<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-17T05:47:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீயிலிருந்து தப்ப மூன்றாவது மாடியிலிருந்து குதித்த இந்தியர்: பேரன் கண்ட திடுக் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/grandson-sees-grandfa-fell-from-3rd-floor-fire-1784266852"></link>
            <id>https://news.lankasri.com/article/grandson-sees-grandfa-fell-from-3rd-floor-fire-1784266852</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வாழ்ந்துவந்த இந்திய தம்பதி, தீவிபத்தில் பலியான விடயம் துயரத்தை உருவாக்கியுள்ளது.

பேரன் கண்ட திடுக் காட்சி

கனடாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வாழ்ந்துவந்த இந்திய தம்பதி, தீவிபத்தில் பலியான விடயம் துயரத்தை உருவாக்கியுள்ளது.
</p><h3>
பேரன் கண்ட திடுக் காட்சி</h3><p>

கனடாவின் எட்மண்டன் நகரில் வாழ்ந்துவரும் லாலி தூர் என்னும் இளைஞர், திங்கட்கிழமை இரவு, தன் குடும்பத்துடன் உணவருந்திக்கொண்டிருந்திருக்கிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c5a594-8a44-4fe2-82fd-41409509389d/26-6a59c0657e976.webp' /></p><p>

அப்போது, தொலைக்காட்சி செய்திகளில், வீடொன்றில் பற்றிய தீயிலிருந்து தப்ப முதியவர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்ததைக் குறித்த செய்தி ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டிருந்திருக்கிறது.
</p><p>
அந்த வீடு தனது தாத்தா, பாட்டியின் வீடு என்பதை அறிந்த தூர், உடனடியாக அங்கு விரைந்துள்ளார்.
</p><p>
தாத்தா வீட்டுக்குச் சென்ற தூர், தன் தாத்தாவின் வீடு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதையும், தீயணைப்பு வீரர்கள் தன் தாத்தாவுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
தூரின் தாத்தாவான மேஜர் சிங் பந்தலும் (85) பாட்டியான சுரிந்தர்ஜித் கவுர் பந்தலும் (82), 30 ஆண்டுகளாக எட்மண்டனில் வாழ்ந்துவந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35ce24a8-5cc6-4b6b-93e3-dc4e6ca68cf9/26-6a59c0662e698.webp' /></p><p>

திங்கட்கிழமை இரவு 9.15 மணியளவில், அவர்கள் வாழ்ந்துவந்த வீட்டின் மீது வாகனம் ஒன்று மோதியுள்ளது.
</p><p>
வாகனம் மோதியதில், அங்கிருந்த எரிவாயுக் குழாய் வெடித்து அந்தக் கட்டிடம் தீப்பற்றியுள்ளது.
</p><p>
வீடு தீப்பிடித்ததை அறிந்த மேஜர் சிங், மூன்றாவது மாடிலிருந்து குதித்துள்ளார். ஆனால், அவர் உயிர் தப்பவில்லை. அதேபோல, வீட்டுக்குள்ளிருந்த அவரது மனைவியான சுரிந்தர்ஜித் கவுர், மறுநாள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.</p><p>

மேஜர் சிங், சுரிந்தர்ஜித் கவுர் தம்பதியருக்கு ஏற்பட்ட துயர முடிவு அவர்களுடைய குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.</p><p>

இந்நிலையில், அவர்கள் வீட்டின் மீது காரை மோதிய 62 வயது நபரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், அந்த கட்டிடத்தில் வாழ்ந்துவந்த ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.</p><p>

இந்த துயர சம்பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T05:41:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர தாக்குதலால் சபரிவர்மன் மூச்சுத்திணறி மரணம் - அறிக்கையில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/custodial-death-sabarivarman-postmortem-report-1784265612"></link>
            <id>https://news.lankasri.com/article/custodial-death-sabarivarman-postmortem-report-1784265612</id>
            <summary type="text">விசாரணைக்கைதி சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.

சபரிவர்மன் மரணம்

கன்னியாகுமரி மாவட்டதில் குட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசாரணைக்கைதி சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
</p><h3>
சபரிவர்மன் மரணம்
</h3><p>
கன்னியாகுமரி மாவட்டதில் குட்கா விற்பனை செய்ததாகக் கூறி, கடந்த ஜூலை 9 ஆம் தேதி 35 வயதான சபரிவர்மன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a035ca84-68c0-40ca-95bd-6f1b214d4d62/26-6a59bb8e46faa.webp' /></p><p> 

கடந்த 13 ஆம் தேதி அவருக்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். </p><p>

அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது உடலை பெற குடும்பத்தினர், மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>முதல் தகவல் அறிக்கை ஜூன் 9 ஆம் தேதி உதவி ஆய்வாளர் பிரைட் பிளஸிங், தலைமை காவலர்கள் ஞானபிலிப்பு, சுயம்புலிங்கம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சபரிவர்மனின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் கடையில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்களாம்.</p><p> 

கடையின் உரிமையாளரான சபரிவர்மன் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதுடன், குட்கா பாக்கெட்டுகளை அவரே எடுத்து ஆஜர்படுத்தினாராம். தலா 15 கிராம் எடைகொண்ட புகையிலை 11 பாக்கெட்டுகள் என 192 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றியுள்ளனர்&nbsp;</p><p>
இதன் பின்னர், சபரிவர்மனை தாக்கியதாக சிறை வார்டன்கள் 3 பேர் மற்றும் 8 சிறைக் கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcdb1f92-04ba-4a00-ba46-92d085e906f9/26-6a59bb8d94302.webp' /></p><p>

சபரி வர்மன் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் தற்காலிக அரசுப் பணி ஆணையை வழங்க அமைச்சர்கள் ராஜேஷ்குமார் மற்றும் ஸ்ரீநாத் முன் வந்தனர். </p><p>

இதனை நிராகரித்த குடும்பத்தினர், சபரி வர்மனின் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட வீடியோவை மறு ஆய்வு செய்த பிறகே அவரது உடலை பெறுவோம் என்று தெரிவித்தனர்.
</p><h3>
உடற்கூறாய்வு அறிக்கை</h3><p>
சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில், அவரின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், கொடூரமான தாக்குதலால் அவர் மூச்சுத்திணறி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

அந்த அறிக்கையில், "சபரி வர்மனின் மூக்கிலிருந்து ரத்தம் கலந்த திரவம் வெளியேறியது. தலையின் மேற்பகுதி, கழுத்தின் பின்புற நடுப்பகுதியில் ஆழமான ரத்தக்கட்டுகள், சிராய்ப்பு காயங்கள் இருந்தது 

மூளை, அதன் ரத்த நாளங்களில் வீக்கம் இருந்தது. </p><p>இது பொதுவாக மூச்சு திணறல் அல்லது கடும் போராட்டத்தின் போது ஏற்படும் அறிகுறி.

சபரிவர்மனின் உடல் உறுப்பு மாதிரிகள், திசுக்கள் பகுப்பாய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது. 

அவரது வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு உள்ளது. கை, காலில் தழும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T05:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மோதிய ரயில்: 3 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/train-collided-with-a-school-van-in-murshidabad-1784265141"></link>
            <id>https://news.lankasri.com/article/train-collided-with-a-school-van-in-murshidabad-1784265141</id>
            <summary type="text">&amp;nbsp;மேக்கு வங்காளம் மாநிலத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது ரயில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேன் மீது மோதிய ரயில்வெள்ளிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மேக்கு வங்காளம் மாநிலத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது ரயில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> வேன் மீது மோதிய ரயில்</h2><p>வெள்ளிக்கிழமை காலை மேற்கு வங்காள மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p> இந்த கோரமான விபத்தில் 2 மாணவர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பல மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/585b3d5e-bc8d-4e3a-beac-07a91801a359/26-6a59b9b68e5f5.webp' /></p><p> &nbsp;பெர்காம்பூரில் உள்ள கர்ணசுபர்ணா ரயில்வே கேட் பகுதியில் காலை 7 மணியளவில் இந்த மோதல் விபத்தானது நிகழ்ந்துள்ளது.</p><p></p><p> பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது நிம்திதா - கட்வா பயணிகள் ரயில் வேன் மீது மோதியது.&nbsp; மோதலின் தீவிரம் காரணமாக வேன் முற்றிலுமாக சிதைந்தது.</p><p> சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விபத்து தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.</p><p> &nbsp;ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T05:12:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலாவிக்கு பள்ளி சுற்றுலா சென்ற 17 வயது லண்டன் மாணவர்: நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/london-student-drowned-to-dies-during-school-trip-1784264141"></link>
            <id>https://news.lankasri.com/article/london-student-drowned-to-dies-during-school-trip-1784264141</id>
            <summary type="text">மலாவி நாட்டில் லண்டன் பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மாணவர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலாவி நாட்டில் லண்டன் பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> லண்டன் மாணவர் உயிரிழப்பு</h2><p>
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவிக்கு பள்ளி சுற்றுலா சென்ற 17 வயது லண்டன் மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> யூஜின் ஈனோக் குவான்(Eugene Enoch Kwon) என்ற சிறுவன் ரிச்மண்ட அபான் தேம்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஹாம்டன் பள்ளியில் பயின்று வந்த நிலையில் சுற்றுலா சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64601465-920d-410c-86ed-1332147e9a37/26-6a59b5ce99fc6.webp' /></p><p> மலாவி ஏரியில் உள்ள மங்கி பே(Monkey Bay) என்ற பகுதியில் உள்ள ஈனோக் குவான் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார்.</p><p></p><p> இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதன் பிறகு கடலோரக் காவல் படையினரால் ஈனோக் குவான் கண்டெடுக்கப்பட்டார்.</p><p> அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2> ஹாம்டன் பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை</h2><p>
மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஹாம்டன் பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த கஷ்டமான சூழலில், உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>தற்போது மாணவர் குடும்பத்தினருக்கும், பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர்கள் சமூகத்திற்கும் தேவையான உளவியல் பயிற்சிகளை வழங்குவதில் முழு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T04:56:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பான முகத்தை உடனடியாக பொலிவாக்க உதவும் மஞ்சள்.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/homemade-turmeric-remedies-to-get-a-glowing-skin-1784261426"></link>
            <id>https://news.lankasri.com/article/homemade-turmeric-remedies-to-get-a-glowing-skin-1784261426</id>
            <summary type="text">பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.

இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
</p><p>
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.</p><p>

மஞ்சள் தூள் முகத்திற்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது.</p><p> </p><p></p><p>இது கிருமி நாசினி, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு அதிசய மூலிகையாகும்.&nbsp; </p><p>இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், மற்றும் சுருக்கங்களைக் குறைத்து முகத்தை பொலிவாக்க உதவுகிறது.</p><p>

அந்தவகையில், முகப்பொலிவை அதிகரிக்க மஞ்சளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.&nbsp;</p><h2>1. தேவையான பொருட்கள்
</h2><ul><li>
மஞ்சள்- 1 ஸ்பூன் </li><li>
அரிசி மாவு- 1 ஸ்பூன்</li><li> 
பால்- 5 ஸ்பூன் </li><li>
தேன்- 2 ஸ்பூன்</li></ul><h2>எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன் மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.</p><p> 

பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/130ecb87-acb7-420c-afc9-18a7cf9e9968/26-6a59ac593a476.webp' /></p><p>அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். </p><p>

இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால், முகம் பொலிவாக இருக்கும்.
</p><h2>
2. தேவையான பொருட்கள்</h2><ul><li> 

மஞ்சள்- 1 ஸ்பூன் </li><li>
கடலை மாவு- 1 ஸ்பூன்</li><li> 
தயிர்- 3 ஸ்பூன் </li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.</p><p> 

பின் அதில் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.</p><p></p><p> 

அடுத்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊறவைத்து பிறகு குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.</p><p> 

இந்த பேஸ்பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்கி, முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T04:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய ஆபத்தான கைதி: மக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/high-risk-fugitive-escape-from-hospital-in-england-1784259861"></link>
            <id>https://news.lankasri.com/article/high-risk-fugitive-escape-from-hospital-in-england-1784259861</id>
            <summary type="text">பிரித்தானியாவில் மருத்துவமனையில் இருந்து ஆபத்தான கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய ஆபத்தான கைதி
மான்செஸ்டர் மருத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் மருத்துவமனையில் இருந்து ஆபத்தான கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தப்பியோடிய ஆபத்தான கைதி</h2><p>
மான்செஸ்டர் மருத்துவமனையில் மர்வான் ஜும்மா என்ற 20 வயது கைதி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.</p><p> கைதி மர்வான் ஜும்மா-வை காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் மிகவும் ஆபத்தானவர் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.</p><p> கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது தப்பித்த மர்வான் ஜும்மா, பெண்கள் மற்றும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி கடுமையான காயங்கள் ஏற்படுத்திய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ceeafe8-0e80-4f64-848d-4bd63d6007a2/26-6a59a516845d1.webp' /></p><p></p><h2> தேடுதல் வேட்டை தீவிரம்</h2><p>மர்வான் ஜும்மாவை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p> கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையின் சிறப்பு பிரிவினர் இந்த தேடுதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caf7963c-e006-4d49-86fb-a124a4e61761/26-6a59a51734633.webp' /></p><p>தப்பியோடிய ஜும்மா கடைசியாக ராட்க்ளிஃப் பகுதியில் பார்க்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு பரி, ப்ரெஸ்ட்விச், க்ரம்சால் மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளில் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> பொதுமக்கள் ஜும்மாவை பார்த்தால் அவரை பிடிக்கவோ அல்லது நெருங்கவோ வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-17T03:44:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 முதல் இங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இது கட்டாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-to-screen-all-newborns-for-sma-2027-1784220726"></link>
            <id>https://news.lankasri.com/article/england-to-screen-all-newborns-for-sma-2027-1784220726</id>
            <summary type="text">இங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 2027 அக்டோபர் மாதம் முதல் Spinal Muscular Atrophy (SMA) எனப்படும் அரிதான தசை சிதைவுநோய்க்கான பரிசோதனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 2027 அக்டோபர் மாதம் முதல் Spinal Muscular Atrophy (SMA) எனப்படும் அரிதான தசை சிதைவுநோய்க்கான பரிசோதனை கட்டாயமாக நடைபெற உள்ளது.
</p><p>
சுகாதார மற்றும் சமூக பராமரிப்புத் துறை இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p></p><p>SMA நோய் குழந்தைகளின் தசைகளை பலவீனப்படுத்தி, உட்கார, தவழ, நடக்க முடியாமல், சுவாசிப்பதாலும், விழுங்குவதிலும் சிரமம் ஏற்படுத்துகிறது.</p><p>

சிகிச்சை இல்லாமல் விட்டால், இரண்டு ஆண்டுக்குள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இங்கிலாந்தில் வருடத்திற்கு சுமார் 48 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0527ccdd-74e4-44d5-9d30-0344c74f3240/26-6a590c38175cb.webp' /></p><p>புதிய திட்டத்தின் மூலம், குழந்தைகள் பிறந்த 5-ஆம் நாளில் எடுக்கப்படும் heel-prick test மூலம் SMA பரிசோதனை செய்யப்படும். இதுவரை 10 நோய்களுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த பரிசோதனை, இனி SMA-க்கும் பயன்படுத்தப்படும்.
</p><p>
முன்பு அறிவிக்கப்பட்ட பைலட் திட்டம் 72 சதவீத குழந்தைகளுக்கே பரிசோதனை செய்யும் வகையில் இருந்ததால், “postcode lottery” எனப்படும் சமத்துவமின்மைக்கு விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, அரசு அனைத்து குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்யும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
</p><p></p><p>SMA UK அமைப்பின் தலைவர் Giles Lomax, “இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய முன்னேற்றம்” எனக் கூறியுள்ளார். </p><p>Muscular Dystrophy UK அமைப்பும் இதை “வரலாற்று சிறப்புமிக்க தருணம்” என வரவேற்றுள்ளது.
</p><p>
இந்த முடிவு SMA நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கையையும், எதிர்காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T02:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் அடுத்த பேரிடி., உத்தரவுக்காக காத்திருக்கும் ஹவுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-orders-houthis-close-red-sea-route-1784248608"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-orders-houthis-close-red-sea-route-1784248608</id>
            <summary type="text">உலகின் மற்றொரு முக்கியமான நீரிணையை மூட ஈரான் திட்டமிட்டுள்ளது.ஈரானின் மின்சார வலையமைப்பை அமெரிக்கா தாக்கினால், யேமனின் ஹவுதி இயக்கம் செங்கடல் வாயிலான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மற்றொரு முக்கியமான நீரிணையை மூட ஈரான் திட்டமிட்டுள்ளது.</p><p>ஈரானின் மின்சார வலையமைப்பை அமெரிக்கா தாக்கினால், யேமனின் ஹவுதி இயக்கம் செங்கடல் வாயிலான பாப் எல்-மண்டெப் நீரிணையை (Bab el-Mandeb strait) மூட தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
</p><p></p><p>இந்த வாயில் உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகும்.

ஹவுதிகள் ஏற்கனவே ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அந்தப் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளதாகவும், உத்தரவை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஹார்முஸ் நீரிணை ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், செங்கடல் வாயிலும் மூடப்பட்டால், மத்திய கிழக்கு நாடுகளின் இரண்டு முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பாதைகளும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும். இது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2635fd0f-6bd9-49d9-81a8-3861fdfe1dcf/26-6a597921c36a2.webp' /></p><p>சவுதி அரேபியா இந்த அச்சுறுத்தலை மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்டு வருகிறது. ஏற்கனவே தனது எண்ணெய் ஏற்றுமதியின் 70 சதவீதம் செங்கடல் வழியாக யன்பு துறைமுகத்திற்கு மாற்றியுள்ளது.</p><p> அங்கு நேரடி தாக்குதல் நடந்தால், உலக எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்ச்சி ஏற்படும்.
</p><p>
ஈரான், ஹவுதிகளை தனது Axis of Resistance கூட்டணியின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. இதில் லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஈராக்கின் ஷியா ஆயுதக் குழுக்களும் அடங்குகின்றன.</p><p>அமெரிக்கா, ஈரான் ஹவுதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி வழங்குவதாக குற்றம் சாட்டுகிறது. ஆனால் ஈரான் அதை மறுத்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-17T00:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியான்மரில் இரட்டை படகு விபத்து: 500-க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்திருக்கலாம்- ஐ.நா. அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/myanmar-shipwrecks-500-rohingya-missing-1784247514"></link>
            <id>https://news.lankasri.com/article/myanmar-shipwrecks-500-rohingya-missing-1784247514</id>
            <summary type="text">மியான்மர் கடற்கரையில் இரண்டு படகுகள் காணாமல் போனதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அமைப்புகள் (UNHCR, IOM) தெரிவித்துள்ளன.

இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியான்மர் கடற்கரையில் இரண்டு படகுகள் காணாமல் போனதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அமைப்புகள் (UNHCR, IOM) தெரிவித்துள்ளன.</p><p>

இந்த படகுகள் ஜூன் மாத இறுதியில் ரகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்டதாகவும், பெரும்பாலும் ரோஹிங்கியா மக்கள் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
முதல் படகில் சுமார் 250 பேர் இருந்தனர். புறப்பட்ட சில நேரங்களிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டது. இரண்டாவது படகில் 280 பேர் இருந்ததாகவும், ஜூலை 8-ஆம் தேதி அயேயார்வாடி கடற்கரையில் மூழ்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/035b07b5-0261-48fa-99ff-d75edcc3a236/26-6a5974dcac6e1.webp' /></p><p>ரோஹிங்கியா மக்கள் பல தசாப்தங்களாக மியான்மர் அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். 2017-இல் வன்முறையிலிருந்து தப்பி சுமார் ஒரு மில்லியன் பேர் வங்காளதேசம் நாட்டின் காக்ஸ் பஜார் முகாமில் தஞ்சம் புகுந்தனர்.
</p><p>
அங்கு தற்போது நிதி குறைவால் வாழ்வாதாரம் கடினமாகி, பலர் ஆபத்தான கடல் பயணத்தைத் தேர்வு செய்யத் தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p></p><p>சமீபத்திய கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடல் பயணம் இன்னும் ஆபத்தானதாக மாறியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.
</p><p>
ஐ.நா. அமைப்புகள், “இது உலகின் மிக ஆபத்தான கடல் பாதைகளில் ஒன்றாகும். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அகதிகளுக்கான பாதுகாப்பு மற்றும் தஞ்சம் வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T00:17:07+00:00</updated>
        </entry>
    </feed>
