<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-02T04:53:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-bus-fares-changing-1785644467"></link>
            <id>https://news.lankasri.com/article/england-bus-fares-changing-1785644467</id>
            <summary type="text">இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இலவசப் பயணம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.</p><h2>இலவசப் பயணம்</h2><p>
</p><p>பொதுவாக, ஆண்டு முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும், அரசு ஓய்வூதியம் பெறும் வயதை (66) எட்டிய பெரியவர்களும் உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/febd4d21-3d7c-480f-b126-10f81dab84f0/26-6a6ec8f995142.webp' /></p><p> </p><p>அதேவேளையில், லண்டனுக்கு வெளியே 5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் 2 பவுண்டுகள் அல்லது அதற்கும் குறைவான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். </p><p>ஆனால், ஆகஸ்ட் 1 முதல் இம்மாத இறுதி வரை, இத்திட்டத்தில் பங்கேற்கும் பேருந்துகளில் 15 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் வரம்பற்ற இலவசப் பயணத்தை மேற்கொள்ள முடியும். </p><p>இங்கிலாந்தில் உள்ள குடும்பங்களை வெகுவாகப் பாதித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் 100 மில்லியன் பவுண்டு மதிப்பிலான மிகப்பெரிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாகவே, மே மாதத்தில் அரசாங்கத்தால் இந்த இலவசப் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>இதில் மிகச் சிறந்த விடயம் என்னவென்றால், இதைப் பயன்படுத்திக்கொள்ள எந்தவிதப் பதிவும் தேவையில்லை; 15 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் உடனடியாக இதில் ஈடுபடத் தொடங்கலாம். </p><p>இந்தத் திட்டமானது, மேற்கு இங்கிலாந்து முழுவதும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தைப் போன்றது. 'கிட்ஸ் கோ ஃப்ரீ' (Kids Go Free) என்ற இந்த முன்முயற்சியானது, கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் உள்ளிட்ட பாடசாலை விடுமுறை நாட்களில், </p><p>பாத் &amp; நார்த் ஈஸ்ட் சோமர்செட், பிரிஸ்டல், நார்த் சோமர்செட் மற்றும் சவுத் க்ளௌசெஸ்டர் ஆகிய பகுதிகளில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16eb8077-c759-4ed3-85da-7131e2d1811c/26-6a6ec8f7ed013.webp' /></p><p> </p><p>மேற்கு இங்கிலாந்தின் லேபர் கட்சி மேயரான ஹெலன் காட்வின் (Helen Godwin) இது தொடர்பில் தெரிவிக்கையில், Kids Go Free திட்டம் இதுவரை 1.4 மில்லியன் இலவசப் பயணங்களை வழங்கியுள்ளது என்றார்.</p><h2>2 பவுண்டுகளாக மாற்றம்</h2><p> </p><p>இந்த நிலையில், ஒரு பயணத்திற்கு 1.50 பவுண்டுகள் கட்டணம் செலுத்தி வாரந்தோறும் சென்று வரும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, இந்த இலவச பேருந்துத் திட்டத்தின் மூலம் தோராயமாக 27 பவுண்டுகள் சேமிக்க முடியும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. </p><p>ஒரு குழந்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம் என்பதுடன், எந்த வரம்பும் இருக்காது என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>நாடு முழுவதும் பயணக் கட்டணங்கள் மாறுபட்டாலும், இங்கிலாந்தில் சராசரி பேருந்துக் கட்டணம் பொதுவாக 3 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இருப்பினும், 2027 ஜனவரியில் இது 2 பவுண்டுகளாக மாற்றப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/354f68e6-1117-4168-9297-5a798ccd02df/26-6a6ec8f8e2fca.webp' /></p><p> </p><p>லண்டனுக்கு வெளியே, பெரும்பாலான தனிப் பயணச் சீட்டுகளின் விலை 1.50 பவுண்டுகள் முதல் 2 பவுண்டுகள் வரை இருக்கும். ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசப் பேருந்துப் பயணம் என்பது, </p><p>பெற்றோர்கள் வெளியூர் பயணங்களைத் திட்டமிடவும், அன்புக்குரியவர்களைச் சந்திக்கவும், விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் வழிவகுக்கும் என்று கூறியுள்ள போக்குவரத்துச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர், </p><p>குடும்பங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் குறைப்பதற்கு இந்த முயற்சி இன்றியமையாதது எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T04:19:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலுடன் இணைந்து... ஈரான் தாக்குதல் தொடர்பில் அதிரடியான முடிவெடுத்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-cancelling-strikes-on-iran-1785640088"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-cancelling-strikes-on-iran-1785640088</id>
            <summary type="text">ஈரானுடன் விரைவாக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நிபந்தனையின் பேரில், அந்த நாட்டின் மீதான தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் விரைவாக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நிபந்தனையின் பேரில், அந்த நாட்டின் மீதான தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><h2>விரைவாக ஒப்பந்தம்</h2><p>
</p><p>தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், உலகின் எதிர்கால நலன் மற்றும் வெற்றிகரமான, செழிப்பான ஈரானின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f9f5cf-b192-4528-aa64-72261d05f078/26-6a6eb624b49d1.webp' /></p><p> </p><p>விரைவாக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். </p><p>இஸ்ரேலுடன் இணைந்து மிக மோசமானத் தாக்குதல் ஒன்றை திட்டமிட்டு வருவதாகவும், இதனால் ஈரான் தங்களிடம் கெஞ்சும் நிலை வரும் எனவும் தெரிவித்திருந்த ஜனாதிபதி ட்ரம்ப், தற்போது இஸ்ரேலுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>சனிக்கிழமை இரவு ஈரான் மீது புதிய, உக்கிரமானத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மத்தியில் ட்ரம்பிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. </p><p>
பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரிப்பதாக அமெரிக்கா மீது முன்னதாகக் குற்றஞ்சாட்டியிருந்த ஈரான், அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் எந்தவொரு பிராந்திய நாடும் போரின் தீப்பிழம்புகளில் சிக்கிக்கொள்ளும் என்று கூறியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33b59a0b-2760-4e64-a07c-5fbd5eecd00f/26-6a6eb62665fba.webp' /></p><h2>எதிர்கொள்ள ஈரான் தயார்</h2><p> </p><p>ஆனால், ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஏதுவாகத் தாக்குதலை தள்ளிவைக்குமாறு ஈரான் மற்றும் மத்திய கிழக்கின் பிற நாடுகள் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்தே, தாம் இந்த முடிவை எடுத்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார். </p><p>மேலும், எந்தவொரு ஒப்பந்தம் என்றாலும், அது ஹார்முஸ் நீரிணையை உடனடியாகவும் முழுமையாகவும் திறந்துவிடுதல் மற்றும் ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் ஆகியவை அடங்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd0161c1-703c-42c1-a347-5dace1d4e52a/26-6a6eb625b450d.webp' /></p><p> </p><p>அமெரிக்க அரசாங்கம் முன்னதாக, மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்கர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தால் அங்கிருந்து வெளியேறத் தயாராக இருக்குமாறும் வலியுறுத்தியிருந்தது. </p><p>அதேவேளை, ஈரானும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்ததுடன், ட்ரம்பின் தாக்குதல்களுக்கு பதிலடி உறுதி என்றும், எதிர்கொள்ள ஈரான் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T03:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-new-attack-iran-issue-warning-to-neighbours-1785631126"></link>
            <id>https://news.lankasri.com/article/us-new-attack-iran-issue-warning-to-neighbours-1785631126</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2> மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு</h2><p>அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து இரு தரப்பிற்கும் இடையிலான மோதல் மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது.</p><p> இதன் ஒரு பகுதியாக ஈரான் மீது அமெரிக்கா மற்றொரு பிரம்மாண்ட தாக்குதலை முன்னெடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/669c0ff7-cd8b-45b3-9486-1e6ff24dceb4/26-6a6e9197ca04c.webp' /></p><p></p><h2> அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை</h2><p>
இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்தும் எந்தவொரு தாக்குதல் முயற்சியிலும் அண்டை நாடுகள் பங்கேற்றால் அதற்கான “கடுமையான பதிலடி” நிச்சயம் கொடுக்கப்படும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.</p><p>சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லாவுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த எச்சரிக்கையை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பதிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc75eeec-d276-494e-9c09-79d4d70daeed/26-6a6e91987fc53.webp' /><br></p><p> &nbsp;தொலைபேசி உரையாடலில், அமெரிக்கா மற்றும் டெல் அவிவ் உடன் இணைந்து பிராந்திய நாடுகள் யாரும் ஈரானுடன் விரோத போக்கில் ஈடுபட வேண்டாம். அப்படி ஈடுபட்டால் நிச்சயம் ஈரான் அதற்கான உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எடுத்துரைத்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-02T00:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் டூவின் ஃபால்ஸ் நகரில் துப்பாக்கிச்சூடு: கொல்லப்பட்ட 3 பேர், இருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-twin-falls-shooting-3-dead-2-injured-1785629077"></link>
            <id>https://news.lankasri.com/article/us-twin-falls-shooting-3-dead-2-injured-1785629077</id>
            <summary type="text">ஐடஹோ மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடுஅமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தில் உள்ள டூவின் ஃபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐடஹோ மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> துப்பாக்கிச் சூடு</h2><p>அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தில் உள்ள டூவின் ஃபால்ஸ்(Twin Falls) என்ற இடத்தில் அரங்கேறிய கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> உள்ளூர் நகராட்சி அதிகாரிகளின் தகவல் படி மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.</p><p>தாக்குதலை யார் நடத்தினார்கள்? அல்லது துப்பாக்கிச் சுட்டிற்கான பின்னணி காரணம் என்ன? என்பதை இதுவரை பொலிஸார் வெளியிடவில்லை.</p><p>இந்த பயங்கரமான துப்பாக்கிச் சூடு சம்பவமானது,&nbsp; புளூ லேக்ஸ் பவுல்வர்ட் நார்த்(Blue Lakes Boulevard North) என்ற பகுதியில் அமைந்துள்ள பரபரப்பான வணிக வளாகத்தில் நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e7cf62a-ffd1-4211-9d48-3d013408435a/26-6a6e899671b39.webp' /></p><p></p><p> அதிலும் குறிப்பாக அங்குள்ள In-N-Out Burger என்ற இடத்தின் வளாகத்திற்கு நிகழ்ந்துள்ளது.</p><p>தாக்குதலை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அப்பகுதியில் இருந்த வணிக நிறுவனங்கள் தங்களது கடைகளை தற்காலிகமாக மூடியுள்ளனர்.</p><p>அதே நேரத்தில், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-02T00:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் விபத்துக்குள்ளான சுற்றுலா பயணிகள் விமானம்: நாஸ்கா கோடுகள் அருகில் என்ன நடந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/plane-crash-near-nazca-lines-13-dead-in-peru-1785627528"></link>
            <id>https://news.lankasri.com/article/plane-crash-near-nazca-lines-13-dead-in-peru-1785627528</id>
            <summary type="text">பெரு நாட்டில் பயணிகள் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான பயணிகள் சுற்றுலா விமானம்பெரு நாட்டின் தெற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரு நாட்டில் பயணிகள் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> விபத்துக்குள்ளான பயணிகள் சுற்றுலா விமானம்</h2><p>பெரு நாட்டின் தெற்கு பகுதியில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>சனிக்கிழமை மதியம் 12.55 மணிக்கு நாஸ்கா நகரில் இருந்து 6 கி.மீ தொலைவிலும், உலகப் புகழ்பெற்ற நாஸ்கோ கோடுகள்(Nazca Lines) அமைந்துள்ள இடத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள புவெப்லோ வியெஜோ(Pueblo Viejo) என்ற இடத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c27b0e-954c-4fa9-954f-25c5bec6f168/26-6a6e83897de5f.webp' /></p><p>புவெப்லோ வியெஜோ என்ற பகுதியில் புகைமூட்டத்திற்கு மத்தியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p> உலகப் புகழ்பெற்ற நாஸ்கோ கோடுகளை பார்வையிட்ட பிறகு தனது பயணத்தை நிறைவு செய்ய தயாரான போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்திற்கு சில நிமிடத்திற்கு முன்பு விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை முற்றிலுமாக இழந்துள்ளது.</p><p> விபத்தின் போது விமானத்தில் 11 பயணிகள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 13 பேர் இருந்த நிலையில், அனைவரும் உயிரிழந்து இருப்பதாக பெரு நாட்டின் வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><p>தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>விபத்துக்குள்ளான விமானம் செஸ்னா கிராண்ட் கேரவன்(Cessna Grand Caravan) என்ற வகையை சேர்ந்த Aerodiana என்ற உள்ளூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c7ecbc-a966-4320-b212-baeaeab8d89f/26-6a6e838a34374.webp' /></p><p> விபத்திற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவரவில்லை. ஆனால் இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.</p><h2> நாஸ்கோ கோடுகள் என்பது?</h2><p>
நாஸ்கோ கோடுகள் என்பது, வானில் இருந்து பார்த்தால் மட்டுமே முழுமையாக தெரியக்கூடிய பண்டைய பாலைவன சித்திரங்கள் ஆகும்.</p><p> பெரு நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான நாஸ்கா கோடுகளை பார்வையிட ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 100000 சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-01T23:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சியூட்டா எல்லை விவகாரம்: ஐரோப்பா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஸ்பெயின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-condemns-eu-neighbors-over-ceuta-issue-1785624226"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-condemns-eu-neighbors-over-ceuta-issue-1785624226</id>
            <summary type="text">சியூட்டா எல்லை விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவும் சுயநலமாக நடந்து கொண்டு இருப்பதாக ஸ்பெயின் குற்றஞ்சாட்டியுள்ளது.சியூட்டா எல்லை விவகாரம்வியாழக்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சியூட்டா எல்லை விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவும் சுயநலமாக நடந்து கொண்டு இருப்பதாக ஸ்பெயின் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><h2>சியூட்டா எல்லை விவகாரம்</h2><p>வியாழக்கிழமையன்று மொராக்கோவில் இருந்து கிட்டத்தட்ட 500000 மக்கள் ஸ்பெயினின் சியூட்டா(Ceuta) பகுதிக்குள் ஒரே நேரத்தில் முயன்றது, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54c1b6e8-5126-4776-a184-5d272cdd7b40/26-6a6e76a4a79ba.webp' /></p><p> இதையடுத்து முக்கிய கொள்கை மாற்றமாக, ஸ்பெயின் உடனான விசா மற்றும் கடவுச் சீட்டு இல்லாத ஷெங்கன் பயண முறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p></p><h2>ஐரோப்பிய நாடுகளை குற்றஞ்சாட்டிய ஸ்பெயின்</h2><p>&nbsp;சியூட்டா எல்லை விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவும் சுயநலமாக நடந்து கொண்டு இருப்பதாக ஸ்பெயின் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p>ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடு மிகவும் பொறுப்பற்றதாகவும், ஒற்றுமையற்றதாகவும் இருப்பதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது.</p><p> அதே நேரத்தில், ஸ்பெயின் எல்லை விவகாரத்தை சில ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் தங்களது உள்நாட்டு அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த முயல்வதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிரான்டே குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e37004a-1f37-4bd5-b028-90996be26624/26-6a6e76a400d26.webp' /></p><p> ஸ்பெயின் ஆப்பிரிக்காவுடன் நேரடியாக எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்த நிலை வேறு எந்த ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளுக்கு ஏற்படவில்லை.</p><p>சியூட்டா எல்லை விவகாரத்தில் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், சில நாடுகள் தங்கள் சுயநலத்திற்காக எடுக்கும் சில முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் கிரான்டே தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T23:06:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாஸ்கோ உணவகத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் உயிரிழப்பு: பின்னணியில் இருப்பது யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/explosion-in-moscow-cafe-3-dead-15-injured-1785625596"></link>
            <id>https://news.lankasri.com/article/explosion-in-moscow-cafe-3-dead-15-injured-1785625596</id>
            <summary type="text">ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் குண்டு வெடிப்பு

மாஸ்கோவின் மத்திய பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> மாஸ்கோவில் குண்டு வெடிப்பு</h2><p>

மாஸ்கோவின் மத்திய பகுதியான குத்ரின்ஸ்காயா சதுக்கத்தில்(Kudrinskaya Square) அமைந்துள்ள கஃபே ஒன்றில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p> &nbsp;இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் வரை உயிரிழந்து இருப்பதுடன், 15 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.</p><p> குண்டு வெடிப்பை தொடர்ந்து உள்துறை அமைச்சக அதிகாரிகளும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3190774a-251e-4ec1-9366-0a5b39e8609b/26-6a6e7bfe5e675.webp' /></p><p>மீட்பு படையினர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருவதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> &nbsp;சனிக்கிழமை மாலை நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பானது, பால்சி ரோஸ்லி(Balzi Rossi) என்ற சொகுசு உணவு விடுதியில் நடைபெற்ற தனியார் கூட்டத்தின் போது நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2> குண்டுவெடிப்பிற்கு பின்னால் இருப்பது யார்?</h2><p>
இந்நிலையில் மாஸ்கோ தலைநகரில் அமைந்துள்ள பால்சி ரோஸ்லி உணவகத்தில் இந்த நாட்டு வெடிகுண்டின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை ரஷ்ய அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ed7d3a6-0dd7-467c-ad41-4d322b87a126/26-6a6e7bff100cc.webp' /></p><p> அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதையும் ரஷ்ய அதிகாரிகள் வெளியிடவில்லை என்றாலும், இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் உக்ரைன் இருக்கலாம் என்று ரஷ்யா சந்தேகப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T23:06:47+00:00</updated>
        </entry>
    </feed>
