<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-29T12:34:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணித்த முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-travels-in-chennai-metro-inspection-1785327565"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-travels-in-chennai-metro-inspection-1785327565</id>
            <summary type="text">முதல்வர் விஜய் மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் பயணம்

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து அரசினர் தோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.</p><h3> 

மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் பயணம்</h3><p>

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய்யை மெட்ரோ அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d9f0f12-c4b1-4def-a459-80a2e5d8168a/26-6a69efcf100cb.webp' />&nbsp;</p><p>

அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் நந்தனம் வரை பயணித்து ஆய்வு மேற்கொண்டார்.&nbsp;</p><p></p><p>

பயணிகளுடன் எவ்வளவு நேரத்திற்கு ஒரு ரயில் வருகிறது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dbca13f-c163-40dd-b3dc-b276ecfb61e5/26-6a69efcfb310c.webp' /></p><p>பயணிகள் முதல்வர் விஜய் உடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மூதாட்டி ஒருவர், முதல்வர் விஜய்யின் கையில் முத்தமிட்டு தோளில் சாய்ந்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
</p><p> 
நந்தனம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் கட்டுப்பாடு மையத்திற்கு சென்றார். அங்கு அதிகாரிகளுடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02656e68-5e9e-4a2c-b29a-50760852affe/26-6a69efd05fab4.webp' /></p><p> 

அங்கிருந்து காரில் கிண்டி கத்திப்பாரா சென்ற முதலமைச்சர் விஜய், பூந்தமல்லி ரோட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>

அங்கிருந்து போரூர் சென்று, போரூர் முதல் பூந்தமல்லி வரை இயக்கப்பட்ட ஆளில்லா மெட்ரோ ரயிலிலும் பயணித்து ஆய்வு மேற்கொண்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T12:20:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடலிற்கு சத்தான கருப்பட்டி உளுந்து லட்டு.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/healthy-ladoo-recipe-in-tamil-1785327458"></link>
            <id>https://news.lankasri.com/article/healthy-ladoo-recipe-in-tamil-1785327458</id>
            <summary type="text">குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் வலுவிற்கு இந்த சத்தான லட்டை சாப்பிடலாம்.அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த சத்தான கருப்பட்டி உளுந்து லட்டை...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் வலுவிற்கு இந்த சத்தான லட்டை சாப்பிடலாம்.</p><p>அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த சத்தான கருப்பட்டி உளுந்து லட்டை இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>

தேவையான பொருட்கள்</h2><ul><li>

கருப்பு உளுந்து- 1 கப்</li><li>
வெள்ளை எள்- ½ கப்</li><li>
பாசிப்பருப்பு - ¼ கப்
</li><li>பச்சரிசி - ஒரு கைப்பிடி
</li><li>கருப்பட்டி- 1 கப்</li><li>
நெய் - 1 கப்</li></ul><h2>செய்முறை</h2><p>
முதலில் வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் கருப்பு உளுந்த சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் அதில் வெள்ளை எள்ளை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
அடுத்து பாசிப்பருப்பு மற்றும் பச்சரிசியை மிதமான தீயில் வைத்து தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc5d7a0-ce22-4130-8f1e-6f2a4abebc40/26-6a69ef6464fd8.webp' /></p><p>இதனை நன்கு ஆறவைத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
</p><p>
பின்னர் ஒரு கருப்பட்டி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.</p><p> 

அரைத்த கலவையை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றிய பின், கரைத்த கருப்பட்டி கலவையை இந்த மாவில் ஊற்றவேண்டும்.</p><p>

இறுதியாக இவற்றில் நெய் சேர்த்து கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்தால் சத்தான லட்டு ரெடி.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T12:19:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமோசா முதல் நூடுல்ஸ் வரை... ஈரான் போர் உணவுப்பொருட்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-war-affects-samosa-noodles-price-1785325507"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-war-affects-samosa-noodles-price-1785325507</id>
            <summary type="text">உலகின் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும், அது ஏதாவது ஒரு வகையில் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என பொதுவாகவே கூறப்படுவதுண்டு.

இந்நிலையில், ஈரான் போரால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும், அது ஏதாவது ஒரு வகையில் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என பொதுவாகவே கூறப்படுவதுண்டு.</p><p>

இந்நிலையில், ஈரான் போரால் சமோசா முதல் நூடுல்ஸ் வரையிலான அன்றாடகம் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளது என்னும் கவலையை உருவாக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
சமோசா முதல் நூடுல்ஸ் வரை...
</h3><p>
முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே செல்லும் ஈரான் போரால், இந்தியாவில் சமோசா, தென்கொரியாவில் நூடுல்ஸ், இந்தோனேசியாவில் தெரு உணவுகள் என மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16f96d51-ad2e-4b46-aaef-a94b83652570/26-6a69e7c471763.webp' /></p><p>
அதாவது, மக்களைப் பொருத்தவரை, இப்படிப்பட்ட ஒரு நிலையில், குறைந்த செலவில் உணவை முடித்துக்கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். அதனால், வியாபாரிகளுக்கு வருவாய் குறைகிறது.</p><p>
குறிப்பாக, இந்த விடயம், மக்கள் அன்றாடம் வாங்கும் உணவுப்பொருட்கள் விடயத்தில் தெளிவாகத் தெரியவந்துள்ளது.
</p><p>
அவை ஆடம்பரப் பொருட்களோ, அல்லது, மக்கள் எப்போதாவது குடும்பத்துடன் சென்று உண்ணும் ஆடம்பர ஹொட்டலில் கிடைக்கும் உணவுப்பொருட்களோ அல்ல! அவை, விலை மலிவான, அன்றாடக உணவுகள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425953f7-45ea-4d81-a6de-c144e70fa046/26-6a69e7c527fda.webp' /></p><p>

எரிபொருள் மற்றும் உணவு தயாரிக்க பயன்படும் பொருட்களின் விலை உயர்வதால் உணவின் விலை உயர, உடனடியாக அதன் தாக்கம் வெளிப்படுகிறது. குறிப்பாக, சமோசா, நூடுல்ஸ் போன்ற உணவுப்பொருட்களை வழக்கமாக விற்கும் வியாபாரிகள் அதை உடனடியாக உணர்கிறார்கள்.</p><p>

மக்கள் வாங்கும் உணவின் அளவைக் குறைக்க, வியாபாரிகளின் வருவாய் குறைகிறது. வியாபாரிகள் விலையை அதிகரித்தாலோ, அது அவர்களுடைய வியாபாரத்தையே பாதிக்கும் அபாயமும் உள்ளது.
</p><p>
ஆக, நுகர்வோர், வியாபாரிகள் என இரு தரப்பினரும் இந்த விடயத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
</p><p>
பல ஆசிய நாடுகள் எரிசக்திக்கு மத்திய கிழக்கு நாடுகளை சார்ந்துள்ளன. போர் முடிவடையாததால், எரிசக்திக்கான, அதாவது, அடுப்பு எரிக்க பயன்படும் எரிவாயு, வாகனங்களுக்காக பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களுக்கான செலவு அதிகரிக்க, போக்குவரத்து செலவு உயர, தயாரிப்பு, பின் உணவு விநியோகம் என அனைத்து விடயங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.
</p><p>
இன்னொரு வகையான பாதிப்பு

அதேபோல, போர் துவங்கியதிலிருந்தே, ஆசியாவில், பல நாடுகளில் சுற்றுலா கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், சுற்றுலாப்பயணிகளை நம்பியிருக்கும் ஹொட்டல்கள், உணவகங்கள் மற்றும் தெரு வியாபாரிகள், சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
பாங்காகில், வியாபாரி ஒருவர் இப்படிக் கூறுகிறார், ‘நாம் எல்லோரும் ஒரே படகில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம், அந்த படகு மூழ்கிவிடாது என்னும் நம்பிக்கையில்’. உலக நடப்பை எளிமையாக ஒரே வரியில் விளக்கிவிட்டார் அவர்!
</p><p>
ஆக, உலகின் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும், அது ஏதாவது ஒரு வகையில் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என கூறப்படுவது வெறும் சொல்வழக்காக இல்லாமல், இன்று நாம் அனைவரும் அனுபவிக்கும் ஒரு நிதர்சனமாகிவிட்டது என்றால் அது மிகையில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T11:45:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளையாட்டு மைதானத்தில் கிடந்த மனிதத் தலை: திகிலை ஏற்படுத்திய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/human-head-found-near-bengaluru-cricket-ground-1785324146"></link>
            <id>https://news.lankasri.com/article/human-head-found-near-bengaluru-cricket-ground-1785324146</id>
            <summary type="text">இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், விளையாட்டு மைதானம் ஒன்றில் மனிதத் தலை ஒன்று கிடந்த விடயம் திகிலை உருவாக்கியுள்ளது.

திகிலை ஏற்படுத்திய சம்பவம்

...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், விளையாட்டு மைதானம் ஒன்றில் மனிதத் தலை ஒன்று கிடந்த விடயம் திகிலை உருவாக்கியுள்ளது.
</p><h3>
திகிலை ஏற்படுத்திய சம்பவம்
</h3><p>
கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில், இன்று காலை விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு விளையாடச் சென்ற சிலர் அங்கு மனிதத் தலை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c77fad49-72e4-49f0-8b14-5669402a0fb2/26-6a69e273ed9f3.webp' /></p><p>

யாரோ ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் பரவ, அந்த பகுதியில் அச்சம் பரவியுள்ளது.
</p><p>
இதற்கிடையில், நேற்றிரவு, ரயில் பாதையில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரது உடல் கிடப்பதாக தகவல் கிடைக்க, பொலிசார் அந்த உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர். அந்த உடலில் தலையில்லை!
</p><p>
இந்தப் பக்கம் ஒருவரது தலை கிடைத்த நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவர, ரயில் பாதையில் கிடைத்த உடலும், விளையாட்டு மைதானத்தில் கிடைத்த தலையும் ஒரே நபருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
மேலும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல் என்னவென்றால், அந்த நபர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்வதற்காக ரயில் பாதையில் படுத்துக்கொண்டிருக்கிறார்.
</p><p>
ரயில் மோதிய வேகத்தில், அவரது தலை துண்டிக்கப்பட்டு, சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் அந்த விளையாட்டு மைதானத்தில் போய் விழுந்துள்ளது!</p><p>

இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T11:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருவில் இறந்த குழந்தை: பிரித்தானிய தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-mom-got-animal-ashes-instead-her-baby-ash-1785315792"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-mom-got-animal-ashes-instead-her-baby-ash-1785315792</id>
            <summary type="text">பிரித்தானியாவில், கருவிலேயே உயிரிழந்த தன் குழந்தையின் அஸ்தியை மூன்று ஆண்டுகளாக பத்திரமாக வைத்திருந்தார் தாய் ஒருவர்.

ஆனால், அவர் வைத்திருந்தது அவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில், கருவிலேயே உயிரிழந்த தன் குழந்தையின் அஸ்தியை மூன்று ஆண்டுகளாக பத்திரமாக வைத்திருந்தார் தாய் ஒருவர்.
</p><p>
ஆனால், அவர் வைத்திருந்தது அவரது குழந்தையின் அஸ்தி அல்ல, அது ஒரு விலங்கின் அஸ்தி என தெரியவந்ததால் பேரதிர்ச்சிக்குள்ளானார் அவர்.</p><h3>

கருவில் இறந்த குழந்தை</h3><p>

இங்கிலாந்தில் வாழும் லூசி நெஸ் (Lucy Ness, 28) என்னும் இளம்பெண்ணின் குழந்தை, 2021ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி, அவரது கருவிலேயே உயிரிழந்துவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afa7e7d5-9160-489e-86d7-74fcfc24e723/26-6a69c1d1b86e3.webp' /></p><p>
தங்கள் குழந்தையின் உடலை லூசியும் அவரது கணவரான கால்லம் எல்லெர்பியும் (Callum Ellerby), இங்கிலாந்தின் Hull என்னுமிடத்திலுள்ள Legacy Independent Funeral Directors Ltd என்னும் இறுதிச்சடங்கு மையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
</p><p>
மே மாதம் 10ஆம் திகதி, குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கூறி, 11ஆம் திகதி, அஸ்திக்கலசம் ஒன்றை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர் இறுதிச்சடங்கு மைய அலுவலர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28384676-1c76-47a0-8771-10d968c15cd6/26-6a69c1d26aaf4.webp' /></p><p>
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம், லூசியின் குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த இறுதிச்சடங்கு மையத்தில் ஒரு பெரிய பிரச்சினை கண்டறியப்பட்டது.&nbsp;</p><p></p><h3>

அதிரவைத்த காட்சி
</h3><p>
ஆம், அந்த இறுதிச்சடங்கு மையத்தில், 30க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படாமலே வைக்கப்பட்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ebed7fe-8b56-4f18-b533-161eabde1bde/26-6a69c1d31e7bd.webp' /></p><p>
அங்கு சென்ற பொலிசார் கண்ட காட்சி அவர்களை அதிரவைத்துள்ளது. ஆம், அங்கு ஏராளமான உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளன. அவற்றில் பல அழுகத்துவங்கியிருந்திருக்கின்றன.
</p><p>
அத்துடன், அங்கு சுமார் 100 அஸ்திக்கலசங்களும் இருந்துள்ளன.</p><h3>

பிரித்தானிய தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி</h3><p>

இந்நிலையில், லூசியும் தன் குழந்தையும் அந்த இறுதிச்சடங்கு மையத்தில்தான் தகனம் செய்யப்பட்டது என்பதால் அது குறித்து விசாரித்துள்ளார்.
</p><p>
அவருக்கு கிடைத்த தகவல் அவரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆம், அவரிடம், அவரது குழந்தையின் அஸ்தி என ஒப்படைக்கப்பட்ட அஸ்தி, ஏதோ ஒரு விலங்குடைய அஸ்தி, அதாவது, ஒரு செல்லப்பிராணியின் அஸ்தி என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

தாங்கள் இதுவரை தங்கள் குழந்தையின் அஸ்தி என நினைத்து பாதுகாத்து வைத்திருந்தது ஒரு விலங்கின் அஸ்தி என தெரியவந்ததால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள் லூசி, கால்லம் தம்பதியர்.</p><p>

இந்நிலையில், அந்த இறுதிச்சடங்கு மைய இயக்குநரான ராபர்ட் புஷ் (48) வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:55:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொல்லப்படக்கூடும்... ஆனாலும் நாடு திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஒருவர் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hasina-says-will-return-to-dhaka-1785322448"></link>
            <id>https://news.lankasri.com/article/hasina-says-will-return-to-dhaka-1785322448</id>
            <summary type="text">வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் தற்போது தலைமறைவாக இருப்பவருமான ஷேக் ஹசீனா, தனது உயிருக்கு ஆபத்து என்ற அச்சம் இருந்தபோதிலும், நாடு திரும்ப உறுதியாக இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் தற்போது தலைமறைவாக இருப்பவருமான ஷேக் ஹசீனா, தனது உயிருக்கு ஆபத்து என்ற அச்சம் இருந்தபோதிலும், நாடு திரும்ப உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள்ளார்.</p><h2>மக்கள் அழைக்கிறார்கள்</h2><p> </p><p>
AFP செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக அளித்த பதிலில், நான் கொல்லப்படலாம்; கைது செய்யப்படலாம்; சிறைக்கு அனுப்பப்படலாம், இருப்பினும் டிசம்பர் மாதத்திற்குள் நாடு திரும்ப இருப்பதாக 78 வயதான ஹசீனா கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e13b888a-e8db-45a2-a1ca-efd6e07d653a/26-6a69e14be117b.webp' /></p><p> </p><p>எனது விதி என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன்; ஏனெனில் என் மக்கள் என்னை அழைக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>தனது 15 ஆண்டுகால இரும்புக்கரம் கொண்ட ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மாணவர் தலைமையிலான எழுச்சியால் 2024 ஆகஸ்ட் மாதம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஹசீனா, தனது மாளிகையை மக்கள் கூட்டம் சூழ்ந்துகொண்ட நிலையில் ஹெலிகொப்டர் மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். </p><p>மாணவர்கள் தலைமையிலான எழுச்சியின் போது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயன்ற அவர் முன்னெடுத்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.</p><p></p><p> </p><p>கடந்த நவம்பர் மாதம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக டாக்கா நீதிமன்றம் ஒன்றால் ஹசீனா குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது; இத்தீர்ப்பை அவர், சட்டத்தின் வடிவில் முன்வைக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றே குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்தியாவில் ரகசியமான ஓரிடத்தில் வசித்து வரும் அவர், தான் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லை என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.</p><p> ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு பதவியேற்ற இடைக்கால நிர்வாகத்தின் கீழ் இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி மாதம் வங்கதேசப் பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றதிலிருந்து அந்த உறவுகள் சீரடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e766e3b4-1e84-4f53-8b7c-410e462a7624/26-6a69e14cb70d5.webp' /></p><h2>அதிகமான பலப்பிரயோகம்</h2><p> </p><p>இதனிடையே, ஹசீனாவைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேசம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது; இக்கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், நாடு திரும்பவிருக்கும் தமது முடிவிற்கும் அதற்கும் தொடர்பில்லை என்றே ஹசீனா தெரிவித்துள்ளார்.</p><p> எதிராளிகளைக் கொலை செய்தல், எதிர்க்கட்சிகளை ஒடுக்குதல், நீதிமன்றங்களைக் கையாளுதல் மற்றும் ஒருதலைப்பட்சமான தேர்தல்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹசீனாவின் நிர்வாகத்தின் மீது மனித உரிமை அமைப்புகள் நீண்டகாலமாகவே குற்றம் சாட்டி வருகின்றன.</p><p> ஆனால், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பல அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பரப்புரைகள் என்று கூறி, ஹசீனா தனது செயல்பாடுகளை நியாயப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb680f38-9daf-4f5c-b9b1-c742b47df762/26-6a69e14d6736f.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, தன்னைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு வழிவகுத்த மாணவர் போராட்டங்களின்போது, ​​அளவுக்கு அதிகமான பலப்பிரயோகத்தை மேற்கொள்ள அனுமதித்ததாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் ஹசீனா நிராகரித்தார். </p><p>இந்த நிலையில், இந்தியாவில் கடந்த வாரம் கல்வி அமைச்சர் பதவி விலகக் காரணமாக அமைந்த, இளைஞர்கள் முன்னெடுத்த நாடு தழுவிய போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T10:52:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியாளாக 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள்! ஆட்டநாயகியான ஸ்ம்ரிதி மந்தனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/smriti-mandhana-blast-88-runs-in-the-hundred-1785322120"></link>
            <id>https://news.lankasri.com/article/smriti-mandhana-blast-88-runs-in-the-hundred-1785322120</id>
            <summary type="text">The Hundred மகளிர் போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸை வீழ்த்தியது.சன்ரைசர்ஸ் லீட்ஸ் 

ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Hundred மகளிர் போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸை வீழ்த்தியது.</p><h2>சன்ரைசர்ஸ் லீட்ஸ் 
</h2><p>
லீட்ஸில் நடந்த The Hundred மகளிர் போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/365e04b8-b531-4317-bd3e-e44c1eb2a98a/26-6a69da8aa8744.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு142 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக அன்னபேல் சதர்லேண்ட் 35 ஓட்டங்கள் எடுத்தது.
</p><p>
பின்னர் களமிறங்கிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் மெக் லென்னிங் 24 (18) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
</p><h2>
 ஸ்ம்ரிதி மந்தனா சரவெடி ஆட்டம் </h2><p>அடுத்த வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
</p><p>
இறுதிவரை களத்தில் நின்ற மந்தனா, 50 பந்துகளில் 88 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) விளாச, மான்செஸ்டர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
</p><p>
கேசிடி, ஜெஸ் ஜோன்ஸன், ஹன்னா மற்றும் டேனியல்லே கிப்ஸன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஸ்ம்ரிதி மந்தனா ஆட்டநாயகி விருது பெற்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0f0ba58-a330-4b04-abd2-6f2498bfd733/26-6a69da8c19b37.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19f3a34c-590f-435b-8439-a030eddb4d0f/26-6a69da8b5f4a3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:47:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம் எலெக்ரிக் காரை பயன்படுத்த வேண்டுமா? கூறப்படும் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/talks-on-uk-pm-andy-burnham-may-use-electric-car-1785320179"></link>
            <id>https://news.lankasri.com/article/talks-on-uk-pm-andy-burnham-may-use-electric-car-1785320179</id>
            <summary type="text">பிரித்தானியாவில் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் ஆன்டி பர்ன்ஹாமின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;அரசாங்க ஜெட் விமானம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் ஆன்டி பர்ன்ஹாமின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><h2>அரசாங்க ஜெட் விமானம்</h2><p>
பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்ன்ஹாம் (Andy Burham), ஐந்து நாட்களுக்குள் பர்ன்ஹாம் மூன்று முறை அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்திய பிறகு, அவரது பயணம் குறித்த கேள்வி ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/647a8517-4bfe-4860-9c87-e3808690b1d3/26-6a69d4392ee9b.webp' />&nbsp;</p><p></p><p>
அதாவது, அவர் மான்செஸ்டரில் உள்ள தனது புதிய வடக்குத் தளத்திற்கும், வெஸ்ட்மின்ஸ்டருக்கும் இடையில் எப்படி பயணிக்கத் திட்டமிடுகிறார் என்பதும், அதற்கான செலவுகளை யார் ஏற்கிறார்கள் என்பதும் தற்போது பாரிய கேள்விக்குறியாக உள்ளது.</p><p>

அதேபோல், பர்ன்ஹாம் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் முடிவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ஏனெனில், இந்த நடவடிக்கைக்கு வரி செலுத்துவோரின் பணம்தான் நிதியளிக்கிறதா என்ற கேள்விகளை இது எழுப்புவதே இதற்கு முக்கியக் காரணம்.</p><p>

திங்கட்கிழமை, ஆன்டி பர்ன்ஹாம் போர்ட்ஸ்மவுத் கடற்படைத் தளத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்காக 37 நிமிட பயணமாக மீண்டும் வானில் பறந்தார். </p><h2>

பயண நேரம் </h2><p>லண்டனில் இருந்து மான்செஸ்டருக்கு இரயிலில் செல்ல சராசரியாக 2 மணிநேரம் 46 நிமிடங்கள் ஆகிறது. இதற்கான கட்டணமும் மிக அதிகமாக உள்ளது.
</p><p>
அதனால், மின்சாரக் காரைப் பயன்படுத்தினால், இதே பயணத்தை பாதிக்கும் குறைவான செலவிலேயே மேற்கொள்ள முடியும் என்று 'Carwow' நிறுவனம் கணக்கிட்டுள்ளது. </p><p>

மேலும், தற்போதைய சூழலில் இருந்து 2029 கோடையில் நடைபெறவுள்ள அடுத்த பொதுத்தேர்தல் வரை, மின்சார வாகனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பயண செலவில் 27,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக பிரதமர் சேமிக்க முடியும் என்று அந்த கார் விற்பனை இணையதளம் கூறுகிறது.
</p><p>
பிரதமர் No 10 நார்த் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் இடையே இரயிலில் பயணம் செய்வதை விட, ஒரு மின்சாரக் காரில் பயணம் செய்வது ஆண்டுக்கு 9,000 பவுண்டுகள் மலிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce0251fd-2a4a-4ec6-a10b-5ea47eeedf34/26-6a69d439e430e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<i><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> </b></i>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:34:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு - ரூ.2,983 கோடியுடன் RCB முதலிடம், CSK நிலை என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2026-ipl-brand-value-rcb-tops-csk-in-4th-1785319284"></link>
            <id>https://news.lankasri.com/article/2026-ipl-brand-value-rcb-tops-csk-in-4th-1785319284</id>
            <summary type="text">உலகளாவிய முதலீட்டு வங்கியான ஹூலிஹான் லோக்கி, 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் பிராண்ட் மதிப்பீட்டு ஆய்வை வெளியிட்டுள்ளது.  

11 சதவீதம் உயர்ந்த ஐபிஎல் மதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய முதலீட்டு வங்கியான ஹூலிஹான் லோக்கி, 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் பிராண்ட் மதிப்பீட்டு ஆய்வை வெளியிட்டுள்ளது. </p><h3> 

11 சதவீதம் உயர்ந்த ஐபிஎல் மதிப்பு</h3><p> 

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் வணிக மதிப்பு, 11 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து 20.6 பில்லியன் டொலராக(இந்திய மதிப்பில் ரூ.1.97 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8448ddfd-a39b-48c6-9522-c3ab3c3ba079/26-6a69cf761dc3b.webp' /></p><p>

ஐபிஎல் வணிக மதிப்பில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டிருப்பதையே இந்த அதிகரிப்பு பிரதிபலிக்கிறது.</p><p>

ஐபிஎல் இன் தனிப்பட்ட பிராண்ட் மதிப்பு கடந்த ஆண்டில் 10.3 சதவீதம் உயர்ந்து, 4.3 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. </p><p>

NFLக்குஅடுத்தபடியாக, உலகின் முதன்மையான விளையாட்டு நிறுவனங்களில் ஒன்றாக ஐபிஎல் உருவெடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p>

ஜியோஸ்டாரின் கூற்றுப்படி, பார்வையாளர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 7% அதிகரித்துள்ளது.
</p><h3>
முதலிடத்தில் RCB</h3><p> 

RCB, 2025 ஆம் ஆண்டில் இருந்த 269 மில்லியன் டொலர் மதிப்பிலிருந்து 16.0% அதிகரித்து, 312 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,983 கோடி) பிராண்ட் மதிப்புடன் ஐபிஎல் இன் மிகவும் மதிப்புமிக்க அணியாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83a408f4-fac0-413a-80a2-d2eb7476c82c/26-6a69cf76c2a0a.webp' /></p><p>

மேலும், 300 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்பு என்ற மைல்கல்லை கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற பெருமையை RCB பெற்றுள்ளது.</p><p> 

2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 9 வது இடத்தை பிடித்திருந்தாலும், 2025 ஆம் ஆண்டில் இருந்த 242 மில்லியன் டொலரிலிருந்து 9.1% அதிகரித்து, 264 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,524 கோடி) பிராண்ட் மதிப்பை பதிவு செய்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p>
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2025 ஆம் ஆண்டில் இருந்த 227 மில்லியன் டொலரிலிருந்து 7.9% அதிகரித்து, 245 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,343 கோடி) பிராண்ட் மதிப்பை எட்டியது. </p><p>

CSK 3.8% ஆண்டு வளர்ச்சியுடன், 244 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,333 கோடி) பிராண்ட் மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2eabe9f-7295-4301-8814-ee38f2d450ff/26-6a69cf777656d.webp' /></p><p>

9.1% வளர்ச்சியுடன் 168 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5வது இடத்திலும், 10.3% வளர்ச்சியுடன் 161 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் 6வது இடத்திலும், 12.1% வளர்ச்சியுடன் 158 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் பஞ்சாப் கிங்ஸ் 7வது இடத்திலும் உள்ளன.
</p><p>
10.6% வளர்ச்சியுடன் 157 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் குஜராத் டைட்டன்ஸ் 8வது இடத்திலும், 2.6% வளர்ச்சியுடன் 156 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் 9வது இடத்திலும், 122 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் மதிப்புடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10வது இடத்திலும் உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று உருவாகும் 3 ராஜயோகங்கள்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-3-rajyoga-formed-1785318479"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-3-rajyoga-formed-1785318479</id>
            <summary type="text">இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ஜூலை 29ஆம் திகதியான இன்று வருகிறது. 

இந்நாளில் சூரியனும், புதனும் சேர்ந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. 

அதோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ஜூலை 29ஆம் திகதியான இன்று வருகிறது. </p><p>

இந்நாளில் சூரியனும், புதனும் சேர்ந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. </p><p>

அதோடு குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் இருப்பதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகியுள்ளது.</p><p> </p><p></p><p>அதுமட்டுமின்றி, சனியின் நிலையால் சச ராஜயோகமும் உருவாகியுள்ளது. </p><p>

இப்படி இந்த 3 ராஜயோகங்களும் குரு பூர்ணிமா நாளில் சுமார் 56 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது.
</p><p>
அந்தவகையில், இன்று ஒரே நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.</p><h2>ரிஷபம் </h2><ul><li>

திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.</li><li> தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். </li><li>புதிய முதலீடுகளுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.</li><li> உயர் அதிகாரிகளிடம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.</li><li> சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/034f3262-823a-41ce-8a6b-c9f13c511e4f/26-6a69cc51df646.webp' /></p><p>
</p><h2>
கும்பம்</h2><ul><li> 

வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</li><li> இக்காலத்தில் பெரிய வெற்றியைக் காணலாம். </li><li>வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கும்.</li><li> பல புதிய வழிகளில் இருந்து பண வரவு அதிகரிக்கும். </li><li>தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.</li></ul><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a6df11c-82da-4dd4-968d-54055897eca0/26-6a69cc528d77f.webp' /></p><h2>மகரம் </h2><ul><li>

கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.</li><li> நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
</li><li>முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். </li><li>
பணியிடத்தில் வேலைகளை வெற்றிகரமாக செய்வீர்கள்.</li><li> அலுவலகத்தில் பாராட்டைப் பெறுவீர்கள். </li><li>நிதி நிலை வலுவடையும்.&nbsp; &nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21770857-ba9b-4d3f-83ab-7cf026626c4f/26-6a69cc533ab24.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T09:49:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் புதிய மனிதவடிவ ரோபோக்களைத் தடை செய்த ட்ரம்ப் நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-bans-chinese-humanoid-1785318309"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-bans-chinese-humanoid-1785318309</id>
            <summary type="text">அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறி, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனிதவடிவ ரோபோக்களை (humanoid robots) இறக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறி, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனிதவடிவ ரோபோக்களை (humanoid robots) இறக்குமதி செய்வதற்குத் தடை விதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>ஆதாரமற்ற காரணங்கள்</h2><p>
</p><p>ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நகர்வு, மனித உருவம் கொண்ட மற்றும் நான்கு கால்களைக் கொண்ட இயந்திரங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ரோபோக்களுக்குப் பொருந்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca452a26-1e12-4234-91ee-141a3653ec90/26-6a69cd4e1437f.webp' /></p><p> </p><p>இந்த மனிதவடிவ ரோபோக்களில் பல சீனாவில் தயாரிக்கப்படுகின்றன; அந்நாடு ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளை மேம்படுத்துவதில் அமெரிக்காவுடன் போட்டியிட்டு வருகிறது. </p><p>அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை எனக் கருதப்படும் பவர் இன்வெர்ட்டர்களின் இறக்குமதியையும் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) தடை செய்துள்ளது. </p><p>இதனிடையே, வர்த்தக விவகாரங்களை அமெரிக்கா அரசியல்மயமாக்குவதையும், ஆதாரமற்ற காரணங்களின் அடிப்படையில் தடைகளை விதிப்பதையும் சீனா நீண்டகாலமாக எதிர்த்து வருவதாக அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்தத் தடை, புதிதாகத் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மேம்பட்ட ரோபோட்டிக் சாதனங்கள் மற்றும் பவர் இன்வெர்ட்டர்களுக்குப் பொருந்தும்; அதேவேளையில், FCC-யால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட தற்போதுள்ள எந்தவொரு மொடலின் விற்பனையையோ அல்லது இறக்குமதியையோ இது தடுக்காது. </p><p>மேலும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இன்வெர்ட்டர்களின் பயன்பாடு, வெளிநாட்டு நிறுவனங்கள் அவற்றை முடக்குவதற்கும், தரவுகளைத் திருடுவதற்கும், வெளிநாட்டு அரசாங்கத் தரப்பினர் தொலைநிலை அணுகல் மற்றும் கண்காணிப்பை எளிதாக்குவதற்கும், அல்லது இணையவழித் தாக்குதல் மூலம் வேறு விதங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடும் என்ற கவலைகளை FCC சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be142c57-584c-4dfa-aa73-eebe90c4bb42/26-6a69cd4d2a410.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட ரோபோக்களைப் பயன்படுத்துவது, தீய நோக்கமுடையவர்கள் அமெரிக்கர்களைக் கண்காணிக்கவோ, வெளிநாட்டு உளவு அமைப்புகளின் திறன்களை மேம்படுத்தவோ அல்லது அந்த ரோபோக்களைத் தொலைவிலிருந்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவோ வழிவகுக்கக்கூடும் என்றும் FCC மேலும் குறிப்பிட்டுள்ளது. </p><p>உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவுடனான வர்த்தகச் சமநிலையின்மையைச் சரிசெய்ய ட்ரம்ப் நிர்வாகம் முயற்சிக்கும் நிலையில், சீனாவின் ஏற்றுமதிகள் அமெரிக்காவின் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளன.</p><h2>தடைகளை எதிர்கொள்ளக்கூடும்</h2><p> </p><p>மின்சார வாகனங்களை உலகிலேயே அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாகத் திகழ்ந்த போதிலும், கடுமையான இறக்குமதி வரி காரணமாக அமெரிக்கச் சந்தையில் சீனாவால் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>இதனிடையே, அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், சீன செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/018c834b-51b4-4476-b5fb-c8feca0c18dc/26-6a69cd4ebfca1.webp' /></p><p> </p><p>இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சீனாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டது என்பது சொந்த அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியின் விளைவு, அத்துடன் சர்வதேச ஒத்துழைப்பின் பலன் என்று சீன அரசாங்கம் கூறியுள்ளது. </p><p>தொழிற்சாலைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் பயன்படுத்துவதற்காக, சீனத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மனிதவடிவ ரோபோக்களை (humanoid robots) தீவிரமாக உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T09:43:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனிக்குள்ளேயே சுற்றுலா செல்லும் எக்கச்சக்கமான ஜேர்மானியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-tourists-rise-but-many-are-germans-1785315021"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-tourists-rise-but-many-are-germans-1785315021</id>
            <summary type="text">ஜேர்மனியில், ஒன்லைன் வாயிலாக ஹொட்டல்களில் தங்க முன்பதிவு செய்யும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.

விடயம் என்னவென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில், ஒன்லைன் வாயிலாக ஹொட்டல்களில் தங்க முன்பதிவு செய்யும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இப்படி ஹொட்டல்களில் தங்க முன்பதிவு செய்துள்ள சுற்றுலாப்பயணிகளில் அதிகம் பேர் வெளிநாட்டவர்கள் அல்ல, ஜேர்மன் நாட்டவர்கள்!
</p><h3>
ஜேர்மனிக்குள்ளேயே சுற்றுலா செல்லும் ஜேர்மானியர்கள்</h3><p>
2025 ஆம் ஆண்டில், சுற்றுலா செல்வதற்காக, ஒன்லைன் வாயிலாக ஹொட்டல்களில் தங்க முன்பதிவு செய்த சுற்றுலாப்பயணிகள் 68.3 மில்லியன் பேர். </p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc8807a5-92fe-4b16-9800-ae2a25252272/26-6a69becf30772.webp' /></p><p>அவர்களில் 48.5 மில்லியன் பேரும் ஜேர்மன் மக்கள்தான். 19.8 மில்லியன் பேர்தான் வெளிநாட்டவர்கள்.&nbsp;</p><p></p><p>
என்றாலும், சுற்றுலாவைப் பொருத்தவரை, அது உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் என்றாலும் சரி, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் என்றாலும் சரி, ஹொட்டல்கள் முதலான விருந்தோம்பல் துறைக்கு அதனால் நன்மையே என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T08:51:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2வது தலைநகரை தேடும் ஜப்பான் - என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/why-japan-searching-second-capital-outside-tokyo-1785314293"></link>
            <id>https://news.lankasri.com/article/why-japan-searching-second-capital-outside-tokyo-1785314293</id>
            <summary type="text">ஜப்பானில் 2வது தலைநகரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஜப்பான் 2வது தலைநகர் 

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் நேற்று 6.8 ரிக்டர் அளவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் 2வது தலைநகரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
</p><h3>
ஜப்பான் 2வது தலைநகர்</h3><p> 

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் நேற்று 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8d068e7-9f29-43bf-8943-43687927f155/26-6a69bbf9150a6.webp' /></p><p>

உலகளவில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது.
</p><p>
இந்நிலையில், ஜப்பானில் 2வது தலைநகரை தேர்வு செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87b2d65a-9355-46b7-85e9-60abc5fd24ad/26-6a69bbf6eabe6.webp' /></p><p>
ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சி (LDP) மற்றும் கூட்டணிக் கட்சியான ஜப்பான் இன்னோவேஷன் கட்சி (JIP) உள்ளிட்ட பல கட்சிகளும் இதற்கு ஆதரவளித்தன.</p><p>

ஜப்பானின் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி, மக்களுக்கான ஜனநாயகக் கட்சி (DPFP), கோமெயிட்டோ, சன்செய்ட்டோ, ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி (JCP) உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. </p><h3> 

2வது தலைநகரம் ஏன்?
</h3><p>
தலைநகர் டோக்கியோவில் ஒரு பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட்டால் நாடு தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab1b4423-5f27-42ba-b34b-5ff6fad59146/26-6a69bbf86060d.webp' /></p><p>

டோக்கியோவில் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் ரிக்டர் அளவுகோலில் 7-ஆம் நிலை நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சுமார் 70% வாய்ப்பு இருப்பதாக அரசாங்கம் மதிப்பிடுகிறது. </p><p>

அப்படி நிகழ்ந்தால், தலைநகரில் உள்ள பிரதமர் அலுவலகம், நாடாளுமன்றம், மத்திய அமைச்சகங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடும். </p><p>

மேலும், ஜப்பானின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 30% பேர் டோக்கியோவில் வசிக்கின்றனர். உலகளவில் அதிக மக்கள் வசிக்கும் 3வது பெருநகரமாக டோக்கியோ உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b92f0d77-17ad-4fd2-a005-5d4661a2bfb6/26-6a69bbf7af94a.webp' /></p><p>

ஜப்பானின் பொருளாதார உற்பத்தியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை உருவாக்குவதோடு, பட்டியலிடப்பட்ட ஜப்பானிய நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை கொண்டுள்ளது.</p><p> 

டோக்கியோவில் உள்ள மக்கள் மற்றும் நிறுவன குவிப்பையும் இந்த திட்டம் சரி செய்யும். </p><h3> 

எந்த நகரத்திற்கு வாய்ப்பு?
</h3><p>
2ஆம் தலைநகர், டோக்கியோவை தாக்கும் ஒரு பேரிடரால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படுவதற்கான குறைந்த வாய்ப்பை கொண்டிருக்க வேண்டும். </p><p>

மேலும், போதுமான அரசாங்க உள்கட்டமைப்பு, பொருளாதார அளவு, மக்கள்தொகை அளவு மற்றும் நிர்வாகத் திறனையும் கொண்டிருக்க வேண்டும்.</p><p>

எந்த நகரங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என்பது குறித்த இறுதி முடிவு பிரதமரிடமே உள்ளது. </p><p>ஒசாகா, ஃபுகுவோகா மற்றும் ஐச்சி ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் 2வது தலைநகருக்கான போட்டியில் ஆர்வம் காட்டியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T08:38:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயால் உருவாகும் மின்னல்: பிரான்சில் ஒரு அரிய நிகழ்வால் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pyrocumulus-cloud-lead-seveare-wild-fire-in-france-1785309434"></link>
            <id>https://news.lankasri.com/article/pyrocumulus-cloud-lead-seveare-wild-fire-in-france-1785309434</id>
            <summary type="text">பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அரிய நிகழ்வொன்றால் மேலும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.

பிரான்சில...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அரிய நிகழ்வொன்றால் மேலும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.
</p><h3>
பிரான்சில் ஒரு அரிய நிகழ்வால் ஆபத்து
</h3><p>
பொதுவாக, நீர்நிலைகளிலிருந்து எழும் நீராவி உயர சென்று குளிர்ந்து மேகங்களாகும் என நாம் பள்ளியில் படித்திருக்கிறோம்.
</p><p>
இந்நிலையில், பிரான்சில் காட்டுத்தீயால் எழும் புகை, ’தீ மேகம்’ என்னும் ஒரு விடயத்தை உருவாக்கியுள்ளதை கவனித்துள்ளார்கள் பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e229a01-5f3b-4c27-883b-fbba37df316e/26-6a69a8fc601f6.webp' /></p><p>
இந்த தீ மேகம், flammagenitus, pyrocumulus cloud என்றும் அழைக்கப்படுகிறது.
</p><p>
அதாவது, காட்டுத்தீயால் எழும் புகை, ஒரு சிறிய மேகத்தை உருவாக்க, அது மேலும் மேலும் பெரிதாகி பெரிய மேகமாக மாற, இந்த மேகம் தன் பங்குக்கு மின்னலை உருவாக்க, அந்த மின்னல் மேலும் புதிய காட்டுத்தீயை உருவாக்கும் பேரபாயம் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5941cec1-dadc-4e3b-9bf3-0e057d850b7e/26-6a69af783664b.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், பிரான்சுக்கு இந்த தீ மேகம் என்னும் நிகழ்வு ஒரு புதிய அனுபவம் என்பதால் அதை எதிர்கொள்வது பிரான்ஸ் நாட்டு தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p>
இதற்கிடையில், இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வுகளுக்கு, மனிதனால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றங்களும் காரணம் என்கிறார்கள் சில அறிவியலாளர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T08:20:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் என்ன? (29-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785312676"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785312676</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (29-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (29-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,305,929.00 ஆகும்.</p><p>

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,070.00.</p><p>

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 368,550.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,240.00.</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 337,850.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,320.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 322,500.00.</p>]]></content>
            <updated>2026-07-29T08:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 3 வருடங்களுக்கு H-1B விசா நிறுத்தப்படலாம்: ஐ.டி ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/could-halt-h-1b-visas-1785310756"></link>
            <id>https://news.lankasri.com/article/could-halt-h-1b-visas-1785310756</id>
            <summary type="text">H-1B விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றத் திட்டமிட்டிருந்தால், தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.H-1B முறைகேடு ஒழிப்பு
புதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றத் திட்டமிட்டிருந்தால், தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.</p><h2>H-1B முறைகேடு ஒழிப்பு</h2><p>
</p><p>புதிய H-1B விசாக்களை வழங்குவதை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது உட்பட, H-1B விசா திட்டத்தில் முக்கிய மாற்றங்களைக் கோரும் பிரேரணை ஒன்றை அமெரிக்க செனட் சபையில் குடியரசுக் கட்சி செனட்டர் ஒருவர் தாக்கல் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b23df2a6-2cd4-499e-9fde-210b28e96055/26-6a69bf6526ea9.webp' /></p><p> </p><p>இந்த முன்மொழிவு தற்போதைய நிலையில் ஒரு பிரேரணையாக மட்டுமே உள்ளது. இது இன்னும் சட்டமாக மாறவில்லை; H-1B திட்டத்தில் இதுவரை எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. </p><p>ஆனால் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையிலான H-1B விசாக்களைப் பெறும் இந்தியத் தொழில்முறை நிபுணர்களை இது கணிசமாகப் பாதிக்கக்கூடும். </p><p>அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தைச் சேர்ந்த செனட்டர் டிம் ஷீஹி, செனட் சபையில் H-1B முறைகேடு ஒழிப்புச் சட்டத்தை' (End H-1B Abuse Act) அறிமுகப்படுத்தியுள்ளார்.</p><p></p><p> </p><p>ஷீஹியின் கூற்றுப்படி, போதுமான தகுதிவாய்ந்த பணியாளர்களைக் கண்டறிய முடியாத சிறப்புத் திறன் சார்ந்த பணிகளை நிரப்புவதற்காகவே H-1B திட்டம் உருவாக்கப்பட்டது என அவர் வாதிடுகிறார். </p><p>மேலும், குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு அமெரிக்கத் தொழிலாளர்களை இடமாற்றம் செய்வதற்கு இது பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் வாதிட்டுள்ளார். </p><p>முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் அத்திட்டத்தை அதன் அசல் நோக்கத்திற்கேற்ப மீட்டெடுக்கும் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் என்றும், மோசடிகளைக் குறைக்கும் என்றும், அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். </p><p>முன்மொழியப்பட்ட சட்ட மசோதா பல முக்கிய மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. அதில், அனைத்து புதிய H-1B விசாக்களையும் மூன்று வருடங்களுக்கு நிறுத்தி வைக்கக் கோரப்பட்டுள்ளது. </p><p>ஒவ்வொரு H-1B விண்ணப்பத்திற்கும் 100,000 அமெரிக்க டொலர் (ரூ. 96,00,000) கட்டாயக் கட்டணமாக அமுல்படுத்த வேண்டும். தற்போதைய சீரற்ற குலுக்கல் முறையை மாற்றி, ஊதியத்தின் அடிப்படையில் தெரிவு செய்யும் முறையை அமுல்படுத்த வேண்டும்; இதில் அதிக ஊதியம் தரும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><h2>இந்தியர்களையே பாதிக்கும்</h2><p> </p><p>H-1B விசா வைத்திருப்பவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் பணிபுரியும் முறையைத் தடை செய்ய வேண்டும். H-1B விசா வைத்திருப்பவர்கள் நிரந்தரக் குடியுரிமைக்கு முயற்சிக்கும் அதே வேளையில் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் 'இரட்டை நோக்கம்' (dual intent) தொடர்பான ஏற்பாட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fde5c08-2a9c-41b4-b63a-26424ece44f7/26-6a69bf65e9138.webp' /></p><p> </p><p>H-வகை விசா வைத்திருப்பவர்கள் தங்கள் சார்ந்திருப்பவர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வருவதைத் தடுக்க வேண்டும். இந்த நிலையில், H-1B விசா தொடர்பான புதிய பிரேரணை சட்டமாக நிறைவேறினால், அது இந்தியர்களையே வெகுவாக பாதிக்கும். </p><p>H-1B திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்காவில் பணிபுரிவதற்காக, ஆயிரக்கணக்கான இந்தியப் பொறியாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற திறன்மிக்க ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் H-1B விசாக்களைப் பெறுகின்றனர். </p><p>தற்போதைக்கு, ஏற்கனவே உள்ள H-1B விசா திட்டம் தற்போதைய விதிகளின்படியே தொடர்ந்து செயல்படும். H-1B விசாவிற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ள இந்தியர்கள், இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மட்டும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்றே கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T07:37:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[88 பந்தில் 186 ஓட்டங்கள் எடுத்து வெற்றி! மூவர் சிக்ஸர்மழை..நொறுங்கிய மார்க்ரம் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sunrisers-leeds-beat-manchester-by-8-wickets-1785310236"></link>
            <id>https://news.lankasri.com/article/sunrisers-leeds-beat-manchester-by-8-wickets-1785310236</id>
            <summary type="text">The Hundred போட்டியில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது. ஜோஸ் பட்லர்

ஹெட்டிங்லே மைதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Hundred போட்டியில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது. </p><h2>ஜோஸ் பட்லர்</h2><p>

ஹெட்டிங்லே மைதானத்தில் நடந்த The Hundred போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ed8e439-aa57-499a-8687-231a784973a8/26-6a69bb149cab0.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் (Jos Buttler) 33 பந்துகளில் 63 ஓட்டங்களும், கிளாசென் 27 பந்துகளில் 53 ஓட்டங்களும் விளாசினர்.</p><p> 

இதன்மூலம் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 181 ஓட்டங்கள் குவித்தது. நேதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளும், கார்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp;</p><h2>புரூக், கிராவ்லே வாணவேடிக்கை&nbsp;</h2><p>

 அடுத்து களமிறங்கிய சன்ரைஸர்ஸ் அணியில் ரிக்கெல்டன் 13 ஓட்டங்களில் வெளியேற, மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) சிக்ஸர்களை பறக்கவிட்டு 26 பந்துகளில் 63 ஓட்டங்கள் (5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசி அவுட் ஆனார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c84746-e9d6-495f-b147-2319a6f516f6/26-6a69bb1565c38.webp' /></p><p>

பின்னர் கைகோர்த்த ஹாரி புரூக், ஜக் கிராவ்லே கூட்டணி வாணவேடிக்கை காட்டியது. 

இவர்களது அதிரடியில் சன்ரைஸர்ஸ் லீட்ஸ் அணி 88 பந்துகளில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
</p><p>
அணித்தலைவர் ஜக் கிராவ்லே (Zak Crawley) 34 பந்துகளில் 56 ஓட்டங்களும் (3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்), ஹாரி புரூக் 17 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 42 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b3b8f5e-91e2-42ac-9a14-0a3e0a7049cb/26-6a69bb162c78b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மாணவர்களுக்கு கனடா அரசிடமிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-issues-warnings-to-international-students-1785307875"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-issues-warnings-to-international-students-1785307875</id>
            <summary type="text">சர்வதேச மாணவர்கள் கனடாவில் வேலை செய்வது தொடர்பில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச மாணவர்கள் கனடாவில் வேலை செய்வது தொடர்பில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

</p><h3>சர்வதேச மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
</h3><p>
சமீபத்தில், கனடாவில் படித்து பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கு பணி அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a551b576-44c0-420f-a1eb-43624c69d10d/26-6a69a2e48fc94.webp' /></p><p>
பணம் செலவு செய்து முறைப்படி கனடாவில் கல்வி கற்றும், தங்களுக்கு பணி அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், மாணவ மாணவியர் உண்ணாவிரதம் இருந்த சம்பங்களும் நடைபெற்றன.
</p><p>
இந்நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Important information for international students who plan to work while studying:<br>• You can only work in Canada as an international student if your study permit conditions say you can.<br>• If you are eligible to work off campus, you can only work up to 24 hours per week while…</p>&mdash; IRCC (@CitImmCanada) <a href="https://x.com/CitImmCanada/status/2081545178309853251?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
அந்த அறிவிப்பின்படி, சர்வதேச மாணவர்களின் கல்வி அனுமதியில் அவர்களுக்கு வேலை செய்ய அனுமதி உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும்.</p><p>

தாங்கள் கல்வி கற்கும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பணிபுரியத் தகுதியுள்ள மாணவர்கள், வகுப்புகள் நடைபெறும் நாட்களில் மட்டும், வாரத்திற்கு 24 மணி நேரம் வரை மட்டுமே வேலை செய்யலாம்.&nbsp;</p><p></p><p>
அனுமதிக்கப்பட்ட வேலை வரம்பை மீறுவது கனடாவில் ஒரு மாணவரின் மாணவர் நிலையை பாதிக்கலாம், எதிர்காலக் கல்வி அல்லது பணி அனுமதி விண்ணப்பங்களைப் பாதிக்கலாம், அத்துடன், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் கட்டாயப்படுத்தலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

அதாவது, சர்வதேச மாணவர்கள், தங்கள் கல்வி அனுமதியில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கவனத்தில் கொள்ளுமாறும், அவற்றை சரியாக பின்பற்றுமாறும் நினைவூட்டப்படுகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T06:51:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைசிவரை நின்ற பாபர் அஸாம்: 120 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்..மே.தீவுகள் மிரட்டல் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/west-indies-beat-pakistan-by-90-runs-in-trinidad-1785307099"></link>
            <id>https://news.lankasri.com/article/west-indies-beat-pakistan-by-90-runs-in-trinidad-1785307099</id>
            <summary type="text">ட்ரினிடாட்டில் நடந்த டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.&amp;nbsp;மேற்கிந்திய தீவுகள் 311
பாகிஸ்தான் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ட்ரினிடாட்டில் நடந்த டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.&nbsp;</p><h2>மேற்கிந்திய தீவுகள் 311</h2><p>
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ட்ரினிடாட்டில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/805d9159-053c-4b20-9121-6ca753a997a8/26-6a69a0ec67a19.webp' /></p><p></p><p>
முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் 311 ஓட்டங்களும், பாகிஸ்தான் 282 ஓட்டங்களும் எடுத்தன. </p><p>

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் 181 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f41b35f9-d7c8-4497-a760-f488f8f52389/26-6a69a0eb98a27.webp' /></p><p>
211 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஜேடன் சீல்ஸ் (Jayden Seales) பந்துவீச்சில் சரிந்தது.&nbsp;</p><h2>போராடிய பாபர் அஸாம்</h2><p>

அணித்தலைவர் பாபர் அஸாம் மட்டும் போராட, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9349fd7-6cf7-4a9e-8e8e-b0d66ff8d7ea/26-6a69a0ed1de10.webp' /></p><p> 

கடைசி விக்கெட்டாக மொஹம்மது அப்பாஸ் 23 ஓட்டங்களில் அவுட் ஆக, பாகிஸ்தான் அணி 120 ஓட்டங்களுக்கு சுருண்டது. பாபர் அஸாம் (Babar Azam) ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்கள் எடுத்தார்.</p><p>

மேற்கிந்திய தீவுகள் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, ஜஸ்டின் கிரீவ்ஸ் (Justin Greaves) ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5d08948-c404-4ca1-bc8b-1d7a80a967c7/26-6a69a0edc60ec.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f03138b-fafd-4a3f-944d-09d7d5147f74/26-6a69a3072292c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T06:40:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uttar-pradesh-man-came-to-chennai-walk-meet-vijay-1785307190"></link>
            <id>https://news.lankasri.com/article/uttar-pradesh-man-came-to-chennai-walk-meet-vijay-1785307190</id>
            <summary type="text">முதல்வர் விஜய்யை சந்திக்க உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் 2,700 கி.மீ நடந்தே வந்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இருந்து நடைபயணம் 

முதல்வர் விஜய் நடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய்யை சந்திக்க உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் 2,700 கி.மீ நடந்தே வந்துள்ளார்.
</p><h3>
உத்தரபிரதேசத்தில் இருந்து நடைபயணம்</h3><p> 

முதல்வர் விஜய் நடிகராக இருந்த காலத்திலே இந்திய அளவில் பிரபலமடைந்திருந்தார்.&nbsp; தற்போது தமிழ்நாடு முதல்வரான நிலையில், வட இந்தியாவை சேர்ந்த சமூகவலைதள Influncerகள் பலரும் முதல்வர் விஜய் குறித்த பல்வேறு செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d55ff76e-e18b-4c66-9c43-2f9032aab7fb/26-6a69a038aa849.webp' /></p><p>
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அலிகாரைசேர்ந்த 24 வயது இளைஞரான அமன், முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவரை காண அலிகாரில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்துள்ளார்.&nbsp;</p><p>கடந்த ஜூலை 3 ஆம் திகதி அலிகரில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அவர், சுமார் 2700 கி.மீ க்கு மேல் நடந்து சென்னையை வந்தடைந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fa9a353-c328-4e3b-a85c-86fb324629c5/26-6a69a038067a8.webp' /></p><p> 

ஆனால், அவர் தலைமை செயலகம் வந்துள்ள நிலையில், முறையான அனுமதி இல்லாததால் முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. </p><h3> 

முதல்வர் விஜய்யை சந்திக்க அனுமதி இல்லை</h3><p> 

சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் விஜய்யை பார்ப்பதற்காக உத்தரப் பிரதேசத்தில் இருந்து சென்னை வரை நடந்தே வந்துள்ளேன். விஜய் அவர்களை இந்தியாவின் பிரதமராக பார்க்க நான் விருப்பப்படுகிறேன்.
</p><p>
நான் நடைப்பயணமாக கடந்து வந்த அனைத்து மாநிலங்களிலும் முதலமைச்சர் விஜய்க்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் விஜய் அவர்களை பிரதமராக பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbVdutUM3MZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbVdutUM3MZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbVdutUM3MZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Aman—01 (@aman_.01k)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் சமமாக மதிப்பவர் விஜய். கல்வி, குழந்தைகள் நலன் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை சிறப்பாக வழிநடத்தக்கூடிய அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன. வடஇந்தியாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அதனால், விஜய் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்பதே என் விருப்பம்.</p><p>சென்னை வந்து ஒரு நாளுக்கும் மேலாகிவிட்டது. விஜய்யைச் சந்திக்க மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். மேலும் அவரது நீலாங்கரை இல்லம், பனையூர் அலுவலகத்திற்கும் சென்றேன்.
</p><p>
ஆனால், இதுவரை அவரை சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த செய்தி விஜய்யின் கவனத்துக்கு சென்று, அவர் என்னை நேரில் சந்திப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். முதலமைச்சர் விஜய்யை பார்க்காமல் நான் சென்னையை விட்டு செல்லமாட்டேன்" என தெரிவித்துள்ளார். </p><p>

இவர் இவ்வாறு நடைபயணம் மேற்கொள்வது இது முதல்முறை இல்லை.</p><p> 

கடந்த ஆண்டில், AIMIM தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசியைச் சந்திப்பதற்காக, அவர் அலிகரிலிருந்து ஹைதராபாத்திற்கு நடைபயணம் செய்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca911a7c-eaf1-41a7-b254-12834deb4502/26-6a69a0395a56c.webp' /></p><p> 

முன்னதாக, அலிகரிலிருந்து மும்பை மற்றும் அஜ்மீர் உள்ளிட்ட நகரங்களுக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் பயண வீடியோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் வெளியிட்டு வருகிறார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T06:40:03+00:00</updated>
        </entry>
    </feed>
