<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-13T20:31:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்வீடன் பொதுத் தேர்தல்: ஆரம்ப கட்ட வாக்கெடுப்பில் முன்னிலை பெறும் இடதுசாரி கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swedish-general-election-left-coalition-takes-lead-1789330172"></link>
            <id>https://news.lankasri.com/article/swedish-general-election-left-coalition-takes-lead-1789330172</id>
            <summary type="text">Swedish General Election Left Coalition Takes lead: ஸ்வீடன் பொதுத் தேர்தலின் ஆரம்ப கட்ட வாக்கெடுப்பில் இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. ஸ்வீடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swedish General Election Left Coalition Takes lead: ஸ்வீடன் பொதுத் தேர்தலின் ஆரம்ப கட்ட வாக்கெடுப்பில் இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.</p><h2> ஸ்வீடன் பொதுத் தேர்தல்</h2><p>ஸ்வீடனில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ளது.</p><p>இந்த தேர்தலில் கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசை அகற்றி விட்டு இடதுசாரி கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3abd2716-1d59-4fab-852d-4ccd6e191fab/26-6aa702fe08d83.webp' /></p><h2> கருத்துக்கணிப்புகள்</h2><p>நோவஸ்(Novus) கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய தரவுகளில், தற்போது ஆட்சியில் இருக்கும் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன்(Ulf Kristersson) தலைமையிலான வலதுசாரி கூட்டணி கிட்டத்தட்ட 47% மக்கள் ஆதரவை பெற்றுள்ளது.</p><p> ஆனால் சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன்(Magdalena Andersson) தலைமையிலான&nbsp; இடதுசாரி கூட்டணி சுமார் 51.3% ஆதரவுடன் ஸ்வீடனில் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b48804a-fd4a-4472-aa6a-08935a431483/26-6aa702feba33d.webp' /></p><p> மேலும். தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளில் இடதுசாரி கூட்டணி இந்த பொதுத் தேர்தலில் எளிதாக வெற்றி பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கருத்து கணிப்புகளை மீறி கிறிஸ்டர்சன் தலைமையிலான பழமைவாத கூட்டணி வெற்றி பெற்றால் அது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையக்கூடும்.</p><p> இதற்கிடையில் முந்தைய தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு விகிதமானது மிக குறைவாக இருக்க கூடும் என்று தேர்தலுக்கு பிந்தைய தரவுகள் தெரிவிக்கின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-13T20:09:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் போரிஸ் ஜான்சனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/boris-johnson-face-security-threat-in-ukraine-1789328754"></link>
            <id>https://news.lankasri.com/article/boris-johnson-face-security-threat-in-ukraine-1789328754</id>
            <summary type="text">பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணித்த ரயிலுக்கு அருகே ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தலில் போரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணித்த ரயிலுக்கு அருகே ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2> பாதுகாப்பு அச்சுறுத்தலில் போரிஸ் ஜான்சன்</h2><p>பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு அவர் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார்.</p><p> உக்ரைனில் போரிஸ் ஜான்சன் பயணித்த ரயிலுக்கு சற்று பின்னால் வந்த ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p> உக்ரைனிய தலைநகர் கீவ்வில் இருந்து போலந்து நோக்கி போரிஸ் ஜான்சன் இரவில் ரயில் பயணம் செய்து கொண்டிருந்த போது எல்லைப் பகுதியில் இந்த வான்வழித் தாக்குதலானது நடத்தப்பட்டு இருப்பதாக ஜேர்மன் நாளிதழான டெர் ஸ்பீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06e89063-d143-42fb-9716-46cc3d6162c6/26-6aa6fd74abeb1.webp' /></p><p>இந்த சம்பவத்தின் போது போரிஸ் ஜான்சனுடன் முன்னாஸ் ஸ்வீடன் பிரதமர் கார்ல் பில்ட், ஜேர்மன் சான்சலரின் பிரீட்ரிக் மெர்ஸின் நெருங்கிய ஆலோசகர் குண்டர் செளட்டர் மற்றும் பல ஐரோப்பிய தூதர்களும் உடனிருந்துள்ளனர்.</p><p>ஜான்சன் பயணித்த ரயில் எல்லைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் ட்ரோன்களின் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டு ரயிலானது உடனடியாக நிறுத்தப்பட்டது.</p><p>இருப்பினும் அதன் பின்னால் வந்த ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-13T19:46:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்ட்ஸ்மவுத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம்: 6 பேரின் புகைப்படங்களை வெளியிட்ட காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/portsmouth-clash-police-release-6-men-images-1789327547"></link>
            <id>https://news.lankasri.com/article/portsmouth-clash-police-release-6-men-images-1789327547</id>
            <summary type="text">Portsmouth Clash Police Release 6 men Images: போர்ட்ஸ்மவுத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் 6 பேரின் புகைப்படங்களை ஹாம்ப்ஷயர்காவல்துறை வெளியிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Portsmouth Clash Police Release 6 men Images: போர்ட்ஸ்மவுத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் 6 பேரின் புகைப்படங்களை ஹாம்ப்ஷயர்காவல்துறை வெளியிட்டுள்ளது.</p><h2>6 பேரின் புகைப்படங்களை வெளியிட்ட காவல்துறை</h2><p>
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை போர்ட்ஸ்மவுத்தில் அகதிகள் எதிர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 6 பேரின் புகைப்படங்களை விசாரணைக்கு உதவும் வகையில் ஹாம்ப்ஷயர்காவல்துறை வெளியிட்டுள்ளது.</p><p> ஆங்கில கால்வாயில் அகதிகளை ஏற்றிக் கொண்டு ஈஸ்ட்னி மரீனா என்ற கப்பல் துறைமுகத்திற்கு வந்ததை அடுத்து இந்த மோதலானது வெடித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a4ed6ac-9be5-469c-9628-2e380d0eb642/26-6aa6f8bdb1041.webp' /></p><p> நூற்றுக்கணக்கானோர் சாலையை மறித்து பல மணி நேரம் போராட்டம் நடத்தினர். இரவு முழுவதும் அங்கேயே இருக்க போவதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட ஹாம்ப்ஷயர் காவல்துறையினர் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு அங்கிருந்து 200க்கும் மேற்பட்டோரை கலைத்தனர்.</p><p> அப்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின் போது காவல்துறையினர், கடலோர காவல் படைக்கு சொந்தமான பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. சில அதிகாரிகளும் காயமடைந்தனர்.</p><p></p><h2> விசாரணை மற்றும் கைது</h2><p>
வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் பொருட்டு துப்பறியும் நிபுணர்கள் பல மணி நேர காணொளி காட்சிகளை ஆய்வு செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d212986-0ccb-498f-bc96-e1edf494873b/26-6aa6f8bd0458f.webp' /></p><p> இதன் ஒரு பகுதியாக விசாரணைக்கு உதவும் வகையில் தற்போது 6 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.</p><p> வன்முறை சம்பவம் தொடர்பில் காவல்துறை ஏற்கனவே வெள்ளிக்கிழமை, ஹாம்ப்ஷயர், பால்ஸ்ரோவ் பகுதியை சேர்ந்த 42 வயது நபர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.</p><p> மேலும் சனிக்கிழமை 16 வயது சிறுவன் ஒருவனும் இதில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-13T19:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் நடுக்கடலில் கவிழ்ந்த பயணிகள் படகு: பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/java-sea-passenger-vessel-capsizes-6-dead-1789324904"></link>
            <id>https://news.lankasri.com/article/java-sea-passenger-vessel-capsizes-6-dead-1789324904</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் ஜாவா கடலில் கப்பல் காணாமல் போன விபத்தில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.மோசமான வானிலையில் சிக்கிய கப்பல்இந்தோனேசியாவின் ஜாவா கடல் பகுதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் ஜாவா கடலில் கப்பல் காணாமல் போன விபத்தில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2>மோசமான வானிலையில் சிக்கிய கப்பல்</h2><p>இந்தோனேசியாவின் ஜாவா கடல் பகுதியில் மோசமான வானிலை காரணமாக பயணிகள் கப்பல் ஒன்று தொடர்பை இழந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.</p><p> கிழக்கு ஜாவாவின் சுபராபாவில் இருந்து சனிக்கிழமை காலை 10.13 மணிக்கு விர்கோ டிரான்ஸ்போர்ட் 8(Virgo Transports 8) என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e833d06-cd18-4789-b633-1ff3253adecc/26-6aa6ee69e8882.webp' /></p><p> 390 அடி நீளம் கொண்ட இந்த கப்பலில் 30 பணியாளர்கள் உட்பட 243 பேர் போர்னியோவின் தெற்கு கலிமந்தன்(Kalimantan) நகரான பஞ்சர்மாசினை(Banjarmasin) நோக்கி பயணம் செய்தனர்.</p><p>கப்பல் மோசமான வானிலையில் சிக்கி தொலை தொடர்பை இழந்த போது அந்த கப்பலின் கேப்டன் ஆபத்து செய்தி அனுப்பியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அதில், கடலில் அலைகள் 10 மீட்டர் வரை உயருவதாகவும், கப்பல் ஆபத்தான முறையில் ஒருபக்கமாக சாய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்நிலையில் வான்வழி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் கப்பல் தலைகீழாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38b92bde-e507-408a-827b-94d345f0507e/26-6aa6ee6aa2dd0.webp' /></p><h2> மீட்பு பணிகள் மற்றும் உயிரிழப்பு</h2><p>இந்த கப்பலில் பயணித்த 107 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் 4 கடற்படை கப்பல்கள் உட்பட 8 மீட்புக் கப்பல்கள், 2 மீட்பு ஹெலிகாப்டர்கள், பஞ்சார்மாசினை தளமாக கொண்ட உள்ளூர் மீட்புக் குழுவினர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><p> இந்நிலையில் கப்பல் விபத்து சம்பவத்தில் குறைந்தது 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் கப்பலில் பயணித்த நுற்றுக்கணக்கானவர்களில் 130 க்கும் மேற்பட்டோர் இன்னும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T18:41:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் உக்ரைன்: ஜெலென்ஸ்கியை எச்சரித்த டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-urges-ukraine-to-stop-attack-on-russian-oil-1789320836"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-urges-ukraine-to-stop-attack-on-russian-oil-1789320836</id>
            <summary type="text"> Trump Urges Ukraine to stop Attack on Russian oil: ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p> Trump Urges Ukraine to stop Attack on Russian oil: ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரியுள்ளார்.</p><h2> ஜெலென்ஸ்கியை வலியுறுத்திய டிரம்ப்</h2><p>ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை&nbsp; உடனடியாக நிறுத்தும்படி உக்ரைனிய ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.</p><p> டீசல் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/003bed0e-47f4-446f-9645-f74702aa75fb/26-6aa6de85a45df.webp' /></p><p> சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு உக்ரைன் - ரஷ்யா இடையிலான மோதல்களே முக்கியக் காரணம் என்று ஞாயிற்றுக்கிழமை அயர்லாந்து ஓபன் போட்டியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிர்ம்ப் குறிப்பிட்டார்.</p><p></p><p> பிராந்திய விவகாரங்கள்.&nbsp;
அமெரிக்காவுடன் இராஜதந்திர ஓப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள ஈரான் தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், இறுதியில் இந்த மோதல் அமெரிக்காவிடம் இருந்து விலகி செல்லும் என்றும்&nbsp; செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் குறிப்பிட்டார்.</p><p> மேலும் காற்று ஆற்றல் உள்கட்டமைப்பு தொடர்பாக பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்னாமுடன் பேசி வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T17:34:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் சிறந்த செவிலியர் விருதை வென்ற பிரித்தானிய வாழ் மலையாளி - ரூ.2 கோடி பரிசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-malayali-wins-global-nursing-award-2026-1789315641"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-malayali-wins-global-nursing-award-2026-1789315641</id>
            <summary type="text">UK Malayali wins Global Nursing Award 2026: உலகின் சிறந்த செவிலியர் விருதை பிரித்தானிய வாழ் மலையாளிவென்றுள்ளார்.

Global Nursing Award 2026கொச்சியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK Malayali wins Global Nursing Award 2026: உலகின் சிறந்த செவிலியர் விருதை பிரித்தானிய வாழ் மலையாளிவென்றுள்ளார்.
</p><h2>
Global Nursing Award 2026</h2><p>கொச்சியில் நடைபெற்ற சிறப்பு விழாவில், பிரித்தானியாவில் செவிலியராக பணியாற்றும் மலையாளி பெண்ணான அஜிமோல் பிரதீப் (Agimol Pradeep) உலகளாவிய Aster Guardians Global Nursing Award 2026 விருதைப் பெற்றார்.
</p><p>
இந்த விருது, உலகம் முழுவதும் 214 நாடுகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட 1.34 லட்சம் செவிலியர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7dadc3d-bcd1-48fb-b154-6a39b231edd6/26-6aa6ca3a93d0d.webp' /></p><h2>அஜிமோல் பிரதீப்</h2><p>அஜிமோல், லண்டனின் King’s College Hospital-இல் மூத்த Transplant Coordinator-ஆகவும், Salford University-இல் Honorary Senior Lecturer-ஆகவும் பணியாற்றுகிறார். </p><p>அவரின் பணி, உடல் உறுப்பு மற்றும் ஸ்டெம்-செல் தானம், நர்சிங் கல்வி, மற்றும் சர்வதேச நர்சிங் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் முயற்சிகள் ஆகியவற்றில் சிறப்பாக இருந்ததால் இந்த விருது வழங்கப்பட்டது.</p><p>
</p><p></p><p>அவர் தொடங்கிய “உபஹார்” (Upahaar) முயற்சி மூலம் 10,000-க்கும் மேற்பட்ட ஸ்டெம்-செல் தானதாரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது, குறிப்பாக தெற்கு ஆசிய நோயாளிகளுக்கு உறுப்பு தானம் குறைவால் ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க உதவியுள்ளது.
</p><h2>
உலகின் எந்த மருத்துவமனையிலும் மலையாளி நர்ஸ்...</h2><p>விழாவில், கேரள முதல்வர் வி.டி. சதீசன் உரையாற்றியபோது, “இந்த விருது, கேரளா உலகம் முழுவதும் அதிகமான செவிலியர்களை உருவாக்கும் மாநிலம் என்பதை நிரூபிக்கிறது. உலகின் எந்த மருத்துவமனையிலும் மலையாளி நர்ஸ் இருப்பார் என்பது பெருமை” எனக் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், கேரளாவை உலக சுகாதார மையமாக மாற்றும் நோக்கில், சர்வதேச தரத்திலான caregiving பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.</p><p></p><h2>

ரூ.2 கோடி பரிசுத்தொகை</h2><p>இந்த விருது, USD 250,000 (சுமார் ரூ.2 கோடி) பரிசுத்தொகையுடன் வழங்கப்பட்டது. அஜிமோலின் சாதனை, உலகளாவிய நர்சிங் துறையில் இந்தியர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T16:40:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கனடா முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-eyes-eu-membership-amid-us-trade-war-1789316938"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-eyes-eu-membership-amid-us-trade-war-1789316938</id>
            <summary type="text">Canada eyes EU membership amid US trade war: அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் தொடரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கனடா முயற்சிக்கிறது.

ஐரோப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada eyes EU membership amid US trade war: அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் தொடரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கனடா முயற்சிக்கிறது.
</p><h2>
ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை உறுப்பினராக&nbsp;கனடா </h2><p>கனேடிய பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவுடன் நடைபெறும் வர்த்தகப் போரின் தாக்கத்தை சமாளிக்க, கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) இணை உறுப்பினராக மாற்ற வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98c74c0a-fa1a-41c5-bb12-a6ad2d045799/26-6aa6cf4be1b5c.webp' /></p><p>அமெரிக்கா விதிக்கும் சுங்கக் கட்டணங்கள் மற்றும் வர்த்தகத் தடைகள் காரணமாக, கனடாவின் எஃகு, அலுமினியம், வேளாண்மை போன்ற துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>இதனால், கனடா தனது வர்த்தகத்தை ஒரே அமெரிக்க சந்தைக்கு மட்டுமே சார்ந்திருப்பது ஆபத்தானது என கார்னி எச்சரித்துள்ளார்.
</p><p></p><p>அவர் கூறியதாவது: “கனடா, நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து போல EU-வின் இணை உறுப்பினராக இருந்தால், 450 மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பிய சந்தைக்கு நேரடி அணுகல் கிடைக்கும். இது, கனடாவின் பொருளாதாரத்தை பலப்படுத்தும்” என்றார்.
</p><p>
இந்த யோசனை, கனடாவின் உலகளாவிய வர்த்தக கூட்டாண்மைகளை விரிவுபடுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.</p><p> </p><p>அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார பதற்றத்தை குறைக்க, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை உருவாக்குவது கனடாவுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.</p><p></p><p>
</p><h2>
எளிதானது அல்ல..</h2><p>ஆனால், இந்த முயற்சி எளிதானது அல்ல. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க வேண்டியிருக்கும். மேலும், அமெரிக்கா இதை விரோதமாகக் கருதி கூடுதல் அழுத்தம் கொடுக்கக்கூடும் என்ற அச்சமும் உள்ளது.
</p><p>
எனினும், கார்னியின் பரிந்துரை, கனடாவின் பொருளாதார சுயாதீனத்தையும், உலகளாவிய அரசியல் நிலைப்பாட்டையும் வலுப்படுத்தும் முக்கியமான யோசனையாகக் கருதப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T16:25:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் முகவரியொன்றில் வந்த அவசர அழைப்பு..40 வயது பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/40-year-old-woman-arrested-acid-attack-in-sussex-1789311256"></link>
            <id>https://news.lankasri.com/article/40-year-old-woman-arrested-acid-attack-in-sussex-1789311256</id>
            <summary type="text">40 year old woman arrested acid attack in sussex: பிரித்தானியாவில் பெண்ணொருவர் திராவகம் வீசிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

பிரித்தானியாவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>40 year old woman arrested acid attack in sussex: பிரித்தானியாவில் பெண்ணொருவர் திராவகம் வீசிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.</p><p>

பிரித்தானியாவின் மேற்கு சசெக்ஸில் வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து 40 வயது பெண் கைது செய்யப்பட்டார். </p><h2>40 வயது பெண் கைது </h2><p>

மேற்கு சசெக்ஸில் உள்ள க்ராலியில் ஒரு முகவரிக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bbd06a6-abb6-4fc9-9b18-8bafddfa7587/26-6aa6b9ad81351.webp' />
</p><p>
</p><p>

அங்கு திராவகம் வீசப்பட்டதால் பாதிக்கப்பட்ட 40 வயது ஆண் ஒருவர் மீட்கப்பட்டார்.&nbsp;</p><p>

அத்துடன் கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தியதாக, சந்தேகத்தின் பேரில் 40 வயது பெண் கைது செய்யப்பட்டார். </p><p>

அவசர சேவைகள் சம்பவ இடத்தில் இருந்த நிலையில், அதிகாரிகள் சாலையின் ஒரு பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T14:53:39+00:00</updated>
        </entry>
    </feed>
