<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-24T12:33:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய தூதரக அதிகாரிகளை பிரான்ஸ் வெளியேற்றும் விவகாரம்: ஈரான் கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-slams-france-for-expel-2-iranian-diplomats-1787573890"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-slams-france-for-expel-2-iranian-diplomats-1787573890</id>
            <summary type="text">Iran calls France&#039;s decision to expel two Iranian diplomats illegal: ஈரானிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் பிரான்சின் முடிவு சட்டவிரோதமானது என ஈரான் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran calls France's decision to expel two Iranian diplomats illegal: ஈரானிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் பிரான்சின் முடிவு சட்டவிரோதமானது என ஈரான் விமர்சித்துள்ளது.</p><p>


ஈரான் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவரை பிரான்ஸ் வெளியேற்ற இருப்பதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
</p><h3>
ஈரானிய தூதரக அதிகாரிகள் இருவரை வெளியேற்றும் பிரான்ஸ்</h3><p>

ஜூலை மாதம் 19ஆம் திகதி, ஈரான் அதிகாரிகள், பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் இருவரை கைது செய்து காவலில் அடைத்து விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள்.
</p><p>
அப்போது, அவர்களில் ஒருவரை ஈரான் அதிகாரிகள் தாக்கியதாகவும் தகவல் வெளியானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eebe867-ea36-4e80-aba8-388fd577f93c/26-6a8c3684771ed.webp' /></p><p>
அதைத்தொடர்ந்துதான், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட், ஈரான் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளார்கள் என்று கூறியிருந்தார்.&nbsp;</p><p>
ஈரான் கடும் விமர்சனம்

பிரான்சின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரானிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் பிரான்சின் முடிவு சட்டவிரோதமானது என ஈரான் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Esmaeil Baqaei, ஈரான் சட்டப்படி எடுத்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் எடுத்துள்ள முடிவு சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c365846-4479-42f1-9b1e-f3a244684f34/26-6a8c3683c4561.webp' /></p><p>
அத்துடன், இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவுகளுக்கு, பிரான்சின் முடிவு எந்த வகையிலும் பயனுள்ளதாக அமையாது என்றும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T12:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[1 டொலருக்கு 2 மில்லியன் ரியால் - அமெரிக்காவின் பொருளாதார தாக்குதலால் ஈரான் நாணயம் சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-rial-hits-record-low-vs-dollar-1787573419"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-rial-hits-record-low-vs-dollar-1787573419</id>
            <summary type="text">Iran&#039;s rial nears 2 million per dollar: ஈரானின் நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.

தற்போது, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran's rial nears 2 million per dollar: ஈரானின் நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.</p><p>

தற்போது, 1 அமெரிக்க டொலருக்கு சுமார் 19.92 லட்சம் ரியால் மதிப்பில் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 4.5 சதவீத வீழ்ச்சியைக் காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e22560a5-9a43-4c2e-9bf8-8cd19c7f2395/26-6a8c34ad5aaa4.webp' /></p><h2>பொருளாதார தாக்குதல்</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு எதிராக “Economic D-Day” எனப்படும் மிகப்பெரிய பொருளாதார தாக்குதலை அறிவித்ததையடுத்து இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெஸ்சன்ட், “ஈரானின் அனைத்து பொருளாதார வாழ்வாதாரங்களையும் துண்டித்து, தனிமைப்படுத்துவதே எங்கள் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஈரான்&nbsp;அரசின் நிதி நிலைமை கடுமையாக பாதிப்பு</h2><p>
</p><p>
ஈரானின் வெளிநாட்டு நாணய வருவாய் பெரும்பாலும் எண்ணெய் ஏற்றுமதியிலிருந்து வந்தது. ஆனால், சமீபத்தில் எண்ணெய் ஏற்றுமதி “முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது” என ஈரான் மத்திய வங்கி ஆளுநர் ஹெம்மத்தி கூறியுள்ளார். இதனால், அரசின் நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும், ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடன் நிதி பரிமாற்றங்களை நிறுத்தியதால், வர்த்தகமும் சிக்கலில் சிக்கியுள்ளது.
</p><p>
இந்நிலையில், ஈரான் சீனா, BRICS, Shanghai Cooperation Organisation போன்ற மேற்கு நாடுகளின் கட்டுப்பாட்டில் இல்லாத அமைப்புகளுடன் இணைந்து புதிய பொருளாதார வழிகளைத் தேடுகிறது. சீனா இன்னும் ஈரானின் எண்ணெய் வாங்கும் மிகப்பெரிய நாடாக இருப்பதால், ஈரான் கிழக்கு நாடுகளுடன் கூட்டாண்மை வலுப்படுத்த முயற்சிக்கிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e8d3c41-560d-4b1c-877d-284618d61ef3/26-6a8c34ae12c1f.webp' /></p><p>இந்த நாணய வீழ்ச்சி, சாதாரண ஈரான் மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிறது. இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிப்பதால் பணவீக்கம் உயரும் அபாயம் உள்ளது. மக்கள் அதிக அளவில் டொலர் மற்றும் பிற வெளிநாட்டு நாணயங்களை வாங்க முயற்சிப்பதால், ரியால் மதிப்பு மேலும் குறையக்கூடும்.
</p><p>
அமெரிக்கா, இராணுவ நடவடிக்கைகளால் ஈரானின் இராணுவ திறனை குறைத்ததாகக் கூறினாலும், ஈரான் இன்னும் பிராந்தியத்தில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் அச்சுறுத்தும் திறனை வைத்திருக்கிறது. எனவே, அமெரிக்கா பொருளாதார அழுத்தத்தின் மூலம் ஈரானை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T12:07:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேரளாவிற்கு விரிவடையும் தவெக - மாநில தலைவராகும் மலையாள நடிகர் தேவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/actor-devan-to-join-tvk-as-kerala-state-leader-1787572672"></link>
            <id>https://news.lankasri.com/article/actor-devan-to-join-tvk-as-kerala-state-leader-1787572672</id>
            <summary type="text">actor devan to joins tvk as kerala state leader: நடிகர் தேவன் தவெகவில் இணைய உள்ளதாவும், அவருக்கு கேரள மாநில தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>actor devan to joins tvk as kerala state leader: நடிகர் தேவன் தவெகவில் இணைய உள்ளதாவும், அவருக்கு கேரள மாநில தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><h3>
தவெகவில் இணையும் நடிகர் தேவன்</h3><p>

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் கேரளாவை சேர்ந்த நடிகர் தேவன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40904e53-755b-46ae-86f4-d27eb587ed6c/26-6a8c31c21cc3c.webp' /></p><p> 

இவர் தன்னுடைய கல்லூரி காலத்திலே அரசியல் ஈடுபாடு கொண்டு கேரள மாணவர் சங்கத்தில் (KSU) உறுப்பினராக இருந்தார்.</p><p> 

2004 ஆம் ஆண்டில் கேரள மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்த இவர், 2021 ஆம் ஆண்டில் கட்சியை பாஜகவில் இணைத்தார். அதன் பின்னர் கேரள பாஜகவின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.&nbsp;</p><p></p><p> 

கடத்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி பாஜகவில் இருந்து விலகிய அவர், பாஜக அரசியல் கருத்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், தேர்தல் வெற்றியை விட பணம் சம்பாதிப்பதே கட்சியின் ஒரே குறிக்கோள் என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf32b0f5-f63b-4517-938c-9e6b741d05a7/26-6a8c31c2c5ec1.webp' /></p><p>

இதனைத்தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.</p><p> 

இது குறித்து தவெகவின் முக்கிய நிர்வாகிகள் தன்னிடம் பேசியதாகவும், தவெகவின் கேரள மாநில தலைவர் பதவி தனக்கு வழங்கப்பட உள்ளதாகவும், செப்டம்பர் 10 ஆம் திகதி முதல்வர் விஜய்யை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

தவெக அமைச்சர்கள் பலரும் முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என பேசி வரும் நிலையில், தவெகவை தேவன் மூலம் கேரளாவில் விரிவுபடுத்துவதற்கான பணிகளை முதல்வர் விஜய் தொடங்கியுள்ளார். </p><p>

நெஞ்சினிலே, ஷாஜகான், சிவகாசி, ஆதி படங்களில் முதல்வர் விஜய்யும் தேவனும் இனைந்து நடித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T12:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்.எஸ்.தோனியின் நீண்ட கால சாதனை முறியடிப்பு: வரலாறு படைத்த ரிஷாப் பண்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rishabh-breaks-ms-dhoni-record-in-test-1787572819"></link>
            <id>https://news.lankasri.com/article/rishabh-breaks-ms-dhoni-record-in-test-1787572819</id>
            <summary type="text">Rishabh breaks ms dhoni record in test: இந்திய முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.தோனியின் நீண்ட கால சாதனையை ரிஷாப் பண்ட் முறியடித்தார். 

டெஸ்ட் கிரிக்கெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rishabh breaks ms dhoni record in test: இந்திய முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.தோனியின் நீண்ட கால சாதனையை ரிஷாப் பண்ட் முறியடித்தார். </p><p>

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அல்லது நடுநிலையான மைதானங்களில் விக்கெட் கீப்பராக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ரிஷாப் பண்ட் படைத்துள்ளார்.&nbsp;</p><h2>ரிஷாப் பண்ட்</h2><p>

கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்டில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddf94f7c-a329-4ea4-8fda-ef6a87c7a874/26-6a8c325685138.webp' /></p><p></p><p>
இதன்மூலம் விக்கெட் கீப்பராக 2,501 ஓட்டங்கள் குவித்து பண்ட் வரலாறு படைத்தார். வெளிநாடுகள் அல்லது நடுநிலையான மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த விக்கெட் கீப்பராக பண்ட் உருவெடுத்துள்ளார்.</p><p>

முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி 2,496 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பண்ட் அவரை முந்தியுள்ளார்.</p><p>
 
ரிஷாப் பண்ட் 51 டெஸ்ட் போட்டிகளில் 43.60 சராசரியுடன் 3,662 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 8 சதங்கள், 20 அரைசதங்கள் அடங்கும்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c698b76-a64d-4d61-8eea-d89091ba0310/26-6a8c32573db19.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:58:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்துக்குள்ளான ஹங்கேரி நாட்டு போர் விமானம்: நொடி பொழுதில் உயிர் தப்பிய விமானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hungarian-gripen-fighter-flight-crashed-1787571659"></link>
            <id>https://news.lankasri.com/article/hungarian-gripen-fighter-flight-crashed-1787571659</id>
            <summary type="text">Hungarian Gripen Fighter Flight Crashed: ஹங்கேரி நாட்டு ராணுவத்தின் போர் விமான விபத்துக்குள்ளான சம்பவம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hungarian Gripen Fighter Flight Crashed: ஹங்கேரி நாட்டு ராணுவத்தின் போர் விமான விபத்துக்குள்ளான சம்பவம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> விபத்துக்குள்ளான போர் விமானம்</h2><p>ஹங்கேரி நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சோல்னோக்(Szolnok) நகருக்கு அருகே அந்நாட்டின் பாதுகாப்பு படையினருக்கு சொந்த்மான போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> கிரிப்பென்(Gripen) ரக போர் விமானமானது விபத்துக்குள்ளாகி இருப்பதை அந்நாட்டு பிரதமர் பீட்டர் மக்யார்(Péter Magyar) திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0735307c-46a4-4472-a2f3-917897a70150/26-6a8c2dccad1bf.webp' /></p><p> இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில், போர் விமானம் விபத்துக்குள்ளான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் விபத்து தொடர்பாக உடனடி அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் பீட்டர் மக்யார் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> உயிர் தப்பிய விமானி</h2><p>
அதிர்ஷ்டவசமாக உரிய நேரத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து விமானி எஜெக்ட் செய்து வெளியேறி விட்டதாகவும், அவருக்கு எந்தவொரு காயமும் இன்றி உயிர் பிழைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த விமான விபத்தினால் பொதுமக்கள் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> விமான விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ரோமுலஸ் ருசின் ஸெண்டி உடனடியாக விரைந்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:41:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலுக்குள் பாய்ந்த கார்... வெளிநாட்டில் இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-student-car-plunges-to-pacific-ocean-1787569950"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-student-car-plunges-to-pacific-ocean-1787569950</id>
            <summary type="text">Indian origin student’s car plunges into Pacific ocean, dies trapped underwater: இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் பயணித்த கார் கடலுக்குள் பாய்ந்த நிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian origin student’s car plunges into Pacific ocean, dies trapped underwater: இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் பயணித்த கார் கடலுக்குள் பாய்ந்த நிலையில், காருக்குள் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>

இந்திய வம்சாவளி மாணவியான ஆலி ரெனீ சிங் (19), கலிபோர்னியா பல்கலையில் இரண்டாமாண்டு பட்டப்படிப்பை முடித்துவிட்டு மூன்றாம் ஆண்டைத் துவங்குவதற்காக காத்திருந்திருக்கிறார்.
</p><h3>
இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு
</h3><p>
இந்நிலையில், இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 13ஆம் திகதி, தன் நண்பர் ஒருவருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார் ஆலி. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70f4a007-3e92-4e79-9af5-7f50b84e0fd0/26-6a8c271f963c3.webp' /></p><p>
அப்போது, சான்டா குரூஸ் என்னுமிடத்தில், கடலோரமாக அமைந்துள்ள West Cliff Drive என்னும் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த அந்தக் கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது.
</p><p>
ஆலியுடன் பயணித்த நண்பர் தன்னை விடுவித்துக்கொண்டு காரிலிருந்து வெளியேறி கரை சேர, ஆலி காருக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையிலும், ஆலியை உயிரற்ற நிலையில்தான் மீட்க முடிந்துள்ளது.
</p><p>
ஆலியின் மரணம், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[214,000 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் அனுமதித்த திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/214000-migrants-have-been-let-into-the-uk-1787563838"></link>
            <id>https://news.lankasri.com/article/214000-migrants-have-been-let-into-the-uk-1787563838</id>
            <summary type="text">Thousands of migrants have been let into the UK under a scheme that shut five years ago: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த ஒரு திட்டத்தின் கீழ், ஆய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thousands of migrants have been let into the UK under a scheme that shut five years ago: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த ஒரு திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுவருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>


பிரெக்சிட்டுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரித்தானியாவில் வாழ அனுமதிப்பதற்காக, The EU Settlement Scheme என்னும் ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.</p><h3>

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை அனுமதித்த திட்டம்
</h3><p>
அந்த திட்டம், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்துவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e1d7ac-ad51-4659-9272-a0c0c627fd51/26-6a8c0f405a3a7.webp' /></p><p>
ஆனால், அதன்பிறகும், அத்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அதாவது, கால தாமதமாக வந்த விண்ணப்பங்கள் என்னும் பெயரில், 160,000 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் 54,000 பேரை சேர்த்து, முடிவடைந்த The EU Settlement Scheme திட்டத்தின் கீழ், 214,000 பேர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.</p><p>

இந்நிலையில், அந்த திட்டத்தை தவறாக பயன்படுத்தி ஏராளமானோர் பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாகவும், உள்துறை அலுவலகம் தூங்கிக்கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Neil O'Brien என்பவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbeb4900-ac78-44e9-aa70-215474c55912/26-6a8c0f3fa8f2b.webp' /></p><p>
ஐந்து ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்த ஒரு திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தவர்களின் கணவன் அல்லது மனைவி என்னும் பெயரில் பிரித்தானியா வர விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை ஏன் உள்துறை அலுவலகம் இன்னமும் ஏற்கிறது என்பதற்கு அமைச்சர்கள் பதிலளித்தாகவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் அவர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T10:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுசுகி அறிமுகப்படுத்திய மினி மின்சார கார் - 310 கி.மீ. ரேஞ்ச்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/suzuki-e-sky-ev-310km-range-minicar-1787564832"></link>
            <id>https://news.lankasri.com/article/suzuki-e-sky-ev-310km-range-minicar-1787564832</id>
            <summary type="text">Suzuki launches electric mini vehicle e Sky EV: சுசுகி நிறுவனம் மினி மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Suzuki e Skyஜப்பானின் பிரபல வாகன உற்பத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Suzuki launches electric mini vehicle e Sky EV: சுசுகி நிறுவனம் மினி மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><h2>
Suzuki e Sky</h2><p>ஜப்பானின் பிரபல வாகன உற்பத்தியாளரான சுசுகி மோட்டார், தனது முதல் மின்சார மினி வாகனமான “e Sky”-யை ஓன்லைனில் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

இந்த வாகனம் 310 கிலோமீட்டர் பயண தூரம் (range) கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7c43dc9-7762-4113-bb44-19ae04ac1e84/26-6a8c13228c01f.webp' /></p><p>மினி வாகனங்களில் இதுவே மிக நீண்ட பயண தூரம் கொண்டதாகக் கருதப்படுகிறது.

சுசுகி, தனது மினி வாகன உற்பத்தி அனுபவத்தை பயன்படுத்தி, எடை குறைப்பு, அதிக எரிசக்தி திறன் ஆகியவற்றின் மூலம் இந்த நீண்ட பயண தூரத்தை அடைந்துள்ளது.
</p><p>
“பெட்ரோல் வாகனங்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கும் எளிதாக ஓட்டக்கூடியதாக வடிவமைக்கப்பட்டது” என சுசுகி நிறுவனத்தின் மேம்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>இந்த வாகனத்தில், நேவிகேஷன் சிஸ்டம் மூலம் மீதமுள்ள பேட்டரி சக்தி மற்றும் போக்குவரத்து நிலையை அடிப்படையாகக் கொண்டு சிறந்த பாதையை பரிந்துரைக்கும் வசதி உள்ளது. இதனால், சார்ஜ் தீர்ந்துவிடும் பயம் இல்லாமல் பயணிகள் நிம்மதியாக பயணிக்க முடியும்.</p><h2>மக்களுக்கு ஏற்ற விலை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29d33d76-f1d0-4ceb-a132-6c791e5f16c6/26-6a8c13236324f.webp' /></p><p>சுசுகி நிறுவனம் இந்த வாகனத்தின் விலையை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், பெட்ரோல் வாகன பயனர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறும் வகையில், விலை மக்களுக்கு ஏற்றதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஜப்பானில் மின்சார மினி வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. சீனாவின் BYD நிறுவனம் கடந்த ஜூலையில் “Racco” எனும் மினி வாகனத்தை அறிமுகப்படுத்தியது. </p><p>மேலும், யோகோஹாமாவைத் தலைமையிடமாகக் கொண்ட EMT நிறுவனம் 2027ஆம் ஆண்டில் சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது.
</p><p>“போட்டி அதிகரிப்பது நுகர்வோருக்கு நல்லது. எங்கள் வலிமை மினி வாகனங்களில் உள்ளது, அதனை வலியுறுத்த விரும்புகிறோம்” என&nbsp;சுசுகி தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T09:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் சேன்ஸலருக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/majority-of-voters-predict-early-exit-for-merz-1787564648"></link>
            <id>https://news.lankasri.com/article/majority-of-voters-predict-early-exit-for-merz-1787564648</id>
            <summary type="text">Majority of Voters Predict Early Exit for Chancellor Merz: ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் விரைவில் பதவி விலகுவார் எனப் பெரும்பான்மையான வாக்காளர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Majority of Voters Predict Early Exit for Chancellor Merz: ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் விரைவில் பதவி விலகுவார் எனப் பெரும்பான்மையான வாக்காளர்கள் கணித்துள்ளனர்.</p><p>


ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்துவருகிறது.
</p><h3>
ஆய்வு முடிவுகள்</h3><p>

YouGov என்னும் ஆய்வமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், சேன்ஸலர் மெர்ஸ், 2029ஆம் ஆண்டு நிகழவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன் பதவி விலகிவிடுவார் என கருதுவதாக பெரும்பான்மையான வாக்காளர்கள் கணித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7646d54c-68bf-4422-babc-10cbe1827276/26-6a8c1269af567.webp' /></p><p>
36 சதவிகித வாக்காளர்கள், மெர்ஸ் 2026ஆம் ஆண்டு முடியும் வரை சேன்ஸலராக இருப்பார் என்றும், என்றாலும், 2029ஆம் ஆண்டு நிகழவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன் அவர் பதவி விலகிவிடுவார் என்றும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
ஆய்வில் பங்கேற்றவர்களில் 18 சதவிகிதம் பேர், இந்த ஆண்டு முடியும் முன்பே அவருக்கு பதிலாக வேறொருவர் சேன்ஸலராவார் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

29 சதவிகிதம் பேர், அடுத்த தேர்தல் வரையாவது அவர் சேன்ஸலராக இருப்பார் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
மொத்தத்தில், 54 சதவிகிதம் பேர், இந்த நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் முன் மெர்ஸ் பதவி விலகிவிடுவார் என கணித்துள்ளார்கள்.
</p><p>
அத்துடன், மெர்ஸ் சமீபத்தில் தனது கேபினட்டில் மாற்றங்கள் செய்த நிலையிலும், தனது அதிகாரத்தை வலுப்படுத்தத் தவறிவிட்டதாக பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதற்கிடையில், அடுத்து யார் சேன்ஸலராவார் என கேட்கப்பட்ட நிலையில், மெர்ஸின் CDU கட்சியைச் சார்ந்த, North Rhine-Westphalia மாகாண பிரீமியரான Hendrik Wüst என்பவரே அடுத்து சேன்ஸலராக பொருத்தமான நபர் என கருதுவதாக 25 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மெர்ஸே சேன்ஸலராக தொடர்வார் என 9 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ள நிலையில், 66 சதவிகிதம் பேர், அடுத்து யார் சேன்ஸலராவார் என தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T09:44:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜாம்பவான்களின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்த படிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/devdutt-padikkal-breaks-dravid-and-sachin-record-1787563951"></link>
            <id>https://news.lankasri.com/article/devdutt-padikkal-breaks-dravid-and-sachin-record-1787563951</id>
            <summary type="text">Padikkal breaks 27 years record of dravid: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தேவ்தத் படிக்கல் புதிய சாதனை படைத்தார். 

கொழும்பில் நடந்து வரும் டெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Padikkal breaks 27 years record of dravid: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தேவ்தத் படிக்கல் புதிய சாதனை படைத்தார். </p><p>

கொழும்பில் நடந்து வரும் டெஸ்டில் இந்திய துடுப்பாட்ட வீரர் தேவ்தத் படிக்கல் புதிய சாதனை படைத்தார்.&nbsp;</p><h2>தேவ்தத் படிக்கல்</h2><p>

இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய துடுப்பாட்ட வீரரான தேவ்தத் படிக்கல், முதல் டெஸ்டில் 167 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76876d44-2b54-423f-850e-a7b94dc541de/26-6a8c109ec5ac6.webp' /></p><p></p><p>

அதேபோல் கொழும்பில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டிலும் 117 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p>

இதன்மூலம் இந்திய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்டின் 27 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளார்.&nbsp;</p><p>அதாவது, வெளிநாட்டு மைதானங்களில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் (328) எடுத்த வீரராக தேவ்தத் படிக்கல் உள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5c86563-6829-4f71-ae3c-29350eb712e5/26-6a8c0fb2583a8.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T09:36:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி, துருக்கி, பாகிஸ்தான் கூட்டணியில் ஈரானுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-may-join-mecca-defense-pact-1787563201"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-may-join-mecca-defense-pact-1787563201</id>
            <summary type="text">Iran may join Mecca Defense Pact: சவுதி, துருக்கி, பாகிஸ்தான் கூட்டணியில் ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெக்கா பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran may join Mecca Defense Pact: சவுதி, துருக்கி, பாகிஸ்தான் கூட்டணியில் ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>
மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை</h2><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய பாதுகாப்பு கூட்டணி உருவாகியுள்ளது. சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இணைந்து “மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை” (Mecca Agreement for Mutual Defense) எனப்படும் ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 7-ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளன.
</p><p>
இந்த ஒப்பந்தத்தின் கீழ், மூன்று நாடுகளில் எதனையும் தாக்கினால் அது மற்ற நாடுகளையும் தாக்கியதாகக் கருதப்படும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb0d69f4-7262-4243-9317-895f116a52d5/26-6a8c0cc2c7277.webp' /></p><h2>ஈரானுக்கு அழைப்பு</h2><p>இப்போது, இந்த கூட்டணியில் ஈரானையும் சேர்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அல்மயாதீன் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் பாராளுமன்றத்தின் “Khaneh Mellat” செய்தி முகமைத் தலைவர் மெஹ்தி ரஹிமி, “ஈரானுக்கு அழைப்பு வந்துள்ளது, அது பரிசீலனையில் உள்ளது” என்று கூறியுள்ளார்.
</p><p>
ஆனால், இதுவரை ஈரான் வெளியுறவு அமைச்சகம் அல்லது சவுதி, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
</p><p></p><p>இந்த கூட்டணியை நேட்டோ (NATO) உடன்படிக்கையின் Article 5-உடன் ஒப்பிட்டு, துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹாகன் ஃபிடான், “இது ஈரானுக்கு எதிரானது அல்ல, எந்த நாட்டையும் குறிவைத்து செய்யப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த ஒப்பந்தத்தின் மூலம், மூன்று நாடுகளும் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், இராணுவத் தலைவர்கள் இடையே சந்திப்புகள், கூட்டு பயிற்சிகள், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.
</p><p>
மேலும், கூட்டணியை விரிவுபடுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும், எகிப்து போன்ற நாடுகள் எதிர்காலத்தில் சேர்க்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p></p><p>இந்த அழைப்பின் மூலம், பிராந்தியத்தில் “பாதுகாப்பு குடை” (Regional Security Umbrella) உருவாக்கும் முயற்சி வலுப்பெறுகிறது. </p><p>ஈரான் நீண்ட காலமாக பிராந்திய பாதுகாப்பு அமைப்புகளை ஆதரித்து வந்ததால், இந்த அழைப்பு அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T09:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் இளைய மகன் உயிருக்கு 10 மில்லியன் டொலர் பரிசு: ஈரான் வெளியிட்ட சர்ச்சை வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-state-tv-airs-murder-threat-to-trump-s-son-1787562408"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-state-tv-airs-murder-threat-to-trump-s-son-1787562408</id>
            <summary type="text">Iran state tv airs murder threat to trump’s son, offers $10mn reward: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இளைய மகன் பாரன் டிரம்ப் குறித்து ஈரானிய ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran state tv airs murder threat to trump’s son, offers $10mn reward: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இளைய மகன் பாரன் டிரம்ப் குறித்து ஈரானிய ஊடகம் வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சையாக மாறியுள்ளது.</p><h2> பாரன் டிரம்ப் குறித்து வெளியான 3 நிமிட வீடியோ</h2><p>
ஈரானிய அரசு ஊடகம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இளைய மகனான பாரன் டிரம்ப்(Barron Trump) தொடர்பான 3 நிமிட சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிப்பரப்பியது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> ஈரான் இன்டர்நேனஷல் வெளியிட்ட தகவலின்படி, அந்த வீடியோவில் டிரம்பின் இளைய மகனான பாரன் டிரம்ப் உயிருக்கு&nbsp;10 மில்லியன் டொலர் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">President Trump,<br><br>Islamic Republic’s state-run Channel 3 has now openly broadcast a video targeting your son, Barron Trump, discussing ways to reach him and promoting a reported $10 million bounty.<br><br>This isn’t some anonymous account on social media. This was broadcast on the… <a href="https://t.co/DPzwLnARO2">https://t.co/DPzwLnARO2</a> <a href="https://t.co/KfWN0xLsci">pic.twitter.com/KfWN0xLsci</a></p>&mdash; Niyak Ghorbani (نیاک) (@GhorbaniiNiyak) <a href="https://x.com/GhorbaniiNiyak/status/2091682542021718291?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p>அத்துடன் அந்த வீடியோவில் பாரன் டிரம்பை உளவு பார்த்தல், அவரின் ஆன்லைன் செயல்பாடுகள் மற்றும் அவரது ரகசிய பாதுகாப்பு சேவைகளை எவ்வாறு தாண்டிச் செல்வது என்ற வழிகள் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த வீடியோவின் உண்மை தன்மை மற்றும் அதில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் எதுவும் சரிபார்க்க முடியவில்லை.</p><p> அமெரிக்க ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களை அரசு ஊடகங்கள் குறிவைப்பது என்பது வழக்கத்திற்கு மாறான தீவிர போக்காக பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-24T09:07:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளன? பின்னணியில் உள்ள காரணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/reason-behind-most-of-flights-in-white-color-1787561996"></link>
            <id>https://news.lankasri.com/article/reason-behind-most-of-flights-in-white-color-1787561996</id>
            <summary type="text">reason for flights in white color: பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் உள்ளதன் பின்னணியில் உள்ள காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

விமானங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>reason for flights in white color: பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் உள்ளதன் பின்னணியில் உள்ள காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h3>

விமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது?
</h3><p>
பொதுவாக பெரும்பாலான விமானங்களின் அளவு மற்றும் நிறுவனத்தின் லோகோ வேறு வேறாக இருந்தாலும், பெரும்பாலானவை வெள்ளை நிறத்திலே இருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16d673c0-0592-4986-8bac-8e6149bfd162/26-6a8c080d76204.webp' /></p><p>

விமான நிறுவனங்கள் வெள்ளை நிறத்தை பயன்படுத்துவதற்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளது.
</p><p>
வெள்ளை நிறம் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டது. இதனால் விமானத்தின் மேற்பரப்பில் அதிக வெப்பம் உறிஞ்சப்படாமல் இருக்கிறது.</p><p> இதனால் விமானம் சூடாகாமல் தவிர்ப்பதோடு, குளிரூட்டும் அமைப்புக்கு அதிக சுமை ஏற்படாது.&nbsp;</p><p></p><p>
விமானம் வெள்ளை நிறத்தில் இருப்பதால் வெளிப்புறத்தில் ஏற்படும் சிறிய சேதங்கள், விரிசல்களை கூட பாதுகாப்பு சோதனையின் போது பராமரிப்பு குழுவினர் எளிதாக கண்டறிய முடியும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/081ad20c-8a53-44a0-96a4-fddc8e5bb609/26-6a8c080e2a430.webp' /></p><p>

சூரிய ஒளியில் வெள்ளை நிறம் மற்ற நிறங்களை விட குறைவாகவே மங்குவதால், விமானத்திற்கு மீண்டும் மீண்டும் வண்ணம் பூசப்பட வேண்டிய நிலை ஏற்படாது.</p><p> 

ஆனால் எல்லா விமானங்களும் வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. அரிதாக ஒரு சில விமானங்கள் கருப்பு, நீலம், தங்க நிறங்களில் உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T09:02:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 வயது சிறுமியின் உயிரை குடித்த அரிய வகை மூளை தின்னும் அமீபா: லூசியானாவில் சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-girl-loses-his-life-to-brain-eating-amoeba-1787560123"></link>
            <id>https://news.lankasri.com/article/us-girl-loses-his-life-to-brain-eating-amoeba-1787560123</id>
            <summary type="text">8 years old girl loses his life to brain eating amoeba: அரிய வகை மூளை தின்னும் அமீபாவால் லூசியானாவை சேர்ந்த 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மூளை தின்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>8 years old girl loses his life to brain eating amoeba: அரிய வகை மூளை தின்னும் அமீபாவால் லூசியானாவை சேர்ந்த 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.</p><h2> மூளை தின்னும் அமீபாவால் பறிபோன சிறுமியின் உயிர்</h2><p>அமெரிக்காவின் லூசியானா மாகாணம் ரஸ்டன்(Ruston) பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி லில்லியன் ஸ்மார்ட்(Lillian Smart) க்ளெய்போர்ன் ஏரியில்(Lake Claiborne) நீராடிய போது அரிய வகை மூளைத் தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p> லில்லியன் ஸ்மார்ட் தன்னுடைய 8வது பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளே(ஆகஸ்ட் 22ம் திகதி) சனிக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p> இந்த துயர செய்தியை அவரது குடும்பத்தினர் பேஸ்புக் பக்கத்தில் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fcd80f1-5af4-4d26-afe2-ff5b9450982a/26-6a8c00bc8f2d8.webp' /></p><p></p><p> மருத்துவர்களின் தீவிரமான சிகிச்சைக்கு பிறகும் மூளையில் ஏற்பட்ட தீவிரமான பாதிப்பு காரணமாக அவரை காப்பாற்ற முடியாமல் போனதாக குடும்பத்தினர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளனர்.</p><h2> அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்</h2><p>
ஆகஸ்ட் 15ம் திகதி 8 வயது சிறுமியான லில்லியன் ஸ்மார்ட்டின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p> ஆகஸ்ட் 19ம் திகதி லூசியானா சுகாதாரத்துறை, மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு நெக்லேரியா பவுலேரி(Naegleria fowleri) தொற்று பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தியது.</p><p> மேலும் கிளைபோர்ன் பாரிஷில் உள்ள க்ளெய்போர்ன் ஏரியில் நீந்திய போது இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p><p> பின்னர் அந்த பாதிக்கப்பட்டவர் 8 வயது சிறுமியான லில்லியன் தான் என்று அவரது குடும்ப நண்பர்கள் உறுதிப்படுத்தினர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T08:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரில் உக்ரைனுடன் நிற்கிறோம், பின்வாங்க மாட்டோம்: பிரித்தானிய பிரதமர் ரஷ்யாவிற்கு பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-says-we-stand-ukraine-in-fight-1787559499"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-says-we-stand-ukraine-in-fight-1787559499</id>
            <summary type="text">UK PM Andy Burnham arrives in kyiv: ஒரு நீடித்த அமைதி ஏற்படும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம் என பிரித்தானிய பிரதமர் பர்ன்ஹாம் உக்ரைனில் பேசியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>UK PM Andy Burnham arrives in kyiv: ஒரு நீடித்த அமைதி ஏற்படும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம் என பிரித்தானிய பிரதமர் பர்ன்ஹாம் உக்ரைனில் பேசியுள்ளார்.
</p><p>அதி இரகசிய ஏவுகணை திட்டங்களை ஒப்படைப்பதற்காக உக்ரைன் வந்தடைந்த பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம், உக்ரைனுடன் நிற்கிறோம், பின்வாங்க மாட்டோம் என ரஷ்யாவிற்கு கூறினார்.&nbsp;</p><h2>பிரித்தானியாவின் ட்ரோன்&nbsp;விமானங்கள் </h2><p> 


ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிகளில் தாக்குதல் நடத்த, பிரித்தானியாவின் ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d4a515c-7670-41d1-a209-4f1c4b51a595/26-6a8c000e4f7bb.webp' />&nbsp;</p><p></p><p>
அத்துடன் பிரித்தானியா எந்த அளவிற்கு இதில் ஆழமாக ஈடுபடுகிறோ, அந்த அளவிற்கு அது அதிக விலையைக் கொடுக்கும் என்றது.

இந்த சூழலில், பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக உக்ரைன் வந்தடைந்தார்.</p><p> இது அவரது முதல் வெளிநாட்டு பயணமாகும். 

உக்ரைனின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்றார். </p><p>அப்போது பேசிய அவர், 

"உக்ரைனின் 35வது சுதந்திர தினத்தில், அதன் மக்களுக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது: பிரித்தானியா உங்களுக்குப் பின்னால் இருக்கிறது. </p><p>

வரவிருக்கும் போராட்டத்திலும், புனரமைப்பிலும் நாங்கள் உக்ரைனுடன் நிற்கிறோம். எங்கள் உறுதியைப் பற்றி ரஷ்யாவிற்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. </p><p>ஒரு நீடித்த அமைதி ஏற்படும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்" என்றார்.

மேலும், அவர் அதி இரகசிய ஸ்டோர்ம் ஷேடோ ஏவுகணைத் திட்டங்களை ஒப்படைக்க உள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f884dede-efa4-4203-9929-72898bc46c67/26-6a8c000f17532.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T08:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 1200 ஆண்டு பழமையான தங்கப் பொருளை கண்டெடுத்த மாணவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-student-finds-1200-year-old-gold-artifact-1787558608"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-student-finds-1200-year-old-gold-artifact-1787558608</id>
            <summary type="text">UK student finds 1200-year-old gold artifact: பிரித்தானியாவில் 1200 ஆண்டு பழமையான தங்கப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.20 வயது மாணவி

பிரித்தானியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK student finds 1200-year-old gold artifact: பிரித்தானியாவில் 1200 ஆண்டு பழமையான தங்கப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2>20 வயது மாணவி</h2><p>
</p><p>
பிரித்தானியாவின் நார்தம்பர்லாந்து பகுதியில் நடைபெற்ற தொல்பொருள் அகழாய்வில், 20 வயது அமெரிக்க மாணவி யாரா சோசா (Yara Souza), வெறும் 90 நிமிடங்களில் தங்கப் பொருளை கண்டுபிடித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a0a75f-0a01-4fa8-a4b1-ba5481b38b5b/26-6a8bfad240069.webp' /></p><p>நியூகாஸில் பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் ஆய்வு படிக்கும் இவர், தனது முதல் அகழாய்வில் இவ்வளவு முக்கியமான கண்டுபிடிப்பை செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த&nbsp;பொருள் </h2><p>

இந்த தங்கப் பொருள் சுமார் 1.5 அங்குல அளவுடையது. அழகிய வடிவமைப்புடன் கூடிய இந்தப் பொருள் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
</p><p>

அக்காலத்தில் தங்கம் உயர்ந்த சமூகத்தினரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும், இது மதச்சார்ந்த அல்லது சடங்கு நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
</p><p></p><p>இந்த அகழாய்வு நடைபெற்ற இடம், ரோமப் பேரரசின் முக்கிய சாலையான “Dere Street” அருகே அமைந்துள்ளது. ரோமப் படையினர் 79-81 கி.பி. காலத்தில் அமைத்த இந்தச் சாலை, வடக்கு பிரிட்டனை அடக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது.</p><p>இன்றும் 200 மைல் நீளத்தில் பரவியுள்ள இந்தச் சாலை, அக்காலத்தில் மத மையங்களான ஜெட்பர்க் மற்றும் ஹெக்சாம் ஆகியவற்றை இணைத்தது.</p><p>

2021ஆம் ஆண்டிலும் இதே பகுதியில் மற்றொரு தங்கப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அந்த இடம் உயர்ந்த சமூகத்தினரின் மதச்சார்ந்த செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
</p><p></p><p>யாரா சோசா, “என் முதல் அகழாய்வில் இவ்வளவு விரைவாக ஒரு முக்கியமான பொருளைக் கண்டுபிடித்தது நம்ப முடியாத அனுபவமாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.</p><p> இந்தப் பொருள் தற்போது நார்தம்பர்லாந்து “Great North Museum: Hancock” அருங்காட்சியகத்தில் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் காட்சிக்கு வைக்கப்படும்.</p><p>

இந்த கண்டுபிடிப்பு, மாணவர்களுக்கு தொல்பொருள் ஆய்வுத் திறன்களை கற்றுக்கொடுக்கவும், பிரித்தானியாவின் வரலாற்றை மேலும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. </p><p>நிபுணர்கள், “இது ரோமர் காலத்திற்குப் பிந்தைய பிரித்தானியாவின் சமூக மற்றும் மத வாழ்க்கையைப் பற்றி புதிய கேள்விகளை எழுப்புகிறது” எனக் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T08:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரியும் மேகனும் மீண்டும் கனடா திரும்பலாம்: அரண்மனை வட்டாரம் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-meghan-may-return-to-canada-after-1year-1787557417"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-meghan-may-return-to-canada-after-1year-1787557417</id>
            <summary type="text">Harry and Meghan may only stay one year before moving to Canada: ஹரியும் மேகனும் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கனடாவுக்குத் திரும்பலாம் என அரண்மனை வட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry and Meghan may only stay one year before moving to Canada: ஹரியும் மேகனும் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கனடாவுக்குத் திரும்பலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>

பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்கப் பெண்ணான மேகனை திருமணம் செய்ததிலிருந்தே தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கத் துவங்கினார்.
</p><p>
திடீரென ஒரு நாள் தானும் மேகனும் ராஜ குடும்ப மூத்த உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஹரி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/598573f0-faf6-4ca0-bd14-832e548dea4d/26-6a8bf62a663c4.webp' /></p><p>

அதன் பின் ஹரியும் மேகனும் கனடாவுக்குச் சென்றார்கள். </p><p>அதன் பின் தன் குடும்பத்துடன், தன் மனைவி மேகனுடைய நாடான அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார் ஹரி.</p><p>
ஆக, எடுத்தோம் கவிழ்த்தோம் என பல முடிவுகளை எடுப்பவர் ஹரி.

இந்நிலையில், மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்புவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார் ஹரி!
</p><h3>
மீண்டும் கனடா திரும்பலாம்</h3><p>

ஹரி, தன் குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியா திரும்ப உள்ளதாகவும், ஹரியின் பிள்ளைகள் பிரித்தானியாவில் கல்வி கற்க உள்ளதாகவும், அவர்கள் படிக்கப்போகிற பள்ளி குறித்து முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e23100-eabb-4633-b659-2fdd961fec34/26-6a8bf62b1760f.webp' /></p><p>
இந்நிலையில், ஹரியும் மேகனும், ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கனடாவுக்குத் திரும்பலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹரி பிரித்தானியா திரும்பினாலும், அவருக்கு ராஜ குடும்பத்தில் பொறுப்புகள் கொடுக்கப்படப்போவதில்லை என்றே கருதப்படுகிறது.&nbsp;</p><p></p><p>

அப்படியிருக்கும்பட்சத்தில், ஹரி எப்போது வேண்டுமானால் மீண்டும் கனடாவுக்கோ அல்லது அவுஸ்திரேலியாவுக்கோ திரும்பலாம் என்கிறார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.
</p><p>
சிக்கல் என்னவென்றால், ஹரி, மேகன் தம்பதியரின் பிள்ளைகளான ஆர்ச்சிக்கும் லிலிபெட்டுக்கும் பள்ளி துவங்கும் நேரம் வந்துவிட்டது.
</p><p>
ஆக, பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தபின் ஹரியும் மேகனும் தாங்கள் விரும்பிய நாட்டுக்குச் செல்வது குறித்து எப்படி முடிவெடுப்பார்கள் என்பதுதான் புரியவில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:44:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனி நகராட்சி மன்றத்தில் ஸ்விங்கர் பார்ட்டி: சர்ச்சையான கவுன்சிலரின் வினோத திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/councilman-in-germany-propose-swinging-parties-1787557393"></link>
            <id>https://news.lankasri.com/article/councilman-in-germany-propose-swinging-parties-1787557393</id>
            <summary type="text">Councilman in Germany propose Swinging Parties: ஜேர்மன் நகராட்சி மன்ற கவுன்சிலரின் ஸ்விங்கர் பார்ட்டி திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கவுன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Councilman in Germany propose Swinging Parties: ஜேர்மன் நகராட்சி மன்ற கவுன்சிலரின் ஸ்விங்கர் பார்ட்டி திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கவுன்சிலரின் சர்ச்சையான ஸ்விங்கர் பார்ட்டி திட்டம்</h2><p>ஜேர்மனியின் மான்ஹெய்ம்(Mannheim) நகரின் ஊராட்சி மன்றத்தில் வயது வந்தவர்களுக்கான ஸ்விங்கர்(Swinging) பார்ட்டி நிகழ்ச்சிகளை நடத்த அப்பகுதி உள்ளூர் அரசியல்வாதியும் கவுன்சிலருமான ஜூலியன் ஃபெராட்(Julien Ferrat) முன்வைத்த யோசனை மிகவும் சர்ச்சையாக வெடித்துள்ளது.</p><p> நகராட்சிக்கான வருவாயை ஈட்டுவது மற்றும் மாற்று வாழ்க்கை முறைகள் மீதான களங்கத்தை நீக்குவது போன்ற நோக்கங்களுக்காக இந்த திட்டமானது முன் வைக்கப்பட்டு இருப்பதாக அவர் விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61fcd3f4-faa8-4362-b618-b21d1eb07822/26-6a8bf6133cb8d.webp' /></p><p> liberal Die Mannheimer கட்சியின் தலைவரான ஜூலியன் ஃபெராட்(Julien Ferrat) ஜேர்மனியின் மிகவும் பைத்தியக்கார கவுன்சிலர்(Germany’s craziest councillor") என்று அழைக்கப்படுவர்.</p><p> ஏற்கனவே இது தொடர்பாக 50 பேர் ஆர்வம் தெரிவித்து இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை நேரில் சந்திக்க ஃபெராட் திட்டமிட்டுள்ளார்.</p><h2>ஸ்விங்கர் பார்ட்டி என்பது?</h2><p>
ஸ்விங்கர் பார்ட்டி என்பது கூட்டாளிகளின் முழு ஒப்புதல் மற்றும் அறிதலுடன் தங்கள் பாலியல் துணைவர்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது ஆகும்.</p><p> ஜேர்மனியில் கிட்டத்தட்ட 1,28,000 ஸ்விங்கர்கள் மற்றும் பல ஸ்விங்கர் பார்ட்டி கிளப்புகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p> இந்நிலையில் அரசாங்க நிர்வாகக் கட்டிடத்தை வயது வந்தவர்களுக்கான பொழுதுபோக்கு இடமாக மாற்றும் ஃபெராட் திட்டத்திற்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-24T07:43:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brits-warned-for-apply-asylum-for-australia-1787551149"></link>
            <id>https://news.lankasri.com/article/brits-warned-for-apply-asylum-for-australia-1787551149</id>
            <summary type="text">British people trying back door route to stay in Australia by applying for asylum have been warned: அவுஸ்திரேலியாவில் தங்குவதற்காகப் புகலிடம் கோரி விண...</summary>
            <content type="html"><![CDATA[<p>British people trying back door route to stay in Australia by applying for asylum have been warned: அவுஸ்திரேலியாவில் தங்குவதற்காகப் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் மறைமுக வழியை முயற்சிக்கும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p>


230க்கும் அதிகமான பிரித்தானியர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிகை
</h3><p>
அதாவது, அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலகட்டத்தை நீட்டிப்பதற்காக சிலர் இந்த முறையை பின்பற்றுவதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p>
ஆகவே, அப்படி அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலகட்டத்தை நீட்டிப்பதற்காக புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் பிரித்தானியர்கள் அப்படிச் செய்வதை நிறுத்துமாறு அவுஸ்திரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11d8674b-7f6e-4743-ba2e-148649fda52f/26-6a8bddae6c46c.webp' /></p><p>
அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் பிரித்தானியர்களும் அயர்லாந்து நாட்டவர்களும், அவுஸ்திரேலியாவில் தாங்கள் தங்கியிருக்கும் காலகட்டத்தை நீட்டிக்க விரும்பினால், புகலிடம் கோரி விண்ணப்பிக்குமாறு சமூக ஊடகங்களில் ஆலோசனை வழங்கப்படுவதை கவனித்துவருவதாக அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ள நிலையில், அது மிக மோசமான ஆலோசனை என உள்விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>

மேலும், இப்படி மோசடி செய்து அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களை நாடுகடத்துவதற்காக, கூடுதல் புலம்பெயர்தல் அலுவலர்களை பணியிலமர்த்துவது தொடர்பில், அவுஸ்திரேலிய உள் விவகாரங்கள் அமைச்சரான டோனி பர்க் திட்டமிட்டுவருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:25:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/net-immigration-to-switzerland-fells-in-2026-half-1787555909"></link>
            <id>https://news.lankasri.com/article/net-immigration-to-switzerland-fells-in-2026-half-1787555909</id>
            <summary type="text">Net immigration to Switzerland fell by 12.5% in the first half of 2026: 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்துக்கு நிகர புலம்பெயர்தல் 12.5 சத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Net immigration to Switzerland fell by 12.5% in the first half of 2026: 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்துக்கு நிகர புலம்பெயர்தல் 12.5 சதவிகிதம் குறைந்துள்ளது.</p><p>


2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்தின் நிகர புலம்பெயர்தல் 12.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.
</p><h3>
சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை
</h3><p>
2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 74,112 பேர் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4942c331-a3fa-4107-b918-294c5254e609/26-6a8bf04654a88.webp' /></p><p>இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 2.9 சதவிகிதம் குறைவாகும்.
</p><p>
அதே நேரத்தில், 39,251 பேர் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறியுள்ளனர். இது இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 4.3 சதவிகிதம் அதிகமாகும்.&nbsp;</p><p></p><p>

ஆக, நிகர புலம்பெயர்தல் 12.5 சதவிகிதம் குறைந்து, சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை, 2026 ஜூன் இறுதி நிலவரப்படி 2,432,444 ஆகியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:19:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் சூழலில் 7.5 ட்ரில்லியன் கன அடி எரிவாயு இருப்பை கண்டறிந்துள்ள ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-discovers-7-5-trillion-cubic-feet-gas-reserve-1787554884"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-discovers-7-5-trillion-cubic-feet-gas-reserve-1787554884</id>
            <summary type="text">Iran discovers 7.5 trillion cubic feet gas reserve: ஈரானில் 7.5 ட்ரில்லியன் கன அடி எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஈரானின் பெட்ரோலிய அமைச்சர் மொஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran discovers 7.5 trillion cubic feet gas reserve: ஈரானில் 7.5 ட்ரில்லியன் கன அடி எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஈரானின் பெட்ரோலிய அமைச்சர் மொஹ்சென் பக்நெஜாத் தெரிவித்துள்ளார்.</p><h3> 

ஈரானில் 7.5 ட்ரில்லியன் கன அடி எரிவாயு இருப்பு</h3><p> 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரில், ஈரானின் எரிவாயு ஆலைகள் தாக்கப்பட்டு கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. </p><p>

மேலும், அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை நிறுத்திவிட்டு, ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cfca640-31f1-49e4-9cc9-453cd3a059f6/26-6a8bec45616e0.webp' /></p><p>

இந்த சூழலில் ஈரானில் 7.5 ட்ரில்லியன் கன அடி கண்டறியப்பட்டுள்ளதாக ஈரானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் மொஹ்சென் பக்நெஜாத் தெரிவித்துள்ளார்.</p><p> 

இது குறித்து பேசிய அவர், "ஃபார்ஸ் மாகாணத்தின் தென்பகுதியில் 7.5 ட்ரில்லியன் கன அடி புதிய எரிவாயு இருப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவில் சுமார் 5.7 டிரில்லியன் கன அடி மீட்கக்கூடிய அளவில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae9ba186-c176-4bfa-9b79-719c699d20ae/26-6a8bec4618f34.webp' /></p><p>
மீட்கக்கூடிய இந்த இருப்பு, ஈரான் கத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான சவுத் பார்ஸின் ஒரு கட்டத்திலிருந்து கிடைக்கும் சுமார் 15 ஆண்டுகால உற்பத்திக்குச் சமமானதாக இருக்கும்." என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எரிவாயுவை “இனிப்பு எரிவாயு” என்று வர்ணித்த பக்னேஜாத், இது மேம்பாட்டு மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் இரண்டையும் குறைக்கும் என தெரிவித்துள்ளார். </p><p>

ஈரானிய அரசு ஊடகங்கள் இந்த வளங்களின் மதிப்பு பல்லாயிரக்கணக்கான கோடி டொலர்களாக இருக்கும் என மதிப்பிடுகின்றன.
</p><p>
கடந்த ஆண்டு, பஸான் வயலில் சுமார் 10 டிரில்லியன் கன அடி எரிவாயு இருப்பதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:02:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்ச்சே அணியை புரட்டியெடுத்த பார்சிலோனா: சம்பவம் செய்த இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/barcelona-beat-elche-by-5-0-in-la-liga-1787555082"></link>
            <id>https://news.lankasri.com/article/barcelona-beat-elche-by-5-0-in-la-liga-1787555082</id>
            <summary type="text">
Barcelona beat elche by 5-0 in la liga: லா லிகா போட்டியில் பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் எல்ச்சே அணியை வீழ்த்தியது.

மானுவல் மார்ட்டினெஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
Barcelona beat elche by 5-0 in la liga: லா லிகா போட்டியில் பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் எல்ச்சே அணியை வீழ்த்தியது.
</p><p>
மானுவல் மார்ட்டினெஸ் வாலெரோ மைதானத்தில் நடந்த லா லிகா போட்டியில், பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் எல்ச்சே அணியை பந்தாடியது.&nbsp;</p><h2>ரபின்ஹா&nbsp;</h2><p>
பார்சிலோனா மற்றும் எல்ச்சே அணிகளுக்கு இடையிலான லா லிகா கால்பந்து போட்டி மானுவல் மார்ட்டினெஸ் வாலெரோ மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/106a7e80-90e9-42db-be0e-479ac3987429/26-6a8bed0e3ce3f.webp' />&nbsp;</p><p></p><p>

14வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் பார்சிலோனாவின் ரபின்ஹா (Raphinha) கோல் அடித்தார். </p><p>அதனைத் தொடர்ந்து கரீம் அடேயேமி 45+3வது நிமிடத்தில் கோல் அடித்தார். 

இதன்மூலம் முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த பார்சிலோனா, இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்தியது.
</p><p>
அந்த அணியின் ஃபெர்மின் லோபெஸ் (Fermin Lopez) 71 மற்றும் 79வது நிமிடங்களில் கோல் அடித்தார். </p><p>இதற்கு பதிலடியாக எல்ச்சே அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் மிரட்டல் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef3ba340-1eba-4f2d-8ff7-e54bbc107b7e/26-6a8bed0d87290.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:02:05+00:00</updated>
        </entry>
    </feed>
