<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-03T09:31:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணக்காரராவது எப்படி என புத்தகம் எழுதியவருக்கு ரூ 11,000 கோடி கடன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/author-kiyosaki-billion-in-debt-1788427527"></link>
            <id>https://news.lankasri.com/article/author-kiyosaki-billion-in-debt-1788427527</id>
            <summary type="text">Robert Kiyosaki Says He is $1.2 Billion in Debt: தனக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக ராபர்ட் கியோசாகி கூறுகிறார்.
உலகப் புகழ்பெற்ற &quot;Rich Dad Po...</summary>
            <content type="html"><![CDATA[<p>Robert Kiyosaki Says He is $1.2 Billion in Debt: தனக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக ராபர்ட் கியோசாகி கூறுகிறார்.
</p><p>உலகப் புகழ்பெற்ற "Rich Dad Poor Dad" நூலின் ஆசிரியரான ராபர்ட் கியோசாகி, சுமார் 1.2 பில்லியன் டொலர், அதாவது சுமார் ரூ.11,000 கோடி கடனில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d8ffd90-681a-4b52-adbd-a79299a570c7/26-6a993d094c4c7.webp' /></p><p>
</p><p>பணக்காரனாவது எப்படி என்பதை விளக்கும் நூலை எழுதி, அதில் பல கோடி சம்பாதித்த நபரே ரூ.11,000 கோடி கடனில் இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>வேனிட்டி ஃபேர் பத்திரிகை ஆகஸ்ட் 26ஆம் திகதி வெளியிட்டுள்ள செய்தியில், 79 வயதான கியோசாகி தற்போது 1.2 பில்லியன் டொலர் கடனில் (இந்திய மதிப்பில் ரூ 1,13,30 கோடி) இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. </p><p>அவருடைய புத்தகத்தின் தலைப்பைப் படித்த ஒருவருக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் கடனில் இருப்பது உண்மையில் அந்தப் புத்தகத்தில் உள்ள தனது கருத்துக்களுடன் ஒத்துப்போவதாக அவர் கூறுகிறார். </p><p>1997ஆம் ஆண்டு வெளியான இவரது "Rich Dad Poor Dad" நூலானது இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளது. கியோசாகி முதன்முதலில் 2025-ல் தனக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாகக் கூறத் தொடங்கினார்.</p><p></p><p> </p><p>இருப்பினும், செப்டம்பர் 2025-ல் வெளியான 'தி ஹன்னா ஹாமண்ட் ஷோ' நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தில், அந்தக் கடன் ஒரு தந்திரோபாயமானது என்று அவர் விளக்கினார். </p><p>அத்துடன், வருமானம் ஈட்டக்கூடிய சொத்துகளை வாங்குவதற்கு கடன் பெறுவதுதான் பணக்காரர்கள் பயன்படுத்தும் உத்தி என தெரிவித்துள்ளார். மேலும், சோம்பேறிகள் மட்டுமே தங்கள் சொந்தப் பணத்தை முதலீடுக்குப் பயன்படுத்துவார்கள். </p><p>கடன் வாங்குவதுதான் உங்கள் வேலை என்றார். மட்டுமின்றி, இந்த வழியில் கடனைப் பயன்படுத்துவது, அதிக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய தனக்கு உதவியதாக அவர் கூறினார். </p><p>இந்த நிலையில், கியோசாகியின் வணிகத்தில் தொடர்ந்து பங்குதாரராக இருக்கும் அவரது முன்னாள் மனைவி கிம், வேனிட்டி ஃபேர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 1.2 பில்லியன் டொலர் கடன் இருந்தாலும், அது கியோசாகி தனிப்பட்ட முறையில் சேர்த்த தொகை அல்ல என்றும், மாறாக, அது அவரின் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் குழுவிடம் உள்ள மொத்தக் கடன் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc745d12-fa46-4151-ac3c-c6f81740c5d6/26-6a993d0a01c79.webp' /></p><p> </p><p>மேலும்,
எங்கள் பங்குதாரர்களுடன் எங்களுக்கு நிறைய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, அவற்றின் எண்ணிக்கை சுமார் 1,500 என்று குறிப்பிட்டார்.</p><p> இதனால், தொழில்நுட்ப ரீதியாக, எங்களுக்கு இந்தக் கடன் எல்லாம் இருக்கிறது, ஆனால் அது உண்மையான சொத்துக்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்றார். </p><p>மட்டுமின்றி, கடனில் கியோசாகியின் தனிப்பட்ட பங்கும் குறைவாகவே உள்ளது.
கியோசாகியின் சொத்துகளின் மதிப்பு அதிகரிக்கும்போது அதை அடைமானமாக வைத்து மீண்டும் கடன் பெறுவதே கியோசியின் முக்கியமான முதலீட்டு அணுகுமுறையாகும். </p><p>சொத்தை விற்பதற்கு பதிலாக, அதன் மீது கடன் பெற்று கிடைக்கும் தொகையை வேறு பிஸ்னஸுக்கு பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். </p><p>மேலும், ஒவ்வொரு முதலீட்டையும் தனித்தனி நிறுவனங்களின் கீழ் வைத்திருப்பதாகவும், இதன் மூலம் ஒரு முதலீடு தோல்வியடைந்தாலும் அதன் தாக்கம் மற்ற முதலீடுகளை பாதிக்காமல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2855e36c-a4fc-4ffc-96f9-8fc222c40b33/26-6a993d0ac0463.webp' /></p><p>
</p><p>'Rich Dad Poor Dad' புத்தகம் 44 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி, குறைந்தது 43 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவர் இந்தப் புத்தகத்தை ஷரோன் லெக்டருடன் இணைந்து எழுதினார். </p><p>புத்தகத்தின் முதல் பதிப்பு சுயமாக வெளியிடப்பட்டது, பின்னர் அது ஆம்வே என்ற பன்முனை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு, நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் இடம்பெற உதவியது. </p><p>வார்னர் புக்ஸ் அந்தப் புத்தகத்தை மீண்டும் வெளியிட்டது, மேலும் 2000-ஆம் ஆண்டில், கியோசாகி ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அந்தப் புத்தகத்தை ஒரு மாபெரும் வெற்றிப் படைப்பாக நிலைநிறுத்த உதவியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T09:23:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் புற்றுநோய் மருத்துவமனையில் இருந்து மணியை திருடிய நபர்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thief-sentenced-for-stealing-gong-from-kitchener-1788427279"></link>
            <id>https://news.lankasri.com/article/thief-sentenced-for-stealing-gong-from-kitchener-1788427279</id>
            <summary type="text">Thief sentenced for stealing gong from Kitchener hospital: புற்றுநோய் மருத்துவமனையில் இருந்த மணியை திருடிய நபருக்கு நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thief sentenced for stealing gong from Kitchener hospital: புற்றுநோய் மருத்துவமனையில் இருந்த மணியை திருடிய நபருக்கு நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்துள்ளது.</p><h2>மணியை திருடிய நபர்</h2><p>
கனடாவின் கிச்சனர்(Kitchener) நகரில் அமைந்துள்ள வாட்டர்லூ பிராந்திய சுகாதார நெட்வொர்க் புற்றுநோய் மையத்தில்(Waterloo Regional Health Network’s (WRHN)) இருந்து 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், நோயாளி தங்கள் சிகிச்சை நிறைவு பெற்றதை மகிழ்ச்சியுடன் கொண்டாட அடிக்கும் மணியை திருடியுள்ளார்.</p><p> ஏப்ரல் 25ம் திகதி நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தை அடுத்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு சம்பந்தப்பட்ட குற்றவாளி விக்டோரியா மற்றும் வெபர் வீதி பகுதியில் வைத்து கைது செய்தனர்.</p><p> மேலும் அங்கிருந்த தற்காலிக முகாமிற்கு அருகில் இருந்த இடத்தில் இருந்து மணியை மீட்டு மீண்டும் மருத்துவமனையிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3050cd08-a50c-419e-90bb-3199777b2758/26-6a993c1127398.webp' /></p><h2>நீதிமன்ற தீர்ப்பு</h2><p>
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p>அதில், குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தை தண்டனை காலமாக கணக்கிட்டு, ஒரு வருட நன்னடத்தை கண்காணிப்புடன் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.</p><p> குற்றம் நிகழ்ந்த போது தான் மது போதையில் இருந்ததாகவும், தன்னுடைய செயலால் சமூகம் அடைந்த வேதனையை எண்ணி மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T09:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சி, வெப்பத்தால் பிரான்ஸ் பொருளாதாரத்துக்கு ஏற்பட உள்ள பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-face-economic-hit-by-drought-heatwaves-1788427194"></link>
            <id>https://news.lankasri.com/article/france-face-economic-hit-by-drought-heatwaves-1788427194</id>
            <summary type="text">France has limited economic hit from drought, heatwaves: வறட்சி, வெப்பத்தால் பிரான்ஸ் பொருளாதாரத்துக்கு ஏற்பட உள்ள பாதிப்பு குறைவே என தகவல் வெளியாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>France has limited economic hit from drought, heatwaves: வறட்சி, வெப்பத்தால் பிரான்ஸ் பொருளாதாரத்துக்கு ஏற்பட உள்ள பாதிப்பு குறைவே என தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>வறட்சி, வெப்பத்தால் பிரான்ஸ் பொருளாதாரத்துக்கு குறிப்பிட்ட அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><h3>
வறட்சியால் ஏற்பட இருக்கும் பாதிப்பு</h3><p>

பிரான்ஸ் எதிர்கொண்ட வறட்சி மற்றும் வரலாறு காணாத அளவிலான வெப்ப அலைகள், பிரான்ஸ் விவசாயத்துறை மீது குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பிரான்ஸ் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a168f148-6802-40bc-a227-1c03364decd2/26-6a993bbc46fd3.webp' /></p><p>
பிரான்ஸ், ஐரோப்பாவிலேயே பெரிய தானிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகும்.
</p><p>
ஆனால், இம்முறை குறிப்பாக, பிரான்ஸ் எதிர்கொண்ட வறட்சி மற்றும் வரலாறு காணாத அளவிலான வெப்ப அலைகள் காரணமாக பலவகை பயிர்களின் அறுவடை பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p>
குறிப்பாக, மக்காச்சோள உற்பத்தி 35 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கதிர் அறுத்துப்போக மீதமிருக்கும் சோளத்தட்டை கால்நடைத் தீவனமாக பயன்படும் நிலையில், அதுவும் இம்முறை வழக்கத்தைவிட குறைவாகவே கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

இப்படி மோசமான தகவல்கள் பல கிடைத்தாலும், மொத்தத்தில் பிரான்சின் பொருளாதார மட்டத்தைக் கணக்கிடும்போது, இந்த வெப்பம் மற்றும் வறட்சி, பிரான்சின் பேரியல் பொருளாதார (macroeconomic) மட்டத்தில் ஏற்படுத்தவிருக்கும் பாதிப்பு குறைவே என்கிறார்கள் துறைசார் அலுவலர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T09:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரணின் பந்துவீச்சில் 103 ஓட்டங்களுக்கு சுருண்ட மலேசிய அணி: நேபாளம் அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-beat-malaysia-by-6-wickets-in-acc-men-odi-1788426345"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-beat-malaysia-by-6-wickets-in-acc-men-odi-1788426345</id>
            <summary type="text">Nepal beat malaysia by 6 wickets in ACC men odi: நேபாள அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது. 

பாங்கியில் நடந்த ACC ஆடவர் பிரீம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal beat malaysia by 6 wickets in ACC men odi: நேபாள அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது.</p><p> 

பாங்கியில் நடந்த ACC ஆடவர் பிரீமியர் கிண்ணப் போட்டியில் நேபாள அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது.&nbsp;</p><h2>ACC ஆடவர் பிரீமியர் கிண்ணப் போட்டி&nbsp;</h2><p>

மலேசியா மற்றும் நேபாளம் அணிகள் மோதிய ACC ஆடவர் பிரீமியர் கிண்ணப் போட்டி பாங்கியில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a139bae-65fd-4e5d-84be-d30c086b16d4/26-6a993b27437d2.webp' /></p><p></p><p>
முதலில் களமிறங்கிய மலேசிய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்ப, அகீல் வாஹித் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p> 

அடுத்து சியாஹதத் 13 ஓட்டங்களிலும், விரன்தீப் 14 ஓட்டங்களிலும் வெளியேறினர். அணித்தலைவர் சையத் அஸிஸ் முபாரக் சரிவில் இருந்து அணியை மீட்க போராட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன.&nbsp;</p><h2>கரண்&nbsp;மிரட்டலான பந்துவீச்சு 
</h2><p>
9வது விக்கெட்டாக முபாரக் 30 (49) ஓட்டங்கள் எடுத்த நிலையில் கரண் கேசி பந்துவீசில் அவுட் ஆக, ஆரிஃப் கடைசி விக்கெட்டாக டக்அவுட் ஆனார்.


32.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த மலேசிய அணி 103 ஓட்டங்களுக்கு சுருண்டது. </p><p>மிரட்டலாக பந்துவீசிய கரண் கேசி (Karan KC) 4 விக்கெட்டுகளும், லலித் ராஜ்பன்ஷி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.</p><p>

 பின்னர் ஆடிய நேபாள அணி 21.4 ஓவர்களில் 106 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அர்ஜுன் குமால் 45 ஓட்டங்களும், இஷான் பாண்டே 20 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6479a232-9368-4016-bb77-10764eeb4e80/26-6a993b268f89d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T09:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்த தடை; நேரத்தை வீணாக்கும் என தலிபான் அரசு விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/taliban-govt-defend-ban-on-protest-in-afghanistan-1788426188"></link>
            <id>https://news.lankasri.com/article/taliban-govt-defend-ban-on-protest-in-afghanistan-1788426188</id>
            <summary type="text">taliban government defend ban protest in afghanistan: ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்த விதித்த தடையை தலிபான் அரசு நியாயப்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>taliban government defend ban protest in afghanistan: ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்த விதித்த தடையை தலிபான் அரசு நியாயப்படுத்தியுள்ளது. </p><h3>

ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்த தடை</h3><p>

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மீது அடக்குமுறைகளை கையாளும் வகையில் பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fd2068c-fa02-4f72-b937-ab17314b64ba/26-6a9937ce56ded.webp' /></p><p> 

கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் போராட்டம் நடத்துவதற்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.&nbsp;</p><p>

இந்த தடைக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.&nbsp;</p><p></p><p>

ஆனால், இஸ்லாமிய சட்டத்தில் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை எனக்கூறி தலிபான் அரசு இந்த தடையை நியாயப்படுத்தியுள்ளது. </p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித், "போராட்டங்கள், ஜனநாயகம் அல்லது குடியரசு போன்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ள சமூகங்களைச் சேர்ந்தவை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6937b6d3-4126-4d5a-b537-19628946bdb5/26-6a9937cf0b098.webp' /></p><p>

இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில், மக்கள் தங்களின் பிரச்னைகளுக்குப் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக நேரடியாக அரசைத் தொடர்புகொள்ள முடியும்.</p><p> 

மேலும், இந்தத் தடை மக்களின் நேரத்தை வீணாக்குவதில் இருந்தும், தனியார் சொத்துக்கள் அழிக்கப்படுவதிலிருந்தும் பாதுகாக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T09:03:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தக்க பதிலடி கொடுப்போம்... ஜேர்மனிக்கு ரஷ்யா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-respond-to-germany-shut-cultural-centers-1788423026"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-respond-to-germany-shut-cultural-centers-1788423026</id>
            <summary type="text">Berlin blames Russia for attempted drone attack at Leipzig, Russia responds: ஜேர்மன் விமான நிலையமொன்றில் ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Berlin blames Russia for attempted drone attack at Leipzig, Russia responds: ஜேர்மன் விமான நிலையமொன்றில் ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஜேர்மனி ரஷ்யா மீது குற்றம் சாட்ட, ரஷ்யா அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.
</p><p>


சென்ற மாதம் ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்தில் வெடிபொருட்களுடன் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
</p><h3>
ரஷ்யா மீது குற்றச்சாட்டு
</h3><p>
விடயம் என்னவென்றால், Leipzig விமான நிலையம், ஜேர்மன் ராணுவம் மற்றும் நேட்டோ ராணுவத்துக்கான ராணுவ தளவாடங்கள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விமான நிலையம் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62c73e04-1214-4b91-8d2e-cfac38a25dd9/26-6a992b743ad54.webp' /></p><p>
அதுமட்டுமின்றி, உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி ட்ரோன்கள் மூலம் தாக்கிக்கொள்ளும் சூழலில், அந்த விமான நிலையம், உக்ரைன் நாட்டின் Antonov ஏர்லைன்ஸ் விமானங்களின் தளமாகவும் செயல்படுவதாலேயே, அங்கு ட்ரோன்கள் காணப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், அங்கு வெடிபொருட்களுடன் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில், ஜேர்மனி வெளிப்படையாகவே ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cedf6385-5bc6-4869-a968-3f0ac856112b/26-6a992b74e434a.webp' /></p><p>

அத்துடன், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul, ஜேர்மனியின் Bonn நகரில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தையும், பெர்லினில் அமைந்துள்ள கலாச்சார மையத்தையும் மூட உத்தரவிட்டுள்ளார்.
</p><h3>
ஜேர்மனிக்கு ரஷ்யா எச்சரிக்கை</h3><p>

ஜேர்மனியின் நடவடிக்கை மற்றொரு தவறு, அது சீரியஸான தவறு என ரஷ்ய ஜனாதிபதியான புடின் கூறியுள்ள நிலையில், ஜேர்மனியின் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28314053-7e1c-4c51-835a-48e14cc1f018/26-6a992b759a7c5.webp' /></p><p>
இந்நிலையில், எதிர்பார்க்கப்பட்டதுபோலவே, ரஷ்யா முழுவதுமுள்ள ஜேர்மன் கலாச்சார மையங்களை மூட இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சரான செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஆக, ஜேர்மனி ரஷ்யா இடையிலான மோதல் மும்முரமாகிவருகிறது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:50:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்ப் உருவம் பொறிக்கப்பட்ட புதிய டொலர் நாணயம் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-mint-release-1-coin-featuring-trump-1788425338"></link>
            <id>https://news.lankasri.com/article/us-mint-release-1-coin-featuring-trump-1788425338</id>
            <summary type="text">US Mint Release $1 Coin Featuring Trump: டொனால்ட் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய டொலர் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிரம்ப் உருவம் பொறிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>US Mint Release $1 Coin Featuring Trump: டொனால்ட் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய டொலர் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2> டிரம்ப் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம்</h2><p>
அமெரிக்காவின் 250 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உருவம் பொறிக்கப்பட்ட புதிய டொலர் நாணயம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> அமெரிக்காவின் நாணய அச்சு நிறுவனம்(US Mint), புதிய தங்க நிற முலாம் பூசப்பட்ட இந்த டொலர் நாணய விற்பனையை தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ff615e0-e76b-4cf5-a625-9c93209135d5/26-6a99347bcfa6e.webp' /></p><p> இந்த புதிய நாணயத்தின் முன்பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உருவப்படமானது பொறிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> புதிய நாணயத்தின் தோற்றம்</h2><p>நாணயத்தின் ஹெட்ஸ்(Heads) என்று அழைக்கப்படும் முன் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் ஜனாதிபதியின் முகத்திற்கு மேலே LIBERTY என்ற வார்த்தையும், அதன் கீழே 1776 -2026 என்ற ஆண்டு விவரமும் பொறிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Available for purchase today at 12PM ET: 2026 President Donald J. Trump $1 Coin. These coins are also in circulation, so check your pocket change. Collect them today! <a href="https://x.com/hashtag/CoinCollecting?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CoinCollecting</a> <a href="https://x.com/hashtag/America250?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#America250</a><a href="https://t.co/g4eJes21ER">https://t.co/g4eJes21ER</a> <a href="https://t.co/4OqkQ2sa9W">pic.twitter.com/4OqkQ2sa9W</a></p>&mdash; United States Mint (@usmint) <a href="https://x.com/usmint/status/2095104491536167250?ref_src=twsrc%5Etfw">September 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> டெயில்ஸ்(Tails) என்று அழைக்கப்படும் பின் பக்கத்தில் அமெரிக்காவின் பெருமைமிகு முத்திரை(Great Seal) பொறிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த புதிய நாணயத்திற்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில், டிரம்பால் நியமிக்கப்பட்ட கலை ஆணையம் ஒப்புதல் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> இது தொடர்பான அறிவிப்பு வெளியான போது, தன்னுடைய உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் என்ற யோசனை வித்தியாசமான ஒன்று எனவும், இருப்பினும் இது தன்னை பெருமை கொள்ள வைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:49:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு: தாக்குதல்தாரி உட்பட 3 பேர் பலி: காவலர்கள் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minneapolis-apartment-shooting-3-dead-1788423183"></link>
            <id>https://news.lankasri.com/article/minneapolis-apartment-shooting-3-dead-1788423183</id>
            <summary type="text">Minneapolis Apartment Shooting 3 dead: அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.துப்பாக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Minneapolis Apartment Shooting 3 dead: அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2>துப்பாக்கிச் சூடு சம்பவம்</h2><p>புதன்கிழமை மதியம் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகர மையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியது.</p><p>இந்த சம்பவத்தில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதுடன் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்ட நபரும் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அத்துடன் இந்த சம்பவத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த 3 காவல்துறை அதிகாரிகள் இதில் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b292da3e-29e2-4e7a-b121-ff84d2da9318/26-6a992c10892f2.webp' /></p><p> காயமடைந்த 3 காவல்துறை அதிகாரிகளும் தற்போது ஆபத்தான கட்டத்தை கடந்து சீரான உடல் நிலையுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2> விசாரணையில் பொலிஸார்</h2><p>மினியாபொலிஸ் மாவட்ட மையத்திற்கு அருகில் அமைந்துள்ள துப்பாக்கிச் சூடு அரங்கேறிய அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிய பகுதிகள் முழுவதையும் பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து பொலிஸார் துப்பாக்கியுடன் நிற்பது பதிவாகியுள்ளது.</p><p> இதில் மேலும் 7 பேர் ஹென்னபின் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்தல் இல்லையென்றால்... உண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ள ராயல் கனடா வங்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rbs-says-caanda-immigration-system-need-reset-1788421033"></link>
            <id>https://news.lankasri.com/article/rbs-says-caanda-immigration-system-need-reset-1788421033</id>
            <summary type="text">Canada&#039;s immigration system needs to be reset, says RBC: கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு மறுசீரமைக்கப்படவேண்டும் என ராயல் கனடா வங்கி தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada's immigration system needs to be reset, says RBC: கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு மறுசீரமைக்கப்படவேண்டும் என ராயல் கனடா வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>

கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு வரலாற்று ரீதியாக நம்பகத்தன்மை கொண்டதாக இருந்து வந்துள்ளது, ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அதன் நம்பகத்தன்மை குறைந்துள்ளது என்று கூறியுள்ளது ராயல் கனடா வங்கி.</p><h3>

புலம்பெயர்தல் இல்லையென்றால்...
</h3><p>
ராயல் கனடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, புலம்பெயர்தல் இல்லாவிட்டால், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்தில், நாட்டின் மக்கள்தொகை பாதியாகக் குறைந்துவிடும் என்று கூறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8dbdea4-fc74-46d9-9582-bf145b13b8de/26-6a9923abc0337.webp' /></p><p>
2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, மூன்று மில்லியன். இது ஏறக்குறைய ஒரு தசாப்த கால புலம்பெயர்தலுக்குச் சமம் என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.
</p><p>
ஆனால், 2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் புலம்பெயர்தல் பெருமளவில் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடிக்கடி விதி மாற்றங்கள் செய்யப்பட்டன.&nbsp;</p><p></p><p>
அத்துடன், வலுவிழந்த புள்ளிகள் முறையிலான புலம்பெயர்தல் அமைப்பு மற்றும் திறன்கள் மற்றும் அனுபவத்தின் மீதான முக்கியத்துவத்தைக் குறைத்ததாலும், ஒரு நிலையற்ற சூழல் உருவானது.
</p><p>
அதன் காரணமாக, 2025ஆம் ஆண்டு, மக்கள்தொகையில் ஒரு அரிதான வீழ்ச்சி ஏற்பட்டது. இத்தகைய விடயங்கள், கனடாவின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/999fa636-ea48-438b-8ec1-5090faa3f52d/26-6a9923ab0f007.webp' /></p><p>
தற்காலிக குடியிருப்பு அனுமதிக்கு வரம்புகள் விதிக்கப்பட்டது மற்றும் குறைவான புலம்பெயர்தல் இலக்குகளை நியமித்ததன் மூலம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது.</p><p>

விடயம் என்னவென்றால், இவை அதிர்ச்சி அலைகளுக்கும் வழிவகுத்தன என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.</p><p>

உதாரணமாக, 2024 முதல் 2026 வரையில் 25க்கும் மேற்பட்ட விதி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அவை, சர்வதேச மாணவர்களைப் பாதித்ததால், உயர்கல்வித் துறையில் 20,000க்கும் மேற்பட்ட வேலை இழப்புகள் ஏற்பட்டன.
</p><p>
ஒவ்வொரு மாதமும் 25,000க்கும் மேற்பட்ட கனேடியர்கள் ஓய்வு பெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலும், பிறப்புகளை விட இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நேரத்திலும், இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது என்கிறது அந்த அறிக்கை.
</p><p>
புலம்பெயர்தல் இல்லாவிட்டால், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்தில் கனடாவின் மக்கள்தொகை பாதியாகக் குறைந்துவிடும் என எச்சரிக்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.</p><p>

ஆக, கனடாவின் புலம்பெயர்தல் யுக்தி அதன் கூர்மையை இழந்துவிட்டதால், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து புதிய பொருளாதார இலக்குகளை அடைய கனடா அரசு முற்படும் நிலையில், புலம்பெயர்தல் அமைப்பின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்கிறது அந்த அறிக்கை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T07:37:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 ஒலிம்பிக் தங்கப்பதங்கங்களை வென்ற அவுஸ்திரேலிய வீராங்கனை: நீண்ட நாள் காதலருடன் திருமணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/olympic-gold-medalist-cate-married-her-boy-friend-1788419476"></link>
            <id>https://news.lankasri.com/article/olympic-gold-medalist-cate-married-her-boy-friend-1788419476</id>
            <summary type="text">அவுஸ்திரேலிய ஒலிம்பிக் வீராங்கனை கேட் கேம்ப்பெல் (Cate Campbell) தனது நீண்டகால காதலரை கரம்பிடித்தார்.Australian Olympian cate campbell married her boy...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலிய ஒலிம்பிக் வீராங்கனை கேட் கேம்ப்பெல் (Cate Campbell) தனது நீண்டகால காதலரை கரம்பிடித்தார்.</p><p>Australian Olympian cate campbell married her boy friend: ஒலிம்பிக் வீராங்கனையான கேட் கேம்ப்பெல் அவுஸ்திரேலியாவில் தனது நீண்டகால காதலரான ஆடம் கெர்ரை திருமணம் செய்துகொண்டார்.&nbsp;</p><h2>அவுஸ்திரேலிய&nbsp;ஒலிம்பிக் வீராங்கனை</h2><p>
ஒலிம்பிக்கில் 4 தங்கப்பதக்கங்கள் உட்பட எட்டு பதக்கங்களை வென்றவர் கேட் கேம்ப்பெல் (Cate Campbell).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b27d16ee-b3ad-4bdb-b8a8-c346271b4c7a/26-6a991ed314061.webp' />&nbsp;</p><p></p><p>

34 வயதாகும் இவர், தனது நீண்டகால காதலரான ஆடம் கெர் என்பவரை அவுஸ்திரேலியாவின் ஹிண்டர்லேண்டில் நடந்த ஒரு பிரமிக்க வைக்கும் திறந்தவெளி விழாவில் மணந்தார். </p><p>

புகழ்பெற்ற நீச்சல் வீராங்கனையான கேட், பல புகைப்படங்களுடன் இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e1d3585-aa3b-45ae-a927-6ec1b64c2ca4/26-6a991ed193f85.webp' /></p><p>
'எங்கள் நாளின் ஒரு சிறு காட்சி இதோ' என்ற வார்த்தைகளுடன் அவர் அதனை பதிவிட்டார். அவரது இந்த அறிவிப்பிற்கு பிறகு வாழ்த்துக்கள் குவிந்தன. </p><p>

 
கேட்டின் சக சிறந்த நீச்சல் வீரர்களான கிராண்ட் ஹாக்கெட், லிப்பி ட்ரிக்கெட் மற்றும் மைக்கேல் கிளிம் ஆகியோரும் இனிமையான செய்திகளை பகிர்ந்துகொண்டனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21e66f5f-32a4-4b0e-92c8-2183e4fe8b1e/26-6a991ed2600b4.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T07:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்தநாள் வாழ்த்துக் கூறி... நேபாளத்தில் இருந்து பெற்றோரின் குரலுக்காக காத்திருக்கும் சிட்னி இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-floods-sydney-couple-1788418812"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-floods-sydney-couple-1788418812</id>
            <summary type="text">Their parents remain among the more than 4,000 missing people: காணாமல் போன 4,000-க்கும் மேற்பட்டோரில் இவர்களது பெற்றோரும் அடங்குவர்.
அவுஸ்திரேலியாவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>Their parents remain among the more than 4,000 missing people: காணாமல் போன 4,000-க்கும் மேற்பட்டோரில் இவர்களது பெற்றோரும் அடங்குவர்.</p><p>
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து நேபாளத்திற்கு புனித யாத்திரைச் சென்ற பெற்றோர் இதுவரை வீடு திரும்பாத நிலையில், இளைஞர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.</p><h2>தகவல் ஏதும் இல்லை</h2><p>
</p><p>சிட்னியில் இருந்து ஆன்மீக யாத்திரைக்காக நேபாளத்திற்குப் புறப்படுவதற்கு முன், ஆகாஷ் வெங்கட்ராமனின் பெற்றோர் அவருக்கு 22-வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8361c1d-9d47-45c9-b946-a7202a46d870/26-6a991afeb3ff3.webp' /></p><p> </p><p>மூன்று நாட்களுக்குப் பிறகு, பனிப்பாறை சரிவு ஒன்றின் காரணமாகச் சேறு, நீர் மற்றும் சிதைவுப் பொருட்கள் கலந்த பெருவெள்ளம் நேபாள-திபெத் எல்லை வழியாகப் பாய்ந்து, திரிசூலி ஆற்றின் கரைகளை உடைத்துக்கொண்டு வீடுகள், பாலங்கள் மற்றும் சாலைகளை அடித்துச் சென்றது. </p><p>அந்த நாளுக்குப் பின்னர் ஆகாஷின் பெற்றோரிடம் இருந்து தகவல் ஏதும் இல்லை. கடந்த புதன்கிழமையன்று ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள 38 அவுஸ்திரேலியர்களில், 52 வயதான வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் மற்றும் 46 வயதான சித்ரா வெங்கட்ராமன் ஆகியோரும் அடங்குவர்.</p><p></p><p> </p><p>அந்தத் தம்பதியினரும், அவர்களது குடும்ப நண்பர்களான ஸ்ரீதரன் ஐயர் (52), லட்சுமி ஐயர் (50) மற்றும் அவர்களது மகன்களான ரிஷப் ஐயர் (23), ருத்ரா ஐயர் (20) ஆகியோரும் புனிதத் தலமான கைலாச மலைக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தனர். </p><p>வெள்ளம் வந்த அந்த காலையில், 'இமயமலை பனிப்பாறை சாகசப் பயணக் குழு'வின் (Himalayan Glacier Adventures tour group) மற்ற உறுப்பினர்களுடன் சியாப்ருபெசியில் உள்ள ஆற்றங்கரையோர விடுதி ஒன்றில் அவர்கள் தங்கியிருந்தனர். </p><p>இந்த நிலையில், பெற்றோரிடம் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதிலிருந்து கடந்த நாட்களில் ஆகாஷ் கண்ணீர் விட்டபடியே இருந்துள்ளார், உளவியல் மாணவனாகத் தன் உணர்ச்சிகளை அடக்கி வைக்கக் கூடாது என்பது அவருக்குத் தெரியும், ஆனாலும், அவர் தன் வாழ்க்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் முயன்றிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/608fba93-ecfe-4e95-b796-a6c20e61d336/26-6a991aff794e1.webp' /></p><p> </p><p>தானும், HSC தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருக்கும் தனது 17 வயதுச் சகோதரனும் இயல்பு நிலையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று தங்கள் பெற்றோர் விரும்பியிருப்பார்கள்; ஆனால், அது கடினமாக இருக்கிறது என்று ஆகாஷ் கூறுகிறார். </p><p>ஆகாஷின் மாமா தற்போது உறவினர்களைத் தேடி நேபாளத்திற்குச் சென்றுள்ளார்; அதேவேளையில், ஆகாஷும் அவரது சகோதரரும் வீட்டிலிருந்தபடியே உதவ முயற்சிக்கின்றனர்.</p><h2>முயற்சிகளும் குறையக்கூடும்</h2><p>
</p><p>அவர்களது குடும்பத்திற்கு அங்குள்ள மக்களிடமிருந்து பெருமளவிலான ஆதரவு கிடைத்துள்ளது; இருப்பினும், நாட்கள் செல்லச் செல்ல, அவுஸ்திரேலியர்களின் கவனம் குறைந்து வருவதாகவும், என் பெற்றோர்களையும் அவர்களுடன் இருந்த மற்ற அனைவரையும் தேடும் முயற்சிகளும் குறையக்கூடும் என்றும் ஆகாஷ் கவலைப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9c1ec4c-0fe2-4acb-a33f-816283319812/26-6a991b002fcaf.webp' /></p><p>
</p><p>வியாழக்கிழமை நிலவரப்படி, 1204 பேர் மரணமடைந்தது உறுதிசெய்யப்பட்டதாகவும், 4,216 பேர் (583 வெளிநாட்டினர் உட்பட) காணாமல் போனதாகவும் நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, காணாமல் போன சுற்றுலாப் பயணிகளை அடையாளம் காணும் முயற்சிகளுக்கு உதவும் வகையில், அவர்களின் உறவினர்கள் டிஎன்ஏ மாதிரிகளை வழங்குமாறு காத்மாண்டு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>நேபாளத்தில் காணாமல் போனதாக முன்னர் நம்பப்பட்ட ஐந்து அவுஸ்திரேலியர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T07:15:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த சமாரி அத்தப்பட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chamari-athapaththu-records-7-wickets-in-one-match-1788419613"></link>
            <id>https://news.lankasri.com/article/chamari-athapaththu-records-7-wickets-in-one-match-1788419613</id>
            <summary type="text">சமாரி அத்தப்பட்டு ஒரே போட்டியில் 7 விக்கெட்கள் வீழ்த்தி 18 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

இலங்கை வெற்றி 

2026 மகளிர் ஆசிய கிண்ண தொடரில் நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமாரி அத்தப்பட்டு ஒரே போட்டியில் 7 விக்கெட்கள் வீழ்த்தி 18 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
</p><h3>
இலங்கை வெற்றி</h3><p> 

2026 மகளிர் ஆசிய கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், இலங்கை மற்றும் இந்தோனேசியா அணிகள் மோதியது. </p><p>

நாணய சுழற்சியில் வென்ற இந்தோனேசியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1054e36-5b6a-49c2-a260-713de52a6c92/26-6a991e1fe1c28.webp' /></p><p>

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்கள் குவித்தது. </p><p>

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிலாக்சி டி சில்வா 50 ஓட்டங்கள் குவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

125 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தோனேசியா, வெறும் 49 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daaf19cb-33f4-45f1-8823-2eba36f56c9e/26-6a991e1f3b922.webp' /></p><p>

இதன் மூலம், இலங்கை மகளிர் அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><h3> 

சமாரி அத்தப்பட்டு சாதனை</h3><p> 

இலங்கை அணித்தலைவி சமாரி அத்தப்பட்டு 3.3 ஓவர்கள் வீசி 5 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d607cef0-40a9-42b2-a1ff-5c19b679fb9f/26-6a991e20937fa.webp' /></p><p>

இதன் மூலம் ஆசிய கிண்ணத்தில் ஒரே போட்டியில் 7 விக்கெட் வீழ்த்திய முதல் நபர் என்ற பெருமையை சமாரி அத்தப்பட்டு படைத்துள்ளார்.&nbsp;</p><p>

முன்னதாக 2008 ஆம் ஆண்டில், ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தானின் ஜாவேரியா கான் வங்கதேசத்திற்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. </p><p>18 ஆண்டுகால சாதனையை தற்போது சமாரி அத்தபட்டு முறியடித்துள்ளார்.
</p><p>
இதே போல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது கேப்டன் என்ற பெருமையையும் சமாரி அத்தபட்டு பெற்றுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T07:13:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் ஜலசந்திக்கு புதிய பெயர் சூட்டிய டிரம்ப்: வைரலாகும் Truth Social பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-renaming-strait-of-hormuz-to-trump-strait-1788417704"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-renaming-strait-of-hormuz-to-trump-strait-1788417704</id>
            <summary type="text"> Trump Renaming Strait of Hormuz to Trump Strait : ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை டிரம்ப் ஜலசந்தி என பெயரிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p> Trump Renaming Strait of Hormuz to Trump Strait : ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை டிரம்ப் ஜலசந்தி என பெயரிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.</p><h2> டிரம்ப் ஜலசந்தி</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கின் முக்கிய கடல் வழித் தடமான ஹார்முஸ் ஜலசந்திக்கு(Strait of Hormuz), டிரம்ப் ஜலசந்தி(Trump Strait) என பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்துள்ளார்.</p><p>இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ஈரானுடனான மோதலுக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியானது அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை ட்ரம்ப் ஜலசந்தி என மாற்றலாமா? என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70accb62-47f3-4e68-a7ca-2a9eff513425/26-6a9916a9f08b7.webp' /></p><p> மேலும் அமெரிக்காவை போலவே இதுவும் முன்பு இருந்ததை விட சூடாக இருக்கும் என்றும் டிரம்ப் அதில் பதிவிட்டுள்ளார்.</p><p>அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து பல சர்ச்சைக்குரிய புவியியல் பெயர் மாற்றங்களை செய்து வரும் நிலையில், அந்த வரிசையில் ஹார்முஸ் ஜலசந்தியும் இணைந்துள்ளது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">It&#39;s got a nice ring to it <a href="https://t.co/Fmzc9iUu8u">pic.twitter.com/Fmzc9iUu8u</a></p>&mdash; The White House (@WhiteHouse) <a href="https://x.com/WhiteHouse/status/2095188498345083028?ref_src=twsrc%5Etfw">September 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 2025ம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே மெக்சிகோ வளைகுடாவை கல்ப் ஆப் அமெரிக்கா(Gulf of America) என்று பெயர் மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T06:43:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம்: புதிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/suspected-swiss-gunman-surrendered-to-police-1788414908"></link>
            <id>https://news.lankasri.com/article/suspected-swiss-gunman-surrendered-to-police-1788414908</id>
            <summary type="text">Suspected Swiss gunman turned himself into police: சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய நபர் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார்.


ஞாயிற்றுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Suspected Swiss gunman turned himself into police: சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய நபர் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார்.</p><p>


ஞாயிற்றுக்கிழமை காலை சுவிட்சர்லாந்தின் Aarau மாகாணத்தில் நடந்துகொண்டிருந்த ஒரு இசை நிகழ்ச்சியின்போது, திடீரென ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cad47c9-d93a-4727-a680-3c3cb4164277/26-6a990bbddbba1.webp' /></p><p>அந்த சம்பவத்தில் இத்தாலி நாட்டவரான மரியா (Maria Spinelli, 22) என்னும் இளம்பெண் கொல்லப்பட்டார். ஆறு பேர் காயமடைந்தார்கள். அவர்களில் இருவர் இன்னமும் மருத்துவமனையில்தான் உள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d5e5625-0879-42ea-9ece-669ad57d42b1/26-6a990bbe907f2.webp' /></p><h3>புதிய தகவல்கள்</h3><p>

இந்நிலையில், தாக்குதல்தாரி தொடர்பில் சில புதிய தகவல்களை தற்போது பொலிசார் வெளியிட்டுள்ளார்கள்.
</p><p>
தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டதாக மட்டுமே முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது, அவர் தானாக முன்வந்து சரணடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/115a9211-8b0d-47fb-af9c-467821f93b60/26-6a990bbf42366.webp' /></p><p>அத்துடன், சம்பவம் Aarau மாகாணத்தில் நிகழ்ந்த நிலையில், தாக்குதல்தாரி, திங்கட்கிழமையன்று Jura மாகாண பொலிசாரிடம் சரணடைந்ததாகவும், அவரது வாகனம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
மேலும், தான் சிறிது காலமாகவே நலமாக இல்லை என்று அந்த 43 வயது நபர் தெரிவித்துள்ளார். </p><p>அதாவது, அந்த நபருக்கு மன நல பிரச்சினைகள் இருப்பதாக கருதப்படுகிறது.
</p><p>
அந்த நபர் Jura மாகாணத்திலிருந்து Aarau மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T05:57:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா திரும்பிய ஹரி, மேகன் தம்பதியர்: ட்ரம்ப் காட்டமான விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-criticized-prince-harry-returns-to-uk-1788411722"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-criticized-prince-harry-returns-to-uk-1788411722</id>
            <summary type="text">Donald Trump has criticized Prince Harry and Meghan Markle after they left for the UK: இளவரசர் ஹரியும் மேகனும் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Donald Trump has criticized Prince Harry and Meghan Markle after they left for the UK: இளவரசர் ஹரியும் மேகனும் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
</p><p>

அமெரிக்காவில் வாழ்ந்துவந்த இளவரசர் ஹரி தன் குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள விடயம் அனைவரும் அறிந்ததே.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f76d7531-6f33-4f74-9971-126816a83a2f/26-6a98ff4c4cea0.webp' /></p><p>
இந்நிலையில், அது குறித்து அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
</p><h3>
ட்ரம்ப் காட்டமான விமர்சனம்</h3><p>

ஹரியும் மேகனும் பிரித்தானியா திரும்பியதில் தனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ள ட்ரம்ப், தனக்கு அவர்களைப் பிடிக்காது என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1cc6c8e-bec8-4582-86e6-57afee0ad404/26-6a98ff4b97b4f.webp' /></p><p>
அதே நேரத்தில், நான் ராஜ குடும்பத்தில் இருந்தால், ஹரி, மேகன் தம்பதியரை மீண்டும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.&nbsp;</p><p>
அத்துடன், தனக்கு மறைந்த எலிசபெத் மகாராணியாருடன் நல்ல நட்பு இருந்ததாகவும், மன்னர் சார்லசுடனும் தனக்கு நல்ல நட்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள ட்ரம்ப், தன்னைப் பொருத்தவரை, அவர்கள் இருவரையுமே ஹரி, மேகன் தம்பதியர் மரியாதைக் குறைவாக நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>

எலிசபெத் மகாராணியாரையும், மன்னர் சார்லசையும் மேகன் மிக மோசமாக நடத்தியதாக தான் கருதுவதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், மேகன் நடந்துகொண்ட விதம் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், தானாக இருந்திருந்தால், அவர்களை ராஜகுடும்பத்தில் மீண்டும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும் மீண்டும் கூறியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T05:45:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய சட்டமன்றம் வளாகம் - முதல்வர் விஜய் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-annonuced-new-tn-assembly-in-chennai-1788413981"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-annonuced-new-tn-assembly-in-chennai-1788413981</id>
            <summary type="text">cm vijay annonuce new tamilnadu assembly in chennai ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay annonuce new tamilnadu assembly in chennai ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். </p><h3>

புதிய சட்டமன்றம்</h3><p>

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதிகளின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதல்வர் விஜய் தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e245fa5c-f825-416c-95fd-29399262dcac/26-6a99081ea268a.webp' /></p><p>

இதில் பேசிய அவர், "சென்னையில் 20 இலட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்.

</p><p>தில், தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும்.&nbsp;</p><p></p><p>
போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.

அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும்" என அறிவித்துள்ளார். </p><p>

முன்மொழியப்பட்ட புதிய தலைமைச் செயலக வளாகத்தைக் கட்டுவதற்கு பட்டினப்பாக்கம், நந்தம்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகம் ஆகிய இடங்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T05:44:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிக்கோலஸ் பூரனின் அணியை முடித்துவிட்ட மொயீன் அலியின் ஃபால்கன்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/moeen-ali-s-antigua-team-beat-trinbago-cpl-t20-1788413762"></link>
            <id>https://news.lankasri.com/article/moeen-ali-s-antigua-team-beat-trinbago-cpl-t20-1788413762</id>
            <summary type="text">Antigua and barubuda falcons win by 8 runs: கரீபியன் பிரீமியர் லீக் 2026 தொடரின் 24வது போட்டியில், ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 8 ஓட்டங்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Antigua and barubuda falcons win by 8 runs: கரீபியன் பிரீமியர் லீக் 2026 தொடரின் 24வது போட்டியில், ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

 ட்ரினிடாட்டில் நடந்த ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கரீபியன் டி20 போட்டியில், ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ஹசன் நவாஸ்</h2><p>
ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணியில் ராகீம் கார்ன்வால் 7 பந்துகளில் 20 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7acdaf05-1f6d-4af0-afa8-a028a9045ff8/26-6a9909df79838.webp' />&nbsp;</p><p></p><p>

பின்னர் எவின் லீவிஸ் 24 ஓட்டங்களும், அமீர் ஜாங்கூ 6 ஓட்டங்களும் எடுத்து வெளியேற, மொயீன் அலி மற்றும் ஹசன் நவாஸ் அதிரடி கூட்டணி அமைத்தனர். </p><p>

ஹசன் நவாஸ் (Hasan Nawaz) 48 பந்துகளில் 76 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 9 பவுண்டரிகள்), மொயீன் அலி (Moeen Ali) 24 பந்துகளில் 32 ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
இதன்மூலம் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 183 ஓட்டங்கள் குவித்தது. அகேல் ஹொசேய்ன், லஹிரு குமார, உஸ்மான் மற்றும் கிரேவ்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
</p><h2>
ஆன்டிகுவா&nbsp;வெற்றி </h2><p>அடுத்து களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 93 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் என தடுமாறியது. அப்போது கிரோன் பொல்லார்ட் (Kieron Pollard), ஜோஷுவா கூட்டணி அமைத்தனர்.
</p><p>
பொல்லார்ட் 41 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ட்ரின்பாகோ அணி 20 ஓவர்களில் 175 ஓட்டங்கள் எடுத்ததால், 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் வெற்றி பெற்றது.</p><p>

இறுதிவரை களத்தில் நின்ற ஜோஷுவா டா சில்வா (Joshua Da Silva) 31 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசினார். </p><p>

ராகீம் கார்ன்வால் 3 விக்கெட்டுகளும், ஜோஷுவா டா சில்வா 2 விக்கெட்டுகளும், ஷாமர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fca25c0a-e7e9-4b86-b407-0987c485318d/26-6a9910efdc591.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T05:44:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் கடத்தல்... 11 வெளிநாட்டினரைக் கைது செய்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-arrests-11-foreigners-1788413378"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-arrests-11-foreigners-1788413378</id>
            <summary type="text">Iran arrests 11 foreigners suspected of fuel smuggling: எரிபொருள் கடத்தல் வழக்கில் சந்தேகிக்கப்படும் 11 வெளிநாட்டினரை ஈரான் கைது செய்தது.
நாட்டிலிருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran arrests 11 foreigners suspected of fuel smuggling: எரிபொருள் கடத்தல் வழக்கில் சந்தேகிக்கப்படும் 11 வெளிநாட்டினரை ஈரான் கைது செய்தது.</p><p>
நாட்டிலிருந்து எரிபொருளைக் கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் 11 வெளிநாட்டினரை ஈரான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75a79199-cb18-46e1-ad01-cf91677b27ec/26-6a9905c4b251c.webp' /></p><p>
</p><p>அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களுக்குக் கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து விதித்து வருவதால், தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான எரிபொருளை இறக்குமதி செய்வதில் ஈரான் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டின் தென்பகுதியில் இந்தக் கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p> அவர்கள் எந்த நாட்டவர்கள் என்பதைக் குறிப்பிடாமல், 11 வெளிநாட்டு சந்தேக நபர்களை எல்லைப் பாதுகாவலர்கள் கைது செய்ததாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. </p><p>வளைகுடா கடற்பரப்பில் இழுவைப் படகைப் பயன்படுத்தி கடத்தல் முயற்சிகள் நடப்பதாக வந்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் காவலர்கள் நடவடிக்கை எடுத்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>படகைச் சோதனையிட்டபோது, ​​காவலர்கள் 382,000 லிற்றர் டீசல் எரிபொருளைக் கண்டுபிடித்ததாக செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஈரானிய அதிகாரிகள் பல ஆண்டுகளாகவே பரவலான எரிபொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்; குறிப்பாக வளைகுடாவை ஒட்டிய தெற்குப் பகுதிகளில் இக்கடத்தல் உள்ளூரில் எரிபொருள் பற்றாக்குறைக்குக் காரணமாக அமைந்துள்ளது. </p><p>2024ல் வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், ஈரானிலிருந்து அண்டை நாடுகளுக்கு நாள்தோறும் 12 மில்லியன் லிற்றர் எரிபொருள் கடத்தப்படுகிறது.</p><p> தொழிலாளர் உரிமைகளைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும் கூட, அண்டை நாடுகளை விட ஈரானில் எரிபொருள் மிகவும் மலிவானது. இருப்பினும், குறைந்த ஊதியம் காரணமாக, பல ஈரானியர்களுக்கு அது இன்னும் அதிக விலை கொண்டதாகவே உள்ளது. </p><p>பல எல்லைப்புறவாசிகள், குறிப்பாக தென்கிழக்கு ஈரானில் உள்ள பலூச் இன சிறுபான்மையினர், வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக எரிபொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இந்த எரிபொருள் கடத்துபவர்களில் சிலரிடம் வாகனங்கள் கூட இல்லை; அவர்கள் எரிபொருள் கலன்களைத் தங்கள் முதுகில் சுமந்து செல்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c5334ad-8fad-482e-ac6b-a58d500cbb01/26-6a9905c617b1a.webp' /></p><p> </p><p>இவர்கள் தினமும் 12,000 முதல் 20,000 லிற்றர் வரை எரிபொருளைக் கடத்துவதாக ஈரான் அரசாங்கம் கூறுகிறது. இருப்பினும், பெரிய அளவிலான எரிபொருள் கடத்தலுக்குப் பின்னணியில் உள்ள முக்கியக் குற்றவாளி புரட்சிக் காவலர் படை (Revolutionary Guards) தான் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. </p><p>ஈரானிலிருந்து கடத்தப்படும் எரிபொருளின் ஆண்டு மதிப்பு 4 பில்லியன் டொலர் என்றும், அதில் 3.5 பில்லியன் டொலர் நிகர லாபம் என்றும் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. </p><p>2023-ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில், ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்கு தினமும் 4 மில்லியன் லிற்றர் எரிபொருள் கடத்தப்பட்டு, எரிபொருள் நிலையங்களில் மலிவாக விற்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdc81cd9-4368-4f3c-ada2-9811dd62f86b/26-6a9905c565923.webp' /></p><p> </p><p>சமீபத்தில், மத்திய கிழக்கில் போர் தொடங்கியதைத் தொடர்ந்து, வளைகுடாப் பகுதியிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதற்குப் பதிலடியாக, ட்ரம்ப் நிர்வாகம் ஈரானியத் துறைமுகங்கள் மீது முற்றுகையை விதித்தது.</p><p> இதனிடையே, செவ்வாயன்று, நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், பெட்ரோல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு குடிமக்களைக் கேட்டுக்கொண்டார். சமீப நாட்களாக தெஹ்ரானில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T05:28:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் இந்தோனேசியா காட்டுத்தீ... மலேசியா, பிலிப்பைன்ஸுக்கும் பரவும் நச்சுப் புகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/haze-besieges-southeast-asia-1788408618"></link>
            <id>https://news.lankasri.com/article/haze-besieges-southeast-asia-1788408618</id>
            <summary type="text">Toxic haze from Indonesia spreads to Malaysia and Philippines: இந்தோனேசியாவிலிருந்து பரவும் நச்சுப் புகை மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸுக்கும் வியாபித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>Toxic haze from Indonesia spreads to Malaysia and Philippines: இந்தோனேசியாவிலிருந்து பரவும் நச்சுப் புகை மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸுக்கும் வியாபித்துள்ளது.
</p><p>இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் உருவான நச்சுப் புகை, பிலிப்பைன்ஸ் வரையிலான அண்டை நாடுகளுக்கும் பரவி, சில முக்கிய நகரங்களில் பொது சுகாதார எச்சரிக்கைகளைத் தூண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a56a587-e091-4fd4-9ca0-92708688027f/26-6a98f32c55b2a.webp' /></p><p>
</p><p>இது தென்கிழக்கு ஆசியாவின் பிரதான நிலப்பகுதி நாடுகளையும் சென்றடையக்கூடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். புதன்கிழமை பகல், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் பெருநகரப் பகுதி முழுவதும் உள்ள ஏழு காற்று கண்காணிப்பு நிலையங்களில், PM2.5 மாசுபடுத்தும் துகள்களின் அளவு ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் துறை (DENR) தெரிவித்துள்ளது. </p><p>இந்தோனேசியாவின் கலிமந்தானில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயிலிருந்து உருவாகும் புகை மற்றும் எல்லை தாண்டிய புகைமூட்டம், தற்போது காணப்படும் புகைமூட்டத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்றும், அவை நிலவும் காற்றினால் பிலிப்பைன்ஸை நோக்கி கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்றும் இயற்கை வளங்கள் துறை (DENR) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. </p><p>மெட்ரோ மணிலாவில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியான குய்சோன் சிட்டியின் நிர்வாகம், செவ்வாய்க்கிழமையன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது; அதில் அனைத்து நேரடி வகுப்புகளும் இடைநிறுத்தப்படுவதாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தொலைதூரக் கல்வி முறைக்கு மாற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p> மத்திய லூசோன், கலபார்சோன், மிமரோபா மற்றும் மத்திய விசாயாஸ் போன்ற பிலிப்பைன்ஸின் பிற பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.</p><p> இந்தோனேசியாவின் வடக்கு அண்டை நாட்டைச் சென்றடைந்த இந்தப் புகைமூட்டம், அந்நாட்டில் காட்டுத்தீயால் ஏற்படும் மாசு தெற்கு சீனக் கடல் வழியாகப் பிலிப்பைன்ஸை நோக்கி நகரும் என்று ஐரோப்பாவைச் சேர்ந்த புவி கண்காணிப்பு அமைப்பான 'கோப்பர்நிக்கஸ் வளிமண்டலக் கண்காணிப்புச் சேவைகள்' (CAMS) முன்னரே கணித்திருந்ததற்கேற்ப நிகழ்ந்துள்ளது. </p><p>CAMS-இன் மூத்த விஞ்ஞானி மார்க் பாரிங்டனின் கூற்றுப்படி, அந்த அமைப்பின் மற்ற முன்னறிவிப்புகள், இந்தப் புகைமூட்டம் தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாமின் தெற்குப் பகுதிகளைச் சென்றடையும் என்று கணித்திருந்தன. </p><p>CAMS முகமையின் தீ உமிழ்வுத் தளத்தின்படி, ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தோனேசியாவிலிருந்து உருவான மொத்த கார்பன் உமிழ்வானது 46 மெகாடன்கள் (Mt) கார்பன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சுமார் 45 நிலக்கரி எரி மின் நிலையங்களின் ஆண்டு உமிழ்வுக்குச் சமமாகும்.</p><p> 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது மிக உயர்ந்த அளவாகும், இதில் கலிமந்தானில் மட்டும் ஏற்பட்ட காட்டுத்தீயிலிருந்து சுமார் 38 மெட்ரிக் டன் கசிவு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a644257b-c3e5-4ccf-afe5-8c5bc8d506c5/26-6a98f32d0675c.webp' /></p><p> </p><p>மேற்கு கலிமந்தானில் இருந்து ஏற்பட்ட காட்டுத்தீயின் புகை, போர்னியோ தீவின் மலேசியப் பகுதிக்குள் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பரவியபோது, ​​எல்லை தாண்டிய புகைமூட்டத்தின் முதல் நிகழ்வுகள் தேசிய பேரிடர் தணிப்பு முகமையால் (BNPB) உறுதிப்படுத்தப்பட்டன. </p><p>அதன் பிறகு, இந்தோனேசியாவில் மேலும் நிலங்கள் எரிந்து வருவதால், மலேசியாவின் அதிகமான பகுதிகள் புகைமூட்டத்தால் மூடப்பட்டுள்ளன. வனத்துறை அமைச்சகத்தின்படி, ஜனவரி முதல் ஜூலை இறுதி வரை நாட்டில் 200,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் தீயில் எரிந்து சாம்பலானது. </p><p>ஜூலை மாதம் மட்டும் சுமார் 100,000 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது. தீவுக்கூட்டத்தில் வறண்ட பருவத்தைத் தூண்டிய எல் நினோ காலநிலை நிலைகளுக்கு மத்தியில், விவசாய நோக்கங்களுக்காக வேண்டுமென்றே நிலங்கள் அழிக்கப்பட்டதால் தீ பரவியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7de6a82-d80a-4459-8069-f97a8540f31b/26-6a98f32db1520.webp' /></p><p> </p><p>புகைமூட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சரவாக் பகுதியில், குறிப்பாக அதிக மழைப்பொழிவை ஊக்குவிக்கும் வகையில், மலேசியா மேக விதைப்புப் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. </p><p>வானிலை நிலவரத்தைப் பொறுத்து, செப்டம்பர் 3 முதல் 5-ஆம் திகதிக்குள் இந்தப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. சரவாக்கில் மோசமடைந்து வரும் காற்றின் தரம் காரணமாக, </p><p>மலேசியக் கூட்டமைப்பு உருவானதை நினைவுகூரும் பொது விடுமுறையான செப்டம்பர் 16 ஆம் திகதி மலேசிய தினக் கொண்டாட்டங்கள், கூச்சிங்கில் உள்ளரங்குகளில் நடத்தப்படும் என்று மலேசியத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபஸில் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T04:08:42+00:00</updated>
        </entry>
    </feed>
