<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-06T13:40:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூச்சிகளை உண்ணும் தாவரம்... 150 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியலாளரின் கூற்று நிரூபணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scientists-identify-an-insect-eating-plant-1786021482"></link>
            <id>https://news.lankasri.com/article/scientists-identify-an-insect-eating-plant-1786021482</id>
            <summary type="text">பிரபல அறிவியலாளரான சார்லஸ் டார்வினின் பூச்சி உண்ணும் தாவரம் குறித்த கூற்று ஒன்று தற்போது நிரூபணமாகியுள்ளது.


பிரபல அறிவியலாளரான சார்லஸ் டார்வின், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல அறிவியலாளரான சார்லஸ் டார்வினின் பூச்சி உண்ணும் தாவரம் குறித்த கூற்று ஒன்று தற்போது நிரூபணமாகியுள்ளது.
</p><p>

பிரபல அறிவியலாளரான சார்லஸ் டார்வின், 150 ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட தாவரம் குறித்து, அது பூச்சி உண்ணும் தாவரமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால், அவரால் அதை நிரூபிக்கமுடியவில்லை!
</p><h3>
அறிவியலாளரின் கூற்று நிரூபணம்</h3><p>

1875ஆம் ஆண்டு, Saxifraga rotundifolia மற்றும் S. umbrosa என்னும் தாவரங்கள் பூச்சி உண்ணும் தாவரங்கள் என்று கூறியிருந்தார் டார்வின்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec712c65-b31c-4268-8761-1452135f1301/26-6a74866b8350d.webp' /></p><p>இந்த Saxifraga வகை தாவரங்களில் மெல்லிய முடி போன்ற அமைப்புகள் காணப்படுவதுடன், அந்த தாவரங்கள் பசை போன்ற ஒரு திரவத்தையும் சுரக்கின்றன.</p><p>

ஆகவே, அந்த தாவரம் பூச்சி உண்ணும் தாவரமாக இருக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்திருந்தார் டார்வின்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஒரு தாவரம் பூச்சி உண்ணும் தாவரம் என்னும் வரையறைக்குள் வரவேண்டுமானால், அந்தத் தாவரம் பூச்சிகளை கவர்ந்திழுத்து, பிடித்து வைத்து, உட்கொள்ளவேண்டும்.&nbsp;</p><p></p><p>

ஆக, Saxifraga தாவரம் பூச்சி உண்ணும் தாவரமாக இருக்கலாம் என்று டார்வின் கூறினாலும், அவரால் அதை நிரூபிக்கமுடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c33e538-2a9b-4609-aecb-d23debd70319/26-6a74866ce2ea3.webp' /></p><p>இந்நிலையில், 150 ஆண்டுகளுக்குப் பின், டார்வினின் கூற்று உண்மைதான் என்பதை ஆய்வாளர்கள் சிலர் நிரூபித்துள்ளார்கள்.
</p><p> 
சீன தலைநகரான பீஜிங்கிலுள்ள Chinese Academy of Sciences என்னும் அமைப்பிலுள்ள Kunming Institute of Botany என்னும் நிறுவன ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள்.</p><p>

அதாவது, ஒரு தாவரம் பூச்சி உண்ணும் தாவரம் என்னும் வரையறைக்குள் வரவேண்டுமானால், அந்தத் தாவரம் பூச்சிகளை கவர்ந்திழுத்து, பிடித்து வைத்து உட்கொள்ளவேண்டும்.
</p><p>
இந்த Saxifraga தாவரம், பூச்சிகளை கவர்ந்திழுப்பதை தற்போது ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள்.
</p><p>
அதாவது, Saxifraga தாவரம் ஒருவித வாசனையை வெளியிடுவதன் மூலம் பூச்சிகளைக் கவர்வது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அது மட்டுமின்றி, சிக்கிய பூச்சிகளை, phosphatase என்னும் என்சைம் மூலம் அந்த தாவரம் ஜீரணிப்பதும் தெரியவந்துள்ளது.</p><p>

இந்த Saxifraga தாவரம் உயரமான மலைகளில், கடல் மட்டத்திலிருந்து 8,000 முதல் 18,000 அடி உயரத்தில் வளர்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4b0babc-cf0d-48b6-a8bb-fea60bbdaad3/26-6a74866c35e0c.webp' /></p><p>என்னதான் அந்த தாவரத்தால் ஒளிச்சேர்க்கை மூலம் தனக்கான உணவைத் தயாரித்துக்கொள்ளமுடியும் என்றாலும், அவ்வளவு உயரத்தில் அதற்கு நைட்ரேட்கள் கிடைக்காது.
</p><p>
அப்படியானால், நைட்ரேட்டுக்கு என்ன செய்வது? மண்ணில் நைட்ரேட் கிடைக்கவில்லை என்றால், நைட்ரேட்டுக்கு ஒரே வழி பூச்சிகள்தான். ஆக, நைட்ரேட் நிறைந்துள்ள பூச்சிகளை கவர்ந்து உட்கொண்டு, தனது நைட்ரேட் தேவையை பூர்த்தி செய்துகொள்கிறது Saxifraga தாவரம்.</p><p>

அதையும், Isotope labeling என்னும் செயல்முறை மூலம் நிரூபித்துள்ளார்கள் அறிவியலாளர்கள்.
</p><p>
நைட்ரஜன் - 15 என்னும் நைட்ரஜன் ஐசோடோப்களை பூச்சிகளின் உடலுக்குள் செலுத்தி, பின் அந்த பூச்சிகளை தாவரங்களுக்கு உணவாக்கி, அதன்பின், அந்த தாவரங்களில் அந்த நைட்ரஜன் - 15 என்னும் நைட்ரஜன் ஐசோடோப்கள் உள்ளதை ஆய்வு மூலம் உறுதி செய்து, Saxifraga தாவரம் பூச்சி உண்ணும் தாவரம்தான் என்பதை நிரூபித்துள்ளார்கள் ஆய்வாளர்கள்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T13:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தித்திக்கும் சுவையில் பருப்பு போளி.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/paruppu-poli-recipe-in-tamil-1786022258"></link>
            <id>https://news.lankasri.com/article/paruppu-poli-recipe-in-tamil-1786022258</id>
            <summary type="text">போளி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.

அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பருப்பு போளி இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>போளி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.</p><p>

அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பருப்பு போளி இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li>
மைதா- 250g
</li><li>உப்பு- 1 சிட்டிகை</li><li>
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை</li><li>
எண்ணெய்- 2 ஸ்பூன்</li><li>
கடலை பருப்பு- ¾ கப்</li><li>
தண்ணீர்- 1 கப்
</li><li>வெல்லம்- 1 கப்</li><li>
ஏலக்காய் தூள்- ¼ கப்
</li><li>நெய்- 1 ஸ்பூன்</li></ul><h2>செய்முறை
</h2><p>முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிணைந்து&nbsp; எண்ணெய் சேர்த்து 3 மணி நேரம் மூடி போட்டு ஊறவைக்கவும்.</p><p>



அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து குக்கரில்&nbsp; தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்து அரைத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9f088c6-6ddd-46c1-94f1-00579b0ac91a/26-6a74897408164.webp' /></p><p>இதனையடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் அரைத்த பருப்பு, வெல்லம், ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறி கெட்டியாகி வந்ததும் இறக்கவும்.
</p><p>
அடுத்து பிணைந்து வைத்த மாவின் உள்ளே செய்த பருப்பை வைத்து மடித்து தவாவில் நெய் சேர்த்து சுட்டு எடுத்தால் சுவையான பருப்பு போளி தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T13:19:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு எதிராக வடகொரிய ஏவுகணைகளை பயன்படுத்தும் ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-deploys-missiles-in-russia-vs-ukraine-1786020022"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-deploys-missiles-in-russia-vs-ukraine-1786020022</id>
            <summary type="text">Russia-Ukraine War: உக்ரைனுக்கு எதிராக வடகொரிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துகிறது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா, வடகொரியாவின் நேரடி உதவியை அதிகரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia-Ukraine War: உக்ரைனுக்கு எதிராக வடகொரிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துகிறது.</p><p>

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா, வடகொரியாவின் நேரடி உதவியை அதிகரித்துள்ளது.
</p><h2>
வடகொரிய ஏவுகணை பிரிவு
</h2><p>
ரஷ்யாவின் வொரோனெஷ் பகுதியில் உள்ள 112-வது ஏவுகணை பிரிகேடில், வடகொரிய ஏவுகணை பிரிவு ஒன்று தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவ உளவுத்துறை அதிகாரி ஆண்ட்ரி செர்னியாக் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9942a8cf-ee06-4da0-96f9-b3a7702d3c4b/26-6a7480b9dfd3f.webp' /></p><p>இந்த பிரிவில் சுமார் 90 வடகொரிய வீரர்கள் உள்ளனர். அவர்கள் 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 6 லாஞ்சர்களுடன் உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்த தயாராக உள்ளனர்.</p><p>

ரஷ்யா, உக்ரைனின் வலுவான வான்வழி பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி, அதிக அளவில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது.</p><p>

2023 இறுதியில் இருந்து ரஷ்யா, வடகொரியாவின் KN-23 மற்றும் KN-24 வகை ஏவுகணைகளை உக்ரைனில் பயன்படுத்தி வருகிறது. </p><p>இவை ரஷ்யாவின் Iskander ஏவுகணைகளை விட அதிக தூரம் மற்றும் அதிக வெடிமருந்து சக்தி கொண்டவை. ஆனால் துல்லியம் குறைவாக இருப்பதால், பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.
</p><p></p><h2>ரஷ்யா-வடகொரியா பாதுகாப்பு ஒப்பந்தம்</h2><p>2024-இல் ரஷ்யா-வடகொரியா இரு நாடுகளும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்பின், வடகொரியா ரஷ்யாவிற்கு கோடிக்கணக்கான குண்டுகள், ஆயிரக்கணக்கான வீரர்கள், தற்போது ஏவுகணை பிரிவுகள் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
</p><p>
சமீபத்தில், உக்ரைனின் ரடுஷ்னே கிராமத்தில் வடகொரிய ஏவுகணை தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். இது, வடகொரிய ஏவுகணைகள் உக்ரைனில் பொதுமக்கள் உயிரிழப்புகளை அதிகரிக்கின்றன என்பதற்கான சான்றாகக் கருதப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/832605f1-e553-47f9-a5cf-4b90cb36e45a/26-6a7480b92dfe0.webp' /></p><h2>வல்லுநர்கள் எச்சரிக்கை
</h2><p>
உக்ரைனின் வான்வழி பாதுகாப்பு குறைபாடு, குறிப்பாக குளிர்காலத்தில் மின்சார வலையமைப்புகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாத நிலையை உருவாக்கும். இதனால், வடகொரியாவின் பல்லிஸ்டிக் ஏவுகணைகள் உக்ரைனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p>
இந்த நடவடிக்கை, ரஷ்யா-வடகொரியா இராணுவ கூட்டாண்மை மேலும் வலுப்பெறுகிறது என்பதையும், உக்ரைனின் போராட்டம் இன்னும் கடினமாகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T12:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாறும் விதி... கடுமையாகவிருக்கும் EES திட்டம்: அதிகரிக்கவிருக்கும் குழப்பங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/choas-at-airports-due-to-tighten-ees-checks-1786015994"></link>
            <id>https://news.lankasri.com/article/choas-at-airports-due-to-tighten-ees-checks-1786015994</id>
            <summary type="text">EES திட்டம் கடுமையாக்கப்பட உள்ளதால் எல்லைகளில் குழப்பங்கள் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத்தின் EES திட்டம் கடுமையாக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>EES திட்டம் கடுமையாக்கப்பட உள்ளதால் எல்லைகளில் குழப்பங்கள் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
</p><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் EES திட்டம் கடுமையாக்கப்பட உள்ளதால், எல்லைகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைமை, மேலும் மோசமடைய உள்ளது.</p><h3>

Entry/Exit System (EES)</h3><p>

ஏப்ரல் மாதம் அறிமுகமான ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) திட்டத்தின்படி, ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் குறுகிய கால பயணத்துக்காக பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், எல்லையில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1739d2b-a7b7-4b6c-90f0-2f7ada4c9b0c/26-6a7470fc79b54.webp' /></p><p>
இப்படி ஏராளமானோரின் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்யவேண்டியுள்ளதால் அதற்கு அதிக நேரம் பிடிக்கிறது.
</p><p>
இதனால், பயணிகள் எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. கால தாமதத்தால் தங்கள் விமானத்தை தவறவிடுபவர்களும் இருக்கிறார்கள்.&nbsp;</p><p></p><p>

கடுமையாகவிருக்கும் EES திட்டம்

விடயம் என்னவென்றால், எல்லைகளில் கூட்டம் அதிகரிக்கும்போது, வரிசைகள் மிக நீளமாகும்போது, சில நாடுகள் தற்காலிகமாக EES திட்டத்தை இடைநிறுத்துகின்றன.
</p><p>
ஆனால், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி முதல், EES திட்ட விதிகள் கடுமையாக்கப்பட உள்ளன. </p><p>அதாவது, இனி எல்லைகளில் கூட்டம் எவ்வளவு அதிகமானாலும், மக்கள் எவ்வளவு நீண்ட வரிசைகளில் காத்திருந்தாலும், EES திட்டம் இடைநிறுத்தப்படாது என ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சியாகிய Frontex என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.
</p><p>
ஆக, எல்லைகளிலும், விமான நிலையங்களிலும், மீண்டும் மக்கள் மிக நீண்ட நேரம், நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை உருவாகப்போகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T11:33:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் பதின்வயது ராணுவக் கல்லூரி மீது அதிரடிக் குற்றச்சாட்டுகளை அடுக்கிய பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-allege-teen-army-college-1786016058"></link>
            <id>https://news.lankasri.com/article/women-allege-teen-army-college-1786016058</id>
            <summary type="text">பிரித்தானியாவின் மிகப்பெரிய ராணுவக் கல்லூரிகளில் ஒன்றில் நிலவும் பெண் வெறுப்பு மற்றும் பாலியல் வன்முறைக் கலாச்சாரம் தொடர்பில் புகார் எழுந்துள்ளது.
பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் மிகப்பெரிய ராணுவக் கல்லூரிகளில் ஒன்றில் நிலவும் பெண் வெறுப்பு மற்றும் பாலியல் வன்முறைக் கலாச்சாரம் தொடர்பில் புகார் எழுந்துள்ளது.
</p><p>பதின்ம வயதினருக்கான பிரித்தானியாவின் மிகப்பெரிய இராணுவப் பயிற்சிக் கல்லூரிகளில் ஒன்று, திட்டமிட்ட பெண் வெறுப்புக் கலாச்சாரமும் பாலியல் வன்முறையும் நிலவுவதாகப் பல பெண் பயிற்சிப் பெறுநர்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தீவிர விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.</p><h2>குறைந்தது நான்கு பெண்கள்</h2><p> </p><p>
இளநிலை வீரர்கள் மற்றும் ஊழியர்கள் இருவராலும் பலர் பாதிப்புக்கு உள்ளானதாக அதில் கூறப்படுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba5d2b4f-f282-4e56-beb0-4f5680bc8c4b/26-6a74713d8beb8.webp' /></p><p> </p><p>வடக்கு யார்க்ஷயரின் ஹரோகேட்டில் உள்ள 'ஆர்மி ஃபவுண்டேஷன் கல்லூரியில் (AFC) கடந்த ஐந்து வருடங்களில் பயின்ற குறைந்தது நான்கு பெண்கள், தங்களுக்கு 17 வயதாக இருந்தபோது கூட்டுப் பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல் மற்றும் மறைந்திருந்து வேடிக்கை பார்க்கும் செயல் ஆகியவற்றிற்கு ஆளாக்கப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். </p><p>மட்டுமின்றி, அக்காலகட்டத்திற்குப் பிறகு ராணுவத்திலிருந்து வெளியேறிய அனைத்துப் பெண்களும், அந்தப் போர் பயிற்சி மையத்தில் பணியாளர்களாலேயே ஊக்குவிக்கப்படும் ஆபத்தான வகையிலான பெண் வெறுப்பு மற்றும் பாலியல் வன்முறை கலாச்சாரம் நிலவுவதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். </p><p>
பிரித்தானியாவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான மிகப்பெரிய இராணுவப் பயிற்சிக் கல்லூரி AFC ஆகும். இராணுவத்தில் சேரும் 16 வயதுடைய அனைத்துப் புதிய வீரர்களும் இந்தப் பயிற்சிப் பள்ளிக்கே வருகின்றனர்; தற்போது இங்குள்ள மொத்தம் 889 பயிற்சியாளர்களில் குறைந்தது 70 பேர் பெண் இளம் வீரர்கள் ஆவர்.</p><p></p><p>
</p><p>பிரித்தானிய ராணுவத்தில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை இந்த வேதனையான தகவல்கள் மேலும் அதிகரித்துள்ளன; இது தொடர்பான நாட்டின் முதல் உத்தியோகப்பூர்வ ஆய்வில், </p><p>கடந்த ஓராண்டில் ராணுவத்தில் பணியாற்றும் பெண்களில் 67 சதவீதம் பேர் ஆண் சக ஊழியர் ஒருவரால் குறைந்தது ஒரு முறையாவது ஒப்புதலின்றி பாலியல் ரீதியான நடத்தைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. </p><p>இந்த நிலையில், AFC-யின் செயல்பாடுகள் குறித்த பிபிசி-யின் விசாரணையில், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஓராண்டு காலத்தில், அக்கல்லூரி தொடர்பான பாலியல் குற்றங்கள் குறித்த 16 புகார்கள் நார்த் யார்க்ஷயர் காவல்துறையிடம் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. </p><p>பதிவு செய்யப்பட்ட அந்தக் குற்றங்களில், உடைகள் இல்லாதக் காட்சி, மறைந்திருந்து நோக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கையில், இந்தப் புகார்கள் வழக்குத் தொடர்வதற்கு வழிவகுத்தனவா என்பதை வெளிப்படுத்தவில்லை. </p><p>ஜனவரி 2018 முதல் ஜூன் 2025 வரையிலான காலத்தில், அக் கல்லூரியில் முறையற்ற பாலியல் நடத்தை தொடர்பான மொத்தம் 176 புகார்கள் அளிக்கப்பட்டதாக பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) தரவுகள் தெரிவிக்கின்றன; இவற்றில் 32 புகார்கள் நிரந்தரப் பணியாளர்கள் மீதும், 144 புகார்கள் இளநிலை வீரர்கள் மீதும் அளிக்கப்பட்டவை ஆகும்.</p><h2>கனவு சிதைந்துபோனது</h2><p> </p><p>பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவிக்கையில், சிறுவயது முதலே ஒரு ராணுவ வீரராக விரும்பியதாகவும்; ஆனால், ராணுவப் பயிற்சி மையத்தில் சக வீரர்கள் பலரால் பல மணிநேரம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது அவளது கனவு சிதைந்துபோனது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69ca060b-b6c8-4bf8-a816-378006bb2bc9/26-6a74713cd96c8.webp' /></p><p> </p><p>தாக்குதல் நடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் ராணுவத்திலிருந்து விலகியதாகவும் குறிப்பிட்டுள்ளார்; அவரது அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அந்தத் தாக்குதல் நடந்த துல்லியமான காலப்பகுதி வெளியிடப்படவில்லை. </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், தமக்கு நேர்ந்தது தொடர்பில் அவர் பொலிசாரை நாடி புகார் அளித்தும், அதில் வழக்கு ஏதும் பதியப்படவில்லை என்றார். </p><p>பின்னர் அவர் நார்த் யார்க்ஷயர் காவல்துறையுடன் ஒரு நிதி சமரசத்தை எட்டியுள்ளார், இதில் அதிகாரிகள் தரப்பில் எந்தப் பொறுப்பையும் ஒப்புக்கொள்ளவில்லை. </p><p>கடந்த ஐந்து ஆண்டுகளில், AFC-யில் உள்ள பல மூத்த பயிற்றுனர்கள் உடல் மற்றும் பாலியல் வன்முறை குற்றங்களுக்காக இராணுவ நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T11:32:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேற்று கடகத்தில் நுழைந்த புதன்.., பணக்கார யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-peyarchi-1786014184"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-peyarchi-1786014184</id>
            <summary type="text">நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.</p><p>

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
</p><p>
இந்நிலையில், மிதுன ராசியில் பயணித்து வரும் புதன் ஆகஸ்ட் 05ஆம் திகதியான நேற்று கடக ராசிக்குள் நுழைந்துள்ளார்.
</p><p>
மேலும், கடக ராசியில் சூரியனுடன் சேர்ந்து புதாதித்ய ராஜயோகமும் உருவாகிறது.
</p><p>
அந்தவகையில், கடக ரசிக்கும் செல்லும் புதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>ரிஷபம் </h2><ul><li>கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். </li><li>தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.</li><li> பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். </li><li>மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். </li><li>வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். </li><li>திடீர் பண வரவு கிடைக்கும். </li><li>வணிகம் தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c32f13a0-33cb-44b1-8bcd-72943e16f803/26-6a746aa07cd2e.webp' /></p><h2>கடகம் </h2><ul><li>வியாபாரத்தில் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். </li><li>வருமானம் அதிகரிக்கும். </li><li>நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். </li><li>பணியிடத்தில் செயல்திறன் அதிகரிக்கும். </li><li>உயர் அதிகாரிகள் உங்கள் வேலையை பாராட்டுவார்கள்.</li><li> சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. </li><li>நிதி நிலைமை மேம்படும்.</li><li> சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். </li><li>வேலைகள் ஒவ்வொன்றும் திட்டமிட்டபடி நடக்கும். </li><li>பரம்பரை சொத்து தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b441c01a-e628-4e8c-ab32-ae30741cd922/26-6a746aa154a2b.webp' /></p><p> </p><h2>
சிம்மம் </h2><ul><li>அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.</li><li> கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். </li><li>தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். </li><li>சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.</li><li> வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.</li><li>நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.</li><li>நல்ல லாபமும் கிடைக்கும்.</li><li> குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.</li></ul><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8edfe10c-d173-4812-880f-6dec62403266/26-6a746aa20694f.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-06T11:07:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அரசு எண்ணெய் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-state-oil-company-bank-accounts-1786011522"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-state-oil-company-bank-accounts-1786011522</id>
            <summary type="text">கடன் காரணமாக ஈரான் அரசு எண்ணெய் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கடன் காரணமாக, அரசுக்குச் சொந்தமான ஒரு வங்கி, தேசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடன் காரணமாக ஈரான் அரசு எண்ணெய் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
</p><p>அதிகரித்து வரும் கடன் காரணமாக, அரசுக்குச் சொந்தமான ஒரு வங்கி, தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.</p><h2>முடக்கப்பட்ட கணக்குகள்</h2><p>
நாட்டின் மிக முக்கியமான வருவாய் ஆதாரம் எதிர்கொள்ளும் நெருக்கடியை இந்த விவகாரம் அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd119bb8-0bbd-40df-bded-e0f05f97cc4c/26-6a745f85437b7.webp' /></p><p> </p><p>'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, 'பேங்க் ஆஃப் இண்டஸ்ட்ரி அண்ட் மைன்' (Bank of Industry and Mine) நிலுவைத் தொகை அல்லது முடக்கப்பட்ட கணக்குகள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை. </p><p>மட்டுமின்றி, NIOC-இன் சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை 2027 மார்ச் மாதம் வரையான ஈரானிய நாட்காட்டி ஆண்டின் இறுதி வரை ஒத்திவைக்கும் ஈரானின் வரவு-செலவுத் திட்டச் சட்டத்தின் விதிகள் இருந்தபோதிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>இதனிடையே, ஆசாதேகன் (Azadegan) எண்ணெய் வயலிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, தேசிய மேம்பாட்டு நிதியத்திற்கு (NDF) சுமார் 17 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த NIOC-ஆல் இயலாது என்று அந்த நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். </p><p>நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான இதன் வளர்ச்சி, அதிகாரத்துவ தாமதங்கள் மற்றும் நிர்வாகத் தடைகளால் மந்தமடைந்துள்ளது.</p><p></p><p> </p><p>தடைகள், பல ஆண்டுகால முதலீட்டுக் குறைபாடு மற்றும் உள்நாட்டு நிதியுதவியை நம்பியிருத்தல் ஆகியவை NIOC-இன் இருப்புநிலைக் குறிப்பில் அழுத்தத்தை அதிகரித்துள்ளதால், அந்நிறுவனம் மீதான நிதி நெருக்கடிகள் அதிகரித்து வருவதை இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. </p><p>அமெரிக்கத் தடைகள் காரணமாக நாட்டின் எரிசக்தித் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் இல்லாத நிலையில், எண்ணெய் வயல் மேம்பாட்டுக்கு நிதியளிக்க என்.ஐ.ஓ.சி நிறுவனம், என்.டி.எஃப் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களை அதிகளவில் சார்ந்துள்ளது.</p><h2>அரசின் சட்டப் பிரிவு</h2><p> </p><p>இது, ஒரு இறையாண்மை நிதியாக (sovereign wealth fund) உருவாக்கப்பட்ட NDF-ஐத் திட்டங்களுக்கான நிதியளிப்பு ஆதாரமாக மாற்றிவிட்டது; அதேவேளையில், எண்ணெய் நிறுவனத்தை அதிகரித்து வரும் கடன் சுமைக்கு உள்ளாக்கியுள்ளது. </p><p>சமீபத்திய டிஜிட்டல் விலைப்பட்டியல் விதிகளைக் கடைபிடிப்பது தொடர்பாக என்.ஐ.ஓ.சி-க்கும் வரி அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0620e4a-85c3-44a2-abc2-ce8e1832a03e/26-6a745f848378c.webp' /></p><p> </p><p>இப்பிரச்சினை காரணமாக, வரி அதிகாரிகள் முன்னதாக NIOC-இன் சில கணக்குகளை முடக்கி, அவற்றில் இருந்த நிதியை எடுத்திருந்தனர்; எனினும், அரசின் சட்டப் பிரிவு தலையிட்டதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை பின்னர் நிறுத்தப்பட்டது. </p><p>இதனிடையே, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தனது எண்ணெய் விற்பனை மற்றும் ரகசிய ஏற்றுமதிப் பரிவர்த்தனைகளைச் சாதாரண வணிக நடவடிக்கைகளாகக் கருதக்கூடாது என்று NIOC வாதிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T10:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Ather-ன் புதிய Konarc மின்சார ஸ்கூட்டர் - ஆகஸ்ட் 29 அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ather-konarc-electric-scooter-india-launch-1786010281"></link>
            <id>https://news.lankasri.com/article/ather-konarc-electric-scooter-india-launch-1786010281</id>
            <summary type="text">Ather Energy நிறுவனம் தனது புதிய Konarc எனப்படும் மின்சார ஸ்கூட்டரின் பெயரை இன்று அறிவித்துள்ளது.

Ather Konarc ஆகஸ்ட் 29-ஆம் திகதி நடைபெறும் Commun...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ather Energy நிறுவனம் தனது புதிய Konarc எனப்படும் மின்சார ஸ்கூட்டரின் பெயரை இன்று அறிவித்துள்ளது.
</p><p>
Ather Konarc ஆகஸ்ட் 29-ஆம் திகதி நடைபெறும் Community Day நிகழ்வில் அறிமுகமாகிறது.
</p><p>
Konarc, முன்பு EL01 Concept என அறிமுகப்படுத்தப்பட்ட மாடலின் தயாரிப்பு பதிப்பாகும். இது Rizta-வின் கீழ் வரிசையில் இடம் பெறும் குடும்ப ஸ்கூட்டராகக் கருதப்படுகிறது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Presenting Ather Konarc!<br><br>Launching on 29th August 2026 at Ather Community Day. <a href="https://t.co/D6uG0bjgpw">pic.twitter.com/D6uG0bjgpw</a></p>&mdash; Tarun Mehta (@tarunsmehta) <a href="https://x.com/tarunsmehta/status/2084931493055606914?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>வடிவமைப்பு அம்சங்கள்
</h2><ul><li>
முன்புறத்தில் அகலமான LED Daytime Running Light</li><li>

ஒளிரும் வடிவில் Ather லோகோ </li><li>

முன்புற டிஸ்க் பிரேக்
</li><li>
ஒற்றை சீட், Rizta-வுடன் ஒப்பிடும்போது சற்று குறுகியது</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6ece03b-0f0f-44cb-b104-50b2f1f6967d/26-6a745cb97ade2.webp' /></p><h2>Konarc-ன்&nbsp;<span style="color: inherit; font-size: 1.75rem;">பிளாட்ஃபார்ம் &amp; சஸ்பென்ஷன்:</span></h2><ul><li>
புதிய Steel Unibody Platform
</li><li>
14-inch முன்சக்கரம் (Ather-ல் முதல் முறை)</li><li>

12-inch பின்சக்கரம்
</li><li>
முன்புறம் Telescopic Forks, பின்புறம் Single Shock Absorber</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a7c3967-a494-479b-8480-94b5599d4af7/26-6a745cba2daee.webp' /></p><p>
</p><h2>
பேட்டரி &amp; விலை:
</h2><ul><li>
2kWh முதல் 4kWh வரை பேட்டரி விருப்பங்கள்
</li><li>
எதிர்காலத்தில் 5kWh பேட்டரி கிடைக்க வாய்ப்பு
</li><li>
Built-in Charger வசதி
</li><li><b>
விலை:</b> ரூ.1 லட்சம் (அறிமுக விலை, ex-showroom)
</li><li>
மேம்பட்ட மாடல்கள் ரூ.1.25 லட்சம் வரை இருக்கலாம்
</li></ul><p></p><p>Konarc, Ather-இன் புதிய மகாராஷ்டிரா தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. விரிவான விவரங்கள், வேரியண்ட்கள், விலை விவரங்கள் ஆகஸ்ட் 29-ஆம் திகதி அறிமுக நாளில் அறிவிக்கப்படும்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T10:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[5,000க்கும் மேற்பட்ட வாடகை வீடுகள்: கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/carney-promises-5000-new-rental-homes-for-toronto-1786010547"></link>
            <id>https://news.lankasri.com/article/carney-promises-5000-new-rental-homes-for-toronto-1786010547</id>
            <summary type="text">ரொரன்றோ மக்களுக்காக சுமார் 5,600 வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.


கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து ரொரன்றோ நகர மக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரொரன்றோ மக்களுக்காக சுமார் 5,600 வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><p>


கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து ரொரன்றோ நகர மக்களுக்காக 5,600க்கும் அதிகமான வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
</p><h3>
5,000க்கும் மேற்பட்ட வாடகை வீடுகள்
</h3><p>
கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து 2.7 பில்லியன் டொலர்கள் முதலீட்டில் 18 வீடுகட்டும் திட்டங்களை செயல்படுத்த உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05b4a449-e360-4c4c-83f9-40f4c5a3471e/26-6a745bb52f0dd.webp' /></p><p>
அடுத்த மூன்று ஆண்டுகளில், 5,600க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 4,500க்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட இருப்பதாக கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் அனைத்து வீடுகளுமே வாடகைக்கு விடப்படுவதற்காகவே கட்டப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:03:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணைத் தாக்குதல்களுக்கு நடுவில் உக்ரைன் சென்றுள்ள பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-defence-sec-streeting-visit-ukraine-amid-attack-1786009664"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-defence-sec-streeting-visit-ukraine-amid-attack-1786009664</id>
            <summary type="text">ரஷ்யா, உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், உக்ரைன் சென்றுள்ளார் பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்.


ரஷ்யா, ஏவுகணைகள் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா, உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், உக்ரைன் சென்றுள்ளார் பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்.</p><p>


ரஷ்யா, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், பிரித்தானிய பாதுகாப்புச் செயலர், உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><h3>

உக்ரைன் சென்றுள்ள பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்</h3><p>

ரஷ்யா, 24 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகள், 4 ஹைப்பர்சோனிக் வகை ஆயுதங்கள் மற்றும் 100க்கும் அதிகமான ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccb93133-2e01-45bb-a8b3-01180581de38/26-6a745841e6dd4.webp' /></p><p>
ஆனால், அவை எதையும் உக்ரைன் தடுத்து நிறுத்தவில்லை! காரணம், அவற்றைத் தடுக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உக்ரைனில் தட்டுப்பாடு நிலவுகிறது.
</p><p>
இப்படிப்பட்ட ஒரு சூழலில், பிரித்தானிய பாதுகாப்புச் செயலராக பதவியேற்றுள்ள வெஸ் ஸ்ட்ரீட்டிங் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
</p><p>
அவரிடம் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உதவி கோரிய நிலையில், உக்ரைனுக்குத் தேவையான ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் சில பிரித்தானியாவிடம் இல்லை.&nbsp;</p><p></p><p>
ஆகவே, தங்களிடம் அந்த பாதுகாப்புக் கருவிகள் இல்லையென்றாலும், அவை யாரிடம் உள்ளதோ அவர்களிடம் தான் உதவி கோர உள்ளதாக ஸ்ட்ரீட்டிங் தெரிவித்துள்ளார்.
</p><p>
பின்னர் ஊடகவியலாளர்களுடன் பேசும்போது புடின் குறித்து அவர்கள் கேள்வி எழுப்ப, தங்களுக்கு ரஷ்ய மக்களுடன் பிரச்சினை இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்வதாகவும், புடினுடன் மட்டுமே தங்களுக்குப் பிரச்சினை என்றும் கூறியுள்ளார் ஸ்ட்ரீட்டிங்.</p><p>

அத்துடன், தாங்கள் ரஷ்யாவுடன் போரிட எப்போதுமே விரும்பியதில்லை என்றும், இப்போதும் விரும்பவில்லை என்றும் கூறியுள்ள ஸ்ட்ரீட்டிங், தாங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக மட்டுமே நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T09:47:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் என்ன?(06-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1786009062"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1786009062</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (06-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (06-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,353,918.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 47,760.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 382,100.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 43,780.00.</p><p>

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 350,250.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 41,790.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 334,350.00.</p>]]></content>
            <updated>2026-08-06T09:37:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்ட இருவர்: குடியுரிமை அளித்த நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iranian-footballers-become-australian-1786008742"></link>
            <id>https://news.lankasri.com/article/iranian-footballers-become-australian-1786008742</id>
            <summary type="text">அவுஸ்திரேலியக் குடியுரிமை வழங்கப்பட்டதில் பெருமிதம் கொள்வதாக ஈரானைச் சேர்ந்த இரண்டு முன்னாள் கால்பந்து வீராங்கனைகள்.
போட்டிக்கு முன்னதாகத் தேசிய கீதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியக் குடியுரிமை வழங்கப்பட்டதில் பெருமிதம் கொள்வதாக ஈரானைச் சேர்ந்த இரண்டு முன்னாள் கால்பந்து வீராங்கனைகள்.
</p><p>போட்டிக்கு முன்னதாகத் தேசிய கீதம் பாட மறுத்ததற்காகத் தங்கள் சொந்த நாட்டில் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்றதில் பெருமை கொள்வதாக ஈரானைச் சேர்ந்த இரண்டு முன்னாள் கால்பந்து வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>ஏழு உறுப்பினர்கள்</h2><p>
</p><p>மார்ச் மாதத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ணம் போட்டியின்போது நிகழ்ந்த பரபரப்பான போராட்டத்தைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பைக் கோரிய ஈரானியக் குழுவின் ஏழு உறுப்பினர்களில் ஃபதேமே பசந்திதே மற்றும் அத்தேஃபே ரமேசனிசாதே ஆகியோரும் அடங்குவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d44d5f0-0086-4018-8460-69b1f2689c9e/26-6a7454a9068bd.webp' /></p><p> அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் பாதுகாப்பு கோரிக்கைகள் முன்வைத்தது ஈரானின் தலைவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதே வேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த வீரர்களின் துணிச்சலைப் பாராட்டிய நிலையில், </p><p>அவர்களில் ஐவர் பின்னர் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு நாடு திரும்பினர். இருப்பினும், பசந்திதே மற்றும் ரமேசனிசாதே ஆகியோர் அவுஸ்திரேலியாவில் தங்கிவிட்டனர்; உள்விவகார அமைச்சர் டோனி பர்க் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அவர்களுக்கு அவுஸ்திரேலியக் குடியுரிமை வழங்கப்பட்டது.</p><p></p><p> </p><p>தஞ்சம் கோரி ஒரு வாரம் கழித்து, அந்த ஜோடி அவுஸ்திரேலிய கிளப்பான பிரிஸ்பேன் ரோருடன் சிரித்தபடி பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியானது; அக்கழகம் புதன்கிழமை அன்று அந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தது. </p><p>இதனிடையே, ஈரானுக்குத் திரும்பியதிலிருந்து, அணியின் மற்ற உறுப்பினர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef90ffc3-8913-4396-b39e-86f2be2b4e9d/26-6a7454a9ac5d9.webp' /></p><p> </p><p>ஆனால், தேசிய அணியின் விளையாட்டு உடைகளை அணிந்தும், தலைமுடியை மறைத்தபடியும், துருக்கியிலிருந்து பேருந்து மூலம் அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குள் நுழைவதை AFP செய்தி நிறுவனம் பதிவு செய்திருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T09:30:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை - வீடியோ காலில் பார்த்த மகள்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/daughters-watch-father-funeral-on-video-call-1786008439"></link>
            <id>https://news.lankasri.com/article/daughters-watch-father-funeral-on-video-call-1786008439</id>
            <summary type="text">முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை என தெரிவித்துள்ள மகள்கள் வீடியோ கால் மூலம் இறுதிச்சடங்கை பார்த்துள்ளனர். 

தந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை என தெரிவித்துள்ள மகள்கள் வீடியோ கால் மூலம் இறுதிச்சடங்கை பார்த்துள்ளனர். </p><h3>

தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை</h3><p>

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த 74 வயதான துணி வியாபாரி சிவசரண் ராம்ரதன் குப்தாவிற்கு 3 மகள்கள் உள்ளனர். </p><p>

சிவசரண் தனது 3 மகள்களையும் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்து தந்தையாக தனது கடமையை நிறைவேற்றியுள்ளார். 2 மகள்கள் ஆசிரியையாக உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cadbfeb-73ef-4ce7-8bf7-4142209c6d7a/26-6a745378ecb91.webp' /></p><p>

ஒரு மகள் நேபாளத்திலும், மற்றொரு மகள் உத்தரபிரதேசத்திலும், இன்னொரு மகள் மும்பையில் வசித்து வந்தாலும், தனது பெற்றோரை கவனித்து கொள்ள முடியாது என ஹரியானாவில் உள்ள சோனிபட் முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர். </p><p>

அவரது மனைவி மீனா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமான நிலையில், சிவசரணும் கடந்த சில மாதங்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டு தற்போது காலமாகியுள்ளார்.</p><p> 

சிவசரணின் இறப்பு குறித்து அவரது மகள்களுக்கு முதியோர் இல்ல நிர்வாகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p> 

ஆனால், நேரில் வந்து கலந்து கொள்ள நேரமில்லை என தெரிவித்துள்ள மகள்கள் வீடியோ கால் மூலமாக இறுதிசடங்கை பார்த்துள்ளனர். </p><p>

இது குறித்து பேசிய முதியோர் இல்ல நிர்வாகி, அவர் முதியோர் இல்லத்தில் இருந்த தொலைபேசி மூலம் தனது மகள்களுடன் அடிக்கடி பேசி வந்தார். </p><p>ஆனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு, அவர்களது தொலைபேசி அழைப்புகள் குறைந்துவிட்டன.
</p><p>
அவர் இறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பே அவரின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து அவரது மகள்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அவரைப் பார்க்க வரவில்லை.</p><p> 

அவர் இறந்த பின்னர் நிர்வாகம் மீண்டும் மகள்களைத் தொடர்புகொண்டு, சோனிபட்டுக்கு வந்தால் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்து தருவதாகக் கூறியது. 

ஆனால், பயணம் செய்யத் தங்களுக்கு நேரமில்லை என்றும்,&nbsp; வீடியோ காலில் பார்ப்பதாகவும் மகள்கள் தெரிவித்துள்ளனர். </p><p>ஒரு மகள் இறுதிச்சடங்கை முறையாக நடத்த கோரி, ஆன்லைனில் ரூ. 5,100 அனுப்பினார். 

உடலை தகனம் செய்த பிறகு, இறுதிச் சடங்கு நிகழ்வுகளின் வீடியோக்களை அனுப்புமாறு கேட்டனர். </p><p>அவர்களில் ஒருவர் தொலைபேசி அழைப்பில், "இது இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும்? நாங்கள் சாப்பிடவும் குளிக்கவும் வேண்டும்" என்று கூறுவது கேட்டது" என தெரிவித்துள்ளார். </p><p>

முதலில் அவரின் அஸ்தியை கொடுக்குமாறு கேட்ட அவரது மகள்கள், பின்னர், சோனிபட்டுக்கு வர தங்களுக்கு நேரமில்லை என்று கூறி அஸ்தியை கங்கையில் கரைக்குமாறு முதியோர் இல்ல நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T09:27:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்த குட்டியை 11 நாட்களாக தாங்கிச் செல்லும் தாய் டால்பின்., மனதை உருக்கும் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mother-dolphin-mourns-dead-calf-for-days-1786008201"></link>
            <id>https://news.lankasri.com/article/mother-dolphin-mourns-dead-calf-for-days-1786008201</id>
            <summary type="text">இறந்த குட்டியை 11 நாட்களாக தாங்கிச் செல்லும் தாய் டால்பினின் மனதை உருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியப் பெருங்கடலில், Fraggle என அழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறந்த குட்டியை 11 நாட்களாக தாங்கிச் செல்லும் தாய் டால்பினின் மனதை உருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
</p><p>
இந்தியப் பெருங்கடலில், Fraggle என அழைக்கப்படும் பெண் டால்பின் தனது இறந்த குட்டியை நீரில் மூழ்காமல் தாங்கி சென்ற மனதை உருக்கும் காட்சி விஞ்ஞானிகள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களால் பதிவு செய்யப்பட்டது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbA4K9RTN2l/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbA4K9RTN2l/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbA4K9RTN2l/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Geographe Marine Research (@geographemarineresearch)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>குட்டி பிறந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில், அதிக சுவாச வீதம் காரணமாக அது உயிரிழந்தது. அதனை தாய் டால்பின் தனது முதுகில் தாங்கி, நீரில் மூழ்காமல் பல நாட்கள் எடுத்துச் சென்றது.

இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c99422b-9beb-43f9-a96c-753898bd134b/26-6a7453b58e2d0.webp' /></p><p>அவுஸ்திரேலியாவின் Geographe Marine Research அமைப்பு வெளியிட்ட இந்த வீடியோவில், “ஃப்ராகிள் கடந்த காலத்தில் நான்கு குட்டிகளை இழந்துள்ளது. இம்முறை கூட அது தன் குட்டியை உயிருடன் வைத்திருக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

விஞ்ஞானிகள் கூறுவதாவது, டால்பின்கள் மிகுந்த சமூக உணர்வும், அறிவும் கொண்டவை. குட்டி இறந்தாலும், தாய் டால்பின் அதை நீண்ட நாட்கள் தாங்கிச் செல்லும் பழக்கம், ‘மரண துக்க சடங்கு’ எனக் கருதப்படுகிறது.
</p><p></p><p>சில சமயங்களில் கூட்டத்தில் உள்ள மற்ற டால்பின்களும் துக்கத்தில் பங்கேற்று, தாய் டால்பினுக்கு துணை நிற்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம், விலங்குகளின் உணர்ச்சிகள் மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு இணையானவை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T09:26:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து ஒரு புதிய மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fake-taxi-driver-target-tourists-in-france-1786003694"></link>
            <id>https://news.lankasri.com/article/fake-taxi-driver-target-tourists-in-france-1786003694</id>
            <summary type="text">பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து டெக்சி மோசடி ஒன்று துவங்கியுள்ளது.


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் போலி டெக்சி சாரதிகள் சுற்றுலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து டெக்சி மோசடி ஒன்று துவங்கியுள்ளது.
</p><p>

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் போலி டெக்சி சாரதிகள் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து மோசடி ஒன்றில் ஈடுபட்டுவருவதாக எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.</p><h3>
அது என்ன மோசடி?</h3><p>

பிரபல பிரெஞ்சு ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர்கள் சிலர், நீண்ட காலமாக பாரீஸில் வாழ்ந்துவரும் அமெரிக்க சமூக ஊடகவியலாளர்கள் சிலர் உதவியுடன் இப்படி ஒரு மோசடி நடைபெறுவதை உறுதி செய்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/027838eb-e133-4fd1-8d1a-0560867b17d4/26-6a7440efdaba4.webp' /></p><p>
வழக்கமாக அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் எப்படி உடை அணிவார்களோ அதேபோல உடையணிந்த இந்த குழு, விமான நிலையமொன்றின் வாசலில் ஒன்றும் தெரியாததுபோல் விழித்துக்கொண்டு நிற்க, உடனே அவர்களை அணுகியுள்ளார் மோசடியாளர் ஒருவர்.
</p><p>
அவர் ஏற்பாடு செய்த டெக்சி, நேரடியாக பாரீஸிலுள்ள ஒரு இடத்துக்குச் செல்வதற்கு பதிலாக, வேண்டுமென்றே பல தெருக்களை சுற்றிவர, டெக்சியின் மீற்றரில் கட்டணம் ஏறிக்கொண்டே சென்றுள்ளது.</p><p>
பயணிகள் இறங்கியதும், அவர்களிடம் 190 யூரோக்கள் கேட்டுள்ளார் டெக்சியின் சாரதி.&nbsp;</p><p></p><p>
விடயம் என்னவென்றால், விமான நிலையத்திலிருந்து இவ்வளவு தொலைவுக்கு 56 முதல் 65 யூரோக்கள்தான் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆக, அந்த சாரதி ஏமாற்றுகிறார் என்பது தெள்ளத்தெளிவாக புரிந்துள்ளது. அத்துடன், இந்த மோசடியாளர்கள் குற்றச்செயல்கள் புரியும் ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் தனியாக செயல்படவில்லை, பலர் இணைந்தே இத்தகைய மோசடிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
</p><p>
இந்நிலையில், இந்த டெக்சி மோசடியில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 45,000 யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்படுவதுடன், அவர்களுடைய வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
இந்த மோசடியிலிருந்து தப்புவது எப்படி?</h3><p>

பாரீஸ் விமான நிலையத்திலிருந்து நகருக்குள் பயணிக்க இவ்வளவு தொகைதான் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பயணிகளின் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் கிடையாது.
</p><p>
சுற்றுலாப்பயணிகள் இந்த விடயங்களை நினைவில் வைத்துக்கொள்வதுடன், அதிகாரப்பூர்வ டெக்சி நிறுத்துமிடங்களில் நிறுத்தப்பட்டுள்ள டெக்சிகளை பயன்படுத்துமாறும், யாராவது தன்னை டெக்சி சாரதி என்று கூறி அணுகினால் அவர்களை தவிர்க்குமாறும் பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
</p><p>
முறைப்படி உரிமம் பெற்ற டெக்சி சாரதிகளுக்கு கட்டணம் குறித்து பேரம் பேச அனுமதி இல்லை. ஆக, யாராவது உங்களிடம் டெக்சி கட்டணம் குறித்து பேரம் பேசினாலே அவர் உரிமம் பெறாதவராக இருக்கலாம் என உஷாராகிவிடுவது நல்லது என்கிறார்கள் அதிகாரிகள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T08:09:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன் சாதாரண ட்ரோன் அல்ல: அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minister-says-explosive-drone-at-german-airport-1786002626"></link>
            <id>https://news.lankasri.com/article/minister-says-explosive-drone-at-german-airport-1786002626</id>
            <summary type="text">ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையத்தில், கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன்களுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.


ஜேர்மன் விமான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையத்தில், கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன்களுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p>


ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், உக்ரைன் விமானம் ஒன்றினருகே மர்ம ட்ரோன் ஒன்று காணப்பட்டதால் பரபரப்பு உருவான நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் கூடுதல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன!
</p><h3>
விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்</h3><p>

ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.</p><p>

மேலும், வானில் மர்மப் பொருள் ஒன்று தென்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் விமானம் ஒன்று உட்பட பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7930b5ad-6359-4686-93a9-fed138807e1d/26-6a743cc421ce4.webp' /></p><p>
இதற்கிடையில், விமான நிலையத்தின் ஓடுபாதை ஒன்றில் மர்மப் பொருள் ஒன்று கிடப்பது தெரியவரவே, கூடுதல் பரபரப்பு உருவானது.&nbsp;</p><p></p><p>
மொத்தத்தில், நேற்று Leipzig-Halle விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
</p><h3>
அதிர்ச்சித் தகவல்</h3><p>

இந்நிலையில், Leipzig-Halle விமான நிலையத்தின் ஓடுபாதையில், கண்டுபிடிக்கப்பட்ட மர்மப் பொருள், வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் என தெரியவந்துள்ளதால் கடும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa66180-4663-4863-957a-babaa925fdee/26-6a743cc4ca320.webp' /></p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் தோப்ரின்ட், ஏற்கனவே ட்ரோன்களால் பிரச்சினைகள் நிலவிவரும் நிலையில், இப்போது வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டுள்ள ட்ரோன்கள் விமான நிலையங்களில் கண்டுபிடிக்கப்படுவது புதிய அச்சுறுத்தல் ஆகும் என்று கூறியுள்ளார்.</p><p>

அத்துடன், ட்ரோன்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களின்போது, அவை எங்கிருந்து வந்தது என்பது உடனடியாக தெரியவராதது கூடுதல் பிரச்சினையாகும் என்றும் கூறியுள்ளார் அலெக்சாண்டர்.</p><p>

ஆக, விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன் எங்கிருந்து வந்தது, அதன் பின்னணியில் இருப்பது யார், அந்த ட்ரோனுடன் இனைக்கப்பட்டிருந்தது என்ன வகையான வெடிப்பொருள் என்பது போன்ற விடயங்கள் குறித்து விசாரணை துவக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T07:51:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் தாக்கி உயிரிழந்த கால்பந்து வீரர்., பலர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thai-footballer-lightning-strike-during-match-1786002399"></link>
            <id>https://news.lankasri.com/article/thai-footballer-lightning-strike-during-match-1786002399</id>
            <summary type="text">தாய்லாந்தில் மின்னல் தாக்கி கால்பந்தாட்ட வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
24 வயது கால்பந்து வீரர்தாய்லாந்தின் நரதிவாட் மாகாணத்தில் நடைபெற்ற நட்பு ரீதியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தில் மின்னல் தாக்கி கால்பந்தாட்ட வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
</p><h2>24 வயது கால்பந்து வீரர்</h2><p>தாய்லாந்தின் நரதிவாட் மாகாணத்தில் நடைபெற்ற நட்பு ரீதியான கால்பந்து போட்டி ஒன்றில், மின்னல் தாக்கியதில் 24 வயது கால்பந்து வீரர் சஃப்வான் அவாயே (Sofwan Awae) உயிரிழந்தார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ar" dir="rtl">🔴: قبل ساعات في تايلاند واثناء مباراة ودية ضربت صاعقة برق مهاجم في نادي يالا التايلاندي اثناء المباراة ومات على الفور…<br><br>المهاجم اسمه صفوان أواي &quot;Safwan Awae&quot; وعمره 24 عام وهنا المقطع للحظة ضرب الصاعقة له مباشره في الملعب تصور بالكامل، والله مشهد مرعب ومهيب <a href="https://t.co/zQcpUwVtHS">pic.twitter.com/zQcpUwVtHS</a></p>&mdash; MOATH | معاذ (@M0ATH) <a href="https://x.com/M0ATH/status/2084978894550294909?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்த சம்பவம் சுங்காய் கோலோக் நகரில் உள்ள சாந்திபாப் மைதானத்தில், மாலை 5.30 மணியளவில் கடும் மழை பெய்துகொண்டிருந்தபோது நடந்தது.</p><p>Abu x Nong Sirin மற்றும் SAMCOLT அணிகள் இடையே நடைபெற்ற Golok FA Cup அரையிறுதி போட்டியின் போது, திடீரென மைதானத்தில் மின்னல் விழுந்தது. அதனால் வீரர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.</p><p>

சஃப்வான், Yala FC அணிக்காக விளையாடியவர். அவர் முன்னதாக Pattani FC-க்கும் விளையாடியிருந்தார். சில நாட்களுக்கு முன்பே Yala FC-யுடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dea0652-3e77-43b8-8f8a-ccc953bd155a/26-6a743be25065a.webp' /></p><p></p><h2>மலேசிய வீரர் உட்பட பலர் காயம்</h2><p>மின்னல் தாக்கியதும் அவசர மருத்துவ குழு விரைந்து உதவி செய்தது. ஆனால் கடுமையான காயங்களால் சஃப்வான் உயிரிழந்தார். மேலும், 22 வயது மலேசிய வீரர் Mohammad Alif Ezzahan Zulkifli உட்பட பலர் காயமடைந்தனர்.</p><p>இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, உலகம் முழுவதும் ரசிகர்கள், நண்பர்கள், கால்பந்து சங்கங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். </p><p>தாய்லாந்து கால்பந்து சங்கமும், யாலா FC-யும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளன.

சஃப்வானின் மரணம் கால்பந்து உலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4f3ddf2-0773-4650-92d8-4a12dbaa2e11/26-6a743be30683b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T07:44:38+00:00</updated>
        </entry>
    </feed>
