<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-12T19:25:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவின் முழு சூரிய கிரகணம்... அதைப் பார்ப்பதற்கான சிறந்த இடம் எது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/solar-eclipse-best-place-to-see-1786556603"></link>
            <id>https://news.lankasri.com/article/solar-eclipse-best-place-to-see-1786556603</id>
            <summary type="text">Europe’s total solar eclipse: ஐரோப்பாவில் நிகழும் முழு சூரிய கிரகணமும், அதைக் காண்பதற்கான சிறந்த இடம் மற்றும் பாதுகாப்பாகப் பார்ப்பதற்கான வழிமுறைகளும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Europe’s total solar eclipse: ஐரோப்பாவில் நிகழும் முழு சூரிய கிரகணமும், அதைக் காண்பதற்கான சிறந்த இடம் மற்றும் பாதுகாப்பாகப் பார்ப்பதற்கான வழிமுறைகளும்.
</p><p>புதன்கிழமை மாலையில், மில்லியன் கணக்கான ஐரோப்பியர்கள் ஒரு வானியல் விருந்தான சூரிய கிரகணத்தைக் காணவிருக்கிறார்கள்.</p><h2>முதல் முழு சூரிய கிரகணம்</h2><p>
</p><p>வட மற்றும் மத்திய ஸ்பெயினின் பெரும் பகுதி மக்களும், போர்த்துகலின் ஒரு சிறு பகுதி மக்களும், கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்தின் சில பகுதி மக்களும் இந்த அரிதான முழு கிரகணத்தை அனுபவிக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/299d888f-0e63-426b-a4a4-0aa16256fd21/26-6a7cb0bda0b65.webp' /></p><p> </p><p>இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் வடக்கு இத்தாலி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில், மறையும் சூரியனின் ஒளி முற்றிலுமாகத் தடுக்கப்படும்.
</p><p>சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேராகக் கடந்து செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது; இதனால் நிலவின் நிழல் பூமியின் மீது விழுகிறது. நிலவினால் சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படும்போது, ​​பார்வையாளர்கள் முழு சூரிய கிரகணத்தைக் காண்கிறார்கள்.</p><p></p><p> </p><p>ஐரோப்பியக் கண்டத்தின் நிலப்பகுதியில் கடந்த இரு தசாப்தங்களில் நிகழும் முதல் முழு சூரிய கிரகணம் இதுவாகும். இங்கிலாந்திலிருந்து காணக்கூடிய இவ்வகையான நிகழ்வு கடைசியாக 1999-இல் நிகழ்ந்தது; அப்போது டெவன் (Devon) மற்றும் கார்ன்வால் (Cornwall) ஆகிய பகுதிகளின் சில பகுதிகள் முழுமையான சூரிய கிரகணப் பாதையில் அமைந்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ef9221-60ab-43e8-93a7-32679cf7eb01/26-6a7cb0bcec4ef.webp' /></p><p> </p><p>இங்கிலாந்திலிருந்து காணக்கூடிய அடுத்த முழுமையான சூரிய கிரகணத்திற்கு 2090-ஆம் ஆண்டு வரையில் காத்திருக்க வேண்டும்.</p><h2>மேற்கு அடிவானம்</h2><p> </p><p>பிரித்தானியாவில், லண்டனில் உள்ள பார்வையாளர்களுக்கு பகுதி கிரகணம் பிரிட்டிஷ் கோடைக்கால நேரம் 18.17 மணிக்குத் தொடங்கி, 19.13 மணிக்கு உச்சத்தை அடைந்து, 20.06 மணிக்கு முடிவடையும் என்று ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் கணக்கிட்டுள்ளது. </p><p>கார்ன்வாலில் உள்ள மக்கள் சுமார் 96 சதவீதம் கிரகணத்தை அனுபவிப்பார்கள்; அதேவேளையில், ஸ்காட்லாந்தின் மேற்குப் பகுதியில் உள்ளவர்கள் 93 சதவீதமும், லண்டனில் உள்ளவர்கள் சுமார் 92 சதவீத கிரகணத்தையும் அனுபவிப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e5e910-8651-465b-90fd-824129c4cbd0/26-6a7cb0be52343.webp' /></p><p>
எனவே, சூரிய கிரகணத்தைப் பார்க்கச் செல்ல விரும்பும் எவரும், கட்டிடங்களோ மரங்களோ மறைக்காத வகையில் மேற்கு அடிவானத்தை நன்றாகப் பார்க்கக்கூடிய ஒரு இடத்தைத் தெரிவு செய்வது நல்லது. </p><p>சூரியனை வெறும் கண்ணால் பார்ப்பதையோ அல்லது sunglasses-களை அணிவதையோ தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர், ஏனெனில் அது நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். </p><p>அதற்குப் பதிலாக, கிரகணத்திற்கென பிரத்யேகக் கண்ணாடிகளை வாங்குமாறு பரிந்துரைக்கின்றனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T17:41:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேட்டோ உச்சிமாநாட்டில் ட்ரம்ப் தங்கியிருந்த அறை வரை தகவல் திரட்டியிருந்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-during-nato-summit-1786551367"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-during-nato-summit-1786551367</id>
            <summary type="text">Iran Knew Where Trump Was Staying: துருக்கியில் நேட்டோ உச்சிமாநாட்டின்போது ட்ரம்ப் தங்கியிருந்த அறையின் தகவல் வரை ஈரான் தெரிந்து வைத்திருந்தது.
கடந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran Knew Where Trump Was Staying: துருக்கியில் நேட்டோ உச்சிமாநாட்டின்போது ட்ரம்ப் தங்கியிருந்த அறையின் தகவல் வரை ஈரான் தெரிந்து வைத்திருந்தது.
</p><p>கடந்த மாதம் துருக்கியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரகசியமாக விமானத்தை மாற்றிய அந்த அசாதாரண நடவடிக்கைக்கு, ஒரு தீவிரமான பாதுகாப்பு எச்சரிக்கையே காரணமாகக் கூறப்படுகிறது.</p><h2>ஏவுகணைத் தாக்குதல்</h2><p> நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ட்ரம்ப் பயணப்படும் விமானத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தக்கூடும் என்பது குறித்த தகவலை அமெரிக்க உளவுத்துறை அறிந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/245fda99-8185-4395-992b-dd3e07703503/26-6a7c9c4a2556c.webp' /></p><p> </p><p>நேட்டோ உச்சிமாநாட்டின் இறுதி நாளான ஜூலை 8 அன்று, ட்ரம்ப் அங்காராவிலிருந்து புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தபோது இந்த அச்சுறுத்தல் எழுந்தது.</p><p>
அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ விமானமான 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தை இலக்கு வைக்கும் தரை-வான் ஏவுகணை தொடர்பான ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல் குறித்த பல்வேறு தகவல்களை அமெரிக்க உளவு அமைப்புகள் பெற்றிருந்ததாகவே, இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிந்த இரு அமெரிக்க அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸ் நாளேடிடம் தெரிவித்துள்ளனர். </p><p>இது மட்டுமின்றி, நேட்டோ உச்சிமாநாடு நடைபெற்ற இடத்திற்கு அருகில், தோளில் வைத்து ஏவக்கூடிய ஏவுகணை ஒன்றை ஒருவர் எடுத்துச் சென்றதாகக் காணப்பட்டார் என்பது மற்றொரு கவலைக்குரிய தகவலாக இருந்தது.</p><p></p><p> </p><p>மேலும், அங்காராவில் ட்ரம்ப் எங்கு தங்கியிருந்தார் என்பது குறித்தும், அவர் தங்கியிருந்த கட்டிடத்தின் எந்தத் தளத்தில் இருந்தார் என்பது குறித்தும் ஈரானிய உளவு அமைப்புகளுக்குத் துல்லியமாகத் தெரிந்திருந்ததாக அமெரிக்க உளவுத்துறையும் நம்பியது. </p><p>இதனையடுத்து, துருக்கியிலிருந்து ஜனாதிபதியை வெளியேற்றுவதற்காக ஒரு அசாதாரணமான நடவடிக்கையை முன்னெடுக்கும் அளவுக்கு அந்தத் தகவல்கள் நம்பகமானதாகக் கருதப்பட்டது.</p><h2>ஈரானை நம்பவைக்க</h2><p> </p><p>இந்த நிலையிலேயே, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே தாம் புறப்பட இருப்பதாக ட்ரம்ப் வெளிப்படையாக அறிவித்ததும், ஊடகங்களின் முன்னிலையில் அவர் அந்த விமானத்தில் ஏறுவதும் ஊடகங்கள் பதிவு செய்தன. </p><p>ஆனால் உண்மையில் அது ஈரானை நம்பவைக்கும் ஒரு திட்டம். அந்த விமானமானது வெள்ளை மாளிகை அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் பயணத்தை மேற்கொள்ளும் செய்தியாளர்கள் குழுவினர் ஆகியோருடன் குறித்த நேரத்தில் புறப்பட்டு சென்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31fd73fe-e9fb-457b-bacd-c24c71a45101/26-6a7c9c496ea83.webp' /></p><p>
</p><p>ட்ரம்பை, விமான நிலைய உணவு வழங்கும் கொள்கலனுக்குள் வைத்து விமான நிலையத்தில் இருந்து ரகசியமாக வெளியேற்றி, பின்னர் ஒரு சிறிய இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டு, துருக்கியிலிருந்து வெளியேற்றப்பட்டார். </p><p>இந்த விவகாரம் தொடர்பில் ட்ரம்ப் ஊடகங்களிடம் இதுவரை விளக்கமளிக்கவில்லை என்பதுடன், அதிகாரிகள் ஆலோசனைகளுக்கு தாம் கட்டுப்பட்டதாக மட்டுமே பதிலளித்துள்ளார். </p><p>ஆனால், பத்திரிகையாளர்களில் சிலர், தாங்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டதற்கு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதோடு, பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கத் தவறியதற்காக வெள்ளை மாளிகை அதிகாரிகளையும் விமர்சித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T16:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI உருவாக்கிய கோப்புகளை கண்களுக்கு தெரியாத Watermarks - Anthropic புதிய முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anthropic-adds-invisible-ai-watermarks-1786548780"></link>
            <id>https://news.lankasri.com/article/anthropic-adds-invisible-ai-watermarks-1786548780</id>
            <summary type="text">Anthropic Adds Invisible AI Watermarks: AI உள்ளடக்கத்தை கண்டுபிடிக்க கண்களுக்கு தெரியாத குறியீடே Anthropic அறிமுகம் செய்கிறது.

அமெரிக்க AI நிறுவனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Anthropic Adds Invisible AI Watermarks: AI உள்ளடக்கத்தை கண்டுபிடிக்க கண்களுக்கு தெரியாத குறியீடே Anthropic அறிமுகம் செய்கிறது.</b></p><p>

அமெரிக்க AI நிறுவனம் Anthropic, தனது Claude AI மாடல்களில் Invisible Watermark தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

இதன் மூலம் AI உருவாக்கிய உரைகள் மற்றும் கோப்புகளை எளிதில் அடையாளம் காண முடியும்.

இந்த Watermarks, சாதாரணமாக மனிதர்களால் காண முடியாத, ஆனால் இயந்திரம் வாசிக்கக்கூடிய குறியீடாக இருக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e04a035f-449f-4c25-a36b-d67c19e50fbd/26-6a7c922dd9888.webp' /></p><p>Claude AI உருவாக்கும் உரைகளில், இந்த மறை குறியீடு தானாகவே சேர்க்கப்படும். உரையை copy-paste செய்தாலும், சில திருத்தங்கள் செய்தாலும் கூட, அந்த Watermark நீங்காமல் இருக்கும்.</p><p></p><p>
</p><h2>
EU AI Act</h2><p>இது ஐரோப்பிய ஒன்றியத்தின் EU AI Act-இன் வெளிப்படைத்தன்மை விதிகளின் ஒரு பகுதியாகும். ஆகஸ்ட் 2, 2026 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியிடப்படும் Claude மாடல்கள் அனைத்தும் இந்த Watermark வசதியுடன் இருக்கும். </p><p>உலகளாவிய அளவிலும் இதை விரிவாக்க Anthropic திட்டமிட்டுள்ளது.

உரை மட்டுமல்லாமல், PNG, JPG, SVG போன்ற கோப்புகளிலும் Claude, C2PA standard அடிப்படையில் டிஜிட்டல் கையொப்ப metadata-ஐ சேர்க்கும். இதன் மூலம் கோப்புகள் AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய முடியும்.</p><p></p><h2>

எச்சரிக்கை</h2><p>ஆனால் Anthropic, “Watermark இருப்பது AI உருவாக்கியது என்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்தாது” என எச்சரிக்கிறது. </p><p>ஏனெனில், ஒருவரின் சொந்த எழுத்தை Claude proofread, translate அல்லது summarize செய்தாலும், அந்த உரையில் Watermark தோன்றலாம்.

அதேபோல், பழைய மாடல்கள் அல்லது மிகச் சிறிய உரைகள் Watermark இல்லாமல் இருக்கலாம்.</p><p>

இந்த முயற்சி, AI உருவாக்கிய உள்ளடக்கங்களை பொறுப்புடன் பயன்படுத்த மற்றும் தவறான தகவல்களைத் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Anthropic, விரைவில் Watermark-யை கண்டறியும் கருவிகளை வெளியிடவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T15:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க போர்க்கப்பலில் உணவு தட்டுப்பாடு - கடலில் குதிக்க முயன்ற கடற்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-sailors-jump-ship-amid-iran-war-crisis-1786547558"></link>
            <id>https://news.lankasri.com/article/us-sailors-jump-ship-amid-iran-war-crisis-1786547558</id>
            <summary type="text">USS Abraham Lincoln sailors jump into the sea: அமெரிக்க போர்க்கப்பலில் கடற்படையினர் கடலில் குதிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் USS Abrah...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>USS Abraham Lincoln sailors jump into the sea: அமெரிக்க போர்க்கப்பலில் கடற்படையினர் கடலில் குதிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
</b></p><p>
அமெரிக்காவின் USS Abraham Lincoln என்ற விமானக் கப்பல், கடந்த 210 நாட்களாக மத்திய கிழக்கில் பணியில் உள்ளது.
</p><h2>
மன அழுத்தத்தில்&nbsp;கடற்படையினர் </h2><p>நீண்டகால பணி, கப்பல் நிலைநிறுத்தம் மற்றும் கடினமான சூழ்நிலைகள் காரணமாக, கப்பலில் பணியாற்றும் கடற்படையினர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc95d18f-063f-4a06-8115-920340b5d924/26-6a7c8d68cee11.webp' /></p><p>கப்பலில் உணவு தட்டுப்பாடு, உடைந்த கழிப்பறைகள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால், சிலர் மன உறுதியை இழந்து கடலில் குதிக்க முயன்றதாக அவர்களின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.</p><h2>

USS Abraham Lincoln போர்க்கப்பல்</h2><p>இந்த கப்பல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான ஈரான் போரில் முக்கிய பங்கு வகிக்கிறது. </p><p>ஜூன் மாதத்தில் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம் முறியடைந்த பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

முக்கியமாக, ஹார்மசு நீரிணை மீது கட்டுப்பாடு பெறுவதற்கான போராட்டமே இப்போரின் மையமாக உள்ளது. </p><p></p><p>அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டு, சுமார் 20 போர்க்கப்பல்களை மத்திய கிழக்கில் நிறுத்தியுள்ளது.
</p><p>
இந்த சூழ்நிலையில், USS Abraham Lincoln கப்பலில் பணிபுரியும் வீரர்கள், நீண்டகால பணி, உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமை காரணமாக மன அழுத்தத்தில் சிக்கியுள்ளனர். </p><p>இது அமெரிக்க கடற்படையின் மனநிலை மற்றும் போர்திறனை பாதிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T15:10:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-drone-strike-hits-russias-richest-woman-1786544680"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-drone-strike-hits-russias-richest-woman-1786544680</id>
            <summary type="text">Ukraine Drone Strike Hits Russias Richest Woman: உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Ukraine Drone Strike Hits Russias Richest Woman: உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.</b></p><p>

ரஷ்யாவின் மிகப்பெரிய ஓன்லைன் வணிக நிறுவனமான Wildberries மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>

ரஷ்யாவின் அமேசான்</h2><p>இந்த நிறுவனம் 2004-ஆம் ஆண்டு தத்யானா கிம் (Tatyana Kim) என்பவரால் தொடங்கப்பட்டது.</p><p> தற்போது ரஷ்யாவின் “அமேசான்” என அழைக்கப்படும் Wildberries, நாட்டின் ஓன்லைன் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5fc08c1-963d-4038-aeca-30279d93d522/26-6a7c822a4fcfe.webp' /></p><p>சமீபத்தில் நடந்த தாக்குதல்களில் பல கிடங்குகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை இழந்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் கிடைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p>

சிறு வியாபாரிகள் தங்கள் பங்குகளை இழந்ததால், எதிர்கால விற்பனை மற்றும் இழப்பீடு குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது.
</p><p></p><h2>உக்ரைன்&nbsp;குற்றச்சாட்டு</h2><p>உக்ரைன், இந்த கிடங்குகள் ரஷ்யாவின் போர் முயற்சிக்கு உதவுகின்றன என்று கூறுகிறது. ஆனால் ரஷ்ய அதிகாரிகள், இவை சாதாரண குடிமக்கள் பயன்பாட்டிற்கான வசதிகள் என தெரிவித்துள்ளது.
</p><p>
தத்யானா கிம், தாக்குதல்களை கண்டித்து, பாதிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு உதவ நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். </p><p>இருப்பினும், விற்பனை குறைந்து, பல விற்பனையாளர்கள் மாற்று தளங்களை தேடத் தொடங்கியுள்ளனர்.
</p><p></p><h2>புதிய யுத்தி</h2><p>ஆய்வாளர்கள், உக்ரைன் இத்தகைய தாக்குதல்களை ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் புதிய யுத்தத் திட்டமாக பார்க்கின்றனர். இது ரஷ்யாவின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கிறது.
</p><p>
தத்யானா கிம், ரஷ்யாவின் தொழில் வெற்றியின் மிகப்பெரிய அடையாளமாக இருந்தாலும், தற்போது தனது நிறுவனத்தை மீண்டும் எழுப்பி, வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T14:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் பணக்கார குடும்ப பட்டியல் - முதல் 10 இடத்தில் 2 தமிழ் குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-tn-familes-in-top-10-india-most-valuable-family-1786541705"></link>
            <id>https://news.lankasri.com/article/2-tn-familes-in-top-10-india-most-valuable-family-1786541705</id>
            <summary type="text">2026 India Most Valuable Family Businesses List : 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலில் 2 தமிழ்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 India Most Valuable Family Businesses List : 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலில் 2 தமிழ்நாடு குடும்பங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது. </p><h3>

இந்தியாவின் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்கள்</h3><p>

பார்க்லேஸ் பிரைவேட் கிளைன்ட்ஸ் ஹுருன் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. </p><p>

இந்த பட்டியலில் உள்ள 300 குடும்ப வணிகங்களின் கூட்டு மதிப்பு தற்போது 1.46 டிரில்லியன் டொலராக (இந்திய மதிப்பில் ரூ.138 லட்சம் கோடி) உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/395fa4d1-09ca-4adb-b6e5-4a6456dd8d68/26-6a7c768b17c35.webp' /></p><p>

2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் இருந்து இந்த வணிகங்களின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. </p><p>அதாவது கடந்த 2 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ. 4,076 கோடி மதிப்பு உயர்விற்குச் சமமாகும்.&nbsp;</p><p></p><p>

இதில் ரிலையன்ஸ் குழும முகேஷ் அம்பானியின் குடும்பம் ரூ. 25.83 லட்சம் கோடி மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. </p><p>ஆதித்யா பிர்லா குழும குமார் மங்கலம் பிர்லா குடும்பம் ரூ. 8.14 லட்சம் கோடி மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளது. </p><p> 

ஜிண்டால் குடும்பம் ரூ. 8.01 லட்சம் கோடி மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளது. </p><p> 

இந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த வெள்ளையன் சுப்பையா தலைமையிலான முருகப்பா குடும்பம், ரூ. 3.06 லட்சம் கோடி மதிப்புடன் 8வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c00b73-1f57-4c45-85be-dc35349f1ca9/26-6a7c768bbe123.webp' /></p><p> 

இதே போல், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஷிவ் நாடார் குடும்பம் ரூ. 2.91 லட்சம் கோடி மதிப்புடன் 9வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a79b494b-778a-4481-a1f7-0adda816ef42/26-6a7c768c703cb.webp' /></p><p>

கௌதம் அதானி குடும்பம் ரூ.19.6 லட்சம் கோடி மதிப்புடன், முதல் தலைமுறை தொழில்முனைவோர் குடும்பங்களில் மிகவும் செல்வந்தர்களாக உள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:35:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய கிரகணம் உயிர் பலி வாங்கும் எனக்கூறும் வதந்திகள்: அறிவியலாளர்கள் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scientist-debunked-solar-eclipse-conspiracy-theory-1786538062"></link>
            <id>https://news.lankasri.com/article/scientist-debunked-solar-eclipse-conspiracy-theory-1786538062</id>
            <summary type="text">இன்று சூரிய கிரகணம் நிகழ இருக்கும் நிலையில், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவத் துவங்கியுள்ளன.


சூரிய கிரகணத்தின்போது பல மில்லி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று சூரிய கிரகணம் நிகழ இருக்கும் நிலையில், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவத் துவங்கியுள்ளன.</p><p>


சூரிய கிரகணத்தின்போது பல மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என்றும், உலகமே இருளில் மூழ்கிவிடும் என்றும் பல வதந்திகள் இணையத்தில் பரவிவரும் நிலையில், அவை குறித்து அறிவியலாளர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.</p><h3>

உலாவரும் வதந்திகள்
</h3><p>
நாசாவிலிருந்து ’Project Anchor’ என்னும் ஒரு ஆவணம் லீக் ஆகியுள்ளதாகவும், அது, சூரிய கிரகணத்தின்போது பூமி 7 விநாடிகளுக்கு புவியீர்ப்பு விசையை இழக்கும் என்று கூறுவதாகவும் ஒரு வதந்தி பரவிவருகிறதாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e348be31-2e54-440a-9611-083115b80224/26-6a7c6850c6f26.webp' /></p><p>
அப்படி பூமிக்கு புவியீர்ப்பு விசை இல்லால் போவதால், 40 மில்லியன் மக்கள் கீழே விழுந்து உயிரிழப்பார்கள், உள் கட்டமைப்பு நாசமாகும், அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் என பயமுறுத்துகிறது அந்த வதந்தி.
</p><p>
இந்த வதந்தி தொடர்பில் விளக்கமளித்துள்ள நாசா, 2026ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 12ஆம் திகதி, பூமி தனது ஈர்ப்பு விசையை இழக்காது என்றும், பூமியின் ஈர்ப்பு விசை, அதன் நிறையால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளது.&nbsp;</p><p></p><p>
அதாவது, பூமியின் அமைப்பில், அதன் மையப்பகுதி, வெளிப்புறம், நடுப்பகுதி, பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலம் ஆகிய அனைத்தும் தங்கள் நிறையை இழந்தால்தான் பூமி அதன் ஈர்ப்பு விசையை இழக்கும் என்றும், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b17affc-baad-47d8-b737-994d17b9c7c2/26-6a7c68501f0d2.webp' /></p><p>

இதுபோக, பல நாட்கள் மின்தடை, தொலைபேசி சேவை பாதிப்பு ஏற்படும் என்றும் சில வதந்திகள் கூறுகின்றன.
</p><p>
ஆனால், சூரிய கிரகணம் என்பது முன்கூட்டியே கணிக்கக்கூடிய ஒரு அறிவியல் நிகழ்வு, அது ஆயுதமோ, தீய சடங்கோ அல்ல என்கிறார்கள் அறிவியலாளர்கள்.</p><p>

உண்மையில், ஒரே நேரத்தில் பலர் சூரிய கிரகணம் தொடர்பான காணொளிகளைப் பார்க்க முயல்வதால், சில இடங்களில் இணைய சேவையின் வேகம் வேண்டுமானால் குறையலாம்.
</p><p>
ஆக, சூரியனும், சந்திரனும், பூமியும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் வருவதால், பூமி மீது சந்திரனின் நிழல் விழுகிறது. இந்த நிகழ்வே சூரிய கிரகணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:30:38+00:00</updated>
        </entry>
    </feed>
