<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-02T23:37:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறண்டுபோன ஐரோப்பிய நதி., ஒற்றை அணு மின் நிலையத்தையும் மூடும் நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hungary-shuts-nuclear-plant-amid-danube-drought-1785655426"></link>
            <id>https://news.lankasri.com/article/hungary-shuts-nuclear-plant-amid-danube-drought-1785655426</id>
            <summary type="text">ஐரோப்பிய நாடான ஹங்கேரி, தனது ஒரே அணு மின் நிலையமான பாக்ஸ் (Paks) அணு மின் நிலையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.

கடந்த 44 ஆண்டுகளில் முதல் முறையாக முழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய நாடான ஹங்கேரி, தனது ஒரே அணு மின் நிலையமான பாக்ஸ் (Paks) அணு மின் நிலையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
</p><p>
கடந்த 44 ஆண்டுகளில் முதல் முறையாக முழுமையாக இந்த அணுமின் நிலையம் நிறுத்தம் செய்யப்படுகிறது.</p><p>

இந்த மின் நிலையம் நாட்டின் மின்சார தேவையின் அரைபங்கிற்கும் மேல் வழங்கி வருகிறது.

ஆனால், டானியூப் ஆற்றின் நீர்மட்டம் வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலையில் சென்றதால், ரியாக்டர்களை குளிர்விக்க தேவையான நீர் கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b36250a-b765-4b18-9233-d2cd60c84508/26-6a6ef0845cb54.webp' /></p><p>

கடந்த வெள்ளிக்கிழமை உற்பத்தி 965 மெகாவாடாகக் குறைந்தது. பின்னர் இரவில் 240 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

சாதாரணமாக 2,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் நிலையம் இப்போது இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>டானியூப் ஆற்றின் நீர்மட்டம் -134 சென்டிமீற்றராக குறைந்துள்ளது. இது 2018-இல் பதிவான -98 செ.மீ. சாதனை அளவை விட மிகக் குறைவு. மேலும், நீர்மட்டம் -144 செ.மீ. வரை குறையக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
</p><p></p><p>இந்த வறட்சி ஹங்கேரியில் 100-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் நீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலைகள் தங்களின் நீர் பயன்பாட்டை குறைக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், அண்டை நாடான ஸ்லோவாக்கியா ஹங்கேரிக்கு உதவ தாயாக இருப்பதாக அறிவித்துள்ளது.
</p><p>
ஐரோப்பா முழுவதும் கடந்த சில மாதங்களாக கடும் வெப்ப அலைகள் தாக்கியுள்ளன. விஞ்ஞானிகள் இதற்கு மனிதனால் உண்டான காலநிலை மாற்றமே காரணம் எனக் கூறுகின்றனர்.
</p><p></p><p>இந்தச் சம்பவம் ஹங்கேரியின் மின்சார உற்பத்தி மட்டுமல்லாமல், கப்பல் போக்குவரத்து, சுற்றுலா, வேளாண்மை மற்றும் தொழில்துறை துறைகளையும் பாதித்துள்ளது. </p><p>வறட்சி மற்றும் வெப்ப அலைகள் காரணமாக ஐரோப்பா முழுவதும் ஆற்றல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T23:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் உட்பகுதிக்குள் உக்ரைன் நடத்திய வேட்டை: 635 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா: 8 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-massive-drone-attack-on-russia-8-dead-1785711589"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-massive-drone-attack-on-russia-8-dead-1785711589</id>
            <summary type="text">ரஷ்யாவின் உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்</h2><p>
ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் ஆழமான பகுதிகளை குறிவைத்து உக்ரைன் அதிரடியான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p>இந்த தாக்குதலில் ரஷ்யாவின் ராணுவத்தின் நிலைகள், பொது மக்கள் குடியிருப்பு மற்றும் எரிசக்தி நிலையங்கள் குறிவைத்து தகர்க்கப்பட்டன.</p><p>உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதல் சம்பவத்தில் சிக்கி ரஷ்யாவில் இதுவரை 8 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cea027b4-773a-4815-9fde-342780a06bc6/26-6a6fcbe6f320a.webp' /></p><p>எங்கல்ஸ் பகுதியின் குடியிருப்பு பகுதி மீது ட்ரோன் மோதியதில் 2 பேரும், சரடோவ் நகரின் அடுக்குமாடி குடியிருப்பு மீது ட்ரோன் மோதியதில் பலத்த சேதமும்&nbsp;ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.</p><p>கிட்டத்தட்ட உக்ரைனில் இருந்து 1300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதியில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர்.</p><p></p><p> பெல்கோரரோட் பகுதியில் ட்ரோன் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>உக்ரைனிய படையின் இந்த ஒருங்கிணைந்த ட்ரோன் தாக்குதலை ரஷ்ய பாதுகாப்பு படைகள் முழுவீச்சில் தடுத்து நிறுத்தினர். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, கிட்டத்தட்ட 635 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி உள்ளது.</p><h2>உறுதிப்படுத்திய ஜெலென்ஸ்கி</h2><p>இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யா மீது நடத்தப்பட்ட பிரம்மாண்ட தாக்குதலை உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c23941f1-9db2-4f0c-8765-ec12deea2f59/26-6a6fcbe7a399e.webp' /></p><p> மேலும் சரடோவ் நகரில் அமைந்திருந்த எண்ணெய் உள்கட்டமைப்புகளையும், எங்கல்ஸில் உள்ள ரஷ்யாவின் ராணுவ தளத்தையும் உக்ரைனிய படைகள் வெற்றிகரமாக தாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>ரஷ்யாவின் தொடர் அத்துமீறலுக்கு உக்ரைனின் நேரடி பதிலடி தான் இந்த நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T23:00:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேஷியா பயணிகள் கப்பலில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு: 41 பேரை காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesian-ferry-fire-5-dead-41-missing-1785695057"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesian-ferry-fire-5-dead-41-missing-1785695057</id>
            <summary type="text">இந்தோனேஷியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பயணிகள் கப்பலில் தீ விபத்து
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேஷியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> பயணிகள் கப்பலில் தீ விபத்து</h2><p>
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பலில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p> இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் வரை பலியாகியுள்ளனர். </p><p>கிட்டத்தட்ட 41 பேரின் நிலைமை இதுவரை என்னவென்று தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7cf46eb-22df-4d0c-9d33-c1fd80ee72e2/26-6a6f8b536e669.webp' /></p><p> காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.</p><p>முடியரா செந்தோசா 2(Mutiara Sentosa 2) என்ற பெயர் கொண்ட இந்த கப்பலில், விபத்தின் போது பயணிகள், பணியாளர்கள் என கிட்டத்தட்ட 271 பேர் பயணம் செய்துள்ளனர்.</p><p> விபத்தில் சிக்கியுள்ள இந்த கப்பல், கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுராபாயாவில் இருந்து தெற்கு சுலாவசியில் உள்ள மகாசக்கர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2> மீட்பு பணிகள் தீவிரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab27dc03-4ec2-46f4-87af-ed33df4b3e8e/26-6a6f8b5423106.webp' /></p><p>கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர கால மீட்பு படையினர் மற்றும் அருகிலிருந்த கப்பல்கள் என அனைவரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்குள் 225 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.</p><p> மேலும் உயிரிழந்த 5 பேரின் உடலையும் கப்பலில் இருந்து மீட்டெடுத்துள்ளனர். காணாமல் போயுள்ள 41 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.</p><p>அதே சமயம் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான உண்மையை கண்டறிய விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p> &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-02T22:31:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபிஃபா தலைவர் பதவியை இழக்கும் கியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/infantino-leadership-challenge-1785663943"></link>
            <id>https://news.lankasri.com/article/infantino-leadership-challenge-1785663943</id>
            <summary type="text">ஃபிஃபா (FIFA) கவுன்சில் உறுப்பினர்களிடமிருந்து கியானி இன்ஃபான்டினோ கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்கள் ஒரு சிறப்புப் பொதுக்கூட்டத்தைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிஃபா (FIFA) கவுன்சில் உறுப்பினர்களிடமிருந்து கியானி இன்ஃபான்டினோ கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்கள் ஒரு சிறப்புப் பொதுக்கூட்டத்தைக் (EGM) கூட்ட வற்புறுத்தி வருகின்றனர்.</p><h2>கவுன்சில் உறுப்பினர்கள்</h2><p>
</p><p>இப்படியான ஒரு பொதுக்கூட்டம் முழு அளவிலான தலைமைத்துவப் போட்டியாக மாறக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/973690ee-f8df-4879-b205-e89ab036c50d/26-6a6f12db8cf3a.webp' /></p><p> </p><p>உலகக் கிண்ணம் தொடரின் பங்குகளை விற்பனை செய்வதற்கான இன்ஃபான்டினோவின் (Infantino) முயற்சி தோல்வியடைவதற்கு முன்பே, ஒரு சிறப்புப் பொதுக் கூட்டத்தைக் (EGM) கூட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருந்தன. </p><p>டொனால்ட் ட்ரம்ப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து, உலகக் கிண்ணம் தொடரின் போது ஃபோலரின் பலோகுன் (Folarin Balogun) மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்த அந்த முன்னெப்போதும் இல்லாத முடிவின் மீது சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கவுன்சில் உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். </p><p>ஃபிஃபா கவுன்சில் என்பது உலகளாவிய நிர்வாக அமைப்பின் முக்கிய முடிவெடுக்கும் மன்றமாகும்; இது ஆறு கூட்டமைப்புகளைச் சேர்ந்த 28 பிரதிநிதிகள், எட்டு துணைத் தலைவர்கள் மற்றும் தலைவர் இன்ஃபான்டினோ ஆகியோரைக் கொண்டதாகும்.</p><p></p><p> </p><p>ஃபிஃபா (FIFA) விதிகளின்படி, 37 கவுன்சில் உறுப்பினர்களில் 50 சதவீதத்தினரோ அல்லது 19 உறுப்பினர்களோ முன்வைக்கும் தீர்மானம் ஒரு சிறப்புப் பொதுக் கூட்டத்தை (EGM) கூட்ட வழிவகுக்கும்.
</p><p>புதிய உலகக் கிண்ணம் செயல்பாட்டு நிறுவனத்தின் 20 சதவீதப் பங்குகளை த்ரைவ் கேப்பிட்டல் நிறுவனத்திற்கு விற்க இன்பான்டினோ ரகசியமாக முன்மொழிந்திருந்தார் என்பது வெளிவருவதற்கு முன்பே, கவுன்சில் உறுப்பினர்கள் ஏற்கனவே இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டியிருந்ததாகவே கூறப்படுகிறது. </p><p>த்ரைவ் கேப்பிட்டல் என்பது ஜனாதிபதி ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் தம்பியான ஜோசுவா குஷ்னரால் நிறுவப்பட்ட ஒரு முதலீட்டு நிறுவனமாகும்.</p><p>
Folarin Balogun விவகாரம் குறித்து ஒரு சுதந்திரமான விசாரணைக்கு இன்ஃபான்டினோ ஒப்புதல் அளிக்க மறுத்தால், அவர் பதவி விலக வேண்டும் என்று அதிருப்தியடைந்த கவுன்சில் உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்தனர்.</p><h2>ஆசியாவின் ஆதரவு தேவை</h2><p> </p><p>இதன் விளைவாக, ட்ரம்பின் அழுத்தத்திற்குப் பணிந்து ஃபிஃபா அரசியல் நடுநிலைமை விதிகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, நார்வே கால்பந்து சங்கம் சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தது. </p><p>இந்த நிலையில், 37 கவுன்சில் உறுப்பினர்களில் 14 பேர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இன்ஃபான்டினோ மீது உண்மையான அழுத்தத்தை ஏற்படுத்த ஆசியாவின் ஆதரவு தேவைப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5af80ed6-8558-425e-b954-668f6b85cc29/26-6a6f12dc5a1a1.webp' /></p><p> </p><p>இதனிடையே, இன்ஃபான்டினோ தனது மறுதேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்கும் 200-க்கும் மேற்பட்ட ஆதரவுக் கடிதங்களை ஏற்கனவே பெற்றுள்ளார்; இருப்பினும், அந்தக் கடிதங்கள் திரும்பப் பெறப்படலாம் என்பதோடு, போட்டியிட விரும்பும் மற்ற வேட்பாளர்கள் தங்கள் விருப்பத்தை அறிவிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 18 வரை உள்ளது. </p><p>மேலும், இன்ஃபான்டினோவைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான மற்றொரு சாத்தியமான வழி, தலைவர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தூண்டுவதற்காக ஒரு அவசர ஃபிஃபா கூட்டத்தைக் கூட்டுவதாகும்; 43 சங்கங்கள் கடிதங்களைச் சமர்ப்பித்தால் இந்த வாக்கெடுப்பு கூட்டப்படலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T22:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-bus-fares-changing-1785644467"></link>
            <id>https://news.lankasri.com/article/england-bus-fares-changing-1785644467</id>
            <summary type="text">இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இலவசப் பயணம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.</p><h2>இலவசப் பயணம்</h2><p>
</p><p>பொதுவாக, ஆண்டு முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும், அரசு ஓய்வூதியம் பெறும் வயதை (66) எட்டிய பெரியவர்களும் உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/febd4d21-3d7c-480f-b126-10f81dab84f0/26-6a6ec8f995142.webp' /></p><p> </p><p>அதேவேளையில், லண்டனுக்கு வெளியே 5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் 2 பவுண்டுகள் அல்லது அதற்கும் குறைவான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். </p><p>ஆனால், ஆகஸ்ட் 1 முதல் இம்மாத இறுதி வரை, இத்திட்டத்தில் பங்கேற்கும் பேருந்துகளில் 15 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் வரம்பற்ற இலவசப் பயணத்தை மேற்கொள்ள முடியும். </p><p>இங்கிலாந்தில் உள்ள குடும்பங்களை வெகுவாகப் பாதித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் 100 மில்லியன் பவுண்டு மதிப்பிலான மிகப்பெரிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாகவே, மே மாதத்தில் அரசாங்கத்தால் இந்த இலவசப் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>இதில் மிகச் சிறந்த விடயம் என்னவென்றால், இதைப் பயன்படுத்திக்கொள்ள எந்தவிதப் பதிவும் தேவையில்லை; 15 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் உடனடியாக இதில் ஈடுபடத் தொடங்கலாம். </p><p>இந்தத் திட்டமானது, மேற்கு இங்கிலாந்து முழுவதும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தைப் போன்றது. 'கிட்ஸ் கோ ஃப்ரீ' (Kids Go Free) என்ற இந்த முன்முயற்சியானது, கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் உள்ளிட்ட பாடசாலை விடுமுறை நாட்களில், </p><p>பாத் &amp; நார்த் ஈஸ்ட் சோமர்செட், பிரிஸ்டல், நார்த் சோமர்செட் மற்றும் சவுத் க்ளௌசெஸ்டர் ஆகிய பகுதிகளில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16eb8077-c759-4ed3-85da-7131e2d1811c/26-6a6ec8f7ed013.webp' /></p><p> </p><p>மேற்கு இங்கிலாந்தின் லேபர் கட்சி மேயரான ஹெலன் காட்வின் (Helen Godwin) இது தொடர்பில் தெரிவிக்கையில், Kids Go Free திட்டம் இதுவரை 1.4 மில்லியன் இலவசப் பயணங்களை வழங்கியுள்ளது என்றார்.</p><h2>2 பவுண்டுகளாக மாற்றம்</h2><p> </p><p>இந்த நிலையில், ஒரு பயணத்திற்கு 1.50 பவுண்டுகள் கட்டணம் செலுத்தி வாரந்தோறும் சென்று வரும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, இந்த இலவச பேருந்துத் திட்டத்தின் மூலம் தோராயமாக 27 பவுண்டுகள் சேமிக்க முடியும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. </p><p>ஒரு குழந்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம் என்பதுடன், எந்த வரம்பும் இருக்காது என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>நாடு முழுவதும் பயணக் கட்டணங்கள் மாறுபட்டாலும், இங்கிலாந்தில் சராசரி பேருந்துக் கட்டணம் பொதுவாக 3 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இருப்பினும், 2027 ஜனவரியில் இது 2 பவுண்டுகளாக மாற்றப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/354f68e6-1117-4168-9297-5a798ccd02df/26-6a6ec8f8e2fca.webp' /></p><p> </p><p>லண்டனுக்கு வெளியே, பெரும்பாலான தனிப் பயணச் சீட்டுகளின் விலை 1.50 பவுண்டுகள் முதல் 2 பவுண்டுகள் வரை இருக்கும். ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசப் பேருந்துப் பயணம் என்பது, </p><p>பெற்றோர்கள் வெளியூர் பயணங்களைத் திட்டமிடவும், அன்புக்குரியவர்களைச் சந்திக்கவும், விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் வழிவகுக்கும் என்று கூறியுள்ள போக்குவரத்துச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர், </p><p>குடும்பங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் குறைப்பதற்கு இந்த முயற்சி இன்றியமையாதது எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T22:01:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[வில்ட்ஷயரில் அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி: குற்றவாளிக்கு உதவிய இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-wiltshire-fatal-shooting-2-get-arrested-1785701665"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-wiltshire-fatal-shooting-2-get-arrested-1785701665</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வில்ட்ஷயர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டிராவலர் தளத்தில் துப்பாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வில்ட்ஷயர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>டிராவலர் தளத்தில் துப்பாக்கிச்சூடு</h2><p>
ஞாயிற்றுக்கிழமை காலை பிரித்தானியாவின் வில்ட்ஷயர் (Wiltshire) பகுதியில் உள்ள டிராவலர் தளத்தில்(Traveller site)&nbsp; அரங்கேறிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளார்.</p><p> துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்பாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு தேவையான மருத்துவ உதவிகளை செய்தனர்.</p><p> இருப்பினும் துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட பலத்த காயத்தால் பாதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2329b364-c1c0-4b97-9835-cbb7506ef0d7/26-6a6fa52309099.webp' /></p><p></p><h2> இருவர் கைது</h2><p>இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களான 70வது வயதுடைய நபர் மற்றும் 40 வயதுடைய பெண் ஒருவர் என இரண்டு பேர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்டவர்கள் மீது, துப்பாக்கி வைத்திருந்தல், குற்றவாளிக்கு உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும் தற்போது அவர்களிடம் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக துப்பறிவாளர்கள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> வில்ட்ஷயரின் டிராவலர் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தேகத்திற்குரிய நடமாட்டம் இருந்ததை யாரும் கண்டிருந்தால் அல்லது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு காவல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T20:14:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதி கட்டத்தை எட்டிய ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தை: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அப்பாஸ் அராக்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-oman-negotiation-goes-well-mins-says-1785700394"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-oman-negotiation-goes-well-mins-says-1785700394</id>
            <summary type="text">ஈரான் - ஓமன் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் - ஓமன் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><h2> ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தை</h2><p>
ஹார்முஸ் விவகாரம், அமெரிக்கா - இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் பிராந்திய பதற்றம் தொடர்பான ஈரான் - ஓமன் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p>இருநாடுகளும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவது குறித்து அமைச்சர் அப்பாஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaca6974-ec5e-431a-80c7-b7d0b2655005/26-6a6fa02c03684.webp' /></p><h2> இருதரப்பு நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை</h2><p>
மேலும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பகேபி, இந்த பேச்சுவார்த்தை இருதரப்பு நலன் தொடர்புடையதாக மட்டுமே இருந்தது. இதில் வெளித்தரப்புகள் குறித்து எந்தவொரு பேச்சுக்கும் இடமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p> ஓமன் உடனான பரஸ்பர உடன்பாடு மற்றும் ஈரானுக்கு நல்லது ஏற்படும் ஒரு பாதையை தேடி இந்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பகேபி IRIB நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.</p><p> இதில், ஹார்முஸ் விவகாரம் மற்றும் அதன் போக்குவரத்து உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதா? என்பது குறித்து எந்தவொரு தெளிவான பதிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T19:53:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏதென்ஸில் சூட்கேசில் சடலமாக அடைக்கப்பட்ட பிரித்தானிய பெண்: கொலையாளி சிக்கியது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scotland-woman-body-in-athens-suspect-arrested-1785692643"></link>
            <id>https://news.lankasri.com/article/scotland-woman-body-in-athens-suspect-arrested-1785692643</id>
            <summary type="text">ஏதென்ஸில் பிரித்தானிய பெண் கொலை வழக்கில் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பெண்கிரீஸ் நாட்டின் தலைநகரான எதென்ஸி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏதென்ஸில் பிரித்தானிய பெண் கொலை வழக்கில் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பெண்</h2><p>கிரீஸ் நாட்டின் தலைநகரான எதென்ஸின் கிப்செலி(Kypseli) பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் கிடந்த சூட்கேஸில் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.</p><p>விசாரணையின் போது சூட்கேசில் சடலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தவர் ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பகுதியை சேர்ந்த 38 வயது எலிசபெத்-ஜேன் ராஸ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d3bc42-f44c-487c-9a61-9b7000681158/26-6a6f81e56e116.webp' /></p><p>மேலும் அவர் உயிரிழந்து 5 முதல் 7 நாட்களுக்கு பிறகே சூட்கேஸில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> உள்ளூர் ஊடகத்தின் தகவல்படி, எலிசபெத்-ஜேன் ராஸ் ஸ்காட்லாந்தில் இருந்து அமெரிக்கா வழியாக சைப்ரஸ் மூலமாக கடந்த ஜூன் 29ம் திகதி கிரீஸ் நாட்டிற்கு வந்தடைந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 26 வயதுடைய நபர் கைது</h2><p>அவர் உயிரிழந்த சில நாட்களுக்கு பிறகு அவரது வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3863aaf8-11ed-4926-8773-eddb0805b1af/26-6a6f81e4bc446.webp' /></p><p> அத்துடன் அவரது செல்போனில் இருந்து குறுஞ்செய்தி ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபரான வெளிநாட்டைச் சேர்ந்த 26 வயது நபர் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> அவர் மீது கொலை, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்ட மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய ஆறுதல் வழங்கப்பட்டு வருவதாக பிரிட்டன் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T17:53:33+00:00</updated>
        </entry>
    </feed>
