<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-07T06:33:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார் - முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-says-ready-to-bear-any-humiliation-1786083324"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-says-ready-to-bear-any-humiliation-1786083324</id>
            <summary type="text">தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் கேள்வி 

தமிழ்நாடு அரசின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். </p><h3>

உதயநிதி ஸ்டாலின் கேள்வி </h3><p>

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 ஆகஸ்ட் முதல் நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.
</p><p>
இன்று, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4382cff7-ac56-43d8-9a67-6b59bae2bc67/26-6a7577fe682ec.webp' /></p><p> 

இதில் பேசிய அவர், தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது தடுப்பணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு வேகம் காட்டி வருகிறது. தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? </p><p>அனைத்துக்கட்சி கூட்டத்தை விவாதிக்க ஆளும் அரசு தயங்குவது ஏன்? 

டில்லியில் கர்நாடக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நம் மாநிலமும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை எப்போது கூட்ட போகிறீர்கள்" என பேசினார்.</p><h3> 

முதலமைச்சர் விஜய் பதில் </h3><p>

இதற்கு பதிலளித்துள்ள பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், "காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சில விவரங்களை கேட்டு இருக்கிறார்கள். காவிரி நமக்கு உயிர் ஆதாரம். நம்முடைய உணர்வு ரீதியான ஒன்று. அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளி கூட நமது அரசுக்கு இல்லை. அதற்கான அவசியமும் இல்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93a1d5df-31fe-420e-a3cb-b94d616e5a9b/26-6a7577fdb68a7.webp' /></p><p>

மேகதாது விவகாரத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து தான் தீர்மானம் போட்டோம். அதனை கடிதமாக பிரதமருக்கும் அனுப்பி வைத்து இருக்கிறோம். அதோடு நாம் அப்படியே இருந்துவிடவில்லை.
</p><p>
மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். காவிரி நதி நீர் பங்கீட்டிலும் சரி , மேகதாது அணை கட்டும் முயற்சிகளை தடுப்பதிலும் சரி, தமிழகத்தின் உரிமையை கொஞ்சம் கூட நம்ம அரசு விட்டு தரவே தராது. அது தான் நமது நிலைப்பாடு.</p><p> 

கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்படும் முயற்சிகள் குறித்து 1969ல் இதே அவையில் விவாதம் நடந்து இருக்கிறது. அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? அப்பொழுது அணை கட்ட விட்டது யார் என்று கேட்டு மலிவான அரசியல் செய்ய விரும்பவில்லை. அது நமது நோக்கமும் இல்லை. </p><p>

காவிரி பிரச்னையில் சம்பந்தப்பட்ட இரண்டு மாநிலங்களும், மத்திய அரசும் உட்கார்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று 1969ல் இந்த அவையில் பேசி இருக்கிறார்கள். அன் பிறகு நிலைமை மாறியது நமக்கு எல்லோருக்கும் தெரியும்.
</p><p>
காவிரி பிரச்னையில் ஒரு முயற்சி எடுத்துப்பார்க்கலாமே என்று நினைத்துதான் பெங்களூரு பயணத்தை பற்றி யோசித்து கேட்டது நான்தான். இது பற்றி பல கருத்துக்கள் வந்தன.
</p><p>
பிரச்னையை தீர்க்க பாசிட்டிவான சிக்னல் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் யோசித்தேன். இன்றைய காலகட்டத்தில் பகை நாடுகளே பேசித் தீர்க்கப் பார்க்கிறாங்க, பக்கத்து மாநிலத்தோட பேசிப் பார்த்தால் என்னன்னு நினைத்தேன்.
</p><p> 
இந்த பயணத்தால் அவமானம் நேர்ந்தால் என்னவாவது என்று கேட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்கிக்கொள்ள நான் தயார். </p><p>

காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். குறுவை சாகுபடிக்கு ஏற்கனவே அந்த நிவாரணம் கொடுத்தாச்சு. </p><p>

இதுவந்து அரசியலே நாங்கள் தான்என்று சொல்லி கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன, பின்ன பேப்பர் படித்து இருந்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும்" என கூறினார்.</p><p> 

இதன் பின்னர் பேசிய சிபிஎம் எம்.எல்.ஏ. செல்லசுவாமி, “தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகாவிற்கு சென்று மண்டியிட வேண்டிய தேவை இல்லை அந்த அவமானத்தை தாங்குவேன் என்று அவர் கூறினார். அது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் அவமானமாகும்." என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T06:15:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம்.., எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-is-the-largest-district-in-india-1786082290"></link>
            <id>https://news.lankasri.com/article/which-is-the-largest-district-in-india-1786082290</id>
            <summary type="text">இந்தியா மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகும்.

நாட்டின் நிர்வாக வசதிக்காக இந்தியா மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களாகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகும்.
</p><p>
நாட்டின் நிர்வாக வசதிக்காக இந்தியா மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்நிலையில், இந்தியாவில் தற்போது மொத்தம் 806 மாவட்டங்கள் உள்ளன.</p><p>

அந்தவகையில், இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது என்பது குறித்து பார்க்கலாம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2da69ada-87ab-48cf-ab3b-6b8c908cedb0/26-6a75748cd64e9.webp' /></p><p>பரப்பளவின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் (Kutch) மாவட்டமாகும். </p><p>இதன் மொத்த பரப்பளவு 45,674 சதுர கிலோமீட்டர்.

இந்த மாவட்டத்தில் சுமார் 21 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். </p><p>

மேலும் 10 தாலுகாக்கள் மற்றும் 994 கிராமங்கள் உள்ளன. இங்கு எழுத்தறிவு விகிதம் 70.59% ஆகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c5b3583-2ca1-4164-ae6f-0d2e96886c43/26-6a75748dc9df6.webp' /></p><p>கட்ச் மாவட்டம் வடமேற்கில் பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. 

பரப்பளவில் இது இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட பெரியதாகும்.
</p><p>
இந்த மாவட்டத்தில் உலகின் மிகப்பெரிய உப்புப் பாலைவனங்களில் ஒன்றான ரான் ஆஃப் கட்ச் அமைந்துள்ளது.</p><p> 

இதில் கிரேட் ரான் ஆஃப் கட்ச், லிட்டில் ரான் ஆஃப் கட்ச் மற்றும் பன்னி புல்வெளி ஆகிய பகுதிகள் அடங்கும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f3bb766-35b7-4c80-a0f0-7eb6df3b9697/26-6a75748e81f46.webp' /></p><p>உலகப் புகழ்பெற்ற சிந்து சமவெளி நாகரிகத்தின் தோலாவிரா தொல்லியல் தளம் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது.
</p><p>
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெறும் ரான் உத்சவ் திருவிழா ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, உள்ளூர் மக்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.
</p><p>
மேலும், கட்ச் பகுதி ஃபிளமிங்கோ பறவைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாகவும், இந்தியக் காட்டுக்கழுதை சரணாலயத்திற்கும் பெயர் பெற்றதாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T06:04:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வெப்பத்தில் தவிக்கும் இத்தாலி... உயர் எச்சரிக்கை நிலையில் முக்கிய நகரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/italy-swelters-heatwave-rages-1786082030"></link>
            <id>https://news.lankasri.com/article/italy-swelters-heatwave-rages-1786082030</id>
            <summary type="text">கடும் வெப்பநிலை காரணமாக, இத்தாலியில் அனைத்து முக்கிய நகரங்களும் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமையன்று நிலவிய அதிக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடும் வெப்பநிலை காரணமாக, இத்தாலியில் அனைத்து முக்கிய நகரங்களும் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
வியாழக்கிழமையன்று நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக, இத்தாலி தனது அனைத்து முக்கிய நகரங்களையும் மிக உயர்ந்த சுகாதார எச்சரிக்கை நிலைக்கு உட்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளது.</p><h2>பொருளாதார இழப்பு</h2><p>
</p><p>ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் வெப்ப அலை தொடர்ந்து நீடித்த நிலையில், எரிசக்தியைச் சேமிப்பதற்காக ஹங்கேரி தனது மிக முக்கியமான சில கட்டிடங்களின் விளக்குகளை அணைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/322ce8ea-db27-4e11-864e-5bf97574430b/26-6a7572f104312.webp' /></p><p> </p><p>உலகின் மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமான ஐரோப்பா, இந்த கோடையில் சாதனை அளவிலான வெப்பம் மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது; குறிப்பாக சமீபத்திய வாரங்களில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இதில் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
</p><p>காட்டுத்தீ அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அதிக நிதி செலவிடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளை வலியுறுத்தும் என்று அதன் சுற்றுச்சூழல் ஆணையர் தெரிவித்துள்ளார். </p><p>அதேவேளை, இந்த கோடைக்காலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு ஏற்கனவே 15 பில்லியன் யூரோக்களை கடந்துவிட்டதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.</p><p></p><p> </p><p>தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல்கேரியா, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மிக அண்மைய ஐரோப்பிய ஒன்றிய நாடாகும். இத்தாலி வெப்பமான கோடைக்காலங்களுக்குப் பழகியதுதான்;</p><h2>கடுமையான சுகாதார ஆபத்து</h2><p> </p><p>இருப்பினும், அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் விடுத்த 'சிவப்பு எச்சரிக்கை' (red alert), தெற்குத் தீவான சிசிலியில் உள்ள பலெர்மோ முதல் மலைப்பாங்கான வடக்குப் பகுதியான போல்சானோ வரை விரிவடைந்துள்ளது. </p><p>நீண்ட காலத்திற்கு நீடிக்கும் அதிக வெப்பநிலை ஒட்டுமொத்த மக்களுக்கும் கடுமையான சுகாதார ஆபத்தை ஏற்படுத்துவதால், இது ஒரு சாத்தியமான சுகாதார அவசரநிலையைக் குறிப்பதாக அந்த எச்சரிக்கை அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b39f9b66-c673-4a53-96fb-bd24557972d2/26-6a7572f1a9ad4.webp' /></p><p> </p><p>புனித பிரான்சிஸின் மறைவின் 800-வது ஆண்டு நினைவைக் குறிக்கும் வகையில் பாப்பரசர் லியோ அசிசி நகருக்கு வருகை தந்தபோது, ​​மலை உச்சியில் அமைந்துள்ள அந்நகரில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் கூடியிருந்த யாத்ரீகர்களின் உடல் சூட்டைத் தணிக்க அவர்கள் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது.</p><p> இத்தாலியின் மிக வெப்பமான பகுதிகளில் ஒன்றான வடக்கு எமிலியா-ரோமக்னா (Emilia-Romagna) பிராந்தியத்தின் பல பகுதிகளில் வியாழக்கிழமையன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகப் பதிவானது; குறிப்பாக ரவென்னா (Ravenna) நகருக்கு அருகிலுள்ள பக்னகவல்லோ (Bagnacavallo) பகுதியில் வெப்பநிலை 42.8 டிகிரி செல்சியஸை எட்டியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T05:51:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்த 97 வயது மூதாட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/97-old-women-record-at-wing-walking-1786024119"></link>
            <id>https://news.lankasri.com/article/97-old-women-record-at-wing-walking-1786024119</id>
            <summary type="text">97 வயது மூதாட்டி, பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

விமான இறக்கை மேல் நடந்த 97 வயது மூதாட்டி

பிரித்தானியாவின் செல்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>97 வயது மூதாட்டி, பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.</p><h3>

விமான இறக்கை மேல் நடந்த 97 வயது மூதாட்டி
</h3><p>
பிரித்தானியாவின் செல்டென்ஹாமைச் சேர்ந்தவர் 97 வயதான பெட்டி ப்ரோமேஜ் என்ற மூதாட்டி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d962fa2-7507-458c-a132-1714aaf8c4dc/26-6a7490ba02c0b.webp' /></p><p>

கடந்த ஆண்டு இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, செல்டென்ஹாம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். </p><p>

செல்டென்ஹாம் மருத்துவமனை ஊழியர்கள் தன்னை நன்றாக கவனித்து கொண்டதால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நிதிதிரட்டும் முயற்சியில் இறங்கினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe3eb363-29bd-4655-a1ee-bc633124265b/26-6a7490b9504af.webp' /></p><p>

இதற்காக பறக்கும் விமானம் ஒன்றின் ரெக்கை மேல் நடந்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A 97-year-old British woman broke her own Guinness World Record for being the oldest female wing walker.<br> <br>&quot;I&#39;d just get bored of life otherwise,&quot; Betty Bromage, who has done six wing walks in the last decade, said. <a href="https://t.co/n4OYn0jMZl">pic.twitter.com/n4OYn0jMZl</a></p>&mdash; ABC News (@ABC) <a href="https://x.com/ABC/status/2085330161323409823?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதன் மூலம் விமான இறக்கையில் நடந்த மிக வயதான பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

முன்னதாக 4 ஆண்டுகளுக்கு முன்னரே இதே சாதனையை படைத்த அவர், தற்போது தன்னுடைய சாதனையே முறியடித்துள்ளார். அதற்கு முன்னதாக 5முறை இவ்வாறு நடந்துள்ளார். </p><p>

எனக்கு நூறு வயதாகும்போது, ​​நான் ஏதாவது சிறப்பான ஒன்றைப் பற்றி யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:15:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு ட்ரோன்: பிரித்தானிய நிபுணர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-expert-warns-regard-drone-in-germany-airport-1786079472"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-expert-warns-regard-drone-in-germany-airport-1786079472</id>
            <summary type="text">ஜேர்மனியில் வெடிகுண்டு இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய நிபுணர் ஒருவர் எச்சரித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் வெடிகுண்டு இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
</p><p>


ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், ட்ரோன் ஒன்றுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.</p><p>

இந்நிலையில், அது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் சில எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டுள்ளார்.
</p><h3>
விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்</h3><p>

ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b14e5c2-506c-4bb5-8a56-18441c00de73/26-6a7568f24932c.webp' /></p><p>

பின்னர், விமான நிலையத்தின் ஓடுபாதையில், வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட, கடும் அதிர்ச்சி உருவானது.
</p><p>
பிரித்தானிய நிபுணர் எச்சரிக்கை

இப்படி ஜேர்மன் விமான நிலையமொன்றில் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் அச்சுறுத்தல் என பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
அதாவது, அந்த ட்ரோன் உக்ரைன் விமானம் ஒன்றின் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ட்ரோனை ரஷ்யாவுடன் இணைத்து எச்சரித்துள்ள வில் கெடஸ் (Will Geddes) என்னும் அந்த நிபுணர், புடின் நினைத்தால் பயணிகள் விமானம் ஒன்றைக் கூட தாக்கி அழிக்க முடியும் என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.</p><p>

இப்போது ட்ரோன் ஒன்றுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளன. அப்படியானால், ட்ரோனுடன் கதிரியக்கப் பொருட்களையோ, உயிரி ஆயுதங்களையோ கூட இணைக்கமுடியும் என்றும் வில் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8db24d5-552a-4267-8db5-b88990485be6/26-6a7568f1925ba.webp' /></p><p>
மேலும், பிரித்தானிய விமான நிலையங்களைப் பொருத்தவரை, ட்ரோன் ஒன்றை காரிலிருந்தோ, வீட்டிலிருந்தோ கூட இயக்கலாம்.
</p><p>
அப்படி ஒரு ட்ரோன் வெடிக்கச் செய்யப்படுமானால், அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும் என்கிறார் அவர்.</p><p>
ஆக, ஜேர்மனியில் ட்ரோன் ஒன்றுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டுள்ள விடயம், இத்தகைய ட்ரோன்களால் ராணுவங்களுக்கு மட்டுமல்ல, பயணிகள் விமானங்களுக்கும் ஆபத்து உள்ளது என்பதையே காட்டுவதாக தெரிவித்துள்ளார் வில்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:11:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் செம்பருத்தி எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/homemade-hibiscus-oil-for-hair-growth-in-tamil-1786077880"></link>
            <id>https://news.lankasri.com/article/homemade-hibiscus-oil-for-hair-growth-in-tamil-1786077880</id>
            <summary type="text">செம்பருத்தி பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் அந்தோசயனின் போன்ற உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

இது இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்பருத்தி பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் அந்தோசயனின் போன்ற உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. </p><p>

இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும், மற்றும் இதய நலனுக்கும் பெரிதும் உதவுகிறது.
</p><p>
செம்பருத்தி பூ சார்ந்த தயாரிப்புகள் முடி உதிர்வைத் தடுத்து, முடியை அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகின்றன.</p><p></p><p>

செம்பருத்தி பூ எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டவும், முடி உதிர்வைத் தடுத்து முடியை அடர்த்தியாகவும் கருமையாகவும் மாற்ற உதவும் மிகச் சிறந்த இயற்கை மூலிகை எண்ணெய் ஆகும். </p><p>

இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து பொடுகை விரட்ட உதவுகிறது.&nbsp;</p><p>அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். </p><h2>தேவையான பொருட்கள் </h2><ul><li>

செம்பருத்தி பூ- 15
</li><li>தேங்காய் எண்ணெய்- ½ லிட்டர் </li></ul><h2>

எப்படி தயாரிப்பது?</h2><p>

முதலில் அடுப்பில் ஒரு இரும்பு வாணல் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவைக்கவும்.</p><p>

அடுத்து இதில் சுத்தம் செய்த செம்பருத்தி இலைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5bcc60f-932b-4356-8d70-6bf1612497ce/26-6a7562baa8a99.webp' /></p><p>இதற்கடுத்து எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து எண்ணெய் ஆறியதும் இதனை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
</p><p>
செம்பருத்தி எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி, இரண்டு கைகளாலும் தேய்த்து முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும்.
</p><p>
பின்னர் 10 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்து ஊறவிட்டு கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T04:45:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸில் அமெரிக்க, இஸ்ரேலிய கப்பல்களைத் தடை செய்யும் மசோதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/draft-bill-bar-us-israeli-ships-1786076621"></link>
            <id>https://news.lankasri.com/article/draft-bill-bar-us-israeli-ships-1786076621</id>
            <summary type="text">அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற எதிரிகளின் கப்பல்களை ஹார்முஸ் நீரிணையில் தடை செய்ய ஈரான் திட்டம்.
அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பிற எதிரிகளின் கப்பல்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற எதிரிகளின் கப்பல்களை ஹார்முஸ் நீரிணையில் தடை செய்ய ஈரான் திட்டம்.
</p><p>அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பிற எதிரிகளின் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து செல்வதைத் தடுக்கும் ஒரு பூர்வாங்க மசோதாவை ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒன்று ஆய்வு செய்து வருகிறது.</p><h2>20 சதவீதம் அபராதம்</h2><p>
</p><p>குறித்த தகவலை ஈரானிய அரசாங்கத்திற்கு நெருக்கமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால், கப்பலில் உள்ள சரக்கின் மதிப்பில் 20 சதவீதம் வரை அபராதம் விதிக்கும் வகையில் இந்த வரைவு மசோதா அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2061d74a-3618-4ae0-b7c3-33aa872779f2/26-6a755dcfa4678.webp' /></p><p> </p><p>சட்டவரைவு இறுதி செய்யப்படுவதற்கு முன்னதாகப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு நிபுணர்களுக்கு நாடாளுமன்றம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்தச் சட்டம் இன்னும் நிபுணர்களின் ஆய்வில் இருப்பதாகவும் ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போருக்கு முன்னர், அந்த நீரிணையில் எவித்தக் கட்டுப்பாடுகளும் இன்றி, எண்ணெய் மற்றும் வணிகக் கப்பல்கள் போக்குவரத்தை முன்னெடுத்து வந்தது.</p><p></p><p> </p><p>ஆனால், போர் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அழுத்தமளிக்கும் வகையில், ஈரான் நிர்வாகம் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கியது.</p><h2>இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா</h2><p> </p><p>இருப்பினும் சீனா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஈரானின் ஏவுகணை பலம் மற்றும் அணு ஆயுதத்திற்கான முயற்சிகளை முடக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் தொடுத்த நிலையில், அமெரிக்காவின் இலக்கு பின்னர் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43c91a30-d37f-4543-bdd0-47dbffa6032e/26-6a755dd05763d.webp' /></p><p> </p><p>இதனையடுத்து வலுவானத் தாக்குதலை முன்னெடுத்த அமெரிக்காவுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. </p><p>தற்போது போருக்கான ஆயுதங்கள் மொத்தம் செலவிட்டுள்ள நிலையில், அமெரிக்கா இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கியுள்ளதாகவே போர் தொடர்பிலான ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T04:21:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிடம் ஆயுதங்கள் இல்லை... கசிந்த தகவல்களால் கடும் கோபத்தில் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-angry-depleted-munitions-1786073955"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-angry-depleted-munitions-1786073955</id>
            <summary type="text">அமெரிக்காவிடம் போருக்குத் தேவையான ஆயுதங்கள் மொத்தமும் தீர்ந்துவிட்டதாக வந்த செய்திகளால் ட்ரம்ப் கோபம் அடைந்துள்ளார்.
கடும் நெருக்கடியில் இருக்கும் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிடம் போருக்குத் தேவையான ஆயுதங்கள் மொத்தமும் தீர்ந்துவிட்டதாக வந்த செய்திகளால் ட்ரம்ப் கோபம் அடைந்துள்ளார்.
</p><p>கடும் நெருக்கடியில் இருக்கும் அமெரிக்க ஆயுதக் கையிருப்பு குறித்த தகவல்கள், ஒரு முக்கியமான கட்டத்தில் அமெரிக்காவை பலவீனமாகக் காட்டுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் கவலை தெரிவித்துள்ளார்.</p><h2>திகைத்துப்போகவில்லை</h2><p>
ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்வதற்காக, அவர் வலுவான இராணுவ நடவடிக்கை எடுக்க இருப்பதாக தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்த நிலையிலேயே, ஆயுதங்கள் இல்லை என்ற தகவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6fc14a-b446-4dd7-a24e-073d34763381/26-6a755366244fe.webp' /></p><p> </p><p>கடந்த வாரம் கேம்ப் டேவிட்டில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த விவாதம் முக்கிய இடத்தைப் பிடித்தது. ஈரான் போரில் சிக்கி ஏற்கனவே ​​விரக்தியடைந்துள்ள ட்ரம்ப், அமெரிக்காவிடம் தற்போது ஆயுதங்கள் இல்லை என்ற ஊடகங்களின் செய்தி தொடர்பில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். </p><p>ஆனால், ஆயுதங்களின் பற்றாக்குறை
தொடர்பான சாத்தியமான பிரச்சனைகள் குறித்து ட்ரம்ப் பல மாதங்களாக நன்கு அறிந்திருந்தார் என்றும், வெளியாகியுள்ள அறிக்கைகளால் அவர் திகைத்துப்போகவில்லை என்றும் பலர் கூறியுள்ளனர். </p><p>இருப்பினும், போரின் ஒரு திருப்புமுனையான கட்டத்தில் அந்தத் தகவல் வெளிச்சத்திற்கு வந்ததாலும், அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் அளிப்பதன் பின்னணியில் அதன் பலவீனமான நிலை என்பது அம்பலப்படுத்தப்பட்டதாலும் அவர் கோபமடைந்தார் என்று கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்காவிடம், குறிப்பாக சில குறிப்பிட்ட வகைகளில், பெருமளவிலான ஆயுதங்கள் இருப்பதாக அவர் பதிவு செய்துள்ளார். </p><p>மேலும், தேவைக்கேற்ப அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பவும் தயார் நிலையில் பல நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்படுகின்றன எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். </p><p>இருப்பினும், ஆயுதங்கள் இல்லை என்பது தொடர்பில் பரவி வரும் தகவல்களில் குறைந்தபட்சம் சிலவாவது துல்லியமானவை என்பதை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாகவே கூறப்படுகிறது. </p><p>அந்தத் தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட்டவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்களுக்குத் தனது நிர்வாகம் நீண்டகால சிறைத் தண்டனைகளை கோரும் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19a6977b-1268-4400-b7d4-201e78e5370b/26-6a7553656eed9.webp' /></p><p> </p><p>இதுவரை, ட்ரம்பின் கோபம் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் மீது குறிப்பாகத் திரும்பவில்லை என்றே வெள்ளை மாளிகை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். </p><p>ஈரான் போருக்கு முன்னர் அமெரிக்காவிடம் சுமார் 2,200 பேட்ரியாட்ஸ் ஏவுகணைகளும் 452 தாட் ஏவுகணைகளும் அதன் கையிருப்பில் இருந்தன. ஆனால் அதில் தற்போது பெரும்பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.</p><h2>கையிருப்புப் பற்றாக்குறை</h2><p> </p><p>அமெரிக்காவிடம் ஆயுதங்கள் இல்லை என கசிந்துள்ள தகவல், அமெரிக்க அதிகாரிகளை மட்டுமல்ல வளைகுடா நாடுகளின் தலைவர்களையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. </p><p>தற்போதைய மோதலைத் தீவிரப்படுத்த ட்ரம்ப் முடிவு செய்தால், வான் பாதுகாப்பு அமைப்புகளின் பற்றாக்குறை, ஈரானின் சாத்தியமான பதிலடித் தாக்குதலைத் தடுக்கும் வளைகுடா நாடுகளின் திறனைப் பாதிக்கக்கூடும். </p><p>மத்திய கிழக்கு நாடுகளில் பல, அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சார்ந்துள்ளன. கையிருப்புப் பற்றாக்குறையானது, ஈரானிடமிருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இடைமறிக்கும் தங்களின் திறனைத் தடுக்கக்கூடும் என்பதை வளைகுடாத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6c920ee-3115-4fec-9a2f-ab8483e4d099/26-6a755366cc517.webp' /></p><p> மீண்டும் அமெரிக்கத் தாக்குதல்கள் நடந்தால், பிராந்தியம் முழுவதும் இருளில் மூழ்கும் அல்லது கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரான் வளைகுடா நாடுகளுக்குத் தெரிவித்துள்ளது. </p><p>ஆயுதங்கள் இல்லை என்ற தகவல் பரவிவரும் நிலையில், கடந்த வாரம் ட்ரம்ப், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் தலைவர்களுடன் போர் குறித்து விவாதித்துள்ளார். </p><p>ஆயுதங்கள் இல்லை என்பது குறித்து வெளிவரும் தகவல்களால் ட்ரம்ப் கோபமடைந்துள்ள நிலையில், இந்தத் தகவல்கள் நிர்வாகத்திற்குள் இருக்கும் போர் எதிர்ப்பு அதிகாரிகளிடமிருந்து கசிந்திருக்கலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் நம்புகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T03:37:13+00:00</updated>
        </entry>
    </feed>
