<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-30T15:52:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saransh-jain-said-33-is-just-a-number-1785422358"></link>
            <id>https://news.lankasri.com/article/saransh-jain-said-33-is-just-a-number-1785422358</id>
            <summary type="text">இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள சரன்ஷ் ஜெயின், களத்தில் வயது தடையில்லை என தெரிவித்துள்ளார்.&amp;nbsp;சரன்ஷ் ஜெயின்
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள சரன்ஷ் ஜெயின், களத்தில் வயது தடையில்லை என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>சரன்ஷ் ஜெயின்</h2><p>
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் விளையாட சரன்ஷ் ஜெயின் 33 வயதில் இடம்பிடித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76b97199-50f0-4562-92f2-067bf8fd36e0/26-6a6b62acbb855.webp' />&nbsp;</p><p></p><p>மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சரன்ஷ் ஜெயின் (Saransh Jain) 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வயதில் இந்திய அணியில் இடம்பிடித்த வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.
</p><h2>வயது ஒரு தடையாகவோ </h2><p>இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து பேசிய சரன்ஷ் ஜெயின், "வயது என்பது வெறும் ஒரு எண் மட்டுமே; இன்றைய காலகட்டத்தில் களத்தடுப்பு (fielding) தரநிலைகள் மிக உயர்ந்த நிலையில் இருப்பதால், 33 வயதும் வெறும் ஒரு எண்ணாகவே கருதப்படுகிறது.</p><p>அதாவது களத்தில் உங்கள் வயது ஒரு தடையாகவோ அல்லது வெளிப்படையாகவோ தெரிவதில்லை.</p><p>ஒருவேளை இன்று இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்காமல் போயிருந்தாலும், அடுத்த ஓராண்டு அல்லது இரண்டாண்டுகளுக்குள் நான் அதில் இடம்பிடித்திருப்பேன் என்று எனக்குத் தெரியும்.
</p><p>
ஆனால், நான் நிச்சயம் அணியில் இடம்பெறுவேன் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது" என தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae4ff400-57c1-406e-9f78-73d410212ddc/26-6a6b634d079f6.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a543f3b-aee0-4b72-bdc0-84c11817e30e/26-6a6b62abd97b9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p>

&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T14:42:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[படிக்க மறுக்கப்பட்ட வாய்ப்பு - ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்து வாய்ப்பு கேட்ட மாணவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/denied-admission-student-hacks-iit-kanpur-website-1785421896"></link>
            <id>https://news.lankasri.com/article/denied-admission-student-hacks-iit-kanpur-website-1785421896</id>
            <summary type="text">படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டநிலையில், மாணவர் ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்து வாய்ப்பு கேட்டுள்ளார்.

ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்த மாணவர் 

கான்பூர் ஐஐடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டநிலையில், மாணவர் ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்து வாய்ப்பு கேட்டுள்ளார்.</p><h3>

ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்த மாணவர் </h3><p>

கான்பூர் ஐஐடி, இளநிலை சைபர் செக்யூரிட்டி’ என்ற பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b92447e2-480a-4bd2-9de4-9aa02c71c2b3/26-6a6b60497b228.webp' /></p><p> 

கோடிங் மற்றும் சைபர் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட மாணவர் ஒருவர், இந்த படிப்பில் சேர விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து, தேவையான கட்டணத்தைச் செலுத்தி, தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி சேர்க்கை செயல்முறையை நிறைவு செய்துள்ளார். </p><p>

ஆனால், அவர் தேர்வுப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதால், அந்தத் திட்டத்திற்கான தேர்வுச் செயல்முறையின் ஒரு பகுதியாக உள்ள ஹேக்கத்தானில் அவரால் பங்கேற்க இயலவில்லை.&nbsp;</p><p></p><p>

தனக்கு சைபர் பாதுகாப்பில் உள்ள திறமையை காட்ட முயற்சித்த அவர், கான்பூர் ஐஐடி மற்றும் சென்னை ஐஐடியின் இணையதளத்தை முடக்கி, "எனக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கும் நோக்கம் இல்லை. எனக்குத் தேவை ஒரு நியாயமான வாய்ப்பு மட்டுமே" என்ற செய்தியை பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a52371d-8d41-4ff4-ae53-635c739c6b3e/26-6a6b604a30098.webp' /></p><p> 

இதனை கண்டறிந்த ஐஐடி குழுவினர், உடனடியாகச் செயல்பட்டு இணையதளத்தை மீட்டனர்.
</p><p>
இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய ஐஐடி கான்பூர் இயக்குநர் மனிந்திர அகர்வால், "அந்த மாணவருக்கு சைபர் பாதுகாப்பில் போதுமான முன் அனுபவம் இல்லாததால் அவர் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e1d003-a930-491c-8d16-4567e68fe0ca/26-6a6b604ad688d.webp' /></p><p>

இந்தக் கல்வி அமர்வுக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை ஏற்கனவே முடிவடைந்துவிட்டது, எனவே இப்போது சேர்க்கை சாத்தியமில்லை.</p><p> 

இருப்பினும், அந்த மாணவரை அழைத்து, முறையான சோதனை மூலம் அவரது தொழில்நுட்பத் திறன்களை மதிப்பீடு செய்வோம். அவர் தனது திறமையை நிரூபித்தால், அடுத்த மாணவர் சேர்க்கைச் சுற்றில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

இவ்வாறு இணையதளத்தை ஹேக் செய்வது சட்டவிரோதம் என்றாலும், மாணவரின் திறமை மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:31:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற மூன்று பெண்களுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-migrants-dies-try-to-cross-english-channel-1785416674"></link>
            <id>https://news.lankasri.com/article/france-migrants-dies-try-to-cross-english-channel-1785416674</id>
            <summary type="text">ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் புலம்பெயர்வோர் நால்வர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.

புலம்பெயர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் புலம்பெயர்வோர் நால்வர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.</p><h3>

புலம்பெயர்வோர் நான்கு பேர் பலி
</h3><p>
இன்று காலை 6.00 மணியளவில், பிரான்சிலுள்ள Dunkirk துறைமுகத்தினருகே சிறிய ரப்பர் படகொன்று புறப்படுவதைக் கண்டதாக பிரான்ஸ் கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d7e581-6e93-41d2-bf62-286092a9841d/26-6a6b4be3a516d.webp' /></p><p>
சிறிது நேரத்திற்குள், அந்த படகில் மூன்று பெண்கள் சுயநினைவிழந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
</p><p>
உடனடியாக அவர்களை மீட்டு கரைக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்ததாக தெரிவித்துள்ள பிரான்ஸ் கடலோரக் காவல் படையினர், ஆனாலும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்று கூறியுள்ளனர்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், அவர்கள் மூவரும் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், அவர்கள் முறையே சுமார் 30, 40 மற்றும் 50 வயதுடையவர்கள் என்றும் தி டெலிகிராஃப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், Dannes என்னுமிடத்தில், மற்றொரு புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, அவரது படகில் பழுது ஏற்பட, அவரும் பலியாகியுள்ளார்.</p><p>

ஆக, இன்று ஒரே நாளில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது புலம்பெயர்வோர் நான்கு பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:16:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் மாத ராசிபலன்.., கடைசி 6 ராசிகளுக்கு எப்படி இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/august-month-rasi-palan-in-tamil-1785413810"></link>
            <id>https://news.lankasri.com/article/august-month-rasi-palan-in-tamil-1785413810</id>
            <summary type="text">நாளையுடன் ஜூலை மாதம் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கின்றது.

ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன.

இந்த பெயர்ச்சிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளையுடன் ஜூலை மாதம் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கின்றது.
</p><p>
ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன.
</p><p>
இந்த பெயர்ச்சிகளின் தாக்கம் 12 ராசிகள் மீது தாக்கங்களை ஏற்படுத்த உள்ளன.
</p><p>
குறிப்பாக ஆகஸ்ட் 1ஆம் திகதி சுக்கிரன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஆகஸ்ட் 2ஆம் திகதி செவ்வாய் மிதுன ராசிக்கு மாறுகிறார்.
</p><p>
மேலும், ஆகஸ்ட் 5ஆம் திகதி புதன் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஆகஸ்ட் 17ஆம் திகதி சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் மற்றும் ஆகஸ்ட் 22ஆம் திகதி புதன் சிம்ம ராசிக்கு மாறுகிறார்.
</p><p>
இந்த மாதத்தில் கடக ராசியில் புதன் நுழையும் போது குருவுடன் இணைந்து கஜலட்சுமி யோகம் மற்றும் சூரியனுடன் இணைந்து புதாதித்ய யோகங்கள் உருவாகும்.
</p><p>
அந்தவகையில், பிறக்கப்போகும் ஆகஸ்ட் மாதம் முதல் 6 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று இராம்ஜி சுவாமிகள் பகிர்ந்துள்ளார்.
</p><h2>

துலாம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ar4jnUiCu7w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>விருச்சிகம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2eqdbWI5J38" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>தனுசு&nbsp;</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zyv_tH_-v-I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மகரம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/91jV4YsazgU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><h2>கும்பம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jUG9EWzEvWg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><h2>மீனம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/V4n_DkqqVEQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெலிகிராம் நிறுவனரை பயங்கரவாதி பட்டியலில் சேர்த்த ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-adds-pavel-durov-to-terrorist-list-1785417528"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-adds-pavel-durov-to-terrorist-list-1785417528</id>
            <summary type="text">கைது செய்ய பிடியாணை பிறப்பித்த ஒரு நாள் கழித்து, டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவை ரஷ்யா பயங்கரவாதி பட்டியலில் சேர்த்தது.&amp;nbsp;டெலிகிராம் நிறுவனர்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்ய பிடியாணை பிறப்பித்த ஒரு நாள் கழித்து, டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவை ரஷ்யா பயங்கரவாதி பட்டியலில் சேர்த்தது.&nbsp;</p><h2>டெலிகிராம் நிறுவனர்&nbsp;</h2><p>
உலகம் முழுவதும் தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/067d8f1d-ff80-4262-8938-1fc9c186ba97/26-6a6b50bc9bdc0.webp' />&nbsp;</p><p></p><p>

இந்த நிறுவனத்தின் தலைவரான பாவெல் துரோவ் துபாயில் வசித்து வருகிறார். 

ரஷ்யாவில் பிறந்த துரோவ் பயங்கரவாதத்திற்கு உதவியதாக ரஷ்ய அரசு குற்றம்சாட்டியது.
</p><p>
அத்துடன் ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது.&nbsp;</p><h2>பயங்கரவாதிகள் பட்டியல்&nbsp;</h2><p>

இந்த நிலையில், ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு அமைப்பான ரோஸ்ஃபின்மானிட்டரிங், வியாழக்கிழமை அன்று பாவெல் துரோவை (Pavel Durov) தனது பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
</p><p>
இதற்கிடையில் சட்ட அமலாக்க அதிகாரிகள், பாவெல் துரோவின் டெலிகிராம் ரஷ்யாவிற்குள் நாசவேலைகள், இணையவழி மோசடி மற்றும் ஆயுதத் தாக்குதல்களை ஒருங்கிணைக்க, உக்ரேனிய உளவுத்துறை மற்றும் பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்படும் உள்ளடக்கத்தை அகற்றத் தவறியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ef52ddb-33b2-46a5-9689-87940c2cb163/26-6a6b50bd70443.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழித்தெறியப்பட்ட முதல்வர் விஜய் போஸ்டர் - கர்நாடகாவில் தீவிரமடையும் காவேரி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karnataka-protest-against-open-cauvery-water-to-tn-1785415567"></link>
            <id>https://news.lankasri.com/article/karnataka-protest-against-open-cauvery-water-to-tn-1785415567</id>
            <summary type="text">தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது.

தமிழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது.</p><h3>

தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க உத்தரவு </h3><p>

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவேரி பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. </p><p>

மேலும், காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடகா அரசு தீவிர முயற்சித்து வருகிறது. 

இதனை எதிர்த்து முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/362aa4ab-9e02-43e4-9d21-29acb0663e78/26-6a6b47951f6f0.webp' /></p><p>

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3,500 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டிருந்தது.</p><p>

ஆனால், இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யவில்லை என்பதால், எங்களின் குடிநீர்த் தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறி கர்நாடக அரசு தண்ணீர் திறக்கத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.&nbsp;</p><p></p><p> 

இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவித்தபடி 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p><h3>

தீவிரமடையும் போராட்டம் </h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e821173b-28fa-4b4f-a727-cfe7f9614155/26-6a6b47946fe43.webp' /></p><p>ஆனால், தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ef360c8-5083-487a-a40f-8a277903e9b0/26-6a6b47931a5f2.webp' /></p><p>

இதில், மாண்டியாவில் முதல்வர் விஜய் பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, ஜனநாயகன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முற்றுகையிட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc6d9802-fb16-4a97-9966-198430780c6e/26-6a6b47926b380.webp' /></p><p>

கர்நாடக ரக்ஷண வேதிகை மாநிலத் தலைவர் டி.ஏ. நாராயண கௌடா, "இந்த தீர்ப்பு கர்நாடகாவின் நலன்களுக்குப் பாதகமானது, இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். 

முழு பந்த் நடத்தி மக்களை சிரமப்படுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அது ஒரு கடைசி கட்ட போராட்டமாகவே இருக்கும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f0c7710-088c-4e93-b3d8-22791775ec87/26-6a6b4793bede3.webp' /></p><p> 

கர்நாடகாவில் இருந்து ஒரு துளி நீர் கூட தமிழ்நாட்டிற்கு செல்லகூடாது என தெரிவித்துள்ள கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ், பந்த் அறிவிப்பது குறித்து நாளை ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c6208a-1d11-49ea-a9f2-f613953948be/26-6a6b4791baad6.webp' /></p><h3>

கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்</h3><p> 

காவேரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகா வர உள்ளதாக கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc37027-59b8-4483-8fef-122221b20570/26-6a6b47911778d.webp' /></p><p> 

இது குறித்து பேசிய அவர், "காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின்மூலம் தீர்வுகாண தமிழக முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள நீர்நிலைகளைப் பார்வையிட அவருக்கு என் தனி ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது. அவருக்கு விளக்கம் அளிக்க வழக்கறிஞர்கள், அதிகாரிகள் குழுவும் தயார்நிலையில் உள்ளது." என தெரிவித்துள்ளார். </p><p>

முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு செல்ல தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b088ee29-4710-468c-9ea2-6a3ee94b199f/26-6a6b4790682ab.webp' /></p><p>

ஆனால் இந்த சூழலிலும், முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் திகதி கர்நாடகாவிற்கு செல்வதில் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>அதற்கு முந்தைய தினம், ஆகஸ்ட் 2 ஆம் திகதி, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் காவேரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:47:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு: வெப்பத்துடன் போராடும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-earthquake-death-toll-increased-34-1785414723"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-earthquake-death-toll-increased-34-1785414723</id>
            <summary type="text">ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்தென்மேற்கு ஜப்பானை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
</p><h2>
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்</h2><p>தென்மேற்கு ஜப்பானை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அதில் குறைந்தது 13 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b3cfea1-6c1c-4365-b98f-a289999c789b/26-6a6b45bbe961c.webp' />&nbsp;</p><p></p><p>
இந்த நிலையில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளதாக குமாமோட்டோ மாகாண அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். </p><p>

ஒரு வணிக வளாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாலும், சுமார் ஒரு மணிநேரம் கழித்து அந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தாலும் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில், இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது வெளியேற்ற முகாம்களில் தங்கியுள்ளனர்.</p><h2> கடும் வெப்பத்துடன் போராட்டம் 
</h2><p>இருப்பினும், இப்பகுதி கடும் வெப்பத்துடன் போராடி வருவதால், அவர்களைக் குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்திருப்பதே சவாலாக உள்ளது.</p><p> 

ஆனால், இனி வரும் நாட்களில் மாகாணத்தில் வெப்பநிலை 39 டிகிரி செல்ஸியஸ்-ஐ எட்டக்கூடும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதன் காரணமாக உயிர் பிழைத்தவர்களையும், மீட்புக் குழுவினரையும் வெப்பத்தாக்கத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3b38101-ad21-42c2-894e-7405e9173449/26-6a6b45bcbcb77.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு கப் பச்சரிசி போதும்..., சுவையான அப்பம் செய்யலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/appam-recipe-in-tamil-1785412484"></link>
            <id>https://news.lankasri.com/article/appam-recipe-in-tamil-1785412484</id>
            <summary type="text">குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த அரிசி அப்பத்தை விரும்பி உண்பார்கள்.

அந்தவகையில், சுவையான அரிசி அப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த அரிசி அப்பத்தை விரும்பி உண்பார்கள்.
</p><p>
அந்தவகையில், சுவையான அரிசி அப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
</p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><ul><li>
பச்சரிசி- 1 கப்
</li><li>வெல்லம்- 1 கப்</li><li>
ஏலக்காய்- 3
</li><li>தேங்காய்- 1
</li><li>வாழைப்பழம்- 1
</li><li>உப்பு- 1 சிட்டிகை</li><li>
தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு
</li></ul><h2>செய்முறை
</h2><p>முதலில் பச்சரிசியை 2 முறை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பச்சரிசி, ஏலக்காய், தேங்காய் துருவல், வாழைப்பழம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/621de8bd-05e9-4f92-85c3-782c9ed90eb5/26-6a6b3b8699156.webp' /></p><p>அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
இதற்கடுத்து அரைத்த மாவில் வெல்ல கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
</p><p>
இறுதியாக குழிப்பணியார சட்டியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானது மாவை ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான அரிசி அப்பம் தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டீபன் பிளெம்மிங் இங்கிலாந்தின் பயிற்சியாளர்: புதிய டெஸ்ட் கேப்டனும் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/stephen-fleming-appointed-coach-for-england-1785412026"></link>
            <id>https://news.lankasri.com/article/stephen-fleming-appointed-coach-for-england-1785412026</id>
            <summary type="text">இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் அணித்தலைவராக ஜோ ரூட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டீபன் பிளெம்மிங்

சென்னை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் அணித்தலைவராக ஜோ ரூட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><h2>ஸ்டீபன் பிளெம்மிங்</h2><p>

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நீண்ட காலமாக பணியாற்றிய ஸ்டீபன் பிளெம்மிங் (Stephen Fleming) சமீபத்தில் அதிலிருந்து வெளியேறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3023dd1a-e6f4-48d4-b726-f5b8e24193ee/26-6a6b3a8b213dc.webp' />&nbsp;</p><p></p><p>

இந்த நிலையில், ஸ்டீபன் பிளெம்மிங் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

இதுகுறித்து பேசிய பிளெம்மிங், "இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பயிற்சியாளராக இணைவதில் நான் மிகுந்த உற்சாகம் அடைகிறேன். இது உலக கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புமிக்க பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டதை நான் பெருமையாகக் கருதுகிறேன்" என தெரிவித்தார்.</p><h2>ஜோ ரூட் </h2><p>

அதேபோல் டெஸ்ட் அணித்தலைவராக ஜோ ரூட் (Joe Root) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறும்போது, </p><p>'இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் அணியின் கேப்டனாக மீண்டும் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமும், பாக்கியமும் ஆகும். </p><p>

டெஸ்ட் அணியின் கேப்டன் பதவி என்பது சவாலானது என்றாலும், மிகுந்த மனநிறைவைத் தரக்கூடிய ஒன்றாகும்; கடந்த மாதம் மெக்கல்லமுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் அந்தப் பொறுப்பை மீண்டும் ஒருமுறை சுவைத்த பிறகு, அடுத்த தலைமுறை வீரர்களை வழிநடத்தி செல்ல நான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன்' என்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6a704e0-3fa6-4098-b7a3-775481570e10/26-6a6b3a8bdf5f2.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T11:48:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெப்ப அலையால் இரண்டு மாதங்களில் மரணமடைந்த பிரித்தானியர்களின் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deaths-from-heat-already-double-1785410694"></link>
            <id>https://news.lankasri.com/article/deaths-from-heat-already-double-1785410694</id>
            <summary type="text">பிரித்தானியாவில் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நிலவிய கடும் வெப்பத்துடன் தொடர்புடைய இறப்புகள், 2025-ஆம் ஆண்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையை விட ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நிலவிய கடும் வெப்பத்துடன் தொடர்புடைய இறப்புகள், 2025-ஆம் ஆண்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையை விட ஏறக்குறைய இருமடங்காகப் பதிவாகியுள்ளது.</p><h2>மே, ஜூன் மாதங்களில்</h2><p>
</p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், வெப்ப அலையால் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 2,877 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34296b1e-2e5e-4f8a-bcfd-55a14f424332/26-6a6b355deb0fe.webp' /></p><p> கடந்த ஆண்டு வெப்ப அலைக்கு 1,504 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவே பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் வெப்பம் தொடர்பான இறப்புகள் ஏற்கனவே 2,877-ஆக உள்ளன; இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக, மே 24 முதல் 27 வரையிலான காலத்தில் சுமார் 753 இறப்புகள் நிகழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஜூன் மாதத்தில் நீடித்த அதிக வெப்பநிலையுடன் தொடர்புடைய மேலும் 2,124 இறப்புகள் பதிவாகியுள்ளன. இவை ஆரம்பக்கட்ட மதிப்பீடுகள் என்று UKHSA கூறுகிறது; இருப்பினும், வெப்பம் தொடர்பான இறப்புகள் 2022-ல் பதிவான ஆண்டுச் சாதனை அளவை மிக வேகமாக நெருங்கி வருவதை இவை ஏற்கனவே சுட்டிக்காட்டுகின்றன.</p><h2>சுகாதார எச்சரிக்கைகள்</h2><p> </p><p>கடந்த மாதம் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் என்ற கடும் அளவை எட்டியதைத் தொடர்ந்து, பிரித்தானியா தனது வரலாற்றிலேயே மிக வெப்பமான ஜூன் மாத நாளை எதிர்கொண்டது. </p><p>பிரித்தானியாவின் சில பகுதிகள் இந்த ஆண்டின் நான்காவது வெப்ப அலையை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது 'அம்பர்' மற்றும் 'மஞ்சள்' நிறத்திலான வெப்பம் தொடர்பான சுகாதார எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c9af992-aa52-457b-9747-15b3cf2fc62e/26-6a6b355eec178.webp' /></p><p> </p><p>தெற்கு இங்கிலாந்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருந்தாலும், மிட்லாண்ட்ஸ் பகுதியிலும் இறப்பு விகிதம் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்ததாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. </p><p>இப்பகுதி தீவிர வெப்பத்திற்கு அரிதாகவே ஆளாவதால், அங்குள்ள மக்கள் அதன் தாக்கங்களுக்கு அதிக பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளனர் என்று இது உணர்த்துகிறது என்றே UKHSA குறிப்பிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T11:23:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் வெப்பம் தொடர்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nearly-10000-heat-related-deaths-in-germany-1785410229"></link>
            <id>https://news.lankasri.com/article/nearly-10000-heat-related-deaths-in-germany-1785410229</id>
            <summary type="text">ஜேர்மனியில் வெப்பம் தொடர்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளதாக ஜேர்மன் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

10,000ஐ நெருங்கிய உயிரிழப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் வெப்பம் தொடர்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளதாக ஜேர்மன் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
</p><h3>
10,000ஐ நெருங்கிய உயிரிழப்புகள்
</h3><p>
ஜேர்மனியில், இந்த ஆண்டில் மட்டும், இதுவரையில், வெப்பம் தொடர்பில் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக ஜேர்மன் சுகாதார அமைப்பான ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>

குறிப்பாக, 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளார்கள்</p><p>விடயம் என்னவென்றால், இந்தக் கோடையில் நிலவும் வெப்ப அலைகள் காரணமாக உயிரிழப்புகள் மேலும் அதிகமாகும் என்றும் ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
ஜூன் மாதத்தில், இதுவரை இல்லாத வகையில், நாட்டின் பல பகுதிகள், 40 டிகிரி மற்றும் அதற்கு அதிகமான வெப்பம் கொண்ட வெப்ப அலைகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:17:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யப் பெண்ணை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ள பிரான்ஸ்: யார் அந்தப் பெண்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-expel-russia-commentator-for-disinformation-1785409835"></link>
            <id>https://news.lankasri.com/article/france-expel-russia-commentator-for-disinformation-1785409835</id>
            <summary type="text">பிரான்ஸ் ஊடகங்களில் ரஷ்ய பிரச்சாரங்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ரஷ்ய நாட்டவரான பெண்ணொருவரை நாட்டை விட்டு வெளியேற பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் ஊடகங்களில் ரஷ்ய பிரச்சாரங்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ரஷ்ய நாட்டவரான பெண்ணொருவரை நாட்டை விட்டு வெளியேற பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது.
</p><h3>
யார் அந்தப் பெண்?
</h3><p>
அவரது பெயர் செனியா ஃபெடரோவா (Xenia Fedorova). பிரான்சில், ரஷ்யா டுடே என்னும் ஊடகத்தின் தலைவராக இருந்தவர் அவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c400ee98-de85-4a1c-92ea-7c07f30af67d/26-6a6b312ca1c60.webp' /></p><p>
</p><p>
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு பிரான்ஸ் அந்த ஊடகத்தை தடை செய்துவிட்டது.
</p><p>
அதன்பின், பிரான்ஸ் நாட்டு கோடீஸ்வரரான வின்சென்ட் போலோர் என்பவருக்கு சொந்தமான ஊடகங்களில் விமர்சகராக பணியாற்றிவந்தார் செனியா.&nbsp;</p><p></p><p>

செனியா, பல்வேறு தொலைக்காட்சிகளிலும் வானொலியிலும் அடிக்கடி தோன்றும் நிலையில், அவர் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் குறித்த ரஷ்யாவின் கருத்துக்களை ஊடகம் வாயிலாக பரப்பிவருவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>

அதைத் தொடர்ந்து, செனியா நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>
அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து செனியா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:10:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல ஆண்டுகளாக வீசிய நாற்றம்: கனேடிய கிராமம் ஒன்று எடுத்துள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canadian-town-removes-rotten-fish-sauce-tank-1785404741"></link>
            <id>https://news.lankasri.com/article/canadian-town-removes-rotten-fish-sauce-tank-1785404741</id>
            <summary type="text">கனேடிய கிராமம் ஒன்றில், மீன் சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து பல ஆண்டுகளாக துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த நிலையில், அது தொடர்பில் உள்ளூர் நிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனேடிய கிராமம் ஒன்றில், மீன் சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து பல ஆண்டுகளாக துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த நிலையில், அது தொடர்பில் உள்ளூர் நிர்வாகம் நல்ல முடிவொன்றை எடுத்துள்ளது.</p><h3>

பல ஆண்டுகளாக வீசிய நாற்றம்
</h3><p>
கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடார் மாகாணத்தில், செயிண்ட் மேரீஸ் என்னும் சிறு கிராமம் ஒன்று உள்ளது.
</p><p>
அந்த கிராம மக்கள், பல ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரச்சினையை சந்தித்துவந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f97ff6e-9944-4e4a-aaec-16cfa37a84b8/26-6a6b1d470aa2c.webp' /></p><p>
அதாவது, அங்கு ஒரு மீன் சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் அந்த தொழிற்சாலை நிர்வாகம் அந்த தொழிற்சாலையை கைவிட்டுச் சென்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/addacb0e-bb03-4e83-8df6-daa2d880f80b/26-6a6b1d47aec95.webp' /></p><p>
அப்போது, அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள், சுமார் 11,000 லிற்றர் கொள்ளளவு கொண்ட, 110 டேங்குகளிலிருந்த மீன் சாஸை அப்படியே விட்டுச் சென்றுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>

காலப்போக்கில் ஜன்னல்கள், கதவுகள், கூரை, சுவர்கள் என அந்த தொழிற்சாலைக் கட்டிடம் சிதிலமடைய, மீன் சாஸ் டேங்குகளில் சாஸை நொதிக்கச் செய்வதற்காக சேர்க்கப்பட்ட பாக்டீரியா தவறாமல் தன் பணியைச் செய்ய, அழுகிய மீன் சாஸிலிருந்து கடும் நாற்றம் வீசத்துவங்கியுள்ளது.</p><p>

பல ஆண்டுகளாக மக்கள் அந்த துர்நாற்றத்தால் அவதியுற்றுவந்த நிலையில், தற்போது உள்ளூர் நிர்வாகம் அது தொடர்பில் ஒரு நல்ல முடிவெடுத்துள்ளது.
</p><p>
ஆம், தாங்களே அந்த மீன் சாஸை அங்கிருந்து அகற்றி, பிரம்மாண்ட பள்ளம் ஒன்று தோண்டி, அதில் ஊற்றி மண்ணைப் போட்டு மூடிவிட உள்ளூர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
</p><p>
ஆக, இத்தனை ஆண்டுகளாக நாற்றத்தால் தவித்துவந்த மக்களுக்கு விரைவில் அதிலிருந்து விடுதலை கிடைக்கப்போகிறது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:00:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 வயது வீரர் சிக்ஸர்மழை! The Hundred-யில் முதல் அரைசதம்..28 பந்தில் 64 ஓட்டங்கள் விளாசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lhuan-dre-pretorius-maiden-the-hundred-fifty-1785407822"></link>
            <id>https://news.lankasri.com/article/lhuan-dre-pretorius-maiden-the-hundred-fifty-1785407822</id>
            <summary type="text">The Hundred போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் MI லண்டனை வீழ்த்தியது.&amp;nbsp;வில் ஜேக்ஸ்&amp;nbsp;அபாரம் 

கென்னிங்டன் ஓவல் மை...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Hundred போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் MI லண்டனை வீழ்த்தியது.&nbsp;</p><h2>வில் ஜேக்ஸ்&nbsp;அபாரம் </h2><p>

கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த The Hundred போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மற்றும் MI லண்டன் அணிகள் மோதின.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">THIS IS SPECIAL 🤩<br><br>20-year-old Lhuan-dre Pretorius reaches his first fifty in <a href="https://x.com/hashtag/TheHundred?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TheHundred</a> <a href="https://t.co/Zl6vw06M5s">pic.twitter.com/Zl6vw06M5s</a></p>&mdash; The Hundred (@thehundred) <a href="https://x.com/thehundred/status/2082554008309203233?ref_src=twsrc%5Etfw">July 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

முதலில் ஆடிய MI லண்டன் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p></p><p>
வில் ஜேக்ஸ் 44 பந்துகளில் 65 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 8 பவுண்டரிகள்), ஷெர்பானே ரூதர்ஃபோர்டு 19 பந்துகளில் 41 ஓட்டங்களும் (4 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசினர்.

ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளும், ஆன்ட்ரூ டை மற்றும் ஜேம்ஸ் கோல்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a43c88de-e2b0-4029-b3da-fb7d1e2e06ea/26-6a6b2ae1e121f.webp' />&nbsp;</p><h2>லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் வாணவேடிக்கை </h2><p>

பின்னர் ஆடிய லண்டன் ஸ்பிரிட் அணியில் பேர்ஸ்டோவ் 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, 20 வயது இளம் வீரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் வாணவேடிக்கை காட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. </p><p>அணியின் ஸ்கோர் 101 ஆக உயர்ந்தபோது, 28 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 64 ஓட்டங்கள் விளாசியிருந்த பிரிட்டோரியஸ் ஆட்டமிழந்தார்.</p><p>

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 16 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜேம்ஸ் ரேவ் மற்றும் டெவால்ட் பிரேவிஸ் கூட்டணி அணியை வெற்றி பெற வைத்தது.
</p><p>
பிரேவிஸ் 37 (18) ஓட்டங்களும், ரேவ் 19 (13) ஓட்டங்களும் விளாச, லண்டன் ஸ்பிரிட் அணி 89 பந்துகளில் இலக்கினை எட்டியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30aa91a2-3ec0-48c9-b22b-89d56ad58c07/26-6a6b2c559f176.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T10:42:25+00:00</updated>
        </entry>
    </feed>
