<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-16T08:23:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் அணு மின் நிலையத்தின் அருகே பறந்த ட்ரோன்களால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/security-concern-drones-buzz-swiss-nuclear-plant-1784189016"></link>
            <id>https://news.lankasri.com/article/security-concern-drones-buzz-swiss-nuclear-plant-1784189016</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்திலுள்ள அணு மின் நிலையம் ஒன்றின் அருகே ட்ரோன்கள் பறந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

அணு மின் நிலையத்தின் அருகே பறந்த ட்ரோன்கள்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்திலுள்ள அணு மின் நிலையம் ஒன்றின் அருகே ட்ரோன்கள் பறந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><h3>
அணு மின் நிலையத்தின் அருகே பறந்த ட்ரோன்கள்</h3><p>

சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்திலுள்ள Gösgen என்னுமிடத்தில், அணு மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/863eb0e8-51e1-45e2-809d-f88f0e903630/26-6a58905962680.webp' /></p><p>
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று அந்த மின் நிலையத்தை நோக்கி ஏழு ட்ரோன்கள் பறந்துவருவதைக் கண்ட உள்ளூர்வாசி ஒருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.</p><p>

அதைத் தொடர்ந்து அங்கு பொலிசார் குவிக்கப்பட்ட நிலையில், அனு மின் நிலையத்தின் பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
அந்த ட்ரோன்கள் ஏன் அணு மின் நிலையத்தை நோக்கி வந்தன என்பது தெரியவில்லை. அவற்றை இயக்கியது யார், அவற்றை பொலிசார் கைப்பற்றினார்களா என்பது குறித்து எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
</p><p>
இதற்கிடையில், ட்ரோன்கள் அல்ல ஒரு விமானமே அந்த அணு மின் நிலையம் மீது மோதினாலும், அதனால் அணு மின் நிலையத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அந்த அளவுக்கு அந்த அணு மின் நிலையம் பாதுகாப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளது என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T08:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்முறையாக அமெரிக்காவை முந்திய சீனா - இந்தியர்கள் எந்த நாட்டை நம்புகின்றனர்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/1st-time-countries-view-positive-on-china-than-us-1784188414"></link>
            <id>https://news.lankasri.com/article/1st-time-countries-view-positive-on-china-than-us-1784188414</id>
            <summary type="text">பியூ ரிசர்ச்சின் கருத்துக்கணிப்பின்படி, முதல்முறையாக அமெரிக்காவை விட சீனாவை அதிக நாடுகள் சாதகமாக கருதுகின்றன.

அமெரிக்காவை முந்திய சீனா
உலக வல்லரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பியூ ரிசர்ச்சின் கருத்துக்கணிப்பின்படி, முதல்முறையாக அமெரிக்காவை விட சீனாவை அதிக நாடுகள் சாதகமாக கருதுகின்றன.
</p><h3>
அமெரிக்காவை முந்திய சீனா</h3><p>
உலக வல்லரசான அமெரிக்கா தற்போதையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் 2வது பதவிக்காலத்தில் வரிவிதிப்பு, ஈரான் மீது தாக்குதல் என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>

இந்நிலையில், பல உலக நாடுகள் அமெரிக்காவை விட சீனாவை நம்ப தொடங்கியுள்ளதாக பியூ ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>

ஈரான் மீதான அமெரிக்கா தாக்குதல் தொடங்கிய பிப்ரவரி 8 முதல் மே 13 வரை பியூ ரிசர்ச் நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/338a452b-4875-4448-865a-4d7b776ab43a/26-6a588dff5ec2e.webp' /></p><p>
20 ஆண்டுகளாக இது குறித்து உலகளாவிய கருத்துக்களைக் கண்காணித்து வரும் இந்த நிறுவனம், முதல் முறையாக அமெரிக்காவை விட சீனாவை உலக நாடுகள் அதிக சாதகமாகப் பார்ப்பதாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>

36 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட 25 நாடுகள் அமெரிக்காவை விட சீனாவை சாதகமாக பார்க்கின்றன.</p><p> 

பிரித்தானியா, பிரேசில் உள்ளிட்ட 5 நாடுகள் இரு நாடுகளையும் சமமாக கருதுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5298264b-8a3c-4e1e-ab00-66d9a38945b4/26-6a588e00142b2.webp' /></p><p>

இந்தியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், போலந்து ஆகிய 6 நாடுகள் மட்டுமே சீனாவை விட அமெரிக்காவை சாதகமாக கருதுகின்றன.</p><p> 

3 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவை சாதகமாக கருதும் நாடுகள் 58 சதவிகிதமும், சீனாவை சாதகமாக கருதும் நாடுகள்32 சதவிகிதமும் இருந்த நிலையில், தற்போது அமெரிக்காவை சாதகமாக கருதும் நாடுகள் 36 சதவிகிதமாக குறைந்துள்ளது. </p><h3>

ட்ரம்ப்பை முந்திய ஷி ஜின்பிங்
</h3><p>
அதேவேளையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இருவர் மீதும் நம்பிக்கையில், ஹங்கேரி, பிரேசில், கொலம்பியா, இந்தியா, இஸ்ரேல், ஜப்பான், பிலிப்பைன்ஸ், போலந்து ஆகிய 8 நாடுகள் ட்ரம்ப்பை நம்புகின்றனர்.&nbsp;</p><p>

தென் கொரியா உள்ளிட்ட 6 நாடுகள் இருவரையும் சமமாக கருதுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af1253f0-06ac-4853-b92b-a4c2795310b8/26-6a588e00b8919.webp' /></p><p>

ஆனால், பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஸ்பெயின் உள்ளிட்ட 22 நாடுகள் ட்ரம்ப்பை விட ஷி ஜின்பிங்கை நம்புகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T07:54:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்ஸியின் கையில் குழந்தையாக லாமின் யாமல்: 20 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை! வைரல் புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fifa-world-cup-messi-yamal-20-yrs-old-viral-photo-1784188179"></link>
            <id>https://news.lankasri.com/article/fifa-world-cup-messi-yamal-20-yrs-old-viral-photo-1784188179</id>
            <summary type="text">மெஸ்ஸி கையில் குழந்தையாக இருந்த லாமின் யமால் இன்று அவருக்கு எதிராகவே உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட இருப்பது ஆச்சரியத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெஸ்ஸி கையில் குழந்தையாக இருந்த லாமின் யமால் இன்று அவருக்கு எதிராகவே உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> லாமின் யமாலை கையில் ஏந்திய மெஸ்ஸி</h2><p>உலக எதிர்பார்த்து காத்திருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியும் ஸ்பெயின் அணியும் மோதவுள்ளன.</p><p> அர்ஜென்டினா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸிக்கும்(Lionel Messi), ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமான லாமின் யமாலுக்கும்(Lamine Yamal) இடையிலான விளையாட்டை காண ஒட்டு மொத்த கால்பந்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f97c05e2-8d7a-4dc4-b2e4-d6979de3eb4d/26-6a588d1547432.webp' /></p><p> மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ள இந்த மோதல், நம்மை 2007ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு அழைத்து செல்கிறது.</p><p> 20 வயது இளம் வீரராக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த லியோனல் மெஸ்ஸி, Diario Sport என்ற பத்திரிக்கைகாக UNICEF தொண்டு நிறுவனத்தின் புகைப்பட நிகழ்வில் கலந்து கொண்டார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e093028-5b9a-4a86-83ed-da0acefb4d82/26-6a588d15ede57.webp' /></p><p>அதில் மெஸ்ஸி குழந்தை ஒன்றை குளிப்பாட்டி தன் கையில் தாங்கியிருப்பது போன்ற அழகான புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.</p><p> சுமார் 20 ஆண்டுகளாக இந்த புகைப்படம் யாருக்கும் தெரியாமல் இருந்த வந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு யமாலின் தந்தை தன்னுடைய சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிறகு தான் உலக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p> ஆம். மெஸ்ஸி குளிப்பாட்டி புகைப்படம் எடுத்து கொண்ட குழந்தை, இன்று பார்சிலோனா அணியின் மிகச் சிறந்த இளம் வீரராக உருவெடுத்துள்ள லாமின் யாமல் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d247f0c-fc83-4c6a-964e-d867c0e0ca7f/26-6a588d169ebb1.webp' /></p><h2> 2026 உலகக் கோப்பை கால்பந்து</h2><p>2026 உலகக் கோப்பை கால்பந்து அதன் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கால்பந்து உலகின் ஜாம்பவானாக பார்க்கப்படும் லியோனல் மெஸ்ஸியை, அவர் கையில் சிறிய குழந்தையாக இருந்த லாமின் யமால் நேருக்கு நேர் மோதவுள்ளார்.</p><p> 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி வெறும் போட்டி மட்டுமல்ல. கால்பந்து விளையாட்டின் ஆளுமையும், கால்பந்து விளையாட்டின் எதிர்காலமும் சங்கமிக்கும் ஒரு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T07:49:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யானைக்கு பயந்து ஊரை காலிசெய்த குடும்பம்... 14 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிவந்த யானை செய்த கொடூர செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dhurbe-elephant-followed-nepal-family-for-14-years-1784185404"></link>
            <id>https://news.lankasri.com/article/dhurbe-elephant-followed-nepal-family-for-14-years-1784185404</id>
            <summary type="text">நேபாளத்தில், 2012ஆம் ஆண்டு ஒரு தம்பதியரை யானை ஒன்று மிதித்துக்கொன்றது.

யானைக்கு பயந்து அந்தக் குடும்பம் ஊரை விட்டே ஓடிய நிலையில், 14 ஆண்டுகளுக்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில், 2012ஆம் ஆண்டு ஒரு தம்பதியரை யானை ஒன்று மிதித்துக்கொன்றது.
</p><p>
யானைக்கு பயந்து அந்தக் குடும்பம் ஊரை விட்டே ஓடிய நிலையில், 14 ஆண்டுகளுக்கு முன் திரும்பிவந்த அந்த யானை அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பேரைக் கொன்றுள்ள விடயம் திகிலை உருவாக்கியுள்ளது.</p><h3>

யானைக்கு பயந்து ஊரை விட்டு ஓடிய குடும்பம்...
</h3><p>
நேபாளத்திலுள்ள மாடி என்னும் ஊரில் வாழ்ந்துவந்துள்ளது ஷானிச்சாரா போடே (Shanichara Bote) என்பவரின் குடும்பம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48fee5a2-b25c-4823-be66-7001c22ffc1d/26-6a58823de5313.webp' /></p><p>
2012ஆம் ஆண்டு, துர்பே என்னும் யானை போடேயின் பெற்றோரை மிதித்துக் கொல்ல, பயந்துபோன போடே குடும்பம், ரப்தி என்னும் ஆற்றைக் கடந்து மறுபக்கம் இருக்கும் ஜகத்பூர் எனும் ஊரில் குடியேறியுள்ளது.</p><p>

இந்நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போடே குடும்பத்தைத் தேடிவந்த துர்பே, இந்த மாதத்தின் துவக்கத்தில் போடேயின் மருமகளான ஆஷிகா போடேயையும் (25) பேரனான பரத் போடேயையும் (4) மிதித்துக் கொன்றுவிட்டது.&nbsp;</p><p></p><p>

அந்த யானைக்கு பயந்துதான் ஊரை விட்டே வந்தோம். ஆறு குறுக்கே இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதே யானை என் மருமகளையும் பேரனையும் கொன்றுவிட்டது. இனி எங்கே ஓடுவது என்று எனக்குத் தெரியவில்லை என்கிறார் போடே.</p><p>
விடயம் என்னவென்றால், போடேயின் மருமகள், பேரனை சேர்த்து, இதுவரை துர்பே யானை, 25 பேரைக் கொன்றுள்ளது.
</p><p>
எதனால் அந்த யானை இப்படி மனித வேட்டையாடுகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.
</p><p>
காடுகளை மனிதன் ஆக்கிரமிப்பதால் இப்படி யானைகள் ஊருக்குள் வந்து மனிதர்களைக் கொல்வதாக நம்பப்பட்டாலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, அதுவும் 14 ஆண்டுகளுக்குப் பின் தேடிவந்து அந்த யானைக் கொன்றது ஏன் என்பதற்கு யாராலும் விளக்கம் கொடுக்கமுடியவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T07:03:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-warns-us-over-infrastructure-threats-1784185288"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-warns-us-over-infrastructure-threats-1784185288</id>
            <summary type="text">ஈரானின் உள்கட்டமைப்புகளை தாக்கினால் பிராந்தியம் முழுவதும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்காவை ஈரான் எச்சரித்துள்ளது. டிரம்பின் எச்சரிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் உள்கட்டமைப்புகளை தாக்கினால் பிராந்தியம் முழுவதும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்காவை ஈரான் எச்சரித்துள்ளது.</p><h2> டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி</h2><p>
மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் உச்சம் தொட்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்த போவதாக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.</p><p> இந்நிலையில், டிரம்பின் இந்த கருத்துக்கு வியாழக்கிழமை ஈரானின் கதம் அல் அம்பியா மத்திய தலைமையகத்தின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் சோல்பகாரி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24b5e82b-41f1-4eb8-b71b-ec588317e97b/26-6a5881ca194fb.webp' /></p><p> அதில், “அமெரிக்கா ஈரான் உள்கட்டமைப்புகளை தாக்கினால், பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு சொந்தமான அனைத்து உள்கட்டமைப்புகளையும் குறிவைத்து ஈரானின் ஆயுத படைகள் தாக்குதல் நடத்தும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.</p><p> மேலும் அமெரிக்க நிலைகள் இருந்ததற்கான சுவடு கூட இருக்காது என்றும் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2> ஹார்முஸ் விவகாரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d8b2c2b-c646-4a2c-9e6c-7fbc9b5c3431/26-6a5881cacdf45.webp' /></p><p>உள்கட்டமைப்பு அச்சுறுத்தல்களை தாண்டி ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் தலையீட்டை&nbsp; எந்தவொரு சூழ்நிலையிலும் ஈரான் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.</p><p> எச்சரிக்கையை மீறி அமெரிக்கா அத்துமீறினால், இதுவரை பார்த்திராத மிக மோசமான விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T07:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் புலம்பெயர்தல் திட்டம் ஒன்று திடீர் நிறுத்தம்: விவரங்கள் செய்திக்குள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-pause-immigration-parents-grands-sponser-1784183067"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-pause-immigration-parents-grands-sponser-1784183067</id>
            <summary type="text">கனடா அரசு, கனேடிய குடிமக்கள் அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா அரசு, கனேடிய குடிமக்கள் அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை காலவரையறையின்றி நிறுத்தியுள்ளது.</p><h3>

புலம்பெயர்தல் திட்டம் ஒன்று திடீர் நிறுத்தம்
</h3><p>
கனடா அரசு, 2020ஆம் ஆண்டு, கனேடிய குடிமக்கள் அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a525515-181c-48ff-a012-e6f56e5afd92/26-6a58791c6a2ca.webp' /></p><p>

அதைத் தொடர்ந்து, அந்த நேரத்தில் சுமார் 2,00,000 பேர் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
</p><p>
இந்நிலையில், தற்போது அந்த திட்டம் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கனடா ஃபெடரல் அரசின் புலம்பெயர்தல் துறை அறிவித்துள்ளது.</p><p>

அதாவது, ஸ்பான்சர் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை விட, மிக அதிகமானோர் ஸ்பான்சர் செய்ய விண்ணப்பித்துள்ளதாக புலம்பெயர்தல் துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
ஏற்கனவே 60,500 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், அவற்றைச் செயல்படுத்துவதற்கான காத்திருப்பு காலம் சுமார் 33 மாதங்கள் ஆகும். கியூபெக்கிலோ 66 மாதங்கள் வரை ஆகலாம்.
</p><p>
ஆக, தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை பொறுப்புடன் நிர்வகிப்பதற்காகவும், காத்திருப்பு காலத்தைக் குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடா ஃபெடரல் அரசின் புலம்பெயர்தல் துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T06:25:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் கசிவா? NPCIL விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/npcil-react-kudankulam-nuclear-plant-data-breach-1784182143"></link>
            <id>https://news.lankasri.com/article/npcil-react-kudankulam-nuclear-plant-data-breach-1784182143</id>
            <summary type="text">கூடங்குளம் அணுமின் நிலைய தரவுகள் கசிந்தது தொடர்பாக NPCIL விளக்கமளித்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூடங்குளம் அணுமின் நிலைய தரவுகள் கசிந்தது தொடர்பாக NPCIL விளக்கமளித்துள்ளது.</p><h3>

கூடங்குளம் அணுமின் நிலையம்
</h3><p>
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல் அங்கு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f87e2c-4b0f-4024-8914-ada08a707219/26-6a58758156315.webp' /></p><p>

2011 ஆம் ஆண்டில், ஜப்பானில் உள்ள புக்குஷிமா டா இச்சி அணுமின் நிலையைத்தில் நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்படுத்திய பாதிப்பிற்கு பின்னர், கூடங்குள அணுஉலைக்கு எதிராக மக்கள் இடிந்தக்கரையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>

இந்தியாவின் அணுமின் தேவையைப் பூர்த்தி செய்வதில் கூடங்குளம் அணுமின் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் 4 அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.</p><p> 

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்‌ஷர், 2018 ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலையில் 3 மற்றும் 4 ஆம் அலகை வடிவமைத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><h3>

அணுமின் நிலைய தரவுகள் கசிவு</h3><p> 

இந்நிலையில், பிரபல இணைய ஊடுருவல் கும்பலான ‘வேர்ல்டு லீக்ஸ்’, 8,58,000 ரிலையன்ஸ் நிறுவன கோப்புகளை இணையத்தில் வெளியிட்டுள்ளது.</p><p> 

அதில், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான 14.3 ஜிபி அளவுள்ள 19,000 ரகசியக் கோப்புகள் என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன.</p><p> 

யோட்டா என்கிற மூன்றாம் தரப்பு இந்திய தரவு சேவை மையத்தின் சர்வரில் இருந்து இருந்த அதன் தரவுகள் கசிந்ததாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாகவும், இது பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தும் எனவும், இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டுமென பலரும் கேள்வி எழுப்பினர்.
</p><p>
இது குறித்து விளக்கமளித்துள்ள இந்திய அணுசக்தி கழகம்(NPCIL), "ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் காரணமாக, கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக கசிந்ததாகக் கூறப்படும் வரைபடங்கள் 'பேலன்ஸ் ஆஃப் பிளாண்ட்' வசதிகளுடன் தொடர்புடையவை.

பாதுக்காப்பு தொடர்பான எந்த வித முக்கியமான தரவுகளும் கசியவில்லை" என தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T06:09:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிபியா கடற்கரையில் கவிழ்ந்த அகதிகள் படகு: 50 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ship-wreck-off-libyan-coast-50-missing-1784178999"></link>
            <id>https://news.lankasri.com/article/ship-wreck-off-libyan-coast-50-missing-1784178999</id>
            <summary type="text">லிபியக் கடற்கரை அருகே படகு கவிழ்ந்த விபத்தில் 50 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.50 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம்?
லிபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லிபியக் கடற்கரை அருகே படகு கவிழ்ந்த விபத்தில் 50 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.</p><h2>50 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம்?</h2><p>
லிபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 60 அகதிகளுடன் வந்த சிறிய படகு கவிழ்ந்ததில் பெண்கள் குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்து இருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.</p><p> செவ்வாய்க்கிழமை டோப்ரூக் அருகே உள்ள பார்டா தீவு பகுதியில் இந்த விபத்து சம்பவமானது ஏற்பட்டுள்ளது.</p><p> விபத்தின் போது படகில் இருந்த 10 பேர் நீந்திச் சென்று அருகில் உள்ள தீவில் கரையேறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a8fbe1-71f6-41ca-bdc0-05df1c0c057c/26-6a58693915256.webp' /></p><p></p><p>ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீதமுள்ள 50 பேர் நிலை தற்போது வரை என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.<br></p><p> &nbsp;வாழ்வாதாரங்களை தேடி மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவிற்கு அகதிகளாக வரும் மக்கள், சிறிய படகில் இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.</p><p> கடந்த மாதம் இதே பகுதியில் நடந்த மற்றொரு படகு விபத்தில் 51 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T05:16:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய நிதி அமைச்சராக பதவி உயர்வு பெறும் ஷபானா மஹ்மூத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-to-name-mahmood-as-uk-finance-minister-1784178122"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-to-name-mahmood-as-uk-finance-minister-1784178122</id>
            <summary type="text">பிரித்தானியாவில், உள்துறைச் செயலராக அதிரடி புலம்பெயர்தல் கொள்கைகளை முன்வைத்த ஷபானா மஹ்மூத், நாட்டின் நிதி அமைச்சராக பதவி உயர்வு பெற இருப்பதாக தகவல் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில், உள்துறைச் செயலராக அதிரடி புலம்பெயர்தல் கொள்கைகளை முன்வைத்த ஷபானா மஹ்மூத், நாட்டின் நிதி அமைச்சராக பதவி உயர்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
நிதி அமைச்சராகும் ஷபானா மஹ்மூத்</h3><p>

பிரித்தானிய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக இருந்தவரான ஆன்டி பர்னாம் என்பவர் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86d76a62-749d-4d22-b99c-babbf4d223e1/26-6a5865ccec75b.webp' /></p><p>
ஆன்டி பர்னாம், வரும் திங்கட்கிழமை, லேபர் கட்சியின் தலைவராகவும், பிரித்தானியாவின் பிரதமராகவும் பொறுப்பேற்க இருக்கிறார்.</p><p>

ஆன்டி பர்னாம் பிரதமராக பொறுப்பேற்றதும், அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
குறிப்பாக, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர்ந்தோரை கலங்கடித்துவரும் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதுக்கு, பிரித்தானியாவின் நிதி அமைச்சராக பதவி உயர்வு அளிக்கப்பட இருப்பதாக ஆன்டி பர்னாமுக்கு நெருக்கமான சிலரை மேற்கோள் காட்டி Financial Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e47f6707-637b-4816-b13a-660777b01986/26-6a5865cc40ffe.webp' /></p><p>
இது ஷபானாவுக்கு பதவி உயர்வு என கூறப்பட்டாலும், இன்னொரு பக்கம், உள்துறையில் கவனம் ஈர்க்கும் வகையில் செயல்பட்ட ஷபானாவுக்கு, பொருளாதாரக் கொள்கையில் பெரிதாக அனுபவம் இல்லை என இப்போதே ஊடகங்கள் எழுதத் துவங்கிவிட்டன.
</p><p>
ஆக, ஸ்டார்மரின் வீழ்ச்சிக்கு அவர் புலம்பெயர்தலைக் கையாண்ட விதம் மட்டுமல்ல, அவரது பொருளாதாரக் கொள்கைகளும்தான் காரணம் என கூறப்படும் நிலையில், அனுபவம் குறைந்த ஷபானா எப்படி நிதி அமைச்சராக சமாளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T05:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க கடற்படை மாணவர் பட்டாலியனை வழிநடத்தும் 17 வயது ராஜஸ்தான் மாணவி: யார் இந்த ரித்தி சௌஹான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-teen-leads-us-navy-battalion-1784177195"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-teen-leads-us-navy-battalion-1784177195</id>
            <summary type="text">ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட 17 வயது மாணவி அமெரிக்க கடற்படையின் மாணவர் பிரிவை வழிநடத்தும் அதிகாரத்தை பெற்றுள்ளார். இந்திய வம்சாவளி மாணவியின் சாதனை
ராஜஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட 17 வயது மாணவி அமெரிக்க கடற்படையின் மாணவர் பிரிவை வழிநடத்தும் அதிகாரத்தை பெற்றுள்ளார்.</p><h2> இந்திய வம்சாவளி மாணவியின் சாதனை</h2><p>
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை பூர்விகமாக கொண்ட 17 வயது மாணவி ரித்தி சௌஹான், அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் பட்டாலியன் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p> நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் உள்ள பெஞ்சமின் கார்டோசோ உயர்நிலைப் பள்ளியில் ரித்தி சௌஹான் பயின்று வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2487bbab-d2f1-4377-a298-a327f3446ed9/26-6a58622ca27d4.webp' /></p><p>இவர் 2 ஆண்டுகளாக தன்னுடைய பள்ளியை கல்விப் போட்டியில் தொடர்ந்து&nbsp; இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற வைத்துள்ளார்.</p><p> மேலும், படை பிரிவின் முதல் சீபெர்ச் நீருக்கடியில் இயங்கும் ரோபோவின் உருவாக்கம் மற்றும்&nbsp; தேசிய கல்வித் தேர்வில் முதலிடம் ஆகியவற்றை பெறுவதற்கும் ரித்தி சௌஹான் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.</p><p></p><p> அத்துடன் பள்ளி தொடங்குவதற்கு முன்னதாக பள்ளிக்கு வந்து, படைப்பிரிவின் தினசரி செயல்பாடுகள் மற்றும் பயிற்சி அமர்வுகளை மேற்பார்வையிட்டு இளம் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f95f988-9b8a-4779-9bab-b8f3570f40f2/26-6a58622d54a0f.webp' /></p><p> இந்நிலையில் கிட்டத்தட்ட 300 மாணவர்களை உள்ளடக்கிய அமெரிக்க கடற்படையின் இளநிலை அதிகாரிகள் படைப்பிரிவின் பட்டாலியன் கட்டளை அதிகாரியாக ரித்தி செளஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p> இது குறித்து பேசிய ரித்தி, பிறருக்கு உதவுவதும் முன்மாதிரியாக திகழ்வதும் தான் தலைமை பண்பு என தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T04:46:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/punjab-girl-stabbed-to-death-in-london-1784171935"></link>
            <id>https://news.lankasri.com/article/punjab-girl-stabbed-to-death-in-london-1784171935</id>
            <summary type="text">பிரித்தானியாவில் உயர்கல்வி பயின்று வந்த இந்திய மாணவி கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாணவிக்கு கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் உயர்கல்வி பயின்று வந்த இந்திய மாணவி கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> இந்திய மாணவிக்கு கத்திக்குத்து</h2><p>இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் டர்ன் தாரன் பகுதியை சேர்ந்த கீரந்தீப் கவுர் என்ற 24 வயது இளம்பெண், அவர் தங்கியிருந்த லண்டன் வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 2 வருடங்களுக்கு முன்பு மாணவர் விசாவில் லண்டனுக்கு சென்ற கீரந்தீப் கவுர், படிப்பை முடித்து விட்டு லண்டன் ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் உள்ள வீடு ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf21877-9e9e-4e20-9820-382c97c2a33b/26-6a584da08e600.webp' /></p><p> இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கீரந்தீப் கவுர் தன்னுடைய அறையில் உறங்கி கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.</p><p> தாக்குதல்தாரி கீரந்தீப் கவுரின் உடம்பில் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் 5 முறை கத்தியால் குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><h2>சிக்கிய சிசிடிவி காட்சி</h2><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி குற்றவாளியை உடனடியாக கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99cfa17d-52e8-4e57-8108-822a3a23e157/26-6a584da13c676.webp' /></p><p> கைது செய்யப்பட்ட நபர் இங்கிலாந்தை சேர்ந்த 44 வயது டேனியல் சீன் ஜேம்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p> பொலிஸாரின் முதற்கட்ட தகவலில், சம்பந்தப்பட்ட நபர் லண்டனில் 20 வயது இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிப்பதற்காக ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் உள்ள கிரந்தீப் கவுரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.</p><p> உள்ளே நுழைந்த டேனியல் தன்னை கீரந்தீப் கவுர் பொலிஸில் காட்டி கொடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.</p><p> தற்போது குற்றவாளி டேனியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p><h2> பெற்றோர் வேதனை</h2><p>
தங்கள் நிலத்தை விற்று தந்தை சுக்தேவ் சிங் மற்றும் தாய் பால்ஜித் கவுர்&nbsp; மகள் கீரந்தீப் கவுரை லண்டனுக்கு படிக்க அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் தற்போது அவர் கொலை செய்யப்பட்ட செய்தி அவர்களை மிகப்பெரிய சோகத்தில் தள்ளியுள்ளது.</p><p> மேலும் தங்களது மகளின் உடலை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T04:40:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கிலிருந்து அனைத்து எரிசக்தி ஏற்றுமதிகளும் முடக்கப்படும்: அச்சுறுத்தும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/halt-middle-east-energy-exports-1784161526"></link>
            <id>https://news.lankasri.com/article/halt-middle-east-energy-exports-1784161526</id>
            <summary type="text">துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா மீண்டும் அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிலிருந்து அனைத்து எரிசக்தி ஏற்றுமதிகளையும...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா மீண்டும் அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிலிருந்து அனைத்து எரிசக்தி ஏற்றுமதிகளையும் நிறுத்திவிடுவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.</p><h2>அணுசக்தித் திட்டத்துடன்</h2><p>
</p><p>இரு நாடுகளும் ஐந்தாவது நாளாகப் பரஸ்பரம் தாக்குதல் நடத்திக்கொண்ட நிலையில், அடுத்த வாரம் அமெரிக்கத் தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்துவது குறித்து டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வந்த வேளையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e92bb75c-6b4e-4532-b9c5-9e049e60898f/26-6a5825eb3c623.webp' /></p><p> </p><p>ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய ஒரு தளம் மீது தாக்குதல் நடத்தப்போவதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார். </p><p>அமெரிக்க இராணுவத்தின் தகவலின்படி, புதன்கிழமை அதிகாலையில் அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை நடைமுறைக்கு வந்தது; அதனைத் தொடர்ந்து, ஈரானின் கடற்கரை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் மீது 90 நிமிடங்கள் நீடித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. </p><p>முந்தைய நாள் நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்; இரு நாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களிலேயே இதுதான் அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.</p><p></p><p> </p><p>ஈரானிய அரசாங்கச் செய்தித்தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானியின் கூற்றுப்படி, சமீபத்திய நாட்களில் தெற்கு ஈரானில் நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். </p><p>ஹார்முஸ் நீரிணையைத் திறக்கச் செய்வதற்காக ஈரான் மீதான தாக்குதல்களை விரிவுபடுத்தக்கூடும் என்று ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய, பலத்த பாதுகாப்புடன் கூடிய நிலத்தடி மையமான "பிக்காக்ஸ் மலை" (Pickaxe Mountain) மீது தாக்குதல் நடத்தப்போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்திருந்தார்.</p><h2>தொடர்ச்சியான பதிலடி</h2><p> </p><p>அமெரிக்காவின் தாக்குதல்கள் மற்றும் மீண்டும் விதிக்கப்பட்ட முற்றுகை காரணமாக, ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதுடன், அப்பகுதியில் அமெரிக்கத் தளங்களைக் கொண்ட நாடுகள் மீது தொடர்ச்சியான பதிலடி வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e11f034-d73b-42ac-8bd5-e7ac8cfa55ed/26-6a5825ebecbdf.webp' /></p><p> </p><p>இதனிடையே, அமெரிக்க இராணுவத்தின் பாதுகாப்பில் அந்த நீரிணையைக் கடக்கவும் கப்பல் நிறுவனங்கள் மறுத்துள்ளன. கடந்த வாரம் அந்த நீரிணையில் ஏழு வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் சுமார் பன்னிரண்டு கப்பல் பணியாளர்கள் கொல்லப்பட்டோ, காணாமலோ அல்லது காயமடைந்தோ உள்ளதாகவும் அமெரிக்கா கூறியது. </p><p>அமெரிக்கப் படைகளைத் தங்கள் மண்ணில் கொண்டுள்ள பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் மீதும் ஈரான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T02:26:57+00:00</updated>
        </entry>
    </feed>
