<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-31T09:01:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் பிரதமர் வேட்பாளரா? அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என மிரட்டும் காங்கிரஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/congress-warn-exit-from-tvk-ministry-if-vijay-pm-1788161023"></link>
            <id>https://news.lankasri.com/article/congress-warn-exit-from-tvk-ministry-if-vijay-pm-1788161023</id>
            <summary type="text">congress threat exit from tvk ministry if vijay as pm candidate: முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>congress threat exit from tvk ministry if vijay as pm candidate: முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என எச்சரித்துள்ளது.
</p><h3> 
விஜய் பிரதமர் வேட்பாளர் </h3><p>

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க தவெக முன்னெடுப்பு செய்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டில் செய்து வரும் திட்டங்கள் எனக்கூறி பல்வேறு போலி செய்திகள் வட இந்தியாவில் சமூக ஊடக பிரபலங்களால் பரப்பப்பட்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ff17c40-3ab3-43a5-85e6-2ee2e0647c71/26-6a952c0218c78.webp' /></p><p> 

இதே போல், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் வர வேண்டும் என பேசினார். 

அதனைத்தொடர்ந்து பல்வேறு தவெக அமைச்சர்களும் முதல்வர் விஜய் தான் அடுத்த பிரதமர் என பேசி வருகின்றனர். </p><p>

சமீபத்தில் தனியார் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில், மோடி, ராகுல் காந்தியை தொடர்ந்து முதல்வர் விஜய் 3வது இடம் பிடித்தார்.&nbsp;</p><p></p><p>

அமைச்சர்களின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. </p><h3>

காங்கிரஸ் எச்சரிக்கை</h3><p> 

கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ் குமார், "தவெக அமைச்சர்கள் பேசும்போது எங்கள் முதல்வர் அடுத்த பிரதமர் என்றெல்லாம் சொல்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fa5189d-e4d0-4580-9a99-12c1db65f5ac/26-6a952c00a7e61.webp' /></p><p> 

வருகிற 2029 ஆம் ஆண்டு நடைபெறுகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவார்கள்.</p><p>

ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியினுடைய இரண்டு அமைச்சர்களும் இந்த பதவியில் நீடிக்க மாட்டார்கள்" என பேசியுள்ளார். </p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "பிரதமராக வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ முதல்வர் விஜய்க்குத் துளியளவும் கிடையாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a505eddd-0631-428f-9029-3522b7f81c50/26-6a952c0163fa2.webp' /></p><p>அவருக்கு கனவிலும், கற்பனையிலும் கூட அப்படி ஒரு எண்ணம் தோன்றாது.

இதுபோன்று பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர்கள், தவெகவினருக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும். </p><p>

இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை என்பதால், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும். வேறு யாரையும் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:45:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரியின் கோபம் போகவில்லை... நண்பர்கள் வட்டாரம் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/friends-reveal-harry-still-angry-with-other-royals-1788162247"></link>
            <id>https://news.lankasri.com/article/friends-reveal-harry-still-angry-with-other-royals-1788162247</id>
            <summary type="text">&amp;nbsp;Harry still angry with other royals: இளவரசர் ஹரி இன்னமும் ராஜ குடும்பத்தில் சிலர் மீது கோபமாகவே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ராஜ குடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Harry still angry with other royals: இளவரசர் ஹரி இன்னமும் ராஜ குடும்பத்தில் சிலர் மீது கோபமாகவே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>


ராஜ குடும்பத்திலிருந்தும், பிரித்தானியாவிலிருந்தும் வெளியேறி ஆறு ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த நிலையில், பிரித்தானிய மன்னரின் இளைய மகனான ஹரி, தன் குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார்.
</p><h3>
ஹரியின் கோபம் போகவில்லை...
</h3><p>
ஆனால், ஹரி இன்னமும் கோபமாகவே இருப்பதாக அவருடைய நண்பர் வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b7acdcd-3108-4e29-9a82-0a3ef63f34be/26-6a9530c96ab22.webp' /></p><p>
ஹரி மீண்டும் தன் குடும்பத்துடன் இணைவார், சமரசமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ராஜ குடும்ப உறுப்பினர்கள் மீதும், பக்கிங்காம் அரண்மனை அலுவலர்கள் மீதும் கோபமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>
தான் தன் தந்தையுடன் சமரசம் ஆவதை கெடுக்கும் வகையில் தன் தந்தையைச் சுற்றி இருக்கும் அதிகாரிகள் சிலர் செயல்பட்டுவருவதாக ஹரி ஏற்கனவே சாடியிருந்தார்.
</p><p>
இந்நிலையில், ராஜ குடும்ப உறுப்பினர்களும், பக்கிங்காம் அரண்மனை அலுவலர்களும் தன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என ஹரி எதிர்பார்ப்பதாக அவரது நண்பர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:45:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ 2 லட்சம் கோடி... ஈரான் போரால் இந்தியா எதிர்கொண்ட இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-paid-second-highest-1788161962"></link>
            <id>https://news.lankasri.com/article/india-paid-second-highest-1788161962</id>
            <summary type="text">During Iran conflict India paid second highest:&amp;nbsp;கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான இரண்டாவது அதிகபட்ச தொகையை இந்தியா செலவிட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>During Iran conflict India paid second highest:&nbsp;கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான இரண்டாவது அதிகபட்ச தொகையை இந்தியா செலவிட்டுள்ளது.</p><p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட ஈரான் போரால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எத்தகைய பாதிப்பு மற்றும் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை CREA அமைப்பு விரிவான தரவுகளை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d809932-bc11-43aa-b394-65bb25e76f43/26-6a952fac8b82e.webp' /></p><p>
</p><p>ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களில், புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 55 பில்லியன் டொலர்களைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p> 1990-ஆம் ஆண்டு வளைகுடாப் போருக்குப் பிறகு ஏற்பட்ட மிக நீண்ட கால விலை அதிர்ச்சி இதுவாகும். சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. </p><p>கடந்த ஐந்து ஆண்டுகளில் தூய்மையான ஆற்றல் துறையில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கம் இல்லாவிட்டால், புதைபடிவ எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 36 பில்லியன் டொலர்கள் அதிகமாக இருந்திருக்கும் என்று 'ஆற்றல் மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம்' (CREA) தெரிவித்துள்ளது.</p><p> இக்காலகட்டத்தில், 35.5 பில்லியன் டொலர் செலவிட்ட சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா புதைபடிவ எரிபொருட்களுக்காகக் கூடுதலாக 22 பில்லியன் டொலரைச் செலவிட்டுள்ளது.</p><p></p><p> </p><p>அதாவது இந்தியா ரூ 2 லட்சம் கோடி அளவுக்கு அதிகமாக செலவிட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கான செலவுகள் அதிகரித்திருப்பது ஏழை நாடுகளையே மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. </p><p>மார்ச் மற்றும் ஆகஸ்ட் 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் அதிகத் தொகையைச் செலவிட்ட முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. </p><p>பிப்ரவரி மாதம் துவங்கிய போர் மூலம் கடந்த 6 மாதத்தில் உலக நாடுகள் சுமார் 330 பில்லியன் டொலர் தொகையை கூடுதலாக கொடுத்து எரிபொருளை வாங்கியுள்ளது. </p><p>போருக்கு முன்பு இருந்த விலை நிலையும், பிப்ரவரி மாதம் போர் துவங்கிய பின்பு ஏற்பட்ட விலை உயர்வை ஒப்பிடுகையில் ஆசிய நாடுகள் வாங்கும் எல்என்ஜி விலை சராசரியாக 75 சதவீதம் உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a988a05b-ef7b-4601-9e28-7a1e36c00ed5/26-6a952fad46583.webp' /></p><p> </p><p>ஐரோப்பா வாங்கும் எல்என்ஜி விலை 60 சதவீதமும், டீசல் 59 சதவீதமும், கச்சா எண்ணெய் 35 சதவீதமும் விலை அதிகரித்துள்ளது என CREA அமைப்பு கணக்கிட்டு உள்ளது. </p><p>இந்த விலை உயர்வால் உலக நாடுகள் சுமார் 330 பில்லியன் டொலர் தொகையை கூடுதலாக செலவு செய்துள்ளது. இதில் பெரும் பங்கை ஐரோப்பிய நாடுகள் செலுத்தியுள்ளது சுமார் 78 பில்லியன் டொலர் தொகையை கூடுதலாக செலவிட்டு உள்ளது. </p><p>சீனாவுக்கு அடுத்தாக உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இறக்கமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கும் வேளையில் மார்ச் மாதம் நாட்டின் LNG இறக்குமதி என்பது 49 சதவீதம் குறைந்துள்ளது. </p><p>இந்த நிலையில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் எல்என்ஜி இறக்குமதி என்பது வெறும் 8 சதவீதத்தில் இருந்து 32 சதவீதம் வரையில் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்தது. இதன் மூலம் தற்போது இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கியமான எரிவாயு சப்ளையராக மாறியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T07:37:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் பூத்த காதல்: ரஷ்யப் பெண்ணை மணமுடித்த தமிழக இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chennai-youth-married-russian-woman-in-tiruchendur-1788161297"></link>
            <id>https://news.lankasri.com/article/chennai-youth-married-russian-woman-in-tiruchendur-1788161297</id>
            <summary type="text">Chennai youth married russian woman in tiruchendur:&amp;nbsp;சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரஷ்யப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

சென்னை மயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chennai youth married russian woman in tiruchendur:&nbsp;சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரஷ்யப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
</p><p>
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உதயசங்கர் என்ற இளைஞர், ரஷ்ய பெண்ணொருவரை காதலித்து திருச்செந்தூரில் திருமணம் செய்துகொண்டார்.&nbsp;</p><h2>சீனாவில் பூத்த காதல்</h2><p>
சீனாவில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உதயசங்கர்.

இவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றிய மரியா என்ற பெண்ணும் நாட்பாக பழகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574d6352-fb7a-460d-b095-33fc77daa600/26-6a952d13ef90d.webp' />&nbsp;</p><p></p><p> நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது.

பின்னர் உதயசங்கர், மரியா ஜோடி தங்கள் காதல் குறித்து குடும்பத்தாரிடம் கூறி திருமணத்திற்கு சம்மதம் பெற்றுள்ளது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் தமிழ் பாரம்பரிய முறைப்படி உதயசங்கர், மரியாவின் திருமணம் நடந்தது.&nbsp;</p><h2>'கீர்த்தனா' என சூட்டிக்கொண்ட ரஷ்யப் பெண்</h2><p>

இதில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.</p><p> 

ரஷ்யாவைச் சேர்ந்த மரியா தனது பெயரை 'கீர்த்தனா' என சூட்டிக்கொண்டது பலரது கவனத்தை ஈர்த்தது.</p><p>

இதற்கிடையில் இந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-08-31T07:27:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஓட்டங்களில் தவறிய சதம்: இங்கிலாந்து மண்ணில்..பாகிஸ்தான் 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-win-by-194-runs-agains-pak-in-lord-s-test-1788158481"></link>
            <id>https://news.lankasri.com/article/england-win-by-194-runs-agains-pak-in-lord-s-test-1788158481</id>
            <summary type="text">England won by 194 runs against pakistan in lord&#039;s: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>England won by 194 runs against pakistan in lord's: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
</p><p>
லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில், இங்கிலாந்து அணி 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.&nbsp;</p><h2>389 ஓட்டங்கள் இலக்கு</h2><p>

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8513f02-ce6c-4516-8c12-29b1d03a74d7/26-6a95233342c9d.webp' />&nbsp;</p><p></p><p>

இங்கிலாந்து அணி நிர்ணயித்த 389 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான், தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
</p><p>
அணித்தலைவர் பாபர் அஸாம் 6 ஓட்டங்களிலும், மொஹம்மது ரிஸ்வான் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க சவுத் ஷகீல் அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார். </p><p>

சதத்தை நோக்கி பயணித்த சவுத் ஷகீல் (Saud Shakeel), அணியின் ஸ்கோர் 169 ஆக இருந்தபோது ஆட்டமிழந்தார். 

அவர் 122 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்கள் எடுத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6ec940-da3a-4e61-9d4b-3f9d46584cdb/26-6a9523328cbd0.webp' /></p><p>ஷாஸாத்தை 9 ஓட்டங்களிலும், மொஹம்மது அலியை 8 ஓட்டங்களிலும் ஜோஷ் டங் வெளியேற்ற பாகிஸ்தான் 194 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
இதன்மூலம் இங்கிலாந்து அணி 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஓலி ராபின்ஸன் 4 விக்கெட்டுகளும், ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d1795ce-0614-4665-85ae-4385400781af/26-6a952331d763f.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/974d4cdb-50ab-4cee-8d69-d757a094e6ad/26-6a952330eea8f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:43:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[259 பயணிகளுடன் புறப்பட்ட படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி, 18 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/8-dead-as-boat-capsizes-cyprus-with-267-on-board-1788157289"></link>
            <id>https://news.lankasri.com/article/8-dead-as-boat-capsizes-cyprus-with-267-on-board-1788157289</id>
            <summary type="text">Eight dead as boat capsizes off Cyprus with 267 on board: 267 பேருடன் புறப்பட்ட படகொன்று சைப்ரஸ் அருகே கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகியுள்ளார்கள்.


நே...</summary>
            <content type="html"><![CDATA[<p>Eight dead as boat capsizes off Cyprus with 267 on board: 267 பேருடன் புறப்பட்ட படகொன்று சைப்ரஸ் அருகே கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகியுள்ளார்கள்.</p><p>


நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, அதாவது, ஆகத்து மாதம் 30ஆம் திகதி, சைப்ரஸ் நாட்டிலிருந்து துருக்கி நோக்கி படகொன்று புறப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d68915c5-9018-47dc-bef5-0c78380d4603/26-6a951d6b96662.webp' /></p><h3>267 பேருடன் புறப்பட்ட படகு
</h3><p>
சைப்ரஸ் நாட்டிலுள்ள Girne துறைமுகத்திலிருந்து, துருக்கி நாட்டிலுள்ள Taşucu துறைமுகம் நோக்கி, 259 பயணிகள், 8 பணியாளர்களுடன் FILOJET என்னும் அந்தப் படகு புறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cef31e45-ecba-407f-89f9-25e143107474/26-6a951d6ae1605.webp' /></p><p>படகு புறப்பட்டு சுமார் 15 நிமிடங்களே ஆன நிலையில், சுமார் 11.30 மணியளவில், படகு அலைகளில் சிக்கியுள்ளது. முதல் அலையை சமாளித்தாலும், இரண்டாம் அலையில் சிக்கி கவிழ்ந்துள்ளது அந்தப் படகு.&nbsp;</p><p></p><p>
தகவலறிந்து சைப்ரஸ் நாட்டு மீட்புப் படகுகளும் ஹெலிகொப்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59342900-48a4-4a67-83b3-95dd99e9bd66/26-6a951d6c4bc6e.webp' /></p><p>தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 249 பேர் மீட்கப்பட்ட நிலையில், எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 18 பேரைக் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c939fcf-0f61-4e79-93e6-3bf284ea2e09/26-6a951d6cf37d0.webp' /></p><p>அந்தப் படகு, 1,686 அடி ஆழத்தில் முழுமையாக மூழ்கிவிட்ட நிலையில், அந்த சம்பவம் தொடர்பில், படகின் கேப்டனும் 7 பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள சுரங்கத்திற்குள் இன்னமும் சிக்கியுள்ள பல நூறு பேர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/workers-trapped-nepal-tunnels-1788157816"></link>
            <id>https://news.lankasri.com/article/workers-trapped-nepal-tunnels-1788157816</id>
            <summary type="text">933 workers trapped in Nepal tunnels: நேபாள சுரங்கப்பாதைகளில் குறைந்தது 933 தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகக் கருதப்படுகிறது.
சுமார் அரை டசின் நீர்மின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>933 workers trapped in Nepal tunnels: நேபாள சுரங்கப்பாதைகளில் குறைந்தது 933 தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகக் கருதப்படுகிறது.
</p><p>சுமார் அரை டசின் நீர்மின் திட்டங்களில் உள்ள சுரங்கங்களில் குறைந்தது 933 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a4a41cf-9bcc-4df6-a100-c31513eaaf85/26-6a951f7ade17d.webp' /></p><p>
</p><p>நேபாள வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,247 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 900-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இந்த நிலையில், நீர்மின் திட்டங்களில் உள்ள சுரங்கங்களில் குறைந்தது 933 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்பர் திரிசூலி வளாகத்தில், சுமார் 350 பேர் சிக்கியிருக்கக்கூடும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தனர். </p><p>இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த ராணுவத்தினர் மற்றும் சிறப்புப் படைகள் பங்கேற்கும் ஒரு பிரம்மாண்டமான மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.</p><p> ஞாயிற்றுக்கிழமையன்று ராணுவம் தொலைதூரப் பகுதிக்கு ஹெலிகொப்டர் மூலம் இயந்திரங்களைக் கொண்டு சென்றதுடன், மீட்புப் படையினர் சுரங்கத்தின் ஒன்றின் நுழைவாயிலில் இருந்து இடிபாடுகளை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளனர்.</p><p></p><p> </p><p>புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நுவாகோட் மற்றும் ரசுவா மாவட்டங்களில் அமைந்துள்ள திரிசூலி ஆற்றின் 'அப்பர் திரிசூலி ஹைட்ரோபவர் 3A' மற்றும் '3B' ஆகியன ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மின் நிலையங்களாகும். </p><p>இதனிடையே, சுரங்கங்களில் ஒன்றின் வாயிலிலிருந்து சேறு படிந்த நிலையில் வெளியே இழுக்கப்பட்ட இருவரைக் காட்டும் புகைப்படத்தை நேபாள ராணுவம் முன்னதாக வெளியிட்டிருந்தது. </p><p>சுரங்கத்திற்குள் சுமார் 180 மீற்றர் தொலைவில் முக்கியப் பணி நடைபெறும் பகுதி அமைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடத்தை அடைவது, அங்கு கடந்த ஆறு நாட்களாகச் சிக்கியிருப்பவர்களின் நிலை குறித்த தகவலை அறிய வாய்ப்பாக அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c50e9b7e-6285-4035-83cd-baf2335fd37e/26-6a951f7b9a4f9.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், 2க்கு 3 அடி அளவுள்ள துளையின் வழியாக மீட்புக் குழுவினர் கீழே இறங்கியதாகவும், அந்தத் துளை விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. </p><p>ஆனால், இதுவரை உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றே அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களின் நிலை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T06:28:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளிர் ஆசிய கிண்ணம்; தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா - தீப்தி சர்மா உலக சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deepti-sharma-record-as-highest-wicket-taker-it20-1788155878"></link>
            <id>https://news.lankasri.com/article/deepti-sharma-record-as-highest-wicket-taker-it20-1788155878</id>
            <summary type="text">மகளிர் ஆசிய கிண்ண போட்டியில், இந்தியா தாய்லாந்தை வீழ்த்தியுள்ளது. 

தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா 

2026 மகளிர் ஆசிய கிண்ணம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசிய கிண்ண போட்டியில், இந்தியா தாய்லாந்தை வீழ்த்தியுள்ளது. </p><h3>

தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா</h3><p> 

2026 மகளிர் ஆசிய கிண்ணம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி தொடங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d41ae6b0-c65c-48b0-b44a-60a6bbdbd2ee/26-6a9517e81e85e.webp' /></p><p>

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தாய்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. </p><p>

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51b4b5d6-be2b-40ec-91d2-55db94cfaf72/26-6a9517e8d6829.webp' /></p><p>

அதிகபட்சமாக இந்தியா தரப்பில் சஃபாலி வர்மா 64 ஓட்டங்கள் குவித்தார். தாய்லாந்து தரப்பில் சுலீபோர்ன் லாவோமி 4 விக்கெட்களை கைப்பற்றினார். </p><p>

160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து மகளிர் அணி, 16.1 ஓவர்களில் 65 ஓட்டங்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/311f7354-0b99-4e07-b5dc-b921710a4864/26-6a9517e98a701.webp' /></p><p>

இதன் மூலம், 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. </p><h3> 

தீப்தி சர்மா உலக சாதனை </h3><p>

1.1 ஓவர்கள் வீசி ஓட்டங்கள் எதுவும் வழங்காமல், 3 விக்கெட்களை கைப்பற்றிய தீப்தி சர்மா புதிய சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e70201b-5776-4aec-8f6e-d0f66d19b9e0/26-6a9517e765acf.webp' /></p><p>

இதன் மூலம், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற உலக சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

முன்னதாக, தாய்லாந்து வீராங்கனை புத்தாவோங் 170 ஓட்டங்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், 171 விக்கெட்களை கைப்பற்றி முதலிடம் பிடித்துள்ளார். </p><p>

மேலும், ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனாவுக்குப் பிறகு, 150 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடிய 3வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை தீப்தி ஷர்மா பெற்றுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:00:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் தாக்குதல் நடத்திய அமெரிக்கா... ஜோர்டான் மீது திருப்பியடித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-strikes-strait-of-hormuz-1788150472"></link>
            <id>https://news.lankasri.com/article/us-strikes-strait-of-hormuz-1788150472</id>
            <summary type="text">US attacked Larak Island to prevent launch of sea mines: கடல் கண்ணிவெடிகள் ஏவப்படுவதைத் தடுப்பதற்காக லராக் தீவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா.
ஹார...</summary>
            <content type="html"><![CDATA[<p>US attacked Larak Island to prevent launch of sea mines: கடல் கண்ணிவெடிகள் ஏவப்படுவதைத் தடுப்பதற்காக லராக் தீவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா.
</p><p>ஹார்முஸ் நீரிணையில் உள்ள ஒரு தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b7cdf89-26e4-45cd-8bcd-f3e78835fe9a/26-6a9502cae8a95.webp' /></p><p>
</p><p>சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, ஈரான் மீது மீண்டும் தாக்குதல் ஒன்றை அமெரிக்கா நடத்தியுள்ளது. கடல் கண்ணிவெடிகள் ஏவப்படுவதைத் தடுப்பதற்காகவே லராக் தீவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. </p><p>ஹார்முஸ் நீரிணைப் பகுதிக்குள் கடல் கண்ணிவெடிகளை ஏவுவதற்கு இஸ்லாமியப் புரட்சிகரப் படைப் பிரிவினர் (IRGC) தயாராவது தெரிய வந்த நிலையில், தாக்குதல் நடத்தியதாகவும், இதில் இரண்டு ஏவுதளங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>இதனிடையே, அமெரிக்காவின் தாக்குதலில் பல வீரர்களும் பொதுமக்களும் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகவும், இதற்கு ஈரான் தரப்பிலிருந்து தண்டனை அளிக்கப்படும் என்றும் IRGC கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>இதனையடுத்து, ஜோர்டானில் அமெரிக்காவால் இயக்கப்படும் கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ராக் ஆகிய விமானப்படைத் தளங்களில் இருந்த தொழில்நுட்பக் கட்டமைப்பு, பராமரிப்பு வசதிகள் மற்றும் எதிரி நாட்டு போர் விமானங்களின் நிலைகளை IRGC குறிவைத்தது.</p><p></p><p> </p><p>அமெரிக்கா தனது தாக்குதலுக்கான விலையை பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் கொடுக்கும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அமெரிக்கா தரப்பில் இருந்து ட்ரோன் தாக்குதல் முன்னெடுத்துள்ளதாகவும், அமெரிக்காவின் mq-9 ட்ரோன் ஒன்றை ஹார்முஸ் நீரிணை மேலே தாக்கி அழித்ததாகவும் IRGC தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு, ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது வந்த அனைத்து ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டுவிட்டதாகவும், இதுவரை குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஒரு அமெரிக்க அதிகாரி கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32d3e5a3-ad51-4575-9bbd-79e4139f4ce1/26-6a9502ca3aa8b.webp' /></p><p> </p><p>லராக் தீவு மீது தாக்குதல் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், ஈரானின் எரிசக்தி மையமான கார்க் தீவு தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>ஆனால் வழக்கம்போல மேலதிக விவரங்கள் எதையும் அவர் அளிக்கவில்லை. ஹார்முஸ் நீரிணையின் சர்வதேசப் பகுதிகளில் இருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டன என்றும், </p><p>புதிதாகக் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு கப்பலோ அல்லது படகோ அழிக்கப்படும் என்று ஈரானிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T05:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brit-woman-dies-at-train-station-in-germany-1788152300"></link>
            <id>https://news.lankasri.com/article/brit-woman-dies-at-train-station-in-germany-1788152300</id>
            <summary type="text">A British woman stabbed to death at train station in Germany: ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில் பிரித்தானிய இளம்பெண்ணொருவர் குத்திக் கொல்லப்பட்டார்.


...</summary>
            <content type="html"><![CDATA[<p>A British woman stabbed to death at train station in Germany: ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில் பிரித்தானிய இளம்பெண்ணொருவர் குத்திக் கொல்லப்பட்டார்.
</p><p>

ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில், இளம்பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
</p><h3>
பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்</h3><p>

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில், பொலிசார் Rosenheim என்னும் நகரிலுள்ள ரயில் நிலையத்துக்கு விரைந்த நிலையில், அங்கு 31 வயதுடைய பிரித்தானிய இளம்பெண்ணொருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் அபாயகரமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a81ba560-06a9-45c6-adaa-aae1eb41d4ca/26-6a9509edaef57.webp' /></p><p>
உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில், சம்பவ இடத்திலிருந்த 27 வயது ஜேர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>
அவருக்கும் எந்த பெண்ணுக்கும் ஏற்கனவே அறிமுகம் உண்டா, எதற்காக அவர் அந்தப் பெண்ணைக் கத்தியால் குத்தினார் என்பது போன்ற விடயங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T04:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... காணாமல் போன பிரித்தானியர்கள் எண்ணிக்கை 48 என உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/missing-brits-in-nepal-rises-1788147836"></link>
            <id>https://news.lankasri.com/article/missing-brits-in-nepal-rises-1788147836</id>
            <summary type="text">Missing Brits in Nepal has reportedly risen: நேபாளத்தில் காணாமல் போன பிரித்தானியர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் காணாமல் போன பிரித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Missing Brits in Nepal has reportedly risen: நேபாளத்தில் காணாமல் போன பிரித்தானியர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>நேபாளத்தில் காணாமல் போன பிரித்தானியர்களின் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>உயிருடன் இருப்பதற்கான</h2><p>
</p><p>உடல்களை அடையாளம் காண்பதற்கு முன்னரே அவற்றை அடக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் அங்குள்ள அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>பயங்கரமான வெள்ளத்தில் மரணமடைந்த சுமார் 800 பேர்களில் 20 பேர்களின் உடல்கள் மட்டுமே குடும்பத்தினர் அடையாளம் கண்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/665d91dc-c5dd-4d41-9382-f30b57dca598/26-6a94f87f27fb3.webp' /></p><p> </p><p>அதேவேளையில், காணாமல் போனாதாக நம்பப்படும் நபர்களின் உறவினர்கள் நிரம்பி வழியும் மருத்துவமனைகளிலும் பிணவறைகளிலும் தொடர்ந்து தேடி வருகின்றனர். </p><p>ஒவ்வொரு நாளும் மேலும் பல சடலங்கள் கண்டெடுக்கப்படுவதால் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேவேளையில், உடல்களை வைப்பதற்கான இட நெருக்கடியால் மருத்துவமனைகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றன.</p><p></p><p> 2,400-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து காணாமல் போயுள்ள நிலையில், அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவு என்றே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். </p><p>திபெத்தில் 15 பிரித்தானியர்கள் காணாமல் போனதாக சீனா தெரிவித்ததை அடுத்து, தற்போது காணாமல் போன பிரித்தானியர்கள் எண்ணிக்கை 48 என அதிகரித்துள்ளது. </p><p>பேரிடரின் போது சீனாவும் நேபாளமும் தனித்தனியான, பெரும்பாலும் மாறுபட்ட புள்ளிவிவரங்களை அறிவித்து வருவதால், உத்தியோகப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளது. </p><p>சேற்றில் இருந்து மீட்கப்படும் உடல்கள், பல நாட்கள் நீருக்கடியில் இருந்ததால் மிகவும் சிதைந்து, அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19837b84-aef5-4bfc-bff5-4e5a0725f46c/26-6a94f87e74727.webp' /></p><p> </p><p>இதனிடையே, அடையாளம் காணப்படாத அல்லது உறவினர்களால் உரிமை கோரப்படாத அனைத்து உடல்களிலிருந்தும் டி.என்.ஏ மாதிரிகளை எடுக்குமாறு நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>பொது சுகாதார நெருக்கடியைத் தடுக்கும் பொருட்டு, சடலங்கள் பின்னர் பொதுப் புதைகுழிகளில் புதைக்கப்படும். இதனிடையே, அதிகாரிக் ஒருவர் தெரிவிக்கையில், </p><p>அவர்களுக்கு கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகள் செய்யப்படும்; எதிர்காலத்தில் அவர்களை அடையாளம் காணும் வாய்ப்பை உருவாக்கும் வகையில், அவர்களின் உடல்களின் புகைப்படங்களும் டிஎன்ஏ (DNA) மாதிரிகளும் சேகரிக்கப்படும் என்றார். </p><p>திரிபுவன் பல்கலைக்கழகப் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் ஏற்கனவே சுமார் 60 சடலங்கள் உள்ளன. ஆனால், எங்களுக்கு வந்துகொண்டிருக்கும் சடலங்களின் எண்ணிக்கையை எங்களால் இனியும் சமாளிக்க முடியாது என்றே நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T03:41:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளம் - திபெத்தை அடுத்து... கிராண்ட் கேன்யனைப் புரட்டிப் போட்ட பெருவெள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/flash-flood-in-grand-canyon-1788145947"></link>
            <id>https://news.lankasri.com/article/flash-flood-in-grand-canyon-1788145947</id>
            <summary type="text">US Grand Canyon Flash Floods: அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் பகுதியில் திடீர் வெள்ளத்தில் பலர் காணாமல் போயினர்.
அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் தேசியப...</summary>
            <content type="html"><![CDATA[<p>US Grand Canyon Flash Floods: அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் பகுதியில் திடீர் வெள்ளத்தில் பலர் காணாமல் போயினர்.
</p><p>அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் தேசியப் பூங்காவில் ஏற்பட்ட பெரும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>காணாமல் போனவர்கள்</h2><p>
</p><p>பிரைட் ஏஞ்சல் கேன்யன் மற்றும் ஃபாண்டம் ராஞ்ச் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, பெரிய பாறைகள், உலோகக் கட்டமைப்புகள் மற்றும் பிற குப்பைகளை அதன் வழியாகப் பாயும் கொலராடோ ஆற்றில் அடித்துச் சென்றதாக தேசிய பூங்கா சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. </p><p>பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றவும், அங்குள்ளவர்களின் விவரங்களை உறுதிப்படுத்தவும் அரிசோனா அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தேசிய பூங்கா சேவை அமைப்பு தெரிவித்துள்ளது;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b3a4b35-7660-4b25-94c4-43693146c2df/26-6a94f11d49c81.webp' /></p><p> </p><p>அத்துடன், காணாமல் போனவர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த மலையேற்றப் பயணிகள் குறித்த ஏதேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் அது கேட்டுக்கொண்டது. </p><p>கொலராடோ ஆற்றில் கலக்கும் பிரைட் ஏஞ்சல் ஓடையில், சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2:30 மணியளவில் திடீர் வெள்ளப்பெருக்கு தொடங்கியது.</p><p></p><p> பெருக்கெடுத்த நீர், ஓடையின் மீதான நடைப்பாலங்களை அடித்துச் சென்றதுடன், நிலப்பரப்பையும் கணிசமாக மாற்றியது. இதனிடையே, உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை, பூங்கா ஊழியர்களும் அரிசோனா பொதுப் பாதுகாப்புத் துறையினரும் 60-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளனர். </p><p>தேசிய பூங்கா சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றே குறிப்பிட்டுள்ளது. </p><p>சனிக்கிழமையன்று 'பிரைட் ஏஞ்சல் கிரீக்' (Bright Angel Creek) வழித்தடத்தையொட்டிய பள்ளத்தாக்கின் உட்பகுதியில் இருந்த மலையேற்றப் பயணிகள் அல்லது 'பேக்-பேக்கர்கள்' (backpackers) குறித்தோ, </p><p>அல்லது பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் முகாமிடுவதற்கான முன்பதிவு செய்திருந்தவர்கள் குறித்தோ ஏதேனும் தகவல் தெரிந்தால் அரசு அமைப்பிற்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்ட பூங்கா அதிகாரிகள்,</p><h2>கொலராடோ ஆற்றில்</h2><p> </p><p>காணாமல் போன அல்லது விவரம் அறியப்படாதவர்களின் எண்ணிக்கையையும் தனி அறிக்கை ஒன்றில் வெளியிட்டனர். பிரைட் ஏஞ்சல் ஓடையின் (Bright Angel Creek) குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ஏறக்குறைய அனைத்து நடைபாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்; </p><p>உலோகக் கட்டமைப்புகளும் இடிபாடுகளும் ஆற்றில் கலப்பதால், அடுத்த அறிவிப்பு வரும் வரை கொலராடோ ஆற்றில் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. </p><p>திங்கட்கிழமை வரையிலும் அப்பகுதியில் மேலும் மழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்குத்தான சரிவுள்ள பாறைப் பகுதியில், சுமார் 30 நிமிடங்களுக்குள் அரை அங்குலம் முதல் 1 அங்குலம் (1 சென்டிமீட்டர் முதல் 2.5 சென்டிமீட்டர்) வரை மழை பெய்ததாக ஃபிளாக்ஸ்டாஃபில் உள்ள தேசிய வானிலை சேவை வானிலை ஆய்வாளர் ஜஸ்டின் ஜான்ட்ரோ கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a29e6749-a820-4fe9-bfe9-519a8307bb79/26-6a94f11e00715.webp' /></p><p>
</p><p>கிராண்ட் கேன்யனின் வடக்குப் பகுதியில் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டதாக கூறியுள்ள அவர்; அப்பகுதியில் 'பிரைட் ஏஞ்சல் கிரீக்' நீரோடையானது வடக்குப் விளிம்பிலிருந்து (North Rim) கொலராடோ நதியை நோக்கி சுமார் 6,000 அடி (1,828 மீட்டர்) உயரத்தில் இருந்து கீழே இறங்கி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p> ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க உணவகம் மற்றும் தங்குமிடங்களைக் கொண்டதும், படகு சவாரி செய்பவர்கள் ஆற்றில் ஏறி இறங்குவதற்கான பொதுவான இடமாகவும் விளங்கும் ஃபாண்டம் ராஞ்சிலிருந்து 62 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்; மேலும் பலர் வெளியேற்றப்படவிருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d62bb6d-0f1e-4a7a-ae00-6ce1e6c207f6/26-6a94f11eba1e4.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T03:09:45+00:00</updated>
        </entry>
    </feed>
