<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-02T19:45:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேஷியா பயணிகள் கப்பலில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு: 41 பேரை காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesian-ferry-fire-5-dead-41-missing-1785695057"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesian-ferry-fire-5-dead-41-missing-1785695057</id>
            <summary type="text">இந்தோனேஷியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பயணிகள் கப்பலில் தீ விபத்து
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேஷியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> பயணிகள் கப்பலில் தீ விபத்து</h2><p>
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பலில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p> இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் வரை பலியாகியுள்ளனர். </p><p>கிட்டத்தட்ட 41 பேரின் நிலைமை இதுவரை என்னவென்று தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7cf46eb-22df-4d0c-9d33-c1fd80ee72e2/26-6a6f8b536e669.webp' /></p><p> காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.</p><p>முடியரா செந்தோசா 2(Mutiara Sentosa 2) என்ற பெயர் கொண்ட இந்த கப்பலில், விபத்தின் போது பயணிகள், பணியாளர்கள் என கிட்டத்தட்ட 271 பேர் பயணம் செய்துள்ளனர்.</p><p> விபத்தில் சிக்கியுள்ள இந்த கப்பல், கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுராபாயாவில் இருந்து தெற்கு சுலாவசியில் உள்ள மகாசக்கர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2> மீட்பு பணிகள் தீவிரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab27dc03-4ec2-46f4-87af-ed33df4b3e8e/26-6a6f8b5423106.webp' /></p><p>கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர கால மீட்பு படையினர் மற்றும் அருகிலிருந்த கப்பல்கள் என அனைவரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்குள் 225 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.</p><p> மேலும் உயிரிழந்த 5 பேரின் உடலையும் கப்பலில் இருந்து மீட்டெடுத்துள்ளனர். காணாமல் போயுள்ள 41 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.</p><p>அதே சமயம் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான உண்மையை கண்டறிய விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p> &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-02T18:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏதென்ஸில் சூட்கேசில் சடலமாக அடைக்கப்பட்ட பிரித்தானிய பெண்: கொலையாளி சிக்கியது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scotland-woman-body-in-athens-suspect-arrested-1785692643"></link>
            <id>https://news.lankasri.com/article/scotland-woman-body-in-athens-suspect-arrested-1785692643</id>
            <summary type="text">ஏதென்ஸில் பிரித்தானிய பெண் கொலை வழக்கில் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பெண்கிரீஸ் நாட்டின் தலைநகரான எதென்ஸி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏதென்ஸில் பிரித்தானிய பெண் கொலை வழக்கில் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பெண்</h2><p>கிரீஸ் நாட்டின் தலைநகரான எதென்ஸின் கிப்செலி(Kypseli) பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் கிடந்த சூட்கேஸில் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.</p><p>விசாரணையின் போது சூட்கேசில் சடலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தவர் ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பகுதியை சேர்ந்த 38 வயது எலிசபெத்-ஜேன் ராஸ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d3bc42-f44c-487c-9a61-9b7000681158/26-6a6f81e56e116.webp' /></p><p>மேலும் அவர் உயிரிழந்து 5 முதல் 7 நாட்களுக்கு பிறகே சூட்கேஸில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> உள்ளூர் ஊடகத்தின் தகவல்படி, எலிசபெத்-ஜேன் ராஸ் ஸ்காட்லாந்தில் இருந்து அமெரிக்கா வழியாக சைப்ரஸ் மூலமாக கடந்த ஜூன் 29ம் திகதி கிரீஸ் நாட்டிற்கு வந்தடைந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 26 வயதுடைய நபர் கைது</h2><p>அவர் உயிரிழந்த சில நாட்களுக்கு பிறகு அவரது வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3863aaf8-11ed-4926-8773-eddb0805b1af/26-6a6f81e4bc446.webp' /></p><p> அத்துடன் அவரது செல்போனில் இருந்து குறுஞ்செய்தி ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபரான வெளிநாட்டைச் சேர்ந்த 26 வயது நபர் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> அவர் மீது கொலை, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்ட மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய ஆறுதல் வழங்கப்பட்டு வருவதாக பிரிட்டன் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T17:53:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வன பாதுகாப்புக்கான நிதியை குறைக்கும் சுவிட்சர்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/switzerland-cuts-forest-climate-funding-1785687298"></link>
            <id>https://news.lankasri.com/article/switzerland-cuts-forest-climate-funding-1785687298</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்து அரசு வன பாதுகாப்புக்கான நிதியை குறைத்துள்ளது.

சுவிட்சர்லாந்து அரசு, வன பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை தழுவிய திட்டங்களுக்கு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்து அரசு வன பாதுகாப்புக்கான நிதியை குறைத்துள்ளது.
</p><p>
சுவிட்சர்லாந்து அரசு, வன பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை தழுவிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதியை 2027 முதல் குறைக்க தீர்மானித்துள்ளது.</p><p>

இந்த முடிவு, நாட்டில் கடும் வெப்ப அலைகள் மற்றும் வறட்சி காரணமாக காடுகள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எடுக்கப்பட்டதால், பரவலான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283360b1-16f2-4a29-b267-1e786e6ded7e/26-6a6f6d03e884f.webp' /></p><p>2019-இல் சுவிஸ் பாராளுமன்றம், காடுகளை வெப்பம் மற்றும் வறட்சிக்கு எதிராக பாதுகாக்க CHF 100 மில்லியன் நிதியை ஒதுக்கியது.

இதன் மூலம், அதிக வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கக்கூடிய புதிய மரவகைகள் நடவு செய்யப்பட்டன.</p><p>

2023-இல் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டாலும், நிதி மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டது. இப்போது, அரசின் புதிய நிதி திட்டத்தில் இந்த நிதி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p>சுவிஸ் சுற்றுச்சூழல் அமைச்சரான ஆல்பர்ட் ரோஸ்டி, இந்த நிதியை Federal Office for the Environment (FOEN)-இன் நிதி திட்டத்திலிருந்து நீக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், Conference on Forests, Wildlife and Landscape (CFP) அமைப்பு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
</p><h2>
நிபுணர்கள் எச்சரிக்கை</h2><p>

ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகரித்து, காடுகளில் தீப்பற்றும் அபாயம் உயரும் நிலையில், இந்த முடிவு மிகவும் தவறான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p>
ஸ்டீஃபன் முல்லர், மையக் கட்சியின் உறுப்பினரும் CFP குழுவின் உறுப்பினருமான இவர், “வன மேலாண்மை செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், நிதி குறைப்பு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.
</p><p>
இந்த முடிவு, சுவிட்சர்லாந்தின் காலநிலை மாற்றத்திற்கான முயற்சிகள் மற்றும் வன பாதுகாப்பு திட்டங்கள் மீது எதிர்காலத்தில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T16:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் நடைபெற்ற இசை திருவிழா: 17 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/teen-girl-passed-away-at-kendal-music-festival-1785687001"></link>
            <id>https://news.lankasri.com/article/teen-girl-passed-away-at-kendal-music-festival-1785687001</id>
            <summary type="text">பிரித்தானியாவில் நடைபெற்ற இசை திருவிழாவில் 17 வயது சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசை திருவிழாவில் சோகம்லேக் டிஸ்ட்ரிக்ட்(Lake District...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் நடைபெற்ற இசை திருவிழாவில் 17 வயது சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> இசை திருவிழாவில் சோகம்</h2><p>லேக் டிஸ்ட்ரிக்ட்(Lake District) பகுதியில் நடைபெற்ற கென்டல் காலிங்(Kendal Calling) இசைத் திருவிழாவில் பங்கேற்ற 17 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவக் கோளாறு காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.13 மணிக்கு கும்ப்ரியாவில்(Cumbria) நடைபெற்ற இசைத் திருவிழாவில் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fcd9500-f5a9-48c5-a241-3b7ae3c6735a/26-6a6f6bdaa42a1.webp' /></p><p> இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பாதிக்கப்பட்டவரை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p> சிறுமி உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b30e2d1-83f5-4673-8397-189ca341c2eb/26-6a6f6bdb578d0.webp' /></p><p> மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையையும் பொலிஸார் தொடங்கியுள்ளனர்.</p><p>குறிப்பாக, சிறுமி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட போது மீட்பு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்ற பெண்கள் குழுவினரை தொடர்பு கொள்ள விசாரணை அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T16:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/maruti-sets-record-241241-cars-in-july-1785685207"></link>
            <id>https://news.lankasri.com/article/maruti-sets-record-241241-cars-in-july-1785685207</id>
            <summary type="text">இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி ஜூலை 2026-இல் புதிய தொழில் சாதனையை படைத்துள்ளது.

ஒரே மாதத்தில் 2,41,241 வாகனங்களை விற்று, இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி ஜூலை 2026-இல் புதிய தொழில் சாதனையை படைத்துள்ளது.
</p><p>
ஒரே மாதத்தில் 2,41,241 வாகனங்களை விற்று, இந்திய கார் தொழில்துறையின் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
</p><p>
இதில், 2,00,123 வாகனங்கள் உள்நாட்டு சந்தையில் விற்கப்பட்டன. அதில் 1,93,203 பயணிகள் வாகனங்கள் (PV) மற்றும் 3,920 வணிக வாகனங்கள் (CV) அடங்கும். மேலும், 30,056 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6929115c-be03-49e1-ad33-2f7cfc208bd1/26-6a6f64d95f8a9.webp' /></p><p>கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மாருதி 1,80,526 வாகனங்களை விற்றிருந்தது. அதற்கு முன் 2025 ஜூலை மாதத்தில் 1,40,570 வாகனங்கள் மட்டுமே விற்றிருந்தது. இதன் மூலம், மாருதி தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
</p><p>
மாருதி சுசூகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்ததாவது: “தற்போது எங்களிடம் சுமார் 1.60 லட்சம் நிலுவையில் உள்ள முன்பதிவுகள் உள்ளன. புதிய பிரெஸ்ஸா (Brezza) ஃபேஸ்லிஃப்ட் தினமும் சுமார் 2,000 முன்பதிவுகளை பெறுகிறது. அதேசமயம், e-விடாரா (e Vitara) மாதத்திற்கு சுமார் 4,000 முன்பதிவுகளை பெறுகிறது” என்றார்.
</p><p></p><p>இந்த சாதனை, இந்திய கார் சந்தையின் வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. </p><p>மாருதி, தனது புதிய மாடல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மூலம் எதிர்காலத்தில் மேலும் விற்பனையில் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T15:38:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[18 வயதில் வேலை தேடி சென்ற இந்தியருக்கு UAE Lottery-ல் விழுந்த பரிசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-man-wins-dh30m-uae-lottery-1785683096"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-man-wins-dh30m-uae-lottery-1785683096</id>
            <summary type="text">UAE Lottery-இல் இந்தியர் ஒருவர் 30 மில்லியன் திர்ஹாம் பரிசு வென்றுள்ளார்.

சுனில் குமார் சதாசிவன் எனும் இந்தியர், UAE Lottery-ல் 30 மில்லியன் திர்ஹா...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE Lottery-இல் இந்தியர் ஒருவர் 30 மில்லியன் திர்ஹாம் பரிசு வென்றுள்ளார்.</p><p>

சுனில் குமார் சதாசிவன் எனும் இந்தியர், UAE Lottery-ல் 30 மில்லியன் திர்ஹாம் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
</p><p>
கேரளாவைச் சேர்ந்த இவர், 18 வயதில் இந்தியாவை விட்டு வெளிநாட்டில் வேலை தேடி சென்றார். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆறு சகோதரிகளின் திருமணத்திற்கும் குடும்ப நலனுக்கும் அர்ப்பணித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afb9fe41-fe4d-4899-9a87-9fe85b365bca/26-6a6f5c9a735eb.webp' /></p><p>2006-இல் திருமணம் செய்து அமீரகத்திற்கு குடிபெயர்ந்தார். பின்னர் இந்தியாவில் டைல்ஸ் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டார். ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக மீண்டும் அமீரகத்திற்கு திரும்பி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பு தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வருகிறார்.
</p><p>
சுனில் மற்றும் அவரது மனைவி 12 ஆண்டுகள் குழந்தை பெற முடியாமல் போராடினர். பல்வேறு சிகிச்சைகளில் சேமிப்புகளைச் செலவழித்தும், நம்பிக்கையை இழக்கவில்லை. இறுதியில், அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார்.</p><p> “அந்தக் காலம் எங்கள் வாழ்க்கையின் மிகக் கடினமான காலம். ஆனால் நம்பிக்கையை விடாமல் இருந்தோம்,” என அவர் கூறினார்.
</p><p></p><p>அவரது மகள், மனைவி மற்றும் தன்னுடைய பிறந்தநாள் திகதிகளி வைத்து வாங்கிய லொட்டரி சீட்டே அவருக்கு 30 மில்லியன் திர்ஹாம் அதிர்ஷ்டத்தை தந்தது.
</p><p>
“பணம் முக்கியமல்ல. என் குடும்பத்துடன் நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்ததே மிகப் பெரிய பரிசு,” என சுனில் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் தனது வீட்டை கட்டி முடித்து, மகளின் கல்வியை உறுதி செய்து, பாதுகாப்பற்ற குழந்தைகள் மற்றும் ஏழைகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளார்.</p><p>

“மக்கள் என்னை நினைவில் கொள்ள வேண்டியது இந்த வெற்றிக்காக அல்ல, நான் செய்த உதவிகளுக்காக,” என அவர் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T15:02:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறண்டுபோன ஐரோப்பிய நதி., ஒற்றை அணு மின் நிலையத்தையும் மூடும் நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hungary-shuts-nuclear-plant-amid-danube-drought-1785655426"></link>
            <id>https://news.lankasri.com/article/hungary-shuts-nuclear-plant-amid-danube-drought-1785655426</id>
            <summary type="text">ஐரோப்பிய நாடான ஹங்கேரி, தனது ஒரே அணு மின் நிலையமான பாக்ஸ் (Paks) அணு மின் நிலையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.

கடந்த 44 ஆண்டுகளில் முதல் முறையாக முழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய நாடான ஹங்கேரி, தனது ஒரே அணு மின் நிலையமான பாக்ஸ் (Paks) அணு மின் நிலையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
</p><p>
கடந்த 44 ஆண்டுகளில் முதல் முறையாக முழுமையாக இந்த அணுமின் நிலையம் நிறுத்தம் செய்யப்படுகிறது.</p><p>

இந்த மின் நிலையம் நாட்டின் மின்சார தேவையின் அரைபங்கிற்கும் மேல் வழங்கி வருகிறது.

ஆனால், டானியூப் ஆற்றின் நீர்மட்டம் வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலையில் சென்றதால், ரியாக்டர்களை குளிர்விக்க தேவையான நீர் கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b36250a-b765-4b18-9233-d2cd60c84508/26-6a6ef0845cb54.webp' /></p><p>

கடந்த வெள்ளிக்கிழமை உற்பத்தி 965 மெகாவாடாகக் குறைந்தது. பின்னர் இரவில் 240 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

சாதாரணமாக 2,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் நிலையம் இப்போது இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>டானியூப் ஆற்றின் நீர்மட்டம் -134 சென்டிமீற்றராக குறைந்துள்ளது. இது 2018-இல் பதிவான -98 செ.மீ. சாதனை அளவை விட மிகக் குறைவு. மேலும், நீர்மட்டம் -144 செ.மீ. வரை குறையக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
</p><p></p><p>இந்த வறட்சி ஹங்கேரியில் 100-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் நீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலைகள் தங்களின் நீர் பயன்பாட்டை குறைக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், அண்டை நாடான ஸ்லோவாக்கியா ஹங்கேரிக்கு உதவ தாயாக இருப்பதாக அறிவித்துள்ளது.
</p><p>
ஐரோப்பா முழுவதும் கடந்த சில மாதங்களாக கடும் வெப்ப அலைகள் தாக்கியுள்ளன. விஞ்ஞானிகள் இதற்கு மனிதனால் உண்டான காலநிலை மாற்றமே காரணம் எனக் கூறுகின்றனர்.
</p><p></p><p>இந்தச் சம்பவம் ஹங்கேரியின் மின்சார உற்பத்தி மட்டுமல்லாமல், கப்பல் போக்குவரத்து, சுற்றுலா, வேளாண்மை மற்றும் தொழில்துறை துறைகளையும் பாதித்துள்ளது. </p><p>வறட்சி மற்றும் வெப்ப அலைகள் காரணமாக ஐரோப்பா முழுவதும் ஆற்றல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T14:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலவச சுற்றுலா விசாவை அறிமுகம் செய்துள்ள வளைகுடா நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/oman-launches-free-14-day-tourist-visa-1785678616"></link>
            <id>https://news.lankasri.com/article/oman-launches-free-14-day-tourist-visa-1785678616</id>
            <summary type="text">இலவச சுற்றுலா விசாவை: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் புதிய விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஓமன் அரசு, சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலவச சுற்றுலா விசாவை: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் புதிய விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p><p>ஓமன் அரசு, சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய இலவச 14 நாள் சுற்றுலா விசா திட்டத்தை அறிவித்துள்ளது.
</p><p>
இந்த மாற்றம், வெளிநாட்டவர் குடியிருப்பு சட்டத்தின் நிர்வாக விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd50a0c4-df7e-4da9-be8d-950d8626aca5/26-6a6f4b1a67ef3.webp' /></p><p>இந்த புதிய திட்டம் Royal Oman Police Decision No. 109/2026 மூலம் அறிவிக்கப்பட்டது. இதனை லெப்டினன்ட் ஜெனரல் ஹசன் பின் மொஹ்சின் அல் ஷ்ரைகி, பொலிஸ் மற்றும் சுங்கத் துறை பொது ஆய்வாளர், அதிகாரப்பூர்வ கசேட்டில் வெளியிட்ட மறுநாளே அமுல்படுத்தினார்.
</p><p>
இந்த விசா, தகுதியான நாடுகளின் குடிமக்களுக்கு வழங்கப்படும். விசா காலாவதியாகும் முன், பயணிகள் இதனை மற்ற சுற்றுலா விசா வகைகளாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் தனித்தனியாக இருக்கும்.</p><p>

புதிய விதிமுறைகளின் படி, இந்த விசா Article 10 மற்றும் Article 29-இல் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், கட்டணம் பூஜ்யம் (Zero Omani Rials) என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p></p><p>இலவச விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதிகாரிகள், தகுதியான நாடுகளை விரைவில் அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை, ஓமனின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.</p><p>உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, ஓமன் தனது விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தி வருகிறது.

இதற்கு முன், ஓமன் வசிப்புக் கட்டுப்பாடுகளை தளர்த்தி, ஸ்பான்சர் இல்லாத விசாக்களை வழங்கியிருந்தது. இப்போது, குறுகிய கால பயணிகளுக்கான இலவச 14 நாள் விசா, சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்&nbsp;என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T14:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயை அணைக்கும் பணியிலிருந்த ஹெலிகொப்டர்கள் மோதல்: அவசர அழைப்பு விடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/helicopter-collide-in-greece-wildfire-1785682015"></link>
            <id>https://news.lankasri.com/article/helicopter-collide-in-greece-wildfire-1785682015</id>
            <summary type="text">கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.&amp;nbsp;ஹெலிகொப்டர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.&nbsp;</p><h2>ஹெலிகொப்டர்கள்&nbsp;</h2><p>
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள Psatha பகுதியில், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இரண்டு ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டிருந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5794c18-4068-41d2-8593-41b171c96500/26-6a6f5862606b6.webp' />&nbsp;</p><p></p><p>

அப்போது அந்த ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின. இதனையடுத்து அவசரகால சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
</p><p>
இதுகுறித்து தீயணைப்புத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் யானிஸ் ஆர்டோபியோஸ், 'காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருந்ததால், சம்பவ இடத்தில் இருந்த தீயணைப்பு வீரர்களால் தங்கள் வாகனங்களின் கதவுகளைக் கூட திறக்க முடியவில்லை' என்றார். </p><p>

இந்த நிலையில், பிரான்ஸ் மற்றும் ருமேனியாவைச் சேர்ந்த அவசரகாலக் குழுவினரின் உதவியுடன், சுமார் 500 கிரேக்க தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T14:45:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் இலங்கை வீராங்கனை! வரலாற்று சாதனை படைத்த சமரி அதப்பத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chamari-athapaththu-1st-sri-lankan-4000-t20-runs-1785679790"></link>
            <id>https://news.lankasri.com/article/chamari-athapaththu-1st-sri-lankan-4000-t20-runs-1785679790</id>
            <summary type="text">இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அதப்பத்து டி20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தார்.சமரி அதப்பத்து&amp;nbsp; 

பாகிஸ்தான் மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அதப்பத்து டி20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தார்.</p><h2>சமரி அதப்பத்து&nbsp;</h2><p> 

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57496f2c-6af4-4c28-8cf7-792d35fc911f/26-6a6f4fb0d3717.webp' />&nbsp;</p><p></p><p>
இப்போட்டியில் இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 15 பந்துகளில் 40 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்களை எட்டிய அவர், இந்த மைல்கல்லினை எட்டிய முதல் இலங்கை வீராங்கனை என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.&nbsp;</p><h2>4வது வீராங்கனை&nbsp;</h2><p>
மேலும், சர்வதேச அளவில் 4000 ஓட்டங்கள் குவித்த 4வது வீராங்கனை என்ற பெருமையையும் சமரி அதப்பத்து பெற்றுள்ளார்.</p><p> 

நியூஸிலாந்தின் சூஸி பேட்ஸ் (4,758), இந்திய அணியின் ஸ்ம்ரிதி மந்தனா (4,538) மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் (4,216) ஆகியோர் 4000 ஓட்டங்கள் கடந்த வீராங்கனைகள் ஆவர்.
</p><p>
சமரி அதப்பத்து இதுவரை 164 டி20 போட்டிகளில் 4003 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்கள், 14 அரைசதங்கள் அடங்கும்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/884b90c5-d751-4c85-9231-d5e59f08adf1/26-6a6f5068b7386.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T14:11:01+00:00</updated>
        </entry>
    </feed>
