<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-13T12:50:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரம்பரியமான சுவையில் கருப்பட்டி பணியாரம்.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karupatti-paniyaram-recipe-in-tamil-1783946458"></link>
            <id>https://news.lankasri.com/article/karupatti-paniyaram-recipe-in-tamil-1783946458</id>
            <summary type="text">கருப்பட்டி உடலுக்கு மிகுந்த ஆற்றலையும், ஊட்டச்சத்தையும் தரக்கூடியது. 

வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் இது, ரத்தத்தை சுத்திகரித்து, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கருப்பட்டி உடலுக்கு மிகுந்த ஆற்றலையும், ஊட்டச்சத்தையும் தரக்கூடியது. </p><p>

வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் இது, ரத்தத்தை சுத்திகரித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.</p><p>

அதன்படி, கருப்பட்டி வைத்து செய்கின்ற இந்த பணியாரத்தை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.</p><p>

அந்தவகையில், தித்திக்கும் சுவையில் கருப்பட்டி பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள் </h2><ul><li>

பச்சரிசி- 2 கப் </li><li>
உளுந்து- 3 ஸ்பூன்</li><li> 
வெந்தயம்- 1 ஸ்பூன் </li><li>
கருப்பட்டி- 1½ கப் </li><li>
தண்ணீர்- ½ கப் </li><li>
ஏலக்காய்- 5</li><li>
சுக்கு பொடி- ½ ஸ்பூன்</li><li> 
உப்பு- ¼ ஸ்பூன் </li><li>
நெய்- தேவையான அளவு</li><li> 
தேங்காய் துருவல்- ¾ கப் </li><li>
கருஞ்சீரகம்- 1 ஸ்பூன் </li></ul><h2>

செய்முறை </h2><p>

முதலில் ஒரு கிண்ணத்தில் பச்சரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து கழுவி தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.</p><p>

அடுத்து ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து கரைத்து வடிகட்டி ஆறவைத்துக்கொள்ளவும்.</p><p>

பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, ஏலக்காய், சுக்கு பொடி, உப்பு மற்றும் சிறிதளவு கருப்பட்டி கரைசல் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4afe81d9-e03e-417d-8139-ee3bf56d046e/26-6a54dcdcb06a4.webp' /></p><p>இதற்கடுத்து அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி மூடிபோட்டு 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.</p><p>

பின்னர் இதில் மீதமுள்ள கருப்பட்டி கலவை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
இதனைத்தொடர்ந்து ஒரு வாணலில் நெய், தேங்காய் துருவல் மற்றும் கருஞ்சேரகம் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
</p><p>
இறுதியாக அடுப்பில் குழிப்பணியார சட்டி வைத்து நெய் சேர்த்து மாவை ஊற்றி பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான கருப்பட்டி பணியாரம் தயார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T12:43:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! சரித்திரம் படைத்த இந்திய மகளிர்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-team-beat-england-by-270-runs-1783945775"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-team-beat-england-by-270-runs-1783945775</id>
            <summary type="text">இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.&amp;nbsp;யஸ்டிகா பாட்டியா&amp;nbsp;சதம் 

இந்தியா மற்றும் இங்கிலாந்து மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.&nbsp;</p><h2>யஸ்டிகா பாட்டியா&nbsp;சதம் </h2><p>

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/193cb446-877a-44b6-a7b7-d088229e6aa8/26-6a54de9dd51aa.webp' /></p><p></p><p>
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 285 ஓட்டங்களும், இங்கிலாந்து 170 ஓட்டங்களும் எடுத்தன.
</p><p>
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 341 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. யஸ்டிகா பாட்டியா (Yastika Bhatia) 113 ஓட்டங்கள் எடுத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a372b346-7e92-45ab-b1d8-42bedd2ae2d4/26-6a54de9f75cae.webp' /></p><h2>

சரித்திர வெற்றி</h2><p>அடுத்து 457 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 186 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஸ்நேக் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59ad5977-7f31-47a4-b64b-b7354a0c758b/26-6a54dbf6a9291.webp' />&nbsp;</p><p>இதன்மூலம் இந்திய அணி 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரித்திர வெற்றி பெற்றது. </p><p>

142 ஆண்டுகால லார்ட்ஸ் கிரிக்கெட் வரலாற்றில் நடந்த முதல் மகளிர் டெஸ்டில் இந்திய வென்று சாதித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bd2aa52-74a0-41c8-b6cd-29cd7437f3d5/26-6a54de9ec26da.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0eafd354-67c3-4bbe-a476-2fa2d16fdd4d/26-6a54dbf60622e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T12:42:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-student-dies-us-crash-days-after-graduating-1783946315"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-student-dies-us-crash-days-after-graduating-1783946315</id>
            <summary type="text">கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணொருவர் சாலை விபத்தொன்றில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணொருவர் சாலை விபத்தொன்றில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.</p><h3>

கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்
</h3><p>
ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயியான அட்லூரி வசந்தராவின் மகள் பிரசன்னா அட்லூரி (25).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34843003-36b1-43b8-8cfd-bdc7f79c3547/26-6a54dc4d2c590.webp' /></p><p>
உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற அட்லூரி, சமீபத்தில்தான் தன் பட்டப்படிப்பை முடித்திருந்தார்.</p><p>

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, நியூயார்க்கிலுள்ள கோவில் ஒன்றிற்கு காரில் சென்றுள்ளார் பிரசன்னா. அவருடன் மூன்று பேர் பயணித்துள்ளார்கள்.</p><p>

நியூயார்க்கில் அவரது கார் சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார் ஒன்று நின்றுகொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது.&nbsp;</p><p></p><p>
இந்த துயர விபத்தில், பிரசன்னாவும், அவருடன் பயணித்த மற்றொருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மற்ற நபர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.</p><p>

தங்கள் சேமிப்பு முழுவதையும் செலவிட்டுத்தான் பிரசன்னாவை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளனர் அவரது பெற்றோர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95f30b53-a8ab-478f-8a69-e50c5106f143/26-6a54dc4dcf6bf.webp' /></p><p>
இந்நிலையில், மகள் படித்து முடித்தாயிற்று, இனி தாங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் பிரசன்னாவின் பெற்றோர் காத்திருக்க, மகள் உயிரிழந்துவிட்ட செய்தி கேட்டு அந்தக் குடும்பம் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது.</p><p>

ஏற்கனவே பிரசன்னாவின் கல்விக்கடனை அடைக்க பணம் தேவைப்படும் நிலையில், என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போயுள்ள அவரது குடும்பத்தினர், தங்கள் மகள் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T12:38:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பிரதமர் ராஜினாமா... மாற்றியமைக்கப்படும் கேபினட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-pm-yulia-svyrydenko-resigns-1783945589"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-pm-yulia-svyrydenko-resigns-1783945589</id>
            <summary type="text">உக்ரைன் ஜனாதிபதி கேபினட்டில் மாற்றம் செய்ய இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உக்ரைன் பிரதமர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உக்ரைன் பிரதமர் ராஜி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் ஜனாதிபதி கேபினட்டில் மாற்றம் செய்ய இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உக்ரைன் பிரதமர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
</p><h3>
உக்ரைன் பிரதமர் ராஜினாமா...</h3><p>

உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, கேபினட்டில் மாற்றங்கள் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bc55447-141c-4649-b42d-41769b886b53/26-6a54d97767219.webp' /></p><p>
ரஷ்யாவுடனான போரின்போது மேம்படுத்தப்பட்ட அரசியல் வியூகத்தை நடைமுறைப்படுத்த இந்த மாற்றங்கள் தேவை என்று கூறியிருந்தார் அவர்.
</p><p>
அதன் தொடர்ச்சியாகவே உக்ரைன் பிரதமரான யூலியா (Yulia Svyrydenko) தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
</p><p>
விடயம் என்னவென்றால், உக்ரைனைப் பொருத்தவரை, பிரதமர் ராஜினாமா செய்தார் என்றால், அவரைத் தொடர்ந்து முழு அமைச்சரவையும் ராஜினாமா செய்யவேண்டும்.&nbsp;</p><p></p><p>
யூலியா பிரதமராவதற்கு முன், நாட்டின் பொருளாதாரத்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பதவி வகித்தவர் ஆவார்.
</p><p>
யூலியா, வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க உக்ரைன் கனிமங்கள் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கியதன் மூலம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T12:29:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.1000 கடன் - 25,000 ஆக திருப்பி கொடுத்த நண்பர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-return-25000-for-1000-borrowed-35-years-ago-1783945196"></link>
            <id>https://news.lankasri.com/article/man-return-25000-for-1000-borrowed-35-years-ago-1783945196</id>
            <summary type="text">35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.1000 கடனை 25,000 ஆக அவரதுநண்பர் தற்போது திருப்பி வழங்கியுள்ளார்.

1991 ஆம் ஆண்டில் வாங்கிய ரூ.1000
கேரள மாநிலத்தை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.1000 கடனை 25,000 ஆக அவரதுநண்பர் தற்போது திருப்பி வழங்கியுள்ளார்.
</p><h3>
1991 ஆம் ஆண்டில் வாங்கிய ரூ.1000</h3><p>
கேரள மாநிலத்தை சேர்ந்த இஸ்மாயிலும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த லச்சன்னாவும், 1991 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் பணி செய்த போது ஒரே அறையில் 5 ஆண்டுகள் தங்கி நண்பர்களாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a3effc-2e67-4b1f-9936-5ba8bb42248b/26-6a54d7ee3f212.webp' /></p><p>
அப்போது, இஸ்மாயில் லச்சனாவிடம் இருந்து 120 சவூதி ரியால்களைக் கடனாக வாங்கியுள்ளார். அப்போது அதன் மதிப்பு இந்திய மதிப்பில் 1,000 ரூபாயாக இருந்தது.</p><p>

லச்சண்ணா அதன் பின்னர் இந்தியா திரும்பிய நிலையில், அந்த காலக்கட்டத்தில் கைபேசிகளோ சமூக ஊடகங்களோ இல்லாததால், இருவரிடையேயான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
ரூ.25,000 ஆக திருப்பியளித்த நண்பர்</h3><p>
ஆனால் அந்த கடனை மறக்காத இஸ்மாயில், அதனை திருப்பி தரவேண்டும் என நினைத்துள்ளார். லச்சண்ணா தெலுங்கானாவின் தர்மபுரியை சேர்ந்தவர் என்பது மட்டும் நினைவில் இருந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46688a66-529e-4098-a490-4f781f2833cf/26-6a54d7ed8c897.webp' /></p><p>
தர்மபுரிக்கு சென்ற அவர், அங்கு விசாரித்து லச்சண்ணாவின் வீட்டை கண்டுபிடித்து அப்போது வாங்கிய ரூ.1,000 ஐ, ரூ.25,000 ஆக அவரது குடும்பத்தினரிடம் திருப்பி வழங்கியுள்ளார்.</p><p>
இதனை தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் லச்சண்ணாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளார்.
</p><p>
35 ஆண்டுகளுக்கு பின்னர், ரூ.1000 த்தை ரூ.35,000 ஆக திருப்பி வழங்கிய இஸ்மாயிலின் செயலை கண்டு லச்சண்ணா வியப்படைந்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T12:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை காலம்! 50 ஆண்டுகால மைல்கல் கடந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/record-broken-heatwave-in-uk-after-50-years-1783943559"></link>
            <id>https://news.lankasri.com/article/record-broken-heatwave-in-uk-after-50-years-1783943559</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வரலாற்றிலேயே மிகவும் அதிக வெப்பநிலை கொண்ட காலமாக பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.50 ஆண்டுகளுக்கு முன்பு

1976ஆம் ஆண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வரலாற்றிலேயே மிகவும் அதிக வெப்பநிலை கொண்ட காலமாக பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>50 ஆண்டுகளுக்கு முன்பு</h2><p>

1976ஆம் ஆண்டு பிரித்தானியாவின் வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க கோடைக்காலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14f786f4-b910-4713-bee9-26098f2b1088/26-6a54d2c5283c7.webp' />&nbsp;</p><p></p><p>

அந்த ஆண்டில், அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு 14 நாட்கள் தொடர்ச்சியாக 30 டிகிரி செல்சியஸுக்கும் மேல் இருந்தது.</p><p>


ஆனால், தற்போது 15 நாட்களைக் கடந்து 50 ஆண்டுகால மைல்கல்லை பிரித்தானியா தாண்டியள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

the University of Reading-யின் வானியல் ஆய்வு மையம் 1908ஆம் ஆண்டு முதல் வெப்பநிலை குறித்த தரவுகளை பதிவு செய்து வருகிறது. </p><h2> 

முக்கியமான விடயத்தை நமக்கு உணர்த்துகிறது</h2><p>இதுகுறித்து The University of Reading-ஐ சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ சார்ல்டன்-பெரெஸ் கூறுகையில்,

"அரை நூற்றாண்டு காலமாக, ஒவ்வொரு வெப்பமான கோடைக்காலத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவுகோலாக 1976ஆம் ஆண்டு விளங்கியது. இப்போது அந்த இடத்தை 2026ஆம் ஆண்டு பிடித்துள்ளது.</p><p>1976யில் பதிவான 14 நாட்களை முறியடித்து, இந்த ஆண்டில் இதுவரை 30 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம் நிலவிய 15 நாட்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம்; மேலும் கோடைக்காலம் முடிவடைய இன்னும் ஆறு வாரங்கள் உள்ளன. இது ஒரு முக்கியமான விடயத்தை நமக்கு உணர்த்துகிறது" என்றார்.
</p><p>
 
இந்த வாரமும் வெப்பமான வானிலை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில நாட்களில் புதிய உச்சபட்ச சாதனை ஒன்று பதிவாக வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றன.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5b44a5-8724-459c-a94d-e93b1852c645/26-6a54d5dda7c81.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T11:57:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர்: சமீபத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/neuschwanstein-accust-fights-extradition-to-us-1783927780"></link>
            <id>https://news.lankasri.com/article/neuschwanstein-accust-fights-extradition-to-us-1783927780</id>
            <summary type="text">ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணொருவரை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர் ஒருவர், தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணொருவரை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர் ஒருவர், தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
</p><h3>
ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்கள்</h3><p>

அமெரிக்காவின் Illinois பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த ஈவா (Eva Liu, 21) மற்றும் கெல்சி (Kelsey Chang, 22) என்னும் இரண்டு இளம்பெண்கள், ஜேர்மனியிலுள்ள Neuschwanstein Castle என்னும் புகழ் பெற்ற மாளிகை ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e10bfeeb-df43-4d2f-a64e-7d0547ae463d/26-6a5493e6132b2.webp' /></p><p>&nbsp;இந்த மாளிகை பல்வேறு திரைப்படங்களில் காட்டப்பட்டுள்ளதுடன், டிஸ்னி திரைப்படங்கள் பலவற்றில் காட்டப்படும் மாளிகைகள் இந்த மாளிகையின் மாதிரியை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654160e6-d846-489d-b692-7aedb917ec6c/26-6a5493e6b7f57.webp' /></p><p>ஆகவே, ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Schwangau என்னுமிடத்தில் அமைந்துள்ள அந்த மாளிகையைக் காண, ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள்.
</p><h3>
கொடூர நபரிடம் சிக்கிய பெண்கள்</h3><p>

இந்நிலையில், அந்த மாளிகைக்கு சுற்றுலா சென்ற ஈவா மற்றும் கெல்சியை சந்தித்த அமெரிக்காவைச் சேர்ந்த ட்ராய் (Troy Bohling, 33) என்னும் நபர், தான் அந்த மாளிகையை ரொமாண்டிக்கான ஒரு இடத்திலிருந்து காண உதவுவதாகக் கூறி அவர்களை ஒரு பாலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63f42888-3ddf-4715-abc4-bec4e929c2d1/26-6a5493e767566.webp' /></p><p>ஆனால், அந்த இடத்துக்குச் சென்றதும் ட்ராய் ஈவாவை தரையில் தள்ளி அவரது உடைகளைக் களைய முற்பட்டிருக்கிறார். கெல்சி அவரைத் தடுக்க முயல, அவரைப் பிடித்து கீழே தள்ளியிருக்கிறார் அந்த நபர். </p><p>கெல்சி 160 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கெல்சி கீழே விழுந்ததைக் கண்டபிறகும் ஈவாவை விடாத அந்த நபர், சுயநினைவிழக்கும் வரை அவரது கழுத்தை நெறித்து, வன்புணர்ந்து, பின்னர் அவரையும் 160 அடி உயர பாலத்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். </p><p></p><p>
கீழே விழுந்த கெல்சிக்கு தலையில் அடிபட்டாலும் அவர் பிழைத்துக்கொண்டார். ஆனால், ஈவா உயிரிழந்துவிட்டார். கைது செய்யப்பட்ட ட்ராய்க்கு ஜேர்மனியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
நாடுகடத்துவதை எதிர்த்து வழக்கு
</h3><p>
ட்ராயின் தண்டனைக்காலம் முடிவடைந்ததும், அவர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட வெளியுறவு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e9e4b3-3c47-4500-b6c0-06d953754c09/26-6a5493e817ab1.webp' /></p><p>ஆனால், தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து Augsburg நகரிலுள்ள நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ட்ராய்.
</p><p>
தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்தினால், அங்கு தன் குற்றங்களுக்காக மீண்டும் ஒரு வழக்கு விசாரணையை தான் எதிர்கொள்ள நேரிடும் என்றும், அமெரிக்காவில் தனக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார் ட்ராய்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77e717e6-e2ff-44a2-aef1-37f753c5e313/26-6a5493e8c0910.webp' /></p><p>விடயம் என்னவென்றால், ஜேர்மன் சட்டப்படி, 20 முதல் 25 ஆண்டுகளுக்கு ஜேர்மன் சிறையில்தான் செலவிட இருக்கிறார் ட்ராய்.
</p><p>
ஆக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரை நாடுகடத்தும் ஆணை நிறைவேற்றப்படாமலும் போகலாம். இந்நிலையில், தனது தண்டனைக்காலத்துக்குப் பிறகு அவர் நாடுகடத்தப்படுவதைக் குறித்து, இப்போதைக்கு எந்த மறு ஆய்வு நடைமுறையும் இல்லை என அரசு சட்டத்தரணி அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T11:35:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தார் முன்னாள் மன்னர் மறைவுக்கு இந்தியாவில் தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-mourns-qatars-father-amir-1783941568"></link>
            <id>https://news.lankasri.com/article/india-mourns-qatars-father-amir-1783941568</id>
            <summary type="text">கத்தாரின் முன்னாள் மன்னர் மறைவுக்கு இந்தியாவில் தேசிய அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

கத்தாரின் தந்தை என அழைக்கப்படும் முன்னாள் மன்னர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கத்தாரின் முன்னாள் மன்னர் மறைவுக்கு இந்தியாவில் தேசிய அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
</p><p>
கத்தாரின் தந்தை என அழைக்கப்படும் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்-தானி 74 வயதில் நேற்று (ஜூலை 12) காலமானார். </p><p>அவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக இந்தியாவில் இன்று (ஜூலை 13) ஒரு நாள் தேசிய துக்கத்தை அனுசரிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f08cad15-d97b-46a1-bb1f-76211fd37359/26-6a54c9c2702e6.webp' /></p><p>இந்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அந்த நாளில் நாட்டின் அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், எந்தவிதமான அதிகாரப்பூர்வ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
பிரதமர் நரேந்திர மோடி, “ஷேக் ஹமத் ஒரு தலைவராக கத்தாரை அபாரமான வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் கொண்டு சென்றார். அவர் இந்தியாவின் உண்மையான நண்பர்” என்று சமூக ஊடகங்களில் அனுதாபம் தெரிவித்தார்.
</p><p></p><p>ஷேக் ஹமத் 1995 முதல் 2013 வரை கத்தாரை ஆட்சி செய்தார். அவரது ஆட்சிக் காலத்தில், கத்தார் உலகின் மிகப்பெரிய LNG (Liquefied Natural Gas) ஏற்றுமதி நாடாக உருவெடுத்தது.</p><p> மேலும், இந்திய-கத்தார் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் 1999, 2005 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்தார்.
</p><p>
கத்தார் அரசு நான்கு நாள் பொது துக்கத்தை அறிவித்துள்ளது. இந்திய அரசின் சார்பில், நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சரான கிரண் ரிஜிஜு விரைவில் கத்தாருக்கு சென்று அனுதாபம் தெரிவிக்க உள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T11:18:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் தலைநகர் அருகே வேகமாகப் பரவும் காட்டுத்தீ: 800 ஹெக்டேர் காடு கபளீகரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/massive-fontainebleau-wildfire-near-paris-1783940836"></link>
            <id>https://news.lankasri.com/article/massive-fontainebleau-wildfire-near-paris-1783940836</id>
            <summary type="text">பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு அருகே அமைந்துள்ள காடு ஒன்றில் காட்டுத்தீ வேகமாக பரவிவருகிறது.

வேகமாகப் பரவும் காட்டுத்தீ

பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு அருகே அமைந்துள்ள காடு ஒன்றில் காட்டுத்தீ வேகமாக பரவிவருகிறது.
</p><h3>
வேகமாகப் பரவும் காட்டுத்தீ
</h3><p>
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ளது Fontainebleau காடு.
</p><p>
மக்கள் பொழுதுபோக்குவதற்காக விரும்பிச் செல்லும் இடங்களில், இந்த Fontainebleau காடும் ஒன்றாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04663b1d-6e9b-4dc8-b559-bcf52d98a17c/26-6a54c6e599a78.webp' /></p><p>
ஆனால், தற்போது அந்தக் காட்டில் காட்டுத்தீ வேகமாகப் பரவிவருகிறது. சுமார் 800 ஹெக்டேர் காட்டை காட்டுத்தீ கபளீகரம் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
பாரீஸிலிருந்து வெளியே செல்லும் A6 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. தீ கேபிள்களை சேதப்படுத்தியதால் பாரீஸையும் Lyon நகரையும் இணைக்கும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது சீர் செய்யப்பட்டுவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், பாரீஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக தீயை அணைக்க தீயணைக்கும் விமானங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.
</p><p>
அத்துடன், கனடாவும் இரண்டு தீயணைக்கும் விமானங்களை அனுப்ப இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T11:07:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழிவாங்கும் பட்டியலில் ட்ரம்ப், மெலோனி உட்பட 13 பெயர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-newspaper-list-targets-world-leaders-1783934539"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-newspaper-list-targets-world-leaders-1783934539</id>
            <summary type="text">ஈரானில் வெளிவரும் பத்திரிக்கையொன்றில், கமேனி கொல்லப்பட்டதற்கான பழிவாங்கல் பட்டியலை வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிப்ரவரி 28 அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் வெளிவரும் பத்திரிக்கையொன்றில், கமேனி கொல்லப்பட்டதற்கான பழிவாங்கல் பட்டியலை வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா கமேனி பழிவாங்கும் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
</p><p>
இந்நிலையில், ஈரானின் தலைநகரில் இருந்து வெளிவரும் Hamshahri என்ற பத்திரிகை, 13 வெளிநாட்டு தலைவர்களின் புகைப்படங்களுடன் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது உலகளவில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40c518d3-17c2-43fa-bef2-6ee5339cc155/26-6a54ae4c6769e.webp' /></p><p>பத்திரிகையில் வெளியிடப்பட்ட பட்டியலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் ஆகியோரின் பெயர்கள் உள்ளனர்.
</p><p>
மேலும், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.</p><p></p><p>ஆனால், இந்த பட்டியல் ஈரான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லை. பத்திரிகை வெளியிட்ட தகவல் மட்டுமே. இருப்பினும், இது உலகளவில் பெரும் கவலைக்குரியதாக உள்ளது.
</p><p>
ஈரான், ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க தாக்குதல்களை கண்டிக்காததையும், அமெரிக்க விமானங்களுக்கு தங்கள் வான்வழியை பயன்படுத்த அனுமதித்ததையும் குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம், மத்திய கிழக்கு போரின் சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T10:20:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் இருந்து கிளம்பிய விமானத்தில் மோதிய பறவை: உயிர்தப்பிய 236 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-airways-flight-cancelled-for-bird-strike-1783936345"></link>
            <id>https://news.lankasri.com/article/british-airways-flight-cancelled-for-bird-strike-1783936345</id>
            <summary type="text">லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் மீது பறவை மோதியதால் ரத்து செய்யப்பட்டது. 500 அடி உயரத்தில்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் மீது பறவை மோதியதால் ரத்து செய்யப்பட்டது. </p><h2>500 அடி உயரத்தில்
</h2><p>
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 224 பயணிகள், 12 ஊழியர்களுடன் லண்டனில் இருந்து சென்னை நோக்கி பயணித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3802382e-7cbf-448a-98f5-192a70a30177/26-6a54b60505252.webp' />&nbsp;</p><p></p><p>
சென்னை சர்வதேச விமானத்தில் தரையிறங்குவதற்கு சுமார் 500 அடி உயரத்தில் விமானம் இருந்தபோது, திடீரென விமானத்தின் முன் பகுதியில் பறவை ஒன்று மோதியது.
</p><p>
விமானத்தின் எஞ்சின் பகுதிக்குள் அந்த பறவை சிக்கிக் கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கினார்.</p><h2> 

உயிர்தப்பிய&nbsp;236 பேர்</h2><p>இதன் காரணமாக, விமானத்தில் இருந்த 236 பேரும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
</p><p>
அதன் பின்னர் விமானத்தில் பறவை மோதியது குறித்து அறிந்த விமான பொறியாளர் குழுவினர், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்தனர்.
</p><p>
அப்போது பறவை மோதியதில் விமானம் சேதமடைந்திருந்ததால் அதனை உடனடியாக மீண்டும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. </p><p>

அதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு செல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc09458-e1d8-4caf-b05b-d92119d28940/26-6a54b605b2878.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T09:56:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியிடைநீக்கம்: நாடொன்றின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trukey-suspends-100-doctors-c-section-deliveries-1783934915"></link>
            <id>https://news.lankasri.com/article/trukey-suspends-100-doctors-c-section-deliveries-1783934915</id>
            <summary type="text">துருக்கி, தன் நாட்டு மருத்துவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பணியிடைநீக்கம் செய்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியிடைநீக்கம்

...</summary>
            <content type="html"><![CDATA[<p>துருக்கி, தன் நாட்டு மருத்துவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பணியிடைநீக்கம் செய்துள்ளது.
</p><h3>
நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியிடைநீக்கம்</h3><p>

துருக்கி நாடு, நூற்றுக்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்களை பணியிடைநீக்கம் செய்துள்ளதுடன் அவர்களுக்கு அபராதமும் விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/905ce669-86ff-4090-a4cb-1335234a4215/26-6a54afc51afd3.webp' /></p><p>
</p><p>
அத்துடன், மீண்டும் கட்டாய மருத்துவப் பயிற்சி மேற்கொள்ளவும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><h3>
என்ன காரணம்?
</h3><p>
அதாவது, துருக்கியில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. </p><p></p><p>
துருக்கி, OECD நாடுகள் என அழைக்கப்படும் 38 நாடுகள் கொண்ட அமைப்பில் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த அமைப்பிலுள்ள நாடுகளிலேயே துருக்கியில்தான் அதிக பெண்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.</p><p>

2023ஆம் ஆண்டு நிலவரப்படி, பிரசவிக்கும் 1,000 பெண்களில் 615 பேர் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம்தான் குழந்தை பெற்றுள்ளார்கள்.

அதாவது, 10இல் 6 பேர் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்துள்ளார்கள்.</p><p>
ஆகவே, 2025ஆம் ஆண்டு, தனியார் மருத்துவமனைகள் சரியான மருத்துவக் காரணம் இன்றி சிசேரியன் முறையில் பிரசவம் பார்க்க துருக்கி அரசு தடை விதித்தது.
</p><p>
ஆக, சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிப்போர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில்தான் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்களை பணியிடைநீக்கம் செய்துள்ளதுடன் அவர்களுக்கு அபராதமும் விதித்துள்ளது துருக்கி அரசு.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T09:28:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா விடுத்துள்ள எச்சரிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-issue-travelling-warns-for-france-1783932963"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-issue-travelling-warns-for-france-1783932963</id>
            <summary type="text">பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களுக்கு கனடா பயண எச்சரிக்கைகள் விடுத்துள்ளது.

எச்சரிக்கைகள்

பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களுக்கு கனடா பயண எச்சரிக்கைகள் விடுத்துள்ளது.
</p><h3>
எச்சரிக்கைகள்</h3><p>

பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களுக்கு கனடா, பயங்கரவாதம், காட்டுத்தீ, திருட்டுகள் மற்றும் வானிலை தொடர்பில் பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
</p><h3>
பயங்கரவாதம்</h3><p>

பிரான்ஸ் அரசு, கோடை முதல் கிறிஸ்துமஸ் வரையிலான காலகட்டத்திற்காக பாதுகாப்புத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
</p><p>
அத்திட்டம், அனுமதியின்றி ட்ரோன்கள் பறப்பதைக் கட்டுப்படுத்துவது, சுற்றுலாத்தலங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பை அதிகரிப்பது மற்றும் பொது மற்றும் அரசு கட்டிடங்களுக்கான பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e009a26-6ddb-46cc-82c2-3477173e90fe/26-6a54a825eda8c.webp' /></p><p>
</p><p>
அதாவது, மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஆபத்து அதிகரித்துள்ளதால், அது தொடர்பான நடவடிக்கைகளை பிரான்ஸ் எடுத்துவருகிறது</p><p>

ஆக, பிரான்சில் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படலாம் என பிரான்சே அறிவித்துள்ளதால், அங்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளுமாறு கனடா அறிவுறுத்தியுள்ளது.</p><h3>

வெப்பம் மற்றும் காட்டுத்தீ
</h3><p>
பிரான்சில் வெப்பம் அதிகமாக காணப்படுவதால், ஈபிள் கோபுரம் சீக்கிரமாக மூடப்படுவது, விழாக்களின்போது வாணவேடிக்கைகளுக்குத் தடை போன்ற நடவடிக்கைகள் விதிக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசு எடுத்துவருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3126a48-8134-4cfd-889a-0b222363c471/26-6a54a82546a84.webp' /></p><p>
காட்டுத்தீ அபாயம் நிலவுவதால், வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகள் போன்ற இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆகவே, கனேடியர்கள் விதிகளைப் பின்பற்றுமாறும், அபாயகரமான இடங்களைத் தவிர்க்குமாறும் கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.
</p><h3>
திருட்டு</h3><p>

பாரீஸ் போன்ற இடங்களில், பேச்சுக்கொடுத்து கவனத்தைத் திருப்பியும், ஜூஸ் போன்றவற்றை மேலே வேண்டுமென்றே கொட்டியும், கவனத்தை திசை திருப்பி திருடும் கூட்டம் உள்ளதாகவும், ஆகவே கனேடியர்கள் தங்கள் பாஸ்போர்ட் போன்ற விடயங்களை தனியாக பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும், பாஸ்போர்ட் நகல் ஒன்றை தாங்கள் தங்கியிருக்கும் அறைகளில் வைத்துக்கொள்ளுமாறும், கையில் அதிக அளவில் ரொக்கம் கொண்டு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T09:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் என்ன? (13-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1783933216"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1783933216</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (13-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
&amp;nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (13-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,309,161.00 ஆகும்.</p><p>

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,180.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 369,450.00.</p><p>

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,340.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 338,700.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,410.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 323,300.00.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T09:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[563 குழந்தைகளுக்கு 25 வயது பிரித்தானியரின் பெயரை சூட்டிய பெரு மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/erling-haaland-name-for-563-peru-babies-1783927630"></link>
            <id>https://news.lankasri.com/article/erling-haaland-name-for-563-peru-babies-1783927630</id>
            <summary type="text">பெரு நாட்டில் நோர்வே கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்டின் பெயர் 563 குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.எர்லிங் ஹாலண்ட்

நடப்பு FIFA உலகக்கிண்ணக் கால்பந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரு நாட்டில் நோர்வே கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்டின் பெயர் 563 குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.</p><h2>எர்லிங் ஹாலண்ட்
</h2><p>
நடப்பு FIFA உலகக்கிண்ணக் கால்பந்து தொடரில், தனது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் எர்லிங் ஹாலண்ட்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/883aa704-4463-4987-8836-3aea0ab3028a/26-6a54944a9efe1.webp' />&nbsp;</p><p></p><p>
இங்கிலாந்தில் பிறந்த எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) பின்னாளில் நோர்வேக்கு இடம்பெயர, தற்போது அந்நாட்டு அணிக்காக விளையாடி வருகிறார்.
</p><p>
இந்த நிலையில், தென் அமெரிக்க நாடான பெருவில் எர்லிங் ஹாலண்டின் பெயர் 563 பிறந்த குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.</p><p>

நெய்மர், மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற வீரர்கள் வரிசையில் 25 வயதாகும் எர்லிங் ஹாலண்டின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.</p><p>

அதே சமயம் ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமான லமின் யமால் (Lamine Yamal), ஏற்கனவே 1,241 பெருவியர்களைத் தனது குடும்பப் பெயரை முதல் பெயராக ஏற்றுக்கொள்ளத் தூண்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/957bc6c3-7318-4519-acc2-4439506bb030/26-6a54944b6d8ff.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T08:50:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புற்றுநோயிலிருந்து குணமடைந்த பிரித்தானிய பிரபலம் அவுஸ்திரேலியாவில் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/actor-sam-neill-passed-away-at-78-1783930647"></link>
            <id>https://news.lankasri.com/article/actor-sam-neill-passed-away-at-78-1783930647</id>
            <summary type="text">ஜுராசிக் பார்க் படப்புகழ் நடிகர் சாம் நீல் அவுஸ்திரேலியாவில் காலமானார்.&amp;nbsp;சாம் நீல்
1975ஆம் ஆண்டில் வெளியான Landfall என்ற நியூஸிலாந்து திரைப்படத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜுராசிக் பார்க் படப்புகழ் நடிகர் சாம் நீல் அவுஸ்திரேலியாவில் காலமானார்.&nbsp;</p><h2>சாம் நீல்</h2><p>
1975ஆம் ஆண்டில் வெளியான Landfall என்ற நியூஸிலாந்து திரைப்படத்தில் அறிமுகமானவர் சாம் நீல் (Sam Neill).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0424e278-ead5-4b5f-bc36-2fd05fe1bd6e/26-6a54a04751875.webp' />&nbsp;</p><p></p><p>

வடக்கு அயர்லாந்தின் Omagh-யில் பிறந்த நடிகர் சாம் நீல் (Sam Neil), நியூஸிலாந்திற்கு குடிபெயர்ந்த பின் நடிகராகவும், தொழிலதிபதிராகவும் உருவெடுத்தார். </p><p>

1993யில் வெளியான ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற சாம் நீல் கலைப்படங்கள் முதல் ஹாலிவுட்டின் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.&nbsp;</p><h2> 78வது வயதில்&nbsp;</h2><p>

சாம் நீல் சமீபத்தில் இரத்தப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்குப் பிறகு அதிலிருந்து குணமடைந்திருந்தார். </p><p> 

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது 78வது வயதில் சாம் நீல் காலமானார். அவரது இறப்பை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். </p><p>

அவரது மரணம் திடீரெனவும், எதிர்பாராத விதமாகவும் நிகழ்ந்ததாகவும் சாம் நீலின் குடும்பத்தினர் விவரித்தனர்.
</p><p>
மேலும், அவரது இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கும் வேளையில், தங்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c65bc51-3059-4d9b-b416-929e31b55ec7/26-6a54a04807211.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T08:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை- 10,000 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-heatwave-10000-deaths-reported-1783929253"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-heatwave-10000-deaths-reported-1783929253</id>
            <summary type="text">ஐரோப்பாவில் கடந்த ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக 10,000-க்கும் மேற்பட்ட கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

EuroMOMO என்ற அமைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவில் கடந்த ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக 10,000-க்கும் மேற்பட்ட கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.</p><p>

EuroMOMO என்ற அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, இதில் பெரும்பாலானோர் (9,000-க்கும் மேற்பட்டோர்) 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆவர்.</p><p></p><p>இந்த வெப்ப அலை பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
வெப்பம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டன, மின்சாரம் பாதிக்கப்பட்டது, மேலும் பல இடங்களில் பல இடங்களில் வெப்ப சாதனைகள் முறியடிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3ad900e-f983-4de5-9555-005006479b4e/26-6a5499a771f95.webp' /></p><p>டென்மார்க் நாட்டின் Statens Serum Institut மருத்துவ நிபுணர் லாஸ்ஸே வெஸ்டர்கார்ட், “இந்த அளவுக்கு அதிகமான உயிரிழப்பு இந்த காலகட்டத்தில் அரிதானது. இதற்கு காரணம் கடும் வெப்பமே” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
அறிவியலாளர்கள், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றம் இல்லாமல் இவ்வாறான வெப்ப அலை நிகழ்வது “மிகவும் சாத்தியமற்றது” என கூறியுள்ளனர்.</p><p> உலக வெப்பமயமாதல் காரணமாக வெப்ப அலைகள் அடிக்கடி, மேலும் தீவிரமாக நிகழ்கின்றன.

பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் மிக அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக பெல்ஜியத்தில், 2000-ஆம் ஆண்டிலிருந்து பதிவாகியுள்ள வெப்ப அலைகளில் இதுவே மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p></p><p>இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் மட்டும் 2,700 பேர் வெப்பத்தால் உயிரிழந்ததாக தனி ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 42 சதவீத உயிரிழப்புகள் உலக வெப்பமயமாதலால் அதிகரித்த வெப்பத்தால் ஏற்பட்டவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
</p><p>
இந்த தரவுகள், காலநிலை மாற்றம் மனித வாழ்வில் ஏற்படுத்தும் ஆபத்துகளை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T08:20:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை மறுநாள் அஸ்தமனமாகும் குரு.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-guru-asthamanam-1783928355"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-guru-asthamanam-1783928355</id>
            <summary type="text">நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
</p><p>
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
</p><p>
இந்நிலையில், குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார்.
</p><p>
மேலும், ஜூலை 15ஆம் திகதியான நாளை மறுநாள் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார்.
</p><p>
அந்தவகையில், குரு பகவானின் இந்த அஸ்தமனத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>துலாம்</h2><ul><li>மெதுவாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். </li><li>கடின உழைப்பு பணியிடத்தில் பாராட்டப்படும். </li><li>வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். </li><li>சொந்தமாக தொழிலை தொடங்க இக்காலம் சிறப்பாக இருக்கும். </li><li>பணிபுரிபவர்களுக்கும் இக்காலம் பொற்காலமாக இருக்கும். </li><li>முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும். </li><li>பண வரவு அதிகரிக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91afe56c-e9e9-46de-a2b8-6e8d506626a7/26-6a549625a2ef4.webp' /></p><p>
</p><h2>
விருச்சிகம்</h2><ul><li>ஒரு பெரிய முடிவை எடுப்பார்கள். </li><li>வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். </li><li>மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். </li><li>அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். </li><li>வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு தேடி வரும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34037729-ab8b-40e5-9329-28b6164b0fe2/26-6a5496265459c.webp' /></p><p>
</p><h2>
மீனம் </h2><ul><li>

வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். </li><li>பணியிடத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். </li><li>புதுமண தம்பதிகள் நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.</li><li> சரியான முடிவுகளை எடுக்க முடியும்.</li><li> மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். </li><li>பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். </li><li>புதிய வருமான வழிகள் உருவாகும்.&nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9136e83e-e7f7-4aa5-b216-c8b02564f7d8/26-6a54962706909.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் 
ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. 
(லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T08:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகும் தமிழ்நாட்டு வீரர்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ashwin-dravid-in-race-to-england-test-team-coach-1783929613"></link>
            <id>https://news.lankasri.com/article/ashwin-dravid-in-race-to-england-test-team-coach-1783929613</id>
            <summary type="text">இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளருக்கு ராகுல் டிராவிட், தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிசீலனையில் உள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளருக்கு ராகுல் டிராவிட், தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிசீலனையில் உள்ளது.</p><h3>

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர்</h3><p> 

2022 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7629c18-ec92-44da-a805-d49ebb4a42c2/26-6a549b0e9bf25.webp' /></p><p> 

சமீபத்தில் அவுஸ்திரேலியா உடனான ஆஷஸ் தொடர், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் என அடுத்தது இங்கிலாந்து டெஸ்ட் அணி மோசமாக செயல்பட்டு வந்த நிலையில், டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் விலகியுள்ளார். </p><p>

அதேவேளையில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக மெக்கல்லம் தொடர்கிறார்.&nbsp;</p><p></p><p>

அடுத்த டெஸ்ட் பயிற்சியாளருக்கான தேடலில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இந்த போட்டியில் இந்திய ஜாம்பவான்களின் பெயர்கள் அடிபடுகின்றன.</p><h3> 

அஸ்வின், டிராவிட்டிற்கு வாய்ப்பு</h3><p> 

முன்னாள் இந்திய வீரரான, தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிசீலனையில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da0b9568-cec3-4e52-bb88-20fb5586be18/26-6a549b0f564e7.webp' /></p><p>

இவருக்கு பயிற்சியாளராக அனுபவம் இல்லாவிட்டாலும், சர்வதேச போட்டியில் உள்ள சிறந்த அனுபவம் காரணமாக பரிசீலனை பட்டியலில் உள்ளார். </p><p>

இதே போல், மற்றொரு முன்னாள் இந்திய வீரரான ராகுல் டிராவிட்டின் பெயரும் பரிசீலனையில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b052a50-ad01-4303-820a-a6c653a3bb0e/26-6a549b10070ee.webp' /></p><p>

டிராவிட் பயிற்சியாளராக இருந்த போது, இந்திய அணி 2024 T20 உலககிண்ணத்தை வென்றது.&nbsp;</p><p>மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஆண்டி பிளவர் பெயரும் பட்டியலில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c3fd8b7-8064-4b73-b158-b47d29aca4d7/26-6a549b10a9ad7.webp' /></p><p>

இவர் தற்போது RCB அணியின் பயிற்சியாளராக உள்ள நிலையில், தொடர்ந்து 2 முறை அந்த அணி ஐபிஎல் கிண்ணத்தை வென்றுள்ளது. </p><p>

மேலும், இங்கிலாந்து முன்னாள் அணித்தலைவர் ஆண்ட்ரூ பிளின்டாஃப், பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன், முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T08:03:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[CSK அணியில் இருந்து விலகிய பிளெமிங் - எந்த பயிற்சியாளரும் செய்யாத சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/stephen-fleming-steps-down-as-csk-head-coach-1783926618"></link>
            <id>https://news.lankasri.com/article/stephen-fleming-steps-down-as-csk-head-coach-1783926618</id>
            <summary type="text">CSK அணியிமன் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிளெமிங் விலகியுள்ளார்.

CSK அணியில் இருந்து விலகிய பிளெமிங்

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>CSK அணியிமன் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிளெமிங் விலகியுள்ளார்.
</p><h3>
CSK அணியில் இருந்து விலகிய பிளெமிங்</h3><p>

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். </p><p>

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஸ்டீபன் பிளெமிங், 10 போட்டிகளில் 196 ஓட்டங்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி 2வது இடத்தைப் பிடித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c047fbd-6ebb-408d-99fb-e676c8709241/26-6a548f5c6a408.webp' /></p><p>

பிளெமிங் 2009 ஆம் ஆண்டில் வீரராக ஓய்வு பெற்ற பின்னர், சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
</p><p>
இவர் பயிற்சியாளராக இருந்த காலகட்டதில், 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இதே போல், 2010 மற்றும் 2014 CLT20 தொடரில் CSK அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.&nbsp;</p><p>மேலும், 12 முறை பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன், 10 முறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.&nbsp;</p><p>

இது மட்டுமல்லாது, 2022 இல் SA20 தொடரின் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் 2023 இல் மேஜர் லீக் கிரிக்கெட்டின் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகிய சூப்பர் கிங்ஸ் அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ede3f19d-6a9c-4f50-b7a2-17cf231490b3/26-6a548f5d196dc.webp' /></p><p>

தற்போது பரஸ்பர ஒப்புதலுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிளமிங் விலகியுள்ளார். </p><p>

ஒரு ஐபிஎல் அணிக்கு நீண்ட காலமாக பயிற்சியாளராக இருந்தவர், அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற பயிற்சியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">OFFICIAL ANNOUNCEMENT<br><br>The Super Kings and Head Coach Stephen Fleming have mutually decided to part ways.<br>Together, we shared one of the most successful and enduring partnerships in IPL history. The legacy you&#39;ve built will continue to inspire us.<br><br>With immense respect and… <a href="https://t.co/qjvb4oZUuU">pic.twitter.com/qjvb4oZUuU</a></p>&mdash; Chennai Super Kings (@ChennaiIPL) <a href="https://x.com/ChennaiIPL/status/2076550405560111496?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "விளையாட்டுத் துறையில் 18 ஆண்டுகள் என்பது ஒரு வாழ்நாள் போன்றது, மேலும் நான் மிகுந்த நன்றியுணர்வுடன் விடைபெறுகிறேன். </p><p>

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான எனது காலம், எனது பயிற்சியாளர் வாழ்க்கையின் ஒரு பெரும் பாக்கியமாகும். நாங்கள் சாதித்த அனைத்தையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள CSK CEO காசி விஸ்வநாதன், இந்தப் பயணத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே, நாங்கள் எப்படி விளையாடினோம் என்பதை மட்டுமல்ல, ஒரு அணியாக நாங்கள் எப்படி இருக்க விரும்பினோம் என்பதையும் வரையறுக்க ஃபிளெமிங் உதவினார். </p><p>

நிலைத்தன்மை, பணிவு மற்றும் அணிக்கு முதலிடம் அளித்தல் ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு கலாச்சாரத்தை அவர் உருவாக்கினார். 

அவருடைய செல்வாக்கு எல்லைகளைக் கடந்து வெகுதூரம் பரவியுள்ளது.மேலும் இந்த அற்புதமான பயணத்தை நாம் ஒன்றாகப் பகிர்ந்துகொண்டதில் பெருமிதம் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p>CSK அணியின் நட்சத்திர வீரரான தோனி, வயோதிகம் காரணமாக அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகமாக உள்ள நிலையில், அணியின் அடுத்த பயிற்சியாளராக தோனி நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T07:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற இந்திய தம்பதி மாயம்: எழுந்துள்ள சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hyderabad-couple-missing-in-swiss-abscond-doubt-1783923114"></link>
            <id>https://news.lankasri.com/article/hyderabad-couple-missing-in-swiss-abscond-doubt-1783923114</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஒரு இந்திய தம்பதி மாயமாகியுள்ள நிலையில், அவர்கள் குறித்து ஒரு சந்தேகம் எழுந்துள்ளதால், அது குறித்து பொலிசார் விசாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஒரு இந்திய தம்பதி மாயமாகியுள்ள நிலையில், அவர்கள் குறித்து ஒரு சந்தேகம் எழுந்துள்ளதால், அது குறித்து பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.</p><h3>

சுவிட்சர்லாந்துக்குச் சென்ற இந்திய தம்பதி மாயம்</h3><p>

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பப்பா சந்திரசேகரும் (Pabba Chandrasekhar, 51) அவரது மனைவியான ஸ்வப்னாவும் (42), ஜூன் மாதம் 22ஆம் திகதி சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0041c72-eac4-4a3d-87f3-ca3c366aa1e9/26-6a5481ab7c47f.webp' /></p><p>
ஆனால், ஜூலை மாதம் 8ஆம் திகதி, அவர்கள் குடும்பத்தினருடனான தொலைபேசித் தொடர்பை நிறுத்தியுள்ளனர். </p><p>அவர்களுடைய மொபைல்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன.

ஆகவே, தன் பெற்றோரைக் காணவில்லை என தம்பதியரின் மகளான ஷ்ரேயா (23) பொலிசில் புகாரளித்துள்ளார்.&nbsp;</p><p></p><h3>
எழுந்துள்ள சந்தேகம்

விடயம் </h3><p>என்னவென்றால், தொழிலதிபரான சந்திரசேகரும் அவரது மனைவியும், 60க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து தனிப்பட்ட முறையிலும் தொழிலுக்காகவும், அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி சுமர் 50 கோடி ரூபாய் வாங்கியுள்ளனர்.</p><p>

ஆக, அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்களோ என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.
</p><p>
ஆகவே, அவர்கள் எங்கிருக்கிறார்கள், உண்மையாகவே சுவிட்சர்லாந்துக்குதான் சென்றார்களா என்பதை அறிவதற்காக, அவர்களுடைய பயணத் திட்டம், பாஸ்போர்ட் பதிவுகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சரிபார்க்கும் முயற்சிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.
</p><p>
தம்பதியரைக் குறித்து யாருக்காவது தெரியவந்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறும் பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T06:50:58+00:00</updated>
        </entry>
    </feed>
