<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-20T17:31:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.50000க்கு வேலை: ஓமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்திய பெண்: கண்ணீருடன் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hyderabad-woman-trapped-in-oman-without-salary-1784565420"></link>
            <id>https://news.lankasri.com/article/hyderabad-woman-trapped-in-oman-without-salary-1784565420</id>
            <summary type="text">ஹைதராபாத் சேர்ந்த பெண் ஒருவரை அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி&amp;nbsp; ஓமனில் சித்திரவதை செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலி ஏஜெண்டுகளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹைதராபாத் சேர்ந்த பெண் ஒருவரை அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி&nbsp; ஓமனில் சித்திரவதை செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><h2> போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்ட பெண்</h2><p>தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஹாடி ஷெரீப் பகுதியை சேர்ந்த ஷப்னம் பேகம் என்ற 26 வயது இளம்பெண்ணுக்கு ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் ரூ 50,000 க்கு வேலை வாங்கி தருவதாக போலி ஏஜெண்டுகள் ஏமாற்றியுள்ளனர்.</p><p>போலி ஏஜெண்டின் ஆசை வார்த்தைகளை நம்பி கடந்த மார்ச் 26ம் திகதி ஷப்னம் ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார்.</p><p>ஆனால், அங்கு சென்றதும் ஏஜெண்டுகளின் உண்மையான ரூபம் ஷப்னத்திற்கு தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/535f23b0-6303-4d25-87ed-5b44d505241e/26-6a5e4eadd8cec.webp' /></p><p>ஷப்னம் அங்கு வெவ்வெறு வீடுகளுக்கு வேலைக்காக 12 முதல் 15 மணி நேரம் எந்தவொரு ஓய்வும் இல்லாமல் அனுப்பப்பட்டுள்ளார்.</p><p> மேலும், அவருக்கு உண்ணுவதற்கு போதுமான உணவு, தங்குவதற்கு சரியான இடம் கூட கொடுக்கவில்லை.</p><p> இதனை தொடர்ந்து ஷப்னம் வேலை செய்ய மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த முதலாளிகள் அவரை கடுமையாக தாக்கியதோடு, வெளி உலகிற்கு தகவல் சொல்லி விட கூடாது என்பதற்காக அவரிடம் இருந்து மொபைல் போனையும் பறித்துள்ளனர்.</p><p></p><p>அத்துடன்&nbsp; கடந்த 4 மாதங்களாக அவருக்கு 1 ரூபாய் கூட சம்பளம் கொடுக்கவில்லை.</p><h2> தூதரகத்தில் தஞ்சம்</h2><p>
இந்நிலையில், அங்கிருந்து எப்படியோ தப்பிய ஷப்னம், மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அடைந்துள்ளார். ஆனால் பாஸ்போர்ட் போன்ற எந்தவொரு ஆவணமும் அவரிடம் இல்லாததால் அவரால் இந்தியாவுக்கு திரும்ப முடியவில்லை.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Urgent Appeal to Hon&#39;ble Dr. <a href="https://x.com/DrSJaishankar?ref_src=twsrc%5Etfw">@DrSJaishankar</a>, Minister for External Affairs, Govt. of India<br><br>Mrs. Shabnam Begum, a resident of Pahadi Shareef, Hyderabad, was allegedly lured to Muscat, Oman by a local agent with the promise of a housemaid job offering 200 Omani Riyals/month. After… <a href="https://t.co/UNrKXbv3QS">pic.twitter.com/UNrKXbv3QS</a></p>&mdash; Amjed Ullah Khan MBT (@amjedmbt) <a href="https://x.com/amjedmbt/status/2078220201620086954?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதையடுத்து ஹைதராபாத்தை சேர்ந்த மஜ்லில் பச்சாவ் தெஹ்ரீக் கட்சி தலைவர் அம்ஜத் உல்லா கானுக்கு ஷப்னம் கண்ணீருடன் வீடியோ ஒன்றை அனுப்பி தன்னை மீட்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.</p><p> இதனை தன்னுடைய X தளத்தில் மஜ்லில் பச்சாவ் தெஹ்ரீக் கட்சி தலைவர் அம்ஜத் உல்லா பகிர்ந்துள்ளார். மேலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஷப்னமை மீட்கும் படி கோரிக்கை வைத்துள்ளார்.</p><p> இந்நிலையில், அவரை மீட்க மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-20T16:37:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக பதவியேற்றார் ஆன்டி பர்னாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-sworn-as-59th-pm-of-uk-1784550432"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-sworn-as-59th-pm-of-uk-1784550432</id>
            <summary type="text">பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார் ஆன்டி பர்னாம்.

பிரதமராக பதவியேற்றார் ஆன்டி பர்னாம்

கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார் ஆன்டி பர்னாம்.</p><h3>

பிரதமராக பதவியேற்றார் ஆன்டி பர்னாம்</h3><p>

கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்துவந்த ஆன்டி பர்னாம், சமீபத்தில் மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
</p><p>
அதைத் தொடர்ந்து, லேபர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆன்டி பர்னாம், சற்று முன் மன்னரை சந்தித்து பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1584e5d8-f391-49d3-b6fb-2f1afe9dbac3/26-6a5e14224174d.webp' /></p><p>ஆன்டி பர்னாம், பிரித்தானியாவின் 59ஆவது பிரதமர் ஆவார். அவருக்கு முன் பிரதமராக பதவி வகித்த சர் கெய்ர் ஸ்டார்மர் சற்று முன் மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமாவைக் கையளிக்க, மன்னர் அதை ஏற்றுக்கொண்டார்.
</p><p>
அதைத் தொடர்ந்து, பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்ற ஆன்டி பர்னாம் மன்னர் சார்லசை சந்தித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d57ef349-120d-4165-8a58-08a33e55ec82/26-6a5e1423b781e.webp' /></p><p>மன்னர் சார்லஸ் முறைப்படி பிரித்தானியாவின் பிரதமராக பொறுப்பேற்கும்படி ஆன்டி பர்னாமைக் கேட்டுக்கொள்ள, அதை ஏற்றுக்கொண்ட ஆன்டி பர்னாம் பிரித்தானியாவின் பிரதமராகியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
அதற்கு அடையாளமாக, ஆன்டி பர்னாம், மன்னர் சார்லசுடன் கைகுலுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d511e8aa-81b1-4f2c-b2c7-2d788a0ff59c/26-6a5e1422f3a9c.webp' /></p><p>ஆன்டி பர்னாம் பிரித்தானியாவின் பிரதமராக முறைப்படி மன்னர் சார்லசால் நியமிக்கப்பட்டதைக் குறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு ஆன்டி பர்னாம், மேன்மை தங்கிய மன்னரை சந்தித்த நிலையில், புதிய நிர்வாகத்தை அமைக்குமாறு ஆன்டி பர்னாமை மன்னர் கேட்டுக்கொண்டார்.
</p><p>
மன்னரின் அழைப்பை ஏற்ற ஆன்டி பர்னாம், பிரதமராகவும் கருவூலத்தின் முதல் பிரபுவாகவும் பதவி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மன்னரின் கைகளில் முத்தமிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அடுத்ததாக, ஆன்டி பர்னாம், பிரதமர் இல்லம் முன் உரையாற்ற இருக்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T16:06:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூச நட்சத்திரத்தில் உதித்த சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sun-transit-1784550885"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sun-transit-1784550885</id>
            <summary type="text">நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

ஜூலை மாதத்தில் சூரியன் தனது ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.</p><p>

ஜூலை மாதத்தில் சூரியன் தனது ராசியை மாற்றியுள்ள அதே நேரத்தில் ஜூலை 20ஆம் திகதியான இன்று தனது நட்சத்திரத்தை மாற்றியுள்ளார்.</p><p>

இந்நிலையில், ஜூலை 20ஆம் திகதியான இன்று சூரியன் பூச நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். </p><p>

அந்தவகையில், சூரியன் பூச நட்சத்திரத்திற்கு சென்றதால் குறிப்பிட்ட 3 ராசிகள் பணயோகத்தை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>கடகம் </h2><ul><li>

முடிவெடுக்கும் திறன் மேம்படும். </li><li>
தொழில் வாழ்க்கையில் அங்கீகாரமும் கிடைக்கும்.</li><li> 
தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
</li><li>வேலையில் பல புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
</li><li>பணியிடத்தில் பெரிய பொறுப்பு கிடைக்கும்.</li><li> 
வேலையில் திருப்தி அடைவீர்கள்.
</li><li>வணிகர்களுக்கு ஒப்பந்தங்களிலிருந்து வருமானம் கிடைக்கும். </li><li>
நிதி நிலைமை நிலையானதாக இருக்கும்.</li><li> 
வருமானத்தில் முன்னேற்றம் உண்டாகும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e6e0806-81b9-405a-8e25-b491ac574a63/26-6a5e1760077e6.webp' /></p><p>
</p><h2>துலாம் </h2><ul><li>

நற்பெயருக்குச் சாதகமாக அமையும்.</li><li>
பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடும். </li><li>
செயல்திறன் மேலதிகாரிகளை கவரக்கூடும். </li><li>
வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்களை தரும். </li><li>
வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள்.</li><li>
பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து லாபம் கிடைக்கும். </li><li>
முதலீடுகளிலிருந்து வருமானம் கிடைக்கும். </li><li>
குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும்.
</li><li>வாழ்க்கை துணையுடன் நேரத்தை செலவிட முடியும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4f33309-2dab-4edb-bc6b-4514421b1629/26-6a5e1760baedf.webp' /></p><h2>மீனம்</h2><ul><li> 

நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும். </li><li>
அவர்களின் சமூக அந்தஸ்து அதிகரிக்கும்.</li><li> 
புதிய வருமான ஆதாரங்கள் திறக்கும்.
</li><li>பொருளாதார நிலை பல மடங்கு அதிகரிக்கும். </li><li>
 காதல் மற்றும் திருமண வாழ்க்கை அருமையாக இருக்கும்.</li><li> 
குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.
</li><li>குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்வார்கள்.
</li><li>பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும். </li><li>
வாழ்க்கையில் சிறப்பான பலன்களை அளிக்கும்.</li></ul><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61ca564b-7a84-412b-84cb-b2d0aa846b1e/26-6a5e1761676ca.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T14:30:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[படிப்பில் தங்கப்பதக்கம் வென்றும் அரசு வேலை கிடைக்கவில்லை - விபரீத முடிவெடுத்த இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gold-medalist-end-his-life-fails-to-get-govt-job-1784556993"></link>
            <id>https://news.lankasri.com/article/gold-medalist-end-his-life-fails-to-get-govt-job-1784556993</id>
            <summary type="text">பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்றும் அரசுவேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.&amp;nbsp;படிப்பில் தங்கப்பதக்கம்உத்தரப்பிரதேசம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்றும் அரசுவேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.&nbsp;</p><h3>படிப்பில் தங்கப்பதக்கம்</h3><p>உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரின் குஜைனி பகுதியில் வசித்து வந்தவர் 23 வயது பொறியியல் பட்டதாரியான ஆனந்த் குமார்.
</p><p>
2024 ஆம் ஆண்டு கான்பூரில் உள்ள பிரான்வீர் சிங் தொழில்நுட்பக் கல்லூரி (PSIT) என்ற தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் (மின் பொறியியல்) படிப்பில் முதலிடம் பிடித்ததுடன், மாநில அளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c59af7b2-5ade-408e-b080-60a3d5f2a4ab/26-6a5e2dc31d20e.webp' /></p><p>

இதற்காக உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் தங்கப் பதக்கம் பெற்றார். </p><p>

இதனையடுத்து அரசுவேலைக்கு முயற்சித்த அவர், வேலை கிடைக்காத விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p> 

ஆனந்த் குமாரின் குடும்பத்தினர் அவருடைய மூத்த சகோதரரின் திருமணத்தை உறுதி செய்வதற்காக பீகாரில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.&nbsp;</p><h3>கைப்பற்றப்பட்ட கடிதம்&nbsp;&nbsp;</h3><p>

இந்த நேரத்தில், ஆனந்த் குமார் கான்பூரின் குஜைனி பகுதியில் உள்ள தங்களது 3 மாடி வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.</p><p>

கதவைத் திரும்பத் திரும்பத் தட்டியும் பதில் வராததால், வீட்டுப் பணிப்பெண் அக்கம்பக்கத்தினருக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் கதவை உடைத்து சடலத்தை மீட்டுள்ளனர். </p><p>

அறையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், "மன்னித்துவிடுங்கள் அப்பா, நான் அரசு வேலை பெறுவதற்காக கிட்டத்தட்ட 50 முறை முயற்சி செய்தும் என்னால் வெற்றி பெற முடியவில்லை. தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். </p><p>

இது குறித்து பேசிய சிவில் இன்ஜினியரிங் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஊழியரான ஆனந்த் குமாரின் தந்தை ராஜ்குமார், "போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு முன்பு, பட்டப்படிப்புக்குப் பின் பவர் கிரிட் நிறுவனத்தில் ஓராண்டு தொழிற்பயிற்சியை முடித்திருந்தார். </p><p>

 ரயில்வே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), வங்கிகள் மற்றும் கல்வித் துறை நடத்திய ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் அவர் கலந்துகொண்டும் வெற்றி பெற முடியவில்லை. கடந்த பல மாதங்களாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்தார்," என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T14:16:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர் இந்தியாவுக்கான எதிர்கால முதலீடு... சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/future-air-india-funding-will-be-1784552863"></link>
            <id>https://news.lankasri.com/article/future-air-india-funding-will-be-1784552863</id>
            <summary type="text">ஏர் இந்தியா நிறுவனத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முதலீடும், தனிப்பட்ட சூழல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்று சிங்கப்பூர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர் இந்தியா நிறுவனத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முதலீடும், தனிப்பட்ட சூழல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) தெரிவித்துள்ளது.</p><h2>கவனமாகப் பரிசீலிக்கும்</h2><p>
</p><p>தனது பல-மைய (multi-hub) வளர்ச்சி உத்தியின் முக்கியத் தூணாக, டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் உருமாற்றத்திற்கு ஆதரவளிப்பதற்கான தனது நீண்டகால உறுதிப்பாட்டை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0004644e-9ddb-4768-b493-dd147b0c8877/26-6a5e1f847bd15.webp' /></p><p> </p><p>மேலும், ஏர் இந்தியாவுக்கான முதலீட்டு வரம்புகள் எதையும் தாங்கள் முன்கூட்டியே நிர்ணயிக்கவில்லை என்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. </p><p>ஏர் இந்தியாவிடமிருந்து கூடுதல் மூதலீடுற்கான கோரிக்கைகள் ஏதேனும் வந்தால், குழுமத்தின் பிற முதலீடுத் தேவைகள் மற்றும் ஏர் இந்தியாவின் வணிக உத்தி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவற்றை வாரியம் கவனமாகப் பரிசீலிக்கும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> மட்டுமின்றி,
தங்களது முதலீடு ஒதுக்கீட்டுக் கட்டமைப்பு, செயல்பாட்டு ரொக்கப் புழக்கங்கள், விமானங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான முதலீட்டுத் தேவைகள், அத்துடன் ஏர் இந்தியா போன்ற மிக முக்கியமான முதலீடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட மதிப்பீட்டு செயல்முறையைப் பின்பற்றுகிறது என்று அந்த விமான நிறுவனம் மேலும் கூறியது.</p><p></p><p>
</p><p>ஏர் நியூசிலாந்து, விர்ஜின் அட்லாண்டிக் மற்றும் விர்ஜின் அவுஸ்திரேலியா போன்ற விமான நிறுவனங்களில் செய்த முதலீடுகளிலிருந்து ஏர் இந்தியாவில் செய்த முதலீடு எவ்வாறு வேறுபடுகிறது என்ற கேள்விக்கு, ஒவ்வொரு முதலீடும் நீண்டகால வளர்ச்சி சாத்தியம், மூலோபாய ஒருங்கிணைப்பு, செயல்பாட்டுச் சூழல் மற்றும் இடர் விவரம் ஆகியவற்றின் அடிப்படையில் சுயாதீனமாக மதிப்பிடப்படுகிறது என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பதிலளித்துள்ளது.</p><h2>நிகர இழப்பு</h2><p>
</p><p>விரிவாக்கப்பட்ட ஏர் இந்தியா குழுமத்தில் தங்களுக்குள்ள 25.1 சதவீதப் பங்குகளை, தங்களது 'பல்முனை மைய' (multi-hub) உத்தியின் ஒரு முக்கிய அங்கமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விவரித்துள்ளது; இது இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் உள்நாட்டுச் சந்தை மற்றும் இந்திய மையங்கள் வழியாகச் செல்லும் சர்வதேசப் பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றை நேரடியாக அணுகும் வாய்ப்பை அதற்கு வழங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84f42e68-e3d8-4773-aa2e-22646b2bb9d3/26-6a5e1f83b9daa.webp' /></p><p>
</p><p>2026-ஆம் நிதியாண்டில் ஏர் இந்தியா ரூ. 26,400 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது; விஸ்தாராவுடனான இணைப்புக்குப் பிந்தைய விமானக் கூட்டமைப்பு நவீனமயமாக்கல், சேவைகளை மேம்படுத்துதல், வழித்தட விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்புச் செலவுகள் ஆகியவற்றில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளே இதற்குக் காரணமாகும்.
</p><p>இதன் விளைவாக, முந்தைய ஆண்டில் விஸ்தாராவிடமிருந்து 48 மில்லியன் சிங்கப்பூர் டொலர் லாபப் பங்கைப் பெற்றிருந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 330 மில்லியன் (சுமார் ரூ. 2,180 கோடி) சிங்கப்பூர் டொலர் அளவிலான நஷ்டப் பங்கைப் பதிவு செய்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T13:06:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டல் - ஐபிஎல் வீரரை கைது செய்ய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/court-order-to-arrest-dc-cricketer-abishek-porel-1784552574"></link>
            <id>https://news.lankasri.com/article/court-order-to-arrest-dc-cricketer-abishek-porel-1784552574</id>
            <summary type="text">டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அபிஷேக் போரெலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அபிஷேக் போரெல்

மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 வயதான அபிஷேக் போரெல், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அபிஷேக் போரெலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><h3>
அபிஷேக் போரெல்</h3><p>

மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 வயதான அபிஷேக் போரெல், 2023 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e26f1f32-3720-44ad-9d16-e971c651abbc/26-6a5e1c7fb78bb.webp' /></p><p>

இந்நிலையில், அபிஷேக் போரெலை கைது செய்ய காவல்துறைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>

மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு மிரட்டியதாக தெரிவித்த புகாரில் அபிஷேக் போரெல் மற்றும் மற்றோரு நபரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

இது குறித்து மாணவி அளித்த புகாரில், மாணவியை திருமணம் செய்வதாக கூறி 3 ஆண்டுகள் அவருடன் உடல் ரீதியாக நெருக்கமாக பழகி வந்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

அபிஷேக் போரெல் கிரிக்கெட் வீரராகப் புகழ் பெறத் தொடங்கியதும், ​​அவர் தன்னை விட்டு விலகி இருப்பதை உணர்ந்த மாணவி, வாக்குறுதியளித்தபடி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கோரியுள்ளார். </p><p>

அதற்கு மறுத்த அபிஷேக் போரெல் மாணவியை அடித்ததாகவும், அவருடைய தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.</p><p> 

இந்த புகாரின் அடிப்படையில் அபிஷேக் உட்பட இருவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
</p><h3>
கைது செய்ய உத்தரவு </h3><p>
 
இந்த வழக்கு இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60c54b0e-20c0-4b74-8371-132604e8895c/26-6a5e1c8066e55.webp' /></p><p>

மாணவியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த இரு நபர்களும் இந்த மாணவியை மட்டுமல்லாமல், வேறு பல பெண்களையும் ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களை எடுத்து, பின்னர் அவர்களை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறினர்.</p><p>

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, இருவரையும் கைது செய்து, அவர்களிடம் உள்ள செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை கைப்பற்றி தனிப்பட்ட புகைப்படங்கள் அழிக்குமாறு ஹூக்ளியில் உள்ள மக்ரா காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். </p><p>

 நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்குள் ஒரு விரிவான அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T13:03:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்டி பர்னாமின் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு? வெளிவரும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-cabinet-expected-1784547475"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-cabinet-expected-1784547475</id>
            <summary type="text">வெஸ்ட்மின்ஸ்டரில் பல வாரங்களாக நிலவி வந்த தீவிரமான ஊகங்களுக்கு மத்தியில், ஆன்டி பர்னாம் தனது முதல் அமைச்சரவையை அறிமுகப்படுத்த உள்ளார்.யார் யாருக்கு வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெஸ்ட்மின்ஸ்டரில் பல வாரங்களாக நிலவி வந்த தீவிரமான ஊகங்களுக்கு மத்தியில், ஆன்டி பர்னாம் தனது முதல் அமைச்சரவையை அறிமுகப்படுத்த உள்ளார்.</p><h2>யார் யாருக்கு வாய்ப்பு</h2><p>
</p><p>நாட்டின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் இன்று உத்தியோகப்பூர்வமாகப் பதவியேற்ற பிறகு, தனது முக்கியக் குழுவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fa9ba4a-9950-48e9-a83b-2cda177e1c8f/26-6a5e0edd5044c.webp' /></p><p> </p><p>ஆன்டி பர்னாம் வெஸ்ட்மின்ஸ்டருக்குத் திரும்பியதிலிருந்து, அரசியல் களத்தில் ஒரு கேள்விதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது: 'நம்பர் 11'-இன் சாவியைப் பெறப்போவது யார்? பல வாரங்களாக, எட் மிலிபண்ட் எதிர்பார்ப்புகளில் முன்னணியில் இருந்தார். </p><p>பர்னாமின் எழுச்சியில் லேபர் கட்சியின் முன்னாள் தலைவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்; மேலும், அரசாங்கத்தின் மிகச் சிறந்த அமைச்சர்களில் ஒருவராகவும் அவர் தனது கூட்டாளிகளால் கருதப்படுகிறார். </p><p>ஆனால், அவரது பதவி உயர்வு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் சந்தை ஆய்வாளர்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. </p><p>ஏனெனில், அவர் தொழிலாளர் கட்சியின் மிதவாத இடதுசாரிகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர் என்று கருதுவதோடு, net zero இலக்கு குறித்த அவரது உறுதிப்பாடு முதலீட்டாளர்களை நிலைகுலையச் செய்துவிடுமோ என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள்.</p><p></p><p> </p><p>இருப்பினும், அவர் நிதி விடயத்தில் கட்டுப்பாட்டுடன் செயல்படுபவர் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்; அத்துடன், அவர் அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்பதைக் குறிக்கும் வகையில் அவரது அமைச்சகப் பணிக்காலத்தில் எந்தச் சான்றும் இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். </p><p>இதனிடையே, உள்விவகாரத்திலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்பினாலும், உள்விவகாரச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தற்போது நிதி அமைச்சராக (Chancellor) நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b39df8de-3529-4830-9338-7b31d7aa5863/26-6a5e0ede19447.webp' /></p><p> </p><p>லேபர் கட்சியின் வலதுசாரிப் பிரிவைச் சேர்ந்தவராகக் கருதப்படும் இவர், நிதிச் சந்தைகளுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் தெரிவாகப் பார்க்கப்படுகிறார். ஆனால், அவருக்குப் பொருளாதாரத் துறையில் அனுபவம் இல்லாததே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. </p><p>வெளிவிவகாரத் துறையைத் தக்கவைத்துக்கொள்ள இவெட் கூப்பர் பல வாரங்களாகப் போராடி வருகிறார். ஆனால், மிலிபண்ட் நிதி அமைச்சர் பொறுப்பைப் பெறத் தவறினால், அவருக்கு ஆறுதல் பரிசாக வெளிவிவகார அமைச்சர் பொறுப்பை பர்னாம் வழங்கக்கூடும்.</p><h2>மிக முக்கியமான பதவி</h2><p> </p><p>பாதுகாப்புத் துறை முதலீட்டுத் திட்டம் தொடர்பாக சர் கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத விதமாக விலகிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலியும் இந்தப் பதவிக்குக் பரிசீலிக்கப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e047a22-9489-44b7-abdf-14828c5ed9f8/26-6a5e0edebf7ec.webp' /></p><p> </p><p>இருப்பினும், ஜான் ஹீலிக்குப் பதிலாக, சில வாரங்களுக்கு முன்புதான் டான் ஜார்விஸ் பாதுகாப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றார். அவர் அந்தப் பதவியைத் தக்கவைக்கலாம் என்றே கூறப்படுகிறது. </p><p>முன்னாள் போக்குவரத்துச் செயலாளரான லூயிஸ் ஹேக் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது. ஏஞ்சலா ரெய்னரும் அமைச்சரவைக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>பர்னாமின் தொகுதிக்கு அருகிலுள்ள தொகுதியைச் சேர்ந்தவரும், ஸ்டார்மரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மற்றொரு அமைச்சருமான லூசி பவல், அமைச்சரவைக்கு மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/454181f6-5495-42f3-a817-d884b279fc44/26-6a5e0edf72c3f.webp' /></p><p> </p><p>போக்குவரத்துத் துறை அமைச்சராகத் தொடர விரும்பினாலும், ஹைடி அலெக்சாண்டர் 'சீஃப் விப்' (Chief Whip) ஆக நியமிக்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. பர்னாமின் அரசாங்கத்தில் மிக முக்கியமான பதவிகளில் ஒன்றுக்கு, வெஸ் ஸ்ட்ரீட்டிங் பெயரும் விவாதிக்கப்படுகிறது.
</p><p>கெய்ர் ஸ்டார்மரின் மிக நெருங்கிய ஆதரவாளர்கள் பலரும் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகத் துறை அமைச்சர் பீட்டர் கைல் தனது அமைச்சரவைப் பதவியை இழக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>தொழில்நுட்பத் துறைச் செயலாளர் லிஸ் கெண்டலும் பதவி நீக்கம் செய்யப்படக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T12:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு கப் உளுந்து போதும்.., ஆரோக்கியமான பணியாரம் செய்யலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/paniyaram-recipe-in-tamil-1784549665"></link>
            <id>https://news.lankasri.com/article/paniyaram-recipe-in-tamil-1784549665</id>
            <summary type="text">உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன.

உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன.
</p><p>
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.</p><p>

குறிப்பாக இது பெண்களின் மாதவிடாய் கால வலிகளைக் குறைத்து உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது.
</p><p>
அந்தவகையில், உடல் வலுவிற்கு சாத்தான உளுந்து பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>

தேவையான பொருட்கள்</h2><ul><li>
உளுந்து- ½ கப்
</li><li>பச்சரிசி- 4 ஸ்பூன்</li><li>உப்பு- தேவையான அளவு&nbsp;
</li><li>எண்ணெய்- 2 ஸ்பூன்</li><li>
கடுகு- ½ ஸ்பூன்
</li><li>கடலை பருப்பு- 2 ஸ்பூன்</li><li>
கறிவேப்பிலை- 1 கொத்து</li><li>
வெங்காயம்- 1</li><li>
பச்சைமிளகாய்- 2
</li><li>கேரட்- 1
</li></ul><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">செய்முறை</span></h2><p>முதலில் ஒரு பாத்திரத்தில் உளுந்து, அரிசி சேர்த்து 2 முறை நன்கு கழுவி 5 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8b5f8b5-1e80-42e9-b138-61a742218380/26-6a5e112337754.webp' /></p><p>அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.
</p><p>



இதற்கடுத்து இதில் நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி துருவிய கேரட் சேர்த்து வதக்கவும்.

பின்னர் இதில் உப்பு சேர்த்து கலந்து அரைத்த மாவில் சேர்த்து கிளறவும்.
</p><p>
இறுதியாக பணியார சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மாவை ஊற்றி சுட்டு எடுத்தால் சத்தான உளுந்து பணியாரம் தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:14:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காளதேசத் தொடரில் புதிய சாதனைக்கு சொந்தக்காரரான ஜிம்பாப்வே கேப்டன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sikandar-raza-most-matches-for-zimbabwe-1784549147"></link>
            <id>https://news.lankasri.com/article/sikandar-raza-most-matches-for-zimbabwe-1784549147</id>
            <summary type="text">சிக்கந்தர் ரஸா ஜிம்பாப்வே அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையைப் பெற்றார். 

சிக்கந்தர் ரஸாவங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிக்கந்தர் ரஸா ஜிம்பாப்வே அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையைப் பெற்றார்.</p><p> 

</p><h2>சிக்கந்தர் ரஸா</h2><p>வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய ஜிம்பாப்வே, டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02e755a3-af13-4268-82ad-709b782b70a1/26-6a5e0fa7520ed.webp' /></p><p></p><p>

இந்தத் தொடரில் விளையாடியதன் மூலம் சிக்கந்தர் ரஸா (Sikandar Raza)புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.</p><p> 

அணித்தலைவராக செயல்பட்ட சிக்கந்தர் ரஸா 314 போட்டிகளில் விளையாடி, அதிக போட்டிகளில் விளையாடிய ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையை படைத்தார். </p><p>

இதற்கு முன்பு ஹாமில்டன் மஸகட்சா (Hamilton Masakadza) 313 போட்டிகளில் விளையாடி இருந்தார்.</p><p> 

ரஸா 22 டெஸ்ட், 156 ஒருநாள் போட்டிகள் மற்றும் 136 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 9,095 ஓட்டங்கள் மற்றும் 245 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7688687d-acf0-4c13-944a-33b6e31d3fe1/26-6a5e0fa840f29.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:06:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி மீது விழுந்த மின்விசிறி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/delhi-hospital-ceiling-fan-falls-on-patient-dies-1784549004"></link>
            <id>https://news.lankasri.com/article/delhi-hospital-ceiling-fan-falls-on-patient-dies-1784549004</id>
            <summary type="text">இந்தியாவின் தலை நகரான புதுடெல்லியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் மீது கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறி கழன்று விழுந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தலை நகரான புதுடெல்லியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் மீது கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறி கழன்று விழுந்தது.
</p><p>
மூன்று மணி நேரத்தில் அந்த நோயாளி உயிரிழந்ததால் பரபரப்பு உருவாகியுள்ளது!
</p><h3>
நோயாளி மீது விழுந்த மின்விசிறி
</h3><p>
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் புதுடெல்லியிலுள்ள குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில், முகம்மது அக்பர் (42) என்னும் நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f8dd6c5-a3d0-4b68-9328-f03100450ec7/26-6a5e0e8e02876.webp' /></p><p>
உயர் இரத்த அழுத்தம், மூளை வீக்கம் மற்றும் நுரையீரல் பிரச்சினை ஆகிய பிரச்சினைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
</p><p>
அக்பர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவிலுள்ள படுக்கை ஒன்றில் படுத்திருக்க, திடீரென கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறி கழன்று அவர் மீது விழுந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
சுமார் மூன்று மணி நேரத்தில், அதாவது, அதிகாலை 12.16 மணிக்கு அக்பர் உயிரிழந்துவிட்டார்.
</p><p>
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அக்பர் குடும்பத்தினர் அவரது மரணம் தொடர்பில் விசாரணை கோரியுள்ளனர்.
</p><p>
இதற்கிடையில், அக்பர் உயர் இரத்த அழுத்தம், மூளை வீக்கம் மற்றும் நுரையீரல் பிரச்சினை ஆகிய காரணங்களால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:04:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rb-udhayakumar-says-tvk-trying-vijay-pm-candidate-1784548578"></link>
            <id>https://news.lankasri.com/article/rb-udhayakumar-says-tvk-trying-vijay-pm-candidate-1784548578</id>
            <summary type="text">முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு நடப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். 


விஜய்யை வைத்து போலி செய்திகள் 

க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு நடப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். </p><h3>


விஜய்யை வைத்து போலி செய்திகள்</h3><p> 

கட்சி தொடங்கி 3 ஆண்டுகளில், சந்தித்த முதல் தேர்தலிலே இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் தவெக தலைவர் விஜய்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5997b863-704c-44f0-acbf-5dc935a4e77f/26-6a5e0ce3bd01f.webp' /></p><p>
கடந்த சில வாரங்களாக முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் செய்துள்ளதாக கூறி, பல்வேறு போலி செய்திகள் வட இந்திய மாநிலங்களில் உள்ள சமூகவலைத்தள பக்கங்களில் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பரப்பப்பட்டு வந்தது.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், அதனை சுட்டிக்காட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் ஆக்க முன்னெடுப்பு நடப்பதாக தெரிவித்துள்ளார்.</p><h3> 

விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு</h3><p>

இது குறித்து பேசிய அவர், "முதலமைச்சர் விஜய் எப்படி செய்தார் பார்த்தீர்களா? அதையும் செய்தார் இதையும் செய்தார் எதையும் செய்வார் என செய்யாததை எல்லாம் narrative செய்ய போலி வீடியோக்களை தயார் செய்து, தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் இன்ஃப்ளூயன்சர்களை வைத்துக்கொண்டு விஜய் பிம்பத்தை கட்டமைத்ததை தவிர தவெக அரசு இந்த 75 நாட்களில் வேறு எதுவும் செய்யவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657cc1f6-fe4c-470b-ad23-f0ba2ce34e50/26-6a5e0ce46f1b6.webp' /></p><p>

இந்த மாய பிம்பத்தை வைத்து தான், 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நம்ம முதல்வர் விஜய்யை முன்னிருந்த தவெக கட்சி முன்னெடுப்பு எடுத்து வருகிறது. டெல்லியில் இருப்பவர்கள் உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும்.</p><p>

பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னெடுப்பு செய்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. எந்த வித வரலாறும், தியாகமும், மக்களுக்கான உரிமை போராட்டமும் இல்லாமல் ரீல்ஸ் மூலம் மூளை சலவை செய்து, நிழல் எதுவும் நிஜம் எதுவும் தெரியாமல் குழப்பி முதலமைச்சர் ஆகியுள்ளார். </p><p></p><p> 

முதலமைச்சருக்கே தகுதியில்லாத அவரை தமிழ்நாடு முதல்வராக பெற்றுள்ள போது, போலி செய்திகளை ரீல்ஸ் மூலம் எல்லா மொழிகளிலும் இன்ஃப்ளூயன்சர்களை கூலிக்கு அமர்த்தி விஜய் விஜய் என கூப்பாடு போட வைத்து பாரத பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த தவெக முன்னெடுப்பு எடுத்து வருகிறது.</p><p>

எது எப்படி இருந்தாலும், என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் விஜய்யின் பருப்பு எங்கு வெந்தாலும், பிரதமர் மோடியிடம் வேகாது என்பதை கூறி நிறைவு செய்கிறேன்" என பேசியுள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:56:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடை பெற்றார் பிரதமர் ஸ்டார்மர்... மன்னர் சார்லசுடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/keir-starmer-meets-king-to-formally-resign-as-pm-1784546359"></link>
            <id>https://news.lankasri.com/article/keir-starmer-meets-king-to-formally-resign-as-pm-1784546359</id>
            <summary type="text">பிரித்தானிய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமாவைக் கையளித்தார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமாவைக் கையளித்தார்.</p><h3>

விடை பெற்றார் ஸ்டார்மர்...</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44d4df2-3316-4a4b-856f-c80565490fbc/26-6a5e0439d5930.webp' /></p><p>2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி மக்கள் ஆதரவுடன் பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்ற கெய்ர் ஸ்டார்மர், உள்ளாட்சித் தேர்தல் தோல்விகள், ரீஃபார்ம் யூகே கட்சியின் வளர்ச்சி, அரசில் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல்கள் மற்றும் சொந்தக் கட்சியினரிடையே ஆதரவை இழந்தது போன்ற பல்வேறு காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் பிரதமர் இல்லம் முன் உரையாடிய ஸ்டார்மர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48072c2d-8d38-4c6e-98a3-dd342000382e/26-6a5e04392ed29.webp' /></p><p>அதைத் தொடர்ந்து, பக்கிங்காம் மாளிகைக்குச் சென்ற ஸ்டார்மர், மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தன் ராஜினாமாவை கையளிக்க, மன்னரும் அதை ஏற்றுக்கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bf2c991-78f1-4bcf-abe9-a0bff85e0909/26-6a5e04387e91b.webp' /></p><p>ஸ்டார்மர் பிரதமர் இல்லம் முன் உரையாற்றும் காட்சிகளும், மன்னரை சந்திக்கும் காட்சிகளும் தற்போது வெளியாகிவருகின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:45:40+00:00</updated>
        </entry>
    </feed>
