<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-29T05:50:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ 22,000 கோடி கடன் ரத்து... சுவிட்சர்லாந்துக்குப் பறக்கும் Essel குழுமத்தின் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/subhash-chandra-swiss-job-1787982282"></link>
            <id>https://news.lankasri.com/article/subhash-chandra-swiss-job-1787982282</id>
            <summary type="text">Subhash Chandra To Take Up Job In Switzerland: எசல் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா சுவிட்சர்லாந்தில் புதிய பணியில் சேரவுள்ளார்.
எசல் குழுமத்தின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Subhash Chandra To Take Up Job In Switzerland: எசல் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா சுவிட்சர்லாந்தில் புதிய பணியில் சேரவுள்ளார்.
</p><p>எசல் குழுமத்தின் தலைவரான சுபாஷ் சந்திரா, சுவிட்சர்லாந்தில் உள்ள முதலீட்டு நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ce834e-59f6-4e6a-a21b-68d6b30377d3/26-6a9271cd121da.webp' /></p><p>
</p><p>அவர் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்த ரூ. 22,006.57 கோடி கடனில் ஒரு சிறு பகுதியை மட்டுமே கடன் கொடுத்தவர்கள் பெறும் வகையிலான கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) அங்கீகரித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.</p><p> மட்டுமின்றி, சுவிட்சர்லாந்தில் தனது புதிய முயற்சிகளுக்காக குடும்பத்தினரிடம் இருந்து கடன் வாங்கவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p> சுபாஷ் சந்திரா வெளியிட்டுள்ள ஒரு காணொளி அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். அதில், இன்று நான் மிகவும் எளிமையான முறையில் பேசுகிறேன். எல்லாவற்றையும் இழந்த ஒருவரைப் பற்றி நான் பேசவில்லை. </p><p>என்னிடம் மீதமுள்ள கடைசி 6.5 கோடி ரூபாயை திட்டத்தின்படி செலுத்த வேண்டும். எனக்கு ஒரு சிறிய குடியிருப்பு வீடு உள்ளது, அதை நான் வாடகைக்கு விட்டுள்ளேன், அந்த வருமானத்தைக் கொண்டு என் செலவுகளைச் சமாளித்து வருகிறேன்.</p><p></p><p> </p><p>எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் மீண்டும் சம்பாதிப்பேன். நான் ஒரு முன்னோடி. நல்ல மற்றும் புதிய விஷயங்களை எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியும். நான் தொடர்ந்து அவ்வாறே செய்வேன் என தெரிவித்துள்ளார். </p><p>எசல் குழுமத்தின் தலைவர் என்ற முறையில், சுபாஷ் சந்திராவின் வணிக சாம்ராஜ்யம் ஊடகம், உள்கட்டமைப்பு, கேளிக்கை பூங்காக்கள் எனப் பல துறைகளில் பரந்து விரிந்துள்ளது. </p><p>தனது காணொளி அறிக்கையில், 75 வயதான சுபாஷ் சந்திரா, சுவிட்சர்லாந்தில் ஒரு வேலை பெறுவது என்ற தனது அடுத்தகட்ட தொழில் நகர்வு குறித்துப் பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b801905-b631-45bd-98ab-273b53869175/26-6a9271cdc2761.webp' /></p><p> </p><p>தற்போது, ​​சுவிட்சர்லாந்தில் முதலீட்டுப் பணிகள் செய்யும் நண்பர்களுடன் இணைந்து பணியாற்ற ஒரு திட்டம் வைத்துள்ளேன். மேலும், குடும்பத்தினரிடமிருந்து 2-4 கோடி ரூபாய் கடன் வாங்கி, முன்னேறிச் செல்லக்கூடிய எங்களின் சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>NCLT அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், சுபாஷ் சந்திரா தனது ரூ. 22,006.57 கோடி கடனில் வெறும் ரூ 6.5 கோடி மட்டுமே திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். </p><p>எஞ்சியத் தொகை மொத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது சுபாஷ் சந்திராவின் மொத்த கடன் தொகையில் அவர் 0.03 சதவீதம் மட்டுமே திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T05:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாட்டியெடுத்த வெயிலைத் தொடர்ந்து பிரான்சை புரட்டி எடுத்த புயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/storm-collapse-france-after-heatwave-1787979868"></link>
            <id>https://news.lankasri.com/article/storm-collapse-france-after-heatwave-1787979868</id>
            <summary type="text">A storm has felled trees, smashed windows and sent people flying in France: பிரான்சில் வீசிய புயல் ஒன்றால் வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்க, மரங்கள் சாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>A storm has felled trees, smashed windows and sent people flying in France: பிரான்சில் வீசிய புயல் ஒன்றால் வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்க, மரங்கள் சாய, மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.
</p><p>

கடும் வெயிலால் அவதியுற்றுவந்த ஐரோப்பிய நாடுகள் சிலவற்றை, தற்போது புயல் புரட்டி எடுத்து வருகிறது.
</p><h3>
பிரான்சை புரட்டி எடுத்த புயல்</h3><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2484139342114986%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
அதீத வெப்பம் காரணமாக பிரான்சில் இதுவரை 7,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

ஆனால், தற்போது வானிலை மாறிவிட்டது. விடயம் என்னவென்றால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும் என எதிர்பார்த்தால், எதிர்பாராதவிதமாக புயல் ஒன்று புரட்டி எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50ab5561-936e-4555-832a-5c78699cd53c/26-6a92685ead7ea.webp' /></p><p>வியாழனன்று பிரான்சின் சில பகுதிகளை தாக்கிய புயல் ஒன்று மக்களுக்கு கடும் அச்சத்தை உருவாக்கியது.&nbsp;</p><p></p><p> 
Seine-et-Marne என்னுமிடத்தில் மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்றும், மழையும், கல்மழையும் ஒன்று சேர்ந்து வாகன ஓட்டிகளை கலங்கடித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97a996c1-185c-4d89-886c-9a6a86a32997/26-6a92685db1d57.webp' /></p><p>கார் மற்றும் ரயில் கண்ணாடிகள் கல்மழையால் உடைந்து சிதற, மரங்கள் சாய்ந்து கார்கள் மீது விழ, மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
</p><p>
இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்பு பிரான்சில் மட்டுமல்ல, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்திலும் இதே நிலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T05:04:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இருந்து ஹாங்காங்கிற்கு கொகைன் கடத்தல்: 24 வயது கேம்பிரிட்ஜ் நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cambridge-man-arrested-for-cocaine-smuggling-1787978099"></link>
            <id>https://news.lankasri.com/article/cambridge-man-arrested-for-cocaine-smuggling-1787978099</id>
            <summary type="text">கனடாவில் சர்வதேச கொகைன் கடத்தல் வலையமைப்பை சேர்ந்த முக்கிய நபர் வாட்டர்லூ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கேம்பிரிட்ஜ் நபர் கைதுகனடாவில் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் சர்வதேச கொகைன் கடத்தல் வலையமைப்பை சேர்ந்த முக்கிய நபர் வாட்டர்லூ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> கேம்பிரிட்ஜ் நபர் கைது</h2><p>கனடாவில் இருந்து ஹாங்காங்கிற்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் நீண்ட காலமாக நடைபெற்ற விசாரணையின் ஒரு பகுதியாக 24 வயது மதிக்கத்தக்க கேம்பிரிட்ஜ் இளைஞர் ஒருவர் வாட்டர்லூ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a99e8259-a1d1-4199-a736-295200fb34e3/26-6a926175504e3.webp' /></p><p> ஆகஸ்ட் 26 ம் திகதி உள்ளூர் குடியிருப்பு பகுதியில் நடத்திய சோதனையின் போது இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்</p><p> இவர் கனடாவில் இருந்து ஹாங்காங்கிற்கு கொக்கைன் கடத்திய வலையமைப்பின் மூளையாக செயல்பட்டவர் என்று புலனாய்வு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> இவர் மீது Schedule I போதைப்பொருட்களை கடத்தியது மற்றும் குற்றச் செயலில் ஈடுபட சதி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது இவர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2> ஹாங்காங்கில் கைது செய்யப்பட்ட பெண்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80359945-7435-428d-ac69-15ae37587228/26-6a92617499118.webp' /></p><p>கொகைன் கடத்தல் வலையமைப்பு தொடர்பான கனேடிய பொலிஸாரின் விசாரணை கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. அப்போது ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் கேம்பிரிட்ஜ் நகரை சேர்ந்த (ஜேட் என்று அடையாள பெயருடன் அழைக்கப்படும்)&nbsp; 20 வயது இளம்பெண் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.</p><p> அவரிடம் இருந்து கிட்டத்தட்ட 25 கிலோ கொகைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் உள்ளூர் மதிப்பு கிட்டத்தட்ட $18 மில்லியன் ஆகும்.</p><p> கைது செய்யப்பட்ட ஜேட், 4 மாதங்களில் பல்வேறு தனித்தனி விமானங்களில் ஹாங்காங்கிற்கு பயணம் செய்து கனேடிய கடத்தல்காரர்களுடன் பெரிய வலையமைப்பை ஏற்படுத்தி இருந்ததாக புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p> ஆனால் தன்னுடைய பையில் போதைப்பொருள் இருந்தது தெரியாது என்றும், சர்வதேச அளவில் பார்சல்களை கொண்டு சேர்க்கும் பணிக்காக இணையத்தில் வெளியான விளம்பரத்திற்கு பதிலளித்தே இந்த வேலையில் சேர்ந்ததாகவும் ஜேட் W5 ஊடகத்திடம் பேசிய ஜேட் தகவல் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T04:35:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா பிக் சர்ச்சில் திருவிழாவில் நடந்த கோர விபத்து: பெயர்ப்பலகை சரிந்ததில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-s-big-church-festival-accident-1-dead-6-injured-1787975977"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-s-big-church-festival-accident-1-dead-6-injured-1787975977</id>
            <summary type="text">Uk’s Big Church Festival Accident 1 Dead, 6 Injured: பிரித்தானியாவின் பிக் சர்ச்சில் திருவிழாவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கோவில் திருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uk’s Big Church Festival Accident 1 Dead, 6 Injured: பிரித்தானியாவின் பிக் சர்ச்சில் திருவிழாவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><h2>கோவில் திருவிழாவில் விபத்து</h2><p>வெஸ்ட் சசெக்ஸ்(West Sussex) நகரில் நடைபெற்ற பிக் சர்ச் திருவிழாவில்(Big Church Festival) விஸ்டன் பூங்காவில்(Wiston Park) இருந்த பெரிய கட்டமைப்பு பெயர் பலகை சரிந்து விழுந்ததில் ஈஸ்ட்போர்ன் பகுதியை சேர்ந்த 41 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><p> வெள்ளிக்கிழமை பிற்பகலில் பெயர் பலகை சரிந்து விழுந்ததாக கிடைத்த அவசர தகவலை தொடர்ந்து&nbsp; விபத்து நடைபெற்ற இடத்திற்கு சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர்.</p><p> இந்த சம்பவத்தில் குறைந்தது 6 பேர் வரை காயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03fbd7c8-9ee4-4526-b21c-7d3e8919d027/26-6a92592aa9669.webp' /></p><p></p><h2>ரத்து செய்யப்பட்ட கோவில் திருவிழா</h2><p>
ஆரம்பத்தில் வெள்ளிக்கிழமை மாலை மற்றும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் திருவிழாவின் எஞ்சிய பிற நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> பெயர் பலகை சரிவு குறித்து சசெக்ஸ் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> வெள்ளிக்கிழமை ஷோர்ஹாம் பகுதியில் மணிக்கு 27 மைல் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையிலும், விபத்துக்கான காரணத்தை பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p><p> மேலும் விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளை யாரேனும் பதிவு செய்து இருந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T03:59:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... 2478 என உயர்ந்த மாயமானவர்கள் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flood-missing-rises-to-2478-1787974918"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flood-missing-rises-to-2478-1787974918</id>
            <summary type="text">Nepal flash flood... number of missing rises to 2,478: நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் எண்ணிக்கை தற்போது 2478 என உயர்ந்தது.
நேபாளத்தில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flash flood... number of missing rises to 2,478: நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் எண்ணிக்கை தற்போது 2478 என உயர்ந்தது.</p><p>
நேபாளத்தில் பெருவெள்ளத்தைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நாலாவது நாளை எட்டியுள்ள நிலையில், பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் எண்ணிக்கை தற்போது 2478 என உயர்ந்துள்ளது.</p><h2>இந்தியாவில்&nbsp;ஏழு உடல்கள்</h2><p>
</p><p>சீன அரசு ஊடகங்களின் தகவலின்படி, திபெத்தில் உத்தியோகப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது; மேலும் 554 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். 570க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, </p><p>குறைந்தது 2400 பேரைக் காணவில்லை என்ற நேபாளத்தின் புள்ளிவிவரங்களுடன் இவை பொருந்துகின்றனவா என்பது குறித்த தகவல் இல்லை.</p><p> இதனிடையே, திபெத்தில் சிக்கித் தவித்த 555 சுற்றுலாப் பயணிகளையும் 499 சீனக் குடியிருப்பாளர்களையும் மீட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42947199-96df-4355-9d98-b6ec8365aa93/26-6a92550865cca.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், இந்தியாவில், நேபாளத்திலிருந்து பாயும் ஆறுகளில் இருந்து ஏழு உடல்கள் மீட்கப்பட்டதாகவும், அவை வெள்ளத்தில் பலியானவர்கள் என நம்பப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>திபெத்தில் உள்ள கைலாச மலைக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தவர்கள் உட்பட, உலகம் முழுவதிலுமிருந்து வந்த ஏராளமான இந்து பக்தர்கள் எல்லைப் பகுதியில் காணாமல் போயுள்ளனர்.</p><p></p><p> </p><p>புதன்கிழமை திபெத்தின் கியிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பிறகு, 260 வெளிநாட்டினர் உட்பட 550-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்று சீன அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது. </p><p>இந்த நிலையில், புதன்கிழமையன்று சீனா-நேபாள எல்லையில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, காணாமல் போனவர்கள் எண்ணிக்கை தற்போது 2,478 என அதிகரித்துள்ளது. </p><p>எல்லையின் தங்கள் பகுதியில் 1,924 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அமைப்பு வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தது; அதேவேளை, திபெத்தில் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 554 ஆக உள்ளதாகவும், ஏழு பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனாவின் சின்ஹுவா செய்தி முகமை இன்று அதிகாலை செய்தி வெளியிட்டது. </p><p>செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவலின்படி, நேபாளத்தில் இதுவரை 3,700-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்; எனினும், குறைந்தது 93,000 பேர் இந்தத் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0af3509-02d1-412a-a756-e246d802f98c/26-6a9255092e571.webp' /></p><p> </p><p>குறைந்தது 777 வெளிநாட்டினர் காணாமல் போயுள்ளனர்; இதில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களும் அடங்கக்கூடும்.</p><p> நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அமைப்பு வெள்ளிக்கிழமையன்று 517 வெளிநாட்டினர் குறித்த தகவல் ஏதுமில்லை என்று தெரிவித்த நிலையில், சீன அதிகாரிகள் காணாமல் போன வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 260 எனக் குறிப்பிட்டுள்ளனர். </p><p>புதன்கிழமையன்று நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த வெள்ளப் பகுதிக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள இரண்டு ஏரிகளை நேபாளம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக, அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். </p><p>வெள்ளிக்கிழமையன்று இரண்டு ஏரிகளில் ஒன்று நிரம்பி வழியத் தொடங்கிய நிலையில், இரண்டு ஏரிகளும் முழுமையாக வற்றும் வரை வெள்ள அபாயம் நீடிக்கும் என்று அந்த அதிகாரி எச்சரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T03:39:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெனிசுலாவின் மொத்த எண்ணெய் வளத்தையும் கைப்பற்றும் அமெரிக்கா... ட்ரம்பின் புதிய ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-oil-agreement-with-venezuela-1787972596"></link>
            <id>https://news.lankasri.com/article/us-oil-agreement-with-venezuela-1787972596</id>
            <summary type="text">Trump announces new US oil agreement: வெனிசுலாவுடனான புதிய அமெரிக்க எண்ணெய் ஒப்பந்தத்தை ட்ரம்ப் அறிவித்தார்.
வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump announces new US oil agreement: வெனிசுலாவுடனான புதிய அமெரிக்க எண்ணெய் ஒப்பந்தத்தை ட்ரம்ப் அறிவித்தார்.
</p><p>வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸுடன் புதிய அமெரிக்க எண்ணெய் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதை டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7151238-c2b6-4037-bf0d-69a9d0a63ae5/26-6a924bf645eec.webp' /></p><p> </p><p>
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், உறுதிசெய்யப்பட்ட 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்புகளின் மீது அமெரிக்காவுக்கு பெரும்பான்மை கட்டுப்பாடு இருக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். </p><p>அதாவது வெனிசுலாவின் மொத்த எண்ணெய் வளத்தையும் அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அம்சங்கள் என்ன என்பது இன்னும் வெளியிடப்படாத நிலையில், </p><p>தனியார் நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியின் மூலம் தனது வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் இதனைச் சாத்தியமாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார். </p><p>65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்புகளை அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் ஒரு டொலர் கூட செலவிடாமல் சொந்தமாக்கியுள்ளதாக ட்ரம்ப் பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் எண்ணெய் இருப்பை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். வெனிசுலாவில் சுமார் 303 பில்லியன் பீப்பாய் அளவுள்ள உறுதிப்படுத்தப்பட்ட எண்ணெய் இருப்பு உள்ளது; இதுவே உலகின் மிகப்பெரிய அளவாகும்.
</p><p>கடந்த ஜனவரியில் அமெரிக்கா, வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்து பதவியிலிருந்து நீக்கியதிலிருந்து, ட்ரம்ப் நிர்வாகம் தனது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வெனிசுலா கச்சா எண்ணெயின் சீரான விநியோகத்தைப் பாதுகாக்கவும், </p><p>அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 1.25 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் ஒபெக் நாட்டின் சேதமடைந்த எரிசக்தித் துறையில் அமெரிக்க முதலீட்டை ஊக்குவிக்கவும் முயன்று வருகிறது. </p><p>நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ட்ரம்ப் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்; மலிவான எண்ணெய் விநியோகம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இந்தச் சிக்கலைக் குறைக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deb4335a-d4fc-4623-8455-a02b935e32cb/26-6a924bf6ee293.webp' /></p><p> </p><p>வெனிசுலாவின் மிகப்பெரிய எரிசக்தி இருப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை உள்ளடக்கிய ஒரு டசினுக்கும் மேற்பட்ட எண்ணெய் வயல்களில் அமெரிக்கா நேரடிப் பங்கினைப் பெறுவது குறித்து, அந்நாட்டு அரசாங்கத்துடன் ட்ரம்ப் நிர்வாகம் தீவிரப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த வாரத் தொடக்கத்தில் செய்தி வெளியிட்டது. </p><p>சுமார் 90 பில்லியன் பீப்பாய் அளவு உறுதிப்படுத்தப்பட்ட இருப்புக்களைக் கொண்ட, வெனிசுலாவின் மிகச் சிறந்த எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் அமெரிக்காவின் பங்கு தொடர்பானதாகவே இந்த விவாதம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>வெனிசுலாவின் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே இந்தத் தகவல்கள் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தின; மதுரோவைக் கைப்பற்றிய பிறகும் உண்மையான அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதில் ட்ரம்ப் நிர்வாகம் தோல்வியடைந்த விவகாரத்தில் அவர்கள் ஏற்கனவே கடும் அதிருப்தியில் உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T03:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Tata Punch ev 2 ஆண்டுகளில் 70,000 கிமீ பயணம் - உரிமையாளரின் அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tata-punch-ev-70000-km-owner-review-1787966585"></link>
            <id>https://news.lankasri.com/article/tata-punch-ev-70000-km-owner-review-1787966585</id>
            <summary type="text">Tata Punch.ev 70,000 km owner review: Tata Punch.ev உரிமையாளர் ஒருவர் தனது 2 ஆண்டுகளில் 70,000 கிமீ பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது,...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tata Punch.ev 70,000 km owner review: Tata Punch.ev உரிமையாளர் ஒருவர் தனது 2 ஆண்டுகளில் 70,000 கிமீ பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.</p><p>

அவர் கூறியதாவது, “இந்த EV எனக்கு பெரும்பாலும் சிரமமில்லாத, நம்பகமான அனுபவத்தை வழங்கியது” என்கிறார்.</p><p></p><p>
</p><h2>
நம்பகத்தன்மை, சேவை</h2><p>

45,000 கிமீ-இல் பின்புற சஸ்பென்ஷனில் சிறிய சத்தம் ஏற்பட்டது. அது உத்தரவாதத்தில் (warranty) மாற்றப்பட்டது. இதைத் தவிர பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. </p><p>

ஒவ்வொரு சிறிய சர்வீஸ் (7,500 கிமீ) சுமார் ரூ.3,000, பெரிய சர்வீஸ் (15,000 கிமீ) சுமார் ரூ.6,000 என செலவானது. 60,000 கிமீ சர்வீஸில் குளிரூட்டும் திரவம் மாற்றப்பட்டதால் ரூ.9,000 செலவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c3eb2f6-ec8d-4da7-b910-cad76b4075fc/26-6a92347adbfab.webp' /></p><p>
</p><h2>
பேட்டரி, சார்ஜிங் </h2><p> 
HV Battery SOH 94 சதவீதம் உள்ளது. குறைந்தது 2 லட்சம் கிமீ வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் 3.3kw AC சார்ஜர் பயன்படுத்தப்பட்டு, சில நேரங்களில் DC சார்ஜிங் செய்யப்பட்டுள்ளது. </p><p>ஆனால் Punch.ev பழைய மாடல்கள் 25kWh வரை மட்டுமே சார்ஜ் செய்ய முடியும். புதிய மாடல்கள் 60kWh வரை சார்ஜ் செய்யும் திறன் பெற்றுள்ளன.</p><p></p><h2>டயர்கள், பராமரிப்பு
</h2><p>
டயர்கள் 70,000 கிமீ வரை நீடித்துள்ளன. TPMS (Tyre Pressure Monitoring System) பயன்படுத்தியதால் puncture பிரச்சினைகள் குறைந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b1a1c69-988b-42ef-b410-83d81ab13c1e/26-6a92347b94089.webp' /></p><h2>

சிறிய குறைகள்
</h2><ul><li>
SOC 20 சதவீதத்திற்கு கீழே சென்றால் ரேஞ்ச் திடீரென குறைகிறது.</li><li>

Tata, பழைய வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட பேட்டரி வசதி வழங்கவில்லை.
</li><li>
பின்புற AC vent, roof lamp, grab rail போன்ற வசதிகள் இல்லை.</li><li>

headlights மழையில் பயனற்றதாக உள்ளன.</li><li>

மாற்றங்கள் (Nodifications): Sunfilm, TPMS, dashcam, spare wheel போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.
</li></ul><h2>
முடிவு</h2><p> 

உரிமையாளர், “முன்பு பெட்ரோல் காரில் மாதம் ரூ.12-15 ஆயிரம் செலவானது. EV-க்கு மாறியதால் சேமிப்பு அதிகமானது. ஆனால் தற்போது பயணம் குறைந்ததால், Punch.ev-ஐ வைத்திருக்க வேண்டுமா என சிந்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T01:20:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருநங்கை வீராங்கனை கிரிக்கெட் விளையாட அனுமதி - தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kapp-slams-trans-cricketer-anaya-bangar-inclusion-1787965538"></link>
            <id>https://news.lankasri.com/article/kapp-slams-trans-cricketer-anaya-bangar-inclusion-1787965538</id>
            <summary type="text">Kapp slams trans cricketer Anaya Bangar inclusion: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட்டில் பங்குபெற கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மரிசான் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Kapp slams trans cricketer Anaya Bangar inclusion: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட்டில் பங்குபெற கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.</p><h2>

மரிசான் காப்&nbsp;கடும் எதிர்ப்பு</h2><p>அவுஸ்திரேலியாவில் டிரான்ஸ் கிரிக்கெட் வீராங்கனை அனயா பங்கர் சமூக கிரிக்கெட்டில் விளையாட அனுமதி பெற்றிருப்பது, தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் மரிசான் காப் (Marizanne Kapp) கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c6b11be-72d6-4951-9d0e-1e9bcf6d290e/26-6a923063ec0c9.webp' /></p><p>36 வயதான காப், “இது முற்றிலும் அபத்தமானது. அனுமதி வழங்கப்படக்கூடாது” என்று தனது Instagram-ல் பதிவு செய்து, Women’s Big Bash League (WBBL)-ஐ குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
</p><h2>
அவுஸ்திரேலியாவில் விளையாட அனுமதி </h2><p>அனயா பங்கர், இந்த ஆண்டு பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்தியாவில் BCCI-க்கு விண்ணப்பித்தபோதும் பதில் கிடைக்காததால், அவர் Cricket Australia-வை அணுகினார். </p><p>

Cricket Australia Integrity Head ஜாக்கி பார்ட்ரிட்ஜ், “மார்ச் 2027 வரை சமூக கிரிக்கெட்டில் (Premier Cricket) விளையாடலாம். ஆனால் Elite Cricket-இல் விளையாட, testosterone அளவு 10 nmol/L-க்கு குறைவாக இருக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>அனயா பங்கர், “நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது, இது மிகப்பெரிய நாள். ஒருகட்டத்தில் நான் கிரிக்கெட்டில் திரும்ப முடியாது என்று நினைத்தேன். Cricket Australia எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.
</p><p>
அனயா, இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகள் ஆவார். அவர் சிறுவயதில் சர்பராஸ் கான் மற்றும் முஷீர் கானுடன் இள வயது பிரிவு போட்டிகளில் விளையாடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd888f2e-30a2-4f28-82f2-dda6e21bf8f0/26-6a923064a5b70.webp' /></p><h2>ICC அனுமதிக்கவில்லை</h2><p>

BCCI அதிகாரிகள், “ICC இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்தியாவில் இது இதுபோன்ற முதல் வழக்கு என்பதால், இன்னும் தீர்மானிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விவகாரம், பெண்கள் கிரிக்கெட்டில் டிரான்ஸ் வீரர்கள் பங்கேற்பு குறித்த சர்ச்சையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T01:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப் பேரழிவில் 538 பேர் உயிரிழப்பு - 85 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-floods-538-dead-85-indians-rescued-1787963857"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-floods-538-dead-85-indians-rescued-1787963857</id>
            <summary type="text">538 confirmed dead in Nepal Floods: நேபாள வெள்ளப் பேரழிவில் 538 பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளம்-திபெத் எல்லைப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>538 confirmed dead in Nepal Floods: நேபாள வெள்ளப் பேரழிவில் 538 பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நேபாள அரசு வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, 538 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05b8338f-4235-4db3-b013-550f5b256480/26-6a9229d4113a6.webp' /></p><h2>

85 இந்தியர்கள் மீட்பு </h2><p>இந்த பேரழிவில் சிக்கியிருந்த 85 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்திய தூதரகம், நேபாள அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.
</p><p>
நேபாளத்தின் பல பகுதிகளில், குறிப்பாக காத்மண்டூ, லலித்பூர், பக்தபூர் மாவட்டங்களில் வெள்ளம் கடுமையாக தாக்கியுள்ளது. வீடுகள், சாலைகள், பாலங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மீட்பு பணிகள் சிரமமாக நடைபெற்று வருகின்றன.
</p><p></p><p>நேபாள அரசு, 1,468 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவித்துள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அடங்குவர். சீனா, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் குடிமக்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம், “நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என அறிவித்துள்ளது. மேலும், இந்திய விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் (NDRF) தேவையான உதவிகளை வழங்கத் தயாராக உள்ளனர்.</p><p></p><p>நேபாள பிரதமர், “இது நாட்டின் மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்றாகும். உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். </p><p>தற்போது, சர்வதேச உதவி குழுக்கள் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த பேரழிவு, நேபாளத்தின் சுற்றுலா துறைக்கும், பொதுமக்களின் வாழ்வுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகள் தங்கள் குடிமக்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T00:34:48+00:00</updated>
        </entry>
    </feed>
