<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-22T19:25:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா அணு ஒப்பந்தம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-saudi-nuclear-deal-for-civilian-power-1784741193"></link>
            <id>https://news.lankasri.com/article/us-saudi-nuclear-deal-for-civilian-power-1784741193</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே புதிய அணு ஒப்பந்தம் அறிவிக்கப்பட உள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவுதி அரேபியாவுக்கு முதன்முறையாக குடிமக்கள் பயன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே புதிய அணு ஒப்பந்தம் அறிவிக்கப்பட உள்ளது.</p><p>இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவுதி அரேபியாவுக்கு முதன்முறையாக குடிமக்கள் பயன்பாட்டிற்கான அணு ஆற்றல் திட்டங்களை உருவாக்க அனுமதி கிடைக்கிறது.
</p><p>
அமெரிக்க நிறுவனங்கள் சவுதி நிலப்பரப்பில் அணு மின் நிலையங்களை இயக்கும் வகையில் ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 30 ஆண்டுகள் நீடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126a0e6e-d0ed-456f-9e90-366815c7abba/26-6a60fd4ae6f05.webp' /></p><p>சவுதி அரேபியாவுக்கு தானாகவே யுரேனியத்தை செறிவூட்டும் (enrich) அதிகாரமும் வழங்கப்படலாம் என அறிக்கைகள் கூறுகின்றன.
</p><p>
இது, 2009-ல் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திலிருந்து மாறுபட்டதாகும். அப்போது அமீரகத்திற்கு தானாக எரிபொருள் தயாரிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
</p><p>
இந்நிலையில், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியாவுக்கு எதிர்காலத்தில் அணு ஆயுதம் உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்று கவலை தெரிவித்துள்ளன. </p><p>எனினும், அமெரிக்கா இந்த ஒப்பந்தம் முழுக்க குடிமக்கள் பயன்பாட்டிற்காக மட்டுமே என வலியுறுத்துகிறது.</p><p></p><p>2008-ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா-சவுதி இடையே அணு ஆற்றல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. பல தடைகள் இருந்தபோதிலும், தற்போது இரு நாடுகளும் வணிக ரீதியான ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. </p><p>அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆற்றல் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T17:24:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[துலாம் முதல் மீனம் வரை.., சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thulam-to-meenam-sani-vakra-palangal-1784727003"></link>
            <id>https://news.lankasri.com/article/thulam-to-meenam-sani-vakra-palangal-1784727003</id>
            <summary type="text">நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
</p><p>
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
</p><p>
இந்நிலையில், சனி பகவான் 2026ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி அன்று மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குவார்.</p><p>

இந்த சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகள் மீதும் ஏற்படும்.</p><p>

அந்தவகையில், சனி வக்ர பெயர்ச்சி துலாம் முதல் மீனம் வரை முதல் 6 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WE0RMOYe9Ko?start=4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T15:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்டன் கமிந்து மெண்டிஸ் 58 ஓட்டங்கள் விளாசல்: ஜாஃப்னா கிங்ஸ் த்ரில் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jaffna-kings-beat-colombo-kaps-by-5-runs-lpl-2026-1784730357"></link>
            <id>https://news.lankasri.com/article/jaffna-kings-beat-colombo-kaps-by-5-runs-lpl-2026-1784730357</id>
            <summary type="text">லங்கா பிரீமியர் லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு காப்ஸ் அணியை வீழ்த்தியது. 179 ஓட்டங்கள்&amp;nbsp;
கொழும்பு காப்ஸ் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா பிரீமியர் லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு காப்ஸ் அணியை வீழ்த்தியது. </p><h2>179 ஓட்டங்கள்&nbsp;</h2><p>
கொழும்பு காப்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி தம்புள்ளையில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b17a25dd-6318-4434-85ef-6f6d68091953/26-6a60d3f541aa9.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ஜாஃப்னா கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
சமிந்து விக்ரமசிங்கே 43 (22) ஓட்டங்களும், கமில் மிஷாரா 39 ஓட்டங்களும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 34 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

பின்னர் களமிறங்கிய கொழும்பு காப்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. </p><h2>கமிந்து மெண்டிஸ் அரைசதம் </h2><p>அணிதலைவர் கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) அதிரடியாக 42 பந்துகளில் 58 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாசினார்.
</p><p>
அடுத்து வந்த ஷாருஜன் 26 ஓட்டங்களும், மிலன் 15 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்க, வனுஜா சஹான் வெற்றிக்காக போராடினார். 

</p><p>20வது ஓவரில் வெற்றிக்கு 27 ஓட்டங்கள் தேவைப்பட, வனுஜா 3வது பந்தில் இருந்து ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். மேலும், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார்.</p><p> 

இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வனுஜா 15 பந்துகளில் 35 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
மிரட்டலாக பந்துவீசிய லிஸாத் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளும், தில்ஷான் மதுஷன்கா மற்றும் ட்ரவீன் மேத்யூ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f24f49e2-5f91-4b61-b157-8ac5d2014fa6/26-6a60d3f62bd61.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:29:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டிலும் பரவும் நீட் எதிர்ப்பு போராட்டம் - கல்லூரிக்கு சென்று கைது செய்யும் காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/police-arrested-anti-neet-protesters-in-tamilnadu-1784730391"></link>
            <id>https://news.lankasri.com/article/police-arrested-anti-neet-protesters-in-tamilnadu-1784730391</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து வருகிறது. 

டெல்லி நீட் எதிர்ப்பு போராட்டம் 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து வருகிறது. </p><h3>

டெல்லி நீட் எதிர்ப்பு போராட்டம்</h3><p> 

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை காவல்துறை நடத்தி கலைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb0057b3-3774-4c06-9817-72245abe0fb1/26-6a60d31b03c36.webp' /></p><p>

இதனையடுத்து, போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டக்குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
</p><p>
நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு, பீஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட துவங்கியுள்ளனர். </p><h3>

தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு போராட்டம்</h3><p> 

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவ அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்னர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மதுரை மாநகர் SFI தலைவர்கள் ஜெ.டீலன் ஜெஸ்டின் சி.டேவிட் ராஜதுரை தங்களது கல்லூரியான காமராஜர் பல்கலைக்கழகத்தில் வகுப்பில் இருக்கிறார்கள் அவர்கள் இருவரையும் தமிழ்நாட்டின் காவல் துறை முன்எச்சரிக்கை கைது என்ற பெயரில் கைது செய்ய Department வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது<br><br>😡 <a href="https://t.co/5Qd1ToXteI">pic.twitter.com/5Qd1ToXteI</a></p>&mdash; Mirdhula SFI (@Mirdhula7) <a href="https://x.com/Mirdhula7/status/2079852590712737978?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

போராட்டம் நடத்திய மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5447dff1-7c84-4e19-b5f2-a22cf1205f90/26-6a60d318ed211.webp' /></p><p>

போராட்டம் தீவிரமடைவதை தடுக்க கல்லூரி வளாகங்களுக்கு சென்று காவல்துறையினர் கைது செய்ய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திருவொற்றியூர் கல்லூரி வளாகத்தினுள் வகுப்பறையில் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்ட <a href="https://x.com/hashtag/SFI?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SFI</a> தோழர்களை தமிழக காவல்துறையினர் அராஜகமாக கைது<br>😡 <a href="https://t.co/A8D0m4a9dC">pic.twitter.com/A8D0m4a9dC</a></p>&mdash; Mirdhula SFI (@Mirdhula7) <a href="https://x.com/Mirdhula7/status/2079820353355022664?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
கைது செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "மக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதால் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை, அமைதியான போராட்டத்தை ஆதரிப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30751395-91ea-466e-ac8e-5b4dd3212793/26-6a60d3199eb8d.webp' /></p><p> தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டம் முறையாக அனுமதி பெற்று மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். 

சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை. திடீரென தூண்டுதலால் போராட்டம் நடைபெற்றதால் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.</p><h3>பெ.சண்முகம் கண்டனம்</h3><p> </p><p>

காவல்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac07b3c0-f7fa-4319-a93b-63cf678de21b/26-6a60d31a531c7.webp' /></p><p>

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய பாஜக அரசு அமலாக்கி வரும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நீட்தேர்வு வினாத்தாள் கசிவிற்கு காரணமான ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

 தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வுகள் கூடாது, நீட் தேர்வில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தலைநகர் டில்லியில் அறவழி போராட்டம் நடந்து வருகிறது.</p><p> 

சோனம் வாங்கக் கைது அதைத் தொடர்ந்து மாணவர்கள் ஊர்வலம் நடத்திட முயற்சித்தனர். அவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக காவல்துறை தடியடி தாக்குதல் தாக்கியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

 மாணவிகள் மீது மிகவும் கீழ்த்தரமான அணுகுமுறையை காவல்துறையினரும், துணை நிலை ராணுவ வீரர்களும் கையாண்டுள்ளனர். அனைத்தும் வீடியோக்களாக வெளிவந்துள்ளது.</p><p>
நெஞ்சம் பதைப்பதைக்கும் ஒன்றிய பாஜக அரசின் மிக மோசமான இந்த அடக்குமுறையை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல. </p><p>

நேற்று முன்தினம் முதல் சென்னையில் ஓரிடத்தில் அமர்ந்து போராட வழியில்லாமல் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு காவல்துறையால் அலைக்கழிக்கப்படுகின்றனர். 

மூன்று நாட்களாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை போராடும் ஜனநாயக உரிமைக்கு எதிரானது.</p><p>
இன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பு செய்து போராடியுள்ளனர். 

காவல்துறை சென்னையில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர் மற்றும் கோவை, மதுரை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட பல நகரங்களில், கல்வி வளாகத்திற்குள் புகுந்து கைது செய்துள்ளது இதுவரை நடந்திராத செயல். இது மிக மோசமான அத்துமீறல் ஆகும். </p><p>

காவல்துறை கல்லூரி வளாகங்களுக்குள் சென்று மாணவர்களை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. இதுபோன்ற ஜனநாயக விரோத அத்துமீறல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
</p><p>
போராடும் உரிமையை நசுக்குகின்ற தமிழ்நாடு காவல்துறையின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பாக இருக்கிற மாநில முதலமைச்சர் ஜனநாயக உரிமைகள் சார்ந்த போராட்ட நடவடிக்கைகளை ஒடுக்க நினைக்கும் காவல்துறையை கட்டுப்படுத்த வேண்டும். </p><p>

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், ஜனநாயக ரீதியில் அறப்போராட்டங்களை நடத்தும் போது, உரிய இடத்தை ஒதுக்கி தர வேண்டும். </p><p>

நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தவெக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களின் ஜனநாயக குரல்களை நெறிப்பது பாஜகவின் கல்விக் கொள்கைக்கு துணை போவதாகவே அமைந்துவிடும்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஜனநாயக உரிமைகளை நசுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோதமான அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்!<br><br>தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!! <a href="https://t.co/1VBhzhmyFc">pic.twitter.com/1VBhzhmyFc</a></p>&mdash; Shanmugam P (@Shanmugamcpim) <a href="https://x.com/Shanmugamcpim/status/2079886460799635675?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
 எனவே, தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோத அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:29:12+00:00</updated>
        </entry>
    </feed>
