<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-24T00:37:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவைப்பட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வோம்., அமெரிக்காவிற்கு கனடா பிரதமர் கார்னி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-eyes-retaliation-on-trump-tariffs-1784851096"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-eyes-retaliation-on-trump-tariffs-1784851096</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய வரிகள் (Tariffs) குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆகஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய வரிகள் (Tariffs) குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

ஆகஸ்ட் 19 முதல் அமுலுக்கு வரும் 50 சதவீத வரிகள், 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள கனேடிய பொருட்களை பாதிக்கும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
</p><p>
கார்னி, “ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன. எங்கள் நாட்டின் நலன்களை காக்க தேவையான பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edaadd2a-d333-4f7d-badf-e66ffec5b1ce/26-6a62aa9976ab5.webp' /></p><p>இந்த விவகாரம் குறித்து கனடாவின் 13 மாநில முதல்வர்களுடன் கார்னி சந்திப்பு நடத்தினார். ஒ</p><p>ன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு, “அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை. கனடாவின் எண்ணெய், Potash போன்ற வளங்களை தடுத்து அமெரிக்காவை அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார். </p><p>ஆனால், அல்பெர்டா முதல்வர் டேனியல் ஸ்மித், “எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவது மிகப்பெரிய தவறு. இது கனடாவையே பாதிக்கும்” என்று எச்சரித்தார்.
</p><p></p><p>இந்த புதிய வரிகள், கனடாவின் மதுபானம், மின்சாதனங்கள், ஹாக்கி ஸ்டிக் போன்ற பொருட்களை அதிகமாக பாதிக்கும். குறிப்பாக ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
கார்னி, “இது ஒரு அழுத்தம் கொடுக்கும் உத்தி என்றாலும், அதே நேரத்தில் முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வாய்ப்பும் உள்ளது” என்று தெரிவித்தார்.
</p><p>
மாநில முதல்வர்கள், “Team Canada” என்ற ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, கூட்டாக அமெரிக்காவிற்கு எதிராக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T23:58:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட சோனம் வாங்சுக்., மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sonam-wangchuk-ends-26-day-hunger-strike-1784840082"></link>
            <id>https://news.lankasri.com/article/sonam-wangchuk-ends-26-day-hunger-strike-1784840082</id>
            <summary type="text">பிரபல சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், 26 நாட்கள் நீடித்த உண்ணாவிரதத்தை ஜூலை 23-ஆம் திகதி இரவு குருகிராமில் உள்ள மெடாண்டா மருத்துவமனையில் முடித்தார...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், 26 நாட்கள் நீடித்த உண்ணாவிரதத்தை ஜூலை 23-ஆம் திகதி இரவு குருகிராமில் உள்ள மெடாண்டா மருத்துவமனையில் முடித்தார்.
</p><p>
மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில், அவரது மனைவி கீதாஞ்சலி அங்க்மோ உடன், வாங்சுக் ஒரு கப் பானத்தை அருந்தியதன் மூலம் உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.
</p><p>
வாங்சுக், “நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நாட்டில் வன்முறை ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு, உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01cde41c-205e-4fce-995a-c956905a79e9/26-6a6283e167007.webp' /></p><p>

அவர் விரைவில் தனது முடிவுக்கான நிபந்தனைகளை விரிவாக விளக்கும் வீடியோவை வெளியிடுவதாகவும் கூறினார்.
</p><p>
மத்திய அரசு, ஜந்தர் மந்தரில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாது என்றும், கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் தேர்வுகளில் ஏற்பட்ட கசிவுகள் தொடர்பாக தீர்வுகள் காணப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
</p><p>
மேலும், NEET தேர்வு வினாத்தாள் கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் வாய்ப்பையும் அரசு பரிசீலிக்கிறது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Just now in the presence of Union Ministers Sh. JP Nadda, Dr. Jitendra Singh and the senior leaders of Apex Body of Leh Ladakh I finally broke my fast after 26 days. Earlier 65 members of parliament from different political parties had visited or signed letters urging me to break… <a href="https://t.co/RFCet7Oksy">pic.twitter.com/RFCet7Oksy</a></p>&mdash; Sonam Wangchuk (@Wangchuk66) <a href="https://x.com/Wangchuk66/status/2080380336630800427?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>பிரதமர் நரேந்திர மோடி, வாங்சுக் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றி உடல் நலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
வாங்சுக், கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டவர். 2024-ஆம் ஆண்டு லடாக்கின் வளங்களைப் பாதுகாக்கும் சட்ட உரிமைக்காக, பனிக்கட்டிகளின் நடுவில் 21 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
</p><p>
அவரது கல்வி தத்துவம் “3 Idiots” திரைப்படத்தில் புன்சுக் வாங்டூ என்ற கதாபாத்திரத்திற்கு ஊக்கமாக இருந்ததாக கருதப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T23:04:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூகுள் மேப்ஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கனடாவின் பண்டைய விண்கல் குழி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-maps-finds-ancient-crater-in-canada-1784842113"></link>
            <id>https://news.lankasri.com/article/google-maps-finds-ancient-crater-in-canada-1784842113</id>
            <summary type="text">கனடாவில், 390 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக கருதப்படும் ஒரு மிகப்பெரிய விண்கல் குழி (Meteorite Crater) சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், 390 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக கருதப்படும் ஒரு மிகப்பெரிய விண்கல் குழி (Meteorite Crater) சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, உலகளவில் சமீபத்திய காலங்களில் மிக முக்கியமான அறிவியல் சாதனையாகக் கருதப்படுகிறது.
</p><p>
கியூபெக் மாநிலத்தைச் சேர்ந்த ஜோயல் லாபோயிண்ட் என்ற ஆர்வலர், 2024-ஆம் ஆண்டு தனது விடுமுறை பயணத்திற்கான பாதையை கூகுள் மேப்ஸ் மூலம் திட்டமிடும்போது, செயற்கைக்கோள் படங்களில் ஒரு வட்ட வடிவ அமைப்பைக் கவனித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6488ca77-51c9-4596-b57e-0c98c98bc204/26-6a628782a115c.webp' /></p><p>முதலில் இது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் என நினைத்த அவர், தரவுத்தளங்களை ஆராய்ந்தபோது எந்த தகவலும் இல்லை என்பதை கண்டறிந்தார்.</p><p>

பின்னர், அவர் “Impact Earth” என்ற இணையதளத்தில் இந்த தகவலை பகிர்ந்தார். கனடாவின் வெஸ்டர்ன் பல்கலைக்கழக புவியியல் நிபுணர்கள் செயற்கைக்கோள் படங்கள், புவியியல் வரைபடங்கள் மற்றும் தள ஆய்வுகளை மேற்கொண்டு, 2025-ஆம் ஆண்டு தொலைதூர ஆய்வுப் பயணத்தில் இந்த அமைப்பை உறுதிப்படுத்தினர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">390-million-year-old meteor crater discovered in Quebec.<br><br>:In 2024, someone identified what looked to be an impact crater located about 100 kilometres north of Magpie, Quebec. It has been confirmed by a team of researchers to be a 25-km diameter crater. <a href="https://t.co/XQ9KNBBoMV">pic.twitter.com/XQ9KNBBoMV</a></p>&mdash; The Weather Network (@weathernetwork) <a href="https://x.com/weathernetwork/status/2079704239534731587?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்த குழி தற்போது “உஹாக்கடிக்” (Uhackatik) என அழைக்கப்படுகிறது. இது 25 கிலோமீட்டர் அகலத்திற்கு பரவியுள்ளதுடன், பல நகரங்களை விட பெரியதாகும். டெவோனியன் காலத்தில் (Devonian Period) விண்கல் தாக்கத்தால் உருவானதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
</p><p>
இந்த ஆய்வுக் குழு, 2026 ஆகஸ்ட் மாதம் ஜேர்மனியில் நடைபெறும் Meteoritical Society மாநாட்டில் தங்கள் கண்டுபிடிப்பை வெளியிட உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T21:28:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-armed-forces-ready-amid-iran-warning-1784834149"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-armed-forces-ready-amid-iran-warning-1784834149</id>
            <summary type="text">பிரித்தானிய அரசு, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படைகள் எப்போதும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.அமெரிக்காவின் B-52 போர் விமானங்கள் பிரித்தானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய அரசு, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படைகள் எப்போதும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவின் B-52 போர் விமானங்கள் பிரித்தானிய தளங்களில் இருந்து பறப்பதை அனுமதித்ததைத் தொடர்ந்து, ஈரான் புரட்சிகர காவல்படை பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை விடுத்தது.
</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/951dec42-3843-4c7a-9a6f-cf65cdc52e9a/26-6a626867eb9a5.webp' /></p><p>பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் தலைமையிலான அரசு, அமெரிக்காவிற்கு பிரித்தானிய தளங்களை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.</p><p>

இது, ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு எதிரான ஏவுகணை தாக்குதல்களை தடுக்க அமெரிக்கா மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவே என அரசு விளக்கமளித்துள்ளது.
</p><p></p><p>அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர், “எந்தவித தாக்குதலாக இருந்தாலும், எங்கள் ஆயுதப்படைகள் 24 மணி நேரமும் நாட்டை பாதுகாக்க தயாராக உள்ளன. ராயல் நேவி, பிரிட்டிஷ் ஆர்மி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸ் ஆகியவை நவீன பாதுகாப்பு திறன்களுடன், கூட்டாளிகளான நேட்டோவுடன் இணைந்து செயல்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
பிரித்தானியா, தனது மக்களையும், நாட்டின் நலன்களையும், கூட்டாளிகளையும் சர்வதேச சட்டத்திற்கிணங்க பாதுகாக்கும் என உறுதியளித்துள்ளது. அதேசமயம், விரிவான போர் நிலைக்கு இழுக்கப்படாமல் இருக்கவும் கவனம் செலுத்துவதாகவும் அரசு கூறியுள்ளது.
</p><p>
இந்த அறிவிப்பு, ஈரான் எச்சரிக்கைக்கு நேரடி பதிலாகவும், பிரித்தானியா தனது பாதுகாப்பு நிலைப்பாட்டை உறுதியாகக் காக்கும் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T19:14:03+00:00</updated>
        </entry>
    </feed>
