<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-29T15:28:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[63 பந்தில் 132 ஓட்டங்கள்! LPL-யில் சம்பவம் செய்த இலங்கை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lahiru-udara-blast-132-runs-in-63-balls-lpl-2026-1785337748"></link>
            <id>https://news.lankasri.com/article/lahiru-udara-blast-132-runs-in-63-balls-lpl-2026-1785337748</id>
            <summary type="text">காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான LPL போட்டியில், கண்டி ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&amp;nbsp;லஹிரு உதார ருத்ரதாண்டவம்
காலி கல்லன...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான LPL போட்டியில், கண்டி ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>லஹிரு உதார ருத்ரதாண்டவம்</h2><p>
காலி கல்லன்ட்ஸ் மற்றும் கண்டி ராயல்ஸ் அணிகள் மோதிய LPL 2026 டி20 போட்டி பல்லகெலேவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b51b41a3-fa9e-423e-9020-18f3cd3e04ed/26-6a6a182246825.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய காலி கல்லன்ட்ஸ் அணி 208 ஓட்டங்கள் குவித்தது. சாம் ஹார்பர் 72 (38) ஓட்டங்களும், சரித் அசலங்கா 70 (32) ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
பின்னர் ஆடிய கண்டி ராயல்ஸ் அணியில் லஹிரு உதார (Lahiru Udara) ருத்ரதாண்டவம் ஆடினார்.</p><p> 

அவரது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் கண்டி ராயல்ஸ் 18.5 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
</p><p>
இறுதிவரை களத்தில் இருந்த லஹிரு உதார 63 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 132 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de62616b-f199-4d5d-8c4b-717ab627256f/26-6a6a182308966.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T15:09:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-ex-police-woman-again-jailed-for-lied-1785335557"></link>
            <id>https://news.lankasri.com/article/british-ex-police-woman-again-jailed-for-lied-1785335557</id>
            <summary type="text">பிரித்தானியாவில் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொய் கூறிய பெண் காவலர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு 

கென்ட் மாகாணத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொய் கூறிய பெண் காவலர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். </p><h2>பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு </h2><p>

கென்ட் மாகாணத்தின் மெய்ட்ஸ்டோனைச் சேர்ந்த 35 வயது லாரென் எவன்ஸ். முன்னாள் காவலரான இவர், ப்ரோம்லி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5c74a02-a168-4f40-8a0b-f44228acd731/26-6a6a0f904ee45.webp' />&nbsp;</p><p></p><p>
கடந்த 2023-யில் தனது பணிக்கு தாமதமாக சென்ற எவன்ஸ், சக ஊழியர்களிடம் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார். </p><p>

காரில் வந்த காவலர் அலெக்ஸ் வாட்ஸன், தன்னை தடுத்து நிறுத்தி தனது உடலை அந்தரங்கமாக சோதனையிட்டதாக உணர்ச்சிப்பூர்வமாக எவன்ஸ் விவரித்துள்ளார்.
</p><p>
அதன் அடிப்படையில் காவலர் அலெக்ஸ் வாட்ஸன், சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். 

மேலும் 23 மணிநேரம் காவலில் வைக்கப்பட்டு, விசாரணைக்கு பின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். </p><p>

ஆனால், பின்னர் மேற்கொள்ளப்பட்ட CCTV மற்றும் ANPR பகுப்பாய்வுகளில் எந்தத் தடையும் ஏற்படவில்லை என்பதும், அவரது வாகனம் நெடுஞ்சாலையை விட்டு வெளியேறவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டதால், அவர் விடுவிக்கப்பட்டார். </p><h2>

சிறை தண்டனை</h2><p>அதே சமயம் லாரென் எவன்ஸ் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதி நடவடிக்கையைத் திசை திருப்பிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார். </p><p>

பணிக்கு தாமதமாக வந்ததை மறைக்க அவர் இவ்வாறு பொய் குற்றச்சாட்டு கூறியது தெரிய வந்ததைத் தொடர்ந்து, லாரென் எவன்ஸுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>

இந்த நிலையில், லாரென் எவன்ஸின் தண்டனை காலம் இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. </p><p>முன்னதாக சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

'அளவுக்கு மீறிய மென்மையான தண்டனை' திட்டத்தின் கீழ் மறுஆய்வு செய்யப்பட்ட பிறகு, மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்போது அவரது தண்டனையை அதிகரித்தது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><i><b>WHATSAPP CHANNEL </b></i></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T14:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரல் சொடக்கு மூலம் ஒரு இன்னிங்ஸில் 8 விக்கெட் - கிரிக்கெட்டில் வினோத மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/clicky-ponting-finger-clicking-cricket-cheating-1785332156"></link>
            <id>https://news.lankasri.com/article/clicky-ponting-finger-clicking-cricket-cheating-1785332156</id>
            <summary type="text">விரல் சொடக்கு மூலம் நடுவரை ஏமாற்றிய சர்ச்சை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


கிளிக்கி பாண்டிங் சர்ச்சை 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், ஐ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விரல் சொடக்கு மூலம் நடுவரை ஏமாற்றிய சர்ச்சை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. </p><h3>


கிளிக்கி பாண்டிங் சர்ச்சை</h3><h3> </h3><p>

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், ஐபிஎல் போன்ற தொடர்களில் பந்து மட்டையில் பட்டதா என்பதை உறுதிப்படுத்த டிஆர்எஸ், ஸ்னிக்கோமீட்டர் போன்ற தொழில்நுட்பங்கள் இருக்கும். </p><p>

ஆனால் இங்கிலாந்தின் கிளப் கிரிக்கெட் லீக்குகளில் இது போன்ற தொழில்நுட்பங்கள் இல்லாமல், நடுவர் கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பதன் அடிப்படையிலே முடிவுகளை வழங்குகின்றனர்.&nbsp;</p><p>

இந்நிலையில், இங்கிலாந்து கிளப் கிரிக்கெட்டில் வினோத மோசடி நடைபெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0468db03-2ce8-4ea4-855b-74068543d6ca/26-6a6a01bdf2e1e.webp' /></p><p> 

வைரலாக இணையத்தில் பரவி வரும் காணொளியில், ஸ்லிப் அல்லது சில்லி பாயிண்ட் பகுதியில் நின்றிருந்த சால்ட்பர்ன் கிரிக்கெட் கிளப் வீரர் பிரையன் டிவைன், பந்தை விக்கெட் கீப்பர் பிடிக்கும் முன்னர், பேட்டை கடக்கும் போது பந்து பேட்டில் பட்டது போன்ற ஒலியை உருவாக்க தனது கை விரல்களால் பலமாக சொடக்கு போட்டு ஒலி எழுப்பியுள்ளார். </p><p></p><p>

இந்த போலி சத்தத்தை நிஜமான என கருதிய நடுவர்கள் பலமுறை அவுட் வழங்கியுள்ளனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/Saltburncc?ref_src=twsrc%5Etfw">@Saltburncc</a> First slip clicks his fingers to imitate an edge, bat nowhere near it and given out.<br>This is about the worst case of cheating I’ve ever seen in cricket.<br>Apparently, their keeper has a huge amount of catches this season.<a href="https://x.com/talkSPORT?ref_src=twsrc%5Etfw">@talkSPORT</a> <a href="https://x.com/bbctms?ref_src=twsrc%5Etfw">@bbctms</a> <a href="https://x.com/SkyCricket?ref_src=twsrc%5Etfw">@SkyCricket</a> <a href="https://x.com/TailendersPod?ref_src=twsrc%5Etfw">@TailendersPod</a> <a href="https://t.co/iM7lZfKF5q">pic.twitter.com/iM7lZfKF5q</a></p>&mdash; Ben Mummery (@ben_mummery) <a href="https://x.com/ben_mummery/status/2081666886089965943?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இது குறித்து வடக்கு யார்க்ஷயர் மற்றும் தெற்கு டர்ஹாம் கிரிக்கெட் லீக் ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.&nbsp;</p><p>

இந்த சர்ச்சைக்கு பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில், சால்ட்பர்ன் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ் போவ்ஸ் தனது கடைசி 8 போட்டிகளில் 31 கேட்சுகளைப் பிடித்துள்ளார். இதில் ஒரே இன்னிங்ஸில் 8 கேட்சுகளை பிடித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட் கீப்பிங் ஆட்டமிழப்புகளுக்கான சாதனையே 7 ஆகும்.&nbsp;</p><p>

இந்த சர்ச்சைக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் பெயரை நக்கலாகச் சேர்த்து, அந்த வீரருக்கு ‘க்ளிக்கி பாண்டிங்’ என இணையவாசிகள் செல்லப்பெயர் சூட்டியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T13:36:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரித் அசலங்கா, ஹார்பர் ருத்ரதாண்டவம்: காலி கல்லன்ட்ஸ் 208 ஓட்டங்கள் குவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sam-harper-and-asalanka-fifty-vs-kandy-royals-1785328470"></link>
            <id>https://news.lankasri.com/article/sam-harper-and-asalanka-fifty-vs-kandy-royals-1785328470</id>
            <summary type="text">LPL டி20 போட்டியில் அசலங்கா, ஹார்பரின் அதிரடியில் காலி கல்லன்ட்ஸ் அணி 208 ஓட்டங்கள் குவித்தது.&amp;nbsp;சாம் ஹார்பர் அதிரடி&amp;nbsp;
பல்லகெலேவில் நடந்து வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>LPL டி20 போட்டியில் அசலங்கா, ஹார்பரின் அதிரடியில் காலி கல்லன்ட்ஸ் அணி 208 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><h2>சாம் ஹார்பர் அதிரடி&nbsp;</h2><p>
பல்லகெலேவில் நடந்து வரும் LPL 2026 டி20 போட்டியில் காலி கல்லன்ட்ஸ் மற்றும் கண்டி ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/605c632a-0455-471b-9a7a-911fc26f793e/26-6a69f599d929f.webp' /></p><p></p><p>

நாணய சுழற்சியில் வென்ற காலி அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.</p><p>நூருல் ஹசன் 33 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய சாம் ஹார்பர் (Sam Harper) 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் விளாசினார்.</p><h2>துவம்சம் செய்த அசலங்கா
</h2><p>அடுத்து வந்த சரித் அசலங்கா எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்து அரைசதம் அடித்தார்.
</p><p>
அணித்தலைவர் ஷானகா 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சரித் அசலங்கா ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 70 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.
</p><p>
காலி கல்லன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் குவித்தது. ஜாகிர் கான் 2 விக்கெட்டுகளும், துஷாரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4b22f45-19a8-4eb9-b6fa-07bd9ad9f97e/26-6a69f59a97f8d.webp' /></p><p> </p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T12:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் பள்ளிகளில் பிரியாணி? பிரபல ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chicken-briyani-to-be-in-tn-govt-school-lunch-1785328229"></link>
            <id>https://news.lankasri.com/article/chicken-briyani-to-be-in-tn-govt-school-lunch-1785328229</id>
            <summary type="text">இந்தியாவின் தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு, விரைவில், மதிய உணவுத்திட்டத்தின் கீழ், வாரத்தில் ஒரு நாள் பிரியாணி வழங்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு, விரைவில், மதிய உணவுத்திட்டத்தின் கீழ், வாரத்தில் ஒரு நாள் பிரியாணி வழங்கப்படலாம் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><h3>
விரைவில் பள்ளிகளில் பிரியாணி?</h3><p>

2026 - 2027ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், நேற்று, தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான ராஜ்மோகனை சந்தித்த 80க்கும் மேற்பட்ட ஆசிரியர் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள், சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/051505b4-3443-4da2-8d8d-1481ee82d9ad/26-6a69f2672491a.webp' /></p><p>

அரசு மதிய உணவுத் திட்டத்துக்காக வழங்கும் அரிசியின் தரத்தை மேம்படுத்தவேண்டும் என்றும், பிள்ளைகள் பள்ளிக்கு வருவதை ஈர்க்கும் வகையில், வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்யவேண்டும் என்றும் அவர்கள் அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அப்போது, இந்த விடயம் ஏற்கனவே முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ராஜ்மோகன், அது பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகிவருகின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T12:30:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணித்த முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-travels-in-chennai-metro-inspection-1785327565"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-travels-in-chennai-metro-inspection-1785327565</id>
            <summary type="text">முதல்வர் விஜய் மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் பயணம்

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து அரசினர் தோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.</p><h3> 

மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் பயணம்</h3><p>

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய்யை மெட்ரோ அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d9f0f12-c4b1-4def-a459-80a2e5d8168a/26-6a69efcf100cb.webp' />&nbsp;</p><p>

அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் நந்தனம் வரை பயணித்து ஆய்வு மேற்கொண்டார்.&nbsp;</p><p></p><p>

பயணிகளுடன் எவ்வளவு நேரத்திற்கு ஒரு ரயில் வருகிறது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dbca13f-c163-40dd-b3dc-b276ecfb61e5/26-6a69efcfb310c.webp' /></p><p>பயணிகள் முதல்வர் விஜய் உடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மூதாட்டி ஒருவர், முதல்வர் விஜய்யின் கையில் முத்தமிட்டு தோளில் சாய்ந்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
</p><p> 
நந்தனம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் கட்டுப்பாடு மையத்திற்கு சென்றார். அங்கு அதிகாரிகளுடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02656e68-5e9e-4a2c-b29a-50760852affe/26-6a69efd05fab4.webp' /></p><p> 

அங்கிருந்து காரில் கிண்டி கத்திப்பாரா சென்ற முதலமைச்சர் விஜய், பூந்தமல்லி ரோட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>

அங்கிருந்து போரூர் சென்று, போரூர் முதல் பூந்தமல்லி வரை இயக்கப்பட்ட ஆளில்லா மெட்ரோ ரயிலிலும் பயணித்து ஆய்வு மேற்கொண்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T12:20:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடலிற்கு சத்தான கருப்பட்டி உளுந்து லட்டு.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/healthy-ladoo-recipe-in-tamil-1785327458"></link>
            <id>https://news.lankasri.com/article/healthy-ladoo-recipe-in-tamil-1785327458</id>
            <summary type="text">குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் வலுவிற்கு இந்த சத்தான லட்டை சாப்பிடலாம்.அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த சத்தான கருப்பட்டி உளுந்து லட்டை...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் வலுவிற்கு இந்த சத்தான லட்டை சாப்பிடலாம்.</p><p>அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த சத்தான கருப்பட்டி உளுந்து லட்டை இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>

தேவையான பொருட்கள்</h2><ul><li>

கருப்பு உளுந்து- 1 கப்</li><li>
வெள்ளை எள்- ½ கப்</li><li>
பாசிப்பருப்பு - ¼ கப்
</li><li>பச்சரிசி - ஒரு கைப்பிடி
</li><li>கருப்பட்டி- 1 கப்</li><li>
நெய் - 1 கப்</li></ul><h2>செய்முறை</h2><p>
முதலில் வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் கருப்பு உளுந்த சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் அதில் வெள்ளை எள்ளை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
அடுத்து பாசிப்பருப்பு மற்றும் பச்சரிசியை மிதமான தீயில் வைத்து தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc5d7a0-ce22-4130-8f1e-6f2a4abebc40/26-6a69ef6464fd8.webp' /></p><p>இதனை நன்கு ஆறவைத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
</p><p>
பின்னர் ஒரு கருப்பட்டி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.</p><p> 

அரைத்த கலவையை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றிய பின், கரைத்த கருப்பட்டி கலவையை இந்த மாவில் ஊற்றவேண்டும்.</p><p>

இறுதியாக இவற்றில் நெய் சேர்த்து கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்தால் சத்தான லட்டு ரெடி.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T12:19:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமோசா முதல் நூடுல்ஸ் வரை... ஈரான் போர் உணவுப்பொருட்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-war-affects-samosa-noodles-price-1785325507"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-war-affects-samosa-noodles-price-1785325507</id>
            <summary type="text">உலகின் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும், அது ஏதாவது ஒரு வகையில் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என பொதுவாகவே கூறப்படுவதுண்டு.

இந்நிலையில், ஈரான் போரால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும், அது ஏதாவது ஒரு வகையில் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என பொதுவாகவே கூறப்படுவதுண்டு.</p><p>

இந்நிலையில், ஈரான் போரால் சமோசா முதல் நூடுல்ஸ் வரையிலான அன்றாடகம் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளது என்னும் கவலையை உருவாக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
சமோசா முதல் நூடுல்ஸ் வரை...
</h3><p>
முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே செல்லும் ஈரான் போரால், இந்தியாவில் சமோசா, தென்கொரியாவில் நூடுல்ஸ், இந்தோனேசியாவில் தெரு உணவுகள் என மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16f96d51-ad2e-4b46-aaef-a94b83652570/26-6a69e7c471763.webp' /></p><p>
அதாவது, மக்களைப் பொருத்தவரை, இப்படிப்பட்ட ஒரு நிலையில், குறைந்த செலவில் உணவை முடித்துக்கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். அதனால், வியாபாரிகளுக்கு வருவாய் குறைகிறது.</p><p>
குறிப்பாக, இந்த விடயம், மக்கள் அன்றாடம் வாங்கும் உணவுப்பொருட்கள் விடயத்தில் தெளிவாகத் தெரியவந்துள்ளது.
</p><p>
அவை ஆடம்பரப் பொருட்களோ, அல்லது, மக்கள் எப்போதாவது குடும்பத்துடன் சென்று உண்ணும் ஆடம்பர ஹொட்டலில் கிடைக்கும் உணவுப்பொருட்களோ அல்ல! அவை, விலை மலிவான, அன்றாடக உணவுகள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425953f7-45ea-4d81-a6de-c144e70fa046/26-6a69e7c527fda.webp' /></p><p>

எரிபொருள் மற்றும் உணவு தயாரிக்க பயன்படும் பொருட்களின் விலை உயர்வதால் உணவின் விலை உயர, உடனடியாக அதன் தாக்கம் வெளிப்படுகிறது. குறிப்பாக, சமோசா, நூடுல்ஸ் போன்ற உணவுப்பொருட்களை வழக்கமாக விற்கும் வியாபாரிகள் அதை உடனடியாக உணர்கிறார்கள்.</p><p>

மக்கள் வாங்கும் உணவின் அளவைக் குறைக்க, வியாபாரிகளின் வருவாய் குறைகிறது. வியாபாரிகள் விலையை அதிகரித்தாலோ, அது அவர்களுடைய வியாபாரத்தையே பாதிக்கும் அபாயமும் உள்ளது.
</p><p>
ஆக, நுகர்வோர், வியாபாரிகள் என இரு தரப்பினரும் இந்த விடயத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
</p><p>
பல ஆசிய நாடுகள் எரிசக்திக்கு மத்திய கிழக்கு நாடுகளை சார்ந்துள்ளன. போர் முடிவடையாததால், எரிசக்திக்கான, அதாவது, அடுப்பு எரிக்க பயன்படும் எரிவாயு, வாகனங்களுக்காக பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களுக்கான செலவு அதிகரிக்க, போக்குவரத்து செலவு உயர, தயாரிப்பு, பின் உணவு விநியோகம் என அனைத்து விடயங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.
</p><p>
இன்னொரு வகையான பாதிப்பு

அதேபோல, போர் துவங்கியதிலிருந்தே, ஆசியாவில், பல நாடுகளில் சுற்றுலா கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், சுற்றுலாப்பயணிகளை நம்பியிருக்கும் ஹொட்டல்கள், உணவகங்கள் மற்றும் தெரு வியாபாரிகள், சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
பாங்காகில், வியாபாரி ஒருவர் இப்படிக் கூறுகிறார், ‘நாம் எல்லோரும் ஒரே படகில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம், அந்த படகு மூழ்கிவிடாது என்னும் நம்பிக்கையில்’. உலக நடப்பை எளிமையாக ஒரே வரியில் விளக்கிவிட்டார் அவர்!
</p><p>
ஆக, உலகின் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும், அது ஏதாவது ஒரு வகையில் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என கூறப்படுவது வெறும் சொல்வழக்காக இல்லாமல், இன்று நாம் அனைவரும் அனுபவிக்கும் ஒரு நிதர்சனமாகிவிட்டது என்றால் அது மிகையில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T11:45:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளையாட்டு மைதானத்தில் கிடந்த மனிதத் தலை: திகிலை ஏற்படுத்திய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/human-head-found-near-bengaluru-cricket-ground-1785324146"></link>
            <id>https://news.lankasri.com/article/human-head-found-near-bengaluru-cricket-ground-1785324146</id>
            <summary type="text">இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், விளையாட்டு மைதானம் ஒன்றில் மனிதத் தலை ஒன்று கிடந்த விடயம் திகிலை உருவாக்கியுள்ளது.

திகிலை ஏற்படுத்திய சம்பவம்

...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், விளையாட்டு மைதானம் ஒன்றில் மனிதத் தலை ஒன்று கிடந்த விடயம் திகிலை உருவாக்கியுள்ளது.
</p><h3>
திகிலை ஏற்படுத்திய சம்பவம்
</h3><p>
கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில், இன்று காலை விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு விளையாடச் சென்ற சிலர் அங்கு மனிதத் தலை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c77fad49-72e4-49f0-8b14-5669402a0fb2/26-6a69e273ed9f3.webp' /></p><p>

யாரோ ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் பரவ, அந்த பகுதியில் அச்சம் பரவியுள்ளது.
</p><p>
இதற்கிடையில், நேற்றிரவு, ரயில் பாதையில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரது உடல் கிடப்பதாக தகவல் கிடைக்க, பொலிசார் அந்த உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர். அந்த உடலில் தலையில்லை!
</p><p>
இந்தப் பக்கம் ஒருவரது தலை கிடைத்த நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவர, ரயில் பாதையில் கிடைத்த உடலும், விளையாட்டு மைதானத்தில் கிடைத்த தலையும் ஒரே நபருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
மேலும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல் என்னவென்றால், அந்த நபர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்வதற்காக ரயில் பாதையில் படுத்துக்கொண்டிருக்கிறார்.
</p><p>
ரயில் மோதிய வேகத்தில், அவரது தலை துண்டிக்கப்பட்டு, சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் அந்த விளையாட்டு மைதானத்தில் போய் விழுந்துள்ளது!</p><p>

இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T11:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருவில் இறந்த குழந்தை: பிரித்தானிய தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-mom-got-animal-ashes-instead-her-baby-ash-1785315792"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-mom-got-animal-ashes-instead-her-baby-ash-1785315792</id>
            <summary type="text">பிரித்தானியாவில், கருவிலேயே உயிரிழந்த தன் குழந்தையின் அஸ்தியை மூன்று ஆண்டுகளாக பத்திரமாக வைத்திருந்தார் தாய் ஒருவர்.

ஆனால், அவர் வைத்திருந்தது அவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில், கருவிலேயே உயிரிழந்த தன் குழந்தையின் அஸ்தியை மூன்று ஆண்டுகளாக பத்திரமாக வைத்திருந்தார் தாய் ஒருவர்.
</p><p>
ஆனால், அவர் வைத்திருந்தது அவரது குழந்தையின் அஸ்தி அல்ல, அது ஒரு விலங்கின் அஸ்தி என தெரியவந்ததால் பேரதிர்ச்சிக்குள்ளானார் அவர்.</p><h3>

கருவில் இறந்த குழந்தை</h3><p>

இங்கிலாந்தில் வாழும் லூசி நெஸ் (Lucy Ness, 28) என்னும் இளம்பெண்ணின் குழந்தை, 2021ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி, அவரது கருவிலேயே உயிரிழந்துவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afa7e7d5-9160-489e-86d7-74fcfc24e723/26-6a69c1d1b86e3.webp' /></p><p>
தங்கள் குழந்தையின் உடலை லூசியும் அவரது கணவரான கால்லம் எல்லெர்பியும் (Callum Ellerby), இங்கிலாந்தின் Hull என்னுமிடத்திலுள்ள Legacy Independent Funeral Directors Ltd என்னும் இறுதிச்சடங்கு மையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
</p><p>
மே மாதம் 10ஆம் திகதி, குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கூறி, 11ஆம் திகதி, அஸ்திக்கலசம் ஒன்றை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர் இறுதிச்சடங்கு மைய அலுவலர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28384676-1c76-47a0-8771-10d968c15cd6/26-6a69c1d26aaf4.webp' /></p><p>
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம், லூசியின் குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த இறுதிச்சடங்கு மையத்தில் ஒரு பெரிய பிரச்சினை கண்டறியப்பட்டது.&nbsp;</p><p></p><h3>

அதிரவைத்த காட்சி
</h3><p>
ஆம், அந்த இறுதிச்சடங்கு மையத்தில், 30க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படாமலே வைக்கப்பட்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ebed7fe-8b56-4f18-b533-161eabde1bde/26-6a69c1d31e7bd.webp' /></p><p>
அங்கு சென்ற பொலிசார் கண்ட காட்சி அவர்களை அதிரவைத்துள்ளது. ஆம், அங்கு ஏராளமான உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளன. அவற்றில் பல அழுகத்துவங்கியிருந்திருக்கின்றன.
</p><p>
அத்துடன், அங்கு சுமார் 100 அஸ்திக்கலசங்களும் இருந்துள்ளன.</p><h3>

பிரித்தானிய தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி</h3><p>

இந்நிலையில், லூசியும் தன் குழந்தையும் அந்த இறுதிச்சடங்கு மையத்தில்தான் தகனம் செய்யப்பட்டது என்பதால் அது குறித்து விசாரித்துள்ளார்.
</p><p>
அவருக்கு கிடைத்த தகவல் அவரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆம், அவரிடம், அவரது குழந்தையின் அஸ்தி என ஒப்படைக்கப்பட்ட அஸ்தி, ஏதோ ஒரு விலங்குடைய அஸ்தி, அதாவது, ஒரு செல்லப்பிராணியின் அஸ்தி என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

தாங்கள் இதுவரை தங்கள் குழந்தையின் அஸ்தி என நினைத்து பாதுகாத்து வைத்திருந்தது ஒரு விலங்கின் அஸ்தி என தெரியவந்ததால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள் லூசி, கால்லம் தம்பதியர்.</p><p>

இந்நிலையில், அந்த இறுதிச்சடங்கு மைய இயக்குநரான ராபர்ட் புஷ் (48) வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:55:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொல்லப்படக்கூடும்... ஆனாலும் நாடு திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஒருவர் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hasina-says-will-return-to-dhaka-1785322448"></link>
            <id>https://news.lankasri.com/article/hasina-says-will-return-to-dhaka-1785322448</id>
            <summary type="text">வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் தற்போது தலைமறைவாக இருப்பவருமான ஷேக் ஹசீனா, தனது உயிருக்கு ஆபத்து என்ற அச்சம் இருந்தபோதிலும், நாடு திரும்ப உறுதியாக இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் தற்போது தலைமறைவாக இருப்பவருமான ஷேக் ஹசீனா, தனது உயிருக்கு ஆபத்து என்ற அச்சம் இருந்தபோதிலும், நாடு திரும்ப உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள்ளார்.</p><h2>மக்கள் அழைக்கிறார்கள்</h2><p> </p><p>
AFP செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக அளித்த பதிலில், நான் கொல்லப்படலாம்; கைது செய்யப்படலாம்; சிறைக்கு அனுப்பப்படலாம், இருப்பினும் டிசம்பர் மாதத்திற்குள் நாடு திரும்ப இருப்பதாக 78 வயதான ஹசீனா கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e13b888a-e8db-45a2-a1ca-efd6e07d653a/26-6a69e14be117b.webp' /></p><p> </p><p>எனது விதி என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன்; ஏனெனில் என் மக்கள் என்னை அழைக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>தனது 15 ஆண்டுகால இரும்புக்கரம் கொண்ட ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மாணவர் தலைமையிலான எழுச்சியால் 2024 ஆகஸ்ட் மாதம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஹசீனா, தனது மாளிகையை மக்கள் கூட்டம் சூழ்ந்துகொண்ட நிலையில் ஹெலிகொப்டர் மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். </p><p>மாணவர்கள் தலைமையிலான எழுச்சியின் போது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயன்ற அவர் முன்னெடுத்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.</p><p></p><p> </p><p>கடந்த நவம்பர் மாதம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக டாக்கா நீதிமன்றம் ஒன்றால் ஹசீனா குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது; இத்தீர்ப்பை அவர், சட்டத்தின் வடிவில் முன்வைக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றே குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்தியாவில் ரகசியமான ஓரிடத்தில் வசித்து வரும் அவர், தான் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லை என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.</p><p> ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு பதவியேற்ற இடைக்கால நிர்வாகத்தின் கீழ் இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி மாதம் வங்கதேசப் பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றதிலிருந்து அந்த உறவுகள் சீரடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e766e3b4-1e84-4f53-8b7c-410e462a7624/26-6a69e14cb70d5.webp' /></p><h2>அதிகமான பலப்பிரயோகம்</h2><p> </p><p>இதனிடையே, ஹசீனாவைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேசம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது; இக்கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், நாடு திரும்பவிருக்கும் தமது முடிவிற்கும் அதற்கும் தொடர்பில்லை என்றே ஹசீனா தெரிவித்துள்ளார்.</p><p> எதிராளிகளைக் கொலை செய்தல், எதிர்க்கட்சிகளை ஒடுக்குதல், நீதிமன்றங்களைக் கையாளுதல் மற்றும் ஒருதலைப்பட்சமான தேர்தல்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹசீனாவின் நிர்வாகத்தின் மீது மனித உரிமை அமைப்புகள் நீண்டகாலமாகவே குற்றம் சாட்டி வருகின்றன.</p><p> ஆனால், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பல அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பரப்புரைகள் என்று கூறி, ஹசீனா தனது செயல்பாடுகளை நியாயப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb680f38-9daf-4f5c-b9b1-c742b47df762/26-6a69e14d6736f.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, தன்னைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு வழிவகுத்த மாணவர் போராட்டங்களின்போது, ​​அளவுக்கு அதிகமான பலப்பிரயோகத்தை மேற்கொள்ள அனுமதித்ததாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் ஹசீனா நிராகரித்தார். </p><p>இந்த நிலையில், இந்தியாவில் கடந்த வாரம் கல்வி அமைச்சர் பதவி விலகக் காரணமாக அமைந்த, இளைஞர்கள் முன்னெடுத்த நாடு தழுவிய போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T10:52:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியாளாக 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள்! ஆட்டநாயகியான ஸ்ம்ரிதி மந்தனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/smriti-mandhana-blast-88-runs-in-the-hundred-1785322120"></link>
            <id>https://news.lankasri.com/article/smriti-mandhana-blast-88-runs-in-the-hundred-1785322120</id>
            <summary type="text">The Hundred மகளிர் போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸை வீழ்த்தியது.சன்ரைசர்ஸ் லீட்ஸ் 

ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Hundred மகளிர் போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸை வீழ்த்தியது.</p><h2>சன்ரைசர்ஸ் லீட்ஸ் 
</h2><p>
லீட்ஸில் நடந்த The Hundred மகளிர் போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/365e04b8-b531-4317-bd3e-e44c1eb2a98a/26-6a69da8aa8744.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு142 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக அன்னபேல் சதர்லேண்ட் 35 ஓட்டங்கள் எடுத்தது.
</p><p>
பின்னர் களமிறங்கிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் மெக் லென்னிங் 24 (18) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
</p><h2>
 ஸ்ம்ரிதி மந்தனா சரவெடி ஆட்டம் </h2><p>அடுத்த வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
</p><p>
இறுதிவரை களத்தில் நின்ற மந்தனா, 50 பந்துகளில் 88 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) விளாச, மான்செஸ்டர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
</p><p>
கேசிடி, ஜெஸ் ஜோன்ஸன், ஹன்னா மற்றும் டேனியல்லே கிப்ஸன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஸ்ம்ரிதி மந்தனா ஆட்டநாயகி விருது பெற்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0f0ba58-a330-4b04-abd2-6f2498bfd733/26-6a69da8c19b37.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19f3a34c-590f-435b-8439-a030eddb4d0f/26-6a69da8b5f4a3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:47:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம் எலெக்ரிக் காரை பயன்படுத்த வேண்டுமா? கூறப்படும் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/talks-on-uk-pm-andy-burnham-may-use-electric-car-1785320179"></link>
            <id>https://news.lankasri.com/article/talks-on-uk-pm-andy-burnham-may-use-electric-car-1785320179</id>
            <summary type="text">பிரித்தானியாவில் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் ஆன்டி பர்ன்ஹாமின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;அரசாங்க ஜெட் விமானம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் ஆன்டி பர்ன்ஹாமின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><h2>அரசாங்க ஜெட் விமானம்</h2><p>
பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்ன்ஹாம் (Andy Burham), ஐந்து நாட்களுக்குள் பர்ன்ஹாம் மூன்று முறை அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்திய பிறகு, அவரது பயணம் குறித்த கேள்வி ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/647a8517-4bfe-4860-9c87-e3808690b1d3/26-6a69d4392ee9b.webp' />&nbsp;</p><p></p><p>
அதாவது, அவர் மான்செஸ்டரில் உள்ள தனது புதிய வடக்குத் தளத்திற்கும், வெஸ்ட்மின்ஸ்டருக்கும் இடையில் எப்படி பயணிக்கத் திட்டமிடுகிறார் என்பதும், அதற்கான செலவுகளை யார் ஏற்கிறார்கள் என்பதும் தற்போது பாரிய கேள்விக்குறியாக உள்ளது.</p><p>

அதேபோல், பர்ன்ஹாம் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் முடிவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ஏனெனில், இந்த நடவடிக்கைக்கு வரி செலுத்துவோரின் பணம்தான் நிதியளிக்கிறதா என்ற கேள்விகளை இது எழுப்புவதே இதற்கு முக்கியக் காரணம்.</p><p>

திங்கட்கிழமை, ஆன்டி பர்ன்ஹாம் போர்ட்ஸ்மவுத் கடற்படைத் தளத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்காக 37 நிமிட பயணமாக மீண்டும் வானில் பறந்தார். </p><h2>

பயண நேரம் </h2><p>லண்டனில் இருந்து மான்செஸ்டருக்கு இரயிலில் செல்ல சராசரியாக 2 மணிநேரம் 46 நிமிடங்கள் ஆகிறது. இதற்கான கட்டணமும் மிக அதிகமாக உள்ளது.
</p><p>
அதனால், மின்சாரக் காரைப் பயன்படுத்தினால், இதே பயணத்தை பாதிக்கும் குறைவான செலவிலேயே மேற்கொள்ள முடியும் என்று 'Carwow' நிறுவனம் கணக்கிட்டுள்ளது. </p><p>

மேலும், தற்போதைய சூழலில் இருந்து 2029 கோடையில் நடைபெறவுள்ள அடுத்த பொதுத்தேர்தல் வரை, மின்சார வாகனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பயண செலவில் 27,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக பிரதமர் சேமிக்க முடியும் என்று அந்த கார் விற்பனை இணையதளம் கூறுகிறது.
</p><p>
பிரதமர் No 10 நார்த் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் இடையே இரயிலில் பயணம் செய்வதை விட, ஒரு மின்சாரக் காரில் பயணம் செய்வது ஆண்டுக்கு 9,000 பவுண்டுகள் மலிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce0251fd-2a4a-4ec6-a10b-5ea47eeedf34/26-6a69d439e430e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<i><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> </b></i>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:34:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு - ரூ.2,983 கோடியுடன் RCB முதலிடம், CSK நிலை என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2026-ipl-brand-value-rcb-tops-csk-in-4th-1785319284"></link>
            <id>https://news.lankasri.com/article/2026-ipl-brand-value-rcb-tops-csk-in-4th-1785319284</id>
            <summary type="text">உலகளாவிய முதலீட்டு வங்கியான ஹூலிஹான் லோக்கி, 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் பிராண்ட் மதிப்பீட்டு ஆய்வை வெளியிட்டுள்ளது.  

11 சதவீதம் உயர்ந்த ஐபிஎல் மதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய முதலீட்டு வங்கியான ஹூலிஹான் லோக்கி, 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் பிராண்ட் மதிப்பீட்டு ஆய்வை வெளியிட்டுள்ளது. </p><h3> 

11 சதவீதம் உயர்ந்த ஐபிஎல் மதிப்பு</h3><p> 

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் வணிக மதிப்பு, 11 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து 20.6 பில்லியன் டொலராக(இந்திய மதிப்பில் ரூ.1.97 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8448ddfd-a39b-48c6-9522-c3ab3c3ba079/26-6a69cf761dc3b.webp' /></p><p>

ஐபிஎல் வணிக மதிப்பில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டிருப்பதையே இந்த அதிகரிப்பு பிரதிபலிக்கிறது.</p><p>

ஐபிஎல் இன் தனிப்பட்ட பிராண்ட் மதிப்பு கடந்த ஆண்டில் 10.3 சதவீதம் உயர்ந்து, 4.3 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. </p><p>

NFLக்குஅடுத்தபடியாக, உலகின் முதன்மையான விளையாட்டு நிறுவனங்களில் ஒன்றாக ஐபிஎல் உருவெடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p>

ஜியோஸ்டாரின் கூற்றுப்படி, பார்வையாளர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 7% அதிகரித்துள்ளது.
</p><h3>
முதலிடத்தில் RCB</h3><p> 

RCB, 2025 ஆம் ஆண்டில் இருந்த 269 மில்லியன் டொலர் மதிப்பிலிருந்து 16.0% அதிகரித்து, 312 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,983 கோடி) பிராண்ட் மதிப்புடன் ஐபிஎல் இன் மிகவும் மதிப்புமிக்க அணியாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83a408f4-fac0-413a-80a2-d2eb7476c82c/26-6a69cf76c2a0a.webp' /></p><p>

மேலும், 300 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்பு என்ற மைல்கல்லை கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற பெருமையை RCB பெற்றுள்ளது.</p><p> 

2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 9 வது இடத்தை பிடித்திருந்தாலும், 2025 ஆம் ஆண்டில் இருந்த 242 மில்லியன் டொலரிலிருந்து 9.1% அதிகரித்து, 264 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,524 கோடி) பிராண்ட் மதிப்பை பதிவு செய்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p>
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2025 ஆம் ஆண்டில் இருந்த 227 மில்லியன் டொலரிலிருந்து 7.9% அதிகரித்து, 245 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,343 கோடி) பிராண்ட் மதிப்பை எட்டியது. </p><p>

CSK 3.8% ஆண்டு வளர்ச்சியுடன், 244 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,333 கோடி) பிராண்ட் மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2eabe9f-7295-4301-8814-ee38f2d450ff/26-6a69cf777656d.webp' /></p><p>

9.1% வளர்ச்சியுடன் 168 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5வது இடத்திலும், 10.3% வளர்ச்சியுடன் 161 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் 6வது இடத்திலும், 12.1% வளர்ச்சியுடன் 158 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் பஞ்சாப் கிங்ஸ் 7வது இடத்திலும் உள்ளன.
</p><p>
10.6% வளர்ச்சியுடன் 157 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் குஜராத் டைட்டன்ஸ் 8வது இடத்திலும், 2.6% வளர்ச்சியுடன் 156 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் 9வது இடத்திலும், 122 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் மதிப்புடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10வது இடத்திலும் உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று உருவாகும் 3 ராஜயோகங்கள்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-3-rajyoga-formed-1785318479"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-3-rajyoga-formed-1785318479</id>
            <summary type="text">இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ஜூலை 29ஆம் திகதியான இன்று வருகிறது. 

இந்நாளில் சூரியனும், புதனும் சேர்ந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. 

அதோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ஜூலை 29ஆம் திகதியான இன்று வருகிறது. </p><p>

இந்நாளில் சூரியனும், புதனும் சேர்ந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. </p><p>

அதோடு குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் இருப்பதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகியுள்ளது.</p><p> </p><p></p><p>அதுமட்டுமின்றி, சனியின் நிலையால் சச ராஜயோகமும் உருவாகியுள்ளது. </p><p>

இப்படி இந்த 3 ராஜயோகங்களும் குரு பூர்ணிமா நாளில் சுமார் 56 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது.
</p><p>
அந்தவகையில், இன்று ஒரே நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.</p><h2>ரிஷபம் </h2><ul><li>

திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.</li><li> தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். </li><li>புதிய முதலீடுகளுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.</li><li> உயர் அதிகாரிகளிடம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.</li><li> சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/034f3262-823a-41ce-8a6b-c9f13c511e4f/26-6a69cc51df646.webp' /></p><p>
</p><h2>
கும்பம்</h2><ul><li> 

வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</li><li> இக்காலத்தில் பெரிய வெற்றியைக் காணலாம். </li><li>வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கும்.</li><li> பல புதிய வழிகளில் இருந்து பண வரவு அதிகரிக்கும். </li><li>தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.</li></ul><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a6df11c-82da-4dd4-968d-54055897eca0/26-6a69cc528d77f.webp' /></p><h2>மகரம் </h2><ul><li>

கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.</li><li> நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
</li><li>முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். </li><li>
பணியிடத்தில் வேலைகளை வெற்றிகரமாக செய்வீர்கள்.</li><li> அலுவலகத்தில் பாராட்டைப் பெறுவீர்கள். </li><li>நிதி நிலை வலுவடையும்.&nbsp; &nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21770857-ba9b-4d3f-83ab-7cf026626c4f/26-6a69cc533ab24.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T09:49:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் புதிய மனிதவடிவ ரோபோக்களைத் தடை செய்த ட்ரம்ப் நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-bans-chinese-humanoid-1785318309"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-bans-chinese-humanoid-1785318309</id>
            <summary type="text">அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறி, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனிதவடிவ ரோபோக்களை (humanoid robots) இறக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறி, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனிதவடிவ ரோபோக்களை (humanoid robots) இறக்குமதி செய்வதற்குத் தடை விதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>ஆதாரமற்ற காரணங்கள்</h2><p>
</p><p>ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நகர்வு, மனித உருவம் கொண்ட மற்றும் நான்கு கால்களைக் கொண்ட இயந்திரங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ரோபோக்களுக்குப் பொருந்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca452a26-1e12-4234-91ee-141a3653ec90/26-6a69cd4e1437f.webp' /></p><p> </p><p>இந்த மனிதவடிவ ரோபோக்களில் பல சீனாவில் தயாரிக்கப்படுகின்றன; அந்நாடு ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளை மேம்படுத்துவதில் அமெரிக்காவுடன் போட்டியிட்டு வருகிறது. </p><p>அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை எனக் கருதப்படும் பவர் இன்வெர்ட்டர்களின் இறக்குமதியையும் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) தடை செய்துள்ளது. </p><p>இதனிடையே, வர்த்தக விவகாரங்களை அமெரிக்கா அரசியல்மயமாக்குவதையும், ஆதாரமற்ற காரணங்களின் அடிப்படையில் தடைகளை விதிப்பதையும் சீனா நீண்டகாலமாக எதிர்த்து வருவதாக அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்தத் தடை, புதிதாகத் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மேம்பட்ட ரோபோட்டிக் சாதனங்கள் மற்றும் பவர் இன்வெர்ட்டர்களுக்குப் பொருந்தும்; அதேவேளையில், FCC-யால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட தற்போதுள்ள எந்தவொரு மொடலின் விற்பனையையோ அல்லது இறக்குமதியையோ இது தடுக்காது. </p><p>மேலும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இன்வெர்ட்டர்களின் பயன்பாடு, வெளிநாட்டு நிறுவனங்கள் அவற்றை முடக்குவதற்கும், தரவுகளைத் திருடுவதற்கும், வெளிநாட்டு அரசாங்கத் தரப்பினர் தொலைநிலை அணுகல் மற்றும் கண்காணிப்பை எளிதாக்குவதற்கும், அல்லது இணையவழித் தாக்குதல் மூலம் வேறு விதங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடும் என்ற கவலைகளை FCC சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be142c57-584c-4dfa-aa73-eebe90c4bb42/26-6a69cd4d2a410.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட ரோபோக்களைப் பயன்படுத்துவது, தீய நோக்கமுடையவர்கள் அமெரிக்கர்களைக் கண்காணிக்கவோ, வெளிநாட்டு உளவு அமைப்புகளின் திறன்களை மேம்படுத்தவோ அல்லது அந்த ரோபோக்களைத் தொலைவிலிருந்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவோ வழிவகுக்கக்கூடும் என்றும் FCC மேலும் குறிப்பிட்டுள்ளது. </p><p>உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவுடனான வர்த்தகச் சமநிலையின்மையைச் சரிசெய்ய ட்ரம்ப் நிர்வாகம் முயற்சிக்கும் நிலையில், சீனாவின் ஏற்றுமதிகள் அமெரிக்காவின் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளன.</p><h2>தடைகளை எதிர்கொள்ளக்கூடும்</h2><p> </p><p>மின்சார வாகனங்களை உலகிலேயே அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாகத் திகழ்ந்த போதிலும், கடுமையான இறக்குமதி வரி காரணமாக அமெரிக்கச் சந்தையில் சீனாவால் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>இதனிடையே, அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், சீன செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/018c834b-51b4-4476-b5fb-c8feca0c18dc/26-6a69cd4ebfca1.webp' /></p><p> </p><p>இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சீனாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டது என்பது சொந்த அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியின் விளைவு, அத்துடன் சர்வதேச ஒத்துழைப்பின் பலன் என்று சீன அரசாங்கம் கூறியுள்ளது. </p><p>தொழிற்சாலைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் பயன்படுத்துவதற்காக, சீனத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மனிதவடிவ ரோபோக்களை (humanoid robots) தீவிரமாக உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T09:43:20+00:00</updated>
        </entry>
    </feed>
