<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-24T15:27:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸில் விதிகளை மீறும் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை - 45 கப்பல்கள் கருப்பு பட்டியலில் சேர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-warns-ships-in-hormuz-with-fines-seizure-1787583608"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-warns-ships-in-hormuz-with-fines-seizure-1787583608</id>
            <summary type="text">Iran warns ships in Hormuz with fines seizure: ஹார்முஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
45 கப்பல்கள் கருப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran warns ships in Hormuz with fines seizure: ஹார்முஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><h2>45 கப்பல்கள் கருப்பு பட்டியலில் சேர்ப்பு</h2><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் விதிகளை மீறிய 45 எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களை ஈரான் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9ba5361-636a-4642-ba00-532af096d0f8/26-6a8c5d6ae0f11.webp' /></p><p>
இந்தக் கப்பல்கள் ஈரானின் அனுமதி இல்லாமல் கடல்சாலையை கடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><h2>

விதிகளை மீறும் கப்பல்களுக்கு எச்சரிக்கை</h2><p>ஈரான் அமைத்துள்ள புதிய “பெர்ஷியன் கல்ஃப் ஸ்ட்ரெய்ட் ஆத்தாரிட்டி” (Persian Gulf Strait Authority) அறிவிப்பின்படி, இந்தக் கப்பல்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம், தடுத்து வைக்கப்படலாம், மேலும் அவற்றின் சரக்குகள் பறிமுதல் செய்யப்படலாம்.
</p><p>
கருப்புப் பட்டியலில் உள்ள கப்பல்களுடன் தொடர்பு கொண்டு சரக்குகளை மாற்றும் பிற கப்பல்களும் அதே தண்டனையை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p>இந்த பட்டியலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (ADNOC), சவுதி அரேபியாவின் தேசிய கப்பல் நிறுவனம் (Bahri), தென் கொரியாவின் Sinokor உள்ளிட்ட பல நிறுவனங்களின் கப்பல்கள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
ஈரான், ஹார்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்கள் தன்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும், பாதுகாப்பு மற்றும் சேவைக்கான கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. </p><p></p><p>இதே நேரத்தில், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கத் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளது.

உலகின் தினசரி எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையின் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் நீரிணையின் வழியாகவே சென்றுகொண்டிருந்தது.</p><p> ஆனால் ஈரான்-அமெரிக்கா மோதலால் அந்தப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை பாதுகாப்புடன் சில கப்பல்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
</p><p>
தற்போது ஈரானின் இந்த நடவடிக்கை, ஏற்கனவே நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T15:01:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் சூழலில் 7.5 ட்ரில்லியன் கன அடி எரிவாயு இருப்பை கண்டறிந்துள்ள ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-discovers-7-5-trillion-cubic-feet-gas-reserve-1787554884"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-discovers-7-5-trillion-cubic-feet-gas-reserve-1787554884</id>
            <summary type="text">Iran discovers 7.5 trillion cubic feet gas reserve: ஈரானில் 7.5 ட்ரில்லியன் கன அடி எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஈரானின் பெட்ரோலிய அமைச்சர் மொஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran discovers 7.5 trillion cubic feet gas reserve: ஈரானில் 7.5 ட்ரில்லியன் கன அடி எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஈரானின் பெட்ரோலிய அமைச்சர் மொஹ்சென் பக்நெஜாத் தெரிவித்துள்ளார்.</p><h3> 

ஈரானில் 7.5 ட்ரில்லியன் கன அடி எரிவாயு இருப்பு</h3><p> 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரில், ஈரானின் எரிவாயு ஆலைகள் தாக்கப்பட்டு கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. </p><p>

மேலும், அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை நிறுத்திவிட்டு, ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cfca640-31f1-49e4-9cc9-453cd3a059f6/26-6a8bec45616e0.webp' /></p><p>

இந்த சூழலில் ஈரானில் 7.5 ட்ரில்லியன் கன அடி கண்டறியப்பட்டுள்ளதாக ஈரானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் மொஹ்சென் பக்நெஜாத் தெரிவித்துள்ளார்.</p><p> 

இது குறித்து பேசிய அவர், "ஃபார்ஸ் மாகாணத்தின் தென்பகுதியில் 7.5 ட்ரில்லியன் கன அடி புதிய எரிவாயு இருப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவில் சுமார் 5.7 டிரில்லியன் கன அடி மீட்கக்கூடிய அளவில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae9ba186-c176-4bfa-9b79-719c699d20ae/26-6a8bec4618f34.webp' /></p><p>
மீட்கக்கூடிய இந்த இருப்பு, ஈரான் கத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான சவுத் பார்ஸின் ஒரு கட்டத்திலிருந்து கிடைக்கும் சுமார் 15 ஆண்டுகால உற்பத்திக்குச் சமமானதாக இருக்கும்." என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எரிவாயுவை “இனிப்பு எரிவாயு” என்று வர்ணித்த பக்னேஜாத், இது மேம்பாட்டு மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் இரண்டையும் குறைக்கும் என தெரிவித்துள்ளார். </p><p>

ஈரானிய அரசு ஊடகங்கள் இந்த வளங்களின் மதிப்பு பல்லாயிரக்கணக்கான கோடி டொலர்களாக இருக்கும் என மதிப்பிடுகின்றன.
</p><p>
கடந்த ஆண்டு, பஸான் வயலில் சுமார் 10 டிரில்லியன் கன அடி எரிவாயு இருப்பதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T14:36:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் அதிகரிக்கும் முதியோர் மக்கள் தொகை - சமூகச் செலவுகள் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-social-spending-hits-record-high-1787581219"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-social-spending-hits-record-high-1787581219</id>
            <summary type="text">Germany social spending hits record high: ஜேர்மனியின் முதியோர் மக்கள் தொகை காரணமாக சமூகச் செலவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சமூகச் செலவுகள்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany social spending hits record high: ஜேர்மனியின் முதியோர் மக்கள் தொகை காரணமாக சமூகச் செலவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.</p><h2>

சமூகச் செலவுகள்&nbsp;உயர்வு</h2><p>ஜேர்மனியில் முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக சமூகச் செலவுகள் வரலாற்றிலேயே அதிக உயர்வை எட்டியுள்ளதாக Ifo Institute வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b09ad37a-9ad4-4f6f-bc20-1239ce36be85/26-6a8c532498538.webp' /></p><p>2025-ஆம் ஆண்டில், வயது முதிர்ச்சி மற்றும் நோய்கள் தொடர்பான செலவுகள் மொத்த சமூகச் செலவுகளில் சுமார் 70 சதவீதமாக இருந்தது.
</p><p>
1992-ஆம் ஆண்டிலிருந்து சமூகச் செலவுகளில் ஏற்பட்ட உண்மையான உயர்வில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவை முதியோர் மற்றும் நோய்கள் தொடர்பான செலவுகளால் ஏற்பட்டதாக ஆய்வு கூறுகிறது.
</p><p>
Ifo ஆராய்ச்சியாளர் எமிலி ஹோஸ்லிங்கர், “சமூகச் செலவுகள் GDP-வை விட வேகமாக உயர்கின்றன. அதனால் பலவீனமான பொருளாதார நிலையும் சமூகச் செலவுகளின் பங்கை அதிகரிக்கச் செய்கிறது” என தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>GDP-யில்&nbsp;32 சதவீதம்</h2><p>2019 முதல் 2025 வரை, சமூகச் செலவுகள் 11.5 சதவீதம் உடர்ந்துள்ளன. இது சுமார் 104 பில்லியன் யூரோ (121.33 பில்லியன் டொலர்) ஆகும். இதே காலத்தில், சமூகச் செலவுகள் GDP-யில் 29.6 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.</p><p>

</p><h2>
செலவுகளுக்கான முக்கிய காரணிகள்:
</h2><ul><li>
முதியோர் மக்கள் தொகைக்கு மருத்துவம் மற்றும் பராமரிப்பு செலவுகள்</li><li>

கூட்டாட்சி ஓய்வூதியக் கட்டணங்கள் அதிகரித்தது
</li></ul><p></p><p>ஜேர்மனியின் மக்கள் தொகை அமைப்பில் ஏற்பட்ட மாற்றம், தலைமுறைகளுக்கிடையே நலவாழ்வு சுமையை அதிகரிக்கிறது. இதனால், அரசின் நிதி நிலைமைக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த நிலை, ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கக்கூடியதாகவும், எதிர்காலத்தில் சமூகச் செலவுகள் மேலும் அதிகரிக்கக்கூடியதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T14:17:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[503 ஓட்டங்கள் குவித்து இந்தியா டிக்ளேர்: இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dhruv-jurel-century-in-colombo-india-503-1787580388"></link>
            <id>https://news.lankasri.com/article/dhruv-jurel-century-in-colombo-india-503-1787580388</id>
            <summary type="text">Dhruv Jurel century in Colombo: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 503 ஓட்டங்கள் குவித்தது.

கொழும்பில் நடந்து வரும் இலங்கை அணிக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Dhruv Jurel century in Colombo: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 503 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
கொழும்பில் நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்தியா 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.&nbsp;</p><h2>துருவ்&nbsp;ஜுரேல்&nbsp;சதம் </h2><p>

கொழும்பில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய அணியில் ரிஷாப் பண்ட் 89 பந்துகளில் 63 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c3ab27-80c7-4807-bea0-1233d25f1ac0/26-6a8c511182c43.webp' />&nbsp;</p><p></p><p>
அவரைத் தொடர்ந்து அரைசதம் கடந்த துருவ் ஜுரேல் (Dhruv Jurel) அபாரமாக ஆடி சதம் விளாசினார். </p><p>

ஜுரேல் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 115 ஓட்டங்கள் விளாச, இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
</p><p>
அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளும், பிரபத் ஜெயசூரியா மற்றும் கேஷாரா நுவந்தா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். </p><h2>

பிரசித் கிருஷ்ணா கொடுத்த அதிர்ச்சி </h2><p>
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு இரண்டாவது ஓவரில் பிரசித் கிருஷ்ணா அதிர்ச்சி கொடுத்தார்.</p><p>

அவரது பந்துவீச்சில் லஹிரு உதாரா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய பிரபத் ஜெயசூரியா 2 ஓட்டங்களில் மானவ் சுதர் ஓவரில் அவுட் ஆனார்.</p><p> 

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 8 ஓட்டங்கள் எடுத்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d4ef919-f34d-4b15-86d2-a39085655b80/26-6a8c511272f50.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T14:08:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள், உயிரி ஆயுதங்களை உருவாக்க உதவும் AI - எச்சரிக்கை அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/security-researchers-warn-ai-could-help-terrorists-1787578357"></link>
            <id>https://news.lankasri.com/article/security-researchers-warn-ai-could-help-terrorists-1787578357</id>
            <summary type="text">Security researchers warn ai could help terrorist groups: செயற்கை நுண்ணறிவு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள், உயிரி ஆயுதங்களை உருவாக்க உதவுக்கூடும் என அறிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Security researchers warn ai could help terrorist groups: செயற்கை நுண்ணறிவு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள், உயிரி ஆயுதங்களை உருவாக்க உதவுக்கூடும் என அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. </p><p>கணினிசார் பாதுகாப்பு ஆய்வாளர்கள், செயற்கை நுண்ணறிவை வைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள், உயிரி ஆயுதங்களை உருவாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.&nbsp;</p><h2>AI குறித்த அறிக்கை</h2><p>
கிரிம்சன் ஃப்ளேர் என்ற ஆய்வுக் குழு AI குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d59f35c-1654-48f0-8e9b-50ee29db8a85/26-6a8c4929526fd.webp' /></p><p></p><p> 

அதில் பரவலாகப் பயன்படுத்தப்படும் off - the - shelf செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளை பயன்படுத்தி, எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி செயல்படும் வகையில் எளிதாக மாற்றியமைக்க முடியும் என்று எச்சரிக்கின்றனர்.</p><p>

'இந்த செயற்கை நுண்ணறிவு, அனுபவமற்ற தீய சக்திகளுக்கு வெடிபொருட்கள் அல்லது இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதற்கான குறிப்பிட்ட வழிமுறைகளை கற்றுக் கொடுக்க அனுமதிக்கிறது' என்று இந்த அறிக்கை கூறுகிறது.
</p><p>
அதாவது, அறிவியலில் அடிப்படை புரிதல் 'தீய சக்திகள்' என்று அழைக்கப்படுபவர்கள் கூட, ஆந்த்ராக்ஸ் போன்ற நம்பமுடியாத அளவிற்கு அபாயகரமான ஆயுதங்களை விரைவில் தங்களுக்கு ஆயுதபாணியாக்கிக் கொள்ள முடியும் என்கிறது.
</p><p>
மேலும், இந்த அறிக்கையானது Abliteration என்று முறைசாரா முறையில் அறியப்படும் ஒரு புதிய முறையைப் பற்றி எச்சரிக்கிறது. </p><h2>

யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து</h2><p>இது பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை 'நிமிடங்களில் செயலிழக்க செய்ய' அனுமதிக்கிறது. </p><p>

அதன் பின்னர் 'அழிக்கப்பட்ட' இந்த மாதிரிகளை பின் இணையத்தில் பதிவேற்றலாம். அங்கு யார் வேண்டுமானாலும் அவற்றை பதிவிறக்கம் செய்து, தங்கள் சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. </p><p>

அத்துடன் OpenAI-யின் ChatGPT போன்ற chatbots, அதே அடிப்படை கட்டமைப்பைப் பயன்படுத்தும் அதே வேளையில், எவருடைய கணினியிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து இயக்கக்கூடிய open-weight வகை பெரிய மொழி மாதிரிகள் (LLMs) குறித்து இந்த அறிக்கை ஆராய்கிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1444eecf-badc-4af7-89fc-e69bce165e25/26-6a8c49286b0bb.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T13:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைதானத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோ - அபராதம் விதித்த ஐசிசி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/icc-fined-for-jaiswal-asitha-fernando-for-fight-1787576957"></link>
            <id>https://news.lankasri.com/article/icc-fined-for-jaiswal-asitha-fernando-for-fight-1787576957</id>
            <summary type="text">மைதானத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா பெர்னாண்டோவிற்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோவிற்கு அபராதம்

இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மைதானத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா பெர்னாண்டோவிற்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.</p><h3>

ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோவிற்கு அபராதம்</h3><p>

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dba04d0-43ba-4671-8aff-916dd2522a87/26-6a8c427e69236.webp' /></p><p> 

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் சதம் விளாசியுள்ளனர். </p><p>

தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால், இலங்கை வீரர் அசிதா பெர்னாண்டோவின் ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசிய பின்னர் அவரது பந்திலே ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p>

ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தியதை அசிதா பெர்னாண்டோ கொண்டாடிய போது, இருவருக்கும் மைதானத்திலே வாக்குவாதம் ஏற்பட்டது.&nbsp;</p><p></p><p>

சக வீரர் ஒருவர் ஜெய்ஸ்வாலை சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் திரும்பி வந்த ஜெய்ஸ்வால் தனது ஹெல்மெட் தலையால் பெர்னாண்டோவை முட்டுவது போல் தள்ளினார்.</p><p>

இது குறித்து ஐசிசி விசாரணை நடத்தியதில், இருவரும் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஒப்புக்கொண்டதால், ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு, தலா ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளி வழங்கப்பட்டது.</p><p> 

கடந்த 24 மாத காலத்தில் இரு வீரர்களும் இதற்கு முன் எந்தக் குற்றச்செயல்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T13:18:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய தூதரக அதிகாரிகளை பிரான்ஸ் வெளியேற்றும் விவகாரம்: ஈரான் கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-slams-france-for-expel-2-iranian-diplomats-1787573890"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-slams-france-for-expel-2-iranian-diplomats-1787573890</id>
            <summary type="text">Iran calls France&#039;s decision to expel two Iranian diplomats illegal: ஈரானிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் பிரான்சின் முடிவு சட்டவிரோதமானது என ஈரான் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran calls France's decision to expel two Iranian diplomats illegal: ஈரானிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் பிரான்சின் முடிவு சட்டவிரோதமானது என ஈரான் விமர்சித்துள்ளது.</p><p>


ஈரான் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவரை பிரான்ஸ் வெளியேற்ற இருப்பதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
</p><h3>
ஈரானிய தூதரக அதிகாரிகள் இருவரை வெளியேற்றும் பிரான்ஸ்</h3><p>

ஜூலை மாதம் 19ஆம் திகதி, ஈரான் அதிகாரிகள், பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் இருவரை கைது செய்து காவலில் அடைத்து விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள்.
</p><p>
அப்போது, அவர்களில் ஒருவரை ஈரான் அதிகாரிகள் தாக்கியதாகவும் தகவல் வெளியானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eebe867-ea36-4e80-aba8-388fd577f93c/26-6a8c3684771ed.webp' /></p><p>
அதைத்தொடர்ந்துதான், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட், ஈரான் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளார்கள் என்று கூறியிருந்தார்.&nbsp;</p><p>
ஈரான் கடும் விமர்சனம்

பிரான்சின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரானிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் பிரான்சின் முடிவு சட்டவிரோதமானது என ஈரான் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Esmaeil Baqaei, ஈரான் சட்டப்படி எடுத்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் எடுத்துள்ள முடிவு சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c365846-4479-42f1-9b1e-f3a244684f34/26-6a8c3683c4561.webp' /></p><p>
அத்துடன், இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவுகளுக்கு, பிரான்சின் முடிவு எந்த வகையிலும் பயனுள்ளதாக அமையாது என்றும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T12:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[1 டொலருக்கு 2 மில்லியன் ரியால் - அமெரிக்காவின் பொருளாதார தாக்குதலால் ஈரான் நாணயம் சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-rial-hits-record-low-vs-dollar-1787573419"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-rial-hits-record-low-vs-dollar-1787573419</id>
            <summary type="text">Iran&#039;s rial nears 2 million per dollar: ஈரானின் நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.

தற்போது, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran's rial nears 2 million per dollar: ஈரானின் நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.</p><p>

தற்போது, 1 அமெரிக்க டொலருக்கு சுமார் 19.92 லட்சம் ரியால் மதிப்பில் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 4.5 சதவீத வீழ்ச்சியைக் காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e22560a5-9a43-4c2e-9bf8-8cd19c7f2395/26-6a8c34ad5aaa4.webp' /></p><h2>பொருளாதார தாக்குதல்</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு எதிராக “Economic D-Day” எனப்படும் மிகப்பெரிய பொருளாதார தாக்குதலை அறிவித்ததையடுத்து இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெஸ்சன்ட், “ஈரானின் அனைத்து பொருளாதார வாழ்வாதாரங்களையும் துண்டித்து, தனிமைப்படுத்துவதே எங்கள் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஈரான்&nbsp;அரசின் நிதி நிலைமை கடுமையாக பாதிப்பு</h2><p>
</p><p>
ஈரானின் வெளிநாட்டு நாணய வருவாய் பெரும்பாலும் எண்ணெய் ஏற்றுமதியிலிருந்து வந்தது. ஆனால், சமீபத்தில் எண்ணெய் ஏற்றுமதி “முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது” என ஈரான் மத்திய வங்கி ஆளுநர் ஹெம்மத்தி கூறியுள்ளார். இதனால், அரசின் நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும், ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடன் நிதி பரிமாற்றங்களை நிறுத்தியதால், வர்த்தகமும் சிக்கலில் சிக்கியுள்ளது.
</p><p>
இந்நிலையில், ஈரான் சீனா, BRICS, Shanghai Cooperation Organisation போன்ற மேற்கு நாடுகளின் கட்டுப்பாட்டில் இல்லாத அமைப்புகளுடன் இணைந்து புதிய பொருளாதார வழிகளைத் தேடுகிறது. சீனா இன்னும் ஈரானின் எண்ணெய் வாங்கும் மிகப்பெரிய நாடாக இருப்பதால், ஈரான் கிழக்கு நாடுகளுடன் கூட்டாண்மை வலுப்படுத்த முயற்சிக்கிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e8d3c41-560d-4b1c-877d-284618d61ef3/26-6a8c34ae12c1f.webp' /></p><p>இந்த நாணய வீழ்ச்சி, சாதாரண ஈரான் மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிறது. இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிப்பதால் பணவீக்கம் உயரும் அபாயம் உள்ளது. மக்கள் அதிக அளவில் டொலர் மற்றும் பிற வெளிநாட்டு நாணயங்களை வாங்க முயற்சிப்பதால், ரியால் மதிப்பு மேலும் குறையக்கூடும்.
</p><p>
அமெரிக்கா, இராணுவ நடவடிக்கைகளால் ஈரானின் இராணுவ திறனை குறைத்ததாகக் கூறினாலும், ஈரான் இன்னும் பிராந்தியத்தில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் அச்சுறுத்தும் திறனை வைத்திருக்கிறது. எனவே, அமெரிக்கா பொருளாதார அழுத்தத்தின் மூலம் ஈரானை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T12:07:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேரளாவிற்கு விரிவடையும் தவெக - மாநில தலைவராகும் மலையாள நடிகர் தேவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/actor-devan-to-join-tvk-as-kerala-state-leader-1787572672"></link>
            <id>https://news.lankasri.com/article/actor-devan-to-join-tvk-as-kerala-state-leader-1787572672</id>
            <summary type="text">actor devan to joins tvk as kerala state leader: நடிகர் தேவன் தவெகவில் இணைய உள்ளதாவும், அவருக்கு கேரள மாநில தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>actor devan to joins tvk as kerala state leader: நடிகர் தேவன் தவெகவில் இணைய உள்ளதாவும், அவருக்கு கேரள மாநில தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><h3>
தவெகவில் இணையும் நடிகர் தேவன்</h3><p>

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் கேரளாவை சேர்ந்த நடிகர் தேவன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40904e53-755b-46ae-86f4-d27eb587ed6c/26-6a8c31c21cc3c.webp' /></p><p> 

இவர் தன்னுடைய கல்லூரி காலத்திலே அரசியல் ஈடுபாடு கொண்டு கேரள மாணவர் சங்கத்தில் (KSU) உறுப்பினராக இருந்தார்.</p><p> 

2004 ஆம் ஆண்டில் கேரள மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்த இவர், 2021 ஆம் ஆண்டில் கட்சியை பாஜகவில் இணைத்தார். அதன் பின்னர் கேரள பாஜகவின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.&nbsp;</p><p></p><p> 

கடத்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி பாஜகவில் இருந்து விலகிய அவர், பாஜக அரசியல் கருத்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், தேர்தல் வெற்றியை விட பணம் சம்பாதிப்பதே கட்சியின் ஒரே குறிக்கோள் என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf32b0f5-f63b-4517-938c-9e6b741d05a7/26-6a8c31c2c5ec1.webp' /></p><p>

இதனைத்தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.</p><p> 

இது குறித்து தவெகவின் முக்கிய நிர்வாகிகள் தன்னிடம் பேசியதாகவும், தவெகவின் கேரள மாநில தலைவர் பதவி தனக்கு வழங்கப்பட உள்ளதாகவும், செப்டம்பர் 10 ஆம் திகதி முதல்வர் விஜய்யை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

தவெக அமைச்சர்கள் பலரும் முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என பேசி வரும் நிலையில், தவெகவை தேவன் மூலம் கேரளாவில் விரிவுபடுத்துவதற்கான பணிகளை முதல்வர் விஜய் தொடங்கியுள்ளார். </p><p>

நெஞ்சினிலே, ஷாஜகான், சிவகாசி, ஆதி படங்களில் முதல்வர் விஜய்யும் தேவனும் இனைந்து நடித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T12:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்.எஸ்.தோனியின் நீண்ட கால சாதனை முறியடிப்பு: வரலாறு படைத்த ரிஷாப் பண்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rishabh-breaks-ms-dhoni-record-in-test-1787572819"></link>
            <id>https://news.lankasri.com/article/rishabh-breaks-ms-dhoni-record-in-test-1787572819</id>
            <summary type="text">Rishabh breaks ms dhoni record in test: இந்திய முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.தோனியின் நீண்ட கால சாதனையை ரிஷாப் பண்ட் முறியடித்தார். 

டெஸ்ட் கிரிக்கெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rishabh breaks ms dhoni record in test: இந்திய முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.தோனியின் நீண்ட கால சாதனையை ரிஷாப் பண்ட் முறியடித்தார். </p><p>

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அல்லது நடுநிலையான மைதானங்களில் விக்கெட் கீப்பராக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ரிஷாப் பண்ட் படைத்துள்ளார்.&nbsp;</p><h2>ரிஷாப் பண்ட்</h2><p>

கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்டில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddf94f7c-a329-4ea4-8fda-ef6a87c7a874/26-6a8c325685138.webp' /></p><p></p><p>
இதன்மூலம் விக்கெட் கீப்பராக 2,501 ஓட்டங்கள் குவித்து பண்ட் வரலாறு படைத்தார். வெளிநாடுகள் அல்லது நடுநிலையான மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த விக்கெட் கீப்பராக பண்ட் உருவெடுத்துள்ளார்.</p><p>

முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி 2,496 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பண்ட் அவரை முந்தியுள்ளார்.</p><p>
 
ரிஷாப் பண்ட் 51 டெஸ்ட் போட்டிகளில் 43.60 சராசரியுடன் 3,662 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 8 சதங்கள், 20 அரைசதங்கள் அடங்கும்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c698b76-a64d-4d61-8eea-d89091ba0310/26-6a8c32573db19.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:58:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்துக்குள்ளான ஹங்கேரி நாட்டு போர் விமானம்: நொடி பொழுதில் உயிர் தப்பிய விமானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hungarian-gripen-fighter-flight-crashed-1787571659"></link>
            <id>https://news.lankasri.com/article/hungarian-gripen-fighter-flight-crashed-1787571659</id>
            <summary type="text">Hungarian Gripen Fighter Flight Crashed: ஹங்கேரி நாட்டு ராணுவத்தின் போர் விமான விபத்துக்குள்ளான சம்பவம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hungarian Gripen Fighter Flight Crashed: ஹங்கேரி நாட்டு ராணுவத்தின் போர் விமான விபத்துக்குள்ளான சம்பவம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> விபத்துக்குள்ளான போர் விமானம்</h2><p>ஹங்கேரி நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சோல்னோக்(Szolnok) நகருக்கு அருகே அந்நாட்டின் பாதுகாப்பு படையினருக்கு சொந்த்மான போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> கிரிப்பென்(Gripen) ரக போர் விமானமானது விபத்துக்குள்ளாகி இருப்பதை அந்நாட்டு பிரதமர் பீட்டர் மக்யார்(Péter Magyar) திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0735307c-46a4-4472-a2f3-917897a70150/26-6a8c2dccad1bf.webp' /></p><p> இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில், போர் விமானம் விபத்துக்குள்ளான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் விபத்து தொடர்பாக உடனடி அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் பீட்டர் மக்யார் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> உயிர் தப்பிய விமானி</h2><p>
அதிர்ஷ்டவசமாக உரிய நேரத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து விமானி எஜெக்ட் செய்து வெளியேறி விட்டதாகவும், அவருக்கு எந்தவொரு காயமும் இன்றி உயிர் பிழைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த விமான விபத்தினால் பொதுமக்கள் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> விமான விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ரோமுலஸ் ருசின் ஸெண்டி உடனடியாக விரைந்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:41:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலுக்குள் பாய்ந்த கார்... வெளிநாட்டில் இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-student-car-plunges-to-pacific-ocean-1787569950"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-student-car-plunges-to-pacific-ocean-1787569950</id>
            <summary type="text">Indian origin student’s car plunges into Pacific ocean, dies trapped underwater: இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் பயணித்த கார் கடலுக்குள் பாய்ந்த நிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian origin student’s car plunges into Pacific ocean, dies trapped underwater: இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் பயணித்த கார் கடலுக்குள் பாய்ந்த நிலையில், காருக்குள் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>

இந்திய வம்சாவளி மாணவியான ஆலி ரெனீ சிங் (19), கலிபோர்னியா பல்கலையில் இரண்டாமாண்டு பட்டப்படிப்பை முடித்துவிட்டு மூன்றாம் ஆண்டைத் துவங்குவதற்காக காத்திருந்திருக்கிறார்.
</p><h3>
இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு
</h3><p>
இந்நிலையில், இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 13ஆம் திகதி, தன் நண்பர் ஒருவருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார் ஆலி. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70f4a007-3e92-4e79-9af5-7f50b84e0fd0/26-6a8c271f963c3.webp' /></p><p>
அப்போது, சான்டா குரூஸ் என்னுமிடத்தில், கடலோரமாக அமைந்துள்ள West Cliff Drive என்னும் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த அந்தக் கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது.
</p><p>
ஆலியுடன் பயணித்த நண்பர் தன்னை விடுவித்துக்கொண்டு காரிலிருந்து வெளியேறி கரை சேர, ஆலி காருக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையிலும், ஆலியை உயிரற்ற நிலையில்தான் மீட்க முடிந்துள்ளது.
</p><p>
ஆலியின் மரணம், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[214,000 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் அனுமதித்த திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/214000-migrants-have-been-let-into-the-uk-1787563838"></link>
            <id>https://news.lankasri.com/article/214000-migrants-have-been-let-into-the-uk-1787563838</id>
            <summary type="text">Thousands of migrants have been let into the UK under a scheme that shut five years ago: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த ஒரு திட்டத்தின் கீழ், ஆய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thousands of migrants have been let into the UK under a scheme that shut five years ago: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த ஒரு திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுவருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>


பிரெக்சிட்டுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரித்தானியாவில் வாழ அனுமதிப்பதற்காக, The EU Settlement Scheme என்னும் ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.</p><h3>

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை அனுமதித்த திட்டம்
</h3><p>
அந்த திட்டம், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்துவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e1d7ac-ad51-4659-9272-a0c0c627fd51/26-6a8c0f405a3a7.webp' /></p><p>
ஆனால், அதன்பிறகும், அத்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அதாவது, கால தாமதமாக வந்த விண்ணப்பங்கள் என்னும் பெயரில், 160,000 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் 54,000 பேரை சேர்த்து, முடிவடைந்த The EU Settlement Scheme திட்டத்தின் கீழ், 214,000 பேர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.</p><p>

இந்நிலையில், அந்த திட்டத்தை தவறாக பயன்படுத்தி ஏராளமானோர் பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாகவும், உள்துறை அலுவலகம் தூங்கிக்கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Neil O'Brien என்பவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbeb4900-ac78-44e9-aa70-215474c55912/26-6a8c0f3fa8f2b.webp' /></p><p>
ஐந்து ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்த ஒரு திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தவர்களின் கணவன் அல்லது மனைவி என்னும் பெயரில் பிரித்தானியா வர விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை ஏன் உள்துறை அலுவலகம் இன்னமும் ஏற்கிறது என்பதற்கு அமைச்சர்கள் பதிலளித்தாகவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் அவர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T10:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுசுகி அறிமுகப்படுத்திய மினி மின்சார கார் - 310 கி.மீ. ரேஞ்ச்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/suzuki-e-sky-ev-310km-range-minicar-1787564832"></link>
            <id>https://news.lankasri.com/article/suzuki-e-sky-ev-310km-range-minicar-1787564832</id>
            <summary type="text">Suzuki launches electric mini vehicle e Sky EV: சுசுகி நிறுவனம் மினி மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Suzuki e Skyஜப்பானின் பிரபல வாகன உற்பத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Suzuki launches electric mini vehicle e Sky EV: சுசுகி நிறுவனம் மினி மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><h2>
Suzuki e Sky</h2><p>ஜப்பானின் பிரபல வாகன உற்பத்தியாளரான சுசுகி மோட்டார், தனது முதல் மின்சார மினி வாகனமான “e Sky”-யை ஓன்லைனில் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

இந்த வாகனம் 310 கிலோமீட்டர் பயண தூரம் (range) கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7c43dc9-7762-4113-bb44-19ae04ac1e84/26-6a8c13228c01f.webp' /></p><p>மினி வாகனங்களில் இதுவே மிக நீண்ட பயண தூரம் கொண்டதாகக் கருதப்படுகிறது.

சுசுகி, தனது மினி வாகன உற்பத்தி அனுபவத்தை பயன்படுத்தி, எடை குறைப்பு, அதிக எரிசக்தி திறன் ஆகியவற்றின் மூலம் இந்த நீண்ட பயண தூரத்தை அடைந்துள்ளது.
</p><p>
“பெட்ரோல் வாகனங்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கும் எளிதாக ஓட்டக்கூடியதாக வடிவமைக்கப்பட்டது” என சுசுகி நிறுவனத்தின் மேம்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>இந்த வாகனத்தில், நேவிகேஷன் சிஸ்டம் மூலம் மீதமுள்ள பேட்டரி சக்தி மற்றும் போக்குவரத்து நிலையை அடிப்படையாகக் கொண்டு சிறந்த பாதையை பரிந்துரைக்கும் வசதி உள்ளது. இதனால், சார்ஜ் தீர்ந்துவிடும் பயம் இல்லாமல் பயணிகள் நிம்மதியாக பயணிக்க முடியும்.</p><h2>மக்களுக்கு ஏற்ற விலை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29d33d76-f1d0-4ceb-a132-6c791e5f16c6/26-6a8c13236324f.webp' /></p><p>சுசுகி நிறுவனம் இந்த வாகனத்தின் விலையை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், பெட்ரோல் வாகன பயனர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறும் வகையில், விலை மக்களுக்கு ஏற்றதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஜப்பானில் மின்சார மினி வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. சீனாவின் BYD நிறுவனம் கடந்த ஜூலையில் “Racco” எனும் மினி வாகனத்தை அறிமுகப்படுத்தியது. </p><p>மேலும், யோகோஹாமாவைத் தலைமையிடமாகக் கொண்ட EMT நிறுவனம் 2027ஆம் ஆண்டில் சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது.
</p><p>“போட்டி அதிகரிப்பது நுகர்வோருக்கு நல்லது. எங்கள் வலிமை மினி வாகனங்களில் உள்ளது, அதனை வலியுறுத்த விரும்புகிறோம்” என&nbsp;சுசுகி தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T09:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் சேன்ஸலருக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/majority-of-voters-predict-early-exit-for-merz-1787564648"></link>
            <id>https://news.lankasri.com/article/majority-of-voters-predict-early-exit-for-merz-1787564648</id>
            <summary type="text">Majority of Voters Predict Early Exit for Chancellor Merz: ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் விரைவில் பதவி விலகுவார் எனப் பெரும்பான்மையான வாக்காளர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Majority of Voters Predict Early Exit for Chancellor Merz: ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் விரைவில் பதவி விலகுவார் எனப் பெரும்பான்மையான வாக்காளர்கள் கணித்துள்ளனர்.</p><p>


ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்துவருகிறது.
</p><h3>
ஆய்வு முடிவுகள்</h3><p>

YouGov என்னும் ஆய்வமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், சேன்ஸலர் மெர்ஸ், 2029ஆம் ஆண்டு நிகழவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன் பதவி விலகிவிடுவார் என கருதுவதாக பெரும்பான்மையான வாக்காளர்கள் கணித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7646d54c-68bf-4422-babc-10cbe1827276/26-6a8c1269af567.webp' /></p><p>
36 சதவிகித வாக்காளர்கள், மெர்ஸ் 2026ஆம் ஆண்டு முடியும் வரை சேன்ஸலராக இருப்பார் என்றும், என்றாலும், 2029ஆம் ஆண்டு நிகழவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன் அவர் பதவி விலகிவிடுவார் என்றும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
ஆய்வில் பங்கேற்றவர்களில் 18 சதவிகிதம் பேர், இந்த ஆண்டு முடியும் முன்பே அவருக்கு பதிலாக வேறொருவர் சேன்ஸலராவார் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

29 சதவிகிதம் பேர், அடுத்த தேர்தல் வரையாவது அவர் சேன்ஸலராக இருப்பார் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
மொத்தத்தில், 54 சதவிகிதம் பேர், இந்த நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் முன் மெர்ஸ் பதவி விலகிவிடுவார் என கணித்துள்ளார்கள்.
</p><p>
அத்துடன், மெர்ஸ் சமீபத்தில் தனது கேபினட்டில் மாற்றங்கள் செய்த நிலையிலும், தனது அதிகாரத்தை வலுப்படுத்தத் தவறிவிட்டதாக பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதற்கிடையில், அடுத்து யார் சேன்ஸலராவார் என கேட்கப்பட்ட நிலையில், மெர்ஸின் CDU கட்சியைச் சார்ந்த, North Rhine-Westphalia மாகாண பிரீமியரான Hendrik Wüst என்பவரே அடுத்து சேன்ஸலராக பொருத்தமான நபர் என கருதுவதாக 25 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மெர்ஸே சேன்ஸலராக தொடர்வார் என 9 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ள நிலையில், 66 சதவிகிதம் பேர், அடுத்து யார் சேன்ஸலராவார் என தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T09:44:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜாம்பவான்களின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்த படிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/devdutt-padikkal-breaks-dravid-and-sachin-record-1787563951"></link>
            <id>https://news.lankasri.com/article/devdutt-padikkal-breaks-dravid-and-sachin-record-1787563951</id>
            <summary type="text">Padikkal breaks 27 years record of dravid: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தேவ்தத் படிக்கல் புதிய சாதனை படைத்தார். 

கொழும்பில் நடந்து வரும் டெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Padikkal breaks 27 years record of dravid: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தேவ்தத் படிக்கல் புதிய சாதனை படைத்தார். </p><p>

கொழும்பில் நடந்து வரும் டெஸ்டில் இந்திய துடுப்பாட்ட வீரர் தேவ்தத் படிக்கல் புதிய சாதனை படைத்தார்.&nbsp;</p><h2>தேவ்தத் படிக்கல்</h2><p>

இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய துடுப்பாட்ட வீரரான தேவ்தத் படிக்கல், முதல் டெஸ்டில் 167 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76876d44-2b54-423f-850e-a7b94dc541de/26-6a8c109ec5ac6.webp' /></p><p></p><p>

அதேபோல் கொழும்பில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டிலும் 117 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p>

இதன்மூலம் இந்திய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்டின் 27 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளார்.&nbsp;</p><p>அதாவது, வெளிநாட்டு மைதானங்களில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் (328) எடுத்த வீரராக தேவ்தத் படிக்கல் உள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5c86563-6829-4f71-ae3c-29350eb712e5/26-6a8c0fb2583a8.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T09:36:28+00:00</updated>
        </entry>
    </feed>
