<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-28T18:53:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எலான் மஸ்க்கின் xAI மீது பிரித்தானிய எம்.பி. வழக்கு., Grok உருவாக்கிய சர்ச்சையான படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-mp-sues-musks-xai-over-grok-fake-images-1785261274"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-mp-sues-musks-xai-over-grok-fake-images-1785261274</id>
            <summary type="text">பிரித்தானியாவின் லேபர் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஜெஸ் அசாடோ, எலான் மஸ்க் நிறுவிய xAI நிறுவனத்திற்கு எதிராக லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் லேபர் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஜெஸ் அசாடோ, எலான் மஸ்க் நிறுவிய xAI நிறுவனத்திற்கு எதிராக லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><p>Grok எனும் AI சாட்பாட், அவரை குறிவைத்து போலியான படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>அசாடோவின் கூற்றுப்படி, கடந்த மாதம் சிலர் Grok-ஐ பயன்படுத்தி, அவரை “மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறைக்கு தயாராக்கும்” போலியான வீடியோவையும், பல பாலியல் படங்களையும் உருவாக்கினர்.</p><p>இது அவர் எலான் மஸ்க் மற்றும் Grok குறித்து பொதுவாக விமர்சித்த பிறகு நடந்ததாக கூறப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18ff4018-5e0b-4d4d-893d-2297e8e05bf6/26-6a68ecdb76dfd.webp' /></p><p>அவர் தாக்கல் செய்த வழக்கில், தனியுரிமை மீறல் மற்றும் தரவு பாதுகாப்பு சட்டம் மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன. Grok-இன் வடிவமைப்பு மற்றும் பயிற்சி முறைகள், இப்படியான பாலியல் உள்ளடக்கங்களை உருவாக்க அனுமதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அசாடோவின் வழக்கறிஞர்கள், Grok-ஐ நிரந்தரமாக இப்படியான படங்களை உருவாக்க முடியாத வகையில் தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். </p><p>இது நிறைவேற்றப்பட்டால், உலகளாவிய AI நிறுவனங்களுக்கு புதிய சட்ட முன்னுதாரணமாக அமையும்.</p><p></p><p>எலான் மஸ்க், பிரித்தானியாவின் ஓன்லைன் பாதுகாப்பு சட்டங்களை “கருத்துரிமையை கட்டுப்படுத்தும்” முயற்சி என விமர்சித்துள்ளார். ஆனால், Grok ஏற்கனவே பல நாடுகளில் அனுமதியில்லாத பாலியல் படங்களை உருவாக்கியதாக விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.</p><p>

இந்த வழக்கு, AI தொழில்நுட்ப வளர்ச்சியில் தனியுரிமை பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ பொறுப்பு குறித்து உலகளவில் முக்கியமான விவாதத்தை தூண்டியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T17:52:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனி மீது உக்ரைன் பயங்கரவாத தாக்குதல்: ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kremlin-says-ukraine-attack-against-germany-1785249780"></link>
            <id>https://news.lankasri.com/article/kremlin-says-ukraine-attack-against-germany-1785249780</id>
            <summary type="text">ஜேர்மனி, கஜகஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.டிமித்ரி பெஸ்கோவ்

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனி, கஜகஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.</p><h2>டிமித்ரி பெஸ்கோவ்</h2><p>
</p><p>
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், மாஸ்கோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உக்ரைன் விவகாரத்தை அமெரிக்கர்கள் கைவிடவில்லை என்றும், அவர்கள் அதிக முன்னுரிமை உள்ள பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89fba66f-cedc-4c87-bf99-eb9040a5cf6b/26-6a68c08f22036.webp' />&nbsp;</p><p></p><p>


மேலும் அவர் ஜேர்மனி, கஜகஸ்தான் மற்றும் ஈரான் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார். </p><p>

 2022-யில் நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயுக் குழாய்களில் நடந்த வெடிப்புகளை மேற்கோள் காட்டிய அவர், அவற்றை உக்ரைன் மீது குற்றம்சாட்டி ஜேர்மனிக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் என்று கூறினார். </p><h2>

காஸ்பியன் பைப்லைன்</h2><p>அத்துடன் "உக்ரைனின் ஆட்சி அதன் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தொடர்வதை நாங்கள் காண்கிறோம். மேலும், நாம் பின்னோக்கிப் பார்த்தால், உக்ரைன் ஆட்சி அதன் பயங்கரவாத நடவடிக்கைகளின் புவியியலைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது" என தெரிவித்தார்.</p><p>

அதேபோல், கஜகஸ்தான் பங்குதாரராக உள்ள காஸ்பியன் பைப்லைன் கூட்டமைப்பின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் மற்றும் காஸ்பியன் கடலில் ஒரு ஈரானியக் கப்பல் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதல் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்; அந்தத் தாக்குதலை ஈரான் மீதான தாக்குதல் என்றும் அவர் விவரித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ede00b-a075-45d0-89c8-4df361d7ad37/26-6a68c090048d3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T14:43:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு சார்பில் மளிகை கடைகள், 30 சதவீத தள்ளுபடி - நியூயார்க்கில் தொடங்க உள்ள மம்தானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/newyork-to-open-grocery-shops-with-30cent-discount-1785245143"></link>
            <id>https://news.lankasri.com/article/newyork-to-open-grocery-shops-with-30cent-discount-1785245143</id>
            <summary type="text">நியூயார்க்கில் அரசு சார்பில் 5 மளிகை கடைகள் அமைக்கப்படும் என மேயர் மம்தானி அறிவித்துள்ளார். 

நியூயார்க் அரசு சார்பில் மளிகை கடை

நியூயார்க் மேயர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூயார்க்கில் அரசு சார்பில் 5 மளிகை கடைகள் அமைக்கப்படும் என மேயர் மம்தானி அறிவித்துள்ளார். </p><h3>

நியூயார்க் அரசு சார்பில் மளிகை கடை
</h3><p>
நியூயார்க் மேயர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசு சார்பில் மளிகை கடைகள் அமைக்கப்படும், மலிவு விலையில் உணவுகள் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை மம்தானி வழங்கினார். </p><p>

அதன்படி, இன்று நியூயார்க் அரசு சார்பில் 5 மளிகை கடைகள் அமைக்கப்படும் என மேயர் மம்தானி அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c01c115-9c5a-424f-9f67-100204893003/26-6a68add891559.webp' /></p><p>
முதல் மளிகைக் கடை 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிராங்க்ஸில் உள்ள ஹன்ட்ஸ் பாயின்ட்டில் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

கிழக்கு ஹார்லமில் உள்ள லா மார்குவேட்டா உட்பட, 5 கடைகளும் ஒவ்வொரு பெருநகரத்திற்கும் ஒன்று என தனது முதல் பதவிக்காலத்தின் இறுதிக்குள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, NYCEDC உடன் இணைந்து 70 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/974fe25d-11a6-46cc-86e4-0a09ecd2eda7/26-6a68add94f19e.webp' /></p><p>

காய்கறிகள், பழங்கள், ரொட்டி, முட்டை, இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் 30 சதவீத தள்ளுபடியில் விற்கப்படும் எனவும், தள்ளுபடி விலைகள், ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">At our five-borough municipal grocery stores, New Yorkers will get a 30% discount on eggs, milk, chicken, fresh produce and other everyday essentials.<br><br>In the wealthiest city in the richest country in the world, no one should have to wonder how they’ll afford the food they need… <a href="https://t.co/zbNVS735bg">pic.twitter.com/zbNVS735bg</a></p>&mdash; Mayor Zohran Kwame Mamdani (@NYCMayor) <a href="https://x.com/NYCMayor/status/2081847809696059888?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p>

இந்த கடைகளை நிர்வகிப்பதற்கு மளிகைக் கடை நடத்துனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடையின் வாடகை, பராமரிப்பு மற்றும் சொத்து வரிகளுக்கான செலவுகளை நியூயார்க் அரசு ஏற்கும்.&nbsp;</p><p></p><p>

விலைவாசி உயர்வு மற்றும் உயர்ந்து வரும் இதர செலவுகள் காரணமாக நியூயார்க் நகரவாசிகள் மாளிகைப்பொருட்கள் வாங்க சிரமப்படுவதாக தெரிவித்துள்ள மம்தானி, அரசு மளிகை கடைகளில் வாங்குவதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 1000 டொலர் சேமிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T13:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 ஆண்டுகளில் முதல்முறையாக..பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த இலங்கை மகளிர் படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chamari-52-and-sri-lanka-win-series-vs-pakistan-1785235789"></link>
            <id>https://news.lankasri.com/article/chamari-52-and-sri-lanka-win-series-vs-pakistan-1785235789</id>
            <summary type="text">பாகிஸ்தான் மகளிர் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

ஃபாத்திமா சனாஇலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் மகளிர் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
</p><h2>
ஃபாத்திமா சனா</h2><p>இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹம்பன்டோடாவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af8ed354-a51f-4010-8c93-74afd9bb2f05/26-6a688a2f829b0.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 187 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. குல் ஃபெரோஸா 40 ஓட்டங்களும், முனீபா அலி 34 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து, சேத்தனா விமுக்தி மற்றும் கவிஷா தில்ஹரி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.</p><p>

பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் விஷ்மி குணரத்னே 12 ஓட்டங்களில் வெளியேறிய, அணித்தலைவர் சமரி அதப்பத்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
</p><p>
</p><h2>சமரி அதப்பத்து</h2><p>சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e715a1-20ac-4c58-bffc-39227941d1e0/26-6a688a304513a.webp' /></p><p> 

அடுத்து கைகோர்த்த ஹர்ஷிதா மற்றும் ஹாசினி வலுவாக கூட்டணி அமைத்து இலங்கையை வெற்றி பெற வைத்தனர். </p><p>

இலங்கை அணி 37.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.&nbsp;</p><p>பாகிஸ்தானுடனான இருதரப்பு தொடரை 24 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கை அணி வென்றுள்ளது.
&nbsp;</p><p>

ஹர்ஷிதா சமரவிக்ரமா (Harshitha Samarawickrama) 71 ஓட்டங்களும், ஹாசினி பெரேரா (Hasini Perera) 50 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e64762f-c0e1-4836-8758-09c585572831/26-6a688a30e9e94.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4edd5798-5dce-47f1-8630-e0930dd62952/26-6a68ab86929b9.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a12c3b56-1498-4047-88b0-ea1e63d7ece3/26-6a68ac0aa0a69.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T13:16:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலையின்போது திடீர் தலைவலி: அடுத்த நொடி 3 பிள்ளைகளின் தாய் மரணம்..அவுஸ்திரேலியாவில் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/42-year-old-woman-suddenly-dropped-dead-australia-1785243235"></link>
            <id>https://news.lankasri.com/article/42-year-old-woman-suddenly-dropped-dead-australia-1785243235</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவர் வேலையின்போது உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

42 வயது பெண்அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த மூன்று பிள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவர் வேலையின்போது உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>

42 வயது பெண்</h2><p>அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் எல்லெனி ஜமால் (42). இவர் Creative Director-ஆக பணியாற்றி வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98808f69-9e1a-4b1c-ad69-21c0920a9a9e/26-6a68a764c2aa0.webp' />&nbsp;</p><p></p><p>

Camilla, Rockmans போன்ற ஃபேஷன் பிராண்டுகளின் விளம்பர பிரச்சாரங்களில் பணியாற்றிய எல்லெனி வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். </p><p>

அங்கு திடீரென அவருக்கு தலைவலி ஏற்பட சரிந்து விழுந்துள்ளார். தன்னை அழைத்து செல்லுமாறு முன்னதாக கணவரை அவர் அழைத்திருந்தார். அலுவலகத்திற்கு வந்த அவர் தனது மனைவிக்கு முதலுதவி அளித்தார்.</p><h2> மூளைச்சாவு </h2><p>பின்னர் எல்லெனி ஜமால் சிட்னி மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எல்லெனி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவித்தனர்.</p><p>

இதனையடுத்து தனது கணவரின் இஸ்லாமிய நம்பிக்கையின்படி, லக்கேம்பா மசூதியில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.</p><p>பின்னர், ஞாயிற்றுக்கிழமை ரூக்வுட் கல்லறையில் எல்லெனி ஜமால் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bd33edd-1276-4fee-a28b-ffc34d655f0c/26-6a68a763e8a70.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T12:56:26+00:00</updated>
        </entry>
    </feed>
