<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-29T15:05:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை புனரமைக்க 5 பில்லியன் டொலர் தேவை - நிதியமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-fm-says-need-5-billion-to-rebuild-1788013838"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-fm-says-need-5-billion-to-rebuild-1788013838</id>
            <summary type="text">நேபாளத்தை புனரமைக்க 5 பில்லியன் டொலர் தேவை என நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார். 

நேபாள பெருவெள்ளம் 

ஆகஸ்ட் 26 ஆம் திகதி சீன மற்றும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தை புனரமைக்க 5 பில்லியன் டொலர் தேவை என நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார். </p><h3>

நேபாள பெருவெள்ளம் </h3><p>

ஆகஸ்ட் 26 ஆம் திகதி சீன மற்றும் நேபாள எல்லையில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3745c96d-bf2a-4e14-a784-227c3b2ad6ea/26-6a92ed11a4193.webp' /></p><p>

மேலும், 3000க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான பாலங்கள், வாகனங்கள், கட்டிடங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது.</p><p>மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று திபெத்தில் உள்ள அணை உடைந்தன் காரணமாக மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. </p><h3> 

 5 பில்லியன் டொலர் தேவை
</h3><p>
"பாலங்கள் சேதமடைந்த இடங்களில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளைச் சீரமைப்பதற்கும், டிஎன்ஏ பரிசோதனை நடத்துவதற்கும், சடலங்களை நீண்ட காலத்திற்குப் பாதுகாத்து வைப்பதற்கும் சிறப்பு நிபுணர் உதவி தேவை என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p>

தற்போது மீண்டும் மீட்பு பணி தொடங்கியுள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனாவிலிருந்து சுரங்க மீட்பு குழு நேபாளம் விரைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4deeb13-b606-4667-a3e2-88919bec2889/26-6a92ed10f11ce.webp' /></p><p>

மேலும்,முன் தயாரிக்கப்பட்ட பாலங்கள், போர்வைகள், மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்ட 60 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 3 விமானங்களை இந்தியா அனுப்பியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc66a145-9040-4cc3-b626-f76b32504e43/26-6a92ed10453d8.webp' /></p><p>

பேரழிவு நிகழ்ந்து 3 நாட்களுக்குப் பிறகு, மீட்கப்பட்ட சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>

சுகாதார அபாயங்கள் மற்றும் நோய் பரவும் அச்சம் காரணமாக, டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடைமுறைகளுக்கு பிறகு உடல்கள்அடக்கம் செய்யப்பட உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/193b6c34-c15a-4be2-affe-9667fe2a971a/26-6a92ed0f93ba7.webp' /></p><p>

மேலும், புனரமைப்புப் பணிகளுக்கு 5 பில்லியன் டொலர் வரை செலவாகும் என அரசு ஆரம்பகட்ட மதிப்பீடு செய்துள்ளது. இது ஒரு மதிப்பீடு மட்டுமே. இழப்பு மற்றும் சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது" என நேபாள நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T14:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[எர்லிங் ஹாலண்டின் மிரள வைத்த கோல்: மான்செஸ்டர் சிட்டி அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-city-beat-palace-by-4-1-1788012233"></link>
            <id>https://news.lankasri.com/article/man-city-beat-palace-by-4-1-1788012233</id>
            <summary type="text">Man city beat palace by 4-1: பிரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் பேலஸ் அணியை வீழ்த்தியது.

லண்டனில் நடந்த பிரீமியர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man city beat palace by 4-1: பிரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் பேலஸ் அணியை வீழ்த்தியது.
</p><p>
லண்டனில் நடந்த பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், ஹாலண்ட் இரண்டு கோல்கள் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் கிரிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>எர்லிங் ஹாலண்ட்</h2><p> 
லண்டன் Selhurst Park மைதானத்தில் நடந்த பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் கிரிஸ்டல் பேலஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e4e306-51e4-44bf-b043-a85808b73358/26-6a92e843bc7fa.webp' />&nbsp;</p><p></p><p>

ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் மான் சிட்டி அணியின் நட்சத்திர வீரரான எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland), உயர பறந்து வந்த பந்தை தலையால் முட்டி அபார கோல் அடித்தார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து 54வது நிமிடத்தில் மற்றொரு மான் சிட்டி வீரரான ரயான் செர்கி, எதிரணியின் தடுப்பை உடைத்து கோல் அடித்தார்.&nbsp;</p><h2>ரயான் செர்கி&nbsp;</h2><p>

பின்னர் பேலஸ் அணி வீரர் பினோ 56வது நிமிடத்தில் கிக் செய்த பந்தை, மான் சிட்டி கோல் கீப்பர் டொன்னாரும்மா தடுக்க முயன்றபோது, அவரது முதுகில் பட்டு கோல் ஆக மாறியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1beadddb-81ee-4152-9c9f-a0af68056096/26-6a92e8446fa30.webp' /></p><p>

அடுத்த 3 நிமிடங்களில் ரயான் செர்கி (Rayan Cherki) துரிதமாக செயல்பட்டு தனது 2வது கோலினை அடித்தார். </p><p>

எர்லிங் ஹாலண்ட் 89வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்க, மான்செஸ்டர் சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dc7a8e2-5784-4104-9bd4-98d65c053a8b/26-6a92e842e39e9.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc0a4e34-1bff-4af3-956c-2f49e3b79122/26-6a92e845258e9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T14:07:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பிரித்தானியர்கள்: சில தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/families-of-33-missing-britons-rush-to-nepal-1788005513"></link>
            <id>https://news.lankasri.com/article/families-of-33-missing-britons-rush-to-nepal-1788005513</id>
            <summary type="text">Families of 33 missing Britons rush to Nepal: நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பிரித்தானியர்களைத் தேடி அவர்களுடைய குடும்பத்தினர் பலர் நேபாளத்துக்குப் புறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Families of 33 missing Britons rush to Nepal: நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பிரித்தானியர்களைத் தேடி அவர்களுடைய குடும்பத்தினர் பலர் நேபாளத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b57ce4c-24d5-4bd3-aa6d-8410329f92a1/26-6a92cc8ab331b.webp' /></p><p>புனித யாத்திரைக்காகவும், சுற்றுலாவுக்காகவும் ஏராளமான மக்கள் நேபாளத்துக்குச் சென்றிருந்த நிலையில், நேபாள திபெத் எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளம், அவர்களில் பலருடைய நிலைமையை தலைகீழாக மாற்றிப்போட்டுவிட்டது.</p><h3>

மாயமான பிரித்தானியர்கள்
</h3><p>
நேபாள பெருவெள்ளத்தில் சுமார் 600 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 1,500 பேருக்கும் மேலானவர்களைக் காணவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e96a24ca-c713-405a-ab50-16fcf08be9a1/26-6a92cc8b66a77.webp' /></p><p>அவர்களில் 33 பிரித்தானியக் குடிமக்களும் அடங்குவர். விடயம் என்னவென்றால், தங்கள் உறவினர்கள் நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய விடயம் அவர்களை விட்டு தொலைவில் இருக்கும் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், அவர்களில் மாயமானவர்கள் நிலை என்ன என்னும் விடயம் கூடுதல் கவலையை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/170897e9-959a-4557-88fd-39a0641897fe/26-6a92cc8c1a79d.webp' /></p><p>விடயம் என்னவென்றால், காணாமல் போனவர்களில் யாரும் கண்டுபிடிக்கப்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.&nbsp;</p><p></p><p>
என்றாலும், சசெக்ஸில் நேபாள உணவு நிறுவனம் ஒன்றை நடத்திவரும் ப்ரமோத் (Pramod Poudel) என்பவர், தன் தந்தையாகிய புருசோத்தம் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக டெய்லி மெயில் ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/544073bd-d555-4e74-bbd4-f46043a25c96/26-6a92cc8cc2843.webp' /></p><p>அதே நேரத்தில், எசெக்ஸில் செவிலியராக பணியாற்றும் ராஜேந்திரா (Rajendra Pudasaini) என்பவரோ, தனது குடும்பத்தில் பலர் காணாமல் போய்விட்டதாகவும், தனது ஞானக்குழந்தையின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c030c5c0-33bd-471c-b257-99e3bf3f37b2/26-6a92cc8d77c3c.webp' /></p><p>பிரச்சினை என்னவென்றால், மின்சாரமும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தங்கள் உறவினர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார்கள் பலரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa95d2ab-e552-48b9-b3ef-66106f89c7bd/26-6a92cc8e2b2b0.webp' /></p><p>இதற்கிடையில், தங்கள் உறவினர்களின் நிலை அறிவதற்காக மாயமான பிரித்தானியர்களின் உறவினர்கள் நேபாளத்துக்கே புறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T12:55:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவுக்கு அரசு வெளியிட உள்ள செயலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cumta-to-launch-app-for-autos-and-taxis-in-chennai-1788007299"></link>
            <id>https://news.lankasri.com/article/cumta-to-launch-app-for-autos-and-taxis-in-chennai-1788007299</id>
            <summary type="text">CUMTA to launch app for autos and taxis in chennai: சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவு செய்ய அரசு தரப்பில் செயலி வெளியிடப்பட உள்ளது.

ஆட்டோ ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>CUMTA to launch app for autos and taxis in chennai: சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவு செய்ய அரசு தரப்பில் செயலி வெளியிடப்பட உள்ளது.</p><h3>

ஆட்டோ டாக்ஸிக்கு அரசு செயலி </h3><p>

சென்னையில் ஆட்டோ, டாக்சி போன்றவற்றை முன்பதிவு செய்து பயணிக்க Rapido, uber போன்ற தனியார் நிறுவனங்களின் செயலிகள் உள்ளன.</p><p>

அதில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் நிறுவனங்கள் அதிக கமிஷன் தொகை வசூலிப்பதாகவும், தங்களுக்கு போதிய வருமானம் இல்லை எனவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e23eb160-d6e7-473d-a592-ed297c2b10c6/26-6a92d3866f6a5.webp' /></p><p>
இதே போல் பயணிகளும் சில ஓட்டுனர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்து வந்தனர்.&nbsp;</p><p></p><p> 

இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய வீட்டு வசதித் துறை அமைச்சர் ராஜ்குமார், சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பயணிகளுக்கு நியாயமான பயணக்கட்டணத்தை உறுதி செய்யவும் டிஜிட்டல் மீட்டர் உள்ளடக்கிய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f6ca121-c984-4b4f-a545-882d2d798a76/26-6a92d38511cc8.webp' /></p><p> 

இந்த செயலி சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பால் (CUMTA) உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். </p><p>

இதில், பயணிகள் ஆட்டோவை முன்பதிவு செய்யவும், ஓட்டுநர்கள் முன்பதிவுகளை ஏற்கவும் வழிவகுக்கும்.
</p><p>
இதில் பயணத்தின் போது டிஜிட்டல் மீட்டர் இயக்கப்பட்டு, அதில் தூரம், நேரம் அதற்கான கட்டணம் காண்பிக்கப்படும். </p><p>

இதில், ஓட்டுநர்களுக்கு நேரடியாக ரொக்கமாகவோ/UPI மூலமாகவோ அல்லது செயலியில் உள்ள UPI தளங்கள் மூலமாகவோ பணம் செலுத்தலாம். </p><p>

மேலும், செயலி மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவோ பயணிகள் புகார்களை பதிவு செய்யலாம்.</p><p>

எரிபொருள் விலைக்கு ஏற்ப, அரசால் அவ்வப்போது கட்டணங்களை புதுப்பிக்க முடியும். </p><h3>

கட்டணங்களை உயர்த்த கோரிக்கை </h3><p>

போக்குவரத்துறை மானிய கோரிக்கையில் ஆட்டோ கட்டண உயர்வை அரசு அறிவிக்க வேண்டுமென ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.</p><p> 

இது தொடர்பாக தவெக ஆட்சி அமைந்த பிறகு அரசு மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள் இடையே 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d869bd64-baa6-49d2-bd7a-6c4db98ecc2a/26-6a92d385bc8e9.webp' /></p><p>

இதில், முதல் 1.5 கிலோமீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.60ம், அதற்கடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.30ம் கோரியுள்ளனர். </p><p>

மேலும், நிமிடத்திற்கு ரூ.1 காத்திருப்புக் கட்டணமும், சாதாரண கட்டணத்தைப்போல் ஒன்றரை மடங்கு இரவு நேரக் கட்டணமும் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T12:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் பெண்ணின் சடலம்: பாதுகாப்பு வளையம் அமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-body-found-in-park-near-stadium-liverpool-1788005969"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-body-found-in-park-near-stadium-liverpool-1788005969</id>
            <summary type="text">Woman body found near premier league stadium:&amp;nbsp;பிரித்தானியாவில் கால்பந்து மைதானத்திற்கு அருகில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பிரித்தானியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman body found near premier league stadium:&nbsp;பிரித்தானியாவில் கால்பந்து மைதானத்திற்கு அருகில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
</p><p>
பிரித்தானியாவின் பிரீமியர் லீக் மைதானத்திற்கு அருகிலுள்ள பூங்கா ஒன்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. </p><h2>பாதுகாப்பு வளையம்</h2><p>

லிவர்பூலின் பிரீமியர் லீக் கால்பந்து மைதானத்திற்கு அருகில் உள்ள ஸ்டான்லி பூங்காவிற்கு, நேற்றைய தினம் மதியம் காவல்துறையினர் விரைந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdaee1d6-6fe8-4295-aac5-b267d4977f21/26-6a92cf4e4ec20.webp' />&nbsp;</p><p></p><p>

குறித்த பூங்காவில் பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. </p><p>

மெர்சிசைட் காவல்துறையினர், பெண்ணின் மரணம் தற்போது விளக்கப்படாத ஒன்றாக கருதப்படுவதாக கூறியுள்ளனர். </p><p>

மேலும், பெண்ணை அடையாளம் காணவும், அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. </p><p>

அத்துடன் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய உள்துறை அமைச்சகத்தின் பிரேத பரிசோதனை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p> 

 </p>]]></content>
            <updated>2026-08-29T12:20:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[110 புலம்பெயர்வோருடன் பிரித்தானியா நோக்கி புறப்பட்ட படகு: ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/migrant-died-72-rescued-from-boat-try-to-reach-uk-1788005821"></link>
            <id>https://news.lankasri.com/article/migrant-died-72-rescued-from-boat-try-to-reach-uk-1788005821</id>
            <summary type="text">One migrant dies and 72 rescued from small boat trying to reach UK: பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும்போது புலம்பெயர்வோர் படகொன்று விபத்துக்குள்ளானதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>One migrant dies and 72 rescued from small boat trying to reach UK: பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும்போது புலம்பெயர்வோர் படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
</p><p>

பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட புலம்பெயர்வோர் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><h3>
110 புலம்பெயர்வோருடன்...
</h3><p>
வியாழக்கிழமை நள்ளிரவு, 110 புலம்பெயர்வோருடன் ரப்பர் படகொன்று பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e7373d0-51c0-45d8-9496-b81ba14cc196/26-6a92cdbf0622f.webp' /></p><p>
அப்போது, படகில் ஏதோ பிரச்சினை என்பதை அறிந்த பிரான்ஸ் கடலோரக் காவல் படையினர் அந்தப் படகை நெருங்கியுள்ளார்கள்.
</p><p>
அந்தப் படகிலிருந்த ஒருவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை தேவை என்பது தெரியவரவே, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக ஹெலிகொப்டர் ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

ஆனால், ஹெலிகொப்டர் வருவதற்குள் அவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

படகிலிருந்த மேலும் மூன்று பேர் காயமடைந்திருந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டதாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், உதவி கோரிய 72 புலம்பெயர்வோரை ஏற்றிக்கொண்டு கரை திரும்பியதாகவும் கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T12:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதல்: 27 பேர் உயிரிழப்பு, 50 கட்டிடங்கள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-attacks-bucha-district-27-dead-1788002672"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-attacks-bucha-district-27-dead-1788002672</id>
            <summary type="text">உக்ரைனின் புச்சாவில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 27 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
சனிக்கிழமை உக்ரைனிய தலைநகர் கீவ் அருகே உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் புச்சாவில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 27 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
</h2><p>சனிக்கிழமை உக்ரைனிய தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா மாவட்டத்தில் ரஷ்ய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 27 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அத்துடன் ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் குறைந்தது 50 கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாக மண்டல ராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமூர் த்காச்சென்கோ தகவல் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef2a99aa-738a-4455-9594-234c775c9c07/26-6a92c1a5cca1f.webp' /></p><p></p><p> ரஷ்யாவின் இந்த திடீர் தாக்குதலால் அருகிருந்த வீடுகள் மற்றும் உணவகங்களில் தீ விபத்து ஏற்பட்டது.</p><p> Myla கிராமத்தில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T11:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த 9 வீரர்கள்: பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுத்த இங்கிலாந்து அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-lead-by-261-runs-in-lord-s-test-1788002658"></link>
            <id>https://news.lankasri.com/article/england-lead-by-261-runs-in-lord-s-test-1788002658</id>
            <summary type="text">
England lead by 261 runs in lord&#039;s test: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 261 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

லார்ட்&#039;ஸில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
England lead by 261 runs in lord's test: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 261 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
</p><p>
லார்ட்'ஸில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இங்கிலாந்து அணி 81 ஓட்டங்கள் எடுத்துள்ள நிலையில் மழை குறுக்கிட்டுள்ளது.&nbsp;</p><h2>இங்கிலாந்து&nbsp;290 ஓட்டங்கள் </h2><p>

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cdad858-21c2-48ea-b86a-cb7b6a95c3dc/26-6a92c225b48b8.webp' /></p><p></p><p>
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. 

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியில், ஷான் மசூத் 1 ரன்னில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
</p><p>
அடுத்து வந்த ஷாஃபிக் (5), பாபர் அஸாம் (8) ஆகியோரை டங் வெளியேற்ற, சவுத் ஷகீல் 16 ஓட்டங்களில் ஓலி ராபின்ஸன் பந்துவீச்சில் lbw ஆனார். </p><p>

அதன் பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்கு சுருண்டது.&nbsp;</p><h2>மழை குறுக்கிட</h2><p>

அதிகபட்சமாக அஸான் அவைஸ் (Azan Awais) 7 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் எடுத்தார். ஓலி ராபின்ஸன் 4 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், ஜோஷ் டங் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
</p><p>
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ஓட்டங்கள் எடுக்க மழை குறுக்கிட ஆட்டம் தடைப்பட்டுள்ளது.
</p><p>
கே 30 ஓட்டங்களுடனும், ஹாரி ப்ரூக் 7 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்க இங்கிலாந்து 261 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b87fb1ba-d39f-4d76-8fe2-40b53a4bdbb4/26-6a92c22672ce2.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T11:24:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் மைல்கணக்கில் அடித்துச் செல்லப்பட்ட வங்கி லாக்கர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-floods-bank-locker-floated-1788002717"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-floods-bank-locker-floated-1788002717</id>
            <summary type="text">A Bank Locker Floated Miles In Nepal&#039;s Floods: நேபாள வெள்ளத்தில் வங்கி லாக்கர் ஒன்று மைல்கணக்கில் அடித்துச் செல்லப்பட்டது.
நேபாளத்தின் சில பகுதிகளைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>A Bank Locker Floated Miles In Nepal's Floods: நேபாள வெள்ளத்தில் வங்கி லாக்கர் ஒன்று மைல்கணக்கில் அடித்துச் செல்லப்பட்டது.
</p><p>நேபாளத்தின் சில பகுதிகளைப் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளம் தாக்கியபோது, ​​சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கிப் பாதுகாப்புப் பெட்டி ஒன்று, எதிர்பாராத ஒரு குற்றச் சம்பவத்தின் மையப்புள்ளியாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/994f7cb2-6f09-4ed9-80c4-69e21ef6a483/26-6a92c19fec895.webp' /></p><p>
</p><p>பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 29 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p> ரசுவாவின் போதேகோஷி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்தப் பாதுகாப்புப் பெட்டகம் அடித்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் அது தாடிங், கல்ச்சி கிராமப்புற நகராட்சி-4 இல் உள்ள பெல்குகோலா அருகே திரிசூலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. </p><p>தாடிங் காவல்துறையினரின் தகவலின்படி, உள்ளூர் மக்கள் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்தது.</p><p></p><p> </p><p>உடனடியாக ஒரு காவல் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. முதற்கட்ட சோதனையின்போது 29 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து 92,68,505 நேபாள ரூபாய்கள் (சுமார் ரூ. 57 லட்சம்) கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p> கண்டெடுக்கப்பட்ட பணத்தின் ஆதாரம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்; அத்துடன், இச்சம்பவத்தில் வேறு சந்தேக நபர்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5c0d5d8-fb15-455f-a054-7bbc213d1d2d/26-6a92c1a0a37f1.webp' /></p><p> </p><p>இதனிடையே, நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமையன்று கடுமையான வெள்ளம் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது; அதன்படி, தற்போது கிட்டத்தட்ட 3,000 பேர்கள் காணாமல் போயுள்ளதாகவும், உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 626-ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T11:22:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள எல்லைச் சோதனைச் சாவடி... சீன மீட்புக் குழுவினர் கண்ட அந்த அதிர வைக்கும் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-border-station-was-1788001160"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-border-station-was-1788001160</id>
            <summary type="text">Nepal border station Chinese rescue team find: நேபாள எல்லைச் சோதனைச் சாவடி ஒன்று அடியோடு அடித்துச் செல்லப்பட்டதை சீன மீட்புக் குழுவினர் கண்டறிந்தனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal border station Chinese rescue team find: நேபாள எல்லைச் சோதனைச் சாவடி ஒன்று அடியோடு அடித்துச் செல்லப்பட்டதை சீன மீட்புக் குழுவினர் கண்டறிந்தனர். </p><p>
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, எல்லைச் சோதனைச் சாவடிகள், பாலங்கள் மற்றும் கட்டிடங்களை அடியோடு அடித்துச் சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/526e236c-458b-4a3f-9648-63242cf040fc/26-6a92bb8b09799.webp' /></p><p>
</p><p>சீன மீட்புக் குழுவினர் சம்பவயிடத்திற்கு முதன்முறையாகச் சென்றடைந்த நிலையில், முற்றிலும் சிதைந்துபோய் இடிபாடுகளாக மட்டுமே காட்சியளிக்கும் எல்லைச் சாவடியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். </p><p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைக்கு இடையே உள்ள நட்புறவுப் பாலத்தின் ஒரு முனையில் அமைந்துள்ள ரசுவாகதி எல்லைக் கடப்புப் பகுதியை, வெள்ளிக்கிழமையன்று மீட்புக் குழுவினர் சென்றடைந்தனர்; அங்கு அப்பகுதி முற்றிலும் அழிந்த நிலையில் காணப்பட்டது. </p><p>பெருவெள்ளப் பேரிடரில் குறைந்தது 626 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 2,426 பேர் இன்னும் காணாமல் போயுள்ளகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மாயமானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>பல வெளிநாட்டினர் புனித யாத்திரைகள் மேற்கொள்வதற்காகவோ அல்லது மலையேற்றப் பயணங்களில் ஈடுபடுவதற்காகவோ ரசுவகதியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. </p><p>இன்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; இருப்பினும், மேலும் வெள்ளம் ஏற்படும் அபாயம், மோசமான வானிலை மற்றும் இப்பணியின் பிரம்மாண்டமான அளவு ஆகியவை சூழலை சவாலானதாக மாற்றுகின்றன. </p><p>புதன்கிழமையன்று திரிசூலி ஆற்றின் வழியாகப் பாய்ந்து வந்த சீற்றமிக்க சேறும் நீரும் முழு குடியிருப்புகளையும் அடித்துச் சென்று முற்றிலுமாக அழித்துவிட்டதை, நேற்று இரவு கிடைத்த புதிய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. </p><p>லாங்டாங் பள்ளத்தாக்கிற்குச் செல்ல விரும்பும் யாத்ரீகர்களுக்கும் மலையேற்றத்தில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிக முக்கியமான ஒரு இடமாகத் திகழும் கியிரோங் (Gyirong) எல்லைப் பகுதியில், அப்பெருவெள்ளம் குறித்த மிகத் தொடக்கக்கால மற்றும் மிகவும் துயரமான காட்சிகள் முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c70c96-81f6-43af-a9c3-7464083ea699/26-6a92bb8bb5d88.webp' /></p><p> </p><p>அந்தப் பெரிய கட்டிடத்தை நீரும் சேறும் முழுமையாகச் சூழ்ந்துகொள்வதற்கு முன்பே, மக்கள் அங்கிருந்து தப்பி ஓடுவதை சிசிடிவி காட்சிகள் பதிவு செய்துள்ளன. அந்தக் கடக்கும் இடம், அதன் பெரிய பின்புற வாகன நிறுத்துமிடம், நட்புப் பாலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கட்டிடங்களும் தற்போது இல்லை. </p><p>21 மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஒரு தேடுதல்-மீட்பு நாய் அடங்கிய சீனக் குழு நேற்று ராசுவாகதியியை வந்தடைந்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் அந்த இடத்தை அடைய, அக்குழு காடுகளையும் பள்ளத்தாக்குகளையும் கடக்கக் கயிறுகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T10:56:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையில் நிகழ்ந்த இரட்டை சரிவு: நேபாள பேரழிவிற்கு பனிப்பாறை சரிவு மட்டும் காரணம் இல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/behind-the-reasons-of-nepal-s-devastating-floods-1787991671"></link>
            <id>https://news.lankasri.com/article/behind-the-reasons-of-nepal-s-devastating-floods-1787991671</id>
            <summary type="text">Uncovers Bedrock Collapse is Behind the Reasons of Nepal&#039;s Devastating Floods: நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uncovers Bedrock Collapse is Behind the Reasons of Nepal's Devastating Floods: நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பு மட்டும் காரணம் இல்லை என்று புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் விளக்கியுள்ளன.</p><h2> நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு</h2><p>
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பு(Glacier Collapse) மட்டும் காரணம் இல்லை என்றும் பனிப்பாறைக்கு கீழே இருந்த பாறை பாளமும்(underlying bedrock) பெரிய அளவில் சரிந்ததே காரணம் என்று வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p>புதன்கிழமை வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மேகங்கள் மற்றும் குப்பைகளால் மூடப்பட்டிருந்ததால், லாங்தாங் லிரூங்(Langtang Lirung) சிகரத்தின் அருகில் இருந்த பனிப்பாறை பகுதி மட்டும் உடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bc0e616-edd2-4fd9-843a-b76239f7e720/26-6a929678c2fec.webp' /></p><p> ஆனால் தற்போது எடுக்கப்பட்ட தெளிவான செயற்கைக்கோள் புகைப்படங்களில், மேலே இருந்த பனிப்பாறைகளுடன் அடியில் இருந்த பாறைகளும் சரிந்து விழுந்ததே ராட்சத வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.</p><p>தீ விக்(The Week) நாளிதழில் வெளியான அறிக்கையில் கல்கரி பல்கலைக்கழக இணைப் பேராசிரியரான டான் சுகர்(Dan Shugar) இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.</p><p> அழிவின் பாதை))
பாறை மற்றும் பனிக்கட்டியின் மிகப்பெரிய பகுதி பள்ளத்தாக்கின் தரையில் விழுந்து மோதியது, அப்போது செங்குத்தான மற்றும் குறுகிய நிலப்பரப்பு குப்பைகள் மற்றும் இடிபாடுகளின் வேகத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.</p><p></p><p> ஆனால் உருகிய பனியின் நீரோட்டமானது வெள்ள நீருக்கு மேலும் வலுசேர்த்தது சேரும் தண்ணீருமாக மாபெரும் வெள்ளப் பெருக்காக மாற்றியது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Vantortech imagery shows the Rasuwagadhi crossing between Nepal and China completely wiped out by the glacial flood. <br><br> 359+ people are dead and nearly 1,000 remain missing.<br><br>This is the crossing, it’s gone. <a href="https://t.co/obmTgUWMwK">pic.twitter.com/obmTgUWMwK</a></p>&mdash; Open Source Intel (@Osint613) <a href="https://x.com/Osint613/status/2093088045272592847?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> விரைவான பனி உருகுதலே இந்த பனிப்பாறை வெடிப்பிற்கான காரணம் என்று விஞ்ஞானிகள் முதலில் கூறினர்.</p><p> ஆனால் பனி மற்றும் பாறை கலவைகள் சரிவே இந்த பேரழிவுக்கு காரணம் என்று சர்வதேச ஒருங்கிணைந்த மலைப்பகுதி மேம்பாட்டு மையம் (ICIMOD) விளக்கியுள்ளது.</p><p> பனி மற்றும் பாறை சரிவுக்கு பல ஆராய்ச்சியாளர்கள் பருவநிலை மாற்றமே காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T10:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற நபர்: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-missing-nepal-flood-went-celebrate-60th-bday-1787996905"></link>
            <id>https://news.lankasri.com/article/man-missing-nepal-flood-went-celebrate-60th-bday-1787996905</id>
            <summary type="text">A man who went to Nepal to celebrate his 60th birthday has gone missing: நேபாளத்தில் தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற ஒருவர் மாயமாகியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>A man who went to Nepal to celebrate his 60th birthday has gone missing: நேபாளத்தில் தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற ஒருவர் மாயமாகியுள்ளார்.</p><p>


அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியினரான ஒருவர், தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்குச் சென்றிருந்தார்.
</p><h3>
நேபாளப் பெருவெள்ளத்தில் மாயம்
</h3><p>
கைலாஷ் மானசரோவருக்குச் செல்வது தீபக் அஹுஜாவுக்கு நீண்ட நாள் கனவு. சமீபத்தில் தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய தீபக், அதைக் காரணமாக வைத்தாவது கைலாஷ் மானசரோவருக்குச் செல்வதென முடிவு செய்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f46dd903-4bfe-44ba-bc29-2a10b30536fd/26-6a92aaeb2b03a.webp' /></p><p>
ஆகவே, தீபக்கும் அவரது மனைவியான மதுவும் நேபாளத்துக்கு புனித யாத்திரை புறப்பட்டார்கள்.
</p><p>
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் நேபாள எல்லையிலிருக்கும்போதுதான் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
பெருவெள்ளம் ஏற்படும் முன் தங்கள் பெற்றோரிடம் பேசியதாகத் தெரிவிக்கும் தீபக், மது தம்பதியரின் மகள்களான ஷ்ரேயாவும் அனன்யாவும், பெருவெள்ளம் குறித்த செய்தி கேள்விப்பட்டபின் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்கிறார்கள்.&nbsp;</p><p></p><p>
தங்கள் பெற்றோர் சீனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என நம்பும் ஷ்ரேயாவும் அனன்யாவும், தனிப்பட்ட முறையில் தூதரக வாயிலாகவும் அவர்களைத் தேடிவருவதாகத் தெரிவிக்கிறார்கள்.
</p><p>
மான்சரோவர் யாத்திரை செல்வது அப்பாவின் கனவு என்று கூறும் பிள்ளைகள், தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய தங்கள் அப்பா, அதைக் காரணமாக வைத்தாவது கைலாஷ் மானசரோவருக்குச் செல்வதென முடிவு செய்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.
</p><p>
தங்கள் பெற்றோர்கள் எங்கிருக்கிறார்கள் என யாருக்காவது தெரியவந்தால் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு அவசரக் கோரிக்கையும் வைத்துள்ளார்கள் ஷ்ரேயாவும் அனன்யாவும்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T09:52:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியன்னா அருங்காட்சியகத்தில் திருட்டு: பல மில்லியன் மதிப்பிலான வைர நெக்லஸ் கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vienna-museum-diamond-necklace-stolen-1787996981"></link>
            <id>https://news.lankasri.com/article/vienna-museum-diamond-necklace-stolen-1787996981</id>
            <summary type="text">Vienna Museum: Million-Dollar Diamond Necklace stolen: வியன்னா அருங்காட்சியகத்தில் நடந்த திருட்டு சம்பவத்தில் பல மில்லியன் டொலர் மதிப்பிலான வைர நெக்லஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vienna Museum: Million-Dollar Diamond Necklace stolen: வியன்னா அருங்காட்சியகத்தில் நடந்த திருட்டு சம்பவத்தில் பல மில்லியன் டொலர் மதிப்பிலான வைர நெக்லஸ் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.</p><h2> வியன்னா அருங்காட்சியகத்தில் திருட்டு</h2><p>வியன்னாவில் உள்ள பண்பாட்டு கலை அருங்காட்சியகத்தில் இரண்டு நபர்கள் நடத்திய திருட்டு சம்பவத்தில் பல மில்லியன் மதிப்புள்ள பிளாட்டினம் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட நெக்லஸ் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.</p><p>சாதாரண பார்வையாளர்கள் போல் அருங்காட்சியகத்திற்கு நுழைந்த இருவர், நேராக வான் கிளீஃப் அண்ட் ஆர்பெல்ஸ்' (Van Cleef and Arpels) நிறுவனத்தின் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றனர்.</p><p style="margin-left: 25px;"></p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/774fb148-bde3-405f-8a07-b1435abcb7eb/26-6a92ab36b17b0.webp' /></p><p> பின்னர் சுத்தியலை கொண்டு அங்கிருந்த கண்ணாடி பெட்டியை உடைத்து விட்டு அங்கிருந்த விலைமதிப்பற்ற நகையை திருடி கொண்டு தப்பியோடியுள்ளனர்.</p><p> திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் முகமூடி எதுவும் அணியாத நிலையில், அவர்கள் இருவரின் முகமும் துல்லியமாக கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.</p><p> இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்ய ஆஸ்திரியாவின் எல்லைகளைத் தாண்டி தேடும் பணியை அதிகாரிகள் முடக்கிவிட்டுள்ளனர்.</p><h2> அரச பாரம்பரிய நகைகள் திருட்டு</h2><p>இந்த திருட்டு சம்பவத்தில் முக்கியமாக முன்னாள் எகிப்து ராணி நாத்லிக்கு சொந்தமான 200 காரட் கலைப்படைப்பு குறிவைக்கப்பட்டுள்ளது.</p><p> முழுக்க முழுக்க பிளாட்டினத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த நகையில் கிட்டத்தட்ட 673 விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.</p><p> இந்த நகையானது ஈரானி எதிர்கால ஷாவாக உருவான ரெசா பஹ்லவிக்கும் எகிப்து ராணியின் மகள் ஃபெளசியாவுக்கும் நடந்த திருமணத்திற்காக 1939ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T09:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரெவிஸின் அரைசதம் வீண்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்த நமீபியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/namibia-beats-southa-africa-in-1st-t20-tri-series-1787995774"></link>
            <id>https://news.lankasri.com/article/namibia-beats-southa-africa-in-1st-t20-tri-series-1787995774</id>
            <summary type="text">T20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதன் மூலம் அந்த அணிக்கு எதிராக தோல்வியே காணாத பெருமையை நமீபியா பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா வீழ்த்திய நம...</summary>
            <content type="html"><![CDATA[<p>T20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதன் மூலம் அந்த அணிக்கு எதிராக தோல்வியே காணாத பெருமையை நமீபியா பெற்றுள்ளது.</p><h3>

தென்னாப்பிரிக்கா வீழ்த்திய நமீபியா
</h3><p>
தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முத்தரப்பு T20 தொடர் நமீபியாவில் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97122502-249f-49d9-9c54-9822d14c4016/26-6a92a67fd27fe.webp' /></p><p>நேற்று நடைபெற்ற முதல் T20 போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா மோதியது. நாணய சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.</p><p>

இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய நமீபியா, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p></p><p>

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் ஜன் ஃப்ரைலிங்க் 60 ஓட்டங்களும், லாரன் ஸ்டீன்காம்ப் 41 ஓட்டங்களும் குவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5042a99c-589a-42da-a57f-60c92ded183c/26-6a92a6808575b.webp' /></p><p> 

164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்கா ஆட தொடங்கிய நிலையில், அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க ப்ரேவிஸ் நிதானமாக ஆடி 75 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d48a4ebc-696e-46be-8cdc-c5a3ac6e76dd/26-6a92a681dbfb7.webp' /></p><p>

இருப்பினும் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6a8749e-5652-4b9b-be09-2944bd04918b/26-6a92a68291bbd.webp' /></p><p>

இதன் மூலம் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நமீபியா இதுவரை தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 2 T20 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பெருமையை பெற்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c44cde24-10f4-4a2e-a2b9-4f886f702baf/26-6a92a68136439.webp' /></p><p>

கடைசி 2 டக் விக்கெட் உட்பட 4 ஓவர்கள் வீசி 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய நமீபியா வீரர் ஸ்மித் ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T09:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாகிகளில் ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/infosys-public-services-ceo-1787995354"></link>
            <id>https://news.lankasri.com/article/infosys-public-services-ceo-1787995354</id>
            <summary type="text">Infosys CEO Missing After Nepal Floods: நேபாள வெள்ளத்திற்குப் பிறகு இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ் தலைமை நிர்வாக அதிகாரி மாயம்.
நேபாளத்தில் ஏற்பட்ட கடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>Infosys CEO Missing After Nepal Floods: நேபாள வெள்ளத்திற்குப் பிறகு இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ் தலைமை நிர்வாக அதிகாரி மாயம்.
</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இன்போசிஸ் பப்ளிக் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c59ce51b-8b87-4fcb-a4b4-80ee2cf84649/26-6a92a4ddc495e.webp' /></p><p>
</p><p>இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ் என்பது துணை நிறுவனமாகும் இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக லக்ஸ் கோபிசெட்டி செயல்பட்டு வந்துள்ளார்.</p><p> முன்னணி தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் துணை நிறுவனமான 'இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ்' (Infosys Public Services), முக்கியமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பொதுத்துறையில் கவனம் செலுத்தி வருகிறது. </p><p>கோபிசெட்டி நேபாளத்திற்குத் தனிப்பட்ட முறையில் சென்றிருந்ததாக பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது; மேலும், அவரது பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதே தங்கள் உடனடி முன்னுரிமை என்றும் இன்ஃபோசிஸ் குறிப்பிட்டுள்ளது. </p><p>கோபிசெட்டி தொடர்பில் தகவல்களைச் சேகரிக்கவும், அவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. </p><p>மட்டுமின்றி, அவரது குடும்பத்தினருடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், இக்கட்டான இச்சூழ்நிலையில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>மேலும், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் வெள்ளம் மற்றும் துயரமான உயிரிழப்புகள் குறித்து தாங்கள் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. </p><p>நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, குறைந்தது 320 இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 400 பேர் சீனப் பகுதியில் சிக்கித் தவிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. </p><p>இதனிடையே, சீனப் பகுதியில் சிக்கியிருந்த 153 இந்தியக் குடிமக்கள் பாதுகாப்பாக நேபாளத்திற்குச் சென்றுவிட்டதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6efe0c67-cf1f-47ac-8fbc-90462f9be0a5/26-6a92a4dd1b6ac.webp' /></p><p>
</p><p>இன்ஃபோசிஸ் இணையதளத்தில் உள்ள கோபிசெட்டியின் விவரக்குறிப்பின்படி, அரசுத் துறை நிறுவனங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான உத்தி, தொழில்நுட்பம், செயல்பாடுகள் மற்றும் மாற்றங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குகிறார்; அத்துடன், அர்த்தமுள்ள இலக்குகளை அடைவதற்கான நிறுவனத்தின் உத்தி மற்றும் அதன் செயலாக்கத்தையும் அவர் மேற்பார்வையிடுகிறார். </p><p>அவரது தற்போதைய பதவிக்கு முன்பு, கோபிசெட்டி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உலகளாவிய துணைத் தலைவராகவும், வணிகப் பயன்பாடுகள் மற்றும் டிஜிட்டல் பணிச்சூழல் சேவையின் தலைவராகவும் இருந்தார். </p><p>அப்போது அவர் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் இத்துறையை உலகளவில் விரிவுபடுத்தினார். இன்ஃபோசிஸில் சேருவதற்கு முன்பு, கோபிசெட்டி ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தார், அங்கு அவர் வட அமெரிக்காவில் சுகாதாரம் மற்றும் பொது சேவைகள் வணிகத்தின் ஒரு பிரிவை வழிநடத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T09:19:53+00:00</updated>
        </entry>
    </feed>
