<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-08T21:51:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wildfire-crisis-in-british-columbia-mass-evacuatio-1786225687"></link>
            <id>https://news.lankasri.com/article/wildfire-crisis-in-british-columbia-mass-evacuatio-1786225687</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவியதையடுத்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கனடாவில் காட்டுத் தீகனடாவின் மேற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவியதையடுத்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2> கனடாவில் காட்டுத் தீ</h2><p>கனடாவின் மேற்குப் பகுதியில் காட்டுத்தீயானது வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p> பால்ட் ரேஞ்ச்(Bald Range) என்ற இடத்தில் தொடங்கிய இந்த காட்டுத் தீ சம்பவமானது கிட்டத்தட்ட 13,300 கால்பந்து மைதானங்களின் அளவிற்கு சமமான 9,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவி தொடர்ந்து கட்டுப்பாடின்றி எரிந்து வருகிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a25d6ce-7a93-42b0-8089-d2f96fdaf08b/26-6a77a418e0f7c.webp' /></p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் சம்மர் லேண்ட்(Summerland) மாவட்டத்திற்கு முதல் நிலை அவசர பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அது மாகாணம் முழுவதுமாக விரிவுபடுத்தப்பட்டது.</p><p>நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் சொத்துக்கள் காட்டுத்தீயில் நாசமாகி இருப்பதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதலமைச்சர் டேவிட் எபி தகவல் தெரிவித்துள்ளார்.</p><h2> மீட்பு மற்றும் பாதிப்புகள்</h2><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thousands of people in Summerland, B.C., are being evacuated as intense wildfires threaten their community.<br><br>To the brave firefighters and first responders working tirelessly to keep people safe: thank you.<br><br>The federal government stands ready to help and support the Government…</p>&mdash; Mark Carney (@MarkJCarney) <a href="https://x.com/MarkJCarney/status/2086162340941287641?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>காட்டுத் தீயை அணைக்க மாகாணம் முழுவதும் கிட்டத்தட்ட 1500 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.</p><p>காட்டுத் தீ பரவல் தீவிரமாக உள்ள பகுதிகளில் 39 வெளியேற்ற உத்தரவுகளையும், 49 பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் அதிகாரிகள் விடுத்துள்ளனர்.</p><p> அத்துடன் சனிக்கிழமை சம்மர்லேண்ட் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. குடிநீரில் சுத்திகரிக்கப்படாத நீர் விநியோக அமைப்பு கலந்ததால் மக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T21:48:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போரில் 50,000 வடகொரிய வீரர்கள்: ரஷ்யா போடும் திட்டம்: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-deploy-50000-troops-to-russia-1786224016"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-deploy-50000-troops-to-russia-1786224016</id>
            <summary type="text">உக்ரைனுக்கு எதிரான போரில் 50000 வடகொரிய வீரர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படலாம் என்று ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் போரில் வட கொரிய வீரர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கு எதிரான போரில் 50000 வடகொரிய வீரர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படலாம் என்று ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h2> உக்ரைன் போரில் வட கொரிய வீரர்கள்</h2><p>உக்ரைன் போரில் களமிறக்கப்படுவதற்காக ரஷ்ய நிலப்பரப்பில் 30,000 முதல் 50,000 வடகொரிய வீரர்கள் நிலை நிறுத்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளது.</p><p>ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள இந்த தகவல், ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே அதிகரித்து வரும் ராணுவ உறவுகள் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bac35ac-73b1-4797-8708-e351b9f1c466/26-6a779d9203cca.webp' /></p><p>யுனைடெட் நியூஸ் என்ற உக்ரைனிய செய்தி ஊடகத்திற்கு ஜெலென்ஸ்கி வழங்கிய தகவலில், வட கொரிய வீரர்கள் நிலைநிறுத்தப்படும் இந்த திட்டமானது உக்ரைன், ஐரோப்பிய பிராந்தியம் மட்டுமின்றி பரந்த அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரித்துள்ளார்.</p><p></p><p> நவீன போர் குறித்த ஆழமான அனுபவங்களை வடகொரிய வீரர்களுக்கு இந்த போர் நடவடிக்கை&nbsp; வழங்கும், அத்துடன் ரஷ்யாவிடம் இருந்து நவீன ஆயுதங்களை இதன் மூலம் பெறவும் வட கொரியா திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இதனை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம்.</p><p> இது எதிர்காலத்தில் ஆசிய பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் ஆபத்தாக அமையலாம் என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.</p><h2>வட கொரிய வீரர்களின் பங்களிப்பு</h2><p>உக்ரைன் போரில் வட கொரிய வீரர்கள் செயல்படுவது என்பது பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5179bab4-63c5-44d5-adec-d6bab2717045/26-6a779d92ac796.webp' /></p><p> ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் போரில் களமிறக்கப்பட்டனர். அது பின்னர் ஆயிரங்களாகவும் தற்போது பல்லாயிரக்கணக்காகவும் அதிகரித்து இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் உக்ரைனிய நிலப்பரப்பில் ஏற்கனவே வட கொரிய ஏவுகணைகள் நாங்கள் கண்டுபிடித்து இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-08T21:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B திட்டத்தில் வழங்கப்பட்ட 60 நாள் அவகாசம் ரத்து: அமெரிக்கா பரிசீலனை: இந்தியர்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-plan-to-eliminate-60-days-grace-period-in-h-1b-1786210120"></link>
            <id>https://news.lankasri.com/article/us-plan-to-eliminate-60-days-grace-period-in-h-1b-1786210120</id>
            <summary type="text">H-1B வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 60 நாட்கள் வேலை தேடும் அவகாசத்தை அமெரிக்க அரசு ரத்து செய்ய திட்டமிட்டு வருகிறது. H-1B வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 60 நாட்கள் வேலை தேடும் அவகாசத்தை அமெரிக்க அரசு ரத்து செய்ய திட்டமிட்டு வருகிறது.</p><h2> H-1B வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்</h2><p>வேலையில் இருந்து நீக்கப்பட்ட H-1B வெளிநாட்டு தொழிலாளர்களும் அவரது குடும்பத்தினரும் அடுத்த வேலையை தேடிக் கொள்ள கொடுக்கப்பட்டுள்ள 60 நாட்கள் கால அவகாசத்தை ரத்து செய்வது குறித்து அமெரிக்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.</p><p>அமெரிக்க அரசின் பரிசீலனையில் உள்ள இந்த முன்மொழிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எப்போது சட்டமாக்கப்படும் அல்லது இதன் முழுமையான விவரங்கள் குறித்து இன்னும் தெளிவாக வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2c7dc41-5776-42b4-929a-85187154b5f6/26-6a776749782ee.webp' /></p><p> இந்த நடைமுறை உறுதி செய்யப்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட காலம் முடிவதற்கும் வேலை இழந்தவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.</p><p></p><h2> இந்திய வம்சாவளியினருக்கு மிகப்பெரிய பாதிப்பு</h2><p>அமெரிக்காவின் H-1B திறமை வாய்ந்த தொழிலாளர் திட்டத்தில் இந்த மாற்றம் இறுதி செய்யப்பட்டால் அமெரிக்காவில் பணிபுரியும் பல இந்தியர்கள் பாதிக்கப்படக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4604610-290f-4357-bf3e-1cb9bb1c0ef8/26-6a77674a2f9b6.webp' /></p><p> அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்வு சேவைகளின்(USCIS) சமீபத்திய தரவுகள் படி, கிட்டத்தட்ட 71% அங்கீகரிக்கப்பட்ட H-1B திட்டங்கள் இந்தியர்களுக்கே கடந்த 2024ம் நிதியண்டில் வழங்கப்பட்டுள்ளது.</p><p> சமீபத்திய அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் படி, அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 52 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T20:40:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டுமா? அமெரிக்கா இதனை மாற்ற கொள்ள வேண்டும்: ஈரான் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/strait-of-hormuz-iran-demanding-to-us-1786220051"></link>
            <id>https://news.lankasri.com/article/strait-of-hormuz-iran-demanding-to-us-1786220051</id>
            <summary type="text">அமெரிக்கா தன்னுடைய கொள்கையை மாற்றினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது சாத்தியம் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா தன்னுடைய கொள்கையை மாற்றினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது சாத்தியம் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.</p><h2> ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது எப்போது?</h2><p>உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து ஈரான் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.</p><p> அதில், அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் ஈரான் மீதான அதன் இராஜதந்திர நிலைப்பாட்டையும் ராணுவ நிலைப்பாட்டையும் மாற்றிக் கொள்ளாத வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு தான் இருக்கும் என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவை அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/333b383f-5c05-4aad-b3cc-33443370b92b/26-6a778e14cf4c4.webp' /></p><p> ஹார்முஸ் வழித்தடத்தை மீண்டும் தடையின்றி இயக்க அமெரிக்கா நிபந்தனையின்றி நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை பேரவையின் செயலாளர் மொஹம்மது பாகர் சோல்கத்ர் சனிக்கிழமையன்று விளக்கினார்.</p><h2> ஈரானின் கோரிக்கைகள்</h2><p>அதில், ஈரான் மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா விடுக்கும் எச்சரிக்கைகள் மற்றும் அவதூறு பேச்சுக்கள் நிறுத்தப்பட வேண்டும்.</p><p> ஈரானின் நட்பு நாடுகளான லெபனான், யேமன், ஈராக் மற்றும் பாலஸ்தீனம் மீதான ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p> கடற்படை முற்றுகையை நீக்க வேண்டும், மேலும் வெளிநாடுகளில் உள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T20:14:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/school-girl-jail-visit-with-live-ammunition-in-up-1786207308"></link>
            <id>https://news.lankasri.com/article/school-girl-jail-visit-with-live-ammunition-in-up-1786207308</id>
            <summary type="text">துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பள்ளிச் சிறுமியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.சிறைக்குள் அத்துமீறி நுழைந்த பெண்உத்தர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பள்ளிச் சிறுமியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><h2>சிறைக்குள் அத்துமீறி நுழைந்த பெண்</h2><p>உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள கிளைச் சிறைக்குள் வியாழக்கிழமை போலி அடையாள அட்டை காண்பித்து சிறைக் கைதி ஒருவரை பள்ளி மாணவி ஒருவர் சந்திக்க சென்ற நிலையில்&nbsp; பாதுகாப்பு பணியாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.</p><p> மேலும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது பயன்படுத்தாத துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக சிறைக் காவலர் அஃப்தாப் ஆலம் அன்சாரி வழங்கிய தகவலில், சிறுமியும் அவருடன் வந்த ஆண் ஒருவரும் இணைந்து சிறையில் இருந்த ஹர்ஷு காஷ்யப் என்ற கைதியை சந்திக்க வந்தது தெரியவந்துள்ளது.</p><p></p><p> முதன்மை நுழைவாயிலில் நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின் போது, அடையாள அட்டையில் இருந்த விவரங்களுக்கு மாறான தகவல்களை இருவரும் கூறிய நிலையில் நிலைமை தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca36d863-7c59-48e8-b100-21185a08ed7d/26-6a775c4de6937.webp' /></p><p> இதையடுத்து அவர்களிடம் உடல் பரிசோதனை நடத்தப்பட்ட போது, அவரின் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 தோட்டாக்களை கண்டுபிடித்தனர்.</p><p>இதையடுத்து சிறைக் காவல் நிலைய பொறுப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, இருவரும் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p><h2>விசாரணையில் கூறப்பட்ட தகவல்</h2><p>கண்டறியப்பட்ட 10 துப்பாக்கிகளும்&nbsp; சிறுமியின் தந்தையுடைய உரிமம் பெற்ற துப்பாக்கிக்கு சொந்தமானது என்று அந்த சிறுமி பொலிஸார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் சிறையில் உள்ள தன்னுடைய நண்பரை சந்திக்க சென்றது தன்னுடைய தந்தைக்கு தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடும் என்ற பயத்தினால் அதனை தன்னுடன் எடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T17:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL 2026 இறுதிபோட்டி: ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jaffna-kings-123-all-out-vs-gag-lpl-2026-final-1786205901"></link>
            <id>https://news.lankasri.com/article/jaffna-kings-123-all-out-vs-gag-lpl-2026-final-1786205901</id>
            <summary type="text">காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான LPL 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 

லங்கா பிரீமியர் லீக் 2026 இறுதிப்போட்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான LPL 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. </p><p>

லங்கா பிரீமியர் லீக் 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><h2>இறுதிப்போட்டி&nbsp;</h2><p>

கொழும்பில் லங்கா பிரீமியர் லீக் 2026 தொடரின் இறுதிபோட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கல்லன்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8982dc5e-f409-4428-bf49-b17570cd17e2/26-6a7756d08fb65.webp' />&nbsp;</p><p></p><p>

நாணய சுழற்சியில் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.

அவிஷ்கா பெர்னாண்டோ 20 (16) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கவாஜா நபாய் டக்அவுட் ஆனார். </p><p>கமில் மிஷாரா (Kamil Mishara) பொறுப்புடன் ஆட ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.&nbsp;</p><h2>ஜாஃப்னா கிங்ஸ்</h2><p>
அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தபோது, கமில் மிஷாரா 41 (32) ஓட்டங்களில் இஷான் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். </p><p>

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சமிந்து விக்ரமசிங்கே 16 பந்துகளில் 24 ஓட்டங்கள் விளாசினார். ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><p>

காலி அணியின் தரப்பில் சரித் அசலங்கா, இஷான் மலிங்கா தலா 3 விக்கெட்டுகளும், தரிந்து ரத்னாயகே 2 விக்கெட்டுகளும், ஆகிப் மற்றும் சச்சிந்து தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/448b2aea-b517-406a-a8d7-80b852679583/26-6a775795bb306.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T16:16:13+00:00</updated>
        </entry>
    </feed>
