<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-15T07:32:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இணையத்தில் வேகமாக பரவும் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesia-earthquake-building-collapse-video-1786778717"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesia-earthquake-building-collapse-video-1786778717</id>
            <summary type="text">இந்தோனேசியாவை 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.இந்தோனேசியா நிலநடுக்கம்இந்தோனேசியாவில் சனிக்கிழமை காலை 5.58 மணிக்கு 7.7 ரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவை 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.</p><h2>இந்தோனேசியா நிலநடுக்கம்</h2><p>இந்தோனேசியாவில் சனிக்கிழமை காலை 5.58 மணிக்கு 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>நிலநடுக்கத்தின் மையமானது கிழக்கு நுசா தெங்காரா (East Nusa Tenggara) மாகாணத்தின் எண்டே (Ende) நகரின் வடமேற்கே 42 மைல் தொலைவில் அமைந்திருந்தது.</p><p> நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசிய கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BUILDINGS SWAY VIOLENTLY and CRUMBLE as 7.7 MONSTER QUAKE ROCKS INDONESIA <a href="https://t.co/qMl0QaNyzT">https://t.co/qMl0QaNyzT</a> <a href="https://t.co/fvePye9AJo">pic.twitter.com/fvePye9AJo</a></p>&mdash; RT (@RT_com) <a href="https://x.com/RT_com/status/2088408804266307967?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2> அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி</h2><p>இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிடம் ஒன்று இடிந்து விழும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.</p><p>அதில், கட்டிடத்தின் கான்கிரீட் தளங்கள் இடிந்து விழுவதும், மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடுவதும் இடம்பெற்றுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T07:25:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட்டு உள்ளடக்க குற்றச்சாட்டு: உயிரிழந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cambridge-professor-jason-ardey-found-dead-1786776148"></link>
            <id>https://news.lankasri.com/article/cambridge-professor-jason-ardey-found-dead-1786776148</id>
            <summary type="text">திருட்டு உள்ளடக்க குற்றச்சாட்டுக்கு பிறகு கேம்பிரிட்ஜ் முன்னாள் பேராசிரியர் ஜேசன் ஆர்டே மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட்டு உள்ளடக்க குற்றச்சாட்டுக்கு பிறகு கேம்பிரிட்ஜ் முன்னாள் பேராசிரியர் ஜேசன் ஆர்டே மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h3> உயிரிழந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்</h3><p>

41 வயது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்வி சமூகவியல் முன்னாள் பேராசிரியர் ஜேசன் ஆர்டே(Jason Arday) லண்டன்&nbsp;பேட்டர்சீ(Battersea)&nbsp;பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அசைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.</p><p>இதையடுத்து அவரது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது, மேலும் இதில் சந்தேகத்திற்குரிய விவகாரங்கள் எதுவும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d36a4df-f515-455c-839b-56d03168ee01/26-6a800a56671e8.webp' /></p><p></p><h2> ஜேசன் ஆர்டே மீது எழுந்த விமர்சனங்கள்</h2><p>ஜேசன் ஆர்டே கடந்த 2023ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மிக இளைய கறுப்பின பேராசிரியராக பதவியேற்று வரலாற்று சாதனை படைத்து இருந்தார். &nbsp;
இருப்பினும் கடந்த மாதம் அவர் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தில் சமர்பித்த முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரை மீது திருட்டு உள்ளடக்க குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.</p><p> ஜேசன் ஆர்டே கட்டுரை கடந்த 2009ம் ஆண்டு வெளியான மாணவர் ஒருவரின் கட்டுரையின் பல உள்ளடக்கங்களை கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.</p><p>ஜேசன் ஆர்டே அந்த மாணவரின் பெயரை அவரது கட்டுரையில் குறிப்பிட்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ba719a0-b828-4fd7-98c6-67b0993f6ec8/26-6a800a571da84.webp' /></p><p>அத்துடன் ஆரம்ப காலத்தில் அவருக்கு இருந்த ஆட்டிசம் குறைபாடு, அவரது தடகள நிதி திரட்டும் முயற்சி ஆகியவையும் விமர்சனங்களுக்கு உள்ளானது.</p><h2> ராஜினாமா செய்த ஜேசன் ஆர்டே</h2><p>
இந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஜேசன் ஆர்டே தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.</p><p> மேலும் தன்னுடைய சக ஊழியர்களுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் ஊகங்கள் ஆகியவை கல்விசார் விவாதங்களை தாண்டி தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் பாதித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p>தன்னுடைய பதவி விலகல் முடிவால் யாரும் நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வதாக கருதக்கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T06:42:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவம்: பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/britain-wildfire-soldiers-help-firefighters-1786774414"></link>
            <id>https://news.lankasri.com/article/britain-wildfire-soldiers-help-firefighters-1786774414</id>
            <summary type="text">பிரித்தானியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறங்க இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறங்க இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
</p><p>


இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில் பல இடங்களில் காட்டுத்தீ கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே.</p><p>

இந்நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறங்க இருப்பதாக பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b66bfae5-6cd8-45f6-aeef-602dd2c752ac/26-6a80038f9d59a.webp' /></p><p>
</p><h2>காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவம்
</h2><p>
பிரித்தானியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், வேல்ஸ் நாட்டில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அவசர உதவிக்குழுவினருக்கு உதவியாக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுவருவதாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.</p><p>

வேல்ஸ் நாட்டிலுள்ள Blaenavon மற்றும் Porth போன்ற இடங்களில் பற்றியெரிந்துவரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் போராடிவரும் நிலையில், தங்களுக்கு உதவ ராணுவத்தை அனுப்பவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு உதவியாக சுமார் 100 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், மக்கள் பார்பிக்யூ முறையில் சமைத்தல் போன்ற காரணங்களுக்காக திறந்தவெளிகளில் தீப்பற்றவைக்கவேண்டாம் என்றும் ஆன்டி பர்னாம் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
திறந்தவெளிகளில் தீப்பற்றவைத்தல் பிறர் உயிருக்கு ஆபத்தாக அமையலாம் என்று கூறியுள்ள அவர், ஆகவே, பொதுமக்கள் தயவு செய்து அதைச் செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T06:13:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணம் செய்ய வேண்டாம் என்ற நாடுகளிலிருந்து குடியேற தடைவிதிக்க வேண்டும்: ஒன் நேஷன் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pauline-hanson-said-about-migration-ban-list-1786772337"></link>
            <id>https://news.lankasri.com/article/pauline-hanson-said-about-migration-ban-list-1786772337</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் பயணம் செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குடியேறுவதற்கு தடை விதிக்க பவுலின் ஹான்சன் அழைப்பு விடுத்துள்ளார். ஒன் நேஷன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் பயணம் செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குடியேறுவதற்கு தடை விதிக்க பவுலின் ஹான்சன் அழைப்பு விடுத்துள்ளார். </p><p>ஒன் நேஷன் தலைவர்&nbsp;பவுலின் ஹான்சன்,&nbsp;அவுஸ்திரேலியாவில் பயணம் செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குடியேறுவதற்கு தடை விதிக்க&nbsp;வேண்டும்&nbsp;என அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>பயணம் செய்ய வேண்டாம்</h2><p> 


அவுஸ்திரேலியாவின் ஸ்மார்ட் டிராவலரில் இந்த நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என ஒரு பட்டியல் வெளியிடப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61278818-e5cf-45bd-a3ef-83ab63a2a753/26-6a7ffe530eb4d.webp' /></p><p></p><p> 

சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் 'கடுமையான ஆபத்து' இருப்பதால், அந்த இடங்களைத் தவிர்க்குமாறு இது அவர்களை எச்சரிக்கிறது.
</p><p>
தற்போது இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், ஈரான், காங்கோ ஜனநாயகக் குடியரசு, உக்ரைன், வட கொரியா மற்றும் சிரியா ஆகியவை அடங்கும். </p><h2>பவுலின் ஹான்சன்</h2><p> 

இந்த நிலையில், ஒன் நேஷன் கட்சியின் தலைவரான பவுலின் ஹான்சன் (Pauline Hanson) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>
அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், "கடுமையான பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அபாயங்கள் காரணமாக ஒரு நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அரசாங்கம் அவுஸ்திரேலியர்களை எச்சரித்தால், அந்நாட்டில் இருந்து வரும் சாதாரண குடியேற்றத்தை வழக்கம்போல் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடாது" என தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் அவர், 'புதிதாக வருபவர்களுக்கு பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்வதில் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் மீது அவுஸ்திரேலியர்களுக்கு நம்பிக்கை இல்லை' என்றும் கூறியுள்ளார்.
</p><p>

அத்துடன் அவுஸ்திரேலியர்களை பாதுகாப்பதில் அல்பேனிய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் பவுலின் ஹான்சன் குற்றம்சாட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58066389-a938-447b-9c57-f255ec03df7b/26-6a7ffe521199a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T05:36:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹீத்ரோ விமான நிலையத்தில் வெள்ளப்பெருக்கு: பயணிகளுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/heathrow-airport-travel-warning-due-to-flooding-1786771410"></link>
            <id>https://news.lankasri.com/article/heathrow-airport-travel-warning-due-to-flooding-1786771410</id>
            <summary type="text">&amp;nbsp;வெள்ளப்பெருக்கு காரணமாக ஹீத்ரோ விமான நிலையத்தின் 2 மற்றும் 3 வது முனையங்களுக்கான வழித்தடங்களில் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெள்ளப்பெருக்கு காரணமாக ஹீத்ரோ விமான நிலையத்தின் 2 மற்றும் 3 வது முனையங்களுக்கான வழித்தடங்களில் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த முனையங்களுக்கு சாலை வழியாக செல்லும் அனைத்து பாதைகளும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.</p><p> மேலும் பயணிகள் சாலை போக்குவரத்தை தவிர்த்து விட்டு ரயில் மற்றும் நிலத்தடி சுரங்க போக்குவரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4efc99a1-63be-4130-9631-bf29deb7c6f5/26-6a7ff7d39d28d.webp' /></p><p></p><p> இந்த தற்காலிக மாற்றத்துக்கு ஏற்றவாறு 2 வது மற்றும் 3 வது முனையங்களுக்கு செல்பவர்கள் அதற்கு ஏற்றவாறு பயண திட்டங்களை வடிவமைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p> அத்துடன் பொதுப் போக்குவரத்து மூலமாக முனையங்களுக்கு வருபவர்கள் அதற்கான கூடுதல் நேரத்தை ஒதுக்கி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-15T05:25:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசா காலாவதியானால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேறவேண்டும்: கனேடிய மாகாணம் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/students-with-expired-visa-should-exit-in-canada-1786769186"></link>
            <id>https://news.lankasri.com/article/students-with-expired-visa-should-exit-in-canada-1786769186</id>
            <summary type="text">வெளிநாட்டு மாணவர்கள் கனடாவுக்கு படிக்கவந்தால், படித்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார் ஆல்பர்ட்டா பிரீமியர்.

கனடாவின் ஆல்பர்ட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு மாணவர்கள் கனடாவுக்கு படிக்கவந்தால், படித்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார் ஆல்பர்ட்டா பிரீமியர்.
</p><p>
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்கள் பட்டம் பெற்றபின் பணி உரிமம் பெறுவது தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
</p><h2>
வெளிநாட்டு மாணவர்கள் வெளியேறவேண்டும்
</h2><p>
இந்நிலையில், சர்வதேச மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான டேனியல் ஸ்மித், வெளிநாட்டு மாணவர்கள் கனடாவுக்கு படிக்கவந்தால், படித்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார்.&nbsp;</p><p>எங்கள் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும், ஆல்பர்ட்டா மாகாண மக்களின் வரிப்பணத்தால் கட்டப்பட்டவை. அவை ஆல்பர்ட்டா மாகாண மாணவர்களுக்காக கட்டப்பட்டவை.</p><p>அங்கு சர்வதேச மாணவர்களுக்கு இடம் இருக்குமானால், விடயம் எளிமையானது, கல்வி கற்றுக்கொள்ளுங்கள், உங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று உங்கள் கல்வியின் அடிப்படையில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள், அவ்வளவுதான், என்கிறார் ஸ்மித்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T04:44:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்ஸர்மழை பொழிந்த வால்டர், கிளாசன்: சன்ரைசர்ஸை நொறுக்கிய மான்செஸ்டர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/paul-walter-and-klaasen-blast-fifty-manchester-won-1786765634"></link>
            <id>https://news.lankasri.com/article/paul-walter-and-klaasen-blast-fifty-manchester-won-1786765634</id>
            <summary type="text">Manchester super giants beat Sunrisers Leeds: சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு எதிரான The Hundred போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அபார வெற்றி பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Manchester super giants beat Sunrisers Leeds: சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு எதிரான The Hundred போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அபார வெற்றி பெற்றது.
</p><p>
கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடந்த The Hundred போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸை வீழ்த்தியது.&nbsp;&nbsp;</p><h2>வால்டர், கிளாசன் கூட்டணி </h2><p><span style="color: inherit; font-size: 14px;">மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகளுக்கு இடையிலான The Hundred போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.&nbsp;</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8968b5a-4e6c-42c2-91eb-70218910df8b/26-6a7fe30764c64.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் டிம் செய்பெர்ட் டக்அவுட் ஆனார். அடுத்து ஜோஸ் பட்லர் அதிரடியாக 20 பந்துகளில் 33 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
பின்னர் பவுல் வால்டர் மற்றும் ஹெய்ன்ரிச் கிளாசன் கூட்டணி எதிரணி பந்துவீச்சை சிதறடித்தது. அரைசதம் அடித்த ஹெய்ன்ரிச் கிளாசன் (Heinrich Klaasen) 26 பந்துகளில் 63 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார்.</p><p> 

பவுல் வால்டர் (Paul Walter) 46 பந்துகளில் 8 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் விளாச, மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 186 ஓட்டங்கள் குவித்தது.
</p><h2>
மான்செஸ்டர் வெற்றி </h2><p>அடுத்து களமிறங்கிய ஹாரி ப்ரூக் 31 பந்துகளில் 49 ஓட்டங்கள் விளாசினார். ஆனால் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரியான் ரிக்கெல்டன் தனியாளாக வெற்றிக்காக போராடினார்.</p><p>

எனினும், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியால் 166 ஓட்டங்களே எடுக்க முடிந்ததால், 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் வெற்றி பெற்றது.</p><p>

இறுதிவரை களத்தில் நின்ற ரியான் ரிக்கெல்டன் (Ryan Rickelton) 34 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்தார். ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளும், சோனி பேக்கர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4d0b5ac-7755-4dd8-8dec-cf08ce16ae2f/26-6a7fe308364af.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T03:53:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவை உலுக்கிய வலுவான நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/earthquake-coast-of-indonesia-1786753536"></link>
            <id>https://news.lankasri.com/article/earthquake-coast-of-indonesia-1786753536</id>
            <summary type="text">Magnitude 7.7 earthquake strikes off coast of Indonesia: இந்தோனேசியக் கடற்கரைக்கு அப்பால் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் சுனாமி எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Magnitude 7.7 earthquake strikes off coast of Indonesia: இந்தோனேசியக் கடற்கரைக்கு அப்பால் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்தோனேசியக் கடற்கரைக்கு அப்பால் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>ஃப்ளோரஸ் (Flores) பகுதி</h2><p> </p><p>
சனிக்கிழமையன்று இந்தோனேசிய நேரப்படி காலை 5:58 மணிக்கு, 10 கி.மீ ஆழத்தில் இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் (Flores) பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. </p><p>இதன் மையப்புள்ளி, கிழக்கு நுசா தெங்காரா (East Nusa Tenggara) மாகாணத்தில் உள்ள எண்டே (Ende) நகரத்திற்கு வட-வடமேற்கே 42 மைல் தொலைவில் அமைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44fd4439-613e-4096-bf07-f04b6134a798/26-6a7fb20244332.webp' /></p><p> </p><p>இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் முகமை சுனாமி எச்சரிக்கையை விடுத்ததுடன், கடற்கரைகள் மற்றும் ஆற்றங்கரைகளிலிருந்து விலகி இருக்குமாறு அப்பகுதி மக்களை வலியுறுத்தியுள்ளது. </p><p>புளோரஸ் தீவுக்கு அருகில் ஆழமற்ற கடலடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அந்த முகமை உறுதி செய்துள்ளது. அதிகாரிகள் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா என்பதைக் கண்டறிய கடலோர அலைமானிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால், பாதிக்கப்பட்ட கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.</p><p></p><h2>சுனாமி எச்சரிக்கை</h2><p> </p><p>17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா, பசிபிக் பெருங்கடல் பகுதியில் எரிமலைகள் மற்றும் புவிப்பிளவுப் பாதைகள் அமைந்துள்ள 'நெருப்பு வளையம்' (Ring of Fire) எனப்படும் பகுதியில் அமைந்திருப்பதால், நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகளுக்கு ஆளாகக்கூடியதாக உள்ளது. </p><p>இதற்கிடையில், கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதி, தீவுகள் அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் சுனாமி அச்சுறுத்தல் ஏதுமில்லை என்று அவுஸ்திரேலியாவின் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்தோனேசியாவில் 0.5 மீற்றர் முதல் 3 மீற்றர் வரையிலான சுனாமி அலைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் 2,400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள புளோரஸ் தீவில் அமைந்துள்ள மௌமேரே நகரவாசிகள், உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். </p><p>இந்தோனேசியாவின் பேரழிவுகரமான நிலநடுக்கங்களின் வரலாற்றில், 2004-ஆம் ஆண்டில் சுமத்ரா கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான பேரழிவு நிலநடுக்கமும் ஒன்றாகும். </p><p>இது ஒரு சுனாமியைத் தூண்டி, அப்பகுதி முழுவதும் 220,000 பேரைக் கொன்றது, இதில் இந்தோனேசியாவில் மட்டும் சுமார் 170,000 பேர் மரணமடைந்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T03:24:53+00:00</updated>
        </entry>
    </feed>
