<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-09T07:32:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர கால எரிபொருள் கையிருப்பில் கைவைத்த சுவிட்சர்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-to-release-fuel-from-emergency-reserves-1788936695"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-to-release-fuel-from-emergency-reserves-1788936695</id>
            <summary type="text">Switzerland has officially authorized the release of fuel from its strategic emergency reserves: சுவிட்சர்லாந்து, அவசர கால தேவைகளுக்காக என வைத்திருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Switzerland has officially authorized the release of fuel from its strategic emergency reserves: சுவிட்சர்லாந்து, அவசர கால தேவைகளுக்காக என வைத்திருந்த எரிபொருள் சேமிப்பிலிருந்து எரிபொருளை விநியோகிக்க அனுமதியளித்துள்ளது.
</p><p>

சுவிட்சர்லாந்தில், எவ்வித எரிபொருள் உற்பத்தியும் நடைபெறுவதில்லை. தனக்குத் தேவையான 100 சதவிகித எரிபொருளையும் அந்நாடு இறக்குமதிதான் செய்கிறது.
</p><p>
ஆகவே, சுமார் நான்கரை மாதங்களுக்கான பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை அவசர காலத் தேவைகளுக்காக சேமித்துவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது சுவிட்சர்லாந்து.
</p><h3>
அவசர கால கையிருப்பில் கைவைத்த சுவிட்சர்லாந்து</h3><p>

இந்நிலையில், அந்த அவசர கால கையிருப்பிலிருக்கும் எரிபொருளை வெளியே எடுக்க தற்போது சுவிஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
அதாவது, வெளியிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதற்காக, சுவிட்சர்லாந்தின் Neuchâtel மாகாணத்தில் The Cressier plant என்னும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று இயங்கிவருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7033f59-b843-4832-9c54-ded6aa6a3de7/26-6aa101f848910.webp' /></p><p>
அந்த சுத்திகரிப்பு நிலையத்தில், சமீபத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஒன்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அது செயல்படவில்லை. அது சீராக, இம்மாதத்தின் பாதி வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
ஏற்கனவே நாம் குறிப்பிட்டுவருவது போல, சரக்குப் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரைன் நதியில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால், பெட்ரோலிய தயாரிப்புகளை இறக்குமதி செய்வதும் கடினமாகி உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a648b59f-7c89-4f95-8716-07dfcb2a0b89/26-6aa101f8f3602.webp' /></p><p>
ஆகவேதான், அவசர கால கையிருப்பிலிருக்கும் எரிபொருளை வெளியே எடுக்க அதிகாரப்பூர்வமாக தற்போது சுவிஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:51:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[CPL T20: 47 வயது கேப்டன் இம்ரான் தாஹிரின்..அணியை நொறுக்கிய பாகிஸ்தான் வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shadab-khan-30-runs-in-9-balls-and-2-wickets-cpl-1788936159"></link>
            <id>https://news.lankasri.com/article/shadab-khan-30-runs-in-9-balls-and-2-wickets-cpl-1788936159</id>
            <summary type="text">Antigua and barbuda falcons won by 65 runs: CPL டி20 போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Antigua and barbuda falcons won by 65 runs: CPL டி20 போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்த CPL டி20 போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் வீழ்த்தியது.&nbsp;</p><h2>ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ்&nbsp;182 ஓட்டங்கள்</h2><p>
ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான CPL டி20 போட்டி ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b35f02b-2394-447b-a77f-a157eb1a234c/26-6aa1022aace1a.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
அதிரடியில் மிரட்டிய பாகிஸ்தானின் ஹசன் நவாஸ் 36 ஓட்டங்களும், ஷதாப் கான் 30 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aabdf35-b26b-4616-b26e-d98249beaa78/26-6aa107222f87e.webp' /></p><h2>
சுருண்ட&nbsp;கயானா </h2><p>பின்னர் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 14.2 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக தின்ட்யால் 25 (13) ஓட்டங்களும், மொஹம்மது நபி 23 (22) ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6c178fd-38a0-4d9d-8da0-b65acc1d9257/26-6aa0ffe1a7c50.webp' />&nbsp;</p><p>

அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளும், ஜோஷுவா ஜேம்ஸ், ஷதாப் கான் மற்றும் சுபியன் மோகிம் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
</p><p>
9 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் விளாசியும், 2 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஷதாப் கான் (Shadab Khan) ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6efb70d9-162e-4ba1-ba7a-779d8b71095d/26-6aa10722f1e41.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bb78944-b231-48fb-9d51-0a64d05851ab/26-6aa10723ad811.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:49:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் - கொழும்பில் ராஜ்நாத் சிங் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rajnath-singh-say-india-always-stand-with-srilanka-1788935597"></link>
            <id>https://news.lankasri.com/article/rajnath-singh-say-india-always-stand-with-srilanka-1788935597</id>
            <summary type="text">இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் என கொழும்பு சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். 

இலங்கை வந்த ராஜ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் என கொழும்பு சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். </p><h3>

இலங்கை வந்த ராஜ்நாத் சிங்</h3><p> 

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb043bfe-fa37-4707-8b4a-e9a0e9860de7/26-6aa0fdaf29a42.webp' /></p><p>
38 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை வருகை தந்துள்ளார். </p><p>

கடைசியாக ராஜிவ்காந்தி அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.சி. பந்த் 1988 ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கை சென்றார்.</p><p> 

2023 ஆம் ஆண்டில் ராஜ்நாத் சிங் இலங்கை வர திட்டமிட்டிருந்த போது, இலங்கை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் வந்ததற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்ததால் அந்த கொழும்பு பயணம் ரத்தானது. </p><h3>

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு</h3><p>

அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், "ஆன்மிகமும் கலாசாரமும் இரண்டறக் கலந்த இலங்கை மண்ணில் உங்களைச் சந்திப்பதில் பெருமையடைகிறேன். 

தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாடு, வளர்ச்சி மீது பிரதமர் நரேந்திர மோடியும் நாங்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cbf0f67-cb7d-4589-aea9-fa47188c84bf/26-6aa0fdafd40d7.webp' /></p><p>

நேர்மையான ஆட்சியின் அடையாளமாக நாடாளுமன்றத்தில் "செங்கோல்' நிறுவப்பட்டதும், திருவள்ளுவர், பாரதியாரின் கொள்கைகளை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதும் தமிழ்ப் பாரம்பரியத்துக்கு மத்திய அரசு அளிக்கும் உயர் மரியாதையாகும்.
</p><p>
இந்தியாவின் எல்லைகள் இன்று முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. நாம் யாரையும் முதலில் தாக்க மாட்டோம். ஆனால், நம்மைத் தாக்கத் துணிந்தால் விட்டுவைக்கவும் மாட்டோம் என்ற நமது கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது.&nbsp;</p><p></p><p>
தற்சார்பு பாரதம் திட்டத்தால் இந்தியா சொந்தமாக ஆயுதங்களைத் தயாரிக்கிறது. தமிழகத்தில் அமைக்கப்படும் "பாதுகாப்புத் தொழில்வழித்தடம்' நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கிறது.
</p><p>
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பகிரப்பட்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம். மேலும் இரு நாடுகளின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியுடன் இருக்கிறோம்.
</p><p>
இரு நாடுகளும் நெருங்கிய கலாச்சார மற்றும் நாகரிகப் பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அவை இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளன.&nbsp;</p><p> 2014 ஆம் ஆண்டில் சுமார் 2 டிரில்லியன் டொலர் மதிப்புடையதாக இருந்த இந்தியாவின் பொருளாதாரம், கடந்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாகி சுமார் 4 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. </p><p>

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு 4 நாடுகளுடன் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா 38 நாடுகளுடன், 8 முக்கிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உட்பட, வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாதாரண குடிமக்களா.. மன்னரின் அறிவிப்பால் ஆச்சரியமடைந்தோம் - ஹரி, மேகன் தம்பதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-s-letter-surprised-said-by-harry-and-meghan-1788868391"></link>
            <id>https://news.lankasri.com/article/king-s-letter-surprised-said-by-harry-and-meghan-1788868391</id>
            <summary type="text">Harry and Meghan says king&#039;s letter surprised: அரச குடும்பத்தாராக இல்லாமல் சாதாரண குடிமக்களாக நடத்தப்படுவீர்கள் என்ற மன்னரின் அறிவிப்பினால் தாங்கள் ஆச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry and Meghan says king's letter surprised: அரச குடும்பத்தாராக இல்லாமல் சாதாரண குடிமக்களாக நடத்தப்படுவீர்கள் என்ற மன்னரின் அறிவிப்பினால் தாங்கள் ஆச்சரியமடைந்ததாக ஹரி, மேகன் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் சாதாரண குடிமக்களாக நடத்தப்படுவார்கள் என்ற மன்னரின் அறிவிப்பால் ஆச்சரியமடைந்துள்ளனர்.&nbsp;</p><h2>பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது</h2><p>
அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹரி வெளியேறியதைத் தொடர்ந்து அவருக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d362355c-b2fd-4eed-8505-c3b7fb471210/26-6a9ff89b1a159.webp' />
</p><p>
</p><p>

அதன் அடிப்படையில் ஹரியும், மேகனும் இனி அரசு குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டது.&nbsp;</p><p>

பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ள ஹரி மற்றும் மேகன் சாதாரண குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என்று மன்னர் சார்லஸ் அறிவிப்பு மூலம் உறுதி செய்தார்.
</p><h2>
ஆச்சரியமாக இருக்கிறது&nbsp;</h2><p>இந்த நிலையில் ஹரி, மேகன் தம்பதியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை; இது சற்று ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
</p><p>

மேலும், மன்னரின் அறிவிப்பு வெளியிடப்பட்டது தம்பதியினருக்கு எதிர்பாராத ஒன்றாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
பிரித்தானிய தம்பதியரின் புதிய வாழ்க்கைக்கான திட்டங்கள் குறித்து, அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகங்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கமளித்ததைத் தொடர்ந்து இது வந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ebe61a6-dc07-4bb8-99ad-e6281f2c32d2/26-6a9ff89c12d29.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T06:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் மீண்டும் ஒரு அருங்காட்சியகக் கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/million-euro-worth-arts-stolen-from-renoir-museum-1788930405"></link>
            <id>https://news.lankasri.com/article/million-euro-worth-arts-stolen-from-renoir-museum-1788930405</id>
            <summary type="text">Thieves steal artworks worth 9 million Euros from France&#039;s Renoir museum: பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து கொள்ளையர்கள் 9 மில்லியன் யூரோக்கள் மத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thieves steal artworks worth 9 million Euros from France's Renoir museum: பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து கொள்ளையர்கள் 9 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான கலைப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.</p><p>



பிரான்சின் பிரபல Louvre அருங்காட்சியகத்திலிருந்து கொள்ளையர்கள் 88 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான அரியவகை நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு ஆகிறது. இன்னமும் அந்த நகைகள் சிக்கவில்லை.</p><p>
இந்நிலையில், பிரான்சில் மீண்டும் ஒரு அருங்காட்சியகக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
</p><h3>
பிரான்சில் மீண்டும் ஒரு அருங்காட்சியகக் கொள்ளை</h3><p>

நேற்று அதிகாலை 5.48 மணியளவில், தெற்கு பிரான்சிலுள்ள Cagnes-sur-Mer என்னுமிடத்தில் அமைந்துள்ள Renoir அருங்காட்சியகம் என்னும் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள், 4 அரிய கலைப்பொருட்களை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6684cac-fe95-46c3-ac97-5c9926ebc1dd/26-6aa0e96675854.webp' /></p><p>
அப்படி ஓடும்போது ஒரு கலைப்பொருளை தவறவிட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள் அவர்கள். இந்தக் காட்சிகள் அங்கிருந்த CCTV கமெராக்களில் பதிவாகியுள்ளன.</p><p>

கொள்ளையடிக்கப்பட்ட கலைப்பொருட்களின் மதிப்பு, 9 மில்லியன் யூரோக்கள் ஆகும்.&nbsp;</p><p></p><p>

இந்த Renoir அருங்காட்சியகம் என்பது, பிரபல ஓவியரான Pierre-Auguste Renoir என்பவர் வாழ்ந்த வீட்டில், அவரது நினைவாக உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T05:07:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்: அமெரிக்க தூதரை அழைத்து கண்டித்த ஐஸ்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-post-a-controversial-map-include-iceland-1788909662"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-post-a-controversial-map-include-iceland-1788909662</id>
            <summary type="text">Trump Post a Controversial Map include Iceland: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படத்திற்கு ஐஸ்லாந்து கண்டனம் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Post a Controversial Map include Iceland: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படத்திற்கு ஐஸ்லாந்து கண்டனம் தெரிவித்துள்ளது.</p><h2>அமெரிக்க கொடியால் மூடப்பட்ட வரைபடம்</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதளப்&nbsp;பக்கமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.</p><p> டிரம்ப் வெளியிட்ட அந்த வரைபடத்தில் கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய பகுதிகள் அமெரிக்க கொடியால் போர்த்தப்பட்டு இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🚨 LMFAO! Iceland has reportedly summoned the US Ambassador after Donald Trump posted a map of the United States laying claim to the entire continent of North America — and Iceland<br><br>Are they fearing an invasion 😂<br><br>Trump is a master troll. There is nobody else like him. <a href="https://t.co/pLGI7RRep9">pic.twitter.com/pLGI7RRep9</a></p>&mdash; Eric Daugherty (@EricLDaugh) <a href="https://x.com/EricLDaugh/status/2097309831900156297?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> மேலும் அதில் &nbsp;அமெரிக்க ஐக்கிய நாடுகள் என பெயரிடப்பட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> ஐஸ்லாந்து கண்டனம்</h2><p>
இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட வரைபடம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> அத்துடன் ஐஸ்லாந்திற்கான அமெரிக்க தூதரை நேரில் அழைத்து ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சகம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.</p><h2> அமெரிக்கா - டென்மார்க் இடையிலான இராஜதந்திர பதற்றம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee8e3089-1c3c-47bc-abac-c707da7fb358/26-6aa0986002183.webp' /></p><p></p><p>ஏற்கனவே கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒருப்பகுதியாக சித்தரித்து வரும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் காரணமாக டென்மார்க் இடையே ராஜதந்திர பதற்றங்களை ஏற்படுத்தியிருந்தன.</p><p> கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவின் அங்கமாக இருக்க எப்போதும் விரும்பவில்லை என்று டென்மார்க் பிரதமரும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p> ஐரோப்பிய ஒன்றியம் கிரீன்லாந்தில் 200 மில்லியன் யூரோ முதலீட்டை அறிவித்த சில மணி நேரங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T04:55:45+00:00</updated>
        </entry>
    </feed>
