<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-08T19:52:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/school-girl-jail-visit-with-live-ammunition-in-up-1786207308"></link>
            <id>https://news.lankasri.com/article/school-girl-jail-visit-with-live-ammunition-in-up-1786207308</id>
            <summary type="text">துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பள்ளிச் சிறுமியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.சிறைக்குள் அத்துமீறி நுழைந்த பெண்உத்தர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பள்ளிச் சிறுமியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><h2>சிறைக்குள் அத்துமீறி நுழைந்த பெண்</h2><p>உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள கிளைச் சிறைக்குள் வியாழக்கிழமை போலி அடையாள அட்டை காண்பித்து சிறைக் கைதி ஒருவரை பள்ளி மாணவி ஒருவர் சந்திக்க சென்ற நிலையில்&nbsp; பாதுகாப்பு பணியாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.</p><p> மேலும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது பயன்படுத்தாத துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக சிறைக் காவலர் அஃப்தாப் ஆலம் அன்சாரி வழங்கிய தகவலில், சிறுமியும் அவருடன் வந்த ஆண் ஒருவரும் இணைந்து சிறையில் இருந்த ஹர்ஷு காஷ்யப் என்ற கைதியை சந்திக்க வந்தது தெரியவந்துள்ளது.</p><p></p><p> முதன்மை நுழைவாயிலில் நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின் போது, அடையாள அட்டையில் இருந்த விவரங்களுக்கு மாறான தகவல்களை இருவரும் கூறிய நிலையில் நிலைமை தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca36d863-7c59-48e8-b100-21185a08ed7d/26-6a775c4de6937.webp' /></p><p> இதையடுத்து அவர்களிடம் உடல் பரிசோதனை நடத்தப்பட்ட போது, அவரின் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 தோட்டாக்களை கண்டுபிடித்தனர்.</p><p>இதையடுத்து சிறைக் காவல் நிலைய பொறுப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, இருவரும் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p><h2>விசாரணையில் கூறப்பட்ட தகவல்</h2><p>கண்டறியப்பட்ட 10 துப்பாக்கிகளும்&nbsp; சிறுமியின் தந்தையுடைய உரிமம் பெற்ற துப்பாக்கிக்கு சொந்தமானது என்று அந்த சிறுமி பொலிஸார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் சிறையில் உள்ள தன்னுடைய நண்பரை சந்திக்க சென்றது தன்னுடைய தந்தைக்கு தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடும் என்ற பயத்தினால் அதனை தன்னுடன் எடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T17:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B திட்டத்தில் வழங்கப்பட்ட 60 நாள் அவகாசம் ரத்து: அமெரிக்கா பரிசீலனை: இந்தியர்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-plan-to-eliminate-60-days-grace-period-in-h-1b-1786210120"></link>
            <id>https://news.lankasri.com/article/us-plan-to-eliminate-60-days-grace-period-in-h-1b-1786210120</id>
            <summary type="text">H-1B வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 60 நாட்கள் வேலை தேடும் அவகாசத்தை அமெரிக்க அரசு ரத்து செய்ய திட்டமிட்டு வருகிறது. H-1B வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 60 நாட்கள் வேலை தேடும் அவகாசத்தை அமெரிக்க அரசு ரத்து செய்ய திட்டமிட்டு வருகிறது.</p><h2> H-1B வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்</h2><p>வேலையில் இருந்து நீக்கப்பட்ட H-1B வெளிநாட்டு தொழிலாளர்களும் அவரது குடும்பத்தினரும் அடுத்த வேலையை தேடிக் கொள்ள கொடுக்கப்பட்டுள்ள 60 நாட்கள் கால அவகாசத்தை ரத்து செய்வது குறித்து அமெரிக்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.</p><p>அமெரிக்க அரசின் பரிசீலனையில் உள்ள இந்த முன்மொழிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எப்போது சட்டமாக்கப்படும் அல்லது இதன் முழுமையான விவரங்கள் குறித்து இன்னும் தெளிவாக வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2c7dc41-5776-42b4-929a-85187154b5f6/26-6a776749782ee.webp' /></p><p> இந்த நடைமுறை உறுதி செய்யப்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட காலம் முடிவதற்கும் வேலை இழந்தவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.</p><p></p><h2> இந்திய வம்சாவளியினருக்கு மிகப்பெரிய பாதிப்பு</h2><p>அமெரிக்காவின் H-1B திறமை வாய்ந்த தொழிலாளர் திட்டத்தில் இந்த மாற்றம் இறுதி செய்யப்பட்டால் அமெரிக்காவில் பணிபுரியும் பல இந்தியர்கள் பாதிக்கப்படக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4604610-290f-4357-bf3e-1cb9bb1c0ef8/26-6a77674a2f9b6.webp' /></p><p> அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்வு சேவைகளின்(USCIS) சமீபத்திய தரவுகள் படி, கிட்டத்தட்ட 71% அங்கீகரிக்கப்பட்ட H-1B திட்டங்கள் இந்தியர்களுக்கே கடந்த 2024ம் நிதியண்டில் வழங்கப்பட்டுள்ளது.</p><p> சமீபத்திய அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் படி, அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 52 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T17:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL 2026 இறுதிபோட்டி: ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jaffna-kings-123-all-out-vs-gag-lpl-2026-final-1786205901"></link>
            <id>https://news.lankasri.com/article/jaffna-kings-123-all-out-vs-gag-lpl-2026-final-1786205901</id>
            <summary type="text">காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான LPL 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 

லங்கா பிரீமியர் லீக் 2026 இறுதிப்போட்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான LPL 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. </p><p>

லங்கா பிரீமியர் லீக் 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><h2>இறுதிப்போட்டி&nbsp;</h2><p>

கொழும்பில் லங்கா பிரீமியர் லீக் 2026 தொடரின் இறுதிபோட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கல்லன்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8982dc5e-f409-4428-bf49-b17570cd17e2/26-6a7756d08fb65.webp' />&nbsp;</p><p></p><p>

நாணய சுழற்சியில் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.

அவிஷ்கா பெர்னாண்டோ 20 (16) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கவாஜா நபாய் டக்அவுட் ஆனார். </p><p>கமில் மிஷாரா (Kamil Mishara) பொறுப்புடன் ஆட ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.&nbsp;</p><h2>ஜாஃப்னா கிங்ஸ்</h2><p>
அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தபோது, கமில் மிஷாரா 41 (32) ஓட்டங்களில் இஷான் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். </p><p>

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சமிந்து விக்ரமசிங்கே 16 பந்துகளில் 24 ஓட்டங்கள் விளாசினார். ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><p>

காலி அணியின் தரப்பில் சரித் அசலங்கா, இஷான் மலிங்கா தலா 3 விக்கெட்டுகளும், தரிந்து ரத்னாயகே 2 விக்கெட்டுகளும், ஆகிப் மற்றும் சச்சிந்து தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/448b2aea-b517-406a-a8d7-80b852679583/26-6a775795bb306.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T16:16:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைந்த டயானாவின் வைரம், நீலக்கல் காதணிகளை அணிந்திருந்த மேகன் மார்க்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/meghan-spotted-with-diana-s-earrings-in-canada-1786203967"></link>
            <id>https://news.lankasri.com/article/meghan-spotted-with-diana-s-earrings-in-canada-1786203967</id>
            <summary type="text">கனடாவில் ஹாரியுடன் நிகழ்வில் கலந்துகொண்ட மேகன் மார்க்கல், மறைந்த இளவரசி டயானாவின் வைரம் மற்றும் நீலக்கல் காதணிகளை அணிந்திருந்ததாக புகைப்படம் எடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் ஹாரியுடன் நிகழ்வில் கலந்துகொண்ட மேகன் மார்க்கல், மறைந்த இளவரசி டயானாவின் வைரம் மற்றும் நீலக்கல் காதணிகளை அணிந்திருந்ததாக புகைப்படம் எடுக்கப்பட்டார்.</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற்ற விழாவில் கணவர் ஹரியுடன் கலந்துகொண்ட மேகன் மார்க்கல், மறைந்த இளவரசி டயானாவின் அணிகலன்களை அணிந்திருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. </p><h2>ஹரி மற்றும் மேகன் </h2><p>

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இசைத்துறையில் ஜாம்பவானான டேவிட் ஃபாஸ்டரின் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் நடந்தது.

அதில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1834d1a0-7b09-46a2-ae87-481b18d5effe/26-6a774f42d91fb.webp' />&nbsp;</p><p></p><p>இந்தத் தம்பதியினர் டேவிட் ஃபாஸ்டர் மற்றும் அவரது மனைவி கேத்தரின் மெக்ஃபீ ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
</p><p>
ஹரி, மேகன் இருவரும் டேவிட் மற்றும் கேத்தரினின் நீண்டகால நண்பர்கள் ஆவர். 

அப்போது மேகன் மார்க்கல், மறைந்த தனது மாமியார் இளவரசி டயானாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது வைரம் மற்றும் நீலக்கல் காதணிகளை அணிந்திருந்தார்.</p><h2> 

தனிப்பட்ட சேகரிப்பில்</h2><p>மேகனின் கூந்தல் கொண்டையாகப் பின்னி விடப்பட்டிருந்ததால், அவர் அணிந்திருந்த காதணிகள் தனித்து தெரிந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65247a68-d824-41d1-bc19-681f4d17756f/26-6a774f4389dc3.webp' /></p><p>

இளவரசி மேகன் மார்க்கல், மறைந்த டயானாவின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்து பல நகைகளை வைத்திருக்கிறார். </p><p>மேலும், இதற்கு முன்பும் பொது நிகழ்ச்சிகளில் டயானாவின் காதணிகளை அணிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0e7d650-c652-41ee-aa11-64c802d6ac33/26-6a774f4236eaa.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T15:43:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையை இழந்த லியோனல் மெஸ்ஸி..ரசிகர்கள் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lionel-messi-father-jorge-died-at-68-1786199639"></link>
            <id>https://news.lankasri.com/article/lionel-messi-father-jorge-died-at-68-1786199639</id>
            <summary type="text">பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் தனது 68 வயதில் காலமானார்.

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் தனது 68 வயதில் காலமானார்.
</p><p>
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி உடல்நலப் பிரச்சனையால் காலமானார்.</p><h2>

லியோனல் மெஸ்ஸி</h2><p>உலகளவில் கால்பந்து ஜாம்பவானாக விளங்குபவர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi). பிபா 2026 உலகக்கிண்ணத் தொடரில் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b1e63d-9b54-4074-ad26-b33750ca24d9/26-6a773e5ac76c3.webp' />&nbsp;</p><p></p><p>
தற்போது மெஸ்ஸி தனது இன்டர் மியாமி கிளப் அணிக்காக லீக்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடி வருகிறார்.
</p><p>
இந்த நிலையில், மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி 68 வயதில் காலமானார். இந்த செய்தியை அர்ஜென்டினாவின் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன.
</p><p>
பின்னர் மெஸ்ஸி விளையாடிய அணியான நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>

ஜோர்ஜ் மெஸ்ஸி 7ஆம் திகதி அன்று, குடும்ப இல்லத்திற்கு அருகிலுள்ள ரொசாரியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் காலமானதாக கூறப்படுகிறது.
</p><p>
சமீபத்திய மாதங்களில் மெஸ்ஸியின் தந்தை உறுதிப்படுத்தப்படாத உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். </p><p>

இதன் காரணமாக, அவர் தனது சொந்த நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசரமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df680724-fa9f-4f2e-bdfa-4b6c5903fa5e/26-6a773e5b7e1d8.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T14:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷம் முதல் கன்னி வரை.., செய்யக்கூடாத விடயங்கள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mesham-to-kanni-rasi-palan-in-tamil-1786192127"></link>
            <id>https://news.lankasri.com/article/mesham-to-kanni-rasi-palan-in-tamil-1786192127</id>
            <summary type="text">ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். 

அவர்களின் ராசிக்குரிய அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட கிழமை என தனித்தனியாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். </p><p>

அவர்களின் ராசிக்குரிய அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட கிழமை என தனித்தனியாக இருக்கும்.</p><p>

அதேபோல், ஒவ்வொரு ராசிக்கும் நல்ல குணங்கள் என்றும் சில இருக்கும், எதிர்மறை குணங்கள் என்றும் சில இருக்கும்.</p><p> 

இந்நிலையில், 12 ராசிக்காரர்களும் தங்கள் இயல்புக்கு மாறாகத் தவிர்க்க வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில செயல்கள் உள்ளன.</p><p> 

ஒவ்வொரு ராசியும் தனது பலவீனமான குணங்களைத் தவிர்க்க வேண்டும். </p><p>

அந்தவகையில், மேஷம் முதல் கன்னி வரை உள்ள ராசிகள் செய்யக்கூடாத சில விடயங்களை இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
</p><h2>
மேஷம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MIgPijL2nTI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>ரிஷபம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EKNbnT-i4Cw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மிதுனம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/p_erJ9akPwI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கடகம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TChUhD8alaI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>சிம்மம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qIbv766UlTg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கன்னி&nbsp;</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-vXOtXWQgug" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T14:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோயினால் அவதியுற்ற குழந்தை: எலிசபெத் மகாராணியின் உறவினர் எடுத்த பயங்கர முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/queen-elizabeth-cousin-kill-daughter-dies-aged-89-1786193181"></link>
            <id>https://news.lankasri.com/article/queen-elizabeth-cousin-kill-daughter-dies-aged-89-1786193181</id>
            <summary type="text">தன் குழந்தை பயங்கர நோயால் அவதியுற்றுவந்ததை காண சகியாமல், குழந்தையைக் கொன்றுள்ளார் எலிசபெத் ராணியாரின் உறவினர் ஒருவர்.


மறைந்த பிரித்தானிய மகாராணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன் குழந்தை பயங்கர நோயால் அவதியுற்றுவந்ததை காண சகியாமல், குழந்தையைக் கொன்றுள்ளார் எலிசபெத் ராணியாரின் உறவினர் ஒருவர்.
</p><p>

மறைந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் சகோதரி முறை உறவினரான பெண்ணொருவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதியுற்றுவந்த தன் குழந்தையைக் கொன்றதைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
</p><h3>
நோயினால் அவதியுற்ற குழந்தை</h3><p>

எலிசபெத் மகாராணியின் சகோதரி உறவு முறையினரான எலிசபெத் ஆலிஸ் வைஸ் (89), இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 2ஆம் திகதி மரணமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd4af423-2737-4a2a-bf55-14365c611d6d/26-6a77251e71230.webp' /></p><p>

ஆலிஸ் வைஸைக் குறித்து நினைவுகூரும்போது, அவரது வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக அவர் தனது குழந்தையைக் கொன்ற விடயம் நினைவுகூரப்படுவதை மறுப்பதற்கில்லை.</p><p>

ஆலிஸ் வைஸுக்கு 36 வயது இருக்கும்போது, அவர், எம்மா சார்லட் என்னும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.</p><p>

நீண்ட காலம் காத்திருந்து, கடவுளிடம் பிரார்த்தனை செய்து பெற்ற தன் மகள் மீது உயிரையே வைத்திருந்தார் ஆலிஸ் வைஸ்.
</p><p>
துரதிர்ஷ்டவசமாக, பிறந்து ஒன்பதே நாட்களில் சார்லட்டை வைரஸ் காய்ச்சல் தாக்கியது.

இருபத்து நான்கே மணி நேரத்தில் கோமாவுக்குச் சென்றாள் சார்லட்.</p><p> வைரஸ் பதிப்பு மூளையை எட்ட, மருத்துவமவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் குழந்தையை விட்டு அக்கம் பக்கம் நகரவில்லை ஆலிஸ் வைஸ்.

வைரஸ் தொற்று காரணமாக, குழந்தையின் மூளை அனுப்பும் தகவல்கள் அதன் கை கால்களை எட்டவில்லை.&nbsp;</p><p></p><p>

அவளது வயிறும் தசைகளும் சரியாக வேலை செய்யாததால், குழந்தைக்கு மிகமெதுவாகவே உணவு ஊட்ட முடிந்தது. இல்லையென்றால் குழந்தை வாந்தியெடுக்கத் துவங்கிவிடுவாள்.
</p><p>
வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட ஆலிஸ் வைஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
</p><p>
சில மாதங்களில் வைரஸ் தொற்று குழந்தையின் மூளையின் முக்கால் பாகத்தை நாசம் செய்துவிட்டது.
</p><p>
அப்போது ஒரு முடிவெடுத்தார் ஆலிஸ் வைஸ். ஆம், இப்படி தன் குழந்தை அவஸ்தைப்படுவதைக் காண சகிக்காமல், குழந்தையைக் கொன்றுவிட முடிவு செய்தார் அவர்.
</p><p>
1974ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 3ஆம் திகதி, தன் மகள் தூக்கத்தில், அமைதியாக, வலியில்லாமல் இந்த உலகத்தை விட்டுக் கடந்து செல்லட்டும் என, அவளுக்கு அவளுக்கு மீறி தூக்கமாத்திரைகளைக் கொடுத்தார் ஆலிஸ் வைஸ்.
</p><p>
சில மாதங்களுக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் தன் குழந்தையைக் கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார் ஆலிஸ் வைஸ்.
</p><p>
அவர் குழந்தையைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகளை அனைவரும் அறிந்திருந்ததால், அவர் மீது பலரும் இரக்கப்பட்டார்கள்.
</p><p>
நீதிபதியும், இது வழக்கத்துக்கு மாறான வழக்குகளிலேயே மிகவும் அசாதாரண வழக்கு என்று கூறி, ஆலிஸ் வைஸுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கினார். ஆனால், அவர் சிறை செல்லவேண்டியதில்லை என்றும், ஓராண்டுக்கு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இருக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
</p><p>
ஆலிஸ் வைஸ், தனது 89ஆவது வயதில், யார்க்‌ஷையரிலுள்ள ஒரு மருத்துவமனையில், இம்மாதம் 2ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T14:06:14+00:00</updated>
        </entry>
    </feed>
