<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-15T12:35:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் நீண்ட தூர தாக்குதல்: குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ்: ஜெலென்ஸ்கி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-targets-russia-s-roscosmos-facilities-1786796771"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-targets-russia-s-roscosmos-facilities-1786796771</id>
            <summary type="text">உக்ரைனின் நீண்ட தூர ஏவுகணைகள் ரஷ்யாவின் முக்கிய தளங்களை குறிவைத்து அளித்துள்ளது. ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பு
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன்னுடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் நீண்ட தூர ஏவுகணைகள் ரஷ்யாவின் முக்கிய தளங்களை குறிவைத்து அளித்துள்ளது.</p><h2> ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பு</h2><p>
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட தகவலில், உக்ரைனிய படைகள் ரஷ்யாவின் ஆழமான எல்லைகள் வரை புகுந்து வெற்றிகரமாக நீண்ட தூரத் தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> அதில், உள்நாட்டு தயாரிப்பான பிளமிங்கோ(Flamingo) ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யாவின் ராணுவ மற்றும் தொழில்துறை கட்டமைப்புகளை வெற்றிகரமாக அழித்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> குறிப்பாக ரோஸ்காஸ்மோஸ் (Roscosmos) நிறுவனத்தின் கீழ் இயங்கும் விண்வெளி மின்னணுவியல் தொழிற்சாலையான புரோகிரெஸ் சென்டரை உக்ரைனிய படைகள் வெற்றிகரமாக தாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33ddfcff-bdce-4746-9900-461eaf927c01/26-6a805ae4ad0fc.webp' /></p><p> இந்த ரோஸ்காஸ்மோஸ் தளமானது உக்ரைனிய எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 700 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p> அத்துடன் உக்ரைன் எல்லையில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதும் திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் போர் திறனை சிதைப்பதே இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-15T12:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை விட்டுப் புறப்பட்ட இந்திய தம்பதி: பக்கத்து வீட்டுப் பெண் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-woman-breaks-down-for-indian-neighbours-1786796219"></link>
            <id>https://news.lankasri.com/article/us-woman-breaks-down-for-indian-neighbours-1786796219</id>
            <summary type="text">மெரிக்காவில் வாழ்ந்துவந்த ஒரு இந்திய தம்பதி அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு புறப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டுப் பெண்ணொருவர் அவர்களைக் கட்டியணைத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெரிக்காவில் வாழ்ந்துவந்த ஒரு இந்திய தம்பதி அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு புறப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டுப் பெண்ணொருவர் அவர்களைக் கட்டியணைத்து அழுது விடைகொடுக்கும் காட்சி ஒன்று நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
</p><p>


அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலர் இனவெறுப்பு சம்பவங்களை எதிர்கொள்ளும் காட்சிகளை இணையத்தில் பார்த்திருப்போம்.
</p><p>
ஆனால், தங்கள் வீட்டுக்கு அருகில் வாழ்ந்துவந்த ஒரு இந்திய தம்பதியரைப் பிரிய மனமில்லாமல் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் கண்ணீர் விடும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7c8fb0d-1f9b-47af-92e3-03fabbc85200/26-6a8058bd32711.webp' /></p><p>
</p><h3>
பக்கத்து வீட்டுப் பெண் செய்த செயல்
</h3><p>
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த அந்த இளம் தம்பதியர் இந்தியாவுக்கே திரும்ப முடிவு செய்து இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.
</p><p>
அப்போது, அவர்களுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்மணி, அவர்களுக்கு பிரியாவிடை கொடுக்க வந்துள்ளார்.</p><p>
</p><p>https://www.indiatoday.in/trending-news/story/us-woman-breaks-down-in-indian-neighbours-arms-as-they-prepare-to-leave-america-2971184-2026-08-14</p><p>அவர்கள் விடைபெற்றுக்கொண்டு செல்ல முயல, அவர் அவர்கள் தோள் மீது சாய்ந்துகொண்டு அழத் துவங்கியுள்ளார்.&nbsp;</p><p>அவர்கள் இருவரும் அவருக்கு ஆறுதல் கூறியும் அவரால் அவர்களை விட முடியவில்லை. </p><p>அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு உங்களை நான் எவ்வளவு மிஸ் பண்ணுவேன் தெரியுமா என கேட்டு மேலும் கண்ணீர் வடித்துள்ளார் அவர்.
</p><p>
கடைசியாக, அந்த தம்பதியருக்காக பிரார்த்தனை செய்து அவர்களை அனுப்ப மனமில்லாமல் அனுப்பிவைத்துள்ளார் அந்த அமெரிக்கப் பெண்மணி.</p><p>
</p><p></p><p>இதில் முக்கிய விடயம் என்னவென்றால், இந்தக் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்படுவது அந்தப் பெண்மணிக்கோ அல்லது அந்த தம்பதியருக்கோ தெரியாது.

நண்பர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் அந்த வீடியோவை எடுத்துள்ளார்.
</p><p>
ஆக, உண்மையாகவே அந்த தம்பதியரும் அந்த அமெரிக்கப் பெண்மணியும் ஒருவரையொருவர் அவ்வளவு நேசித்துள்ளார்கள் என்பது அந்த வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
</p><p>
வீடியோவைப் பார்வையிட்ட பலரும் நெகிழ்ந்துபோன நிலையில், இதேபோல் நல்ல அயலகத்தாரை பிரிந்து வந்த சிலர் தங்களுக்கும் இதேபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டதாகவும், பிரிந்த பின்பும் தங்கள் அயலகத்தாருடனான அன்பு நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T12:17:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் வேகமாக பரவும் காட்டுத்தீ: தீயில் கருகிய 1100 ஹெக்டேர் காடுகள்: 500 மக்கள் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-wildfire-1000-hectares-burned-500-evacuated-1786795211"></link>
            <id>https://news.lankasri.com/article/france-wildfire-1000-hectares-burned-500-evacuated-1786795211</id>
            <summary type="text">பிரான்சில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரான்சில் காட்டுத்தீஐர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2> பிரான்சில் காட்டுத்தீ</h2><p>ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளை வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீ பாடாய் படுத்தி வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் பரவிய காட்டுத்தீ மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதுவரை கிட்டத்தட்ட 1100 ஹெக்டேர் காடுகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன. இதன் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவசர அவசரமாக அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1717910-2885-4e27-ac2c-c04a73706c1e/26-6a8054cd10a4d.webp' /></p><h2> காட்டுத்தீ பரவலுக்கான முக்கிய காரணம்</h2><p>
இந்த ஆண்டு கோடைக்காலத்தில் பிரான்ஸில் வெப்ப அலைகளானது வழக்கத்தை விட பல மடங்கு தீவிரத்தன்மை கொண்டதாக இருந்தது.</p><p> இதன் காரணமாக காடுகள் வறண்டு மிக எளிதில் தீப்பிடிக்கக் கூடிய இடமாக மாறி போனதே இந்த கட்டுப்படுத்த முடியாத பயங்கர காட்டுத்தீ சம்பவங்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.</p><p></p><p> புதிய காட்டுத்தீ சம்பவமானது வியாழக்கிழமை லேண்ட்ஸ் மாகாணத்தில் ஆரம்பித்து பரவ தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98df6ba-4be7-43df-b6fb-f4b4437123c0/26-6a8054cdb631e.webp' /></p><h2> போராடும் தீயணைப்பு வீரர்கள்</h2><p>காட்டுத்தீ சம்பவத்தை கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.</p><p> நள்ளிரவில் லாண்டஸ் டி காஸ்கோக்னே என்ற இயற்கை பூங்காவில் அமைந்துள்ள சிறிய கிராமமான லுக்லான் அருகே தீப்பொறிகளானது எழும்பின.</p><p>ஆனால் தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். இதனால் வீடுகள் எதுவும் சேதமடையவில்லை.</p><p> இருப்பினும் அடுத்த 15 மணி நேரம் மிகவும் இக்கட்டான நேரம் என்று தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T12:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவிற்கு பயத்தை காட்டும் இளம் வங்காளதேச பந்துவீச்சாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hasan-mahmud-stunning-bowl-against-australia-day-3-1786792919"></link>
            <id>https://news.lankasri.com/article/hasan-mahmud-stunning-bowl-against-australia-day-3-1786792919</id>
            <summary type="text">டார்வினில் நடந்து வரும் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 67 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், அவுஸ்திரேலியா 4 விக்கெட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>டார்வினில் நடந்து வரும் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 67 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
</p><p>
வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், அவுஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்துள்ளது.&nbsp;</p><h2>வங்காளதேச அணி 426 ஓட்டங்கள்</h2><p> 

அவுஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டார்வினில் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f02100be-f834-42c9-9f5e-ae844664b358/26-6a804bd9ea7f8.webp' />&nbsp;</p><p></p><p>
முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 198 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, வங்காளதேச அணி 426 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. </p><p>

தன்ஸித் ஹசன் தமிம் 101 ஓட்டங்களும், நஜ்முல் ஹொசைன் 84 ஓட்டங்களும், மெஹிதி ஹசன் 65 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஜோஷ் ஹேசல்வுட் 6 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் லயன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p> 

பின்னர் 228 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. </p><h2>ஹசன் மஹ்முத்&nbsp;மிரட்டலான&nbsp;பந்துவீச்சு </h2><p> 

26 வயது இளம் வீரரான ஹசன் மஹ்முத் (Hasan Mahmud) மிரட்டலான பந்துவீச்சில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தினார். </p><p>

அவரது பந்துவீச்சில் ஜேக் வெதரால்ட் டக்அவுட் ஆக, டிராவிஸ் ஹெட் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மார்னஸ் லபுஸ்சாக்னே 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டைஜூல் இஸ்லாம் பந்துவீச்சில் வெளியேறினார்.</p><p>

நிதானமாக ஓட்டங்களை சேர்த்த ஸ்டீவன் ஸ்மித் 44 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, மெஹிதி ஹசன் மிராஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். </p><p>

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மேலும் 67 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. </p><p>

கேமரூன் கிரீன் 43 ஓட்டங்களுடனும், அலெக்ஸ் கேரி 19 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். ஹசன் 2 விக்கெட்டுகளும், டைஜுல் மற்றும் மெஹிதி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5adaad6-708d-44c8-a3e0-bc5b3a4265e9/26-6a804bda9ebb3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:19:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் நாட்டை நள்ளிரவில் உலுக்கிய நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-earthquake-hits-buliding-collapsed-1786792649"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-earthquake-hits-buliding-collapsed-1786792649</id>
            <summary type="text">ஸ்பெயின் நாட்டை நள்ளிரவில் நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.


ஸ்பெயின் நாட்டிலுள்ள கிரனாடா நகரை ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் நாட்டை நள்ளிரவில் நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
</p><p>

ஸ்பெயின் நாட்டிலுள்ள கிரனாடா நகரை ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
</p><h2>
நள்ளிரவில் உலுக்கிய நிலநடுக்கம்</h2><p>

நள்ளிரவு 1.00 மணியளவில் கிரனாடா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வீடுகளில் வாழும் உள்ளூர் மக்களும் ஹொட்டல்களில் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகளும் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25450c1f-351e-4317-b2a3-baead1f0ea60/26-6a804acb2a8d1.webp' /></p><p>பல வீடுகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ள நிலையில், சாலைகளில் பிளவு ஏற்பட்டுள்ளதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணலாம்.</p><p>
</p><p></p><p>நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவசர நிலை பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள Andalusia அரசின் துணைத்தலைவரான Antonio Sanz Cabello, மக்கள் கட்டிடங்களுக்குள் செல்லவேண்டாம் என்றும், இடிந்து விழும் நிலையிலுள்ள எதன் அருகிலும் நிற்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8a0b931-05df-45c0-a64c-ffdfbf3ceb6a/26-6a804acbd28d0.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து Gojar என்னும் கிராமத்தின் அருகே மீண்டும் ரிக்டர் அளவுகோலில் 2.6ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
</p><p>
ஸ்பெயினைப் பொருத்தவரை, பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுவது அபூர்வம் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:17:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோவியத் தியாகிகளின் சாதனைகளை மறக்கமாட்டோம்: வடகொரிய ஜனாதிபதி கிம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kim-jong-un-tribute-soviet-soldiers-in-north-korea-1786789099"></link>
            <id>https://news.lankasri.com/article/kim-jong-un-tribute-soviet-soldiers-in-north-korea-1786789099</id>
            <summary type="text">வடகொரியா, ரஷ்யா இடையிலான சிறந்த வரலாறு தீராத உந்து சக்தியாக உள்ளது என கிம் தெரிவித்தார். 

வடகொரியாவின் பியோங்யாங்கில் உள்ள விடுதலை நினைவுச் சின்னத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரியா, ரஷ்யா இடையிலான சிறந்த வரலாறு தீராத உந்து சக்தியாக உள்ளது என கிம் தெரிவித்தார்.</p><p> 

வடகொரியாவின் பியோங்யாங்கில் உள்ள விடுதலை நினைவுச் சின்னத்தை கிம் பார்வையிட்டதாக கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>நிறைவு விழா&nbsp;</h2><p>

1910 முதல் 1945-ஆம் ஆண்டு வரையிலான ஜப்பானியக் காலனித்துவ ஆட்சியில் இருந்து கொரியா விடுதலையடைந்ததன் 81-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80b4d019-f55d-42d0-96f3-5af97ebdc39f/26-6a803cf02b447.webp' />&nbsp;</p><p></p><p>

அப்போது சோவியத் இராணுவத்தின் தியாகிகளின் சாதனைகளை நாங்கள் மறக்கமாட்டோம் என்ற வாசகம் கொண்ட மலர்வளையம் மூலம் ஜனாதிபதி கிம்-ஜோங் உன் (Kim-Jong Un) அஞ்சலி செலுத்தினார்.
</p><p>
மேலும், பியோங்யாங்கில் உள்ள விடுதலை நினைவுச் சின்னத்தை அவர் பார்வையிட்டதாக வடகொரியாவின் 'கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்தது.&nbsp;</p><h2>இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு</h2><p>

கிம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், "வடகொரியா மற்றும் ரஷ்யா இடையிலான சிறந்த வரலாறு, மரபுகள் மற்றும் இரத்த உறவு ஆகியவை, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பு உறவுகளுக்கு ஒரு அடிப்படைத் தூணாகவும், தீராத உந்து சக்தியாகவும் தற்போது திகழ்கின்றன" என்று குறிப்பிட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cd45dd8-a3a8-4bc3-9c45-855a64965396/26-6a803cef74552.webp' /></p><p>

இதற்கிடையில், இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் தீவிரமாக ஒத்துழைத்து வருவதாகவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து ரஷ்ய ஜனாதிபதி புடின் (Putin) சனிக்கிழமையன்று வாழ்த்து செய்தி அனுப்பியதாக KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23909f24-9a06-4fc3-a3da-93492bafb0bc/26-6a803ceebb3c5.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T10:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் தடம்புரண்ட ரயில்: இரண்டு நாட்களில் இரண்டாவது சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/passenger-train-derailed-service-in-essex-1786788474"></link>
            <id>https://news.lankasri.com/article/passenger-train-derailed-service-in-essex-1786788474</id>
            <summary type="text">இங்கிலாந்தின் எசெக்ஸில் மீண்டும் ஒரு ரயில் தடம்புரண்டுள்ளது.


இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸிலுள்ள லூயிஸ் என்னுமிடத்தில் நேற்று முன் தினம் ஒரு பயணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் எசெக்ஸில் மீண்டும் ஒரு ரயில் தடம்புரண்டுள்ளது.
</p><p>

இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸிலுள்ள லூயிஸ் என்னுமிடத்தில் நேற்று முன் தினம் ஒரு பயணிகள் ரயில் தடம்புரண்டது.
</p><p>
இந்நிலையில், நேற்று மீண்டும் ஒரு பயணிகள் ரயில் தடம்புரண்டுள்ளது.
</p><h3>
இங்கிலாந்தில் தடம்புரண்ட இரண்டாவது ரயில்</h3><p>

Rayleigh என்னுமிடத்திலிருந்து Wickford ரயில் நிலையம் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் ரயில் ஒன்று, நேற்று மதியம் உள்ளூர் நேரப்படி 2:12 மணியளவில் Wickford அருகே தடம்புரண்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79f6203c-9b43-4bf6-8d81-bceb21a063ff/26-6a803a7bee34f.webp' /></p><p></p><p>ரயிலில் 45 பேர் பயணித்த நிலையில், யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மார்க் ஃப்ராங்கோயிஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நிலையில், நேற்றைய திகதியிட்ட பயண்ச்சீட்டுகளை இன்றும் பயன்படுத்திக்கொள்ளலாம் என ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இப்படி இரண்டு நாட்களில் இரண்டு ரயில்கள் தடம்புரண்டுள்ள விடயம் சற்றே அச்சத்தை உருவாக்கியுள்ள நிலையில், பிரித்தானிய போக்குவரத்துத் துறை, உலகின் பாதுகாப்பான ரயில் சேவைகளில் பிரித்தானிய ரயில் சேவையும் ஒன்று என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="http://british-family-defrauded-motorway-tolls-in-france-1786785544" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T10:08:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தை உரிமை கொண்டாடிய வாடகை தாய்: பெற்றோர் தொடுத்த வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/america-california-surrogacy-legal-battle-1786788174"></link>
            <id>https://news.lankasri.com/article/america-california-surrogacy-legal-battle-1786788174</id>
            <summary type="text">அமெரிக்காவில் பிறந்த குழந்தையை வாடகை தாய் உரிமை கொண்டாடிய நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.வாடகை தாய் மூலம் குழந்தைஅமெரிக்காவின் கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் பிறந்த குழந்தையை வாடகை தாய் உரிமை கொண்டாடிய நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.</p><h2>வாடகை தாய் மூலம் குழந்தை</h2><p>அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஓமர் அகமது மற்றும் நெளஷீன் கில்கர் ஆகியோர் செவிலியரான மெக்கென்னா வெஸ்ட் என்ற வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.</p><p>மேலும் இது தொடர்பாக அவர்களுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் கருவில் குழந்தைக்கு ஏதேனும் உடல் நல குறைபாடுகள் இருந்தால் கருவை கலைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது.</p><p>இதையடுத்து சிசுவின் 20 வது வாரத்தில் எடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் குழந்தைக்கு இதய நோய் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba4bb367-1d86-4c3a-b296-20e5efa26b2c/26-6a8039500d73a.webp' /></p><p> மேலும் குழந்தை பிறந்த உடனே சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டியது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் வாடகை தாயிடம் கருவை கலைக்குமாறு கூறியதாகவும், ஆனால் குழந்தையை நானே வைத்துக் கொள்கிறேன் என்று வாடகை தாய் கூறியதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p> இறுதியில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த அந்த வாடகை தாய்&nbsp; மெக்கென்னா வெஸ்ட், அந்த குழந்தையுடன் டெக்சாஸ் மாகாணத்திற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.</p><h2> நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெற்றோர்</h2><p>
இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் நீதிமன்றத்தில் வாடகை தாய் மீது வழக்கு தொடர்ந்தனர்.</p><p>மேலும் குழந்தையை தாங்கள் கலைக்க சொல்லவில்லை என்றும், வாடகை தாய் எங்களை ஏமாற்றி விட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p> வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இறுதியில் குழந்தையை அதன் உண்மையான தாயிடம் ஒப்படைக்குமாறும், குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் வழங்குமாறு உத்தரவிட்டு தீர்ப்பு அளித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T10:03:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகத் தடை - சுதந்திரத்தை மீறுவதாக பிரான்ஸ் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-court-blocks-social-media-ban-for-teens-1786787170"></link>
            <id>https://news.lankasri.com/article/france-court-blocks-social-media-ban-for-teens-1786787170</id>
            <summary type="text">France court blocks social media ban for teens: சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் உச்ச நீதிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>France court blocks social media ban for teens: சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பிரான்ஸ் உச்ச நீதிமன்றம் (Top Court) 15 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்துள்ளது.
</p><p>
இந்தச் சட்டம், குழந்தைகள் Facebook, TikTok, Snapchat, YouTube போன்ற தளங்களில் கணக்குகளைத் திறக்க முடியாது எனவும், ஏற்கனவே திறந்துள்ள கணக்குகள் நான்கு மாதங்களில் மூடப்பட வேண்டும் எனவும் கூறியது.
</p><p>
மேலும், வயது சரிபார்ப்பை கட்டாயமாக்கும் விதிமுறையும் இதில் இருந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f583b10-9b88-4778-9677-8b71a58a2806/26-6a8037802cf4d.webp' /></p><h2>உச்சநீதிமன்ற தீர்ப்பு</h2><p>ஆனால், உச்ச நீதிமன்றம் இந்தத் தடை கருத்துச் சுதந்திரத்தையும் தனியுரிமையையும் மீறுவதாகக் கூறி சட்டத்தை செல்லாது என அறிவித்துள்ளது.
</p><p>
“சட்டம் தேவையான சட்டப் பாதுகாப்புகளை வழங்கவில்லை. இது சுதந்திரத்தை அளவுக்கு மீறி கட்டுப்படுத்துகிறது” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
</p><p></p><p>இந்தச் சட்டம் ஜூலை மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவுஸ்திரேலியாவில் இதேபோன்ற தடை அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஐரோப்பாவில் முதன்முதலாக இப்படியான சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பால் அது தடைபட்டுள்ளது.</p><h2>
இம்மானுவேல் மேக்ரான்&nbsp;உத்தரவு</h2><p>ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அவர், புதிய சட்ட வரைவு உருவாக்கி 2027 வசந்த காலத்திற்குள் அமுல்படுத்த வேண்டும் என்று பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவிடம் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
சமூக ஊடக நிறுவனங்கள், முழுமையான தடையை (blanket ban) எதிர்க்கின்றன. தங்களிடம் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளன. ஆனால், அரசு விதிக்கும் சட்டங்களுக்கு இணங்குவோம் என்றும் கூறியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T09:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்றிற்கு 3,000 யூரோக்கள் அபராதம்: சுவாரஸ்யப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-family-defrauded-motorway-tolls-in-france-1786785544"></link>
            <id>https://news.lankasri.com/article/british-family-defrauded-motorway-tolls-in-france-1786785544</id>
            <summary type="text">தொடர்ந்து சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றிய ஒரு பிரித்தானியக் குடும்பத்துக்கு பிரான்ஸ் அதிகாரிகள் 3,000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளார்கள்.


ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ந்து சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றிய ஒரு பிரித்தானியக் குடும்பத்துக்கு பிரான்ஸ் அதிகாரிகள் 3,000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளார்கள்.
</p><p>

பிரித்தானியக் குடும்பம் ஒன்று, பிரான்சில் தொடர்ச்சியாக சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றிவந்துள்ளது.
</p><h3>
3,000 யூரோக்கள் அபராதம்
</h3><p>
இந்நிலையில், Saint-Maurice-Colombier என்னுமிடத்தில் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது அந்தக் குடும்பம்.
</p><p>
அப்போது, ஆறு மாதங்களாக அந்தக் குடும்பத்தினர் சுங்க கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றிவந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
அதாவது, மூன்று கார்களில் அந்தக் குடும்பத்தினர் பயணிப்பது வழக்கமாம். எங்காவது சுங்கச் சாவடி இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், காரை விட்டு இறங்கி, குறுக்கே நிற்கும் தடைக் கம்பத்தை கையால் தூக்கிப் பிடிக்க, கார்கள் நைசாக அங்கிருந்து சென்றுவிடுமாம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ec77c66-1510-4542-be3f-389063b6cb95/26-6a802f09a0ff9.webp' /></p><p></p><p>இந்நிலையில், அவர்கள் வசமாக பொலிசாரிடம் சிக்கியதைத் தொடர்ந்து, செலுத்தத் தவறிய கட்டணம், அதற்கான மதிப்புக் கூட்டு வரி, விதி மீறலுக்கான அபராதம் என மொத்தம் 3,000 யூரோக்கள் செலுத்த அந்தக் குடும்பத்தினருக்கு பிரான்ஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[19 ஓவர்களில் 98 ஓட்டங்களே எடுத்த மொயீன் அலியின் அணி: 7.4 ஓவரில் செயின்ட் லூசியா வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saint-lucia-kings-beat-antigua-3-wkts-in-dls-1786785261"></link>
            <id>https://news.lankasri.com/article/saint-lucia-kings-beat-antigua-3-wkts-in-dls-1786785261</id>
            <summary type="text">ஆன்டிகுவா பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் வெற்றி பெற்றது. 

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் செயின்ட் லூசியா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆன்டிகுவா பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் வெற்றி பெற்றது. </p><p>

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆன்டிகுவா பார்புடா ஃபால்கன்ஸை வீழ்த்தியது.&nbsp; </p><h2>மேத்யூ ஃபோர்டே</h2><p>

செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் ஆன்டிகுவா பார்புடா ஃபால்கன்ஸ் அணிகளுக்கு இடையிலான The Hundred போட்டி கிராஸ் இஸ்லேட்டில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15878aed-a5e6-432f-8f6b-0514801cac85/26-6a802f10846af.webp' />
</p><p>
</p><p>
முதலில் ஆடிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

மேத்யூ ஃபோர்டே, பிஷோப் மற்றும் சேஸின் மிரட்டலான பந்துவீச்சில் ஆன்டிகுவா அணி ஓட்டங்கள் எடுக்க தடுமாறியது. </p><p>

மழையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட, ஆன்டிகுவா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ஓட்டங்களே எடுத்தது.</p><p> 
 
அதிகபட்சமாக ரக்கீம் கார்ன்வால் 26 ஓட்டங்களும், அமீர் ஜன்கூ 23 ஓட்டங்களும் எடுத்தனர். மேத்யூ ஃபோர்டே (Matthew Forde) 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><p>

பின்னர் ஆடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு மழையால் 8 ஓவர்களில் 52 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. </p><p>

செயின்ட் லூசியா அணி 7.4 ஓவர்களில் 54 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகள் மற்றும் 11 ஓட்டங்கள் எடுத்த மேத்யூ ஃபோர்டே ஆட்டநாயகன் விருதுபெற்றார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் விமான விபத்து: இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/light-aircraft-crashed-in-wales-gwynedd-2-dead-1786785194"></link>
            <id>https://news.lankasri.com/article/light-aircraft-crashed-in-wales-gwynedd-2-dead-1786785194</id>
            <summary type="text">வடக்கு வேல்ஸ் பகுதியில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சிறிய ரக விமான விபத்துஇங்கிலாந்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு வேல்ஸ் பகுதியில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2> சிறிய ரக விமான விபத்து</h2><p>இங்கிலாந்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில் இருந்து வடக்கு வேல்ஸின் கார்னர்ஃபோன் விமான நிலையத்தை நோக்கி சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.</p><p> ஆனால் திட்டமிட்டபடி விமானம் கார்னர்ஃபோன் விமான நிலையத்தை வந்து சேராததை அடுத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52dcf6c9-5206-43a1-9e7a-a53d65e71302/26-6a802dabe2811.webp' /></p><p>இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் தரை மற்றும் வான்வழி மீட்பு படையினர் களமிறக்கப்பட்டனர்.</p><p></p><p> தீவிர தேடுதல் பணிகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை பிற்பகலில் Gwynedd பகுதியில் உள்ள Porthmadog அருகே சிறிய ரக விமானத்தின் சிதைந்த பாகங்கள் கிடப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.</p><h2>இருவர் உயிரிழப்பு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6201c55-b631-45cb-bb61-fa27ac074c63/26-6a802dac957bc.webp' /></p><p>இந்த விமான விபத்தை தொடர்ந்து, அதில் பயணம் செய்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p> இதுகுறித்து விமான விபத்து புலனாய்வுப் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதுடன், விபத்துக்கான காரணத்தை கண்டறிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-15T09:13:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியிலும் பரவத் துவங்கியது காட்டுத்தீ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-wildfire-evacuation-in-eifel-forest-1786781491"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-wildfire-evacuation-in-eifel-forest-1786781491</id>
            <summary type="text">ஜேர்மன் வனப்பகுதி ஒன்றில் காட்டுத்தீ பரவத் துவங்கியுள்ள நிலையில், சுமார் 1,800 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.


உலக நாடுகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் வனப்பகுதி ஒன்றில் காட்டுத்தீ பரவத் துவங்கியுள்ள நிலையில், சுமார் 1,800 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
</p><p>

உலக நாடுகள் சிலவற்றில் வெப்பம் காரணமாக காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், ஜேர்மன் வனப்பகுதி ஒன்றிலும் காட்டுத்தீ பரவத் துவங்கியுள்ளது.
</p><h3>
ஜேர்மனியிலும் பரவத் துவங்கிய காட்டுத்தீ
</h3><p>
ஜேர்மனி, பெல்ஜியம் நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது Eifel வனப்பகுதி.

ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்தில் அமைந்துள்ள அந்த வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், அந்தப் பகுதியில் அமைந்துள்ள Gey என்னும் கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுவருகிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98ebe9e-184f-42a7-886f-ec01c2b58038/26-6a801f34daf88.webp' /></p><p>தீயை அணைக்கும் மற்றும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளின்போது, மீட்புக்குழுவினரில் நான்கு பேருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும், பொதுமக்களில் முதியவர் ஒருவருக்கு இதயப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டதாகவும் உள்ளூர் அரசியல்வாதியான Christian Nolten என்பவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இதற்கிடையில், இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட, வெடிக்காத குண்டுகள் பல அப்பகுதியில் பரவலாக காணப்படுவது தீயணைப்பு வீரர்களுக்கு கூடுதல் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.
</p><p>
இந்நிலையில், தீ எப்படி உருவானது, பொதுமக்கள் யாராவது தங்களுக்கே தெரியாமல் தீ பரவ காரணமாக இருந்துவிட்டார்களா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T08:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரிலையன்ஸ்-ரோல்ஸ் ராய்ஸ் கூட்டணி: இந்தியாவில் போர் விமான எஞ்சின் தயாரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/reliance-rolls-royce-jet-engine-deal-india-1786780780"></link>
            <id>https://news.lankasri.com/article/reliance-rolls-royce-jet-engine-deal-india-1786780780</id>
            <summary type="text">Reliance Rolls-Royce jet engine deal India: ரிலையன்ஸ்-ரோல்ஸ் ராய்ஸ் கூட்டணியில் இந்தியாவில் போர் விமான எஞ்சின் தயாரிக்கப்படவுள்ளது.

இந்தியாவின் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Reliance Rolls-Royce jet engine deal India: ரிலையன்ஸ்-ரோல்ஸ் ராய்ஸ் கூட்டணியில் இந்தியாவில் போர் விமான எஞ்சின் தயாரிக்கப்படவுள்ளது.</p><p>

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பிரித்தானியாவின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் இணைந்து போர் விமானங்களுக்கு தேவையான எஞ்சின்களை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
</p><p>
இந்த கூட்டணி, இந்தியாவின் "Make in India" திட்டத்திற்கு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dadcfb36-ab9d-497e-9bcb-fda5302bd49a/26-6a801c6e35e17.webp' /></p><h2>வெளிநாட்டு சார்பு</h2><p>தற்போது இந்தியா தனது போர் விமான எஞ்சின்களை பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதனால் பாதுகாப்பு துறையில் வெளிநாட்டு சார்பு அதிகமாக உள்ளது.
</p><p>
ரிலையன்ஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் இணைந்து, இந்தியாவின் எதிர்கால போர் விமானங்களுக்கு தேவையான உயர் திறன் கொண்ட எஞ்சின்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.</p><p> இந்த திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டால், இந்தியா தனது பாதுகாப்பு தேவைகளில் தன்னிறைவு அடையும்.
</p><p></p><h2>புதிய வேலை வாய்ப்புகள்</h2><p>மேலும், இந்த கூட்டணி இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி துறையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். உலகளாவிய பாதுகாப்பு சந்தையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும்.
</p><p>
இந்திய அரசு, பாதுகாப்பு உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்கினை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது. ரிலையன்ஸ் - ரோல்ஸ் ராய்ஸ் கூட்டணி, அந்த முயற்சிக்கு முக்கிய ஆதரவாக இருக்கும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T07:57:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு: கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/giant-python-swallowed-woman-rubber-worker-1786780453"></link>
            <id>https://news.lankasri.com/article/giant-python-swallowed-woman-rubber-worker-1786780453</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் மலைப்பாம்பு ஒன்று பெண் ஒருவரை முழுமையாக விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் தொழிலாளியை விழுங்கிய மலைப்பாம்புஇந்தோனேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் மலைப்பாம்பு ஒன்று பெண் ஒருவரை முழுமையாக விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> பெண் தொழிலாளியை விழுங்கிய மலைப்பாம்பு</h2><p>இந்தோனேசியாவின் ஜாம்பி மாகாணத்தில் 52 வயது ஜஹ்ரா(Jahrah) என்ற பெண் மலை ரப்பர் தோட்டத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல தன்னுடைய வேலைக்கு சென்றுள்ளார்.</p><p> அப்போது கிட்டத்தட்ட 16 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்றினால் அவர் முழுமையாக விழுங்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4feba99-f6af-4cbe-ab49-a23685847a71/26-6a801b265459a.webp' /></p><p></p><h2>கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி</h2><p>ஜஹ்ரா வேலை நேரம் முடிந்தும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் மத்தியில் கவலை அதிகரித்தது.</p><p> இதையடுத்து ரப்பர் தோட்டத்திற்கு சென்று பார்த்த அவரது கணவர், ஜஹ்ராவின் வேலைக் கருவிகளும், உடமைகளும் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.</p><p> உடனடியாக கிராம மக்களுடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் அவரது கணவர் இறங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9347ffb2-3ec9-40f5-b10e-c01818c7a0d4/26-6a801b270e105.webp' /></p><p> திங்கட்கிழமை நகர முடியாமல் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பதை மலை கிராம மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.</p><p>இதனால் சந்தேகமடைந்த மக்கள், அந்த பாம்பை கொன்றுள்ளனர். அத்துடன் அந்த பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்த போது உள்ளே ஜஹ்ரா உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p> பாம்பின் வயிற்றில் இருந்த ஜஹ்ரா உடல் பெருமளவு சேதமடையாமல் அப்படியே இருந்ததாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த சம்பவம் அப்பகுதியை சுற்றியுள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-15T07:57:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனிப்பாறைச் சரிவில் உயிரிழந்த மாணவர்கள்: வழிகாட்டி மீது கொலைக் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/avalanche-tragedy-in-meiringen-bern-1786779191"></link>
            <id>https://news.lankasri.com/article/avalanche-tragedy-in-meiringen-bern-1786779191</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைச் சரிவில் சிக்கி பதின்மவயதினர் இருவர் உயிரிழந்த விடயம் தொடர்பில், சுற்றுலா வழிகாட்டி மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைச் சரிவில் சிக்கி பதின்மவயதினர் இருவர் உயிரிழந்த விடயம் தொடர்பில், சுற்றுலா வழிகாட்டி மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>

சுவிட்சர்லாந்திலுள்ள உறைவிடப் பள்ளி ஒன்றில் படித்துவந்த மாணவர்கள் சிலரை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் பனிச்சறுக்கு விளையாட அழைத்துச் சென்றுள்ளார்.
</p><h3>
பனிப்பாறைச் சரிவில் உயிரிழந்த மாணவர்கள்</h3><p>

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி, அவர்கள் Gstelliwang என்னுமிடத்துக்கு பனிச்சறுக்கு விளையாடச் சென்றுள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், அப்போது அங்கு பனிப்பாறைச் சரிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்திருக்கிறது.</p><p>

ஆனால், எச்சரிக்கையையும் மீறி அந்த வழிகாட்டி பிள்ளைகளை பனிச்சறுக்கு விளையாட அழைத்துச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3826cbca-f7d2-4de8-9adf-7a2af76fd50a/26-6a80163876284.webp' /></p><p></p><p>

இந்நிலையில், அவர்கள் பனிச்சறுக்கு விளையாடும்போது பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டுள்ளது.

பனிப்பாறைச் சரிவில் சிக்கிய அமெரிக்க மாணவி ஒருவரும், பிரித்தானிய மாணவர் ஒருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
</p><h3>
வழிகாட்டி மீது கொலைக் குற்றச்சாட்டு
</h3><p>
இந்த வழக்கில், அந்த சுற்றுலா வழிகாட்டி அலட்சியம் காரணமாக உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அது தொடர்பில் கொலைக்குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>

அவருக்கு 13,500 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், அவர் உடனடியாக அந்த அபராதத்தைச் செலுத்தவேண்டியதில்லை.
</p><p>
அவர் இரண்டு ஆண்டுகள் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இருக்கும் நிலையில், மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டால் மட்டுமே அந்த அபராதத்தை செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T07:33:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவம்: பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/britain-wildfire-soldiers-help-firefighters-1786774414"></link>
            <id>https://news.lankasri.com/article/britain-wildfire-soldiers-help-firefighters-1786774414</id>
            <summary type="text">பிரித்தானியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறங்க இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறங்க இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
</p><p>


இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில் பல இடங்களில் காட்டுத்தீ கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே.</p><p>

இந்நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறங்க இருப்பதாக பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b66bfae5-6cd8-45f6-aeef-602dd2c752ac/26-6a80038f9d59a.webp' /></p><p>
</p><h2>காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவம்
</h2><p>
பிரித்தானியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், வேல்ஸ் நாட்டில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அவசர உதவிக்குழுவினருக்கு உதவியாக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுவருவதாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.</p><p>

வேல்ஸ் நாட்டிலுள்ள Blaenavon மற்றும் Porth போன்ற இடங்களில் பற்றியெரிந்துவரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் போராடிவரும் நிலையில், தங்களுக்கு உதவ ராணுவத்தை அனுப்பவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு உதவியாக சுமார் 100 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், மக்கள் பார்பிக்யூ முறையில் சமைத்தல் போன்ற காரணங்களுக்காக திறந்தவெளிகளில் தீப்பற்றவைக்கவேண்டாம் என்றும் ஆன்டி பர்னாம் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
திறந்தவெளிகளில் தீப்பற்றவைத்தல் பிறர் உயிருக்கு ஆபத்தாக அமையலாம் என்று கூறியுள்ள அவர், ஆகவே, பொதுமக்கள் தயவு செய்து அதைச் செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T07:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இணையத்தில் வேகமாக பரவும் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesia-earthquake-building-collapse-video-1786778717"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesia-earthquake-building-collapse-video-1786778717</id>
            <summary type="text">இந்தோனேசியாவை 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.இந்தோனேசியா நிலநடுக்கம்இந்தோனேசியாவில் சனிக்கிழமை காலை 5.58 மணிக்கு 7.7 ரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவை 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.</p><h2>இந்தோனேசியா நிலநடுக்கம்</h2><p>இந்தோனேசியாவில் சனிக்கிழமை காலை 5.58 மணிக்கு 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>நிலநடுக்கத்தின் மையமானது கிழக்கு நுசா தெங்காரா (East Nusa Tenggara) மாகாணத்தின் எண்டே (Ende) நகரின் வடமேற்கே 42 மைல் தொலைவில் அமைந்திருந்தது.</p><p> நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசிய கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BUILDINGS SWAY VIOLENTLY and CRUMBLE as 7.7 MONSTER QUAKE ROCKS INDONESIA <a href="https://t.co/qMl0QaNyzT">https://t.co/qMl0QaNyzT</a> <a href="https://t.co/fvePye9AJo">pic.twitter.com/fvePye9AJo</a></p>&mdash; RT (@RT_com) <a href="https://x.com/RT_com/status/2088408804266307967?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2> அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி</h2><p>இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிடம் ஒன்று இடிந்து விழும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.</p><p>அதில், கட்டிடத்தின் கான்கிரீட் தளங்கள் இடிந்து விழுவதும், மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடுவதும் இடம்பெற்றுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T07:25:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட்டு உள்ளடக்க குற்றச்சாட்டு: உயிரிழந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cambridge-professor-jason-ardey-found-dead-1786776148"></link>
            <id>https://news.lankasri.com/article/cambridge-professor-jason-ardey-found-dead-1786776148</id>
            <summary type="text">திருட்டு உள்ளடக்க குற்றச்சாட்டுக்கு பிறகு கேம்பிரிட்ஜ் முன்னாள் பேராசிரியர் ஜேசன் ஆர்டே மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட்டு உள்ளடக்க குற்றச்சாட்டுக்கு பிறகு கேம்பிரிட்ஜ் முன்னாள் பேராசிரியர் ஜேசன் ஆர்டே மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h3> உயிரிழந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்</h3><p>

41 வயது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்வி சமூகவியல் முன்னாள் பேராசிரியர் ஜேசன் ஆர்டே(Jason Arday) லண்டன்&nbsp;பேட்டர்சீ(Battersea)&nbsp;பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அசைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.</p><p>இதையடுத்து அவரது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது, மேலும் இதில் சந்தேகத்திற்குரிய விவகாரங்கள் எதுவும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d36a4df-f515-455c-839b-56d03168ee01/26-6a800a56671e8.webp' /></p><p></p><h2> ஜேசன் ஆர்டே மீது எழுந்த விமர்சனங்கள்</h2><p>ஜேசன் ஆர்டே கடந்த 2023ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மிக இளைய கறுப்பின பேராசிரியராக பதவியேற்று வரலாற்று சாதனை படைத்து இருந்தார். &nbsp;
இருப்பினும் கடந்த மாதம் அவர் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தில் சமர்பித்த முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரை மீது திருட்டு உள்ளடக்க குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.</p><p> ஜேசன் ஆர்டே கட்டுரை கடந்த 2009ம் ஆண்டு வெளியான மாணவர் ஒருவரின் கட்டுரையின் பல உள்ளடக்கங்களை கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.</p><p>ஜேசன் ஆர்டே அந்த மாணவரின் பெயரை அவரது கட்டுரையில் குறிப்பிட்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ba719a0-b828-4fd7-98c6-67b0993f6ec8/26-6a800a571da84.webp' /></p><p>அத்துடன் ஆரம்ப காலத்தில் அவருக்கு இருந்த ஆட்டிசம் குறைபாடு, அவரது தடகள நிதி திரட்டும் முயற்சி ஆகியவையும் விமர்சனங்களுக்கு உள்ளானது.</p><h2> ராஜினாமா செய்த ஜேசன் ஆர்டே</h2><p>
இந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஜேசன் ஆர்டே தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.</p><p> மேலும் தன்னுடைய சக ஊழியர்களுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் ஊகங்கள் ஆகியவை கல்விசார் விவாதங்களை தாண்டி தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் பாதித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p>தன்னுடைய பதவி விலகல் முடிவால் யாரும் நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வதாக கருதக்கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T06:42:57+00:00</updated>
        </entry>
    </feed>
