<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-06T16:52:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்தரப்பு இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வேயை அலறவிட்ட ஹெர்மன், பிரேவிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-africa-scored-205-vs-zim-tri-series-final-1788704615"></link>
            <id>https://news.lankasri.com/article/south-africa-scored-205-vs-zim-tri-series-final-1788704615</id>
            <summary type="text">ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா 205 ஓட்டங்கள் குவித்தது.

நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் முத்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா 205 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 205 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><h2>ஜோர்டன் ஹெர்மன்&nbsp;அரைசதம் </h2><p>
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி, நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/731d1617-fbd6-42a3-8f49-73427faed3e9/26-6a9d78fae18e7.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் கோன்னோர் எஸ்டர்ஹுய்சென் (Connor Esterhuizen) 23 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
பின்னர் களமிறங்கிய டெவல்ட் பிரேவிஸ் (Dewald Brevis) தொடக்க வீரர் ஜோர்டன் ஹெர்மனுடன் (Jordan Hermann) கைகோர்த்து ஜிம்பாப்வே பந்துவீச்சை நொறுக்கினார்.&nbsp;</p><h2>பிரேவிஸ்,&nbsp;ஜென்சன் </h2><p>
அரைசதம் விளாசிய ஜோர்டன் ஹெர்மன் 29 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரேவிஸ் 32 (23) ஓட்டங்களில் இருந்தபோது பிராட் எவன்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். </p><p>

அதனைத் தொடர்ந்து ஸோர்சி 17 ஓட்டங்களிலும், ரூபின் ஹெர்மன் 16 பந்துகளில் 27 ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
டுயன் ஜென்சன் ஆட்டமிழக்காமல் 14 பந்துகளில் 23 ஓட்டங்கள் விளாச, தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d41bece-11da-4bb3-9d27-7180a6d8dc47/26-6a9d78fbbd6b5.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரையில் விழுந்து வெடித்த இராணுவ விமானம்: கிரீஸ் வான்வழி விமான கண்காட்சியில் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/f-4-phantom-crash-at-athens-airshow-2-pilots-kille-1788703892"></link>
            <id>https://news.lankasri.com/article/f-4-phantom-crash-at-athens-airshow-2-pilots-kille-1788703892</id>
            <summary type="text">F-4 Phantom Crash at Athens Airshow 2 Pilots Killed: கிரீஸ் நாட்டில் நடைபெற்ற வான்வழி கண்காட்சியில் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>F-4 Phantom Crash at Athens Airshow 2 Pilots Killed: கிரீஸ் நாட்டில் நடைபெற்ற வான்வழி கண்காட்சியில் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2> வான்வழி விமான கண்காட்சியில் விபத்து</h2><p>&nbsp;கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதன்ஸ் அருகே “ஏதன்ஸ் பிளையிங் வீக்”(Athens Flying Week) என்ற வருடாந்திர வான்வழி கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.</p><p> இந்த வான்வழி விமான கண்காட்சியில் எதிர்பாராத விதமாக எஃப்-4 ஃபான்டம் (F-4 Phantom) என்ற ராணுவ விமானம் கோர விபத்தில் சிக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceb7f9d9-f225-4e32-ab6c-9a26be435fe6/26-6a9d74963246b.webp' /></p><p> இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கிரீஸ் நாட்டின் செய்தி நிறுவனமான ANA தகவல் படி, இந்த இராணுவ விமான விபத்தானது பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.</p><p></p><h2> &nbsp;விபத்து தொடர்பான முக்கிய விவரங்கள்</h2><p>
சாகசத்திற்காக புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே தன்னுடைய உயரத்தை இழந்து கீழே விழுந்தது.</p><p>விமானிகள் இருவரும் விபத்திற்கு முன்னதாக துரதிர்ஷ்டவசமாக பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து வெளியேற வில்லை என்பதை உள்ளூர் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨 BREAKING — FULL VIDEO: Hellenic Air Force F-4E Phantom II crashes during a solo flying display at Tanagra, Greece. Footage captures the aircraft’s final maneuver before it goes down. There was no immediately visible sign of parachutes, while officials have yet to confirm the… <a href="https://t.co/1NMJQAGvJS">pic.twitter.com/1NMJQAGvJS</a></p>&mdash; OSINT AFG (@AfghanOSINT0) <a href="https://x.com/AfghanOSINT0/status/2096259739222974644?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> விமானம் தரையில் விழுந்ததும் ஒரு பயங்கர வெடிப்பானது ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டனர்.</p><p> இந்த விமான விபத்தை தொடர்ந்து எஞ்சி இருந்த வான்வழி விமான கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.</p><p> பாதுகாப்புத்துறை அமைச்சர் நிகோஸ் டென்டியாஸ், கண்காட்சிக்கான தனது திட்டத்தை ரத்து செய்தார். அத்துடன் விபத்து நடைபெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை ஆய்வு செய்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பதின்பருவ மாணவியிடம் தகாத முறையில் பேசிய ஆசிரியர்: வாழ்நாள் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/essex-teacher-duhig-banned-life-time-teaching-1788701428"></link>
            <id>https://news.lankasri.com/article/essex-teacher-duhig-banned-life-time-teaching-1788701428</id>
            <summary type="text">Essex teacher duhig banned life time teaching: பிரித்தானியாவில் மாணவியிடம் தகாத முறையில் பேசியஆசிரியருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Essex teacher duhig banned life time teaching: பிரித்தானியாவில் மாணவியிடம் தகாத முறையில் பேசியஆசிரியருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரித்தானியாவில் ஆசிரியர் ஒருவர், மாணவியுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புவதாக கூறியதற்காக, அவரது பணியில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார்.&nbsp;</p><h2>டேட்டிங் செயலி மூலம்&nbsp;</h2><p>

பிரித்தானியாவின் Dagenham-யில் உள்ள Godwin தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் டேனியல் டுஹிக் (29).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e0dc8ea-bfb0-4a92-b25c-e1e35c9f479f/26-6a9d6bd0cc983.webp' />&nbsp;</p><p></p><p> 

எசெக்ஸின் ஹார்ன்சர்ச் பகுதியைச் சேர்ந்த இவர், 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான டேட்டிங் செயலி மூலம் 16 வயதுக்கும் குறைவான சிறுமி ஒருவரிடம் பேசியுள்ளார். </p><p>

கடந்த 2023 டிசம்பர் மாதம் குறித்த சிறுமிக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை டுஹிக் அனுப்பியிருக்கிறார். அதில் பள்ளி மாணவியான அந்த சிறுமியிடம் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புவதாக டுஹிக் கூறியிருக்கிறார்.</p><p> 

அதனைத் தொடர்ந்து எழுந்த புகாரினையடுத்து டேனியில் டுஹிக் 2024-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். 

பின்னர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், பாதிக்கப்பட்டவர் ஒரு சிறுமி என்று தனக்கு தெரியாது என்று வாதிட்டார்.</p><p> 

என்றாலும், ஒரு சிறுமியுடன் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக டேனியல் தண்டிக்கப்பட்டார். 

பணியில் இருந்து நீக்கப்பட்ட டேனியல், தனது தொழில் வாழ்க்கையைத் தொடர மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு பள்ளியிடம் கோரினார்.
</p><h2>
 கற்பித்தல் பணியில் ஈடுபட தடை </h2><p>இதற்கிடையில் ஆசிரியருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அது 18 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அத்துடன் அவர் மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபடவும், 100 மணிநேரம் ஊதியமில்லா சமூக பணியை செய்யவும் உத்தரவிடப்பட்டது. </p><p>

மேலும், பாதிக்கப்பட்டவருக்கு 154 பவுண்டுகள் மற்றும் அரசுத் தரப்பு வழக்கு செலவுகளுக்காக 85 பவுண்டுகளை அவர் செலுத்த வேண்டியிருந்தது; அத்துடன் அவர் ஏழு ஆண்டுகளுக்கு 'பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில்' சேர்க்கப்பட்டார். </p><p>

இந்த நிலையில், லண்டனின் Redbridge பகுதியில் Learning Support Assistant ஆக முன்பு பணியாற்றிய டுஹிக், ஒரு தீர்ப்பாயத்தின் விசாரணையில் வாழ்நாள் முழுவதும் கற்பித்தல் பணியில் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
ஆசிரியர் ஒழுங்குமுறைக் குழு, டேனியல் டுஹிக் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களை செய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று கண்டறிந்தது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cf07ae8-e694-45b6-a4c0-8792e52510d6/26-6a9d6bd1bffe6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T13:31:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியின் புதிய பாதுகாப்பு கவசத் திட்டம்: வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-announces-multi-layered-security-shield-1788696446"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-announces-multi-layered-security-shield-1788696446</id>
            <summary type="text">அதிகரித்து வரும் வான்வழி பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தொடர்ந்து ஜேர்மனி பாதுகாப்பு கவசத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. ஜேர்மனியின் பாதுகாப்பு கவச திட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகரித்து வரும் வான்வழி பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தொடர்ந்து ஜேர்மனி பாதுகாப்பு கவசத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.</p><h2> ஜேர்மனியின் பாதுகாப்பு கவச திட்டம்</h2><p>நாட்டின் லிப்ஜிக் ஹாலே(Leipzig-Halle Airport) விமான நிலையம் ட்ரோன் தாக்குதலுக்காக குறிவைக்கப்பட்டதை அடுத்து, அதிகரித்து வரும் வான்வழி மற்றும் டிஜிட்டல் தாக்குதலை சமாளிக்க ஜேர்மனி வலுவான பல அடுக்கு பாதுகாப்பு கவசத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.</p><p> இந்த பல அடுக்கு பாதுகாப்பு கவசமானது நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகள், பெரிய நகரங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் ஆகியவற்றை வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் உளவு வேலைகளில் இருந்து பாதுகாக்கும் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டொப்ரிண்ட் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74dc3118-b4e1-4635-b2a3-deb9bce73883/26-6a9d577fc250b.webp' /></p><p> இந்த புதிய திட்டத்தின் கீழ் ட்ரோன் தடுப்பு பிரிவுகள் நாட்டின் பல பகுதிகளுக்கு விரிவாக்கப்படுகின்றன.</p><p>வான்வழி அச்சுறுத்தல்களை சமாளிப்பதோடு, டிஜிட்டல் ஹேக்கிங் முயற்சிகளை கட்டுப்படுத்த தேசிய இணைய பாதுகாப்பு கவசம் ஒன்றையும் அறிமுகப்படுத்த ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.</p><p></p><p>இதில் செயற்கை நுண்ணறிவு(AI), வீடியோ கண்காணிப்பு மற்றும் பயோமெட்ரிக் ஆகிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு சந்தேகத்திற்குரிய நபர்களை முன்கூட்டியே அடையாளம் காண அரசு திட்டமிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6657113-d451-4e8f-ad2c-b2883bd38061/26-6a9d5780761a1.webp' /></p><p> இது அரசு துறை மற்றும் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களை கட்டுப்படுத்த இந்த புதிய முன்னெடுப்பானது எடுக்கப்பட்டுள்ளது.</p><p> ஆகஸ்ட் 4ம் திகதி ஜேர்மனியின் லிப்ஜிக் ஹாலே விமான நிலையத்தின் மீது ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அடுத்தே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> இந்த சம்பவத்திற்கு ரஷ்யா தான் காரணம் என்று ஜேர்மனியின் உளவுத்துறை குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T12:48:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஜியானி இன்ஃபான்டினோ: அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய FIFA]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fifa-gianni-infantino-will-run-for-re-election-1788697863"></link>
            <id>https://news.lankasri.com/article/fifa-gianni-infantino-will-run-for-re-election-1788697863</id>
            <summary type="text">Gianni Infantino will run for re-election FIFA Confirms: அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஜியானி இன்ஃபான்டினோ போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Gianni Infantino will run for re-election FIFA Confirms: அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஜியானி இன்ஃபான்டினோ போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> சர்ச்சையில் சிக்கிய பிஃபா தலைவர்</h2><p>கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் டிக்கெட் விற்பனை தொடர்பில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது.</p><p>இந்த சர்ச்சையை தொடர்ந்து பிஃபா தலைவர் நேரடியாக எந்தவொரு ஊடகங்களையும் சந்திக்காமல் இருந்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b82a8841-c504-42ab-b890-d69d67afe900/26-6a9d5d095b045.webp' /></p><p>இந்நிலையில் சனிக்கிழமை போலந்து நாட்டின் கட்டோவிஸ்(Katowice) நகரில் நடைபெறும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை போட்டியின் தொடக்க விழாவிற்கு வருகை தந்த பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino) வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.</p><p>அப்போது பிஃபாவில் அவரது எதிர்காலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கால்பந்து விளையாட்டை வளர்ப்பதும், உலகளவிலான கால்பந்து தொடர்களை மேம்படுத்துவது தான் தன்னுடைய எதிர்காலம் என்று பதிலளித்தார்.</p><p> மேலும் டிக்கெட் விற்பனை சர்ச்சை தொடர்பாக நேரடியாக பதிலளிக்க தவிர்த்த இன்ஃபான்டினோ, “ இன்று இதற்கான நேரம் அல்ல” என்றும் “உரிய நேரத்தில் பல விஷயங்களை சொல்வதற்கு இருக்கும் என்று தெரிவித்தார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e8271b-c28a-4af4-8365-b04995e4429a/26-6a9d5d0a13641.webp' /></p><h2> பிஃபா வெளியிட்ட அறிவிப்பு</h2><p>இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் பிஃபா தேர்தலில் ஜியானி இன்ஃபான்டினோ மீண்டும் போட்டியிடுவார் என்பதை பிஃபா(FIFA) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>அவரது நீண்ட பதவி காலம் குறித்து பல கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T12:31:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தில் புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rumesh-tharanga-pathirage-new-record-in-belgium-1788695382"></link>
            <id>https://news.lankasri.com/article/rumesh-tharanga-pathirage-new-record-in-belgium-1788695382</id>
            <summary type="text">Rumesh tharanga pathirage create history in javelin 2026: டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இலங்கையின் ரூமேஷ் பத்திரகே தரங்க புதிய வரலாறு படைத்தார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rumesh tharanga pathirage create history in javelin 2026: டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இலங்கையின் ரூமேஷ் பத்திரகே தரங்க புதிய வரலாறு படைத்தார். </p><p>

பெல்ஜியத்தில் நடந்த மைமண்ட் லீக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் ரூமேஷ் பத்திரகே தரங்க புதிய வரலாறு படைத்தார்.&nbsp;</p><h2>ஆடவர் ஈட்டி எறிதல்</h2><p>
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் டயமண்ட் லீக் இறுதிப் போட்டி நடந்தது.&nbsp;ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில்&nbsp;இலங்கை வீரர் ரூமேஷ் தரங்க பத்திரகே&nbsp;பங்கேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f97a28d6-1b6f-431a-8066-a4b7338240cf/26-6a9d545888f6b.webp' />&nbsp;</p><p></p><p>இறுதிப்போட்டி வரை சென்ற அவர், தனது மூன்றாவது முயற்சியில் 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த பட்டத்தை வென்றார்.</p><p> 

இதன்மூலம் டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை ரூமேஷ் தரங்க பத்திரகே (Rumesh Tharanga Pathirage)பெற்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p>ரூமேஷ் கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39ddb031-2495-40f6-90a9-79d861286b2a/26-6a9d5457a80c7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:51:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இது வெறும் ஆரம்பம் மட்டுமே... டோவரில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான குழு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dover-anti-migrant-blockade-1788694099"></link>
            <id>https://news.lankasri.com/article/dover-anti-migrant-blockade-1788694099</id>
            <summary type="text">Dover anti-migrant mob warn it&#039;s only the beginning: டோவரில் புலம்பெயர் மக்களுக்கு எதிரான குழு ஒன்று, இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று எச்சரித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Dover anti-migrant mob warn it's only the beginning: டோவரில் புலம்பெயர் மக்களுக்கு எதிரான குழு ஒன்று, இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று எச்சரித்துள்ளது.
</p><p>நேற்று டோவர் துறைமுகத்திற்குள் அத்துமீறி நுழைந்த, முகமூடி அணிந்த குழுவை அரசியல்வாதிகள் கண்டித்துள்ள நிலையில், இது வெறும் ஆரம்பம் தான் என்று போராட்டக்காரர்கள் எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c442894-9ef7-4577-bffd-3d1109579c37/26-6a9d4e56f0f1c.webp' /></p><p>
</p><p>கருப்பு உடை அணிந்த நூற்றுக்கணக்கானவர்கள் பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பான படகு முனையத்தை மறித்ததால், அதைச் சுற்றியுள்ள சாலைகளில் பல மணிநேரப் போக்குவரத்து முடக்கமும் மைல்கணக்கிலான வாகன வரிசைகளும் ஏற்பட்டன. </p><p>இணையத்தில் வெளியான காணொளிகள், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு வேனின் பின்பகுதியிலிருந்து வெளியேறி, பின்னர் நகருக்குள் அணிவகுத்துச் சென்றதைக் காட்டின.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, அவர்கள் படகுப் போக்குவரத்தை நிறுத்துங்கள் போன்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். இந்த நிலையில், அந்தப் குழுவைக் கண்டித்த அரசியல்வாதிகளில் Reform UK கட்சியைச் சேர்ந்த ராபர்ட் ஜென்ரிக் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ஜொனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோரும் அடங்குவர்.</p><p> ஆனால், அந்தக் குழுவின் மீது காவல்துறை மெதுவாக நடவடிக்கை எடுத்ததை டோவர் மாவட்ட மன்றத் தலைவர் கெவின் மில்ஸ் விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c10a0b4-91d9-4744-ab02-c6c4e705d769/26-6a9d4e5646ffd.webp' /></p><p> புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் சிறிய படகுகள் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதால் ஏற்படும் அதிருப்தியைப் புரிந்துகொள்வதாக ஜென்ரிக் கூறினார், ஆனால் முகமூடி அணிந்து மக்கள் போராட்டத்தில் குதிப்பதை தாம் விரும்பவில்லை என்றார். </p><p>இந்த நிலையில், இந்த முகமூடி அணிந்த குழுவைக் களமிறக்கியது Patriot Platform என்ற அமைப்பு என்றே தெரிய வருகிறது. இந்த அமைப்பானது ஆண்டின் தொடக்கத்தில், தீவிர வலதுசாரிச் சிந்தனை கொண்ட சமூக ஊடகப் பிரபலமும் டேனியல் தாமஸ் என்ற இயற்பெயரைக் கொண்டவருமான டேனி டோமோவால் நிறுவப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf23201c-cd8f-4d37-ae02-9691d6e0785f/26-6a9d4e57a67b6.webp' /></p><p> </p><p>இவ்வமைப்பின் நோக்கம் இந்நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதே என்று அவர் முன்னரே அறிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில், தீவிரமான அத்துமீறல் குற்றத்திற்காக தாமஸ் கைது செய்யப்பட்டதோடு, டோவர், ராம்ஸ்கேட் மற்றும் ஃபோல்க்ஸ்டோன் ஆகிய இடங்களுக்குச் செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. </p><p>மேலும் கடந்த மாதம், சட்டப்பூர்வ அனுமதியின்றி டோவர் துறைமுகத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.</p><p> நேற்றைய போராட்டத்தில் காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை; மதிய வேளையில் போராட்டக்காரர்களை டோவர் பிரையரி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். குறைந்தது 100 போராட்டக்காரர்கள் ராம்ஸ்கேட் செல்லும் ரயிலில் ஏறுவதும் தெரிய வந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T11:25:25+00:00</updated>
        </entry>
    </feed>
