<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-03T02:34:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு செல்ல தயாராக இருந்த இலங்கை இளைஞர்: திருகோணமலை சாலையில் நேர்ந்த பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-youngster-died-in-trincomalee-accident-1785715385"></link>
            <id>https://news.lankasri.com/article/2-youngster-died-in-trincomalee-accident-1785715385</id>
            <summary type="text">பிரான்சுக்கு செல்ல தயாராக இருந்த இளைஞர் இலங்கையில் சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை விபத்துஇலங்கையின் திருகோண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சுக்கு செல்ல தயாராக இருந்த இளைஞர் இலங்கையில் சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> சாலை விபத்து</h2><p>இலங்கையின் திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - ஜின்னாநகர், 59 ஆம் கட்டை பகுதியில் நேற்று (02ம் திகதி) மாலை ஏற்பட்ட மோசமான மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p> திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த கோர விபத்தானது நிகழ்ந்து இருப்பதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31dcb410-8b32-4944-995a-7c9e193143a8/26-6a6fdabadcc1e.webp' /></p><p> இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் மூதூர் - கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><p> இவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் என்றும், மற்றொருவர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சாலை விபத்தை தொடர்ந்து ரிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2810ba5-bcc6-42c9-bf26-6ae0b5e422e0/26-6a6fdabb91105.webp' /></p><p> உயிரிழந்த இரண்டு இளைஞரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த விபத்து தொடர்பான கூடுதல் விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T00:25:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவிற்குள் உக்ரைன் நடத்திய வேட்டை: 635 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா: 8 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-massive-drone-attack-on-russia-8-dead-1785711589"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-massive-drone-attack-on-russia-8-dead-1785711589</id>
            <summary type="text">ரஷ்யாவின் உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்</h2><p>
ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் ஆழமான பகுதிகளை குறிவைத்து உக்ரைன் அதிரடியான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p>இந்த தாக்குதலில் ரஷ்யாவின் ராணுவத்தின் நிலைகள், பொது மக்கள் குடியிருப்பு மற்றும் எரிசக்தி நிலையங்கள் குறிவைத்து தகர்க்கப்பட்டன.</p><p>உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதல் சம்பவத்தில் சிக்கி ரஷ்யாவில் இதுவரை 8 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cea027b4-773a-4815-9fde-342780a06bc6/26-6a6fcbe6f320a.webp' /></p><p>எங்கல்ஸ் பகுதியின் குடியிருப்பு பகுதி மீது ட்ரோன் மோதியதில் 2 பேரும், சரடோவ் நகரின் அடுக்குமாடி குடியிருப்பு மீது ட்ரோன் மோதியதில் பலத்த சேதமும்&nbsp;ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.</p><p>கிட்டத்தட்ட உக்ரைனில் இருந்து 1300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதியில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர்.</p><p></p><p> பெல்கோரரோட் பகுதியில் ட்ரோன் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>உக்ரைனிய படையின் இந்த ஒருங்கிணைந்த ட்ரோன் தாக்குதலை ரஷ்ய பாதுகாப்பு படைகள் முழுவீச்சில் தடுத்து நிறுத்தினர். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, கிட்டத்தட்ட 635 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி உள்ளது.</p><h2>உறுதிப்படுத்திய ஜெலென்ஸ்கி</h2><p>இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யா மீது நடத்தப்பட்ட பிரம்மாண்ட தாக்குதலை உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c23941f1-9db2-4f0c-8765-ec12deea2f59/26-6a6fcbe7a399e.webp' /></p><p> மேலும் சரடோவ் நகரில் அமைந்திருந்த எண்ணெய் உள்கட்டமைப்புகளையும், எங்கல்ஸில் உள்ள ரஷ்யாவின் ராணுவ தளத்தையும் உக்ரைனிய படைகள் வெற்றிகரமாக தாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>ரஷ்யாவின் தொடர் அத்துமீறலுக்கு உக்ரைனின் நேரடி பதிலடி தான் இந்த நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T00:04:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் சுய அழிப்பு படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்: 5 காவலர்கள் உட்பட 14 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-terror-bombing-kills-14-people-1785714316"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-terror-bombing-kills-14-people-1785714316</id>
            <summary type="text">பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் சுய அழிப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 14 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கோர தாக்குதல்ஞாயிற்றுக்கிழமை பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் சுய அழிப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 14 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> பாகிஸ்தானில் கோர தாக்குதல்</h2><p>ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் சுய அழிப்பு படையினர் நடத்திய தாக்குதல் 14 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p> இந்த தாக்குதலில் 5 காவல்துறை அதிகாரிகள் வரை உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/412a757d-a945-4362-97cb-9e5f44479e70/26-6a6fd68e6de75.webp' /></p><p></p><p> கபல்(Kabal) பகுதியில் காவல் நிலையத்திற்கு அருகில் நடைபெற்ற போராட்ட கூட்டத்தை குறித்து இந்த மோசமான குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.</p><p> குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை கைபர் பக்துன்க்வா அவசரகால சேவையின் செய்தி தொடர்பாளர் பிலால் பைசி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨 Pakistan: A suicide bomber has exploded near a police station in Kabal, Swat valley of Khyber Pakhtunkhwa province. There was large public rally, ‘Aman Pasoon’ in the area when the bombing took place. Multiple casualties have been reported. <a href="https://t.co/QXIMj7czin">https://t.co/QXIMj7czin</a></p>&mdash; Asia Front (@asiafront0) <a href="https://x.com/asiafront0/status/2083935658276790464?ref_src=twsrc%5Etfw">August 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-02T23:45:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறண்டுபோன ஐரோப்பிய நதி., ஒற்றை அணு மின் நிலையத்தையும் மூடும் நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hungary-shuts-nuclear-plant-amid-danube-drought-1785655426"></link>
            <id>https://news.lankasri.com/article/hungary-shuts-nuclear-plant-amid-danube-drought-1785655426</id>
            <summary type="text">ஐரோப்பிய நாடான ஹங்கேரி, தனது ஒரே அணு மின் நிலையமான பாக்ஸ் (Paks) அணு மின் நிலையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.

கடந்த 44 ஆண்டுகளில் முதல் முறையாக முழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய நாடான ஹங்கேரி, தனது ஒரே அணு மின் நிலையமான பாக்ஸ் (Paks) அணு மின் நிலையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
</p><p>
கடந்த 44 ஆண்டுகளில் முதல் முறையாக முழுமையாக இந்த அணுமின் நிலையம் நிறுத்தம் செய்யப்படுகிறது.</p><p>

இந்த மின் நிலையம் நாட்டின் மின்சார தேவையின் அரைபங்கிற்கும் மேல் வழங்கி வருகிறது.

ஆனால், டானியூப் ஆற்றின் நீர்மட்டம் வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலையில் சென்றதால், ரியாக்டர்களை குளிர்விக்க தேவையான நீர் கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b36250a-b765-4b18-9233-d2cd60c84508/26-6a6ef0845cb54.webp' /></p><p>

கடந்த வெள்ளிக்கிழமை உற்பத்தி 965 மெகாவாடாகக் குறைந்தது. பின்னர் இரவில் 240 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

சாதாரணமாக 2,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் நிலையம் இப்போது இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>டானியூப் ஆற்றின் நீர்மட்டம் -134 சென்டிமீற்றராக குறைந்துள்ளது. இது 2018-இல் பதிவான -98 செ.மீ. சாதனை அளவை விட மிகக் குறைவு. மேலும், நீர்மட்டம் -144 செ.மீ. வரை குறையக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
</p><p></p><p>இந்த வறட்சி ஹங்கேரியில் 100-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் நீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலைகள் தங்களின் நீர் பயன்பாட்டை குறைக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், அண்டை நாடான ஸ்லோவாக்கியா ஹங்கேரிக்கு உதவ தாயாக இருப்பதாக அறிவித்துள்ளது.
</p><p>
ஐரோப்பா முழுவதும் கடந்த சில மாதங்களாக கடும் வெப்ப அலைகள் தாக்கியுள்ளன. விஞ்ஞானிகள் இதற்கு மனிதனால் உண்டான காலநிலை மாற்றமே காரணம் எனக் கூறுகின்றனர்.
</p><p></p><p>இந்தச் சம்பவம் ஹங்கேரியின் மின்சார உற்பத்தி மட்டுமல்லாமல், கப்பல் போக்குவரத்து, சுற்றுலா, வேளாண்மை மற்றும் தொழில்துறை துறைகளையும் பாதித்துள்ளது. </p><p>வறட்சி மற்றும் வெப்ப அலைகள் காரணமாக ஐரோப்பா முழுவதும் ஆற்றல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T23:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேஷியா பயணிகள் கப்பலில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு: 41 பேரை காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesian-ferry-fire-5-dead-41-missing-1785695057"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesian-ferry-fire-5-dead-41-missing-1785695057</id>
            <summary type="text">இந்தோனேஷியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பயணிகள் கப்பலில் தீ விபத்து
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேஷியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> பயணிகள் கப்பலில் தீ விபத்து</h2><p>
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பலில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p> இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் வரை பலியாகியுள்ளனர். </p><p>கிட்டத்தட்ட 41 பேரின் நிலைமை இதுவரை என்னவென்று தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7cf46eb-22df-4d0c-9d33-c1fd80ee72e2/26-6a6f8b536e669.webp' /></p><p> காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.</p><p>முடியரா செந்தோசா 2(Mutiara Sentosa 2) என்ற பெயர் கொண்ட இந்த கப்பலில், விபத்தின் போது பயணிகள், பணியாளர்கள் என கிட்டத்தட்ட 271 பேர் பயணம் செய்துள்ளனர்.</p><p> விபத்தில் சிக்கியுள்ள இந்த கப்பல், கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுராபாயாவில் இருந்து தெற்கு சுலாவசியில் உள்ள மகாசக்கர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2> மீட்பு பணிகள் தீவிரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab27dc03-4ec2-46f4-87af-ed33df4b3e8e/26-6a6f8b5423106.webp' /></p><p>கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர கால மீட்பு படையினர் மற்றும் அருகிலிருந்த கப்பல்கள் என அனைவரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்குள் 225 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.</p><p> மேலும் உயிரிழந்த 5 பேரின் உடலையும் கப்பலில் இருந்து மீட்டெடுத்துள்ளனர். காணாமல் போயுள்ள 41 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.</p><p>அதே சமயம் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான உண்மையை கண்டறிய விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p> &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-02T22:31:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபிஃபா தலைவர் பதவியை இழக்கும் கியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/infantino-leadership-challenge-1785663943"></link>
            <id>https://news.lankasri.com/article/infantino-leadership-challenge-1785663943</id>
            <summary type="text">ஃபிஃபா (FIFA) கவுன்சில் உறுப்பினர்களிடமிருந்து கியானி இன்ஃபான்டினோ கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்கள் ஒரு சிறப்புப் பொதுக்கூட்டத்தைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிஃபா (FIFA) கவுன்சில் உறுப்பினர்களிடமிருந்து கியானி இன்ஃபான்டினோ கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்கள் ஒரு சிறப்புப் பொதுக்கூட்டத்தைக் (EGM) கூட்ட வற்புறுத்தி வருகின்றனர்.</p><h2>கவுன்சில் உறுப்பினர்கள்</h2><p>
</p><p>இப்படியான ஒரு பொதுக்கூட்டம் முழு அளவிலான தலைமைத்துவப் போட்டியாக மாறக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/973690ee-f8df-4879-b205-e89ab036c50d/26-6a6f12db8cf3a.webp' /></p><p> </p><p>உலகக் கிண்ணம் தொடரின் பங்குகளை விற்பனை செய்வதற்கான இன்ஃபான்டினோவின் (Infantino) முயற்சி தோல்வியடைவதற்கு முன்பே, ஒரு சிறப்புப் பொதுக் கூட்டத்தைக் (EGM) கூட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருந்தன. </p><p>டொனால்ட் ட்ரம்ப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து, உலகக் கிண்ணம் தொடரின் போது ஃபோலரின் பலோகுன் (Folarin Balogun) மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்த அந்த முன்னெப்போதும் இல்லாத முடிவின் மீது சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கவுன்சில் உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். </p><p>ஃபிஃபா கவுன்சில் என்பது உலகளாவிய நிர்வாக அமைப்பின் முக்கிய முடிவெடுக்கும் மன்றமாகும்; இது ஆறு கூட்டமைப்புகளைச் சேர்ந்த 28 பிரதிநிதிகள், எட்டு துணைத் தலைவர்கள் மற்றும் தலைவர் இன்ஃபான்டினோ ஆகியோரைக் கொண்டதாகும்.</p><p></p><p> </p><p>ஃபிஃபா (FIFA) விதிகளின்படி, 37 கவுன்சில் உறுப்பினர்களில் 50 சதவீதத்தினரோ அல்லது 19 உறுப்பினர்களோ முன்வைக்கும் தீர்மானம் ஒரு சிறப்புப் பொதுக் கூட்டத்தை (EGM) கூட்ட வழிவகுக்கும்.
</p><p>புதிய உலகக் கிண்ணம் செயல்பாட்டு நிறுவனத்தின் 20 சதவீதப் பங்குகளை த்ரைவ் கேப்பிட்டல் நிறுவனத்திற்கு விற்க இன்பான்டினோ ரகசியமாக முன்மொழிந்திருந்தார் என்பது வெளிவருவதற்கு முன்பே, கவுன்சில் உறுப்பினர்கள் ஏற்கனவே இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டியிருந்ததாகவே கூறப்படுகிறது. </p><p>த்ரைவ் கேப்பிட்டல் என்பது ஜனாதிபதி ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் தம்பியான ஜோசுவா குஷ்னரால் நிறுவப்பட்ட ஒரு முதலீட்டு நிறுவனமாகும்.</p><p>
Folarin Balogun விவகாரம் குறித்து ஒரு சுதந்திரமான விசாரணைக்கு இன்ஃபான்டினோ ஒப்புதல் அளிக்க மறுத்தால், அவர் பதவி விலக வேண்டும் என்று அதிருப்தியடைந்த கவுன்சில் உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்தனர்.</p><h2>ஆசியாவின் ஆதரவு தேவை</h2><p> </p><p>இதன் விளைவாக, ட்ரம்பின் அழுத்தத்திற்குப் பணிந்து ஃபிஃபா அரசியல் நடுநிலைமை விதிகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, நார்வே கால்பந்து சங்கம் சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தது. </p><p>இந்த நிலையில், 37 கவுன்சில் உறுப்பினர்களில் 14 பேர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இன்ஃபான்டினோ மீது உண்மையான அழுத்தத்தை ஏற்படுத்த ஆசியாவின் ஆதரவு தேவைப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5af80ed6-8558-425e-b954-668f6b85cc29/26-6a6f12dc5a1a1.webp' /></p><p> </p><p>இதனிடையே, இன்ஃபான்டினோ தனது மறுதேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்கும் 200-க்கும் மேற்பட்ட ஆதரவுக் கடிதங்களை ஏற்கனவே பெற்றுள்ளார்; இருப்பினும், அந்தக் கடிதங்கள் திரும்பப் பெறப்படலாம் என்பதோடு, போட்டியிட விரும்பும் மற்ற வேட்பாளர்கள் தங்கள் விருப்பத்தை அறிவிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 18 வரை உள்ளது. </p><p>மேலும், இன்ஃபான்டினோவைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான மற்றொரு சாத்தியமான வழி, தலைவர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தூண்டுவதற்காக ஒரு அவசர ஃபிஃபா கூட்டத்தைக் கூட்டுவதாகும்; 43 சங்கங்கள் கடிதங்களைச் சமர்ப்பித்தால் இந்த வாக்கெடுப்பு கூட்டப்படலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T22:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-bus-fares-changing-1785644467"></link>
            <id>https://news.lankasri.com/article/england-bus-fares-changing-1785644467</id>
            <summary type="text">இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இலவசப் பயணம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.</p><h2>இலவசப் பயணம்</h2><p>
</p><p>பொதுவாக, ஆண்டு முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும், அரசு ஓய்வூதியம் பெறும் வயதை (66) எட்டிய பெரியவர்களும் உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/febd4d21-3d7c-480f-b126-10f81dab84f0/26-6a6ec8f995142.webp' /></p><p> </p><p>அதேவேளையில், லண்டனுக்கு வெளியே 5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் 2 பவுண்டுகள் அல்லது அதற்கும் குறைவான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். </p><p>ஆனால், ஆகஸ்ட் 1 முதல் இம்மாத இறுதி வரை, இத்திட்டத்தில் பங்கேற்கும் பேருந்துகளில் 15 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் வரம்பற்ற இலவசப் பயணத்தை மேற்கொள்ள முடியும். </p><p>இங்கிலாந்தில் உள்ள குடும்பங்களை வெகுவாகப் பாதித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் 100 மில்லியன் பவுண்டு மதிப்பிலான மிகப்பெரிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாகவே, மே மாதத்தில் அரசாங்கத்தால் இந்த இலவசப் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>இதில் மிகச் சிறந்த விடயம் என்னவென்றால், இதைப் பயன்படுத்திக்கொள்ள எந்தவிதப் பதிவும் தேவையில்லை; 15 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் உடனடியாக இதில் ஈடுபடத் தொடங்கலாம். </p><p>இந்தத் திட்டமானது, மேற்கு இங்கிலாந்து முழுவதும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தைப் போன்றது. 'கிட்ஸ் கோ ஃப்ரீ' (Kids Go Free) என்ற இந்த முன்முயற்சியானது, கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் உள்ளிட்ட பாடசாலை விடுமுறை நாட்களில், </p><p>பாத் &amp; நார்த் ஈஸ்ட் சோமர்செட், பிரிஸ்டல், நார்த் சோமர்செட் மற்றும் சவுத் க்ளௌசெஸ்டர் ஆகிய பகுதிகளில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16eb8077-c759-4ed3-85da-7131e2d1811c/26-6a6ec8f7ed013.webp' /></p><p> </p><p>மேற்கு இங்கிலாந்தின் லேபர் கட்சி மேயரான ஹெலன் காட்வின் (Helen Godwin) இது தொடர்பில் தெரிவிக்கையில், Kids Go Free திட்டம் இதுவரை 1.4 மில்லியன் இலவசப் பயணங்களை வழங்கியுள்ளது என்றார்.</p><h2>2 பவுண்டுகளாக மாற்றம்</h2><p> </p><p>இந்த நிலையில், ஒரு பயணத்திற்கு 1.50 பவுண்டுகள் கட்டணம் செலுத்தி வாரந்தோறும் சென்று வரும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, இந்த இலவச பேருந்துத் திட்டத்தின் மூலம் தோராயமாக 27 பவுண்டுகள் சேமிக்க முடியும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. </p><p>ஒரு குழந்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம் என்பதுடன், எந்த வரம்பும் இருக்காது என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>நாடு முழுவதும் பயணக் கட்டணங்கள் மாறுபட்டாலும், இங்கிலாந்தில் சராசரி பேருந்துக் கட்டணம் பொதுவாக 3 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இருப்பினும், 2027 ஜனவரியில் இது 2 பவுண்டுகளாக மாற்றப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/354f68e6-1117-4168-9297-5a798ccd02df/26-6a6ec8f8e2fca.webp' /></p><p> </p><p>லண்டனுக்கு வெளியே, பெரும்பாலான தனிப் பயணச் சீட்டுகளின் விலை 1.50 பவுண்டுகள் முதல் 2 பவுண்டுகள் வரை இருக்கும். ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசப் பேருந்துப் பயணம் என்பது, </p><p>பெற்றோர்கள் வெளியூர் பயணங்களைத் திட்டமிடவும், அன்புக்குரியவர்களைச் சந்திக்கவும், விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் வழிவகுக்கும் என்று கூறியுள்ள போக்குவரத்துச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர், </p><p>குடும்பங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் குறைப்பதற்கு இந்த முயற்சி இன்றியமையாதது எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T22:01:01+00:00</updated>
        </entry>
    </feed>
