<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-30T05:53:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்த நெய்மர் - முறியடிக்கப்படாத சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/footballer-neymar-announced-retirement-for-brazil-1785390673"></link>
            <id>https://news.lankasri.com/article/footballer-neymar-announced-retirement-for-brazil-1785390673</id>
            <summary type="text">பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  

 ஓய்வை அறிவித்த நெய்மர்

2010 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். </p><h3> 

 ஓய்வை அறிவித்த நெய்மர்</h3><p>

2010 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் அமெரிக்காவுக்கு எதிரான நட்புறவுப் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானவர் நெய்மர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/451ccad2-c213-4bf0-bed2-45f7959cb394/26-6a6ae6533f1fb.webp' /></p><p>

பிரேசில் அணிக்காக 130 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 80 கோல்களை அடித்துள்ளார் மற்றும் 59 கோல்களுக்கு உதவியாக இருந்துள்ளார்.
</p><p>
இதன் மூலம், பிரேசில் கால்பந்து அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். </p><p>

2014 முதல் 2026 வரை தொடர்ச்சியாக 4 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற நெய்மர், 15 போட்டிகளில் 9 கோல்களை அடித்து, 4 தொடர்களிலும் கோல் அடித்த மிகச் சில வீரர்களில் ஒருவரானார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c35cad37-709b-4d84-a43f-0ae5773cad0f/26-6a6ae653edd96.webp' /></p><p>

2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில், 5 முறை சாம்பியனான பிரேசில் அணி,.காலிறுதிக்கு முந்தைய சுற்றான 'ரவுண்ட் ஆஃப் 16' ஆட்டத்தில் நார்வே அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.</p><p> 

அவர் சர்வதேச போட்டியில் அறிமுகமான அதே மெட்லைஃப் ஸ்டேடியத்தில் தனது கடைசி சர்வதேச போட்டியை விளையாடியுள்ளார்.</p><p>

கடந்த 2 ஆண்டுகளாக காயம் காரணமாக அடிக்கடி அவதிப்பட்டு வந்த நெய்மரால், இந்த தொடரின் முதல் சில போட்டிகளிலும் அவரால் முழுமையாக விளையாட முடியாமல் போனது. </p><p>

இந்நிலையில் தனது சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ள நெய்மர், "தேசிய அணியுடனான எனது காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். நான் அங்கு வரலாறு படைத்தேன், அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். </p><p>நான் அங்கே நிறைய அனுபவங்களைப் பெற்றேன், என் இரத்தத்தையும் உயிரையும் கொடுத்தேன், மேலும் அந்த மஞ்சள் ஜெர்சிக்காக எப்போதும் போராடினேன். ஆனால், எனக்கு இனி அது வேண்டும் என்று தோன்றவில்லை" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d5b8739-6125-4408-827d-2e9c173e92c2/26-6a6ae6549fc99.webp' /></p><p>

சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், தனது Santos அணிக்காக விளையாட உள்ளார். </p><p>

நெய்மர் 2017 ஆம் ஆண்டில் பார்சிலோனாவிலிருந்து பாரிஸ் செயிண்ட் ஜெர்மெயினுக்கு 222 மில்லியன் யூரோக்கு(இந்திய மதிப்பில் ரூ.2,432 கோடி) பரிமாற்றம் செய்யப்பட்டதே, தற்போது வரை சாதனை பரிமாற்றமாக உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T05:53:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனை விட்டு வெளியேறிவரும் ஆயிரக்கணக்கான மக்கள்: காரணம் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cost-of-living-leads-peoples-to-leave-london-1785388249"></link>
            <id>https://news.lankasri.com/article/cost-of-living-leads-peoples-to-leave-london-1785388249</id>
            <summary type="text">ஆயிரக்கணக்கானோர் லண்டனை விட்டு வெளியேறிவருவதை தேசிய புள்ளியியல் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

லண்டனை விட்டு வெளியேறிவரும் மக்கள்

லண்டனை விட்டு ஆயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆயிரக்கணக்கானோர் லண்டனை விட்டு வெளியேறிவருவதை தேசிய புள்ளியியல் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
</p><h3>
லண்டனை விட்டு வெளியேறிவரும் மக்கள்
</h3><p>
லண்டனை விட்டு ஆயிரக்கணக்கானோர் வெளியேறிவருவதை உறுதி செய்துள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம், 1980களுக்குப் பிறகு, கோவிட் காலகட்டம் தவிர்த்து, இந்த அளவுக்கு லண்டன் மக்கள்தொகை குறைந்துள்ளது இப்போதுதான் என்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/687dc31a-f750-4532-aa13-7f61d9979d34/26-6a6adcdaba3c0.webp' /></p><p>

2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், சுமார் 27,000 பேர் லண்டனை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஆக, 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 9,149,646 ஆக இருந்த லண்டன் மக்கள் தொகை, 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், 9,122,909 ஆக குறைந்துள்ளது.</p><h3>

காரணம் என்ன?
</h3><p>
இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனை விட்டு வெளியேற முக்கிய காரணம், விலைவாசி உயர்வுதான்!
</p><p>
சமீபத்தில், Deutsche Bank Research Institute என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள், பிரித்தானியாவில் மட்டுமல்ல, உலகிலேயே விலைவாசி அதிகமான பல நகரங்களைவிட லண்டனில் விலைவாசி அதிகம் என்று கூறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35504163-6ae2-4e12-85c5-8dc224eda7fd/26-6a6adcdb69321.webp' /></p><p>
பிரித்தானியாவைப் பொருத்தவரை, எடின்பர்கிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் ஒரு சதுர மீற்றர் பரப்பின் விலை 5,019 பவுண்டுகள்.&nbsp;</p><p></p><p>
பர்மிங்காமில் ஒரு சதுர மீற்றர் பரப்பின் விலை 4,045 பவுண்டுகள். அதே நேரத்தில், லண்டனிலோ, ஒரு சதுர மீற்றர் பரப்பின் விலை 14,982 பவுண்டுகள்!</p><p>

அத்துடன், போக்குவரத்துச் செலவும் லண்டனில் அதிகம் என்கிறது, Deutsche Bank Research Institute ஆய்வமைப்பு.</p><p>

லண்டன், நியூயார்க், பாரீஸ் மற்றும் ஹொங்ஹொங் ஆகிய நகரங்கள் உலகின் திறமைசாலிகளையும் முதலீட்டையும் கவர்ந்திழுப்பது என்னவோ உண்மைதான். ஆனால், வீடுகள் விலை அல்லது வாடகை, காற்று மாசு, தினசரி நீண்ட பயணம் மற்றும் விலைவாசி ஆகிய விடயங்கள் இந்த நகரங்களின் வாழத்தகுந்த தன்மைக்கான மதிப்பெண்களை குறைத்துவிடுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்களான Jim Reid மற்றும் Galina Pozdnyakova.
</p><p>
அதாவது, படிப்பினை என்னவென்றால், விலைவாசி உயர்ந்த நகரங்கள் என்பதால் மட்டுமே, அவை வாழத் தகுந்த நகரங்களாகிவிடாது என்கிறார்கள் அவர்கள்.</p><p>

ஆக, விலைவாசி உயர்வால், ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனை விட்டு வெளியேறி வருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T05:11:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ணத்தைப் புறக்கணியுங்கள்... இங்கிலாந்து அணிக்கு ரசிகர்கள் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-fans-lead-boycott-calls-1785388030"></link>
            <id>https://news.lankasri.com/article/england-fans-lead-boycott-calls-1785388030</id>
            <summary type="text">உலகக் கிண்ணம் தொடரை விற்பனை செய்வதற்கான ஃபிஃபாவின் திட்டத்தால் ஆத்திரமடைந்துள்ள ரசிகர்கள், இங்கிலாந்து அணி உலகக் கிண்ணம் தொடரை புறக்கணிக்க வேண்டும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணம் தொடரை விற்பனை செய்வதற்கான ஃபிஃபாவின் திட்டத்தால் ஆத்திரமடைந்துள்ள ரசிகர்கள், இங்கிலாந்து அணி உலகக் கிண்ணம் தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.</p><h2>ரசிகர்கள் ஆத்திரம்</h2><p>
</p><p>திட்டமிட்டபடி உலகக் கிண்ணம் தொடருக்கான உரிமைகள் விற்கப்பட்டால், ஃபிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவும் அவரது அமெரிக்க நண்பர்களும் பல மில்லியன் டொலர் தொகையைத் தங்கள் வசப்படுத்திக்கொள்ள அது வழிவகுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eb9d907-81df-4790-bae5-7c64d45560e3/26-6a6add17d9534.webp' /></p><p> </p><p>இந்த நகர்வு முழுக்க முழுக்கப் பேராசையாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும், இன்ஃபான்டினோவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஆத்திரமடைந்த ரசிகர்கள் கூறுகின்றனர். </p><p>இந்த நிலையில், ஐரோப்பாவின் நிர்வாக அமைப்பான UEFA அவசர ஆலோசனைகளை நடத்தவுள்ளது; இதில் அதன் 55 உறுப்பு நாடுகளைக் கொண்ட குழு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள பரிசீலித்து வருகிறது, இது ஒரு கூட்டுப் புறக்கணிப்புக்கு வழிவகுக்கக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது.</p><p></p><p> </p><p>உலக கால்பந்து நிர்வாக அமைப்பான ஃபிஃபா (FIFA), தனது போட்டிகளை நடத்துவதற்காக ஒரு தனியார் நிறுவனத்தை உருவாக்கும் திட்டத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாதது குறித்துத் தங்கள் தலைவர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறி, இத்திட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இங்கிலாந்தின் கால்பந்து சங்கம் (FA) களமிறங்கியுள்ளது. </p><p>நடந்து முடிந்த உலகக் கிண்ணம் தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இன்ஃபான்டினோவின் மிக அதிகப்படியான டிக்கெட் விலைகளால் ரசிகர்கள் கொள்ளையடிக்கப்பட்டனர்.</p><h2>இறுதி எச்சரிக்கை</h2><p> </p><p>ஃபிஃபா உறுப்புச் சங்கங்கள் அனைத்திற்கும் இன்ஃபான்டினோ இறுதி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவரது மிரட்டலை முறியடிக்குமாறு இங்கிலாந்து ரசிகர்கள் தங்களின் கால்பந்து சங்கத்தை (FA) வலியுறுத்தியுள்ளனர். </p><p>ஃபிஃபாவின் 211 உறுப்பு நாடுகளும் 53 நாட்களுக்குள் தனது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அவற்றுக்குத் தலா 30 மில்லியன் பவுண்டுகள் வீதம் ஒருமுறை வழங்கப்படும் தொகையை இன்ஃபான்டினோ முன்மொழிந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96931f16-e181-446a-9d61-156b7dfc0ab0/26-6a6add18a80f4.webp' /></p><p> </p><p>'ஃபீஃபா ஃபார்வர்ட் எண்டர்பிரைஸ்' என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்க அவர் திட்டமிட்டு வருவதுடன், உலகக் கிண்ணம் தொடரை நான்கு ஆண்டுகளுக்குப் பதிலாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தவும் திட்டமிட்டு வருவதாகவும் நம்பப்படுகிறது. </p><p>மேலும், இன்ஃபான்டினோவின் நண்பரும் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்க வணிகக் கூட்டாளிகளிடம், இந்த மாற்றம் குறித்து ரகசியமாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது. </p><p>ஜனாதிபதி ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் சகோதரரான ஜோசுவா குஷ்னர் நடத்தும் 'த்ரைவ்' (Thrive) என்ற முதலீட்டு நிறுவனமும் இதில்&nbsp;முதலீடு செய்ய தீவிரம் காட்டி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T05:05:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே வாரத்தில் கருவளையம் நீங்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/home-remedies-for-dark-circle-in-tamil-1785387347"></link>
            <id>https://news.lankasri.com/article/home-remedies-for-dark-circle-in-tamil-1785387347</id>
            <summary type="text">பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.

ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
</p><p>
ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. </p><p>அந்தவகையில், முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையங்கள் நிரந்தரமாக நீங்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><ul><li>

உருளைக்கிழங்கு- 1
</li><li>காபி தூள்- 1 ஸ்பூன்</li></ul><h2>

பயன்படுத்தும் முறை</h2><p>

முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி அதனை தோலுரித்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>

பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் சாறை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
அடுத்து உருளைக்கிழங்கு சாறுடன் காபி தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25243990-1f86-48df-93fe-0d710d72e1be/26-6a6ad9b780b20.webp' /></p><p>

இப்போது இதனை கண்களுக்கு அடியில் தடவி இரண்டு நிமிடம் மெதுவாக மசாஜ் செய்து 15 நிமிடம் அப்படியே விட்டுவிடவும்.</p><p>

இறுதியாக கண்களை குளிர்ந்த நீரை பயன்படுத்தி கழுவிக்கொள்ளலாம்.
</p><p>
இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்திவர விரைவிலேயே கருவளையம் நிரந்தரமாக நீங்கி விடும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T04:57:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவுக்கு வராத ஈரான் போர்... கடும் நெருக்கடியில் அமெரிக்காவின் ஆயுத இருப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-weapons-stockpiles-dwindle-1785384938"></link>
            <id>https://news.lankasri.com/article/us-weapons-stockpiles-dwindle-1785384938</id>
            <summary type="text">சமீபத்திய வாரங்களில் ஈரானுடனான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, முக்கியமான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உட்பட அமெரிக்க ராணுவத்தின் ஆயுத இருப்புகள் கடுமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்திய வாரங்களில் ஈரானுடனான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, முக்கியமான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உட்பட அமெரிக்க ராணுவத்தின் ஆயுத இருப்புகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.</p><h2>அதிக ஆபத்தை எதிர்கொள்ள</h2><p>
</p><p>ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதியான தீர்வு இன்னும் எட்டப்படாமல் ட்ரம்ப் நிர்வாகம் தத்தளித்து வரும் நிலையில், ஏவுகணைகளின் பற்றாக்குறை, பிற முனைகளில் அமெரிக்கா மோதலில் ஈடுபடும் திறனைப் பாதிக்கக்கூடும் என்றே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1677821-2e5b-4228-83a9-a0f1ab515507/26-6a6ad161db482.webp' /></p><p> திங்களன்று வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், அமெரிக்காவிடம் தற்போது 827-க்கும் குறைவான பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளும், 278-க்கும் குறைவான தாட் பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிப்பு ஏவுகணைகளும் எஞ்சியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>போருக்கு முந்தைய அமெரிக்க ராணுவத்தின் ஆயுத இருப்பானது 
CSIS-இன் மதிப்பீட்டின்படி, சுமார் 2,200 'பேட்ரியாட்' ஏவுகணைகளும் (அவற்றின் மிகவும் நவீனமயமாக்கப்பட்ட இரண்டு வகைகளைச் சேர்ந்தவை) 452 'தாட்' (THAAD) பாலிஸ்டிக் ஏவுகணைகளும் இருந்தன. </p><p>இவை அமெரிக்க ராணுவம் தங்களை நோக்கி வரும் எதிரியின் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்கான முதன்மையான அமைப்புகளாகும்; மேலும், ஒவ்வொரு இடைமறிப்பு ஏவுகணையின் விலையும் பல மில்லியன் டொலர்கள் ஆகும்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், CSIS அறிக்கையின் ஆசிரியர்கள் குறிப்பிடுகையில், குறைந்துவிட்ட ஆயுதக் கையிருப்பு, அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் அதிக ஆபத்தை எதிர்கொள்ள நிர்பந்திக்கக்கூடும். </p><p>பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பேட்ரியாட் மற்றும் தாட் (THAAD) ஏவுகணை அமைப்புகள் போன்ற சிறந்த மாற்று வழிகள் எதுவும் இல்லை. அத்தகைய அச்சுறுத்தல்களை இடைமறிக்கக்கூடிய சாதாரண ஏவுகணைகளைக் கொண்ட கடற்படைக் கப்பல்கள், பொதுவாக மிகவும் தொலைவில் உள்ளன.</p><p> திங்களன்று ஆயுதங்களின் கையிருப்பு குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​மிகவும் மேம்பட்ட ரகங்களை மீண்டும் நிரப்ப விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார், ஆனால் கையிருப்பு மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>இதனிடையே, கூட்டுத் தலைமைப் படைத் தலைவர்களின் (Joint Chiefs of Staff) தலைவரான ஜெனரல் டான் கெய்ன், தங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் நிதி கிடைக்காவிட்டால், இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் கிடைக்காது என்று கடந்த வாரம் செனட் உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21a598fd-5d41-48f4-8446-edb5661e3418/26-6a6ad162cc33e.webp' /></p><p> </p><p>ஈரான் மீதானப் போரைத் தீவிரமாக விரிவுபடுத்துவது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் பரிசீலித்துக்கொண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று அவருடன் நடைபெற்ற கூட்டத்தில் ஆயுத இருப்பு குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டியதாக ஜெனரல் கெய்ன் கூறியதாக CNN செய்தி வெளியிட்டிருந்தது. </p><p>மோதலைத் தீவிரப்படுத்துவதால் ஏற்படக்கூடிய கூடுதல் பாதகமான விளைவுகள் குறித்து ஜெனரல் கெய்ன் மற்றும் பிற தளபதிகள் விளக்கமளித்ததைத் தொடர்ந்து, அந்தச் சந்திப்பிற்குப் பிறகு ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.</p><h2>பல ஆண்டுகள் ஆகலாம்</h2><p> </p><p>ஆனால், அந்த இடைநிறுத்தம் குறுகிய காலமே நீடித்திருக்கலாம். செவ்வாய்க்கிழமையன்று, ஈராக்கில் உள்ள ஈரானின் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்க மற்றும் சவுதிப் படைகள் கூட்டுத் தாக்குதல்களை நடத்தின. </p><p>மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதல் ஒன்றை முறியடித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த மாதத் தொடக்கத்தில், ஈரானுடனான தொடர் மோதல் ஆயுத இருப்பை மிகக் குறைந்த நிலைக்குக் குறைக்கக்கூடும்; </p><p>இது சீனா அல்லது வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அமெரிக்க ராணுவத்தின் திறனைப் பாதிக்கக்கூடியதாக அமையலாம் என ஓய்வுபெற்ற மரைன் கார்ப்ஸ் கர்னல் மார்க் கேன்சியன் எச்சரித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6739b14-db4f-4f2d-a954-cb3cf318a620/26-6a6ad1637dfe0.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகள் போன்ற அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு நீண்ட காலம் தேவைப்படுவதால், அமெரிக்காவின் ஆயுத இருப்பை முழுமையாக மீண்டும் நிரப்புவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். </p><p>ஆயுதப் பற்றாக்குறைக்கு முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகமே பெரும்பாலும் காரணம் என்று ட்ரம்ப்பும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்ஸெத்தும் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>ஆனால், இஸ்ரேல் காரணமாக ஈரானுடன் உருவானப் போரினால் இந்தப் பிரச்சினை மிகவும் மோசமடைந்துள்ளது என்றே CSIS அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T04:13:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-turns-to-canadian-crude-1785381473"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-turns-to-canadian-crude-1785381473</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணை ஊடாக எந்தக் கப்பலும் வெளியேற முடியாத நெருக்கடியான சூழலில், ஆசிய நாடுகள் எரிபொருள் நெருக்கடியால் தத்தளிக்கும் நிலையில், ஜப்பான் கனடா பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணை ஊடாக எந்தக் கப்பலும் வெளியேற முடியாத நெருக்கடியான சூழலில், ஆசிய நாடுகள் எரிபொருள் நெருக்கடியால் தத்தளிக்கும் நிலையில், ஜப்பான் கனடா பக்கம் திரும்பியுள்ளது.</p><h2>டிரான்ஸ் மவுண்டன் குழாய்வழி</h2><p>
</p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், 2025-ஆம் ஆண்டிற்குப் பிறகு கனடாவின் முதல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி, எக்ஸான் மொபில் நிறுவனத்தால் கப்பல் மூலம் ஜப்பானுக்குச் செல்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b32b4598-2cf0-4cf5-9acb-511d8d508311/26-6a6ac401870e5.webp' /></p><p>
</p><p>750,000 பீப்பாய்கள் வரை கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட, மார்ஷல் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட 'ஃப்ரீடம் குளோரி' என்ற கப்பல், டிரான்ஸ் மவுண்டன் குழாய்வழி (TMX) கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு புதன்கிழமை வான்கூவரிலிருந்து புறப்பட்டுள்ளது. </p><p>ஜப்பானின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான ஈனியோஸ் TMX கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. இதனிடையே, எண்ணெய் விலை உயர்வு காரணமாக, ஜப்பான் அரசாங்கம் இந்த ஆண்டிற்கான தங்களது வளர்ச்சி முன்னறிவிப்பை 1.3 சதவீதத்திலிருந்து 0.9 சதவீதமாகக் குறைத்துள்ளது.</p><p></p><p> </p><p>பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கும் வரை, ஜப்பான் தனது எண்ணெயில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை ஹார்முஸ் நீரிணை வழியாகவே இறக்குமதி செய்து வந்தது.
</p><p>போரினால் ஹார்முஸ் வழியாக எண்ணெய் விநியோகம் தடைபட்டதைத் தொடர்ந்து, தற்போது ஜப்பான் உட்பட பல ஆசிய நாடுகள் தங்களது விநியோகஸ்தர்களை அவசரமாகப் பன்முகப்படுத்த முயற்சித்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31644137-51b5-4894-8887-abcc20e9f78b/26-6a6ac40244930.webp' /></p><p> </p><p>டிரான்ஸ் மவுண்டன் குழாய்வழியானது, கனடாவின் ஆல்பர்ட்டாவிலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபியில் உள்ள ஒரு கடல் முனையத்திற்கு, ஒரு நாளைக்கு 890,000 பீப்பாய்கள் வரையிலான கச்சா எண்ணெயைக் கொண்டு செல்கிறது.</p><h2>இந்தியா, மலேசியா</h2><p> </p><p>TMX என அறியப்படும் இந்தக் குழாய்வழி ஃபெடரல் நிர்வாகத்திற்குச் சொந்தமானது, மேலும் இது 2025-ஆம் வருடத்தின் மூன்றாம் காலாண்டிலிருந்து கிட்டத்தட்ட 90 சதவீத கொள்ளளவில் இயங்கி வருகிறது. </p><p>ஆசியா நாடுகளுக்கான ஏற்றுமதி 2024-இல் சுமார் 51 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு வான்கூவரிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மொத்த எண்ணெய் ஏற்றுமதியில், TMX வழியாக ஆசியாவிற்குச் செய்யப்பட்ட ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 77 சதவீதமாக அதிகரித்துள்ளது.
</p><p>ஈரான் போர் தொடங்கியதன் பிறகு, இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அனைத்தும் TMX குழாய்வழி மூலம் கொண்டுவரப்படும் கச்சா எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1aa0f70-208f-4483-be3d-b1c7dc033e09/26-6a6ac402eca23.webp' /></p><p> </p><p>அதேவேளையில், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் கனடிய எண்ணெய் கிட்டத்தட்ட 60 சதவீதமாக உள்ளது என்று அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் (US Energy Information Administration) தெரிவித்துள்ளது. </p><p>இதற்கிடையில், கனடியப் பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் புதிய வரிகளை அறிவித்திருந்த போதிலும், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகளில் கனடாவின் எண்ணெயை ஒரு பேராயுதமாகப் பயன்படுத்துவதில் தனக்கு உடன்பாடில்லை என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T03:16:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்நாட்டில் தயாரிக்கப்படும் உக்ரைன் ட்ரோன்கள்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-drone-hits-russia-s-biggest-oil-refinery-1785375550"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-drone-hits-russia-s-biggest-oil-refinery-1785375550</id>
            <summary type="text">ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா மோதல்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் கடந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2> உக்ரைன் - ரஷ்யா மோதல்</h2><p>
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.</p><p> இந்த போர் காலகட்டத்தில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் எதிர்ப்பு தாக்குதல் நடத்தி வந்த உக்ரைன், கடந்த சில காலமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் மூலம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c816e2f5-7d4a-4808-8cab-a31a9170a8e2/26-6a6aab40565d9.webp' /></p><p> அதே நேரம் நேற்று வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பிற்கு பிறகு பேசிய உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிரான போரில் இன்னும் அதிக அளவில் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2> ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்</h2><p>இந்நிலையில் இன்று ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தின் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.</p><p>உக்ரைனில் இருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது கிட்டத்தட்ட 17 மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டதாகும்.</p><p> உக்ரைன் நடத்திய இந்த ட்ரோன் தாக்குதலில் 6 பேர் வரை படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> இடை மறிக்கப்பட்ட ட்ரோன் பாகங்களில் விழுந்ததில் அடையாளம் காணப்படாத தொழிற்சாலை இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T01:39:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கோவில் அன்னதான நிகழ்வில் வாள்வெட்டு தாக்குதல்: பலர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sword-attack-in-batticaloa-temple-in-sri-lanka-1785374489"></link>
            <id>https://news.lankasri.com/article/sword-attack-in-batticaloa-temple-in-sri-lanka-1785374489</id>
            <summary type="text">இலங்கையில் கோவில் அன்னதான நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூர ஆயுத தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு ஆலயத்தில் பரபரப்புஏறாவூர் மைலம்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கோவில் அன்னதான நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூர ஆயுத தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> மட்டக்களப்பு ஆலயத்தில் பரபரப்பு</h2><p>ஏறாவூர் மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் கோவிலில் அன்னதான நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்த போது வாள்வெட்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த வன்முறையில், பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஒருவரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இருப்பினும் மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49825b48-c939-4c6a-a3c0-a584635238dd/26-6a6aa71b28a5f.webp' /></p><p> மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் கோவிலில் வருடாந்திர உற்சவம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்ட போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p></p><h2>முற்றிய வாக்குவாதம்</h2><p>இந்த நிகழ்வின் போது அன்னதானம் வாங்கி உண்ட இளைஞர் ஒருவர், உணவு சரி இல்லை என தெரிவித்துள்ள நிலையில் அன்னதானம் வழங்கியவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p> இதையடுத்து 7 பேர் கொண்ட கும்பல் அன்னதானம் வழங்கியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p> மடக்கி பிடிக்கப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-30T01:21:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரீஸ் சூட்கேசில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பிரித்தானிய பெண்: சர்வதேச விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scottish-woman-found-dead-in-greece-1785368450"></link>
            <id>https://news.lankasri.com/article/scottish-woman-found-dead-in-greece-1785368450</id>
            <summary type="text">ஏதென்ஸில் சூட்கேஸில் பிரித்தானிய பெண்&amp;nbsp; ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூட்கேஸில் பிரித்தானிய பெண்கிரீஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏதென்ஸில் சூட்கேஸில் பிரித்தானிய பெண்&nbsp; ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> சூட்கேஸில் பிரித்தானிய பெண்</h2><p>கிரீஸ் தலைநகர் எதென்ஸில் உள்ள பழமையான கட்டிடம் ஒன்றில் இருந்த சூட்கேஸில் ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண்ணின் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> உள்ளூர் ஊடகங்கள் வழங்கிய தகவலின் படி, சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் 38 வயது எலிசபெத் என்பவருடையது என தெரியவந்துள்ளது.</p><p> இதனை பிரித்தானியாவின் காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c40770-12c4-4f39-aecf-a090076a39f6/26-6a6a8f8409968.webp' /></p><p> மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக கிரீஸ் நாட்டு அதிகாரிகளும், இண்டர்போல் மற்றும் ஸ்காட்லாந்து காவல் துறையினரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> பாதிக்கப்பட்ட பெண் சைப்ரஸ் வழியாக அமெரிக்காவில் இருந்து கிரீஸுக்கு வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.</p><p></p><p> மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய, கொலை செய்யப்பட்ட பெண் கடைசியாக எங்கு சென்றார் என்பது போன்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T00:58:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயை அணைக்க சென்ற ஹெலிகாப்டர்: விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bell-412-helicopter-accident-in-argentina-1785373092"></link>
            <id>https://news.lankasri.com/article/bell-412-helicopter-accident-in-argentina-1785373092</id>
            <summary type="text">அர்ஜென்டினாவில் காட்டுத்தீயை அணைக்க சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. &amp;nbsp;விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்அர்ஜென்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினாவில் காட்டுத்தீயை அணைக்க சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> &nbsp;விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்</h2><p>அர்ஜென்டினாவின் மேற்கு சான் ஜூவான் மாகாணத்தில் மீட்பு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>சான் ஜூவானின் இஷிகுவாலாஸ்டோ இயற்கை பூங்காவில்&nbsp; ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க மீட்பு ஹெலிகாப்டர் சென்றதாகவும், அப்போது பெல் 412 ரக ஹெலிகாப்டர்&nbsp; ஆபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbb7bb25-2fd9-4fc4-967f-a419db685dbb/26-6a6aa1a6ed9ea.webp' /></p><p></p><p>உயிரிழந்த அனைவரும் தீயணைப்பு, காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு பணியாளர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>விபத்து தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதன்கிழமை காலை ஹெலிகாப்டர் ஆனது தன்னுடைய இணைப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>சான் ஜூவான் மாகாண ஆளுநர் மார்செலோ ஒர்ரெகோ, நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தையும், அதில் 7 பேர் வரை உயிரிழந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</a><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T00:58:32+00:00</updated>
        </entry>
    </feed>
