<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-02T01:50:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-new-attack-iran-issue-warning-to-neighbours-1785631126"></link>
            <id>https://news.lankasri.com/article/us-new-attack-iran-issue-warning-to-neighbours-1785631126</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2> மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு</h2><p>அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து இரு தரப்பிற்கும் இடையிலான மோதல் மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது.</p><p> இதன் ஒரு பகுதியாக ஈரான் மீது அமெரிக்கா மற்றொரு பிரம்மாண்ட தாக்குதலை முன்னெடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/669c0ff7-cd8b-45b3-9486-1e6ff24dceb4/26-6a6e9197ca04c.webp' /></p><p></p><h2> அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை</h2><p>
இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்தும் எந்தவொரு தாக்குதல் முயற்சியிலும் அண்டை நாடுகள் பங்கேற்றால் அதற்கான “கடுமையான பதிலடி” நிச்சயம் கொடுக்கப்படும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.</p><p>சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லாவுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த எச்சரிக்கையை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பதிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc75eeec-d276-494e-9c09-79d4d70daeed/26-6a6e91987fc53.webp' /><br></p><p> &nbsp;தொலைபேசி உரையாடலில், அமெரிக்கா மற்றும் டெல் அவிவ் உடன் இணைந்து பிராந்திய நாடுகள் யாரும் ஈரானுடன் விரோத போக்கில் ஈடுபட வேண்டாம். அப்படி ஈடுபட்டால் நிச்சயம் ஈரான் அதற்கான உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எடுத்துரைத்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-02T00:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் டூவின் ஃபால்ஸ் நகரில் துப்பாக்கிச்சூடு: கொல்லப்பட்ட 3 பேர், இருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-twin-falls-shooting-3-dead-2-injured-1785629077"></link>
            <id>https://news.lankasri.com/article/us-twin-falls-shooting-3-dead-2-injured-1785629077</id>
            <summary type="text">ஐடஹோ மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடுஅமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தில் உள்ள டூவின் ஃபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐடஹோ மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> துப்பாக்கிச் சூடு</h2><p>அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தில் உள்ள டூவின் ஃபால்ஸ்(Twin Falls) என்ற இடத்தில் அரங்கேறிய கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> உள்ளூர் நகராட்சி அதிகாரிகளின் தகவல் படி மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.</p><p>தாக்குதலை யார் நடத்தினார்கள்? அல்லது துப்பாக்கிச் சுட்டிற்கான பின்னணி காரணம் என்ன? என்பதை இதுவரை பொலிஸார் வெளியிடவில்லை.</p><p>இந்த பயங்கரமான துப்பாக்கிச் சூடு சம்பவமானது,&nbsp; புளூ லேக்ஸ் பவுல்வர்ட் நார்த்(Blue Lakes Boulevard North) என்ற பகுதியில் அமைந்துள்ள பரபரப்பான வணிக வளாகத்தில் நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e7cf62a-ffd1-4211-9d48-3d013408435a/26-6a6e899671b39.webp' /></p><p></p><p> அதிலும் குறிப்பாக அங்குள்ள In-N-Out Burger என்ற இடத்தின் வளாகத்திற்கு நிகழ்ந்துள்ளது.</p><p>தாக்குதலை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அப்பகுதியில் இருந்த வணிக நிறுவனங்கள் தங்களது கடைகளை தற்காலிகமாக மூடியுள்ளனர்.</p><p>அதே நேரத்தில், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-02T00:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் விபத்துக்குள்ளான சுற்றுலா பயணிகள் விமானம்: நாஸ்கா கோடுகள் அருகில் என்ன நடந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/plane-crash-near-nazca-lines-13-dead-in-peru-1785627528"></link>
            <id>https://news.lankasri.com/article/plane-crash-near-nazca-lines-13-dead-in-peru-1785627528</id>
            <summary type="text">பெரு நாட்டில் பயணிகள் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான பயணிகள் சுற்றுலா விமானம்பெரு நாட்டின் தெற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரு நாட்டில் பயணிகள் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> விபத்துக்குள்ளான பயணிகள் சுற்றுலா விமானம்</h2><p>பெரு நாட்டின் தெற்கு பகுதியில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>சனிக்கிழமை மதியம் 12.55 மணிக்கு நாஸ்கா நகரில் இருந்து 6 கி.மீ தொலைவிலும், உலகப் புகழ்பெற்ற நாஸ்கோ கோடுகள்(Nazca Lines) அமைந்துள்ள இடத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள புவெப்லோ வியெஜோ(Pueblo Viejo) என்ற இடத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c27b0e-954c-4fa9-954f-25c5bec6f168/26-6a6e83897de5f.webp' /></p><p>புவெப்லோ வியெஜோ என்ற பகுதியில் புகைமூட்டத்திற்கு மத்தியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p> உலகப் புகழ்பெற்ற நாஸ்கோ கோடுகளை பார்வையிட்ட பிறகு தனது பயணத்தை நிறைவு செய்ய தயாரான போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்திற்கு சில நிமிடத்திற்கு முன்பு விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை முற்றிலுமாக இழந்துள்ளது.</p><p> விபத்தின் போது விமானத்தில் 11 பயணிகள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 13 பேர் இருந்த நிலையில், அனைவரும் உயிரிழந்து இருப்பதாக பெரு நாட்டின் வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><p>தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>விபத்துக்குள்ளான விமானம் செஸ்னா கிராண்ட் கேரவன்(Cessna Grand Caravan) என்ற வகையை சேர்ந்த Aerodiana என்ற உள்ளூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c7ecbc-a966-4320-b212-baeaeab8d89f/26-6a6e838a34374.webp' /></p><p> விபத்திற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவரவில்லை. ஆனால் இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.</p><h2> நாஸ்கோ கோடுகள் என்பது?</h2><p>
நாஸ்கோ கோடுகள் என்பது, வானில் இருந்து பார்த்தால் மட்டுமே முழுமையாக தெரியக்கூடிய பண்டைய பாலைவன சித்திரங்கள் ஆகும்.</p><p> பெரு நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான நாஸ்கா கோடுகளை பார்வையிட ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 100000 சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-01T23:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சியூட்டா எல்லை விவகாரம்: ஐரோப்பா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஸ்பெயின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-condemns-eu-neighbors-over-ceuta-issue-1785624226"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-condemns-eu-neighbors-over-ceuta-issue-1785624226</id>
            <summary type="text">சியூட்டா எல்லை விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவும் சுயநலமாக நடந்து கொண்டு இருப்பதாக ஸ்பெயின் குற்றஞ்சாட்டியுள்ளது.சியூட்டா எல்லை விவகாரம்வியாழக்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சியூட்டா எல்லை விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவும் சுயநலமாக நடந்து கொண்டு இருப்பதாக ஸ்பெயின் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><h2>சியூட்டா எல்லை விவகாரம்</h2><p>வியாழக்கிழமையன்று மொராக்கோவில் இருந்து கிட்டத்தட்ட 500000 மக்கள் ஸ்பெயினின் சியூட்டா(Ceuta) பகுதிக்குள் ஒரே நேரத்தில் முயன்றது, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54c1b6e8-5126-4776-a184-5d272cdd7b40/26-6a6e76a4a79ba.webp' /></p><p> இதையடுத்து முக்கிய கொள்கை மாற்றமாக, ஸ்பெயின் உடனான விசா மற்றும் கடவுச் சீட்டு இல்லாத ஷெங்கன் பயண முறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p></p><h2>ஐரோப்பிய நாடுகளை குற்றஞ்சாட்டிய ஸ்பெயின்</h2><p>&nbsp;சியூட்டா எல்லை விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவும் சுயநலமாக நடந்து கொண்டு இருப்பதாக ஸ்பெயின் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p>ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடு மிகவும் பொறுப்பற்றதாகவும், ஒற்றுமையற்றதாகவும் இருப்பதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது.</p><p> அதே நேரத்தில், ஸ்பெயின் எல்லை விவகாரத்தை சில ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் தங்களது உள்நாட்டு அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த முயல்வதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிரான்டே குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e37004a-1f37-4bd5-b028-90996be26624/26-6a6e76a400d26.webp' /></p><p> ஸ்பெயின் ஆப்பிரிக்காவுடன் நேரடியாக எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்த நிலை வேறு எந்த ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளுக்கு ஏற்படவில்லை.</p><p>சியூட்டா எல்லை விவகாரத்தில் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், சில நாடுகள் தங்கள் சுயநலத்திற்காக எடுக்கும் சில முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் கிரான்டே தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T23:06:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாஸ்கோ உணவகத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் உயிரிழப்பு: பின்னணியில் இருப்பது யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/explosion-in-moscow-cafe-3-dead-15-injured-1785625596"></link>
            <id>https://news.lankasri.com/article/explosion-in-moscow-cafe-3-dead-15-injured-1785625596</id>
            <summary type="text">ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் குண்டு வெடிப்பு

மாஸ்கோவின் மத்திய பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> மாஸ்கோவில் குண்டு வெடிப்பு</h2><p>

மாஸ்கோவின் மத்திய பகுதியான குத்ரின்ஸ்காயா சதுக்கத்தில்(Kudrinskaya Square) அமைந்துள்ள கஃபே ஒன்றில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p> &nbsp;இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் வரை உயிரிழந்து இருப்பதுடன், 15 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.</p><p> குண்டு வெடிப்பை தொடர்ந்து உள்துறை அமைச்சக அதிகாரிகளும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3190774a-251e-4ec1-9366-0a5b39e8609b/26-6a6e7bfe5e675.webp' /></p><p>மீட்பு படையினர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருவதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> &nbsp;சனிக்கிழமை மாலை நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பானது, பால்சி ரோஸ்லி(Balzi Rossi) என்ற சொகுசு உணவு விடுதியில் நடைபெற்ற தனியார் கூட்டத்தின் போது நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2> குண்டுவெடிப்பிற்கு பின்னால் இருப்பது யார்?</h2><p>
இந்நிலையில் மாஸ்கோ தலைநகரில் அமைந்துள்ள பால்சி ரோஸ்லி உணவகத்தில் இந்த நாட்டு வெடிகுண்டின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை ரஷ்ய அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ed7d3a6-0dd7-467c-ad41-4d322b87a126/26-6a6e7bff100cc.webp' /></p><p> அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதையும் ரஷ்ய அதிகாரிகள் வெளியிடவில்லை என்றாலும், இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் உக்ரைன் இருக்கலாம் என்று ரஷ்யா சந்தேகப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T23:06:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டையர்கள் - திருமணத்தை நடத்தி வைத்த இரட்டை பாதிரியார்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-twin-brothers-marry-twin-sister-twin-priest-1785577487"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-twin-brothers-marry-twin-sister-twin-priest-1785577487</id>
            <summary type="text">பொதுவாக இரட்டையர்கள் என்றாலே அரிதாக பார்க்கப்படுவது உண்டு. ஆனால், இரட்டை&amp;nbsp; இரட்டையர்களை மணந்து, அதனை இரட்டையர்கள் நடத்தி வைத்த அரிய நிகழ்வு நடைபெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக இரட்டையர்கள் என்றாலே அரிதாக பார்க்கப்படுவது உண்டு. ஆனால், இரட்டை&nbsp; இரட்டையர்களை மணந்து, அதனை இரட்டையர்கள் நடத்தி வைத்த அரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.</p><h3> 

கேரளாவில் இரட்டையர்கள்&nbsp;திருமணம் </h3><p>கேரளாவின் சங்கனாச்சேரி வெட்டுபரம்பிலை சேர்ந்த குஞ்சுமோன் தாமஸ் - ஜோமோல் தம்பதியினரின் இரட்டை மகன்கள் அகில் மற்றும் நிகில்.</p><p> 

பத்தனம்திட்டா மாவட்டம் குளத்தூர் கும்புலுவேலியைச் சேர்ந்த டோமிச்சன், மேரிக்குட்டி தம்பதியரின் இரட்டை மகள்கள் மகி, மரியா.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e8dc66-93f7-421a-85eb-e93b39142852/26-6a6dc010e4f5b.webp' /></p><p>
கடந்த வியாழக்கிழமை, சங்கனாசேரி மெட்ரோபாலிட்டன் தேவாலயத்தில் அகில் மேகியை திருமணம் செய்துள்ளார். </p><p>

அகிலின் இரட்டை சகோதரரான நிகில், மேகியின் இரட்டை சகோதரியான மரியாவை திருமணம் செய்துள்ளார். </p><p>

இந்த திருமணத்தை காஞ்சிரப்பள்ளி மறைமாவட்டத்தின் இரட்டைப் பாதிரியார்களான அருட்தந்தை ஆன்டோ பேழும்கட்டில் மற்றும் அருட்தந்தை அஜோ பேழும்கட்டில் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>

இந்த திருமணத்திற்கு, பாலாவைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஜெரோன் ஜேம்ஸ் மற்றும் ஜோஹன் ஜேம்ஸ் பலிபீடத்தில் உதவியுள்ளனர்.</p><p> 

இரு சகோதரர்களும் வணிகக் கப்பலிலும், சகோதரிகள் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பணிபுரிகின்றனர்.</p><p> 

"இரட்டைக் குழந்தைகள் சூழ திருமணம் செய்துகொள்வது சிறுவயதிலிருந்தே எங்கள் கனவாக இருந்தது. எங்கள் பெற்றோரும் குடும்பத்தினரும் கூட அதை விரும்பினார்கள்" என அந்த சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

"இரட்டைக் குழந்தைகளின் திருமணத்தை நடத்தி வைப்பது மிகவும் சிறப்பானது. இது வாழ்நாள் முழுவதும் நினைவுகளைத் தரும் ஓர் அனுபவம். </p><p>

அவர்கள் ஒன்றாகப் பிறந்தார்கள், ஒன்றாக ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். நாங்களும் ஒன்றாகவே பாதிரியார் ஆனோம். இவை அழகான நினைவுகள்" என்று பாதிரியார்கள் கூறினார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T22:43:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-deploys-military-to-ceuta-after-migrant-1785578718"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-deploys-military-to-ceuta-after-migrant-1785578718</id>
            <summary type="text">இரண்டே நாட்களில் மொராக்கோ நாட்டவர்கள் சுமார் 60,000 பேர் ஸ்பெயினுக்கு சொ ந்தமான பகுதி ஒன்றிற்குள் நுழைந்ததைக் கண்டு ஐரோப்பாவே பதறிய நிலையில், அவர்களில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டே நாட்களில் மொராக்கோ நாட்டவர்கள் சுமார் 60,000 பேர் ஸ்பெயினுக்கு சொ ந்தமான பகுதி ஒன்றிற்குள் நுழைந்ததைக் கண்டு ஐரோப்பாவே பதறிய நிலையில், அவர்களில் சுமார் 45,000 பேர் சில மணி நேரத்துக்குள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்கள்.</p><h3>

ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்...
</h3><p>
மொராக்கோ நாட்டவர்களான சுமார் 60,000 பேர், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை காலைக்குள், ஸ்பெயினுக்கு சொந்தமான சியூட்டா என்னும் நகருக்குள் நுழைந்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27aa8739-7b8b-4c7e-8b50-8a54f1bdcced/26-6a6dc4dfbdf59.webp' /></p><p>அத்தனை பேர் கொண்ட கூட்டம் நினைத்திருந்தால் நிலப்பரப்பு வழியாக சியூட்டாவுக்குள் நுழைந்திருக்கமுடியும்.
</p><p>
ஆனால், உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சியூட்டாவுக்குள் நுழைய, ஸ்பெயினுக்குள் நுழைந்தவர்கள் நம் நாட்டுக்குள்ளும் வந்துவிடுவார்களோ என மற்ற ஐரோப்பிய நாடுகள் பதறின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da1504b3-fec9-477a-83d0-5a10db22139a/26-6a6dc4e06f6bd.webp' /></p><h3>மீண்டும் நாடு திரும்பிய மொராக்கோ நாட்டவர்கள்
</h3><p>
அவர்கள் ஸ்பெயினுக்கு சொந்தமான சியூட்டாவுக்குள் நுழைந்ததால், ஸ்பெயின் அவர்களை தடுப்புக்காவலில் அடைத்து, ஸ்பெயினில் தங்க சட்டப்படி அனுமதி இல்லாதவர்கள் என கருதப்படுவோரை மொராக்கோ நாட்டுக்கே திருப்பி அனுப்பியிருக்கக்கூடும்.
</p><p>
அதில் மீதமுள்ளவர்கள் ஸ்பெயினுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கவும் கூடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டுக்குள் நுழைந்திருக்கவும் முடியும்.&nbsp;</p><p></p><p>
ஆனால், சியூட்டாவுக்குள் நுழைந்த சில மணி நேரத்துக்குள், சுமார் 50,000 பேர் மீண்டும் தங்கள் சொந்த நாடான மொராக்கோவுக்கே திரும்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/373641a3-2294-4ce6-8244-d1ebe7be7595/26-6a6dc4e11beac.webp' /></p><p>விடயம் என்னவென்றால், சியூட்டாவில் தங்களுக்கு உணவோ, தங்க இடமோ கிடைக்கவில்லை என்றும், ஆகவேதான் தாங்கள் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பி விட்டதாகவும் அவர்களில் பலர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், ஐந்து மணி நேரம் நீந்தி வந்த தங்களை ஸ்பெயின் ராணுவம் உதைத்துத் துரத்தியதாகவும், தங்கள் கைகளில் பனம் இருந்தும் உணவு கிடைக்கவில்லை என்றும், இங்கு எதற்காக வந்தோம் என வருந்தியதாகவும் சிலர் தெரிவித்துள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T22:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் விரக்தியில் ட்ரம்ப்... ஈரான் போரில் இருந்து வெளியேறத் தீவிர ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-seeks-exit-from-iran-war-1785555364"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-seeks-exit-from-iran-war-1785555364</id>
            <summary type="text">ஈரானுடனான மோதலை மீண்டும் தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை வைத்துள்ள நிலையில், மோதலை நீட்டிப்பது பெரும் அபாயத்தில் முடியும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான மோதலை மீண்டும் தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை வைத்துள்ள நிலையில், மோதலை நீட்டிப்பது பெரும் அபாயத்தில் முடியும் என சவுதி அரேபியா தரப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மோதல் தணிய வேண்டும்</h2><p>
</p><p>ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி ட்ரம்ப்புடன் விவாதித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுடனான பேச்சுவார்த்தை முன்னெடுப்புகள் பலனளிக்கும் என்பது குறித்துச் சந்தேகம் வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e902279d-376e-4e9a-8029-13a9f62055a9/26-6a6d6bca5b523.webp' /></p><p> </p><p>மேலும், பேச்சுவார்த்தைகளுக்குப் பதிலாக, முழு அளவிலான போரை மீண்டும் தொடங்குவது உட்பட, ஈரானின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான வழிகள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். </p><p>ஆனால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்த சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான், தமது சகோதரர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் விருப்பத்தை இருவருடனும் விவாதித்துள்ளார். </p><p>அதில், ஈரான் தொடர்பான மோதல் தணிய வேண்டும் என்று சவுதி அரேபியா விரும்புகிறது என்றும், இம்மோதல் நீடிப்பது பெரும் அபாயங்களுக்கு காரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>ஆனால், தனது காலக்கெடுவையும் கடந்து நீண்டுவிட்ட ஒரு மோதலில் இருந்து வெளியேறுவதற்கான வழியை ட்ரம்ப் தீவிரமாகவே தேடும் வேளையில், அவர் எதிர்கொள்ளும் முரண்பட்ட சூழ்நிலைகளை இவை வலியுறுத்துவதாகவே அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது. </p><p>போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு சக குடியரசுக் கட்சியினரிடமிருந்து அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அப்போர் உண்மையில் விரிவடைந்து வருவதாகவே தோன்றுகிறது; பிராந்தியத்தில் உள்ள ஏறக்குறைய அனைத்து நாடுகளும் இதில் இழுக்கப்பட்டுள்ளன.</p><p> போரை நிறுத்தும் ஒரு ஒப்பந்தத்திற்கு ஈரான் கெஞ்சுவதாக ட்ரம்ப் கூறி வந்தாலும், உண்மையில் ஜனாதிபதி ட்ரம்ப் இதில் இருந்து வெளியேற முடியாமல் கடும் விரக்தியில் இருப்பதாகவே அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் பேசுபொருளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6d4c3c4-b86a-4e34-9f2c-7990d947909a/26-6a6d6bc852600.webp' /></p><p> </p><p>மேலும், ஹார்முஸ் நீரிணை மீது தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்தவும், அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைகளை வீசவும் ஈரான் நிர்வாகத்தின் முக்கியப் பிரமுகர்கள் முன்னெப்போதையும் விட அதிக உறுதியுடன் இருப்பதாகச் சில அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர். </p><p>தனது கோரிக்கைகளுக்கு ஈரான் பணிய மறுப்பதால் ட்ரம்ப் விரக்தியடைந்துள்ளார். இதன் விளைவாக, அவர் திரைமறைவில் ஆத்திரம் கொண்ட சந்திப்புகளையும், தனது நேச நாடுகளுடன் வசவுகள் நிறைந்த தொலைபேசி உரையாடல்களையும் நடத்தியுள்ளார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். </p><p>மேலும், அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ஈரான் போரில் வெற்றியுடன் வெளியேற வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுப்பதே அதற்கான ஒரே வழி என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ட்ரம்பின் ஜனாதிபதி பதவியையே</h2><p> </p><p>உண்மையில், ஈரானிடமிருந்து தொடரும் அச்சுறுத்தல்களால், ட்ரம்ப் தனது சொந்தத் திட்டங்களையே மாற்றியமைக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.மிக சமீபத்தில் துருக்கியிலிருந்து அவர் திரும்பும் பயணத்தின்போது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்களை மாற்றியமைத்தது இதில் குறிப்பிடத்தக்கதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a6e48c-7fde-45e8-b887-2a7a44f9fb11/26-6a6d6bc903ba4.webp' /></p><p> </p><p>ஈரானுக்கு பயந்து அமெரிக்க ஜனாதிபதி தனது பயணத் திட்டத்தையே மாற்றும் நிலை ஏற்பட்டது. மட்டுமின்றி, ஈரான் போர், ட்ரம்பின் ஜனாதிபதி பதவியையே முற்றிலுமாக விழுங்கிவிடும் என்று அவரது ஆதரவாளர்கள் பலர் தற்போது கவலைப்படுகிறார்கள். </p><p>அமெரிக்க மக்களில் வெறும் 23 சதவீதம் பேர்கள் மட்டுமே ஈரானுடனான ட்ரம்பின் போரை ஆதரிக்கின்றனர். இந்தப் மோதலின்போது ட்ரம்பை பெருமளவில் ஆதரித்து வந்தாலும், எரிபொருள் விலை உயர்வு இடைக்காலத் தேர்தல்களில் தங்கள் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று குடியரசுக் கட்சியினர் கவலை கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb72d4cd-5fb7-4f36-a3e0-72a234b9105d/26-6a6d6bc9a9343.webp' /></p><p> </p><p>இதை ட்ரம்பிடமும் அவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கத்தார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட மத்தியஸ்தர்கள் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அவசரமாக முயற்சித்து வரும் நிலையில், தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் மிகக் குறைவாகவே உள்ளன. </p><p>மாறாக, ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் முடிவெடுக்கும் அதிகாரத்தை உறுதியாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பேசி வந்த அரசியல் பிரமுகர்கள் வெறும் பெயரளவிலான தலைவர்களாக மட்டுமே நீடிப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு தற்போது அஞ்சுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T21:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பொலிஸாரிடம் இருந்து தப்பிய 22 வயது கைது: தேடுதல் வேட்டை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/manhunt-after-22-yrs-old-suspect-flee-from-police-1785614447"></link>
            <id>https://news.lankasri.com/article/manhunt-after-22-yrs-old-suspect-flee-from-police-1785614447</id>
            <summary type="text">பிரித்தானியாவில் காவல்துறையினரிடம் இருந்து தப்பிய 22 வயது இளைஞரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.தப்பியோடிய குற்றவாளிபிரித்தானியாவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் காவல்துறையினரிடம் இருந்து தப்பிய 22 வயது இளைஞரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.</p><h2>தப்பியோடிய குற்றவாளி</h2><p>பிரித்தானியாவின் லிவர்பூல் நகரில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவதற்கு முன்பு காவல் நிலையத்தில் இருந்து 22 வயது இளைஞர் தப்பியோடினார்.</p><p> அதிகாரிகள் வழங்கிய தகவலில், சந்தேக நபரான ஸ்டீபன் கிரிசிப்(Stephen Grzyb)&nbsp; சனிக்கிழமை காலை லிவர்பூல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்ற போது தப்பியோடியதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9d4a69-13d8-41e7-b650-45436c5822ae/26-6a6e5071aecf2.webp' /></p><p> பிரின்சஸ் டிரைவ் பகுதியை சேர்ந்த சந்தேக நபரான ஸ்டீபன் கிரிசிப், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்தார்.</p><p></p><p> தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வாகனமான GEOAmey-வில் அழைத்து வரப்பட்ட ஸ்டீபன், காவல்துறையினரிடம் இருந்து தப்பி ரெட் கிராஸ் தெரு வழியாக மெர்சி நதியை ஒட்டிய தி ஸ்ட்ராண்ட் பகுதியை நோக்கி ஓடியதாக காவல்துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> தேடுதல் வேட்டை தீவிரம்</h2><p>
இந்நிலையில் தப்பியோடிய ஸ்டீபன் கிர்சிபை பிடிக்க மெர்சிசைடு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4807bb3-2e52-4499-bced-00d3c2ff2c2f/26-6a6e50726343c.webp' /></p><p> பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைக்கு உதவும் விதமாக, சந்தேக நபரான கிர்சிப்பின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.</p><p> லிவர்பூல் முழுவதும் தீவர விசாரணை நடந்து வருவதுடன், முன்னெச்சரிக்கையாக கிர்சிப்பின் வீட்டிற்கும் காவல்துறை பாதுகாப்பு போட்டுள்ளது.</p><p> மேலும் கிர்சிப் குறித்த தகவல் பொதுமக்கள் யாருக்கும் கிடைத்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T20:00:58+00:00</updated>
        </entry>
    </feed>
