<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-12T07:24:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூட்டு வலி நீங்க ரத்தம் ஊற சத்தான முருங்கை கீரை கொள்ளு சூப் செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-to-make-murungai-keerai-kollu-soup-for-legpain-1786516264"></link>
            <id>https://news.lankasri.com/article/how-to-make-murungai-keerai-kollu-soup-for-legpain-1786516264</id>
            <summary type="text">Murungai Keerai- Kollu Soup: முருங்கை கீரையும் கொள்ளு பருப்பு இருந்தால் அவற்றைக் கொண்டு சூப் செய்து கொடுக்கின்ற பொழுது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Murungai Keerai- Kollu Soup: முருங்கை கீரையும் கொள்ளு பருப்பு இருந்தால் அவற்றைக் கொண்டு சூப் செய்து கொடுக்கின்ற பொழுது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு சளி மூட்டு வலி விலகுகிறது. அதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cfa23b7-0777-4f29-ba20-ba4d8567306a/26-6a7c132a813de.webp' /><br></p><p>
</p><h3>
 
தேவையான பொருட்கள்: </h3><p>&nbsp;கொள்ளு - 1 1/2 டேபிள் ஸ்பூன்&nbsp;</p><p> தண்ணீர் - 1 1/4 கப் * பூண்டு - 2 பல் </p><p>இஞ்சி - 1/2 இன்ச்&nbsp;</p><p> சின்ன வெங்காயம் - 10 * கொத்தமல்லி - சிறிது </p><p>முருங்கைக்கீரை - 1 கைப்பிடி </p><p>சீரகம் - 1 டீஸ்பூன் * மிளகு - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p> மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p> தண்ணீர் - 1/2 லிட்டர்.
 தாளிப்பதற்கு...&nbsp;</p><p>தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் </p><p>கிராம்பு - 2&nbsp;</p><p> பட்டை - 1 துண்டு&nbsp;</p><p> இடிச்ச சின்ன வெங்காயம் - 5 </p><p>முருங்கைக்கீரை - 10 இலைகள்&nbsp; சூப்&nbsp;</p><p> உப்பு - சுவைக்கேற்ப </p><p>மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p> எலுமிச்சை - பாதி&nbsp;</p><p> கொத்தமல்லி - சிறிது</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">செய்முறை:</span><br></p><p> முதலில் அடுப்பில் குக்கரை வைத்து அதனுடன் கொள்ளு சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதை ஒரு முறை கழுவிக்கொண்டு மீண்டும் குக்கர் அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை கப் நீர் ஊற்றி குக்கர் மூடி 3 முதல் 4 வசூல் விட்டு இறக்க வேண்டும். </p><p>பிறகு விசில் இறங்கியதும் குக்கரை திறந்து அதில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, முருங்கைக்கீரை, சீரகம், மிளகு மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து இறக்க வேண்டும்.</p><p>&nbsp; &nbsp;<br></p><p> </p><p>விசில் இறங்கியதும் குக்கரில் உள்ளதை ஒரு பாத்திரத்தில் வடி கட்டிக்கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸரில் சாறு வடிகட்டிய பொருட்களை சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்ததையும் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.</p><p> அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கிராம்பு பட்டையை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின்பு அதில் இடிச்ச சின்ன வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். </p><p>பிறகு பத்து முருங்கை இலைகளை சேர்த்து வதக்கி வடிகட்டி வைத்துள்ள சூப்பை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு கலந்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து பிறகு இறக்கிக் கொள்ள வேண்டும். </p><p>இறக்கிய சூப்பில் மிளகுத்தூள் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியை தூவி கிளறினால் சுவையான முருங்கைக்கீரை கொள்ளு சூப் ரெடி. இதை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது மூட்டு வலி சளி பிரச்சனை போன்றவை நீங்குவதோடு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d66be45-0f37-474e-a554-51ede27a594f/26-6a7c1329c6efa.webp' />&nbsp;&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-12T07:17:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பவுண்டரி இல்லாமல் 9 சிக்ஸர் விளாசிய ரஸல்! 38 பந்தில் 68 ஓட்டங்கள் விளாசியும் வீண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andre-russell-blast-68-runs-with-9-sixer-1786518912"></link>
            <id>https://news.lankasri.com/article/andre-russell-blast-68-runs-with-9-sixer-1786518912</id>
            <summary type="text">கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.

சபீனா பார்க் மைதானத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.</p><p>

சபீனா பார்க் மைதானத்தில் நடந்த ஜமைக்கா கிங்ஸ்மென் அணிக்கு எதிரான கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>பிரண்டன் கிங், ஷெர்பானே ரூதர்போர்டு</h2><p>
பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகளுக்கு இடையிலான கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டி சபீனா பார்க்கில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9087a84e-55ab-4b29-85da-a38175737b0f/26-6a7c1d8386ed2.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணியில் கார்ட்டர் 27 (15) ஓட்டங்கள் விளாசி வெளியேற, சரவெடி காட்டிய குயின்டன் டி காக் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் விளாசினார். </p><p>

பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரண்டன் கிங், ஷெர்பானே ரூதர்போர்டு கூட்டணி அதிரடியில் மிரட்ட, பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 206 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

பிரண்டன் கிங் (Brandon King) 51 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், ஷெர்பானே ரூதர்போர்டு (Sherfane Rutherford) 28 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்களும் விளாசினர். </p><p>

அடுத்து களமிறங்கிய ஜமைக்கா கிங்ஸ்மென் அணியில் ஹென்ரிக்ஸ் (2), ஜஹான்ஹிர் (0) சொதப்ப, மெக்கென்ஸியும் டக்அவுட் ஆனார். 

அப்போது களமிறங்கிய அணித்தலைவர் ரோவ்மன் பௌல், கேசி கார்ட்டியுடன் இணைந்து சிக்ஸர்களை பறக்கவிட்டார். </p><h2>

ஆந்த்ரே ரஸல் வாணவேடிக்கை </h2><p>(பௌல் (Powell) 24 பந்துகளில் 38 ஓட்டங்கள் (4 சிக்ஸர்) விளாச, ஹஸ்ஸன் கான் டக்அவுட் ஆனார். கார்ட்டி 27 பந்துகளில் 45 ஓட்டங்கள் (4 சிக்ஸர், ஒரு பவுண்டரி) எடுத்த நிலையில் சாம்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். </p><p>

அணி 132 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் என தடுமாற, ஆந்த்ரே ரஸல் (Andre Russell) தனியாளாக வாணவேடிக்கை காட்டினார்.</p><p> 

அவர் கடைசி ஓவரில் 38 பந்துகளில் 68 ஓட்டங்கள் (9 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழக்க, ஜமைக்கா அணி 20 ஓவர்களில் 201 ஓட்டங்களே எடுத்ததால் பார்படோஸ் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

விட்டல் லாவ்ஸ் 20 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 32 ஓட்டங்கள் விளாசினார். மிரட்டலாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டேனியல் சாம்ஸ் (Daniel Sams) ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய என்.சந்திரசேகரன் - பங்குகள் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/n-chandrasekaran-step-down-as-tata-sons-chairman-1786517952"></link>
            <id>https://news.lankasri.com/article/n-chandrasekaran-step-down-as-tata-sons-chairman-1786517952</id>
            <summary type="text">N.Chandrasekaran resigns tata sons chairman : டாடா சன்ஸ் தலைவர் பதவியை தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ள நிலையில், டாடா குழும பங...</summary>
            <content type="html"><![CDATA[<p>N.Chandrasekaran resigns tata sons chairman : டாடா சன்ஸ் தலைவர் பதவியை தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ள நிலையில், டாடா குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளது.</p><h3> 

டாடா சன்ஸ் தலைவர் பதவி விலகல்</h3><p> 

400 பில்லியன் டொலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் தாய் நிறுவனமாக டாடா சன்ஸ் உள்ளது. 

இது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டாடா மோட்டார்ஸ் மற்றும் ஏர் இந்தியா உட்பட 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது.
</p><p>
டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66% பங்குகள், குழுமத்தின் தொண்டுப் பிரிவான டாடா டிரஸ்ட்ஸுக்குச் சொந்தமானது.
</p><p>
கடந்த 2017 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d60c043-2735-4bf5-9063-76fc6ec81d95/26-6a7c19c135852.webp' /></p><p>

அவரது பதவிக்காலம் பிப்ரவரி 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.</p><p> 

ஆகஸ்ட் 18 அன்று நடைபெறவுள்ள நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த ராஜினாமா நடைபெற்றுள்ளது. </p><p>

டாடா டிரஸ்ட்ஸின் தலைவர் நோயல் டாடா உடனான கருத்து வேறுபாடு மற்றும் எதிர்ப்பு காரணமாகவே இந்த ராஜினாமா முடிவை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாடா குழுமத்தில் எனது 40 ஆண்டுகால தொழில் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளேன். இந்த மதிப்புமிக்க நிறுவனத்திற்குப் பங்களிக்கும் மிகுந்த மனநிறைவைத் தரும் வாய்ப்பிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். </p><p>

கடந்த 10 ஆண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது ஒரு பெரும் கௌரவமாகவும் ஆழ்ந்த பொறுப்பாகவும் இருந்துள்ளது.</p><p>

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக எனது தற்போதைய பதவிக்காலம் பிப்ரவரி 20, 2027 அன்று முடிவடைகிறது. சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியவை எனது அடுத்த பதவிக்காலத்தை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க ஒருமனதாகத் தீர்மானித்துப் பரிந்துரைத்தன. இதனை டாடா சன்ஸ் நியமனம் மற்றும் ஊதியக் குழு மற்றும் இயக்குநர்கள் குழு பதிவுசெய்து பரிந்துரைத்தது. </p><p>

அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 24, 2026 அன்று டாடா சன்ஸ் இயக்குநர்கள் குழுவில் அந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இயக்குநர்கள் குழு உறுப்பினர்களில் ஒருவர் அதற்கு ஆதரவளிக்காததால் அந்த முன்மொழிவு நிறைவேற்றப்படவில்லை. ஒருமித்த ஆதரவு இல்லாத நிலையில், நான் அந்த முடிவை ஒத்திவைக்கத் தேர்ந்தெடுத்தேன்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Tata Sons Chairman, N Chandrasekaran, released a statement, &quot;I have communicated to the Tata Sons Board that I have decided not to offer myself for reappointment when my term ends on Feb 20, 2027. I have asked the Board to decide on the succession soon to ensure a proper… <a href="https://t.co/cG5eBoftOg">pic.twitter.com/cG5eBoftOg</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2087419418230104302?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அந்த இயக்குநர் குழுக் கூட்டம் நடந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் இன்றுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. டாடா சன்ஸ் ஒரு மிகப் பெரிய நிறுவனம், மேலும் பல முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.</p><p> 

பிப்ரவரி 2027 க்கு அப்பால் குழுமத்தை வழிநடத்த ஒரு தலைவர் இருப்பது அவசியம் என்பது மட்டுமல்லாமல், ஊழியர்கள், முதலீட்டாளர்கள், கூட்டாளிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தலைமைத்துவம் குறித்த தெளிவும் முக்கியமானது. </p><p>

இந்தச் சூழ்நிலைகளில், 2027 பிப்ரவரி 20 அன்று எனது பதவிக்காலம் முடிவடையும்போது, ​​மறுநியமனத்திற்கு என்னை முன்மொழியப் போவதில்லை என முடிவு செய்துள்ளதை, இன்று காலை டாடா சன்ஸ் வாரியத்திற்குத் தெரிவித்துள்ளேன். </p><p>முறையான அதிகாரப் பரிமாற்றத்தை உறுதி செய்வதற்காக, அடுத்த வாரிசு நியமனம் குறித்து விரைவில் முடிவெடுக்குமாறு வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.</p><h3> 

பங்குகள் வீழ்ச்சி</h3><p> 

சந்திரசேகரனின் ராஜினாமாவையடுத்து, டாடா குழுமப் பங்குகள் இன்று 4% வரை சரிவை சந்தித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e57f18d-aceb-46e8-bea9-5fcb9875d71f/26-6a7c19c2918af.webp' /></p><p>

ஜாகுவார் லேண்ட் ரோவரின் உரிமையாளரான டாடா மோட்டார்ஸ், 2.8 சதவீதமும், TCS 4.1 சதவீதம் சரிவையும் சந்தித்துள்ளது. </p><h3>

யார் இந்த என்.சந்திரசேகரன்?
</h3><p>
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்த என்.சந்திரசேகரன், தனது பள்ளிக்கல்வியை மோகனூரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddef3a49-af30-4558-9b16-c69a9e76c814/26-6a7c19c1db96e.webp' /></p><p> 

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கணினிப் பிரிவில் முதுகலையில் பட்டம் பெற்றுள்ளார்.&nbsp;</p><p> 

1987 ஆம் ஆண்டு, டாடா குழுமத்தின் TCS நிறுவனத்தில் பயிற்சியாளராக வாழ்க்கையை தொடங்கி, 2009 ஆம் ஆண்டு அதன் தலைமை செயல் அதிகாரியாக(CEO) நியமிக்கப்பட்டார்.
</p><p>
2024-25 நிதியாண்டில் ரூ.155.81 கோடி சம்பளம் பெற்ற என்.சந்திரசேகரன், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நிறுவனத் தலைவர் என்ற பெருமையை பெற்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T06:59:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியால் வற்றிவரும் நதி: சுவிஸ் இறக்குமதி பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-import-to-affect-due-to-river-drought-1786515327"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-import-to-affect-due-to-river-drought-1786515327</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்திலுள்ள முக்கிய நதி ஒன்றில் தண்ணீர் வற்றிவருவதால் சுவிஸ் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.


நான்கு பக்கமும் நிலம் சூழ்ந்த சுவிட்சர்லாந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்திலுள்ள முக்கிய நதி ஒன்றில் தண்ணீர் வற்றிவருவதால் சுவிஸ் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>

நான்கு பக்கமும் நிலம் சூழ்ந்த சுவிட்சர்லாந்தை கடலுடன் இணைக்கும் ஒரே விடயம் ரைன் நதிதான்.
</p><p>
அந்த நதியே வற்றிவருவதால், நாட்டுக்குள் கப்பல் மூலம் நடைபெறும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுவருகிறது.</p><h3>

வறட்சியால் வற்றும் நதி
</h3><p>
உலக நாடுகள் பலவற்றிலுள்ள மக்கள் கோடைக்காலத்தில் சுற்றுலா செல்ல விரும்பித் தேர்ந்தெடுக்கும் நாடுகளில் முக்கியமான நாடு சுவிட்சர்லாந்து.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e05018d0-b1b1-446a-aec0-3956ba86141f/26-6a7c0f81093d4.webp' /></p><p>
ஆனால், மழைப்பொழிவு குறைந்துள்ளதால் சுவிட்சலாந்தில் வறட்சி உருவாகியுள்ளது.
</p><p>
இந்த வறட்சி, இறக்குமதியையும் பாதித்துள்ளதுதான் கவலையை ஏற்படுத்தியுள்ள விடயம்!
</p><p>
அதாவது, சுவிட்சர்லாந்தில், எண்ணெய் தொடர்புடைய தயாரிப்புகள், கால்நடைத் தீவனங்கள் மற்றும் உரம் ஆகியவற்றில் 8 முதல் 10 சதவிகிதம், ரைன் நதி மூலமாகத்தான் இறக்குமதி செய்யப்படுகின்றன.&nbsp;</p><p></p><p>
ஆனால், ரைன் நதியில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. ஆகவே பல கப்பல்கள் நின்றுவிட்டன. சில குறைவான சரக்குகளுடன் பயணிக்கின்றன.
</p><p>
ஆக, சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுவருகிறது. என்றாலும், அத்தியாவசிய பொருட்கள் கப்பல்களுக்கு பதிலாக தற்போது ரயில் மூலம் கொண்டு வரப்படுவதால் கூடுதல் செலவு ஏற்படுவதாக ஃபெடரல் தேசிய பொருளாதார வழங்கல் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T06:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் - அதிமுக எதிர்ப்பு, திமுக ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/admk-oppose-cm-vijay-delimitation-resolution-1786513821"></link>
            <id>https://news.lankasri.com/article/admk-oppose-cm-vijay-delimitation-resolution-1786513821</id>
            <summary type="text">resolution against delimitation in TN assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்திற்கு திமுக, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>resolution against delimitation in TN assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
</p><h3>
தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம்</h3><p> 

தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. </p><p>

இன்று நடைபெற்று வரும் 5 ஆம் நாள் விவாதத்தில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்த தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80fe01a4-5005-4df1-9d8d-76b01fa3ce13/26-6a7c099ecad69.webp' /></p><p> 

 தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய், "நம்முடைய குடும்பத்தில், நம்முடைய வீட்டில் இருக்கிற பாட்டி, அம்மா, அக்கா, தங்கச்சி என பெண்களைப் பற்றிய ஒரு தீர்மானம் இது. அவர்களுக்காகவும், அவர்களைப் பற்றியும் என் மனதிலிருந்தும், இதயத்திலிருந்தும் பேசுகிறேன்.</p><p> 

இதற்கு முன்பு கிடைத்த வெற்றிக்கும், இன்று இந்த இடத்திற்கும் மிகப்பெரிய காரணமாக இருந்தவர்கள் பெண்கள்தான்.
</p><p>
சங்ககாலம் தொடங்கி இன்றுவரை அடையாளமாக விளங்குகிற பெண் ஆளுமைகள் குறித்து பேசினார்.

நம்முடைய தமிழ்நாட்டு மண்ணில் சங்ககாலம் தொடங்கி இன்று வரை மிகப்பெரிய அடையாளமாக விளங்கிய பெண் ஆளுமைகள் ஏராளம். சங்ககாலத்தில் அவ்வையார், இலக்கியத்தில் கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி போன்றோர் நிலைத்து நிற்பவர்கள்.&nbsp;</p><p></p><p>
ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றவர்கள் ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள். ராணி வேலுநாச்சியார், குயிலி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அஞ்சலையம்மாள் உள்ளிட்டோர் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர்கள்.</p><p>

இவ்வாறு நம்முடைய தமிழ்நாட்டுப் பெண்கள் சுதந்திரப் போராட்டம் தொடங்கி சமூகநீதிப் போராட்டம் வரை பல்வேறு தளங்களில் பங்களித்துள்ளனர். </p><p>

அதுமட்டுமல்லாமல், கல்வி, அறிவியல், அரசியல், நீதி, நிர்வாகம், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் இன்று தமிழ்நாட்டுப் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9319e255-b4d4-481f-9fbd-2836037e218d/26-6a7c099f7d781.webp' /></p><p> 

தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்களை அதிக வாக்காளர்களாக உள்ளனர். பெண்களுக்கான அரசியல் இடம் என்பது சலுகை அல்ல அது உரிமை.</p><p> பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. 

பெண்களுக்கான அரசியல் அதிகாரம் வழங்குவதில் முன்னோடி மாநிலமாக தவெக அரசு உள்ளது. பேரவையில் 4 பெண் அமைச்சர்கள் உள்ளனர்.
</p><p>
பெண்களுக்கான பாதுகாப்பிலும் அவர்களுக்கான முக்கியத்துவத்திலும் தவெக அரசு கவனமாக தான் உள்ளது. உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்ததால் ஆயிரக்கணக்கான பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்துள்ளனர். </p><p>

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இது பெண்களுக்கான சலுகை அல்ல, அவர்களுக்கான ஜனநாயக உரிமை. </p><p>

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 6 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிலிமிட்டேஷன் காரணமாக தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசப்பட்டது.&nbsp;</p><p></p><p>
ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவிகித மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு அதன் அடிப்படையில் தொகுதி மறு சீரமைக்கப்படும். இவ்வாறு செய்தால் தென் மாநிலங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் குறையும்.</p><p>

தொகுதி மறு சீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றினால் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தென்மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவ அநீதி ஏற்படும். எனவே 543 என்ற மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும்" என பேசினார். </p><h3>

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
</h3><p>
இந்த தீர்மானம் குறித்து கட்சிகளின் சார்பில் அதன் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63f3365c-ab5c-4d29-b597-81bbd473e803/26-6a7c09a030302.webp' /></p><p>

இந்த தீர்மானம் குறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், பாமக எம்எல்ஏ கணேஷ் குமார், பாஜக எம்எல்ஏ போஜராஜன், உள்ளிட்டோர் மகளிர் இடஒதுக்கீட்டை வரவேற்றாலும், தனித்தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p>தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீர்மானத்தை ஆதரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் மிகப்பெரிய இரசாயன ஆலையைத் தாக்கிய ட்ரோன்கள்: உக்ரைன் மீது குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-strike-russia-s-big-petrochemical-plant-1786512517"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-strike-russia-s-big-petrochemical-plant-1786512517</id>
            <summary type="text">மேற்கு சைபீரியாவில் ரஷ்யாவின் மிகப்பெரிய இரசாயன ஆலையை உக்ரைன் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு சைபீரியாவின் ட்யூமென் பகுதியில் ரஷ்யாவின் மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு சைபீரியாவில் ரஷ்யாவின் மிகப்பெரிய இரசாயன ஆலையை உக்ரைன் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

மேற்கு சைபீரியாவின் ட்யூமென் பகுதியில் ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோ இரசாயன ஆலையை உக்ரைன் தாக்கியதாக கூறப்படுகிறது.&nbsp;</p><h2>பெட்ரோ இரசாயன ஆலை</h2><p>

ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோ இரசாயன ஆலை மேற்கு சைபீரியாவின் ட்யூமென் பகுதியில் உள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e27f445b-d46a-4f91-b4da-eaee80619131/26-6a7c055768fac.webp' /></p><p></p><p>
ஆலை ஒன்றின் மீது பல ட்ரோன்கள் மோதியதாகவும், அதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் ட்யூமென் பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் மூர் உறுதிப்படுத்தினார்.</p><p>ஆனால், அவர் அந்த இடத்தின் பெயரை குறிப்பிடவில்லை. அதே சமயம், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில் பெட்ரோ இரசாயன ஆலைக்கு மேலே அடர்த்தியான புகை மேகங்கள் எழுவதாகக் கூறப்படுகிறது.
</p><p>
சிபூர் பெட்ரோ இரசாயன நிறுவனத்தின் ஒரு பகுதியான ஸாப்ஸிப்நெஃப்டெகிம் ஆலையை ட்ரோன்கள் குறிவைத்ததாக சரிபார்க்கப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><h2>காலவரையின்றி&nbsp;</h2><p>
ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோ இரசாயன ஆலை தாக்கப்பட்டதாக சுயாதீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>தாக்குதலுக்கு உள்ளன ஆலை, சேதத்தின் அளவு மற்றும் அதன் விளைவுகள் மதிப்பிடப்பட்டு வரும் நிலையில் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தொழிற்சாலை வட்டாரம் ஒன்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.</p><p>

இதற்கிடையில், திங்கட்கிழமை அதிகாலையில் இரண்டு ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறிய உக்ரைன், ட்யூமென் பிராந்தியத்தில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக பொறுப்பேற்கவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd56c86e-2b84-45ab-90f5-e47b03a4b0c9/26-6a7c055837cfd.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-radio-falsely-announced-king-charles-death-1786510321"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-radio-falsely-announced-king-charles-death-1786510321</id>
            <summary type="text">மே மாதத்தில், தனியார் வானொலி ஒன்று மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பு, பணியாளர் ஒருவரின் ஆர்வத்தால் ஏற்பட்ட தவறு என விளக்கமளிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மே மாதத்தில், தனியார் வானொலி ஒன்று மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பு, பணியாளர் ஒருவரின் ஆர்வத்தால் ஏற்பட்ட தவறு என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் தனியார் வானொலி, ரேடியோ கரோலின்.
</p><p>
மே மாதம் 19ஆம் திகதி, வானொலியில் வழக்கம்போல பாடல்கள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த நிலையில், திடீரென நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன.</p><h3>

மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு
</h3><p>
அதைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸ் மரணடைந்து விட்டதால், நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாக, நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் குழப்பமடைந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16b3a2a2-594f-464b-be81-84730efa84a6/26-6a7bfbf372fed.webp' /></p><p>
குழப்பத்தை அதிகரிக்கும் வகையில், தேசிய கீதமும் ஒலிக்கச் செய்யப்பட்டுள்ளது.
</p><p> 
பின்னர் மீண்டும் ஒரு முறை மன்னர் சார்லஸ் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட, 16 நிமிடங்களுக்கு நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு அமைதி நிலவியுள்ளது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், அரை மணி நேரத்துக்குப் பின், மீண்டும் அறிவிப்பொன்றை வெளியிட்ட வானொலி அறிவிப்பாளர், மன்னர் மரணமடைந்துவிட்டதாக தவறுதலாக அறிவிப்பு வெளியானதாகக் கூறி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><h3>
நடந்தது என்ன?
</h3><p>
அதாவது, எல்லா பிரித்தானிய ஊடகங்களுமே, மன்னரின் மரணம் தொடர்பான ஒரு செய்தியை தயாராக வைத்திருக்குமாம்.
</p><p>
வானொலி நிலையத்தில் கணினி பராமரிப்புப் பணிக்காக வந்த ஒரு பணியாளர், கணினியில் மன்னர் மரணம் தொடர்புடைய மூன்று கோப்புகள் இருப்பதைக் கவனித்துள்ளார்.
</p><p>
அதில் என்ன உள்ளது என்பதை அறியும் ஆர்வத்தில், அந்த கோப்புகளை ஒலிக்கச் செய்துள்ளார் அந்த பணியாளர்.
</p><p>
விடயம் என்னவென்றால், அப்போது ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த பாடல் நிகழ்ச்சி, வேறொரு இடத்திலிருந்து ஒலிபரப்பாகிக்கொண்டிருந்திருக்கிறது.</p><p>

அப்போது, தொலைபேசியில் வாசகர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், வானொலி நிலையத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே, பாடல் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு, மன்னர் குறித்து வந்த செய்தியை ஒலிபரப்பியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ceb0cb-fee7-44e8-b144-43b75c710c29/26-6a7bfbf2c1a4e.webp' /></p><p>
இதற்கிடையில், அந்த பராமரிப்புப் பணியாளர் தான் தவறு செய்துவிட்டது தெரியவந்ததால், அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
</p><p>
நிகழ்ச்சியை வழங்குபவர் வானொலி நிலையத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலைய பொறியாளரிடம் விசாரிக்க, அவர் அந்த பராமரிப்புப் பணியாளர் செய்த தவறு குறித்து கூறியுள்ளார்.</p><p>

தவறை உணர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், வாசகர்களிடம் மன்னர் குறித்து வெளியான தவறான செய்திக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அதற்குள் அரை மணி நேரம் கடந்துவிட்டிருக்கிறது.
</p><h3>
ஒழுங்குமுறை அமைப்புக்கு வந்த புகார்கள்
</h3><p>
இந்நிலையில், வானொலி, தொலைக்காட்சி முதலான தகவல் தொடர்பு அமைப்புகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கும் ஒழுங்குமுறை அமைப்பான Ofcom என்னும் அமைப்புக்கு இந்த தவறு தொடர்பில் புகார்கள் வர, அந்த அமைப்பு விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.</p><p>

விசாரணையின் முடிவுகள், ரேடியோ கரோலின் வானொலி, இரண்டு விதி மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளன.
</p><p>
துல்லியமான, பாரபட்சமற்ற தகவல்களை வெளியிடுதல் மற்றும் தவறு நிகழ்ந்தால் உடனடியாக அதை திருத்திக்கொண்டு அது குறித்து விளக்கமளித்தல் என இரண்டு விதிகளை ரேடியோ கரோலின் வானொலி மீறியுள்ளதாக Ofcom தெரிவித்துள்ளது.
</p><h3>
என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?</h3><p>

தவறு செய்த பராமரிப்புப் பணியாளர் உடனடியாக வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டதாக வானொலி நிலையம் தெரிவித்துள்ளதுடன், அவர் மன்னிப்புக் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், மன்னர் மரணம் தொடர்பான கோப்புகள், ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த கணினியிலிருந்து அகற்றப்பட்டு, தனியாக ஒரு ஹார்ட் ட்ரைவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அந்த கோப்புகளை பயன்படுத்துதல் தொடர்பில் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:20:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 80 ரன்! the Hundred-யில் சன்ரைசர்ஸை நொறுக்கிய டிம் செய்பெர்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/manchester-super-giants-win-by-10-wickets-1786506267"></link>
            <id>https://news.lankasri.com/article/manchester-super-giants-win-by-10-wickets-1786506267</id>
            <summary type="text">சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு எதிரான the Hundred போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

எமிரேட்ஸ் ஓல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு எதிரான the Hundred போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p><p> 

எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த the Hundred போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>127 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்</h2><p> 

மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகளுக்கு இடையிலான the Hundred போட்டி மான்செஸ்டரின் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a019dd-db2c-4166-b57a-b5d6645fbefd/26-6a7bec1dcbc49.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 127 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மிட்சேல் மார்ஷ் 32 (23) ஓட்டங்களும், ஜாக் கிராவ்லே 31 (28) ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

கஸ் அட்கின்ஸன் 3 விக்கெட்டுகளும், சோனி பேக்கர் 2 விக்கெட்டுகளும், டங், டாவ்ஸன், நூர் அகமது மற்றும் பவுல் வால்டர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><h2>
செய்பெர்ட்&nbsp;ருத்ரதாண்டவம் </h2><p>பின்னர் ஆடிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் பவுல் வால்டர் (Paul Walter) மற்றும் டிம் செய்பெர்ட் (Tim Seifert) இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட்டனர்.
</p><p>
ருத்ரதாண்டவம் ஆடிய செய்பெர்ட் 40 பந்துகளில் 7 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் விளாசினார். வால்டர் 28 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
இதன்மூலம் மான்செஸ்டர் அணி 68 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 128 ஓட்டங்கள் எடுத்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e47f421c-aa84-4441-8c60-d898bb589eec/26-6a7bec7713b74.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T03:42:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓகஸ்ட் மாதத்தில் சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலில் வர்த்தகம் செய்தல்: EUR/USD-க்குப் பொறுமை தேவை கணிப்பு அல்ல அது ஏன்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eur-usd-trading-in-august-why-patience-matters-1786505453"></link>
            <id>https://news.lankasri.com/article/eur-usd-trading-in-august-why-patience-matters-1786505453</id>
            <summary type="text">சவாலான சகல சந்தைகளும் அதிக ஏற்ற இறக்கம் கொண்டவை அல்ல. நிச்சயமற்ற தன்மையானது, சந்தைகளில் தெளிவான போக்குகள் உருவாவதைத் தடுக்கும் சூழல்களே மிகவும் கடினமா...</summary>
            <content type="html"><![CDATA[<p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d753d152-b14c-478c-afa2-79ba5b8e0c90/26-6a7be9ef31e48.webp' /><br></p><p>சவாலான சகல சந்தைகளும் அதிக ஏற்ற இறக்கம் கொண்டவை அல்ல. நிச்சயமற்ற தன்மையானது, சந்தைகளில் தெளிவான போக்குகள் உருவாவதைத் தடுக்கும் சூழல்களே மிகவும் கடினமான வர்த்தகச் சூழல்களில் சிலவாகும்.
</p><p>
ஓகஸ்ட் மாதம் நெருங்கி வரும் நிலையில், பணவீக்கம் மத்திய வங்கியின் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது, அதேவேளையில் பல முக்கியப் பொருளாதாரங்களில் விலை மாறும் வேகம் குறைகிறது.
</p><p>
ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் யுஎஸ் ஃபெடரல் ரிசர்வ் ஆகிய இரண்டின் மீதான எதிர்பார்ப்புகளையும் சந்தைகள் தொடர்ந்து மறுமதிப்பீடு செய்து வருவதால், யூரோ/டொலர் பரிமாற்ற வீதமானது, ஒன்றுக்கொன்று முரண்படும் பேரியல் பொருளாதாரக் கண்ணோட்டங்களுக்கு இடையில் சிக்கியுள்ளது.
</p><p>
யூரோ அல்லது யுஎஸ் டொலர் ஆகிய இரண்டுமே தீர்க்கமான பேரியல் சாதகத்தைக் கொண்டிருக்காதபோது​ தற்போதும் வணிகத்தை மேற்கொண்டுவரும் வர்த்தகர்கள் தங்கள் கவனத்தைத் திசைசார் கணிப்பிலிருந்து, ஒழுங்குபடுத்தப்பட்ட செயலாக்கம் மற்றும் புறநிலை இடர் மேலாண்மைக்கு மாற்ற வேண்டும்.</p><h2>சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலைப் புரிந்துகொள்ளுதல்</h2><p>சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழல்-பாணி நிலைமைகள் நாணயச் சந்தைகளுக்கு ஒரு விரக்தி தரும் பொறியை உருவாக்குகின்றன, கட்டுக்கடங்காத பணவீக்கம் மற்றும் பலவீனமடையும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் கலவையானது, மத்திய வங்கிகள் கடினமான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளுகிறது. இந்தச் சூழல் ஒவ்வொரு வாரமும் முரண்பாடான பொருளாதாரச் சமிக்ஞைகளை உருவாக்குகிறது.
</p><p>
ஒரு நாள், எதிர்பார்த்ததை விட அதிகமான பணவீக்கக் குறியீடு இருப்பது, உயர் வட்டி வீதங்களைச் சுட்டிக்காட்டி, நாணயத்தின் வலிமையை அதிகரிக்கிறது.
</p><p>
அடுத்த நாள், ஒரு மோசமான உற்பத்தி அறிக்கையானது பொருளாதாரச் சுழற்சி மெதுவாக இருப்பதை உணர்த்தி, உடனடியாக நாணய மதிப்பின் பலவீனத்திற்கு வழிவகுக்கிறது. யூரோ மண்டலத்தின் பொருளாதாரக் கண்ணோட்டம் மறுக்க முடியாதபடி நிலையற்றதாகவே உள்ளது.
</p><p>
சமீபத்திய OECD பகுப்பாய்வானது, பலவீனமான உலகளாவிய வளர்ச்சிச் சூழலைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், ஐரோப்பா குறிப்பாக எரிசக்தி விலையின் சடுதியான மாற்றங்கள் மற்றும் மந்தமான தேவை ஆகியவற்றால் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அதே சமயத்தில், யுஎஸ் தரவுகளும் இது போன்ற ஒரு சிக்கலான சித்திரத்தை அளிக்கின்றன.
</p><p>
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட சமீபத்திய தரவு, ஜூன் மாதத்தில் யுஎஸ் நுகர்வோர் பணவீக்கம் 3.5% ஆகக் குறைந்துள்ளதைக் குறிக்கிறது.
</p><p>
ஒருங்கிணைந்த உலகளாவிய வளர்ச்சிக் கண்ணோட்டம் இல்லாததால், EUR/USD இன் பாரம்பரிய உந்தும் காரணிகளைப் புரிந்துகொள்வது கடினமாகிறது. பொதுவாக, ஒரு பிராந்தியத்தில் காணப்படும் வலுவான வளர்ச்சியும் உயரும் வட்டி வீதங்களும் அதன் நாணயத்தின் மதிப்பை உயர்த்துகின்றன.
</p><p>
இன்று, இரு பிராந்தியங்களும் வளர்ச்சி மந்தநிலையையும் குறையாத பணவீக்கத்தையும் எதிர்கொள்கின்றன. மாறிவரும் இந்தச் சூழலால், யுஎஸ் மற்றும் ஐரோப்பா இடையிலான வட்டி வீத வேறுபாடுகள் சந்தையால் தொடர்ந்து மறுமதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. எண்ணெய் விலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள அழுத்தத்திற்கு மத்தியிலும், வட்டி வீதங்கள் ஏற்கனவே பொருத்தமான நிலையில் இருப்பதாகக் கொள்கை வகுப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதால், ஜூலை மாதத்தில் ECB எச்சரிக்கையுடன் செயல்படும் என்று சந்தைகள் பரவலாக எதிர்பார்க்கின்றன. இதனால், EUR/USD ஜோடிக்கு நிலையான போக்குகளை உருவாக்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.
</p><p>
ஒவ்வொரு புதிய பொருளாதார வெளியீடும் சந்தை எதிர்பார்ப்புகளை மாற்றியமைத்து, திட்டவட்டமான ஏற்றங்களுக்குப் பதிலாக அடிக்கடி தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
</p><h2>
நிச்சயமற்ற தன்மையின் உளவியல்
</h2><p>விலைகள் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் மாறும் போக்குடைய சூழல்களைவிட, இழுபறியான சந்தை நிலவரங்கள் வர்த்தகர்கள்மீது பெரும்பாலும் அதிக உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
</p><p>
ஒரு தெளிவான சந்தைப் போக்கு நிலவும்போது, ​​வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்தில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வழிகாட்டும் ஆதரவையும் எதிர்ப்பு நிலைகளையும் எளிதாக அடையாளம் காண முடியும். ஒரு சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலில், ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கிய தெளிவான போக்கு இல்லாத நிலை விரக்தியையும், அதிக இழப்பை ஏற்படுத்தக்கூடிய நடத்தை சார்ந்த தவறுகளையும் ஏற்படுத்துகிறது.
</p><p>
விலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மாறிக்கொண்டிருக்கும் சூழலில், அளவுக்கு அதிகமாக வர்த்தகம் செய்வது மிகவும் பொதுவான ஓர் ஆபத்தாகும். அடுத்தப் பெரிய சந்தை நகர்வைப் பிடித்து லாபம் பெறலாம் என்ற நம்பிக்கையில் வர்த்தகர்கள் ஒவ்வொரு மேக்ரோ தலைப்புச் செய்தியையும் அடிக்கடி பின்பற்றிச் செல்கிறார்கள். இந்த உறுதிப்படுத்தும் சார்புநிலை, உண்மையில் சீரற்ற சந்தை ஏற்றத் தாழ்வுகள் மட்டுமே உள்ள இடங்களில் போக்குகளைக் காண அவர்களைத் தூண்டுகிறது.
</p><p>
எதிர்பார்ப்பைவிடச் சிறந்த ஒரு வேலைவாய்ப்பு அறிக்கை, ஒரு தீவிரமான நீண்டகால முதலீட்டு நிலையைத் தூண்டக்கூடும்; ஆனால், சில மணித்தியாலங்களிலேயே ஒரு மோசமான கொள்முதல் முகாமையாளர்கள் குறியீட்டுக் கணக்கெடுப்பு அந்த நகர்வைத் தலைகீழாக மாற்றிவிடக்கூடும். அடுத்த ஏற்றத்தைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற அச்சம், தொடர்ச்சியான தவறான சமிக்ஞைகள் மூலமாக மூலதனத்தை வற்றச் செய்கிறது.
</p><p>
EUR/USD ஜோடி பல வாரங்களாக ஒரு குறுகிய வரம்பிற்குள் தேக்கமடைந்திருக்கும்போது, ​​கட்டாயப்படுத்தி வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற உளவியல் உந்துதல் மிகத் தீவிரமாகிறது.
</p><p>
குறுகிய கால வேக மாற்றத்தை ஓர் அடிப்படை மாற்றமாகக் தவறாகக் கருதி, வர்த்தகர்கள் குறைந்த கால அளவுகளுக்கு மாறத் தொடங்குகிறார்கள். நிச்சயமற்ற பேரியல் பொருளாதாரச் சூழல்களில் மூலதனத்தைப் பாதுகாப்பது, பெரிய திசைசார் நகர்வுகளைக் கைப்பற்றுவதைப் போலவே பல நேரங்களில் மதிப்புமிக்கது என்பதை அனுபவமிக்க வர்த்தகர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
</p><p>
பொறுமையும், தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக நிறைவேற்றமும் அதயாவசியமானவையாகின்றன. இத்தகைய சூழல்களில், குறைவாக வர்த்தகம் செய்வதே பெரும்பாலும் அதிக லாபம் தரும் மூலோபாயமாக அமைகிறது.
</p><h2>
அமைப்பு தெளிவாக இல்லாதபோது, ​​சூழல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது
</h2><p>நிலையற்ற பேரியல் சூழல்களில் செயல்படுவதற்குப் பொறுமைக்கு அப்பால் கூடுதல் திறன்கள் தேவைப்படுகின்றன.

&nbsp;</p><p>உண்மையற்ற தொடக்கங்கள், முக்கியச் செய்திகளின் தலைகீழ் மாற்றங்கள், திடீர் விலை மாற்றங்கள் ஆகியவற்றைத் தாங்கக்கூடிய ஒரு வர்த்தகச் செயல்முறை இதற்குத் தேவைப்படுகிறது. பணவீக்கத் தரவுகள், வளர்ச்சிகுறித்த கவலைகள், மத்திய வங்கியின் சமிக்ஞைகள், வட்டி வீதம்குறித்த மாறிவரும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றிற்கு இடையே EUR/USD ஜோடி இழுபறிக்கு உள்ளாகும்போது, ​​வர்த்தகச் சூழலின் ஒவ்வொரு அம்சமும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.&nbsp;&nbsp;</p><p>இங்குதான், விஷயத்தைத் திணிக்காமல் <a href="https://www.exness.com/" target="_blank">Exness</a>-ஐ அறிமுகப்படுத்த முடியும். EUR/USD போன்ற ஒரு சந்தையில், அடுத்தடுத்த தரவு வெளியீடுகளின் அடிப்படையில் சூழல் மாறக்கூடும் என்பதால், CFD வர்த்தகர்களுக்கு நிதானத்துடன் செயல்பட உதவும் சூழல் தேவைப்படுகிறது.</p><p>ஒரு தரகரால் பேரியல் சித்திரத்தை மேலும் தெளிவுபடுத்த முடியாது, ஆனால் முடிவெடுப்பது தொடர்பான பின்வரும் கவனச்சிதறல்களைக் குறைக்க அவரால் உதவ முடியும்: அதாவது, பிழையின்றி ஓர்டர் செய்யப்பட்டதா, செலவுகள் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றனவா மற்றும் CFD வர்த்தகர் கவனத்தைச் சிதறடிக்காமல் இடர் அபாயத்தை நிர்வகிக்க முடியுமா என்பன.
</p><p>
இது முக்கியமானது, ஏனெனில் வரம்பு-பிணைக்கப்பட்ட நாணயச் சந்தைகள் பெரும்பாலும் தயக்கம் மற்றும் அதிகப்படியான எதிர்வினையைச் சம அளவில் தண்டிக்கின்றன. ஒரு CFD வர்த்தகர் ஏற்கனவே ஓர் உண்மையான கொள்கைச் சமிக்ஞையை மற்றொரு தவறான நகர்விலிருந்து பிரித்தறிய முயற்சிக்கும்போது, ​​அந்த வர்த்தகத்தின் செயல்முறைகள் நிச்சயமற்ற தன்மைக்கு மற்றொரு ஆதாரமாக மாறிவிடக் கூடாது. மிகவும் சீரான செயலாக்கமும் தெளிவான விலை நிர்ணயமும் பின்வருவனவற்றின் மீதான கவனத்தை அது இருக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்க உதவலாம்:
</p><p>
அமைவு, ஆபத்து மற்றும் வர்த்தகத்தில் இருப்பதற்கான காரணம். EUR/USD ஜோடி உண்மையில் வர்த்தகம் செய்யப்படும் விதத்தின் அடிப்படையில், <a href="https://www.exness.com/exness-terminal/" target="_blank">Exness Terminal </a>கூட இந்த விவாதத்திற்குப் பொருத்தமானதாக அமைகிறது.
</p><p>
அந்த ஜோடி அரிதாகவே ஒரே ஒரு சமிக்ஞையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. CFD வர்த்தகர்கள் ஒரே நேரத்தில் டொலர், யூரோஸோன் தரவுகள், ஃபெட் குறித்த எதிர்பார்ப்புகள், ECB-இன் கருத்துகள், தங்கம், கச்சா எண்ணெய், பங்குச் சந்தை மனநிலை ஆகியவற்றைக் கவனிக்க வேண்டியிருக்கலாம்.

&nbsp;&nbsp;</p><p>வரைபட பகுப்பாய்வு, செயல்படுத்துதல், நிலை முகாமைத்துவம், கணக்குக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கான ஒற்றைப் பணிச்சூழல், அந்தப் பரந்த பேரியல் கண்ணோட்டத்தை ஒன்றிணைத்து வைத்திருக்க உதவுகிறது.&nbsp;&nbsp;</p><p>குறிப்பாக, EUR/USD கூடிக் குறையாமல், கிடைமட்டமாக நகரும்போதும், ஒவ்வொரு நகர்விற்கும் பின்னால் இருக்கும் காரணங்கள் மாறிக்கொண்டே இருக்கும்போதும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இடர் கட்டுப்பாடானது வகுத்த அதே திட்டத்தின் ஒரு பகுதியாக மாறுகிறது. தெளிவான போக்கு நிலவும் ஒரு சூழலில், CFD வர்த்தகர்கள் பெரும்பாலும் சந்தை அமைப்பையே தங்கள் பணிகளைச் செய்ய அனுமதிக்க முடியும். EUR/USD சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும்போது, ​​சந்தை அமைப்பு சாதகமான வாய்ப்புகளைக் குறைவாகவே வழங்குகிறது.&nbsp;&nbsp;</p><p>பிரத்தியேகமான விலை நிலைகள் அடிக்கடி சோதிக்கப்படுகின்றன, சந்தைகுறித்த உறுதிப்பாடு விரைவாகக் குறைகிறது; இதனால், வர்த்தகம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே திட்டத்தை மாற்றியமைக்க CFD வர்த்தகர்கள் தூண்டப்படலாம்.&nbsp;&nbsp;</p><p>வெளிப்பாடு, மார்ஜின் மற்றும் கணக்கின் நிலைகுறித்த தெளிவான புலப்படுநிலையானது, வர்த்தகத்தை உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினைகளின் அடிப்படையில் அல்லாமல், விதிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ள உதவுகிறது. உட்கட்டமைப்பானது நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்கின்றன என்பது விஷயமல்ல. அது தீர்ப்பதில்லை.&nbsp;&nbsp;</p><p>முக்கியமான விஷயம் என்னவென்றால், நிலையற்ற சந்தைகள் ஏற்கனவே CFD வர்த்தகரிடம் போதும் என்கிற அளவுக்குச் சவால்களை முன்வைக்கின்றன. EUR/USD ஜோடியானது இரண்டு பலவீனமான கண்ணோட்டங்களுக்கு இடையே சிக்கியிருக்கும்போது, ​​கையாள வேண்டிய மற்றொரு காரணியைச் சேர்ப்பதற்குப் பதிலாக, வர்த்தக ஒழுக்கத்தைக் காக்க அந்தத் தளம் உதவ வேண்டும்.&nbsp;&nbsp;</p><h2>முடிவுரை </h2><p>பணவீக்க மந்தநிலையின்போது வெற்றிகரமான EUR/USD வர்த்தகம் என்பது, ஒவ்வொரு பொருளாதார வெளியீட்டையும் கணிப்பதை விட, சந்தைகள் ஒரு வழிகாட்டலைத் தேடும்போது ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதைப் பற்றியதே ஆகும். ஓகஸ்ட் மாதத்தில் சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலானது, பேரியல் முதலீட்டாளர்கள் மற்றும் சில நாட்கள் அல்லது வாரங்கள் வரை வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் ஆகிய இரு தரப்பினரின் பொறுமையையும் சந்தேகமின்றிச் சோதிக்கும்.&nbsp;&nbsp;</p><p>வர்த்தகர்கள் இத்தகைய நிச்சயமற்ற பேரியல் சூழல்களை ஒரு புறநிலை சார்ந்த பகுப்பாய்வுடனும், கட்டாயப்படுத்தி வர்த்தகம் செய்வதை உறுதியாகத் தவிர்த்தும் அணுக வேண்டும்.</p><p>சீரான நிறைவேற்றலை ஆதரிக்கும் ஒரு வலுவான வர்த்தக உள்கட்டமைப்பைச் சார்ந்திருப்பதன் மூலம், வர்த்தகர்கள் சவாலான, ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் கட்டுண்ட சந்தைகளைச் சமாளித்து, தங்கள் மூலதனத்திற்குப் பாதிப்பின்றி வெளிவர முடியும்.

&nbsp;&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-12T03:35:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி: மர்மமான ஏவுகணையை ஏவிய வட கொரியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-fires-suspected-ballistic-missile-1786492335"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-fires-suspected-ballistic-missile-1786492335</id>
            <summary type="text">வட கொரியா சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி இருப்பதாக ஜப்பான் குற்றஞ்சாட்டியுள்ளது.கடலில் பாய்ந்த வட கொரிய ஏவுகணைபுதன்கிழமை வடகொரியா ராணுவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட கொரியா சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி இருப்பதாக ஜப்பான் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><h2>கடலில் பாய்ந்த வட கொரிய ஏவுகணை</h2><p>புதன்கிழமை வடகொரியா ராணுவம் சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை கடல் பிராந்தியத்தில் ஏவி இருப்பதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p>ஏவுகணை கடலில் விழுந்து இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒரே வாரத்தில் நடத்தப்படும் வட கொரியாவின் இரண்டாவது ஆயுதச் சோதனை இதுவாகும்.</p><p> ஜப்பானை தொடர்ந்து, தென்கொரியாவும் கிழக்கு கடற்கரைப் பகுதிக்கு அப்பால் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை வட கொரியா ஏவி இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8838d621-8403-443e-8dd4-1847d253e022/26-6a7bb5b07079b.webp' /></p><p></p><h2> அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி</h2><p>அமெரிக்கா - தென்கொரியா இடையே அடுத்த வாரம் வருடாந்திர ராணுவ பயிற்சி தொடங்க உள்ள நிலையில் இது தொடர்பான அறிவிப்பு வந்த இரண்டு நாட்களில் வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை செய்துள்ளது.</p><p> பிராந்திய மற்றும் தற்காப்பு திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் Ulchi Freedom Shield என்று அழைக்கப்படும் கூட்டுப் பயிற்சி வட கொரியாவை எரிச்சலடைய செய்துள்ளது.</p><p> ஏனென்றால் இந்த போர் பயிற்சியானது வட கொரியா மீதான படையெடுப்பிற்கான ஒத்திகையாக அது கருகிறது.</p><p> தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பிறகு வடகொரியாவின் இந்த நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-12T02:40:34+00:00</updated>
        </entry>
    </feed>
