<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-23T20:38:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-armed-forces-ready-amid-iran-warning-1784834149"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-armed-forces-ready-amid-iran-warning-1784834149</id>
            <summary type="text">பிரித்தானிய அரசு, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படைகள் எப்போதும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.அமெரிக்காவின் B-52 போர் விமானங்கள் பிரித்தானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய அரசு, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படைகள் எப்போதும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவின் B-52 போர் விமானங்கள் பிரித்தானிய தளங்களில் இருந்து பறப்பதை அனுமதித்ததைத் தொடர்ந்து, ஈரான் புரட்சிகர காவல்படை பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை விடுத்தது.
</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/951dec42-3843-4c7a-9a6f-cf65cdc52e9a/26-6a626867eb9a5.webp' /></p><p>பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் தலைமையிலான அரசு, அமெரிக்காவிற்கு பிரித்தானிய தளங்களை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.</p><p>

இது, ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு எதிரான ஏவுகணை தாக்குதல்களை தடுக்க அமெரிக்கா மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவே என அரசு விளக்கமளித்துள்ளது.
</p><p></p><p>அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர், “எந்தவித தாக்குதலாக இருந்தாலும், எங்கள் ஆயுதப்படைகள் 24 மணி நேரமும் நாட்டை பாதுகாக்க தயாராக உள்ளன. ராயல் நேவி, பிரிட்டிஷ் ஆர்மி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸ் ஆகியவை நவீன பாதுகாப்பு திறன்களுடன், கூட்டாளிகளான நேட்டோவுடன் இணைந்து செயல்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
பிரித்தானியா, தனது மக்களையும், நாட்டின் நலன்களையும், கூட்டாளிகளையும் சர்வதேச சட்டத்திற்கிணங்க பாதுகாக்கும் என உறுதியளித்துள்ளது. அதேசமயம், விரிவான போர் நிலைக்கு இழுக்கப்படாமல் இருக்கவும் கவனம் செலுத்துவதாகவும் அரசு கூறியுள்ளது.
</p><p>
இந்த அறிவிப்பு, ஈரான் எச்சரிக்கைக்கு நேரடி பதிலாகவும், பிரித்தானியா தனது பாதுகாப்பு நிலைப்பாட்டை உறுதியாகக் காக்கும் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T19:14:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய வங்கிகள், கிரிப்டோவை குறிவைத்து ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ள தடைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eu-imposes-21st-sanctions-on-russia-banks-oil-1784827460"></link>
            <id>https://news.lankasri.com/article/eu-imposes-21st-sanctions-on-russia-banks-oil-1784827460</id>
            <summary type="text">உக்ரைன் போருக்கான எதிர்ப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக 21-வது தடைகள் தொகுப்பை அறிவித்துள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய தடைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் போருக்கான எதிர்ப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக 21-வது தடைகள் தொகுப்பை அறிவித்துள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய தடைகளின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.</p><p>

இந்த புதிய நடவடிக்கையில் 218 நிறுவனங்கள் மற்றும் நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, 94 ரஷ்ய நிதி நிறுவனங்கள், மாஸ்கோ பங்குச் சந்தை உள்ளிட்டவை தடைகளில் அடங்குகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38740cd0-d457-4977-9bac-91ffee5401a6/26-6a624e46635ef.webp' /></p><p>இதனால் ரஷ்ய வங்கிகள், நிதி பரிவர்த்தனைகள், கிரிப்டோ நெட்வொர்க் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படவுள்ளன.
</p><p>
மேலும், 32 வங்கிகள் SWIFT எனப்படும் உலகளாவிய பண பரிவர்த்தனை அமைப்பிலிருந்து துண்டிக்கப்படுகின்றன. இதனால் ரஷ்யாவின் சர்வதேச நிதி தொடர்புகள் பெரிதும் சிக்கலாகும்.</p><p></p><p>எண்ணெய் விலைக்கு விதிக்கப்பட்ட உச்சவரம்பு பீப்பாய்க்கு 44.10 டொலர் விலையில் 12 மாதங்களுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யா சந்தை அதிர்வுகளால் கூடுதல் லாபம் பெறுவதைத் தடுக்க முயற்சி செய்யப்படுகிறது.</p><p>

அதே நேரத்தில், கிரீஸ் நாட்டின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ரஷ்ய LNG (Liquefied Natural Gas) மூன்றாம் நாடுகளுக்கு மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் ரஷ்ய LNG இறக்குமதி 2027 ஜனவரி 1 முதல் தடை செய்யப்படும்.</p><p></p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத் துறைத் தலைவர் காஜா கல்லாஸ், “இது நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய தடைகள் தொகுப்பு. ரஷ்யாவின் போர் இயந்திரத்தை பலவீனப்படுத்துவதே எங்கள் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T17:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை அரைசதம் - ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vaibhav-record-fifty-leads-india-beat-zimbabwe-1784818522"></link>
            <id>https://news.lankasri.com/article/vaibhav-record-fifty-leads-india-beat-zimbabwe-1784818522</id>
            <summary type="text">வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தியுள்ளது. 

 ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா 

ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தியுள்ளது. </p><h3>

 ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா </h3><p>

ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய அணி 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக ஜிம்பாப்வே சென்​றுள்​ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/326baf5a-4199-4c08-bed2-d93f48f1f9cf/26-6a622b5c7201a.webp' /></p><p>
இன்று ஹராரே​வில் நடைபெற்ற முதல் T20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. </p><p>

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fd56880-1509-481e-884c-161e5e47e390/26-6a622b5bc0ddb.webp' /></p><p>

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக வெஸ்லி மாதவேரே 39 ஓட்டங்கள் குவித்தார். இந்தியா தரப்பில் பிரின்ஸ் யாதவ் மற்றும் மயங்க் யாதவ் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b807539-0ac6-4781-9262-c308a990a6c8/26-6a622b5dcf3a0.webp' /></p><p> 

126 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 13.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;</p><p></p><h3> 

வைபவ் சூர்யவன்ஷி சாதனை </h3><p>

19 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 ஓட்டங்கள் குவித்து தனது சர்வதேச முதல் அரைசத்தை வைபவ் சூரியவன்ஷி பதிவு செய்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/831cce57-37e6-4430-8ccc-2bfc9ed5465b/26-6a622b5d28298.webp' /></p><p>

15 வயதான சூர்யவன்ஷி, சர்வதேசப் போட்டிகளில் அரைசதம் அடித்த மிக இளம் வயது வீரர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.</p><p> 

2020 ஆம் ஆண்டில் நேபாள வீரர் குஷால் மல்லா அமெரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 15 வயது மற்றும் 340 நாட்களில் அரைசதம் அடித்திருந்தார்.</p><p> 

சூர்யவன்ஷி 15 வயது மற்றும் 118 நாட்களில் சர்வதேச அரைசதம் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T14:55:36+00:00</updated>
        </entry>
    </feed>
