<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-08T15:42:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையை இழந்த லியோனல் மெஸ்ஸி..ரசிகர்கள் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lionel-messi-father-jorge-died-at-68-1786199639"></link>
            <id>https://news.lankasri.com/article/lionel-messi-father-jorge-died-at-68-1786199639</id>
            <summary type="text">பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் தனது 68 வயதில் காலமானார்.

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் தனது 68 வயதில் காலமானார்.
</p><p>
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி உடல்நலப் பிரச்சனையால் காலமானார்.</p><h2>

லியோனல் மெஸ்ஸி</h2><p>உலகளவில் கால்பந்து ஜாம்பவானாக விளங்குபவர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi). பிபா 2026 உலகக்கிண்ணத் தொடரில் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b1e63d-9b54-4074-ad26-b33750ca24d9/26-6a773e5ac76c3.webp' />&nbsp;</p><p></p><p>
தற்போது மெஸ்ஸி தனது இன்டர் மியாமி கிளப் அணிக்காக லீக்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடி வருகிறார்.
</p><p>
இந்த நிலையில், மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி 68 வயதில் காலமானார். இந்த செய்தியை அர்ஜென்டினாவின் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன.
</p><p>
பின்னர் மெஸ்ஸி விளையாடிய அணியான நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>

ஜோர்ஜ் மெஸ்ஸி 7ஆம் திகதி அன்று, குடும்ப இல்லத்திற்கு அருகிலுள்ள ரொசாரியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் காலமானதாக கூறப்படுகிறது.
</p><p>
சமீபத்திய மாதங்களில் மெஸ்ஸியின் தந்தை உறுதிப்படுத்தப்படாத உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். </p><p>

இதன் காரணமாக, அவர் தனது சொந்த நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசரமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df680724-fa9f-4f2e-bdfa-4b6c5903fa5e/26-6a773e5b7e1d8.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T14:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷம் முதல் கன்னி வரை.., செய்யக்கூடாத விடயங்கள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mesham-to-kanni-rasi-palan-in-tamil-1786192127"></link>
            <id>https://news.lankasri.com/article/mesham-to-kanni-rasi-palan-in-tamil-1786192127</id>
            <summary type="text">ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். 

அவர்களின் ராசிக்குரிய அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட கிழமை என தனித்தனியாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். </p><p>

அவர்களின் ராசிக்குரிய அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட கிழமை என தனித்தனியாக இருக்கும்.</p><p>

அதேபோல், ஒவ்வொரு ராசிக்கும் நல்ல குணங்கள் என்றும் சில இருக்கும், எதிர்மறை குணங்கள் என்றும் சில இருக்கும்.</p><p> 

இந்நிலையில், 12 ராசிக்காரர்களும் தங்கள் இயல்புக்கு மாறாகத் தவிர்க்க வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில செயல்கள் உள்ளன.</p><p> 

ஒவ்வொரு ராசியும் தனது பலவீனமான குணங்களைத் தவிர்க்க வேண்டும். </p><p>

அந்தவகையில், மேஷம் முதல் கன்னி வரை உள்ள ராசிகள் செய்யக்கூடாத சில விடயங்களை இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
</p><h2>
மேஷம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MIgPijL2nTI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>ரிஷபம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EKNbnT-i4Cw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மிதுனம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/p_erJ9akPwI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கடகம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TChUhD8alaI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>சிம்மம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qIbv766UlTg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கன்னி&nbsp;</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-vXOtXWQgug" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T14:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோயினால் அவதியுற்ற குழந்தை: எலிசபெத் மகாராணியின் உறவினர் எடுத்த பயங்கர முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/queen-elizabeth-cousin-kill-daughter-dies-aged-89-1786193181"></link>
            <id>https://news.lankasri.com/article/queen-elizabeth-cousin-kill-daughter-dies-aged-89-1786193181</id>
            <summary type="text">தன் குழந்தை பயங்கர நோயால் அவதியுற்றுவந்ததை காண சகியாமல், குழந்தையைக் கொன்றுள்ளார் எலிசபெத் ராணியாரின் உறவினர் ஒருவர்.


மறைந்த பிரித்தானிய மகாராணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன் குழந்தை பயங்கர நோயால் அவதியுற்றுவந்ததை காண சகியாமல், குழந்தையைக் கொன்றுள்ளார் எலிசபெத் ராணியாரின் உறவினர் ஒருவர்.
</p><p>

மறைந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் சகோதரி முறை உறவினரான பெண்ணொருவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதியுற்றுவந்த தன் குழந்தையைக் கொன்றதைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
</p><h3>
நோயினால் அவதியுற்ற குழந்தை</h3><p>

எலிசபெத் மகாராணியின் சகோதரி உறவு முறையினரான எலிசபெத் ஆலிஸ் வைஸ் (89), இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 2ஆம் திகதி மரணமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd4af423-2737-4a2a-bf55-14365c611d6d/26-6a77251e71230.webp' /></p><p>

ஆலிஸ் வைஸைக் குறித்து நினைவுகூரும்போது, அவரது வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக அவர் தனது குழந்தையைக் கொன்ற விடயம் நினைவுகூரப்படுவதை மறுப்பதற்கில்லை.</p><p>

ஆலிஸ் வைஸுக்கு 36 வயது இருக்கும்போது, அவர், எம்மா சார்லட் என்னும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.</p><p>

நீண்ட காலம் காத்திருந்து, கடவுளிடம் பிரார்த்தனை செய்து பெற்ற தன் மகள் மீது உயிரையே வைத்திருந்தார் ஆலிஸ் வைஸ்.
</p><p>
துரதிர்ஷ்டவசமாக, பிறந்து ஒன்பதே நாட்களில் சார்லட்டை வைரஸ் காய்ச்சல் தாக்கியது.

இருபத்து நான்கே மணி நேரத்தில் கோமாவுக்குச் சென்றாள் சார்லட்.</p><p> வைரஸ் பதிப்பு மூளையை எட்ட, மருத்துவமவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் குழந்தையை விட்டு அக்கம் பக்கம் நகரவில்லை ஆலிஸ் வைஸ்.

வைரஸ் தொற்று காரணமாக, குழந்தையின் மூளை அனுப்பும் தகவல்கள் அதன் கை கால்களை எட்டவில்லை.&nbsp;</p><p></p><p>

அவளது வயிறும் தசைகளும் சரியாக வேலை செய்யாததால், குழந்தைக்கு மிகமெதுவாகவே உணவு ஊட்ட முடிந்தது. இல்லையென்றால் குழந்தை வாந்தியெடுக்கத் துவங்கிவிடுவாள்.
</p><p>
வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட ஆலிஸ் வைஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
</p><p>
சில மாதங்களில் வைரஸ் தொற்று குழந்தையின் மூளையின் முக்கால் பாகத்தை நாசம் செய்துவிட்டது.
</p><p>
அப்போது ஒரு முடிவெடுத்தார் ஆலிஸ் வைஸ். ஆம், இப்படி தன் குழந்தை அவஸ்தைப்படுவதைக் காண சகிக்காமல், குழந்தையைக் கொன்றுவிட முடிவு செய்தார் அவர்.
</p><p>
1974ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 3ஆம் திகதி, தன் மகள் தூக்கத்தில், அமைதியாக, வலியில்லாமல் இந்த உலகத்தை விட்டுக் கடந்து செல்லட்டும் என, அவளுக்கு அவளுக்கு மீறி தூக்கமாத்திரைகளைக் கொடுத்தார் ஆலிஸ் வைஸ்.
</p><p>
சில மாதங்களுக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் தன் குழந்தையைக் கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார் ஆலிஸ் வைஸ்.
</p><p>
அவர் குழந்தையைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகளை அனைவரும் அறிந்திருந்ததால், அவர் மீது பலரும் இரக்கப்பட்டார்கள்.
</p><p>
நீதிபதியும், இது வழக்கத்துக்கு மாறான வழக்குகளிலேயே மிகவும் அசாதாரண வழக்கு என்று கூறி, ஆலிஸ் வைஸுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கினார். ஆனால், அவர் சிறை செல்லவேண்டியதில்லை என்றும், ஓராண்டுக்கு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இருக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
</p><p>
ஆலிஸ் வைஸ், தனது 89ஆவது வயதில், யார்க்‌ஷையரிலுள்ள ஒரு மருத்துவமனையில், இம்மாதம் 2ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T14:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ODI கிரிக்கெட்டில் எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ள ரஷீத் கான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rashid-khan-record-as-take-3-6-wickets-haul-in-odi-1786196543"></link>
            <id>https://news.lankasri.com/article/rashid-khan-record-as-take-3-6-wickets-haul-in-odi-1786196543</id>
            <summary type="text">ஒருநாள் போட்டிகளில் 3 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் படைத்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருநாள் போட்டிகளில் 3 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் படைத்துள்ளார். </p><h3>

ஆப்கானிஸ்தான் வெற்றி </h3><p>

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்திற்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி, நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.</p><p> 

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 47 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccd15442-febb-4387-aec4-853c3388b686/26-6a773240afb92.webp' /></p><p>

இதன்படி, 300 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து, 33.4 ஓவர்களில் 207 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p></p><p>

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p><h3>

ரஷீத் கான் சாதனை</h3><p>

இந்த போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் புதிய சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caae3c36-b193-4135-b8ee-710d7f41240b/26-6a77324163955.webp' /></p><p>

இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் 3 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். </p><p>

முன்னதாக 2017 ஆம் ஆண்டிலும், இதே அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.</p><p>

2017 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 7 விக்கெட்களை வீழ்த்தினார். </p><p>

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யூனிஸ், ஒருநாள் போட்டிகளில் 5 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T13:43:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு எதிராக சதம் விளாசிய தேவ்தத் படிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/devdutt-padikkal-century-vs-sri-lanka-cricket-xi-1786194123"></link>
            <id>https://news.lankasri.com/article/devdutt-padikkal-century-vs-sri-lanka-cricket-xi-1786194123</id>
            <summary type="text">இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் தேவ்தத் படிக்கல் சதம் விளாசினார்.

கொழும்பில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் தேவ்தத் படிக்கல் சதம் விளாசினார்.
</p><p>
கொழும்பில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் தேவ்தத் படிக்கல் சதம் அடித்தார்.</p><h2>

இலங்கை&nbsp;363 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்</h2><p>இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் லெவன் அணிகளுக்கு இடையிலான பயிற்சி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbf7c92c-8288-4a81-b53a-8fecbd1e856e/26-6a7728cdb7dbc.webp' />&nbsp;</p><p></p><p>
இலங்கை கிரிக்கெட் லெவன் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 363 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

ரவிந்து ரஸந்த 71 ஓட்டங்களும், நிஷான் மதுஷ்கா 66 ஓட்டங்களும், சோனல் தினுஷா 52 ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p> 

இந்திய அணியின் தரப்பில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் மானவ் சுதர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
</p><p>
பின்னர் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டக்அவுட் ஆக, கே.எல்.ராகுல் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><h2>

தேவ்தத் படிக்கல்&nbsp;சதம் </h2><p>ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) 63 ஓட்டங்கள் எடுத்து ரிடையர் ஹர்ட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய ரிஷாப் பண்ட் (2), துருவ் ஜுரேல் (1) ஆகியோர் சொதப்பினர்.
</p><p>
எனினும் தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) அபாரமாக ஆடி சதம் விளாசினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ஓட்டங்கள் குவித்துள்ளது.
</p><p>
படிக்கல் 142 ஓட்டங்களுடனும், பிரார் 36 (18) ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். ரமேஷ் மெண்டிஸ், அசங்கா மனோஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4797af11-a99f-4a26-83a2-467c9b564394/26-6a7728ce6a226.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T12:59:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு ரயில் பாதை - ரஷ்யா முன்மொழிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-propose-rail-route-to-india-via-pakistan-1786192238"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-propose-rail-route-to-india-via-pakistan-1786192238</id>
            <summary type="text">பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு நேரடி ரயில் பாதை அமைப்பதற்கு ரஷ்யா முன்மொழிந்துள்ளது. 

ரஷ்யா இந்தியா இடையே ரயில் பாதை

அமெரிக்கா மற்றும் ஈரான் இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு நேரடி ரயில் பாதை அமைப்பதற்கு ரஷ்யா முன்மொழிந்துள்ளது. </p><h3>

ரஷ்யா இந்தியா இடையே ரயில் பாதை</h3><p>

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையில் கப்பல்கள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது.&nbsp;</p><p>

இதன் காரணமாக எரிபொருள் விநியோகம் தடைபட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. </p><p>

இந்நிலையில், இந்த பாதிப்பை குறைக்கும் வகையில், இந்தியா உடன் ரயில் போக்குவரத்தை உருவாக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியுள்ளது. </p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர் மராட் குஸ்னுல்லின்(Marat Khusnullin), "இந்தியப் பெருங்கடலுக்கு ஒரு ரயில் இணைப்பு ஏற்படுத்துவது குறித்தும் ஆராயப்பட வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b1a9b43-e5ff-4a9a-a64f-77ae84381241/26-6a772170741be.webp' /></p><p>

போஸ்பரஸ் மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்பான அபாயங்கள் காரணமாக, துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக மாற்று வழிகள் தேவைப்படலாம். இந்தியாவிற்கு அணுகலை வழங்கும் எந்தவொரு வழியும் ஏற்றுக்கொள்ளத்தக்கது" என தெரிவித்துள்ளார்.</p><p>

இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக ரஷ்ய எண்ணெயின் இரண்டாவது பெரிய இறக்குமதியாளராக மாறியுள்ளது. மேலும், இரு நாடுகளும் 2030 ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டொலர் வர்த்தக இலக்கை நிர்ணயித்துள்ளன.&nbsp;</p><p></p><p>
ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சுமூகமான உறவுகள் இல்லாததால் இந்த திட்டத்தினை முன்னெடுத்து செல்வதில் சிக்கல்கள் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4014045-30b0-4a01-b95c-6dd2ad839412/26-6a77216fbf9a3.webp' /></p><p>

முன்னதாக 2024 ஆம் ஆண்டில், ரஷ்யா ஈரானைக் கடந்து செல்லும் INSTC வழித்தடத்தின் மூலம் 2 ரயில் பெட்டிகளில் நிலக்கரியை இந்தியாவிற்கு அனுப்பியது.

ஈரானின் தெற்கு துறைமுகங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் காரணமாக அந்த வழித்தடம் தற்போது பயன்பாட்டில் இல்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T12:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவூறும் சுவையில் பட்டன் பஜ்ஜி.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/button-bajji-recipe-in-tamil-1786190857"></link>
            <id>https://news.lankasri.com/article/button-bajji-recipe-in-tamil-1786190857</id>
            <summary type="text">பஜ்ஜி என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதுவும் மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சாப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பஜ்ஜி என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
</p><p>
அதுவும் மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு நிறைவாக இருக்கும்.
</p><p>
அந்தவகையில், நாவூறும் சுவையில் பட்டன் பஜ்ஜி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>தேவையான பொருட்கள் </h2><ul><li>

பீர்க்கங்காய்- 1
</li><li>கடலை மாவு- ½ கப் </li><li>
அரிசி மாவு- ½ கப்</li><li> 
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்</li><li> 
பெருங்காயம்- ¼ ஸ்பூன்</li><li> 
உப்பு- தேவையான அளவு </li><li>
தண்ணீர்- சிறிதளவு</li><li> 
எண்ணெய்- தேவையான அளவு
</li></ul><h2>
செய்முறை </h2><p>

முதலில் பீர்க்கங்காயை கழுவி தோலுரித்து சிறிய சிறிய வட்டமாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயம், உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd877ee5-f578-4f5f-ad2d-ceaf228970c5/26-6a771c1418188.webp' /></p><p>

பின் அடுப்பில் ஒரு வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.</p><p>

இறுதியாக வெட்டிவைத்த பீர்க்கங்காயை மாவில் நனைத்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான பட்டன் பஜ்ஜி தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T12:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீவ் பிராந்தியத்தில் ரஷ்யாவின் பயங்கர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-strike-on-kyiv-three-killed-include-child-1786191071"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-strike-on-kyiv-three-killed-include-child-1786191071</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகருக்கு வடகிழக்கில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர். மூன்று பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகருக்கு வடகிழக்கில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
</p><p>
உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர். </p><h2>மூன்று பேர் கொல்லப்பட்டதாக
</h2><p>
உக்ரைனின் கீவ்வின் வடகிழக்கில் உள்ள புரோவரி மாவட்டத்தில் ரஷ்யத் தாக்குதல் நடத்தியது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02986a55-324b-4559-9877-052bdbfd0924/26-6a771ce1b0a65.webp' /></p><p></p><p>
இதில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய இராணுவ அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.</p><p> 

மேலும், மூன்று பேர் காயமடைந்ததாக பிராந்திய இராணுவ நிர்வாகத் தலைவர் டைமூர் தகாச்சென்கோ டெலிகிராமில் எழுதியுள்ளார்.&nbsp;</p><h2>கணிசமாக அதிகரித்துள்ள&nbsp;தாக்குதல்</h2><p>

சமீபத்திய மாதங்களில், மாஸ்கோ உக்ரைன் தலைநகர் மீதான தனது தாக்குதல்களை கணிசமாக அதிகரித்துள்ளது.
</p><p>
அடிக்கடி, இடைமறிக்க கடினமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை குறுகிய நேரத் தாக்குதல்களாக நடத்தி வருகிறது. </p><p>

இந்த சூழலில் வரவிருக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து கீவ் எச்சரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903cb01d-9908-42aa-8ac3-ece925ef5301/26-6a771ce261f92.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T12:09:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 முறை சிறுபடகுகளை தடுத்து நிறுத்திய பிரான்ஸ் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/french-officers-stop-10-small-boats-1786188888"></link>
            <id>https://news.lankasri.com/article/french-officers-stop-10-small-boats-1786188888</id>
            <summary type="text">பிரான்ஸ் அதிகாரிகள் சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதில்லை என கூறப்படுவதில் உண்மையில்லை என எல்லை பாதுகாப்பு அதிகாரி விளக்கம்....</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் அதிகாரிகள் சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதில்லை என கூறப்படுவதில் உண்மையில்லை என எல்லை பாதுகாப்பு அதிகாரி விளக்கம்.
</p><p>

கடந்த சில வாரங்களாக பிரித்தானிய தரப்பிலிருந்து கன்சர்வேட்டிவ் கட்சியினரும், ரீஃபார்ம் கட்சியினரும், பிரான்ஸ் அதிகாரிகள் சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதில்லை என குற்றச்சாட்டு முன்வைத்துவருகிறார்கள்.
</p><h3>
உண்மை இல்லை...
</h3><p>
ஆனால், அவர்கள் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்கிறார் பிரித்தானிய எல்லை பாதுகாப்பு அமைப்பின் சிறுபடகுகள் கட்டுப்பாட்டு பிரிவின் இயக்குநரான சார்லி (Charlie Eastaugh).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e9af52-86cc-4dd7-b48a-0ccd9385be7d/26-6a77145a4742e.webp' /></p><p>
இளவேனிற்காலத்துக்குப் பிறகு மட்டுமே, பிரான்ஸ் அதிகாரிகள், பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோரை 10 முறை தடுத்து நிறுத்தியுள்ளார்கள் என்கிறார் அவர்.
</p><p>
கடந்த சில வாரங்களாக ஆங்கிலக்கால்வாயில் நாம் கண்ட விடயங்கள், மக்களை சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஆட்கடத்தல்காரர்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்து உணர்த்துகின்றன.&nbsp;</p><p></p><p>
ஊடகங்களில் வெளியாகிவரும் புகைப்படங்களை வைத்து, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வோரை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் நடக்கவில்லை என கூறுவது எளிது.
</p><p>
ஆனால், புலம்பெயர்ந்தோர் பிரித்தானியக் கரையை அடைவதற்கு முன், அவர்களை தடுத்து நிறுத்த பிரான்ஸ் அதிகாரிகள் எப்படி அயராது உழைக்கிறார்கள் என்பது தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும் என்கிறார் சார்லி.
</p><p>
பிரான்ஸ் அதிகாரிகள், புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்த எடுக்கும் நடவடிக்கைகளின்போது ஆயுதங்களுடன் வரும் வன்முறையாளர்களை எதிர்கொள்வது, பெரும் கூட்டத்தை கலைப்பது, கடத்தல்காரர்களைக் கைது செய்வது, ஆயுதங்களை பறிமுதல் செய்வது, எங்கள் வழக்குகளுக்கு உதவும் ஆதாரங்களைத் திரட்டுவது என பல விடயங்களைச் செய்கிறார்கள்.
</p><p>
புகலிடக்கோரிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை அவர்கள் எதிர்கொள்ளும் முன்பும், பிரான்ஸ் பொலிசாரின் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை உள்ள அனைத்து பிரிவினரும் அதற்காக திட்டமிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அதை நடைமுறைப்படுத்தும்போது, அதாவது, எரிச்சலிலிருக்கும் மக்களையும், ஆபத்தான ஆட்கடத்தல் கும்பல்களையும் எதிர்கொள்ளும்போது, அவர்கள் தங்கள் அதிகாரிகளின் பதுகாப்பையும், மக்களுடைய பாதுகாப்பையும் சம அளவில் உறுதி செய்யவேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார் சார்லி.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T11:50:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாதந்தோறும் ரூ.6000 வருமானம்.., அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/post-office-mis-invest-scheme-details-in-tamil-1786189337"></link>
            <id>https://news.lankasri.com/article/post-office-mis-invest-scheme-details-in-tamil-1786189337</id>
            <summary type="text">பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர் பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். 

அந்தவகையில், அஞ்சலகத்தின் மாதாந்திர வருமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர் பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.</p><p> 

அந்தவகையில், அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) பாதுகாப்பான முதலீட்டு திட்டமாக உள்ளது.
</p><p>
இந்தத் திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. 

குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் முதலீடு செய்யும் இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.</p><p>

தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் முதலீடு செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a58c4f6a-2e20-48be-be43-64077c0d2162/26-6a77161b5e85a.webp' /></p><p>உதாரணமாக, ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.37,000 வட்டி கிடைக்கும். இதன் மூலம் மாதந்தோறும் சுமார் ரூ.3,083 வருமானம் கிடைக்கும்.
</p><p>
பெரியவர்கள் தங்கள் பெயரில் தனிநபர் கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சம் 3 பெரியவர்கள் இணைந்து கூட்டுக் கணக்கையும் தொடங்கலாம்.
</p><p>
மேலும், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மைனர் குழந்தையின் பெயரில் கணக்கு தொடங்கலாம். </p><p>கணக்கு தொடங்கிய முதல் ஒரு ஆண்டுக்குள் பணத்தை திரும்பப் பெற முடியாது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71dd10c0-3138-4e46-8cd2-5cd9f762cd5b/26-6a77161c12ba0.webp' /></p><p>1 முதல் 3 ஆண்டுகளுக்குள் கணக்கை முடித்தால், முதலீட்டுத் தொகையில் 2% பிடித்தம் செய்யப்படும். மேலும், 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் முடித்தால், 1% பிடித்தம் செய்யப்படும்.</p><p>
ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், 7.4% வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ.74,000 வட்டி கிடைக்கும். அதாவது, மாதந்தோறும் சுமார் ரூ.6,167 வருமானமாக கிடைக்கும்.
</p><p>
5 ஆண்டுகள் முடிவடைந்ததும் முதலீடு செய்த ரூ.10 லட்சம் முழுமையாக திரும்ப வழங்கப்படும்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T11:44:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடு மேய்த்தவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி: தமிழச்சியின் சாதனை பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vanmathi-ias-officer-success-story-1786189144"></link>
            <id>https://news.lankasri.com/article/vanmathi-ias-officer-success-story-1786189144</id>
            <summary type="text">Vanmathi Success Story: ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்த சாதாரண ஓட்டுநரின் மகள் இன்று தமிழகமே போற்றும் அதிகாரியாக உயர்ந்து நிற்கிறார்.

வறுமை காரணமாக ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vanmathi Success Story: ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்த சாதாரண ஓட்டுநரின் மகள் இன்று தமிழகமே போற்றும் அதிகாரியாக உயர்ந்து நிற்கிறார்.
</p><p>
வறுமை காரணமாக ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டே படிப்பால் உயர்ந்து இன்று உயர் அதிகாரியாகி இருக்கிறார்.
</p><p>
தன் சாதனை பயணத்துக்கு வறுமையை காரணம் காட்டாமல் கலெக்டராக உயர்ந்து ஜொலிக்கிறார் வான்மதி ஐஏஎஸ்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/390c3202-ecab-48dc-8b0e-6e487681d0aa/26-6a771623b19de.webp' /><br></p><p>
</p><p>
வான்மதியின் தந்தை ஓட்டுநர், காலையில் பள்ளிக்கு செல்லும் வான்மதி மாலை நேரங்களில் ஆடு, மாடுகளை மேய்க்கச் சென்றுவிடுவார்.
</p><p>
கையோடு புத்தகத்தையும் எடுத்து சென்றுவிடுவார், படிப்பில் அதீத கவனம், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், இப்படியே பள்ளிக்கால நாட்கள் கடந்தோடின.
</p><p>
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைக்கலாம் என குடும்பத்தினர் ஆலோசித்தனர், ஆனால் வான்மதிக்கு அவரது பெற்றோர் உறுதுணையாய் இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c51c09e-2000-4c63-9c36-4eb18a997bb6/26-6a7716246262f.webp' /><br></p><p>
</p><p>
தனது விடாமுயற்சியில் முதுகலை பட்டம் பெற்ற வான்மதி யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரானார்.

பல ஆண்டு கனவு அவருக்கு நனவாகிப்போனது, 2015ம் ஆண்டு நடந்த தேர்தவில் அகில இந்திய அளவில் 152வது இடத்தை பிடித்து ஐஏஎஸ் அதிகாரியானார்.
</p><p>
அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பு அளித்த வான்மதி தற்போது மகாராஷ்டிராவின் வர்தா மாவட்ட ஆட்சியராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.<br></p>]]></content>
            <updated>2026-08-08T11:42:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்தால் முடியாது... ஈரான் போரில் இருந்து வெளியேறும் வழி தேடும் ட்ரம்ப்பின் உயர்மட்டத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-general-looking-off-ramp-1786188675"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-general-looking-off-ramp-1786188675</id>
            <summary type="text">ஈரான் போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியை ட்ரம்ப்பின் உயர்மட்டத் தளபதி தேடிக்கொண்டிருக்கிறார்.
அமெரிக்க ராணுவத்தின் வாய்ப்புகள் குறைவாகவே உள்ள நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியை ட்ரம்ப்பின் உயர்மட்டத் தளபதி தேடிக்கொண்டிருக்கிறார்.
</p><p>அமெரிக்க ராணுவத்தின் வாய்ப்புகள் குறைவாகவே உள்ள நிலையில், ஈரானுடனான போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியை ட்ரம்ப்பின் உயர்மட்ட ராணுவத் தளபதி தேடுவதாகத் தகவல் கசிந்துள்ளது.</p><h2>எதிர்விளைவை ஏற்படுத்தும்</h2><p>
</p><p>கடந்த சில வாரங்களாகவே, ஈரான் போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியொன்றை அமெரிக்கா கண்டறிய வேண்டும் என்பதை, கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன் (Gen. Dan Caine), ட்ரம்ப்பின் பிற உயர்மட்ட ஆலோசகர்களிடம் தனிப்பட்ட முறையில் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9e9bf44-9887-4168-8321-8e9a2d62efda/26-6a77138609e06.webp' /></p><p>
</p><p>ஈரானுடனான மோதலைத் தீவிரப்படுத்துவதற்கான ராணுவ நடவடிக்கைகள் எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும், வான்வழித் தாக்குதல் திறனை மட்டும் கொண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த இலக்குகளை அடைவது சாத்தியமில்லை என்றும் தளபதிகள் மட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.</p><p> ஈரானுடனானப் போர் ஒரு முக்கியத் திருப்பத்தை எட்டியுள்ளது என்ற கருத்தைக் கொண்டவர்களில் கேன் (Caine) மட்டுமே இல்லை. மோதலைத் தீவிரப்படுத்துவதற்கான ராணுவ நடவடிக்கைகள் குறித்த கவலைகளைப் பகிர்ந்துகொண்ட அவர், </p><p>போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டறிவது குறித்தும் சிஐஏ (CIA) இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப், வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட அமைச்சரவையின் முக்கிய அதிகாரிகளுடன் விவாதித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>அமெரிக்காவின் உயர்மட்ட ராணுவத் தளபதி ஒருவரான Caine, ஜனாதிபதியுடனான சந்திப்புகளுக்கு முன்னதாக பல்வேறு அரசு அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், ட்ரம்பின் முக்கிய மற்றும் ஒத்த கருத்துடைய ஆலோசகர்களுடன் ஒருமித்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவும் அவர்களுடன் அண்மையில் தனியாகக் கலந்துரையாடியுள்ளார்.</p><h2>ராணுவத் தீர்வு ஏதுமில்லை</h2><p> </p><p>அமெரிக்கத் தரைப்படையினரை நேரடியாகக் களத்தில் இறக்குவதை உள்ளடக்காதவை உட்பட, தற்போதுள்ள ராணுவ நடவடிக்கைத் தெரிவுகளில் உள்ள வரம்புகள் மற்றும் இடர்பாடுகளைத் தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாக இருந்துள்ளது. </p><p>ஈரானில் தரைப்படையைக் களமிறக்குவதில் ட்ரம்ப் தொடர்ந்து விருப்பமின்மையையே வெளிப்படுத்தி வந்துள்ளார்; அதற்குப் பதிலாக, வான்வழித் தாக்குதல்கள் மூலமாகவே அவர்களைத் தனது நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஒப்பந்தத்தை ஏற்க வைக்க முடியும் என்று அவர் கருதுவதையே இது உணர்த்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ae1a4f0-de6e-4cab-aeaa-46f8adcbcda4/26-6a771386b0c90.webp' /></p><p> </p><p>ட்ரம்பின் அமைச்சரவையில் உள்ள Caine மற்றும் பிறர், அந்த முடிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே தனிப்பட்ட முறையில் கருதுகின்றனர்; அதற்குப் பதிலாக, ஜனாதிபதியின் வரையறைகளுக்குள் பொருந்தக்கூடிய பிற வழிமுறைகளை உருவாக்க அவர்கள் முயன்று வருகின்றனர்.
</p><p>ஈரானின் ராணுவ வலிமை முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுவிட்டதாக&nbsp;அமெரிக்கா தொடர்ச்சியாக அறிவித்து வந்தாலும், இந்த மோதல் தொடங்கி ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், ஜனாதிபதி தானே முன்வந்து தொடங்கிய இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர எளிதான ராணுவத் தீர்வு ஏதுமில்லை என்று ட்ரம்ப்பின் மிக மூத்த தளபதி ஒருவர் தனிப்பட்ட முறையில் வாதிடுவது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T11:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனா நோக்கி நகரும்... ஜப்பானைப் புரட்டிப் போட்ட டால்பின் புயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/typhoon-dolphin-hits-japan-1786185655"></link>
            <id>https://news.lankasri.com/article/typhoon-dolphin-hits-japan-1786185655</id>
            <summary type="text">ஜப்பானின் தெற்குத் தீவான ஒகினாவாவைத் தாக்கிய டால்பின் புயல், தற்போது கிழக்கு சீனாவை நோக்கி நகர்கிறது.
ஜப்பானின் தெற்குத் தீவான ஒகினாவாவை டால்பின் புய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் தெற்குத் தீவான ஒகினாவாவைத் தாக்கிய டால்பின் புயல், தற்போது கிழக்கு சீனாவை நோக்கி நகர்கிறது.
</p><p>ஜப்பானின் தெற்குத் தீவான ஒகினாவாவை டால்பின் புயல் தாக்கியதில், ஐந்து பேர் காயமடைந்தனர் மற்றும் 14,000 கட்டிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.</p><h2>விமானச் சேவைகள் ரத்து</h2><p> </p><p>
குறித்த புயலானது தற்போது கிழக்கு சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், துறைமுகங்கள், பாடசாலைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை அதிகாரிகள் மூடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/708fb1da-32d5-4bc5-9ffc-8e0ebd8abc73/26-6a7707b9abe7a.webp' /></p><p> </p><p>ஜப்பானில் டால்பின் புயலால் ஒகினாவா தீவும், ககோஷிமா மாகாணத்தில் உள்ள அமாமி தீவும் முக்கியமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். </p><p>ஐந்து முதியவர்கள் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் தப்பியதாகவும், அவர்களில் மூவர் பலத்த காற்றின் காரணமாகக் கீழே விழுந்ததாக ஒகினாவா மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>டால்பின் புயல் காரணமாக ஒகினாவா, சீனா மற்றும் தைவானில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹொங்ஹொங்கின் சீன வெள்ளை டால்பினின் பெயரால் பெயரிடப்பட்ட இந்தப் புயல், கிழக்கு ஆசியாவில் வரலாறு காணாத வெப்ப அலை நிலவி வரும் வேளையில் உருவாகியுள்ளது.</p><p> ஜப்பானிய மிருகக்காட்சிசாலை ஒன்றில் மூன்று சிங்கங்கள் வெப்பத்தாக்குதல் காரணமாக மரணமடைந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், தென் கொரியாவில் நிலவிய கடும் வெப்பநிலையே 20-க்கும் மேற்பட்ட சிங்கங்களின் இறப்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.</p><p></p><p> ஜூலை 26 அன்று உருவான ஒரு வெப்பமண்டல காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்திலிருந்து உருவான டால்பின் புயல், பசிபிக் பெருங்கடலைக் கடந்து பல ஆயிரம் கிலோமீற்றர் பயணித்து, ​​மத்திய பசிபிக் பெருங்கடலின் திறந்த நீர்ப்பரப்பின் மீது மணிக்கு 30 மைல் வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்தது. </p><p>அதன் பயணத்தின்போது, ​​அது முதலில் வெப்பமண்டலப் புயலாகவும், பின்னர் தீவிர வெப்பமண்டலப் புயலாகவும் வலுவடைந்தது; அதன்பின் ஜூலை 28 அன்று அது ஒரு சூறாவளியாகவும், பின்னர் மிக வலிமையான சூறாவளியாகவும் உருவெடுத்தது. </p><p>சனிக்கிழமையன்று, கிரீன்விச் நேரம் அதிகாலை 03:00 மணி நிலவரப்படி, டால்பின் புயலானது ஒகினாவாவில் உள்ள குமே தீவிலிருந்து சுமார் 100 மைல் வடமேற்கே, மணிக்கு 9 மைல் வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. </p><p>அதன் அதிகபட்ச தொடர்ச்சியான காற்றின் வேகம் மணிக்கு 100 மைல் ஆகவும், திடீர் காற்று வீச்சுகள் மணிக்கு 134 மைல் வரையும் இருந்தன.</p><h2>மழையும் பலத்த காற்றும்</h2><p> </p><p>புயல் சீனாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி தற்போது நகர்ந்து வருவதால், தேசிய அதிகாரிகள் மூன்றாம் நிலை அவசரக்கால நடவடிக்கையை அறிவித்துள்ளனர்; இது மிகக் குறைந்த அளவிலிருந்து இரண்டாவது நிலையாகும்.
</p><p>சீன தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, டால்பின் புயல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை, சீனாவின் கிழக்கு மற்றும் தெற்குக் கடற்கரைப் பகுதிகளில், பெரும்பாலும் ஜெஜியாங் மாகாணத்தின் ஷௌஷான் நகருக்கும் ஃபுஜியான் மாகாணத்தின் ஃபுடிங் நகருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>ஷாங்காய் மற்றும் அண்டை மாகாணங்களின் சில பகுதிகள் உட்பட கிழக்குச் சீனாவின் பல பகுதிகளில், ஆகஸ்ட் 12-ஆம் திகதி வரை மழையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82cc0104-efca-485c-86a0-1536c37beaff/26-6a7707ba5d4a1.webp' /></p><p> </p><p>மேலும், கிழக்கு ஜெஜியாங் (Zhejiang) மாகாணத்தின் சில பகுதிகளில் 600 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். ஜெஜியாங் மாகாணம் தனது கடலோரப் பகுதி புயல் எச்சரிக்கையை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியதுடன், துறைமுகச் செயல்பாடுகளை நிறுத்திவைத்தது மற்றும் 162 பயணிகள் படகுச் சேவைகளையும் இடைநிறுத்தியது.
</p><p>இதற்கிடையில், சூறாவளி காரணமாகத் தைவான் 63 சர்வதேச விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. </p><p>வார இறுதியில் தீவின் வடக்குப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், சனிக்கிழமை நிலவரப்படி மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிடவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T10:38:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிட்னி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்கள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fruits-that-help-improve-kidney-health-in-tamil-1786184857"></link>
            <id>https://news.lankasri.com/article/fruits-that-help-improve-kidney-health-in-tamil-1786184857</id>
            <summary type="text">நமது உடலில் பல முக்கியமான உறுப்புகளில் கிட்னி அதாவது சிறுநீரகங்களும் ஒன்று.

சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து யூரியா போன்ற கழிவுகளை வடிகட்டும் வேலையை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நமது உடலில் பல முக்கியமான உறுப்புகளில் கிட்னி அதாவது சிறுநீரகங்களும் ஒன்று.
</p><p>
சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து யூரியா போன்ற கழிவுகளை வடிகட்டும் வேலையை செய்கின்றன.
</p><p>
மேலும் செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளில் உள்ள அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7f13a52-d488-4dfe-ba83-42a9c1e181d2/26-6a770600d9717.webp' /></p><p>

சிறுநீரகம், சிறுநீரை உருவாக்குவதற்கும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
</p><p>
அந்தவகையில், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்கள் குறித்து பார்க்கலாம்.&nbsp;</p><h2>ப்ளூபெர்ரி</h2><p>

ப்ளூபெர்ரியில் அதிகம் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆந்தோசயனின்கள், சிறுநீரகங்களில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியைக் குறைக்க உதவக்கூடும். மேலும், இதில் பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/159a8a22-6de9-4a81-89c3-6d33af3b43c2/26-6a7705a6e1c5e.webp' /></p><p> </p><h2>கிரான்பெர்ரி
</h2><p>
கிரான்பெர்ரி சிறுநீர்ப் பாதையின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய பழமாகும். சிறுநீர்ப் பாதையில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் ஒட்டுவதைத் தடுப்பதன் மூலம், சிறுநீரகங்களை பாதிக்கக்கூடிய சில தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்க உதவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a93a08c-44b0-494b-b1f8-0739b971a8eb/26-6a7705a7c9df4.webp' /></p><h2>ஸ்ட்ராபெர்ரி
</h2><p>
ஸ்ட்ராபெர்ரியில் அதிகம் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியைக் குறைக்க உதவும். மேலும், இதில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ecb3ff0-caf3-4d1a-9831-1dd69e8a8a8e/26-6a7705a8830f1.webp' /></p><p>
</p><h2>ஆப்பிள்
</h2><p>
ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அதேநேரத்தில், பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக இருப்பதால், சிறுநீரக ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு உணவில் சேர்க்கக்கூடிய பழமாக இது உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d48a3948-1c4d-4eef-82b0-d02e096b5e4d/26-6a7705a9416ce.webp' /></p><p> </p><h2>கருப்பு திராட்சை
</h2><p>
கருப்பு திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற தாவரச் சேர்மங்கள் அழற்சியைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ee8cb39-d223-443e-92b6-b370fd4d9e43/26-6a7705a9f3af7.webp' /></p><h2>சிட்ரஸ் பழங்கள்</h2><p>

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவக்கூடும். குறிப்பாக, சிட்ரேட் கால்சியம்-ஆக்சலேட் கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. மேலும், இவற்றில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்ட்கள் உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df5aaaef-520c-4ed2-b55a-96a0b01a6f05/26-6a7705aaadb3f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T10:34:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[54 ஓட்டங்களில் சுருண்டு படுதோல்வி: வங்காளதேசத்தை சரித்த ஒற்றை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cricket-australia-xi-beat-bangladesh-warm-up-test-1786184790"></link>
            <id>https://news.lankasri.com/article/cricket-australia-xi-beat-bangladesh-warm-up-test-1786184790</id>
            <summary type="text">வங்காளதேச அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பயிற்சி டெஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வங்காளதேச அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

பயிற்சி டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.&nbsp;</p><h2>மெஹிதி ஹசன் மிராஸ் 109 ஓட்டங்கள்&nbsp;</h2><p>




டார்வினில் நடந்த பயிற்சி டெஸ்டில் வங்காளதேசம் மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/507bc096-0559-49cc-a6a6-52d90ef0a2a2/26-6a77045a08e57.webp' />&nbsp;</p><p></p><p>
வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 263 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மெஹிதி ஹசன் மிராஸ் 109 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள்) குவித்தார். கோரி ரோச்சிச்சியொலி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். </p><p>

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் 355 ஓட்டங்கள் குவித்தது. டீகியூ வைல்லி 130 ஓட்டங்களும், ஜேக் டோரன் 76 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;</p><h2>கேம்பல் தாம்ஸன்</h2><p>

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்காளதேச அணி கேம்பல் தாம்ஸனின் (Campbell Thompson) மிரட்டலான பந்துவீச்சில் 54 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
தன்ஸித் ஹஸனை (22 ஓட்டங்கள்) தவிர ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். கேம்பல் தாம்ஸன் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/612fe833-586a-4c96-af0d-c931b23eb3eb/26-6a77045958dc9.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0ba3eb8-8382-4bb5-a95e-21fd325bd4b2/26-6a77045aae282.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T10:24:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் ராணுவ தளம் ஒன்றின் அருகே மீண்டும் ட்ரோன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-drones-spotted-over-german-military-base-1786183253"></link>
            <id>https://news.lankasri.com/article/2-drones-spotted-over-german-military-base-1786183253</id>
            <summary type="text">ஜேர்மன் ராணுவ தளம் ஒன்றின் அருகே மீண்டும் இரண்டு ட்ரோன்கள் காணப்பட்டதாக ஜேர்மன் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


ஜேர்மன் விமான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் ராணுவ தளம் ஒன்றின் அருகே மீண்டும் இரண்டு ட்ரோன்கள் காணப்பட்டதாக ஜேர்மன் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>


ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், ஜேர்மன் ராணுவ தளம் ஒன்றின் அருகே மீண்டும் இரண்டு ட்ரோன்கள் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h3>

ஜேர்மன் விமான நிலையத்தில் மர்மப் பொருள்
</h3><p>
ஜேர்மனியின் Leipzig விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf2da36-4877-42a9-8b92-2a9ceb95d269/26-6a76fe57c7766.webp' /></p><p>
பின்னர், விமான ஓடுபாதையில் மர்மப்பொருள் ஒன்று கிடப்பது தெரியவரவே, உஷாரான அதிகாரிகள், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் ரோபோ ஒன்றை அங்கு அனுப்பியுள்ளனர்.
</p><p>
அவர்கள் சந்தேகப்பட்டது போலவே, அங்கு வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கிடப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு உருவானது.&nbsp;</p><p></p><h3>
ஜேர்மன் ராணுவ தளம் ஒன்றின் அருகே மீண்டும் ட்ரோன்கள்
</h3><p>
இந்நிலையில், வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள Mechernich நகரில் அமைந்துள்ள ராணுவத் தளத்தின் மீது வியாழக்கிழமை இரவு 10.00 மணியளவில் இரண்டு ட்ரோன்கள் பறப்பதை அந்த தளத்தின் பாதுகாப்பு மையம் கண்டறிந்துள்ளதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25624cbc-05c4-4a52-8379-4bb0d58784cd/26-6a76fe57221a1.webp' /></p><p>
இந்த விடயம் தொடர்பில் ராணுவ பொலிசார் விசாரணை ஒன்றை மேற்கொண்ட நிலையில், பின்னர் அந்த வழக்கை Euskirchen நகர பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
</p><p>
விடயம் என்னவென்றால், அந்த ராணுவ தளத்தின் மீது ஆறு ட்ரோன்கள் பறந்ததாக உள்ளுர் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T10:04:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரோட்டத்தில் சிக்கிய சிறுமி: காப்பாற்றிய நபரைத் தேடும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/search-missing-swimmer-rescue-child-myrtle-beach-1786182558"></link>
            <id>https://news.lankasri.com/article/search-missing-swimmer-rescue-child-myrtle-beach-1786182558</id>
            <summary type="text">அமெரிக்காவில் கடல் நீரோட்டத்தில் சிக்கிய சிறுமி ஒருத்தியைக் காப்பாற்றிய நபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.


அமெரிக்காவின் தெற்கு கரோலினாவிலுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் கடல் நீரோட்டத்தில் சிக்கிய சிறுமி ஒருத்தியைக் காப்பாற்றிய நபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
</p><p>

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவிலுள்ள கடற்கரை ஒன்றில் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருத்தி கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டாள்.</p><h3>

நீரோட்டத்தில் சிக்கிய சிறுமி
</h3><p>
மிர்ட்டில் பீச் என்னுமிடத்தில் அமைந்துள்ள கடற்கரையில் நிகழ்ந்த அந்த சம்பவம் பரபரப்பை உருவாக்கிய நிலையில், பிள்ளையைக் காப்பாற்றுவதற்காக ஒருவர் தண்ணீரில் குதித்துள்ளார்.
</p><p>
பிள்ளையைக் கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு அவர் சத்தமிட, அங்கிருந்த சிலர் தண்ணீருக்குள் குதித்து பிள்ளையை அவரிடமிருந்து வாங்கி கரைக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d42e2ff0-6934-4239-9cf4-2b865db89878/26-6a76fb9f6cbee.webp' /></p><p>
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பிள்ளையைக் காப்பாற்றிய நபர் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
</p><p>
நேற்றிரவு உள்ளூர் நேரப்படி சுமார் 8.00 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், அவரைத் தேடும் பணி இப்போதும் தொடர்வதாகவும், அவரை இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். </p><p></p><p>

இந்நிலையில், குழந்தையைக் காப்பாற்றிவிட்டு தண்ணீரில் மூழ்கிய அந்த நபருக்காக பிராத்தனை செய்யுமாறு பலரும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
</p><p>
அமெரிக்க ஊடகங்கள் அந்த நபரின் பெயரை வெளியிடாமல், அவரை ’நல்ல சமாரியன்’ என்று மட்டுமே குறிப்பிட்டுவரும் நிலையில், அவரால் காப்பாற்றப்பட்ட பிள்ளையின் பெயரையோ, அவள் எப்படி இருக்கிறாள் என்பது குறித்த விவரங்களையோ அதிகாரிகள் வெளியிடவில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T09:51:23+00:00</updated>
        </entry>
    </feed>
