<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-08T20:28:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/over-600-flights-cancelled-in-uk-1788895899"></link>
            <id>https://news.lankasri.com/article/over-600-flights-cancelled-in-uk-1788895899</id>
            <summary type="text">Over 600 Flights Cancelled in Uk After air traffic control disruption: பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நுற்றுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Over 600 Flights Cancelled in Uk After air traffic control disruption: பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><h2> நுற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து</h2><p>பிரித்தானியாவில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p> இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பல விமான நிலையங்களில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">As of 1700 UTC, 625 flights have been canceled at airports in the UK following an earlier technical problem at NATS’ Shanwick ATC facility. <br><br>easyJet: 218<br>British Airways: 132<br>Ryanair 41<br>KLM 37<br>Eurowings 22 <a href="https://t.co/4hHZYmjFJv">pic.twitter.com/4hHZYmjFJv</a></p>&mdash; Flightradar24 (@flightradar24) <a href="https://x.com/flightradar24/status/2097372088193487276?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> Flightradar24 தரவுகள் படி, மாலை 6 மணி நிலவரத்தின் கீழ் பிரித்தானியாவில் 625 விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p> இதில், பிரிட்டிஷ் ஏர்வேஸின் 132 விமானங்கள் , ஈசிஜெட் நிறுவனத்தின் 218 விமானங்கள், ரயான்ஏர் நிறுவனத்தின் 41 விமானங்கள், கேஎல்எம் நிறுவனத்தின் 37 விமானங்கள் மற்றும் யூரோவிங்ஸ் நிறுவனத்தின் 22 விமானங்கள்&nbsp; ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p> யூரோ கட்டுப்பாட்டு அமைப்பின்(Eurocontrol) தரவுகள் படி, தெற்கு இங்கிலாந்தில் பறந்த 590 விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d91407-e2ba-444f-80ab-f85566943ab2/26-6aa0629c9dee5.webp' /></p><p> ஹீத்ரோ விமான நிலையத்தில் மட்டும் 132 விமான புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 199 விமானங்கள் தாமதம் செய்யப்பட்டுள்ளன.</p><p> இந்த விமான ரத்து மற்றும் தாமதத்தின் காரணமாக கிட்டத்தட்ட 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T19:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல்: புதிய உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/oil-price-surge-after-attacks-on-saudi-by-houthis-1788897385"></link>
            <id>https://news.lankasri.com/article/oil-price-surge-after-attacks-on-saudi-by-houthis-1788897385</id>
            <summary type="text"> Oil Price Surge After Attacks on Saudi by Houthis: மத்திய கிழக்கில் சவுதி அரேபியாவிற்கும் ஹவுதி படையினருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக கச்சா எண்ணெய...</summary>
            <content type="html"><![CDATA[<p> Oil Price Surge After Attacks on Saudi by Houthis: மத்திய கிழக்கில் சவுதி அரேபியாவிற்கும் ஹவுதி படையினருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.</p><h2> சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல்</h2><p>மத்திய கிழக்கில் நிலவி வரும் புவிசார் பதற்றங்களுக்கு மத்தியில் புதிய மோதலாக சவுதி அரேபியாவின் நகரங்களை குறி வைத்து ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p> தெற்கு சவுதி அரேபியாவின் நான்கு நகரங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் வான்வழி தளங்களை குறிவைத்து ஏமனின் ஹவுதி படையினர் பாலிஸ்டிக் ஏவுகணைகளை மற்றும் ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0de0638-bf95-47c2-a607-7a11ebdf4b6a/26-6aa0686b9ca40.webp' /></p><p> இந்த தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 73 பேர் காயமடைந்து இருப்பதாக சவுதி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அத்துடன் ஹவுதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏமனின் மரிப் (Marib) நகரை குறிவைத்து சவுதி படையினர் 4 வானவழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fc46eb8-f4eb-43b7-ba55-f83ea84a73eb/26-6aa0686c51499.webp' /></p><p></p><h2>அதிகரித்த கச்சா எண்ணெய் விலை</h2><p>
ஏற்கனவே உள்ள பதற்றங்களுக்கு மத்தியில் கூடுதலாக மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்த மோதல் காரணமாக பல வாரங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது.</p><p> பிரித்தானிய நேரப்படி காலை 7.30 மணிக்கு, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.25 டொலர்கள்(1.3%) உயர்ந்து 98.25 டொலராக விற்பனை செய்யப்பட்டது.</p><p> வர்த்தகத்தின் ஆரம்பத்தில் இந்த விலை 98.79 டொலராக உயர்ந்தது. இது ஜூலை 24ம் திகதிக்கு பிறகு பதிவான அதிகபட்ச மதிப்பாகும்.</p><p> கடந்த பிப்ரவரியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தொடங்கிய பிறகு கச்சா எண்ணெய் விலையானது கடும் ஏற்றங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T19:56:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் ஆளில்லா நீர்மூழ்கியை கைப்பற்றிய ஈரான்? வெளியான வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-media-reports-capture-of-unmanned-submarine-1788894679"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-media-reports-capture-of-unmanned-submarine-1788894679</id>
            <summary type="text">Iran media Reports Capture of Unmanned Submarine: நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.சிறைபிடிக்கப்பட்ட ஆளில்லா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran media Reports Capture of Unmanned Submarine: நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.</p><h2>சிறைபிடிக்கப்பட்ட ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்?</h2><p>ஈரானின் புரட்சிகர காவல் படையினரின் தகவலில், ஹார்முஸ் ஜலசந்தியில் வைத்து ஆளில்லா நீர்முழ்கி கப்பல் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.</p><p> ஈரானிய இராணுவத்தின் கூற்றுப்படி இந்த ஆளில்லா நீர்மூழ்கி கப்பலானது ஆண்டுரில்(Anduril) நிறுவனத்தின் 'Dive LD' என்ற தன்னாட்சி நீர்மூழ்கி கப்பல் என தெரியவந்துள்ளது.</p><p>செவ்வாய்க்கிழமை ஈரானிய அரசு ஊடகமான IRNA மற்றும் பல செய்தி நிறுவனங்களும் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஒன்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">⚡️BREAKING: The IRGC has released Footage of the Seizure of US Navy&#39;s Advanced Dive-LD Autonomous Underwater Vehicle<br><br>The United States was using it to Detect Mines in the Strait of Hormuz<br><br>The Dive-LD contains Classified Technology and Iran will likely Share it with Russia and… <a href="https://t.co/JznS0A2C7T">pic.twitter.com/JznS0A2C7T</a></p>&mdash; Iran Observer (@IranObserver0) <a href="https://x.com/IranObserver0/status/2097388572042998093?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> IRGC வெளியிட்ட காட்சிகளில், நீர்மூழ்கி கப்பல் எந்தவொரு சேதமும், பாதிப்புகளும் இல்லாமல் நல்ல நிலையில் இருப்பதை பார்க்க முடிந்தது.</p><p> Dive LD நீர்மூழ்கி கப்பல் கைப்பற்றப்பட்டது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டால் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஒன்றை நாடு ஒன்று கைப்பற்றும் முதல் சம்பவம் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfceedde-fcfe-4ff3-96f9-0784d2856645/26-6aa05dd8aa3c7.webp' /></p><p> &nbsp; ஈரானிய ராணுவம் மற்றும் ஊடகங்கள் இது தொடர்பான செய்தியை தீவிரமாக அறிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T19:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூடுல்ஸ் உணவில் உயிருடன் மிதந்த குட்டி எலி: ஆர்டர் செய்த பெண்ணிற்கு அதிர்ச்சி: வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/baby-rat-flots-in-beef-noodles-viral-video-1788891929"></link>
            <id>https://news.lankasri.com/article/baby-rat-flots-in-beef-noodles-viral-video-1788891929</id>
            <summary type="text">உணவகம் ஒன்றில் இருந்து வாங்கப்பட்ட நூடுல்ஸ் பார்சலில் குட்டி எலி ஒன்று உயிருடன் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் உயிருடன் கிடந்த எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உணவகம் ஒன்றில் இருந்து வாங்கப்பட்ட நூடுல்ஸ் பார்சலில் குட்டி எலி ஒன்று உயிருடன் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> உணவில் உயிருடன் கிடந்த எலி</h2><p>
ஹாங்காங்கின் குவாய் சுங் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் மதிய உணவிற்காக திங்கட்கிழமை அப்பகுதியில் இருந்த “வா ஜெர்” என்ற உணவகத்தில் இருந்து சாத்தே பீப் நூடுல்ஸ் உணவை ஆர்டர் செய்துள்ளார்.</p><p> &nbsp;சுமார் 10 சதவீத தள்ளுபடியுடன் ரூ. 530க்கு இந்த உணவை அவர் வாங்கியுள்ளார்.</p><p> ஆர்டர் செய்யப்பட்ட அந்த உணவை வாங்கிக் கொண்டு, சாப்பிடுவதற்காக அந்த உணவை திறந்த போது அதில் சிறிய எலி ஒன்று உயிருடன் நெளிவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaa1cc26-404e-4bae-8892-5feb9de6cf9b/26-6aa0531ab9993.webp' /></p><p> இதையடுத்து அந்த பெண் உடனடியாக உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.</p><h2> உணவகம் அளித்த விளக்கம்</h2><p>இந்த சம்பவம் மிகவும் பயங்கரமான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட சம்பவமாக தெரிகிறது. கடந்த ஓராண்டாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறோம். இதுவரை எலி அல்லது பூச்சிகள் தொடர்பான புகார் எதுவும் வந்தது இல்லை என்று உணவகத்தின் உரிமையாளர் மைக் தெரிவித்துள்ளார்.</p><p> இது தொழிற்பேட்டை என்பதால் எப்போதாவது எலிகள் இங்கு நடமாடுவது உண்டு. அதனால் நாங்கள் மாதந்தோறும் உணவகத்தில் ஆழமான துப்புரவு மற்றும் கிருமிநாசினி பணிகளை செய்து வருவதாக விளக்கமளித்துள்ளார்.</p><p> மேலும் இதனை யாரும் குறும்பாக செய்து இருக்கவும் வாய்ப்பில்லை, இனி வரும் காலங்களில் பூச்சு கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Customer finds NEWBORN MOUSE in noodle dish in Hong Kong <a href="https://t.co/jGMxCKcrbB">pic.twitter.com/jGMxCKcrbB</a></p>&mdash; RTVisual (@RT_Visual_on_X) <a href="https://x.com/RT_Visual_on_X/status/2097310037697876293?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2> இணையத்தில் வைரலான விவகாரம்</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியான 18 வினாடிகள் கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.</p><p> மசாலா சாஸுக்குள் குட்டி எலி ஒன்று கை, கால்களை அசைத்து கொண்டு இருப்பது நெட்டிசன்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T18:45:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேத்தியை வளர்க்க ரூ.45 லட்சம் இழப்பீடு கேட்ட தாய்: மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mother-demands-45-lakhs-for-raising-granddaughter-1788888277"></link>
            <id>https://news.lankasri.com/article/mother-demands-45-lakhs-for-raising-granddaughter-1788888277</id>
            <summary type="text">Mother demands 45 lakhs for raising granddaughter in China: சீனாவில் 15 ஆண்டுகள் பேத்தியை வளர்த்தற்காக மகனிடம் ரூ.45 லட்சம் கேட்டு தாய் ஒருவர் வழக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mother demands 45 lakhs for raising granddaughter in China: சீனாவில் 15 ஆண்டுகள் பேத்தியை வளர்த்தற்காக மகனிடம் ரூ.45 லட்சம் கேட்டு தாய் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><h2> பேத்தியை வளர்த்ததற்கு ஊதியம் கேட்ட பாட்டி</h2><p>சீனாவின் கிழக்கு பகுதியில் வாழும் 60 வயது மதிக்கத்தக்க “சு”(Xu) என்ற பெண், தன்னுடைய மகன் லியாங் என்பவர் மீது ஷாங்காய் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.</p><p> அதில், கடந்த 2014ம் ஆண்டு தன்னுடைய மகன் லியாங் அவருடைய மனைவியை பிரிந்தார். இதையடுத்து மகன் லியானும், அவரது 4 வயது மகளையும் சேர்த்து கவனித்து வந்தேன்.</p><p>லியாங் அவனுடைய மகளை பராமரிக்கும் மொத்த கடமையையும் என்னிடமே ஒப்படைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92058509-e602-4dc1-906b-9e2bfe9940b3/26-6aa044d6e16aa.webp' /></p><p> நானும் கடந்த 15 ஆண்டுகளாக தன்னுடைய பேத்தியின் அன்றாட செலவுகள், மருத்துவ மற்றும் கல்வி கட்டணங்கள் என அனைத்தையும் என்னுடைய சொந்த பணத்தில் கவனித்து வந்தேன்.</p><p> </p><p></p><p>ஆனால் லியாங் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவனுடைய மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.</p><p> மகளை மட்டும் தன்னிடமே விட்டு விட்டுச் சென்றுவிட்டார். இப்போது நான் பொருளாதார நெருக்கடியினாலும், முதுமையாலும் பாதிக்கப்பட்டுள்ளேன்.</p><p> என்னுடைய மகனுக்கு குடும்ப பொறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லை. ஒரு தந்தையாக அவனது கடமையை செய்ய தவறி விட்டான்.</p><p> இனிமேலும் என்னால் அவனுடைய பண உதவி இல்லாமல் பேத்தியை கவனித்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் 15 ஆண்டுகளாக பேத்தியை பராமரித்ததற்காக 3,60,000 யுவான் தொகையை கட்டணமாக என்னுடைய மகன் வழங்க வேண்டும் என்றும் தாய் “சு” நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;தாயின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இருந்த மகன் லியாங், அப்போது தனக்கு மாதம் வெறும் ரூ.37000 மட்டுமே ஊதியமாக இருந்ததாகவும், தன்னுடைய சக்தி உட்பட்டு அனைத்து உதவிகளையும் தன்னுடைய மகளுக்கு செய்ததாக தெரிவித்தார்.</p><h2> சட்ட நிபுணர்களின் கருத்து</h2><p>தாய் “சு” தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஷாங்காய் சட்ட வல்லுநகர்கள் வழங்கிய தகவலில், இது குடும்ப உறவுகளை வியாபாரமாக்குவது அல்ல, மாறாக குடும்ப பொறுப்புகளை தெளிவுபடுத்தும் ஒன்று என தெரிவித்துள்ளனர்.</p><p> குழந்தையை வளர்க்கும் பொறுப்பு முதலில் பெற்றோர்களுடையது, பின்னர் அவர்களால் முடியவில்லை என்றால் தான் தாத்தா-பாட்டிகள் தங்களது உதவிகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T17:26:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மு.க.ஸ்டாலினை உடல்மொழியால் கேலி செய்தேனா? முதல்வர் விஜய் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-clarified-his-body-language-not-intetion-1788879358"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-clarified-his-body-language-not-intetion-1788879358</id>
            <summary type="text">cm vijay clarified his body language not intention about m.k.stalin: சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசிய போது, அவரது சைகை முகஸ்டாலினை கே...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay clarified his body language not intention about m.k.stalin: சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசிய போது, அவரது சைகை முகஸ்டாலினை கேலி செய்வதாக எதிர்ப்பு எழுந்த நிலையில், அது குறித்து முதல்வர் விஜய் விளக்கமளித்துள்ளார்.</p><h3> 

உடல்மொழிக்கு முதல்வர் விஜய் விளக்கம் </h3><p>

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கைக்கான பதிலுரையில் பேசிய முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் குறித்து பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c1372ab-83e8-4ab7-b1f4-88f2fff1bd05/26-6aa021ffd134a.webp' /></p><p>

அப்போது, மு.க.ஸ்டாலின் பற்றி பேசும் போது எதற்கெடுத்தாலும் மிசாவை பார்த்தவர்கள் என திமுகவினர் பேசுகின்றனரே அந்த வரலாறு என்னன்னு எல்லாருக்கும் தெரியும் எனக்கூறும் போது தாடையில் கை வைத்து ஒரு சைகை செய்தார். </p><p>

மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போது காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டதாக பல மேடைகளிலும் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். </p><p>

முதல்வர் விஜய்யின் இந்த சைகை மு.க.ஸ்டாலினை கேலி செய்வதாக திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகமும் முதல்வர் விஜய்க்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், சட்டமன்றத்தில் பேசிய போது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது அது உள்நோக்கம் கொண்டதில்லை என முதல்வர் விஜய் விளக்கமளித்துள்ளார்.</p><p>
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை…</p>&mdash; TVK Vijay (@TVKVijayHQ) <a href="https://x.com/TVKVijayHQ/status/2097291431081877776?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். </p><p>

முதலமைச்சரின் உடல் மொழி தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும் விளக்கம் அளித்தார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T14:59:48+00:00</updated>
        </entry>
    </feed>
