<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-26T19:25:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு, இந்தியர்கள் உட்பட பலர் காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flash-floods-kill-157-hundreds-missing-1787771009"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flash-floods-kill-157-hundreds-missing-1787771009</id>
            <summary type="text">Nepal flash floods hundreds missing: நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் 157 பேரின் உயிரை பறித்துள்ளது.

750-க்கும் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flash floods hundreds missing: நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் 157 பேரின் உயிரை பறித்துள்ளது.
</p><h2>
750-க்கும் மேற்பட்டோர்&nbsp;காணவில்லை</h2><p>750-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதில் குறைந்தது 133 இந்தியர்கள், குறிப்பாக 37 தமிழர்கள், மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அடங்குவர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44cfb45-e76f-4958-bfac-287ae0458c44/26-6a8f38840ce03.webp' /></p><p>இந்த வெள்ளம் திபெத் பகுதியில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு மூன்று நிமிடங்களில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>நிலநடுக்கத்தால் பனிச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்பதால், அதுவே வெள்ளத்திற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Scariest video from Nepal Flood <a href="https://t.co/Gi3mYLHHvZ">pic.twitter.com/Gi3mYLHHvZ</a></p>&mdash; Mishraji 🚩🚩😎 (@R_Mishraji) <a href="https://x.com/R_Mishraji/status/2092651491295465845?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>வெள்ளம் போதே கோஷி ஆற்றில் பாய்ந்து, ராசுவா மற்றும் தாடிங் மாவட்டங்களை கடுமையாக பாதித்தது. திமுரே, சியாப்ரு பேசி போன்ற பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தன. வீடுகள், வாகனங்கள், பாலங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
</p><p>
95 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 100 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, காத்மண்டுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p></p><h2>தமிழ்நாட்டைச் சேர்ந்த...</h2><p>இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற 50 யாத்திரிகர்கள் காணாமல் போயுள்ளனர். தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த 37 சுற்றுலா பயணிகளும் தொடர்பில் இல்லை.
</p><p>
இந்த பேரழிவால் 354 மெகாவாட் திறன் கொண்ட 8 நீர்மின் திட்டங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் 19 பாலங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகள் கடினமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/506b1589-90f8-4896-a639-36235a67b683/26-6a8f3884ba9ae.webp' /></p><p>
</p><h2>
பிரதமர் நரேந்திர மோடி</h2><p>இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுடன் பேசி, அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். இந்திய தூதரகம் அவசர எண்களை வெளியிட்டு, காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.</p><p>

நேபாள அரசு 12 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>சீனாவும் தன் எல்லைப் பகுதியில் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

இந்த பேரழிவு நேபாளத்தின் வடக்கு எல்லையில் மிகப்பெரிய மனிதாபிமான மற்றும் கட்டமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T19:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பமாக பிரித்தானியாவில் குடியேறிய இளவரசர் ஹரி-மேகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-meghan-return-for-uk-stay-1787764609"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-meghan-return-for-uk-stay-1787764609</id>
            <summary type="text">Harry Meghan return for UK stay: பிரித்தானியாவில் நீண்டகாலம் தங்கும் திட்டத்துடன் ஹரி-மேகன் தம்பதி குழந்தைகளுடன் வந்து இறங்கியுள்ளனர்.

குடும்பத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry Meghan return for UK stay: பிரித்தானியாவில் நீண்டகாலம் தங்கும் திட்டத்துடன் ஹரி-மேகன் தம்பதி குழந்தைகளுடன் வந்து இறங்கியுள்ளனர்.</p><h2>

குடும்பத்துடன்...</h2><p>இளவரசர் ஹரி மற்றும் மேகன், தங்கள் குழந்தைகள் ஆர்ச்சியும் லிலிபெட் ஆகியோருடன், கலிஃபோர்னியாவிலிருந்து தனியார் விமானத்தில் புறப்பட்டு, பிரித்தானியாவின் பர்மிங்காம் விமான நிலையத்தில் இறங்கினர்.
</p><p>அவர்கள் பிரித்தானியாவில் நீண்ட காலம் தங்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/075e0264-9bc4-41ac-ae1e-0785556b1022/26-6a8f1f83332f4.webp' /></p><p>2020-ஆம் ஆண்டு அரச குடும்ப பொறுப்புகளை விட்டு விலகிய பிறகு, அவர்கள் அமெரிக்காவில் குடியேறியிருந்தனர். இப்போது, அவர்கள் மீண்டும் பிரித்தானியாவில் குடியேற முடிவு செய்துள்ளனர்.
</p><p>
ஆனால், அவர்கள் “non-working royals” எனப்படும் நிலையில், அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ பணிகளில் ஈடுபடமாட்டார்கள்.</p><p></p><p>அவர்கள் லண்டன் நகரத்திற்கு வெளியே, கோட்ஸ்வோல்ட்ஸ் பகுதியில் உள்ள தனியார் வீட்டில் தங்க உள்ளனர். குழந்தைகள் ஆர்ச்சியும் லிலிபெட்டும் அங்குள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர், புதிய கல்வியாண்டு அடுத்த வாரம் தொடங்க உள்ளது.
</p><h2>
பாதுகாப்பு </h2><p>அவர்களின் பாதுகாப்பு குறித்து விவாதம் எழுந்துள்ளது. ஹரி, முன்னதாக தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியிருந்தார். தற்போது, அவர்களுக்கு எந்த அளவிலான பாதுகாப்பு வழங்கப்படும், அதை யார் ஏற்க வேண்டும் என்பது தெளிவாகவில்லை.
</p><p>
இந்த வருகை, அரச குடும்பத்துடன் உள்ள உறவுகளை மீண்டும் சீரமைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிறகு, ஹரி மற்றும் மேகன் இருவரும் ஒன்றாக பிரித்தானியாவிற்கு வருவது இதுவே முதல் முறை.
</p><p>
அவர்களின் நீண்ட காலம் தங்குவது குறித்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் பல்வேறு எதிர்வினைகள் எழுந்துள்ளன. பலரும், அவர்களின் பாதுகாப்பு செலவுகளை அரசாங்கம் ஏற்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T17:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் கொசுவால் ஜேர்மனி ஊழியர் உயிரிழப்பு: ஐவர் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-airport-worker-dies-after-mosquito-bite-1787753495"></link>
            <id>https://news.lankasri.com/article/german-airport-worker-dies-after-mosquito-bite-1787753495</id>
            <summary type="text">German airport worker dies after mosquito bite: விமானம் மூலம் வந்த கொசுவால் பாதிக்கப்பட்ட ஜேர்மனி விமான ஊழியர் உயிரிழந்தார்.

ஜேர்மனியில் கொசுவால் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>German airport worker dies after mosquito bite: விமானம் மூலம் வந்த கொசுவால் பாதிக்கப்பட்ட ஜேர்மனி விமான ஊழியர் உயிரிழந்தார்.
</p><p>
ஜேர்மனியில் கொசுவால் பாதிக்கப்பட்ட விமான ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>விமான ஊழியர்&nbsp;</h2><p>
ஜேர்மனியில் விமானத்தில் சிக்கி வந்ததாகக் கருதப்படும் கொசுவால் விமான ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11cdcdca-cc0a-4aac-b8ee-a67447ae8c55/26-6a8ef4b59899d.webp' />&nbsp;</p><p></p><p>
அரிதான மலேரியா பரவல் சூழலில், குறித்த ஊழியர் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டதாக 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, பிராங்பேர்ட் விமான நிலைய வளாகத்தைச் சுற்றி கொசுக்களைப் பிடிக்கும் பொறிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை எங்கிருந்து வந்தன என்பதை அறிய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>4 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக</h2><p>
ஜேர்மனியின் பரபரப்பான இந்த விமான நிலையத்தில் ஜூலை மாதத்தில் 4 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>

இதுகுறித்து Robert Koch Institute என்ற நோய்க் கட்டுப்பாடு மற்றும் பொது சுகாதாரத்திற்கான ஜேர்மன் கூட்டாட்சி அரசு நிறுவனம், விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட Anopheles வகை கொசுவே இதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830137b3-1156-4720-aead-69ae727a7611/26-6a8ef4b65ff6d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T15:02:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[413 ஓட்டங்கள் வித்தியாசத்தில்..வங்காளதேச ஏ அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க ஏ அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-africa-a-team-won-by-innings-and-413-runs-1787756473"></link>
            <id>https://news.lankasri.com/article/south-africa-a-team-won-by-innings-and-413-runs-1787756473</id>
            <summary type="text">South africa A team won by innings and 413 runs: வங்காளதேச ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>South africa A team won by innings and 413 runs: வங்காளதேச ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
பிரிட்டோரியாவில் நடந்த முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேச ஏ அணியை வீழ்த்தியது.&nbsp;&nbsp;</p><h2>தென் ஆப்பிரிக்க ஏ அணி 647 ஓட்டங்கள்</h2><p>
தென் ஆப்பிரிக்கா ஏ மற்றும் வங்காளதேச ஏ அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்டோரியா நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec7db11-4563-42e8-a0dd-d00a89615317/26-6a8effbbce86a.webp' /></p><p></p><p>

வங்காளதேச ஏ அணி முதல் இன்னிங்ஸில் 122 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, தென் ஆப்பிரிக்க ஏ அணி 647 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
</p><p>
அணித்தலைவர் மார்க்கியூஸ் அக்கர்மன் 256 ஓட்டங்களும், சினேதேம்பா கிஷிலே 200 ஓட்டங்களும் விளாசினர். </p><h2>

இமாலய வெற்றி</h2><p>பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்காளதேச அணி 112 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நைம் 30 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

கோடி யூசுஃப், ஷெபோ மற்றும் டெலனோ தலா 3 விக்கெட்டுகளும், ஜெரால்டு ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><p>
தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27a3448e-273e-46cb-93f0-9db266d661b7/26-6a8efff8abeac.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T14:58:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[360 டன் எடையுள்ள கோட்டையை கயிறு கட்டி 2 மீட்டர் நகர்த்திய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/people-moved-360-ton-japan-hirosaki-castle-by-rope-1787752251"></link>
            <id>https://news.lankasri.com/article/people-moved-360-ton-japan-hirosaki-castle-by-rope-1787752251</id>
            <summary type="text">people moved 360 ton castle by ropes ஜப்பானில் 360 டன் எடையுள்ள கோட்டையை பொதுமக்கள் 2 மீட்டர் தூரம் கயிறு கட்டி நகர்த்தியுள்ளனர்.

360 டன் எடையுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>people moved 360 ton castle by ropes ஜப்பானில் 360 டன் எடையுள்ள கோட்டையை பொதுமக்கள் 2 மீட்டர் தூரம் கயிறு கட்டி நகர்த்தியுள்ளனர்.
</p><h3>
360 டன் எடையுள்ள கோட்டையை கயிறு கட்டி நகர்த்திய மக்கள்</h3><p>

ஜப்பானின் ஆவோமோரி மாகாணத்தில் உள்ள ஹிரோசாகி கோட்டை(hirosaki castle) 1611 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.</p><p> ஆனால், 1627 ஆம் ஆண்டில் மின்னல் தாக்கியதில் வெடிமருந்துக் கிடங்கு தீப்பற்றிக்கொண்டதால், அதன் அசல் மையக்கோட்டை எரிந்துபோனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d57a813-e887-4e31-9082-beb3d1d36501/26-6a8eef3cc5568.webp' /></p><p> 

தற்போதைய கோபுரம் 1810 ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.</p><p> 

நிலநடுக்கத்தில் இந்த கோட்டையின் சுவர்கள் சேதமடைந்தால் அதனை பலப்படுத்த கோட்டையை இடிக்காமல் அதனை ஹிக்கியா என்று அழைக்கப்படும் கீழ் பகுதியில் தண்டவாளங்களை பொருத்தி நகர்த்தும் தொழில்நுட்பம் மூலம் நகர்த்தி சீரமைக்க முயற்சித்தனர்.&nbsp;</p><p></p><p>

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த கோட்டை மனிதர்கள் மற்றும் எந்திரங்களின் உதவியுடன் நகர்த்தப்பட்டு, 2024 ஆம் ஆண்டில் இந்த சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. அப்போது 2,185 கற்களும் அவற்றின் அசல் இடங்களில் மீண்டும் அடுக்கப்பட்டன.&nbsp;</p><p>
சீரமைப்பு பணி நிறைவடைந்த நிலையில், கோட்டையை அதன் பழைய இடத்திற்கே மீண்டும் கொண்டுவர அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c6bd9c0-f389-4a7f-8fed-e1bfdec128a2/26-6a8eef3d79a4b.webp' /></p><p> 

சுமார் 1800 பேர் இதற்கு தேவைப்பட்ட நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட 4000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Hirosaki Castle in northern Japan is being returned to its original site after being moved for earthquake repairs. Using ropes and rollers, 1,800 people manually moved the structure over the weekend. <a href="https://t.co/O4mdc8SiZW">pic.twitter.com/O4mdc8SiZW</a></p>&mdash; South China Morning Post (@SCMPNews) <a href="https://x.com/SCMPNews/status/2092492241474289974?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

தற்போது 1800 பேர் 80 குழுக்களாக பிரிந்து கயிறு மூலம் இழுக்கும் பணியை தொடங்கினர். 30 மீட்டர் நீளமுள்ள கயிறுகளை பயன்படுத்தி 2 மீட்டர் வரை நகரத்தியுள்ளனர். </p><p>

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 5 மீட்டர் தூரம் மக்கள் நகர்த்திய பின்னர், மீதமுள்ள சுமார் 73 மீட்டர் தூரம், இந்த ஆண்டின் இறுதிக்குள் இயந்திரங்களைப் பயன்படுத்தி நகர்த்தப்படும். மீதமுள்ள பணிகள் முடிந்த பின்னர், 2033 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படும்.</p><p>

தனது தலைப்பாகையில் 2 ஜப்பானியக் கொடிகளைச் செருகிக்கொண்டு இந்த முயற்சியில் இணைந்த 82 வயதான கட்சுமி டெராடா, 11 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டை இடமாற்றம் செய்யப்பட்டபோதும் பங்கேற்றிருந்தார்.
</p><p>
இந்த கோட்டையை நகர்த்திய போது, மீண்டும் கோட்டை பழைய இடத்திற்கு வருவதை பார்க்க நான் அவ்வளவு காலம் வாழ்வேனா என கவலைப்பட்டேன். ஆனால் பாருங்கள், நான் விடாமுயற்சியுடன் இருந்தேன். நான் உயிருடனும் நலமுடனும் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T13:50:58+00:00</updated>
        </entry>
    </feed>
