<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-18T19:27:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவை குறிவைக்கும் ரஷ்யா: ஜனாதிபதி மக்ரோன் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/macron-sounds-alarm-over-russian-attacks-on-eu-1789758649"></link>
            <id>https://news.lankasri.com/article/macron-sounds-alarm-over-russian-attacks-on-eu-1789758649</id>
            <summary type="text">பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா மீதான ரஷ்யாவின் கலப்பின தாக்குதல் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மக்ரோன் எச்சரிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா மீதான ரஷ்யாவின் கலப்பின தாக்குதல் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>மக்ரோன் எச்சரிக்கை</h2><p>
ரஷ்யாவின் விரோத போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் கலப்பினப் போர் ஆபத்து அதிகரித்து இருப்பதாகவும் பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p> எலிசி அரண்மனையில் செய்தியாளர்களை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ரஷ்யாவின் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தேவையான அனைத்து பாதுகாப்பு வியூகங்களை ஏற்படுத்தவும், விரிவான உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கான உத்தரவையும் வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21e56dee-44c7-460a-88fa-db3f5d0ffe7a/26-6aad8cbb295c7.webp' /></p><p> சமீபத்திய காலத்தில் ரஷ்யா முன்னெடுத்து வரும் அத்துமீறிய தாக்குதல்களை சுட்டிக்காட்டிய மக்ரோன் , இதற்கான பதிலடிகள் நிச்சயமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.</p><p> &nbsp;எங்களை அச்சுறுத்துவதும், உக்ரைனுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்பதை முடக்குவதுமே ரஷ்யாவின் நோக்கம் என்றும், ஆனால் அதற்கு நேர்மாறான பலன்கள் மட்டுமே ரஷ்யாவிற்கு கிடைக்கும் என்றும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> இன்று நம்முடைய பாதுகாப்பும், நாளை நம்முடைய பாதுகாப்பும் உக்ரைனிடம் தான் அடங்கியுள்ளது நாம் நன்கு அறிவோம் என்பதால் எதற்கும் அஞ்ச மாட்டோம் என்று மக்ரோன் தெரிவித்துள்ளார்.</p><p>உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதை தடுப்பதற்காக ரஷ்யா இத்தகைய அத்துமீறிய தாக்குதலில் ஈடுபடுவதாக பல்வேறு ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தற்போது பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் இந்த கருத்தும் அதனுடன் ஒத்துப் போகிறது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T19:11:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி விமான தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: சேதமடைந்த இத்தாலிய போர் விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/italian-fighter-jet-get-attacked-in-saudi-1789750272"></link>
            <id>https://news.lankasri.com/article/italian-fighter-jet-get-attacked-in-saudi-1789750272</id>
            <summary type="text"> Italian Fighter Jet get attacked in Saudi: சவுதி விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இத்தாலிய போர் விமானம் சேதமடைந்து இருப்பது உறுதி செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p> Italian Fighter Jet get attacked in Saudi: சவுதி விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இத்தாலிய போர் விமானம் சேதமடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2> இத்தாலிய போர் விமானம் சேதம்</h2><p>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைக்கும் சவுதி அரேபியாவின் ராணுவத்திற்கும் இடையே மோதலானது தீவிரமடைந்து வருகிறது.</p><p> இந்த சூழ்நிலையில் வியாழக்கிழமை மேற்கு சவுதி அரேபியாவின் தைஃப் பகுதியில் அமைந்துள்ள கிங் பஹ்த் விமான தளத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p> இந்த தாக்குதலில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இத்தாலிய ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.</p><p></p><p> இந்த தகவலை வெள்ளிக்கிழமை இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் குவிடோ குரோசெட்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27bf1d00-880a-4463-8fa7-010bbe0631ac/26-6aad6c022e425.webp' /></p><p> தாக்குதலுக்கு உள்ளான போர் விமானம், ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிரான கூட்டுப்படைக்காக இத்தாலியின் தரப்பாக வழங்கப்பட்ட போர் விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதில் இத்தாலிய வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், வேறு எந்தவொரு உபகரணங்களும் சேதம் அடைய வில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> மேலும் பதற்றமான இந்த பகுதியில் இத்தாலிய வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிலைமையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T18:55:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் மசூதிக்கு அருகே கார் குண்டுவெடிப்பு: 4 வயது குழந்தை உட்பட 21 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/car-bombing-at-pakistan-s-kohat-mosque-21-dead-1789755728"></link>
            <id>https://news.lankasri.com/article/car-bombing-at-pakistan-s-kohat-mosque-21-dead-1789755728</id>
            <summary type="text">Car Bombing at Pakistan’s Kohat Mosque 21 dead: பாகிஸ்தானில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கார் குண்டுவெடிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Car Bombing at Pakistan’s Kohat Mosque 21 dead: பாகிஸ்தானில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> கார் குண்டுவெடிப்பு</h2><p>வடமேற்கு பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை தொழுகையை குறிவைத்து மசூதி அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 21 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> இதில் 15 காவல்துறை அதிகாரிகளும், 4 வயது குழந்தையும் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹத் நகரில் இந்த கோர தாக்குதலானது அரங்கேறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb0e0761-6341-44c6-b6f5-43885c164f3c/26-6aad815275d39.webp' /></p><p></p><p> கார் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் சேர்த்து, அதற்கு அருகில் அமைந்துள்ள காவல்துறை முகாம் மீது ஆயுதமேந்திய கும்பல் ஒன்று திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியது.</p><p> இந்த தாக்குதல் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், சம்பவ இடம் முழுவதும் இடுபாடுகளால் குழம்பி இருப்பதாகவும்,&nbsp; காயமடைந்தவர்களுக்கு பொதுமக்கள் உதவுவதும் பதிவாகியுள்ளது.</p><p>இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில் சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.<br></p>]]></content>
            <updated>2026-09-18T18:22:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 946 மில்லியன் டொலர் ஒப்பந்தம்: விண்வெளிக்கு பறக்கும் 3 குழுக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spacex-nasa-new-946-million-contract-1789754457"></link>
            <id>https://news.lankasri.com/article/spacex-nasa-new-946-million-contract-1789754457</id>
            <summary type="text">SpaceX-Nasa New $946 Million Contract: சுமார் 1 பில்லியன் மதிப்பிலான விண்வெளி பயண ஒப்பந்தத்தை நாசாவிடம் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. நாசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>SpaceX-Nasa New $946 Million Contract: சுமார் 1 பில்லியன் மதிப்பிலான விண்வெளி பயண ஒப்பந்தத்தை நாசாவிடம் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.</p><h2> நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம்</h2><p>சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கூடுதலாக 3 விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான ஒப்பந்த திருத்தத்தை நாசா மேற்கொண்டுள்ளது.</p><p> இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் 946 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தை நாசா மேற்கொண்டுள்ளது.</p><p> இந்த ஒப்பந்த திருத்தத்தின் மூலம் நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கூட்டுப்பணி இந்த புத்தாண்டின் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e74f904c-02fc-41be-8315-67d86b0741c8/26-6aad7c5a96590.webp' /></p><p> புதிய ஒப்பந்தத்தின் கீழ் Crew-15, Crew-16 மற்றும் Crew-17 ஆகியவை புதிய பயணங்களை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதன்மூலம் நாசாவின் வணிக விண்வெளி போக்குவரத்து திட்டத்தின் கீழ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் 17வது விண்வெளி பயணம் இதுவாகும்.</p><p> விண்கலத்தை விண்ணில் செலுத்துவது,&nbsp; பூமியின் சுற்று வட்டப்பாதையில் விண்கலத்தை இயக்குவது மற்றும் வீரர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது ஆகியவை ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்ட முக்கிய பணிகள் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/807aa45d-66ae-4715-9619-cc42e0b26f6d/26-6aad7c5b4eb3a.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T18:01:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள் - பேரழிவுகள் அதிகரிக்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/himalayan-glaciers-near-dangerous-tipping-point-1789749105"></link>
            <id>https://news.lankasri.com/article/himalayan-glaciers-near-dangerous-tipping-point-1789749105</id>
            <summary type="text">Himalayan glaciers melting accelerates: இமயமலை பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகிறது.

புதிய ஆய்வு&amp;nbsp;எச்சரிக்கைஇமயமலைப் பனிப்பாறைகள் கடந்த பத்து ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Himalayan glaciers melting accelerates: இமயமலை பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகிறது.</p><p>
</p><h2>
புதிய ஆய்வு&nbsp;எச்சரிக்கை</h2><p>இமயமலைப் பனிப்பாறைகள் கடந்த பத்து ஆண்டுகளை விட 65 சதவீதம் வேகமாக உருகி வருகின்றன என்று புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
</p><p>
இதனால் பனிப்பாறை ஏரிகள், நிலச்சரிவு, திடீர் வெள்ளம் போன்ற பேரழிவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43a4a35-0e31-4eb8-bba1-5f94b0a63e8b/26-6aad67742bf05.webp' /></p><p>தெற்கு ஆசியாவில் இருந்து வெளிப்படும் Black Carbon புகைத் துகள்கள், பனிப்பாறை உருக மூன்றில் ஒரு பங்கு காரணமாக உள்ளன. குறிப்பாக, செங்கல் அடுக்குகள் (brick kilns) மற்றும் தொழிற்சாலைகள் 32 முதல் 42 சதவீதம் வரை கார்பன் உமிழ்வை ஏற்படுத்துகின்றன. </p><p>இந்த துகள்கள் பனி மீது படிந்து, சூரிய வெப்பத்தை அதிகம் உறிஞ்சி, உருகலை வேகப்படுத்துகின்றன.
</p><p></p><h2>மிகுந்த ஆபத்தில் 56 ஏரிகள்&nbsp;</h2><p>இந்த அறிக்கை இந்தியாவில் உள்ள 189 ஆபத்தான பனிப்பாறை ஏரிகளை ஆய்வு செய்து, 56 ஏரிகள் மிகுந்த ஆபத்தானவை என வகைப்படுத்தியுள்ளது.</p><p> இவை உடைந்து போனால், கிராமங்கள், சாலைகள், பாலங்கள், அடிப்படை வசதிகள் அனைத்தும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம்.

மேலும், இமயமலைப் பகுதியில் சுமார் 40,000 பனிப்பாறைகள் உள்ளன.</p><p> ஆனால், 0.1 சதவீதம் மட்டுமே முறையாக கண்காணிக்கப்படுகின்றன. இதனால் எதிர்கால பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த மாற்றங்கள் மலைப்பகுதிகளை மட்டுமல்லாமல், தெற்காசியாவின் நீர்வளத்தையும் பாதிக்கின்றன. </p><p>2050-க்குள் பெரும்பாலான இமயமலை நதிகள் “peak water” நிலையை அடைந்து, பின்னர் நீர்வரத்து குறையும் அபாயம் உள்ளது. நூற்றாண்டின் இறுதிக்குள் பனிப்பாறைகளின் 80 சதவீதம் வரை இழக்கப்படும் அபாயம் உள்ளது.
</p><p></p><p>இமயமலை சூழல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20 சதவீதத்திற்கும் மேல் ஆதரவு அளிக்கிறது. விவசாயம், உணவு உற்பத்தி, மின்சாரம், சுற்றுலா, வாழ்வாதாரம் அனைத்தும் இதனைச் சார்ந்துள்ளன.
</p><p>
கார்பன் உமிழ்வை குறைப்பது, பனிப்பாறைகளை கண்காணிப்பது, முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துவது, வன மேலாண்மை மற்றும் நிலையான சுற்றுலா திட்டங்களை உருவாக்குவது அவசியம் என இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T16:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவில் நடக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-holds-first-election-since-ukraine-war-1789746803"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-holds-first-election-since-ukraine-war-1789746803</id>
            <summary type="text">Russia holds first election since Ukraine war: ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியுள்ளது.

ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல்2022-ஆம் ஆண்டு உக்ரைன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia holds first election since Ukraine war: ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியுள்ளது.</p><h2>

ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல்</h2><p>2022-ஆம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவில் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது.
</p><p>
செப்டம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தேர்தலில், சுமார் 111 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/602da3b1-e75c-4956-a17d-f1cfc7dfb56a/26-6aad5e753cf7e.webp' /></p><p>இந்த தேர்தல் மூலம் 450 இடங்களைக் கொண்ட ஸ்டேட் டூமா (State Duma) எனப்படும் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் பாதி இடங்கள் கட்சிப் பட்டியல் மூலம், மற்ற பாதி தனிப்பட்ட தொகுதிகள் மூலம் நிரப்பப்படுகின்றன.</p><p>
வாக்குப்பதிவு முறைமைகள் பாரம்பரிய வாக்குச்சாவடிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

யுனைடெட் ரஷ்யா கட்சி (United Russia Party) பெரும்பான்மையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p></p><p>போருக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்த யாப்லோகோ கட்சி (Yabloko Party) கட்சிப் பட்டியலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. சிலர் தனிப்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
</p><h2>
மக்கள் ஆதரவு</h2><p>ஜனாதிபதி விளாடிமிர் புடின், தொலைக்காட்சி உரையில், இந்த தேர்தலை ரஷ்ய படைகளுக்கு மக்கள் ஆதரவு காட்டும் நிகழ்வாக&nbsp;இருக்கும் என கூறினார்.</p><p> அவர், “உங்கள் வாக்கு, எங்கள் வீரர்களுக்கு பின்னால் கோடிக்கணக்கான மக்கள் நிற்கிறார்கள் என்பதை உலகிற்கு காட்டும்” என்று தெரிவித்தார் .</p><p></p><p>இந்த தேர்தல், ரஷ்யாவின் பொருளாதார சவால்களுக்கும், மேற்கத்திய தடைகளுக்கும், எரிபொருள் பற்றாக்குறைகளுக்கும் நடுவே நடைபெறுகிறது.</p><p> உக்ரைன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், ரஷ்யா தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டதாகக் கூறும் உக்ரைனின் நான்கு பிராந்தியங்களிலும், கிரிமியாவிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.</p><p> உக்ரைன் அரசு, இந்த தேர்தலை சட்டவிரோதமானது எனக் கூறி, சர்வதேச சமூகத்தை அங்கீகரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
முதல் நிலை முடிவுகள் செப்டம்பர் 20 இரவு வெளியாகும் எனவும், முழுமையான முடிவுகள் செப்டம்பர் 21 அன்று அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T16:06:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதியுதவியை குறைத்த பிரித்தானிய அரசு - ஏழை நாடுகள் கடும் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-aid-cuts-hit-poorest-nations-hardest-1789741548"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-aid-cuts-hit-poorest-nations-hardest-1789741548</id>
            <summary type="text">UK aid cuts hit poorest nations hardest: ஏழ்மையான நாடுகளுக்கான நிதியுதவியை பிரித்தானிய அரசு குறைத்துள்ளது.

ஏழை நாடுகள் கடும் பாதிப்புமுன்னாள் பிரதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK aid cuts hit poorest nations hardest: ஏழ்மையான நாடுகளுக்கான நிதியுதவியை பிரித்தானிய அரசு குறைத்துள்ளது.
</p><h2>
ஏழை நாடுகள் கடும் பாதிப்பு</h2><p>முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசின் நிதியுதவி குறைப்புகள், உலகின் மிக ஏழை நாடுகளை கடுமையாக பாதித்துள்ளன.
</p><p>
புதிய புள்ளிவிவரங்களின்படி, குறைந்த வருமான நாடுகளுக்கான நிதியுதவி 6.7 சதவீதம் குறைக்கப்பட்டு, 118 மில்லியன் பவுண்டு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70d148f1-7782-4cad-b828-7af808f1d33b/26-6aad49eeb177e.webp' /></p><p>2025-ஆம் ஆண்டில், பிரித்தானியாவின் மொத்த உதவி நிதி (Official Development Assistance) தேசிய வருமானத்தின் 0.44 சதவீதமாகக் குறைந்தது. இது 2024-இல் இருந்த 0.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 987 மில்லியன் பவுண்டு குறைவு. </p><p>ஸ்டார்மர் அரசு, இந்த நிதியை பாதுகாப்புத் துறைக்கு மாற்றும் திட்டத்தை அறிவித்திருந்தது.
</p><p></p><p>Bond என்ற தொண்டு அமைப்பின் கொள்கை இயக்குநர் கிடியன் ராபினோவிட்ஸ், “இந்த நிதி குறைப்புகள் ஏழை நாடுகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சியாரா லியோனில் தாய்மை சுகாதார சேவைகள், ஆப்பிரிக்காவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி திட்டங்கள் மூடப்படுகின்றன” என்று தெரிவித்தார்.</p><p>

உதவி நிதியின் மிகப்பெரிய பகுதி (18.4%) பிரித்தானியாவில் அகதிகளுக்கான செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. உக்ரைன், ஏமன், ஆப்கானிஸ்தான் ஆகியவை முக்கிய உதவி பெறும் நாடுகளாகும். ஆனால், எதிர்காலத்தில் ஏமனுக்கு 28 சதவீதம் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு 39 சதவீதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p></p><p>அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் உதவி குறைப்புகளும் சேர்ந்து, உலகளாவிய மனிதாபிமான அமைப்புகள் மிகப்பெரிய நிதி பற்றாக்குறையை சந்திக்கின்றன. கடந்த ஆண்டு, 64 மில்லியன் மக்கள் உதவி பெற முடியாமல் போனதாக Alnap அறிக்கை தெரிவித்துள்ளது.</p><p>

Bond அமைப்பு, புதிய பிரதமர் ஆன்டி பர்னாம், ஸ்டார்மர் அரசு மேற்கொண்ட உதவி குறைப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T15:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்ஸர் மழைபொழிந்த உகாண்டா வீரர்! நொறுங்கிய கென்யா அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uganda-player-olipa-gerald-95-in-52-balls-1789742221"></link>
            <id>https://news.lankasri.com/article/uganda-player-olipa-gerald-95-in-52-balls-1789742221</id>
            <summary type="text">Olipa Gerald 95 runs vs kenya: கென்யா அணிக்கு எதிரான டி20 போட்டியில் உகாண்டா 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆப்பிரிக்க கண்ட கிண்ணப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Olipa Gerald 95 runs vs kenya: கென்யா அணிக்கு எதிரான டி20 போட்டியில் உகாண்டா 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p><p>

ஆப்பிரிக்க கண்ட கிண்ணப் போட்டியில் உகாண்டா அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது.
</p><h2>
ஒலிபா ஜெரால்ட்</h2><p>உகாண்டா மற்றும் கென்யா அணிகளுக்கு இடையிலான ஆப்பிரிக்க கண்ட கிண்ண டி20 போட்டி கிகாலி சிட்டியில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46dc159f-6ef4-44db-b6e5-e371f744e72c/26-6aad4d19b634a.webp' />&nbsp;</p><p></p><p> 

முதலில் ஆடிய உகாண்டா அணியில் சரவெடி ஆட்டம் ஆடிய ஒலிபா ஜெரால்ட் (Olipa Gerald), 52 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 95 ஓட்டங்கள் விளாசினார். </p><p>

அணித்தலைவர் ரியாஸத் அலி ஷா 19 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாச, உகாண்டா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><h2>உகாண்டா வெற்றி </h2><p>

பின்னர் ஆடிய கென்யா 19 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, உகாண்டா அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>

கென்யா அணியில் அதிகபட்சமாக ராகேப் பட்டேல் 33 ஓட்டங்களும், சச்சின் கில் 22 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>ஜுமா மியாகி மற்றும் எனோக் காசைஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.&nbsp;மியூசிங்யுசி மற்றும் பகுமா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fb8e050-f3a5-4259-8a82-dd400ff7348c/26-6aad4d1a723bf.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T14:36:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் நிழல் போர் குறித்து உண்மைகள்: பிரித்தானியர்களிடம் வெளிப்படுத்தும் கட்டாயத்தில் பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-faces-of-clarify-russian-war-reflects-1789739518"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-faces-of-clarify-russian-war-reflects-1789739518</id>
            <summary type="text">Uk pm burnham faces of clarify russian war reflects: பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், ரஷ்யாவின் நிழல் போர் குறித்த விடயங்களை வெளிப்படுத்தும் கோரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uk pm burnham faces of clarify russian war reflects: பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், ரஷ்யாவின் நிழல் போர் குறித்த விடயங்களை வெளிப்படுத்தும் கோரிக்கைகளை எதிர்கொள்கிறார். </p><p>

நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் நிழல் போரினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து, பிரித்தானியர்களிடம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை ஆண்டி பர்ன்ஹாம் எதிர்கொள்கிறார்.&nbsp;</p><h2>ரஷ்யாவின் நிழல் போர்&nbsp;</h2><p>

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடுகள் (நேட்டோ) மீது ரஷ்யா ட்ரோன் விமானங்கள் அல்லது ரொக்கெட்டுகளைக் கொண்டு கலப்புத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f667a8e9-330e-4287-8acb-3890958677c1/26-6aad441283b29.webp' /></p><p>
அதனைத் தொடர்ந்து, பெலாரஸில் இருந்து லிதுவேனியாவின் வான்வெளிக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்ட ஒரு ட்ரோன் விமானத்தை நேட்டோ போர் விமானிகள் இந்த வாரம் சுட்டு வீழ்த்தினர்.&nbsp;</p><p></p><p>
இந்த நிலையில், பிரித்தானிய பிரதமரான ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் நிழல் போரினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து, மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்கொள்கிறார்.
</p><p>
இதுகுறித்து பேசியுள்ள டோரி தலைவர் கெமி பேடனோக் மற்றும் Reform UK-வின் நைஜல் ஃபாரேஜ் ஆகிய இருவரும், பிரித்தானியாவை எவ்வாறு பாதுகாக்க வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளார் என்பதை பிரதமர் இன்னும் விரிவாக விளக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;</p><h2>அவசரத்திற்கு ஈடுகொடுக்குமாறு</h2><p>

பேடனோக்கின் பதிவில் இராணுவ ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்துவதிலும், பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதாலும் நேட்டோ கூட்டாளிகளின் வளர்ந்து வரும் அவசரத்திற்கு ஈடுகொடுக்குமாறு பர்ன்ஹாம் மற்றும் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/538246be-664f-4110-a211-824ebcecf5ff/26-6aad4592e8eb8.webp' /></p><p>
ரஷ்யா லிதுவேனியாவின் வான்வெளியை மீறியதாக வெளியான சமீபத்திய தகவல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. 

இந்த நிலையில் மேக்ரோன் மற்றும் டஸ்க் ஆகியோர் காட்டும் அவசரமான செயல்பாடுகள் அந்த கவலையை மேலும் அதிகரிக்கின்றன.</p><p>

ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலை அரசு போதுமான அளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறதா என்பது தெளிவாக இல்லை.</p><p> 

நேட்டோ மீது 2030-க்குள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அரசின் சொந்த உளவுத்துறை மதிப்பீடு கூறுகிறது; அதேவேளையில் சிறிய அளவிலான ஊடுருவல்களும் ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58e89cad-fb31-4ce1-a2cb-3692c6cb57c0/26-6aad4411c4582.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T13:57:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய விளையாட்டு வீரர்கள் தங்க ரூ.268 கோடிக்கு கப்பலை வாடகைக்கு எடுத்துள்ள ஜப்பான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-rent-268-cr-cruise-ship-for-asian-games-1789739371"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-rent-268-cr-cruise-ship-for-asian-games-1789739371</id>
            <summary type="text">japan rent rs 268 crores cruise ship for asian games: ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்குவதற்காக ஜப்பான் ரூ.268 கோடிக்கு சொகுசு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>japan rent rs 268 crores cruise ship for asian games: ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்குவதற்காக ஜப்பான் ரூ.268 கோடிக்கு சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்துள்ளது.</p><h3> 

ஆசிய விளையாட்டு போட்டி
</h3><p>
20 வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நாளை தொடங்கி, அக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/763561e5-315d-4688-805d-d3975bb8db97/26-6aad416c85319.webp' /></p><p> 

இந்தத் தொடரில், 45 நாடுகளை சேர்ந்த 17,000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். </p><p>

வழக்கமாக சர்வதேச விளையாட்டு தொடர்களின் போது, வீரர்கள் தங்குவதற்கு பல அடுக்கு குடியிருப்புகளுடன் கூடிய விளையாட்டு கிராமம் உருவாக்கப்படும்.</p><h3> 

ரூ.268 கோடிக்கு வாடகையில் சொகுசு கப்பல்</h3><p> 

ஆனால் ஜப்பான், வீரர்களை தங்க வைக்க ‘கோஸ்டா செரீனா’ என்ற இத்தாலிய சொகுசு கப்பலை வாடகைக்கு அமர்த்தியுள்ளது. </p><p>

சுமார் 300 மீட்டர் நீளமும், 100,000 டன்களுக்கும் அதிகமான எடையும், 1,500 அறைகளும் கொண்ட இந்தக் கப்பலில், சுமார் 4,000 விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளும் தங்க வைக்கப்படுவார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73c478f0-7825-4dc0-a141-bd37c7e100b8/26-6aad416d3acdc.webp' /></p><p>

28 மில்லியன் டொலர்( இந்திய மதிப்பில் ரூ.268 கோடி) செலவில் அந்த கப்பல் வாடகைக்கு எடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h3>

வசதி குறைபாடு
</h3><p>
நகோயா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில், தங்குமிட வசதி குறைபாடு குறித்து பல்வேறு நாடுகளும் புகார் தெரிவித்துள்ளன.</p><p> 

2 வீரர்களுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதை 3 பேர் பகிர்ந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

போட்டியை நடத்தும் ஜப்பானை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கும் இந்த பிரச்சினை உள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dccab355-0e2a-4d09-bbd5-68f096f1980d/26-6aad416de2b82.webp' /></p><p>

மேலும், தென் கொரியா அணியைச் சேர்ந்த ஒரு வீரர் தனது குடிலில் தண்ணீர் கசியும் தொட்டியையும், தரை முழுவதும் ஈரமாக இருப்பதையும் காட்டும் காணொளியை, "தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்" என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.&nbsp;</p><p></p><p>
இதே போல், தாய்லாந்து வீரர்கள் சொகுசு கப்பலின் வரவேற்பு மையத்தில் தரையில் படுத்து உறங்கிய காட்சிகள் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. </p><p>

சில பயிற்சியாளர்கள் போன்ற சில அதிகாரிகள், வெளியே வெவ்வேறு ஹொட்டல்களுக்கு சென்று தங்கியுள்ளனர். </p><p>

ஜப்பானில் ஒரு பெரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுக்கு, ஒரு சொகுசுக் கப்பல் தங்குமிடமாகப் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை," என்று அந்த சொகுசுக் கப்பலை வரவேற்கும் விழாவில் ஏற்பாட்டாளர் ஓமுரா தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T13:49:43+00:00</updated>
        </entry>
    </feed>
