<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-31T14:33:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இருமுறை புற்றுநோயை வென்ற 61 வயது பெண்: குற்றவாளியால் நேர்ந்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/61-year-old-woman-who-beat-cancer-killed-in-usa-1785506395"></link>
            <id>https://news.lankasri.com/article/61-year-old-woman-who-beat-cancer-killed-in-usa-1785506395</id>
            <summary type="text">அமெரிக்காவில் 61 வயது பெண்ணொருவரை நபர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புற்றுநோயில் இருந்து மீண்ட பெண் அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் 61 வயது பெண்ணொருவரை நபர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> 

புற்றுநோயில் இருந்து மீண்ட பெண் </h2><p>அமெரிக்காவின் அரிஸோனாவைச் சேர்ந்த 61 வயதுப் பெண் சூசன் கெர்கே. இவர் டக்சனில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb4351a9-c455-48db-b4a0-042328e6587f/26-6a6cab2c5bc95.webp' /></p><p>
இவர் இரண்டு முறை புற்றுநோயில் இருந்து மீண்ட பின், தனது ஓய்வுக்கால விழாவை திட்டமிட்டிருந்தார்.
</p><p>
இந்த நிலையில், சூசன் கெர்கே கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது குடியிருப்பிற்கு வெளியே, ஒரு தொடர் குற்றவாளியின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகினார். 

இதில் அவரது செயற்கை பற்கள் கழன்று விழுந்தது படுகாயமடைந்தார். </p><h2>பரிதாப மரணம் </h2><p> இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மூளை இரத்தக் கசிவுக்காக அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.</p><p>ஆனால், செயற்கை சுவாசக் கருவியில் வைக்கப்பட்டிருந்த சூசன் பரிதாபமாக உயிரிழந்தார். 

27 வயதான Dahseir Edward Jefferson என்ற தொடர் குற்றவாளி இந்த கொடூரத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது. </p><p>தனது நண்பருக்கு உதவ சென்றபோது, ஜெபர்சனால் தாக்கப்பட்டு சூசன் உயிரிழந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T14:01:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழைந்த விவகாரம்: பரபரப்பாகும் பிரான்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-to-reinforce-checks-in-spain-border-migrant-1785504020"></link>
            <id>https://news.lankasri.com/article/france-to-reinforce-checks-in-spain-border-migrant-1785504020</id>
            <summary type="text">ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழையும் காட்சிகள் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.

பரபரப்பாகும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழையும் காட்சிகள் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.</p><h3>

பரபரப்பாகும் பிரான்ஸ்</h3><p>

ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான மொராக்கோ நாட்டவர்களான புலம்பெயர்வோர் நுழைந்துள்ள விடயத்தால், அதைச் சுற்றியுள்ள நாடுகள் பரபரப்பாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91064214-a32d-46ea-843b-bc198774f9f8/26-6a6ca1162c1f8.webp' /></p><p>

இத்தாலி பிரதமர் ஸ்பெயினை ஷெங்கன் மண்டத்திலிருந்தே நீக்கவேண்டும் என அறிக்கை விட, மொராக்கோ நாட்டவர்களான புலம்பெயர்வோர் தங்கள் நாடுகளுக்குள் நுழைந்துவிடாமல் தடுப்பதற்காக ஸ்பெயினைச் சுற்றியுள்ள நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்கிவருகின்றன.&nbsp;</p><p></p><p>

பிரான்சைப் பொருத்தவரை, ஸ்பெயினை ஒட்டியுள்ள நாடுகளில் அதுவும் ஒன்று. ஆகவே, பிரான்ஸ் ஸ்பெயின் எல்லையில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த உள்ளது அந்நாடு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f762dd5-c21b-4378-9a41-3cd2a9ef627d/26-6a6ca11579acf.webp' /></p><p>
இது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சரான லாரென்ட் (Laurent Nuñez) கூறும்போது, சியூட்டாவில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஸ்பெயின் எல்லையில் கட்டுப்பாடுகளை உடனடியாக வலுப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T13:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய பகுதியொன்றில் 3வது நாளாக காட்டுத்தீ: மீண்டுவர 25 ஆண்டுகள் ஆகலாம்..நிபுணர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/firefighters-continues-battling-suffolk-wildfire-1785496848"></link>
            <id>https://news.lankasri.com/article/firefighters-continues-battling-suffolk-wildfire-1785496848</id>
            <summary type="text">பிரித்தானியாவின் சஃபோக்கில் ஏற்பட்ட காட்டுத்தீ மூன்றாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.மூன்றாவது நாளாக காட்டுத்தீ 

சஃபோக்கில் ஏற்பட்ட பாரிய காட்டுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் சஃபோக்கில் ஏற்பட்ட காட்டுத்தீ மூன்றாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.</p><h2>மூன்றாவது நாளாக காட்டுத்தீ 
</h2><p>
சஃபோக்கில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீ தொடர்ந்து மூன்றாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f24459b8-ea1c-4469-b8d6-67ab9993b61e/26-6a6c865ab7cbd.webp' /></p><p></p><p>

தீ பரவுவதைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில், ஹெலிகொப்டர்களில் இருந்து ஆயிரக்கணக்கான லிற்றர் கடல்நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. </p><p>

லெஸ்டனுக்கு அருகிலுள்ள டன்விச் ஹீத் பகுதியில், புதன்கிழமை மாலை முதல் தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
லண்டன், எசெக்ஸ் மற்றும் மேற்கு யார்க்ஷயர் போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் தீயணைப்புக் குழுவினர் உள்ளூர், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்துள்ளனர்.</p><h2>25 ஆண்டுகள் ஆகலாம்</h2><p> 

அதேபோல், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் டசின் கணக்கான விவசாயிகள் இணைந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ede2cf-c482-4e5b-9d09-05327581cbb5/26-6a6c865b7493a.webp' />&nbsp;</p><p>அவர்களில் பலர், வயல்வெளித் தீ குறித்த தங்கள் அறிவைப் பகிர்ந்துகொண்டு, தண்ணீர் டேங்கர்களைக் கொண்டு செல்ல தங்கள் டிராக்டர்களைப் பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில் ஏராளமான குடியிருப்பாளர்களும், நூற்றுக்கணக்கான விடுமுறைக்காலப் பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>

சஃபோக் (Suffolk) பகுதிக்கான RSPB மேலாளர் ஆடம் ரோவ்லேண்ட்ஸ் கூறுகையில், "ஆண்டின் இக்காலகட்டத்தில் இப்பகுதி மிகவும் வறண்டு காணப்படுவதால், தீ விபத்திற்கான அபாயம் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். அந்த முதல் தீப்பொறி RSPB நிலப்பகுதியிலிருந்தே உருவானது என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. 

டன்விச் ஹீத் பகுதியைச் சுற்றியுள்ள நிலப்பகுதி மீண்டும் பழைய நிலையை அடைய 25 ஆண்டுகள் ஆகலாம்" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f89c5309-8290-4594-b2d9-8c20be6bc682/26-6a6c87f9948cf.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ee64bb1-d348-4d3f-9663-c6eff93fb816/26-6a6c87f8c4b8e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T13:08:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுக்குள் நுழையும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர்: என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thousands-of-migrants-enters-to-spain-from-morocco-1785503180"></link>
            <id>https://news.lankasri.com/article/thousands-of-migrants-enters-to-spain-from-morocco-1785503180</id>
            <summary type="text">ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழையும் காட்சிகள் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.&amp;nbsp;நடந்தது என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழையும் காட்சிகள் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de4cb772-6c7e-4470-a874-33b41e36fa05/26-6a6c9dcd46e96.webp' /></p><h3>நடந்தது என்ன?
</h3><p>
ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழைவதாக கூறப்பட்டாலும், உண்மையில், வட ஆப்பிரிக்காவிலுள்ள மொராக்கோ நாட்டை ஒட்டியுள்ள, சியூட்டா என்னும் நகரத்துக்குள்தான் புலம்பெயர்வோர் நுழைந்துள்ளார்கள்.
</p><p>
மொராக்கோ நாட்டிலிருந்து, வெறும் ஒரு கோட்டால் பிரிக்கப்படும் நகரம்தான் ஸ்பெயினுக்கு சொந்தமான இந்த சியூட்டா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef6dfeeb-b71a-46d9-be94-142ce850f624/26-6a6c9dcdecbb7.webp' /></p><p>ஆக, மொரக்கோவிலிருந்து, அதை ஒட்டியுள்ள சியூட்டா நகரத்துக்குள்தான் புலம்பெயர்வோர் நுழைந்துள்ளார்கள்.
</p><p>
மொராக்கோ நாட்டவர்கள் அடிக்கடி இப்படி சியூட்டா நகருக்குள் நுழைய முயல்வது உண்டு. விடயம் என்னவென்றால், இம்முறை, சுமார் 49,000 பேர் ஒரே நேரத்தில் சியூட்டாவுக்குள் நுழைந்ததால்தான் அது உலகின் கவனம் ஈர்த்துவிட்டது.&nbsp;</p><p></p><h3>
எதனால் திடீரென புலம்பெயர்வோர் நுழைந்தார்கள்?</h3><p>

முக்கிய விடயம் என்னெவென்றால், மொராக்கோவையும் சியூட்டாவையும் பிரிப்பது ஒரு கோடுதான்.</p><p>

ஆனால், மொராக்கோ மக்கள் அந்தக் கோட்டைத் தாண்டி சியூட்டாவுக்குள் நுழையவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdd002c5-a755-4c47-906d-ab03ee9097fd/26-6a6c9dce9a190.webp' /></p><p>அவர்கள் கடல் வழியாக நீந்தி சியூட்டாவுக்குள் நுழைந்துள்ளார்கள். அப்படி கடலில் நீந்தும்போது சுமார் 18 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
வெறும் ஒரு கோட்டைத் தாண்டி சியூட்டாவுக்குள் நுழையமுடியும்போது, ஏன் இப்படி உயிரைப் பணயம் வைத்து மக்கள் கடல் வழியாக நீந்தி வருகிறார்கள்.</p><p>

அதாவது, சமீபத்தில் ஸ்பெயின் உச்சநீதிமன்றம், புலம்பெயர்தல் தொடர்பான வழக்கொன்றில், கடல் வழியாக சியூட்டாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை திருப்பி அனுப்ப முடியாது என தீர்ப்பு வழங்கியது.
</p><p>
அந்த தீர்ப்பின் தாக்கம்தான் இந்த திடீர் புலம்பெயர்தலின் பின்னணியாக இருக்கக்கூடும் என ஸ்பெயின் பிரதமரான பெட்ரா சான்ச்செஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bdd5c67-1b06-4206-a164-ca23de88e6f4/26-6a6c9dcf48fb7.webp' /></p><p>ஆக, ஸ்பெயினுக்குள், அதாவது, ஸ்பெயினுக்கு சொந்தமான சியூட்டா நகருக்குள் நுழைந்த மொராக்கோ நாட்டவர்களான புலம்பெயர்ந்தோரை தற்காலிகமாக தங்கவைத்துவிட்டு, ஸ்பெயினில் தங்க சட்டப்படி அனுமதி இல்லாதவர்கள் என கருதப்படுவோரை மொராக்கோ நாட்டுக்கே திருப்பி அனுப்ப திட்டமிட்டுவருவதாக ஸ்பெயின் பிரதமரான பெட்ரா சான்ச்செஸ் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T13:06:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[49 வயதில் மிரட்டிய திலகரத்னே தில்ஷன்: சுருண்ட பாகிஸ்தான் பாந்தர்ஸ்..ஆசியன் ஸ்டார்ஸ் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/asian-stars-beat-pakistan-panthers-by-85-runs-1785502286"></link>
            <id>https://news.lankasri.com/article/asian-stars-beat-pakistan-panthers-by-85-runs-1785502286</id>
            <summary type="text">ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக் போட்டியில், ஆசியன் ஸ்டார்ஸ் அணி 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பாந்தர்ஸை வீழ்த்தியது.&amp;nbsp;தேவேந்திர சிங்&amp;nbsp;விளாசல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக் போட்டியில், ஆசியன் ஸ்டார்ஸ் அணி 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பாந்தர்ஸை வீழ்த்தியது.&nbsp;</p><h2>தேவேந்திர சிங்&nbsp;விளாசல்</h2><p>

லூஸாகாவில் நடந்த ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக் போட்டியில், ஆசியன் ஸ்டார்ஸ் மற்றும் பாகிஸ்தான் பாந்தர்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The Asian Stars have posted a formidable 186/6 in 20 overs! 💥<br><br>⭐ Devendra Singh stole the show with a blazing 58 off 21 balls*, while Sandeep Singh added a valuable 33.<br><br>🎯 Target: Pakistan Panthers need 187 runs to secure the win.<a href="https://x.com/hashtag/AsianLegendsLeague?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AsianLegendsLeague</a> <a href="https://x.com/hashtag/ALLT20?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ALLT20</a> <a href="https://x.com/hashtag/CricketLegends?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CricketLegends</a> <a href="https://t.co/G2cdQFgwN3">pic.twitter.com/G2cdQFgwN3</a></p>&mdash; Asian Legends League (@allt20official) <a href="https://x.com/allt20official/status/2083128430170919325?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய ஆசியன் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் குவித்தது.</p><p> 

தேவேந்திர சிங் 21 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்களும், சந்தீப் சிங் 33 ஓட்டங்களும், ராஜீவ் ரிஷி 26 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">FIFTY in just 21 balls. 💥<br> <br>Devendra Singh stayed not out on 58 and took the game away.<br><br>Pure dominance from start to finish.<br><br>Drop a 👏 if that knock gave you goosebumps!<a href="https://x.com/hashtag/halfcentury?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#halfcentury</a> <a href="https://x.com/hashtag/CricketLovers?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CricketLovers</a> <a href="https://x.com/hashtag/T20Cricket?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#T20Cricket</a> <a href="https://x.com/hashtag/CricketLegends?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CricketLegends</a> <a href="https://x.com/hashtag/t20?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#t20</a> <a href="https://t.co/XmpITCpr0p">pic.twitter.com/XmpITCpr0p</a></p>&mdash; Asian Legends League (@allt20official) <a href="https://x.com/allt20official/status/2083129881995391249?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><h2>தில்ஷன்&nbsp;ஆட்டநாயகன் </h2><p>
பின்னர் ஆடிய பாகிஸ்தான் பாந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் ஆசியன் ஸ்டார்ஸ் 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
அதிகபட்சமாக யாசிர் ஷா 34 ஓட்டங்களும், மொஹம்மது இர்பான் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p> திலகரத்னே தில்ஷன் 3 விக்கெட்டுகளும், மெஹ்ரான் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;தில்ஷன் ஆட்டநாயகன் விருது பெற்றார். 
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">That&#39;s how you finish in style! 🔥 <br><br>Asian Stars beat Pakistan Panthers by 85 runs. 🏏<br><br>Complete dominance with bat and ball to seal a big win. <br><br>What did you think of the performance? Drop your reaction below! 👇<a href="https://x.com/hashtag/AsianLegendsLeague?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AsianLegendsLeague</a> <a href="https://x.com/hashtag/ALLT20?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ALLT20</a> <a href="https://x.com/hashtag/CricketLegends?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CricketLegends</a> <a href="https://x.com/hashtag/T20Cricket?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#T20Cricket</a> <a href="https://t.co/ZpXKj42qxB">pic.twitter.com/ZpXKj42qxB</a></p>&mdash; Asian Legends League (@allt20official) <a href="https://x.com/allt20official/status/2083154526639726606?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T13:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pujith-jayasundara-got-death-sentence-easter-1785502222"></link>
            <id>https://news.lankasri.com/article/pujith-jayasundara-got-death-sentence-easter-1785502222</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை

கடந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><h3>

பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை</h3><p>

கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு திருநாள் அன்று கொழும்பு உட்பட 3 இடங்களில் 3 தேவாலயங்கள், 3 ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது.</p><p> 

இதில், 39 வெளிநாட்டவர்கள், 3 காவல்துறையினர் உட்படக் குறைந்தது 253 பேர் உயிரிழந்தனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/499b84a0-f9ec-4980-a5c1-3d7ed7c9874e/26-6a6c9a1025367.webp' /></p><p>

இதில், போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், தாக்குதலை தடுக்க நடவடிக்கை தவறியதாக முன்னாள் காவல்துறைத் தலைவர் புஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றத்தின் விசாரணை அமர்வு இன்று மரண தண்டனை விதித்துள்ளது.&nbsp;</p><p></p><p> 

அவர் மீது சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T12:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகள் விரும்பி உண்ணும் வாழைப்பழ பான்கேக்.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/banana-pancake-recipe-in-tamil-1785501951"></link>
            <id>https://news.lankasri.com/article/banana-pancake-recipe-in-tamil-1785501951</id>
            <summary type="text">&amp;nbsp;தற்போது குழந்தைகளுக்கு பெரும்பாலும் துரித உணவுகள் போன்றவற்றின் மீது ஈர்ப்பு அதிகரித்துவிட்டன.

அந்தவகையில், குழந்தைகள் விருப்பி உண்ணும் சத்தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தற்போது குழந்தைகளுக்கு பெரும்பாலும் துரித உணவுகள் போன்றவற்றின் மீது ஈர்ப்பு அதிகரித்துவிட்டன.</p><p>

அந்தவகையில், குழந்தைகள் விருப்பி உண்ணும் சத்தான வாழைப்பழ பான்கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்
</h2><ul><li>
வாழைப்பழம்- 2</li><li> முட்டை- 1
</li><li>வெல்லம்- 150g</li><li> கோதுமை மாவு- 1 கப்</li><li>
காய்ச்சிய பால்- ½ கப்
</li><li>உப்பு- சிறிதளவு </li><li>
சமையல் சோடா- 1 சிட்டிகை </li><li>
வெண்ணெய்- தேவையான அளவு </li></ul><h2>

செய்முறை</h2><p> 
 
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், முட்டை, வெல்லம் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் அதில் கோதுமை மாவு, காய்ச்சிய பால் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1db8649-996f-4dcd-9d10-1b6fc9847670/26-6a6c990168ace.webp' /></p><p>அடுத்து இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு , சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
</p><p>
இதற்கடுத்து அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் மாவை ஊற்றி வெண்ணெய் சேர்த்து சுட்டு எடுத்தால் சுவையான வாழைப்பழ பான்கேக் தயார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T12:46:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் அதிக கடன், அதிக குற்ற வழக்குகள் உள்ள முதல்வர் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-cm-has-most-liabalities-criminal-case-india-1785501027"></link>
            <id>https://news.lankasri.com/article/which-cm-has-most-liabalities-criminal-case-india-1785501027</id>
            <summary type="text">ADR என்ற அமைப்பு, இந்தியாவில் உள்ள 28 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் தகவல்களை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

இந்த அறிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ADR என்ற அமைப்பு, இந்தியாவில் உள்ள 28 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் தகவல்களை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. </p><p>

இந்த அறிக்கை, முதலமைச்சர்கள் கடைசியாக போட்டியிட்ட தேர்தல்களின் போது வெளியிட்ட பிராமண பத்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுளளது.</p><h3> 

இந்தியாவின் இளம் முதலமைச்சர் </h3><p>

மொத்தமுள்ள 31 முதலமைச்சர்களில், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் ஒரே பெண் முதலமைச்சர் ஆவார்.</p><p> 

வயதின் அடிப்படையில், இந்தியாவின் இளம் முதலமைச்சராக 44 வயதான அருணாச்சலபிரதேச முதல்வர் பெமா காண்டு மற்றும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f561dd4a-887c-4782-95f6-aa5affdecf86/26-6a6c956472db4.webp' /></p><p>

அதிக வயதுடைய முதலமைச்சராக 75 வயதான புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7aae966-f60d-4231-b430-17b14d2d3e29/26-6a6c95652d412.webp' /></p><p> 

41 - 50 வயதில் 8 முதலமைச்சர்களும், 51 - 60 வயதில் 17 முதலமைச்சர்களும், 61 - 70 வயதில் 2 முதலமைச்சர்களும், 71 - 80 வயதில் 4 முதலமைச்சர்களும் உள்ளனர்.&nbsp;</p><p></p><h3> 

அதிக கடன் உள்ள முதல்வர்</h3><p>

சொத்து மதிப்பின் அடிப்படையில், ரூ.1,413 கோடிகளுடன் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இந்தியாவின் பணக்கார முதலமைச்சராக உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efa999b3-b373-4aed-9b4f-15a954cfa79a/26-6a6c9566c48d3.webp' /></p><p>

ரூ.931 கோடிகளுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 2வது இடத்திலும், ரூ.648 கோடிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 3வது இடத்திலும், ரூ.332 கோடிகளுடன் அருணாச்சலபிரதேச முதல்வர் பெமா காண்டு 3வது இடத்திலும் உள்ளனர். </p><p>

இவர்கள் 4 பேரும், ரூ.50 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்துள்ள முதலமைச்சராக உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1abd1aa8-1e39-4b43-8edf-b6678d10e8f8/26-6a6c95677cbfc.webp' /></p><p> 

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா ரூ.55 லட்சம் சொத்து மதிப்புடன் கடைசி இடத்தில் உள்ளார். </p><p> 

இதே போல், அதிக கடன் உள்ள முதல்வராக ரூ.265 கோடி கடனுடன் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் முதலிடத்தில் உள்ளார்.&nbsp;</p><p></p><h3>

அதிக குற்ற வழக்கு உள்ள முதல்வர்</h3><p> 

31 முதலமைச்சர்களில் 14 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2860fcb5-09c0-49be-90fa-db6c5d676715/26-6a6c95682d4e7.webp' /></p><p>
அதிகபட்சமாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது 72 கடுமையான இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் உட்பட 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன. </p><p>

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி 29 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது 19 வழக்குகள் உள்ளது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T12:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுதங்களைக் கைவிட ஹமாஸ் படைகள் ஒப்புதல்: ட்ரம்ப் அளித்த வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gaza-disarmament-agreement-1785496904"></link>
            <id>https://news.lankasri.com/article/gaza-disarmament-agreement-1785496904</id>
            <summary type="text">காஸாவில் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுவதற்கான திட்டத்தை முன்னெடுக்கும் ஆவணம் ஒன்றை ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனக் குழுக்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.மகத்தான முன்னெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸாவில் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுவதற்கான திட்டத்தை முன்னெடுக்கும் ஆவணம் ஒன்றை ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனக் குழுக்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.</p><h2>மகத்தான முன்னெடுப்பு</h2><p>
</p><p>ஹமாஸ் படைகளின் இந்த முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமைதி மற்றும் பாதுகாப்பை நோக்கிய ஒரு மகத்தான முன்னெடுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01656797-03dd-41e9-8309-e7d5a6577fa0/26-6a6c87058fd90.webp' /></p><p>
</p><p>ஆயுதங்களைக் கைவிடுவதற்கான துல்லியமான செயல்வடிவத்தை 14 நாட்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்றும், சர்வதேச சரிபார்ப்பு அமைப்பின் ஒப்புதல் மற்றும் அனைத்துத் தரப்பினரின் உடன்பாட்டுக்கு உட்பட்டு அதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இதனிடையே ஹமாஸ் தரப்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட காஸி ஹமாத் தெரிவிக்கையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் கடினமாகவும் சவாலாகவும் இருந்ததாகவும், சாத்தியமான சிறந்த தீர்வை எட்டுவதற்கு முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். </p><p>இருப்பினும், இஸ்ரேலியப் படைகள் தங்களது கடமைகளை நிறைவேற்றத் தவறினால், ஒப்பந்தத்தின் எந்தப் பகுதியையும் ஹமாஸ் படைகள் செயல்படுத்தாது என்றும் ஹமாத் கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், ஆயுதங்களைக் கைவிடுவது என்பது காஸாவிலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுவதையும், பாலஸ்தீனப் பகுதியில் ஜனாதிபதி ட்ரம்ப் உறுதி அளித்துள்ள மறுசீரமைப்புப் பணிகளில் ஏற்படும் முன்னேற்றத்தையும் பொறுத்தே அமையும் என்றும் ஹமாத் விளக்கமளித்துள்ளார். </p><p>ஆனால், இந்த விவகாரத்தில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் இருந்து எவ்விதக் கருத்தும் வெளியாகவில்லை. இந்த நிலையில் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் குறிப்பிடுகையில், </p><p>பாலஸ்தீன மக்களுக்கு உதவ 'அமைதிக்கான வாரியத்துடன்' (Board of Peace) நெருக்கமாக இணைந்து செயல்படவுள்ள புதிய பாலஸ்தீன அரசாங்கத்தின் கீழ் காஸா நிர்வகிக்கப்படுவதை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15069c09-0176-4282-b890-b41723c16d5e/26-6a6c8704ccf21.webp' /></p><p> </p><p>அதே வேளை, காஸா இனி பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான தளமாகப் பயன்படுத்தப்படாத நிலையில், இஸ்ரேல் தனக்குரிய பாதுகாப்பைப் பெறும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>காஸாவிற்கு ஒரு தேசியக் குழு மற்றும் சர்வதேச நிலைப்படுத்தல் படை ஆகியவை நுழைவதோடு ஆயுதங்களைக் கைவிடும் நடவடிக்கை தொடங்கும்.</p><p> அதன்பின்னர், சர்வதேச சரிபார்ப்புக் குழுவின் கண்காணிப்பிலும் பாலஸ்தீனக் குழுக்களின் பங்கேற்புடனும், பட்டியலிடுதல் மற்றும் சேமித்து வைத்தல் செயல்முறையைத் தேசியக் குழு மேற்பார்வையிடும்.</p><h2>இஸ்ரேலியப் படைகள்</h2><p> </p><p>ஆயுதங்களைக் கைவிடும் செயல்முறையானது, காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படுவதோடும் தொடர்புடையது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/176ba642-8d2a-4059-b5bf-aabb9ea5e04c/26-6a6c870644734.webp' /></p><p> மேலும், இஸ்ரேலிடமோ அல்லது பாலஸ்தீனியர் அல்லாத எந்தவொரு அமைப்பிற்கோ ஆயுதங்கள் எதுவும் ஒப்படைக்கப்படக் கூடாது என்றும், காஸாவில் ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே அமைப்பாக 'தேசியக் குழு' (National Committee) மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>காஸா காவல்துறையினரிடம் உள்ள ஆயுதங்கள் முதலில் ஒப்படைக்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து கனரக ஆயுதங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>இத்திட்டத்தின் கீழ் காஸாவில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்; இருப்பினும், இந்தச் செயல்முறையைச் செயல்படுத்தக் கால அவகாசம் தேவைப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். </p><p>கடந்த அக்டோபர் மாதம் ட்ரம்பின் மத்தியஸ்தத்தில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தாலும், இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ச்சியாக மீறியுள்ளது; அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து 1,200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் படைகள் கொன்றுள்ளது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2835afd7-124a-4c98-81f3-a38754ce4bc8/26-6a6c8706eb37d.webp' /></p><p> </p><p>மேலும் நிலப்பரப்புகளைக் கைப்பற்றி வருவதுடன், காஸாவிற்குள் மற்றும் அங்கிருந்து வெளியே மக்கள் மற்றும் சரக்குகள் செல்வதற்கான கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து விதித்து வருகிறது.
</p><p>இந்த நிலையில், ஆயுதங்களைக் கைவிடுவது முழுமையடைந்ததும், இஸ்ரேல் காஸாவிலிருந்து வெளியேறும் என்றும், அதற்குப் பதிலாக ஒரு புதிய பாலஸ்தீனக் காவல் படையுடன் இணைந்து செயல்படும் சர்வதேச நிலைப்படுத்தல் படை அங்கு அமர்த்தப்படும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T11:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்கரையில் ஒதுங்கிய பைகளில் கட்டுக்கட்டாக பணம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/7-lakhs-euro-cash-bag-wash-up-in-sicily-beach-1785496502"></link>
            <id>https://news.lankasri.com/article/7-lakhs-euro-cash-bag-wash-up-in-sicily-beach-1785496502</id>
            <summary type="text">சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற தீவொன்றில், கடற்கரையில் ஒதுங்கிய பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு உருவானது.

கரையில் ஒது...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற தீவொன்றில், கடற்கரையில் ஒதுங்கிய பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு உருவானது.</p><h3>

கரையில் ஒதுங்கிய பைகளில் கட்டுக்கட்டாக பணம்</h3><p>

இத்தாலிக்கு சொந்தமான சிசிலித் தீவிலுள்ள, Casuzze என்னும் இடத்தில் அமைந்துள்ள கடற்கரை ஒன்றில் பல பைகள் கரையொதுங்கியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/581c6333-e03a-4768-9ce7-e6192324d6d6/26-6a6c83b9211ab.webp' /></p><p>
அதைக் கண்ட மக்கள் அந்த பைகளை சேகரித்து அதில் என்ன உள்ளது என சோதிக்க, அந்தப் பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது.
</p><p>
அதாவது, மால்ட்டா தீவிலிருந்து ஒரு படகு வந்துள்ளது. அதில் மூன்று ஆண்களும் ஒரு சிறுபையனும் இருந்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
வரும் வழியில் எரிபொருள் தீர்ந்துபோகவே, அந்த படகு அலைகளால் கரையை நோக்கி இழுத்துவரப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6522fe58-d130-49f3-920e-c3544ff9ef01/26-6a6c83b857846.webp' /></p><p>
பொலிசார் அவர்களை நெருங்க, பொலிசாரைக் கண்டதும் படகிலிருந்தவர்களில் மூன்று பேர் கடலில் குதிக்க, ஒருவர் படகிலிருந்த பைகளை கடலுக்குள் வீசியுள்ளார். அந்த பைகள்தான் கரையில் ஒதுங்கியுள்ளன!
</p><p>
பொலிசார் அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ள நிலையில், அந்தப் பைகளில் சுமார் 500,000 முதல் 600,000 பவுண்டுகள் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.</p><p>

படகிலிருந்த நால்வரையும் பொலிசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ள நிலையில், அது சட்ட விரோதப் பணமா, அது யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T11:18:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா, இஸ்ரேலை அடுத்து... சாத்தியமான தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் சவுதி அரேபியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-prepares-land-offensive-1785491889"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-prepares-land-offensive-1785491889</id>
            <summary type="text">மத்திய ஏமனில் ஹவுதிகளுக்கு எதிராகக் கடல் வழியாகவும், சாத்தியமான தரை வழியாகவும் ஒரு பெரிய இராணுவத் தாக்குதலை நடத்த சவுதி அரேபியா தயாராகி வருவதாக தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஏமனில் ஹவுதிகளுக்கு எதிராகக் கடல் வழியாகவும், சாத்தியமான தரை வழியாகவும் ஒரு பெரிய இராணுவத் தாக்குதலை நடத்த சவுதி அரேபியா தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.</p><h2>ஆயத்த நடவடிக்கை</h2><p>
</p><p>தெற்கு செங்கடல் வழியாக நடைபெறும் தனது எண்ணெய் ஏற்றுமதியின் மீதான ஹவுதிகளின் இறுக்கமான பிடியை உடைக்கும் முயற்சியாக சவுதி அரேபியா இந்த முடிவுக்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33f3f219-e339-4e2f-855a-81179e4cef0b/26-6a6c74bce03e4.webp' /></p><p> </p><p>ஏமனின் கிழக்குப் பகுதியிலிருந்து சவுதிப் படைகள் வெளியேறுவது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், இது ஒரு தரைவழித் தாக்குதலுக்கான ஆயத்த நடவடிக்கையாக இருக்கலாம் என்றே ஏமன் தரப்பு நம்புகிறது. </p><p>இதனிடையே, செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டப் நீரிணையில் ஹவுதிகளின் தாக்குதல்களிலிருந்து கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, ஒரு கடற்படைக் கூட்டணியை உருவாக்க சவுதி அரேபியா தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. </p><p>ஐக்கிய அரபு அமீரகம் உட்பட சில நாடுகள் தவிர்த்து, துருக்கி, பாகிஸ்தான், எகிப்து, சூடான் மற்றும் ஜிபூட்டி உள்ளிட்ட 14 நாடுகள், பன்னாட்டு கடல்சார் தற்காப்புக் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் வகையில் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.</p><p></p><p>
ஏமனின் தலைநகரான சனா மற்றும் அதன் செங்கடல் கடற்கரைப் பகுதியின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதிகள், சவுதி அரேபியக் கப்பல்களுக்கு எதிராகத் தடையை அமுல்படுத்துவதாக ஜூலை 20 அன்று அறிவித்தனர்; ஆனால், செங்கடலில் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களின் மீதும் கட்டணம் விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை ஹவுதிகள் மறுத்துள்ளனர். </p><p>ஏமன் மீதான தனது முற்றுகையை சவுதி அரேபியா நீக்கியவுடன் தாங்களும் முற்றுகையை நீக்குவதாக ஹவுதிகள் உறுதி அளித்துள்ளனர். இதன் மூலம், இந்த மோதல் நேரடியாக ஈரான் தொடர்பானது அல்ல என்றும், ஏமனின் எதிர்காலம் சார்ந்தது என்றும் ஹவுதிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c68398b-72b5-4f4b-8131-70705e7ccb3b/26-6a6c74baadb66.webp' /></p><p> </p><p>ஹவுதிகளுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக சவுதி அரேபியா 2015-இல் அந்நாட்டு உள்நாட்டுப் போரில் களமிறங்கியது. </p><p>இதனிடையே, செங்கடல் கூட்டமைப்பில் இணையுமாறு அமெரிக்கா மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் குழுவிடமும் சவுதி அரேபியா கோரிக்கை விடுத்துள்ளது. </p><p>செங்கடலில் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே 'ஆஸ்பிடிஸ்' (Aspides) எனும் கடற்படைப் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது; ஹவுதிகள் மேற்கொண்டுள்ள முற்றுகை பொதுவானதா அல்லது சவுதி அரேபியாவை மட்டுமே குறிவைப்பதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6418b304-f8f4-403f-adbf-5b652fa6a344/26-6a6c74bb7ac96.webp' /></p><p> </p><p>ஆனால், சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள எண்ணெய் வயல்களையும் செங்கடல் பகுதி ஏற்றுமதி மையத்தையும் இணைக்கும் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து மையங்களைத் தாக்கியதாக ஹவுதிப் படைகள் ஜூலை 25 அன்று தெரிவித்தன. </p><p>அரேபியத் தீபகற்பத்தின் மறுபுறம் உள்ள ஹார்முஸ் நீரிணை முடக்கத்திற்கு மேலதிகமாக, சவுதி கப்பல் போக்குவரத்திற்குச் செங்கடல் பாதையும் மூடப்பட்டால், அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும்.</p><h2>சவுதி அரேபியாவும் ஹவுதிகளும்</h2><p> </p><p>ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு, சவுதியின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதம் வரை ஹார்முஸ் நீரிணை வழியாகவே அனுப்பப்பட்டது. இந்த நிலையில், தங்களையும் தங்கள் தொழில் துறையையும் பாதுகாத்துக்கொள்ளத் தயாராக இருப்பதை வெளிப்படுத்த சவுதி அரேபிய அரசாங்கம் ஆர்வமாக உள்ளது.
</p><p>அதேவேளை, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை இன்னும் ராஜதந்திர ரீதியாகத் தீர்க்க முடியும் என்று கருதுவதால், ஈரானுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த அவர்கள் விரும்பவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/119a5277-021c-40f6-a225-62efd10f2306/26-6a6c74bc2bdce.webp' /></p><p> </p><p>ஏமன் மீதான கட்டுப்பாட்டிற்காக சவுதி அரேபியாவும் ஹவுதிகளும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் போட்டியிட்டு வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் அங்கு நிலவி வந்த நிலையற்ற சூழல் நிலைமையை சீர்குலைந்துள்ளது. </p><p>ஏற்கனவே ஹமாஸ் விவகாரத்தில் காஸா பகுதியில் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் கொடூரமானத் தாக்குதல்களை முன்னெடுத்து, தற்போது ஒரு போர் நிறுத்தத்தில் தாக்குதலின் தீவிரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளனர். </p><p>ஆனால், 2022ல் உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம் தற்போதும் போரிட்டு வருகிறது. அந்த வரிசையில் சவுதி அரேபியாவும் ஏமன் மீது சாத்தியமான தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T09:56:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவுக்காக உளவு பார்த்ததாக பிரான்ஸ் முன்னாள் கடற்படை விமானி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ex-french-pilot-arrested-for-spying-china-1785490823"></link>
            <id>https://news.lankasri.com/article/ex-french-pilot-arrested-for-spying-china-1785490823</id>
            <summary type="text">பிரான்ஸ் முன்னாள் கடற்படை விமானி ஒருவர் சீனாவுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரான்ஸ் விமானி கைது

பிரான்ஸ் முன்னாள் கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் முன்னாள் கடற்படை விமானி ஒருவர் சீனாவுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
முன்னாள் பிரான்ஸ் விமானி கைது
</h3><p>
பிரான்ஸ் முன்னாள் கடற்படை விமானியான பியர் (Pierre-Henri Chuet) என்பவர், முக்கியமான இராணுவத் தகவல்களைச் சேகரித்து சீன உளவாளிகளுக்குக் கொடுத்ததாக பாரிஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1e30f36-6b17-40a5-8e08-0a5dbfad2a1f/26-6a6c6d8925da4.webp' /></p><p>
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான விசாரணை தொடர்வதாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அந்த செய்திகளின்படி, பியர் பிரான்ஸ் கடற்படையில் பணியாற்றியபோது, 2018 செப்டம்பர் மற்றும் 2019 ஆகஸ்ட் ஆகிய காலகட்டங்களில், குறைந்தது இரண்டு முறையாவது சீனாவுக்குப் பயணம் செய்ததாக அதிகாரிகள் நம்புகிறார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், பியர் இந்தப் பயணங்கள் குறித்து பிரான்ஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><p>
அந்தப் பயணங்களின் போது, தென்னாப்பிரிக்க விமான நிறுவனம் ஒன்றின் மூலம் சீன இராணுவ விமானிகளுக்குப் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்ததாக பியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், அவர் பிரான்ஸ் இராணுவ விமானப் போக்குவரத்து தொடர்பான முக்கியமான செயல்பாட்டு மற்றும் தந்திரோபாய அறிவையும் பகிர்ந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
</p><p>
இந்த பியர், சமீபத்தில், இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்களின் செயல்திறனைக் குறித்து கேள்வி எழுப்பியதுடன், சீனத் தயாரிப்பு விமானங்களைப் புகழ்ந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T09:40:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவகுமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dk-shivakumar-urge-vijay-postpone-karnataka-visit-1785490205"></link>
            <id>https://news.lankasri.com/article/dk-shivakumar-urge-vijay-postpone-karnataka-visit-1785490205</id>
            <summary type="text">முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். 


காவேரி விவகாரம் 

காவேரி நீர் திறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.</p><h3> 


காவேரி விவகாரம் </h3><p>

காவேரி நீர் திறப்பு மற்றும் காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.</p><p> 

தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e50c986-9bf5-420b-9ea2-38d544f90ad7/26-6a6c6b1f10306.webp' /></p><p>
தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.</p><p>
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய், கர்நாடகாவிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h3>விஜய் கர்நாடகா வர வேண்டாம்</h3><p> 

இந்நிலையில், தற்போது உள்ள சூழலில் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். </p><p>

 கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் நீர்வள மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97bfce64-8d2b-4e53-bb78-27d7610b836c/26-6a6c6b1fb7a20.webp' /></p><p>

இதன் பின்னர் பேசிய அவர், "இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் இது குறித்து விவாதித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரும் நானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் உள்ளோம். 

இரு மாநிலங்களுக்கும் சிக்கல் ஏற்படுத்தாத தீர்வை எட்ட முயற்சிக்கிறோம். </p><p>

போதிய நீர் இல்லை என்று கூறியும் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது வேதனை அளிக்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத சூழல் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.</p><p>

தமிழ்நாடு முதல்வர் விஜய் வரும்போது போராட்டம் நடந்தால் நன்றாக இருக்காது. வேறொரு தேதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். 

சிறிது காலம் காத்திருக்கலாம். உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிப்போம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T09:30:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானை சுழன்றடித்த 24 வயது இலங்கை வீராங்கனை! டி20யில் 64 பந்தில் 101 ஓட்டங்கள் விளாசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/imesha-dulani-century-helps-sri-lanka-beat-pak-1785489264"></link>
            <id>https://news.lankasri.com/article/imesha-dulani-century-helps-sri-lanka-beat-pak-1785489264</id>
            <summary type="text">தம்புள்ளையில் நடந்த டி20 போட்டியில், இலங்கை அணி 6 வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.&amp;nbsp;முனீபா அலி,&amp;nbsp;ஷாவால் ஸுல்ஃபிஹர்&amp;nbsp;விளாசல்

இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளையில் நடந்த டி20 போட்டியில், இலங்கை அணி 6 வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.&nbsp;</p><h2>முனீபா அலி,&nbsp;ஷாவால் ஸுல்ஃபிஹர்&nbsp;விளாசல்</h2><p>

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தம்புள்ளையில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0c46249-8d08-4642-8e90-e6fb09d2480f/26-6a6c6a8c2b082.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனைகள் முதல் விக்கெட்டுக்கு 39 பந்துகளில் 66 ஓட்டங்கள் குவித்தனர்.</p><p>

முனீபா அலி (Muneeba Ali) 24 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ரன்அவுட் ஆனார்.

பின்னர் அரைசதம் விளாசிய ஷாவால் ஸுல்ஃபிஹர் (Shawaal Zulfiqar) 41 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 176 ஓட்டங்கள் எடுத்தது.
</p><p>
அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் இமேஷா துலானி, சமரி அதப்பத்து கூட்டணி அதிரயில் மிரட்டியது.&nbsp;</p><h2>இமேஷா துலானி&nbsp;சதம் </h2><p>
அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 22 பந்துகளில் 39 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். </p><p>

அடுத்து வந்த விஷ்மி (3), ஹர்ஷிதா (7) ஆகியோர் சொதப்ப, 24 வயதான இமேஷா துலானி (Imesha Dulani) பவுண்டரிகளை விரட்டி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

63 பந்துகளில் சதம் விளாசிய இமேஷா, 19வது ஓவரில் வெற்றிக்கான இலக்கை எட்ட வைத்தார். </p><p>இலங்கை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இமேஷா துலானி ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 1 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் ஆட்டநாயகி விருது பெற்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d1bd70-8118-433b-b53c-bb6229a8daee/26-6a6c6a8b5fa6c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T09:25:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.., இலங்கையின் இன்றைய நிலவரம் (31-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785489823"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785489823</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (31-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (31-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,312,832.00 ஆகும்.</p><p>

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,310.00.</p><p>

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 370,500.00.</p><p>

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,460.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 339,650.00.</p><p>

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,530.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 324,200.00.</p>]]></content>
            <updated>2026-07-31T09:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் பனிச்சரிவு - பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nirmal-purja-led-climbers-missing-in-avalanche-1785488835"></link>
            <id>https://news.lankasri.com/article/nirmal-purja-led-climbers-missing-in-avalanche-1785488835</id>
            <summary type="text">பாகிஸ்தானின் பிராட் பீக்கில் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மலையேற்றத்தின் போது பனிச்சரிவால் மாயமாகியுள்ளனர். 

பிராட் பீக் பனிச்சரிவு 

பாகிஸ்தானின...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் பிராட் பீக்கில் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மலையேற்றத்தின் போது பனிச்சரிவால் மாயமாகியுள்ளனர்.</p><h3> 

பிராட் பீக் பனிச்சரிவு</h3><p> 

பாகிஸ்தானின் காரகோரம்(Karakoram) மலைத்தொடரில் 8,051 மீட்டர் உயரமுள்ள பிராட் பீக்(Broad Peak) உலகின் மிக உயரமான மலை சிகரங்களில் ஒன்றாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/279a3e88-e6d4-4e1c-95bd-1546fce15da9/26-6a6c65c737c18.webp' /></p><p>இது உலகின் 12வது பெரிய சிகரமாகவும், அந்த மலைத்தொடரில் 3வது உயரமான சிகரமாகவும் உள்ளது.
</p><p>
இங்கு, நேபாளத்தில் பிறந்து பிரித்தானியாவில் வசித்து வரும் உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா(Nirmal Purja) உள்ளிட்ட 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் அடங்கிய குழு மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a01cc156-0f1b-464c-a036-3bbe79c4133c/26-6a6c65c7ef544.webp' /></p><p> 

இந்த குழுவில், 5 நேபாள மலையேறுபவர்கள், ஹன்சாவைச் சேர்ந்த பாகிஸ்தானிய மலையேறுபவரான சோஹைல் சகி, ஒரு ஓமன் மலையேறுபவர், ஒரு அமெரிக்க மலையேறுபவர், ஒரு சீன மலையேறுபவரானவாங் மற்றும் மற்றொரு வெளிநாட்டு மலையேறுபவர் ஆகியோர் இருந்தனர்.</p><p>

நேற்று, பிராட் பீக்கில் ஏற்பட்ட பனிச்சரிவிற்கு பின்னர் இந்த குழுவினர் மாயமாகியுள்ளனர். </p><p>

இது குறித்து தகவலறிந்த உடன், அந்த பகுதியில் மற்ற மலைகளில் உள்ள மளியேறுபவர்கள் மற்றும் 2 ராணுவ மீட்பு ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணிக்காக அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. </p><p>இதில், 4 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், 6 பேரை தேடி வருவதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><h3> 

யார் இந்த நிர்மல் பூர்ஜா?
</h3><p>
நேபாளத்தில் பிறந்த நிர்மல் பூர்ஜா, 2003 ஆம் ஆண்டில் பிரித்தானிய இராணுவத்தில் சேர்ந்து, 2009 ல் ராயல் மரைன் ஆனார்.</p><p> 

 எவரெஸ்ட் , லோட்சே மற்றும் மகாளு சிகரங்களை 48 மணி நேரத்திற்குள் அடைந்த முதல் நபர் புர்ஜா ஆவார்.
</p><p>
நிர்மல் புர்ஜா, 2019 ஆம் ஆண்டில் 189 நாட்களில், உலகின் 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள 14 மலைகள் அனைத்திலும் ஏறியதற்காக அறியப்படுகிறார். இந்தச் சாதனை, “14 Peaks: Nothing is Impossible” என்ற நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்றது.</p><p>
மேலும், உலகின் மிக உயரமான பல சிகரங்களை மிகக் குறைந்த நேரத்தில் அடைந்ததற்காக அவர் 6 கின்னஸ் உலக சாதனைகளையும் படைத்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T09:07:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ 84,000 கோடியில் ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deep-sea-oil-gas-exploration-1785488141"></link>
            <id>https://news.lankasri.com/article/deep-sea-oil-gas-exploration-1785488141</id>
            <summary type="text">எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கான ஆழ்கடல் தேடல் பணிகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட லட்சியத் திட்டமான ‘சமுத்ரா மந்தன்’ (Samudra Manthan) திட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கான ஆழ்கடல் தேடல் பணிகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட லட்சியத் திட்டமான ‘சமுத்ரா மந்தன்’ (Samudra Manthan) திட்டத்திற்கு, இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கக்கூடும் என்று தகவல்.</p><h2>கடல்சார் ஆய்வு</h2><p>
</p><p>ஜூலை 31-ஆம் திகதி கூடவுள்ள அமைச்சரவை, ஆழ்கடல் மற்றும் மிக ஆழ்கடல் பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் ரூ 84,000 கோடி மதிப்பிலான முதற்கட்டச் செலவுத் திட்டத்தை ஆய்வு செய்யும் என்று தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfbd95b3-2b01-4f1a-846d-037ee90d3c04/26-6a6c642ece325.webp' /></p><p> </p><p>இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'சமுத்திர மந்தன்' திட்டம் ( 'தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டம்' என்று அழைக்கப்படுகிறது) 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. </p><p>அதிக செலவு மற்றும் வணிக ரீதியாக லாபகரமான ஹைட்ரோகார்பன் இருப்புகளைக் கண்டறிவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக தனியார் முதலீடு குறைவாகவே இருந்து வரும் அதிக ஆபத்துடைய கடல்சார் ஆய்வு நடவடிக்கைகளுக்கு, இத்திட்டம் கொள்கை மற்றும் நிதி ரீதியான ஆதரவை வழங்கும்.</p><p></p><p> உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பது, இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது மற்றும் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவை இந்திய அரசின் நோக்கமாகும். இம்முயற்சியானது, 'சமுத்திர மந்தன்' திட்டத்தின் கீழ் இந்தியாவின் கடல்சார் ஹைட்ரோகார்பன் வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசின் பரந்த உத்திக்கு இணங்க அமைந்துள்ளது.</p><h2>எரிசக்தித் தேவை</h2><p> </p><p>கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் புதிய உரிமச் சுற்றுகள் மூலம் உலகளாவிய பெரும் எரிசக்தி நிறுவனங்களை ஈர்ப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், இந்த அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவின் புதிய கடலோரப் படுகைகளில் ஆய்வுப் பணிகளை கணிசமாக ஊக்குவிக்கும். </p><p>இந்தியா தனது எரிசக்தித் தேவைகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது; இதனால், சமீபத்திய மாதங்களில் காணப்பட்டதைப் போல உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நாட்டின் பொருளாதாரம் ஆளாவதுடன், நிதிப் பற்றாக்குறையும் அதிகரிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d3cc65-6dc9-494b-b735-3e116eb47784/26-6a6c642f956c1.webp' /></p><p> </p><p>பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (PPAC) தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் எண்ணெய் உற்பத்தி 2.4 சதவீதம் குறைந்து 28 மில்லியன் டன்னாக இருந்தது. </p><p>2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-மே மாதங்களில், எண்ணெய் உற்பத்தி 4.6 மில்லியன் டன்னாகக் குறைந்தது; இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 4.8 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T08:53:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் வேலை இருப்பதாக ஆசை காட்டும் செய்திகள்: உண்மை நிலவரம் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indians-exploited-workforce-in-germany-1785487506"></link>
            <id>https://news.lankasri.com/article/indians-exploited-workforce-in-germany-1785487506</id>
            <summary type="text">தெற்காசியர்கள் பலருக்கு, மேலை நாடுகளில் வேலை செய்ய ஆசை எப்போதுமே இருந்துவருவதை மறுப்பதற்கில்லை.

அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்கள் மேலை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்காசியர்கள் பலருக்கு, மேலை நாடுகளில் வேலை செய்ய ஆசை எப்போதுமே இருந்துவருவதை மறுப்பதற்கில்லை.
</p><p>
அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்கள் மேலை நாடுகளில் கொடுக்கப்படும் ஊதியம், தங்கள் நாட்டுப் பணத்தில் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கிறார்கள்.&nbsp;</p><p>
உதாரணமாக, கனடாவில் ஒரு மாதத்துக்கு 2,000 டொலர்கள் ஊதியம் என்றால், அதை இலங்கை பணத்துக்கு மாற்றினால், அது 4,77,367.71 ரூபாய், இந்தியப் பணத்தில் 1,36,130 ரூபாய்.
</p><p>
அதேபோல, ஜேர்மனியில் ஒரு மாதத்துக்கு 2,000 யூரோக்கள் ஊதியம் என்றால், அதை இலங்கை பணத்துக்கு மாற்றினால், அது 7,70,740 ரூபாய், இந்தியப் பணத்தில் 2,19,712 ரூபாய்.
</p><h3>
ஜேர்மனியில் வேலை
</h3><p>
விடயம் என்னவென்றால், தெற்காசியர்களின் தேவையையும், ஆசையையும் பல மேற்கத்திய நாடுகள் பயன்படுத்திக்கொள்கின்றன எனலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfc07dbe-01ec-41f8-88a5-5095c9e0c5e4/26-6a6c6095063ae.webp' /></p><p>
அதாவது, உண்மையை வெளிப்படையாகக் கூறினால், பல மேற்கத்திய நாடுகளில், எக்கச்சக்கமான பணியாளர்கள் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள்.</p><p>

அவர்களுடைய இடத்தை நிரப்ப அங்கு போதுமான இளைஞர்கள் இல்லை, அத்துடன், சில குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய அங்குள்ள இளைஞர்கள் தயாராகவும் இல்லை.
</p><p>
ஆகவே, இந்த நாடுகள் இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளிலுள்ள இளைஞர்களை ஆசை காட்டி இழுக்கின்றன.&nbsp;</p><p></p><p>
ஆனால், அங்கு செல்லும்போது, பலரும், தாங்கள் எதிர்பார்த்துவந்த வேலை கிடைக்கவில்லை என உணரும்போது ஏமாற்றமடைகிறார்கள்.&nbsp;</p><p>
லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து வெளிநாட்டுக்கு வந்தாயிற்று. ஆகவே, அப்படியே திரும்பிப் போக முடியாது. எனவே, கிடைத்த வேலையை செய்யலாம் என்னும் ஒரு நிலை உருவாகிவிடுகிறது.
</p><h3>
ஏமாற்றப்படும் தெற்காசியர்கள்</h3><p>

இந்நிலையில், இப்படி இந்திய இளைஞர்களும், வேலைக்காக வருபவர்களும் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என ஐரோப்பிய ஊடகம் ஒன்றே செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>
இப்படி ஏமாற்றப்படுபவர்கள் பட்டியலில், திறன் மிகு பணியாளர்களை சேர்க்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
</p><p>
இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு கல்வி கற்பதற்காகவோ, அல்லது வேலைக்காகவோ வரும் பல இளைஞர்கள், கடன் வாங்கியோ அல்லது இருக்கும் சொத்தை விற்று அல்லது அடமானம் வைத்தோ அதற்கான பணத்தை தயார் செய்கிறார்கள்.
</p><p>
மாணவர் விசா மூலம் ஜேர்மனிக்கு வருவதற்கே, 20,000 யூரோக்கள் செலவாகிறது. இந்தியப்பணத்தில் அது 21,98,200 ரூபாய், இலங்கை மதிப்பில் 77,07,400 ரூபாய்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b35cb2a-09fa-4e39-a9f2-a47dc8e05956/26-6a6c6094514ce.webp' /></p><p>
அத்துடன், அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் சுமார் 12,000 யூரோக்கள் இருப்பதை நிரூபிக்கவும் வேண்டும்.
</p><p>
12,000 யூரோக்கள் என்பதி இந்திய மதிப்பில், 13,19,004 ரூபாய், இலங்கை மதிப்பில், 46,24,440 ரூபாய்!
</p><p>
ஆக, இப்படி எக்கச்சக்கமான பணத்தை செலவு செய்து ஜேர்மனிக்கு வரும் இந்தியர்கள் முதலானோர், அங்கு வந்த பிறகு நிலைமை எதிர்பார்த்ததைப்போல் இல்லை, அதாவது, தாங்கள் விளம்பரங்களில் பார்த்ததுபோலவே அல்லது தங்கள் ஏஜண்டுகள் ஆசை காட்டியதுபோலவோ இல்லை என தெரியவரும்போது, வேறு வழியில்லாமல், ஏதாவது ஒரு வேலையை செய்தாகவேண்டும் என்ற கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள்.</p><p>

அப்படி பலருக்கு கிடைக்கும் வேலை, அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, உணவு டெலிவரி செய்யும் வேலை.
</p><p>
வீடுகளில் தாய்மார்கள் பாத்திரம் கழுவச் சொல்லும்போது முகம் சுழிக்கும் பெண் பிள்ளைகள் பலர், ஜேர்மனியில் இறைச்சி வெட்டும் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
</p><p>
இதற்கிடையில், உணவு டெலிவரி நிறுவனங்கள் நேரடியாக ஆட்களை வேலைக்கு எடுக்காமல், ஏஜன்சிகளுக்கு துணை காண்ட்ராக்டில் விட, அவர்கள் வேலை செய்பவர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுப்பதும், சில நேரங்களில் சம்பளப்பணத்தை பிடித்துவைத்துக்கொள்வதும் நடக்கிறதாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8deb3ec4-d234-4ab7-b279-0c54fb374c71/26-6a6c6095ae9de.webp' /></p><p>
வேலை கொடுப்பவரை நேரடியாக சந்திக்காமல், ஒன்லைன் அல்லது சமூக ஊடகங்கள் மூலமே தொடர்பு கொள்வதால், அவர்கள் ஏமாற்றினாலும் அவர்களைக் கண்டுபிடிக்கமுடியாது.
</p><p>
இன்னொரு பக்கம், அதிகாரிகள், வேலை வழங்குபவர்களைக் கண்டுகொள்ளாமல், டெலிவரி வேலை செய்யும் பணியாளர்களை குறிவைப்பதால், அதிகாரிகளுக்கு பயந்துகொண்டே வேலை செய்யும் சூழலும் உள்ளது.</p><p>

இதில் மொழிப்பிரச்சினை இன்னொருபக்கம்!</p><p>

ஆக, மொத்தத்தில், ஜேர்மனியில் நிறைய வேலை இருக்கிறது என ஆசை காட்டும் விளம்பரங்கள், உண்மை நிலவரம் என்ன என்பதைச் சொல்வதில்லை.</p><p>

விளம்பரங்களை நம்பி ஜேர்மனிக்குச் செல்லும் இந்தியர்கள் முதலானோர், இப்படி பரிதாபங்களில் சிக்கி, நாட்டுக்கும் திரும்ப முடியாமல், ஏதோ ஒரு வேலையைப் பார்க்கிறார்கள் என்கிறது, தி லோக்கல் ஜேர்மனி என்னும் ஊடகம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T08:45:16+00:00</updated>
        </entry>
    </feed>
