<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-16T06:35:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியா சொந்த மண்ணில் படுதோல்வி! சம்பவம் செய்த வங்காளதேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bangladesh-first-time-beat-australia-test-2026-1786861937"></link>
            <id>https://news.lankasri.com/article/bangladesh-first-time-beat-australia-test-2026-1786861937</id>
            <summary type="text">அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்காளதேசம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டார்வினில் நடந்த அவுஸ்திரேலியா அணிக்கு எதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்காளதேசம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p> 

டார்வினில் நடந்த அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>கிரீன்&nbsp;சதம் </h2><p>
அவுஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டார்வினில் நடந்தது.</p><p>

முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 198 ஓட்டங்களும், வங்காளதேசம் 426 ஓட்டங்களும் எடுத்தன. 

இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 284 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. </p><p>கேமரூன் கிரீன் 104 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் 57 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம், 14.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
</p><p>
முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஹசன் மஹ்முத் (Hasan Mahmud) ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T06:29:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலிய பகுதியாக காசா மற்றும் மேற்குக் கரை: அமெரிக்கா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/palestinian-territories-as-part-of-israel-us-map-1786851833"></link>
            <id>https://news.lankasri.com/article/palestinian-territories-as-part-of-israel-us-map-1786851833</id>
            <summary type="text">காசா மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதியை இஸ்ரேலிய பகுதியாக சித்தரித்து அமெரிக்கா வெளியிட்ட வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசா மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதியை இஸ்ரேலிய பகுதியாக சித்தரித்து அமெரிக்கா வெளியிட்ட வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய வரைபடம்</h2><p>அண்மையில் மத்திய கிழக்கு வரைபடம் ஒன்றை அமெரிக்காவின் மத்திய கட்டளைக் குழு வெளியிட்டு இருந்தது.</p><p>அதில், பாலஸ்தீனத்தின் காசா மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதிகள் இஸ்ரேலின் ஒருப்பகுதியாக காட்டப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> சென்ட் காம் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This is the plan which Arab kingdoms back huh. Centcom removes Palestine and give it all to Israel. <a href="https://t.co/LWwgGe5vxr">pic.twitter.com/LWwgGe5vxr</a></p>&mdash; Ali (@MerruX) <a href="https://x.com/MerruX/status/2088750061723296252?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p>இந்த சுற்றுப்பயணத்தின் போது தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய குடிமை மற்றும் ராணுவத் தலைவர்களுடன் உயர்மட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.</p><p>இதில், பஹ்ரைன், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba2c0e81-5286-46ca-8aa5-7afe39628811/26-6a8131fb65b49.webp' /></p><p>மேலும் சுற்றுப்பயணத்தின் போது இந்த நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களுடன் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் உரையாடினார்.</p><p> மத்திய கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T06:03:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்த நபர்: ரூ.5 லட்சம் வரை அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tourist-fined-5lakhs-for-waking-polar-bear-1786860149"></link>
            <id>https://news.lankasri.com/article/tourist-fined-5lakhs-for-waking-polar-bear-1786860149</id>
            <summary type="text">பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்ததற்காக நபர் ஒருவருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்த நபர்நார்வே நாட்டின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்ததற்காக நபர் ஒருவருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்த நபர்</h2><p>நார்வே நாட்டின் தீவுக்கூட்டமான ஸ்வால்பார்ட் கடற்கரையில் வெள்ளை பனிக்கரடி ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது.</p><p> இந்நிலையில் அந்த கடற்கரைக்கு உள்ளூர் கப்பல் ஒன்றில் வந்த சுற்றுலா பயணி ஒருவர் பனிக்கரடி தூங்கிக் கொண்டு இருப்பதை கண்டுள்ளார்.</p><p>மேலும் கரடி நகர்ந்து செல்வதை பார்க்க விரும்பிய அந்த நபர் வேண்டுமென்றே கப்பலில் இருந்த ஒலி எழுப்பானை தொடர்ந்து எழுப்பி கரடியை பீதியடைய வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a37ba4d-3005-4a39-b330-0c090cc2feb2/26-6a8152773cf0f.webp' /></p><p> திடீரென எழுப்பப்பட்ட அந்த சத்தத்தில் திகிலடைந்த கரடி தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்டதோடு அந்த இடத்தை விட்டும் தப்பியோடியது.</p><p>ஸ்வால்பார்டில் 1972ம் ஆண்டு முதல் பனிக்கரடிகள் பாதுகாக்கப்பட்ட இனமாக இருந்து வருகிறது. மேலும் பனிக்கரடிகளுக்கு இடையூறு செய்வது என்பது சட்டப்படி குற்றமாகவும் கருதப்படுகிறது.</p><p></p><h2> ரூ.5 லட்சம் வரை அபராதம்</h2><p>
இந்த நிகழ்வுகளை கவனித்த உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து ஸ்வால்பார்ட் ஆளுநர் முன்பு நிறுத்தியுள்ளனர்.</p><p> விசாரணையின் இறுதியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், இறுதியில் சம்பந்தப்பட்ட நபருக்கு 50000 நார்வேஜியன் குரோனர்(இந்திய ரூபாய் மதிப்பில் 4.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T06:02:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[“தளபதி விஜய்” சாலை: கிராம சபையில் பரந்தூர் மக்கள் தீர்மானம் நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/parandur-people-named-thalapathy-vijay-to-road-1786855906"></link>
            <id>https://news.lankasri.com/article/parandur-people-named-thalapathy-vijay-to-road-1786855906</id>
            <summary type="text">பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள சாலைக்கு “தளபதி விஜய்” என கிராம மக்கள் பெயர் சூட்டியுள்ளனர்.நிறுத்தி வைக்கப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள சாலைக்கு “தளபதி விஜய்” என கிராம மக்கள் பெயர் சூட்டியுள்ளனர்.</p><h2>நிறுத்தி வைக்கப்பட்ட பரந்தூர் விமான நிலையம்</h2><p>பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று பல மாதங்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.</p><p>பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்து இருந்தார்.</p><p> இதையடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்றதை அடுத்து பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5ac10b8-1974-4a97-a8a8-67882bf85d55/26-6a8141e3f33c9.webp' /></p><p></p><h2>&nbsp;தளபதி விஜய் சாலை</h2><p>இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக&nbsp; அந்த கிராம மக்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.</p><p> தீர்மானத்தில் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள சாலைக்கு “தளபதி விஜய்” சாலை என பெயரிடப்பட்டுள்ளது.</p><p> இந்த தீர்மானம் கிராம சபையில் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-16T05:50:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சியூட்டாவிற்குள் நுழைய முயற்சி... டசின் கணக்கான புலம்பெயர்ந்தோர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/morocco-detains-dozens-of-migrants-1786840134"></link>
            <id>https://news.lankasri.com/article/morocco-detains-dozens-of-migrants-1786840134</id>
            <summary type="text">Morocco detains dozens of migrants: சியூட்டாவிற்குள் நுழைய முயன்ற டசின் கணக்கான புலம்பெயர் மக்களை மொராக்கோ நிர்வாகம் கைது செய்துள்ளது.
வட ஆப்பிரிக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Morocco detains dozens of migrants: சியூட்டாவிற்குள் நுழைய முயன்ற டசின் கணக்கான புலம்பெயர் மக்களை மொராக்கோ நிர்வாகம் கைது செய்துள்ளது.</p><p>
வட ஆப்பிரிக்காவில் ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலுள்ள 'சியூட்டா' (Ceuta) பகுதிக்குள் நுழைய முயன்ற டசின் கணக்கான புலம்பெயர் மக்களை மொராக்கோ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><h2>இரண்டாவது முறையாக</h2><p>
</p><p>மொராக்கோ பாதுகாப்புத் தரவுகளின்படி, ஃபினிடெக் (Fnideq) நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள எல்லைக்குச் செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். </p><p>சில மணிநேரங்களுக்குள் சுமார் 78,000 குடியேறிகள் கடல் வழியாக அந்தத் தனிப்பகுதிக்கு (exclave) வந்து சேர்ந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது; அவர்களில் 100 பேர் மரணமடைந்ததாகவும், வந்தவர்களில் பெரும்பாலோர் மொராக்கோவிற்கே திரும்பிவிட்டதாகவும் அந்நகர மேயர் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe25949f-e748-4ece-9227-94c1f6923a5b/26-6a810448c018a.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், மக்கள் பெருமளவில் வந்து குவிந்ததைத் தொடர்ந்தும், இந்த வார இறுதியில் இரண்டாவது முறையாகப் பெருந்திரளாக எல்லை கடக்க முயற்சி மேற்கொள்ளப்படலாம் என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவியதைத் தொடர்ந்தும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
எல்லையிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள ஃபினிடெக் பகுதியிலோ அல்லது அதைச் சுற்றியோ 111 பேர் தடுத்து வைக்கப்பட்டதாகப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன; இவர்களில் பெரும்பாலோர் சஹாரா-கீழ் ஆப்பிரிக்கப் (sub-Saharan Africa) பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p> </p><p>அருகிலுள்ள குன்றுகளில் கூடியிருந்த புலம்பெயர்ந்தோர் குழுக்களைக் கலைக்க, கலவரத் தடுப்பு உபகரணங்களை அணிந்திருந்தவர்கள் உட்பட மொராக்கோ காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p> </p><p>சனிக்கிழமையன்று பெருந்திரளாக எல்லை கடந்து செல்லுமாறு அழைப்பு விடுக்கும், சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் செய்திகள் பரவுவதை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக மொராக்கோ அரசாங்கம் இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்தது; அத்துடன், இதனை ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் இதில் பங்கேற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.</p><p>சனிக்கிழமையன்று மொராக்கோ, இராணுவ அதிகாரிகளையும், கடற்படை வேகப் படகுகளையும், ட்ரோன்களையும் எல்லைக்கு அனுப்பியிருந்தது.</p><p> இதற்கிடையில், அப்பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள ஸ்பெயின் நிர்வாகம் 1,500-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை ஈடுபடுத்தியது. கடந்த மாதம் ஏற்பட்ட ஊடுருவலைத் தொடர்ந்து, ஸ்பெயினும் ஒரு உலோக வேலியையும் மிதக்கும் தடுப்பு ஒன்றையும் அமைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83e62c3a-42d6-4fdd-b61e-445048c4f939/26-6a81044971b63.webp' /></p><p> </p><p>ஜூலை மாத இறுதியில் வெடித்த இந்த நெருக்கடி நிலை பின்னர் தணிந்திருந்தாலும், இது திறந்த எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே பதற்றத்தையும், ஸ்பானிய அரசாங்கத்தின் மீதான விமர்சனத்தையும் தூண்டியுள்ளது. </p><p>ஸ்பெயினுடனான 29 உறுப்பினர்களைக் கொண்ட ஷெங்கன் (Schengen) சுதந்திர நடமாட்ட ஒப்பந்தத்தை இத்தாலி இடைநிறுத்தியதுடன், ஸ்பெயினிலிருந்து வருபவர்களுக்கான எல்லைச் சோதனைகளையும் அறிமுகப்படுத்தியது. </p><p>இத்தாலிக்கு ஃபின்லாந்து மற்றும் டென்மார்க் ஆதரவளித்தன; அதேவேளையில், ஸ்பெயினின் உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்று செக் குடியரசு வலியுறுத்தியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T02:30:08+00:00</updated>
        </entry>
    </feed>
