<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-12T23:30:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயம்: கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-flags-off-london-ajith-car-race-1789252635"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-flags-off-london-ajith-car-race-1789252635</id>
            <summary type="text">CM Vijay Flags Off London Ajith Car Race: லண்டனில் நடிகர் அஜித் குமார் கலந்து கொள்ளும் கார் பந்தய போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடி அசைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>CM Vijay Flags Off London Ajith Car Race: லண்டனில் நடிகர் அஜித் குமார் கலந்து கொள்ளும் கார் பந்தய போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார்.</p><h2>முதலமைச்சரின் லண்டன் பயணம்</h2><p>
வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ளார்.</p><p> தமிழகத்தில் சர்வதேச தளத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் மற்றும் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்து இருந்த நிலையில், லண்டனில் உள்ள சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளை முதல்வர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Proud Moment of TAMILNADU People&#39;s 💪<br><br>Our honorable CM Vijay flagged off the car race.<br><br>all the best Thala <a href="https://x.com/Akracingoffl?ref_src=twsrc%5Etfw">@Akracingoffl</a> 👍<a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://x.com/hashtag/CMVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMVijay‌</a> <a href="https://x.com/hashtag/Ajith?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Ajith</a> <a href="https://t.co/V0b141uzDs">pic.twitter.com/V0b141uzDs</a></p>&mdash; BOSS TVK ❤️💛❤️ (@BossTVK) <a href="https://x.com/BossTVK/status/2098808742389354578?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><h2> கொடியசைத்து தொடங்கி வைத்த விஜய்
</h2><p>
இந்நிலையில் மிச்செலின் லீ மான்ஸில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தய போட்டியை பச்சைக் கொடி அசைத்து முதலமைச்சர் முறைப்படி தொடங்கி வைத்தார்.</p><p>இதில் LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்ப்பில் 16ம் எண் கொண்ட Ligier என்ற பந்தயக் காரை நடிகர் அஜித்குமார் இயக்குகிறார்.</p><p> நடிகர் அஜித் குமாரின் இணை கார் ஓட்டுநராக பிரான்ஸ் நாட்டின் முன்னணி கார் பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக் பங்கேற்கிறார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="tl" dir="ltr">SWAG PRO MAx<br><br>AK-VJ <a href="https://t.co/tKLYvwNRvI">pic.twitter.com/tKLYvwNRvI</a></p>&mdash; Suresh Elangovan (@sureshelangov12) <a href="https://x.com/sureshelangov12/status/2098809553282637914?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> முதல்வர் விஜயின் வருகை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் அஜித்குமார், கடந்த 34 ஆண்டுகளாக திரையுலகில் தன்னுடைய நண்பராக பயணித்த முதல்வர் விஜய், தன்னுடைய பிஸியான நேரத்திலும் எங்களை ஊக்குவிப்பதற்காக சில்வர்ஸ்டோன் வந்ததற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்</p><p> மேலும் தமிழ்நாட்டில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றும் நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.</p><p> இந்த நிகழ்வின் போது நடிகர் அஜித்குமாரின் காரில் அமர்ந்து முதலமைச்சர் விஜய் போட்டோவுக்கு போஸ் குடுத்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T22:37:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மாலுமிகள் பயணித்த 3 வர்த்தக கப்பல் மீது தாக்குதல்: மத்திய கிழக்கில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-indian-sailors-carrying-ship-attacked-in-hormuz-1789252347"></link>
            <id>https://news.lankasri.com/article/3-indian-sailors-carrying-ship-attacked-in-hormuz-1789252347</id>
            <summary type="text">3 Indian Sailors Carrying Ship Attacked in Middle East: மத்திய கிழக்கில் இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்திய மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>3 Indian Sailors Carrying Ship Attacked in Middle East: மத்திய கிழக்கில் இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><h2>இந்திய மாலுமிகள் கப்பல் மீது தாக்குதல்</h2><p>மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்பகுதியில் கடந்த செப்டம்பர் 8ம் மற்றும் 9ம் திகதிகளில் இந்திய மாலுமிகள் பயணித்த 3 வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் 3 வர்த்தக கப்பல்களில் இருந்த அனைத்து இந்திய மாலுமிகளும் காயமின்றி உயிர் பிழைத்தனர்.</p><p>கடல்சார் நிர்வாக இயக்குநரகம் வெளியிட்ட தகவலில், செப்டம்பர் 8ம் திகதி ஓமன் வளைகுடா பகுதியில் இரவு 11 மணியளவில் ஜிம்பாப்வே கொடியுடன் பயணித்த ரீஸ்கோ என்ற கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை தாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/218dc1a3-dd26-4c35-91ed-fd382a555d2f/26-6aa5d2fcecd57.webp' /></p><p> இந்த கப்பலில் கிட்டத்தட்ட 21 இந்திய மாலுமிகள் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் தாக்குதலுக்கு முன்பாகவே கப்பலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p> இதைப்போல ஓமன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் செப்டம்பர் 8 மற்றும் 9ம் திகதியில் தாக்குதலுக்கு உள்ளான மற்ற 2 படகுகளில் இருந்த இந்திய மாலுமிகளும் பத்திரமாக காயமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p> இருதரப்பிற்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள பாரசீக மற்றும் அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இந்திய கொடியுடன் பயணிக்கும் கப்பல்கள் மற்றும் இந்தியா நோக்கி பயணிக்கும் கப்பல்கள் என மொத்தம் 10 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டு அதிலுள்ள மாலுமிகள் பத்திரமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p> ஈரான் அமெரிக்கா இடையிலான போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இந்தியக் கொடி பொருத்தப்பட்ட 4 கப்பல்கள் மற்றும் இந்தியர்கள் பயணித்த 50 கப்பல்கள் இத்தகைய தாக்குதலை எதிர்கொண்டுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T22:32:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் குடியிருப்பு கட்டிடத்தில் பரவிய தீ: ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fire-at-east-london-residential-building-one-dead-1789252017"></link>
            <id>https://news.lankasri.com/article/fire-at-east-london-residential-building-one-dead-1789252017</id>
            <summary type="text">Fire at East London residential building One dead: கிழக்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Fire at East London residential building One dead: கிழக்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2> லண்டனில் தீ விபத்து</h2><p>லண்டனின் பிளாக்வால் வே(Blackwall Way) பகுதியில் அமைந்துள்ள 22 மாடி கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.</p><p>கட்டிடத்தின் 17 வது மாடியில் தீ பற்றியது தொடர்பாக அதிகாலை 4.35 மணிக்கு அவசர உதவிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> கிட்டத்தட்ட 10 தீயணைப்பு வாகனங்கள், 70 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f73713d4-d1b2-42b7-8388-1fd91061e912/26-6aa5d1b339763.webp' /></p><p>தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி காலை 6.41 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.</p><p> ஆனால் அதற்குள் தீ பரவிய 17வது மாடியின் பாதி பரப்பளவு தீயில் எரிந்து சேதமடைந்தது.</p><p></p><h2> உயிரிழப்புகள் மற்றும் காயம்</h2><p>மருத்துவ சேவையினரின் துரித நடவடிக்கைக்கு மத்தியிலும் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><p> மேலும் மொத்தம் 4 பேர் காயமடைந்த நிலையில், அதில் இருவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><p> தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.</p><p> இந்நிலையில் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-12T22:27:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI வளர்ச்சி வேகத்தை குறைக்க ஆந்த்ரோபிக் CEO வலியுறுத்தல்: எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-growth-should-measured-anthropic-s-ceo-says-1789251682"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-growth-should-measured-anthropic-s-ceo-says-1789251682</id>
            <summary type="text">AI Growth Should Measured Anthropic&#039;s CEO Says: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthrop...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI Growth Should Measured Anthropic's CEO Says: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி(Dario Amodei) வலியுறுத்தியுள்ளார்..</p><h2>AI வேகத்தை குறைக்க வேண்டும்</h2><p>செயற்கை நுண்ணறிவுத் துறையின் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் மனித குலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடும் அபாயம் இருப்பதாக பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி எச்சரித்துள்ளார்.</p><p> அத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b7f5e40-5c64-4856-b0f5-6f2515326029/26-6aa5d063afc16.webp' /><br></p><p>செயற்கை நுண்ணறிவின் எதிர்கால அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்தும் வகையில் 3 கட்ட விரிவான திட்டத்தை டாரியோ அமோடி முன்வைத்துள்ளார்.</p><p>அதன்படி, வெளிப்புற குழுக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கண்காணிப்பதுடன் நிகழ்வுகளை பதிவு செய்து நுண்ணறிவு மாடல்களை சோதிப்பார்கள்.</p><p></p><p> ஏஐ நிறுவனங்கள் இணைந்து தெளிவான அளவுகோலையும், வளர்ச்சியின் வேகத்தையும் நிர்ணயிக்க வேண்டும்.</p><p>ஜனநாயக நாடுகள் ஏஐ பாதுகாப்பு தர நிலைகளில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ள வேணும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We Must Pace the Frontier: I’ve written a new essay on why the AI industry should slow down, with a three-part plan for doing so.<br><br>Anthropic is unilaterally committing to the first of these steps. We’ll provide third-party evaluators with permanent, employee-level access to our…</p>&mdash; Dario Amodei (@DarioAmodei) <a href="https://x.com/DarioAmodei/status/2098773920774074715?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி முன்வைத்த இந்த திட்ட வழிமுறைகளுக்கு, ஓபன்ஏஐ(Open AI) நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-12T22:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம்: டிரம்ப் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-says-deal-with-canada-could-come-soon-1789251401"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-says-deal-with-canada-could-come-soon-1789251401</id>
            <summary type="text"> Trump Says Deal With Canada could come fairly soon: கனடா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து டிரம்ப் நம்பிக்கையான கருத்துக்களை வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p> Trump Says Deal With Canada could come fairly soon: கனடா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து டிரம்ப் நம்பிக்கையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><h2> தடைப்பட்ட பேச்சுவார்த்தை</h2><p>
கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி அமெரிக்கா முன்வைத்த புதிய கோரிக்கைகளை அடுத்து கனேடிய பிரதமர் மார்க் கார்னி தன்னுடைய பேச்சுவார்த்தை குழுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.</p><p> இதனால் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை முற்றிலுமாக முடங்கியது.</p><p> கனடாவின் இந்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கனத்த வரிகளை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62509da5-84c4-436f-bb8f-1bb09443d579/26-6aa5cf4b58d91.webp' /></p><p> கனடாவும் இதற்கு ஈடு கொடுக்கும் விதமாக உடனடி பதில் நடவடிக்கையை அறிவித்தது.</p><p>பின்னர் இதன் தொடர்ச்சியாக மதுபானங்கள் மற்றும் மால்ட் பானங்களை இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது.</p><h2>பேச்சுவார்த்தைக்கு தயார்</h2><p>இந்த தீவிரமான மோதல்களுக்கு பிறகும், அமெரிக்கா மற்றும் கனடா தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.</p><p>செப்டம்பர் 11ம் திகதி கல்கரியில் செய்தியாளர்களிடம் பேசிய கனேடிய பிரதமர் மார்க் கார்னி, இரு தரப்பிற்கு பலனை தரக்கூடிய பேச்சுவார்த்தைக்கு கனடா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.</p><p>ஆனால் கெடுபிடிகளுக்கு பயந்து இந்த பேச்சு வார்த்தையானது நடைபெறாது என்று கார்னி உறுதிப்படுத்தினார்.</p><p>இந்நிலையில் டப்ளினில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா விவசாயப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை கனடா அரசு நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், கனடாவுடன் கூடிய விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று எட்டப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T22:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/15-year-old-boy-survives-two-days-in-bering-sea-1789234034"></link>
            <id>https://news.lankasri.com/article/15-year-old-boy-survives-two-days-in-bering-sea-1789234034</id>
            <summary type="text">15-year-old-boy-survives-two-days-in-bering-sea: 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.கடலில் உயிருக்கு போராடிய 15 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>15-year-old-boy-survives-two-days-in-bering-sea: 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.</p><h2>கடலில் உயிருக்கு போராடிய 15 வயது சிறுவன்</h2><p>

அமெரிக்காவின் அலாஸ்கா அருகில் உள்ள பெரிங் கடலில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> &nbsp;செயிண்ட லாரன்ஸ் தீவில் உள்ள சவோங்கா கிராமத்தை சேர்ந்த டெரெக் பார்க்கர் அக்னாங்கா என்ற 15 வயது சிறுவன் படகில் உறவினர்களுடன் மீன்பிடிக்க சென்ற போது அவரது படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்தது.</p><p>கடலில் நீரின் வெப்பநிலையானது வெறும் 10 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருந்த நிலையில், கவிழ்ந்த படகை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இரவு பகலாக உயிருக்கு போராடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/594c2f50-a0e6-43f1-b91f-0cecd20798d9/26-6aa58b7424b8c.webp' /></p><p></p><h2> மீட்பு மற்றும் தேடுதல் பணி</h2><p>

கடலுக்கு சென்ற 3 பேரை காணவில்லை என உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததும். அமெரிக்க கடலோரக் காவல்படை தீவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.</p><p> இதில் சிறுவனுடன் சென்ற மற்ற இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> கடலில் உயிருக்காக 2 நாட்களாக போராடிய சிறுவன் சுமார் 2 நாட்களுக்கு பிறகு செயிண்ட் லாரன்ஸ் தீவுக்கு அருகே மீட்கப்பட்டார்.</p><p> மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக கரைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.</p><p> 15 வயது சிறுவன் 2 நாட்களாக கடலில் மிதந்த படி உயிருடன் இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T21:52:27+00:00</updated>
        </entry>
    </feed>
