<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-20T23:29:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்க கனேடியா மாகாணங்களைக் கேட்டுக்கொண்ட பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-to-end-us-alcohol-ban-1787266116"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-to-end-us-alcohol-ban-1787266116</id>
            <summary type="text">Canada&#039;s provinces to end US alcohol ban: அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்குமாறு கனடாவின் மாகாணங்களை பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada's provinces to end US alcohol ban: அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்குமாறு கனடாவின் மாகாணங்களை பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் நெருங்கி வரும் நிலையில், மதுபானக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அமெரிக்க மதுபானங்களை மீண்டும் இடம்பெறச் செய்யுமாறு கனடிய மாகாணங்களை பிரதமர் மார்க் கார்னி கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2>முடிவுக்குக் கொண்டுவர</h2><p>
</p><p>வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்கள் கடந்த நான்கு நாட்களில் நான்காவது முறையாக வியாழக்கிழமை வாஷிங்டனில் சந்தித்தனர். இச்சந்திப்பிற்குப் பிறகு கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் செய்தியாளர்களிடம், ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5d3e8af-05f5-4feb-a7dd-0b1a98584556/26-6a87844688acb.webp' /></p><p> முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை; இருப்பினும், அமெரிக்க விஸ்கி மற்றும் பிற மதுபானங்கள் மீதான புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவருமாறு கார்னி தங்களைக் கேட்டுக்கொண்டதாக கனடாவின் மாகாண முதல்வர்கள் தெரிவித்தனர். </p><p>அமெரிக்க மதுபானங்கள் மட்டுமின்றி, கனடிய எஃகு, அலுமினியம் மற்றும் கார்கள் ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>இதனிடையே, கனடியப் பொருட்கள் பலவற்றின் மீது புதன்கிழமை இரவு முதல் புதிய சுங்க வரிகளை விதிக்கப்போவதாக மிரட்டியிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்த ஒப்பந்தத்தின் விவரங்களை இறுதி செய்வதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் அவற்றைச் செயல்படுத்தும் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.</p><p></p><p> </p><p>அமெரிக்க விவசாயிகளுக்கான இறக்குமதி வரிகளை நீக்க கனடா ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் புதன்கிழமையன்று தெரிவித்தார்; இருப்பினும், எந்தெந்த விவசாயத் துறைகள் இதனால் பயனடையும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. </p><p>கனடாவின் எஃகு, அலுமினியம், வாகனங்கள் மற்றும் மரக்கட்டைகள் மீதான வரிகளை அமெரிக்கா கைவிடவோ அல்லது குறைக்கவோ செய்யும் ஒரு ஒப்பந்தத்தை கனடா நாடி வருகிறது. </p><p>வெள்ளிக்கிழமை மாலைக்குள் நிறைவடையக்கூடிய ஒப்பந்தத்தின்படி, கனடிய எஃகு மற்றும் அலுமினியம் மீதான அமெரிக்க வரிகள் 50 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>விற்பனைக்குத் தடை</h2><p> அமெரிக்க மற்றும் கனடிய ஊடகங்களின் செய்திகளின்படி, கனடாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மீதான தனது முதன்மை சுங்க வரியை அமெரிக்கா 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கக்கூடும். </p><p>பிரதமர் புதன்கிழமை பிற்பகல் தனது அமைச்சரவையையும் கனடிய மாகாணங்களின் தலைவர்களையும் சந்தித்து அவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ca8912b-a486-47d4-a265-920e2d2ff47c/26-6a8784473ab22.webp' /></p><p> கார்னியின் சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்க மதுபானத்தை கனடிய சந்தைகளுக்கு மீண்டும் கொண்டுவருமாறு பிரதமர் மாகாணங்களைக் கேட்டுக்கொண்டதாக நோவா ஸ்கோஷியா மாகாண முதல்வர் டிம் ஹூஸ்டன் தெரிவித்தார். </p><p>ட்ரம்பின் வரிப்போருக்குப் பதிலடியாக, கடந்த ஆண்டு கனடாவின் பெரும்பாலான மாகாணங்கள் அமெரிக்க மதுபான விற்பனைக்குத் தடை விதித்தன. </p><p>கடந்த ஆண்டு தொடக்கத்தில் புறக்கணிப்பு அமுலுக்கு வந்ததிலிருந்து, கனடாவுக்கான ஏற்றுமதி 70 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளதாக அமெரிக்க ஒயின் மற்றும் மதுபானத் தொழில் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T22:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானைத் தனிமைப்படுத்த ட்ரம்பின் திட்டம்... சீனா மற்றும் ரஷ்யாவால் முடக்கக்கூடும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-russia-could-hobble-trump-1787261112"></link>
            <id>https://news.lankasri.com/article/china-russia-could-hobble-trump-1787261112</id>
            <summary type="text">China and Russia could hobble Trump’s plans: ஈரானைத் தனிமைப்படுத்துவதற்கான ட்ரம்ப்பின் திட்டங்களுக்குச் சீனா மற்றும் ரஷ்யா முட்டுக்கட்டை போடக்கூடும்....</summary>
            <content type="html"><![CDATA[<p>China and Russia could hobble Trump’s plans: ஈரானைத் தனிமைப்படுத்துவதற்கான ட்ரம்ப்பின் திட்டங்களுக்குச் சீனா மற்றும் ரஷ்யா முட்டுக்கட்டை போடக்கூடும்.
</p><p>ஈரானுக்குப் பொருளாதார ரீதியாக உதவியை வழங்கும் எந்தவொரு நாட்டின் மீதும் நிதி ரீதியான தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.</p><h2>சீனா மற்றும் ரஷ்யா</h2><p>
</p><p>இஸ்ரேல் காரணமாக ஈரானுடனான அமெரிக்காவின் அதிக செலவுமிக்க போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>தனது பதவிக்காலத்தின் முற்பகுதியில் பல பாதிப்புகளை ஏற்படுத்திய வர்த்தகப் போர்களுக்குப் பிறகு, தனது வெளிவிவகாரக் கொள்கை இலக்குகளை அடைய அமெரிக்காவின் பொருளாதார வலிமையைப் பயன்படுத்திக்கொள்ள ட்ரம்ப் மேற்கொள்ளும் மிகச் சமீபத்திய முயற்சி இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0604b13a-af95-4c6d-996a-d05f34a4cb11/26-6a8770baaeed0.webp' /></p><p> </p><p>ஆனால், ஈரானின் முதன்மையான வர்த்தகப் பங்காளிகளான சீனா மற்றும் ரஷ்யா மீது ட்ரம்பிற்கு உள்ள செல்வாக்கு அல்லது அழுத்தம் செலுத்தும் திறன் குறைவானதே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். </p><p>ரஷ்யா ஏற்கனவே அமெரிக்காவின் பரவலான பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டுள்ளதுடன், அமெரிக்கத் தலைமையிலான பொருளாதாரக் கட்டமைப்பிற்கு வெளியிலேயே பெரும்பாலும் செயல்பட்டு வருகிறது. </p><p>அதேவேளை, தனது சொந்தப் பொருளாதார நலன்களுக்கு உகந்ததாக இருக்கும்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் புறக்கணிக்கத் தயாராக இருப்பதை சீனா பலமுறை வெளிப்படுத்தியுள்ளது. </p><p>ட்ரம்ப் எடுத்துள்ள இந்த முடிவும் தோல்வியில் முடியும் என்றே ஆய்வாளர் ஒருவரின் கருத்தாக உள்ளது.
பாரம்பரியமாகப் பலதரப்பு ஒருங்கிணைப்பின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருவகை ஒருங்கிணைந்த தடைகளை, ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக அமுல்படுத்த முயற்சிக்கிறார்.</p><p></p><p> </p><p>அதாவது, சீனா, ரஷ்யா, ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகியவற்றை இதில் இணைத்துக்கொள்வது அவசியமாகும். ஆனால் அதற்கான நகர்வுகளை அமெரிக்கா முன்னெடுக்காமல், முடிவுகளை அறிவித்துள்ளது.</p><p>ஈரான் மீதான இந்த நகர்வுகளை ட்ரம்ப் எடுத்த அதே நாளில், முக்கியமான இறக்குமதிகள் மற்றும் வணிகச் சந்தைகளுக்கான அணுகல் ஆகியவற்றிற்கு நீண்டகாலமாக ஈரானைச் சார்ந்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், </p><p>தனது நாட்டின் மீது ஈரான் ராணுவம் இரண்டு ஏவுகணைகளை ஏவியதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ஈரான் மீது காலவரையறையற்ற வர்த்தகத் தடையை அறிவித்தது. </p><p>இதன் பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தம் இருக்கலாம் என்றே பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் குறித்த பேராசிரியரான நாடர் ஹபிபி குறிப்பிடுகிறார். </p><p>ஆனால், சீனா-ஈரான் இடையிலான வர்த்தகத்திற்கு இடையூறு விளைவிக்கும் அமெரிக்காவின் எந்தவொரு திட்டமும் குறிப்பிடத்தக்க தடைகளைச் சந்திக்கக்கூடும் என்றே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. </p><p>பகுப்பாய்வு நிறுவனமான Kpler-இன் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் ஈரான் ஏற்றுமதி செய்த எண்ணெயில் 80 சதவீதத்தை சீனா வாங்கியுள்ளது.</p><p> இதனால், சீனாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்கு வைப்பது பெரும்பாலும் சவாலான ஒன்றாகும்; ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க நிதி அமைப்பைச் சார்ந்திருக்காமல் சுதந்திரமாகச் செயல்படுபவை.</p><h2>பிரச்சினையைத் தீர்க்க உதவாது</h2><p>
</p><p>மேலும், அமெரிக்க நிதியமைச்சகம் அச்சுறுத்தியுள்ளபடி, ஈரானிய நிதிகளைக் கையாளும் முக்கிய சீன வங்கிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது பாதிப்பை ஏற்படுத்தினாலும், அது ஒரு முக்கியமான கட்டத்தில் சீனாவைத் திருப்பித் தாக்கத் தூண்டவும் கூடும். </p><p>இதனிடையே, ட்ரம்பின் பொருளாதார அழுத்த நடவடிக்கைக்குப் பதிலளித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், கூடுதல் தடைகள் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்று கூறியுள்ளார்.
</p><p>அடுத்த மாதம் அமெரிக்காவுக்குச் செல்லவிருக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் பயணத்திற்கு முன்னதாக, சீனாவுடனான பதற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவே அமெரிக்கா முயன்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/327413af-387d-4584-b017-e1996527faf9/26-6a8770bb744fc.webp' /></p><p> </p><p>ஈரானைப் பொறுத்தவரை சீனாவை விட ரஷ்யா ஒரு சிறிய வர்த்தகப் பங்காளியாக இருந்தாலும், மேற்கத்திய நாடுகளின் தலையீடு அல்லது கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் வகையிலான முக்கிய வர்த்தக மற்றும் இராணுவ உறவுகளைக் கட்டியெழுப்புவதில் மாஸ்கோவும் தெஹ்ரானும் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளன. </p><p>கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ள இந்த இரு நாடுகளும் ஜனவரி 2025-இல் 20 ஆண்டுகாலக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன; ரஷ்ய எரிசக்தித் துறை அமைச்சர் செர்ஜி சிவிலேவின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் 2025-ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அவற்றின் வர்த்தக அளவை 4.8 பில்லியன் டொலராக உயர்த்த உதவியது. </p><p>தடை விதிக்கப்பட்ட எண்ணெய் வர்த்தகத்தைத் தாண்டி, ரஷ்யாவும் ஈரானும் காஸ்பியன் கடல் வழியாக ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களையும் பரிமாறிக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>இந்த நிலையில், ஈரானின் வெளிவிவகார அமைச்சர் புதன்கிழமையன்று, ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் முன்னெடுத்துள்ள பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாகச் சாடினார்; இது அமெரிக்காவின் தோல்வியடைந்த கொள்கைகளின் தொடர்ச்சி என்றும், இது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மேலும் பல தோல்விகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T21:22:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தல்... நித்யா ராமனை சோம்பேறி என்று அழைத்த கரேன் பாஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karen-bass-calls-rival-raman-lazy-1787254247"></link>
            <id>https://news.lankasri.com/article/karen-bass-calls-rival-raman-lazy-1787254247</id>
            <summary type="text">Karen Bass calls rival Nithya Raman lazy: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ், தனது போட்டியாளரான நித்யா ராமனை அவர் முகத்திற்கு நேராகவே சோம்பேறி என்று அழைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Karen Bass calls rival Nithya Raman lazy: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ், தனது போட்டியாளரான நித்யா ராமனை அவர் முகத்திற்கு நேராகவே சோம்பேறி என்று அழைத்தார்.
</p><p>லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் பதவிக்கான விவாதம், பதவியில் இருக்கும் கரேன் பாஸ் தனது போட்டியாளரான நித்யா ராமனை சோம்பேறி என்று கூறியதைத் தொடர்ந்து அனல் பறக்கும் வகையில் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffdda84b-d271-4b21-8294-6d3eb53be6be/26-6a8755eb0516b.webp' /></p><p>
</p><p>சபாநாயகராக இருந்தபோதுதான் முதல் வரிச் சலுகைக்கான நடவடிக்கையை மேற்கொண்டேன். அப்போது உங்கள் அடையாளமே இல்லை என்று தனக்கு அருகில் அமர்ந்திருந்த ராமனிடம் பாஸ் கூறினார். </p><p>மேலும், பொழுதுபோக்குத் துறை சார்ந்த விடயங்களில் வாக்களிக்க வேண்டிய நேரம் வந்தபோதுகூட, நீங்கள் வாக்களிக்காமல் தவிர்த்துவிட்டீர்கள். சொல்லப்போனால், பணிக்கு வராத காரணத்தினால் நீங்கள் பல ஆயிரம் வாக்குகளைத் தவறவிட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றார். </p><p>முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் நாள் நெருங்கிவரும் வேளையில், நகர மேயரான கரேன் பாஸ் புதன்கிழமை இரவு காட்டமான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.</p><p></p><p> </p><p>கரேன் பாஸ்ஸின் கீழ் பணியாற்றும் நகர மன்ற உறுப்பினரான ராமன், தனது பணி நெறிமுறைகள் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்க ஒரு வாய்ப்பைக் கோரியதோடு, தான் கூட்டங்களில் கலந்துகொள்ளத் தவறியதையும் ஒப்புக்கொண்டார். </p><p>அத்துடன், முந்தைய மேயராலும், இந்த மேயராலும் நான் நியமிக்கப்பட்ட வெளிவிவகார வாரியங்கள் சில சமயங்களில் நமது மன்ற நாட்களுடன் முரண்படுவதால், வழக்கமான மன்றக் கூட்டங்களைத் தவறவிட நேரிடுகிறது என்பது (பாஸுக்கும்) என்னைப் போலவே தெரியும் என்று மன்ற உறுப்பினர் ராமன் கூறினார்.</p><p>ராமனும் கடுமையாகத் தாக்கிப் பேசியதோடு, வீடற்றோர் பிரச்சினையில் மேயரின் செயல்பாடுகளைக் கண்டித்து, அவரது 'இன்சைட் சேஃப்' என்ற வீட்டுவசதித் திட்டம் ஒரு தோல்வி என்றும் குறிப்பிட்டார்.</p><p>இந்த மேயர் 'இன்சைடு சேஃப்' திட்டத்திற்காக 400 மில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளார், ஆனால் தணிக்கைகளை மேற்கொள்ள மறுத்துவிட்டார் என்றும் ராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c541959-8d80-4602-bc50-38a23f8f292d/26-6a8755e9a2858.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, தனது முயற்சிகளின் விளைவாக, தனது நான்காவது கவுன்சில் மாவட்டத்தில் வீடின்றித் தெருக்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கையில் 49 சதவீதம் குறைவு ஏற்பட்டதையும் ராமன் சுட்டிக்காட்டினார்.</p><p>வீடற்றோருக்கான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து நகர நிதிகளையும் தணிக்கை செய்து, அவற்றின் செயல்திறனைக் கண்காணிப்பதாக ராமன் உறுதியளித்தார். </p><p>பாஸ், 'இன்சைட் சேஃப்' திட்டத்தை ஆதரித்துப் பேசியதோடு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் வீடற்றோருக்கான முழு அமைப்பையும் மாற்றியமைக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01ffe573-6cfd-4907-a02a-1168c92a94d9/26-6a8755ea538e4.webp' /></p><p> </p><p>லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நடத்திய ஓர் ஆய்வில், 'இன்சைட் சேஃப்' திட்டம் தொடங்கப்பட்ட கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில், அதில் பங்கேற்ற வீடற்றவர்களில் ஏறத்தாழ 41 சதவீதத்தினர் மீண்டும் வீடற்ற நிலைக்குத் திரும்பியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. </p><p>முதல்நிலைத் தேர்தலில் ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமான ஸ்பென்சர் பிராட்டை வீழ்த்தியதன் மூலம், பாஸும் ராமனும் தேர்தலில் தங்களது இடங்களை உறுதி செய்தனர். </p><p>முதன்மைத் தேர்தலில் மேயர் கரேன் பாஸ் 34 சதவீத வாக்குகளும், ராமன் 29 சதவீத வாக்குகளும் பெற்று முன்னிலை வகித்தனர். மேயர் தேர்தலில் பாஸ் பெரும் முன்னிலையில் இருப்பதாகக் காட்டிய கருத்துக்கணிப்பு போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே இந்தக் கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளது. </p><p>லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தல் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறும். இதில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்து தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் பதவிக்கான போட்டியில் களமிறங்கியுள்ள நித்யா ராமனுக்கு வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T19:28:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயர்லாந்தில் கோதிக் கோட்டை ஒன்றை வாங்கிய மார்க் ஜுக்கர்பெர்க்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zuckerberg-buys-gothic-castle-1787248435"></link>
            <id>https://news.lankasri.com/article/zuckerberg-buys-gothic-castle-1787248435</id>
            <summary type="text">Mark Zuckerberg buys Gothic castle: மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் அயர்லாந்தில் ஒரு கோட்டையை வாங்கியுள்ளனர். 
தொழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mark Zuckerberg buys Gothic castle: மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் அயர்லாந்தில் ஒரு கோட்டையை வாங்கியுள்ளனர். </p><p>
தொழில்நுட்பத் துறை கோடீஸ்வரரான மார்க் ஜுக்கர்பெர்க்கும் அவரது மனைவி பிரிசில்லா சானும் அயர்லாந்தில் ஒரு கோட்டையை வாங்கியுள்ளனர்; அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் குறித்து அவர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>கோதிக் பாணி மாளிகை</h2><p>
</p><p>மெட்டாவின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க், அண்மைய வாரங்களில் ஆலன்-பக்லி குடும்பத்திடமிருந்து கோதிக் பாணியிலான மூன்று மாடி 'ஸ்ட்ரான்க்கல்லி' (Strancally) கோட்டையை வாங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5bbb69d-e849-4626-8ad6-e14bf1e7ce07/26-6a873f362869a.webp' /></p><p> </p><p>மார்க் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைத் தொடர்ந்து பராமரிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்; அத்துடன் அயர்லாந்தில் நேரத்தைச் செலவிடவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். </p><p>1827-ல் ஒரு ஆங்கில அரசியல்வாதிக்காகக் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, டப்ளினிலிருந்து சுமார் 93 மைல் தென்மேற்கே, வாட்டர்ஃபோர்டு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு மூன்று மாடி, செதுக்கப்பட்ட கற்களால் ஆன கோதிக் மறுமலர்ச்சி பாணி மாளிகையாகும்.</p><p></p><p> </p><p>கோட்டையை வாங்க மார்க் சக்கர்பெர்க் செலுத்திய தொகை தொடர்பான தகவல் வெளியாகவில்லை. இந்தக் கோட்டையானது, கடந்த 20 வருடங்களில் அதன் முந்தைய உரிமையாளர்களால் விரிவாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>அபராதம் விதிக்கப்பட வேண்டும்</h2><p> </p><p>மெட்டா நிறுவனம் அயர்லாந்தில் சுமார் 1,500 பேரைப் பணியமர்த்தியுள்ளது, அதன் சர்வதேசத் தலைமையகம் டப்ளினில் அமைந்துள்ளது.
ஜுக்கர்பெர்க்கும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து அமெரிக்காவிலேயே வசிப்பார்கள்; அயர்லாந்தில் மெட்டா நிறுவனத்தின் பணிகளை மேற்கொள்ளும்போது மட்டும் அங்குள்ள குடியிருப்பைப் பயன்படுத்துவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9c3a97-b278-40d2-8595-01be56235b0e/26-6a873f354f1b5.webp' /></p><p>
</p><p>இதனிடையே, இளம் பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கை வேண்டுமென்றே அடிமையாக்கும் வகையில் உருவாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், மெட்டா நிறுவனத்திற்கு எதிராக செவ்வாயன்று நடைபெற்ற அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில், அந்நிறுவனம் குழந்தைகளைத் தெரிந்தே அடிமையாக்கிச் சுரண்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. </p><p>குழந்தைகளுக்கு அடிமைப்படுத்தும் தன்மையுள்ள தயாரிப்புகளை வடிவமைத்ததற்காக, மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சுமார் 200 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று மாகாணங்களின் கூட்டமைப்பு ஒன்று கோருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T17:51:29+00:00</updated>
        </entry>
    </feed>
