<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-17T11:36:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் கோருவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/demand-for-canadian-citizenship-certificates-rise-1786965674"></link>
            <id>https://news.lankasri.com/article/demand-for-canadian-citizenship-certificates-rise-1786965674</id>
            <summary type="text">கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் கோருவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
 

வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் கோருவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
</p><p> 

வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில், அவர்களுடைய கனேடிய குடியுரிமை அவர்களுடைய பிள்ளைகளைச் சென்றடையாது என்னும் நிலை கனடாவில் இருந்தது.
</p><p>
ஆனால், ’குடியுரிமைச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு சட்டம்’ என்னும் மசோதா, சட்டமாக மாறியுள்ளதால், பாதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது கனேடிய குடியுரிமை பெறத் தகுதி பெற்றுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b286f692-539e-458f-a37a-514947f8e958/26-6a82eeac9c23d.webp' /></p><h3>
குடியுரிமைச் சான்றிதழ் கோருவோர் எண்ணிக்கை</h3><p>

இந்நிலையில், கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் கோருவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
</p><p>
அதற்கு முக்கியக் காரணம், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துவருகிறார்கள்.&nbsp;</p><p></p><p>
இதற்கிடையில், தாங்கள் கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் பெறும் நோக்கில், தங்கள் மூதாதையர்கள் கனேடியர்கள் என்பதை உறுதி செய்வதற்காக, அது தொடர்பான அலுவலகங்களுக்கு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சம்பந்தப்பட்ட அலுவலக அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T11:21:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சரின் பேச்சால் சர்ச்சை - திமுகவிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-asks-sorry-in-tamilnadu-assembly-1786958387"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-asks-sorry-in-tamilnadu-assembly-1786958387</id>
            <summary type="text">cm vijay asks sorry in assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயரை குறிப்பிட்டு வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பேசியதற்காக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay asks sorry in assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயரை குறிப்பிட்டு வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பேசியதற்காக முதல்வர் விஜய் மன்னிப்பு கோரியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2s93gFXebJA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><h3>
முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயரை குறிப்பிட்ட அமைச்சர்
</h3><p>
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.</p><p> 

சட்டமன்றத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், முன்னாள் முதல்வர் என்று மட்டும் கூறாமல் கருணாநிதி என பெயரை குறிப்பிட்டு பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3993f93c-dd39-40ee-aec7-30f0a1654631/26-6a82d23566c35.webp' /></p><p> 

பெயரை குறிப்பிடதற்கு, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவை முன்னவர் செங்கோட்டையன், ரஞ்சித்குமாரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொண்டார்.&nbsp;</p><p></p><p>
இதனையடுத்து பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "சட்டமன்றத்தில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது ஒரு எம்எல்ஏ சட்டமன்றத்தில் கருணாநிதி என பெயரைக் குறிப்பிட போது அதனை வாபஸ் வாங்க சொல்லி மன்னிப்பு கேட்க சொன்னார்" என குறிப்பிட்டார்.&nbsp;</p><h3> 

மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய் </h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/033c3551-d789-4868-84ff-7cd65b1695a4/26-6a82d234b76fc.webp' /></p><p>இதன் பின்னர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடும்போது பேசிய முதல்வர் விஜய், "உங்கள் தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது தவறு தான். அவர் சார்பாக நான் sorry கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T10:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[91 ஓட்டங்களுக்கு சுருண்ட சன்ரைசர்ஸ்: முதல் கிண்ணத்தை வென்ற ட்ரெண்ட் ராக்கெட்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trent-rockets-women-won-first-the-hundred-title-1786961595"></link>
            <id>https://news.lankasri.com/article/trent-rockets-women-won-first-the-hundred-title-1786961595</id>
            <summary type="text">2026 The Hundred மகளிர் கிண்ணத்தை முதல் முறையாக ட்ரெண்ட் ராக்கெட்ஸ் வென்றது.

லார்ட்&#039;ஸில் நடந்த The Hundred மகளிர் தொடர் இறுதிப்போட்டியில் வெற்றி பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 The Hundred மகளிர் கிண்ணத்தை முதல் முறையாக ட்ரெண்ட் ராக்கெட்ஸ் வென்றது.
</p><p>
லார்ட்'ஸில் நடந்த The Hundred மகளிர் தொடர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மகுடம் சூடியது.&nbsp;</p><h2>சுருண்ட சன்ரைசர்ஸ் லீட்ஸ் &nbsp;</h2><p>
2026 The Hundred மகளிர் தொடரின் இறுதிப்போட்டியில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f599039e-cb04-431a-95e8-abbc7297fc42/26-6a82e04d0ee6f.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 91 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அன்னபெல் சதர்லேண்ட் 25 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

கிம் கார்த், சமந்தா பேட்ஸ், சார்லே பிலிப்ஸ் மற்றும் ஜார்ஜியா ஆடம்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
</p><h2>
ட்ரெண்ட் ராக்கெட்ஸ் சாம்பியன் </h2><p>பின்னர் ஆடிய ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 54 பந்துகளில் 92 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

சோபியா டங்கலே 41 (23) ஓட்டங்களும், பெத் மூனி 31 (21) ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e1238e6-62e9-4fda-9040-cd10944907bd/26-6a82e04dc3cfc.webp' /></p><p>

இந்த வெற்றியின் மூலம் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி முதல் முறையாக கிண்ணத்தை வென்று மகுடம் சூடியது.
</p><p>
ஆட்டநாயகி விருதினை ஜார்ஜியா ஆடம்ஸும், தொடர் நாயகி விருதை அன்னபெல் சதர்லேண்டும் பெற்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aee47f8-83cb-4106-aebe-6ce0bada285d/26-6a82e04e76778.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64ee54e7-f63a-4360-b816-a2d3f92da460/26-6a82e04f2b048.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T10:17:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் மோசடியில் சிக்கி 4,000 யூரோக்களை இழந்த பிரித்தானியப் பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-women-lost-4000-euro-in-france-1786959201"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-women-lost-4000-euro-in-france-1786959201</id>
            <summary type="text">பிரான்சில் வாழ்ந்துவரும் பிரித்தானியப் பெண்ணொருவர் வங்கி மோசடி ஒன்றில் சிக்கி 4,000 யூரோக்களை இழந்துள்ளார்.


தென்மேற்கு பிரான்சிலுள்ள Bordeaux நகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் வாழ்ந்துவரும் பிரித்தானியப் பெண்ணொருவர் வங்கி மோசடி ஒன்றில் சிக்கி 4,000 யூரோக்களை இழந்துள்ளார்.
</p><p>

தென்மேற்கு பிரான்சிலுள்ள Bordeaux நகரில் வாழ்ந்துவருபவர் பிரித்தானியரான Deirdre Rankin (79).
</p><p>
2025ஆம் ஆண்டு ஆகத்து மாதம் அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அழைத்தவர் தான் Deirdreயின் வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறியுள்ளார்.</p><h3>
பறிபோன 4,000 யூரோக்கள்
</h3><p>
Deirdreயின் வங்கிக்கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளதாகவும், உடனடியாக அவரது வங்கிக்கணக்கை காப்பாற்றிக்கொள்ளுமாறும் கூறியுள்ளார் அந்த நபர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e43df601-5a7d-42ac-ac54-67436dab9dbb/26-6a82d5627288b.webp' /></p><p>

அதாவது, Deirdreயின் வங்கிக்கணக்கிலிருக்கும் பணத்தைக் காப்பாற்றவேண்டுமானால், அதை உடனடியாக வேறு கணக்குக்கு மாற்றவேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார்.
</p><p>
அப்படியே Deirdre செய்ய, பிறகு புதிய கணக்கை சோதித்துப் பார்த்தால், அதில் பணம் எதுவும் இல்லை. அந்த நபர் அந்த கணக்கிலிருந்த பணத்தை எடுத்துவிட்டு வங்கிக்கணக்கை மூடிவிட்டார்.&nbsp;</p><p></p><p>
அவ்வளவுதான் Deirdreயின் வங்கிக்கணக்கிலிருந்த 4,000 யூரோக்கள் மாயமாகிவிட்டன.
</p><p>
Deirdre இந்த விடயம் தொடர்பில் புகாரளிக்க, 300 யூரோக்களை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளது வங்கி.
</p><p>
விடயம் என்னவென்றால், பிரான்சைப் பொருத்தவரை, வாடிக்கையாளர்கள் மோசடி மூலம் இழந்த பணத்தை வங்கி திருப்பிக் கொடுத்தாகவேண்டும் என்கிற அவசியம் இல்லை.
</p><p>
2025ஆம் ஆண்டு, இதேபோன்றதொரு மோசடி வழக்கில், ஏமாந்த வாடிக்கையாளருக்கு வங்கி பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துவிட்டது.
</p><p>
மின்னஞ்சல் ஒன்றை நம்பி அந்த நபர் பணத்தை இழந்த நிலையில், அது மோசடி என தெளிவாக புரிய வாய்ப்பிருந்தும் வங்கிக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர் அலட்சியமாக இருந்ததாலேயே அவர் தன் பணத்தை இழந்துள்ளதாகவும் நீதிமன்றம் கூறிவிட்டது.</p><p>

ஆக, யாராவது தொலைபேசியில் அழைத்து வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி, உங்கள் பாஸ்வேர்ட் போன்ற விடயங்களைக் கேட்டால், உடனடியாக தொலைபேசி அழைப்பை துண்டித்துவிடுங்கள் என்று கூறியுள்ள அதிகாரிகள், அப்படி ஏதாவது முக்கிய தகவல்களை நீங்கள் பகிர்ந்துவிட்டதாக கருதினால் உடனடியாக உங்கள் வங்கியை அணுகி நடந்ததைத் தெரியப்படுத்துங்கள் என்றும் கூறுகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T09:35:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்கோடா ஸ்லாவியா புதிய மாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/skoda-slavia-facelift-india-launch-aug-18-1786956519"></link>
            <id>https://news.lankasri.com/article/skoda-slavia-facelift-india-launch-aug-18-1786956519</id>
            <summary type="text">Skoda Slavia Facelift launch in India: ஸ்கோடா ஸ்லாவியாவின் புதிய facelift மாடலை டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

ஸ்கோடா இந்தியா தனது பிரபலமான செடான் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Skoda Slavia Facelift launch in India: ஸ்கோடா ஸ்லாவியாவின் புதிய facelift மாடலை டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.
</p><p>
ஸ்கோடா இந்தியா தனது பிரபலமான செடான் கார் ஸ்லாவியாவின் புதிய facelift மாடலை ஆகஸ்ட் 18, 2026 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d69c911e-b277-437a-bfe8-1ad6d4634cd1/26-6a82cae89cb10.webp' /></p><h2>

மாற்றங்கள்:
</h2><p>
புதிய மாடலில் வெளிப்புற வடிவமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புறத்தில் புதிய கிரில், அதிக குரோம் அலங்காரம், மாற்றியமைக்கப்பட்ட ஹெட்லாம்புகள் மற்றும் LED லைட்டிங் சிக்னேச்சர்கள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
பம்பர் மற்றும் fog-lamp housing-களும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் புதிய 5-spoke அலாய் வீல்கள் அறிமுகமாகின்றன. பின்புறத்தில் sequential turn indicators கொண்ட tail lamps இடம்பெறுகின்றன.</p><p></p><p>உட்புற அமைப்பில் 10.25-inch டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, அதே அளவிலான infotainment screen, wireless charging, automatic climate control, rear AC vents மற்றும் 8-speaker audio system ஆகியவை இடம்பெறுகின்றன. single-pane sunroof, TPMS, front parking sensors போன்ற வசதிகளும் தொடர்கின்றன.
</p><p>
எஞ்சின் விருப்பங்களில் மாற்றம் இல்லை. 1.0 லிட்டர் TSI (116 PS, 178 Nm) மற்றும் 1.5 லிட்டர் TSI (150 PS, 250 Nm) என இரண்டு பெட்ரோல் எஞ்சின்கள் வழங்கப்படுகின்றன. 1.0 லிட்டர் மாடல் 6-speed manual மற்றும் புதிய 8-speed automatic transmission-இல் கிடைக்கிறது. 1.5 லிட்டர் மாடல் 7-speed DSG-யுடன் வருகிறது.
</p><p></p><h2>பாதுகாப்பு அம்சங்கள்:
</h2><p>
6 airbags, ABS, ESC, TPMS, ISOFIX mounts ஆகியவை தொடர்கின்றன. Global NCAP-இல் 5-star மதிப்பீடு பெற்றுள்ளதால், புதிய மாடலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><h2>
விலை:
</h2><p>
தற்போதைய ரூ.10 லட்சம் - ரூ.18.19 லட்சம் ex-showroom வரம்பை விட சற்று அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. புதிய ஸ்லாவியா, Hyundai Verna, Volkswagen Virtus, Honda City ஆகியவற்றுடன் போட்டியிடும்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T08:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவன் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/7-dies-in-bihar-ashokdham-shiva-temple-stampede-1786953400"></link>
            <id>https://news.lankasri.com/article/7-dies-in-bihar-ashokdham-shiva-temple-stampede-1786953400</id>
            <summary type="text">bihar ashokdham shiva temple stampede: பீகாரில் உள்ள அசோக்தாம் என்ற சிவன் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். 

சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>bihar ashokdham shiva temple stampede: பீகாரில் உள்ள அசோக்தாம் என்ற சிவன் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். </p><h3>

சிவன் கோவில் கூட்ட நெரிசல் </h3><p>

பீகார் மாநிலம் லஹிசாராய் மாவட்டத்தில் அசோக்தாம் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8171b43c-aa08-44f7-860d-c55479f57783/26-6a82beb9e9347.webp' /></p><p>
புனித ஸ்ராவன் மாதத்தில் மூன்றாம் திங்களான இன்று அதிகாலையிலே சிவனை தரிசித்து, நீர் அபிஷேகம் காண சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலில் குவிந்தனர்.</p><p>குறுகிய இடைவெளியில் 2 ரயில்கள் நிலையத்திற்கு வந்ததால், காலை 6.30 மணி முதல் 6.45 மணிக்குள் கோவிலுக்கு மாபெரும் கூட்டம் வந்துள்ளது.</p><p>
கூட்ட நெரிசலின் காரணமாக ஒரு பக்கத் தடுப்பு உடைந்து, மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து, கூட்ட நெரிசல் அதிகரித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46a2ca42-1aac-4995-a54b-fae1550ae14c/26-6a82beba9af9a.webp' /></p><p>திடீரென்று அங்கு ஆண்கள் வரிசையில் இருந்த ஒரு மின் கம்பம் சரிந்து விழுந்தது. 

கம்பம் சரிந்து விழுந்தபோது, ​​மக்கள் மீது மின்சாரக் கம்பி விழுந்துவிட்டதாக வதந்தி பரவியது. </p><p>இதனால் பெண்கள் வரிசையில் நெரிசல் அதிகரித்தது. இந்த நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p> 

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

ஆனால் சரிந்து விழுந்தது மின்கம்பம் தான். ஆபத்தான மின்கம்பி இல்லை என மாவட்ட ஆட்சியர் சைலேந்திர குமார் விளக்கமளித்துள்ளார். </p><p>

இந்த துயர சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி, பீகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">लखीसराय के अशोकधाम हाल्ट पर हुई हृदयविदारक दुर्घटना में सभी मृतकों के निकटतम आश्रितों को राज्य सरकार की ओर से ₹4-4 लाख अनुग्रह अनुदान दिया जाएगा।<br><br>दुःख की इस घड़ी में राज्य सरकार पूरी संवेदना और प्रतिबद्धता के साथ शोक संतप्त परिवारों के साथ खड़ी है।🙏</p>&mdash; Samrat Choudhary (@samrat4bjp) <a href="https://x.com/samrat4bjp/status/2089209888010649689?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக பீகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T08:30:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறு மாதங்களில் 40,000 புலம்பெயர்ந்தோர்: சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/40000-foreign-residents-left-swiss-in-6-months-1786954575"></link>
            <id>https://news.lankasri.com/article/40000-foreign-residents-left-swiss-in-6-months-1786954575</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.


2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சுவிட்சர்லாந்திலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
</p><p>

2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சுவிட்சர்லாந்திலிருந்து சுமார் 40,000 புலம்பெயர்ந்தோர் வெளியேறியுள்ளனர்.
</p><h3>
சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர்
</h3><p>
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சுவிட்சர்லாந்திலிருந்து சுமார் 40,000 புலம்பெயர்ந்தோர் வெளியேறியுள்ள நிலையில், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 4.3 சதவிகிதம் அதிகம் என்கிறது புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5469190-9944-483f-8869-db580a0a5cf7/26-6a82c3513f06f.webp' /></p><p>
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, மக்கள் சுவிட்சர்லாந்துக்கு வருவதற்கு, வேலைதான் முக்கிய காரணமாக உள்ளது.
</p><p>
ஆக, வேலைக்காக வருபவர்கள், வேலைச்சூழல் மோசமானதாக மாறும்போதோ, வேறு ஏதாவது ஒரு நாட்டில் நல்ல வேலை கிடைக்கும்போதோ சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறிவிடுகிறார்கள்.
</p><p>
அத்துடன், வேறு பல காரணங்களுடன், பணி ஓய்வும் மற்றொரு காரணமாக உள்ளது. </p><p>அதாவது, சுவிட்சர்லாந்தில் வேலை செய்பவர்கள் பணி ஓய்வு பெறும்போது, தங்கள் நாடுகளில் கிடைக்கும் சுவிஸ் ஓய்வூதியத் தொகை, சுவிட்சர்லாந்தில் இருக்கும்போது கிடைக்கும் தொகையை விட சற்று அதிகமாக உள்ளதால் அதன் காரணமாக தங்கள் நாடுகளுக்குத் திரும்பத் துவங்கியுள்ளனர் பலர்.&nbsp;</p><p></p><p>
இதற்கிடையில், ஒரு பக்கம் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வர, சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கையோ குறையத் துவங்கியுள்ளது.
</p><p>
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 74,112.

இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 2.9 சதவிகிதம் குறைவு ஆகும்.
</p><p>விடயம் என்னவென்றால், பல நாடுகள் புலம்பெயர்ந்தோரை தொல்லையாக கருதத் துவங்கியுள்ள நிலையில், பேபி பூமர்கள் என அழைக்கப்படும் 1946க்கும் 1964க்கும் இடையில் பிறந்தவர்கள் மொத்தமாக பணி ஓய்வுபெறும்போது, அதனால் தங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பை பல நாடுகள் விரைவில் உணரப்போகின்றன என்பதில் மட்டும் சந்தேகமில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T08:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொடிப் பொழுதில் எதிரணியை திசைதிருப்பி முல்லர் கோல்: 9வது கிண்ணத்தை வென்ற வான்கூவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vancouver-whitecaps-fc-win-9th-cascadia-title-1786952036"></link>
            <id>https://news.lankasri.com/article/vancouver-whitecaps-fc-win-9th-cascadia-title-1786952036</id>
            <summary type="text">Vancouver Whitecaps FC win Cascadia Title: MLS கால்பந்து போட்டியில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் சியாட்டில் சௌண்டர்ஸ் அணியை வீழ்த்தியத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vancouver Whitecaps FC win Cascadia Title: MLS கால்பந்து போட்டியில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் சியாட்டில் சௌண்டர்ஸ் அணியை வீழ்த்தியது.
</p><p>
லூமென் ஃபீல்ட் மைதானத்தில் நடந்த MLS கால்பந்து போட்டியில், எல்லோமி மற்றும் முல்லர் கோல்கள் அடிக்க வான்கூவர் ஒயிட்கேப்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் சியாட்டில் சௌண்டர்ஸ் அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>வான்கூவர் ஒயிட்கேப்ஸ்&nbsp;</h2><p>
வான்கூவர் ஒயிட்கேப்ஸ் மற்றும் சியாட்டில் சௌண்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான MLS கால்பந்து போட்டி லூமென் ஃபீல்ட் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87eecef8-6d0f-4a65-ba7e-fb725a21af3b/26-6a82ba24ea172.webp' />&nbsp;</p><p></p><p>

முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில், 77வது நிமிடத்தில் வான்கூவர் அணிக்கு முதல் கோல் கிடைத்தது.
</p><p>
இமானுவல் சேபி கடத்திய பந்தை, ரயன் எல்லோமி (Rayan Elloumi) மிரட்டலாக கிக் செய்து கோலாக மாற்றினார். </p><h2>

தாமஸ் முல்லர் </h2><p>அதனைத் தொடர்ந்து, 81வது நிமிடத்தில் வான்கூவர் அணிக்கு பெனால்டி கட்டத்திற்குள்ளேயே Free Kick வாய்ப்பு கிடைத்தது.</p><p> 

அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஜேர்மனியின் தாமஸ் முல்லர் (Thomas Muller), நொடிப்பொழுதில் எதிரணி வீரர்களின் கவனத்தை திசைதிருப்பி பந்தை கிக் செய்ய, அது வலது கம்பத்தில் பட்டு திரும்பி கோல் ஆனது.
</p><p>
அதன் பின்னர் சியாட்டில் அணி கோல் அடிக்காததால், வான்கூவர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

இதன்மூலம் 9வது முறையாக Cascadia கிண்ணப் பட்டத்தை வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி கைப்பற்றியது.&nbsp; &nbsp;</p><p> </p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/130363a0-5570-412d-91dd-c6577add2059/26-6a82ba25dccaa.webp' /><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T07:34:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட இளம்பெண்: உடற்கூறு ஆய்வில் தெரியவந்த திடுக் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dhane-teens-death-in-train-accident-women-pregnant-1786949168"></link>
            <id>https://news.lankasri.com/article/dhane-teens-death-in-train-accident-women-pregnant-1786949168</id>
            <summary type="text">தானே நகரில் இளம்பெண்ணொருவர் ரயில் விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட நிலையில், அவர் மூன்று மாத கர்ப்பிணி என்பது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.


இம்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தானே நகரில் இளம்பெண்ணொருவர் ரயில் விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட நிலையில், அவர் மூன்று மாத கர்ப்பிணி என்பது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>

இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 2ஆம் திகதி, மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள தானே நகரில், 17 வயதுப் பெண்ணொருவர் ரயில் மோதி உயிரிழந்தார்.&nbsp;</p><p>
அது ஒரு விபத்து என பொலிசார் முதலில் எண்ணிய நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28502882-4853-41e4-8578-ca17bd914e0f/26-6a82ae31b4039.webp' /></p><h3>
காதலர் கைது</h3><p>

அதைத் தொடர்ந்து பொலிசார் அவரது மொபைலை ஆய்வு செய்ய, அவர் டெலிவரி பாயாக வேலை செய்யும் ஒரு இளைஞருடன் தொடர்ந்து தொடர்பிலிருந்தது தெரியவந்தது.&nbsp;</p><p></p><p>
அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இளம்பெண் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார், அவரது முடிவுக்கு, அவரது காதலர் என கருதப்படும் அந்த இளைஞர் காரணமாக இருந்திருக்கலாம் என்னும் கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:17:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் லட்சுமி மிட்டலின் எஃகு ஆலையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-missile-hits-mittals-ukraine-steel-plant-1786951178"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-missile-hits-mittals-ukraine-steel-plant-1786951178</id>
            <summary type="text">Russian missile hits Mittals Ukraine steel plant: உக்ரைனில் லட்சுமி மிட்டலின் எஃகு ஆலையில் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்திய வம்சாவளி தொழிலதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian missile hits Mittals Ukraine steel plant: உக்ரைனில் லட்சுமி மிட்டலின் எஃகு ஆலையில் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றுள்ளது.</p><h2>

இந்திய வம்சாவளி தொழிலதிபர்</h2><p>உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் அமைந்துள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் ArcelorMittal எஃகு ஆலையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
இந்த தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், 14 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0de759e8-142d-4511-9da3-85393fe6fb27/26-6a82b60c689a3.webp' /></p><p>ஆலையின் முக்கியமான ஆற்றல் மற்றும் உலைப்பிரிவுகள் சேதமடைந்ததால் உற்பத்தி பகுதியளவில் நிறுத்தப்பட்டுள்ளது.
</p><h2>
பதிலடி தாக்குதல் </h2><p>இந்த தாக்குதல், உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிராக நூற்றுக்கணக்கான ட்ரோன்களை அனுப்பியதற்கான பதிலடி என கூறப்படுகிறது.
</p><p>
அந்த ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை, 822 ட்ரோன்களை தடுத்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
</p><p>
மாஸ்கோ அருகே ஒரு வீட்டில் ட்ரோன் தாக்குதலால் 83 வயது முதியவர் உயிரிழந்தார். மேலும், ரஷ்யாவின் மிகப்பெரிய ஓன்லைன் விற்பனை நிறுவனம் Wildberries கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
</p><p></p><p>உக்ரைனின் பல நகரங்களில் கடந்த வாரம் மட்டும் 1,550 ட்ரோன்கள், 1,560 குண்டுகள் மற்றும் 62 ஏவுகணைகள் தாக்கியதாக ஜனாதிபதி ஜெ;லென்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் தனது கூட்டாளிகளிடம் கூடுதல் வான்வழி பாதுகாப்பு உதவி வழங்குமாறு மீண்டும் கேட்டுக்கொண்டார்.</p><p>

இந்த தாக்குதல்கள் உக்ரைன்-ரஷ்யா போரின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளன. பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், போரின் தாக்கம் இரு நாடுகளிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T07:17:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் இந்திய இளம்பெண்ணுக்குக் கிடைத்த மோசமான அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-face-disrespect-in-germany-restaurant-1786948630"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-face-disrespect-in-germany-restaurant-1786948630</id>
            <summary type="text">இந்திய இளம்பெண்ணொருவர் ஜேர்மன் ஹொட்டல் ஒன்றில் தான் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


பணி நிமித்தம் ஜேர்மனியில் தங்கியுள்ள இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய இளம்பெண்ணொருவர் ஜேர்மன் ஹொட்டல் ஒன்றில் தான் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
</p><p>

பணி நிமித்தம் ஜேர்மனியில் தங்கியுள்ள இந்திய இளம்பெண்ணொருவர், சமீபத்தில் அங்குள்ள ஹொட்டல் ஒன்றிற்குச் சென்ற நிலையில், ஹொட்டல் ஊழியர் ஒருவர் அவரை மரியாதைக் குறைவாக நடத்தியுள்ளார்.
</p><h3>
இளம்பெண் சந்தித்த மோசமான அனுபவம்
</h3><p>
அறிவியலாளரான அனன்யா என்னும் அந்த இளம்பெண், தன் தோழி ஒருவருடன் Rostock நகரிலுள்ள Peter Pane Burger Grill என்னும் ஹொட்டலுக்குச் சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/102f802f-1fe4-41ce-8717-573e1d49e56e/26-6a82ac18af7d7.webp' /></p><p>
வழக்கமாக, ஜேர்மன் ஹொட்டல்களில் ஊழியர் ஒருவர் வாசலில் நின்று, வருபவர்களை வரவேற்று இருக்கை இருந்தால் அங்கு அழைத்துச் சென்று அவர்களை அமரவைப்பார்.
</p><p>
ஆனால், அனன்யாவும் அவரது தோழியும் சென்ற ஹொட்டலில் யாரும் இல்லையாம். அவர்கள் சுமார் ஐந்து நிமிடங்கள் வாசலில் காத்திருக்க, அங்கு வந்த ஜேர்மன் குடும்பம் ஒன்று யாருக்கும் காத்திருக்காமல் நேரே சென்று இருக்கைகளில் அமர்ந்துகொண்டனராம்.
</p><p>
ஆக, காத்திருந்து யாரும் வராததால் அனன்யாவும் தன் தோழியுடன் ஹொடலுக்குள் சென்றிருக்கிறார். என்றாலும் எந்த இருக்கையிலும் அமராமல், யாராவது ஊழியர்கள் வருவார்களா என பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் இருவரும்.&nbsp;</p><p></p><p>
சற்று நேரத்தில் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வந்த ஒருவர், அவர்களிடம் வந்து, நீங்கள் நேரே உள்ளே வரக்கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா, நீங்கள் வெளியே காத்திருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
</p><p>
நாங்கள் ஏற்கனவே சுமார் 5 நிமிடம் காத்திருந்தோம், யாரும் வராததால்தான் உள்ளே வந்தோம் என அனன்யா கூற, இல்லை, நீங்கள் பொய் சொல்கிறீர்கள், 10 விநாடிகள்தான் நீங்கள் காத்திருந்தீர்கள் என சத்தமிட்டுள்ளார் அந்த ஊழியர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49c31494-1664-4c16-945e-c956939baed3/26-6a82ac180845e.webp' /></p><p>
அவரிடம் எவ்வளவு விளக்கமுயன்றும் அவர்கள் கூறியதை அவர் ஏற்காமல், உங்களுக்கு அவ்வளவு பசியா, நேரே வந்துவிட்டீர்களே என்பது போல கேலியாக பேசியதுடன், அவர்களை ஒரு மேசையருகே அமரவைத்துவிட்டு, மெனு கார்டை தொம்மென்று மேசையில் வைத்திருக்கிறார்.
</p><p>
அத்துடன் நிற்காமல், ஹொட்டலுக்கு வந்த மற்றவர்களிடம் சென்று, இவர்களை கைகாட்டி ஏதோ அவர் பேச, இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது என முடிவு செய்து ஹொட்டலை விட்டு வெளியேறியுள்ளனர் அனன்யாவும் அவரது தோழியும்.
</p><p>
அனன்யா, தான் முதன்முறையாக ஜேர்மனியில் இப்படி ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை எதிர்கொண்டது குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.</p><p>

இந்நிலையில், Peter Pane Burger Grill உணவகம், அனன்யாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
</p><p>
அனன்யாவின் சமூக ஊடக இடுகைக்கு பதிலளித்துள்ள அந்த உணவகம், உங்கள் வீடியோவைப் பார்த்தோம், நீங்கள் சந்தித்த மோசமான அனுபவத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.</p><p>

எங்கள் நிறுவனத்தில் 100 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணி புரிந்துவருகிறார்கள். எங்கள் உணவகத்தில் எல்லோருக்கும் வரவேற்புண்டு என்று கூறியுள்ள அந்த உணவகம், உங்களுக்கு சரியான வரவேற்பும் மரியாதையும் கொடுக்கப்படாததற்காக வருந்துகிறோம் என்றும், இந்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகிறோம் என்றும் கூறியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:37:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெயரை கேட்டாலே அச்சத்தில் உறைந்த மெல்போர்ன் மக்கள்..மோசமான நிலையில் மீட்கப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/melbourne-s-fadi-haddara-gun-shot-at-altona-1786948257"></link>
            <id>https://news.lankasri.com/article/melbourne-s-fadi-haddara-gun-shot-at-altona-1786948257</id>
            <summary type="text">Fadi Haddara was shot in Altona North: அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நிழலுலக பிரமுகராக அறியப்பட்ட ஃபாடி ஹத்தாரா மோசமான நிலையில் மீட்கப்பட்டார்.அவுஸ்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Fadi Haddara was shot in Altona North: அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நிழலுலக பிரமுகராக அறியப்பட்ட ஃபாடி ஹத்தாரா மோசமான நிலையில் மீட்கப்பட்டார்.</p><p>அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நிழலுலக பிரமுகரான ஃபாடி ஹத்தாரா, சந்தேகிக்கப்படும் கும்பல் மோதல் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார். </p><h2>

நிழலுலக பிரமுகராக
</h2><p>அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நிழலுலக பிரமுகராக மக்களை அச்சுறுத்தி வந்தவர் 48 வயதான ஃபாடி ஹத்தாரா (Fadi Haddara).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ef6e875-bc3b-4d53-8f13-790ae9778ea5/26-6a82aaa3e0067.webp' />&nbsp;</p><p></p><p>
பல ஆண்டுகளாக மெல்போர்னில் மற்றவர்கள் அஞ்சும்படியாக இருந்த ஹத்தாரா, விக்டோரியாவின் சட்டவிரோத புகையிலை வர்த்தகத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்ததாக சந்தேகிக்கப்பட்டது.
</p><p>
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை Altona North பகுதியில் உள்ள மேரிகோல்ட் அவென்யூவில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் வைத்து ஃபாடி ஹத்தாரா (48) சுடப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டார்.
</p><h2>
உயிருக்கு ஆபத்தான நிலையில்
</h2><p>பின்னர் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார்.
</p><p>
அவர் கும்பல்களுக்கு இடையிலான மோதலில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சுடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், காவல்துறையினர் ஒரு குற்ற நிகழ்விடத்தை அமைத்தனர். இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fe1c7d3-af8e-436e-a18b-94f4c8934c71/26-6a82ac94d72e6.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db34b55-c377-447d-a5c0-caa114caeb35/26-6a82ab8306333.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>
&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T06:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் விவகாரம் - சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்த திமுக]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minister-not-answer-dmk-walkout-in-tn-assembly-1786947869"></link>
            <id>https://news.lankasri.com/article/minister-not-answer-dmk-walkout-in-tn-assembly-1786947869</id>
            <summary type="text">dmk walkout assembly : போதைப்பொருள் விவகாரம் குறித்து அரசு உரிய விளக்கமளிக்கவில்லை என திமுக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துள்ளது. 

 உதயநிதி ஸ்டாலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>dmk walkout assembly : போதைப்பொருள் விவகாரம் குறித்து அரசு உரிய விளக்கமளிக்கவில்லை என திமுக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துள்ளது. </p><h3>

 உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு</h3><p> 

தமிழ்நாடு சட்டமன்றத்தில், இன்று கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொல்லப்பட்டது தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.&nbsp;&nbsp;</p><p> 

இது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கொலைகள் நடைபெற்றுள்ளது. கோவையில் ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த 19 வயது இளைஞன் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36f93fa4-5561-4885-9e45-25424b751144/26-6a82a92169cc5.webp' /></p><p> 

இந்த பிரச்சனையை நான் ஏற்கனவே அவையில் எழுப்பும் பொழுது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இது ஒரு கோஷ்டி பூசலால் நடந்த கொலை என தெரிவித்துள்ளார்.

10 பேர் சண்டை போட்டு பத்து பேர் மோதினால் அது கோஷ்டி பூசல் என்று சொல்லலாம். ஆனால், ஒரு மாணவனை 20 பேர் சேர்ந்து தாக்கி உள்ளனர். அதனால் இது படுகொலை. </p><p>மாணவர் அமுதன் விவகாரத்தில், கோவை செட்டிபாளையம் போலீசார் வழக்கு விசாரணைக்காக அமுதனை வர சொல்லியுள்ளனர்.

போதை கும்பல் குறித்து அமுதனிடம் தகவல் வாங்கிய காவல்துறையினர், குற்றவாளிகளை கண்டுபிடித்து நியாயமாக போதைப்பொருட்களை பறிமுதல் செய்திருக்க வேண்டும். </p><p>ஆனால், போதைப் பொருள் குறித்து அமுதனிடம் தகவல் பெற்ற காவல் துறையினர் குற்றவாளிகளிடமே அது குறித்தான தகவலை பகிர்ந்து உள்ளனர். அதுதான் அமுதனின் மரணத்திற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.</p><p>

போதைப் பொருள் கும்பல் குறித்து காவல்துறையினரிடம் அமுதன் தகவல் கொடுத்ததால் தான் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது பெற்றோர்கள் நம்புகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக கள ஆய்வு செய்த பல்வேறு சமூக ஆர்வலர்களும் இதே குற்றச்சாட்டை தான் முன் வைக்கிறார்கள்

இது தனிப்பட்ட கோஷ்டி பூசலாக கடந்து போய்விட முடியாது. </p><p>அரசின் அலட்சியத்தாலும் காவல்துறையின் பொறுப்பற்ற போக்கால் தான் இந்த கொலை நடந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படும் காவல்துறையினர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை கலாச்சாரத்தை எதிர்த்து நிற்கும் ஒருவருக்கும் விடப்படும் எச்சரிக்கை தான் இந்த கோவை சம்பவம்.</p><p>சென்னையிலும் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

சென்னையில் திருவொற்றியூரைச் சேர்ந்த தனுஷ் குமார் போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிராக தட்டிக் கேட்டுள்ளார். அவரை 40 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்தனர்" என பேசினார்.&nbsp;</p><p></p><h3> 

ஜாபர் சாதிக்குடன் தொடர்பு</h3><p> 

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், "மாணவர்கள் குழுக்களுக்கு இடையிலான முன்விரோதம் காரணமாக அமுதன் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை, பழிவாங்கலே காரணம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f71df05f-1dfa-463e-8305-ab1351b94083/26-6a82a920b40b5.webp' /></p><p>போதைப்பொருள் குறித்து புகாரளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை.

போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்ததால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம். உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை. இதுவரை அமுதன் கொலையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். </p><p>

மேலும், திமுக ஆட்சியில் டெல்லியில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் முதல்வர் குடும்பம் மற்றும் அமைச்சர்களுக்கு இருந்த தொடர்பு அனைவரும் அறிந்தது" என தெரிவித்தார். </p><p> 

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "கடந்த ஆட்சியில் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்பட்ட நபரை, எங்கள் தலைவர் உடனடியாக கைது செய்ததோடு, கட்சியில் இருந்தும் நீக்கிவிட்டார். </p><p>

ஆனால் தவெக ஆட்சியில் ஒரு அமைச்சரே IPL விளையாட்டின்போது பவுடர் நுணுக்கிவிட்டு, மாத்திரையை நுணுக்கியதாக கதை விட்டார். அவரிடம் காவல்துறை ஏதேனும் விசாரணை நடத்தியதா? தவெக ஏதும் நடவடிக்கை எடுத்துருக்கிறதா" என கூறினார். </p><h3> 

 அமைச்சர் சரத்குமார் விளக்கம் </h3><p>

இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துப் பேசிய அமைச்சர் சரத்குமார், "அந்த வீடியோ தவறான புரிதலோடு பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதை ஏற்கனவே நான் தெளிவாக விளக்கிவிட்டேன். 

அதில் அவர்களுக்கு முரண்பாடு இருந்தால், அந்த நிகழ்வு நடந்தது திமுக ஆட்சியில் தான்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/607cd54d-81d4-4602-af1e-56b9a067b2fc/26-6a82a91f5bf32.webp' /></p><p>அப்போது ஸ்டேடியத்தில் போதை பொருளை அவர்கள் அனுமதித்தார்களா? விளக்கம் அளித்த பின் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்" என பதிலளித்தார்.</p><h3>திமுக வெளிநடப்பு&nbsp;&nbsp;</h3><p> </p><p>

இதனையடுத்து தங்கள் கேள்விக்கு அரசு தரப்பில் உரிய பதிலளிக்கவில்லை என தெரிவித்த திமுக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தது.
</p><p>
வெளிநடப்பு செய்த பின்னர் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், "கோவையில் மாணவர் அமுதன், திருவொற்றியூரில் மாணவர் தனுஷ் ஆகியோரை போதைப் பொருள் கும்பல் அடித்துப் படுகொலை செய்துள்ளது. இதுகுறித்து பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கேள்வி எழுப்பினோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f2d5a12-cbc7-42f6-8a8e-c754a62bdabd/26-6a82a9200da5c.webp' /></p><p>

ஆனால், அதற்கான தெளிவான விளக்கத்தை அளிக்காமல், எதிர்க்கட்சிகளின் மேல் பழி போடும் வழக்கத்தையே தவெக அரசு செய்து வருகிறது. </p><p>கடந்த 3 மாதங்களாக சொல்லிக் கொண்டே இருக்கிறோம். தவெக அரசில் எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்றே தெரியவில்லை. அந்தத்துறை குறித்த கேள்விக்கு, துறை அமைச்சர்கள் பதிலளிப்பதில்லை. </p><p>

சட்டம், ஒழுங்கு குறித்த கேள்விக்கு அந்தத் துறை அமைச்சர் அவையிலே இல்லை. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிப்பதில்லை. இதைக் கண்டித்து தான் வெளிநடப்பு செய்தோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zW0GYKpAVLo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:24:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது: புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/reform-uk-plans-ban-benefits-for-foreign-nationals-1786943875"></link>
            <id>https://news.lankasri.com/article/reform-uk-plans-ban-benefits-for-foreign-nationals-1786943875</id>
            <summary type="text">பிரித்தானியாவின் ரீஃபார்ம் யூகே கட்சி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது என்று கூறியுள்ளது.


பிரித்தானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் ரீஃபார்ம் யூகே கட்சி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது என்று கூறியுள்ளது.</p><p>


பிரித்தானியாவின் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான ரீஃபார்ம் யூகே கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படுவது தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
</p><h3>
வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள்...
</h3><p>
ரீஃபார்ம் யூகே கட்சியைச் சேர்ந்த ராபர்ட் ஜென்ரிக் கூறும்போது, வெளிநாட்டவர்களின் நலனுக்காக பணம் கொடுக்க பிரித்தானிய பணியாளர்களை கட்டாயப்படுத்துவது சரியல்ல என்று கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3afec38-50ea-4c3f-b1e1-51819c910e8e/26-6a82998569dc6.webp' /></p><p>
ஆகவே, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படுவது தடை செய்யப்படும் என்று கூறியுள்ளது ரீஃபார்ம் யூகே கட்சி.</p><p>

அக்கட்சியின் திட்டப்படி, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் வீட்டுக்கான உதவி, ஓய்வூதியம் தொடர்பிலான உதவி, வேலை தேடுவோருக்கு வழங்கப்படும் நிதியுதவி, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவி மற்றும் உடற்குறைபாடுகள் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் என அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும். </p><p></p><p>
முக்கிய விடயம் என்னவென்றால், மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளும் தடை செய்யப்படும் என்று கூறியுள்ளது ரீஃபார்ம் கட்சி.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:10:56+00:00</updated>
        </entry>
    </feed>
