<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-13T14:20:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்டான் ஹெர்மன் மிரட்டல் ஆட்டம்: நமீபியாவை ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-africa-whitewash-namibia-in-odi-series-1789307920"></link>
            <id>https://news.lankasri.com/article/south-africa-whitewash-namibia-in-odi-series-1789307920</id>
            <summary type="text">
South africa whitewash namibia in odi series: நமீபியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி முழுமையாக கைப்பற்றியது.

நமீபியா அணிக்கு எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>
South africa whitewash namibia in odi series: நமீபியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி முழுமையாக கைப்பற்றியது.</p><p>

நமீபியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது. </p><h2>சுருண்ட நமீபியா
</h2><p>
Windhoek-யில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நமீபியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca2e264a-aace-4812-9ef0-471accb30ada/26-6aa6ae08df328.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய நமீபியா அணி 156 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சனே க்ரீன் 33 ஓட்டங்கள் எடுத்தார். பிஜோர்ன் போர்டுன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.</p><p>
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 21.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a176beb8-60e2-442f-8d34-ad79b2a9728e/26-6aa6ae0835899.webp' />&nbsp;</p><h2>ஹெர்மன்&nbsp;</h2><p>

ஜோர்டான் ஹெர்மன் (Jordan Hermann) 59 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் விளாசினார். கோன்னோர் எஸ்டர்ஹுய்ஸன் 68 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 3-0 என்ற கணக்கில் நமீபியாவை ஒயிட்வாஷ் செய்தது. </p><p>

தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் பிஜோர்ன் போர்டுன் ஆட்டநாயகன் விருதும், ஜோர்டான் ஹெர்மன் மற்றும் ரூபென் ட்ரம்பல்மேன் இருவரும் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96594be4-f108-48be-a703-2bc798a7171b/26-6aa6ae077fdcb.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/320d6b6f-7b01-4340-84c9-af07eb1c1a21/26-6aa6ae0695166.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T14:04:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிளவுபட உள்ள பிரித்தானியா; சுதந்திரம் கோரும் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scotland-wales-ireland-leaders-meet-to-break-up-uk-1789306135"></link>
            <id>https://news.lankasri.com/article/scotland-wales-ireland-leaders-meet-to-break-up-uk-1789306135</id>
            <summary type="text">wales scotland ireland leaders meet to break up united kingdom: ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளின் முதல் அமைச்சர்கள் பிரித்தானியாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>wales scotland ireland leaders meet to break up united kingdom: ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளின் முதல் அமைச்சர்கள் பிரித்தானியாவிலிருந்து பிரிந்து செல்வது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தும் உரிமையைக் கோரும் ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட உள்ளனர். </p><h3>

ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து முதல் அமைச்சர்கள் சந்திப்பு</h3><p> 

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கியதாக பிரித்தானியா உள்ளது.</p><p> 

இந்நிலையில், பிரித்தானியாவிலிருந்து ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை பிரிந்து சென்று சுதந்திரம் பெற விரும்புகிறது.</p><p>ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி, வேல்ஸின் முதல் அமைச்சர் ருன் அப் ஐயோவர்த் மற்றும் வடக்கு அயர்லாந்தின் முதல் அமைச்சர் மிஷேல் ஓ'நீல் ஆகியோர் திங்கட்கிழமை வேல்ஸின் கார்டிஃபில் நடைபெறும் உச்சிமாநாட்டில் ஒன்று கூட உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be013cd7-b966-4bbd-a923-55f0fb6b6893/26-6aa6a7d298610.webp' /></p><p>

இந்த மாநாட்டில், பிரித்தானியாவிலிருந்து பிரிந்து செல்வது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தும் உரிமையைக் கோரும் ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட உள்ளனர்.&nbsp;</p><p></p><p>

மேலும், பொருளாதாரம், எரிசக்தி, ஐரோப்பா மற்றும் சர்வதேச விவகாரங்களில் நெருங்கிய ஒத்துழைப்பை நாடும் அதே வேளையில், சுதந்திரம் தொடர்பான ஒரு புதிய அரசியல் பிரச்சாரம் குறித்து&nbsp; விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><h3>

ட்ரம்ப் ஆதரவு </h3><p>

பொதுமக்களின் ஆதரவு இருந்தால் ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கூறியதைத் தொடர்ந்து, அவர் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24180e91-d999-455c-b7e3-1bae860a27a6/26-6aa6a7d403ae5.webp' /></p><p>

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது டப்ளின் பயணத்தின்போது, ​​ஒன்றுபட்ட அயர்லாந்தைக் காணத் தாம் விரும்புவதாக கூறியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
</p><h3>
பிரித்தானியாவின் கடைசி பிரதமராக பர்ன்ஹாம்</h3><p>

இது குறித்து பேசிய ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி, "வரலாற்றிலேயே முதன்முறையாக, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகியவை சுதந்திர ஆதரவு முதல் அமைச்சர்களால் வழிநடத்தப்படுகின்றன.&nbsp;</p><p>

தற்போதைய நிலை நீடிக்க முடியாதது என்பதற்கும், பிரித்தானியாவின் பிந்தைய எதிர்காலத்திற்கு வெஸ்ட்மின்ஸ்டர் தயாராக வேண்டும் என்பதற்கும் இதைவிடத் தெளிவான அறிகுறி இருக்க முடியாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3589120-99c0-485d-8f42-7b5645f45def/26-6aa6a7d34e18f.webp' /></p><p> 

ஆண்டி பர்ன்ஹாம், தான் பிரித்தானியாவின் கடைசிப் பிரதமராக வரலாற்றில் இடம்பிடிப்பார் என்ற எண்ணத்தை இப்போது எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.</p><p> 
 
நாளை கார்டிஃபிலில், இந்தத் தீவுகள் முழுவதிலுமிருந்து வரும் கூட்டாளிகளுடன் ஒரு சிறந்த எதிர்காலம் குறித்து விவாதிக்க ஆவலுடன் உள்ளேன். அது சுதந்திரத்தின் புதிய தொடக்கத்தால் மட்டுமே சாத்தியமாகும்" என தெரிவித்துள்ளார். </p><h3>

 சாத்தியமற்றது என தெரிவித்துள்ள பர்ன்ஹாம்
</h3><p>
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பு மற்றொரு ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவது சாத்தியமற்றது. 

ஸ்காட்லாந்தில் ஒரு சுதந்திரப் பொது வாக்கெடுப்புக்கு ஒருமித்த கருத்து இல்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bff7c642-01e8-44bd-8ebf-9c5c9bec0cc6/26-6aa6a7d1bc053.webp' /></p><p> அத்துடன், வடக்கு அயர்லாந்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தற்போது பிரித்தானியாவிலிருந்து பிரிந்து செல்ல விரும்புகிறார்கள் என்று கூறுவதற்கும் தெளிவான அடிப்படை இல்லை" என கூறியுள்ளார். </p><p>

பர்ன்ஹாம், ஸ்வினிக்கு அனுப்பிய கடிதத்தில், "தொழிற்கட்சி சுதந்திரத்தையோ அல்லது மற்றொரு பொது வாக்கெடுப்பையோ ஆதரிக்காது என தொழிற்கட்சி தனது 2024 தேர்தல் அறிக்கையில் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>

சமீபத்தில் கிளாஸ்கோவில் நாம் சந்தித்தபோது நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் தெளிவுபடுத்தியதைப் போல, சுதந்திரமும் பொது வாக்கெடுப்பும் சாத்தியமற்றவை. </p><p>

ஏனெனில் அது, பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலிருந்தும், வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கக் குடும்பங்களுக்கு உதவுவதிலிருந்தும் நமது கவனத்தைத் திசைதிருப்பிவிடும்" என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-13T13:43:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்திற்கு ஆபத்து - ரஷ்ய அணுசக்தித் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-attack-fuel-trucks-in-zaporizhzhia-plant-1789306317"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-attack-fuel-trucks-in-zaporizhzhia-plant-1789306317</id>
            <summary type="text">Ukraine attack fuel trucks in zaporizhzhia plant: உக்ரைன் நடத்திய தாக்குதலினால் அணுமின் நிலையத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அணுசக்தித் தலைவர் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukraine attack fuel trucks in zaporizhzhia plant: உக்ரைன் நடத்திய தாக்குதலினால் அணுமின் நிலையத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அணுசக்தித் தலைவர் தெரிவித்துள்ளார். </p><p>

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாக உள்ளது ஸபோரிஷியா. இது ஆறு அணு உலைகளைக் கொண்டது.&nbsp;</p><h2>ஸபோரிஷியா அணுமின் நிலையம்</h2><p>
போரின் ஆரம்ப வாரங்களில் ரஷ்யப் படைகள் இந்த அணுமின் நிலையத்தை கைப்பற்றியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32dad546-9ec2-4123-9364-6ee133753b5a/26-6aa6a64690f7c.webp' /></p><p></p><p>
இந்நிலையில், ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் டீசல் எரிபொருள் லொறிகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.</p><p>

இதில் இரண்டு ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் வேண்டுமென்றே பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸி லிகாச்சேவ் (Alexei Likhachev) தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>கடுமையான காயங்கள்</h2><p>

மேலும் ஏராளமான ரஷ்ய வீரர்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்ததாகவும், சிலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இதற்கிடையில், இந்த அணுமின் நிலையத்தை ரஷ்யா கைவிட்டு அதன் செயல்பாட்டினை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உக்ரைன் கோரியுள்ளது. </p><p>

ஆனால், ரஷ்யா இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. தற்போது அங்குள்ள எரிபொருள் மூலம் மின்சாரம் எதுவும் உற்பத்தி செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d54a872-f0b3-46e5-980a-a400989b8399/26-6aa6a647611d9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T13:30:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆண்டுகளுக்கு முன் உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் குழந்தை பெற்ற பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/54-old-woman-give-birth-by-22-yr-old-frozen-embryo-1789302137"></link>
            <id>https://news.lankasri.com/article/54-old-woman-give-birth-by-22-yr-old-frozen-embryo-1789302137</id>
            <summary type="text">54 year old women give baby brith by 22 year old frozen embryo: 22 ஆண்டுகளுக்கு முன் உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் 54 வயதான பெண் குழந்தை பெற்றுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>54 year old women give baby brith by 22 year old frozen embryo: 22 ஆண்டுகளுக்கு முன் உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் 54 வயதான பெண் குழந்தை பெற்றுள்ளார். </p><h3>

22 ஆண்டுகளுக்கு முன் உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் குழந்தை</h3><p> 

54 வயதான கிறிஸ்டினா ராப்டி ட்ஸெலெபி மற்றும் 60 வயதான கான்ஸ்டன்டினோஸ் ராப்டிஸ் என்ற கிரேக்கத் தம்பதி, அக்டோபர் 2025 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்தில் தங்களது ஒரே மகனான ஜார்ஜியாஸை இழந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9728aee-7d05-4665-9f1a-c1d67781b0cb/26-6aa6957ac167b.webp' /></p><p>

அந்த நாட்டின் சட்டப்படி, செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற அதிகபட்ச வயதாக 54 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>

செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற திட்டமிட்ட கிறிஸ்டினா ராப்டி ட்ஸெலெபிக்கு இன்னும் 2 மாதங்களே இருந்த நிலையில் தற்போது 22 ஆண்டுகளுக்கு முன் உறைய வைக்கப்பட்ட கரு முட்டையை பயன்படுத்தி பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>

கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி ஏதென்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 7 பவுண்ட், 11 அவுன்ஸ் எடையில் பிறந்த தங்களது மகளுக்கு, இறந்த தங்களது மகனின் நினைவாக ஜார்ஜியா என அவரது பெயரை சூட்டினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddf73889-e535-47ff-bf97-bb016948c28e/26-6aa6957b7d076.webp' /></p><p>

இது குறித்து பேசிய ராப்டி-ட்ஸெலெபி, "அரசாங்கத்தின் காலக்கெடுவான இரண்டரை மாதங்கள் மட்டுமே எனக்கு அவகாசம் இருந்தது. 

காலக்கட்டுப்பாடுகள் மற்றும் சட்டக் கட்டமைப்பால் விதிக்கப்பட்ட கடுமையான வயது வரம்புகள் காரணமாக, நாங்கள் மிக விரைவாகச் செயல்பட வேண்டியிருந்தது" என தெரிவித்துள்ளார்.
</p><p>
 கின்னஸ் உலக சாதனைகளின்படி, வெற்றிகரமான கர்ப்பத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மிகப் பழமையான மனிதக் கருவானது, 31 ஆண்டுகளுக்கும் பழமையானதாக இருந்தது.</p>]]></content>
            <updated>2026-09-13T12:24:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைந்துவிட்ட அட்லாண்டிக் சூறாவளிகள்... எல் நினோ தாக்கம் என நிபுணர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/atlantic-hurricanes-gone-1789298714"></link>
            <id>https://news.lankasri.com/article/atlantic-hurricanes-gone-1789298714</id>
            <summary type="text">El Nino Might Bring Slow Storm Season: எல் நினோ புயல் பருவத்தை மந்தமாக்கக்கூடும்.
புயல்கள் உருவாவதற்கு முன்பே அவற்றை நசுக்கிவிடும் ஒரு சூப்பர் எல் நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>El Nino Might Bring Slow Storm Season: எல் நினோ புயல் பருவத்தை மந்தமாக்கக்கூடும்.
</p><p>புயல்கள் உருவாவதற்கு முன்பே அவற்றை நசுக்கிவிடும் ஒரு சூப்பர் எல் நினோ காரணமாக, இந்த சூறாவளிப் பருவத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமைதியாக உள்ளது.</p><h2>ஒரு புயல் பருவம்</h2><p> </p><p>
தேசிய சூறாவளி மையத்தின் தகவலின் அடிப்படையில், வழக்கமாக சூறாவளிப் பருவத்தின் உச்சக்கட்டமாக அமையும் இந்தக் காலகட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை அட்லாண்டிக் பெருங்கடலில் எந்தச் சூறாவளியும் உருவாகவில்லை; </p><p>மேலும், குறைந்தது அடுத்த ஒரு வாரத்திற்காவது சூறாவளி எதுவும் உருவாக வாய்ப்பில்லை என்றே தெரிய வருகிறது. இந்தக் பருவத்தில் ஒப்பீட்டளவில் பலவீனமான மற்றும் குறுகிய கால அளவு கொண்ட ஐந்து வெப்பமண்டலப் புயல்கள் மட்டுமே உருவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4460be9-3328-47d5-97a1-1bccd202707d/26-6aa6881c7b1ad.webp' /></p><p> </p><p>அரசுக்குச் சொந்தமான வானிலை முன்னறிவிப்பு மையத்தின் வானிலை ஆய்வாளரான நிக் நோவெல்லா கூறியதன்படி, மணிக்கு 74 மைல் வேகத்திலான காற்றைக் கொண்ட புயல் (அதாவது 'ஹரிகேன்' என வகைப்படுத்தப்படத் தேவையான வேகத்தை எட்டிய புயல்) எதுவும் உருவாகாமலே ஒரு புயல் பருவம் இவ்வளவு நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தது என்பது சனிக்கிழமையன்று ஒரு சாதனையாக அமைந்தது; </p><p>குறைந்தது செயற்கைக்கோள் பயன்பாட்டுக் காலத்திலாவது இதுவே சாதனையாகும். 1950-களுக்கு முந்தைய காலகட்டத்தில், சூறாவளிப் பருவத்தின் இவ்வளவு பிந்தைய கட்டத்தில் எந்தவொரு சூறாவளியும் பதிவாகாத சில ஆண்டுகள் இருந்தன; ஆனால், கடல்சார் கண்காணிப்பு முழுமையாக இல்லாதிருந்ததால் வானிலை ஆய்வாளர்கள் அந்தப் பதிவுகளை நம்புவதில்லை.</p><p></p><p> </p><p>புயல்களின் எண்ணிக்கை, அவற்றின் வலிமை மற்றும் அவை நீடிக்கும் காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் ஒரு அளவீட்டின்படி, ஒட்டுமொத்த சூறாவளிச் செயல்பாடும் 1950-க்குப் பிந்தைய சாதனை அளவிலான குறைந்த மட்டத்தில் உள்ளது என்று கொலராடோ மாகாணப் பல்கலைக்கழகத்தின் சூறாவளி நிபுணர் ஃபில் க்ளோட்ச்பாக் தெரிவித்துள்ளார். </p><p>அட்லாண்டிக் பகுதியில் புயல் செயல்பாடானது, ஆண்டின் இக்காலகட்டத்திற்கான இயல்பான அளவில் வெறும் 7 சதவீதமாக மட்டுமே உள்ளது. இருப்பினும் மக்கள் தங்கள் பாதுகாப்பைக் குறைத்துக்கொள்ளக் கூடாது, ஏனெனில் எல் நினோ காலகட்டத்தில்கூட, ஒரேயொரு புயல் பேரழிவை ஏற்படுத்தப் போதுமானது.</p><p> பல வல்லுநர்கள் 1992-ஆம் ஆண்டைச் சுட்டிக்காட்டினர், அது பேரழிவை ஏற்படுத்திய ஆண்ட்ரூ சூறாவளியுடன் தாமதமாக ஆனால் மிக மோசமாகத் தொடங்கியது.</p><h2>வலிமையான புயல்கள்</h2><p> </p><p>அட்லாண்டிக்கில் ஏற்படும் மிகப்பெரிய எல் நினோ விளைவு என்பது, முன்னெப்போதும் இல்லாத அளவிலான வலுவான காற்றுச் சிதைவு ஆகும். இதில், வலுவான கிழக்கத்தியக் காற்று ஒரு புயல் அமைப்பைத் தாழ்வான மட்டங்களில் தாக்கும்போது, ​​வலுவான மேற்கத்தியக் காற்று அதை உயரமான பகுதிகளில் எதிர் திசையில் தள்ளுகிறது. </p><p>இதன் விளைவாக, அவை அந்தப் புயலைச் சிதைத்துவிடுகின்றன. ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில், வழக்கமாக வலிமையான புயல்கள் உருவாகி மேற்கு நோக்கி நகரும் இப்பகுதியில் நிலவும் wind shear அளவானது, ஒரு வெப்பமண்டலச் சூறாவளி தாங்கக்கூடிய அளவை விட மணிக்கு சுமார் 45 மைல்கள் அதிகமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb672df5-f13d-4645-b67f-a9054565f106/26-6aa6881d2dd3f.webp' /></p><p> </p><p>காற்றுச் சுழற்சி அதிகமாக இல்லாத ஒரே பகுதி மெக்சிகோ வளைகுடா ஆகும். மேலும், அந்தப் புயல்கள் பருவத்தின் பிற்பகுதியில்தான் தீவிரமடையத் தொடங்கும் என்பதால், அப்பகுதிக்கு இன்னும் சில வலுவான புயல்கள் வரக்கூடும். </p><p>புயல்களுக்கு வழக்கமாக வலுவூட்டும் வகையில் கடல் நீர் வெப்பமாக இருந்தபோதிலும் (உலகெங்கிலும் உள்ள பெருங்கடல்கள் தொடர்ந்து 100 நாட்களாகப் பதிவு செய்யப்பட்ட அளவைவிட அதிக வெப்பத்துடன் காணப்படுகின்றன), இவையனைத்தையும் மீறிச் செயல்படும் 'எல் நினோ'வின் (El Nino) ஆற்றலை இது காட்டுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-13T11:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிஜோர்ன், மாபாகா-வின் மிரட்டலான பந்துவீச்சில் சுருண்ட நமீபியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/namibia-156-all-out-vs-south-africa-in-3rd-odi-1789298408"></link>
            <id>https://news.lankasri.com/article/namibia-156-all-out-vs-south-africa-in-3rd-odi-1789298408</id>
            <summary type="text">Namibia 156 runs all out vs south africa: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் நமீபியா அணி 156 ஓட்டங்களுக்கு சுருண்டது. 

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Namibia 156 runs all out vs south africa: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் நமீபியா அணி 156 ஓட்டங்களுக்கு சுருண்டது. </p><p>

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நமீபியா 156 ஓட்டங்களுக்கு சுருண்டது.&nbsp;</p><h2>அலெக்ஸாண்டர் நிதான&nbsp;ஆட்டம் </h2><p>

நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் Windhoek மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d68bec31-05cf-4159-a316-4f014d050000/26-6aa687948c0da.webp' />&nbsp;</p><p></p><p>
நாணய சுழற்சியில் வென்று நமீபியா அணி முதலில் துடுப்பாடியது. அலெக்ஸாண்டர் நிதானமாக ஆட, மைக்கேல் மற்றும் ப்ரைலிங்க் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
</p><p>
பின்னர் ஸ்டீன்கேம்ப் 23 (36) ஓட்டங்களில் இருந்தபோது பிஜோர்ன் பந்துவீச்சில் போல்டானார். 31 ஓட்டங்கள் எடுத்திருந்த அலெக்ஸாண்டர் ரன்அவுட் ஆனார்.&nbsp;</p><h2>விக்கெட்டுகளை கைப்பற்றிய பிஜோர்ன்&nbsp;</h2><p>
அடுத்து வந்த எராஸ்மஸ் (3), ஈட்டன் (4) ஆகியோரது விக்கெட்டுகளையும் பிஜோர்ன் போர்டுன் (Bjorn Fortuin) கைப்பற்றினார்.</p><p>

மேக்ஸ் ஹெய்ங்கோ அதிரடியாக 6 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்கள் விளாச, சனே க்ரீன் 33 (42) ஓட்டங்கள் எடுத்த நிலையில் மாபாகா பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். </p><p>

36.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த நமீபியா அணி 156 ஓட்டங்களுக்கு சுருண்டது. பிஜோர்ன் போர்டுன் 4 விக்கெட்டுகளும், மாபாகா மற்றும் பீட்டர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T11:19:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் இருந்து சரக்கு விமானத்தில் ரகசியமாக வெளியேற்றப்பட்ட அமெரிக்க தூதர்: அவரின் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-diplomat-smuggled-out-of-uk-1789296442"></link>
            <id>https://news.lankasri.com/article/us-diplomat-smuggled-out-of-uk-1789296442</id>
            <summary type="text">US diplomat smuggled out of UK on cargo plane: சரக்கு விமானம் மூலம் அமெரிக்க தூதர் ஒருவர் பிரித்தானியாவிருந்து ரகசியமாக வெளியேற்றப்பட்டார்.
லண்டனில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>US diplomat smuggled out of UK on cargo plane: சரக்கு விமானம் மூலம் அமெரிக்க தூதர் ஒருவர் பிரித்தானியாவிருந்து ரகசியமாக வெளியேற்றப்பட்டார்.</p><p>
லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிய சிறார் துஸ்பிரயோகக் குற்றவாளி ஒருவரை, அமெரிக்க உளவுத்துறையினர் பிடித்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளனர்.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
</p><p>குறித்த சம்பவம் பிரித்தானிய பொலிசாருக்குத் தெரிவிக்காமலேயே ரகசியமாக நடந்துள்ளது. மட்டுமின்றி, அமெரிக்காவில் வசிக்கும் அவரது சகோதரர் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகளால் அந்த ரகசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/158dbfec-05e0-44a1-9f7d-6152dca50fb5/26-6aa67f3cc7acd.webp' /></p><p> </p><p>தெற்கு லண்டனின் நைன் எல்ம்ஸில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரரான தூதருக்கு, அவரது சகோதரர் துஸ்பிரயோகத் தரவுகளை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். </p><p>ஆகஸ்ட் 25 அன்று புட்னியில் உள்ள அந்தத் தூதரின் குடியிருப்பிற்குள் அதிரடியாக நுழைவதற்கு முன்னதாக, அதிகாரிகள் அமெரிக்காவில் நீதிமன்ற உத்தரவு ஒன்றைப் பெற்றிருந்ததாகக் கருதப்படுகிறது.</p><p></p><p>
</p><p>அவர்கள் அந்த குடியிருப்பில் சிறார்களைத் துன்புறுத்தும் வகையிலான படங்களைக் கண்டெடுத்துள்ளனர்; மேலும், பிரித்தானியாவில் கைது செய்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாதபோதிலும் அந்த நபரைப் பிடித்துக் கைது செய்துள்ளனர். </p><p>ஆகஸ்ட் 24 அன்று, அமெரிக்க விமானப்படைக்கு முக்கிய தளம் அமைந்துள்ள குளோசெஸ்டர்ஷையரின் (Gloucs) RAF ஃபேர்ஃபோர்டுக்கு, சிகாகோவிலிருந்து போயிங் 747-4R7F ரக விமானம் ஒன்று வந்தத்தை விமானப் பயணத் தரவுகள் காட்டுகின்றன. </p><p>ஆகஸ்ட் 25 அன்று, அதே விமானம் மாலை 5:33 மணிக்கு ஃபேர்ஃபோர்டிலிருந்து புறப்பட்டு, 7 மணி 11 நிமிடப் பயணத்திற்குப் பிறகு, உள்ளூர் நேரப்படி மாலை 7:44 மணிக்கு டெலாவேரில் உள்ள டோவர் விமானப்படை தளத்தை வந்தடைந்தது. </p><p>அதே விமானம் அங்கிருந்து இரவு 11:22 மணிக்குக் கிளம்பி, ஒரு மணி நேரம் 38 நிமிடப் பயணத்திற்குப் பிறகு இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோவில் உள்ள ஓ'ஹேர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b982fed-c6f8-4026-8f7d-4758cf969428/26-6aa67f3d86794.webp' /></p><p> </p><p>அது ஒரு சரக்கு விமானம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 25-க்கு முந்தைய குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஃபேர்ஃபோர்டுக்குப் பயணம் செய்திருக்கவில்லை என்றே தெரிய வருகிறது. </p><p>அந்த தூதர் ரகரியமாக வெளியேற்றப்பட்ட பின்னரே, பெருநகர காவல்துறைக்கும் பிற பிரித்தானிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. </p><p>இந்த விவகாரம் பிரித்தானிய-அமெரிக்க உறவுகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதுடன், உண்மையை மூடிமறைத்ததாகக் குற்றச்சாட்டுகளைத் தூண்டியுள்ளது. </p><p>உள்விவகாரச் செயலாளர் ஷபானா மஹ்மூத் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கும் ஸ்காட்லாண்ட் யார்டுக்கும் இடையே நெருக்கடியான கூட்டங்களுக்கும் வழிவகுத்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T10:44:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/naam-tamilar-announced-candidates-for-by-election-1789294891"></link>
            <id>https://news.lankasri.com/article/naam-tamilar-announced-candidates-for-by-election-1789294891</id>
            <summary type="text">ntk announced candidates for madurantakam and dharapuram by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ntk announced candidates for madurantakam and dharapuram by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. </p><h3>

இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி</h3><p> 

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
</p><p>
இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது.
</p><p>
தவெக அரசை வெளியிலிருந்து ஆதரித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் தாராபுரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுராந்தகத்திலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. செப்டம்பர் 15 ஆம் திகதி வேட்பாளர் பட்டியலை அறிவிக்க உள்ளது. </p><p>

தற்போது நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29cdbcf4-8af2-4603-a3b6-23e67ffcf7b4/26-6aa6792cf3592.webp' /></p><p>

மதுராந்தகம் தொகுதியில் கோ.ஜானகிராமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் மு.கார்த்திகா போட்டியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

2026 சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட கோ.ஜானகிராமன், 4,950 வாக்குகள் பெற்றார்.
</p><p>
கார்த்திகா நாம் தமிழர் சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாகை பாராளுமன்ற தொகுதியிலும், 2026 சட்டமன்ற தேர்தலில் கீழ்வேளூர்(தனி) தொகுதியில் போட்டியிட்டு 8,069 வாக்குகள் பெற்றார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026<br>நாம் தமிழர் கட்சி<br>வேட்பாளர்கள் அறிவிப்பு<br><br>வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர்… <a href="https://t.co/WP7fa0ymW2">pic.twitter.com/WP7fa0ymW2</a></p>&mdash; செந்தமிழன் சீமான் (@Seeman4TN) <a href="https://x.com/Seeman4TN/status/2099077160283803977?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மேலும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ச.கார்த்திக் குமாரி போட்டியிடுவார் என அறிவிக்கபட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T10:21:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Reform UK-விற்கு மற்றொரு கிரிப்டோ பில்லியனர் ஆதரவு- 49 மில்லியன் டொலர் நன்கொடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/crypto-billionaire-funds-reform-uk-1789294771"></link>
            <id>https://news.lankasri.com/article/crypto-billionaire-funds-reform-uk-1789294771</id>
            <summary type="text">Crypto billionaire funds Reform UK: பிரித்தானியாவின் வலதுசாரி அரசியல் கட்சியான Reform UK-விற்கு, தொடர்ந்து இரண்டாவது கிரிப்டோ பில்லியனர் மிகப்பெரிய நன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Crypto billionaire funds Reform UK: பிரித்தானியாவின் வலதுசாரி அரசியல் கட்சியான Reform UK-விற்கு, தொடர்ந்து இரண்டாவது கிரிப்டோ பில்லியனர் மிகப்பெரிய நன்கொடை வழங்கியுள்ளார்.
</p><h2>
கிரிப்டோ பில்லியனர்</h2><p>Christopher Harborne என்ற 63 வயது கிரிப்டோ முதலீட்டாளர், சுமார் 48.7 மில்லியன் டொலர் (£36 மில்லியன்) நன்கொடை அளித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca976fc9-3927-437c-bc80-1700c8e31db5/26-6aa678b49583a.webp' /></p><p>இதற்கு முன், BitMEX நிறுவனத்தின் இணை நிறுவனர் Ben Delo 49 மில்லியன் டொலர் அளித்திருந்தார்.
</p><p>
இரண்டு நாட்களில் கிடைத்த இந்த நன்கொடைகள், Reform UK-விற்கு மொத்தம் 97 மில்லியன் டொலர் நிதி ஆதரவை பெற்றுத் தந்துள்ளன.</p><p></p><h2>

சட்ட சிக்கல்</h2><p>Harborne, தனது நன்கொடையை “நாட்டிற்கான தன்னார்வ பரிசு” என Daily Telegraph-ல் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த நிதி Reform UK கட்சிக்கு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் Metropolitan Police, Reform UK வெளிநாட்டு நிதி பெற்றதா என்ற சந்தேகத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.</p><p>

Reform UK தலைவர் Nigel Farage, இந்த நன்கொடைகளை வரவேற்று, “இந்த பில்லியனர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விரும்புவது, பிரித்தானியாவை சரி செய்யக்கூடிய அரசு மட்டுமே” என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>

நேர்மை இல்லாத கட்சி</h2><p>இதே நேரத்தில், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் Kemi Badenoch, Reform UK நேர்மை இல்லாத கட்சி என விமர்சித்துள்ளார்.

Reform UK, 2021-இல் Brexit Party-யிலிருந்து உருவானது. </p><p>Farage, “anti-establishment” தலைவராக தன்னை காட்டி, கன்சர்வேட்டிவ் மற்றும் லேபர் கட்சிகளின் மீது மக்கள் விரக்தி அதிகரித்துள்ள நிலையில், தனது கட்சியை மாற்று சக்தியாக முன்னிறுத்தி வருகிறார்.
</p><p>
இந்த நன்கொடைகள், Reform UK கட்சிக்கு அரசியல் மேடையில் வலுவான நிதி ஆதரவை அளித்தாலும், சட்ட சிக்கல்கள் மற்றும் நேர்மை குறித்த கேள்விகள் கட்சியின் எதிர்காலத்தை சிக்கலாக்குகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T10:16:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரி.,இந்தக் கோட்டை அரச குடும்பத்தினருக்கு மட்டுமேயானது: கேலி செய்த நிகழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-meghan-uk-return-mocked-1789293970"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-meghan-uk-return-mocked-1789293970</id>
            <summary type="text">Harry meghan uk return mocked: இளவரசர் ஹரி மற்றும் மேகன் இருவரும் பிரித்தானியா திரும்பியது, நிகழ்ச்சி ஒன்றில் கேலி செய்யப்பட்டது.

இளவரசர் ஹரி, மேகன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry meghan uk return mocked: இளவரசர் ஹரி மற்றும் மேகன் இருவரும் பிரித்தானியா திரும்பியது, நிகழ்ச்சி ஒன்றில் கேலி செய்யப்பட்டது.</p><p>

இளவரசர் ஹரி, மேகன் தம்பதியின் சர்ச்சைக்குரிய பிரித்தானிய வருகை நிகழ்ச்சி ஒன்றில் கடுமையாக கேலி செய்யப்பட்டது.&nbsp;</p><h2>ஹரி, மேகன் தம்பதி</h2><p>

ஆறு ஆண்டுகளுக்கு முன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய இளவரசர் ஹரி, மேகன் தம்பதி பிரித்தானியா திரும்பியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcad024c-bf8c-4f93-b9eb-02c9a481750f/26-6aa694914dac8.webp' /></p><p></p><p> 

முன்னதாக அவர்கள் சாதாரண குடிமக்களே என்றும், அவ்வாறே நடத்தப்படுவார்கள் என்றும் மன்னர் சார்லஸ் கூறியிருந்தார்.
</p><p>
இந்த நிலையில், Saturday Night Live UK நிகழ்ச்சியில் ஹரி, மேகன் இருவரும் கேலி செய்யப்பட்டனர். </p><p>

அந்நிகழ்ச்சியில் அரச குடும்பத்தினர் போல் வேடமிட்ட நடிகர்களில், கமில்லாவைப் பார்த்து 'சிற்றன்னை இராணி' என்று மேகன் கூறுகிறார். </p><p>

மன்னர் சார்லஸ் 'அந்த நெட்ஃபிலிக்ஸ் பணத்தை ஏற்கனவே செலவழித்துவிட்டேன் என்று சொல்லாதே' என ஹரியிடம் கூறுகிறார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bf534ac-e4e2-4865-9f93-102e54698324/26-6aa6955f92ed3.webp' /></p><h2>அரச குடும்பத்தினருக்கு மட்டுமேயானது</h2><p>

நகைச்சுவை நடிகர்களான ஜாக் ஷெப் மற்றும் அயோவாடே பாம்க்போய் ஆகியோரால் சித்தரிக்கப்பட்ட சசெக்ஸ் தம்பதியினர், மன்னர் சார்லஸ் (லாரி டீன்) மற்றும் இராணி கமில்லா (எம்மா சிடி) ஆகியோரை அவர்களின் பால்மோரல் எஸ்டேட்டில் சந்திக்கின்றனர். </p><p>

அப்போது 'ஹரி நீ இங்கே என்ன செய்கிறாய்? இந்தக் கோட்டை அரச குடும்பத்தினருக்கு மட்டுமேயானது' சார்லஸ், தனது இளைய மகன் ஹரியிடம் கூறுகிறார்.</p><p> 

இதுபோல் ஒரு நீண்ட உரையாடலை ஹரி, மேகன் தம்பதியை கேலி செய்து வகையில் அந்த குழு செய்தது.


பார்வையாளர்கள் இந்த நகைச்சுவைக் காட்சி குறித்த தங்கள் எண்ணங்களை இணையத்தில் உடனடியாக பகிர்ந்துகொண்டனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c5cf70c-3300-4a83-895b-d34718d6fe94/26-6aa6949204493.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T10:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[DC அணியின் பயிற்சியாளர் குழுவில் இணையும் சமிந்த வாஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chaminda-vaas-jo-toin-in-dc-as-fast-bowling-coach-1789293001"></link>
            <id>https://news.lankasri.com/article/chaminda-vaas-jo-toin-in-dc-as-fast-bowling-coach-1789293001</id>
            <summary type="text">chaminda vaas to join in delhi capitals as fast bowling coach: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இலங்கை முன்னாள் வீரர் சமிந்த வாஸ் இணைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>chaminda vaas to join in delhi capitals as fast bowling coach: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இலங்கை முன்னாள் வீரர் சமிந்த வாஸ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h3> 

DC அணியில் சமிந்த வாஸ் </h3><p>

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவினை மாற்றியமைக்கும் முயற்சியில் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது. </p><p>

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் சமிந்த வாஸ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb7afc7-9703-4185-80e1-64dbfe9d8015/26-6aa671ca7cf95.webp' /></p><p> 

52 வயதான சமிந்த வாஸ், 1994 முதல் 2009 வரை இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார்.</p><p> 

சமிந்த வாஸ் இலங்கை அணிக்காக 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்களும், 322 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc38f683-1f27-433b-9203-5f36a6474a67/26-6aa671cb33830.webp' /></p><p>
ஒருநாள் போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர், ஒருநாள் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை எடுத்த இளம் பந்துவீச்சாளர் உள்ளிட்ட சாதனைகளை வாஸ் படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

மேலும், 1996 உலகக் கிண்ணம் மற்றும் 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இலங்கை அணியில் சமிந்த வாஸ் இடம்பெற்றிருந்தார்.</p><p> 

டெல்லியில் நடைபெறும் DC அணியின் ஆயத்தப் பயிற்சி முகாம் மற்றும் தேர்வுகளில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

இதே போல், இந்தியாவின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ராவும் சுழற்பந்து பயிற்சியாளராக இணைய உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1f00687-7b7a-401a-8b60-d877986bee41/26-6aa671cbde5b3.webp' /></p><p> 

தற்போது தலைமை பயிற்சியாளாராக உள்ள ஹேமங் பதானிக்கு மாற்றாக முன்னாள் இந்திய அணித்தலைவர் சௌரவ் கங்குலி பொறுப்பேற்க உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/120007e3-a99f-4edd-b879-e7c1812c664f/26-6aa671cc98aae.webp' /></p><p>இதே போல் முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் உதவிப் பயிற்சியாளராக இணைய உள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T09:56:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 பில்லியன் டொலர் முதலீட்டில் உருவாக்கப்பட்ட நகரம் - இன்று பேய் நகரம் என அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/forest-city-ghost-city-tech-dream-collapses-1789285145"></link>
            <id>https://news.lankasri.com/article/forest-city-ghost-city-tech-dream-collapses-1789285145</id>
            <summary type="text">Ghost City Tech Dream Collapses: டெக் தொழில்முனைவோரின் கனவு நகரமாக கட்டப்பட்ட Forest City இப்போது Ghost City-யாக மாறியுள்ளது.

Forest City-Ghost Cit...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ghost City Tech Dream Collapses: டெக் தொழில்முனைவோரின் கனவு நகரமாக கட்டப்பட்ட Forest City இப்போது Ghost City-யாக மாறியுள்ளது.</p><h2>

Forest City-Ghost City-யாக மாறியது</h2><p>மலேசியாவின் ஜோகூர் பகுதியில், சிங்கப்பூர் எல்லைக்கு அருகில் உருவாக்கப்பட்ட Forest City உலகின் மிகப்பெரிய நகரத் திட்டங்களில் ஒன்றாகும். </p><p>சுமார் 100 பில்லியன் டொலர் முதலீட்டில் கட்டப்பட்ட இந்த நகரம், உயரமான குடியிருப்புகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் என அனைத்தையும் கொண்டிருந்தது.
</p><p>
ஆனால் மக்கள் வசிப்பதற்கான ஆர்வம் குறைவதால், இது “கோஸ்ட் சிட்டி” என அழைக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f91f07-cca4-4768-98a8-17c60f752b89/26-6aa6531b33701.webp' /></p><p>2024-இல், Balaji Srinivasan உருவாக்கிய Network School என்ற தொழில்நுட்ப சமூக முயற்சி இங்கு தொடங்கப்பட்டது. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், டிஜிட்டல் நோமேட்கள், இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் ஒன்றாக வாழ்ந்து, வேலை செய்து, கற்றுக்கொள்ளும் புதிய வாழ்க்கை முறையை சோதிக்க முயன்றனர்.

பங்கேற்பாளர்கள் மாதம் சுமார் 1,500 டொலர் செலுத்தி, தங்குமிடம், உணவு, வகுப்புகள், உடற்பயிற்சி மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளை பெற்றனர். </p><p></p><h2>சிக்கல்கள்&nbsp;</h2><p>ஆனால், ஈரப்பதமான காலநிலை காரணமாக வீடுகளில் பூஞ்சை, உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் குறைவு, பெண்கள்-ஆண்கள் பங்கேற்பில் சமநிலை இல்லாமை போன்ற சிக்கல்கள் எழுந்தன.

மேலும், மலேசிய அதிகாரிகளின் அனுமதி பிரச்சினைகள், சட்ட சிக்கல்கள் காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்குள் Network School மூடப்பட்டது.
</p><p>
Forest City-யின் வெறிச்சோடிய கட்டிடங்கள், தொழில்நுட்ப சமூகத்துக்கு ஒரு பெரிய சோதனை மேடையாக இருந்தாலும், அது முழுமையான நகரமாக மாற முடியவில்லை. சில நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் இருந்தாலும், நூற்றுக்கணக்கான மக்களை தங்க வைக்கும் அளவுக்கு கட்டப்பட்ட நகரம் வெறிச்சோடியே இருந்தது.</p><p>
</p><p></p><p>இந்த முயற்சி, தொழில்நுட்ப சமூகங்கள் எவ்வாறு ஒன்றாக வாழ்ந்து, வேலை செய்து, புதிய சமூக வடிவங்களை உருவாக்க முடியும் என்பதை சோதித்தது.</p><p> ஆனால், நடைமுறை சிக்கல்கள் மற்றும் அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக, Forest City-யின் கனவு குறுகிய காலத்திலேயே முறிந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T09:36:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரக்கிள் பங்குகளை விற்கும் திட்டத்தை ரத்து செய்த லாரி எலிசன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ellison-cancels-plan-to-sell-oracle-1789292330"></link>
            <id>https://news.lankasri.com/article/ellison-cancels-plan-to-sell-oracle-1789292330</id>
            <summary type="text">Larry Ellison cancels plan to sell Oracle stock: ஆரக்கிள் பங்குகளை விற்கும் திட்டத்தை கைவிட்டார் லாரி எலிசன்.
சுமார் 7.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Larry Ellison cancels plan to sell Oracle stock: ஆரக்கிள் பங்குகளை விற்கும் திட்டத்தை கைவிட்டார் லாரி எலிசன்.
</p><p>சுமார் 7.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள, 50 மில்லியன் வரையிலான ஆரக்கிள் (Oracle) நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை, அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் நிர்வாகத் தலைவருமான லாரி எலிசன் ரத்து செய்துள்ளதாக ஆரக்கிள் தெரிவித்துள்ளது.</p><h2>எந்தத் திட்டமும் இல்லை</h2><p>
</p><p>எலிசன் அந்த வர்த்தகத் திட்டத்தை ஜூன் 22, 2026 அன்று ஏற்றுக்கொண்டதாகவும், அது அக்டோபர் 24, 2026 அன்று காலாவதியாகத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் ஆரக்கிள் நிறுவனம் வெள்ளிக்கிழமை ஒரு ஒழுங்குமுறைத் தாக்கல் மூலம் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aee2affe-1e44-4be2-80bd-72b7443ed244/26-6aa66f2ca14f1.webp' /></p><p> </p><p>இதனிடையே, அந்தத் திட்டத்தின் கீழ் ஆரக்கிள் நிறுவனப் பங்குகள் எதுவும் விற்கப்படவில்லை என்றும், தனது ஆரக்கிள் பங்குகள் எதையும் விற்பனை செய்ய அவருக்கு வேறு எந்தத் திட்டமும் இல்லை என்றும் ஆரக்கிள் நிறுவனம் சனிக்கிழமை விளக்கமளித்துள்ளது. </p><p>அதிகரித்து வரும் முதலீட்டுச் செலவினங்கள் அதன் தடையற்ற பணப்புழக்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதால், அது குறித்த முதலீட்டாளர்களின் கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு ஆரக்கிளின் பங்கு விலை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து பங்குகள் ஏறக்குறைய 23 சதவீதம் சரிந்துள்ளன; மேலும், எலிசன் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு முந்தைய கடைசி வர்த்தக நாளான ஜூன் 18 அன்று இருந்த அதன் நிறைவு விலையை விட 18 சதவீதத்திற்கும் அதிகமாகக் கீழே உள்ளன. </p><p>எலிசனின் வர்த்தகத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை ஆரக்கிள் தெரிவிக்கவில்லை. LSEG தரவுகளின்படி, 82 வயதான எலிசன் 2014 வரை ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார்; மேலும், அந்நிறுவனத்தின் 38 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளைத் தன்வசம் கொண்டுள்ள அவர், அதன் மிகப்பெரிய பங்குதாரராகவும் உள்ளார். </p><p>வாரத்தின் தொடக்கத்தில், வால் ஸ்ட்ரீட் கணிப்புகளை விஞ்சும் வகையிலான காலாண்டு முடிவுகளையும், எதிர்பார்த்ததை விடக் குறைவான பணப் பயன்பாட்டையும் (cash burn) ஆரக்கிள் நிறுவனம் வெளியிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a0d2299-61d1-4add-9353-a78e12b7838b/26-6aa66f2d53dde.webp' /></p><p> </p><p>இது, கடன் மூலம் நிதியளிக்கப்பட்ட அதன் அதிகப்படியான செலவினங்கள் குறித்த கவலைகளைக் குறைத்ததுடன், வெள்ளிக்கிழமையன்று அந்நிறுவனத்தின் பங்கு விலைகள் உயரவும் வழிவகுத்தது. </p><p>இருப்பினும், பணப்புழக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட இன்னும் சிறிது காலம் ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறியதையடுத்து, அதன் பங்கு விலை பின்னர் தலைகீழ் மாற்றத்தைச் சந்தித்தது. </p><p>வேலை நீக்கங்கள் உள்ளிட்ட மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதற்கான செலவுகள் சுமார் 700 மில்லியன் டொலர் வரை அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்தது.</p>]]></content>
            <updated>2026-09-13T09:35:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; CPI, CPIM போட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cpim-and-cpi-to-contest-in-by-election-1789289202"></link>
            <id>https://news.lankasri.com/article/cpim-and-cpi-to-contest-in-by-election-1789289202</id>
            <summary type="text">cpim and cpi to contest in madurantakam and dharapuram by election: இடைத்தேர்தலில், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்...</summary>
            <content type="html"><![CDATA[<p>cpim and cpi to contest in madurantakam and dharapuram by election: இடைத்தேர்தலில், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.</p><h3>

இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள CPI, CPIM</h3><p> 

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
</p><p>
இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது. </p><p>

இந்நிலையில், தவெக அரசை வெளியிலிருந்து ஆதரித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைதேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7598e110-cd94-46ac-b756-adafa03a36d3/26-6aa662f41b51d.webp' /></p><p> 

இடைத்தேர்தல் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், "நாங்கள் யாருடைய கூட்டணியிலும் இல்லை. இந்த இடைத்தேர்தல் இயல்பானது அல்ல, திணிக்கப்பட்ட ஒன்று.</p><p>

ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறோம். </p><p>

தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும. எளிய உழைக்கும் மக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க இடதுசாரிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும்" என அறிவித்துள்ளார்.&nbsp;</p><p>திருச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை கூட்டதிற்க்கு பிறகு பேசிய CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம், தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b16dbacd-17c9-4b79-a99f-7891f36f027f/26-6aa664d4d1f81.webp' /></p><p>

தவெகவுக்கு ஆதரவு இல்லை என்பதால் திமுகவுக்கு ஆதரவு என்று அர்த்தம் இல்லை. இடைத்தேர்தலில் இடதுசாரிக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நாளை மறுநாள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும்" என அறிவித்துள்ளார்.</p><p>நாம் தமிழர் கட்சி இன்று 2 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T09:04:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்கூட்டர்களின் SUV River Indie - பயனரின் ஒரு வருட அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/river-indie-ev-review-after-1-year-suv-of-scooters-1789290305"></link>
            <id>https://news.lankasri.com/article/river-indie-ev-review-after-1-year-suv-of-scooters-1789290305</id>
            <summary type="text">River Indie EV customer review after 1 year: River Indie மின்சார ஸ்கூட்டரை 1 வருடம் பயன்படுத்திய நபரின் அனுபவத்தை இங்கே பார்க்கலாம்.

ஸ்கூட்டர்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>River Indie EV customer review after 1 year: River Indie மின்சார ஸ்கூட்டரை 1 வருடம் பயன்படுத்திய நபரின் அனுபவத்தை இங்கே பார்க்கலாம்.
</p><h2>
ஸ்கூட்டர்களின் SUV River Indie</h2><p>மின்சார வாகனங்கள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஸ்கூட்டர்களின் SUV என அழைக்கப்படும் River Indie கடந்த ஒரு வருடமாக பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3812fddf-5c05-48de-9ba7-e9f799ebb20b/26-6aa6674440ea9.webp' /></p><p>டெல்லியில் சுமார் ரூ.1,60,414 விலையில் அறிமுகமான இந்த ஸ்கூட்டர், அதிக சேமிப்பு வசதி, வலுவான வடிவமைப்பு மற்றும் நீண்ட பயண திறன் காரணமாக பலரின் விருப்பமாக மாறியுள்ளது.</p><h2>

வசதிகள்</h2><p>

River Indie-யின் 787 mm உயரம் கொண்ட இருக்கை, 160 mm ground clearance, மற்றும் 14 inch alloy wheels ஆகியவை நகரப் பயணத்திலும், சாலையின் தடங்கல்களிலும் சுலபமாகச் செல்ல உதவுகின்றன.</p><p> இருவர் தாராளமாக அமரக்கூடிய நீளமான இருக்கை, பரந்த footboard, கூடுதல் foot pegs ஆகியவை நீண்ட பயணத்தில் வசதியை அதிகரிக்கின்றன.</p><p></p><p>
</p><h2>
பேட்டரி &amp; ரேஞ்ச்: </h2><p>

இந்த ஸ்கூட்டர் 4 kWh battery-யை பயன்படுத்துகிறது. நிறுவனம் கூறும் 163 km IDC range இருந்தாலும், நடைமுறை பயணத்தில் சுமார் 110 km வரை கிடைக்கிறது. Eco, Ride, Rush என மூன்று பயண முறைகள் உள்ளன. Rush mode-ல் அதிகபட்சம் 90 km/h வேகம் பெற முடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a835386-4547-4b58-9e0f-0fc656a64ffe/26-6aa66743885f2.webp' /></p><p>
</p><h2>
பராமரிப்பு &amp; செலவு:</h2><p> 
 
மாதாந்திர மின்சார செலவு சுமார் ரூ.400 மட்டுமே; பெட்ரோல் ஸ்கூட்டருடன் ஒப்பிடும்போது இது பெரிய சேமிப்பு. Engine oil, clutch, gearbox போன்ற பராமரிப்பு தேவைகள் இல்லாததால், பராமரிப்பு எளிதாகிறது.
</p><h2>
சேமிப்பு வசதி: </h2><p> 
43 லிட்டர் under-seat storage, 12 லிட்டர் glove box, பெரிய footboard, bag hooks, USB charging, reverse assist போன்ற வசதிகள் பயணிகளுக்கு மிகுந்த உதவியாக உள்ளன.

ஆனால் Bluetooth connectivity, navigation போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இல்லாதது குறையாகும்.</p><p></p><h2>

நன்மைகள்:</h2><ul><li>

43 லிட்டர் under-seat storage
</li><li>
பரந்த footboard மற்றும் luggage-friendly design
</li><li>
14 inch wheels மூலம் நல்ல stability
</li><li>
தினசரி பயணத்திற்கு ஏற்ற வலுவான வடிவமைப்பு
</li></ul><h2>
குறைபாடுகள்:
</h2><ul><li>
143 kg எடை, கையால் தள்ளும்போது சிரமம்</li><li>

Bluetooth connectivity, navigation வசதி இல்லை
</li></ul><p>
River Indie, தினசரி பயணத்திற்கும், கூடுதல் சுமைகளை ஏற்றிச் செல்லவும் ஏற்ற ஒரு வலுவான மின்சார ஸ்கூட்டர். ஆனால், எடை மற்றும் சில தொழில்நுட்ப குறைகள் வாங்குபவர்களுக்கு சிந்திக்க வேண்டிய அம்சங்களாகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T09:01:49+00:00</updated>
        </entry>
    </feed>
