<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-01T08:48:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஒருவர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-ex-pm-edouard-balladur-passed-away-1788249879"></link>
            <id>https://news.lankasri.com/article/france-ex-pm-edouard-balladur-passed-away-1788249879</id>
            <summary type="text">One of France&#039;s prime ministers has died, current Prime Minister Sébastien Lecornu says: பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பிரான்சின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>One of France's prime ministers has died, current Prime Minister Sébastien Lecornu says: பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பிரான்சின் இந்நாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
</p><p>

பிரான்சின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான Edouard Balladur மரணமடைந்துள்ளதாக பிரான்ஸ் இந்நாள் பிரதமரான செபாஸ்டியன் லெக்கார்னு தெரிவித்துள்ளார்.</p><h3>

பிரான்ஸ் முன்னாள் பிரதமர் மரணம்</h3><p>

Edouard Balladur, 1993ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் பிரதமராக பதவி வகித்தவர் ஆவார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1267a0ab-e067-46a9-af32-9f5a82ffbe50/26-6a968718c91d1.webp' /></p><p>
இந்நிலையில், சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன், Edouard Balladur தனது 97ஆவது வயதில் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

மறைந்த பிரதமருக்கு புகழாரம் சூட்டியுள்ள செபாஸ்டியன், பிரான்ஸ் வரலாற்றுடன் 50 ஆண்டுகள் தொடர்புடையவரான Edouard Balladur, அரசியல் வட்டாரத்தில் பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் முன்மாதிரியாக நிலைத்திருப்பார் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T08:04:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியா செல்லும் முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-to-visit-uk-sep-10-attract-investments-1788240744"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-to-visit-uk-sep-10-attract-investments-1788240744</id>
            <summary type="text">cm vijay to visit uk in september 10 for attract investments: முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay to visit uk in september 10 for attract investments: முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><h3>

பிரித்தானியா செல்லும் முதல்வர் விஜய் </h3><p>

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள முதல்வர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/881748e4-cd19-49a4-9ac9-be7daf1f5f13/26-6a96636ac8f79.webp' /></p><p> 

சமீபத்தில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p></p><p>

ஆனால், பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிட்டப்பட்டதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள், அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கு செல்லும் என தொழில்துறையினர் கவலை தெரிவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/643764c6-8bb1-45f4-b3c0-13798ce09383/26-6a96636a1a167.webp' /></p><p>

இந்நிலையில், முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p> 

செப்டம்பர் 16 ஆம் திகதி வரை முதல்வர் விஜய் பிரித்தானியாவில் இருந்து, தொழில்துறையினர் மற்றும் பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a46aaad-2417-4acf-aff0-7f6c6842ce4f/26-6a96636b7b52c.webp' /></p><p> 

இதே போல், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு, வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி தைவானில் நடைபெற உள்ள செமி கண்டக்டர், செயற்கை நுண்ணறிவு சிப் உள்ளிட்ட தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் செமிகான் மாநாட்டில் கலந்து கொண்டு முதலீடுகளை ஈர்க்க உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T08:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி வெற்றி பெற்றால்... ஜேர்மன் சேன்ஸலரின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/merz-warns-if-afd-won-damage-to-eastern-states-1788249561"></link>
            <id>https://news.lankasri.com/article/merz-warns-if-afd-won-damage-to-eastern-states-1788249561</id>
            <summary type="text">Election victory for AfD would do serious damage to the eastern German state, says Chancellor Friedrich Merz: எதிர்வரும் மாகாணத் தேர்தலில் புலம்பெயர்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Election victory for AfD would do serious damage to the eastern German state, says Chancellor Friedrich Merz: எதிர்வரும் மாகாணத் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி வெற்றி பெறுமானால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.</p><p>


ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.
</p><p>
அந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
</p><h3>
ஜேர்மன் சேன்ஸலரின் எச்சரிக்கை</h3><p>

இந்நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி அந்தத் தேர்தலில் வெற்றி பெறுமானால் அது அந்த மாகாணத்துக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f3f1d19-4708-4ebd-9e86-8b1cc86c09c4/26-6a9685db2560d.webp' /></p><p>
குறிப்பாக, Saxony-Anhalt மாகாணத்தின் பிரீமியர் AfD கட்சியைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், அம்மாகாணத்தில் புதிய தொழிற்சாலைகள் அல்லது தொழில்களைத் துவக்க சர்வதேச முதலீட்டாளர்கள் விரும்பமாட்டார்கள் என்று கூறியுள்ளார் மெர்ஸ்.&nbsp;</p><p></p><p>
ஆகவே, தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் Saxony-Anhalt மாகாணம் சிக்குவதை தடுக்க எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்றும் கூறியுள்ளார் மெர்ஸ்.
</p><p>
அதற்காக, தான் இந்த வாரம் Saxony-Anhalt மாகாணத்திற்கு நேரடியாகச் சென்று, யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யாமலிருக்கும் அம்மாகாண வாக்காளர்களை AfD கட்சிக்கு வாக்களிக்காமல் தடுக்கும் வகையில் அவர்களிடம் பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T07:59:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுபாஷ் சந்திராவின் ரூ 22,000 கோடி கடன் ரத்து: இடைக்காலத் தடை விதித்த 5 பேர் கொண்ட அமர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/subhash-chandra-repayment-plan-1788248059"></link>
            <id>https://news.lankasri.com/article/subhash-chandra-repayment-plan-1788248059</id>
            <summary type="text">5-member bench stays Subhash Chandra&#039;s repayment plan: சுபாஷ் சந்திராவின் கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு 5 பேர் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை....</summary>
            <content type="html"><![CDATA[<p>5-member bench stays Subhash Chandra's repayment plan: சுபாஷ் சந்திராவின் கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு 5 பேர் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை.
</p><p>ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சுபாஷ் சந்திரா முன்வைத்த ரூ. 6.5 கோடி கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த முந்தைய உத்தரவுக்கு, தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/024ce577-4d4c-44f9-b94d-ee2377273f23/26-6a967ffd7623a.webp' /></p><p> </p><p>முடிவை நிர்ணயிக்கும் நடுவர் (tie-breaker judge) தெரிவித்த கருத்து பெரும்பான்மை கருத்து அல்ல என்றும், அது வழக்கின் இறுதி உத்தரவு அல்ல என்றும் NCLT அமர்வு கூறியுள்ளது. </p><p>

ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் கௌரவத் தலைவரான சுபாஷ் சந்திரா, ஒப்புக்கொண்ட ரூ.22,007 கோடி கடனுக்கு சமர்ப்பித்த ரூ.6.5 கோடி திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில், </p><p>தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) டெல்லி அமர்வின் மூன்று உறுப்பினர்களிடையே ஏற்பட்ட இழுபறிக்குப் பிறகு, இந்த வழக்கை செப்டம்பர் 1 அன்று விசாரிப்பதற்காக, தீர்ப்பாயம் திங்களன்று ஐந்து பேர் கொண்ட அமர்வை அமைத்தது.</p><p> இந்த அமர்வில் நீதித்துறை உறுப்பினர்களான அனுபிந்தர் சிங் கிரேவால், பச்சு வெங்கட் பலராம் தாஸ் மற்றும் மகேந்திர கண்டேல்வால் ஆகியோரும், தொழில்நுட்ப உறுப்பினர்களான அதுல் சதுர்வேதி மற்றும் ரவீந்திர சதுர்வேதி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.</p><p></p><p> </p><p>இந்த விவகாரத்தில் பெரும்பான்மைக் கருத்து எதுவும் எழவில்லை என்றும், அதனால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் தீர்ப்பாயத்தின் அசல் அமர்வு கூறியது. </p><p>கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவை சந்திராவின் திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததோடு, அதனைத் தீர்ப்பாயம் நிராகரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தன. </p><p>அத்திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட மதிப்பானது, சந்திராவின் சொத்து மதிப்பில் வெறும் 0.028 சதவீதம் மட்டுமே என்றும் அவர்கள் தெரிவித்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T07:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பனிச்சரிவுக்கு காரணம் என்ன? வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/weatherman-explains-reason-for-nepal-glacier-slide-1788247285"></link>
            <id>https://news.lankasri.com/article/weatherman-explains-reason-for-nepal-glacier-slide-1788247285</id>
            <summary type="text">delta weatherman hemachandran explains reason behind nepal glacier slide: நேபாளத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு என்ன காரணம் என வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>delta weatherman hemachandran explains reason behind nepal glacier slide: நேபாளத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு என்ன காரணம் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.</p><h3> 

நேபாளத்தில் பனிச்சரிவுக்கு காரணம் என்ன? </h3><p>

சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aab2c338-3cc5-4a73-bc1f-a058ccdeaa2b/26-6a967cf77deb5.webp' /></p><p> 

சுமார் 4,462 பேர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 

இதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நீர்மின் நிலைய சுரங்கங்களில் சுமார் 900 பணியாளர்கள் சிக்கியுள்ளதாவும், அவர்களை மீட்க முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p> 

முதலில் நிலநடுக்கம் காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பனிச்சரிவு காரணமாகவே, பனிப்பாறைகள் உருகி, ஆற்றில் நீர்வரத்து பாரிய அளவில் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

வெள்ளப்பெருக்கில் நீர் மட்டுமில்லாமல், சேறுகள், வீடு, பாறைகள் அடித்து வரப்பட்டுள்ளதால் மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. </p><p>

வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த பனிப்பாறை சரிவு நிகழ்ந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். </p><p>

இந்நிலையில் இந்த வெள்ளப்பெருக்கு குறித்து விரிவாக பேசிய டெல்டா வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன், நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்கு காரணம் என்ன? இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு எதனால் நடந்தது? இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா?எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய பேராபத்துகள் என்னென்ன என்பது குறித்தும் பேசியுள்ளார். </p><p>

மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க</p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LTUXPhqZuUQ?start=13" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T07:21:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா இடைத்தேர்தல்கள்: பிரதமர் மார்க் கார்னி கட்சி அமோக வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/carney-liberal-party-sweeps-all-3-byelections-1788243776"></link>
            <id>https://news.lankasri.com/article/carney-liberal-party-sweeps-all-3-byelections-1788243776</id>
            <summary type="text">Liberal party sweeps all three byelections: கனடா இடைத்தேர்தல்கள் மூன்றிலும் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.


திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Liberal party sweeps all three byelections: கனடா இடைத்தேர்தல்கள் மூன்றிலும் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.</p><p>


திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று இடைத்தேர்தல்களிலும் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி, முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
</p><h3>
பிரதமர் மார்க் கார்னி கட்சி அமோக வெற்றி
</h3><p>
திங்கட்கிழமையன்று, ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், மூன்றிலுமே பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dcfc344-8432-4e49-8b7c-3b416556ea15/26-6a966f423c4ec.webp' /></p><p>
தேர்தலில், லிபரல் கோட்டைகளான ஒன்ராறியோவின் Beaches–East York தொகுதியையும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் North Vancouver–Capilano தொகுதியையும் லேபர் கட்சி தக்கவைத்துக்கொண்டுள்ளதுடன், பியர் பொய்லியேவின் கன்சர்வேடிவ் கட்சியிடமிருந்து கியூபெக்கின் Chicoutimi–Le Fjord தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த தொடர் ராஜினாமாக்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை இரவு நிலவரப்படி, ஆளும் லிபரல் கட்சி 170 இருக்கைகளைக் கொண்டிருந்தது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், தற்போது இந்த மூன்று தொகுதிகளில் கிடைத்துள்ள வெற்றியால் லிபரல் கட்சிக்கு 173 இருக்கைகள் கிடைத்துள்ளன.

173 இருக்கைகள் என்பது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறத் தேவையானதை விட ஒரு இடம் கூடுதலாகும்.
</p><p>
ஆக, இந்தப் பெரும்பான்மையுடன், லிபரல் கட்சியினர் எதிர்க்கட்சியால் கவிழ்க்கப்படும் அபாயம் இன்றி 2029 வரை ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T07:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[43 பந்தில் 111 ரன் விளாசிய ஹெட்மையர்! 16 ஓவர்களில் 185 ஓட்டங்கள்..நொறுங்கிய பூரனின் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shimron-hetmyer-111-in-43-balls-cpl-t20-1788246045"></link>
            <id>https://news.lankasri.com/article/shimron-hetmyer-111-in-43-balls-cpl-t20-1788246045</id>
            <summary type="text">Shimron hetmyer 111 runs in 43 balls: கரீபியன் லீக் போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடி சதம் விளாசினார். 

ஷிம்ரான் ஹெட்மையர் சதம் விளாச, கயானா அமே...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shimron hetmyer 111 runs in 43 balls: கரீபியன் லீக் போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடி சதம் விளாசினார். </p><p>

ஷிம்ரான் ஹெட்மையர் சதம் விளாச, கயானா அமேசான் வாரியர்ஸ் அணி கரீபியன் லீக் போட்டியில் அபார வெற்றி பெற்றது.
</p><h2>
ஹெட்மையர் ருத்ரதாண்டவம் </h2><p>குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35e93b85-6e06-413d-97b7-c18efc826594/26-6a9678208f40a.webp' />&nbsp;</p><p></p><p> 

முதலில் களமிறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில், தொடக்க வீரர்கள் சொதப்ப ஷிம்ரான் ஹெட்மையர் (Shimron Hetmyer) ருத்ரதாண்டவம் ஆடினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2343c08d-e563-4603-9d75-7b4d182a070b/26-6a96789326881.webp' /></p><h2>
ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ்&nbsp;தோல்வி</h2><p>ரோமாரியோ ஷெப்பர்ட் அவருடன் கைகோர்க்க, கயானா அணி 16 ஓவர்களில் 185 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p>
ஷிம்ரான் ஹெட்மையர் 43 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 111 ஓட்டங்கள் விளாசினார். ஷெப்பர்ட் 7 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசினார். </p><p>

பின்னர் ஆடிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்களில் 172 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. அலெக்ஸ் ஹால்ஸ் 55 (24), நிக்கோலஸ் பூரன் 43 (16) ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bed940d-0f7d-4619-b79e-b35b430f507c/26-6a96796b9cc0b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9e98b08-3803-4503-a0d2-cc9cb3e83001/26-6a96781fd8e21.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed01b5a9-3fa6-472b-a569-43d258e911ce/26-6a967821497d1.webp' />&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T06:59:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்... இன்னொரு அவுஸ்திரேலியர் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/second-australian-found-alive-1788245791"></link>
            <id>https://news.lankasri.com/article/second-australian-found-alive-1788245791</id>
            <summary type="text">Second Australian is found alive in Nepal: நேபாளத்தில் இரண்டாவது அவுஸ்திரேலியர் உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Second Australian is found alive in Nepal: நேபாளத்தில் இரண்டாவது அவுஸ்திரேலியர் உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்திற்குப் பிறகு, இரண்டாவது அவுஸ்திரேலியர் ஒருவர் உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a786d89-ddc4-428d-a43b-e66381fefbda/26-6a9677230b825.webp' /></p><p>
</p><p>நேபாள வெள்ளத்தில் காணாமல் போன அவுஸ்திரேலியர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டதை அல்பானீஸ் அரசாங்கம் ஏபிசி செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியது. </p><p>அடையாளம் வெளியிடப்படாத அந்த அவுஸ்திரேலியர், தூதரக அதிகாரிகளிடமிருந்து உதவிகளைப் பெற்று வருவதோடு, தனது குடும்பத்தினருடனும் பேசியுள்ளார்.</p><p></p><p> </p><p>வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமானதாகக் கருத்தப்படும் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை தற்போது 42 ஆக உள்ளது. வெள்ளப்பெருக்கில் மொத்தம் 3,925 பேர் காணாமல் போயுள்ள நிலையில், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளது. </p><p>26 வயதான காரா செவரினோ என்பவர் நேபாள வெள்ளத்தில் சிக்கி, பத்திரமாக மீட்கப்பட்ட முதல் அவுஸ்திரேலியர் ஆவார். சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்குள் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து அவர் மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d0832b4-2278-4fc7-9a58-b892e4f3838a/26-6a9677225312d.webp' /></p><p> </p><p>இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அவுஸ்திரேலிய தூதரக ஊழியர்களுடன் அவரது புகைப்படம் வெளியானது.</p><p> சம்பவத்தின் போது லாங்டாங் தேசிய பூங்காவிற்கு அருகில் செவெரினோ இருந்துள்ளார்; பேரழிவிலிருந்து தப்பிக்க டிராக்டரில் சென்றுகொண்டிருந்த ஒரு குழுவினருடன் இணைந்து அவர் உயிர் பிழைத்தார். </p><p>காணாமல் போன அவுஸ்திரேலியர்களில் பலர், இந்து, பௌத்த, சமண மதங்களில் புனிதத் தலமாகக் கருதப்படும் கைலாச மலைக்கு யாத்திரை சென்றிருந்தனர். ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடைக்காலம், மலையேற்றத்திற்கு ஆண்டின் மிகவும் பிரபலமான பருவமாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T06:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்த நபர்: கவனம் ஈர்த்துள்ள ஒரு செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-family-pleads-french-authority-to-release-body-1788242693"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-family-pleads-french-authority-to-release-body-1788242693</id>
            <summary type="text">British family pleads with French authorities to release body of relative who died in Channel: பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் உயிரிழந்த நபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>British family pleads with French authorities to release body of relative who died in Channel: பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் உயிரிழந்த நபரின் உடலை ஒப்படைக்குமாறு பிரித்தானியக் குடும்பம் ஒன்று பிரான்ஸ் அதிகாரிகளைக் கோரியுள்ளது.</p><p>


பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்றின் முன் ஒரு கூட்டம் சீக்கியர்கள் நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சிகள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.</p><h3>

ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்த நபர்
</h3><p>
பிரான்சிலுள்ள Dunkirk நகரில் அமைந்துள்ள அந்த நீதிமன்றம் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அந்த நபர்கள் கையில் வைத்துள்ள பதாகைகளில் ஒரு சீக்கியரின் படம் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66d5e056-a562-4c9f-b4d0-53c319474e31/26-6a966b0681e7e.webp' /></p><p>
அவரது பெயர், ஜஸ்மீத் வத்வா (Jasmeet Wadhwa, 32). இந்த ஜஸ்மீத், தனது தாயாகிய ஹர்பன்ஸ் கௌர் வத்வாவுடன் (Harbans Kaur Wadhwa) ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றுள்ளார்.
</p><p>
ஏப்ரல் மாதம், பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், தன் தாய் கண் முன்னே உயிரிழந்துள்ளார் ஜஸ்மீத்.&nbsp;</p><p></p><h3>

கவனம் ஈர்த்துள்ள ஒரு செய்தி
</h3><p>
விடயம் என்னவென்றால், ஜஸ்மீத்தும் அவரது தாயும், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களிடமிருந்து தப்பி பிரான்சுக்கு வந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9776af37-f2f7-4154-8f11-cccd1133f751/26-6a96846d02857.webp' /></p><p>
அவர்கள் எங்கிருந்து புறப்பட்டவர்கள், ஏன் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றார்கள் என்பது தெரியவில்லை.
</p><p>
அப்படி ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி, பிரான்ஸ் வந்தடைந்த ஜஸ்மீத்தும் அவரது தாயும் சிறுபடகொன்றின் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, ஜஸ்மீத்தும், சூடான் நாட்டவர் ஒருவரும் ஆங்கிலக்கால்வாயில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்கள்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f8a850b-0f41-47fe-937b-ef4ad37c624a/26-6a96846dcb2d3.webp' /></p><p>
அதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல் பிரான்சுக்கே திரும்பக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஜஸ்மீத்தின் தாயும் பிரான்சுக்கே சென்றுள்ளார்.
</p><p>
இப்போது, பிரான்சில் வைக்கப்பட்டுள்ள ஜஸ்மீத்தின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு அவருடைய உறவினர்கள் பிரான்ஸ் அதிகாரிகளைக் கோரியுள்ளனர்.</p><p>

அதன் ஒரு பகுதியாகத்தான் Dunkirk நகரில் அமைந்துள்ள நீதிமன்றம் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் அவர்கள்.
</p><p>
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், ஜஸ்மீத்தின் உடலைக் கோரி பிரான்ஸ் சென்றுள்ளவர்கள், பிரித்தானியர்கள். அதாவது, பிரித்தானியக் குடியுரிமை பெற்ற சீக்கியர்கள்.
</p><p>
ஆக, ஜஸ்மீத்தின் உறவினர்கள் பிரித்தானியாவில் முறைப்படி அனுமதி பெற்று வாழ்ந்துவரும் நிலையில், ஜஸ்மீத் ஏன் முறைப்படி பிரித்தானியா வர விண்ணப்பிக்கவில்லை என்பது தெரியவில்லை.
</p><p>
இதற்கிடையில், ’one in, one out’ திட்டத்தின் கீழ் தன்னை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ளுமாறு ஜஸ்மீத்தின் தாய் பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
</p><p>
ஆனால், அவரிடம், அவர் ஆப்கன் நாட்டவர் என்பதற்கான அடையாள ஆவணமான Tazkira என்னும் ஆவணம் இல்லை.
</p><p>
ஆகவே, பிரித்தானிய உள்துறை அலுவலகம் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
</p><p>
இந்நிலையில்தான், ஜஸ்மீத்தின் உடலை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, பிரித்தானியாவிலிருக்கும் அவரது உறவினர்கள் பிரான்சுக்குச் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
</p><p>
பொதுவாக, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படுவதில்லை.
</p><p>
அவர்கள் உடலை ஒப்படைக்கக்கோரி அவர்களுடைய உறவினர்கள் இதுபோல் வெளிப்படையாக ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுவதில்லை.</p><p>

ஆகவேதான் இந்த செய்தி கவனம் ஈர்த்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T06:05:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போர்... எதிரிகளால் தூக்கிலிடப்படலாம் என அஞ்சும் விளாடிமிர் புடின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-fears-enemies-will-1788236221"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-fears-enemies-will-1788236221</id>
            <summary type="text">Putin fears enemies will hang him: எதிரிகள் தன்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள் எனப் பீதியடைந்த புடின்.

உக்ரைன் மீதான தனது இடைவிடாத போரை வெற்றி இல்லாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin fears enemies will hang him: எதிரிகள் தன்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள் எனப் பீதியடைந்த புடின்.
</p><p>
உக்ரைன் மீதான தனது இடைவிடாத போரை வெற்றி இல்லாமல் முடித்துக்கொள்வது தனது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று புடின் அஞ்சுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>தூக்கிலிட்டு விடுவார்கள்</h2><p>
</p><p>கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியுடன் தனது போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், தான் கொல்லப்படலாம் என்று புடின் தனது நெருங்கிய வட்டாரத்தினரிடம் கூறியதாகத் தகவல் கசிந்துள்ளது. </p><p>தி எகனாமிஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், பீதியடைந்த புடின், தான் டான்பாஸ் பகுதியின் கட்டுப்பாட்டை வெல்லவில்லை என்றால், அவர்கள் தன்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள் என்று தனக்கு ஆதரவான பெரும் கோடீஸ்வரர்களிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4d8124c-bad7-4659-8ecb-72ee323e3141/26-6a9651bfbd496.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, உக்ரைன் மீதான படையெடுப்பு தோல்வியடைந்துவிட்டதாகவும், அது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக நீடித்து ரஷ்யாவின் பொருளாதாரத்தைச் சீரழித்துவிட்டதாகவும் புடினின் முக்கிய கூட்டாளிகளும் கருதுகின்றனர்.
</p><p>இணையவழி சில்லறை விற்பனையாளர்களின் கிடங்குகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கி உக்ரைன் சமீபத்தில் நடத்திய முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்கள், பேரழிவுகரமான பெட்ரோல் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, போரின் விலையை புடினின் குடிமக்களுக்கு நேரடியாக உணர்த்தியுள்ளன.</p><p></p><p> </p><p>ஆனால் இதற்கு மிக மோசமான பதிலடி உறுதி என விளாடிமிர் புடின் மிரட்டல் விடுத்திருந்தாலும், புடின் ஒரு இக்கட்டான முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்டு, அதிலிருந்து வெளியேற ஆபத்தான வழியைத் தெரிவு செய்துள்ளதாக கிரெம்ளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>தீவிர நெருக்கடியில் சிக்கியுள்ள புடின், நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் மீது ஆவேசமாகப் பாய்வதன் மூலம் தனது அண்டை நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தில் உள்ளார். </p><p>இந்த நிலையில், உக்ரைன் மீதான தனது கொடூரமான போரை நிறுத்துமாறு நரேந்திர மோடி புடினிடம் வெளிப்படையாக கூறியதால், அவர் இன்று உலக அரங்கில் தலைகுனியும் நிலை ஏற்பட்டது.</p><h2>தீவிரப்படுத்துவதில் உறுதி</h2><p> </p><p>ரஷ்யாவின் மிக நெருக்கமான நட்பு நாடான இந்தியா, நாம் ஒரு முடிவில்லாத போரிலிருந்து போரின் முடிவை நோக்கி நகர வேண்டும் என கூறியுள்ளது. </p><p>இதில் கடும் கோபமடைந்த விளாடிமிர் புடின்,
தனது மொழிபெயர்ப்புக் கருவியை (earpiece) கழற்றி வீசிவிட்டு, பற்களைக் கடித்தவாறே, மிக்க நன்றி, பிரதமரே. நாங்கள் அந்தத் திசையில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்று பதிலளித்துள்ளார். </p><p>ரஷ்யாவிற்கு இந்தப் பேரழிவுகரமான போரினால் ஏற்படும் பெரும் இழப்புகள் இருந்தபோதிலும், புடின் மோதலைத் தீவிரப்படுத்துவதில் உறுதியாகத் தெரிகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7b3b109-f2a1-4ee5-831e-120c5b75526d/26-6a9651c07124b.webp' /></p><p> 2022-இல் உக்ரைன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கியதிலிருந்து, அவரது படைகளைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் பேர் உயிரிழந்தோ அல்லது காயமடைந்தோ போரில் இழக்கப்பட்டுள்ளனர். </p><p>எதிரிகளைப் பின்னுக்குத் தள்ளுவதற்கு இன்றியமையாததான, 50 கி.மீ அகலமுள்ள நகரங்களைக் கொண்ட பாதுகாப்பு அரணான, டான்பாஸின் எஞ்சிய பகுதியை முழுமையாகக் கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய இலக்காக மாறியுள்ளது. டான்பாஸ் பகுதியை அவர் கைப்பற்றும் வரையில் போர் நீடிக்கலாம் என்றே கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T05:35:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராண்ட் கேன்யன் வெள்ளப்பெருக்கு... காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/person-missing-in-grand-canyon-1788240496"></link>
            <id>https://news.lankasri.com/article/person-missing-in-grand-canyon-1788240496</id>
            <summary type="text">Desperate search for person missing in Grand Canyon: கிராண்ட் கேன்யனில் காணாமல் போன நபரைத் தேடும் பணி தீவிரம்.
கிராண்ட் கேன்யன் பகுதியில் ஏற்பட்ட கடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Desperate search for person missing in Grand Canyon: கிராண்ட் கேன்யனில் காணாமல் போன நபரைத் தேடும் பணி தீவிரம்.
</p><p>கிராண்ட் கேன்யன் பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், 80 மலையேற்ற வீரர்களும் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5baf0a5a-3c7d-4a06-b9fe-085d20411698/26-6a96627282380.webp' /></p><p>
</p><p>உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், ரம்மியமான பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால், கொலராடோ நதிக்கு அருகிலுள்ள பாதைகளில் இருந்து மலையேறுபவர்களும், சுற்றுலா செல்பவர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்.</p><p> இந்த நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கவும் அவர்களைக் கண்டறியவும், தேடுதல் குழுவினர் இரவு நேரப் பார்வைக் கண்ணாடிகள் மற்றும் பிற உபகரணங்களைப் பயன்படுத்தியதாக, திங்கள்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சம்பவ இடக் கட்டளை அதிகாரி டேவ் பிளாக் தெரிவித்தார். </p><p>சனிக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குள் 45 பேர் மீட்கப்பட்டனர்; ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் 37 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><p></p><p> அதேவேளையில், காணாமல் போன 15 மலையேற்ற வீரர்களைத் தேடும் பணியை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டனர். திங்கட்கிழமை முழுவதும் தேடுதல் பணிகள் தொடர்ந்த நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய பூங்காவின் அனுமதி முறையைப் பார்வையிட்டும், வாகனங்களின் பதிவு எண்களைச் சரிபார்த்தும் பூங்காப் பாதுகாவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். </p><p>இருப்பினும், திடீர் வெள்ளப்பெருக்கு பள்ளத்தாக்கிற்குள் செல்லும் ஒரேயொரு நீர்க் குழாயை கடுமையாக சேதப்படுத்தியதால் ஆபத்துகள் நீடித்தன, மேலும் இரவு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்தனர். </p><p>முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிராண்ட் கேன்யன் தேசியப் பூங்காவிற்குள் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஹொட்டல்களில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு அதிகாரிகள் தற்போது தடை விதித்துள்ளனர். </p><p>மேலும், ஆண்டு முழுவதும் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு அவசரகால நீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e92ffee5-f157-48b2-93ca-8cdbe348a793/26-6a966273368c8.webp' /></p><p> </p><p>கிராண்ட் கேன்யனின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு மலையேற்றம் செய்பவர்கள் இரவில் தங்கும் பிரபலமான விடுதிகள் மற்றும் முகாம் பகுதிகளைச் சுற்றி, கொலராடோ நதி பாயும் இடத்திற்கு அருகே பள்ளத்தாக்கின் ஆழத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. </p><p>செங்குத்தான சரிவுள்ள பாறைப் பகுதியில், வெறும் அரை மணி நேரத்திற்குள் சுமார் அரை முதல் ஒரு அங்குலம் வரை மழை பெய்துள்ளது. கிராண்ட் கேன்யன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் நிலப்பரப்பைச் சிதைத்துக்கொண்டு செல்வதை, மேலே இருந்த தொங்கு பாலத்திலிருந்து மலையேற்றப் பயணிகள் படம்பிடித்த காட்சிகள் மிகவும் பயங்கரமாக இருந்தன. </p><p>பழுப்பு நிற நீரில் பெரிய குப்பைக் குவியல்களும் மிதந்து கொண்டிருந்தன. பின்னர், அப்பகுதியிலிருந்து ஏராளமான பார்வையாளர்கள் ஹெலிகொப்டர் மூலம் வெளியேற்றப்பட்டனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T05:26:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் இருந்து இன்னொரு துயரமான செய்தி வெளிவரலாம்... சுரங்கத்தில் சிக்கிய 900 பேர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-search-hydropower-workers-1788233441"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-search-hydropower-workers-1788233441</id>
            <summary type="text">Nepal rescuers in search of hydropower workers: நேபாளத்தில் நீர்மின் தொழிலாளர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal rescuers in search of hydropower workers: நேபாளத்தில் நீர்மின் தொழிலாளர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
நேபாளத்தின் திரிசூலி ஆற்றின் ஓரத்தில் உள்ள, சேறு மூடியுள்ள சுரங்கத்தில் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் கிட்டத்தட்ட 900 தொழிலாளர்களின் குடும்பத்தினர், தங்கள் அன்புக்குரியவர்கள் உயிருடன் மீட்கப்படலாம் என்ற நம்பிக்கையைக் கைவிடாமல் உள்ளனர்.</p><h2>ஏழில் ஒருவர்</h2><p>
</p><p>சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களைச் 
 சென்றடைவதற்கான முக்கியமான வாய்ப்பு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்ற அச்சத்தில், மீட்புக் குழுவினர் திங்கட்கிழமையன்றும் கடுமையாக போராடினர்;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cdd56af-3794-40e7-aedc-b0321509dd71/26-6a9646e3a987c.webp' /></p><p> </p><p>மலைச்சரிவை வெடிவைத்துத் தகர்த்த அவர்கள், பின்னர் திரிசூலி-3A பகுதிக்குள் காற்று நுழையும் வழி செய்தனர். நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 939-ஐ எட்டியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ள நிலையிலேயே, நீர்மின் தொழிலாளர்கள் 900 பேர்கள் தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது.
</p><p>மேலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3,925 ஆக அந்த முகமை திருத்தியுள்ளது, அவர்களில் 592 பேர் வெளிநாட்டினர் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><p> காணாமல் போனவர்களில் ஏறக்குறைய ஏழில் ஒருவர் நீர்மின் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என நம்பப்படுகிறது. அவ்விடங்களிலிருந்து 279 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா திங்களன்று தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>சீன மற்றும் நேபாள இராணுவத்தினரைக் கொண்ட ஒரு சர்வதேசக் குழு இந்த மீட்பு நடவடிக்கையை முன்னின்று நடத்துகிறது, அதேவேளையில் இந்தியா, கொரியா மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர். </p><p>நேபாளம் நீர்மின்சக்தியை பெருமளவில் சார்ந்துள்ளதுடன், தனது மலைப்பாங்கான ஆற்றுப் படுகைகளில் இத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக செலவிட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட அல்லது கட்டுமானத்தில் இருந்த குறைந்தது 11 திட்டங்கள் வெள்ளத்தில் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b88c4db-4839-4481-9cbf-c75a0b709ec4/26-6a9646e45bd2a.webp' /></p><p> </p><p>இதனிடையே, மீட்புக் குழுவினர் வார இறுதியில் சுரங்கத்திற்குள் காற்று நுழையும் வகை செய்தனர், ஆனால் அது முன்னதாகவே செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று உள்ளே சிக்கியவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர். </p><p>திங்கள்கிழமை பகல், ஒரு நீர்மின் நிலையத்திற்குச் செல்லும் சுரங்கப்பாதைக்குள் ஒரு குழுவால் நுழைய முடிந்தது, ஆனால் அங்கு யாரும் இல்லாததைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.</p><h2>நான்கு உடல்கள்</h2><p> </p><p>இந்த நிலையில், நிலத்தடி தேடுதல் பணிகளில் நேபாள அதிகாரிகளுக்குத் தொலைதூரத்திலிருந்து உதவி வரும் அவுஸ்திரேலியப் பொறியாளர் அர்னால்ட் டிக்ஸ், சுரங்கப்பாதைகளைக் கண்டறிவதில் மீட்புக் குழுவினர் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறினார். </p><p>சேறு மூடியுள்ளதால், மீட்புக் குழுவினரால் சுரங்கப்பாதைகளை அடையாளம் காண முடியாமல் உள்ளது என்றும், 
அவை எங்கு அமைந்துள்ளன என்பதை அறிந்த பிறகு, அவற்றைச் சென்றடைவதற்கான சிறந்த வழியை மீட்புக் குழுவினரால் தீர்மானிக்க முடியும் என்றும்; பொதுவாக இதற்காக நிலத்தைத் தோண்டுவதும் பாறைகளை வெடிவைத்துத் தகர்ப்பதும் அவசியமாகிறது என்றார். </p><p>மட்டுமின்றி, மேலே கொட்டிய பெருமழையிலிருந்து நிலத்தடிச் சூழல் ஒருவிதப் பாதுகாப்பை அளித்திருக்கக்கூடும் என்பதால், நிலத்தடியில் சிக்கியுள்ளவர்கள் குறித்து தனக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13488f67-8c04-4e39-af55-565fe50abd07/26-6a9646e513c6b.webp' /></p><p> </p><p>ஆனால், சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 7 நாட்களாகியுள்ளதால், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் நிலை தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது. மேலும், ஒரு சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களுக்கு ஆக்ஸிஜன் வசதி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் எஞ்சிய பலரது நிலை மோசமாக இருக்கவும் வாய்ப்புள்ளது என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>இதனிடையே, மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், சேறு நிரம்பிய மூன்று சுரங்கப் பாதைகளிலிருந்து நான்கு உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்தது. </p><p>கடந்த புதன்கிழமை பேரழிவு ஏற்பட்டபோது, ​​சில தொழிலாளர்களால் உதவிக்கு அழைப்பு விடுக்க முடிந்தது. மேலும், தப்பிய மற்றவர்கள், தங்கள் சக ஊழியர்களில் பலர் இன்னும் சுரங்கங்களில் சிக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T03:29:10+00:00</updated>
        </entry>
    </feed>
