<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-15T08:30:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென இருளில் மூழ்கிய கனேடிய நகரம்: திகிலடைந்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/daylight-turns-to-dark-in-quebec-wildfires-cause-1784103287"></link>
            <id>https://news.lankasri.com/article/daylight-turns-to-dark-in-quebec-wildfires-cause-1784103287</id>
            <summary type="text">கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள ஒரு நகரம், பகல் நேரத்தில் திடீரென இருளில் மூழ்கியதால் திகில் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென இருளில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள ஒரு நகரம், பகல் நேரத்தில் திடீரென இருளில் மூழ்கியதால் திகில் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><h3>
திடீரென இருளில் மூழ்கிய நகரம்
</h3><p>
நேற்று காலை, கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள La Tuque நகரை திடீரென இருள் சூழ்ந்ததால் மக்கள் திகிலடைந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c754732-7fd0-4a8f-92f6-e78671913628/26-6a5741784f1d9.webp' /></p><p>
ஏற்கனவே காட்டுத்தீ உருவாக்கிய புகை சூரியனை மறைத்திருக்க, அதைத் தொடர்ந்து கார்மேகங்கள் சூழ, பட்டப்பகல், இரவு போல மாற, தெரு விளக்குகள் எரியத் துவங்கியுள்ளன.
</p><p>
35 ஆண்டுகளுக்கு முன் மொன்றியலில் நிகழ்ந்த தங்கள் நிச்சயதார்த்தத்தை நினைவுகூருவதற்காக அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு வந்த சாரா லெட்ஸ்கி, La Tuqueஇல் தான் சந்தித்த அந்த அனுபவம் திகிலூட்டுவதாக அமைந்திருந்ததாக தெரிவிக்கிறார்.&nbsp;</p><p></p><p>
மரச்சாமான்களை டெலிவரி செய்யும் வேலையைச் செய்யும் மார்க் லராம் என்பவர், புகை மற்றும் வெப்பம் காரணமாக தனது வேலை கடினமானதாக இருந்ததாக தெரிவிக்கிறார்.</p><p>

புகையிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, நாம்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாகவேண்டும், இல்லையென்றால் மயக்கம் போட்டு விழவேண்டியதுதான் என்கிறார் அவர்.
</p><p>
இதற்கிடையில், காட்டுத்தீயால் பரவிவரும் புகையால் சாலைகளில் போதுமான வெளிச்சம் இல்லை என்றும், காற்றின் தரம் மோசமாக உள்ளதாகவும் எச்சரித்திருந்த கனடாவின் சுற்றுச்சூழல் அமைப்பு, மக்கள் வீட்டுக்கு வெளியே நேரம் செலவிடுவதைக் குறைக்குமாறும், விளையாட்டு மைதானங்களில் விளையாடுவது முதலான நிகழ்ச்சிகளை குறைக்கவோ அல்லது மாற்றிவைக்கவோ செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T08:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டைனோசரின் எலும்புகூட்டை ரூ.482 கோடிக்கு வாங்கியுள்ள நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gus-dinosaur-fossil-sold-in-auction-for-482-crores-1784102437"></link>
            <id>https://news.lankasri.com/article/gus-dinosaur-fossil-sold-in-auction-for-482-crores-1784102437</id>
            <summary type="text">பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசர் என்ற உயிரினத்தை நாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்போம். 

டைனோசரின் புதைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசர் என்ற உயிரினத்தை நாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்போம்.</p><p> 

டைனோசரின் புதைப்படிவங்கள் அவ்வப்போது அரிதாக சில இடங்களில் அகழாய்வின் போது கண்டறியப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கபட்ட டைனோசரின் எலும்புகூடு ரூ.482 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. </p><h3>

ரூ.482 கோடிக்கு வாங்கப்பட்ட டைனோசரின் எலும்புகூடு</h3><p>

சுமார் 12.5 அடி (3.8 மீட்டர்) உயரமும் 38 அடி (11.5 மீட்டர்) நீளமும் கொண்ட கஸ்(GUS) என பெயரிடப்பட்டுள்ள இந்த டைனோசர் எலும்புக்கூடு, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைரனோசரஸ் ரெக்ஸ் மாதிரிகளில் மிகப்பெரிய மற்றும் மிகவும் முழுமையான ஒன்றாகக் கருதப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7246e03-7a23-436c-9895-e97419732dfc/26-6a573e2763956.webp' /></p><p>
இதில், கத்தி போன்ற கூர்மையான பற்களைக் கொண்ட தாடை, பாதுகாக்கப்பட்ட மண்டையோடு உள்ளது. மேலும், இதில் நன்கு பாதுகாக்கப்பட்ட 2 பாதங்களும், டி. ரெக்ஸ் புதைபடிவங்களில் அரிதாகக் காணப்படும் ஃபர்குலா அல்லது விஷ் போன் உள்ளிட்ட பல அரிய எலும்புகளும் அடங்கியுள்ளன.
</p><p>
டைரனோசரஸ் ரெக்ஸின் எலும்புக்கூடு, பல ஆண்டுகளாக ஏற்பட்ட பல்வேறு காயங்களின் அறிகுறிகளையும் காட்டுகிறது. அந்த எலும்புகளில், விலா எலும்பு மற்றும் வயிற்றுப் பகுதிக்கு அருகில் சில முறிந்த மற்றும் குணமடைந்த எலும்புகளும், மண்டை ஓட்டு எலும்புகளில் சில கடித் தடங்களும் காணப்படுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1acd7ebe-a99f-4592-8a0e-d967725b5f35/26-6a573e28186ec.webp' /></p><p>

சோத்பீஸ் நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில், 7 பங்கேற்பாளர்கள் கலந்து கொந்துள்ளனர். 20 - 30 மில்லியன் டொலருக்கு ஏலம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 50.1 மில்லியன் டொலருக்கு(இந்திய மதிப்பில் சுமார் ரூ.482 கோடி) பெயர் வெளியிட விரும்பாத நபர் வாங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

2024 ஆம் ஆண்டில் ஹெட்ஜ் ஃபண்ட் முதலீட்டாளரான கென்னத் கிரிஃபின்,ஸ்டெகோசரஸ் “அபெக்ஸ்" எனப்பயிரிடப்பட்ட டைனோசர் எலும்புக்கூட்டை 44.6 மில்லியன் டொலருக்கு வாங்கியதே அதிகபட்சமாக இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9097147-efb2-4469-9695-d923d69282a0/26-6a573e26b3ad2.webp' /></p><p>

இந்த புதைப்படிவம் Gary Gus Licking என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கண்டறியப்பட்ட நிலையில், இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை, அவர் மறைந்து விட்டதால் அவரது குடும்பத்திற்கு செல்லும்.
</p><p>
அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த புதைபடிவம், ஆராய்ச்சியாளர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதால், கஸ்ஸை ஒரு பொது அருங்காட்சியகத்தில் வைக்குமாறு முதுகெலும்பி தொல்லுயிரியல் சங்கம் அதன் புதிய உரிமையாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T08:01:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேங்காக் இசை விடுதியில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bangkok-music-pub-death-doll-reach-32-1784099638"></link>
            <id>https://news.lankasri.com/article/bangkok-music-pub-death-doll-reach-32-1784099638</id>
            <summary type="text">பேங்காக்கில் உள்ள இசை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இசை விடுதியில் தீ விபத்துபேங்காக்கின் வடக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேங்காக்கில் உள்ள இசை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.</p><h2> இசை விடுதியில் தீ விபத்து</h2><p>பேங்காக்கின் வடக்கு பகுதியில் உள்ள சத்துசாக்-கில் அமைந்துள்ள ராங் பீர் லேட் பிராவ்(Rong Beer Na Lat Phrao) என்ற இசை விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p> முதற்கட்ட விசாரணையில், இந்த தீ விபத்தானது விடுதியின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த ஏர் கண்டிஷனரில் ஏற்பட்ட மின்சகிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9387260-fb9a-4cd1-8ac6-84f374e4a3e1/26-6a573337ebde5.webp' /></p><p> இந்த சம்பவத்தின் போது பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், பின்னர் தீப்பொறிகளும் புகையும் இடத்தை முழுவதுமாக சூழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>விபத்துக்குள்ளான இசை விடுதி விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிக்காக அதிக இளைஞர்கள் கூடும் இடமாக கருதப்படுகிறது.</p><h2> உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு</h2><p>இந்த சம்பவத்தில் ஏற்கனவே 30 பேர் வரை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3846a7e2-ce8e-456e-91ff-216f45c624af/26-6a573338bdda4.webp' /></p><p> மேலும் தற்போது வரை 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 15 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> சம்பவத்தின் போது விடுதியின் அவசர கால வழி அடைக்கப்பட்டிருந்ததா மற்றும் விடுதி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="http://உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்." target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T07:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறு, ஏரிகளில் குளிப்பவர்களுக்கு சுவிஸ் அதிகாரிகளின் எச்சரிக்கை செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-officials-warns-in-bath-for-lakes-rivers-1784099096"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-officials-warns-in-bath-for-lakes-rivers-1784099096</id>
            <summary type="text">சுவிஸ் மாகாணமொன்றில், ஆறு, ஏரிகளில் குளிப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள் அதிகாரிகள்.

ஆறு, ஏரிகளில் குளிப்பவர்களுக்கு ஒரு எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிஸ் மாகாணமொன்றில், ஆறு, ஏரிகளில் குளிப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள் அதிகாரிகள்.
</p><h3>
ஆறு, ஏரிகளில் குளிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி</h3><p>

சுவிட்சர்லாந்தின் Fribourg மாகாண அதிகாரிகள், மாகாணத்திலுள்ள ஆறு, ஏரிகளில் தண்ணீர் மட்டம் குறைவாக இருப்பதும், வெப்பநிலை அதிகரித்துவருவதும், பாக்டீரியா பெருக சாதகமான சூழல் என்று தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c1341fd-ab6b-4662-a8e7-9f0fdc7eb692/26-6a57311a16d78.webp' /></p><p>
ஆகவே, மக்கள் அனுமதிக்கப்பட்ட கடற்கரைகளில் மட்டுமே குளிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
</p><p>
கடற்கரைகளில் உள்ள தண்ணீரின் தரம் முறைப்படி தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், ஆறு, ஏரிகளில் அப்படி இல்லை.&nbsp;</p><p></p><p>

ஆகவே, முறைப்படி தொடர்ச்சியாக பரிசோதனைக்குட்படுத்தப்படாத நீர் நிலைகளில் நீந்துவது உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
குறிப்பாக, எளிதில் பாதிக்கப்படும் தோல் உள்ளவர்கள், சிறுவர்கள் உட்பட, அத்தகைய ஆறு, ஏரிகளைத் தவிர்க்குமாறும், மற்றபடி ஆறு, ஏரிகளில் நீந்துபவர்கள், நீந்தி முடித்தபின் நல்ல தண்ணீரில் குளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T07:05:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறைய பிழைகளை செய்துவிட்டோம்: தோல்வி குறித்து எம்பாப்பே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mbappe-said-about-reason-behind-loss-with-spain-1784098282"></link>
            <id>https://news.lankasri.com/article/mbappe-said-about-reason-behind-loss-with-spain-1784098282</id>
            <summary type="text">தங்கள் திட்டத்தை செயல்படுத்தவே முடியவில்லை என பிரான்ஸ் வீரர் எம்பாபே தெரிவித்தார்.&amp;nbsp;கிலியன் எம்பாப்பே 

ஸ்பெயின் அணிக்கு எதிரான FIFA உலகக்கிண்ண ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கள் திட்டத்தை செயல்படுத்தவே முடியவில்லை என பிரான்ஸ் வீரர் எம்பாபே தெரிவித்தார்.&nbsp;</p><h2>கிலியன் எம்பாப்பே</h2><p> 

ஸ்பெயின் அணிக்கு எதிரான FIFA உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் படுதோல்வியடைந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1aaaa35-16b3-41b3-a406-badb8114c634/26-6a572ee6bc4e2.webp' />&nbsp;</p><p></p><p>

நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பேவினால் (Kylian Mbappe) ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. </p><p>

போட்டிக்கு பின் பேசிய எம்பாப்பே, "நாங்கள் நிறைய பிழைகளை செய்துவிட்டோம். திட்டமிட்ட ஆட்ட யுக்திகளை செயல்படுத்தவே முடியாமல் போய்விட்டது. 

உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு உரிய தரத்தில் ஆடாததால் இறுதிப் போட்டி என்று கனவை எட்ட முடியவில்லை" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/996eb86a-ec1f-4c45-9fb0-7340d399b93e/26-6a572ee609f16.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T06:55:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.3 கோடி லிற்றர் ரசாயன பால் விநியோகம்... கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-3-crore-litre-synthetic-milk-made-in-maharashtra-1784097534"></link>
            <id>https://news.lankasri.com/article/2-3-crore-litre-synthetic-milk-made-in-maharashtra-1784097534</id>
            <summary type="text">இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், கடந்த ஆறு மாதங்களாக மக்கள் கலப்பட பாலை உட்கொண்டு வந்துள்ளார்கள் என்னும் அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், கடந்த ஆறு மாதங்களாக மக்கள் கலப்பட பாலை உட்கொண்டு வந்துள்ளார்கள் என்னும் அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.</p><h3>

கலப்பட பால்
</h3><p>
இந்த கலப்பட பால் என்பது உண்மையில் பாலே அல்ல என்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணம்!
</p><p>
ஆம், டிட்டர்ஜண்ட் பவுடர், பாமாயில் மற்றும் தரம் குறைந்த ரசாயன பவுடர் ஒன்றை பயன்படுத்தி பால் போன்ற ஒன்றை செயற்கையாக உருவாக்கியுள்ளது ஒரு நிறுவனம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34b33fae-060e-4c64-ad44-d4c38d0074bb/26-6a572affb0da7.webp' /></p><p>
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் பாலில், 100 லிற்றர் நல்ல பாலுடன் 10 லிற்றர் இந்த கலப்பட பால் கலக்கப்பட்டுள்ளது.</p><p>

அப்படியானால், 2.3 கோடி லிற்றர் கலப்படப் பால், கடந்த ஆறு மாதங்களாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுவந்திருக்கிறது.&nbsp;</p><p></p><p>
அவ்வகையில், 2,30,470 கிலோ செயற்கை பால் பவுடரை பயன்படுத்தி, சுமார் 23,04,070 லிற்றர் கலப்படப் பால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 9.21 கோடி ரூபாய் ஆகும்.
</p><p>
மஹாராஷ்ட்ராவின் Dharashiv மாவட்டத்தில் இந்த கலப்பட கும்பலை பொலிசாரும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் கண்டுபிடித்துள்ள நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரும் தலைமறைவாகிவிட்டார்கள்.
</p><p>
அவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை ஆய்வாளர் ஒருவர் தலைமையில் சிறப்பு பொலிஸ் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
</p><h3>
அதிரவைக்கும் தகவல்

விடயம் </h3><p>என்னவென்றால், இந்த டிட்டர்ஜெண்ட் மற்றும் பாமாயில் கலந்த கலப்பட பாலை அருந்துவதால், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் குடல் பயங்கரமாக பாதிக்கப்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ab03c8e-ca5a-4ba2-a8d9-25808d208651/26-6a572b0061b3f.webp' /></p><p>
குறிப்பாக, குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்களுக்கு இந்த கலப்படப் பால் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
</p><p>
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், மஹாராஷ்ட்ராவின் Dharashiv மாவட்டத்திலுள்ள Bhum தாலுகாவிலிருந்து நாளொன்றிற்கு பல லட்சம் லிற்றர் பால் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
</p><p>
அத்துடன், நாளொன்றிற்கு சுமார் 70 முதல் 80 டன் கோவாவும் தயாரிக்கப்படுகிறது. ஆக, இதே கலப்படப் பாலை பயன்படுத்தி அந்த கோவா தயாரிக்கப்பட்டுள்ளதா, அந்த கலப்படப் பால் ஏற்றுமதி செய்யப்படுவதால், அது எங்கெங்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்னும் பல கேள்விகள், நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T06:41:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய பிரதமருக்கு பிரான்சின் உயரிய விருது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/starmer-becomes-1st-uk-pm-to-receive-chevalier-1784092308"></link>
            <id>https://news.lankasri.com/article/starmer-becomes-1st-uk-pm-to-receive-chevalier-1784092308</id>
            <summary type="text">பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு, பிரான்சின் மிக உயரிய விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.

பிரித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு, பிரான்சின் மிக உயரிய விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
</p><h3>
பிரித்தானிய பிரதமருக்கு பிரான்சின் உயரிய விருது</h3><p>

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு, பிரான்சின் மிக உயரிய விருதான 'செவாலியே' (Chevalier de la Légion d'honneur) விருது வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b11d904d-d22c-4e60-9b99-d576eeb7d903/26-6a571695f10ad.webp' /></p><p>

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உக்ரைன் விவகாரங்களில் அவர் ஆற்றிய முக்கியப் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் இந்த விருதை ஸ்டார்மருக்கு நேரில் வழங்கி கெளரவித்தார்.&nbsp;</p><p></p><p>

ஸ்டார்மருக்கு இந்த உயரிய விருது வழங்கப்படும்போது, உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸும் உடன் இருந்தார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e56c9c7e-d335-4d86-b9f5-c863d77b79b2/26-6a571697570da.webp' /></p><p>

ஸ்டார்மருக்கு செவாலியே விருதை வழங்கிய மேக்ரான், பிரதமராக நீங்கள் பணியாற்றிய ஆண்டுகளுக்காக, எனது நன்றியையும் பிரெஞ்சு மக்களின் நன்றியையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4673145d-5b27-4b17-a114-695f8a0f60bb/26-6a571696a5cdf.webp' /></p><p>
அத்துடன், நாம் போற்றக் கற்றுக்கொள்ளும் மனிதப் பண்புகள் அனைத்தும் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானவையாகவே இருக்கின்றன. உங்களிடம் நாங்கள் மிகவும் நம்பகமான மற்றும் நட்பான ஒரு கூட்டாளரைக் கண்டோம் நான் சொல்லியே ஆக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbe255f6-5a66-4252-99ff-1402c44627d5/26-6a571698068d4.webp' /></p><p>பிரதமர் பதவியிலிருக்கும்போது பிரான்சின் இந்த மிக உயரிய கெளரவத்தை நேரடியாகப் பெறும் முதல் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T06:35:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா - சாதனை படைத்த சுப்மன் கில், அக்சர் படேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-beats-england-by-6-wickets-in-1st-odi-1784096474"></link>
            <id>https://news.lankasri.com/article/india-beats-england-by-6-wickets-in-1st-odi-1784096474</id>
            <summary type="text">இங்கிலாந்திற்கு எதிரான முதல் ODI போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

இந்தியா மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்திற்கு எதிரான முதல் ODI போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><h3>
இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா</h3><p>

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் ODI போட்டி நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cc0894e-542a-4053-ab12-090fe7353c48/26-6a5726db60ba5.webp' /></p><p> 

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பாட்டதை தேர்வு செய்தது. 47.5 ஓவர்கள் முடிவில், 258 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20b7cef3-1031-47ef-adef-4de1008f320b/26-6a5726dc0f540.webp' /></p><p>

இங்கிலாந்து தரப்பில், அதிகபட்சமாக ஜோ ரூட் 76 ஓட்டங்களும், லியாம் டாசன் 68 ஓட்டங்களும் குவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81c50abe-7e9a-42e3-b6b4-396ba4fdd69e/26-6a5726dcb3001.webp' /></p><p>

இந்தியா தரப்பில் அக்சர் படேல் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4742f20-9ff6-4560-bea5-36d319865c2d/26-6a5726dd61609.webp' /></p><p>
259 ஓட்டங்கள் என்று வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா 11 ஓட்டங்களுடனும், விராட் கோலி 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f055e4d-c59d-4db9-ac48-fbf7c9146568/26-6a5726de0ffb4.webp' /></p><p>

அணித்தலைவர் சுப்மன் கில் 75 பந்துகளில் 80 ஓட்டங்கள் எடுத்த நிலையில், காயம் காரணமாக வெளியேறினார். </p><p>

தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் 35 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 52 ஓட்டங்களும், அக்சர் படேல் 57 ஓட்டங்களும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.&nbsp;</p><p></p><p>

 45.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 262 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.</p><p> 

4 விக்கெட்கள் எடுத்து, 57 ஓட்டங்கள் குவித்த அக்சர் படேல் ஆட்ட நாயகன் விருது வென்றார். </p><h3>

சாதனைகள்</h3><p> 

40 ஓவர்களுக்கு பின்னர் பந்து வீச வந்து 4 விக்கெட்களை கைப்பற்றிய 2வது சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அக்சர் படேல் படைத்துள்ளார். முன்னதாக ஜடேஜா மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27510a93-80a1-41ec-8b0b-6dfd26263e25/26-6a5726e00ff6f.webp' /></p><p>
இந்த போட்டியில் சுப்மன் கில் அடித்த 80 ஓட்டங்கள் மூலம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அணித்தலைவராக 3 இன்னிங்ஸில் விளையாடி 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 510 ஓட்டங்கள் இதுவரை அடித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6a2d2b-4290-4fe7-88ca-caa33016f2b9/26-6a5726df5fa44.webp' /></p><p>

இதன் மூலம், இங்கிலாந்தில் ஒரே மைதானத்தில் 500 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்திய அணித்தலைவர் என்ற சாதனையை படைத்தார்.&nbsp;</p><p></p><p> 

முன்னதாக, விராட் கோலி இந்த மைதானத்தில், 6 இன்னிங்ஸில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 469 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.</p><p>

இதை போட்டியில் ஆடியதன் மூலம், 200 ODI போட்டிகளில் விளையாடிய 2வது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜாஸ் பட்லர் படைத்துள்ளார். 

இயோன் மோர்கன் 225 ODI போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T06:22:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா, வெனிசுலா, கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்த டிரம்ப்: சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-shares-ai-usa-map-on-truth-social-1784095598"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-shares-ai-usa-map-on-truth-social-1784095598</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் பகிர்ந்த AI புகைப்படம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> டிரம்ப் பகிர்ந்த AI புகைப்படம்</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தன்னுடைய சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியல்(Truth Social) பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள அந்த புகைப்படத்தில், கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்க எல்லைக்கு உட்பட்ட பகுதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தது.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/937c85f7-df85-460d-8c57-c7d09e42ba0d/26-6a57236f7e9d0.webp' /></p><p> இந்த புகைப்படம் உக்ரைன் - ரஷ்யா மோதல் தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் 2025ம் ஆண்டு நடைபெற்ற உலக தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மாற்றியமைக்கப்பட்ட வடிவம் என்று தெரியவந்துள்ளது.</p><p></p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa96f4f7-b957-4e62-9aef-0388f92fba7e/26-6a572370377c9.webp' /></p><p> இதில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட பல நாடுகளின் முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.</p><p> அவர்களில் முக்கியமாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T06:06:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வம்சாவளி வீரரின் விண்வெளி பயணம்: யார் இந்த அனில் மேனன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anil-menon-1st-space-mission-from-bakonur-1784088809"></link>
            <id>https://news.lankasri.com/article/anil-menon-1st-space-mission-from-bakonur-1784088809</id>
            <summary type="text">கேரளாவை சேர்ந்த அனில் மேனன் நேற்று இரவு தன்னுடைய விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளார். இந்திய வம்சாவளி வீரரின் விண்வெளி பயணம்இந்திய வம்சாவளியை சேர்ந்த நாச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவை சேர்ந்த அனில் மேனன் நேற்று இரவு தன்னுடைய விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளார்.</p><h2> இந்திய வம்சாவளி வீரரின் விண்வெளி பயணம்</h2><p>இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன் நேற்றிரவு 8.17 மணிக்கு கஜகஸ்தானின் பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட சோயுஸ் எம்எஸ் 29 விண்கலம் மூலம் தன்னுடைய விண்வெளி பயணத்தை தொடங்கினார்.</p><p>அனில் மேனன் பயணம் செய்த விண்கலமானது தற்போது பாதுகாப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8cf728f-b352-4f2b-bffe-4414834e6496/26-6a5708eac994b.webp' /></p><p> அனில் மேனன் உடன் ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோட்டர் டுப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோரும் தங்கள் விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p> கிட்டத்தட்ட 8 மாதங்கள் இவர்களது விண்வெளி ஆய்வுப் பயணம் தொடரும் என்றும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> யார் இந்த அனில் மேனன்</h2><p>
கேரள மாநிலம் பாலக்காட்டின் ஒட்டப்பாலத்தை சேர்ந்த சங்கரன் மேனன் மற்றும் உக்ரைனின் எலிசபெத் சமோய்லென்கோ ஆகிய தம்பதியினரின் மகன் தான் அனில் மேனன் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0e22c65-b075-41e4-9e0c-b1eaafa587b9/26-6a5708eb811da.webp' /></p><p> அனில் மேனன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து இருப்பதோடு, டாக்டராகவும் பயிற்சி பெற்றுள்ளார்.</p><p> மேலும் அமெரிக்க விண்வெளிப் படையின் பைலட்டாகவும் அனில் மேனன் பணியாற்றியுள்ளார்.</p><p> பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிகாட்டிய அனில் மேனன் நாசாவின் விண்வெளி குழுவில் இடம்பெற்றுள்ளார்.</p><p> தன்னுடைய முதல் விண்வெளிப் பயணத்தில் அனில் மேனன், நீண்ட காலம் விண்வெளியில் தங்குவதால் மனிதர்களின் உடல் நலத்தில் ஏற்படும் மாறுதல்கள் குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T04:17:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 10 வயது சிறுவன்: இஸ்ரேலிய படையினரின் அத்துமீறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/10-yrs-old-killed-in-israel-army-shooting-in-gaza-1784086219"></link>
            <id>https://news.lankasri.com/article/10-yrs-old-killed-in-israel-army-shooting-in-gaza-1784086219</id>
            <summary type="text">காசாவில் நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுவன் கொல்லப்பட்டு இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 வயது சிறுவன் உயிரிழப்புதெற்கு காசாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசாவில் நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுவன் கொல்லப்பட்டு இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> 10 வயது சிறுவன் உயிரிழப்பு</h2><p>தெற்கு காசாவின் ராபாவில் உள்ள அல்மவாசி பகுதியில் அமைந்துள்ள தற்காலிக அகதிகள் முகாமில் இஸ்ரேலிய படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 வயதுடைய முவாதாஸ் அபு ஷார் என்ற சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.</p><p> இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிறுவனின் அத்தை பேசிய போது, அந்த சிறுவன் கையில் என்ன துப்பாக்கியா வைத்திருந்தான்? அவன் கூடாரத்திற்குள் தனியாக விளையாடி கொண்டிருந்தான். அவனுக்கு மகிழ்ச்சியாக வாழவும், விளையாடவும் உரிமை இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b693b1fb-3c24-4b2c-97cc-3595c27d8f52/26-6a56fecc9f913.webp' /></p><p>இஸ்ரேலிய படைகள் கடந்த சில நாட்களாக நடத்தி வரும் துப்பாக்கிச் சூட்டில் 8 முதல் 14 வயதுடைய நான்கு குழந்தைகள் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2> &nbsp;காவல் நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்</h2><p>
வடக்கு காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையம் மீது இஸ்ரேலிய படையினர் ட்ரோன் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.</p><p> இந்த ட்ரோன் தாக்குதலில், காவல் நிலையத்தின் தலைவரான கர்னல் முகமது மர்வான் சலீம் மற்றும் சில காவல்துறை அதிகாரிகள், பெண் ஒருவர் என 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p> கர்னல் முகமது மர்வான் ஜபாலியா மத்திய படைப்பிரிவின் தலைவராக செயல்பட்டதாகவும், இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட காரணத்தினாலும் இந்த தாக்குதல் தவிர்க்க முடியாதது என்று இஸ்ரேல் தரப்பு விளக்கமளித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T03:30:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸை அடுத்து... செங்கடல் வழித்தடத்தை முடக்க திட்டமிடும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-eyes-choking-off-red-sea-1784075252"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-eyes-choking-off-red-sea-1784075252</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான், தற்போது தனது மிகவும் ஆபத்தான துருப்புச்சீட்டைப் பயன்படுத்தக்கூடும் என்று தகவல் கசிந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான், தற்போது தனது மிகவும் ஆபத்தான துருப்புச்சீட்டைப் பயன்படுத்தக்கூடும் என்று தகவல் கசிந்துள்ளது.</p><h2>அமெரிக்கா மீது அழுத்தம்</h2><p>
</p><p>செங்கடலுக்கான பாப் அல்-மண்டேப் நுழைவாயிலை மூடுவதற்கு யேமனின் ஹவுதி படைகளைப் பயன்படுத்துவதுடன், அமெரிக்காவுக்கு எதிராக ஒரு புதிய முனையைத் திறந்து, உலகின் மிக முக்கியமான இரண்டு எரிசக்திப் பாதைகளை ஆபத்துக்குள்ளாக்குதல் என்பதே ஈரானின் திட்டம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae45e279-8d14-483f-adff-d880a8ad9363/26-6a56d50c84b43.webp' /></p><p> </p><p>ட்ரம்பின் மிரட்டலுக்கு இதுவரைப் பணியாத ஈரானுக்குள் அமெரிக்கத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதாலும், அதனுடன் ஹவுதிகளின் தாக்குதல்களும் அதிகரித்து வருவதாலும், </p><p>ஈரான் இந்த மோதலை விரிவுபடுத்தி, வளைகுடாப் பகுதிக்கு அப்பால் உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கான அச்சுறுத்தலை நீட்டிப்பதன் மூலம் அமெரிக்கா மீது அழுத்தத்தை அதிகரிக்க முயல்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். </p><p>ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்தைத் தடை செய்வதன் மூலம், ஈரான் தனது திட்டத்தின் வலிமையை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது.</p><p>
தற்போது, ​​செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மண்டேபில் இரண்டாவது அழுத்தப் புள்ளியைத் திறக்க ஈரான் தயாராக இருப்பதாகத் தெரிகிறது; இந்த நீர்வழி வழியாகவே சவூதி எண்ணெய் ஏற்றுமதியும், உலகளாவிய கப்பல் போக்குவரத்தின் கணிசமான பங்கும் கடந்து செல்கின்றன.</p><p></p><p> </p><p>இதனிடையே, சவுதி அரேபியா ஏமன் மீதான தாக்குதலைத் தொடர்ந்தால் பாப் அல்-மண்டேப் நீரிணையை மூடுவதற்கு நாட்டின் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக ஏமன் நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று எச்சரித்தார். </p><p>மேலும், ஏமன் மீது தாக்குதல் நடத்துமாறு சவுதி அரேபியாவை வாஷிங்டன் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தது; இத்தகைய தூண்டுதல் நடவடிக்கை ஒருபோதும் அமெரிக்காவின் நலனுக்கு உகந்ததாக இருக்காது என ஹவுதி எதிர்ப்பு இயக்கம் ஒன்று பதிலளித்துள்ளது.</p><h2>ஹவுதிகள் நிரூபித்துள்ளனர்</h2><p>
</p><p>வளைகுடாவிலிருந்து செங்கடல் வரை மோதல் பரவும் இக்கட்டான சூழல் உருவாகி வருவதால், வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலானது, உலகின் மிக முக்கியமான இரண்டு எண்ணெய் போக்குவரத்துத் தடைகள் இந்த மோதலின் தீர்க்கமான போர்க்களமாக மாறுவதற்கு முன்பாக, பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புமாறு அமெரிக்கா மற்றும் ஈரான் மீதான அழுத்தத்தையும் அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f37a5de-57b2-4ff7-8186-7ef5e6e398c4/26-6a56d50d70a63.webp' /></p><p> </p><p>பாப் அல்-மண்டேப் வழியாக உலகளாவிய வர்த்தகத்தை முடக்க முடியும் என்பதை ஹவுதிகள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். 2023 அக்டோபரில் காஸா போர் வெடித்த பிறகு, ஹவுதிகள், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களைக் குறிவைப்பதாகக் கூறி, செங்கடலில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது.
</p><p>இந்த நடவடிக்கை, முக்கிய கப்பல் நிறுவனங்களைத் தெற்கு ஆப்பிரிக்காவைச் சுற்றி தங்கள் கப்பல்களின் பாதைகளை மாற்றிவிடக் கட்டாயப்படுத்தியது, இதனால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தன; மேலும் இது, கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க மற்றும் பிரித்தானிய வான்வழித் தாக்குதல்களையும், ஒரு பன்னாட்டுக் கடற்படை நடவடிக்கையையும் தூண்டியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T03:05:51+00:00</updated>
        </entry>
    </feed>
