<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-10T03:41:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுக்கடலில் பற்றியெரிந்த பயணிகள் படகு... ஏராளமான மக்கள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/80-missing-philippine-ferry-fire-1789009802"></link>
            <id>https://news.lankasri.com/article/80-missing-philippine-ferry-fire-1789009802</id>
            <summary type="text">Philippines ferry fire leaves scores of people missing: பிலிப்பைன்ஸில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர்.
மேற்கு பிலிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Philippines ferry fire leaves scores of people missing: பிலிப்பைன்ஸில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர்.
</p><p>மேற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பலவான் தீவுக்கு அருகே புதன்கிழமை இரவு பயணிகள் படகு ஒன்று தீப்பிடித்ததில், ஐந்து பேர் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.</p><h2>எண்ணிக்கை மாறக்கூடும்</h2><p>
</p><p>பலவானின் கொரோன் கடற்பகுதியில் தீ விபத்தில் சிக்கிய எம்வி ஜூன் ஆஸ்டர் படகில் இருந்து நாற்பத்தி மூன்று பேர் மீட்கப்பட்டதாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c96e430b-ba1e-4623-a27a-78fa90531e74/26-6aa21f8cdde90.webp' /></p><p> </p><p>இதனிடையே, கடலோரக் காவல் படையின் செய்தித் தொடர்பாளர் கமோடோர் நோயெமி கயப்யாப் கூறுகையில், அந்தப் படகின் பயணப் பட்டியலில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவித்தார். </p><p>மேலும், பதிவுசெய்யப்பட்ட உயிர் பிழைத்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், 80-க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை; மீட்புப் பணிகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை மாறக்கூடும் என்று கயப்யாப் கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>அந்தப் படகு மணிலாவில் உள்ள பாசெக்கோவிலிருந்து புறப்பட்டு கொரோனை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். இதனிடையே, லுசோனில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒரு குடும்பம் இந்த விபத்தில் சிக்கி இன்னும் காணாமல் போயுள்ளனர். </p><p>7,100 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமான பிலிப்பைன்ஸில் கடல் விபத்துகள் சாதாரணமாக நிகழ்கின்றன. விமானம் மூலம் அணுக முடியாத சில தீவுகளுக்கு இடையே, மக்களையும் சரக்குகளையும் கொண்டு செல்ல தீவுகளுக்கு இடையேயான படகுகள் ஒரு மலிவான வழியாகும். </p><p>ஆனால், கடுமையான வானிலை, பருவமழை மற்றும் புயல்கள் காரணமாக கொந்தளிப்பான சூழல்கள் ஏற்படக்கூடிய அபாயம் எப்போதும் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a754a770-4caf-44cd-91ec-84e3115df8fd/26-6aa21f8d907b8.webp' /></p><p> பிலிப்பைன்ஸ் நாடு ஆண்டுதோறும் சராசரியாக 20 புயல்களால் பாதிக்கப்படுகிறது. மோசமான பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டங்களைச் சீரற்ற முறையில் அமுல்படுத்துதல் ஆகியவையும் கடந்த கால விபத்துகளுக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளன. </p><p>ஆனால் தற்போது, 87 பேர் காணாமல் போயுள்ள நிலையில், இந்தப் படகு விபத்து பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக அமையக்கூடும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T03:07:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித குலத்தை AI அழிக்கலாம்! 10% -க்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-could-wipe-out-humanity-within-the-next-10-yrs-1788980667"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-could-wipe-out-humanity-within-the-next-10-yrs-1788980667</id>
            <summary type="text">AI Could Wipe Out Humanity Within the Next 10 Years: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI Could Wipe Out Humanity Within the Next 10 Years: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2> மனித குலத்திற்கு காத்திருக்கும் பேராபத்து</h2><p>அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது(AI) மனித குலத்தையே முற்றிலுமாக அழிக்கலாம் என்றும், அதற்கான வாய்ப்புகள் 10% -க்கும் அதிகமாக இருப்பதாக முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) அமைப்பின் மூத்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எவன் ஹூபிங்கர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90f70de2-7ac7-4ad2-9ed4-1a85b0008d86/26-6aa1adbd55529.webp' /></p><p>ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இருந்து விலகியவரும், ஓபன் ஏஐ(OpenAI) நிறுவனத்தில் பணியாற்றியவருமான ஜேக்கப் காக்சன்(Jacob Coxon) வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்த எவன் ஹூபிங்கர்(Evan Hubinger) இவ்வாறு பதிலளித்துள்ளார்.</p><p> X தளத்தில் பதிலளித்துள்ள எவன் ஹூபிங்கர், தற்போதைய AI மாடல்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மிகவும் குறைவு என்றாலும், எதிர்காலத்தில் இந்த AI தொழில்நுட்பங்கள் தங்களை தாங்களே மேம்படுத்திக் கொண்டு மிகப் பெரிய ஆதிக்கத்தை செலுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரித்துள்ளார்.</p><p>மேலும் அவை மனித குலத்தின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p> ஆனால் இதில், AI மாடல்கள் எவ்வாறு மனித குலத்தை அழிக்கும் என்பதற்கான பிரத்யேக நிகழ்வுகளை அவர் விளக்கவில்லை.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c305c317-2279-41c1-bfc3-57fe13041a34/26-6aa1adbece5ef.webp' /></p><h2>விவாதங்களும், சந்தேகங்களும்</h2><p>இந்த கருத்துகள் துறைசார் வல்லுனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இடையே பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.</p><p> ஐ.நா அமைப்பின் AI ஆலோசகரும், கணினி விஞ்ஞானியுமான டேம் வெண்டி ஹால், AI அச்சுறுத்தல் தொடர்பான இந்த சமூக வலைதள பதிவை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் நிறுவனங்கள் பங்குச் சந்தைக்குள் நுழையும் போது இத்தகைய விவகாரங்களை விளம்பர உத்தியாக பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e85963a2-8514-48b9-8d9e-be7ff104e031/26-6aa1adbe0e885.webp' /></p><p> அத்துடன் இத்தகைய ஆபத்தான மதிப்பீடுகள் கொண்ட நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில்,&nbsp; இங்கிலாந்து AI பாதுகாப்பு நிறுவனத்திடம், ஆந்த்ரோபிக் நிறுவனம் தங்களது அதிநவீன புதிய AI மாடலை ஆபத்து மதிப்பீட்டிற்கு வழங்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T00:25:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியான வீடியோ: கோபத்தில் சொந்த மகளை கொன்ற தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ahmedabad-sofia-premeditated-honor-killing-1788999857"></link>
            <id>https://news.lankasri.com/article/ahmedabad-sofia-premeditated-honor-killing-1788999857</id>
            <summary type="text">Ahmedabad Sofia Premeditated Honor Killing: அகமதாபாத்தில் சொந்த மகளையே அவரது தந்தை மற்றும் சகோதரர் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ahmedabad Sofia Premeditated Honor Killing: அகமதாபாத்தில் சொந்த மகளையே அவரது தந்தை மற்றும் சகோதரர் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தந்தையும், சகோதரரும் சேர்ந்து நடத்திய சதி</h2><p>
அகமதாபாத்தில் சோபியா என்ற 22 வயது பெண் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண் ஒருவருடன் சோபியா இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவியுள்ளது.</p><p> இதனால் கடும் கோபமடைந்த சோபியாவின் குடும்பத்தினர், சமூக அவமானத்துக்கு பயந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.</p><p> இதையடுத்து ஆகஸ்ட் 12ம் திகதி இரவு சோபியாவை மோட்டார் சைக்கிள் சவாரிக்கு செல்வோம் என்று அவரது தந்தை மொஹமந்த் ஃபரூக் மற்றும் அவரது 38 வயது சகோதரர் மொஹமந்த் ஹபில் ஆகிய இருவரும் வெளியே அழைத்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42480047-29be-432d-8cfd-a92a7e22f18f/26-6aa1f8b373b2f.webp' /></p><p> கெல்ஜிபுரா கிராமத்திற்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மண் பாதையில் பைக்கை நிறுத்திய சகோதரர் ஹபில், சோபியாவின் தலையில் இரும்பு சுத்தியால் மூன்று முறை தாக்கியுள்ளார்.</p><p>பின்னர் கொலையை மறைப்பதற்காக மீண்டும் சோபியாவின் உடலை சாலைக்கு கொண்டு வந்து, வாகன விபத்து போல் சித்தரிப்பதற்காக அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும், அவர்களையும் சேதப்படுத்தி கொண்டனர்.</p><p> பின்னர் பொலிஸார் தகவல் கொடுத்த அவர்கள், கெல்ஜிபுரா சந்திப்பு அருகில் வேகமாக வந்த கார் ஒன்று தங்களை மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும், இதில் தன்னுடைய சகோதரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோபியா அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><h2> பொலிஸாருக்கு எழுந்த சந்தேகம்</h2><p>
சோபியாவின் தந்தை மற்றும் சகோதரர் அளித்த விவரங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்த காரணத்தினால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p> அப்போது மூன்று மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியான வீடியோ குறித்தும், சோபியா மீது குடும்பத்தினர் கொண்டிருந்த கோபம் குறித்தும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.</p><p> மேலும் சோபியாவை அடித்து கொன்றுவிட்டு விபத்து போல் காட்சிப்படுத்தியதையும் பொலிஸார் விசாரணையில் உறுதிப்படுத்தினர்.</p><p> இந்நிலையில் சோபியாவின் தந்தை மொஹமந்த் ஃபரூக் மற்றும் சகோதரர் மொஹமந்த் ஹபில் இருவரும் கைது செய்யப்பட்டு கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-10T00:24:28+00:00</updated>
        </entry>
    </feed>
