<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-08T02:35:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030-க்குள் மனிதர்கள் விலங்குகளுடன் பேச AI உதவும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-may-let-humans-talk-to-animals-by-2030-1788830558"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-may-let-humans-talk-to-animals-by-2030-1788830558</id>
            <summary type="text">AI help humans talk to animals by 2030: புதிய தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI help humans talk to animals by 2030: புதிய தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.</p><p>
</p><h2>
விலங்குகளுடன் உரையாட முடியும்</h2><p>செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் 2030-க்குள் மனிதர்கள் விலங்குகளின் மொழியைப் புரிந்து கொண்டு அவர்களுடன் உரையாட முடியும் என சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/607c87b9-8221-477d-8867-b7c67c82fda3/26-6a9f635fcf333.webp' /></p><p>இந்த ஆய்வில், விலங்குகள் உபயோகிக்கும் ஒலிகள், சைகைகள் மற்றும் உடல் மொழியை AI மூலம் பகுப்பாய்வு செய்து, அதனை மனிதர்களுக்குப் புரியும் வகையில் மொழிபெயர்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது. </p><p>அதேபோல், மனிதர்களின் சொற்கள் மற்றும் உணர்வுகளை விலங்குகள் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றவும் AI உதவும்.
</p><p></p><p>விலங்குகளின் தொடர்பு முறைகள் மிகவும் சிக்கலானவை. அவற்றை மனிதர்கள் நேரடியாகப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் AI, பெரும் அளவிலான தரவுகளை சேகரித்து, ஒலியியல் மற்றும் நடத்தைப் படிமுறைகளை ஆராய்ந்து, விலங்குகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டது என்று 
ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, விலங்குகள் பாதுகாப்பு, பண்ணை வளர்ப்பு, செல்லப்பிராணி பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, வனவிலங்கு பாதுகாப்பு துறையில், விலங்குகளின் தேவைகள் மற்றும் எச்சரிக்கைகளை நேரடியாக அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
</p><p></p><p>மேலும், மனிதர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் ஆழமான உறவை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். நாய், பூனை போன்றவை எதை உணர்கின்றன, எதை விரும்புகின்றன என்பதை நேரடியாக அறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இத்திட்டம் இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தாலும், 2030-க்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T01:19:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை - மூடப்பட்ட ஈபிள் கோபுரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eiffel-tower-shut-over-women-staff-row-1788829834"></link>
            <id>https://news.lankasri.com/article/eiffel-tower-shut-over-women-staff-row-1788829834</id>
            <summary type="text">Eiffel tower shut over women staff row: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் அடையாளமாக விளங்கும் ஈபிள் கோபுரம் திங்கட்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.காரணம், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Eiffel tower shut over women staff row: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் அடையாளமாக விளங்கும் ஈபிள் கோபுரம் திங்கட்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.</p><p>காரணம், இந்து மத குழுவான BAPS (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) சார்பில் சுமார் 100 பேர் கொண்ட குழு ஈபிள் கோபுரத்திற்கு வந்த போது, பெண் பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75752ab8-500b-49bb-804a-97f9e3b15e72/26-6a9f608c6b8c8.webp' /></p><p>

சம்பவம் குறித்து ஊழியர் சங்க பிரதிநிதி டயான் டாவோயின் தெரிவித்ததாவது:</p><p>

“அந்த குழுவினர் கோபுரம் வழியாகச் சென்றபோது, பெண் பணியாளர்கள் தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேறும்படி கூறப்பட்டனர். அவர்களின் இடத்தில் ஆண்கள் பணியாற்றினர்” என்றார். இதனால் ஊழியர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.
</p><p>
இந்த சம்பவம் வார இறுதியில் நடந்ததால், திங்கட்கிழமை காலை ஊழியர்கள் கூட்டம் நடத்தி, மேலாண்மையுடன் உரையாடி, இனி பெண்கள் இவ்வாறு புறக்கணிக்கப்படக்கூடாது என வலியுறுத்தினர். இதனால் கோபுரம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
</p><p></p><p>பாரிஸ் மேயர் இம்மானுவேல் கிரெகாயர் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். “பெண்கள் புறக்கணிக்கப்பட்டது மிகுந்த கவலைக்குரியது. உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும்” என அவர் தெரிவித்தார்.
</p><p>
ஈபிள் கோபுர நிர்வாகம் SETE இந்த சம்பவம் தவறானது என ஒப்புக்கொண்டது. “பெண்களுடன் தொடர்புகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டது தவறு” என SETE தலைவர் அரியல் வேயில் கூறினார்.

இந்த சர்ச்சை பிரான்ஸ் அரசியல்வாதிகளிடமும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

இதேவேளை, BAPS அமைப்பு பாரிஸ் புறநகரில் தனது முதல் பெரிய இந்துக் கோவிலை திறந்து வைத்தது. இதில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த கோவில் இந்தியாவின் பண்பாட்டு மதிப்புகளை பிரான்சுக்கு கொண்டு செல்லும் பாலமாக இருக்கும் எனக் கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T01:07:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி - சிறிய தவறால் பணி நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-techie-fired-over-sauna-towel-mix-up-1788817298"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-techie-fired-over-sauna-towel-mix-up-1788817298</id>
            <summary type="text">Swiss techie fired over sauna towel mix-up: சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி, மூத்த நிர்வாகியுடன் ஏற்பட்ட சிறிய சம்பவத்தால் வேலை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss techie fired over sauna towel mix-up: சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி, மூத்த நிர்வாகியுடன் ஏற்பட்ட சிறிய சம்பவத்தால் வேலை இழந்ததாக கூறியுள்ளார்.</p><p>
</p><h2>சுவிட்சர்லாந்தில் ரூ.1 கோடி சம்பளம்</h2><p>சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய மென்பொருள் பொறியாளர், சுமார் ரூ.1 கோடி வருடச்சம்பளம் பெற்றிருந்தார்.
</p><p>
ஆனால், உடற்பயிற்சி மையத்தில் சோனாவில் நடந்த ஒரு சிறிய தவறால் அவர் வேலை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab5a3152-7ad1-4a69-a41f-03421ebc9485/26-6a9f2f93d63a4.webp' /></p><h2>தவறுதலாக துண்டை எடுத்ததற்காக</h2><p>அவரது விளக்கத்தின் படி, மே 8 அன்று ஜிம் சோனாவில் பயிற்சி முடிந்தபின் தவறுதலாக ஒரு மூத்த நிர்வாகியின் துண்டை எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த நிர்வாகி அமைதியாக நடந்துகொண்டாலும், “புதிய வேலை தேடத் தொடங்குங்கள்” என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.
</p><p>
ஐந்து நாட்களுக்குப் பிறகு, மே 13 அன்று, HR குழுவினரிடமிருந்து “பொருளாதார காரணங்களால்” பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சோனா சம்பவமே உண்மையான காரணமாக இருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.</p><p></p><h2>வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்காது..</h2><p>அவர் 2022 முதல் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பல திட்டங்களில் ஈடுபட்டிருந்தபோதும், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் திட்டங்கள் தாமதமானதாகவும், தான் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் உழைந்திருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று அவர் மனவருத்தம் தெரிவித்தார்.
</p><p>
மேலும், “என்னை ‘சமூக விரோத’ (antisocial) பட்டியலில் சேர்த்துள்ளனர், இதனால் எதிர்காலத்தில் வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்காது” என்று அவர் குற்றம்சாட்டினார்.</p><p> தற்போது மூன்று மாதங்களாக வேலை இழந்த நிலையில், தனியார் வியாபாரம் தொடங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>இந்த சம்பவம், ஊழியர்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு உயர்நிலை நிர்வாகத்தின் முடிவுகளின் கீழ் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.</p><p>அவர் இந்த சம்பவத்தை Reddit பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T00:34:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரகசியமாக பாலைவன விமான தளத்தை உருவாக்கிவரும் சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chinas-secret-desert-airbase-for-next-gen-jets-1788827854"></link>
            <id>https://news.lankasri.com/article/chinas-secret-desert-airbase-for-next-gen-jets-1788827854</id>
            <summary type="text">China builds secret desert airbase: சீனா ரகசிய பாலைவன விமான தளத்தை உருவாக்கிவருகிறது.

பாலைவனப் பகுதியில் விமான சோதனை&amp;nbsp;தளம்சீனா தனது மேற்கு பாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>China builds secret desert airbase: சீனா ரகசிய பாலைவன விமான தளத்தை உருவாக்கிவருகிறது.
</p><h2>
பாலைவனப் பகுதியில் விமான சோதனை&nbsp;தளம்</h2><p>சீனா தனது மேற்கு பாலைவனப் பகுதியில் உள்ள லோப் நூர் விமான சோதனைத் தளத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
</p><p>
செயற்கைக்கோள் படங்களில், அங்கு நான்கு பெரிய ஹேங்கர்கள், புதிய டாக்ஸிவேக்கள், வட்ட வடிவ சோதனை மேடை, எரிபொருள் சேமிப்பு வசதிகள் ஆகியவை கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e73bd8be-fb14-43fd-95f5-fdfe3e101682/26-6a9f58d005504.webp' /></p><p>இந்த விரிவாக்கம், சீனாவின் அடுத்த தலைமுறை போர் விமான திட்டங்களை வேகமாக முன்னெடுக்க உதவுகிறது. </p><p>2025 ஆகஸ்டில், J-36 எனப்படும் ஆறாம் தலைமுறை போர் விமானம் முதன்முதலில் இங்கு கண்டறியப்பட்டது. அதற்கு 17 நாட்கள் கழித்து, J-XDS அல்லது J-50 எனப்படும் மற்றொரு புதிய விமானமும் இங்கு சோதனைக்காக வந்தது.</p><p>
</p><p></p><p>2026 பிப்ரவரி மாதத்திற்குள், இந்த தளம் 60,000 சதுர அடிகள் ஹேங்கர் இடம் மற்றும் 3,00,000 சதுர அடிகள் கூடுதல் வசதிகள் பெற்றது. இதனால் தளத்தின் அளவு இரட்டிப்பு ஆனது.

லோப் நூர் தளம், 5 கி.மீ நீள ரன்வே கொண்டது. </p><p>பாலைவனப் பகுதியில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், இங்கு ரகசிய சோதனைகள் எளிதாக நடத்தப்படுகின்றன. இதனால் சீனாவுக்கு சோதனை வேகத்தை அதிகரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

மேலும், இந்த விரிவாக்கம் H-20 எனப்படும் ரகசிய ஸ்டெல்த் பாம்பர் திட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற ஊகமும் எழுந்துள்ளது.</p><p> </p><p></p><p>புதிய ஹேங்கர்கள், H-6 பாம்பர் போன்ற பெரிய விமானங்களையும் தாங்கக்கூடிய அளவில் உள்ளன.

சீனா தற்போது ஷென்யாங் பகுதியில் 40 லட்சம் சதுர அடிகள் கொண்ட புதிய உற்பத்தி வளாகம் அமைத்து வருகிறது. </p><p>இது சீனாவின் அடுத்த தலைமுறை வான்படை ஆற்றலை உருவாக்கும் மிகப்பெரிய முயற்சியாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவுடன் போட்டியிட, சீனா 2035-க்குள் இந்த புதிய போர் விமானங்களை செயல்படுத்தும் திட்டத்தில் உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T00:34:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரோன் தாக்குதல் குற்றச்சாட்டு - ஜேர்மன் தூதரகத்தை மூடிய ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-shuts-german-consulate-over-drone-row-1788822808"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-shuts-german-consulate-over-drone-row-1788822808</id>
            <summary type="text">Russia shuts german consulate: ட்ரோன் தாக்குதல் குற்றச்சாட்டில், ரஷ்யாவில் ஜேர்மன் தூதரகம் மூடப்பட்டது.
ஜேர்மன் தூதரகத்தை மூடிய ரஷ்யாரஷ்ய அரசு, ஜேர்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia shuts german consulate: ட்ரோன் தாக்குதல் குற்றச்சாட்டில், ரஷ்யாவில் ஜேர்மன் தூதரகம் மூடப்பட்டது.
</p><h2>ஜேர்மன் தூதரகத்தை மூடிய ரஷ்யா</h2><p>ரஷ்ய அரசு, ஜேர்மனியின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தூதரகம் மூடப்பட வேண்டும் என்றும், செப்டம்பர் 18 திகதிக்குள் அங்கு பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.</p><p>ரஷ்யா-ஜேர்மனி உறவுகள் ஏற்கனவே உக்ரைன் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது தூதரகம் மூடப்பட்ட நடவடிக்கை இரு நாடுகளின் உறவை மேலும் மோசமாக்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96c18eb4-1377-4a67-ac9a-508df702f10e/26-6a9f4519c2d5c.webp' /></p><p>
கடந்த வாரம் லீப்சிக் விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலை ரஷ்யா திட்டமிட்டதாக ஜேர்மனி குற்றம் சாட்டியது.
</p><p>
அதற்கு பதிலாக, ரஷ்யா ஜேர்மன் தூதரகத்தை மூடுவதோடு, Goethe Institute பணியாளர்களும் செப்டம்பர் 13-க்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
</p><p>
ஜேர்மனி ஏற்கனவே ரஷ்யாவின் பான் தூதரகத்தையும், மாஸ்கோ கலாச்சார மையத்தையும் மூடியிருந்தது.</p><p>
</p><p></p><p>ஐரோப்பிய ஒன்றியம், லீப்சிக் விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதல் “அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம்” எனக் கூறியுள்ளது. ஆனால் ரஷ்யா இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.</p><p>

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், “ஜேர்மனி மீண்டும் போரை விரும்புகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம், உக்ரைனுக்கு முக்கிய ஆதரவாளராக இருக்கும் ஜேர்மனி மற்றும் ரஷ்யா இடையேயான உறவை மேலும் கடுமையாக்கி, ஐரோப்பிய பாதுகாப்பு சூழ்நிலைக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T23:10:34+00:00</updated>
        </entry>
    </feed>
