<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-09T08:47:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஜ்தபா கமேனியின் புதிய வீடியோவை வெளியிட்டுள்ள ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mojtaba-khamenei-video-amid-health-rumors-1786260328"></link>
            <id>https://news.lankasri.com/article/mojtaba-khamenei-video-amid-health-rumors-1786260328</id>
            <summary type="text">Mojtaba Khamenei new Video: மொஜ்தபா கமேனியின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.செய்தி நிறுவனம்&amp;nbsp;வெளியிட்ட&amp;nbsp;வீடியோ 

அமெரிக்கா-ஈரான் இடையே நடந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mojtaba Khamenei new Video: மொஜ்தபா கமேனியின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.</p><h2>செய்தி நிறுவனம்&nbsp;வெளியிட்ட&nbsp;வீடியோ </h2><p>

அமெரிக்கா-ஈரான் இடையே நடந்து வரும் போருக்கு இடையில், ஈரான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேஹ்ர் செய்தி நிறுவனம், புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் வீடியோவை வெளியிட்டுள்ளது.
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Iran’s Mehr RELEASES VIDEO of Supreme Leader Mojtaba Khamenei for ‘FIRST TIME’ <a href="https://t.co/v3Rp81VfLH">pic.twitter.com/v3Rp81VfLH</a></p>&mdash; RT (@RT_com) <a href="https://x.com/RT_com/status/2086198246121042165?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் அவரது தந்தையும், ஈரானின் முன்னாள் உச்சத் தலைவருமான அலி கமேனி உயிரிழந்தார். அதே தாக்குதலில் மொஜ்தபா கமேனியின் முகம் மற்றும் காலில் கடுமையான காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p>
இந்த வீடியோ 12 விநாடிகள் மட்டுமே உள்ளது. அதில், கருப்பு துர்பன் மற்றும் சாம்பல் நிற ஆடையுடன், வெள்ளை உடை அணிந்து காணப்படும் மொஜ்தபா கமேனி, ஒரு அறைக்குள் கம்பளத்தில் அமர்ந்து, சுற்றியிருந்தவர்களுடன் உரையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.</p><p>

அவர் ஆரோக்கியமாக இருப்பது போல தோன்றினாலும், வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc3882c4-76d1-44cb-8215-9379d7ef8c8c/26-6a782d86d31d4.webp' /></p><h2>இதேபோன்ற ஒரு வீடியோ</h2><p>மார்ச் மாதம், ஈரான் அரசின் IRIB தொலைக்காட்சி நிறுவனம் இதேபோன்ற ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தது. ஆனால், அதற்கும் திகதி, இடம் குறித்த தகவல்கள் வெளிப்படையாக வழங்கப்படவில்லை.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🚨 Published for the first time<br><br>A video of religious science teaching by Ayatollah Mojtaba Khamenei <a href="https://t.co/uFtIvZ0POy">pic.twitter.com/uFtIvZ0POy</a></p>&mdash; IRIB (Islamic Republic of Iran Broadcasting) (@iribnews_irib) <a href="https://x.com/iribnews_irib/status/2034767962612125707?ref_src=twsrc%5Etfw">March 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மொஜ்தபா கமேனி மார்ச் 8-ஆம் திகதி ஈரானின் மூன்றாவது உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. அவரது தந்தையின் இறுதி நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.</p><h2>வதந்திகளை அடக்க முயற்சி</h2><p>ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன், “மொஜ்தபாவுடன் தொடர்பு கொள்ளுவது கடினமாக உள்ளது. ஆனால் அவர் எங்களுக்குப் பெரிய வலிமை. அவர் காட்டும் கருணையும், தெளிவான சிந்தனையும் எங்களுக்கு உதவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “மொஜ்தபா 90 சதவீதம் உயிரிழந்த நிலையில் உள்ளார்” என்று கூறியிருந்தார். </p><p>இஸ்ரேலின் Channel 14 தொலைக்காட்சி, அவர் மோசமான நிலையில் உள்ளார் என்று செய்தி வெளியிட்டது.
</p><p>
இந்த வீடியோ வெளியீடு, ஈரானின் உச்சத் தலைவரின் உடல்நிலை குறித்த வதந்திகளை அடக்க முயற்சியாக பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T08:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனி நபர்களுக்கு இடையேயான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணமில்லை- மத்திய அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/no-charges-for-upi-transactions-central-gov-1786263138"></link>
            <id>https://news.lankasri.com/article/no-charges-for-upi-transactions-central-gov-1786263138</id>
            <summary type="text">தனி நபர்களுக்கு இடையேயான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பயனர்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனி நபர்களுக்கு இடையேயான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பயனர்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
</p><h2>
மத்திய அரசு விளக்கம் </h2><p>

யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
</p><p>
இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்து, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இதுவரை இருந்த கட்டணமில்லா நடைமுறை மாற்றப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.</p><p>

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பொதுமக்களுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8545b4d9-79d8-4198-b4e9-60fe5be176f0/26-6a78366a564e3.webp' /></p><p>தனி நபர்களுக்கு இடையேயான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் மத்திய அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.
</p><p>
எதிர்காலத்தில் குறிப்பிட்ட சில வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டும் குறைந்த அளவில் கட்டணம் விதிக்கப்படலாம் என்றும், இந்தக் கட்டணம் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை விடக் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், விசா, மாஸ்டர்கார்டு போன்ற அமெரிக்க கட்டணச் சேவை நிறுவனங்களுக்கு சாதகமாக யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் மத்திய அரசு மறுத்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T08:12:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதந்திர தேவி சிலை அருகே 5 மாதக் குழந்தையுடன் உயிரிழந்த பெண்: நியூயார்க்கில் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-and-5-month-baby-died-in-new-york-statue-1786259816"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-and-5-month-baby-died-in-new-york-statue-1786259816</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூயார்க் நகரில் படகு கவிழ்ந்ததில் பெண்ணொருவர் 5 மாதக் குழந்தையுடன் உயிரிழந்தார். 

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூயார்க் நகரில் படகு கவிழ்ந்ததில் பெண்ணொருவர் 5 மாதக் குழந்தையுடன் உயிரிழந்தார். </p><p>

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை அருகே, பெண்ணொருவர் ஐந்து மாதக் குழந்தையுடன் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தார்.&nbsp;</p><h2>சுதந்திர தேவி சிலை அருகே</h2><p>

நியூயார்க் நகரில் உள்ள சுதந்திர தேவி சிலை அருகே சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fb72319-0c77-486e-8398-115608270df3/26-6a78296ac65f3.webp' /></p><p>

அதில் பலர் தண்ணீரில் விழ பெண்ணொருவரும், குழந்தையும் கவலைக்கிடமான நிலையில் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.</p><p> 

அவர்கள் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பரிதாபமாக உயிரிழந்ததாக நியூயார்க் போஸ்ட் பத்திரிகைக்கு வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p>
உயிரிழந்த பெண்ணும், குழந்தையும் உறவினர்களா? மற்றும் படகில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை.
</p><p>
சனிக்கிழமையன்று இரவு 10.30 மணிக்கு சற்று முன்னதாக இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T07:14:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்ச ராசியில் வலுவடையும் குரு.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-guru-peyarchi-1786259517"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-guru-peyarchi-1786259517</id>
            <summary type="text">Jupiter Rises in Cancer on August 10- நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை ப...</summary>
            <content type="html"><![CDATA[<h6><span style="color: inherit; font-size: 0.875rem;">Jupiter Rises in Cancer on August 10- நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.</span></h6><p>இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
</p><p>
இந்நிலையில், குரு பகவான் ஆகஸ்ட் 10ஆம் திகதி கடக ராசியில் உதயமாகவுள்ளார்

கடக ராசியில் குரு பகவான் இருப்பதால், ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகியுள்ளது. </p><p>

அந்தவகையில், குரு பகவான் கடக ராசியில் உதயமாவதால் வலுவடைந்து குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு இருமடங்கு நன்மைகளை வழங்கவுள்ளார்.</p><h2>கடகம்</h2><ul><li> 

தன்னம்பிக்கை அதிகரிக்கும்.</li><li>
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும்.</li><li>
வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.</li><li>
புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.
</li><li>குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f26f3393-f195-43c5-a16b-bd9e5ac292f2/26-6a78283e8e88d.webp' /></p><p>
</p><h2>
 கன்னி

</h2><ul><li>நல்ல மாற்றங்கள் ஏற்படும்.</li><li>
வருமானம் அதிகரிக்கும்.
</li><li>தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.</li><li>
முதலீடுகளில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.</li><li>செல்வாக்கு மிக்கவர்களின் நட்பு கிடைக்கும்.</li><li>
நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
</li><li>குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f78a51a-d6a4-4ac7-a004-ee822e620ca5/26-6a78283f3dea7.webp' /></p><p>
</p><h2>
 துலாம் </h2><ul><li>

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
</li><li>பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
</li><li>வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.</li><li>
வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.</li><li>
எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/080f1f6f-7829-41e5-b82d-0e8176a6ff47/26-6a78283fe6a88.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T07:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா முழுவதும் வலைவீசித் தேடப்பட்ட ரொறன்ரோ நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/toronto-man-wanted-arrested-1786259390"></link>
            <id>https://news.lankasri.com/article/toronto-man-wanted-arrested-1786259390</id>
            <summary type="text">Toronto man wanted on woman’s death arrested: பெண்ணின் மரணம் தொடர்பில் கனடா முழுவதும் பிடியாணையில் தேடப்பட்ட ரொறன்ரோ நபர் கைது.
கடந்த ஆண்டின் பிற்பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Toronto man wanted on woman’s death arrested: பெண்ணின் மரணம் தொடர்பில் கனடா முழுவதும் பிடியாணையில் தேடப்பட்ட ரொறன்ரோ நபர் கைது.</p><p>
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் மேற்குப் பகுதி வீடு ஒன்றில் காணாமல் போன பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><h2>மரணமடைந்த நிலையில்</h2><p>
</p><p>கடந்த வருடம் டிசம்பர் 20 அன்று பகல் சுமார் 6:30 மணியளவில், காணாமல் போனவர் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டிருந்த ரொறன்ரோ காவல்துறையினர், </p><p>ஸ்ட்ராச்சன் அவென்யூ (Strachan Avenue) மற்றும் வெலிங்டன் ஸ்ட்ரீட் வெஸ்ட் (Wellington Street West) ஆகியவற்றுக்கு அருகிலுள்ள குயின் வெஸ்ட் (Queen West) பகுதியில் அமைந்திருந்த ஒரு குடியிருப்பில் மரணமடைந்த நிலையில் ஒரு பெண்ணைக் கண்டறிந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c6bad93-6617-41d8-9fcf-b2b6e2bfdd58/26-6a7827c1025b1.webp' /></p><p> </p><p>அந்தப் பெண்ணின் மரணம் பின்னர் ஒரு கொலை என்று அடையாளப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், விசாரணைத் தீவிரமடைந்ததை அடுத்து, மரணமடைந்தவரும் சந்தேக நபரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்றும், அவர்கள் நெருக்கமான உறவில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>மேலும், பாதிக்கப்பட்டவர் ரொறன்ரோவைச் சேர்ந்த 30 வயதான ஹிமான்ஷி குரானா என அடையாளம் காணப்பட்டார். 2025-ஆம் வருடத்தில் அந்நகரில் நிகழ்ந்த 40-வது கொலைச் சம்பவம் அதுவாகும்.</p><h2>முதல் நிலை கொலைக் குற்றம்</h2><p> </p><p>இதனையடுத்து, ​​குரானாவின் மரணம் தொடர்பான முதல் நிலை கொலைக் குற்றத்திற்காக, ரொறன்ரோவைச் சேர்ந்த 32 வயதான அப்துல் கஃபூரியைக் கைது செய்ய கனடா முழுவதும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த விசாரணை அதிகாரிகள், அவரது புகைப்படத்தையும் வெளியிட்டனர்.</p><p></p><p> </p><p>ஆகஸ்ட் 8 அன்று வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில், சந்தேக நபரை கனடாவிற்குத் திரும்பக் கொண்டுவருவதற்கு வசதி செய்வதற்காக, தங்களது தப்பியோடியவர்களைப் பிடிக்கும் பிரிவு மற்றும் கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவின் உறுப்பினர்கள் தேசிய மற்றும் சர்வதேச காவல் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக ரொறன்ரோ காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, ஆகஸ்ட் 7-ஆம் திகதி கஃபூரி கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T07:07:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் தொடர்பில் எச்சரித்த அமெரிக்கா... ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்திய ராயல் கடற்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/warns-putin-royal-navy-patrols-1786249639"></link>
            <id>https://news.lankasri.com/article/warns-putin-royal-navy-patrols-1786249639</id>
            <summary type="text"> US warns Putin could attack a NATO country: நேட்டோ நாடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்த புடின் உத்தரவிடக்கூடும் என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p> US warns Putin could attack a NATO country: நேட்டோ நாடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்த புடின் உத்தரவிடக்கூடும் என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் எச்சரிக்கை.
</p><p>சில வாரங்களுக்குள் நேட்டோ (NATO) நாடொன்றின் மீது தாக்குதல் நடத்துமாறு விளாடிமிர் புடின் உத்தரவிடக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறைத் தலைவர்கள் எச்சரித்துள்ள நிலையில், ராயல் கடற்படை தனது ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.</p><h2>எந்த நேரத்திலும்</h2><p>
</p><p>இந்த இலையுதிர் காலம் முதல் 2029-ஆம் ஆண்டு வரை எந்த நேரத்திலும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் ஒரு சிறிய தரைவழி ஊடுருவலை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இணையவழித் தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலமோ, ரஷ்யா நேட்டோ கூட்டமைப்பின் உறுதியைச் சோதிக்க விரும்புவதாக அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/789c8a48-1b60-4dfa-acf1-00824f857c67/26-6a7801a9adac6.webp' /></p><p> </p><p>கடந்த வாரம் போலந்தில் ரஷ்ய ஏவுகணை ஒன்று விழுந்ததைத் தொடர்ந்தும், ஆயுதங்களை ஏற்றிச் சென்ற உக்ரேனிய விமானம் அருகே ஜேர்மனியின் லீப்ஜிக் விமான நிலையத்தில் செவ்வாயன்று வெடிகுண்டுகள் கொண்ட ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்தும் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. </p><p>பிரித்தானியாவின் ஆயுதப் படைகள் தங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது; இதன்படி, ஜூலை மாதத்தில் 21 நாட்களுக்கு ராயல் கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, கடற்கரைப் பகுதிகள் மற்றும் வட அட்லாண்டிக் கடல் பகுதிகளில் ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கண்காணித்தனர்.</p><p></p><p> </p><p>போலந்தின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, நேற்று பிபிசியிடம் பேசுகையில், அமெரிக்காவின் உளவுத்தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், புடின் மிகவும் விரக்தியில் இருக்கிறார், ஏதேனும் ஒரு போலியான ஆத்திரமூட்டும் செயலில் அவர் ஈடுபடக்கூடும் என்றே நாங்கள் நினைக்கிறோம். அவரால் நேட்டோ மீது படையெடுப்பைத் தொடங்க இயலாது, ஆனால் விரும்பத்தகாத ஒன்று நிகழ வாய்ப்புள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbce24b-66bd-4151-9cb9-40d7d2024dc7/26-6a7801aa5fce7.webp' /></p><p> </p><p>ஜனநாயகப் பாதுகாப்புக்கான அறக்கட்டளை என்ற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரலுமான மார்க் மான்ட்கோமெரி, கிழக்கு ஐரோப்பாவில் கலப்புப் போரை நோக்கிய ரஷ்யாவின் நகர்வை இராணுவ வல்லுநர்கள் கண்காணித்து வருவதாகக் கூறினார். </p><p>உக்ரைனில் மோதல்கள் நின்று, ஐரோப்பாவின் கவனம் திசைதிரும்பினால், கிழக்கு ஐரோப்பா அல்லது பால்டிக் நாடுகள் மீது ரஷ்யா தரைவழி ஊடுருவலை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><h2>ராயல் கடற்படையின் நடவடிக்கை</h2><p> </p><p>இதனிடையே, பிரித்தானியாவின் கடல் எல்லைக்குள் ரஷ்யப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ராயல் கடற்படையின் நடவடிக்கைகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தெரிவித்தது.</p><p> கடந்த ஜூன் மாதம் ஆங்கிலக் கால்வாயில், ராயல் மரைன் கமாண்டோக்கள் தடைசெய்யப்பட்ட ரஷ்யாவுக்காக செயல்படும் எண்ணெய் கப்பலான ஸ்மிர்டோஸை வழிமறித்து அதில் ஏறியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>ஏற்கனவே 500-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தடைகளை விதித்துள்ள பிரித்தானியா, பதிவு செய்யப்படாத மற்றும் பழைய கப்பல்கள் தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதில் முன்னணியில் உள்ள நாடாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad139f10-80a5-43b6-b8b6-54e4200172b9/26-6a7801ab12e12.webp' /></p><p> </p><p>இதற்கிடையில், 'பேட்ரியாட்' வான் பாதுகாப்பு ஏவுகணைகளை மாதந்தோறும் வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று அறிவித்தார். </p><p>ஆனால், ஈரானுடனான போர் காரணமாக அமெரிக்காவின் கையிருப்பில் இருந்த 'பேட்ரியாட்' வான் பாதுகாப்பு ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை அவர்கள் பயன்படுத்திவிட்டதால், தற்போது ட்ரம்ப் நிர்வாகம் தடுமாறி வருவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T07:00:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் முறையாக மகுடம் சூடிய..தசுன் ஷானகாவின் காலி கல்லன்ட்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/galle-gallants-won-maiden-lpl-trophy-2026-1786256731"></link>
            <id>https://news.lankasri.com/article/galle-gallants-won-maiden-lpl-trophy-2026-1786256731</id>
            <summary type="text">LPL 2026 இறுதிப்போட்டியில் காலி கல்லன்ட்ஸ் வெற்றி பெற்று மகுடம் சூடியது. ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான லங்கா பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் காலி கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>LPL 2026 இறுதிப்போட்டியில் காலி கல்லன்ட்ஸ் வெற்றி பெற்று மகுடம் சூடியது. </p><p>ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான லங்கா பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் காலி கல்லன்ட்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றது.&nbsp;</p><h2>LPL 2026 இறுதிப்போட்டி</h2><p>கொழும்பில் நடந்த LPL 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கல்லன்ட்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76d8061d-034d-4b73-9906-6158bf5379e5/26-6a781d5f181d5.webp' />&nbsp;</p><p></p><p>முதலில் ஆடிய ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கமில் மிஷாரா 41 (32) ஓட்டங்களும், சமிந்து விக்ரமசிங்கே 24 (16) ஓட்டங்களும் எடுத்தனர். சரித் அசலங்கா, இஷான் மலிங்கா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.</p><p> பின்னர் ஆடிய காலி கல்லன்ட்ஸ் அணியில் ஹார்பர் (1), அசலங்கா (2) ஆகியோர் சொதப்ப, தாமஸ் ஃப்ரேஸர் 34 ஓட்டங்கள் எடுத்தார்.</p><h2> ஷானகா அதிரடி </h2><p>தினுர கலுபஹன அதிரடியாக 19 பந்துகளில் 31 ஓட்டங்கள் விளாச, கருணாரத்னே 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். </p><p>எனினும் சஹன் அரச்சிகே மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானகா 15.5வது ஓவரிலேயே அணியை வெற்றி பெற வைத்தார்.</p><p> ஷானகா (Shanaka) 9 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்கள் விளாசினார். ட்ரவீன், ஷாகிப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1acab41a-5d7b-4357-98de-3d1efc5c644a/26-6a781d5e6888a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T06:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் 97 ஆறுகள் பாயும் ஒரே ஒரு மாவட்டம்.. எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-district-in-india-where-97-rivers-flow-1786255734"></link>
            <id>https://news.lankasri.com/article/which-district-in-india-where-97-rivers-flow-1786255734</id>
            <summary type="text">97 Rivers Flow Through a Single District in India – இந்தியாவில் 97 ஆறுகள் பாயும் ஒரே ஒரு மாவட்டம் எது என்பது குறித்து பலருக்கும் தெரியாத ஒரு விடயமாகும...</summary>
            <content type="html"><![CDATA[<p>97 Rivers Flow Through a Single District in India – இந்தியாவில் 97 ஆறுகள் பாயும் ஒரே ஒரு மாவட்டம் எது என்பது குறித்து பலருக்கும் தெரியாத ஒரு விடயமாகும்.
</p><h2>
எந்த மாவட்டம்?
</h2><p>
இந்தியாவில் பல முக்கியமான மற்றும் பிரபலமான ஆறுகள் உள்ளன. சில பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான சிறிய ஆறுகளும் பாய்கின்றன.</p><p> 

அந்தவகையில், குஜராத் மாநிலத்தில் மொத்தம் 185 ஆறுகள் உள்ளன. இதில் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் 97 ஆறுகள் பாய்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f58116dc-6b92-47c5-a9e1-cf5e052b822d/26-6a781ab8f14cd.webp' /></p><p>குஜராத்தில் உள்ள ஆறுகள் கீழ் குஜராத், சௌராஷ்டிரா மற்றும் கட்ச் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. </p><p>

இதில் குஜராத்தின் கட்ச் பகுதியில் அதிகபட்சமாக 97 ஆறுகள் பாய்கின்றன. </p><p>

ஆனால், இவற்றில் பெரும்பாலான ஆறுகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதில்லை. பருவமழை காலத்தில் மட்டுமே இந்த ஆறுகளில் நீர் பாய்கிறது.
</p><h2>
97 ஆறுகள்</h2><h2> </h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/183e3326-ef0a-4066-bd62-bfcbce68602b/26-6a781ab81c64c.webp' /></p><p>கட்ச் பகுதியில் உள்ள ஆறுகள் அவை செல்லும் திசையின் அடிப்படையில் வடக்குப் பகுதி மற்றும் தெற்குப் பகுதி இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.</p><p> 

கட்ச்சின் வடக்குப் பகுதியில் குக்கி, காளி, சுவி, மாலன், சரண் மற்றும் காரி உள்ளிட்ட ஆறுகள் பாய்கின்றன.
</p><p>
தெற்குப் பகுதியில் நைரோ, கனகாவதி, நாகமதி, கரோட், மிதி, சாங் மற்றும் சாய் உள்ளிட்ட ஆறுகள் உள்ளன. இவை கட்ச் வளைகுடாவில் கலக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6645a444-25a5-4d00-99be-d393ee4446b7/26-6a781ab9c1cb0.webp' /></p><p>கட்ச்சில் ருக்மாவதி, சுவி, மாலன், சரண், சாகர், மிதி, குருத், வெக்தி, சாங், காரி, நாரா, பஞ்சோரா, கரோட், கொட்டி, காளி, கனகாவதி மற்றும் ருத்ரமாதா உள்ளிட்ட பல முக்கியமான ஆறுகள் உள்ளன.
</p><p>
கட்ச்சில் உள்ள சில ஆறுகள் கடலில் கலப்பதில்லை. இவை கன்னி நதிகள் என்று அழைக்கப்படுகின்றன.</p><p>

பனாஸ், சரஸ்வதி, ரூபன், லூனி, மச்சு, கோடத்ரோய், பிராமினி, காரி, ஃபால்கி, நாரா, சுவி, பூர் மற்றும் புருட் ஆகியவை குஜராத்தின் முக்கியமான கன்னி நதிகளாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T06:14:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் பட்டதாரி விசா... அதிர்ச்சியளிக்கும் குடியேற்ற எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/graduate-visas-shock-immigration-1786255907"></link>
            <id>https://news.lankasri.com/article/graduate-visas-shock-immigration-1786255907</id>
            <summary type="text">Graduate visas going to Family members:
அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்றிராதவர்களுக்கு ஏறக்குறைய 30 சதவீத பட்டதாரி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 
அவுஸ்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Graduate visas going to Family members:
அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்றிராதவர்களுக்கு ஏறக்குறைய 30 சதவீத பட்டதாரி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>
அவுஸ்திரேலியாவில் ஒருபோதும் கல்வி பயின்றிராத குடும்ப உறுப்பினர்களுக்கே ஏறக்குறைய 30 சதவீத பட்டதாரி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிரவைக்கும் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.</p><h2>குடும்ப உறுப்பினர்கள்</h2><p>
</p><p>மொத்தம் வழங்கப்பட்ட 271,191 தற்காலிகப் பட்டதாரி விசாக்களில் சுமார் 73,900 விசாக்கள், துணைவர் மற்றும் சார்ந்திருக்கும் பிள்ளைகள் உள்ளிட்ட இரண்டாம் நிலை விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830fc98f-5b43-4e4b-bbd6-eb3d0342c097/26-6a781a25edfa3.webp' /></p><p> </p><p>இந்த எண்ணிக்கை, ஜூன் 2022-ல் பதிவான 24,200 என்ற எண்ணிக்கையை விட 204 சதவிகிதம் அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த விசாக்கள் பொதுவாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன, மேலும் அவை பட்டம் பெற்ற பிறகு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு அவர்களை அனுமதிக்கின்றன. </p><p>அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைபெறவுள்ள முக்கிய உரை ஒன்றில், குடியேற்றம் தொடர்பான புதிய அணுகுமுறையை லேபர் கட்சி அறிமுகப்படுத்த உள்விவகார அமைச்சர் டோனி பர்க் தயாராகி வரும் நிலையில், இந்தத் தரவுகள் குடியேற்றக் கொள்கை நடைமுறைகள் குறித்த விவாதத்தைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>வீட்டு வசதி மலிவுத்தன்மை, வாடகைப் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு அழுத்தங்கள் குறித்த கவலைகள் அதிகரித்து வந்தபோதிலும், அல்பானிஸ் அரசாங்கம் தங்கள் நீண்டகால இடம்பெயர்வு இலக்கைக் குறைக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது. </p><p>மட்டுமின்றி, ஆண்டுக்கு 225,000 பேர் என்ற நிகர வெளிநாட்டு இடம்பெயர்வு இலக்கை லேபர் கட்சி அரசாங்கம் தக்கவைத்துக்கொள்ளும் என்றும் தெரிய வருகிறது.</p><p></p><p> </p><p>2026-ஆம் ஆண்டிற்கான ஃபெடரல் வரவு-செலவுத் திட்டம், 2027 முதல் குடியேற்றத்தின் அளவு ஆண்டுக்கு 225,000 ஆகக் குறையும் என்று கணித்திருந்தது; ஆனால், அரசின் கணிப்புகளைத் தாண்டி குடியேற்ற எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது; குறிப்பாக, கடந்த ஆண்டில் நிகர வெளிநாட்டு குடியேற்றத்தின் அளவு 301,000-ஐ எட்டியுள்ளது. </p><p>குடியேற்றத்தை மேலும் குறைப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மக்கள்தொகைப் பெருக்கத்தை வீட்டுவசதி வழங்கல், உள்கட்டமைப்பு முதலீடு மற்றும் அத்தியாவசிய சேவைகளுடன் சிறப்பாகப் பொருத்துவதில் அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>மாணவர் விசா வழங்கல்</h2><p> தற்போதைய விதிகளின்படி, பல்கலைக்கழகப் பட்டப் படிப்புகள் அல்லது தொழிற்கல்விப் பாடநெறிகளைப் பயிலும் சர்வதேச மாணவர்கள், தங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைத் தங்களுடன் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து வரலாம். </p><p>மேலும், முதன்மை விசா வைத்திருப்பவருக்கு வழங்கப்படும் அதே பணி உரிமைகள் அந்தக்குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகின்றன. </p><p>படிப்பை முடித்த பிறகு, மாணவர்கள் 'தற்காலிகப் பட்டதாரி விசா'விற்கு (temporary graduate visa) மாறலாம்; இது அவர்கள் பணி அனுபவத்தைப் பெறும் அதே வேளையில், அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க அனுமதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d64d4f8f-93b3-495f-9601-3da49d748b19/26-6a781a269eec6.webp' /></p><p> </p><p>கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர் விசா வழங்கல்கள் சாதனை அளவை எட்டியதால், இந்த வழிமுறை வேகமாக விரிவடைந்தது. </p><p>2022-23 ஆம் ஆண்டில் 5,77,000-க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டன; இதன் விளைவாக, படிப்பை முடித்த பிறகு வழங்கப்படும் விசா நடைமுறைகளுக்கு மாறிய பட்டதாரிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. </p><p>2022-இல் லேபர் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தற்காலிகப் பட்டதாரி விசா வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 174 சதவீதம் அதிகரித்துள்ளதாக உள்விவகார அமைச்சகத்தின் தரவுகள் காட்டுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T06:09:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருவளையத்தை நிரந்தரமாக நீக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/homemade-eye-masks-to-remove-dark-circles-1786251059"></link>
            <id>https://news.lankasri.com/article/homemade-eye-masks-to-remove-dark-circles-1786251059</id>
            <summary type="text">பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.

ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
</p><p>
ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
</p><p>
அந்தவகையில், முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையங்கள் நிரந்தரமாக நீங்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.</p><p></p><p> </p><h2>1. தேவையான பொருட்கள்</h2><ul><li> 

உருளைக்கிழங்கு- 1
</li><li>தேன்- 1 ஸ்பூன் </li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாறை எடுத்துக் கொள்ள வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ba6101c-3396-41ad-89d7-2161622b7e04/26-6a78080e09742.webp' /></p><p>பின் அதில் தேன் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவ வேண்டும்.</p><p> 

அதன் பின் 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
</p><h2>
2. தேவையான பொருட்கள் </h2><ul><li>

மஞ்சள்- 1 ஸ்பூன்</li><li> 
பால்- 4 ஸ்பூன்</li></ul><h2> 

எப்படி பயன்படுத்துவது?</h2><p>

முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.</p><p> </p><p></p><p>பின் அதை கண்களைச் சுற்றி தடவி 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். </p><p>

பிறகு கண்களை குளிர்ச்சியான நீரால் கழுவ வேண்டும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T04:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழு சூரிய கிரகணம்... ஐரோப்பா முழுவதும் மின் கட்டமைப்புகளில் அழுத்தம் ஏற்படலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/full-solar-eclipse-power-grids-1786246457"></link>
            <id>https://news.lankasri.com/article/full-solar-eclipse-power-grids-1786246457</id>
            <summary type="text">Solar and Lunar Eclipses Worldwide – 2026: புதன்கிழமை நிகழவிருக்கும் முழு சூரிய கிரகணம், ஐரோப்பா முழுவதும் உள்ள மின் கட்டமைப்புகளுக்கு அழுத்தத்தை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Solar and Lunar Eclipses Worldwide – 2026: புதன்கிழமை நிகழவிருக்கும் முழு சூரிய கிரகணம், ஐரோப்பா முழுவதும் உள்ள மின் கட்டமைப்புகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>புதன்கிழமை மாலையில் நிகழவுள்ள முழு சூரிய கிரகணம், ஐரோப்பா முழுவதும் ஏற்கனவே சிரமங்களை எதிர்கொண்டுள்ள மின் கட்டமைப்புகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><h2>பாதிக்கக்கூடும்</h2><p> </p><p>கிரகணத்தால் சூரிய மின்சக்தியில் ஏற்படும் சரிவு, இந்த கோடைகாலத்தின் கடுமையான வானிலையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டமைப்பைப் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a253d7-c0d8-42db-9ca1-a145fa6d0115/26-6a77f53c90a80.webp' /></p><p> கண்டம் முழுவதும் வெப்ப அலைகள் காரணமாக அணு மற்றும் நிலக்கரி மின் நிலையங்கள் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் குறைந்த நீர் மட்டம் காரணமாக நீர்மின் நிலையங்கள் செயலிழந்துள்ளன. </p><p>பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள மின்கட்டமைப்பு இயக்குநர்கள், சூரிய மின் உற்பத்தியில் இழப்புகளை எதிர்பார்த்து, மற்ற மின் திட்டங்களிலிருந்து அமைப்பைச் சமநிலைப்படுத்தத் தயாராக உள்ளனர். </p><p>ஸ்பெயின் மின் கட்டமைப்பு நிறுவனமான ரெட் எலெக்ட்ரிகா, இந்த கிரகணத்தால் ஸ்பெயினின் சூரிய மின்சக்தி 5 ஜிகாவாட் வரை குறையக்கூடும் என்றும், இது ஆகஸ்ட் மாதத்தில் ஒரு வழக்கமான புதன்கிழமையின் அதிகபட்ச தேவையில் 13 சதவீதத்திற்குச் சமம் என்றும் கூறுகிறது.</p><p></p><p> </p><p>பிரித்தானியாவில், சூரிய ஆற்றல் உற்பத்தி 1.3 ஜிகாவாட் வரை குறையக்கூடும் என்றும், இது இரண்டு அணு உலைகளின் உற்பத்தியை இழப்பதற்கு ஒப்பானது என்றும் தேசிய எரிசக்தி அமைப்பு இயக்குநகம் கூறுகிறது. </p><p>இந்த நூற்றாண்டில் ஐரோப்பாவில் தெரியும் முதல் கிரகணம், மாலை 6 மணிக்குச் சற்றுப் பிறகு பிரித்தானியாவில் தொடங்கும். 2081-ஆம் ஆண்டு வரை முழு சூரிய கிரகணம் மீண்டும் நிகழாது.</p><h2>லண்டனில் 91 சதவீதம்</h2><p> </p><p>நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சூரிய கிரகணத்தின் அளவு 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்; அதாவது, சூரியனின் ஒன்பது பங்குகளுக்கும் அதிகமான பகுதியை நிலவு மறைக்கும். </p><p>ஆகஸ்ட் 1999-ல் முற்பகலில் இங்கிலாந்து முழுவதும் இருள் சூழ்ந்ததற்குப் பிறகு, இங்கு நிகழவிருக்கும் மிக முழுமையான கிரகணம் இதுவாகவே இருக்கும்.</p><p> இம்முறை, மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் சூரியன் அதிக அளவில் மறைக்கப்படுவதைக் காண முடியும்; பிளைமவுத் (Plymouth) நகரில் 95 சதவீதம் மறைக்கப்படும். லண்டனில் 91 சதவீத கிரகணத்தைக் காண முடியும், ஆனால் ஷெட்லாண்டில் இந்த அளவு 88 சதவீதமாகக் குறைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b495a7db-a040-4b62-9839-f89456bfc2b4/26-6a77f53bdded8.webp' /></p><p> ஸ்பெயினின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள், பலேரிக் தீவுகள் மற்றும் வடகிழக்கு போர்த்துகல் ஆகிய இடங்களில் இது முழு சூரிய கிரகணமாக அமையும்; அப்போது சூரியன் இரண்டு நிமிடங்களுக்கும் மேலாக முழுமையாக மறைக்கப்படும். </p><p>முழு சூரிய கிரகணம் நெருங்கி வரும் நிலையில், இபிசாவில் உள்ள இரவு விடுதிகள் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த விருந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T03:32:12+00:00</updated>
        </entry>
    </feed>
