<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-20T19:19:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயர்லாந்தில் கோதிக் கோட்டை ஒன்றை வாங்கிய மார்க் ஜுக்கர்பெர்க்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zuckerberg-buys-gothic-castle-1787248435"></link>
            <id>https://news.lankasri.com/article/zuckerberg-buys-gothic-castle-1787248435</id>
            <summary type="text">Mark Zuckerberg buys Gothic castle: மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் அயர்லாந்தில் ஒரு கோட்டையை வாங்கியுள்ளனர். 
தொழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mark Zuckerberg buys Gothic castle: மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் அயர்லாந்தில் ஒரு கோட்டையை வாங்கியுள்ளனர். </p><p>
தொழில்நுட்பத் துறை கோடீஸ்வரரான மார்க் ஜுக்கர்பெர்க்கும் அவரது மனைவி பிரிசில்லா சானும் அயர்லாந்தில் ஒரு கோட்டையை வாங்கியுள்ளனர்; அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் குறித்து அவர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>கோதிக் பாணி மாளிகை</h2><p>
</p><p>மெட்டாவின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க், அண்மைய வாரங்களில் ஆலன்-பக்லி குடும்பத்திடமிருந்து கோதிக் பாணியிலான மூன்று மாடி 'ஸ்ட்ரான்க்கல்லி' (Strancally) கோட்டையை வாங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5bbb69d-e849-4626-8ad6-e14bf1e7ce07/26-6a873f362869a.webp' /></p><p> </p><p>மார்க் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைத் தொடர்ந்து பராமரிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்; அத்துடன் அயர்லாந்தில் நேரத்தைச் செலவிடவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். </p><p>1827-ல் ஒரு ஆங்கில அரசியல்வாதிக்காகக் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, டப்ளினிலிருந்து சுமார் 93 மைல் தென்மேற்கே, வாட்டர்ஃபோர்டு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு மூன்று மாடி, செதுக்கப்பட்ட கற்களால் ஆன கோதிக் மறுமலர்ச்சி பாணி மாளிகையாகும்.</p><p></p><p> </p><p>கோட்டையை வாங்க மார்க் சக்கர்பெர்க் செலுத்திய தொகை தொடர்பான தகவல் வெளியாகவில்லை. இந்தக் கோட்டையானது, கடந்த 20 வருடங்களில் அதன் முந்தைய உரிமையாளர்களால் விரிவாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>அபராதம் விதிக்கப்பட வேண்டும்</h2><p> </p><p>மெட்டா நிறுவனம் அயர்லாந்தில் சுமார் 1,500 பேரைப் பணியமர்த்தியுள்ளது, அதன் சர்வதேசத் தலைமையகம் டப்ளினில் அமைந்துள்ளது.
ஜுக்கர்பெர்க்கும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து அமெரிக்காவிலேயே வசிப்பார்கள்; அயர்லாந்தில் மெட்டா நிறுவனத்தின் பணிகளை மேற்கொள்ளும்போது மட்டும் அங்குள்ள குடியிருப்பைப் பயன்படுத்துவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9c3a97-b278-40d2-8595-01be56235b0e/26-6a873f354f1b5.webp' /></p><p>
</p><p>இதனிடையே, இளம் பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கை வேண்டுமென்றே அடிமையாக்கும் வகையில் உருவாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், மெட்டா நிறுவனத்திற்கு எதிராக செவ்வாயன்று நடைபெற்ற அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில், அந்நிறுவனம் குழந்தைகளைத் தெரிந்தே அடிமையாக்கிச் சுரண்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. </p><p>குழந்தைகளுக்கு அடிமைப்படுத்தும் தன்மையுள்ள தயாரிப்புகளை வடிவமைத்ததற்காக, மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சுமார் 200 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று மாகாணங்களின் கூட்டமைப்பு ஒன்று கோருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T17:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோட்டக் குழாய் பயன்பாட்டுத் தடை... பிரித்தானியாவின் மிகப்பெரிய நீர் விநியோக நிறுவனம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/water-supplier-warns-hosepipe-ban-1787243194"></link>
            <id>https://news.lankasri.com/article/water-supplier-warns-hosepipe-ban-1787243194</id>
            <summary type="text">Hosepipe ban will last until end of YEAR: குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான தடை இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்கும் என்று எச்சரிக்கை.
பிரித்தானியாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hosepipe ban will last until end of YEAR: குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான தடை இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்கும் என்று எச்சரிக்கை.
</p><p>பிரித்தானியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த ஆண்டின் இறுதி வரை குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான (hosepipe) கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நாட்டின் மிகப்பெரிய நீர் விநியோக நிறுவனம் எச்சரித்துள்ளது.</p><h2>ஆண்டின் இறுதி வரை</h2><p>
</p><p>சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்த நடவடிக்கைகள் அவசியமென்றும், இவை பல மாதங்களுக்குத் தொடரக்கூடும் என்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>தேம்ஸ் வாட்டர் (Thames Water) நிறுவனத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஹோஸ்பைப் பயன்பாட்டுத் தடை கட்டுப்பாடுகள், இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64222f7d-1981-4efc-a4fc-ae519a3d77f7/26-6a872abd227d1.webp' /></p><p> </p><p>பிரித்தானியாவில் கோடைக்காலத்தின் ஐந்தாவது வெப்ப அலை முடிவுக்கு வரும் நிலையில், ஆண்டின் மிக வெப்பமான நாளில் லண்டனில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. </p><p>இந்த நிலையில், தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகலில் ஒருவரான நெவில் மன்காஸ்டர் தெரிவிக்கையில், எங்களின் வழக்கமான நீர் விநியோகத்திற்கு மேலதிகமாக, நீருக்கான பெரும் தேவை இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என்று கேள்விக்கு பதிலளித்துள்ள ​​மன்காஸ்டர், யதார்த்தமாகப் பார்த்தால், அவை நீக்கப்படுவதற்கு இந்த ஆண்டின் இறுதிப் பகுதி வரை ஆகலாம் என்று நான் கருதுகிறேன் என்றார்.</p><p></p><p> </p><p>நீண்ட கால வெப்பமான மற்றும் வறண்ட கோடைக்காலத்திற்குப் பிறகு, இங்கிலாந்தின் ஏறக்குறைய முக்கால் பகுதியும் வேல்ஸ் முழுவதும் தற்போது வறட்சி நிலையை எதிர்கொண்டுள்ளன. </p><p>இந்த வாரத் தொடக்கத்தில், இங்கிலாந்தின் சில முக்கிய நகரங்களில் இடி மற்றும் பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது; சில பகுதிகளில் பல மாதங்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவிலான மழை பதிவாகியுள்ளது.</p><h2>1,000 பவுண்டுகள்</h2><p> </p><p>தேம்ஸ் வாட்டர் நிறுவனம் ஜூலை மாத இறுதியில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது அந்நிறுவனத்தின் குடிநீர் வாடிக்கையாளர்களில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் அத்தடையின் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். </p><p>சமீபத்திய மாதங்களில் மேலும் ஒன்பது நீர் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளன; இத்தடை உத்தரவுகள் இங்கிலாந்தின் தெற்குப் பகுதியின் பெரும்பகுதியையும் வேல்ஸின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6796d074-38b2-4161-b74e-a8728c9bbdbd/26-6a872abc74463.webp' /></p><p> </p><p>மிக சமீபத்தில், வெசெக்ஸ் வாட்டர் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அன்று பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு குழாய் மூலம் நீர் பாய்ச்சுவதற்குத் தடை விதித்தது. இதன் மூலம், 50 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தக் கட்டுப்பாடுகளை அந்த நிறுவனம் அமுல்படுத்தியுள்ளது. </p><p>தற்காலிக பயன்பாட்டுத் தடையின் கீழ், செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது அல்லது வெந்நீர்த் தொட்டிகளை நிரப்புவது போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு நீர்க்குழாய்கள், தெளிப்பான்கள் மற்றும் அழுத்தக் கழுவிகளைப் பயன்படுத்தக் கூடாது. </p><p>அங்கீகரிக்கப்பட்ட விதிவிலக்கு அல்லது சட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு இடைவெளி (loophole) பொருந்தாத பட்சத்தில், விதிகளை மீறுபவர்கள் 1,000 பவுண்டுகள் அபராதத்தைச் சந்திக்க நேரிடலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T16:24:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் Visa-Free Entry பட்டியலில் 2 ஆசிய நாடுகள் சேர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-grants-visa-free-entry-to-kyrgyzstan-vietnam-1787241629"></link>
            <id>https://news.lankasri.com/article/china-grants-visa-free-entry-to-kyrgyzstan-vietnam-1787241629</id>
            <summary type="text">Two asian countries join China&#039;s visa-free entry list: சீனாவின் Visa-Free Entry பட்டியலில் 2 ஆசிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய குடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two asian countries join China's visa-free entry list: சீனாவின் Visa-Free Entry பட்டியலில் 2 ஆசிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
</p><p>
சீனாவின் தேசிய குடியேற்ற நிர்வாகம் (NIA) அறிவித்துள்ள புதிய கொள்கையின் படி, கிற்கிஸ்தான் மற்றும் வியட்நாம் குடிமக்கள் இனி சீனாவிற்கு விசா இல்லாமல் நுழையலாம். </p><p>இந்த விதிமுறை இன்று முதல் (ஆகஸ்ட் 20, 2026) அமுலுக்கு வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/911fce2d-2c81-455f-a5e1-2bce9ec7f58b/26-6a87249f1ee98.webp' /></p><h2>10 நாட்கள் வரை தங்கலாம்</h2><p>புதிய கொள்கையின் படி, இந்த இரண்டு நாடுகளின் குடிமக்கள் 240 மணி நேர visa-free transit அனுமதி பெறுவர். </p><p>அவர்கள் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட 65 திறந்த துறைமுகங்கள் வழியாக சீனாவிற்குள் நுழைந்து, குறிப்பிட்ட பகுதிகளில் 10 நாட்கள் (240 மணி நேரம்) வரை தங்கலாம்.

மேலும், ஹைனான் மாகாணத்தில் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>இந்த காலத்தில் அவர்கள் சுற்றுலா, வணிகம், குடும்ப சந்திப்பு போன்ற குறுகிய கால நடவடிக்கைகளில் ஈடுபடலாம். ஆனால் வேலை, படிப்பு, செய்தி சேகரிப்பு போன்ற செயல்களுக்கு முன்கூட்டியே விசா பெற வேண்டும்.
</p><h2>
57 நாடுகளுக்கு&nbsp;விரிவு</h2><p>சீனாவின் விசா கொள்கையை விரிவுபடுத்தும் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அண்டை நாடுகளுடன் நம்பிக்கை, ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, சீனாவின் 240-hour visa-free transit policy தற்போது 57 நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது.</p><p>

இந்த புதிய விதிமுறைகள், சீனாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T15:57:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோமாலியாவில் கடத்தப்பட்ட சரக்கு கப்பலில் சிக்கிய 6 இந்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/six-indians-on-hijacked-somali-cargo-ship-1787240320"></link>
            <id>https://news.lankasri.com/article/six-indians-on-hijacked-somali-cargo-ship-1787240320</id>
            <summary type="text">Six Indians aboard cargo ship hijacked off Somalia: சோமாலியாவின் புன்ட்லாந்து கடற்கரையில் கடத்தல்காரர்கள் கைப்பற்றிய சரக்கு கப்பலில் ஆறு இந்தியர்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Six Indians aboard cargo ship hijacked off Somalia: சோமாலியாவின் புன்ட்லாந்து கடற்கரையில் கடத்தல்காரர்கள் கைப்பற்றிய சரக்கு கப்பலில் ஆறு இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>M/V LUTUF என்ற கப்பல், காமெரூன் நாட்டின் கொடியுடன் பயணித்தது. இந்த கப்பல் துருக்கி இராணுவ பயிற்சி மையத்திற்காக ஆயுதங்கள் மற்றும் அதற்கு தொடர்புடைய சாதனங்களை எடுத்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாறையா அருகே நடந்தது. எட்டு ஆயுதம் ஏந்திய கடத்தல்காரர்கள் கப்பலை கைப்பற்றினர்.</p><p> கப்பலில் மொத்தம் 10 பேர் இருந்தனர். ஆறு இந்தியர்கள், ஒரு துருக்கியர், ஒரு ஜார்ஜியர் மற்றும் இரண்டு செர்பிய பாதுகாப்பு பணியாளர்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363df18e-1784-4fc5-9254-acebcfc834b8/26-6a871f82b1540.webp' /></p><p>கப்பலை கைப்பற்றிய கடத்தல்காரர்கள் அதை நுகால் கடற்கரை நோக்கி அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், துருக்கிய ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் அந்த பகுதியில் கண்காணிப்பு செய்தன.</p><p> அப்போது, ஒரு சிறிய படகு கப்பலுக்கு அருகில் வந்து ‘காட்’ எனப்படும் போதைப்பொருளை வழங்கியது. அதற்குப் பிறகு நடந்த வான்வழி தாக்குதலில் நால்வர் உயிரிழந்தனர், இருவர் காயமடைந்தனர்.</p><p>

இந்த தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும், கப்பலில் இருந்த ஆறு இந்தியர்களின் நிலைமை குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.
</p><p></p><p>சோமாலிய அதிகாரிகள், இந்த கடத்தல்காரர்கள் ஏப்ரல் மாதம் கைப்பற்றப்பட்ட M/V Sward கப்பல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கின்றனர். அந்த கப்பலும் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாக கடல் பாதுகாப்பு அறிக்கைகள் கூறுகின்றன.
</p><p>
இந்த சம்பவம், சோமாலிய கடற்கரையில் மீண்டும் கடத்தல் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T15:36:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வினாடிக்கு 25,000 கி.மீ அதிவேக நட்சத்திரம் கண்டுபிடிப்பு - ஐன்ஸ்டீன் கோட்பாட்டை சோதிக்க வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fastest-star-found-near-black-hole-1787238259"></link>
            <id>https://news.lankasri.com/article/fastest-star-found-near-black-hole-1787238259</id>
            <summary type="text">Scientists found the world’s fastest star: வானியலாளர்கள் மிக வேகமான நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

Star S301வானியலாளர்கள், Milkyway விண்மீன் மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>Scientists found the world’s fastest star: வானியலாளர்கள் மிக வேகமான நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
</p><h2>
Star S301</h2><p>வானியலாளர்கள், Milkyway விண்மீன் மண்டலத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே அதிவேக நட்சத்திரத்தை (Star S301) கண்டறிந்துள்ளனர்.
</p><p>
இந்த நட்சத்திரம், நமது மில்கிவே விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள Sagittarius A* எனப்படும் மிகப்பெரிய கருந்துளையைச் சுற்றி, வினாடிக்கு 15,500 மைல்கள் (சுமார் 25,000 கி.மீ) வேகத்தில் பயணிக்கிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3c6c098-9662-48c2-b727-1088e98950ab/26-6a8717755b6e3.webp' /></p><h2>ஒளியின் வேகத்தை விட...</h2><p>இது ஒளியின் வேகத்தை விட 8 சதவீதம் அதிக வேகம் ஆகும்.
</p><p>S301 நட்சத்திரம், வெறும் 8.7 ஆண்டுகளில் கருந்துளையைச் சுற்றி ஒரு முழு சுற்றை முடிக்கிறது. அதன் பாதை மிகவும் நீளமான elliptical orbit ஆகும். மிக அருகில் வரும் போது, அது கருந்துளைக்கு சுமார் 1.8 பில்லியன் கி.மீ நெருக்கமாக வருகிறது.
</p><p></p><h2>ஐன்ஸ்டீன் கோட்பாட்டை சோதிக்க வாய்ப்பு</h2><p>இந்த கண்டுபிடிப்பு, ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பு கோட்பாட்டை (General Relativity) சோதிக்க ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக, “Frame Dragging” எனப்படும் நிகழ்வை, கால-விண்வெளி அமைப்பை இழுத்துச் செல்லும் விளைவுகளை ஆராய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
</p><h2>
கண்டுபிடிப்பு விவரங்கள்:
</h2><ul><li>
S301 நட்சத்திரம் சூரியனை விட 1.5 மடங்கு நிறை (mass) கொண்டது.
</li><li>
சூரியனை விட 5 மடங்கு பிரகாசமானது.
</li><li>
2017 முதல் 2023 வரை சேகரிக்கப்பட்ட தரவுகள் மூலம், ESO-வின் GRAVITY கருவி பயன்படுத்தி கண்டறியப்பட்டது.</li></ul><p></p><p>ஆராய்ச்சியாளர்கள், இது முன்பு இரட்டை நட்சத்திர அமைப்பில் இருந்திருக்கலாம் என்றும், கருந்துளை அதை பிரித்து, S301-ஐ பிடித்துக்கொண்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.
</p><p>
அடுத்த முக்கியமான வாய்ப்பு 2031-ல் கிடைக்கும். அப்போது S301 மீண்டும் கருந்துளைக்கு மிக அருகில் வரும். ESO-வின் Extremely Large Telescope மூலம் அதன் இயக்கத்தை மிகத் துல்லியமாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த கண்டுபிடிப்பு, கருந்துளையின் சுழற்சி வேகத்தை நேரடியாக அளவிடும் வாய்ப்பை வழங்குவதால், வானியலின் வரலாற்றில் மிகப் பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T15:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு திட்டங்களை பரப்பும் வீடியோவிற்கு ரூ.1 லட்சம் - வாரி வழங்கும் பீகார் அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bihar-to-pay-creators-lakh-for-govt-scheme-video-1787236482"></link>
            <id>https://news.lankasri.com/article/bihar-to-pay-creators-lakh-for-govt-scheme-video-1787236482</id>
            <summary type="text">bihar to pay creators for government scheme video: அரசு திட்டங்களை பரப்பும் வீடியோவிற்கு ரூ.1 லட்சம் வரை வழங்க பீகார் அரசு முன்வந்துள்ளது.

அரசு திட...</summary>
            <content type="html"><![CDATA[<p>bihar to pay creators for government scheme video: அரசு திட்டங்களை பரப்பும் வீடியோவிற்கு ரூ.1 லட்சம் வரை வழங்க பீகார் அரசு முன்வந்துள்ளது.
</p><h3>
அரசு திட்டங்களை பரப்பும் வீடியோவிற்கு பணம் </h3><p>

முன்னதாக அரசு தங்களது திட்டங்கள் மற்றும் சாதனைகளை நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடங்கங்களில் மட்டுமே விளம்பரப்படுத்தி வந்தது.</p><p> 

இளைய தலைமுறையினர் சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்தி வருவதால், தற்போது சமூக ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeaf4c69-31e3-4280-ae10-e660251d5f02/26-6a8710843c67f.webp' /></p><p> 

இதே போல் அரசின் நலத்திட்டங்கள் குறித்து வீடியோ வெளியிடும் சமூகஊடக படைப்பாளிகளுக்கு பீகார் மாநில அரசு பணம் வழங்க உள்ளது. </p><p>

இதில் அரசின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான வீடியோக்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு 1 லட்சம் பார்வைகளுக்கும், சமூக ஊடகப் படைப்பாளிகளுக்கு ரூ.10,000 வழங்கும். ஒரு வீடியோவிற்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.&nbsp;</p><p></p><p>

மாநில அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட சமூகஊடக பக்கங்கள் மற்றும் சேனல்கள் மட்டுமே இதில் பங்குபெற முடியும்.
</p><p>
வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் நிறைவடைந்த பின்னரே அதற்கான பார்வைகளை சரிபார்த்து அரசு பணத்தை வழங்கும்.
</p><p>
பிரிவுகள், தகுதி நிபந்தனைகள், கட்டண விதிகளை விவரிக்கும் ஒரு விரிவான அறிவிப்பை, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிடும் என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T14:36:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடுகடத்தப்பட்ட ரஷ்யர்களுக்காக..ஜேர்மன் உளவு நிறுவனம் செய்துள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-spy-agency-hotline-for-exiled-persons-1787234958"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-spy-agency-hotline-for-exiled-persons-1787234958</id>
            <summary type="text">ஜேர்மனியின் உள்நாட்டு உளவு நிறுவனமானது நாடு கடத்தப்பட்ட குழுக்களுக்காக பிரத்யேக உதவி எண்ணை நிறுவியுள்ளது. 

நாட்டிற்குள் வெளிநாட்டு உளவாளிகளால் அச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் உள்நாட்டு உளவு நிறுவனமானது நாடு கடத்தப்பட்ட குழுக்களுக்காக பிரத்யேக உதவி எண்ணை நிறுவியுள்ளது.</p><p> 

நாட்டிற்குள் வெளிநாட்டு உளவாளிகளால் அச்சுறுத்தல், கண்காணிப்பு அல்லது உடல்ரீதியான வன்முறையை எதிர்கொள்ளும் நாடு கடத்தப்பட்ட குழுக்களுக்காக, ஜேர்மனி உள்நாட்டு உளவு நிறுவனம் பிரத்யேக எண்ணை நிறுவியுள்ளது.&nbsp;</p><h2>உளவுத்துறைகளுக்கு&nbsp;புதிய அதிகாரங்கள் </h2><p>

இணையவழி மற்றும் கலப்புத் தாக்குதல்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில், தகவல் தொடர்புகளை ஊடுருவிப் பார்ப்பதற்கும் வெளிநாட்டு எதிரிகளின் நடவடிக்கைகளை முடக்குவதற்கும், உளவுத்துறைகளுக்கு புதிய அதிகாரங்களை வழங்க ஜேர்மனி முயன்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e41e2be-0725-428a-b023-a9de27223a35/26-6a870b89572c3.webp' /></p><p></p><p>



இந்த சூழலில், ஜேர்மனியில் தஞ்சம் புகுந்த தனிநபர்களுக்கான உதவி எண்ணை உள்நாட்டு உளவு நிறுவனம் நிறுவியுள்ளது.</p><p> 

இதில் ஈரான் மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் ரஷ்யாவில் இருந்தும் வரும் அச்சுறுத்தல்களுக்கு முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. </p><p>



இதனை விளம்பரப்படுத்தும் ஒரு சிற்றேட்டை, அரசியலமைப்புப் பாதுகாப்பிற்கான கூட்டாட்சி அலுவலகம் வெளியிட்டது.&nbsp;</p><h2>புகாரளிக்க ஊக்குவிப்பு </h2><p>

நாட்டிற்குள் வெளிநாட்டு உளவாளிகளால் அச்சுறுத்தல், கண்காணிப்பு அல்லது உடல்ரீதியான வன்முறையை எதிர்கொள்ளும் நாடு கடத்தப்பட்ட குழுக்கள் மற்றும் அரசியல் அதிருப்தியாளர்களுக்காக இது செயல்முறைப்படுத்தப்பட உள்ளது. </p><p>

இத்திட்டத்தின் கீழ், அரசால் ஆதரிக்கப்படும் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஐரோப்பாவில் செயல்படும் வெளிநாட்டு உளவாளிகளின் வலையமைப்புகளை உளவுத்துறை ஆய்வாளர்கள் அடையாளம் காணவும், வரைபடமாக்கவும் மற்றும் முறியடிக்கவும் உதவும் வகையில், சம்பவங்களை புகாரளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். </p><p>


மேலும் இதுகுறித்த BfV-யின் சிற்றேட்டில், 'பாதிக்கப்பட்ட தனிநபர்கள் வழங்கும் தகவல்கள், நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு நேரடியாக உதவக்கூடும். தீவிர அச்சுறுத்தல்களை முறியடிக்கவும் உதவக்கூடும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03a59f82-0caf-46f2-9067-57f50f33eb40/26-6a870b888efa9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T14:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பார்வையற்றோருக்கான AI கண்ணாடி - நைஜீரிய இளைஞர் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nigerian-youth-builds-ai-glasses-for-blind-1787234298"></link>
            <id>https://news.lankasri.com/article/nigerian-youth-builds-ai-glasses-for-blind-1787234298</id>
            <summary type="text">Nigerian youth builds AI Glasses for blind: பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.AI கண்ணாடிநைஜீரியாவின் கானோ நகரத்தைச் சேர்ந்த 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nigerian youth builds AI Glasses for blind: பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.</p><h2>AI கண்ணாடி</h2><p>நைஜீரியாவின் கானோ நகரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் கலீஃபா அமினு (Khalifa Aminu), பார்வையற்றோர் மற்றும் குறைந்த பார்வையுடையோருக்காக புதிய AI கண்ணாடி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
</p><p>
இந்த கண்ணாடி, தடைகளை கண்டறிந்து, பயனாளியின் இருப்பிடத்தை (location) கண்காணித்து, அவர்களுடன் பேசும் திறனையும் கொண்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e053b1c-1af9-466b-bad4-f624eb1a425c/26-6a8707fbcd784.webp' /></p><p>அமினு தனது கண்டுபிடிப்பை சமூக வலைதளமான X-ல் வெளியிட்டார். “இந்த AI கண்ணாடி, சென்சார்கள் மற்றும் GPS தொழில்நுட்பத்தை இணைத்து, பார்வையற்றோர் சுயமாகச் செல்ல உதவும்,” என்று அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><h2>
முக்கிய அம்சங்கள்:
</h2><p>
முன் உள்ள தடைகளை கண்டறிந்து எச்சரிக்கை வழங்கும்.
</p><p>
GPS மூலம் பயனாளியின் இருப்பிடத்தை அறிய உதவும்.</p><p>

பயனாளர் தவறி வழி தவறினால், அவர்களின் இருப்பிடத்தை WhatsApp அல்லது Email மூலம் குடும்பத்தினருக்கு அனுப்பும்.
</p><p>
AI மற்றும் voice interaction மூலம், சுற்றுப்புறத்தை விளக்கிக் கூறும் திறன்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I created an AI Smart Glass to help blind people walk without a cane or a guide 👓 <br>But this is not like the smart glasses people are used to seeing<br><br>Because this Glass combines AI, sensors, and GPS to help the user detect things in front of them, avoid obstacles, and know their… <a href="https://t.co/1O2hvfcz3S">pic.twitter.com/1O2hvfcz3S</a></p>&mdash; khalifa aminu (@inventorkhalifa) <a href="https://x.com/inventorkhalifa/status/2090001916977668257?ref_src=twsrc%5Etfw">August 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அமினு தனது சமூகத்தில் பார்வையற்றோர் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பார்த்து இந்த யோசனையை உருவாக்கினார். ஆரம்பத்தில், குறைந்த செலவில் கிடைக்கும் எலக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தி prototype உருவாக்கினார்.</p><p> பார்வையற்ற ஒருவர் இதைப் பயன்படுத்தி கருத்துக்களை வழங்கியதால், கண்ணாடி வடிவமைப்பில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டன.
</p><p>
முதலில், எச்சரிக்கை ஒலி (beep) மட்டுமே வழங்கிய prototype, தற்போது AI, GPS, voice interaction ஆகியவற்றை இணைத்துள்ளது. இதனால், பயனாளி தடைகளைத் தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்தைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.</p><p>

நைஜீரியாவின் National Commission for Persons with Disabilities மற்றும் Kano Patriotic Front ஆகியவை அமினுவின் கண்டுபிடிப்புக்கு ஆதரவு அளித்துள்ளன. இந்த கண்டுபிடிப்பு, பார்வையற்றோரின் வாழ்க்கையை எளிதாக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T14:09:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 டிரில்லியன் டொலரை கடந்த அமெரிக்கா கடன் - டிரம்ப் ஆட்சியில் 2 மடங்கு உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-debt-crosses-40-trillion-in-1st-time-1787232008"></link>
            <id>https://news.lankasri.com/article/us-debt-crosses-40-trillion-in-1st-time-1787232008</id>
            <summary type="text">us debt crosses 40 trillion debt: அமெரிக்காவின் கடன் முதல்முறையாக 40 டிரில்லியன் டொலரை கடந்துள்ளது.

40 டிரில்லியன் டொலரை கடந்த அமெரிக்கா கடன்

அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>us debt crosses 40 trillion debt: அமெரிக்காவின் கடன் முதல்முறையாக 40 டிரில்லியன் டொலரை கடந்துள்ளது.
</p><h3>
40 டிரில்லியன் டொலரை கடந்த அமெரிக்கா கடன்
</h3><p>
அமெரிக்காவிற்கு உள்ள கடன்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா கருவூலத் துறை வெளியிட்டுள்ளது. </p><p>

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் முதன்முதலில் பதவியேற்ற கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவின் கடன் 19.95 டிரில்லியன் டொலராக இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7843746f-91fb-46fe-a8f6-70c5478321c5/26-6a86ff0aa6118.webp' /></p><p>
தற்போது இந்த கடன்தொகை இரட்டிப்பாகி 40.047 டிரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. </p><p>

ஒட்டுமொத்த கடன் தொகையில் 32.266 டிரில்லியன் டொலர் பொதுக் கடனாகவும்,7.782 டிரில்லியன் டொலர் அரசாங்கங்களுக்கு இடையேயான கடனாகவும் உள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 39 டிரில்லியன் டொலராக இருந்த கடன், அடுத்த 5 மாதங்களில் ஒரு டிரில்லியன் டொலர் உயர்ந்து 40.047 டிரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.</p><p> 

கொரோனா கால நிவாரணங்களுக்காக பெருமளவில் கடன் வாங்கப்பட்டது. ராணுவ செலவுகள், மூத்த குடிமக்களுக்கான சமூக பாதுகாப்பு, சுகாதார பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அதிகளவில் கடன் வாங்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன் மூலம், அமெரிக்காவில் தனிநபர் கடன் சுமார் 1,17,000 டொலராக உள்ளது.

கடன் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்க சந்தையில் வட்டி விகிதங்களும் பணவீக்கமும் உயர்ந்து, சாமானிய மக்களின் வீட்டு வாடகை உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:20:17+00:00</updated>
        </entry>
    </feed>
