<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-13T19:36:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்ட்ஸ்மவுத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம்: 6 பேரின் புகைப்படங்களை வெளியிட்ட காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/portsmouth-clash-police-release-6-men-images-1789327547"></link>
            <id>https://news.lankasri.com/article/portsmouth-clash-police-release-6-men-images-1789327547</id>
            <summary type="text">Portsmouth Clash Police Release 6 men Images: போர்ட்ஸ்மவுத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் 6 பேரின் புகைப்படங்களை ஹாம்ப்ஷயர்காவல்துறை வெளியிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Portsmouth Clash Police Release 6 men Images: போர்ட்ஸ்மவுத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் 6 பேரின் புகைப்படங்களை ஹாம்ப்ஷயர்காவல்துறை வெளியிட்டுள்ளது.</p><h2>6 பேரின் புகைப்படங்களை வெளியிட்ட காவல்துறை</h2><p>
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை போர்ட்ஸ்மவுத்தில் அகதிகள் எதிர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 6 பேரின் புகைப்படங்களை விசாரணைக்கு உதவும் வகையில் ஹாம்ப்ஷயர்காவல்துறை வெளியிட்டுள்ளது.</p><p> ஆங்கில கால்வாயில் அகதிகளை ஏற்றிக் கொண்டு ஈஸ்ட்னி மரீனா என்ற கப்பல் துறைமுகத்திற்கு வந்ததை அடுத்து இந்த மோதலானது வெடித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a4ed6ac-9be5-469c-9628-2e380d0eb642/26-6aa6f8bdb1041.webp' /></p><p> நூற்றுக்கணக்கானோர் சாலையை மறித்து பல மணி நேரம் போராட்டம் நடத்தினர். இரவு முழுவதும் அங்கேயே இருக்க போவதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட ஹாம்ப்ஷயர் காவல்துறையினர் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு அங்கிருந்து 200க்கும் மேற்பட்டோரை கலைத்தனர்.</p><p> அப்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின் போது காவல்துறையினர், கடலோர காவல் படைக்கு சொந்தமான பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. சில அதிகாரிகளும் காயமடைந்தனர்.</p><p></p><h2> விசாரணை மற்றும் கைது</h2><p>
வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் பொருட்டு துப்பறியும் நிபுணர்கள் பல மணி நேர காணொளி காட்சிகளை ஆய்வு செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d212986-0ccb-498f-bc96-e1edf494873b/26-6aa6f8bd0458f.webp' /></p><p> இதன் ஒரு பகுதியாக விசாரணைக்கு உதவும் வகையில் தற்போது 6 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.</p><p> வன்முறை சம்பவம் தொடர்பில் காவல்துறை ஏற்கனவே வெள்ளிக்கிழமை, ஹாம்ப்ஷயர், பால்ஸ்ரோவ் பகுதியை சேர்ந்த 42 வயது நபர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.</p><p> மேலும் சனிக்கிழமை 16 வயது சிறுவன் ஒருவனும் இதில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-13T19:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் நடுக்கடலில் கவிழ்ந்த பயணிகள் படகு: பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/java-sea-passenger-vessel-capsizes-6-dead-1789324904"></link>
            <id>https://news.lankasri.com/article/java-sea-passenger-vessel-capsizes-6-dead-1789324904</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் ஜாவா கடலில் கப்பல் காணாமல் போன விபத்தில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.மோசமான வானிலையில் சிக்கிய கப்பல்இந்தோனேசியாவின் ஜாவா கடல் பகுதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் ஜாவா கடலில் கப்பல் காணாமல் போன விபத்தில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2>மோசமான வானிலையில் சிக்கிய கப்பல்</h2><p>இந்தோனேசியாவின் ஜாவா கடல் பகுதியில் மோசமான வானிலை காரணமாக பயணிகள் கப்பல் ஒன்று தொடர்பை இழந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.</p><p> கிழக்கு ஜாவாவின் சுபராபாவில் இருந்து சனிக்கிழமை காலை 10.13 மணிக்கு விர்கோ டிரான்ஸ்போர்ட் 8(Virgo Transports 8) என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e833d06-cd18-4789-b633-1ff3253adecc/26-6aa6ee69e8882.webp' /></p><p> 390 அடி நீளம் கொண்ட இந்த கப்பலில் 30 பணியாளர்கள் உட்பட 243 பேர் போர்னியோவின் தெற்கு கலிமந்தன்(Kalimantan) நகரான பஞ்சர்மாசினை(Banjarmasin) நோக்கி பயணம் செய்தனர்.</p><p>கப்பல் மோசமான வானிலையில் சிக்கி தொலை தொடர்பை இழந்த போது அந்த கப்பலின் கேப்டன் ஆபத்து செய்தி அனுப்பியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அதில், கடலில் அலைகள் 10 மீட்டர் வரை உயருவதாகவும், கப்பல் ஆபத்தான முறையில் ஒருபக்கமாக சாய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்நிலையில் வான்வழி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் கப்பல் தலைகீழாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38b92bde-e507-408a-827b-94d345f0507e/26-6aa6ee6aa2dd0.webp' /></p><h2> மீட்பு பணிகள் மற்றும் உயிரிழப்பு</h2><p>இந்த கப்பலில் பயணித்த 107 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் 4 கடற்படை கப்பல்கள் உட்பட 8 மீட்புக் கப்பல்கள், 2 மீட்பு ஹெலிகாப்டர்கள், பஞ்சார்மாசினை தளமாக கொண்ட உள்ளூர் மீட்புக் குழுவினர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><p> இந்நிலையில் கப்பல் விபத்து சம்பவத்தில் குறைந்தது 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் கப்பலில் பயணித்த நுற்றுக்கணக்கானவர்களில் 130 க்கும் மேற்பட்டோர் இன்னும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T18:41:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் உக்ரைன்: ஜெலென்ஸ்கியை எச்சரித்த டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-urges-ukraine-to-stop-attack-on-russian-oil-1789320836"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-urges-ukraine-to-stop-attack-on-russian-oil-1789320836</id>
            <summary type="text"> Trump Urges Ukraine to stop Attack on Russian oil: ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p> Trump Urges Ukraine to stop Attack on Russian oil: ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரியுள்ளார்.</p><h2> ஜெலென்ஸ்கியை வலியுறுத்திய டிரம்ப்</h2><p>ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை&nbsp; உடனடியாக நிறுத்தும்படி உக்ரைனிய ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.</p><p> டீசல் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/003bed0e-47f4-446f-9645-f74702aa75fb/26-6aa6de85a45df.webp' /></p><p> சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு உக்ரைன் - ரஷ்யா இடையிலான மோதல்களே முக்கியக் காரணம் என்று ஞாயிற்றுக்கிழமை அயர்லாந்து ஓபன் போட்டியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிர்ம்ப் குறிப்பிட்டார்.</p><p></p><p> பிராந்திய விவகாரங்கள்.&nbsp;
அமெரிக்காவுடன் இராஜதந்திர ஓப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள ஈரான் தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், இறுதியில் இந்த மோதல் அமெரிக்காவிடம் இருந்து விலகி செல்லும் என்றும்&nbsp; செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் குறிப்பிட்டார்.</p><p> மேலும் காற்று ஆற்றல் உள்கட்டமைப்பு தொடர்பாக பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்னாமுடன் பேசி வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T17:34:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் சிறந்த செவிலியர் விருதை வென்ற பிரித்தானிய வாழ் மலையாளி - ரூ.2 கோடி பரிசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-malayali-wins-global-nursing-award-2026-1789315641"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-malayali-wins-global-nursing-award-2026-1789315641</id>
            <summary type="text">UK Malayali wins Global Nursing Award 2026: உலகின் சிறந்த செவிலியர் விருதை பிரித்தானிய வாழ் மலையாளிவென்றுள்ளார்.

Global Nursing Award 2026கொச்சியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK Malayali wins Global Nursing Award 2026: உலகின் சிறந்த செவிலியர் விருதை பிரித்தானிய வாழ் மலையாளிவென்றுள்ளார்.
</p><h2>
Global Nursing Award 2026</h2><p>கொச்சியில் நடைபெற்ற சிறப்பு விழாவில், பிரித்தானியாவில் செவிலியராக பணியாற்றும் மலையாளி பெண்ணான அஜிமோல் பிரதீப் (Agimol Pradeep) உலகளாவிய Aster Guardians Global Nursing Award 2026 விருதைப் பெற்றார்.
</p><p>
இந்த விருது, உலகம் முழுவதும் 214 நாடுகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட 1.34 லட்சம் செவிலியர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7dadc3d-bcd1-48fb-b154-6a39b231edd6/26-6aa6ca3a93d0d.webp' /></p><h2>அஜிமோல் பிரதீப்</h2><p>அஜிமோல், லண்டனின் King’s College Hospital-இல் மூத்த Transplant Coordinator-ஆகவும், Salford University-இல் Honorary Senior Lecturer-ஆகவும் பணியாற்றுகிறார். </p><p>அவரின் பணி, உடல் உறுப்பு மற்றும் ஸ்டெம்-செல் தானம், நர்சிங் கல்வி, மற்றும் சர்வதேச நர்சிங் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் முயற்சிகள் ஆகியவற்றில் சிறப்பாக இருந்ததால் இந்த விருது வழங்கப்பட்டது.</p><p>
</p><p></p><p>அவர் தொடங்கிய “உபஹார்” (Upahaar) முயற்சி மூலம் 10,000-க்கும் மேற்பட்ட ஸ்டெம்-செல் தானதாரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது, குறிப்பாக தெற்கு ஆசிய நோயாளிகளுக்கு உறுப்பு தானம் குறைவால் ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க உதவியுள்ளது.
</p><h2>
உலகின் எந்த மருத்துவமனையிலும் மலையாளி நர்ஸ்...</h2><p>விழாவில், கேரள முதல்வர் வி.டி. சதீசன் உரையாற்றியபோது, “இந்த விருது, கேரளா உலகம் முழுவதும் அதிகமான செவிலியர்களை உருவாக்கும் மாநிலம் என்பதை நிரூபிக்கிறது. உலகின் எந்த மருத்துவமனையிலும் மலையாளி நர்ஸ் இருப்பார் என்பது பெருமை” எனக் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், கேரளாவை உலக சுகாதார மையமாக மாற்றும் நோக்கில், சர்வதேச தரத்திலான caregiving பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.</p><p></p><h2>

ரூ.2 கோடி பரிசுத்தொகை</h2><p>இந்த விருது, USD 250,000 (சுமார் ரூ.2 கோடி) பரிசுத்தொகையுடன் வழங்கப்பட்டது. அஜிமோலின் சாதனை, உலகளாவிய நர்சிங் துறையில் இந்தியர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T16:40:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கனடா முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-eyes-eu-membership-amid-us-trade-war-1789316938"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-eyes-eu-membership-amid-us-trade-war-1789316938</id>
            <summary type="text">Canada eyes EU membership amid US trade war: அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் தொடரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கனடா முயற்சிக்கிறது.

ஐரோப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada eyes EU membership amid US trade war: அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் தொடரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கனடா முயற்சிக்கிறது.
</p><h2>
ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை உறுப்பினராக&nbsp;கனடா </h2><p>கனேடிய பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவுடன் நடைபெறும் வர்த்தகப் போரின் தாக்கத்தை சமாளிக்க, கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) இணை உறுப்பினராக மாற்ற வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98c74c0a-fa1a-41c5-bb12-a6ad2d045799/26-6aa6cf4be1b5c.webp' /></p><p>அமெரிக்கா விதிக்கும் சுங்கக் கட்டணங்கள் மற்றும் வர்த்தகத் தடைகள் காரணமாக, கனடாவின் எஃகு, அலுமினியம், வேளாண்மை போன்ற துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>இதனால், கனடா தனது வர்த்தகத்தை ஒரே அமெரிக்க சந்தைக்கு மட்டுமே சார்ந்திருப்பது ஆபத்தானது என கார்னி எச்சரித்துள்ளார்.
</p><p></p><p>அவர் கூறியதாவது: “கனடா, நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து போல EU-வின் இணை உறுப்பினராக இருந்தால், 450 மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பிய சந்தைக்கு நேரடி அணுகல் கிடைக்கும். இது, கனடாவின் பொருளாதாரத்தை பலப்படுத்தும்” என்றார்.
</p><p>
இந்த யோசனை, கனடாவின் உலகளாவிய வர்த்தக கூட்டாண்மைகளை விரிவுபடுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.</p><p> </p><p>அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார பதற்றத்தை குறைக்க, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை உருவாக்குவது கனடாவுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.</p><p></p><p>
</p><h2>
எளிதானது அல்ல..</h2><p>ஆனால், இந்த முயற்சி எளிதானது அல்ல. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க வேண்டியிருக்கும். மேலும், அமெரிக்கா இதை விரோதமாகக் கருதி கூடுதல் அழுத்தம் கொடுக்கக்கூடும் என்ற அச்சமும் உள்ளது.
</p><p>
எனினும், கார்னியின் பரிந்துரை, கனடாவின் பொருளாதார சுயாதீனத்தையும், உலகளாவிய அரசியல் நிலைப்பாட்டையும் வலுப்படுத்தும் முக்கியமான யோசனையாகக் கருதப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T16:25:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் முகவரியொன்றில் வந்த அவசர அழைப்பு..40 வயது பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/40-year-old-woman-arrested-acid-attack-in-sussex-1789311256"></link>
            <id>https://news.lankasri.com/article/40-year-old-woman-arrested-acid-attack-in-sussex-1789311256</id>
            <summary type="text">40 year old woman arrested acid attack in sussex: பிரித்தானியாவில் பெண்ணொருவர் திராவகம் வீசிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

பிரித்தானியாவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>40 year old woman arrested acid attack in sussex: பிரித்தானியாவில் பெண்ணொருவர் திராவகம் வீசிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.</p><p>

பிரித்தானியாவின் மேற்கு சசெக்ஸில் வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து 40 வயது பெண் கைது செய்யப்பட்டார். </p><h2>40 வயது பெண் கைது </h2><p>

மேற்கு சசெக்ஸில் உள்ள க்ராலியில் ஒரு முகவரிக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bbd06a6-abb6-4fc9-9b18-8bafddfa7587/26-6aa6b9ad81351.webp' />
</p><p>
</p><p>

அங்கு திராவகம் வீசப்பட்டதால் பாதிக்கப்பட்ட 40 வயது ஆண் ஒருவர் மீட்கப்பட்டார்.&nbsp;</p><p>

அத்துடன் கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தியதாக, சந்தேகத்தின் பேரில் 40 வயது பெண் கைது செய்யப்பட்டார். </p><p>

அவசர சேவைகள் சம்பவ இடத்தில் இருந்த நிலையில், அதிகாரிகள் சாலையின் ஒரு பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T14:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் 40 பில்லியன் யூரோ முதலீடு செய்யும் UAE]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uae-40-bn-euro-germany-investment-boosts-tech-1789309395"></link>
            <id>https://news.lankasri.com/article/uae-40-bn-euro-germany-investment-boosts-tech-1789309395</id>
            <summary type="text">UAE to invest 40 Bn Euro in Germany to boosts tech: ஐக்கிய அரபு அமீரகம், ஜேர்மனியில் 40 பில்லியன் யூரோ முதலீட்டை அறிவித்துள்ளது.40 பில்லியன் யூரோ&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE to invest 40 Bn Euro in Germany to boosts tech: ஐக்கிய அரபு அமீரகம், ஜேர்மனியில் 40 பில்லியன் யூரோ முதலீட்டை அறிவித்துள்ளது.</p><h2>40 பில்லியன் யூரோ&nbsp;முதலீடு</h2><p> </p><p>

ஜேர்மனியுடன் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) 40 பில்லியன் யூரோ (சுமார் $46.5 பில்லியன்) முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
</p><p>
இந்த அறிவிப்பு, UAE ஜனாதிபதி ஷேக் முகமது பின் சாயித் அல் நஹ்யான் ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில், ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸுடனான சந்திப்பின்போது வெளியிடப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08ec913b-0149-46ec-9ee6-2918228fa98f/26-6aa6b3c64fc8c.webp' /></p><h2>முதலீட்டு துறைகள்
</h2><ul><li>டேட்டா சென்டர்கள்: சுமார் 1 GW திறன் கொண்ட டேட்டா சென்டர்கள் ஜேர்மனியில் அமைக்கப்பட உள்ளன.
</li><li>
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு
</li><li>
தொழில், எரிசக்தி, மேம்பட்ட தொழில்நுட்பங்கள்</li></ul><p></p><h2>

ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டாண்மைகள்
</h2><ul><li>
UAE-ஜேர்மனி இடையே Investment Council உருவாக்கப்பட்டது.
</li><li>
வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த Strategic Dialogue தொடங்கப்பட்டது.
</li><li>
இரு நாடுகளின் நிறுவனங்கள் 29 ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன. இதன் மொத்த மதிப்பு 9.4 பில்லியன் யூரோ ஆகும்.
</li><li>
சுமார் 10 பில்லியன் யூரோ முதலீடு Bavaria மாநிலத்திற்கு செல்கிறது.</li></ul><p></p><h2>
விமான சேவை விரிவாக்கம்
</h2><p>UAE விமான நிறுவனம் Emirates, பெர்லின் மற்றும் துபாய் இடையே நேரடி சேவை தொடங்க அனுமதி பெற்றுள்ளது. இதற்கு முன்பு ஜேர்மனியின் விதிமுறைகள் காரணமாக Emirates பெர்லினுக்கு சேவை வழங்க முடியவில்லை.</p><h2>

பொருளாதார உறவுகள்</h2><ul><li>
UAE, ஜேர்மனியின் வளைகுடா பிராந்தியத்தில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது.</li><li>

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டு 15 பில்லியன் டொலரை கடந்தது.
</li><li>
BMW, Siemens, ThyssenKrupp போன்ற ஜேர்மன் நிறுவனங்கள் அமீரகத்தில் செயல்படுகின்றன.</li></ul><p>

இந்த முதலீடு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் ஜேர்மனிக்கு பெரும் ஆதரவாக இருக்கும். UAE-யின் நீண்டகால கூட்டாண்மை நோக்கத்தை இது வெளிப்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T14:28:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்டான் ஹெர்மன் மிரட்டல் ஆட்டம்: நமீபியாவை ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-africa-whitewash-namibia-in-odi-series-1789307920"></link>
            <id>https://news.lankasri.com/article/south-africa-whitewash-namibia-in-odi-series-1789307920</id>
            <summary type="text">
South africa whitewash namibia in odi series: நமீபியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி முழுமையாக கைப்பற்றியது.

நமீபியா அணிக்கு எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>
South africa whitewash namibia in odi series: நமீபியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி முழுமையாக கைப்பற்றியது.</p><p>

நமீபியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது. </p><h2>சுருண்ட நமீபியா
</h2><p>
Windhoek-யில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நமீபியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca2e264a-aace-4812-9ef0-471accb30ada/26-6aa6ae08df328.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய நமீபியா அணி 156 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சனே க்ரீன் 33 ஓட்டங்கள் எடுத்தார். பிஜோர்ன் போர்டுன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.</p><p>
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 21.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a176beb8-60e2-442f-8d34-ad79b2a9728e/26-6aa6ae0835899.webp' />&nbsp;</p><h2>ஹெர்மன்&nbsp;</h2><p>

ஜோர்டான் ஹெர்மன் (Jordan Hermann) 59 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் விளாசினார். கோன்னோர் எஸ்டர்ஹுய்ஸன் 68 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 3-0 என்ற கணக்கில் நமீபியாவை ஒயிட்வாஷ் செய்தது. </p><p>

தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் பிஜோர்ன் போர்டுன் ஆட்டநாயகன் விருதும், ஜோர்டான் ஹெர்மன் மற்றும் ரூபென் ட்ரம்பல்மேன் இருவரும் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96594be4-f108-48be-a703-2bc798a7171b/26-6aa6ae077fdcb.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/320d6b6f-7b01-4340-84c9-af07eb1c1a21/26-6aa6ae0695166.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T14:04:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிளவுபட உள்ள பிரித்தானியா; சுதந்திரம் கோரும் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scotland-wales-ireland-leaders-meet-to-break-up-uk-1789306135"></link>
            <id>https://news.lankasri.com/article/scotland-wales-ireland-leaders-meet-to-break-up-uk-1789306135</id>
            <summary type="text">wales scotland ireland leaders meet to break up united kingdom: ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளின் முதல் அமைச்சர்கள் பிரித்தானியாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>wales scotland ireland leaders meet to break up united kingdom: ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளின் முதல் அமைச்சர்கள் பிரித்தானியாவிலிருந்து பிரிந்து செல்வது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தும் உரிமையைக் கோரும் ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட உள்ளனர். </p><h3>

ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து முதல் அமைச்சர்கள் சந்திப்பு</h3><p> 

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கியதாக பிரித்தானியா உள்ளது.</p><p> 

இந்நிலையில், பிரித்தானியாவிலிருந்து ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை பிரிந்து சென்று சுதந்திரம் பெற விரும்புகிறது.</p><p>ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி, வேல்ஸின் முதல் அமைச்சர் ருன் அப் ஐயோவர்த் மற்றும் வடக்கு அயர்லாந்தின் முதல் அமைச்சர் மிஷேல் ஓ'நீல் ஆகியோர் திங்கட்கிழமை வேல்ஸின் கார்டிஃபில் நடைபெறும் உச்சிமாநாட்டில் ஒன்று கூட உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be013cd7-b966-4bbd-a923-55f0fb6b6893/26-6aa6a7d298610.webp' /></p><p>

இந்த மாநாட்டில், பிரித்தானியாவிலிருந்து பிரிந்து செல்வது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தும் உரிமையைக் கோரும் ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட உள்ளனர்.&nbsp;</p><p></p><p>

மேலும், பொருளாதாரம், எரிசக்தி, ஐரோப்பா மற்றும் சர்வதேச விவகாரங்களில் நெருங்கிய ஒத்துழைப்பை நாடும் அதே வேளையில், சுதந்திரம் தொடர்பான ஒரு புதிய அரசியல் பிரச்சாரம் குறித்து&nbsp; விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><h3>

ட்ரம்ப் ஆதரவு </h3><p>

பொதுமக்களின் ஆதரவு இருந்தால் ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கூறியதைத் தொடர்ந்து, அவர் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24180e91-d999-455c-b7e3-1bae860a27a6/26-6aa6a7d403ae5.webp' /></p><p>

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது டப்ளின் பயணத்தின்போது, ​​ஒன்றுபட்ட அயர்லாந்தைக் காணத் தாம் விரும்புவதாக கூறியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
</p><h3>
பிரித்தானியாவின் கடைசி பிரதமராக பர்ன்ஹாம்</h3><p>

இது குறித்து பேசிய ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி, "வரலாற்றிலேயே முதன்முறையாக, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகியவை சுதந்திர ஆதரவு முதல் அமைச்சர்களால் வழிநடத்தப்படுகின்றன.&nbsp;</p><p>

தற்போதைய நிலை நீடிக்க முடியாதது என்பதற்கும், பிரித்தானியாவின் பிந்தைய எதிர்காலத்திற்கு வெஸ்ட்மின்ஸ்டர் தயாராக வேண்டும் என்பதற்கும் இதைவிடத் தெளிவான அறிகுறி இருக்க முடியாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3589120-99c0-485d-8f42-7b5645f45def/26-6aa6a7d34e18f.webp' /></p><p> 

ஆண்டி பர்ன்ஹாம், தான் பிரித்தானியாவின் கடைசிப் பிரதமராக வரலாற்றில் இடம்பிடிப்பார் என்ற எண்ணத்தை இப்போது எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.</p><p> 
 
நாளை கார்டிஃபிலில், இந்தத் தீவுகள் முழுவதிலுமிருந்து வரும் கூட்டாளிகளுடன் ஒரு சிறந்த எதிர்காலம் குறித்து விவாதிக்க ஆவலுடன் உள்ளேன். அது சுதந்திரத்தின் புதிய தொடக்கத்தால் மட்டுமே சாத்தியமாகும்" என தெரிவித்துள்ளார். </p><h3>

 சாத்தியமற்றது என தெரிவித்துள்ள பர்ன்ஹாம்
</h3><p>
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பு மற்றொரு ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவது சாத்தியமற்றது. 

ஸ்காட்லாந்தில் ஒரு சுதந்திரப் பொது வாக்கெடுப்புக்கு ஒருமித்த கருத்து இல்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bff7c642-01e8-44bd-8ebf-9c5c9bec0cc6/26-6aa6a7d1bc053.webp' /></p><p> அத்துடன், வடக்கு அயர்லாந்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தற்போது பிரித்தானியாவிலிருந்து பிரிந்து செல்ல விரும்புகிறார்கள் என்று கூறுவதற்கும் தெளிவான அடிப்படை இல்லை" என கூறியுள்ளார். </p><p>

பர்ன்ஹாம், ஸ்வினிக்கு அனுப்பிய கடிதத்தில், "தொழிற்கட்சி சுதந்திரத்தையோ அல்லது மற்றொரு பொது வாக்கெடுப்பையோ ஆதரிக்காது என தொழிற்கட்சி தனது 2024 தேர்தல் அறிக்கையில் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>

சமீபத்தில் கிளாஸ்கோவில் நாம் சந்தித்தபோது நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் தெளிவுபடுத்தியதைப் போல, சுதந்திரமும் பொது வாக்கெடுப்பும் சாத்தியமற்றவை. </p><p>

ஏனெனில் அது, பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலிருந்தும், வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கக் குடும்பங்களுக்கு உதவுவதிலிருந்தும் நமது கவனத்தைத் திசைதிருப்பிவிடும்" என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-13T13:43:36+00:00</updated>
        </entry>
    </feed>
