<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-26T05:23:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய கடற்கரையில் சோகம்: நீரில் மூழ்கி 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/40-years-old-died-in-devon-coast-1787719089"></link>
            <id>https://news.lankasri.com/article/40-years-old-died-in-devon-coast-1787719089</id>
            <summary type="text">40 years old died in Devon coast: பிரித்தானிய கடற்கரையில் நிகழ்ந்த நீச்சல் விபத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>40 years old died in Devon coast: பிரித்தானிய கடற்கரையில் நிகழ்ந்த நீச்சல் விபத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2> பிரித்தானிய கடற்கரையில் சோகம்</h2><p>
பிரித்தானியாவின் டெவோன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சோகமான சம்பவத்தில் சர்ரேயைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார்.</p><p> திங்கட்கிழமை பிளாக்நூல் சான்ட்ஸ் கடற்கரையில் ஒருவர் ஆபத்தில் சிக்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.</p><p> &nbsp;விரைவாக செயல்பட்ட கடற்கரை காவல்படையினர் நீரில் மூழ்கிய நபரை கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவருக்கு தேவையான அனைத்து முதலுதவி சிகிச்சைகளையும் அளித்தனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70ec51f3-bd3e-468f-92b0-c6700f35ea29/26-6a8e6db35ff3f.webp' /></p><p> இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் பின்னர் அறிவித்தனர்.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கிய டெவோன் மற்றும் கார்ன்வால் காவல்துறை அதிகாரிகள்,&nbsp; இது ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> வெப்பமான காலத்தில் திறந்தவெளி நீர்நிலைகளில் ஆபத்து அதிகரிப்பதால், கடற்கரை, ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற இடங்களில் நீந்தும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T04:38:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க இராணுவ விமானம்: வாய் திறக்காத மாஸ்கோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-air-force-flight-landed-in-moscow-airport-1787714816"></link>
            <id>https://news.lankasri.com/article/us-air-force-flight-landed-in-moscow-airport-1787714816</id>
            <summary type="text">உக்ரைன் உடனான போர் பதற்றம் நீடித்து வரும் இந்த நேரத்தில் அமெரிக்க விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் உடனான போர் பதற்றம் நீடித்து வரும் இந்த நேரத்தில் அமெரிக்க விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><h2> உக்ரைன் - ரஷ்யா மோதல்</h2><p>
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p> இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.</p><p> அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பல கட்ட பொருளாதார தடைகள் விதித்து இருப்பதுடன், ரஷ்ய எண்ணெயை மற்ற நாடுகளும் வாங்க கூடாது என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ab2bdea-c950-45b8-b4a1-1a5363ea1f02/26-6a8e5d017fc02.webp' /></p><p> இருப்பினும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்த அச்சுறுத்தல்களுக்கு கவலை படாமல் தீவிரமாக சண்டை போட்டு வருகிறார்.</p><h2> ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்</h2><p>இந்நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய டிரான்ஸ்போர்ட் விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><p> இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது தொடர்பாக ரஷ்யா எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.</p><p> தரவுகளின் படி, ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம் C-17A Globemaster III என தெரியவந்துள்ளது.</p><p> மேலும் இந்த விமானம் நேரடியாக அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவிற்கு வரவில்லை.</p><p> அமெரிக்காவில் உள்ள கேம்ப் ஸ்பிரிங்ஸ் என்ற ஆண்ட்ருவ்ஸ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட&nbsp; C-17A Globemaster III விமானம், முதலில் லிட்வியாவில் உள்ள ரிகா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.</p><p> &nbsp;ஆண்ட்ருவ்ஸ் விமானப்படை தளம் அமெரிக்க ஜனாதிபதியின் ஏர் விமானப்படை தளத்தில் முக்கியமானதாகும்.</p><p> நேற்று முன்தினம் லிட்வியாவில் இருந்து புறப்பட்ட C-17A Globemaster III விமானம் ரஷ்யாவில் உள்ள வனுகோவா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.</p><p> இந்த C-17A Globemaster III விமானம் அமெரிக்கா விமானப்படையின் ராணுவ தளவாடங்கள், சரக்குகளுடன் நீண்ட தூரம் பறக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-26T04:31:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியா எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானம்: எச்சரித்த ரேடார் அமைப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-aircraft-enters-into-south-korea-zone-1787717275"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-aircraft-enters-into-south-korea-zone-1787717275</id>
            <summary type="text">Russian aircraft enters into South Korea zone: தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது பதற்றத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian aircraft enters into South Korea zone: தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தென் கொரிய வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய விமானம்</h2><p>

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் சில நிமிட பொழுதில் அத்துமீறி நுழைந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.</p><p> &nbsp;ரஷ்ய போர் விமானங்கள் கிழக்கு கடற்கரைக்கு மேலாக உள்ள வான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.</p><p> மேலும் இந்த விமானங்கள் டோக்டோ மற்றும் உல்லுங் தீவுகள் அருகே வந்து விட்டு அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0644acfb-fdc3-447a-bf18-98f7ba832df9/26-6a8e669cdccec.webp' /></p><p> ஆனால் இந்த சம்பவத்தில் ரஷ்ய விமானங்கள் தென் கொரியாவின் வான்வெளிக்குள் நுழையவில்லை என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2> தென் கொரியாவின் உடனடி நடவடிக்கை</h2><p>
ரஷ்ய விமானங்கள் நுழைந்ததை அடுத்து தென் கொரியா தன்னுடைய போர் விமானங்களை உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர்.</p><p> ரஷ்ய விமானங்கள் நெருங்கி வருவதை தென் கொரிய ரேடார் அமைப்புகள் முன்கூட்டியே அறிந்து போர் விமானங்களை அனுப்பியதாகவும், எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் விமானப்படை இருப்பதால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விமானங்களை உடனடியாக அந்த பகுதிக்கு அனுப்பியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T04:08:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் காட்விக் விமான நிலையத்தில்... உடல் உறைந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gatwick-airport-stowaway-found-1787703459"></link>
            <id>https://news.lankasri.com/article/gatwick-airport-stowaway-found-1787703459</id>
            <summary type="text">Stowaway was found frozen to death: விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் உடல் உறைந்து இறந்து கிடந்தார். 

காட்விக் விமான நிலையத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Stowaway was found frozen to death: விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் உடல் உறைந்து இறந்து கிடந்தார். </p><p>

காட்விக் விமான நிலையத்தில், விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் அடையாளம் தெரியாத ஒருவர் பனியில் உறைந்து இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/889ff2f0-ff65-4244-ac0a-eee7c12d2ee1/26-6a8e30a5ac427.webp' /></p><p>
மொராக்கோவிலிருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தின் 'லேண்டிங் கியர்' பகுதியில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மறைந்திருந்த நிலையில் ஜூன் மாதத்தில் கண்டெடுக்கப்பட்டார். </p><p>பிரேதப் பரிசோதனையில், மாரடைப்பு, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் உடல் வெப்பநிலை குறைவு ஆகியவையே மரணத்திற்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது. </p><p>வெஸ்ட் சசெக்ஸ், பிரைட்டன் மற்றும் ஹோவ் பகுதிக்கான மரண விசாரணை அதிகாரி ஜோசப் டர்னர், சக்கர அறையின் உட்புறச் சூழல் மிகக் கடுமையான குளிருடன் இருந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><p>இந்த மரணம் இயற்கைக்கு மாறானது என்று நம்புவதற்கான காரணம் இருந்ததன் அடிப்படையில் விசாரணையை முறைப்படி தொடங்கி வைத்த அவர், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்திருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார். </p><p>சக்கரப் பகுதியிலிருந்து வெளியே தொங்கிக்கொண்டிருந்த பேக்கிங் பட்டையை (packing strap) கவனித்த தரைப்பகுதிப் பொறியாளர் ஒருவர் அந்த நபரைக் கண்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3871300e-016c-4b42-a173-397aa50736ef/26-6a8e30a65d148.webp' /></p><p> </p><p>குறிப்பிட்ட அந்த ஏர் அரேபியா விமானம் டான்ஜியர்ஸிலிருந்து வந்திருந்தது. சம்பவம் நடந்தபோது, ​​லண்டன் கேட்விக் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், </p><p>செவ்வாய்க்கிழமை, ஜூன் 16, 2026 அன்று காலை 11.30 மணிக்கு மேல், ஏர் அரேபியா விமானம் வந்திறங்கியபோது ஒரு சம்பவம் கண்டறியப்பட்டதையடுத்து, லண்டன் கேட்விக் விமான நிலையத்தின் அவசரக்காலப் பிரிவினர் அந்த விமானத்திற்குச் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். </p><p>மேலும், சசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியபடி, ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்னர், எங்கள் குழுக்கள் சசெக்ஸ் காவல்துறைக்கும் மரண விசாரணை அதிகாரிக்கும் உதவியதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விசாரணை 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T02:25:34+00:00</updated>
        </entry>
    </feed>
