<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-07T13:27:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமேசானின் Great Freedom Sale 2026 - பல பொருட்களுக்கு 80 சதவீதம் தள்ளுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/amazon-freedom-sale-2026-80-percent-off-deals-1786109082"></link>
            <id>https://news.lankasri.com/article/amazon-freedom-sale-2026-80-percent-off-deals-1786109082</id>
            <summary type="text">இந்தியாவில் அமேசான் Great Freedom Sale 2026 அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள், மின்சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன், அழகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் அமேசான் Great Freedom Sale 2026 அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
</p><p>
ஸ்மார்ட்போன்கள், மின்சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன், அழகு சாதனங்கள் மற்றும் அன்றாடம் தேவைப்படும் பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86a5a2e9-acea-4f42-9eb5-901810b78c5b/26-6a75dc9ccb5e7.webp' /></p><p>
</p><h2>
முக்கிய அம்சங்கள்:</h2><ul><li>

HDFC Bank கிரெடிட் கார்டு மற்றும் EasyEMI பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி.
</li><li>
No-Cost EMI, Amazon Pay Rewards, Exchange Offers, Coupons ஆகியவை கூடுதலாக கிடைக்கும்.
</li><li>
Prime உறுப்பினர்களுக்கு 15 சதவீதம் கூடுதல் சேமிப்பு மற்றும் பிரத்யேக சலுகைகள் வழங்கப்படும்.
</li><li>
AI Tools (Rufus, Lens AI, Price History, Review Highlights) மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக பொருட்களை தேர்வு செய்யலாம்.
</li></ul><p></p><h2>பிரபல சலுகைகள்:
</h2><p>
Samsung Galaxy S25 Ultra - ரூ.1,29,999 விலையிலிருந்து ரூ.94,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. HDFC தள்ளுபடி மற்றும் Exchange Offer மூலம் விலை ரூ.90,000-க்கு கீழ் குறையலாம்.</p><p>
OnePlus N6x - ரூ.17,499, Nord CE6 - ரூ.31,999, iQOO Z11 Lite - ரூ.17,999.
</p><p>
5G ஸ்மார்ட்போன்கள் ரூ.12,999 முதல் கிடைக்கின்றன.
</p><p></p><p>Samsung, LG, Bosch, Haier போன்ற பிராண்டுகளின் Washing Machine, Refrigerator, TV, Laptop, Tablet, Audio Products ஆகியவற்றில் 65 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விற்பனை, வாடிக்கையாளர்களுக்கு விலை குறைவுடன் மட்டுமல்லாமல், AI அடிப்படையிலான ஷாப்பிங் அனுபவத்தையும் வழங்குகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T13:22:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்து விசா விதிகளில் தளர்வு - ஹெபடைட்டிஸ் B, C இனி தடையில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-zealand-relaxes-visa-health-rules-2026-1786102874"></link>
            <id>https://news.lankasri.com/article/new-zealand-relaxes-visa-health-rules-2026-1786102874</id>
            <summary type="text">நியூசிலாந்து அரசு குடியேற்ற விசா விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 3, 2026 முதல், ஹெபடைட்டிஸ் B மற்றும் ஹெபடைட்டிஸ் C நோய்கள் இனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்து அரசு குடியேற்ற விசா விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. </p><p>

ஆகஸ்ட் 3, 2026 முதல், ஹெபடைட்டிஸ் B மற்றும் ஹெபடைட்டிஸ் C நோய்கள் இனி குடியேற்ற விண்ணப்பங்களுக்கு தானாகவே தடையாக இருக்காது.</p><p>

இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து விண்ணப்பிக்கும் மக்களுக்கு இது இனிமையான செய்தியாக இருக்கும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4991a586-20fd-4296-a042-9a88e6c07e5b/26-6a75c57268835.webp' /></p><p>முன்பு, இந்த நோய்களுக்கு விலை உயர்ந்த சிகிச்சை தேவைப்படும் நிலையில், விண்ணப்பதாரர்கள் “அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிலை” விதிகளை பூர்த்தி செய்யவில்லை என கருதப்பட்டனர்.</p><p>ஆனால், தற்போது அதற்கான சிகிச்சை செலவுகள் குறைந்துள்ளதால், 81,000 நியூசிலாந்து டொலர் செலவு வரம்பை மீறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனால், ஹெபடைட்டிஸ் B அல்லது C இருப்பது மட்டும் குடியேற்ற விண்ணப்பத்தை நிராகரிக்க காரணமாக இருக்காது. </p><p></p><p>இருப்பினும், விண்ணப்பதாரர்கள் தங்கள் மருத்துவ வரலாற்றை முழுமையாக தெரிவிக்க வேண்டும். தேவையானால், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கூடுதல் தகவல்கள் கேட்கப்படலாம்.
</p><p>
இது முழுமையான சுகாதார விதிகளை நீக்குவது அல்ல. சிறுநீரக, கல்லீரல் நோய்கள், புற்றுநோய், நரம்பியல், இதய நோய்கள், மனநிலை பிரச்சினைகள் போன்றவை இன்னும் சுகாதார மதிப்பீட்டில் முக்கியமாக கருதப்படும்.
</p><p>
இந்த மாற்றம், நியூசிலாந்தின் குடியேற்ற சுகாதார கொள்கையை சீரமைத்து, உண்மையில் அதிக செலவுகளை ஏற்படுத்தும் நோய்களையே கவனத்தில் கொள்ளும் வகையில் செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T13:12:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடிக் கிருத்திகை.., 12 ராசிக்கும் முருகர் சொல்லும் செய்தி என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/12-rasipalan-for-aadi-krittikai-in-tamil-1786107421"></link>
            <id>https://news.lankasri.com/article/12-rasipalan-for-aadi-krittikai-in-tamil-1786107421</id>
            <summary type="text">ஆடிக் கிருத்திகை என்பது தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளாகும். 

2026 ஆம் ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை திருவிழா ஆகஸ்ட் 6 மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடிக் கிருத்திகை என்பது தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளாகும். </p><p>

2026 ஆம் ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை திருவிழா ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 7 ஆகிய தேதிகளில் அதாவது இன்று நடைபெற்று கொண்டுள்ளது.
</p><p>
கிருத்திகை நட்சத்திரம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை தொடங்கி பக்தர்களால் முருகப்பெருமானை வழிபட உகந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. </p><p>

இது முருகப்பெருமானை வழிபடவும், விரதம் இருக்கவும் உகந்த மிக முக்கியமான புனித நாளாகும். </p><p>

கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட முருகப்பெருமானை இத்திருநாளில் வழிபடுவது பல நன்மைகளைத் தரும்.</p><p> 

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றி, சரவணப் பொய்கையில் மலர்ந்த முருகப்பெருமானை கார்த்திகை பெண்கள் ஆறு பேர் அரவணைத்து வளர்த்தனர்.
</p><p>
கார்த்திகை பெண்களுக்குச் சிறப்புச் செய்யும் நாளாகவும், அவர்களின் பெயரால் கிருத்திகை விரதம் அனுசரிக்கப்படுகிறது.</p><p>

இத்திருநாளில், கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் மற்றும் முருகனின் திருநாமங்களைச் சொல்லி வழிபடலாம்.
</p><p>
அந்தவகையில், ஆடிக் கிருத்திகை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று டாரட் வாசிப்பாளர் சாரா இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PVXRfDAi6SY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T12:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்ட்: கெத்து காட்டிய இலங்கை வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-xi-scored-363-vs-india-day-1-1786105554"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-xi-scored-363-vs-india-day-1-1786105554</id>
            <summary type="text">இந்திய அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இலங்கை லெவன் 363 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கொழும்பு பயிற்சி டெஸ்டில் இலங்கை அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இலங்கை லெவன் 363 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
</p><p>
கொழும்பு பயிற்சி டெஸ்டில் இலங்கை அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 363 ஓட்டங்கள் குவித்துள்ளது.&nbsp;</p><h2>மதுஷ்கா,&nbsp;ரவிந்து </h2><p>



இலங்கை லெவன் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான பயிற்சி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6112834d-664e-485f-aa04-6af6a7a99760/26-6a75ced595d32.webp' />&nbsp;</p><p></p><p>
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை லெவன் அணியில் தொடக்க வீரர்கள் அதிரடி காட்டினர்.

இந்தக் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 110 ஓட்டங்கள் குவித்தது. </p><p>நிஷான் மதுஷ்கா ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். 

அடுத்து பசிந்து சூரியபந்தாரா 35 ஓட்டங்களில் வெளியேற, ரவிந்து ரசந்த 71 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். </p><p>

பின்னர் வந்த பவன் ரத்னயாகே 39 ஓட்டங்களும், அஹன் 31 ஓட்டங்களும் எடுத்தனர். அரைசதம் அடித்த அணித்தலைவர் சோனல் தினுஷா (Sonal Dinusha) 52 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
</p><p>
முதல் நாள் முடிவில் இலங்கை லெவன் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 363 ஓட்டங்கள் குவித்துள்ளது. ஜடேஜா, குல்தீப் மற்றும் மானவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/377b8e6c-194c-427f-a249-3ccf29761150/26-6a75ced64866c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T12:50:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணுகுண்டு வீச்சுக்கு தப்பிப் பிழைத்தவர்கள் ஜப்பான் அரசுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hiroshima-survivors-warns-japan-rearmament-bomb-1786106589"></link>
            <id>https://news.lankasri.com/article/hiroshima-survivors-warns-japan-rearmament-bomb-1786106589</id>
            <summary type="text">அமெரிக்கா வீசிய அணுகுண்டுக்கு தப்பிய ஜப்பானியர்கள், ஆயுதமயமாக்கலுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.


1945ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6ஆம் திகதி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா வீசிய அணுகுண்டுக்கு தப்பிய ஜப்பானியர்கள், ஆயுதமயமாக்கலுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.</p><p>


1945ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6ஆம் திகதி, அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது அணுகுண்டு வீசியது. அதில், 80,000 பேர் உயிரிழந்தார்கள்.</p><p>

மூன்று நாட்களுக்குப் பின் அமெரிக்கா நாகசாகி நகரின் மீது இரண்டாவது அணுகுண்டை வீசியது!</p><h3>

ஜப்பான் அரசுக்கு எச்சரிக்கை</h3><p>

மீண்டும் போரில் ஈடுபடுவதில்லை என அப்போது ஜப்பான் வாக்குறுதி அளித்து, சர்வதேச சமுதாயத்தின் நம்பிக்கையை பெற்றது என்கிறார் அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டமைப்பான Nihon Hidankyo என்னும் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரலான மசாக்கோ வாடா.
</p><p>
அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசும்போது, வாடாவுக்கு வயது ஒன்று!&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f918ac3b-c10a-428e-9f45-2e267d9be828/26-6a75d2de7d720.webp' /></p><p>
ஆனால், இப்போது ஜப்பான் மீண்டும் ஆயுதமயமாக்கலுக்கு திரும்பிவருகிறது என்று கூறும் வாடா, கொடுத்த வாக்குறுதியால் ஏற்படுத்திய நம்பிக்கையை இப்போதைய அரசு நிர்வாகம் அழித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்.</p><p>

வாடாவைப்போலவே அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பிய மசாஷி லெஷிமா (84) என்பவரும், ஜப்பானின் தற்போதைய ராணுவ பலப்படுத்துதலுக்கும், இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்த ஆயுதப் பந்தயத்துக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை என்கிறார்.&nbsp;</p><p></p><p>

அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசும்போது லெஷிமாவுக்கு வயது 3.
</p><p>
குண்டு வீச்சின் பாதிப்பு காரணமாக தைராய்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லெஷிமாவுக்கு, அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தையும் தொண்டைப் புற்றுநோயால்தான் உயிரிழந்தார் என்பது ஆறாத காயம்.</p><p>

போரில் அணுகுண்டு வீசப்பட்டு, 81ஆண்டுகள் ஆனபிறகும் அதன் பாதிப்புகள் நீடித்துவரும் நிலையில், மீண்டும் ஜப்பான் ராணுவமயமாக்கலை நியாயப்படுத்திவருவது என் இரத்தத்தைக் கொதிக்கவைக்கிறது என்கிறார் லெஷிமா.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2722d05-ff89-40ac-aef8-04f84ad7e6d3/26-6a75d2df2ccbc.webp' /></p><p>

ஜப்பான் தொடர்ந்து இதே பாதையில் பயணிக்குமானால், அது போரில்தான் முடியும் என்று கூறும் லெஷிமா, இன்னொரு போர் வெடித்தால் அது அணு ஆயுதப் போராகத்தான் இருக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவிக்கிறார்.</p><p>

ஆகத்து மாதம் 6ஆம் திகதி, ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் 81ஆவது ஆண்டு நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T12:46:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே கட்டுமரப் படகு சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-catamaran-crossing-between-france-and-uk-1786104403"></link>
            <id>https://news.lankasri.com/article/new-catamaran-crossing-between-france-and-uk-1786104403</id>
            <summary type="text">பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே புதிய கட்டுமரப் படகு சேவை ஒன்று, சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட உள்ளது.


பிரான்சிலுள்ள நார்மாண்டிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே புதிய கட்டுமரப் படகு சேவை ஒன்று, சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட உள்ளது.
</p><p>

பிரான்சிலுள்ள நார்மாண்டிக்கும் பிரித்தானியாவிலுள்ள சசெக்ஸ் நகருக்கும் இடையே கட்டுமரப் படகு சேவை ஒன்று, சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட உள்ளது.
</p><h3>
புதிய கட்டுமரப் படகு சேவை
</h3><p>
இந்த சோதனை முயற்சி அடுத்த மாதம் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அதில், காற்றின் உதவியால் செலுத்தப்படும் கட்டுமரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d42a8b5a-88de-4dc0-b1db-f851ed8ea248/26-6a75ca550c219.webp' /></p><p>

செப்டம்பர் 8ஆம் திகதி முதல், 13ஆம் திகதி வரை, பிரான்சிலிருந்து இரு சேவைகளும், பிரித்தானியாவிலிருந்து மூன்று சேவைகளும் முயற்சிக்கப்பட உள்ளன.</p><p>

ஒரு பயணத்தின் போது படகில் 12 பயணிகள் வரை அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் தங்கள் சைக்கிள்களையும் உடன் கொண்டுவரலாம்.
</p><p>
இந்த கட்டுமரப்பயணத்தை தலைமை தாங்குபவர் பிரபல மாலுமியான Michel Desjoyeaux என்பவர்.&nbsp;</p><p></p><p>
இந்த பயணத்துக்கான கட்டணம், ஒரு முறை பயணிக்க 220 பவுண்டுகள்.
</p><p>
முக்கிய விடயம் என்னவென்றால், இந்த படகில் பயணிக்கவும் பயணிகளுக்கு பாஸ்போர்ட் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T12:06:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைட்டமின் B12 குறைபாட்டை எச்சரிக்கும் முக்கிய அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/6-warning-signs-of-vitamin-b12-deficiency-1786103704"></link>
            <id>https://news.lankasri.com/article/6-warning-signs-of-vitamin-b12-deficiency-1786103704</id>
            <summary type="text">வைட்டமின் B12 என்பது இரத்த சிவப்பணுக்கள், டிஎன்ஏ உருவாக்கம் மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்குத் தேவையான உயிர்ச்சத்து ஆகும். 

மனித உடல் இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வைட்டமின் B12 என்பது இரத்த சிவப்பணுக்கள், டிஎன்ஏ உருவாக்கம் மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்குத் தேவையான உயிர்ச்சத்து ஆகும். </p><p>

மனித உடல் இதனைத் தானே உற்பத்தி செய்யாது என்பதால் உணவுகள் மூலம் மட்டுமே பெற வேண்டும்.</p><p>

உடலில் தேவையான அளவு வைட்டமின் B12 இல்லாத நிலை வைட்டமின் B12 குறைபாடு எனப்படும்.</p><p> 

இது சோர்வு, நரம்பு பலவீனம், கை-கால்களில் கூச்ச உணர்வு மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af900339-75bf-4b24-a1f7-37480f7a043f/26-6a75c79a95906.webp' /></p><p>போதுமான உணவை உட்கொள்ளாமை அல்லது உடல் அதனை உறிஞ்சப் பற்றாக்குமையால் இது உண்டாகிறது.
</p><p>
அதன்படி முட்டை, மீன், இறைச்சி, செறிவூட்டப்பட்ட தானியங்கள், பருவகால பழங்கள் போன்ற வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
</p><p>
அந்தவகையில், வைட்டமின் B12 குறைபாட்டை எச்சரிக்கும் முக்கிய அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.</p><h2>என்னென்ன அறிகுறிகள்?
</h2><p><b>உடல் சோர்வு-</b> வைட்டமின் B12 குறைந்தால், இரத்த சிவப்பணுக்கள் குறைவாக உருவாகும். இதனால் உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் அதிக சோர்வு மற்றும் மந்தநிலை ஏற்படும்.
</p><p><b>சருமம் வெளிறுதல்-</b> சருமம் வழக்கத்தை விட வெளிறி காணப்பட்டால், அது இரத்தசோகை அல்லது வைட்டமின் B12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கும்.</p><p><b>மூச்சுத்திணறல்-</b> வைட்டமின் B12 குறைபாட்டால் உடலுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் குறைவதால், உடற்பயிற்சி செய்யும்போது அல்லது ஓய்வில் இருக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்படும்.</p><p></p><p>
</p><p><b>கை, கால்களில் கூச்ச உணர்வு-</b> கை, கால்களில் மரத்துப்போதல், ஊசி குத்துவது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்பட்டால், அது நரம்புகளை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கும். </p><p><b>நடப்பதில் சிரமம்-</b> நரம்பு பாதிப்பால் தள்ளாடி நடப்பது அல்லது நடப்பதில் சிரமம் ஏற்படுவது வைட்டமின் B12 குறைபாட்டால் ஏற்படும்.
</p><p><b>மனநிலை மாற்றங்கள்-</b> பதட்டம், எரிச்சல், மனச்சோர்வு போன்ற மனநிலை மாற்றங்களும் வைட்டமின் B12 குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T12:01:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடுகடத்தப்பட்ட 50 புகலிடக்கோரிக்கையாளர்கள் மீண்டும் பிரித்தானியாவில்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/50-deported-asylum-seekers-returned-to-uk-1786103283"></link>
            <id>https://news.lankasri.com/article/50-deported-asylum-seekers-returned-to-uk-1786103283</id>
            <summary type="text">பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட 50 புகலிடக்கோரிக்கையாளர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பிவிட்டுள்ளார்கள்.


One in, one out ஒப்பந்தத்தின் கீழ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட 50 புகலிடக்கோரிக்கையாளர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பிவிட்டுள்ளார்கள்.
</p><p>

One in, one out ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட முதல் புகலிடக்கோரிக்கையாளர் பிரித்தானியாவிலிருப்பதை பிரித்தானிய ஊடகம் ஒன்று கண்டறிந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a48ce4b-3f7d-4e17-93e2-bc70270064a4/26-6a75c5f5d764a.webp' /></p><p>
அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்டார்.
</p><p>
அப்படியானால், அவரைப்போலவே எத்தனை பேர் மீண்டும் பிரித்தானியா திரும்பியிருப்பார்கள் என்னும் கேள்வி அப்போது எழுந்தது. ஆனால், அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை!
</p><h3>
50 புகலிடக்கோரிக்கையாளர்கள்
</h3><p>
இந்நிலையில், One in, one out ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானியாவால் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட சுமார் 50 புகலிடக்கோரிக்கையாளர்கள் மீண்டும் பிரித்தானியா திரும்பிவிட்டதாக தி கார்டியன் பத்திரிகை தற்போது தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf6e73ad-7cc9-404e-b000-1cf8b821ec8b/26-6a75c5f52defd.webp' /></p><p>
அப்படி பிரித்தானியா திரும்பியவர்களில் சிலர் உள்துறை அலுவலகத்தால் கைது செய்யப்பட்டாலும், அவர்களைப்போலவே மீண்டும் பிரித்தானியா திரும்பிய மேலும் பலர் பிரித்தானியாவில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.&nbsp;</p><p></p><p>

உள்துறை அலுவகத் தரவுகளின்படி, one in one out திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 30ஆம் திகதி நிலவரப்படி, 1,117 பேர் பிரான்சிலிருந்து பிரித்தானியா வந்தடைந்துள்ளார்கள், 1,087 பேர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T11:52:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புல் வெட்ட செல்கிறேன் என பெருமையாக பதிவு: கோடிக்கணக்கிலான கஞ்சாவுடன் சிக்கிய பிரித்தானிய பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/45-year-old-uk-woman-arrested-for-cannabis-smuggle-1786103493"></link>
            <id>https://news.lankasri.com/article/45-year-old-uk-woman-arrested-for-cannabis-smuggle-1786103493</id>
            <summary type="text">பிரித்தானியப் பெண்ணொருவர் 5,00,000 பவுண்ட் மதிப்புள்ள கஞ்சாவை கடத்தும்போது பிடிபட்டார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த 45 வயது பெண் 5,00,000 பவுண்ட் மதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியப் பெண்ணொருவர் 5,00,000 பவுண்ட் மதிப்புள்ள கஞ்சாவை கடத்தும்போது பிடிபட்டார்.
</p><p>
பிரித்தானியாவைச் சேர்ந்த 45 வயது பெண் 5,00,000 பவுண்ட் மதிப்புள்ள தாய்லாந்து கஞ்சாவை கடத்தியதை ஒப்புக்கொண்டார்.</p><h2>

பிரித்தானியப் பெண் </h2><p>45 வயதான ஏமி ஜேன் டர்பன் என்ற பிரித்தானியப் பெண் தாய்லாந்திற்கு பயணம் செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54ce0b6a-a137-4a8d-a452-cea630fea449/26-6a75c6c9026f4.webp' />&nbsp;</p><p></p><p>

அப்போது அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், "புல் வெட்ட வீட்டிற்கு செல்கிறேன் - நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிந்தால் சரி. எப்போது வருவேன் என்ற நேரம் குறிப்பிடப்படவில்லை. எனவே உங்கள் புல்வெளிக்கு நான் எப்போது வரப்போகிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது" என பதிவிட்டிருந்தார்.
</p><p>

அதனைத் தொடர்ந்து, தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் வந்த அவரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.</p><p>

அப்போது கிளாஸ் பி வகையைச் சேர்ந்த போதைப்பொருள் நிரப்பப்பட்ட இரண்டு சூட்கேஸ்களில் 51.2 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதன் சந்தை மதிப்பு 5,12,000 பவுண்ட் எனவும் தெரிய வந்துள்ளது. </p><p> 
 
பின்னர் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், தேசிய குற்றவியல் முகமையின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.&nbsp;</p><h2>கஞ்சா கடத்திய குற்றம்</h2><p>

Uxbridge மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தான் கஞ்சா கடத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஏமி, வியாழக்கிழமை அன்று காவலில் வைக்கப்பட்டார். 

அவருக்கு அக்டோபர் மாதம் 14ஆம் திகதி அன்று தண்டனை விதிக்கப்படவுள்ளது. </p><p> 

தேசிய குற்றவியல் தகவலின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் பிரித்தானியாவிற்குள் கஞ்சாவைக் கடத்த முயலும் கடத்தல்காரர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே, பிரித்தானிய விமான நிலையங்களில் 600 கடத்தல்காரர்கள்கைது செய்யப்பட்டுள்ளதால், நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று NCA தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c983a272-9d2d-4dc2-96a1-34d168e20e21/26-6a75c6c84b7a6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T11:49:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறார் பாதுகாப்பு... மெற்றாவுக்கு 567 மில்லியன் டொலர் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/child-safety-meta-fined-1786102140"></link>
            <id>https://news.lankasri.com/article/child-safety-meta-fined-1786102140</id>
            <summary type="text">சிறார் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கத் தவறியதற்காக, மெற்றா நிறுவனத்திற்கு மேலும் 567 மில்லியன் டொலர் அபராதம்.
சிறார்களுக்குத் தங்கள் தளங்களால் ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறார் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கத் தவறியதற்காக, மெற்றா நிறுவனத்திற்கு மேலும் 567 மில்லியன் டொலர் அபராதம்.
</p><p>சிறார்களுக்குத் தங்கள் தளங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கத் தவறியதற்காக, மெற்றா (Meta) நிறுவனம் மேலும் 567 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என்று நியூ மெக்ஸிகோவைச் சேர்ந்த அமெரிக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>பொதுத் தொல்லை</h2><p>
</p><p>குழந்தை பாதுகாப்பு விவகாரத்தில் மெற்றா நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதம் இதுவாகும். அந்தச் சமூக ஊடக நிறுவனம் காற்று மாசுபாட்டைப் போன்றதொரு பொதுத் தொல்லை என்று கூறிய நீதிபதி பிரையன் பெஷைட், எதிர்காலத் தீங்குகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிதியத்தில் அந்நிறுவனம் அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac0af46-5f93-4cca-811b-fa0d70529f24/26-6a75c17f0ef63.webp' /></p><p> </p><p>வியாழக்கிழமையன்று அளிக்கப்பட்ட தீர்ப்பானது, இவ்வழக்கில் மெற்றா நிறுவனம் ஏற்கனவே செலுத்த உத்தரவிடப்பட்ட 375 மில்லியன் டொலர் அபராதத் தொகையுடன் கூடுதலாக அமைவதுடன், இதன் மூலம் மொத்த அபராதத் தொகை 942 மில்லியன் டொலராக உயர்கிறது. </p><p>மெற்றா நிறுவனத்தை ஒரு தொழிற்சாலையுடன் ஒப்பிட்ட நீதிபதி பீட்ஷைட் (Biedscheid); அதில் விளம்பரங்களும் உள்ளடக்கமும் அதன் தயாரிப்புகளாகவும், சிறார்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்பு மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவை குறைக்கப்பட வேண்டிய மாசுபாடாகவும் கருதப்படுகின்றன.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ் ஆகியவற்றைச் சொந்தமாகக்கொண்டு இயக்கும் மெற்றா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,</p><h2>மேல்முறையீடு</h2><p> </p><p>நாங்கள் இந்தத் தீர்ப்புடன் உடன்படவில்லை, மேலும் மேல்முறையீடு செய்வோம் என்றும் கூறியுள்ளார். அத்துடன், எங்கள் தளங்களில் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம், மேலும் தீய சக்திகளையும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தையும் கண்டறிந்து அகற்றுவதில் உள்ள சவால்கள் குறித்து வெளிப்படையாக இருந்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். </p><p>இந்த வழக்கில் முன்னதாக வழங்கப்பட்ட 375 மில்லியன் டொலர் தீர்ப்பு குறித்து, மெற்றா நிறுவனம் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகக் கூறி, இதேபோன்ற ஒரு விளக்கத்தையும் அளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19c6b427-c79c-4c96-9fd0-e1c0ad8e817f/26-6a75c17fb87ec.webp' /></p><p> </p><p>சிறார் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக மெற்றா மீது ஒரு மாகாணம் வெற்றிகரமாக வழக்குத் தொடர்ந்தது இதுவே முதல் முறையாகும். </p><p>மெற்றா நிறுவனம் தற்போது அமெரிக்காவில் இதே போன்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகளை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T11:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் இயற்கை வைரம் உற்பத்தி செய்யும் ஒரே மாநிலம் எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-is-the-indias-only-diamond-producing-state-1786101832"></link>
            <id>https://news.lankasri.com/article/which-is-the-indias-only-diamond-producing-state-1786101832</id>
            <summary type="text">வைரம் என்பது பூமியின் அடியில் அதிக அழுத்தத்தில் உருவாகும் தூய கார்பன் பொருள் ஆகும். 

அழகிய ஒளியைச் சிதறடிக்கும் தன்மை கொண்டதால், இது நவரத்தினங்களில...</summary>
            <content type="html"><![CDATA[<p>வைரம் என்பது பூமியின் அடியில் அதிக அழுத்தத்தில் உருவாகும் தூய கார்பன் பொருள் ஆகும். </p><p>

அழகிய ஒளியைச் சிதறடிக்கும் தன்மை கொண்டதால், இது நவரத்தினங்களில் மிகவும் விலை உயர்ந்த ஆபரணமாகப் பயன்படுத்தப்படுகிறது.</p><p>
உலகின் மிகவும் விலையுயர்ந்த ரத்தினங்களில் வைரம் முதலிடத்தில் உள்ளது. </p><p>

இந்தியாவில் வைரம் வாங்குபவர்கள் குறைவாக இருந்தாலும், வைர பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியில் நாடு உலகளவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e846746-2982-4ed5-94be-4fbae86f57f3/26-6a75c04b1c21c.webp' /></p><p>அந்தவகையில், இந்தியாவில் இயற்கை வைரம் உற்பத்தி செய்யும் ஒரே மாநிலம் எது என்பது குறித்து பார்க்கலாம்.</p><p>தற்போது இந்தியாவில் இயற்கை வைரம் வணிகரீதியாக உற்பத்தி செய்யும் ஒரே மாநிலம் மத்தியப் பிரதேசம் ஆகும்.
</p><p>
மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள மஜ்கவான் வைரச் சுரங்கம் இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள ஒரே வைரச் சுரங்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b969230b-b293-4eea-8717-68854597f7de/26-6a75c04bcc55a.webp' /></p><p> 

இந்தச் சுரங்கத்தை தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் இயக்கி வருகிறது.

ஒரு காலத்தில் கோல்கொண்டா உள்ளிட்ட பகுதிகளில் வைரச் சுரங்கங்கள் செயல்பட்டன.</p><p> 

உலகப் புகழ்பெற்ற கோஹினூர், ஹோப் டைமண்ட், ரீஜென்ட் டைமண்ட் போன்ற வைரங்கள் இந்தியாவில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டவை.
</p><p>
தற்போது இந்தியாவில் வைரங்களை வெட்டி மெருகூட்டும் தொழில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், பதப்படுத்தப்படும் பெரும்பாலான இயற்கை வைரங்கள் ரஷ்யா, போட்ஸ்வானா, கனடா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T11:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியா மீது ஈரான் ஆதரவுப்படைகளால் இருமுனைத் தாக்குதல்: நெருக்கடியில் மத்திய கிழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-expects-two-pronged-attack-1786099823"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-expects-two-pronged-attack-1786099823</id>
            <summary type="text">ஈரான் ஆதரவுப் படைகளிடமிருந்து இருமுனைத் தாக்குதல் ஒன்று விரைவில் நிகழக்கூடும் என்று சவுதி எதிர்பார்க்கிறது.
ஈராக்கிய போராளிக் குழுக்களிடமிருந்தும், ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஆதரவுப் படைகளிடமிருந்து இருமுனைத் தாக்குதல் ஒன்று விரைவில் நிகழக்கூடும் என்று சவுதி எதிர்பார்க்கிறது.
</p><p>ஈராக்கிய போராளிக் குழுக்களிடமிருந்தும், ஏமன் ஹவுதிகளிடமிருந்தும், ஈரானால் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் ஒன்று நிகழும் என சவுதி அரேபியா எதிர்பார்க்கிறது.</p><h2>உளவுத்துறை அறிக்கை</h2><p>
</p><p>இது தொடர்பில் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், எரிசக்தி உள்கட்டமைப்பு, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் பொருளாதாரத் தளங்கள் குறிவைக்கப்படலாம் என்று சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும் பிற பிராந்திய நாடுகளிலிருந்து வந்த உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f586e783-f896-442e-b03e-f1bb024339bb/26-6a75b871da0bc.webp' /></p><p> </p><p>மேலும், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இடம் மாற்றப்படுவதை சவுதி அரேபியா அவதானித்ததாகவும், இது இரு திசைகளிலிருந்தும் ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைக் குறிப்பதாகவும், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலடி கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சவுதி அரேபியா மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். </p><p>இந்த அரிதான எச்சரிக்கையானது, கடந்த சில வாரங்களாக சவுதி அரேபியா பிராந்திய மோதலின் இலக்காக எவ்வாறு அதிகளவில் மாறியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவே கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>சவுதி அரேபியா ஏமனின் ஹவுதிகள் மற்றும் ஈராக் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது; மேலும், தனது எண்ணெய் நிலையங்கள் மீதான ட்ரோன் தாக்குதல்களுக்கு ஈரானின் ஆதரவு பெற்ற குழுக்களே காரணம் என்று குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ஜூலை மாத இறுதியில் அமெரிக்க மத்தியக் கட்டளையுடன் இணைந்து அக்குழுக்கள் மீது தாக்குதல்களை நடத்தியது. </p><p>அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று முக்கிய சுன்னி முஸ்லிம் சக்திகளுக்கு இடையிலான கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக, வெள்ளிக்கிழமை அன்று மெக்காவில் ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என இவ்விவகாரம் குறித்த தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>சீர்குலைக்கும் நோக்கம்</h2><p> </p><p>இதனிடையே, பதற்றத்தைத் தணிக்கவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் சவுதி அரேபிய நிர்வாகம் தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்கள் குறிப்பாகக் கவலைக்குரியதாக இருப்பதாக சவுதி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்; மேலும், ஈரான் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனான தொடர்புகளும் மத்தியஸ்த முயற்சிகளும் சரியான திசையில் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/166ef575-8604-4ac0-8ec4-f78adc1cf1da/26-6a75b87297d52.webp' /></p><p> </p><p>மேலும், திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் அந்த சமாதான முயற்சிகளைச் சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவையாக இருக்கலாம் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார். </p><p>இந்த நிலையில், ஈரான் தொடர்பான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையிலான தற்காலிக ஏற்பாட்டின் கீழ், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு வளைகுடா நாடுகளும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாகப் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T11:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை திரும்ப பெற்ற சங்கீதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sangeetha-vapas-divorce-case-on-cm-vijay-1786097480"></link>
            <id>https://news.lankasri.com/article/sangeetha-vapas-divorce-case-on-cm-vijay-1786097480</id>
            <summary type="text">முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை அவரது மனைவி சங்கீதா திரும்ப பெற்றுள்ளார். 

விவாகரத்து வழக்கை திரும்ப பெற்ற சங்கீதா 

தவெக தலைவர் விஜய், 20...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை அவரது மனைவி சங்கீதா திரும்ப பெற்றுள்ளார். </p><h3>

விவாகரத்து வழக்கை திரும்ப பெற்ற சங்கீதா </h3><p>

தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியுள்ளார்.
</p><p>
விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு விவாகரத்து கோரி மனு அளித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d5e7d48-615f-4fe9-9bec-ae5e1572f99b/26-6a75af496ffb9.webp' /></p><p>

அந்த மனுவில் கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். </p><p>

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளதால், அவரால் விவாகரத்து வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.</p><p> 

சங்கீதா காணொளி வாயிலாக ஆஜராகி 20 நிமிடங்கள் தனது வாதத்தை முன்வைத்தார். </p><p> வாதத்தை கேட்ட நீதிபதி, திகதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார். 

இந்நிலையில் சங்கீதா வழக்கை திரும்பப் பெற்றுள்ளார்.</p><p> இதனையடுத்து வழக்கை நீதிபதி முடித்து வைத்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T10:11:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் விமான நிலையத்தில் வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன்: சில புதிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drone-on-germany-airport-not-blast-tech-error-1786096601"></link>
            <id>https://news.lankasri.com/article/drone-on-germany-airport-not-blast-tech-error-1786096601</id>
            <summary type="text">ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடிக்கவில்லை என தகவல் வெளியாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன், உக்ரைன் விமானத்தை குறிவைத்து அனுப்பப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
</p><h3>
ஜேர்மன் விமான நிலையத்தில் மர்மப் பொருள்</h3><p>

ஜேர்மனியின் Leipzig விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e69b5a70-84e1-47c2-920d-a4187a3b377b/26-6a75abdad3327.webp' /></p><p>
பின்னர், விமான ஓடுபாதையில் மர்மப்பொருள் ஒன்று கிடப்பது தெரியவரவே, உஷாரான அதிகாரிகள், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் ரோபோ ஒன்றை அங்கு அனுப்பியுள்ளனர்.
</p><p>
அவர்கள் சந்தேகப்பட்டது போலவே, அங்கு வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கிடப்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அந்தக் கருவியில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அது வெடிக்கவில்லை என ஜேர்மன் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், அந்த ட்ரோன், உக்ரைன் விமானம் ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்த விமானத்தில் ராணுவ தளவாடங்கள் இருந்ததாகவும் ஜேர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdf0a2b9-365e-4010-9234-c64d26eea25c/26-6a75abdb8431e.webp' /></p><p>
ஆனால், அந்த தகவலை ஜேர்மன் நாடாளுமன்ற உள்துறை கமிட்டி உறுப்பினரான Detlef Seif மறுத்துள்ளார்.&nbsp;</p><p>
ஒரு முக்கிய சரக்கு மையமாகவும், ரஷ்யாவுக்கு அருகிலுள்ள தனது தளத்துக்கு உபகரணங்களை வழங்க உதவும் தளமாகவும் பயன்படும் Leipzig விமான நிலையத்தை, உக்ரைன் விமானங்கள் பயன்படுத்துவது வழக்கம்.
</p><p>
ஏற்கனவே, 2024ஆம் ஆண்டு, Leipzig விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல்கள் தானாக தீப்பிடித்து எரிந்த விடயத்தின் பின்னால் ரஷ்யா இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அங்கு உக்ரைன் விமானங்களும் நிற்கும் நிலையில், உக்ரைன் ரஷ்யப் போர் பின்னணியில், இந்த விடயத்தின் பின்னணியிலும் ரஷ்யா இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T09:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[PSG அணி அதிர்ச்சித் தோல்வி: சர்வதேச வீரர்கள் திரும்பிய பிறகே..பயிற்சியாளரின் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/psg-coach-said-about-upset-loss-vs-mallorca-1786096039"></link>
            <id>https://news.lankasri.com/article/psg-coach-said-about-upset-loss-vs-mallorca-1786096039</id>
            <summary type="text">மல்லோர்கா அணிக்கு எதிரான போட்டியில் PSG அணி படுதோல்வி அடைந்தது.&amp;nbsp;&amp;nbsp;கிளப் நட்பு போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 0-3 என்ற கோல் கணக்கில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மல்லோர்கா அணிக்கு எதிரான போட்டியில் PSG அணி படுதோல்வி அடைந்தது.&nbsp;&nbsp;</p><p>கிளப் நட்பு போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 0-3 என்ற கோல் கணக்கில் மல்லோர்காவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.&nbsp;</p><h2>மல்லோர்கா வெற்றி </h2><p>
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் (PSG) மற்றும் மல்லோர்கா அணிகளுக்கு இடையிலான கிளப் நட்பு போட்டி ஸ்பெயினியில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ea2abed-72b6-4886-9c48-8e74dfc1118e/26-6a75a9aa75be4.webp' />&nbsp;</p><p></p><p>

ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் மல்லோர்காவின் ஸிடோ லுவும்போ கோல் அடித்தார். அடுத்த 19 நிமிடங்களில் ஜென் விர்கிலி கோல் அடித்தார்.
</p><p>
இந்த அதிர்ச்சியில் இருந்து PSG அணி மீள்வதற்குள் 51வது ஆன்டோனியோ ரெய்லோ (Antonio Raillo) கோல் அடித்தார்.</p><p> 

இறுதிவரை PSG அணியினரால் கோல் அடிக்க முடியாததால், மல்லோர்கா 3-0 என்ற கோல் வெற்றி பெற்று அதிர்ச்சி கொடுத்தது.
</p><h2>
பயிற்சியாளர் </h2><p>தோல்வி குறித்து பேசிய PSG பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்யூ (Luis Enrique), "இது எங்கள் உடல்தகுதியை மேம்படுத்துவதற்கான ஒரு போட்டி. இதற்கு ஒரு சரியான பகுப்பாய்வை வழங்குவது கடினம். முதல் பாதியில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டதாக நினைக்கிறேன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/362ac58f-9e62-4a9d-9fc8-9a411318ac55/26-6a75a9ab24140.webp' /></p><p>

ஆனால், இரண்டாவது கோலை விட்டுக்கொடுத்தபோது நாங்கள் செய்த தவறு ஆட்டத்தை எங்களுக்கு கடினமாக்கியது. 

இருப்பினும், நான் பார்த்த விடயங்களில் மகிழ்ச்சியடைகிறேன்; அகாடமி வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டதை காண முடிந்தது. இது நாங்கள் விரும்பிய முடிவு அல்ல; ஆனால் கால்பந்தில் இது இயல்பான ஒன்றுதான். PSG அணிக்கு எதிராக விளையாடுவது மற்ற அணிகளுக்கு ஒரு உந்துதலாக அமைகிறது, அது இயல்பானதே.</p><p>இது எங்கள் பருவக்காலத்திற்கு முந்தைய பயிற்சியின் முதல் வாரம்; அணியில் பல அகாடமி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் திரும்பிய பிறகே எங்கள் அணியின் உண்மையான நிலையை எங்களால் முழுமையாக மதிப்பிட முடியும்" என தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e33381b2-2fea-4773-a0db-d5bc001e4e46/26-6a75a9ac8063f.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd0beec2-ece3-4b2b-b8fa-657e2329a7f6/26-6a75a9abcafd1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T09:46:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளின் தக்காளிகளைச் சாப்பிட்டதால் பலியான 15 யானைகள்: வெளியான பகீர் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/elephants-killed-suspected-cyanide-1786095792"></link>
            <id>https://news.lankasri.com/article/elephants-killed-suspected-cyanide-1786095792</id>
            <summary type="text">கென்யாவின் அம்போசெலி தேசியப் பூங்காவிற்கு அருகிலுள்ள பண்ணைகளில் தக்காளிகளைச் சாப்பிட்டதால் 15 யானைகள் மரணமடைந்துள்ளன.
கென்யாவின் அம்போசெலி தேசிய பூங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கென்யாவின் அம்போசெலி தேசியப் பூங்காவிற்கு அருகிலுள்ள பண்ணைகளில் தக்காளிகளைச் சாப்பிட்டதால் 15 யானைகள் மரணமடைந்துள்ளன.</p><p>
கென்யாவின் அம்போசெலி தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள பண்ணைகளில் தக்காளிப் பழங்களைச் சாப்பிட்ட பிறகு, 15 யானைகள் இறந்த நிலையில் அது சயனைடு நச்சுத்தன்மையால் நடந்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>தக்காளிப் பழங்களால்</h2><p>
</p><p>காட்டு விலங்குகளும் வீட்டு விலங்குகளும் இணைந்து வாழும், பண்ணைகளில் தக்காளி மற்றும் வெங்காயம் பயிரிடப்படும் ஒரு சூழலில் சயனைடு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8548d240-1036-4cae-a62d-dcc0e88c1283/26-6a75a8b3092aa.webp' /></p><p> </p><p>ஆனால், தங்கள் தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டதால் யானைகள் பலியானதாக வெளியாகியுள்ளத் தகவலை விவசாயிகள் மறுத்து வருகின்றனர்.</p><p> அம்போசெலி பூங்காவிற்கு அருகில் விரிவடையும் விவசாய நடவடிக்கைகளால் இப்பகுதியில் மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், யானைகளின் இறப்புகளும் அதற்கான காரணங்கள் குறித்த கருத்து வேறுபாடுகளும் கவலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. </p><p>வேட்டையாடுதலைக் குறைத்து யானைகளைப் பாதுகாப்பதன் மூலம், வரலாற்று ரீதியாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலிருந்த தங்கள் யானை இனத்தின் எண்ணிக்கையை 36,000-க்கும் அதிகமானதாக மீண்டும் உயர்த்தியதற்காக, சமீப காலம் வரை கென்யா பரவலாக அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளது.</p><p>
அம்போசெலி சூழல் மண்டலத்தில் ஒரு மாத காலத்திற்குள் 15 யானைகள் மரணமடைந்ததாகக் கென்யா வனவிலங்கு சேவை அமைப்பு கடந்த மாதம் அறிவித்தது.</p><p></p><p> </p><p>முதற்கட்ட ஆய்வகப் பரிசோதனைகளில் சயனைடு கண்டறியப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனைகளில் விலங்குகளின் வயிற்றில் தக்காளிகள் இருப்பது தெரியவந்தது. </p><p>மருத்துவர்கள் தெரிவிக்கையில், யானைகள் இறப்பதற்கு முன், பக்கவாதம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியிருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2>விவசாய நிலங்கள்</h2><p> </p><p>ஆரம்பகட்ட சோதனைகள் சயனைடு நச்சுத்தன்மையைக் சுட்டிக்காட்டின; இருப்பினும், சயனைடின் செறிவை உறுதிப்படுத்த மேலதிக ஆய்வகச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. </p><p>அம்போசெலியின் எல்லையில் அமைந்துள்ள கிமானா, கென்யாவின் மிகச் சிறந்த விவசாயப் பகுதிகளில் ஒன்றாகும்; இங்கு விளையும் தக்காளி, வெங்காயம் மற்றும் பிரெஞ்சு பீன்ஸ் ஆகியவை தலைநகர் நைரோபியில் உள்ள சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. </p><p>கென்யாவின் தேசிய யானைகள் பாதுகாப்புத் திட்டத்தின்படி, பூங்காவிற்கு அருகில் விவசாய நிலங்கள் விரிவடைந்துள்ள நிலையில், வேட்டையாடுதலுக்கு அடுத்தபடியாக மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதலே உயிரிழப்புகளுக்கு இரண்டாவது முக்கிய காரணமாகத் தொடர்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80a99269-f135-409e-b82f-6eb148436a1d/26-6a75a8b3bb480.webp' /></p><p> </p><p>2000 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில், தங்கள் பயிர்கள், உடைமைகள் மற்றும் உயிர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் சமூகங்கள் மேற்கொண்ட தற்காப்பு அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளால் குறைந்தது 1,160 யானைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>மேலும், பொதுவாகப் பயன்படுத்தப்படும் விவசாய இடுபொருட்களிலிருந்து சயனைடு வந்திருக்கக்கூடும் என்பதில் விவசாயிகளுக்குச் சந்தேகம் உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T09:41:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் விவாகரத்து வழக்கு - 20 நிமிடங்கள் காணொளியில் வாதம் செய்த சங்கீதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vijay-sangeetha-divorce-case-adjourned-1786095537"></link>
            <id>https://news.lankasri.com/article/vijay-sangeetha-divorce-case-adjourned-1786095537</id>
            <summary type="text">முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில், 20 நிமிடங்கள் காணொளியில் சங்கீதா வாதம் செய்த நிலையில், திகதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில், 20 நிமிடங்கள் காணொளியில் சங்கீதா வாதம் செய்த நிலையில், திகதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><h3>

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு</h3><p>

தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a941561-8dcc-44d4-9bca-b4d9f2e70300/26-6a75a7b247cd6.webp' /></p><p>
விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு விவாகரத்து கோரி மனு அளித்தார். </p><p>

அந்த மனுவில் கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டுமென இருதரப்பு வழக்கறிஞர்களும் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. </p><p>

ஆனால் தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளதால், அவரால் விவாகரத்து வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். </p><p>

சங்கீதா காணொளி வாயிலாக ஆஜராகி 20 நிமிடங்கள் தனது வாதத்தை முன்வைத்தார். 

வாதத்தை கேட்ட நீதிபதி, திகதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T09:39:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேப்பரை படிக்க சொன்ன முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/udhayanidhi-replies-to-vijay-comment-to-read-paper-1786090480"></link>
            <id>https://news.lankasri.com/article/udhayanidhi-replies-to-vijay-comment-to-read-paper-1786090480</id>
            <summary type="text">சட்டமன்றத்தில் பேப்பர் படித்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும் என முதல்வர் விஜய் பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டமன்றத்தில் பேப்பர் படித்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும் என முதல்வர் விஜய் பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.</p><h3> 

 உதயநிதி ஸ்டாலின் கேள்வி</h3><p> 

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 ஆகஸ்ட் முதல் நடைபெற்று வருகிறது. </p><p>

இன்று நடைபெற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது தடுப்பணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு வேகம் காட்டி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33f05e89-6d79-4535-804c-33deb0830b06/26-6a7593f3591e7.webp' /></p><p>

தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? அனைத்துக்கட்சி கூட்டத்தை விவாதிக்க ஆளும் அரசு தயங்குவது ஏன்? நம் மாநிலமும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை எப்போது கூட்ட போகிறீர்கள்" என பேசினார்.&nbsp;</p><p></p><h3>

பேப்பரை படிக்கச் சொன்ன முதல்வர் விஜய்</h3><p> 

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், "காவிரி பிரச்னையில் ஒரு முயற்சி எடுத்துப்பார்க்கலாமே என்று நினைத்துதான் பெங்களூரு பயணத்தை பற்றி யோசித்து கேட்டது நான்தான்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d90650f-1835-4768-a127-9be2663eebb9/26-6a7593f1f1c92.webp' /></p><p> 

இந்த பயணத்தால் அவமானம் நேர்ந்தால் என்னவாவது என்று கேட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்கிக்கொள்ள நான் தயார். </p><p>

காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். குறுவை சாகுபடிக்கு ஏற்கனவே அந்த நிவாரணம் கொடுத்தாச்சு. </p><p>

இதுவந்து அரசியலே நாங்கள் தான் என்று சொல்லி கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன, பின்ன பேப்பர் படித்து இருந்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும்" என கூறினார். </p><h3>

உதயநிதி ஸ்டாலின் பதிலடி </h3><p>

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "அரசு கொடுத்தது சிறப்பு தொகுப்பு. ஆனால் இப்போது விவசாயிகள் வறட்சி நிவாரண நிதி. இது ரெண்டுக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோங்க.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05fefc00-bc0e-4aea-a0d8-b98f79b006f4/26-6a7593f2a757c.webp' /></p><p>

இதுக்கு டெய்லி காலை பேப்பர் படிச்சா மட்டும் பத்தாது. விவசாயிகளை, அனைத்து கட்சிகளை சந்திக்கணும். தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டம் கூட்ட என்ன பயம்?" என்று பதிலடி கொடுத்தார்.</p><p> 

இதற்கு விளக்கமளித்த அவை முன்னவர் செங்கோட்டையன், "வறட்சி நிதி செப்டம்பர் மாதத்திற்கு பின் தான் கணக்கெடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T09:10:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்தியருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-orgin-man-dies-in-robbery-attempt-in-canada-1786091731"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-orgin-man-dies-in-robbery-attempt-in-canada-1786091731</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவரைக் கொன்றதாக கனேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவரைக் கொன்றதாக கனேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில், கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.</p><h3>

கொள்ளை முயற்சியின்போது கொல்லப்பட்ட இந்தியர்
</h3><p>
எட்மண்டனில் மதுபான விடுதி ஒன்றை நடத்திவரும் சுக்ஜீத் சிங் ரந்தாவா (48) என்பவர், புதன்கிழமை இரவு தனது விடுதியை மூடிக்கொண்டிருந்திருக்கிறார்.</p><p>

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிங் கடையில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவரை சிங் தடுக்க, அந்த நபர் சிங்கை தாக்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6baa4a-daf1-46b6-9c2c-e742dac056e5/26-6a7598d4e584e.webp' /></p><p>
தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, சிங் படுகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.</p><p>

முதலுதவி சிகிச்சைக்குப் பின் சிங்கை அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில், நிக்கோலஸ் (Nicholas Butler-Chowace, 22) என்னும் கனேடியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
சிங்கின் நண்பரான ரவி ப்ரகாஷ் என்பவர் கூறும்போது, சிங் கடையை மூடிக்கொண்டிருக்கும்போது, நிக்கோலஸ் அங்கு வந்து மதுபானம் திருட முயன்றதாகவும், அதை தடுத்த சிங் தாக்கப்பட்டதாகவும், தன் கடைக்குள்ளேயே அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

தங்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என்று கூறும் ரவி, தானும் சிறு தொழில் ஒன்றை நடத்தி வருவதாகவும், தானும் தனது ஊழியர்களும்கூட இதேபோல தாக்கப்பட்டுள்ளதாகவும், இதே நிலை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T08:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை எவ்வளவு? (07-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1786090496"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1786090496</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (07-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (07-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,347,429.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 47,530.00.</p><p>

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 380,250.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 43,570.00.</p><p>

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 348,600.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 41,590.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 332,750.00.</p>]]></content>
            <updated>2026-08-07T08:15:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் டால்பின் புயல்: 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றம், 500 விமானங்கள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-evacuates-260k-as-typhoon-dolphin-hits-1786090234"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-evacuates-260k-as-typhoon-dolphin-hits-1786090234</id>
            <summary type="text">Japan Typhoon Dolphin: டால்பின் புயல் ஜப்பானை நெருங்கி வருகிறது.ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் டால்பின் புயல் நெருங்கி வருவதால், அதிகாரிகள் அவசர வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Japan Typhoon Dolphin: டால்பின் புயல் ஜப்பானை நெருங்கி வருகிறது.</p><p>ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் டால்பின் புயல் நெருங்கி வருவதால், அதிகாரிகள் அவசர வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.</p><p>காகோஷிமா மற்றும் ஒகினாவா மாகாணங்களில் சுமார் 2,60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2394eb3f-fcbe-4885-a367-1df54cbaf58c/26-6a7592fd1d5ff.webp' /></p><p>இந்த புயல் Category 1 வகை புயலாகும். அதிகபட்சமாக 144 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. சில இடங்களில் 198 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
</p><p>
புயல் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா (Toyota) நிறுவனம் தனது 9 தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
</p><p></p><p>புயல் தாக்கம் ஒகினாவா மற்றும் கியுஷூ தீவுகள் முழுவதும் பரவியுள்ளது. கடந்த வாரம் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட குமமோட்டோ மாகாணம் இன்னும் பாதிப்பிலிருந்து மீளவில்லை. அங்கு 6,700 பேர் இன்னும் வெளியேற்ற முகாம்களில் தங்கியுள்ளனர்.
</p><p>
மேலும், புயலுடன் கூடிய மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்பதால் வெப்பவாதம் (Heatstroke) அபாயமும் அதிகரித்துள்ளது.

அதிகாரிகள் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T08:08:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் உச்ச கட்ட வறட்சி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-is-reaching-extreme-drought-level-1786085315"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-is-reaching-extreme-drought-level-1786085315</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்து தனது வறட்சி எச்சரிக்கையை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது.


குறைவான மழை மற்றும் தொடர் வெப்ப அலைகள் காரணமாக சுவிட்சர்லாந்து தனது வறட்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்து தனது வறட்சி எச்சரிக்கையை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது.
</p><p>

குறைவான மழை மற்றும் தொடர் வெப்ப அலைகள் காரணமாக சுவிட்சர்லாந்து தனது வறட்சி எச்சரிக்கையை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது.
</p><h3>
உச்ச கட்ட வறட்சி
</h3><p>
சுவிட்சர்லாந்தில் வறட்சி, நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் இல்லை, சில நீர் நிலைகள் வறண்டுவிட்டன என தகவல்கள் வெளியாகிவருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4244085-541e-4c4b-bf66-e2ccb02f4b77/26-6a757fc4ad953.webp' /></p><p>
வழக்கமாக ஆல்ப்ஸ் மலையில் தங்கள் கால்நடைகளை மேய்க்கும் விவசாயிகள், கால்நடைகளுக்கு புல் பற்றாக்குறை உருவாகியுள்ளதால் கஷ்டப்பட்டுவருகிறார்கள்.&nbsp;</p><p></p><p>
சுற்றுலாப்பயணிகள் உல்லாசப்பயணம் மேற்கொள்ளும் ஏரிகள் சில வறண்டு ஏரியின் படுகை வெடிக்கும் நிலை உருவாகியுள்ளதால், சுற்றுலாவும் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JqHovwxIBSk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
நீர் நிலைகள் வறண்டுபோனதால் பல்லாயிரக்கணக்கான மீன்கள் மாண்டுவிட்டன. பல இடங்களில் தண்ணீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆக, உலக நாடுகள் பலவற்றிலிருந்து கோடையை செலவிடுவதற்காக மக்கள் சுவிட்சர்லாந்துக்குச் செல்வது வழக்கம். </p><p>ஆனால், அந்த சுவிட்சர்லாந்திலேயே வறட்சி என வெளியாகியுள்ள தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:51:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார் - முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-says-ready-to-bear-any-humiliation-1786083324"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-says-ready-to-bear-any-humiliation-1786083324</id>
            <summary type="text">தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் கேள்வி 

தமிழ்நாடு அரசின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். </p><h3>

உதயநிதி ஸ்டாலின் கேள்வி </h3><p>

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 ஆகஸ்ட் முதல் நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.
</p><p>
இன்று, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4382cff7-ac56-43d8-9a67-6b59bae2bc67/26-6a7577fe682ec.webp' /></p><p> 

இதில் பேசிய அவர், தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது தடுப்பணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு வேகம் காட்டி வருகிறது. தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? </p><p>அனைத்துக்கட்சி கூட்டத்தை விவாதிக்க ஆளும் அரசு தயங்குவது ஏன்? 

டில்லியில் கர்நாடக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நம் மாநிலமும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை எப்போது கூட்ட போகிறீர்கள்" என பேசினார்.</p><h3> 

முதலமைச்சர் விஜய் பதில் </h3><p>

இதற்கு பதிலளித்துள்ள பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், "காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சில விவரங்களை கேட்டு இருக்கிறார்கள். காவிரி நமக்கு உயிர் ஆதாரம். நம்முடைய உணர்வு ரீதியான ஒன்று. அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளி கூட நமது அரசுக்கு இல்லை. அதற்கான அவசியமும் இல்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93a1d5df-31fe-420e-a3cb-b94d616e5a9b/26-6a7577fdb68a7.webp' /></p><p>

மேகதாது விவகாரத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து தான் தீர்மானம் போட்டோம். அதனை கடிதமாக பிரதமருக்கும் அனுப்பி வைத்து இருக்கிறோம். அதோடு நாம் அப்படியே இருந்துவிடவில்லை.
</p><p>
மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். காவிரி நதி நீர் பங்கீட்டிலும் சரி , மேகதாது அணை கட்டும் முயற்சிகளை தடுப்பதிலும் சரி, தமிழகத்தின் உரிமையை கொஞ்சம் கூட நம்ம அரசு விட்டு தரவே தராது. அது தான் நமது நிலைப்பாடு.</p><p> 

கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்படும் முயற்சிகள் குறித்து 1969ல் இதே அவையில் விவாதம் நடந்து இருக்கிறது. அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? அப்பொழுது அணை கட்ட விட்டது யார் என்று கேட்டு மலிவான அரசியல் செய்ய விரும்பவில்லை. அது நமது நோக்கமும் இல்லை. </p><p>

காவிரி பிரச்னையில் சம்பந்தப்பட்ட இரண்டு மாநிலங்களும், மத்திய அரசும் உட்கார்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று 1969ல் இந்த அவையில் பேசி இருக்கிறார்கள். அன் பிறகு நிலைமை மாறியது நமக்கு எல்லோருக்கும் தெரியும்.
</p><p>
காவிரி பிரச்னையில் ஒரு முயற்சி எடுத்துப்பார்க்கலாமே என்று நினைத்துதான் பெங்களூரு பயணத்தை பற்றி யோசித்து கேட்டது நான்தான். இது பற்றி பல கருத்துக்கள் வந்தன.
</p><p>
பிரச்னையை தீர்க்க பாசிட்டிவான சிக்னல் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் யோசித்தேன். இன்றைய காலகட்டத்தில் பகை நாடுகளே பேசித் தீர்க்கப் பார்க்கிறாங்க, பக்கத்து மாநிலத்தோட பேசிப் பார்த்தால் என்னன்னு நினைத்தேன்.
</p><p> 
இந்த பயணத்தால் அவமானம் நேர்ந்தால் என்னவாவது என்று கேட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்கிக்கொள்ள நான் தயார். </p><p>

காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். குறுவை சாகுபடிக்கு ஏற்கனவே அந்த நிவாரணம் கொடுத்தாச்சு. </p><p>

இதுவந்து அரசியலே நாங்கள் தான்என்று சொல்லி கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன, பின்ன பேப்பர் படித்து இருந்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும்" என கூறினார்.</p><p> 

இதன் பின்னர் பேசிய சிபிஎம் எம்.எல்.ஏ. செல்லசுவாமி, “தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகாவிற்கு சென்று மண்டியிட வேண்டிய தேவை இல்லை அந்த அவமானத்தை தாங்குவேன் என்று அவர் கூறினார். அது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் அவமானமாகும்." என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:40:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி-துருக்கி-பாகிஸ்தான் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-turkey-pakistan-sign-defence-pact-1786088225"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-turkey-pakistan-sign-defence-pact-1786088225</id>
            <summary type="text">சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று முக்கியமான இஸ்லாமிய நாடுகள் இன்று (ஆகஸ்ட் 7) ஜெத்தாவில் கூடி, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று முக்கியமான இஸ்லாமிய நாடுகள் இன்று (ஆகஸ்ட் 7) ஜெத்தாவில் கூடி, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.
</p><p>
சவுதி இராணுவம் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த ஒப்பந்தம் நீண்ட காலமாக ஆலோசனையில் இருந்தாலும், சமீபத்திய பிராந்திய சூழ்நிலைகள் காரணமாக விரைவாக முடிவுக்கு வந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/191c7810-1c86-4226-9358-3cca6bb18667/26-6a758b22692bb.webp' /></p><p>அமெரிக்கா-ஈரான் போரின் தாக்கம், ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடலில் கப்பல் போக்குவரத்து பாதிப்பு ஆகியவை இந்த ஒப்பந்தத்தை அவசியமாக்கியுள்ளன.
</p><p>
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் ஆகியோர் ஜெத்தாவில் சந்திக்க உள்ளனர். </p><p>பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தலைவர் அசிம் முனீர் நேற்று சவுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். துருக்கி ஜனாதிபதி இன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இந்த விஜயம் ஆகஸ்ட் 6 முதல் 8 வரை நடைபெறும் என்றும், இது உடனடி பிரச்சினைகளைத் தாண்டி நீண்டகால முக்கியத்துவம் பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னதாக 2025-இல் சவுதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தான் உலகில் ஒரே அணு ஆயுதம் கொண்ட முஸ்லிம் நாடாக இருப்பதால், இந்த புதிய மூன்று நாடுகள் ஒப்பந்தம் உலக கவனத்தை ஈர்க்கிறது.</p><p>

இந்த ஒப்பந்தம், பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, மூன்று நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை உறுதிப்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T07:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sun-ketu-conjunction-1786088012"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sun-ketu-conjunction-1786088012</id>
            <summary type="text">நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

அதேபோல், நவக்கிரகங்களில் அமங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.</p><p>

அதேபோல், நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.</p><p>

இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.</p><p> </p><p></p><p>அதே வேளையில் இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருகிறார். </p><p>

இதனால் இந்த சூரிய பெயர்ச்சியால் சிம்ம ராசியில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் சூரியன்-கேது சேர்க்கை நிகழவுள்ளது.</p><p>

அந்தவகையில், சூரியன் மற்றும் கேதுவின் இந்த இணைவால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிக பலன்களை பெறப்போகின்றனர்.&nbsp;</p><h2>சிம்மம்</h2><ul><li>

நிதி நிலை நன்றாக இருக்கும்.
</li><li>குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் கிடைக்கும்.</li><li>
நிலுவையில் உள்ள பணம் திரும்பக் கிடைக்கும்.</li><li>
முதலீடுகள் பெரிய லாபத்தைக் கொடுக்கும்.</li><li>
பொருளாதார நிலை வலுவடையும்.
</li><li>வேலையை மாற்ற இக்காலம் சரியாக இருக்கும்.
</li><li>இக்காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.</li><li>
குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவும்.
</li><li>பூர்வீகச் சொத்து மூலம் ஆதாயம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a05862-cf99-4b0d-ab20-7522a246ed34/26-6a758b12ec29b.webp' /></p><p>
</p><h2>
கன்னி </h2><ul><li>
சாதகமானப் பலன்களை அளிக்கும்.
</li><li>அவர்களின் நற்பெயரை மேலும் உயர்த்தும்.
</li><li>சுற்றியுள்ளவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.
</li><li>வியாபாரத்தில் முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வீர்கள்.
</li><li>தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது மிகச்சிறந்த காலம்.
</li><li>அவர்களின் பொருளாதார நிலை மேம்படும்.
</li><li>நிதி நிலையில் முன்னேற்றம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63a50270-67ff-4f01-b660-3c7dad9a1364/26-6a758b13a66fa.webp' /></p><h2>
 மகரம்</h2><ul><li> 
நேர்மறையான பலன்களை ஏற்படுத்தும்.
</li><li>நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
</li><li>அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும்.
</li><li>வேலையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் உண்டாகும்.</li><li>
காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
</li><li>குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.
</li><li>இக்காலத்தில் சாதனைகளை செய்வார்கள்.
</li><li>வணிகத்தில் அதிகளவு லாபம் உண்டாகும்.</li><li>
வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19bb7775-4344-4643-8544-b0efc67abb4b/26-6a758b1457517.webp' /></p><p>
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T07:37:22+00:00</updated>
        </entry>
    </feed>
