<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-09T20:33:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து: தாக்குதல்தாரியை சுட்டு வீழ்த்திய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-stabbed-in-luton-man-was-shot-by-police-1788976004"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-stabbed-in-luton-man-was-shot-by-police-1788976004</id>
            <summary type="text">Woman Stabbed in Luton Man Was Shot By Police: பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு பிறகு சந்தேக நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு வீழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman Stabbed in Luton Man Was Shot By Police: பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு பிறகு சந்தேக நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.</p><h2>கத்தியை காட்டி பெண்ணை மிரட்டிய நபர்</h2><p>பிரித்தானியாவின் லூட்டன் நகரில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பெண் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானார்.</p><p> கார்டிகன் தெருவில் பிற்பகல் 12.50 மணிக்கு தாக்குதல்தாரி ஒருவர் கத்தியை காட்டி பெண் ஒருவரை மிரட்டி வருவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p> அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தாக்குதல்தாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p> இந்த சம்பவத்தில், பொலிஸாரால் சுடப்பட்ட நபர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80d54dbe-a1bd-4afc-879f-7375144fb380/26-6aa19b86387b6.webp' /></p><p> மேலும் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளான பெண்ணும் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2> விசாரணையை தொடங்கிய IOPC</h2><p>பொலிஸார் நடத்திய தாக்குதலில் துப்பாக்கி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா, தாக்குதல்தாரி மீது பயன்படுத்தப்பட்ட பலம் நியாயமானதா என்பது குறித்து சுதந்திரமான காவல்துறை ஒழுங்குமுறை குழு(IOPC) விசாரணையை நடத்தி வருகிறது.</p><p> IOPC தகவலில், இந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் 4 சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டு இருப்பதாகவும், மற்றொரு அதிகாரி லத்தியால் அடிக்கக்கூடிய ரவுண்டை பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஆரம்பக்கட்ட விசாரணையில், காவல்துறை அதிகாரிகள் எந்தவொரு குற்றவியல் நடவடிக்கைகள் அல்லது தொழில்முறை தரங்களை மீறியதற்கான அறிகுறிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T19:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் அதிபர் விமானத்தை தாக்க முயன்ற ட்ரோன்: நூலிழையில் உயிர் தப்பிய ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-s-flight-targeted-by-drone-1788982201"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-s-flight-targeted-by-drone-1788982201</id>
            <summary type="text">Zelensky’s Flight Targeted by Drone : உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் விமானத்தின் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. ஜெலென்ஸ்கி விமானத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zelensky’s Flight Targeted by Drone : உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் விமானத்தின் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது.</p><h2> ஜெலென்ஸ்கி விமானத்தை தாக்க முயற்சித்த ட்ரோன்</h2><p>உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நார்வே நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அவரது விமானத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக நார்வே நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர்(jonas Gahr Støre) தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இந்த தாக்குதலில் அவர் நூலிழையில் உயிர் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64f4bdd3-f17e-40c9-b19f-1a9a5524dcbf/26-6aa1b3bba41be.webp' /></p><p>நார்வே மன்னர் ஹரால்டின்(Harald) இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மோல்டோவாவில் இருந்து விமானம் மூலம் ஜெலென்ஸ்கி புறப்படத் தயாரான போது இந்த தாக்குதல் சம்பவமானது நடத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>உக்ரைன் மீது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில் அந்நாட்டு தலைவர் ஜெலென்ஸ்கி எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு இது ஒரு சான்று என்றும் நார்வே பிரதமர் ஸ்டோர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2> சர்வதேச ஆதரவை கோரிய ஜெலென்ஸ்கி</h2><p>நார்வே மன்னரின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்திய பிறகு, சர்வதேச தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்களுடன் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebd89fe1-9ec8-452e-bd97-37b279496993/26-6aa1b3bc5aae7.webp' /></p><p> அப்போது அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைகளுக்கு பதிலாக ஐரோப்பாவின் கூட்டு தயாரிப்பான FREYJA ஏவுகணை திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.</p><p> ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவை திரட்ட அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தொடர்ந்து உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர சர்வதேச நாடுகளின் தற்போதைய நடவடிக்கைகள் போதாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T19:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் உளவு அமைப்புடன் ரகசிய தொடர்பு: பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swindon-man-arrested-for-assisting-russia-1788977441"></link>
            <id>https://news.lankasri.com/article/swindon-man-arrested-for-assisting-russia-1788977441</id>
            <summary type="text">Man Arrested For assisting Russian intelligence in Swindon: ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் ஸ்விண்டன் பகுதியை சேர்ந்த நபர் பொலிஸாரால் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man Arrested For assisting Russian intelligence in Swindon: ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் ஸ்விண்டன் பகுதியை சேர்ந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>ரஷ்யாவுக்கு உளவு பார்த்த நபர்</h2><p>ரஷ்ய உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் ஸ்விண்டன் பகுதியை சேர்ந்த 31 வயது ஜோசுவா கேமிட்ஜ் (Joshua Cammidge) என்ற நபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கடந்த வார இறுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளும், வில்ட்ஷயர் காவல்துறை அதிகாரிகளும் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையின் கீழ் ஜோசுவா கேமிட்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59b7550c-4fc7-47af-837d-acfd09d6ba4c/26-6aa1a122ea787.webp' /></p><p></p><p>ரஷ்ய உளவு அமைப்பான GRU-யின் பிரதிநிதியுடன் ஜோசுவா கேமிட்ஜ் தொடர்பில் இருந்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட ஜோசுவா கேமிட்ஜ் உடனடியாக லண்டனுக்கு அழைத்து வரப்பட்டதுடன், அவரது முதல் விசாரணைக்காக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.</p><p> ஜோசுவா கேமிட்ஜ் வெளிநாட்டு உளவுத் துறைக்கு உதவி தொடர்பான குற்றச்சாட்டுகளை கிரவுன் ப்ராசிகியூஷன் சர்வீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T19:05:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித குலத்தை AI அழிக்கலாம்! 10% -க்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-could-wipe-out-humanity-within-the-next-10-yrs-1788980667"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-could-wipe-out-humanity-within-the-next-10-yrs-1788980667</id>
            <summary type="text">AI Could Wipe Out Humanity Within the Next 10 Years: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI Could Wipe Out Humanity Within the Next 10 Years: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2> மனித குலத்திற்கு காத்திருக்கும் பேராபத்து</h2><p>அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது(AI) மனித குலத்தையே முற்றிலுமாக அழிக்கலாம் என்றும், அதற்கான வாய்ப்புகள் 10% -க்கும் அதிகமாக இருப்பதாக முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) அமைப்பின் மூத்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எவன் ஹூபிங்கர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90f70de2-7ac7-4ad2-9ed4-1a85b0008d86/26-6aa1adbd55529.webp' /></p><p>ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இருந்து விலகியவரும், ஓபன் ஏஐ(OpenAI) நிறுவனத்தில் பணியாற்றியவருமான ஜேக்கப் காக்சன்(Jacob Coxon) வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்த எவன் ஹூபிங்கர்(Evan Hubinger) இவ்வாறு பதிலளித்துள்ளார்.</p><p> X தளத்தில் பதிலளித்துள்ள எவன் ஹூபிங்கர், தற்போதைய AI மாடல்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மிகவும் குறைவு என்றாலும், எதிர்காலத்தில் இந்த AI தொழில்நுட்பங்கள் தங்களை தாங்களே மேம்படுத்திக் கொண்டு மிகப் பெரிய ஆதிக்கத்தை செலுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரித்துள்ளார்.</p><p>மேலும் அவை மனித குலத்தின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p> ஆனால் இதில், AI மாடல்கள் எவ்வாறு மனித குலத்தை அழிக்கும் என்பதற்கான பிரத்யேக நிகழ்வுகளை அவர் விளக்கவில்லை.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c305c317-2279-41c1-bfc3-57fe13041a34/26-6aa1adbece5ef.webp' /></p><h2>விவாதங்களும், சந்தேகங்களும்</h2><p>இந்த கருத்துகள் துறைசார் வல்லுனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இடையே பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.</p><p> ஐ.நா அமைப்பின் AI ஆலோசகரும், கணினி விஞ்ஞானியுமான டேம் வெண்டி ஹால், AI அச்சுறுத்தல் தொடர்பான இந்த சமூக வலைதள பதிவை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் நிறுவனங்கள் பங்குச் சந்தைக்குள் நுழையும் போது இத்தகைய விவகாரங்களை விளம்பர உத்தியாக பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e85963a2-8514-48b9-8d9e-be7ff104e031/26-6aa1adbe0e885.webp' /></p><p> அத்துடன் இத்தகைய ஆபத்தான மதிப்பீடுகள் கொண்ட நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில்,&nbsp; இங்கிலாந்து AI பாதுகாப்பு நிறுவனத்திடம், ஆந்த்ரோபிக் நிறுவனம் தங்களது அதிநவீன புதிய AI மாடலை ஆபத்து மதிப்பீட்டிற்கு வழங்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T19:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூட்கேஸில் இருந்த அபூர்வ முதலையின் தலை: இத்தாலி விமான நிலையத்தில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/crocodile-head-found-in-italy-passengers-suitcase-1788971633"></link>
            <id>https://news.lankasri.com/article/crocodile-head-found-in-italy-passengers-suitcase-1788971633</id>
            <summary type="text">Crocodile Head Found in Italy Passengers Suitcase: பயணி ஒருவரின் சூட்கேஸில் முதலையின் தலை இருந்த நிலையில் அதனை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Crocodile Head Found in Italy Passengers Suitcase: பயணி ஒருவரின் சூட்கேஸில் முதலையின் தலை இருந்த நிலையில் அதனை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><h2> சூட்கேஸில் முதலை தலை</h2><p>இத்தாலியின் துரின் நகரில் அமைந்துள்ள காசெல்லே விமான நிலையத்தில் பயணி ஒருவரின் சூட்கேஸில் இருந்த அழியும் விளிம்பு நிலையில் உள்ள அபூர்வ வகை முதலையின் தலை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p> இந்த சட்டவிரோத நடவடிக்கையை அடுத்து, முதலையின் தலையை கொண்டு வந்த இத்தாலிய நபர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> கடத்தல்காரரான இத்தாலிய நபர் அமெரிக்காவின் மியாமியிலிருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலியின் காசெல்லே விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார்.</p><p> முதலையின் தலை முழுமையாக உலர்த்தப்பட்டு சாதாரண பேக்கிங் பேப்பரில் சுற்றப்பட்டிருந்ததால், கைது செய்யப்பட்ட நபர் எளிதாக அமெரிக்காவின் பாதுகாப்பு சோதனைகளில் சிக்காமல் தப்பியுள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09e1e519-0580-4dff-9576-59bbfc7214d9/26-6aa18a7310620.webp' /></p><p> ஆனால் இத்தாலிய விமான நிலைய அதிகாரிகளின் விரிவான சோதனையின் போது சூட்கேஸிற்குள் முதலையின் தலை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>தண்டனை மற்றும் அபராதம்</h2><p>
சூட்கேஸில் முதலையின் தலையை கடத்தி வந்த நபருக்கு எதிராக, முறையான சான்றிதழ்கள் அல்லது உரிமம் இன்றி பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பகுதியை சேர்ந்த முதலையை கடத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p> அவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டால் தண்டனையாக சுமார் ரு.2.20 கோடி அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 6 மாதங்கள் முதல் 1 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T16:34:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின்லாந்தில் 15 பில்லியன் டொலர் முதலீட்டை அறிவித்த Google]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-invests-15-bn-dollar-in-ai-nuclear-deal-1788970014"></link>
            <id>https://news.lankasri.com/article/google-invests-15-bn-dollar-in-ai-nuclear-deal-1788970014</id>
            <summary type="text">Google invests 15 Bn Dollars in AI and nuclear deal: கூகுள் நிறுவனம் பின்லாந்தில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்கிறது.பின்லாந்தில் 13 பில்லியன் யூரோ&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>Google invests 15 Bn Dollars in AI and nuclear deal: கூகுள் நிறுவனம் பின்லாந்தில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்கிறது.</p><h2>பின்லாந்தில் 13 பில்லியன் யூரோ&nbsp;முதலீடு</h2><p>

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Google (Alphabet Inc.) பின்லாந்தில் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பில் 13 பில்லியன் யூரோ ($15.1 பில்லியன்) முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
</p><p>
இந்த முதலீடு அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும். அதோடு, Google தனது முதல் அணு மின்சார ஒப்பந்தத்தை அமெரிக்காவிற்கு வெளியே பின்லாந்தில் கையெழுத்திட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72060f02-1fb9-4b4f-b69a-070c1028998b/26-6aa1841f7a9af.webp' /></p><p>பின்லாந்தின் Fortum நிறுவனம், தனது இரண்டு அணு மின் நிலையங்களில் ஒன்றின் மின்சார உற்பத்தியின் 50 சதவீதம் வரை 22 ஆண்டுகள் Google-க்கு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. </p><p>இது கூகுள் நிறுவனத்திற்கு பெரிய அடித்தளம் என்றும் இதுவே அமெரிக்காவிற்கு வெளியே கூகுளின் முதல் அணு மின்சார ஒப்பந்தம் என்றும் Google-ன் Chief Investment Officer Ruth Porat ஹெல்சிங்கியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><p>
</p><p></p><p>பின்லாந்து, Microsoft மற்றும் ByteDance போன்ற நிறுவனங்களும் தரவு மையங்களை அமைக்க விரும்பும் முக்கிய இடமாக மாறியுள்ளது. காரணம், குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட அணு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாய்ப்புகள் அங்கு உள்ளது.
</p><p>
மேலும், Google மற்றும் Fortum இணைந்து பின்லாந்தில் புதிய அணு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை ஆராய உள்ளன.
</p><p>
இந்த நடவடிக்கை, AI உள்கட்டமைப்புக்கான மிகப்பெரிய ஆற்றல் (மின்சார) தேவையை பூர்த்தி செய்யும் வகையில், உலகளாவிய தொழில்நுட்ப துறையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T16:03:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோபோக்களை உருவாக்கும் ரோபோக்கள் - சீனாவில் வியக்கவைக்கும் புதிய தொழிற்சாலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/xpeng-robots-build-robots-in-china-factory-1788968716"></link>
            <id>https://news.lankasri.com/article/xpeng-robots-build-robots-in-china-factory-1788968716</id>
            <summary type="text">XPeng robots build robots in China factory: சீனாவில் ரோபோக்களே ரோபோக்களை உருவாக்கும் புதிய தொழிற்சாலை வியக்கவைக்கிறது.

தானியங்கி உற்பத்தி வரிசைசீனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>XPeng robots build robots in China factory: சீனாவில் ரோபோக்களே ரோபோக்களை உருவாக்கும் புதிய தொழிற்சாலை வியக்கவைக்கிறது.
</p><h2>
தானியங்கி உற்பத்தி வரிசை</h2><p>சீனாவின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான XPeng தனது புதிய முயற்சியால் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
குவாங்சோவில் நிறுவப்பட்ட புதிய தொழிற்சாலையில், IRON humanoid robot-ஐ உருவாக்கும் முழுமையான தானியங்கி உற்பத்தி வரிசை (Production Line) தொடங்கப்பட்டுள்ளது.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We made it!<br>XPENG launches the world’s first automated production line for advanced general‑purpose humanoid robots.<br>The world’s first advanced general‑purpose humanoid robot has completed automated production and autonomously walks off the line.<a href="https://x.com/search?q=%24XPEV&amp;src=ctag&amp;ref_src=twsrc%5Etfw">$XPEV</a> <a href="https://t.co/ayEiFFgO5p">pic.twitter.com/ayEiFFgO5p</a></p>&mdash; XPENG (@XPENG_Global) <a href="https://x.com/XPENG_Global/status/2097159359520231758?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்த தொழிற்சாலையில், சுமார் 80 சதவீதம் முக்கிய செயல்முறைகள் தானியங்கி (automated) முறையில் நடைபெறுகின்றன. XPeng வெளியிட்ட வீடியோவில், தயாரிக்கப்பட்ட முதல் IRON ரோபோட், மனிதர்களின் உதவியின்றி தானாகவே உற்பத்தி வரிசையிலிருந்து வெளியே நடந்து சென்றது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
</p><p>
XPeng-ன் நோக்கம், ரோபோக்களை உருவாக்குவதில் மட்டுமல்லாமல், பெரிய அளவில் ரோபோக்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலை அமைப்பை உருவாக்குவது.</p><p></p><h2>முழுமையாக&nbsp;இல்லை</h2><p> இருப்பினும், முழுமையாக ரோபோக்கள் மட்டுமே உற்பத்தி செய்கின்றன என்ற நிலைமை இல்லை. மனிதர்கள், இயந்திரங்கள் மற்றும் தானியங்கி அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff86dabd-0c9e-4e4d-9776-e8106186ff89/26-6aa17f0dd9ea3.webp' /></p><p>

XPeng, இதை உலகின் முதல் மேம்பட்ட பொதுப் பயன்பாட்டு humanoid ரோபோக்களுக்கு தானியங்கி உற்பத்தி வரிசை என விவரித்துள்ளது.
</p><p>
இந்த முன்னேற்றம், எதிர்காலத்தில் ரோபோட்கள் உற்பத்தி துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தொழில்துறை, மருத்துவம், சேவை துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் humanoid ரோபோட்கள் பரவலாக பயன்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T15:42:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-bans-canadian-alcohol-bikes-dairy-imports-1788939333"></link>
            <id>https://news.lankasri.com/article/us-bans-canadian-alcohol-bikes-dairy-imports-1788939333</id>
            <summary type="text">US bans Canadian alcohol bikes dairy imports: கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இறக்குமதி தடைஅ...</summary>
            <content type="html"><![CDATA[<p>US bans Canadian alcohol bikes dairy imports: கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.</p><h2>

இறக்குமதி தடை</h2><p>அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு கனடா விதித்த எதிர் வரி நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, கனடாவில் இருந்து வரும் பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ளார்.
</p><p>
செப்டம்பர் 29 முதல் அமுலுக்கு வரும் இந்த தடை, மதுபானங்கள், பால் சார்ந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உள்ளடக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa8674c-1077-4b41-86b6-af655a03a614/26-6aa10c46f2a08.webp' /></p><p> </p><p>மேலும், சில பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சீஸ், மோட்டார் படகு, உலோகங்கள், மரச்சாமான்கள் போன்றவை அதிக வரி சுமையுடன் அமெரிக்க சந்தையில் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
கனடா தனது பக்கம், அமெரிக்காவின் எஃகு, ஆடை, மரச்சாமான்கள் போன்ற பொருட்களுக்கு டொலருக்கு-டொலர் வரி விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளின் வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. விலைகள் உயர்ந்து, வாடிக்கையாளர்கள் குறையும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><p>
அமெரிக்கா-கனடா உறவு வரலாற்று ரீதியாக நெருக்கமானது. கனடாவின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவிற்கே செல்கிறது. ஆனால் தற்போதைய வர்த்தகப் போர், இரு நாடுகளின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
</p><p>
பொருளாதார நிபுணர்கள், இந்த வர்த்தகப் போர் இரு தரப்புக்கும் இழப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என எச்சரிக்கின்றனர். வாடிக்கையாளர்களே மிகப்பெரிய இழப்பாளர்ககளாக இருப்பார்கள் என அவர்கள் கூறுகின்றனர்.
</p><p></p><p>கனடா பிரதமர் மார்க் கார்னி, “செயல்படுவதற்கு எப்போதும் செலவு இருக்கும். ஆனால் செயல்படாமல் இருப்பதற்கான செலவு அதைவிட அதிகம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த வர்த்தகப் போர் எப்போது முடிவடையும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினாலும், புதிய பேச்சுவார்த்தைக்கான திகதிகள் அறிவிக்கப்படவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T15:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்திரன் எங்களுடையது - டிரம்ப் பதிவால் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trumps-moon-claim-vs-space-law-reality-1788967005"></link>
            <id>https://news.lankasri.com/article/trumps-moon-claim-vs-space-law-reality-1788967005</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் Truth Social-ல் “The Moon is ours” எனும் வாசகத்துடன் சந்திரனின் படத்தை வெளியிட்டார். இந்த பதிவு உலகளவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் Truth Social-ல் “The Moon is ours” எனும் வாசகத்துடன் சந்திரனின் படத்தை வெளியிட்டார். </p><p>இந்த பதிவு உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

ஆனால், சட்ட ரீதியாக எந்த நாட்டுக்கும் சந்திரனை சொந்தமாக்கும் உரிமை இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894a6fc0-1dbe-4ff8-9546-cda1acf5ce31/26-6aa1785eccb79.webp' /></p><p>

1967 Outer Space Treaty எனப்படும் ஐ.நா. உடன்படிக்கை, சந்திரன் உட்பட விண்வெளி பகுதிகளை எந்த நாடும் தன் சொந்தமாகக் கொள்ள முடியாது எனத் தெளிவாகக் கூறுகிறது.</p><p> Article II-இல், “விண்வெளி, சந்திரன் போன்றவை எந்த நாட்டின் ஆட்சியிலும், ஆக்கிரமிப்பிலும், சொந்த உரிமையிலும் இருக்க முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது. Article I-இல், விண்வெளி ஆராய்ச்சி அனைத்து நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>

இதனால், சந்திரனில் தேசியக் கொடி நாட்டுவது அந்த நிலப்பரப்பை அந்த நாட்டின் சொத்தாக்காது. நாடுகள் தங்கள் விண்கலங்கள், கருவிகள் போன்றவற்றை சொந்தமாகக் கொள்ளலாம், ஆனால் சந்திரனின் நிலப்பரப்பை உரிமை கோர முடியாது.
</p><p>
இப்போது, NASA Artemis திட்டம் மற்றும் Artemis Accords மூலம் 71 நாடுகள் சந்திரன் ஆராய்ச்சியில் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் சந்திரனில் ஆராய்ச்சி நிலையங்கள், வளங்கள், நிரந்தர கட்டமைப்புகள் உருவாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் Outer Space Treaty, நாடுகள் சந்திரனை தங்கள் சொத்தாக்குவதைத் தடுக்கிறது.
</p><p>
அதனால், டிரம்ப் கூறிய “The Moon is ours” என்பது அரசியல் கூற்றாக இருந்தாலும், சட்டப்படி சந்திரன் யாருக்கும் சொந்தமில்லை. அது மனிதகுலத்தின் பொதுச் சொத்து எனக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T15:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாபர் அஸாம் உட்பட 8 வீரர் ஒற்றை இலக்கத்தில் அவுட்: 133 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-133-all-out-vs-england-3rd-test-edgbaston-1788964086"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-133-all-out-vs-england-3rd-test-edgbaston-1788964086</id>
            <summary type="text">Pakistan 133 all out vs england in 3rd test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பர்மிங்காமில் தொடங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pakistan 133 all out vs england in 3rd test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
பர்மிங்காமில் தொடங்கியுள்ள டெஸ்டில், இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.&nbsp;</p><h2>விக்கெட்டுகள் சரிவு</h2><p>
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமின் எட்ஜ்பஸ்டனில் தொடங்கியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Robinson gets another ☝️<br><br>Click here for live updates 👉<a href="https://t.co/VUdUehsgT2">https://t.co/VUdUehsgT2</a> <a href="https://t.co/aBBEhObETK">pic.twitter.com/aBBEhObETK</a></p>&mdash; England Cricket (@englandcricket) <a href="https://x.com/englandcricket/status/2097638864215015535?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.&nbsp;</p><p></p><p>
சைம் அயூப் டக்அவுட் ஆக, அஸான் அவைஸ் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஷாஃபிக் (3), ஷான் மசூத் (5) ஆகியோர் நடையைக் கட்டினர்.
</p><p>
அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் பாபர் அஸாம் 9Babar Azam) 7 ஓட்டங்களில் ஜோஷ் டங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>133 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் </h2><p>

சவுத் ஷகீல் மட்டும் நின்று ஆட, ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்களுக்கு சுருண்டது. </p><p>

அதிகபட்சமாக சவுத் ஷகீல் (Saud Shakeel) 47 பந்துகளில் 43 ஓட்டங்களும், மொஹம்மது அப்பாஸ் 21 ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p> 

ஜோஷ் டங் (Josh Tongue) 4 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஓலி ராபின்ஸன் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6225c0d-2ce1-4ca2-815c-96f01fb383af/26-6aa16df222676.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T15:00:46+00:00</updated>
        </entry>
    </feed>
