<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-21T05:23:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வன்முறையைக் கையில் எடுக்கும் புலம்பெயர்வோர்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/migrants-attcked-cops-on-france-beach-1787287695"></link>
            <id>https://news.lankasri.com/article/migrants-attcked-cops-on-france-beach-1787287695</id>
            <summary type="text">Migrants on a French beach attacked cops as they tried to set sail for Britain: பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Migrants on a French beach attacked cops as they tried to set sail for Britain: பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர் பிரான்ஸ் நாட்டு பொலிசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
</p><p>

பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர், பிரான்ஸ் நாட்டு பொலிசாரை தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
</p><h3>
அதிர்ச்சிக் காட்சிகள்
</h3><p>
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் இந்தக் காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டு கடற்கரை ஒன்றில் நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdda8ed2-2c44-4ffa-a7fc-c9dc2ffcf5bc/26-6a87d891e15e4.webp' /></p><p>
ஆம், கடத்தல்காரர்கள் வன்முறையை பயன்படுத்தி, புலம்பெயர்வோரை கட்டாயப்படுத்தி சிறுபடகுகளில் ஏற்றி அனுப்புவது குறித்த செய்திகளை கேள்விப்பட்டுள்ளோம்.
</p><p>
ஆனால், முதன்முறையாக, புலம்பெயர்வோர் வன்முறையைக் கையில் எடுக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a5f78b-d280-4e33-99f4-b4670fcd736f/26-6a87d89125948.webp' /></p><p>

பிரான்ஸ் நாட்டு பொலிசார், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரை தடுக்க போதுமான முயற்சிகள் மேற்கொள்வதில்லை என பலமுறை பிரித்தானிய தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
ஆனால், இந்த காட்சிகளைப் பார்க்கும்போது, அந்தக் குற்றச்சாட்டு முழுமையாக உண்மையானது அல்ல என்பது தெளிவாகியுள்ளது.
</p><p>
தற்போது வெளியிடப்பட்டுள்ள காட்சிகளில், புலம்பெயர்வோர் சிலர் ரப்பர் படகொன்றை தூக்கிக்கொண்டு கடலுக்குள் இறங்க முயல்வதையும், பொலிசார் அவர்களைத் தடுக்க முயல, புலம்பெயர்வோரில் சிலர் பொலிசாரை தாக்குவதையும் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1LoilLwwSjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

அவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே போன்ற ஒரு ஸ்பிரேயை தெளிக்கும் பொலிசார், அவர்களுடைய ரப்பர் படகுகளை கத்தியால் கீறுவதையும் அந்த வீடியோவில் பார்க்கமுடிகிறது.</p><p>

ஏப்ரல் மாதம் 27ஆம் திகதிக்கும் ஆகத்து மாதம் 2ஆம் திகதிக்கும் இடையில் இதுபோல 185 சிறுபடகுகளை தடுத்து நிறுத்தியதாக பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதாவது, மூன்று மாதங்களில், சுமார் 4,300 சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தியுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T04:52:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தப்பட்ட 2 வணிக கப்பல்கள்: கேள்விக்குறியாகும் 22 இந்தியர்களின் நிலை?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-merchant-ships-hijacked-22-indians-in-peril-1787283635"></link>
            <id>https://news.lankasri.com/article/2-merchant-ships-hijacked-22-indians-in-peril-1787283635</id>
            <summary type="text">2 merchant ships hijacked off Yemen, Somalia sea 22 Indians in peril : ஏமன் மற்றும் சோமாலியா கடற்கரை பகுதியில் 2 வணிக கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2 merchant ships hijacked off Yemen, Somalia sea 22 Indians in peril : ஏமன் மற்றும் சோமாலியா கடற்கரை பகுதியில் 2 வணிக கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளன.</p><h2> ஏமன் கடற்கரையில் கடத்தப்பட்ட வணிக கப்பல்கள்</h2><p>
ஏமன் கடற்கரைக்கு 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவிற்கு சென்று கொண்டிருந்த “எம்டி ஷிபு 1”(M.T. Sibu 1) என்ற எண்ணெய் வணிக கப்பல் ஆயுதமேந்திய 6 கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.</p><p> எரித்திரியா நாட்டு கொடியுடன் பயணித்த இந்த படகில் மொத்தம் 20 பணியாளர்கள் இருந்த நிலையில் அதில் 16 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4b2ba0f-721f-45ff-8a9e-3dc77b410899/26-6a87c8b480e27.webp' /></p><p>வணிக கப்பலானது நேற்று கடத்தப்பட்ட நிலையில், கப்பலின் தற்போதைய நிலை குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. </p><p>&nbsp;ஆனால் 16 இந்தியர்களுடன் சேர்த்து மொத்தம் 20 பணியாளர்களும் பத்திரமாக இருப்பதாக தகவல் கிடைத்து இருப்பதாக இந்திய கடல்சார் நிர்வாக தலைமை இயக்குநரகம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><h2> சோமாலியாவில் கடத்தப்பட்ட மற்றொரு கப்பல்</h2><p>திங்கட்கிழமையன்று சோமாலியாவின் பண்ட்லேன்ட் கடற்கரைக்கு அருகே கேமரூன் கொடியுடன் சென்ற வணிக கப்பலான “எம்வி லுடிப்”(M/V LUTUF) கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0d6c0c3-c2e2-4d3b-9ad2-5eff101863c0/26-6a87c8b5339df.webp' /></p><p> இதில் மொத்தம் 10 பணியாளர்கள்&nbsp; இருந்த நிலையில் அவர்களில் 6 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.</p><p> வணிக கப்பலானது பண்ட்லேண்ட்டில் உள்ள Eyl மாவட்டத்தில் உள்ள மராரையாவுக்கு 3.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளது.</p><p></p><p> சோமாலிய அதிகாரிகளின் தகவல் படி, கடத்தப்பட்ட கப்பல் வடக்கு சோமாலியாவில் Nugaal கடற்கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.</p><p> கடத்தப்பட்ட போலார் மூவ்மெண்ட் ஷிப்பிங் கப்பலானது சோமாலியாவில் உள்ள துருக்கி ராணுவ பயிற்சி மையத்திற்கான ஆயுதங்கள், பயிற்சி உபகரணங்கள் சேட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு சென்றதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் 8 கடற்கொள்ளையர்கள் இணைந்து இந்த வணிக கப்பலை கடத்தி இருப்பதாகவும், இவர்கள் கடந்த ஏப்ரலில் ஸ்வார்ட் என்ற கப்பலை கடத்தியவர்கள் என்றும் சோமாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T04:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலாஸ்காவில் 8 பேருடன் பறந்த Charter விமானம் விபத்து: தேடுதல் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/alaska-charter-plane-crashed-near-cape-newenham-1787285029"></link>
            <id>https://news.lankasri.com/article/alaska-charter-plane-crashed-near-cape-newenham-1787285029</id>
            <summary type="text">Alaska Charter plane crashed near cape newenham: &amp;nbsp;அலாஸ்காவில் 8 பேருடன் பறந்த Charter விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானம்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Alaska Charter plane crashed near cape newenham: &nbsp;அலாஸ்காவில் 8 பேருடன் பறந்த Charter விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2> விபத்துக்குள்ளான விமானம்</h2><p>மேற்கு அலாஸ்காவின் தொலைதூர ரேடார் நிலையம் அருகே 2 விமானிகள் மற்றும் 6 பயணிகள் என 8 பேருடன் சென்ற Charter விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதாக என தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தகவல் படி தெரியவந்துள்ளது.</p><p> விமானம் ஆங்கரேஜில்(Anchorage) இருந்து புறப்பட்டு கேப் நியூஹாம்(Cape Newenham) நோக்கிச் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7431b4e1-5b44-4867-9fda-de6c7d74f597/26-6a87ce26c4a61.webp' /></p><p></p><p> விபத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அதில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் தற்போதைய நிலைமை குறித்தும் எந்தவொரு தகவலும் தெரியவரவில்லை.</p><p> விபத்தை தொடர்ந்து அலாஸ்கா மீட்பு ஒருங்கிணைப்பு மையம் விபத்து தொடர்பான தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தொடங்கியுள்ளது.</p><p> விபத்துக்கான காரணத்தை கண்டறிய உள்ளூர் அதிகாரிகள் மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்களை திரட்டி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T04:04:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானைத் தனிமைப்படுத்த ட்ரம்பின் திட்டம்... சீனா மற்றும் ரஷ்யாவால் முடக்கக்கூடும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-russia-could-hobble-trump-1787261112"></link>
            <id>https://news.lankasri.com/article/china-russia-could-hobble-trump-1787261112</id>
            <summary type="text">China and Russia could hobble Trump’s plans: ஈரானைத் தனிமைப்படுத்துவதற்கான ட்ரம்ப்பின் திட்டங்களுக்குச் சீனா மற்றும் ரஷ்யா முட்டுக்கட்டை போடக்கூடும்....</summary>
            <content type="html"><![CDATA[<p>China and Russia could hobble Trump’s plans: ஈரானைத் தனிமைப்படுத்துவதற்கான ட்ரம்ப்பின் திட்டங்களுக்குச் சீனா மற்றும் ரஷ்யா முட்டுக்கட்டை போடக்கூடும்.
</p><p>ஈரானுக்குப் பொருளாதார ரீதியாக உதவியை வழங்கும் எந்தவொரு நாட்டின் மீதும் நிதி ரீதியான தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.</p><h2>சீனா மற்றும் ரஷ்யா</h2><p>
</p><p>இஸ்ரேல் காரணமாக ஈரானுடனான அமெரிக்காவின் அதிக செலவுமிக்க போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>தனது பதவிக்காலத்தின் முற்பகுதியில் பல பாதிப்புகளை ஏற்படுத்திய வர்த்தகப் போர்களுக்குப் பிறகு, தனது வெளிவிவகாரக் கொள்கை இலக்குகளை அடைய அமெரிக்காவின் பொருளாதார வலிமையைப் பயன்படுத்திக்கொள்ள ட்ரம்ப் மேற்கொள்ளும் மிகச் சமீபத்திய முயற்சி இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0604b13a-af95-4c6d-996a-d05f34a4cb11/26-6a8770baaeed0.webp' /></p><p> </p><p>ஆனால், ஈரானின் முதன்மையான வர்த்தகப் பங்காளிகளான சீனா மற்றும் ரஷ்யா மீது ட்ரம்பிற்கு உள்ள செல்வாக்கு அல்லது அழுத்தம் செலுத்தும் திறன் குறைவானதே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். </p><p>ரஷ்யா ஏற்கனவே அமெரிக்காவின் பரவலான பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டுள்ளதுடன், அமெரிக்கத் தலைமையிலான பொருளாதாரக் கட்டமைப்பிற்கு வெளியிலேயே பெரும்பாலும் செயல்பட்டு வருகிறது. </p><p>அதேவேளை, தனது சொந்தப் பொருளாதார நலன்களுக்கு உகந்ததாக இருக்கும்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் புறக்கணிக்கத் தயாராக இருப்பதை சீனா பலமுறை வெளிப்படுத்தியுள்ளது. </p><p>ட்ரம்ப் எடுத்துள்ள இந்த முடிவும் தோல்வியில் முடியும் என்றே ஆய்வாளர் ஒருவரின் கருத்தாக உள்ளது.
பாரம்பரியமாகப் பலதரப்பு ஒருங்கிணைப்பின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருவகை ஒருங்கிணைந்த தடைகளை, ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக அமுல்படுத்த முயற்சிக்கிறார்.</p><p></p><p> </p><p>அதாவது, சீனா, ரஷ்யா, ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகியவற்றை இதில் இணைத்துக்கொள்வது அவசியமாகும். ஆனால் அதற்கான நகர்வுகளை அமெரிக்கா முன்னெடுக்காமல், முடிவுகளை அறிவித்துள்ளது.</p><p>ஈரான் மீதான இந்த நகர்வுகளை ட்ரம்ப் எடுத்த அதே நாளில், முக்கியமான இறக்குமதிகள் மற்றும் வணிகச் சந்தைகளுக்கான அணுகல் ஆகியவற்றிற்கு நீண்டகாலமாக ஈரானைச் சார்ந்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், </p><p>தனது நாட்டின் மீது ஈரான் ராணுவம் இரண்டு ஏவுகணைகளை ஏவியதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ஈரான் மீது காலவரையறையற்ற வர்த்தகத் தடையை அறிவித்தது. </p><p>இதன் பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தம் இருக்கலாம் என்றே பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் குறித்த பேராசிரியரான நாடர் ஹபிபி குறிப்பிடுகிறார். </p><p>ஆனால், சீனா-ஈரான் இடையிலான வர்த்தகத்திற்கு இடையூறு விளைவிக்கும் அமெரிக்காவின் எந்தவொரு திட்டமும் குறிப்பிடத்தக்க தடைகளைச் சந்திக்கக்கூடும் என்றே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. </p><p>பகுப்பாய்வு நிறுவனமான Kpler-இன் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் ஈரான் ஏற்றுமதி செய்த எண்ணெயில் 80 சதவீதத்தை சீனா வாங்கியுள்ளது.</p><p> இதனால், சீனாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்கு வைப்பது பெரும்பாலும் சவாலான ஒன்றாகும்; ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க நிதி அமைப்பைச் சார்ந்திருக்காமல் சுதந்திரமாகச் செயல்படுபவை.</p><h2>பிரச்சினையைத் தீர்க்க உதவாது</h2><p>
</p><p>மேலும், அமெரிக்க நிதியமைச்சகம் அச்சுறுத்தியுள்ளபடி, ஈரானிய நிதிகளைக் கையாளும் முக்கிய சீன வங்கிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது பாதிப்பை ஏற்படுத்தினாலும், அது ஒரு முக்கியமான கட்டத்தில் சீனாவைத் திருப்பித் தாக்கத் தூண்டவும் கூடும். </p><p>இதனிடையே, ட்ரம்பின் பொருளாதார அழுத்த நடவடிக்கைக்குப் பதிலளித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், கூடுதல் தடைகள் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்று கூறியுள்ளார்.
</p><p>அடுத்த மாதம் அமெரிக்காவுக்குச் செல்லவிருக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் பயணத்திற்கு முன்னதாக, சீனாவுடனான பதற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவே அமெரிக்கா முயன்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/327413af-387d-4584-b017-e1996527faf9/26-6a8770bb744fc.webp' /></p><p> </p><p>ஈரானைப் பொறுத்தவரை சீனாவை விட ரஷ்யா ஒரு சிறிய வர்த்தகப் பங்காளியாக இருந்தாலும், மேற்கத்திய நாடுகளின் தலையீடு அல்லது கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் வகையிலான முக்கிய வர்த்தக மற்றும் இராணுவ உறவுகளைக் கட்டியெழுப்புவதில் மாஸ்கோவும் தெஹ்ரானும் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளன. </p><p>கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ள இந்த இரு நாடுகளும் ஜனவரி 2025-இல் 20 ஆண்டுகாலக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன; ரஷ்ய எரிசக்தித் துறை அமைச்சர் செர்ஜி சிவிலேவின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் 2025-ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அவற்றின் வர்த்தக அளவை 4.8 பில்லியன் டொலராக உயர்த்த உதவியது. </p><p>தடை விதிக்கப்பட்ட எண்ணெய் வர்த்தகத்தைத் தாண்டி, ரஷ்யாவும் ஈரானும் காஸ்பியன் கடல் வழியாக ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களையும் பரிமாறிக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>இந்த நிலையில், ஈரானின் வெளிவிவகார அமைச்சர் புதன்கிழமையன்று, ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் முன்னெடுத்துள்ள பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாகச் சாடினார்; இது அமெரிக்காவின் தோல்வியடைந்த கொள்கைகளின் தொடர்ச்சி என்றும், இது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மேலும் பல தோல்விகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T00:22:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுங்கவரி இல்லா 10 லட்சம் டன் கச்சா சர்க்கரை இறக்குமதிக்கு இந்தியா அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/allows-duty-free-sugar-imports-1787271836"></link>
            <id>https://news.lankasri.com/article/allows-duty-free-sugar-imports-1787271836</id>
            <summary type="text">India allows 10 lakh tonnes of duty-free raw sugar imports: 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.
உள்நாட்டில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>India allows 10 lakh tonnes of duty-free raw sugar imports: 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.
</p><p>உள்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அக்டோபர் 31 வரை 10 லட்சம் மெட்ரிக் டன் வரையிலான கச்சா சர்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.</p><h2>வரி இல்லாத இறக்குமதி</h2><p> </p><p>இதன் மூலம் ஏறக்குறைய பத்து ஆண்டுகளில் முதல் முறையாகச் சர்க்கரை இறக்குமதி செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
சுங்க வரி விகித ஒதுக்கீட்டின் கீழ் கச்சா சர்க்கரை இறக்குமதியை அனுமதிக்கும் வகையில், வியாழக்கிழமையன்று அதன் இறக்குமதிக் கொள்கை திருத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86243082-2300-45d8-aad8-5be806baaf36/26-6a879a9ee2e12.webp' /></p><p>
</p><p>TRQ (சுங்க வரி விகித ஒதுக்கீட்டு முறை) திட்டத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட அளவிலான சரக்குகளைக் குறைந்த சுங்க வரியிலோ அல்லது வரி இல்லாமலோ இறக்குமதி செய்ய முடியும். </p><p>சமீபத்திய அறிவிப்பு, வரி இல்லாத இறக்குமதி வரம்பை 10 லட்சம் டன்களாக நிர்ணயிப்பதோடு, இத்திட்டத்தை 2026 அக்டோபர் 31 வரை நடைமுறையில் வைத்திருக்கிறது. </p><p>விநியோகம் குறைந்ததால், கடந்த இரண்டு மாதங்களில் சர்க்கரை விலை கிட்டத்தட்ட 40 சதவீதம் உயர்ந்த நிலையில், பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில் நுகர்வோர் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>இந்தச் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே சர்க்கரையை அதிகம் நுகரும் நாடு இந்தியா. அறிவிப்பு வெளியிடப்பட்ட திகதி வரை ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சர்க்கரைக்காக, SION E-52-ன் கீழ் வழங்கப்பட்ட முன்னேறிய அங்கீகாரங்களை (Advance Authorisations) புதிய TRQ திட்டத்திற்கு மாற்றிக்கொள்ளும் ஒருமுறை வாய்ப்பையும் அரசு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. </p><p>அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா சர்க்கரையிலிருந்து ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அல்லது இனி தயாரிக்கப்படவிருக்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கும் இந்த விதிமுறை பொருந்தும். </p><p>இருப்பினும், இந்த மாற்றத்தைத் தெரிவுசெய்யும் நிறுவனங்கள், இறக்குமதியின் போது தாங்கள் பெற்றிருந்த ஜிஎஸ்டி விலக்கைச் செலுத்த வேண்டியிருக்கும்.</p><p> மட்டுமின்றி, இத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் கச்சா சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை, அக்டோபர் 31-ஆம் திகதிக்குள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87603ed6-e2fc-45c6-8621-e2d3afad621c/26-6a879a9f9f6a2.webp' /></p><p> </p><p>உள்நாட்டுச் சர்க்கரை சந்தையைச் சமநிலைப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளில், இந்த இறக்குமதித் தளர்வும் இணைந்துள்ளது. </p><p>பதுக்கல் மற்றும் ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்தவும், நியாயமான விலையில் விநியோகத்தைத் தக்கவைக்கவும் நோக்கமாகக் கொண்டு, ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரை சர்க்கரை வியாபாரிகள் இருப்பு வைப்பதற்கான வரம்புகளை அரசு ஏற்கனவே விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T00:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் உக்கிரத் தாக்குதலுக்கு இலக்கான உக்ரைன்: 16 கடந்த இறப்பு எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/intense-russian-bombardment-1787269320"></link>
            <id>https://news.lankasri.com/article/intense-russian-bombardment-1787269320</id>
            <summary type="text">Kyiv comes under intense Russian bombardment: உக்ரைன் மீது ரஷ்யாவின் கடுமையான குண்டுவீச்சில் 16க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
உக்ரைனின் தலைநகரான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Kyiv comes under intense Russian bombardment: உக்ரைன் மீது ரஷ்யாவின் கடுமையான குண்டுவீச்சில் 16க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.</p><p>
உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா நடத்திய உக்கிரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2>அதிகபட்ச சேதம்</h2><p>
</p><p>போர் தொடங்கியதிலிருந்து அந்நகரம் மீது நடத்தப்பட்ட மிகத் தீவிரமான வான்வழித் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். நள்ளிரவு வாக்கில் தொடங்கி மதியம் வரை நீடித்த தாக்குதலில், வீடுகள், ஒரு பாடசாலை மற்றும் குழந்தைகள் மருத்துவ மையம் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa3b859d-1671-486e-8f7f-17b4108e3bca/26-6a8790cacd751.webp' /></p><p> </p><p>தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், 33 பேர் காயமடைந்ததாக மற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>இது ஒரு மிகப்பெரிய தாக்குதல்; பொதுமக்கள் பயன்பாட்டிற்கான உள்கட்டமைப்புகளுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில், பல்வேறு வகையான பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஒருங்கிணைத்து ரஷ்யர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். </p><p>இரவுநேரத் தாக்குதலில் ரஷ்யா டசின் கணக்கான பாலிஸ்டிக், குரூஸ் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும், 168 ட்ரோன்களையும் ஏவியதாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>பின்னர், 46 குரூஸ் ஏவுகணைகளில் 41-ஐயும் 145 ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தெரிவித்தது; எனினும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஏவப்பட்ட அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகள் எதையும் இடைமறித்து அழிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. </p><p>பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளின் பற்றாக்குறையால், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே வந்து சேரக்கூடிய அதிவேக ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள உக்ரைன் திணறி வருகிறது.</p><h2>ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்</h2><p> </p><p>இதனிடையே, பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, எத்தனை ஏவுகணைகள் ஏவப்பட்டன என்பதை அறிவிப்பதை நிறுத்த விமானப்படை இந்த மாதத் தொடக்கத்தில் முடிவு செய்தது. </p><p>இந்த நிலையில், தாக்குதல்களுக்கு உலகளாவிய ரீதியில் கண்டனம் தெரிவிக்குமாறு ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். வான் பாதுகாப்பு வசதிகள் குறைவாகவே உள்ள நிலையில், இரு தரப்பினரும் நீண்ட தூரத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb18d3a5-f684-4776-9112-6c77469a1335/26-6a8790cb802b6.webp' /></p><p> </p><p>உக்ரைன், புதிதாக உருவாக்கப்பட்ட கிரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி மாஸ்கோவிற்கு அருகிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. </p><p>அதே நேரத்தில், ரஷ்யா கடுமையான பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதிக அளவில் பயன்படுத்தி கீவ் மீதான தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T23:39:34+00:00</updated>
        </entry>
    </feed>
