<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-20T21:25:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தல்... நித்யா ராமனை சோம்பேறி என்று அழைத்த கரேன் பாஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karen-bass-calls-rival-raman-lazy-1787254247"></link>
            <id>https://news.lankasri.com/article/karen-bass-calls-rival-raman-lazy-1787254247</id>
            <summary type="text">Karen Bass calls rival Nithya Raman lazy: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ், தனது போட்டியாளரான நித்யா ராமனை அவர் முகத்திற்கு நேராகவே சோம்பேறி என்று அழைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Karen Bass calls rival Nithya Raman lazy: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ், தனது போட்டியாளரான நித்யா ராமனை அவர் முகத்திற்கு நேராகவே சோம்பேறி என்று அழைத்தார்.
</p><p>லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் பதவிக்கான விவாதம், பதவியில் இருக்கும் கரேன் பாஸ் தனது போட்டியாளரான நித்யா ராமனை சோம்பேறி என்று கூறியதைத் தொடர்ந்து அனல் பறக்கும் வகையில் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffdda84b-d271-4b21-8294-6d3eb53be6be/26-6a8755eb0516b.webp' /></p><p>
</p><p>சபாநாயகராக இருந்தபோதுதான் முதல் வரிச் சலுகைக்கான நடவடிக்கையை மேற்கொண்டேன். அப்போது உங்கள் அடையாளமே இல்லை என்று தனக்கு அருகில் அமர்ந்திருந்த ராமனிடம் பாஸ் கூறினார். </p><p>மேலும், பொழுதுபோக்குத் துறை சார்ந்த விடயங்களில் வாக்களிக்க வேண்டிய நேரம் வந்தபோதுகூட, நீங்கள் வாக்களிக்காமல் தவிர்த்துவிட்டீர்கள். சொல்லப்போனால், பணிக்கு வராத காரணத்தினால் நீங்கள் பல ஆயிரம் வாக்குகளைத் தவறவிட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றார். </p><p>முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் நாள் நெருங்கிவரும் வேளையில், நகர மேயரான கரேன் பாஸ் புதன்கிழமை இரவு காட்டமான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.</p><p></p><p> </p><p>கரேன் பாஸ்ஸின் கீழ் பணியாற்றும் நகர மன்ற உறுப்பினரான ராமன், தனது பணி நெறிமுறைகள் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்க ஒரு வாய்ப்பைக் கோரியதோடு, தான் கூட்டங்களில் கலந்துகொள்ளத் தவறியதையும் ஒப்புக்கொண்டார். </p><p>அத்துடன், முந்தைய மேயராலும், இந்த மேயராலும் நான் நியமிக்கப்பட்ட வெளிவிவகார வாரியங்கள் சில சமயங்களில் நமது மன்ற நாட்களுடன் முரண்படுவதால், வழக்கமான மன்றக் கூட்டங்களைத் தவறவிட நேரிடுகிறது என்பது (பாஸுக்கும்) என்னைப் போலவே தெரியும் என்று மன்ற உறுப்பினர் ராமன் கூறினார்.</p><p>ராமனும் கடுமையாகத் தாக்கிப் பேசியதோடு, வீடற்றோர் பிரச்சினையில் மேயரின் செயல்பாடுகளைக் கண்டித்து, அவரது 'இன்சைட் சேஃப்' என்ற வீட்டுவசதித் திட்டம் ஒரு தோல்வி என்றும் குறிப்பிட்டார்.</p><p>இந்த மேயர் 'இன்சைடு சேஃப்' திட்டத்திற்காக 400 மில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளார், ஆனால் தணிக்கைகளை மேற்கொள்ள மறுத்துவிட்டார் என்றும் ராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c541959-8d80-4602-bc50-38a23f8f292d/26-6a8755e9a2858.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, தனது முயற்சிகளின் விளைவாக, தனது நான்காவது கவுன்சில் மாவட்டத்தில் வீடின்றித் தெருக்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கையில் 49 சதவீதம் குறைவு ஏற்பட்டதையும் ராமன் சுட்டிக்காட்டினார்.</p><p>வீடற்றோருக்கான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து நகர நிதிகளையும் தணிக்கை செய்து, அவற்றின் செயல்திறனைக் கண்காணிப்பதாக ராமன் உறுதியளித்தார். </p><p>பாஸ், 'இன்சைட் சேஃப்' திட்டத்தை ஆதரித்துப் பேசியதோடு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் வீடற்றோருக்கான முழு அமைப்பையும் மாற்றியமைக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01ffe573-6cfd-4907-a02a-1168c92a94d9/26-6a8755ea538e4.webp' /></p><p> </p><p>லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நடத்திய ஓர் ஆய்வில், 'இன்சைட் சேஃப்' திட்டம் தொடங்கப்பட்ட கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில், அதில் பங்கேற்ற வீடற்றவர்களில் ஏறத்தாழ 41 சதவீதத்தினர் மீண்டும் வீடற்ற நிலைக்குத் திரும்பியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. </p><p>முதல்நிலைத் தேர்தலில் ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமான ஸ்பென்சர் பிராட்டை வீழ்த்தியதன் மூலம், பாஸும் ராமனும் தேர்தலில் தங்களது இடங்களை உறுதி செய்தனர். </p><p>முதன்மைத் தேர்தலில் மேயர் கரேன் பாஸ் 34 சதவீத வாக்குகளும், ராமன் 29 சதவீத வாக்குகளும் பெற்று முன்னிலை வகித்தனர். மேயர் தேர்தலில் பாஸ் பெரும் முன்னிலையில் இருப்பதாகக் காட்டிய கருத்துக்கணிப்பு போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே இந்தக் கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளது. </p><p>லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தல் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறும். இதில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்து தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் பதவிக்கான போட்டியில் களமிறங்கியுள்ள நித்யா ராமனுக்கு வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T19:28:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயர்லாந்தில் கோதிக் கோட்டை ஒன்றை வாங்கிய மார்க் ஜுக்கர்பெர்க்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zuckerberg-buys-gothic-castle-1787248435"></link>
            <id>https://news.lankasri.com/article/zuckerberg-buys-gothic-castle-1787248435</id>
            <summary type="text">Mark Zuckerberg buys Gothic castle: மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் அயர்லாந்தில் ஒரு கோட்டையை வாங்கியுள்ளனர். 
தொழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mark Zuckerberg buys Gothic castle: மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் அயர்லாந்தில் ஒரு கோட்டையை வாங்கியுள்ளனர். </p><p>
தொழில்நுட்பத் துறை கோடீஸ்வரரான மார்க் ஜுக்கர்பெர்க்கும் அவரது மனைவி பிரிசில்லா சானும் அயர்லாந்தில் ஒரு கோட்டையை வாங்கியுள்ளனர்; அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் குறித்து அவர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>கோதிக் பாணி மாளிகை</h2><p>
</p><p>மெட்டாவின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க், அண்மைய வாரங்களில் ஆலன்-பக்லி குடும்பத்திடமிருந்து கோதிக் பாணியிலான மூன்று மாடி 'ஸ்ட்ரான்க்கல்லி' (Strancally) கோட்டையை வாங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5bbb69d-e849-4626-8ad6-e14bf1e7ce07/26-6a873f362869a.webp' /></p><p> </p><p>மார்க் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைத் தொடர்ந்து பராமரிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்; அத்துடன் அயர்லாந்தில் நேரத்தைச் செலவிடவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். </p><p>1827-ல் ஒரு ஆங்கில அரசியல்வாதிக்காகக் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, டப்ளினிலிருந்து சுமார் 93 மைல் தென்மேற்கே, வாட்டர்ஃபோர்டு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு மூன்று மாடி, செதுக்கப்பட்ட கற்களால் ஆன கோதிக் மறுமலர்ச்சி பாணி மாளிகையாகும்.</p><p></p><p> </p><p>கோட்டையை வாங்க மார்க் சக்கர்பெர்க் செலுத்திய தொகை தொடர்பான தகவல் வெளியாகவில்லை. இந்தக் கோட்டையானது, கடந்த 20 வருடங்களில் அதன் முந்தைய உரிமையாளர்களால் விரிவாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>அபராதம் விதிக்கப்பட வேண்டும்</h2><p> </p><p>மெட்டா நிறுவனம் அயர்லாந்தில் சுமார் 1,500 பேரைப் பணியமர்த்தியுள்ளது, அதன் சர்வதேசத் தலைமையகம் டப்ளினில் அமைந்துள்ளது.
ஜுக்கர்பெர்க்கும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து அமெரிக்காவிலேயே வசிப்பார்கள்; அயர்லாந்தில் மெட்டா நிறுவனத்தின் பணிகளை மேற்கொள்ளும்போது மட்டும் அங்குள்ள குடியிருப்பைப் பயன்படுத்துவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9c3a97-b278-40d2-8595-01be56235b0e/26-6a873f354f1b5.webp' /></p><p>
</p><p>இதனிடையே, இளம் பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கை வேண்டுமென்றே அடிமையாக்கும் வகையில் உருவாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், மெட்டா நிறுவனத்திற்கு எதிராக செவ்வாயன்று நடைபெற்ற அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில், அந்நிறுவனம் குழந்தைகளைத் தெரிந்தே அடிமையாக்கிச் சுரண்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. </p><p>குழந்தைகளுக்கு அடிமைப்படுத்தும் தன்மையுள்ள தயாரிப்புகளை வடிவமைத்ததற்காக, மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சுமார் 200 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று மாகாணங்களின் கூட்டமைப்பு ஒன்று கோருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T17:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோட்டக் குழாய் பயன்பாட்டுத் தடை... பிரித்தானியாவின் மிகப்பெரிய நீர் விநியோக நிறுவனம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/water-supplier-warns-hosepipe-ban-1787243194"></link>
            <id>https://news.lankasri.com/article/water-supplier-warns-hosepipe-ban-1787243194</id>
            <summary type="text">Hosepipe ban will last until end of YEAR: குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான தடை இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்கும் என்று எச்சரிக்கை.
பிரித்தானியாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hosepipe ban will last until end of YEAR: குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான தடை இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்கும் என்று எச்சரிக்கை.
</p><p>பிரித்தானியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த ஆண்டின் இறுதி வரை குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான (hosepipe) கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நாட்டின் மிகப்பெரிய நீர் விநியோக நிறுவனம் எச்சரித்துள்ளது.</p><h2>ஆண்டின் இறுதி வரை</h2><p>
</p><p>சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்த நடவடிக்கைகள் அவசியமென்றும், இவை பல மாதங்களுக்குத் தொடரக்கூடும் என்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>தேம்ஸ் வாட்டர் (Thames Water) நிறுவனத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஹோஸ்பைப் பயன்பாட்டுத் தடை கட்டுப்பாடுகள், இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64222f7d-1981-4efc-a4fc-ae519a3d77f7/26-6a872abd227d1.webp' /></p><p> </p><p>பிரித்தானியாவில் கோடைக்காலத்தின் ஐந்தாவது வெப்ப அலை முடிவுக்கு வரும் நிலையில், ஆண்டின் மிக வெப்பமான நாளில் லண்டனில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. </p><p>இந்த நிலையில், தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகலில் ஒருவரான நெவில் மன்காஸ்டர் தெரிவிக்கையில், எங்களின் வழக்கமான நீர் விநியோகத்திற்கு மேலதிகமாக, நீருக்கான பெரும் தேவை இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என்று கேள்விக்கு பதிலளித்துள்ள ​​மன்காஸ்டர், யதார்த்தமாகப் பார்த்தால், அவை நீக்கப்படுவதற்கு இந்த ஆண்டின் இறுதிப் பகுதி வரை ஆகலாம் என்று நான் கருதுகிறேன் என்றார்.</p><p></p><p> </p><p>நீண்ட கால வெப்பமான மற்றும் வறண்ட கோடைக்காலத்திற்குப் பிறகு, இங்கிலாந்தின் ஏறக்குறைய முக்கால் பகுதியும் வேல்ஸ் முழுவதும் தற்போது வறட்சி நிலையை எதிர்கொண்டுள்ளன. </p><p>இந்த வாரத் தொடக்கத்தில், இங்கிலாந்தின் சில முக்கிய நகரங்களில் இடி மற்றும் பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது; சில பகுதிகளில் பல மாதங்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவிலான மழை பதிவாகியுள்ளது.</p><h2>1,000 பவுண்டுகள்</h2><p> </p><p>தேம்ஸ் வாட்டர் நிறுவனம் ஜூலை மாத இறுதியில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது அந்நிறுவனத்தின் குடிநீர் வாடிக்கையாளர்களில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் அத்தடையின் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். </p><p>சமீபத்திய மாதங்களில் மேலும் ஒன்பது நீர் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளன; இத்தடை உத்தரவுகள் இங்கிலாந்தின் தெற்குப் பகுதியின் பெரும்பகுதியையும் வேல்ஸின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6796d074-38b2-4161-b74e-a8728c9bbdbd/26-6a872abc74463.webp' /></p><p> </p><p>மிக சமீபத்தில், வெசெக்ஸ் வாட்டர் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அன்று பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு குழாய் மூலம் நீர் பாய்ச்சுவதற்குத் தடை விதித்தது. இதன் மூலம், 50 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தக் கட்டுப்பாடுகளை அந்த நிறுவனம் அமுல்படுத்தியுள்ளது. </p><p>தற்காலிக பயன்பாட்டுத் தடையின் கீழ், செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது அல்லது வெந்நீர்த் தொட்டிகளை நிரப்புவது போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு நீர்க்குழாய்கள், தெளிப்பான்கள் மற்றும் அழுத்தக் கழுவிகளைப் பயன்படுத்தக் கூடாது. </p><p>அங்கீகரிக்கப்பட்ட விதிவிலக்கு அல்லது சட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு இடைவெளி (loophole) பொருந்தாத பட்சத்தில், விதிகளை மீறுபவர்கள் 1,000 பவுண்டுகள் அபராதத்தைச் சந்திக்க நேரிடலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T16:24:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் Visa-Free Entry பட்டியலில் 2 ஆசிய நாடுகள் சேர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-grants-visa-free-entry-to-kyrgyzstan-vietnam-1787241629"></link>
            <id>https://news.lankasri.com/article/china-grants-visa-free-entry-to-kyrgyzstan-vietnam-1787241629</id>
            <summary type="text">Two asian countries join China&#039;s visa-free entry list: சீனாவின் Visa-Free Entry பட்டியலில் 2 ஆசிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய குடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two asian countries join China's visa-free entry list: சீனாவின் Visa-Free Entry பட்டியலில் 2 ஆசிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
</p><p>
சீனாவின் தேசிய குடியேற்ற நிர்வாகம் (NIA) அறிவித்துள்ள புதிய கொள்கையின் படி, கிற்கிஸ்தான் மற்றும் வியட்நாம் குடிமக்கள் இனி சீனாவிற்கு விசா இல்லாமல் நுழையலாம். </p><p>இந்த விதிமுறை இன்று முதல் (ஆகஸ்ட் 20, 2026) அமுலுக்கு வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/911fce2d-2c81-455f-a5e1-2bce9ec7f58b/26-6a87249f1ee98.webp' /></p><h2>10 நாட்கள் வரை தங்கலாம்</h2><p>புதிய கொள்கையின் படி, இந்த இரண்டு நாடுகளின் குடிமக்கள் 240 மணி நேர visa-free transit அனுமதி பெறுவர். </p><p>அவர்கள் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட 65 திறந்த துறைமுகங்கள் வழியாக சீனாவிற்குள் நுழைந்து, குறிப்பிட்ட பகுதிகளில் 10 நாட்கள் (240 மணி நேரம்) வரை தங்கலாம்.

மேலும், ஹைனான் மாகாணத்தில் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>இந்த காலத்தில் அவர்கள் சுற்றுலா, வணிகம், குடும்ப சந்திப்பு போன்ற குறுகிய கால நடவடிக்கைகளில் ஈடுபடலாம். ஆனால் வேலை, படிப்பு, செய்தி சேகரிப்பு போன்ற செயல்களுக்கு முன்கூட்டியே விசா பெற வேண்டும்.
</p><h2>
57 நாடுகளுக்கு&nbsp;விரிவு</h2><p>சீனாவின் விசா கொள்கையை விரிவுபடுத்தும் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அண்டை நாடுகளுடன் நம்பிக்கை, ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, சீனாவின் 240-hour visa-free transit policy தற்போது 57 நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது.</p><p>

இந்த புதிய விதிமுறைகள், சீனாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T15:57:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோமாலியாவில் கடத்தப்பட்ட சரக்கு கப்பலில் சிக்கிய 6 இந்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/six-indians-on-hijacked-somali-cargo-ship-1787240320"></link>
            <id>https://news.lankasri.com/article/six-indians-on-hijacked-somali-cargo-ship-1787240320</id>
            <summary type="text">Six Indians aboard cargo ship hijacked off Somalia: சோமாலியாவின் புன்ட்லாந்து கடற்கரையில் கடத்தல்காரர்கள் கைப்பற்றிய சரக்கு கப்பலில் ஆறு இந்தியர்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Six Indians aboard cargo ship hijacked off Somalia: சோமாலியாவின் புன்ட்லாந்து கடற்கரையில் கடத்தல்காரர்கள் கைப்பற்றிய சரக்கு கப்பலில் ஆறு இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>M/V LUTUF என்ற கப்பல், காமெரூன் நாட்டின் கொடியுடன் பயணித்தது. இந்த கப்பல் துருக்கி இராணுவ பயிற்சி மையத்திற்காக ஆயுதங்கள் மற்றும் அதற்கு தொடர்புடைய சாதனங்களை எடுத்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாறையா அருகே நடந்தது. எட்டு ஆயுதம் ஏந்திய கடத்தல்காரர்கள் கப்பலை கைப்பற்றினர்.</p><p> கப்பலில் மொத்தம் 10 பேர் இருந்தனர். ஆறு இந்தியர்கள், ஒரு துருக்கியர், ஒரு ஜார்ஜியர் மற்றும் இரண்டு செர்பிய பாதுகாப்பு பணியாளர்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363df18e-1784-4fc5-9254-acebcfc834b8/26-6a871f82b1540.webp' /></p><p>கப்பலை கைப்பற்றிய கடத்தல்காரர்கள் அதை நுகால் கடற்கரை நோக்கி அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், துருக்கிய ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் அந்த பகுதியில் கண்காணிப்பு செய்தன.</p><p> அப்போது, ஒரு சிறிய படகு கப்பலுக்கு அருகில் வந்து ‘காட்’ எனப்படும் போதைப்பொருளை வழங்கியது. அதற்குப் பிறகு நடந்த வான்வழி தாக்குதலில் நால்வர் உயிரிழந்தனர், இருவர் காயமடைந்தனர்.</p><p>

இந்த தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும், கப்பலில் இருந்த ஆறு இந்தியர்களின் நிலைமை குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.
</p><p></p><p>சோமாலிய அதிகாரிகள், இந்த கடத்தல்காரர்கள் ஏப்ரல் மாதம் கைப்பற்றப்பட்ட M/V Sward கப்பல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கின்றனர். அந்த கப்பலும் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாக கடல் பாதுகாப்பு அறிக்கைகள் கூறுகின்றன.
</p><p>
இந்த சம்பவம், சோமாலிய கடற்கரையில் மீண்டும் கடத்தல் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T15:36:05+00:00</updated>
        </entry>
    </feed>
