<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-30T13:26:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் 1643 குழந்தைகளின் உயிரை பேராபத்தில் இருந்து காப்பாற்றிய ஆசிரியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-headmaster-saves-1643-children-life-in-flood-1788086836"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-headmaster-saves-1643-children-life-in-flood-1788086836</id>
            <summary type="text">Nepal Headmaster saves 1643 children life in flood: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை ஆசிரியர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal Headmaster saves 1643 children life in flood: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை ஆசிரியர் ஒருவர் காப்பாற்றினார்.</p><p>
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாடசாலை ஒன்று அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஆசிரியர் ஒருவர் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார்.&nbsp;</p><h2>பாடசாலையின் முதல்வர்</h2><p>
நேபாளத்தின் வடக்கு-மத்திய பகுதியில் உள்ள திரிசூலி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலை பாடசாலையின் முதல்வராக பணியாற்றுபவர் இராஜேந்திர தவாடி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81978766-d361-4340-a957-51d7e11dc501/26-6a940d4bc7873.webp' /></p><p></p><p>

அப்பகுதியில் ஆற்றின் மேல் பகுதியில் ஐந்து மைல் தொலைவில் உள்ள கிராமம் ஒன்று வெள்ளப்பெருக்கிற்கு இரையானதாக, நண்பர் ஒருவர் மூலம் தவாடிக்கு தகவல் கிடைத்துள்ளது.
</p><p>
அத்துடன் ஆற்றில் இருந்து 200 அடி உயரத்தில் அமைந்திருந்த பாடசாலைக்கு நோக்கி, வெள்ள நீர் வேகமாக உயர்ந்து வருவதாக பெற்றோரும் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். </p><p>

அச்சமயம் 900 குழந்தைகள் ஏற்கனவே பாடசாலைக்கு வந்திருந்தனர். மேலும், 700 குழந்தைகள் நடந்தும், பேருந்திலும் பாடசாலைக்கு வந்து கொண்டிருந்தனர்.&nbsp;</p><h2>1,643 குழந்தைகள்</h2><p>
அப்போது தனது பாடசாலை ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த முதல்வர் தவாடி, உடனடியாக பாடசாலை பேருந்து சாரதிகளை தொடர்புகொண்டு திரும்பிச் செல்லுமாறு கூறியிருக்கிறார்.
</p><p>
பின்னர் பாடசாலையில் குழந்தைகளை கவனிக்கத் தொடங்கிய அவர், மாணவர்களை நடந்தே குன்றின் மீது செல்லுமாறு அனுப்பியிருக்கிறார். </p><p>அவரும் அவர்களுடன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். 

இவ்வாறு 1,643 குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் சிலரை துரிதமாக செயல்பட்டு அவர் காப்பாற்றியிருக்கிறார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b422f3d-cc44-4762-95d1-e2d66a4195a0/26-6a940d4cadd50.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T12:15:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-set-389-run-target-to-pakistan-in-2nd-test-1788090189"></link>
            <id>https://news.lankasri.com/article/england-set-389-run-target-to-pakistan-in-2nd-test-1788090189</id>
            <summary type="text">England set 389 target to pakistan: லார்ட்&#039;ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து 389 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

லண்டன் லார்ட்&#039;ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>England set 389 target to pakistan: லார்ட்'ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து 389 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
</p><p>
லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்டில், இங்கிலாந்து அணி 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.&nbsp;</p><h2>இங்கிலாந்து அணி ஆல்அவுட்</h2><p>
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82ac62fe-97eb-4ede-8a2c-bdea73813e4b/26-6a94188f00b5a.webp' />&nbsp;</p><p></p><p>

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களும், பாகிஸ்தான் 110 ஓட்டங்களும் எடுத்தன. 

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. </p><p> 

ஜோ ரூட் 24 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, எமிலியோ கே 31 ஓட்டங்கள் எடுத்து மொஹம்மது அப்பாஸ் பந்துவீச்சில் lbw ஆனார்.

அணியின் ஸ்கோர் 128 ஆக உயர்ந்தபோது ஹாரி புரூக் (34) ஆட்டமிழக்க, டேன் லாரன்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43e77e1c-0336-461f-9fd3-ad45f9a6e870/26-6a94188fd348d.webp' /></p><p>
ஜேமி ஸ்மித் மற்றும் கஸ் அட்கின்ஸன் தலா 7 ஓட்டங்களில் வெளியேறினர். டேன் லாரன்ஸ் (Dan Lawrence) 70 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்தார்.&nbsp;</p><h2>இமாலய இலக்கு</h2><p>
கடைசி விக்கெட்டான ஜோஷ் டங்கினை (12) பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாம் ரன்அவுட் செய்ய, இங்கிலாந்து அணி 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8314644d-1f6b-407e-b517-f894588b451b/26-6a94189089ced.webp' /></p><p>

அபாரமாக பந்துவீசிய மொஹம்மது அப்பாஸ் 5 விக்கெட்டுகளும், குர்ரம் ஷஷாத் மற்றும் மொஹம்மது அலி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். </p><p>

389 ஓட்டங்கள் என்ற இலக்கினை நோக்கி களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79822600-6295-4bf3-ba55-7ee742976c83/26-6a9418913aa06.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T11:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/khamenei-letter-to-muslim-countries-1788088867"></link>
            <id>https://news.lankasri.com/article/khamenei-letter-to-muslim-countries-1788088867</id>
            <summary type="text">Mojtaba Khamenei&#039;s Letter To Muslim Countries: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம் எழுதியுள்ளார்.
ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mojtaba Khamenei's Letter To Muslim Countries: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம் எழுதியுள்ளார்.
</p><p>ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணையுமாறு அப்பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>தீர்வு என்பது</h2><p>
</p><p>மத்திய கிழக்குப்போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஞாயிறன்று வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16570d70-8fc4-4029-9de1-278af1f994d0/26-6a94122555599.webp' /></p><p> </p><p>பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியபோது அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்த மொஜ்தபா கமேனி, பதவியேற்றதிலிருந்து இதுவரை பொதுவெளியில் காணப்படவில்லை; மேலும் அதிகாரிகள் அவரைப் பற்றிய எந்தவொரு காணொளியையோ அல்லது ஒலிப்பதிவையோ வெளியிடவில்லை. </p><p>இந்த நிலையில், வெளியாகியுள்ள கடிதத்தில், இஸ்லாமிய நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது நல்வழியில் ஒற்றுமை, நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றிலேயே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>ஷியா முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையிலேயே அவரது கடிதமும் வெளியாகியுள்ளது.</p><p></p><p> </p><p>எந்தவொரு பதவியில் இருப்பவரானாலும் சரி, தெரிந்தோ அல்லது தெரியாமலோ, வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ, முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தும் அல்லது முஸ்லிம் சமூகத்தில் மோதலை உருவாக்கும் செயலில் ஈடுபடுபவர் எவரும் இஸ்லாத்தின் எதிரிகளின் நோக்கத்திற்கே சேவை செய்தவராவார் எனவும் கமேனி குறிப்பிட்டுள்ளார். </p><p>மட்டுமின்றி, பிராந்திய நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அதன் திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதை எதிர்கொள்ளுமாறும் கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.</p><p> போரின்போது, ​​சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்தது. அதன்பிறகு அந்த நாடுகளுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன.</p><h2>டொலர் பயன்பாடு</h2><p> </p><p>முக்கிய அரசு கொள்கைகள் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட கமேனி, ஈரானிய அதிகாரிகளும் குடிமக்களும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். </p><p>வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதையும் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று நான் உறுதியாகத் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். </p><p>மட்டுமின்றி, பல மாதங்களாக நீடித்த அமெரிக்கக் கடற்படை முற்றுகை மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதித்த பல ஆண்டுகால முடக்கும் பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, ஈரானியப் பொருளாதாரத்தை படிப்படியாக டொலர் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கவும், வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் பொருளாதார உற்பத்தியை அதிகரிக்கவும் அவர் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T11:18:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதியைத் தீவிரப்படுத்தும் ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-petrol-supplier-to-russia-1788081408"></link>
            <id>https://news.lankasri.com/article/india-petrol-supplier-to-russia-1788081408</id>
            <summary type="text">India emerges as key petrol supplier to Russia: ரஷ்யாவின் முக்கிய பெட்ரோலிய விநியோக நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்தியா கடந்த இரண்டு மாதங்களில் க...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>I</b>ndia emerges as key petrol supplier to Russia: ரஷ்யாவின் முக்கிய பெட்ரோலிய விநியோக நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
</p><p>இந்தியா கடந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 10 லட்சம் பீப்பாய் பெட்ரோலை ஏற்றுமதி செய்து, ரஷ்யாவிற்கு பெட்ரோலை வழங்கும் ஒரு முக்கிய நாடாக உருவெடுத்துள்ளது.</p><h2>குஜராத்தில் நயாரா எனர்ஜி</h2><p>
</p><p>ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, புடின் நிர்வாகம் வெளிநாட்டுச் சந்தைகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>சுத்திகரிப்பு ஆலைகளில் ஏற்பட்ட இடையூறுகளால் உள்நாட்டு எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்ததன் விளைவாக, ரஷ்யாவின் கடல்வழி பெட்ரோல் இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு சுமார் 125,000 பீப்பாய்கள் என்ற சாதனை அளவை எட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82b44f69-72a8-4862-9c8f-e68a67d0c36f/26-6a93f502f3b2e.webp' /></p><p> </p><p>இது அந்த மாதத்திற்கான மதிப்பிடப்பட்ட 470,000 டன்களுக்குச் சமமாகும். இந்தியா மட்டுமின்றி துருக்கி மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளில் இருந்தும் ரஷ்யா பெட்ரோல் இறக்குமதியை முன்னெடுத்து வருகிறது. </p><p>இந்தியாவின் விநியோகத்தில் பெரும்பகுதி, ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்ட் (Rosneft) நிறுவனத்திற்குப் பகுதி உரிமையுள்ள, குஜராத்தில் உள்ள நயாரா எனர்ஜியின் வதினார் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்பட்டது.</p><p></p><p> </p><p>2022-ஆம் ஆண்டு முதல் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா கணிசமாக அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் நாளொன்றுக்கு சுமார் 1 மில்லியன் பீப்பாய்களாக இருந்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாளொன்றுக்கு 2.6 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமாக உயர்ந்தது; இது நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிக்கும் மேற்பட்ட பங்கைக் கொண்டுள்ளது. </p><p>இதன் விளைவாக, இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பெட்ரோலில் சில, ரஷ்ய கச்சா எண்ணெயைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்றே தெரிய வருகிறது. </p><p>உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒன்றான ரஷ்யா, உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களால் எரிசக்தி உள்கட்டமைப்பு சேதமடைந்ததாலும், சுத்திகரிப்பு ஆலை செயல்பாடுகள் தடைபட்டதாலும், பெட்ரோலை இறக்குமதி செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளது. </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ரஷ்யாவின் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தி 70 சதவீதம் வரை சரிந்துள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது 32 தாக்குதல்கள் நடத்தப்பட்டன; இது சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒரு தாக்குதல் என்ற விகிதத்தில் அமைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38415a62-401d-4c0a-b6f8-f527b54ef248/26-6a93f5024a375.webp' /></p><p> </p><p>இந்த இடையூறு ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதியையும் பாதித்துள்ளது. பெட்ரோல் உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அல்லாதோர் ஆகிய இரு தரப்பினருக்குமான பெட்ரோல் ஏற்றுமதித் தடையை 2027 ஜனவரி இறுதி வரை ரஷ்யா நீட்டித்துள்ளது; அதேவேளையில், டீசல் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் 2026 செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. </p><p>ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யா இறக்குமதி செய்த பெட்ரோலில் சுமார் 55 சதவீதம், அதாவது ஏறக்குறைய 2,60,000 டன்கள், தடைகளுக்கு உட்பட்ட கப்பல்கள் மூலம் வந்தடைந்தது. </p><p>ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் மொத்த பெட்ரோல் இறக்குமதியில் சுமார் 40 சதவீதம் கப்பல்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aae2af4-4875-4acd-aa0a-9d60c56b809c/26-6a93f503aa70f.webp' /></p><p> </p><p>இவற்றில் பெரும்பாலானவை, கப்பல்கள் தங்களின் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) சமிக்ஞைகளை அணைத்துவிட்டு நடத்தப்பட்டன. இதற்கிடையில், ஏற்றுமதி கட்டுப்பாடுகள், சுத்திகரிப்பு நிலைய சேதம் மற்றும் எரிபொருள் முனையங்களில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக ரஷ்யாவின் டீசல் மற்றும் கேஸ்-ஆயில் ஏற்றுமதி தொடர்ந்து நெருக்கடிக்குள்ளானது. </p><p>ஆகஸ்ட் 25 வரையிலான காலகட்டத்தில், கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட டீசல் மற்றும் கேஸ் ஆயில் ஏற்றுமதி நாளொன்றுக்கு சுமார் 1,50,000 பீப்பாய்களாக இருந்தது; இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய மாற்றமின்றி இருந்தாலும், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட நாளொன்றுக்கு சுமார் 6,10,000 பீப்பாய்கள் குறைவாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T10:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் இரவு நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு... ஒருவர் மரணம், பலர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-rave-kills-woman-injures-five-1788083320"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-rave-kills-woman-injures-five-1788083320</id>
            <summary type="text">Shooting at rave party in Switzerland: சுவிட்சர்லாந்தில் இரவு நேரம் நடந்த நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு.
வடக்கு சுவிட்சர்லாந்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shooting at rave party in Switzerland: சுவிட்சர்லாந்தில் இரவு நேரம் நடந்த நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு.
</p><p>வடக்கு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இரவு நேர இசை மற்றும் நடன விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>ஆராவர் ரேவ்</h2><p> </p><p>
தாக்குதல் நடத்திய நபரை இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், தீவிரமாகத் தேடி வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61ec3bdd-3018-413e-907c-290c2a77f347/26-6a93fc7a3585c.webp' /></p><p> சூரிச்சின் மேற்கே உள்ள ஆராவ் நகரில் இந்தச் சம்பவம் நடந்ததை அடுத்து, காவல்துறை பெரிய அளவில் களமிறங்கியுள்ளது. 'ஆராவர் ரேவ்' (Aarauer Rave) நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்த இந்த நிகழ்ச்சியின்போது, அதிகாலை 3 மணிக்கு முன்னதாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சுவிஸ் நாளிதழான 'பிளிக்' (Blick) தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரை நடைபெற்ற வருடாந்திர டெக்னோ பார்ட்டியில் சுமார் 3,500 பேர் கலந்துகொண்டனர்.</p><p></p><p> </p><p>அந்த நிகழ்ச்சி நடைபெற்ற பந்தய மைதானத்தில்தான் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல் துறை செய்தித் தொடர்பாளர் வனேசா ரம்போல்ட் அந்தப் பத்திரிகையிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், பெரும் மக்கள் கூட்டத்திற்குள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றே ரம்போல்ட் குறிப்பிட்டுள்ளார். மரணமடைந்தவர் 22 வயது பெண் என்றே தெரிய வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9004856c-025a-49d9-80a7-eb2cd3f9fa46/26-6a93fc7adc7c4.webp' /></p><p> </p><p>ஆராவ் நகரம், சூரிச்சிலிருந்து மேற்கே சுமார் 46 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் இங்கு ஏறத்தாழ 23,000 மக்கள் வசிக்கின்றனர். மட்டுமின்றி, இது ஜேர்மனியுடனான எல்லையிலிருந்து 25 மைல்களுக்கும் குறைவான தூரத்தில் உள்ளது. </p><p>ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கி உரிமையாளர் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும். இருப்பினும், வன்முறைத் துப்பாக்கிச் சூடுகள் அரிதாகவே நிகழ்கின்றன, மேலும் சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T09:46:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெனால்டியில் கோல் அடித்த ஜேர்மனியின் நட்சத்திர வீரர்: கனேடிய கிளப் அணி அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thomas-muller-goal-in-penalty-vancouver-win-1788082082"></link>
            <id>https://news.lankasri.com/article/thomas-muller-goal-in-penalty-vancouver-win-1788082082</id>
            <summary type="text">Thomas muller goal in penalty vancouver win: MLS போட்டியில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்ட்டிங் கேசி அணியை வீழ்த்தியது.

க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thomas muller goal in penalty vancouver win: MLS போட்டியில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்ட்டிங் கேசி அணியை வீழ்த்தியது.</p><p>

கான்சாஸ் சிட்டியில் நடந்த MLS போட்டியில், வான்கூவர் ஒயிட்கேப்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்ட்டிங் கேசி அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>பெனால்டி&nbsp;கோல் </h2><p>
வான்கூவர் ஒயிட்கேப்ஸ் மற்றும் ஸ்போர்ட்டிங் அணிகளுக்கு இடையிலான MLS போட்டி கான்சாஸ் சிட்டியின் Children's Mercy Park மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e707a4e-7efb-480b-bb48-630ecc98fb8c/26-6a93f9b7396cb.webp' /></p><p></p><p>
ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை, நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் (Thomas Muller) சரியாக பயன்படுத்தி கோலாக மாற்றினார்.
</p><p>
அடுத்த 8 நிமிடங்களில் பிரையன் ஒயிட் (Brian White) கோல் அடித்தார். அதற்கு பதில் கோல் அடிக்க ஸ்போர்ட்டிங் அணி திணறியது. </p><p>90வது நிமிடத்தில் வான்கூவர் ஒயிட்கேப்ஸின் ரயான் எல்லோமி கோல் அடிக்க, வான்கூவர் ஒயிட்கேப்ஸ் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2d679cf-81ee-44e5-a270-b1d987528ad1/26-6a93f9b81cea1.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6597e928-8bcf-488d-989b-2e5509fc80e7/26-6a93f7a58423c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/325bdc9a-d30e-48f1-b276-4d901bb6674e/26-6a93f9b8c5ec4.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T09:25:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களுக்கு ரஷ்ய உளவு அமைப்புகளால் அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/defence-firms-russian-spy-threat-1788065608"></link>
            <id>https://news.lankasri.com/article/defence-firms-russian-spy-threat-1788065608</id>
            <summary type="text">Britain&#039;s defence firms are warned of Russian spy threat: பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களுக்கு ரஷ்ய உளவு அமைப்புகளால் அச்சுறுத்தல்.
உக்ரைனுக்கு ஆயுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Britain's defence firms are warned of Russian spy threat: பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களுக்கு ரஷ்ய உளவு அமைப்புகளால் அச்சுறுத்தல்.
</p><p>உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களின் தலைவர்கள், ரஷ்ய உளவாளிகளின் இலக்காக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>உக்ரைனுக்காக ட்ரோன்</h2><p>
</p><p>கோடையின் தொடக்கத்தில் மூத்த அரசு அதிகாரிகளுக்கும் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற வட்டமேசை சந்திப்பின்போது, ​​ரஷ்யாவிடமிருந்து தாங்களும் தங்கள் ஊழியர்களும் எதிர்கொள்ளும் அதிகரித்த அச்சுறுத்தல்கள் குறித்து நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54cb2d10-669a-45d9-9ad6-dfbc3428915d/26-6a93b74a8dbe3.webp' /></p><p> </p><p>குறிப்பிட்ட எந்தெந்த நிறுவனத் தலைவர்கள் அங்கு இருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை; இருப்பினும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களை வழங்கும் நிறுவனங்களின் தலைவர்களே அவர்கள் என்று கருதப்படுகிறது. </p><p>பல ஆயுத நிறுவனங்கள் தங்களின் ஆயுத விற்பனையின் காரணமாக ஏற்கனவே முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேற்கு சஃபோக்கில் உள்ள RAF மில்டன்ஹாலுக்கு அருகில் அமைந்துள்ள, உக்ரைனுக்காக ட்ரோன்களைத் தயாரிக்கும் உக்ர்ஸ்பெக் சிஸ்டம்ஸ் நிறுவனமும், </p><p>ரஷ்யாவின் உட்பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்க சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களை வழங்கிய BAE சிஸ்டம்ஸின் துணை நிறுவனமான காலன்-லென்ஸும் அவற்றில் அடங்கும்.</p><p></p><p> மட்டுமின்றி, ரஷ்யாவைத் தாக்க
 உக்ரைன் பயன்படுத்தும் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணைகளைத் தயாரிக்கும் MBDA நிறுவனமும் முக்கியத்துவம் வாய்ந்தது.</p><p> இதனிடையே, இரண்டு ஜேர்மானிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களைக் கொல்ல ரஷ்யா தீட்டிய சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'ஃபாரின், காமன்வெல்த் அண்ட் டெவலப்மென்ட் ஆபீஸ்' (Foreign, Commonwealth &amp; Development Office) கூட்டம் நடைபெற்றது.
</p><p>அவர்களில் ஒருவர், உக்ரேனியப் படைகளுக்கு பீரங்கி குண்டுகளை வழங்குவதற்கான 4.2 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள ஒப்பந்தத்தைக் கொண்டிருந்த பாதுகாப்புத் துறை நிறுவனமான 'ரைன்மெட்டல்' (Rheinmetall)-இன் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்மின் பாப்பர்கர் ஆவார். </p><p>இந்த நிலையில், பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் தலைவர்கள், தங்கள் சொந்தப் பாதுகாப்பு மற்றும் தங்கள் நிறுவனங்களின் கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்துச் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்றே தகவல் கசிந்துள்ளது. </p><p>மேலும், பாதுகாப்புத் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் தற்போது ரஷ்யர்களின் முறையான இலக்காகக் கருதப்படுகிறார்கள் என்பதை ரஷ்யா உணர்த்துகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T08:20:32+00:00</updated>
        </entry>
    </feed>
