<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-20T06:33:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசுர பலத்துடன் ஸ்பெயின் அணி... 5 வருடங்களில் 16 வெற்றிக் கிண்ணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-team-sixteen-titles-1784528543"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-team-sixteen-titles-1784528543</id>
            <summary type="text">இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெர்லினில் ஐரோப்பிய சேம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி, நியூ ஜெர்சியில் நடந்த உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெர்லினில் ஐரோப்பிய சேம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி, நியூ ஜெர்சியில் நடந்த உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தற்போது உலக சேம்பியன் பட்டம் வென்றுள்ளது.</p><h2>16 பட்டங்கள்</h2><p>
</p><p>யூரோ கிண்ணம் 2008-ஐ வென்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2010-ல் அவர்கள் அதே சாதனையைப் படைத்தனர். ஸ்பெயினின் இந்தச் சமீபத்திய வெற்றி, ஆண்கள் மற்றும் மகளிர் விளையாட்டில் அவர்களின் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ece1a72-d1f8-442e-882f-2bc55b07e48e/26-6a5dbfc59dc9f.webp' /></p><p> </p><p>ஆண்கள் மற்றும் மகளிர் உலகக் கிண்ணங்களை ஒரே நேரத்தில் வென்ற முதல் நாடும் இவர்களே – 2023-ல் சிட்னியில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. </p><p>மட்டுமின்றி, ஆண்கள் அணி 2023-இல் நேஷன்ஸ் லீக் மற்றும் 2024 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றனர்; அதேவேளையில், மகளிர் அணி 2024 மற்றும் 2025 ஆகிய இரு ஆண்டுகளிலும் நேஷன்ஸ் லீக் பட்டத்தை வென்றனர்.</p><p></p><p> </p><p>உண்மையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்பெயின் கால்பந்து அணி 17 வயதுக்குட்பட்டோர் முதல் சீனியர் நிலை வரை வியக்கத்தக்க வகையில் உலகக் கிண்ணம் உட்பட 16 பட்டங்களை வென்றுள்ளது. </p><p>கடந்த 2022 முதல் 2026 வரையில் ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணி மட்டும் 11 பட்டங்களை வென்றுள்ளது. இதில், 20 வயதுக்கு உட்பட்டவர்கள் அணி 2022ல் உலகக் கிண்ணம் வென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9febd453-11c4-4e3d-8ca6-742b2afef585/26-6a5dbfc65e340.webp' /></p><h2>38 ஆட்டங்களில்</h2><p> </p><p>19 வயதுக்கு உட்பட்டவர்களின் அணி 5 முறை ஐரோப்பிய சேம்பியன்கள் பட்டம் வென்றுள்ளது. 17 வயதுக்கு உட்பட்டவர்கள் அணி கடந்த 2022ல் உலகக் கிண்ணம் வென்றதுடன், 2024ல் ஐரோப்பிய சேம்பியன்கள் பட்டம் வென்றுள்ளது. </p><p>ஆண்கள் கால்பந்து அணி கடந்த 2022 முதல் 2026 வரையில் 5 பட்டங்களை வென்றுள்ளது. இதில் ஆண்கள் சீனியர் அணி 2026ல் உலகக் கிண்ணம், 2024ல் ஐரோப்பிய சேம்பியன்கள் பட்டம், 2023ல் நேஷன்ஸ் லீக் பட்டம் வென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e21e86-8135-4dc6-b469-4fde18bdcdae/26-6a5dbfc70ef89.webp' /></p><p> </p><p>23 வயதுக்கு உட்பட்டவர்கள் அணி 2024ல் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றனர். 19 வயதுக்கு உட்பட்டவர்கள் அணி 2026ல் ஐரோப்பிய சேம்பியன்கள் பட்டம் வென்றுள்ளது. </p><p>ஸ்பெயின் அணி அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்துத் தொடர்ந்து 38 ஆட்டங்களில் தோல்வியைச் சந்திக்காமல் உள்ளது; இது வரலாற்றிலேயே ஐரோப்பிய அல்லது தென் அமெரிக்க அணி ஒன்று பதிவு செய்துள்ள மிக நீண்ட தொடர் வெற்றியாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T06:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் மாகாணமொன்றில் மின்னல் தாக்கி சுமார் 100 ஆடுகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-lightning-strike-kills-100-goats-1784527748"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-lightning-strike-kills-100-goats-1784527748</id>
            <summary type="text">சுவிஸ் மாகாணமொன்றில் மின்னல் தாக்கியதில் சுமார் 100 ஆடுகள் பலியானதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மின்னல் தாக்கி சுமார் 100 ஆடுகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிஸ் மாகாணமொன்றில் மின்னல் தாக்கியதில் சுமார் 100 ஆடுகள் பலியானதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
</p><h3>
மின்னல் தாக்கி சுமார் 100 ஆடுகள் பலி
</h3><p>
சுவிட்சர்லாந்தின் வாலே மாகாணத்திலுள்ள எக்கர்ஹார்ன் என்னுமிடத்தில், அம்மாகாணத்தின் அடையாளமாக கருதப்படும் கருப்பு மூக்கு செம்மறியாடுகள் இரவு நேரத்தில் கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a738dd41-8539-4bb3-80a7-d1b7969e31c9/26-6a5dbb85bb2ed.webp' /></p><p>
வியாழக்கிழமை இரவு புயல் வீச, சில மணி நேரங்களுக்குள் சுமார் 26,000 முறை மின்னல் உருவாக, அந்த மின்னல் தாக்கியதில், கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருந்த 97 ஆடுகள் கொல்லப்பட்டுவிட்டன.
</p><p>
அதாவது, சமீப காலமாக, ஓநாய் போன்ற விலங்குகளிடமிருந்து ஆடுகளை பாதுகாப்பதற்காக, ஆடுகளை கூட்டமாக, நெருக்கமாக கொட்டகைகளில் அடைக்கும் முறையை சுவிஸ் விவசாயிகள் பின்பற்றத் துவங்கியுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
ஆனால், அப்படி ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு நெருக்கமாக நின்றதே ஆடுகளுக்கு பிரச்சினையாகிவிட்டது.
</p><p>
ஆம், மின்னல் தாக்கியதில் ஒன்றையொன்று ஒட்டி நின்ற ஆடுகள் மொத்தமாக பாதிக்கப்பட, 97 ஆடுகள் பலியாகிவிட்டன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T06:10:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோரும் கிராமம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/village-to-hold-vote-on-leaving-uk-1784524352"></link>
            <id>https://news.lankasri.com/article/village-to-hold-vote-on-leaving-uk-1784524352</id>
            <summary type="text">இங்கிலாந்திலுள்ள கிராமம் ஒன்று பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோருவது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

சுதந்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்திலுள்ள கிராமம் ஒன்று பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோருவது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.</p><h3>

சுதந்திரம் கோரும் பிரித்தானிய கிராமம்</h3><p>

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரிலுள்ள பிடிங்டன் என்னும் கிராமம், பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோருவது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e776f1e-c04f-4922-b2e5-7748841940ab/26-6a5dae420594d.webp' /></p><p>

அதாவது, பிடிங்டனுக்கு அருகிலுள்ள பைசெஸ்டர் என்னுமிடத்தில் ஒரு ராணுவ தளம் உள்ளது.
</p><p>
அந்த ராணுவ தளத்தை சுமார் 3.750 புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கும் முகாமாக மாற்ற பிரித்தானிய உள்துறை அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
</p><p>
ஆக, தங்கள் கிராமத்துக்கு அருகில் புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே, இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர் பிடிங்டன் கிராம மக்கள்.&nbsp;</p><p></p><p>

தங்கள் கிராமத்துக்கு அருகே புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைப்பது குறித்து தங்களிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று கூறும் அக்கிராமத்தினர், பொதுவாக்கெடுப்பு நடத்தலாமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்கள்.
</p><p>
அந்த வாக்கெடுப்பில், பொதுவாக்கெடுப்பு நடத்தலாம் என மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து, பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோருவது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர் அக்கிராம மக்கள்.</p><p>

விடயம் என்னவென்றால், பிரித்தானியாவைப் பொருத்தவரை, அப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தினாலும், அரசும் நாடாளுமன்றமும் ஒப்புதலளித்தால் மட்டுமே அக்கிராமம் சுதந்திரம் பெற முடியும்.</p><p>

என்றாலும், இது தங்களைக் கலந்தாலோசிக்காமலே, தங்கள் கிராமத்துக்கு அருகே புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைக்க உள்துறை அலுவலகம் முடிவெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பிடிங்டன் மக்கள் மேற்கொள்ளும் ஒரு அடையாள நடவடிக்கை என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.</p><p>

அதாவது, தங்கள் கிராமத்துக்கு அருகே புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைவதை பிடிங்டன் மக்கள் விரும்பவில்லை என்பதை அரசுக்கு தெரியப்படுத்துவதற்காகவே இந்த வாக்கெடுப்பு குறித்த அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T06:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமன்றத்தை பூட்டும் போது எலும்பு இருக்காது - முதல்வருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dmk-mla-markandeyan-arrested-for-hate-speech-cm-1784526908"></link>
            <id>https://news.lankasri.com/article/dmk-mla-markandeyan-arrested-for-hate-speech-cm-1784526908</id>
            <summary type="text">முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். 

திமுக எம்.எல்.ஏமார்க்கண்டேயன் பேச்சு 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h3> 

திமுக எம்.எல்.ஏமார்க்கண்டேயன் பேச்சு </h3><p>

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது. </p><p>

இதில் பேசிய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
</p><p>
இதில் பேசிய அவர், "மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர், உன்னை சட்டமன்றத்திற்குள் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் என்ன கோமாளி பயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4d161c3-8579-4152-82ff-d83c366b939b/26-6a5db83e364ac.webp' /></p><p>

சட்டமன்றத்தை பூட்டும் போது உனக்கு எலும்பு இருக்காது, உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம், சட்டமன்றத்தை பூட்டிப் பார். யார் ஓடியது? கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கரூரில் இருந்து கேராவனில் யாரை வைத்துக்கொண்டு நீ ஓடினாய்? நாங்க ஒன்னும் பயந்து ஓடவில்லை.&nbsp;&nbsp;</p><p></p><p>
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பேய் அடிச்சது போல சட்டமன்றத்தில் உட்கார்ந்திருந்தார். கொத்து புரோட்டா போட போறாராம், உன்னை போல ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்க பார்த்திருக்கிறோம்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">தவெக தலைவர் விஜய் அவர்கள் குறித்து பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களின் முழுப்பேச்சு ! <a href="https://t.co/wmAvDyGPEw">pic.twitter.com/wmAvDyGPEw</a></p>&mdash; Duraimurugan (@Saattaidurai) <a href="https://x.com/Saattaidurai/status/2079046683938500986?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
ஊழலின் மொத்த உருவம் தமிழகத்தின் முதல்வர். நூறு ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விக்கிறாங்க. 150 கோடி ரூபாய் கருப்பு பணம் வாங்கி இருக்காங்க.
</p><p>
வழக்கு போடுவேன், மிரட்டுவேன் எம்எல்ஏவிடம் விலைபேசுவேன் என்கிறான். மானங்கெட்ட பையன், தகுதி இல்லாதவன் தான் இவன் கட்சில இருக்கான். 

எங்கள் தலைவர்களை அவமரியாதை படுத்தினால் அடித்து விரட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். எந்த இடத்தில் என்ன பேசினாலும் அடிப்போம்." என பேசியுள்ளார்.</p><h3> 

கைது </h3><p>

மார்க்கண்டேயனின் இந்த பேச்சு குறித்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் தவெகவினர் புகார் அளித்தனர்.</p><p>

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0eadfec8-2e35-4490-9d79-19254f7f1e0d/26-6a5db83edb2e3.webp' /></p><p> 

அவரின் வீட்டின் முன்பு திரண்ட திமுகவினர் காவல்துறையினரின் வாகனத்தை மறித்து அமர்ந்து கோஷமிட்டனர்.</p><h3> 

கனிமொழி கண்டனம்</h3><p>

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் கைதுக்கு திமுக எம்.பி கனிமொழி, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c5d8ce7-7d60-423a-8f87-8a359a53d950/26-6a5db83d84c0f.webp' /></p><p>
திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், "விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. <a href="https://x.com/mlavilathikulam?ref_src=twsrc%5Etfw">@mlavilathikulam</a> அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.<br><br>விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க…</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2079041444044771512?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். 

உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T05:58:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக்கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய பரிசுத்தொகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-and-argentina-prize-money-of-fifa-2026-1784525340"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-and-argentina-prize-money-of-fifa-2026-1784525340</id>
            <summary type="text">FIFA உலகக்கிண்ணம் வென்ற ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.&amp;nbsp;50 மில்லியன் டொலர்கள்&amp;nbsp;

ஈஸ்ட் ரூதர்போர்ட்டில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>FIFA உலகக்கிண்ணம் வென்ற ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.&nbsp;</p><h2>50 மில்லியன் டொலர்கள்&nbsp;</h2><p>

ஈஸ்ட் ரூதர்போர்ட்டில் நடந்த FIFA உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98db8c0e-a38a-4a6b-94be-7b0f18c92154/26-6a5db3bc11018.webp' />&nbsp;</p><p></p><p>

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு பரிசுத்தொகையாக 50 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.482 கோடி ஆகும்.</p><h2>
சாம்பியன்ஷிப் மோதிரங்கள்</h2><p>அத்துடன் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி முதல் முறையாக, சுமார் 1,50,000 டொலர் (ரூ.1.4 கோடி) மதிப்புடையதாக கூறப்படும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சாம்பியன்ஷிப் மோதிரங்களையும் பெறுகிறது. </p><p>

அதேபோல் தோல்வியுற்ற அணியான அர்ஜென்டினா 33 மில்லியன் டொலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.318 கோடி) பெறுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc20a90c-326a-4c0d-a9a6-ddb6666c70bc/26-6a5db3bcb469c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T05:34:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவர் ஒரு போர்க்குற்றவாளி... நியூயார்க் மேயர் மம்தானி மீண்டும் சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-war-criminal-says-1784524889"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-war-criminal-says-1784524889</id>
            <summary type="text">இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகருக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரைத் தனது நிர்வாகத்தால் கைது செய்ய முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகருக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரைத் தனது நிர்வாகத்தால் கைது செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.</p><h2>கைது செய்ய முடியுமா</h2><p>
</p><p>எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்காக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகருக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7af8e0e-0390-4ae9-b23f-56cf79dba03b/26-6a5db1976c53a.webp' /></p><p> </p><p>இந்த நிலையிலேயே, தனது நிர்வாகத்தால் நெதன்யாகுவை கைது செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக மம்தானி கூறியுள்ளார்.</p><p> நியூயார்க் டைம்ஸின் The Interview பாட்காஸ்டின் சனிக்கிழமை அத்தியாயத்தில் மம்தானி தெரிவித்த கருத்துகள் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. </p><p>குறித்த பாட்காஸ்டில் பேசிய மம்தானி, பிரதமர் நெதன்யாகு தற்போது ஹேக் (The Hague) நகரில் இருக்க வேண்டியவர் என குறிப்பிட்டுள்ளார். காஸாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக 2024 நவம்பரில் நெதன்யாகுவைக் கைது செய்வதற்கான பிடிவாரண்டை வெளியிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள டச்சு நகரமாகும் ஹேக். </p><p>

நெதன்யாகு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போர்க்குற்றவாளி; கடந்த பல ஆண்டுகளாக அவரது நடவடிக்கைகள் ஏற்படுத்திய விளைவுகளின் காரணமாகவே, பலரும் இத்தகையதொரு கருத்தைக் கொண்டுள்ளனர் எனவும் மம்தானி அந்த பாட்காஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், நெதன்யாகு போன்ற ஒரு வெளிநாட்டுத் தலைவரைக் கைது செய்யுமாறு, தனது மேற்பார்வையில் உள்ள நியூயார்க் காவல் துறைக்கு (NYPD) உத்தரவிடும் சட்டப்பூர்வ அதிகாரம் தமக்கு உள்ளதா என்பது குறித்துத் தனக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் மாம்தானி குறிப்பிட்டுள்ளார். </p><p>ஆனால், இந்த விவகாரம் குறித்து நகரின் சட்டத் துறையுடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மம்தானி தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, நியூயார்க் நகரில் சட்டம் எதைச் செய்ய அனுமதிக்கிறதோ, அதைத்தான் நாங்கள் செய்வோம், ஆனால், அதற்காக னகரத்தின் சட்டத்தை நாங்கள் திருத்தப்போவதில்லை என்றும் மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>காஸாவில் போருக்கான ஒரு ஆயுதமாக மக்களைப் பட்டினி போடுதல், அத்துடன் கொலை, துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சாட்டி, நெதன்யாகு மற்றும் பிற இஸ்ரேலியத் தலைவர்களைக் கைது செய்ய சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிடியாணை பிறப்பித்திருந்தது.</p><h2>ஹமாஸ் ஆதரவாளர்</h2><p> </p><p>மம்தானி தனது மேயர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​காஸாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை ஒரு இனப்படுகொலை என்றும், நெதன்யாகுவை ஒரு போர்க் குற்றவாளி என்றும் சித்தரித்தார். </p><p>மேலும், செப்டம்பர் மாதம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நெதன்யாகு எப்போதாவது நெதன்யாகு நியூயார்க்கில் கால் வைத்தால், அவரைக் கைது செய்யுமாறு நியூயார்க் நகர காவல்துறைக்கு (NYPD) உத்தரவிடுவேன் என்றும் கூறினார். </p><p>ஆனால், மம்தானிக்கு அப்போது பதிலளித்த சட்ட வல்லுநர்கள், நெதன்யாகுவைக் கைது செய்வது மம்தானிக்கு நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாக இருக்கும் என்றும், அப்படியான ஒரு சம்பவம் அமெரிக்க ஃபெடரல் அரசாங்கத்துடன் நேரடி மோதலில் ஈடுபடுத்தக்கூடும் என்றும் விளக்கமளித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d603902-0b09-4110-bd05-da4b77abd122/26-6a5db1968b01f.webp' /></p><p> இதனிடையே, மம்தானியின் சூளுரைகளை தாம் கண்டுகொள்வதில்லை என தெரிவித்துள்ள நெதன்யாகு, அவர் ஒரு ஹமாஸ் ஆதரவாளர் என்றும் குற்றஞ்சாட்டினார். </p><p>அத்துடன், ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலின் தூதர் டேனி டானன் தெரிவிக்கையில், இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு நியூயார்க் வந்து, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பெருமிதத்துடன் உரையாற்றுவார்; </p><p>மேலும், இஸ்ரேலின் உண்மையை எடுத்துரைக்கவும், தனது குடிமக்களைப் பாதுகாப்பதற்கான அதன் அசைக்க முடியாத உரிமையை வலியுறுத்தவும் உலகத்தின் முன் நிற்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T05:19:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளைமுடியை கருப்பாக்க உதவும் கருஞ்சீரக எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/home-made-hair-oil-for-grey-hair-in-tamil-1784522463"></link>
            <id>https://news.lankasri.com/article/home-made-hair-oil-for-grey-hair-in-tamil-1784522463</id>
            <summary type="text">முடிக்கு இயற்கையான கருமை நிறத்தை அளிக்கும் மெலனின் உற்பத்தி குறையும்போது அல்லது நிறமி செல்கள் மந்தமாகும்போது முடி நரைக்கிறது. 

மரபியல், வைட்டமின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முடிக்கு இயற்கையான கருமை நிறத்தை அளிக்கும் மெலனின் உற்பத்தி குறையும்போது அல்லது நிறமி செல்கள் மந்தமாகும்போது முடி நரைக்கிறது. </p><p>

மரபியல், வைட்டமின் பி12 மற்றும் டி குறைபாடு, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.</p><p>

இன்றைய காலகட்டத்தில் இளநரை, நரைமுடி போன்ற பிரச்சனைகள் பலருக்கும் இருக்கிறது.
</p><p>
அந்தவகையில், ஒரே வாரத்தில் நரைமுடியை கருப்பாக்கும் கருஞ்சீரக எண்ணெய்யை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><ul><li>

கருஞ்சீரகம்- 3 ஸ்பூன்
</li><li>வெந்தயம்- 3 ஸ்பூன்
</li><li>கறிவேப்பிலை- 1 கைப்பிடி</li><li>கரிசலாங்கண்ணி பொடி- 2 ஸ்பூன் </li><li>தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்</li></ul><h2>எப்படி தயாரிப்பது?
</h2><p>
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>

அடுத்து ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்தி அரைத்த கலவைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a69cb999-0da8-424a-a46d-4f7b40b11d6b/26-6a5da786d7317.webp' /></p><p>இதற்கடுத்து நன்கு கொதித்து எண்ணெய் நிறம் மாறி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
</p><p>
எண்ணெய் நன்கு ஆறியதும் அதனை வடிகட்டி தலைமுடியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
</p><p>
இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி நிரந்தரமாக கருப்பாக மாறும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T04:44:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோஹித் ஷர்மா 138 ஓட்டங்கள் விளாசியும் வீண்: இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-win-odi-series-2-1-vs-india-1784518254"></link>
            <id>https://news.lankasri.com/article/england-win-odi-series-2-1-vs-india-1784518254</id>
            <summary type="text">இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது. இங்கிலாந்து 387 ஓட்டங்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது. </p><h2>இங்கிலாந்து 387 ஓட்டங்கள்
</h2><p>
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89ae9103-7fe0-481e-a988-e8c3650524cc/26-6a5d97f7e9eba.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 387 ஓட்டங்கள் குவித்தது. பென் டக்கெட் (Ben Duckett) 141 ஓட்டங்களும், பெத்தெல் 91 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

பின்னர் ஆடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 360 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
</p><h2>
ரோஹித் ஷர்மா&nbsp;138&nbsp;ஓட்டங்கள்</h2><p>ரோஹித் ஷர்மா (Rohit Sharma) 138 ஓட்டங்களும், கில் 77 ஓட்டங்களும், விராட் கோஹ்லி (Virat Kohli) 74 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b07b3e8-5a39-4644-90cf-bd887409a78d/26-6a5d97f72a621.webp' /></p><p>
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ஜோ ரூட் (Joe Root) ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6491a175-2abd-49a4-9452-a1403088ef1b/26-6a5d97f89ecd1.webp' />&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">COME ONNNNN ENGLAND!! 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 <a href="https://t.co/ZQsrjWZpw8">pic.twitter.com/ZQsrjWZpw8</a></p>&mdash; England Cricket (@englandcricket) <a href="https://x.com/englandcricket/status/2078908655592689777?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T03:38:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் இரட்டை நிலநடுக்கம்., குறைந்தது ஆறு பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/twin-earthquakes-kill-six-in-central-peru-1784506061"></link>
            <id>https://news.lankasri.com/article/twin-earthquakes-kill-six-in-central-peru-1784506061</id>
            <summary type="text">பெருவின் மத்திய பகுதியில் ஜூலை 19 அன்று இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவின் மத்திய பகுதியில் ஜூலை 19 அன்று இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஐரோப்பிய நிலநடுக்க மையம் (EMSC) வெளியிட்ட தகவலின்படி, முதல் நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதன் பின்னர் சில மணி நேரங்களில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c61fe7e4-e97e-40f4-aba8-cffc830b166e/26-6a5d66cfb74da.webp' /></p><p>இரண்டும் பெருவின் மத்திய பகுதியில் உள்ள Huancayo மற்றும் Ayacucho பகுதிகளை அதிகமாக பாதித்தன.
</p><p>
பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால் மீட்பு நடவடிக்கைகள் சிரமமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
</p><p>
பெருவின் ஜனாதிபதி, “இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முழுமையான உதவிகளை வழங்கும்” என்று உறுதியளித்துள்ளார். </p><p>தற்போது தேசிய அவசர மேலாண்மை குழு மற்றும் படை வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p></p><p>பெரு, பசிபிக்கின் “Ring of Fire” பகுதியில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடாகும். கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நிலநடுக்கங்கள் பெருவில் உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
இந்த சமீபத்திய நிலநடுக்கம், பெருவின் மக்கள் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T03:07:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் சிறந்த அணி- கண்ணீர் மல்கிய மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/messi-in-tears-as-spain-win-world-cup-1784508552"></link>
            <id>https://news.lankasri.com/article/messi-in-tears-as-spain-win-world-cup-1784508552</id>
            <summary type="text">2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா, ஸ்பெயினிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Ferran Torres கூடுதல் நேரத்தில் அடித்த கோல், ஸ்பெயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா, ஸ்பெயினிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
</p><p>
Ferran Torres கூடுதல் நேரத்தில் அடித்த கோல், ஸ்பெயினுக்கு இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தை உறுதிசெய்தது.
</p><p>
போட்டிக்குப் பிறகு, அர்ஜென்டினா கேப்டன் Lionel Messi கண்ணீர் மல்கியபடி, “ஸ்பெயின் எங்களை விட சிறந்த அணி. அவர்கள் முழுமையாக ஆட்டத்தை கட்டுப்படுத்தினர்” என்று ஒப்புக்கொண்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2017c646-655c-47d0-a2df-cd633e3ea842/26-6a5d728b52303.webp' /></p><p>MetLife Stadium-ல் நடைபெற்ற இந்த போட்டியை 80,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்தனர். </p><p>பெரும்பாலானோர் மெஸ்ஸி தனது 39 வயதில் இரண்டாவது உலகக் கோப்பையை வெல்வார் என எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், ஸ்பெயின் அணி 20-1 என்ற ஷாட் கணக்கில் முன்னிலை பெற்றது. பாஸ் விநியோகத்தில் கூட, ஸ்பெயின் 845-433 என்ற வித்தியாசத்தில் அர்ஜென்டினாவை முறியடித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a47c71f5-b7cf-4a08-8ccb-55219a6892dd/26-6a5d728a9a32f.webp' /></p><p>மெஸ்ஸி, “நாங்கள் முழு மனதுடன் விளையாடினோம். தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இதுவரை செய்த சாதனைகளை மறக்க முடியாது. என் வீரர்களுக்கும், என் நாட்டுக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.
</p><p>
இந்த தோல்வி, மெஸ்ஸியின் உலகக் கோப்பை பயணத்தில் மிகுந்த உணர்ச்சி பூர்வமான தருணமாக அமைந்தது. அவர் உலகக் கோப்பை வரலாற்றில் 21 கோல்கள் அடித்துள்ளார். ஆனால், பிரான்ஸ் வீரர் Kylian Mbappé 22 கோல்களுடன் அவரை முந்தியுள்ளார்.
</p><p>
ஸ்பெயின் தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை பட்டங்களை ஒரே நேரத்தில் பெற்றுள்ள ஒரே நாடாக விளங்குகிறது. இது, உலக கால்பந்தில் ஸ்பெயினின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T00:56:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டோரஸ் அடித்த ஒற்றை கோல்., உலகக் கோப்பை சாம்பியனான ஸ்பெயின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/torres-goal-seals-spains-world-cup-win-1784507899"></link>
            <id>https://news.lankasri.com/article/torres-goal-seals-spains-world-cup-win-1784507899</id>
            <summary type="text">2026 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை 1–0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, தங்களின் இரண்டாவது உலகக் கோப்பையை வென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை 1–0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, தங்களின் இரண்டாவது உலகக் கோப்பையை வென்றுள்ளது.</p><p>போட்டி மிகவும் கடினமாகவும், இரு அணிகளும் தாக்குதலில் பலவீனமாகவும் இருந்த நிலையில், கூடுதல் நேரத்தில் (Extra Time) மாற்று வீரராக வந்த Ferran Torres வெற்றிக்கான அந்த ஒற்றை கோலை அடித்தார். இந்த கோல், ஸ்பெயினுக்கு உலகக் கோப்பை பட்டத்தை உறுதிசெய்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b312ca-d816-4d1b-88ba-00ef0c65d50f/26-6a5d6dfcb7fe1.webp' /></p><p>அர்ஜென்டினா அணி Lionel Messi தலைமையில் விளையாடினாலும், தாக்குதலில் பலவீனமாக இருந்தது. பல வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல், அர்ஜென்டினா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
</p><p>ஸ்பெயின் அணி, 2010 இல் உலகக் கோப்பையை வென்ற பிறகு, இப்போது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி, ஸ்பெயின் கால்பந்து வரலாற்றில் முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d715ebe8-bd69-4afa-b580-058f2cc6b9ad/26-6a5d6dfe2be80.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2f250a6-2a35-41b6-bb87-c6f43dc10a2f/26-6a5d6dfd71cc9.webp' /></p><p>போட்டியின் போது, இரு அணிகளும் டிபென்ஸில் கவனம் செலுத்தியதால், கோல் வாய்ப்புகள் குறைவாக இருந்தன. ஆனால், Torres-ன் துல்லியமான அடிக்கு அர்ஜென்டினாவின் டிபென்ஸ் முறியடிக்கப்பட்டது.
</p><p>இந்த வெற்றி, ஸ்பெயின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஸ்பெயின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">WATCH: Spain lifts the FIFA World Cup trophy.<br><br>The FIFA World Cup 2026 has come to an end. <a href="https://t.co/Wcr1As5ZQP">pic.twitter.com/Wcr1As5ZQP</a></p>&mdash; Clash Report (@clashreport) <a href="https://x.com/clashreport/status/2078974318940135802?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T00:36:42+00:00</updated>
        </entry>
    </feed>
