<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-31T19:27:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 மணி நேரம் இடைவிடாமல் வான்வழித் தாக்குதல்: ஈரானுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057"></link>
            <id>https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057</id>
            <summary type="text">ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><h2>அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்</h2><p>ஈரானின் முக்கிய இலக்குகளை குறிவைத்து அமெரிக்க மத்திய கட்டளை பீடம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் விடாமல் தீவிர தாக்குதல் நடத்தி முடித்து இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம்(CENTCOM) தெரிவித்துள்ளது.</p><p>CENTCOM வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய வியூக மையங்கள் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b81e468-9e15-4068-bc7c-369a8285fec7/26-6a6cef5ac2501.webp' /></p><p>அதில் முக்கியமாக இராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், அதிநவீன ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகள், கடற்கரை கண்காணிப்பு மையங்கள் மற்றும் முக்கிய கடல்சார் பாதுகாப்பு திறன்கள் அழிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தாக்குதலுக்கான பின்னணி</h2><p>செவ்வாய்க்கிழமை அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52e64c48-69da-43b9-a0ad-ef04a7432d20/26-6a6cef5b72f9c.webp' /></p><p>மேலும் ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதல்களை அமெரிக்க பாதுகாப்பு திறன்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகவும், இதனால் அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகளுக்கு எந்தவொரு சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> ஈரானிய படைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை தடுத்து அமெரிக்க பணியாளர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க அமெரிக்கா உறுதியுடன் இருப்பதை இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுவதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T18:54:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ceuta-crisis-37500-refugees-return-to-morocco-1785516053"></link>
            <id>https://news.lankasri.com/article/ceuta-crisis-37500-refugees-return-to-morocco-1785516053</id>
            <summary type="text">மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் எல்லைப்புற நகரான சியூட்டாவிற்குள் நுழைந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினுக்குள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் எல்லைப்புற நகரான சியூட்டாவிற்குள் நுழைந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டினர்</h2><p>வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய ஸ்பெயின் ஆதிக்கப் பகுதியான சியூட்டாவின்(Ceuta) எல்லைப் பகுதிக்குள் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p> ஆயிரக்கணக்கானோரின் அத்துமீறிய நுழைவை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு முற்றிலும் சிதைப்பட்டு இருப்பதாகவும், உடனே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு எல்லை பாதுகாப்பிற்கு இராணுவத்தை அனுப்ப வேண்டும் எனவும் உள்ளூர் அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc924ce5-96e7-4b1b-afa7-a85ba4880bf3/26-6a6cd0174126c.webp' /></p><p> ஸ்பெயின் உள்துறை அமைச்சகத்தின் தகவல் படி, சியூட்டாவிற்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை உச்சபட்சமாக 50,000ஐ கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதில் (பெரும்பாலானோர் மொராக்கோவை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்).
தாராஜல் எல்லை வழியாகவும், கடற்கரை வழியாகவும் சியூட்டாவிற்குள் நுழையும் இந்த மக்களில் சிலர் “விவா எஸ்பானா”(Viva España!) என்ற கோஷங்களை எழுப்பியும், சாலைகளில் நடனமாடியும் வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது.</p><p></p><h2> மொராக்கோவிற்கு திரும்பிய மக்கள்</h2><p>
இந்நிலையில் சியூட்டாவிற்குள் அத்துமீறி நுழைந்தவர்களில் 37,500க்கும் அதிகமானோர் மீண்டும் மொராக்கோவிற்கு திரும்பி சென்று விட்டதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a406a87d-6274-4d92-92a7-f1bea40a683d/26-6a6cd017e6a64.webp' /></p><p>ஒரே நேரத்தில் நிகழ்ந்த இந்த அதிகமான அகதிகள் இடம்பெயர்வில் கிட்டத்தட்ட 57 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> இந்த நெருக்கடியான சூழ்நிலை குறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் இது ஸ்பெயின் இறையாண்மை மீது நடந்த மிகப்பெரிய தாக்குதல் மற்றும் மீறல் என்று குற்றம்சாட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T17:47:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்ஜீரியாவில் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: பறிப்போன 25 பேர் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/algeria-bus-crash-at-least-25-dead-1785517157"></link>
            <id>https://news.lankasri.com/article/algeria-bus-crash-at-least-25-dead-1785517157</id>
            <summary type="text">அல்ஜீரியாவில் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அல்ஜீரியாவில் பேருந்து விபத்துவெள்ளிக்கிழமை அல்ஜீரியாவில் பயணிகள் பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அல்ஜீரியாவில் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><h2>அல்ஜீரியாவில் பேருந்து விபத்து</h2><p>வெள்ளிக்கிழமை அல்ஜீரியாவில் பயணிகள் பேருந்து ஒன்று தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 25 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> மேலும் 44 பேர் இந்த கோர பேருந்து விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.</p><p></p><p>விபத்துக்குள்ளான பேருந்து செடிஃப் நகரில் இருந்து நாட்டின் தலைநகரான அல்ஜியர்ஸை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p> விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdb3bdf2-55b5-473d-8a0a-fd08e74e114a/26-6a6cd467172b3.webp' /></p><p>25 பேர் வரை உயிரிழந்ததை தொடர்ந்து அல்ஜீரிய ஜனாதிபதி அப்துல்மஜித் டெபூன் நாடு முழுவதும் 3 நாள் தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T17:06:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[67 ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்ற கேப்டன்: 183 ஓட்டங்களுக்கு சுருண்ட நெதர்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scott-edwards-67-vs-namibia-and-netherlands-allout-1785510132"></link>
            <id>https://news.lankasri.com/article/scott-edwards-67-vs-namibia-and-netherlands-allout-1785510132</id>
            <summary type="text">நமீபியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.&amp;nbsp;ஸ்கொட் எட்வர்ட்ஸ்
நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நமீபியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.&nbsp;</p><h2>ஸ்கொட் எட்வர்ட்ஸ்</h2><p>
நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் Utrecht-யில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c88aca2a-843d-41e6-8e07-a7a1fec3aa4b/26-6a6cbaa3a868b.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித், ஜாக் லயன் டக்அவுட் ஆகினர்.</p><p>

பின்னர் மேக்ஸ் ஓ'டௌட் 23 ஓட்டங்களிலும், பாஸ் டி லீட் 27 ஓட்டங்களிலும் வெளியேற அணித்தலைவர் ஸ்கொட் எட்வர்ட்ஸ் நிலைத்து நின்று ஆடினார். </p><p>

மறுமுனையில் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணி 48.5 ஓவர்களில் 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
இறுதிவரை களத்தில் நின்ற ஸ்கொட் எட்வர்ட்ஸ் (Scott Edwards) 85 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் எடுத்தார்.
</p><p>
ரூபென் ட்ரம்ப்பெல்மன், ஜேக் பிரஸ்ஸெல் தலா 3 விக்கெட்டுகளும், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் 2 விக்கெட்டுகளும், எராஸ்மஸ் மற்றும் ஜேஜே ஸ்மித் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T15:07:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இருமுறை புற்றுநோயை வென்ற 61 வயது பெண்: குற்றவாளியால் நேர்ந்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/61-year-old-woman-who-beat-cancer-killed-in-usa-1785506395"></link>
            <id>https://news.lankasri.com/article/61-year-old-woman-who-beat-cancer-killed-in-usa-1785506395</id>
            <summary type="text">அமெரிக்காவில் 61 வயது பெண்ணொருவரை நபர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புற்றுநோயில் இருந்து மீண்ட பெண் அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் 61 வயது பெண்ணொருவரை நபர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> 

புற்றுநோயில் இருந்து மீண்ட பெண் </h2><p>அமெரிக்காவின் அரிஸோனாவைச் சேர்ந்த 61 வயதுப் பெண் சூசன் கெர்கே. இவர் டக்சனில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb4351a9-c455-48db-b4a0-042328e6587f/26-6a6cab2c5bc95.webp' /></p><p>
இவர் இரண்டு முறை புற்றுநோயில் இருந்து மீண்ட பின், தனது ஓய்வுக்கால விழாவை திட்டமிட்டிருந்தார்.
</p><p>
இந்த நிலையில், சூசன் கெர்கே கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது குடியிருப்பிற்கு வெளியே, ஒரு தொடர் குற்றவாளியின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகினார். 

இதில் அவரது செயற்கை பற்கள் கழன்று விழுந்தது படுகாயமடைந்தார். </p><h2>பரிதாப மரணம் </h2><p> இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மூளை இரத்தக் கசிவுக்காக அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.</p><p>ஆனால், செயற்கை சுவாசக் கருவியில் வைக்கப்பட்டிருந்த சூசன் பரிதாபமாக உயிரிழந்தார். 

27 வயதான Dahseir Edward Jefferson என்ற தொடர் குற்றவாளி இந்த கொடூரத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது. </p><p>தனது நண்பருக்கு உதவ சென்றபோது, ஜெபர்சனால் தாக்கப்பட்டு சூசன் உயிரிழந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T14:39:11+00:00</updated>
        </entry>
    </feed>
