<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-21T17:22:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[157 ஓட்டங்களுக்கு சுருண்ட நேபாளம்: 6 விக்கெட்டுகள் வீழ்த்தி..மொத்தமாக முடித்த ஜேஜே ஸ்மித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/namibia-beat-nepal-by-8-wickets-1784648951"></link>
            <id>https://news.lankasri.com/article/namibia-beat-nepal-by-8-wickets-1784648951</id>
            <summary type="text">நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நம்பியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சுருண்ட&amp;nbsp;நேபாளம் 
நமீபியா மற்றும் நேபாளம் அணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நம்பியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><h2>சுருண்ட&nbsp;நேபாளம் </h2><p>
நமீபியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி உட்ரேச்சில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78afac5c-ff21-4968-8923-2fa56c61987b/26-6a5f97c4824b5.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய நேபாள அணி ஜேஜே ஸ்மித்தின் மிரட்டலான பந்துவீச்சில் 157 ஓட்டங்களுக்கு சுருண்டது.</p><p> 

அதிகபட்சமாக ரோஹித் பவுடெல் 31 ஓட்டங்களும், திபேந்திர சிங் 30 ஓட்டங்களும் எடுத்தனர். ஜேஜே ஸ்மித் (JJ Smit) 27 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f09748b2-9fa7-43a0-8490-57a7aca4b830/26-6a5f97c531fc1.webp' /></p><p>
பின்னர் ஆடிய நமீபியா அணி 37 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.</p><p>ஜென் ஃப்ரைலிங்க் 76 ஓட்டங்களும், மைக்கேல் வான் லிங்கன் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c6d97d1-f6b4-404f-bc49-b51caa3cc879/26-6a5f97c5e5cfe.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T15:59:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்களை கடைசியாக பார்க்கும் தருணமென நினைக்கவில்லை: கணவர் மரணம்..மனைவியின் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wife-post-of-us-soldier-found-who-died-in-iraq-1784644562"></link>
            <id>https://news.lankasri.com/article/wife-post-of-us-soldier-found-who-died-in-iraq-1784644562</id>
            <summary type="text">ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி பதிவிட்டுள்ளார்.அமெரிக்க வீரர்&amp;nbsp;மரணம்
ஈரானிய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி பதிவிட்டுள்ளார்.</p><h2>அமெரிக்க வீரர்&nbsp;மரணம்</h2><p>
ஈரானிய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be204840-a794-4852-82df-ee0f5bfb0e72/26-6a5f867d4dc6c.webp' /></p><p></p><p>
அவர் வட கரோலினாவின் Fayetteville-வைச் சேர்ந்த சார்ஜென்ட் மைக்கேல் இமானுவெல் ஸ்வின்டன் (30) என தேறிய வந்தது.</p><p> 

மேலும், அவர் ஈராக்கின் எர்பில் விமானப்படைத் தளத்தில் நடந்த பணியின்போது கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வர, இதுகுறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.</p><h2>

 நான் கடைசியாக பார்க்கும் தருணம் </h2><p>இந்த நிலையில், உயிரிழந்த வீரரின் மனைவி மியா கோன்சலஸ்-ஸ்வின்டன் தனது கணவர் பணிக்கு செல்லும் முன் சீருடையில் ஒரு குழந்தையை ஏந்தியிருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.</p><p> 

அந்த பதிவில், "உங்களை நான் கடைசியாக பார்க்கும் தருணம் இதுவாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. </p><p>ஈராக்கில் பணியில் இருந்தபோது எனது கணவர் மைக்கேல் கொல்லப்பட்டதாக இன்று காலை எனக்கு தெரிவிக்கப்பட்டது. </p><p>

இந்த துயரச் செய்தியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவித்து வருகிறேன்; எனவே தயவுசெய்து என் நிலையை புரிந்துகொள்ளுங்கள்" என எழுதியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/164b868f-052e-4bd4-8efa-8e1832aba1ad/26-6a5f867e22d3b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T14:38:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷம் முதல் கன்னி வரை.., சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sani-vakra-peyarchi-2026-1784636880"></link>
            <id>https://news.lankasri.com/article/sani-vakra-peyarchi-2026-1784636880</id>
            <summary type="text">நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
</p><p>
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
</p><p>
இந்நிலையில், சனி பகவான் 2026ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி அன்று மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குவார்.
</p><p>
அந்தவகையில், சனி வக்ர பெயர்ச்சி மேஷம் முதல் கன்னி வரை முதல் 6 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/z4v76bNaK38" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T14:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியல் - இடம் பிடித்த ஒரே இந்திய நகரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2026-world-happiest-cities-jaipur-in-6th-place-1784641083"></link>
            <id>https://news.lankasri.com/article/2026-world-happiest-cities-jaipur-in-6th-place-1784641083</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில் ஒரு இந்திய நகரம் இடம்பிடித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள் 

உலகின் மகிழ்ச்சியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில் ஒரு இந்திய நகரம் இடம்பிடித்துள்ளது.</p><h3>

2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள்</h3><p> 

உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் டைம் அவுட் வெளியிட்டு வருகிறது. </p><p>

24,000-க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகளிடம் தங்கள் நகரம் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா என்பது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு, ஒவ்வொரு நாட்டிலும் மிக உயர்ந்த தரவரிசை பெற்ற நகரம் மட்டுமே இறுதி பட்டியலில் சேர்க்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef3632b2-8e70-450c-a818-d8ccd79e4db7/26-6a5f763c482ea.webp' /></p><p>

20 நகரங்கள் உள்ள 2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் பிரித்தானியாவின் பாத் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.&nbsp;</p><p></p><p> 

இந்த நகரின் 93 சதவீதம் பேர் தங்கள் நகரம் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும், 92 சதவீதம் பேர் மற்ற இடங்களை விட பாத்தில் தாங்கள் அதிக மகிழ்ச்சியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர். </p><p>

2வது இடத்தில் பனாமாவின் பனாமா நகரமும், 3வது இடத்தில் மெக்சிகோவின் குவாடலஹாரா நகரமும், 4வது இடத்தில் கொலம்பியாவின் மெடலின் நகரமும், 5வது இடத்தில் போலந்தின் கிராகோ நகரமும் உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5cca7a1-792f-48e8-abe4-b8cbbb801153/26-6a5f763cf0f95.webp' /></p><p>

இந்த பட்டியலில் 6வது இடத்தில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் இடம்பிடித்துள்ளது.</p><p> 

7வது இடத்தில் அமெரிக்காவின் சிகாகோவும், 8வது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனும், 9வது இடத்தில் சீனாவின் ஷாங்காயும், 10வது இடத்தில் ஸ்வீடனின் கோதென்பர்க்கும், 11வது இடத்தில் கனடாவின் மான்ட்ரியலும் உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T13:38:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரில் 2 வாரத்தில் 100 வீரர்கள் காயம் - ஒப்புக்கொண்ட அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pentagon-admit-100-us-soldiers-injured-in-iran-hit-1784639143"></link>
            <id>https://news.lankasri.com/article/pentagon-admit-100-us-soldiers-injured-in-iran-hit-1784639143</id>
            <summary type="text">ஈரான் போரில் 2 வாரத்தில் 100 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

100 அமெரிக்க வீரர்கள் காயம்

ஈரான் மற்றும் அமெரிக்கா இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் போரில் 2 வாரத்தில் 100 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.</p><h3>

100 அமெரிக்க வீரர்கள் காயம்</h3><p>

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தம் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 10 நாட்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் நிலவி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/881ffba4-2258-443d-ab7c-146413e67f6c/26-6a5f6ea954ce0.webp' /></p><p>

ஈரானின் பாந்தர் அப்பாஸ், குவாசம் தீவு, சாம்பஹார், கொனர்க், சிரிக் போன்ற துறைமுக நகரங்கள் மீது தொடர்ந்து 10வது நாளாக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. </p><p>

அதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்த போரில் காயமடைந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா மறைப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் குற்றஞ்சாட்டியது.</p><p> 

இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்த பெண்டகன் செய்தி தொடர்பாளர் ஷான் பார்னெல், " ஜூலை 7 முதல் நடைபெற்று வரும் தாக்குதலில் சுமார் 100 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஏதாவது ஒருவகையில் காயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2487004d-acdb-4778-b40b-311a79f4c58d/26-6a5f6ea89d617.webp' /></p><p>

அதில் பெரும்பாலானோருக்கு சிறிய அளவிலான காயம் என்பதால் அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டனர்" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T13:05:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்ஸி இல்லாமலே தாயகம் திரும்பிய அர்ஜென்டினா அணி: கிடைத்த உற்சாக வரவேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/argentina-team-member-back-to-home-without-messi-1784638057"></link>
            <id>https://news.lankasri.com/article/argentina-team-member-back-to-home-without-messi-1784638057</id>
            <summary type="text">உலகக்கிண்ணத்தை இழந்தாலும் தாயகம் திரும்பிய அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.&amp;nbsp;தாயகம் திரும்பிய&amp;nbsp;வீரர்கள் 

FIFA உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக்கிண்ணத்தை இழந்தாலும் தாயகம் திரும்பிய அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.&nbsp;</p><h2>தாயகம் திரும்பிய&nbsp;வீரர்கள் </h2><p>

FIFA உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வீரர்கள் தாயகம் திரும்பினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caac765a-e0fc-405f-908c-5d302c43e719/26-6a5f6ccf946b1.webp' /></p><p></p><p>
பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி மற்றும் அணியின் மற்ற வீரர்கள் விமானத்திற்கு வெளியே சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் இராணுவ இசைக்குழுவின் வரவேற்கப்பட்டனர். </p><p>

அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் உற்சாக வீரர்களை வரவேற்றனர்.&nbsp;</p><h2>பட்டாசுகளை வெடித்தும்&nbsp;</h2><p>

வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் நடனமாடியும், பாடியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.
</p><p>
முன்னதாக, அணியின் சில வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் தாயகம் திரும்பும் விமானத்தில் செல்ல மாட்டார்கள் என அர்ஜென்டினா கால்பந்து சங்கம் தெரிவித்திருந்தது.
</p><p>
அதன்படி, நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) குழுவினருடன் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ef9de71-2157-497d-8e93-4da763a426d0/26-6a5f6b2fad63e.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90929f3f-8da2-446c-8a80-b803899dd898/26-6a5f6b307c264.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3120717d-6bce-4eb3-8612-4a4de2d4e0d7/26-6a5f6cceaa167.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T12:49:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக இடம்: ஆண்களைவிட...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/more-womens-than-men-in-andy-burnham-cabinet-1784636531"></link>
            <id>https://news.lankasri.com/article/more-womens-than-men-in-andy-burnham-cabinet-1784636531</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம், தனது அமைச்சரவையில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக இடம் கொடுத்துள்ளார்.

ஆண்களை விட பெண்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம், தனது அமைச்சரவையில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக இடம் கொடுத்துள்ளார்.
</p><h3>
ஆண்களை விட பெண்களுக்கு அதிக இடம்&nbsp;</h3><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e9bf75-2d56-4c29-9bc2-4ad46e60e845/26-6a5f647582a43.webp' /></p><p>ஆம், ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் 11 ஆண் அமைச்சர்கள், 12 பெண் அமைச்சர்கள்!</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d39445ba-d012-4c74-bd3e-506f4194274d/26-6a5f6474d51e9.webp' /></p><p>அவர்களில், உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், வீட்டுவசதித்துறை அமைச்சரான ஏஞ்சலா ரெய்னர், முதல் மாநிலச் செயலரான லூயிஸ் ஹைக் மற்றும் கல்விச் செயலரான லூசி பவல் ஆகியோர் அடங்குவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef03a1a6-2c73-4108-9f15-a20c9d446a7d/26-6a5f647635947.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43964547-5872-4e7a-a784-a6d6f8eeea02/26-6a5f6476dd28a.webp' /></p><p>லூயிஸுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் மாநிலச் செயலர் பதவி என்பது, துணைப் பிரதமர் பதவிக்கு இணையான பதவியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d0a93f-288f-48e2-be29-0c5a3bfbc6b7/26-6a5f647798c0e.webp' /></p><p>மேலும், யெவட் கூப்பருக்கு சுகாதாரச் செயலர் பதவியும், பிரிட்ஜட் பிலிப்சனுக்கு பெண்கள் மற்றும் சமத்துவ அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c515acc-4bfd-4452-b598-5fc5053e39b4/26-6a5f647847bc1.webp' /></p><p>அத்துடன், ஆன்டி பர்னாம் நாடாளுமன்ற உறுப்பினராவதில் முக்கிய பங்காற்றிய ஆனலீஸ் மிட்க்லீக்கு chief whip என்னும் பொறுப்பும், இந்திய வம்சாவளியினரான லிசா நந்திக்கு கலாச்சாரச் செயலர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7967e08-9170-4418-bdce-4da10ff9508c/26-6a5f6478ea4ce.webp' /></p><p>முந்தைய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரின் முதல் அமைச்சரவையிலும் பெண்களுக்கு அதிக இடம் வழங்கப்பட்டிருந்தது. அவரது அமைச்சர்களில் 11 பேர் பெண்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T12:22:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்; பதவி விலக வேண்டும்: போராட்டத்தில் ராகுல் காந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rahul-gandhi-demand-pm-modi-resign-and-protest-1784635805"></link>
            <id>https://news.lankasri.com/article/rahul-gandhi-demand-pm-modi-resign-and-protest-1784635805</id>
            <summary type="text">நீட் முறைகேடுகளுக்குபொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.&amp;nbsp;காவல்துறை அடக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் முறைகேடுகளுக்குபொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.&nbsp;</p><h2>காவல்துறை அடக்குமுறை</h2><p>
 
CJP போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட காவல்துறை அடக்குமுறையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e49a9328-f81e-4d3e-9f9e-e1706ccf6054/26-6a5f63341871c.webp' /></p><p></p><p>


நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

கல்வி மற்றும் தேர்வு முறை தொடர்பாகவே இந்த மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>

மக்கள் தாக்கப்படும் விதம் முற்றிலும் 'இந்தியத்தன்மைக்கு முரணானது. நேற்று நடந்த சம்பவத்திற்கு மோடி ஜி இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை.

 கல்வி மற்றும் தேர்வு முறைகள் சீர்குலைந்து, அவை நடைமுறையில் இல்லாமலே போய்விட்டன என்பது நாடு முழுவதற்கும் தெரியும். </p><p>பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார்? அதற்கான காரணம் என்ன? அவர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாணவர்களைக் காவல்துறையினர் தாக்கும் இந்த அராஜகத்தை நிறுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.&nbsp;</p><h2>போராட்டத்தில் ராகுல் காந்தி</h2><p>
 அதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டத்தில் இறங்கினர்.</p><p>

நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என பிரதமர் இல்லம் நோக்கி சென்றனர். 

ஆனால், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த, காங்கிரஸ் கட்சியினர் அங்கேயே அமர்ந்து போராடி வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9583d71f-1c58-45b4-bca3-359d79472d7e/26-6a5f6334bec1b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T12:15:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு கப் மீல் மேக்கர் போதும்.., சுவையான கோலா உருண்டை செய்யலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kola-urundai-recipe-in-tamil-1784635288"></link>
            <id>https://news.lankasri.com/article/kola-urundai-recipe-in-tamil-1784635288</id>
            <summary type="text">மீல் மேக்கரில் புரதச்சத்து மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. 

மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீல் மேக்கரில் புரதச்சத்து மிக அதிக அளவில் நிறைந்துள்ளது.</p><p> 

மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், நார்ச்சத்துக்களும் காணப்படுகின்றன.
</p><p>
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த மீல் மேக்கர் கோலா உருண்டை மிகவும் பிடிக்கும்.
</p><p>
அந்தவகையில், நாவூறும் சுவையில் மீல் மேக்கர் கோலா உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>தேவையான பொருட்கள்
</h2><ul><li>
மீல் மேக்கர்- 1 கப் </li><li>
சோம்பு- 1 ஸ்பூன்
</li><li>பச்சைமிளகாய்- 2
</li><li>வெங்காயம்- 1</li><li>
புதினா- 1 கைப்பிடி</li><li>கொத்தமல்லி- சிறிதளவு</li><li>
பொட்டுக்கடலை- 2 ஸ்பூன்
</li><li>மிளகாய் தூள்- 1 ஸ்பூன்</li><li>
கரம் மசாலா- ½ ஸ்பூன்
</li><li>உப்பு- தேவையான அளவு</li><li>இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்</li><li>அரிசி மாவு- 1 ஸ்பூன்
</li><li>கறிவேப்பிலை- 1 கொத்து</li></ul><h2>செய்முறை</h2><p>

முதலில் மீல் மேக்கரை வெந்நீர் ஊற்றி 15 நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.
</p><p>
பின் ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, இஞ்சி பூண்டு, அரிசி மாவு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/949496f0-9d6e-4a2c-bbcd-69ec609ec9ce/26-6a5f5f9a9556c.webp' /></p><p>

அடுத்து இதில் ஊறவைத்த சோயாக்களை பிழிந்து சேர்த்து நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து சிறிய சிறிய உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
</p><p>
இறுதியாக வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை பொறித்து எடுத்தால் சுவையான மீல் மேக்கர் கோலா உருண்டை தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T12:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய்க்கு வீடியோவை அனுப்பவா? காவலரை மிரட்டிய வடமாநில ஓட்டுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/driver-to-police-says-will-send-video-to-cm-vijay-1784634567"></link>
            <id>https://news.lankasri.com/article/driver-to-police-says-will-send-video-to-cm-vijay-1784634567</id>
            <summary type="text">முதல்வர் விஜய்க்கு வீடியோவை அனுப்பவா என காவலரை வடமாநில லொறி ஓட்டுநர் மிரட்டிய வீடியோ இணையத்த்தில் வைரலாகி வருகிறது.

லஞ்சத்திற்கு எதிராக முதல்வர் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய்க்கு வீடியோவை அனுப்பவா என காவலரை வடமாநில லொறி ஓட்டுநர் மிரட்டிய வீடியோ இணையத்த்தில் வைரலாகி வருகிறது.
</p><h3>
லஞ்சத்திற்கு எதிராக முதல்வர் விஜய்</h3><p>

தமிழக முதல்வராக உள்ள விஜய், லஞ்சம் ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்குவேன் என உறுதியளித்துள்ளார்.&nbsp;</p><p>

சமீபத்தில் கரூரில் பேசிய முதல்வர் விஜய், "யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள். உங்களுடன் நான் இருக்கிறன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ed888d5-0d46-4a98-b6f7-6c6533505793/26-6a5f5cc90b180.webp' /></p><p> 

இதை மீறி யாராவது கட்டாயப்படுத்தினால், இது எங்க மகன், எங்க பிள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்கள் விஜியோட ஆட்சி என்று உறுதியாக சொல்லுங்கள்" என பேசினார். </p><p>

அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் உடனடியாக 94981 80936 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மெசேஜ் மூலம் புகார் அளிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. </p><p>

மேலும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு dvac@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கு அல்லது 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய எண்களுக்கும் புகார் தெரிவிக்கலாம்.</p><h3> 

காவலரை மிரட்டிய வடமாநில ஓட்டுநர்
</h3><p>
இந்நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த லொறி ஓட்டுநர் ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள காவலரிடம் தளபதிக்கு விஜய் கிட்ட சொல்லட்டுமா என மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298ed564-924b-4f68-909a-88237ad487c5/26-6a5f5cc9c76ab.webp' /></p><p>

அந்த வீடியோவில் அபராதம் விதிக்கும் மெஷின் உடன் உள்ள காவலர் பில் எங்கே? நான் சோதனையிட வேண்டும் என கேட்கிறார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">North Indian truck driver used just name of <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a> to stop this Police from taking bribe 🙏🙏<br><br>Driver : Take a photo, Vijay Thalapathy ji.<br><br>Driver : Look, our container is empty, there isn&#39;t even a seal on it...<br><br>Police Officer : Hey, let me check it first. Where is the… <a href="https://t.co/UabFQjR7Hn">pic.twitter.com/UabFQjR7Hn</a></p>&mdash; Iʀsʜᴀᴅ (@irshad5005) <a href="https://x.com/irshad5005/status/2079414563347583161?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அதனை வீடியோ எடுக்கும் வட மாநில லொறி ஓட்டுநர், "என் லாரியின் கண்டெய்னர் காலியாக இருக்கிறது. அதில் சீல் கூட இல்லை. ஆனால் இந்த காவலர் அபராதம் விதிக்கும் வகையில் பணம் கேட்கிறார். 

தளபதி விஜய் நம்பர் என்னிடம் இருக்கிறது. நான் இதை அவருக்கு அனுப்பி புகாரளிக்கிறேன்" என கூறுகிறார்.</p><p> 

இந்த வீடியோவை தவெகவினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:49:37+00:00</updated>
        </entry>
    </feed>
