<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-07T08:21:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேப்பரை படிக்க சொன்ன முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/udhayanidhi-replies-to-vijay-comment-to-read-paper-1786090480"></link>
            <id>https://news.lankasri.com/article/udhayanidhi-replies-to-vijay-comment-to-read-paper-1786090480</id>
            <summary type="text">சட்டமன்றத்தில் பேப்பர் படித்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும் என முதல்வர் விஜய் பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டமன்றத்தில் பேப்பர் படித்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும் என முதல்வர் விஜய் பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.</p><h3> 

 உதயநிதி ஸ்டாலின் கேள்வி</h3><p> 

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 ஆகஸ்ட் முதல் நடைபெற்று வருகிறது. </p><p>

இன்று நடைபெற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது தடுப்பணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு வேகம் காட்டி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33f05e89-6d79-4535-804c-33deb0830b06/26-6a7593f3591e7.webp' /></p><p>

தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? அனைத்துக்கட்சி கூட்டத்தை விவாதிக்க ஆளும் அரசு தயங்குவது ஏன்? நம் மாநிலமும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை எப்போது கூட்ட போகிறீர்கள்" என பேசினார்.&nbsp;</p><p></p><h3>

பேப்பரை படிக்கச் சொன்ன முதல்வர் விஜய்</h3><p> 

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், "காவிரி பிரச்னையில் ஒரு முயற்சி எடுத்துப்பார்க்கலாமே என்று நினைத்துதான் பெங்களூரு பயணத்தை பற்றி யோசித்து கேட்டது நான்தான்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d90650f-1835-4768-a127-9be2663eebb9/26-6a7593f1f1c92.webp' /></p><p> 

இந்த பயணத்தால் அவமானம் நேர்ந்தால் என்னவாவது என்று கேட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்கிக்கொள்ள நான் தயார். </p><p>

காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். குறுவை சாகுபடிக்கு ஏற்கனவே அந்த நிவாரணம் கொடுத்தாச்சு. </p><p>

இதுவந்து அரசியலே நாங்கள் தான் என்று சொல்லி கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன, பின்ன பேப்பர் படித்து இருந்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும்" என கூறினார். </p><h3>

உதயநிதி ஸ்டாலின் பதிலடி </h3><p>

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "அரசு கொடுத்தது சிறப்பு தொகுப்பு. ஆனால் இப்போது விவசாயிகள் வறட்சி நிவாரண நிதி. இது ரெண்டுக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோங்க.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05fefc00-bc0e-4aea-a0d8-b98f79b006f4/26-6a7593f2a757c.webp' /></p><p>

இதுக்கு டெய்லி காலை பேப்பர் படிச்சா மட்டும் பத்தாது. விவசாயிகளை, அனைத்து கட்சிகளை சந்திக்கணும். தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டம் கூட்ட என்ன பயம்?" என்று பதிலடி கொடுத்தார்.</p><p> 

இதற்கு விளக்கமளித்த அவை முன்னவர் செங்கோட்டையன், "வறட்சி நிதி செப்டம்பர் மாதத்திற்கு பின் தான் கணக்கெடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T08:16:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை எவ்வளவு? (07-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1786090496"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1786090496</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (07-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (07-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,347,429.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 47,530.00.</p><p>

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 380,250.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 43,570.00.</p><p>

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 348,600.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 41,590.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 332,750.00.</p>]]></content>
            <updated>2026-08-07T08:15:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் டால்பின் புயல்: 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றம், 500 விமானங்கள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-evacuates-260k-as-typhoon-dolphin-hits-1786090234"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-evacuates-260k-as-typhoon-dolphin-hits-1786090234</id>
            <summary type="text">Japan Typhoon Dolphin: டால்பின் புயல் ஜப்பானை நெருங்கி வருகிறது.ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் டால்பின் புயல் நெருங்கி வருவதால், அதிகாரிகள் அவசர வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Japan Typhoon Dolphin: டால்பின் புயல் ஜப்பானை நெருங்கி வருகிறது.</p><p>ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் டால்பின் புயல் நெருங்கி வருவதால், அதிகாரிகள் அவசர வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.</p><p>காகோஷிமா மற்றும் ஒகினாவா மாகாணங்களில் சுமார் 2,60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2394eb3f-fcbe-4885-a367-1df54cbaf58c/26-6a7592fd1d5ff.webp' /></p><p>இந்த புயல் Category 1 வகை புயலாகும். அதிகபட்சமாக 144 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. சில இடங்களில் 198 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
</p><p>
புயல் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா (Toyota) நிறுவனம் தனது 9 தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
</p><p></p><p>புயல் தாக்கம் ஒகினாவா மற்றும் கியுஷூ தீவுகள் முழுவதும் பரவியுள்ளது. கடந்த வாரம் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட குமமோட்டோ மாகாணம் இன்னும் பாதிப்பிலிருந்து மீளவில்லை. அங்கு 6,700 பேர் இன்னும் வெளியேற்ற முகாம்களில் தங்கியுள்ளனர்.
</p><p>
மேலும், புயலுடன் கூடிய மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்பதால் வெப்பவாதம் (Heatstroke) அபாயமும் அதிகரித்துள்ளது.

அதிகாரிகள் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T08:08:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் உச்ச கட்ட வறட்சி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-is-reaching-extreme-drought-level-1786085315"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-is-reaching-extreme-drought-level-1786085315</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்து தனது வறட்சி எச்சரிக்கையை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது.


குறைவான மழை மற்றும் தொடர் வெப்ப அலைகள் காரணமாக சுவிட்சர்லாந்து தனது வறட்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்து தனது வறட்சி எச்சரிக்கையை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது.
</p><p>

குறைவான மழை மற்றும் தொடர் வெப்ப அலைகள் காரணமாக சுவிட்சர்லாந்து தனது வறட்சி எச்சரிக்கையை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது.
</p><h3>
உச்ச கட்ட வறட்சி
</h3><p>
சுவிட்சர்லாந்தில் வறட்சி, நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் இல்லை, சில நீர் நிலைகள் வறண்டுவிட்டன என தகவல்கள் வெளியாகிவருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4244085-541e-4c4b-bf66-e2ccb02f4b77/26-6a757fc4ad953.webp' /></p><p>
வழக்கமாக ஆல்ப்ஸ் மலையில் தங்கள் கால்நடைகளை மேய்க்கும் விவசாயிகள், கால்நடைகளுக்கு புல் பற்றாக்குறை உருவாகியுள்ளதால் கஷ்டப்பட்டுவருகிறார்கள்.&nbsp;</p><p></p><p>
சுற்றுலாப்பயணிகள் உல்லாசப்பயணம் மேற்கொள்ளும் ஏரிகள் சில வறண்டு ஏரியின் படுகை வெடிக்கும் நிலை உருவாகியுள்ளதால், சுற்றுலாவும் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JqHovwxIBSk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
நீர் நிலைகள் வறண்டுபோனதால் பல்லாயிரக்கணக்கான மீன்கள் மாண்டுவிட்டன. பல இடங்களில் தண்ணீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆக, உலக நாடுகள் பலவற்றிலிருந்து கோடையை செலவிடுவதற்காக மக்கள் சுவிட்சர்லாந்துக்குச் செல்வது வழக்கம். </p><p>ஆனால், அந்த சுவிட்சர்லாந்திலேயே வறட்சி என வெளியாகியுள்ள தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:51:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார் - முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-says-ready-to-bear-any-humiliation-1786083324"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-says-ready-to-bear-any-humiliation-1786083324</id>
            <summary type="text">தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் கேள்வி 

தமிழ்நாடு அரசின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். </p><h3>

உதயநிதி ஸ்டாலின் கேள்வி </h3><p>

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 ஆகஸ்ட் முதல் நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.
</p><p>
இன்று, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4382cff7-ac56-43d8-9a67-6b59bae2bc67/26-6a7577fe682ec.webp' /></p><p> 

இதில் பேசிய அவர், தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது தடுப்பணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு வேகம் காட்டி வருகிறது. தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? </p><p>அனைத்துக்கட்சி கூட்டத்தை விவாதிக்க ஆளும் அரசு தயங்குவது ஏன்? 

டில்லியில் கர்நாடக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நம் மாநிலமும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை எப்போது கூட்ட போகிறீர்கள்" என பேசினார்.</p><h3> 

முதலமைச்சர் விஜய் பதில் </h3><p>

இதற்கு பதிலளித்துள்ள பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், "காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சில விவரங்களை கேட்டு இருக்கிறார்கள். காவிரி நமக்கு உயிர் ஆதாரம். நம்முடைய உணர்வு ரீதியான ஒன்று. அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளி கூட நமது அரசுக்கு இல்லை. அதற்கான அவசியமும் இல்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93a1d5df-31fe-420e-a3cb-b94d616e5a9b/26-6a7577fdb68a7.webp' /></p><p>

மேகதாது விவகாரத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து தான் தீர்மானம் போட்டோம். அதனை கடிதமாக பிரதமருக்கும் அனுப்பி வைத்து இருக்கிறோம். அதோடு நாம் அப்படியே இருந்துவிடவில்லை.
</p><p>
மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். காவிரி நதி நீர் பங்கீட்டிலும் சரி , மேகதாது அணை கட்டும் முயற்சிகளை தடுப்பதிலும் சரி, தமிழகத்தின் உரிமையை கொஞ்சம் கூட நம்ம அரசு விட்டு தரவே தராது. அது தான் நமது நிலைப்பாடு.</p><p> 

கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்படும் முயற்சிகள் குறித்து 1969ல் இதே அவையில் விவாதம் நடந்து இருக்கிறது. அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? அப்பொழுது அணை கட்ட விட்டது யார் என்று கேட்டு மலிவான அரசியல் செய்ய விரும்பவில்லை. அது நமது நோக்கமும் இல்லை. </p><p>

காவிரி பிரச்னையில் சம்பந்தப்பட்ட இரண்டு மாநிலங்களும், மத்திய அரசும் உட்கார்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று 1969ல் இந்த அவையில் பேசி இருக்கிறார்கள். அன் பிறகு நிலைமை மாறியது நமக்கு எல்லோருக்கும் தெரியும்.
</p><p>
காவிரி பிரச்னையில் ஒரு முயற்சி எடுத்துப்பார்க்கலாமே என்று நினைத்துதான் பெங்களூரு பயணத்தை பற்றி யோசித்து கேட்டது நான்தான். இது பற்றி பல கருத்துக்கள் வந்தன.
</p><p>
பிரச்னையை தீர்க்க பாசிட்டிவான சிக்னல் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் யோசித்தேன். இன்றைய காலகட்டத்தில் பகை நாடுகளே பேசித் தீர்க்கப் பார்க்கிறாங்க, பக்கத்து மாநிலத்தோட பேசிப் பார்த்தால் என்னன்னு நினைத்தேன்.
</p><p> 
இந்த பயணத்தால் அவமானம் நேர்ந்தால் என்னவாவது என்று கேட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்கிக்கொள்ள நான் தயார். </p><p>

காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். குறுவை சாகுபடிக்கு ஏற்கனவே அந்த நிவாரணம் கொடுத்தாச்சு. </p><p>

இதுவந்து அரசியலே நாங்கள் தான்என்று சொல்லி கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன, பின்ன பேப்பர் படித்து இருந்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும்" என கூறினார்.</p><p> 

இதன் பின்னர் பேசிய சிபிஎம் எம்.எல்.ஏ. செல்லசுவாமி, “தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகாவிற்கு சென்று மண்டியிட வேண்டிய தேவை இல்லை அந்த அவமானத்தை தாங்குவேன் என்று அவர் கூறினார். அது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் அவமானமாகும்." என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:40:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி-துருக்கி-பாகிஸ்தான் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-turkey-pakistan-sign-defence-pact-1786088225"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-turkey-pakistan-sign-defence-pact-1786088225</id>
            <summary type="text">சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று முக்கியமான இஸ்லாமிய நாடுகள் இன்று (ஆகஸ்ட் 7) ஜெத்தாவில் கூடி, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று முக்கியமான இஸ்லாமிய நாடுகள் இன்று (ஆகஸ்ட் 7) ஜெத்தாவில் கூடி, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.
</p><p>
சவுதி இராணுவம் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த ஒப்பந்தம் நீண்ட காலமாக ஆலோசனையில் இருந்தாலும், சமீபத்திய பிராந்திய சூழ்நிலைகள் காரணமாக விரைவாக முடிவுக்கு வந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/191c7810-1c86-4226-9358-3cca6bb18667/26-6a758b22692bb.webp' /></p><p>அமெரிக்கா-ஈரான் போரின் தாக்கம், ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடலில் கப்பல் போக்குவரத்து பாதிப்பு ஆகியவை இந்த ஒப்பந்தத்தை அவசியமாக்கியுள்ளன.
</p><p>
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் ஆகியோர் ஜெத்தாவில் சந்திக்க உள்ளனர். </p><p>பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தலைவர் அசிம் முனீர் நேற்று சவுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். துருக்கி ஜனாதிபதி இன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இந்த விஜயம் ஆகஸ்ட் 6 முதல் 8 வரை நடைபெறும் என்றும், இது உடனடி பிரச்சினைகளைத் தாண்டி நீண்டகால முக்கியத்துவம் பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னதாக 2025-இல் சவுதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தான் உலகில் ஒரே அணு ஆயுதம் கொண்ட முஸ்லிம் நாடாக இருப்பதால், இந்த புதிய மூன்று நாடுகள் ஒப்பந்தம் உலக கவனத்தை ஈர்க்கிறது.</p><p>

இந்த ஒப்பந்தம், பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, மூன்று நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை உறுதிப்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T07:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sun-ketu-conjunction-1786088012"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sun-ketu-conjunction-1786088012</id>
            <summary type="text">நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

அதேபோல், நவக்கிரகங்களில் அமங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.</p><p>

அதேபோல், நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.</p><p>

இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.</p><p> </p><p></p><p>அதே வேளையில் இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருகிறார். </p><p>

இதனால் இந்த சூரிய பெயர்ச்சியால் சிம்ம ராசியில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் சூரியன்-கேது சேர்க்கை நிகழவுள்ளது.</p><p>

அந்தவகையில், சூரியன் மற்றும் கேதுவின் இந்த இணைவால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிக பலன்களை பெறப்போகின்றனர்.&nbsp;</p><h2>சிம்மம்</h2><ul><li>

நிதி நிலை நன்றாக இருக்கும்.
</li><li>குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் கிடைக்கும்.</li><li>
நிலுவையில் உள்ள பணம் திரும்பக் கிடைக்கும்.</li><li>
முதலீடுகள் பெரிய லாபத்தைக் கொடுக்கும்.</li><li>
பொருளாதார நிலை வலுவடையும்.
</li><li>வேலையை மாற்ற இக்காலம் சரியாக இருக்கும்.
</li><li>இக்காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.</li><li>
குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவும்.
</li><li>பூர்வீகச் சொத்து மூலம் ஆதாயம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a05862-cf99-4b0d-ab20-7522a246ed34/26-6a758b12ec29b.webp' /></p><p>
</p><h2>
கன்னி </h2><ul><li>
சாதகமானப் பலன்களை அளிக்கும்.
</li><li>அவர்களின் நற்பெயரை மேலும் உயர்த்தும்.
</li><li>சுற்றியுள்ளவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.
</li><li>வியாபாரத்தில் முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வீர்கள்.
</li><li>தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது மிகச்சிறந்த காலம்.
</li><li>அவர்களின் பொருளாதார நிலை மேம்படும்.
</li><li>நிதி நிலையில் முன்னேற்றம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63a50270-67ff-4f01-b660-3c7dad9a1364/26-6a758b13a66fa.webp' /></p><h2>
 மகரம்</h2><ul><li> 
நேர்மறையான பலன்களை ஏற்படுத்தும்.
</li><li>நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
</li><li>அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும்.
</li><li>வேலையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் உண்டாகும்.</li><li>
காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
</li><li>குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.
</li><li>இக்காலத்தில் சாதனைகளை செய்வார்கள்.
</li><li>வணிகத்தில் அதிகளவு லாபம் உண்டாகும்.</li><li>
வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19bb7775-4344-4643-8544-b0efc67abb4b/26-6a758b1457517.webp' /></p><p>
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T07:37:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தன்றே கார் மோதி உயிரிழந்த மணப்பெண்: குற்றவாளி பெண்ணின் புதிய காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/body-camera-footage-of-bride-killed-in-carolina-1786088081"></link>
            <id>https://news.lankasri.com/article/body-camera-footage-of-bride-killed-in-carolina-1786088081</id>
            <summary type="text">அமெரிக்காவில் மணப்பெண் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பெண் தனது கைது குறித்து புலம்பும் காணொளி வெளியாகியுள்ளது.&amp;nbsp;மணப்பெண்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் மணப்பெண் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பெண் தனது கைது குறித்து புலம்பும் காணொளி வெளியாகியுள்ளது.&nbsp;</p><h2>மணப்பெண்&nbsp;மரணம் </h2><p>

அமெரிக்காவின் சார்லஸ்டனில், கடந்த 2023ஆம் ஆண்டு எரிக் ஹட்சின்சன், சமந்தா மில்லர் ஆகிய புதுமணத் தம்பதியின் கோல்ஃப் வாகனத்தின் மீது அதிவேகத்தில் வந்த கார் மோதியது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VWOhVLb2z1o?start=92" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இதில் 34 வயதான சமந்தா மில்லர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஹட்சின்சனுக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிவுகள், முகத்தில் பலத்த எலும்பு முறிவுகள் மற்றும் மூளையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. </p><p>

வாடகை கார் மூலம் இந்த விபத்தை ஏற்படுத்திய ஜேமி லீ கொமோரோஸ்கி என்ற பெண், சில கணங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். 

ஆரம்பத்தில் பிணை இல்லாமல் காவலில் வைக்கப்பட்ட கொமோரோஸ்கி, மார்ச் 2024-யில் 150,000 டொலர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
</p><p>
இறுதியில், அவர் கவனக்குறைவான கொலை, குடிபோதையில் வாகனம் ஓட்டியது மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டி பெரும் உடல் காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்திய இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
</p><p>

மேலும் தனது குற்றத்திற்காக மன்னிப்பு கோரிய போதிலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மது அருந்தி வாகனம் ஓட்டி இருவருக்குக் கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்திய குற்றங்களுக்காக தலா 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மது அருந்தி வாகனம் ஓட்டிய தீவிர குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24af7d08-f8ad-42b2-af8c-fe3d8f98c0b5/26-6a758a952d126.webp' />&nbsp; </p><h2>கமெரா காட்சிகள்</h2><p>

இந்த நிலையில் அவர் மீது தற்போது ஒரு தவறான மரணம் தொடர்பான சிவில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது; இவ்வழக்கை ஹட்சின்சன் அவர் மீதும், அன்று இரவு அவருக்கு மது பரிமாறிய மதுக்கூடங்கள் மீதும் தொடுத்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், WCSC வெளியிட்ட புதிய பாதுகாப்பு கமெரா காட்சிகளில் தனது கைது தொடர்பான நடைமுறைகளை மேற்கொண்டிருந்த அதிகாரிகளிடம், 

"நான் இதை முடித்துக்கொண்டு வீட்டிற்கு செல்ல விரும்புகிறேன்" என்று அவர் புலம்புகிறார்.</p><p> 

மேலும், "நான் செய்ததாக கூறப்படும் எந்தவொரு விடயத்திற்கும் யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை" என்று வலியுறுத்திய அவர், தனது தந்தையை அழைக்கலாமா என்று கேட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa724b8e-6538-443b-a6d4-23627b9b61b9/26-6a758a946526f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:32:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயது மாணவரால் மொத்தமாக அதிர்ந்த தாய்லாந்து: 3 ஆசிரியர்கள் உட்பட 6 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thailand-school-shooting-1786087337"></link>
            <id>https://news.lankasri.com/article/thailand-school-shooting-1786087337</id>
            <summary type="text">தாய்லாந்தில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆசிரியர்களும் மாணவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆசிரியர்களும் மாணவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>தாய்லாந்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆசிரியர்களும் மாணவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2>ஆறு பேர் மரணம்</h2><p>
</p><p>சமீபத்திய வருடங்களில் தாய்லாந்தில் நிகழ்ந்த மிக மோசமான பாடசாலை துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒன்றாகவே கூறப்படுகிறது. இதில் குறைந்தது ஆறு பேர் மரணமடைந்துள்ளனர், அவர்களில் மூன்று பேர் மாணவர்கள் மற்றும் மூன்று பேர் ஆசிரியர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d997a8d0-b14f-4130-a538-f53c6d867eb2/26-6a7587ab75484.webp' /></p><p> </p><p>மேலும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் டிரைராங் பிவ்பான் தெரிவித்துள்ளார். </p><p>பாங்காக்கிற்கு வடக்கே உள்ள நோந்தபுரி மாகாணத்தின் பாங் குவாய் (Bang Kruai) மாவட்டத்தில், பரபரப்பான நெடுஞ்சாலையொட்டி அமைந்துள்ள சுமார் 3,000 மாணவர்கள் பயிலும் புகழ்பெற்ற இடைநிலைப் பள்ளியான 'டெப்சிரின் நோந்தபுரி' (Debsirin Nonthaburi) பள்ளியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. </p><p>துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் இறந்துவிட்டதாக ஆரம்பக்கட்டத் தகவல்களில் காவல்துறை கூறியிருந்தாலும், அவர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மருத்துவர்கள் அவருக்கு அவசரச் சிகிச்சை அளித்து வருவதாகவும் டிரைரோங் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><p> </p><p>குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் டிரைராங் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமானதாக அந்தத் துப்பாக்கி கருதப்படுகிறது; இருப்பினும், அந்த நபர் அத்துப்பாக்கியை எவ்வாறு அடைந்தார் என்பதைப் பொலிசார் இன்னும் கண்டறியவில்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் டிரைரோங் தெரிவித்துள்ளார்.</p><h2>10.3 மில்லியன் துப்பாக்கி</h2><p> </p><p>தென்கிழக்கு ஆசியாவின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், தாய்லாந்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. </p><p>சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'ஸ்மால் ஆர்ம்ஸ் சர்வே' (SAS) அமைப்பின் 2017-ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, தாய்லாந்தில் பொதுமக்களின் வசம் 10.3 மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள் இருந்தன; அதாவது, அங்கு ஒவ்வொரு 100 பேருக்கும் சுமார் 15 துப்பாக்கிகள் இருந்தன என தெரிய வருகிறது.</p><p> வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய நோய்ப் சுமை தரவுத்தளத்தின்படி, பிலிப்பைன்ஸுக்கு அடுத்தபடியாக, தென்கிழக்கு ஆசியாவில் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் அதிக எண்ணிக்கையில் நிகழும் இரண்டாவது நாடாக தாய்லாந்து திகழ்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8667ea0-8710-418c-94e4-ae59745c3a43/26-6a7587ac2e220.webp' /></p><p> </p><p>தெற்கு தாய்லாந்தின் ஹாட் யாய் (Hat Yai) மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில், கடந்த பிப்ரவரி மாதம் ஓர் ஆசிரியர் மரணமடைந்தார்; ஒரு மாணவர் காயமடைந்தார். </p><p>முன்னதாக 2022-ஆம் ஆண்டில், நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவத்தில் 36 பேர் கொல்லப்பட்டனர்; அவர்களில் 24 பேர் குழந்தைகள் ஆவர். இத்தகைய சம்பவங்களிலேயே இதுவே அந்நாட்டின் மிக மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிகழ்வாகக் கருதப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T07:20:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து அசைந்துகொண்டிருக்கும் கிணறு: குஜராத்தில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/villagers-wonder-on-gujart-shaking-well-1786084553"></link>
            <id>https://news.lankasri.com/article/villagers-wonder-on-gujart-shaking-well-1786084553</id>
            <summary type="text">இந்தியாவின் குஜராத்தில் கிணறு ஒன்றில் தொடர்ந்து நீர் பயங்கரமாக அசைந்துகொண்டிருக்கும் விடயம் ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.


இந்தியாவின் குஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் குஜராத்தில் கிணறு ஒன்றில் தொடர்ந்து நீர் பயங்கரமாக அசைந்துகொண்டிருக்கும் விடயம் ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.</p><p>


இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள வீரபத்ரா கிராமத்தில், மூன்று மாதங்களுக்கு முன், தன் நிலத்தில் பிரம்மாண்ட கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளார் ப்ரன் ஜீவன் சதாரியா என்னும் விவசாயி.</p><p>

இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 2ஆம் திகதி, கிணற்றுக்குச் சென்ற சதாரியா, வித்தியாசமான காட்சி ஒன்றைக் கண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3847a356-b4f7-4be1-b0b0-80979aa03de7/26-6a757ccacd043.webp' /></p><p>
ஆம், வாளியை அசைக்கும்போது அதிலுள்ள தண்ணீர் அசைவதைப் போல, அந்தக் கிணற்றிலுள்ள நீர் பயங்கரமாக அசைந்துகொண்டே இருந்திருக்கிறது, சில நேரங்களில் கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேயும் சிந்தியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Well water oscillate non stop in Gujarat. Whyy ?<br><br>This is called well seiche<br><br>Imagine you have a bucket filled with water. If you suddenly shake the bucket once, the water moves left to right → left → right for some time before becoming still.<br><br>Now imagine the Earth itself is… <a href="https://t.co/d26u8mgnPv">pic.twitter.com/d26u8mgnPv</a></p>&mdash; Madhu sudhan Reddy Pakala (@MSRPakala) <a href="https://x.com/MSRPakala/status/2085555877021659159?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h3>எதனால் இப்படி நிகழ்கிறது?</h3><p>

எதனால் இந்த கிணற்றிலுள்ள நீர் அசைந்துகொண்டே இருக்கிறது என்பது யாருக்கும் புரியாத நிலையில், இது நிலநடுக்கம் தொடர்பானது அல்ல என்று மட்டும் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
</p><p>
இந்நிலையில், நில இயல் நிபுணரான J.S. Vadher என்பவர், சமீபத்தில் பெய்த மழை, நிலத்தடி நீரில் மாற்றங்களை ஏற்படுத்தியதால் இந்த விடயம் நடக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
அதாவது, நிலத்தடி நீர் வேகமாக பூமிக்கடியில் செல்லும்போது, பாறைகளுக்கிடையில் சிக்கியுள்ள காற்று வெளியேறுவதால் அந்தக் கிணற்றிலுள்ள தண்ணீர் அசையக்கூடும் என்கிறார் அவர்.</p><p>

என்றாலும், நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ள இருக்கும் நிலையில், அவர்களுடைய ஆய்வு முடிவுகள் இந்த விடயத்துக்கு விளக்கமளிக்கக்கூடும்.

அதுவரை, இந்த அசையும் கிணறு ஒரு மர்மமாகவே நீடிக்கப்போகிறது.
</p><p>
இந்நிலையில், இந்த அரிய காட்சியைக் காண்பதற்காக ஏராளமான மக்கள் அங்கு கூடிவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T06:35:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிக்கோலஸ் பூரனின் அதிரடியில்..இமாலய இலக்கினை எட்டிய MI லண்டன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mi-london-beat-london-spirit-by-4-wickets-1786084436"></link>
            <id>https://news.lankasri.com/article/mi-london-beat-london-spirit-by-4-wickets-1786084436</id>
            <summary type="text">லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிரான The Hundred போட்டியில் MI லண்டன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்&amp;nbsp;

லண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிரான The Hundred போட்டியில் MI லண்டன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><h2>லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்&nbsp;</h2><p>

லண்டன் ஸ்பிரிட் மற்றும் MI லண்டன் அணிகளுக்கு இடையிலான The Hundred போட்டி லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3338ba97-453b-4ca5-a244-89bbef002f1e/26-6a757c589d9be.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய லண்டன் ஸ்பிரிட் அணி 100 பந்துகளில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் (Lhuan-dre Pretorius) 28 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>பூரன்,&nbsp;கர்ரன்&nbsp;விளாசல் </h2><p> 

டேவிட் வில்லி 18 பந்துகளில் 31 ஓட்டங்களும், ஜேம்ஸ் கோல்ஸ் 23 பந்துகளில் 30 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78df5e5d-d1a8-4d19-a40b-2381db790a29/26-6a757c5950014.webp' /></p><p>

பின்னர் ஆடிய MI லண்டன் அணி 94 பந்துகளில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.</p><p>

நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்களும், சாம் கர்ரன் 23 பந்துகளில் 33 ஓட்டங்களும், சிக்கந்தர் ரஸா 18 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 32 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78df5e5d-d1a8-4d19-a40b-2381db790a29/26-6a757c5950014.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T06:31:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம்.., எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-is-the-largest-district-in-india-1786082290"></link>
            <id>https://news.lankasri.com/article/which-is-the-largest-district-in-india-1786082290</id>
            <summary type="text">இந்தியா மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகும்.

நாட்டின் நிர்வாக வசதிக்காக இந்தியா மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களாகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகும்.
</p><p>
நாட்டின் நிர்வாக வசதிக்காக இந்தியா மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்நிலையில், இந்தியாவில் தற்போது மொத்தம் 806 மாவட்டங்கள் உள்ளன.</p><p>

அந்தவகையில், இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது என்பது குறித்து பார்க்கலாம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2da69ada-87ab-48cf-ab3b-6b8c908cedb0/26-6a75748cd64e9.webp' /></p><p>பரப்பளவின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் (Kutch) மாவட்டமாகும். </p><p>இதன் மொத்த பரப்பளவு 45,674 சதுர கிலோமீட்டர்.

இந்த மாவட்டத்தில் சுமார் 21 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். </p><p>

மேலும் 10 தாலுகாக்கள் மற்றும் 994 கிராமங்கள் உள்ளன. இங்கு எழுத்தறிவு விகிதம் 70.59% ஆகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c5b3583-2ca1-4164-ae6f-0d2e96886c43/26-6a75748dc9df6.webp' /></p><p>கட்ச் மாவட்டம் வடமேற்கில் பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. 

பரப்பளவில் இது இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட பெரியதாகும்.
</p><p>
இந்த மாவட்டத்தில் உலகின் மிகப்பெரிய உப்புப் பாலைவனங்களில் ஒன்றான ரான் ஆஃப் கட்ச் அமைந்துள்ளது.</p><p> 

இதில் கிரேட் ரான் ஆஃப் கட்ச், லிட்டில் ரான் ஆஃப் கட்ச் மற்றும் பன்னி புல்வெளி ஆகிய பகுதிகள் அடங்கும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f3bb766-35b7-4c80-a0f0-7eb6df3b9697/26-6a75748e81f46.webp' /></p><p>உலகப் புகழ்பெற்ற சிந்து சமவெளி நாகரிகத்தின் தோலாவிரா தொல்லியல் தளம் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது.
</p><p>
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெறும் ரான் உத்சவ் திருவிழா ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, உள்ளூர் மக்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.
</p><p>
மேலும், கட்ச் பகுதி ஃபிளமிங்கோ பறவைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாகவும், இந்தியக் காட்டுக்கழுதை சரணாலயத்திற்கும் பெயர் பெற்றதாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T06:04:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வெப்பத்தில் தவிக்கும் இத்தாலி... உயர் எச்சரிக்கை நிலையில் முக்கிய நகரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/italy-swelters-heatwave-rages-1786082030"></link>
            <id>https://news.lankasri.com/article/italy-swelters-heatwave-rages-1786082030</id>
            <summary type="text">கடும் வெப்பநிலை காரணமாக, இத்தாலியில் அனைத்து முக்கிய நகரங்களும் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமையன்று நிலவிய அதிக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடும் வெப்பநிலை காரணமாக, இத்தாலியில் அனைத்து முக்கிய நகரங்களும் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
வியாழக்கிழமையன்று நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக, இத்தாலி தனது அனைத்து முக்கிய நகரங்களையும் மிக உயர்ந்த சுகாதார எச்சரிக்கை நிலைக்கு உட்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளது.</p><h2>பொருளாதார இழப்பு</h2><p>
</p><p>ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் வெப்ப அலை தொடர்ந்து நீடித்த நிலையில், எரிசக்தியைச் சேமிப்பதற்காக ஹங்கேரி தனது மிக முக்கியமான சில கட்டிடங்களின் விளக்குகளை அணைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/322ce8ea-db27-4e11-864e-5bf97574430b/26-6a7572f104312.webp' /></p><p> </p><p>உலகின் மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமான ஐரோப்பா, இந்த கோடையில் சாதனை அளவிலான வெப்பம் மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது; குறிப்பாக சமீபத்திய வாரங்களில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இதில் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
</p><p>காட்டுத்தீ அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அதிக நிதி செலவிடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளை வலியுறுத்தும் என்று அதன் சுற்றுச்சூழல் ஆணையர் தெரிவித்துள்ளார். </p><p>அதேவேளை, இந்த கோடைக்காலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு ஏற்கனவே 15 பில்லியன் யூரோக்களை கடந்துவிட்டதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.</p><p></p><p> </p><p>தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல்கேரியா, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மிக அண்மைய ஐரோப்பிய ஒன்றிய நாடாகும். இத்தாலி வெப்பமான கோடைக்காலங்களுக்குப் பழகியதுதான்;</p><h2>கடுமையான சுகாதார ஆபத்து</h2><p> </p><p>இருப்பினும், அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் விடுத்த 'சிவப்பு எச்சரிக்கை' (red alert), தெற்குத் தீவான சிசிலியில் உள்ள பலெர்மோ முதல் மலைப்பாங்கான வடக்குப் பகுதியான போல்சானோ வரை விரிவடைந்துள்ளது. </p><p>நீண்ட காலத்திற்கு நீடிக்கும் அதிக வெப்பநிலை ஒட்டுமொத்த மக்களுக்கும் கடுமையான சுகாதார ஆபத்தை ஏற்படுத்துவதால், இது ஒரு சாத்தியமான சுகாதார அவசரநிலையைக் குறிப்பதாக அந்த எச்சரிக்கை அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b39f9b66-c673-4a53-96fb-bd24557972d2/26-6a7572f1a9ad4.webp' /></p><p> </p><p>புனித பிரான்சிஸின் மறைவின் 800-வது ஆண்டு நினைவைக் குறிக்கும் வகையில் பாப்பரசர் லியோ அசிசி நகருக்கு வருகை தந்தபோது, ​​மலை உச்சியில் அமைந்துள்ள அந்நகரில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் கூடியிருந்த யாத்ரீகர்களின் உடல் சூட்டைத் தணிக்க அவர்கள் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது.</p><p> இத்தாலியின் மிக வெப்பமான பகுதிகளில் ஒன்றான வடக்கு எமிலியா-ரோமக்னா (Emilia-Romagna) பிராந்தியத்தின் பல பகுதிகளில் வியாழக்கிழமையன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகப் பதிவானது; குறிப்பாக ரவென்னா (Ravenna) நகருக்கு அருகிலுள்ள பக்னகவல்லோ (Bagnacavallo) பகுதியில் வெப்பநிலை 42.8 டிகிரி செல்சியஸை எட்டியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T05:51:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்த 97 வயது மூதாட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/97-old-women-record-at-wing-walking-1786024119"></link>
            <id>https://news.lankasri.com/article/97-old-women-record-at-wing-walking-1786024119</id>
            <summary type="text">97 வயது மூதாட்டி, பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

விமான இறக்கை மேல் நடந்த 97 வயது மூதாட்டி

பிரித்தானியாவின் செல்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>97 வயது மூதாட்டி, பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.</p><h3>

விமான இறக்கை மேல் நடந்த 97 வயது மூதாட்டி
</h3><p>
பிரித்தானியாவின் செல்டென்ஹாமைச் சேர்ந்தவர் 97 வயதான பெட்டி ப்ரோமேஜ் என்ற மூதாட்டி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d962fa2-7507-458c-a132-1714aaf8c4dc/26-6a7490ba02c0b.webp' /></p><p>

கடந்த ஆண்டு இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, செல்டென்ஹாம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். </p><p>

செல்டென்ஹாம் மருத்துவமனை ஊழியர்கள் தன்னை நன்றாக கவனித்து கொண்டதால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நிதிதிரட்டும் முயற்சியில் இறங்கினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe3eb363-29bd-4655-a1ee-bc633124265b/26-6a7490b9504af.webp' /></p><p>

இதற்காக பறக்கும் விமானம் ஒன்றின் ரெக்கை மேல் நடந்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A 97-year-old British woman broke her own Guinness World Record for being the oldest female wing walker.<br> <br>&quot;I&#39;d just get bored of life otherwise,&quot; Betty Bromage, who has done six wing walks in the last decade, said. <a href="https://t.co/n4OYn0jMZl">pic.twitter.com/n4OYn0jMZl</a></p>&mdash; ABC News (@ABC) <a href="https://x.com/ABC/status/2085330161323409823?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதன் மூலம் விமான இறக்கையில் நடந்த மிக வயதான பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

முன்னதாக 4 ஆண்டுகளுக்கு முன்னரே இதே சாதனையை படைத்த அவர், தற்போது தன்னுடைய சாதனையே முறியடித்துள்ளார். அதற்கு முன்னதாக 5முறை இவ்வாறு நடந்துள்ளார். </p><p>

எனக்கு நூறு வயதாகும்போது, ​​நான் ஏதாவது சிறப்பான ஒன்றைப் பற்றி யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:15:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு ட்ரோன்: பிரித்தானிய நிபுணர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-expert-warns-regard-drone-in-germany-airport-1786079472"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-expert-warns-regard-drone-in-germany-airport-1786079472</id>
            <summary type="text">ஜேர்மனியில் வெடிகுண்டு இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய நிபுணர் ஒருவர் எச்சரித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் வெடிகுண்டு இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
</p><p>


ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், ட்ரோன் ஒன்றுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.</p><p>

இந்நிலையில், அது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் சில எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டுள்ளார்.
</p><h3>
விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்</h3><p>

ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b14e5c2-506c-4bb5-8a56-18441c00de73/26-6a7568f24932c.webp' /></p><p>

பின்னர், விமான நிலையத்தின் ஓடுபாதையில், வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட, கடும் அதிர்ச்சி உருவானது.
</p><p>
பிரித்தானிய நிபுணர் எச்சரிக்கை

இப்படி ஜேர்மன் விமான நிலையமொன்றில் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் அச்சுறுத்தல் என பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
அதாவது, அந்த ட்ரோன் உக்ரைன் விமானம் ஒன்றின் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ட்ரோனை ரஷ்யாவுடன் இணைத்து எச்சரித்துள்ள வில் கெடஸ் (Will Geddes) என்னும் அந்த நிபுணர், புடின் நினைத்தால் பயணிகள் விமானம் ஒன்றைக் கூட தாக்கி அழிக்க முடியும் என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.</p><p>

இப்போது ட்ரோன் ஒன்றுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளன. அப்படியானால், ட்ரோனுடன் கதிரியக்கப் பொருட்களையோ, உயிரி ஆயுதங்களையோ கூட இணைக்கமுடியும் என்றும் வில் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8db24d5-552a-4267-8db5-b88990485be6/26-6a7568f1925ba.webp' /></p><p>
மேலும், பிரித்தானிய விமான நிலையங்களைப் பொருத்தவரை, ட்ரோன் ஒன்றை காரிலிருந்தோ, வீட்டிலிருந்தோ கூட இயக்கலாம்.
</p><p>
அப்படி ஒரு ட்ரோன் வெடிக்கச் செய்யப்படுமானால், அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும் என்கிறார் அவர்.</p><p>
ஆக, ஜேர்மனியில் ட்ரோன் ஒன்றுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டுள்ள விடயம், இத்தகைய ட்ரோன்களால் ராணுவங்களுக்கு மட்டுமல்ல, பயணிகள் விமானங்களுக்கும் ஆபத்து உள்ளது என்பதையே காட்டுவதாக தெரிவித்துள்ளார் வில்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:11:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் செம்பருத்தி எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/homemade-hibiscus-oil-for-hair-growth-in-tamil-1786077880"></link>
            <id>https://news.lankasri.com/article/homemade-hibiscus-oil-for-hair-growth-in-tamil-1786077880</id>
            <summary type="text">செம்பருத்தி பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் அந்தோசயனின் போன்ற உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

இது இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்பருத்தி பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் அந்தோசயனின் போன்ற உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. </p><p>

இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும், மற்றும் இதய நலனுக்கும் பெரிதும் உதவுகிறது.
</p><p>
செம்பருத்தி பூ சார்ந்த தயாரிப்புகள் முடி உதிர்வைத் தடுத்து, முடியை அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகின்றன.</p><p></p><p>

செம்பருத்தி பூ எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டவும், முடி உதிர்வைத் தடுத்து முடியை அடர்த்தியாகவும் கருமையாகவும் மாற்ற உதவும் மிகச் சிறந்த இயற்கை மூலிகை எண்ணெய் ஆகும். </p><p>

இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து பொடுகை விரட்ட உதவுகிறது.&nbsp;</p><p>அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். </p><h2>தேவையான பொருட்கள் </h2><ul><li>

செம்பருத்தி பூ- 15
</li><li>தேங்காய் எண்ணெய்- ½ லிட்டர் </li></ul><h2>

எப்படி தயாரிப்பது?</h2><p>

முதலில் அடுப்பில் ஒரு இரும்பு வாணல் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவைக்கவும்.</p><p>

அடுத்து இதில் சுத்தம் செய்த செம்பருத்தி இலைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5bcc60f-932b-4356-8d70-6bf1612497ce/26-6a7562baa8a99.webp' /></p><p>இதற்கடுத்து எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து எண்ணெய் ஆறியதும் இதனை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
</p><p>
செம்பருத்தி எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி, இரண்டு கைகளாலும் தேய்த்து முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும்.
</p><p>
பின்னர் 10 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்து ஊறவிட்டு கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T04:45:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸில் அமெரிக்க, இஸ்ரேலிய கப்பல்களைத் தடை செய்யும் மசோதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/draft-bill-bar-us-israeli-ships-1786076621"></link>
            <id>https://news.lankasri.com/article/draft-bill-bar-us-israeli-ships-1786076621</id>
            <summary type="text">அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற எதிரிகளின் கப்பல்களை ஹார்முஸ் நீரிணையில் தடை செய்ய ஈரான் திட்டம்.
அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பிற எதிரிகளின் கப்பல்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற எதிரிகளின் கப்பல்களை ஹார்முஸ் நீரிணையில் தடை செய்ய ஈரான் திட்டம்.
</p><p>அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பிற எதிரிகளின் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து செல்வதைத் தடுக்கும் ஒரு பூர்வாங்க மசோதாவை ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒன்று ஆய்வு செய்து வருகிறது.</p><h2>20 சதவீதம் அபராதம்</h2><p>
</p><p>குறித்த தகவலை ஈரானிய அரசாங்கத்திற்கு நெருக்கமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால், கப்பலில் உள்ள சரக்கின் மதிப்பில் 20 சதவீதம் வரை அபராதம் விதிக்கும் வகையில் இந்த வரைவு மசோதா அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2061d74a-3618-4ae0-b7c3-33aa872779f2/26-6a755dcfa4678.webp' /></p><p> </p><p>சட்டவரைவு இறுதி செய்யப்படுவதற்கு முன்னதாகப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு நிபுணர்களுக்கு நாடாளுமன்றம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்தச் சட்டம் இன்னும் நிபுணர்களின் ஆய்வில் இருப்பதாகவும் ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போருக்கு முன்னர், அந்த நீரிணையில் எவித்தக் கட்டுப்பாடுகளும் இன்றி, எண்ணெய் மற்றும் வணிகக் கப்பல்கள் போக்குவரத்தை முன்னெடுத்து வந்தது.</p><p></p><p> </p><p>ஆனால், போர் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அழுத்தமளிக்கும் வகையில், ஈரான் நிர்வாகம் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கியது.</p><h2>இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா</h2><p> </p><p>இருப்பினும் சீனா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஈரானின் ஏவுகணை பலம் மற்றும் அணு ஆயுதத்திற்கான முயற்சிகளை முடக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் தொடுத்த நிலையில், அமெரிக்காவின் இலக்கு பின்னர் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43c91a30-d37f-4543-bdd0-47dbffa6032e/26-6a755dd05763d.webp' /></p><p> </p><p>இதனையடுத்து வலுவானத் தாக்குதலை முன்னெடுத்த அமெரிக்காவுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. </p><p>தற்போது போருக்கான ஆயுதங்கள் மொத்தம் செலவிட்டுள்ள நிலையில், அமெரிக்கா இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கியுள்ளதாகவே போர் தொடர்பிலான ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T04:21:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிடம் ஆயுதங்கள் இல்லை... கசிந்த தகவல்களால் கடும் கோபத்தில் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-angry-depleted-munitions-1786073955"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-angry-depleted-munitions-1786073955</id>
            <summary type="text">அமெரிக்காவிடம் போருக்குத் தேவையான ஆயுதங்கள் மொத்தமும் தீர்ந்துவிட்டதாக வந்த செய்திகளால் ட்ரம்ப் கோபம் அடைந்துள்ளார்.
கடும் நெருக்கடியில் இருக்கும் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிடம் போருக்குத் தேவையான ஆயுதங்கள் மொத்தமும் தீர்ந்துவிட்டதாக வந்த செய்திகளால் ட்ரம்ப் கோபம் அடைந்துள்ளார்.
</p><p>கடும் நெருக்கடியில் இருக்கும் அமெரிக்க ஆயுதக் கையிருப்பு குறித்த தகவல்கள், ஒரு முக்கியமான கட்டத்தில் அமெரிக்காவை பலவீனமாகக் காட்டுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் கவலை தெரிவித்துள்ளார்.</p><h2>திகைத்துப்போகவில்லை</h2><p>
ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்வதற்காக, அவர் வலுவான இராணுவ நடவடிக்கை எடுக்க இருப்பதாக தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்த நிலையிலேயே, ஆயுதங்கள் இல்லை என்ற தகவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6fc14a-b446-4dd7-a24e-073d34763381/26-6a755366244fe.webp' /></p><p> </p><p>கடந்த வாரம் கேம்ப் டேவிட்டில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த விவாதம் முக்கிய இடத்தைப் பிடித்தது. ஈரான் போரில் சிக்கி ஏற்கனவே ​​விரக்தியடைந்துள்ள ட்ரம்ப், அமெரிக்காவிடம் தற்போது ஆயுதங்கள் இல்லை என்ற ஊடகங்களின் செய்தி தொடர்பில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். </p><p>ஆனால், ஆயுதங்களின் பற்றாக்குறை
தொடர்பான சாத்தியமான பிரச்சனைகள் குறித்து ட்ரம்ப் பல மாதங்களாக நன்கு அறிந்திருந்தார் என்றும், வெளியாகியுள்ள அறிக்கைகளால் அவர் திகைத்துப்போகவில்லை என்றும் பலர் கூறியுள்ளனர். </p><p>இருப்பினும், போரின் ஒரு திருப்புமுனையான கட்டத்தில் அந்தத் தகவல் வெளிச்சத்திற்கு வந்ததாலும், அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் அளிப்பதன் பின்னணியில் அதன் பலவீனமான நிலை என்பது அம்பலப்படுத்தப்பட்டதாலும் அவர் கோபமடைந்தார் என்று கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்காவிடம், குறிப்பாக சில குறிப்பிட்ட வகைகளில், பெருமளவிலான ஆயுதங்கள் இருப்பதாக அவர் பதிவு செய்துள்ளார். </p><p>மேலும், தேவைக்கேற்ப அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பவும் தயார் நிலையில் பல நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்படுகின்றன எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். </p><p>இருப்பினும், ஆயுதங்கள் இல்லை என்பது தொடர்பில் பரவி வரும் தகவல்களில் குறைந்தபட்சம் சிலவாவது துல்லியமானவை என்பதை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாகவே கூறப்படுகிறது. </p><p>அந்தத் தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட்டவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்களுக்குத் தனது நிர்வாகம் நீண்டகால சிறைத் தண்டனைகளை கோரும் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19a6977b-1268-4400-b7d4-201e78e5370b/26-6a7553656eed9.webp' /></p><p> </p><p>இதுவரை, ட்ரம்பின் கோபம் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் மீது குறிப்பாகத் திரும்பவில்லை என்றே வெள்ளை மாளிகை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். </p><p>ஈரான் போருக்கு முன்னர் அமெரிக்காவிடம் சுமார் 2,200 பேட்ரியாட்ஸ் ஏவுகணைகளும் 452 தாட் ஏவுகணைகளும் அதன் கையிருப்பில் இருந்தன. ஆனால் அதில் தற்போது பெரும்பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.</p><h2>கையிருப்புப் பற்றாக்குறை</h2><p> </p><p>அமெரிக்காவிடம் ஆயுதங்கள் இல்லை என கசிந்துள்ள தகவல், அமெரிக்க அதிகாரிகளை மட்டுமல்ல வளைகுடா நாடுகளின் தலைவர்களையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. </p><p>தற்போதைய மோதலைத் தீவிரப்படுத்த ட்ரம்ப் முடிவு செய்தால், வான் பாதுகாப்பு அமைப்புகளின் பற்றாக்குறை, ஈரானின் சாத்தியமான பதிலடித் தாக்குதலைத் தடுக்கும் வளைகுடா நாடுகளின் திறனைப் பாதிக்கக்கூடும். </p><p>மத்திய கிழக்கு நாடுகளில் பல, அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சார்ந்துள்ளன. கையிருப்புப் பற்றாக்குறையானது, ஈரானிடமிருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இடைமறிக்கும் தங்களின் திறனைத் தடுக்கக்கூடும் என்பதை வளைகுடாத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6c920ee-3115-4fec-9a2f-ab8483e4d099/26-6a755366cc517.webp' /></p><p> மீண்டும் அமெரிக்கத் தாக்குதல்கள் நடந்தால், பிராந்தியம் முழுவதும் இருளில் மூழ்கும் அல்லது கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரான் வளைகுடா நாடுகளுக்குத் தெரிவித்துள்ளது. </p><p>ஆயுதங்கள் இல்லை என்ற தகவல் பரவிவரும் நிலையில், கடந்த வாரம் ட்ரம்ப், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் தலைவர்களுடன் போர் குறித்து விவாதித்துள்ளார். </p><p>ஆயுதங்கள் இல்லை என்பது குறித்து வெளிவரும் தகவல்களால் ட்ரம்ப் கோபமடைந்துள்ள நிலையில், இந்தத் தகவல்கள் நிர்வாகத்திற்குள் இருக்கும் போர் எதிர்ப்பு அதிகாரிகளிடமிருந்து கசிந்திருக்கலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் நம்புகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T03:37:13+00:00</updated>
        </entry>
    </feed>
