<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-16T16:38:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனவுகளுடன் கனடாவுக்குச் செல்லும் மக்கள்: இணையம் காட்டும் காட்சிகள் உண்மையா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-return-indians-says-earned-10l-paid-tax-5l-1784209172"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-return-indians-says-earned-10l-paid-tax-5l-1784209172</id>
            <summary type="text">பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக செல்ல தேர்ந்தெடுக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்றாக உள்ளது.

ஆனால், இணையம் காட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக செல்ல தேர்ந்தெடுக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்றாக உள்ளது.</p><p>

ஆனால், இணையம் காட்டும், சுத்தமான காற்று, அமைதியான வாழ்க்கை என்னும் காட்சிகள் உண்மையா?
</p><h3>
இந்தியர் ஒருவரின் அனுபவம்</h3><p>

கனடாவில் நிரந்தரமாக வாழ்வதற்காக கனடா சென்ற இந்தியரான ஹர்ஷ் குப்தா, கனடா வாழ்க்கை இணையத்தில் காட்டப்படுவது போல் இல்லை என்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cf1da3d-7a52-4c5e-ba32-4f2ea3dec4be/26-6a58df15de777.webp' /></p><p>

நீங்கள் கனடாவுக்குச் செல்ல விரும்பும் ஒரு இந்தியர் என்றால், ஒரு அனுபவஸ்தன் என்னும் முறையில் நான் உங்களுக்கு சில ஆலோசனைகளைக் கூற விரும்புகிறேன் என்கிறார் குப்தா.&nbsp;</p><p></p><p>
கனடாவுக்குச் செல்ல விரும்புவோரின் முதல் தேவை, ஒரு நல்ல வேலை. ஆனால், பலரும் எதிர்பார்ப்பதுபோல, நல்ல சம்பளத்தில் ஒரு வேலை கிடைப்பது கனடாவில் கடினம் என்கிறார் அவர்.
</p><p>
அடுத்த அதிர்ச்சி, வரிகள் என்று கூறும் குப்தா, தான் தன் தொழில் மூலமாக மாதம் ஒன்றிற்கு 10 லட்ச ரூபாய் சம்பாதித்ததாகவும், ஆனால், 5 லட்ச ரூபாய் வரி செலுத்தியதாகவும் தெரிவிக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99186cd2-e11e-449a-b890-0383ca5eae6d/26-6a58df1691937.webp' /></p><p>
கனடாவின் மருத்துவ அமைப்பு குறித்து பேசும் குப்தா, தான் மருத்துவரை சந்திப்பதற்காக 6 மாதங்கள் காத்திருந்ததாகவும், மருந்துகளும் விலையும் அதிகம் என்றும் கூறுகிறார்.
</p><p>
வானிலை மற்றொரு சவாலான விடயம் என்று கூறும் குப்தா, கனடாவின் நீண்ட கோடை காலம், அன்றாட வாழ்வை பாதித்ததாகவும், வெறும் குளிராக மட்டுமல்ல, அது மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
</p><p>
விலைவாசியும் மிக அதிகம் என்று கூறும் குப்தா, அது மக்களுடைய வாழ்க்கைத்தரத்தையும், கனடா குறித்த பார்வையையும் மாற்றிவிடுவதாகவும் தெரிவிக்கிறார்.
</p><p>
அத்துடன், தன்னைப் பொருத்தவரை, நிரந்தரக் குடியுரிமை பெறுவது கடினமாக இருந்ததாக தெரிவிக்கும் குப்தா, கனடா வாழ்க்கை என்பது எல்லோருக்குமானது அல்ல, உணவு விநியோகம், ட்ரக் சாரதி வேலை, விவசாயம் என ஏதாவது வேலை செய்யத் தயார் என்றால், சமாளித்துக்கொள்ளலாம். </p><p>மற்றபடி கஷ்டம் என்கிறார்.

ஆக, இணையத்தில் காட்டப்படும் இயற்கைக் காட்சிகளையும், சுத்தமான காற்று, அமைதியான வாழ்க்கை என்னும் விடயங்களையும் நம்பி நீங்கள் கனடாவுக்குச் செல்வீர்களானால், முதல் 4 முதல் 5 மாதங்கள் நன்றாக இருக்கும், அப்புறம் கஷ்டம்தான் என்கிறார் குப்தா!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:39:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா - அதிரடி முடிவெடுத்த இந்திய அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/isro-scientists-mass-resignations-tighten-rules-1784208564"></link>
            <id>https://news.lankasri.com/article/isro-scientists-mass-resignations-tighten-rules-1784208564</id>
            <summary type="text">100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ள நிலையில், விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா

இந்திய விண்வெளி ஆர...</summary>
            <content type="html"><![CDATA[<p>100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ள நிலையில், விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. </p><h3>

இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா
</h3><p>
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் கடந்த சில மாதங்களில், அனுபவம் வாய்ந்த 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb3b72ef-bde2-4e51-9e5d-d3daae1fb33f/26-6a58dcb63665a.webp' /></p><p>

பெங்களூரு யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்திலிருந்து மட்டும் சுமார் 80 விஞ்ஞானிகளும், திருவனந்தபுரம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலிருந்து சுமார்30 விஞ்ஞானிகளும் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p></p><p>

எல்விஎம் 3 (LVM-3) திட்ட இயக்குநர், ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்ட இயக்குநர், சந்திரயான் - 3 திட்டத்தின் உருவகப்படுத்துதல் (simulations) பிரிவு மேலாளர் உள்ளிட்ட பல முக்கிய விஞ்ஞானிகளும் வெளியேறியுள்ளனர். </p><h3> 

என்ன காரணம்?
</h3><p>
இந்தியாவில், 400க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இவை கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 150 மில்லியன் டொலர் முதலீடுகளை ஈர்த்துள்ளன. </p><p>

விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவனங்களின் ஈடுபாட்டை அதிகரிக்க மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்கள் மூத்த விஞ்ஞானிகளை தங்களது நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் நியமிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
</p><p>
இஸ்ரோவில் இருந்து விலகும் விஞ்ஞானிகள் இது போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இணைந்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb4f55db-bef7-4034-9f5f-d9d96f90d881/26-6a58dcb6f0c51.webp' /></p><p> 

சமீபத்தில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் சென்னையை தளமாக கொண்டு இயங்கும் அக்னிகுல் என்று நிறுவனத்தில் இணைந்துள்ளார்.</p><p> 

மூத்த விஞ்ஞானிகளின் தொடர் விலகல்களால் இஸ்ரோவின் ககன்யான் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. </p><p>

இதனால், ககன்யான் போன்ற முக்கிய திட்டங்களில் பணியாற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் தன்னார்வ ஓய்வு (VRS), ராஜினாமா கோரிக்கைகளை அந்த திட்டங்கள் முடியும் வரை இனி வழக்கமான நடைமுறையாக ஏற்கக் கூடாது என்று என்று அனைத்து இஸ்ரோ மைய இயக்குநர்கள் மற்றும் பிரிவு தலைவர்களுக்கும் விண்வெளித் துறை உத்தரவிட்டுள்ளது.
</p><p>
மேலும், விஞ்ஞானி/பொறியாளர்-எஸ்ஜி நிலை வரையிலான அதிகாரிகளின் தன்னார்வ ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை மைய இயக்குநர்களே ஏற்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மாற்றி சம்பந்தப்பட்ட மைய இயக்குநர்களின் பரிந்துரையுடன் இறுதி முடிவுக்காக விண்வெளித் துறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2719ead1-3bc1-4d75-b015-12b607b6a71d/26-6a58dcb7cb298.webp' /></p><p>
இது குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், "பலர் நிறுவனங்களை விட்டு வெளியேறுவது சாதாரணமான ஒன்றுதான். 

இந்த புதிய விதியானது விஞ்ஞானிகளைத் தடுத்து வைப்பதற்காக மட்டுமின்றி, நாட்டின் முக்கியத் திட்டங்கள் திடீரெனத் தொய்வடைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இஸ்ரோ இதனைச் சீராகக் கையாண்டு வருகிறது" என விளக்கமளித்தார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:29:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றி கொண்டாட்டத்தில் பாக்லண்ட் தீவு பதாகை - சிக்கலில் அர்ஜென்டினா வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/argentina-to-face-action-for-falklands-banner-fifa-1784205700"></link>
            <id>https://news.lankasri.com/article/argentina-to-face-action-for-falklands-banner-fifa-1784205700</id>
            <summary type="text">இங்கிலாந்தை வீழ்த்திய வெற்றி கொண்டாட்டத்தில் ஃபாக்லண்ட் தீவு பதாகையை ஏந்தியது அர்ஜென்டினா வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. 

வெற்றி கொண்டாட்டத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தை வீழ்த்திய வெற்றி கொண்டாட்டத்தில் ஃபாக்லண்ட் தீவு பதாகையை ஏந்தியது அர்ஜென்டினா வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. </p><h3>

வெற்றி கொண்டாட்டத்தில் பாக்லண்ட் தீவு பதாகை</h3><p>2026 பிபா உலக கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில், அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. </p><p>

இதில், 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ள உள்ளது. </p><p>

இங்கிலாந்தை வீழ்த்திய பின்னர், அர்ஜென்டினா வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தின் போது பயன்படுத்திய பதாகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86c358ea-748a-46e2-8794-10649137ca1b/26-6a58d1858ceb9.webp' /></p><p> 

அர்ஜென்டினா வீரர்கள் "லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்" என்று எழுதப்பட்ட பதாகையை வைத்து வெற்றியை கொண்டாடினர். இதற்கு, "ஃபாக்லண்ட் தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை" என்று பொருள் ஆகும்.</p><h3> 

பாக்லாந்து தீவுகள்
</h3><p>
தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பாக்லாந்து தீவுகள் யாருக்கு சொந்தம் என்பதில் அர்ஜென்டினா மற்றும் பிரித்தானியா இடையே மோதல் நிலவி வருகிறது. </p><p>

இந்த தீவுகளுக்காக, 1982 ஆம் ஆண்டில் அர்ஜென்டினா மற்றும் பிரித்தானியா இடையே நடைபெற்ற சுமார் 2 மாத கால போரில், அர்ஜென்டினாவைச் சேர்ந்த 655 வீரர்களும், பிரித்தானியாவை சேர்ந்த 255 வீரர்களும், அந்த தீவுகளைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்தனர். இறுதியில், அர்ஜென்டினா சரணடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ccee8b5-e97f-4440-8eae-842cb6274440/26-6a58d18640ff2.webp' /></p><p> </p><p>

அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அர்ஜென்டினா துணை ஜனாதிபதி விக்டோரியா வில்லாரூயல், "ஃபாக்லண்ட் தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை, அவற்றை மைதானத்திற்குள் கொண்டு வர அவர்கள் தடை விதித்தார்கள்.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="es" dir="ltr">¡Las Malvinas son Argentinas! 🇦🇷 Prohibieron llevarlas a la cancha y se olvidaron que las llevamos en la sangre y el corazón. <a href="https://t.co/qB455HeqVX">pic.twitter.com/qB455HeqVX</a></p>&mdash; Victoria Villarruel (@VickyVillarruel) <a href="https://x.com/VickyVillarruel/status/2077519309652316181?ref_src=twsrc%5Etfw">July 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

ஆனால் நாம் அவற்றை நமது ரத்தத்திலும் இதயத்திலும் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டார்கள்" என பதிவிட்டுள்ளார். </p><p>

மேலும், அர்ஜென்டினா ராணுவ வீரர்கள் உள்ள வீடியோவை பகிர்ந்து, இது மற்றுமொரு சாதாரண போட்டி இல்லை என பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>
இந்த போட்டிக்கு முன்னதாக "நாளை நாம் அபகரிக்கும் கொள்ளையர்களுக்கு எதிராக விளையாடுகிறோம். இது மற்றுமொரு சாதாரணப் போட்டி அல்ல" என பதிவிட்டிருந்தார். </p><p>

இவ்வாறு மைதானத்தில் அரசியலை கலப்பது விதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதால், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானியாவின் வர்த்தகம் மற்றும் வணிகத்துறை செயலாளர் பீட்டர் கைல் பிபாவிடம் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a44daf91-f123-4416-8bb6-e1a937806a2d/26-6a58d186e57a6.webp' /></p><p>

 கால்பந்து மைதானங்களுக்குள் அரசியல், மதம் அல்லது தனிப்பட்ட முழக்கங்கள், சின்னங்கள் மற்றும் கொடிகளைப் பயன்படுத்துவதற்கு பிபா தடை விதித்துள்ளது. 

இதனை மீறும் அணி அல்லது வீரர்களுக்கு அபராதம் அல்லது விளையாட தடை போன்ற கடும் நடவடிக்கைகளை பிபா மேற்கொண்டுள்ளது.</p><p> 

முன்னதாக 2014 ஆம் ஆண்டிலும், ஸ்லோவேனியாவுக்கு எதிரான ஒரு நட்புப் போட்டிக்கு முன்பாக அர்ஜென்டினா வீரர்கள் இதே போன்ற பேனரை ஏந்தியதற்காக, அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திற்கு பிபா 20,000 பவுண்டுகள் அபராதம் விதித்திருந்தது.</p><p>

இந்நிலையில், அர்ஜென்டினா வீரர்கள் இந்த செயல் குறித்து பிபா விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

ஏற்கனவே, நடுவர்கள் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி, எகிப்து கால்பந்து சம்மேளனம் (EFA) பிபாவிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தது. </p><p>

argentinaout.org என்று இணையதளத்தில் அர்ஜென்டினாவை வெளியேற்றுக என்ற கையெழுத்து பிரச்சாரத்தில், தற்போது வரை 1.41 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T12:45:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோவிட் தொற்றுக்கு இருவர் பலி... பரபரப்பாகும் இந்திய மாநிலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-death-as-covid-resurfaces-in-andhra-pradesh-1784203586"></link>
            <id>https://news.lankasri.com/article/2-death-as-covid-resurfaces-in-andhra-pradesh-1784203586</id>
            <summary type="text">இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு பேர் கோவிட் தொற்றுக்கு பலியாகியுள்ளதைத் தொடர்ந்து அம்மாநிலம் பரபரப்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு பேர் கோவிட் தொற்றுக்கு பலியாகியுள்ளதைத் தொடர்ந்து அம்மாநிலம் பரபரப்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.</p><h3>

கோவிட் தொற்றுக்கு இருவர் பலி...
</h3><p>
ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் எட்டு பேருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், இரண்டு பேர் கோவிட் தொற்றுக்கு பலியாகிவிட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கோவிட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ca300ac-b4d9-4f6b-918f-01babc6ce2d7/26-6a58c944dd75d.webp' /></p><p>&nbsp;கடப்பா மாவட்டத்தில் இரண்டு பேர் கோவிடுக்கு பலியானதைத் தொடர்ந்து, ஆந்திரப்பிரதேச சுகாதாரத்துறை அந்த பகுதியிலிருந்து 40 பேரிடம் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளது.&nbsp;</p><p></p><p>
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கோவிட் பரிசோதனைகள் துவக்கப்பட்டுள்ளன.
</p><p>
இரத்த மாதிரிகள் சேகரிக்கச் செல்வோர் பாதுகாப்பு உடைகள் அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62971b0d-29e4-44e7-b567-bf211131165f/26-6a58c94438fa6.webp' /></p><p>
அரசு மருத்துவமனைகளிலும், 10 படுக்கைகள் கொண்ட வார்டுகள் கோவிட் நோயாளிகளுக்காக தயார் நிலையில் வைக்க ஆந்திரப்பிரதேச சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p>
தொற்று பரவலைத் தடுப்பதற்காக, கைகளைக் கழுவுதல், மாஸ்க் அணிதல் போன்ற நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், அருகிலுள்ள ஒடிஷா மாநிலமும், ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் கோவிட் சோதனைகளைத் துவக்கியுள்ளதுடன், சுகாதாரத்துறையினர் தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாக டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T12:06:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணைக்கொலைச் சட்டம்: பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-parliment-approves-assisted-dying-bill-1784200532"></link>
            <id>https://news.lankasri.com/article/france-parliment-approves-assisted-dying-bill-1784200532</id>
            <summary type="text">பிரான்சில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுவந்த கருணைக்கொலைச் சட்டம், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கீழவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

நாடாளுமன்ற உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுவந்த கருணைக்கொலைச் சட்டம், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கீழவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.</p><h3>

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்
</h3><p>
கருணைக்கொலை மசோதாவுக்கு ஆதரவாக 291 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 241 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க, பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f30c69a-4d15-464d-9531-f06daab21425/26-6a58bd55c591d.webp' /></p><p>
அடுத்ததாக, ஒரு சட்டம் அரசியலமைப்பிற்கு இணங்குகிறதா என்பதைச் சரிபார்க்கும் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பான அரசியலமைப்பு சபையிடம், மசோதாவின் சில விதிகளை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>
இந்த சட்டம், தீவிரமான மற்றும் குணப்படுத்த முடியாத, உயிருக்கு ஆபத்தான நோய் முற்றிய அல்லது இறுதிக்கட்டத்தில் உள்ள வயதான பிரான்ஸ் குடிமக்கள், தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள வழிவகுக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/058c8cce-0519-4b28-b3e7-327fdd56a8a5/26-6a58bd567959f.webp' /></p><p>
அந்த நோய், அவர்களால் தாங்க முடியாத நோயாகவும், சிகிச்சைக்குக் கட்டுப்படாததாகவும், தொடர்ச்சியான உடல் அல்லது மன வேதனையில் ஆழ்த்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.
</p><p>
விடயம் என்னவென்றால், இதேபோல ஏற்கனவே மூன்று முறை இந்த மசோதா கீழவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டும், மேலவையில் நிராகரிக்கப்பட்டுவிட்டது.</p><p>

என்றாலும், பெரும்பான்மை பிரான்ஸ் மக்கள் இந்த சட்டத்துக்கு ஆதரவாக இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஆக, இம்முறை மேலவை என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T11:24:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு நிற சவப்பெட்டியில் டிரம்ப்: ஈரானின் பிரம்மாண்ட விளம்பர பலகை: அதிகரிக்கும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tehran-viral-billboard-about-trump-death-1784200459"></link>
            <id>https://news.lankasri.com/article/tehran-viral-billboard-about-trump-death-1784200459</id>
            <summary type="text">ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிரான விளம்பர பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சர்ச்சைக்குள்ளான விளம்பர பலகைஈரான் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிரான விளம்பர பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சர்ச்சைக்குள்ளான விளம்பர பலகை</h2><p>ஈரான் அமெரிக்கா இடையே மோதலானது மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில் அமைந்துள்ள என்கேலாப் சதுக்கத்தில்(Enghelab Square) வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை ஒன்று சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.</p><p>அதில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருப்பு நிற சவப்பெட்டியில் கிடப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3279ba7-a89f-41de-8fa9-ab1f8027173e/26-6a58bd0cd199e.webp' /></p><p> மேலும் கருப்பு நிற சவப்பெட்டியின் மீது அச்சுறுத்தும் விதமாக பாரசீகம் மற்றும் ஆங்கில மொழியில் “டிரம்பை நாங்கள் கொல்வோம்” (we will kill trump) என எழுதப்பட்டுள்ளது.</p><p></p><p> மறைந்த ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதி சடங்கில் பயன்படுத்தப்பட்ட நினைவேந்தல் பலகையை போலவே இதுவும் வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> மேலும், காமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் பள்ளி கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் குறித்தும் அஞ்சலி வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.</p><p> மேற்கத்திய நாடுகளை ஈரான் இத்தகைய விளம்பரங்கள் மூலம் விமர்சிப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், தற்போதைய விளம்பரம் மிகவும் ஆக்ரோஷமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T11:14:32+00:00</updated>
        </entry>
    </feed>
