<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-11T11:36:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாமில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு - தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamilnadu-peoples-dies-in-vietam-boat-capsize-1783769545"></link>
            <id>https://news.lankasri.com/article/tamilnadu-peoples-dies-in-vietam-boat-capsize-1783769545</id>
            <summary type="text">வியட்நாம் படகு விபத்தில் தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

வியட்நாம் படகு விபத்து 

வியட்நாமின் ஃபு குவோக் கடற்பகுதியில் ஹான் மே ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியட்நாம் படகு விபத்தில் தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
</p><h3>
வியட்நாம் படகு விபத்து </h3><p>

வியட்நாமின் ஃபு குவோக் கடற்பகுதியில் ஹான் மே ருட்டிலிருந்து ஆன் தோய் துறைமுகத்திற்கு 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 4 பணியாளர்கள் உடன் ஓஷன் பேர்ல் ஐலேண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான வேகப்படகு ஒன்று புறப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/432326b0-869b-49ee-aa31-359e2f40de06/26-6a5229cab347a.webp' /></p><p>

ஹான் மே ரட் ங்கோய் தீவிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில், அந்த படகு எதிர்பாராதவிதமாகப் பழுதடைந்து கவிழ்ந்ததில், அதில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கடலில் விழுந்தனர்.
</p><p>
இதனைகண்ட அந்த பகுதியில் இருந்து மற்ற சுற்றுலா படகுகளும் அவர்களை மீட்க உதவியது. கடற்படை, கடலோரக் காவல்படை ஒருங்கிணைந்து, மீட்பு நடவடிக்கையில் பங்கேற்பதற்காக 35 அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் 2 கப்பல்களை அனுப்பப்பட்டது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🇻🇳 In Vietnam, 15 people died when a boat capsized near Phu Quoc Island, VTC News reported, citing police.<br><br>According to law enforcement, the vessel was carrying tourists; there were 36 people on board, including four crew members. <a href="https://t.co/JZaRz0wPr2">pic.twitter.com/JZaRz0wPr2</a></p>&mdash; Маrina Wolf (@volkova_ma57183) <a href="https://x.com/volkova_ma57183/status/2075902331577614478?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
ஆன் தோய் துறைமுக எல்லைக் காவல் நிலையத்தின் அறிக்கையின்படி, 2 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>இதில் உயிரிழந்த பலரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">As per information received from official sources, the following 32 Indian tourists were onboard the boat which capsized near Phu Quoc Island in Vietnam a few hours ago. <br><br>We are ascertaining further details of casualties and would update soon.<a href="https://x.com/cghcm?ref_src=twsrc%5Etfw">@cghcm</a> <a href="https://t.co/geddttdpWB">pic.twitter.com/geddttdpWB</a></p>&mdash; India in Vietnam (@AmbHanoi) <a href="https://x.com/AmbHanoi/status/2075902600646726044?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

அந்த வேகப் படகு அசாதாரணமான அலைகளையும் காற்றையும் எதிர்கொண்டதே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கும் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வியட்நாமிலுள்ள இந்திய தூதரகம், "ஒரு துயரச் சம்பவமாக, சில மணி நேரங்களுக்கு முன்பு வியட்நாமின் ஃபு குவோக் தீவுக்கு அருகே பல இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்துள்ளது.&nbsp;</p><p>உள்ளூர் அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்த துல்லியமான விவரங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. 

முதல் கட்டுப்பாட்டு அறையை 84362817930, 84915523714 மற்றும் 84334520414, 84913089165 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">In a tragic incident, a boat carrying several Indian tourists has capsized near Phu Quoc Island in Vietnam a few hours ago. <br><br>Exact details of the incident are being ascertained as search and rescue operations by local authorities are ongoing. <br><br>In order to provide information…</p>&mdash; India in Vietnam (@AmbHanoi) <a href="https://x.com/AmbHanoi/status/2075868586690945210?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
தகவல் மற்றும் உதவியை வழங்குவதற்காக, ஹோ சி மின் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திலும், ஹனோயில் உள்ள தூதரகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
தெளிவான நீல நிற நீர் மற்றும் வெண்மணலுக்காகப் புகழ்பெற்ற மே ரட் தீவை அடைய பொதுவாக சுமார் 20-40 நிமிடங்கள் படகு அல்லது வேகப்படகில் பார்வையாளர்கள் பயணிக்கின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T11:32:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேரளாவில் சிறிய சிகிச்சைக்காக சென்ற 18 மாத குழந்தை: மயக்க மருந்தால் உயிரிழந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/toddler-dead-in-kerala-kannur-medical-negligence-1783769072"></link>
            <id>https://news.lankasri.com/article/toddler-dead-in-kerala-kannur-medical-negligence-1783769072</id>
            <summary type="text">கேரளாவில் சிறிய சிகிச்சைக்காக மருத்துவமனை&amp;nbsp;சென்ற 18 மாத குழந்தை உயிரிழந்ததை அடுத்து மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 மாதக் குழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவில் சிறிய சிகிச்சைக்காக மருத்துவமனை&nbsp;சென்ற 18 மாத குழந்தை உயிரிழந்ததை அடுத்து மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2> 18 மாதக் குழந்தை உயிரிழப்பு</h2><p>கடந்த ஜூலை 5ம் திகதி கேரள மாநிலம் ஈரமாம்-குட்டூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் மற்றும் விஜீஷா தம்பதியினரின் 18 மாதக் குழந்தை தேவாம்ஷ் செளர்யா விளையாடிக் கொண்டிருந்த போது கீழே விழுந்ததில் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.</p><p> பின்னர் முதலுதவிக்காக குழந்தை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், உதட்டில் தையல் போடுவதற்காக பையனூரில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ac4fe4-70bf-482d-8dad-22d16e4ec857/26-6a5227f1b25b5.webp' /></p><p> மருத்துவமனையில் தையல் போடுவதற்காக குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் குழந்தை சுயநினைவை இழந்தது.</p><p>இதனால் கண்ணூரில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குழந்தை வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதையடுத்து தன்னுடைய மகன் தேவாம்ஷ் செளர்யா உயிரிழப்பிற்கு மருத்துவர் அஞ்சலி பொதுவாள் தான் காரணம் என்று குற்றம்சாட்டி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><p> இந்நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா(BNS) பிரிவு 125-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p></p><h2> மருத்துவமனை விளக்கம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a31313a9-444c-4c3b-884e-1b2085a43b06/26-6a5227f263c5e.webp' /></p><p>
குழந்தையின் உயிரிழப்பு தொடர்பாக பெற்றோர் தெரிவித்த குற்றச்சாட்டை பேபி மெமோரியல் மருத்துவமனை மறுத்துள்ளது.</p><p> குழந்தையின் உதட்டில் தையல் போடுவதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது.</p><p> பின்னர் உடனடியாக குழந்தைக்கு வென்டிலேட்டர் பொறுத்தப்பட்டு அவசர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கியும் துரதிர்ஷ்டவசமாக குழந்தை உயிரிழந்தது.</p><p> தகுந்த சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், சில நேரங்களில் மயக்க மருந்தின் இத்தகைய பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது, குழந்தையை காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்து மருத்துவ முயற்சிகளையும் மேற்கொண்டதாக மருத்துவமனை தரப்பு விளக்கமளித்துள்ளது.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T11:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் இருளில் தவித்தபோது டென்னிஸ் விளையாடிய மேயர்: பறிபோகும் பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/berlin-mayor-played-tennis-while-power-cut-1783766921"></link>
            <id>https://news.lankasri.com/article/berlin-mayor-played-tennis-while-power-cut-1783766921</id>
            <summary type="text">ஜேர்மன் தலைநகர் பெர்லினில், 45,000 வீடுகள் இருளில் மூழ்கிய விடயம் மக்களைக் கொந்தளிக்கச் செய்த நிலையில், அதனால் மேயர் ஒருவர் தன் பதவியை இழக்க நேரிட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் தலைநகர் பெர்லினில், 45,000 வீடுகள் இருளில் மூழ்கிய விடயம் மக்களைக் கொந்தளிக்கச் செய்த நிலையில், அதனால் மேயர் ஒருவர் தன் பதவியை இழக்க நேரிட்டுள்ளது.
</p><h3>
இருளில் மூழ்கிய 45,000 வீடுகள்</h3><p>

ஜனவரி மாதம் 3ஆம் திகதி இரவு, பெர்லினிலுள்ள Lichterfelde என்னுமிடத்தில் அமைந்துள்ள மின் நிலையம் ஒன்றில் தீப்பற்றியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c387004-950e-45f5-b0be-b778348b1549/26-6a521f8b64f9d.webp' /></p><p>
அதன் காரணமாக, தென்மேற்கு பெர்லினிலுள்ள 45,000 வீடுகளிலும், 2,200 அலுவலகங்களிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் அவதியுற நேர்ந்ததுடன், நிலைமை சீரடைய நான்கு நாட்கள் வரை காத்திருக்கவேண்டியிருந்தது.&nbsp;</p><p></p><h3>
பறிபோகும் மேயரின் பதவி</h3><p>

விடயம் என்னவென்றால், பெர்லின் இருளில் மூழ்கிய நேரத்தில், பெர்லின் நகர மேயரான கய் வெக்னர் ( Kai Wegner) டென்னிஸ் விளையாடச் சென்றுவிட்டாராம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd0bdf8c-252a-4211-b0f5-fe98d4f20c42/26-6a521f8c12ba8.webp' /></p><p>
அத்துடன், நிலைமையை சரி செய்ய தான் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக வெக்னர் கூறியிருந்த நிலையில், அவர் சொன்னதில் உண்மையில்லை, அவர் உடனடியாக தக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை என்னும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.</p><p>

இதற்கிடையில், பெர்லினில் செப்டம்பர் மாதம் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வெக்னர் மீண்டும் மேயர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என அவர் சார்ந்த CDU கட்சியினர் அவருக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0053b108-aba8-4a45-84fc-fca5bf2259a5/26-6a521f8cb6bf8.webp' /></p><p>
ஆகவே, தான் அடுத்த மேயர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என வெக்னர் தற்போது அறிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T11:12:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த வெடிச்சத்தங்கள்: கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 121 ட்ரோன்களை வீசிய ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-air-strike-with-121-drones-on-ukraine-1783766076"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-air-strike-with-121-drones-on-ukraine-1783766076</id>
            <summary type="text">ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் பலரை காயமடைந்தனர். பாலிஸ்டிக் ஏவுகணைகள் 

உக்ரைனின் கீவ் நகரில் வான் பாதுகாப்பிற்கான ஏவுகணைகள், வெடிமருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் பலரை காயமடைந்தனர். </p><h2>பாலிஸ்டிக் ஏவுகணைகள்</h2><p> 

உக்ரைனின் கீவ் நகரில் வான் பாதுகாப்பிற்கான ஏவுகணைகள், வெடிமருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d370f5-2375-4baa-885d-4372c9151c93/26-6a521dbf99e40.webp' /></p><p>

இந்த சூழலில் கீவ் மீது சனிக்கிழமை அதிகாலையில் ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>

இந்தத் தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கு முன்பே, அதிகாலை நேரத்தில் பலத்த வெடிசத்தங்கள் கேட்டதாக ஊடகவியலாளர் ஒருவர் கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b09f78-998f-47ee-b8ea-bfa9dcc0e0ca/26-6a521dc061625.webp' /></p><p>

இதற்கிடையில், ரஷ்யா 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 6 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 121 ட்ரோன்களை ஏவியதாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c8265cd-3cf9-4a61-9f01-860ac36944d0/26-6a521dc1129e9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:39:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைக்குள் புகுந்து பெண்ணை பிணைக்கைதியாக பிடித்த சந்தேக நபர்: ஜேர்மனியில் இரவில் நடந்த பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/berlin-supermarket-hostage-situation-resolved-1783764908"></link>
            <id>https://news.lankasri.com/article/berlin-supermarket-hostage-situation-resolved-1783764908</id>
            <summary type="text">ஜேர்மனியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பெண் ஊழியரை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பெண் ஊழியரை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட பெண்</h2><p>வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தலைநகர் பெர்லினில் உள்ள மரியன் ஃபெல்டே பகுதியில் அமைந்துள்ள Rewe என்ற சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் உயிர் பறிக்கும் ஆயுதத்தை காட்டி அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரை பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டார்.</p><p> இதனையடுத்து தகவலறிந்து வந்த பொலிஸார் மற்றும் அதிரடி மீட்பு படையினர் சூப்பர் மார்க்கெட்டை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f849ad9-deb4-4ff0-9837-71736cb7efca/26-6a5217ae1bfc6.webp' /></p><p> இந்த சம்பவத்தின் போது சூப்பர் மார்க்கெட் இருந்து தப்பியோடி வந்த 22 வயது நபர் ஒருவர் வழங்கிய தகவலில், சந்தேக நபர் மிகப்பெரிய கத்தியை வைத்து இருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக தான் தப்பித்து கொண்டதாகவும், ஆனால் தன்னுடைய சக ஊழியர் அவரிடம் சிக்கிக் கொண்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p> சமூக வலைதளங்களில் இது தொடர்பாக வெளியான காட்சிகளில், பொலிஸார் அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதையும், அவசர கால வாகனங்கள் குவிக்கப்பட்டு, அதிகாரி ஒருவர் ஏணியை பயன்படுத்தி அந்த கடைக்குள் எட்டிப் பார்ப்பதும் பதிவாகி இருந்தது.</p><p></p><p> இரவு முழுவதும் நீடித்த இந்த சூழ்நிலைக்கு பிறகு, பொலிஸார் சந்தேக நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியில் அதிரடியாக கடைக்குள் புகுந்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d74ee69d-88aa-42ec-bddf-a8a15ce0fbb7/26-6a5217aec21a0.webp' /></p><p> மேலும் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பெண்ணும் எந்தவொரு ஆபத்துமின்றி மீட்கப்பட்டார்.</p><h2> பொலிஸார் விசாரணை</h2><p> சந்தேக நபரின் இந்த செயலுக்கான காரணம் குறித்து இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ விவரங்களும் வெளியாகவில்லை.</p><p>அதைப்போல பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்றும் பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக் காதலியுடன் நடனமாடும் கனடாவின் முன்னாள் பிரதமர் ட்ரூடோ: வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/justin-trudeau-dance-with-katy-perry-her-new-song-1783762305"></link>
            <id>https://news.lankasri.com/article/justin-trudeau-dance-with-katy-perry-her-new-song-1783762305</id>
            <summary type="text">கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும், பிரபல அமெரிக்க பாடகியான கேற்றி பெர்ரியும் காதலிக்கும் விடயம் உலகம் அறிந்ததே.

இந்நிலையில், சமூக ஊடகம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும், பிரபல அமெரிக்க பாடகியான கேற்றி பெர்ரியும் காதலிக்கும் விடயம் உலகம் அறிந்ததே.
</p><p>
இந்நிலையில், சமூக ஊடகம் ஒன்றில், ட்ரூடோவும் கேற்றி பெர்ரியும் நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.</p><h3>

ட்ரூடோவும் கேற்றி பெர்ரியும் நடனமாடும் வீடியோ
</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f83a12e-d571-49ac-b9e2-741eb0f4f0ee/26-6a520d835ee55.webp' /></p><p>பாடகி கேற்றி பெர்ரி, ‘Watch It Burn’ என்னும் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dand7ATjT-M/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dand7ATjT-M/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dand7ATjT-M/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Firstpost (@firstpost)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
இந்நிலையில், அந்த பாடலுக்கு கேற்றி பெர்ரி நடனமாடுவதைக் காட்டும் டிக் டோக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
</p><p>
அந்த வீடியோவில், கேற்றி பெர்ரியின் காதலரும் கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் தலை காட்டியுள்ளார். அந்த வீடியோ வைரலாகியுள்ளது.</p><p>

விடயம் என்னவென்றால், அந்த பாடல், தான் சமீபத்தில் சந்தித்த கடினமான காலகட்டங்களைக் குறித்து கேற்றி பெர்ரி பாடும் பாடலாகும்.&nbsp;</p><p></p><p>

அவற்றில் ஒன்று, கேற்றி பெர்ரி தன் காதலரான ஓர்லாண்டோ ப்ளூம் என்பவரை பிரிந்ததாகும்.</p><p>

அந்தப் பிரிவால் தனக்கு ஏற்பட்ட கோபம் போன்ற உணர்வுகளை அந்தப் பாடலில் வெளிப்படுத்தும் கேற்றி பெர்ரி, கடைசியாக தான் நடந்ததை மன்னிக்கவும் மறக்கவும் முயற்சி செய்யப்போவதாக கூறி பாடலை முடிப்பார்.
</p><p>
விடயம் என்னவென்றால், தன் முன்னாள் காதலரைப் பிரிந்ததால் ஏற்பட்ட கோபத்தைக் குறித்து கேற்றி பெர்ரி பாடும் பாடலில், இந்நாள் காதலரான ஜஸ்டின் ட்ரூடோ தலை காட்டியுள்ளது சற்று அபத்தமாக உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் டிஜிட்டல் ஹப்பாக மாறும் இந்தியா., கூகுள், அமேசான் பில்லியன்களில் முதலீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indias-data-centre-boom-attracts-billions-1783762443"></link>
            <id>https://news.lankasri.com/article/indias-data-centre-boom-attracts-billions-1783762443</id>
            <summary type="text">இந்தியா தற்போது உலகளவில் டேட்டா சென்டர் முதலீடுகளுக்கான முக்கிய தளமாக மாறியுள்ளது.செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு அதிகரிப்பதும், அரசின் டேட்டா உள்ளூர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா தற்போது உலகளவில் டேட்டா சென்டர் முதலீடுகளுக்கான முக்கிய தளமாக மாறியுள்ளது.</p><p>செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு அதிகரிப்பதும், அரசின் டேட்டா உள்ளூர்மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் சுயாட்சி கொள்கைகளும், இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளன.</p><p>சமீபத்திய பட்ஜெட்டில் 2047 வரை வரி சலுகை வழங்கப்பட்ட நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் ஈக்விட்டி நிறுவனங்களை இந்தியாவை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e44bc0c-514d-4531-a1ce-78099fb36f0f/26-6a520e0d5c780.webp' /></p><p>தற்போது இந்தியா உலகின் 20 சதவீத டேட்டாவை தன்னகத்தே வைத்திருப்பதால், AI வேலைப்பளு, கிளவுட் பயன்பாடு மற்றும் அரசின் ஆதரவு கொள்கைகள் இணைந்து, இந்தியாவை வேகமாக வளர்ந்து வரும் டேட்டா சென்டர் சந்தையாக மாற்றியுள்ளன.
</p><p>
அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற மாபெரும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவில் டேட்டா சென்டர் திறனை விரிவுபடுத்த 57 பில்லியன் டொலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>இதனுடன், உலகளாவிய தனியார் முதலீட்டு நிறுவனங்களும், உள்நாட்டு டேட்டா சென்டர் நிறுவனங்களில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து வருகின்றன.
</p><p>
2030-க்குள் இந்திய டேட்டா சென்டர் துறையில் 25 பில்லியன் டொலர் முதலீடு வரக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.</p><p>

இந்த வளர்ச்சி, இந்தியாவை மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு 100 மில்லி விநாடி தூரத்தில் உள்ள டிஜிட்டல் ஹப்பாக மாற்றுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T09:32:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் மீது விழும் சனி.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-sani-transit-1783761945"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-sani-transit-1783761945</id>
            <summary type="text">நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

அதேபோல், நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
</p><p>
அதேபோல், நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
</p><p>
இந்நிலையில், தற்போது சனி பகவான் மீன ராசியில் உள்ளார். அதே வேளையில் செவ்வாய் ரிஷப ராசியில் உள்ளார். </p><p>

மேலும், ஜூலை மாதத்தில் செவ்வாய் ரிஷப ராசியிலும், சனி மீன ராசியிலும் இருப்பதால், சனியின் 3 ஆம் பார்வை செவ்வாயின் மீது விழுகிறது. </p><p>

அந்தவகையில், செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை விழுவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>ரிஷபம் </h2><ul><li>

இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். </li><li>
வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். </li><li>
நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.</li><li> 
திட்டங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5000b29-5fda-4ff6-bd9b-3e687770723c/26-6a520c1bd307c.webp' /></p><h2>

கன்னி </h2><ul><li>

இக்காலம் மிகவும் வரப்பிரசாதமாக இருக்கும்.</li><li> 
அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். </li><li>
வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். </li><li>
நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். </li><li>
தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். </li><li>
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1ea2e08-61fa-4530-82f7-565718459c57/26-6a520c1c82a99.webp' /></p><p>
</p><h2>
கும்பம் </h2><ul><li>

தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.</li><li> 
சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். </li><li>
வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும்.</li><li> 
புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.</li><li> 
முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.</li><li> 
தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். </li><li>
வியாபாரிகளுக்கு லாபத்தை அள்ளித் தரும்.&nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e2213f3-c99e-4784-b947-10d4f0665c5b/26-6a520c1d3171a.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் 
ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. 
(லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T09:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேத்யூ ஷார்ட் அணியை சரித்த ஹோல்டர்: அபார பந்துவீச்சில் கிடைத்த வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/los-angeles-knight-riders-win-by-11-runs-vs-sfu-1783761500"></link>
            <id>https://news.lankasri.com/article/los-angeles-knight-riders-win-by-11-runs-vs-sfu-1783761500</id>
            <summary type="text">மேஜர் லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சான் ஃபிரான்ஸிஸ்கோவை வீழ்த்தியது.காலின் மன்ரோ 52 ஓட்டங்கள்&amp;nbsp;

டல்லாஸில் நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேஜர் லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சான் ஃபிரான்ஸிஸ்கோவை வீழ்த்தியது.</p><h2>காலின் மன்ரோ 52 ஓட்டங்கள்&nbsp;</h2><p>

டல்லாஸில் நடந்த போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b38c50f-f27a-4216-95b6-6f74675c4fb5/26-6a520cb690a15.webp' /></p><p></p><p>

முதலில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 184 ஓட்டங்கள் குவித்தது. காலின் மன்ரோ 52 ஓட்டங்களும், மேத்யூ ட்ரோம்ப் 49 ஓட்டங்களும் விளாசினர். ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளும், சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
</p><p>
பின்னர் களமிறங்கிய சான் ஃபிரான்ஸிஸ்கோ அணி 19.1 ஓவர்களில் 173 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
ஹஸன் கான் 45 ஓட்டங்களும், மேத்யூ ஷார்ட் 43 ஓட்டங்களும், ஹம்மத் அஸாம் 40 ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
மிரட்டலாக பந்துவீசிய அணித்தலைவர் 4 விக்கெட்டுகளும், ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04f725de-11a5-4c6b-8c0a-c411e8ecb2ce/26-6a520cb764802.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T09:27:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதர்களுக்கு பதிலாக 100 ஆடுகளை வேலைக்கு அமர்த்திய கார் நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/why-volkswagen-hires-100-sheeps-at-poland-1783761584"></link>
            <id>https://news.lankasri.com/article/why-volkswagen-hires-100-sheeps-at-poland-1783761584</id>
            <summary type="text">ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மனிதர்களுக்கு பதிலாக 100 ஆடுகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது. 

 100 ஆடுகளை வேலைக்கு அமர்த்திய ஃபோக்ஸ்வேகன்

ஜேர்மனியை தளமாக கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மனிதர்களுக்கு பதிலாக 100 ஆடுகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது.</p><h3> 

 100 ஆடுகளை வேலைக்கு அமர்த்திய ஃபோக்ஸ்வேகன்</h3><p>

ஜேர்மனியை தளமாக கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன்(Volkswagen) நிறுவனம், உலகளவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f376200f-9007-4f96-a280-9f49af072ab3/26-6a520ab252b8d.webp' /></p><p> 

போலந்தின் போஸ்னானில் உள்ள தனது உற்பத்தி ஆலைக்கு மின்சாரம் வழங்கும் சூரிய மின் தகடுகளுக்குக் கீழே மேய்வதற்காக நிறுவனம் 100 செம்மறி ஆடுகளைக் கொண்ட மந்தையை அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
அந்த ஆலையில், 31,000-க்கும் மேற்பட்ட சூரிய மின் தகடுகளுக்குக் கீழே உள்ள தாவரங்களை மனிதர்கள் மூலம் இயந்திரங்களை பயன்படுத்தி வெட்டுவதற்கு பதிலாக ஆடுகளை அமர்த்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>

விவசாயமும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலும் ஒரே நிலத்தில் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்று ஆய்வு செய்ய, போஸ்னான் உயிர் அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98e218c-ea45-4749-b8f5-ffa33cf23777/26-6a520ab19f30c.webp' /></p><p>

அதன் ஆராய்ச்சியாளர்கள், செம்மறி ஆடுகள் மேய்வது விலங்குகளின் நலன், பல்லுயிர் பெருக்கம், மண்ணின் தரம், தாவரங்கள் மற்றும் அந்த இடத்தின் நுண் காலநிலை ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.
</p><p>
செம்மறிஆடுகள் சூரியப் பண்ணையைப் பராமரிக்க உதவுகின்றன, அதே நேரத்தில் பேனல்கள் நிழலை வழங்கி, வெப்பமான நாட்களில் அந்த விலங்குகளுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.
</p><p>
இந்த மேய்ச்சல் முறையானது பராமரிப்புச் செலவுகளையும் மாசு வெளியேற்றத்தையும் குறைப்பதோடு, பூச்சிகள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு மிகவும் உகந்த சூழலையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

பெர்லினைச் சேர்ந்த குவாண்டா எனர்ஜி நிறுவனத்தால் கட்டப்பட்டு இயக்கப்படும் 18.3 மெகாவாட் சூரிய மின் நிலையம், பிரகாசமான வெயில் நாட்களில் ஃபோக்ஸ்வேகன் தொழிற்சாலைக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T09:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் இதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.,இல்லையென்றால்:அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-ask-public-guarantee-from-iran-to-stop-attack-1783758906"></link>
            <id>https://news.lankasri.com/article/us-ask-public-guarantee-from-iran-to-stop-attack-1783758906</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதல் நடத்தப்படாது என்று ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என&amp;nbsp; அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் மீண்டும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதல் நடத்தப்படாது என்று ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என&nbsp; அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.</p><h2> மத்திய கிழக்கில் மீண்டும் தொற்றிய பதற்றம்</h2><p>ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் 3 வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டி ஈரான் சமீபத்தில் வான்வழித் தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் முன்னெடுத்தார்.</p><p> இதையடுத்து ஈரானும் பதிலடியாக குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46ae11bb-f3e7-4263-9972-e7e8886bef0c/26-6a52003b91f38.webp' /></p><p> இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் சிதைந்து, மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் தொற்றியுள்ளது.</p><p></p><h2> ஈரான் இதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்</h2><p>இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் இனி நடத்தப்படாது என்று ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> ஈரானிய உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், இருதரப்பு தூதரக முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றால் ஹார்முஸ் ஜலசந்தியில் இனி தாக்குதல் நடத்தப்படாது என்ற நிலைப்பாட்டை ஈரான் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98d7ecf3-7135-4d9d-8aeb-c36662fdb561/26-6a52003ce92d4.webp' /></p><p> ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் தடையின்றி செல்வதை ஈரான் உறுதிப்படுத்த வேண்டும்.</p><p> இந்த வாக்குறுதிகளை ஈரான் வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கவில்லை என்றால் அது ஈரானுக்கு நல்ல முடிவாக இருக்காது என்று இது குறித்து பேசிய அமெரிக்க அதிகாரி எச்சரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T08:35:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பக்கத்து நாட்டு பாதுகாப்புக்கு பணம் கொடுக்க பிரான்ஸ் மறுப்பு: பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-refuses-to-pay-g7-security-costs-to-swiss-1783758429"></link>
            <id>https://news.lankasri.com/article/france-refuses-to-pay-g7-security-costs-to-swiss-1783758429</id>
            <summary type="text">பிரான்சில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டின்போது சுவிட்சர்லாந்தில் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது சுவிஸ் அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டின்போது சுவிட்சர்லாந்தில் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது சுவிஸ் அரசு.
</p><p>
அதற்கான செலவுகளை பகிர்ந்துகொள்ளுமாறு பிரான்ஸ் அரசை சுவிஸ் அரசு கேட்டுக்கொண்டிருந்த நிலையில், செலவை பகிர்ந்துகொள்ள பிரான்ஸ் மறுத்துவிட்டது.</p><h3>

பின்னணி
</h3><p>
2003ஆம் ஆண்டு, பிரான்சிலுள்ள Évian-les-Bains என்னுமிடத்தில் G8 உச்சி மாநாடு நடைபெற்றது.
</p><p>
மாநாட்டுக்கு முந்தைய இரவு, உலகமயமாக்கலுக்கு எதிரான அமைப்பொன்றைச் சேர்ந்த சிலர் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1e388df-f6f6-4f2d-8e63-2ec3648c0ed1/26-6a51fe5fe55af.webp' /></p><p>
ஆர்ப்பாட்டமாக துவங்கிய விடயம், சூறையாடலில் முடிந்தது. ஆடம்பர பொருட்கள் விற்பனை நிலையங்கள், கடைகள் என அனைத்தையும் நொறுக்கிய ஒரு கூட்டம் பொருட்களை சூறையாடியது.</p><p>

இந்நிலையில், சென்ற மாதம், அதாவது, ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை, அதே Évian-les-Bains என்னுமிடத்தில், G7 உச்சி மாநாடு நடைபெற்றது.&nbsp;</p><p></p><p>

2003ஆம் ஆண்டைப்போலவே இம்முறையும் வன்முறை வெடிக்கக்கூடும் என அஞ்சிய சுவிஸ் அதிகாரிகள் அதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
</p><p>
மாநாடு நடைபெறும் Evian-les-Bains நகரை ஒட்டியுள்ள ஜெனீவா மாகாணத்தின் எல்லைகளில் சுமார் 30 எல்லைகள் மூடப்பட்டன.</p><p>

பாதுகாப்புக்காக ஏராளமான பொலிசாரும், 4,000 ராணுவத்தினரும் ஜெனீவாவில் குவிக்கப்பட்டார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b09e963-bd9e-459f-8fa3-971363b105ac/26-6a51fe5f3e6d9.webp' /></p><p>பாதுகாப்புக்காக ஜெனீவா மாகாணம் 30 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிட்டுள்ளதாக ஜெனீவா பாதுகாப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், அந்த பாதுகாப்புச் செலவுகளை பகிர்ந்துகொள்ளுமாறு சுவிஸ் அரசு பிரான்ஸ் அரசைக் கேட்டுக்கொண்டது.
</p><p>
அதாவது, பிரான்சில் நடைபெறும் உச்சி மாநாட்டால் சுவிட்சர்லாந்தில் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுப்பதற்காக சுவிஸ் அரசுக்கு செலவு ஏற்பட்டதால், அந்த செலவை பிரான்சும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என சுவிஸ் அரசு கோரியது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது, என்றாலும், பிரான்ஸ் பணம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவே என்றும் சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T08:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 கோடி பரிசு விழுந்த லொட்டரி சீட்டை குப்பையில் வீசிய கடைக்காரர்- அதிர்ஷ்டத்தை இழக்கவிருக்கும் பிரித்தானிய பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-woman-may-lose-rs-150-crore-lottery-jackpot-1783757338"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-woman-may-lose-rs-150-crore-lottery-jackpot-1783757338</id>
            <summary type="text">பிரித்தானியாவில் பெண்ணொருவர் தனது லொட்டரிச் சீட்டிற்கு சுமார் ரூ.500 கோடி பரிசு விழுந்தும், அதிர்ஷ்டத்தை இழக்கவுள்ளார்.இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் மாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் பெண்ணொருவர் தனது லொட்டரிச் சீட்டிற்கு சுமார் ரூ.500 கோடி பரிசு விழுந்தும், அதிர்ஷ்டத்தை இழக்கவுள்ளார்.</p><p>இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த காத் மெயின் (Kath Main) என்ற 46 வயது பெண், தனது வாழ்க்கையை மாற்றக்கூடிய 12 மில்லியன் பவுண்ட் (இலங்கை பணமதிப்பில் ரூ.540 கோடி) லொட்டரி பரிசை இழக்கும் நிலையில் உள்ளார்.</p><p>காரணம், அவர் வாங்கிய லொட்டரி சீட்டை அந்தக் கடைக்காரர் தவறுதலாக குப்பையில் போட்டுவிட்டார்.</p><p>காத், கடந்த 20 ஆண்டுகளாக ஒரே ஆறு எண்களில் தொடர்ந்து லொட்டரி சீட்டை வாங்கி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ef21e49-e9ea-49c1-acee-69ded57de7aa/26-6a51ff117f02b.webp' /></p><p>பொதுவாக அவரது தாயாரே சீட்டை வாங்குவார்.

ஜூன் 6-ஆம் திகதி நடந்த லொட்டரி டிராவில் பெரிய பரிசு வென்ற சீட்டு இன்னும் பெறப்படவில்லை என்ற செய்தியை பார்த்தபோது தான், காத் தனது எண்கள் வெற்றி பெற்றிருப்பதை உணர்ந்தார்.

அவர் தாயாரிடம் கேட்டபோது, “சீட்டை சரிபார்த்தேன், வெற்றிபெறவில்லை” என்று கூறியுள்ளார். </p><p>ஆனால் காத், “இல்லை நாம் வாங்கிய சீட்டு வெற்றி பெற்றது, 12 மில்லியன் பவுண்டு” என்று உறுதியாகச் சொன்னார்.

அதற்கு தாயார், “சீட்டை கடை உரிமையாளர் குப்பையில் போட்டுவிட்டார்” என்று பதிலளித்தார்.</p><p>
</p><p></p><p>கடை உரிமையாளர் கரண் குமார், “சீட்டை ஸ்கேன் செய்த இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் வெற்றி எண் காட்டப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

National Lottery ஆப்பரேட்டரான Allwyn தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது.</p><p>பொதுவாக, லொட்டரி சீட்டை இழந்தாலும், திருடப்பட்டாலும், அழிந்தாலும், உரிய சான்றுகள் இருந்தால் பரிசு வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில் காத், “இந்த 30 நாட்கள் காத்திருப்பு மிகவும் கடினமாக உள்ளது. வெற்றி உறுதி ஆனால், முதலில் நியூசிலாந்து பயணம் செய்து 2029-ல் நடைபெறும் பிரிட்டிஷ் &amp; ஐரிஷ் லயன்ஸ் சுற்றுப்போட்டியை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
</p><p>
இந்த அதிர்ஷடம் அவரை வந்து சேருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T08:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cinema-attendance-is-rise-in-switzerland-1783757111"></link>
            <id>https://news.lankasri.com/article/cinema-attendance-is-rise-in-switzerland-1783757111</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

திரையரங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
</p><h3>
திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு
</h3><p>
திரையரங்குகள் என்பவை மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல. அவை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு விடயமும் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f42ba687-d2e5-4575-ade8-cf4c29069ee9/26-6a51f938b3abd.webp' /></p><p>
திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் முதல், திரையரங்குகளுக்கு அருகிலிருக்கும் உணவகங்கள், கடைகளில் நடக்கும் வியாபாரம், திரையரங்குகள் மற்றும் அது சார்ந்த தொழில்கள் உருவாக்கும் வருவாய் என நாட்டின் பொருளாதாரத்தில் திரைப்படங்களுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.</p><p>

கோவிட் காலகட்டத்தில் திரைத்துறை சந்தித்த இழப்பும், அதைத் தொடர்ந்து பலர் OTT வாயிலாக தங்கள் திரைப்படங்களைத் திரையிட முடிவு செய்ததும் நினைவிருக்கலாம்.&nbsp;</p><p></p><p>
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
</p><p>
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 5,300,000 பேர் திரைப்படங்களைக் காண திரையரங்குகளுக்குச் சென்றுள்ளார்கள்.
</p><p>
2026ஐப் பொருத்தவரை, குறிப்பாக, இத்தாலி மொழி பேசும் Ticino மாகாணத்தில், திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8adea214-4c08-45dd-a600-e2e2300f5609/26-6a51f9396242f.webp' /></p><p>
பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் மாகாணங்களில் திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை 29 சதவிகிதமும், ஜேர்மன் மொழி பேசும் மாகாணங்களில் 16 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
</p><p>
ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், சுவிஸ் திரைப்படங்களைவிட, மற்ற நாடுகளின் தயாரிப்பான திரைப்படங்களைக் காணச் சென்றவர்கள் எண்ணிக்கை 49 சதவிகிதம் அதிகரித்துள்ளது.</p><p>

குறிப்பாக, மே மாதத்தின் நடுப்பகுதியில், 20ஆவது சினிமா வாரத்தின்போது சுமார் 365,000 பேர் திரைப்படங்களைக் காண திரையரங்குகளுக்குச் சென்றுள்ளார்கள்.
</p><p>
அந்த நேரத்தில் திரையிடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று, பெரிதும் கவனம் ஈர்த்துவரும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை சித்தரிக்கும் மைக்கேல் என்னும் திரைப்படம் ஆகும்!
</p><p>
என்றாலும், கோவிடுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவுதான். ஏனென்றால், 2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சுமார் 6,000,000 பேர் திரைப்படங்கள் காண திரையரங்குகளுக்குச் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T08:05:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை குறிவைத்து காத்திருக்கும் 1000 ஏவுகணைகள்: என்னை தொட்டால் சர்வநாசம்: டிரம்ப் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-stated-1000-missiles-ready-to-attack-iran-1783756884"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-stated-1000-missiles-ready-to-attack-iran-1783756884</id>
            <summary type="text">1000 ஏவுகணைகள் ஈரானை குறிவைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஜனாதிபதி டிரம்பை கொல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>1000 ஏவுகணைகள் ஈரானை குறிவைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2> ஜனாதிபதி டிரம்பை கொல்ல ஈரான் சதி?</h2><p>ஈரான் தன்னை கொல்ல சதி திட்டம் தீட்டி வருவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p> உலகின் பல முனைகளில் இருந்து என்னை கொல்ல அல்லது கொல்ல முயற்சித்து ஈரான் அரசு தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a18fd0ae-4084-4e0d-82c6-8cc2df7ef952/26-6a51f8563a9fc.webp' /></p><p> சமீபத்தில் ஈரானிய உச்ச தலைவர் அலி காமேனியின் இறுதி ஊர்வத்தில் பொதுமக்கள் சிலர் டிரம்ப்பை கொல்ல வேண்டும் என்று கோஷமிட்டதும், “Kill Trump” என்ற வாசகம் எழுதிய பதாகைகளை ஏந்திச் சென்றதை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டானது வெளிவந்துள்ளது.</p><p></p><h2>டிரம்பின் அதிரடி உத்தரவு</h2><p>இந்நிலையில் ஈரான் என்னை கொலை செய்தால் அல்லது முயற்சி செய்தால் அமெரிக்க ராணுவம் மிக கடுமையான தாக்குதல்&nbsp; நடவடிக்கையை எடுக்க தயார் நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e86ecbd-d699-4412-ae39-ae0bddbc3478/26-6a51f85582a8a.webp' /></p><p>மேலும் ஏற்கனவே 1000 ஏவுகணைகள் ஈரானை குறிவைத்து தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டு இருப்பதாகவும், ஈரான் தன்னை கொல்ல முயற்சி செய்தால் மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஈரான் மீது பாயும் என்று எச்சரித்துள்ளார்.</p><p>அத்துடன் ஒருவேளை இந்த தாக்குதல் நடந்தால் ஈரானின் அனைத்து பகுதிகளையும் தரைமட்டமாக அழிப்பதற்கான உத்தரவு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும், இந்த இராணுவ உத்தரவுகள் ஒரு வருட காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T08:01:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி அனில் மேனன் - என்ன திட்டம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-anil-menon-to-travel-to-iss-space-1783755979"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-anil-menon-to-travel-to-iss-space-1783755979</id>
            <summary type="text">இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரரான அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஜூலை 14 ஆம் திகதி பயணம் மேற்கொள்ள உள்ளார். 

நாசா வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரரான அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஜூலை 14 ஆம் திகதி பயணம் மேற்கொள்ள உள்ளார். </p><h3>

நாசா விண்வெளி பயணம்</h3><p> 

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/587cae5c-c123-410e-804b-d84b63cdd5a7/26-6a51f4ce4aaa2.webp' /></p><p>கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ரோஸ்கோஸ்மோஸ் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.</p><p> 

அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோத்ர் துப்ரோவ், அன்னா கிகினா ஆகியோர் செல்ல உள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d81890ac-2b82-45ac-8ea7-921aa6ee2bc8/26-6a51f4ccea37d.webp' /></p><p>விண்வெளி நிலையத்தில் 8 மாதங்கள் தங்கி, நீண்ட கால விண்வெளிப் பயணம் மனித உடலியலில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்ய உள்ளார். மேலும், எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கான புதிய மருத்துவ தொழில்நுட்பங்களைச் சோதிப்பார்.
</p><p>
மேலும், உயர் செயல்திறன் கொண்ட கணினிகளுக்குத் தேவையான பாகங்களின் பெருமளவு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் குறைக்கடத்திப் படிகங்களை விண்வெளியில் உற்பத்தி செய்வது குறித்து ஆய்வு செய்வார்.&nbsp;</p><p></p><h3>
யார் இந்த அனில் மேனன்?
</h3><p> 

கேரளாவைச் சேர்ந்த சங்கரன் மேனன் என்பவருக்கும், உக்ரைனைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அமெரிக்காவின் மினுசோட்டா மாநிலத்தில் உள்ள மின்னியாபொலிஸ் என்ற நகரத்தில் 1976 ஆம் ஆண்டில் பிறந்தவர் அனில் மேனன்.
</p><p>
1999 ஆம் ஆண்டில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நியூரோபயாலஜியில் இளங்கலைப் பட்டமும், 2004 ஆம் ஆண்டில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் முதுகலைப் பட்டமும், 2006 ஆம் ஆண்டில் ஸ்டான்போர்டு மெடிகல் ஸ்கூலில் MD (Doctor of Medicine) பட்டமும் பெற்றிருக்கிறார்.</p><p> மருத்துவரான இவர், 2010 ஆம் ஆண்டில் ஹைட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம், 2015 ஆம் ஆண்டில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் 2011 ஆம் ஆண்டில் ரெனோ விமானக் கண்காட்சி விபத்து ஆகியவற்றின் போது முதல் மீட்பாளராகப் பணியாற்றியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5659ebf-41f5-491b-831d-a3c4401bb3a5/26-6a51f4cd98dd6.webp' /></p><p>

இமயமலை மீட்பு சங்கத்துடன் இணைந்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் மலையேறுபவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி பணியாற்றியுள்ளார். 

மேலும், இந்தியாவில் ஓராண்டு காலம் தங்கியிருந்து, போலியோ தடுப்பூசி முயற்சிகளைப் பற்றி ஆய்வு செய்து ஆதரவளித்துள்ளார். </p><p> 

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதல் ஃப்ளைட் சர்ஜனாக இருந்த இவர், முதன் முதலில் ஸ்பேஸ் எக்ஸ் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பிய Demo-2 மிஷனிலும் பங்காற்றியிருக்கிறார்.&nbsp;</p><p>நாசாவின் பல்வேறு திட்டங்களிலும் Crew Flight Surgeon ஆகவும் பணியாற்றியிருக்கிறார். 

முன்னதாக அமெரிக்கா விமானப்படையில், ஃப்ளைட் சர்ஜனாகவும் (Flight Surgeon) பணியாற்றியிருக்கிறார்.&nbsp;</p><p>

ஜனவரி 2022 ஆம் ஆண்டில் நாசா விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2 ஆண்டுகள் விண்வெளி வீரருக்கான பயிற்சியை பெற்றார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7401d180-15c6-4bed-825e-5d05dc36fccf/26-6a51f4ceec949.webp' /></p><p>

இவரின் மனைவி அண்ணா மேனனும் நாசா விண்வெளி வீரர் ஆவார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T07:47:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம்: பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/letter-to-andy-burnaham-for-soft-on-migrants-1783752482"></link>
            <id>https://news.lankasri.com/article/letter-to-andy-burnaham-for-soft-on-migrants-1783752482</id>
            <summary type="text">பிரித்தானியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் முன்பே ஆன்டி பர்னாமுக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கிவிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் முன்பே ஆன்டி பர்னாமுக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கிவிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.</p><h3>

பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம்</h3><p>

ஆன்டி பர்னாம், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/789106b4-c5af-4f8a-9883-392ceb96c4e2/26-6a51e7239f339.webp' /></p><p>
ஆனால், அவர் பிரதமராவதற்கு முன்பே ஆன்டி பர்னாமுக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கிவிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
</p><p>
ஆம், லேபர் கட்சியைச் சேர்ந்த சுமார் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆன்டி பர்னாமுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அந்தக் கடிதத்தில், புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம் என அவர்கள் ஆன்டி பர்னாமை வலியுறுத்தியுள்ளார்கள்.
</p><p>
அதாவது, ஏற்கனவே பிரித்தானியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்து, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான விதி ஒன்றை அறிமுகம் செய்தார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a38a8a4-3187-4215-8e3d-1353ff984e7c/26-6a51e7244b96a.webp' /></p><p>
ஆம், ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 10 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என ஷபானா புது விதி ஒன்றை அறிவிக்க, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
</p><p>
எனவே, இது சரியல்ல, ஏற்கனவே பல ஆண்டுகள் பிரித்தானியாவில் விதிகளைப் பின்பற்றி சட்டப்படி வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோரை குறிவைக்கவேண்டாம். புதிய விதிகளைக் கொண்டுவந்து அவர்களை கடினமான சூழலுக்கு உள்ளாக்கவேண்டாம் என ஆன்டி பர்னாமுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.</p><p>
ஆக, பதவிக்கு வரும் முன்பே, ஆன்டி பர்னாமுக்கு சிக்கல் துவங்கிவிட்டது, அதுவும், அவரது கட்சிக்குள்ளிருந்தே!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T07:30:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - கனடாவை இணைக்கும் புதிய சர்வதேச பாலம்: திறக்கப்படுவது எப்போது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-gordie-howe-bridge-set-for-opening-1783752546"></link>
            <id>https://news.lankasri.com/article/new-gordie-howe-bridge-set-for-opening-1783752546</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் கனடாவை இணைக்கும் கார்டி ஹோவ் சர்வதேச பாலம் ஜூலை மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட பாலம் திறப்புஅமெரிக்காவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் கனடாவை இணைக்கும் கார்டி ஹோவ் சர்வதேச பாலம் ஜூலை மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> பிரம்மாண்ட பாலம் திறப்பு</h2><p>அமெரிக்காவின் டெட்ராய்ட்(மிச்சிகன்) நகரையும், கனடாவின் வின்ட்சர் (ஒன்ராறியோ) நகரையும் இணைக்கும் பிரம்மாண்ட சர்வதேச பாலமான “கார்டி ஹோவ்” (Gordie Howe) திட்டமிட்டப்படி ஜூலை 27ம் திகதி திறக்கப்பட உள்ளது.</p><p>இந்த திட்டத்தில் எந்தவொரு தடையும் ஏற்படாமல் நிறைவேறுவதை உறுதி செய்த புதிய ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd851aac-f2a2-4b58-b38c-2dd4d53656a9/26-6a51e763f2038.webp' /></p><p></p><h2> கனடா அரசுக்கு டிரம்ப் கருத்து</h2><p>
சர்வதேச பாலமான “கார்டி ஹோவ்” தொடர்பான முந்தைய ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருந்ததாகவும், தற்போது திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ள கூடியதாகவும் நியாயமானதாகவும் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e9373d5-c52d-4f57-b692-33b012080f89/26-6a51e764a282c.webp' /></p><p> மேலும், சர்வதேச பாலமான கார்டி ஹோவ்-விற்கு ஒத்துழைப்பு வழங்கிய கனடா அரசுக்கு நன்றி எனவும், பாலத் திட்டத்தை முன்னெடுத்து சென்று வெற்றிகரமாக முடித்ததற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் இந்த சிறப்பான முன்னேற்றத்தின் மூலம் இரண்டு நாடுகளும் தொடர்ந்து பல ஆண்டுகள் வெற்றியை பெறட்டும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:49:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓயோவில் கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்பு- ஜனாதிபதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nigeria-rescues-abducted-schoolchildren-teachers-1783752593"></link>
            <id>https://news.lankasri.com/article/nigeria-rescues-abducted-schoolchildren-teachers-1783752593</id>
            <summary type="text">நைஜீரியாவின் தென்மேற்கு ஒயோ மாநிலத்தில் கடந்த மே மாதம் ஆயுத கும்பலால் கடத்தப்பட்ட 39 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜீரியாவின் தென்மேற்கு ஒயோ மாநிலத்தில் கடந்த மே மாதம் ஆயுத கும்பலால் கடத்தப்பட்ட 39 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் மே 15 அன்று ஒயோ மாநிலத்தின் ஓரிரே மாவட்டத்தில் பல பள்ளிகளை குறிவைத்து நடந்தது.</p><p>அரசாங்கத்தின் தகவலின்படி, கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம், கடத்தப்பட்ட ஆசிரியர்களில் ஒருவர் சிறையில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72e59f41-a7fb-4a29-9e7e-7a0ee55e99e9/26-6a51e792d02e5.webp' /></p><p>
நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு தனது அறிக்கையில், “இந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நீதி கிடைக்கும். கொல்லப்பட்ட ஆசிரியரின் குடும்பத்திற்கும் அரசு நியாயம் செய்து தரும்” என்று உறுதியளித்தார்.</p><p>கடந்த சில ஆண்டுகளில் நைஜீரியாவில் ஆயுத கும்பல்களின் பெருமளவு கடத்தல்கள் முக்கிய பாதுகாப்பு சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக பள்ளிகள் அடிக்கடி குறிவைக்கப்படுகின்றன. ஆனால் தென்மேற்கு பகுதியில் இத்தகைய தாக்குதல்கள் குறைவாகவே நடந்துள்ளன.</p><p>

இந்த மீட்பு நடவடிக்கை, நைஜீரியாவில் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T06:48:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் ஒரு கப் வெண்டைக்காய் நீர்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/health-benefits-of-drinking-lady-s-finger-water-1783751301"></link>
            <id>https://news.lankasri.com/article/health-benefits-of-drinking-lady-s-finger-water-1783751301</id>
            <summary type="text">வெண்டைக்காய் குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும் கொண்ட ஒரு சிறந்த காய்கறி ஆகும். 

இது செரிமானத்தை மேம்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெண்டைக்காய் குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும் கொண்ட ஒரு சிறந்த காய்கறி ஆகும். </p><p>

இது செரிமானத்தை மேம்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியத்தை பாதுகாத்தல், மற்றும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் கே போன்ற பல முக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
</p><p>
அதன்படி, இரவு முழுவதும் வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதால் பல நன்மைகள் கிடைக்கும்.</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c8000ca-a469-4df0-aced-86a9f16a1745/26-6a51e28778549.webp' />
</p><p>
அந்தவகையில், ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு கப் வெண்டைக்காய் நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.</p><p></p><h2>கிடைக்கும் நன்மைகள் </h2><p><b>உடல் சோர்வு நீங்கும்-</b> எலுமிச்சை சேர்த்த வெண்டைக்காய் நீரை தொடர்ந்து ஒரு மாதம் குடித்தால் உடல் சோர்வு குறைந்து, சுறுசுறுப்பு அதிகரிக்க உதவலாம்.
</p><p><b>
சிறுநீரகங்களுக்கு நல்லது- </b>வெண்டைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சிறுநீரக செல்களை பாதுகாக்க உதவக்கூடும். இருப்பினும், இதற்கான மனிதர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இன்னும் குறைவாகவே உள்ளன.
</p><p><b>
இதய ஆரோக்கியம்- </b>வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் கோழைப் பொருள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4db154d1-ed8d-4570-9340-a3bd76d1ed35/26-6a51e2882cf48.webp' /></p><p>
</p><p><b>
இரத்த சர்க்கரை&nbsp;கட்டுப்பாடு- </b>வெண்டைக்காய் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை குறைக்கவும் உதவக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p><b>
கல்லீரல் சுத்தம்-</b> வெண்டைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாத்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்.</p><p><b>

நோய் எதிர்ப்பு சக்தி- </b>வைட்டமின் A, C, K, ஃபோலேட் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவக்கூடும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:29:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதம் மாற மறுத்த இந்திய மாணவி - உஸ்பெகிஸ்தானில் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-student-killed-in-uzbekistan-due-conversion-1783750831"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-student-killed-in-uzbekistan-due-conversion-1783750831</id>
            <summary type="text">உஸ்பெகிஸ்தானில் படித்து வந்த இந்திய மாணவி மதம் மாற மறுத்தால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உஸ்பெகிஸ்தானில் கொல்லப்பட்ட இந்திய மனைவி 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>உஸ்பெகிஸ்தானில் படித்து வந்த இந்திய மாணவி மதம் மாற மறுத்தால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h3>

உஸ்பெகிஸ்தானில் கொல்லப்பட்ட இந்திய மனைவி</h3><p> 

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாடு பகுதியைச் சேர்ந்தவர் பசந்த்-மினி தம்பதியின் மகளான சவரியா பசந்த்(21), உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dab6a699-6294-4b3e-b2d7-7e9c5cf30a2e/26-6a51e0b0804e2.webp' /></p><p> </p><p>

அதே கல்லூரியில், மலப்புரம் மாவட்டம் பெரிந் தல்மண்ணா பகுதியை சேர்ந்த சாதருள் அனாம் (21) என்ற மாணவரும் படித்து வந்துள்ளார். </p><p>

மாணவ, மாணவிகள் ஒரே விடுதியில் வேறு வேறு தளங்களில் வசித்து வந்துள்ளனர். </p><p>

இந்நிலையில், கடந்த ஜூலை 3 ஆம் திகதி சவரியாவை, சாதருல் அனாம் மடிக்கணினியால் அடித்ததில் உயிரிழந்து விட்டதாக சாகர்யாவின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.</p><p> 

சாதருல் அனாமை உஸ்பெகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>சவரியாவின் உறவினர்கள் உஸ்பெகிஸ்தான் சென்ற நிலையில், அவரது உடல் விமானம் மூலம் கேரளாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p> 

உறவினர்களின் கோரிக்கையை ஏற்று, ஆலப்புழை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சவரியாவின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உடல் தகனம் செய்யப்பட்டது.</p><h3>

மதம் மாற வற்புறுத்தல் </h3><p>

இது குறித்து பேசிய சவரியாவின் மாமா ஜனீஷ், "உஸ்பெகிஸ்தானில் உள்ள ஒரு விசாரணை அதிகாரி, மடிக்கணினி மூலம் தலையில் அடித்ததில் அவர் உயிரிழக்கவில்லை. 

சவரியாவின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், இது அவர் நீண்ட நேரத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்பதைக் காட்டுவதாகவும் என்னிடமே தெரிவித்தார். </p><p>

மேலும், சாதருள் அனாம் சவரியாவை மதம் மாற கட்டாயப்படுத்தியதை அங்குள்ள மாணவர்கள் பலரும் பார்த்ததாக என்னிடம் தெரிவித்தனர் என விசாரணை அதிகாரி கூறினார்" என்று தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பாக ஹரிபாடு காவல்நிலையத்தில் அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பகையை மிஞ்சிய பாசம்... நான்கு ஆண்டுகளுக்குப் பின் பேரப்பிள்ளைகளை சந்தித்த மன்னர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-charles-meet-harry-kids-after-4-years-1783746945"></link>
            <id>https://news.lankasri.com/article/king-charles-meet-harry-kids-after-4-years-1783746945</id>
            <summary type="text">சார்லஸ்



பிரித்தானிய மன்னர் சார்லஸ், நான்கு ஆண்டுகளுக்குப் பின் தனது இளைய மகனான ஹரியின் பிள்ளைகளை சந்தித்துள்ளார்.

பகையை மிஞ்சிய பாசம்...

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சார்லஸ்



பிரித்தானிய மன்னர் சார்லஸ், நான்கு ஆண்டுகளுக்குப் பின் தனது இளைய மகனான ஹரியின் பிள்ளைகளை சந்தித்துள்ளார்.
</p><h3>
பகையை மிஞ்சிய பாசம்...
</h3><p>
ராஜ குடும்ப மரபுக்கு மாறாக, விவாகரத்து பெற்ற, நடிகையான ஒரு பெண்ணை ராஜ குடும்பத்துக்குள் கொண்டு வந்த இளவரசர் ஹரி, அதன் தொடர்ச்சியாக உருவான பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல், ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f85fda3a-7cd9-4ac8-9838-a9a898175afc/26-6a51d1842c546.webp' /></p><p>
ராஜ குடும்பத்தை விட்டு மட்டுமல்ல, பிரித்தானியாவை விட்டே வெளியேறி அமெரிக்காவில் குடியமர்ந்த ஹரி மேகன் தம்பதியர், ராஜ குடும்பத்தைக் குறித்தும், ராணி கமீலா, இளவரசர் வில்லியம், இளவரசி கேட் குறித்தும் மோசமாக விமர்சனங்கள் முன்வைக்க, அவர்களுக்கும் ராஜ குடும்பத்துக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது.
</p><p>
ஹரி, தனது சுய சரிதைப் புத்தகமான ‘ஸ்பேர்’ எனும் புத்தகத்தில், தன் பங்குக்கு தன் குடும்பத்தைக் குறித்து மோசமாக எழுதி நிலைமையை மேலும் மோசமாக்கினார்.
</p><p>
ஒருபக்கம் ராஜ குடும்பத்துக்கும் ஹரி குடும்பத்துக்கும் இடையிலான பிளவு அதிகரித்துக்கொண்டே செல்ல, இன்னொரு பக்கம், ஹரியின் பிள்ளைகளான தனது பேரப்பிளைகளைக் காண ஏங்கினார் மன்னர் சார்லஸ்.
</p><p>
இந்நிலையில், ஹரி தனது இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்காக பிரித்தானிய வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
</p><p>
அப்படி அவர் பிரித்தானியா வரும்போது மன்னரை சந்திப்பது என ஒரு திட்டம் உருவாக, இதை ஒரு வாய்ப்பாக வைத்து தன் பேரப்பிள்ளைகளை சந்திக்க திட்டமிட்டார் மன்னர்.&nbsp;</p><p></p><p>
அதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை மதியம், மன்னரும் ராணி கமீலாவும், ஹரி மேகன் தம்பதியர் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டை சந்தித்துள்ளார்கள்.
</p><h3>
சந்திப்பு நிகழ்ந்த இடம்</h3><p>

விடயம் என்னவென்றால், இந்த சந்திப்பு ஊடகவியலாளர்கள் காண லண்டனில் நடைபெறவில்லை. மன்னரின் தனிப்பட்ட இல்லமான ஹைக்ரோவ் இல்லம் என்னும் இடத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/389e09cb-d8fd-4377-ac4a-782d88fd3649/26-6a51d182ccbdc.webp' /></p><p>
இந்த ஹைக்ரோவ் இல்லம், லண்டனிலிருந்து சுமார் 2 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது.</p><h3>

எதனால் இப்படி ஒரு ரகசிய சந்திப்பு?
</h3><p>
மன்னர் சார்லஸ், ஹரி குடும்பத்தை சந்திக்க இந்த ஹைக்ரோவ் இல்லத்தை தேர்ந்தெடுக்க பல காரணங்கள் உள்ளன.
</p><p>
அதாவது, இது ஒரு தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. மன்னர் தன் மகன் குடும்பத்தை சந்திக்கிறார் அவ்வளவுதான். அதனால், அங்கு ஊடகவியலாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ஆகவே, அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் வெளியாகாது.
</p><p>
அத்துடன், ஹரியின் இன்விக்டஸ் நிகழ்ச்சி நடக்கும் இடம் பர்மிங்காம். அது ஹைக்ரோவ் இல்லத்திலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e8e01c-42a0-4efb-b516-ff1a5adc2da9/26-6a51d1837c04a.webp' /></p><p>

மன்னரை சந்தித்தபின் ஹரி குடும்பம் இளவரசி டயானாவின் கல்லறையைக் காணச் செல்வதாக திட்டம். ஹைக்ரோவ் இல்லத்திலிருந்து அங்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆகும்.
</p><p>
அதேபோல, மன்னர் சார்லஸ் நிகழ்ச்சி ஒன்றிற்காக ஆக்ஸ்ஃபோர்ட்ஷையருக்கு வந்திருந்தார், அங்கிருந்து ஹைக்ரோவ் இல்லம் வர ஒரு மணி நேரம் ஆகும். ஆக, எல்லோருக்கும் பயணிக்க வசதியான ஒரு இடமாக ஹைக்ரோவ் இல்லம் அமைந்துவிட்டது.
</p><p>
எல்லாவற்றிற்கும் மேல், சிறு வயதில் இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் மகிழ்ச்சியுடன் செலவிட்ட வீடு ஹைக்ரோவ் இல்லம் என்பது கூடுதல் சிறப்பு!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:14:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்: தலைநகர் கீவ்வில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-missiles-targets-kyiv-6-injured-1783748492"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-missiles-targets-kyiv-6-injured-1783748492</id>
            <summary type="text">உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை ரஷ்ய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.அதிகாலை 3.38 மணியளவில் தொடங்கிய இந்த வான்வழித் தாக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை ரஷ்ய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.</p><p>அதிகாலை 3.38 மணியளவில் தொடங்கிய இந்த வான்வழித் தாக்குதலில் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெடி சத்தம் கேட்கப்பட்டது.</p><p>இதையடுத்து கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.</p><p> கீவ் நகர இராணுவ நிர்வாக தலைவர் டைமூர் டகாசென்கோ டெலிகிராமில் தெரிவித்துள்ள தகவலில், தலைநகர் கீவ்வை குறிவைத்து எதிரிப் படைகள் ஏவுகணை தாக்குதல் தொடங்கியுள்ளனர். எனவே பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dfa4c0d-f732-47cc-a6ad-3435e275b882/26-6a51d78de5b39.webp' /></p><p> கீவ் நகர மேயர் இந்த தாக்குதலில் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>பாதிக்கப்பட்டவர்கள் விவரம்</h2><p>
இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.</p><p>ரஷ்ய படைகளின் தாக்குதலில் டிப்ரோவ்ஸ்கி மற்றும் ஸ்வியாடோஷின்ஸ்கி மாவட்டங்கள் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.</p><p> சேதத்தின் முழு அளவை மதிப்பீடும் பணியில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.</p><p> தாக்குதலுக்கு ரஷ்ய படைகள் பயன்படுத்திய ஏவுகணைகள் வகை குறித்து உக்ரைனிய படைகள் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.</p><p> இருப்பினும் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை Iskander-M அல்லது S-300/S-400 ஏவுகணையாக இருக்கலாம் என உக்ரைன் தரப்பு சந்தேகம் எழுப்பி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:41:42+00:00</updated>
        </entry>
    </feed>
