<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-03T06:35:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபிஃபா தலைவரின் மறுதேர்தல்... அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ் கால்பந்து சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wales-withdraws-support-for-1785730465"></link>
            <id>https://news.lankasri.com/article/wales-withdraws-support-for-1785730465</id>
            <summary type="text">ஃபிஃபா தலைவருக்கானத் தேர்தலில் மீண்டும் களம் காணும் கியானி இன்ஃபான்டினோவுக்கு அளிக்கப்பட்டிருந்த ஆதரவை வேல்ஸ் கால்பந்து சங்கம் அதிரடியாக விலக்கிக் கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிஃபா தலைவருக்கானத் தேர்தலில் மீண்டும் களம் காணும் கியானி இன்ஃபான்டினோவுக்கு அளிக்கப்பட்டிருந்த ஆதரவை வேல்ஸ் கால்பந்து சங்கம் அதிரடியாக விலக்கிக் கொண்டுள்ளது.</p><h2>அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ்</h2><p> </p><p>
Gianni Infantino-வின் மறுதேர்தலுக்கான ஆதரவை உத்தியோகப்பூர்வமாக விலக்கிக் கொண்ட முதல் கால்பந்து சங்கம் வேல்ஸ் என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d67e77d-4fd1-4c3c-8166-94e8190710cd/26-6a70176248a37.webp' /></p><p>
</p><p>உலகக் கிண்ணம் தொடருக்கானப் பங்குகளை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை அவர் ரகசியமாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உறவினர்களுடன் முன்னெடுத்த நிலையில், இன்ஃபான்டினோவின் தலைமையின் மீதான நம்பிக்கை தகர்ந்தது. </p><p>வேல்ஸ் கால்பந்து சங்கம் தெரிவிக்கையில், 2027-2031-ஆம் ஆண்டுக் காலத்திற்கான ஃபிஃபா (FIFA) தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்காக கியானி இன்ஃபான்டினோவின் வேட்புமனு மீதான ஆதரவை விலக்கிக்கொள்வதை இதன் மூலம் உறுதிப்படுத்துவதாக பதிவு செய்துள்ளது.</p><p></p><p> </p><p>அத்துடன், நல்லாட்சி, செயல்முறை, தலைமைத்துவம், பங்குதாரர் மேலாண்மை, தகவல் தொடர்பு மற்றும் சரியான முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் அண்மையில் ஏற்பட்ட தோல்விகள், உலக கால்பந்து விளையாட்டின் தலைமைப் பொறுப்பில் நீடிப்பதற்கு வேல்ஸ் கால்பந்து சங்கத்தின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் நிலைக்கு நம்மை இன்ஃபான்டினோ இட்டுச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc4d0ee4-6b51-473e-9203-cea43e1488b1/26-6a70176318b45.webp' /></p><p> </p><p>மேலும், கால்பந்தின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தவறுவது, எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தோல்வியாகும் என்றும் குறிப்பிட்டு வேல்ஸ் கால்பந்து சங்கம் தங்களது தலைவரைப் பற்றிய நிலைப்பாடு குறித்து ஃபிஃபாவுக்கு (FIFA) கடிதம் எழுதியுள்ளது.</p><h2>சரிந்த செல்வாக்கு</h2><p> </p><p>அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஸ்பெயினுக்கு உலகக் கிண்ணத்தைக் கையளித்த இரண்டு வாரங்களிலேயே, இன்ஃபான்டினோவின் நற்பெயர் மற்றும் செல்வாக்கு மிக வேகமாகச் சரிந்துள்ளது.
</p><p>உலகக் கிண்ணம் போட்டிகளை விற்பனை செய்வதற்கான திட்டத்திற்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக்கூறச் செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் இன்ஃபான்டினோவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான ஐரோப்பிய கால்பந்து அமைப்பின் ஒருங்கிணைந்த முயற்சியில் வேல்ஸ் (Wales) நாடும் இணைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3afc8731-8289-4f91-8213-302b1652074d/26-6a701763bdee1.webp' /></p><p> </p><p>இதனிடையே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இல்லாமலேயே இன்ஃபான்டினோ பதவியிலிருந்து விலகும் வகையிலான அழுத்தத்தை அதிகரிக்க, வேல்ஸ் கால்பந்து சங்கத்தைத் தொடர்ந்து மேலும் பல சங்கங்களும் இதே பாதையைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> இன்பான்டினோ அடுத்த ஆண்டு மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார், ஆனால் அவரது தலைவர் பதவி தற்போது கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.</p><p> 
ஏற்கனவே, இன்ஃபான்டினோ தனது மறுதேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்கும் 200-க்கும் மேற்பட்ட ஆதரவுக் கடிதங்களை பெற்றிருந்தார். அதில் தற்போது முதல் நாடாக வேல்ஸ் தனது ஆதரவை விலக்கிக் கொண்டு அதிர்ச்சியளித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T06:20:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 காமன்வெல்த் போட்டிகளில் 4வது இடம் பிடித்த இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-secure-4th-place-in-2026-glasgow-cwg-1785737029"></link>
            <id>https://news.lankasri.com/article/india-secure-4th-place-in-2026-glasgow-cwg-1785737029</id>
            <summary type="text">2026 காமன்வெல்த் போட்டிகளில், 39 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது.

2026 காமன்வெல்த் தொடர் 

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடந்த ஜூல...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 காமன்வெல்த் போட்டிகளில், 39 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது.
</p><h3>
2026 காமன்வெல்த் தொடர் </h3><p>

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடந்த ஜூலை 23 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bae307de-cb09-4abb-a300-18a95c48a686/26-6a702f482ef9b.webp' /></p><p>

10 விளையாட்டுகள் இடம்பெற்ற இந்த தொடரில், 70 தங்கம், 45 வெள்ளி, 55 வெண்கலம் என மொத்தம் 170 பதக்கங்களுடன் பதக்கபட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடம் பிடித்தது.&nbsp;</p><p> 

29 தங்கம், 45 வெள்ளி, 36 வெண்கலம் உட்பட 110 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும், 19 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் உட்பட 62 பதக்கங்களுடன் கனடா 3வது இடத்திலும் உள்ளது.&nbsp;</p><p></p><h3> 

4வது இடத்தில் இந்தியா</h3><p> 

இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் பதக்கபட்டியலில் 4வது இடத்தை பிடித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e94e415-f440-4600-8fd7-ff2e72b3ff7c/26-6a702f46cb078.webp' /></p><p>

குத்துசண்டை பிரிவில் மட்டும் இந்தியா 7 தங்கப்பதக்கங்களை வென்றது.&nbsp;</p><p>

2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா அதே 4வது இடத்தை பிடித்திருந்தாலும், 21 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கள் வென்றிருந்தது.</p><p> 

1998 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக 50 பதக்கங்களுக்கு குறைவாக வென்றுள்ளது. </p><p>

கடந்த 2022 காமன்வெல்த் தொடரில் 19 விளையாட்டுகள் இருந்த நிலையில், தற்போது 10 போட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">No Wrestling. <br>No Badminton. <br>No Table Tennis. <br>No Hockey.<br><br>Yet, India managed to finish 4th at the Commonwealth Games 2026. 🇮🇳<br><br>THANK YOU, TEAM INDIA! 🙏 <a href="https://t.co/cY2THFEkVv">pic.twitter.com/cY2THFEkVv</a></p>&mdash; The Khel India (@TheKhelIndia) <a href="https://x.com/TheKhelIndia/status/2083964735754829888?ref_src=twsrc%5Etfw">August 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம், பூப்பந்து, மேசைப்பந்து, கள ஹாக்கி என இந்தியா பதக்கங்களை அள்ளும் விளையாட்டுகள் தொடரில் இருந்து நீக்கப்பட்டது இந்தியாவிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.&nbsp;</p><p>நிறைவு விழாவின் போது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் கொடியையும், சடங்கு ரீதியான தடியையும் இந்தியாவிற்கு முறைப்படி வழங்கப்ட்டது. ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தலைவர் பி.டி. உஷா ஆகியோர் இந்தியா சார்பில் அதனை பெற்றுக்கொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a872fd6-5cc4-4a8d-a14d-f4dfb62b7889/26-6a702f477ca50.webp' /></p><p>

அடுத்த காமன்வெல்த் போட்டிகளை 2030 ஆம் ஆண்டில் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இந்தியா நடத்த உள்ளதால். இதில் அதிகளவிலான பதக்கங்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">𝐈𝐍𝐃𝐈𝐀’𝐒 𝐌𝐎𝐌𝐄𝐍𝐓 𝐇𝐀𝐒 𝐀𝐑𝐑𝐈𝐕𝐄𝐃! 🇮🇳✨<br><br>IOA President PT Usha, Gujarat Deputy CM Harsh Sanghavi, and Neeraj Chopra received the Commonwealth Games Flag.<br><br>India officially takes over as host of the 2030 Commonwealth Games! 🏟️ <a href="https://t.co/rXiT3wyKjt">pic.twitter.com/rXiT3wyKjt</a></p>&mdash; The Khel India (@TheKhelIndia) <a href="https://x.com/TheKhelIndia/status/2084124858561216652?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

முன்னதாக 2010 காமன்வெல்த் போட்டிகள் டெல்லியில் நடைபெற்ற போது, இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்களுடன் 2வது இடம் பிடித்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T06:03:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்தநாள் கொண்டாட்டம்... படுகொலை முயற்சியிலிருந்து தப்பிய புடினின் போர்த் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-war-commander-survives-1785737002"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-war-commander-survives-1785737002</id>
            <summary type="text">ரஷ்ய உணவகம் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததில் புடினின் போர்த் தளபதிகளில் ஒருவர் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய உணவகம் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததில் புடினின் போர்த் தளபதிகளில் ஒருவர் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளார்.</p><h2>பிறந்தநாள் கொண்டாட்டம்</h2><p>
</p><p>குறித்த சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 19 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். கிரெம்ளினிலிருந்து ஒரு மைலுக்கும் சற்று அதிகமான தொலைவில் உள்ள குத்ரின்ஸ்கயா சதுக்கத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/163285dc-b7dc-428d-b911-929adb19365d/26-6a70307bac60b.webp' /></p><p> </p><p>பரிசுப்பொருள் என கூரியர் மூலம் அந்த உணவகத்திற்கு வெடிகுண்டு அனுப்பப்பட்டுள்ளது. ரஷ்ய விண்வெளிப் படைகளின் தலைமைத் தளபதியும் மூத்த போர் தளபதியுமான அலெக்சாண்டர் சாய்கோவின் 55-வது பிறந்தநாள் கொண்டாட்டம் அந்த உணவகத்தில் நடைபெற்றது. </p><p>உள்ளூர் செய்திகளின் அடிப்படையில், அந்தத் தாக்குதலில் தளபதி உயிர் பிழைத்த போதிலும், அவரது மருமகன் கொல்லப்பட்டார் மற்றும் அவரது மகள் பலத்த காயமடைந்தார். </p><p>சுமார் 85,000 பவுண்ட் செலவில் நடைபெற்ற அந்த விருந்து நிகழ்ச்சியில், மாஸ்கோவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், உயர்மட்ட ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><p></p><p> </p><p>வெளியாகியுள்ள தகவலில், வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் மரணமடைந்த இருவரில், முன்னாள் தொழில்முறை ஐஸ் ஹாக்கி வீரரான 27 வயது டேனில் பெரெட்ரியும் (Daniil Peredriy) ஒருவர் எனத் தெரிய வந்துள்ளது. </p><p>அந்த வெடிவிபத்தில், அவரது மனைவியும் சாய்கோவின் மகளுமான 25 வயதுடைய மரியா பெரெட்ரி மூளைக் காயத்திற்கு ஆளானார். கடந்த ஜூன் மாதம் உக்ரைன் நிர்வாகத்தால் போர்க்குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்டவர் தளபதி சாய்கோ. </p><p>இவர் 
ரஷ்யாவில் பல விருதுகளைப் பெற்ற போர் நாயககானக் கொண்டாடப்படும் நபராவார்; மேலும், Tu-95MS ரக விமானங்களைப் பயன்படுத்தி உக்ரைன் மீது நடத்தப்பட்ட கொடூரமான வான்வழித் தாக்குதலுக்குப் பின்னணியில் செயல்பட்டவரும் இவரே.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9136fa6f-fba9-491d-8d97-715fb8af921d/26-6a70307c8c3e3.webp' /></p><p> </p><p>2022-இல் உக்ரைன் மீதான புடினின் ஆரம்பக்கட்டப் படையெடுப்பின்போது, ​​கீவ் நகருக்கு அருகிலுள்ள புச்சாவில் குறைந்தது 450 பேர் கொல்லப்பட்டதோடு, அங்குப் பரவலாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கூட்டுப் பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளை இவரது படைகள் மேற்கொண்டன; அக்காலகட்டத்தில் கீவ் முன்னணியில் ரஷ்யப் படைகளுக்குச் சாய்கோ (Chayko) தலைமை தாங்கினார். </p><p>புச்சா படுகொலை என்பது இமோதலில் ரஷ்யா இழைத்த மிக மோசமான போர்க்குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், இறப்புகள் குறித்த உத்தியோகப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகாத நிலையில், ரஷ்யப் பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய 'சேனல் 112' (Channel 112) வெளியிட்ட தகவல்கள் இந்தக் கொடூரங்களை அம்பலப்படுத்தியுள்ளன.</p><h2>இழைக்கப்பட்ட போர்க்குற்றம்</h2><p> </p><p>இதனிடையே, மாஸ்கோ காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், கிடைத்துள்ள தகவலின்படி, இரவு சுமார் 8.10 மணியளவில் பிரபலமான ஒரு உணவகத்திற்கு அருகே நிகழ்ந்த வெடிவிபத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 15 பேர் பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட காயங்களுடன் தப்பியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். </p><p>இதற்கிடையில், புடினின் மிக இளம் வயது தளபதிகளில் ஒருவரான 39 வயதுடைய டிமிட்ரி மிகைலோவ், போர்க்களத்தில் FPV ட்ரோன் தாக்குதலுக்குள்ளாகி கொல்லப்பட்டதாக உக்ரேனிய தரப்பில் இருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ee4899-7de7-477b-8cf6-886895562887/26-6a70307d3c5d2.webp' /></p><p> </p><p>இசியும் (Izium) பகுதியில் ரஷ்யாவின் கொடூரமான ஆக்கிரமிப்பின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுடன் இவர் தொடர்புடையவர் என்று உக்ரேனிய விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><p>இப்போரில் டசினுக்கும் மேற்பட்ட ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். டிமிட்ரி மிகைலோவுக்கு 36 வயதாக இருந்தபோதே ஜனாதிபதி புடின் அவரை ஜெனரலாக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T06:01:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாறு காணாத வெப்பம்... பொதுமக்களுக்கு கிழக்கு ஆசிய நாடொன்று விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-korea-highest-temperature-1785726809"></link>
            <id>https://news.lankasri.com/article/south-korea-highest-temperature-1785726809</id>
            <summary type="text">ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெப்பநிலைப் பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் மிக உயர்ந்த வெப்பநிலைப் பதிவாகியுள்ளது.மிக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெப்பநிலைப் பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் மிக உயர்ந்த வெப்பநிலைப் பதிவாகியுள்ளது.</p><h2>மிக அதிகபட்ச வெப்பநிலை</h2><p>
</p><p>கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5178eb44-ea93-4d8d-bcbf-8bdaaa812379/26-6a7008c97e981.webp' /></p><p> தென்கிழக்கு நகரமான யாங்சானில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வெப்பநிலை 42.5 டிகிரி செல்சியஸை எட்டியதாக கொரிய வானிலை ஆய்வு மையம் (KMA) தெரிவித்துள்ளது; 1904-ஆம் ஆண்டில் நவீன வானிலை கண்காணிப்பு முறை தொடங்கியதிலிருந்து பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.</p><p> வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், யாங்சான் (Yangsan) பகுதி தொடர்ந்து நிலவும் வெப்ப அலையின் மையமாகத் திகழ்கிறது; அங்கு ஞாயிற்றுக்கிழமையன்று தொடர்ந்து ஐந்தாவது நாளாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. </p><p>அதேவேளை, டேகு (Daegu) மற்றும் புசான் (Busan) உள்ளிட்ட பல நகரங்களிலும் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸின் உயர் நிலைகளை எட்டி வருகிறது.</p><p></p><p> இதனிடையே, கடுமையான வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் குளிரூட்டப்பட்ட வணிக வளாகங்கள் அல்லது சிற்றுண்டிச்சாலைகளை நோக்கிப் படையெடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>ஞாயிற்றுக்கிழமையன்று 20-க்கும் மேற்பட்ட பகுதிகள் அவசர வெப்ப அலை எச்சரிக்கையின் கீழ் இருந்தன; அதிகரித்து வரும் வெப்பநிலையைச் சிறப்பாகக் கையாள்வதற்காக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய எச்சரிக்கை வகை இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bceea541-bf89-4d10-ae4b-91f87d5b9089/26-6a7008ca6d229.webp' /></p><p> </p><p>வெப்ப அலை வீசும் பகுதிகளில், அன்றைய தினத்தில் உணரப்படும் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸையோ அல்லது உண்மையான வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸையோ எட்டும் என்று கணிக்கப்படும்போது அவசரக்கால எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.</p><h2>பருவநிலை மாற்றம்</h2><p> </p><p>KMA வெளியிட்டுள்ளத் தரவுகள் அடிப்படையில், நாட்டில் வெப்ப அலை வீசும் நாட்களின் சராசரி ஆண்டு எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் இருமடங்கிற்கும் அதிகமாக அதிகரித்து 19-ஆக உயர்ந்துள்ளது. </p><p>குறைந்தபட்சம் 33 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்ட ஒரு நாள், வெப்ப அலை நாளாக வரையறுக்கப்படுகிறது.



சாங்வோன் (Changwon) நகரில் வெப்பநிலை 39.5 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருந்த தென் கொரியாவின் தொழில்முறை பேஸ்பால் லீக் தொடரின் ஒரு ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; அந்நகரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு ஆட்டம் ரத்து செய்யப்படுவது இதுவேயாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e60cecae-4a3a-4fa0-a8ca-7bd8a5575c45/26-6a7008cb1f50b.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், மனிதனால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்தின் விளைவாக, வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழக்கூடியதாகவும், அதிகத் தீவிரத்தன்மை கொண்டவையாகவும் மாறி வருகின்றன என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். </p><p>அத்துடன், உலக நாடுகளில் தீவிர வானிலை நிலையை மேலும் தீவிரமாக்கும் வகையில், இந்த ஆண்டு 'எல் நினோ' (El Niño) மீண்டும் திரும்பியுள்ளது; இது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையை உயர்த்தக்கூடிய, பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T03:11:32+00:00</updated>
        </entry>
    </feed>
