<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-03T13:43:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய விமானப்படை தளபதியை தலையில் சுட்ட மர்ம நபர்: உயிருக்கு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-general-varpakhovich-being-shot-in-head-1788442587"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-general-varpakhovich-being-shot-in-head-1788442587</id>
            <summary type="text">Russian major general varpakhovich being shot in head: மர்ம நபர் ஒருவர் தலையில் சுட்டதில் ரஷ்ய விமானப்படை தளபதி உயிருக்கு போராடி வருகிறார்.

ரஷ்ய அண...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian major general varpakhovich being shot in head: மர்ம நபர் ஒருவர் தலையில் சுட்டதில் ரஷ்ய விமானப்படை தளபதி உயிருக்கு போராடி வருகிறார்.
</p><p>
ரஷ்ய அணு ஆயுத குண்டுவீச்சு விமானப்படை தளபதி வார்பகோவிச், மர்ம நபரால் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளானதால் உயிருக்கு போராடி வருகிறார்.</p><h2>கனரக குண்டுவீச்சு விமானப்படை தளபதி</h2><p>

ரஷ்யாவின் 22வது கனரக குண்டுவீச்சு விமானப்படை தளபதியாக இருப்பவர் மேஜர் ஜெனரல் நிகோலாய் வார்பகோவிச் (56).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba53e415-aac7-4127-b062-c5d723aad945/26-6a9977de05a54.webp' />&nbsp;</p><p></p><p>

உக்ரைனிய குழந்தைகள் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக இவர் கருதப்படுகிறார்.</p><p> 

இந்த நிலையில், நிகோலாயின் வீட்டிற்கு வந்த 
ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர், தான் கொண்டுவந்த துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார்.</p><p>

இதில் தலையில் குண்டுபட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகோலாய் உயிருக்கு போராடி வருவதாகக் கூறப்படுகிறது.</p><p>

எங்கெல்ஸ் மாவட்டத்தின் புரோபுஷ்தேனியே கிராமத்தில், அவர் முகத்திலும் வயிற்றிலும் துப்பாக்கியால் இரண்டு முறை சுடப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T13:35:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் சுரங்கப்பாதையில் குத்துச்சண்டை: இணையத்தை கலக்கும் இரண்டு எலிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/oxford-circus-mice-boxing-video-goes-viral-1788440464"></link>
            <id>https://news.lankasri.com/article/oxford-circus-mice-boxing-video-goes-viral-1788440464</id>
            <summary type="text">Oxford Circus Mice Boxing Video Goes Viral: லண்டன் சுரங்கப்பாதையில் இரண்டு எலிகள் குத்துச் சண்டை போடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.வைரல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Oxford Circus Mice Boxing Video Goes Viral: லண்டன் சுரங்கப்பாதையில் இரண்டு எலிகள் குத்துச் சண்டை போடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><h2>வைரல் வீடியோ</h2><p>லண்டன் சுரங்கப்பாதை நிலையத்தில் பயணம் செய்தவர்கள் தங்களுடைய அவசர பயணத்திற்கு இடையே சுவாரஸ்யமான குத்துச்சண்டை நிகழ்ச்சியை கண்டு ரசித்துள்ளனர்.</p><p> லண்டனின் ஆக்ஸ்போர்ட் சர்க்கஸ் (Oxford Circus) நிலையத்தின் சுரங்கப்பாதையில் இரண்டு எலிகள் தங்கள் பின்னங்கால்களில் நின்று கொண்டு முன் கைகளால் குத்துச் சண்டையில் ஈடுபட்ட காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38c875b0-06b0-4dc2-b0e7-df5467b9cc7b/26-6a996f91db05f.webp' /></p><p> சமூக வலைதளத்தில், லண்டன் சுரங்கப்பாதையில் சண்டை… ஆனால் “என்ன ஒரு அழகு” என்ற தலைப்புடன் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.</p><p>வெறும் 4 நாட்களில் இந்த வீடியோ கிட்டத்தட்ட 120000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.</p><p></p><p>ஆனால் இந்த குத்துச்சண்டையில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்பது தெரியவரவில்லை.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A pair of mice get into a squabble outside a subway station in London 👀 <a href="https://t.co/7T6rwohqhH">pic.twitter.com/7T6rwohqhH</a></p>&mdash; TheBlaze (@theblaze) <a href="https://x.com/theblaze/status/2095225927475085493?ref_src=twsrc%5Etfw">September 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இந்த வீடியோ காட்சி இணையத்தில் பரவியதை அடுத்து இணையத்தில் அமெரிக்க சுரங்கப்பாதை எலிகள் மற்றும் பிரித்தானிய சுரங்கப்பாதை எலிகள் இடையே ஒப்பீடு விவாதத்தில் நெட்டிசன்கள் இறங்கியது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T13:01:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஸ்மனன் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vvs-laxman-returns-as-india-coach-for-asian-games-1788440174"></link>
            <id>https://news.lankasri.com/article/vvs-laxman-returns-as-india-coach-for-asian-games-1788440174</id>
            <summary type="text">vvs laxman appointed as coach for asian games indian squad: ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>vvs laxman appointed as coach for asian games indian squad: ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><h3>
இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஸ்மனன்</h3><p>

ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரும் வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கி அக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில், கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 24 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38c9f607-aaa6-4ab8-80b2-6d7d0be8d602/26-6a996e7076a93.webp' /></p><p>
இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியின் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>

இதே போல், இந்தியாவிற்கு வருகை தர உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி செப்டம்பர் 27 ஆம் திகதி தொடங்கி அக்டோபர் 17 ஆம் திகதி வரை 3 ODI மற்றும் 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.&nbsp;</p><p>

இந்த தொடருக்கு இந்திய அணியை வழிநடத்த முழுநேர தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் இந்தியாவில் இருப்பார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f346924-c24b-48fe-a8af-3335aeb21e1e/26-6a996e712a42c.webp' /></p><p>

முன்னதாக 2023 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் செயல்பட்டார். 

இதில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி தங்க பதக்கம் வென்றது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T13:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரப்சிம்ரன் சிங் சிக்ஸர் மழை! 56 பந்தில் 110 ஓட்டங்கள் விளாசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prabhsimran-singh-century-against-batinda-royals-1788440049"></link>
            <id>https://news.lankasri.com/article/prabhsimran-singh-century-against-batinda-royals-1788440049</id>
            <summary type="text">Prabhsimran Singh century against Batinda Royals: ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டியில் ஜலந்தர் வாரியர்ஸ் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prabhsimran Singh century against Batinda Royals: ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டியில் ஜலந்தர் வாரியர்ஸ் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
</p><p>
பதிந்தா ராயல்ஸ் அணிக்கு எதிரான ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டியில், ஜலந்தர் வாரியர்ஸ் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>பிரப்சிம்ரன் சிங்&nbsp;</h2><p>
ஜலந்தர் வாரியர்ஸ் மற்றும் பதிந்தா ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டி மொஹாலியில் நடந்தது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Total TABAHI 🔥🔥<br><br>Catch all the Sher-E-Punjab T20 action LIVE on FanCode 📲<a href="https://x.com/hashtag/SherEPunjabT20?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SherEPunjabT20</a> <a href="https://t.co/PP4TMJeyRo">pic.twitter.com/PP4TMJeyRo</a></p>&mdash; FanCode (@FanCode) <a href="https://x.com/FanCode/status/2095490799865893093?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

முதலில் களமிறங்கிய ஜலந்தர் வாரியர்ஸ் அணியில் விஸ்வநாத் சிங் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p></p><p>

அடுத்து வந்த ஹர்ஜாஸ் (8), உமேஷ் (8) ஆகியோர் சொதப்ப, அணித்தலைவர் பிரப்சிம்ரன் சிங் (Prabhsimran Singh) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.</p><p>

அவருக்கு உறுதுணையாக அதிரடி காட்டிய ஆர்யன் யாதவ் 19 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் விளாசினார்.
</p><h2>
த்ரில் வெற்றி </h2><p>பிரப்சிம்ரன் சிங் 56 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 110 ஓட்டங்கள் விளாச, ஜலந்தர் வாரியர்ஸ் அணி 205 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
</p><p>
பின்னர் ஆடிய பதிந்தா ராயல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் எடுக்க, 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜலந்தர் வாரியர்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.
</p><p>
அதிகபட்சமாக உதய் சஹாரன் 43 பந்துகளில் 6 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்களும், ஹர்நூர் சிங் 29 பந்துகளில் 44 ஓட்டங்களும் விளாசினர். ரன்தீப் சிங் மற்றும் எமன்ஜோத் சிங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dac4452f-3414-4b50-8e8c-2b790eb36863/26-6a996df3d5f23.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T12:51:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளத்தில் மாயமான குடும்பம்: தொலைபேசியின் அருகிலேயே காத்திருக்கும் சகோதரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brother-of-uk-person-missing-nepal-wait-by-phone-1788438192"></link>
            <id>https://news.lankasri.com/article/brother-of-uk-person-missing-nepal-wait-by-phone-1788438192</id>
            <summary type="text">Brother of British person missing in Nepal waiting by phone for updates: நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நபர் ஒருவரின் சகோதரர், அவரைக் குறித்து ஏதாவது தக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Brother of British person missing in Nepal waiting by phone for updates: நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நபர் ஒருவரின் சகோதரர், அவரைக் குறித்து ஏதாவது தகவல் கிடைக்காதா என தொலைபேசியின் அருகிலேயே காத்திருக்கிறார்.
</p><p>

நேபாளப் பெருவெள்ளம் 1,240 உயிர்களை பலிகொண்டுவிட்ட நிலையில், இன்னமும் ஆயிரக்கணக்கானவர்களைக் காணவில்லை.
</p><p>
அப்படி என்ன ஆனார்கள் என்றே தெரியாத ஆயிரக்கணக்கானவர்களில் பிரித்தானியர்களும் அடங்குவர்.
</p><h3>
தொலைபேசியின் அருகிலேயே காத்திருக்கும் சகோதரர்
</h3><p>
கடந்த வாரம், சந்தோஷ் சாஹு, அவரது மனைவியான சுரபி பதி, தம்பதியரின் பிள்ளைகளான ஸ்பாண்டன் மற்றும் சாய்னா குமாரி ஆகியோர் பிரித்தானியாவிலிருந்து கைலாச மலைக்கு ஒரு குழுவாக புனித யாத்திரை சென்றிருந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2a45d8e-901c-4694-aa16-45755c002bae/26-6a9966b18839a.webp' /></p><p>

அவர்கள் நேபாளத்திலிருக்கும்போதுதான் அந்த பயங்கர பெருவெள்ளம் ஆயிரக்கணக்கானோரை வாரிச் சென்றது.
</p><p>
பெருவெள்ளத்துக்குப் பின், சந்தோஷ் குடும்பத்துடனான வாட்ஸ் ஆப் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கிறார் அவரது சகோதரரான முரளி.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், பிரித்தானியக் குடிமகனான சந்தோஷின் சகோதரர் முரளி, தன் சகோதரர் குடும்பம் குறித்து ஏதேனும் தகவல் கிடைக்காதா என தான் தொலைபேசியின் அருகிலேயே காத்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.
</p><p>
சகோதரரின் குரலைக் கேட்கவேண்டும், அவர் என் பெயரைக் கூறி என்னை அழைப்பதைக் கேட்கவேண்டும் எனக்கூறும் முரளி, அண்ணா நான் உங்களை நேசிக்கிறேன் என்று கூறும்போது, அவரது குரல் தழுதழுக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49f8c72d-e8fb-44f4-83fb-6a99ae682474/26-6a9966b23a7df.webp' /></p><p>
என் சகோதரர் குடும்பத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிறது. இதுவரை எந்த தகவலும் இல்லை, தூதரகம் உதவியாக உள்ளதை மறுப்பதற்கில்லை, என்றாலும், உதவிகரமான எந்த தகவலும் இல்லை என்கிறார் முரளி.
</p><p>
இதற்கிடையில், தங்கள் உறவினர்கள் நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்கள் என்னும் செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சியைவிட, அவர்கள் என்ன ஆனார்கள், உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாமல் தவிக்கும் விடயம்தான் கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என மாயமான பலருடைய உறவினர்களும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T12:45:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளத்தைத் தொடர்ந்து திபெத்தில் நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/earthquake-hits-tibet-after-nepal-flash-floods-1788436887"></link>
            <id>https://news.lankasri.com/article/earthquake-hits-tibet-after-nepal-flash-floods-1788436887</id>
            <summary type="text">Earthquake hits Tibet days after devastating Nepal flash floods: நேபாள பெருவெள்ளம் ஏற்படுத்திய பயங்கரத்தின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில், திபெத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Earthquake hits Tibet days after devastating Nepal flash floods: நேபாள பெருவெள்ளம் ஏற்படுத்திய பயங்கரத்தின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில், திபெத்தை நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
</p><p>

நேபாள பெருவெள்ளம் கொடுத்த அதிர்ச்சியே இன்னும் தீரவில்லை. இந்நிலையில், திபெத்தை நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
</p><h3>
திபெத்தில் நிலநடுக்கம்</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88a44bd8-927d-4a96-a4f3-05cbfa55fbe2/26-6a99619939336.webp' /></p><p>இன்று மதியம், அதாவது, செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி, வியாழக்கிழமை மதியம் 1.46 மணியளவில், ரிக்டர் அளவுகோலில் 5.0ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று திபெத்தைத் தாக்கியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">EQ of M: 5.0, On: 03/09/2026 13:46:38 IST, Lat: 31.479 N, Long: 80.370 E, Depth: 14 Km, Location: Tibet. <br>For more information Download the BhooKamp App <a href="https://t.co/5gCOtjdtw0">https://t.co/5gCOtjdtw0</a> <a href="https://x.com/DrJitendraSingh?ref_src=twsrc%5Etfw">@DrJitendraSingh</a> <a href="https://x.com/OfficeOfDrJS?ref_src=twsrc%5Etfw">@OfficeOfDrJS</a> <a href="https://x.com/tummalasrini?ref_src=twsrc%5Etfw">@tummalasrini</a> <a href="https://x.com/GSuresh_NCS?ref_src=twsrc%5Etfw">@GSuresh_NCS</a> <a href="https://x.com/ndmaindia?ref_src=twsrc%5Etfw">@ndmaindia</a> <a href="https://t.co/zwrE8sNscC">pic.twitter.com/zwrE8sNscC</a></p>&mdash; National Center for Seismology (@NCS_Earthquake) <a href="https://x.com/NCS_Earthquake/status/2095429708985024978?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்நிலையில், இதுவரை மக்களுக்கோ, கட்டிடங்களுக்கோ எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p>

ஏற்கனவே நேபாள திபெத் எல்லையில் பெருவெள்ளத்தால் 1,268 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,200 பேரின் நிலைமை இன்னமும் தெரியாமல் உள்ளது.</p><p>

இந்நிலையில், திபெத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ள செய்தி கூடுதல் பதற்றத்தை உருவாக்குவதாக அமைந்துள்ளதை மறுப்பதற்கில்லை!&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T12:01:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் திருமணம்..கனடாவில் தமிழக மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/29-year-old-tamil-guy-died-who-studying-canada-1788436664"></link>
            <id>https://news.lankasri.com/article/29-year-old-tamil-guy-died-who-studying-canada-1788436664</id>
            <summary type="text">Tamilnadu guy died in canada: இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கனடாவில் இருந்து புறப்பட இருந்தபோது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Tamilnadu guy died in canada: இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கனடாவில் இருந்து புறப்பட இருந்தபோது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
தமிழ்நாட்டின் ஊட்டியைச் சேர்ந்த அரவிந்தன் என்ற மாணவர், கனடாவில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட இருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. </p><h2>கனடாவில் உயர் கல்வி 
</h2><p>
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் அரவிந்தன். இவர் கனடாவில் உயர் கல்வி பயின்று வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b544bc-1044-4267-88d7-3c4001288cb5/26-6a9966cb236c7.webp' /></p><p></p><p> 

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்றைய தினம் அரவிந்தன் இந்தியாவிற்கு புறப்பட இருந்தபோது உயிரிழந்துள்ளார்.
</p><p>
அரவிந்தனின் பெற்றோரை தொடர்புகொண்ட கனேடிய பொலிஸார், அவர் 18வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.</p><p> 

இந்த நிலையில், அரவிந்தனின் பெற்றோர் தங்கள் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T11:55:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பள்ளி மாணவர்கள் AI பயன்படுத்த நியூயார்க்கில் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-york-mayor-ban-school-students-using-ai-1788436347"></link>
            <id>https://news.lankasri.com/article/new-york-mayor-ban-school-students-using-ai-1788436347</id>
            <summary type="text">new york mayor mamdani ban school students using ai: உலகம் முழுவதும் AI கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், நியூயார்க் பள்ளிகளில் 8 ஆம் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>new york mayor mamdani ban school students using ai: உலகம் முழுவதும் AI கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், நியூயார்க் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை AI பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
அதிகரித்து வரும் AI பயன்பாடு</h3><p> 

உலகம் முழுவதும் AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலை வழங்குவதோடு, மாணவர்களுக்கு வீட்டு பாடத்தில் உதவுவது தொடங்கி, ஐடி ஊழியர்களுக்கு கோடிங் எழுதுவது வரை பல்வேறு பணிகளை AI செய்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce6217c1-5968-4292-9250-490547b9da1c/26-6a995f7ce78fb.webp' /></p><p>

தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு பள்ளிகளில் AI பாடம் கற்றுத் தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.</p><h3> 

நியூயார்க் பள்ளிகளில் AI பயன்பாட்டிற்கு தடை
</h3><p>
அதேவேளையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு AI பயன்பாட்டிற்கு தடை விதிப்பதாக நியூயார்க் நகர மேயர் மம்தானி அறிவித்துள்ளார்.</p><p> 

மொத்த மாணவர் சேர்க்கையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கான, சுமார் 6,00,000 அரசுப் பள்ளி மாணவர்களை இது பாதிக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/812e7bdb-b8d8-494f-aa44-111c0486cdf4/26-6a995f7da24d4.webp' /></p><p>

ஆசிரியர்கள், பாடத் திட்டமிடல் மற்றும் பிற செயல்பாட்டுப் பணிகளுக்கு ​​செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். </p><p>

இந்த தடை ஒரு ஆண்டுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வருட காலத்தில் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.</p><p>

இதே போல் மாணவர்களின் திரைநேரத்திற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 30 நிமிடங்களும், 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களும் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.&nbsp; </p><p></p><p> 

இதில் மாற்றுத்திறனாளி மற்றும் ஆங்கிலம் கற்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. </p><p>

AI தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தானி, “ஆரம்பக் கல்வியில் செயற்கை நுண்ணறிவு தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, அது அவசியமானது என்றும் தொழில்நுட்பத் துறை நம்மை நம்ப வைக்க விரும்புகிறது. நாங்கள் அதை அப்படிப் பார்க்கவில்லை. </p><p>

குழந்தைகள் கற்று வளர்வதற்கு ஆசிரியர்களும் மனிதத் தொடர்பும் தேவை. அவர்கள் சக மாணவர்களுடன் சேர்ந்து திறன்களை வளர்த்துக் கொள்ளவும், கல்வியாளர்களுடன் உறவுகளைக் கட்டியெழுப்பவும், கடினமான பிரச்சனைகளைத் தாங்களாகவே சமாளிக்கவும் வேண்டும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T11:54:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலஸ்தீனியர்களை வெளியேற்ற ட்ரம்பின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/expel-palestinians-from-gaza-1788434603"></link>
            <id>https://news.lankasri.com/article/expel-palestinians-from-gaza-1788434603</id>
            <summary type="text">Israel plan to expel Palestinians from Gaza: காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை மொத்தமாக வெளியேற்றத் திட்டமிடும் இஸ்ரேல்.
காஸா பகுதியிலிருந்து பாலஸ்தீன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Israel plan to expel Palestinians from Gaza: காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை மொத்தமாக வெளியேற்றத் திட்டமிடும் இஸ்ரேல்.
</p><p>காஸா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் பெற, டொனால்ட் ட்ரம்பின் ஆதரவை இஸ்ரேல் நாடுவதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f9cf390-e5f4-4962-a77f-5ce854fb8b44/26-6a9958ad3136f.webp' /></p><p>
</p><p>இஸ்ரேலின் இத்திட்டம் ஒரு சாத்தியமான போர்க்குற்றமாகக் கருதப்பட்டு பரவலாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய செய்தித் தளமான 'Ynet' மற்றும் 'Yedioth Ahronoth' நாளிதழ் ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், இந்த இடம்பெயர்வு இல்லாமல் காஸா விவகாரத்திற்கு இறுதியில் உண்மையான தீர்வு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். </p><p>மேலும், கடல் வழியாகவோ, வான் வழியாகவோ அல்லது சாத்தியமான அனைத்து வழிகள் மூலமாகவோ அவர்களை வெளியேற்ற இஸ்ரேலிய அரசாங்கம் திட்டமிட்டுத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>காஸா முனையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது குறித்தும், அப்போது அப்பகுதியிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்தும் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ட்ரம்ப் விவாதித்தார்; ஆனால், பின்னர் அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.</p><p></p><p> </p><p>ஆனால், தற்போது அதே திட்டத்துடன் இஸ்ரேல் வாய்ப்புக்காக காத்திருக்கிறது. கடந்த ஆண்டு வெள்ளை மாளிகை வகுத்த 20 அம்ச அமைதித் திட்டம், பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கு அழைப்பு விடுக்கவில்லை; அத்தகைய நடவடிக்கை பரவலாக 'இனச் சுத்திகரிப்பு' என்று கருதப்பட்டிருக்கும்.</p><p> இருப்பினும், காஸாவிலிருந்து பாலஸ்தீனர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு ஆதரவாகப் பிராந்தியத்தின் பொதுக்கருத்தை மாற்றியமைக்க அமெரிக்காவின் ஆதரவு உதவக்கூடும் என்று காட்ஸ் புதன்கிழமையன்று கூறினார். </p><p>பாலஸ்தீன அகதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு அண்டை நாடுகளைச் சம்மதிக்க வைப்பதற்கு ட்ரம்ப்பின் ஒப்புதல் மிக முக்கியம் என்றும் அவர் கூறினார்.</p><p> மட்டுமின்றி, காஸா மக்களை வெளியேற்றும் திட்டத்தை ட்ரம்ப் கைவிடவில்லை என்றும், தற்போது மட்டுமல்ல எல்லா நேரங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது; இறுதியில், அனைவரின் நலனுக்கும் உகந்த வேறொரு தீர்வு எதுவும் இல்லை என்றே நான் கருதுகிறேன் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72e751e0-32a4-412c-90e5-dbba11612b3d/26-6a9958added57.webp' /></p><p>
</p><p>இஸ்ரேலில் தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் சூழலில் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன; இத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது வலதுசாரி கூட்டணியும், பாலஸ்தீனர்களுக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வாக்காளர்களை ஈர்க்க முயன்று வருகின்றனர். </p><p>காஸா முனையில் உள்ள மஞ்சள் கோட்டிற்கு அருகிலுள்ள இஸ்ரேலிய ராணுவ முகாம் ஒன்றை நெதன்யாகு புதன்கிழமை அன்று பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், இப்பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது, மேலும் நாங்கள் இந்த எல்லைக்கோட்டிலேயே தொடர்வோம் என்றார். </p><p>அத்துடன் ஹமாஸ் படைகளை நிராயுதபாணியாக்குவது மற்றும் காஸாவை இராணுவமயமற்றதாக்குவது ஆகிய எங்கள் இலக்கை அடைய நாங்கள் அனைத்தையும் செய்து வருகிறோம். காஸா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T11:21:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுக்கடலில் தத்தளித்த புலம்பெயர்ந்தோர் படகு: 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gambian-migrant-boat-adrift-80-dead-1788433467"></link>
            <id>https://news.lankasri.com/article/gambian-migrant-boat-adrift-80-dead-1788433467</id>
            <summary type="text">Gambian Migrant Boat Adrift 80 dead: கேனரி தீவுகளை நோக்கி சென்ற கப்பல் நடுக்கடலில் தத்தளித்த நிலையில் அதிலிருந்த 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Gambian Migrant Boat Adrift 80 dead: கேனரி தீவுகளை நோக்கி சென்ற கப்பல் நடுக்கடலில் தத்தளித்த நிலையில் அதிலிருந்த 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.</p><h2> 80 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு</h2><p>காம்பியாவில்(Gambia) இருந்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு கேனரி தீவுகளை நோக்கி புறப்பட்ட படகு நடுவழியில் விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 80 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.</p><p> கடல்சார் மீட்பு படையினர் ரோந்து விமானம் மூலம் கிரான் கேனரி தீவிற்கு தெற்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் மரத்தினால் ஆன படகு ஒன்று நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44359c73-159b-4e29-a103-ec16684d6223/26-6a99543c97cf3.webp' /></p><p> இதையடுத்து Guardamar Urania என்ற மீட்புக் கப்பல் வியாழக்கிழமை அப்பகுதியை சென்றடைந்த போது, அந்த படகில் 45 உயிர் பிழைத்தவர்களும், 5 உடல்களும் மட்டுமே இருந்தன.</p><p></p><p>கடல் கொந்தளிப்பு மற்றும் மீட்பு படையினருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததை அடுத்து படகில் இருந்த எஞ்சிய சடலங்களை மீட்கும் பணி தடைபட்டுள்ளது.</p><p> செப்டம்பர் 7ம் திகதி காம்பியாவில் இருந்து புறப்பட்ட கப்பலுடன் இந்த கப்பல் ஒத்து போவதாக ஸ்பெயின் நாட்டின் சிவில் கார்டு மற்றும் கமினாண்டோ ஃபிரோன்டெராஸ் ஆகிய தொண்டு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8293f03a-76c6-40fd-94c2-c752062bfea9/26-6a99543d4a0a3.webp' /></p><p> அத்துடன் இந்த படகு புறப்படும் போது கிட்டத்தட்ட 4 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 128 பேருடன் புறப்பட்டுள்ளது.</p><p> முதற்கட்ட தகவலின்படி, இதில் உயிர் பிழைத்தவர்கள் அனைவரும் காம்பியா மற்றும் மாலி நாட்டை சேர்ந்த வயது வந்த ஆண்கள் என தெரியவந்துள்ளது.&nbsp; இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T11:04:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை புலம்பெயர்ந்தோர் அடைய.,வேறொன்றை கையிலெடுத்த ஆட்கடத்தல்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/migrant-smugglers-using-mega-dinghies-to-reach-uk-1788432451"></link>
            <id>https://news.lankasri.com/article/migrant-smugglers-using-mega-dinghies-to-reach-uk-1788432451</id>
            <summary type="text">Migrant smugglers using mega dinghies to reach uk: ஆங்கிலக் கால்வாயைக் கடந்து புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்ல, மெகா-டிங்கி படகுகளை, ஆட்கடத்தல்காரர்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Migrant smugglers using mega dinghies to reach uk: ஆங்கிலக் கால்வாயைக் கடந்து புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்ல, மெகா-டிங்கி படகுகளை, ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். </p><p>

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை அடைய, ஆட்கடத்தல்காரர்கள் மெகா-டிங்கி படகுகளை பயன்படுத்துகின்றனர் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.&nbsp; </p><h2>ஒரே இரவில் 230 புலம்பெயர்ந்தோருடன்</h2><p>
 
கடந்த மாதம், 230 புலம்பெயர்ந்தோருடன் நிரம்பிய, ஒரு பிரம்மாண்டமான காற்றடைக்கப்பட்ட படகு ஒரே இரவில் பிரித்தானியாவிற்கு வந்தடைந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d29284e2-0ccd-4bf4-a398-a131bf28f608/26-6a99516299952.webp' />&nbsp;</p><p></p><p>
ஒரே சிறிய படகில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்கள்தொகை இதுதான். </p><p>இது ஒரு போயிங் 737 விமானத்தின் வழக்கமான கொள்ளளவை விட அதிகம் ஆகும்.

இதற்கு முன்பு 165 பேர் கொண்ட படகு 17 நாட்களுக்கு முன்பு வந்ததே அதிகபட்சமாக இருந்தது. </p><p>

 
இந்த நிலையில் மாபெரும் படகுகளின் திடீர் வருகைக்குப் பின்னால் உள்ள மற்றொரு காரணத்தை விசாரணை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

அதாவது, கடத்தல்காரர்களிடம் சிறிய படகுகள் தீர்ந்து வருவதால், அவர்கள் மெகா-டிங்கி படகுகளை தொடங்கியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0c01d5d-f55f-489b-8f08-fcf8a3a4aff6/26-6a9951635a1ca.webp' /></p><h2>புதிய கவலைகள்</h2><p>குறைவான படகுகளே கிடைப்பதால், முன்பு தனித்தனியாக செயல்பட்டு வந்த போட்டி குற்றக் குழுக்கள், இப்போது ஒன்றாக செயல்பட நிர்பந்திக்கப்படுகின்றன. </p><p>

இதன் விளைவாக, பெரிய படகுகளில் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை அவர்கள் திணிக்கின்றனர்.

இத்தகைய பெரிய படகுகள் மேலும் பல தயாராகி வருவதாகக் குற்றக்கும்பல் உறுப்பினர்கள் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.</p><p> 

கடத்தல்காரர்களின் இந்த முன்னெடுப்பு, ஆங்கிலக் கால்வாயின் இருபுறமும் உள்ள அவசரக்கால மீட்புக் குழுக்களிடையே மனித உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்த புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
</p><p>
இதற்கிடையில், பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதற்கு ஆட்கடத்தல்காரர்கள் ஒரு நபருக்கு சுமார் 2,000 பவுண்டுகள் வரை கட்டணம் வசூலிப்பதாகக் கருதப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cb36768-f3a4-4ee4-8307-84963e994e45/26-6a99516410b56.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59e9a89e-1419-47a4-a932-afa6fb83b3f5/26-6a995164bce4d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T10:49:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிக்க போட்டியிடும் நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/polanski-bid-to-replace-starmer-in-parliment-1788432126"></link>
            <id>https://news.lankasri.com/article/polanski-bid-to-replace-starmer-in-parliment-1788432126</id>
            <summary type="text">Green Party leader Zack Polanski launches bid to replace Keir Starmer in parliament: கிரீன் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி, கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Green Party leader Zack Polanski launches bid to replace Keir Starmer in parliament: கிரீன் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி, கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சிகளைத் துவக்கியுள்ளார்.</p><p>


பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தது அனைவரும் அறிந்ததே.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a8bd4d4-cdcd-4ba5-9401-a5bd82e8b1e0/26-6a994f00b244c.webp' /></p><p>

அதுமட்டுமின்றி, அவர் சமீபத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
</p><h3>
கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிக்க...
</h3><p>
கெய்ர் ஸ்டார்மர், இங்கிலாந்திலுள்ள Holborn and St Pancras தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
</p><p>
அவர் தனது நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதி காலியாக உள்ளது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், அந்தத் தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் கிரீன் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2d43d45-51d7-4877-9123-4e7b814ffb2e/26-6a994f000b16a.webp' /></p><p>

நான் இந்த பகுதியில் நீண்ட காலமாக வாழ்ந்துவருகிறேன் என்று கூறியுள்ள போலன்ஸ்கி, எனக்கு இப்பகுதியைக் குறித்து நன்றாகத் தெரியும் என்றும், அது எனக்கு பிடித்த இடம் என்றும், நாடாளுமன்றத்தில் இந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த ஆவலாக உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
</p><p>
விடயம் என்னவென்றால், கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, Holborn and St Pancras தொகுதியில் இதுவரை இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T10:44:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்ஸில்லா அளவில் வளர்கிறது... எல் நினோ வேகமாக நெருங்குவதாக ஐநா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/un-warns-el-ni-o-approaching-1788431579"></link>
            <id>https://news.lankasri.com/article/un-warns-el-ni-o-approaching-1788431579</id>
            <summary type="text">UN warns of record El Niño approaching: எல் நினோ நெருங்கி வருவதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு நம் கண்முன்னே மிகப...</summary>
            <content type="html"><![CDATA[<p>UN warns of record El Niño approaching: எல் நினோ நெருங்கி வருவதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு நம் கண்முன்னே மிகப்பெரிய அளவில் வலுவடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d28f29d8-839b-416f-855a-ca306b18dbf4/26-6a994cdd82a82.webp' /></p><p>
</p><p>சமீபத்திய கணிப்புகளின் அடிப்படையில், எல் நினோ வெப்பநிலை தொடர்பான சாதனைகளை முறியடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. </p><p>குறைந்தது 1,000 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய 'எல் நினோ' நிகழ்வாக இது இருக்கக்கூடும்; புவி வெப்பமடைதலால் வெப்பநிலை ஏற்கனவே வேகமாக அதிகரித்து வரும் சூழலில், இது வளிமண்டலத்தில் கூடுதல் வெப்பத்தைச் சேர்க்கும்.</p><p></p><p> </p><p>இந்தக் காரணிகளின் ஒருங்கிணைப்பால், 2027-ஆம் ஆண்டு முந்தைய சாதனையை முறியடித்து, இதுவரை பதிவான ஆண்டுகளிலேயே மிக வெப்பமான ஆண்டாக அமையவுள்ளது. </p><p>எல் நினோ நிகழ்வால் ஏற்படும் வெப்ப அதிகரிப்பு ஏற்கனவே தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது; இந்தோனேசியாவில் காட்டுத்தீ தீவிரமடைவது முதல் இந்தியாவில் மிக முக்கியமான பருவமழை பொழிவு குறைவது வரை இதன் விளைவுகள் காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a96b4357-90ea-4941-a643-40cfdfb96412/26-6a994cde39ef1.webp' /></p><p> </p><p>அவுஸ்திரேலியாவில் அதிகரித்த காட்டுத்தீ அபாயம் முதல் தென் அமெரிக்காவில் தீவிரமான வெள்ளப்பெருக்கு வரை, இதன் தாக்கங்கள் உலகம் முழுவதும் பரவும். எல் நினோ நிகழ்வு சுமார் 5 கோடி மக்களைக் கடுமையான பஞ்சத்திற்குத் தள்ளக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் தெரிவித்தது.</p><p> புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் மாசுபாட்டினால் உருவாகியுள்ள பருவநிலை நெருக்கடி, தீவிர வானிலை நிகழ்வுகளின் தீவிரத்தை ஏற்கனவே அதிகரித்துள்ளதுடன் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது; குறிப்பாக, இந்த கோடையில் ஐரோப்பாவில் பதிவான மிகத் தீவிரமான வெப்ப அலை குறைந்தது 35,000 பேரின் மரணத்திற்குக் காரணமாகியுள்ளது. </p><p>எல் நினோ நிகழ்வின் தாக்கம் மேலும் தீவிரமடையும்; இந்நிகழ்வின் அளவானது உண்மையிலேயே மலைக்க வைப்பதாகவும், 'காட்ஸில்லா' (Godzilla) அளவிலான ஒரு நிகழ்வாகவும் இருக்கும் என்று விவரிக்கப்பட்டுள்ளது. </p><p>திங்கட்கிழமையன்று பெறப்பட்ட மிகச் சமீபத்திய தரவுகளில், எல் நினோ நிகழ்வின் மையப்பகுதியில் உள்ள கடல் நீரின் வெப்பநிலை, கடந்த 30 ஆண்டுகளின் சராசரி அளவை விட 2.6 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதைக் காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05230e15-b852-4b6f-bb66-8b5ac505f839/26-6a994cdee2463.webp' /></p><p> </p><p>செயற்கைக்கோள் தரவுப் பதிவுக் காலத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த மாறுபாடான 3.1 டிகிரி செல்சியஸ் (2015-இல் பதிவானது) என்ற அளவை இது ஏற்கனவே நெருங்கிவிட்டது; அதேவேளையில், உச்சநிலை எட்டப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. </p><p>வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், 'எல் நினோ' நிலைமை உறுதியாக நிலைபெற்றுள்ளது; இது வரும் மாதங்களில் மிகவும் தீவிரமான நிகழ்வாக வலுவடையக்கூடும் என்பதோடு, வெள்ளம், வறட்சி மற்றும் கடும் வெப்பம் போன்ற பெரும் தாக்கங்கள் 2027-ஆம் ஆண்டு முழுவதும் நீடிக்கும். </p><p>சில பகுதிகளில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் கடல் மேற்பரப்புக்குக் கீழே உள்ள நீரின் வெப்பநிலை சராசரியை விட 8 டிகிரி செல்சியஸ் என்ற அசாதாரணமான அளவுக்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T10:31:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேரிச்சம் பழம் சாப்பிடுவதற்கு சரியான நேரம் என்ன தெரியுமா ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/when-is-the-right-time-to-eat-dates-1788427530"></link>
            <id>https://news.lankasri.com/article/when-is-the-right-time-to-eat-dates-1788427530</id>
            <summary type="text">பேரிச்சம்பழத்தில் வைட்டமின் பி6, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் ஃபைபர், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இருந்தாலும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேரிச்சம்பழத்தில் வைட்டமின் பி6, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் ஃபைபர், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. </p><p>இருந்தாலும் இந்த பேரிச்சம் பழத்தை நாம் சாதாரணமாக சாப்பிடுவதை விடவும் சரியான நேரத்தில் சாப்பிடுவது தான் நமக்கு உடல் ரீதியாக ஒரு மிகப்பெரிய அளவில் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்று சொல்கிறார்கள். </p><p>அந்த வகையில், பேரிச்சம் பழத்தை நம் எப்பொழுது சாப்பிட்டால் அதிக அளவில் நமக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b5d255-e332-4677-8296-01b8c22f7bdc/26-6a993d0c3bb25.webp' /></p><h3>1.வெறும் வயிற்றில்:</h3><p>

இந்த பேரிச்சம் பழத்தை நாள் துவங்கும் பொழுது அதுவும் வெறும் வயிற்றில் இரண்டு மூன்று பேரிச்சம் பழம் சாப்பிடுவது உடல் ரீதியாக ஒரு மிகப்பெரிய அளவில் சக்தியை கொடுப்பதாக சொல்லப்படுகிறது. </p><p>இதில் இருக்கக்கூடிய பைபர் நம்முடைய செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது. ஆதலால், தினமும் காலையில் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் நமக்கு ஹீமோகுளோபின் அளவு, குறிப்பாக இரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது. </p><h3>

2. உடற்பயிற்சிக்கு:</h3><p>தினமும் உடற்பயிற்சி அல்லது யோகா செய்யக்கூடிய நபராக இருந்தால் 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன்பாக பேரிச்சம்பழம் எடுத்துக் கொள்கின்ற பொழுது அது உங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஒரு நன்மையை அளிக்கிறது.</p><p> அதில் இருக்கக்கூடிய இயற்கையான சர்க்கரை உடலுக்கு மெதுவாக ஆற்றலை வழங்குவதோடு பயிற்சி மேற்கொள்கின்ற பொழுது சோர்வை குறைக்கவும் உதவுகிறது. இதன் வழியாக உடலுக்கு நல்ல சக்தி கிடைப்பதோடு தசைகளுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce634781-b317-43da-b7ea-c1d6dc3dcfaf/26-6a993d0ce510c.webp' /></p><p> </p><h3>

3. இரவில் பாலுடன்:
</h3><p>சிலருக்கு இரவு நேரங்களில் பேரிச்ச பணம் எடுத்துக் கொள்வது அவர்களுக்கு பயனுள்ளதாக அமைக்கும். குறிப்பாக, உடல் சோர்வு பலவீனமாக இருப்பவர்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக ஒரு இரண்டு பேரிச்சம் பழங்களை வெதுவெதுப்பான பாலில் வேகவைத்து கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம். </p><p>இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு நரம்புகளை அமைதிப்படுத்தி தரமான தூக்கத்தை கொடுக்க உதவுகிறது. இருப்பினும் செரிமான பிரச்சனைகள் இருப்பவர்கள் இரவு நேரத்தில் அதிக பேரிச்சம்பழம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.</p><h3>பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்:</h3><p>

1.பேரிச்சம் பழத்தில் குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் இதுபோன்ற இயற்கையான சர்க்கரைகள் இருக்கிறது. அதனால், சோர்வாகவும் பலவீனமாக உணரும் பொழுது நிச்சயம் இரண்டு மூன்று பேரிச்சம் பழங்களை எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் விரைவில் ஒரு நல்ல ஆற்றலை பெறும். </p><p>2.மேலும், பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது குடலின் செயல்பாட்டை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடலில் வளர்ச்சிதை மாற்றமும் சீராக அமைகிறது. குறிப்பாக தொடர்ந்து ஒருவர் பேரிச்சம் பழம் சாப்பிடுகின்ற பொழுது அவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் முற்றிலும் விலகுகிறது. </p><p>3. பேரிச்சம் பழத்தில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான செலினியம், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை நம்முடைய எலும்புகளை வலுப்படுத்துவதோடு எலும்பு தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9954da7-16f0-4efa-a6f2-edb2ca29f6ad/26-6a993d0d9f866.webp' /></p><p> </p><p>4. இந்த பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் சோடியம் குறைவாகவும் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. மேலும், கெட்ட கொழுப்பு எனப்படும் LDL கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இது உதவுகிறது. இதனால் நம்முடைய இதய ஆரோக்கியமும் பாதுகாப்பாக இருக்கும். </p><p>
5. இந்த பேரிச்சம் பழத்தில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நம்முடைய சருமத்திற்கு ஊட்டச்சத்தை கொடுக்கிறது. இதன் வழியாக சருமம் ஒரு நல்ல பொலிவை பெறுவதோடு சுருக்கங்கள் குறையவும் உதவுகிறது. </p><p>இதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நம்முடைய கூந்தலுக்கும் வலிமையை கொடுக்கிறது. இந்த பேரிச்சம்பழம் பார்ப்பதற்கு சிறிய அளவாக இருந்தாலும் அதில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. </p><p>இருப்பினும் சரியான நேரத்தில் அளவோடு எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான சத்துக்கள் கிடைக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது, உடற்பயிற்சிக்கு முன்பாக சாப்பிடுவது மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வது அல்லது இரவு பாலுடன் சாப்பிடுவது என ஒவ்வொரு நேரத்திலும் பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதற்கான தனி காரணங்கள் இருப்பதால் இன்னும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளும் பொழுது நிச்சயம் அதற்குரிய ஒரு நல்ல பலன்களை பெறலாம்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T10:26:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணக்காரராவது எப்படி என புத்தகம் எழுதியவருக்கு ரூ 11,000 கோடி கடன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/author-kiyosaki-billion-in-debt-1788427527"></link>
            <id>https://news.lankasri.com/article/author-kiyosaki-billion-in-debt-1788427527</id>
            <summary type="text">Robert Kiyosaki Says He is $1.2 Billion in Debt: தனக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக ராபர்ட் கியோசாகி கூறுகிறார்.
உலகப் புகழ்பெற்ற &quot;Rich Dad Po...</summary>
            <content type="html"><![CDATA[<p>Robert Kiyosaki Says He is $1.2 Billion in Debt: தனக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக ராபர்ட் கியோசாகி கூறுகிறார்.
</p><p>உலகப் புகழ்பெற்ற "Rich Dad Poor Dad" நூலின் ஆசிரியரான ராபர்ட் கியோசாகி, சுமார் 1.2 பில்லியன் டொலர், அதாவது சுமார் ரூ.11,000 கோடி கடனில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d8ffd90-681a-4b52-adbd-a79299a570c7/26-6a993d094c4c7.webp' /></p><p>
</p><p>பணக்காரனாவது எப்படி என்பதை விளக்கும் நூலை எழுதி, அதில் பல கோடி சம்பாதித்த நபரே ரூ.11,000 கோடி கடனில் இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>வேனிட்டி ஃபேர் பத்திரிகை ஆகஸ்ட் 26ஆம் திகதி வெளியிட்டுள்ள செய்தியில், 79 வயதான கியோசாகி தற்போது 1.2 பில்லியன் டொலர் கடனில் (இந்திய மதிப்பில் ரூ 1,13,30 கோடி) இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. </p><p>அவருடைய புத்தகத்தின் தலைப்பைப் படித்த ஒருவருக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் கடனில் இருப்பது உண்மையில் அந்தப் புத்தகத்தில் உள்ள தனது கருத்துக்களுடன் ஒத்துப்போவதாக அவர் கூறுகிறார். </p><p>1997ஆம் ஆண்டு வெளியான இவரது "Rich Dad Poor Dad" நூலானது இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளது. கியோசாகி முதன்முதலில் 2025-ல் தனக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாகக் கூறத் தொடங்கினார்.</p><p></p><p> </p><p>இருப்பினும், செப்டம்பர் 2025-ல் வெளியான 'தி ஹன்னா ஹாமண்ட் ஷோ' நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தில், அந்தக் கடன் ஒரு தந்திரோபாயமானது என்று அவர் விளக்கினார். </p><p>அத்துடன், வருமானம் ஈட்டக்கூடிய சொத்துகளை வாங்குவதற்கு கடன் பெறுவதுதான் பணக்காரர்கள் பயன்படுத்தும் உத்தி என தெரிவித்துள்ளார். மேலும், சோம்பேறிகள் மட்டுமே தங்கள் சொந்தப் பணத்தை முதலீடுக்குப் பயன்படுத்துவார்கள். </p><p>கடன் வாங்குவதுதான் உங்கள் வேலை என்றார். மட்டுமின்றி, இந்த வழியில் கடனைப் பயன்படுத்துவது, அதிக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய தனக்கு உதவியதாக அவர் கூறினார். </p><p>இந்த நிலையில், கியோசாகியின் வணிகத்தில் தொடர்ந்து பங்குதாரராக இருக்கும் அவரது முன்னாள் மனைவி கிம், வேனிட்டி ஃபேர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 1.2 பில்லியன் டொலர் கடன் இருந்தாலும், அது கியோசாகி தனிப்பட்ட முறையில் சேர்த்த தொகை அல்ல என்றும், மாறாக, அது அவரின் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் குழுவிடம் உள்ள மொத்தக் கடன் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc745d12-fa46-4151-ac3c-c6f81740c5d6/26-6a993d0a01c79.webp' /></p><p> </p><p>மேலும்,
எங்கள் பங்குதாரர்களுடன் எங்களுக்கு நிறைய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, அவற்றின் எண்ணிக்கை சுமார் 1,500 என்று குறிப்பிட்டார்.</p><p> இதனால், தொழில்நுட்ப ரீதியாக, எங்களுக்கு இந்தக் கடன் எல்லாம் இருக்கிறது, ஆனால் அது உண்மையான சொத்துக்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்றார். </p><p>மட்டுமின்றி, கடனில் கியோசாகியின் தனிப்பட்ட பங்கும் குறைவாகவே உள்ளது.
கியோசாகியின் சொத்துகளின் மதிப்பு அதிகரிக்கும்போது அதை அடைமானமாக வைத்து மீண்டும் கடன் பெறுவதே கியோசியின் முக்கியமான முதலீட்டு அணுகுமுறையாகும். </p><p>சொத்தை விற்பதற்கு பதிலாக, அதன் மீது கடன் பெற்று கிடைக்கும் தொகையை வேறு பிஸ்னஸுக்கு பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். </p><p>மேலும், ஒவ்வொரு முதலீட்டையும் தனித்தனி நிறுவனங்களின் கீழ் வைத்திருப்பதாகவும், இதன் மூலம் ஒரு முதலீடு தோல்வியடைந்தாலும் அதன் தாக்கம் மற்ற முதலீடுகளை பாதிக்காமல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2855e36c-a4fc-4ffc-96f9-8fc222c40b33/26-6a993d0ac0463.webp' /></p><p>
</p><p>'Rich Dad Poor Dad' புத்தகம் 44 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி, குறைந்தது 43 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவர் இந்தப் புத்தகத்தை ஷரோன் லெக்டருடன் இணைந்து எழுதினார். </p><p>புத்தகத்தின் முதல் பதிப்பு சுயமாக வெளியிடப்பட்டது, பின்னர் அது ஆம்வே என்ற பன்முனை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு, நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் இடம்பெற உதவியது. </p><p>வார்னர் புக்ஸ் அந்தப் புத்தகத்தை மீண்டும் வெளியிட்டது, மேலும் 2000-ஆம் ஆண்டில், கியோசாகி ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அந்தப் புத்தகத்தை ஒரு மாபெரும் வெற்றிப் படைப்பாக நிலைநிறுத்த உதவியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T10:15:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[A66 சாலை விபத்து: பிரித்தானியாவில் மூடப்படும் பல பள்ளிகள்: இளைஞரின் இறுதி ஊர்வலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/a66-crash-middlesbrough-schools-close-early-1788429588"></link>
            <id>https://news.lankasri.com/article/a66-crash-middlesbrough-schools-close-early-1788429588</id>
            <summary type="text">A66 crash Middlesbrough schools close early: A66 சாலை விபத்தில் உயிரிழந்த யாக்கூப் மத்துசியாக் என்ற நபரின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் மிடில்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>A66 crash Middlesbrough schools close early: A66 சாலை விபத்தில் உயிரிழந்த யாக்கூப் மத்துசியாக் என்ற நபரின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் மிடில்ஸ்பரோ(Middlesbrough) பகுதியில் உள்ள பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட உள்ளன.</p><h2>A66 சாலை விபத்து</h2><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரித்தானியாவின் மிட்ல்ஸ்பரோ (Middlesbrough) அருகே உள்ள A66 சாலையில் நடந்த துரத்தல் நடவடிக்கையின் போது வோக்ஸ்வேகன் பாசாட் காரும், காவல்துறையினரின் காரும் மோதிக் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5d49317-f52b-473a-bb24-187707e9fbd8/26-6a9945160ff04.webp' /></p><p> இந்த சம்பவத்தில் யாக்கூப் மத்துசியாக், கோல் வொர்த்தி, தியோ ரே, மகாய் சாடிங்டன் மற்றும் மைக்கேல் காஹில் ஆகிய 5 இளைஞர் மற்றும் 37 வயதான மேத்யூ பிளேட்ஸ் மற்றும் 38 வயதான டாம் க்ளஃப் ஆகிய 2 காவலர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h3> பள்ளிகள் மூடல்</h3><p>
உயிரிழந்த இளைஞர்களில் ஒருவரான யாக்கூப் மத்துசியாக் என்பவரின் இறுதி ஊர்வலம் மிடில்ஸ்பரோ பகுதியில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற உள்ளது.</p><p> &nbsp;சவுத் பேங்கில் உள்ள செயிண்ட் ஜான் தேவாலயத்தில் நடைபெறும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மிடில்ஸ்பரோ பகுதியில் உள்ள பல பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a50982c4-b567-4185-bb51-93c90ba85a40/26-6a9945155ac57.webp' /></p><p> சவுத் பேங்க் தொடக்கப் பள்ளி, அவுட்வுட் அகாடமி, செயின்ட் பீட்டர்ஸ் கத்தோலிக்க கல்லூரி மற்றும் செயின்ட் மார்கரெட் கிளிதோரோ கத்தோலிக்க தொடக்கப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகள் மதிய வேளையில் மூடப்படுவதாக அறிவித்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T10:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் புற்றுநோய் மருத்துவமனையில் இருந்து மணியை திருடிய நபர்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thief-sentenced-for-stealing-gong-from-kitchener-1788427279"></link>
            <id>https://news.lankasri.com/article/thief-sentenced-for-stealing-gong-from-kitchener-1788427279</id>
            <summary type="text">Thief sentenced for stealing gong from Kitchener hospital: புற்றுநோய் மருத்துவமனையில் இருந்த மணியை திருடிய நபருக்கு நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thief sentenced for stealing gong from Kitchener hospital: புற்றுநோய் மருத்துவமனையில் இருந்த மணியை திருடிய நபருக்கு நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்துள்ளது.</p><h2>மணியை திருடிய நபர்</h2><p>
கனடாவின் கிச்சனர்(Kitchener) நகரில் அமைந்துள்ள வாட்டர்லூ பிராந்திய சுகாதார நெட்வொர்க் புற்றுநோய் மையத்தில்(Waterloo Regional Health Network’s (WRHN)) இருந்து 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், நோயாளி தங்கள் சிகிச்சை நிறைவு பெற்றதை மகிழ்ச்சியுடன் கொண்டாட அடிக்கும் மணியை திருடியுள்ளார்.</p><p> ஏப்ரல் 25ம் திகதி நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தை அடுத்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு சம்பந்தப்பட்ட குற்றவாளி விக்டோரியா மற்றும் வெபர் வீதி பகுதியில் வைத்து கைது செய்தனர்.</p><p> மேலும் அங்கிருந்த தற்காலிக முகாமிற்கு அருகில் இருந்த இடத்தில் இருந்து மணியை மீட்டு மீண்டும் மருத்துவமனையிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3050cd08-a50c-419e-90bb-3199777b2758/26-6a993c1127398.webp' /></p><h2>நீதிமன்ற தீர்ப்பு</h2><p>
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p>அதில், குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தை தண்டனை காலமாக கணக்கிட்டு, ஒரு வருட நன்னடத்தை கண்காணிப்புடன் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.</p><p> குற்றம் நிகழ்ந்த போது தான் மது போதையில் இருந்ததாகவும், தன்னுடைய செயலால் சமூகம் அடைந்த வேதனையை எண்ணி மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T09:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சி, வெப்பத்தால் பிரான்ஸ் பொருளாதாரத்துக்கு ஏற்பட உள்ள பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-face-economic-hit-by-drought-heatwaves-1788427194"></link>
            <id>https://news.lankasri.com/article/france-face-economic-hit-by-drought-heatwaves-1788427194</id>
            <summary type="text">France has limited economic hit from drought, heatwaves: வறட்சி, வெப்பத்தால் பிரான்ஸ் பொருளாதாரத்துக்கு ஏற்பட உள்ள பாதிப்பு குறைவே என தகவல் வெளியாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>France has limited economic hit from drought, heatwaves: வறட்சி, வெப்பத்தால் பிரான்ஸ் பொருளாதாரத்துக்கு ஏற்பட உள்ள பாதிப்பு குறைவே என தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>வறட்சி, வெப்பத்தால் பிரான்ஸ் பொருளாதாரத்துக்கு குறிப்பிட்ட அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><h3>
வறட்சியால் ஏற்பட இருக்கும் பாதிப்பு</h3><p>

பிரான்ஸ் எதிர்கொண்ட வறட்சி மற்றும் வரலாறு காணாத அளவிலான வெப்ப அலைகள், பிரான்ஸ் விவசாயத்துறை மீது குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பிரான்ஸ் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a168f148-6802-40bc-a227-1c03364decd2/26-6a993bbc46fd3.webp' /></p><p>
பிரான்ஸ், ஐரோப்பாவிலேயே பெரிய தானிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகும்.
</p><p>
ஆனால், இம்முறை குறிப்பாக, பிரான்ஸ் எதிர்கொண்ட வறட்சி மற்றும் வரலாறு காணாத அளவிலான வெப்ப அலைகள் காரணமாக பலவகை பயிர்களின் அறுவடை பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p>
குறிப்பாக, மக்காச்சோள உற்பத்தி 35 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கதிர் அறுத்துப்போக மீதமிருக்கும் சோளத்தட்டை கால்நடைத் தீவனமாக பயன்படும் நிலையில், அதுவும் இம்முறை வழக்கத்தைவிட குறைவாகவே கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

இப்படி மோசமான தகவல்கள் பல கிடைத்தாலும், மொத்தத்தில் பிரான்சின் பொருளாதார மட்டத்தைக் கணக்கிடும்போது, இந்த வெப்பம் மற்றும் வறட்சி, பிரான்சின் பேரியல் பொருளாதார (macroeconomic) மட்டத்தில் ஏற்படுத்தவிருக்கும் பாதிப்பு குறைவே என்கிறார்கள் துறைசார் அலுவலர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T09:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரணின் பந்துவீச்சில் 103 ஓட்டங்களுக்கு சுருண்ட மலேசிய அணி: நேபாளம் அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-beat-malaysia-by-6-wickets-in-acc-men-odi-1788426345"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-beat-malaysia-by-6-wickets-in-acc-men-odi-1788426345</id>
            <summary type="text">Nepal beat malaysia by 6 wickets in ACC men odi: நேபாள அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது. 

பாங்கியில் நடந்த ACC ஆடவர் பிரீம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal beat malaysia by 6 wickets in ACC men odi: நேபாள அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது.</p><p> 

பாங்கியில் நடந்த ACC ஆடவர் பிரீமியர் கிண்ணப் போட்டியில் நேபாள அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது.&nbsp;</p><h2>ACC ஆடவர் பிரீமியர் கிண்ணப் போட்டி&nbsp;</h2><p>

மலேசியா மற்றும் நேபாளம் அணிகள் மோதிய ACC ஆடவர் பிரீமியர் கிண்ணப் போட்டி பாங்கியில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a139bae-65fd-4e5d-84be-d30c086b16d4/26-6a993b27437d2.webp' /></p><p></p><p>
முதலில் களமிறங்கிய மலேசிய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்ப, அகீல் வாஹித் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p> 

அடுத்து சியாஹதத் 13 ஓட்டங்களிலும், விரன்தீப் 14 ஓட்டங்களிலும் வெளியேறினர். அணித்தலைவர் சையத் அஸிஸ் முபாரக் சரிவில் இருந்து அணியை மீட்க போராட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன.&nbsp;</p><h2>கரண்&nbsp;மிரட்டலான பந்துவீச்சு 
</h2><p>
9வது விக்கெட்டாக முபாரக் 30 (49) ஓட்டங்கள் எடுத்த நிலையில் கரண் கேசி பந்துவீசில் அவுட் ஆக, ஆரிஃப் கடைசி விக்கெட்டாக டக்அவுட் ஆனார்.


32.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த மலேசிய அணி 103 ஓட்டங்களுக்கு சுருண்டது. </p><p>மிரட்டலாக பந்துவீசிய கரண் கேசி (Karan KC) 4 விக்கெட்டுகளும், லலித் ராஜ்பன்ஷி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.</p><p>

 பின்னர் ஆடிய நேபாள அணி 21.4 ஓவர்களில் 106 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அர்ஜுன் குமால் 45 ஓட்டங்களும், இஷான் பாண்டே 20 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6479a232-9368-4016-bb77-10764eeb4e80/26-6a993b268f89d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T09:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்த தடை; நேரத்தை வீணாக்கும் என தலிபான் அரசு விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/taliban-govt-defend-ban-on-protest-in-afghanistan-1788426188"></link>
            <id>https://news.lankasri.com/article/taliban-govt-defend-ban-on-protest-in-afghanistan-1788426188</id>
            <summary type="text">taliban government defend ban protest in afghanistan: ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்த விதித்த தடையை தலிபான் அரசு நியாயப்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>taliban government defend ban protest in afghanistan: ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்த விதித்த தடையை தலிபான் அரசு நியாயப்படுத்தியுள்ளது. </p><h3>

ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்த தடை</h3><p>

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மீது அடக்குமுறைகளை கையாளும் வகையில் பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fd2068c-fa02-4f72-b937-ab17314b64ba/26-6a9937ce56ded.webp' /></p><p> 

கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் போராட்டம் நடத்துவதற்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.&nbsp;</p><p>

இந்த தடைக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.&nbsp;</p><p></p><p>

ஆனால், இஸ்லாமிய சட்டத்தில் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை எனக்கூறி தலிபான் அரசு இந்த தடையை நியாயப்படுத்தியுள்ளது. </p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித், "போராட்டங்கள், ஜனநாயகம் அல்லது குடியரசு போன்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ள சமூகங்களைச் சேர்ந்தவை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6937b6d3-4126-4d5a-b537-19628946bdb5/26-6a9937cf0b098.webp' /></p><p>

இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில், மக்கள் தங்களின் பிரச்னைகளுக்குப் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக நேரடியாக அரசைத் தொடர்புகொள்ள முடியும்.</p><p> 

மேலும், இந்தத் தடை மக்களின் நேரத்தை வீணாக்குவதில் இருந்தும், தனியார் சொத்துக்கள் அழிக்கப்படுவதிலிருந்தும் பாதுகாக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T09:03:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தக்க பதிலடி கொடுப்போம்... ஜேர்மனிக்கு ரஷ்யா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-respond-to-germany-shut-cultural-centers-1788423026"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-respond-to-germany-shut-cultural-centers-1788423026</id>
            <summary type="text">Berlin blames Russia for attempted drone attack at Leipzig, Russia responds: ஜேர்மன் விமான நிலையமொன்றில் ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Berlin blames Russia for attempted drone attack at Leipzig, Russia responds: ஜேர்மன் விமான நிலையமொன்றில் ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஜேர்மனி ரஷ்யா மீது குற்றம் சாட்ட, ரஷ்யா அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.
</p><p>


சென்ற மாதம் ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்தில் வெடிபொருட்களுடன் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
</p><h3>
ரஷ்யா மீது குற்றச்சாட்டு
</h3><p>
விடயம் என்னவென்றால், Leipzig விமான நிலையம், ஜேர்மன் ராணுவம் மற்றும் நேட்டோ ராணுவத்துக்கான ராணுவ தளவாடங்கள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விமான நிலையம் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62c73e04-1214-4b91-8d2e-cfac38a25dd9/26-6a992b743ad54.webp' /></p><p>
அதுமட்டுமின்றி, உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி ட்ரோன்கள் மூலம் தாக்கிக்கொள்ளும் சூழலில், அந்த விமான நிலையம், உக்ரைன் நாட்டின் Antonov ஏர்லைன்ஸ் விமானங்களின் தளமாகவும் செயல்படுவதாலேயே, அங்கு ட்ரோன்கள் காணப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், அங்கு வெடிபொருட்களுடன் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில், ஜேர்மனி வெளிப்படையாகவே ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cedf6385-5bc6-4869-a968-3f0ac856112b/26-6a992b74e434a.webp' /></p><p>

அத்துடன், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul, ஜேர்மனியின் Bonn நகரில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தையும், பெர்லினில் அமைந்துள்ள கலாச்சார மையத்தையும் மூட உத்தரவிட்டுள்ளார்.
</p><h3>
ஜேர்மனிக்கு ரஷ்யா எச்சரிக்கை</h3><p>

ஜேர்மனியின் நடவடிக்கை மற்றொரு தவறு, அது சீரியஸான தவறு என ரஷ்ய ஜனாதிபதியான புடின் கூறியுள்ள நிலையில், ஜேர்மனியின் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28314053-7e1c-4c51-835a-48e14cc1f018/26-6a992b759a7c5.webp' /></p><p>
இந்நிலையில், எதிர்பார்க்கப்பட்டதுபோலவே, ரஷ்யா முழுவதுமுள்ள ஜேர்மன் கலாச்சார மையங்களை மூட இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சரான செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஆக, ஜேர்மனி ரஷ்யா இடையிலான மோதல் மும்முரமாகிவருகிறது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:50:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்ப் உருவம் பொறிக்கப்பட்ட புதிய டொலர் நாணயம் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-mint-release-1-coin-featuring-trump-1788425338"></link>
            <id>https://news.lankasri.com/article/us-mint-release-1-coin-featuring-trump-1788425338</id>
            <summary type="text">US Mint Release $1 Coin Featuring Trump: டொனால்ட் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய டொலர் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிரம்ப் உருவம் பொறிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>US Mint Release $1 Coin Featuring Trump: டொனால்ட் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய டொலர் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2> டிரம்ப் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம்</h2><p>
அமெரிக்காவின் 250 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உருவம் பொறிக்கப்பட்ட புதிய டொலர் நாணயம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> அமெரிக்காவின் நாணய அச்சு நிறுவனம்(US Mint), புதிய தங்க நிற முலாம் பூசப்பட்ட இந்த டொலர் நாணய விற்பனையை தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ff615e0-e76b-4cf5-a625-9c93209135d5/26-6a99347bcfa6e.webp' /></p><p> இந்த புதிய நாணயத்தின் முன்பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உருவப்படமானது பொறிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> புதிய நாணயத்தின் தோற்றம்</h2><p>நாணயத்தின் ஹெட்ஸ்(Heads) என்று அழைக்கப்படும் முன் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் ஜனாதிபதியின் முகத்திற்கு மேலே LIBERTY என்ற வார்த்தையும், அதன் கீழே 1776 -2026 என்ற ஆண்டு விவரமும் பொறிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Available for purchase today at 12PM ET: 2026 President Donald J. Trump $1 Coin. These coins are also in circulation, so check your pocket change. Collect them today! <a href="https://x.com/hashtag/CoinCollecting?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CoinCollecting</a> <a href="https://x.com/hashtag/America250?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#America250</a><a href="https://t.co/g4eJes21ER">https://t.co/g4eJes21ER</a> <a href="https://t.co/4OqkQ2sa9W">pic.twitter.com/4OqkQ2sa9W</a></p>&mdash; United States Mint (@usmint) <a href="https://x.com/usmint/status/2095104491536167250?ref_src=twsrc%5Etfw">September 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> டெயில்ஸ்(Tails) என்று அழைக்கப்படும் பின் பக்கத்தில் அமெரிக்காவின் பெருமைமிகு முத்திரை(Great Seal) பொறிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த புதிய நாணயத்திற்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில், டிரம்பால் நியமிக்கப்பட்ட கலை ஆணையம் ஒப்புதல் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> இது தொடர்பான அறிவிப்பு வெளியான போது, தன்னுடைய உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் என்ற யோசனை வித்தியாசமான ஒன்று எனவும், இருப்பினும் இது தன்னை பெருமை கொள்ள வைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:49:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு: தாக்குதல்தாரி உட்பட 3 பேர் பலி: காவலர்கள் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minneapolis-apartment-shooting-3-dead-1788423183"></link>
            <id>https://news.lankasri.com/article/minneapolis-apartment-shooting-3-dead-1788423183</id>
            <summary type="text">Minneapolis Apartment Shooting 3 dead: அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.துப்பாக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Minneapolis Apartment Shooting 3 dead: அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2>துப்பாக்கிச் சூடு சம்பவம்</h2><p>புதன்கிழமை மதியம் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகர மையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியது.</p><p>இந்த சம்பவத்தில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதுடன் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்ட நபரும் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அத்துடன் இந்த சம்பவத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த 3 காவல்துறை அதிகாரிகள் இதில் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b292da3e-29e2-4e7a-b121-ff84d2da9318/26-6a992c10892f2.webp' /></p><p> காயமடைந்த 3 காவல்துறை அதிகாரிகளும் தற்போது ஆபத்தான கட்டத்தை கடந்து சீரான உடல் நிலையுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2> விசாரணையில் பொலிஸார்</h2><p>மினியாபொலிஸ் மாவட்ட மையத்திற்கு அருகில் அமைந்துள்ள துப்பாக்கிச் சூடு அரங்கேறிய அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிய பகுதிகள் முழுவதையும் பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து பொலிஸார் துப்பாக்கியுடன் நிற்பது பதிவாகியுள்ளது.</p><p> இதில் மேலும் 7 பேர் ஹென்னபின் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:13:12+00:00</updated>
        </entry>
    </feed>
