<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-07T23:21:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரோன் தாக்குதல் குற்றச்சாட்டு - ஜேர்மன் தூதரகத்தை மூடிய ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-shuts-german-consulate-over-drone-row-1788822808"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-shuts-german-consulate-over-drone-row-1788822808</id>
            <summary type="text">Russia shuts german consulate: ட்ரோன் தாக்குதல் குற்றச்சாட்டில், ரஷ்யாவில் ஜேர்மன் தூதரகம் மூடப்பட்டது.
ஜேர்மன் தூதரகத்தை மூடிய ரஷ்யாரஷ்ய அரசு, ஜேர்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia shuts german consulate: ட்ரோன் தாக்குதல் குற்றச்சாட்டில், ரஷ்யாவில் ஜேர்மன் தூதரகம் மூடப்பட்டது.
</p><h2>ஜேர்மன் தூதரகத்தை மூடிய ரஷ்யா</h2><p>ரஷ்ய அரசு, ஜேர்மனியின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தூதரகம் மூடப்பட வேண்டும் என்றும், செப்டம்பர் 18 திகதிக்குள் அங்கு பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.</p><p>ரஷ்யா-ஜேர்மனி உறவுகள் ஏற்கனவே உக்ரைன் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது தூதரகம் மூடப்பட்ட நடவடிக்கை இரு நாடுகளின் உறவை மேலும் மோசமாக்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96c18eb4-1377-4a67-ac9a-508df702f10e/26-6a9f4519c2d5c.webp' /></p><p>
கடந்த வாரம் லீப்சிக் விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலை ரஷ்யா திட்டமிட்டதாக ஜேர்மனி குற்றம் சாட்டியது.
</p><p>
அதற்கு பதிலாக, ரஷ்யா ஜேர்மன் தூதரகத்தை மூடுவதோடு, Goethe Institute பணியாளர்களும் செப்டம்பர் 13-க்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
</p><p>
ஜேர்மனி ஏற்கனவே ரஷ்யாவின் பான் தூதரகத்தையும், மாஸ்கோ கலாச்சார மையத்தையும் மூடியிருந்தது.</p><p>
</p><p></p><p>ஐரோப்பிய ஒன்றியம், லீப்சிக் விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதல் “அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம்” எனக் கூறியுள்ளது. ஆனால் ரஷ்யா இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.</p><p>

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், “ஜேர்மனி மீண்டும் போரை விரும்புகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம், உக்ரைனுக்கு முக்கிய ஆதரவாளராக இருக்கும் ஜேர்மனி மற்றும் ரஷ்யா இடையேயான உறவை மேலும் கடுமையாக்கி, ஐரோப்பிய பாதுகாப்பு சூழ்நிலைக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T23:10:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி - சிறிய தவறால் பணி நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-techie-fired-over-sauna-towel-mix-up-1788817298"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-techie-fired-over-sauna-towel-mix-up-1788817298</id>
            <summary type="text">Swiss techie fired over sauna towel mix-up: சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி, மூத்த நிர்வாகியுடன் ஏற்பட்ட சிறிய சம்பவத்தால் வேலை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss techie fired over sauna towel mix-up: சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி, மூத்த நிர்வாகியுடன் ஏற்பட்ட சிறிய சம்பவத்தால் வேலை இழந்ததாக கூறியுள்ளார்.</p><p>
</p><h2>சுவிட்சர்லாந்தில் ரூ.1 கோடி சம்பளம்</h2><p>சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய மென்பொருள் பொறியாளர், சுமார் ரூ.1 கோடி வருடச்சம்பளம் பெற்றிருந்தார்.
</p><p>
ஆனால், உடற்பயிற்சி மையத்தில் சோனாவில் நடந்த ஒரு சிறிய தவறால் அவர் வேலை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab5a3152-7ad1-4a69-a41f-03421ebc9485/26-6a9f2f93d63a4.webp' /></p><h2>தவறுதலாக துண்டை எடுத்ததற்காக</h2><p>அவரது விளக்கத்தின் படி, மே 8 அன்று ஜிம் சோனாவில் பயிற்சி முடிந்தபின் தவறுதலாக ஒரு மூத்த நிர்வாகியின் துண்டை எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த நிர்வாகி அமைதியாக நடந்துகொண்டாலும், “புதிய வேலை தேடத் தொடங்குங்கள்” என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.
</p><p>
ஐந்து நாட்களுக்குப் பிறகு, மே 13 அன்று, HR குழுவினரிடமிருந்து “பொருளாதார காரணங்களால்” பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சோனா சம்பவமே உண்மையான காரணமாக இருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.</p><p></p><h2>வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்காது..</h2><p>அவர் 2022 முதல் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பல திட்டங்களில் ஈடுபட்டிருந்தபோதும், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் திட்டங்கள் தாமதமானதாகவும், தான் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் உழைந்திருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று அவர் மனவருத்தம் தெரிவித்தார்.
</p><p>
மேலும், “என்னை ‘சமூக விரோத’ (antisocial) பட்டியலில் சேர்த்துள்ளனர், இதனால் எதிர்காலத்தில் வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்காது” என்று அவர் குற்றம்சாட்டினார்.</p><p> தற்போது மூன்று மாதங்களாக வேலை இழந்த நிலையில், தனியார் வியாபாரம் தொடங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>இந்த சம்பவம், ஊழியர்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு உயர்நிலை நிர்வாகத்தின் முடிவுகளின் கீழ் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.</p><p>அவர் இந்த சம்பவத்தை Reddit பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T21:38:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் கிரிப்டோ பரிவர்த்தனை 350 பில்லியன் டொலராக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/middle-east-crypto-surges-to-350-bn-dollars-1788809175"></link>
            <id>https://news.lankasri.com/article/middle-east-crypto-surges-to-350-bn-dollars-1788809175</id>
            <summary type="text">Middle East Crypto Surges to 350 Bn dollars: மத்திய கிழக்கில் கிரிப்டோ பரிவர்த்தனை பல மடங்கு உயர்ந்துள்ளது.மூன்று மடங்கு அதிகரிப்பு

மத்திய கிழக்கில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Middle East Crypto Surges to 350 Bn dollars: மத்திய கிழக்கில் கிரிப்டோ பரிவர்த்தனை பல மடங்கு உயர்ந்துள்ளது.</p><h2>மூன்று மடங்கு அதிகரிப்பு</h2><p>

மத்திய கிழக்கில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>

Bitcoin Policy Institute வெளியிட்ட தகவலின்படி, 2022-இல் சுமார் 100 பில்லியன் டொலராக இருந்த பரிவர்த்தனை மதிப்பு, 2025–2026-இல் 350 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db5d72a2-cafa-4802-b0c3-c6c8062e7089/26-6a9f13048f80b.webp' /></p><h2>பாதுகாப்பான சொத்தாக Bitcoin...</h2><p>ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல்கள், எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம், வட்டி விகிதம் போன்ற பொருளாதார சவால்கள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் செல்வத்தை பாதுகாக்க கிரிப்டோகரன்சிகளுக்கு மாறியுள்ளனர்.
</p><p>
ஆரம்பத்தில் Bitcoin விலை உலக பங்குச் சந்தைகளுடன் இணைந்து குறைந்தாலும், பின்னர் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக Bitcoin-ஐ தேர்வு செய்ததால் அதன் சந்தை பங்கு 64.8 சதவீதம் வரை உயர்ந்தது.</p><p>
</p><p></p><p>எகிப்து, துருக்கி, லெபனான், ஈரான் போன்ற நாடுகளில் நாணய மதிப்பு குறைவதால் மக்கள் Bitcoin மற்றும் அமெரிக்க டொலருடன் இணைக்கப்பட்ட Stablecoins-ஐ அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். </p><p>அதேசமயம், UAE மற்றும் பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகள் கிரிப்டோ நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் ஒழுங்குமுறை சட்டங்களை உருவாக்கி, டிஜிட்டல் சொத்து மையங்களாக தங்களை வலுப்படுத்தி வருகின்றன.</p><p>

சண்டைகள், தடைகள், நாணய நிலையற்ற தன்மை போன்ற சூழ்நிலைகளில் கிரிப்டோகரன்சிகள் செல்வத்தை பாதுகாக்கவும், மதிப்பை மாற்றவும் முக்கிய கருவியாக மாறியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T19:36:41+00:00</updated>
        </entry>
    </feed>
