<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-10T08:29:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பட்டப்பகலில் மூன்று வயது சிறுமியை தாக்கிய கரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bear-attacks-3-year-old-child-in-maple-ridge-1786350152"></link>
            <id>https://news.lankasri.com/article/bear-attacks-3-year-old-child-in-maple-ridge-1786350152</id>
            <summary type="text">கனடாவில் சிறுமி ஒருத்தியை கரடி ஒன்று தாக்கியதில் அவள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், மூன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் சிறுமி ஒருத்தியை கரடி ஒன்று தாக்கியதில் அவள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.
</p><p>

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், மூன்று வயது சிறுமி ஒருத்தி கரடியால் தாக்கப்பட்டுள்ளாள்.</p><h3>

கரடி தாக்கியதால் சிறுமி காயம்</h3><p>

நேற்று காலை 11.30 மணியளவில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Maple Ridge நகரில் அமைந்துள்ள வீடொன்றின் வெளியே மூன்று வயது சிறுமி ஒருத்தி விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55334395-ca2f-416f-bd5f-803dfbba4f9e/26-6a798a4a0c139.webp' /></p><p>
அப்போது அங்கு வந்த கரடி ஒன்று சிறுமியைத் தாக்கியுள்ளது. குழந்தையில் அலறல் சத்தம் கேட்டு அவளது தந்தை வந்து கரடியைத் துரத்தியுள்ளார்.</p><p>

காயமடைந்த அந்தச் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவளது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதற்கிடையில், தகவலறிந்து அங்கு வந்த பொலிசார், மீண்டும் மீண்டும் அந்தக் கரடி அங்கு வர முயற்சிப்பதைக் கவனித்துள்ளனர்.
</p><p>
மதியம் வாக்கில் மீண்டும் அந்தக் கரடி ஆக்ரோஷமாக அங்குவர, பொலிசார் அதை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p>
ஆனால், குண்டு பாய்ந்தும் அந்தக் கரடி காட்டுக்குள் ஓடிவிட்டிருக்கிறது.
</p><p>
கரடியைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுவரும் நிலையில், மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருக்குமாறும், யாராவது கரடியைப் பார்த்தால் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவலளிக்குமாறும் பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
இதேபோல, கடந்த ஞாயிற்றுக்கிழமை, இதே பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள South Chilcotin என்னுமிடத்தில் மலையேற்றத்துக்குச் சென்ற 72 வயது பெண்ணொருவரையும் ஒரு கரடி தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T08:22:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அருகே 20 போர்க்கப்பல்களை களமிறக்கிய அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-deploy-warships-near-iran-hormuz-tensions-rise-1786348535"></link>
            <id>https://news.lankasri.com/article/us-deploy-warships-near-iran-hormuz-tensions-rise-1786348535</id>
            <summary type="text">US deployed 20 Warships Near Iran: ஈரான் அருகே அமெரிக்கா 20-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை களமிறக்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>US deployed 20 Warships Near Iran: ஈரான் அருகே அமெரிக்கா 20-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை களமிறக்கியுள்ளது.</p><p>

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
</p><h2>
 20 போர்க்கப்பல்கள் களமிறக்கம்</h2><p>ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா 20-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை நிறுத்தி, கடற்படை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7423c449-f5ed-4dd3-a98a-b21482427743/26-6a798805a1b1c.webp' /></p><p>அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்ததாவது:

ஆகஸ்ட் 9-ஆம் திகதி வரை 55 வணிகக் கப்பல்கள் திசைதிருப்பப்பட்டுள்ளன. அதில் 2 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டு, மேலும் 2 கப்பல்கள் அமெரிக்க கடற்படையினரால் சோதனை செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இந்த நடவடிக்கைகள், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் விதித்த கட்டுப்பாடுகளை எதிர்த்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">U.S. Sailors stand watch on the bridge of USS Ross (DDG 71). Ross is one of over 20 U.S. warships deployed to the Middle East supporting military missions, including strict enforcement of the U.S. blockade against Iran. As of Aug. 9, CENTCOM has redirected 55 commercial vessels,… <a href="https://t.co/B5NCpX7Nxw">pic.twitter.com/B5NCpX7Nxw</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2086568419164369145?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><h2>
எரிசக்தி சந்தையை பாதிக்கும் அபாயம்</h2><p>உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் ஐந்தில் ஒரு பங்கு இந்த குறுகிய கடற்பரப்பின் வழியாகச் செல்கிறது. எனவே, இந்த பகுதியில் ஏற்படும் பதற்றம் உலகளாவிய எரிசக்தி சந்தையை பாதிக்கும் அபாயம் உள்ளது.
</p><p>
ஈரான், ஓமன் நாட்டுடன் புதிய கப்பல் போக்குவரத்து ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. </p><p>ஆனால், அமெரிக்கா தன் மீது விதித்த தடைகள், இராணுவ அச்சுறுத்தல்கள், மற்றும் பொருளாதார சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதையும், கடற்படை மறுப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பதையும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
</p><p></p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “நாங்கள் ஈரானுடன் முழுமையான பேச்சுவார்த்தை நடத்தவில்லை, வெறும் ‘semi-negotiation’ மட்டுமே நடக்கிறது” என்று கூறியுள்ளார்.
</p><p>
ஈரான் வெளிநாட்டு அமைச்சர் அபாஸ் அராக்சி, “அமெரிக்கா இடைக்கால ஒப்பந்தத்தை மீறி வரும் வரை நேரடி பேச்சுவார்த்தை நடைபெறாது” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனால், ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம், உலகளாவிய வர்த்தகத்துக்கும், எரிசக்தி விநியோகத்துக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><p>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</p></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T08:11:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் புகழ்பெற்ற சாதனையாளர் 30 வயதில் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-climber-jake-whisenat-death-at-his-30-1786347538"></link>
            <id>https://news.lankasri.com/article/us-climber-jake-whisenat-death-at-his-30-1786347538</id>
            <summary type="text">அமெரிக்காவில் புகழ்பெற்ற சிகரம் ஏறும் சாதனையாளர் ஜேக் வைசனன்ட் விபத்தில் உயிரிழந்தார். 

அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயதான மலையேறும் சாதனையாளர் ஜேக் வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் புகழ்பெற்ற சிகரம் ஏறும் சாதனையாளர் ஜேக் வைசனன்ட் விபத்தில் உயிரிழந்தார்.</p><p> 

அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயதான மலையேறும் சாதனையாளர் ஜேக் வைசனன்ட், சியரா நெவாடாவில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து உயிரிழந்தார்.&nbsp;</p><h2>ஜேக் வைசனன்ட்&nbsp;</h2><p>

கடந்த ஆகஸ்ட் 3-ஆம் திகதி அன்று, சியாரா நெவாடாவில் புகழ்பெற்ற சாதனையாளரான ஜேக் வைசனன்ட் மலையேற்றத்தில் ஈடுபட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73d633eb-a33b-4419-9eba-14aa3baf45e2/26-6a798016aa81a.webp' /></p><p>

அப்போது எதிர்பாராத விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். துலாரே கவுண்டி ஷெரிப் அலுவலகம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.
</p><p>
கலிபோர்னியாவின் மேமத் லேக்ஸ் பகுதியைச் சேர்ந்த 30 வயதான அவரது மரணம் குறித்து வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
</p><p>
எனினும், வைசனன்ட்டின் வாழ்நாள் தோழியான பெய்லி மூர் போன்றவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e9b1627-c71c-4579-b990-67bc8b795faa/26-6a798015f38f0.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-10T07:36:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஷ்மீரில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரித்தானியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-national-killed-in-kashmir-1786347295"></link>
            <id>https://news.lankasri.com/article/british-national-killed-in-kashmir-1786347295</id>
            <summary type="text">British national shot dead in Kashmir: காஷ்மீரில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் பிரித்தானியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் கட்டுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>British national shot dead in Kashmir: காஷ்மீரில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் பிரித்தானியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
</p><p>பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல்களின்போது, ​​பிரித்தானியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கார்டியன் பத்திரிகை வெளிப்படுத்தியுள்ளது.</p><h2>பாதுகாப்புப் படையினர்</h2><p>
</p><p>
மற்றொரு பிரித்தானியர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒரு பிராந்தியச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சகம் ஊடாக அவரை விடுவிக்க அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்ந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cb88019-2556-458c-a59e-32213ce4f757/26-6a797f22443f8.webp' /></p><p> </p><p>பீட்டர்ஸ்பரோவைச் சேர்ந்த 50 வயதான முகமது அக்தர் ஜூன் 9 அன்று கொல்லப்பட்டார். இந்தியாவும் உரிமை கோரும் சர்ச்சைக்குரிய பகுதியில், பொருளாதார மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்திப் போராடியவர்கள் கூடியிருந்த இடத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>மோதல்கள் நடைபெற்ற பகுதிக்கு அருகிலுள்ள கோட்லி நகரில் அக்தர் தங்கியிருந்தார்; அவர் நேரிடையாக துப்பாக்கியால் தாக்கப்படவில்லை என்றே அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>அவர் போராட்டங்களில் பங்கேற்கவில்லை என்றும், ஆனால் அவரது வீட்டிற்கு அருகிலேயே அந்தப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>மேலும், அக்தரின் பிள்ளைகள் இந்த விவகாரத்தை பிரித்தானிய அதிகாரிகளிடம் மேற்கொண்டு செல்ல வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். அவர்களால் காஷ்மீரில் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ய முடியவில்லை, மேலும் இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தால் தங்கள் குடும்பம் குறிவைக்கப்படலாம் என்றும் அஞ்சியுள்ளனர். </p><p>இந்த நிலையில், பாகிஸ்தான் நிர்வாகத்திலுள்ள காஷ்மீரின் சில பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து பிரித்தானியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று வெளிவிவகாரம், காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) தெரிவித்துள்ளது. </p><p>FCDO அமைச்சர்களும் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரித்தானியாவின் உயர் ஸ்தானிகரும் தங்கள் இணையான அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்; பிரித்தானியாவின் பயண வழிகாட்டுதல்கள் ஆகஸ்ட் 7 அன்று புதுப்பிக்கப்பட்டன, மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியமான பயணங்களைத் தவிர மற்ற அனைத்துப் பயணங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என்ற அறிவுறுத்தல் தொடர்ந்து வழங்கப்படுகிறது. </p><p>நாடாளுமன்ற உறுப்பினர் ஹமிஷ் ஃபால்கனர், வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது, ​​கடந்த ஜூன் 16-17 திகதிகளில் இஸ்லாமாபாத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது தனது இணையான அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதாகத் தெரியவருகிறது.</p><h2>பயங்கரவாத அமைப்பாக</h2><p>
</p><p>ஜூலை 27 அன்று தொடங்கிய மூன்று கட்டத் தேர்தலுக்கு மாதங்களுக்கு முன்பே காஷ்மீரில் போராட்டங்களை முன்னெடுத்த 'ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி' (JAAC) எனும் சிவில் சமூக அமைப்பின் ஆதரவாளர்கள் மீது வன்முறை ரீதியான ஒடுக்குமுறையை ஏவியதாக பாகிஸ்தான் அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது; இப்பகுதியில் நிலவும் அமைதியின்மையால் இத்தேர்தல் நடவடிக்கைகள் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>பாகிஸ்தான் JAAC-ஐ ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதுடன், அப்பகுதியில் ஜூன் 5 முதல் தகவல் தொடர்புத் தடையையும் விதித்துள்ளது. </p><p>கடந்த மாதம் நடைபெற்ற போராட்டங்களின்போது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் குறைந்தது 30 பேரைக் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது; இந்தக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bca3184e-f98c-49a3-8150-912607764428/26-6a797f2192699.webp' /></p><p> </p><p>ஜூன் 5-ஆம் திகதி நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு காஷ்மீர் நகரமான மிர்பூரில் கைது செய்யப்பட்டவர்களில் நாட்டிங்ஹாம் நகரைச் சேர்ந்த பிரித்தானியரான 38 வயது வகாஸ் ஆரிஃபும் ஒருவர்; ஆனால், அவர் அப்போராட்டங்களில் பங்கேற்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>இதனிடையே, ஆரிஃப் மிர்பூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதிலிருந்து, அவருடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள பிரித்தானிய அதிகாரிகளால் முடியவில்லை என்று அவரது மனைவி வாரிஷா கம்பூல்வி தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T07:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான் - விவசாயிக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rajasthan-farmer-5-lakh-eaten-by-termite-1786346319"></link>
            <id>https://news.lankasri.com/article/rajasthan-farmer-5-lakh-eaten-by-termite-1786346319</id>
            <summary type="text">திருட்டு பயம் காரணமாக விவசாயி புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்துள்ளது. 

ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான்

ராஜஸ்தான் மாநிலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட்டு பயம் காரணமாக விவசாயி புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்துள்ளது.</p><h3> 

ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான்</h3><p>

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ராவைச் சேர்ந்த விவசாயி மங்கிலால் மேக்வால்,

அவர் சமீபத்தில் தனது நிலத்தின் ஒரு பகுதியை விற்றதன் மூலம் ரூ.5 லட்சம் பெற்றுள்ளார். அந்த பணத்தை வைத்து தனது விவசாய நிலத்தில் ஒரு அறையை கட்ட திட்டமிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db8b931c-dbb7-4152-bd1e-6e2bc5b25e5c/26-6a797b513e9b4.webp' /></p><p> 

ஆனால் அந்த பணம் திருடப்படலாம் அல்லது தேவையில்லாமல் செலவழிக்கப்படலாம் என நினைத்த அவர், அந்த பணத்தை ஒரு பாலித்தீன் பையில் போட்டு, தனது வயலில் ஒரு குழி தோண்டிப் புதைத்தார்.</p><p>

இது குறித்து அவர் தனது மனைவி மற்றும் மகன்களிடம் கூட தெரிவிக்கவில்லை. மங்கிலாலுக்கு மதுஅருந்தும் பழக்கமும், மறதி நோயும் உள்ளது.&nbsp;</p><p></p><p>

இதன் காரணமாக அறை கட்ட நினைத்த போது, பணத்தை எங்கே புதைத்து வைத்தோம் என தெரியவில்லை. குடும்ப உறிப்பனர்களிடம் இதை தெரிவித்த பின்னர், அவர்களும் இணைந்து விவசாய நிலம் முழுவதும் தேடியும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. </p><p>

இதன் பின்னர் ஒரு வருடம் கழித்து, விதைப்பிற்காக டிராக்டர் மூலம் வயலைத் தயார் செய்த போது, அந்த பணப்பை நிலத்தின் மேற்பரப்பிற்கு வந்துள்ளது.&nbsp;</p><p> 

மறுநாள் காலை மங்கிலாலின் மனைவியும் மகனும் அந்தப் பையைக் கவனித்துத் திறந்தபோது, ​​கரையான் அரிப்பால் அந்த பையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் கடுமையாகச் சேதமடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="hi" dir="ltr">सुरक्षित रखने के लिए किसान मांगीलाल मेघवाल ने 5 लाख रुपए खेत में गाड़ दिए. कुछ समय बाद उसे पैसों की ज़रूरत पड़ी लेकिन तब तक वो जगह भूल गया था कि उसने पैसे कहां छुपाये. तब उसने अपने बेटों को ये बात बताई. उसके परिवार ने 10 बीघे के उस खेत की जगह जगह खुदाई की. लेकिन पैसे नहीं मिले.… <a href="https://t.co/Sxu47QvLWh">pic.twitter.com/Sxu47QvLWh</a></p>&mdash; Ruby Arun रूबी अरुण (@arunruby08) <a href="https://x.com/arunruby08/status/2086418949173129560?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு பச்சபத்ரா மற்றும் பலோத்ராவில் உள்ள SBI வங்கி கிளையை அணுகிய போது, நோட்டுகளின் மோசமான நிலை காரணமாக வங்கி அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. </p><p>மேலும், ஜெய்ப்பூரில் உள்ள வங்கிக்கிளையை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளனர். </p><p>

ஆனால், தன்னுடைய பொருளாதார சூழல் காரணமாக தற்போது ஜெய்ப்பூருக்குப் பயணம் செய்ய முடியாது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எப்படியாவது பணத்தை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.</p><p> 

இந்த பணத்தை புதைத்தது குறித்து எங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தால் இவ்வளவு பெரிய இழப்பை தவிர்த்திருக்கலாம் என அவரது மனைவி கண்ணீர் வடித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T07:18:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைசி கட்டத்தில் Own கோல் அடித்ததால் பறிபோன வெற்றி: பெனால்டிஷூட் அவுட்டில் ஏற்பட்ட குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chelsea-and-johor-darul-match-draw-without-penalty-1786344214"></link>
            <id>https://news.lankasri.com/article/chelsea-and-johor-darul-match-draw-without-penalty-1786344214</id>
            <summary type="text">Chelsea vs Johor Darul Ta&#039;zim club friendlies match end draw: செல்சி மற்றும் ஜோஹோர் தாருல் தாஸிம் அணிகளுக்கு இடையிலான போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chelsea vs Johor Darul Ta'zim club friendlies match end draw: செல்சி மற்றும் ஜோஹோர் தாருல் தாஸிம் அணிகளுக்கு இடையிலான போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.</p><p>

மலேசியாவில் நடந்த செல்சி, ஜோஹோர் தாருல் தாஸிம் அணிகளுக்கு இடையிலான கிளப் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி, பெனால்டிஷூட் ரத்து செய்யப்பட்டதால் டிராவில் முடிந்தது. </p><h2>நட்பு ரீதியிலான கிளப் கால்பந்து போட்டி</h2><p> 


மலேசியாவில் நடந்த நட்பு ரீதியிலான கிளப் கால்பந்து போட்டியில் செல்சி (Chelsea) மற்றும் ஜோஹோர் தாருல் தாஸிம் (Johor Darul Ta'zim) அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dae89e9-cf06-4ffb-a185-3f844b48de08/26-6a79731928963.webp' />&nbsp;</p><p></p><p>

பரபரப்பாக சென்ற இப்போட்டியில் 88 நிமிடங்கள் வரை ஜோஹோர் தாருல் தாஸிம் அணி 3-2 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தது. </p><p>

ஆனால், அந்த அணியின் ஆன்டோனியோ கிறிஸ்டியன் 89வது நிமிடத்தில் சுயகோல் (Own Goal) அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.&nbsp;</p><h2>பெனால்டிஷூட்-அவுட்&nbsp;</h2><p>

இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டிஷூட்-அவுட் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அது நடைபெறாததால் மைதானத்தில் பெரும் குழப்பம் நிலவியது. </p><p>

இரு அணிகளும், ஊழியர்களும் மைதானத்தை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பாததால், ஆட்டம் திடீரென முடிவுக்கு வந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34f8af40-121e-4255-82a1-a2a44f3ef775/26-6a797319cc186.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:41:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகத்தில் இருந்தே... தாய்லாந்து துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிசார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thai-school-shooter-learnt-1786342843"></link>
            <id>https://news.lankasri.com/article/thai-school-shooter-learnt-1786342843</id>
            <summary type="text">Thai school shooter learnt via social media: தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சமூக ஊடகங்கள் மூலம் துப்பாக்கிகளைப் பயன்படுத்தக் கற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thai school shooter learnt via social media: தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சமூக ஊடகங்கள் மூலம் துப்பாக்கிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டார்.
</p><p>தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி, எட்டு பேரைக் கொலை செய்ததுடன் தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட பதின்ம வயது இளைஞர் ஒருவர், சமூக ஊடகங்கள் வாயிலாகத் துப்பாக்கியைப் பயன்படுத்தும் முறையைத் தானே கற்றுக்கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>குடும்பப் பிரச்சினை</h2><p>
</p><p>வன்முறை சார்ந்த சமூக ஊடக உள்ளடக்கங்களைப் பார்த்தது, படிப்பு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் குறித்த பதற்றம், அத்துடன் நண்பர்களுடனான மோதல் ஆகியவையும் அந்தச் சிறுவனின் செயல்களுக்குத் தூண்டுகோலாக அமைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c77706a-3e0f-45b9-a325-517452b8b1fb/26-6a796dbd98187.webp' /></p><p> </p><p>தாக்குதலில் ஈடுபட்ட அந்த 14 வயது சிறுவனின் செயல் நோக்கத்தை விசாரிக்கும்போது, ​​இதுவரை 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளதாக மூத்த காவல் அதிகாரி அத்தபோல் அனுசித் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
</p><p>பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால் தாய்லாந்து தத்தளித்து வரும் நிலையில், அந்நாட்டுத் தலைவர் புதிய துப்பாக்கிச் சட்டங்களைக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளார்.
</p><p>புகழ்பெற்ற ஒரு மேல்நிலைப் பள்ளியின் உள்ளூர் கிளையான டெப்சிரின் நோந்தபுரி பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது தாத்தாவுக்குச் சொந்தமான கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி வீட்டில் வைத்துத் தனது தாத்தா-பாட்டியைச் சுட்டுக் கொன்றதாகவும், பின்னர் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>இந்தச் செயல் திட்டமிட்டுச் செய்யப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்விக்கு, ​​அத்தபோல் அது அநேகமாக அப்படித்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.</p><p>
காவல்துறையினர் சேகரித்துள்ள ஆதாரங்களில், துப்பாக்கிச் சூடு நடத்த அந்தச் சிறுவன் பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டா உறைகள், அவனது அலைபேசி மற்றும் பள்ளிக்கு அவன் எடுத்துச் சென்ற பையில் கண்டெடுக்கப்பட்ட கத்தி ஆகியவை அடங்கும்.</p><h2>ஆதாரம் இல்லை</h2><p> </p><p>அவரது வீட்டில் உள்ள கணினி, அவர் சமூக ஊடகங்களில் வன்முறை சார்ந்த லாட்சிகளைப் பார்த்திருந்ததைக் காட்டுவதாகக் காவல்துறை கூறுகிறது.</p><p> அத்துடன், குறித்த சிறுவனின் தாக்குதலானது துல்லியமாக இருந்தது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் பதின்ம வயதுடையவர் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டதற்கோ அல்லது துப்பாக்கி சுடும் தளத்தில் பயிற்சி பெற்றதற்கோ எந்த ஆதாரமும் காவல்துறை விசாரணையில் கிடைக்கவில்லை என்றும் அத்தபோல் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/344b7d4e-07a7-4011-aab5-71ee970a1a0f/26-6a796dbe4d4eb.webp' /></p><p> </p><p>இதனிடையே, பெற்றோர் பிரிந்துவிட்டதால், அந்தப் பதின்ம வயது இளைஞர் தனது இரண்டு வயது முதலே தாத்தா-பாட்டியுடன் வசித்து வந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். </p><p>அந்தப் பதின்ம வயதினரின் தந்தை அவரது செயல்களுக்காக மன்னிப்பு கோரியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழப்புகளை ஏற்படுத்திய அந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலர் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் துயரம் தெரிவித்து வருகின்றனர்; சிலர் பள்ளியின் முன் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T06:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட இந்திய இளைஞர்: அதிர்ச்சிப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-student-kills-gf-in-us-arrested-in-germany-1786340512"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-student-kills-gf-in-us-arrested-in-germany-1786340512</id>
            <summary type="text">தன் காதலியைக் கொலை செய்து விட்டு தப்பியோடிய இந்திய இளைஞர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்ற இந்திய இளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன் காதலியைக் கொலை செய்து விட்டு தப்பியோடிய இந்திய இளைஞர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர், தன் காதலியைக் கொலை செய்துவிட்டு தப்பிச் செல்லும்போது ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட இந்திய இளைஞர்
</h3><p>
வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள Tucson நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து, தீயணைப்புத்துறையினருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
</p><p>
அங்கு யாரோ ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் அவசர உதவிக்குழுவினர் அங்கு விரைய, அந்த வீட்டில் ஜுலிஸ்ஸா ரூபி சலஸார் (Julissa Rubi Salazar, 19) என்னும் இளம்பெண் உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddaa3e00-95b0-4443-b71c-08aee84063d7/26-6a7964a24ae0a.webp' /></p><p>
பொலிசார் மேற்கொண்ட ஆய்வில் ஜுலிஸ்ஸா கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
</p><p>
தொடர் விசாரணை ஜுலிஸ்ஸாவின் காதலரான வருண் பச்சிகரி (Varun Batchigari, 20) என்னும் இந்திய இளைஞரை கைகாட்ட, பொலிசார் அவரைத் தேடத் துவங்கியுள்ளனர்.&nbsp;</p><p></p><p>
ஆனால், வருண் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக விமானம் ஏறிவிட்டது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ba0d461-02a2-460f-9fb8-f785c153e356/26-6a7964a300210.webp' /></p><p>

உடனடியாக, அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, Tucson நகர பொலிசார், அங்குள்ள FBI அதிகாரிகள் மற்றும் ஜேர்மன் தலைநகரான பெர்லினிலுள்ள FBI அமைப்பு ஆகியோருடன் மூன்று குழுக்களாக இணைந்து வருணைப் பிடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
</p><p>
அதன்படி, இந்தியா செல்வதற்காக ஜேர்மனி சென்ற வருண் ஜேர்மனியில் கால் வைத்ததும், அங்கு தயாராக காத்திருந்த அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.
</p><p>
ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட வருண், அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட உள்ளார்.
</p><p>
வருண் ஜூலிஸ்ஸாவை தாக்கும் வழக்கம் கொண்டவர் என்பது சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
</p><p>
தன்னை மீண்டும் மீண்டும் தாக்கியதுடன், மோசமாகவும் நடத்தியதால் வருணைப் பிரிய முடிவு செய்துள்ளார் ஜுலிஸ்ஸா.
</p><p>
ஆத்திரமடைந்த வருண் ஜுலிஸ்ஸாவைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டதாக கருதப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:55:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு மலையேற்றத்துக்குச் சென்ற வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-woman-dies-while-hiking-mont-blanc-1786340977"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-woman-dies-while-hiking-mont-blanc-1786340977</id>
            <summary type="text">ரஷ்ய நாட்டவரான பெண்ணொருவர் பிரான்சில் மலையேற்றத்துக்குச் சென்ற நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.


ரஷ்ய சுற்றுலாப்பயணி ஒருவர், பிரான்சிலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய நாட்டவரான பெண்ணொருவர் பிரான்சில் மலையேற்றத்துக்குச் சென்ற நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>

ரஷ்ய சுற்றுலாப்பயணி ஒருவர், பிரான்சிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற நிலையில், மாயமானார்.
</p><h3>
மாயமான சுற்றுலாப்பயணி
</h3><p>
தனது 60 வயதுகளிலிருக்கும் அந்த ரஷ்யப் பெண், செவ்வாயன்று, ஆல்ப்ஸ் மலையிலுள்ள Mont Blanc என்னும் மலையில் தனியாக மலையேற்றத்துக்குச் சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85996d41-8e52-4692-b986-f0dc44074d1f/26-6a7966727b353.webp' /></p><p>
ஆனால், மாலையில் அவர் தான் தங்கியிருந்த ஹொட்டலுக்குத் திரும்பாததால் அதிகாரிகளுக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில், வியாழன்று அவரை உயிரற்ற நிலையில்தான் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
</p><p>
அந்தப் பெண்ணின் மொபைலிலிருந்து வந்த சிக்னலை வைத்து அவரைத் தேடும்போது, அவர் பனிப்பாறை ஒன்றிலிருந்த பிளவுக்குள் விழுந்து உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அதாவது, கோடையின்போது பனிப்பாறைகளில் பிளவுகள் உருவாகும். ஆனால், அந்த பிளவுக்கு மேல் ஒரு அடுக்கு பனி படர்வதால், பனிக்கு அடியில் பிளவு ஏற்பட்டுள்ளது வெளியிலிருந்து தெரியாமல் இருக்கக்கூடும்.
</p><p>
அப்படிப்பட்ட ஒரு இடத்தில் நடந்து செல்லும்போது, அந்தப் பெண் அந்த பனிப்பாறை பிளவுக்குள் விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:50:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ருத்ரதாண்டவமாடிய லிவிங்ஸ்டன்! 82 பந்துகளில் 166 ஓட்டங்கள் எடுத்து லண்டன் ஸ்பிரிட் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/livingstone-and-brevis-blast-fifty-helps-ldn-won-1786340348"></link>
            <id>https://news.lankasri.com/article/livingstone-and-brevis-blast-fifty-helps-ldn-won-1786340348</id>
            <summary type="text">London Spirit beat Birmingham Phoenix: The Hundred போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பர்மிங்காம் ஃபீனிக்ஸை வீழ்த்தியது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>London Spirit beat Birmingham Phoenix: The Hundred போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பர்மிங்காம் ஃபீனிக்ஸை வீழ்த்தியது. </p><p>

லார்ட்'சில் நடந்த The Hundred போட்டியில், லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் லண்டன் ஸ்பிரிட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>கிளார்க்,&nbsp;டிக்சன்&nbsp;விளாசல்</h2><p>

பர்மிங்காம் ஃபீனிக்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகளுக்கு இடையிலான The Hundred போட்டி லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7724dc61-ff28-469c-84f6-c2e4747c1413/26-6a7963ff4fea9.webp' /></p><p></p><p>

முதலில் ஆடிய பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் குவித்தது. </p><p>

ஜோ கிளார்க் (Joe Clarke) 42 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், சீன் டிக்சன் (Sean Dickson) 28 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
பின்னர் ஆடிய லண்டன் ஸ்பிரிட் அணியில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 16 ஓட்டங்களும், பேர்ஸ்டோவ் 10 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.&nbsp;</p><h2>லிவிங்ஸ்டன்,&nbsp;பிரேவிஸ்&nbsp;ருத்ரதாண்டவம்</h2><p>
அடுத்து கைகோர்த்த அணித்தலைவர் லியாம் லிவிங்ஸ்டன், டெவால்ட் பிரேவிஸ் கூட்டணி சிக்ஸர்களை பறக்கவிட்டது.
</p><p>
அரைசதம் விளாசிய லியாம் லிவிங்ஸ்டன் (Liam Livingstone) 30 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். </p><p>

எனினும் டெவால்ட் பிரேவிஸ் (Dewald Brevis) ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 55 ஓட்டங்கள் ( 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாச, லண்டன் ஸ்பிரிட் அணி 82 பந்துகளில் 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3074c30-f8a1-4878-8501-8467266c7131/26-6a79640002221.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் என்றாலே கெத்து - தனித்தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamil-means-swag-cm-vijay-speech-on-resolution-1786339893"></link>
            <id>https://news.lankasri.com/article/tamil-means-swag-cm-vijay-speech-on-resolution-1786339893</id>
            <summary type="text">தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படவேண்டும் என சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படவேண்டும் என சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><h3>
தமிழ்த்தாய் வாழ்த்து</h3><p> 

தமிழக அரசு நிகழ்வுகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதுதான் நடைமுறையாக இருந்தது.
</p><p>
ஆனால், தவெக அரசு ஆட்சியமைத்த பின்னர், மத்திய அரசின் வழிகாட்டுதல் என்ற பேரில், முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழா, அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஆகிய நிகழ்வுகளில் வந்தேமாதரம் முதலில் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டது சர்ச்சையானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3db00564-d8b2-485c-b0e9-f3d30426584b/26-6a79623687392.webp' /></p><p>

தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்படும் என தவெக அரசு உறுதியளித்தாலும், சமீபத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடலான "நீராடும் கடலுடுத்த" என்ற பாடலை பாடிய மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைகழகத்திலே தமிழ்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டது.
</p><p>
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு நிகழ்வுகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்பட வேண்டும் என தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h3>

தமிழ் என்றாலே கெத்து
</h3><p>
இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய், "மொழி எப்போதும் தொடர்புக்கான ஒன்றே. அதை யாரும் மறுக்க முடியாது. உலகில் உள்ள எல்லா மொழிக்கும் இது பொருந்தும். ஆனால் தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. பேசினால் வரும் ஓசை மட்டுமல்ல. அது நமது உயிர். நமது உணர்வு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a458b4a-1940-4562-9601-b0b0d659d44e/26-6a796237dd60e.webp' /></p><p>
நம்மை பெற்ற தாயை அம்மா என்று சொல்லும்போது பாசம் நேசம் எல்லாமும் நமக்குள் உணர்வாக தோன்றுவதுபோல தமிழும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. தாய் எப்படியோ அதுபோல தான் தாய் மொழியும்.
</p><p>
நம் தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் என்றால் நம் எல்லாருக்குமான தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும். தாயை போற்றுகிற வாழ்த்துகிற சமூகம் தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விடும். விடாது. விடவும் மாட்டோம்.</p><p> 

நமது தமிழ்த்தாய் வாழ்த்தை 1891 இல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் நம் தமிழ் மொழியை தமிழ்த்தாய் என்று உயர்வாக பாடினார்.
</p><p>
இன்று தமிழ் பேசும் மக்கள் இல்லாத நாடுகளே குறைவுதான். தமிழும் தமிழனும் இல்லாத நாடு எது?. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது ஒருசிந்தனை, அது ஒரு அன்பு. தமிழ் என்றால் விருந்தோம்பல். சுருக்கமாக தமிழ் என்றால் கெத்து. தமிழ் என்றால் பவர்.
</p><p>
ஒரு கட்சிக்கு பிரச்சனை என்றால் அந்த கட்சி மட்டுமே போராடும். ஆனால் தமிழுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடே வந்து நிற்கும். அதனால் தான் தமிழ் என்றால் உயிர், உணர்வு. உலகில் தோன்றிய பல மொழிகள் காலப்போக்கில் மறைந்தன. ஆனால் தமிழ் நீடித்து நிற்கும் ஒன்று.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/067bfcad-0656-4596-b464-b84b27a3c398/26-6a796237389f3.webp' /></p><p>
தமிழ்த்தாய் வாழ்த்தின் கண்ணியத்தையும் தமிழின் தொன்மையையும், தமிழர் பண்பாட்டின் பெருமையையும் பாதுகாக்கும் உயரிய பணியில் பணியில் இந்த பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைத்து, அனைத்து பல்கலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவன நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கொண்டுவரப்படும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." என பேசினார்.</p><p> 

இந்த தீர்மானத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரித்த நிலையில், தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:31:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா காட்டுத்தீ... மிக மோசமான சூழலை எதிர்கொள்ளத் தயாராக மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-wildfire-residents-warned-1786333732"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-wildfire-residents-warned-1786333732</id>
            <summary type="text">Residents warned to brace for the worst: கனடாவில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி எரிந்து வருவதால், மிக மோசமான சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மக்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Residents warned to brace for the worst: கனடாவில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி எரிந்து வருவதால், மிக மோசமான சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை.
</p><p>மேற்கு கனடாவில் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்ட காட்டுத்தீ வேகமாகப் பரவி அதன் பரப்பளவு இருமடங்காக அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதையடுத்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0efb165c-aca3-42a6-a7b3-07dba2771682/26-6a794a26ca86c.webp' /></p><p>
பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ சேவையின் தகவல்படி, பால்ட் ரேஞ்ச் தீ தற்போது சம்மர்லேண்ட், பீச்லேண்ட் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிற பகுதிகளில் 53 சதுர மைல்களுக்கும் அதிகமான பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது. </p><p>இதனிடையே, தீப்பிழம்புகள் மிகவும் உயரமாக இருந்ததால் அவை தமக்கே உரிய வானிலை அமைப்புகளை உருவாக்கியதாகவும், அதன் விளைவாக மின்னல் உருவானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் முதல்வர் டேவிட் எபி சனிக்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தீயணைப்பு அதிகாரி ஒருவர் இந்தத் தீ விபத்தை வெடிகுண்டு வெடித்ததற்கு ஒப்பிட்டதாகத் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், அவசரநிலை பிரகடனமானது, பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விலையேற்றத்தைத் தடுப்பதற்கான விநியோகப் பாதுகாப்புகள் உள்ளிட்ட சிறப்பு அதிகாரங்களையும், மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கான கூடுதல் வளங்களையும் மாகாண அரசாங்கத்திற்கு வழங்குகிறது.
</p><p>சுமார் 12,000 மக்கள் வசிக்கும் சம்மர்லேண்ட் பகுதி, மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளதுடன், அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. </p><p>சுமார் 6,500 பேர் வசிக்கும் பீச்லேண்ட் பகுதியின் சில பகுதிகளில் இருந்த மக்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது.
பால்ட் ரேஞ்ச் (Bald Range) காட்டுத்தீ இந்த கோடையில் மிகப்பெரிய அளவிலான வெளியேற்ற நடவடிக்கையைத் தூண்டியுள்ளது; பிரிட்டிஷ் கொலம்பியா முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e7774b5-aa31-419d-8509-03adb36c5382/26-6a794a2779b93.webp' /></p><p>
</p><p>அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய ஒகனகன் மற்றும் ஒகனகன்-சிமில்கமீன் பிராந்திய மாவட்டங்களும், ஸ்ன்பிங்க்டன் இந்திய பூர்வகுடியினக் குழுவும், சம்மர்லேண்ட் மற்றும் பீச்லேண்ட் மாவட்டங்களும் வெளியேற்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன, மேலும் சில பகுதிகளில் வெளியேற்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. </p><p>ஒகனகனில், ஏராளமான குதிரைகளை வெளியேற்றுவதற்கு அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கோடைக்காலத்தில் கனடா முழுவதும் நூற்றுக்கணக்கான காட்டுத்தீகள் கொழுந்துவிட்டு எரிந்தன; குறிப்பாக ஜூலை மாதத்தில் ஒன்ராறியோவில் மட்டும் சுமார் 200 காட்டுத்தீகள் எரிந்ததால், ரொறன்ரோவின் காற்றுத் தரம் சில நாட்களுக்கு உலகின் மிக மோசமான நிலைகளில் ஒன்றாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62be0226-e00c-4b65-b6a2-59f5b1964cf1/26-6a794a2829987.webp' /></p><p> </p><p>கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயிலிருந்து எழுந்த புகை அமெரிக்காவின் மினசோட்டா மற்றும் நியூயார்க் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பரவியது; இதனால், அமெரிக்காவின் வடக்குப் பக்கத்து நாடான கனடா மீது புதிய வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T05:15:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த மழை, பெருவெள்ளம், நிலச்சரிவு அபாயம்... மில்லியன் மக்களை வெளியேற்றிய சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-evacuates-million-from-homes-1786331764"></link>
            <id>https://news.lankasri.com/article/china-evacuates-million-from-homes-1786331764</id>
            <summary type="text">China evacuates one million: ஷாங்காய் உள்ளிட்ட கிழக்குச் சீனப் பகுதிகளைச் சேர்ந்த மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>China evacuates one million: ஷாங்காய் உள்ளிட்ட கிழக்குச் சீனப் பகுதிகளைச் சேர்ந்த மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். </p><p>
ஞாயிற்றுக்கிழமை மாலை 'டால்பின்' புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, ஷாங்காய் உள்ளிட்ட கிழக்குச் சீனப் பகுதிகளைச் சேர்ந்த 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2>சிவப்பு எச்சரிக்கை</h2><p>
</p><p>வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, முதலில் ஜெஜியாங் மாகாணத்தின் யுஹுவான் (Yuhuan) பகுதியில் மாலை 5:30 மணிக்கு, மணிக்கு 94 மைல் வரையிலான அதிகபட்ச காற்று வேகத்துடன் கரையைக் கடந்துள்ளது; அதன்பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து வென்ஜோ (Wenzhou) நகரத்தில் இரண்டாவது முறையாகக் கரையைக் கடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec5c595-4f8e-401e-a447-0136da70f086/26-6a79427725bc8.webp' /></p><p> </p><p>அந்தப் புயல் இப்பகுதி முழுவதும் போக்குவரத்தை முடக்கியதுடன், ஷாங்காயில் மட்டும் 1,500 விமானங்கள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டது.</p><p> சீன அதிகாரிகள் முன்னதாக 'டால்பின்' புயல் குறித்து சிவப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தனர்; ஆனால் திங்கட்கிழமை காலை அதனை வெப்பமண்டலப் புயலாகக் குறைத்து அறிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>புயல் தொடர்ந்து நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது; புதன்கிழமை வரை பலத்த மழை, கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், ஷான்டாங், ஹெனான், ஹூபே, அன்ஹுய், ஜியாங்சு, ஜெஜியாங் ஆகிய மாகாணங்களிலும் ஷாங்காய் நகரத்திலும் திங்களன்று பலத்த மழை பெய்யும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7650cb97-7423-42e3-8154-a2c636edb59d/26-6a794277caf10.webp' /></p><h2>290 கப்பல்கள்</h2><p> </p><p>உள்ளூர் நிர்வாகங்கள் மக்களை வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளன; அதேவேளையில், டிஸ்னிலேண்ட் மற்றும் லெகோலேண்ட் ஆகியவற்றின் சில பகுதிகள் மற்றும் ஷாங்காயின் 'பண்ட்' (Bund) பகுதியில் உள்ள பல பார்வையாளர் தளங்கள் உட்பட முக்கிய சுற்றுலாத் தலங்கள் பலவும் மூடப்பட்டுள்ளன. </p><p>இதனிடையே, கடலோரப் பயணிகள் படகுச் சேவையின் 55 வழித்தடங்கள் இடைநிறுத்தப்பட்டதாகவும், கடற்பகுதியில் நடைபெற்று வந்த 115 கட்டுமானத் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதாகவும், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் 290 கப்பல்கள் பாதுகாப்பான நீர்நிலைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் ஃபுஜியான் கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f136bd7-f7d7-44fe-baa9-4b5e7042286a/26-6a79427673949.webp' /></p><p> </p><p>ஜெஜியாங் மாகாணத்தின் சில பகுதிகளில் புவியியல் சார்ந்த பேரிடர்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்; அதேவேளையில், மலைப்பகுதி வெள்ளப்பெருக்குக்கான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், உள்ளூர் நிர்வாகத்தின் வெளியேற்ற உத்தரவுகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T03:13:56+00:00</updated>
        </entry>
    </feed>
