<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-27T05:30:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள-திபெத் பெருவெள்ளம்... என்ன நடந்தது: விரிவான பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-tibet-floods-1787805167"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-tibet-floods-1787805167</id>
            <summary type="text">Deadly Nepal-Tibet floods: நேபாளம்-திபெத் பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு குறித்த விரிவான பின்னணி.
நேபாள-திபெத் எல்லையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Deadly Nepal-Tibet floods: நேபாளம்-திபெத் பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு குறித்த விரிவான பின்னணி.
</p><p>நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஆகியவை பரவலான சேதத்தை ஏற்படுத்தியதோடு, நூற்றுக்கணக்கானோரின் மரணத்திற்கும் பலர் காணாமல் போவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126094cb-8daa-4ab1-a3b1-31f492983cca/26-6a8fbdf22f488.webp' /></p><p>
</p><p>தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் உயிர் அபாயங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், நேபாள அதிகாரிகள் மிகப்பெரிய அளவிலான இழப்பை எதிர்பார்க்கின்றனர்.
</p><p>நிலச்சரிவு ஏற்படுவதற்குச் சற்று முன்பு திபெத்-நேபாள எல்லையில் நிலநடுக்கம் ஒன்று பதிவானதாக நேபாள வெளிவிவகார அமைச்சர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்; இதுவே அந்தப் பேரிடரைத் தூண்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. </p><p>ஆனால், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் சமீபத்திய பகுப்பாய்வு நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்பதைக் குறிக்கிறது; இது நிலச்சரிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. </p><p>ஒரு சாத்தியம் என்னவென்றால், மழைநீர் அல்லது உருகும் பனியிலிருந்து வரும் நீர், நிலத்தையோ பனியையோ நிலை குலையச் செய்து, ஒரு தொடர் வினையைத் தூண்டியிருக்கலாம். </p><p>இந்து குஷ் இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதற்குப் பருவநிலை மாற்றம் காரணமாக அமைகிறது என்பது தெரிந்ததே; இருப்பினும், இந்த குறிப்பிட்ட நிகழ்வில் அதன் பங்கைத் துல்லியமாகக் குறிப்பிடுவதற்கு இது மிக ஆரம்பக்கட்ட நிலையே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.</p><p></p><p> விஞ்ஞானிகள் தற்போது இந்தப் பேரிடன் உண்மையானப் பின்னணி என்ன என்பது தொடர்பில் டெஹ்ரிந்துகொள்ள முயன்று வருகின்றனர். மேலும், நிலச்சரிவு சரியாக எங்கு ஏற்பட்டது, பனிப்பாறை ஏதேனும் திடீரென வற்றியதா, ஆற்றுப் பாதை எங்கு மறிக்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்த செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சமீபத்திய மழைப்பொழிவு குறித்த தரவுகள் ஆகியவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர். </p><p>நுவாகோட் (Nuwakot) பகுதியில், வேகமாக முன்னேறி வந்த சேறு மற்றும் பாறைகளின் பெருவெள்ளம் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்களை அடித்துச் செல்வதை அந்தப் பகுதி மக்கள் அங்கிருந்து தப்பி ஓடியபோது எடுக்கப்பட்ட காட்சிகளில் பதிவாகியுள்ளது. </p><p>ஒரு காணொளியில், திரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு வழியாக நீர் மற்றும் சேறு கலந்த பிரம்மாண்டமான சுவரொன்று பாய்ந்து வந்து, பல மாடிகளைக் கொண்ட ரசுவாகதி எல்லைச் சோதனைச் சாவடியை மூழ்கடிப்பது பதிவாகியுள்ளது. </p><p>போட் கோஷி, திரிசூலி மற்றும் நாராயணி நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாள எல்லையின் திபெத்தியப் பகுதியில் உள்ள கிராமங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மரணமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c8528f-d225-4995-921d-e884f1708b6a/26-6a8fbdf2d6523.webp' /></p><p>
</p><p>குறைந்தது 162 பேர் மரணமடைந்துள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில், 64 பேர் சித்வான் மாவட்டத்தின் கீழ்நிலைப் பகுதிகளிலும், மேலும் 26 பேர் நவல்பாசி கிழக்குப் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். </p><p>திபெத்தின் கியிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுப் பேரழிவில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளதாக சீனாவின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. </p><p>இவர்களில் 260 பேர் வெளிநாட்டினர் என்றும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாகவே நீடிக்கிறது என்றும் சிசிடிவி தெரிவித்துள்ளது. கியிராங்கில் உள்ள எல்லை, சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே சுற்றுலாப் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய கடக்கும் இடமாக விளங்குகிறது.</p><p> முன்னதாக, சுமார் 579 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாகவும், அவர்களில் 466 பேர் வெளிநாட்டினர் என்றும் நேபாளம் தெரிவித்திருந்தது. நேபாள மற்றும் சீனப் புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காணாமல் போனவர்களில் யாரேனும் இருமுறை கணக்கிடப்பட்டுள்ளனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. </p><p>இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால தங்குமிடம், தண்ணீர், சுகாதாரம் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக 500,000 டொலர் நிதியுதவி அளிப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e366ec0-99a4-44c5-9510-91773075bccc/26-6a8fbdf389895.webp' /></p><p> </p><p>நேபாளத்தில் உள்ள பிரித்தானியக் குடிமக்களுக்கு உதவும் வகையில், பிரித்தானிய அரசாங்கம் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார். இதுவரை வெளியாகியுள்ள தரவுகலின் அடிப்படையில், காணாமல் போனவர்களில் குறைந்தது 34 அவுஸ்திரேலிய குடிமக்கள் அடங்குவதாக பிரதமர் ஆன்றனி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>காணாமல் போனவர்களில் 54 அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் அடங்குவதாக நேபாள சுற்றுலா வாரியம் அளித்துள்ள சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. 24 கனடியர்கள் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>13 வயது சிறுமி உட்பட 33 பிரித்தானியக் குடிமக்கள் காணாமல் போயுள்ளதை நேபாள காவல்துறை உறுதி செய்துள்ளது. இதனிடையே, ஃபிஷ்டெயில் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்துடன் பயணம் செய்த 17 மலேசியர்கள் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> நேபாளத்தில் உள்ள மலேசிய தூதரக அதிகாரி ஒருவர், 50-க்கும் மேற்பட்ட மலேசியர்களை தற்போது தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறினார். 53 உக்ரேனியர்கள் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா காவல்துறை தங்களுக்குத் தெரிவித்ததாக உக்ரேனின் வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளது.</p><p> அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்த 142 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. தென் கொரியா, தென்னாப்பிரிக்கா, போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளும் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T04:30:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... பிரித்தானியச் சிறுமி உட்பட 400 வெளிநாட்டவர்கள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flash-flood-british-citizens-1787801788"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flash-flood-british-citizens-1787801788</id>
            <summary type="text">Nepal flash flood British citizens missing: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 13 வயது சிறுமி உட்பட பல பிரித்தானியக் குடிமக்கள் மாயம்.
நேபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flash flood British citizens missing: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 13 வயது சிறுமி உட்பட பல பிரித்தானியக் குடிமக்கள் மாயம்.</p><p>
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 13 வயது சிறுமி உட்பட 33 பிரித்தானியக் குடிமக்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fe8b3b3-450c-4654-a72a-58060445ee19/26-6a8fb0be941d6.webp' /></p><p>
</p><p>புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை சுமார் 8:30 மணியளவில், போட்டே கோஷி ஆற்றின் திபெத்தியப் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மாயாமானதாகக் கூறப்படும் வெளிநாட்டவர்களில் 33 பிரித்தானியர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>புதன்கிழமை, ஆல்பைன் ஈகோ ட்ரெக் என்ற சுற்றுலா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், காணாமல் போன பிரித்தானியர்களில் 13 வயது சிறுமி ஒருவரும், இரண்டு ஐரிஷ் குடிமக்களும் அடங்குவதாகத் தெரிவித்தது. </p><p>மேலும், பயணப் பதிவுகளின்படி, காணாமல் போன பிரித்தானியக் குடிமக்களில் 65, 64 மற்றும் 52 வயதுடைய மூன்று ஆண்களும்; 44, 47, 51, 60, 63, 63 மற்றும் 65 வயதுடைய ஏழு பெண்களும் அடங்குவர். </p><p>நேபாளத்தில் வழிகாட்டியுடனான சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களை ஏற்பாடு செய்யும் அந்த நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் நேபாளத்தைச் சேர்ந்த நான்கு சுற்றுலா வழிகாட்டிகளும் (38, 35, 45 மற்றும் 29 வயதுடையவர்கள்) காணாமல் போயுள்ளதை உறுதிப்படுத்தியது. </p><p>மட்டுமின்றி, கைலாஷ் மலைக்கு ஒன்பது நாள் பயணமாகச் சென்றிருந்த அவர்கள், நேபாளத்திலிருந்து திபெத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தபோது, ​​திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் எல்லையில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இதனிடையே, காணாமல் போனவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் எந்த நாட்டினர் என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் இதுவரை 157 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>நேபாளம் மற்றும் திபெத் இடையிலான இமயமலை எல்லையில் மண் மற்றும் பாறைகளால் ஆன சுவர் ஒன்று ஆற்றில் சரிந்து விழுந்ததாகவும், இதனால் நேபாளப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தும் வகையிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>நேபாளத்தில் வீடுகள், சாலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன; அதேவேளையில், எல்லைப் பகுதி நிலவழிப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஜிரோங் (Gyirong) மாவட்டத்தில் சிலர் காணாமல் போனதையடுத்து, திபெத் அதிகாரிகள் பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். </p><p>இந்த நிலையில், நிலநடுக்கம் ஒன்று பனிச்சரிவைத் தூண்டிவிட்டு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக நேபாள வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4aad5f6-96f0-4649-933c-8d67dc844124/26-6a8fb0bf4afbb.webp' /></p><p> </p><p>இதனிடையே, நீர்மின் நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த எட்டு தென் கொரியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 10 பேர் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>நேபாளத்தின் ரசுவா மாவட்டம் மற்றும் போட்டே கோஷி, திரிசூலி ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், தேவைப்பட்டால் உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறும் உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p> பார்வையாளர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் பயண முகவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். வரும் நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தவர்கள் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>இதனிடையே, காத்மாண்டுவில் உள்ள பிரித்தானிய தூதரகம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை உள்ளூர் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியது.
</p><p>அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், பின்லாந்து, பிரான்ஸ், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் தூதரகங்கள் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், </p><p>ராசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கு தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T03:33:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாவது வெள்ள அபாயம் - நேபாளத்தில் மீண்டும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-faces-second-flood-warning-by-icimod-1787785613"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-faces-second-flood-warning-by-icimod-1787785613</id>
            <summary type="text">Nepal faces second flood warning: நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம் இருப்பதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இரண்டாவது வெள்ள அபாயம்நேபாளத்தின் ரசுவா ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal faces second flood warning: நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம் இருப்பதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
</p><h2>
இரண்டாவது வெள்ள அபாயம்</h2><p>நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளம் இன்னும் முழுமையாக அடங்கவில்லை.</p><p> 

இப்போது, காத்துமாண்டுவை தலைமையிடமாகக் கொண்ட International Centre for Integrated Mountain Development (ICIMOD) நிறுவனம், “இரண்டாவது வெள்ளம் ஏற்படும் அபாயம் மிகுந்துள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p></p><p>ஆகஸ்ட் 26 அன்று, பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம், Bhote Koshi மற்றும் Trishuli ஆற்றுப் பகுதிகளை கடுமையாக பாதித்தது. சில நிமிடங்களில் நீர்மட்டம் 9 மீட்டர் வரை உயர்ந்ததால், கிராமங்கள், சாலைகள், பாலங்கள், கண்காணிப்பு நிலையங்கள் அனைத்தும் சேதமடைந்தன.
</p><p>
ICIMOD விஞ்ஞானிகள், “Lhende Khola பகுதியில் பனிச்சரிவு காரணமாக ஆற்றில் பெரிய அளவில் பனி மற்றும் கற்கள் விழுந்திருக்கலாம். இதனால் ஆற்றின் ஓட்டம் தடைபட்டு, தற்காலிக அணை உருவாகியிருக்கலாம். அது உடைந்தால், இரண்டாவது வெள்ளம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளனர்.
</p><p></p><p>நேபாள-சீனா எல்லைப் பகுதியில் இன்னும் தடுப்பு அணை இருப்பதாகவும், அது உடைந்தால் Jilong port மற்றும் கீழ்நிலப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 14 மாதங்களில் இதே பகுதியில் இரண்டாவது முறையாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நுவாகோட், தாடிங் மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

ICIMOD இயக்குநர் பெமா க்யாம்சோ, “நேபாள மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த திடீர் பேரழிவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எங்கள் பங்கு தொடரும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p>விஞ்ஞானிகள், “குளிர்பரப்பில் (Cryosphere) ஏற்படும் மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பனிச்சரிவு, பனிச்சரிவு அணைகள், நிலச்சரிவு போன்றவை மிக வேகமாக நடக்கின்றன. இதற்கு எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பு தேவை” என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், நேபாள அரசு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் வெளியேற்றம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T00:33:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 9 அடுத்த iPhone வெளியீடு: ஆப்பிள் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apple-sets-sept-9-date-for-next-iphone-launch-1787790923"></link>
            <id>https://news.lankasri.com/article/apple-sets-sept-9-date-for-next-iphone-launch-1787790923</id>
            <summary type="text">Apple sets next iPhone launch on Sept 9: ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை iPhone-ஐ வெளியிடும் நிகழ்ச்சியை 2026 செப்டம்பர் 9 அன்று நடத்தவுள்ளதாக அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apple sets next iPhone launch on Sept 9: ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை iPhone-ஐ வெளியிடும் நிகழ்ச்சியை 2026 செப்டம்பர் 9 அன்று நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>
இந்த நிகழ்ச்சி, புதிய CEO ஜான் டெர்னஸ் (John Ternus) தலைமையில் நடைபெறுவதால், உலகம் முழுவதும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0798903a-f266-4ce2-8c93-061a99fd0ac0/26-6a8f864d648c6.webp' /></p><p>கடந்த சில மாதங்களாக, iPhone-இன் புதிய மாடல் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, மேம்பட்ட AI அம்சங்கள், சிறந்த கமெரா தொழில்நுட்பம், மற்றும் அதிக திறன் கொண்ட பேற்றரி ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

மேலும், iPhone-இன் வடிவமைப்பில் சிறிய மாற்றங்களும், புதிய நிறங்களும் அறிமுகமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p></p><p>ஆப்பிள், தனது நிகழ்ச்சியை கூப்பர்டினோ, கலிபோர்னியா நகரில் உள்ள Apple Park-இல் நடத்த உள்ளது. உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாக காண்பிக்கப்படும்.
</p><p>
புதிய iPhone-இன் விலை மற்றும் விற்பனை திகதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், நிபுணர்கள், “இந்த முறை iPhone விலை சிறிது அதிகமாக இருக்கலாம். </p><p>அதே நேரத்தில், புதிய AI அம்சங்கள் மற்றும் மேம்பட்ட செயல்திறன் காரணமாக வாடிக்கையாளர்கள் அதை விரும்புவார்கள்” எனக் கூறுகின்றனர்.
</p><p>
ஆப்பிள் ரசிகர்கள், “டெர்னஸ் தலைமையில் வரும் முதல் iPhone எப்படியிருக்கும்?” என்ற கேள்வியுடன் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T00:32:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் தற்காலிக பாதை: ஈரான்-ஓமன் ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-oman-agree-temporary-hormuz-route-1787789640"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-oman-agree-temporary-hormuz-route-1787789640</id>
            <summary type="text">Iran-Oman agree temporary Hormuz route: ஈரான் மற்றும் ஓமன் இடையே புதிய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


புதிய பாதைஈரான் மற்றும் ஓமன், உலகின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran-Oman agree temporary Hormuz route: ஈரான் மற்றும் ஓமன் இடையே புதிய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><h2>

புதிய பாதை</h2><p>ஈரான் மற்றும் ஓமன், உலகின் முக்கியமான எரிபொருள் போக்குவரத்து வழியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில் புதிய தற்காலிக பாதையை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be18a338-3bda-4b8c-b07e-f811c41b2936/26-6a8f814a8f955.webp' /></p><h2>

தற்காலிக ஒப்பந்தம்</h2><p>ஈரான் துணை வெளிவிவகார அமைச்சர் காஜெம் கரிபாபாதி, “புதிய பாதையின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் ஈரான் நிலப்பரப்பில் இருக்கும். இது தற்காலிக ஒப்பந்தம் மட்டுமே” எனக் கூறியுள்ளார். </p><p>இந்த பாதை சுமார் 11 கிலோமீட்டர் அகலமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
ஓமன் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அல்-புசைதி, “இந்த பாதையை விரைவில் அறிவிப்போம். எதிர்காலத்தில் நிரந்தர தீர்வும் உருவாகும்” எனக் கூறியுள்ளார்.
</p><p></p><p>கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால் உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. </p><p>ஜூன் மாதத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானாலும், அதில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை அமெரிக்கா பின்பற்றவில்லை என ஈரான் குற்றம்சாட்டுகிறது.</p><p>

ஈரான், “அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தால், ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது” எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், “அமெரிக்கா விதிக்கும் புதிய பொருளாதார தடைகள் தோல்வியடையும்” எனவும் எச்சரித்துள்ளது.
</p><p></p><p>இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையில் இன்னும் கடல் கண்ணிவெடிகள் உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. </p><p>அமெரிக்கா, “கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன” எனக் கூறினாலும், ஈரான் அதை மறுத்து, “அமெரிக்க கப்பல்கள் எளிதில் இலக்காக மாறும்” என எச்சரித்துள்ளது.
</p><p>
இந்த ஒப்பந்தம், உலக எரிபொருள் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T00:11:14+00:00</updated>
        </entry>
    </feed>
