<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-07T05:35:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்த 97 வயது மூதாட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/97-old-women-record-at-wing-walking-1786024119"></link>
            <id>https://news.lankasri.com/article/97-old-women-record-at-wing-walking-1786024119</id>
            <summary type="text">97 வயது மூதாட்டி, பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

விமான இறக்கை மேல் நடந்த 97 வயது மூதாட்டி

பிரித்தானியாவின் செல்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>97 வயது மூதாட்டி, பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.</p><h3>

விமான இறக்கை மேல் நடந்த 97 வயது மூதாட்டி
</h3><p>
பிரித்தானியாவின் செல்டென்ஹாமைச் சேர்ந்தவர் 97 வயதான பெட்டி ப்ரோமேஜ் என்ற மூதாட்டி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d962fa2-7507-458c-a132-1714aaf8c4dc/26-6a7490ba02c0b.webp' /></p><p>

கடந்த ஆண்டு இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, செல்டென்ஹாம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். </p><p>

செல்டென்ஹாம் மருத்துவமனை ஊழியர்கள் தன்னை நன்றாக கவனித்து கொண்டதால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நிதிதிரட்டும் முயற்சியில் இறங்கினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe3eb363-29bd-4655-a1ee-bc633124265b/26-6a7490b9504af.webp' /></p><p>

இதற்காக பறக்கும் விமானம் ஒன்றின் ரெக்கை மேல் நடந்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A 97-year-old British woman broke her own Guinness World Record for being the oldest female wing walker.<br> <br>&quot;I&#39;d just get bored of life otherwise,&quot; Betty Bromage, who has done six wing walks in the last decade, said. <a href="https://t.co/n4OYn0jMZl">pic.twitter.com/n4OYn0jMZl</a></p>&mdash; ABC News (@ABC) <a href="https://x.com/ABC/status/2085330161323409823?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதன் மூலம் விமான இறக்கையில் நடந்த மிக வயதான பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

முன்னதாக 4 ஆண்டுகளுக்கு முன்னரே இதே சாதனையை படைத்த அவர், தற்போது தன்னுடைய சாதனையே முறியடித்துள்ளார். அதற்கு முன்னதாக 5முறை இவ்வாறு நடந்துள்ளார். </p><p>

எனக்கு நூறு வயதாகும்போது, ​​நான் ஏதாவது சிறப்பான ஒன்றைப் பற்றி யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:15:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு ட்ரோன்: பிரித்தானிய நிபுணர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-expert-warns-regard-drone-in-germany-airport-1786079472"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-expert-warns-regard-drone-in-germany-airport-1786079472</id>
            <summary type="text">ஜேர்மனியில் வெடிகுண்டு இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய நிபுணர் ஒருவர் எச்சரித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் வெடிகுண்டு இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
</p><p>


ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், ட்ரோன் ஒன்றுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.</p><p>

இந்நிலையில், அது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் சில எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டுள்ளார்.
</p><h3>
விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்</h3><p>

ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b14e5c2-506c-4bb5-8a56-18441c00de73/26-6a7568f24932c.webp' /></p><p>

பின்னர், விமான நிலையத்தின் ஓடுபாதையில், வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட, கடும் அதிர்ச்சி உருவானது.
</p><p>
பிரித்தானிய நிபுணர் எச்சரிக்கை

இப்படி ஜேர்மன் விமான நிலையமொன்றில் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் அச்சுறுத்தல் என பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
அதாவது, அந்த ட்ரோன் உக்ரைன் விமானம் ஒன்றின் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ட்ரோனை ரஷ்யாவுடன் இணைத்து எச்சரித்துள்ள வில் கெடஸ் (Will Geddes) என்னும் அந்த நிபுணர், புடின் நினைத்தால் பயணிகள் விமானம் ஒன்றைக் கூட தாக்கி அழிக்க முடியும் என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.</p><p>

இப்போது ட்ரோன் ஒன்றுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளன. அப்படியானால், ட்ரோனுடன் கதிரியக்கப் பொருட்களையோ, உயிரி ஆயுதங்களையோ கூட இணைக்கமுடியும் என்றும் வில் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8db24d5-552a-4267-8db5-b88990485be6/26-6a7568f1925ba.webp' /></p><p>
மேலும், பிரித்தானிய விமான நிலையங்களைப் பொருத்தவரை, ட்ரோன் ஒன்றை காரிலிருந்தோ, வீட்டிலிருந்தோ கூட இயக்கலாம்.
</p><p>
அப்படி ஒரு ட்ரோன் வெடிக்கச் செய்யப்படுமானால், அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும் என்கிறார் அவர்.</p><p>
ஆக, ஜேர்மனியில் ட்ரோன் ஒன்றுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டுள்ள விடயம், இத்தகைய ட்ரோன்களால் ராணுவங்களுக்கு மட்டுமல்ல, பயணிகள் விமானங்களுக்கும் ஆபத்து உள்ளது என்பதையே காட்டுவதாக தெரிவித்துள்ளார் வில்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:11:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் செம்பருத்தி எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/homemade-hibiscus-oil-for-hair-growth-in-tamil-1786077880"></link>
            <id>https://news.lankasri.com/article/homemade-hibiscus-oil-for-hair-growth-in-tamil-1786077880</id>
            <summary type="text">செம்பருத்தி பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் அந்தோசயனின் போன்ற உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

இது இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்பருத்தி பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் அந்தோசயனின் போன்ற உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. </p><p>

இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும், மற்றும் இதய நலனுக்கும் பெரிதும் உதவுகிறது.
</p><p>
செம்பருத்தி பூ சார்ந்த தயாரிப்புகள் முடி உதிர்வைத் தடுத்து, முடியை அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகின்றன.</p><p></p><p>

செம்பருத்தி பூ எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டவும், முடி உதிர்வைத் தடுத்து முடியை அடர்த்தியாகவும் கருமையாகவும் மாற்ற உதவும் மிகச் சிறந்த இயற்கை மூலிகை எண்ணெய் ஆகும். </p><p>

இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து பொடுகை விரட்ட உதவுகிறது.&nbsp;</p><p>அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். </p><h2>தேவையான பொருட்கள் </h2><ul><li>

செம்பருத்தி பூ- 15
</li><li>தேங்காய் எண்ணெய்- ½ லிட்டர் </li></ul><h2>

எப்படி தயாரிப்பது?</h2><p>

முதலில் அடுப்பில் ஒரு இரும்பு வாணல் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவைக்கவும்.</p><p>

அடுத்து இதில் சுத்தம் செய்த செம்பருத்தி இலைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5bcc60f-932b-4356-8d70-6bf1612497ce/26-6a7562baa8a99.webp' /></p><p>இதற்கடுத்து எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து எண்ணெய் ஆறியதும் இதனை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
</p><p>
செம்பருத்தி எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி, இரண்டு கைகளாலும் தேய்த்து முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும்.
</p><p>
பின்னர் 10 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்து ஊறவிட்டு கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T04:45:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸில் அமெரிக்க, இஸ்ரேலிய கப்பல்களைத் தடை செய்யும் மசோதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/draft-bill-bar-us-israeli-ships-1786076621"></link>
            <id>https://news.lankasri.com/article/draft-bill-bar-us-israeli-ships-1786076621</id>
            <summary type="text">அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற எதிரிகளின் கப்பல்களை ஹார்முஸ் நீரிணையில் தடை செய்ய ஈரான் திட்டம்.
அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பிற எதிரிகளின் கப்பல்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற எதிரிகளின் கப்பல்களை ஹார்முஸ் நீரிணையில் தடை செய்ய ஈரான் திட்டம்.
</p><p>அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பிற எதிரிகளின் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து செல்வதைத் தடுக்கும் ஒரு பூர்வாங்க மசோதாவை ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒன்று ஆய்வு செய்து வருகிறது.</p><h2>20 சதவீதம் அபராதம்</h2><p>
</p><p>குறித்த தகவலை ஈரானிய அரசாங்கத்திற்கு நெருக்கமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால், கப்பலில் உள்ள சரக்கின் மதிப்பில் 20 சதவீதம் வரை அபராதம் விதிக்கும் வகையில் இந்த வரைவு மசோதா அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2061d74a-3618-4ae0-b7c3-33aa872779f2/26-6a755dcfa4678.webp' /></p><p> </p><p>சட்டவரைவு இறுதி செய்யப்படுவதற்கு முன்னதாகப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு நிபுணர்களுக்கு நாடாளுமன்றம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்தச் சட்டம் இன்னும் நிபுணர்களின் ஆய்வில் இருப்பதாகவும் ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போருக்கு முன்னர், அந்த நீரிணையில் எவித்தக் கட்டுப்பாடுகளும் இன்றி, எண்ணெய் மற்றும் வணிகக் கப்பல்கள் போக்குவரத்தை முன்னெடுத்து வந்தது.</p><p></p><p> </p><p>ஆனால், போர் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அழுத்தமளிக்கும் வகையில், ஈரான் நிர்வாகம் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கியது.</p><h2>இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா</h2><p> </p><p>இருப்பினும் சீனா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஈரானின் ஏவுகணை பலம் மற்றும் அணு ஆயுதத்திற்கான முயற்சிகளை முடக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் தொடுத்த நிலையில், அமெரிக்காவின் இலக்கு பின்னர் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43c91a30-d37f-4543-bdd0-47dbffa6032e/26-6a755dd05763d.webp' /></p><p> </p><p>இதனையடுத்து வலுவானத் தாக்குதலை முன்னெடுத்த அமெரிக்காவுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. </p><p>தற்போது போருக்கான ஆயுதங்கள் மொத்தம் செலவிட்டுள்ள நிலையில், அமெரிக்கா இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கியுள்ளதாகவே போர் தொடர்பிலான ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T04:21:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிடம் ஆயுதங்கள் இல்லை... கசிந்த தகவல்களால் கடும் கோபத்தில் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-angry-depleted-munitions-1786073955"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-angry-depleted-munitions-1786073955</id>
            <summary type="text">அமெரிக்காவிடம் போருக்குத் தேவையான ஆயுதங்கள் மொத்தமும் தீர்ந்துவிட்டதாக வந்த செய்திகளால் ட்ரம்ப் கோபம் அடைந்துள்ளார்.
கடும் நெருக்கடியில் இருக்கும் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிடம் போருக்குத் தேவையான ஆயுதங்கள் மொத்தமும் தீர்ந்துவிட்டதாக வந்த செய்திகளால் ட்ரம்ப் கோபம் அடைந்துள்ளார்.
</p><p>கடும் நெருக்கடியில் இருக்கும் அமெரிக்க ஆயுதக் கையிருப்பு குறித்த தகவல்கள், ஒரு முக்கியமான கட்டத்தில் அமெரிக்காவை பலவீனமாகக் காட்டுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் கவலை தெரிவித்துள்ளார்.</p><h2>திகைத்துப்போகவில்லை</h2><p>
ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்வதற்காக, அவர் வலுவான இராணுவ நடவடிக்கை எடுக்க இருப்பதாக தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்த நிலையிலேயே, ஆயுதங்கள் இல்லை என்ற தகவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6fc14a-b446-4dd7-a24e-073d34763381/26-6a755366244fe.webp' /></p><p> </p><p>கடந்த வாரம் கேம்ப் டேவிட்டில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த விவாதம் முக்கிய இடத்தைப் பிடித்தது. ஈரான் போரில் சிக்கி ஏற்கனவே ​​விரக்தியடைந்துள்ள ட்ரம்ப், அமெரிக்காவிடம் தற்போது ஆயுதங்கள் இல்லை என்ற ஊடகங்களின் செய்தி தொடர்பில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். </p><p>ஆனால், ஆயுதங்களின் பற்றாக்குறை
தொடர்பான சாத்தியமான பிரச்சனைகள் குறித்து ட்ரம்ப் பல மாதங்களாக நன்கு அறிந்திருந்தார் என்றும், வெளியாகியுள்ள அறிக்கைகளால் அவர் திகைத்துப்போகவில்லை என்றும் பலர் கூறியுள்ளனர். </p><p>இருப்பினும், போரின் ஒரு திருப்புமுனையான கட்டத்தில் அந்தத் தகவல் வெளிச்சத்திற்கு வந்ததாலும், அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் அளிப்பதன் பின்னணியில் அதன் பலவீனமான நிலை என்பது அம்பலப்படுத்தப்பட்டதாலும் அவர் கோபமடைந்தார் என்று கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்காவிடம், குறிப்பாக சில குறிப்பிட்ட வகைகளில், பெருமளவிலான ஆயுதங்கள் இருப்பதாக அவர் பதிவு செய்துள்ளார். </p><p>மேலும், தேவைக்கேற்ப அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பவும் தயார் நிலையில் பல நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்படுகின்றன எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். </p><p>இருப்பினும், ஆயுதங்கள் இல்லை என்பது தொடர்பில் பரவி வரும் தகவல்களில் குறைந்தபட்சம் சிலவாவது துல்லியமானவை என்பதை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாகவே கூறப்படுகிறது. </p><p>அந்தத் தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட்டவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்களுக்குத் தனது நிர்வாகம் நீண்டகால சிறைத் தண்டனைகளை கோரும் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19a6977b-1268-4400-b7d4-201e78e5370b/26-6a7553656eed9.webp' /></p><p> </p><p>இதுவரை, ட்ரம்பின் கோபம் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் மீது குறிப்பாகத் திரும்பவில்லை என்றே வெள்ளை மாளிகை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். </p><p>ஈரான் போருக்கு முன்னர் அமெரிக்காவிடம் சுமார் 2,200 பேட்ரியாட்ஸ் ஏவுகணைகளும் 452 தாட் ஏவுகணைகளும் அதன் கையிருப்பில் இருந்தன. ஆனால் அதில் தற்போது பெரும்பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.</p><h2>கையிருப்புப் பற்றாக்குறை</h2><p> </p><p>அமெரிக்காவிடம் ஆயுதங்கள் இல்லை என கசிந்துள்ள தகவல், அமெரிக்க அதிகாரிகளை மட்டுமல்ல வளைகுடா நாடுகளின் தலைவர்களையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. </p><p>தற்போதைய மோதலைத் தீவிரப்படுத்த ட்ரம்ப் முடிவு செய்தால், வான் பாதுகாப்பு அமைப்புகளின் பற்றாக்குறை, ஈரானின் சாத்தியமான பதிலடித் தாக்குதலைத் தடுக்கும் வளைகுடா நாடுகளின் திறனைப் பாதிக்கக்கூடும். </p><p>மத்திய கிழக்கு நாடுகளில் பல, அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சார்ந்துள்ளன. கையிருப்புப் பற்றாக்குறையானது, ஈரானிடமிருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இடைமறிக்கும் தங்களின் திறனைத் தடுக்கக்கூடும் என்பதை வளைகுடாத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6c920ee-3115-4fec-9a2f-ab8483e4d099/26-6a755366cc517.webp' /></p><p> மீண்டும் அமெரிக்கத் தாக்குதல்கள் நடந்தால், பிராந்தியம் முழுவதும் இருளில் மூழ்கும் அல்லது கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரான் வளைகுடா நாடுகளுக்குத் தெரிவித்துள்ளது. </p><p>ஆயுதங்கள் இல்லை என்ற தகவல் பரவிவரும் நிலையில், கடந்த வாரம் ட்ரம்ப், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் தலைவர்களுடன் போர் குறித்து விவாதித்துள்ளார். </p><p>ஆயுதங்கள் இல்லை என்பது குறித்து வெளிவரும் தகவல்களால் ட்ரம்ப் கோபமடைந்துள்ள நிலையில், இந்தத் தகவல்கள் நிர்வாகத்திற்குள் இருக்கும் போர் எதிர்ப்பு அதிகாரிகளிடமிருந்து கசிந்திருக்கலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் நம்புகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T03:37:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலந்தியா அகதிகள் முகாமை சூறையாடிய இஸ்ரேல் : 8 நாடுகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/israel-attack-qalandiya-refugee-camp-51-injured-1786061851"></link>
            <id>https://news.lankasri.com/article/israel-attack-qalandiya-refugee-camp-51-injured-1786061851</id>
            <summary type="text">கலந்தியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 51 பேர் வரை காயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய ராணுவத்தினரின் அத்துமீறல்மேற்குக் கரையில் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கலந்தியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 51 பேர் வரை காயமடைந்துள்ளனர்.</p><h2> இஸ்ரேலிய ராணுவத்தினரின் அத்துமீறல்</h2><p>மேற்குக் கரையில் உள்ள கலந்தியா(Qalandiya) அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய சோதனையின் போது நடத்திய வன்முறை தாக்குதலில் குறைந்தது 51 பேர் வரை காயமடைந்து இருப்பதாக ஜெருசலேம் ஆளுநரகத்தின் தரவுகளை கொண்டு அல் ஜசீரா தகவல் வெளியிட்டுள்ளது.</p><p> இரண்டாவது நாளாக மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினர் இத்தகைய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f8bbc4b-c074-43dd-b938-a9c1878420b4/26-6a75241c9d5f5.webp' /></p><p> இந்த நடவடிக்கையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், கிட்டத்தட்ட 70 பேர் வரை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> அத்துடன் முகாமில் இருந்த 7 குடியிருப்பு வீடுகளை இஸ்ரேலிய படையினர் இடித்து தள்ளியுள்ளனர்.</p><p></p><p> இஸ்ரேலின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் வசிக்கும் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து இருப்பதோடு பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>சர்வதேச நாடுகளின் கண்டனம்</h2><p>இதற்கிடையில் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் உள்ள 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bdf1417-9f02-4fff-a6aa-01ad1fa3c847/26-6a75241d4e9e8.webp' /></p><p> அதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா, ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து இஸ்ரேலிய தொடர் இராணுவ நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>அதிலும் குறிப்பாக மருத்துவ மையங்கள், பொதுமக்களின் உள்கட்டமைப்புகள், அதிகரிக்கும் பொதுமக்கள் உயிரிழப்பு ஆகியவற்றை குறிப்பாக சுட்டிக்காட்டி கண்டித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-07T00:17:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பெண் காவலரை கடித்து காயப்படுத்திய வன்முறையாளர்கள்: இருவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-arrested-after-woman-police-bitten-in-norfolk-1786060112"></link>
            <id>https://news.lankasri.com/article/2-arrested-after-woman-police-bitten-in-norfolk-1786060112</id>
            <summary type="text">நோர்போக்கில்(Norfolk) தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் வன்முறையில் பொலிஸார் காயமடைந்ததை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டத்தில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்போக்கில்(Norfolk) தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் வன்முறையில் பொலிஸார் காயமடைந்ததை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> கூட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்த சென்ற போது பெண் காவலரை கடுமையாக கடித்து காயப்படுத்தியதுடன், மற்றொரு காவலர் கல்லால் தாக்கி காயமடைய செய்துள்ளனர்.</p><p> வன்முறையாளர்களின் இந்த செயல்களை காவல்துறை அதிகாரிகள் வன்மையாக கண்டித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b97bc47d-dc4b-4540-8e7c-81b3cc607284/26-6a751d51cf033.webp' /></p><p>இதற்கிடையில் புதன்கிழமை மோதல்களுக்கு பிறகு பொது அமைதியை குலைத்தல் மற்றும் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் 40 வயது நபர் மற்றும் 60 வயதுடைய நபர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2> வன்முறையின் பின்னணி</h2><p>தங்குமிடங்களில் அகதிகள் தங்க வைக்கப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து தெட்போர்ட்டில் (Thetford) பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் கூட்டம் அத்துமீறி நுழைய முயற்சித்தது.</p><p></p><p> இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, அத்துடன் அங்கு வீடுகளில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் உள்ளூர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.</p><p> இந்நிலையில் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் காவல்துறையினர் தலையீட்டு வன்முறை நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b8e981b-a9ab-46ed-962a-c60577d7251b/26-6a751d5287857.webp' /></p><h2> காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை</h2><p>வன்முறை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நோர்போக் காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p> அதன்படி, வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரை தீவிர பாதுகாப்பு நடவடிக்கை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் முகக் கவசத்தை காவல்துறையினர் அகற்ற கோரும் பட்சத்தில் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் அல்லது உடனடியாக பொலிஸாரால் கைது செய்யப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T23:49:16+00:00</updated>
        </entry>
    </feed>
