<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-09T23:20:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய கிராமங்களை சூறையாடிய உக்ரைன்: சுட்டு வீழ்த்தப்பட்ட 285 ட்ரோன்கள்: 6 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-massive-drone-attack-in-belgorod-1786315324"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-massive-drone-attack-in-belgorod-1786315324</id>
            <summary type="text">ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில்&amp;nbsp; 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சுட்டு வீழ்த்தப்பட்ட 285 ட்ரோன்கள்ஞாயிற்றுக்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில்&nbsp; 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> சுட்டு வீழ்த்தப்பட்ட 285 ட்ரோன்கள்</h2><p>ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோ நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ரஷ்ய பகுதிகளை குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p>ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலில், கிட்டத்தட்ட 285 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தி உள்ளன.</p><p>இந்த தாக்குதல் உக்ரைனின் எல்லையை ஒட்டிய பெல்கோரோட், பிரியான்ஸ்க் மற்றும் குர்ஸ்க் ஆகியவற்றை மையமாக கொண்டு நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bedc2a4f-d031-4721-8661-87fd977b93f6/26-6a79023e792aa.webp' /></p><h2> அதிகரிக்கும் உயிரிழப்பு</h2><p>உக்ரைனின் சமீபத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>கிட்டத்தட்ட 30 குடியிருப்பு வீடுகள் உக்ரைன் தாக்குதலில் சிதைக்கப்பட்டுள்ளன.</p><p> &nbsp;உக்ரைனிய ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் பணியாளர்கள் மேலும் ஒரு ஆணின் உடலை பத்திரமாக மீட்டுள்ளனர்.</p><p>பேரழிவுகரமான இந்த தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T22:42:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச குற்றக் கும்பலின் தலைவன் டப்ளினுக்கு நாடு கடத்தல்: யார் இந்த டேனியல் கினஹான்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/danial-kinahan-arrived-at-dublin-special-court-1786304922"></link>
            <id>https://news.lankasri.com/article/danial-kinahan-arrived-at-dublin-special-court-1786304922</id>
            <summary type="text">அயர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவனான டேனியல் கினஹான்(Daniel Kinahan) டப்ளின் சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அயர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவனான டேனியல் கினஹான்(Daniel Kinahan) டப்ளின் சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.</p><h2>டேனியல் கினஹான் நீதிமன்றத்தில் ஆஜர்</h2><p>அயர்லாந்து ராணுவத்தின் விமானம் மூலம் அயர்லாந்துக்கு அழைத்து வரப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவராக கருதப்படும் டேனியல் கினாஹான் பலத்த வாகன பாதுகாப்புடன் டப்ளினில் உள்ள சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.</p><p> டப்ளினின் பால்டோனலில் உள்ள காசெமெண்ட் விமான நிலையத்தில் டேனியல் கினாஹான்(Danial kinahan) வந்து இறங்கிய உடன் பலத்த பாதுகாப்பு கொண்ட வாகனங்கள் அவரை ஏற்றுக் கொண்டு அதிவேகமாக புறப்பட்ட நிலையில் தற்போது அந்த வாகன பேரணி சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தை வந்தடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebd1267f-73a4-4ef0-bfc7-1d545a4412f2/26-6a78d99c523cb.webp' /></p><p>டேனியல் கினாஹானை ஏற்றிக் கொண்டு விமானம் துபாயில் இருந்து புறப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 70,000க்கும் மேற்பட்டோர் இந்த விமானத்தை ஆன்லைன் மூலமாக விமானத்தை தீவிரமாக கண்காணித்துள்ளனர்.</p><p></p><h2> யார் இந்த டேனியல் கினாஹான்</h2><p>ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த டேனியல் கினாஹன், சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகிய பெரும் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><p> டேனியல் கினாஹன் மிகப்பெரிய குற்றக் கும்பலின் தலைவன் என்று டப்ளின்&nbsp; உயர்நீதிமன்றத்தால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> கடந்த 2015ம் ஆண்டு கினாஹன் கார்டல் கும்பலும், ஹட்சி பிரிவினருக்கும் இடையே வெடித்த அதிகாரப் போட்டியின் போது கிட்டத்தட்ட 18 உயிர்கள் கொல்லப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e98187b-2b7c-4eb4-b337-188576290f48/26-6a78d99b9fe41.webp' /></p><p> அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் இந்த கார்டல் கும்பல்கள் நடத்திய இரக்கமற்ற போரினால் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p> கடந்த 2022ம் ஆண்டு கூட டேனியல் கினாஹனை கைது செய்ய உதவி செய்பவர்களுக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.’</p><p> &nbsp;கிட்டத்தட்ட அயர்லாந்து, பிரித்தானியா, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த குற்ற கும்பலை அழிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.</p><p> கொகைன், கஞ்சா, மற்றும் உள்நாட்டு சரக்கு பொருட்கள் ஆகியவற்றை கடத்தி&nbsp; பல கோடிகளுக்கு சட்டப்பூர்வ பணமாக மாற்றியதாக(money laundering) இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T22:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏரியில் தத்தளித்து உயிரிழந்த 19 வயது இளைஞர்: கடலில் மாயமான பெண்: தீவிர தேடுதல் வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-19-yrs-old-dies-in-grasmere-lake-1786302177"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-19-yrs-old-dies-in-grasmere-lake-1786302177</id>
            <summary type="text">பிரித்தானியாவில் வார இறுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தனித்தனி நீர்நிலை விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. லேக் மாவட்டத்தில் நடந்த சோகம்லேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் வார இறுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தனித்தனி நீர்நிலை விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன.</p><h2> லேக் மாவட்டத்தில் நடந்த சோகம்</h2><p>லேக்(Lake) மாவட்டத்தின் கிராஸ்மியர்(Grasmere) ஏரியில் 19 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> சனிக்கிழமை மாலை 4.35 மணியளவில் இளைஞர் ஒருவர் ஏரியில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கும்ப்ரியா காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p>அங்கிருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69683ad5-c219-4d8c-9996-54f3ac366101/26-6a78cee327c22.webp' /></p><p> இந்த சம்பவத்தில் யார் மீதும் சந்தேகம் இல்லை என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் சிறுவனை காப்பாற்ற உதவிய பொதுமக்களுக்கு கும்ப்ரியா காவல்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2> காணாமல் போன பெண்</h2><p>சனிக்கிழமை இரவு வேமவுத்(Weymouth) கடற்கரைப் பகுதியில் பெண் ஒருவர் கடலுக்குள் சென்றதாக பொதுமக்களில் ஒருவர் இரவு 11.05 மணிக்கு டோர்செட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> கடலுக்கு சென்ற பெண் தனியாக இருந்ததாகவும், பின்னர் அவர் திரும்பி வெளியே வரவில்லை என்றும் நம்பப்படுகிறது.</p><p>காணாமல் போனதாக கூறப்படும் பெண் நடுத்தரமான உடல் அமைப்பு கொண்டவர் என்றும், வெளிர் நிறத்தில் உள்ள நீண்ட ஆடையை அணிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p> இந்நிலையில் கடலில் இறங்கி காணாமல் போனதாக நம்பப்படும் பெண்ணை கண்டுபிடிப்பதற்காக கடல்வழி மற்றும் வான்வழி மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T22:09:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்ப் கோல்ப் கிளப் மேலே பிறந்த 2 சிறிய விமானங்கள்: களத்தில் இறங்கிய F-16 ரக போர் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/norad-intercepts-2-small-plane-near-president-even-1786310999"></link>
            <id>https://news.lankasri.com/article/norad-intercepts-2-small-plane-near-president-even-1786310999</id>
            <summary type="text">டிரம்ப் கோல்ஃப் கிளப்பிற்கு மேலே அத்துமீறி பறந்த இரண்டு சிறிய ரக விமானங்களை அமெரிக்க விமானப்படை F-16 ரக போர் விமானங்கள் இடைமறித்து வெளியேற்றினர். அத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிரம்ப் கோல்ஃப் கிளப்பிற்கு மேலே அத்துமீறி பறந்த இரண்டு சிறிய ரக விமானங்களை அமெரிக்க விமானப்படை F-16 ரக போர் விமானங்கள் இடைமறித்து வெளியேற்றினர்.</p><h2> அத்துமீறி நுழைந்த சிறிய விமானங்கள்</h2><p>
அமெரிக்காவின் பெட்மின்ஸ்டர் நகருக்கு மேல் வான்வெளி தடையை மீறி இரண்டு சிறிய ரக விமானங்கள் பறந்தன.</p><p> ஞாயிற்றுக்கிழமை பெட்மின்ஸ்டர் நகரில் அமைந்துள்ள டிரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">WATCH: US F-16 jet intercepts aircraft over Bedminster, New Jersey, where President Trump is present <a href="https://t.co/gS4gTP9Lbo">pic.twitter.com/gS4gTP9Lbo</a></p>&mdash; Rapid Report (@RapidReport2025) <a href="https://x.com/RapidReport2025/status/2086524153348104470?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதையடுத்து அமெரிக்கா விமானப்படை பிரிவான NORAD தங்களது&nbsp; F-16 ரக போர் விமானங்கள் கொண்டு அத்துமீறிய இரண்டு சிறிய ரக விமானங்களையும் வெற்றிகரமாக இடைமறித்து அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர் என்று பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p></p><p> இந்த வான்வெளி அத்துமீறல் நடைபெற்ற போது ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கோல்ஃப் கிளப்பில் நேரடியாக இருந்தாரா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p>மேலும் அத்துமீறி தடை செய்யப்பட்ட பகுதிக்குள் விமானத்தை செலுத்தியவர் யார்? அவர்களின் இந்த செயலுக்கு என்ன காரணம்? என்பது குறித்தும்&nbsp; அதிகாரிகள் எந்தவொரு விளக்கத்தையும் வெளியிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fe36dbb-a031-4df1-9425-55b248509003/26-6a78f15995aec.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T21:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடுபாதையில் விமானத்தை துரத்திச் சென்ற இரண்டு பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-chase-plane-in-moscow-airport-scare-1786290107"></link>
            <id>https://news.lankasri.com/article/women-chase-plane-in-moscow-airport-scare-1786290107</id>
            <summary type="text">Women Chase Plane in Moscow Airport: மாஸ்கோ விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் விமானத்தை துரத்திச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.

ஓடுபாதையில் இரண்டு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Women Chase Plane in Moscow Airport: மாஸ்கோ விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் விமானத்தை துரத்திச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.</p><h2>

ஓடுபாதையில் இரண்டு பெண்கள்</h2><p>ஜூலை 25-ஆம் திகதி, ரஷ்யாவின் ஷெரெமேட்யேவோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்த விசித்திரமான சம்பவம் தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
இரண்டு பெண்கள் தங்கள் Aeroflot விமானத்தை தவறவிட்டதால், விமானம் புறப்படும் தருணத்தில் ஓடுபாதையில் துரத்திச் சென்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Meanwhile at Moscow&#39;s Sheremetyevo International Airport two passengers who had missed their flight ran onto the tarmac on July 25 and walked directly toward an Aeroflot aircraft in an attempt to board, with one woman dragging a suitcase behind her. <a href="https://t.co/1vmHOeBrhg">pic.twitter.com/1vmHOeBrhg</a></p>&mdash; Breaking Aviation News &amp; Videos (@aviationbrk) <a href="https://x.com/aviationbrk/status/2086052750802952490?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அவர்கள் ஏற்கனவே பாதுகாப்பு சோதனையை கடந்திருந்தாலும், விமானத்தில் ஏற வேண்டிய நேரத்தை தவறவிட்டனர்.

மீண்டும் டிக்கெட் பதிவு செய்யாமல், நேரடியாக விமானம் நிறுத்தப்பட்டிருந்த apron பகுதியில் நுழைந்தனர். அப்போது விமானம் கேட்டில் இருந்து நகர்த்தப்பட்டு கொண்டிருந்தது.</p><p>

வீடியோ காட்சிகளில், பெண்களில் ஒருவர் தனது சூட் கேஸை இழுத்துக்கொண்டு விமானத்தை நோக்கி ஓடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. மற்றொருவர் விமானத்தை நோக்கி கைகளை அசைத்து பைலட் கவனத்தை ஈர்க்க முயன்றார்.</p><p>
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b27100d9-1f99-4417-8c06-ce0c5795bf09/26-6a78a07c654fb.webp' /></p><h2>விமான இயக்கம் நிறுத்தப்பட்டது</h2><p>இந்த சம்பவம் பெரும் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தியது. apron பகுதி மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இடமாகும். அங்கு விமானங்கள் நகர்த்தப்படுவதோடு, பல்வேறு வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் இயங்குகின்றனர்.</p><p>பெண்கள் அங்கு நுழைந்ததால், விமான இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

பின்னர், பணியாளர்கள் அவர்களை தடுத்து, மீண்டும் டெர்மினலுக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் ரஷ்யாவின் Federal Security Service (FSB)-க்கு ஒப்படைக்கப்பட்டனர்.
</p><p>
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பயணிகள் விமானத்தை தவறவிட்டால் எவ்வளவு ஆபத்தான முடிவுகளை எடுக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியது.</p><p></p><p>
</p><h2>
மற்றொரு சம்பவம்- 30 பவுண்டுகள் அபராதம்</h2><p>இதேபோன்ற சம்பவம் கடந்த மே மாதத்திலும் நடந்தது. அப்போது, ஒரு பயணி விமான நிலையக் கழிப்பறையில் சிக்கி, விமானத்தை தவறவிட்டார். பின்னர் அவர் ஓடுபாதையில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்றார். ஆனால், விமானம் புறப்பட்டுவிட்டது. அந்த பயணிக்கு சுமார் 30 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T19:03:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நைஜர் நாட்டில் கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன்: அல்ஜீரிய ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/algerian-military-rescues-german-citizen-in-niger-1786296265"></link>
            <id>https://news.lankasri.com/article/algerian-military-rescues-german-citizen-in-niger-1786296265</id>
            <summary type="text">நைஜர் நாட்டு எல்லையில் கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் அல்ஜீரிய ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளார்.கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர்நைஜர் நாட்டின் எல்லை பகுதியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜர் நாட்டு எல்லையில் கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் அல்ஜீரிய ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர்</h2><p>நைஜர் நாட்டின் எல்லை பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆயுதம் ஏந்திய குற்ற கும்பலால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார்.</p><p> இந்நிலையில் அவர் அல்ஜீரிய ராணுவ படையால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் செக்யூரிட்டி போர்சஸ் (பாதுகாப்பு படையினரால்) பாதுகாப்பாக மீட்கப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அல்ஜீரிய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4b97439-1c37-4fb2-bb70-8e3efd4e678a/26-6a78b7caed5aa.webp' /></p><p> மீட்கப்பட்ட ஜேர்மன் குடிமகன் அல்ஜீரியாவின் தென்பகுதியான இன் குஸ்ஸாம் பகுதியில் இருந்து தலைநகருக்கு அருகிலுள்ள பூஃபாரிக்(Boufarik) ராணுவ தளத்திற்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p> மீட்கப்பட்ட ஜேர்மன் நாட்டவரின் உடல் நலம் தற்போது சீராக இருப்பதாகவும், உரிய நேரத்தில் ஜேர்மன் அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் எவ்வாறு மீட்கப்பட்டார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை அல்ஜீரிய அரசு இன்னும் வெளியிடவில்லை.</p><h2>ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வழங்கிய தகவல்</h2><p>ஜேர்மன் குடிமகன் கடத்தப்பட்ட விவகாரம் தங்களுக்கு தெரியும் என்றும், வெளிநாடுகளில் கடத்தப்படும் ஜேர்மன் குடிமக்கள் குறித்து எந்தவொரு கருத்தும் அரசாங்கம் தெரிவிப்பதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T17:24:38+00:00</updated>
        </entry>
    </feed>
