<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-18T05:34:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய தேர்தல் நடைமுறைகளை பாராட்டிய டொனால்ட் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-praises-indian-election-system-1787030241"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-praises-indian-election-system-1787030241</id>
            <summary type="text">இந்திய தேர்தல் நடைமுறைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார். டிரம்ப் பாராட்டுஅமெரிக்காவில் தீவிரமான வாக்காளர் அடையாள சட்டங்களை கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய தேர்தல் நடைமுறைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.</p><h2> டிரம்ப் பாராட்டு</h2><p>அமெரிக்காவில் தீவிரமான வாக்காளர் அடையாள சட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய தேர்தல் நடைமுறைகளை வெகுவாக பாராட்டியுள்ளார்.</p><p> &nbsp;அமெரிக்காவில் தேர்தல்களில் கட்டாய புகைப்பட அடையாள அட்டை நடைமுறை இல்லாதது குறித்து இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்(Gyanesh Kumar) உடன் நடைபெற்ற உரையாடல் குறித்து ட்ருத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27b0c661-1fd5-4cf4-8e76-adf51c383255/26-6a83eae3346b3.webp' /></p><p>அந்த உரையாடலின் போது, கட்டாய புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் எப்படி பாதுகாப்பான தேர்தலை நடத்த முடியும் என்று ஞானேஷ்குமார் தன்னிடம் கேள்வி எழுப்பியதாக டிரம்ப் மேற்கோள் காட்டினார்.</p><p></p><p> இந்தியாவில் நடந்த கடைசி தேர்தலில் 642 மில்லியன் மக்கள் தங்களது புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்கு செலுத்தியுள்ளனர். 1%க்கும் குறைவான மக்கள் மின்னஞ்சல் மூலமாக வாக்கு செலுத்தியுள்ளனர்.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Earlier this month, India’s Chief Election Commissioner, Gyanesh Kumar, asked our Administration — How can you have Elections in the U.S. without a valid Photo ID? India’s last Election had 646,000,000 Voters! Less than 1% voted by mail, and every single Voter had to have a VALID… <a href="https://t.co/dWtL287nkk">pic.twitter.com/dWtL287nkk</a></p>&mdash; Commentary Donald J. Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) <a href="https://x.com/TrumpTruthOnX/status/2089488950079668319?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>வாக்களித்த ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள&nbsp; அட்டையை வைத்துள்ளனர். </p><p>&nbsp;இந்த உரையாடல் டிரம்ப் தீவிரமாக வலியுறுத்தி வரும் The save america act மசோதாவிற்கு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-08-18T05:17:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு: குடும்பங்களின் இன்றைய நிலையைக் கூறும் ஒரு செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-skeleton-found-in-bengaluru-house-1787029712"></link>
            <id>https://news.lankasri.com/article/women-skeleton-found-in-bengaluru-house-1787029712</id>
            <summary type="text">பெங்களூருவில் வீடொன்றிற்குள் பெண்ணொருவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவரை யாரும் தேடவில்லை என்பது தெரியவந்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெங்களூருவில் வீடொன்றிற்குள் பெண்ணொருவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவரை யாரும் தேடவில்லை என்பது தெரியவந்துள்ளது.
</p><p>

கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் வீடொன்றில் தனியாக வசித்துவந்துள்ளார் தாக்‌ஷாயினி (52) என்னும் பெண்.
</p><p>
நீண்ட காலமாக அவரது வீடு திறக்கப்படாமலே இருந்த நிலையில், இம்மாதம் 7ஆம் திகதி, பொலிசாருக்கு அது குறித்து தகவலளிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
வீட்டுக்குள் பெண்ணின் எலும்புக்கூடு
</h3><p>
பொலிசார் அந்த வீட்டை சோதனையிட, அந்த வீட்டுக்குள் ஒரு எலும்புக்கூடு இருப்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffdd97b8-8434-4f05-ac9d-a9e1fd09343f/26-6a83e8d1effb4.webp' /></p><p>
பொலிசார் விசாரணையில் இறங்க, உயிரிழந்து எலும்புக்கூடாக கண்டுபிடிக்கப்பட்டது தாக்‌ஷாயினி என்பது அவரது சகோதரரான மகேஷ் என்பவர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், 2005ஆம் ஆண்டு தன் மகனை இழந்துள்ளார் தாக்‌ஷாயினி. அந்த இழப்பு அவருக்கு மன நல பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
2017ஆம் ஆண்டு தாக்‌ஷாயினியின் கணவரும் மரணமடைய, குடும்பத்தில் யாருடனும் எந்த தொடர்பும் இல்லாமல் தனியாகவே வாழ்ந்துவந்துள்ளார் அவர்.</p><p>

விடயம் என்னவென்றால், தாக்‌ஷாயினிக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணமாகி வேறொரு இடத்தில் வாழ்ந்துவரும் அந்தப் பெண் தன் தாயை நீண்ட காலமாக வந்து பார்க்கவே இல்லையாம்.&nbsp;</p><p></p><p>
ஆக, தாக்‌ஷாயினி எப்படி வாழ்ந்தார், எப்படி உயிரிழந்தார், எப்போது உயிரிழந்தார், எதனால் உயிரிழந்தார் என எந்த தகவல்களும் குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல், இறந்து, உடல் எலும்புக்கூடான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் அவர்.
</p><p>
கூட்டுக்குடும்பங்கள் என்னும் ஒரு முறை மாறி, குடும்பங்கள் சின்னச் சின்னக் குடும்பங்களாகி, ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு இடத்தில் குடியேறி, உற்றார் உறவினர்கள் யார், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துவிட்டது தெரிந்த விடயம்தான்.</p><p>

ஆனால், மிக வயது முதிர்ந்து தள்ளாடும் வயது அல்ல, வெறும் 52 வயதில் ஒரு பெண் வீட்டுக்குள் மரணமடைந்து, எலும்புக்கூடாகும் வரை அவரை யாரும் தேடவில்லை என்றால், இன்றைய குடும்பங்களின் நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பது மிகத் தெளிவாக புரிகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T05:11:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல்: அமெரிக்கா நடத்தும் தீவிர ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-plans-to-nuclear-attack-on-iran-1787025070"></link>
            <id>https://news.lankasri.com/article/us-plans-to-nuclear-attack-on-iran-1787025070</id>
            <summary type="text">ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரான் மீது அணு ஆயுதம்ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><h2> ஈரான் மீது அணு ஆயுதம்</h2><p>ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட கருத்தில், அமெரிக்கா இனி வெளிநாட்டு போர்களில் ஈடுபடாது என்று டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்து இருப்பதாகவும், ஆனால் ஈரான் மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கான வரம்பை அவரது அரசு நிர்வாகம் குறைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca35f0b2-8627-4764-8368-adb0120d945e/26-6a83d6afd71a9.webp' /></p><p style="margin-left: 25px;"></p><p> அமெரிக்க உளவுத்துறை வழங்கும் அறிக்கைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக இஸ்ரேல் அளிக்கும் எச்சரிக்கைகளை கேட்டு மட்டுமே செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>அமெரிக்கா ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதுடன், அது மிகப்பெரிய உலகப் போராக மாறி தாங்க முடியாத பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p> முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை மாளிகை இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T03:51:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-to-bomb-oman-1786984671"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-to-bomb-oman-1786984671</id>
            <summary type="text">Donald Trump threatens to bomb Oman: ஓமான் இடையூறு செய்தால், அதன் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Donald Trump threatens to bomb Oman: ஓமான் இடையூறு செய்தால், அதன் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
</p><p>ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தனது முயற்சிக்கு ஓமான் நாடு தடையாக நின்றால், அந்நாட்டின் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மிரட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43ff41fc-ff1d-407f-a8a9-8a65287c751b/26-6a8338e24b290.webp' /></p><p>
</p><p>ஓமான் குறுக்கிட்டால், அவர்களைக் குண்டுமழையால் சின்னாபின்னமாக்குவோம் என்று ட்ரம்ப் திங்களன்று ஃபாக்ஸ் நியூஸிடம் கூறியுள்ளார்.</p><p> 
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாரம்பரியமாக ஒரு முக்கிய மறைமுகத் தொடர்பாளராகச் செயல்பட்டு வரும், அமெரிக்காவின் நீண்டகால உத்திசார்ப் பங்காளியான ஓமானை நோக்கி, அவர் இதுபோன்ற அச்சுறுத்தலை விடுப்பது இது இரண்டாவது முறையாகும். </p><p>இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக போர் தொடங்கி, 
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், </p><p>ஈரானுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட இராஜதந்திர வாய்ப்புக்கான காலக்கெடு முடிந்து, இறுதி உடன்பாடு எதுவும் தென்படாத நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி கடும் விரக்தியில் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என்றே கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>ஆனால், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு தமக்கு அவசரம் இல்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான அந்த இரண்டு மாத கால அவகாசம், எந்தவொரு திருப்புமுனையும் இன்றி திங்களன்று முடிவடைந்தது. </p><p>போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ட்ரம்ப் தொடர்ச்சியாக கூறிவந்தாலும், அத்தகைய ஒரு திருப்புமுனை எதுவும் ஏற்படாத நிலையில், சமீப மாதங்களில் ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் பேசி வந்துள்ளார். </p><p>ஈரான் விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் ட்ரம்ப் நிர்வாகம், போரில் இருந்து வெளியேற முடியாமலும் திணறி வருகிறது. ஆனால், ஈரான் சரணடைய வேண்டும் என்ற கோரிக்கையை ட்ரம்ப் தற்போது முன்வைத்துள்ளார். </p><p>இருப்பினும்
ஈரான் மீது புதிய காலக்கெடுவை விதிக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். ஈரான் விவகாரத்தில் தாம் அவசரப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>கிட்டத்தட்ட ஆறு மாத கால சண்டையால் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருகிறது என்ற கவலைகளையும் ட்ரம்ப் நிராகரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72fd95b-6795-47f1-9d7d-63b2b2e369d1/26-6a8338e19b1e0.webp' /></p><p> </p><p>ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இதுவரை செலவிட்ட ஆயுதங்கள் வெறும் சிறு அளவு மட்டுமே என்றும் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறியுள்ளார். மேலும், ஜோ பைடன் நிர்வாகத்தால் மேம்பட்ட ஆயுதங்கள் பல உக்ரைனுக்கு வழங்கப்பட்டதால் சிறு நெருக்கடி ஏற்பட்டது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>இதனிடையே, ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஈரானும் ஓமானும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் முன்னேற்றம் ஏற்படுவதாக தகவல் வெளியான நிலையிலேயே, ஓமான் மீது குண்டுவீசப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். </p><p>அமெரிக்காவுடன் ஓமானுக்கு இருக்கும் பல தசாப்த கால இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளுக்கு மேலதிகமாக, 53 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த வளைகுடா நாடு, போரில் ஒரு மத்தியஸ்தப் பாத்திரத்தை வகித்துள்ளதுடன், ஈரானின் தாக்குதலுக்கும் உள்ளானது. </p><p>ட்ரம்பின் சமீபத்திய சீற்றத்தையும் மீறி, ஓமானுடன் பேச்சுவார்த்தைகள் தீவிரமாகத் தொடர்வதாக ஈரான் வெளிவிவகார அமைச்சகம் திங்களன்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T03:25:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் பேச்சுவார்த்தை... ட்ரம்ப்பை வலியுறுத்தும் எர்டோகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/erdogan-urges-trump-to-talks-1787011448"></link>
            <id>https://news.lankasri.com/article/erdogan-urges-trump-to-talks-1787011448</id>
            <summary type="text">Erdogan urges Trump to pursue talks: ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு ட்ரம்ப்பை எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Erdogan urges Trump to pursue talks: ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு ட்ரம்ப்பை எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்க ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு, துருக்கிய ஜனாதிபதி தயீப் எர்டோகன் டொனால்ட் ட்ரம்ப்பை தொலைபேசி உரையாடலின்போது வலியுறுத்தியுள்ளார்.</p><h2>முடிவுக்குக் கொண்டுவருமாறு</h2><p>
</p><p>அமைதி முயற்சிகளுக்கு துருக்கியின் ஆதரவை வழங்குவதாகவும் எர்டோகன் அலுவலகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. நேட்டோ அமைப்பில் இரண்டாவது மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டதும், </p><p>ஈரானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்வதுமான துருக்கி, போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/895d025b-946f-4663-8c04-e25a48f9f762/26-6a83a17b1f155.webp' /></p><p> </p><p>அமெரிக்கா, ஈரான் மற்றும் பாகிஸ்தான், கத்தார் போன்ற மத்தியஸ்தர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வரும் துருக்கி, சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே ஒரு மத்தியஸ்தராகவும் செயல்பட்டு வருகிறது. </p><p>இந்த நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றங்கள் குறித்து ராஜதந்திர வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம் என்றும், பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று நம்புவதாகவும், அமைதி முயற்சிகளுக்குத் துருக்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் எர்டோகன் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தாக்குதல் சார்ந்ததாக</h2><p> </p><p>போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் முடங்கியுள்ள நிலையில், தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது; </p><p>இதனைத் தொடர்ந்து, ஈரான் தனது ராணுவ நிலைப்பாட்டை முழுமையான தாக்குதல் சார்ந்ததாக மாற்றிக்கொள்ளும் என்று அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e48e1ef-92ea-4837-a429-c2d21fa4b3a7/26-6a83a17bc650f.webp' /></p><p> </p><p>ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளும் தேக்கமடைந்துள்ளன. </p><p>ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை துருக்கி விமர்சித்துள்ளது; அதேவேளையில், வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைக் கண்டிப்பதோடு, முக்கியத்துவம் வாய்ந்த அந்த நீரிணையை மீண்டும் திறக்குமாறும் அது வலியுறுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T00:01:47+00:00</updated>
        </entry>
    </feed>
