<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-14T22:21:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தையை தொடங்கியது அமெரிக்கா: ஜே.டி வான்ஸ் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-starts-direct-talks-with-houthis-1789416325"></link>
            <id>https://news.lankasri.com/article/us-starts-direct-talks-with-houthis-1789416325</id>
            <summary type="text">US Starts Direct Talks with Houthis Following Perim Island Seizure: ஹவுதிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>US Starts Direct Talks with Houthis Following Perim Island Seizure: ஹவுதிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><h2> பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்</h2><p>செங்கடலின் கிழக்கு கடற்கரைக்கு அருகே இராஜதந்திர ரீதியில் முக்கியமாக அமைந்துள்ள பெரிம்(Perim) தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p> இந்த பெரிம் தீவானது முக்கியமான சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து பாதையான பாப் எல்-மண்டப் ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ளது. எனவே இந்த கைப்பற்றல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு முக்கிய ராணுவ பலத்தை பெற்றுத் தந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/524d768d-a419-4f81-ba24-6d97cbda9595/26-6aa853873c11a.webp' /></p><h2> அமெரிக்கா தலையீடு</h2><p>இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் நேரடித் தொடர்புகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது.</p><p> கான்சாஸ் மாகாணத்திற்கு புறப்படுவதற்கு சற்று முன்பு ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடியை அமெரிக்கா தீவிரமாக கையாண்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> அத்துடன் இது தொடர்பாக சவுதி அரேபியா, எமிரேட்ஸ் மற்றும் அப்பகுதியை சுற்றி பாதிக்கப்பட்ட மற்ற தரப்பினருடனும் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-14T20:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI-க்கு எதிரான அபத்தமான சதி! செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஒழுங்குமுறைக்கு டிரம்ப் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966</id>
            <summary type="text">Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2> ஆந்த்ரோபிக் CEO-யின் எச்சரிக்கை</h2><p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி(Dario Amodei) சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.</p><p> செயற்கை நுண்ணறிவுத் துறையின் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் மனித குலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடும் அபாயம் இருப்பதாகவும் டாரியோ அமோடி எச்சரித்து இருந்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We Must Pace the Frontier: I’ve written a new essay on why the AI industry should slow down, with a three-part plan for doing so.<br><br>Anthropic is unilaterally committing to the first of these steps. We’ll provide third-party evaluators with permanent, employee-level access to our…</p>&mdash; Dario Amodei (@DarioAmodei) <a href="https://x.com/DarioAmodei/status/2098773920774074715?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி முன்வைத்த செயற்கை நுண்ணறிவுக்கான கூடுதல் பாதுகாப்பு தேவைகளை ஓபன் ஏஐ(Open AI) நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோரும் அங்கீகரித்து இருந்தனர்.</p><h2> டிரம்பின் நிலைப்பாடு</h2><p>
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> &nbsp;ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி முன்வைத்த கடுமையான தடைகள் தொடர்பான தேவைகள் மற்றும் வாதங்களை டிரம்ப் கடுமையாக நிராகரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a780ac8-aa70-4014-ab6c-4826558b588a/26-6aa84a4fa7e4c.webp' /></p><p> இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட கருத்தில், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி(Sick Conspiracy) என்று தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் அந்த பதிவில், ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி-வை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> குறிப்பாக, டாரியோ அமோடியை கிண்டல் செய்யும் வகையில், “அவர் தன்னை பரிசுத்தமான சிறிய தேவதை போல் காட்டிக் கொள்வதாக” குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T19:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம்! ஒப்புக் கொண்ட உக்ரைன் - ரஷ்யா: டிரம்ப் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-says-ukraine-russia-accept-to-halt-attacks-1789407597"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-says-ukraine-russia-accept-to-halt-attacks-1789407597</id>
            <summary type="text">Trump Says Ukraine and Russia Accept to Halt Attacks: &amp;nbsp;ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம் என்று ரஷ்யாவும்,&amp;nbsp; உக்ரைனும் ஒப்புக் கொண்டதாக டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Says Ukraine and Russia Accept to Halt Attacks: &nbsp;ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம் என்று ரஷ்யாவும்,&nbsp; உக்ரைனும் ஒப்புக் கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2> எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்க மாட்டோம்</h2><p>
உக்ரைனும், ரஷ்யாவின் இனி எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்கிக் கொள்ள மாட்டோம் என்று ஒப்புக் கொண்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>மேலும், உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணம் இல்லை என்றும், உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்து வரும் மோதல்களே காரணம் என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ள டிரம்ப், ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என்று உக்ரைன் தெரிவித்து இருப்பதாகவும், ரஷ்யாவும் அவ்வாறே ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf003e7d-46e1-47fb-b6c8-d5389ae829eb/26-6aa8316ed80fa.webp' /></p><p> மேலும் அதில் உலகின் டீசல் விலை ஏற்றத்திற்கு ரஷ்யா - உக்ரைன் போர் தான் காரணம், ஈரான் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>நேட்டோ ஆதரவை பெறும் உக்ரைன்</h2><p>இதற்கிடையில் உக்ரைனுக்கான ஆதரவை நேட்டோ அதிகரிக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.</p><p> உக்ரைனுக்கு எதிராக மோசமான தாக்குதல்களை ரஷ்யா தொடர்ந்து வருகிறது. இதன்மூலம் மேலும் மேலும் ரஷ்ய பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது.</p><p> உக்ரைனுக்கு நேட்டோ ஆதரவு அளிப்பதை யாராலும் தடுத்துவிட முடியாது என்றும், நேட்டோவின் ஒற்றுமையை சிதைத்து விட முடியும் என்று ரஷ்யா நினைக்கிறது. ஆனால் அது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T19:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சோகம்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-participants-dies-in-great-north-run-1789411762"></link>
            <id>https://news.lankasri.com/article/2-participants-dies-in-great-north-run-1789411762</id>
            <summary type="text">2 Participants Dies in Great North Run: பிரித்தானியாவில் நடைபெற்ற கிரேட் நார்த் ரன் போட்டியில் இரண்டு பங்கேற்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2 Participants Dies in Great North Run: பிரித்தானியாவில் நடைபெற்ற கிரேட் நார்த் ரன் போட்டியில் இரண்டு பங்கேற்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> இருவர் உயிரிழப்பு</h2><p>உலகின் மிகப்பெரிய அரை மாரத்தான் போட்டியாக கருதப்படும் கிரேட் நார்த் ரன்(Great North Run) போட்டியில் இரண்டு பங்கேற்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> நியூகேஸில்(Newcastle) முதல் சவுத் ஷீல்ட்ஸ்(South Shields) வரை நடைபெற்ற 13.1 மைல் தூரப் அரை மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் வடகிழக்கு பகுதியை நேர்ந்த இரண்டு 25 வயது இளைஞர்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d08605f5-3365-44b7-ab06-388ac54e0839/26-6aa841b3aa132.webp' /></p><p> அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட போதிலும் இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக கிரேட் ரன் கம்பெனி அறிவித்துள்ளது.</p><p> உயிரிழப்புக்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கருத்தில் கொண்டு மேற்கண்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற இந்த அரை மாரத்தான் போட்டியில் கிட்டத்தட்ட 63,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.</p><p> மேலும் இந்த ஓட்டப் பந்தயத்தில் மற்றொரு முக்கியமான நிகழ்வாக, இதில் பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ஹாம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.</p><p> இதன் மூலம் இந்த போட்டியில் பங்கேற்ற முதல் பிரித்தானிய பிரதமர் என்ற பெருமையை அவர் ஆண்டி பர்ஹாம் பெற்றுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T18:49:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/abu-dhabi-prince-thanks-indian-car-driver-1789404132"></link>
            <id>https://news.lankasri.com/article/abu-dhabi-prince-thanks-indian-car-driver-1789404132</id>
            <summary type="text">விமானத்தில் ஏற சென்ற அபுதாபி இளவரசர் திடீரென திரும்பி வந்து இந்திய ஓட்டுநருக்கு கைகுலுக்கி பேசி விட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.பிரிக்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமானத்தில் ஏற சென்ற அபுதாபி இளவரசர் திடீரென திரும்பி வந்து இந்திய ஓட்டுநருக்கு கைகுலுக்கி பேசி விட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.</p><h2>பிரிக்ஸ் உச்சி மாநாடு</h2><p>இந்திய தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13ம் திகதிகளில் 18 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது.</p><p> 13 உலகத் தலைவர்களும், 17 தூதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாட்டில் மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை உருவாக்குதல் ஆகியவை முக்கிய கருப்பொருளாக இருந்தது.</p><p></p><p> இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அந்நாட்டின் பட்டத்து இளவரசராக ஷேக் காலித் பங்கேற்றார்.</p><p> உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி முறைப்படி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.</p><h2>அபுதாபி இளவரசரின் வியப்பூட்டிய செயல்</h2><p>இந்நிலையில் மாநாட்டை முடித்து விட்டு தன்னுடைய நாட்டிற்கு செல்வதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பட்டத்து இளவரசர் ஷேக் காலித், புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏறுவதற்காக சென்றார்.</p><p> ஆனால் விமானத்தில் இருந்து திடீரென காரை நோக்கி திரும்பிய பட்டத்து இளவரசர் ஷேக் காலித், தனக்கான காரை ஓட்டி வந்த இந்திய ஓட்டுநரை நோக்கி நடந்து சென்றார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Crown Prince Sheikh Khalid bin Mohammed bin Zayed Al Nahyan<br>of <a href="https://x.com/hashtag/AbuDhabi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AbuDhabi</a>, Upon departing <a href="https://x.com/hashtag/India?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#India</a> and before boarding the plane, turns around and goes to bid farewell to the Indian driver who was with him <a href="https://t.co/oj5Fs6DRJ1">pic.twitter.com/oj5Fs6DRJ1</a></p>&mdash; Siddhant Mishra (@siddhantvm) <a href="https://x.com/siddhantvm/status/2099147010842718433?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அத்துடன் அந்த ஓட்டுநருடன் கை குலுக்கி விட்டு சில வார்த்தைகளைப் பேசிவிட்டு சென்ற மீண்டும் தன்னுடைய விமானத்தில் ஏறிச் சென்றார்.</p><p>இதையடுத்து அபுதாபி இளவரசரின் செயல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஓட்டுநரை அங்கீகரிப்பதற்காக நேரம் ஒதுக்கிய அபுதாபி இளவரசரின் செயலை பாராட்டி வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T16:42:23+00:00</updated>
        </entry>
    </feed>
