<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-25T17:31:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-to-give-exempt-for-existing-care-workers-1784980082"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-to-give-exempt-for-existing-care-workers-1784980082</id>
            <summary type="text">பிரித்தானியாவின் பிரதமராக லேபர் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், தொடர்ச்சியாக மக்களுக்கு நன்மை தரும் சில நடவடிக்கைகளை எடுத்துவருகிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் பிரதமராக லேபர் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், தொடர்ச்சியாக மக்களுக்கு நன்மை தரும் சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
</p><p>
இந்நிலையில், அவர், புலம்பெயர்தல் தொடர்பில் ஒரு நல்ல முடிவை எடுக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் லட்சக்கணக்கானோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
</p><h3>
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு...
</h3><p>
உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், தொடர்ச்சியாக புலம்பெயர்தலுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகள் ஏராளமானோருக்கு கவலையை ஏற்படுத்துபவையாக அமைந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7cfb2f3-73e8-48c4-8de2-c4e6e61ccd8f/26-6a64a273b3c5e.webp' /></p><p>
அவற்றில் ஒன்று, ஏற்கனவே பிரித்தானியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்து, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான விதி ஆகும்.
</p><p>
அதாவது, ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 10 ஆண்டுகளுக்கும்மேல் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என்னும் ரீதியிலான புது விதி ஒன்றை ஷபானா அறிவிக்க, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள். </p><p></p><p>
இந்நிலையில், அந்த விதியிலிருந்து முதியவர்களை கவனித்துக்கொள்ளும் பணியை மேற்கொள்ளும் care workers என்னும் பணியாளர்களுக்கு, அதாவது, ஏற்கனவே பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோருக்கு, விலக்கு அளிக்க பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்த செய்தி, லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
</p><h3>
என்ன காரணம்?
</h3><p>
இப்படி தன் அரசில் உள்துறைச் செயலராக இருக்கும் ஷபானாவின் முடிவுக்கு எதிராக பிரதமர் ஆன்டி பர்னாம் முடிவெடுக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb6b03c-d9e4-44b1-bf21-43bbfb6c634f/26-6a64a274625d9.webp' /></p><p>
அதை ஆன்டி பர்னாமே கூறியும் உள்ளார். அதாவது, ஆன்டி பர்னாமின் தந்தையான ராய், அல்ஸீமர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
தன் மகன் பிரித்தானியாவின் பிரதமரானதுகூட அவருக்கு தெரியாது என்னும் ரீதியில் சில செய்திகள் வெளியாகியிருந்தன.
</p><p>
இந்நிலையில், ஷபானாவின் கட்டுப்பாடுகளிலிருந்து care worker பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கும் திட்டம் குறித்து பேசிய ஆன்டி பர்னாம், என் தந்தைக்கு அல்ஸீமர் பிரச்சினை உள்ளது.
</p><p>
அவரை கவனித்துக்கொள்ள care worker பணியாளர்கள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். அது அவர்கள் தவறல்ல, சிஸ்டமே தவறு என்று கூறியிருந்தார் ஆன்டி பர்னாம்.
</p><p>
அத்துடன், சமூக பாதுகாப்பு அமைப்பை இப்படியே விட்டுவிட முடியாது என்றும் கூறியிருந்தார் ஆன்டி பர்னாம்.
</p><p>
ஆக, விரைவில் அது குறித்து ஆன்டி பர்னாம் அறிவிப்பு ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், புலம்பெயர்ந்தோர், சுகாதாரப் பணியாளர்கள் உட்பட ஏராளமானோருக்கு நல்ல செய்தி ஒன்று காத்திருக்கிறது என்று மட்டும் இப்போதைக்குக் கூறலாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T17:24:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் அமெரிக்காவை பேரழிவுக்கு..தயாராக அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-could-devastate-america-in-single-day-warning-1784995679"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-could-devastate-america-in-single-day-warning-1784995679</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால், அமெரிக்கா இணையப் பேரழிவுக்கு தயாராகுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


செயற்கை நுண்ணறிவு கடந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால், அமெரிக்கா இணையப் பேரழிவுக்கு தயாராகுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>

செயற்கை நுண்ணறிவு </h2><p>கடந்த 21ஆம் திகதி, தனது மேம்பட்ட மாதிரிகளில் ஒன்று கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்து, இணையத்தை அணுகி மற்றொரு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் அமைப்புகளை ஹேக் செய்ததாக, ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் வெளிப்படுத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/289fbc29-86f7-4758-9310-f4a3c00c1f3f/26-6a64e15d1b91d.webp' />&nbsp;</p><p></p><p>
மனித அறிவுறுத்தல்கள் இன்றி, ஒரு AI மாதிரி மற்றொரு நிறுவனத்தின் தரவுத்தளங்களில் தன்னிச்சையாக ஊடுருவியது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது. </p><p>

இந்த முன்னெப்போதும் இல்லாத மீறல், உலகளாவிய கவலையைத் தூண்டியுள்ளதுடன், திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்ட ரோபோ கிளர்ச்சிகளுடன் ஒப்பிட்டும் பேசப்படுகிறது.&nbsp;</p><h2>பேரழிவுக்கு உள்ளாக்கக்கூடும்</h2><p> 

இந்த நிலையில், "செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஹேக்கிங் நிரல்கள், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெருநிறுவன மற்றும் அரசாங்க நெட்வொர்க்குகளுக்குள் ஊடுருவி, முக்கியமான தரவுகளைத் திருடி, Ransomware மூலம் முக்கிய அமைப்புகளை முடக்கி, ஒரே நாளில் ஒரு தேசத்தையே பேரழிவுக்கு உள்ளாக்கக்கூடும்" என்று DigitalWarefare.com-யின் ஜேம்ஸ் நைட் எச்சரித்துள்ளார்.</p><p> 

மேலும் அவர், 'வளர்ந்து வரும் இந்த ஆயுதங்கள், ஒரு சூப்பர்கம்ப்யூட்டரின் வேகத்தில், வணிகங்களுக்கும் சாதாரண மக்களுக்கும் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் வகையில், விரைவில் தன்னிச்சையாக திட்டமிட்டு, செயல்பட்டு தங்கள் உத்திகளை மாற்றியமைக்கும் திறன் கொண்டவை' என்றும் விளக்கியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b037d4e0-94d0-48b1-b324-0b0d5ab156f2/26-6a64e1b42d78e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T16:16:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷான் கிஷன், திலக் வர்மா ருத்ரதாண்டவம்! ஜிம்பாப்வேயை சரித்த அபிஷேக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ishan-blast-81-and-abhishek-took-3-wkts-vs-zim-1784992514"></link>
            <id>https://news.lankasri.com/article/ishan-blast-81-and-abhishek-took-3-wkts-vs-zim-1784992514</id>
            <summary type="text">ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா 219 ஓட்டங்கள்  

ஹராரேயில் நடந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. </p><h2>இந்தியா 219 ஓட்டங்கள் </h2><p> 

ஹராரேயில் நடந்த டி20 போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b869d81-826d-4f61-b997-30a4bfa22d1b/26-6a64d5d532be0.webp' />&nbsp;</p><p></p><p>

இஷான் கிஷன் (Ishan Kishan) 44 பந்துகளில் 81 ஓட்டங்களும் (2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள்), திலக் வர்மா (Tilak Varma) 29 பந்துகளில் 60 ஓட்டங்களும் (3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c438387-bc17-450c-b1d7-973a2f475b48/26-6a64d3dd995f3.webp' /></p><p>
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 17.5 ஓவர்களில் 129 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பிரையன் பென்னெட் 32 (19) ஓட்டங்களில் எடுத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9211647b-7fc8-42a9-b3c0-65e9359bf80a/26-6a64d5d5da474.webp' /></p><p>

அபிஷேக் ஷர்மா 3 விக்கெட்டுகளும், யஷ் தாக்கூர் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், பிஷ்னாய், ஷிவம் தூபே மற்றும் திலக் வர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a72e7502-f66a-408a-90ed-61107cb8ce12/26-6a64d3dccb9fd.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25c292a0-a6b9-46ac-8e14-e169773dd702/26-6a64d5d4540a9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T15:25:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் சைக்கிள் பந்தயத்தில் வீரருக்கு நேர்ந்த அசம்பாவிதம்: அதிர்ச்சி காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/colombian-rider-rubio-crashing-face-to-car-video-1784990199"></link>
            <id>https://news.lankasri.com/article/colombian-rider-rubio-crashing-face-to-car-video-1784990199</id>
            <summary type="text">பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் கொலம்பியா வீரர் படுகாயமடைந்ததால் பாதியில் விலகினார்.கொலம்பிய வீரர்

பிரான்ஸ், பாரிஸ் மற்றும் பார்சிலோனாவில் நடந்து வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் கொலம்பியா வீரர் படுகாயமடைந்ததால் பாதியில் விலகினார்.</p><h2>கொலம்பிய வீரர்
</h2><p>
பிரான்ஸ், பாரிஸ் மற்றும் பார்சிலோனாவில் நடந்து வரும் டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில், கொலம்பிய வீரர் ஐனர் ரூபியோ (Einer Rubio) கலந்துகொண்டார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">The crash of 🇨🇴 Einer Rubio from another angle...<br><br>Read more:<br>📰 <a href="https://t.co/TjchzYFuDV">https://t.co/TjchzYFuDV</a><br><br>🎥 IG Pamezcycling <a href="https://t.co/2Ay9VSFWIk">pic.twitter.com/2Ay9VSFWIk</a></p>&mdash; Domestique (@Domestique___) <a href="https://x.com/Domestique___/status/2080753347607269467?ref_src=twsrc%5Etfw">July 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
நேற்றைய 19-வது கட்டப் பந்தயத்தின்போது ரூபியோவிற்கு முன்பு சென்றுகொண்டிருந்த கார், பார்வையாளர்கள் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக திடீரென நின்றது.&nbsp;</p><p></p><p>
இதனை சற்றும் எதிர்பாராத ஐனர் ரூபியோ காரின் பின்பக்க கண்ணாடியில் பலமாக மோதினார். 

இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட இரத்தம் கொட்டியது. </p><p>உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கிரெனோபில்லில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.</p><h2> 

மேலாளர் பகிரங்க மன்னிப்பு </h2><p>அங்கு அவரது காயங்களின் தீவிரத்தைக் கண்டறிய புதிய சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில் ரூபியோ மோதிய காரினை ஒட்டிய XRG அணியின் மேலாளர் ஜோக்சியன் பெர்னாண்டஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார்.</p><p> 

எனினும், பார்வையாளர்களின் உயிரைக் காப்பாற்றவே அவ்வாறு செய்ததாகவும் தெளிவுபடுத்தினார்.

ரூபியோவிற்கு ஏற்பட்ட விபத்து குறித்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ff7033f-c8d5-4468-b92c-81a2b7add29f/26-6a64cab74c4eb.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T14:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அன்று காய்கறி விற்றவர், இன்று இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார் - யார் இந்த ஜண்டு குமார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vegtable-seller-jhandhu-kumar-won-medal-for-india-1784989549"></link>
            <id>https://news.lankasri.com/article/vegtable-seller-jhandhu-kumar-won-medal-for-india-1784989549</id>
            <summary type="text">&amp;nbsp;காய்கறி விற்று, இ-ரிக்ஸா ஓட்டி வறுமையில் இருந்த ஜண்டு குமார் காமன்வெல்த் தொடரில் இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார்.

கிளாஸ்கோ காமன்வெல்த்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;காய்கறி விற்று, இ-ரிக்ஸா ஓட்டி வறுமையில் இருந்த ஜண்டு குமார் காமன்வெல்த் தொடரில் இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார்.</p><h3>

கிளாஸ்கோ காமன்வெல்த்
</h3><p>
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், இந்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 ஆம் திகதி ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dcd56d8-5a67-447f-a990-a8e63cc9431d/26-6a64c76e65819.webp' /></p><p> 

74 நாடுகளை சேர்ந்த சுமார் 3000 வீரர், வீராங்கனைகல் இதில் கலந்து கொள்கின்றனர். </p><h3> 

ஜண்டு குமார்</h3><p>

இதில், ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிப்டிங் பிரிவில் இந்தியாவின் ஜண்டு குமார்(jhandu kumar) வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6d7c27e-9026-472c-966a-8bb0437feccc/26-6a64c76f17b3c.webp' /></p><p>

இது, 2026 காமன்வெல்த் விளையாட்டு தொடரில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள முதல் பதக்கம் ஆகும். </p><p>

பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டம், ஹர்நாத் என்ற ஊரில் பிறந்த 28 வயதான ஜண்டு குமார், தனது 5 வயதிலே போலியோ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

அவரது பெற்றோர் சிறிய காய்கறி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அவரது பெற்றோருக்கு பக்கபலமாக இவரும் காய்கறி விற்று வந்துள்ளார். </p><p>

தினமும் காய்கறிகள் வாங்குவதற்காக பீகார் ஷெரீஃபிற்கு சுமார் 20 கி.மீ பயணம் செய்து, அவற்றை மீண்டும் கொண்டு வந்து சந்தையில் விற்பேன் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9459fd53-1985-42b9-8568-ac26aa7757bb/26-6a64c76fbd255.webp' /></p><p> 

அதன்பின்னர், மேம்பாலம் கட்டுவதற்காக அவரது காய்கறி கடை அங்கிருந்து அகற்றப்பட்டபோது தனது வருமானத்திற்காக, நண்பர்களிடம் கடன் பெற்று மின்சார ரிக்ஸா வாங்கி ஓட்டி வந்துள்ளார். </p><p>

2016 ஆம் ஆண்டு முதல் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லும் ஜண்டு குமாருக்கு அப்போது பாரா பவர்லிஃப்டிங் பற்றி எதுவும் தெரியவில்லை. 

2018 ஆம் ஆண்டில் அதுகுறித்து தெரிய வந்த போது, அதற்காக கடுமையாக பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார்.
</p><p>
2023 ஆம் ஆண்டில் தேசிய பாரா பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக அவர் தனது மின்சார ஆட்டோவை விற்றார். </p><p>

ஜண்டுவின் ஆர்வத்தை கவனித்த தேசியப் பயிற்சியாளர் ராஜேந்தர் சிங் ரஹேலு, காந்திநகரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய சிறப்பு மையத்தில் பயிற்சி பெறுமாறு ஜண்டுவை அழைத்தார்.
</p><p>
அதைத்தொடர்ந்து, முதல் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம், ஆசியா-ஓசியானியா திறந்தநிலை பாரா பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் என பல்வேறு போட்டிகளை பதக்கங்களை குவிக்க தொடங்கியுள்ளார். </p><p> 

பதக்கம் வென்ற பின்னர் பேசிய ஜண்டு குமார், "நான் பறப்பது போல் உணர்கிறேன். இது எனது முதல் பதக்கம். என் மனதில் ஒரே ஒரு எண்ணம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது: நான் இந்தப் பதக்கத்தை வென்றே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், தனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் மற்றும் தனது விளையாட்டு வாழ்க்கை முழுவதும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.</p><p> 

அவர்கள் என்னை இவ்வளவு பயிற்சி செய்ய அனுமதித்ததற்கும், என் மீது இவ்வளவு அன்பு காட்டியதற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்பேன் என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) குறித்து பேசிய அவர், "நான் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாங்கள் அங்கே பயிற்சி செய்கிறோம், ஒரு வகையில் இந்தப் பதக்கம் அவர்களுக்கே சொந்தமானது," என்று கூறினார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A spectacular performance by Jhandu Kumar, who has opened India’s medal tally at the <a href="https://x.com/hashtag/CWG2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CWG2026</a> by winning a Bronze in the Men’s Heavyweight Para Powerlifting event! Congratulations to him. His achievement is a powerful reflection of immense strength, unwavering determination and… <a href="https://t.co/kMdkU6RRAF">pic.twitter.com/kMdkU6RRAF</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2080873132559323405?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
பதக்கம் வென்றுள்ள ஜண்டு குமாருக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T14:25:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபூர்வ மருத்துவ பிரச்சினையால் வெளிநாட்டில் இந்தியர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-techie-dies-in-us-rare-aortic-dissection-1784984558"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-techie-dies-in-us-rare-aortic-dissection-1784984558</id>
            <summary type="text">அமெரிக்காவில் வாழ்ந்துவந்த மென்பொருள் பொறியாளரான இந்தியர் ஒருவர், அபூர்வ மருத்துவ பிரச்சினை ஒன்றின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் வாழ்ந்துவந்த மென்பொருள் பொறியாளரான இந்தியர் ஒருவர், அபூர்வ மருத்துவ பிரச்சினை ஒன்றின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.</p><h3>

வெளிநாட்டில் இந்தியர் மரணம்</h3><p>

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் வாழ்ந்து வந்தவர், வெங்கட ரவிதேஜா ரவிபதி (34).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/856ed422-088a-4c58-8f3d-1e4b5cfc99a4/26-6a64b3f00c31a.webp' /></p><p>
கடந்த வாரம், ரவிக்கு திடீரென இடது காலில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. வலி அப்படியே நெஞ்சு வரை பரவ, உடனடியாக அவரது குடும்பத்தினர் அவசர உதவியை அழைத்துள்ளனர்.
</p><p>
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ’Type A Aortic Dissection’ என்னும் அபூர்வ பிரச்சினை இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
</p><p>
திடீரென ரவி இப்படி ஒரு அபூர்வ பிரச்சினையால் உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
</p><p>
ரவிக்கு 26 வயதில் மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T14:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[1997ல் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய தர்மேந்திர பிரதான் - இன்று பறிபோன அமைச்சர் பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dharmendra-pradhan-protest-for-paper-leak-in-1997-1784983409"></link>
            <id>https://news.lankasri.com/article/dharmendra-pradhan-protest-for-paper-leak-in-1997-1784983409</id>
            <summary type="text">இன்று நீட் வினாத்தாள் கசிவு காரணமாக அமைச்சர் பதவியை இழந்துள்ள தர்மேந்திர பிரதான், தனது மாணவர் பருவத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியதாக கூறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று நீட் வினாத்தாள் கசிவு காரணமாக அமைச்சர் பதவியை இழந்துள்ள தர்மேந்திர பிரதான், தனது மாணவர் பருவத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியதாக கூறப்படுகிறது. </p><h3>

தர்மேந்திர பிரதான் ராஜினாமா</h3><p> 

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(CJP) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57504a5b-5155-493b-9630-9b324bd06234/26-6a64af73aecb6.webp' /></p><p>
இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி, மோடி அரசையே அசைத்து பார்த்துள்ளது. தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><p>

12 ஆண்டுகால மோடி அரசில், ஒரு அமைச்சர் மக்களின் போராட்டதிற்கு பணிந்து பதவியை ராஜினாமா செய்துள்ளது இதுவே முதல்முறையாகும்.&nbsp;</p><p></p><p>

தங்களது 3 கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதால் நாடு முழுவதும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக CJP அறிவித்துள்ளது.</p><h3>

1997 ல் போராடிய தர்மேந்திர பிரதான்</h3><p>

ஒடிசாவை சேர்ந்த தர்மேந்திர பிரதான் தனது கல்லூரி காலத்திலே RSS அமைப்பின் மாணவர் அமைப்பான ABVPயில் இணைந்து தீவிரமாக பணியாற்றியுள்ளார். 2 முறை ABVPயின் தேசிய செயலாளராக இருந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5efcaf2-6197-4535-a5df-da16ce089eac/26-6a64af730c736.webp' /></p><p>புவனேஸ்வரில் உள்ள ஆர்எம்டி பட்டக் கல்லூரியின் முதல்வராக உள்ள பிரசாந்த் குமார் ரௌட், கல்லூரியில் தர்மேந்திர பிரதானின் ஜுனியராக இருந்துள்ளார். </p><p>

தர்மேந்திர பிரதான் குறித்து பேசிய அவர், "1997 ஆம் ஆண்டில் ஒடிசாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் ஜானகி பல்லப் பட்நாயக் முதலமைச்சராக இருந்தார். </p><p>

நாங்கள் தலைமைச் செயலகத்தின் முன்பு ஒடிசா அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினோம். அங்கு சுமார் 1,500 மாணவர்கள் எங்களுடன் இணைந்தனர்.</p><p> 

போராட்டம் அமைதியாக நடைபெற்றாலும் காவல்துறை எங்களை கடுமையாக தாக்கியது. நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம்.</p><p> அப்போது பிரதான் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவருக்கு சில எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருந்தன. 

வன்முறை நிகழ்ந்தபோதிலும், வினாத்தாள் கசிவுக்கு எதிராக பிரதான் தொடர்ந்து போராடியதே, அவரை மாநிலத்தின் மிக முக்கியமான மாணவர் தலைவர்களில் ஒருவராக நிலைநிறுத்தியது" என்று தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T12:43:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானுக்கு தரமான பதிலடி கொடுத்த இலங்கை: சதம் விளாசிய இருவர்..அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vishmi-and-harshitha-century-vs-pakistan-2nd-odi-1784981466"></link>
            <id>https://news.lankasri.com/article/vishmi-and-harshitha-century-vs-pakistan-2nd-odi-1784981466</id>
            <summary type="text">பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.&amp;nbsp;சிட்ரா அமின்&amp;nbsp;சதம் 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>சிட்ரா அமின்&nbsp;சதம் </h2><p>
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹம்பன்டோடாவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff010950-616e-4014-af30-bd1ae0e63f10/26-6a64a9d681925.webp' /></p><p></p><p> 

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி சிட்ரா அமின் (Sidra Amin) 100 ஓட்டங்களும், ஆயிஷா 49 ஓட்டங்களும் எடுக்க 273 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 1 ரன்னில் ஃபாத்திமா சனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>ஹர்ஷிதா, விஷ்மி சதம் </h2><p><span style="font-size: 14px; color: inherit;">அடுத்து களமிறங்கிய ஹர்ஷிதாவுடன் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே இணைந்து வலுவான கூட்டணி அமைத்தார்.</span></p><p> 

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விஷ்மி குணரத்னே (Vishmi Gunaratne) 123 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். </p><p>

அதனைத் தொடர்ந்து நிதானமாக ஓட்டங்களை சேர்த்த ஹர்ஷிதா சமரவிக்ரமா (Harshitha Samarawickrama) 100 ஓட்டங்களும், கவிஷா தில்ஹரி 40 ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
இதன்மூலம் இலங்கை அணி 46.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0e3dcb-55a1-4398-872e-b2399a43b18a/26-6a64a9d5c77c5.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T12:15:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/yemen-escalates-attacks-after-1784978891"></link>
            <id>https://news.lankasri.com/article/yemen-escalates-attacks-after-1784978891</id>
            <summary type="text">கடந்த ஐந்து மாதங்களாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் சவுதி அரேபியாவும் ஏமனும் இழுத்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஐந்து மாதங்களாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் சவுதி அரேபியாவும் ஏமனும் இழுத்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.</p><h2>யான்பு மற்றும் ஜசான்</h2><p>
</p><p>செங்கடல் கப்பல் போக்குவரத்தின் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஏமனின் ஹொடைடாவில் உள்ள ஹவுதி இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், </p><p>வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த இலக்குகளை அழித்ததாகவும் சவுதி அரேபியா அறிவித்த மறுநாளான சனிக்கிழமையன்று, ஹவுதிகள் ஏவுகணைகளை ஏவியதில் சவுதி அரேபியாவின் யான்பு மற்றும் ஜசான் நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c65d301-91fc-449c-9de2-e3aa34b50a39/26-6a649f3ab7b59.webp' /></p><p> </p><p>பொதுவாக 'ஹவுதிகள்' என்று அழைக்கப்படும் ஏமனின் 'அன்சார் அல்லாஹ்' அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், சவுதி அரேபியா ஹொடைடா மாகாணத்தில் உள்ள கமரன் தீவு மற்றும் தொலைத்தொடர்பு நிலையங்களுக்குச் சொந்தமான வசதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டிருந்தது. </p><p>இதனிடையே, அல் ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், சவுதி எண்ணெய் கப்பல்கள் குறிவைக்கப்பட்ட ஒரு முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையான பாப் அல்-மந்தீப் நீரிணைக்கு அருகில் கமரான் தீவு அமைந்துள்ளதால், அது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.</p><p></p><p> </p><p>சவுதி கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இந்த மோதல் வெடித்தது; ஹவுதிகளின் கடல்வழி முற்றுகையானது, ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதைத் தொடர்ந்து, உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தலாக மாறியது.</p><h2>அரம்கோ எண்ணெய் நிலையங்கள்</h2><p> இந்த நிலையில், ஹொடைடாவில் உள்ள ராணுவ இலக்குகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தினால், செங்கடலில் உள்ள எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்களை மட்டுமல்லாமல், </p><p>சவுதி அராம்கோ (Saudi Aramco) நிறுவனத்தின் கட்டமைப்புகள், விமான நிலையங்கள், விமானப்படைத் தளங்கள் மற்றும் எண்ணெய் குழாய்த்தொடர்கள் ஆகியவற்றையும் குறிவைத்துத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவோம் என்று ஹவுதிகள் எச்சரித்திருந்தனர். </p><p>தற்போது சவுதி அரேபியாவின் யான்பு மற்றும் ஜசான் நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஃபார்ஸ்' (Fars) செய்தி முகமை வெளியிட்டுள்ள நாசா செயற்கைக்கோள் படங்களில், ஏவுகணைத் தாக்குதல்கள் ஜிசானில் உள்ள சவுதி அராம்கோவின் சேமிப்புக் கிடங்குகளில் தீ விபத்தை ஏற்படுத்தியதைக் காட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fe13999-ac83-4cd2-8f2b-1a24b4bb6978/26-6a649f39ee41d.webp' /></p><p> </p><p>சனிக்கிழமையன்று ஹவுதிகள் நடத்திய அரம்கோ எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, யான்பு மற்றும் ஜசான் விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. </p><p>ஏமனில் இருந்து அதிகாலையில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்கள் காரணமாக, தெற்கு சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ரியாத் பல எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T11:35:33+00:00</updated>
        </entry>
    </feed>
