<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-17T17:38:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-iran-conflict-escalates-with-kuwait-strike-1784306916"></link>
            <id>https://news.lankasri.com/article/us-iran-conflict-escalates-with-kuwait-strike-1784306916</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் ஆறாவது நாளாக தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்கா, ஈரானின் தெற்கு பகுதிகளில் உள்ள பாலங்கள் மற்றும் விமான நிலையத்தை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் ஆறாவது நாளாக தீவிரமடைந்துள்ளது.
</p><p>
அமெரிக்கா, ஈரானின் தெற்கு பகுதிகளில் உள்ள பாலங்கள் மற்றும் விமான நிலையத்தை தாக்கியது.

இதற்கு பதிலாக, ஈரான் குவைத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கி தீ விபத்தை ஏற்படுத்தியது.
</p><p>
குவைத் அதிகாரிகள், தாக்குதலால் பல மின் உற்பத்தி பிரிவுகள் செயலிழந்ததாகவும், தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தியதாகவும் தெரிவித்தனர். இதனால் அந்நாட்டின் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea17279-be00-4e7c-8ff2-469bc03c04b9/26-6a5a5ce586cce.webp' /></p><p>அமெரிக்கா பாலங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள ஈரான்ஷஹ்ர் பகுதியில் உள்ள விமான நிலையமும் தாக்குதலுக்குள்ளானது.</p><p>
மேலும், அமெரிக்க தளங்கள் அமைந்துள்ள குவைத், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளிலும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. கத்தாரின் தலைநகர் தோஹாவில் வெடிப்பு ஏற்பட்டதில் ஒரு குழந்தை காயமடைந்தது.
</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Kuwait&#39;s Ministry of Electricity, Water and Renewable Energy says an Iranian drone/missile attack struck a power generation and water desalination facility, sparking a fire, causing significant damage, and forcing multiple electricity generation units offline. <a href="https://t.co/qp52AoErc3">pic.twitter.com/qp52AoErc3</a></p>&mdash; распад и неуважение (@VictorKvert2008) <a href="https://x.com/VictorKvert2008/status/2078108294057480697?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படையினர் ஒரு எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளனர். அதே சமயம், யேமனின் ஆயுதம் ஏந்திய படை மற்றொரு கப்பலை கைப்பற்றியதால், செங்கடல் வழியாக செல்லும் எண்ணெய் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த தாக்குதல்கள் காரணமாக உலக சந்தையில் எண்ணெய் விலை 3 சதவீதம் உயர்ந்து, பங்குச் சந்தைகள் சரிவடைந்துள்ளன. </p><p>அமெரிக்கா-ஈரான் இடையிலான தற்காலிக சமாதான ஒப்பந்தம் முறிந்ததால், மீண்டும் முழுமையான போர் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T16:47:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிம்பாப்வேவுக்கு பதிலடி கொடுத்த வங்காளதேச அணி: மொத்தமாக சரித்த இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bangladesh-beat-zimbabwe-by-34-runs-2nd-t20-1784298435"></link>
            <id>https://news.lankasri.com/article/bangladesh-beat-zimbabwe-by-34-runs-2nd-t20-1784298435</id>
            <summary type="text">ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், வங்காளதேசம் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&amp;nbsp;186 ஓட்டங்கள்
புலவாயோவில் வங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், வங்காளதேசம் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>186 ஓட்டங்கள்</h2><p>
புலவாயோவில் வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f93adb34-c707-448b-8b33-a8df5e002e7c/26-6a5a3c91611ea.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவர்களில் 186 ஓட்டங்கள் குவித்தது. தன்ஸித் ஹசன் 58 ஓட்டங்களும், சைப் ஹசன் 55 ஓட்டங்களும் விளாசினர். </p><p>

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 19.4 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ரியான் பர்ல் 29 (19) ஓட்டங்களும், சிக்கந்தர் ரஸா 28 (12) ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;</p><h2>ரிஷாத் ஹொசைன்&nbsp;அபாரம்</h2><p>

அபாரமாக பந்துவீசிய ரிஷாத் ஹொசைன் (Rishad Hossain) 4 விக்கெட்டுகளும், மஹெதி ஹசன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். </p><p>

வங்காளதேச அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7f4346-032d-4ed7-99ba-a446f634437c/26-6a5a3c9252756.webp' />&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Bangladesh level the three-match series. <br><br>Decider this Sunday at the same venue, starting at 12.30pm (CAT)💥<a href="https://x.com/hashtag/ZIMvBAN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ZIMvBAN</a> <a href="https://x.com/hashtag/ExperienceZimbabwe?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ExperienceZimbabwe</a> 📝 <a href="https://t.co/QE8ALjY6ZP">https://t.co/QE8ALjY6ZP</a> <a href="https://t.co/NqBNXnOTB9">pic.twitter.com/NqBNXnOTB9</a></p>&mdash; Zimbabwe Cricket (@ZimCricketv) <a href="https://x.com/ZimCricketv/status/2078118807818698940?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T15:10:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்கள் கிட்ட ரவுடிங்க கலாட்டா பண்ணாங்க - ஆய்வுக்கு வந்த முதல்வர் விஜய்யிடம் புகார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/students-complaint-to-cm-vijay-hostel-inspection-1784298826"></link>
            <id>https://news.lankasri.com/article/students-complaint-to-cm-vijay-hostel-inspection-1784298826</id>
            <summary type="text">சமூகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய்யிடம் மாணவர்கள் ஏராளமான புகார்களை தெரிவித்துள்ளனர்.

சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு

த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய்யிடம் மாணவர்கள் ஏராளமான புகார்களை தெரிவித்துள்ளனர்.</p><h3>

சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு</h3><p>

தமிழக முதல்வர் விஜய், இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூகநல விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். </p><p>

அங்குள்ள வசதிகளை பார்வையிட்ட அவர், மாணவர்களிடம குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e377c2fb-ae81-4a53-b9e4-8cc374e88abf/26-6a5a3d4bcdc6d.webp' /></p><p>

முதல்வர் விஜய்யிடம், அங்குள்ள மாணவர்கள் ஏராளமான புகார்களை தெரிவித்தனர்.</p><h3> 

மாணவர்கள் புகார்
</h3><p>
விடுதியில் பேசிய மாணவர், முன்னதாக புழு, பூச்சி உள்ள உணவே வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஒப்பந்ததாரர் மாற்றப்பட்ட பின்னர் 5 நாட்களுக்கு நல்ல உணவு கிடைத்தது. மீண்டும் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. </p><p>

பல மாணவர்கள் இங்கு தங்கி, TNPSC மற்றும் UPSCக்கு படிகின்றனர். அவர்கள் இன்ஸ்ட்டியூட் முடித்து வர இரவு நேரமாகி விடுவதால், விடுதி கதவை மூடி விடுகின்றனர்.&nbsp;</p><p> பல மாணவர்கள் இரவு கொசுக்கடியில் பார்க்கில் தூங்க வேண்டிய நிலை உள்ளது. ஒருமுறை மாணவர்கள் கிட்ட ரவுடிங்க வந்து கலாட்டா பண்ணாங்க.
</p><p> வார்டன் மற்றும் கண்காணிப்பாளர்கள் மாணவர்களை இழிவாக பேசுகின்றனர். 

கழிவறை உடைந்து சுத்தமில்லாத நிலையில் உள்ளது. போதிய கண்காணிப்பு கேமராக்கள் இல்லை" என கூறினார். </p><p>

மாணவர் கூறிய புகார்களை கேட்டுக்கொண்ட முதல்வர் விஜய், அங்குள்ள சமையல் தயாரிப்பு கூடம், கழிவறை, மாணவர்களின் அறை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். </p><p>

இதன் பின்னர் இந்த ஆய்வு குறித்து பேசிய சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு, முதல்வர் ஆய்வுக்கு செல்வது எங்களுக்கே 10 நிமிடம் முன்னதான் தெரியும். ஒரு முதலமைச்சரே பசங்க கிட்ட நேரடியா குறைகளை கேக்குறதை இப்போதான் பாக்குறேன். </p><p>

மாணவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும் என முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்" என பேசினார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T14:33:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்தெந்த ராசிகள் அம்மனை வழிபாடு செய்யலாம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-rasi-should-worship-sakthi-1784292851"></link>
            <id>https://news.lankasri.com/article/which-rasi-should-worship-sakthi-1784292851</id>
            <summary type="text">அம்மன் என்பவர் இந்து சமயத்தில் பிரபஞ்சத்தின் படைப்பு, காப்பு, மற்றும் அழிப்புத் தொழில்களுக்கு காரணமான சக்தியின் வடிவமாக வணங்கப்படுகிறார்.

அம்மன் பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்மன் என்பவர் இந்து சமயத்தில் பிரபஞ்சத்தின் படைப்பு, காப்பு, மற்றும் அழிப்புத் தொழில்களுக்கு காரணமான சக்தியின் வடிவமாக வணங்கப்படுகிறார்.
</p><p>
அம்மன் பல்வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் பக்தர்களால் வழிபடப்படுகிறார். </p><p>

அவற்றில் மாரியம்மன, துர்கை, காளி, மீனாட்சி மற்றும் காமாட்சி ஆகியவை சில முக்கிய வடிவங்கள் ஆகும்.
</p><p>
இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளி என்பதால், தமிழகத்தின் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
</p><p>
அம்மன் வழிபாட்டிற்கு உகந்த ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், அதிகாலை எழுந்து குளித்துவிட்டு, அம்மன் கோவில்களில் கூழ் வார்த்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்திக்கடன்களைச் செலுத்துவார்கள்.
</p><p>
வீடுகளிலும் கோவில்களிலும் அம்மன் பக்திப் பாடல்களை ஒலிக்கவிட்டு வழிபடுவது மன அமைதியையும், ஆன்மீக சக்தியையும் தரும்.
</p><p>
அந்தவகையில், எந்தெந்த ராசிகள் அம்மனை வழிபாடு செய்யலாம் என்று இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tKBHDAetrMo" width="640" height="360" class="note-video-clip"></iframe> &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T14:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையவழியில் மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு - மக்களுக்கு முதல்வர் விஜய் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-calls-peoples-for-self-enumeration-census-1784296302"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-calls-peoples-for-self-enumeration-census-1784296302</id>
            <summary type="text">மக்கள்தொகை சுய கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் கலந்து கொள்ள முதல்வர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு

இந்தியாவில் ஒவ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள்தொகை சுய கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் கலந்து கொள்ள முதல்வர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.</p><h3>

மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு</h3><p>

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நடத்தப்படும், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
</p><p>
இந்த முறை விருப்பமுள்ள மக்கள் சுயமாக இணைய வழியிலும் தங்களது விவரங்களை வழங்கும் வகையில், சுய கணக்கெடுப்பில்(Self Enumeration) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a29ce15-9cd2-4d93-b16c-b85253b9776e/26-6a5a3370845cd.webp' /></p><p>

இந்த சுய கணக்கெடுப்பு, இன்று(ஜூலை 17) தொடங்கி ஜூலை 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. </p><p>

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் விஜய் தனது மடிக்கணினி மூலம் இந்த சுயகணக்கெடுப்பில் பங்குபெற்று தனது விவரங்களை பதிவு செய்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

மேலும், தமிழ்நாட்டு மக்களும் இதில் பங்குபெற முதல்வர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். </p><h3> 

முதல்வர் விஜய் அழைப்பு </h3><p>

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்! </p><p> 

நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b5ab71c-9834-4340-8cf2-1087046498b0/26-6a5a336fd32d8.webp' /></p><p>

இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள். </p><p>

இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்! <br><br>நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே,… <a href="https://t.co/fvA6pX24Jq">pic.twitter.com/fvA6pX24Jq</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2078079650815971589?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T13:51:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் வீரருக்கு லஞ்சம் - முன்னாள் இந்திய வீரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lpl-jaffna-kings-co-owner-manjot-kalra-arrested-1784295238"></link>
            <id>https://news.lankasri.com/article/lpl-jaffna-kings-co-owner-manjot-kalra-arrested-1784295238</id>
            <summary type="text">கிரிக்கெட் வீரருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த T20 அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் 

2026 லங்கா பிரீமியர் லீக்(L...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிக்கெட் வீரருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த T20 அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
லங்கா பிரீமியர் லீக் </h3><p>

2026 லங்கா பிரீமியர் லீக்(LPL) இலங்கையில் இன்று தொடங்கி வரும் ஆகஸ்டு 8 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d11dee09-43bb-49ef-a90b-e7ec2b682f69/26-6a5a2f48a7d28.webp' /></p><p>

இதில், 5 அணிகள் பங்குபெற்று விளையாட உள்ளது. முதல் போட்டியில், 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜாப்னா கிங்ஸ் அணியும், காலி டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளது.</p><h3>

மன்ஜோத் கல்ரா கைது</h3><p> 

இந்நிலையில் வீரருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக முன்னாள் இந்திய வீரரும், ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாருமான 27 வயதான மன்ஜோத் கல்ராவை(Manjot Kalra), இலங்கையின் விளையாட்டுத் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaeb5bd0-cef5-4215-bfd2-69057b7baf66/26-6a5a2f495a432.webp' /></p><p>
10 நாட்களுக்கு முன்பு, கல்ரா ஒரு வீரரை அணுகி அவருக்கு 95 லட்சம் இலங்கை ரூபாய் லஞ்சம் வழங்க முயற்சித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>
மேலும், ஜாப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடும் இலங்கை வீரர்களான பானுக ராஜபக்ச, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் துனித் வெல்லலகே ஆகியோர் புகார் அளித்ததாக காவல்துறை தெரிவித்தது. </p><p>

முன்னதாக தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமையாளரான தமீம் ரஹ்மான், பந்தயங்களை ஏற்பாடு செய்ததையும், ஒரு வீரரை செல்வாக்கு செலுத்த முயன்றதையும் ஒப்புக்கொண்ட பின்னர் அவருக்கு நீதிமன்றம் 4 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையையும் 24 மில்லியன் இலங்கை ரூபாய்கள் அபராதமும் விதித்தது.</p><p> 

அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டாலும், LPL தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8dca382-101b-4eea-a75c-678798622daa/26-6a5a2f47da6ee.webp' /></p><p>

2018 ஆம் ஆண்டின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியில் விளையாடிய மன்ஜோத் கல்ரா, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்து பிரபலமானார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T13:34:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைசி ஓவரில் சிக்ஸர்மழை! ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த வீரர் (வீடியோ)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mohammad-saifuddin-28-runs-in-one-over-vs-zimbabwe-1784293859"></link>
            <id>https://news.lankasri.com/article/mohammad-saifuddin-28-runs-in-one-over-vs-zimbabwe-1784293859</id>
            <summary type="text">ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சைப் ஹசன் மற்றும் தன்ஸித் ஹசன் அரைசதம் அடித்தனர்.சைப் ஹசன், தன்ஸித் ஹசன்

வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சைப் ஹசன் மற்றும் தன்ஸித் ஹசன் அரைசதம் அடித்தனர்.</p><h2>சைப் ஹசன், தன்ஸித் ஹசன்
</h2><p>
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Bangladesh post 186 runs on the board, setting the stage for an exciting contest. Now it&#39;s over to the bowlers to defend the total<a href="https://x.com/hashtag/BCB?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BCB</a> <a href="https://x.com/hashtag/Tigers?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Tigers</a> <a href="https://x.com/hashtag/Bangladesh?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Bangladesh</a> <a href="https://x.com/hashtag/Cricket?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Cricket</a> <a href="https://x.com/hashtag/ZIMvBAN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ZIMvBAN</a> <a href="https://t.co/DTPNp0EojZ">pic.twitter.com/DTPNp0EojZ</a></p>&mdash; Bangladesh Cricket (@BCBtigers) <a href="https://x.com/BCBtigers/status/2078096836276133948?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p></p><p>

முதலில் துடுப்பாடிய வங்காளதேச அணியில் சைப் ஹசன், தன்ஸித் ஹசன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.&nbsp;</p><p>
அதிரடி அரைசதம் அடித்த சைப் ஹசன் (Saif Hassan) 55 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தன்ஸித் ஹசன் (Tanzid Hasan) 58 ஓட்டங்களில் வெளியேறினார். 

இந்தக் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 88 பந்துகளில் 120 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad5931fa-1e5c-446a-9906-1177c975d63d/26-6a5a2aed12057.webp' />&nbsp;</p><h2>வாணவேடிக்கை&nbsp;</h2><p>டௌஹித் ஹிரிடோய் (6), பர்வேஸ் ஹொசைன் (1) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 

எனினும் யாசிர் அலி களமிறங்கியதும் சிக்ஸர் பறக்கவிட்டார்.</p><p> கடைசி ஓவரில் மொஹம்மது சைஃபுதின் தொடர்ச்சியாக 4 சிக்ஸர் அடித்து வாணவேடிக்கை காட்டினார். 

அதன்மூலம் ஒரே ஓவரில் 28 ஓட்டங்கள் கிடைக்க, வங்காளதேச அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

மொஹம்மது சைஃபுதின் (Mohammad Saifuddin) 10 பந்துகளில் 31 ஓட்டங்களும், யாசிர் அலி 12 பந்துகளில் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a3d9a68-2c4d-416a-9e32-fbfe2e88371a/26-6a5a2aee04628.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T13:15:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு... நான்கு பேருக்கு மலேரியா தொற்று உருவானதால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/4-germany-airport-workers-infected-malaria-1784292617"></link>
            <id>https://news.lankasri.com/article/4-germany-airport-workers-infected-malaria-1784292617</id>
            <summary type="text">ஜேர்மன் விமான நிலையம் ஒன்றின் ஊழியர்கள் நான்கு பேருக்கு மலேரியா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு கொசு விமானத்துக்குள் நுழைந்ததால் இந்த தொற்று பரவியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் விமான நிலையம் ஒன்றின் ஊழியர்கள் நான்கு பேருக்கு மலேரியா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
ஒரு கொசு விமானத்துக்குள் நுழைந்ததால் இந்த தொற்று பரவியுள்ளதாக கருதப்படும் நிலையில், மலேரியா தொற்று பரவல் ஏற்படலாம் என்னும் அச்சம் உருவாகியுள்ளது.
</p><h3>
விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு...
</h3><p>
ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் விமான நிலையத்தில், பயணிகளின் உடைமைகளைக் கையாளும் ஊழியர்கள் நான்கு பேருக்கு மலேரியா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b09bb414-610a-4a8d-b815-7a7dcdd3ebe8/26-6a5a250bac457.webp' /></p><p>
விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு இந்த தொற்று பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
</p><p>
எந்த விமானத்தில் இந்த கொசுப் பிரச்சினை ஏற்பட்டது என்பது தெரியவில்லை.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், விமானப்பணியாளர்கள் யாருக்காவது காய்ச்சல் வந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்திக்குமாறும், ’விமான நிலைய மலேரியா’ குறித்து மருத்துவரிடம் திட்டவட்டமாக குறிப்பிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eed6bbd8-5577-47ae-a3a3-59ff5df02ae0/26-6a5a250b044e6.webp' /></p><p>
1969க்கும் 2024க்கும் இடையில், இத்தகைய விமான நிலைய மலேரியா தொற்றால் 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 9 பேர் ஜேர்மனியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T12:54:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனையை எச்சரிக்கும் முக்கிய அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/insulin-resistance-symptoms-in-tamil-1784292044"></link>
            <id>https://news.lankasri.com/article/insulin-resistance-symptoms-in-tamil-1784292044</id>
            <summary type="text">இன்சுலின் என்பது நமது உடலில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோன் ஆகும். இது கணையத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது.இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்களுக்குள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்சுலின் என்பது நமது உடலில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோன் ஆகும். இது கணையத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது.</p><p>இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்களுக்குள் கொண்டு சென்று, உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க இன்சுலின் உதவுகிறது.
</p><p>
ஆனால், தசைகள், கொழுப்பு மற்றும் கல்லீரலில் உள்ள செல்கள் இன்சுலினுக்கு சரியாக பதிலளிக்காதபோது, இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2b97452-f581-4617-bf1b-d2e3c60e9a04/26-6a5a243d52416.webp' /></p><p>இதற்கு உரிய சிகிச்சை அளிக்காமல் விட்டால், நாளடைவில் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
</p><p>
அந்தவகையில், இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனையை எச்சரிக்கும் முக்கிய அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.&nbsp;</p><h2>என்னென்ன அறிகுறிகள்?
</h2><ul><li>
வயிற்றுப் பகுதியில் தொடர்ந்து எடை அதிகரிப்பது.</li><li> கழுத்து, அக்குள் மற்றும் இடுப்பு பகுதிகளில் தோல் கருமையாக மாறுவது.</li><li> திடீரென தோலில் மருக்கள் அதிகரிப்பது.</li><li>போதுமான தூக்கம் இருந்தும் உடல் சோர்வாக இருப்பது.</li><li> முகம் வீங்கியது போல் தோன்றுவது.</li><li>உணவு சாப்பிட்ட உடனேயே மீண்டும் பசி எடுப்பது.</li><li>சர்க்கரை உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படுவது.</li><li>சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே உடலில் ஆற்றல் குறைவது.</li><li>கவனம் மற்றும் நினைவாற்றல் குறைவது.</li><li>இரத்தப் பரிசோதனையில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு குறைவாகவும் இருப்பது.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57b791b2-f0f8-49ec-b5e3-bb61a3643ed4/26-6a5a243c8a402.webp' /></p><h2>செய்ய வேண்டிய மாற்றங்கள்</h2><ul><li>

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும்.
</li><li>உணவின் அளவை கட்டுப்படுத்த வேண்டும்.
</li><li>எந்த வேளை உணவையும் தவிர்க்கக்கூடாது.
</li><li>சர்க்கரை நிறைந்த பானங்களை தவிர்க்க வேண்டும்.
</li><li>வெளி உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
</li><li>வாரத்திற்கு 3 முதல் 4 முறை வலிமைப் பயிற்சி செய்ய வேண்டும்.
</li><li>தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
</li><li>ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
</li><li>இரவில் போதுமான ஆழ்ந்த தூக்கம் பெற வேண்டும்.</li><li>
மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.&nbsp;&nbsp;</li></ul><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T12:47:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லார்ட்ஸில் ஓய்வை அறிவிக்க உள்ள ரோஹித் சர்மா? போட்டியை காண வந்துள்ள பெற்றோர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rohit-sharma-to-retire-in-lords-parent-came-london-1784292071"></link>
            <id>https://news.lankasri.com/article/rohit-sharma-to-retire-in-lords-parent-came-london-1784292071</id>
            <summary type="text">லார்ட்ஸில் நடைபெற உள்ள போட்டியில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க உள்ளதாகவும், அந்த போட்டியை காண அவரது பெற்றோர்கள் லண்டன் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>லார்ட்ஸில் நடைபெற உள்ள போட்டியில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க உள்ளதாகவும், அந்த போட்டியை காண அவரது பெற்றோர்கள் லண்டன் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. </p><h3>

ஓய்வை அறிவிக்க உள்ள ரோஹித் சர்மா?</h3><p>

இந்தியா மற்றும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டி20 மற்றும் 3 ODI போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. </p><p>

ஜூலை 19 ஆம் திகதி நடைபெற லார்ட்ஸில் நடைபெற உள்ள 3வது ODI போட்டியில் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd3e1cda-0155-4c5b-898d-4bf485e2f923/26-6a5a22e90abe9.webp' /></p><p>
இங்கிலாந்திற்கான எதிரான முதல் 2 ODI போட்டிகளில் 11 மற்றும் 26 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார். 

கடைசியாக விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளில், ஒரு அரைசதம் உட்பட 241 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார். </p><p>

ஒருபக்கம் இவ்வாறு ஓட்டங்களை குவிக்க திணறி வரும் நிலையில், 2027 உலக கிண்ணத்திற்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு பிசிசிஐ வாய்ப்பளிக்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>

இதன் காரணமாக அதிருப்தியில் உள்ள ரோஹித் சர்மா லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியுடன் ஓய்வை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.</p><h3> 

 லண்டன் வந்துள்ள பெற்றோர்கள்</h3><p> 

ரோஹித் சர்மாவின் இறுதிப்போட்டியை காண அவரது பெற்றோர்களான குருநாத் ஷர்மா மற்றும் பூர்ணிமா ஷர்மா ஆகியோர் லண்டனுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/095aaf68-6560-4728-b6e0-9a1d123d49df/26-6a5a22e9b27cf.webp' /></p><p>இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, " உண்மை என்னவென்றால், ரோஹித் சர்மாவும் தேர்வுக்குழுவினரும் பேசினார்கள். இப்போதுதான் அங்கிருந்து வருகிறேன். ஓய்வு பெறுவாரா என்பது உண்மையா, வதந்தியா என்று தெரியாது.மேலும் அவருக்கு 40 வயதை நெருங்குகிறது" என தெரிவித்துள்ளார். </p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் பார்திவ் படேல், "ரோஹித் சர்மா லார்ட்ஸ் போட்டியுடன் ஓய்வு பெறுவது உண்மையாக இருந்தால் அதனை சதத்துடன் அவர் விடைபெற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 ஐசிசி கிண்ணத்தை வென்றுள்ளது. </p><p> 

2023 ODI உலக கிண்ணத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவிய நிலையில், 2027 உலக கிண்ணத்தை வென்று கொடுத்து விட்டு ஓய்வை அறிவிக்க விரும்பினார். </p><p>

2024 T20 உலக கிண்ணத்தை வென்றதும் சர்வதேச T20 போட்டிகளில் ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா, கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்தார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T12:41:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[10,000 mAh பேட்டரி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் OnePlus மற்றும் Oppo? வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/source-says-oneplus-and-oppo-bring-10000-mah-phone-1784291165"></link>
            <id>https://news.lankasri.com/article/source-says-oneplus-and-oppo-bring-10000-mah-phone-1784291165</id>
            <summary type="text">10,000 mAh பேட்டரி ஸ்மார்ட்போனை OnePlus மற்றும் Oppo நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.&amp;nbsp;Oppo, OnePlus 

இந்தியாவில் சமீபத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>10,000 mAh பேட்டரி ஸ்மார்ட்போனை OnePlus மற்றும் Oppo நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.&nbsp;</p><h2>Oppo, OnePlus </h2><p>

இந்தியாவில் சமீபத்திய பெரிய பேட்டரி கொண்ட Oppo A6 Pro 5G ஸ்மார்ட்போனை Oppo நிறுவனம் அறிமுகப்படுத்தியது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d76e3f27-5f3c-4673-b6bd-a5a459aee59f/26-6a5a2065407ff.webp' />&nbsp;</p><p></p><p>கடந்த ஏப்ரல் மாதம் OnePlus நிறுவனமும் பெரிய பேட்டரி கொண்ட OnePlus Nord 6 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.</p><p> 

அந்நிறுவனத்தின் இந்த மொடல் ஸ்மார்ட்போன்தான் OnePlus-யின் மிகப்பெரிய பேட்டரி (9000 mAh) கொண்டதாக இருந்தது.</p><p> 

இந்த நிலையில், Oppo மற்றும் OnePlus நிறுவனங்கள் 10,000 mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>ஆரம்பக்கட்ட ஆய்வு
</h2><p>
 
சீன சமூக ஊடகத் தளமான Weibo-வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், OnePlus போன் தற்போது ஆரம்பக்கட்ட ஆய்வு நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. </p><p>


ஆனால் 10,000 mAh பேட்டரி ஸ்மார்ட்போன் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் OnePlus நிறுவனம் வெளியிடவில்லை.
</p><p>

அதே சமயம், அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள Oppo நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் SM8845 என்ற மொடல் எண்ணைக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இது 10,000 mAh-க்கும் அதிகமான திறன் கொண்ட பேட்டரியுடன் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.
</p><p>
முன்னதாக, Oppo நிறுவனத்தின் Oppo A6 Pro 5G ஸ்மார்ட்போன், இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 7000 mAh பேட்டரி மற்றும் 80W வேகமான சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82c82c02-7002-47ac-9984-bc11834681dd/26-6a5a206488d56.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T12:29:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[Post office: மொத்தம் ரூ.50 லட்சம் கிடைக்கும்.., எத்தனை வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sukanya-samriddhi-yojana-scheme-details-in-tamil-1784289823"></link>
            <id>https://news.lankasri.com/article/sukanya-samriddhi-yojana-scheme-details-in-tamil-1784289823</id>
            <summary type="text">பொதுவாக, பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களின் முதல் தேர்வாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன.

அதன்படி, பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களின் முதல் தேர்வாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன.</p><p>

அதன்படி, பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் சேமிப்புத் திட்டம் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆகும். </p><p>

இது சுகன்யா சம்ரித்தி யோஜனா என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.</p><p> 

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணத்தை சேமிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.&nbsp;</p><p>இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9042b7b1-9b39-4864-947f-f5434a7f99f9/26-6a5a1a213b186.webp' />&nbsp;&nbsp;</p><p>
தொடர்ந்து ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.71 லட்சத்திற்கும் அதிகமான தொகையைப் பெற முடியும்.</p><p>

செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கு தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை மத்திய அரசு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கிறது. </p><p>

இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1,05,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், சுமார் ரூ.50 லட்சம் கிடைக்கும்.&nbsp;</p><p>8.2% வட்டி தொடர்ந்து கிடைத்தால், 21 ஆண்டுகளின் முடிவில் சுமார் ரூ.50.27 லட்சம் கிடைக்கும்.</p><p>

இந்தக் கணக்கீட்டின்படி, ஆண்டுக்கு முதலீடு ரூ.1,05,000 எனில் 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.15.75 லட்சம் ஆகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c174f9ea-4d10-47a5-8d4b-1bf24dcce7f4/26-6a5a1a21e25f2.webp' /></p><p>எனவே மொத்த வட்டி சுமார் ரூ.34.52 லட்சம் கிடைக்கும். அதேபோல் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.50.27 லட்சம் கிடைக்கும்.&nbsp;</p><p>இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்த வேண்டும். அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. </p><p>

கணக்கு தொடங்கிய 21 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.&nbsp;</p><p>இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். </p><p>

80C பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீட்டுக்கு வரி விலக்கு பெறலாம். மேலும், கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விதிக்கப்படாது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T12:05:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்துக்கு காத்திருந்த இளம்பெண்ணுக்கு பட்டப்பகலில் நிகழ்ந்த பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-murders-girl-in-bus-stand-for-reject-love-1784288610"></link>
            <id>https://news.lankasri.com/article/man-murders-girl-in-bus-stand-for-reject-love-1784288610</id>
            <summary type="text">கர்நாடகா மாநிலத்தில், பேருந்துக்கு காத்திருந்த இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் பட்டாக்கத்தியால் சரமாரியாகத் தாக்கினார்.

பட்டப்பகலில் நிகழ்ந்த அந்த கொடூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடகா மாநிலத்தில், பேருந்துக்கு காத்திருந்த இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் பட்டாக்கத்தியால் சரமாரியாகத் தாக்கினார்.</p><p>

பட்டப்பகலில் நிகழ்ந்த அந்த கொடூரத் தாக்குதலில் அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்!</p><h3>

பட்டப்பகலில் நிகழ்ந்த பயங்கரம்
</h3><p>
நேற்று மாலை, கர்நாடகா மாநிலத்திலுள்ள Bantwal நகரில் லாவண்யா (21) என்னும் இளம்பெண் பேருந்து நிலையம் ஒன்றிற்குச் சென்று, பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/757c46a7-eaa9-49b1-ad48-130c3629e8cd/26-6a5a156388032.webp' /></p><p>

அப்போது, அங்கு ஏற்கனவே வந்து காத்திருந்த ஒரு இளைஞர், தன் பையிலிருந்த பட்டாக்கத்தியை உருவியவண்ணம் லாவண்யாவை நோக்கி ஓடியுள்ளார்.</p><p>

தன்னை நோக்கி கத்தியுடன் ஒருவர் ஓடிவருவதைக் கண்ட லாவண்யா, தப்பியோட முயன்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d536aa-ae39-4dce-928f-0f9bf20f2892/26-6a5a156438212.webp' /></p><p>
ஆனால், அந்த இளைஞர் லாவண்யாவை துரத்தி துரத்தி வெட்டியுள்ளார். லாவண்யா கீழே விழ, அந்த இளைஞர் கத்தியை வீசிவிட்டு அங்கு தயாராக நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.&nbsp;</p><p></p><h3>
ஒருதலைக் காதல்?
</h3><p>
இந்நிலையில், அந்த இளைஞர் பெயர் சேத்தன் என்றும், அவர் லாவண்யாவின் தூரத்து உறவினர் என்றும் கூறப்படுகிறது.
</p><p>
அவர் ஒருதலைபட்சமாக லாவண்யாவைக் காதலித்துவந்ததாகவும், அவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
பட்டப்பகலில் மக்கள்முன்னிலையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், தப்பியோடிய சேத்தனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T11:50:18+00:00</updated>
        </entry>
    </feed>
