<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-08T21:24:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 4 கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்து: 3 பேர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/multi-vehicle-crash-near-edinburgh-3-arrested-1788898709"></link>
            <id>https://news.lankasri.com/article/multi-vehicle-crash-near-edinburgh-3-arrested-1788898709</id>
            <summary type="text">3 Arrested Following Multi vehicle crash near Edinburgh: பிரித்தானியாவின் எடின்பர்க் விமான நிலையம் அருகே ஏற்பட்ட விபத்து தொடர்பாக 3 பேர் கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>3 Arrested Following Multi vehicle crash near Edinburgh: பிரித்தானியாவின் எடின்பர்க் விமான நிலையம் அருகே ஏற்பட்ட விபத்து தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2> விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய நபர்கள்</h2><p>
பிரித்தானியாவின் எடின்பர்க் விமான நிலையம் அருகே திங்கட்கிழமை காலை 9.25 மணியளவில் A8 கிளாஸ்கோ சாலையில் பல வாகனங்கள் மோதிய கோர சாலை விபத்தானது அரங்கேறியது.</p><p> ஹிட்-அண்ட்-ரன்(மோதிவிட்டு நிற்காமல் தப்பி ஓடிய சம்பவம்) விபத்தாக கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் இந்த சம்பவத்தில், சாம்பல் நிற மெர்சிடிஸ் A250, கருப்பு நிற ரெனால்ட் கேப்டர், சாம்பல் நிற ஸ்கோடா கரோக் மற்றும் சாம்பல் நிற ஹூண்டாய் i30 ஆகிய நான்கு கார்கள் விபத்தில் சிக்கின.</p><p> விபத்து குறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இந்த விபத்தில் ஹூண்டாய்&nbsp; i30 காரை ஓட்டி வந்த 59 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/570800f9-0f17-4be5-9392-a050ae5b9b0c/26-6aa06d96ed7a9.webp' /></p><p> மேலும் இதில் 4 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்கு பிறகு தற்போது பாதுகாப்பாக வீடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 3 பேர் கைது</h2><p>
இந்த கோர சாலை விபத்து சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p> இதில் 32 வயது ஆடவர் ஒருவரும், 19 மற்றும் 23 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு இருப்பதாக ஸ்காட்லாந்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><p> இந்த விபத்து காரணமாக விமான நிலையத்திற்கு செல்லும் சாலை நீண்ட நேரம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T20:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/over-600-flights-cancelled-in-uk-1788895899"></link>
            <id>https://news.lankasri.com/article/over-600-flights-cancelled-in-uk-1788895899</id>
            <summary type="text">Over 600 Flights Cancelled in Uk After air traffic control disruption: பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நுற்றுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Over 600 Flights Cancelled in Uk After air traffic control disruption: பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><h2> நுற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து</h2><p>பிரித்தானியாவில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p> இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பல விமான நிலையங்களில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">As of 1700 UTC, 625 flights have been canceled at airports in the UK following an earlier technical problem at NATS’ Shanwick ATC facility. <br><br>easyJet: 218<br>British Airways: 132<br>Ryanair 41<br>KLM 37<br>Eurowings 22 <a href="https://t.co/4hHZYmjFJv">pic.twitter.com/4hHZYmjFJv</a></p>&mdash; Flightradar24 (@flightradar24) <a href="https://x.com/flightradar24/status/2097372088193487276?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> Flightradar24 தரவுகள் படி, மாலை 6 மணி நிலவரத்தின் கீழ் பிரித்தானியாவில் 625 விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p> இதில், பிரிட்டிஷ் ஏர்வேஸின் 132 விமானங்கள் , ஈசிஜெட் நிறுவனத்தின் 218 விமானங்கள், ரயான்ஏர் நிறுவனத்தின் 41 விமானங்கள், கேஎல்எம் நிறுவனத்தின் 37 விமானங்கள் மற்றும் யூரோவிங்ஸ் நிறுவனத்தின் 22 விமானங்கள்&nbsp; ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p> யூரோ கட்டுப்பாட்டு அமைப்பின்(Eurocontrol) தரவுகள் படி, தெற்கு இங்கிலாந்தில் பறந்த 590 விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d91407-e2ba-444f-80ab-f85566943ab2/26-6aa0629c9dee5.webp' /></p><p> ஹீத்ரோ விமான நிலையத்தில் மட்டும் 132 விமான புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 199 விமானங்கள் தாமதம் செய்யப்பட்டுள்ளன.</p><p> இந்த விமான ரத்து மற்றும் தாமதத்தின் காரணமாக கிட்டத்தட்ட 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T19:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல்: புதிய உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/oil-price-surge-after-attacks-on-saudi-by-houthis-1788897385"></link>
            <id>https://news.lankasri.com/article/oil-price-surge-after-attacks-on-saudi-by-houthis-1788897385</id>
            <summary type="text"> Oil Price Surge After Attacks on Saudi by Houthis: மத்திய கிழக்கில் சவுதி அரேபியாவிற்கும் ஹவுதி படையினருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக கச்சா எண்ணெய...</summary>
            <content type="html"><![CDATA[<p> Oil Price Surge After Attacks on Saudi by Houthis: மத்திய கிழக்கில் சவுதி அரேபியாவிற்கும் ஹவுதி படையினருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.</p><h2> சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல்</h2><p>மத்திய கிழக்கில் நிலவி வரும் புவிசார் பதற்றங்களுக்கு மத்தியில் புதிய மோதலாக சவுதி அரேபியாவின் நகரங்களை குறி வைத்து ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p> தெற்கு சவுதி அரேபியாவின் நான்கு நகரங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் வான்வழி தளங்களை குறிவைத்து ஏமனின் ஹவுதி படையினர் பாலிஸ்டிக் ஏவுகணைகளை மற்றும் ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0de0638-bf95-47c2-a607-7a11ebdf4b6a/26-6aa0686b9ca40.webp' /></p><p> இந்த தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 73 பேர் காயமடைந்து இருப்பதாக சவுதி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அத்துடன் ஹவுதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏமனின் மரிப் (Marib) நகரை குறிவைத்து சவுதி படையினர் 4 வானவழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fc46eb8-f4eb-43b7-ba55-f83ea84a73eb/26-6aa0686c51499.webp' /></p><p></p><h2>அதிகரித்த கச்சா எண்ணெய் விலை</h2><p>
ஏற்கனவே உள்ள பதற்றங்களுக்கு மத்தியில் கூடுதலாக மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்த மோதல் காரணமாக பல வாரங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது.</p><p> பிரித்தானிய நேரப்படி காலை 7.30 மணிக்கு, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.25 டொலர்கள்(1.3%) உயர்ந்து 98.25 டொலராக விற்பனை செய்யப்பட்டது.</p><p> வர்த்தகத்தின் ஆரம்பத்தில் இந்த விலை 98.79 டொலராக உயர்ந்தது. இது ஜூலை 24ம் திகதிக்கு பிறகு பதிவான அதிகபட்ச மதிப்பாகும்.</p><p> கடந்த பிப்ரவரியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தொடங்கிய பிறகு கச்சா எண்ணெய் விலையானது கடும் ஏற்றங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T19:56:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் ஆளில்லா நீர்மூழ்கியை கைப்பற்றிய ஈரான்? வெளியான வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-media-reports-capture-of-unmanned-submarine-1788894679"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-media-reports-capture-of-unmanned-submarine-1788894679</id>
            <summary type="text">Iran media Reports Capture of Unmanned Submarine: நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.சிறைபிடிக்கப்பட்ட ஆளில்லா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran media Reports Capture of Unmanned Submarine: நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.</p><h2>சிறைபிடிக்கப்பட்ட ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்?</h2><p>ஈரானின் புரட்சிகர காவல் படையினரின் தகவலில், ஹார்முஸ் ஜலசந்தியில் வைத்து ஆளில்லா நீர்முழ்கி கப்பல் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.</p><p> ஈரானிய இராணுவத்தின் கூற்றுப்படி இந்த ஆளில்லா நீர்மூழ்கி கப்பலானது ஆண்டுரில்(Anduril) நிறுவனத்தின் 'Dive LD' என்ற தன்னாட்சி நீர்மூழ்கி கப்பல் என தெரியவந்துள்ளது.</p><p>செவ்வாய்க்கிழமை ஈரானிய அரசு ஊடகமான IRNA மற்றும் பல செய்தி நிறுவனங்களும் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஒன்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">⚡️BREAKING: The IRGC has released Footage of the Seizure of US Navy&#39;s Advanced Dive-LD Autonomous Underwater Vehicle<br><br>The United States was using it to Detect Mines in the Strait of Hormuz<br><br>The Dive-LD contains Classified Technology and Iran will likely Share it with Russia and… <a href="https://t.co/JznS0A2C7T">pic.twitter.com/JznS0A2C7T</a></p>&mdash; Iran Observer (@IranObserver0) <a href="https://x.com/IranObserver0/status/2097388572042998093?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> IRGC வெளியிட்ட காட்சிகளில், நீர்மூழ்கி கப்பல் எந்தவொரு சேதமும், பாதிப்புகளும் இல்லாமல் நல்ல நிலையில் இருப்பதை பார்க்க முடிந்தது.</p><p> Dive LD நீர்மூழ்கி கப்பல் கைப்பற்றப்பட்டது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டால் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஒன்றை நாடு ஒன்று கைப்பற்றும் முதல் சம்பவம் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfceedde-fcfe-4ff3-96f9-0784d2856645/26-6aa05dd8aa3c7.webp' /></p><p> &nbsp; ஈரானிய ராணுவம் மற்றும் ஊடகங்கள் இது தொடர்பான செய்தியை தீவிரமாக அறிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T19:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூடுல்ஸ் உணவில் உயிருடன் மிதந்த குட்டி எலி: ஆர்டர் செய்த பெண்ணிற்கு அதிர்ச்சி: வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/baby-rat-flots-in-beef-noodles-viral-video-1788891929"></link>
            <id>https://news.lankasri.com/article/baby-rat-flots-in-beef-noodles-viral-video-1788891929</id>
            <summary type="text">உணவகம் ஒன்றில் இருந்து வாங்கப்பட்ட நூடுல்ஸ் பார்சலில் குட்டி எலி ஒன்று உயிருடன் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் உயிருடன் கிடந்த எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உணவகம் ஒன்றில் இருந்து வாங்கப்பட்ட நூடுல்ஸ் பார்சலில் குட்டி எலி ஒன்று உயிருடன் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> உணவில் உயிருடன் கிடந்த எலி</h2><p>
ஹாங்காங்கின் குவாய் சுங் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் மதிய உணவிற்காக திங்கட்கிழமை அப்பகுதியில் இருந்த “வா ஜெர்” என்ற உணவகத்தில் இருந்து சாத்தே பீப் நூடுல்ஸ் உணவை ஆர்டர் செய்துள்ளார்.</p><p> &nbsp;சுமார் 10 சதவீத தள்ளுபடியுடன் ரூ. 530க்கு இந்த உணவை அவர் வாங்கியுள்ளார்.</p><p> ஆர்டர் செய்யப்பட்ட அந்த உணவை வாங்கிக் கொண்டு, சாப்பிடுவதற்காக அந்த உணவை திறந்த போது அதில் சிறிய எலி ஒன்று உயிருடன் நெளிவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaa1cc26-404e-4bae-8892-5feb9de6cf9b/26-6aa0531ab9993.webp' /></p><p> இதையடுத்து அந்த பெண் உடனடியாக உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.</p><h2> உணவகம் அளித்த விளக்கம்</h2><p>இந்த சம்பவம் மிகவும் பயங்கரமான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட சம்பவமாக தெரிகிறது. கடந்த ஓராண்டாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறோம். இதுவரை எலி அல்லது பூச்சிகள் தொடர்பான புகார் எதுவும் வந்தது இல்லை என்று உணவகத்தின் உரிமையாளர் மைக் தெரிவித்துள்ளார்.</p><p> இது தொழிற்பேட்டை என்பதால் எப்போதாவது எலிகள் இங்கு நடமாடுவது உண்டு. அதனால் நாங்கள் மாதந்தோறும் உணவகத்தில் ஆழமான துப்புரவு மற்றும் கிருமிநாசினி பணிகளை செய்து வருவதாக விளக்கமளித்துள்ளார்.</p><p> மேலும் இதனை யாரும் குறும்பாக செய்து இருக்கவும் வாய்ப்பில்லை, இனி வரும் காலங்களில் பூச்சு கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Customer finds NEWBORN MOUSE in noodle dish in Hong Kong <a href="https://t.co/jGMxCKcrbB">pic.twitter.com/jGMxCKcrbB</a></p>&mdash; RTVisual (@RT_Visual_on_X) <a href="https://x.com/RT_Visual_on_X/status/2097310037697876293?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2> இணையத்தில் வைரலான விவகாரம்</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியான 18 வினாடிகள் கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.</p><p> மசாலா சாஸுக்குள் குட்டி எலி ஒன்று கை, கால்களை அசைத்து கொண்டு இருப்பது நெட்டிசன்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T18:45:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேத்தியை வளர்க்க ரூ.45 லட்சம் இழப்பீடு கேட்ட தாய்: மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mother-demands-45-lakhs-for-raising-granddaughter-1788888277"></link>
            <id>https://news.lankasri.com/article/mother-demands-45-lakhs-for-raising-granddaughter-1788888277</id>
            <summary type="text">Mother demands 45 lakhs for raising granddaughter in China: சீனாவில் 15 ஆண்டுகள் பேத்தியை வளர்த்தற்காக மகனிடம் ரூ.45 லட்சம் கேட்டு தாய் ஒருவர் வழக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mother demands 45 lakhs for raising granddaughter in China: சீனாவில் 15 ஆண்டுகள் பேத்தியை வளர்த்தற்காக மகனிடம் ரூ.45 லட்சம் கேட்டு தாய் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><h2> பேத்தியை வளர்த்ததற்கு ஊதியம் கேட்ட பாட்டி</h2><p>சீனாவின் கிழக்கு பகுதியில் வாழும் 60 வயது மதிக்கத்தக்க “சு”(Xu) என்ற பெண், தன்னுடைய மகன் லியாங் என்பவர் மீது ஷாங்காய் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.</p><p> அதில், கடந்த 2014ம் ஆண்டு தன்னுடைய மகன் லியாங் அவருடைய மனைவியை பிரிந்தார். இதையடுத்து மகன் லியானும், அவரது 4 வயது மகளையும் சேர்த்து கவனித்து வந்தேன்.</p><p>லியாங் அவனுடைய மகளை பராமரிக்கும் மொத்த கடமையையும் என்னிடமே ஒப்படைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92058509-e602-4dc1-906b-9e2bfe9940b3/26-6aa044d6e16aa.webp' /></p><p> நானும் கடந்த 15 ஆண்டுகளாக தன்னுடைய பேத்தியின் அன்றாட செலவுகள், மருத்துவ மற்றும் கல்வி கட்டணங்கள் என அனைத்தையும் என்னுடைய சொந்த பணத்தில் கவனித்து வந்தேன்.</p><p> </p><p></p><p>ஆனால் லியாங் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவனுடைய மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.</p><p> மகளை மட்டும் தன்னிடமே விட்டு விட்டுச் சென்றுவிட்டார். இப்போது நான் பொருளாதார நெருக்கடியினாலும், முதுமையாலும் பாதிக்கப்பட்டுள்ளேன்.</p><p> என்னுடைய மகனுக்கு குடும்ப பொறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லை. ஒரு தந்தையாக அவனது கடமையை செய்ய தவறி விட்டான்.</p><p> இனிமேலும் என்னால் அவனுடைய பண உதவி இல்லாமல் பேத்தியை கவனித்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் 15 ஆண்டுகளாக பேத்தியை பராமரித்ததற்காக 3,60,000 யுவான் தொகையை கட்டணமாக என்னுடைய மகன் வழங்க வேண்டும் என்றும் தாய் “சு” நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;தாயின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இருந்த மகன் லியாங், அப்போது தனக்கு மாதம் வெறும் ரூ.37000 மட்டுமே ஊதியமாக இருந்ததாகவும், தன்னுடைய சக்தி உட்பட்டு அனைத்து உதவிகளையும் தன்னுடைய மகளுக்கு செய்ததாக தெரிவித்தார்.</p><h2> சட்ட நிபுணர்களின் கருத்து</h2><p>தாய் “சு” தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஷாங்காய் சட்ட வல்லுநகர்கள் வழங்கிய தகவலில், இது குடும்ப உறவுகளை வியாபாரமாக்குவது அல்ல, மாறாக குடும்ப பொறுப்புகளை தெளிவுபடுத்தும் ஒன்று என தெரிவித்துள்ளனர்.</p><p> குழந்தையை வளர்க்கும் பொறுப்பு முதலில் பெற்றோர்களுடையது, பின்னர் அவர்களால் முடியவில்லை என்றால் தான் தாத்தா-பாட்டிகள் தங்களது உதவிகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T17:26:11+00:00</updated>
        </entry>
    </feed>
