<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-02T21:39:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[வில்ட்ஷயரில் அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி: குற்றவாளிக்கு உதவிய இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-wiltshire-fatal-shooting-2-get-arrested-1785701665"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-wiltshire-fatal-shooting-2-get-arrested-1785701665</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வில்ட்ஷயர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டிராவலர் தளத்தில் துப்பாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வில்ட்ஷயர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>டிராவலர் தளத்தில் துப்பாக்கிச்சூடு</h2><p>
ஞாயிற்றுக்கிழமை காலை பிரித்தானியாவின் வில்ட்ஷயர் (Wiltshire) பகுதியில் உள்ள டிராவலர் தளத்தில்(Traveller site)&nbsp; அரங்கேறிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளார்.</p><p> துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்பாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு தேவையான மருத்துவ உதவிகளை செய்தனர்.</p><p> இருப்பினும் துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட பலத்த காயத்தால் பாதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2329b364-c1c0-4b97-9835-cbb7506ef0d7/26-6a6fa52309099.webp' /></p><p></p><h2> இருவர் கைது</h2><p>இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களான 70வது வயதுடைய நபர் மற்றும் 40 வயதுடைய பெண் ஒருவர் என இரண்டு பேர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்டவர்கள் மீது, துப்பாக்கி வைத்திருந்தல், குற்றவாளிக்கு உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும் தற்போது அவர்களிடம் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக துப்பறிவாளர்கள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> வில்ட்ஷயரின் டிராவலர் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தேகத்திற்குரிய நடமாட்டம் இருந்ததை யாரும் கண்டிருந்தால் அல்லது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு காவல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T20:14:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதி கட்டத்தை எட்டிய ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தை: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அப்பாஸ் அராக்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-oman-negotiation-goes-well-mins-says-1785700394"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-oman-negotiation-goes-well-mins-says-1785700394</id>
            <summary type="text">ஈரான் - ஓமன் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் - ஓமன் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><h2> ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தை</h2><p>
ஹார்முஸ் விவகாரம், அமெரிக்கா - இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் பிராந்திய பதற்றம் தொடர்பான ஈரான் - ஓமன் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p>இருநாடுகளும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவது குறித்து அமைச்சர் அப்பாஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaca6974-ec5e-431a-80c7-b7d0b2655005/26-6a6fa02c03684.webp' /></p><h2> இருதரப்பு நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை</h2><p>
மேலும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பகேபி, இந்த பேச்சுவார்த்தை இருதரப்பு நலன் தொடர்புடையதாக மட்டுமே இருந்தது. இதில் வெளித்தரப்புகள் குறித்து எந்தவொரு பேச்சுக்கும் இடமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p> ஓமன் உடனான பரஸ்பர உடன்பாடு மற்றும் ஈரானுக்கு நல்லது ஏற்படும் ஒரு பாதையை தேடி இந்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பகேபி IRIB நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.</p><p> இதில், ஹார்முஸ் விவகாரம் மற்றும் அதன் போக்குவரத்து உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதா? என்பது குறித்து எந்தவொரு தெளிவான பதிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T19:53:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேஷியா பயணிகள் கப்பலில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு: 41 பேரை காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesian-ferry-fire-5-dead-41-missing-1785695057"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesian-ferry-fire-5-dead-41-missing-1785695057</id>
            <summary type="text">இந்தோனேஷியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பயணிகள் கப்பலில் தீ விபத்து
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேஷியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> பயணிகள் கப்பலில் தீ விபத்து</h2><p>
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பலில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p> இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் வரை பலியாகியுள்ளனர். </p><p>கிட்டத்தட்ட 41 பேரின் நிலைமை இதுவரை என்னவென்று தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7cf46eb-22df-4d0c-9d33-c1fd80ee72e2/26-6a6f8b536e669.webp' /></p><p> காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.</p><p>முடியரா செந்தோசா 2(Mutiara Sentosa 2) என்ற பெயர் கொண்ட இந்த கப்பலில், விபத்தின் போது பயணிகள், பணியாளர்கள் என கிட்டத்தட்ட 271 பேர் பயணம் செய்துள்ளனர்.</p><p> விபத்தில் சிக்கியுள்ள இந்த கப்பல், கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுராபாயாவில் இருந்து தெற்கு சுலாவசியில் உள்ள மகாசக்கர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2> மீட்பு பணிகள் தீவிரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab27dc03-4ec2-46f4-87af-ed33df4b3e8e/26-6a6f8b5423106.webp' /></p><p>கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர கால மீட்பு படையினர் மற்றும் அருகிலிருந்த கப்பல்கள் என அனைவரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்குள் 225 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.</p><p> மேலும் உயிரிழந்த 5 பேரின் உடலையும் கப்பலில் இருந்து மீட்டெடுத்துள்ளனர். காணாமல் போயுள்ள 41 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.</p><p>அதே சமயம் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான உண்மையை கண்டறிய விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p> &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-02T18:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏதென்ஸில் சூட்கேசில் சடலமாக அடைக்கப்பட்ட பிரித்தானிய பெண்: கொலையாளி சிக்கியது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scotland-woman-body-in-athens-suspect-arrested-1785692643"></link>
            <id>https://news.lankasri.com/article/scotland-woman-body-in-athens-suspect-arrested-1785692643</id>
            <summary type="text">ஏதென்ஸில் பிரித்தானிய பெண் கொலை வழக்கில் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பெண்கிரீஸ் நாட்டின் தலைநகரான எதென்ஸி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏதென்ஸில் பிரித்தானிய பெண் கொலை வழக்கில் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பெண்</h2><p>கிரீஸ் நாட்டின் தலைநகரான எதென்ஸின் கிப்செலி(Kypseli) பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் கிடந்த சூட்கேஸில் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.</p><p>விசாரணையின் போது சூட்கேசில் சடலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தவர் ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பகுதியை சேர்ந்த 38 வயது எலிசபெத்-ஜேன் ராஸ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d3bc42-f44c-487c-9a61-9b7000681158/26-6a6f81e56e116.webp' /></p><p>மேலும் அவர் உயிரிழந்து 5 முதல் 7 நாட்களுக்கு பிறகே சூட்கேஸில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> உள்ளூர் ஊடகத்தின் தகவல்படி, எலிசபெத்-ஜேன் ராஸ் ஸ்காட்லாந்தில் இருந்து அமெரிக்கா வழியாக சைப்ரஸ் மூலமாக கடந்த ஜூன் 29ம் திகதி கிரீஸ் நாட்டிற்கு வந்தடைந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 26 வயதுடைய நபர் கைது</h2><p>அவர் உயிரிழந்த சில நாட்களுக்கு பிறகு அவரது வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3863aaf8-11ed-4926-8773-eddb0805b1af/26-6a6f81e4bc446.webp' /></p><p> அத்துடன் அவரது செல்போனில் இருந்து குறுஞ்செய்தி ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபரான வெளிநாட்டைச் சேர்ந்த 26 வயது நபர் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> அவர் மீது கொலை, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்ட மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய ஆறுதல் வழங்கப்பட்டு வருவதாக பிரிட்டன் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T17:53:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வன பாதுகாப்புக்கான நிதியை குறைக்கும் சுவிட்சர்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/switzerland-cuts-forest-climate-funding-1785687298"></link>
            <id>https://news.lankasri.com/article/switzerland-cuts-forest-climate-funding-1785687298</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்து அரசு வன பாதுகாப்புக்கான நிதியை குறைத்துள்ளது.

சுவிட்சர்லாந்து அரசு, வன பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை தழுவிய திட்டங்களுக்கு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்து அரசு வன பாதுகாப்புக்கான நிதியை குறைத்துள்ளது.
</p><p>
சுவிட்சர்லாந்து அரசு, வன பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை தழுவிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதியை 2027 முதல் குறைக்க தீர்மானித்துள்ளது.</p><p>

இந்த முடிவு, நாட்டில் கடும் வெப்ப அலைகள் மற்றும் வறட்சி காரணமாக காடுகள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எடுக்கப்பட்டதால், பரவலான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283360b1-16f2-4a29-b267-1e786e6ded7e/26-6a6f6d03e884f.webp' /></p><p>2019-இல் சுவிஸ் பாராளுமன்றம், காடுகளை வெப்பம் மற்றும் வறட்சிக்கு எதிராக பாதுகாக்க CHF 100 மில்லியன் நிதியை ஒதுக்கியது.

இதன் மூலம், அதிக வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கக்கூடிய புதிய மரவகைகள் நடவு செய்யப்பட்டன.</p><p>

2023-இல் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டாலும், நிதி மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டது. இப்போது, அரசின் புதிய நிதி திட்டத்தில் இந்த நிதி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p>சுவிஸ் சுற்றுச்சூழல் அமைச்சரான ஆல்பர்ட் ரோஸ்டி, இந்த நிதியை Federal Office for the Environment (FOEN)-இன் நிதி திட்டத்திலிருந்து நீக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், Conference on Forests, Wildlife and Landscape (CFP) அமைப்பு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
</p><h2>
நிபுணர்கள் எச்சரிக்கை</h2><p>

ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகரித்து, காடுகளில் தீப்பற்றும் அபாயம் உயரும் நிலையில், இந்த முடிவு மிகவும் தவறான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p>
ஸ்டீஃபன் முல்லர், மையக் கட்சியின் உறுப்பினரும் CFP குழுவின் உறுப்பினருமான இவர், “வன மேலாண்மை செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், நிதி குறைப்பு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.
</p><p>
இந்த முடிவு, சுவிட்சர்லாந்தின் காலநிலை மாற்றத்திற்கான முயற்சிகள் மற்றும் வன பாதுகாப்பு திட்டங்கள் மீது எதிர்காலத்தில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T16:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் நடைபெற்ற இசை திருவிழா: 17 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/teen-girl-passed-away-at-kendal-music-festival-1785687001"></link>
            <id>https://news.lankasri.com/article/teen-girl-passed-away-at-kendal-music-festival-1785687001</id>
            <summary type="text">பிரித்தானியாவில் நடைபெற்ற இசை திருவிழாவில் 17 வயது சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசை திருவிழாவில் சோகம்லேக் டிஸ்ட்ரிக்ட்(Lake District...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் நடைபெற்ற இசை திருவிழாவில் 17 வயது சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> இசை திருவிழாவில் சோகம்</h2><p>லேக் டிஸ்ட்ரிக்ட்(Lake District) பகுதியில் நடைபெற்ற கென்டல் காலிங்(Kendal Calling) இசைத் திருவிழாவில் பங்கேற்ற 17 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவக் கோளாறு காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.13 மணிக்கு கும்ப்ரியாவில்(Cumbria) நடைபெற்ற இசைத் திருவிழாவில் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fcd9500-f5a9-48c5-a241-3b7ae3c6735a/26-6a6f6bdaa42a1.webp' /></p><p> இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பாதிக்கப்பட்டவரை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p> சிறுமி உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b30e2d1-83f5-4673-8397-189ca341c2eb/26-6a6f6bdb578d0.webp' /></p><p> மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையையும் பொலிஸார் தொடங்கியுள்ளனர்.</p><p>குறிப்பாக, சிறுமி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட போது மீட்பு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்ற பெண்கள் குழுவினரை தொடர்பு கொள்ள விசாரணை அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T16:10:11+00:00</updated>
        </entry>
    </feed>
