<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-27T05:44:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் நாட்டுக்கு வராதீர்கள்... சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக நாடொன்றில் வெடித்த கலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mallorca-thousands-of-protesters-against-tourists-1785129047"></link>
            <id>https://news.lankasri.com/article/mallorca-thousands-of-protesters-against-tourists-1785129047</id>
            <summary type="text">பல நாடுகளில், நாட்டின் வருவாய்க்கு முக்கிய காரணிகளில் ஒன்று சுற்றுலா என்னும் நிலை காணப்படுகிறது.

ஆனால், பெருந்திரளாக சுற்றுலாப்பயணிகள் தங்கள் ஊர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல நாடுகளில், நாட்டின் வருவாய்க்கு முக்கிய காரணிகளில் ஒன்று சுற்றுலா என்னும் நிலை காணப்படுகிறது.
</p><p>
ஆனால், பெருந்திரளாக சுற்றுலாப்பயணிகள் தங்கள் ஊர்களுக்கு வருவதை சில நாடுகளில் உள்ளவர்கள் தொல்லையாக நினைக்கிறார்கள்.
</p><p>
சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளில் ஆங்காங்கே சுற்றுலா எதிர்ப்பு குறித்த செய்திகள் வெளியாகிவரும் நிலையில், நாடொன்றின் மக்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட விடயம் கலவரத்தில் முடிந்துள்ளது.</p><h3>

எங்கள் நாட்டுக்கு வராதீர்கள்...
</h3><p>
ஆம். நேற்று மாலை, ஸ்பெயினுக்கு சொந்தமான மஜோர்க்கா தீவின் தலைநகரான பால்மாவில் 25,000க்கும் அதிகமான பொதுமக்கள் சாலைகளில் கூடி சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2c0ad77-29ea-452d-aa54-6ceacde3a09b/26-6a66e8586fbb1.webp' /></p><p>ஒரு கட்டத்தில், பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்த, கூட்டத்தில் சிலர் தடையை மீற முயல, பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களும் இடையே மோதல் வெடித்தது.&nbsp;</p><p></p><p>
பொலிசார் தடியடி நடத்தியதுடன், ஒரு கட்டத்தில் கூட்டத்தினரை நோக்கி ரப்பர் குண்டுகளை சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6826eccd-7fe9-4fca-9574-903caeefb123/26-6a66e8591df2d.webp' /></p><p>இருதரப்பினரும் மோதிக்கொண்டதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும், பொலிசாரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் மோதிக்கொள்வதையும் காட்டும் ஏராளமான காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63983c80-15a6-43ec-b2a1-664f51d4d4a5/26-6a66e859c1a9a.webp' /></p><p>சுற்றுலாப்பயணிகள் வராதீர்கள், சுற்றுலாப்பயணிகளே திரும்பிச் செல்லுங்கள், மஜோர்க்காவை காப்பாற்றுங்கள், சுற்றுலாவால் பேரழிவு, எனக்கூறும் பதாகைகளை மக்கள் ஏந்தியிருந்தையும் காணமுடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/979b1d47-29fc-4871-9afa-a27fa5cbf159/26-6a66e85a6ffb0.webp' /></p><p>விடயம் என்னவென்றால், இப்படி சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக மஜோர்க்கா மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த மூன்று ஆண்டுகளாக, கோடையின்போது இதேபோல் சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T05:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் உணவுகள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/liver-health-top-10-foods-that-detox-liver-1785128810"></link>
            <id>https://news.lankasri.com/article/liver-health-top-10-foods-that-detox-liver-1785128810</id>
            <summary type="text">நம் உடலில் கல்லீரல் மிகவும் கடினமாக உழைக்கும் உறுப்புகளில் ஒன்றாகும்.

இது உடலிலிருந்து நச்சுக்களை வடிகட்டுகிறது, ஊட்டச்சத்துக்களை வளர்சிதை மாற்றம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம் உடலில் கல்லீரல் மிகவும் கடினமாக உழைக்கும் உறுப்புகளில் ஒன்றாகும்.</p><p>

இது உடலிலிருந்து நச்சுக்களை வடிகட்டுகிறது, ஊட்டச்சத்துக்களை வளர்சிதை மாற்றம் செய்கிறது, இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் செரிமானத்திற்காக பித்தநீரை உற்பத்தி செய்கிறது.
</p><p>
இருப்பினும் தவறான உணவுப் பழக்கம், அதிகப்படியான சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், மது, மன அழுத்தம் போன்றவை கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d93645d-925e-4de2-bf99-069181c6a128/26-6a66e76c6b3d9.webp' /></p><p>கல்லீரலுக்கு இயற்கையாகவே நச்சு நீக்கும் திறன் இருந்தாலும், சரியான உணவுகள் இந்த செயல்முறையை மேம்படுத்தும்.</p><p>

அந்தவகையில், கல்லீரல் நச்சுக்களை வெளியேற்ற உதவும் 10 உணவுகள் குறித்து பார்க்கலாம்.</p><h2>என்னென்ன தெரியுமா?</h2><p><b>
கீரை வகைகள்- </b>உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. அவை செரிமானத்தையும் மேம்படுத்துகின்றன.
</p><p><b>
பீட்ரூட்- </b>கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது. இது கல்லீரல் செல்களை பாதுகாக்கிறது மற்றும் கொழுப்பு மாற்றத்தை சீராக்குகிறது.</p><p><b>

பூண்டு- </b>கல்லீரல் நச்சு நீக்கும் செயல்பாட்டை தூண்டுகிறது. இது கல்லீரல் சேதத்தை குறைக்க உதவுகிறது.
</p><p><b>
எலுமிச்சை- </b>எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் பித்தநீர் உற்பத்தியை அதிகரித்து நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன.</p><p>
</p><p></p><p><b>மஞ்சள்- </b>மஞ்சளில் உள்ள குர்குமின் கல்லீரல் அழற்சியை குறைத்து அதை பாதுகாக்கிறது.
</p><p><b>
ஆப்பிள்- </b>உடலில் உள்ள நச்சுக்களை பிணைத்து வெளியேற்ற உதவுகிறது. இது கல்லீரலின் சுமையை குறைக்கிறது.
</p><p><b>
அவகாடோ- </b>கல்லீரல் நச்சு நீக்கத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.
</p><p><b>
சிலுவை காய்கறிகள்- </b>ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
</p><p><b>
க்ரீன் டீ-</b> கல்லீரல் செல்களை பாதுகாத்து கொழுப்பு சேர்வதை குறைக்க உதவுகிறது.
</p><p><b>
தக்காளி- </b>கல்லீரலை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து காக்கிறது மற்றும் அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T05:07:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சியாட்டில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/seattle-centre-food-festival-shooting-2-dead-1785127428"></link>
            <id>https://news.lankasri.com/article/seattle-centre-food-festival-shooting-2-dead-1785127428</id>
            <summary type="text">அமெரிக்காவின் சியாட்டில் நடைபெற்ற உணவு திருவிழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் சியாட்டில் நடைபெற்ற உணவு திருவிழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு</h2><p>
சியாட்டில் நகரின் புகழ்பெற்ற சியாட்டில் சென்டரில் நடைபெற்ற பிரம்மாண்ட உணவுத் திருவிழாவில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது.</p><p> ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p> மேலும் ஒரு குழந்தை உட்பட 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58633893-d48e-4be7-9d5d-0e48d5c92a2a/26-6a66e2b85f8bc.webp' /></p><p> தீயணைப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலின் படி, மாலை 18.00 மணி அளவில் இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><p></p><p> உணவு திருவிழாவில் கலந்து கொண்ட நபர்கள் வழங்கிய தகவலில், கொண்டாட்டத்தின் போது பலமுறை துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும், இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அலறி அடித்துக் கொண்டு ஓடியதாக தெரிவித்துள்ளனர்.</p><p> சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் நிலைமையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தாக்குதல்தாரிகள் குறித்து விரைவில் தகவல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T04:49:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை வம்புக்கு இழுக்கும் உக்ரைன்: ஈரானிய வணிக கப்பல் மீது திடீர் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-attack-iran-commercial-vessel-in-caspian-1785122681"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-attack-iran-commercial-vessel-in-caspian-1785122681</id>
            <summary type="text">ஈரானிய வணிக கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் அரசு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல்
காஸ்பியன் கடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய வணிக கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் அரசு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><h2> ஈரான் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல்</h2><p>
காஸ்பியன் கடல் பிராந்தியத்தில் உக்ரைனிய படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானுக்கு சொந்தமான வணிக கப்பல் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.</p><p> உக்ரைனிய படைகளின் இந்த தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன், மற்றொரு நபர் காயமடைந்துள்ளார்.&nbsp;
</p><p>இந்நிலையில் உக்ரைனிய படைகளின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9036a0ef-49fc-4c83-9a9b-d9e44db14782/26-6a66cf7ae8eb3.webp' /></p><p></p><h2>உக்ரைன் மீது நேரடி குற்றச்சாட்டு</h2><p>இந்த தாக்குதல் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்(X) தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மீது நேரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p><p> மேலும் இந்த தாக்குதல் ஐ.நா சாசனத்தின் விதிகளை மீறும் செயல் என்றும், ஐரோப்பாவை போருக்குள் இழுப்பதற்காக இஸ்ரேல் உக்ரைனை தூண்டி விடுவதாகவும் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.</p><p></p><p> </p><p>சனிக்கிழமை ஈரானிய வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை உக்ரைனிய ஜனாதிபதி தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த பதில் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.</p><p> உக்ரைனின் தாக்குதல் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு கொள்கை உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கியதாக அராக்சி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T03:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெலென்ஸ்கியை முதல் வெளிநாட்டு விருந்தினராக வரவேற்கும் புதிய பிரித்தானிய பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-welcomes-zelenskiy-as-first-guest-1785109278"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-welcomes-zelenskiy-as-first-guest-1785109278</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம், தனது பதவியேற்புக்குப் பிறகு முதல் வெளிநாட்டு விருந்தினராக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வரவேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம், தனது பதவியேற்புக்குப் பிறகு முதல் வெளிநாட்டு விருந்தினராக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வரவேற்கிறார்.</p><p>இந்த சந்திப்பு, பிரித்தானியா உக்ரைனுக்கு வழங்கும் உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறது.
</p><p>
இரு தலைவர்களும் பிரித்தானியாவில் உள்ள கடற்படை தளத்தில் சந்தித்து, பிரித்தானியா தலைமையில் நடைபெறும் பயிற்சி திட்டங்கள் உக்ரைன் படைகளின் திறனை எவ்வாறு மேம்படுத்துகின்றன என்பதை நேரடியாக பார்வையிட உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7727cc1-91be-4c8b-8512-3d7a7bcb95d8/26-6a669b2055d0a.webp' /></p><p>“பிரித்தானியா எப்போதும் உக்ரைனுடன் தோளோடு தோள் நின்று போராடும். ரஷ்யா எங்கள் உறுதியை சந்தேகிக்கக் கூடாது” என்று பர்னாம் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விஜயத்தின் போது, கடந்த மூன்று வாரங்களாக பிரித்தானியாவில் பயிற்சி பெற்ற 200-க்கும் மேற்பட்ட உக்ரைன் படையினரையும் கடற்படையினரையும் இரு தலைவர்களும் சந்திக்க உள்ளனர். </p><p>‘Exercise Sea Breeze’ எனப்படும் கடல் பாதுகாப்பு மற்றும் கண்ணிவெடி எதிர்ப்பு பயிற்சியில் அவர்கள் பங்கேற்றுள்ளனர்.
</p><p></p><p>2022ஆம் ஆண்டு ரஷ்யா முழுமையான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, பிரித்தானியா உக்ரைனுக்கு 25 பில்லியன் பவுண்டு மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது. </p><p>இதில் 16 பில்லியன் பவுண்டு இராணுவ உதவியும், 5.6 பில்லியன் பவுண்டு இராணுவத்திற்கு அப்பாற்பட்ட உதவிகளும் அடங்கும்.</p><p>முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பதவி விலகுவதற்கு முன் உக்ரைனுக்கு சென்றபோது, 16 Gripen போர் விமானங்களை வழங்க 300 மில்லியன் யூரோ உதவி அறிவித்திருந்தார்.
</p><p>
இந்த சந்திப்பு, பிரித்தானியா-உக்ரைன் உறவை மேலும் வலுப்படுத்துவதோடு, ரஷ்யாவிற்கு எதிரான போராட்டத்தில் உக்ரைனுக்கு சர்வதேச ஆதரவு தொடர்வதை வெளிப்படுத்துகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T00:52:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[NISAR S-Band SAR தரவுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்ட ISRO]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/isro-opens-nisar-s-band-sar-data-access-1785113512"></link>
            <id>https://news.lankasri.com/article/isro-opens-nisar-s-band-sar-data-access-1785113512</id>
            <summary type="text">இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), NISAR S-Band Synthetic Aperture Radar (SAR) தரவுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட்டது.

இதன் மூலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), NISAR S-Band Synthetic Aperture Radar (SAR) தரவுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட்டது.</p><p>

இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயனர்கள், பேரிடர் மேலாண்மை, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற துறைகளில் மேம்பட்ட செயற்கைக்கோள் தரவுகளை பயன்படுத்த முடியும்.
</p><h2>
NISAR திட்டம்</h2><p>NASA–ISRO Synthetic Aperture Radar (NISAR) உலகின் முதல் இரட்டை அலைவரிசை (L-band மற்றும் S-band) ரேடார் செயற்கைக்கோள் ஆகும். இது 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியின் மேற்பரப்பை உயர் தெளிவுத்திறனுடன், அனைத்து வானிலை சூழலிலும் படம்பிடிக்கும் திறன் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9697c68-a7ee-4514-84ca-776935ec7fb7/26-6a66abaa2fd45.webp' /></p><p>
</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தரவு செயலாக்கம்</span></h2><p> S-band SAR தரவுகள் ISRO-வின் தரை நிலையங்களில் சேகரிக்கப்பட்டு, NRSC, ஷாத்நகர் (IMGEOS) மையத்தில் செயலாக்கப்படுகின்றன. ஜூலை 8, 2026 முதல் தொடங்கிய Cycle 25-இல் சேகரிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் தற்போது பதிவிறக்கத்திற்குத் தயாராக உள்ளன. பழைய தரவுகள் மறுசெயலாக்கம் செய்யப்பட்டு படிப்படியாக காப்பகத்தில் சேர்க்கப்படும்.
</p><h2>
பயன்பாடுகள்</h2><p>வெளியிடப்பட்ட தரவுகளில் Standard SAR datasets, Interferometric products, Pixel offset products ஆகியவை அடங்கும். இவை பேரிடர் மேலாண்மை, நிலப்பயன்பாடு ஆய்வு, புவியியல் அபாய மதிப்பீடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற பல்வேறு துறைகளில் பயன்படும்.</p><p></p><p>
</p><h2>
அணுகுமுறை</h2><p> 
பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் ISRO-வின் Bhoonidhi போர்டல் மூலம் NISAR தரவுகளை தேடவும், காட்சிப்படுத்தவும், பதிவிறக்கவும் முடியும். மேலும், தரவு மாற்றம், geospatial analysis, SAR processing போன்ற கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த வெளியீடு, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி திறனை உலகளவில் வலுப்படுத்துவதோடு, அறிவியல் ஆராய்ச்சிக்கும், நடைமுறை பயன்பாடுகளுக்கும் பெரும் பங்களிப்பை வழங்குகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T00:52:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Toyota Fortuner போட்டியாக இந்தியாவில் புதிய Kia Sorento அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kia-sorento-to-rival-toyota-fortuner-in-india-1785112814"></link>
            <id>https://news.lankasri.com/article/kia-sorento-to-rival-toyota-fortuner-in-india-1785112814</id>
            <summary type="text">இந்தியாவில் பிரபலமான Toyota Fortuner-க்கு போட்டியாக, Kia நிறுவனம் தனது புதிய Sorento SUV-வை அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது.

ஏற்கனவே உலக சந்தைகளில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் பிரபலமான Toyota Fortuner-க்கு போட்டியாக, Kia நிறுவனம் தனது புதிய Sorento SUV-வை அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது.
</p><p>
ஏற்கனவே உலக சந்தைகளில் விற்பனை செய்யப்படும் இந்த 7-சீட்டர் SUV, இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>

பாதுகாப்பு அம்சங்கள்</h2><p>Sorento, சர்வதேச சந்தையில் 9 ஏர்பேக், TPMS, ESC, ABS, VSM, ரோல்ஓவர் சென்சார் போன்ற பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.
</p><p>
ANCAP சோதனையில் 5-நட்சத்திர மதிப்பீடு பெற்றுள்ளது. இந்தியாவில் BNCAP சோதனையிலும் இதே தரத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/489f293e-8c62-4fc7-b7f9-1b68dd77a4c7/26-6a66a8f0ce099.webp' /></p><p>
</p><h2>
டிஜிட்டல் வசதிகள்</h2><p>இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் கொண்ட கர்வ் டூயல்-ஸ்கிரீன் அமைப்பு, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay ஆகியவை வழங்கப்படுகின்றன. டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல் டாஷ்போர்டில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.</p><h2>

Driver Assist</h2><p>Level-2+ ADAS அம்சங்கள், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், 360-டிகிரி கேமரா, பிளைண்ட்-ஸ்பாட் மோனிட்டரிங் போன்ற வசதிகள் கிடைக்கும்.
</p><h2>
பிரீமியம் வசதிகள்</h2><p>வெண்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் சீட்கள், 14-வழி பவர் டிரைவர் சீட், 10-வழி பவர் கோ-டிரைவர் சீட், பனோராமிக் சன்ரூஃப், கேப்டன் சீட்கள் (இரண்டாம் வரிசை), அனைத்து வரிசைகளிலும் USB போர்ட்கள், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் உள்ளன.</p><p></p><p>
</p><h2>
வடிவமைப்பு</h2><p>20-இன்ச் அலாய் வீல்கள், வெர்டிகல் LED ஹெட்லைட்கள், ரூஃப் ரெயில்கள் ஆகியவை Sorento-வுக்கு வலுவான, ஸ்டைலிஷ் தோற்றத்தை அளிக்கின்றன.</p><p>

இந்த SUV, இந்திய சந்தையில் Toyota Fortuner-க்கு வலுவான போட்டியாளராக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T00:38:26+00:00</updated>
        </entry>
    </feed>
