<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-25T17:34:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் வர்த்தகப் போர்... திருப்பியடித்த கார்னி: 700 அமெரிக்கப் பொருட்கள் மீது வரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-to-impose-tariffs-on-1787674412"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-to-impose-tariffs-on-1787674412</id>
            <summary type="text">Canada announced retaliatory tariffs on 700 US goods: 20 பில்லியன் டொலர் மதிப்பிலான 700 அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா கூடுதல் வரிகளை அறிவித்தது.
கனட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada announced retaliatory tariffs on 700 US goods: 20 பில்லியன் டொலர் மதிப்பிலான 700 அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா கூடுதல் வரிகளை அறிவித்தது.
</p><p>கனடா செவ்வாய்க்கிழமையன்று, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான 700 அமெரிக்கப் பொருட்கள் மீது 15 முதல் 50 சதவீதம் வரையிலான கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளது.</p><h2>சுமார் 700 வகை</h2><p>
</p><p>சனிக்கிழமையன்றே கனடாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரிகள் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், கனடா அறிவித்துள்ள வரிகள் செப்டம்பர் 8 முதல் அமுல்படுத்தப்படும். </p><p>கனடா விதிக்கும் இறக்குமதி வரிகள் அமெரிக்காவின் வரி விகிதங்களுக்கு இணையாக இருக்கும் என்றும், அவை எஃகு, பால் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகளைப் பாதிக்கும் என்றும் கனடிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், அழகுசாதனப் பொருட்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் வரை, சுமார் 700 வகையான அமெரிக்கப் பொருட்களைப் பாதிக்கும் வகையிலான சமமான மதிப்பிலான பதிலடி வரி விதிப்புத் திட்டத்தை ஃபெடரல் அரசு வகுத்து வருகிறது.</p><p> 27.6 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது, அப்பொருட்களைப் பொறுத்து 15 சதவீதம், 25 சதவீதம் மற்றும் 50 சதவீதம் என்ற விகிதங்களில் சுங்க வரிகள் விதிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1de0a6b8-efae-40b0-927d-aa488d6446a4/26-6a8dbf2e31818.webp' /></p><p> </p><p>இந்த வரிகள் செப்டம்பர் 8 முதல் அமுலுக்கு வரும். நிதி அமைச்சர் ஃபிரான்சுவா-ஃபிலிப் ஷாம்பேன், தொழில் துறை அமைச்சர் மெலனி ஜோலி, வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பாட்டி ஹஜ்டு மற்றும் தெற்கு ஒன்ராறியோவிற்கான ஃபெடரல் மேம்பாட்டு முகமைக்கு பொறுப்பான அமைச்சர் இவான் சாலமன் ஆகியோர் ஒருங்கிணைந்து செவ்வாய்க்கிழமை ஒட்டாவாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். </p><p>பல வாரங்களாக நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், கனடாவும் அமெரிக்காவும் ஒரு இறுதி நேர வர்த்தக ஒப்பந்தத்தை எட்டத் தவறியதால், பல பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரிகளை விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய நடவடிக்கை வெள்ளிக்கிழமை இரவு நடைமுறைக்கு வந்தது. </p><p>வரிகளுக்கு உட்பட்ட பொருட்களில் கனடா-அமெரிக்கா-மெக்ஸிகோ ஒப்பந்தத்தின் (CUSMA) கீழ் அடங்கும் பொருட்களும் கூட இடம்பெற்றுள்ளன. அமெரிக்க மதுபானங்கள் மீதான மாகாண அளவிலான தடை உள்ளிட்ட, பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கர்களால் விவரிக்கப்படும் வர்த்தகக் கொள்கைகள் காரணமாக, 1930-ஆம் ஆண்டின் சுங்கவரிச் சட்டத்தின் (Tariff Act) பிரிவு 338-இன் கீழ் புதிய சுங்கவரிகளை விதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளுக்கு இணையாக அமையும் வகையிலேயே இந்த வரி விதிக்கப்படவுள்ள பொருட்களின் பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு பொருளின் மீதான வரி விகிதமும் அதே பொருட்களுக்கான அமெரிக்க வரி விகிதத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். </p><p>உதாரணமாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகள் தற்போது 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயரும்; அதேபோல, தளபாடங்கள் மற்றும் ஆடைகள் மீதான வரிகளும் உயர்த்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a11895c3-371b-4338-b7b3-9b793bb630e9/26-6a8dbf2ed8f76.webp' /></p><p> </p><p>50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் மற்ற குறிப்பிடத்தக்க பொருட்கள் பின்வருமாறு:

வாசனைத் திரவியங்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள், ஸ்மார்ட்போன்கள், பால் பொருட்கள், மேசை மற்றும் சமையலறைப் பொருட்கள், ஒட்டுப்பலகைப் பொருட்கள், காகிதப் பொருட்கள், தேன், கரும்புப்பாகு மற்றும் மால்ட் சாறு, கதவுகள், ஜன்னல்கள் மற்றும் சட்டங்கள், கத்தி, முள் கரண்டி வகைகள் இதில் அடங்கும். </p><p>
25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் பின்வருவன அடங்கும்:

பல்வேறு வகையான கடல் உணவுப் பொருட்கள், பெரிய அளவிலான சமையலறை உபகரணங்கள், சீஸ் மற்றும் தயிர் சார்ந்த பொருட்கள், தரைவிரிப்புகள் மற்றும் ஜவுளிப் பொருட்கள். அதே சமயம், 15 சதவீத வரி விதிக்கப்படும் பொருட்களின் குறுகிய பட்டியலில் குளிரூட்டும் இயந்திரங்களும் அடங்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T16:11:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் திரைப்பட பாணியில் சம்பவம்: பொலிஸார் கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-dies-after-car-chase-in-warwickshire-uk-1787658602"></link>
            <id>https://news.lankasri.com/article/man-dies-after-car-chase-in-warwickshire-uk-1787658602</id>
            <summary type="text">Man dies after car chase in warwickshire uk: பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

இங்கிலாந்தின் வார்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man dies after car chase in warwickshire uk: பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
</p><p>
இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் காவல்துறை அதிகாரிகள் துரத்திச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.&nbsp;</p><h2>Audi காரினை விரட்டிச் சென்ற&nbsp;காவல்துறை</h2><p>

இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள Stratford-upon-Avonயில் காவல்துறையினர் ஒரு கருப்பு Audi காரினை விரட்டிச் சென்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ab9006a-b7c7-4f31-bc62-7e1ae0c66926/26-6a8d86222df60.webp' /></p><p></p><p> 

பர்மிங்காம் சாலையில் அந்த கார் நிற்க தவறியதைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த துரத்தலை தொடங்கினர்.</p><p>

திரைப்படத்தை விஞ்சும்படியான இந்த துரத்தலின்போது, குறித்த Audi கார் மற்றொரு வெள்ளைநிற Ford Puma கார் மீது மோதியது.&nbsp;</p><h2>ஒருவர் மரணம், மூவர் படுகாயம்&nbsp;</h2><p>

இதில் Audi காரினை இயக்கிய ஆண் நபர் உயிரிழந்தார். மேலும், Ford காரின் சாரதி உட்பட மூவர் காயமடைந்தனர்.&nbsp;</p><p> 

இதனையடுத்து, இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் துணை மருத்துவ அதிகாரிகள் உட்பட இரண்டு வான்வழி ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
</p><p>
இதற்கிடையில், துரத்தலின்போது மேலும் பல வாகனங்களும் சேதமடைய, காவல்துறையின் கண்காணிப்பு அமைப்பான Independent Office for Police Conduct இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d9af39b-1a65-47e1-903b-e9ea082ea579/26-6a8d8622eec14.webp' /></p><p>இச்சம்பவம் குறித்து உயிரிழந்த நபர் மற்றும் அப்பெண்மணி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.&nbsp;</p><h2>காவல்துறை&nbsp;</h2><p>

துரத்தல் நடவடிக்கையின்போது வேறு பல வாகனங்களும் சேதமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> காவல்துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பான சுயாதீன காவல்துறை நடத்தை அலுவலகத்திடம் (IOPC) ஒப்படைக்கப்பட்டுள்ளன. </p><p>

இதுகுறித்து கண்காணிப்பாளர் ஸ்டீவ் ஃபிளாவெல் கூறுகையில், "இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன; இக்கடினமான சூழலில் அவர்களுக்குத் தேவையான சிறப்பு உதவிகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.

காவல்துறையின் நடவடிக்கையைத் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டதால், நாங்கள் கட்டாய நடைமுறையின்படி இந்த விவகாரத்தை 'சுயாதீன காவல்துறை நடத்தை அலுவலகத்திடம்' பரிந்துரைத்துள்ளோம்" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b51b6433-28cc-4d95-a609-6434781082ee/26-6a8d8623a0c38.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T15:13:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை, இந்தியாவுக்கு மேல் புள்ளிப்பட்டியலில் வங்காளதேசம்: தலைவர் ஹபிபுல் பஷர் பெருமிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/habibul-bashar-said-we-are-in-very-good-position-1787670301"></link>
            <id>https://news.lankasri.com/article/habibul-bashar-said-we-are-in-very-good-position-1787670301</id>
            <summary type="text">&amp;nbsp;மரியாதையுடனேயே நாங்கள் தாயகம் திரும்புகிறோம் என வங்காளதேசத் தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். 

வங்காளதேசத் தேர்வுக்குழுத் தலைவரான ஹபிபு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மரியாதையுடனேயே நாங்கள் தாயகம் திரும்புகிறோம் என வங்காளதேசத் தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p> 

வங்காளதேசத் தேர்வுக்குழுத் தலைவரான ஹபிபுல் பஷர், அவுஸ்திரேலியாவில் இருந்து மரியாதையுடன் தாயகம் திரும்பியுள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>வங்காளதேச அணி</h2><p>

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய வங்காளதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/034050a8-84d2-4388-b719-7589113865ab/26-6a8db075cb11e.webp' /></p><p></p><p>

இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்காளதேச அணி நான்காவது இடத்தில் உள்ளது. </p><p>

இதுகுறித்து பேசிய வங்காளதேச தேர்வுக்குழுத் தலைவர் ஹபிபுல் பஷர் (Habibul Bashar), ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக தகுதிபெறும் வகையில் தங்கள் அணி நல்ல நிலையில் இருப்பதாக நம்புவதாக கூறுகிறார்.</p><h2>

ஹபிபுல் பஷர்</h2><p>மேலும் அவர் கூறுகையில், "எங்களுக்கு இன்னும் 5 மிக முக்கியமான டெஸ்ட் போட்டிகள் உள்ளன; எனவே, அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல; பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய டெஸ்ட் போட்டிகள் அல்லது அதற்கு முந்தைய போட்டிகளைப் பார்த்தால், நாங்கள் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறோம்.
</p><p>
ஒரு டெஸ்ட் அணியாக நாங்கள் மிக சிறந்த அணியாக மாறிவிட்டோம் என்று இப்போதே என்னால் கூற முடியாது. நாங்கள் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது என்றே நான் கருதுகிறேன். 

ஆனால், நாங்கள் எங்களுக்கு என ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முடிந்துள்ளது. </p><p>

அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துத் திரும்பும்போது வங்காளதேசம் எடுத்துச் செல்லும் விடயம் ஒன்று உள்ளது; அது நாங்கள் இங்கு வருவதற்கு முன்பே பேசிய ஒன்றுதான்.

அதாவது தாயகம் திரும்பும்போது ஒரு குறிப்பிட்ட அளவிலான மரியாதையை தக்கவைத்துக் கொண்டு திரும்ப வேண்டும் என்பதுதான் அது. 


அந்த மரியாதையுடனேயே நாங்கள் தாயகம் திரும்புகிறோம் என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்தார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14e660ce-ba29-483b-bd62-a7f3221191a8/26-6a8db16de1cae.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T15:12:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியாளாக போராடும் இலங்கை வீரர்: சூடுபிடிக்கும் இரண்டாவது டெஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sonal-dinusha-85-not-out-vs-india-in-colombo-1787662436"></link>
            <id>https://news.lankasri.com/article/sonal-dinusha-85-not-out-vs-india-in-colombo-1787662436</id>
            <summary type="text">Sri Lanka 265-8 against india in colombo: கொழும்பு டெஸ்டின் மூன்றாம் நாளில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sri Lanka 265-8 against india in colombo: கொழும்பு டெஸ்டின் மூன்றாம் நாளில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது.</p><p>

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது.</p><h2> 

பஸிந்து சூரியபந்தரா&nbsp;80 ஓட்டங்கள்</h2><p>இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கொழும்பில் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e83ea96-48ca-4fd7-809d-a5f5d64a4a1a/26-6a8d9068704f6.webp' /></p><p></p><p>
மூன்றாவது நாளான இன்று இலங்கை அணி முதல் இன்னிங்ஸைத் தொடர, கமிந்து மெண்டிஸ் 32 ஓட்டங்களில் வெளியேறினார்.</p><p>

பின்னர் அணித்தலைவர் தனஞ்செய டி சில்வாவை 8 ஓட்டங்களில் மானவ் சுதர் பந்துவீச்சில் அவுட் ஆக, அரைசதம் அடித்த பஸிந்து சூரியபந்தரா (Pasindu Sooriyabandara) 80 ஓட்டங்களில் ரவீந்திர ஜடேஜாவின் ஓவரில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>போராடும் சோனல் தினுஷா</h2><p>

அடுத்து நிரோஷன் திக்வெல்ல டக்அவுட் ஆனார். எனினும் சோனல் தினுஷா மற்றும் கேஷாரா வலுவான கூட்டணி அமைத்தனர். </p><p>

சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டிய சோனல் அரைசதம் அடிக்க, கேஷாரா 18 (74) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.</p><p>

இலங்கை அணி நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தனியாளாக போராடி வரும் சோனல் தினுஷா (Sonal Dinusha) 85 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a668eb-369c-4afe-b2d4-25931a48fe5a/26-6a8d9067a9f51.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><i><b>WHATSAPP CHANNEL</b></i></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T12:51:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சி - உரிமையாளர்களுடன் மனக்கசப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dhoni-csk-relationship-trouble-stake-talk-fails-1787661707"></link>
            <id>https://news.lankasri.com/article/dhoni-csk-relationship-trouble-stake-talk-fails-1787661707</id>
            <summary type="text">dhoni csk relationship affect after stake talk fails: சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சித்த விவகாரத்தில் அணி உரிமையாளர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>dhoni csk relationship affect after stake talk fails: சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சித்த விவகாரத்தில் அணி உரிமையாளர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h3> 

 சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சி</h3><p>

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a3f734b-be35-4d0c-878b-b3000e348ed7/26-6a8d8d8d3e0e0.webp' /></p><p> 

2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவான போது இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் இந்த அணியை வாங்கினார்.</p><p> 

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் அணியை நிர்வகித்து வருகிறார்.</p><p>

2008 ஆம் ஆண்டு முதல் எம்.எஸ்.தோனி இந்த அணியில் விளையாடி வருகிறார். எம்.எஸ்.தோனிக்காக அதிகளவிலான ரசிகர்கள் CSK அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p> 

காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த தோனி, 2026 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 

45 வயதாகி விட்ட நிலையில், தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19910289-a5b9-4fae-97b1-e5341b7cd227/26-6a8d8d8c8cc6b.webp' /></p><p> 

இந்நிலையில், சிஎஸ்கே அணியில் தோனி பங்குகளை வாங்க முயற்சித்ததாகவும், இந்த விவகாரத்தில் அணி நிர்வாகத்துடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>

தோனி முதலில் 25% பங்குகளை வாங்க விரும்பியுள்ளார். ஆனால் சிஎஸ்கே உரிமையாளர்கள் அவருக்கு 3% பங்குகளை வழங்க முன்வந்தனர். அதன் பின்னர் தோனி 18% பங்குகளை கேட்ட நிலையில், அதிகபட்சமாக 5% வரை வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இதன் காரணமாக தோனி மற்றும் அணி உரிமையாளர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி அணியில் தொடர்வாரா என கேள்வி எழுந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T12:41:54+00:00</updated>
        </entry>
    </feed>
