<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-03T21:36:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் போலி லேபிள் உணவுப் பொருட்கள் - கனடா இறக்குமதி அபாயம் குறித்து மதிப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-probes-india-food-label-fraud-risk-1788463109"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-probes-india-food-label-fraud-risk-1788463109</id>
            <summary type="text">Canada probes India food label fraud risk: இந்தியாவில் போலி லேபிள் உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கனடா அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada probes India food label fraud risk: இந்தியாவில் போலி லேபிள் உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கனடா அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.</p><h2>

போலி லேபிள் உணவுப் பொருட்கள்</h2><p>மும்பையில் நடந்த உணவுப் பொருள் சோதனையில், போலியான ஊட்டச்சத்து தகவல்கள் மற்றும் காலாவதி திகதிகள் ஒட்டப்பட்ட உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனடா அரசு தனது இறக்குமதி அபாயங்களை மதிப்பீடு செய்யத் தொடங்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eb8899e-19f4-4806-9a06-1313a0885bcf/26-6a99c80702784.webp' /></p><p>மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) நடத்திய சோதனையில், PepsiCo, Nestlé, Coca-Cola, Unilever போன்ற நிறுவனங்களின் பொருட்கள், போலி லேபிள்களுடன் கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்தன. </p><p>சுமார் 80,000 டொலர் மதிப்புள்ள பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் அச்சுப்பொறிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p></p><h2>கனடாவிற்கு ஏற்றுமதி?</h2><p>இந்த போலி லேபிள்களில், கனடாவில் பயன்படுத்தப்படும் இருமொழி (ஆங்கிலம்-பிரெஞ்சு) ஊட்டச்சத்து தகவல்கள் இடம்பெற்றிருந்தன. 

இது, பொருட்கள் கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்காக மாற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
</p><p>
கனடாவின் Food Inspection Agency (CFIA), “இந்த சம்பவம் கனடா இறக்குமதிக்கு அபாயம் ஏற்படுத்துகிறதா என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதுவரை, இந்த போலி பொருட்கள் கனடாவுக்கு வந்ததாக எந்த ஆதாரமும் இல்லை” என தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், “போலி திகதிகள், தவறான ஊட்டச்சத்து தகவல்கள், தவறான மூல நாடு குறிப்பு போன்ற உணவு மோசடிகளை மிகக் கடுமையாக எடுத்துக் கொள்ளப்படும்” என்பதையும் தெரிவித்துள்ளது.
</p><p></p><p>இந்த சோதனை, இந்தியாவில் உணவு பாதுகாப்பு சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். பல இடங்களில் சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
</p><p>
PepsiCo நிறுவனம், “இந்த ஏற்றுமதி நிறுவனங்களுடன் எங்களுக்கு எந்த வணிகத் தொடர்பும் இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் எங்கள் பொருட்கள், இந்திய சந்தைக்காக மட்டுமே” என்று விளக்கம் அளித்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம், உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி தரநிலைகள் குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><p>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</p></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T21:29:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக பிரித்தானியாவில் 2 பில்லியன் பவுண்டு வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apple-faces-2-bn-pound-uk-lawsuit-over-app-rules-1788465918"></link>
            <id>https://news.lankasri.com/article/apple-faces-2-bn-pound-uk-lawsuit-over-app-rules-1788465918</id>
            <summary type="text">Apple faces 2 Bn pound UK lawsuit over app rules: பிரித்தானியாவில் ஆப்பிள் நிறுவனம் மீது மிகப்பெரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆப்பிள் மீது வழக்கு2 ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apple faces 2 Bn pound UK lawsuit over app rules: பிரித்தானியாவில் ஆப்பிள் நிறுவனம் மீது மிகப்பெரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
</p><h2>
ஆப்பிள் மீது வழக்கு</h2><p>2 பில்லியன் பவுண்டு மதிப்பிலான இந்த வழக்கு, ஆப்பிள் தனது App Tracking Transparency (ATT) விதிகளை பயன்படுத்தி போட்டியாளர்களுக்கு அநீதி செய்ததாக குற்றம் சாட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1cab08a-e0d3-4a16-84d3-49bce4dcd472/26-6a99d3003ceb3.webp' /></p><p>

ATT விதிகள் 2021-இல் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விதிகளின் படி, iPhone மற்றும் iPad பயனர்கள், தங்களின் செயல்பாடுகளை (activity) மற்ற Apps மற்றும் இணையதளங்கள் கண்காணிக்க அனுமதி தர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க முடியும். 

பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p>
</p><p></p><h2>போட்டியாளர்களுக்கு பாதிப்பு</h2><p>ஆனால், வழக்குத் தொடர்ந்தவர்கள் கூறுவதாவது: இந்த விதிகள் ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டும் சாதகமாக உள்ளன. ஏனெனில், ஆப்பிள் தனது சொந்த விளம்பர சேவைகளுக்கு (Apple Ads) அதிக சலுகை அளிக்கிறது. மற்ற App developers மற்றும் விளம்பர நிறுவனங்கள், பயனர்களை அடைய முடியாமல், வருவாய் இழக்கின்றன. இதனால், சந்தையில் போட்டியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த வழக்கு, “Consumer &amp; Competition Litigation” குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கூறுவதாவது, ஆப்பிள் தனது App Store மற்றும் ATT விதிகளை பயன்படுத்தி, சந்தையில் தன்னுடைய ஆதிக்கத்தை அதிகரிக்கிறது. இதனால், சிறிய App developers மற்றும் விளம்பர நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.</p><p></p><h2>ஆப்பிள்&nbsp;பதில்</h2><p>இதற்கு பதிலளித்துள்ள ஆப்பிள் நிறுவனம், “ATT விதிகள் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டவை. எங்கள் நோக்கம், பயனர்களுக்கு அதிக கட்டுப்பாடு வழங்குவதே” என தெரிவித்துள்ளது.</p><p>

இந்த வழக்கு, லண்டன் Competition Appeal Tribunal (CAT) முன் விசாரணைக்கு வரும். தீர்ப்பு, உலகளாவிய App சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T20:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் அடிமைத்தனத்திலிருந்து தப்பிய பராமரிப்பு பணியாளர்களுக்கு விசா சலுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-visa-relief-for-modern-slavery-victims-1788457966"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-visa-relief-for-modern-slavery-victims-1788457966</id>
            <summary type="text">UK visa relief for modern slavery victims: பிரித்தானியாவில் அடிமைத்தனத்திலிருந்து தப்பிய பராமரிப்பு பணியாளர்களுக்கு விசா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK visa relief for modern slavery victims: பிரித்தானியாவில் அடிமைத்தனத்திலிருந்து தப்பிய பராமரிப்பு பணியாளர்களுக்கு விசா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>
புதிய சலுகை</h2><p>பிரித்தானியாவில் பராமரிப்பு பணியாளர்கள், சமையலர்கள் மற்றும் பலர் நவீன அடிமைத்தன (Modern Slavery) சூழ்நிலையிலிருந்து தப்பிய நிலையில், தங்களின் குடியேற்ற நிலையை (migration status) இழக்காமல் பாதுகாப்பாக வேலையை தொடர Home Office புதிய சலுகையை அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae9fcbca-dd70-472d-bda8-4a13cd7b1af8/26-6a99b3f0855a9.webp' /></p><p>முன்பு, Brexit-க்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட Skilled Worker Visa திட்டத்தின் கீழ், வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களை ஸ்பான்சர் செய்த நிறுவனத்துடன் மட்டுமே வேலை செய்ய முடிந்தது.
</p><p>
அந்த நிறுவனத்திலிருந்து விலகினால், புதிய ஸ்பான்சரை விரைவாகக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
</p><p>
இதனால், பலர் தங்கள் migration status-ஐ இழக்கும் அச்சத்தில், குறைந்த சம்பளம், நீண்ட நேர வேலை, Zero-hour contract போன்ற சுரண்டல்களை சகித்துக் கொண்டனர்.
</p><p></p><p>இப்போது, பிரித்தானிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய மாற்றத்தின் படி, ஒருவர் “Modern Slavery victim” என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டால், அவர்களுக்கு மீதமுள்ள விசா காலத்தில் எந்த நிறுவனத்திலும் வேலை செய்ய அனுமதி வழங்கப்படும். </p><p>இது, சுரண்டலிலிருந்து தப்பியவர்களுக்கு பாதுகாப்பாக வாழவும், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் உதவும்.</p><p>
</p><p></p><p>Salvation Army-யின் Anti-Trafficking பிரிவு துணை இயக்குநர் Heather Grinsted கூறியதாவது: “இந்த மாற்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கையை மரியாதையுடன் மீண்டும் தொடங்க உதவும்.”
</p><p>
ஆனால் Work Rights Centre நிறுவனத்தின் தலைவர் Dora-Olivia Vicol, “இது பெரிய மாற்றமாக இருக்கலாம். ஆனால் Modern Slavery framework எவ்வளவு எளிதில் அணுகக்கூடியது என்பதில்தான் அதன் பயன் இருக்கும்” என எச்சரித்துள்ளார்.
</p><p>
பிரித்தானிய அரசு, சுரண்டல் செய்த நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4,400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உரிமை இழந்துள்ளன.</p><p></p><p>Migration and Citizenship அமைச்சர் Jo White கூறியதாவது: “அடிமைத்தனத்திற்கு உள்ளானவர்கள், தங்கள் குடியேற்ற நிலை காரணமாக சுரண்டலுக்கு ஆளாகக் கூடாது. இந்த மாற்றம், அவர்களுக்கு சுதந்திரமாக வேலை செய்யும் வாய்ப்பை வழங்கும்.”
</p><p>
இந்த நடவடிக்கை, பராமரிப்பு பணியாளர்கள், சமையலர்கள், உணவக பணியாளர்கள் உள்ளிட்ட பலருக்கு நம்பிக்கையை அளிக்கிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T17:49:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் திருமணம்..கனடாவில் தமிழக மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/29-year-old-tamil-guy-died-who-studying-canada-1788436664"></link>
            <id>https://news.lankasri.com/article/29-year-old-tamil-guy-died-who-studying-canada-1788436664</id>
            <summary type="text">Tamilnadu guy died in canada: இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கனடாவில் இருந்து புறப்பட இருந்தபோது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Tamilnadu guy died in canada: இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கனடாவில் இருந்து புறப்பட இருந்தபோது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
தமிழ்நாட்டின் ஊட்டியைச் சேர்ந்த அரவிந்தன் என்ற மாணவர், கனடாவில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட இருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. </p><h2>கனடாவில் உயர் கல்வி 
</h2><p>
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் அரவிந்தன். இவர் கனடாவில் உயர் கல்வி பயின்று வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b544bc-1044-4267-88d7-3c4001288cb5/26-6a9966cb236c7.webp' /></p><p></p><p> 

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்றைய தினம் அரவிந்தன் இந்தியாவிற்கு புறப்பட இருந்தபோது உயிரிழந்துள்ளார்.
</p><p>
அரவிந்தனின் பெற்றோரை தொடர்புகொண்ட கனேடிய பொலிஸார், அவர் 18வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.</p><p> 

இந்த நிலையில், அரவிந்தனின் பெற்றோர் தங்கள் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T16:06:13+00:00</updated>
        </entry>
    </feed>
