<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-12T10:35:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆர்க்டிக் கடல் பாதையில் சரக்கு கப்பல் சேவையை தொடங்க சீனா திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-eyes-arctic-route-amid-middle-east-war-1786526126"></link>
            <id>https://news.lankasri.com/article/china-eyes-arctic-route-amid-middle-east-war-1786526126</id>
            <summary type="text">China Eyes Arctic Route: சீனா ஆர்க்டிக் கடல் பாதையில் சரக்குக்கப்பல் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.&amp;nbsp;மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் போர் காரண...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>China Eyes Arctic Route: சீனா ஆர்க்டிக் கடல் பாதையில் சரக்குக்கப்பல் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.&nbsp;</b></p><p>மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் போர் காரணமாக, சீனா தனது ஐரோப்பாவிற்கான சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு புதிய மாற்று வழியைத் தேடுகிறது.</p><h2>

ஆர்க்டிக் பாதையில் சரக்கு கப்பல் சேவை</h2><p>இதன் விளைவாக, சீனாவின் Sea Legend எனும் கப்பல் போக்குவரத்து நிறுவனம், “Ice Silk Road” எனப்படும் ஆர்க்டிக் பாதையில் வாரந்தோறும் சரக்கு கப்பல் சேவையை தொடங்கியுள்ளது.</p><p>இந்த பாதை, சீனாவின் நிங்போ துறைமுகத்திலிருந்து இங்கிலாந்தின் ஃபெலிக்ஸ்டோவ் துறைமுகம் வரை செல்லும் நேரத்தை பாதியாகக் குறைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea38515c-a57c-4aac-8860-3fd1c4e61aba/26-6a7c39b045796.webp' /></p><p>ஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறைகள் உருகுவதால், கோடைக்காலங்களில் கப்பல்கள் ice-breaker கப்பல்களின் உதவியின்றி பயணிக்க முடிகிறது. இதனால் செலவுகள் குறைந்து, போக்குவரத்து எளிதாகிறது.
</p><p>
ஆனால், மேற்கத்திய கப்பல் நிறுவனங்கள் (Maersk, Hapag Lloyd, MSC) இந்த பாதையைப் பயன்படுத்த மறுத்துள்ளன.
</p><h2>
காரணங்கள்:
</h2><ul><li>
ரஷ்யாவின் கட்டுப்பாடு (Northern Sea Route-க்கு அனுமதி Rosatom மூலம் வழங்கப்படுகிறது)
</li><li>
சூழல் அபாயங்கள் - பனிப்பாறைகள், எண்ணெய் கசிவு, உயிரியல் பாதிப்பு
</li><li>
செயல்பாட்டு சவால்கள் - இயந்திரக் கோளாறுகள், மீட்பு நடவடிக்கைகளில் சிரமம்</li></ul><p></p><p>Allianz நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 2013 முதல் 2023 வரை ஆர்க்டிக் கடலில் 531 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பாதி சம்பவங்கள் இயந்திரக் கோளாறுகளால் ஏற்பட்டவை.
</p><p>
சீனாவிற்கு ரஷ்யாவுடன் உள்ள நெருக்கமான உறவு காரணமாக, இந்த பாதையை பயன்படுத்துவதில் அதிக நன்மை கிடைக்கிறது. </p><p>மத்திய கிழக்கு பகுதியில் ஹவுதிக்கள் சீனாவுடன் தொடர்புடைய சரக்குகளை தாக்காமல் இருந்தாலும், தவறான கணக்கீடுகள் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>
மேற்கத்திய நிறுவனங்கள், ஆர்க்டிக் பாதையை விட Cape of Good Hope வழியாக நீண்ட பயணத்தைத் தேர்வு செய்கின்றன. ஆனால் சீனாவின் “Ice Silk Road” திட்டம், ஆசியா-யூரோப் வர்த்தகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T09:13:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முட்டை மஞ்சள் கரு சாப்பிடலாமா? கூடாதா? அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/what-is-the-benefits-of-eating-egg-yellow-yolks-1786525232"></link>
            <id>https://news.lankasri.com/article/what-is-the-benefits-of-eating-egg-yellow-yolks-1786525232</id>
            <summary type="text">Egg yolk is good or bad: பொதுவாக, பலருக்கும் முட்டையில் இருக்கக்கூடிய மஞ்சள் கரு பிடிப்பதில்லை. அதில் கொழுப்பு சத்து அதிகம் இருக்கும் என்று அதை தவிர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Egg yolk is good or bad: பொதுவாக, பலருக்கும் முட்டையில் இருக்கக்கூடிய மஞ்சள் கரு பிடிப்பதில்லை. அதில் கொழுப்பு சத்து அதிகம் இருக்கும் என்று அதை தவிர்க்கின்றனர். ஆனால் உண்மையில் முட்டை மஞ்சள் கொழுப்பு சத்து அதிகம் இருக்கிறதா? என்பதை பற்றி பார்ப்போம்.
</p><p> கடந்து சில தினங்களாக மக்கள் மத்தியில் ஆரோக்கியம் தொடர்பான ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், முட்டை சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது காலை உணவு புரதம் இருக்க வேண்டியதன் அவசியம் அதிகரித்து வருகிறது. இருந்தாலும் கூட பலரும் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட மறுக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9efee7-7a16-4b7f-bfeb-9f18e2db3f95/26-6a7c3631ea3a9.webp' /></p><p></p><p> </p><p>காரணம் முட்டையின் மஞ்சள் கரு என்பது கொழுப்பு சத்து அதிகம் நிறைந்த பகுதி என்ற காரணமாகவே அவர்கள் தவிர்க்கின்றனர். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று பலருக்கும் தெரிவதில்லை. உண்மையில் முட்டையின் மஞ்சள் கருவில் பல அத்தியாவசிய வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் கோலின் ஆகியவை உள்ளதாக சொல்லப்படுகிறது.
</p><p> ஆதலால், எல்லோரும் முட்டையின் மஞ்சள் கருவை தூக்கி எறிய வேண்டும் என்பதில்லை. மேலும், நாம் சாப்பிட வேண்டிய முழு முட்டை அல்லது வெள்ளை கருக்கலின் எண்ணிக்கை இவையெல்லாம் நம்முடைய ஒட்டுமொத்த உணவு முறை கலோரி தேவைகள் மற்றும் தனிப்பட்ட உடல் நிலையாகிவை பொறுத்து அமையக்கூடியது.</p><p></p><p>
</p><p> உங்களுடைய மருத்துவர் உடல் நல காரணத்திற்காக குறிப்பிட்ட சில உணவு முறையை உங்களுக்கு பரிந்துரைத்தால் அதற்கு ஏற்ப முட்டைகளும் மஞ்சள் கருவையும் எடுத்துக் கொள்வது சிறந்தது. மேலும், நல்ல ஆரோக்கியமான ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு முட்டை மஞ்சள் கருவுகளை கட்டாயமாக பயமின்றி எடுத்துக் கொள்ளலாம்.</p><p>மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தாலும் அது ஆரோக்கியமான மனிதர்களின் ரத்த கொலஸ்ட்ரால் அளவை நேரடியாக பாதிப்பு இல்லை என்று மருத்துவ ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கிறார்கள். </p><p>அதோடு, நம்முடைய உடலுக்கு தேவையான வைட்டமின் டி ,பி 12, ஏ இரும்புச்சத்து மற்றும் மூளை வளர்ச்சிக்கு உகந்த கோலின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இந்த மஞ்சள் கருவில் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ab93b10-3568-4fec-9e80-d593bfb4fddf/26-6a7c3632a3559.webp' /></p><p></p><p>மேலும், ஒரு சிலர் இப்பொழுது உடற்பயிற்சிக்காக ஜிம் செல்லக்கூடியவராக இருந்தால் அவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று முழு முட்டைகள் வரை மஞ்சள் கருடன் சேர்த்து சாப்பிடலாம். </p><p>நீங்கள் இன்னும் கூடுதலாக முட்டை சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டு மஞ்சள் கருவின் எண்ணிக்கையை ஒன்று அல்லது இரண்டாக கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது என்றும் சொல்லப்படுகிறது. </p><p>ஆகையால், புரத தேவைக்காக ஒன்று அல்லது மூன்று முட்டை சாப்பிடுபவர்கள் எனில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை, அச்சம் இல்லாமல் கட்டாயமாக சாப்பிடலாம் உங்களுக்கு ஏதேனும் குழப்பம் பயம் இருந்தால் மருத்துவரை ஆலோசித்து பிறகு அவர்களுடைய அறிவுரையின்படி எடுத்துக் கொள்ளலாம்.</p>]]></content>
            <updated>2026-08-12T09:08:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்துவரும் நதிநீர் மட்டம்: ஜேர்மன் அமைச்சர்கள் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-transport-ministers-discuss-rhine-river-1786525649"></link>
            <id>https://news.lankasri.com/article/german-transport-ministers-discuss-rhine-river-1786525649</id>
            <summary type="text">ரைன் நதியின் நீர் மட்டம் குறைந்துவருவதால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அமைச்சர்கள் விவாதிக்க உள்ளார்கள்.


ரைன் நதியில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரைன் நதியின் நீர் மட்டம் குறைந்துவருவதால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அமைச்சர்கள் விவாதிக்க உள்ளார்கள்.
</p><p>

ரைன் நதியில் நீர் மட்டம் குறைந்துவருவதால், ஜேர்மனியில் சரக்குக் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
குறைந்துவரும் நதிநீர் மட்டம்
</h3><p>
சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் பிறக்கும் ரைன் நதி, Liechtenstein, ஆஸ்திரியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து வழியாக வட கடலைச் சென்றடைகிறது.</p><p>

ஆக, ஐரோப்பாவில், நீர் வழிப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது ரைன் நதி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/531d5fa0-ab2a-456f-af2e-adbc2a02cd4f/26-6a7c37d364e8e.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், இந்த நாடுகள் சரக்குப் போக்குவரத்துக்கு ரைன் நதியை நம்பியுள்ளன.
</p><p>
ஆனால், வெயில் மற்றும் மழையின்மை காரணமாக ரைன் நதியில் நீர் மட்டம் குறைந்துவருகிறது.&nbsp;</p><p></p><p>
இதனால், ஏற்கனவே ரைன் நதியில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் சுவிட்சர்லாந்தில் சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜேர்மனியிலும் சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
</p><p>
இந்நிலையில், சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொருட்கள் தட்டுப்பாட்டை சமாளிப்பது தொடர்பில் விவாதிப்பதற்காக, ஜேர்மன் அமைச்சர்கள் கூட்டம் ஒன்றில் பங்கேற்க உள்ளார்கள்.
</p><p>
அதன்படி, இன்று, ஜேர்மன் ஃபெடரல் போக்குவரத்துத்துறை அமைச்சரும், ஜேர்மன் மாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர்களும், வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் கூட்டம் ஒன்றில் பங்கேற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிக்க உள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T09:08:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் ஜெல்லி மீன்களால் மின் உற்பத்தி பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jelly-fish-hit-nuclear-plant-affect-electricity-1786524823"></link>
            <id>https://news.lankasri.com/article/jelly-fish-hit-nuclear-plant-affect-electricity-1786524823</id>
            <summary type="text">பிரான்சிலுள்ள அணு மின் நிலையங்களை குளிர்விக்க பயன்படும் தண்ணீரில் ஜெல்லி மீன்கள் இருந்ததால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


பிரான்சிலுள்ள அணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சிலுள்ள அணு மின் நிலையங்களை குளிர்விக்க பயன்படும் தண்ணீரில் ஜெல்லி மீன்கள் இருந்ததால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>

பிரான்சிலுள்ள அணு மின் நிலையம் ஒன்றில் உள்ள அணுக்கரு உலைகள் மூன்றின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின் வழங்கல் அமைப்பான EDF (Électricité de France) தெரிவித்துள்ளது.</p><h3>

ஜெல்லி மீன்களால் நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி
</h3><p>
பிரான்சிலுள்ள Dunkirk என்னுமிடத்திற்கு அருகில், மேற்கு ஐரோப்பாவிலேயே பெரிய அணு மின் நிலையமான Gravelines அணு மின் நிலையம் அமைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a35ced-1920-4dec-a66d-0126ea560513/26-6a7c349930c4a.webp' /></p><p>
இந்த மின் நிலையங்களிலுள்ள அணுக்கரு உலைகளை குளிர்விப்பதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கும். </p><p>அந்த குழாய்கள் வழியாக கடல் நீர் செலுத்தப்படும்.

விடயம் என்னவென்றால், பருவநிலை மாற்றம், அதிக அளவில் மீன்களைப் பிடித்தல், வெப்பமாகும் கடல், பிளாஸ்டிக் மாசு ஆகிய காரணங்களால் கடலில் ஜெல்லி மீன்கள் அதிக அளவில் பெருகுகின்றன.&nbsp;</p><p></p><p>

மின் நிலையங்களிலுள்ள அணுக்கரு உலைகளை குளிர்விப்பதற்காக இந்த கடல் நீர்தான் பயன்படுத்தப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், Gravelines அணு மின் நிலையத்தில் அணுக்கரு உலைகளை குளிர்விப்பதற்காக பயன்படுத்தப்படும் கடல் நீரில் ஏராளமான ஜெல்லி மீன்கள் இருந்ததால், குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46e7dca1-976a-4ecc-ac26-78311160d8f5/26-6a7c34986f35f.webp' /></p><p>
ஆகவே, அணு மின் நிலையத்திலுள்ள மூன்று அணுக்கரு உலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின் வழங்கல் அமைப்பான EDF தெரிவித்துள்ளது.</p><p>

ஏற்கனவே, அதீத வெப்பம் காரணமாக பிரான்சில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அணுக்கரு உலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால், மின் உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T08:54:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு பின்னால் வயிற்றை தடவிக்கொண்டிருந்த இளம்பெண்- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pregnant-woman-goes-viral-at-trump-vaccine-event-1786521571"></link>
            <id>https://news.lankasri.com/article/pregnant-woman-goes-viral-at-trump-vaccine-event-1786521571</id>
            <summary type="text">Pregnant Woman Goes Viral at Trump Event: ட்ரம்பிற்கு பின்னால் வயிற்றில் கையை வைத்துக்கொண்டு நின்ற இளம்பெண் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளார்.

ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pregnant Woman Goes Viral at Trump Event: ட்ரம்பிற்கு பின்னால் வயிற்றில் கையை வைத்துக்கொண்டு நின்ற இளம்பெண் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளார்.
</p><h2>
ட்ரம்ப்&nbsp;தடுப்பூசி&nbsp;கையெழுத்து&nbsp;நிகழ்ச்சி</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிந்துரைகளை மாற்றும் புதிய நிர்வாக உத்தரவை அவரது அலுவலகத்தில் கையெழுத்திட்டார். அந்த காணொளி இணையத்தில் வெளியானது. </p><p>

அதில், அவருக்கு பின்னால் நின்ற இளம் பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றார்.</p><p> </p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Claims she has a button fitted on her belly, and when she gets the nod that he’s asleep she moves her hand and presses a button that wakes him. They’re calling her The Zapper. No idea if it’s true but it *appears* to line up. <a href="https://t.co/hgx4x6iQp6">pic.twitter.com/hgx4x6iQp6</a></p>&mdash; Tim Brannigan (@tim_brannigan) <a href="https://x.com/tim_brannigan/status/2087083698193682450?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அந்த பெண்ணின் பெயர் ஜெய்மி லீக் பிராங்க்ளின் (Jayme Leagh Franklin).

அவர் “The Conservateur” என்ற கன்சர்வேட்டிவ் மீடியா மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
</p><h2>
வயிற்றின் மீது கை வைத்துக் கொண்டிருந்த&nbsp;பிராங்க்ளின்</h2><p>நிகழ்ச்சியில் ட்ரம்ப் மற்றும் சுகாதார செயலாளர் ராபர்ட் எப். கென்னடி ஜூனியர் அருகில் நின்றிருந்த பிராங்க்ளின், தனது வயிற்றின் மீது கை வைத்துக் கொண்டிருந்த காட்சி வைரலானது. </p><p>சிலர், அவர் ட்ரம்புக்கு மின்சார ஷாக் கொடுத்ததாகவும், ரகசியமாக தனது வயிற்றில் ஒரு பொத்தானை அழுத்தியதாகவும் வதந்திகளை பரப்பினர்.
</p><p></p><p>இதற்கு பதிலளித்த பிராங்க்ளின், சமூக வலைதளமான X-இல், “I’m just pregnant you weirdos” என்று பதிவிட்டு, அவர் கர்ப்பமாக இருந்ததால் தான் வயிற்றில் கையை வைத்து பார்த்துக்கொண்டு இருந்ததாக வெளிப்படையாக தெரிவித்தார்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I’m just pregnant you weirdos 😂😭 <a href="https://t.co/NG3tYyJmXy">https://t.co/NG3tYyJmXy</a></p>&mdash; Jayme Leagh Franklin (@jaymefranklin16) <a href="https://x.com/jaymefranklin16/status/2087396416670912601?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ae0120-954e-4f53-bb0e-1d911ca8dd6d/26-6a7c27e587f0b.webp' /></p><h2>ஜெய்மி லீக் பிராங்க்ளின்</h2><p>பிராங்க்ளின், 2020-இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அவர் 2019-இல் அமெரிக்க செனட்டில் சட்டமன்ற இன்டர்னாக பணியாற்றினார். பின்னர் ட்ரம்ப் 2020 தேர்தல் பிரசாரத்தில் coalitions coordinator ஆகவும், வெள்ளை மாளிகையில் correspondence director-ஆகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p>
அவரது நிறுவனம் “The Conservateur”, அரசியல், கலாசாரம், மதம், அழகு, பெண்மை போன்ற துறைகளில் கன்சர்வேட்டிவ் கிறிஸ்தவ இளைஞர்களுக்கான செய்தி மற்றும் கருத்துரைகளை வழங்குகிறது.</p><p>
</p><p>
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது தனக்கு பெருமை என பிராங்க்ளின் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T08:40:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/aadhav-arjuna-says-need-pm-from-tamilnadu-1786523839"></link>
            <id>https://news.lankasri.com/article/aadhav-arjuna-says-need-pm-from-tamilnadu-1786523839</id>
            <summary type="text">aadhav arjuna needs pm from tamil nadu : தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். 

த...</summary>
            <content type="html"><![CDATA[<p>aadhav arjuna needs pm from tamil nadu : தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். </p><h3>

தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம்</h3><p> 

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. </p><p>

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் விஜய், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48b8fdea-6942-46a5-bb2a-83b781e3f6de/26-6a7c30c0d5283.webp' /></p><p> 

இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&nbsp;</p><p></p><h3> 

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர்
</h3><p>
இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தென் மாநிலங்களுக்கு தொகுதிகளை 50 சதவிகிதம் உயர்த்தினாலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17f06545-1a41-4ef3-9ad1-11eb678dfbd0/26-6a7c30c23a011.webp' /></p><p>

தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், அது அரசியலில் பிரதிபலிக்கவில்லை. தற்போது 5 முதல் 6 வட இந்திய மாநிலங்கள் சேர்ந்தாலே பிரதமரை உருவாக்க முடியும் என்ற நிலை தற்போது வரை உள்ளது. அது மாற்றப்பட வேண்டும். </p><p>

தென் இந்தியாவிலிருந்து ஏன் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும். அதிகாரம் உத்தரப்பிரதேசத்திற்கோ, பீகாருக்கோ, குஜராத்திற்கோ மட்டும் அல்ல. நம்முடைய குரல் சட்டமன்றத்தில் ஒலித்தது போல், பாராளுமன்றத்தில் ஒரு பிரதமராக ஒலிக்கப்பட வேண்டும்" என பேசியுள்ளார்.</p><h3> 

ஆர்.பி.உதயகுமார்
</h3><p>
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இது குறித்து பேசிய அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் செய்யாததை எல்லாம் செய்ததாக கூறி இன்ஃப்ளூயன்சர்களை வைத்துக்கொண்டு, பிற மொழிகளில் போலி செய்திகள் மூலம் மாயபிம்பம் உருவாக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d520d469-13d7-47c9-91e6-e39d183d4d61/26-6a7c30c187cd0.webp' /></p><p>
இந்த மாயபிம்பத்தை வைத்து, 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நம்ம முதல்வர் விஜய்யை முன்னிருந்த தவெக கட்சி முன்னெடுப்பு எடுத்து வருகிறது" என பேசியிருந்தார்.</p><p>&nbsp;&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wN25U-NxuJM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T08:37:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் அணு ஆயுத சோதனை: சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-warning-to-china-after-missile-test-1786523191"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-warning-to-china-after-missile-test-1786523191</id>
            <summary type="text">Australia warns china after missile launch: சீனாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

பசிபிக் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Australia warns china after missile launch: சீனாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்குப் பிறகு, சீனாவிற்கு அவுஸ்திரேலியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><h2>அணு ஆயுத ஏவுகணை சோதனை</h2><p>கடந்த ஜூலை மாதம் அவுஸ்திரேலியா ஃபிஜியுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e82009b0-e054-4ff2-bf86-7f91c4812693/26-6a7c2e39cb709.webp' />&nbsp;</p><p></p><p>

அதனைத் தொடர்ந்து, சில மணி நேரங்களில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அப்பகுதிக்குள் அணு ஆயுத ஏவுகணை ஏவப்பட்டதை சீனா உறுதி செய்தது. குறித்த ஏவுகணை துவாலு அருகே தரையிறங்கியதாக நம்பப்படுகிறது.
</p><p>
இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக சர்வதேச அளவில் சீனா கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
</p><p>
மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறையால் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு குறைந்தது 24 மணி நேரமாவது முன்னறிவிப்பு வழங்க 'சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும்' உறுதியளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.</p><h2>40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்த அவுஸ்திரேலியா</h2><p>இந்த நிலையில், தென் பசிபிக் பகுதியில் சீனா நடத்திய சோதனை ஏவுதலைத் தொடர்ந்து, ஏவுகணை ஏவுதல்கள் குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வழங்க வேண்டும் என்ற அமெரிக்காவின் அழைப்பில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.
</p><p>
சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான அறிக்கையில், 'பசிபிக் பகுதியில் சமீபத்தில் நடந்த ஏவுகணை சோதனை நடவடிக்கைகள், ஏவுகணை ஏவுதல்கள் குறித்து அறிவிப்பதற்கும் மோதல் தவிர்ப்பதற்கும் பெரும்பாலான நாடுகள் பின்பற்றும் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை.
</p><p>
போதுமான முன் அறிவிப்பு மற்றும் விவரங்கள் இல்லாமல் அணு ஆயுதத் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்துவது ஆபத்தானது மற்றும் இந்த சோதனைகளுக்கு அருகிலுள்ள தொடர்புடைய நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பைக் குலைக்கிறது' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88c9330b-e2b0-441b-8d19-a75f99e5917b/26-6a7c2e3a80bfe.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T08:24:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் - அதிமுக எதிர்ப்பு, திமுக ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/admk-oppose-cm-vijay-delimitation-resolution-1786513821"></link>
            <id>https://news.lankasri.com/article/admk-oppose-cm-vijay-delimitation-resolution-1786513821</id>
            <summary type="text">resolution against delimitation in TN assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்திற்கு திமுக, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>resolution against delimitation in TN assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
</p><h3>
தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம்</h3><p> 

தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. </p><p>

இன்று நடைபெற்று வரும் 5 ஆம் நாள் விவாதத்தில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்த தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80fe01a4-5005-4df1-9d8d-76b01fa3ce13/26-6a7c099ecad69.webp' /></p><p> 

 தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய், "நம்முடைய குடும்பத்தில், நம்முடைய வீட்டில் இருக்கிற பாட்டி, அம்மா, அக்கா, தங்கச்சி என பெண்களைப் பற்றிய ஒரு தீர்மானம் இது. அவர்களுக்காகவும், அவர்களைப் பற்றியும் என் மனதிலிருந்தும், இதயத்திலிருந்தும் பேசுகிறேன்.</p><p> 

இதற்கு முன்பு கிடைத்த வெற்றிக்கும், இன்று இந்த இடத்திற்கும் மிகப்பெரிய காரணமாக இருந்தவர்கள் பெண்கள்தான்.
</p><p>
சங்ககாலம் தொடங்கி இன்றுவரை அடையாளமாக விளங்குகிற பெண் ஆளுமைகள் குறித்து பேசினார்.

நம்முடைய தமிழ்நாட்டு மண்ணில் சங்ககாலம் தொடங்கி இன்று வரை மிகப்பெரிய அடையாளமாக விளங்கிய பெண் ஆளுமைகள் ஏராளம். சங்ககாலத்தில் அவ்வையார், இலக்கியத்தில் கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி போன்றோர் நிலைத்து நிற்பவர்கள்.&nbsp;</p><p></p><p>
ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றவர்கள் ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள். ராணி வேலுநாச்சியார், குயிலி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அஞ்சலையம்மாள் உள்ளிட்டோர் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர்கள்.</p><p>

இவ்வாறு நம்முடைய தமிழ்நாட்டுப் பெண்கள் சுதந்திரப் போராட்டம் தொடங்கி சமூகநீதிப் போராட்டம் வரை பல்வேறு தளங்களில் பங்களித்துள்ளனர். </p><p>

அதுமட்டுமல்லாமல், கல்வி, அறிவியல், அரசியல், நீதி, நிர்வாகம், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் இன்று தமிழ்நாட்டுப் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9319e255-b4d4-481f-9fbd-2836037e218d/26-6a7c099f7d781.webp' /></p><p> 

தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்களை அதிக வாக்காளர்களாக உள்ளனர். பெண்களுக்கான அரசியல் இடம் என்பது சலுகை அல்ல அது உரிமை.</p><p> பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. 

பெண்களுக்கான அரசியல் அதிகாரம் வழங்குவதில் முன்னோடி மாநிலமாக தவெக அரசு உள்ளது. பேரவையில் 4 பெண் அமைச்சர்கள் உள்ளனர்.
</p><p>
பெண்களுக்கான பாதுகாப்பிலும் அவர்களுக்கான முக்கியத்துவத்திலும் தவெக அரசு கவனமாக தான் உள்ளது. உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்ததால் ஆயிரக்கணக்கான பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்துள்ளனர். </p><p>

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இது பெண்களுக்கான சலுகை அல்ல, அவர்களுக்கான ஜனநாயக உரிமை. </p><p>

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 6 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிலிமிட்டேஷன் காரணமாக தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசப்பட்டது.&nbsp;</p><p></p><p>
ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவிகித மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு அதன் அடிப்படையில் தொகுதி மறு சீரமைக்கப்படும். இவ்வாறு செய்தால் தென் மாநிலங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் குறையும்.</p><p>

தொகுதி மறு சீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றினால் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தென்மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவ அநீதி ஏற்படும். எனவே 543 என்ற மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும்" என பேசினார். </p><h3>

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
</h3><p>
இந்த தீர்மானம் குறித்து கட்சிகளின் சார்பில் அதன் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63f3365c-ab5c-4d29-b597-81bbd473e803/26-6a7c09a030302.webp' /></p><p>

இந்த தீர்மானம் குறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், பாமக எம்எல்ஏ கணேஷ் குமார், பாஜக எம்எல்ஏ போஜராஜன், உள்ளிட்டோர் மகளிர் இடஒதுக்கீட்டை வரவேற்றாலும், தனித்தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p>தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீர்மானத்தை ஆதரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தூதரை வெளியேற்ற கோரிக்கை: புகார் மனுவில் 29,000 கனேடியர்கள் கையெழுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/29000-canadians-signed-for-expell-us-ambassador-1786519541"></link>
            <id>https://news.lankasri.com/article/29000-canadians-signed-for-expell-us-ambassador-1786519541</id>
            <summary type="text">கனடாவுக்கான அமெரிக்க தூதரை வெளியேற்றக் கோரும் புகார் மனுவில் சுமார் 30,000 கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.


தற்போது கனடாவுக்கான அமெரிக்க தூதராக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுக்கான அமெரிக்க தூதரை வெளியேற்றக் கோரும் புகார் மனுவில் சுமார் 30,000 கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
</p><p>

தற்போது கனடாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பு வகிப்பவர், பீற் ஹோக்ஸ்ட்ரா ( Pete Hoekstra).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc741e98-2050-41d7-92c6-13d5ad719fcb/26-6a7c1ff6bed83.webp' /></p><p>
இந்நிலையில், பீற் ஹோக்ஸ்ட்ராவை விரும்பத்தகாத நபராக அறிவிக்கவேண்டும் (Persona non grata declaration) என்றும், கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவியிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்றும் கோரும் புகார் மனு ஒன்று கனடாவில் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><h3>
சுமார் 30,000 கனேடியர்கள்
</h3><p>
அந்த புகார் மனுவில், 29,000க்கும் அதிகமான கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
</p><p>
கனடா - அமெரிக்கா தூதரக உறவைச் சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிட்டதாகவும், தூதரக நெறிமுறைகளுக்கு முரணாகக் கனேடிய அரசியல் விடயங்களில் மீண்டும் மீண்டும் தலையிட்டதாகவும் ஹோக்ஸ்ட்ரா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54297631-6edb-4141-b942-3331cdd7be78/26-6a7c1ff770f3d.webp' /></p><p>
மேலும், கனடா விவகாரங்களில் அமெரிக்காவின் தூதரகத் தலையீட்டை மறுஆய்வு செய்ய, ஒரு நாடாளுமன்றக் குழுவை அமைக்க லிபரல் அரசாங்கம் உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைத்துக்கொள்வது குறித்த டிரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களை ஹோக்ஸ்ட்ரா இயல்பான விடயமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அந்த மனு கூறுகிறது.&nbsp;</p><p>
அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ள Persona non grata declaration என்பது என்னவென்றால், 1961ஆம் ஆண்டு அறிமுகமான தூதரக உறவுகள் தொடர்பிலான வியன்னா ஒப்பந்தத்தின் பிரிவு 9இன்படி, தனது நாட்டுக்கான மற்றொரு நாட்டின் தூதரையோ அல்லது ஒரு வெளிநாட்டவரையோ, ஒரு நாடு, அவருக்கு இங்கு வரவேற்பில்லை என பிரகடனம் செய்யலாம்.
</p><p>
அப்படி பிரகடனம் செய்யப்பட்டவருக்கு அதற்குப் பின் ஒரு தூதருக்கான பாதுகாப்பு வழங்கப்படாது என்பதுடன், அவரை, அந்த நபரின் சொந்த நாடு திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:25:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூட்டு வலி நீங்க சத்தான முருங்கை கீரை கொள்ளு சூப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-to-make-murungai-keerai-kollu-soup-for-legpain-1786516264"></link>
            <id>https://news.lankasri.com/article/how-to-make-murungai-keerai-kollu-soup-for-legpain-1786516264</id>
            <summary type="text">Murungai Keerai- Kollu Soup: முருங்கை கீரையும் கொள்ளு பருப்பு இருந்தால் அவற்றைக் கொண்டு சூப் செய்து கொடுக்கின்ற பொழுது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Murungai Keerai- Kollu Soup: முருங்கை கீரையும் கொள்ளு பருப்பு இருந்தால் அவற்றைக் கொண்டு சூப் செய்து கொடுக்கின்ற பொழுது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு சளி மூட்டு வலி விலகுகிறது. அதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cfa23b7-0777-4f29-ba20-ba4d8567306a/26-6a7c132a813de.webp' /><br></p><p>
</p><h3>
 
தேவையான பொருட்கள்: </h3><p>&nbsp;கொள்ளு - 1 1/2 டேபிள் ஸ்பூன்&nbsp;</p><p> தண்ணீர் - 1 1/4 கப் * பூண்டு - 2 பல் </p><p>இஞ்சி - 1/2 இன்ச்&nbsp;</p><p> சின்ன வெங்காயம் - 10 * கொத்தமல்லி - சிறிது </p><p>முருங்கைக்கீரை - 1 கைப்பிடி </p><p>சீரகம் - 1 டீஸ்பூன் * மிளகு - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p> மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p> தண்ணீர் - 1/2 லிட்டர்.
 தாளிப்பதற்கு...&nbsp;</p><p>தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் </p><p>கிராம்பு - 2&nbsp;</p><p> பட்டை - 1 துண்டு&nbsp;</p><p> இடிச்ச சின்ன வெங்காயம் - 5 </p><p>முருங்கைக்கீரை - 10 இலைகள்&nbsp; சூப்&nbsp;</p><p> உப்பு - சுவைக்கேற்ப </p><p>மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p> எலுமிச்சை - பாதி&nbsp;</p><p> கொத்தமல்லி - சிறிது</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">செய்முறை:</span><br></p><p> முதலில் அடுப்பில் குக்கரை வைத்து அதனுடன் கொள்ளு சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதை ஒரு முறை கழுவிக்கொண்டு மீண்டும் குக்கர் அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை கப் நீர் ஊற்றி குக்கர் மூடி 3 முதல் 4 வசூல் விட்டு இறக்க வேண்டும். </p><p>பிறகு விசில் இறங்கியதும் குக்கரை திறந்து அதில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, முருங்கைக்கீரை, சீரகம், மிளகு மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து இறக்க வேண்டும்.</p><p>&nbsp; &nbsp;<br></p><p> </p><p>விசில் இறங்கியதும் குக்கரில் உள்ளதை ஒரு பாத்திரத்தில் வடி கட்டிக்கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸரில் சாறு வடிகட்டிய பொருட்களை சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்ததையும் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.</p><p> அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கிராம்பு பட்டையை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின்பு அதில் இடிச்ச சின்ன வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். </p><p>பிறகு பத்து முருங்கை இலைகளை சேர்த்து வதக்கி வடிகட்டி வைத்துள்ள சூப்பை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு கலந்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து பிறகு இறக்கிக் கொள்ள வேண்டும். </p><p>இறக்கிய சூப்பில் மிளகுத்தூள் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியை தூவி கிளறினால் சுவையான முருங்கைக்கீரை கொள்ளு சூப் ரெடி. இதை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது மூட்டு வலி சளி பிரச்சனை போன்றவை நீங்குவதோடு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d66be45-0f37-474e-a554-51ede27a594f/26-6a7c1329c6efa.webp' />&nbsp;&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-12T07:17:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பவுண்டரி இல்லாமல் 9 சிக்ஸர் விளாசிய ரஸல்! 38 பந்தில் 68 ஓட்டங்கள் விளாசியும் வீண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andre-russell-blast-68-runs-with-9-sixer-1786518912"></link>
            <id>https://news.lankasri.com/article/andre-russell-blast-68-runs-with-9-sixer-1786518912</id>
            <summary type="text">கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.

சபீனா பார்க் மைதானத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.</p><p>

சபீனா பார்க் மைதானத்தில் நடந்த ஜமைக்கா கிங்ஸ்மென் அணிக்கு எதிரான கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>பிரண்டன் கிங், ஷெர்பானே ரூதர்போர்டு</h2><p>
பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகளுக்கு இடையிலான கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டி சபீனா பார்க்கில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a654f633-9e76-482f-9551-a8f22083118d/26-6a7c204d638f9.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணியில் கார்ட்டர் 27 (15) ஓட்டங்கள் விளாசி வெளியேற, சரவெடி காட்டிய குயின்டன் டி காக் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் விளாசினார். </p><p>

பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரண்டன் கிங், ஷெர்பானே ரூதர்போர்டு கூட்டணி அதிரடியில் மிரட்ட, பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 206 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

பிரண்டன் கிங் (Brandon King) 51 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், ஷெர்பானே ரூதர்போர்டு (Sherfane Rutherford) 28 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்களும் விளாசினர். </p><p>

அடுத்து களமிறங்கிய ஜமைக்கா கிங்ஸ்மென் அணியில் ஹென்ரிக்ஸ் (2), ஜஹான்ஹிர் (0) சொதப்ப, மெக்கென்ஸியும் டக்அவுட் ஆனார். 

அப்போது களமிறங்கிய அணித்தலைவர் ரோவ்மன் பௌல், கேசி கார்ட்டியுடன் இணைந்து சிக்ஸர்களை பறக்கவிட்டார். </p><h2>

ஆந்த்ரே ரஸல் வாணவேடிக்கை </h2><p>(பௌல் (Powell) 24 பந்துகளில் 38 ஓட்டங்கள் (4 சிக்ஸர்) விளாச, ஹஸ்ஸன் கான் டக்அவுட் ஆனார். கார்ட்டி 27 பந்துகளில் 45 ஓட்டங்கள் (4 சிக்ஸர், ஒரு பவுண்டரி) எடுத்த நிலையில் சாம்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02c75477-d7ef-49b4-9582-65f76adfc499/26-6a7c2051b0865.webp' /></p><p>

அணி 132 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் என தடுமாற, ஆந்த்ரே ரஸல் (Andre Russell) தனியாளாக வாணவேடிக்கை காட்டினார்.</p><p> 

அவர் கடைசி ஓவரில் 38 பந்துகளில் 68 ஓட்டங்கள் (9 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழக்க, ஜமைக்கா அணி 20 ஓவர்களில் 201 ஓட்டங்களே எடுத்ததால் பார்படோஸ் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

விட்டல் லாவ்ஸ் 20 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 32 ஓட்டங்கள் விளாசினார். மிரட்டலாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டேனியல் சாம்ஸ் (Daniel Sams) ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fca675b-d161-4263-aab8-cffca808404e/26-6a7c205260615.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய என்.சந்திரசேகரன் - பங்குகள் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/n-chandrasekaran-step-down-as-tata-sons-chairman-1786517952"></link>
            <id>https://news.lankasri.com/article/n-chandrasekaran-step-down-as-tata-sons-chairman-1786517952</id>
            <summary type="text">N.Chandrasekaran resigns tata sons chairman : டாடா சன்ஸ் தலைவர் பதவியை தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ள நிலையில், டாடா குழும பங...</summary>
            <content type="html"><![CDATA[<p>N.Chandrasekaran resigns tata sons chairman : டாடா சன்ஸ் தலைவர் பதவியை தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ள நிலையில், டாடா குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளது.</p><h3> 

டாடா சன்ஸ் தலைவர் பதவி விலகல்</h3><p> 

400 பில்லியன் டொலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் தாய் நிறுவனமாக டாடா சன்ஸ் உள்ளது. 

இது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டாடா மோட்டார்ஸ் மற்றும் ஏர் இந்தியா உட்பட 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது.
</p><p>
டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66% பங்குகள், குழுமத்தின் தொண்டுப் பிரிவான டாடா டிரஸ்ட்ஸுக்குச் சொந்தமானது.
</p><p>
கடந்த 2017 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d60c043-2735-4bf5-9063-76fc6ec81d95/26-6a7c19c135852.webp' /></p><p>

அவரது பதவிக்காலம் பிப்ரவரி 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.</p><p> 

ஆகஸ்ட் 18 அன்று நடைபெறவுள்ள நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த ராஜினாமா நடைபெற்றுள்ளது. </p><p>

டாடா டிரஸ்ட்ஸின் தலைவர் நோயல் டாடா உடனான கருத்து வேறுபாடு மற்றும் எதிர்ப்பு காரணமாகவே இந்த ராஜினாமா முடிவை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாடா குழுமத்தில் எனது 40 ஆண்டுகால தொழில் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளேன். இந்த மதிப்புமிக்க நிறுவனத்திற்குப் பங்களிக்கும் மிகுந்த மனநிறைவைத் தரும் வாய்ப்பிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். </p><p>

கடந்த 10 ஆண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது ஒரு பெரும் கௌரவமாகவும் ஆழ்ந்த பொறுப்பாகவும் இருந்துள்ளது.</p><p>

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக எனது தற்போதைய பதவிக்காலம் பிப்ரவரி 20, 2027 அன்று முடிவடைகிறது. சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியவை எனது அடுத்த பதவிக்காலத்தை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க ஒருமனதாகத் தீர்மானித்துப் பரிந்துரைத்தன. இதனை டாடா சன்ஸ் நியமனம் மற்றும் ஊதியக் குழு மற்றும் இயக்குநர்கள் குழு பதிவுசெய்து பரிந்துரைத்தது. </p><p>

அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 24, 2026 அன்று டாடா சன்ஸ் இயக்குநர்கள் குழுவில் அந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இயக்குநர்கள் குழு உறுப்பினர்களில் ஒருவர் அதற்கு ஆதரவளிக்காததால் அந்த முன்மொழிவு நிறைவேற்றப்படவில்லை. ஒருமித்த ஆதரவு இல்லாத நிலையில், நான் அந்த முடிவை ஒத்திவைக்கத் தேர்ந்தெடுத்தேன்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Tata Sons Chairman, N Chandrasekaran, released a statement, &quot;I have communicated to the Tata Sons Board that I have decided not to offer myself for reappointment when my term ends on Feb 20, 2027. I have asked the Board to decide on the succession soon to ensure a proper… <a href="https://t.co/cG5eBoftOg">pic.twitter.com/cG5eBoftOg</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2087419418230104302?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அந்த இயக்குநர் குழுக் கூட்டம் நடந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் இன்றுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. டாடா சன்ஸ் ஒரு மிகப் பெரிய நிறுவனம், மேலும் பல முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.</p><p> 

பிப்ரவரி 2027 க்கு அப்பால் குழுமத்தை வழிநடத்த ஒரு தலைவர் இருப்பது அவசியம் என்பது மட்டுமல்லாமல், ஊழியர்கள், முதலீட்டாளர்கள், கூட்டாளிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தலைமைத்துவம் குறித்த தெளிவும் முக்கியமானது. </p><p>

இந்தச் சூழ்நிலைகளில், 2027 பிப்ரவரி 20 அன்று எனது பதவிக்காலம் முடிவடையும்போது, ​​மறுநியமனத்திற்கு என்னை முன்மொழியப் போவதில்லை என முடிவு செய்துள்ளதை, இன்று காலை டாடா சன்ஸ் வாரியத்திற்குத் தெரிவித்துள்ளேன். </p><p>முறையான அதிகாரப் பரிமாற்றத்தை உறுதி செய்வதற்காக, அடுத்த வாரிசு நியமனம் குறித்து விரைவில் முடிவெடுக்குமாறு வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.</p><h3> 

பங்குகள் வீழ்ச்சி</h3><p> 

சந்திரசேகரனின் ராஜினாமாவையடுத்து, டாடா குழுமப் பங்குகள் இன்று 4% வரை சரிவை சந்தித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e57f18d-aceb-46e8-bea9-5fcb9875d71f/26-6a7c19c2918af.webp' /></p><p>

ஜாகுவார் லேண்ட் ரோவரின் உரிமையாளரான டாடா மோட்டார்ஸ், 2.8 சதவீதமும், TCS 4.1 சதவீதம் சரிவையும் சந்தித்துள்ளது. </p><h3>

யார் இந்த என்.சந்திரசேகரன்?
</h3><p>
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்த என்.சந்திரசேகரன், தனது பள்ளிக்கல்வியை மோகனூரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddef3a49-af30-4558-9b16-c69a9e76c814/26-6a7c19c1db96e.webp' /></p><p> 

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கணினிப் பிரிவில் முதுகலையில் பட்டம் பெற்றுள்ளார்.&nbsp;</p><p> 

1987 ஆம் ஆண்டு, டாடா குழுமத்தின் TCS நிறுவனத்தில் பயிற்சியாளராக வாழ்க்கையை தொடங்கி, 2009 ஆம் ஆண்டு அதன் தலைமை செயல் அதிகாரியாக(CEO) நியமிக்கப்பட்டார்.
</p><p>
2024-25 நிதியாண்டில் ரூ.155.81 கோடி சம்பளம் பெற்ற என்.சந்திரசேகரன், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நிறுவனத் தலைவர் என்ற பெருமையை பெற்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T06:59:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியால் வற்றிவரும் நதி: சுவிஸ் இறக்குமதி பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-import-to-affect-due-to-river-drought-1786515327"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-import-to-affect-due-to-river-drought-1786515327</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்திலுள்ள முக்கிய நதி ஒன்றில் தண்ணீர் வற்றிவருவதால் சுவிஸ் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.


நான்கு பக்கமும் நிலம் சூழ்ந்த சுவிட்சர்லாந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்திலுள்ள முக்கிய நதி ஒன்றில் தண்ணீர் வற்றிவருவதால் சுவிஸ் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>

நான்கு பக்கமும் நிலம் சூழ்ந்த சுவிட்சர்லாந்தை கடலுடன் இணைக்கும் ஒரே விடயம் ரைன் நதிதான்.
</p><p>
அந்த நதியே வற்றிவருவதால், நாட்டுக்குள் கப்பல் மூலம் நடைபெறும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுவருகிறது.</p><h3>

வறட்சியால் வற்றும் நதி
</h3><p>
உலக நாடுகள் பலவற்றிலுள்ள மக்கள் கோடைக்காலத்தில் சுற்றுலா செல்ல விரும்பித் தேர்ந்தெடுக்கும் நாடுகளில் முக்கியமான நாடு சுவிட்சர்லாந்து.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e05018d0-b1b1-446a-aec0-3956ba86141f/26-6a7c0f81093d4.webp' /></p><p>
ஆனால், மழைப்பொழிவு குறைந்துள்ளதால் சுவிட்சலாந்தில் வறட்சி உருவாகியுள்ளது.
</p><p>
இந்த வறட்சி, இறக்குமதியையும் பாதித்துள்ளதுதான் கவலையை ஏற்படுத்தியுள்ள விடயம்!
</p><p>
அதாவது, சுவிட்சர்லாந்தில், எண்ணெய் தொடர்புடைய தயாரிப்புகள், கால்நடைத் தீவனங்கள் மற்றும் உரம் ஆகியவற்றில் 8 முதல் 10 சதவிகிதம், ரைன் நதி மூலமாகத்தான் இறக்குமதி செய்யப்படுகின்றன.&nbsp;</p><p></p><p>
ஆனால், ரைன் நதியில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. ஆகவே பல கப்பல்கள் நின்றுவிட்டன. சில குறைவான சரக்குகளுடன் பயணிக்கின்றன.
</p><p>
ஆக, சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுவருகிறது. என்றாலும், அத்தியாவசிய பொருட்கள் கப்பல்களுக்கு பதிலாக தற்போது ரயில் மூலம் கொண்டு வரப்படுவதால் கூடுதல் செலவு ஏற்படுவதாக ஃபெடரல் தேசிய பொருளாதார வழங்கல் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T06:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் மிகப்பெரிய இரசாயன ஆலையைத் தாக்கிய ட்ரோன்கள்: உக்ரைன் மீது குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-strike-russia-s-big-petrochemical-plant-1786512517"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-strike-russia-s-big-petrochemical-plant-1786512517</id>
            <summary type="text">மேற்கு சைபீரியாவில் ரஷ்யாவின் மிகப்பெரிய இரசாயன ஆலையை உக்ரைன் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு சைபீரியாவின் ட்யூமென் பகுதியில் ரஷ்யாவின் மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு சைபீரியாவில் ரஷ்யாவின் மிகப்பெரிய இரசாயன ஆலையை உக்ரைன் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

மேற்கு சைபீரியாவின் ட்யூமென் பகுதியில் ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோ இரசாயன ஆலையை உக்ரைன் தாக்கியதாக கூறப்படுகிறது.&nbsp;</p><h2>பெட்ரோ இரசாயன ஆலை</h2><p>

ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோ இரசாயன ஆலை மேற்கு சைபீரியாவின் ட்யூமென் பகுதியில் உள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e27f445b-d46a-4f91-b4da-eaee80619131/26-6a7c055768fac.webp' /></p><p></p><p>
ஆலை ஒன்றின் மீது பல ட்ரோன்கள் மோதியதாகவும், அதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் ட்யூமென் பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் மூர் உறுதிப்படுத்தினார்.</p><p>ஆனால், அவர் அந்த இடத்தின் பெயரை குறிப்பிடவில்லை. அதே சமயம், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில் பெட்ரோ இரசாயன ஆலைக்கு மேலே அடர்த்தியான புகை மேகங்கள் எழுவதாகக் கூறப்படுகிறது.
</p><p>
சிபூர் பெட்ரோ இரசாயன நிறுவனத்தின் ஒரு பகுதியான ஸாப்ஸிப்நெஃப்டெகிம் ஆலையை ட்ரோன்கள் குறிவைத்ததாக சரிபார்க்கப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><h2>காலவரையின்றி&nbsp;</h2><p>
ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோ இரசாயன ஆலை தாக்கப்பட்டதாக சுயாதீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>தாக்குதலுக்கு உள்ளன ஆலை, சேதத்தின் அளவு மற்றும் அதன் விளைவுகள் மதிப்பிடப்பட்டு வரும் நிலையில் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தொழிற்சாலை வட்டாரம் ஒன்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.</p><p>

இதற்கிடையில், திங்கட்கிழமை அதிகாலையில் இரண்டு ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறிய உக்ரைன், ட்யூமென் பிராந்தியத்தில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக பொறுப்பேற்கவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd56c86e-2b84-45ab-90f5-e47b03a4b0c9/26-6a7c055837cfd.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-radio-falsely-announced-king-charles-death-1786510321"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-radio-falsely-announced-king-charles-death-1786510321</id>
            <summary type="text">மே மாதத்தில், தனியார் வானொலி ஒன்று மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பு, பணியாளர் ஒருவரின் ஆர்வத்தால் ஏற்பட்ட தவறு என விளக்கமளிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மே மாதத்தில், தனியார் வானொலி ஒன்று மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பு, பணியாளர் ஒருவரின் ஆர்வத்தால் ஏற்பட்ட தவறு என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் தனியார் வானொலி, ரேடியோ கரோலின்.
</p><p>
மே மாதம் 19ஆம் திகதி, வானொலியில் வழக்கம்போல பாடல்கள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த நிலையில், திடீரென நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன.</p><h3>

மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு
</h3><p>
அதைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸ் மரணடைந்து விட்டதால், நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாக, நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் குழப்பமடைந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16b3a2a2-594f-464b-be81-84730efa84a6/26-6a7bfbf372fed.webp' /></p><p>
குழப்பத்தை அதிகரிக்கும் வகையில், தேசிய கீதமும் ஒலிக்கச் செய்யப்பட்டுள்ளது.
</p><p> 
பின்னர் மீண்டும் ஒரு முறை மன்னர் சார்லஸ் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட, 16 நிமிடங்களுக்கு நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு அமைதி நிலவியுள்ளது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், அரை மணி நேரத்துக்குப் பின், மீண்டும் அறிவிப்பொன்றை வெளியிட்ட வானொலி அறிவிப்பாளர், மன்னர் மரணமடைந்துவிட்டதாக தவறுதலாக அறிவிப்பு வெளியானதாகக் கூறி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><h3>
நடந்தது என்ன?
</h3><p>
அதாவது, எல்லா பிரித்தானிய ஊடகங்களுமே, மன்னரின் மரணம் தொடர்பான ஒரு செய்தியை தயாராக வைத்திருக்குமாம்.
</p><p>
வானொலி நிலையத்தில் கணினி பராமரிப்புப் பணிக்காக வந்த ஒரு பணியாளர், கணினியில் மன்னர் மரணம் தொடர்புடைய மூன்று கோப்புகள் இருப்பதைக் கவனித்துள்ளார்.
</p><p>
அதில் என்ன உள்ளது என்பதை அறியும் ஆர்வத்தில், அந்த கோப்புகளை ஒலிக்கச் செய்துள்ளார் அந்த பணியாளர்.
</p><p>
விடயம் என்னவென்றால், அப்போது ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த பாடல் நிகழ்ச்சி, வேறொரு இடத்திலிருந்து ஒலிபரப்பாகிக்கொண்டிருந்திருக்கிறது.</p><p>

அப்போது, தொலைபேசியில் வாசகர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், வானொலி நிலையத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே, பாடல் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு, மன்னர் குறித்து வந்த செய்தியை ஒலிபரப்பியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ceb0cb-fee7-44e8-b144-43b75c710c29/26-6a7bfbf2c1a4e.webp' /></p><p>
இதற்கிடையில், அந்த பராமரிப்புப் பணியாளர் தான் தவறு செய்துவிட்டது தெரியவந்ததால், அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
</p><p>
நிகழ்ச்சியை வழங்குபவர் வானொலி நிலையத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலைய பொறியாளரிடம் விசாரிக்க, அவர் அந்த பராமரிப்புப் பணியாளர் செய்த தவறு குறித்து கூறியுள்ளார்.</p><p>

தவறை உணர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், வாசகர்களிடம் மன்னர் குறித்து வெளியான தவறான செய்திக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அதற்குள் அரை மணி நேரம் கடந்துவிட்டிருக்கிறது.
</p><h3>
ஒழுங்குமுறை அமைப்புக்கு வந்த புகார்கள்
</h3><p>
இந்நிலையில், வானொலி, தொலைக்காட்சி முதலான தகவல் தொடர்பு அமைப்புகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கும் ஒழுங்குமுறை அமைப்பான Ofcom என்னும் அமைப்புக்கு இந்த தவறு தொடர்பில் புகார்கள் வர, அந்த அமைப்பு விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.</p><p>

விசாரணையின் முடிவுகள், ரேடியோ கரோலின் வானொலி, இரண்டு விதி மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளன.
</p><p>
துல்லியமான, பாரபட்சமற்ற தகவல்களை வெளியிடுதல் மற்றும் தவறு நிகழ்ந்தால் உடனடியாக அதை திருத்திக்கொண்டு அது குறித்து விளக்கமளித்தல் என இரண்டு விதிகளை ரேடியோ கரோலின் வானொலி மீறியுள்ளதாக Ofcom தெரிவித்துள்ளது.
</p><h3>
என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?</h3><p>

தவறு செய்த பராமரிப்புப் பணியாளர் உடனடியாக வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டதாக வானொலி நிலையம் தெரிவித்துள்ளதுடன், அவர் மன்னிப்புக் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், மன்னர் மரணம் தொடர்பான கோப்புகள், ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த கணினியிலிருந்து அகற்றப்பட்டு, தனியாக ஒரு ஹார்ட் ட்ரைவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அந்த கோப்புகளை பயன்படுத்துதல் தொடர்பில் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:20:14+00:00</updated>
        </entry>
    </feed>
