<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-20T00:20:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் இரட்டை நிலநடுக்கம்., குறைந்தது ஆறு பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/twin-earthquakes-kill-six-in-central-peru-1784506061"></link>
            <id>https://news.lankasri.com/article/twin-earthquakes-kill-six-in-central-peru-1784506061</id>
            <summary type="text">பெருவின் மத்திய பகுதியில் ஜூலை 19 அன்று இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவின் மத்திய பகுதியில் ஜூலை 19 அன்று இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஐரோப்பிய நிலநடுக்க மையம் (EMSC) வெளியிட்ட தகவலின்படி, முதல் நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதன் பின்னர் சில மணி நேரங்களில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c61fe7e4-e97e-40f4-aba8-cffc830b166e/26-6a5d66cfb74da.webp' /></p><p>இரண்டும் பெருவின் மத்திய பகுதியில் உள்ள Huancayo மற்றும் Ayacucho பகுதிகளை அதிகமாக பாதித்தன.
</p><p>
பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால் மீட்பு நடவடிக்கைகள் சிரமமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
</p><p>
பெருவின் ஜனாதிபதி, “இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முழுமையான உதவிகளை வழங்கும்” என்று உறுதியளித்துள்ளார். </p><p>தற்போது தேசிய அவசர மேலாண்மை குழு மற்றும் படை வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p></p><p>பெரு, பசிபிக்கின் “Ring of Fire” பகுதியில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடாகும். கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நிலநடுக்கங்கள் பெருவில் உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
இந்த சமீபத்திய நிலநடுக்கம், பெருவின் மக்கள் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T00:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் அணு நிலையம் மீது அமெரிக்க தாக்குதல்- பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-strikes-iran-nuclear-plant-tensions-rise-1784503149"></link>
            <id>https://news.lankasri.com/article/us-strikes-iran-nuclear-plant-tensions-rise-1784503149</id>
            <summary type="text">ஈரானின் தென்மேற்கு Khuzestan மாகாணத்தில் கட்டுமானத்தில் இருந்த Darkhovin அணு மின் நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் தென்மேற்கு Khuzestan மாகாணத்தில் கட்டுமானத்தில் இருந்த Darkhovin அணு மின் நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. </p><p>

ஈரான் அணு ஆற்றல் அமைப்பு (AEOI) வெளியிட்ட அறிக்கையில், ஜூலை 19 அதிகாலை 3.39 மணிக்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், இது “ஈரானின் தேசிய சுயாட்சிக்கும், சர்வதேச சட்டத்திற்கும் எதிரான கொடூரமான நடவடிக்கை” எனவும் கூறப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/715062da-d08b-4755-be5a-d82d92e0d000/26-6a5d5b6fb38dc.webp' /></p><p>இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
</p><p>
இதற்கிடையில், ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) கடற்படை, ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க ஆதரவுடன் விதிமீறி சென்றதாகக் கூறப்படும் நான்கு கப்பல்களை தடுத்து நிறுத்தியதாக அறிவித்துள்ளது. </p><p>

இதில் இரண்டு கப்பல்கள் விபத்துக்குள்ளாகி நிறுத்தப்பட்டன. மற்ற இரண்டு கப்பல்கள் எச்சரிக்கையால் தங்கள் பாதையை மாற்றியதாக IRGC தெரிவித்துள்ளது.
</p><p></p><p>அமெரிக்க மத்திய கட்டளை (US Central Command) வெளியிட்ட தகவலின்படி, கடந்த வாரம் மட்டும் ஈரானின் கடற்கரை கண்காணிப்பு, ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் எட்டாவது சுற்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. </p><p>தற்போது மத்திய கிழக்கில் 50,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயர் எச்சரிக்கையில் உள்ளனர்.

மேலும், ஈரான் இராணுவம், அமெரிக்காவின் Camp Udairi மற்றும் Ali Al Salem விமான தளங்களை ட்ரோன் தாக்குதலால் குறிவைத்ததாகவும் அறிவித்துள்ளது.
</p><p>
இந்த சம்பவங்கள், அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழ்நிலையை மோசமாக்கியுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T23:57:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எபோலா பரவல்- கனடா விதித்த தற்காலிக நுழைவுத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-bans-congo-travelers-over-ebola-fears-1784499103"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-bans-congo-travelers-over-ebola-fears-1784499103</id>
            <summary type="text">காங்கோவில் எபோலா நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கனடா அரசு புதிய தற்காலிக எல்லை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

கடந்த 21 நாட்களில் காங்கோவில் இருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கோவில் எபோலா நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கனடா அரசு புதிய தற்காலிக எல்லை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
</p><p>
கடந்த 21 நாட்களில் காங்கோவில் இருந்த எந்த வெளிநாட்டவரும் கனடாவிற்குள் நுழைய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இந்த முடிவு, உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆலோசனையை மீறுகிறது. WHO, பயணத் தடைகள் மற்றும் வர்த்தகத் தடைகள் நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் பயனில்லை என்றும், அவை தேவையற்ற அவநம்பிக்கையும், பாகுபாடுகளையும் உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
</p><p>
WHO மதிப்பீட்டின்படி, காங்கோவில் ஏற்பட்டுள்ள எபோலா பரவல் சர்வதேச அளவில் பரவும் அபாயம் குறைவாகவே உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04f5ca9e-cc62-4eb6-b752-42cd98f2acfb/26-6a5d4cd270084.webp' /></p><p>ஜூலை 15 நிலவரப்படி, காங்கோவில் 2,100 க்கும் மேற்பட்ட எபோலா நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதில் 828 பேர் உயிரிழந்துள்ளனர். எபோலா நோய் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவரின் உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது.
</p><p>
கனடாவின் பொது சுகாதார நிறுவனம், “காங்கோவில் இருந்த வெளிநாட்டவர்களின் நுழைவை 21 நாட்களுக்கு தடை செய்வது, கனடியர்களின் சுகாதார அபாயத்தை குறைக்கும்” என்று தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஜூலை 20 இரவு 11:59 மணி முதல் அமுலுக்கு வரும்.
</p><p></p><p>இந்த விதிகளை மீறுவோருக்கு 150,000 கனேடிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படலாம். நிறுவனங்களுக்கு 1.5 மில்லியன் டொலர் வரை அபராதம் விதிக்கப்படும்.
</p><p>
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அமெரிக்காவில், காங்கோவில் இருந்தவர்கள் 21 நாட்கள் வரையிலும் விமானம் மூலம் நுழையத் தடை செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

ஐரோப்பிய நோய் தடுப்பு மையம் (ECDC) பயணத் தடைகள் மனிதாபிமான உதவிகளை பாதிக்கும் என்றும், அவை குறைந்த பயனுடையவை என்றும் எச்சரித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T22:15:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் அதிக வருமானம் ஈட்டும் மக்கள் வெளிநாடு செல்ல விருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/half-of-germanys-rich-plan-to-move-abroad-1784494413"></link>
            <id>https://news.lankasri.com/article/half-of-germanys-rich-plan-to-move-abroad-1784494413</id>
            <summary type="text">ஜேர்மனியில் அதிக வருமானம் ஈட்டும் மக்களில் பாதி பேர் வெளிநாடு செல்ல விருப்பம் காட்டுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் அதிக வருமானம் ஈட்டும் மக்களில் பாதி பேர் வெளிநாடு செல்ல விருப்பம் காட்டுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
</p><p>
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2,88,000 ஜேர்மன் குடிமக்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.</p><p>

Indeed வேலைவாய்ப்பு தளத்தின் ஆய்வின்படி, 6,000 யூரோவிற்கும் மேல் மாதாந்திர வருமானம் பெறும் 54 சதவீதம் பேர் கடந்த 12 மாதங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை ஆராய்ந்துள்ளனர்.
</p><p>
இவர்களில் 77 சதவீதம் பேர் பல ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக வெளிநாட்டில் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c3986e-a6ec-46c8-81ba-f234bed1d6ca/26-6a5d394ee56ac.webp' /></p><h2>அவர்களின் முக்கிய காரணங்கள்:
</h2><p>
அதிக வருமானம் (51%)</p><p>

சிறந்த வாழ்க்கைத் தரம் (51%)
</p><p>
குறைந்த வரி மற்றும் சமூகக் கட்டணங்கள் (42%)</p><p>

நல்ல காலநிலை (42%)</p><p>

ஆனால், பதவி உயர்வு வாய்ப்புகள் போன்றவை குறைவானவர்களையே ஈர்க்கின்றன (24%).</p><p></p><p>ஜேர்மனியில் வரி சுமை அதிகம் என்பதே பெரும்பாலானோரின் குற்றச்சாட்டு. ஒரு ஊழியருக்காக முதலாளி செலவிடும் 100 யூரோவில், ஊழியருக்கு 50.70 யூரோ மட்டுமே கைக்கு வரும். மீதியை வரி மற்றும் சமூகக் கட்டணங்களாக பிடித்துக்கொள்ளப்படுகின்றன.</p><p>

வெளிநாடு செல்ல விரும்புவோரின் விருப்ப நாடுகளில் அமெரிக்கா (14.4%), பிரித்தானியா (13.6%), சுவிட்சர்லாந்து (13.6%) முன்னிலையில் உள்ளன. மேலும், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அதிக ஈர்ப்பை பெற்றுள்ளன.</p><p>
</p><p></p><p>ஜேர்மனியில் இருந்து வெளியேறும் மக்கள் அதிகரித்தாலும், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து திறமையான தொழில்நுட்ப நிபுணர்கள் ஜேர்மனிக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.</p><p>குறிப்பாக IT, AI, Digitalisation துறைகளில் அவர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்த நிலை, ஜேர்மனியின் வரி மற்றும் சமூகக் கொள்கைகள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T20:51:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-drone-strikes-gulf-1784490869"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-drone-strikes-gulf-1784490869</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான், அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து “காமிகாஸி ட்ரோன்” தாக்குதலை நடத்தியதாக அந்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான், அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து “காமிகாஸி ட்ரோன்” தாக்குதலை நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
</p><p>
குவைத்தில் உள்ள Camp Udairi ஆயுதக் களஞ்சியம், Ali Al Salem விமான தளத்தில் உள்ள Patriot ரேடார் மற்றும் வான்வழி கண்காணிப்பு அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.</p><p></p><p>குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், அமெரிக்க இராணுவ தளங்களை கொண்டுள்ளதால், ஈரானின் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>குவைத் அரசு, மின்சாரம் நிலையம் மற்றும் குடிநீர் உற்பத்தி நிலையம், மேலும் ஒரு எண்ணெய் நிலையம் தாக்குதலுக்குள்ளானதாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f95eed2-e6c4-4648-81f7-99715177c37b/26-6a5d2b7760680.webp' /></p><p>இதற்கு பதிலளிக்க அமெரிக்கா, ஈரானை “தண்டிக்க” விமானத் தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில், அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். </p><p>US Central Command வெளியிட்ட தகவலின்படி, இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையே சமீபத்தில் கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை (MoU) இருந்தபோதும், மீண்டும் வன்முறை வெடித்திருப்பதை காட்டுகிறது.
</p><p>
மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் தற்போது உயர் எச்சரிக்கையில் உள்ளன. ஈரானின் தாக்குதல்கள், பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிலையை மேலும் சிக்கலாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T19:52:49+00:00</updated>
        </entry>
    </feed>
