<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-28T10:33:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான்காவது வெப்ப அலையை எதிர்கொள்ளவிருக்கும் பிரித்தானியா... மக்களுக்கு வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/britain-braces-fourth-heatwave-1785234024"></link>
            <id>https://news.lankasri.com/article/britain-braces-fourth-heatwave-1785234024</id>
            <summary type="text">இந்த வருடத்தில் நான்காவது முறையாக வெப்ப அலை வீசக்கூடும் என்று பிரித்தானிய வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அவசர மருத்துவப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வருடத்தில் நான்காவது முறையாக வெப்ப அலை வீசக்கூடும் என்று பிரித்தானிய வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அவசர மருத்துவப் பணியாளர்களும் தீயணைப்பு வீரர்களும் தயாராக உள்ளனர்.</p><h2>முன்னெப்போதும் இல்லாத</h2><p>
</p><p>புதன்கிழமைக்குள் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது; இதனால் வெப்பம் தொடர்பான உடல்நல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், காய்ந்துபோன பூங்காக்கள் மற்றும் கிராமப்புறங்களில் கவனமாக இருக்குமாறு தீயணைப்புத் துறைத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். </p><p>வானிலை ஆய்வு மையத்தின் தற்போதையத் தரவுகளின்படி, பிரித்தானியா முழுவதும் ஜூலை மாதம் சராசரியை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது. </p><p>மேலும், கோடைக்காலம் முடிய இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாக உள்ள நிலையில், பிரித்தானியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 30 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான நாட்களை ஏற்கனவே எதிர்கொண்டுள்ளது. </p><p>வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, தெற்கு இங்கிலாந்தில் ஜூலை மாதத்திற்கான சராசரி மழையளவில் 1 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது; அதேவேளையில், ஒட்டுமொத்த இங்கிலாந்தில் 5 சதவீதமும், பிரித்தானியாவில் 20 சதவீதமும் பதிவாகியுள்ளது. </p><p>நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் நிலவும் உயர் அழுத்த மண்டலத்தின் தாக்கத்தால், செவ்வாய்க்கிழமை முதல் வெப்பநிலை உயர்ந்து 30 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும், புதன்கிழமையன்று வெப்பம் உச்சத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>சுகாதார எச்சரிக்கை</h2><p> </p><p>வியாழக்கிழமை முதல் வெப்பநிலை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது; எனினும், தென்கிழக்குப் பகுதியில் மற்றொரு வெப்பமான நாள் நிலவுவதால், அப்பகுதி உத்தியோகப்பூர்வ வெப்ப அலைச் சூழலிலேயே நீடிக்கக்கூடும். </p><p>இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு 'அம்பர்' (amber) அளவிலான வெப்பம் சார்ந்த சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ள இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமை, </p><p>இந்த வெப்பம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், சுகாதார சேவைகளுக்கான தேவையை அதிகரிக்கக்கூடும் என்றும் திங்களன்று தெரிவித்தது. </p><p>சமீபத்திய நாட்களில் ஐரோப்பா முழுவதும், குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், </p><p>நிலவும் தீவிர வெப்ப அலை பிரித்தானியாவிலும் காட்டுத்தீ ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்பதால், தீயணைப்புத் துறைத் தலைவர்களும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T10:18:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே இரவில் மாஸ்கோவை நோக்கி சீறிப்பாய்ந்த 390 ட்ரோன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-strike-390-drones-on-moscow-overnight-1785233340"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-strike-390-drones-on-moscow-overnight-1785233340</id>
            <summary type="text">உக்ரைன் சுமார் 400 ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யாவின் மீது தாக்குதல் நடத்தியது.390 ட்ரோன் விமானங்கள்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் சுமார் 400 ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யாவின் மீது தாக்குதல் நடத்தியது.</p><h2>390 ட்ரோன் விமானங்கள்
</h2><p>
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை உக்ரைனின் 390 ட்ரோன் விமானங்கள் ஒரே இரவில் தாக்கியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed6d269c-8ec1-4449-9017-0d31609a8a91/26-6a68810f90c08.webp' />&nbsp;</p><p></p><p>
அதேபோல் தென்மேற்கு பெல்கோரோட் பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில், குறைந்தது 19 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>
இந்த தாக்குதல் குறித்து பேசிய மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், 'திங்கட்கிழமை இரவு முதல் மாஸ்கோவின் பரந்த பகுதிக்கு மேலே 390 ட்ரோன் விமானங்கள் கண்காணிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டன' என்றார்.
</p><h2>
உயிரிழப்புகள் எதுவும் இல்லை</h2><p>ஆனால், அவற்றால் எந்த சேதமோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாக அவர் தெரிவிக்கவில்லை.</p><p>

இதற்கிடையில், மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆன்ட்ரி வேரோபியோவ், செக்கோவ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் ட்ரோன் விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறினார்.
</p><p>
கட்டிடத்தின் முகப்பு மற்றும் இரண்டு குடியிருப்புகள் சேதமடைந்ததாகவும், உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32949dab-bffb-449d-94c1-f5cac3011fd2/26-6a68810ec7db1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T10:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்டி பர்னாம் பிரதமரானதும் பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/poll-says-labour-party-overtakes-reforum-uk-1785223810"></link>
            <id>https://news.lankasri.com/article/poll-says-labour-party-overtakes-reforum-uk-1785223810</id>
            <summary type="text">&amp;nbsp;பிரித்தானிய பிரதமராக ஆன்டி பர்னாம் பொறுப்பேற்ற நேரம், லேபர் கட்சிக்கு நல்ல நேரமாக அமைந்துள்ளது.ஆன்டி பர்னாம் பிரதமரானதும்...

ஆம், ஆன்டி பர்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரித்தானிய பிரதமராக ஆன்டி பர்னாம் பொறுப்பேற்ற நேரம், லேபர் கட்சிக்கு நல்ல நேரமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/943cf304-d623-48d9-ad42-4a733443b711/26-6a685a840c02c.webp' /></p><h3>ஆன்டி பர்னாம் பிரதமரானதும்...
</h3><p>
ஆம், ஆன்டி பர்னாம் பிரதமரானதும் லேபர் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6247948e-d7fb-4ab1-bbd4-b692394486c3/26-6a685a84b3fde.webp' /></p><p>கடந்த ஆண்டின் இறுதியில் நைஜல் ஃபராஜின் யூகே ரீஃபார்ம் கட்சி, மற்ற அனைத்துக் கட்சிகளையும் விட 10 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbb1b83-5ecd-4ec5-834c-e61fa991b2f3/26-6a685a8564771.webp' /></p><p>ஆனால், ஆன்டி பர்னாம் பிரதமரானதற்குப் பின், முதன்முறையாக தற்போது லேபர் கட்சி ரீஃபார்ம் கட்சியைத் தாண்டி 4 புள்ளிகள் முன்னேற்றம் கண்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

ஆன்டி பர்னாமிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, தான் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளால் அளவுக்கு மீறி உற்சாகமடையவில்லை என்றும், அதே நேரத்தில், மக்கள் நேர்மறையாக (positive) பதிலளித்துள்ளது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T09:52:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிந்தது நாடகம்... ஜேர்மனிக்கு புதிய போக்குவரத்துத்துறை அமைச்சர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/steffen-bilger-as-new-german-transport-minister-1785231707"></link>
            <id>https://news.lankasri.com/article/steffen-bilger-as-new-german-transport-minister-1785231707</id>
            <summary type="text">ஜேர்மன் அரசியலில் கடந்த 10 நாட்களாகவே தொடர்ச்சியாக பல விடயங்கள் நடந்தவண்ணம் உள்ளன.

தொடர்ச்சியாக பல விடயங்கள்

ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் அரசியலில் கடந்த 10 நாட்களாகவே தொடர்ச்சியாக பல விடயங்கள் நடந்தவண்ணம் உள்ளன.
</p><h3>
தொடர்ச்சியாக பல விடயங்கள்</h3><p>

ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸின் கட்சியான CDU மற்றும் அதன் சகோதரி கட்சியான CSU கட்சிகளின் நாடாளுமன்றக் குழு தலைவரான இருந்த ஜென்ஸ் ஸ்பான் என்பவர், கட்சிக் கொள்கைகளுக்கு விரோதமாக வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டதால் அவருக்கு கடும் எதிர்ப்பு உருவானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00b14506-a29c-4d80-8c38-13f018e96362/26-6a68795d4b8ca.webp' /></p><p>

அதைத்தொடர்ந்து 18ஆம் திகதி தனது நாடாளுமன்றக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்பான்.</p><p>

இந்நிலையில், ஸ்பானின் ராஜினாமாவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்யத் துவங்கினார்.&nbsp;</p><p></p><p>
அப்போது, ஜேர்மன் ரயில் போக்குவரத்து தொடர்பில் நாட்டில் அதிருப்தி நிலவிவருவதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சரான பேட்ரிக் ஷ்னைடரும் மாற்றப்படலாம் என பேச்சு அடிபடத் துவங்கியது.</p><p>தன் பெயர் இப்படி அடிடுவதால் விரக்தியடைந்த ஷ்னைடர், தனது பதவி தொடர்பில் ஒரு கண்ணியமற்ற சூழல் உருவாகியுள்ளதால், தன்னால் வேலையில் கவனம் செலுத்தமுடியவில்லை என்றும், தன்னை பதவிநீக்கம் செய்யுமாறு ஜேர்மன் சேன்ஸலரை கேட்டுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/607a3dac-3ee7-4e76-b9f4-8982b52df12b/26-6a68795c99197.webp' /></p><p>
இந்நிலையில், தற்போது புதிய போக்குவரத்துத் துறை அமைச்சராக, ஸ்டீஃபன் பில்கெர் (Steffen Bilger) என்பவர் பெயரை அறிவித்துள்ளார் மெர்ஸ்.
</p><p>
இந்த பில்கெர், ஏற்கனவே 2018 முதல் 2021 வரை போக்குவரத்து அமைச்சகத்தில் மாகாணச் செயலராக பணியாற்றியவர் ஆவார்.
</p><p>
விடயம் என்னவென்றால், மாகாண தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், மெர்ஸ் என்ன மாற்றங்கள் செய்தாலும், அதனால் எந்த பலனும் இருக்கப்போவதில்லை என கன்சர்வேட்டிவ் கட்சியினரே கருத்து தெரிவித்துவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T09:45:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை எவ்வளவு?(28-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785230639"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785230639</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (28-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (28-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><p>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</p></td></tr></tbody></table><p>தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,305,929.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,070.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 368,550.00.</p><p>

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,240.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 337,850.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,320.00.</p><p>

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 322,500.00. </p>]]></content>
            <updated>2026-07-28T09:27:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/earthquake-hit-japan-1785230770"></link>
            <id>https://news.lankasri.com/article/earthquake-hit-japan-1785230770</id>
            <summary type="text">ஜப்பானின் தெற்குப் பகுதியிலுள்ள முக்கியத் தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தைத் 7.1 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் தெற்குப் பகுதியிலுள்ள முக்கியத் தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தைத் 7.1 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.</p><h2>சுனாமி எச்சரிக்கை</h2><p>
</p><p>நில அதிர்வுகளின் மையம் கடல் மட்டத்திற்குக் கீழே 10 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/515dbb58-42ae-4c62-9210-78ad861c0ca8/26-6a687a975305d.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், நிலநடுக்கத்தால் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாகவும் பிரதமர் சனே தகைச்சி தெரிவித்துள்ளார். </p><p>இதனிடையே, ஒரு மீற்றர் (3.28 அடி) வரையிலான அலைகள் எழக்கூடும் என்பதால், அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். </p><p>கடலோரப் பகுதி மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறும், வெளியேற்றம் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p>சேதம் தொடர்பான நிலவரத்தை விரைவாக மதிப்பிடுமாறு ஜப்பானியப் பிரதமரின் அலுவலகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அனைத்திற்கும் மேலாக மனித உயிர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும், அவசரக்காலப் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் எவ்வித முயற்சியையும் குறைத்துவிடக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>செவ்வாய்க்கிழமையன்று தென்மேற்கு ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அணுமின் நிலையங்களில் உடனடி அசாதாரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/717d87da-ebfa-4dd7-982d-98177c85d18b/26-6a687a967e0b9.webp' /></p><p> </p><p>இதனிடையே, ஜப்பானின் தெற்குப் பகுதியான கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுவோகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி ஆகிய மாகாணங்களுக்கு ஜப்பானிய அரசு அவசர நிலநடுக்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.</p><h2>சுமார் 18 சதவீதம்</h2><p> </p><p>ஜூன் 25 அன்று வடக்கு ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, ஆனால் அதனால் உயிரிழப்புகளோ பெரிய சேதங்களோ ஏற்படவில்லை என்றே தெரிய வருகிறது. </p><p>பசிபிக் 'நெருப்பு வளையத்தின்' (Ring of Fire) மேற்கு விளிம்பில் அமைந்துள்ள நான்கு முக்கிய புவித்தட்டுகள் (tectonic plates) சந்திக்கும் இடத்தில் ஜப்பான் அமைந்துள்ளதால், அது உலகின் நிலநடுக்க அபாயம் மிகுந்த நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. </p><p>சுமார் 125 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்தத் தீவுக்கூட்டத்தில், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன; மேலும், உலகின் மொத்த நிலநடுக்கங்களில் சுமார் 18 சதவீதம் இங்கு நிகழ்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff99ce5d-9448-4781-806a-2708a464b1c3/26-6a687a9804188.webp' /></p><p> </p><p>பெரும்பாலானவை லேசானவையே; இருப்பினும், அவை ஏற்படும் இடம் மற்றும் புவி மேற்பரப்பிற்கு அடியில் அவை தாக்கும் ஆழம் ஆகியவற்றைப் பொறுத்து அவற்றால் ஏற்படும் பாதிப்பு மாறுபடுகிறது. </p><p>2011-இல் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான பிரம்மாண்டமான கடலடி நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த சுனாமியால் சுமார் 18,500 பேர் மரணமடைந்தனர் அல்லது காணாமல் போயினர்; அத்துடன் ஃபுகுஷிமா அணுமின் நிலையமும் சேதமடைந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T09:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை சுருட்டிய இலங்கை: சமரி அதப்பத்து அபாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chamari-took-3-wickets-pakistan-allout-for-187-1785228825"></link>
            <id>https://news.lankasri.com/article/chamari-took-3-wickets-pakistan-allout-for-187-1785228825</id>
            <summary type="text">இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 187 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

மீட்டெடுத்த&amp;nbsp;ஃபெரோஸா, முனீபா பாகிஸ்தான், இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 187 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><h2>

மீட்டெடுத்த&nbsp;ஃபெரோஸா, முனீபா </h2><p>பாகிஸ்தான், இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹம்பன்டோடாவில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3519b3fb-9287-4a02-8fc8-e6f43ca48cd8/26-6a68712149aef.webp' /></p><p></p><p>

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.
</p><p>
சதப் ஷாமஸ் 9 ஓட்டங்களிலும், சிட்ரா அமின் மற்றும் ஆயிஷா டக்அவுட் ஆகியும் நடையை கட்டினர்.

பின்னர் கைகோர்த்த குல் ஃபெரோஸா, முனீபா அலி கூட்டணி அணியை மீட்டெடுத்தது.</p><p> ஃபெரோஸா 40 ஓட்டங்கள் விளாசிய நிலையில் சமரி அதப்பத்து பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அணியின் ஸ்கோர் 110 ஆக இருந்தபோது, நிதானமாக ஆடிய முனீபா அலி (Muneeba Ali) 34 ஓட்டங்களில் சமரி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>ஃபாத்திமா சனா&nbsp;அதிரடி </h2><p>

அடுத்து அதிரடி காட்டிய நாஜிஹா அல்வியை 30 ஓட்டங்களில் சமரி வெளியேற்றினார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, அணித்தலைவர் ஃபாத்திமா சனா விரைவாக ஓட்டங்களை சேர்த்தார்.
</p><p>
49 பந்துகளில் எதிர்கொண்ட ஃபாத்திமா சனா (Fatima Sana) ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆக, பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கு சுருண்டது. </p><p>

இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து, சேத்தனா விமுக்தி மற்றும் கவிஷா தில்ஹரி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Target set! 🎯<br>Pakistan Women post 187 on the board. 🇱🇰 <br>It’s time for Sri Lanka Women to chase it down and seal the victory! 💪🏏<a href="https://x.com/hashtag/SLvPAK?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SLvPAK</a> <a href="https://x.com/hashtag/SriLankaCricket?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SriLankaCricket</a> <a href="https://t.co/hZTZI4wBNq">pic.twitter.com/hZTZI4wBNq</a></p>&mdash; Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) <a href="https://x.com/OfficialSLC/status/2082011453612314756?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T08:51:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப், மேக்ரான் இடையே மீண்டும் மோதல் வெடிக்குமா? பின்னணியில் ஒரு சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/volker-turk-issue-in-un-to-clash-macron-trump-1785227477"></link>
            <id>https://news.lankasri.com/article/volker-turk-issue-in-un-to-clash-macron-trump-1785227477</id>
            <summary type="text">ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், ட்ரம்ப், மேக்ரான் இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஐ....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், ட்ரம்ப், மேக்ரான் இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.</p><h3>

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த சம்பவம்
</h3><p>
ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகராக பொறுப்பு வகித்துவருபவர் வோல்க்கர் டர்க் (Volker Türk).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e31bffe-dd47-4095-b678-cf225ca455fd/26-6a6868d7eaa8c.webp' /></p><p>
ஆஸ்திரியா நாட்டவரும் சட்டத்தரணியுமான டர்க்கை, மேலும் நான்கு ஆண்டுகள் ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் பொறுப்பில் நீட்டிப்பது குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் திங்கட்கிழமையன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.</p><p>

டர்க்குக்கு ஆதரவாக 144 பேரும், எதிராக 10 பேரும் வாக்களித்தனர், 13 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்க வரவில்லை.&nbsp;</p><p></p><p>
பிரான்ஸ், டர்க்குக்கு ஆதரவாகவும், அமெரிக்கா, எதிராகவும் வாக்களித்தன.
</p><p>
இதற்கிடையில், பிரான்ஸ் பிரதிநிதி ஐ,நா கவுன்சிலில் உரையாற்றும்போது, பிரான்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க தூதர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள்.
</p><h3>
பின்னணி
</h3><p>
விடயம் என்னவென்றால், வெள்ளிக்கிழமைதான் பிரான்சும் அமெரிக்காவும் மனித உரிமைகள் தொடர்பில், சமூக ஊடகமான எக்ஸில் வார்த்தை மோதலில் ஈடுபட்டிருந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af3a3557-5351-422c-b561-333c15f5fd94/26-6a6868d742c67.webp' /></p><p>
அமெரிக்கா ஒரு காலத்தில் மனித உரிமைகளின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. இன்று, வடகொரியா, நிகராகுவா, மாலி மற்றும் ரஷ்யாவுடன், அமெரிக்கா தனித்து நிற்கிறது. அத்துடன், உலகம் இப்போது அமெரிக்காவின் பேச்சைக் கேட்பதில்லை என்று சமூக ஊடகமான எக்ஸில் பிரான்ஸ் தரப்பு தெரிவித்திருந்தது.&nbsp;</p><p>
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரான்ஸ் உலகின் மோசமான அடக்குமுறையாளர்களுடன் நெருக்கமாக பழகிக்கொண்டே, அமெரிக்கா, பிரித்தானியா மறும் இஸ்ரேல் போன்ற சுதந்திரமான, இறையாண்மை கொண்ட ஜனநாயக நாடுகளுக்கு அறிவுரை கூறுகிறது என அமெரிக்க தரப்பு கூறியிருந்தது.
</p><p>
ஆக, பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இணையவழி மோதல்கள் துவங்கியுள்ள நிலையில், மீண்டும் ட்ரம்புக்கும் மேக்ரானுக்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T08:31:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டை அடித்தால் ரூ.15,000 அரசு ஊக்கத்தொகை - பெண்களை குறிவைத்து நடந்த மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rs-15000-for-head-shaving-by-govt-scam-in-salem-1785226723"></link>
            <id>https://news.lankasri.com/article/rs-15000-for-head-shaving-by-govt-scam-in-salem-1785226723</id>
            <summary type="text">மொட்டை அடித்தால் ரூ.15,000 அரசு ஊக்கத்தொகை வழங்குவதாக சேலத்தில் பெண்களை குறிவைத்து மோசடி நடந்துள்ளது. 

மொட்டை அடித்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை 

சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொட்டை அடித்தால் ரூ.15,000 அரசு ஊக்கத்தொகை வழங்குவதாக சேலத்தில் பெண்களை குறிவைத்து மோசடி நடந்துள்ளது. </p><h3>

மொட்டை அடித்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை </h3><p>

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள புதுகொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள் என்பவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76f719c4-fb4c-42e1-a6d9-5b61dd025cd0/26-6a6865e4f2146.webp' /></p><p>
இதில் பேசிய நபர், தான் தாலுகா அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறியதோடு, கொரோனாவை போல் புதுவித நோய் பரவுகிறது. இந்த நோய் தலைமுடி வழியாக பரவுவதால் வெளிநாடுகளில் உள்ள பலரும், மொட்டை அடித்துக்கொண்டு இந்த நோயில் இருந்து தப்பியுள்ளனர்.</p><p>

இவ்வாறு மொட்டை அடித்துக்கொள்ளும் நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு ரூ.15,000, ஆண்களுக்கு ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p>

புதுகொட்டாம்பட்டிக்கு 18 டோக்கன்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், உங்கள் உறவினர்களுக்கும் இது குறித்து தெரியப்படுத்தலாம். </p><p>

கிராமத்திற்கு வரும் போது மொட்டை அடித்து தயாராக இருப்பவர்களுக்கு அதிகாரிகள் பணம் வழங்குவார்கள். பணம் கொடுப்பதற்கு சேர், டேபிள் போட்டு தயாராக இருங்கள்" என தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், அவர்களை நம்ப வைக்க மொட்டை அடித்துள்ள பெண்கள் மற்றும் பணம் உள்ள புகைப்படங்களை வாட்சப்பில் அனுப்பியுள்ளார். </p><p>

இதனை நம்பி, 18 பேர் மொட்டை அடிக்க தயாராக இருந்த நிலையில், 3 பேர் உள்ளூரில் உள்ள மொட்டை அடிக்கும் நபர்களை அழைத்து மொட்டை அடித்து கொண்டனர். </p><p>

இதனையடுத்து, செல்போனில் அழைத்த நபருக்கு மீண்டும் அழைத்த போது அவர்களின் போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. </p><p>

இதன்பின்னர், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண்கள், ஆத்தூர் காவல்நிலையில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T08:18:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்ம ராசியில் நுழையப்போகும் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-peyarchi-1785223975"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-peyarchi-1785223975</id>
            <summary type="text">நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
</p><p>
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
</p><p>
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் புதன் ஒரு முக்கியமான கிரக மாற்றத்திற்கு ஆளாகப்போகிறார். </p><p>

கிரகங்களின் இளவரசரான புதன் கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்குள் நுழையப்போகிறார்.</p><p>

அந்தவகையில், சிம்ம ராசிக்கு புதன் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.&nbsp;</p><p></p><h2>மிதுனம்
</h2><ul><li>இக்காலத்தில் நேரடி நன்மைகள் கிடைக்கும்.
</li><li>முதலீடுகள் பெரும் வெற்றியைத் தரும்.</li><li>
இலக்குகளை அடைய வேகமாக இருப்பார்கள்.
</li><li>வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை தரும்.
</li><li>அங்கீகாரமும், புகழும் தேடி வரும்.</li><li>
உறவுகளில் சாதகமான மாற்றங்கள் நிகழும்.</li><li>
வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சியை தரும்.
</li><li>வாழ்க்கையில் சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fb4dd6c-3110-4b43-bc1a-67346b2c185e/26-6a685c405f418.webp' />
</p><h2>
சிம்மம் </h2><ul><li>
வாழ்க்கையில் நேர்மறையான பலன் கிடைக்கும்.
</li><li>முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும்.</li><li>
பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பணம் கிடைக்கும்.</li><li>
வியாபாரத்தை விரிவாக்க ஏற்ற காலமாக இருக்கும்.</li><li>
விரும்பிய வேலையைப் பெறுவார்கள்.
</li><li>தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.</li><li>
குடும்பத்தில் அமைதி நிலவும்.</li><li>
சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.</li><li>
பேச்சாற்றல் பெரிதும் மேம்படும்.
</li><li>இக்காலத்தில் நிதி நிலை வலுவடையும்.
</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/958261b1-9fc5-49e6-a9e2-5933a894f1aa/26-6a685c4116b70.webp' />
</p><h2>
தனுசு
</h2><ul><li>நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
</li><li>வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும்.
</li><li>மற்றவர்களிடம் சிக்கியுள்ள பணம் கைக்கு வந்து சேரும்.</li><li>
வியாபாரிகள் ஒப்பந்தங்கள் மூலம் லாபத்தை பெறுவார்கள்.
</li><li>வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் வாய்ப்புள்ளன.</li><li>
வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.</li><li>
முதலீட்டிலிருந்து லாபம் கிடைக்கும்.</li><li>
குழந்தைகள் விடயத்தில் நல்ல செய்தி கிடைக்கும்.</li><li>
ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c4c23f9-3caa-49f2-93be-4e57b12f0409/26-6a685c41bdb00.webp' /></p><p>
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T07:37:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் சிக்கிய பிரித்தானிய தம்பதி: 15 ஆண்டுகள் சிறை..என்ன நடந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-couple-arrested-in-australia-find-ketamine-1785224126"></link>
            <id>https://news.lankasri.com/article/british-couple-arrested-in-australia-find-ketamine-1785224126</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் வாடகைக் காரின் டிக்கியில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய தம்பதி கைது செய்யப்பட்டனர். 

போதைப்பொருள்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் வாடகைக் காரின் டிக்கியில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய தம்பதி கைது செய்யப்பட்டனர். </p><p>

</p><h2>போதைப்பொருள்&nbsp;</h2><p>அவுஸ்திரேலியாவில் தம்பதி குறித்து அண்டை வீட்டார் புகார் அளித்ததன் பேரில், ஒரு குடியிருப்பு பகுதியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4f6ade9-c680-421b-a6c4-62f1bc5dca37/26-6a685c186c8fe.webp' /></p><p></p><p>
அப்போது வாடகைக் காரின் டிக்கியில் கெட்டமைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் போதைப்பொருள் வைத்திருந்ததாக பிரித்தானிய தம்பதி கைது செய்யப்பட்டனர். </p><p>அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.&nbsp;</p><h2>பிரித்தானிய தம்பதி</h2><p>
முதற்கட்ட விசாரணையில், குறித்த பிரித்தானிய தம்பதி 30 வயது ஜாக் ஃபாரெல்லி மற்றும் இரண்டு குழந்தைகளின் தாயான 23 வயது டெமி மெக்டெய்ட் என தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/485d45d4-722b-435d-97a8-35ec4ea6889d/26-6a6873ca74fce.webp' /></p><p>

மேலும், இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டது சுமார் 107 கிலோகிராம் அளவிலான தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் என்றும், அதன் மதிப்பு 5.7 மில்லியன் பவுண்ட்கள் எனவும் தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86ad5d97-c0c7-468b-a36f-27eb7f97030e/26-6a6873cb2375f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T07:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகு தொடர்பில் ட்ரம்பிடம் கோரிக்கை வைத்த இஸ்ரேல் முன்னாள் தளபதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/israeli-ex-generals-urge-trump-1785223302"></link>
            <id>https://news.lankasri.com/article/israeli-ex-generals-urge-trump-1785223302</id>
            <summary type="text">மேற்குக் கரையில் குடியேற்றவாசிகளின் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துமாறு நெதன்யாகுவை வலியுறுத்தும்படி ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இஸ்ரேல் முன்னாள் தளபதிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்குக் கரையில் குடியேற்றவாசிகளின் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துமாறு நெதன்யாகுவை வலியுறுத்தும்படி ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இஸ்ரேல் முன்னாள் தளபதிகள் உட்பட நூற்றுக்கணக்கான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><h2>உதவக்கூடிய ஒரே நபர்</h2><p>
</p><p>செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றில், ஏறக்குறைய 600 முன்னாள் அதிகாரிகள் ட்ரம்ப்பிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ce89b54-7d05-4537-89d7-89c989583f46/26-6a685bae066b6.webp' /></p><p> </p><p>மேற்குக் கரையில் வன்முறை அதிகரிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பேரழிவையும், அதனால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய விளைவுகளையும் தவிர்க்க உதவக்கூடிய ஒரே நபர் அவர்தான் என்று அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தனர். </p><p>மேற்குக் கரையில் தீவிரமடைந்து வரும் வன்முறையை விரைவாகவும் உறுதியாகவும் கட்டுப்படுத்தாவிட்டால், அது அப்பகுதி முழுவதிலும் பெரும் பதற்றத்தைத் தூண்டக்கூடும்; அத்துடன், இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் அப்பகுதியில் அமெரிக்காவின் நலன்கள் ஆகிய இரண்டின் மீதும் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><p> </p><p>மேலும், இந்தத் துயரத்தைத் தவிர்க்க உங்களைத் தவிர வேறு யாராலும் முடியாது என்பதே எங்கள் தொழில்முறை சார்ந்த கணிப்பு என்றும் ட்ரம்பிடம் கோரியுள்ளனர். </p><p>CIS என அறியப்படும் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான தளபதிகள் என்பது ஓய்வுபெற்ற 550-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய ராணுவ கர்னல்கள் மற்றும் ஜெனரல்கள், அத்துடன் மொசாத், ஷின் பெட், இஸ்ரேலியக் காவல்துறை, வெளிவிவகார அதிகாரிகள் மற்றும் பிற பிரிவுகளில் அதற்கு இணையான பதவிகளை வகித்தவர்களை உள்ளடக்கிய சியோனிச இயக்கமாகும். </p><p>யூத மக்களின் வலுவான ஜனநாயக இல்லமாக இஸ்ரேலின் எதிர்காலத்தை உறுதி செய்வதே இந்த அமைப்பின் குறிக்கோளாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d1dbf62-2bad-4b86-9a70-b91784cc6623/26-6a685baea9d27.webp' /></p><p> குடியேறிகள் மற்றும் இஸ்ரேலியப் படைகளைச் சட்டத்தின் கண்காணிப்பிலிருந்து பாதுகாப்பது உட்பட, இக்குழப்பத்தின் பெரும்பகுதியை அரசாங்கத்தைச் சேர்ந்த சிலரே திட்டமிட்டு நடத்துகிறார்கள் என்பது ரகசியமான ஒன்றல்ல என்றும் CIS பதிவு செய்துள்ளது.</p><h2>ஏழாவது பயணம்</h2><p> </p><p>மேலும், யூதக் குடியேறிகளின் பயங்கரவாதச் செயல்பாடுகள் அதிகரித்து வருவது, அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதல் மற்றும் அதனால் பல முனைகளிலும் ஏற்பட்ட விளைவுகளை விடவும் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. </p><p>வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பில், நெதன்யாகுவிடம் இந்த விவகாரத்தை எழுப்புமாறு அந்த அமைப்பு ட்ரம்ப்பை வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3487388b-375c-4963-a476-ae629b01006a/26-6a685bad33747.webp' /></p><p> </p><p>ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் வெள்ளை மாளிகைக்கு மேற்கொள்ளும் தனது ஏழாவது பயணத்தின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமையன்று ட்ரம்ப்பை நெதன்யாகு சந்திக்கவுள்ளார். </p><p>மேலும், ஈரானுக்கு ஆதரவாக ஹவுதிகள் செங்கடலை முற்றுகையிட்டுள்ளதுடன், ஈரான் மீதான தாக்குதலை சமீபத்தில் தீவிரப்படுத்தியதுடன், திடீரென்று அமெரிக்க இராணுவம் நிறுத்தியதன் சில நாட்களில் நெதன்யாகு அமெரிக்கா பயணப்படுகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T07:19:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவது எத்தனை பேர்? வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/givt-reveals-how-many-indians-income-above-100cr-1785222842"></link>
            <id>https://news.lankasri.com/article/givt-reveals-how-many-indians-income-above-100cr-1785222842</id>
            <summary type="text">இந்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. </p><h3>

இந்தியாவில் அதிகரிக்கும் பணக்காரர்கள்</h3><p>

நாட்டில் செல்வம் குவிந்திருப்பது மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முராரி லால் மீனா எழுப்பிய கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830c8f99-6f46-4b5d-95e6-a5329ccef390/26-6a6856bb946c2.webp' /></p><p>

அரசு தரப்பில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவதாக அறிவிக்கும் நபர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>வருமான வரி செலுத்துவதன் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இந்த அறிக்கையின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியவர்களின் எண்னிக்கை 415 ஆக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் 576 ஆக அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b5881f7-6259-421f-bea3-39dfcbd4560d/26-6a6856bc450e5.webp' /></p><p>

2021-22 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 142 ஆகவும், 2022-23 நிதியாண்டில் 301 ஆகவும், 2023-24 நிதியாண்டில் 284 ஆகவும் இருந்துள்ளது. </p><p> 

இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ளது. </p><p>

ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, 86.7 பில்லியன் டொலர் நிகர மதிப்புடன் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார். </p><p>

அவரைத் தொடர்ந்து கௌதம் அதானி 85.5 பில்லியன் டொலருடனும், சாவித்ரி ஜிண்டால் மற்றும் அவரது குடும்பத்தினர் 37.5 பில்லியன் டொலருடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T07:14:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் பந்திலேயே பூரன் அவுட்: அதிரடி காட்டிய ஜேக்ஸ்..கடைசி பந்தில் த்ரில் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mi-london-beat-southern-brave-by-three-wickets-1785221139"></link>
            <id>https://news.lankasri.com/article/mi-london-beat-southern-brave-by-three-wickets-1785221139</id>
            <summary type="text">The Hundred போட்டியில் MI லண்டன் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு சௌதர்ன் பிரேவ் அணியை வீழ்த்தியது.சௌதர்ன் பிரேவ் 129 ஓட்டங்கள்
தி ரோஸ் பௌல் மைதானத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Hundred போட்டியில் MI லண்டன் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு சௌதர்ன் பிரேவ் அணியை வீழ்த்தியது.</p><h2>சௌதர்ன் பிரேவ் 129 ஓட்டங்கள்</h2><p>
தி ரோஸ் பௌல் மைதானத்தில் நடந்த The Hundred போட்டியில் MI லண்டன் மற்றும் சௌதர்ன் பிரேவ் அணிகள் மோதின.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Elite in the field as usual, Nathan Sowter! 👏<a href="https://x.com/hashtag/MILondon?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MILondon</a> 💙💚 <a href="https://t.co/89kOlugSTB">pic.twitter.com/89kOlugSTB</a></p>&mdash; MI London (@MILondonCricket) <a href="https://x.com/MILondonCricket/status/2081829043838570504?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p></p><p>


முதலில் ஆடிய சௌதர்ன் பிரேவ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் எடுத்தது. ஜேமி ஸ்மித் 49 ஓட்டங்களும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
ட்ரெண்ட் போல்ட், டாம் கர்ரன், ரிச்சர்ட் க்ளீஸன் மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

பின்னர் களமிறங்கிய MI லண்டன் அணியில் ஸ்டோய்னிஸ் பந்துவீச்சில் ஜேம்ஸ் வின்ஸ், நிக்கோலஸ் பூரன் டக்அவுட் ஆகினர். </p><p>

அடுத்து வந்த சாம் கர்ரன், வில் ஜேக்ஸுடன் கைகோர்த்து ஓட்டங்கள் சேர்த்தார். 

அதிரடி காட்டிய வில் ஜேக்ஸ் அரைசதம் அடிக்க, சாம் கர்ரன் 30 ஓட்டங்களில் அவுட் ஆனார்.</p><h2>வில் ஜேக்ஸ் அதிரடி </h2><p>பின்னர் வில் ஜேக்ஸ் (Will Jacks) 41 பந்துகளில் 54 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/032c492b-0cc1-4808-a933-35fbd37838c4/26-6a6853aa2fc56.webp' /></p><p>

அதனைத் தொடர்ந்து ஷெர்பானே ரூதர்போர்ட் 12 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 21 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
</p><p>
டாம் கர்ரன் 7 ஓட்டங்களிலும், ரஷித் கான் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.</p><p>
கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், ஓலி போப் இலக்கினை எட்டி வெற்றி பெற வைத்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A big W on the road! 🏆<a href="https://x.com/hashtag/MILondon?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MILondon</a> 💙💚 <a href="https://t.co/cudhN5HlEY">pic.twitter.com/cudhN5HlEY</a></p>&mdash; MI London (@MILondonCricket) <a href="https://x.com/MILondonCricket/status/2081844162123518385?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T06:48:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்திய இளம்பெண்ணொருவர் சுட்டுக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-girl-shot-death-in-canada-1785215098"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-girl-shot-death-in-canada-1785215098</id>
            <summary type="text">கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவரை சுட்டுக்கொன்ற நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் அதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவரை சுட்டுக்கொன்ற நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் அதிரடியாக அவரைக் கைது செய்துள்ளார்கள்.
</p><h3>
இந்திய இளம்பெண்ணொருவர் சுட்டுக்கொலை
</h3><p>
வெள்ளிக்கிழமை காலை 7.23 மணியளவில், கனடாவின் ரொரன்றோவில், நவ்நீத் கௌர் (26) என்னும் இளம்பெண் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77fec185-b89a-4efa-a1d9-bb262e36ad6c/26-6a68387b8382a.webp' /></p><p>

கௌரை பின் தொடர்ந்த ஒருவர், திடீரென அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
</p><p>
தகவலறிந்த பொலிசார், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் அதிரடியாக அவரைக் கைது செய்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஷரன்ஜீத் சிங் (37) என்றும் அவர் பிராம்டனைச் சேர்ந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
அவர் ஏற்கனவே கௌருக்கு அறிமுகமானவரா, எதனால் கௌரை அவர் சுட்டார் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.
</p><p>
சிங் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T06:41:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் மனைவிக்கு கொலை மிரட்டல்... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-targets-melania-trump-by-assassination-threat-1785219598"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-targets-melania-trump-by-assassination-threat-1785219598</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் மனைவி மெலானியாவுக்கு ஈரான் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் மனைவி மெலானியாவுக்கு ஈரான் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.</p><h3>

ட்ரம்ப் மனைவிக்கு கொலை மிரட்டல்...
</h3><p>
ஈரான் ஊடகங்களில், ‘எங்கே வைத்து மெலானியாவை கொலை செய்யலாம்’ என்னும் தலைப்புடன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c808005d-f1ef-4db3-a49c-f7d1448156dc/26-6a684a112eb40.webp' /></p><p>

அந்த வீடியோவில் பேசுபவர், மெலானியா ஃபேஷன் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்றும், ஆகவே, அவர் ஆடைகள் வாங்கச் செல்லும் இடங்களில் வைத்து அவரைக் கொல்லலாம் என்னும் ரீதியிலும் பேசுகிறார்.&nbsp;</p><p></p><p>

ட்ரம்புக்கு ஈரான் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் வருவது புதிதல்ல. என்றாலும், இம்முறை, மெலானியா எங்கெங்கு ஆடைகள் வாங்கச் செல்வார், அவரது உதவியாளர்கள் யார் யார் என்பது போன்ற தெளிவான விளக்கங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த வீடியோ அச்சத்தை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e79e515-e934-4195-a9ef-bea35d47548a/26-6a684a10725dc.webp' /></p><p>
அதாவது, மெலானியாவின் உதவியாளர்கள் மூலம் அவர் இருக்கும் இடம் குறித்து அறிந்துகொண்டு, அவர் ஆடை வாங்கும் இடத்தில், அவருக்கு விருப்பமான நிறுவன ஆடைகளில் நச்சை தெளித்து கொல்லலாம் என்னும் அளவுக்கு அந்த வீடியோவில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
கடைசியாக, ட்ரம்ப் மெலானியா தம்பதியரின் மகனான பேரன் ட்ரம்புக்கு ஒரு செய்தியை சொல்வதுடன் வீடியோ முடிவடைகிறது.</p><p>

’பேரன் ட்ரம்ப், இது துவக்கம்தான், எங்களுக்காக காத்திரு’ என்கிறது அந்த செய்தி!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T06:20:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ச்சியாக 5 விக்கெட் மெய்டன் ஓவர் - வரலாற்று சாதனை படைத்த ஜஸ்டின் கிரீவ்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/justin-greaves-record-5-consecutive-wicket-maidens-1785218292"></link>
            <id>https://news.lankasri.com/article/justin-greaves-record-5-consecutive-wicket-maidens-1785218292</id>
            <summary type="text">&amp;nbsp;மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.

தொடர்ச்சியாக 5 விக்கெட் மெய்டன் ஓவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
</p><h3>
தொடர்ச்சியாக 5 விக்கெட் மெய்டன் ஓவர்
</h3><p>
2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி, மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ளது. </p><p>

தரூபாவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் 311 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ffd7314-3c81-4ccb-97de-691c3c955e94/26-6a6844f698720.webp' /></p><p>

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 282 குவித்து ஆல் அவுட் ஆனது. </p><p>

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஆல் ரவுண்டர் ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட்களை கைப்பற்றியதோடு எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 11 ஓவர்களை வீசி, 27 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99ce26c1-2241-4610-979b-95ba0a4cfcd6/26-6a6844f5e1c4f.webp' /></p><p>

இதில், 6 ஓவரில் ஓட்டங்கள் எதுவும் வழங்காமல் மெய்டன் ஓவர் வீசியதோடு, தொடர்ச்சியாக 5 மெய்டன் ஓவர்கள் வீசி 5 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். </p><p>

2016 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தொடர்ச்சியாக 4 விக்கெட் மெய்டன் ஓவர்கள் வீசியதே சாதனையாக இருந்தது. </p><p>

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவே அவரது முதல் 5 விக்கெட் சாதனையாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T06:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளின் செங்கடல் முற்றுகை... ஆசியாவில் மோசமடையும் எரிபொருள் நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/in-asia-worsens-energy-crisis-1785216793"></link>
            <id>https://news.lankasri.com/article/in-asia-worsens-energy-crisis-1785216793</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் மற்றொரு முக்கியமான கடல்வழிப் பாதை முற்றுகையை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த ஆறு மாதங்களில் தங்களின் இரண்டாவது பெரிய எரிபொருள் நெருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் மற்றொரு முக்கியமான கடல்வழிப் பாதை முற்றுகையை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த ஆறு மாதங்களில் தங்களின் இரண்டாவது பெரிய எரிபொருள் நெருக்கடியைத் தவிர்க்க ஆசிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.</p><h2>ஏமனின் ஹவுதிகள்</h2><p>
</p><p>அமெரிக்க இராணுவத்தின் ஹார்முஸ் நீரிணை முற்றுகை மற்றும் ஹவுதிகளின் செங்கடல் முற்றுகை ஆகியவையைத் தவிர்த்து தற்போது வளைகுடா எண்ணெய் தடையின்றிச் செல்வதற்கு சூயஸ் கால்வாய் மட்டுமே முழுமையாகத் திறந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/767e84cc-1ae8-4124-8ec7-5cd7e9f8aa2d/26-6a6843c2d5feb.webp' /></p><p> </p><p>எண்ணெய் இறக்குமதியில் 90 சதவீதம் வரையில் மத்திய கிழக்கு நாடுகளையே நம்பியுள்ள ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் பாப் அல்-மண்டப் நீரிணை வழியாகச் செல்லும் சவுதி அரேபியக் கப்பல் போக்குவரத்தை ஏமனின் ஹவுதிகள் முடக்கியதைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. </p><p>இஸ்ரேல் தாக்குதலை அடுத்து மார்ச் மாதத்தில் ஹார்முஸ் நீரிணையை ஈரான் கப்பல் போக்குவரத்திற்கு மூடியதால் ஆசியாவின் பல நாடுகள் இன்னும் அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன; இச்செயல், மத்திய கிழக்கு கச்சா எண்ணெயின் குறைந்து வரும் இருப்பைப் பெறுவதற்காக அப்பிராந்தியத்திலுள்ள அரசாங்கங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் நிலைக்குத் தள்ளியது. </p><p>ஜப்பான் உட்பட அதன் அண்டை நாடுகள் பெட்ரோலியத்தின் விலையைக் குறைவாக வைத்திருக்க எரிபொருள் மானியங்களுக்காக ஏற்கனவே பல பில்லியன் கணக்கில் செலவிட்டு வருகின்றன; இது அந்தந்த நாடுகளின் அரசு வரவு-செலவுத் திட்டங்களைப் பெரிதும் பாதிக்கிறது.</p><p></p><p> </p><p>இதற்கிடையில், இறக்குமதிச் செலவுகள் அதிகரித்திருப்பது பணவீக்கத்தை உயர்த்தியுள்ளது; இது ஜப்பான் மற்றும் இந்தோனேசியா போன்ற பிராந்தியத்தின் முக்கிய நாடுகளின் அரசாங்கங்கள் மீது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>தற்போது, ​​செங்கடல் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அழுத்தத்தை அதிகரிக்கவுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதற்குப் பதிலளிக்கும் விதமாக, மார்ச் மாதத்தில் சவுதி அரேபியா தனது வளைகுடாப் பகுதி எண்ணெய் ஏற்றுமதிக்கான வழித்தடத்தை மாற்றியமைத்தது; அதன்படி, நாட்டின் கிழக்குக் கடற்கரையிலிருந்து செங்கடலில் உள்ள யான்பு (Yanbu) துறைமுகத்திற்கு எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது.</p><h2>அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக</h2><p> </p><p>தற்போது சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை இத்துறைமுகத்தின் வழியாகவே கையாளப்படுகின்றன.</p><p> சவுதி அரேபியாவின் எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடான சீனா மற்றும் அதனைத் தொடர்ந்து இந்தியா, ஜப்பான், தென் கொரியா போன்ற பல ஆசிய நாடுகளுக்கு இது ஒரு உயிர்நாடியாக அமைந்தது. </p><p>இதனிடையே, சில ஜப்பானிய மற்றும் தென் கொரிய சுத்திகரிப்பு நிறுவனங்கள், ஹவுதிகளின் அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக, சரக்குகளை சூயஸ் கால்வாய் வழியாக வடக்கே மத்திய தரைக்கடல் மற்றும் ஆப்பிரிக்காவைச் சுற்றி திருப்பிவிட முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80dda18a-ac74-455d-977a-748ec27f91be/26-6a6843c220098.webp' /></p><p> </p><p>ஆனால், இந்த நீண்ட மாற்றுப் பாதையால் பெரும் செலவுகள் ஏற்படுகின்றன. 
மத்திய தரைக்கடல் மற்றும் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாக எண்ணெயைக் கொண்டு செல்வது, பெரும்பாலான ஆசிய இறக்குமதியாளர்களுக்குப் பயண நேரத்தை இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரிப்பதோடு, சரக்குக் கட்டணம் மற்றும் எரிபொருள் செலவுகளையும் மேலும் உயர்த்தும். </p><p>தற்போதைக்கு, இதைப் பலர் ஏற்கத் தயாராக இருக்கக்கூடிய ஒரு செலவாகும். ஹவுதிகள் கடந்த வாரம் செங்கடலிலிருந்து வெளியேறிய குறைந்தது இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்களைக் குறிவைத்ததுடன், இந்த வாரம் சவுதியின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீதும் தாக்குதல்களை நடத்தினர். </p><p>ஹவுதிகளின் அச்சுறுத்தலால் சர்வதேச கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், பாப் அல்-மண்டப் (Bab al-Mandab) வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை பல மாதங்களிலேயே மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T05:31:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயிற்றை சுத்தம் செய்ய உதவும் இயற்கை பானங்கள்.., காலையில் குடிக்கலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-morning-drinks-for-clean-stomach-in-tamil-1785214043"></link>
            <id>https://news.lankasri.com/article/5-morning-drinks-for-clean-stomach-in-tamil-1785214043</id>
            <summary type="text">மனித உடலின் இயக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தூய்மையான தண்ணீரே மிகச் சிறந்த மற்றும் அவசியமான பானமாகும்.

ஆனால் அதனுடன் சில இயற்கை பொருட்களை சேர்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனித உடலின் இயக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தூய்மையான தண்ணீரே மிகச் சிறந்த மற்றும் அவசியமான பானமாகும்.</p><p>

ஆனால் அதனுடன் சில இயற்கை பொருட்களை சேர்த்து குடித்தால், செரிமான ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.</p><p>

அடிக்கடி மலச்சிக்கல், வாய்வு, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், காலையில் வெறும் வயிற்றில் சில இயற்கை பானங்களை குடிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
</p><p>
அந்தவகையில், வயிற்றை சுத்தம் செய்ய உதவும் சில இயற்கை பானங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8bb7772-1055-4398-a909-7ef07524ccc2/26-6a683553ca0db.webp' /></p><h2>1. எலுமிச்சை - தேன் நீர்</h2><p>

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். இது செரிமானத்தை தூண்டி, மலச்சிக்கல், வாய்வு மற்றும் வயிற்று உப்புசத்தை குறைக்க உதவும். மேலும் சரும பொலிவையும் அதிகரிக்க உதவுகிறது.</p><h2>

2. நெய் கலந்த வெதுவெதுப்பான நீர்
</h2><p>ஒரு டீஸ்பூன் நெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது குடல் இயக்கத்தை சீராக்கவும், கழிவுகள் எளிதாக வெளியேறவும் உதவும். இருப்பினும், உயர் கொலஸ்ட்ரால் அல்லது ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இதை குடிக்க வேண்டும்.</p><p></p><p>
</p><h2>
3. சைலியம் (இசப்கோல்)
</h2><p>ஒரு ஸ்பூன் சைலியத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனைகளில் நிவாரணம் கிடைக்கும். இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.
</p><h2>
4. சோம்பு அல்லது சீரக நீர்
</h2><p>சிறிதளவு சோம்பு அல்லது சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை காலையில் குடிக்கலாம். இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், அசிடிட்டி, வாய்வு மற்றும் வயிற்று உப்புசத்தை குறைக்க உதவும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T04:52:47+00:00</updated>
        </entry>
    </feed>
