<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-26T00:30:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் காட்விக் விமான நிலையத்தில்... உடல் உறைந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gatwick-airport-stowaway-found-1787703459"></link>
            <id>https://news.lankasri.com/article/gatwick-airport-stowaway-found-1787703459</id>
            <summary type="text">Stowaway was found frozen to death: விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் உடல் உறைந்து இறந்து கிடந்தார். 

காட்விக் விமான நிலையத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Stowaway was found frozen to death: விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் உடல் உறைந்து இறந்து கிடந்தார். </p><p>

காட்விக் விமான நிலையத்தில், விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் அடையாளம் தெரியாத ஒருவர் பனியில் உறைந்து இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/889ff2f0-ff65-4244-ac0a-eee7c12d2ee1/26-6a8e30a5ac427.webp' /></p><p>
மொராக்கோவிலிருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தின் 'லேண்டிங் கியர்' பகுதியில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மறைந்திருந்த நிலையில் ஜூன் மாதத்தில் கண்டெடுக்கப்பட்டார். </p><p>பிரேதப் பரிசோதனையில், மாரடைப்பு, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் உடல் வெப்பநிலை குறைவு ஆகியவையே மரணத்திற்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது. </p><p>வெஸ்ட் சசெக்ஸ், பிரைட்டன் மற்றும் ஹோவ் பகுதிக்கான மரண விசாரணை அதிகாரி ஜோசப் டர்னர், சக்கர அறையின் உட்புறச் சூழல் மிகக் கடுமையான குளிருடன் இருந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><p>இந்த மரணம் இயற்கைக்கு மாறானது என்று நம்புவதற்கான காரணம் இருந்ததன் அடிப்படையில் விசாரணையை முறைப்படி தொடங்கி வைத்த அவர், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்திருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார். </p><p>சக்கரப் பகுதியிலிருந்து வெளியே தொங்கிக்கொண்டிருந்த பேக்கிங் பட்டையை (packing strap) கவனித்த தரைப்பகுதிப் பொறியாளர் ஒருவர் அந்த நபரைக் கண்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3871300e-016c-4b42-a173-397aa50736ef/26-6a8e30a65d148.webp' /></p><p> </p><p>குறிப்பிட்ட அந்த ஏர் அரேபியா விமானம் டான்ஜியர்ஸிலிருந்து வந்திருந்தது. சம்பவம் நடந்தபோது, ​​லண்டன் கேட்விக் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், </p><p>செவ்வாய்க்கிழமை, ஜூன் 16, 2026 அன்று காலை 11.30 மணிக்கு மேல், ஏர் அரேபியா விமானம் வந்திறங்கியபோது ஒரு சம்பவம் கண்டறியப்பட்டதையடுத்து, லண்டன் கேட்விக் விமான நிலையத்தின் அவசரக்காலப் பிரிவினர் அந்த விமானத்திற்குச் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். </p><p>மேலும், சசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியபடி, ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்னர், எங்கள் குழுக்கள் சசெக்ஸ் காவல்துறைக்கும் மரண விசாரணை அதிகாரிக்கும் உதவியதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விசாரணை 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T00:15:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதல்களை நிறுத்த உக்ரைனிடம் கோரிக்கை... ரஷ்யா பறந்த அமெரிக்க உளவுத்துறை தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-to-halt-strikes-1787692688"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-to-halt-strikes-1787692688</id>
            <summary type="text">CIA Chief On Secret Trip To Moscow: அமெரிக்க உளவுத்துறை தலைவர் மாஸ்கோவிற்கு ரகசியப் பயணம்.
அமெரிக்க உளவுத்துறை தலைவர் ஜான் ராட்க்ளிஃப், ரஷ்ய அதிகாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>CIA Chief On Secret Trip To Moscow: அமெரிக்க உளவுத்துறை தலைவர் மாஸ்கோவிற்கு ரகசியப் பயணம்.
</p><p>அமெரிக்க உளவுத்துறை தலைவர் ஜான் ராட்க்ளிஃப், ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முன்னறிவிப்பின்றி மாஸ்கோவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbf7ec52-5afe-491a-a24f-9e98c8cf60cc/26-6a8e0693da59f.webp' /></p><p>
</p><p>அவரது பயணத்திற்கு முன்பு, மாஸ்கோ மற்றும் வடக்கு ரஷ்யாவின் பிற நகரங்கள் மீதான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துமாறு உக்ரைனிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இந்தக் கோரிக்கை திங்கள் முதல் புதன் வரை அமுல்படுத்த வேண்டும் என்றும், ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி ரஷ்யாவிற்குப் பயணம் செய்யவிருப்பதாக கீவ்விற்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.</p><p></p><p> </p><p>ரஷ்யாவையும் உக்ரைனையும் ஒரு ஒப்பந்தத்திற்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஒரு முக்கியமான தருணத்தில் இந்த இரகசியப் பயணம் அமைந்துள்ளது. </p><p>செவ்வாய்க்கிழமை அதிகாலையில், அமெரிக்காவின் போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III இராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று மாஸ்கோவின் வ்னுகோவோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96df43f6-e277-4e53-b09e-8f00fa68b763/26-6a8e0693327fe.webp' /></p><p> </p><p>அந்த விமானம் மேரிலாந்தில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸிலிருந்து புறப்பட்டதாகத் தெரிகிறது. மட்டுமின்றி, தங்கள் பகுதியில் விமானத்தை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாக லாட்வியாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். </p><p>அவ்விமானம் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, அந்த வான்வெளியில் இயக்குவதற்கான அனுமதியைப் பெற்றிருந்தது என்று அவர் கூறினார். </p><p>ஈரானை உலகப் பொருளாதாரத்திலிருந்து துண்டிப்பதை நோக்கமாகக் கொண்ட Operation Economic Outcast என்ற புதிய நடவடிக்கையை அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவித்த மறுநாளே, ராட்க்ளிஃப்பின் மாஸ்கோ பயணமும் அமைந்துள்ளது. </p><p>ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மற்றும் அமைப்புகளை இந்த நடவடிக்கை குறிவைக்கிறது; ஈரானின் முக்கிய உத்திசார் வர்த்தகக் கூட்டாளிகளில் ரஷ்யாவும் ஒன்று.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T23:18:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹைதி தலைநகர் அருகே டசின் கணக்கானோர் கடத்தல்... 47 பேர் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gang-attack-near-haiti-capital-1787699997"></link>
            <id>https://news.lankasri.com/article/gang-attack-near-haiti-capital-1787699997</id>
            <summary type="text">Gang attack near Haiti capital: ஹைதி தலைநகருக்கு அருகே குழு ஒன்று நடத்திய தாக்குதலில் டசின் கணக்கானோர் கடத்தப்பட்டனர்.
கடந்த வார இறுதியில் ஹைதியின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Gang attack near Haiti capital: ஹைதி தலைநகருக்கு அருகே குழு ஒன்று நடத்திய தாக்குதலில் டசின் கணக்கானோர் கடத்தப்பட்டனர்.
</p><p>கடந்த வார இறுதியில் ஹைதியின் தலைநகருக்கு அருகே ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fff23af8-6d50-45dc-a425-418c933e403f/26-6a8e2320031a3.webp' /></p><p>
</p><p>போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு மேலே உள்ள மலைகளில் அமைந்துள்ள கென்ஸ்காஃப் சமூகத்தைப் பாதுகாக்கும் முயற்சியில், அதிகாரிகள் தங்கள் குழு உறுப்பினர்களில் யாரையாவது கொன்றால், பணயக்கைதிகளைக் கொன்றுவிடுவதாக ஒரு குழு தலைவர் மிரட்டியுள்ளார். </p><p>கரீபியன் நாட்டில் பாதுகாப்பு மேம்பட்டு வருகிறது என்ற நம்பிக்கையை ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் தகர்த்தது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், </p><p>அப்பகுதியில் உள்ள ஆயுதம் ஏந்திய குழுக்களை விரட்டியடிக்க ட்ரோன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஹைதியின் தேசியக் காவல் துறைத் தலைவர் விளாடிமிர் பாரைசனை அந்தக் குழுவின் தலைவன் எச்சரித்தான். </p><p>ஹைதியின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதக் குழு தலைவர்களில் ஒருவரான 'இஸோ' (Izo) அல்லது ஜான்சன் ஆண்ட்ரே (Johnson André) என்பவரைக் குறிக்கும் வகையில், அவர் தன்னை 'இஸோ 2' (Izo 2) என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், 'Izo 2' என்பவர் 'Didi' என்றும் அறியப்பட்டதாகவும், இஸோ மற்றும் பிற குழு தலைவர்களின் சார்பாகவும் அவர்களுடன் ஒருங்கிணைந்தும் கென்ஸ்காஃப் (Kenscoff) பகுதியில் ஆயுதமேந்திய குழுவை வழிநடத்தியதாகவும் கூறப்படுகிறது.
</p><p>ஹைதியின் காவல்துறையையும், ஐ.நா. ஆதரவு பெற்ற குழு ஒழிப்புப் படையையும், அவர்களின் செல்வாக்கை இன்னும் அதிகமாகச் சிதறடிக்கக் கட்டாயப்படுத்துவதே இந்தத் தாக்குதலின் நோக்கமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். </p><p>மேலும், ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பிறகு டிசம்பர் 13 அன்று பொதுத் தேர்தலை நடத்த ஹைதி தயாராகி வரும் நிலையில், இந்தத் தாக்குதல் ஒரு பலப்பிரயோகமாகவும், அந்நாட்டு அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் விடுக்கப்பட்ட ஒரு செய்தியாகவும் இருக்கலாம் என்றே கூறுகின்றனர்.</p><p> கென்ஸ்கோஃப் (Kenscoff) மீதான முதல் பெரிய தாக்குதல் 2025 ஜனவரியில் நடைபெற்றது; அதன்பின்னர், நகர மன்றத்தைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் அவ்வப்போது தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. </p><p>ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் இதுவரை நடந்தவற்றிலேயே மிகப்பெரியது. ஹைதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த அலுவலகத்தின் தகவலின்படி, கொல்லப்பட்ட 47 பேரில் குறைந்தது ஐந்து பேர் குழந்தைகள் ஆவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97abddee-8e7a-47f2-8d66-a1e5e58a6491/26-6a8e2320e371c.webp' /></p><p> </p><p>கென்ஸ்கோஃப் (Kenscoff) நகரின் மேயர் ஜீன் மாசிலான், கொல்லப்பட்டவர்களில் இரண்டு அரசு ஊழியர்கள் அடங்குவதாகவும், அவர்களில் தனது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனது உறவினரும் ஒருவர் என்றும் கூறினார். </p><p>அமெரிக்காவால் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டுள்ள 'விவ் அன்சாம்' (Viv Ansanm) என்ற சக்திவாய்ந்த குழுக்களின் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், 25 வீடுகளுக்கும் தீ வைத்ததாக அவர் கூறினார். </p><p>தாக்குதலுக்கு முன்னதாகப் போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை என்று சில உயிர் பிழைத்தவர்கள் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டினர். அந்தக் குற்றச்சாட்டுகளைக் காவல்துறை மறுத்தது. </p><p>போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரின் சுமார் 70 சதவீதப் பகுதியும், ஹைதியின் மத்தியப் பகுதி மற்றும் அதற்கப்பால் உள்ள பரந்த நிலப்பரப்புகளும் ஆயுதமேந்திய நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும், ஹைதி முழுவதும் குழு வன்முறையால் முன்னெப்போதும் இல்லாத வகையில் 15 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T23:17:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்கிய இந்தியா: பின்னணியில் இருக்கும் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-lifted-wheat-export-ban-1787696804"></link>
            <id>https://news.lankasri.com/article/india-lifted-wheat-export-ban-1787696804</id>
            <summary type="text">India lifted wheat export ban: கடந்த 2022ல் விதித்த கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா நீக்கியுள்ளது.
கோதுமை மற்றும் கோதுமை மாவு மீதான ஏற்றுமதித் தட...</summary>
            <content type="html"><![CDATA[<p>India lifted wheat export ban: கடந்த 2022ல் விதித்த கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா நீக்கியுள்ளது.
</p><p>கோதுமை மற்றும் கோதுமை மாவு மீதான ஏற்றுமதித் தடையை இந்திய அரசு நீக்கியுள்ளதுடன், குறிப்பிட்ட கோதுமைப் பொருட்களை உடனடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2b8548d-09be-4bf6-9fcd-f6d176a39241/26-6a8e16a713fd8.webp' /></p><p> </p><p>
திருத்தப்பட்ட கொள்கையானது கோதுமை அல்லது மெஸ்லின் மாவு (அட்டா), மைதா, ரவை (சூஜி), முழு கோதுமை மாவு மற்றும் அதிலிருந்து பெறப்படும் மாவு ஆகியவற்றை ஏற்றுமதி செய்யலாம். </p><p>உள்நாட்டு இருப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்தியாவின் கோதுமை ஏற்றுமதிக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. </p><p>2022-இல், நாட்டின் 140 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தியா ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது. </p><p>ரஷ்யா-உக்ரைன் போரினால் உலகளாவிய விநியோகம் தடைபட்டதைத் தொடர்ந்து உள்நாட்டு விலைகள் உயர்ந்ததும், பயிர்களைச் சேதப்படுத்தி ஒட்டுமொத்த கோதுமை விளைச்சலைக் குறைத்த சுட்டெரிக்கும் வெப்பநிலையும் இந்த முடிவுக்கு வழிவகுத்தன.</p><p></p><p> </p><p> பெருமளவிலான மக்கள் தொகைக்குத் தேவையானவற்றை உள்ளூரிலேயே கிடைக்கச் செய்வதை உறுதிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.</p><p>
அக்காலகட்டத்தில், 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 2.05 பில்லியன் டொலர் மதிப்பிலான 7 மில்லியன் டன்கள் என்ற சாதனை அளவை எட்டியிருந்தது. </p><p>உள்நாட்டு விலைகளைக் கட்டுப்படுத்துதல், உணவு விநியோகத்தைப் பாதுகாத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவையே இந்தத் தடையின் நோக்கங்களாக இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2822ee8a-ccd2-4dfa-bbed-d9e1bd8e0cd9/26-6a8e16a7bae6b.webp' /></p><p> </p><p>இந்தியாவின் சமீபத்திய கோதுமை அறுவடை 120.6 மில்லியன் டன்கள் என்ற வரலாற்றுச் சாதனை அளவை எட்டியுள்ளதாலும், மொத்த உணவு தானிய உற்பத்தி 5.3 சதவீதம் அதிகரித்துள்ளதாலும், உள்நாட்டு விநியோகம் மேம்பட்டிருப்பதைக் காரணம் காட்டி இந்தியா தற்போது அந்தத் தடையை நீக்கியுள்ளது.</p><p> இந்தியாவில் கோதுமை அதிகம் பயிரிடப்படும் மாநிலங்களாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், பீகார் மற்றும் குஜராத் ஆகியவை உள்ளன. </p><p>2024-25 ஆம் ஆண்டில் கோதுமை உற்பத்தி 117.94 மில்லியன் டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான் மற்றும் ஈராக் ஆகியவை இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளாகத் திகழ்கின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T22:24:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் மீண்டும் ட்ரோன் தாக்குதல் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drone-near-leipzig-airport-1787686820"></link>
            <id>https://news.lankasri.com/article/drone-near-leipzig-airport-1787686820</id>
            <summary type="text">Third drone found near Leipzig airport: லீப்சிக் விமான நிலையத்திற்கு அருகே மூன்றாவது ட்ரோன் மற்றும் சந்தேகத்திற்குரிய ராணுவ வெடிபொருட்கள்.
லீப்சிக் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Third drone found near Leipzig airport: லீப்சிக் விமான நிலையத்திற்கு அருகே மூன்றாவது ட்ரோன் மற்றும் சந்தேகத்திற்குரிய ராணுவ வெடிபொருட்கள்.</p><p>
லீப்சிக் விமான நிலையத்தின் மீதான தாக்குதல் முயற்சியுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்றாவது ட்ரோன் மற்றும் சந்தேகத்திற்குரிய ராணுவ வெடிபொருட்களை ஜேர்மன் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><h2>விரைவில் வெளியிடும்</h2><p>
</p><p>முறியடிக்கப்பட்ட நாசவேலை முயற்சி நடந்து 10 நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 14 அன்று, லீப்சிக் விமான நிலையத்திற்குச் சற்று மேற்கே உள்ள கேபெல்ஸ்கெட்டாலில் (Kabelsketal) அந்த ட்ரோன் கண்டெடுக்கப்பட்டது; அதனுடன் சுமார் 50 கிராம் (1.8 அவுன்ஸ்) எடையுள்ள, இராணுவத் தரத்திலான வெடிபொருள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு பொருளும் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35750c42-0720-4f35-a943-02032f82f95f/26-6a8defa7783c7.webp' /></p><p>
</p><p>லீப்சிக் விமான நிலையமானது நேட்டோ (NATO) மற்றும் உக்ரைனின் அன்டோனோவ் ஏர்லைன்ஸ் (Antonov Airlines) ஆகியவற்றால் இராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் சரக்கு மற்றும் இராணுவப் போக்குவரத்துக்கான ஒரு மையமாகும். </p><p>இந்த விவகாரத்தில் விசாரணையை முன்னெடுத்துவரும் தலைமை சட்டத்தரணி அலுவலகம், செவ்வாய்க்கிழமை அன்று கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.</p><p> ஆனால், ட்ரோன் தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருப்பதாகக் கருதப்படுகிறது என்பது குறித்த தகவல்களை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்று ஜேர்மன் சேன்ஸ்லர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c46565ce-d6e4-4834-aa19-de7124f8cb4d/26-6a8defa6c5993.webp' /></p><p> </p><p>அவர்கள் இதற்கானத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் குறிப்பிட்ட மெர்ஸ், பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து அரசாங்கம் இது குறித்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறது என்றும் விரைவில் இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து அம்பலப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார். </p><p>இந்தத் தாக்குதல் முயற்சியில் ரஷ்ய உளவுத்துறையின் தொடர்பு இருக்கலாம் என்று பரவலாக சந்தேகிக்கப்படும் நிலையில், ரஷ்யா அத்தொடர்பை மறுத்துள்ளது. மட்டுமின்றி, ரஷ்யாவோ அல்லது அதனுடன் நெருங்கிய தொடர்புடைய தரப்போ இதற்குப் பொறுப்பு என்று கருதுகிறதா என்பது குறித்து, தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதை ஜேர்மானிய அரசாங்கமும் இதுவரை தவிர்த்து வந்துள்ளது. </p><p>இந்தத் தாக்குதல் முயற்சி, ஜேர்மனி அதிகளவில் இலக்காகி வருவதைக் காட்டுவதாக மெர்ஸ் கூறியுள்ளார். ராணுவப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் உக்ரேனிய அன்டோனோவ் சரக்கு விமானத்திற்கு அருகே, வெடிபொருட்களுடன் இராணுவ ட்ரோன் ஒன்று ஆகஸ்ட் 4 அன்று கண்டெடுக்கப்பட்டது. </p><p>விசாரணை அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில், மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டிருந்த அந்த விமானத்தின் இறக்கைகளில் அந்த ட்ரோன் தரையிறங்கும் நோக்கில் வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அதில் பொருத்தப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடிக்கவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டது.</p><p></p><p> முதல் ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டாவது ட்ரோன் ஒன்று டிஹெச்எல் (DHL) சரக்கு விமானம் ஒன்றின் மீது மோதியிருக்கலாம் என்றும், இதன் காரணமாக அந்த விமானம் தனது தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு மார்சேய் நகருக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். </p><p>மூன்றாவது ட்ரோன், லீப்சிக் விமான நிலையத்தின் மேற்கு எல்லையை நேரடியாக ஒட்டியுள்ள ஒரு நகராட்சியின் வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது.</p><p> முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, அதிக வெடிப்புத்தன்மை கொண்ட ஹெக்சோஜென் என்ற வேதிப்பொருளாக இருக்கலாம் எனச் சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒரு பொருளின் எச்சங்களை காவல்துறை அதிகாரி கண்டெடுத்தார். </p><p>இந்த நிலையில், வெளியேத் தெரிந்ததை விட மிகப்பாரிய தாக்குதல் ஒன்றைத்தான் குற்றவாளிகள் திட்டமிட்டிருக்கக்கூடும் என செய்தி ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன. </p><p>அந்த ட்ரோன்கள் வெடித்திருந்தால், அவை ஒரு பேரழிவை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T19:37:45+00:00</updated>
        </entry>
    </feed>
