<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-15T06:24:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா - சாதனை படைத்த சுப்மன் கில், அக்சர் படேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-beats-england-by-6-wickets-in-1st-odi-1784096474"></link>
            <id>https://news.lankasri.com/article/india-beats-england-by-6-wickets-in-1st-odi-1784096474</id>
            <summary type="text">இங்கிலாந்திற்கு எதிரான முதல் ODI போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

இந்தியா மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்திற்கு எதிரான முதல் ODI போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><h3>
இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா</h3><p>

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் ODI போட்டி நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cc0894e-542a-4053-ab12-090fe7353c48/26-6a5726db60ba5.webp' /></p><p> 

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பாட்டதை தேர்வு செய்தது. 47.5 ஓவர்கள் முடிவில், 258 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20b7cef3-1031-47ef-adef-4de1008f320b/26-6a5726dc0f540.webp' /></p><p>

இங்கிலாந்து தரப்பில், அதிகபட்சமாக ஜோ ரூட் 76 ஓட்டங்களும், லியாம் டாசன் 68 ஓட்டங்களும் குவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81c50abe-7e9a-42e3-b6b4-396ba4fdd69e/26-6a5726dcb3001.webp' /></p><p>

இந்தியா தரப்பில் அக்சர் படேல் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4742f20-9ff6-4560-bea5-36d319865c2d/26-6a5726dd61609.webp' /></p><p>
259 ஓட்டங்கள் என்று வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா 11 ஓட்டங்களுடனும், விராட் கோலி 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f055e4d-c59d-4db9-ac48-fbf7c9146568/26-6a5726de0ffb4.webp' /></p><p>

அணித்தலைவர் சுப்மன் கில் 75 பந்துகளில் 80 ஓட்டங்கள் எடுத்த நிலையில், காயம் காரணமாக வெளியேறினார். </p><p>

தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் 35 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 52 ஓட்டங்களும், அக்சர் படேல் 57 ஓட்டங்களும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.&nbsp;</p><p></p><p>

 45.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 262 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.</p><p> 

4 விக்கெட்கள் எடுத்து, 57 ஓட்டங்கள் குவித்த அக்சர் படேல் ஆட்ட நாயகன் விருது வென்றார். </p><h3>

சாதனைகள்</h3><p> 

40 ஓவர்களுக்கு பின்னர் பந்து வீச வந்து 4 விக்கெட்களை கைப்பற்றிய 2வது சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அக்சர் படேல் படைத்துள்ளார். முன்னதாக ஜடேஜா மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27510a93-80a1-41ec-8b0b-6dfd26263e25/26-6a5726e00ff6f.webp' /></p><p>
இந்த போட்டியில் சுப்மன் கில் அடித்த 80 ஓட்டங்கள் மூலம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அணித்தலைவராக 3 இன்னிங்ஸில் விளையாடி 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 510 ஓட்டங்கள் இதுவரை அடித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6a2d2b-4290-4fe7-88ca-caa33016f2b9/26-6a5726df5fa44.webp' /></p><p>

இதன் மூலம், இங்கிலாந்தில் ஒரே மைதானத்தில் 500 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்திய அணித்தலைவர் என்ற சாதனையை படைத்தார்.&nbsp;</p><p></p><p> 

முன்னதாக, விராட் கோலி இந்த மைதானத்தில், 6 இன்னிங்ஸில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 469 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.</p><p>

இதை போட்டியில் ஆடியதன் மூலம், 200 ODI போட்டிகளில் விளையாடிய 2வது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜாஸ் பட்லர் படைத்துள்ளார். 

இயோன் மோர்கன் 225 ODI போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T06:22:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா, வெனிசுலா, கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்த டிரம்ப்: சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-shares-ai-usa-map-on-truth-social-1784095598"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-shares-ai-usa-map-on-truth-social-1784095598</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் பகிர்ந்த AI புகைப்படம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> டிரம்ப் பகிர்ந்த AI புகைப்படம்</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தன்னுடைய சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியல்(Truth Social) பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள அந்த புகைப்படத்தில், கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்க எல்லைக்கு உட்பட்ட பகுதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தது.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/937c85f7-df85-460d-8c57-c7d09e42ba0d/26-6a57236f7e9d0.webp' /></p><p> இந்த புகைப்படம் உக்ரைன் - ரஷ்யா மோதல் தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் 2025ம் ஆண்டு நடைபெற்ற உலக தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மாற்றியமைக்கப்பட்ட வடிவம் என்று தெரியவந்துள்ளது.</p><p></p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa96f4f7-b957-4e62-9aef-0388f92fba7e/26-6a572370377c9.webp' /></p><p> இதில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட பல நாடுகளின் முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.</p><p> அவர்களில் முக்கியமாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T06:06:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய பிரதமருக்கு பிரான்சின் உயரிய விருது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/starmer-becomes-1st-uk-pm-to-receive-chevalier-1784092308"></link>
            <id>https://news.lankasri.com/article/starmer-becomes-1st-uk-pm-to-receive-chevalier-1784092308</id>
            <summary type="text">பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு, பிரான்சின் மிக உயரிய விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.

பிரித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு, பிரான்சின் மிக உயரிய விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
</p><h3>
பிரித்தானிய பிரதமருக்கு பிரான்சின் உயரிய விருது</h3><p>

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு, பிரான்சின் மிக உயரிய விருதான 'செவாலியே' (Chevalier de la Légion d'honneur) விருது வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b11d904d-d22c-4e60-9b99-d576eeb7d903/26-6a571695f10ad.webp' /></p><p>

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உக்ரைன் விவகாரங்களில் அவர் ஆற்றிய முக்கியப் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் இந்த விருதை ஸ்டார்மருக்கு நேரில் வழங்கி கெளரவித்தார்.&nbsp;</p><p></p><p>

ஸ்டார்மருக்கு இந்த உயரிய விருது வழங்கப்படும்போது, உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸும் உடன் இருந்தார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e56c9c7e-d335-4d86-b9f5-c863d77b79b2/26-6a571697570da.webp' /></p><p>

ஸ்டார்மருக்கு செவாலியே விருதை வழங்கிய மேக்ரான், பிரதமராக நீங்கள் பணியாற்றிய ஆண்டுகளுக்காக, எனது நன்றியையும் பிரெஞ்சு மக்களின் நன்றியையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4673145d-5b27-4b17-a114-695f8a0f60bb/26-6a571696a5cdf.webp' /></p><p>
அத்துடன், நாம் போற்றக் கற்றுக்கொள்ளும் மனிதப் பண்புகள் அனைத்தும் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானவையாகவே இருக்கின்றன. உங்களிடம் நாங்கள் மிகவும் நம்பகமான மற்றும் நட்பான ஒரு கூட்டாளரைக் கண்டோம் நான் சொல்லியே ஆக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbe255f6-5a66-4252-99ff-1402c44627d5/26-6a571698068d4.webp' /></p><p>பிரதமர் பதவியிலிருக்கும்போது பிரான்சின் இந்த மிக உயரிய கெளரவத்தை நேரடியாகப் பெறும் முதல் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T05:12:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வம்சாவளி வீரரின் விண்வெளி பயணம்: யார் இந்த அனில் மேனன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anil-menon-1st-space-mission-from-bakonur-1784088809"></link>
            <id>https://news.lankasri.com/article/anil-menon-1st-space-mission-from-bakonur-1784088809</id>
            <summary type="text">கேரளாவை சேர்ந்த அனில் மேனன் நேற்று இரவு தன்னுடைய விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளார். இந்திய வம்சாவளி வீரரின் விண்வெளி பயணம்இந்திய வம்சாவளியை சேர்ந்த நாச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவை சேர்ந்த அனில் மேனன் நேற்று இரவு தன்னுடைய விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளார்.</p><h2> இந்திய வம்சாவளி வீரரின் விண்வெளி பயணம்</h2><p>இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன் நேற்றிரவு 8.17 மணிக்கு கஜகஸ்தானின் பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட சோயுஸ் எம்எஸ் 29 விண்கலம் மூலம் தன்னுடைய விண்வெளி பயணத்தை தொடங்கினார்.</p><p>அனில் மேனன் பயணம் செய்த விண்கலமானது தற்போது பாதுகாப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8cf728f-b352-4f2b-bffe-4414834e6496/26-6a5708eac994b.webp' /></p><p> அனில் மேனன் உடன் ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோட்டர் டுப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோரும் தங்கள் விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p> கிட்டத்தட்ட 8 மாதங்கள் இவர்களது விண்வெளி ஆய்வுப் பயணம் தொடரும் என்றும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> யார் இந்த அனில் மேனன்</h2><p>
கேரள மாநிலம் பாலக்காட்டின் ஒட்டப்பாலத்தை சேர்ந்த சங்கரன் மேனன் மற்றும் உக்ரைனின் எலிசபெத் சமோய்லென்கோ ஆகிய தம்பதியினரின் மகன் தான் அனில் மேனன் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0e22c65-b075-41e4-9e0c-b1eaafa587b9/26-6a5708eb811da.webp' /></p><p> அனில் மேனன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து இருப்பதோடு, டாக்டராகவும் பயிற்சி பெற்றுள்ளார்.</p><p> மேலும் அமெரிக்க விண்வெளிப் படையின் பைலட்டாகவும் அனில் மேனன் பணியாற்றியுள்ளார்.</p><p> பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிகாட்டிய அனில் மேனன் நாசாவின் விண்வெளி குழுவில் இடம்பெற்றுள்ளார்.</p><p> தன்னுடைய முதல் விண்வெளிப் பயணத்தில் அனில் மேனன், நீண்ட காலம் விண்வெளியில் தங்குவதால் மனிதர்களின் உடல் நலத்தில் ஏற்படும் மாறுதல்கள் குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T04:17:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 10 வயது சிறுவன்: இஸ்ரேலிய படையினரின் அத்துமீறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/10-yrs-old-killed-in-israel-army-shooting-in-gaza-1784086219"></link>
            <id>https://news.lankasri.com/article/10-yrs-old-killed-in-israel-army-shooting-in-gaza-1784086219</id>
            <summary type="text">காசாவில் நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுவன் கொல்லப்பட்டு இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 வயது சிறுவன் உயிரிழப்புதெற்கு காசாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசாவில் நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுவன் கொல்லப்பட்டு இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> 10 வயது சிறுவன் உயிரிழப்பு</h2><p>தெற்கு காசாவின் ராபாவில் உள்ள அல்மவாசி பகுதியில் அமைந்துள்ள தற்காலிக அகதிகள் முகாமில் இஸ்ரேலிய படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 வயதுடைய முவாதாஸ் அபு ஷார் என்ற சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.</p><p> இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிறுவனின் அத்தை பேசிய போது, அந்த சிறுவன் கையில் என்ன துப்பாக்கியா வைத்திருந்தான்? அவன் கூடாரத்திற்குள் தனியாக விளையாடி கொண்டிருந்தான். அவனுக்கு மகிழ்ச்சியாக வாழவும், விளையாடவும் உரிமை இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b693b1fb-3c24-4b2c-97cc-3595c27d8f52/26-6a56fecc9f913.webp' /></p><p>இஸ்ரேலிய படைகள் கடந்த சில நாட்களாக நடத்தி வரும் துப்பாக்கிச் சூட்டில் 8 முதல் 14 வயதுடைய நான்கு குழந்தைகள் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2> &nbsp;காவல் நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்</h2><p>
வடக்கு காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையம் மீது இஸ்ரேலிய படையினர் ட்ரோன் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.</p><p> இந்த ட்ரோன் தாக்குதலில், காவல் நிலையத்தின் தலைவரான கர்னல் முகமது மர்வான் சலீம் மற்றும் சில காவல்துறை அதிகாரிகள், பெண் ஒருவர் என 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p> கர்னல் முகமது மர்வான் ஜபாலியா மத்திய படைப்பிரிவின் தலைவராக செயல்பட்டதாகவும், இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட காரணத்தினாலும் இந்த தாக்குதல் தவிர்க்க முடியாதது என்று இஸ்ரேல் தரப்பு விளக்கமளித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T03:30:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸை அடுத்து... செங்கடல் வழித்தடத்தை முடக்க திட்டமிடும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-eyes-choking-off-red-sea-1784075252"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-eyes-choking-off-red-sea-1784075252</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான், தற்போது தனது மிகவும் ஆபத்தான துருப்புச்சீட்டைப் பயன்படுத்தக்கூடும் என்று தகவல் கசிந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான், தற்போது தனது மிகவும் ஆபத்தான துருப்புச்சீட்டைப் பயன்படுத்தக்கூடும் என்று தகவல் கசிந்துள்ளது.</p><h2>அமெரிக்கா மீது அழுத்தம்</h2><p>
</p><p>செங்கடலுக்கான பாப் அல்-மண்டேப் நுழைவாயிலை மூடுவதற்கு யேமனின் ஹவுதி படைகளைப் பயன்படுத்துவதுடன், அமெரிக்காவுக்கு எதிராக ஒரு புதிய முனையைத் திறந்து, உலகின் மிக முக்கியமான இரண்டு எரிசக்திப் பாதைகளை ஆபத்துக்குள்ளாக்குதல் என்பதே ஈரானின் திட்டம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae45e279-8d14-483f-adff-d880a8ad9363/26-6a56d50c84b43.webp' /></p><p> </p><p>ட்ரம்பின் மிரட்டலுக்கு இதுவரைப் பணியாத ஈரானுக்குள் அமெரிக்கத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதாலும், அதனுடன் ஹவுதிகளின் தாக்குதல்களும் அதிகரித்து வருவதாலும், </p><p>ஈரான் இந்த மோதலை விரிவுபடுத்தி, வளைகுடாப் பகுதிக்கு அப்பால் உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கான அச்சுறுத்தலை நீட்டிப்பதன் மூலம் அமெரிக்கா மீது அழுத்தத்தை அதிகரிக்க முயல்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். </p><p>ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்தைத் தடை செய்வதன் மூலம், ஈரான் தனது திட்டத்தின் வலிமையை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது.</p><p>
தற்போது, ​​செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மண்டேபில் இரண்டாவது அழுத்தப் புள்ளியைத் திறக்க ஈரான் தயாராக இருப்பதாகத் தெரிகிறது; இந்த நீர்வழி வழியாகவே சவூதி எண்ணெய் ஏற்றுமதியும், உலகளாவிய கப்பல் போக்குவரத்தின் கணிசமான பங்கும் கடந்து செல்கின்றன.</p><p></p><p> </p><p>இதனிடையே, சவுதி அரேபியா ஏமன் மீதான தாக்குதலைத் தொடர்ந்தால் பாப் அல்-மண்டேப் நீரிணையை மூடுவதற்கு நாட்டின் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக ஏமன் நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று எச்சரித்தார். </p><p>மேலும், ஏமன் மீது தாக்குதல் நடத்துமாறு சவுதி அரேபியாவை வாஷிங்டன் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தது; இத்தகைய தூண்டுதல் நடவடிக்கை ஒருபோதும் அமெரிக்காவின் நலனுக்கு உகந்ததாக இருக்காது என ஹவுதி எதிர்ப்பு இயக்கம் ஒன்று பதிலளித்துள்ளது.</p><h2>ஹவுதிகள் நிரூபித்துள்ளனர்</h2><p>
</p><p>வளைகுடாவிலிருந்து செங்கடல் வரை மோதல் பரவும் இக்கட்டான சூழல் உருவாகி வருவதால், வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலானது, உலகின் மிக முக்கியமான இரண்டு எண்ணெய் போக்குவரத்துத் தடைகள் இந்த மோதலின் தீர்க்கமான போர்க்களமாக மாறுவதற்கு முன்பாக, பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புமாறு அமெரிக்கா மற்றும் ஈரான் மீதான அழுத்தத்தையும் அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f37a5de-57b2-4ff7-8186-7ef5e6e398c4/26-6a56d50d70a63.webp' /></p><p> </p><p>பாப் அல்-மண்டேப் வழியாக உலகளாவிய வர்த்தகத்தை முடக்க முடியும் என்பதை ஹவுதிகள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். 2023 அக்டோபரில் காஸா போர் வெடித்த பிறகு, ஹவுதிகள், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களைக் குறிவைப்பதாகக் கூறி, செங்கடலில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது.
</p><p>இந்த நடவடிக்கை, முக்கிய கப்பல் நிறுவனங்களைத் தெற்கு ஆப்பிரிக்காவைச் சுற்றி தங்கள் கப்பல்களின் பாதைகளை மாற்றிவிடக் கட்டாயப்படுத்தியது, இதனால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தன; மேலும் இது, கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க மற்றும் பிரித்தானிய வான்வழித் தாக்குதல்களையும், ஒரு பன்னாட்டுக் கடற்படை நடவடிக்கையையும் தூண்டியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T03:05:51+00:00</updated>
        </entry>
    </feed>
