<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-06T12:58:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியின் புதிய பாதுகாப்பு கவசத் திட்டம்: வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-announces-multi-layered-security-shield-1788696446"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-announces-multi-layered-security-shield-1788696446</id>
            <summary type="text">அதிகரித்து வரும் வான்வழி பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தொடர்ந்து ஜேர்மனி பாதுகாப்பு கவசத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. ஜேர்மனியின் பாதுகாப்பு கவச திட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகரித்து வரும் வான்வழி பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தொடர்ந்து ஜேர்மனி பாதுகாப்பு கவசத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.</p><h2> ஜேர்மனியின் பாதுகாப்பு கவச திட்டம்</h2><p>நாட்டின் லிப்ஜிக் ஹாலே(Leipzig-Halle Airport) விமான நிலையம் ட்ரோன் தாக்குதலுக்காக குறிவைக்கப்பட்டதை அடுத்து, அதிகரித்து வரும் வான்வழி மற்றும் டிஜிட்டல் தாக்குதலை சமாளிக்க ஜேர்மனி வலுவான பல அடுக்கு பாதுகாப்பு கவசத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.</p><p> இந்த பல அடுக்கு பாதுகாப்பு கவசமானது நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகள், பெரிய நகரங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் ஆகியவற்றை வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் உளவு வேலைகளில் இருந்து பாதுகாக்கும் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டொப்ரிண்ட் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74dc3118-b4e1-4635-b2a3-deb9bce73883/26-6a9d577fc250b.webp' /></p><p> இந்த புதிய திட்டத்தின் கீழ் ட்ரோன் தடுப்பு பிரிவுகள் நாட்டின் பல பகுதிகளுக்கு விரிவாக்கப்படுகின்றன.</p><p>வான்வழி அச்சுறுத்தல்களை சமாளிப்பதோடு, டிஜிட்டல் ஹேக்கிங் முயற்சிகளை கட்டுப்படுத்த தேசிய இணைய பாதுகாப்பு கவசம் ஒன்றையும் அறிமுகப்படுத்த ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.</p><p></p><p>இதில் செயற்கை நுண்ணறிவு(AI), வீடியோ கண்காணிப்பு மற்றும் பயோமெட்ரிக் ஆகிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு சந்தேகத்திற்குரிய நபர்களை முன்கூட்டியே அடையாளம் காண அரசு திட்டமிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6657113-d451-4e8f-ad2c-b2883bd38061/26-6a9d5780761a1.webp' /></p><p> இது அரசு துறை மற்றும் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களை கட்டுப்படுத்த இந்த புதிய முன்னெடுப்பானது எடுக்கப்பட்டுள்ளது.</p><p> ஆகஸ்ட் 4ம் திகதி ஜேர்மனியின் லிப்ஜிக் ஹாலே விமான நிலையத்தின் மீது ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அடுத்தே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> இந்த சம்பவத்திற்கு ரஷ்யா தான் காரணம் என்று ஜேர்மனியின் உளவுத்துறை குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T12:48:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஜியானி இன்ஃபான்டினோ: அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய FIFA]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fifa-gianni-infantino-will-run-for-re-election-1788697863"></link>
            <id>https://news.lankasri.com/article/fifa-gianni-infantino-will-run-for-re-election-1788697863</id>
            <summary type="text">Gianni Infantino will run for re-election FIFA Confirms: அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஜியானி இன்ஃபான்டினோ போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Gianni Infantino will run for re-election FIFA Confirms: அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஜியானி இன்ஃபான்டினோ போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> சர்ச்சையில் சிக்கிய பிஃபா தலைவர்</h2><p>கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் டிக்கெட் விற்பனை தொடர்பில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது.</p><p>இந்த சர்ச்சையை தொடர்ந்து பிஃபா தலைவர் நேரடியாக எந்தவொரு ஊடகங்களையும் சந்திக்காமல் இருந்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b82a8841-c504-42ab-b890-d69d67afe900/26-6a9d5d095b045.webp' /></p><p>இந்நிலையில் சனிக்கிழமை போலந்து நாட்டின் கட்டோவிஸ்(Katowice) நகரில் நடைபெறும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை போட்டியின் தொடக்க விழாவிற்கு வருகை தந்த பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino) வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.</p><p>அப்போது பிஃபாவில் அவரது எதிர்காலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கால்பந்து விளையாட்டை வளர்ப்பதும், உலகளவிலான கால்பந்து தொடர்களை மேம்படுத்துவது தான் தன்னுடைய எதிர்காலம் என்று பதிலளித்தார்.</p><p> மேலும் டிக்கெட் விற்பனை சர்ச்சை தொடர்பாக நேரடியாக பதிலளிக்க தவிர்த்த இன்ஃபான்டினோ, “ இன்று இதற்கான நேரம் அல்ல” என்றும் “உரிய நேரத்தில் பல விஷயங்களை சொல்வதற்கு இருக்கும் என்று தெரிவித்தார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e8271b-c28a-4af4-8365-b04995e4429a/26-6a9d5d0a13641.webp' /></p><h2> பிஃபா வெளியிட்ட அறிவிப்பு</h2><p>இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் பிஃபா தேர்தலில் ஜியானி இன்ஃபான்டினோ மீண்டும் போட்டியிடுவார் என்பதை பிஃபா(FIFA) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>அவரது நீண்ட பதவி காலம் குறித்து பல கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T12:31:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தில் புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rumesh-tharanga-pathirage-new-record-in-belgium-1788695382"></link>
            <id>https://news.lankasri.com/article/rumesh-tharanga-pathirage-new-record-in-belgium-1788695382</id>
            <summary type="text">Rumesh tharanga pathirage create history in javelin 2026: டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இலங்கையின் ரூமேஷ் பத்திரகே தரங்க புதிய வரலாறு படைத்தார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rumesh tharanga pathirage create history in javelin 2026: டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இலங்கையின் ரூமேஷ் பத்திரகே தரங்க புதிய வரலாறு படைத்தார். </p><p>

பெல்ஜியத்தில் நடந்த மைமண்ட் லீக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் ரூமேஷ் பத்திரகே தரங்க புதிய வரலாறு படைத்தார்.&nbsp;</p><h2>ஆடவர் ஈட்டி எறிதல்</h2><p>
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் டயமண்ட் லீக் இறுதிப் போட்டி நடந்தது.&nbsp;ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில்&nbsp;இலங்கை வீரர் ரூமேஷ் தரங்க பத்திரகே&nbsp;பங்கேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f97a28d6-1b6f-431a-8066-a4b7338240cf/26-6a9d545888f6b.webp' />&nbsp;</p><p></p><p>இறுதிப்போட்டி வரை சென்ற அவர், தனது மூன்றாவது முயற்சியில் 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த பட்டத்தை வென்றார்.</p><p> 

இதன்மூலம் டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை ரூமேஷ் தரங்க பத்திரகே (Rumesh Tharanga Pathirage)பெற்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39ddb031-2495-40f6-90a9-79d861286b2a/26-6a9d5457a80c7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:51:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இது வெறும் ஆரம்பம் மட்டுமே... டோவரில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான குழு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dover-anti-migrant-blockade-1788694099"></link>
            <id>https://news.lankasri.com/article/dover-anti-migrant-blockade-1788694099</id>
            <summary type="text">Dover anti-migrant mob warn it&#039;s only the beginning: டோவரில் புலம்பெயர் மக்களுக்கு எதிரான குழு ஒன்று, இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று எச்சரித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Dover anti-migrant mob warn it's only the beginning: டோவரில் புலம்பெயர் மக்களுக்கு எதிரான குழு ஒன்று, இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று எச்சரித்துள்ளது.
</p><p>நேற்று டோவர் துறைமுகத்திற்குள் அத்துமீறி நுழைந்த, முகமூடி அணிந்த குழுவை அரசியல்வாதிகள் கண்டித்துள்ள நிலையில், இது வெறும் ஆரம்பம் தான் என்று போராட்டக்காரர்கள் எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c442894-9ef7-4577-bffd-3d1109579c37/26-6a9d4e56f0f1c.webp' /></p><p>
</p><p>கருப்பு உடை அணிந்த நூற்றுக்கணக்கானவர்கள் பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பான படகு முனையத்தை மறித்ததால், அதைச் சுற்றியுள்ள சாலைகளில் பல மணிநேரப் போக்குவரத்து முடக்கமும் மைல்கணக்கிலான வாகன வரிசைகளும் ஏற்பட்டன. </p><p>இணையத்தில் வெளியான காணொளிகள், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு வேனின் பின்பகுதியிலிருந்து வெளியேறி, பின்னர் நகருக்குள் அணிவகுத்துச் சென்றதைக் காட்டின.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, அவர்கள் படகுப் போக்குவரத்தை நிறுத்துங்கள் போன்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். இந்த நிலையில், அந்தப் குழுவைக் கண்டித்த அரசியல்வாதிகளில் Reform UK கட்சியைச் சேர்ந்த ராபர்ட் ஜென்ரிக் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ஜொனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோரும் அடங்குவர்.</p><p> ஆனால், அந்தக் குழுவின் மீது காவல்துறை மெதுவாக நடவடிக்கை எடுத்ததை டோவர் மாவட்ட மன்றத் தலைவர் கெவின் மில்ஸ் விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c10a0b4-91d9-4744-ab02-c6c4e705d769/26-6a9d4e5646ffd.webp' /></p><p> புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் சிறிய படகுகள் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதால் ஏற்படும் அதிருப்தியைப் புரிந்துகொள்வதாக ஜென்ரிக் கூறினார், ஆனால் முகமூடி அணிந்து மக்கள் போராட்டத்தில் குதிப்பதை தாம் விரும்பவில்லை என்றார். </p><p>இந்த நிலையில், இந்த முகமூடி அணிந்த குழுவைக் களமிறக்கியது Patriot Platform என்ற அமைப்பு என்றே தெரிய வருகிறது. இந்த அமைப்பானது ஆண்டின் தொடக்கத்தில், தீவிர வலதுசாரிச் சிந்தனை கொண்ட சமூக ஊடகப் பிரபலமும் டேனியல் தாமஸ் என்ற இயற்பெயரைக் கொண்டவருமான டேனி டோமோவால் நிறுவப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf23201c-cd8f-4d37-ae02-9691d6e0785f/26-6a9d4e57a67b6.webp' /></p><p> </p><p>இவ்வமைப்பின் நோக்கம் இந்நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதே என்று அவர் முன்னரே அறிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில், தீவிரமான அத்துமீறல் குற்றத்திற்காக தாமஸ் கைது செய்யப்பட்டதோடு, டோவர், ராம்ஸ்கேட் மற்றும் ஃபோல்க்ஸ்டோன் ஆகிய இடங்களுக்குச் செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. </p><p>மேலும் கடந்த மாதம், சட்டப்பூர்வ அனுமதியின்றி டோவர் துறைமுகத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.</p><p> நேற்றைய போராட்டத்தில் காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை; மதிய வேளையில் போராட்டக்காரர்களை டோவர் பிரையரி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். குறைந்தது 100 போராட்டக்காரர்கள் ராம்ஸ்கேட் செல்லும் ரயிலில் ஏறுவதும் தெரிய வந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T11:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவிடம் விளக்கம் கோரும் திபெத்தில் காணாமல் போன யாத்ரீகர்களின் குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/missing-pilgrims-in-tibet-1788690937"></link>
            <id>https://news.lankasri.com/article/missing-pilgrims-in-tibet-1788690937</id>
            <summary type="text">Families of missing pilgrims in Tibet demand answers from China: திபெத்தில் காணாமல் போன யாத்ரீகர்களின் குடும்பத்தினர் சீனாவிடம் விளக்கம் கோருகின்றனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Families of missing pilgrims in Tibet demand answers from China: திபெத்தில் காணாமல் போன யாத்ரீகர்களின் குடும்பத்தினர் சீனாவிடம் விளக்கம் கோருகின்றனர்.
</p><p>பேரழிவு ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகும் இந்தியாவில் பிறந்த பின்லாந்து குடிமகள் உட்பட, திபெத்தில் 261 வெளிநாட்டினர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.</p><h2>மொத்தம் 531 பேர்</h2><p> </p><p>
இந்த விவகாரத்தில் சீன ஆரசாங்கத்தின் பதில்கள் கடும் விரக்தியை ஏற்படுத்துவதாகவே உறவினர்கள் பலர் தெரிவிக்கின்றனர். காணாமல் போயுள்ள உறவினர்கள் விவகாரத்தில், சீனாவுக்கு சென்று முறையிட முடியாத நிலை இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0595951-fc0e-4a87-ae35-1239c276b374/26-6a9d41fb817b9.webp' /></p><p> </p><p>பாதிப்புக்குள்ளானப் பகுதியில் என்ன நடக்கிறது அல்லது அங்குள்ள சூழல் என்ன என்பது குறித்து சீனாவிலிருந்து எந்தத் தகவலும் இல்லை என்றே கூறுகின்றனர். </p><p>கடந்த வாரம் திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு 1,300-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்ததுடன், எல்லைப் பகுதியின் இருபுறமும் 5,600-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. </p><p>திபெத்தில் குறைந்தது 31 பேர் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 531 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.</p><p></p><p> </p><p>ஆனால், காணாமல் போனவர்களின் பல குடும்பங்கள் சீனாவில் இருந்து வெளியாகும் தகவல் மறைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றன; இது அவர்களின் துயரத்தை மேலும் தீவிரமாக்குகிறது. </p><p>இதனிடையே, 
சீன அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதற்காக, திபெத்தில் மாயமாகியுள்ள பிரியங்கா சௌத்ரி என்பவரின் மகளிடமிருந்து டிஎன்ஏ (DNA) மாதிரியைப் பெறுவதற்கு, சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து காவல்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். </p><p>இந்த நிலையில், குற்றச்சாட்டுகள், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான காலக்கெடு, அல்லது திபெத்திய தரப்பில் பயன்படுத்தப்படும் டிஎன்ஏ சேகரிப்பு நெறிமுறைகள் ஆகியவை குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. </p><p>ஆனால், 23 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரகங்களுக்குத் தாங்கள் விளக்கங்களை அளித்து வருவதாகவும்; அத்துடன், வெள்ளம் குறித்த தகவல்களை வெளியிட்ட விதம் வெளிப்படையானதாகவும் உரிய நேரத்தில் அமைந்ததாகவும் திங்களன்று சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>டிஎன்ஏ (DNA) பரிசோதனை</h2><p> </p><p>மேலும், உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக மற்ற நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. </p><p>பேரழிவின் பெரும் பாதிப்புக்குள்ளான நேபாளத்திற்கு, டிஎன்ஏ (DNA) மூலம் அடையாளம் காணும் நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றையும் அனுப்பியுள்ளது.</p><p> நேபாளத்தில், காணாமல் போனவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களைக் காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்; அதேவேளையில், தேடுதல் பணிகளுடன் இணைந்து தீவிர டிஎன்ஏ (DNA) பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p> நேபாளத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள குடிமக்களைக் கொண்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளை, கடந்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்திற்கு சீனா அழைத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8de2d30-4912-47e7-9737-445bf3425e0f/26-6a9d41fc3373e.webp' /></p><p> </p><p>இதில் கலந்துகொண்ட தூதரக அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களை டிஎன்ஏ (DNA) மூலம் அடையாளம் காணும் பணியை எவ்வாறு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது என்பது குறித்த எந்த விவரங்களையும் பெய்ஜிங் பகிர்ந்துகொள்ளவில்லை என்று தெரிவித்தனர். </p><p>மேலும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணவோ அல்லது அவர்களது குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளவோ ​​உதவக்கூடிய, முகத்தை அடையாளம் காணும் படங்கள் உள்ளிட்ட காணொளிகளை, நில எல்லைப் பகுதியின் தங்கள் தரப்பிலிருந்து வழங்க சீனா முன்வரவில்லை என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ள தூதர்கள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T10:32:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தூதர்களுடன் புடின் 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-talks-with-us-envoys-morethan-3-hours-1788690617"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-talks-with-us-envoys-morethan-3-hours-1788690617</id>
            <summary type="text">Vladimir putin talks with us envoys: ரஷ்யாவிற்கு வருகை தந்த அமெரிக்க தூதர்களுடன் ஜனாதிபதி புடின் 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vladimir putin talks with us envoys: ரஷ்யாவிற்கு வருகை தந்த அமெரிக்க தூதர்களுடன் ஜனாதிபதி புடின் 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>

அமெரிக்க தூதர்களான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கிரெம்ளின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.&nbsp;</p><h2>அமெரிக்க தூதர்கள்&nbsp;</h2><p> 

ரஷ்யா மற்றும் உக்ரைன் சமீப வாரங்களில் இரு தரப்பில் இருந்தும் தொலைதூர வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2e04913-595c-44fc-9942-55bbee569168/26-6a9d42d1465ca.webp' /></p><p></p><p>

இந்த சூழலில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகிய தூதர்கள் ரஷ்யாவிற்கு பயணித்துள்ளனர்.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சார்பாக, ஜனவரிக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யாவிற்கு இவர்கள் வருகை புரிந்துள்ளனர். </p><p>

அவர்கள் இருவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அது 3 மணிநேரத்திற்கு மேலாக நடந்ததாகவும், மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் என்றும் கிரெம்ளின் அதிகாரி யூரி உஷாகோவ் தெரிவித்தார். </p><p>

அதே சமயம் இதில் எந்தவொரு முக்கிய முன்னேற்றமும் ஏற்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.</p><h2>

உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பது</h2><p>பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்த பல கருத்துகளை விட்கோஃப், குஷ்னர் முன்வைத்தனர் என்று தெரிவித்தார். ஆனால், அந்த கருத்துக்கள் என்ன என்பது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.</p><p> 

மேலும் அவர் கூறுகையில், "போர்க்களத்தில் ரஷ்யா உண்மையான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும், தனது இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பதாகவும் புடின் அந்த இருவரிடமும் கூறினார்.

உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பது குறித்த வெறும் கருத்துப் பரிமாற்றத்தைத் தாண்டி இந்தப் பேச்சுவார்த்தைகள் சென்றன.
</p><p>
பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் சாத்தியமான பெரிய, பரஸ்பர நன்மை பயக்கும் ரஷ்ய-அமெரிக்கத் திட்டங்கள் குறித்து ஓரளவு விரிவாக விவாதிக்கப்பட்டது.

மொத்தத்தில், இந்தப் பேச்சுவார்த்தைகள் சரியான நேரத்தில் நடந்ததாகவும், இரு தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தன என்று கூறலாம்" என்றார். </p><p> 

இதற்கிடையில், விட்காஃப் மற்றும் குஷ்னர் இருவரும் மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை கீவ்வில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க உள்ளனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8fe707f-7112-46af-a26a-f4144c955db2/26-6a9d42d2193ba.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T10:27:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த 24 மணி நேரத்தில்.,உக்ரைனிய சூறையாடிய ரஷ்யா: 8 பேர் பலி, 69 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-s-overnight-attacks-on-ukraine-8-dead-1788690051"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-s-overnight-attacks-on-ukraine-8-dead-1788690051</id>
            <summary type="text">Russia’s Overnight Attacks on Ukraine 8 Dead: கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia’s Overnight Attacks on Ukraine 8 Dead: கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> ரஷ்யாவின் தொடர் தாக்குதல்</h2><p>உக்ரைனிய நகரங்களை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 69 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைனிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த தாக்குதலில் கார்கிவ் மாகாணத்தில் 4 பேர், கெர்சன் மாகாணத்தில் 2 பேர், ஜபோரிஜியா மாகாணம் மற்றும் மைக்கோலைவ் மாகாணத்தில் தலா ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ccaf274-8ea4-44f4-baa7-86e32bc72984/26-6a9d3e84be09d.webp' /></p><p></p><h2>உக்ரைனை நோக்கி ஏவப்பட்ட ட்ரோன்கள்</h2><p>
இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 108 ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தி இருப்பதுடன், பல S8000 Banderol ஏவுகணைகளையும் தாக்குதலுக்கு ஏவியுள்ளது.</p><p>ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் சேர்த்து கிட்டத்தட்ட 88 வான்வழி தாக்குதல் ஆயுதங்களை உக்ரைனிய விமானப்படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து விட்டதாக தெரிவித்துள்ளது.</p><p> இருப்பினும் 11 வெவ்வேறு இடங்களில் ரஷ்ய ஆயுதங்கள் தங்களது இலக்குகளை அடைந்து தாக்குதல்களை நிறைவேற்றியுள்ளன.</p><p> அத்துடன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் உதிரி பாகங்களும் 7 இடங்களில் விழுந்துள்ளன.</p><p>அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் இருவரும் உக்ரைனிய தலைநகர் கீவ்விற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு சற்று முன்னதாக இந்த கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-06T10:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் திடீரென இடிந்து விழுந்த மாணவர் விடுதி: 50 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/student-hostel-collapse-in-delhi-1788688107"></link>
            <id>https://news.lankasri.com/article/student-hostel-collapse-in-delhi-1788688107</id>
            <summary type="text">Student Hostel Collapse in Delhi : டெல்லியில் மாணவர் விடுதி திடீரென இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடிந்து விழுந்த மாணவர் விடுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Student Hostel Collapse in Delhi : டெல்லியில் மாணவர் விடுதி திடீரென இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> இடிந்து விழுந்த மாணவர் விடுதி</h2><p>
புது டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் மாணவர் விடுதியாக செயல்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.</p><p> இந்த திடீர் விபத்து காரணமாக கட்டிடத்தில் இருந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: A building has collapsed near Satya Niketan in South-West Delhi. The fire department received an alert around 1:30 PM. The rescue operation is underway. More details are awaited as the situation becomes clearer: Delhi police<br><br>(Source: NSUI) <a href="https://t.co/txNWIYZzTu">https://t.co/txNWIYZzTu</a> <a href="https://t.co/8ExL24roVn">pic.twitter.com/8ExL24roVn</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2096518444275712323?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;<br></p><p> விபத்து தொடர்பாக தகவல் கிடைத்ததும் டெல்லி தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.</p><p></p><p>மீட்பு பணிகள் தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருவதால், சூழ்நிலையை முழுமையாக ஆராயப்பட்டு பின்னர் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T09:48:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/european-countries-moving-their-gold-1788686401"></link>
            <id>https://news.lankasri.com/article/european-countries-moving-their-gold-1788686401</id>
            <summary type="text">European countries moving their gold out of North America: ஐரோப்பிய நாடுகள் தங்கள் தங்கத்தை வட அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுகின்றன.
சமீபத்தில் அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>European countries moving their gold out of North America: ஐரோப்பிய நாடுகள் தங்கள் தங்கத்தை வட அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுகின்றன.</p><p>
சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து டன் கணக்கிலானத் தங்கத்தை வெளியேற்றியுள்ள நெதர்லாந்து வங்கி, இந்த இடமாற்றம், கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள தங்களை மேலும் தயார்படுத்தும் என்று கூறியுள்ளது.</p><h2>பொருளாதார அதிர்ச்சி</h2><p>
</p><p>அதிகரித்து வரும் புவிசார் அரசியல் அமைதியின்மையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவிலும் கனடாவிலும் வைக்கப்பட்டிருந்த சுமார் 313 டன் தங்கத்தில் இருந்து 86 டன்கள் லண்டனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக நெதர்லாந்து வங்கி தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a418fed-6e27-41e0-807c-2fb85aee0943/26-6a9d3043808f9.webp' /></p><p> </p><p>அதாவது, கடும் நெருக்கடி ஏற்படும் எனில் இந்தத் தொகுப்பை தங்களால் உடனடியாகப் பயன்படுத்த முடியும் எனவும் விளக்கமளித்துள்ளது. ஆனால், நெதர்லாந்து வங்கி ஏன் இதை தற்போது செய்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. </p><p>மட்டுமின்றி, ஏதேனும் ஒரு பெரிய பொருளாதார அதிர்ச்சியை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என்றும் வினவுகின்றனர். ஆனால் அப்படியொரு நிலை தோன்றவில்லை என்றாலும், </p><p>வர்த்தகம் மற்றும் இராணுவ மோதல்கள் காரணமாக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தங்கள் தங்கத்தை உள்நாட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்கவும் முற்படும் சூழலில், </p><p>உலகம் எதிர்கொண்டுள்ள நிலையற்ற மற்றும் நிச்சயமற்ற நிலைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை என புரிந்துகொள்ளப்படுகிறது.</p><p></p><p> இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் இருந்த தங்களது தங்க இருப்புகளைத் தாயகத்திற்குக் கொண்டுவந்துவிட்டதாக பிரான்ஸ் அறிவித்தது.</p><p> இதற்கிடையில், ஜேர்மனியின் Bundesbank கடந்த 2016-ல் முடிவடைந்த சில ஆண்டுகளில், வெளிநாடுகளில் வைக்கப்பட்டிருந்த 216 டன்னுக்கும் அதிகமான தங்களின் தங்க இருப்பை, நியூயார்க்கிலிருந்து 111 டன்கள் மற்றும் பாரிஸிலிருந்து 105 டன்கள் என இடமாற்றம் செய்தது. </p><p>பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் விரைவாக வர்த்தகம் செய்யக்கூடிய இடத்தில் தங்கத்தை வைத்திருப்பது ஆகியவையும் இந்த இடமாற்றத்திற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. </p><p>இந்த ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து அகற்றப்பட்ட தங்கம், தற்போது பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளதாக நெதர்லாண்ட்ஸ் வங்கி தெரிவித்துள்ளது.</p><h2>400,000 தங்கக் கட்டிகள்</h2><p> </p><p>உலக அளவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாகத் திகழ்வதால், லண்டன் மிகச் சிறந்த தெரிவாகக் கருதப்படுகிறது. நெருக்கடியான சூழலில் தங்கத்தை விரைவாக வாங்கவோ அல்லது விற்கவோ விரும்பினால் லண்டனே அதற்கான சரியான இடமாகும்; இதனாலேயே 'பேங்க் ஆஃப் இங்கிலாந்து' (Bank of England) தங்கம் சேமித்து வைப்பதற்கான ஒரு பிரபலமான இடமாகத் திகழ்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40bbffdf-f16c-4183-b95e-7bdba37a9032/26-6a9d3044e5618.webp' /></p><p> </p><p>இவ்வங்கி உலகின் மிகப்பெரிய தங்கப் பாதுகாப்பாளர்களில் ஒன்றாகும். மத்திய லண்டனில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனத்தின் அடித்தளத்தில், 200 பில்லியன் பவுண்டுகளுக்கும் (GBP) அதிகமான மதிப்புள்ள சுமார் 400,000 தங்கக் கட்டிகள் பாதுகாக்கப்படுகின்றன. </p><p> 
கடந்த நான்கு ஆண்டுகளில், மத்திய வங்கிகள் ஆண்டுக்கு சராசரியாக 1,000 டன் தங்கத்தைச் சேகரித்துள்ளன; இது அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் இருந்த 500 டன் சராசரி அளவை விடக் கணிசமாக அதிகம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b1620f1-cf02-4bff-8ff2-52ecc9683c37/26-6a9d304436412.webp' /></p><p> </p><p>இந்தப்போக்கு உலகளாவிய நிதி நெருக்கடி காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது; மேலும், அடுத்த ஆண்டில் இது மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>கோல்ட்மேன் (Goldman) நிறுவன ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப்படி, 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு ட்ராய் அவுன்ஸிற்கு (troy ounce) 4,900 டொலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இது ஆகஸ்ட் மாதத்தில் இருந்த விலையை விட 300 டொலர் அதிகமாகும். </p><p>விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, பல நாடுகளின் மத்திய வங்கிகளிடமிருந்து தங்கத்திற்கான தேவை அதிகரிப்பதாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T09:18:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 800 பேரல் கின்னஸ் பீர் கொள்ளை: திருடப்பட்டது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/800-barrels-of-guinness-beer-stolen-in-england-1788685038"></link>
            <id>https://news.lankasri.com/article/800-barrels-of-guinness-beer-stolen-in-england-1788685038</id>
            <summary type="text">பிரித்தானியாவில் சினிமா பாணியில் சுமார் 800 பேரல் பீர் திருடப்பட்டுள்ளது.800 பேரல் பீர் திருட்டுபிரித்தானியாவின் ரன்கோர்ன்(Runcorn) நகரில் அமைந்துள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் சினிமா பாணியில் சுமார் 800 பேரல் பீர் திருடப்பட்டுள்ளது.</p><h2>800 பேரல் பீர் திருட்டு</h2><p>பிரித்தானியாவின் ரன்கோர்ன்(Runcorn) நகரில் அமைந்துள்ள தொழில்துறை வளாகத்தில் இருந்து கிட்டத்தட்ட 800 பேரல் கின்னஸ் பீர்(Guinness Beer) கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த திருடப்பட்ட பீர் ஆனது சுமார் 70,000 பைண்ட்(pints) அளவுக்கு சமமானது ஆகும்.</p><p> அத்துடன் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 115,000 பவுண்டுகள்(இந்திய ரூபாய் மதிப்பில் 1.56 கோடியாகும்) என்று செஷயர் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f20e89d4-f36c-40a1-bd7b-9abaa45d33b9/26-6a9d2af04952b.webp' /></p><p> சேமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பீர் பேரல்களும் அப்பகுதியில் உள்ள மதுபான விடுதிகளுக்கு விநியோகிக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><h2> கொள்ளையடிக்கப்பட்டது எப்படி?</h2><p>
மாலை நேரத்து இருளை பயன்படுத்தி கொண்ட திருடர்கள் இரண்டு கனரக சரக்கு டிரக்குகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.</p><p> இரவு சுமார் 7.45 மணிக்கு இந்த வாகனம் மெர்சி கேட்வே பாலம் வழியாக முதல் லொறியானது வெளியேறியது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>அதிலிருந்து 2 மணி நேரம் கழித்து(இரவு 9.30) இரண்டாவது லொறியானது ரெய்ன்ஹில் மற்றும் வாட்கின்சன் வே திசையை நோக்கி சென்றுள்ளது.</p><p> முதல் லொறியை ஓட்டி வந்தவர் சிறிய தாடி, பீனி தொப்பி அணிந்த வெள்ளையர் என்றும், இரண்டாவது லொறியை ஓட்டி வந்தவர் கேப் அணிந்து இருந்ததாக மட்டும் தெரியவந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T08:57:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேகமாக 300 கோல்கள்! மெஸ்ஸிக்கு அடுத்து 26 வயது வீரர் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/erling-haaland-fastest-300-club-goals-after-messi-1788684655"></link>
            <id>https://news.lankasri.com/article/erling-haaland-fastest-300-club-goals-after-messi-1788684655</id>
            <summary type="text">Erling Haaland fastest 300 club goals: கால்பந்து கிளப் போட்டிகளில் மெஸ்ஸிக்கு அடுத்து, அதிவேகமாக 300 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை எர்லிங் ஹாலண்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Erling Haaland fastest 300 club goals: கால்பந்து கிளப் போட்டிகளில் மெஸ்ஸிக்கு அடுத்து, அதிவேகமாக 300 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை எர்லிங் ஹாலண்ட் படைத்துள்ளார்.</p><p>

நார்வேயின் எர்லிங் ஹாலண்ட், கால்பந்து கிளப் போட்டிகளில் மெஸ்ஸிக்கு அடுத்து அதிவேகமாக 300 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.&nbsp;</p><h2>எர்லிங் ஹாலண்ட்&nbsp;</h2><p>
மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடி வரும் நார்வேயின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/644185a9-9978-4cf8-966b-7fefaeab9178/26-6a9d2a04bb7df.webp' />&nbsp;</p><p></p><p>

26 வயதான எர்லிங் ஹாலண்ட், நேற்று நடந்த பிரீமியர் லீக் தொடரின் கவென்ட்ரி அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்து மான்செஸ்டர் சிட்டியை வெற்றி பெற வைத்தார்.</p><p>

அவர் அடித்த கோல் கிளப் போட்டிகளில் 300வது கோல் ஆகும். இதன்மூலம் லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்து அதிவேகமாக 300 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஹாலண்ட் படைத்தார்.&nbsp;</p><h2>165 கோல்கள்</h2><p>

மெஸ்ஸி 365 போட்டிகளில் இந்த சாதனை செய்த நிலையில், ஹாலண்ட் 368 போட்டிகளில் மைல்கல்லினை எட்டியுள்ளார்.</p><p> 

இவர்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே (398 போட்டிகள்) உள்ளார்.
</p><p>
எர்லிங் ஹாலண்ட் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக மட்டும் 165 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f323c786-65c2-4028-8085-d99754366e6d/26-6a9d2a058adb3.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7cfb31e-17ae-42a5-b1ff-9f916f4266d4/26-6a9d2b60c54ae.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T08:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் முதல் முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/afd-bids-first-taste-of-power-1788678540"></link>
            <id>https://news.lankasri.com/article/afd-bids-first-taste-of-power-1788678540</id>
            <summary type="text">AfD bids for first taste of power: தீவிர வலதுசாரிக் கட்சியான AfD முதல் முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறது.
ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் இந்த வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>AfD bids for first taste of power: தீவிர வலதுசாரிக் கட்சியான AfD முதல் முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறது.
</p><p>ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் இந்த வார இறுதியில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் நடைபெறவிருப்பதால், ஜேர்மானிய மக்கள் மூச்சைப் பிடித்துக் காத்திருக்கின்றனர்.</p><h2>அதிகாரத்தைக் கைப்பற்றும்</h2><p>
</p><p>தீவிர வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி, Saxony-Anhalt மாகாண நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற இலக்கு வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d844e108-7e56-4084-a548-00f8c7c12647/26-6a9d118e567f3.webp' /></p><p> </p><p>பெரும்பான்மையுடன் வெற்றி கிடைத்தால், போருக்குப் பிந்தைய காலத்தில் ஜேர்மனியில் மாகாண அளவிலான அதிகாரத்தை ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி கைப்பற்றுவது இதுவே முதல் முறையாக அமையும். </p><p>AfD-யின் எதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை, இது தீவிர ஆபத்து நிறைந்த ஒரு விடயமாகும். ஆனால், AfD-ஐ பொறுத்தவரை நாடு தழுவிய அளவில் அதிகாரத்தைக் கைப்பற்றும் தனது கனவை நோக்கிய ஒரு படிக்கல்லாகவே அக்கட்சி இதைப் பார்க்கிறது. </p><p>இது ஜேர்மனியின் வரலாற்றையே மாற்றக்கூடிய ஒரு தேர்தல் என்றே கூறுகின்றனர். மட்டுமின்றி, தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வாரா என்பது குறித்த வதந்திகள் நீடிப்பதால், நெருக்கடியில் சிக்கியுள்ள கன்சர்வேடிவ் (சிடியு) கட்சியின் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸுக்கு இந்த முடிவு புதிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.</p><p></p><p> </p><p>சமீபத்திய பொதுக் கூட்டங்களின்போது கூச்சலிட்டு வரவேற்கப்பட்டதால், மெர்ஸ் ஒரு தேர்தல் பலமாகப் பார்க்கப்படவில்லை. தீவிர வலதுசாரிகளின் எழுச்சியைத் தடுப்பதாக அளித்த வாக்குறுதிக்கு நேர்மாறான நிலை ஏற்பட்டுள்ளதால், அனேகமாக மெர்ஸ் தற்போது வருத்தப்படலாம் என்றே கூறுகின்றனர்.</p><p> ஆனால் இதற்கு மாறாக AfD-யின் வேட்பாளர் Ulrich Siegmund விவாதத்திலும் ஊடகச் செய்திகளிலும் ஆதிக்கம் செலுத்தியதாகத் தெரிகிறது. 35 வயதேயான அவர் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்து வருகிறார். </p><p>புலம்பெயர்ந்தோர், பொதுப் பாதுகாப்பு, ஜேர்மனியின் தள்ளாடும் பொருளாதாரம், அதிக எரிசக்தி செலவுகள் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் உதவிகள் ஆகியவை குறித்து வாக்காளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.</p><h2>சர்ச்சைக்குரியவையாக</h2><p> </p><p>மக்களும் Ulrich Siegmund மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. மற்ற ஆதரவாளர்கள் அவ்வளவு உறுதியாக இல்லை, ஆனால் பல தசாப்தங்களாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரதான கட்சிகள் மீது தங்களுக்கு நம்பிக்கை போய்விட்டதாகக் கூறுகிறார்கள். </p><p>இருப்பினும் Saxony-Anhalt மாகாணத்தில் AfD அளித்துள்ள வாக்குறுதிகள் ஜேர்மனிக்குள் மிகுந்த சர்ச்சைக்குரியவையாக உள்ளன. இயல்பான குடும்பக் கட்டமைப்புகளை விட, பாலியல் பிறழ்வுகள் மற்றும் இனப்பெருக்க நோக்கமற்ற வாழ்க்கை முறைகள் தீவிரமாக ஊக்குவிக்கப்படுவதாக அதன் தேர்தல் அறிக்கையில் கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e192ecdd-6193-4449-b8a7-7cf661ec1236/26-6a9d118f0aa23.webp' /></p><p> </p><p> பாடசாலைகளில் LGBT வானவில் கொடிகள் பறக்கவிடப்படுவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு நாஜிக்களைப் பற்றி குறைவாகவும், ஜேர்மானிய வரலாற்றின் நேர்மறையான அம்சங்களைப் பற்றி அதிகமாகவும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கட்சி வாதிடுகிறது.</p><p> குடியேற்றம் தொடர்பான விவகாரத்தில், மாகாணத்தில் வதிவிட உரிமையை இனி கொண்டிராத குடியேறிகளை கைது செய்து வெளியேற்றும் திட்டங்களின் ஒரு பகுதியாக, ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T08:50:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்: இருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/california-small-plane-crash-two-dead-1788680733"></link>
            <id>https://news.lankasri.com/article/california-small-plane-crash-two-dead-1788680733</id>
            <summary type="text">California small plane crash Two Dead: கலிபோர்னியாவில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியாவில் விமான விபத்து
சனிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>California small plane crash Two Dead: கலிபோர்னியாவில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> கலிபோர்னியாவில் விமான விபத்து</h2><p>
சனிக்கிழமை பிற்பகலில் கலிபோர்னியாவின் நார்த்வெஸ்ட் ப்ரெஸ்னோ(Northwest Fresno) பகுதியில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் இரண்டு பேர் வரை உயிரிழந்துள்ளனர்.&nbsp;
மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CALIFORNIA | Plane crash reported in Northeast Fresno <a href="https://t.co/9fRf0CZIEo">https://t.co/9fRf0CZIEo</a> <a href="https://t.co/N2vMOER4eK">pic.twitter.com/N2vMOER4eK</a></p>&mdash; Breaking X (@BreakingXAlerts) <a href="https://x.com/BreakingXAlerts/status/2096373297927643540?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> பிளைத் அவென்யூவில் உள்ள சியாரா ஸ்கை பார்க் விமான நிலையத்திற்கு அருகே இந்த சிறிய ரக விமான விபத்தானது ஏற்பட்டுள்ளது.</p><p>விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், உள்ளூர் மற்றும் மத்திய விமான துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><p> விமான விபத்தை தொடர்ந்து அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் மின் தடை ஏற்பட்டது. ஆனால் விரைவாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின் தடையை உடனடியாக சரி செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e70fc691-57e4-4f0b-a214-d89190d2b4d2/26-6a9d1a1ee007a.webp' /></p><p></p><p> இந்நிலையில், இந்த விமான விபத்தானது எதிர்பாராத மற்றும் பேரதிர்ச்சியான துயரம் என்று ப்ரெஸ்னோ நகர மன்ற உறுப்பினர் மைக் கார்பாசி குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:45:45+00:00</updated>
        </entry>
    </feed>
