<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-03T05:46:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபிஃபா தலைவரின் மறுதேர்தல்... அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ் கால்பந்து சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wales-withdraws-support-for-1785730465"></link>
            <id>https://news.lankasri.com/article/wales-withdraws-support-for-1785730465</id>
            <summary type="text">ஃபிஃபா தலைவருக்கானத் தேர்தலில் மீண்டும் களம் காணும் கியானி இன்ஃபான்டினோவுக்கு அளிக்கப்பட்டிருந்த ஆதரவை வேல்ஸ் கால்பந்து சங்கம் அதிரடியாக விலக்கிக் கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிஃபா தலைவருக்கானத் தேர்தலில் மீண்டும் களம் காணும் கியானி இன்ஃபான்டினோவுக்கு அளிக்கப்பட்டிருந்த ஆதரவை வேல்ஸ் கால்பந்து சங்கம் அதிரடியாக விலக்கிக் கொண்டுள்ளது.</p><h2>அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ்</h2><p> </p><p>
Gianni Infantino-வின் மறுதேர்தலுக்கான ஆதரவை உத்தியோகப்பூர்வமாக விலக்கிக் கொண்ட முதல் கால்பந்து சங்கம் வேல்ஸ் என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d67e77d-4fd1-4c3c-8166-94e8190710cd/26-6a70176248a37.webp' /></p><p>
</p><p>உலகக் கிண்ணம் தொடருக்கானப் பங்குகளை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை அவர் ரகசியமாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உறவினர்களுடன் முன்னெடுத்த நிலையில், இன்ஃபான்டினோவின் தலைமையின் மீதான நம்பிக்கை தகர்ந்தது. </p><p>வேல்ஸ் கால்பந்து சங்கம் தெரிவிக்கையில், 2027-2031-ஆம் ஆண்டுக் காலத்திற்கான ஃபிஃபா (FIFA) தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்காக கியானி இன்ஃபான்டினோவின் வேட்புமனு மீதான ஆதரவை விலக்கிக்கொள்வதை இதன் மூலம் உறுதிப்படுத்துவதாக பதிவு செய்துள்ளது.</p><p></p><p> </p><p>அத்துடன், நல்லாட்சி, செயல்முறை, தலைமைத்துவம், பங்குதாரர் மேலாண்மை, தகவல் தொடர்பு மற்றும் சரியான முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் அண்மையில் ஏற்பட்ட தோல்விகள், உலக கால்பந்து விளையாட்டின் தலைமைப் பொறுப்பில் நீடிப்பதற்கு வேல்ஸ் கால்பந்து சங்கத்தின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் நிலைக்கு நம்மை இன்ஃபான்டினோ இட்டுச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc4d0ee4-6b51-473e-9203-cea43e1488b1/26-6a70176318b45.webp' /></p><p> </p><p>மேலும், கால்பந்தின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தவறுவது, எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தோல்வியாகும் என்றும் குறிப்பிட்டு வேல்ஸ் கால்பந்து சங்கம் தங்களது தலைவரைப் பற்றிய நிலைப்பாடு குறித்து ஃபிஃபாவுக்கு (FIFA) கடிதம் எழுதியுள்ளது.</p><h2>சரிந்த செல்வாக்கு</h2><p> </p><p>அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஸ்பெயினுக்கு உலகக் கிண்ணத்தைக் கையளித்த இரண்டு வாரங்களிலேயே, இன்ஃபான்டினோவின் நற்பெயர் மற்றும் செல்வாக்கு மிக வேகமாகச் சரிந்துள்ளது.
</p><p>உலகக் கிண்ணம் போட்டிகளை விற்பனை செய்வதற்கான திட்டத்திற்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக்கூறச் செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் இன்ஃபான்டினோவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான ஐரோப்பிய கால்பந்து அமைப்பின் ஒருங்கிணைந்த முயற்சியில் வேல்ஸ் (Wales) நாடும் இணைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3afc8731-8289-4f91-8213-302b1652074d/26-6a701763bdee1.webp' /></p><p> </p><p>இதனிடையே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இல்லாமலேயே இன்ஃபான்டினோ பதவியிலிருந்து விலகும் வகையிலான அழுத்தத்தை அதிகரிக்க, வேல்ஸ் கால்பந்து சங்கத்தைத் தொடர்ந்து மேலும் பல சங்கங்களும் இதே பாதையைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> இன்பான்டினோ அடுத்த ஆண்டு மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார், ஆனால் அவரது தலைவர் பதவி தற்போது கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.</p><p> 
ஏற்கனவே, இன்ஃபான்டினோ தனது மறுதேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்கும் 200-க்கும் மேற்பட்ட ஆதரவுக் கடிதங்களை பெற்றிருந்தார். அதில் தற்போது முதல் நாடாக வேல்ஸ் தனது ஆதரவை விலக்கிக் கொண்டு அதிர்ச்சியளித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T04:12:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாறு காணாத வெப்பம்... பொதுமக்களுக்கு கிழக்கு ஆசிய நாடொன்று விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-korea-highest-temperature-1785726809"></link>
            <id>https://news.lankasri.com/article/south-korea-highest-temperature-1785726809</id>
            <summary type="text">ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெப்பநிலைப் பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் மிக உயர்ந்த வெப்பநிலைப் பதிவாகியுள்ளது.மிக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெப்பநிலைப் பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் மிக உயர்ந்த வெப்பநிலைப் பதிவாகியுள்ளது.</p><h2>மிக அதிகபட்ச வெப்பநிலை</h2><p>
</p><p>கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5178eb44-ea93-4d8d-bcbf-8bdaaa812379/26-6a7008c97e981.webp' /></p><p> தென்கிழக்கு நகரமான யாங்சானில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வெப்பநிலை 42.5 டிகிரி செல்சியஸை எட்டியதாக கொரிய வானிலை ஆய்வு மையம் (KMA) தெரிவித்துள்ளது; 1904-ஆம் ஆண்டில் நவீன வானிலை கண்காணிப்பு முறை தொடங்கியதிலிருந்து பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.</p><p> வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், யாங்சான் (Yangsan) பகுதி தொடர்ந்து நிலவும் வெப்ப அலையின் மையமாகத் திகழ்கிறது; அங்கு ஞாயிற்றுக்கிழமையன்று தொடர்ந்து ஐந்தாவது நாளாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. </p><p>அதேவேளை, டேகு (Daegu) மற்றும் புசான் (Busan) உள்ளிட்ட பல நகரங்களிலும் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸின் உயர் நிலைகளை எட்டி வருகிறது.</p><p></p><p> இதனிடையே, கடுமையான வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் குளிரூட்டப்பட்ட வணிக வளாகங்கள் அல்லது சிற்றுண்டிச்சாலைகளை நோக்கிப் படையெடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>ஞாயிற்றுக்கிழமையன்று 20-க்கும் மேற்பட்ட பகுதிகள் அவசர வெப்ப அலை எச்சரிக்கையின் கீழ் இருந்தன; அதிகரித்து வரும் வெப்பநிலையைச் சிறப்பாகக் கையாள்வதற்காக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய எச்சரிக்கை வகை இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bceea541-bf89-4d10-ae4b-91f87d5b9089/26-6a7008ca6d229.webp' /></p><p> </p><p>வெப்ப அலை வீசும் பகுதிகளில், அன்றைய தினத்தில் உணரப்படும் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸையோ அல்லது உண்மையான வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸையோ எட்டும் என்று கணிக்கப்படும்போது அவசரக்கால எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.</p><h2>பருவநிலை மாற்றம்</h2><p> </p><p>KMA வெளியிட்டுள்ளத் தரவுகள் அடிப்படையில், நாட்டில் வெப்ப அலை வீசும் நாட்களின் சராசரி ஆண்டு எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் இருமடங்கிற்கும் அதிகமாக அதிகரித்து 19-ஆக உயர்ந்துள்ளது. </p><p>குறைந்தபட்சம் 33 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்ட ஒரு நாள், வெப்ப அலை நாளாக வரையறுக்கப்படுகிறது.



சாங்வோன் (Changwon) நகரில் வெப்பநிலை 39.5 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருந்த தென் கொரியாவின் தொழில்முறை பேஸ்பால் லீக் தொடரின் ஒரு ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; அந்நகரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு ஆட்டம் ரத்து செய்யப்படுவது இதுவேயாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e60cecae-4a3a-4fa0-a8ca-7bd8a5575c45/26-6a7008cb1f50b.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், மனிதனால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்தின் விளைவாக, வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழக்கூடியதாகவும், அதிகத் தீவிரத்தன்மை கொண்டவையாகவும் மாறி வருகின்றன என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். </p><p>அத்துடன், உலக நாடுகளில் தீவிர வானிலை நிலையை மேலும் தீவிரமாக்கும் வகையில், இந்த ஆண்டு 'எல் நினோ' (El Niño) மீண்டும் திரும்பியுள்ளது; இது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையை உயர்த்தக்கூடிய, பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T03:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு செல்ல தயாராக இருந்த இலங்கை இளைஞர்: திருகோணமலை சாலையில் நேர்ந்த பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-youngster-died-in-trincomalee-accident-1785715385"></link>
            <id>https://news.lankasri.com/article/2-youngster-died-in-trincomalee-accident-1785715385</id>
            <summary type="text">பிரான்சுக்கு செல்ல தயாராக இருந்த இளைஞர் இலங்கையில் சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை விபத்துஇலங்கையின் திருகோண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சுக்கு செல்ல தயாராக இருந்த இளைஞர் இலங்கையில் சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> சாலை விபத்து</h2><p>இலங்கையின் திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - ஜின்னாநகர், 59 ஆம் கட்டை பகுதியில் நேற்று (02ம் திகதி) மாலை ஏற்பட்ட மோசமான மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p> திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த கோர விபத்தானது நிகழ்ந்து இருப்பதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31dcb410-8b32-4944-995a-7c9e193143a8/26-6a6fdabadcc1e.webp' /></p><p> இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் மூதூர் - கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><p> இவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் என்றும், மற்றொருவர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சாலை விபத்தை தொடர்ந்து ரிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2810ba5-bcc6-42c9-bf26-6ae0b5e422e0/26-6a6fdabb91105.webp' /></p><p> உயிரிழந்த இரண்டு இளைஞரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த விபத்து தொடர்பான கூடுதல் விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T00:25:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவிற்குள் உக்ரைன் நடத்திய வேட்டை: 635 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா: 8 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-massive-drone-attack-on-russia-8-dead-1785711589"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-massive-drone-attack-on-russia-8-dead-1785711589</id>
            <summary type="text">ரஷ்யாவின் உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்</h2><p>
ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் ஆழமான பகுதிகளை குறிவைத்து உக்ரைன் அதிரடியான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p>இந்த தாக்குதலில் ரஷ்யாவின் ராணுவத்தின் நிலைகள், பொது மக்கள் குடியிருப்பு மற்றும் எரிசக்தி நிலையங்கள் குறிவைத்து தகர்க்கப்பட்டன.</p><p>உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதல் சம்பவத்தில் சிக்கி ரஷ்யாவில் இதுவரை 8 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cea027b4-773a-4815-9fde-342780a06bc6/26-6a6fcbe6f320a.webp' /></p><p>எங்கல்ஸ் பகுதியின் குடியிருப்பு பகுதி மீது ட்ரோன் மோதியதில் 2 பேரும், சரடோவ் நகரின் அடுக்குமாடி குடியிருப்பு மீது ட்ரோன் மோதியதில் பலத்த சேதமும்&nbsp;ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.</p><p>கிட்டத்தட்ட உக்ரைனில் இருந்து 1300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதியில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர்.</p><p></p><p> பெல்கோரரோட் பகுதியில் ட்ரோன் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>உக்ரைனிய படையின் இந்த ஒருங்கிணைந்த ட்ரோன் தாக்குதலை ரஷ்ய பாதுகாப்பு படைகள் முழுவீச்சில் தடுத்து நிறுத்தினர். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, கிட்டத்தட்ட 635 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி உள்ளது.</p><h2>உறுதிப்படுத்திய ஜெலென்ஸ்கி</h2><p>இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யா மீது நடத்தப்பட்ட பிரம்மாண்ட தாக்குதலை உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c23941f1-9db2-4f0c-8765-ec12deea2f59/26-6a6fcbe7a399e.webp' /></p><p> மேலும் சரடோவ் நகரில் அமைந்திருந்த எண்ணெய் உள்கட்டமைப்புகளையும், எங்கல்ஸில் உள்ள ரஷ்யாவின் ராணுவ தளத்தையும் உக்ரைனிய படைகள் வெற்றிகரமாக தாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>ரஷ்யாவின் தொடர் அத்துமீறலுக்கு உக்ரைனின் நேரடி பதிலடி தான் இந்த நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T00:04:24+00:00</updated>
        </entry>
    </feed>
