<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-09T18:26:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் உளவு அமைப்புடன் ரகசிய தொடர்பு: பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swindon-man-arrested-for-assisting-russia-1788977441"></link>
            <id>https://news.lankasri.com/article/swindon-man-arrested-for-assisting-russia-1788977441</id>
            <summary type="text">Man Arrested For assisting Russian intelligence in Swindon: ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் ஸ்விண்டன் பகுதியை சேர்ந்த நபர் பொலிஸாரால் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man Arrested For assisting Russian intelligence in Swindon: ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் ஸ்விண்டன் பகுதியை சேர்ந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>ரஷ்யாவுக்கு உளவு பார்த்த நபர்</h2><p>ரஷ்ய உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் ஸ்விண்டன் பகுதியை சேர்ந்த 31 வயது ஜோசுவா கேமிட்ஜ் (Joshua Cammidge) என்ற நபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கடந்த வார இறுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளும், வில்ட்ஷயர் காவல்துறை அதிகாரிகளும் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையின் கீழ் ஜோசுவா கேமிட்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59b7550c-4fc7-47af-837d-acfd09d6ba4c/26-6aa1a122ea787.webp' /></p><p></p><p>ரஷ்ய உளவு அமைப்பான GRU-யின் பிரதிநிதியுடன் ஜோசுவா கேமிட்ஜ் தொடர்பில் இருந்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட ஜோசுவா கேமிட்ஜ் உடனடியாக லண்டனுக்கு அழைத்து வரப்பட்டதுடன், அவரது முதல் விசாரணைக்காக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.</p><p> ஜோசுவா கேமிட்ஜ் வெளிநாட்டு உளவுத் துறைக்கு உதவி தொடர்பான குற்றச்சாட்டுகளை கிரவுன் ப்ராசிகியூஷன் சர்வீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T18:10:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து: தாக்குதல்தாரியை சுட்டு வீழ்த்திய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-stabbed-in-luton-man-was-shot-by-police-1788976004"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-stabbed-in-luton-man-was-shot-by-police-1788976004</id>
            <summary type="text">Woman Stabbed in Luton Man Was Shot By Police: பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு பிறகு சந்தேக நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு வீழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman Stabbed in Luton Man Was Shot By Police: பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு பிறகு சந்தேக நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.</p><h2>கத்தியை காட்டி பெண்ணை மிரட்டிய நபர்</h2><p>பிரித்தானியாவின் லூட்டன் நகரில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பெண் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானார்.</p><p> கார்டிகன் தெருவில் பிற்பகல் 12.50 மணிக்கு தாக்குதல்தாரி ஒருவர் கத்தியை காட்டி பெண் ஒருவரை மிரட்டி வருவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p> அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தாக்குதல்தாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p> இந்த சம்பவத்தில், பொலிஸாரால் சுடப்பட்ட நபர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80d54dbe-a1bd-4afc-879f-7375144fb380/26-6aa19b86387b6.webp' /></p><p> மேலும் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளான பெண்ணும் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2> விசாரணையை தொடங்கிய IOPC</h2><p>பொலிஸார் நடத்திய தாக்குதலில் துப்பாக்கி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா, தாக்குதல்தாரி மீது பயன்படுத்தப்பட்ட பலம் நியாயமானதா என்பது குறித்து சுதந்திரமான காவல்துறை ஒழுங்குமுறை குழு(IOPC) விசாரணையை நடத்தி வருகிறது.</p><p> IOPC தகவலில், இந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் 4 சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டு இருப்பதாகவும், மற்றொரு அதிகாரி லத்தியால் அடிக்கக்கூடிய ரவுண்டை பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஆரம்பக்கட்ட விசாரணையில், காவல்துறை அதிகாரிகள் எந்தவொரு குற்றவியல் நடவடிக்கைகள் அல்லது தொழில்முறை தரங்களை மீறியதற்கான அறிகுறிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T17:47:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூட்கேஸில் இருந்த அபூர்வ முதலையின் தலை: இத்தாலி விமான நிலையத்தில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/crocodile-head-found-in-italy-passengers-suitcase-1788971633"></link>
            <id>https://news.lankasri.com/article/crocodile-head-found-in-italy-passengers-suitcase-1788971633</id>
            <summary type="text">Crocodile Head Found in Italy Passengers Suitcase: பயணி ஒருவரின் சூட்கேஸில் முதலையின் தலை இருந்த நிலையில் அதனை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Crocodile Head Found in Italy Passengers Suitcase: பயணி ஒருவரின் சூட்கேஸில் முதலையின் தலை இருந்த நிலையில் அதனை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><h2> சூட்கேஸில் முதலை தலை</h2><p>இத்தாலியின் துரின் நகரில் அமைந்துள்ள காசெல்லே விமான நிலையத்தில் பயணி ஒருவரின் சூட்கேஸில் இருந்த அழியும் விளிம்பு நிலையில் உள்ள அபூர்வ வகை முதலையின் தலை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p> இந்த சட்டவிரோத நடவடிக்கையை அடுத்து, முதலையின் தலையை கொண்டு வந்த இத்தாலிய நபர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> கடத்தல்காரரான இத்தாலிய நபர் அமெரிக்காவின் மியாமியிலிருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலியின் காசெல்லே விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார்.</p><p> முதலையின் தலை முழுமையாக உலர்த்தப்பட்டு சாதாரண பேக்கிங் பேப்பரில் சுற்றப்பட்டிருந்ததால், கைது செய்யப்பட்ட நபர் எளிதாக அமெரிக்காவின் பாதுகாப்பு சோதனைகளில் சிக்காமல் தப்பியுள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09e1e519-0580-4dff-9576-59bbfc7214d9/26-6aa18a7310620.webp' /></p><p> ஆனால் இத்தாலிய விமான நிலைய அதிகாரிகளின் விரிவான சோதனையின் போது சூட்கேஸிற்குள் முதலையின் தலை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>தண்டனை மற்றும் அபராதம்</h2><p>
சூட்கேஸில் முதலையின் தலையை கடத்தி வந்த நபருக்கு எதிராக, முறையான சான்றிதழ்கள் அல்லது உரிமம் இன்றி பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பகுதியை சேர்ந்த முதலையை கடத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p> அவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டால் தண்டனையாக சுமார் ரு.2.20 கோடி அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 6 மாதங்கள் முதல் 1 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T16:34:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின்லாந்தில் 15 பில்லியன் டொலர் முதலீட்டை அறிவித்த Google]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-invests-15-bn-dollar-in-ai-nuclear-deal-1788970014"></link>
            <id>https://news.lankasri.com/article/google-invests-15-bn-dollar-in-ai-nuclear-deal-1788970014</id>
            <summary type="text">Google invests 15 Bn Dollars in AI and nuclear deal: கூகுள் நிறுவனம் பின்லாந்தில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்கிறது.பின்லாந்தில் 13 பில்லியன் யூரோ&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>Google invests 15 Bn Dollars in AI and nuclear deal: கூகுள் நிறுவனம் பின்லாந்தில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்கிறது.</p><h2>பின்லாந்தில் 13 பில்லியன் யூரோ&nbsp;முதலீடு</h2><p>

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Google (Alphabet Inc.) பின்லாந்தில் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பில் 13 பில்லியன் யூரோ ($15.1 பில்லியன்) முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
</p><p>
இந்த முதலீடு அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும். அதோடு, Google தனது முதல் அணு மின்சார ஒப்பந்தத்தை அமெரிக்காவிற்கு வெளியே பின்லாந்தில் கையெழுத்திட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72060f02-1fb9-4b4f-b69a-070c1028998b/26-6aa1841f7a9af.webp' /></p><p>பின்லாந்தின் Fortum நிறுவனம், தனது இரண்டு அணு மின் நிலையங்களில் ஒன்றின் மின்சார உற்பத்தியின் 50 சதவீதம் வரை 22 ஆண்டுகள் Google-க்கு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. </p><p>இது கூகுள் நிறுவனத்திற்கு பெரிய அடித்தளம் என்றும் இதுவே அமெரிக்காவிற்கு வெளியே கூகுளின் முதல் அணு மின்சார ஒப்பந்தம் என்றும் Google-ன் Chief Investment Officer Ruth Porat ஹெல்சிங்கியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><p>
</p><p></p><p>பின்லாந்து, Microsoft மற்றும் ByteDance போன்ற நிறுவனங்களும் தரவு மையங்களை அமைக்க விரும்பும் முக்கிய இடமாக மாறியுள்ளது. காரணம், குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட அணு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாய்ப்புகள் அங்கு உள்ளது.
</p><p>
மேலும், Google மற்றும் Fortum இணைந்து பின்லாந்தில் புதிய அணு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை ஆராய உள்ளன.
</p><p>
இந்த நடவடிக்கை, AI உள்கட்டமைப்புக்கான மிகப்பெரிய ஆற்றல் (மின்சார) தேவையை பூர்த்தி செய்யும் வகையில், உலகளாவிய தொழில்நுட்ப துறையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T16:03:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோபோக்களை உருவாக்கும் ரோபோக்கள் - சீனாவில் வியக்கவைக்கும் புதிய தொழிற்சாலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/xpeng-robots-build-robots-in-china-factory-1788968716"></link>
            <id>https://news.lankasri.com/article/xpeng-robots-build-robots-in-china-factory-1788968716</id>
            <summary type="text">XPeng robots build robots in China factory: சீனாவில் ரோபோக்களே ரோபோக்களை உருவாக்கும் புதிய தொழிற்சாலை வியக்கவைக்கிறது.

தானியங்கி உற்பத்தி வரிசைசீனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>XPeng robots build robots in China factory: சீனாவில் ரோபோக்களே ரோபோக்களை உருவாக்கும் புதிய தொழிற்சாலை வியக்கவைக்கிறது.
</p><h2>
தானியங்கி உற்பத்தி வரிசை</h2><p>சீனாவின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான XPeng தனது புதிய முயற்சியால் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
குவாங்சோவில் நிறுவப்பட்ட புதிய தொழிற்சாலையில், IRON humanoid robot-ஐ உருவாக்கும் முழுமையான தானியங்கி உற்பத்தி வரிசை (Production Line) தொடங்கப்பட்டுள்ளது.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We made it!<br>XPENG launches the world’s first automated production line for advanced general‑purpose humanoid robots.<br>The world’s first advanced general‑purpose humanoid robot has completed automated production and autonomously walks off the line.<a href="https://x.com/search?q=%24XPEV&amp;src=ctag&amp;ref_src=twsrc%5Etfw">$XPEV</a> <a href="https://t.co/ayEiFFgO5p">pic.twitter.com/ayEiFFgO5p</a></p>&mdash; XPENG (@XPENG_Global) <a href="https://x.com/XPENG_Global/status/2097159359520231758?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்த தொழிற்சாலையில், சுமார் 80 சதவீதம் முக்கிய செயல்முறைகள் தானியங்கி (automated) முறையில் நடைபெறுகின்றன. XPeng வெளியிட்ட வீடியோவில், தயாரிக்கப்பட்ட முதல் IRON ரோபோட், மனிதர்களின் உதவியின்றி தானாகவே உற்பத்தி வரிசையிலிருந்து வெளியே நடந்து சென்றது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
</p><p>
XPeng-ன் நோக்கம், ரோபோக்களை உருவாக்குவதில் மட்டுமல்லாமல், பெரிய அளவில் ரோபோக்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலை அமைப்பை உருவாக்குவது.</p><p></p><h2>முழுமையாக&nbsp;இல்லை</h2><p> இருப்பினும், முழுமையாக ரோபோக்கள் மட்டுமே உற்பத்தி செய்கின்றன என்ற நிலைமை இல்லை. மனிதர்கள், இயந்திரங்கள் மற்றும் தானியங்கி அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff86dabd-0c9e-4e4d-9776-e8106186ff89/26-6aa17f0dd9ea3.webp' /></p><p>

XPeng, இதை உலகின் முதல் மேம்பட்ட பொதுப் பயன்பாட்டு humanoid ரோபோக்களுக்கு தானியங்கி உற்பத்தி வரிசை என விவரித்துள்ளது.
</p><p>
இந்த முன்னேற்றம், எதிர்காலத்தில் ரோபோட்கள் உற்பத்தி துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தொழில்துறை, மருத்துவம், சேவை துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் humanoid ரோபோட்கள் பரவலாக பயன்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T15:42:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-bans-canadian-alcohol-bikes-dairy-imports-1788939333"></link>
            <id>https://news.lankasri.com/article/us-bans-canadian-alcohol-bikes-dairy-imports-1788939333</id>
            <summary type="text">US bans Canadian alcohol bikes dairy imports: கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இறக்குமதி தடைஅ...</summary>
            <content type="html"><![CDATA[<p>US bans Canadian alcohol bikes dairy imports: கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.</p><h2>

இறக்குமதி தடை</h2><p>அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு கனடா விதித்த எதிர் வரி நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, கனடாவில் இருந்து வரும் பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ளார்.
</p><p>
செப்டம்பர் 29 முதல் அமுலுக்கு வரும் இந்த தடை, மதுபானங்கள், பால் சார்ந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உள்ளடக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa8674c-1077-4b41-86b6-af655a03a614/26-6aa10c46f2a08.webp' /></p><p> </p><p>மேலும், சில பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சீஸ், மோட்டார் படகு, உலோகங்கள், மரச்சாமான்கள் போன்றவை அதிக வரி சுமையுடன் அமெரிக்க சந்தையில் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
கனடா தனது பக்கம், அமெரிக்காவின் எஃகு, ஆடை, மரச்சாமான்கள் போன்ற பொருட்களுக்கு டொலருக்கு-டொலர் வரி விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளின் வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. விலைகள் உயர்ந்து, வாடிக்கையாளர்கள் குறையும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><p>
அமெரிக்கா-கனடா உறவு வரலாற்று ரீதியாக நெருக்கமானது. கனடாவின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவிற்கே செல்கிறது. ஆனால் தற்போதைய வர்த்தகப் போர், இரு நாடுகளின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
</p><p>
பொருளாதார நிபுணர்கள், இந்த வர்த்தகப் போர் இரு தரப்புக்கும் இழப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என எச்சரிக்கின்றனர். வாடிக்கையாளர்களே மிகப்பெரிய இழப்பாளர்ககளாக இருப்பார்கள் என அவர்கள் கூறுகின்றனர்.
</p><p></p><p>கனடா பிரதமர் மார்க் கார்னி, “செயல்படுவதற்கு எப்போதும் செலவு இருக்கும். ஆனால் செயல்படாமல் இருப்பதற்கான செலவு அதைவிட அதிகம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த வர்த்தகப் போர் எப்போது முடிவடையும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினாலும், புதிய பேச்சுவார்த்தைக்கான திகதிகள் அறிவிக்கப்படவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T15:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்திரன் எங்களுடையது - டிரம்ப் பதிவால் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trumps-moon-claim-vs-space-law-reality-1788967005"></link>
            <id>https://news.lankasri.com/article/trumps-moon-claim-vs-space-law-reality-1788967005</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் Truth Social-ல் “The Moon is ours” எனும் வாசகத்துடன் சந்திரனின் படத்தை வெளியிட்டார். இந்த பதிவு உலகளவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் Truth Social-ல் “The Moon is ours” எனும் வாசகத்துடன் சந்திரனின் படத்தை வெளியிட்டார். </p><p>இந்த பதிவு உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

ஆனால், சட்ட ரீதியாக எந்த நாட்டுக்கும் சந்திரனை சொந்தமாக்கும் உரிமை இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894a6fc0-1dbe-4ff8-9546-cda1acf5ce31/26-6aa1785eccb79.webp' /></p><p>

1967 Outer Space Treaty எனப்படும் ஐ.நா. உடன்படிக்கை, சந்திரன் உட்பட விண்வெளி பகுதிகளை எந்த நாடும் தன் சொந்தமாகக் கொள்ள முடியாது எனத் தெளிவாகக் கூறுகிறது.</p><p> Article II-இல், “விண்வெளி, சந்திரன் போன்றவை எந்த நாட்டின் ஆட்சியிலும், ஆக்கிரமிப்பிலும், சொந்த உரிமையிலும் இருக்க முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது. Article I-இல், விண்வெளி ஆராய்ச்சி அனைத்து நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>

இதனால், சந்திரனில் தேசியக் கொடி நாட்டுவது அந்த நிலப்பரப்பை அந்த நாட்டின் சொத்தாக்காது. நாடுகள் தங்கள் விண்கலங்கள், கருவிகள் போன்றவற்றை சொந்தமாகக் கொள்ளலாம், ஆனால் சந்திரனின் நிலப்பரப்பை உரிமை கோர முடியாது.
</p><p>
இப்போது, NASA Artemis திட்டம் மற்றும் Artemis Accords மூலம் 71 நாடுகள் சந்திரன் ஆராய்ச்சியில் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் சந்திரனில் ஆராய்ச்சி நிலையங்கள், வளங்கள், நிரந்தர கட்டமைப்புகள் உருவாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் Outer Space Treaty, நாடுகள் சந்திரனை தங்கள் சொத்தாக்குவதைத் தடுக்கிறது.
</p><p>
அதனால், டிரம்ப் கூறிய “The Moon is ours” என்பது அரசியல் கூற்றாக இருந்தாலும், சட்டப்படி சந்திரன் யாருக்கும் சொந்தமில்லை. அது மனிதகுலத்தின் பொதுச் சொத்து எனக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T15:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாபர் அஸாம் உட்பட 8 வீரர் ஒற்றை இலக்கத்தில் அவுட்: 133 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-133-all-out-vs-england-3rd-test-edgbaston-1788964086"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-133-all-out-vs-england-3rd-test-edgbaston-1788964086</id>
            <summary type="text">Pakistan 133 all out vs england in 3rd test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பர்மிங்காமில் தொடங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pakistan 133 all out vs england in 3rd test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
பர்மிங்காமில் தொடங்கியுள்ள டெஸ்டில், இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.&nbsp;</p><h2>விக்கெட்டுகள் சரிவு</h2><p>
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமின் எட்ஜ்பஸ்டனில் தொடங்கியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Robinson gets another ☝️<br><br>Click here for live updates 👉<a href="https://t.co/VUdUehsgT2">https://t.co/VUdUehsgT2</a> <a href="https://t.co/aBBEhObETK">pic.twitter.com/aBBEhObETK</a></p>&mdash; England Cricket (@englandcricket) <a href="https://x.com/englandcricket/status/2097638864215015535?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.&nbsp;</p><p></p><p>
சைம் அயூப் டக்அவுட் ஆக, அஸான் அவைஸ் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஷாஃபிக் (3), ஷான் மசூத் (5) ஆகியோர் நடையைக் கட்டினர்.
</p><p>
அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் பாபர் அஸாம் 9Babar Azam) 7 ஓட்டங்களில் ஜோஷ் டங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>133 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் </h2><p>

சவுத் ஷகீல் மட்டும் நின்று ஆட, ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்களுக்கு சுருண்டது. </p><p>

அதிகபட்சமாக சவுத் ஷகீல் (Saud Shakeel) 47 பந்துகளில் 43 ஓட்டங்களும், மொஹம்மது அப்பாஸ் 21 ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p> 

ஜோஷ் டங் (Josh Tongue) 4 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஓலி ராபின்ஸன் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6225c0d-2ce1-4ca2-815c-96f01fb383af/26-6aa16df222676.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T15:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏஐயால் 2030க்குள் மனிதகுலம் அழியும் - ஆந்த்ரோபிக்கிலிருந்து வெளியேறிய வல்லுநர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anthropic-expert-says-ai-could-kill-humans-2030-1788963875"></link>
            <id>https://news.lankasri.com/article/anthropic-expert-says-ai-could-kill-humans-2030-1788963875</id>
            <summary type="text">anthropic researcher says ai could kill humans before 2030:செயற்கை நுண்ணறிவு எனஅழைக்கப்படும் AIயின் வளர்ச்சி நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>anthropic researcher says ai could kill humans before 2030:செயற்கை நுண்ணறிவு எனஅழைக்கப்படும் AIயின் வளர்ச்சி நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. </p><h3>

ஏஐயால் 2030க்குள் மனிதகுலம் அழியும்</h3><p>

AI வளர்ச்சியால் மனிதர்களில் சிலர் வேலை இழப்பை சந்தித்து வரும் சூழலில், எதிர்காலத்தில் AI மனிதர்களின் கட்டுப்பாடின்றி செயல்பட சாத்தியம் உள்ளதாக அச்சம் நிலவி வந்தது. </p><p>

இந்நிலையில், AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள Open AI மற்றும் Anthropic ஆகிய 2 நிறுவனங்களில் பணியாற்றியுள்ள ஜேக்கப் காக்சன் என்ற 27 வயது AI ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c0ed57-1c58-43b9-b421-97de516515b7/26-6aa16c24ade5b.webp' /></p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் இன்று ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளேன். கடந்த 3 ஆண்டுகளாக நான் ஓப்பன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய இரு நிறுவனங்களிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன்.&nbsp;</p><p>

இந்த இரண்டு நிறுவனங்களுமே பொறுப்புடன் செயல்படவில்லை. அவை தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ளும் சூப்பர் இன்டெலிஜென்ட்ஸை உருவாக்குவதில் போட்டியிடுகின்றன.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I resigned from Anthropic today. I spent the last three years doing pretraining research at both OpenAI and Anthropic. Neither company is acting responsibly. They are racing straight to self-improving superintelligence and gambling with our lives. More thoughts below.</p>&mdash; Jacob Coxon (@hilbertspaess) <a href="https://x.com/hilbertspaess/status/2097476196791709843?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p>

இந்தத் தொழில்நுட்பத்தின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். இவை விரைவில், எதையும் ஊடுருவி அறியக்கூடிய, ஒரே இரவில் எந்தத் துறையிலும் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய, உண்மையான சக்தியையும் வளங்களையும் பெறக்கூடிய மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அமைப்புகளாக மாறும். </p><p>

இந்த AI ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாம் அனைவரும் கண்டிருக்கிறோம், மேலும் அந்த முன்னேற்றத்தின் வேகம் குறையவில்லை.&nbsp;</p><p>

இந்த செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவர்களே, அது இந்த தசாப்தத்தின் முடிவில் நம் அனைவரையும் கொன்றுவிடும் என்று உண்மையாகவே நம்புகிறார்கள். இது ஒரு சந்தைப்படுத்தல் தந்திரம் அல்ல.&nbsp;</p><p></p><p>

சொல்லப்போனால், பல நிர்வாகிகளும் மூத்த ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகைகளில் தங்கள் வார்த்தைகளை அறிவுப்பூர்வமாகத் தோன்றும் வகையில் பேசுவார்கள். ஆனால் அதே நபர்கள் AI குறித்த பயத்தை வெளிப்படுத்துவதை நான் கேட்டிருக்கிறேன். </p><p>

OpenA Iயில் பலர் இதனால் ஏற்படக்கூடிய அபாயங்களை ஆழமாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஆனால். ஆந்த்ரோபிக்கில், அந்த அபாயங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தாலும் அதை முதலில் அடைவதற்கான ஒரு போட்டியில் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.</p><p> 

ஆந்த்ரோபிக்கின் சீரமைப்பு அறிவியல் தலைவரான இவான் ஹூபிங்கர், அடுத்த பத்தாண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு அனைத்து மனிதர்களையும் கொன்றுவிடுவதற்கான நிகழ்தகவு 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகத் தனிப்பட்ட முறையில் மதிப்பிடுவதாக தெரிவித்துள்ளார். </p><p>

ஜேக்கப் காக்சன் AI எந்த முறையில் மனித குலத்தை அழிக்கும் என்பதை குறிப்பிடவில்லை. ஆனால், AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள 2 நிறுவனங்களின் உள்ளே பணியாற்றியுள்ளவர் கூறியது மனிதர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T14:25:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[iPhone 17 Pro விலை குறைப்பு - Cosmic Orange நிறம் விரைவில் நிறுத்தப்படலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iphone-17-pro-deal-rs-75810-exchange-offer-1788962792"></link>
            <id>https://news.lankasri.com/article/iphone-17-pro-deal-rs-75810-exchange-offer-1788962792</id>
            <summary type="text">Apple நிறுவனத்தின் iPhone 17 Pro (256GB Cosmic Orange) மாடல் தற்போது Flipkart-இல் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது.

ரூ.75,810-க்கு iPhone 17 Pro...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apple நிறுவனத்தின் iPhone 17 Pro (256GB Cosmic Orange) மாடல் தற்போது Flipkart-இல் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது.
</p><h2>
ரூ.75,810-க்கு iPhone 17 Pro</h2><p>இந்த மாடல், ஆரம்ப விலை 1,34,900 ரூபாயாக இருந்த நிலையில், பழைய iPhone 16 Pro-வை மாற்றி கொடுத்தால் ரூ.55,100 வரை எக்சேஞ்ச் மதிப்பு கிடைக்கிறது. </p><p>அதற்கு மேலாக, Flipkart Axis Bank Credit Card மூலம் ரூ.3,990 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதனால், iPhone 17 Pro-வின் இறுதி விலை 75,810 ரூபாயாக குறைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04945e3e-1bd4-421a-a955-72aa3d743aac/26-6aa167e9ec65d.webp' /></p><p> EMI முறையில் வாங்க விரும்புவோருக்கு மாதம் ரூ.3,907 முதல் தவணை வசதி வழங்கப்படுகிறது.
</p><p>
இந்த சலுகை, குறிப்பாக iPhone 16 Pro வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், பழைய போனின் நிலைமை (சேதம், செயல்பாடு) அடிப்படையில் எக்சேஞ்ச் மதிப்பு மாறுபடும்.</p><p></p><p>
</p><h2>
இறுதி வாய்ப்பு</h2><p>Apple நிறுவனம், புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max வெளியீட்டுக்குப் பிறகு, பழைய Pro மாடல்களை நிறுத்தும் பழக்கத்தை பின்பற்றுகிறது. அதனால், Cosmic Orange நிறம் விரைவில் சந்தையில் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.
</p><p>
இந்த சலுகை, iPhone 17 Pro வாங்க விரும்புவோருக்கு இறுதி வாய்ப்பாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T14:03:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் சதமே 150 ஓட்டங்கள் விளாசிய 24 வயது வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jordan-hermann-maiden-century-150-runs-vs-namibia-1788959376"></link>
            <id>https://news.lankasri.com/article/jordan-hermann-maiden-century-150-runs-vs-namibia-1788959376</id>
            <summary type="text">Jordan hermann 150 runs vs namibia: தென் ஆப்பிரிக்காவின் ஜோர்டன் ஹெர்மன் நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.

நமீபியா அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jordan hermann 150 runs vs namibia: தென் ஆப்பிரிக்காவின் ஜோர்டன் ஹெர்மன் நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.
</p><p>
நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க தொடக்க வீரரான ஜோர்டன் ஹெர்மன் 150 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>டோனி டி ஸோர்சி&nbsp;72</h2><p>
தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி Windhoek-யில் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/281f418b-84d3-43ac-889b-175340ad6a2b/26-6aa15c0166218.webp' />&nbsp;</p><p></p><p>நாணய சுழற்சியில் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, தென் ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.</p><p>

கோன்னோர் எஸ்டர்ஹுய்ஸன் 10 ஓட்டங்களில் வெளியேற, ஜோர்டன் ஹெர்மன் மற்றும் டோனி டி ஸோர்சி கூட்டணி 190 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p>அரைசதம் அடித்த டோனி 72 ஓட்டங்களில் வெளியேற, டெவால்ட் பிரேவிஸ் 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e32fa0-893e-4438-a190-579e3fe3348a/26-6aa15c007fd7e.webp' />&nbsp;&nbsp;</p><h2>ஜோர்டன் ஹெர்மன்&nbsp;150 </h2><p>மறுமுனையில் அதிரடி மிரட்டிய ஜோர்டன் ஹெர்மன் முதல் சதத்தை பதிவு செய்தார். அணியின் ஸ்கோர் 275 ஓட்டங்களாக உயர்ந்தபோது, ஜோர்டன் ஹெர்மன் 126 பந்துகளில் 150 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 17 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p>கார்பின் போஷ் அதிரடியாக 24 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 39 ஓட்டங்கள் விளாச, தென் ஆப்பிரிக்க அணி 348 ஓட்டங்கள் குவித்தது. ரூபென் ட்ரம்பல்மன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d39ca20-34cb-4ac3-b07f-36b1e2c5e460/26-6aa15a93b4f85.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df839f7-6147-4f60-9448-99cc0bf86a71/26-6aa1625c0e6d6.webp' /></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A Debut For The Books! 📝<br><br>Jordan Hermann’s day just keeps getting better as the debutant brings up an extraordinary 150! 🤯<br><br>A sensational innings of exquisite stroke play as Hermann makes his mark on the international stage. 🇿🇦🙌<a href="https://x.com/hashtag/Unbreakable?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Unbreakable</a> <a href="https://t.co/QdNfetlj9F">pic.twitter.com/QdNfetlj9F</a></p>&mdash; Proteas Men (@ProteasMenCSA) <a href="https://x.com/ProteasMenCSA/status/2097635146153218105?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் நகரமொன்றில் பாரிய தீவிபத்து: ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/person-dies-in-fire-at-swiss-commercial-building-1788959278"></link>
            <id>https://news.lankasri.com/article/person-dies-in-fire-at-swiss-commercial-building-1788959278</id>
            <summary type="text">Person dies in fire at Swiss fruit and vegetable wholesaler building: சுவிட்சர்லாந்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Person dies in fire at Swiss fruit and vegetable wholesaler building: சுவிட்சர்லாந்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானார்.</p><p>


சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்திலுள்ள Bellach என்னுமிடத்தில், காய்கறிகள், பழங்கள் மொத்த விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்று உள்ளது.
</p><h3>
ஒருவர் பலி</h3><p>

இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் அந்தக் கட்டிடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6457589-5265-46fa-95b2-c26584fb927c/26-6aa15a2f6510d.webp' /></p><p>
</p><p>
தகவலறிந்து தீயணைப்புக்குழுவினர் அங்கு வரும் முன், தீ கட்டிடத்தை கபளீகரம் செய்துவிட்டிருக்கிறது.&nbsp;</p><p></p><p>
கட்டிடம் தீயில் முழுமையாக சேதமடைந்துவிட, பொலிசார் மேற்கொண்ட ஆய்வில், அந்தக் கட்டிடத்துக்குள் ஒருவர் உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் யார், எதனால் தீப்பற்றியது என்பது போன்ற விடயங்கள் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 டொலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை - மத்திய கிழக்கு மோதல் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brent-oil-tops-100-dollars-amid-middle-east-war-1788959020"></link>
            <id>https://news.lankasri.com/article/brent-oil-tops-100-dollars-amid-middle-east-war-1788959020</id>
            <summary type="text">Brent oil tops 100 dollars amid middle east war: மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்ததால், உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

100 டொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Brent oil tops 100 dollars amid middle east war: மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்ததால், உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.</p><h2>

100 டொலரை தாண்டிய&nbsp;கச்சா எண்ணெய்</h2><p>ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை செப்டம்பர் 9 அன்று ஒரு பீப்பாய் 100 டொலரை தாண்டியது. கடந்த ஜூலை 24-க்குப் பிறகு முதல் முறையாக 100 டொலரை கடந்துள்ளது.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஆறு மாதங்களாக நீடிக்கும் மோதல், எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eafbe0ea-f0cd-4eea-bc08-8e908025515a/26-6aa1592daf61f.webp' /></p><p>ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் சவுதி அரேபியாவின் எரிசக்தி நிலையங்களை தாக்கியதால், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தீப்பற்றி சேதமடைந்தன. இதனால் செங்கடல் வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்கள் கூட அபாயத்தில் உள்ளன.
</p><p>
சந்தை நிபுணர்கள், இந்த மோதல் நீண்ட காலம் நீடிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர். இது தற்காலிக உயர்வு அல்ல, பாதுகாப்பு அபாயம் காரணமாக உருவான நிலையான விலை உயர்வு என Abaxx Markets நிறுவனத்தின் ஜெஃப்ரி கர்ரி தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>எண்ணெய் விநியோகம் குறையும்</h2><p>அமெரிக்கா, கனடா, கயானா போன்ற OPEC கூட்டமைப்பில் அல்லாத நாடுகள் உற்பத்தியை அதிகரித்தாலும், சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) உலகளாவிய எண்ணெய் விநியோகம் இந்த ஆண்டு 4.3 மில்லியன் பீப்பாய் குறையும் என எச்சரித்துள்ளது.
</p><p>
Goldman Sachs, Bank of America, HSBC போன்ற முக்கிய வங்கிகள், எண்ணெய் விலை முன்னறிவிப்புகளை உயர்த்தியுள்ளன.
</p><p>
இந்த விலை உயர்வு உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பணவீக்கம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. குறிப்பாக, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T13:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி - தவெக தலைமையிலான கூட்டணிக்கு பெயர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tvk-to-led-secular-social-justice-victory-alliance-1788958803"></link>
            <id>https://news.lankasri.com/article/tvk-to-led-secular-social-justice-victory-alliance-1788958803</id>
            <summary type="text">tvk led alliance named as secular social justice victory alliance: தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப...</summary>
            <content type="html"><![CDATA[<p>tvk led alliance named as secular social justice victory alliance: தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. </p><h3>

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி
</h3><p>
தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் இன்று மாலை சென்னை பனையூரில் நடைபெற்றது. </p><p>

இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9df255b-ea65-48ab-a118-883c35ee2c31/26-6aa1585469af3.webp' /></p><p> 

மேலும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டனர். </p><p>

இந்நிலையில், தவெக தலைமையிலான இந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், "மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் செயல்படும். 

கூட்டணியின் தலைவராக விஜய் இருப்பார். புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும்.</p><p> இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என யாரையும் இதுவரை முன்னிறுத்தியது கிடையாது. கடந்த தேர்தலிலும் அப்படி யாரையும் அறிவிக்கவில்லை. 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை இந்தியா கூட்டணி முடிவு செய்யும்.</p><p> 

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்.அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐசிசியின் முடிவால் ரூ.656 கோடி இழப்பை சந்திக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-cricket-to-face-rs-656-cr-revenue-loss-1788958061"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-cricket-to-face-rs-656-cr-revenue-loss-1788958061</id>
            <summary type="text">இலங்கையில் நடைபெறவிருந்த மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவிற்கு மாற்றப்பட்டதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் 656 கோடி இலங்கை ரூபாய் இழப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நடைபெறவிருந்த மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவிற்கு மாற்றப்பட்டதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் 656 கோடி இலங்கை ரூபாய் இழப்பை சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. </p><h3>

ரூ.656 கோடி இழப்பை சந்திக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம் </h3><p>

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் தொடர்ச்சியான அரசாங்கத் தலையீடு மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் (SLC) தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாததால், அரசு இடைக்கால குழு அமைத்து நிர்வகித்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8a2ebf6-b349-465c-83b5-4033718c6aaa/26-6aa1556e8c027.webp' /></p><p>
இதன் காரணமாக இலங்கையில் நடைபெறவிருந்த மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை இந்தியாவிற்கு மாற்றுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. </p><p>

6 அணிகள் பங்கேற்க உள்ள இந்தத் தொடர், 2027 பிப்ரவரி 14 முதல் 28 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்த தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்ததால், நேரடியாகவும் சுற்றுலா உள்ளிட்டவை மூலமும் இலங்கை கிரிக்கெட் வாரியம் சுமார் 20 மில்லியன் டொலர்(இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.656 கோடி) இழப்பை சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐசிசி தொடரை நடத்தும் உரிமையை இழப்பது இது முதல் முறை இல்லை.</p><p> 

முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் நிர்வாகக் கவலைகள் காரணமாக ஐசிசி இலங்கை கிரிக்கெட்டை இடைநீக்கம் செய்ததுடன், 2024 ஆம் ஆண்டுக்கான U19 உலகக் கிண்ணத்தை இலங்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றியது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T12:47:50+00:00</updated>
        </entry>
    </feed>
