<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-28T16:19:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த நமீபியா! மிரட்டிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jan-frylinck-60-in-38-balls-vs-south-africa-1787929882"></link>
            <id>https://news.lankasri.com/article/jan-frylinck-60-in-38-balls-vs-south-africa-1787929882</id>
            <summary type="text">Jan Frylinck 60 runs vs south africa: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் நமீபிய வீரர் ஜென் ஃப்ரைலிங்க் அரைசதம் அடித்தார். 


நமீபியாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jan Frylinck 60 runs vs south africa: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் நமீபிய வீரர் ஜென் ஃப்ரைலிங்க் அரைசதம் அடித்தார். </p><p>


நமீபியாவின் ஜென் ஃப்ரைலிங்க் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் 60 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>நமீபியா 163 ஓட்டங்கள்&nbsp;</h2><p>


நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி Windhoek மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1f9a60c-f9d5-461a-8b12-a2fa2da35f4a/26-6a91a6df79e1a.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் துடுப்பாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p>ப்ரென்லன்,&nbsp;&nbsp;</p><p>அதிரடியில் மிரட்டிய ஜென் ஃப்ரைலிங்க் (Jan Frylinck) 38 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

லௌரேன் ஸ்டீன்கம்ப் 29 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;&nbsp;</p><h2>பிரேவிஸ் 75 ஓட்டங்கள் </h2><p>பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்ததால், நமீபியா 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp;</p><p>அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 50 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;&nbsp;</p><p>ரூபென் ட்ரம்பெல்மன் மற்றும் ஜேஜே ஸ்மித் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். எரஸ்மஸ், ப்ரஸ்ஸல் மற்றும் மேக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25dc55ef-0af9-43d2-b026-7f355e6453cc/26-6a91ac8457dac.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T15:16:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் இளம் மன்னர் 34 வயதில் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uganda-boy-king-dies-at-34-1787925392"></link>
            <id>https://news.lankasri.com/article/uganda-boy-king-dies-at-34-1787925392</id>
            <summary type="text">Uganda boy king dies at 34: உகாண்டாவின் பழங்குடியின மன்னர் ஓயோ நியிம்பா 34 வயதில் காலமானார்.

உகாண்டாவின் டூரோ பழங்குடியின இராஜ்ஜியத்தின் இளம் மன்னர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uganda boy king dies at 34: உகாண்டாவின் பழங்குடியின மன்னர் ஓயோ நியிம்பா 34 வயதில் காலமானார்.
</p><p>
உகாண்டாவின் டூரோ பழங்குடியின இராஜ்ஜியத்தின் இளம் மன்னரான ஓயோ நியிம்பா தனது 34 வயதில் காலமானார்.&nbsp;</p><h2>ஓயோ நியிம்பா</h2><p>

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் டூரோ பழங்குடியின இராஜ்ஜியத்தின் மன்னராக 3 வயதில் பொறுப்பேற்றவர் ஓயோ நியிம்பா (Oyo Nyimba).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c082ecd-6dec-4058-8117-70b973456449/26-6a91942f6e0a9.webp' />&nbsp;</p><p></p><p>

1995ஆம் ஆண்டில் அவர் பொறுப்பேற்றதன் மூலம், கின்னஸ் உலக ஷைத்தானிய புத்தகத்தில் இடம்பிடித்திருந்தார். அறியப்படாத நோய்க்காக மன்னர் ஓயோ அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.</p><p>

இந்த நிலையில், இளம் மன்னர் ஓயோ நியிம்பா தனது 34 வயதில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் கால்வின் வ்மோமிரே அகிகி இதனை அறிவித்தார்.</p><p> 

பிரதமரின் அறிக்கையில், "அரியணையின் தொடர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னர் தனது வாரிசாக ஒரு இளவரசரை விட்டுச் சென்றுள்ளார். </p><p>டூரோ இராஜ்ஜியத்தின் மரபுகள் மற்றும் வழக்கப்படி, அந்த இளவரசரின் அடையாளம் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42efd9d3-0660-4aee-80d1-8c36b57ff0db/26-6a9194303d629.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T13:56:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமார் 400 தமிழர்கள் நேபாளத்திற்கு சென்றுள்ளனர் - அமைச்சர் ராஜ் மோகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minister-rajmohan-says-around-400-tamils-in-nepal-1787924305"></link>
            <id>https://news.lankasri.com/article/minister-rajmohan-says-around-400-tamils-in-nepal-1787924305</id>
            <summary type="text">சுமார் 400 தமிழர்கள் நேபாளத்திற்கு சென்றுள்ளதாக அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார். 

நேபாள பெருவெள்ளம் 

சீன மற்றும் நேபாள எல்லையில் நேற்று முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 400 தமிழர்கள் நேபாளத்திற்கு சென்றுள்ளதாக அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார்.</p><h3> 

நேபாள பெருவெள்ளம் </h3><p>

சீன மற்றும் நேபாள எல்லையில் நேற்று முன்தினம் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. மேலும், 1500க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f216ba-2d08-48a7-b9b8-8767276bb59e/26-6a918f53791f7.webp' /></p><p>

இந்த சூழலில், தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்று அங்கு ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர். </p><p>

இவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 4 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbfb796c-94a6-45dc-aab9-4830a3f7ccc9/26-6a918f52beb6a.webp' /></p><p>

கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் சென்றுள்ளனர்.&nbsp;</p><p></p><p>

அவர்கள் 3 பேருந்துகள் மூலமாக சென்றதில் ஒரு பேருந்தில் உள்ள 21 பேர் பாதுகாப்பாக அங்குள்ள ராணுவ முகாம் ஒன்றில் தஞ்சமடைந்தனர். அதன் பின்னர் காட்மாண்டிற்கு சென்று அங்கிருந்த விமானம் மூலமாக டெல்லிக்கு வந்தடைந்துள்ளார். </p><p>

இன்று இரவு 8 மணிக்கு டெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு வர உள்ளனர். </p><h3>

நேபாளத்திற்கு சென்றுள்ள 400 தமிழர்கள்</h3><p> 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். இன்று இரவு அவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு செல்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c6835ea-446e-4b57-a0cf-51c293c88d28/26-6a918f542ca4f.webp' /></p><p>

இவர்கள் பாஸ்போர்ட்டை தவற விட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்னென்ன உதவி தேவையோ அதையெல்லாம் செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இந்த குழு 3 பேருந்துகளில் சென்றதில் நடுவில் சென்ற இவர்களது வாகனம் தப்பியுள்ளது. இது போன்ற பெரிய குழு சிறிய குழுக்களாக, ரயில் மூலமும் பலர் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
சுமார் 400 பேர் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 140 பேர் கொண்ட குழு பாதுகாப்பாக உள்ளது. அவர்களை காத்மாண்டு வழியாக கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருகிறது. </p><p>

சுமார் 90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்பு கொள்ள தீவிரமாக முயற்சித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T13:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளாடிமிர் புடினை ரஷ்யாவில் சந்திக்கும் நாடொன்றின் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/belarus-president-meet-putin-on-saturday-in-russia-1787920679"></link>
            <id>https://news.lankasri.com/article/belarus-president-meet-putin-on-saturday-in-russia-1787920679</id>
            <summary type="text">Belarus president meet putin on saturday in russia: பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச்சுவார்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Belarus president meet putin on saturday in russia: பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
</p><p>
இந்த வார இறுதியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் ஜனாதிபதிகள் விளாடிமிர் புடினும், அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. </p><h2>பாதுகாப்பு விடயங்கள்&nbsp;குறித்து </h2><p>

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ வியாழக்கிழமையன்று ரஷ்யா வந்தடைந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d378a8b-12c2-40cc-84e9-756eff6cb63f/26-6a918319a7bae.webp' />&nbsp;</p><p></p><p> 

அவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் (Vladimir Putin) இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியப் பகுதிகள், அழுத்தமான பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள், பாதுகாப்பு விடயங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
</p><p>
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், தலைவர்களின் பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன. </p><h2>ரஷ்ய-பெலாரஸ் வர்த்தகம் </h2><p>

மேலும், பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுடன் ரஷ்ய-பெலாரஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் லுகாஷென்கோ விவாதிக்க உள்ளார்.</p><p>

அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவின் ஆட்சி பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கிரெம்ளினை பெருமளவில் சார்ந்தே உள்ளது.
</p><p>
அத்துடன் ரஷ்யாவின் தந்திரோபாய அணு ஆயுதங்களில் ஒரு பகுதியை பெலாரஸ் தற்போது தனது மண்ணில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f4e87e1-433a-47e8-afe3-2d7d190b00e3/26-6a91831a6a7d7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:43:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலை விபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-indian-students-dies-in-us-car-accident-1787920400"></link>
            <id>https://news.lankasri.com/article/3-indian-students-dies-in-us-car-accident-1787920400</id>
            <summary type="text">Three Indian students killed in Florida after their car hit roadside tree: அமெரிக்காவில் சாலை விபத்தொன்றில் மூன்று இந்திய மாணவர்கள் பலியானார்கள்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Three Indian students killed in Florida after their car hit roadside tree: அமெரிக்காவில் சாலை விபத்தொன்றில் மூன்று இந்திய மாணவர்கள் பலியானார்கள்.</p><p>


செவ்வாய்க்கிழமை காலை, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் மூன்று இந்திய இளைஞர்கள்.</p><h3>

சாலை விபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலி
</h3><p>
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அந்த மூன்று பேரும், சில மாதங்களுக்கு முன்புதான் உயர் கல்வி கற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7c08c05-a720-4423-b1af-d9910ebbb113/26-6a9180123217d.webp' /></p><p>

படித்துக்கொண்டே மூவரும் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுகொண்டிருந்திருக்கிறார்கள் மூவரும்.
</p><p>
அப்போது, அவர்கள் பயணித்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகி, மரம் ஒன்றில் மோதியுள்ளது.&nbsp;</p><p></p><p>
மோதிய வேகத்தில் கார் தீப்பிடிக்க, காரில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராகுல் என்னும் மாணவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்த மற்ற மாணவர்களின் பெயர்கள் வெளியாகவில்லை.
</p><p>
எதனால் இந்த விபத்து நிகழ்ந்தது என்பது தெரியாத நிலையில், அது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:38:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-charles-heartbroken-by-nepal-floods-1787919749"></link>
            <id>https://news.lankasri.com/article/king-charles-heartbroken-by-nepal-floods-1787919749</id>
            <summary type="text">King Charles heartbroken by deadly Nepal flash floods: நேபாளப் பெருவெள்ளம் தன் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.


நேபாள் -...</summary>
            <content type="html"><![CDATA[<p>King Charles heartbroken by deadly Nepal flash floods: நேபாளப் பெருவெள்ளம் தன் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.</p><p>


நேபாள் - திபெத் எல்லையில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தின்போது, ஒரு 13 வயது சிறுமி மற்றும் ஒரு 14 வயதுப் பையன் உட்பட 33 பிரித்தானியர்கள் மாயமாகியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a2b59d-e3b5-42f1-940b-aff52d1f1c66/26-6a917d872dba7.webp' /></p><h3>
மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள செய்தி</h3><p>

இந்நிலையில், பிரித்தானிய மன்னர் சார்லஸ், நேபாள பெருவெள்ளம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>

நேபாள பெருவெள்ளம் குறித்த செய்தி தங்கள் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் தெரிவித்துள்ள நிலையில், பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14bc57c6-0ee9-4a57-9d39-510e00eadbdb/26-6a917d87d52ac.webp' /></p><p>
மேலும், நேபாளத்துடன் பிரித்தானியர்கள் பலர் வலிமையான, ஆழ்ந்த மற்றும் தனிப்பட்ட முறையிலான உறவு வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ள மன்னர் சார்லஸ், தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல், அவர்களைக் குறித்த தகவலுக்காக கவலையுடன் காத்திருக்கும் பல குடும்பங்களுக்கு தங்கள் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும், நேபாள பெருவெள்ளம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், இந்த பயங்கர இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் நினைவுகூர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:24:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.2 லட்சம் ஊதியத்தில் தந்தையை வேலைக்கு அமர்த்திய 16 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/16-yr-old-raul-john-aju-pay-2lakh-to-father-salary-1787918487"></link>
            <id>https://news.lankasri.com/article/16-yr-old-raul-john-aju-pay-2lakh-to-father-salary-1787918487</id>
            <summary type="text">16 year old raul john aju pay 2 lakhs salary for his dad: கேரளாவை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது நிறுவனத்தில், ரூ.2 லட்சம் ஊதியத்தில் தந்தையை வேலைக்கு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>16 year old raul john aju pay 2 lakhs salary for his dad: கேரளாவை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது நிறுவனத்தில், ரூ.2 லட்சம் ஊதியத்தில் தந்தையை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
</p><h3>
16 வயதில் AI நிறுவனம் நடத்தும் சிறுவன் </h3><p>

எதிர்காலத்தில் பெரும்பாலான தொழில் மற்றும் வேலைகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இளம் தலைமுறையினர் பலரும் AI கருவிகளை பயன்படுத்த கற்று வருகின்றனர்.
</p><p>
ஆனால் 16 வயது சிறுவனான ரவுல் ஜான் அஜு(raul john aju0, 15க்கும் மேற்பட்ட AI கருவிகளை உருவாக்கி, AI நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98fbe6a7-c569-438e-8e24-f9191bf52c12/26-6a917899b4dd5.webp' /></p><p>

ரவுல் ஜான் அஜு, கேரளாவின் கொச்சி, குன்னம்புரத்தில் உள்ள வடக்கு இடப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் பிரிவில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். </p><p>

இவரின் தந்தை அஜு ஜோசப், அடோப், அமேசான், விப்ரோ, ஐபிஎம் உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். </p><p>இதனால் 9 வயதிலே ரவுலிற்கு AI கருவிகளை பயன்படுத்தும் அனுபவம் கிடைத்தது. 

அந்த ஆர்வத்தில் AI குறித்து கற்றுக்கொண்ட அவர், AI கருவிகளை உருவாக்க தொடங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

தனது 12 வயதிலேயே, பள்ளி அறிவியல் திட்டப்பணிக்காக மீபாட் (MeBot) என்ற ரோபோவை அவர் உருவாக்கியிருந்தார். 

அதைத்தொடர்ந்து, ரெஸ்க்யூ ஏஐ (RESQ AI), ஸாப்கேப் (ZapGap), இன்வெஸ்டோ ஏஐ (Investo AI) மற்றும் ஃபீட்ஃபை (FeedFye) உட்பட 15க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை உருவாக்கியுள்ளார்.
</p><p>
மேலும், AI டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி 15 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். குறிப்பாக தனது தந்தையையும் மாதம் ரூ.2 லட்சம் ஊதியத்திற்கு வேலையில் அமர்த்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3df7fc5-5f32-4a5e-9ed1-43913f7d78f1/26-6a917898439e4.webp' /></p><p>

மேலும், தனது நிறுவனத்தின் மூலம் திங்க்கிராஃப்ட் அகாடமியை நடத்தி வருகிறார். ஐஐடி, ஐஐஎம், முன்னணி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பெருநிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், இதில் விளையாட்டு மூலம் எளிதாக செயற்கை நுண்ணறிவுத் திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள். 

இதன் மூலம் உலகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் AI திறனை கற்றுக்கொண்டுள்ளார்கள். </p><p>

டெல்லியில் நடைபெற்ற 2026 இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஐநா ஏற்பாடு செய்திருந்த அமர்வில் ரவுல் ஜான் அஜு பங்கேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a204b249-37bc-4412-ab0f-71406d3a880a/26-6a917898ec557.webp' /></p><p>
என்னால் செல்போனில் அறிவை கற்றுக்கொள்ள முடிந்தாலும், சந்தைப்படுத்தல் உள்ளிட்டவற்றில் தந்தையின் அனுபவம் காரணமாக அவரை என் நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளேன்" என தெரிவித்துள்ளார். </p><p>

இளமை காலத்தில் பலரும் தன்னுடைய தேவைக்கு பெற்றோரிடம் பணம் பெற்று வரும் சூழலில், ரூ.2 லட்சம் ஊதியத்தில் தந்தைக்கு வேலை வழங்கிய சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:01:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திபெத்தில் உடைந்த அணை - மீட்பு பணிகளை நிறுத்திய சீனா, நேபாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dam-burst-in-tibet-rescue-operations-halted-1787902009"></link>
            <id>https://news.lankasri.com/article/dam-burst-in-tibet-rescue-operations-halted-1787902009</id>
            <summary type="text">dam burst in tibet rescue operations halted for fresh flood warns: திபெத்தில் அணை உடைந்துள்ளதால் மீண்டும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>dam burst in tibet rescue operations halted for fresh flood warns: திபெத்தில் அணை உடைந்துள்ளதால் மீண்டும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>திபெத்தில் உடைந்த அணை

</p><p>

சீனா - நேபாள எல்லையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. 1,468 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>

நேபாள மற்றும் காவல்துறை, ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு மக்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாயமாகியுள்ளனர்.</p><p> 

இந்நிலையில், திபெத் பக்கத்தில் உள்ள கியிராங் எல்லைத் துறைமுகத்திற்கு மேலே உள்ள ஒரு நீர்த்தேக்க அணை ஒன்று உடைந்துஉள்ளதாக நேபாள காவல்துறை அறிவித்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="no" dir="ltr">Alert !! <a href="https://t.co/grYxhc5N7Q">pic.twitter.com/grYxhc5N7Q</a></p>&mdash; Nepal Police (@NepalPoliceHQ) <a href="https://x.com/NepalPoliceHQ/status/2093216702121325051?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மேலும், "மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்துப் பாதுகாப்புப் பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது. </p><p>

இதே போல், சீனாவும் மீண்டும் பாரிய வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.&nbsp;</p><p>வெள்ள அச்சம் காரணமாக உள்ளூர் மக்கள் மலை மீது விரைந்து ஏறி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பேரிடர் வெறும் தொடக்கம்... ஆபத்தை எதிர்நோக்கும் 15 மில்லியன் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flood-million-people-danger-zone-1787916480"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flood-million-people-danger-zone-1787916480</id>
            <summary type="text">15 million people in the danger zone: சுமார் 15 மில்லியன் மக்கள் ஆபத்தான மண்டலத்தில் உள்ளனர்.
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>15 million people in the danger zone: சுமார் 15 மில்லியன் மக்கள் ஆபத்தான மண்டலத்தில் உள்ளனர்.
</p><p>நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்துள்ளதுடன் 1,500-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.</p><h2>அடிக்கடி நிகழும்</h2><p>
</p><p>லாங்டாங்-லிருங் மலையில் பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததே இந்த பேரிடருக்குக் காரணம் என்றும், அந்த நிகழ்வு ரிக்டர் அளவில் 5.2 தீவிரத்தன்மை கொண்ட நிலநடுக்கமாகப் பதிவானது என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். </p><p>இதன் உண்மையான பின்னணியைக் கண்டறிய மாதக்கணக்கில் ஆய்வு தேவைப்படலாம் என்றாலும், இது ஒரே ஒரு முறை மட்டும் நிகழும் நிகழ்வு அல்ல என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42ca267c-e0e2-4dc6-ac06-5e74c2402200/26-6a9170c28b867.webp' /></p><p> </p><p>நிபுணரின் கூற்றுப்படி, இத்தகைய நிகழ்வுகள், ஒருவேளை இன்னும் பெரிய அளவிலானவை அடிக்கடி நிகழும் சாத்தியத்தை அதிகரிக்கிறது. மொத்தத்தில், உலகம் முழுவதும் சுமார் 1.5 கோடி மக்கள் இதுபோன்ற ஆபத்தான பகுதிகளில் வசித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். </p><p>ஆசியாவில் உள்ள இமயமலை, காரகோரம், இந்துகுஷ் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைத்தொடர்கள் அதிக ஆபத்தில் இருந்தாலும், அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் மக்களும் ஆபத்தில் உள்ளனர்.</p><p></p><p> </p><p>இன்று நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரைப் போன்ற ஒரு நிகழ்வை வட அமெரிக்காவும் சந்திக்கக்கூடும் என நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். இந்தத் பேரிடரைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் இன்னும் தீவிரமாக முயன்று வரும் நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட இறப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு பனிப்பாறை சரிவின் விளைவே என்று தற்போதைய சான்றுகள் தெரிவிக்கின்றன. </p><p>சுமார் 50 முன்னணி நிபுணர்களின் கூட்டு முயற்சியால் இயங்கும் 'அண்டார்டிக் பனிப்பாறைகள்' (Antarctic Glaciers) என்ற ஆராய்ச்சி குழுவின் கூற்றுப்படி, வெள்ளப்பெருக்குக்குச் சற்று முன்னதாக நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை சரிவு ஆகியவை ஏற்பட்டிருந்ததை ஆரம்பக்கட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. </p><p>இதனால் பனிக்கட்டியும் பாறைகளும் மலையிலிருந்து சரிந்து விழுந்து, முந்தைய வெள்ளப்பெருக்குகளால் படிந்திருந்த வண்டல் மண்ணுடன் கலந்து, லெண்டே கோலா (Lhende Khola) ஆற்றை தற்காலிகமாகத் தடுத்தன. </p><p>அது தற்காலிகமாக ஒரு பெரிய ஏரி உருவாகக் காரணமானது; பின்னர் அது உடைந்து பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. இது போன்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடந்துள்ளன; பருவநிலை மாற்றம் தொடர்வதால், இத்தகைய நிகழ்வுகள் இனி மேலும் அடிக்கடி நிகழக்கூடும். </p><p>உதாரணமாக, 2021-இல் பாறை மற்றும் பனிக்கட்டியின் பெரும் சரிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய குப்பைப் பெருக்கெடுப்பு (debris flow), 200-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்ததுடன், இரண்டு நீர்மின் நிலையங்களையும் சேதப்படுத்தியது.</p><h2>விஞ்ஞானிகள் எச்சரிக்கை</h2><p> </p><p>இதற்கிடையில், கனடாவில் 2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாறைச் சரிவின்போது, ​​18 மில்லியன் கன மீற்றர் அளவிலான பாறைகள் பனிப்பாறை ஏரி ஒன்றில் சரிந்து விழுந்தன; இதனால் எழுந்த 100 மீற்றர் உயரமுள்ள அலைகள், 6 மைல் நீளமுள்ள ஒரு கால்வாயை அரித்து உருவாக்கின.</p><p> மலைப்பகுதிகளும் 'பனியாற்றுக் ஏரி உடைப்பு வெள்ளம்' (glacial lake outburst flood) எனப்படும் இதே போன்றதொரு அச்சுறுத்தலுக்கு ஆளாகும் அபாயம் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். </p><p>பனிப்பாறையிலிருந்து உருகி வரும் நீர் அதன் அடிப்பகுதியில் ஒரு பெரிய ஏரியை உருவாக்கும்போதும், அந்த ஏரி மெல்லிய மற்றும் நிலையற்ற ஒரு இயற்கையான அணையால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்போதும் இப்படியானப் பேரிடர் நிகழ்கிறது. </p><p>பனிப்பாறை சரிந்தாலோ அல்லது உருகிய நீரின் அளவு மிக அதிகமாக உயர்ந்தாலோ, அந்தத் தடுப்பு உடைந்து, மலைச்சரிவில் பேரழிவை ஏற்படுத்தும் வகையிலான பெரும் நீரோட்டம் பாய்ந்து வரக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/912b1a7b-6332-42e7-aff4-e4efd3038148/26-6a9170c33f4c4.webp' /></p><p> </p><p>இருப்பினும், உலகம் முழுவதும் உள்ள பனிப்பாறைகள் தற்போது மக்களை இத்தகைய வெள்ள அபாயத்திற்கு உள்ளாக்கி வருகின்றன; இது நேபாளத்தில் காணப்பட்டதை விடக் குறைவானதல்ல, சொல்லப்போனால் அதைவிட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமையக்கூடும். </p><p>ஆய்வாளர்கள் குழு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பனி ஏரி உடைப்பு வெள்ளத்தால் (GLOFs) அச்சுறுத்தலுக்குள்ளாகும் 1 கோடியே 50 லட்சம் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியா, பாகிஸ்தான், பெரு மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே வசிக்கின்றனர். </p><p>இமயமலை, காரகோரம், இந்துகுஷ் மற்றும் அவற்றையொட்டிய மலைத்தொடர்களை உள்ளடக்கிய 'உயர் மலை ஆசிய' (HMA) பகுதிகளில் வசிக்கும் மக்களே அதிக ஆபத்தில் உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T11:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 22,000 டன் குப்பைகள் அகற்றம்: செலவு செய்யப்பட்ட 6 மில்லியன் பவுண்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/22000-tonnes-of-illegal-dump-clears-in-oxfordshire-1787917909"></link>
            <id>https://news.lankasri.com/article/22000-tonnes-of-illegal-dump-clears-in-oxfordshire-1787917909</id>
            <summary type="text">பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயர் சட்டவிரோத குப்பை குவியல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. 22,000 டன் குப்பைகள் அகற்றம்ஆக்ஸ்போர்ட்ஷயர்(Oxfordshire) கிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயர் சட்டவிரோத குப்பை குவியல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.</p><h2> 22,000 டன் குப்பைகள் அகற்றம்</h2><p>ஆக்ஸ்போர்ட்ஷயர்(Oxfordshire) கிட்லிங்டன்(Kidlington) பகுதியில் அமைந்திருந்த மிகப்பெரிய சட்டவிரோத குப்பை குவியல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.</p><p> அரசின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 22,000 டன்னுக்கு அதிகமான வணிக மற்றும் வீட்டுக் கழிவுகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64330a69-cd6b-41db-a888-b8416e16a725/26-6a917656a5210.webp' /></p><p></p><p>A34 நெடுஞ்சாலையை ஒட்டியும், Cherwell நதியின் கரையோரமாக அமைந்திருந்த 3 ஏக்கர் நிலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய குப்பை மலையாக உருவெடுத்து இருந்தது.</p><p> செயற்கைகோள் புகைப்படங்கள் படி, இந்த இடம் 150 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்ட குப்பை குவியலாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது.</p><h2> துப்புரவு பணிகள்</h2><p>கிட்டத்தட்ட வெம்ப்லி மைதானத்தை விட மிகப்பெரிய அளவில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்ற 30 லொறி லோடு குப்பைகள் தினமும் வெளியேற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19a4c84b-efe5-4f8a-b346-2b6da02cc107/26-6a9176575a14b.webp' /></p><p> இந்த சுத்திகரிப்பு திட்டத்திற்காக சுற்றுச்சூழல் முகமை கிட்டத்தட்ட 6 மில்லியன் பவுண்டுகளை செலவு செய்துள்ளது.</p><p> இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக கண்டறியப்படும் நபர்களிடம் இருந்து இந்த தொகை மீண்டும் வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> சம்பந்தப்பட்ட பகுதியில் குப்பை கொட்டியதுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:52:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்திற்கு பயத்தை காட்டிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்: போராடிய அட்கின்ஸன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-290-runs-all-out-vs-pakistan-lord-s-test-1787917747"></link>
            <id>https://news.lankasri.com/article/england-290-runs-all-out-vs-pakistan-lord-s-test-1787917747</id>
            <summary type="text">England team allout for 290 runs at lord&#039;s ground:
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 290 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>England team allout for 290 runs at lord's ground:
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 290 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><p>

லண்டன் லார்ட்'ஸில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் 290 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;&nbsp;</p><h2>நெருக்கடி கொடுத்த அப்பாஸ்&nbsp;&nbsp;</h2><p><span style="font-size: 14px;">இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77976c10-60f9-4330-a847-9c0437b3ea6b/26-6a91762b549b6.webp' /></p><p></p><p>
துடுப்பாட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியில் எமிலியோ கே 8 ஓட்டங்களிலும், பென் டக்கெட் 17 ஓட்டங்களிலும் மொஹம்மது அப்பாஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.</p><p> 

பின்னர் வந்த அணித்தலைவர் ஜோ ரூட் 4 ஓட்டங்களில் அப்பாஸின் பந்துவீசில் lbw ஆகி வெளியேறினார். புரூக் (15), டென் லாரன்ஸ் (17) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.&nbsp;</p><h2>கோக்ஸ்&nbsp;அரைசதம் </h2><p>

நிதானமாக ஆடிய ஜோர்டன் கோக்ஸ் 55 ஓட்டங்கள் எடுக்க, அதிரடி காட்டிய ஜேமி ஸ்மித் (Jamie Smith) 80 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

கடைசி கட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கஸ் அட்கின்ஸன் 45 (46) ஓட்டங்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 290 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
ஜோஷ் டங் 30 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். மொஹம்மது அப்பாஸ் (Mohammad Abbas) 4 விக்கெட்டுகளும், மொஹம்மது அலி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdeb261c-99b5-4ef0-8430-c643eafc7e34/26-6a91762c13e50.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:48:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பேரிடர்... 5 மாதங்களுக்கு முன்னரே விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-disaster-5-months-before-1787911956"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-disaster-5-months-before-1787911956</id>
            <summary type="text">Two Reports Indicated What Lay Ahead: நேபாள மக்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை இரண்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two Reports Indicated What Lay Ahead: நேபாள மக்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை இரண்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
</p><p>இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பனி இழப்பு விகிதம் இரட்டிப்பாகியுள்ளதால், இந்து குஷ் இமயமலை முழுவதும் உள்ள பனியாறுகள் மிக வேகமாக உருகி வருவதாக ஐந்து மாதங்களுக்கு முன்பு இரண்டு அறிக்கைகள் எச்சரித்துள்ளது.</p><h2>இரண்டு பில்லியன்</h2><p>
</p><p>குறித்த ஆய்வறிக்கையை இந்து குஷ் இமயமலை (HKH) பகுதி மக்களின் நலனுக்காகச் செயல்படும், அரசுகளுக்கு இடையிலான ஓர் அறிவு மற்றும் கற்றல் மையம் முன்னெடுத்துள்ளது. </p><p>
காத்மாண்டுவை மையமாகக் கொண்டு செயல்படும் 'ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டிற்கான சர்வதேச மையம்' (ICIMOD) தனது இரண்டு அறிக்கைகளில், 1975-ஆம் ஆண்டு முதல் பனிப்பாறைகளின் தடிமன் 27 மீற்றர் வரை குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d60f06fb-243e-4dad-9a33-1876ddc2f470/26-6a915f16b7b9f.webp' /></p><p> </p><p>இந்த மையத்தின் பிராந்திய உறுப்பினர்களாக இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
இந்து குஷ்-இமயமலைப் பகுதி மற்றும் திபெத்திய பீடபூமியில் இருந்து உருகும் நீரைச் சார்ந்து வாழும், கீழ்நிலையில் உள்ள சுமார் இரண்டு பில்லியன் மக்களுக்கு எதிர்காலத்தில் ஒரு கவலைக்குரிய சூழல் நிலவக்கூடும் என அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டின. </p><p>இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு 489 பேரின் உயிரைப் பறித்த நேபாளத்தின் திடீர் வெள்ளப்பெருக்கிற்கான துல்லியமான காரணம் குறித்து விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இருப்பினும், அவர்களில் பலர் பல்வேறு காரணிகளின் கலவையையே கருத்தில் கொள்கின்றனர்; அவற்றில் மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம் என்னவென்றால், 4,000 மீற்றர் மற்றும் அதற்கு மேற்பட்ட உயரத்தில் பனிப்பொழிவுக்குப் பதிலாக மழை பெய்திருக்கிறது. </p><p></p><p>இந்த நிலையில், ஒரு காலத்தில் பனிப்பொழிவு இருந்த உயரங்களில் தற்போது மழை பெய்வதற்கும், பனியாறுகள் மிக வேகமாகப் பின்வாங்குவதற்கும் வெப்பமயமாதலே காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இதனிடையே, தனித்தனியாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இரண்டு ICIMOD அறிக்கைகளில், 1990 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்து குஷ்-இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் தங்கள் மொத்தப் பரப்பளவில் சுமார் 12 சதவீதத்தையும், மதிப்பிடப்பட்ட பனிக்கட்டி இருப்பில் 9 சதவீதத்தையும் இழந்தன என்று குறிப்பிட்டிருந்தன. </p><p>ICIMOD-இன் இரண்டு அறிக்கைகளில் ஒன்றான 'HKH Glacier Outlook 2026' (கண்காணிக்கப்பட்ட 38 பனிப்பாறைகளின் தரவுகளை இது ஆய்வு செய்தது), 2000-ஆம் ஆண்டிலிருந்து பனிப்பாறை இழப்பு இருமடங்காக அதிகரித்துள்ளதைக் கண்டறிந்துள்ளது; </p><p>இது, இமயமலையின் பனி மண்டலத்தின் (cryosphere) சில பகுதிகள், மீளமுடியாத வகையில் பின்வாங்கும் நிலையை நோக்கிய முக்கியமான திருப்புமுனைகளை நெருங்கிக்கொண்டிருக்கலாம் என்பதற்கான வலுவான அறிகுறியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98c339b1-dcec-408e-9b44-f0b0a8c61812/26-6a915f176d6c9.webp' /></p><p> </p><p>அதிக உயரத்தில் உள்ள ஒரு இடத்திலிருந்து உருவான பனி மற்றும் பாறைச் சரிவு இந்தப் பெருவெள்ளத்தைத் தூண்டியிருக்கக்கூடுமா என்பது குறித்து ICIMOD ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். </p><p>போட்டே கோஷி ஆற்றின் துணை ஆறான லெண்டே கோலாவிற்குள் பெருமளவிலான பனிக்கட்டியும் பாறைச் சிதைவுகளும் நுழைந்திருக்கலாம்; இது நீர், வண்டல் மற்றும் பெரிய பாறைகளை அடித்துக்கொண்டு கீழ்நோக்கிச் செல்லும் வகையிலான திடீர் நீரோட்டப் பெருக்கை ஏற்படுத்தியிருக்கலாம். </p><p>சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், பனியாறுகள் பின்வாங்குவதாலும் நிரந்தர உறைபனி சிதைவடைவதாலும் பனிப்பொழிவு குறைந்து வருவதையே இது அதிகமாகச் சுட்டிக்காட்டுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T11:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலில் வெற்றி பெறும் நிலையில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி: குழப்பத்தில் புலம்பெயர்ந்தோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/migrants-raising-questions-about-germany-election-1787915117"></link>
            <id>https://news.lankasri.com/article/migrants-raising-questions-about-germany-election-1787915117</id>
            <summary type="text">September 6 German state election raises questions among migrants: ஜேர்மன் மாகாணமொன்றில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ள தேர்தல் புலம்பெயர்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>September 6 German state election raises questions among migrants: ஜேர்மன் மாகாணமொன்றில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ள தேர்தல் புலம்பெயர்ந்தோருக்கு எதிர்காலம் குறித்த குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
</p><p>

ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.
</p><p>
அந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெறலாம் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.</p><h3>

குழப்பத்தில் புலம்பெயர்ந்தோர்
</h3><p>
 AfD கட்சி, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி என்பது அனைவரும் அறிந்த விடயம். அக்கட்சியின் கொள்கைகளில் முக்கியமானவை ஜேர்மனிக்கு மற்ற நாட்டவர்கள் புலம்பெயர்தலைக் குறைப்பது, புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவது முதலானவையாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b97d8c0-ed9b-4d61-adb4-41a7f94b5458/26-6a916b6f067fe.webp' /></p><p>
ஆக, அக்கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், தங்கள் நிலைமை என்ன என்பது குறித்து அம்மாகாணத்தில் வாழும் புலம்பெயர்ந்தோர் இப்போதே தீவிரமாக யோசிக்கத் துவங்கிவிட்டார்கள்.
</p><p>
ஏற்கனவே கருப்பினத்தவர் முதலானோர் இனவெறுப்பை எதிர்கொண்டுவரும் நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், அதற்குப் பிறகு நாங்கள் எப்படி பாதுகாப்பாக உணரமுடியும், எப்படி சமுதாயத்தின் ஒரு சாதாரண பாகமாக நாங்கள் அங்கீகரிக்கப்படுவோம் என்கிறார்கள் கருப்பினத்தவர்கள் சிலர்.&nbsp;</p><p></p><p>
AfD கட்சி தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், இந்த நாட்டில் தாங்கள் தொடர்ந்து வாழமுடியுமா என கேள்வி எழுப்புகிறார்கள் கருப்பின இளைய தலைமுறையினர்.
</p><p>
புலம்பெயர்தல் பின்னணி கொண்ட பலர், தாங்கள் என செய்வதென தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
</p><p>
சிரியா நாட்டவரான Batoul Nayouf என்பவர், நிலைமையை ஒரே வாக்கியத்தில் தெளிவாக உணர்த்திவிட்டார். ஆம், நாங்கள் சூட்கேஸ்களை தயாராக வைத்துக்கொண்டு, அவற்றின் மீதுதான் உட்கார்ந்திருக்கிறோம் என்கிறார் அவர்.
</p><p>
வாக்களிப்போம், AfD கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், அதன்பின் Saxony-Anhalt மாகாணத்தில் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்று பார்க்கலாம், எப்படியும் நாம் அக்கட்சி வெற்றி பெறுவதைத் தடுக்க முயற்சிக்கவேண்டும் என்கிறார் ஒருங்கிணைப்பு ஆலோசகரும் உள்ளூர் அரசியல்வாதியும், கருப்பினத்தவருமான Amidou Traore என்பவர்.
</p><p>
ஆக மொத்தத்தில், செப்டம்பர் 6ஆம் திகதி Saxony-Anhalt மாகாணத்தில் நடைபெற உள்ள தேர்தல், அம்மாகாணத்தில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு எதிர்காலம் குறித்த குழப்பத்தை உருவாக்கியுள்ளதில் சந்தேகம் இல்லை எனலாம்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:07:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய இளம்பெண்: குற்றவாளி சிக்கினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hyderabad-girl-killed-in-us-ex-bf-arrested-in-agra-1787912482"></link>
            <id>https://news.lankasri.com/article/hyderabad-girl-killed-in-us-ex-bf-arrested-in-agra-1787912482</id>
            <summary type="text">An Indian man wanted in the United States for allegedly murdering his former roommate has been arrested: இந்திய இளம்பெண்ணொருவர் அமெரிக்காவில் சடலமாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>An Indian man wanted in the United States for allegedly murdering his former roommate has been arrested: இந்திய இளம்பெண்ணொருவர் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்ட விடயத்தில், அவரைக் கொலை செய்ததாக கருதப்படும் நபரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
</p><p>

அமெரிக்காவின் மேரிலேண்டில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணான நிகிதா (Nikitha Rao Godishala, 27), டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாயமானார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b54be3e-12d6-4aeb-acd3-ba74d791c196/26-6a916124d0c7b.webp' /></p><p>
ஜனவரி மாதம் 2ஆம் திகதி, அர்ஜூன் ஷர்மா (26) என்னும் நபர், நிகிதாவைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார். இந்த அர்ஜூன், நிகிதா தங்கியிருந்த அதே குடியிருப்பில் அவருடன் தங்கியிருந்தவர் ஆவார்.</p><h3>
இந்திய இளம்பெண் சடலமாக மீட்பு
</h3><p>
நிகிதாவை தீவிரமாகத் தேடிவந்த பொலிசார், ஜனவரி மாதம் 3ஆம் திகதி, அர்ஜூன் வாழ்ந்துவந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே நிகிதாவின் உயிரற்ற உடலைக் கண்டு பிடித்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b334c142-e085-44b9-9f51-a27731d29cc2/26-6a91612427b62.webp' /></p><p>
அர்ஜூன் தலைமறைவாகிவிட, அமெரிக்க பொலிசார், அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்திருந்தார்கள்.</p><h3>

முரணான தகவல்கள்
</h3><p>
அர்ஜூன் நிகிதாவின் காதலர் என அமெரிக்க பொலிசார் தெரிவித்திருந்த நிலையில், அவர் தன் மகளுடைய காதலர் அல்ல என்றும், அவர் தன் மகளுடைய அறைத்தோழர் மட்டுமே என்றும், இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் விடயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே தன் மகளை அர்ஜூன் கொலை செய்துவிட்டதாகவும் நிகிதாவின் தந்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
அத்துடன், ஜனவரி மாதம், அர்ஜூன் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.</p><p>
ஆனால், அர்ஜூன் ஆக்ராவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 25ஆம் திகதி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்நிலையில், அர்ஜூன் கைது குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவலளிக்கட்டுள்ளதாகவும், அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T10:56:12+00:00</updated>
        </entry>
    </feed>
