<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-20T01:27:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை: 7 நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-communicated-7-conditions-for-u-s-1789860945"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-communicated-7-conditions-for-u-s-1789860945</id>
            <summary type="text"> Iran Communicated 7 Conditions for U.S: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது. 7 நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p> Iran Communicated 7 Conditions for U.S: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.</p><h2> 7 நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்</h2><p>அமெரிக்காவுடன்&nbsp; போர் நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான முக்கிய நிபந்தனைகளை ஈரான் அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைத்துள்ளது.</p><p> பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னதாக கத்தாரின் ராஜதந்திர வழிகள் மூலமாக ஈரான் தங்களது முக்கிய நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது என ஈரான் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயின் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/812c4e0d-03bc-4b32-bfca-08f824359a1c/26-6aaf1c531ac79.webp' /></p><p> ஈரான் அனுப்பிய நிபந்தனைகளை அமெரிக்கா தவறாக புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் ரெசாய் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அமெரிக்கா தற்போது எதிர்கொண்டு வரும் மூலோபாய சிக்கல்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகளையும், ஈரானின் இறையாண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><h2>அமெரிக்காவின் பார்வை</h2><p>ஈரானுக்கு எதிரான விவகாரத்தில் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததை அடுத்து இந்த முன்னேற்றமானது நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63978084-80bd-48be-ad86-e4eebe12bf2a/26-6aaf1c53c7751.webp' /></p><p>அதில், நீண்ட கால போரை முடிவுக்கு கொண்டு வர ராஜந்திர வழிகளை பின்பற்றுவதா அல்லது கடுமையான ராணுவ நடவடிக்கைகளை பின்பற்றுவதா என்று இறுதி முடிவு செய்யப்படும் என டிரம்ப் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T00:21:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சிறுவனை துன்புறுத்திய இலங்கையர்: பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lankan-old-man-arrested-in-canada-1789863659"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lankan-old-man-arrested-in-canada-1789863659</id>
            <summary type="text">Sri Lankan Old Man Arrested in Canada: கனடாவில் சிறுவன் ஒருவனை துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுவனை துன்புறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sri Lankan Old Man Arrested in Canada: கனடாவில் சிறுவன் ஒருவனை துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>சிறுவனை துன்புறுத்திய இலங்கையர்</h2><p>
கனடாவின் விட்பி பகுதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்த 62 வயது சம்பத் பெரேரா என்ற இலங்கையர், மோசமான செயல் காரணமாக கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> இவர் அந்த மருந்தகத்தில் பணியாற்றி வந்த சிறுவன் ஒருவனை தகாத முறையில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p> பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் பேரில் டர்ஹாம் பிராந்திய பொலிஸார் சந்தேக நபரான சம்பத் பெரேரா-வை கைது செய்தனர்</p><p>சம்பத் பெரேரா மீது தகாத முறையில் செயல்பட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1fa249c-287c-4dc4-acda-2555d499c8c1/26-6aaf26ecc18b3.webp' /></p><p></p><p>ஆனால் இது தொடர்பாக நீதிமன்றம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும் குறித்த இந்த நபரால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் உடனடியாக முன்வந்து புகார் அளிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T00:21:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களை தாக்கிய ஹவுதிகள்: பதிலடிகள் தொடரும் என எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthi-attacks-riyadh-and-yanbu-in-saudi-1789854301"></link>
            <id>https://news.lankasri.com/article/houthi-attacks-riyadh-and-yanbu-in-saudi-1789854301</id>
            <summary type="text">சவுதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக அதன் இராணுவ பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். சவுதியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக அதன் இராணுவ பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h3> சவுதியின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்த ஹவுதி</h3><p>
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மற்றும் யான்பு நகரில் உள்ள சவுதி அராம்கோ நிறுவனத்தின் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ஹவுதி படையினர் இராணுவ பேச்சாளர் யஹ்ஹா சரீ தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> இந்த தாக்குதலில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஏராளமான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஏமன் தலைநகர் சனா மீது சவுதி ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக யஹ்ஹா சரீ குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5087c42e-cc0d-4463-8812-278cae157840/26-6aaf025ea6350.webp' /></p><p> பொதுமக்களை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்துவதாக சவுதி குற்றஞ்சாட்டிய நிலையில், அதனை மறுத்த யஹ்ஹா சரீ, குறிவைக்கப்பட்ட ராணுவ இலக்குகளை ஏவுகணைகள் வெற்றிகரமாக அடைந்ததாக தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் சவுதிக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர போவதாகவும் சரீ குறிப்பிட்டுள்ளார்.</p><p> இதற்கிடையில் ஹவுதி படையினர் நடத்திய தாக்குதல் பதற்றம் காரணமாக தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக விமான சேவைகளை இடை நிறுத்தியுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-09-19T23:14:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 ஆண்டுகளாக இந்திய சிறையில் போராடும் பிரித்தானியர்: ஜாமீன் வழங்கிய டெல்லி நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-sikh-jagtar-singh-johal-gets-bail-1789842800"></link>
            <id>https://news.lankasri.com/article/british-sikh-jagtar-singh-johal-gets-bail-1789842800</id>
            <summary type="text">British Sikh Jagtar Singh Johal Gets Bail: இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>British Sikh Jagtar Singh Johal Gets Bail: இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.</p><h2> பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கிய இந்திய நீதிமன்றம்</h2><p>
பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2017 ம் ஆண்டு முதல் ஸ்காட்லாந்தை சேர்ந்த பிரித்தானிய சீக்கியர் ஜக்தார் சிங் ஜோஹல்&nbsp; இந்திய அதிகாரிகளால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.</p><p> தற்போது 39 வயதாகும் ஜக்தார் சிங் ஜோஹல் கடந்த 2017ம் ஆண்டு தன்னுடைய திருமணத்திற்காக இந்தியா வந்து சேர்ந்தார்.</p><p> திருமணம் முடிந்து 3 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஷாப்பிங் மாலில் தன்னுடைய மனைவுடன் இருக்கும் போது ஜக்தார் சிங் ஜோஹல் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் காரில் பலவந்தமாக கடத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eb0b435-7673-4377-be66-03538b104a9b/26-6aaed571938fc.webp' /></p><p></p><h2> ஜக்தார் சிங் ஜோஹல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு</h2><p>
ஜக்தார் சிங் ஜோஹல் பஞ்சாபில் உள்ள காலிஸ்தான் விடுதலை படைகளுக்கு நிதியுதவி செய்து வந்ததாக இந்திய அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.</p><p> இருப்பினும் இது தொடர்பான போதிய ஆதாரங்களை இந்திய அரசு அதிகாரிகள் சமர்ப்பிக்க தவறியதால், ஜக்தார் சிங் ஜோஹல் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தன.</p><p> இந்நிலையில்&nbsp; பல ஆண்டுகளாக இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய சீக்கியர் ஜக்தார் சிங் ஜோஹலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T19:44:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி: புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/missing-13-year-old-girl-lillia-new-cctv-released-1789846974"></link>
            <id>https://news.lankasri.com/article/missing-13-year-old-girl-lillia-new-cctv-released-1789846974</id>
            <summary type="text">Missing 13-Year-Old Girl Lillia New CCTV Released: பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Missing 13-Year-Old Girl Lillia New CCTV Released: பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.</p><h2> காணாமல் போன 13 வயது சிறுமி</h2><p>
கடந்த செப்டம்பர் 11ம் திகதி வெள்ளிக்கிழமை போல்டனைச் சேர்ந்த 13 வயது சிறுமி லில்லியா(Lillia) தன்னுடைய வீட்டில் இருந்து வெளியேறியதை அடுத்து காணாமல் போனார்.</p><p>கடந்த ஒரு வார காலமாக காணாமல் போன 13 வயது சிறுமி லில்லியை கண்டுபிடிக்கும் முயற்சியில் &nbsp; கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f0c5bb-4048-4724-aa1d-1688fa4159bf/26-6aaee5c06a24f.webp' /></p><p> பல மணி நேர தீவிர சிசிடிவி ஆய்வுக்கு பிறகு செப்டம்பர் 14ம் திகதி காலை 10.36 மணிக்கு&nbsp; தேடப்பட்டு வரும் சிறுமி லில்லியா மான்செஸ்டர் பிக்காடில்லி(Piccadilly) பேருந்து நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர்.</p><p></p><p> மேலும் அவர் சால்போர்ட் நகருக்கான நம்பர் 36 பேருந்தில் ஏறிய லில்லியா, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய சில நிமிடத்தில் கேமராவில் பதிவாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c5a307f-e80d-4486-98ad-6482c05215d3/26-6aaee5c12f1ca.webp' /></p><p> இந்நிலையில் அந்த சிசிடிவி காட்சிகளை தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ள காவல்துறை, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய லில்லி எந்த திசையில் சென்றார் அல்லது அவரை பற்றி வேறு ஏதேனும் தகவல் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.</p><p>புதிதாக வெளியான சிசிடிவி காட்சிகளில், காணாமல் போன லில்லி முதுப்பையுடன் கருப்பு நிற உடை அணிந்து இருந்ததும், தலையில் ஹூடி அணிந்து இருந்ததும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T19:43:09+00:00</updated>
        </entry>
    </feed>
