<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-27T10:17:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் மக்களால் பெர்லின் நகர காவல்துறைக்கு ஏற்பட்ட நூதன சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/berlin-police-are-struggling-1787824243"></link>
            <id>https://news.lankasri.com/article/berlin-police-are-struggling-1787824243</id>
            <summary type="text">Hard to find enough German-speaking recruits: போதுமான ஜேர்மன் மொழி பேசும் புதிய காவலர்களைத் திரட்டுவதில் பெர்லின் காவல்துறை சிரமப்பட்டு வருகிறது.
புல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hard to find enough German-speaking recruits: போதுமான ஜேர்மன் மொழி பேசும் புதிய காவலர்களைத் திரட்டுவதில் பெர்லின் காவல்துறை சிரமப்பட்டு வருகிறது.
</p><p>புலம்பெயர்ந்த மக்களின் விண்ணப்ப எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், போதுமான ஜேர்மன் மொழி பேசும் கவலர்களை நியமிப்பதில் பெர்லின் நிர்வாகம் சிரமப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a04eaa18-3cf8-49f9-a442-7f9f7bf9073c/26-6a9008760e43e.webp' /></p><p>
</p><p>விண்ணப்பதாரர்களில் 40 சதவீதம் பேர் ஜேர்மன் மொழித் தேர்வில் தோல்வியடைந்ததாக நகர காவல் படைத் தலைவர் பார்பரா ஸ்லோவிக் மெய்செல் தெரிவித்துள்ளார். </p><p>நகரத்திற்குப் புதிய காவலர்கள் மிகவும் தேவைப்படுவதாலும், அதே சமயம் தரத்தைக் குறைத்துக்கொள்ள முடியாததாலும், இது தனக்கும் காவல்துறைக்கும் ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார். </p><p>உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், விண்ணப்பதாரர்கள் உள்ளனர், ஆனால் உயர் தரநிலைகளை எங்களால் குறைக்க முடியாத நிலை உள்ளது என்றார்.</p><p></p><p> மேலும், நாங்கள் எங்கள் காவல் நடவடிக்கைகளை நாளுக்கு நாள் விளக்க வேண்டியுள்ளது... மட்டுமின்றி, சில சமயங்களில் விடயங்களை எழுத்துப்பூர்வமாகவும் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது என்றார். </p><p>2025-ஆம் ஆண்டு முதல் 1,200 தொடக்க நிலை பணியிடங்களில் சுமார் கால் பங்கு நிரப்பப்படாமல் உள்ளன என்றும், தகுதியான விண்ணப்பதாரர்களுக்காக மிகவும் கடுமையான போட்டியை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825271b1-bdfa-48b4-883f-3d92557f802b/26-6a900876b4c9b.webp' /></p><p> </p><p>மேலும் தகுதியானவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 2025 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் பயிற்சியைத் தொடங்கிய 240 பயிற்சி மாணவர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஜேர்மன் மொழியில் கூடுதல் பயிற்சி தேவைப்பட்டது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
ஜேர்மனியில் உள்ள மற்ற எந்தப் படையையும் விட, பெர்லினில்தான் புலம்பெயர்ந்த பின்னணியைச் சேர்ந்த அதிகாரிகளின் விகிதம் 37 சதவீதமாக மிக அதிகமாக உள்ளது. விண்ணப்பதாரர்கள் கணினியில் எழுதும் தேர்விலும், அத்துடன் சொல்வெழுத்துத் தேர்வு மற்றும் அவர்களின் ஜேர்மன் இலக்கணத் திறன் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
</p><p>அவர்கள், ஜேர்மனியின் அடிப்படைச் சட்டக் கோட்பாடுகள் குறித்து தங்களுக்கு ஆழமான புரிதல் இருப்பதையும், அவற்றை பொதுமக்களுக்கு விளக்கத் திறனுள்ளவர்களாக இருப்பதையும் நிரூபிக்க வேண்டும். குறிப்பாக அடுத்த மாதம் கிழக்குப் பகுதியில் நடைபெறவிருக்கும் முக்கியத் தேர்தல்களை முன்னிட்டு, இடம்பெயர்வு மற்றும் நாட்டில் அது வகிக்கும் பங்கு குறித்த விவாதம் மேலும் சூடுபிடித்துள்ளது. </p><p>பெருந்தொற்றின் முதல் ஆண்டைத் தவிர, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜேர்மனியில் சட்டவிரோதக் குடியேற்றம் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்தில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2eaafbe-e06e-40be-9194-49316308acca/26-6a90087768748.webp' /></p><p> </p><p>கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்தபோது எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவதாக உறுதியளித்த, சேன்ஸலர் ஃபிரெட்ரிக் மெர்ஸின் ஆட்சிக்காலத்தில் இந்தச் சாதனை அளவிலான புள்ளிவிவரங்கள் பதிவாகியுள்ளன.
</p><p>2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை, 106,298 முதல் முறை தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் தேசிய குடிவரவு முகமையான பாம்ஃப் (Bamf) மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஜேர்மனி தனது மிகக் குறைந்த வருடாந்திர மொத்த எண்ணிக்கையைப் பதிவு செய்யும் பாதையில் உள்ளது.
</p><p>2024-ல், இந்த எண்ணிக்கை 229,751 ஆக, இருமடங்குக்கும் அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு, எல்லையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள ஃபெடரல் காவல்துறை, 62,526 சட்டவிரோத நுழைவுகளைப் பதிவு செய்தது; இது 2023-ஆம் ஆண்டின் எண்ணிக்கையில் பாதியாகும். </p><p>இதற்கிடையில், மே முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் எல்லையைக் கடக்க முயன்ற 33,000 பேரில் கிட்டத்தட்ட 75 சதவிகிதத்தினர் நிராகரிக்கப்பட்டனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T09:48:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு: சுமார் 1500 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flash-flood-270-dead-1500-missing-1787823682"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flash-flood-270-dead-1500-missing-1787823682</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை
நேபாள - திபெத் எல்லைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.</p><h2> அதிகரிக்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை</h2><p>
நேபாள - திபெத் எல்லையில் போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் ரசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p> இந்த திடீர் பயங்கர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb966226-fd9d-4565-b025-cee9dc606592/26-6a9006440b9f6.webp' /></p><p>அத்துடன் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்துள்ளது என்று நேபாள காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.</p><p> வெள்ளத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 66 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள கிட்டத்தட்ட 4.50 காவல்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2> காணாமல் போன வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகள்</h2><p>நேபாள வெள்ளத்தில் காணாமல் போன வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e83c14f-553b-4b03-8a53-2047f52cac92/26-6a900644b7ea6.webp' /></p><p> சீன வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்படி கிட்டத்தட்ட 100 சீனர்கள் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> நேபாள நாட்டின் சுற்றுலா வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கிட்டத்தட்ட 644 சர்வதேச பயணிகள் இதுவரை என்ன ஆனார்கள் என்பது தெரியவரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்தியர்கள் 178 பேர், நேபாளத்தினர் 127, அமெரிக்கர்கள் 65, மலேசியர்கள் 53, உக்ரைனியர்கள் 51, அவுஸ்திரேலியர்கள் 35, பிரித்தானியர்கள் 33 பேர் காணாமல் போயுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T09:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலருக்கு ஆயுதம்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/n-korea-condemns-us-over-125m-arms-sale-to-s-korea-1787821931"></link>
            <id>https://news.lankasri.com/article/n-korea-condemns-us-over-125m-arms-sale-to-s-korea-1787821931</id>
            <summary type="text">N Korea Condemns US Over 125m arms sale to S Korea: தென் கொரியாவிற்கு அமெரிக்கா ஆயுத விற்பனை செய்வதை வட கொரியா கடுமையாக கண்டித்துள்ளது. அமெரிக்காவுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>N Korea Condemns US Over 125m arms sale to S Korea: தென் கொரியாவிற்கு அமெரிக்கா ஆயுத விற்பனை செய்வதை வட கொரியா கடுமையாக கண்டித்துள்ளது.</p><h2> அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை</h2><p>தென் கொரியாவிற்கு ஆயுத விற்பனை தொடர்பில் புதிதாக ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தங்கள் நாட்டிற்கு எதிரான நேரடி விரோதப் போக்கு என்று வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.</p><p> வட கொரிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான KCNA வாயிலாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்காவின் இந்த செயலுக்கு வட கொரியா வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf74da9-a66b-4cf9-9439-e0095171fd1a/26-6a8fff6d0834f.webp' /></p><p></p><p> அத்துடன் நிலைமை மோசமானதாக அமைந்தால் உடனடியாகவும், சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 125 மில்லியன் டொலர் ராணுவ தளவாடங்களுக்கான ஒப்புதலை தென் கொரியாவிற்கு அமெரிக்கா அளித்ததை அடுத்து இந்த இராஜதந்திர மோதல் ஏற்பட்டுள்ளது.</p><p> தென் கொரியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 103 'AIM-9X Sidewinder Block II' ஆகிய ஏவுகணைகளும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T09:12:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய U19 அணியில் இடம்பிடித்துள்ள டிராவிட், சேவாக் மகன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sehwag-and-dravid-sons-in-india-u19-squad-vs-aus-1787819688"></link>
            <id>https://news.lankasri.com/article/sehwag-and-dravid-sons-in-india-u19-squad-vs-aus-1787819688</id>
            <summary type="text">sehwag and dravid sons in india u19 squad: அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய U19 அணியில் முன்னாள் வீரர்கள் டிராவிட் மற்றும் சேவாக்கின் மகன்கள் இடம்பிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>sehwag and dravid sons in india u19 squad: அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய U19 அணியில் முன்னாள் வீரர்கள் டிராவிட் மற்றும் சேவாக்கின் மகன்கள் இடம்பிடித்துள்ளார்.
</p><h3>
இந்திய U19 அணியில் டிராவிட், சேவாக் மகன்கள்
</h3><p>
கடைசியாக 2012 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்கள் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் இணைந்து விளையாடினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e97d63a-3f71-4a40-8f91-e82b376cd558/26-6a8ff6a9c8809.webp' /></p><p> 

தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு அதே அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் டிராவிட் மற்றும் சேவாக்கின் மகன்கள் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர்.&nbsp;</p><p></p><p> 

வரும் செப்டம்பர் மாதத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அவுஸ்திரேலியா அணி, இந்தியாவிற்கு வருகை தந்து 3 ஒருநாள் மற்றும் 2 பலநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨 News 🚨<br><br>India U19 squad for Australia U19 Men’s Tour of India announced.<br><br>The tour consists of three One-Day matches and two Multi-Day fixtures.<br><br>Venues 🏟️: Rajkot and Ahmedabad<br><br>More Details ▶️ <a href="https://t.co/o2pF8bj3RJ">https://t.co/o2pF8bj3RJ</a><br><br> <a href="https://x.com/hashtag/INDU19vAUSU19?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#INDU19vAUSU19</a> <a href="https://t.co/Ud0tvcqaBe">pic.twitter.com/Ud0tvcqaBe</a></p>&mdash; BCCI (@BCCI) <a href="https://x.com/BCCI/status/2092854647908442568?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இதற்கான இந்திய U19 அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிக்கான அணியில் ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட் மற்றும் சேவாக்கின் மூத்த மகனான ஆர்யவிர் சேவாக் இடம் பிடித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56e3beb2-ab53-4761-9bfc-46e8549b6d4a/26-6a8ff6aa8028b.webp' /></p><p>

17 வயதான அன்வே டிராவிட் முன்னதாக கடந்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய U 19 அணியில் இடம்பெற்றிருந்தார். விக்கெட் கீப்பரான இவர் அந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடி, 14 மற்றும் 87 ஓட்டங்கள் எடுத்தார்.
</p><p>
டெல்லி பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் 18 வயதான ஆர்யாவீர் இந்திய அணியில் இடம் பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T08:39:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலாஸ்காவில் ஏரிக்குள் பாய்ந்த விமானம்: 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/small-plane-sink-into-seldovia-lagoon-4-dead-1787817044"></link>
            <id>https://news.lankasri.com/article/small-plane-sink-into-seldovia-lagoon-4-dead-1787817044</id>
            <summary type="text">அலாஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அலாஸ்காவில் ஏரிக்குள் விழுந்த விமானம்அமெரிக்காவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அலாஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> அலாஸ்காவில் ஏரிக்குள் விழுந்த விமானம்</h2><p>அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள செல்டோவியா(Seldovia) கடற்கரைப் பகுதிக்கு அருகே உள்ள கடல்நீரேரிப் பகுதியில் (tidal lagoon) பைப்பர் PA-24 (Piper PA-24) ரக சிறிய விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> சம்பந்தப்பட்ட விமானம் புதன்கிழமை பிற்பகலில் ஆஞ்சரேஜ் நகரில் உள்ள மெரில் ஃபீல்டு விமான நிலையத்தில் இருந்து செல்டோவியா உள்ளூர் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a937387-7fc6-4c5b-8b57-72be1f9a9ab5/26-6a8fec5605c3c.webp' /></p><p> தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம் கிட்டத்தட்ட 17 அடி ஆழத்தில் மூழ்கிய நிலையில் அதில் பயணித்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2> மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>
விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் அலாஸ்கா மாநில காவல்துறையினர் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.</p><p> விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த மக்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முயற்சி செய்தனர், ஆனால் அதிகமான ஆழம் மற்றும் விமானம் நீருக்குள் மூழ்கி இருந்ததால் அவர்களால் எந்தவொரு தீவிரமான முயற்சிகளையும் செய்ய முடியவில்லை.</p><p> மாலை 6 மணியளவில் மீட்புக் குழுவினர் விமானத்தின் இடிபாடுகளில் இருந்து உயிரிழந்த 4 பெரியவர்களின் உடல்களையும் மீட்டெடுத்தனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T07:50:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் சிக்கியுள்ள 106 தமிழர்கள் - அமைச்சர் ராஜ்மோகன் சட்டமன்றத்தில் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minister-rajmohan-says-106-tamil-peoples-in-nepal-1787816203"></link>
            <id>https://news.lankasri.com/article/minister-rajmohan-says-106-tamil-peoples-in-nepal-1787816203</id>
            <summary type="text">106 tamil peoples in nepal : நேபாளத்தில் 106 தமிழர்கள் சிக்கியுள்ளதாக சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.

நேபாளத்தில் சிக்கியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>106 tamil peoples in nepal : நேபாளத்தில் 106 தமிழர்கள் சிக்கியுள்ளதாக சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.
</p><h3>
நேபாளத்தில் சிக்கியுள்ள 106 தமிழர்கள்
</h3><p>
நேபாளத்தில் நேற்று பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a245d7-3b46-41c2-8d66-89cccdf3c123/26-6a8fe90d717bd.webp' /></p><p> 

1,500க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது.&nbsp;</p><p></p><p>

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 103 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 தமிழர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளதாக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cccb90e5-2a43-4eb8-a3f8-101efc98921d/26-6a8fe90cadc85.webp' /></p><p> 

இதில் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.&nbsp;</p><p>

இதில், ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் பாதுகாப்பாக ராணுவ முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை சாலை வழியாக காட்மாண்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதமுள்ள 37 பேர் குறித்து தகவல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p>

சென்னையை சேர்ந்த மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி மூலம் 49 தமிழர்கள் நேபாளம் சென்றுள்ளனர். அவர்களின் நிலை குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களை மீட்பது தொடர்பாக அங்குள்ள இந்திய தூதரகத்திடம் பேசி வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T07:37:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/people-warned-stock-tins-water-1787815342"></link>
            <id>https://news.lankasri.com/article/people-warned-stock-tins-water-1787815342</id>
            <summary type="text">Uk tells people to stock up on water and tinned food: தண்ணீர் மற்றும் டின் செய்யப்பட்ட உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uk tells people to stock up on water and tinned food: தண்ணீர் மற்றும் டின் செய்யப்பட்ட உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்த உள்ளது. </p><p>
அபாயகரமான எதிர்பாராத வானிலை மற்றும் எதிரி நாடுகளின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள எவ்வாறு தயாராவது என்பது குறித்து பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26a5d299-3631-4fe8-af30-cde14d7c05e4/26-6a8fe5b1450b5.webp' /></p><p>
</p><p>கடுமையான புயல்கள், காட்டுத்தீ மற்றும் பகை நாடுகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள சிறப்பாக எவ்வாறு தயாராவது என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. </p><p>இவற்றில் உணவு மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொள்வதும் அடங்கும். 2030-ஆம் ஆண்டிற்குள்ளேயே நேட்டோ (NATO) மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்று முன்னாள் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் இந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார். </p><p>இந்த நிலையில், அமைச்சரவை அலுவலகம் தெரிவிக்கையில், தேசியப் பாதுகாப்பைப் பாதுகாப்பதே எந்தவொரு அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை.</p><p></p><p> </p><p>குடும்பங்கள் தங்களை மேலும் மீள்திறன் கொண்டவையாக ஆக்கிக்கொள்ள எடுக்கக்கூடிய எளிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நமது நாட்டின் தயார்நிலையை வலுப்படுத்தும் வீட்டுப் பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் உறுதிபூண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர். </p><p>ரஷ்யாவால் அச்சுறுத்தல் இருப்பதை பிரித்தானிய உளவு அமைப்புகள் உறுதி செய்துவரும் நிலையில், இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், நேட்டோவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாமல், தங்கள் சார்பாகத் தாக்குதல்களை நடத்துவதற்காக ரஷ்யா குழுக்களையோ அல்லது கூலிப்படையினரையோ களமிறக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e36ef917-7173-4f46-ba7b-349114e523cb/26-6a8fe5b09354d.webp' /></p><p> </p><p>இங்கிலாந்தின் மின் நிலையம் ஒன்றைச் சிறிது நேரம் செயலிழக்கச் செய்த இணையத் தாக்குதலுக்கு ஈரானின் ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் (hackers) காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, இணைய அச்சுறுத்தல்கள் குறித்தும் கவலை எழுந்துள்ளது. </p><p>இதனிடையே, நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளின் உற்பத்தியை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் உக்ரைனுக்குத் தொழில்நுட்ப ரகசியஙக்ளை வழங்கியதற்காக, பிரித்தானியாவிற்கு எதிராக வெளிப்படையான அச்சுறுத்தல்களை விடுத்த ரஷ்யாவை பிரதமர் ஆன்டி பர்னாம் எச்சரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T07:19:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன நாட்காட்டியால் மாறிய பயணத்திட்டம் - நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamils-changed-nepal-trip-date-by-chinese-calendar-1787812331"></link>
            <id>https://news.lankasri.com/article/tamils-changed-nepal-trip-date-by-chinese-calendar-1787812331</id>
            <summary type="text">tamils changed nepal trip date by chinese calendar: சீன நாட்காட்டியால் தமிழர்களின் பயணத்திட்டம் மாற்றப்பட்டு, நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

நேப...</summary>
            <content type="html"><![CDATA[<p>tamils changed nepal trip date by chinese calendar: சீன நாட்காட்டியால் தமிழர்களின் பயணத்திட்டம் மாற்றப்பட்டு, நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
</p><h3>
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் </h3><p>

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. 

800க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca061987-c963-4912-9f09-6e57b972f9a3/26-6a8fd9ed02bf8.webp' /></p><p>

இதில் தமிழ்நாட்டில் இருந்து 57 பேர் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.&nbsp;</p><p>இவர்கள் 3 பேருந்துகள் மூலம் சென்ற நிலையில், ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் பாதுகாப்பாக ராணுவ முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். மீதமுள்ள 37 பேரின் நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை.&nbsp;</p><p></p><h3>

சீன நாட்காட்டியால் மாறிய பயணத்திட்டம்</h3><p>

இது குறித்து பேசிய சுற்றுலா நிறுவன நிறுவனர், அந்த சுற்றுலா பயணிகள் ஆகஸ்ட் 1 ஆம் திகதி தான் கயிலாய யாத்திரைக்காக நேபாளம் செல்ல திட்டமிட்டிருந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4515f03a-bf9d-4deb-8b9e-084674de2fec/26-6a8fd9ec4d4c6.webp' />&nbsp;&nbsp;</p><p>
ஆனால் நாங்கள் விண்ணப்பிக்கும் போது சீன நாட்காட்டியின் படி ஆகஸ்ட் 1 முதல் 20 வரை குதிரை ஆண்டு என்பதால் அந்த நாட்களில் ஜெயின் பக்கதர்களுக்கு மட்டுமே கோவிலில் முன்னுரிமை வழங்கப்படும். ஆகஸ்ட் 20 க்கு பிறகு விண்ணப்பியுங்கள் என நேபாள அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
</p><p>
இதன் காரணமாகவே பயணத் திட்டதை ஆகஸ்ட் 23ஆம் திகதிக்கு மாற்றினோம். திகதி மாற்றப்பட்டதால் பல பயணிகள் வர முடியாமல் ரத்து செய்தனர்" என தெரிவித்தார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T07:18:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு: அதிர்ச்சிகரமான தருணங்களின் கேமரா காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flood-terrifying-moments-viral-videos-1787814288"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flood-terrifying-moments-viral-videos-1787814288</id>
            <summary type="text">Nepal Flood Terrifying Moments Viral Videos: நேபாள - திபெத் எல்லையில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் கேமராவில் பதிவான அதிர்ச்சிகரமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal Flood Terrifying Moments Viral Videos: நேபாள - திபெத் எல்லையில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் கேமராவில் பதிவான அதிர்ச்சிகரமான தருணங்கள் வெளியாகியுள்ளன.</p><h2>நேபாள - திபெத் எல்லையில் திடீர் வெள்ளப்பெருக்கு</h2><p>
நேபாள - திபெத் எல்லையில் இருந்து வந்த திடீர் மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு வடக்கு நேபாள பகுதிகளை தீவிரமாக உலுக்கியுள்ளது.</p><p> போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் ரசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/279237ed-af35-4e90-9b0f-791341623e1d/26-6a8fe191650d7.webp' /></p><p></p><p> இந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் இதுவரை குறைந்தது 157 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 142 இந்தியர்கள் உட்பட 341 வெளிநாட்டினரை சேர்த்து மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><h2> வீடியோவில் பதிவான அதிர்ச்சிகரமான தருணங்கள்</h2><p>திபெத்தின் ஜிரோங்(Gyirong) துறைமுகத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில், புதன்கிழமை காலை 9 மணியளவில் தடிமான சேறு, பாறைகள், குப்பைகள், ஆகியவற்றை அடித்துக் கொண்டு பிரமாண்ட வெள்ளமானது கரைகளை துடைத்தெறிந்து செல்லும் தருணங்கள் பதிவாகியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This is seriously scary. CCTV footage from Gyirong Port in Tibet, China, directly opposite Nepal’s Rasuwa district. This flash flood hit here first and later caused massive havoc in Nepal. Can’t even imagine someone surviving this. Prayers for everyone affected. 🙏 <a href="https://t.co/o805P8KGSu">https://t.co/o805P8KGSu</a> <a href="https://t.co/31QzZ64aBD">pic.twitter.com/31QzZ64aBD</a></p>&mdash; Nikhil saini (@iNikhilsaini) <a href="https://x.com/iNikhilsaini/status/2092558888751284687?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.</p><p> அந்த பகுதிகளில் இருந்து டஜன் கணக்கான மக்கள் தப்பியோட முயன்றதும், ஆனால் சில நொடி பொழுதில் அவர்களையும் வெள்ளம் சூறையாடி இழுத்துச் செல்லும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது.</p><p>இதைப்போன்று இன்னும் பல பகுதிகள் இந்த வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T07:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: நிலநடுக்கம் காரணம் அல்ல., அமெரிக்கா வெளியிட்ட திடுக்கிடும் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-floods-caused-by-glacial-collapse-1787812351"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-floods-caused-by-glacial-collapse-1787812351</id>
            <summary type="text">Nepal Floods caused by Glacial Collapse: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெளிவுபடுத்தியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal Floods caused by Glacial Collapse: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2> நேபாள வெள்ளப்பெருக்கு</h2><p> 

திபெத் எல்லையில் இருந்து வந்த திடீர் மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு வடக்கு நேபாள பகுதிகளை தீவிரமாக உலுக்கியுள்ளது.</p><p> போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25fd99d3-36c0-4085-87f7-84706ed96e38/26-6a8fda013e446.webp' /></p><p>இந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் இதுவரை குறைந்தது 157 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 142 இந்தியர்கள் உட்பட 341 வெளிநாட்டினரை சேர்த்து மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><h2> அமெரிக்கா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்</h2><p>
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய வெள்ளப்பெருக்கிற்கு ஆரம்பத்தில் நிலநடுக்கமே காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.</p><p> ஆனால் இந்த வெள்ளப்பெருக்கு நேபாள-சீன எல்லையில் பூமிக்கடியில் பதிவான நிலநடுக்கத்தால் அல்ல. மாறாக பனிப்பாறை சரிவு(glacial collapse) மற்றும் குப்பைகள் பெருக்கெடுத்ததால்(debris flow) ஏற்பட்ட சம்பவம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெளிவுபடுத்தியுள்ளது.</p><p> ஆரம்ப கட்டத்தில், காலை 8.37 மணியளவில் காத்மாண்டுவிற்கு வடக்கே 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற முடிவுகளை தானியங்கி அமைப்புகள் பதிவு செய்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40fa7732-e0ab-48dd-a51b-82c54a49f257/26-6a8fda01e5877.webp' /></p><p>ஆனால் பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிளாண்ட் லேப்ஸ் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நடத்தப்பட்ட கூடுதல் ஆய்வுகளில், பனி மற்றும் பாறைகளில் ஏற்பட்ட சரிவே லெண்டே நதியில் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.</p><p> இந்த வெள்ளப்பெருக்கே போட்டே கோஷி நதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி ரசுவே, நுவாகோட் மற்றும் தாதிங் ஆகிய மாவட்டங்களை உலுக்கியுள்ளது.</p><p> இந்த பனிச்சரிவு நிலநடுக்கத்திற்கு நிகரான 5.2 ரிக்டர் அளவிலான நில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் இது டெக்டோனிக் தகடுகளின் நகர்வு அல்ல என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T06:32:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-tactical-nuclear-weapons-1787812015"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-tactical-nuclear-weapons-1787812015</id>
            <summary type="text">Putin will use tactical nuclear weapons: உக்ரைன் மீது புடின் தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவார் என அச்சம்.
ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக தந்திரோப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin will use tactical nuclear weapons: உக்ரைன் மீது புடின் தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவார் என அச்சம்.
</p><p>ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக தந்திரோபாய அணு ஆயுதங்களை (tactical nuclear weapons) பயன்படுத்தலாம் என்ற அச்சம் வலுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a023480a-c56d-432d-89b1-98db2a72cd8b/26-6a8fd8b1a01f3.webp' /></p><p>
</p><p>ரஷ்யாவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது; அதேவேளையில், மோதலைத் தீவிரப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஜனாதிபதி புடின் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>சமீபத்திய மாதங்களில் உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்றுக்கொன்று எதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன; குறிப்பாக, ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து உக்ரைன் வலுவானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. </p><p>இதற்கிடையில், பேச்சுவார்த்தைகள் ஏறக்குறைய முறிந்துவிட்டன; அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கை இரு தரப்பிலும் மிகக் குறைவாகவே உள்ளது. மேலும், பொருளாதாரத் தடைகள் அல்லது தனது சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் தாக்குதல்கள் ஆகியவற்றின் அழுத்தத்தால் போரை முடிவுக்குக் கொண்டுவரப் போவதில்லை என்பதில் ரஷ்யா உறுதியாக உள்ளது. </p><p>நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களையும் உளவுத் தகவல்களையும் வழங்குவது குறித்து ரஷ்யா கடும் சீற்றம் கொண்டுள்ளது - இது பிரித்தானியாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்துள்ளது, இதனை மூர்க்கத்தனமானது என இந்த வாரம் பிரதமர் ஆன்டி பர்னாம் குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p> உக்ரைன் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே புடினின் முடிவு என்று ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று வட்டாரங்கள் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன. </p><p>இதனிடையே, உங்கள் பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறைகளில் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருங்கள் என புடின் உக்ரைனை எச்சரித்துள்ளார். </p><p>தலைநகர் கீவ்வின் மையப்பகுதி மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் உட்பட, தனது வழக்கமான பாலிஸ்டிக் தாக்குதல்களை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்பது குறித்து ரஷ்யா தற்போது பரிசீலித்து வருகிறது. ஆனால், புடின் இறுதியில் நவீனப் போர்முறையின் விதிகளைக் கைவிட்டு, அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கான முடிவை எடுக்கக் கூடும் என்று ரஷ்ய அதிகாரிகள் பலர் முடிவுக்கு வந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p>உத்திசார் ஏவுகணைகளை விட, குறைந்த சக்தி மற்றும் குறைந்த வரம்பு கொண்ட தந்திரோபாய அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கூறுகின்றனர். </p><p>1945-ல் அமெரிக்கா ஜப்பான் மீது வீசிய குண்டுகளைப் போல முழு நகரங்களையும் அழிப்பதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட போர்க்களத்தில் மேலாதிக்கம் பெறுவதற்காக அவை பயன்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/137b3709-f0f5-4b9f-8c44-0678ba4587da/26-6a8fd8b252469.webp' /></p><p> </p><p>உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்தே, உக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று அவர் தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளார்; தாக்குதல் நடத்தப்படக்கூடிய பகுதிகளைக் காட்டும் வரைபடங்களைக்கூட அவர் வெளியிட்டுள்ளார். </p><p>மேலும், அவர் அந்த முடிவை எடுத்தால், அவருக்குத் தடையாக நிற்க யாரும் இருக்கமாட்டார்கள் என்றே கூறுகின்றனர். அமெரிக்கா ஈரானுடனான மோதலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது; அதேவேளையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது டொனால்ட் ட்ரம்பிற்கும் தனக்கும் இடையே உருவான புரிதல் குறித்த நம்பிக்கையை புடின் கைவிட்டுவிட்டார். </p><p>2014-இல் ஆயுத மோதல்கள் தொடங்கியதிலிருந்து உறுதியாகத் தாக்குப்பிடித்து வரும் டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்திலுள்ள தங்கள் அரண் போன்ற நகரங்களை உக்ரைன் விட்டுக்கொடுத்தால் அமைதிக்கான வழி பிறக்கக்கூடும் என்று ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது; ஆனால், அத்தகையதொரு நடவடிக்கைக்கு இடமே இல்லை என்பதை உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T06:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள-திபெத் பெருவெள்ளம்... என்ன நடந்தது: விரிவான பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-tibet-floods-1787805167"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-tibet-floods-1787805167</id>
            <summary type="text">Deadly Nepal-Tibet floods: நேபாளம்-திபெத் பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு குறித்த விரிவான பின்னணி.
நேபாள-திபெத் எல்லையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Deadly Nepal-Tibet floods: நேபாளம்-திபெத் பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு குறித்த விரிவான பின்னணி.
</p><p>நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஆகியவை பரவலான சேதத்தை ஏற்படுத்தியதோடு, நூற்றுக்கணக்கானோரின் மரணத்திற்கும் பலர் காணாமல் போவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126094cb-8daa-4ab1-a3b1-31f492983cca/26-6a8fbdf22f488.webp' /></p><p>
</p><p>தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் உயிர் அபாயங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், நேபாள அதிகாரிகள் மிகப்பெரிய அளவிலான இழப்பை எதிர்பார்க்கின்றனர்.
</p><p>நிலச்சரிவு ஏற்படுவதற்குச் சற்று முன்பு திபெத்-நேபாள எல்லையில் நிலநடுக்கம் ஒன்று பதிவானதாக நேபாள வெளிவிவகார அமைச்சர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்; இதுவே அந்தப் பேரிடரைத் தூண்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. </p><p>ஆனால், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் சமீபத்திய பகுப்பாய்வு நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்பதைக் குறிக்கிறது; இது நிலச்சரிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. </p><p>ஒரு சாத்தியம் என்னவென்றால், மழைநீர் அல்லது உருகும் பனியிலிருந்து வரும் நீர், நிலத்தையோ பனியையோ நிலை குலையச் செய்து, ஒரு தொடர் வினையைத் தூண்டியிருக்கலாம். </p><p>இந்து குஷ் இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதற்குப் பருவநிலை மாற்றம் காரணமாக அமைகிறது என்பது தெரிந்ததே; இருப்பினும், இந்த குறிப்பிட்ட நிகழ்வில் அதன் பங்கைத் துல்லியமாகக் குறிப்பிடுவதற்கு இது மிக ஆரம்பக்கட்ட நிலையே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.</p><p></p><p> விஞ்ஞானிகள் தற்போது இந்தப் பேரிடன் உண்மையானப் பின்னணி என்ன என்பது தொடர்பில் டெஹ்ரிந்துகொள்ள முயன்று வருகின்றனர். மேலும், நிலச்சரிவு சரியாக எங்கு ஏற்பட்டது, பனிப்பாறை ஏதேனும் திடீரென வற்றியதா, ஆற்றுப் பாதை எங்கு மறிக்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்த செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சமீபத்திய மழைப்பொழிவு குறித்த தரவுகள் ஆகியவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர். </p><p>நுவாகோட் (Nuwakot) பகுதியில், வேகமாக முன்னேறி வந்த சேறு மற்றும் பாறைகளின் பெருவெள்ளம் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்களை அடித்துச் செல்வதை அந்தப் பகுதி மக்கள் அங்கிருந்து தப்பி ஓடியபோது எடுக்கப்பட்ட காட்சிகளில் பதிவாகியுள்ளது. </p><p>ஒரு காணொளியில், திரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு வழியாக நீர் மற்றும் சேறு கலந்த பிரம்மாண்டமான சுவரொன்று பாய்ந்து வந்து, பல மாடிகளைக் கொண்ட ரசுவாகதி எல்லைச் சோதனைச் சாவடியை மூழ்கடிப்பது பதிவாகியுள்ளது. </p><p>போட் கோஷி, திரிசூலி மற்றும் நாராயணி நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாள எல்லையின் திபெத்தியப் பகுதியில் உள்ள கிராமங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மரணமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c8528f-d225-4995-921d-e884f1708b6a/26-6a8fbdf2d6523.webp' /></p><p>
</p><p>குறைந்தது 162 பேர் மரணமடைந்துள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில், 64 பேர் சித்வான் மாவட்டத்தின் கீழ்நிலைப் பகுதிகளிலும், மேலும் 26 பேர் நவல்பாசி கிழக்குப் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். </p><p>திபெத்தின் கியிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுப் பேரழிவில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளதாக சீனாவின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. </p><p>இவர்களில் 260 பேர் வெளிநாட்டினர் என்றும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாகவே நீடிக்கிறது என்றும் சிசிடிவி தெரிவித்துள்ளது. கியிராங்கில் உள்ள எல்லை, சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே சுற்றுலாப் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய கடக்கும் இடமாக விளங்குகிறது.</p><p> முன்னதாக, சுமார் 579 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாகவும், அவர்களில் 466 பேர் வெளிநாட்டினர் என்றும் நேபாளம் தெரிவித்திருந்தது. நேபாள மற்றும் சீனப் புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காணாமல் போனவர்களில் யாரேனும் இருமுறை கணக்கிடப்பட்டுள்ளனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. </p><p>இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால தங்குமிடம், தண்ணீர், சுகாதாரம் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக 500,000 டொலர் நிதியுதவி அளிப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e366ec0-99a4-44c5-9510-91773075bccc/26-6a8fbdf389895.webp' /></p><p> </p><p>நேபாளத்தில் உள்ள பிரித்தானியக் குடிமக்களுக்கு உதவும் வகையில், பிரித்தானிய அரசாங்கம் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார். இதுவரை வெளியாகியுள்ள தரவுகலின் அடிப்படையில், காணாமல் போனவர்களில் குறைந்தது 34 அவுஸ்திரேலிய குடிமக்கள் அடங்குவதாக பிரதமர் ஆன்றனி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>காணாமல் போனவர்களில் 54 அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் அடங்குவதாக நேபாள சுற்றுலா வாரியம் அளித்துள்ள சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. 24 கனடியர்கள் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>13 வயது சிறுமி உட்பட 33 பிரித்தானியக் குடிமக்கள் காணாமல் போயுள்ளதை நேபாள காவல்துறை உறுதி செய்துள்ளது. இதனிடையே, ஃபிஷ்டெயில் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்துடன் பயணம் செய்த 17 மலேசியர்கள் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> நேபாளத்தில் உள்ள மலேசிய தூதரக அதிகாரி ஒருவர், 50-க்கும் மேற்பட்ட மலேசியர்களை தற்போது தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறினார். 53 உக்ரேனியர்கள் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா காவல்துறை தங்களுக்குத் தெரிவித்ததாக உக்ரேனின் வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளது.</p><p> அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்த 142 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. தென் கொரியா, தென்னாப்பிரிக்கா, போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளும் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T04:30:11+00:00</updated>
        </entry>
    </feed>
