<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-03T21:23:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மூழ்கிய 19 வயது கயாக்கிங் வீரர்: பிரித்தானிய கடற்கரையில் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/19-yrs-old-kayaker-body-found-in-uk-coast-1785785861"></link>
            <id>https://news.lankasri.com/article/19-yrs-old-kayaker-body-found-in-uk-coast-1785785861</id>
            <summary type="text">பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்ட் கடற்கரையில் காணாமல் போன 19 வயது இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.கயாக்கிங் வீரர் உடல் மீட்பு
நார்தம்பர்லேண்ட் கடற்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்ட் கடற்கரையில் காணாமல் போன 19 வயது இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.</p><h2>கயாக்கிங் வீரர் உடல் மீட்பு</h2><p>
நார்தம்பர்லேண்ட் கடற்கரையில் கயாக்கிங் சென்றபோது விபத்தில் சிக்கி 19 வயது மைக்கேல் ஹென்றி என்ற இளைஞர் காணாமல் போனார்.</p><p>பவுல்மர்(Boulmer) பகுதிக்கு அருகே ஜூலை 7ம் திகதி மாலை மைக்கேல் ஹென்றி சென்ற இரண்டு பேர் கொண்ட படகு கவிழ்ந்ததை அடுத்து காணாமல் போனார்.</p><p> இதில், மைக்கேல் ஹென்றியுடன் பயணம் செய்த மற்றொரு வீரர் அதிர்ஷ்டவசமாக கடலில் தத்தளித்த நிலையில் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aa2535d-fbc9-45e6-8509-9f22cd44a739/26-6a70ee075c20a.webp' /></p><p>ஆனால் மைக்கேல் ஹென்றியை மீட்க முடியவில்லை. இதையடுத்து அவரை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையானது பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.</p><p> இந்நிலையில், கடந்த ஜூலை 26ம் திகதி பிளைத் கடற்கரையில் ஹென்றியின் உடல்&nbsp; கண்டுடெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> இருப்பினும் முறையான அடையாளம் காணும் பணி நிறைவடைந்ததை அடுத்து, இது தொடர்பான அறிக்கை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><p> ஹென்றியின் மறைவை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஹென்றியின் அழகான நினைவுகளை உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p> மேலும் ஹென்றியை கண்டுபிடிக்க அயராது உழைத்த அவசரகால சேவைகளுக்கும், மீட்பு பணியாளர்களுக்கும் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T19:37:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய அதிகாரிகள் இரட்டை வேடம்: அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ்: டிரம்ப் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-control-strait-of-hormuz-trump-warns-iran-1785776458"></link>
            <id>https://news.lankasri.com/article/us-control-strait-of-hormuz-trump-warns-iran-1785776458</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் கட்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி</h2><p>
திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த தகவலில், அமெரிக்காவின் அனுமதியின்றி ஈரானுக்குள் எதுவும் நுழைய முடியாது. ஏனென்றால் தற்போதைய கடல்சார் முற்றுகை நடவடிக்கை இதனை உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.</p><p> இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eb54eb6-3b0a-4be8-9683-86f59e42bab8/26-6a70c94d0f567.webp' /></p><p> அமெரிக்காவுடன் முறையான ஒப்பந்தம் அல்லது முழுமையான சரணடைதல் எட்டப்படாமல் இந்த முற்றுகை நிலைப்பாடு தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p> அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு தற்போது எந்தவொரு அதிகாரமும், கட்டுப்பாடும் இல்லை என்று மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஈரானிய அதிகாரிகளின் நடத்தையை விமர்சித்த ட்ரம்ப்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e6ea4ab-3dbd-4f7a-b2ec-1547d6320d66/26-6a70c94c58bd1.webp' /></p><p>பேச்சுவார்த்தை தொடர்பான விஷயங்களில் ஈரானிய அதிகாரிகள் இரட்டை வேடம் போடுவதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> அதில் ஈரானிய அதிகாரிகள் தாங்களே முன்வந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்த போது அவர்களின் முயற்சி கெஞ்சுவது போல் இருந்தது.</p><p> ஆனால் மறுபுறம் நாங்கள் ஓமன் வழியாக மட்டுமே பேச்சுவார்த்தைக்கு தொடர்பு கொள்வதாக வெளிப்படையாக பொய் கூறுகின்றனர் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T19:02:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணுசக்தி மற்றும் கடல் வழி ஒப்பந்தம்: ஈரானுக்கு இது தான் கடைசி வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-says-last-chance-for-diplomatic-deal-to-iran-1785783720"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-says-last-chance-for-diplomatic-deal-to-iran-1785783720</id>
            <summary type="text">போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு இது தான் கடைசி வாய்ப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.மத்திய கிழக்கில் நீடிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு இது தான் கடைசி வாய்ப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்</h2><p>அமெரிக்கா - ஈரான் இடையிலான தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில்,&nbsp; இரு நாடுகளும் இடையில் முன்னதாக எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன.</p><p> இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமானது நீடித்து வருகிறது. திங்கட்கிழமை கூட&nbsp; ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27264863-ea90-4e6c-80dd-9286596078cd/26-6a70e5ab3f8f4.webp' /></p><p> அமெரிக்காவுடன் முறையான ஒப்பந்தம் அல்லது முழுமையான சரணடைதல் எட்டப்படாமல் இந்த முற்றுகை நிலைப்பாடு தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><h2> ஈரானுக்கு கடைசி வாய்ப்பு</h2><p>
இந்நிலையில் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “ அவர்கள் அனைவரும் இதற்கு கடைசி வாய்ப்பு ஒன்றை கொடுக்க விரும்பினர். இது சாதாரணமாக நடக்க கூடிய ஒன்றல்ல. இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு நல்ல ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும்.</p><p> அரசியல் ரீதியில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான நல்ல வாய்ப்பை ஈரான் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f498fd3-7ad2-4de2-81bc-ca8e2d47bf30/26-6a70e5aa8d8ec.webp' /></p><p> ஈரான் - அமெரிக்கா இடையிலான இராணுவ மோதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைதிக்கான இந்த புதிய பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p> தற்போது முன்வைக்கப்படும் அமைதி ஒப்பந்தத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற வர்த்தக போக்குவரத்தும், அணுசக்தி திட்டங்கள் மீதான தடையும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T19:02:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சை விட்டு வெளியேறுங்கள்: ரஷ்ய விமர்சகர் ஃபெடோரோவா-க்கு அரசு உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-commentator-ordered-to-leave-france-1785780543"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-commentator-ordered-to-leave-france-1785780543</id>
            <summary type="text">ரஷ்ய அரசியல் விமர்சகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. ரஷ்ய விமர்சகரை வெளியேற்றிய பிரான்ஸ்ரஷ்யா தொடர்பான ஆதரவு பிரச்சாரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய அரசியல் விமர்சகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2> ரஷ்ய விமர்சகரை வெளியேற்றிய பிரான்ஸ்</h2><p>ரஷ்யா தொடர்பான ஆதரவு பிரச்சாரங்களை பிரெஞ்சு ஊடகங்களில் பரப்பி வந்ததாக குற்றம்சாட்டப்பட்ட ரஷ்ய அரசியல் விமர்சகர் செனியா ஃபெடோரோவா(Xenia Fedorova) உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்சின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.</p><p> பிரான்ஸ் நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில், ரஷ்யாவின் பரப்புரையை திட்டமிட்டு ஃபெடோரோவா பரப்பி வந்ததாக பிரான்ஸ் நாட்டின் Libération நாளிதழ் தெரிவித்துள்ளது.</p><p> AFP செய்தி நிறுவனத்தின் தகவல் படி, பிரான்ஸ் அரசின் வெளியேற்ற உத்தரவை அடுத்து, ஃபெடோரோவா தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e10518e3-ddd4-4c26-9cda-5e4c7e7e110e/26-6a70d940aa198.webp' /></p><p></p><h2> ரஷ்யா டுடே-வின் ஊடக தலைவர்</h2><p>
2022ம் ஆண்டு உக்ரைனுக்கு எதிரான போர் தீவிரமடைவதற்கு முன்பு, அதாவது பல்வேறு கட்ட தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்பு ஃபெடோரோவா பிரான்ஸில் உள்ள ரஷ்யா டுடே(RT) ஊடகத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார்.</p><p> தடைக்கு பிறகு நாட்டை விட்டு வெளியேறாத ஃபெடோரோவா, அங்கே தங்கி பிரான்ஸ் கோடீஸ்வரர் வின்சென்ட் பொல்லோரே(Vincent Bolloré) ஊடக நிறுவனத்தில் ஒளிபரப்பு அலைவரிசைகளில் விமர்சகராக பணியாற்றி வந்துள்ளார்.</p><p> 'Le Journal du Dimanche' பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த ஃபெடோரோவா, உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்புவதாக அந்த பத்திரிகையின் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T18:09:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவை தண்டிக்கப் போவதாக எச்சரித்த ட்ரம்ப்., காட்டுத்தீ விவகாரம் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-canada-over-wildfires-1785772146"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-canada-over-wildfires-1785772146</id>
            <summary type="text">Canada Wildfires: காட்டுத்தீ விவகாரத்தில் கனடாவை தண்டிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

தண்டனை கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, அமெரிக்காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada Wildfires: காட்டுத்தீ விவகாரத்தில் கனடாவை தண்டிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>

தண்டனை </h2><p>கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, அமெரிக்காவின் வடக்கு பகுதிகள் புகை மூட்டத்தில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவிற்கு எதிராக “தண்டனை நடவடிக்கை” எடுக்கப் போவதாக மீண்டும் எச்சரித்துள்ளார்.
</p><p>
Air Force One விமானத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “நான் முடிவு செய்துவிட்டேன். நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள். கனடா கட்டாயம் விலை செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd9150e6-5b1b-4f50-8f67-6c42001f2bab/26-6a70b874535f8.webp' /></p><p>ட்ரம்ப், கடந்த மாதம் TruthSocial-ல், கனடா தனது காடுகள் மற்றும் புதர்களை சரியாக பராமரிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். “அமெரிக்கா தேவையில்லாமல் மாசான, ஆரோக்கியமற்ற காற்றால் தாக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார். இதற்காக, கனடாவிற்கு புதிய சுங்க வரிகள் (tariffs) விதிக்கலாம் என எச்சரித்தார்.
</p><p>
இதற்கிடையில், கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மனிந்தர் சிது, “நாட்டின் வணிக நிறுவனங்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெற உதவும் Strategic Exports Office ஒன்றை தொடங்குகிறோம்” என்று அறிவித்தார்.
</p><p>
இந்த அலுவலகம், அரசாங்க ஆதரவு, நிதி உதவி மற்றும் தூதரக ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கனடா நிறுவனங்களுக்கு உலக சந்தையில் போட்டியிட உதவும்.
</p><p></p><p>ட்ரம்ப் எவ்வாறு கனடாவை தண்டிக்கப் போகிறார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், அவரது தொடர்ச்சியான எச்சரிக்கைகள், அமெரிக்கா-கனடா உறவுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T16:34:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் ஏரிகளில் பாசி நச்சுகளை கண்டறியும் புதிய சென்சார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-sensor-detects-algae-toxins-in-lakes-1785773013"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-sensor-detects-algae-toxins-in-lakes-1785773013</id>
            <summary type="text">Switzerland: ஏரிகளில் பரவும் நீல-பச்சை பாசி நச்சுகளை கண்டறியக்கூடிய புதிய சென்சார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Lausanne EPFL தொழில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Switzerland: ஏரிகளில் பரவும் நீல-பச்சை பாசி நச்சுகளை கண்டறியக்கூடிய புதிய சென்சார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சுவிட்சர்லாந்தின் Lausanne EPFL தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய புதிய சென்சார், ஏரிகளில் பரவும் நீல-பச்சை பாசி (Blue-Green Algae) நச்சுகளை மிகத் துல்லியமாக கண்டறியக்கூடியதாக உள்ளது.
</p><p>
கோடை காலத்தில் நீரின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த பாசிகள் வேகமாக பரவி Microcystins எனப்படும் ஆபத்தான நச்சுகளை வெளியிடுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c98fac38-99ca-44b0-8acc-1cfea6794ee3/26-6a70bbd7b6dd0.webp' /></p><p>இது மனிதர்களுக்கு, செல்லப்பிராணிகளுக்கு, குடிநீர் விநியோகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

முன்பு, துரிதமான பரிசோதனைகள் விரைவான முடிவுகளை அளித்தாலும், 300-க்கும் மேற்பட்ட நச்சு வகைகளை வேறுபடுத்த முடியவில்லை. ஆய்வக பரிசோதனைகள் மிகத் துல்லியமானவை என்றாலும், பெரிய கருவிகள், நிபுணர்கள், மற்றும் பல நாட்கள் தேவைப்பட்டன.
</p><p>
இந்த சிக்கலை தீர்க்க, EPFL ஆராய்ச்சியாளர்கள் Nanopore Sensor ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது Aerolysin Protein மூலம் உருவாக்கப்பட்ட மிகச் சிறிய சேனல். மின்சாரம் செலுத்தப்படும் போது, ஒவ்வொரு நச்சு மூலக்கூறும் தனித்துவமான மின்சார தடம் (Electrical Fingerprint) உருவாக்குகிறது. இதன் மூலம், நச்சு வகைகளை வேறுபடுத்த முடிகிறது.
</p><p></p><p>ஆய்வகத்தில், இந்த முறையைப் பயன்படுத்தி 7 வகையான Microcystins-ஐ தெளிவாக அடையாளம் காண முடிந்தது. மேலும், இது WHO குடிநீர் வழிகாட்டுதலின் அளவுக்கு 40 மடங்கு குறைவான செறிவுகளிலும் செயல்படுகிறது.
</p><p>
தற்போது, நீர் மாதிரிகளை கையால் வடிகட்டி தயாரிக்க வேண்டும். ஆனால், ஆராய்ச்சியாளர்களின் நீண்டகால இலக்கு, கைக்கேற்ற சாதனம் ஒன்றை உருவாக்குவது. இதை ஏரிக்கரையில் அல்லது படகில் நேரடியாக பயன்படுத்தலாம்.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, சுவிட்சர்லாந்தின் ஏரிகள் மற்றும் குடிநீர் பாதுகாப்பு துறையில் மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T16:01:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[TV, Wi-Fi, OTT இணைந்த Jio Home Pack திட்டங்கள் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/reliance-jio-rs-400-home-pack-with-ott-1785769883"></link>
            <id>https://news.lankasri.com/article/reliance-jio-rs-400-home-pack-with-ott-1785769883</id>
            <summary type="text">ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய Jio Home Packs-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, குடும்பங்களுக்கான பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய Jio Home Packs-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, குடும்பங்களுக்கான புதிய Jio Home Packs-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

இந்த திட்டங்கள் TV, Wi-Fi மற்றும் OTT சேவைகள் அனைத்தையும் ஒரே சந்தாவில் வழங்குகின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55934fb9-6dcd-4273-a621-a117f5954602/26-6a70b4424a1f7.webp' /></p><p>புதிய திட்டங்கள் மாதத்திற்கு ரூ.400 முதல் தொடங்குகின்றன. மூன்று வகைகளில் கிடைக்கின்றன:
</p><p><b>
TV-only pack:</b> 400 ரூபாய்க்கு 1,000-க்கும் மேற்பட்ட Live TV சேனல்கள் மற்றும் 12 OTT ஆப்ஸ் கிடைக்கும்.
</p><p><b>
Wi-Fi-only packs:</b> 450 ரூபாய்க்கு - 30 Mbps வேகத்திலும், 600 ரூபாய்க்கு - 100 Mbps வேகத்திலும் இன்டர்நெட் கிடைக்கும்.
</p><p><b>
Wi-Fi + TV + OTT Packs
</b></p><p>555 ரூபாய்க்கு - 30 Mbps wifi + 1000 TV சேனல்கள் + OTT (12) கிடைக்கும்.</p><p>

707 ரூபாய்க்கு - 100 Mbps wifi + 1000 TV சேனல்கள் + OTT (12) கிடைக்கும்.</p><p></p><p>இந்த திட்டங்கள், வீட்டு தேவைகளுக்கு ஏற்ப தனித்தனியாக தேர்வு செய்யும் வசதியை வழங்குகின்றன. இணையம் மட்டும் வேண்டுமென்றாலும், TV சேனல்கள் மட்டும் போதும் என்றாலும், அல்லது அனைத்தும் வேண்டும் என்றாலும் விருப்பப்படி தேர்வு செய்யலாம்.
</p><p>
ஜியோ நிறுவனம், புதிய பயனர்களுக்கு இலவச doorstep installation மற்றும் maintenance support வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த திட்டங்கள், OTT பயன்பாடு அதிகரித்துள்ள காலத்தில், குடும்பங்களுக்கு சிறந்த விலை மற்றும் வசதியான இணைப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. </p><p>100 Mbps வரை வேகத்துடன், 1,000-க்கும் மேற்பட்ட TV சேனல்கள், 12 OTT ஆப்ஸ் ஆகியவை ஒரே சந்தாவில் கிடைப்பது, இந்தியாவில் டிஜிட்டல் எண்டர்டெயின்மென்ட் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T15:29:11+00:00</updated>
        </entry>
    </feed>
