<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-19T12:26:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாறும் வானிலை... பிரித்தானியாவில் கொட்டித் தீர்க்க இருக்கும் மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/climate-change-leads-to-chance-heavy-rain-in-uk-1787141892"></link>
            <id>https://news.lankasri.com/article/climate-change-leads-to-chance-heavy-rain-in-uk-1787141892</id>
            <summary type="text">Heavy rain and thunderstorms set to batter Britain: பிரித்தானியாவை மழையும் புயலும் புரட்டி எடுக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Heavy rain and thunderstorms set to batter Britain: பிரித்தானியாவை மழையும் புயலும் புரட்டி எடுக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.</p><p>

ஐரோப்பிய நாடுகள் பலவற்றை வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், பிரித்தானியா இடி மின்னலுடன் மழையை எதிர்கொள்ள இருக்கிறது.
</p><h3>
மாறும் வானிலை...
</h3><p>
ஆம், வரும் நாட்களில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மாலை 7.00 மணி முதல் நாளை காலை 10.00 மணி வரை பல பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f112e5d-7a6a-4ca1-914c-25cd51340104/26-6a859f058f5e5.webp' /></p><p>
மழை, இடி மின்னலுடன் கனமழை மற்றும் மழையின் காரணமாக திடீர் வெள்ளம், இவற்றால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஆகிய விடயங்கள் எதிர்பார்க்கப்படுவதாலேயே, மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
என்றாலும், பிரித்தானியாவில் கடும் வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், இந்த மழை உடனடியாக வறட்சியை தீர்த்துவிடப்போவதில்லை என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T12:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் நீட்டித்துள்ள ஜேர்மனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-extends-border-control-1787141539"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-extends-border-control-1787141539</id>
            <summary type="text">Germany extends border controls: ஜேர்மனி எல்லைக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

ஜேர்மனி, எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany extends border controls: ஜேர்மனி எல்லைக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
</p><p>
ஜேர்மனி, எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><h3>
எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிப்பு
</h3><p>
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்காகவும் பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டும், ஜேர்மனி எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் டொப்ரிண்ட் (Alexander Dobrindt) தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4c2a3fa-5f31-4717-a11c-7d46f5807026/26-6a859da4c80cd.webp' /></p><p>

ஏற்கனவே அமுலிலிருக்கும் ஜேர்மன் எல்லைக் கட்டுப்பாடுகள் செப்டம்பர் நடுப்பகுதியில் முடிவடைய இருக்கும் நிலையில், 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் நடுப்பகுதி வரை அவை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், ஐரோப்பாவின் எல்லைப் பகுதிகளில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைகளில் ஏற்படும் திடீர் குடியேற்ற அழுத்தங்கள் போன்ற காரணங்களாலேயே ஜேர்மனி இந்த முடிவை எடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p>
ஜேர்மனி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், தனது அனைத்து நில எல்லைகளிலும் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T12:12:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய கடல் பகுதியில் 90 ஆண்டுகளில் முதல் முறையாக..746 பவுண்டு எடைகொண்ட மீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scientists-explain-reason-of-bluefin-tuna-uk-sea-1787140621"></link>
            <id>https://news.lankasri.com/article/scientists-explain-reason-of-bluefin-tuna-uk-sea-1787140621</id>
            <summary type="text">Scientists explain reason of bluefin tuna in uk sea: பிரித்தானிய கடல் பகுதிக்கு நீலத்துடுப்பு சூரை மீண்டும் வந்துள்ளது குறித்து விஞ்ஞானிகள் வெளிப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Scientists explain reason of bluefin tuna in uk sea: பிரித்தானிய கடல் பகுதிக்கு நீலத்துடுப்பு சூரை மீண்டும் வந்துள்ளது குறித்து விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p>90 ஆண்டுகளில் முதன்முறையாக பிரித்தானியாவின் வட கடலில் 746 பவுண்டு எடையுள்ள பிரம்மாண்ட மீன் பிடிக்கப்பட்டது குறித்து விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><h2>பிரம்மாண்டமான மீன்&nbsp;</h2><p>
பிரித்தானிய வட கடல் பகுதியில் 746 பவுண்டு (338 கிலோ) எடைகொண்ட ஒரு பிரம்மாண்டமான மீன் பிடிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a9a4bb2-9ba2-4956-865b-ae00449d47b1/26-6a859b13ecae4.webp' /></p><p></p><p>

1939-ஆம் ஆண்டிற்குப் பிறகு யார்ஷையர் விட்பி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட முதல் நீலத்துடுப்பு சூரை மீன் இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
</p><p>
இந்த வகை மீன்கள், மணிக்கு 43 மைல் வேகத்தை எட்டக்கூடியவை மற்றும் இவை பொதுவாக அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் மிதவெப்ப மண்டல நீரில் காணப்படுகிறது. </p><p>

கடல் வெப்பமடைதல் மற்றும் கடுமையான மீன்பிடி கட்டுப்பாடுகள் ஆகியவை இந்த மாபெரும் வேட்டையாடும் மீன்களை எவ்வாறு மீண்டும் கொண்டு வந்துள்ளன என்பதை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.&nbsp;</p><h2>பெருமளவில் திரும்பி வந்துள்ளன</h2><p>

ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இந்த இனம் தென்மேற்குப் பகுதி கடற்பரப்புகளுக்கு பெருமளவில் திரும்பி வந்துள்ளன; டெவோன் மற்றும் கார்ன்வால் கடற்பரப்புகள் 'சூரை மீன்களால்' நிரம்பி வழிகின்றன. </p><p>

இப்போது, இது வட கடலிலும் செழித்து வளர்வதாகத் தெரிகிறது - மேலும் இதற்கு வெப்பமான கடல் நீரே ஒரு பகுதி காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e5d5ed5-da0d-47c8-a838-ce75b44eb8c5/26-6a859b14c28a0.webp' /></p><p>

அதேபோல், உயர்ந்து வரும் கடல் வெப்பநிலை மற்றும் அடிக்கடி ஏற்படும் கடல் வெப்ப அலைகள், ஐக்கிய இராச்சியத்தின் கடற்பரப்புகளை இந்த மீன்களுக்கு மிகவும் பொருத்தமானதாக மாற்றுவதாகத் தெரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். </p><p>

நீலத்துடுப்பு சூரை மீன்களின் பரவல் குறித்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய கிரேஸ் மெக்நிக்கோலஸ் கூறுகையில், 

"எதிர்பார்த்ததை விட இந்த மீன்கள் மேலும் வடக்கே நகர்கின்றன என்பதற்கான ஆரம்ப அறிகுறிகளை எங்கள் முடிவுகள் வழங்குகின்றன. மேலும், இது கடல் வெப்பமடைவதால் ஏற்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b969b13c-c42b-46a0-b51f-07a228c8c824/26-6a859b15742fd.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:58:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் மாநில முதல்வர்கள் மாநாடு - துணைத்தலைவராக முதலமைச்சர் விஜய் தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-selects-as-vice-chairman-of-south-zone-cm-1787140677"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-selects-as-vice-chairman-of-south-zone-cm-1787140677</id>
            <summary type="text">vijay as vice chairman of south zone cm: தென் மண்டல மாநில முதல்வர்கள் குழுவின்துணைத்தலைவராக தமிழ்நாடு முதல்வர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>vijay as vice chairman of south zone cm: தென் மண்டல மாநில முதல்வர்கள் குழுவின்துணைத்தலைவராக தமிழ்நாடு முதல்வர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். </p><h3>

தென் மாநில முதல்வர்கள் மாநாடு
</h3><p>
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை சென்னை கோவளத்தில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bae8a89-e4d2-4c37-8eaf-d3e18a6d1644/26-6a859a46e82f9.webp' /></p><p>
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் வி.டி.சதீசன், தெலங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். </p><p>

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பதிலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொள்கிறார்.&nbsp;</p><p>

இந்த மாநாட்டில் ஒவ்​வொரு மாநிலங்​களுக்கு இடையே​யான ஒத்​துழைப்​பு, பொருளா​தார வளர்ச்​சி, தொழில் முதலீடு​கள், கூட்​டுறவைப் பலப்​படுத்​து​வது, நீர்​வளப் பகிர்​வு, குற்​றங்​கள் தடுப்​பு, எல்​லைப் பிரச்சி​னை​கள் உள்ளிட்ட பல்​வேறு முக்​கிய விவ​காரங்​கள் குறித்து ஆலோ​சனை நடத்​தப்பட உள்​ளது.&nbsp;</p><p></p><p>
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று மாலை 6 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். </p><p>

நாளை காலை 10 மணிக்கு தொடங்கி 3 மணி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாலை 3.30 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் மத்திய அமைச்சர் அமித் ஷா வழிபாடு செய்துவிட்டு டெல்லிக்கு திரும்புகிறார்.</p><h3> 

துணைத்தலைவராக முதலமைச்சர் விஜய்
</h3><p>
காவேரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல இருந்த நிலையில், போராட்டம் காரணமாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கேட்டுக்கொண்டதன் பேரில் அந்த பயணத்தை முதல்வர் ரத்து செய்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a48c2524-8385-4bc7-8a6a-dcb900c846a8/26-6a859a47a0d60.webp' /></p><p>

தற்போது கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் சென்னை வரும் நிலையில், இரு மாநில முதல்வர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனவும், கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்தும் முதல்வர் விஜய் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்த தெற்கு மண்டல குழுவிற்கான தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், துணைத்தலைவராக முதல்வர் விஜய்யும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:58:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[19ஆவது மாடியிலிருந்து விழுந்து இறந்த குழந்தை: 18 மில்லியன் இழப்பீடு கோரும் குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/family-sue-building-owner-baby-fall-from-apartment-1787132492"></link>
            <id>https://news.lankasri.com/article/family-sue-building-owner-baby-fall-from-apartment-1787132492</id>
            <summary type="text">Family of toddler who died in fall from Toronto apartment sues building owners: ரொரன்றோ அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறு குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Family of toddler who died in fall from Toronto apartment sues building owners: ரொரன்றோ அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறு குழந்தையின் குடும்பத்தினர், கட்டிட உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
</p><p>

கனடாவின் ரொரன்றோ நகரிலுள்ள வடக்கு யார்க் பகுதியில் அமைந்துள்ளது 50 Graydon Hall Drive என்னும் அடுக்குமாடிக் குடியிருப்பு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba56bde8-fecf-44b5-9820-fa6b3aba02fc/26-6a857a4e176e6.webp' /></p><p>
அந்த குடியிருப்பின் 19ஆவது மாடியில், ரக்‌ஷித் சௌஹான், தீபாலி காஷ்யப் தம்பதியர் தங்கள் கைக்குழந்தையுடன் வாழ்ந்துவந்த நிலையில், மே மாதம் ஒரு நாள் தங்கள் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.</p><h3>

மாடியிலிருந்து விழுந்து இறந்த குழந்தை</h3><p>

இரண்டு வயதை எட்டாத அந்தக் குழந்தை, விளையாடும்போது ஜன்னல் கண்ணாடியைத் தொட்டதாகவும், திடீரென அந்தக் கண்ணாடி உடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள் ரக்‌ஷித், தீபாலி தம்பதியர்.&nbsp;</p><p>
ஒரு நொடிப்பொழுதில், கண்ணாடி உடைந்த ஜன்னல் வழியாக குழந்தை வெளியே விழுந்திருக்கிறாள்.
</p><p>
குழந்தை தங்கள் கண் முன்னே விழுந்து உயிரிழந்ததைக் கண்டு திகிலடைந்த பெற்றோர், சொல்லொணா அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ftoronto.culture%2Fposts%2Fpfbid02B2pTC8fk5cW2qjL3xSwALeGsfRnu6PWSUY58MKgmLvidQPuxTMEicLTFeRSxHoU3l&show_text=true&width=500" width="500" height="776" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><h3> மில்லியன் இழப்பீடு கோரும் குடும்பம்</h3><p>

இந்நிலையில், அந்தக் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கட்டிட நிர்வாகம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள் அந்தக் குழந்தையின் பெற்றோரும் தாத்தா பாட்டியும்.
</p><p>
அந்தக் கட்டிடத்தில் ஏற்கனவே இதுபோல கண்ணாடி உடைந்ததால் அங்கு குடியிருக்கும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரிந்த நிலையிலும், அதை சீர் செய்ய கட்டிட உரிமையாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள் அவர்கள்.&nbsp;&nbsp;</p><p></p><p>
அத்துடன், குழந்தை இறந்ததும், அந்தக் கட்டிட உரிமையாளர்கள் குடும்பம் எதையோ மறைக்க முயல்வதாக அவதூறு பரப்பியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.</p><p>

ஆகவே, அந்தக் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கட்டிட நிர்வாகம் தங்களுக்கு 18 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது அந்தக் குழந்தையின் குடும்பம்.
</p><p>
இதற்கிடையில், அதே வடக்கு யார்க் பகுதியில் அமைந்துள்ள மற்றொரு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து, ஞாயிற்றுக்கிழமையன்று, ஒரு ஆறு வயது சிறுமி விழுந்து உயிரிழந்துள்ளாள் என்னும் துயரச் செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:06:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிரியோஸுக்கு தற்காலிக தடை: உறுதியான கோகைன் பயன்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nick-kyrgios-faces-suspension-after-cocaine-test-1787137534"></link>
            <id>https://news.lankasri.com/article/nick-kyrgios-faces-suspension-after-cocaine-test-1787137534</id>
            <summary type="text">Nick Kyrgios faces suspension after cocaine test: கோகைன் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிரியோஸுக்கு தற்காலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nick Kyrgios faces suspension after cocaine test: கோகைன் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிரியோஸுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2> நிக் கிரியோஸுக்கு தற்காலிக தடை</h2><p>அவுஸ்திரேலிய டென்னிஸ் நட்சத்திரம் நிக் கிரியோஸ்(Nick Kyrgios) கோகைன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு முகமை(ITIA) இந்த தகவலை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> மேலும் ITIA வழங்கிய தகவலில், கடந்த ஜூன் 22ம் திகதி மயோர்கா ஓபன் போட்டிகள் நடைபெற்ற போது கிரியோஸுடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.</p><p> இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் ஜூலை 17ம் திகதி கோகைன் முதன்மை கூறுகளான பென்சோயில்கோமைன் மாதிரியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d27a6fa1-cc7a-48d2-b076-456a70e7bf1e/26-6a858dff934df.webp' /></p><h2> தவறை ஒப்புக் கொண்ட நிக் கிரியோஸ்</h2><p>இந்த அறிவிப்பு வெளியான பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிக் கிரியோஸ் வெளியிட்ட பதிவில், “தான் பெரிய தவறிழைத்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.” </p><p>&nbsp;அத்துடன் தன்னுடைய குடும்பத்தினர், விளம்பரதாரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T11:05:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு: குரோஷியாவில் உக்ரைனியர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukrainian-arrested-in-croatia-over-nord-stream-1787135446"></link>
            <id>https://news.lankasri.com/article/ukrainian-arrested-in-croatia-over-nord-stream-1787135446</id>
            <summary type="text">Ukrainian arrested in Croatia over Nord stream sabotage: நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் உக்ரைனியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukrainian arrested in Croatia over Nord stream sabotage: நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் உக்ரைனியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> உக்ரைனியர் கைது</h2><p>
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு 2022ம் ஆண்டு நோர்ட் ஸ்ட்ரீம்(Nord Stream) எரிவாயு குழாய் வெடிகுண்டு வைத்து சிதைக்கப்பட்டது.</p><p> இந்த சம்பவத்தில் புதன்கிழமையன்று உக்ரைனை சேர்ந்த விளாடிமிர் இசட்(Vladimir Z) என்ற நபர் குரோஷியாவில் உள்ள புலா நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4e3e610-2512-4eee-b6a7-e7ff9652f366/26-6a8585d76d331.webp' /></p><p>பயிற்சி பெற்ற ஸ்கூபா டைவரான விளாடிமிர் இசட், செர்ஹி கே(Serhil K) என்ற நபருடன் இணைந்து இந்த நாச வேலையை செய்ததாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p> இவர்கள் போலி அடையாள அட்டையை காண்பித்து இடைதரகர்கள் மூலம் ஜேர்மனியின் ரோஸ்டாக் துறைமுகத்தில் உள்ள படகை வாடகைக்கு எடுத்துள்ளனர்.</p><p> இந்த படகில் சென்று டென்மார்க்கின் பார்ஹோம்(Bornholm) தீவுக்கு அருகே உள்ள நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 வது எரிவாயு குழாயை வெடிபொருட்கள் வைத்து சிதைத்துள்ளனர் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு நோர்ட் ஸ்ட்ரீம் வழித்தடங்களும் கடுமையான சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecf16f7a-1484-4df9-baae-db3766ef4784/26-6a8585d81ff8f.webp' /></p><p></p><h2>நாடு கடத்தப்பட்ட உக்ரைனியர்</h2><p>
விளாடிமிர் இசட் குரோஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ஜேர்மனிக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஜேர்மனிக்கு அழைத்து வரப்பட்ட பிறகு, அவர் பெடரல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:31:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-supply-drinking-water-in-tankers-1787133781"></link>
            <id>https://news.lankasri.com/article/france-supply-drinking-water-in-tankers-1787133781</id>
            <summary type="text">Tankers are supplying drinking water in drought stricken France: வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரான்சில், டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tankers are supplying drinking water in drought stricken France: வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரான்சில், டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
</p><p>

பிரான்சில் வழக்கமாக குடிநீர் விநியோகம் தாராளமாக இருக்கும் பகுதிகளில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.
</p><p>
இந்தக் கோடையின் கடுமையான வெப்பம், அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள பிரான்ஸ் மட்டுமல்ல, ஐரோப்பாவும் தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.</p><h3>

டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகம்</h3><p>

பொதுவாக பிரான்சில் பால், அல்லது எண்ணெய்தான் டேங்கர் லொறிகள் மூலம் கொண்டு செல்லப்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef4378cd-3b10-49e0-870e-b96362e6fa64/26-6a857f5700cf4.webp' /></p><p>
ஆனால், வழக்கத்துக்கு மாறாக பிரான்ஸ் மக்கள் டேங்கர் லொறிகளில் குடிநீர் கொண்டு செல்லப்படும் காட்சிகளை கண்டுவருகிறார்கள்.
</p><p>
பிரான்சைப் பொருத்தவரை, சுமார் 40,000 பேர் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
சுமார் 550,000 பேர் தொடர்ச்சியாக குடிநீர் விநியோகம் வழங்கப்படுதலை இழக்கும் அபாயத்தில் உள்ளார்கள்.
</p><p>
பிரான்சின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் தண்ணீர்க் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
விடயம் என்னவென்றால், அப்படியிருந்தும் சில பகுதிகளில்தான் டேங்கர் லொறி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
</p><p>
அதாவது, ஒரு முனிசிபாலிட்டி, குடிநீர் தேவைகளுக்காக எந்த தண்ணீர் ஆதாரத்தை நம்பியுள்ளது, ஒரு ஆதாரம் உதவாமல் போனால் அதற்கு மாற்றாக வேறு குடிநீர் ஆதாரம் ஏதேனும் உள்ளதா என்பதைப் பொருத்தே எந்த பகுதிகளுக்கு டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை சுழலில் சாய்த்த மானவ் சுதர்: 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-beat-sri-lanka-by-165-runs-galle-test-1787131420"></link>
            <id>https://news.lankasri.com/article/india-beat-sri-lanka-by-165-runs-galle-test-1787131420</id>
            <summary type="text">காலியில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

காலியில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலியில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
</p><p>
காலியில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&nbsp;&nbsp;</p><h2>சோனல் தினுஷா&nbsp;84 ஓட்டங்கள்</h2><p>

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலியில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/521a9a63-271c-44a8-b344-3b79b3d6944f/26-6a8577530ab3f.webp' />&nbsp;</p><p></p><p>

இந்திய அணி 372 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.</p><p>

பின்னர் நிலைத்து நின்று ஆடிய தனஞ்செய டி சில்வா 59 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, திக்வெல்ல 10 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
</p><p>
வெற்றிக்காக போராடிய சோனல் தினுஷா (Sonal Dinusha) 84 ஓட்டங்கள் குவித்த நிலையில் மானவ் சுதர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். </p><p>

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் மானவ் சுதரின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 206 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
இதன்மூலம் இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மானவ் சுதர் (Manav Suthar) 6 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T09:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜின்னா குறித்த ரகசியத்தை மறைத்த மும்பை மருத்துவர்கள் - உயரிய விருது வழங்கும் பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-to-award-mumbai-doctors-for-kept-secret-1787131297"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-to-award-mumbai-doctors-for-kept-secret-1787131297</id>
            <summary type="text">pakistan announced highest award for mumbai doctors kept jinnah health secret: ஜின்னாவின் நோய் குறித்த ரகசியத்தை மறைத்த இரு மும்பை மருத்துவர்களுக்கு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>pakistan announced highest award for mumbai doctors kept jinnah health secret: ஜின்னாவின் நோய் குறித்த ரகசியத்தை மறைத்த இரு மும்பை மருத்துவர்களுக்கு பாகிஸ்தான் உயரிய விருதை அறிவித்துள்ளது.
</p><h3>
மும்பை மருத்துவர்களுக்கு உயரிய விருது வழங்கும் பாகிஸ்தான்
</h3><p>
1947ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பிரிவினையுடன் சுதந்திரமும் பெற்றன. 

முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக இருந்த முகமது அலி ஜின்னா, பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கிய காரணமாக இருந்தார். பாகிஸ்தானின் நிறுவனரான அவர் அறியப்படுகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3afe0ca-9937-45b0-8bac-290923d3553d/26-6a8575a3230a8.webp' /></p><p>
1946 ஆம் ஆண்டில், ஜின்னாவின் எக்ஸ் ரேயை பரிசோதித்த டாக்டர் படேலும் டாக்டர் தாய்போ-கூவும், அவருக்கு காசநோய் முற்றிய நிலையை அடைந்ததை கண்டறிந்தோடு, அவர் இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என்றும் முடிவு செய்தனர்.</p><p>

ஆனால், தொழில்முறை இரகசியத்தன்மையை கடைப்பிடித்ததன் காரணமாக அவர்கள் இதனை வெளியே சொல்லவில்லை. </p><p> 

அந்த காலகட்டத்தில் காசநோயைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் எதுவும் கண்டறியப்படாததால், அது ஒரு கொடிய நோயாகவே கருதப்பட்டது.&nbsp;</p><p></p><p>

தனது அரசியல் மற்றும் தலைமைத்துவ பிம்பத்தை பாதுகாக்க தனது சகோதரி பாத்திமா ஜின்னா உள்ளிட்ட மிக நெருங்கியவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிவிக்காமல் முற்றிலும் ரகசியமாக வைத்திருந்தனர். </p><p>

பிரிவினை பெற்ற ஒரு ஆண்டில் 1948 செப்டம்பர் 11 ஆம் திகதி ஜின்னா காசநோய் காரணமாக உயிரிழந்தார். </p><p>

ஓரிரு ஆண்டுகளில் ஜின்னா இறந்துவிடுவார் என தெரிந்திருந்தால், இந்த பிரிவினை மற்றும் சுதந்திரத்தை மவுண்ட் பேட்டன் தாமதப்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது, இது வரலாற்றின் போக்கை மாற்றியிருக்க கூடும் என வரலாற்று ஆசிரியர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். </p><p>

தற்போது அந்த ரகசியத்தை பாதுகாத்து பாகிஸ்தான் உருவாக ஒருவகையில் காரணமாக இருந்த பார்சி சமூகத்தைச் சேர்ந்த இரு மருத்துவர்கள், பாகிஸ்தானின் உயரிய குடிமை விருதான நிஷான்-இ-இம்தியாஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். </p><p>

இந்த விருதுக்கான தேர்வு குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர் அஹ்சன் இக்பால் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "விருதுகள் குழுவின் தலைவர் என்ற முறையில், பம்பாயின் பார்சி சமூகத்தைச் சேர்ந்த, காயிதே ஆஸம் முஹம்மது அலி ஜின்னாவின் மரணப் படுக்கையில் இருந்த நோயின் இரகசியத்தை உண்மையுடன் பாதுகாத்த, ஒரு பொது மருத்துவர் மற்றும் ஒரு கதிரியக்க நிபுணர் ஆகிய இரண்டு குறிப்பிடத்தக்க மருத்துவர்களை நிஷான்-இ-இம்தியாஸ் விருதுக்குப் பரிந்துரைக்கும் பாக்கியம் பெற்றதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e20950d-d6d7-4892-9fc2-736796961b26/26-6a8575a3d610e.webp' /></p><p>

தங்கள் தொழில்முறை உறுதிமொழிக்கு அவர்கள் காட்டிய விசுவாசம், பாகிஸ்தான் உருவாக்கத்தை சாத்தியமாக்கிய சூழ்நிலைகளுக்கு அறியாமலேயே ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக அமைந்தது" என தெரிவித்துள்ளார்.</p><p> 

ஜின்னாவின் மறைவுக்கு 78 ஆண்டுகளுக்குப் பிறகு, டாக்டர் படேல் மற்றும் டாக்டர் தாய்போ-கூ ஆகியோருக்கான பாகிஸ்தானின் இந்த விருது, 2027 மார்ச் மாதம் நடைபெறும் விழாவில் அவர்களுக்கு முறைப்படி மரணத்திற்குப் பின் வழங்கப்படும்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T09:23:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் ட்ரம்ப்: சட்டப்படி சாத்தியமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/can-trump-legally-declare-hormuz-as-us-territory-1787125501"></link>
            <id>https://news.lankasri.com/article/can-trump-legally-declare-hormuz-as-us-territory-1787125501</id>
            <summary type="text">Can Donald Trump legally declare Strait of Hormuz US territory? அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஹோர்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் நிலையில், அது சட்டப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Can Donald Trump legally declare Strait of Hormuz US territory? அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஹோர்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் நிலையில், அது சட்டப்படி சாத்தியமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
</p><p>

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தியை ஒரு அமெரிக்கப் பிராந்தியம் என அறிவித்துள்ளார்.
</p><p>
அப்படி அவர் ஹோர்முஸ் ஜலசந்தி அமெரிக்கப் பிராந்தியம் என சட்டப்படி அறிவிக்கமுடியுமா?
</p><h3>
ஹோர்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் ட்ரம்ப்</h3><p>

முதலில், டிரம்ப், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி கப்பலை பாரசீக வளைகுடாவிற்கு அருகில் நிறுத்தி ஹோர்முஸ் ஜலசந்தியை மூட முயன்றார்.</p><p>

பின்னர், அந்த நீர்வழிப்பாதை நெடுகிலும் இருந்த ஈரானிய துறைமுகங்களில் கப்பல்கள் நுழைவதையும், வெளியேறுவதையும் தடுத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/124ea61a-eeab-4bfc-ac7e-f0e150749384/26-6a855eff2faff.webp' /></p><p>

இப்போது, அவர் மேலும் ஒரு படி முன்னேறி, ஹோர்முஸ் ஜலசந்தியை ஒரு அமெரிக்கப் பிராந்தியமாக அறிவித்துள்ளார்.&nbsp;</p><p>

பாரசீக வளைகுடாவையும் ஓமான் வளைகுடாவையும் இணைக்கும் அந்த நீர்வழிப்பாதையை, ஒரு 'புதிய அமெரிக்கப் பிராந்தியமாக' காட்டும் வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார் ட்ரம்ப்!
</p><h3>
சட்டப்படி சாத்தியமா?
</h3><p>
விடயம் என்னவென்றால், ஹோர்முஸ் ஜலசந்தி, வடக்கே ஈரானுக்கும் தெற்கே ஓமானுக்கும் இடையில் அமைந்துள்ளது.
</p><p>
ஐக்கிய நாடுகள் கடல் சட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த இரண்டு நாடுகளின் கடற்கரையிலிருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவு வரையிலான பகுதி அந்த நாடுகளுக்குச் சொந்தம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1c14f80-e4cf-4ad7-bbc2-1e89fc82eada/26-6a855efe7ce51.webp' /></p><p>
அமெரிக்கா இதில் எந்த உரிமையும் கோர முடியாது.&nbsp;</p><p>
அதே நேரத்தில், ஹோர்முஸ் ஜலசந்தி இரண்டு நீர்வழிகளை இணைப்பதாலும், சர்வதேச கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுவதாலும், ஐக்கிய நாடுகள் கடல் சட்ட ஒப்பந்தத்தின் 37 - 44 பிரிவுகளின்படி அது ஒரு சர்வதேச ஜலசந்தியாகும்.&nbsp;</p><p></p><p>
போக்குவரத்து வழித்தட விதிமுறையின்படி, அனைத்துக் கப்பல்களுக்கும் விமானங்களுக்கும் இந்த நீர்வழிப்பாதை வழியாகத் தடையின்றிப் பயணிக்கும் உரிமை உண்டு, கடலோர நாடுகள் இந்த உரிமைகளை இடைநிறுத்தம் செய்ய முடியாது.</p><p>

மேலும், எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் நீர்வழியையோ அல்லது வேறு எந்த சர்வதேச நீர்நிலையையோ தனக்குச் சொந்தமானது என உரிமை கோருவதை சர்வதேச சட்டம் அனுமதிப்பதில்லை.
</p><p>
அமெரிக்கா ஐ.நா. கடல் சட்ட ஒப்பந்தத்தில் ஓர் உறுப்பினராக இல்லாவிட்டாலும், அதன் விதிகளை அதனால் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால், அந்த ஒப்பந்தம், ஒரு சர்வதேசச் சட்டமாக மதிக்கப்படுகிறது.</p><p>
ஆக, ட்ரம்ப் எதையாவது சொல்வார், சற்று நேரத்தில் அதிலிருந்து பின்வாங்கிவிடுவார். இப்போது ஹோர்முஸ் ஜலசந்தியைக் குறித்து அப்படி ஒரு விடயத்தைக் கூறியுள்ளார். இதுவும் அதேபோல்தானா என்பது தெரியவில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T08:25:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[Most Wanted குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்தியர்: அமெரிக்காவின் FBI அமைப்பு அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-gangster-major-singh-on-fbi-s-most-wanted-1787126712"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-gangster-major-singh-on-fbi-s-most-wanted-1787126712</id>
            <summary type="text">Indian gangster major Singh on FBI’s most wanted person: அமெரிக்காவின் FBI அமைப்பின் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian gangster major Singh on FBI’s most wanted person: அமெரிக்காவின் FBI அமைப்பின் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மேஜர் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><h2> தேடப்படும் மிக முக்கிய குற்றவாளியான இந்தியர்</h2><p>அமெரிக்காவின் முக்கியமான FBI அமைப்பின் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த 29 வயது மேஜர் சிங்(Major Singh) அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p> இவர் பஞ்சாப்பின் ஜக்கு பகவான்பரியா(Jaggu Bhagwanpuria) என்ற குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.</p><p> மேலும் கலிபோர்னியாவில் நடைபெற்ற பன்னாட்டுக் குற்றச் சம்பவத்தில் மேஜர் சிங்கிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இவரை அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p><p> கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் மேஜர் சிங் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a5d25be-1349-455c-b85f-18f53f646921/26-6a8563b98a9f5.webp' /></p><p></p><h2> சர்வதேச அளவிலான கைது நடவடிக்கை</h2><p>அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சட்ட அமலாக்க முகமைகள் இணைந்து நடத்தும் ஆபரேஷன் ஹார்ட்பால்(Operation Hardball) என்ற நடவடிக்கையின் கீழ் மேஜர் சிங் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.</p><p> ஆபரேஷன் ஹார்ட்பால் நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையில் பன்னாட்டு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய இந்தியர்கள் 24 பேர் இந்த மாதத்தின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p> இதில் 11 பேர் கலிபோர்னியாவில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T08:05:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோல்டர் அணி படுதோல்வி: ருத்ரதாண்டவமாடிய கீமோ பவுல், ரோவ்மன் பௌல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/keemo-paul-smash-65-runs-vs-st-kitts-1787126422"></link>
            <id>https://news.lankasri.com/article/keemo-paul-smash-65-runs-vs-st-kitts-1787126422</id>
            <summary type="text">Jaimaica Kingsmen beat St Kitts by 51 runs:
கரீபியன் தொடரில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jaimaica Kingsmen beat St Kitts by 51 runs:
கரீபியன் தொடரில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸை வீழ்த்தியது.</p><p>
சபீனா பார்க் மைதானத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ஜமைக்கா கிங்ஸ்மென்&nbsp;181 ஓட்டங்கள் </h2><p> 

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 10வது போட்டியில், செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85b75e66-781e-4980-82aa-ba546cea9965/26-6a85639723cff.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
கீமோ பவுல் 36 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்களும், ரோவ்மன் பௌல் 39 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்களும் விளாசினார். </p><p>

பின்னர் ஆடிய செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் அணி 18 ஓவர்களிகள் 130 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
அதிகபட்சமாக கெவின் விக்ஹம் 37 ஓட்டங்களும், நவின் 19 ஓட்டங்களும் எடுத்தனர். கீமோ பவுல் 3 விக்கெட்டுகளும், ஆந்த்ரே ரஸல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74d30ac1-f43b-43d3-b0d8-c1928569e488/26-6a856397db1b1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T08:02:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம் - லடாக்கில் கட்ட திட்டமிடும் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/world-hightest-cricket-stadium-to-be-in-ladakh-1787124377"></link>
            <id>https://news.lankasri.com/article/world-hightest-cricket-stadium-to-be-in-ladakh-1787124377</id>
            <summary type="text">proposal for world hightest cricket stadium in adakh: இந்தியாவின் லடாக்கில் உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

லடாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>proposal for world hightest cricket stadium in adakh: இந்தியாவின் லடாக்கில் உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.</p><h3>

லடாக்கில் உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம்</h3><p>

இந்தியா உலகளவில் அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடாக உள்ளது. உலகின் பெரிய மற்றும் உயரமான கிரிக்கெட் மைதானம் இந்தியாவிலே உள்ளது.</p><p> 

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9dd9b8b-a78f-4e53-bce8-010c0257bf0f/26-6a855a9bc4482.webp' /></p><p>

இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள தௌலாதர் மலைத்தொடருக்கு எதிரே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,780 அடி உயரத்தில் உள்ள மைதானமே உயரமான மைதானமாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa035799-95b1-4b56-9d03-7b4634c4f164/26-6a855a9a6da69.webp' /></p><p> 

தற்போது அதனை விட 2 மடங்கு உயரத்தில் கிரிக்கெட் மைதானத்தை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. </p><p>

ஜம்மு காஷ்மீரிலிருந்த 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.&nbsp;</p><p></p><p>

தற்போது இங்கு விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. </p><p>

லடாக்கில் உள்ள லே அருகே, திக்ஸே என்ற இடத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,800 அடி உயரத்தில் கிரிக்கெட் மைதானம் கட்ட முன்மொழியப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96288605-0aac-49ea-8089-2f3d36cc3334/26-6a855a9b1dd92.webp' /></p><p> இதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்கும் பணியை லடாக் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
</p><p>
இந்த திட்டத்திற்கு சுமார் ரூ.100 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மைதானம் கட்டி முடிக்கப்பட்டால் இதுவே உலகின் உயரமான கிரிக்கெட் மைதானமாக இருக்கும்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:26:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு: இருதரப்பு உச்சி மாநாடு எப்போது? கசிந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-seeks-to-meet-kim-jong-un-in-november-1787122972"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-seeks-to-meet-kim-jong-un-in-november-1787122972</id>
            <summary type="text">Trump seeks to meet Kim Jong Un in November: வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு நவம்பரில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump seeks to meet Kim Jong Un in November: வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு நவம்பரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2> கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு</h2><p>வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடன் நேரடி சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.</p><p>இலையுதிர் காலத்தில் இந்த நேரடி சந்திப்பை நடத்தவதற்காக தன்னுடைய அதிகாரிகளுடன் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p> வால் ஸ்ட்ரீட் ஜர்னல்(Wall Street Journal) அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e2667c-4fd3-44fb-8abc-5618d53cdf0d/26-6a85551d95902.webp' /></p><h2> நவம்பரில் சந்திப்பு</h2><p>
கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மிகவும் ரகசியமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.</p><p> ஆசியாவிற்கு டிரம்ப் மேற்கொள்ள இருக்கும் அடுத்த சுற்றுப்பயணத்தின் போது இந்த சந்திப்பை நடத்த சரியான நேரமாக என்று டிரம்ப் கருதுவதாக கூறப்படுகிறது.</p><p> குறிப்பாக சீனாவின் சென்சென் நகரில் நவம்பர் மாதம் நடைபெறும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் போது கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு நிகழ வாய்ப்பு இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் சர்ரே பூங்காவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்: இந்திய வம்சாவளி நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-man-arrested-after-surrey-park-assault-1787120962"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-man-arrested-after-surrey-park-assault-1787120962</id>
            <summary type="text">Indian Origin Man arrested after surrey park assault: கனடாவில் இளம்பெண் நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் சம்பவத்தில் இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian Origin Man arrested after surrey park assault: கனடாவில் இளம்பெண் நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் சம்பவத்தில் இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> இந்திய வம்சாவளி நபர் கைது</h2><p>
கனடாவின் சர்ரே நகரில் அமைந்துள்ள பூங்காவில் இளம்பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் தொடர்பாக 40 வயது மதிக்கத்தக்க இந்திய வம்சாவளி நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p> ஜகந்தர் குரானா(Jagendar Kurana) என்று அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேக நபர், சர்ரேவில் உள்ள பியர் கிரீக் பூங்காவில்(Bear Creek Park) இளம்பெண் ஒருவரை தகாத முறையில் தொட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.</p><p> &nbsp;ஆகஸ்ட் 9ம் திகதி இது தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர் மீது பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p> இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எந்தவொரு உடல் காயங்களும் ஏற்படவில்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd926498-4df0-41ec-bc45-83357fa3a959/26-6a854d4395010.webp' /></p><h2>கைது நடவடிக்கை</h2><p>பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், ஆகஸ்ட் 12ம் திகதி ஜகந்தர் குரானா-வை கைது செய்தனர்.</p><p> சந்தேக நபர் மீது போடப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா வழக்கு தொடரகம் அனுமதியளித்துள்ளது.</p><p> கைது செய்யப்பட்ட ஜகந்தர் குரானா தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு ஜாமீன் விசாரணைக்காக காத்திருக்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-19T06:29:33+00:00</updated>
        </entry>
    </feed>
