<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-14T19:16:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிஸ் அருகே மூன்றாவது நாளாகப் பற்றியெரியும் காட்டுத்தீ: திணறும் தீயணைப்பு வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/blaze-near-paris-burns-on-1784056188"></link>
            <id>https://news.lankasri.com/article/blaze-near-paris-burns-on-1784056188</id>
            <summary type="text">ஐரோப்பாவின் பல பகுதிகளில் மேலும் காட்டுத்தீ பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ள வெப்ப அலைக்கு மத்தியில், பாரிஸுக்குத் தெற்கே மூன்று நாட்களாகத் தொடர்ந்து எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவின் பல பகுதிகளில் மேலும் காட்டுத்தீ பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ள வெப்ப அலைக்கு மத்தியில், பாரிஸுக்குத் தெற்கே மூன்று நாட்களாகத் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை</h2><p>பிரான்ஸ் காட்டுத்தீயுடன் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், பிரித்தானியா மற்றும் ஸ்பெயினையும் பாதித்து வரும் இந்த பருவத்தின் மூன்றாவது தீவிர வெப்ப அலை இத்தாலிக்கும் பரவியுள்ளது.
</p><p>இத்தாலிய அதிகாரிகள் இந்த வாரம் சார்டினியா (Sardinia) பகுதியில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் (111.2 டிகிரி பாரன்ஹீட்) வரை உயரக்கூடும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமையன்று மேற்கு ஐரோப்பா முழுவதும் பதிவான சராசரி அதிகபட்ச வெப்பநிலை 29.4 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது; இது 1961 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் ஜூலை 14-ஆம் திகதிக்கான சராசரி அதிகபட்ச வெப்பநிலையை விட 6.3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். </p><p>இந்த வித்தியாசம் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மிக அதிகமாகக் காணப்பட்டது; அங்கு சராசரி அதிகபட்ச வெப்பநிலையானது முறையே 9.4 டிகிரி செல்சியஸ் மற்றும் 9.1 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவாகியிருந்தது. </p><p>இந்த நிலையில், காலநிலை மாற்றம் இத்தகைய நிகழ்வுகளை அடிக்கடி நிகழக்கூடியதாகவும் தீவிரமானதாகவும் மாற்றி வருவதாகவும், இதனால் கண்டம் முழுவதும் உள்ள காடுகளும் புதர்நிலங்களும் எளிதில் தீப்பற்றும் நிலையில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். </p><p>மே மாத இறுதியில் மற்றும் ஜூன் மாதத்தில் ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் ஏற்பட்ட, சாதனை அளவிலான இரண்டு வெப்ப அலைகளின்போது 10,000-க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளன; இவ்வளவு அதிகமான மரணங்களுக்கு வெப்பமே நம்பத்தகுந்த ஒரே காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். </p><p>ஸ்பெயினின் பிரபலமான சுற்றுலாப் பகுதியான அல்மேரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 13 பேர் (பெரும்பாலும் வெளிநாட்டினர்) மரணமடைந்ததுடன் 10 பேரைக் காணவில்லை; இச்சம்பவத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் காணும் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். </p><p>இதனிடையே, பிரான்ஸின் மிகவும் புகழ்பெற்ற அரச அரண்மனைகளில் ஒன்று அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபோன்டென்ப்ளூ (Fontainebleau) காட்டில் பரவிய தீயை அணைக்க, பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடியுள்ளனர்.</p><h2>இதுவரை 32,000 ஹெக்டேர்</h2><p> </p><p>தீயை மூட்டியதாகக் கருதப்படும் சந்தேகத்தின் பேரில் குறைந்தது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஃபோன்டென்பிளோ வனப்பகுதியைச் சுற்றியுள்ள இரண்டு தீ விபத்துகள் இன்னும் தொடர்ந்து பரவி வருவதாகவும், பிரதான தீ 1,600 ஹெக்டேர் பரப்பளவையும், அருகிலுள்ள மற்றொரு தீ 450 ஹெக்டேர் பரப்பளவையும் எரித்துச் சாம்பலாக்கியுள்ளதாகவும், ஆனால் வானிலை சீரடைந்துள்ளதாகவும் உள்ளூர் பிரெஞ்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>தீ விபத்து ஃபான்டென்ப்ளூ அரண்மனையிலிருந்து (Palace of Fontainebleau) சில கிலோமீற்றர் தொலைவிலேயே ஏற்பட்டிருந்ததால், தண்ணீர் சுமந்து செல்லும் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட கணிசமான வளங்கள் அப்பகுதியில் ஈடுபடுத்தப்பட்டதாக உள்விவகார அமைச்சர் லாரன்ட் நுனெஸ் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், பிரான்சில் இந்த ஆண்டு இதுவரை 32,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்துள்ள நிலையில், ஃபோன்டெய்ன்பிளூ (Fontainebleau) காட்டுத்தீயும் சேர்ந்து இந்த ஆண்டை காட்டுத்தீயைப் பொறுத்தவரை ஒரு சாதனை ஆண்டாக மாற்றக்கூடும் என்று அமைச்சர் நுனெஸ் கூறியுள்ளார். </p><p>இந்த பருவத்தில் தீ வைத்ததாகக் கருதப்படும் சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் முழுவதும் 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T19:08:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-sinks-russian-military-ship-1784051138"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-sinks-russian-military-ship-1784051138</id>
            <summary type="text">தீவிரமடைந்து வரும் எரிபொருள் நெருக்கடியால் ரஷ்யா முழுவதும் உள்ள எண்ணெய் நிலையங்களில் குழப்பம் நிலவி வரும் நிலையில், கருங்கடலில் ஒரு ரஷ்ய ராணுவக் கப்பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவிரமடைந்து வரும் எரிபொருள் நெருக்கடியால் ரஷ்யா முழுவதும் உள்ள எண்ணெய் நிலையங்களில் குழப்பம் நிலவி வரும் நிலையில், கருங்கடலில் ஒரு ரஷ்ய ராணுவக் கப்பலை உக்ரைன் மூழ்கடித்துள்ளது.</p><h2>உக்ரைன் கடற்படை</h2><p>
</p><p>உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்யாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் தாக்கிச் சிதைத்ததைத் தொடர்ந்து, எஞ்சியிருக்கும் சொற்ப அளவு பெட்ரோலைப் பெறுவதற்காகத் தவிக்கும் ரஷ்யர்களிடையே மோதல்கள் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82e82b70-85a7-4e14-a725-b09dfb3098ea/26-6a5676f7afc60.webp' /></p><p> </p><p>உக்ரைனின் சமீபத்திய தாக்குதலால், ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவிற்கு மேற்கே உள்ள ரஷ்யத் துறைமுகமான நோவோரோசிஸ்க் (Novorossiysk) கடல் பகுதியில், புடின் தனது 'எமரால்டு' பாதுகாப்புப் படை ரோந்து கப்பலை இழந்தார். </p><p>புதிய மற்றும் இரகசியமான சர்கன்-3000 கடல் ட்ரோன் மூலம் 205 அடி நீளமுள்ள ரஷ்ய கப்பல் செவ்வாய்க்கிழமை மூழ்கடிக்கப்பட்டதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது. </p><p>மட்டுமின்றி, 'எமரால்டு' கப்பலின் பணியாளர்கள் மத்தியில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டிருந்ததையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டில் கெர்ச் நீரிணையில் மூன்று கடற்படைக் கப்பல்களைக் கைப்பற்றியதன் மூலம் இந்தக் கப்பலை உக்ரைன் நீண்டக காலமாக இலக்கு வைத்து வந்துள்ளது.</p><p></p><p> </p><p>எமரால்டு கப்பலின் குழுவினர், உக்ரேனிய இழுவை கப்பலான 'யானி கபு' (Yany Kapu) மீது மோதியதாகவும், அப்படகு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், சுமார் 24 மாலுமிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. </p><p>இன்று 'எமரால்டு' கப்பலைத் பழிவாங்கும் நோக்கில் தாக்கிய 'சர்கன்-3000' நீண்ட தூரக் கடற்படைத் தாக்குதல் பணிகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ட்ரோன் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1addafa-af93-4195-a61a-5e9ff47e3427/26-6a5676f700969.webp' /></p><h2>எரிபொருள் பற்றாக்குறை</h2><p> </p><p>எண்ணெய் கப்பல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் மீதான முந்தைய தாக்குதல்களால் பெட்ரோல் இருப்பு குறைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ளவற்றைப் பெறுவதற்காக ரஷ்யர்கள் போராடும் சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
</p><p>சாரதிகள் எரிபொருள் நிரப்பச் செல்லும்போது பாதுகாப்பிற்காக கத்திகளை உடன் எடுத்துச் செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரஷ்யா முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து வருவதால், நாடு முழுவதும் தேவைக்கு அதிகமாக எரிபொருள் வாங்குவதற்குத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c1e7ea6-304f-4294-aef3-bd947d38c75d/26-6a5676f862e7f.webp' /></p><p> </p><p>எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏற்றுமதியும் முடங்கியுள்ளது; இதனால், பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட எரிபொருள் விற்பனை மூலம் ரஷ்யாவிற்குக் கிடைத்து வந்த வருவாய் தடைபட்டுள்ளது. </p><p>எரிபொருள் பற்றாக்குறை விவசாயிகளைப் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், ரஷ்யாவின் அறுவடைக்கும் கடுமையான நெருக்கடி ஏற்படும் சூழலை புடின் எதிர்கொள்கிறார். </p><p>இதனிடையே, கம்பைன் ஹார்வெஸ்டர்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ரஷ்யாவின் தெற்குப் பகுதிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T17:44:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-drops-hormuz-tolls-1784046770"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-drops-hormuz-tolls-1784046770</id>
            <summary type="text">ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களும் ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தலாம் எனவும், வளைகுடா நாடுகளுடன் மிகப்பெரிய முதலீட்டு ஒப்பந்தங்களைச் செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களும் ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தலாம் எனவும், வளைகுடா நாடுகளுடன் மிகப்பெரிய முதலீட்டு ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><h2>முழுமையான முற்றுகை</h2><p>
தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல் போக்குவரத்திற்கும் ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d39e79a-4bbb-4cb9-9479-a07b4938a26e/26-6a566beee6681.webp' /></p><p> </p><p>அதற்குக் காரணம், அவர்களை முழுமையான அழிவை நோக்கிய பாதையில் இட்டுச் செல்லும் அவர்களின் பொய்யான, வன்முறை மற்றும் தீய எண்ணம் கொண்ட தலைமைதான் என்றார். </p><p>எனவே, ஈரானியத் துறைமுகங்களுக்கு வரும் அல்லது அங்கிருந்து வெளியேறும் கப்பல்கள், அல்லது ஈரானிய சரக்குகள் தொடர்பான பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது மட்டுமே அமெரிக்கா முழுமையான முற்றுகையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன், வளைகுடா நாடுகளுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள், அந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 20 சதவீதம் கட்டணம் விதிக்க வேண்டும் என்று தான் முந்தைய நாள் முன்மொழிந்திருந்த திட்டத்திற்கு மாற்றாக அமையும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>மேலும், மத்திய கிழக்குத் தலைவர்களுடனான மிகவும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், அமெரிக்காவிற்குச் செலுத்தப்பட வேண்டிய 20 சதவீத கட்டணத்திற்கு பதிலாக, பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடன் மேற்கொள்ளவிருக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தாம் முடிவு செய்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வர்த்தகம் மற்றும் முதலீடு</h2><p> </p><p>வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் முன்னெடுக்கும் முதலீடுகள் மிகப் பிரம்மாண்டமானவையாக இருக்கும்; அதே வேளையில், அவர்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் அவை மிகச் சிறந்தவையாகவும் அமையும். </p><p>அனைவருக்கும் தெரிந்தபடி, வரலாற்றிலேயே எந்தவொரு நாடும் செய்யாத அளவிற்கு அமெரிக்காவில் நாம் மிகப்பெரிய அளவிலான டொலர் முதலீடுகளைச் செய்துள்ளோம்; ஆனால் இந்த புதிய முதலீடுகள் அந்த அளவை இன்னும் அதிகரிக்கச் செய்யும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b303b350-73e4-463f-b13f-50a754220cb9/26-6a566befcd76f.webp' /></p><p> </p><p>இதன் விளைவாக, தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க அளவில் அமெரிக்காவிற்குள் குவியும்; இது அதிக ஊதியம் தரும் லட்சக்கணக்கான கூடுதல் அமெரிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும்! </p><p>அமெரிக்கா மீண்டும் வெற்றி பெற்று வருகிறது; முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெறுகிறது. 52,000 போராட்டக்காரர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்களை ஈரான் கொன்று குவித்த காலம் முடிந்துவிட்டது; எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது எனவும் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>ஆனால், வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் முதலீடு மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனவா அல்லது சந்தைப் போக்கை கட்டுப்படுத்த வழ்க்கமான ட்ரம்பின் வணிக உத்தியா என்பது உறுதி செய்யப்படவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T16:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் மீண்டும் WhatsApp-ல் ChatGPT., மெட்டாவிற்கு EU உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chatgpt-back-on-whatsapp-in-eu-1784042515"></link>
            <id>https://news.lankasri.com/article/chatgpt-back-on-whatsapp-in-eu-1784042515</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உத்தரவின் பேரில், ChatGPT மீண்டும் WhatsApp-ல் அறிமுகமாகியுள்ளது.கடந்த ஆறு மாதங்களுக்கு WhatsApp-ல் ChatGPT பயன்படுத்த முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உத்தரவின் பேரில், ChatGPT மீண்டும் WhatsApp-ல் அறிமுகமாகியுள்ளது.</p><p>கடந்த ஆறு மாதங்களுக்கு WhatsApp-ல் ChatGPT பயன்படுத்த முடியாமல் இருந்த நிலையில், ஜூலை 13, 2026 முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
Meta நிறுவனம், 2025 அக்டோபரில் WhatsApp Business API விதிகளை மாற்றி, ChatGPT, Microsoft Copilot போன்ற AI உதவியாளர்களை தடை செய்தது.

இதற்கு காரணமாக “சர்வர் சுமை அதிகரிப்பு” என விளக்கம் அளித்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a1c433e-f450-4d94-854f-ab948e02a519/26-6a56541582b8f.webp' /></p><p>ஆனால், விமர்சகர்கள் இதை Meta-வின் சொந்த AI-ஐ முன்னிறுத்தும் முயற்சி எனக் கூறினர்.

இதற்கு எதிராக, ஜூன் 9, 2026 அன்று EU, Meta-க்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து, WhatsApp API-யை மீண்டும் திறக்க கட்டாயப்படுத்தியது. </p><p>விதிகளை மீறினால் Meta-க்கு வருடாந்திர வருமானத்தின் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
</p><p>
இப்போது, EU பயனர்கள் WhatsApp-ல் 1-800-CHATGPT என்ற சரிபார்க்கப்பட்ட எண்ணின் மூலம் ChatGPT-ஐ நேரடியாகப் பயன்படுத்த முடிகிறது. இதில் உரையாடல், குரல் உள்ளீடு, படங்களைப் பதிவேற்றம், AI பட உருவாக்கம் போன்ற வசதிகள் WhatsApp-இல் கிடைக்கின்றன.</p><p></p><p>சில பயனர்கள், ChatGPT-ஐ பயன்படுத்திய பின் WhatsApp கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். OpenAI, “சரிபார்க்கப்பட்ட எண்ணை மட்டுமே பயன்படுத்துங்கள்” என அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T15:20:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஜ்தபா கமேனி 90 சதவீதம் போய்விட்டார்., ட்ரம்ப் அதிர்ச்சியூட்டும் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-claims-iran-leaders-killed-mojtaba-hit-1784041690"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-claims-iran-leaders-killed-mojtaba-hit-1784041690</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமாகும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் முக்கிய இராணுவத் தலைவர்கள் அழிக்கப்பட்டதாகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமாகும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் முக்கிய இராணுவத் தலைவர்கள் அழிக்கப்பட்டதாகவும், உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி 90 சதவீதம் போய்விட்டார் (90% gone) என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.</p><p>

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் கடற்படை, விமானப்படை, எதிர்வான்படை அனைத்தும் அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் Fox News-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67f027f6-0f63-44a2-97d8-7a48b5a5526e/26-6a5650dc4b112.webp' /></p><p>

“அவர்களின் சிறந்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கமேனி இல்லை” என அவர் கூறினார்.
</p><p>
மொஜ்தபா கமேனி, தந்தையின் மரணத்திற்குப் பின் ஈரானின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டனர். சமீபத்திய விமானத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்ததால், தந்தையின் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p></p><p>மேலும், ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீதான முற்றுகையை (Iranian blockade) அமுல்படுத்தும் என்றும், அந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் பாதுகாப்புக்காக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்தார்.
</p><p>
“ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும். ஈரானின் கப்பல்கள் மட்டும் தடுக்கப்படும். மற்ற நாடுகள் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம்” என Truth Social-ல் பதிவிட்டார்.</p><p>

இதற்கு பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “ஹார்முஸ் நீரிணையின் காவலர் எப்போதும் ஈரானே. அமெரிக்கா அல்ல” எனக் கூறினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T15:06:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் அணுகுண்டு வீசுவதை மோடி தடுத்தாரா? போலந்து அமைச்சர் சொன்ன தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/poland-minister-says-modi-stops-putin-use-nukes-1784040945"></link>
            <id>https://news.lankasri.com/article/poland-minister-says-modi-stops-putin-use-nukes-1784040945</id>
            <summary type="text">&amp;nbsp;புடின் அணு ஆயுதம் பயன்படுத்துவதை மோடி தடுத்தார் என போலந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புடின் அணுஆயுத பயன்பாட்டை தடுத்த மோடி 

இந்தியாவிற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;புடின் அணு ஆயுதம் பயன்படுத்துவதை மோடி தடுத்தார் என போலந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><h3>
புடின் அணுஆயுத பயன்பாட்டை தடுத்த மோடி</h3><p> 

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள போலந்து துணை வெளியுறவு அமைச்சர் விளாடிஸ்லாவ் பார்டோசெவ்ஸ்கி, இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a096d1f-3af2-4d25-8ff0-2db74482386b/26-6a564df372ceb.webp' /></p><p>
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிராக ரஷ்யாவை இணங்க வைப்பதில் பிரதமர் மோடி முக்கிய பங்கு வகித்தார் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81855257-1188-41c4-9138-9f86335b5be3/26-6a564df42b265.webp' /></p><p>

இது குறித்து பேசிய அவர், "நரேந்திர மோடி மிகவும் பிரபலமான மற்றும் மதிக்கப்படும் ஒரு உலகத்தரம் வாய்ந்த தலைவர். மேலும், இந்தியாவுக்கு ரஷ்ய கூட்டமைப்புடனும், அதற்கு முன்பாக சோவியத் யூனியனுடனும் அணிசேரா நாடாக நீண்டகால உறவு இருந்து வருகிறது.&nbsp;</p><p></p><p>

போரின்போது தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என ரஷ்யாவை இணங்க வைப்பதில், 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரதமர் மோடி பங்கு வகித்தார்.
</p><p>
மோடி தன்னிடம் கூறுவதை ரஷ்ய ஜனாதிபதி புடின் உண்மையில் கவனத்தில் கொள்கிறார். புடின் மீது உண்மையில் அழுத்தம் கொடுக்கவும் செல்வாக்கு செலுத்தவும் கூடிய ஒரு சிலரில் பிரதமர் மோடியும் ஒருவர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/644f112c-828b-4b51-8168-a35fd66b63e1/26-6a564df4cfc0c.webp' /></p><p> 

மோடி மட்டுமல்ல, சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் உட்பட அனைவரும் பதற்றத்தை அதிகரிப்பதற்கு எதிராக உள்ளனர். குறிப்பாக, ரஷ்யாவிற்கு விரோதமானவையாகக் கருதப்படாத நாடுகளில் இருந்து இது வரும்போது, ​​அது முக்கியமானதாகிறது. இதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது" என பேசியுள்ளார். </p><p>

2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் இரு தரப்பிலும் சுமார் 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் பணக்காரர்கள் விரும்பும் 10 ஆடம்பர சுற்றுலா தலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/top-10-luxury-billionaire-holiday-spots-1784038916"></link>
            <id>https://news.lankasri.com/article/top-10-luxury-billionaire-holiday-spots-1784038916</id>
            <summary type="text">உலகின் பணக்காரர்கள், பில்லியனர்கள், பிரபலங்கள் விடுமுறைக்கு செல்லும் இடங்கள் சாதாரண சுற்றுலா தலங்களல்ல.தனியார் ஜெட் விமான நிலையங்கள், மெகா சொகுசுப் பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் பணக்காரர்கள், பில்லியனர்கள், பிரபலங்கள் விடுமுறைக்கு செல்லும் இடங்கள் சாதாரண சுற்றுலா தலங்களல்ல.</p><p>தனியார் ஜெட் விமான நிலையங்கள், மெகா சொகுசுப் படகுகள், அரண்மனை ஹோட்டல்கள், தனியார் கிளப்புகள், மற்றும் தனிமையை உறுதி செய்யும் வசதிகள் கொண்ட இடங்களே இவர்களின் விருப்பம்.
</p><p></p><p>அவ்வாறு, உலகின் பணக்காரர்கள் விரும்பும் 10 ஆடம்பர சுற்றுலா தலங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.&nbsp;</p><h2>1.பிரெஞ்சு ரிவியாரா (France)
</h2><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1df418df-bc95-478d-ae08-51f3aa9850de/26-6a5646a242f0d.webp' /></p><p>French Riviera உலகின் முதலிடம் பெற்ற பில்லியனர் விடுமுறை தலமாகும்.
</p><p>
அழகிய கடற்கரை, சொகுசுப் படகு (Yacht) பயண வசதி, அரண்மனை ஹோட்டல்கள், பிரபல உணவகங்கள் ஆகியவை இங்கு முக்கிய அம்சங்களாக உள்ளன. ஜெஃப் பெசோஸ், எல்டன் ஜான் போன்றோர் இங்கு அடிக்கடி வருகை தருகின்றனர்.
</p><h2>2.மொனாக்கோ (Monaco)
</h2><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e5d80e-f293-4fa3-8b5b-d4c096e8e5c6/26-6a5646a31b99a.webp' /></p><p>மிகச் சிறிய நாடாக இருந்தாலும், உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல்கள் இங்கு உள்ளன. ஒரு இரவு தங்கும் செலவு சுமார் 2,440 டொலர் ஆகும். கேசினோ, ஃபார்முலா 1, சூப்பர் யாட்கள் ஆகியவை இங்கு பிரபலமானவை.
</p><h2>3.மியாமி (USA)</h2><p>அமெரிக்காவின் ரிவியாரா என அழைக்கப்படும் மியாமி (Miami), கலை, கலாச்சாரம், ஆடம்பர ஹோட்டல்கள், கடற்கரை வாழ்க்கை ஆகியவற்றால் பிரபலமானது.
</p><h2>4.ஹாம்ப்டன்ஸ் (USA)</h2><p>Hamptons நியூயார்க் பில்லியனர்களின் கோடை விடுமுறைக்கான சிறந்த ஸ்பாட் ஆகும். தனியார் கிளப்புகள், கடற்கரை, பெரிய எஸ்டேட்கள், சமூக நிகழ்ச்சிகள் ஆகியவை இங்கு முக்கியதத்துவம் பெறுகின்றன.</p><h2>5.அமால்ஃபி கோஸ்ட் (Italy)</h2><p>Amalfi Coast உள்ள கடற்கரை பாறைகள், பழமையான ஹோட்டல்கள், யாட் பயணங்கள், இத்தாலிய விருந்தோம்பல் ஆகியவை இங்கு ஆடம்பரத்தை வெளிப்படுத்துகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eec595b-1367-47b6-9c94-9adbffeb8080/26-6a5646a3cb1d5.webp' /></p><p>
</p><h2>6.பாலி (Indonesia)</h2><p>Bali ஆசியாவின் முன்னணி சுற்றுலா தலமாகும். தனியார் வில்லாக்கள், காடு சூழ்ந்த ஹோட்டல்கள், யோகா, ஸ்பா, ஆன்மீக அனுபவங்கள் ஆகியவை பில்லியனர்களை இங்கு கவர்கின்றன.</p><h2>7.குர்செவல் (France)</h2><p>Courchevel பனிச்சறுக்கு விடுமுறை தலமாகும். அரண்மனை ஹோட்டல்கள், தனியார் மர் வீடுகள், உயர்தர உணவகங்கள், ஸ்கீ வசதிகள் ஆகியவை இங்கு உள்ளன.
</p><h2>8.மஜோர்கா (Spain)</h2><p>Majorca- மலைகள், ஆலிவ் தோட்டங்கள், தனிமையான கடற்கரை, யாட் துறைமுகங்கள் ஆகியவை இங்கு பிரபலமானவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4eb4633-3144-470b-9de6-b6ecb72a98cd/26-6a5646a480a26.webp' /></p><h2>9.மாலத்தீவு (Maldives)</h2><p>தனியார் தீவுகள், நீர்மீது கட்டப்பட்ட வில்லாக்கள், seaplane பயணங்கள் ஆகியவை உலகின் பணக்காரர்களை கவர்கின்றன.
</p><h2>10.காப்ரி (Italy)</h2><p>பழமையான கவர்ச்சி, Blue Grotto கடல் குகை, சூப்பர் யாட் பயணங்கள், பிரபல ஷாப்பிங், இரவு வாழ்க்கை ஆகியவை காப்ரியின் சிறப்பு அம்சங்களாக யுள்ளன.</p><p>

இந்த 10 தலங்கள் உலக பணக்காரர்கள் மிகவும் விரும்பி செல்லும் இடங்களாக உள்ளன. தனிமை, ஆடம்பரம், தனித்துவமான அனுபவம் ஆகியவை செல்வந்தர்களை இங்கே இழுக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:23:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை - கடைசிக்கு முந்தைய இடத்தில் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-second-lowest-in-environment-performance-1784035929"></link>
            <id>https://news.lankasri.com/article/india-second-lowest-in-environment-performance-1784035929</id>
            <summary type="text">சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை பட்டியலில், இந்தியா கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.

சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை

சுற்றுசூழல் ஆரோக்கியம் என்ற நோக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை பட்டியலில், இந்தியா கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.
</p><h3>
சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை
</h3><p>
சுற்றுசூழல் ஆரோக்கியம் என்ற நோக்கத்தில், ஏல் பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் இணைந்து உலகளாவிய சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு தரவரிசைப் பட்டியலை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிட்டு வருகிறது.
</p><p>
இதில், காற்றின் தரம், சுற்றுப்புறத்தில் உள்ள நுண்ணிய துகள்களின் அளவு, மரங்களின் அடர்த்தி இழப்பு, பருவநிலை மாற்றத் தணிப்பு உள்ளிட்ட 47 குறிகாட்டிகளின் அடிப்படையில் 177 நாடுகளை மதிப்பீடு செய்து, இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cc4a7dc-ca23-4a69-9fac-60e0b3bcc592/26-6a563a5a9eae5.webp' /></p><p>
இதில், சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு அடிப்படையில், 100க்கு 74.79 மதிப்பெண்களுடன் எஸ்டோனியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. </p><p>

74.24 மதிப்பெண்களுடன் லக்சம்பர்க் 2வது இடத்திலும், 71.51 மதிப்பெண்களுடன் பிரித்தானியா 3வது இடத்திலும், 71.04 மதிப்பெண்களுடன் பின்லாந்து 4வது இடத்திலும், 71.04 மதிப்பெண்களுடன் நெதர்லாந்து 5வது இடத்திலும், உள்ளது.&nbsp;</p><p></p><p>

ஜெர்மனி 6வது இடத்திலும், பிரான்ஸ் 7வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 15வது இடத்திலும், அவுஸ்திரேலியா 25வது இடத்திலும், அமெரிக்கா 27வது இடத்திலும், கனடா 29வது இடத்திலும் உள்ளது. </p><h3>

கடைசிக்கு முந்தைய இடத்தில்&nbsp;இந்தியா </h3><p>39.58 மதிப்பெண்களுடன் இலங்கை 94 வது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில், 38.8 மதிப்பெண்களுடன்134வது இடத்தில் இருந்துள்ளது. </p><p>

இதே போல், இந்த பட்டியலில் 22.46 மதிப்பெண்களுடன் இந்தியா கடைசிக்கு முந்தைய இடமான 176வது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில், 180 நாடுகள் இருந்த நிலையில், 27.6 மதிப்பெண்களுடன் 176வது இடத்தில் இருந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f669fc-69e0-47f2-b55c-badead8c1a10/26-6a563a5b523aa.webp' /></p><p>

2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில், 25.5 மதிப்பெண்களுடன் 179வது இடத்தில் இருந்த பாகிஸ்தான், தற்போது 29.03 மதிப்பெண்களுடன் 157வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.</p><p>

லாவோஸ் 21.78 மதிப்பெண்களுடன் 177வது இடத்தில் கடைசி நாடாக உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T13:48:56+00:00</updated>
        </entry>
    </feed>
