<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-14T17:26:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/abu-dhabi-prince-thanks-indian-car-driver-1789404132"></link>
            <id>https://news.lankasri.com/article/abu-dhabi-prince-thanks-indian-car-driver-1789404132</id>
            <summary type="text">விமானத்தில் ஏற சென்ற அபுதாபி இளவரசர் திடீரென திரும்பி வந்து இந்திய ஓட்டுநருக்கு கைகுலுக்கி பேசி விட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.பிரிக்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமானத்தில் ஏற சென்ற அபுதாபி இளவரசர் திடீரென திரும்பி வந்து இந்திய ஓட்டுநருக்கு கைகுலுக்கி பேசி விட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.</p><h2>பிரிக்ஸ் உச்சி மாநாடு</h2><p>இந்திய தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13ம் திகதிகளில் 18 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது.</p><p> 13 உலகத் தலைவர்களும், 17 தூதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாட்டில் மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை உருவாக்குதல் ஆகியவை முக்கிய கருப்பொருளாக இருந்தது.</p><p></p><p> இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அந்நாட்டின் பட்டத்து இளவரசராக ஷேக் காலித் பங்கேற்றார்.</p><p> உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி முறைப்படி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.</p><h2>அபுதாபி இளவரசரின் வியப்பூட்டிய செயல்</h2><p>இந்நிலையில் மாநாட்டை முடித்து விட்டு தன்னுடைய நாட்டிற்கு செல்வதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பட்டத்து இளவரசர் ஷேக் காலித், புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏறுவதற்காக சென்றார்.</p><p> ஆனால் விமானத்தில் இருந்து திடீரென காரை நோக்கி திரும்பிய பட்டத்து இளவரசர் ஷேக் காலித், தனக்கான காரை ஓட்டி வந்த இந்திய ஓட்டுநரை நோக்கி நடந்து சென்றார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Crown Prince Sheikh Khalid bin Mohammed bin Zayed Al Nahyan<br>of <a href="https://x.com/hashtag/AbuDhabi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AbuDhabi</a>, Upon departing <a href="https://x.com/hashtag/India?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#India</a> and before boarding the plane, turns around and goes to bid farewell to the Indian driver who was with him <a href="https://t.co/oj5Fs6DRJ1">pic.twitter.com/oj5Fs6DRJ1</a></p>&mdash; Siddhant Mishra (@siddhantvm) <a href="https://x.com/siddhantvm/status/2099147010842718433?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அத்துடன் அந்த ஓட்டுநருடன் கை குலுக்கி விட்டு சில வார்த்தைகளைப் பேசிவிட்டு சென்ற மீண்டும் தன்னுடைய விமானத்தில் ஏறிச் சென்றார்.</p><p>இதையடுத்து அபுதாபி இளவரசரின் செயல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஓட்டுநரை அங்கீகரிப்பதற்காக நேரம் ஒதுக்கிய அபுதாபி இளவரசரின் செயலை பாராட்டி வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T16:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-iran-oil-like-venezuela-1789369714"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-iran-oil-like-venezuela-1789369714</id>
            <summary type="text">US could stay in Iran and keep oil, like Venezuela deal: வெனிசுலா ஒப்பந்தத்தைப் போலவே, அமெரிக்கா ஈரானின் எண்ணெயைத் தன்வசம் வைத்துக்கொள்ளக்கூடும்.

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>US could stay in Iran and keep oil, like Venezuela deal: வெனிசுலா ஒப்பந்தத்தைப் போலவே, அமெரிக்கா ஈரானின் எண்ணெயைத் தன்வசம் வைத்துக்கொள்ளக்கூடும்.
</p><p>
அமெரிக்கா ஈரானில் தங்கி அங்கிருக்கும் எண்ணெயைத் தன்வசம் வைத்துக்கொள்ளக்கூடும் என்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>முடிவுக்கு வரும்</h2><p>
</p><p>வெனிசுலாவின் மொத்த எண்ணெய் இருப்புகளில் ஐந்தில் ஒரு பங்கைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியுடன் ஒப்பிட்டுப் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப் இதைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b3b5999-8860-4e4f-ae4e-863b3551683a/26-6aa79d7452b91.webp' /></p><p> </p><p>அயர்லாந்து சென்றிருந்த ட்ரம்ப், ​​ஈரான் தொடர்பான போர் இந்த ஆண்டிலேயே - அநேகமாக நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களுக்குப் பிறகு - முடிவுக்கு வரும் என்று தான் தொடர்ந்து எதிர்பார்ப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார். </p><p>ஐரிஷ் ஓபன் கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டியில் பேசிய ட்ரம்ப், ஈரான் போர் முடிவுக்கு வந்தவுடன் பெட்ரோல் விலை மிக வேகமாகச் சரியும் என்றும் குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><p>மத்திய கிழக்கில் நிலவும் கொந்தளிப்பு எண்ணெய் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது; சவுதி எண்ணெய் குழாய் வழித்தடம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, திங்கட்கிழமையன்று மீண்டும் விலை உயரும் என்று எண்ணெய் வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். </p><p>இதனிடையே, ஈரானுடன் சரியான ஒப்பந்தத்தை மட்டுமே மேற்கொள்வதாகவும், பயனற்ற ஒப்பந்தங்களைச் செய்யப்போவதில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்; அத்துடன் ஈரான் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b530145-e70d-475d-afdc-e764c7607ea8/26-6aa79d75072f1.webp' /></p><p> </p><p>ஆனால், இந்தக் கூற்றை ஈரான் ஏற்கனவே பல முறை மறுத்துள்ளது. 
இருப்பினும், ஈரானுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது என்ற மற்றொரு திட்டத்தையும் ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்தார். </p><p>ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட வெனிசுலாவுடனான அமெரிக்க ஒப்பந்தத்தை இதற்கு அவர் ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டார்.
மேலும், வெனிசுலா போன்றதொரு முடிவுக்கு அமெரிக்கா வராவிட்டால், இறுதியில் (ஈரானிலிருந்து) நாம் வெளியேற்றப்படுவோம் என்று கூறிய ட்ரம்ப், வெனிசுலாவிலிருந்து கிடைக்கும் அமெரிக்க வருவாய் பலமுறை போருக்கான செலவை ஈடுகட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-14T15:52:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக 300 ஓட்டங்கள் விளாசி மிரள வைத்த பாகிஸ்தான் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/salman-ali-agha-300-not-out-for-kingsmen-1789393832"></link>
            <id>https://news.lankasri.com/article/salman-ali-agha-300-not-out-for-kingsmen-1789393832</id>
            <summary type="text">Salman Ali Agha scored 300 in 336 balls:&amp;nbsp; ஐதராபாத் கிங்ஸ்மென் அகாடமி அணிக்காக சல்மான் அலி அகா 300 ஓட்டங்கள் விளாசினார்.

பாகிஸ்தானின் சல்மான் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Salman Ali Agha scored 300 in 336 balls:&nbsp; ஐதராபாத் கிங்ஸ்மென் அகாடமி அணிக்காக சல்மான் அலி அகா 300 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

பாகிஸ்தானின் சல்மான் அலி அகா மார்க்ஹோர் அணிக்கு எதிராக 336 பந்துகளில் 300 ஓட்டங்கள் விளாசினார். </p><h2>சல்மான் அலி அகா&nbsp;</h2><p>

பிரசிடெண்ட் டிராபி கிரேட் டெஸ்ட் போட்டியில் மார்க்ஹோர் ஐடி சொலியூஷன் மற்றும் ஐதராபாத் கிங்ஸ்மென் அகாடமி அணிகள் விளையாடி வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9ea4b34-4a5b-4073-b08d-01d2372a951f/26-6aa7fc8857115.webp' />&nbsp;</p><p></p><p>
ஐதராபாத் கிங்ஸ்மென் அகாடமி அணி முதல் இன்னிங்ஸில் 565 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்ய, மார்க்ஹோர் அணி 330 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மார்க்ஹோர் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்துள்ளது.&nbsp; &nbsp;</p><p>கிங்ஸ்மென் அணியின் இன்னிங்ஸில், பாகிஸ்தான் டி20 அணித்தலைவரான சல்மான் அலி அகா (Salman Ali Agha) 336 பந்துகளில் 300 ஓட்டங்கள் விளாசி களத்தில் நின்றார். 
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e796e7cc-85e2-4441-bdde-d3707baeb632/26-6aa7fc87a17c8.webp' /></p>]]></content>
            <updated>2026-09-14T13:51:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா வரும் பாகிஸ்தான் ஹாக்கி அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/punjab-cm-confirms-pakistan-hockey-team-play-india-1789393577"></link>
            <id>https://news.lankasri.com/article/punjab-cm-confirms-pakistan-hockey-team-play-india-1789393577</id>
            <summary type="text">punjab cm confirms pakistan hockey team to play in india: இந்தியாவில் நடைபெற உள்ள ஆடவர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தான் கலந்து கொள்ளும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>punjab cm confirms pakistan hockey team to play in india: இந்தியாவில் நடைபெற உள்ள ஆடவர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தான் கலந்து கொள்ளும் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உறுதிப்படுத்தியுள்ளார். </p><h3>

இந்தியா வரும் பாகிஸ்தான் ஹாக்கி அணி </h3><p>

2026 ஆம் ஆண்டுக்கான ஆடவர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி, அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 வரை இந்தியாவின் பஞ்சாபில் நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b0878b9-de60-43f3-a787-46e7d9427408/26-6aa7faaad2e73.webp' /></p><p>

இதில் நடப்பு சாம்பியானான இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. </p><p>

லீக் சுற்றுப் போட்டிகள் ஜலந்தரிலும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மொஹாலி மைதானத்திலும் நடைபெற உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cbccd80-2e38-4aa1-bc59-b92559e496b5/26-6aa7faab8700c.webp' /></p><p>

பங்கேற்கும் அணிகளில் ஏதேனும் ஒன்று விலகினால், மாற்று அணிகளாக ஓமன் மற்றும் வங்கதேசம் பங்கேற்க உள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருதரப்பு போட்டிகள் விளையாட கட்டுப்பாடு உள்ள நிலையில், பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்க எந்தப் பிரச்சினையும் இல்லை என இந்தியாவின் கொள்கையை சுட்டிக்காட்டிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், பாகிஸ்தான் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dcdd52a-6560-4059-b17b-b3fae89429cf/26-6aa7faac3976d.webp' /></p><p> 

ஒலிம்பிக் சாசனத்திற்கு இணங்க, பலதரப்புப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றோடு ஒன்று போட்டியிடலாம் என்றும், இந்தியாவில் நடைபெறும் அத்தகைய போட்டிகளில் எல்லை தாண்டிய விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்பட மாட்டாது எனவும் விளையாட்டு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.&nbsp;</p><p>
முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம், ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்தது, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரிடமிருந்து கோப்பையை பெற மறுத்தது ஆகியவற்றை காரணம் காட்டி, தமிழ்நாட்டில் நடைபெறவிருந்த 2025 இளையோர் உலகக் கிண்ண போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகியது.</p><p>

நேற்று 2026 மகளிர் ஆசிய கிண்ண T20 தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதும், பிசிசிஐயின் உத்தரவிற்கு ஏற்ப ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து இந்திய மகளிர் அணி தங்களது வெற்றிக் கிண்ணத்தை வாங்க மறுத்தது.</p>]]></content>
            <updated>2026-09-14T13:46:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[399 ட்ரோன்களை இடைமறித்த ரஷ்யா: இரவு முழுவதும் நடந்த தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-says-399-drones-intercepted-by-defense-1789392571"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-says-399-drones-intercepted-by-defense-1789392571</id>
            <summary type="text">Russian defense intercept 399 ukraine drones: ரஷ்யாவின் சோச்சி மீது உக்ரைன் நடத்திய இரவுநேர தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர். 

ரஷ்யாவின் கடற்கரை நகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian defense intercept 399 ukraine drones: ரஷ்யாவின் சோச்சி மீது உக்ரைன் நடத்திய இரவுநேர தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர். </p><p>

ரஷ்யாவின் கடற்கரை நகரமான சோச்சி மீது உக்ரைன் நடத்திய இரவுநேர தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர்.
</p><h2>
இரவுநேர தாக்குதல்</h2><p>உக்ரைன் ரஷ்யாவின் கடற்கரை நகரமான சோச்சி மீது இரவுநேர தாக்குதல் நடத்தியது. 

இதில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16e69dc5-f234-46c2-9327-a6cf62c1a672/26-6aa7f6be16eee.webp' />&nbsp;</p><p></p><p>

மேலும், இந்த தாக்குதலின் விளைவாக மூன்று வீடுகள் சேதமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். </p><p>

ரோஸ்டோவ் பிராந்தியத்தில் 50 ட்ரோன் விமானங்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக ஆளுநர் யூரி ஸ்லியுசர் கூறினார்.
</p><p>

இதற்கிடையில், ரஷ்யா முழுவதும் 399 உக்ரேனிய ட்ரோன் விமானங்களை இடைமறித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T13:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்பும் கிராமம் ஒன்று: பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/piddington-village-to-polls-decide-leave-the-uk-1789389892"></link>
            <id>https://news.lankasri.com/article/piddington-village-to-polls-decide-leave-the-uk-1789389892</id>
            <summary type="text">&amp;nbsp;A small village will head to the polls tomorrow to decide if they leave the UK: பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் நாளை கிராமம் ஒன்றில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;A small village will head to the polls tomorrow to decide if they leave the UK: பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் நாளை கிராமம் ஒன்றில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
</p><p>

இங்கிலாந்திலுள்ள சிறு கிராமம் ஒன்று பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் நாளை வாக்கெடுப்பு நடத்த உள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><h3>
பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்பும் கிராமம்</h3><p>

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரிலுள்ள கிராமம், பிடிங்டன்.

350 பேர் மட்டுமே வாழும் பிடிங்டன் கிராமம், பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் நாளை வாக்கெடுப்பு நடத்த உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4cf5ba-840b-4586-9603-a45b7a548a60/26-6aa7ec4607e65.webp' /></p><p>
அதாவது, வெறும் 350 பேர் வாழும் அச்சிறு கிராமத்தில், ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்க வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அக்கிராம மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.&nbsp;</p><p></p><p>
பிடிங்டன் கிராமத்தில், பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான பிரம்மாண்ட கட்டிடங்கள் உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20cb47c2-5ba2-4e31-ab13-9c20de3ef8e3/26-6aa7ec46b3003.webp' /></p><p>
அந்தக் கட்டிடங்களில் ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்கவைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

ஆகவே, அப்படி ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்கள் அங்கு தங்கவைக்கப்படுவதால், தங்கள் கிராமத்தின் பாதுகாப்பும் தனியுரிமையும் பாதிக்கப்படும் என அஞ்சும் அக்கிராம மக்கள், பிரித்தானியாவை விட்டு வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71dbaf8a-7d95-4b32-8e50-e608f231264c/26-6aa7ec4767e73.webp' /></p><p>
அது தொடர்பில் நாளை அக்கிராமத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
</p><p>
இந்நிலையில், உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் பிடிங்டன் கிராம மக்களுக்கு தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க, அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் ஆதரவையும் கோரியுள்ளார்கள் பிடிங்டன் கிராம மக்கள்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T12:45:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 2 GCC ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamilnadu-sign-2-gcc-11000-cr-mou-in-vijay-uk-trip-1789389200"></link>
            <id>https://news.lankasri.com/article/tamilnadu-sign-2-gcc-11000-cr-mou-in-vijay-uk-trip-1789389200</id>
            <summary type="text">tamilnadu signs 2 gcc and 11,000 crores in mou in cm vijay uk visit: லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>tamilnadu signs 2 gcc and 11,000 crores in mou in cm vijay uk visit: லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் GCCs விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
</p><h3>
முதல்வர் விஜய்யின் பிரித்தானியா பயணம்</h3><p> 
 
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். 

அங்கு லண்டன் வாழ் தமிழர்கள் முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab8b1491-a6cb-4e59-a5a8-3d09d803b9e9/26-6aa7e99221c35.webp' /></p><p> 

இந்த பயணத்தின் ஒருபகுதியாக சில்வர்ஸ்டோர் சர்க்யூட் மைதானத்தில், நடிகர் அஜித் கலந்துகொண்ட கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.&nbsp;</p><p></p><h3> 

கையெழுத்தான 3 ஒப்பந்தங்கள் </h3><p>

இந்நிலையில், இன்று முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb9edbe6-dadd-46d3-a369-3ac78993be2a/26-6aa7e992cc972.webp' /></p><p>

இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/723cebce-617a-41cd-b957-a81fb474b3ed/26-6aa7e99382233.webp' /></p><p>


அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres - GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.&nbsp;</p><p></p><p>
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f340e1e1-255b-403a-b2c8-70e1721b079a/26-6aa7e994eb2f5.webp' /></p><p>

சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.</p><p>

ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e106763d-dede-4bcc-ad16-8169bc975a9a/26-6aa7e9943816b.webp' /></p><p>
முதல்வர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன் மற்றும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-இன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப் IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-14T12:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தள்ளாடிய அணி..7 சிக்ஸர்களுடன் 29 பந்தில் 68 ஓட்டங்கள் விளாசிய அமீரக வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/khuzaima-tanveer-blast-68-runs-uae-won-by-6-wkts-1789386839"></link>
            <id>https://news.lankasri.com/article/khuzaima-tanveer-blast-68-runs-uae-won-by-6-wkts-1789386839</id>
            <summary type="text">UAE beat malaysia by 6 wickets: ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது. 


மலேசியா அணிக்கு எதிரான டி20 போட்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE beat malaysia by 6 wickets: ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது. </p><p>


மலேசியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ஆயன் அஃப்ஸல்&nbsp;அபார பந்துவீச்சு </h2><p>
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கோலாலம்பூரில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4724cb1-90cc-4e30-a0f0-6030a658f485/26-6aa7ef5227757.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய மலேசிய அணியில் விரன்தீப் சிங் 32 ஓட்டங்களும், சையத் அஸிஸ் 28 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

இதன்மூலம் மலேசியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. ஆயன் அஃப்ஸல் கான் 3 விக்கெட்டுகளும், குஸைமா தன்வீர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d31749-6086-4e91-9546-e089a6110617/26-6aa7e34557231.webp' /></p><h2> 

குஸைமா தன்வீர்</h2><p>பின்னர் ஆடிய அமீரக அணியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய, 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை அணி இழந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50990714-cce5-4a08-9b16-39480cbda35a/26-6aa7e34650712.webp' /></p><p>
அப்போது அதிரடியில் மிரட்டிய குஸைமா தன்வீர் (Khuzaima Tanveer) 29 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாச, அமீரக அணி 16.5 ஓவர்களில் 150 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.</p><p>அரைசதம் விளாசியதுடன் 2 விக்கெட்களும் வீழ்த்திய குஸைமா தன்வீர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68a76247-d76e-4192-83d6-c9df0cec4624/26-6aa7e3470b933.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d77d12-dbde-49dd-b9d5-d8c590706871/26-6aa7e347b347d.webp' /></p>]]></content>
            <updated>2026-09-14T12:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருக்கி பில்லியனரின் விமானம் விபத்தில் சிக்கியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkey-billionaire-plane-crash-in-libya-airport-1789387271"></link>
            <id>https://news.lankasri.com/article/turkey-billionaire-plane-crash-in-libya-airport-1789387271</id>
            <summary type="text">turkey billionaire Hamdi Akın private plane crash at libya airport: துருக்கி பில்லியனர் ஹம்டி அகினுக்கு சொந்தமான வர்த்தக விமானம் லிபியாவில் தரையிறங்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>turkey billionaire Hamdi Akın private plane crash at libya airport: துருக்கி பில்லியனர் ஹம்டி அகினுக்கு சொந்தமான வர்த்தக விமானம் லிபியாவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது. </p><h3>

விபத்தில் சிக்கிய துருக்கி பில்லியனரின் விமானம்
</h3><p>
துருக்கியின் இஸ்தான்புல் அத்தாதுர்க் விமான நிலையத்திலிருந்து, செஸ்னா சிடேஷன் லாட்டிட்யூட் வர்த்தக விமானம் லிபியாவுக்குச் சென்று கொண்டிருந்தது.</p><p>

உள்ளூர் நேரப்படி காலை 10:07 மணிக்கு மிஸ்ராட்டா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27db9c99-b561-4f13-a654-3cce58ffc595/26-6aa7e208ef020.webp' /></p><p>விமான நிலைய அவசர மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்து, விமானத்தில் இருந்த 2 விமானிகள் மற்றும் ஒரு விமானப் பணியாளரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

மூவரும் காயமின்றி நலமுடன் உள்ளதாக தெரிய வந்துள்ளது. </p><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதாக லிபியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
துருக்கியிலிருந்து வந்த அந்த விமானம், 3 லிபிய அரசியல் பிரமுகர்களை துருக்கிக்கு ஏற்றிச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. </p><p>

இவர்களில், திரிப்போலியைத் தளமாகக் கொண்ட பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் அப்தெல்சலாம் ஜூபியின் சகோதரரான முகமது ஜூபியும் அடங்குவார்.
</p><p>
TC-AKF என்ற பதிவு எண்ணைக் கொண்ட இந்த வர்த்தக விமானமானது துருக்கி தொழிலதிபர் ஹம்டி அகினுக்குச் சொந்தமானது ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e22d6517-142f-4c70-a9ac-1cbff16e9ed3/26-6aa7e209a176c.webp' /></p><p>

72 வயதான ஹம்டி அகின், அக்ஃபென் ஹோல்டிங்கின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் ஆவார்.</p><p> 

போர்ப்ஸ் நிறுவன மதிப்பீட்டின் படி, ஹம்டி அகின் 2.7 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் துருக்கியின் முதல் 10 பணக்கார பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T12:01:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவடையும் மேக்ரானின் பதவிக்காலம்: அடுத்த ஜனாதிபதி யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/french-extreme-candidate-in-2027-presidential-race-1789378488"></link>
            <id>https://news.lankasri.com/article/french-extreme-candidate-in-2027-presidential-race-1789378488</id>
            <summary type="text">French extreme candidates steam ahead in 2027 presidential race: 2027ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், தீவிர வலதுசாரியினர் முதலானோருக்கு மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>French extreme candidates steam ahead in 2027 presidential race: 2027ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், தீவிர வலதுசாரியினர் முதலானோருக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
</p><p>

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம், 2027ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
</p><p>
இந்நிலையில், அடுத்து யார் பிரான்சின் ஜனாதிபதியாவார் என்னும் கேள்வி வலுத்தவண்ணம் உள்ளது.
</p><h3>
அடுத்த ஜனாதிபதி யார்?
</h3><p>
சமீபத்திய ஆய்வொன்றில், வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சார்ந்த மரீன் லெ பென்னுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71910714-27d4-491e-b40e-348dc8e31448/26-6aa7bfb9eb337.webp' /></p><p>

முதல் சுற்றுத் தேர்தலில், மரீன் லெ பென்னுக்கு 33 முதல் 36 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.&nbsp;</p><p></p><p>

அத்துடன், தீவிர இடதுசாரியினரான ஜான் லூக் மெலன்ஷான் இரண்டாம் இடத்தைப் பிடிப்பார் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35b52fed-b67c-43ad-9d3b-04def56a3eeb/26-6aa7bfbaa3dd5.webp' /></p><p>
மேக்ரான் ஆட்சியில் பிரதமராக இருந்த Edouard Philippeம் பிரான்ஸ் ஜனாதிபதிக்கான போட்டியில்இருக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95e59149-5079-4138-b68b-98f3409f6d33/26-6aa7bfbb5729f.webp' /></p><p>
மெலன்ஷானைப் பொருத்தவரை, அவர் ஏற்கனவே 2012, 2017 மற்றும் 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டும், அவரால் இரண்டாவது சுற்றை எட்டவேமுடியாமல் போய்விட்டது.
</p><p>
அதேபோல, மரீன் லெ பென்னும் 2017 மற்றும் 2022ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டும் மேக்ரானிடம் தோற்றுப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T11:30:54+00:00</updated>
        </entry>
    </feed>
