<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-17T12:27:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்சியம் சத்து நிறைந்த ராகி லட்டு.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/high-protein-ragi-laddu-recipe-in-tamil-1789647555"></link>
            <id>https://news.lankasri.com/article/high-protein-ragi-laddu-recipe-in-tamil-1789647555</id>
            <summary type="text">High Protein Ragi Laddu-&amp;nbsp;ராகி கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவு ஆகும்.

இது எலும்புகளை வலிமையாக்கவும், உடல் எடையைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>High Protein Ragi Laddu-&nbsp;ராகி கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவு ஆகும்.
</p><p>
இது எலும்புகளை வலிமையாக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
</p><p>
தினசரி உணவில் சேர்ப்பது நாள் முழுவதும் ஆற்றலைத் தந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
</p><p>
அந்தவகையில், சத்து நிறைந்த ராகி லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li> 

ராகி மாவு- 1 கப் </li><li>
வெல்லம்- 1 கப் </li><li>
வறுத்த வேர்க்கடலை- ½ கப்
</li><li>ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன் </li><li>
உப்பு- 1 சிட்டிகை </li><li>
நெய்- 2 ஸ்பூன் </li></ul><h2>

செய்முறை </h2><p>

முதலில் ஒரு கிண்ணத்தில் ராகி மாவு, உப்பு மாற்று சுடு தண்ணீர் சேர்த்து பிணைந்து நெய் தடவி வைத்துக்கொள்ளவும்.</p><p>

பின் இதனை வட்டமாக தட்டி தவாவில் இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்து ராகி ரொட்டியை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44b9138e-f980-46d8-afde-907747fd419f/26-6aabdac554044.webp' /></p><p>இதற்கடுத்து மிக்ஸி ஜாரில் வெல்லம், வேர்க்கடலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
</p><p>
பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த கலவைகளை சேர்த்து அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
</p><p>
இறுதியாக கைகளில் நெய் தடவி இதனை லட்டுவாக பிடித்தால் சத்தான ராகி லட்டு தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T12:19:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் டெக்சியில் பயணித்த இந்தியர் சந்தித்த அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-shares-norway-taxi-bill-rs-9508-for-29km-1789646831"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-shares-norway-taxi-bill-rs-9508-for-29km-1789646831</id>
            <summary type="text">Indian shares Norway taxi bill of Rs. 9,508: நோர்வே நாட்டில் டெக்சியில் பயணித்த இந்தியர் ஒருவர், டெக்சி கட்டணம் 9,508 ரூபாய் என்பதால் வியப்படைந்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian shares Norway taxi bill of Rs. 9,508: நோர்வே நாட்டில் டெக்சியில் பயணித்த இந்தியர் ஒருவர், டெக்சி கட்டணம் 9,508 ரூபாய் என்பதால் வியப்படைந்துள்ளார்.
</p><p>

இந்தியரான வினோத் என்பவர் நோர்வே நாட்டில் டெக்சி ஒன்றில் பயணித்துள்ளார்.
</p><h3>
டெக்சியில் பயணித்த இந்தியர் சந்தித்த அனுபவம்</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23bb3108-8d62-4bf7-b20e-a405c8fc1a0f/26-6aabd7f08133b.webp' /></p><p>29 கிலோமீற்றர் தூரத்தை 22 நிமிடத்தில் அவர் எட்டிய நிலையில், டெக்சி கட்டணம் 934 Norwegian Krone என பில் வந்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Sharing my today&#39;s taxi ride experience in Norway. 🇳🇴🚕<br><br>22 minutes. 29 km. Smooth ride and a great experience.<br><br>The bill? 934 NOK — roughly ₹9,580. 😳<br><br>There are a few things India does far better than Norway… this is one of them. 🇮🇳😊<br><br>I’ve had much more affordable Uber rides… <a href="https://t.co/aNk1fCqEXF">pic.twitter.com/aNk1fCqEXF</a></p>&mdash; Vinod (@turiyatman) <a href="https://x.com/turiyatman/status/2100266845857042673?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
வழக்கமாக ஆசியர்கள் செய்வதைப் போலவே அதை தன் நாட்டுப் பணமாக மாற்றி கணக்குப் பார்த்துள்ளார் அவர். </p><p>அவ்வகையில், இந்திய மதிப்பில் டெக்சி கட்டணம் 9,508 ரூபாய் என வரவே, ஆச்சரியமடைந்துள்ளார் அவர்.&nbsp;</p><p></p><p>
அது குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ள அவர், தன் நாட்டில் இவ்வளவு தொலைவு பயணிக்க சிறிய தொகைதான் செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அவரது இடுகை வேகமாக பகிரப்பட்ட நிலையில், சிலர், நோர்வேயில் சராசரி மாதாந்திர ஊதியம் இந்திய மதிப்பில் 6.5 லட்ச ரூபாய் என்றும், ஆகவே, அங்கு டெக்சி கட்டணம் அப்படித்தான் இருக்கும் என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T12:07:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவுண்டி தொடரில் 2 வது முறையாக 5 விக்கெட்களை கைப்பற்றிய மானவ் சுதார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/manav-suthar-2nd-5-wicket-haul-in-county-cricket-1789646311"></link>
            <id>https://news.lankasri.com/article/manav-suthar-2nd-5-wicket-haul-in-county-cricket-1789646311</id>
            <summary type="text">manav suthar second 5 wicket haul in county cricket: மானவ்&amp;nbsp;சுதார், கவுண்டி தொடரில் 2 வது முறையாக 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். 

கவுண...</summary>
            <content type="html"><![CDATA[<p>manav suthar second 5 wicket haul in county cricket: மானவ்&nbsp;சுதார், கவுண்டி தொடரில் 2 வது முறையாக 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். </p><h3>

கவுண்டி சாம்பியன்ஷிப்</h3><p>

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் செப்டம்பர் 15 ஆம் திகதி தொடங்கிய போட்டியில் வார்விக்ஷயர் மற்றும் எசெக்ஸ் அணிகள் மோதியது.</p><p> 

நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தொடங்கிய எசெக்ஸ் அணி, 44 ஓவர்களில் 134 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff7b376-93ce-4c34-bd2e-3408a12a2173/26-6aabd5e9b5f07.webp' /></p><p>

எசெக்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜ் பெல் 61 ஓட்டங்கள் குவித்தார். வார்விக்ஷயர் தரப்பில் ஈதன் பேம்பர் 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.</p><p> 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய வார்விக்ஷயர் அணி, 61.1 ஓவர்களில் 191 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p></p><p> 

வார்விக்ஷயர் தரப்பில் அதிகபட்சமாக சாம் ஹெய்ன் 88 ஓட்டங்கள் குவித்தார். எசெக்ஸ் தரப்பில் மேத்யூ கிரிட்ச்லி 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b471c21f-76ca-499e-93ce-d91ae45fdd66/26-6aabd5ea6eb98.webp' /></p><p> 

2வது இன்னிங்க்ஸை ஆட தொடங்கிய எசெக்ஸ் அணி 181 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. </p><h3> 

5 விக்கெட்களை கைப்பற்றிய மானவ் சுதார்
</h3><p>
எசெக்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் மானவ் சுதார் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad37b2eb-3412-471f-92cd-30d9dc50dba1/26-6aabd5e904fad.webp' /></p><p>

இதனையடுத்து, 133 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வார்விக்ஷயர் அணி, 25.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 138 ஓட்டங்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/553db182-d900-430c-a0b7-21d3793a106c/26-6aabd5eb23a89.webp' /></p><p> 

முன்னதாக கிளாமோர்கன் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓட்டம் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, 131 ஆண்டுகளில் எந்த வீரரும் செய்யாத சாதனையை மானவ் சுதார் படைத்தார்.&nbsp;</p><p> 

மானவ் சுதார் இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 2 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு மொத்தமாக 26 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.</p><p>

24 வயதான மானவ் சுதார், கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, தனது முதல் இன்னிங்ஸில் 33 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். </p><p>

அதனைத் தொடர்ந்து, காலியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 76 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், 55 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, ஒரு வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.</p>]]></content>
            <updated>2026-09-17T11:59:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.5 லட்சத்துக்கு மேல் வட்டி கிடைக்கும்.., அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/post-office-nsc-scheme-details-in-tamil-1789645033"></link>
            <id>https://news.lankasri.com/article/post-office-nsc-scheme-details-in-tamil-1789645033</id>
            <summary type="text">post office nsc scheme details- பாதுகாப்பான முதலீட்டையும், நிலையான வருமானத்தையும் விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் உதவியாக உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>post office nsc scheme details- பாதுகாப்பான முதலீட்டையும், நிலையான வருமானத்தையும் விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் உதவியாக உள்ளன. </p><p>

அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களில், குறைந்த தொகையில் முதலீடு செய்ய முடியும்.
</p><p>
அந்தவகையில், அஞ்சலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் (NSC) பிரபலமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். </p><p>

இந்தத் திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது.

தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குழந்தைகளின் பெயரிலும் கணக்கு தொடங்க முடியும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c02c1649-99e1-427c-bc55-6dd0dc4fe806/26-6aabd13c37552.webp' /></p><p>10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்கை பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் நிர்வகிக்கலாம்.
</p><p>
முதியவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு வயதினரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
</p><p>
தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்து கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் கூட்டு வட்டி முறையில் வருமானம் கணக்கிடப்படுகிறது. </p><p>

முதலீட்டுக்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். முழுமையான பலன்களைப் பெற, முதிர்வு காலம் வரை முதலீட்டைத் தொடர வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bf0fb13-8f00-4cbf-ace1-95323c99bc1c/26-6aabd13b50656.webp' /></p><p>மேலும், முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுவதற்கு சில விதிமுறைகளின்படி அனுமதி உள்ளது.
</p><p>
கணக்கு தொடங்கிய ஒரு வருடத்திற்கு பிறகு முன்கூட்டியே மூடப்பட்டால் வட்டி வழங்கப்படாது, முதலீடு செய்த அசல் தொகை மட்டுமே கிடைக்கும்.
</p><p>
இத்திட்டத்தில் ரூ.11.50 லட்சத்தை ஒரே தவணையாக முதலீடு செய்து, 5 ஆண்டுகள் தொடர்ந்து வைத்திருந்தால், ஆண்டுக்கு 7.7% வட்டி விகிதத்தின் அடிப்படையில் முதிர்வில் சுமார் ரூ.16.66 லட்சம் கிடைக்கும்.
</p><p>
இதில், முதலீட்டின் மீதான வட்டி வருமானம் மட்டும் சுமார் ரூ.5,16,389 ஆக இருக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:40:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா தொடர்பில் ஐரோப்பாவிற்கு மிரட்டல் விடுத்த டொனால்ட் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-eu-1789641254"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-eu-1789641254</id>
            <summary type="text">Trump threatens to stop trading with EU: ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்.
கனடாவைத் தனது முதல் இணை உறுப்பினரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump threatens to stop trading with EU: ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்.</p><p>
கனடாவைத் தனது முதல் இணை உறுப்பினராக ஆக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்ததைத் தொடர்ந்து, கடுமையான இறக்குமதி வரிகளை விதிக்கப்போவதாகவும் வர்த்தகத்தை நிறுத்த இருப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அந்த ஒன்றியத்தை அச்சுறுத்தியுள்ளார்.</p><h2>மிக அதிக வரி</h2><p>
</p><p>ஐரோப்பிய ஒன்றியம் அந்தத் திட்டத்துடன் முன்னோக்கிச் சென்றால், அமெரிக்கா மிகக் கடுமையான வரிகளை விதிக்கலாம் அல்லது ஐரோப்பாவுடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ளலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9b9a8f-021d-4788-8754-debf83fca777/26-6aabc228534f4.webp' /></p><p> </p><p>மேலும், அது நல்ல நோக்கத்துடன் இருந்தால் சரி; ஆனால் அது தவறான நோக்கத்துடன் இருந்தால், ஐரோப்பாவின் மீது மிக அதிக அளவிலான வரிகளை விதிப்போம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராகுமாறு கனடாவிற்கு ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அழைப்பு விடுத்த மறுநாளான வியாழக்கிழமையன்று, கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.</p><p></p><p>
</p><p>வான் டெர் லேயன் கார்னிக்கு 
தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்பை உறுதி அளித்தார், ஜனநாயகங்கள் சர்வதேச விதிகள் அடிப்படையிலான அமைப்பில் முறிவை எதிர்கொண்டுள்ளதால், பிரஸ்ஸல்ஸும் ஒட்டாவவும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கூறினார். </p><p>இது வேறெவருக்கும் எதிரானதல்ல, மாறாக நமது பொதுவான வலிமைக்கான ஒரு கூட்டாண்மை ஆகும். சுருக்கமாகச் சொன்னால், கனடாவுடனான உறவைச் சாத்தியமான மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல நாங்கள் விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டிருந்தார். </p><p>இதனிடையே, ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகளைத் தடுக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு இல்லை என்று பிரான்ஸின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சர் பெஞ்சமின் ஹடாட் வியாழக்கிழமை தெரிவித்தார். </p><p>அமெரிக்க வர்த்தகத்தின் மீதான தனது அதிகப்படியான சார்ந்திருத்தலைக் குறைக்க கனடா முயன்று வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு தனித்துவமான கூட்டணி அமைக்குமாறு கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>ஒரு ஆழமான கூட்டாண்மை</h2><p>
</p><p>புதன்கிழமை ஸ்ட்ராஸ்பர்க்கில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களைச் சந்தித்த பிறகு, அவர் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கனடாவையும் பகிரப்பட்ட விழுமியங்களால் ஒன்றுபட்ட இயல்பான கூட்டாளிகள் என்று விவரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2182fce-582d-451e-8b42-7b89425b7b7b/26-6aabc229061f2.webp' /></p><p> </p><p>மேலும், நமது மக்களுக்கு அதிக வாய்ப்புகளையும் செழிப்பையும் உருவாக்குவதற்காக, நமது பரஸ்பர இறையாண்மையை வலுப்படுத்தும் ஒரு ஆழமான கூட்டாண்மையில் இரு தரப்பினரும் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார். </p><p>இணை உறுப்பினர் ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும். கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே ஏற்கனவே ஒரு வர்த்தக ஒப்பந்தமும் ஏராளமான இருதரப்பு உடன்படிக்கைகளும் உள்ளன.</p><p></p><p> </p><p>ஆனால், டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியானதன் பின்னர், தனது இரு பழைய நட்பு நாடுகள் மீதும் வரிகளை உயர்த்தியதாலும், கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றுவது பற்றித் தொடர்ந்து பேசி, ஐரோப்பிய ஒன்றியத்தைக் கடுமையாகச் சாடியதாலும், இவ்விரு நாடுகளும் மேலும் நெருங்கியுள்ளன. </p><p>27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இதுவரை இணை உறுப்பினர் பிரிவு இருந்ததில்லை. இருப்பினும், அது நார்வே, ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. </p><p>இந்த உறவுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல விதிகளைப் பின்பற்றும் அந்நாடுகளுடன் ஆழமான பொருளாதார ஒருங்கிணைப்பை அனுமதிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-17T11:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் நகரங்களை மூழ்கடித்தப் பேய் மழை... சிவப்பு எச்சரிக்கை விடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/torrential-rain-deadly-floods-1789643578"></link>
            <id>https://news.lankasri.com/article/torrential-rain-deadly-floods-1789643578</id>
            <summary type="text">Torrential rain sparks deadly floods in Spain: ஸ்பெயினில் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயின் முழுவதும் பெய்த கனமழை பெரும் பாதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Torrential rain sparks deadly floods in Spain: ஸ்பெயினில் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
</p><p>ஸ்பெயின் முழுவதும் பெய்த கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பெரும் வெள்ளப்பெருக்கையும், கடுமையான ஆபத்து குறித்த அவசர எச்சரிக்கைகளையும் தூண்டியுள்ளது.</p><h2>வெள்ளப்பெருக்கு</h2><p>
</p><p>ஸ்பெயினில் இதுவரை இல்லாத அளவு மிக வெப்பமான கோடைக்காலம் முடிந்து சில வாரங்களிலேயே, நாட்டை மூழ்கடித்த பயங்கரமான பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cafd857-2cc0-479a-8bd1-15cf84bf616e/26-6aabcb3c8e543.webp' /></p><p> </p><p>இதனிடையே, பெனிடார்ம், இபிசா மற்றும் மகாலாஃப் போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்கள் கனமழையால் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், வரும் நாட்களில் ஸ்பெயின் மேலும் பல வெள்ளப்பெருக்குகளைச் சந்திக்கவுள்ளது என்றே கூறுகின்றனர்.</p><p> பயங்கரமான இடியுடன் கூடிய மழையில் சிக்கிய பொதுமக்களை மீட்க அவசரகாலப் பணியாளர்கள் முயற்சிப்பதை பல்வேறு காணொளிக் காட்சிகள் காட்டின.</p><p> ஸ்பெயினின் பலேரிக் தீவுகளில் பலவற்றிற்கு ஆரஞ்சு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமையன்று, பயங்கரமான அலைகள் கட்டலோனியா மற்றும் வலென்சியாவைத் தாக்கின.</p><p></p><p> </p><p>30 நிமிடங்களில் இவ்வளவு அதிக அளவிலான மழைப்பொழிவை மிக அரிதாகவே பார்த்துள்ளதாக ஸ்பெயினின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>வியாழக்கிழமையன்று ஐபீரிய தீபகற்பத்தின் தென்கிழக்கு பகுதி முழுவதும் கடுமையான மழை மற்றும் வெள்ளம் குறித்த மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கைகள் வியாழன் முழுவதும், சில சமயங்களில் வெள்ளிக்கிழமை வரையிலும் நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். </p><p>பார்சிலோனாவில் உள்ள மெட்ரோ நிலையங்களும் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது; அதேவேளையில், வலென்சியாவில் அனைத்து சுரங்கப்பாதை ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03182782-9fea-4b91-8a6d-135d41e576cb/26-6aabcb3d44c77.webp' /></p><p> </p><p>கட்டலோனியா மற்றும் வலென்சியாவில் வசிப்பவர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். தெருக்கள் சேற்றுப் பகுதிகளாக மாறின; மேலும் வலென்சியாவில் 12 விமானங்கள் வேறு இடங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதால் பயணங்களில் கூடுதல் குழப்பம் ஏற்பட்டது. </p><p>வலென்சியாவில், இந்த வாரத்தில் இதுவரை வானிலை தொடர்பான சுமார் 500 புகார்கள் அவசர சேவைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-17T11:09:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு: வழக்கு விசாரணை துவக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ex-french-minister-goes-trial-on-corruption-charge-1789638697"></link>
            <id>https://news.lankasri.com/article/ex-french-minister-goes-trial-on-corruption-charge-1789638697</id>
            <summary type="text">Former French culture minister goes on trial over corruption charges: பிரான்ஸ் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Former French culture minister goes on trial over corruption charges: பிரான்ஸ் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.</p><p>


பிரான்ஸ் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்.</p><h3>

பெண் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு</h3><p>

2007ஆம் ஆண்டு, ரச்சிதா டதி (Rachida Dati, 60) என்னும் பெண் பிரான்சின் நீதித்துறை அமைச்சராக பதவியேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62af7098-be2e-48bf-84e7-b68534147b33/26-6aabb82a87b32.webp' /></p><p>
பிரான்ஸ் நாட்டில் ஒரு இஸ்லாமியப் பெண்ணொருவருக்கு அவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டது அதுவே முதல்முறை.
</p><p>
அப்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் சார்க்கோஸி, பிரான்சிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும், கல்வியும் முயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்னும் ஒரு செய்தியை தெரிவிப்பதற்காகவே ரச்சிதாவுக்கு நீதித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
</p><p>
ஆனால், ரச்சிதா ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, Renault-Nissan கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.&nbsp;</p><p></p><p>

மேலும், சட்டத்தரணியாக செயல்பட்டதற்காக அந்நிறுவனக் கிளை ஒன்றிலிருந்து 900,000 யூரோக்கள் கட்டணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் அந்நிறுவனத்தில் எந்த பணியும் செய்யவில்லை.
</p><p>
பின்னர் பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சராக ரச்சிதா பொறுப்பு வகித்தார். இந்நிலையில், Renault-Nissan நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டது தொடர்பில் ரச்சிதா மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் முதலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

அந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று துவங்கியுள்ளது. வழக்கில் ரச்சிதா குற்றவாளி என நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர் 10 ஆண்டுகள் சிறை செல்லவேண்டிவரலாம்.
</p><p>
மேலும், அவருக்கு 450,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பதுடன், ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T09:51:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/arrest-warrant-issued-cricketer-aravinda-de-silva-1789638237"></link>
            <id>https://news.lankasri.com/article/arrest-warrant-issued-cricketer-aravinda-de-silva-1789638237</id>
            <summary type="text">court issued arrest warrant for ex srilankan cricketer aravinda de silva: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியை கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>court issued arrest warrant for ex srilankan cricketer aravinda de silva: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
</p><h3>
அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடியாணை</h3><p>

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா 1984 முதல் 2003 வரை இலங்கை தேசிய அணிக்காக விளையாடியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/530c99b7-5af7-464f-b10c-5632790a90d2/26-6aabb65f4abc8.webp' /></p><p> 

1996 ஆம் ஆண்டில் உலக கிண்ணம் வென்ற இலங்கை அணியிலும் இடம் பிடித்திருந்தார். </p><p>

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக ஏர்பஸ் விமானங்களைக் வாங்கிய போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர் கபில சந்திரசேன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e05e2c9f-60e1-477d-9597-b28adb5b8a40/26-6aabb65e8be1d.webp' /></p><p> 

இவர் கடந்த மே மாதம் 8 ஆம் திகதி கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள அரவிந்த டி சில்வாவின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.&nbsp;</p><p></p><p>

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்கவை கைது செய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9910aabe-ea50-4ad3-950b-0c988a3ed0c5/26-6aabb660026f4.webp' /></p><p>

அரவிந்த டி சில்வாவின் தாயார் ராணி டி சில்வா செப்டம்பர் 14 ஆம் திகதி காலமானார். நேற்று அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் தகனச் சடங்குகள் நடைபெற்ற நாளில் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.</p><p>

அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரவிந்தா டி சில்வாவின் தாயார் காலமானதாலும், அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறவிருந்ததாலும் அவர்களால் ஆஜராக இயலவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T09:44:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய எண்ணெய் வர்த்தகம்... இந்தியா, சீனாவுக்கு ட்ரம்ப் தரப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-oil-team-trump-warns-1789637956"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-oil-team-trump-warns-1789637956</id>
            <summary type="text">Team Trump Warns India, China Over Russian Oil Trade: ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுக்கு ட்ரம்ப் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Team Trump Warns India, China Over Russian Oil Trade: ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுக்கு ட்ரம்ப் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான சார்பைக் குறைத்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் அமெரிக்காவிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரத் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரு நேரடியான மிரட்டலை விடுத்துள்ளது.</p><h2>பொருளாதாரத் தடை</h2><p> </p><p> 
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்யா தடைகள் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குடியரசுக் கட்சியின் செனட்டர் ரிச்சர்ட் புளூமெண்டல், </p><p>இந்தியாவும் சீனாவும் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் வேறு எங்காவது தங்களுக்கான எரிபொருளை வாங்க வேண்டும் என்று எச்சரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e43ac23-204c-40cd-8671-527cf20ccf64/26-6aabb5464b972.webp' /></p><p> உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, ரஷ்ய எண்ணெயை அதிகளவில் வாங்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது; 2022-ல் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு ஆளான ரஷ்யாவுக்கு, இந்த எண்ணெய் விற்பனை அதன் நிதிநிலையைச் சீரமைக்க உதவுவதாகக் கருதப்படுகிறது.</p><p></p><p>
</p><p>மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் உடன் இணைந்து இந்த மசோதாவை உருவாக்கிய ப்ளூமெண்டல், இந்தத் தடைகள் புடினுக்கு அழுத்தமளித்து, போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்று நம்புவதாகக் கூறினார்.
</p><p>2026-ஆம் ஆண்டின் லிண்ட்சே கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டம், ரஷ்ய அதிகாரிகள், வங்கிகள் மற்றும் ரஷ்ய எரிசக்தியின் போக்குவரத்தை சீராக வைத்திருக்கும் ஒரு மறைமுக எண்ணெய்க் கப்பல் குழுமம் ஆகியவற்றின் மீது தடைகளை விதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p> இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட, ரஷ்ய எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளின் மீது 100 சதவீதம் வரையிலான இறக்குமதி வரிகளை விதிக்குமாறும் இது ஜனாதிபதி ட்ரம்ப்பை அறிவுறுத்துகிறது. </p><p>ஆனால், 
ரஷ்யாவின் இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் 15 சதவீதத்திற்கும் குறைவாக இறக்குமதி செய்யும் மற்றும் அந்த இறக்குமதியைக் குறைக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ள நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.</p><h2>உறுதியாக இருப்பதாக</h2><p> </p><p>புதன்கிழமை அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 262-159 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்த மசோதா பிரதிநிதிகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது. தற்போது இது, சட்டமாக கையொப்பமிடுவதற்காக ட்ரம்ப்பிடம் அனுப்பப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5121f8b-0c53-4722-90d4-03e726ae11d0/26-6aabb54701c79.webp' /></p><p> </p><p>அமெரிக்கா இத்தகைய இறக்குமதியாளர்களைத் தண்டிக்கும் வகையில் புதிய நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும், தங்கள் மக்களுக்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாகவும், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பல்வேறு விற்பனையாளர்களிடமிருந்து தொடர்ந்து எரிசக்தியைப் பெறுவோம் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. </p><p>அத்தகைய புதிய நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்று அமெரிக்காவுக்கு எச்சரித்திருந்ததாகவும் இந்தியா கூறியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T09:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்கும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-plans-israel-arms-sale-1789624991"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-plans-israel-arms-sale-1789624991</id>
            <summary type="text">Trump’s administration is planning to sell highly destructive 2,000-pound bombs to israel: அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump’s administration is planning to sell highly destructive 2,000-pound bombs to israel: அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், பல்லாயிரக்கணக்கான, அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடை கொண்ட குண்டுகள் உட்பட 2.8 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதத் தொகுப்பை இஸ்ரேலுக்கு விற்கத் திட்டமிட்டுள்ளது.</p><h2>அளவுக்கு அதிகமாக</h2><p>
முக்கிய ஆயுத விற்பனைகளை மறுஆய்வு செய்யும் தொடர்புடைய நாடாளுமன்றக் குழுக்களுக்கு முறைசாரா முறையில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டமிடப்பட்ட தொகுப்பில், 20,000 எம்.கே-84 குண்டுகளும் 20,000 பி.எல்.யூ-117 குண்டுகளும் அடங்கும் என தகவல் கசிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e750fca-295b-46f0-a114-fdc785f6ae62/26-6aab82a113726.webp' /></p><p> </p><p>2023-இல் காஸா போர் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேலுக்கான அமெரிக்கப் பொதுமக்களின் ஆதரவு, குறிப்பாக ஜனநாயகக் கட்சியினரிடையே பெருமளவில் சரிந்துள்ளது. </p><p>
ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட குவின்னிபியாக் பல்கலைக்கழகக் கருத்துக்கணிப்பு ஒன்றின்படி, அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளவுக்கு அதிகமாக ஆதரவளிப்பதாக 48 சதவீத பேர்களும் 66 சதவீத ஜனநாயகக் கட்சியினரும் கருதுகின்றனர்; 2017-இல் இந்தக் கேள்வி முதன்முதலில் கேட்கப்பட்டபோது இச்சதவீதங்கள் முறையே 16 மற்றும் 20 ஆக மட்டுமே இருந்தன.</p><p></p><p> </p><p>காஸா மற்றும் லெபனான் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகளைப் பயன்படுத்தி வருகிறது; இது மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் ஈர்த்துள்ளது.
</p><p>காஸா சுகாதாரத் துறையினரின் தகவலின்படி, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில் 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலையை நிகழ்த்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஒன்று கண்டறிந்தது; ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கிறது.
</p><p>அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 250-க்கும் மேற்பட்டோரைப் பணயக்கைதிகளாகப் பிடித்ததைத் தொடர்ந்து, தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தற்காப்புக்காகவே என்று இஸ்ரேல் கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/851654de-b10f-46c9-b070-507424bbc39c/26-6aab82a1bea45.webp' /></p><p> </p><p>உண்மையில் காஸா போரின் பின்னணி குறித்த தகவல்களை இஸ்ரேலியப் பத்திரிகை ஒன்று சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. காஸா விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்ட சூழலில், இஸ்ரேலின் பார்வை ஈரான் மீது திரும்பியது. </p><p>பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. தற்போது ஈரான் போரில் இருந்து வெளியேற முடியாமல், அமெரிக்கா திணறி வருவதுடன், கடும் பின்னடைவையும் சந்தித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T09:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய எண்ணெய் விநியோகம்... தத்தளிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-oil-uncertainty-indian-buyers-1789630231"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-oil-uncertainty-indian-buyers-1789630231</id>
            <summary type="text">Russian Oil Uncertainty Hangs Over India&#039;s Largest Buyers: ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, இந்தியாவின் மிகப்பெரிய கொள்முதல் நிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian Oil Uncertainty Hangs Over India's Largest Buyers: ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, இந்தியாவின் மிகப்பெரிய கொள்முதல் நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது.
</p><p>இந்திய அரசுக்குச் சொந்தமான சுத்திகரிப்பு ஆலைகள், கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான விநியோக நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளன.</p><h2>இந்தியாவிற்கு மட்டும்</h2><p>
</p><p>ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்வதன் மீது அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்ற சூழலானது, மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நீடிக்கும் மோதலின் தாக்கத்தை மேலும் தீவிரமாக்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd439f1f-5268-4024-8537-c35484303d63/26-6aab971976197.webp' /></p><p> </p><p>பிப்ரவரி மாத இறுதி முதல் ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது, ஆனால் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவுதி அரேபியா கடந்த வாரம் கிழக்கு-மேற்கு குழாய்வழி நடவடிக்கைகளை மூட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. </p><p>இதனால், இந்தியாவிற்கு மட்டும் ஒரு நாளைக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பீப்பாய்கள் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இருப்பினும், அந்த இடையூறுகள் தற்காலிகமானவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>மேலும், சில நாட்களுக்குள் சுமார் பாதி கொள்ளளவை மீட்டெடுப்பதற்காக, சவுதி அரேபியா தற்போது சேதமடைந்த ஒரு பகுதியைத் தவிர்த்துச் செல்ல முயற்சி செய்து வருகிறது.</p><p></p><p> </p><p>ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்கனவே கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன; ரஷ்யாவின் எண்ணெய் துறையுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீது தண்டனைக்குரிய சுங்க வரிகளை விதிக்க வழிவகுக்கும் விரிவான அமெரிக்கத் தடைகள் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் புதன்கிழமையன்று ஒப்புதல் அளித்துள்ள நிலையில், </p><p>இனி இந்த எண்ணெயைக் கையாள்வது மேலும் சவாலானதாக மாறக்கூடும். இந்திய அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன, ஆனால் நவம்பர் மற்றும் அதற்குப் பிறகான தேவைகளைப் பொறுத்தவரை, அந்நிறுவனங்கள் கடினமான முடிவுகளை எதிர்கொள்கின்றன என்று தகவல் கசிந்துள்ளது. </p><p>கடந்த சில மாதங்களாக இறக்குமதிச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்தியா தள்ளுபடி விலையிலான ரஷ்ய எண்ணெய் மற்றும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான நீண்டகால ஒப்பந்த அடிப்படையிலான மத்திய கிழக்கு எண்ணெய் விநியோகங்களை பெருமளவில் நம்பியுள்ளது.</p><h2>சுமார் 20 நாட்களுக்கான</h2><p> </p><p>தற்போது கடல்வழி கச்சா எண்ணெயை வாங்கும் ரஷ்யாவின் முதன்மை நாடாக இந்தியா உள்ளது, ஆனால் இந்தியாவின் சுத்திகரிப்பு ஆலைகள் கூடுதல் மற்றும் பலதரப்பட்ட விநியோகங்களுக்காக ஏற்கனவே அமெரிக்கா, பிரேசில், கனடா, வெனிசுலா மற்றும் ஆப்பிரிக்காவைச் சார்ந்துள்ளன. </p><p>மத்திய கிழக்கில் எரிசக்தி நெருக்கடி தொடங்கி பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நேரம் மிகவும் இக்கட்டானதாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1308102f-e7ea-4232-bd26-6625732c8f88/26-6aab971a29a1c.webp' /></p><p> 'கேப்லர்' (Kpler) அமைப்பின் தரவுகளின்படி, செப்டம்பர் 14-ல் தொடங்கிய வாரத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இருப்பு 93.5 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது; இது கடந்த மே மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகும். </p><p>இது சுமார் 20 நாட்களுக்கான இறக்குமதிக்கு இணையான அளவை ஈடுசெய்யப் போதுமானது. அதே நேரத்தில், ராஜஸ்தானில் ஒரு நாளைக்கு 180,000 பீப்பாய்கள் சுத்திகரிக்கும் திறன் கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலையம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. </p><p>மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தற்போதுள்ள ஆலைகளை விரிவுபடுத்தி, டிசம்பர் மாதத்திற்குள் ஒரு நாளைக்கு 340,000 பீப்பாய்களுக்கும் அதிகமான கொள்ளளவை சேர்க்க உள்ளதால், நாட்டின் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-17T08:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டயானா குறித்து சார்லஸ் மோசமாக பேசியதாகக் கூறும் சகோதரர்: அரண்மனை பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/buckingham-palace-deny-claims-in-earl-spencer-book-1789635089"></link>
            <id>https://news.lankasri.com/article/buckingham-palace-deny-claims-in-earl-spencer-book-1789635089</id>
            <summary type="text">Buckingham Palace denies Charles said Diana would be forgotten soon enough: இளவரசி டயானா விரைவில் மறக்கப்பட்டு போவார் என சார்லஸ் கூறியதாக கூறப்படும் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Buckingham Palace denies Charles said Diana would be forgotten soon enough: இளவரசி டயானா விரைவில் மறக்கப்பட்டு போவார் என சார்லஸ் கூறியதாக கூறப்படும் விடயத்தை பக்கிங்காம் அரண்மனை மறுத்துள்ளது.
</p><p>

இளவரசி டயானாவின் சகோதரரான எர்ல் ஸ்பென்சர், டயானா குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்: ‘Swan Song: Diana, My Sister’ என்பது அந்த புத்தகத்தின் பெயர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ceffe1c-b2b3-4123-a9b3-4428614be0f8/26-6aabaa12a7498.webp' /></p><p>
டயானாவின் இறுதிச்சடங்கின்போது, அவரது சவப்பெட்டிக்குப் பின்னால் அவரது பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியமும், ஹரியும் நடந்து செல்வதாக திட்டமிடப்பட்டிருந்துள்ளது.
</p><h3>
சார்லஸ் மோசமாக பேசியதாகக் கூறும் சகோதரர்
</h3><p>
அதற்கு டயானாவின் சகோதரரான ஸ்பென்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சார்லசிடம் தொலைபேசியில் பேசிய அவர், தன் பிள்ளைகள் இப்படி தன் சவப்பெட்டிக்குப் பின்னால் நடப்பதை டயானா விரும்பியிருக்கமாட்டார் என்று கூற, அந்த விடயம் சார்லசை கோபப்படுத்தியதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்பென்சர்.&nbsp;</p><p>

’சார்லஸ், டயானா மீது தனக்கிருந்த அடக்கிவைத்த அவமதிப்பையும், அவரது மரணத்தால் உலகம் இவ்வளவு நிலைகுலைந்து போனதைக் கண்டு ஏற்பட்ட திகிலையும் தொலைபேசியில் என்னிடம் கொட்டித் தீர்த்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b63ac55d-8264-4dc8-8e04-0452e31144c7/26-6aabb02d2d8b0.webp' /></p><p>
நிச்சயமாக டயானா விரைவில் மறக்கப்பட்டுபோவார் என்றும் சார்லஸ் கூறினார்’ என தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் ஸ்பென்சர்.
</p><h3>
அரண்மனை பதிலடி
</h3><p> 
இந்நிலையில், ஸ்பென்சரின் கூற்றுக்கு பக்கிங்காம் அரண்மனை பதிலடி கொடுத்துள்ளது. ‘கொள்கை ரீதியாக நாங்கள் புத்தகங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பதில்லை என்றாலும், சகோதரப் பிரிவின் துயரம், அத்தகைய இழப்பு நிகழ்ந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட, பகுத்தறிவை மழுங்கடித்து, முடிவெடுக்கும் திறனைப் பாதித்து, மற்றவர்கள் அடையாளம் காண முடியாத வழிகளில் நினைவுகளுக்குச் சாயம் பூசிவிடும் என்பதை மாட்சிமை பொருந்திய மன்னர் அவர்கள் உணர்ந்திருக்கிறார்’ என்றும் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
அதாவது, ஸ்பென்சரின் அந்தக் கூற்றை அரண்மனை நிராகரித்துள்ளது. ஏனென்றால், ஆழ்ந்த இரக்க குணம் கொண்டவரும், அந்த நேரத்தில் தனது சொந்தத் துயரத்தையும், தனது இரண்டு மகன்களின் துயரத்தையும் சமாளித்துக் கொண்டிருந்தவருமான ஒரு மனிதர் மீது இப்படி ஒரு கருத்தை முன்வைப்பது முற்றிலும் தவறு என அரண்மனை வட்டாரம் கருதுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8270a9c5-b67e-4ca6-977a-8a47e7cfb8a5/26-6aabb02e035e6.webp' /></p><p>
மேலும், மன்னரின் முன்னாள் தகவல் தொடர்புச் செயலாளரான ஜூலியன் பெய்ன் என்பவர், எனக்குத் தெரிந்தவரை, மன்னர் அப்படி பேசுவதில்லை என்று கூறியுள்ளார்.
</p><p>
ஆகவே, ஸ்பென்சர் கூறியுள்ள தவறான கருத்தை சரிசெய்ய வேண்டும் என அரண்மனை கருதியதே, அவர்கள் வெளியே வந்து தைரியமாக இப்படி வழக்கத்துக்கு மாறாக ஒரு கருத்தை முன்வைக்கக் காரணமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T08:51:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சிலையை கரைக்கும் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/6-students-die-during-ganesh-immersion-telangana-1789634309"></link>
            <id>https://news.lankasri.com/article/6-students-die-during-ganesh-immersion-telangana-1789634309</id>
            <summary type="text">6 students dies during ganesh immersion in telangana: தெலங்கானாவில் விநாயகர் சிலையை கரைக்கும் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 

வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>6 students dies during ganesh immersion in telangana: தெலங்கானாவில் விநாயகர் சிலையை கரைக்கும் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். </p><h3>

விநாயகர் சிலையை கரைக்கும் போது 6 மாணவர்கள் உயிரிழப்பு </h3><p>

கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி, இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட சிலைகள், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e0b183b-470e-4f46-b71b-bfd6fa4d5a10/26-6aaba7072b1f0.webp' /></p><p>

தெலங்கானா மாநிலம், படஞ்சேரு மண்டலத்தில் உள்ள இனோலே கிராமத்தில் அமைந்துள்ள சிரிஷா நினைவு அறக்கட்டளையின் சார்பில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டது. </p><p>நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், சிரிஷா நினைவு அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள், நெருடுசெர்லா ஏரியில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக உள்ளூர் மக்களுடன் சேர்ந்து ஒரு&nbsp;வாகனத்தில் விநாயகர் சிலையை கொண்டு சென்றுள்ளனர்.&nbsp;</p><p></p><p>

ஏரியில் நீருக்கு அடியில் 12 அடி ஆழத்தில் பள்ளம் இருப்பதை அறியாத 9 மாணவர்கள், ஆழமான பகுதியில் இறங்கியுள்ளனர். </p><p>அதில் நீச்சல் தெரிந்த மாணவர்கள், நீச்சலடித்தும் அங்கிருந்த மற்றவர்களின் உதவியுடன் தப்பி தங்கள் உயிரை காப்பாற்றியுள்ளனர். 

நீச்சல் தெரியாத 6 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p> உயிரிழந்த மாணவர்கள் நரசிம்ம ராஜு (18), சுமந்த் (19), கணேஷ் (20), உதய குமார் (21), ஷாம் குமார் (18) மற்றும் சித்தார்த் (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

பட்டன்செருவு காவல்துறையினர், பேரிடர் மீட்புப் படை (DRF), தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் இணைந்து 7 படகுகளைக் கொண்டு நடத்திய மீட்புப் பணியில் 2 மணி நேரத்திற்குப் பிறகு உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61c280c4-c94d-4a21-848d-82d9027b8a64/26-6aaba7088934a.webp' /></p><p> 

உயிரிழந்த 6 மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அனைத்து விதமான உதவிகளையும் வழங்குமாறு, இந்தத் துயரச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். </p><p>

இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிரிஷா நினைவு அறக்கட்டளையின் நிர்வாகம், விநாயகர் சிலை கரைப்பதற்கு அனுமதி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6c3c7cf-eb1e-47ed-94eb-c2227c413b52/26-6aaba707d495d.webp' /></p><p>
அறக்கட்டளையின் காப்பாளர் மாணவர்களுடன் சிலை கரைக்கப்படும்போதும் உடனிருந்தாலும், சிலை கரைப்பை மேற்பார்வையிட அவர் நீருக்குள் இறங்கவில்லை என தெரியவந்துள்ளது. </p><p>

இதனையடுத்து சிரிஷா நினைவு அறக்கட்டளையின் காப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T08:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு பவுன் தங்க விலை எவ்வளவு? (17-09-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1789632587"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1789632587</id>
            <summary type="text">Today gold price in sri lanka-&amp;nbsp;இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (17-09-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Today gold price in sri lanka-&nbsp;இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (17-09-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,344,607.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 47,430.00.</p><p>

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 379,450.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 43,480.00.</p><p>

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 347,850.00.</p><p>

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 41,510.00.</p><p>

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 332,050.00.&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-17T08:10:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுப்பணியாளர்கள் தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுக்கும் ஜேர்மனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-to-crack-down-worker-exploitation-1789631480"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-to-crack-down-worker-exploitation-1789631480</id>
            <summary type="text">Germany to crack down on worker exploitation: வெளிநாட்டுப்பணியாளர்கள் ஏமாற்றப்படுவது தொடர்பில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்க ஜேர்மனி திட்டமிட்டுவருகிறது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany to crack down on worker exploitation: வெளிநாட்டுப்பணியாளர்கள் ஏமாற்றப்படுவது தொடர்பில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்க ஜேர்மனி திட்டமிட்டுவருகிறது.</p><p>


ஜேர்மனியில் நிலவும் பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கு, அந்நாடு வெளிநாட்டுப் பணியாளர்களையே நம்பியுள்ளது.
</p><h3>
வெளிநாட்டுப்பணியாளர்கள் தொடர்பில் முடிவுகள்</h3><p>

அதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜேர்மனிக்கு பணியாளர்கள் வேலைக்கு வருவதை எளிதாக்கும் வகையில் விதிகளும் நடைமுறையில் உள்ளன.&nbsp;</p><p>
விடயம் என்னவென்றால், அப்படி ஜேர்மனிக்கு வேலைக்கு வரும் பணியாளர்களை ஏமாற்றுவதும் நடக்கிறது, ஏமாற்றி அரசின் உதவிகளைப் பெறும் விடயங்களும் நடக்கின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adc053db-b0d1-4d48-9ee2-771f7680cf3d/26-6aab9bf981359.webp' /></p><p>
ஆக, இப்படி வெளிநாட்டுப் பணியாளர்கள் ஏமாற்றப்படுவதையும், அவர்கள் பெயரால் மோசடிகள் நடப்பதையும் தடுக்க அரசு திட்டமிட்டுவருவதாக ஜேர்மன் தொழிலாளர் துறை அமைச்சரான Baerbel Bas தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
அதன்படி, பணியாளர்கள் ஏமாற்றப்படுவதை தவிர்க்கும் வகையில் ஏஜன்சிகளுக்கிடையில் தரவுகள் பகிரப்படுவதை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க உள்ளார்கள்.</p><p>

அத்துடன், ஏமாற்றும் பணி வழங்குவோரை தங்கள் தவறுகளுக்கு பொறுப்பேற்க வைக்கவும், அரசு உதவிகள் தவறான நபர்களைச் சென்றடைவதைத் தவிர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T07:51:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: ஒருவர் விடுவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/charge-drop-against-ali-raza-in-torondo-gold-heist-1789630133"></link>
            <id>https://news.lankasri.com/article/charge-drop-against-ali-raza-in-torondo-gold-heist-1789630133</id>
            <summary type="text">Crown drops charge against Toronto man accused in Pearson airport gold heist: பியர்சன் விமான நிலைய கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Crown drops charge against Toronto man accused in Pearson airport gold heist: பியர்சன் விமான நிலைய கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர் ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>

கனடா விமான நிலையமொன்றிலிருந்து 400 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் விலக்கிக்கொண்டுள்ளார்கள்.
</p><h3>
கனடாவில் திருடப்பட்ட 400 கிலோ தங்கக் கட்டிகள்</h3><p>

2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டன.&nbsp;</p><p>
கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தக்க ஆவணங்களுடன் வந்த ஒருவர் அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a7febab-c53d-46f9-96f6-5fa7bf085d06/26-6aab96b75e4fb.webp' /></p><p>
அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ள வேறு சிலர் வந்துள்ளார்கள். அவர்கள் அந்த பார்சல்களுக்கான ஆவணங்களைக் கொடுக்க, அப்புறம்தான் தெரியவந்துள்ளது, ஏற்கனவே வந்த நபர் மோசடியாளர் என்பது.
</p><p>
அந்த பார்சல்களில், 6,600 தங்கக் கட்டிகள் இருந்துள்ளன. 400 கிலோ எடையுள்ள அவற்றின் மதிப்பு அப்போதே சுமார் 20 மில்லியன் டொலர்கள். அத்துடன், மற்றொரு பார்சலில் 2 மில்லியன் டொலர்கள் கரன்சியும் இருந்துள்ளது.&nbsp;</p><p></p><h3>

சமீபத்திய தகவல்
</h3><p>
சினிமா பாணியில் நடந்த அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 9 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
</p><p>
இந்நிலையில், ரொரன்றோவைச் சேர்ந்த Ali Raza (40) என்னும் நபர், அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d75cc9d-881f-4bb0-8f73-547adb2feade/26-6aab96b8104a0.webp' /></p><p>
நேற்று புதன்கிழமை, Ali Razaவுக்கு எதிரான வழக்கு, சூழ்நிலை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி, அரசுத் தரப்பு அவர் மீதான குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

தீர்ப்பைக் கேட்ட Ali Raza, தான் நிரபராதி என்றும், தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

என்றாலும், இந்த வழக்கு, நகைத் தொழில் செய்யும் Ali Razaவின் நற்பெயருக்கு களங்கத்தை உருவாக்கிவிட்டது என்றும், அவருக்கு தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ள அவரது சட்டத்தரணியான Brij Mohan என்பவர், அவர் தனது நற்பெயரை திரும்பப் பெற மேலும் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T07:29:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிக்ஸ் மாநாட்டில் சீன ஜனாதிபதி மயங்கி விழுந்ததாக பரவும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/claims-on-china-xi-jinping-fainted-at-brics-summit-1789629279"></link>
            <id>https://news.lankasri.com/article/claims-on-china-xi-jinping-fainted-at-brics-summit-1789629279</id>
            <summary type="text">Wanjun Xie
claims china president xi jinping fainted at brics summit: பிரிக்ஸ் மாநாட்டிற்கு வருகை தந்த போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மயங்கி விழுந்ததா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Wanjun Xie
claims china president xi jinping fainted at brics summit: பிரிக்ஸ் மாநாட்டிற்கு வருகை தந்த போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மயங்கி விழுந்ததாக தகவல் பரவி வருகிறது.</p><h3> 

பிரிக்ஸ் மாநாட்டில் மயங்கி விழுந்த ஷி ஜின்பிங் </h3><p>

டெல்லியில் கடந்த செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் 18வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. </p><p>

இதில், இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54e43ac0-6da1-4abb-94ae-143614cbcf76/26-6aab93620bf0a.webp' /></p><p>
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உரையாற்றிக்கொண்டிருந்த போது, ஷி ஜின்பிங் அசௌகரியமாக உணர்ந்ததால் மோடி உரையை நிறுத்திவிட்டு, ஜின்பிங்கின் மொழிபெயர்ப்பாளரை நோக்கி “Is it OK?” எனக் கேட்டார். </p><p>

மைக்ரோஃபோன் கோளாறு அல்லது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டாலும், ஜின்பிங் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாரா என பலரும் சந்தேகம் எழுப்பினர்.&nbsp;&nbsp;</p><p></p><p> 

அதைத்தொடர்ந்து, அன்று இரவு பிரதமர் மோடி அளித்த இரவு விருந்திலும் ஷி ஜின்பிங் கலந்து கொள்ளாதது சந்தேகத்தை வலுப்படுத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86ab761f-65b9-47b6-a14d-fc294d0a5856/26-6aab9361557ed.webp' /></p><p>

இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டிற்கு வருகை தந்த ஜின்பிங் மயங்கி விழுந்ததாகவும், பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் சீன ஜனநாயகக் கட்சியின் தலைவர் வான்ஜுன் ஷியே எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியா நடத்திய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஷி ஜின்பிங் மயங்கி விழுந்ததாக தகவல் பரவியுள்ளது.
</p><p>
அவருடன் சென்ற மருத்துவக் குழுவினரால் அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அவர் தனது இந்தியப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஒரு சிறப்பு விமானத்தில் சீனாவுக்குத் திரும்பினார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zh" dir="ltr">据传，习近平在印度主办的金砖峰会上晕倒，经随行医疗团队的紧急救治后，提前结束对印度的访问，搭乘专机返回中国。飞机抵达北京机场后，北京当局没有安排大批官员接机，也没有组织欢迎仪式，而是用军用直升机，直接将习近平送到了北京301医院，进行急救。… <a href="https://t.co/3bfnNfoZ05">pic.twitter.com/3bfnNfoZ05</a></p>&mdash; 谢万军 Wanjun Xie (@WanjunXie) <a href="https://x.com/WanjunXie/status/2100042128390762923?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பெய்ஜிங் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது, ​​அவரை வரவேற்க பெய்ஜிங் அதிகாரிகள் ஒரு பெரிய அதிகாரிக் குழுவையோ அல்லது வரவேற்பு விழாவையோ ஏற்பாடு செய்யவில்லை. </p><p>

மாறாக, ஷி ஜின்பிங்கை அவசர சிகிச்சைக்காக பெய்ஜிங்கின் 301 மருத்துவமனைக்கு நேரடியாகக் கொண்டு செல்ல ஒரு ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.</p><p> 

பெய்ஜிங்கின் 301 மருத்துவமனையின் நிபுணர் குழுவின் பரிசோதனைக்குப் பிறகு, ஷி ஜின்பிங்கிற்கு கடுமையான இஸ்கிமிக் பக்கவாதம், அதாவது தற்காலிக பெருமூளை இரத்த உறைவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. </p><p>

தனது உடல்நிலை குறித்த தகவல்களை இந்தியத் தரப்பு பெற்றுவிடுமோ என்று ஷி ஜின்பிங் அஞ்சியதால், அவர் இந்திய மருத்துவமனையில் அவசர சிகிச்சையை மறுத்து, சிகிச்சைக்காக பெய்ஜிங்கிற்கு ஒரு சிறப்பு விமானத்தில் திரும்பினார். </p><p>

விமானப் பயணத்தின்போது, ​​அறுவை சிகிச்சைக்கான நிலைமைகள் இல்லாததால், ஷி ஜின்பிங்கின் உயிரைக் காப்பாற்ற மருத்துவக் குழுவினரால் பழமையான சிகிச்சைகளை மட்டுமே அளிக்க முடிந்தது. இதன் விளைவாக, அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கான பொன்னான வாய்ப்பை அவர் தவறவிட்டார். </p><p>

பெய்ஜிங்கின் 301 மருத்துவமனையில் கூட, ஷி ஜின்பிங்கிற்கு சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், கடுமையான பின்விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. </p><p>

தற்போது, ​​அமெரிக்கப் பயணத்திற்கு முன்பு ஷி ஜின்பிங் குணமடைவாரா என்பதை பெய்ஜிங் அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. 

எனவே, செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறவிருந்த அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருக்குமா என்பதைப் பொறுத்திருந்து அவர்கள் காத்திருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார். </p><p>

தொடர்ந்து மற்ற பதிவுகளில், ஷி ஜின்பிங்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், அவர் இன்னும் அபாயகட்டத்தில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆனால் இது ஆதாரமற்ற தகவல் என பலரும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். </p><p>இது குறித்து சீனா மற்றும் இந்தியா தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. </p><p>

சீன ஜனநாயகக் கட்சி சீனாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வான்ஜுன் ஷியே அமெரிக்காவில் வசித்து வருகிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T07:14:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நட்சத்திரத்தை மாற்றும் புதன்.., இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-peyarchi-1789628194"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-peyarchi-1789628194</id>
            <summary type="text">3 zodiac get money due to budhan peyarchi-&amp;nbsp;நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம...</summary>
            <content type="html"><![CDATA[<p>3 zodiac get money due to budhan peyarchi-&nbsp;நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.</p><p>

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.</p><p>

இந்நிலையில்,புதன் தற்போது தனது சொந்த ராசியான கன்னி ராசியில் சஞ்சரித்து வருகிறார்.</p><p>
</p><p></p><p>அதேவேளையில், புதன் கிரகம் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஹஸ்த நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.
</p><p>
மேலும், செப்டம்பர் 21ஆம் திகதி வரை புதன் ஹஸ்த நட்சத்திரத்தில் நீடிப்பார்.
</p><p>
அந்தவகையில், ஹஸ்த நட்சத்திரத்தின் வழியாக புதன் கிரகம் பயணிப்பதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.</p><h2>மிதுனம்
</h2><ul><li>
தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.</li><li>
முடிக்கப்படாமல் இருந்த பணிகளை நிறைவடையும்.
</li><li>பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.</li><li>
கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.
</li><li>தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
</li><li>பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ள முடியும்.</li><li>திருமண வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியான நேரமும் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c38ce69-e854-4539-8cca-7103053bc72a/26-6aab8fccf0d0c.webp' /></p><h2>கடகம்
</h2><p>
</p><ul><li>தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
</li><li>பணியிடத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும்.
</li><li>நிதிநிலை சீராகி, சேமிப்பு அதிகரிக்கும்.</li><li>
பல்வேறு துறைகளில் இருந்து வருமானம் கிடைக்கும்.
</li><li>புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.</li><li>
பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a015aae3-587c-452e-97b0-4f5f39e754b5/26-6aab8fcdc1daa.webp' /></p><p>
</p><h2>கன்னி
</h2><ul><li>
முதலீடுகள் மற்றும் வணிகம் மூலம் நிதி நன்மைகள் கிடைக்கும்.
</li><li>தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
</li><li>நிதிநிலை எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமையும்.</li><li>
நீண்ட கால முதலீடுகளுக்கு ஏற்ற காலமாக இருக்கும்.
</li><li>வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும்.</li><li>
திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.</li><li>
வெளிநாட்டில் வேலை செய்யம் வாய்ப்புகள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/403812a3-c84a-4f84-838b-37385e3a08fa/26-6aab8fce77039.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-17T07:01:07+00:00</updated>
        </entry>
    </feed>
