<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-19T14:17:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ப்ளாக்போர்ட் 149, சதர்லேண்ட் 100: ஒரு பந்து மீதமிருக்க..336 ஓட்டங்கள் சேஸ் செய்த அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/liam-blackford-149-runs-in-australia-domestic-1789826688"></link>
            <id>https://news.lankasri.com/article/liam-blackford-149-runs-in-australia-domestic-1789826688</id>
            <summary type="text">Victoria won by 3 wickets against queensland: அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில் விக்டோரியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Victoria won by 3 wickets against queensland: அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில் விக்டோரியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

குயின்ஸ்லேண்ட் அணிக்கு எதிரான அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விக்டோரியா வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>குயின்ஸ்லேண்ட்&nbsp;335 ஓட்டங்கள் </h2><p>
பிரிஸ்பேனில் நடந்த அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில், விக்டோரியா மற்றும் குயின்ஸ்லேண்ட் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db518fb1-ccb7-4a4b-bb2e-c9643a50816f/26-6aae985d76790.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய குயின்ஸ்லேண்ட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 335 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

ஹூகோ பர்டன் 70 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், டயலான் மெக்லாக்லன் 29 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களும் விளாசினர். </p><h2>

பிளாக்போர்ட் 149 </h2><p>பின்னர் ஆடிய விக்டோரியா அணி 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பிளாக் மெக்டொனால்ட் 17 ஓட்டங்களில் வெளியேற, வில் சதர்லேண்ட் மற்றும் லியாம் பிளாக்போர்ட் கூட்டணி அமைத்தனர். </p><p>

இவர்களது ருத்ரதாண்டவ ஆட்டத்தில் விக்டோரியா அணி 49.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
</p><p>
லியாம் பிளாக்போர்ட் (Liam Blackford) 113 பந்துகளில் 149 ஓட்டங்களும் (6 சிக்ஸர், 16 பவுண்டரிகள்), அணித்தலைவர் வில் சதர்லேண்ட் 106 பந்துகளில் 100 ஓட்டங்களும் (4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) விளாசினர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c21b63f5-4278-4020-9062-c60eb0541174/26-6aae985e67d70.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T14:09:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் மின்சார கார் விற்பனை அதிகரிப்பு - அரசுக்கு வருவாய் குறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germanys-ev-boom-cuts-fuel-tax-revenue-1789826179"></link>
            <id>https://news.lankasri.com/article/germanys-ev-boom-cuts-fuel-tax-revenue-1789826179</id>
            <summary type="text">Germany’s EV boom cuts fuel tax revenue: ஜேர்மன் அரசுக்கு எரிபொருள் வரி வருவாய் குறைந்துள்ளது.

ஜேர்மனியில் மின்சார கார்கள் அதிக அளவில் விற்பனையாகி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany’s EV boom cuts fuel tax revenue: ஜேர்மன் அரசுக்கு எரிபொருள் வரி வருவாய் குறைந்துள்ளது.
</p><p>
ஜேர்மனியில் மின்சார கார்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு குறைந்தாலும், அரசுக்கு எரிபொருள் வரி வருவாய் குறைந்து வருகிறது.</p><p>
</p><h2>
மின்சார கார் விற்பனை</h2><p>சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 முதல் காலாண்டில் ஐரோப்பாவில் மின்சார கார் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நோர்வேவில் புதிய கார்கள் 95 சதவீதம் மின்சார வாகனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c17692cb-5975-469e-8eea-d3aad85ac555/26-6aae9485c7f4f.webp' /></p><h2>அரசுக்கு வருவாய் குறைவு</h2><p>ஜேர்மனியில் டீசல் மற்றும் பெட்ரோல் மீது அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2.10 யூரோவாகும், அதில் 1.14 யூரோ அரசு வரியாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மின்சார வாகனங்களுக்கு இவ்வாறு எரிசக்தி வரி இல்லை. </p><p>இதனால் அரசின் வருவாய் குறைந்து வருகிறது. 2016-இல் 37 பில்லியன் யூரோவாக இருந்த எரிசக்தி வருவாய், கடந்த ஆண்டு 33 பில்லியன் யூரோவாக குறைந்துள்ளது.</p><p>
அறிக்கைகள் படி, 2050-க்குள் இந்த வருவாய் 5 பில்லியன் யூரோ மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான நிதி குறைவது அரசுக்கு பெரிய சவாலாக உள்ளது.
</p><p></p><p>பிரித்தானியா, நோர்வே, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் மின்சார வாகனங்களுக்கு புதிய வரி முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. ஜேர்மனியிலும் வாகனங்களுக்கு சாலை கட்டணம் அல்லது புதிய வரி விதிப்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.
</p><p>
மின்சார வாகன வளர்ச்சி சுற்றுச்சூழலுக்கு நல்லது என்றாலும், அரசின் வருவாய் குறைவு எதிர்காலத்தில் போக்குவரத்து திட்டங்களுக்கு சவாலாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T13:53:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய விளையாட்டு போட்டி; நக்வியிடம் பதக்கங்களை பெறுமா இந்தியா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/naqvi-can-give-asian-games-medals-will-india-get-1789824902"></link>
            <id>https://news.lankasri.com/article/naqvi-can-give-asian-games-medals-will-india-get-1789824902</id>
            <summary type="text">will india accept medal if naqvi gives asian games medals: ஆசிய கிண்ணத்தில் நக்வியிடம் கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி, ஆசிய விளையாட்டு போட்டியிலும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>will india accept medal if naqvi gives asian games medals: ஆசிய கிண்ணத்தில் நக்வியிடம் கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி, ஆசிய விளையாட்டு போட்டியிலும் பெற மறுக்குமா என கேள்வி எழுந்துள்ளது.</p><h3>நக்வியிடம் கிண்ணம் பெற மறுத்த இந்தியா&nbsp;</h3><p>
ஆண்கள் மற்றும் பெண்கள் ஆசியக் கிண்ண கிரிக்கெட் ஆகிய இரண்டிலும், இந்தியா நடப்பு சாம்பியனாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/200041d3-c81d-48a4-8d47-65160f8c450b/26-6aae8f88dba15.webp' /></p><p>
ஆனால் பட்டங்களை வென்ற பிறகு நடைபெற்ற அதிகாரப்பூர்வ பரிசளிப்பு விழாவில், பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மொஹ்சின் நக்வி வெற்றி கிண்ணம் வழங்கியதை இரு அணிகளும் பெற்றுக் கொள்ளவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d648285d-7fd5-46df-9d32-16eda3ded70a/26-6aae8f882d47e.webp' /></p><p>
பிசிசிஐயின் உத்தரவின் பேரிலே கிண்ணத்தை பெறவில்லை என கூறப்பட்டது.&nbsp;</p><p></p><p>
ஜப்பானில் இன்று தொடங்கியுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று, மொஹ்சின் நக்வி பதக்கம் வழங்கினால் இந்தியா பெற மறுக்குமா என கேள்வி எழுந்தது. </p><h3>

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்கம் பெறுமா?
</h3><p>
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஐசிசியின் கீழ் செயல்பட்டு வந்தது. ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் (OCA) கீழ் நடத்தப்படுகிறது.&nbsp;</p><p></p><p> 

OCA விதிகளின்படி, பதக்கங்கள் OCA தலைவரால் வழங்கப்படுகின்றன. அவர் இந்தப் பொறுப்பை மற்ற OCA உறுப்பினர்களுக்கும், தொடர்புடைய சர்வதேச அல்லது ஆசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் வழங்கலாம்.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98477b0-839f-487f-a585-c2eec37beded/26-6aae8f89905f1.webp' /></p><p>
அப்படி ஒரு சூழல் நிகழ்ந்தால் இந்திய அணி பதக்கங்களை பெற்றுக்கொள்ளுமா என பிசிசிஐ தலைவர் செயலாளர் தேவாஜித் சாய்கியா கேட்கப்பட்ட போது, நாங்கள் போட்டிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறோம். 

அணிகள் முதலில் வெற்றி மேடையை அடைய வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c75268e-d2b8-4dde-9889-ad802eeefca4/26-6aae8f8a45240.webp' /></p><p>அந்த நேரத்தில் நிலவும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, அப்போது நாங்கள் ஒரு முடிவை எடுப்போம். அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
OCA விதிகளின்படி, வெற்றி விழாக்களின் போது ஆர்ப்பாட்டங்கள், அரசியல், வணிக, மத அல்லது இனப் பிரச்சாரங்களையும் இந்த வழிகாட்டுதல்களை தடை செய்கின்றன.
</p><p>
OCA விதிகள், விளையாட்டுப் போட்டிகள், பதக்கங்கள், கொடிகள், சின்னங்கள் அல்லது சான்றிதழ்களுக்கு அவமரியாதையாகக் கருதப்படும் செயல்களுக்குத் தண்டனைகளை வழங்குகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T13:39:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை மசோதா: சட்டமாக்கிய ட்ரம்ப்..வெளியான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-signs-sanctions-bill-against-russia-1789822896"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-signs-sanctions-bill-against-russia-1789822896</id>
            <summary type="text">Trump signs sanctions bill against russia: ரஷ்யாவின் மீது விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். 

அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump signs sanctions bill against russia: ரஷ்யாவின் மீது விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.</p><p> 

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவின் மீது விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவில் கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த</h2><p>
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு விவகாரத்தில், பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த ட்ரம்பின் அமெரிக்கா முடிவு செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef1c1158-1fbb-440a-a37a-c4da8f93c33d/26-6aae888c9abd7.webp' />&nbsp;</p><p></p><p>
அத்துடன் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான சார்பை குறைத்துக் கொள்ளவில்லை என்றால், முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரத் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் ட்ரம்பின் நிர்வாகம், இந்தியா மற்றும் சீனாவிற்கு நேரடியான மிரட்டலை விடுத்தது.
</p><p>
அதனைத் தொடர்ந்து இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், அந்நாடுகள் மீது 100 சதவீதம் இறக்குமதி வரிகளை விதிக்கவும் மற்றும் ஈரான் மீதான தடைகளை நீட்டிக்கவும் அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதாவை ட்ரம்ப் அரசு கொண்டு வந்தது. </p><h2>

ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் </h2><p>இந்த நிலையில், குறித்த மசோதாவில் வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டு, அதனை சட்டமாக்கினார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.</p><p>
கடந்த ஜூலை மாதம், "ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் விதிக்கும் 2026ஆம் ஆண்டின் சட்டம்" என்று அழைக்கப்படும் இந்த மசோதா புதன்கிழமையன்று பிரதிநிதிகள் சபையிலும், கடந்த மாதம் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T13:01:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 பில்லியன் டொலரை எட்டும் Anthropic 2026 வருமானம் - விரைவில் IPO திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anthropic-revenue-hits-100-bn-dollar-ipo-nears-1789820980"></link>
            <id>https://news.lankasri.com/article/anthropic-revenue-hits-100-bn-dollar-ipo-nears-1789820980</id>
            <summary type="text">Anthropic revenue hits 100 Bn dollar: Anthropic நிறுவனத்தின் வருமானம் 100 பில்லியன் டொலரை எட்டவுள்ளது.

100 பில்லியன் டொலர்AI துறையில் வேகமாக வளர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Anthropic revenue hits 100 Bn dollar: Anthropic நிறுவனத்தின் வருமானம் 100 பில்லியன் டொலரை எட்டவுள்ளது.</p><h2>

100 பில்லியன் டொலர்</h2><p>AI துறையில் வேகமாக வளர்ந்து வரும் Anthropic நிறுவனம், 2026-இல் 100 பில்லியன் டொலர் அளவுக்கு ஆண்டு வருமானத்தை எட்டும் நிலையில் உள்ளது.</p><p>

New York Times மற்றும் Bloomberg வெளியிட்ட தகவலின்படி, Anthropic-ன் Claude AI மென்பொருளுக்கான வணிகத் தேவைகள் மிகவும் அதிகரித்துள்ளதால், வருமானம் கடந்த ஆண்டு 9 பில்லியனிலிருந்து, 2026 ஜூலை மாதத்தில் 65 பில்லியனாக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2086d9ad-2cac-4aa0-8507-f06518e678d9/26-6aae80368fb44.webp' /></p><p>
</p><h2>
IPO திட்டம்</h2><p>இந்த வளர்ச்சி, Anthropic-க்கு IPO (Initial Public Offering) நடத்தும் திட்டத்தை வலுப்படுத்தியுள்ளது. நிறுவனம் ஜூன் மாதம் SEC-க்கு (Securities and Exchange Commission) ரகசியமாக IPO ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. </p><p>Reuters மற்றும் Wall Street Journal தகவலின்படி, IPO நவம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளது.

Anthropic-ன் வாடிக்கையாளர்களில் Fortune 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் அடங்குகின்றன. </p><p></p><p>Claude AI மென்பொருள், கோடிங், அலுவலக பணிகள் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளை எளிமைப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், AI பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் கவலைகள் அதிகரித்து வருகின்றன. </p><p>Anthropic CEO Dario Amodei, “அடுத்த தலைமுறை AI மாதிரிகளை உருவாக்கும் வேகத்தை குறைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.</p><p>

Anthropic-ன் IPO, AI துறையில் மிகப்பெரிய பங்குச் சந்தை அறிமுகமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். நிறுவனம் தற்போது 965 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் உள்ளது.
</p><p>
இந்த IPO வெற்றிகரமாக நடந்தால், Anthropic நிறுவனம் OpenAI மற்றும் Google போன்ற போட்டியாளர்களை விட வலுவான நிலையைப் பெறும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T12:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து பிரித்தானிய அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ள சட்டவிரோத புலம்பெயர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/7-migrants-found-hiding-in-back-of-lorry-in-uk-1789820198"></link>
            <id>https://news.lankasri.com/article/7-migrants-found-hiding-in-back-of-lorry-in-uk-1789820198</id>
            <summary type="text">Seven migrants are found hiding in back of a lorry in England: இங்கிலாந்தில், லொறி ஒன்றின் பின்னால் புலம்பெயர்வோர் ஏழு பேர் மறைந்திருந்தது கண்டுபிடிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Seven migrants are found hiding in back of a lorry in England: இங்கிலாந்தில், லொறி ஒன்றின் பின்னால் புலம்பெயர்வோர் ஏழு பேர் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>


பிரித்தானியா சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.&nbsp;</p><p>
படகுகள் மூலம் புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் நிலையில், அந்த படகுகளை இயக்குவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் புதிதாக சட்டம் கூட இயற்றியாயிற்று.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60bd6a5b-7da4-42a8-b254-04bf264d6339/26-6aae7d28126ce.webp' /></p><p>

ஆனாலும், சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் பிரித்தானிய அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
</p><h3>
பெரும் சவாலாக உள்ள சட்டவிரோத புலம்பெயர்தல்</h3><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a9b104-632a-4630-8b38-377ce3c5c510/26-6aae7d27533af.webp' /></p><p>காரணம் என்னவென்றால், முதலில் லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் சட்டவிரோத புலம்பெயர்வோர்.&nbsp;</p><p>

ஆனால், கெடுபிடிகள் அதிகரிக்கவே, சிறு படகுகள் மூலம் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்பத் துவங்கினார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.
</p><p>
இப்போது, படகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுக்க பிரான்ஸ், பெல்ஜியம் முதலான நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளது பிரித்தானிய அரசு.&nbsp;</p><p>

விடயம் என்னவென்றால், படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய கெடுபிடிகள் அதிகரிக்கவே, மீண்டும் லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றுவருகிறார்கள் சட்டவிரோத புலம்பெயர்வோர்.

அவ்வகையில், நேற்று முன்தினம், இங்கிலாந்திலுள்ள Hertfordshireஇலுள்ள சாலை ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்றை மடக்கிச் சோதனையிட்டுள்ளனர் பொலிசார்.&nbsp;</p><p></p><p>
அப்போது, அந்த லொறிக்குள் புலம்பெயர்வோர் 7 பேர் மறைந்திருந்தது தெரியவந்துள்ளது.</p><p>

சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு உதவியாக இருந்ததாக, அந்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T12:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[96 ஓட்டங்கள் இலக்கு: 20வது ஓவரில் எட்டிய ஹொங்கொங் சீனா..திணறடித்த ஜப்பான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hongkong-china-beat-japan-by-4-wickets-1789819506"></link>
            <id>https://news.lankasri.com/article/hongkong-china-beat-japan-by-4-wickets-1789819506</id>
            <summary type="text">HongKong China beat Japan by 4 Wickets: ஜப்பான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹொங்கொங் சீனா வெற்றி பெற்றது.

ஜப்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p>HongKong China beat Japan by 4 Wickets: ஜப்பான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹொங்கொங் சீனா வெற்றி பெற்றது.
</p><p>
ஜப்பான் அணி நிர்ணயித்த 96 ஓட்டங்கள் இலக்கினை, ஹொங்கொங் சீனா 20வது ஓவரில் எட்டி வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ஜப்பான் 95 ஓட்டங்கள் &nbsp;&nbsp;</h2><p>
ஹொங்கொங் சீனா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி கான்டோவில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8344673-d249-4f9f-a05e-6080a670b4c3/26-6aae7b4a891dd.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய ஜப்பான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ஓட்டங்கள் எடுத்தது. பெஞ்சமின் இட்டோ டேவிஸ் 35 ஓட்டங்கள் எடுத்தார்.
</p><p>
எஹ்சான் கான் 3 விக்கெட்டுகளும், யாசிம் முர்தஸா 2 விக்கெட்டுகளும், அனஸ் கான் மற்றும் ராணா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
</p><p>
பின்னர் ஆடிய ஹொங்கொங் சீனா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

ஷாஹித் வாசிப் மற்றும் ஹசன் கான் இருவரும் வெற்றிக்காக போராடினர். </p><p>ஹசன் கான் 25 ஓட்டங்களில் வெளியேற, ஹொங்கொங் சீனா 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
</p><p>
மிரட்டலாக பந்துவீசிய பெஞ்சமின் இட்டோ டேவிஸ் 3 விக்கெட்டுகளும், சார்லி ஹரா 2 விக்கெட்டுகளும், மகோடோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T12:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்வோர் பயணிக்கும் பிரம்மாண்ட படகை இயக்கிய நபருக்கு சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-jails-teen-asylum-for-steering-migrant-boat-1789819228"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-jails-teen-asylum-for-steering-migrant-boat-1789819228</id>
            <summary type="text">UK jails teen asylum seeker for steering overcrowded Channel migrant boat: பிரம்மாண்ட புலம்பெயர்வோர் படகொன்றை இயக்கிய நபருக்கு பிரித்தானியாவில் சிறைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK jails teen asylum seeker for steering overcrowded Channel migrant boat: பிரம்மாண்ட புலம்பெயர்வோர் படகொன்றை இயக்கிய நபருக்கு பிரித்தானியாவில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>

பிரித்தானியா சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.</p><p>

இந்நிலையில், பிரம்மாண்ட புலம்பெயர்வோர் படகொன்றை இயக்கிய இளைஞர் ஒருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><h3>
பிரம்மாண்ட படகை இயக்கிய நபருக்கு சிறை
</h3><p>
பிரான்சிலிருந்து புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறு ரப்பர் படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சிகள் நாடாளுமன்றம் வரை ஒலித்துவரும் நிலையில், ‘சிறுபடகுகள்’ என்னும் பதம் ஊடகங்களில் முக்கிய இடம்பெற்றுவந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9008bf55-4ac4-4dd0-bf73-204e21205137/26-6aae795ddf0d0.webp' /></p><p>

அரசியல்வாதிகள், சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரால் பெரும் தொல்லை என்னும் ரீதியில் முழங்கிக்கொண்டிருக்க, அதை கேலிக்கூத்தாக்குவதுபோல, சிறு படகுகள் இல்லை, பெரிய படகுகள் மூலம் புலம்பெயர்வோரை அனுப்பத் துவங்கினார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.
</p><p>
ஆக, இந்த பிரம்மாண்ட படகுகளால் அரசுக்கு புதிய தலைவலி துவங்கிய நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், புதிய சட்டம் ஒன்றை இயற்றியது பிரித்தானியா.&nbsp;</p><p></p><p>
அதன்படி, படகுகள் மூலம் புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் நிலையில், அந்த படகுகளை இயக்குவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
</p><p>
இந்நிலையில், சமீபத்தில் 165 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்கு கொண்டுவர முயன்ற பிரம்மாண்ட படகொன்றை மடக்கிப் பிடித்தனர் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள்.
</p><p>
அந்த படகை இயக்கிய சூடான் நாட்டைச் சேர்ந்த Chan Mathok Atak (19) என்னும் இளைஞருக்கு நேற்று கேன்டர்பரி க்ரௌன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a386db-11da-446d-9511-bffa768ed182/26-6aae795eb3d35.webp' /></p><p>
Chanக்கு இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனைக்காலம் முடிவடைந்ததும், அவர் தன் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படவும் வாய்ப்புள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>
Chan இயக்கிய படகில் 31 சிறுவர்கள் உட்பட 165 புலம்பெயர்ந்தோருடன் பயணித்த நிலையில், அந்த படகில் பாதுகாப்பு உடைகளோ, உபகரணங்களோ, முதலுதவி சிகிச்சைக்கான மருந்துகளோ இல்லை.
</p><p>
அத்துடன், ஒரே ஒரு சிறிய இயந்திரத்தின் உதவியுடன், 165 புலம்பெயர்ந்தோருடன் நகர முடியாமல், மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது அந்தப் படகு.
</p><p>
ஆக, அத்தனை உயிர்களை ஆபத்தான வகையில் ஆங்கிலக்கால்வாயில் பயணிக்கவைத்ததற்காக, அந்த படகை இயக்கியதாக கருதப்படும் Chan கைது செய்யப்பட்டு அவருக்கு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T12:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக ஏதிலிகள் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/refugee-team-1st-time-participate-in-asian-games-1789818510"></link>
            <id>https://news.lankasri.com/article/refugee-team-1st-time-participate-in-asian-games-1789818510</id>
            <summary type="text">refugees team first time participate in asian games: ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக ஏதிலிகள் அணி இடம் பெற்றுள்ளது. 

ஆசிய விளையாட்டு போட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>refugees team first time participate in asian games: ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக ஏதிலிகள் அணி இடம் பெற்றுள்ளது. </p><h3>

ஆசிய விளையாட்டு போட்டியில் ஏதிலிகள் அணி</h3><p> 

20 வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் இன்று தொடங்கி, அக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
</p><p>
இந்தத் தொடரில், 45 நாடுகளை சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c32ad5bc-207a-4a9a-9eaf-40053c695b64/26-6aae76901a580.webp' /></p><p>

இந்த ஆசிய விளையாட்டு போட்டியில், முதல் முறையாக ஆசிய ஏதிலிகள் அணியும் பங்குபெற உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>

இந்த ஏதிலிகள் அணியில், டேக்வாண்டோவில் பங்கேற்கும் 2 விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Meet Tala Al-Hunaidi and Mahmoud Al Hussein.<br><br>They’re Syrian refugees living in Jordan and they’re about to make history.<br><br>They will become members of the first-ever Refugee Team to compete at an Asian Games. <a href="https://x.com/hashtag/AichiNagoya2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AichiNagoya2026</a> <a href="https://t.co/eVBvztmyhO">pic.twitter.com/eVBvztmyhO</a></p>&mdash; UNHCR, the UN Refugee Agency (@Refugees) <a href="https://x.com/Refugees/status/2101160862983548942?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
24 வயதான மஹ்மூத் அல் ஜாசிம் அல் முகமது அல் ஹுசைன் ஆடவர் 80 கிலோ கியோருகி பிரிவிலும், 18 வயதான தலாஹ் அல் ஹசன் அல் ஹினிடே மகளிர் 49 கிலோ கியோருகி பிரிவிலும் போட்டியிடுவார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67404e6c-10ab-4596-92ba-644782a99fb9/26-6aae7690c2451.webp' /></p><p>
சிரியாவை சேர்ந்த இந்த 2 விளையாட்டு வீரர்களும் ஜோர்டானில் உள்ள அஸ்ராக் ஏதிலிகள் முகாமில் வசிக்கின்றனர். </p><p>

இருவரில் யாரேனும் தங்கம் வென்றால், பதக்க வழங்கும் விழாவின் போது OCA கொடி ஏற்றப்பட்டு, OCA கீதம் இசைக்கப்படும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T11:48:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்... வழங்கப்பட்ட வாக்குச் சீட்டுகளில் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-voters-favour-of-putin-1789817772"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-voters-favour-of-putin-1789817772</id>
            <summary type="text">Russian voters are handed ballot papers with an X already marked: ரஷ்ய வாக்காளர்களுக்கு ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் வழங்கப்படுகின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian voters are handed ballot papers with an X already marked: ரஷ்ய வாக்காளர்களுக்கு ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
</p><p>ரஷ்ய வாக்காளர்களுக்கு, விளாடிமிர் புடினின் கட்சிக்கு ஆதரவாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.</p><h2>குறியீடு இடப்பட்ட</h2><p>
</p><p>போர்க்காலச் சூழலில் நடைபெறும் தனது முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான மூன்று நாள் வாக்குப்பதிவை ரஷ்யா வெள்ளிக்கிழமையன்று தொடங்கியது; இதில் குறிப்பிடத்தக்க எதிர்க்கட்சிகள் ஏதுமில்லாத நிலையில், விமர்சகர்களால் 'போலி' என்று குறிப்பிடப்படும் இத்தேர்தல் புடினின் அரசியல் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9e9df98-18a5-4025-9f4f-c8a9feabe4a4/26-6aae73ae515bb.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், சைக்‌டிவ்கார் (Syktyvkar) நகர வாக்காளர்களுக்கு, புடினின் 'யுனைடெட் ரஷ்யா' கட்சிக்கு ஆதரவாக ஏற்கனவே குறியீடு இடப்பட்ட வாக்குச்சீட்டுகள் தவறுதலாக வழங்கப்பட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒலெக் மிகைலோவ் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இதற்கிடையில், தென்மேற்கு ரஷ்யாவின் வொரோனேஷ் (Voronezh) நகரில், ஒருவர் பல வாக்குச் சீட்டுகளை வாக்குப்பெட்டியில் போடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p></p><p> </p><p>செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் இதே போன்றதொரு சம்பவம் பதிவாகியுள்ளது; அங்கு வாக்குச்சாவடி ஊழியர் ஒருவர் சுமார் 100 வாக்குச்சீட்டுகளைப் பெட்டிக்குள் திணிப்பது காணொளியில் பதிவாகியுள்ளது. </p><p>இதற்கிடையில், ஐக்கிய ரஷ்யாவுக்கு வாக்களிக்குமாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, அரசு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தாங்கள் பூர்த்தி செய்த வாக்குச் சீட்டுகளின் புகைப்படங்களை தங்கள் மேலதிகாரிகளுக்கு அனுப்பும்படி கட்டளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. </p><p>சமாரா பிராந்தியத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் கையில் வாக்குச் சீட்டுகளுடன் வெளியேறுவதைக் காண முடிந்தது, அதே சமயம் சகலின் தீவில், நடமாடும் வாக்குச் சாவடிகள் பார்வையாளர்கள் இல்லாமல் இயங்கின.</p><p></p><p> </p><p>எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய தொலைதூர ட்ரோன் தாக்குதல்கள் பரவலான எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் நடைபெற்றுள்ளது. </p><p>வைல்ட்பெர்ரீஸ் மற்றும் ஓசோன் ஆகிய இணையவழி சில்லறை விற்பனையாளர்களுக்குச் சொந்தமான கிடங்குகளும் தாக்கப்பட்டன. இந்தச் சேதம் ரஷ்யப் பொருளாதாரத்தின் சிக்கல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், லட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் போரின் தாக்கத்தை உணரச் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0aa433a-2d7e-40cf-920f-2b3e304c9e04/26-6aae73af06f92.webp' /></p><p> </p><p>கிராஸ்னோடர் பிராந்தியத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ட்ரோன் தாக்குதலால் ஜன்னல்கள் உடைந்ததைத் தொடர்ந்து, அந்த வாக்குச்சாவடி வேறொரு இடத்திற்கு மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் எல்லா பாம்ஃபிலோவா தெரிவித்தார். </p><p>போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட, ஆனால் இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இல்லாத உக்ரைனின் நான்கு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களும் முதன்முறையாக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கின்றனர். </p><p>2014-இல் ரஷ்யாவால் சட்டவிரோதமாக இணைத்துக்கொள்ளப்பட்ட கருங்கடல் தீபகற்பமான கிரீமியாவிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-19T11:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோபல் பரிசு தொடர்பில் ஒரு புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nobel-prize-money-raised-1789817361"></link>
            <id>https://news.lankasri.com/article/nobel-prize-money-raised-1789817361</id>
            <summary type="text">Nobel prize sum raised: நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.


நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது.

நோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nobel prize sum raised: நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.


நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது.</p><h3>

நோபல் பரிசு தொடர்பில் ஒரு புதிய தகவல்</h3><p>

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றவர்கள் பெயர்கள், அக்டோபர் மாதம் 5 முதல் 12ஆம் திகதிக்குள்ளான காலகட்டத்தில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நோபல் பரிசை வழங்கும் நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b9f6b4f-af68-4c75-9204-124349154b21/26-6aae72134355d.webp' /></p><p>
ஆம், இதற்கு முன் நோபல் பரிசு வென்றவர்களுக்கு 11 மில்லியன் குரோனர் (kronor) வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நோபல் பரிசு வெல்பவர்களுக்கு 12 மில்லியன் குரோனர் வழங்கப்பட உள்ளது.
</p><p>
நோர்வே பணமான 12 மில்லியன் குரோனர் என்பது, 1.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இலங்கை மதிப்பில் அது, 42,22,53,628.20 ரூபாய்.&nbsp;</p><p></p><p>

நோபல் பரிசுகள் வழங்குவது துவங்கப்பட்டு 125 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, அதைக் கொண்டாடும் வகையில் இந்த பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக நோபல் அறக்கட்டளையின் இயக்குநரான Hanna Stjarne தெரிவித்துள்ளார்.
</p><p>
முதல் நோபல் பரிசு, 1901ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அப்போது நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை 150,782 குரோனர் ஆகும்.</p>]]></content>
            <updated>2026-09-19T11:29:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று மாலை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- இந்திய வானிலை மையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/low-pressure-area-forming-over-andaman-sea-1789816258"></link>
            <id>https://news.lankasri.com/article/low-pressure-area-forming-over-andaman-sea-1789816258</id>
            <summary type="text">அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

வானிலை மையம் கூற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
</p><h2>
வானிலை மையம் கூறுகையில்.., </h2><p>

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.</p><p>

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27d35524-e9d2-4199-b36f-09dd046fd7bb/26-6aae6dc45cfa5.webp' /></p><p>குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
</p><p>
தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 3 தினங்களுக்கு நகரக்கூடும்.
</p><p>
மேலும், கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T11:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் இனி சிறார் செய்யும் குற்றங்களுக்கு பெற்றோர் தண்டிக்கப்படலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/parents-could-be-fined-or-jailed-1789815052"></link>
            <id>https://news.lankasri.com/article/parents-could-be-fined-or-jailed-1789815052</id>
            <summary type="text">Parents in England could be jailed for child’s crimes: பிரித்தானியாவில், தங்கள் குழந்தைகளின் குற்றங்களுக்காகப் பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்படலாம்.
க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Parents in England could be jailed for child’s crimes: பிரித்தானியாவில், தங்கள் குழந்தைகளின் குற்றங்களுக்காகப் பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்படலாம்.
</p><p>குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளின் பெற்றோர்கள், தங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இழக்க நேரிடலாம், அபராதங்களைச் சந்திக்க நேரிடலாம், மேலும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆலோசனை அமர்வு</h2><p>
</p><p>சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் தங்கள் பங்கை ஆற்றுவதை உறுதிசெய்வது தொடர்பாக, இளம் குற்றவாளிகள் தொடர்பான நீதி அமைப்பு பெற்றோர்களைப் பொருத்தமான வகையில் பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் என்று&nbsp;அமைச்சர் ஜேக் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3661551b-42a6-47c6-bc67-a125009c8fbf/26-6aae690e631e2.webp' /></p><p> </p><p>பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் நடத்தையைச் சரிசெய்யும் வகையில் ஆலோசனை அமர்வுகளில் (தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சிகள் உட்பட) பங்கேற்கக் கட்டாயப்படுத்தும் வகையிலான 'பெற்றோருக்கான உத்தரவுகளை' (parenting orders) வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் அரசு திட்டங்களை வகுத்துள்ளது; </p><p>இத்தகைய உத்தரவுகளைப் பின்பற்றத் தவறினால் 1,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என அறிவிப்பு வெளியான நிலையிலேயே அமைச்சர் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், மிகத் தீவிரமான சூழல்களில் மட்டுமே பெற்றோருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும், தண்டனை குறித்த முடிவு நீதிபதியின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். </p><p>மட்டுமின்றி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை, அவர் ஊக்கமும் தண்டனையும் கலந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக விவரித்துள்ளார். </p><p>குற்றவியல் நீதித்துறையைச் சேர்ந்த பல நிபுணர்கள் இந்த முன்மொழிவுகளை விமர்சித்துள்ளனர்; மேலும், இந்த உத்தரவுகள் பயனளிக்காதவை என்றும் ஏழைகளைத் தண்டிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். </p><p>டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் உதவிப் பேராசிரியரான நிக்கி ரூட்டர், அபராதத் தொகையை அதிகரிப்பது சமூகங்களின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.</p><h2>குற்றவியல் நடவடிக்கை</h2><p> </p><p>மேலும், வறுமை என்பது ஏராளமான குற்றச் செயல்களுடன் பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் அபராதம் அதிகரிக்க அதிகரிக்க, அவர்களிடம் இருக்கும் பணமும் குறைகிறது. ஒரு குடும்பத்திடம் பணம் குறையக் குறைய, அவர்கள் மேலும் வறுமையில் மூழ்குவதை நாம் காண்கிறோம் என்றார். </p><p>16 வயதுக்குட்பட்ட குழந்தை ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், நீதிமன்றங்கள் 'பெற்றோர் பொறுப்புக்கான உத்தரவு' (parenting order) ஒன்றை வழங்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். </p><p>மேலும் குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்க இது உதவும் என்று அவர்கள் கருதினால், 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கான உத்தரவு குறித்தும் அவர்கள் பரிசீலிக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34a62bb1-6019-40c7-908e-8d65bc250acb/26-6aae690f2013a.webp' /></p><p> </p><p>தண்டனை விதிப்புக்கான கவுன்சிலின் (Sentencing Council) கூற்றுப்படி, இந்த உத்தரவின் காலம் 12 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்; மேலும், பெற்றோர் பொறுப்பு தொடர்பான உத்தரவை மீறுவது ஒரு குற்றவியல் நடவடிக்கையாகக் கருதப்பட்டு, அதிகபட்சமாக 1,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படலாம். </p><p>அரசுப் புள்ளிவிவரங்களின்படி, பெற்றோர் தொடர்பான உத்தரவுகளின் (parenting orders) பயன்பாடு சமீபத்திய ஆண்டுகளில் குறைந்துள்ளது; 2009-10 ஆம் ஆண்டில் 1,000-க்கும் மேற்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், 2022-23 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை வெறும் 33-ஆகக் குறைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T10:47:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகத்தில் கேக் பூசியதால் நண்பர் குத்திக்கொலை: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-killed-by-birthday-boy-after-smearing-cake-1789811812"></link>
            <id>https://news.lankasri.com/article/man-killed-by-birthday-boy-after-smearing-cake-1789811812</id>
            <summary type="text">Man killed by birthday boy after smearing cake on face: ஜம்முவில் பிறந்தநாள் கொண்டாடிய நபர், நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man killed by birthday boy after smearing cake on face: ஜம்முவில் பிறந்தநாள் கொண்டாடிய நபர், நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
</p><p>
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக்கினை முகத்தில் பூசியதால், நண்பர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் ஜம்முவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2>கேக் வெட்டும்போது</h2><p>

ஜம்முவின் லோயர் ரூப் நகர் பகுதியைச் சேர்ந்த நீரஜ் என்பவர், சாலையோரத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efe36fc1-823e-483e-a80a-4a6256f541ff/26-6aae5ed32af3b.webp' />&nbsp;</p><p></p><p>

அப்போது அவரது நண்பர்கள் பவன் நாயர், சோத்ரா, சிங், பாட்தி ஆகியோர் கேக் வெட்டும்போது உடனிருந்தனர். அச்சமயம் பவன் கேக்கினை முகத்தில் பூசியதால் நீரஜ் கடும் கோபமடைந்துள்ளார்.</p><p> உடனே வாக்குவாதம் ஏற்பட, அவர் கத்தியால் நாயரின் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.&nbsp;</p><h2>ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக</h2><p>

இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த பவன், அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். </p><p>ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பவன் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.</p><p>
இதனையடுத்து நீரஜ் மற்றும் அவரது சகோதரர் ரிஷு ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e54147a9-dd50-4351-9ad4-807c7843ffda/26-6aae5ed405767.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T10:03:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைகீழாக... 27,000 அடி உயரத்தில் சாக விடப்பட்ட நபர்: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dying-mountain-guide-hanging-1789811170"></link>
            <id>https://news.lankasri.com/article/dying-mountain-guide-hanging-1789811170</id>
            <summary type="text">Climbers discover dying mountain guide hanging upside-down: தலைகீழாகத் தொங்கியபடி இறக்கும் தருவாயில் இருந்த மலை வழிகாட்டியை மலையேறுபவர்கள் கண்டுபிடித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Climbers discover dying mountain guide hanging upside-down: தலைகீழாகத் தொங்கியபடி இறக்கும் தருவாயில் இருந்த மலை வழிகாட்டியை மலையேறுபவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
</p><p>27,000 அடி உயரத்தில், நள்ளிரவு வேளையில், உலகின் மிக ஆபத்தான மலைப் பாதைகளில் ஒன்றில், மலையேறும் குழுவினர் ஒரு வேதனையான முடிவை எடுக்க வேண்டிய இக்கட்டான சூழலை எதிர்கொண்டனர்.</p><h2>புதிய உலக சாதனை</h2><p>
</p><p>நார்வேயின் மலையேறும் நட்சத்திரமான கிறிஸ்டின் ஹரிலாவும் அவரது குழுவினரும், 2023-ஆம் ஆண்டு கே2 சிகரத்தில் சாதனை படைக்கும் வகையில் ஏறியபோது, ​​இறக்கும் தருவாயில் இருந்த ஒரு மலைச் சுமைதூக்குபவரைக் கண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a77deb-b5b9-4125-b617-b31fecbae44a/26-6aae59e494101.webp' /></p><p> </p><p>அவர்கள் தங்கள் பணியைக் கைவிட்டு, அவரைப் பாதுகாப்பாகக் கொண்டு வர தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டுமா அல்லது புதிய உலக சாதனையைப் படைக்க இன்னும் சில மீற்றர் தூரத்தில் இருக்கும் உச்சியை நோக்கிச் செல்வதா என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டியிருந்தது. </p><p>அவர்கள் பிந்தையதையே தெரிவு செய்தனர்; இந்த முடிவு ஹரிலாவுக்கு எதிராக மாதக்கணக்கில் நீடித்த சர்ச்சைகள், வசைபாடல்கள் மற்றும் கொலை மிரட்டல்களைத் தூண்டியதுடன், மலையேற்ற உலகில் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. </p><p>தற்போது வெளிவந்துள்ள ஒரு புதிய ஆவணப்படம், இதுவரை வெளிவராத பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. அதில், ஹரிலாவின் குழுவினர் பாகிஸ்தானிய சுமைதூக்கு வீரரான முகமது ஹசனைக் கண்டுபிடித்த தருணமும், அவரைக் காப்பாற்ற அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், இறுதியில் அந்த மீட்புப் பணியைக் கைவிட்டதும் சித்தரிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>தற்போது 40 வயதாகும் ஹரிலா, உலகின் மிக உயரமான 14 மலைகளையும் ஏறிய மிக வேகமான மலையேற்ற வீரர் ஆனார்; பாகிஸ்தானில் உள்ள கே2 (K2) மலையில் ஏறியதன் மூலம், வெறும் 92 நாட்களில் அவர் இந்தச் சாதனையை நிறைவு செய்தார். </p><p>வெளியாகியுள்ள அந்த ஆவணப்படத்தில், ஹரிலா மலையில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த பாகிஸ்தானியரைக் கண்டுபிடித்ததை நினைவு கூர்ந்தார், அவரது கால்களைச் சுற்றி கயிற்றில் ஏதோ சிக்கல் இருந்ததை நாங்கள் பார்த்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccc1ffb7-20d2-4c6e-9476-c06fd0ce56ac/26-6aae59e549475.webp' /></p><p> </p><p>அவரை நெருங்க தங்களின் குழு கடும் முயற்சிகள் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மரணித்துக்கொண்டிருக்கும் சுமை தூக்குபவரைச் சென்றடைய முயற்சிக்கும் அக்குழுவினர், இருளில் பனி படர்ந்த மலைச்சரிவில் சிரமப்பட்டு முன்னேறுவதை இப்படம் காட்டுகிறது. </p><p>இறுதியில் ஒரு புதிய கயிற்றைப் பயன்படுத்தி ஹசனைப் பாதுகாப்பாக மீட்க அந்த அணியால் முடிந்தது என்று ஹரிலா கூறினார்; ஆனால், அனைவரும் திரும்பிச் செல்வது சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.</p><h2>மிகவும் ஆபத்தான நிலை</h2><p> </p><p>மட்டுமின்றி, அவர்கள் ஹசனை அடைந்தபோது, ​​அவர் ஏற்கனவே மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். அவர் முற்றிலும் உறைந்து போயிருந்தார்.</p><p> அவரிடம் ஆக்சிஜன் இல்லை, கையுறைகள் இல்லை, குளிரைத் தடுக்கும் சிறப்பு உடையும் (down suit) இல்லை. நான் அவரைச் சூடுபடுத்தவும், அவரது விரல்களை அசைக்கவும், அவருக்குச் சுடுநீர் கொடுக்கவும் முயன்றேன் என்கிறார் ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர், கேப்ரியல். </p><p>இந்த நிலையில், இன்னொரு பேராபத்து அவர்களைச் சூழ்ந்தது. K2 மலையின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் ஒன்றான 'பாட்டில்நெக்' (Bottleneck) பகுதிக்குச் சற்று அப்பால், அதிகாலை சுமார் 3:20 மணியளவில், ஒரு பெரிய பனிச்சரிவு ஒரு செராக் (செங்குத்தான பனிப்பாறை) பகுதியிலிருந்து சரிந்து விழுந்தது. </p><p>குழுவின் இரு உறுப்பினர்கள் அப்பகுதியில் ஏற்கனவே முன்னேறிச் சென்றிருந்ததால், தானும் லாமாவும் கேப்ரியலிடமிருந்து பிரிந்து மேலே செல்லத் தொடங்கியதாகவும், அதேவேளையில் அவர் ஹசனுடன் தங்கிவிட்டதாகவும் ஹரிலா விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d425ed1-a693-4f6a-bbe7-7f00f7b22168/26-6aae59e601065.webp' /></p><p> </p><p>ஹசன் ஏற்கனவே மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அவர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதைத் தான் உணர்ந்துகொண்டதாக கேப்ரியல் பின்னர் நினைவுகூர்ந்தார். </p><p>விடிந்ததும், ஹசனைக் காப்பாற்ற மலையேறுபவர்களால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை; அவர்கள் மலையேற்றத்தைத் தொடர்ந்தனர். ஹசனை மீட்டுவர முடியாமல் போனதால் ஹர்லா எதிர்கொண்ட வெறுப்பையும், கொலை மிரட்டலையும் அவர் நினைவுகூர்ந்தார். </p><p>மலையேற்றத்தை முடித்துத் திரும்பிய உடனேயே முழு விவரத்தையும் வெளிப்படுத்தாததே அவர்களின் மிகப்பெரிய தவறு என்று அவர் கூறுகிறார். </p><p>அதனைத் தொடர்ந்து ஹசனின் மரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. ஹசன் பணியாற்றிய நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்குச் செயல்பாடுகளை நிறுத்திவைக்க வேண்டியிருந்தது.</p>]]></content>
            <updated>2026-09-19T09:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[AIயின் பிழையான அறிக்கையால் சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட இருந்த மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/false-ai-report-lead-almost-war-between-china-us-1789810166"></link>
            <id>https://news.lankasri.com/article/false-ai-report-lead-almost-war-between-china-us-1789810166</id>
            <summary type="text">false ai report leads almost war between china and us: AIயின் பிழையான அறிக்கையால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட இருந்த சம்பவம் தற்போது தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>false ai report leads almost war between china and us: AIயின் பிழையான அறிக்கையால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட இருந்த சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. </p><h3>

AIயின் பிழையான அறிக்கை</h3><p>

செயற்கை நுண்ணறிவின் தாக்கம், நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. 

ஆனால், செயற்கை நுண்ணறிவு முழுமையாக நம்பகத்தன்மை உடையது இல்லை என நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். </p><p>

நிபுணர்களின் கூற்றுப்படியே, செயற்கை நுண்ணறிவு அவ்வப்போது பிழையான தகவல்களை வழங்கி வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/239f4664-343a-48a2-9088-1dafbe31b4de/26-6aae55f89359a.webp' /></p><p>

அவ்வாறாக AI வழங்கிய பிழையான அறிக்கை ஒன்று, அமெரிக்கா மற்றும் சீனா இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பை உருவாக்கியிருந்தது. </p><p>

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வந்த சூழலில், மத்திய கிழக்கு கடல் பகுதியிலிருந்து சீன கப்பல் ஒன்று அணு ஆயுதத் திட்டதிற்கான பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வதாக அமெரிக்கா ராணுவத்திற்கு உளவு தகவல் அறிக்கை கிடைத்துள்ளது.&nbsp;</p><p></p><h3>

சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட இருந்த மோதல்</h3><p> 

இதனையடுத்து, ஆயுதங்களுடன் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் கப்பலில் ஏற தயாராக இருந்தனர். அதே போல், அமெரிக்கா ராணுவ விமானங்களும் வானில் வட்டமிட தொடங்கியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a23866-b43a-452c-9215-5fba67274f92/26-6aae55f7de600.webp' /></p><p>

இதனிடையே ராணுவ அதிகாரிகள் அந்த அறிக்கையை ஆய்வு செய்ததில், அது AI மூலம் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. </p><p>

ஹவாயில் அமைந்துள்ள அமெரிக்க பசிபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளை மையத்திலிருந்து பெறப்பட்ட, கப்பலின் பயணிகளின் பட்டியல் குறித்த உளவுத் தகவல்களை ஆய்வாளர் ஆய்வு செய்தபோது இந்தச் சம்பவம் தொடங்கியது. </p><p>

அந்த ஆய்வாளர் பயன்படுத்திய AI மென்பொருள், கப்பல் கொண்டு சென்ற பொருளைத் தவறாக அடையாளம் கண்டதை அதிகாரிகள் உறுதிசெய்ததை அடுத்து, அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.</p><p>

இந்த சம்பவம் குறித்து விவரித்த அமெரிக்கா ராணுவ அதிகாரிகள், "அந்த உளவுத்துறை அறிக்கை முற்றிலும் பொய்யானது ஆனால் கிட்டத்தட்ட ஒரு போரைத் தொடங்கிவிட்டது" என தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>

அந்தக் கப்பல் உண்மையில் எதை ஏற்றிச் சென்றது, எங்கு சென்றுகொண்டிருந்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.</p><p>

AI தொழில்நுட்பம் மனித கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்கக்கூடும், AI இன்னும் சில ஆண்டுகளில் மனித குலத்தையே அழித்து விட வாய்ப்புள்ளதாக Open AI மற்றும் Anthropic ஆகிய முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றிய ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்த பின்னர் தங்களது பணியை ராஜினாமா செய்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

ஆனால், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T09:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[OpenAI 2030-க்குள் 278 பில்லியன் டொலர் இழப்பை சந்திக்கலாம் - FT அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/openai-may-burn-278-bn-dollars-by-2030-ft-report-1789809001"></link>
            <id>https://news.lankasri.com/article/openai-may-burn-278-bn-dollars-by-2030-ft-report-1789809001</id>
            <summary type="text">OpenAI may burn 278 Bn Dollars by 2030: OpenAI நிறுவனம் 2030-க்குள் மிகப்பெரிய நிதி இழப்பை சந்திக்கக்கூடும் என Financial Times வெளியிட்ட தகவல் அதிர்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>OpenAI may burn 278 Bn Dollars by 2030: OpenAI நிறுவனம் 2030-க்குள் மிகப்பெரிய நிதி இழப்பை சந்திக்கக்கூடும் என Financial Times வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

அந்த அறிக்கையின் படி, 2026 முதல் 2030 வரை OpenAI-யின் negative free cash flow (செலவுகள் வருமானத்தை விட அதிகம்) 278 பில்லியன் டொலர் வரை செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/915df1be-94ec-462d-a7b6-15cd2003b123/26-6aae516b00dbf.webp' /></p><p>இது ஜூலை மாதம் நடந்த தனியார் நிறுவனக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவல். அப்போது, OpenAI மிகப்பெரிய கணினி சக்தி (computing power) ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
OpenAI-யின் வருமானம் 2026-இல் 36 பில்லியன் டொலரில் இருந்து 2030-இல் 350 பில்லியன் டொலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கணினி சக்தி மற்றும் தொழில்நுட்ப முதலீடுகளில் மிகப்பெரிய செலவுகள் காரணமாக, அந்த வருமானம் போதாது என FT தெரிவித்துள்ளது.
</p><p></p><p>மேலும், Bloomberg தகவலின்படி, OpenAI புதிய முதலீட்டாளர்களுடன் 1.2 டிரில்லியன் டொலர் மதிப்பீட்டில் நிதி திரட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. IPO (Initial Public Offering) இன்னும் திட்டமிடப்பட்டுவருவதால், இந்த ஆண்டு நடைபெறாது என CEO சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த கூடுதல் நிதி, IPO-வை தள்ளிப்போடுவதற்கும், mergers &amp; acquisitions (இணைப்பு மற்றும் கையகப்படுத்தல்) நடவடிக்கைகளுக்கும் உதவக்கூடும்.</p><p>

OpenAI-யின் இந்த மிகப்பெரிய செலவுகள், AI துறையில் உலகளாவிய போட்டியை அதிகரிக்கும் நிலையில், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியைப் பற்றி பல கேள்விகளை எழுப்புகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T09:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் உயர் கல்வி முடித்த இளைஞர்: பணத்துக்காக செய்த பயங்கர செயல்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-returned-graduate-held-in-1-cr-ransom-plot-1789808739"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-returned-graduate-held-in-1-cr-ransom-plot-1789808739</id>
            <summary type="text">UK returned graduate held in1 crore Rupees ransom plot: பிரித்தானியாவில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் கேட்டு சிறுவன் ஒருவனை கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK returned graduate held in1 crore Rupees ransom plot: பிரித்தானியாவில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் கேட்டு சிறுவன் ஒருவனை கடத்திய விடயம் கொலையில் முடிந்துள்ளது.</p><p>


பிரித்தானியாவில் உயர் கல்வி முடிந்த இளைஞர் ஒருவர், கொலை வழக்கொன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
சிறுவனை கடத்திய இளைஞர்</h3><p>

பெங்களூருவைச் சேர்ந்த வாலா பாஸ்கர் ரெட்டி (28) என்னும் இளைஞர், சமீபத்தில்தான் பிரித்தானியாவில் உயர் கல்வி முடித்து இந்தியா திரும்பியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca90d601-d43c-402e-a03c-7671ce8d4426/26-6aae506516b59.webp' /></p><p>

இந்நிலையில், ரெட்டியும், பள்ளி ஒன்றில் பேருந்து கிளீனராக வேலை செய்யும் ஏடுகொண்டலு என்னும் நபரும் சேர்ந்து, சிறுவன் ஒருவனை கடத்த திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
அதன்படி, முன்பு ரெட்டி வீட்டுக்கு அருகில் வாழ்ந்துவந்த ப்ரஜ்வால் என்னும் எட்டாம் வகுப்பு சிறுவனை, பட்டாசு வாங்கித் தருவதாகவும், தனது காரை ஓட்ட அனுமதிப்பதாகவும் கூறி, ஆசை காட்டி அழைத்துச் சென்றுள்ளனர் இருவரும்.
</p><p>
வழியில் ஓரிடத்தில் அந்த சிறுவனை ஒரு கட்டிடத்தில் அடைத்துவைத்து, அவனை பேசவைத்து, வீடியோ ஒன்றை எடுத்து, அவனது பெற்றோரை மிரட்டி பணம் பறிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் இருவரும்.&nbsp;</p><p></p><p>
அப்போது, அந்தச் சிறுவனை இரண்டு முறை அவர்கள் தாக்கியுள்ளார்கள். இரண்டாவது முறை தாக்கும்போது அந்தச் சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளான்.
</p><p>
பயந்துபோன, ஏடுகொண்டலு ஓட்டம் பிடிக்க, சிறுவனின் உடலை காரின் பின்பக்கத்தில் அடைத்து, காரை எடுத்துக்கொண்டு ஆந்திரா செல்ல முடிவு செய்துள்ளார் ரெட்டி.
</p><p>
ஆனால், பதற்றத்தில் அவரது கார் இரண்டு இடங்களில் விபத்துக்குள்ளாகியுள்ளது. மின் கம்பம் ஒன்றிலும், பின் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகே நின்றிருந்த இரண்டு கார்கள் மீதும் ரெட்டியின் கார் மோத, அங்கிருந்தவர்கள் ரெட்டியை மடக்கிப் பிடித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அவரது காரை சோதனையிடும்போது, காரின் பின் பக்கத்தில் சிறுவன் ஒருவன் உடல் இருக்கவே, உடனடியாக பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
ரெட்டியைக் கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், ஏடுகொண்டலுவையும் தேடி வருகிறார்கள்.
</p><p>
ரெட்டிக்கும் அவர் கடத்திய சிறுவன் குடும்பத்துக்கும் பகை எதுவும் இல்லை என்பது உறுதியான நிலையில், எதனால் அவர் அந்தச் சிறுவனை கடத்தினார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
</p><p>
இந்நிலையில், ரெட்டி பிரித்தானியாவுக்குக் கல்வி கற்கச் சென்றதில், அவரது தந்தைக்கு மூன்று கோடி ரூபாய் கடன் ஆகிவிட்டதால், அந்தக் கடனை அடைக்க, அந்தச் சிறுவனைக் கடத்தி அவனது பெற்றோரிடமிருந்து பணம் பறிக்க ரெட்டி திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T09:05:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வக்ர நிவர்த்தியடையும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sani-vakra-peyarchi-1789806963"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sani-vakra-peyarchi-1789806963</id>
            <summary type="text">நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
</p><p>
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
</p><p>
இந்நிலையில், தற்போது சனி பகவான் மீன ராசியில் ஜூலை 27ஆம் திகதி முதல் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.</p><p> </p><p></p><p>மேலும், சனி டிசம்பர் 11ஆம் திகதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். </p><p>

அந்தவகையில், சனி வக்ர நிவர்த்தி அடைவதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.&nbsp;&nbsp;</p><h2>ரிஷபம்
</h2><ul><li>
வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
</li><li>
வாழ்க்கையில் சந்தித்து வந்த சிரமங்கள் முடிவுக்கு வரும்.
</li><li>
பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
</li><li>
பணப் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/161d19c5-c51e-4f8f-ab3a-ae96c4fe0a61/26-6aae49758a557.webp' /></p><p>
</p><h2>
மிதுனம்
</h2><ul><li>
நல்ல பலன்கள் கிடைக்கும்.
</li><li>
புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
</li><li>
நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.</li><li>

பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.</li><li>

மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/430fbd3f-6b58-4652-9d95-2f5f7ea6d146/26-6aae4976417c5.webp' /></p><h2>

துலாம்</h2><ul><li>

தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
</li><li>
வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
</li><li>
முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.</li><li>

நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் நிறைவு பெறும்.
</li><li>
சிலருக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.&nbsp; &nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59b09021-f855-431c-b8cc-4a120b4de449/26-6aae4976e7c16.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T08:36:57+00:00</updated>
        </entry>
    </feed>
