<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-15T04:24:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரி-மேகன் தம்பதியினர் அதிரடி: குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் எடுத்த முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-meghan-relocates-children-to-new-school-1789428309"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-meghan-relocates-children-to-new-school-1789428309</id>
            <summary type="text">Harry Meghan Relocates children to new School: பாதுகாப்பு காரணங்களால் ஹரி-மேகன் தம்பதி தங்களது பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்றியுள்ளனர்.இங்கிலாந்துக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry Meghan Relocates children to new School: பாதுகாப்பு காரணங்களால் ஹரி-மேகன் தம்பதி தங்களது பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்றியுள்ளனர்.</p><h2>இங்கிலாந்துக்கு திரும்பிய ஹரி-மேகன் தம்பதி</h2><p>முக்கிய ராஜ கடமைகளில் இருந்து விலகிய சசெக்ஸ் இளவரசரான ஹரி மற்றும் இளவரசி மேகன் தம்பதி 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினர்.</p><p> பெரும்பாலும் தனியாகவும், மிகவும் அரிதாகவே பிரித்தானியாவுக்கு வந்து சென்ற சசெக்ஸ் தம்பதி, தற்போது திரும்பவும் முழுமையாக பிரித்தானியாவில் குடியேறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4d80c80-ebcb-4d7e-9ed7-ce12e9146228/26-6aa88256f103f.webp' /></p><p> இந்த நீண்ட கால திட்டம் தொடர்பாக பொது அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு மன்னர் சார்லஸுக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.</p><p> ராஜாங்க குடியிருப்புகளில் இருந்து வெளியே தங்கியிருக்கும் இந்த தம்பதி, தற்போது அரசு சார்பிலான பொறுப்புகளில் எதிலும் இல்லாத ராஜ குடும்ப உறுப்பினர்களாக உள்ளனர்.</p><p></p><p> சசெக்ஸ் தம்பதி கடந்த வாரம் தங்களது குழந்தைகளான 7 வயது ஆர்ச்சி மற்றும் 5 வயது லிலிபெட் இருவரையும் புதிய கல்வி நிலையத்தில் சேர்த்தனர்.</p><h2> குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றிய சசெக்ஸ் தம்பதி</h2><p>
இந்நிலையில் பாதுகாப்பு மதிப்பீடுகள் மற்றும் பள்ளிக்கு செல்வதற்கான நீண்ட தூரம் மற்றும் போக்குவரத்து சவால்கள் காரணமாக சசெக்ஸ் தம்பதி தங்களது குழந்தைகளை புதிய கல்வி நிலையத்திற்கு மாற்றியுள்ளனர்.</p><p> சசெக்ஸ் தம்பதியினரின் தற்போதைய இருப்பிடம் மற்றும் பள்ளிகளின் விவரங்கள் ஆகியவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.</p><p> தினசரி நடைமுறை சிக்கல்களை மனதில் கொண்டு மட்டுமே இந்த மாற்றம் மேற்கொண்டு இருப்பதாகவும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் அர்ப்பணிக்கு சசெக்ஸ் தம்பதி நன்றி தெரிவித்து இருப்பதாக மேகனின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03e743a-6a27-49c1-9020-2da03b201761/26-6aa88257ac3dc.webp' /></p><p> இந்த இடமாற்றம் முந்தைய பள்ளியின் தரத்தையோ அல்லது கவனிப்பு குறையையோ மதிப்பிடுவதற்கானது இல்லை என்பதையும் தம்பதி தெளிவுபடுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T00:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்ணிவெடிகளில் சிக்கிய எண்ணெய் கப்பல்: ஹார்முஸ் ஜலசந்தியில் முழுமையாக தீக்கிரையான அவலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/oil-tanker-explodes-after-struck-naval-mine-1789425942"></link>
            <id>https://news.lankasri.com/article/oil-tanker-explodes-after-struck-naval-mine-1789425942</id>
            <summary type="text"> Oil Tanker Explodes after struck naval mine: ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட விபத்தில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்று தீப்பிடித்தது. ஹார்முஸ் ஜலசந்தியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p> Oil Tanker Explodes after struck naval mine: ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட விபத்தில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்று தீப்பிடித்தது.</p><h2> ஹார்முஸ் ஜலசந்தியில் விபத்து</h2><p>ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கு பகுதியில் “எல் கையா”(El Gaia) என்ற பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் ஒன்று தடை செய்யப்பட்ட கடற்பகுதிக்குள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்த கண்ணிவெடிகளில் மோதி பெரும் விபத்தில் சிக்கியது.</p><p> கண்ணிவெடிகள் வெடித்ததில் எண்ணெய் கப்பலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு தீ பரவியது.</p><p>வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அனைத்து தீயணைப்பு முயற்சிகளும் தோல்வியடைந்ததாக திங்கட்கிழமை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/798aa03a-078a-42a8-987d-ecb7cc9f040e/26-6aa8791857ec3.webp' /></p><p></p><p> மீட்பு முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சுமார் 180 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் தற்போது முழுமையாக தீயில் எரிந்து வருகிறது.</p><p> ஈரானிய கடற்படை இதுவரை இந்த கப்பல் விபத்து தொடர்பான துல்லியமான நேரத்தை வெளியிடவில்லை.</p><h2> கப்பல் மற்றும் பணியாளர்கள் நிலைமை</h2><p>தரவுகளின் படி, “எல் கையா” கப்பல் சுமார் 48,000 டன் எடை கொள்ளளவு கொண்டது என்றும் விபத்து ஏற்பட்ட கப்பலில் இந்திய மாலுமிகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> இதுவரை 13 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான மாலுமி ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-14T23:26:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI-க்கு எதிரான அபத்தமான சதி! செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஒழுங்குமுறைக்கு டிரம்ப் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966</id>
            <summary type="text">Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2> ஆந்த்ரோபிக் CEO-யின் எச்சரிக்கை</h2><p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி(Dario Amodei) சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.</p><p> செயற்கை நுண்ணறிவுத் துறையின் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் மனித குலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடும் அபாயம் இருப்பதாகவும் டாரியோ அமோடி எச்சரித்து இருந்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We Must Pace the Frontier: I’ve written a new essay on why the AI industry should slow down, with a three-part plan for doing so.<br><br>Anthropic is unilaterally committing to the first of these steps. We’ll provide third-party evaluators with permanent, employee-level access to our…</p>&mdash; Dario Amodei (@DarioAmodei) <a href="https://x.com/DarioAmodei/status/2098773920774074715?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி முன்வைத்த செயற்கை நுண்ணறிவுக்கான கூடுதல் பாதுகாப்பு தேவைகளை ஓபன் ஏஐ(Open AI) நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோரும் அங்கீகரித்து இருந்தனர்.</p><h2> டிரம்பின் நிலைப்பாடு</h2><p>
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> &nbsp;ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி முன்வைத்த கடுமையான தடைகள் தொடர்பான தேவைகள் மற்றும் வாதங்களை டிரம்ப் கடுமையாக நிராகரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a780ac8-aa70-4014-ab6c-4826558b588a/26-6aa84a4fa7e4c.webp' /></p><p> இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட கருத்தில், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி(Sick Conspiracy) என்று தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் அந்த பதிவில், ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி-வை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> குறிப்பாக, டாரியோ அமோடியை கிண்டல் செய்யும் வகையில், “அவர் தன்னை பரிசுத்தமான சிறிய தேவதை போல் காட்டிக் கொள்வதாக” குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T22:46:28+00:00</updated>
        </entry>
    </feed>
