<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-17T01:29:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் அடுத்த பேரிடி., உத்தரவுக்காக காத்திருக்கும் ஹவுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-orders-houthis-close-red-sea-route-1784248608"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-orders-houthis-close-red-sea-route-1784248608</id>
            <summary type="text">உலகின் மற்றொரு முக்கியமான நீரிணையை மூட ஈரான் திட்டமிட்டுள்ளது.ஈரானின் மின்சார வலையமைப்பை அமெரிக்கா தாக்கினால், யேமனின் ஹவுதி இயக்கம் செங்கடல் வாயிலான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மற்றொரு முக்கியமான நீரிணையை மூட ஈரான் திட்டமிட்டுள்ளது.</p><p>ஈரானின் மின்சார வலையமைப்பை அமெரிக்கா தாக்கினால், யேமனின் ஹவுதி இயக்கம் செங்கடல் வாயிலான பாப் எல்-மண்டெப் நீரிணையை (Bab el-Mandeb strait) மூட தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
</p><p></p><p>இந்த வாயில் உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகும்.

ஹவுதிகள் ஏற்கனவே ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அந்தப் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளதாகவும், உத்தரவை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஹார்முஸ் நீரிணை ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், செங்கடல் வாயிலும் மூடப்பட்டால், மத்திய கிழக்கு நாடுகளின் இரண்டு முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பாதைகளும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும். இது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2635fd0f-6bd9-49d9-81a8-3861fdfe1dcf/26-6a597921c36a2.webp' /></p><p>சவுதி அரேபியா இந்த அச்சுறுத்தலை மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்டு வருகிறது. ஏற்கனவே தனது எண்ணெய் ஏற்றுமதியின் 70 சதவீதம் செங்கடல் வழியாக யன்பு துறைமுகத்திற்கு மாற்றியுள்ளது.</p><p> அங்கு நேரடி தாக்குதல் நடந்தால், உலக எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்ச்சி ஏற்படும்.
</p><p>
ஈரான், ஹவுதிகளை தனது Axis of Resistance கூட்டணியின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. இதில் லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஈராக்கின் ஷியா ஆயுதக் குழுக்களும் அடங்குகின்றன.</p><p>அமெரிக்கா, ஈரான் ஹவுதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி வழங்குவதாக குற்றம் சாட்டுகிறது. ஆனால் ஈரான் அதை மறுத்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-17T00:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியான்மரில் இரட்டை படகு விபத்து: 500-க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்திருக்கலாம்- ஐ.நா. அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/myanmar-shipwrecks-500-rohingya-missing-1784247514"></link>
            <id>https://news.lankasri.com/article/myanmar-shipwrecks-500-rohingya-missing-1784247514</id>
            <summary type="text">மியான்மர் கடற்கரையில் இரண்டு படகுகள் காணாமல் போனதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அமைப்புகள் (UNHCR, IOM) தெரிவித்துள்ளன.

இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியான்மர் கடற்கரையில் இரண்டு படகுகள் காணாமல் போனதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அமைப்புகள் (UNHCR, IOM) தெரிவித்துள்ளன.</p><p>

இந்த படகுகள் ஜூன் மாத இறுதியில் ரகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்டதாகவும், பெரும்பாலும் ரோஹிங்கியா மக்கள் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
முதல் படகில் சுமார் 250 பேர் இருந்தனர். புறப்பட்ட சில நேரங்களிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டது. இரண்டாவது படகில் 280 பேர் இருந்ததாகவும், ஜூலை 8-ஆம் தேதி அயேயார்வாடி கடற்கரையில் மூழ்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/035b07b5-0261-48fa-99ff-d75edcc3a236/26-6a5974dcac6e1.webp' /></p><p>ரோஹிங்கியா மக்கள் பல தசாப்தங்களாக மியான்மர் அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். 2017-இல் வன்முறையிலிருந்து தப்பி சுமார் ஒரு மில்லியன் பேர் வங்காளதேசம் நாட்டின் காக்ஸ் பஜார் முகாமில் தஞ்சம் புகுந்தனர்.
</p><p>
அங்கு தற்போது நிதி குறைவால் வாழ்வாதாரம் கடினமாகி, பலர் ஆபத்தான கடல் பயணத்தைத் தேர்வு செய்யத் தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p></p><p>சமீபத்திய கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடல் பயணம் இன்னும் ஆபத்தானதாக மாறியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.
</p><p>
ஐ.நா. அமைப்புகள், “இது உலகின் மிக ஆபத்தான கடல் பாதைகளில் ஒன்றாகும். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அகதிகளுக்கான பாதுகாப்பு மற்றும் தஞ்சம் வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T00:17:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 ஆண்டுகள் தான்- வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா விதிகளை கடுமையாக்கிய அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-tightens-visa-rules-for-foreign-students-1784242761"></link>
            <id>https://news.lankasri.com/article/us-tightens-visa-rules-for-foreign-students-1784242761</id>
            <summary type="text">அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம், வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கடுமையான விசா விதிகளை அறிவித்துள்ளது.

அதன் படி, மாணவர்கள் இனி அதிகபட்சம் நான்கு ஆண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம், வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கடுமையான விசா விதிகளை அறிவித்துள்ளது.
</p><p>
அதன் படி, மாணவர்கள் இனி அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதி பெறுவார்கள். அதற்கு மேல் தொடர விரும்பினால், அரசின் அனுமதி அவசியமாகும்.
</p><p>
முன்பு, பல்கலைக்கழகங்கள் தாமாகவே விசா நீட்டிப்பு வழங்கும் அதிகாரம் பெற்றிருந்தன. ஆனால் புதிய விதிகள், அந்த அதிகாரத்தை நீக்குகின்றன. </p><p>மேலும், மாணவர்கள் பாடநெறிகளை மாற்றுவது அல்லது பல்கலைக்கழகங்களை மாற்றுவது கடுமையாக கட்டுப்படுத்தப்படும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3516180-cc1c-421e-a2f6-97220b0355d5/26-6a5962cf4985c.webp' /></p><p>அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சகம், “விசா முறைகேடுகளை தடுக்கவும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும்” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
</p><p>
இதுவரை, F-1 மற்றும் J-1 விசா பெற்ற மாணவர்கள் “duration of status” என்ற முறையில், தங்கள் படிப்பை முடிக்கும் வரை அமெரிக்காவில் தங்க அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் புதிய விதிகள், அந்த காலத்தை நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே வரையறுக்கின்றன.
</p><p>
மேலும், பட்டம் முடித்த பின் மாணவர்கள் 30 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். முன்பு வழங்கப்பட்ட 60 நாள் சலுகை காலம் குறைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>இந்த விதிகள் “தவறானது, தேவையற்றது” என NAFSA: Association of International Educators அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஃபான்டா ஆவ், “இது மாணவர்களுக்கு குழப்பம், பயம், மற்றும் தேவையற்ற அதிகார சிக்கல்களை உருவாக்கும்” எனக் கூறினார்.
</p><p>
இந்த புதிய விதிகள், அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்துடன், குடியேற்றக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T22:59:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கின் அனைத்து உள்கட்டமைப்புகளையும் அழிப்போம்- எச்சரித்துள்ள ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-threatens-regional-infrastructure-us-strikes-1784237537"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-threatens-regional-infrastructure-us-strikes-1784237537</id>
            <summary type="text">அமெரிக்காவின் வான்வழி தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் தனது கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் சார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் வான்வழி தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் தனது கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
</p><p>
காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் சார்பில் பேசிய இராணுவ அதிகாரி கர்னல் எப்ராஹிம் சொல்ஃபகாரி, “அமெரிக்கா எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அனைத்து உள்கட்டமைப்புகளையும் எங்கள் சக்திவாய்ந்த ஆயுதப்படைகளால் நசுக்கப்படும்” எனக் கூறினார்.</p><p></p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் மின்நிலையங்கள் மற்றும் பாலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என எச்சரித்திருந்தார்.
</p><p>
அதற்கு பதிலளித்த ஈரான், “ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா தலையிட அனுமதிக்கமாட்டோம். இது ஈரானின் வெல்லமுடியாத சிவப்பு கோடு’” என தெரிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2570a818-52f5-4dd6-b709-9f2f956e8150/26-6a594de382350.webp' /></p><p>இந்த எச்சரிக்கை, அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழியாக இருப்பதால், இங்கு எந்தவொரு மோதலும் உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும்.
</p><p>
சமீபத்தில் ஈரான் தனது புதிய ட்ரோன் உத்தியை வெளிப்படுத்தி, அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளின் வான்வழி பாதுகாப்பை சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது. </p><p>இதனால், பிராந்தியத்தில் இராணுவ நிலைமை மிகவும் பதற்றமானதாக மாறியுள்ளது.

இந்த சூழ்நிலை, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதிக்கும், உலகளாவிய பாதுகாப்பிற்கும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T21:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ தீவிரம்- மக்கள் வெளியேற்ற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/boston-bar-evacuation-as-wildfires-rage-in-bc-1784231372"></link>
            <id>https://news.lankasri.com/article/boston-bar-evacuation-as-wildfires-rage-in-bc-1784231372</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ தீவிரமடைந்ததால் Boston Bar பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் உடனடியாக வெளியேறுமாறு அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ தீவிரமடைந்ததால் Boston Bar பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p><p>

Fraser Canyon பகுதியில் பரவியுள்ள தீ, பல வீடுகளையும், சாலைகளையும் ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது. தீ வேகமாக பரவி வருவதால், மக்கள் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என அவசர மேலாண்மை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea1e061f-c5c9-42ed-ac31-46969d9ef9de/26-6a5935cd9aedf.webp' /> </p><p>Boston Bar மற்றும் அருகிலுள்ள North Bend பகுதிகளில் வசிக்கும் மக்கள், அதிகாரிகள் அமைத்துள்ள பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
தீயணைப்பு படையினர், “தீ கட்டுப்பாட்டுக்கு எட்டாத அளவுக்கு பரவி வருகிறது. மக்கள் தாமதிக்காமல் வெளியேற வேண்டும்” என எச்சரித்துள்ளனர்.</p><p>

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்த கோடைக்காலத்தில் பல காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதிக வெப்பநிலை, வறட்சி, காற்றின் வேகம் ஆகியவை தீ பரவலை அதிகரித்துள்ளன. </p><p></p><p>Boston Bar பகுதியில் தற்போது புகை மூட்டம் அதிகரித்து, சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
</p><p>
கனடா அரசு, “மக்களின் உயிர் பாதுகாப்பே முதன்மை. வீடுகள், சொத்துக்கள் பின்னர் மீட்கப்படலாம். மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.
</p><p>
இந்த காட்டுத்தீ, பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. Boston Bar மக்கள், தங்கள் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக அவசரமாக வெளியேறி வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T20:58:31+00:00</updated>
        </entry>
    </feed>
