<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-01T12:49:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாவது இன்னிங்ஸிலும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: அரையிறுதியில் அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/east-zone-win-by-4-wickets-in-duleep-semi-final-1788266066"></link>
            <id>https://news.lankasri.com/article/east-zone-win-by-4-wickets-in-duleep-semi-final-1788266066</id>
            <summary type="text">East Zone win by 4 wickets in duleep trophy semi final: துலீப் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் கிழக்கு மண்டல அணி வெற்றி பெற்றது.

பெங்களுரூவில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>East Zone win by 4 wickets in duleep trophy semi final: துலீப் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் கிழக்கு மண்டல அணி வெற்றி பெற்றது.</p><p>

பெங்களுரூவில் நடந்த துலீப் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், கிழக்கு மண்டல அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மத்திய மண்டல அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>முதல் அரையிறுதிப் போட்டி</h2><p>
கிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி பெங்களூருவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c78f250e-31c3-4bb7-9f72-4b58399e205a/26-6a96c84f74f6f.webp' />&nbsp;</p><p></p><p>
159 ஓட்டங்கள் வெற்றி இலக்கினை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய கிழக்கு மண்டல அணியில் வைபவ் சூர்யவன்ஷி வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார்.</p><p> 


அவர் 43பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அபிமன்யூ ஈஸ்வரன் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.</p><p> 

பின்னர் விராட் சிங் 12 ஓட்டங்களிலும், குமார் குஷாக்ரா 22 ஓட்டங்களிலும் வெளியேற அனுகுல் ராய் டக்அவுட் ஆனார்.</p><p> 

எனினும், இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 39 (41) ஓட்டங்கள் எடுக்க, கிழக்கு மண்டல அணி 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b7a445e-9f50-4e5e-ba93-cd9a76b0749b/26-6a96c84ebbed9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T12:40:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூசாரி வீட்டு குழாய் நீரில் அடித்த துர்நாற்றம்: தெரியவந்த திடுக் உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-body-found-in-water-tanks-in-salem-house-1788265701"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-body-found-in-water-tanks-in-salem-house-1788265701</id>
            <summary type="text">Woman’s dismembered body found in overhead tank: தண்ணீர்த்தொட்டி ஒன்றில் பெண்ணொருவரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman’s dismembered body found in overhead tank: தண்ணீர்த்தொட்டி ஒன்றில் பெண்ணொருவரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p>

தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தில் வாழ்ந்துவரும் கோயில் பூசாரியான ரமேஷ், வெளியூர் சென்றுவிட்டு திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளார்.
</p><p>
குழாய்த் தண்ணீரில் ஏதோ துர்நாற்றம் வீசுவதைக் கவனித்த ரமேஷ், வீட்டின் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர்த்தொட்டியை சோதனையிட்டுள்ளார்.</p><h3>

தெரியவந்த திடுக் உண்மை</h3><p>

அப்போது தண்ணீர்த்தொட்டிக்குள் ஒரு பிளாஸ்டிக் கவரில் மனித கைகால்கள் வைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளார் அவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff7a5f2-3a0a-41d5-a515-db8bcdd67936/26-6a96c4e6ba514.webp' /></p><p>
அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் அந்த பிளாஸ்டிக் கவரை கைப்பற்றியதுடன், அருகிலுள்ள வீடுகளின் மாடிகளிலும் சோதனையிட்டுள்ளனர்.
</p><p>
அப்போது, மற்றொரு வீட்டின் மாடியிலும் ஒரு பிளாஸ்டிக் கவரில் உடல் பாகங்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
முதல் கட்ட ஆய்வில், அவை 30 முதல் 40 வயது வரையுள்ள ஒரு பெண்ணின் உடல் என்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அத்துடன், அந்தப் பெண்ணின் உடலிலிருந்த நகைகள் மாயமாகியிருந்ததால், அவரை அவரது நகைகளுக்காக கொலை செய்திருக்கலாம் என்றும், கொலை செய்துவிட்டு, அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் அவரது உடலை பிளாஸ்டிக் பைகளில் போட்டு மாடிகளில் மறைத்துவைத்திருக்கலாம் என்றும் பொலிசார் கருதுகிறார்கள்.
</p><p>
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேரை கைது செய்துள்ள பொலிசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T12:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[H4 பணி அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம் - இந்தியர்களுக்கே அதிக பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-plans-to-end-h4-work-permit-will-affect-indians-1788264918"></link>
            <id>https://news.lankasri.com/article/us-plans-to-end-h4-work-permit-will-affect-indians-1788264918</id>
            <summary type="text">us plans to end H4 work permit it will affect indians: அமெரிக்காவில் H1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைதுணை வேலை செய்ய அனுமதி அளிக்கும் H4 பணி அனும...</summary>
            <content type="html"><![CDATA[<p>us plans to end H4 work permit it will affect indians: அமெரிக்காவில் H1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைதுணை வேலை செய்ய அனுமதி அளிக்கும் H4 பணி அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. </p><h3>

H4 பணி அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம்</h3><p>

அமெரிக்காவில் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில், டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09a69ccd-fa07-41ec-8770-8f595755281f/26-6a96c1d8c29bd.webp' /></p><p>

 முன்னதாக அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான H1B விசாவிற்கான கட்டணத்தை ரூ.1.9 லட்​சத்​தில் இருந்து
ரூ.88 லட்சமாக உயர்த்தினார்.

இதற்கு சில நீதிமன்றங்கள் தடை விதித்த நிலையில், இது தொடர்பான மேல்முறையீடு வழக்கு நடைபெற்று வருகிறது. </p><p>

தற்போது H1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணையினர் அமெரிக்காவில் வேலை செய்வதற்கான H4 பணி அனுமதியை ரத்து செய்யும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.</p><p> 

H1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு H-4 விசா அமெரிக்கா வழங்கி வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d115b27-ea15-4d87-bae8-4ae32df5379b/26-6a96c1d819261.webp' /></p><p>H-4 தகுதியானது, குடும்ப உறுப்பினர்கள் H-1B வைத்திருப்பவருடன் சென்று அமெரிக்காவில் வசிக்க அனுமதிக்கிறது. ஆனால் வேலைவாய்ப்பு உரிமைகளை வழங்குவதில்லை.
</p><p>
2015 ஆம் ஆண்டில் புதிய விதிகள் மூலம், H-4 விசா வைத்திருப்பவர்கள் வேலை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. </p><p>

தற்போது வேலைவாய்ப்பு அங்கீகாரத்திற்குத் தகுதியுள்ள வெளிநாட்டினர் பிரிவிலிருந்து H-4 சார்ந்த வாழ்க்கைத் துணைவர்களை நீக்குதல்" என்ற தலைப்பிலான முன்மொழிவை அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்பு துறை பட்டியலிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

 இந்த முன்மொழிவு சட்டமாக மாறி நடைமுறைக்கு வரும் போது, அது அமெரிக்காவில் உள்ள இந்தியர்களையே அதிகளவில் பாதிக்கும். </p><p>

2014 முதல் 2017 வரையிலான தரவுகளின்படி, H-4 வேலை அனுமதி 93% இந்தியக் குடிமக்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்த அனுமதி பெற்றவர்களில் 94% பேர் பெண்கள் ஆவர்.
</p><p>
இந்த முன்மொழிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு மக்களின் கருத்துக்களை பெற்ற பிறகே இறுதி முடிவு எடுக்கப்பட்டு சட்டமாக அமுலுக்கு வரும். அதுவரை H 4 வேலை அனுமதி பெற்றுள்ளவர்களுக்கு பாதிப்பில்லை.
</p><p>
இருப்பினும் அமெரிக்காவில் கணவர் மற்றும் மனைவி இருவரின் வருமானத்தையும் சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு இந்த முன்மொழிவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T12:15:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் காணாமல் போன மகனைத் தேடி ஒரு குடும்பத்தின் நான்கு நாள் பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/family-lost-son-in-nepal-flood-1788257804"></link>
            <id>https://news.lankasri.com/article/family-lost-son-in-nepal-flood-1788257804</id>
            <summary type="text">Nepal&#039;s floods.. A family&#039;s four-day quest for a son: நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான மகனைத் தேடி ஒரு குடும்பம் மேற்கொண்ட நான்கு நாள் பயணம்.
நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal's floods.. A family's four-day quest for a son: நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான மகனைத் தேடி ஒரு குடும்பம் மேற்கொண்ட நான்கு நாள் பயணம்.</p><p>
நேபாளத்தில் வெள்ளம் புரட்டிப்போட்டதைத் தொடர்ந்து, 21 வயதான அரசு ஊழியர் ஒருவர் தொடர்பில் அவரது குடும்பத்தினர் நான்கு நாட்களாகத் துயரமும் பதற்றமும் நிறைந்த நிலையில் தேடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad72a47a-1211-42a6-981e-6b2e4cbd1a93/26-6a96a60e3db4e.webp' /></p><p>
</p><p>நேபாளம் மற்றும் திபெத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகப் பனி, பாறை, சேறு மற்றும் சிதைவுப் பொருட்கள் கலந்த பெருவெள்ளத்தை ஏற்படுத்திய பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட மிக மோசமான சூழலிலும், நம்பிக்கையைத் தளர்த்தாமல் இருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களில் கட்கா (Khadka) குடும்பத்தினரும் அடங்குவர்.</p><p> 
வெள்ளம் ஏற்படுவதற்கு முந்தைய இரவு 21 வயதான ஆயுஷ் கட்கா தனது உறவினர்களிடம் பேசியிருந்தார்; மறுநாள் காலையிலும் அவரது சமூக ஊடகக் கணக்கு அவர் ஒன்லைனில் இருப்பதைக் காட்டியது. </p><p>அவர் உயிர் பிழைத்திருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை அவரது குடும்பத்தினருக்கு இந்தச் சிறிய அறிகுறி அளித்தது. ஆகஸ்ட் 26 அன்று பரவலான அழிவு குறித்த தகவல்கள் வெளியானதும், குடும்பத்தினர் உடனடியாக ஒரு தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்; ஆனால், அது இறுதியில் பயனற்ற முயற்சியாகவே முடிந்துள்ளது.</p><p></p><p> </p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான முக்கிய ஒருங்கிணைப்பு மையங்களில் ஒன்றான நுவாகோட்டில் உள்ள நேபாள ராணுவத்தின் மைதாலி முகாமுக்கு அருகில், அவரது தந்தையின் சகோதரரான கணேஷ் கட்கா இரண்டு நாட்களாகக் காத்திருந்தார். </p><p>இதற்கிடையில், ஆயுஷின் தாய்வழி அத்தை லட்சுமி தாபா, அவரைச் சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள சித்வானில் தேடிக்கொண்டிருந்தார்; அங்கு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் மீட்கப்பட்டு வந்தன. </p><p>இந்த நிலையில், 1,000 பேரின் உயிரைப் பறித்து, சுமார் 4,000 பேரைக் காணாமல் போகச் செய்த அந்தப் பேரிடர் நிகழ்ந்த நாளன்றே, ஆயுஷுடையது என்று கருதப்படும் ஒரு சடலத்தை அதிகாரிகள் ஏற்கனவே மீட்டிருந்தனர்; ஆனால், அந்த நேரத்தில் குடும்பத்தினர் பலருக்கும் இந்தத் தகவல் தெரிந்திருக்கவில்லை.</p><p> ஆகஸ்ட் 27 அன்று, உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக மீட்கப்பட்ட உடல்களின் புகைப்படங்கள் தொலைக்காட்சித் திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருந்த தற்காலிக முகாம் ஒன்றிற்கு லட்சுமி சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/158e3675-a761-48f3-b569-716d50be5883/26-6a96a60ee7b2d.webp' /></p><p> </p><p>ஒரு புகைப்படம் உடனடியாக அவரது கவனத்தை ஈர்த்தது. அது அவர்தான் என்று எனக்கு ஏறக்குறைய 70% உறுதியாகத் தெரிந்திருந்தது என்று அவர் கூறியுள்ளார். அவர் அந்தப் புகைப்படத்தை கணேஷ் உள்ளிட்ட பிற உறவினர்களுக்கு அவர்களின் கருத்துக்களை அறிய அனுப்பினார்; ஆனால், ஆயுஷின் தாயார் முனா கட்காவிடம் அதைக் காட்ட வேண்டாம் என்று குடும்பத்தினர் வேண்டுமென்றே முடிவு செய்தனர். </p><p>அந்தக் குடும்பத்தினர் கண்ணுக்குத் தெரிந்த ஒவ்வொரு விவரத்தையும் கூர்ந்து கவனித்தனர்: அவரது தாடியைப் போலவே, அவரது தாடையின் இடது பக்கத்தில் இருந்த மச்சமும் ஆயுஷின் மச்சத்துடன் ஒத்துப்போவது போல் தோன்றியது. </p><p>அவரது இடது கையில் அவர் வழக்கமாக அணிந்திருந்த, ஆனால் மணிக்கட்டுப் பகுதிக்கு நழுவியிருந்த கருப்பு நிற மதரீதியான பாதுகாப்புக் கயிற்றையும் அவர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். </p><p>இதனிடையே, அடையாளம் காணப்படாத உடல்களைப் பெருமளவில் அடக்கம் செய்ய அதிகாரிகள் தயாரான நிலையில், கட்கா குடும்பத்தினருக்கு அந்த நிச்சயமற்ற நிலை இன்னும் அதிக வேதனையை அளிப்பதாக அமைந்தது. </p><p>தொலைதூர மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சித்வானுக்கு வந்து அவர்களை அடையாளம் காண்பதற்குப் போதுமான நேரம் கிடைப்பதற்கு முன்பே, அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுவிடக்கூடும் என்று கட்கா குடும்பத்தினர் அஞ்சினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87622089-6747-4e4b-9384-a6f5d6031548/26-6a96a60f9f3fe.webp' /></p><p> </p><p>வெள்ளம் ஏற்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 30 அன்றுதான், மகன் இறந்துவிட்டான் என்ற தகவல் ஆயுஷின் தாய்க்கு அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டது. </p><p>மறுநாள் அதிகாலை சுமார் 1 மணியளவில், நெருங்கிய மற்றும் உறவினர்கள் சல்யானிலிருந்து புறப்பட்டு, இரவு முழுவதும் பயணித்து சித்வானை அடைந்தனர். </p><p>ஆயுஷின் உடல் அடையாளம் காணப்பட்டு, பின்னர் உடலைத் தகனம் செய்வதற்காக, சுமார் 35 உறவினர்கள் நாராயணி ஆற்றங்கரையில் கூடினர். </p><p>அவன் பிறந்தபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம், அதேபோல் இவ்வளவு இளம் வயதிலேயே அவன் அரசு ஊழியர் தேர்வில் தேர்ச்சி பெற்றபோதும் மகிழ்ச்சியடைந்தோம், இன்று எங்களைக் கண்ணீரில் விட்டுவிட்டு அவன் சென்றுவிட்டான் என்று லட்சுமி கண்கலங்கியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T11:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தை மீறிய உறவில் மனைவி: வீடியோ மூலம் நிரூபித்த கணவருக்கு சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/taiwan-man-jailed-who-captured-wife-cheating-1788262969"></link>
            <id>https://news.lankasri.com/article/taiwan-man-jailed-who-captured-wife-cheating-1788262969</id>
            <summary type="text">Taiwan man jailed who captured wife cheating with vacuum video: தைவானில் மனைவி ஏமாற்றுவதை படம்பிடித்த கணவர் தனியுரிமையை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Taiwan man jailed who captured wife cheating with vacuum video: தைவானில் மனைவி ஏமாற்றுவதை படம்பிடித்த கணவர் தனியுரிமையை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்டார். </p><p>

தைவானில் ரோபோட் Vacuum Cleaner மூலம் தன் மனைவி ஏமாற்றுவதை படம்பிடித்த நபருக்கு, தனியுரிமையை மீறியதாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது.&nbsp;</p><h2>கணவருக்கு சந்தேகம்&nbsp;</h2><p>

தைவானைச் சேர்ந்த நபர் ஒருவர், தன் மனைவியின் விடுமுறை இல்லத்தில் தொடர்பில்லாத பல் துலக்கும் தூரிகையை கண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63d88aa9-d616-4f92-9e51-8d39cf7a559b/26-6a96bb6769d2f.webp' />&nbsp;</p><p></p><p>
இதனால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட,வெளிப்புறத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். 

அதில், ஒருவர் தனது மனைவியை மீண்டும் மீண்டும் வீட்டில் கொண்டுபோய் விடுவது தெரியவந்தது. </p><p>

அதனைத் தொடர்ந்து, பல மாதங்கள் கழித்து டிசம்பர் 2023-யில் அந்தத் தம்பதியினர் வசித்து வந்த தனது பெற்றோர் வீட்டில் இருந்த செயலி மூலம், அந்த விடுமுறை இல்லத்தில் இருந்த ரிமோட் Vacuum Cleaner-ஐ அவர் இயக்கினார்.
</p><p>
ஆனால், அந்த சாதனத்தின் Audio செயல்பாட்டை இயக்க முயன்றபோது, அதற்கு பதிலாக Live கமெராவை இயக்கியுள்ளார்.</p><p> அதில் அவரது மனைவி தனது காதலருடன் இருப்பது பதிவானதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை கூறியது.</p><h2>

வீடியோவாக பதிவு</h2><p>குறித்த கணவர், தனது மனைவி மற்றும் அவரின் காதலர் இருவரும் ஆடையை களைந்து, அந்த இல்லத்தை சுற்றி நடமாடுவதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
</p><p>
பின்னர் தனது விவாகரத்து நடவடிக்கைகளின்போது, அந்த வீடியோ ஆதாரமாக சமர்ப்பித்த அவர், தனது மனைவியிடம் இருந்து 46,600 பவுண்டுகளுக்கும் சற்று அதிகமான தொகையை இழப்பீடாக கோரினார்.
</p><p>
அதனை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், குறித்த கணவரின் மனைவி 11,600 பவுண்டுகளுக்கும் சற்று அதிகமான (500,000 தைவான் டொலர்கள்) அதிகமான தொகையை செலுத்த உத்தரவிட்டது. </p><p>

என்றாலும், குறித்த பெண் தனது தனியுரிமையை கணவர் மீறிவிட்டதாகக் கூறி, குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். </p><h2>

ஐந்து மாத சிறை</h2><p>பின்னர் அந்த ஆதாரம் ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கணவர் வாதிட்டார்.&nbsp;</p><p>

ஆனாலும், குற்றவியல் நீதிமன்றம் அவரது வாதத்தை நிராகரித்து, திருமணக் கடமைகள் ஒரு தனிநபரின் தனியுரிமை உரிமையை விட மேலானவை அல்ல என்று நீதிமன்றம் கூறியது.
</p><p>
அத்துடன் கணவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், மனைவிக்கு 3,500 பவுண்டுகள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06aebc86-04b1-4e01-83d2-0c48be8a5cad/26-6a96bb669ed9f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> </b>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை தொடர் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய பிரித்தானியர்... 12 ஆண்களுக்கும் தொடர்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/husband-abusing-his-wife-stands-trial-1788261403"></link>
            <id>https://news.lankasri.com/article/husband-abusing-his-wife-stands-trial-1788261403</id>
            <summary type="text">UK husband accused of abusing his wife with 12 others: பிரித்தானியாவில், தனது மனைவியை மற்ற 12 பேருடன் சேர்ந்து துன்புறுத்தியதாக கணவன் மீது குற்றம் சாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK husband accused of abusing his wife with 12 others: பிரித்தானியாவில், தனது மனைவியை மற்ற 12 பேருடன் சேர்ந்து துன்புறுத்தியதாக கணவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணவன், பிரித்தானியாவின் மான்செஸ்டரில் விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c701a76a-ead5-4715-a859-2c3bb5c0a61a/26-6a96b41da797e.webp' /></p><p>
</p><p>துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவோ அல்லது அதற்குத் துணைபுரிந்ததாகவோ குற்றம் சாட்டப்பட்ட மற்ற பன்னிருவரும் விசாரணையை எதிர்கொள்கின்றனர். </p><p>அரசுத் தரப்பு சட்டத்தரணிகளின் தகவலின்படி, பிரித்தானியாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஸ்டாக்போர்ட்டைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க அந்த நபர் மீது, 2004-ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்ததாகக் கூறப்படும் 48 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>அவரது மனைவியின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக, காவல்துறை அந்த நபரின் அடையாளத்தை பொதுவெளியில் வெளியிடவில்லை. அந்த கணவர் ஆரம்பத்தில் அனைத்துக் குற்றங்களையும் மறுத்தார். </p><p>அரசுத் தரப்பு சட்டத்தரணிகளின் கூற்றுப்படி, அவர் பின்னர் 15 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்: ஐந்து கற்பழிப்பு குற்றங்கள், ஆறு ஊடுருவல் தாக்குதல் குற்றங்கள், மூன்று பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் மனைவியின் அனுமதியின்றி அவரது அந்தரங்கப் படங்களைப் பகிர்ந்த ஒரு குற்றம் ஆகியவை இதில் அடங்கும்.</p><p></p><p> </p><p>எஞ்சியுள்ள 33 குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். ஸ்கொட்லாந்தின் டண்டியைச் சேர்ந்த 59 வயதான கீத் ஃபோதரிங்ஹாம் (Keith Fotheringham) என்ற பதின்மூன்றாவது நபர், பாலியல் ரீதியான ஊடுருவலுடன் கூடிய தாக்குதல், அத்தகைய தாக்குதலை நடத்துவதற்கான சதி, பாலியல் வன்புணர்வுக்கான சதி ஆகிய குற்றச்சாட்டுகளைத் தனித்தனியாக ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்; அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும். முதற்கட்ட விசாரணைகளில், மான்செஸ்டரிலிருந்து தென்கிழக்கே சுமார் 30 நிமிட பயணத் தொலைவில் உள்ள ஸ்டாக்போர்ட்டில் இருக்கும் தம்பதியரின் வீட்டிற்கு, கூறப்படும் குற்றங்களைச் செய்வதற்காக அந்த நபர்களில் சிலர் அழைக்கப்பட்டதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c1c6e1f-c426-453b-9d1c-1d261fc806d6/26-6a96b41e5d31b.webp' /></p><p> </p><p>பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த, 28 முதல் 73 வயதுக்குட்பட்ட 12 இணை பிரதிவாதிகளும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
</p><p>அவர்களில், ஸ்டாக்போர்ட்டைச் சேர்ந்த 43 வயதான மருத்துவ உதவியாளர் ஜொனாதன் கிர்க்கும் ஒருவர். மான்செஸ்டர் மற்றும் சால்ஃபோர்டில் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து, 2011-ல் அப்பகுதியில் உள்ள அவசரகாலப் பணியாளர்களை இளவரசர் ஹரி சந்தித்தபோது, ​​அவருடன் கிர்க் கைகுலுக்கிய புகைப்படம் ஒன்றும் வெளியானது. </p><p>கிர்க் மீது பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை செய்ய சதி செய்தல் மற்றும் ஊடுருவித் தாக்க சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும், முன்னாள் கால்பந்து கிளப் தலைமை நிர்வாகியான 55 வயது கார்ல் லிண்ட்சே மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p></p><p> </p><p>அவர் மீது பாலியல் வன்கொடுமை செய்ய சதித்திட்டம் தீட்டியது, பாலியல் ஊடுருவல் மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது மற்றும் உள்நோக்கத்துடன் போதைப் பொருளை வழங்க சதித்திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>கென்ட்டைச் சேர்ந்த 42 வயதான டேனியல் ரேனர் மற்றும் டெர்பிஷயரைச் சேர்ந்த 59 வயதான டேவிட் கிரேவ்ஸ் ஆகிய இருவரும், பாலியல் வன்கொடுமை செய்ய சதித்திட்டம் தீட்டியது, பாலியல் ஊடுருவல் மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது மற்றும் உள்நோக்கத்துடன் போதைப் பொருளை வழங்க சதித்திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்; </p><p>செஷயரைச் சேர்ந்த 73 வயதான கிரஹாம் ப்ரோஹாம், பாலியல் வன்கொடுமை செய்தது, பாலியல் வன்கொடுமை செய்ய சதித்திட்டம் தீட்டியது மற்றும் பாலியல் ஊடுருவல் மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். </p><p>இந்த வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட 12 வார கால விசாரணையின்போது, ​​அவர்கள் மின்ஷல் ஸ்ட்ரீட் கிரவுன் நீதிமன்றத்தில் அந்த கணவருடன் இணைந்து வழக்கை எதிர்கொள்ள உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T11:15:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பிரித்தானியக் குடும்பம்: வழக்கில் முக்கிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pistol-found-14-years-after-brit-family-shot-dead-1788260760"></link>
            <id>https://news.lankasri.com/article/pistol-found-14-years-after-brit-family-shot-dead-1788260760</id>
            <summary type="text">Breakthrough in murders mystery as pistol found 14 years after Brit family shot dead: 14 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியக் குடும்பம் ஒன்று சுட்டுக்கொல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Breakthrough in murders mystery as pistol found 14 years after Brit family shot dead: 14 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியக் குடும்பம் ஒன்று சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளதைத் தொடர்ந்து வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.</p><p>[<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86579e78-fb30-4100-a7b9-34f2dbe4cb29/26-6a96b19af2e3a.webp' />]</p><p>பிரான்சில் நடந்த பயங்கர கொலை சம்பவம் ஒன்று தொடர்பில், ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><h3>
துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்
</h3><p>
2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி, பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு பிரித்தானியக் குடும்பம் சென்ற காரை நோக்கி, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.</p><p>

அவர் சுட்டதில், காரிலிருந்த Saad al-Hilli (50), அவரது மனைவி Iqbal (47) மற்றும் தாயார் Suhaila Al-Allaf (74) ஆகியோர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86579e78-fb30-4100-a7b9-34f2dbe4cb29/26-6a96b19af2e3a.webp' /></p><p>தம்பதியரின் ஒரு மகளான Zainab (7) காயத்துடன் உயிர் பிழைக்க, மறு நாள் தடயவியல் நிபுணர்கள் இறந்தவர்களின் உடல்களை அகற்றும்போது, தாய் Iqbalஇன் கால்களுக்கிடையில் அவரது இரண்டாவது குழந்தையான Zeena (4) பயந்து நடுங்கிக்கொண்டு ஒளிந்திருப்பது தெரியவந்தது.&nbsp;</p><p></p><p>
இந்த துப்பாக்கிச்சூட்டில், அவ்வழியே சைக்கிளில் வந்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டவரான Sylvain Mollier (45) என்பவரும் கொல்லப்பட்டிருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e47178fb-b4f3-4dab-8afb-daf1eb03c00f/26-6a96b19baa27d.webp' /></p><h3>வழக்கில் முக்கிய திருப்பம்
</h3><p>
இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள ஏரி ஒன்றின் அடியிலிருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், அது ஒரு சுவிஸ் ராணுவ துப்பாக்கி. அத்துடன், 1935ஆம் ஆண்டு, அதே மொடலில் 940 துப்பாக்கிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e5ba4aa-663d-4640-bdc4-22f155bfc54b/26-6a96b19a4bb4f.webp' /></p><p>மேலும், தாக்குதல்தாரி, ஒரு முறை தன் இலக்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அவர் உயிரிழந்ததை உறுதி செய்யும் வகையில், இரண்டாவது முறை அதே நபரை சுடும் ஒரு கைதேர்ந்த, துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற நபர்.
</p><p>
அத்துடன், இந்த வகை துப்பாக்கிகளில் ஒரு சீரியல் நம்பர் இருக்கும். ஆகவே, அது எங்கு தயாரிக்கப்பட்டது என்பது முதல், அதை யார் பயன்படுத்தினார் என்பது வரை கண்டுபிடிக்கமுடியும்.
</p><p>
எல்லாவற்றிற்கும் மேல், தண்ணீருக்குள் எத்தனை ஆண்டுகள் கிடந்திருந்தாலும், அதிலுள்ள DNAவைக் கண்டுபிடிக்கும் வழிமுறைகள் தற்போது உள்ளதால், முன்பு கிடைத்த ஆதாரங்களை, தற்போது கிடைத்துள்ள ஆதாரத்துடன் இணைத்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கக்கூடும் என்பதே நல்ல செய்தி.
</p><p>
ஆக, அந்த துப்பாக்கி தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள், Saad al-Hilli குடும்பத்தினரைக் கொல்ல குற்றவாளி பயன்படுத்திய துப்பாக்கி இதுதானா என்பதைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறி..குதிக்க முயன்ற புலம்பெயர் நபர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sudan-migrant-youth-dies-after-failed-jump-lorry-1788257818"></link>
            <id>https://news.lankasri.com/article/sudan-migrant-youth-dies-after-failed-jump-lorry-1788257818</id>
            <summary type="text">Sudan migrant youth dies after failed jump lorry: பிரான்ஸில் பிரித்தானியா நோக்கி சென்றுகொண்டிருந்த லொறி மீது குதிக்க முயன்ற புலம்பெயர்ந்த ஒருவர் உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sudan migrant youth dies after failed jump lorry: பிரான்ஸில் பிரித்தானியா நோக்கி சென்றுகொண்டிருந்த லொறி மீது குதிக்க முயன்ற புலம்பெயர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.</p><p>

பிரான்ஸின் Calais சாலை சுங்கச்சாவடியின் உச்சியில் இருந்து, பிரித்தானியா நோக்கி சென்றுகொண்டிருந்த லொறி ஒன்றின் மீது குதிக்க முயன்ற சூடானிய நபர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><h2>22 வயது இளைஞர்</h2><p>

பிரான்ஸ் நாட்டின் Pas-de-Calais பகுதியில் உள்ள செட்க்ஸ் சுங்கச்சாவடியின் வழியாக பிரித்தானியா நோக்கி லொறி ஒன்று சென்றுகொண்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d66d722c-d5cd-40fa-89b4-20f9acd5b397/26-6a96a6c05b168.webp' />&nbsp;</p><p></p><p>
அப்போது சுங்கச்சாவடியின் கட்டமைப்பின் உச்சியில் இருந்த 22 வயது இளைஞர் ஒருவர், அந்த லொறியின் மீது குதிக்க முயன்றுள்ளார்.
</p><p>
ஆனால், அவர் வாகனத்தை சரியாக அடைய முடியாததால், அதற்கு பின்னால் சாலையில் கீழே விழுந்துள்ளார். 

இதில் படுகாயமடைந்த குறித்த இளைஞர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.</p><h2>

துரதிர்ஷ்டவசமாக&nbsp;உயிரிழப்பு</h2><p>துரதிர்ஷ்டவசமாக ஞாயிற்றுக்கிழமை மதியம் அந்நபர் உயிரிழந்தார். விசாரணையில் குறித்த இளைஞர் சூடானைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

உயிரிழந்தவரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. </p><p>


அதே சமயம், சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு நபர் சில நிமிடங்களுக்கு முன்னர் அதே வாகனத்தில் வெற்றிகரமாக ஏறி சென்றுள்ளார்.
</p><p>
Calais துறைமுகம் மற்றும் சேனல் சுரங்கப்பாதையை சுற்றியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், புலம்பெயர்ந்தோர் லொறிகளில் மறைந்து பிரித்தானியாவை அடைய முயற்சிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e007cd54-12d5-43b1-b334-830b9aec4738/26-6a96a6c126fe0.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:17:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெனீவா ஏரியில் எக்கச்சக்கமான பிளாஸ்டிக் துகள்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/plastic-pollution-found-in-lake-geneva-1788256332"></link>
            <id>https://news.lankasri.com/article/plastic-pollution-found-in-lake-geneva-1788256332</id>
            <summary type="text">More plastic pollution found in Lake Geneva: ஜெனீவா ஏரியில் முன்பு கணிக்கப்பட்டதைவிட, கூடுதல் பிளாஸ்டிக் மாசு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.


ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>More plastic pollution found in Lake Geneva: ஜெனீவா ஏரியில் முன்பு கணிக்கப்பட்டதைவிட, கூடுதல் பிளாஸ்டிக் மாசு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p>


சுவிஸ் பல்கலை மற்றும் ஆய்வமைப்பு ஒன்று இணைந்து மேற்கொண்ட ஆய்வில், ஜெனீவா ஏரி, முன்பு கணிக்கப்பட்டதைவிட, 656 மடங்கு வரை அதிக அளவு நுண்பிளாஸ்டிக்கால் மாசுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>
லோசான் பல்கலைக்கழகமும், Swiss Federal Technology Institute of Lausanne என்னும் ஆய்வமைப்பும் இணைந்து ஒரு குழுவாக இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன.
</p><h3>
ஜெனீவா ஏரியில் எக்கச்சக்கமான பிளாஸ்டிக் துகள்கள்</h3><p>

மனித முடியின் அகலத்திற்குச் சமமான, அதாவது, 100 மைக்ரோமீட்டருக்கும் குறைவான, சாதாரணமாக பயன்படுத்தப்படும் வலைகளுக்குப் புலப்படாத, மிக நுண்ணிய துகள்களைக் கண்டறியும் ஒரு முறையை இந்தக் குழு உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a202406c-0927-4c59-ae10-5abde9cf00fa/26-6a96a04da7e5e.webp' /></p><p>
ஏரியின் மொத்த பிளாஸ்டிக் மாசுபாட்டில் 97 சதவீதம் வரை இந்த நுண் பிளாஸ்டிக் துகள்களே காரணம் என்பது அந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p>

இவ்வளவு சிறிய துகள்கள், மனித உடலிலுள்ள செல்களுக்குள் நுழைந்து அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும் என ஆய்வை தலைமையேற்று நடத்திய கிறிஸ்டல் ஹாஸ்லர் என்பவர் எச்சரிக்கிறார்.
</p><p>
சுவிஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 99 சதவிகித நுண்பிளாஸ்டிக்குகளை வடிகட்டுகின்றன, ஆனால் அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு, டயர் தேய்மானம், செயற்கைத் துணிகளைத் துவைத்தல் மற்றும் மழைநீர் வழிந்தோடுதல் போன்ற பரவலான மூலங்களிலிருந்து வருகின்றன.</p><p>

விடயம் என்னவென்றால், அவை சுத்திகரிப்பு நிலையத்தை ஒருபோதும் சென்றடைவதில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T09:54:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பனிச்சரிவுக்கு காரணம் என்ன? வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/weatherman-explains-reason-for-nepal-glacier-slide-1788247285"></link>
            <id>https://news.lankasri.com/article/weatherman-explains-reason-for-nepal-glacier-slide-1788247285</id>
            <summary type="text">delta weatherman hemachandran explains reason behind nepal glacier slide: நேபாளத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு என்ன காரணம் என வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>delta weatherman hemachandran explains reason behind nepal glacier slide: நேபாளத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு என்ன காரணம் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.</p><h3> 

நேபாளத்தில் பனிச்சரிவுக்கு காரணம் என்ன? </h3><p>

சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aab2c338-3cc5-4a73-bc1f-a058ccdeaa2b/26-6a967cf77deb5.webp' /></p><p> 

சுமார் 4,462 பேர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 

இதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நீர்மின் நிலைய சுரங்கங்களில் சுமார் 900 பணியாளர்கள் சிக்கியுள்ளதாவும், அவர்களை மீட்க முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p> 

முதலில் நிலநடுக்கம் காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பனிச்சரிவு காரணமாகவே, பனிப்பாறைகள் உருகி, ஆற்றில் நீர்வரத்து பாரிய அளவில் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

வெள்ளப்பெருக்கில் நீர் மட்டுமில்லாமல், சேறுகள், வீடு, பாறைகள் அடித்து வரப்பட்டுள்ளதால் மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. </p><p>

வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த பனிப்பாறை சரிவு நிகழ்ந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். </p><p>

இந்நிலையில் இந்த வெள்ளப்பெருக்கு குறித்து விரிவாக பேசிய டெல்டா வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன், நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்கு காரணம் என்ன? இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு எதனால் நடந்தது? இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா?எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய பேராபத்துகள் என்னென்ன என்பது குறித்தும் பேசியுள்ளார். </p><p>

மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க</p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LTUXPhqZuUQ?start=13" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T09:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை - அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/onions-to-sell-at-ration-shop-for-rs35-per-kig-1788253772"></link>
            <id>https://news.lankasri.com/article/onions-to-sell-at-ration-shop-for-rs35-per-kig-1788253772</id>
            <summary type="text">onions to sell at ration shop for rs35 per kg from 3 september: ரேஷன் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.35 க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வெங்கட்ரமணன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>onions to sell at ration shop for rs35 per kg from 3 september: ரேஷன் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.35 க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். </p><h3>

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை</h3><p>

சமையலுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2564859-6c74-494c-a274-cb4cd5511de6/26-6a96964dc8ab3.webp' /></p><p>

தற்போது வெங்காய விலை கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். </p><p>

இதனை சமாளிக்க ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.&nbsp;</p><p></p><p>

இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், "ஜூலை 6ஆம் தேதி, 6.7.2026 அன்று நடைபெற்ற விலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்படுத்தும் வகையில், ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe5095b6-8f28-4e95-ad76-468cec18d751/26-6a96964e7a3a0.webp' /></p><p>

இந்த ஆய்வுக்கூட்டத்தின் தொடர் நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களின் விலை விவரங்கள் தினந்தோறும், வாரா வாரம், மாதம் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. </p><p>

தற்சமயம் ஈரான் போர் காரணமாக வாகன எரிபொருள் விலையேற்றத்தால், போக்குவரத்து செலவுகள் உயர்வு, தற்போது அண்டை மாநிலங்களில் நிலவும் மாறுபட்ட காலநிலையின் தாக்கம் மற்றும் வெங்காய உற்பத்தியில் முதன்மையாக விளங்கும் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் வரத்து குறைவு காரணமாக வெளிச்சந்தைகளில் வெங்காயத்தின் விலை உயர்வு விலை ரூ.56 முதல் ரூ. 60 வரை விற்கப்பட்டு வருகிறது.&nbsp;</p><p></p><p>
 ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் நலனை கருத்தில் கொண்டு விலையேற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், அரசு தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டுமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்துள்ளது.</p><p> 

நகரப்புற பகுதிகளில் அமைந்துள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதான கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள் அமுதம் அங்காடிகள் மற்றும் நகரப்புற பகுதியில் அமைந்துள்ள நியாயவிலை கடைகள் மூலமாக ஒரு கிலோ ரூ.35 க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதில் முதற்கட்டமாக நகர்ப்புறத்தில் அமைந்துள்ள 8,233 நியாய விலைக் கடைகள் மூலம் சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். </p><p>

 3 செப்டம்பர் 2026 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு 1 கிலோ வெங்காயம் வீதம் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T09:10:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஒருவர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-ex-pm-edouard-balladur-passed-away-1788249879"></link>
            <id>https://news.lankasri.com/article/france-ex-pm-edouard-balladur-passed-away-1788249879</id>
            <summary type="text">One of France&#039;s former prime ministers has died, current Prime Minister Sébastien Lecornu says: பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பிரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>One of France's former prime ministers has died, current Prime Minister Sébastien Lecornu says: பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பிரான்சின் இந்நாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
</p><p>

பிரான்சின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான Edouard Balladur மரணமடைந்துள்ளதாக பிரான்ஸ் இந்நாள் பிரதமரான செபாஸ்டியன் லெக்கார்னு தெரிவித்துள்ளார்.</p><h3>

பிரான்ஸ் முன்னாள் பிரதமர் மரணம்</h3><p>

Edouard Balladur, 1993ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் பிரதமராக பதவி வகித்தவர் ஆவார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1267a0ab-e067-46a9-af32-9f5a82ffbe50/26-6a968718c91d1.webp' /></p><p>
இந்நிலையில், சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன், Edouard Balladur தனது 97ஆவது வயதில் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

மறைந்த பிரதமருக்கு புகழாரம் சூட்டியுள்ள செபாஸ்டியன், பிரான்ஸ் வரலாற்றுடன் 50 ஆண்டுகள் தொடர்புடையவரான Edouard Balladur, அரசியல் வட்டாரத்தில் பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் முன்மாதிரியாக நிலைத்திருப்பார் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T08:04:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியா செல்லும் முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-to-visit-uk-sep-10-attract-investments-1788240744"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-to-visit-uk-sep-10-attract-investments-1788240744</id>
            <summary type="text">cm vijay to visit uk in september 10 for attract investments: முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay to visit uk in september 10 for attract investments: முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><h3>

பிரித்தானியா செல்லும் முதல்வர் விஜய் </h3><p>

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள முதல்வர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/881748e4-cd19-49a4-9ac9-be7daf1f5f13/26-6a96636ac8f79.webp' /></p><p> 

சமீபத்தில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p></p><p>

ஆனால், பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிட்டப்பட்டதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள், அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கு செல்லும் என தொழில்துறையினர் கவலை தெரிவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/643764c6-8bb1-45f4-b3c0-13798ce09383/26-6a96636a1a167.webp' /></p><p>

இந்நிலையில், முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p> 

செப்டம்பர் 16 ஆம் திகதி வரை முதல்வர் விஜய் பிரித்தானியாவில் இருந்து, தொழில்துறையினர் மற்றும் பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a46aaad-2417-4acf-aff0-7f6c6842ce4f/26-6a96636b7b52c.webp' /></p><p> 

இதே போல், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு, வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி தைவானில் நடைபெற உள்ள செமி கண்டக்டர், செயற்கை நுண்ணறிவு சிப் உள்ளிட்ட தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் செமிகான் மாநாட்டில் கலந்து கொண்டு முதலீடுகளை ஈர்க்க உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T08:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி வெற்றி பெற்றால்... ஜேர்மன் சேன்ஸலரின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/merz-warns-if-afd-won-damage-to-eastern-states-1788249561"></link>
            <id>https://news.lankasri.com/article/merz-warns-if-afd-won-damage-to-eastern-states-1788249561</id>
            <summary type="text">Election victory for AfD would do serious damage to the eastern German state, says Chancellor Friedrich Merz: எதிர்வரும் மாகாணத் தேர்தலில் புலம்பெயர்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Election victory for AfD would do serious damage to the eastern German state, says Chancellor Friedrich Merz: எதிர்வரும் மாகாணத் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி வெற்றி பெறுமானால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.</p><p>


ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.
</p><p>
அந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
</p><h3>
ஜேர்மன் சேன்ஸலரின் எச்சரிக்கை</h3><p>

இந்நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி அந்தத் தேர்தலில் வெற்றி பெறுமானால் அது அந்த மாகாணத்துக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f3f1d19-4708-4ebd-9e86-8b1cc86c09c4/26-6a9685db2560d.webp' /></p><p>
குறிப்பாக, Saxony-Anhalt மாகாணத்தின் பிரீமியர் AfD கட்சியைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், அம்மாகாணத்தில் புதிய தொழிற்சாலைகள் அல்லது தொழில்களைத் துவக்க சர்வதேச முதலீட்டாளர்கள் விரும்பமாட்டார்கள் என்று கூறியுள்ளார் மெர்ஸ்.&nbsp;</p><p></p><p>
ஆகவே, தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் Saxony-Anhalt மாகாணம் சிக்குவதை தடுக்க எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்றும் கூறியுள்ளார் மெர்ஸ்.
</p><p>
அதற்காக, தான் இந்த வாரம் Saxony-Anhalt மாகாணத்திற்கு நேரடியாகச் சென்று, யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யாமலிருக்கும் அம்மாகாண வாக்காளர்களை AfD கட்சிக்கு வாக்களிக்காமல் தடுக்கும் வகையில் அவர்களிடம் பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T07:59:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுபாஷ் சந்திராவின் ரூ 22,000 கோடி கடன் ரத்து: இடைக்காலத் தடை விதித்த 5 பேர் கொண்ட அமர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/subhash-chandra-repayment-plan-1788248059"></link>
            <id>https://news.lankasri.com/article/subhash-chandra-repayment-plan-1788248059</id>
            <summary type="text">5-member bench stays Subhash Chandra&#039;s repayment plan: சுபாஷ் சந்திராவின் கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு 5 பேர் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை....</summary>
            <content type="html"><![CDATA[<p>5-member bench stays Subhash Chandra's repayment plan: சுபாஷ் சந்திராவின் கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு 5 பேர் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை.
</p><p>ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சுபாஷ் சந்திரா முன்வைத்த ரூ. 6.5 கோடி கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த முந்தைய உத்தரவுக்கு, தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/024ce577-4d4c-44f9-b94d-ee2377273f23/26-6a967ffd7623a.webp' /></p><p> </p><p>முடிவை நிர்ணயிக்கும் நடுவர் (tie-breaker judge) தெரிவித்த கருத்து பெரும்பான்மை கருத்து அல்ல என்றும், அது வழக்கின் இறுதி உத்தரவு அல்ல என்றும் NCLT அமர்வு கூறியுள்ளது. </p><p>

ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் கௌரவத் தலைவரான சுபாஷ் சந்திரா, ஒப்புக்கொண்ட ரூ.22,007 கோடி கடனுக்கு சமர்ப்பித்த ரூ.6.5 கோடி திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில், </p><p>தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) டெல்லி அமர்வின் மூன்று உறுப்பினர்களிடையே ஏற்பட்ட இழுபறிக்குப் பிறகு, இந்த வழக்கை செப்டம்பர் 1 அன்று விசாரிப்பதற்காக, தீர்ப்பாயம் திங்களன்று ஐந்து பேர் கொண்ட அமர்வை அமைத்தது.</p><p> இந்த அமர்வில் நீதித்துறை உறுப்பினர்களான அனுபிந்தர் சிங் கிரேவால், பச்சு வெங்கட் பலராம் தாஸ் மற்றும் மகேந்திர கண்டேல்வால் ஆகியோரும், தொழில்நுட்ப உறுப்பினர்களான அதுல் சதுர்வேதி மற்றும் ரவீந்திர சதுர்வேதி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.</p><p></p><p> </p><p>இந்த விவகாரத்தில் பெரும்பான்மைக் கருத்து எதுவும் எழவில்லை என்றும், அதனால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் தீர்ப்பாயத்தின் அசல் அமர்வு கூறியது. </p><p>கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவை சந்திராவின் திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததோடு, அதனைத் தீர்ப்பாயம் நிராகரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தன. </p><p>அத்திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட மதிப்பானது, சந்திராவின் சொத்து மதிப்பில் வெறும் 0.028 சதவீதம் மட்டுமே என்றும் அவர்கள் தெரிவித்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T07:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா இடைத்தேர்தல்கள்: பிரதமர் மார்க் கார்னி கட்சி அமோக வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/carney-liberal-party-sweeps-all-3-byelections-1788243776"></link>
            <id>https://news.lankasri.com/article/carney-liberal-party-sweeps-all-3-byelections-1788243776</id>
            <summary type="text">Liberal party sweeps all three byelections: கனடா இடைத்தேர்தல்கள் மூன்றிலும் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.


திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Liberal party sweeps all three byelections: கனடா இடைத்தேர்தல்கள் மூன்றிலும் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.</p><p>


திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று இடைத்தேர்தல்களிலும் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி, முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
</p><h3>
பிரதமர் மார்க் கார்னி கட்சி அமோக வெற்றி
</h3><p>
திங்கட்கிழமையன்று, ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், மூன்றிலுமே பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dcfc344-8432-4e49-8b7c-3b416556ea15/26-6a966f423c4ec.webp' /></p><p>
தேர்தலில், லிபரல் கோட்டைகளான ஒன்ராறியோவின் Beaches–East York தொகுதியையும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் North Vancouver–Capilano தொகுதியையும் லேபர் கட்சி தக்கவைத்துக்கொண்டுள்ளதுடன், பியர் பொய்லியேவின் கன்சர்வேடிவ் கட்சியிடமிருந்து கியூபெக்கின் Chicoutimi–Le Fjord தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த தொடர் ராஜினாமாக்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை இரவு நிலவரப்படி, ஆளும் லிபரல் கட்சி 170 இருக்கைகளைக் கொண்டிருந்தது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், தற்போது இந்த மூன்று தொகுதிகளில் கிடைத்துள்ள வெற்றியால் லிபரல் கட்சிக்கு 173 இருக்கைகள் கிடைத்துள்ளன.

173 இருக்கைகள் என்பது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறத் தேவையானதை விட ஒரு இடம் கூடுதலாகும்.
</p><p>
ஆக, இந்தப் பெரும்பான்மையுடன், லிபரல் கட்சியினர் எதிர்க்கட்சியால் கவிழ்க்கப்படும் அபாயம் இன்றி 2029 வரை ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T07:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[43 பந்தில் 111 ரன் விளாசிய ஹெட்மையர்! 16 ஓவர்களில் 185 ஓட்டங்கள்..நொறுங்கிய பூரனின் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shimron-hetmyer-111-in-43-balls-cpl-t20-1788246045"></link>
            <id>https://news.lankasri.com/article/shimron-hetmyer-111-in-43-balls-cpl-t20-1788246045</id>
            <summary type="text">Shimron hetmyer 111 runs in 43 balls: கரீபியன் லீக் போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடி சதம் விளாசினார். 

ஷிம்ரான் ஹெட்மையர் சதம் விளாச, கயானா அமே...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shimron hetmyer 111 runs in 43 balls: கரீபியன் லீக் போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடி சதம் விளாசினார். </p><p>

ஷிம்ரான் ஹெட்மையர் சதம் விளாச, கயானா அமேசான் வாரியர்ஸ் அணி கரீபியன் லீக் போட்டியில் அபார வெற்றி பெற்றது.
</p><h2>
ஹெட்மையர் ருத்ரதாண்டவம் </h2><p>குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35e93b85-6e06-413d-97b7-c18efc826594/26-6a9678208f40a.webp' />&nbsp;</p><p></p><p> 

முதலில் களமிறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில், தொடக்க வீரர்கள் சொதப்ப ஷிம்ரான் ஹெட்மையர் (Shimron Hetmyer) ருத்ரதாண்டவம் ஆடினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2343c08d-e563-4603-9d75-7b4d182a070b/26-6a96789326881.webp' /></p><h2>
ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ்&nbsp;தோல்வி</h2><p>ரோமாரியோ ஷெப்பர்ட் அவருடன் கைகோர்க்க, கயானா அணி 16 ஓவர்களில் 185 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p>
ஷிம்ரான் ஹெட்மையர் 43 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 111 ஓட்டங்கள் விளாசினார். ஷெப்பர்ட் 7 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசினார். </p><p>

பின்னர் ஆடிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்களில் 172 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. அலெக்ஸ் ஹால்ஸ் 55 (24), நிக்கோலஸ் பூரன் 43 (16) ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bed940d-0f7d-4619-b79e-b35b430f507c/26-6a96796b9cc0b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9e98b08-3803-4503-a0d2-cc9cb3e83001/26-6a96781fd8e21.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed01b5a9-3fa6-472b-a569-43d258e911ce/26-6a967821497d1.webp' />&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T06:59:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்... இன்னொரு அவுஸ்திரேலியர் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/second-australian-found-alive-1788245791"></link>
            <id>https://news.lankasri.com/article/second-australian-found-alive-1788245791</id>
            <summary type="text">Second Australian is found alive in Nepal: நேபாளத்தில் இரண்டாவது அவுஸ்திரேலியர் உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Second Australian is found alive in Nepal: நேபாளத்தில் இரண்டாவது அவுஸ்திரேலியர் உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்திற்குப் பிறகு, இரண்டாவது அவுஸ்திரேலியர் ஒருவர் உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a786d89-ddc4-428d-a43b-e66381fefbda/26-6a9677230b825.webp' /></p><p>
</p><p>நேபாள வெள்ளத்தில் காணாமல் போன அவுஸ்திரேலியர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டதை அல்பானீஸ் அரசாங்கம் ஏபிசி செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியது. </p><p>அடையாளம் வெளியிடப்படாத அந்த அவுஸ்திரேலியர், தூதரக அதிகாரிகளிடமிருந்து உதவிகளைப் பெற்று வருவதோடு, தனது குடும்பத்தினருடனும் பேசியுள்ளார்.</p><p></p><p> </p><p>வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமானதாகக் கருத்தப்படும் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை தற்போது 42 ஆக உள்ளது. வெள்ளப்பெருக்கில் மொத்தம் 3,925 பேர் காணாமல் போயுள்ள நிலையில், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளது. </p><p>26 வயதான காரா செவரினோ என்பவர் நேபாள வெள்ளத்தில் சிக்கி, பத்திரமாக மீட்கப்பட்ட முதல் அவுஸ்திரேலியர் ஆவார். சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்குள் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து அவர் மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d0832b4-2278-4fc7-9a58-b892e4f3838a/26-6a9677225312d.webp' /></p><p> </p><p>இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அவுஸ்திரேலிய தூதரக ஊழியர்களுடன் அவரது புகைப்படம் வெளியானது.</p><p> சம்பவத்தின் போது லாங்டாங் தேசிய பூங்காவிற்கு அருகில் செவெரினோ இருந்துள்ளார்; பேரழிவிலிருந்து தப்பிக்க டிராக்டரில் சென்றுகொண்டிருந்த ஒரு குழுவினருடன் இணைந்து அவர் உயிர் பிழைத்தார். </p><p>காணாமல் போன அவுஸ்திரேலியர்களில் பலர், இந்து, பௌத்த, சமண மதங்களில் புனிதத் தலமாகக் கருதப்படும் கைலாச மலைக்கு யாத்திரை சென்றிருந்தனர். ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடைக்காலம், மலையேற்றத்திற்கு ஆண்டின் மிகவும் பிரபலமான பருவமாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T06:55:00+00:00</updated>
        </entry>
    </feed>
