<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-07T19:08:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடாவில் புதிய கட்டுப்பாட்டு மண்டலம் - ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-to-declare-new-gulf-restricted-zone-soon-1788801835"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-to-declare-new-gulf-restricted-zone-soon-1788801835</id>
            <summary type="text">Iran to declare new gulf restricted zone soon: வளைகுடா பகுதியில் முக்கிய முடிவை ஈரான் எடுத்துள்ளது.
புதிய கட்டுப்பாட்டு மண்டலம்ஈரான் விரைவில் வளைகுடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran to declare new gulf restricted zone soon: வளைகுடா பகுதியில் முக்கிய முடிவை ஈரான் எடுத்துள்ளது.
</p><h2>புதிய கட்டுப்பாட்டு மண்டலம்</h2><p>ஈரான் விரைவில் வளைகுடாவில் புதிய கட்டுப்பாட்டு மண்டலத்தை அறிவிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்த மண்டலம் அமெரிக்கா ஈரானுக்கு விதித்துள்ள தடைகள் தொடங்கும் இடத்திலிருந்து வளைகுடா பகுதிகளுக்கு விரிவடையும் என்று ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சன் ரெசாயி தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbe7adaa-ba68-48a3-863e-58bb9a54881c/26-6a9ef32ca1434.webp' /></p><p>இந்த புதிய மண்டலத்தில் நுழையும் எந்தக் கப்பலும் தடைப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும், ஹார்முஸ் நீரிணையில் புதிய சர்வதேச கடற்பாதை வரைபடங்கள் ஈரான் மற்றும் ஓமன் இணைந்து ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
“அமெரிக்கா தனது சபோட்டாஜ் மற்றும் தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும்” என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p>சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான Kharg Island பலமுறை தாக்குதலுக்கு உள்ளானாலும் இன்னும் செயல்பட்டு வருவதாக ஈரான் எண்ணெய் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, விலை உயர்வு தொடர்கிறது.
</p><p>
ஈரான் பாராளுமன்றத் தலைவர் காளிபாப், “இனி ஈரானின் நலன்களுக்கு எதிரான எந்தத் தாக்குதலும் வேகமான, கடுமையான பதிலை சந்திக்கும்” என்று எச்சரித்துள்ளார். அதேசமயம், ஈரான் பொருளாதார சவால்களை சமாளிக்க சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என பொருளாதார அமைச்சர் தெரிவித்தார்.
</p><p>
இந்த அறிவிப்பு வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் வணிகப் போக்குவரத்துக்கு புதிய சவால்களை உருவாக்கும் நிலையில், சர்வதேச சமூகத்தின் கவனம் ஈரானின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் நிலைகொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T17:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் துணை மின் நிலைய தாக்குதல்கள்..சந்தேக நபர் குறித்து விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-investigating-suspect-after-fire-damage-1788785801"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-investigating-suspect-after-fire-damage-1788785801</id>
            <summary type="text">Germany investigating after another substation fire: ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany investigating after another substation fire: ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p>

ரஷ்யாவின் ஹைபிரிட் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>ஜேர்மனியை குறிவைத்து</h2><p> 
ஐரோப்பிய நாடான ஜேர்மனியை குறிவைத்து சம்பவம் தொடர்ச்சியாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3751eb32-da13-46b8-8076-7dd7c3d13caf/26-6a9eb5879eea7.webp' />&nbsp;</p><p></p><p>
இந்த சூழலில், திங்களன்று பெர்லினில் உள்ள ஒரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதம் உண்டானது.</p><p> 

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், "கட்டுமானப் பணி நடைபெறும் இடம் மற்றும் துணை மின் நிலையத்தின் ஒரு பகுதி ஆகியவை தீயில் எரிந்து சேதமடைந்தன. இதனால் விநியோகத்தில் எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை" என்றனர். </p><p>

மேலும், நாசவேலை குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது நாசவேலையா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக என்றும் தெரிவித்தனர்.
</p><p>
இதற்கிடையில், நிலக்கரி மின் நிலையங்களில் இருந்து மின்சார விநியோகத்தைத் துண்டிக்கும் நோக்கில், கடந்த வாரம் ஜேர்மனி முழுவதும் உள்ள துணை மின் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்குக் காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும், தீவிரப் போக்குடைய சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38b2eedd-cc20-48db-871a-f63f41b4f39c/26-6a9eb586df47b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T16:37:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வீராங்கனை ஆட்டமிழந்ததும் சைகை - பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-captain-fatima-fined-for-send-off-gesture-1788789509"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-captain-fatima-fined-for-send-off-gesture-1788789509</id>
            <summary type="text">இந்திய வீராங்கனை ஷிபாலி வர்மா ஆட்டமிழந்ததும் அவரை நோக்கி சைகை செய்த பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் கேப்டனுக்கு அபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வீராங்கனை ஷிபாலி வர்மா ஆட்டமிழந்ததும் அவரை நோக்கி சைகை செய்த பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><h3>

பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம்</h3><p> 


2026 மகளிர் ஆசிய கிண்ண தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.&nbsp;</p><p>

பாகிஸ்தான் 55 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 8.4 ஓவர்களில் 57 ஓட்டங்கள் குவித்து இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e53154d2-04a9-4707-846c-e6241f6b3c57/26-6a9ec30747dc8.webp' /></p><p>

இந்தியா 1.3 ஓவர்களில் 13 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய வீராங்கனை ஷிபாலி வர்மா, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா பந்தை அடித்து அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p></p><p> 

ஷிபாலி வர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியதும் வெளியே போ என்ற ரீதியில், பாத்திமா சனா சைகை செய்தார். </p><p>

இது ஐசிசி நன்னடத்தை விதியை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட பாத்திமா சனாவிற்கு போட்டிக்கான கட்டணத்தில் 10 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T14:05:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் சமரசம் ஆக வாய்ப்புள்ளதா? நிபுணர் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-uk-return-hope-reconcile-with-william-1788786920"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-uk-return-hope-reconcile-with-william-1788786920</id>
            <summary type="text">Prince Harry&#039;s return to Home sparked hope that the brothers would reconcile: இளவரசர் ஹரி பிரித்தானியா திரும்பிய விடயம், அவரும் வில்லியமும் சமரசம் ஆவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prince Harry's return to Home sparked hope that the brothers would reconcile: இளவரசர் ஹரி பிரித்தானியா திரும்பிய விடயம், அவரும் வில்லியமும் சமரசம் ஆவார்கள் என்ற நம்பிக்கையை பலருக்கும் ஊட்டியது.
</p><p>

அமெரிக்காவில் வாழ்ந்துவந்த இளவரசர் ஹரி, ஆறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பிரித்தானியா திரும்பிய விடயம், அவரும் வில்லியமும் சமரசம் ஆவார்கள் என்ற நம்பிக்கையை பலருக்கும் ஊட்டியது.</p><h3>

வில்லியமும் ஹரியும் சமரசம் ஆக வாய்ப்புள்ளதா?</h3><p>

இளவரசர் ஹரி பிரித்தானியா வந்து இத்தனை வாரங்கள் ஆகியும், தன் அண்ணனான இளவரசர் வில்லியமை சென்று சந்திக்கவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cdf83eb-2ffe-4f9a-bbb2-77ae69f90c89/26-6a9eb8ea41b38.webp' /></p><p>
ஹரியின் தாய் டயானா முதல், மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத் வரை, மன்னராகும் இளவரசர் வில்லியமுக்கு உறுதுணையாக இளவரசர் ஹரி நிற்பார் என்றே நம்பியிருந்தார்கள்.
</p><p>
ஆனால், ஹரியோ, தான் ஸ்பேர் என தன்னைத்தான் அழைத்துக்கொண்டு தன் சுயசரிதைப் புத்தகத்தில், தன் கோபத்தையும் வெறுப்பையும் தன் அண்ணன் மற்றும் அண்ணி மீது உமிழ்ந்துவிட்டார்.&nbsp;</p><p></p><p>
சட்டப்படி, பிரித்தானியாவில் மன்னருடைய மூத்த மகன்தான் அடுத்து மன்னராகவேண்டும். இது அனைவரும் அறிந்ததே.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/150d9a46-3b33-42e4-812f-a941d424868e/26-6a9eb8eae893c.webp' /></p><p>
ஆனால், அதை ஏற்றுக்கொள்ள இயலாமல், வாய்க்கு வந்தபடி பேசி பிரிவினையை ஏற்படுத்திவிட்டார் ஹரி.
</p><p>
ஹரி, எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுப்பவர், மூடுக்கு ஏற்றபடி நடந்துகொள்பவர் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
</p><p>
ஆனால், அவர் தன் அண்ணனுக்கு துரோகம் செய்வார் என யாரும் கொஞ்சமும் நினைக்கவில்லை. ஆனால், ஹரி துரோகம் செய்துவிட்டார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான ஆண்ட்ரூ மார்ட்டன் என்பவர்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T13:19:09+00:00</updated>
        </entry>
    </feed>
