<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-31T00:35:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியை வாட்டிய வரலாறு காணாத வெப்பம்: 10000ஐ தொட்ட உயிரிழப்பு எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-reach-10000-heat-related-deaths-1785447872"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-reach-10000-heat-related-deaths-1785447872</id>
            <summary type="text">ஜேர்மனியில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தொட்டுள்ளது. 10,000-ஐ தொட்ட உயிரிழப்பு
ஜேர்மனியில் இந்த ஆண்டு பதிவான மிகத் தீவிரமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தொட்டுள்ளது.</p><h2> 10,000-ஐ தொட்ட உயிரிழப்பு</h2><p>
ஜேர்மனியில் இந்த ஆண்டு பதிவான மிகத் தீவிரமான வெப்ப அலைகள் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.</p><p> ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் (RKI) என்ற நிறுவனம் வெளியிட்ட தரவுகளில், இந்த ஆண்டு அதிகமான வெப்பத்தில்&nbsp; பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa39c3c-4ef1-412d-a9a3-91a41fde6693/26-6a6bc5c27bd6a.webp' /></p><p>கோடை காலம் நிறைவடைவதற்கு முன்பே பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கை கடந்த கால உச்சபட்ச&nbsp; உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகமாகும்.</p><p></p><p> கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 19ம் திகதி வரை மட்டும் கிட்டத்தட்ட 9800 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.</p><p> ஜூன் மாதத்தில் மட்டும் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000க்கும் அதிகமாகும்.</p><p> ஜூன் காலக்கட்டத்தில் ஜேர்மனியின் வெப்ப அலை சில பகுதிகளில் 42°C (107.6°F) வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 19ம் திகதி வரை பதிவான இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு பதிவான 9000 என்ற அதிகபட்ச உயிரிழப்புகளின் எண்ணிக்கையை முந்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cb16ecc-7a5b-47e2-a8f7-9084b06b4bec/26-6a6bc5c330b9c.webp' /></p><p> ஜூன் 22 முதல் 28ம் திகதி வரை பதிவான உயிரிழப்புகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையை விட 32% அதிகமாகும்.</p><p> ஜூலை 19 க்கு பிந்தைய வெப்ப நிலைகள் மற்றும் உயிரிழப்புகள் இன்னும் இதில் சேர்க்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> ஜேர்மனியில் பதிவான தீவிரமான வெப்ப அலையில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-30T23:52:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டினர்: சியூட்டா எல்லையில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/morocco-migrants-cross-ceuta-border-viral-video-1785455419"></link>
            <id>https://news.lankasri.com/article/morocco-migrants-cross-ceuta-border-viral-video-1785455419</id>
            <summary type="text">மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் எல்லைப்புற நகரான சியூட்டாவிற்குள் நுழைந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பெயினுக்குள் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் எல்லைப்புற நகரான சியூட்டாவிற்குள் நுழைந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டினர்</h2><p>வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய ஆதிக்கப் பகுதியான சியூட்டாவின்(Ceuta) எல்லைப் பகுதிக்குள் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a12c048-670a-465d-8f83-7b0a2cdbbd9d/26-6a6be33d03b07.webp' /></p><p> ஆயிரக்கணக்கானோரின் அத்துமீறிய நுழைந்ததை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு முற்றிலும் சிதைப்பட்டு இருப்பதாகவும், உடனே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு எல்லை பாதுகாப்பிற்கு இராணுவத்தை அனுப்ப வேண்டும் எனவும் உள்ளூர் அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p> அத்துமீறி நுழையும் ஆயிரக்கணக்கானோர்(பெரும்பாலானோர் மொராக்கோவை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை சேர்ந்தவர்கள்) இளைஞர், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் நுழையும் குடும்பத்தினர் ஆவார்க்ள்.</p><p></p><p> தாராஜல் எல்லை வழியாகவும், கடற்கரை வழியாகவும் சியூட்டாவிற்குள் நுழையும் இந்த மக்களில் சிலர் “விவா எஸ்பானா”(Viva España!) என்ற கோஷங்களை எழுப்பியும், சாலைகளில் நடனமாடியும் வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p> எல்லை காவலில் இருந்த அதிகாரிகள் நிலைமையை மிகவும் மோசமானதாக விவரித்துள்ளனர்.</p><p>இதற்கு முந்தைய புதன்கிழமை அன்று, ஆபத்தான முறையில் பலர் கடலில் நீந்தி சென்று ஸ்பெயின் நாட்டிற்கு நுழைய முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><iframe width="988" height="556" src="https://www.youtube.com/embed/hne9e6SKCl4" title="Migrants storm Ceuta to get into Europe | DW News" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><h2> மொராக்கோ மெளனம்</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக மொராக்கோ அதிகாரிகள் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.</p><p>அதே நேரத்தில் இந்த நெருக்கடிக்கு பதிலளித்த ஸ்பெயின் உள்துறை அமைச்சகம், குடிமக்களும் எல்லை பாதுகாப்பும் முதன்மையானவை என்று உறுதிப்படுத்தினார்.</p><p> ஆனால் குடி பெயர்வு தொடர்பான பிரச்சனைகளுக்கு எல்லாம் தேசிய அளவிலான அவசரநிலை பிரகடனம் செய்ய முடியாது என மறுத்துவிட்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T23:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் புதிய கட்டுப்பாடுகள்: நாய் கழிவுகளை சுத்தம் செய்யாவிட்டால் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-city-introduces-new-rules-to-dog-owners-1785451847"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-city-introduces-new-rules-to-dog-owners-1785451847</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் கியாஸ்ஸோ(Chiasso) நகரில் நாய் வளர்ப்போருக்கான புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாய் கழிவுகளை சுத்தம் செய்ய உத்தரவுபொது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் கியாஸ்ஸோ(Chiasso) நகரில் நாய் வளர்ப்போருக்கான புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.</p><h2> நாய் கழிவுகளை சுத்தம் செய்ய உத்தரவு</h2><p>பொது இடங்கள் மற்றும் தெருக்களில் நாய்களின் கழிவு மற்றும் சிறுநீரால் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சுவிட்சர்லாந்தின் கியாஸ்ஸோ நகரம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p> அதன்படி நாய் வளர்ப்பாளர்கள் இனி தங்கள் நாய்களை பொது இடங்களுக்கோ அல்லது தெருக்களுக்கோ அழைத்து செல்லும் போது கட்டாயம் கழிவு பையும், தண்ணீர் பாட்டிலும் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a48725c3-bde2-42f8-9dbc-7d1f7b0cf0c3/26-6a6bd548b307b.webp' /></p><p>பொது இடங்களில் நாய்கள் சிறுநீர் கழித்தால் அதனை தண்ணீர் கொண்டு நீர்த்து போக செய்ய வேண்டும், மேலும் கழிவுகளை அதற்கான பைகள் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> தொடர் வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக நகரின் வீதிகளில் அதிக துர்நாற்றம் வீசுவதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக நகராட்சி மேயர் புருனோ அரிகோனி காரணத்தை விளக்கியுள்ளார்,</p><p></p><h2>மீறியவர்களுக்கு அபராதம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef97ed14-ddd1-4f47-af14-93c60d84caeb/26-6a6bd5496456f.webp' /></p><p>இந்த புதிய உத்தரவை பின்பற்ற தவறியவர்களுக்கு முதலில் எச்சரிக்கை கொடுக்கப்படும்.</p><p> பின்னர் மீண்டும் இந்த தவறினை செய்தால் அவர்களுக்கு 100 சுவிஸ் பிராங்க் அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T22:51:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழு நீள நீச்சலுடைகளுக்கு தடை விதிக்கும் சட்டம்: ஜெனிவா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/geneva-suspends-full-body-swimwear-ban-1785449991"></link>
            <id>https://news.lankasri.com/article/geneva-suspends-full-body-swimwear-ban-1785449991</id>
            <summary type="text">முழு நீள நீச்சல் உடைகள் மீதான தடைக்கு ஜெனிவா நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முழு நீள நீச்சலுடைகளுக்கு தடைபொது இடங்களில் உள்ள நீர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முழு நீள நீச்சல் உடைகள் மீதான தடைக்கு ஜெனிவா நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.</p><h2> முழு நீள நீச்சலுடைகளுக்கு தடை</h2><p>பொது இடங்களில் உள்ள நீர்நிலைகளில் முழு அளவிலான நீச்சல் உடைகளுக்கு தடை விதிக்கும் சட்டத்தை ஸ்விட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கிராண்ட் கவுன்சிலால் கடந்த மார்ச் மாதம் அங்கீகரித்து இருந்தது.</p><p> மேலும் இந்த சட்டம் மே 30ம் திகதி முதல் அமுலுக்கு வந்த நிலையில் , இந்த சட்டத்தின் பிரிவு 5ன் கீழ்&nbsp; முழங்காலுக்கு கீழே உள்ள கால்களையும், தோள்களுக்கு கீழே உள்ள கைகளையும் முழுமையாக மறைக்கும் நீச்சல் ஆடைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c2ee939-1a98-4e18-a765-38cdb95a781b/26-6a6bce08f0698.webp' /></p><p> இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்கள் அணியும் புர்கினி வகையிலான நீச்சல் உடைகளை குறிவைத்தே இந்த சட்டம் முன்மொழியப்பட்டது. பின்னர் மருத்துவ காரணங்கள் அல்லது சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கப்படும் ஆடைகளுக்கும் இந்த தடை விரிவாக்கப்பட்டது.</p><p>சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்திற்கு எதிர்ப்புகள் உடனடியாக கிளம்பின.</p><p> மேலும் இந்த தடை சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் அதிகாரப்பூர்வமான வழக்குகளையும் தொடர்ந்தனர்.</p><p></p><h2> நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு</h2><p>இந்நிலையில் ஜெனீவா நகரின் பொது நீர் நிலையங்களில்&nbsp; முழு அளவிலான நீச்சல் ஆடைகளை பயன்படுத்த தடை விதித்த சட்டத்திற்கு ஜெனிவா நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.</p><p> இதன் மூலம் இறுதித் தீர்ப்பு வரும் வரை ஜெனீவா நகரின் பொது நீர் நிலையங்களில்&nbsp; முழு அளவிலான நீச்சல் ஆடைகளை பயன்படுத்த எந்தவொரு தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> இந்த தடைச் சட்டம் மத சுதந்திரம், தனிநபர் விருப்பம், கண்ணியம் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றை கேள்வி எழுப்புவதாக உள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T22:20:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சயனைடு விஷம் காரணமாக 15 யானைகள் உயிரிழப்பு: கென்யா தேசிய பூங்காவில் சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cyanide-poisoning-kils-15-elephant-in-kenya-1785445697"></link>
            <id>https://news.lankasri.com/article/cyanide-poisoning-kils-15-elephant-in-kenya-1785445697</id>
            <summary type="text">கென்யாவின் தேசிய பூங்காவில் 15 யானைகள் சயனைடு விஷம் காரணமாக உயிரிழந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சயனைடு விஷம் காரணமாக 15 யானைகள் உயிரிழப்பு
கென்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கென்யாவின் தேசிய பூங்காவில் 15 யானைகள் சயனைடு விஷம் காரணமாக உயிரிழந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. </p><h2>சயனைடு விஷம் காரணமாக 15 யானைகள் உயிரிழப்பு</h2><p>
கென்யாவின் புகழ்பெற்ற அம்போசெலி தேசிய பூங்காவில் இந்த மாத தொடக்கத்தில் 15 யானைகள்&nbsp; உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.</p><p> இந்நிலையில் உயிரிழந்த 15 யானைகளும் விவசாய பூச்சிக்கொல்லிகளில் இருந்த சயனைடு விஷம் பாதித்ததால் தான் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு வனவிலங்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> தன்சானிய நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள இந்த பூங்காவில், விவசாயிகள் பயிரிட்டு இருந்த நச்சுத்தன்மை கொண்ட பூச்சுக்கொல்லிகள் தெளிக்கப்பட்டிந்த தக்காளிப் பழங்களை உட்கொண்டதாலே 15 யானைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என்று கென்ய வனவிலங்கு சேவை அமைப்பின் பேச்சாளர் டங்கன் ஜுமா வன்யாமா(Duncan Juma Wanyama) தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b982a88-cb4a-4161-a9c9-3bd399c37aa5/26-6a6bbd432fa63.webp' /></p><p></p><p>இதனை உறுதிப்படுத்தும் விதமாக, உயிரிழந்த யானைகளின் வயிற்றில் தக்காளி பழங்கள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>திட்டமிட்ட செயலா? அல்லது தற்செயல் நிகழ்வா?</h2><p>
யானைகள் சயனைடு இருந்த தக்காளி பழங்களை உட்கொண்டது&nbsp; தற்செயல் நிகழ்வா? அல்லது திட்டமிட்ட செயலா? என பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> சயனைடு என்பது நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய உடல் பாகங்களை உடனடியாக பாதிக்கக்கூடிய கொடிய நச்சுப் பொருளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T21:08:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-threat-to-boycott-fifa-world-cup-1785435271"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-threat-to-boycott-fifa-world-cup-1785435271</id>
            <summary type="text">ஃபிபா பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்தால் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து விலகுவதாக ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன. உலகக் கோப்பையை புறக்கணிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிபா பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்தால் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து விலகுவதாக ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.</p><h2> உலகக் கோப்பையை புறக்கணிக்கும் ஐரோப்பா?</h2><p>ஃபிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ(Gianni Infantino) முன்மொழிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் சர்ச்சைக்குரிய திட்டத்தை ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான UEFA எதிர்த்துள்ளது.</p><p>உலகக் கோப்பை பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை ஃபிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ முன் நகர்த்தி சென்றால் UEFA உறுப்பு நாடுகள் இனி ஃபிபா உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்காது என எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f8e9f20-bb1d-4254-acd6-45b8298f040e/26-6a6b948901139.webp' /></p><p> ஃபிபா பங்குகளை விற்பனை செய்யும் வணிக திட்டத்திற்கும், வெளிநாடு முதலீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 55 உறுப்பு நாடுகளை கொண்ட UEFA கூட்டமைப்பு&nbsp; இந்த வாரம் அவசர கூட்டம் ஒன்றை கூட்டி ஃபிபா நடத்தும் தொடர்களை புறக்கணிப்பது தொடர்பான முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.</p><p> மேலும் உலகக் கோப்பை போட்டிகளை முதலீட்டு பொருளாக மாற்றக்கூடாது என்றும் UEFA திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.</p><p></p><h2> 20 பில்லியன் டொலரில் புதிய துணை நிறுவனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d77493b-f57d-42b8-bb4c-96eb2e1b1adb/26-6a6b9489ab6b2.webp' /></p><p>ஃபிபா தலைவர்&nbsp; ஜியானி இன்பான்டினோ 20 பில்லிய்ன் டொலர் மதிப்பிலான துணை நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதை செவ்வாய்க்கிழமை ஃபிபா உறுதிப்படுத்தியது.</p><p> மேலும் ஃபிபா பார்வர்ட் என்டர்பிரைஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய முயற்சியின் கீழ் நிறுவனத்தின் 20%-க்கும் அதிகமான பங்குகளை விற்று கிட்டத்தட்ட 4.2 பில்லியன் டொலர்களை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T20:44:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய கடற்கரையில் மீண்டும் சோகம்: கடல் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-dies-at-frinton-coast-in-uk-essex-1785437185"></link>
            <id>https://news.lankasri.com/article/man-dies-at-frinton-coast-in-uk-essex-1785437185</id>
            <summary type="text">பிரித்தானியாவின் ஃப்ரின்டன் கடற்கரையில் நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்
ஃப்ரின்டன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் ஃப்ரின்டன் கடற்கரையில் நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்</h2><p>
ஃப்ரின்டன் கடற்கரையில் கடலில் சிக்கி தவித்த நபர் இறுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பதாக எசெக்ஸ் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> வியாழக்கிழமை பிற்பகல் 2.10 மணி அளவில் கடல் நீரில் மூழ்கிய நபர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டார். </p><p>&nbsp;அவருக்கு போதிய முதலுதவி சிகிச்சைகள் வழங்கியும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/939fe37e-16b1-49d7-ab95-4dd3070a7756/26-6a6b9c028b37a.webp' /></p><p> தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு மருத்துவ ஊர்தி மற்றும் வான்வழி அவசர ஊர்தி உட்பட 10 க்கும் மேற்பட்ட அவசர சேவை வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.</p><p> மேலும் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தடையின்றி நடைபெறும் விதமாக பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு உள்ளூர் காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.</p><p></p><h2> எசெக்ஸ் கடற்கரையில் தொடரும் சோகம்</h2><p>
இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு முன்பு ஜூலை 22ம் திகதி மேற்கு பகுதியில் உள்ள மெர்சியாவில் நிகழ்ந்த விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்து இருந்தான்.</p><p> அத்துடன் ஏற்கனவே அந்த விபத்தில் 41 வயது பெண்ணும், அவரது 15 வயது மகளும் உயிரிழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-30T18:46:34+00:00</updated>
        </entry>
    </feed>
