<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-19T21:18:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் அதிக வருமானம் ஈட்டும் மக்கள் வெளிநாடு செல்ல விருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/half-of-germanys-rich-plan-to-move-abroad-1784494413"></link>
            <id>https://news.lankasri.com/article/half-of-germanys-rich-plan-to-move-abroad-1784494413</id>
            <summary type="text">ஜேர்மனியில் அதிக வருமானம் ஈட்டும் மக்களில் பாதி பேர் வெளிநாடு செல்ல விருப்பம் காட்டுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் அதிக வருமானம் ஈட்டும் மக்களில் பாதி பேர் வெளிநாடு செல்ல விருப்பம் காட்டுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
</p><p>
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2,88,000 ஜேர்மன் குடிமக்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.</p><p>

Indeed வேலைவாய்ப்பு தளத்தின் ஆய்வின்படி, 6,000 யூரோவிற்கும் மேல் மாதாந்திர வருமானம் பெறும் 54 சதவீதம் பேர் கடந்த 12 மாதங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை ஆராய்ந்துள்ளனர்.
</p><p>
இவர்களில் 77 சதவீதம் பேர் பல ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக வெளிநாட்டில் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c3986e-a6ec-46c8-81ba-f234bed1d6ca/26-6a5d394ee56ac.webp' /></p><h2>அவர்களின் முக்கிய காரணங்கள்:
</h2><p>
அதிக வருமானம் (51%)</p><p>

சிறந்த வாழ்க்கைத் தரம் (51%)
</p><p>
குறைந்த வரி மற்றும் சமூகக் கட்டணங்கள் (42%)</p><p>

நல்ல காலநிலை (42%)</p><p>

ஆனால், பதவி உயர்வு வாய்ப்புகள் போன்றவை குறைவானவர்களையே ஈர்க்கின்றன (24%).</p><p></p><p>ஜேர்மனியில் வரி சுமை அதிகம் என்பதே பெரும்பாலானோரின் குற்றச்சாட்டு. ஒரு ஊழியருக்காக முதலாளி செலவிடும் 100 யூரோவில், ஊழியருக்கு 50.70 யூரோ மட்டுமே கைக்கு வரும். மீதியை வரி மற்றும் சமூகக் கட்டணங்களாக பிடித்துக்கொள்ளப்படுகின்றன.</p><p>

வெளிநாடு செல்ல விரும்புவோரின் விருப்ப நாடுகளில் அமெரிக்கா (14.4%), பிரித்தானியா (13.6%), சுவிட்சர்லாந்து (13.6%) முன்னிலையில் உள்ளன. மேலும், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அதிக ஈர்ப்பை பெற்றுள்ளன.</p><p>
</p><p></p><p>ஜேர்மனியில் இருந்து வெளியேறும் மக்கள் அதிகரித்தாலும், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து திறமையான தொழில்நுட்ப நிபுணர்கள் ஜேர்மனிக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.</p><p>குறிப்பாக IT, AI, Digitalisation துறைகளில் அவர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்த நிலை, ஜேர்மனியின் வரி மற்றும் சமூகக் கொள்கைகள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T20:51:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-drone-strikes-gulf-1784490869"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-drone-strikes-gulf-1784490869</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான், அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து “காமிகாஸி ட்ரோன்” தாக்குதலை நடத்தியதாக அந்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான், அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து “காமிகாஸி ட்ரோன்” தாக்குதலை நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
</p><p>
குவைத்தில் உள்ள Camp Udairi ஆயுதக் களஞ்சியம், Ali Al Salem விமான தளத்தில் உள்ள Patriot ரேடார் மற்றும் வான்வழி கண்காணிப்பு அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.</p><p></p><p>குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், அமெரிக்க இராணுவ தளங்களை கொண்டுள்ளதால், ஈரானின் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>குவைத் அரசு, மின்சாரம் நிலையம் மற்றும் குடிநீர் உற்பத்தி நிலையம், மேலும் ஒரு எண்ணெய் நிலையம் தாக்குதலுக்குள்ளானதாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f95eed2-e6c4-4648-81f7-99715177c37b/26-6a5d2b7760680.webp' /></p><p>இதற்கு பதிலளிக்க அமெரிக்கா, ஈரானை “தண்டிக்க” விமானத் தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில், அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். </p><p>US Central Command வெளியிட்ட தகவலின்படி, இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையே சமீபத்தில் கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை (MoU) இருந்தபோதும், மீண்டும் வன்முறை வெடித்திருப்பதை காட்டுகிறது.
</p><p>
மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் தற்போது உயர் எச்சரிக்கையில் உள்ளன. ஈரானின் தாக்குதல்கள், பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிலையை மேலும் சிக்கலாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T19:52:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 பில்லியன் டொலர் எண்ணெயை சினவிற்கு அனுப்பிய ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/irans-6b-dollar-oil-rush-to-china-amid-us-truce-1784484571"></link>
            <id>https://news.lankasri.com/article/irans-6b-dollar-oil-rush-to-china-amid-us-truce-1784484571</id>
            <summary type="text">அமெரிக்கா தடையை நீக்கிய இடைப்பட்ட காலத்தில் ஈரான் சுமார் 6 பில்லியன் டொலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை சினவிற்கு அனுப்பியுள்ளது.

ஈரான் தனது எண்ணெய் ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா தடையை நீக்கிய இடைப்பட்ட காலத்தில் ஈரான் சுமார் 6 பில்லியன் டொலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை சினவிற்கு அனுப்பியுள்ளது.</p><p>

ஈரான் தனது எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்க தடைகள் காரணமாக நீண்ட காலமாக கட்டுப்படுத்தி வந்தது.
</p><p>
ஆனால், ஜூன் 17 அன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான தற்காலிக ஒப்பந்தத்தின் மூலம் ஒரு மாத காலத்திற்கு தடைகள் நீக்கப்பட்டன.</p><p>

அந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஈரான் தனது நிழல் கப்பல் படை (shadow fleet) மூலம் சுமார் 70 மில்லியன் பீப்பாய் எண்ணெயை சீனாவிற்கு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணெய் ஏற்றுமதி மதிப்பு 5 முதல் 6 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4edbf1b-4e38-4154-a888-25b96c590340/26-6a5d12dd5ed27.webp' /></p><p>ஈரான் கப்பல்கள் முதலில் மலேசியாவின் கடற்கரை அருகே சென்றடைந்து, அங்கு கடலில் பெரிய குழாய்கள் மூலம் எண்ணெய் மற்ற கப்பல்களுக்கு மாற்றப்பட்டது. பின்னர் அந்த கப்பல்கள் சீனாவின் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு (teapot refineries) சென்றடைந்தன.</p><p>

ஈரானின் பொருளாதாரம் புரட்சிக்குப் பிறகு மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, இந்த வருமானம் ஈரானுக்கு மிக முக்கியமானதாகும். அமெரிக்க தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளதால், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் சிக்கலில் உள்ளது.</p><p></p><p>“அமெரிக்கா தடையை நீக்காமல் இருந்திருந்தால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த ஒரு மாத இடைவெளியில் ஈரான் விரைவாக எண்ணெய் அனுப்பி, மீண்டும் ஒரு பெரிய வருமானத்தை பெற்றுள்ளது” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p>இந்த நடவடிக்கை, ஈரான் தனது பொருளாதாரத்தை காப்பாற்றுவதோடு, அமெரிக்காவுக்கு எதிரான தனது அரசியல் மற்றும் இராணுவ நோக்கங்களையும் வலுப்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T18:07:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/finland-s-bunker-city-space-for-million-people-1784473356"></link>
            <id>https://news.lankasri.com/article/finland-s-bunker-city-space-for-million-people-1784473356</id>
            <summary type="text">பின்லாந்தில் 10 லட்சம் பேர் வரை தங்கும் வசதி கொண்ட நிலத்தடி நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.நிலத்தடியில் நகரம்

ஐரோப்பிய நாடான பின்லாந்து, 1954ஆம் ஆண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பின்லாந்தில் 10 லட்சம் பேர் வரை தங்கும் வசதி கொண்ட நிலத்தடி நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>நிலத்தடியில் நகரம்
</h2><p>
ஐரோப்பிய நாடான பின்லாந்து, 1954ஆம் ஆண்டு முதல் 1,200 சதுர மீற்றருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட கட்டிடங்களின் அடியில், குண்டுத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் அறையை அமைப்பது கட்டாயம் என்று சட்டம் இயற்றியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf641332-7ce3-4c24-81cc-3693bf2e8350/26-6a5ce89378ab8.webp' />&nbsp;</p><p></p><p>
அதன்படி, தலைநகர் ஹெல்சின்கியின் நிலத்தடியில் நகரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நகரின் தெருக்களில் காணப்படும் எண்ணற்ற சானா குளியல் நிலையங்கள் மற்றும் காபி கடைகளுக்கு அடியில், ஒரு இரகசிய 'இரண்டாவது நகரம்' உள்ளது; பேரிடர் ஏற்படும் வரை இது பயன்பாடின்றி அமைதியாக இருக்கும்.
</p><p>
ஒருவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அணு ஆயுதத் தாக்குதலை நடத்தினால், 10 லட்சம் பேர் வரை தங்கும் வசதி கொண்டதாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
</p><p>தலைநகருக்கு அடியில் பாறைப் படுகையில் 5,500-க்கும் மேற்பட்ட பாதுகாப்பான நிலத்தடி அறைகள் (Shelters) குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. 

நகரின் மொத்த மக்கள் தொகையே 6,75,000 மட்டுமே என்ற நிலையில், 10 லட்சம் தங்கலாம் என்பது மிகப்பெரிய அளவாகும்.
</p><p>

இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக, 'Winter War' என்று அழைக்கப்பட்ட நீண்ட மோதலின்போது ரஷ்யா அந்நாட்டின் மீது படையெடுத்த 1939-ஆம் ஆண்டில் இருந்தே, பின்லாந்து இத்தகைய பாதுகாப்பு நிலத்தடி அறைகளை தொடர்ந்து கட்டி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/882007af-b971-474e-a2e1-f30816dd78e6/26-6a5ce89465467.webp' /></p><p>

இதுபோன்ற மிகப்பெரிய பாதுகாப்பு அறைகளில் Merihaka என்பதும் ஒன்றாகும். 71,000 கன மீற்றர் கொள்ளளவு கொண்ட இந்த பதுங்குக் குழி, ஏறக்குறைய ஒரு 7 மாடி அலுவலகக் கட்டிடத்தின் கன அளவிற்கு சமமானது.
</p><h2>
 'போருக்கு தயாராகும் நாடு' </h2><p>இதில் விளையாட்டுத் திடல்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் தரைக்குக் கீழே 25 மீற்றர் ஆழத்தில் ஒரு சிறுவர் விளையாட்டு மைதானம் ஆகியவை உள்ளன. உள்ளூர்வாசிகள் இதில் தங்குவதற்கு பழகிக் கொள்ளும் வகையில் இவை தினமும் பயன்பாட்டில் இருக்கின்றன.</p><p>அவசரகாலத் தேவை ஏற்பட்டால், 72 மணிநேரத்திற்குள் இதை அடுக்கு படுக்கைகள், நீர்த் தொட்டிகள் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் கொண்ட சேமிப்புக் கிடங்குகளாக மாற்றியமைக்க முடியும். </p><p>

ஹெல்சின்கியில் உள்ள 48 பெரிய தங்குமிடங்களில் மெரிஹாக்காவும் ஒன்றாகும். நகரம் முழுவதும் மிகவும் பரவலாக தங்குமிடங்கள் இருப்பதால், சில ஹெவி மெட்டல் இசைக்குழுக்களுக்கான ஒத்திகை பகுதிகளாக கூட பயன்படுத்தப்படுகின்றன.</p><p> 

இதுபோன்ற நிலத்தடி நகர நடவடிக்கையால் 'போருக்கு தயாராகும் நாடு' என்ற பெயர் மூலம் பின்லாந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d8a5135-ec4d-4b76-a2d6-451e2303edbe/26-6a5ce89516f10.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b73f3868-cdca-4355-aca7-caba7fac2454/26-6a5ce97382742.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T16:26:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேல்ஸில் 25 வயது இளைஞர் திடீர் மரணம்: மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/25-year-old-youth-dies-in-wales-and-three-arrested-1784478257"></link>
            <id>https://news.lankasri.com/article/25-year-old-youth-dies-in-wales-and-three-arrested-1784478257</id>
            <summary type="text">வேல்ஸில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.&amp;nbsp;அவசர சேவைக் குழுவினர் 

வேல்ஸின் லானெல்வெட் பகுதியில் உள்ள பென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேல்ஸில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.&nbsp;</p><h2>அவசர சேவைக் குழுவினர்</h2><p> 

வேல்ஸின் லானெல்வெட் பகுதியில் உள்ள பென்மேனாவ் பண்ணையில், மருத்துவ அவசரநிலை குறித்த தகவல் கிடைத்துள்ளது. உடனே அவசர சேவைக் குழுவினர் அங்கு விரைந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/666907f0-0074-47bb-b461-d985e9df2fac/26-6a5cfa98bd8ff.webp' />&nbsp;</p><p></p><p>அப்போது, Royal Welsh Show மைதானத்திற்கு அருகில் உள்ள முகாம் தளம் ஒன்றில், 25 வயது இளைஞர் ஒருவர் சுயநினைவின்றி இருந்துள்ளார்.
</p><p>
மருத்துவக் குழுவினர் அவரை காப்பாற்ற முயற்சித்தது பலனளிக்கவில்லை. குறித்த இளைஞர் இறந்ததை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். </p><p>

பின்னர் அவரது நெருங்கிய உறவினர்களுக்கு காவல்துறையினர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. </p><p>

மேலும், போதைப்பொருள் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டு, தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T16:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைசி ஓவரில் திக் திக்..த்ரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய வங்காளதேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bangladesh-win-t20-series-vs-zimbabwe-2026-1784475445"></link>
            <id>https://news.lankasri.com/article/bangladesh-win-t20-series-vs-zimbabwe-2026-1784475445</id>
            <summary type="text">ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை வங்காளதேச அணி கைப்பற்றியது. டியோன் மையர்ஸ் 73&amp;nbsp;ஓட்டங்கள் 

வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை வங்காளதேச அணி கைப்பற்றியது. </p><h2>டியோன் மையர்ஸ் 73&nbsp;ஓட்டங்கள் </h2><p>

வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி புலவாயோவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91502ed5-78cc-45ee-9dfe-137d7e802990/26-6a5ceffb68360.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. 

டியோன் மையர்ஸ் 73 (53) ஓட்டங்களும், பிரையன் பென்னெட் 47 (38) ஓட்டங்களும் விளாசினர். சைஃப்புதின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.</p><p>

பின்னர் ஆடிய வங்காளதேச அணியில் தன்ஸித் ஹசன் தமிம் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a6547e-a65d-4778-974c-181de7b62522/26-6a5cf0d66796e.webp' /></p><h2>

தொடரை வென்ற&nbsp;வங்காளதேச அணி</h2><p>கடைசி ஓவரில் 5 ஓட்டங்கள் தேவைப்பட, பிராட் எவன்ஸ் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. </p><p>அப்போது களமிறங்கிய மஹெதி ஹசன் பவுண்டரி அடிக்க, வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.</p><p>

58 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 66 ஓட்டங்கள் விளாசிய தன்ஸித் ஹசன் (Tanzid Hasan) ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/579120a2-bddb-4844-8a92-81268f02c5c0/26-6a5ceffa824f7.webp' />&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Bangladesh clinch the T20I series 2-1 against Zimbabwe with a fantastic team performance. A well-deserved series victory built on determination, teamwork, and resilience. <a href="https://t.co/upWbYHCzvq">pic.twitter.com/upWbYHCzvq</a></p>&mdash; Bangladesh Cricket (@BCBtigers) <a href="https://x.com/BCBtigers/status/2078847560467521677?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T15:42:52+00:00</updated>
        </entry>
    </feed>
