<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-15T14:21:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் வர உள்ள பறக்கும் பேருந்து - அமைச்சர் நிதின் கட்காரி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gadkari-says-to-bring-flying-bus-in-india-1784121396"></link>
            <id>https://news.lankasri.com/article/gadkari-says-to-bring-flying-bus-in-india-1784121396</id>
            <summary type="text">இந்தியாவில் பறக்கும் பேருந்தை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வர உள்ள ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் பறக்கும் பேருந்தை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
</p><h3>
இந்தியாவில் வர உள்ள பறக்கும் பேருந்து
</h3><p>
இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் அதேவேளையில், அதனால் அதிகரித்துள்ள வாகனப் பயன்பாடு மூலம் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. </p><p>

போக்குவரத்தை நெரிசல் மற்றும் அதனால் ஏற்பாடு காற்று மாசு உள்ளிட்ட சிக்கல்களை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.</p><p> 

லக்னோ-கான்பூர் விரைவுச்சாலைத் தொடக்க விழாவில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் எதிர்காலத்தில் பறக்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aff6343-74ab-4475-9996-2ffbef9e0343/26-6a578835d8b70.webp' /></p><p>

இது குறித்து பேசிய அவர், "நான் எப்போதுமே நாட்டிற்குப் புதிய தொழில்நுட்பங்களையும், கம்பிவடப் பாதைகளையும், கேபிள் கார்களையும் கொண்டு வந்துள்ளேன்.

 முன்னதாக, தண்ணீரில் தரையிறங்கக்கூடிய ஒரு விமானத்தையும் நான் கொண்டு வந்திருந்தேன்.&nbsp;</p><p></p><p>இப்போது எனது அடுத்த திட்டம், ஒரு பறக்கும் பேருந்தைக் கொண்டு வருவதாகும்.

இந்தத் துறை என் அதிகார வரம்பிற்குள் வருவதால், பறக்கும் பேருந்துகளுக்கான மின்சார அதிவேகப் போக்குவரத்து முறையை உருவாக்கப் போகிறேன்.</p><p> 

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், பயணிகள் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு எப்போது சென்றடைந்தார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. இதை நான் விரைவில் தொடங்குவேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/facbbf80-f263-4737-b629-b1f2f33ae922/26-6a5788368b46f.webp' /></p><p>

ஆனால் அந்த திட்டத்திற்கான தொழில்நுட்பம் குறித்தோ, சாத்தியக்கூறுகள் குறித்தோ, காலக்கெடு குறித்தோ எந்தவித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.</p><p> 

பறக்கும் பேருந்து என உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் செல்லும் பேருந்துகளை(Sky Bus) அவர் குறிப்பிட்டிருக்கலாம் என கருதுகின்றனர்.</p><p>

அப்படியான பறக்கும் பேருந்துகள் வரும் பட்சத்தில், பெருநகரங்களில் உள்ள போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். 

ஆனால், அதற்கான தொழில்நுட்பம், கட்டுமானம் என அதனை தொடங்கி முடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T13:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[டி20யிலும் வங்காளதேசத்தை புரட்டியெடுத்த ஜிம்பாப்வே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brad-evans-blast-last-over-zim-170-vs-ban-1784120400"></link>
            <id>https://news.lankasri.com/article/brad-evans-blast-last-over-zim-170-vs-ban-1784120400</id>
            <summary type="text">வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே 170 ஓட்டங்கள் குவித்தது.&amp;nbsp;பென்னெட் 44 ஓட்டங்கள் 
ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் அணிகளுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே 170 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><h2>பென்னெட் 44 ஓட்டங்கள் </h2><p>
ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98e44a7c-d389-410d-8f49-39c66bade2ac/26-6a57852c5401b.webp' />&nbsp;</p><p></p><p>

நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, ஜிம்பாப்வே முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.</p><p>

பிரையன் பென்னெட் (Brian Bennett) 30 பந்துகளில் 44 ஓட்டங்கள் விளாசினார். ரியான் பர்ல் (Ryan Burl) 25 பந்துகளில் 30 ஓட்டங்களும், பிராட் எவன்ஸ் (Brad Evans) 10 பந்துகளில் 19 ஓட்டங்களும் விளாசினர்.</p><p> 

இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் குவித்தது. </p><p>நஹித் ராணா 4 விக்கெட்டுகளும், மொஹம்மது சைப்புதின் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">NAHID RANA ON FIRE! A breathtaking spell from Nahid Rana as he tears through the batting lineup with raw pace and relentless aggression. A performance to remember! <a href="https://x.com/hashtag/NahidRana?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NahidRana</a> <a href="https://x.com/hashtag/BangladeshCricket?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BangladeshCricket</a> <a href="https://x.com/hashtag/BCB?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BCB</a> <a href="https://x.com/hashtag/Tigers?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Tigers</a> <a href="https://x.com/hashtag/ZIMvBAN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ZIMvBAN</a> <a href="https://t.co/p64DWniTNU">pic.twitter.com/p64DWniTNU</a></p>&mdash; Bangladesh Cricket (@BCBtigers) <a href="https://x.com/BCBtigers/status/2077364040695951585?ref_src=twsrc%5Etfw">July 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T13:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-appoint-special-envoy-for-overseas-prisoners-1784118255"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-appoint-special-envoy-for-overseas-prisoners-1784118255</id>
            <summary type="text">பிரித்தானிய அரசு, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்காக சிறப்பு தூதர் ஒருவரை நியமித்துள்ளது.

வெளிநாடுகளில் சிறையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய அரசு, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்காக சிறப்பு தூதர் ஒருவரை நியமித்துள்ளது.</p><h3>

வெளிநாடுகளில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்காக...
</h3><p>
32 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் Alistair Burt.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c88b6f0-64d9-4118-97be-c14a1a191229/26-6a577bf116c11.webp' /></p><p>
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கான மாகாண அமைச்சராகவும் பதவி வகித்தவரான Alistairதான் வெளிநாடுகளில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>
அதாவது, பிரித்தானிய ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்டவரான Nazanin Zaghari-Ratcliffe என்னும் பெண் ஈரானில் 6 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்தது குறித்து அறிந்திருக்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4ae105f-6a04-4b4f-90b2-19ea99b03d4e/26-6a577bf1bcb1b.webp' /></p><p>
அதேபோல, இந்தியாவில் பிரித்தானியக் குடிமகனான ஜக்தார் சிங் ஜோஹல் என்பவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அத்தகையோரை மீட்டு பிரித்தானியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பிலான சிக்கலான தூதரக வழக்குகளைக் கையாள்வதற்காகவே Alistairக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T12:24:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனி, ஜப்பானை முந்தி..கார் ஏற்றுமதி வரலாற்றில் சாதனை படைத்த நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-new-record-of-car-export-as-1-million-1784117495"></link>
            <id>https://news.lankasri.com/article/china-new-record-of-car-export-as-1-million-1784117495</id>
            <summary type="text">சீனா 10 லட்சத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.வரலாற்றிலேயே முதல் முறை
உலகின் முன்னணி வாகன ஏற்றுமதி நாடாகத் திகழ்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா 10 லட்சத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">வரலாற்றிலேயே முதல் முறை</span></h2><p>
உலகின் முன்னணி வாகன ஏற்றுமதி நாடாகத் திகழ்ந்த ஜேர்மனி மற்றும் ஜப்பானை முந்தி சீனா முதலிடம் பிடித்திருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ccb6e64-b569-4f55-8d6f-a1260d9743e3/26-6a577a3aacae2.webp' />&nbsp;</p><p></p><p>

இதனைத் தொடர்ந்து, சீன வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (CAAM) சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் சீனா சாதனை அளவாக 10.37 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
</p><p>
இதன்மூலம் தமது மாதாந்திர கார் ஏற்றுமதி வரலாற்றிலேயே முதல் முறையாக சீனா 10 லட்சம் (1 மில்லியன்) வாகனங்கள் என்ற அளவைக் கடந்துள்ளது. </p><p>

இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.6 சதவீத வளர்ச்சியையும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 75.1 சதவீத வளர்ச்சியையும் குறிக்கிறது.
</p><p>
மேலும், தற்போது கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள சீனா, இந்த ஆண்டு 10 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை ஏற்றுமதி செய்யும் பாதையில் பயணிப்பதாக தெரிய வந்துள்ளது.
</p><h2>
ஏற்றுமதியில் மிகப்பெரிய மாற்றம்</h2><p>மின்சார வாகனங்கள் (EVs) மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் ஏற்றுமதியில் மிகப்பெரிய மாற்றம் காணப்பட்டது; ஜூன் மாதத்தில் மட்டும் இவற்றின் ஏற்றுமதி 5, 23,000 யூனிட்களை எட்டியது. இது முந்தைய ஆண்டை விட 1.6 மடங்கு அதிகமாகும். </p><p>

ஜூன் மாதத்தில், சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒவ்வொரு இரண்டு வாகனங்களிலும் ஒன்று பேட்டரி மற்றும் மின்சார மோட்டார்கள் கொண்டதாக இருந்தது. எதிர்கால வளர்ச்சி குறித்து சீனா எச்சரிக்கையுடனேயே உள்ளது.</p><p>ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி மிதமாகவே இருக்கும் என்று கணித்துள்ள சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி வரிகள் மற்றும் சீன மின்சார வாகன உற்பத்தியாளர்களை இலக்காகக் கொண்ட பிற நடவடிக்கைகள் ஆகியவை சாத்தியமான சவால்களாக அமையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77e9ae71-c05b-423e-b94c-290bccdd9ba4/26-6a577a3b8ccbb.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T12:15:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி இன்ஸ்டாமார்ட் மூலம் LPG சிலிண்டர் வாங்கலாம் - இணைப்பு கூட தேவையில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/instamart-to-deliver-lpg-cylinder-how-to-order-1784117584"></link>
            <id>https://news.lankasri.com/article/instamart-to-deliver-lpg-cylinder-how-to-order-1784117584</id>
            <summary type="text">&amp;nbsp;HPCL நிறுவனத்துடன் இணைந்து, LPG சிலிண்டர் டெலிவரி சேவையை இன்ஸ்டாமார்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாமார்ட் மூலம் LPG சிலிண்டர்

ஸ்விக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;HPCL நிறுவனத்துடன் இணைந்து, LPG சிலிண்டர் டெலிவரி சேவையை இன்ஸ்டாமார்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><h3>
இன்ஸ்டாமார்ட் மூலம் LPG சிலிண்டர்
</h3><p>
ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் நிறுவனம், மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றை 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை வழங்கி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79811f93-ef5f-4649-8993-9e4db62a6f1f/26-6a577951b05fa.webp' /></p><p> 

இந்நிலையில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்துடன் இணைந்து, LPG சிலிண்டர்களையும் டெலிவரி செய்ய உள்ளது.</p><p> 

10 கிலோ ஹெச்பி நவ்யா சிலிண்டரும், 5 கிலோ எடையுள்ள வழக்கமான மெட்டல் சிலிண்டரும் இதில் கிடைக்கும்.&nbsp;</p><p></p><p>

நாவ்யா சிலிண்டர் வழக்கமான சிலிண்டர்களை விட எடை குறைவானது மற்றும் பயனர்கள் மீதமுள்ள எரிவாயு அளவைச் சரிபார்க்க உதவும் ஒளிபுகும் அமைப்பைக் கொண்டுள்ளது.</p><p> 

இதன் மூலம் சிலிண்டர் வாங்க ஏற்கனேவே வீட்டு சிலிண்டர் இணைப்பு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. </p><p>

இன்ஸ்டாமார்ட் செயலி மூலம், 10 கிலோ ஹெச்பி நவ்யா அல்லது 5 கிலோ சிலிண்டரை ஆர்டர் செய்யலாம். 

இந்த ஆர்டர்கள் HPCL-இன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் நெட்வொர்க் மூலம் நிறைவேற்றப்பட்டு, பயிற்சி பெற்ற ஊழியர்களால் டெலிவரி செய்யப்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b33b972-508d-4b0e-a9c5-b154099e8c8b/26-6a57795260b80.webp' /></p><p>
முதல்முறை வாங்கும் பொது மட்டும் அடையாளச் சரிபார்ப்பு இருக்கும். மற்றும் டெலிவரி செய்யப்பட்டதற்கான ஆதார ஆவணங்கள் வழங்கப்படும்.
</p><p>
அடுத்து ஒவ்வொரு முறையும் உங்கள் காலியான சிலிண்டரை கொடுத்து புதிய சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம்.</p><p>

முதற்கட்டமாக, பெங்களூருவில் இந்த சேவையை தொடங்கியுள்ளது. எதிர்வரும் நாட்களில் நாட்டின் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். </p><p>

இந்த திட்டம், சிறிய குடும்பத்தை சேர்ந்தவர்கள், வெளியூரில் தங்கி பணிபுரிபவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T12:13:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலையில் முடிந்த சிறுபிள்ளைகள் இருவரின் காதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/boy-15-pushes-ex-girlfriend-13-from-7th-floor-dies-1784114343"></link>
            <id>https://news.lankasri.com/article/boy-15-pushes-ex-girlfriend-13-from-7th-floor-dies-1784114343</id>
            <summary type="text">சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பாலினம், வயது, நாடு என்று எந்த வரையறைக்கும் உட்படாமல் சிறுபிள்ளைகள் குற்றச்செயல்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. </p><p>பாலினம், வயது, நாடு என்று எந்த வரையறைக்கும் உட்படாமல் சிறுபிள்ளைகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருவது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
</p><h3>
கொலையில் முடிந்த சிறுபிள்ளைகளின் காதல்</h3><p>

இத்தாலியிலுள்ள Piacenza என்னுமிடத்தில், 13 வயது சிறுமி ஒருத்தியும் 15 வயது சிறுவன் ஒருவனும் காதலித்துவந்துள்ளார்கள்!&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d43995a5-3c2a-4088-b1a8-9abf4e551ede/26-6a576ca8e4572.webp' /></p><p>
ஒரு கட்டத்தில் தன் காதலிக்கு அந்தச் சிறுவன் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க, அந்தச் சிறுமி அவனைப் பிரிந்துள்ளாள். </p><p>அதற்குப் பிறகும் அந்தச் சிறுவன் அந்தச் சிறுமியை பின்தொடர்ந்து அவனுக்கு தொல்லை கொடுத்துவந்துள்ளான்.
</p><p>
இந்நிலையில், அரோரா (Aurora Tila) என்னும் அந்தச் சிறுமி, 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு கட்டிடத்தின் ஏழாவது மாடியிலிருந்து விழுந்து இறந்துவிட்டாள்.&nbsp;</p><p></p><p>

அவள் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக அந்தச் சிறுவன் கூறியிருந்தான். ஆனால், அவன் கூறிய விடயங்கள், அந்தச் சிறுமி இறந்துகிடந்த நிலையுடன் ஒத்துப்போகவில்லை.
</p><p>
இதற்கிடையில், அந்தச் சிறுமி ஏழாவது மாடியில் பால்கனியிலிருந்த கம்பியைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்ததையும், அந்தச் சிறுவன் அவள் கையில் அடிக்க, அதனால் அவள் கீழே விழுந்ததையும் தான் பார்த்ததாக, நடந்ததைக் கண்ணால் கண்ட ஒருவர் சாட்சியமளிக்க, அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டான்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/455ce39a-2b87-4207-9bc1-7d2e44fa2e00/26-6a576ca99f5f4.webp' /></p><p>
அவனுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் அரோராவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதுடன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளான் அந்தச் சிறுவன்.
</p><p>
இவ்வளவு காலத்துக்குப் பிறகு அந்தச் சிறுவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், அதனால் அவனது தண்டனைக் காலம் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் குறையக்கூடும் என்று கூறியுள்ள அரோராவின் தாயின் சட்டத்தரணி, அது நியாயமல்ல என்று கூறியுள்ளார்.
</p><p>
அந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை, செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி துவங்க உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T11:19:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும்... கவலை தெரிவித்துள்ள ஜேர்மன் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-newspaper-lists-merz-in-hit-list-1784108783"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-newspaper-lists-merz-in-hit-list-1784108783</id>
            <summary type="text">ஈரான் தரப்பிலிருந்து உலகத்தலைவர்கள் பலருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜேர்மன் மண்ணில் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என ஜேர்மன் அரசியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தரப்பிலிருந்து உலகத்தலைவர்கள் பலருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜேர்மன் மண்ணில் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என ஜேர்மன் அரசியல்வாதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><h3>

உலகத்தலைவர்கள் பலருக்கு மிரட்டல்
</h3><p>
ஈரான் ஊடகமான Hamshahri, ஈரான் உச்சத் தலைவரான அலி கமேனி கொல்லப்பட்டதற்காக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட 13 உலக நாடுகளின் தலைவர்களை பழிவாங்க இருப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e72c6525-91ce-4593-a21d-5e911a1884ec/26-6a5756f16fcfd.webp' /></p><p>
அந்த தலைவர்களில் பட்டியலில், ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸின் பெயரும் அடங்கும்!
</p><h3>
கவலை தெரிவித்துள்ள ஜேர்மன் அரசியல்வாதிகள்</h3><p>

அந்த செய்தியைத் தொடர்ந்து, ஜேர்மன் மண்ணில் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என ஜேர்மன் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
ஜேர்மனியின் உளவு அமைப்புகளைக் கண்காணிக்கும் ஜேர்மன் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தலைவரான மார்க் ஹென்ரிச்மன் இது குறித்து கூறும்போது, ஈரானின் உளவு அமைப்புகள் ஐரோப்பாவிலும் தாக்குதல்களைத் திட்டமிடுகின்றன என்று நாம் கருத வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dd36928-e6c3-4810-8bdc-c0f659f32ec2/26-6a5756f221cd6.webp' /></p><p>
ஜேர்மன் பாதுகாப்புத்துறையினர், ’ஒருமுறை பயன்படுத்தப்படும் ஏஜண்டுகள்’ என அழைக்கப்படும், ஒரே ஒரு தாக்குதலை நடத்துவதற்காக மட்டும் பணியமர்த்தப்படும் நபர்கள் குறித்து கவலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், ஈரான் வம்சாவளியினரும், ஜேர்மன் நாடாளுமன்றத் துணைத்தலைவருமான உமித் நூரிபூர், ஈரானால் ஜேர்மனிக்கு அனுப்பப்படும் பயங்கரவாதிகள் தொடர்பில் எங்களுக்கு பல கடந்த கால அனுபவங்கள் உள்ளன.
</p><p>
அதாவது, ஈரான் அரசு, பத்திரிகைகளை தணிக்கை செய்துதான் வெளியிடும். அப்படியிருக்கும்போது, 13 உலகத் தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தியை அரசு நினைத்தால் தணிக்கை செய்திருக்கமுடியும்.
</p><p>
ஆனால், ஈரான் அரசு அப்படிச் செய்யவில்லை. அப்படியானால், தணிக்கையாளர்களின் அனுமதியுடன்தான் அந்த மிரட்டல் செய்தி வெளியாகியுள்ளது என்பதால், அதை நாம் சீரியஸாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
</p><p>
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை அல்லது ஈரான் உளவுத்துறைக்காக வேலை செய்யும் சுமார் 180 பேர் தற்போது ஜேர்மனியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளதால், அவர்கள், தனிநபருக்கு மிரட்டல் விடுப்பது முதல், தாக்குதல் நடத்துவது தொடர்பான உளவு பார்ப்பது வரையிலான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என ஜேர்மன் உள்நாட்டு உளவுத்துறையே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T11:00:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் காட்டுத்தீ... தீவைத்த தீயணைப்பு வீரர்: திடுக் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/volunteer-firefighter-behind-fontainebleau-fire-1784112643"></link>
            <id>https://news.lankasri.com/article/volunteer-firefighter-behind-fontainebleau-fire-1784112643</id>
            <summary type="text">பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ, சுமார் 1,200 ஹெக்டேர் காட்டை கபளீகரம் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ, சுமார் 1,200 ஹெக்டேர் காட்டை கபளீகரம் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

<iframe width="1012" height="569" src="https://www.youtube.com/embed/ORo0-l80NXM" title="Volunteer firefighter admits to starting a fire in the Fontainebleau forest • FRANCE 24 English" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen=""></iframe>
</p><p>
ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><h3>
திடுக் தகவல்
</h3><p>
இந்நிலையில், தீயை துவக்கியதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் தன்னார்வலராக செயல்பட்ட தீயணைப்புவீரர் என்னும் செய்தி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42951294-d97b-4b64-89fe-7046e6fc617f/26-6a5766042d597.webp' /></p><p>

ஒருவர் தான் பெட்ரோல் மூலம் தீயை துவக்கியதாகவும், மற்றொருவர் தற்செயலாக சிகரெட் துண்டை எறிந்ததன் மூலம் அறியாமல் தீயை துவக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>

மற்றொருவர், கைகளில் கரியுடன் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
</p><p>
பொலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T10:57:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[267 பந்துகளில் 233 ரன் விளாசிய இலங்கை வீரர்! பதிலடியாக இந்திய அணி தொடக்க வீரர்கள் சதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-u19-opening-pair-257-runs-vs-sri-lanka-1784109155"></link>
            <id>https://news.lankasri.com/article/india-u19-opening-pair-257-runs-vs-sri-lanka-1784109155</id>
            <summary type="text">இலங்கை அணிக்கு எதிரான U19 டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சதம் விளாசினர்.&amp;nbsp;செனுஜா வெகுனாகோடா&amp;nbsp;
இந்தியா மற்றும் இலங்கை அணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அணிக்கு எதிரான U19 டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சதம் விளாசினர்.&nbsp;</p><h2>செனுஜா வெகுனாகோடா&nbsp;</h2><p>
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான U19 டெஸ்ட் போட்டி காலியில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23bcdf57-8e83-438a-9913-071597e778c0/26-6a5758c336521.webp' />&nbsp;</p><p></p><p>

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 424 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
</p><p>

செனுஜா வெகுனாகோடா (Senuja Wekunagoda) 233 (267) ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 1 சிக்ஸர், 33 பவுண்டரிகள் அடங்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05a300b9-e0df-4ae2-862d-6c70776ebef4/26-6a57628bdb23a.webp' /></p><h2>
தொடக்க வீரர்கள் சதம்</h2><p>அணித்தலைவர் விமத் தின்சரா 52 ஓட்டங்களும், கவிஜா 49 ஓட்டங்களும், சமிகா 45 ஓட்டங்களும் எடுத்தனர். ஜெகநாதன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
</p><p>
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்களான லக்ஷ்யா ராஜேஷ் மற்றும் சாகர் விர்க் சதம் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7af323cf-9b0c-448a-bdaa-5f97d49e67da/26-6a57628b39bc8.webp' /></p><p>
இந்தக் கூட்டணி 257 ஓட்டங்கள் குவிக்க மழை குறுக்கிட்டது. லக்ஷ்யா ராஜேஷ் (Lakshya Rajesh) 134 ஓட்டங்களுடனும், சாகர் விர்க் (Sagar Virk) 112 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9d7f63c-06f8-49f9-aa60-71c5b19946e4/26-6a57628c91821.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T10:06:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை பெற்ற இந்தியர் - யார் இந்த யூசுப் அலி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/yusuff-ali-got-kuwait-1st-15-year-golden-residency-1784108068"></link>
            <id>https://news.lankasri.com/article/yusuff-ali-got-kuwait-1st-15-year-golden-residency-1784108068</id>
            <summary type="text">குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை, இந்தியரான யூசுப் அலி பெற்றுள்ளார்.

குவைத் கோல்டன் ரெசிடென்சி பெற்ற யூசுப் அலி

எண்ணெய்த் துறையைத் தாண்டி த...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை, இந்தியரான யூசுப் அலி பெற்றுள்ளார்.</p><h3>

குவைத் கோல்டன் ரெசிடென்சி பெற்ற யூசுப் அலி
</h3><p>
எண்ணெய்த் துறையைத் தாண்டி தனது பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்தவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், 15 ஆண்டு கால தங்க வதிவிட(Golden Residence) திட்டத்தை குவைத் அரசு அறிமுகப்படுத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/174fe9db-a21e-4ba1-8037-2291fcfce8d6/26-6a5754265c11c.webp' /></p><p>

இந்தியரான யூசுப் அலிக்கு, குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை குவைத்தின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசுஃப் சவுத் அல்-சபா வழங்கி கௌரவித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ar" dir="rtl">معالي النائب الأول لرئيس مجلس الوزراء ووزير الداخلية يسلم أول إقامة ذهبية لمدة 15 عام لرئيس مجلس إدارة مجموعة «لولو» العالمية يوسف علي موسليام<br><br>• الإقامة الذهبية تمثل خطوة استراتيجية لتطوير منظومة الإقامة وتعزيز البيئة الاستثمارية في دولة الكويت<br><br>• استقطاب الاستثمارات النوعية… <a href="https://t.co/223WGtIT3D">pic.twitter.com/223WGtIT3D</a></p>&mdash; وزارة الداخلية (@Moi_kuw) <a href="https://x.com/Moi_kuw/status/2077046677572133063?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h3>

 யார் இந்த யூசுப் அலி?
</h3><p>
இந்தியாவின் கேரளாவில் பிறந்த யூசுப் அலி, லூலூ குழுமத்தின் தலைவராக உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfcf4922-3053-4e50-a097-ebc8ff2d9ac7/26-6a5754270d5ce.webp' /></p><p>

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1990 களில் தொடங்கப்பட்ட லூலூ சூப்பர் மார்க்கெட், தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா என உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 250க்கும் இடங்களில் இயங்கி வருகிறது.</p><p>

ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மால்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் சொந்தமாக ஹொட்டல்களை வைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5578dede-6b74-4a82-96f1-d4697afdb10d/26-6a575427b351a.webp' /></p><p>
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிறிய அளவில் பங்குகளைக் கொண்டிருப்பதுடன், அதன் இயக்குநர் குழுவிலும் அங்கம் வகிக்கிறார்.&nbsp;</p><p></p><p>
போர்ப்ஸ் பத்திரிகையின் படி, யூசுப் அலியின் நிகர சொத்துமதிப்பு 5.4 பில்லியன் டொலர் ஆகும். உலக பணக்காரர்கள் பட்டியலில் 720வது இடத்திலும், இந்திய அளவில் 49 வது இடத்திலும் உள்ளார்.
</p><h3>
கோல்டன் ரெசிடென்சி பெற தகுதி</h3><p> 

இந்த கோல்டன் ரெசிடென்சியை பெறுவதற்கு, நிர்ணயிக்கப்பட்ட பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். </p><p>

விண்ணப்பதாரர்கள், ‘குவைத் நேரடி முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தால்’ (KDIPA) உரிமம் பெற்ற முதலீட்டு நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும். </p><p>

 உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறைந்தது 5 மில்லியன் குவைத் தினார் மதிப்பிலான முதலீடுகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். </p><p>

தகுதிபெறும் முதலீட்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள், இயக்குநர்கள் மற்றும் மூத்த நிர்வாகத்தினர், அவர்களது வாழ்க்கைத் துணை, குழந்தைகள் ஆகியோரும் இந்த கோல்டன் ரெசிடென்சியை பெறலாம்.
</p><p>
மேலும், முதலீட்டாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் 1 மில்லியன் குவைத் தினார் (KD) மூலதனத்தை முதலீடு செய்ய வேண்டும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T09:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு கப்பலில் பிரித்தானிய பயணியின் சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-man-found-dead-in-cruise-ship-near-crete-1784105316"></link>
            <id>https://news.lankasri.com/article/british-man-found-dead-in-cruise-ship-near-crete-1784105316</id>
            <summary type="text">கிரீட் தீவுப் பகுதியில் சொகுசு கப்பலில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.&amp;nbsp;அசைவற்ற நிலையில்
கிரீட் தீவுப் பகுதி வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரீட் தீவுப் பகுதியில் சொகுசு கப்பலில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.&nbsp;</p><h2>அசைவற்ற நிலையில்</h2><p>
கிரீட் தீவுப் பகுதி வழியாக சென்ற சொகுசு கப்பலில், 79 வயதான நபர் ஒருவர் தளத்தில் அசைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e840d8ae-71db-4600-b6ac-86e76872adba/26-6a574a807b715.webp' />&nbsp;</p><p></p><p>
அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது; மேலும் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார்.</p><p> ஆனால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் பிரித்தானிய சுற்றுலாப் பயணி என பின்னர் தெரிய வந்தது.
</p><h2>
கிரேக்கத் தீவில் நிறுத்தப்பட வேண்டிய நிலை</h2><p>இதுகுறித்து உள்ளூர் கடலோரக் காவல்படையினர், அந்த சொகுசு கப்பல் கிரீட் தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது; இதனால் அக்கப்பல் கிரேக்கத் தீவில் நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிவித்தனர். </p><p>

மேலும் The Chania Port கூறுகையில், "அந்த பிரித்தானியரின் மரணம் குறித்த முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. மேலும், அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.</p><p>

அத்துடன் அந்நபர் சொகுசு கப்பலில் தனியாக பயணம் செய்தாரா அல்லது குடும்பத்துடன் சென்றாரா என்பது தற்போது தெளிவாக தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T08:51:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறைய பிழைகளை செய்துவிட்டோம்: தோல்வி குறித்து எம்பாப்பே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mbappe-said-about-reason-behind-loss-with-spain-1784098282"></link>
            <id>https://news.lankasri.com/article/mbappe-said-about-reason-behind-loss-with-spain-1784098282</id>
            <summary type="text">தங்கள் திட்டத்தை செயல்படுத்தவே முடியவில்லை என பிரான்ஸ் வீரர் எம்பாபே தெரிவித்தார்.&amp;nbsp;கிலியன் எம்பாப்பே 

ஸ்பெயின் அணிக்கு எதிரான FIFA உலகக்கிண்ண ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கள் திட்டத்தை செயல்படுத்தவே முடியவில்லை என பிரான்ஸ் வீரர் எம்பாபே தெரிவித்தார்.&nbsp;</p><h2>கிலியன் எம்பாப்பே</h2><p> 

ஸ்பெயின் அணிக்கு எதிரான FIFA உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் படுதோல்வியடைந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1aaaa35-16b3-41b3-a406-badb8114c634/26-6a572ee6bc4e2.webp' />&nbsp;</p><p></p><p>

நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பேவினால் (Kylian Mbappe) ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. </p><p>

போட்டிக்கு பின் பேசிய எம்பாப்பே, "நாங்கள் நிறைய பிழைகளை செய்துவிட்டோம். திட்டமிட்ட ஆட்ட யுக்திகளை செயல்படுத்தவே முடியாமல் போய்விட்டது. 

உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு உரிய தரத்தில் ஆடாததால் இறுதிப் போட்டி என்று கனவை எட்ட முடியவில்லை" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/996eb86a-ec1f-4c45-9fb0-7340d399b93e/26-6a572ee609f16.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T08:30:17+00:00</updated>
        </entry>
    </feed>
