<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-01T03:45:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் விரக்தியில் ட்ரம்ப்... ஈரான் போரில் இருந்து வெளியேறத் தீவிர ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-seeks-exit-from-iran-war-1785555364"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-seeks-exit-from-iran-war-1785555364</id>
            <summary type="text">ஈரானுடனான மோதலை மீண்டும் தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை வைத்துள்ள நிலையில், மோதலை நீட்டிப்பது பெரும் அபாயத்தில் முடியும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான மோதலை மீண்டும் தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை வைத்துள்ள நிலையில், மோதலை நீட்டிப்பது பெரும் அபாயத்தில் முடியும் என சவுதி அரேபியா தரப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மோதல் தணிய வேண்டும்</h2><p>
</p><p>ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி ட்ரம்ப்புடன் விவாதித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுடனான பேச்சுவார்த்தை முன்னெடுப்புகள் பலனளிக்கும் என்பது குறித்துச் சந்தேகம் வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e902279d-376e-4e9a-8029-13a9f62055a9/26-6a6d6bca5b523.webp' /></p><p> </p><p>மேலும், பேச்சுவார்த்தைகளுக்குப் பதிலாக, முழு அளவிலான போரை மீண்டும் தொடங்குவது உட்பட, ஈரானின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான வழிகள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். </p><p>ஆனால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்த சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான், தமது சகோதரர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் விருப்பத்தை இருவருடனும் விவாதித்துள்ளார். </p><p>அதில், ஈரான் தொடர்பான மோதல் தணிய வேண்டும் என்று சவுதி அரேபியா விரும்புகிறது என்றும், இம்மோதல் நீடிப்பது பெரும் அபாயங்களுக்கு காரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>ஆனால், தனது காலக்கெடுவையும் கடந்து நீண்டுவிட்ட ஒரு மோதலில் இருந்து வெளியேறுவதற்கான வழியை ட்ரம்ப் தீவிரமாகவே தேடும் வேளையில், அவர் எதிர்கொள்ளும் முரண்பட்ட சூழ்நிலைகளை இவை வலியுறுத்துவதாகவே அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது. </p><p>போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு சக குடியரசுக் கட்சியினரிடமிருந்து அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அப்போர் உண்மையில் விரிவடைந்து வருவதாகவே தோன்றுகிறது; பிராந்தியத்தில் உள்ள ஏறக்குறைய அனைத்து நாடுகளும் இதில் இழுக்கப்பட்டுள்ளன.</p><p> போரை நிறுத்தும் ஒரு ஒப்பந்தத்திற்கு ஈரான் கெஞ்சுவதாக ட்ரம்ப் கூறி வந்தாலும், உண்மையில் ஜனாதிபதி ட்ரம்ப் இதில் இருந்து வெளியேற முடியாமல் கடும் விரக்தியில் இருப்பதாகவே அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் பேசுபொருளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6d4c3c4-b86a-4e34-9f2c-7990d947909a/26-6a6d6bc852600.webp' /></p><p> </p><p>மேலும், ஹார்முஸ் நீரிணை மீது தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்தவும், அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைகளை வீசவும் ஈரான் நிர்வாகத்தின் முக்கியப் பிரமுகர்கள் முன்னெப்போதையும் விட அதிக உறுதியுடன் இருப்பதாகச் சில அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர். </p><p>தனது கோரிக்கைகளுக்கு ஈரான் பணிய மறுப்பதால் ட்ரம்ப் விரக்தியடைந்துள்ளார். இதன் விளைவாக, அவர் திரைமறைவில் ஆத்திரம் கொண்ட சந்திப்புகளையும், தனது நேச நாடுகளுடன் வசவுகள் நிறைந்த தொலைபேசி உரையாடல்களையும் நடத்தியுள்ளார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். </p><p>மேலும், அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ஈரான் போரில் வெற்றியுடன் வெளியேற வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுப்பதே அதற்கான ஒரே வழி என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ட்ரம்பின் ஜனாதிபதி பதவியையே</h2><p> </p><p>உண்மையில், ஈரானிடமிருந்து தொடரும் அச்சுறுத்தல்களால், ட்ரம்ப் தனது சொந்தத் திட்டங்களையே மாற்றியமைக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.மிக சமீபத்தில் துருக்கியிலிருந்து அவர் திரும்பும் பயணத்தின்போது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்களை மாற்றியமைத்தது இதில் குறிப்பிடத்தக்கதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a6e48c-7fde-45e8-b887-2a7a44f9fb11/26-6a6d6bc903ba4.webp' /></p><p> </p><p>ஈரானுக்கு பயந்து அமெரிக்க ஜனாதிபதி தனது பயணத் திட்டத்தையே மாற்றும் நிலை ஏற்பட்டது. மட்டுமின்றி, ஈரான் போர், ட்ரம்பின் ஜனாதிபதி பதவியையே முற்றிலுமாக விழுங்கிவிடும் என்று அவரது ஆதரவாளர்கள் பலர் தற்போது கவலைப்படுகிறார்கள். </p><p>அமெரிக்க மக்களில் வெறும் 23 சதவீதம் பேர்கள் மட்டுமே ஈரானுடனான ட்ரம்பின் போரை ஆதரிக்கின்றனர். இந்தப் மோதலின்போது ட்ரம்பை பெருமளவில் ஆதரித்து வந்தாலும், எரிபொருள் விலை உயர்வு இடைக்காலத் தேர்தல்களில் தங்கள் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று குடியரசுக் கட்சியினர் கவலை கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb72d4cd-5fb7-4f36-a3e0-72a234b9105d/26-6a6d6bc9a9343.webp' /></p><p> </p><p>இதை ட்ரம்பிடமும் அவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கத்தார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட மத்தியஸ்தர்கள் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அவசரமாக முயற்சித்து வரும் நிலையில், தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் மிகக் குறைவாகவே உள்ளன. </p><p>மாறாக, ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் முடிவெடுக்கும் அதிகாரத்தை உறுதியாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பேசி வந்த அரசியல் பிரமுகர்கள் வெறும் பெயரளவிலான தலைவர்களாக மட்டுமே நீடிப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு தற்போது அஞ்சுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T03:34:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்: 34 வயதுடையவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-marissa-shooting-1-man-injured-1785541036"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-marissa-shooting-1-man-injured-1785541036</id>
            <summary type="text">இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மாத்தறை - மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு
இலங்கையில் மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><h2> மாத்தறை - மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு</h2><p>
இலங்கையில் மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில் வெள்ளிக்கிழமையன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களால் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நபர் காயமடைந்ததாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d781954-d708-49ad-9748-c9649bcdc6b0/26-6a6d31ae27a68.webp' /></p><p>துப்பாக்கிச்சூடு தாக்குதலில் காயமடைந்த நபர் உடனடியாக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> இந்த சம்பவத்தில் ரிவால்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.</p><p></p><p> இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T00:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 மணி நேரம் இடைவிடாமல் வான்வழித் தாக்குதல்: ஈரானுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057"></link>
            <id>https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057</id>
            <summary type="text">ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><h2>அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்</h2><p>ஈரானின் முக்கிய இலக்குகளை குறிவைத்து அமெரிக்க மத்திய கட்டளை பீடம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் விடாமல் தீவிர தாக்குதல் நடத்தி முடித்து இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம்(CENTCOM) தெரிவித்துள்ளது.</p><p>CENTCOM வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய வியூக மையங்கள் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b81e468-9e15-4068-bc7c-369a8285fec7/26-6a6cef5ac2501.webp' /></p><p>அதில் முக்கியமாக இராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், அதிநவீன ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகள், கடற்கரை கண்காணிப்பு மையங்கள் மற்றும் முக்கிய கடல்சார் பாதுகாப்பு திறன்கள் அழிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தாக்குதலுக்கான பின்னணி</h2><p>செவ்வாய்க்கிழமை அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52e64c48-69da-43b9-a0ad-ef04a7432d20/26-6a6cef5b72f9c.webp' /></p><p>மேலும் ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதல்களை அமெரிக்க பாதுகாப்பு திறன்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகவும், இதனால் அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகளுக்கு எந்தவொரு சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> ஈரானிய படைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை தடுத்து அமெரிக்க பணியாளர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க அமெரிக்கா உறுதியுடன் இருப்பதை இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுவதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T23:38:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரியானாவில் சர்வதேச கபடி வீரரின் மனைவி எடுத்த விபரீத முடிவு: பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kabaddi-player-sheelu-balhara-wife-dies-in-rohtak-1785535664"></link>
            <id>https://news.lankasri.com/article/kabaddi-player-sheelu-balhara-wife-dies-in-rohtak-1785535664</id>
            <summary type="text">ஹரியானாவில் சர்வதேச கபடி வீரரின் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உயிரை மாய்த்துக் கொண்ட கபடி வீரரின் மனைவி
ஹரியானா மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹரியானாவில் சர்வதேச கபடி வீரரின் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>உயிரை மாய்த்துக் கொண்ட கபடி வீரரின் மனைவி</h2><p>
ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் சர்வதேச கபடி வீரர் ஷீலு பல்ஹாராவின் 23 வயது மனைவி முஸ்கான் வெள்ளிக்கிழமை அவர்களது இல்லத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முஸ்கானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p> மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் அதிகாரிகள் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3ff0090-ae83-482b-914b-af1892d67c43/26-6a6d1cb22bfc4.webp' /></p><p> மனைவி முஸ்கானின் உயிரை மாய்த்துக் கொள்ளும் இந்த முடிவுக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவரவில்லை.</p><p></p><p> சர்வதேச கபடி வீரரான ஷீலு பல்ஹாராவுக்கும் ரோஹ்தக் மேகம் பகுதியை சேர்ந்த முஸ்கானுக்கு கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.</p><p> இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹர்திக் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T22:07:57+00:00</updated>
        </entry>
    </feed>
