<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-18T06:31:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழின் இனிமை தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும்- முதல்வர் விஜய் தமிழ்நாடு தின வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-tamil-nadu-day-wishes-1784355422"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-tamil-nadu-day-wishes-1784355422</id>
            <summary type="text">மெட்ராஸ் மாகாணமாக இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்றக் கோரி, முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா 1967 ஜூலை 18 அன்று சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெட்ராஸ் மாகாணமாக இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்றக் கோரி, முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா 1967 ஜூலை 18 அன்று சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றினார்.
</p><p>
தமிழ்நாட்டின் கலாச்சார மற்றும் மொழி அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த நாள் தமிழ்நாடு தினமாக முக்கியத்துவம் பெறுகிறது.
</p><p>
இந்நிலையில், தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2>வெளியிட்ட பதிவு..,&nbsp;&nbsp;</h2><p>தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு &quot;தமிழ்நாடு&quot; எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br><br>மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர்…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2078321433567215779?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p> </p><p> 
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
</p><p>தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்! என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T06:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஞ்சாயத்து பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் - சாதித்த ஸ்ராவணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shravani-kudale-india-female-topper-in-neet-2026-1784355331"></link>
            <id>https://news.lankasri.com/article/shravani-kudale-india-female-topper-in-neet-2026-1784355331</id>
            <summary type="text">நீட் மறுதேர்வில் பஞ்சாயத்து பள்ளியில் படித்த சேர்ந்த ஸ்ராவணி குடாலே(தேசிய அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியாக சந்தித்துள்ளார்.நீட் மறுதேர்வு முடிவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் மறுதேர்வில் பஞ்சாயத்து பள்ளியில் படித்த சேர்ந்த ஸ்ராவணி குடாலே(தேசிய அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியாக சந்தித்துள்ளார்.</p><h3>நீட் மறுதேர்வு முடிவு</h3><p> 

2026 - 2027 மாணவர் சேர்க்கைக்கான கடந்த மே 3 ஆம் திகதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு, ஜூன் 22 ஆம் திகதி மறுதேர்வு நடத்தப்பட்டது.&nbsp;&nbsp;</p><p> 

நீட் மறுதேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. 20 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய இந்த மறுதேர்வில் 11. 21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.</p><p> 

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆரியன் குப்தா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பான்ஷுல் பன்சால் ஆகிய இரு மாணவர்களும் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். </p><h3>

 அதிக மதிப்பெண் பெற்ற மாணவி </h3><p>

மகாராஷ்டிரவின் புனே மாவட்டம், பாராமதி தாலுகாவை சேர்ந்த ஸ்ராவணி குடாலே(shravani kudale), 710 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியாக உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b4e9e22-eb0b-48e4-ad20-8bff896ec025/26-6a5b1a05be2ea.webp' /></p><p>

ஸ்ராவணி குடாலே, மகாராஷ்டிர மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 5வது இடமும் பிடித்துள்ளார்.</p><p> 

ஸ்ராவணி குடாலேவிற்கு மகாராஷ்டிர துணை முதல்வர் துணை முதலமைச்சர் சுனேத்ரா அஜித் பவார், காணொளிக் காட்சி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.</p><p> 

ஸ்ராவணியின் பெற்றோர்களான ஜெயஸ்ரீ மற்றும் கிருஷ்ணா இருவரும் மாவட்டப் பஞ்சாயத்து பள்ளி ஆசிரியர்கள் ஆவர்.
</p><p>
இது குறித்து பேசிய ஸ்ராவணி குடாலே, "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது ஒரு கனவு நனவானது போல் உணர்கிறேன். </p><p>

எனது பள்ளிப் பருவத்திலிருந்தே நீட் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருந்தேன். </p><p>நான் 9 ஆம் வகுப்பில் படிக்கும்போதே தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினேன்

நான் எனது ஆரம்பக் கல்வியை மாவட்டப் பஞ்சாயத்து பள்ளியிலும், இடைநிலைக் கல்வியை பகுதி ஆங்கில வழிப் பள்ளியிலும் முடித்திருந்தபோதிலும், ஆங்கிலத்தைப் புரிந்துகொள்வதில் எனக்கு ஒருபோதும் எந்தச் சிரமமும் இருந்ததில்லை.
</p><p>
மே மாதம் நடந்த எனது முந்தைய தேர்வில், நான் சுமார் 715 மதிப்பெண்களை எதிர்பார்த்தேன், ஆனால் எனது தரவரிசை குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. இந்த மறுதேர்வை ஒரு புதிய வாய்ப்பாகக் கருதி, முழு அர்ப்பணிப்புடன் தயாரானேன்.</p><p> 

படிப்பில் கவனம் செலுத்துவதற்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக கைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருந்தேன். முந்தைய தேர்வோடு ஒப்பிடும்போது, ​​இரண்டாவது நீட் தேர்வு கடினமாக இருந்தது" என தெரிவித்துள்ளார். </p><p>

மகளின் வெற்றி குறித்து பேசிய அவளது பெற்றோர், "அவள் சிறப்பாகச் செயல்படுவாள் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம், ஆனால் அவள் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்துவாள் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04e77e9a-202c-468f-bbcd-4986d45e5f74/26-6a5b1a05168a1.webp' /></p><p>

அவளுடைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஆசிரியர்கள் வழங்கிய வழிகாட்டுதல் ஆகியவை பலனளித்துள்ளன. பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் மகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம்" என தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T06:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jude-bellingham-reveals-what-messi-said-in-fifa-wc-1784355136"></link>
            <id>https://news.lankasri.com/article/jude-bellingham-reveals-what-messi-said-in-fifa-wc-1784355136</id>
            <summary type="text">உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல் குறித்து இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கமளித்துள்ளார். மெஸ்ஸி - ஜூட் பெல்லிங்ஹாம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல் குறித்து இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கமளித்துள்ளார்.</p><h2> மெஸ்ஸி - ஜூட் பெல்லிங்ஹாம் வாக்குவாதம்</h2><p>உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதிய நிலையில், 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.</p><p>அட்லாண்டாவின் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே பல வாக்குவாதங்கள் ஏற்பட்டு போட்டியில் அனல் பறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60249ef3-7271-43fa-89c8-846f2c30b063/26-6a5b19419f4f2.webp' /></p><p> போட்டியின் 4வது நிமிடத்திலேயே அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸிக்கும், இங்கிலாந்து அணியின் பெல்லிங்ஹாமிற்கும் இடையில் தீவிரமான வாக்குவாதம் ஏற்பட்டது போன்ற காட்சிகள் கேமராவில் பதிவானது.</p><p> இது சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்ட நிலையில், இது தொடர்பான விளக்கத்தை ஜூட் பெல்லிங்ஹாம் அளித்துள்ளார்.</p><p></p><h2> ஜூட் பெல்லிங்ஹாம் அளித்த விளக்கம்</h2><p>அதில், “நாங்கள் ஒரு ஃபவுல் குறித்து விவாதித்தோம். அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. நான் ஃபவுல் நடந்ததாக கருதி பேசினேன்”. அதற்கு பதிலளித்த மெஸ்ஸி “எனக்கு நடந்த ஃபவுலுக்கு என்ன பதில்? என்று கேட்டார்.</p><p> அதற்கு அதை தாங்கும் அளவிற்கு நீங்கள் வலுவானவர் என்று மெஸ்ஸிக்கு நான் பதிலளித்தேன் என்று தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">what did Bellingham tell Messi?😭💀 <a href="https://t.co/1pi5NkR61x">pic.twitter.com/1pi5NkR61x</a></p>&mdash; BLAKE 𖤍 (@Am__Blake) <a href="https://x.com/Am__Blake/status/2077677196550742016?ref_src=twsrc%5Etfw">July 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மேலும் மெஸ்ஸியுடன் விளையாடியது எனக்கு கிடைத்த பெருமை, எங்களுக்குள் எந்தவொரு கசப்புணர்வும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.</p><p> அத்துடன் அரையிறுதிப் போட்டியில் வெளியேறியதை தொடர்ந்து, இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.</p><p> அதில், இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் மீண்டும் அதே ஏமாற்றமான செய்தியை ரசிகர்களுக்கு சொல்வது வருத்தமளிப்பதாக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T06:12:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை இறுதிப் போட்டி: 19 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம்: மெஸ்ஸி கொடுத்த ரியாக்‌ஷன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/messi-reacts-on-viral-photo-with-lamine-yamal-1784351861"></link>
            <id>https://news.lankasri.com/article/messi-reacts-on-viral-photo-with-lamine-yamal-1784351861</id>
            <summary type="text">19 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸியும், லாமின் யமாலும் இணைந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அது குறித்து மெஸ்ஸி தன்னுடைய கருத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>19 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸியும், லாமின் யமாலும் இணைந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அது குறித்து மெஸ்ஸி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.</p><h2> சமூக வலைதளத்தில் வைரலாகும் மெஸ்ஸி - லாமின் யாமல் புகைப்படம்</h2><p>
உலகம் எதிர்பார்த்து காத்திருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியும் ஸ்பெயின் அணியும் மோதவுள்ளன.
இந்த வேளையில், 19 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸியும், லாமின் யமாலும் இணைந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d01d783b-11d4-4626-b764-df298aa51ac2/26-6a5b0c77065df.webp' /></p><p> கடந்த 2007ம் ஆண்டு 20 வயது இளம் வீரராக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த லியோனல் மெஸ்ஸி, Diario Sport என்ற பத்திரிக்கைகாக UNICEF தொண்டு நிறுவனத்தின் புகைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தையாக இருந்த லாமின் யாமலை குளிப்பாட்டும் புகைப்படம் தான் அது.</p><p> இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸிக்கும்(Lionel Messi), ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமான லாமின் யமாலுக்கும்(Lamine Yamal) இடையிலான விளையாட்டை காண ஒட்டு மொத்த கால்பந்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbfb664b-e362-4084-9026-c7149a5fb57d/26-6a5b0c77ad71e.webp' /></p><p></p><h2>மெஸ்ஸியின் நெகிழ்ச்சி</h2><p>உலகக் கோப்பை கால்பந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நியூயார்க் நகரில் நடைபெற்ற பிஃபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அர்ஜென்டினா அணியின் கால்பந்து வீரர் மெஸ்ஸி, அந்த புகைப்படம் நம்பமுடியததாக உள்ளது என்று தன்னுடைய வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>அவர் குழந்தையாக இருக்கும் போது அவருடன் நான் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இன்று அவருக்கு எதிராக கால்பந்து உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளேன் என்பது விசித்திரமாக (Crazy) உள்ளது என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24718bd7-4c2a-4fcd-91d4-5623c102d275/26-6a5b0c785d681.webp' /></p><p> மேலும் 19 வயது லாமின் யமாலை உலகத் தரம் வாய்ந்த மிகச் சிறந்த வீரர் என்று குறிப்பிட்ட மெஸ்ஸி அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.</p><p> அதே சமயம் இறுதிப் போட்டியில் அவரை சிறப்பாக விளையாட விடாமல் தடுப்பதே எங்கள் நோக்கம் என்றும், ஸ்பெயின் அணியில் பல சிறந்த வீரர்கள் உள்ளார்கள். இருப்பினும் அவர்களை தடுக்க எங்களிடம் பல ஆயுதங்கள் இருப்பதாகவும் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.</p><p> அத்துடன் யாமலின் எதிர்காலம் சிறப்பானதாக அமையட்டும் என்று வாழ்த்திய மெஸ்ஸி, இந்த முறை அவருக்கு கோப்பை கிடைக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>You May Like This Video</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hREfbhirMUg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-18T05:40:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-new-pm-andy-burnham-family-background-1784351696"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-new-pm-andy-burnham-family-background-1784351696</id>
            <summary type="text">லேபர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், திங்கட்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 20ஆம் திகதி முறைப்படி பிரித்தானியாவின் பிரதமராக பதவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>லேபர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், திங்கட்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 20ஆம் திகதி முறைப்படி பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c796693-e983-4c08-9e2d-939ff75ca472/26-6a5b0bd1e4fe4.webp' /></p><p>இந்நிலையில், அவரது குடும்பம் குறித்த சில தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
</p><h3>
ஆன்டி பர்னாமின் குடும்பம்</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d108444-feba-4a68-8eed-575e63f905ce/26-6a5b0bd294294.webp' /></p><p>ஆன்டி பர்னாமின் மனைவியின் பெயர், மேரி ஃப்ரான்ஸ் வான் ஹீல் (Marie-France van Heel, 56). அவர் ‘Frankie’ என அழைக்கப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbfa6442-8a6e-4142-b587-d13a9b4ac1e7/26-6a5b0bd348ab6.webp' /></p><p>நெதர்லாந்தில் பிறந்தவரான ஃப்ராங்கி, கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் பயில்வதற்காக பிரித்தானியா வந்தார்.
</p><p>
1989ஆம் ஆண்டு, அதே பல்கலையில் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்த ஆன்டி பர்னாமை சந்தித்தார் அவர்.&nbsp;</p><p></p><p>
காதலித்து இணைந்துவாழத் துவங்கிய ஆன்டி பர்னாம், ஃப்ராங்கி தம்பதியர் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.
</p><p>
 ஃப்ராங்கி, Iduna என்னும் நிறுவனத்தில் chief marketing officer என்னும் பொறுப்பு வகித்துவருகிறார்.
</p><p>
ஆன்டி பர்னாம், ஃப்ராங்கி தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் ஜிம்மி பர்னாம், வரலாற்றில் பட்டம் பெற்றவர், Royal College of Nursingஇல் International Policy Officer என்னும் பொறுப்பு வகிக்கிறார்.</p><p>

இரண்டாவது மகளான ரோஸி பர்னாம், குற்றவியலில் பட்டம் பெற்றவர், Jägermeister UK என்னும் அமைப்பில் Customer Development Executive என்னும் பொறுப்பு வகிக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dbb447d-8068-4ac7-837e-fe3c8a9be939/26-6a5b0bd3efa79.webp' /></p><p>தம்பதியரின் மூன்றாவது மகளான ஆன் மேரி பர்னாம், ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f746e944-6a34-42ba-b920-79faf5529537/26-6a5b0bd4cd58a.webp' /></p><p>சில அரசியல் தலைவர்களின் மனைவிகளைப் போல, ஆன்டி பர்னாமின் மனைவியான ஃப்ராங்கி பொதுவாக பொது இடங்களில் அதிகம் தலைகாட்டுவதில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T05:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறண்ட முகத்தை ஈரப்பதத்துடன் மாற்ற உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/homemade-face-packs-for-dry-skin-in-tamil-1784349413"></link>
            <id>https://news.lankasri.com/article/homemade-face-packs-for-dry-skin-in-tamil-1784349413</id>
            <summary type="text">வெயில் காலத்தில் சருமத்தில் பல பிரச்சனைகள் வந்தடைகின்றன.

அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள், வறண்ட சருமம் போன்ற பாதிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெயில் காலத்தில் சருமத்தில் பல பிரச்சனைகள் வந்தடைகின்றன.
</p><p>
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள், வறண்ட சருமம் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன. </p><p>அதேபோல், முகத்தில் ஏற்படும் வறண்ட சருமம் என்பது சருமத்தில் ஈரப்பதம் அல்லது எண்ணெய் பசை குறையும் போது உண்டாகிறது.</p><p> </p><p></p><p>இது தோல் இறுக்கம், செதில்களாக உரிதல் மற்றும் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.&nbsp;</p><p>அந்தவகையில், முகம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க உதவும் பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.&nbsp;</p><h2>1. தேவையான பொருட்கள்
</h2><ul><li>வாழைப்பழம்- 1</li><li>
தேன்- 1 ஸ்பூன்</li></ul><h2>எப்படி பயன்படுத்துவது?
</h2><p>முதலில் ஒரு கிண்ணத்தில் பழுத்த வாழைப்பழம் சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
</p><p>
பின் இதில் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f09714e5-a147-43ad-9dd3-5c66de009f57/26-6a5b0396458b2.webp' /></p><p>பின்பு இதனை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
</p><p>
இதற்கடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
</p><h2>
2. தேவையான பொருட்கள்
</h2><ul><li>பால்- 3 ஸ்பூன்
</li><li>தேன்- 1 ஸ்பூன்
</li></ul><h2>
எப்படி பயன்படுத்துவது?</h2><p>
முதலில் ஒரு கிண்ணத்தில் பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவேண்டும்.</p><p></p><p>

பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.</p><p>

இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர வறண்டு சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T04:40:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான சுனாமி அலைகள் தாக்கக்கூடும்: மெக்சிகோவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்: மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mexico-7-3-earthquake-tsunami-warning-issued-1784349014"></link>
            <id>https://news.lankasri.com/article/mexico-7-3-earthquake-tsunami-warning-issued-1784349014</id>
            <summary type="text">மெக்சிகோவில் 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெக்சிகோவில் 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2> மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்</h2><p>மெக்சிகோ கடற்கரையை ஒட்டிய பகுதியில்&nbsp; 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.</p><p> ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தை ரிக்டர் 7.4 என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டு இருந்தாலும், பின்னர் அதன் அளவை ரிக்டர் 7.3 ஆக மாற்றி அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5aeb09d4-6095-4aae-87f4-f7532e9c9740/26-6a5b015914557.webp' /></p><p> &nbsp;மேலும் இந்த நிலநடுக்கம் சுமார் 10 கி.மீ ஆழத்தில் Aquiles serdan-க்கு தென்மேற்கே 48 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மிக முக்கியமான நில அதிர்வாக விஞ்ஞானிகள் இதனை வகைப்படுத்தும் நிலையில் பல உயர்மட்ட கட்டிடங்கள் மற்றும் சொகுசு விடுதிகள் ஆகியவையுடன் வேகமாக வளர்ந்து வரும் புவேர்ட்டோ மடேரோ பகுதிக்கு அருகில் இது ஏற்பட்டு இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2> சுனாமி எச்சரிக்கை</h2><p>&nbsp;7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்பட கூடும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2cb0557-9dbc-40fa-b890-d8eedd8cd86f/26-6a5b0157b3f47.webp' /></p><p>மேலும் ஏற்படும் சுனாமி அலைகள் நிலநடுக்க மையத்தில் இருந்து 186 மைல் சுற்றளவில் உள்ள பகுதிகளை தாக்கலாம் என்றும், அலைகள் கடல் மட்டத்தில் இருந்து 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் உயரம் வரை எழக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈக்வடார், எல் சால்வடார், நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ் மற்றும் பெரு ஆகிய நாடுகளின் கடற்கரையில் 0.3 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சுனாமி எச்சரிக்கை தொடர்ந்து பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கடற்கரை பகுதிகளை தவிர்க்குமாறு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T04:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு: 8 பேர் உயிரிழப்பு, டஜன் கணக்கானோர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-landslides-8-dead-several-missing-1784345745"></link>
            <id>https://news.lankasri.com/article/china-landslides-8-dead-several-missing-1784345745</id>
            <summary type="text">சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இதுவரை 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சீனாவில் நிலச்சரிவுவெள்ளிக்கிழமை தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரின் பெங்ஷுய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இதுவரை 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> சீனாவில் நிலச்சரிவு</h2><p>வெள்ளிக்கிழமை தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரின் பெங்ஷுய் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9.10 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p> இந்த நிலச்சரிவில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 34 பேர் வரை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e924613-eb7f-47f4-bfa1-50d9f3dec1df/26-6a5af49260a66.webp' /></p><p> நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 18 பேர் மீட்கப்பட்டதாகவும், அதில் 8 பேர் உயிரிழந்து விட்டதாகவும் மாவட்ட தலைவர் ரென் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.</p><p> இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2> மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 800க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் தீவிர பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக அங்குள்ள ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fc51f00-d48c-43e8-9a18-ee061a003525/26-6a5af4931070b.webp' /></p><p> மேலும் மலையடிவாரத்தில் அமைந்திருந்த வீடுகள் மற்றும் வணிக கடைகள் மண் மற்றும் பாறை சரிவில் மூடியிருப்பதை CCTV வெளியிட்ட காட்சிகளில் பார்க்க முடிகிறது.</p><p> மீட்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 50 மில்லியன் யுவான் தொகையை இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக அரசு ஒதுக்கியுள்ளது என்று நிதி மற்றும் அவசரகால மேலாண்மை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T03:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை பரிமாறிக் கொண்ட உக்ரைன் -ரஷ்யா: இதுவரை தெரியவராத உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-and-russia-exchange-dead-soldiers-body-1784278170"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-and-russia-exchange-dead-soldiers-body-1784278170</id>
            <summary type="text">போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர். வீரர்களின் உடல் பரிமாற்றம்உக்ரைன் ரஷ்யா இடையிலான போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர்.</p><h2> வீரர்களின் உடல் பரிமாற்றம்</h2><p>உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள்&nbsp; நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>இந்த போர் நடவடிக்கையில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் அவ்வப்போது பரிமாறிக் கொள்ளும் நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை போர்க்களத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் முறைப்படி பரிமாறிக் கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c26c8114-4a92-479f-992e-992dd5f72f00/26-6a59ec9c0fb34.webp' /></p><p> இந்த பரிமாற்றத்தில் கிட்டத்தட்ட 501 வீரர்களின் உடல்களை மீட்டு இருப்பதாக உக்ரைனிய அரசு தரப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.</p><p> அதே நேரத்தில் 31 வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் இருந்து பெற்று இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p></p><p> 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இருநாடுகளும் திரும்ப பெறும் உடல்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab62840-53f4-467e-b15b-0f123a6d8f68/26-6a59ec9cb25a8.webp' /></p><p> உக்ரைனிய அரசு இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 21,000 வீரர்களின் உடல்களை ரஷ்யாவிடம் இருந்து மீட்டுள்ளது.</p><p> ஆனால், இந்த ஆண்டில் ரஷ்யா சுமார் 600 உடல்களை மட்டுமே திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p> கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதே வேளையில் இருநாடுகளும் தங்கள் தரப்பு உயிரிழப்புகள் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவல்களையும் இதுவரை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்துள்ளனர்.</p><p>இதனால் இந்த போரில் ஏற்பட்டுள்ள உண்மையான உயிர் சேதம் குறித்த எந்தவொரு தகவலும் வெளிப்படையாக கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T03:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Nudify ஆப்ஸ்களை நீக்க Google, Apple நிறுவனங்களுக்கு உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apple-google-ordered-to-remove-nudify-apps-1784335946"></link>
            <id>https://news.lankasri.com/article/apple-google-ordered-to-remove-nudify-apps-1784335946</id>
            <summary type="text">அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு, “Nudify” எனப்படும் செயலிகளை (Apps) தங்களது App Store-களில் இருந்து ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு, “Nudify” எனப்படும் செயலிகளை (Apps) தங்களது App Store-களில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்த செயலிகள், புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி, அதில் உள்ளவர்களை நிர்வாணமாக காட்டும் திறன் கொண்டவை.
</p><p>
காலிஃபோர்னியா சட்டப்படி, “அனுமதி இல்லாமல் உருவாக்கப்படும் deepfake p0rn” தொடர்பான எந்தச் செயலையும் ஊக்குவிப்பது குற்றமாகும். 2025-இல், பாதிக்கப்பட்டவர்கள் மூன்றாம் தரப்பினரை எதிர்த்து வழக்கு தொடரும் உரிமையும் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc00222a-7233-41cc-82d3-cb5d9935aaeb/26-6a5ace4c3932b.webp' /></p><p>

சான் பிரான்சிஸ்கோ நகர சட்டத்தரணி டேவிட் சியூ, “ஆப்பிள் மற்றும் கூகுள், பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி, அனுமதி இல்லாத deepfake படங்களை உருவாக்கும் செயலிகளிலிருந்து லாபம் பெற்றுள்ளன. இவை உடனடியாக நீக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
Tech Transparency Project (TTP) வெளியிட்ட அறிக்கைகளில், கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில், ஆப்பிள் மற்றும் கூகுள் தங்களது App Store-களில் டசன் கணக்கான Nudify செயலிகளை வைத்திருந்ததாகவும், அவற்றின் மூலம் “non-consensual intimate images” விற்பனை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>ஆப்பிள், “இந்த செயலிகள் எங்கள் App Store விதிமுறைகளுக்கு எதிரானவை. மூன்று செயலிகளை ஏற்கனவே நீக்கியுள்ளோம். மேலும் நான்கு செயலிகள் விதிகளை மீறினால் அவற்றையும் நீக்குவோம்” என்று தெரிவித்துள்ளது.
</p><p>
கூகுள், “குறிப்பிட்ட ஐந்து செயலிகள் Google Play-இல் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ‘Nudify’ போன்ற தேடல் சொற்களையும் தடை செய்துள்ளோம்” என்று தெரிவித்தது.
</p><p>
இந்த நடவடிக்கை, deepfake தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை கட்டுப்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T00:50:50+00:00</updated>
        </entry>
    </feed>
