<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-15T09:33:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதை உறுதிப்படுத்திய அமெரிக்கா - உலகளவில் பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-confirms-deployment-of-space-weapons-1789464228"></link>
            <id>https://news.lankasri.com/article/us-confirms-deployment-of-space-weapons-1789464228</id>
            <summary type="text">US confirms deployment of space weapons: விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

விண்வெளி ஆயுதங்கள்அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>US confirms deployment of space weapons: விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>

விண்வெளி ஆயுதங்கள்</h2><p>அமெரிக்கா, பூமியின் சுற்றுப்பாதையில் விண்வெளி ஆயுதங்களை நிலைநிறுத்தியிருப்பதை முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

அமெரிக்க வான்படைச் செயலாளர் ட்ராய் மெய்ன்க், “அமெரிக்க படைகளை எதிரி தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த ஆயுதம் அவசியம்” என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ae4a9ff-a4d1-42ca-849c-2b3e3e15e9b8/26-6aa90ea613d1d.webp' /></p><p>இந்த அறிவிப்பு, ரஷ்யா மற்றும் சீனா உருவாக்கி வரும் விண்வெளி தாக்குதல் திட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

சீனா, “விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தொடங்க வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
அமெரிக்க விண்வெளி படை (US Space Force), 2019-ல் தொடங்கப்பட்டது. இது, அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை பாதுகாப்பதோடு, எதிரி செயற்கைக்கோள்களைத் தாக்கும் திறனையும் கொண்டதாகக் கருதப்படுகிறது.
</p><p></p><h2>வாய்ப்பு குறைவு</h2><p>வல்லுநர்கள், இந்த ஆயுதம் 'மின்னணு போர் அல்லது ரேடியோ தடுப்பு கருவியாக' இருக்கலாம் என ஊகிக்கின்றனர். </p><p>இது எதிரி செயற்கைக்கோள்களின் தொடர்புகளை பாதிக்கக்கூடும். ஆனால், செயற்கைக்கோளை நேரடியாக அழிக்கும் “கைனெடிக் கில் வாகனம்” போன்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு, ஏனெனில் அது விண்வெளியில் அதிக அளவு சிதைவுகளை உருவாக்கும்.</p><p></p><p>டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், “Golden Dome” எனப்படும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்வெளி ஆயுதங்கள் முக்கிய பங்காற்றும் என அறிவித்துள்ளது.
</p><p>
1967-ஆம் ஆண்டு ஒப்பந்தம், விண்வெளியில் பெரும் அழிவு ஆயுதங்களைத் தடை செய்திருந்தாலும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் செயற்கைக்கோள்களை குறிவைத்து புதிய ஆயுதங்களை உருவாக்கி வருகின்றன.
</p><h2>
உலகளவில் பதற்றம் அதிகரிப்பு</h2><p>இந்த அறிவிப்பு, உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் அபாயம் உள்ளது. விண்வெளி, எதிர்காலப் போர்களில் முக்கியமான தளமாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T09:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக பெண் தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/berlin-businesswoman-charged-spying-for-russia-1789463388"></link>
            <id>https://news.lankasri.com/article/berlin-businesswoman-charged-spying-for-russia-1789463388</id>
            <summary type="text">Businesswoman charged with spying for Russia: ஜேர்மனியில், ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக பெண் தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Businesswoman charged with spying for Russia: ஜேர்மனியில், ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக பெண் தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>

ஜேர்மன் தலைநகர் பெர்லினை மையமாகக் கொண்ட தொழிலதிபராகிய பெண் ஒருவர் மீது ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h3>

பெண் தொழிலதிபர்
</h3><p>
ஜேர்மன் மற்றும் உக்ரைன் இரட்டைக் குடியுரிமை கொண்டவரான இலோனா (Ilona W, 57) என்னும் பெண், பெர்லினை மையமாகக் கொண்டு மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/059b53b7-2451-434f-9e62-fa9af1adf476/26-6aa90b5e141f3.webp' /></p><p>
ராணுவ மற்றும் அரசியல் வட்டாரத்தில் ஆலோசகராகவும் பணியாற்றுவதால், பெரும் புள்ளிகளின் தொடர்பு இருந்திருக்கிறது அவருக்கு.
</p><p>
இந்நிலையில், தனது அரசியல் மற்றும் ராணுவ தொடர்புகளை பயன்படுத்தி, தகவல்களை சேகரித்துள்ளார் இலோனா.&nbsp;</p><p></p><p>
பெர்லினிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றும் ரஷ்ய உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பிலிருந்த இலோனா, தான் சேகரித்த தகவல்களை அவருடன் பகிர்ந்துகொண்டதுடன், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க அந்த அதிகாரிக்கு உதவியும் உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df8ddc0d-8ab5-4bd0-b3dd-b16015567643/26-6aa90b5ebc6b5.webp' /></p><p>

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகத்திலும், ஆயுத தயாரிப்புத் துறையிலும் பணியாற்றியவர்களை தனக்காக வேலை செய்யவைக்கவும் முயன்றுள்ளார் இலோனா.
</p><p>
மேலும், ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பில், அந்த ரஷ்ய அதிகாரிக்காக ஜேர்மன் பாதுகாப்புக் கொள்கை மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பில் தகவல்களைப் பெறவும் முயன்றுள்ளார் இலோனா.
</p><p>
இலோனா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ரஷ்ய அதிகாரியை ஜேர்மனி வெளியேற்ற, பதிலுக்கு ஜேர்மன் தூதர் ஒருவரை ரஷ்யா வெளியேற்றியது.</p><p>

இந்நிலையில், இலோனா மீது ரஷ்யாவுக்காக உளவு பார்த்தது தொடர்பில் முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T09:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண் துணை இல்லாமல் ஆப்கானிஸ்தானில் பயணம் செய்ததால் கேரள பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-vlogger-arunima-arrest-claim-in-afghanistan-1789462792"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-vlogger-arunima-arrest-claim-in-afghanistan-1789462792</id>
            <summary type="text">kerala vlogger arunima arrest claim in afghanistan: ஆண் துணை இல்லாமல் பயணம் செய்ததால் ஆப்கானிஸ்தானில் கேரள பெண் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>kerala vlogger arunima arrest claim in afghanistan: ஆண் துணை இல்லாமல் பயணம் செய்ததால் ஆப்கானிஸ்தானில் கேரள பெண் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><h3>
ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட கேரள பெண்</h3><p> 

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள், பொதுமக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது அடக்குமுறைகளை கையாளும் வகையில் பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றனர். </p><p>

ஆண் துணையின்றி பெண்கள் வெளியே செல்லக்கூடாது என தலிபான்கள் பல்வேறு சட்டங்களை பிறப்பித்துள்ளனர். </p><p>

இந்நிலையில், பேக்பேக்கர் அருணிமா(Backpacker Arunima) என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை நடத்தி வரும் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca81481-3b00-4fea-9fb3-c12040c356b6/26-6aa9090a17a0f.webp' /></p><p>

ஒரு லாரியில் லிஃப்ட் கேட்டுப் பயணித்து இரவு 7 மணியளவில் பாமியானை அடைந்த அவரை உள்ளூர் மக்களும் அதிகாரிகளும் அணுகியுள்ளனர். </p><p>

கடவுச்சீட்டு, விசா மற்றும் பயண அனுமதியைச் சரிபார்த்த அதிகாரிகள், ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஒரு ஆண் துணையுடனோ அல்லது வழிகாட்டியுடனோதான் பயணிக்க வேண்டும் என்ற விதியை அவர் மீறிவிட்டதாகத் தெரிவித்தனர்.&nbsp;</p><p></p><p>
ஆண் துணை இல்லாததால் அவருக்கு பாமியானில் அனுமதி சீட்டு வழங்கப்படாத நிலையில், அனுமதி சீட்டு இல்லாத அவரை கைது செய்வதாக தெரிவித்துள்ளனர். </p><p>

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தான் ஆப்கானிஸ்தானின் பாமியானில் ஆபத்தில் உள்ளதாகவும், இந்திய தூதரகம் குறித்து யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும். என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3Dpfbid035TniBR1f5VX8MS2BZpcvPfddNnKMDvx8msswRySMb3GVJdJSGTmQiK3NZhGqATHXl%26id%3D100080169201601&show_text=true&width=500" width="500" height="590" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>

அதன் பின்னர் பாம்யானை அடைய தனக்கு உதவிய நபரை தொடர்பு கொண்ட பின்னர் அந்த நபர், தனக்காக அதிகாரிகளிடம் பேசியதாக தெரிவித்துள்ளார்.</p><p> 
 
அனுமதி சீட்டு இல்லாமல் இவ்வளவு நாட்கள் ஆப்கானிஸ்தானில் பயணம் செய்ததற்காக அவருக்கு அபராதம் விதித்து, விடுவித்துள்ளனர். </p><p>

தான் இங்கிருந்து உஸ்பெஸ்கிஸ்தானுக்கு செல்ல உள்ளதாக அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், அனுமதி இல்லாமல் அடுத்த நாட்டிற்கு செல்லலாம் என தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த சம்பவம் குறித்து பேசிய அவர், "பெண்கள் தனியாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படாத ஒரு நாட்டில், ஒரு பெண்ணாகத் தனியாகப் பயணம் செய்ததுதான் நான் செய்த குற்றம்

ஒவ்வொரு மாகாணத்திற்கும் அனுமதி தேவை.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3Dpfbid0uprRtcpNx8XU1KNydcXtUCbYcE3EzecdsypLWUYxJHnMBRwJ15Fw6KAs6RXk6Hg6l%26id%3D100080169201601&show_text=true&width=500" width="500" height="764" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>தனியாகப் பயணம் செய்யும் ஒரு பெண்ணுக்கு அவர்கள் அனுமதி வழங்க மாட்டார்கள் என்பதால், நான் அந்த அனுமதிகளைப் பெறவில்லை. 

நான் ஒரு பெண் என்பதால் மட்டுமே இதையெல்லாம் கடந்து செல்ல வேண்டியிருந்தது. </p><p>என் ஆண் நண்பர்கள் பலர் இந்த நாடு முழுவதும் பயணம் செய்திருக்கிறார்கள். அவர்களில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. </p><p>

இங்கு அவர்களின் முடிவுகளே சட்டங்கள். இங்கு காவல்துறையோ, சிறைச்சாலையோ அல்லது அது போன்ற எதுவும் இல்லை. இங்குள்ள தலிபான்களைப் பொறுத்தவரை, ஒவ்வொருவரும் ஒரு தலிபான்தான். அதற்காக எல்லோரும் தலிபான்கள் என்று அர்த்தமல்ல. </p><p>

நான் அந்த மனிதனின் கைகளையும் கால்களையும் பிடித்துக்கொண்டு அவரிடம் கெஞ்சினேன், அதனால்தான் அவர்கள் என்னைக் கைது செய்யவில்லை. </p><p>

சில மணிநேரங்களுக்கு, நான் உண்மையிலேயே நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தேன். நான் மிகவும் பதட்டமாக இருந்தேன், என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இறந்துவிடுவேன் என்று உணர்ந்தேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T09:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரும்புக் கூண்டுகளில் அடைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்: பதறவைக்கும் ஒரு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/immigrants-held-in-small-outdoor-cages-in-florida-1789458396"></link>
            <id>https://news.lankasri.com/article/immigrants-held-in-small-outdoor-cages-in-florida-1789458396</id>
            <summary type="text">Immigrants held in small outdoor cages in Florida: அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், புலம்பெயர்ந்தோர் இரும்புக்கூண்டுகளில் அடைக்கப்பட்டது குறித்த ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Immigrants held in small outdoor cages in Florida: அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், புலம்பெயர்ந்தோர் இரும்புக்கூண்டுகளில் அடைக்கப்பட்டது குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.</p><p>


உலக நாடுகள் பலவற்றில் புலம்பெயர்தல் அரசியலாகிவிட்டதை மறுப்பதற்கில்லை. ஒரு பக்கம் புலம்பெயர்வோர் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதால் தங்களுக்கு பிரச்சினை என அரசாங்கங்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம், புலம்பெயர்ந்தோர் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதைக் குறித்த செய்திகள் வெளியாகிக்கொண்டேதான் இருக்கின்றன.
</p><h3>
பதறவைக்கும் ஒரு தகவல்
</h3><p>
சமீபத்தில், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்ஸ் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர்கள் அடித்து உதைக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12407d4e-1827-4a4a-a797-8030818e4628/26-6aa8f7dd46c79.webp' /></p><p>
இந்நிலையில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், புலம்பெயர்ந்தோரை 1.67 சதுரமீற்றர் அளவே கொண்ட இரும்புக் கூண்டுகளில் அதிகாரிகள் அடைத்துவைத்தது தெரியவந்துள்ளது.</p><p>

விடயம் என்னவென்றால், இந்த உண்மையை வெளிக்கொணர்ந்ததே அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள்தான்.
</p><p>
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் ஆய்வுக்குழு ஒன்று நடத்திய திடீர் சோதனைகளின்போது, புலம்பெயர்ந்தோர் இந்த இரும்புக்கூண்டுகளில் அடைக்கப்பட்டதும், அவர்களுக்கு நல்ல தண்ணீரோ, மருந்துகளோ கொடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.&nbsp;</p><p></p><p>

அதைவிட மோசமான ஒரு தகவல் என்னவென்றால், புலம்பெயர்ந்தோரை அடைக்கும் அந்த தடுப்புக்காவல் மையம் அமைந்துள்ள இடம், முதலைகள் அதிகம் வாழும் சதுப்புநிலமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41c4a3ab-da1c-47fd-b732-b6f6709db79e/26-6aa8f7deab01a.webp' /></p><p>
</p><p>
அது குறித்து கேலி செய்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அங்கு அடைக்கப்படும் புலம்பெயர்ந்தோர் எப்படி ஓடுவது என கற்றுக்கொள்வார்கள் என்று கூறினாராம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/983f4eee-69ce-40b8-a90e-4dc0d935040d/26-6aa8f7de01bb8.webp' /></p><p>

விடயம் என்னவென்றால், இப்படி அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகும்போதெல்லாம், அதிகாரிகள் இரண்டு விடயங்கள் செய்கிறார்கள்.
</p><p>
ஒன்று, அது இப்போது இல்லை, முன்பு இருந்தது, இப்போது அதை ஒழித்துவிட்டோம் என்று கூறுவது.
</p><p>
இரண்டு, அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, உள்ளூர் அதிகாரிகள் அல்லது ஒப்பந்ததாரர்கள்தான் காரணம் என்று கூறிவிடுவது.
</p><p>
ஆக, தங்கள் நாட்டிலிருப்பதைவிட ஒரு மேம்பட்ட வாழ்வைத் தேடியோ, அல்லது உயிருக்கு பயந்தோ இன்னொரு நாட்டுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோர் அங்கு எப்படி மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்த செய்திகள் வெளியாகிக்கொண்டேதான் இருக்கின்றன.
</p><p>
இதுபோன்ற விடயங்களை தட்டிக் கேட்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளும், உலக நாடுகள் அவைகளும், எந்த புலம்பெயர்ந்தோர் விடயத்திலும் நேரடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டதாக வெளியாகும் செய்திகளை மட்டும் அதிகம் காணமுடிவதில்லை!</p>]]></content>
            <updated>2026-09-15T08:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதி தாக்குதலால் சவுதி அரேபியாவில் அவசர நிலை - மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthi-attacks-trigger-saudi-emergency-alerts-1789458383"></link>
            <id>https://news.lankasri.com/article/houthi-attacks-trigger-saudi-emergency-alerts-1789458383</id>
            <summary type="text">Houthi Attacks Trigger Saudi Emergency Alerts: சவுதி அரசு முக்கிய நகரங்களில் அவசர எச்சரிக்கை அறிவித்துள்ளது.

நான்கு முக்கிய நகரங்களில் அவசர எச்சரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthi Attacks Trigger Saudi Emergency Alerts: சவுதி அரசு முக்கிய நகரங்களில் அவசர எச்சரிக்கை அறிவித்துள்ளது.
</p><h2>
நான்கு முக்கிய நகரங்களில் அவசர எச்சரிக்கை</h2><p>சவுதி அரேபியாவில் ஹவுதி போராளிகள் நடத்திய தாக்குதலால் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சவுதி அரசு அல்உலா, அபா, ஜாசான், ஜெட்டா மற்றும் யான்பு ஆகிய நகரங்களில் அவசர எச்சரிக்கை அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/827afb54-a103-4c6d-abcc-3f1848b56012/26-6aa8f7d14e76c.webp' /></p><p>இந்த தாக்குதல், மேற்கு ஆசியாவில் ஏற்கனவே நிலவும் அரசியல் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி குழுக்கள், ஏமன் வழியாக சவுதி மீது தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சவுதி-ஈரான் உறவுகள் மோசமடைந்துள்ளன. </p><p>அமெரிக்கா, சவுதியின் பாதுகாப்பிற்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் அமெரிக்கா-ஈரான் உறவுகள் மேலும் சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.</p><p></p><h2>பாதிப்பு&nbsp;</h2><p>

இந்த சூழ்நிலையில், ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், இந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தால் நேரடி பாதிப்புகளை சந்திக்கக்கூடும்.
</p><p>
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நிலைமை குறித்து கவலை தெரிவித்ததுடன், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஹவுதி தாக்குதல்களை கண்டித்து, சவுதியுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளார்.
</p><p></p><p>மேற்கு ஆசியாவில் நிலவும் இந்த பதற்றம், உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச வர்த்தகத்தில் சிக்கல்கள், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு சவாலாக இருக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T07:43:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயையும் குழந்தையையும் சுட்ட கனேடியர்: பொலிசார் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-police-killed-man-after-gun-incident-1789457213"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-police-killed-man-after-gun-incident-1789457213</id>
            <summary type="text">Man killed by police after gun incident involving woman and a baby: கனடாவில் பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் சுட்டதாக நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man killed by police after gun incident involving woman and a baby: கனடாவில் பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் சுட்டதாக நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
</p><p>


கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் 36 வயது ஆண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><h3>

தாயையும் குழந்தையையும் சுட்ட கனேடியர்</h3><p>

ஞாயிற்றுக்கிழமை காலை, ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் அமைந்துள்ள அந்த வீட்டுக்கு பொலிசார் விரைந்த நிலையில், சம்பந்தப்பட்ட நபருடன் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் முயன்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a163ec5f-9bab-4cf9-a1e5-afcfede40b65/26-6aa8f33f1bacf.webp' /></p><p>
ஆனால், கதவைத் திறந்துகொண்டு கையில் துப்பாக்கியுடன் வெளியே வந்த அந்த நபர் துப்பாக்கியைக் கீழே போட மறுத்துள்ளார்.
</p><p>
ஆகவே, மூன்று பொலிசார் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
அந்த நபர் படுகாயமடைந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
இதற்கிடையில், அந்த வீட்டுக்குள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்த ஒரு பெண்ணையும், காயமடைந்திருந்த ஒரு குழந்தையையும் மீட்ட போலிசார், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
</p><p>
கொல்லப்பட்ட அந்த ஆணும், காயமடைந்த அந்தப் பெண்ணும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று கூறியுள்ள பொலிசார், குடும்பச் சண்டையே இந்த பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T07:27:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் நண்பரை காப்பற்ற முயன்ற இந்திய இளம்பெண் ரயில் மோதி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-dies-hit-by-us-train-when-save-friend-1789456865"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-dies-hit-by-us-train-when-save-friend-1789456865</id>
            <summary type="text">&amp;nbsp;indian origin women dies in newyork hit by train while save friend fell in track: நியூயார்க்கில் தண்டவாளத்தில் சிக்கிய ஆண் நண்பரை காப்பற்ற முயன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;indian origin women dies in newyork hit by train while save friend fell in track: நியூயார்க்கில் தண்டவாளத்தில் சிக்கிய ஆண் நண்பரை காப்பற்ற முயன்ற இந்திய இளம்பெண் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.
</p><h3>
நண்பரை காப்பற்ற முயன்ற பெண் ரயில் மோதி உயிரிழப்பு</h3><p> 

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலாய்கா சித்ரே மற்றும் நேபாள பூர்விகத்தை கொண்ட நவம் கவுல் ஆகிய இருவரும் அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று அங்கு பணியாற்றி வந்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc4f8fb-a1d3-4c1a-8eb7-4a3282f8bc36/26-6aa8f1e2aac1f.webp' /></p><p> 

நேற்று நள்ளிரவு 3 மணியளவில் நியூயார்க்கின் மன்ஹாட்டன் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக இருவரும் காத்திருந்துள்ளனர்.</p><p> 

அப்போது ரயில் வரும் நேரத்தில் நவம் கவுல் தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அவரை காப்பாற்ற மலாய்கா சித்ரேவும் தண்டவாளத்தில் இறங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><p> 

அவர்கள் இருவரையும் தண்டவாளத்தில் பார்த்தாலும் அருகே வந்துவிட்டதால் ரயில் ஓட்டுநரால் ரயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை. </p><p>

ரயில் மோதியதில், இருவரும் ரயிலுக்கு அடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இருவரின் உடலையும் மீட்டுள்ள நியூயார்க் காவல்துறைத் துறையினர் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.</p><p> 

நியூ ஜெர்சியில் அருகில் உள்ள நகரங்களில் வசித்து வந்த இருவரும், 2024 ஆம் ஆண்டில் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தனர்.
</p><p>
மலாய்கா சித்ரே, அகாடியா பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தில் தரச் செயல்பாட்டு நிபுணராகப் பணிபுரிந்துகொண்டே, டெம்பிள் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் படிப்பில் முனைவர் பட்டம் படித்து வந்தார்.
</p><p>
வணிகப் பட்டம் பெற்றிருந்த நவம் கவுல், ப்ளூம்பெர்க் நிறுவனத்தில் தரவு ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T07:21:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருநாள் பிச்சைக்காரராக மாறிய ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள எம்.எல்.ஏ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rs-3000-crore-worth-mla-turns-begger-in-mumbai-1789451925"></link>
            <id>https://news.lankasri.com/article/rs-3000-crore-worth-mla-turns-begger-in-mumbai-1789451925</id>
            <summary type="text">3000 crore worth mumbai mla turns begger for a day: ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள மும்பை எம்.எல்.ஏ ஒருவர் ஒரு நாள் பிச்சைக்காரராக மாறி தெருவோரத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>3000 crore worth mumbai mla turns begger for a day: ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள மும்பை எம்.எல்.ஏ ஒருவர் ஒரு நாள் பிச்சைக்காரராக மாறி தெருவோரத்தில் அமர்ந்து யாசகம் பெற்றுள்ளார். </p><h3>

ஒரு நாள் பிச்சைக்காரராக மாறிய எம்.எல்.ஏ </h3><p>

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள காட்கோபர் கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்ஏ வாக இருப்பவர் பாஜகவை சேர்ந்த பராக் ஷா(parag shah).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4de0076-2aba-4f28-b345-90057d775230/26-6aa8de978b4cd.webp' /></p><p>

ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அவர், 2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனது சொத்துமதிப்பு ரூ. 3,383 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். </p><p>

இந்நிலையில், தனது தோற்றத்தை ஒரு பிச்சைக்காரர் போல் மாற்றிக்கொண்டு, பாதுகாப்பை துறந்து விட்டு, காட்கோபர் வீதிகளில் அமர்ந்து யாசகம் பெற்றுள்ளார். </p><p>

பிரபல அரசியவாதியாக இருந்தாலும் மக்கள் யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a288660-7464-41ea-bf54-23c9b792a845/26-6aa8de98421da.webp' /></p><p>

ஜைன மதத்தின் சதுர்மா பண்டிகைகள் நடைபெறும் சூழலில், வாழ்க்கையையும், மக்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களையும் உண்மையாக அனுபவிப்பதற்காக, ஒரு நாள் பிச்சைக்காரராக ஆகும்படி தனது ஆன்மீக குருவான நம்ரமுனி மகாராஜின் ஆலோசனையின் பேரில் இதனை செய்துள்ளார். </p><p>

இந்த அனுபவம் குறித்து தனது குருவிடமும் மக்களிடமும் பகிர்ந்து கொண்ட பராக் ஷா, "ஒரு நபர் எனக்கு ரூ.20 வழங்கி சாப்பிடுமாறு கூறியுள்ளார். </p><p>ஒரு சமோசா கடைக்கு சென்று தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி விட்டு சமோசா கேட்டபோது, அந்த ஏழை வியாபாரி முகம் சுழிக்காமல் எனக்கு இலவசமாகவே சமோசா வழங்கினார்.</p><p>

நான் கவனித்த ஒரு விஷயம், மும்பை நகரம் அப்படிப்பட்டது, இங்குள்ள மக்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் உதவத் தயாராக இருப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">🙏 पवित्र पर्युषण पर्व पर एक प्रेरणादायी अनुभव 🙏<br><br>परम पूज्य राष्ट्रसंत श्री नम्रमुनि महाराज साहेब ने अपने प्रवचन में समाज के जरूरतमंद लोगों के प्रति संवेदनशीलता, करुणा और मानवता का संदेश दिया।<br><br>गुरुदेव की आज्ञा का पालन करते हुए वेशभूषा बदलकर घाटकोपर रेलवे स्टेशन परिसर में आम… <a href="https://t.co/mFL2cWWfne">pic.twitter.com/mFL2cWWfne</a></p>&mdash; Parag Shah (@ParagShahBJP) <a href="https://x.com/ParagShahBJP/status/2099357542535319818?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மேலும், "நான் பிச்சைக்காரன் வேடத்தில் என் சொந்த வளாகத்திற்குள் சென்றபோது, ​​என் காவலாளியே என்னை வெளியே தள்ளிவிட்டார். 

என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி மக்களுக்கு உதவுவார், மேலும் எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எப்போதும் வற்புறுத்துவார். </p><p>

ஆனால் நான் பிச்சைக்காரன் வேடத்தில் அவரிடம் சென்றபோது, ​​அவர் என்னை விரட்டிவிட்டார். மக்கள் தனிநபரை விட பணம், பதவி மற்றும் அதிகாரத்திற்கே அதிக மதிப்பு கொடுக்கிறார்கள்" என கூறியுள்ளார்.</p><p>

பராக் ஷா யாசகம் பெற்றது மட்டுமில்லாமல் ஒரு பிச்சைக்காரரை போல் சாலை ஓரத்தில் அமர்ந்து தனது கிடைத்த உணவை சாப்பிட்டார்.</p><p> 

அதன் பிறகு தனது பிச்சைக்காரர் தோற்றதை கலைத்துவிட்டு தான் யாசகம் பெற்ற பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T06:45:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலில் ரப்பர் ரசாயனங்கள்: சுவிஸ் ஆய்வு முடிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rubber-related-chemicals-found-in-swiss-milk-1789452487"></link>
            <id>https://news.lankasri.com/article/rubber-related-chemicals-found-in-swiss-milk-1789452487</id>
            <summary type="text">Researchers find rubber related chemicals in Swiss milk: சுவிட்சர்லாந்தில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Researchers find rubber related chemicals in Swiss milk: சுவிட்சர்லாந்தில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.</p><p>


சுவிஸ் ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்றில், சுவிட்சர்லாந்தில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.</p><h3>

பாலில் ரப்பர் ரசாயனங்கள்
</h3><p>
சுவிட்சர்லாந்திலுள்ள 17 பண்ணைகளிலிருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் ஏழு பால் மாதிரிகளில் ரப்பர் தொடர்புடைய ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/177be8aa-9748-423a-8b37-d4e33c52cf85/26-6aa8e0c8d978e.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், பால் கறக்க பயன்படுத்தப்படும் ரப்பர் குழாய்கள் காலப்போக்கில் பழமையாவதால், அதிலிருந்து இந்த ரப்பர் ரசாயனங்கள் வந்திருக்கலாம் என்னும் எதிர்பாராத ஒரு தகவல் சற்றே யோசிக்க வைத்துள்ளது.
</p><p>
அத்துடன், பொதுவாகவே உலக நாடுகள் பலவற்றில், சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது வாகனங்களின் டயர்கள் தேய்வதால் எக்கச்சக்கமான அளவில் ரப்பர் துகள்கள் சுற்றுச்சூழலில் கலக்கின்றன.&nbsp;</p><p></p><p>
இந்த ரப்பர் துகள்கள், காற்று, தண்ணீர் மற்றும் உரம் வாயிலாக விவசாய நிலத்தை அடைந்து உணவுச்சங்கியில் கலக்கலாம் என்றும் கருதப்படுகிறது.</p><p>

இதற்கிடையில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பது தெரியவந்தாலும், இந்த ரசாயனங்களால் மனித உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை அறிய மேலதிக ஆய்வுகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T06:13:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள்: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/asylum-seekers-came-in-france-with-injure-from-uk-1789448903"></link>
            <id>https://news.lankasri.com/article/asylum-seekers-came-in-france-with-injure-from-uk-1789448903</id>
            <summary type="text">Asylum seekers arriving in France injured after being deported from UK: பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள் இருக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>Asylum seekers arriving in France injured after being deported from UK: பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள் இருக்கும் விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p>

பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட One in, one out என்னும் ஒப்பந்தத்தின்கீழ், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், தனக்கு பிரித்தானியாவில் குடும்பம் இருப்பதை நிரூபிக்க இயலாதபட்சத்தில், அவர் பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.
</p><p>
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரித்தானியாவில் குடும்பம் உள்ளதை நிரூபிக்கக்கூடிய, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.
</p><h3>
புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள்
</h3><p>
விடயம் என்னவென்றால், அப்படி One in, one out ஒப்பந்தத்தின்கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள், பிரித்தானியாவிலிருக்கும்போது கடுமையாக தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d77d770c-45f0-40f5-9baa-6b86ec62cf0b/26-6aa8d2c98ea43.webp' /></p><p>

ஆம், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்ஸ் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர்கள் உடலில் காயங்கள் முதல் எலும்பு முறிவு வரை இருப்பது தெரியவந்துள்ளது.
</p><p>
சிலர், பயங்கர மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, தான் தங்கியிருக்கும் இடத்தின் அறைக்கதவு எங்குள்ளது என்பதைக் கண்டுபிடிக்கக்கூட முடியாமல் திணறும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
சிலர் வயிற்றில் பலமாக மிதிக்கப்பட்டதால் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
இந்த விடயங்கள், சமீபத்தில், அதாவது, அவர்கள் பிரித்தானியாவில் தடுப்புக்காவலில் இருக்கும்போது நடந்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், வழக்கம்போல உள்துறை அலுவலகம், அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், புகலிடக்கோரிக்கையாளர்களை மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்த அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T05:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI-க்கு எதிரான அபத்தமான சதி! செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஒழுங்குமுறைக்கு டிரம்ப் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966</id>
            <summary type="text">Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2> ஆந்த்ரோபிக் CEO-யின் எச்சரிக்கை</h2><p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி(Dario Amodei) சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.</p><p> செயற்கை நுண்ணறிவுத் துறையின் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் மனித குலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடும் அபாயம் இருப்பதாகவும் டாரியோ அமோடி எச்சரித்து இருந்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We Must Pace the Frontier: I’ve written a new essay on why the AI industry should slow down, with a three-part plan for doing so.<br><br>Anthropic is unilaterally committing to the first of these steps. We’ll provide third-party evaluators with permanent, employee-level access to our…</p>&mdash; Dario Amodei (@DarioAmodei) <a href="https://x.com/DarioAmodei/status/2098773920774074715?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி முன்வைத்த செயற்கை நுண்ணறிவுக்கான கூடுதல் பாதுகாப்பு தேவைகளை ஓபன் ஏஐ(Open AI) நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோரும் அங்கீகரித்து இருந்தனர்.</p><h2> டிரம்பின் நிலைப்பாடு</h2><p>
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> &nbsp;ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி முன்வைத்த கடுமையான தடைகள் தொடர்பான தேவைகள் மற்றும் வாதங்களை டிரம்ப் கடுமையாக நிராகரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a780ac8-aa70-4014-ab6c-4826558b588a/26-6aa84a4fa7e4c.webp' /></p><p> இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட கருத்தில், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி(Sick Conspiracy) என்று தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் அந்த பதிவில், ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி-வை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> குறிப்பாக, டாரியோ அமோடியை கிண்டல் செய்யும் வகையில், “அவர் தன்னை பரிசுத்தமான சிறிய தேவதை போல் காட்டிக் கொள்வதாக” குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-15T05:00:35+00:00</updated>
        </entry>
    </feed>
