<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-13T22:34:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் காட்டுத்தீ... பிரித்தானியப் பெண்மணியும் 12 நண்பர்களும் சிக்கியிருக்கலாம் என்று அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-wildfires-brit-wife-12-friends-1783981399"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-wildfires-brit-wife-12-friends-1783981399</id>
            <summary type="text">ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி தனது மனைவியும் 12 நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரும் மரணமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், அங்கிருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி தனது மனைவியும் 12 நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரும் மரணமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், அங்கிருந்து உயிர் தப்பியது எவ்வாறு என்பதை பிரித்தானியர் ஒருவர் விவரித்துள்ளார்.</p><h2>காரில் தப்பிக்க</h2><p>
</p><p>பிரித்தானியரான 70 வயது மால்கம் டிம்ப்ரெல், அல்மேரியா மாகாணத்தில் உள்ள பெடார் (Bédar) கிராமத்தில் தனது மனைவி அனெட் கில்கோருடன் வசித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1558a43-f77d-4970-abb2-912037f395ba/26-6a5567a3efc64.webp' /></p><p> </p><p>கடந்த வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் அப்பகுதி அழிந்தது; இதில் குறைந்தது 13 பேர் மரணமடைந்தனர். தீப்பிழம்புகள் தங்கள் வீடுகளை நெருங்கிய நிலையில், ​​அந்தத் தம்பதியினரும் அவர்களது அண்டை வீட்டாரும் காரில் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். </p><p>இந்த நிலையில், டிம்ப்ரெல் தனது அன்புக்குரிய பூனைகளான சார்லி மற்றும் லில்லிக்காக வீட்டிற்குத் திரும்பும் முடிவை ஒரு நொடிப் பொழுதில் எடுத்தார்.</p><p> அந்த இரண்டு பூனைகளையும் அழைத்துக்கொண்ட பிறகு, டிம்ப்ரெல் தமது மனைவி உள்ளிட்ட அந்தக் குழுவினரைச் சென்றடைய முயன்றார்; ஆனால், அவர்கள் தங்கள் வாகனங்களை விட்டு வெளியேறியிருந்ததைக் கண்டார்.</p><p></p><p>தீப்பிழம்புகளுக்கு நடுவே நடந்து செல்வது மட்டுமே பாதுகாப்பான வழி என்று தனது மனைவியும், மற்ற ஏழு நண்பர்களும் அண்டை வீட்டாரும் முடிவு செய்ததாக அவர் பிபிசியிடம் கூறினார். </p><p>அந்த முடிவை எடுக்க வேண்டாம் என தாம் அலறியதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றே டிம்ப்ரெல் தெரிவித்துள்ளார். மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நெருப்பைக் கடப்பது ஆபத்தான முடிவென்றாலும், அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றே இவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/607f0aa7-0485-422b-8b2d-ce72c5c85c62/26-6a5567a4de095.webp' /></p><p> </p><p>இதனையடுத்து, தனித்துவிடப்பட்ட டிம்ப்ரெல், கைவிடப்பட்ட கார்களில் ஒன்றில், நெருப்பில் இருந்து தப்பிக்க ஒளிந்துகொண்டுள்ளார். ஒருகட்டத்தில் தீப்பிழம்புகள் கடந்து சென்றதை அடுத்து, டிம்ப்ரெல் அவசரகால தீயணைப்புக் குழுவினரால் மீட்கப்பட்டார்.</p><h2>ஐந்து பிரித்தானியர்கள்</h2><p> </p><p>தற்போது டிஎன்ஏ தெளிவுபடுத்தலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அந்தத் தம்பதியின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பாதையில் எட்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. </p><p>இதுவரை ஐந்து பிரித்தானியர்களின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு, சியரா டி லாஸ் ஃபிலாப்ரேஸ் (Sierra de Los Filabres) மலைகளுக்கு அருகிலுள்ள அரை-வறண்ட பகுதியில் இந்தத் தீ விபத்து முதன்முதலில் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80f65106-9ffc-42ba-ac92-8bb18948ec1a/26-6a5567a63dcc6.webp' /></p><p> மரணமடைந்தவர்களில் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீ விபத்து நிகழ்ந்த மையப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 12 உடல்களில், அடையாளம் காணப்பட்ட முதல் ஆறு பேர் இவர்களே என்று அடையாளம் காணும் பணிகளை ஒருங்கிணைக்கும் நிபுணர்கள் தெரிவித்தனர். </p><p>தீ விபத்தில் காயமடைந்த முதிய பிரித்தானியப் பெண் ஒருவர் மருத்துவமனையில் மரணமடைந்ததாக அண்டலூசியப் பிராந்திய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T22:21:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணைகளிலிருந்து ஐரோப்பாவைப் பாதுகாக்க... அமைந்த 10 நாடுகள் கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/coalition-protect-europe-from-1783977410"></link>
            <id>https://news.lankasri.com/article/coalition-protect-europe-from-1783977410</id>
            <summary type="text">ஐரோப்பாவை பாலிஸ்டிக் ஏவுகணைகளிலிருந்து பாதுகாக்க ஒரு கூட்டணியை அமைப்பதாக உக்ரைனும் மேலும் ஒன்பது நாடுகளும் திங்களன்று அறிவித்துள்ளன.தற்காப்பு கட்டமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவை பாலிஸ்டிக் ஏவுகணைகளிலிருந்து பாதுகாக்க ஒரு கூட்டணியை அமைப்பதாக உக்ரைனும் மேலும் ஒன்பது நாடுகளும் திங்களன்று அறிவித்துள்ளன.</p><h2>தற்காப்பு கட்டமைப்பு</h2><p>
</p><p>நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வல்லரசு ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பை எதிர்த்துப் போராடி வரும் உக்ரைனின் அனுபவத்தைப் பயன்படுத்தவும் முடிவு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c206f106-1bc2-441b-85ab-077dc8ce0c43/26-6a5558e3e136d.webp' /></p><p>ஐரோப்பாவிற்காக ஒரு பகிரப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்புத் திறனை உருவாக்குவதே எங்கள் இலக்கு என்று, பாரிஸில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது அந்த 10 நாடுகளும் ஓர் அறிக்கையில் தெரிவித்தன. </p><p>தனது நாட்டைத் தாக்கிச் சிதைத்து, ஐரோப்பாவின் பிற பகுதிகள் மீது குறிவைத்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை உருவாக்குவதில் உதவுமாறு, ஜெலென்ஸ்கி இருபத்து நான்கு தலைவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார். </p><p>இந்த நிலையில், குரூஸ் ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களைக் காட்டிலும் இடைமறித்துத் தடுப்பதற்கு மிகவும் கடினமான பாலிஸ்டிக் ஏவுகணைகளால் ஏற்படும் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைத் தாங்கள் அங்கீகரிப்பதாக ஜெலென்ஸ்கியும் டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் தெரிவித்தனர்.</p><p></p><p> </p><p>மேலும், எதிர்கால ஏவுகணை அச்சுறுத்தல்களைத் தடுத்து முறியடிக்க, ஒருங்கிணைந்த ஏவுகணைத் தற்காப்பு கட்டமைப்பு வடிவிலான ஒரு விரிவான தீர்வு ஐரோப்பாவைப் பாதுகாப்பதற்கு அவசியமென நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் 10 தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.</p><h2>தனித்துவமான அனுபவம்</h2><p> </p><p>மட்டுமின்றி, ரஷ்யா தொடுத்த ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளின் மூலம் உக்ரைன் பெற்ற தனித்துவமான அனுபவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். </p><p>ஆனால், பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான காலக்கெடு எதுவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை; மேலும், இத்திட்டத்தில் பிற நாடுகளும் இணைய வாய்ப்புள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba4ff7b1-abdc-425a-a4d6-2287041d0c1b/26-6a5558e4ae87e.webp' /></p><p>
</p><p>இதனிடையே, பரவலான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்திய சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் முனையங்கள் மீதான உக்ரைனின் சமீபத்திய தொலைதூரத் தாக்குதல்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்களன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.</p><p>மேலும், அவர்கள் ரஷ்யப் பிரதேசத்தைத் தாக்க முயற்சிக்கும் ஒவ்வொரு இடத்திலும், நாங்கள் அதேபோல் பதிலடி கொடுப்போம், ஆனால் எங்கள் தாக்குதல்கள் பல மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று புடின் கூறியுள்ளார். </p><p>இந்த நிலையில், ஐரோப்பிய வெளிவிவகார அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் தனியாகச் சந்தித்து, உக்ரைனின் தேவைகள் மற்றும் ஐரோப்பியக் கண்டத்திற்கு ரஷ்யா விடுக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/402ae082-d69c-4b3f-9b35-d920f527b604/26-6a5558e55f0ed.webp' /></p><p> </p><p>குளிர்காலத்திற்கு முன்னதாக, தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளுடனான முயற்சிகளைத் துரிதப்படுத்த ஜெலென்ஸ்கி தீவிரமாக உள்ளார். </p><p>அக்குளிர்காலத்தில் உக்ரேனியர்களுக்கு மின்சாரம், வெப்பம் மற்றும் தண்ணீர் கிடைப்பதைத் தடுப்பதற்காக ரஷ்யா வழக்கமாகத் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T21:15:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு மாதம் வாட்டியெடுத்த வெப்ப அலை... பிரித்தானியாவில் 2,700 பேர்கள் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-and-wales-heatwaves-1783964885"></link>
            <id>https://news.lankasri.com/article/england-and-wales-heatwaves-1783964885</id>
            <summary type="text">ஜூன் மாதத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளைப் பாதித்த வெப்ப அலை, அதன் உச்சக்கட்டமாக இருந்த மூன்று நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 440 பேர்களின் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூன் மாதத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளைப் பாதித்த வெப்ப அலை, அதன் உச்சக்கட்டமாக இருந்த மூன்று நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 440 பேர்களின் உயிரைப் பறித்ததாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.</p><h2>சிவப்பு எச்சரிக்கை</h2><p>
</p><p>ஜூன் மாதம் மொத்தம் நிலவிய வெப்ப அலை மற்றும் மே மாதத்தில் ஏற்பட்ட ஒரு வெப்ப அலை ஆகியவற்றின் காரணமாக, சுமார் 2,700 பேர்கள் அகால மரணமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fc9b0f8-e095-42b7-80b1-d8efe96d23ca/26-6a5526660ec33.webp' /></p><p> </p><p>காலநிலை நெருக்கடியால் தீவிரமடைந்து வரும் கடும் வெப்பத்தின் ஆபத்தை இந்தத் தரவுகள் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. </p><p>வெளியாகியுள்ள ஆய்வுகலின் அடிப்படையில், மனித நடவடிக்கைகளால் இதுவரை ஏற்பட்டுள்ள 1.4 டிகிரி செல்சியஸ் அளவிலான புவி வெப்பமடைதல் இல்லாவிட்டால், பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் இறந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிய வந்துள்ளது. </p><p>ஒப்பீட்டளவில் பார்த்தால், அரசுப் புள்ளிவிவரங்களின்படி, சாலை விபத்துகளால் நாளொன்றுக்கு சுமார் நான்கு பேரும், மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டால் நாளொன்றுக்கு சுமார் 35 பேரும் மரணமடைகின்றனர். </p><p>ஜூன் மாத வெப்ப அலை உச்சக்கட்டத்தின் விளைவாக, இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமையும் வானிலை ஆய்வு மையமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கைகளை விடுத்தன.</p><p></p><p> </p><p>இது அனைவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்தாலும், அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தால் இளையோர், முதியோர் மற்றும் ஏற்கனவே நோய் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாக அறிவித்திருந்தது. </p><p>2020 மற்றும் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில், கோடைக்கால வெப்ப அலைகளால் பிரித்தானியாவில் 10,000-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததாக UKHSA முன்பு கண்டறிந்தது. </p><p>இதனிடையே, வேகமாக மோசமடைந்து வரும் தீவிர வானிலை நிகழ்வுகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் திட்டங்கள் போதுமானதாக இல்லை என்று பருவநிலை மாற்றக் குழு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எச்சரித்து வருகிறது.</p><h2>கூடுதல் வெப்பம்</h2><p> </p><p>ஜூன் மாதத்தில் நிலவிய வெப்ப அலை ஐரோப்பாவில் இதுவரை பதிவானவற்றிலேயே மிகவும் பரவலானதாகவும் தீவிரமானதாகவும் இருந்தது; இது 20,000-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>மே மாத வெப்ப அலையின்போது மேற்கு லண்டனில் அதிகபட்சமாக 35.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது; அதேவேளையில், ஜூன் மாதத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக சாதனை அளவிலான வெப்பநிலைகள் நிலவிய சூழல், கிழக்கு ஆங்லியாவில் 37 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00f10759-f94e-4065-af03-cc65b5cb5252/26-6a552666eabe0.webp' /></p><p> </p><p>2026 மே 21 முதல் 29 வரை நீடித்த மே மாத வெப்ப அலைக் காலத்தில், வெப்பம் தொடர்பான காரணங்களால் 550 பேர் மரணமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர்கள், பருவநிலை நெருக்கடியால் ஏற்பட்ட கூடுதல் வெப்பத்தின் விளைவாக மரணமடைந்துள்ளனர்.
மேலும், ஜூன் 24-26 வரையிலான உச்சக்கட்ட வெப்ப அலை காலகட்டத்தை உள்ளடக்கிய, ஜூன் 18 முதல் 28 வரையிலான காலகட்டத்தில் சுமார் 2,200 வெப்ப மரணங்கள் நிகழ்ந்ததாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T19:57:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவை உலுக்கிய இன்னொரு நிலநடுக்கம்: மிகப்பெரிய ஆபத்தை எச்சரிக்கும் நிபுணர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/california-earthquake-experts-warn-1783971031"></link>
            <id>https://news.lankasri.com/article/california-earthquake-experts-warn-1783971031</id>
            <summary type="text">தெற்கு கலிபோர்னியாவில் இரண்டு நாட்களில் இரண்டாவது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து நிபுணர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தல் தொடர்பில் எச்சரித்துள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு கலிபோர்னியாவில் இரண்டு நாட்களில் இரண்டாவது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து நிபுணர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தல் தொடர்பில் எச்சரித்துள்ளனர்.</p><h2>பெரிய மற்றும் பேரழிவை</h2><p>
</p><p>கலிபோர்னியாவில் விரைவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்படக்கூடும் என்று நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/385e7b08-3cee-4aa1-af11-3199a6844c26/26-6a553e9241b2b.webp' /></p><p> </p><p>திங்கள்கிழமை உள்ளூர் நேரம் காலை 9:40 மணியளவில், லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து 90 மைல்களுக்கும் குறைவான தொலைவில் 4.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. </p><p>மட்டுமின்றி, ரிக்டர் அளவுகோலில் 4.1 அளவுள்ள நில அதிர்வு ஏற்பட்ட 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில், ஒரு பெரிய மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நெருங்கி வந்துள்ளதாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த புவி இயற்பியலாளர் ஒருவர் எச்சரித்துள்ளார். </p><p>இரு நிலநடுக்கங்களும் ஒப்பீட்டளவில் சிறியவையாக இருந்ததோடு, அதனால் எந்தவொரு காயங்களும் பதிவாகவில்லை என்றாலும், ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த நில அதிர்வு, கார்லாக் பிளவுக்கோட்டையும் பெரும் பாதிப்புக்குள்ளான சான் ஆண்ட்ரியாஸ் பிளவுக்கோட்டையும் இணைக்கும் ஒரு அரிதான சந்திப்பில் ஏற்பட்டதாகப் புவி இயற்பியலாளர் ஸ்டெஃபான் பர்ன்ஸ் எச்சரித்துள்ளார்.</p><p></p><p> </p><p>கார்லாக் என்பது தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு பெரிய கிழக்கு-மேற்குப் பிளவு ஆகும், அதேசமயம் சான் ஆண்ட்ரியாஸ் என்பது தெற்கு கலிபோர்னியாவிலிருந்து வடக்கே வளைகுடாப் பகுதி வழியாக பசிபிக் பெருங்கடலுக்குள் செல்லும் 800 மைல் நீளமுள்ள ஒரு பிளவு ஆகும். </p><p>இந்த இரண்டு பிளவுப் பகுதிகளும் சந்திக்கும் இடத்தில், அதாவது கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வளவு தீவிரமான நிலநடுக்கம் ஏற்படாத ஒரு பகுதியில் இந்த நிலநடுக்கம் தாக்கியதாக பர்ன்ஸ் எச்சரித்துள்ளார். </p><p>விஞ்ஞானியின் கூற்றுப்படி, அந்தச் சந்திப்பில் நடந்த இந்த சிறிய நிகழ்வானது, நிலத்தடியில் அழுத்தம் அதிகரித்து வருவதற்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்றும், கலிபோர்னியாவில் ஏற்படவிருக்கும் அடுத்த பெரிய நிலநடுக்கத்தில் கார்லாக் பிளவு ஒரு பங்கு வகிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dfabc62-edd3-468e-9c0e-e343a112d53a/26-6a553e932b117.webp' /></p><p> </p><p>நீண்ட காலமாக கலிபோர்னியாவில் விஞ்ஞானிகள் பேரச்சத்துடன் எதிர்பார்க்கும் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு 8-ஐ விட வலிமையானதாக இருக்க வாய்ப்புள்ளது என்றும், சான் ஆண்ட்ரியாஸ் கடற்பரப்பு வழியாகப் பரவும்போது மேற்கு கடற்கரையைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் அளவுக்கு மிகப் பெரியதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர். </p><p>பர்ன்ஸ் தெரிவிக்கையில், கார்லாக் (Garlock) பிளவு மண்டலம் ஒரு பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தத் தயாரான நிலையில் உள்ளது. இது ரிக்டர் அளவில் 7 அல்லது அதற்கும் அதிகமாகவும், ஏன் 7.5 அல்லது அதற்கு மேற்பட்ட அளவாகக் கூட இருக்கலாம் என்கிறார். </p><p>திங்களன்று ஏற்பட்ட 4.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் கார்லாக் பிளவுப் பகுதியில் (Garlock Fault) ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது; எனினும், இது சான் ஆண்ட்ரியாஸ் பிளவுடன் கார்லாக் பிளவு இணையும் இடத்திலிருந்து கிழக்கே சுமார் 70 மைல் தொலைவில் நிகழ்ந்துள்ளது. </p><p>இதனிடையே, இந்த நிலநடுக்கங்கள் மாபெரும் நிலநடுக்கத்திற்கான முன்னோட்ட அதிர்வுகளாக இருப்பதற்கான பல முக்கிய காரணங்களை பர்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார். </p><p>கலிபோர்னியாவில் உள்ள சான் ஆண்ட்ரியாஸ் மற்றும் பிற புவிப்பிளவுகள் குறித்த முந்தைய ஆய்வுகள், 2043-ஆம் ஆண்டிற்குள் ரிக்டர் அளவில் 6.7-க்கும் அதிகமான தீவிரத்தன்மை கொண்ட ஒரு பெரும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 99 சதவீத வாய்ப்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளன. </p><p>லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அடியில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால், அது நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளையும், பல்லாயிரக்கணக்கான காயங்களையும், 200 பில்லியன் டொலர் மதிப்பிலான சேதங்களையும் ஏற்படுத்தும் என்று USGS-ஐச் சேர்ந்த நிபுணர்கள் கணித்துள்ளனர்.</p><h2>ரிக்டர் அளவுகோலில் 8</h2><p> </p><p>கார்லாக் மற்றும் சான் ஆண்ட்ரியாஸ் ஆகிய இரண்டும் பக்கவாட்டு நகர்வுப் பிளவுகள் என்றும், அவை நெடுஞ்சாலையில் இரண்டு டிராக்டர்-டிரெய்லர்கள் எதிர் திசைகளில் அருகருகே செல்வதைப் போல, புவியின் மேலோட்டின் இரண்டு பிரம்மாண்டமான பாறைகள் கிடைமட்டமாக ஒன்றையொன்று கடந்து சரியும் இடங்கள் என்றும் பர்ன்ஸ் விளக்கமளித்துள்ளார். </p><p>கார்லாக் பிளவு இடப்புறமாக நகர, சான் ஆண்ட்ரியாஸ் பிளவு வலப்புறமாக நகர்கிறது. இவ்விரு பிளவுகளும் கலிபோர்னியாவின் ஃபிரேசியர் பூங்காவிற்கு அருகில் சந்தித்து, சான் ஆண்ட்ரியாஸ் பிளவின் ஒரு குறிப்பிடத்தக்க வளைவில் சிக்கலான தள்ளுதல் மற்றும் இழுத்தல் மண்டலத்தை உருவாக்குகின்றன.</p><p> பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகளாக, பிணைக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக சான் ஆண்ட்ரியாஸ் பிளவுப் பகுதியில் உள்ள இந்த வளைவுக்கு அருகில், மிகப்பெரிய அளவிலான அழுத்தமும் ஆற்றலும் குவிய்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c794aaf8-d681-48ba-bb4e-b0b9d58055b5/26-6a553e93ce9ae.webp' /></p><p> </p><p>சிக்கிய பகுதிகள் இறுதியாகத் திடீரென நழுவும்போது, ​​அது சேமித்து வைத்திருந்த நில அதிர்வு ஆற்றல் அனைத்தையும் ஒரு நிலநடுக்கமாக வெளியிடுகிறது.</p><p> இது, கார்லாக் பிளவைப் பொறுத்தவரை, ரிக்டர் அளவுகோலில் ஏறக்குறைய 8 அளவுள்ள ஒரு நிகழ்வை உருவாக்கும் ஒரு பெரிய பிளவைத் தூண்டக்கூடும்.</p><p>


தெற்கு கலிபோர்னியாவின் இப்பகுதி இன்னும் தீவிரமான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது என்றும், சான் ஆண்ட்ரியாஸ் (San Andreas) பிளவு கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான மிக உயர்ந்த நில அதிர்வு அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது என்றும் விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T19:29:10+00:00</updated>
        </entry>
    </feed>
