<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-20T23:24:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் இம்ரான் கானின் சகோதரி அலீமா கான் கைது: கமிஷனர் போட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/former-pm-imran-khan-sister-get-arrested-in-pak-1789945522"></link>
            <id>https://news.lankasri.com/article/former-pm-imran-khan-sister-get-arrested-in-pak-1789945522</id>
            <summary type="text">Former PM Imran khan Sister get Arrested in Pak: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் சகோதரி அலீமா கான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அலீமா கான் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Former PM Imran khan Sister get Arrested in Pak: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் சகோதரி அலீமா கான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> அலீமா கான் கைது</h2><p>பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியான இம்ரான் கானின் சகோதரி அலீமா கான் நேற்று அரசு அதிகாரிகளால்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>முன்னாள் ஜனாதிபதியான இம்ரான் கானை விடுதலை செய்யுமாறு சகோதரி அலீமா கான் தொடர்ந்து சண்டை மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3ea9ab4-6484-4269-823d-9ed74ab61aae/26-6ab066b40dc1b.webp' /></p><p></p><p>இம்ரான் கானை விடுதலை செய்யுமாறு அவரது கட்சியான தெஹ்ரீக் - இ - இன்சாப் வரும் செப்டம்பர் 27ம் திகதி மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள இந்நிலையில் அவரது சகோதரி அலீமா கானின் கைது அரங்கேறியுள்ளது.</p><p>அலீமா கான் பொது அமைதியை சீர்குலைக்க கூடும் என்ற அடிப்படையில் பஞ்சாப் பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் அவரை 30 நாட்கள் காவலில் வைக்க லாகூர் துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>சகோதரி அலீமா கான் தற்போது லக்பத் சிறைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.<br></p>]]></content>
            <updated>2026-09-20T23:05:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை: இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை எம்.பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamil-man-sentenced-to-death-in-saudi-1789932834"></link>
            <id>https://news.lankasri.com/article/tamil-man-sentenced-to-death-in-saudi-1789932834</id>
            <summary type="text">Tamil man Sentenced to Death in Saudi Sri Lanka MP Urges Indian PM Modi to Rescue: சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய பிரதமர் மோடி மீட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tamil man Sentenced to Death in Saudi Sri Lanka MP Urges Indian PM Modi to Rescue: சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய பிரதமர் மோடி மீட்க வேண்டும் என்று இலங்கை எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2> சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்ட இலங்கை தமிழ் இளைஞர்</h2><p>இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்துக்கள் கதிர்காமம் முருகன் கோயிலுக்கு புனித பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். </p><p>&nbsp;அப்போது அவர்களுடன் சுப்பிரமணியம் என்ற பெயர் கொண்ட நாயும் சென்றுள்ளது. அந்த நாயை முஸ்லிம் இளைஞர் ஒருவர் மிதிப்பது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p> பலரும் அந்த வீடியோவின் கமெண்டில் தங்களது கண்டன கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f5f4ae4-f7d0-42d1-9d23-9f132941fb23/26-6ab03523e8667.webp' /></p><p> சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞரான அனோஜன் சிவராசாவும் அந்த வீடியோவின் கமெண்டில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.</p><p></p><p> இதையடுத்து சவுதி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறையும், ரூ.7.55 கோடி அபராதமும் விதித்தது.</p><p> இதனை எதிர்த்து அனோஜன் மேல்முறையீடு செய்த நிலையில், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2> இந்திய பிரதமர் மோடி தலையிட வேண்டும்</h2><p>இந்நிலையில் சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய பிரதமர் மோடி மீட்க வேண்டும் என்று இலங்கையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்.பி. யுமான&nbsp; எம்.பி மனோ கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.</p><p>[Q51ZQE
]</p><p> இது தொடர்பாக சமூக வலைதளத்தில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில், இந்திய பிரதமர் மோடியும், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் சல்மானும் மிக நெருங்கிய நட்பு கொண்டவர்கள்.</p><p> எனவே இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனிப்பட்ட முறையில் இந்திய பிரதமர் மோடியுடன் இலங்கை தமிழ் இளைஞரான அனோஜன் தொடர்பில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p> மேலும் இளைஞர் அனோஜன் சிவராசாவை மீட்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-20T22:27:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்திய படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-attacks-on-drug-smuggling-boat-4-dead-1789937079"></link>
            <id>https://news.lankasri.com/article/us-attacks-on-drug-smuggling-boat-4-dead-1789937079</id>
            <summary type="text">US Attacks on Drug Smuggling Boat 4 Dead: &amp;nbsp;போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>US Attacks on Drug Smuggling Boat 4 Dead: &nbsp;போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> போதைப்பொருள் கடத்தல் படகு மீது தாக்குதல்</h2><p>வெனிசுலா, மெக்சிகோ போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு போதைப் பொருளானது கடத்தப்பட்டு வருகிறது.</p><p> இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p> டிரம்பின் இந்த உத்தரவின் பேரில் அமெரிக்க கடற்படை இராணுவத்தினர்&nbsp; பசிபிக் மற்றும் கரீபியன் ஆகிய கடல் வழியாக போதைப் பொருள் கடத்தும் படகுகள் மீது தீவிரமான தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a06f7fcd-f477-43ba-b048-8826f613ffad/26-6ab045b93c9a2.webp' /></p><p></p><p> இவ்வாறு நடத்தப்படும் தாக்குதல்களில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த பலர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் பலி</h2><p>
இந்நிலையில் நேற்று கரீபியன் கடல் வழியாக சிறிய படகில் போதை பொருள் கடத்தி வந்த கும்பல் மீது அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p> இந்த தாக்குதலில் படகில் இருந்த 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக இதுவரை 69 தாக்குதல்களை அமெரிக்கா ராணுவம் நடத்தியுள்ளது.</p><p> இந்த தாக்குதலில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 231 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T20:44:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[6,000mAh பற்றரி திறன்.,Lava Bold N4 Pro இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lava-bold-n4-pro-launched-in-india-1789935829"></link>
            <id>https://news.lankasri.com/article/lava-bold-n4-pro-launched-in-india-1789935829</id>
            <summary type="text">Lava Bold N4 Pro Launched in India: Price and Specs: 6,000mAh பற்றரி திறனுடன் லாவா போல்ட் என்4 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. Lava B...</summary>
            <content type="html"><![CDATA[<p>Lava Bold N4 Pro Launched in India: Price and Specs: 6,000mAh பற்றரி திறனுடன் லாவா போல்ட் என்4 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.</p><h2> Lava Bold N4 Pro அறிமுகம்</h2><p>இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Lava நிறுவனத்தின்&nbsp; Bold N4 Pro ஸ்மார்ட்போன் அறிமுகமாகி கவனம் பெற்று வருகிறது.</p><p> பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், செப்டம்பர் 26ம் திகதி முதல் இந்திய சந்தைகளில் விற்பனையை தொடங்குகிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b44168cf-50ef-44ad-aa7e-5bfa4424b9f0/26-6ab040d6c7087.webp' /></p><h2> Lava Bold N4 Pro சிறப்பம்சங்கள்</h2><p>Lava Bold N4 Pro ஸ்மார்ட்போன் சிறப்பான&nbsp; மற்றும் துடிப்பான&nbsp; 6.75 இன்ச் ஹெச்டி+ எல்சிடி திரையை கொண்டுள்ளது.</p><p> Unisoc T8200 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கொண்டுள்ளது.</p><p>6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக Lava Bold N4 Pro ஸ்மார்ட்போனில் 6,000mAh பற்றரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 50 மெகாபிக்சல் பின்பக்க பிரதான கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த Lava Bold N4 Pro ஸ்மார்ட்போனின் விலையானது இந்திய சந்தையில் ரூ.13,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T20:24:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[19 ஆண்டுகளுக்கு பிறகு AI உதவியுடன் கொலையாளியை கைது செய்த தமிழ்நாடு பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tn-police-use-ai-to-arrest-absconding-accused-1789934402"></link>
            <id>https://news.lankasri.com/article/tn-police-use-ai-to-arrest-absconding-accused-1789934402</id>
            <summary type="text">TN Police Use AI to Arrest 19 years absconding Accused: கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தலைமறைவான நபரை நவீன AI உதவியுடன் கிட்டத்தட்ட 19 ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>TN Police Use AI to Arrest 19 years absconding Accused: கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தலைமறைவான நபரை நவீன AI உதவியுடன் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து பொலிஸார் அசத்தியுள்ளனர்.</p><h2> தலைமறைவான குற்றவாளி
</h2><p>2007ம் ஆண்டு சென்னை திருவொற்றியூர் பகுதியில் பாண்டியமணி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா(அப்போது வயது 20) உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்தனர்.</p><p> பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஷேக் அப்துல்லா பொலிஸாரின் கண்களுக்கு சிக்காமல் தலைமறைவானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e92f89-be3c-48b5-831e-2d669987228a/26-6ab03b43991c3.webp' /></p><p> இந்நிலையில் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்ட நிலையில் தனிப்படை பொலிஸார் 2007ம் ஆண்டு ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.</p><h2>AI உதவியுடன் அசத்திய பொலிஸார்</h2><p>கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவர் தற்போது எப்படி இருப்பார் என்பதை ஊகிக்க, பொலிஸார் நவீன ஏஐ உருவ அமைப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.</p><p>தொழில்நுட்ப உதவியுடன் தற்போது 39 வயதில் இருக்கும் ஷேக் அப்துல்லாவின் உருவ தோற்றத்தை பொலிஸார் இறுதி செய்தனர்.</p><p> இதையடுத்து அந்த புகைப்படங்களை வைத்து சமூக வலைதள கணக்குகள் மற்றும் அவர் முன்பு வசித்த பகுதியில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p> இறுதியில் 39 வயதான ஷேக் அப்துல்லா திருமுல்லைவாயில் சோழம்பேடு மெயின் ரோடு பகுதியில் தன்னுடைய குடும்பத்தினருடன் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p> பிறகு திருமுல்லைவாயல் பகுதியில் முகாமிட்ட தனிப்படை பொலிஸார் நேற்று முன்தினம் ஷேக் அப்துல்லாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். </p><p>&nbsp;பின்னர் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷேக் அப்துல்லா, நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p><p> நவீன AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் 19 ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவான குற்றவாளியை பொலிஸார் கைது செய்து இருப்பது பாராட்டுதலை பெற்று வருகிறது.<br></p>]]></content>
            <updated>2026-09-20T20:00:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் பழிவாங்கும் ஆடை: ஏலம் விட ஏற்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/princess-diana-s-revenge-dress-set-to-go-auction-1789929820"></link>
            <id>https://news.lankasri.com/article/princess-diana-s-revenge-dress-set-to-go-auction-1789929820</id>
            <summary type="text">Princess Diana’s Revenge Dress Set to go Auction: &amp;nbsp;பிரித்தானிய இளவரசி டயானாவின் பழிவாங்கும் ஆடை மீண்டும் ஏலத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Princess Diana’s Revenge Dress Set to go Auction: &nbsp;பிரித்தானிய இளவரசி டயானாவின் பழிவாங்கும் ஆடை மீண்டும் ஏலத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> மீண்டும் ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் ஆடை</h2><p>மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் புகழ்பெற்ற “பழிவாங்கும் ஆடை”(Revence Dress) சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.</p><p> லண்டனில் உள்ள சோதேபிஸ்(Sotheby’s) என்ற ஏல நிறுவனத்தினால் நடத்தப்படும் கண்காட்சியில் இந்த பழிவாங்கும் ஆடை வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0add9f7c-8abc-4acd-a833-95e67b591d11/26-6ab0295e36f3e.webp' /></p><p>லண்டனில் நேற்று தொடங்கப்பட்ட இந்த கண்காட்சி செப்டம்பர் 24ம் திகதி வரை நடைபெற உள்ளது.</p><p></p><p>லண்டனை தொடர்ந்து ஹாங்காங், ஜெனிவா போன்ற நகரங்களின் கண்காட்சிகளில் வைக்கப்பட்டு இறுதியாக 2026ம் டிசம்பர் 9ம் திகதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை ஏலம் விடப்படவுள்ளது.</p><p> இப்போதைய பிரித்தானிய மன்னர் மற்றும் அப்போதைய இளவரசரான சார்லஸ் உடனான திருமணம் முறிவை சந்தித்த போது, இளவரசி டயானா சோகத்தில் மூழ்கி விடாமல், இந்த உலகத்திற்கு தன்னுடைய அழகையும், தைரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அணிந்த ஆடைகளை ஊடகங்கள் பழிவாங்கும் ஆடை என வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e1a6f65-0a40-4ab2-ad75-851c947bea89/26-6ab0295ee1307.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T18:43:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி: பேருந்து மீது குறிவைத்து தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-election-officer-killed-in-ukraine-attack-1789925970"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-election-officer-killed-in-ukraine-attack-1789925970</id>
            <summary type="text">Russia Election Officer Killed in Ukraine Attack: உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய தேர்தல் அதிகாரி கொல்லப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia Election Officer Killed in Ukraine Attack: உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய தேர்தல் அதிகாரி கொல்லப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி</h2><p> கெர்சன் மாகாணத்தில் நடைபெற்ற ரஷ்ய தேர்தல் பணியின் போது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தேர்தல் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p> இந்த தகவலை ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் எல்லா பாம்ஃபிலோவா உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>மேலும், கெர்சன் பகுதியில் பொதுமக்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் வரை கொல்லப்பட்டதாகவும், அதில் ஒருவர் Nizhneserogozsky மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையம் எண் 220 தேர்தல் ஆணைய உறுப்பினர் ஓல்கா பெட்ரோவ்னா டெம்யானென்கோ எனவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb278de-52ba-4610-9809-b8a46fd8fe51/26-6ab01a53d60ce.webp' /></p><p></p><p>ரஷ்யாவின் தேர்தல் செயல்முறைகளை சீர் குலைக்கும் விதமாக தொலைதூர கிழக்கு பகுதிகளில் உக்ரைன் நாச வேலைகளில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யாவின் டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் முன்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> உக்ரைனின் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்றது.</p><p> மாஸ்கோவில் நடைபெற்ற வாக்குப்பதிவில் காலை 10 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 3.2 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T17:39:37+00:00</updated>
        </entry>
    </feed>
