<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-28T22:14:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026-இல் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற 35,000 இந்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/35000-indians-gain-uk-settlement-in-2026-1787953325"></link>
            <id>https://news.lankasri.com/article/35000-indians-gain-uk-settlement-in-2026-1787953325</id>
            <summary type="text">35000 Indians gain UK settlement in 2026: 2026 ஜூன் வரை 35,000 இந்தியர்கள் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றனர்.

35,384 இந்தியர்கள்2026-ஆம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>35000 Indians gain UK settlement in 2026: 2026 ஜூன் வரை 35,000 இந்தியர்கள் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றனர்.
</p><h2>
35,384 இந்தியர்கள்</h2><p>2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவடையும் காலக்கட்டத்தில், 35,384 இந்தியர்கள் பிரித்தானியாவில் Indefinite Leave to Remain (ILR) எனப்படும் நிரந்தர குடியுரிமை அனுமதியை பெற்றுள்ளனர்.</p><p>இது கடந்த ஆண்டை விட 51 சதவீதம் அதிகம் என UK Home Office வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ee5bf85-b74a-4d69-83f3-5979232e8b01/26-6a9200af32134.webp' /></p><h2>ILR </h2><p>ILR என்பது பிரித்தானியாவில் காலவரையற்ற குடியிருப்பு மற்றும் வேலை செய்யும் உரிமையை வழங்கும் முக்கியமான நிலையாகும்.
</p><p>
இந்தியர்கள், பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெறும் மிகப்பெரிய குழுவாகத் திகழ்கின்றனர். குறிப்பாக வேலை வாய்ப்பு வழியாக பிரித்தானியாவிற்கு சென்றவர்கள், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் ILR பெறும் தகுதியை பெற்றுள்ளனர்.
</p><h2>
குடியுரிமை விதிகளை கடுமையாக்க திட்டம்</h2><p>ஆனால், பிரித்தானிய அரசு விரைவில் குடியுரிமை விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. தற்போதைய 5 ஆண்டுகள் தகுதி காலம், 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது. </p><p>சில பிரிவுகளில், குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு 15 ஆண்டுகள், அரசு நிதி உதவிகளைப் பெறுவோருக்கு 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p></p><p>2025-26 காலகட்டத்தில், 24,851 இந்தியர்கள் பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து 18,489 பாகிஸ்தான் குடிமக்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். </p><p>இதன் மூலம், இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் பிரித்தானியாவில் குடியுரிமை பெறும் மிகப்பெரிய குழுவாகத் திகழ்கின்றனர்.</p><p></p><p>
</p><h2>
மாணவர்கள் </h2><p>இதே நேரத்தில், இந்திய மாணவர்கள் பிரித்தானியாவில் குறைந்துள்ளனர். 2026 ஜூன் மாதம் முடிவடையும் காலத்தில், 82,523 இந்திய மாணவர்கள் UK மாணவர் விசா பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 16 சதவீதம் குறைவு. சீனா, 86,368 மாணவர் விசா பெற்றதால், இந்தியாவை முந்தியுள்ளது. </p><p>மேலும், மாணவர்களின் dependent family members விசா வழங்கல் 81 சதவீதம் குறைந்துள்ளது.</p><p>

இந்த புள்ளிவிவரங்கள், இந்தியர்களின் பிரித்தானிய குடியேற்றத்தில் இரு விதமான மாற்றங்களை காட்டுகின்றன. வேலை வாய்ப்பு வழியாக சென்றவர்கள் அதிக அளவில் நிரந்தர குடியுரிமை பெறுகின்றனர். ஆனால், புதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு விதிகள் கடுமையாக்கப்பட்டதால், அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T21:39:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப் பேரழிவில் 35 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் காணாமல் போனது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-floods-35-nations-missing-citizens-1787945065"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-floods-35-nations-missing-citizens-1787945065</id>
            <summary type="text">Nepal Floods - 35 nations missing citizens: நேபாள பெருவெள்ளத்தில் 35 நாடுகளை சேர்ந்தவர்கள் காணாமல் பொறியுள்ளனர்.

நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal Floods - 35 nations missing citizens: நேபாள பெருவெள்ளத்தில் 35 நாடுகளை சேர்ந்தவர்கள் காணாமல் பொறியுள்ளனர்.
</p><p>
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. </p><p>

நேபாள அரசு வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, 1,468 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 517 வெளிநாட்டவர்கள் அடங்குவர். இதுவரை 392 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09944d80-c2be-466f-82a2-cda6fe7b924f/26-6a91e82a97e7e.webp' /></p><p>நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்ததாவது, 667 பேர் காணாமல் போயுள்ளனர் என பதிவாகியுள்ளது. இதில் 127 நேபாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அடங்குவர்.
</p><p><b>
இந்தியா:</b> வியாழன் நிலவரப்படி 178 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p><b>அமெரிக்கா:</b> 90 பேர் காணாமல் போயுள்ளனர். 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p><b>பிரித்தானியா:</b> 33 பேர் காணாமல் போயுள்ளனர்.
</p><p><b>கனடா:</b> 25 பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால், கனடா அரசு 30 பேர் தொடர்பில் தகவல் இல்லை என தெரிவித்துள்ளது.
</p><p><b>அவுஸ்திரேலியா:</b> 39 பேர் காணாமல் போயுள்ளனர்.
</p><p><b>மலேசியா:</b> 51 பேர் தொடர்பில் தகவல் இல்லை.
</p><p><b>உக்ரைன்: </b>56 பேர் காணாமல் போயுள்ளனர்.
</p><p><b>சீனா:</b> 100-க்கும் மேற்பட்ட சீனர்கள் காணாமல் போயுள்ளனர்.
</p><p></p><p>மேலும், ஜேர்மனி (8), ரஷ்யா (8), சிங்கப்பூர் (9), தென் கொரியா (9), பிரான்ஸ் (4), ஸ்பெயின் (4), ஜப்பான் (5), நியூசிலாந்து (5), தென்னாப்பிரிக்கா (6), லாட்வியா (6), போர்ச்சுகல் (3), இத்தாலி (3), அயர்லாந்து (2), கசகஸ்தான் (2), இஸ்ரேல் (1), லிதுவேனியா (1), பிலிப்பைன்ஸ் (1), ஸ்வீடன் (1), பெல்ஜியம் (3), ஹங்கேரி (3),நெதர்லாந்து (2), பின்லாந்து (1) உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் காணாமல் போயுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d39788c1-a936-405d-866e-2ad39555284d/26-6a91e82b5605b.webp' /></p><p>சுவிற்சர்லாந்து (1), பல்கேரியா (1) ஆகிய நாடுக்ளிக் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
சிலர் மீட்கப்பட்டாலும், பலர் இன்னும் தொடர்பில் இல்லை. இரட்டை குடியுரிமை, உடல்களை அடையாளம் காணும் சிரமம், பேரழிவின் குழப்பம் ஆகிய காரணங்களால் எண்ணிக்கைகள் மாறக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த பேரழிவு, நேபாளத்தின் சுற்றுலா துறைக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் காணாமல் போனதால், பல நாடுகள் தங்கள் குடிமக்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T19:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு மாணவர் இன்டர்ன்ஷிப் மீது டிரம்ப் நிர்வாகம் கடும் கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-restricts-foreign-student-internships-1787938747"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-restricts-foreign-student-internships-1787938747</id>
            <summary type="text">Trump restricts foreign student internships: வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப்பில் கடுமையானா கட்டுப்பாடுகளை டிரம்ப் கொண்டுவருகிறார்.

டிரம்ப் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump restricts foreign student internships: வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப்பில் கடுமையானா கட்டுப்பாடுகளை டிரம்ப் கொண்டுவருகிறார்.</p><p>

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் வெளிநாட்டு மாணவர்களின் Curricular Practical Training (CPT) அனுமதிகளை கடுமையாக கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dc53d9c-55be-4959-bad3-a3d21b0cf7c1/26-6a91c7bd2e265.webp' /></p><p>

CPT என்பது வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய இன்டர்ன்ஷிப் அல்லது பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் திட்டமாகும்.</p><h2>புதிய வழிகாட்டுதல்</h2><p> ஆனால், சமீபத்தில் பல CPT அனுமதிகள் விதிகளை மீறுவதாக கண்டறியப்பட்டதால், US Immigration and Customs Enforcement (ICE) உட்பட்ட Student and Exchange Visitor Program (SEVP) ஆகஸ்ட் 24-ஆம் திகதி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது.
</p><p>
அதில், CPT அனுமதி பெறும் பயிற்சிகள் பாடத்திட்டத்துடன் நேரடியாக இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை பின்பற்றாத பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் சான்றிதழை இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p></p><p>இதனால், UCLA மற்றும் UC Berkeley போன்ற பல்கலைக்கழகங்கள் சில CPT விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்தி ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.</p><p> UC Berkeley, புதிய அறிவிப்பு முந்தையதை விடக் கடுமையானதாக இருப்பதாகவும், சில இன்டர்ன்ஷிப் அனுமதிகளை இனி வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்க உள்துறை அமைச்சகம், “விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், டிரம்ப் நிர்வாகத்தில் இந்த திட்டத்தின் தவறான பயன்பாடு இனி சகித்துக்கொள்ளப்படாது” என்று தெரிவித்துள்ளது.
</p><p>
இது கல்வி துறையை மட்டுமல்லாமல், பல்கலைக்கழகங்களின் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள், பல்வகைமை திட்டங்கள், காலநிலை முயற்சிகள், பாலினக் கொள்கைகள் போன்றவற்றிலும் விசாரணைகள் நடத்தும் பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.</p><p></p><p>சில மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், Justice Department பல்கலைக்கழகங்களின் சேர்க்கை முறைகளையும் ஆய்வு செய்து, சில இடங்களில் கருப்பர் மற்றும் ஹிஸ்பானிக் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளது. பல்கலைக்கழகங்கள் இதனை மறுத்துள்ளன.</p><p>
இந்த நடவடிக்கைகள், அமெரிக்காவில் கல்வி பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p> இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் குறையக்கூடும் என்பதால், மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T17:36:18+00:00</updated>
        </entry>
    </feed>
