<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-10T17:18:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்டானில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-missiles-damage-us-jets-in-jordan-1789047864"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-missiles-damage-us-jets-in-jordan-1789047864</id>
            <summary type="text">Iran missiles damage US jets in Jordan: ஜோர்டானில் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதமடைந்துள்ளன.

அமெரிக்க போர் விமானங்கள் சேதம்ஜோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran missiles damage US jets in Jordan: ஜோர்டானில் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதமடைந்துள்ளன.</p><h2>

அமெரிக்க போர் விமானங்கள் சேதம்</h2><p>ஜோர்டானில் உள்ள Muwaffaq Salti விமான தளம் (Al-Azraq) மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பல அமெரிக்க போர் விமானங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அமெரிக்காவின் A-10 Thunderbolt (Warthog) விமானம் கடுமையாக சேதமடைந்தது, அதன் ஒரு சிறகு முற்றிலும் அழிந்துவிட்டது. மேலும், சுமார் எட்டு F-15 போர் விமானங்கள் சிறிய அளவில் சேதங்களை சந்தித்தன. ஆனால் அவை பின்னர் சேவைக்கு திரும்பியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/287e3fff-93d3-4de8-a047-6496616859ca/26-6aa2b50007a97.webp' /></p><p>இந்த தாக்குதலின் போது, அமெரிக்க படைகள் 30-க்கும் மேற்பட்ட Patriot interceptor missiles-ஐ பயன்படுத்தி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டன.
</p><p>
ஈரான், தண்டனை நடவடிக்கை (punitive operation) என அழைக்கப்படும் இந்த தாக்குதலை, அமெரிக்கா தனது ஐந்து ஈரான் எண்ணெய் கப்பல்களை அழித்ததற்கான பதிலடி எனக் கூறியுள்ளது.
</p><p></p><p>ஜோர்டான் அரசு, “எங்கள் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் 20 ஏவுகணைகளில் 18-ஐ தடுத்து நிறுத்தின. மீதமுள்ள 2 ஏவுகணைகள் மக்கள் வசிப்பிடமற்ற பகுதிகளில் விழுந்தன. உயிரிழப்புகள் எதுவும் இல்லை” என தெரிவித்ததாவது.
</p><p>
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையேயான நீண்டகால பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. Strait of Hormuz மற்றும் Bab-el-Mandeb போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் இரு தரப்பும் தங்கள் தாக்குதல்களை அதிகரித்து வருகின்றன.
</p><p>
சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரிப்பதாவது, “இந்த தாக்குதல்கள், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றத்தை உலகளாவிய எரிபொருள் விநியோகத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தாக மாற்றுகின்றன” எனக் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T17:07:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் வீதியில் நடந்த கத்திக்குத்து: 4 பேர் வரை மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/london-street-stabbing-4-hospitalised-1789059949"></link>
            <id>https://news.lankasri.com/article/london-street-stabbing-4-hospitalised-1789059949</id>
            <summary type="text">லண்டனின் முக்கிய வீதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 4 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.லண்டனில் கத்திக்குத்து தாக்குதல்வியாழக்கிழமை மதியம் தென்கிழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனின் முக்கிய வீதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 4 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>லண்டனில் கத்திக்குத்து தாக்குதல்</h2><p>வியாழக்கிழமை மதியம் தென்கிழக்கு லண்டனின் பரபரப்பான வீதியில் நடந்த திடீர் கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>செப்டம்பர் 10ம் திகதி மதியம் 2 மணியளவில் ப்ராம்லி உயர் வீதியில் அரங்கேறிய கத்திக்குத்து சம்பவம் குறித்து அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p> இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த 4 பேரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ab0552a-5b1b-4985-b12b-72329fbb5a0e/26-6aa2e36f07ce5.webp' /></p><p> இந்த சம்பவத்தை தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு சிறப்பு பாராமெடிக் குழுவினர், ஆம்புலன்ஸ் குழுக்கள், வான்வழி ஆம்புலன்ஸ்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் வரவழைக்கப்பட்டனர்.</p><p>இந்த வன்முறை சம்பவத்தில் கிட்டத்தட்ட 7 சந்தேக நபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T17:05:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருமுறை சார்ஜ் செய்தால் 178 கிமீ ரேஞ்சு - புதிய BGauss C12 MaxR மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bgauss-c12-maxr-ev-scooter-launched-1789057628"></link>
            <id>https://news.lankasri.com/article/bgauss-c12-maxr-ev-scooter-launched-1789057628</id>
            <summary type="text">BGauss C12 MaxR EV Scooter Launched: இந்தியாவில் மின்சார வாகன சந்தையில் புதிய போட்டியாளராக BGauss C12 MaxR அறிமுகமாகியுள்ளது.

இதன் விலை ரூ.1.46 லட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>BGauss C12 MaxR EV Scooter Launched: இந்தியாவில் மின்சார வாகன சந்தையில் புதிய போட்டியாளராக BGauss C12 MaxR அறிமுகமாகியுள்ளது.</p><p>

இதன் விலை ரூ.1.46 லட்சம் (ex-showroom) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர், ஒரே சார்ஜில் 178 கிமீ IDC-certified range வழங்குகிறது. அதிகபட்ச வேகம் 75 kmph ஆகும். 4.2 kW peak power கொண்ட HyperZen in-wheel motor மூலம் இயக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e285f7b-3799-49e1-b4cf-eeac68da50fb/26-6aa2da5f22ed6.webp' /></p><h2>முக்கிய அம்சங்கள்:
</h2><p><b>பேட்டரி:</b> 3.8 kWh LFP battery, IP67 rating உடன் வருகிறது.
</p><p><b>
பாதுகாப்பு</b>: 110 பாதுகாப்பு அம்சங்கள் (safety &amp; protection functions) கொண்ட Battery Management System கொடுக்கப்பட்டுள்ளது.
</p><p><b>
Ride Modes</b>: மூன்று ride mode-கள் உள்ளன.
</p><p><b>
வடிவமைப்பு</b>: Premium styling, urban mobility தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p><b>

தொழில்நுட்பம்</b>: Integrated gear transmission, MCU system - maintenance குறைவு.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae3f23f5-7cc7-4104-9b2f-17ffc951b3cb/26-6aa2da5fcf6eb.webp' /></p><p>BGauss நிறுவனம், “இந்த ஸ்கூட்டர் performance, practicality, premium design ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. நகரப் பயணங்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்” என தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த மாடல், connected features மற்றும் intelligent storage solutions உடன் வருகிறது. belt/chain drive தேவையில்லாமல், gear transmission மூலம் torque-ஐ திறம்பட வழங்குகிறது.</p><p>
சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை விரும்பும் பயனர்களுக்கு, BGauss C12 MaxR ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T16:24:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க வரி தள்ளுபடி - சுவிஸ் நிறுவனங்களுக்கு 2 பில்லியன் டொலர் திருப்பிச் செலுத்தப்பட வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-firms-gain-2-bn-dollar-us-tariff-refunds-1789055967"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-firms-gain-2-bn-dollar-us-tariff-refunds-1789055967</id>
            <summary type="text">Swiss firms gain 2 Billion dollar US tariff refunds: சுவிட்சர்லாந்து நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்ட சுங்க வரிகள் தொடர்பாக பெரிய நிவாரணம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss firms gain 2 Billion dollar US tariff refunds: சுவிட்சர்லாந்து நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்ட சுங்க வரிகள் தொடர்பாக பெரிய நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.</p><p>

UBS வங்கி வெளியிட்ட புதிய மதிப்பீட்டின் படி, சுவிஸ் நிறுவனங்கள் செலுத்தப்பட்ட தொகையில் 2 பில்லியன் டொலர் வரை திருப்பிப் பெறலாம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe4f4c33-6dc9-41e0-b994-c638c64ec911/26-6aa2d3e11acbf.webp' /></p><p>இந்த நிவாரணம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட டிரம்ப் விதித்த சுங்க வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததன் பின்னர் கிடைக்கிறது.</p><p> 2025 ஏப்ரல் முதல் 2026 பிப்ரவரி வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மருத்துவ கருவிகள், துல்லியமான கருவிகள், கடிகாரங்கள் போன்ற பொருட்களுக்கு அதிகளவில் திருப்பிச் செலுத்தல் கிடைக்கும் என UBS தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், காபி, இயந்திரங்கள், மின்சார உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கும் பகுதி நிவாரணம் கிடைக்கும். </p><p></p><p>ஆனால், “இந்த நிவாரணம் நேரடியாக ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அல்ல, இறக்குமதி நிறுவனங்களுக்கே முதலில் வழங்கப்படும். எனவே, சுவிஸ் நிறுவனங்கள் முழுமையான நன்மையைப் பெற முடியாமல் போகலாம்” என UBS தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்கா-சுவிட்சர்லாந்து இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் படி, எதிர்காலத்தில் சுங்க வரிகள் 12.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயரக்கூடும்.</p><p> இருப்பினும், மருந்துகள் (Pharmaceuticals) போன்ற முக்கிய ஏற்றுமதி பொருட்கள் பெரும்பாலும் விலக்கு பெறுவதால், நடைமுறையில் சுங்க வரி சுமார் 6 சதவீதம் மட்டுமே இருக்கும் என UBS வல்லுநர்கள் கூறுகின்றனர்.
</p><p>
இந்த நிவாரணம், சுவிஸ் நிறுவனங்களுக்கு பொருளாதார ஊக்கம் அளிக்கும் நிலையில், அமெரிக்கா-சுவிட்சர்லாந்து இடையேயான வர்த்தக உறவுகள் புதிய பரிமாணத்தை அடையும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T15:56:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவை தாக்கிய ஹவுதி - மெக்கா ஒப்பந்தத்தில் இராணுவ நடவடிக்கையை மறுத்த பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-declines-military-action-on-mecca-pact-1789053395"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-declines-military-action-on-mecca-pact-1789053395</id>
            <summary type="text">Pakistan declines military action on Mecca Pact: சவுதி அரேபியாவை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கிய நிலையில், பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pakistan declines military action on Mecca Pact: சவுதி அரேபியாவை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கிய நிலையில், பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.</p><h2>

இராணுவ நடவடிக்கையை மறுத்த பாகிஸ்தான் </h2><p>மெக்கா ஒப்பந்தம் (Mecca Pact) படி, சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் ஒருவர்மீது தாக்குதல் நடந்தால், அது மூவர்மீதும் தாக்குதல் எனக் கருதப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
ஆனால், பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சஜ்ஜாத் ஹைதர் கான் தெரிவித்ததாவது: “இப்போதைக்கு இராணுவ நடவடிக்கை எதுவும் பேசப்படவில்லை. காலம் வரும் போது, ஒப்பந்தத்தின் படி செயல்படுவோம்” எனக் கூறினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bc32ea5-d1b5-46ba-8beb-3c9c60d5ee67/26-6aa2caf2a0a11.webp' /></p><p>சமீபத்தில் நடந்த ஹவுதி தாக்குதலில், சவுதி அரேபியாவில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், எண்ணெய் நிலையங்கள் மற்றும் பல வசதிகள் சேதமடைந்தன. இதனால், பாகிஸ்தான் சவுதி அரேபியாவுக்கு நேரடியாக இராணுவ உதவி வழங்குமா என்ற கேள்வி எழுந்தது.</p><p>

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அசிஃப், மெக்கா ஒப்பந்தத்தை நேட்டோவின் Article 5-க்கு ஒப்பிட்டார். அதாவது, ஒரு உறுப்பினர்மீது தாக்குதல் நடந்தால், அது அனைவர்மீதும் தாக்குதல் எனக் கருதப்படும். ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
</p><p></p><h2>வல்லுநர்கள் கருத்து</h2><p> இது நேட்டோ போன்ற கூட்டமைப்பு அல்ல, புதிய பிராந்திய கூட்டணி உருவாகவில்லை. பாகிஸ்தான் தனது உள்நாட்டு பொருளாதார சவால்களையும், அமெரிக்கா-ஈரான் இடையேயான நடுவர் நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நேரடி இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க விரும்புகிறது என தெரிவித்துள்ளனர்.
</p><p>
சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தானுடன் ஏற்கனவே பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது. மேலும், Gulf Cooperation Council (GCC) உடன் 2000 முதல் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ளது. ஆனால், இவை நேட்டோவின் Article 5 போல தானாகவே இராணுவ நடவடிக்கையைத் தூண்டவில்லை.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T15:18:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடியுரிமை வழங்க எக்கச்சக்கமாக கட்டணம் வசூலிக்கும் பிரித்தானியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/applicants-for-uk-citizenship-charge-more-5-times-1789044193"></link>
            <id>https://news.lankasri.com/article/applicants-for-uk-citizenship-charge-more-5-times-1789044193</id>
            <summary type="text">Applicants for UK citizenship charged more than five times the admin cost: பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிப்போர், நிர்வாக செலவை ஒப்பிடும்போது, ஐந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Applicants for UK citizenship charged more than five times the admin cost: பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிப்போர், நிர்வாக செலவை ஒப்பிடும்போது, ஐந்து மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்துகிறார்களாம்.
</p><p>

பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிப்போர், உள்துறை அலுவலகத்துக்கு ஆகும் நிர்வாக செலவை ஒப்பிடும்போது, ஐந்து மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதாக, சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
</p><h3>
எக்கச்சக்கமான கட்டணம் வசூலிக்கும் பிரித்தானியா</h3><p>

குடியுரிமை வழங்குவதற்காக, அமெரிக்கா வசூலிக்கும் கட்டணம், 562 பவுண்டுகள். மற்ற G7 நாடுகளை ஒப்பிடும்போது, குடியுரிமை வழங்குவதற்காக பிரித்தானியாதான் உள்ளதிலேயே அதிக கட்டணம் வசூலிக்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b37749a2-94b3-43a5-bfbb-667bfcef1f0d/26-6aa2a5e2cedfd.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், ஒருவருக்கு குடியுரிமை வழங்குவதற்காக, பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு ஆகும் நிர்வாக செலவு, 324 பவுண்டுகள் மட்டுமே.</p><p></p><p>

ஆனால், பிரித்தானியா 1,709 பவுண்டுகள் வசூலிப்பதுடன், குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தனியாக 130 பவுண்டுகள் வசூலிக்கிறது.</p><p>

ஆக மொத்தம், ஒருவர் பிரித்தானியக் குடியுரிமை பெறுவதற்காக செலுத்தும் கட்டணம், 1,839 பவுண்டுகள். ஆக, கிட்டத்தட்ட, ஐந்து மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கிறது பிரித்தானியா.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் தொப்பை குறைய வேண்டுமா? காலையில் எழுந்து இந்த 5 விஷயங்களை செய்யுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-morning-habit-that-help-to-reduce-belly-fat-1789035991"></link>
            <id>https://news.lankasri.com/article/5-morning-habit-that-help-to-reduce-belly-fat-1789035991</id>
            <summary type="text">பலருக்கும் வயிற்று தொப்பை ஒரு மிகப்பெரிய குறைபாடாக இருக்கிறது. அதனை குறைப்பதற்கு பலரும் பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். ஆனால், அது சற்று கடினமாகவே...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலருக்கும் வயிற்று தொப்பை ஒரு மிகப்பெரிய குறைபாடாக இருக்கிறது. அதனை குறைப்பதற்கு பலரும் பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். ஆனால், அது சற்று கடினமாகவே அமைகிறது. அதாவது, வெறும் உடற்பயிற்சி கொண்டு மற்றும் நாம் இந்த வயிற்றுப்புண் குறைத்து விட முடியாது.</p><p> சரியான பழக்க வழக்கங்கள் வழியாகத்தான் இதனை நாம் சரி செய்ய முடியும்.


 
அது முக்கியமாக நாம் காலை நேர பழக்கங்களில் செய்யும் விஷயங்களில் தொடங்கி முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><p> காலையில் எழுந்தவுடன் நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய மாற்றங்கள் நம்முடைய உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து நாள் முழுவதும் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதன் வழியாக நமது கொழுப்பை எளிதில் கரைத்து விட முடியும். அப்படியாக, நாம் காலையில் எழுந்து செய்யக்கூடிய ஒரு ஐந்து முக்கியமான பழக்கவழக்கங்களை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126a62a0-a335-4d3f-a0a6-007a2f4d7e88/26-6aa285da46a9d.webp' /></p><p></p><p>
</p><h3>
1) வெதுவெதுப்பான நீர் அருந்துதல்:</h3><p> 
 காலையில் எழுந்தவுடன் முதலாவதாக வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிப்பது அவசியம். நம்முடைய உடலில் மெட்டபாலிசத்தை 30 சதவீதம் வரை அதிகரித்து, நச்சுக்களை வெளியேற்றுவதோடு தொப்பை கொழுப்பையும் கரைக்க உதவுகிறது. </p><h3>



2) சூரிய ஒளியில் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி:</h3><p> 
அதேபோல், காலை நேர சூரிய ஒளிகள் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் வரை எளிய உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது சூரிய ஒளியிலிருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் டி, தொப்பை கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. </p><h3>


3) அதிக புரதம் நிறைந்த காலை உணவு: </h3><p>
காலையில் முக்கியமாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொண்டு முட்டை, முளைகட்டிய பயறுகள், பன்னீர் அல்லது ஓட்ஸ் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். இது நம்முடைய வயிற்றை நீண்ட நேரம் பசியின்மையோடு வைப்பதோடு தொப்பையை குறைக்க உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4d0529b-99f4-44db-b984-a6b3488477ab/26-6aa285db015c6.webp' /></p><p></p><p> </p><h3>


4) காலை நேர தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம்: </h3><p>

காலையில் எழுந்தவுடன் நிச்சயமாக உங்களுக்கான நேரமாக ஒரு பத்து நிமிடங்கள் செலவு செய்வது அவசியம். அதில் நீங்கள் தியானமும் மூச்சு பயிற்சி செய்வது மிக மிக முக்கியம். இது நம்முடைய உடலிம் அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவை குறைக்கிறது. அந்த அளவு குறையும்போது அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதை இயற்கையாகவே தடுக்கப்படுகிறது. </p><h3>

5) காலை எடையைச் சரிபார்த்தல்: </h3><p>
மேலும், காலை எழுந்தவுடன் கழிவறையை பயன்படுத்திவிட்டு வெறும் வயிற்றில் உடல் எடையை சரி பார்ப்பது வழக்கமாக மாற்றிக் கொள்ளும் பொழுது நாம் உடல் எடையை பற்றிய ஒரு விழிப்புணர்வு உண்டாகும். அதனால், அந்த நாள் முழுவதும் நாம் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து கட்டுப்பாடோடு இருப்பதற்கு ஒரு வழி வகுக்கும்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T13:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் அழிவின் விளிம்பில் 70 சதவீத கடல் பறவைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-seabirds-face-70-percent-extinction-risk-1789046034"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-seabirds-face-70-percent-extinction-risk-1789046034</id>
            <summary type="text">UK seabirds face 70 percent extinction risk: பிரித்தானியாவில் கடல் பறவைகள் மிகுந்த ஆபத்தில் உள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை எச்சரிக்கிறது.

 மிகுந்த ஆபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK seabirds face 70 percent extinction risk: பிரித்தானியாவில் கடல் பறவைகள் மிகுந்த ஆபத்தில் உள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை எச்சரிக்கிறது.</p><h2>

 மிகுந்த ஆபத்தில் கடல் பறவைகள்&nbsp;</h2><p>காலநிலை மாற்றம் காரணமாக, அடுத்த சில தசாப்தங்களில் 70 சதவீத கடல் பறவைகள் அழிவுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acea0453-b11b-4383-b198-f598db75e908/26-6aa2ad142a561.webp' /></p><p>இந்த அறிக்கையில், கடல் நீரின் வெப்பநிலை உயர்வு, உணவுப் பொருட்களின் குறைபாடு, மற்றும் கடல் சூழலின் மாற்றங்கள் ஆகியவை பறவைகளின் வாழ்வை கடுமையாக பாதிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பஃபின் (Puffin), கிட்டிவேக் (Kittiwake) போன்ற பறவைகள் அதிக ஆபத்தில் உள்ளன.</p><p> விஞ்ஞானிகள் எச்சரிப்பதாவது, “கடல் பறவைகள் அழிவது, கடல் சூழலின் ஆரோக்கியத்திற்கும், உயிரியல் சமநிலைக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பறவைகள் கடல் உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றின் அழிவு, மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்களின் வாழ்வையும் பாதிக்கும்” என தெரிவித்துள்ளனர்.
</p><p></p><h2>உடனடி&nbsp;நடவடிக்கைகள் வேண்டும்</h2><p>மேலும், கடல் பறவைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தபட்டுள்ளது.</p><p>கார்பன் உமிழ்வை குறைப்பது, கடல் பாதுகாப்பு பகுதிகளை விரிவாக்குவது, மற்றும் மீன்பிடித் துறையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது போன்ற நடவடிக்கைகள் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுவதாவது, “இது வெறும் பறவைகள் பற்றிய பிரச்சினை அல்ல; உலகளாவிய சூழல் சமநிலையைப் பற்றிய எச்சரிக்கை. கடல் பறவைகள் அழிவது, மனிதர்களின் வாழ்வையும் நேரடியாக பாதிக்கும்” என தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த அறிக்கை, உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளை மீண்டும் நினைவூட்டுகிறது. உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கடல் பறவைகள் மட்டுமல்ல, முழு கடல் சூழலே ஆபத்தில் சிக்கக்கூடும்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T13:10:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டார்மரின் தொகுதியில் அகதி ஒருவரை வேட்பாளராக நிறுத்தும் லேபர் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/labour-picks-child-refugee-to-stand-in-by-election-1789045124"></link>
            <id>https://news.lankasri.com/article/labour-picks-child-refugee-to-stand-in-by-election-1789045124</id>
            <summary type="text">Labour picks former child refugee to stand in by election for Starmer’s seat: கெய்ர் ஸ்டார்மரின் இருக்கைக்கு போட்டியிட அகதி ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Labour picks former child refugee to stand in by election for Starmer’s seat: கெய்ர் ஸ்டார்மரின் இருக்கைக்கு போட்டியிட அகதி ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளது லேபர் கட்சி.
</p><p>

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தது அனைவரும் அறிந்ததே.
</p><p>
அதுமட்டுமின்றி, அவர் சமீபத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
</p><h3>
கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிக்க...
</h3><p>
கெய்ர் ஸ்டார்மர், இங்கிலாந்திலுள்ள Holborn and St Pancras தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6366c906-f755-46ba-a13c-d6233c841073/26-6aa2a98682898.webp' /></p><p>
அவர் தனது நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதி காலியாக உள்ளது.
</p><p>
இந்நிலையில், அந்தத் தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் கிரீன் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி.&nbsp;</p><p></p><p>
அவருடன், தற்போது இந்திய வம்சாவளியினரான ரிஷி மத்லானி (44) என்னும் நபரும் போட்டியில் இணைந்துள்ளார்.
</p><h3>
அகதி ஒருவரை நிறுத்தும் லேபர் கட்சி</h3><p>

இந்நிலையில், Holborn and St Pancras தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட, அகதியாக பிரித்தானியா வந்த பெண்ணொருவரை தேர்ந்தெடுத்துள்ளது லேபர் கட்சி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f428f49f-35af-40e1-8363-02720e495d0d/26-6aa2a985ceb97.webp' /></p><p>

1900களில், ஒரு சிறுமியாக சோமாலியாவிலிருந்து அகதியாக வந்த Sagal Abdi-Wali (42) என்னும் பெண்ணே லேபர் கட்சி சார்பில் Holborn and St Pancras தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட நிறுத்தப்பட உள்ளார்.
</p><p>
Abdi-Wali, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் இரண்டு பள்ளிகளிலும் பணியாற்றியவர் ஆவார்.</p><p>

Holborn and St Pancras தொகுதியில், அடுத்த மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 8ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் AI கல்லூரி அமைக்க ரூ.190 கோடி நன்கொடை வழங்கிய இந்திய தம்பதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-couple-donates-190-cr-for-us-college-1789043265"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-couple-donates-190-cr-for-us-college-1789043265</id>
            <summary type="text">indian origin couple donates 190 crores for setup ai college in us: அமெரிக்காவில் AI கல்லூரி அமைக்க, இந்திய வம்சாவளி தம்பதி ரூ.190 கோடி நன்கொடை வழங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>indian origin couple donates 190 crores for setup ai college in us: அமெரிக்காவில் AI கல்லூரி அமைக்க, இந்திய வம்சாவளி தம்பதி ரூ.190 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.
</p><h3>
 ரூ.190 கோடி நன்கொடை வழங்கிய இந்திய தம்பதி</h3><p> 

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகம்(UNT) ஒரு பொது ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 44,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 230 பட்டப்படிப்புகள் உள்ளது. 

இங்கு கடந்த ஆண்டு 13,000 க்கும் அதிகமானோர் பட்டம் பெற்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f375fa32-9a6d-49f3-856c-917b2f1a234d/26-6aa2a2428ef2b.webp' /></p><p>

இந்நிலையில், இந்த பல்கலைக்கழகம் செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுக் கல்லூரி ஒன்றை அமைப்பதற்காக இந்திய வம்சாவளி தம்பதியான விகாஸ் சின்ஹா மற்றும் அனுராதா 20 மில்லியன் டொலர்களை(இந்திய மதிப்பில் ரூ.190 கோடி) நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
</p><p>
இந்த நன்கொடையைப் பாராட்டும் விதமாக, UNT பல்கலைக்கழகம் அவர்களின் பெயரில் அனுராதா மற்றும் விகாஸ் சின்ஹா ​​செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுக் கல்லூரியை அமைக்க உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aa396b0-0357-48eb-9962-29962562ab41/26-6aa2a24344468.webp' /></p><p>
இந்தப் புதிய கல்லூரி 2 கல்விப் பிரிவுகள் மூலம் செயல்படும். ஒரு பிரிவு அறிவார்ந்த அமைப்புகளை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்தும், மற்றொன்று மனித மற்றும் நிறுவனச் சூழல்களில் தகவல் மற்றும் அறிவார்ந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்யும்.&nbsp;</p><p></p><h3>

யார் இந்த விகாஸ் சின்ஹா அனுராதா?
</h3><p>
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற விகாஸ் மற்றும் அனுராதா, மேல்படிப்புக்காக இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றனர்.

இருவரும் புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தனர்.</p><p> 

விகாஸ் 2023 ஆம் ஆண்டில் UNT-யில் தனது முனைவர் பட்டத்தைப் பெறுவதற்கு முன்பு, நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார். </p><p>

விகாஸ் சின்ஹா ​​தற்போது பிராட்காம் நிறுவனத்தின் மெயின்ஃபிரேம் மென்பொருள் பிரிவின் துணைத் தலைவராக உள்ளார், மேலும் 2023 முதல் UNT தகவல் கல்லூரியின் தலைமைத்துவ வாரியத்தில் பணியாற்றி வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e359fe88-97d2-48de-99b3-95192ed34b81/26-6aa2a243ef3a8.webp' /></p><p>
இந்த நன்கொடை குறித்து பேசிய அவர், "கல்வி எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குப் பல கதவுகளைத் திறந்து வைத்துள்ளது, அந்தக் கதவுகளை நாங்கள் மற்றவர்களுக்கும் திறந்து வைக்க விரும்புகிறோம். </p><p>

எங்களைப் பொறுத்தவரை, இந்தப் பரிசானது அந்த வாய்ப்பை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதும், குடியேறிகள் அமெரிக்கக் கனவில் வெறுமனே பங்கேற்பவர்கள் மட்டுமல்ல, அதைக் கட்டமைக்கவும் உதவுகிறார்கள் என்பதை அங்கீகரிப்பதுமாகும்" என தெரிவித்துள்ளார். </p><p>

முன்னதாக 2024 ஆம் ஆண்டில், இந்த தம்பதியினர் ​​தரவு அறிவியல் துறையை நிறுவுவதற்காக 3 மில்லியன் டொலர்களை நன்கொடையை வழங்கினர். அத்துடன், கல்வி உதவித்தொகை, பேராசிரியர்கள், ஆராய்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகளை ஆதரிக்கும் அறக்கட்டளை நிதிகளையும் வழங்கினர்.</p><p>

மீண்டும் 2025 ஆம் ஆண்டில் மற்றொரு பெரும் நன்கொடையை வழங்கி, தரவு அறிவியலுக்கான சின்ஹா ​​புத்தாக்க ஆய்வகத்தை உருவாக்கினர்.
</p><p>
இந்த நன்கொடையானது, மாணவர் வெற்றி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் தொடர்பான UNT-யின் இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதோடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளால் அதிகரித்து வரும் பணியிடத்திற்கு பட்டதாரிகளைத் தயார்படுத்தவும் உதவும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:29:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் நடுவே... பல மில்லியன் டொலர் சம்பாதித்த டொனால்ட் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-oil-investments-gained-millions-1789036523"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-oil-investments-gained-millions-1789036523</id>
            <summary type="text">Trump’s oil investments have gained millions: ட்ரம்பின் எண்ணெய் முதலீடுகள் பல மில்லியன் லாபம் ஈட்டியுள்ளன.
ஈரான் தொடர்பான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump’s oil investments have gained millions: ட்ரம்பின் எண்ணெய் முதலீடுகள் பல மில்லியன் லாபம் ஈட்டியுள்ளன.
</p><p>ஈரான் தொடர்பான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் போர்க்கால உத்தரவுகள் உலகளாவிய சந்தைகளை தொடர்ச்சியாக உலுக்கியதால், அவரது தனிப்பட்ட எரிசக்தி முதலீடுகள் லாபம் ஈட்டியுள்ளன.</p><h2>முதலீடுகளின் மதிப்பு</h2><p>
</p><p>போர் தொடங்கிய முதல் ஆறு மாதங்கள் முழுவதும், ட்ரம்ப்பின் முதலீட்டுக் கணக்குகள் எரிசக்தித் துறைப் பங்குகளைத் தீவிரமாக வர்த்தகம் செய்து வந்தன.</p><p> அவரது வருடாந்திர நிதிநிலை வெளிப்பாடுகள், நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் மற்றும் 'ஃபேக்ட்-செட்' (FactSet) சந்தை தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிஎன்பிசி (CNBC) மேற்கொண்ட பகுப்பாய்வின்படி, </p><p>போருக்கு முந்தைய நாளான பிப்ரவரி 27 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில், அவரிடமிருந்த மிகப்பெரிய ஒன்பது எண்ணெய் மற்றும் எரிவாயு முதலீடுகளின் மதிப்பு சுமார் 1.5 மில்லியன் முதல் 4.4 மில்லியன் டொலர் வரை அதிகரித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3536e213-c1b7-4c91-bbb4-343eb46b0a41/26-6aa287ed7c141.webp' /></p><p>
ட்ரம்ப்பின் பல்வேறு முதலீட்டுக் கணக்குகளில் உள்ள அதே எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் அவருக்கு இருந்த 2025-ஆம் ஆண்டின் இறுதி நிலவரங்களை ஒருங்கிணைத்து, அவற்றின் வெளிப்படுத்தப்பட்ட மதிப்பின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதன் மூலம் CNBC அந்த ஒன்பது முதலீடுகளை அடையாளம் கண்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஒவ்வொரு முதலீடு தொடர்பாகவும் ட்ரம்ப் வெளியிட்ட குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்புகள், அத்துடன் பிப்ரவரி 27 மற்றும் ஆகஸ்ட் 31 ஆகிய திகதிகளில் சந்தை வர்த்தகம் நிறைவடைந்த நேரங்களுக்கு இடைப்பட்ட அவற்றின் பங்கு விலை மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு, லாப வரம்பை CNBC கணக்கிட்டுள்ளது.
</p><p>ஜூன் 29-ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், அந்த ஒன்பது நிறுவனங்கள் தொடர்பான கொள்முதல் மற்றும் குறைந்தது 23 விற்பனை நடவடிக்கைகளை ட்ரம்ப்பின் கணக்குகள் பதிவு செய்துள்ளன; ட்ரம்ப் தனது வர்த்தக விவரங்களை வெளியிட்ட மிகச் சமீபத்திய திகதியும் இதுவேயாகும்.</p><p> பங்குகளின் துல்லியமான எண்ணிக்கை, வர்த்தகம் நடந்த விலைகள் அல்லது எந்தப் பங்குகள் விற்கப்பட்டன போன்ற விவரங்கள் இந்த அறிக்கைகளில் இடம்பெறாததால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பீடுகள், ஈட்டப்பட்ட லாபத்தையோ அல்லது ட்ரம்ப்பின் தற்போதைய துல்லியமான பங்கு இருப்பையோ குறிப்பதாக அமையாது.</p><h2>பல மில்லியன் டொலர்</h2><p>
</p><p>ட்ரம்ப் அல்லது அவரது முதலீட்டு மேலாளர்கள், அவரது முடிவுகள் குறித்த முன் அறிவின் அடிப்படையில் வர்த்தகம் செய்தார்கள் என்பதற்கோ, அவரது நிதி நலன்கள் கொள்கையைப் பாதித்தன என்பதற்கோ, அல்லது அவர் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனையை வழிநடத்தினார் என்பதற்கோ CNBC எந்த ஆதாரத்தையும் கண்டறியவில்லை. </p><p>ட்ரம்ப் அமைப்பு இந்த விவகாரத்தில் ஏற்கனவே தெளிவான விளக்கமும் அளித்துள்ளது. இருப்பினும், தனது நிர்வாகத்தின் ராணுவ மற்றும் தூதரக முடிவுகளால் நேரடியாகப் பாதிக்கப்படும் ஒரு துறையில், பல மில்லியன் டொலர் மதிப்பிலான நிதிசார் பங்கை ட்ரம்ப் கொண்டிருப்பதற்கு இந்த ஆவணங்கள் மிகச் சமீபத்திய உதாரணமாக அமைந்துள்ளன. </p><p>பற்றாக்குறையைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டியதற்காக எக்ஸான் (Exxon) மற்றும் செவ்ரான் (Chevron) ஆகிய எண்ணெய் நிறுவனங்களை ட்ரம்ப் பகிரங்கமாகக் கடுமையாகச் சாடிய அதே வேளையில், எண்ணெய் துறையில் தான் வைத்திருந்த முதலீடுகள் மூலமும் அவர் லாபம் ஈட்டினார். </p><p>போர்க்கால நிகழ்வுகள் சந்தைகளை ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாக்கிய நாட்களில், ட்ரம்பின் கணக்குகள் தொடர்ச்சியாக எரிசக்திப் பங்குகளை வர்த்தகம் செய்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e66205ea-e1e1-4d83-b562-924da9122dca/26-6aa287ee31d9b.webp' /></p><p> </p><p>ஈரான் மீதான முதல் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பிந்தைய முதல் வர்த்தக நாளான மார்ச் 2 அன்று, ட்ரம்பின் கணக்குகள் எட்டு முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியதாகத் தெரிவித்தன; இதில் எக்ஸான் நிறுவனத்தில் 100,001 டொலர் முதல் 250,000 டொலர் வரையிலான பங்குகளை வாங்கியதும் அடங்கும்.
</p><p>ட்ரம்ப் தனது நிதி வெளிப்படுத்தல்களின்படி, எக்ஸான் நிறுவனத்தில் 3.2 மில்லியன் டொலர் முதல் 12.5 மில்லியன் டொலர் வரை முதலீடு செய்த நிலையில் இந்தப் போரில் நுழைந்தார். </p><p>ட்ரம்பின் பங்குகள் மற்றும் பங்கு விலைகள் குறித்த சிஎன்பிசி பகுப்பாய்வின் அடிப்படையில், ஆகஸ்ட் 31 அன்று சந்தை முடிவடையும் நேரத்தில், பிற்கால வர்த்தகங்களைக் கணக்கில் கொள்வதற்கு முன்பு, எக்ஸானின் பங்கு விலை உயர்வானது அந்த ஆரம்ப முதலீட்டில் தோராயமாக 176,000 டொலர் முதல் 690,000 டொலர் வரை சேர்த்திருந்தது. </p><p>இந்த நிலையில், Transparency International U.S. அமைப்பின் நிர்வாகி ஸ்காட் கிரேடாக் ட்ரம்பின் போர் நிறுத்த முயற்சிகள் அவரது கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு முடிவுகளுடன் நேரடியாக ஒத்துப்போவது போல் அமைந்துள்ளது, </p><p>இருந்தாலும், இந்த வர்த்தகங்கள் குறித்து ட்ரம்புக்கு முன்கூட்டியே தெரியும் என்பதற்கோ அல்லது அவரது கொள்கை முடிவுகளுக்காகவே இந்த வர்த்தகங்கள் நடத்தப்பட்டன என்பதற்கோ எந்தவொரு நேரடியான ஆதாரமும் உறுதிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T11:50:19+00:00</updated>
        </entry>
    </feed>
