.lankasri.com/article/singapore-tops-2026-global-competitiveness-ranking-1788564479</id>
            <summary type="text">Singapore tops 2026 global competitiveness ranking: 2026 இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்களின் தரவரிசையை இங்கே பார்க்கலாம்.

சிங்கப்பூர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Singapore tops 2026 global competitiveness ranking: 2026 இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்களின் தரவரிசையை இங்கே பார்க்கலாம்.</p><h2>

சிங்கப்பூர்&nbsp;முதலிடம்</h2><p>சிங்கப்பூர், 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் மிகப் போட்டித்திறன் வாய்ந்த பொருளாதாரமாக (Most Competitive Economy) தேர்வாகியுள்ளது.</p><p>

IMD World Competitiveness Ranking வெளியிட்ட பட்டியலில், சிங்கப்பூர் 100 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/259fa4da-2bc6-4880-9f49-4af2a4662953/26-6a9b560c0ea16.webp' /></p><p>இரண்டாம் இடத்தில் ஹொங்ஹொங் (95.6), மூன்றாம் இடத்தில் சுவிட்சர்லாந்து (95.3), நான்காம் இடத்தில் தைவான் (94.3), ஐந்தாம் இடத்தில் டென்மார்க் (94.1) ஆகியவை உள்ளன. </p><p>

தொடர்ந்து அயர்லாந்து (94.1), ஐக்கிய அரபு அமீரகம் (94.1), நெதர்லாந்து (90.1), ஸ்வீடன் (88.5) அடுத்ததடுத்த இடங்கைப் பிடித்துள்ளன.
</p><p></p><h2>அமெரிக்கா</h2><p>அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், இந்த பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. இது, பொருளாதாரத்தின் அளவும் போட்டித்திறனும் ஒன்றல்ல என்பதை காட்டுகிறது.
</p><p>
முதல் 10 இடங்களில் 5 இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. இந்தியா இந்த தரவரிசையில் 44-வது இடத்தையே பிடித்துள்ளது.
</p><p>
IMD, போட்டித்திறனை மதிப்பீடு செய்ய 341 அளவுகோல்கள் பயன்படுத்துகிறது. இதில் பொருளாதார செயல்திறன், அரசின் திறன், வணிக திறன், அடிப்படை வசதிகள் ஆகிய நான்கு முக்கிய தூண்கள் அடங்கும்.
</p><p></p><p>சிங்கப்பூர், 2026-இல் வணிக திறன் (Business Efficiency) பிரிவில் முதலிடத்தைப் பெற்றதால், மொத்தத்தில் மீண்டும் உலகின் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசியா இணைந்து 10 இடங்களில் 9 இடங்களை பிடித்துள்ளன. காரணம், திறமையான தொழிலாளர்கள், மேம்பட்ட அடிப்படை வசதிகள், சட்டத்தின் நம்பகத்தன்மை, மற்றும் புதுமை (Innovation) ஆகியவை.
</p><p>
இந்த பட்டியலில் வியட்நாம் முதல் முறையாக இடம் பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 7-வது இடத்தில், சவுதி அரேபியா 13-வது இடத்தில் உள்ளது.

இந்த தரவரிசை, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், நிறுவனங்களின் நீண்டகால முதலீடு மற்றும் போட்டித்திறனை உருவாக்கும் சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T23:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாங்கள் தாக்குதல் நடத்தமாட்டோம் - ரஷ்யாவுடன் தற்காலிக போர்நிறுத்தத்தை முன்மொழிந்த ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-proposes-ceasefire-us-envoys-visit-1788555596"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-proposes-ceasefire-us-envoys-visit-1788555596</id>
            <summary type="text">Zelensky proposes ceasefire amid US envoys visit: ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் செய்ய ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.தற்காலிக&amp;nbsp;போர்நிறுத்தம்உக்ரைன் ஜனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zelensky proposes ceasefire amid US envoys visit: ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் செய்ய ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.</p><h2>தற்காலிக&nbsp;போர்நிறுத்தம்</h2><p>உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடன் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire) செய்ய முன்மொழிந்துள்ளார்.
</p><p>
காரணம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தூதர்கள் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் வார இறுதியில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் செல்ல உள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79b8dc65-1b9c-4d4e-b64a-875783765bb5/26-6a9b31cf11139.webp' /></p><p>ஜெலென்ஸ்கி, “அவர்களின் பயணத்தின் போது எங்கள் பக்கம் வான்வழி தாக்குதல் இருக்காது. அதேபோல் ரஷ்யாவும் தாக்குதலை நிறுத்த வேண்டும். இதனால் பேச்சுவார்த்தைகள் நடைபெற வழி ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>

ரஷ்யா, உக்ரைன் உளவுத்துறை தலைமையகத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது. அந்த தாக்குதல், உளவுத்துறை தலைவரின் அலுவலகத்தை நேரடியாக குறிவைத்ததாக ஜெலன்ஸ்கி கூறினார்.
</p><p></p><p>அமெரிக்க தூதர்கள், மாஸ்கோவில் சனிக்கிழமையும், கீவ் நகரில் ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இது, ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவு காணும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
</p><p>
ஜெலென்ஸ்கி, “நாங்கள் ரஷ்யாவுக்காக அல்ல, தூதர்களின் பாதுகாப்புக்காக கவலைப்படுகிறோம். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர உண்மையான வாய்ப்புகள் தேவை” என்று குறிப்பிட்டார்.
</p><p></p><p>கடந்த சில நாட்களாக ரஷ்யா, கீவ் மற்றும் பிற நகரங்களில் பகல் நேர தாக்குதல்களை அதிகரித்துள்ளது. ஓடெசா பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர். ட்னிப்ரோவில் நடந்த தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
</p><p>
இந்த சூழ்நிலையில், அமெரிக்க தூதர்களின் பயணம், போருக்கு முடிவு காணும் முக்கிய அரசியல் முயற்சி எனக் கருதப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T22:24:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நன்றி, டியர் மோடி - இந்தியா-இத்தாலி உறவை வலுப்படுத்தும் மெலோனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/meloni-thanks-modi-india-italy-ties-stronger-1788550134"></link>
            <id>https://news.lankasri.com/article/meloni-thanks-modi-india-italy-ties-stronger-1788550134</id>
            <summary type="text">Meloni thanks Modi, India-Italy ties stronger: இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறிய வாழ்த்துக்கு மெலோனி நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி, டியர் மோடிஇத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Meloni thanks Modi, India-Italy ties stronger: இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறிய வாழ்த்துக்கு மெலோனி நன்றி தெரிவித்துள்ளார்.
</p><h2>
நன்றி, டியர் மோடி</h2><p>இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இரண்டாம் உலகப்போருக்குப் பின் நீண்ட காலம் தொடர்ந்து பதவி வகித்த பிரதமராக சாதனை படைத்துள்ளார்.

இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். </p><p>அதற்கு பதிலளித்த மெலோனி, “நன்றி, அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி. இன்று இந்தியா-இத்தாலி உறவு இதுவரை இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது” என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/390916ed-7afc-47b4-a09b-a7fbcc76b683/26-6a9b1bf819333.webp' /></p><p>மெலோனி, 2022 அக்டோபர் 22 முதல் பிரதமராக உள்ளார். 1,413 நாட்கள் தொடர்ந்து பதவி வகித்ததால், முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
</p><p>
மெலோனி தனது பதிவில், “நாம் தொடங்கிய சிறப்பு மூலோபாய கூட்டாண்மை (Special Strategic Partnership), இரு நாடுகளின் திறமைகளை இணைத்து புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தையும் (Economic Corridor) இணைந்து வலுப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டார்.
</p><p></p><p>மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “இத்தாலி மக்களின் நம்பிக்கையும் நெருக்கமும் மெலோனியின் தலைமையில் பிரதிபலிக்கிறது. இந்தியா-இத்தாலி உறவை வலுப்படுத்தியதில் அவரது நட்பு முக்கிய பங்கு வகித்துள்ளது” என்று தெரிவித்தார்.
</p><h2>
மெலோனி+மோடி=மெலோடி</h2><p>இரு தலைவர்களின் நட்பு சமூக வலைதளங்களில் “Melodi” என்ற பெயரில் பிரபலமாகியுள்ளது.</p><p>2023-இல் COP28 மாநாட்டில் மெலோனி, மோடியுடன் எடுத்த செல்ஃபியை “Good friends at COP28 #Melodi” எனப் பகிர்ந்தபோது, இந்த ஹாஷ்டேக் வைரலானது. பின்னர் G7 மாநாட்டிலும், ரோமில் நடந்த சந்திப்பிலும் இந்த “Melodi” மீம் மீண்டும் பேசுபொருளானது.</p><p>
இந்தியாவும், இத்தாலியும், மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தி, கண்டங்கள் இடையேயான உறவை மேம்படுத்தும் முயற்சியில் முன்னேறி வருகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T19:25:53+00:00</updated>
        </entry>
    </feed>
