<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-11T05:34:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரதச்சத்து நிறைந்த சோயா சாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/soya-rice-recipe-in-tamil-1786424634"></link>
            <id>https://news.lankasri.com/article/soya-rice-recipe-in-tamil-1786424634</id>
            <summary type="text">Soya Rice:&amp;nbsp;புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு சோயா துண்டுகளை(Soya Chunks), சைவ உணவுப்பிரியர்களின் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Soya Rice:&nbsp;புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு சோயா துண்டுகளை(Soya Chunks), சைவ உணவுப்பிரியர்களின் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.</p><p>

தசை வளர்ச்சிக்கு உதவுவதுடன் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.
</p><p>
இதிலுள்ள கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது, இதனை வைத்து சுவையான சோயா சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம்.</p><h2>தேவையான பொருட்கள்</h2><p>

பாஸ்மதி அரிசி- கால் கப் (வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்)
</p><p>சோயா - கால் கப் (வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்)
</p><p>வெங்காயம்- 1 (பொடிதாக நறுக்கியது)
</p><p>பச்சைமிளகாய்- 2 (பொடிதாக நறுக்கியது)</p><p>
சீரகம்- 1 டீஸ்பூன்</p><p>
கடுகு- சிறிதளவு</p><p>
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்</p><p>
காஸ்மீரி மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
</p><p>மல்லித்தூள்- 1 டீஸ்பூன்
</p><p>சீரகத்தூள்- 1 டீஸ்பூன்
</p><p>கரம் மசாலா தூள்- 1 டீஸ்பூன்
</p><p>எண்ணெய்- தேவையான அளவு
</p><p>உப்பு- தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbe1ffd5-e43b-4e54-9b10-ee3134c6a0b3/26-6a7aaffeb031e.webp' /><br></p><h2>

மசாலா அரைப்பதற்கு
</h2><p>
மிளகு- 1 டீஸ்பூன்
<br>சோம்பு- 1 டீஸ்பூன்
<br>பூண்டு- 6 பற்கள்
<br>இஞ்சி- சிறிய துண்டு
<br>புளி- சிறிதளவு</p><h2>

செய்முறை
</h2><p>
அரைப்பதற்கு கொடுத்துள்ள மசாலா பொருட்களை மிக்ஸி ஜாரில் மாற்றி கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
</p><p>
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றியதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும், இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
</p><p>
வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும், நன்றாக கிளறிவிடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e216a3ff-a2e4-46b1-9820-83cc7dfdf189/26-6a7aafff632d3.webp' /><br></p><p>
</p><p>
இதனுடன் மஞ்சள் தூள், காஸ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து கிளறவும், சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் மசாலா வாசனை போகும் வரை வேகவிடவும்.</p><p>

இதனுடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள சோயாவை சேர்க்கவும், நன்றாக கிளறிவிட்டு 5 நிமிடம் மிதமான தீயில் அப்படியே விட்டு விடவும்.
</p><p>
சோயா மசாலாவுடன் நன்றாக சேர்ந்த பின்னர், வேக வைத்த பாஸ்மரி அரிசி சேர்த்து கிளறவும், கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்தால் சுவையான சோயா சாதம் தயார்!!!<br></p>]]></content>
            <updated>2026-08-11T05:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய இளைஞர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-student-dies-in-us-in-road-accident-1786424770"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-student-dies-in-us-in-road-accident-1786424770</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற இந்திய இளைஞர் ஒருவர் சாலை விபத்தொன்றில் பலியாகியுள்ளார்.


அமெரிக்காவில் சாலை விபத்தொன்றில் சிக்கிய இந்திய இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற இந்திய இளைஞர் ஒருவர் சாலை விபத்தொன்றில் பலியாகியுள்ளார்.</p><p>


அமெரிக்காவில் சாலை விபத்தொன்றில் சிக்கிய இந்திய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.</p><h3>

சாலை விபத்தில் இந்திய இளைஞர் பலி</h3><p>

இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள கடப்பா என்னுமிடத்தைச் சேர்ந்த திலீப் குமார் (Dileep Kumar Bhungaravula), அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்திலுள்ள கென்ட் மாகாண பல்கலையில் கல்வி பயின்று வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27251ba4-13ff-432a-b339-8ae40a42a8c3/26-6a7aadc380c09.webp' /></p><p>

கடந்த வெள்ளிக்கிழமை, திலீப் ஓட்டிவந்த கார் எதிரே வந்த ட்ரக்குடன் மோதி விபத்துக்குள்ளானது.
</p><p>
பொலிசார் அவசர உதவிக்குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், திலீப் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

அவருடன் விபத்தில் சிக்கிய மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், நியூயார்க்கிலுள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், திலீப்பின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், தேவையான உதவிகளையும் செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We are deeply saddened to learn of the untimely demise of Mr. Dileep Kumar Bungatavula, an Indian national, who tragically lost his life in a car accident in Ohio on August 7, 2026.<br><br>Our thoughts and heartfelt condolences are with his family during this difficult time. The…</p>&mdash; India in New York (@IndiainNewYork) <a href="https://x.com/IndiainNewYork/status/2086127982502937082?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
திலீப்பின் தந்தை ஒரு விவசாயி. பிள்ளையை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கே கடன் வாங்கியிருந்த நிலையில், பிள்ளை உயிரிழந்த செய்தி கேட்டு துக்கத்தில் ஆழ்ந்துள்ளதுடன், கடனை அடைக்க என்ன செய்வது என்ற கவலையிலும் ஆழ்ந்துள்ளது திலீப் குடும்பம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T05:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண் திறந்து பார்த்த அம்மன்: அற்புத நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mariyamman-and-kaliyamman-appeared-with-eyes-open-1786419738"></link>
            <id>https://news.lankasri.com/article/mariyamman-and-kaliyamman-appeared-with-eyes-open-1786419738</id>
            <summary type="text">Mariyamman Kaliyamman Eyes Open: தமிழ்நாட்டின் நெல்லையில் மாரியம்மன்- காளியம்மன் சாமிகள் கண் திறந்து பார்த்த அற்புத நிகழ்வு பக்தர்களை பரவசமடைய வைத்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mariyamman Kaliyamman Eyes Open: தமிழ்நாட்டின் நெல்லையில் மாரியம்மன்- காளியம்மன் சாமிகள் கண் திறந்து பார்த்த அற்புத நிகழ்வு பக்தர்களை பரவசமடைய வைத்துள்ளது.</p><h2>கண்திறந்து காட்சி கொடுத்த அம்மன்</h2><p>
</p><p>
நெல்லை மேல ஊருடையார்புரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.</p><p>

100 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் மாரியம்மன் மற்றும் காளியம்மன் சாமிகளை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1378f661-3974-492e-b6ed-655a1bf867b0/26-6a7a9a6174ff9.webp' /><br></p><p>
</p><p>
அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தெய்வீக சக்தி வாய்ந்த அம்மனாக அருள்பாலிக்கிறார்கள்.
</p><p>
அம்மன்கள் திடீரென கண் திறந்து பார்த்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
இதனை காண பக்தர்கள் படையெடுத்து வருவதால் அப்பகுதி பரபரப்பாக உள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-08-11T03:43:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரியாவின் உதவி இல்லாமல் ரஷ்யாவால் போர் நடத்த முடியாது! ஜெலென்ஸ்கி காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelenskyy-alleges-n-korea-involvement-in-ukraine-1786397526"></link>
            <id>https://news.lankasri.com/article/zelenskyy-alleges-n-korea-involvement-in-ukraine-1786397526</id>
            <summary type="text">உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தங்களது படைகளில் வட கொரிய வீரர்களை இணைத்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.உக்ரைன் போரில் வட கொரியாவின் பங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தங்களது படைகளில் வட கொரிய வீரர்களை இணைத்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>உக்ரைன் போரில் வட கொரியாவின் பங்களிப்பு</h2><p>உக்ரைன் போரில் வட கொரிய வீரர்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ரஷ்யா தீவிரமாக பயன்படுத்த தொடங்கி இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p> இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வரலாற்றிலேயே முதல் முறையாக வட கொரியாவின் உதவி இல்லாமல் ரஷ்யாவால் போர் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4571a5f4-ba56-46d9-b2f0-9268ecb496c9/26-6a7a435873cfc.webp' /></p><p> உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த வடகொரியாவின் புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா பெற்று இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p></p><h2> உலக நாடுகளுக்கு எச்சரிக்கை</h2><p>
ரஷ்யா - வடகொரியா இடையிலான இந்த அபாயகரமான கூட்டணி உலக நாடுகளுக்கு மிகவும் பேராபத்து என்று சுட்டிக்காட்டினார்.</p><p> அத்துடன் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான போரில் வட கொரிய வீரர்களும் மற்றும் ஏவுகணைகளும் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதன் மூலம் அவர்கள் நேரடியாக போர் அனுபவங்களை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7318d8df-2ad5-4fcd-a1c8-276cfb27b264/26-6a7a43592a171.webp' /></p><p> இதன் மூலம் அவர்கள் தங்களது பலவீனங்களை சரிசெய்து கொண்டு மிக ஆழமான ராணுவ அனுபவங்களை பெறுவதாக எச்சரித்துள்ளார்.</p><p>இந்த அனுபவம் எதிர்காலத்தில் ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> எனவே இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும், வட கொரியாவின் இலக்குகளை கட்டுப்படுத்த உக்ரைனுக்கு சர்வதேச ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T03:42:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயர்லாந்தை தனியாளாக சம்பவம் செய்த ரஷீத் கான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rashid-khan-37-runs-helps-afghan-beat-ireland-1786419763"></link>
            <id>https://news.lankasri.com/article/rashid-khan-37-runs-helps-afghan-beat-ireland-1786419763</id>
            <summary type="text">Afghanistan beat Ireland by 3 Wickets: அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Afghanistan beat Ireland by 3 Wickets: அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
பெல்ஃபாஸ்டில் நடந்த ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>206-க்கு ஆல்அவுட்</h2><p>

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி பெல்ஃபாஸ்டில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49dd71e3-e7a4-4bdc-8955-43767bd7547f/26-6a7a9a36a52d7.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய அயர்லாந்து அணி ரஷீத் கான், காஸன்ஃபர் மற்றும் யாமினின் அபார பந்துவீச்சில் 206 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

அதிகபட்சமாக கேவின் ஹோயி 36 ஓட்டங்களும், கேட் கேர்மைக்கேல் 32 ஓட்டங்களும் எடுத்தனர். ரஷீத் கான், காஸன்ஃபர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.</p><p>

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியாக ஆட ஜட்ரான் 12 ஓட்டங்களும், அடல் 27 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

ரஹ்மத் ஷா 4 ஓட்டங்களில் வெளியேற, ஷாஹிதி 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76175605-8005-4dd8-8a71-7001ece03812/26-6a7a9a3600910.webp' />&nbsp;</p><h2>ரஷீத் கான்&nbsp;அபாரம் </h2><p> மறுமுனையில் சிக்ஸர்களை பறக்கவிட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz) அரைசதம் விளாசினார். அணியின் ஸ்கோர் 149 ஆக உயர்ந்தபோது குர்பாஸ் 71 ஓட்டங்களில் (5 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) அவுட் ஆனார்.</p><p>அடுத்து வந்த ரசூலி (13), ஓமர்சாய் (13) இருவரும் சொதப்ப, ரஷீத் கான் (Rashid Khan) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.</p><p>

அவர் 43 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் 207 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e30911-36e6-4c87-af10-d86a7fa2ec34/26-6a7a9a3753bca.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T03:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/high-end-sex-doll-found-in-suitcase-in-australia-1786384813"></link>
            <id>https://news.lankasri.com/article/high-end-sex-doll-found-in-suitcase-in-australia-1786384813</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் உயர் ரக செக்ஸ் பொம்மை(Sex Toy) என்பது தெரியவந்துள்ளது. கைவிடப்பட்ட சூட்கேஸினால் பரபரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் உயர் ரக செக்ஸ் பொம்மை(Sex Toy) என்பது தெரியவந்துள்ளது.</p><h2> கைவிடப்பட்ட சூட்கேஸினால் பரபரப்பு</h2><p>ஞாயிற்றுக்கிழமை மாலை அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கிராமப் பகுதியில் கிடந்த கைவிடப்பட்ட சூட்கேஸில் மனித சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.</p><p> ஓலன்(Oallen) பகுதியில் மண் பாதைக்கு அருகே சந்தேகத்திற்கு உரிய வகையில் கிடந்த சூட்கேஸை கொடூரமான குற்றப் புள்ளி என்று நம்பி சந்தேகத்தின் பேரில் வோல்கான் சாலையை சுற்றி வளைத்து உள்ளூர் அதிகாரிகள் தடயங்களை பாதுகாத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24c82192-0d86-4c59-b68a-2751f18df8f5/26-6a7a11af573ed.webp' /></p><h2> 20 மணி நேர தடயவியல் விசாரணையில் தெரியவந்த உண்மை</h2><p>சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் அதிகாரிகள், 20 மணி நேரத்திற்கு மேலாக ஆராய்ந்த பிறகு திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளிப்படுத்தினர்.</p><p> அதில், சூட்கேஸில் இருந்தது மனித எச்சங்கள் என்று நம்பப்பட்ட நிலையில், அது உண்மையில் மிகவும் தத்ரூபமாக உயர் ரக செக்ஸ் பொம்மை என்பது தெரியவந்துள்ளது.</p><p> ஆரம்பத்தில் அந்த பொருள் மனிதனைப் போலவே தத்ரூபமாக இருந்ததால் ஆய்வகத்திற்கு எடுத்து சென்று சோதனை செய்வதற்கு முன்பு வரை நிபுணர்களுமே அதனை மனித சடலம் என்று நம்பி ஏமாந்ததாக ஹியூம் காவல்துறை மாவட்டத்தின் தளபதி சூப்பிரண்டு லிண்டா பிராட்பரி(Superintent linda bradbury) தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc19b18c-4198-4209-8acc-5cf779ddaade/26-6a7a11b00b7fc.webp' /></p><p> நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் கூற்றுப்படி, சடலம் என்று நம்பப்பட்ட அந்த பொம்மைக்கு ஆடைகள் அணிவிக்கப்பட்டு இருந்ததோடு, அவற்றில் முடி, மூக்குத்தி மற்றும் உடல் காயங்கள் ஆகியவை துல்லியமாக மனித உருவத்துடன் ஒத்திருக்கும் வகையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T00:35:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட 2 சிறுமிகள்: தந்தை எடுத்த விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bengaluru-5star-hotel-father-killed-2-daughters-1786405267"></link>
            <id>https://news.lankasri.com/article/bengaluru-5star-hotel-father-killed-2-daughters-1786405267</id>
            <summary type="text">பெங்களூருவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 2 குழந்தைகளை கொன்று விட்டு தந்தை தானும் உயிரை&amp;nbsp; மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெங்களூருவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 2 குழந்தைகளை கொன்று விட்டு தந்தை தானும் உயிரை&nbsp; மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> சடலமாக மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகள்</h2><p>பெங்களூரு நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அறையில் இரண்டு சிறுமிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேலும் அதே அறையில் அந்த குழந்தைகளின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.</p><p> இந்த சம்பவம் கொலை மற்றும் தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ளும் முயற்சியாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c23397a-ac62-45b1-8832-51a70ee11bf1/26-6a7a619554756.webp' /></p><p></p><h2> என்ன நடந்தது?</h2><p>மாலை 4 மணிக்கு ஓட்டல் தூய்மைப் பணியாளர்கள் அறையை சுத்தம் செய்வதற்காக அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது 10 வயது மற்றும் 5 வயது சகோதரிகள் இரண்டு பேர் படுக்கையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.</p><p>அத்துடன் சிறுமிகளின் தந்தையான 40 வ்யது எஸ்.ஜி இம்ரானும் குளியலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.</p><p> இதையடுத்து அவரை மீட்டு ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2> காவல்துறையினர் விளக்கம்</h2><p>இந்த குடும்பம் முந்தைய நாள் ஹோட்டல் அறையில் வந்து தங்கியுள்ளனர். மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே இம்ரானின் இத்தகைய செயலுக்கு காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> தன்னுடைய குழந்தைகள் இப்படியொரு தாயுடன் வாழ்வதை தான் விரும்பவில்லை, எனவே தான் அவர்களையும் கொலை செய்ய முடிவு செய்தேன் என்று காவல்துறையினரிடம் இம்ரான் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.</p><p> இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T00:05:20+00:00</updated>
        </entry>
    </feed>
