<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-19T15:25:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[103 போர்க் கைதிகள் பரிமாற்றம்: வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-and-ukraine-exchange-103-prisoners-1787149587"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-and-ukraine-exchange-103-prisoners-1787149587</id>
            <summary type="text">Russia and Ukraine exchange 103 prisoners: உக்ரைனுடன் தலா 103 போர்க் கைதிகளை பரிமாறிக்கொண்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia and Ukraine exchange 103 prisoners: உக்ரைனுடன் தலா 103 போர்க் கைதிகளை பரிமாறிக்கொண்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஐக்கிய அரபு அமீரகத்தின் சமரசத்தைத் தொடர்ந்து ரஷ்யாவும், உக்ரைனும் தலா 103 போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொண்டன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>103 போர்க் கைதிகள்</h2><p>

அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவர் சமரச பேச்சுவார்த்தை மூலம் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நூற்றுக்கணக்கான போர்க் கைதிகளை விடுவித்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c7bc9b9-1620-4f36-a1d9-37c6a5f83af7/26-6a85bd161df78.webp' />&nbsp;</p><p></p><p>

அந்த வகையில், தற்போது 103 போர்க் கைதிகளை இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
</p><p>
அப்போது தனது உக்ரேனிய இணையான டிமிட்ரோ லுபினெட்ஸை சந்தித்ததாக ரஷ்யாவின் மனித உரிமைகள் ஆணையர் யானா லான்ட்ராடோவா தெரிவித்தார்.&nbsp;</p><h2>உக்ரைன் உறுதிப்படுத்தவில்லை</h2><p> 

பெலாரஸில் நடைபெற்ற லுபினெட்ஸ் உடனான சந்திப்பின் புகைப்படங்களையும், காணொளிகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
</p><p>

போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கும் இடையே ஜூன் மாதத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் கைதிகள் பரிமாற்றம் இதுவாகும். ஆனால், உக்ரைன் இதனை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை. </p><p>

அதே சமயம் ரஷ்ய இராணுவம், புதன்கிழமை விடுவிக்கப்பட்ட தங்கள் நாட்டு இராணுவ வீரர்கள் தற்போது பெலாரஸில் இருப்பதாகவும், அங்கு அவர்களுக்கு மருத்துவ மற்றும் மனநல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c7b2136-7e68-4a88-a1e7-8f7e9b8721bc/26-6a85bd16d75de.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T14:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scotland-mp-martyn-day-married-kerala-women-1787147669"></link>
            <id>https://news.lankasri.com/article/scotland-mp-martyn-day-married-kerala-women-1787147669</id>
            <summary type="text">கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் வைத்து கேரள பெண்ணை ஸ்காட்லாந்து எம்.பி திருமணம் செய்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல்

கேரள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் வைத்து கேரள பெண்ணை ஸ்காட்லாந்து எம்.பி திருமணம் செய்துள்ளார்.
</p><h3>
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல்</h3><p>

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பம்பக்குடாவைச் சேர்ந்த நிதின் சந்த்(nitin chand) என்பவர், 2008 ஆம் ஆண்டில் மாணவர் விசா மூலம் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தார். </p><p>

அங்கு, அரசாங்கத்தின் குடிவரவு விதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவரது விசா ரத்து செய்யப்பட்டது.</p><p>விசா தொடர்பான பிரச்சினைகளுக்காக 2016 ஆம் ஆண்டில், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மார்ட்டின் டே(martyn day) என்பவரை நிதின் சந்தித்து இது குறித்து பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2984bba-7f56-48a2-ad4a-8db86433c9c1/26-6a85b5976db2c.webp' /></p><p>

அப்போதே நிதின் மீது மார்ட்டின் டேவிற்கு காதல் மலர்ந்துள்ளது.
</p><p>
தான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர், தனக்கு 12 வயதில் ஒரு குழந்தை உள்ளது என நிதின் சந்த் தெரிவித்த நிலையிலும் மார்ட்டின் டே இதில் உறுதியாகி இருந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

இதனையடுத்து, மார்ட்டின் டேயின் பெற்றோர்கள் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் அவர்கள் பிரித்தானியாவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். </p><p>

குருவாயூரப்பனின் தீவிர பக்தையான நிதின் சந்த், தனது திருமணம் குருவாயூர் கோவிலில் நடைபெற வேண்டும் என்று நீண்ட காலமாகப் பிரார்த்தனை செய்து வந்துள்ளார். </p><p>

விசா நடைமுறை காரணமாக அப்போது செல்ல முடியவில்லை. அதன் பிறகு 3 முறை இந்த தம்பதிகள் குருவாயூருக்கு வந்தும் திருமணம் செய்யும் சூழல் அமையவில்லை.</p><h3> 

கேரள பெண்ணை மணந்த ஸ்காட்லாந்து எம்.பி
</h3><p>
இந்நிலையில், தற்போது கேரளாவிற்கு இந்த தம்பதி வந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 16 ஆம் திகதி கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் வைத்து 55 வயதான மார்ட்டின் டே, 49 வயதான நிதின் சந்திற்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2059c6ed-54b8-43c6-a641-4f5782a3fa82/26-6a85b598c5911.webp' /></p><p>

இந்த திருமணத்தில், நிதின் சந்திராவின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த 22 வயது மகன் வேதிக் சங்கரும் உடனிருந்தார். </p><p>

மேலாண்மை ஆலோசகராக பணியாற்றும் நிதின், தன் கணவருடன் இணைந்து ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.</p><p>கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில், ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி (SNP) சார்பில் ஃபால்கிர்க் கிழக்கு மற்றும் லின்லித்கோ தொகுதியில் போட்டியிட்ட மார்ட்டின் டே, 14,465 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ba8888-eabf-44be-9aba-a433a3670f68/26-6a85b5981fea0.webp' /></p><p>

மார்ட்டின் டே மலையாள மொழியை கற்கவும், கேரள பாரம்பரியத்தை புரிந்து கொள்ளவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T13:54:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை: முத்தரப்பு தொடர் அட்டவணை வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/schedule-out-of-sri-lanka-england-pakistan-series-1787145805"></link>
            <id>https://news.lankasri.com/article/schedule-out-of-sri-lanka-england-pakistan-series-1787145805</id>
            <summary type="text">Sri Lanka tour of pakistan tri-series: இலங்கை, இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளன.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sri Lanka tour of pakistan tri-series: இலங்கை, இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளன.
</p><p>
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள முத்தரப்பு தொடரின் அட்டவணை வெளியாகியுள்ளது.&nbsp;</p><h2>முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர்&nbsp;</h2><p>

இலங்கை, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபரில் நடைபெற உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/107a2515-76db-4e43-8769-6b14ce30bbad/26-6a85af7d5917c.webp' /></p><p></p><p>

பாகிஸ்தானின் மைதானங்களில் நடைபெற உள்ள இந்தத் தொடரில் பங்கேற்க இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன. </p><p>

அக்டோபர் 18-ஆம் திகதி தொடங்கி, 31-ஆம் திகதி வரை மொத்தம் 7 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaf6e3d1-896b-4bf5-84cb-9a1b39fc8c73/26-6a85af7e274c1.webp' /></p><p><b>
போட்டி அட்டவணை:</b></p><ul><li> 

பாகிஸ்தான் vs இலங்கை - அக்டோபர் 18 (ராவல்பிண்டி)</li><li> பாகிஸ்தான் vs இங்கிலாந்து - அக்டோபர் 20 (ராவல்பிண்டி)</li><li> 
இலங்கை vs இங்கிலாந்து - அக்டோபர் 22 (ராவல்பிண்டி) </li><li>
பாகிஸ்தான் vs இங்கிலாந்து - அக்டோபர் 25 (கடாஃபி) </li><li>

பாகிஸ்தான் vs இலங்கை - அக்டோபர் 27 (கடாஃபி)
</li><li>இலங்கை vs இங்கிலாந்து - அக்டோபர் 29 (கடாஃபி) </li><li>

இறுதிப்போட்டி - அக்டோபர் 31 (கடாஃபி)&nbsp; &nbsp; &nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3dc6774-e15e-4608-b885-6f89633c434e/26-6a85af7ee568b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T13:25:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாறும் வானிலை... பிரித்தானியாவில் கொட்டித் தீர்க்க இருக்கும் மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/climate-change-leads-to-chance-heavy-rain-in-uk-1787141892"></link>
            <id>https://news.lankasri.com/article/climate-change-leads-to-chance-heavy-rain-in-uk-1787141892</id>
            <summary type="text">Heavy rain and thunderstorms set to batter Britain: பிரித்தானியாவை மழையும் புயலும் புரட்டி எடுக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Heavy rain and thunderstorms set to batter Britain: பிரித்தானியாவை மழையும் புயலும் புரட்டி எடுக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.</p><p>

ஐரோப்பிய நாடுகள் பலவற்றை வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், பிரித்தானியா இடி மின்னலுடன் மழையை எதிர்கொள்ள இருக்கிறது.
</p><h3>
மாறும் வானிலை...
</h3><p>
ஆம், வரும் நாட்களில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மாலை 7.00 மணி முதல் நாளை காலை 10.00 மணி வரை பல பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f112e5d-7a6a-4ca1-914c-25cd51340104/26-6a859f058f5e5.webp' /></p><p>
மழை, இடி மின்னலுடன் கனமழை மற்றும் மழையின் காரணமாக திடீர் வெள்ளம், இவற்றால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஆகிய விடயங்கள் எதிர்பார்க்கப்படுவதாலேயே, மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
என்றாலும், பிரித்தானியாவில் கடும் வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், இந்த மழை உடனடியாக வறட்சியை தீர்த்துவிடப்போவதில்லை என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T12:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் நீட்டித்துள்ள ஜேர்மனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-extends-border-control-1787141539"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-extends-border-control-1787141539</id>
            <summary type="text">Germany extends border controls: ஜேர்மனி எல்லைக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

ஜேர்மனி, எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany extends border controls: ஜேர்மனி எல்லைக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
</p><p>
ஜேர்மனி, எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><h3>
எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிப்பு
</h3><p>
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்காகவும் பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டும், ஜேர்மனி எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் டொப்ரிண்ட் (Alexander Dobrindt) தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4c2a3fa-5f31-4717-a11c-7d46f5807026/26-6a859da4c80cd.webp' /></p><p>

ஏற்கனவே அமுலிலிருக்கும் ஜேர்மன் எல்லைக் கட்டுப்பாடுகள் செப்டம்பர் நடுப்பகுதியில் முடிவடைய இருக்கும் நிலையில், 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் நடுப்பகுதி வரை அவை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், ஐரோப்பாவின் எல்லைப் பகுதிகளில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைகளில் ஏற்படும் திடீர் குடியேற்ற அழுத்தங்கள் போன்ற காரணங்களாலேயே ஜேர்மனி இந்த முடிவை எடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p>
ஜேர்மனி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், தனது அனைத்து நில எல்லைகளிலும் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T12:12:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய கடல் பகுதியில் 90 ஆண்டுகளில் முதல் முறையாக..746 பவுண்டு எடைகொண்ட மீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scientists-explain-reason-of-bluefin-tuna-uk-sea-1787140621"></link>
            <id>https://news.lankasri.com/article/scientists-explain-reason-of-bluefin-tuna-uk-sea-1787140621</id>
            <summary type="text">Scientists explain reason of bluefin tuna in uk sea: பிரித்தானிய கடல் பகுதிக்கு நீலத்துடுப்பு சூரை மீண்டும் வந்துள்ளது குறித்து விஞ்ஞானிகள் வெளிப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Scientists explain reason of bluefin tuna in uk sea: பிரித்தானிய கடல் பகுதிக்கு நீலத்துடுப்பு சூரை மீண்டும் வந்துள்ளது குறித்து விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p>90 ஆண்டுகளில் முதன்முறையாக பிரித்தானியாவின் வட கடலில் 746 பவுண்டு எடையுள்ள பிரம்மாண்ட மீன் பிடிக்கப்பட்டது குறித்து விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><h2>பிரம்மாண்டமான மீன்&nbsp;</h2><p>
பிரித்தானிய வட கடல் பகுதியில் 746 பவுண்டு (338 கிலோ) எடைகொண்ட ஒரு பிரம்மாண்டமான மீன் பிடிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a9a4bb2-9ba2-4956-865b-ae00449d47b1/26-6a859b13ecae4.webp' /></p><p></p><p>

1939-ஆம் ஆண்டிற்குப் பிறகு யார்ஷையர் விட்பி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட முதல் நீலத்துடுப்பு சூரை மீன் இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
</p><p>
இந்த வகை மீன்கள், மணிக்கு 43 மைல் வேகத்தை எட்டக்கூடியவை மற்றும் இவை பொதுவாக அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் மிதவெப்ப மண்டல நீரில் காணப்படுகிறது. </p><p>

கடல் வெப்பமடைதல் மற்றும் கடுமையான மீன்பிடி கட்டுப்பாடுகள் ஆகியவை இந்த மாபெரும் வேட்டையாடும் மீன்களை எவ்வாறு மீண்டும் கொண்டு வந்துள்ளன என்பதை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.&nbsp;</p><h2>பெருமளவில் திரும்பி வந்துள்ளன</h2><p>

ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இந்த இனம் தென்மேற்குப் பகுதி கடற்பரப்புகளுக்கு பெருமளவில் திரும்பி வந்துள்ளன; டெவோன் மற்றும் கார்ன்வால் கடற்பரப்புகள் 'சூரை மீன்களால்' நிரம்பி வழிகின்றன. </p><p>

இப்போது, இது வட கடலிலும் செழித்து வளர்வதாகத் தெரிகிறது - மேலும் இதற்கு வெப்பமான கடல் நீரே ஒரு பகுதி காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e5d5ed5-da0d-47c8-a838-ce75b44eb8c5/26-6a859b14c28a0.webp' /></p><p>

அதேபோல், உயர்ந்து வரும் கடல் வெப்பநிலை மற்றும் அடிக்கடி ஏற்படும் கடல் வெப்ப அலைகள், ஐக்கிய இராச்சியத்தின் கடற்பரப்புகளை இந்த மீன்களுக்கு மிகவும் பொருத்தமானதாக மாற்றுவதாகத் தெரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். </p><p>

நீலத்துடுப்பு சூரை மீன்களின் பரவல் குறித்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய கிரேஸ் மெக்நிக்கோலஸ் கூறுகையில், 

"எதிர்பார்த்ததை விட இந்த மீன்கள் மேலும் வடக்கே நகர்கின்றன என்பதற்கான ஆரம்ப அறிகுறிகளை எங்கள் முடிவுகள் வழங்குகின்றன. மேலும், இது கடல் வெப்பமடைவதால் ஏற்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b969b13c-c42b-46a0-b51f-07a228c8c824/26-6a859b15742fd.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:58:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் மாநில முதல்வர்கள் மாநாடு - துணைத்தலைவராக முதலமைச்சர் விஜய் தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-selects-as-vice-chairman-of-south-zone-cm-1787140677"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-selects-as-vice-chairman-of-south-zone-cm-1787140677</id>
            <summary type="text">vijay as vice chairman of south zone cm: தென் மண்டல மாநில முதல்வர்கள் குழுவின்துணைத்தலைவராக தமிழ்நாடு முதல்வர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>vijay as vice chairman of south zone cm: தென் மண்டல மாநில முதல்வர்கள் குழுவின்துணைத்தலைவராக தமிழ்நாடு முதல்வர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். </p><h3>

தென் மாநில முதல்வர்கள் மாநாடு
</h3><p>
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை சென்னை கோவளத்தில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bae8a89-e4d2-4c37-8eaf-d3e18a6d1644/26-6a859a46e82f9.webp' /></p><p>
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் வி.டி.சதீசன், தெலங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். </p><p>

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பதிலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொள்கிறார்.&nbsp;</p><p>

இந்த மாநாட்டில் ஒவ்​வொரு மாநிலங்​களுக்கு இடையே​யான ஒத்​துழைப்​பு, பொருளா​தார வளர்ச்​சி, தொழில் முதலீடு​கள், கூட்​டுறவைப் பலப்​படுத்​து​வது, நீர்​வளப் பகிர்​வு, குற்​றங்​கள் தடுப்​பு, எல்​லைப் பிரச்சி​னை​கள் உள்ளிட்ட பல்​வேறு முக்​கிய விவ​காரங்​கள் குறித்து ஆலோ​சனை நடத்​தப்பட உள்​ளது.&nbsp;</p><p></p><p>
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று மாலை 6 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். </p><p>

நாளை காலை 10 மணிக்கு தொடங்கி 3 மணி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாலை 3.30 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் மத்திய அமைச்சர் அமித் ஷா வழிபாடு செய்துவிட்டு டெல்லிக்கு திரும்புகிறார்.</p><h3> 

துணைத்தலைவராக முதலமைச்சர் விஜய்
</h3><p>
காவேரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல இருந்த நிலையில், போராட்டம் காரணமாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கேட்டுக்கொண்டதன் பேரில் அந்த பயணத்தை முதல்வர் ரத்து செய்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a48c2524-8385-4bc7-8a6a-dcb900c846a8/26-6a859a47a0d60.webp' /></p><p>

தற்போது கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் சென்னை வரும் நிலையில், இரு மாநில முதல்வர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனவும், கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்தும் முதல்வர் விஜய் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்த தெற்கு மண்டல குழுவிற்கான தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், துணைத்தலைவராக முதல்வர் விஜய்யும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:58:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[19ஆவது மாடியிலிருந்து விழுந்து இறந்த குழந்தை: 18 மில்லியன் இழப்பீடு கோரும் குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/family-sue-building-owner-baby-fall-from-apartment-1787132492"></link>
            <id>https://news.lankasri.com/article/family-sue-building-owner-baby-fall-from-apartment-1787132492</id>
            <summary type="text">Family of toddler who died in fall from Toronto apartment sues building owners: ரொரன்றோ அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறு குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Family of toddler who died in fall from Toronto apartment sues building owners: ரொரன்றோ அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறு குழந்தையின் குடும்பத்தினர், கட்டிட உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
</p><p>

கனடாவின் ரொரன்றோ நகரிலுள்ள வடக்கு யார்க் பகுதியில் அமைந்துள்ளது 50 Graydon Hall Drive என்னும் அடுக்குமாடிக் குடியிருப்பு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba56bde8-fecf-44b5-9820-fa6b3aba02fc/26-6a857a4e176e6.webp' /></p><p>
அந்த குடியிருப்பின் 19ஆவது மாடியில், ரக்‌ஷித் சௌஹான், தீபாலி காஷ்யப் தம்பதியர் தங்கள் கைக்குழந்தையுடன் வாழ்ந்துவந்த நிலையில், மே மாதம் ஒரு நாள் தங்கள் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.</p><h3>

மாடியிலிருந்து விழுந்து இறந்த குழந்தை</h3><p>

இரண்டு வயதை எட்டாத அந்தக் குழந்தை, விளையாடும்போது ஜன்னல் கண்ணாடியைத் தொட்டதாகவும், திடீரென அந்தக் கண்ணாடி உடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள் ரக்‌ஷித், தீபாலி தம்பதியர்.&nbsp;</p><p>
ஒரு நொடிப்பொழுதில், கண்ணாடி உடைந்த ஜன்னல் வழியாக குழந்தை வெளியே விழுந்திருக்கிறாள்.
</p><p>
குழந்தை தங்கள் கண் முன்னே விழுந்து உயிரிழந்ததைக் கண்டு திகிலடைந்த பெற்றோர், சொல்லொணா அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ftoronto.culture%2Fposts%2Fpfbid02B2pTC8fk5cW2qjL3xSwALeGsfRnu6PWSUY58MKgmLvidQPuxTMEicLTFeRSxHoU3l&show_text=true&width=500" width="500" height="776" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><h3> மில்லியன் இழப்பீடு கோரும் குடும்பம்</h3><p>

இந்நிலையில், அந்தக் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கட்டிட நிர்வாகம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள் அந்தக் குழந்தையின் பெற்றோரும் தாத்தா பாட்டியும்.
</p><p>
அந்தக் கட்டிடத்தில் ஏற்கனவே இதுபோல கண்ணாடி உடைந்ததால் அங்கு குடியிருக்கும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரிந்த நிலையிலும், அதை சீர் செய்ய கட்டிட உரிமையாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள் அவர்கள்.&nbsp;&nbsp;</p><p></p><p>
அத்துடன், குழந்தை இறந்ததும், அந்தக் கட்டிட உரிமையாளர்கள் குடும்பம் எதையோ மறைக்க முயல்வதாக அவதூறு பரப்பியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.</p><p>

ஆகவே, அந்தக் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கட்டிட நிர்வாகம் தங்களுக்கு 18 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது அந்தக் குழந்தையின் குடும்பம்.
</p><p>
இதற்கிடையில், அதே வடக்கு யார்க் பகுதியில் அமைந்துள்ள மற்றொரு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து, ஞாயிற்றுக்கிழமையன்று, ஒரு ஆறு வயது சிறுமி விழுந்து உயிரிழந்துள்ளாள் என்னும் துயரச் செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:06:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிரியோஸுக்கு தற்காலிக தடை: உறுதியான கோகைன் பயன்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nick-kyrgios-faces-suspension-after-cocaine-test-1787137534"></link>
            <id>https://news.lankasri.com/article/nick-kyrgios-faces-suspension-after-cocaine-test-1787137534</id>
            <summary type="text">Nick Kyrgios faces suspension after cocaine test: கோகைன் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிரியோஸுக்கு தற்காலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nick Kyrgios faces suspension after cocaine test: கோகைன் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிரியோஸுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2> நிக் கிரியோஸுக்கு தற்காலிக தடை</h2><p>அவுஸ்திரேலிய டென்னிஸ் நட்சத்திரம் நிக் கிரியோஸ்(Nick Kyrgios) கோகைன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு முகமை(ITIA) இந்த தகவலை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> மேலும் ITIA வழங்கிய தகவலில், கடந்த ஜூன் 22ம் திகதி மயோர்கா ஓபன் போட்டிகள் நடைபெற்ற போது கிரியோஸுடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.</p><p> இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் ஜூலை 17ம் திகதி கோகைன் முதன்மை கூறுகளான பென்சோயில்கோமைன் மாதிரியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d27a6fa1-cc7a-48d2-b076-456a70e7bf1e/26-6a858dff934df.webp' /></p><h2> தவறை ஒப்புக் கொண்ட நிக் கிரியோஸ்</h2><p>இந்த அறிவிப்பு வெளியான பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிக் கிரியோஸ் வெளியிட்ட பதிவில், “தான் பெரிய தவறிழைத்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.” </p><p>&nbsp;அத்துடன் தன்னுடைய குடும்பத்தினர், விளம்பரதாரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T11:05:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு: குரோஷியாவில் உக்ரைனியர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukrainian-arrested-in-croatia-over-nord-stream-1787135446"></link>
            <id>https://news.lankasri.com/article/ukrainian-arrested-in-croatia-over-nord-stream-1787135446</id>
            <summary type="text">Ukrainian arrested in Croatia over Nord stream sabotage: நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் உக்ரைனியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukrainian arrested in Croatia over Nord stream sabotage: நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் உக்ரைனியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> உக்ரைனியர் கைது</h2><p>
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு 2022ம் ஆண்டு நோர்ட் ஸ்ட்ரீம்(Nord Stream) எரிவாயு குழாய் வெடிகுண்டு வைத்து சிதைக்கப்பட்டது.</p><p> இந்த சம்பவத்தில் புதன்கிழமையன்று உக்ரைனை சேர்ந்த விளாடிமிர் இசட்(Vladimir Z) என்ற நபர் குரோஷியாவில் உள்ள புலா நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4e3e610-2512-4eee-b6a7-e7ff9652f366/26-6a8585d76d331.webp' /></p><p>பயிற்சி பெற்ற ஸ்கூபா டைவரான விளாடிமிர் இசட், செர்ஹி கே(Serhil K) என்ற நபருடன் இணைந்து இந்த நாச வேலையை செய்ததாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p> இவர்கள் போலி அடையாள அட்டையை காண்பித்து இடைதரகர்கள் மூலம் ஜேர்மனியின் ரோஸ்டாக் துறைமுகத்தில் உள்ள படகை வாடகைக்கு எடுத்துள்ளனர்.</p><p> இந்த படகில் சென்று டென்மார்க்கின் பார்ஹோம்(Bornholm) தீவுக்கு அருகே உள்ள நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 வது எரிவாயு குழாயை வெடிபொருட்கள் வைத்து சிதைத்துள்ளனர் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு நோர்ட் ஸ்ட்ரீம் வழித்தடங்களும் கடுமையான சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecf16f7a-1484-4df9-baae-db3766ef4784/26-6a8585d81ff8f.webp' /></p><p></p><h2>நாடு கடத்தப்பட்ட உக்ரைனியர்</h2><p>
விளாடிமிர் இசட் குரோஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ஜேர்மனிக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஜேர்மனிக்கு அழைத்து வரப்பட்ட பிறகு, அவர் பெடரல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:31:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-supply-drinking-water-in-tankers-1787133781"></link>
            <id>https://news.lankasri.com/article/france-supply-drinking-water-in-tankers-1787133781</id>
            <summary type="text">Tankers are supplying drinking water in drought stricken France: வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரான்சில், டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tankers are supplying drinking water in drought stricken France: வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரான்சில், டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
</p><p>

பிரான்சில் வழக்கமாக குடிநீர் விநியோகம் தாராளமாக இருக்கும் பகுதிகளில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.
</p><p>
இந்தக் கோடையின் கடுமையான வெப்பம், அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள பிரான்ஸ் மட்டுமல்ல, ஐரோப்பாவும் தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.</p><h3>

டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகம்</h3><p>

பொதுவாக பிரான்சில் பால், அல்லது எண்ணெய்தான் டேங்கர் லொறிகள் மூலம் கொண்டு செல்லப்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef4378cd-3b10-49e0-870e-b96362e6fa64/26-6a857f5700cf4.webp' /></p><p>
ஆனால், வழக்கத்துக்கு மாறாக பிரான்ஸ் மக்கள் டேங்கர் லொறிகளில் குடிநீர் கொண்டு செல்லப்படும் காட்சிகளை கண்டுவருகிறார்கள்.
</p><p>
பிரான்சைப் பொருத்தவரை, சுமார் 40,000 பேர் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
சுமார் 550,000 பேர் தொடர்ச்சியாக குடிநீர் விநியோகம் வழங்கப்படுதலை இழக்கும் அபாயத்தில் உள்ளார்கள்.
</p><p>
பிரான்சின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் தண்ணீர்க் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
விடயம் என்னவென்றால், அப்படியிருந்தும் சில பகுதிகளில்தான் டேங்கர் லொறி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
</p><p>
அதாவது, ஒரு முனிசிபாலிட்டி, குடிநீர் தேவைகளுக்காக எந்த தண்ணீர் ஆதாரத்தை நம்பியுள்ளது, ஒரு ஆதாரம் உதவாமல் போனால் அதற்கு மாற்றாக வேறு குடிநீர் ஆதாரம் ஏதேனும் உள்ளதா என்பதைப் பொருத்தே எந்த பகுதிகளுக்கு டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை சுழலில் சாய்த்த மானவ் சுதர்: 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-beat-sri-lanka-by-165-runs-galle-test-1787131420"></link>
            <id>https://news.lankasri.com/article/india-beat-sri-lanka-by-165-runs-galle-test-1787131420</id>
            <summary type="text">காலியில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

காலியில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலியில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
</p><p>
காலியில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&nbsp;&nbsp;</p><h2>சோனல் தினுஷா&nbsp;84 ஓட்டங்கள்</h2><p>

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலியில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/521a9a63-271c-44a8-b344-3b79b3d6944f/26-6a8577530ab3f.webp' />&nbsp;</p><p></p><p>

இந்திய அணி 372 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.</p><p>

பின்னர் நிலைத்து நின்று ஆடிய தனஞ்செய டி சில்வா 59 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, திக்வெல்ல 10 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
</p><p>
வெற்றிக்காக போராடிய சோனல் தினுஷா (Sonal Dinusha) 84 ஓட்டங்கள் குவித்த நிலையில் மானவ் சுதர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். </p><p>

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் மானவ் சுதரின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 206 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
இதன்மூலம் இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மானவ் சுதர் (Manav Suthar) 6 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T09:26:23+00:00</updated>
        </entry>
    </feed>
