<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-10T04:33:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா காட்டுத்தீ... மிக மோசமான சூழலை எதிர்கொள்ளத் தயாராக மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-wildfire-residents-warned-1786333732"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-wildfire-residents-warned-1786333732</id>
            <summary type="text">Residents warned to brace for the worst: கனடாவில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி எரிந்து வருவதால், மிக மோசமான சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மக்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Residents warned to brace for the worst: கனடாவில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி எரிந்து வருவதால், மிக மோசமான சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை.
</p><p>மேற்கு கனடாவில் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்ட காட்டுத்தீ வேகமாகப் பரவி அதன் பரப்பளவு இருமடங்காக அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதையடுத்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0efb165c-aca3-42a6-a7b3-07dba2771682/26-6a794a26ca86c.webp' /></p><p>
பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ சேவையின் தகவல்படி, பால்ட் ரேஞ்ச் தீ தற்போது சம்மர்லேண்ட், பீச்லேண்ட் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிற பகுதிகளில் 53 சதுர மைல்களுக்கும் அதிகமான பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது. </p><p>இதனிடையே, தீப்பிழம்புகள் மிகவும் உயரமாக இருந்ததால் அவை தமக்கே உரிய வானிலை அமைப்புகளை உருவாக்கியதாகவும், அதன் விளைவாக மின்னல் உருவானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் முதல்வர் டேவிட் எபி சனிக்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தீயணைப்பு அதிகாரி ஒருவர் இந்தத் தீ விபத்தை வெடிகுண்டு வெடித்ததற்கு ஒப்பிட்டதாகத் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், அவசரநிலை பிரகடனமானது, பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விலையேற்றத்தைத் தடுப்பதற்கான விநியோகப் பாதுகாப்புகள் உள்ளிட்ட சிறப்பு அதிகாரங்களையும், மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கான கூடுதல் வளங்களையும் மாகாண அரசாங்கத்திற்கு வழங்குகிறது.
</p><p>சுமார் 12,000 மக்கள் வசிக்கும் சம்மர்லேண்ட் பகுதி, மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளதுடன், அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. </p><p>சுமார் 6,500 பேர் வசிக்கும் பீச்லேண்ட் பகுதியின் சில பகுதிகளில் இருந்த மக்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது.
பால்ட் ரேஞ்ச் (Bald Range) காட்டுத்தீ இந்த கோடையில் மிகப்பெரிய அளவிலான வெளியேற்ற நடவடிக்கையைத் தூண்டியுள்ளது; பிரிட்டிஷ் கொலம்பியா முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e7774b5-aa31-419d-8509-03adb36c5382/26-6a794a2779b93.webp' /></p><p>
</p><p>அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய ஒகனகன் மற்றும் ஒகனகன்-சிமில்கமீன் பிராந்திய மாவட்டங்களும், ஸ்ன்பிங்க்டன் இந்திய பூர்வகுடியினக் குழுவும், சம்மர்லேண்ட் மற்றும் பீச்லேண்ட் மாவட்டங்களும் வெளியேற்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன, மேலும் சில பகுதிகளில் வெளியேற்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. </p><p>ஒகனகனில், ஏராளமான குதிரைகளை வெளியேற்றுவதற்கு அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கோடைக்காலத்தில் கனடா முழுவதும் நூற்றுக்கணக்கான காட்டுத்தீகள் கொழுந்துவிட்டு எரிந்தன; குறிப்பாக ஜூலை மாதத்தில் ஒன்ராறியோவில் மட்டும் சுமார் 200 காட்டுத்தீகள் எரிந்ததால், ரொறன்ரோவின் காற்றுத் தரம் சில நாட்களுக்கு உலகின் மிக மோசமான நிலைகளில் ஒன்றாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62be0226-e00c-4b65-b6a2-59f5b1964cf1/26-6a794a2829987.webp' /></p><p> </p><p>கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயிலிருந்து எழுந்த புகை அமெரிக்காவின் மினசோட்டா மற்றும் நியூயார்க் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பரவியது; இதனால், அமெரிக்காவின் வடக்குப் பக்கத்து நாடான கனடா மீது புதிய வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T03:46:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த மழை, பெருவெள்ளம், நிலச்சரிவு அபாயம்... மில்லியன் மக்களை வெளியேற்றிய சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-evacuates-million-from-homes-1786331764"></link>
            <id>https://news.lankasri.com/article/china-evacuates-million-from-homes-1786331764</id>
            <summary type="text">China evacuates one million: ஷாங்காய் உள்ளிட்ட கிழக்குச் சீனப் பகுதிகளைச் சேர்ந்த மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>China evacuates one million: ஷாங்காய் உள்ளிட்ட கிழக்குச் சீனப் பகுதிகளைச் சேர்ந்த மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். </p><p>
ஞாயிற்றுக்கிழமை மாலை 'டால்பின்' புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, ஷாங்காய் உள்ளிட்ட கிழக்குச் சீனப் பகுதிகளைச் சேர்ந்த 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2>சிவப்பு எச்சரிக்கை</h2><p>
</p><p>வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, முதலில் ஜெஜியாங் மாகாணத்தின் யுஹுவான் (Yuhuan) பகுதியில் மாலை 5:30 மணிக்கு, மணிக்கு 94 மைல் வரையிலான அதிகபட்ச காற்று வேகத்துடன் கரையைக் கடந்துள்ளது; அதன்பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து வென்ஜோ (Wenzhou) நகரத்தில் இரண்டாவது முறையாகக் கரையைக் கடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec5c595-4f8e-401e-a447-0136da70f086/26-6a79427725bc8.webp' /></p><p> </p><p>அந்தப் புயல் இப்பகுதி முழுவதும் போக்குவரத்தை முடக்கியதுடன், ஷாங்காயில் மட்டும் 1,500 விமானங்கள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டது.</p><p> சீன அதிகாரிகள் முன்னதாக 'டால்பின்' புயல் குறித்து சிவப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தனர்; ஆனால் திங்கட்கிழமை காலை அதனை வெப்பமண்டலப் புயலாகக் குறைத்து அறிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>புயல் தொடர்ந்து நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது; புதன்கிழமை வரை பலத்த மழை, கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், ஷான்டாங், ஹெனான், ஹூபே, அன்ஹுய், ஜியாங்சு, ஜெஜியாங் ஆகிய மாகாணங்களிலும் ஷாங்காய் நகரத்திலும் திங்களன்று பலத்த மழை பெய்யும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7650cb97-7423-42e3-8154-a2c636edb59d/26-6a794277caf10.webp' /></p><h2>290 கப்பல்கள்</h2><p> </p><p>உள்ளூர் நிர்வாகங்கள் மக்களை வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளன; அதேவேளையில், டிஸ்னிலேண்ட் மற்றும் லெகோலேண்ட் ஆகியவற்றின் சில பகுதிகள் மற்றும் ஷாங்காயின் 'பண்ட்' (Bund) பகுதியில் உள்ள பல பார்வையாளர் தளங்கள் உட்பட முக்கிய சுற்றுலாத் தலங்கள் பலவும் மூடப்பட்டுள்ளன. </p><p>இதனிடையே, கடலோரப் பயணிகள் படகுச் சேவையின் 55 வழித்தடங்கள் இடைநிறுத்தப்பட்டதாகவும், கடற்பகுதியில் நடைபெற்று வந்த 115 கட்டுமானத் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதாகவும், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் 290 கப்பல்கள் பாதுகாப்பான நீர்நிலைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் ஃபுஜியான் கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f136bd7-f7d7-44fe-baa9-4b5e7042286a/26-6a79427673949.webp' /></p><p> </p><p>ஜெஜியாங் மாகாணத்தின் சில பகுதிகளில் புவியியல் சார்ந்த பேரிடர்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்; அதேவேளையில், மலைப்பகுதி வெள்ளப்பெருக்குக்கான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், உள்ளூர் நிர்வாகத்தின் வெளியேற்ற உத்தரவுகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T03:13:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன்: அல்ஜீரிய ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/algerian-military-rescues-german-citizen-in-niger-1786296265"></link>
            <id>https://news.lankasri.com/article/algerian-military-rescues-german-citizen-in-niger-1786296265</id>
            <summary type="text">நைஜர் நாட்டு எல்லையில் கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் அல்ஜீரிய ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளார்.கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர்நைஜர் நாட்டின் எல்லை பகுதியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜர் நாட்டு எல்லையில் கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் அல்ஜீரிய ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர்</h2><p>நைஜர் நாட்டின் எல்லை பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆயுதம் ஏந்திய குற்ற கும்பலால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார்.</p><p> இந்நிலையில் அவர் அல்ஜீரிய ராணுவ படையால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் செக்யூரிட்டி போர்சஸ் (பாதுகாப்பு படையினரால்) பாதுகாப்பாக மீட்கப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அல்ஜீரிய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4b97439-1c37-4fb2-bb70-8e3efd4e678a/26-6a78b7caed5aa.webp' /></p><p> மீட்கப்பட்ட ஜேர்மன் குடிமகன் அல்ஜீரியாவின் தென்பகுதியான இன் குஸ்ஸாம் பகுதியில் இருந்து தலைநகருக்கு அருகிலுள்ள பூஃபாரிக்(Boufarik) ராணுவ தளத்திற்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p> மீட்கப்பட்ட ஜேர்மன் நாட்டவரின் உடல் நலம் தற்போது சீராக இருப்பதாகவும், உரிய நேரத்தில் ஜேர்மன் அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் எவ்வாறு மீட்கப்பட்டார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை அல்ஜீரிய அரசு இன்னும் வெளியிடவில்லை.</p><h2>ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வழங்கிய தகவல்</h2><p>ஜேர்மன் குடிமகன் கடத்தப்பட்ட விவகாரம் தங்களுக்கு தெரியும் என்றும், வெளிநாடுகளில் கடத்தப்படும் ஜேர்மன் குடிமக்கள் குறித்து எந்தவொரு கருத்தும் அரசாங்கம் தெரிவிப்பதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T00:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[95 கோடியை தாண்டிய Gemini AI பயன்பாட்டாளர்கள்: கூகுள் CEO சுந்தர் பிச்சை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-ai-dept-reshuffled-sundar-pichai-announces-1786321130"></link>
            <id>https://news.lankasri.com/article/google-ai-dept-reshuffled-sundar-pichai-announces-1786321130</id>
            <summary type="text">கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு(AI) பிரிவின் தலைமை பொறுப்புகளில் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூகுள் தலைமையில் அதிரடி மாற்றம்செயற்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு(AI) பிரிவின் தலைமை பொறுப்புகளில் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2> கூகுள் தலைமையில் அதிரடி மாற்றம்</h2><p>செயற்கை நுண்ணறிவு பிரிவில் கூகுள் நிறுவனம் முதன்மையான தொடர்ந்து திகழ வேண்டும் என்று கூகுள் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களை விரைவுபடுத்தி வருகிறது.</p><p> அதே நேரம் கூகுள் நிறுவனத்தின் உயர் பதவிகளிலும், பொறுப்புகளிலும் பெரும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> இது தொடர்பாக கூகுள் CEO சுந்தர் பிச்சை தங்களுடைய ஊழியர்களுக்கு மின்னஞ்சல்&nbsp; அனுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce51f2e8-04c8-4df7-bc46-5e8dfa6a6f86/26-6a7918eccf983.webp' /></p><h2> ஊழியர்களின் விலகல், புதிய பொறுப்புகள்</h2><p>கூகுள் நிறுவனத்தின் 30 வது ஊழியராக இணைந்து கிட்டத்தட்ட கடந்த 27 ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தின் தேடுபொறி, கூகுள் மேப்ஸ், மற்றும் கூகுள் பிரைன் ஆகிய முக்கிய கட்டமைப்புகளை வழிநடத்திய ஜெஃப் டீன் கூகுள் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார்.</p><p> கூகுள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான&nbsp; சஞ்சய் கெமாவாத்&nbsp; உடன் இணைந்து ஜெஃப் டீன் புதிய தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கவுள்ளார்.</p><p> இதையடுத்து கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான டெமிஸ் ஹசாபிஸ், கூகுளின் தாய் நிறுவனமான Alphabet நிறுவனத்தின் முதன்மை அறிவியலாளராகவும், DeepMind அமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2fa0248-8628-4d3a-b49a-915ae9122f3b/26-6a7918ed84071.webp' /></p><p> அதே போல கூகுள் நிறுவனத்தின் DeepMind பிரிவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான கொரே கவுக்சியோக்லு நிறுவனத்தின் சீனியர் வைஸ் பிரசிடென்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.</p><p> இவர் Gemini AI, ஆராய்ச்சிகள் ஆகியவற்றின் அன்றாட செயற்பாடுகளை நேரடியாக தலைமையேற்று வழி நடத்துகிறார்.</p><p> கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான Gemini AI பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 95 கோடியை தாண்டியுள்ளது.</p><p> அதே போல திறந்த மூலக் குறியீடு கொண்ட Gamma மாடல்கள் இதுவரை 90 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T00:19:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்ப் கோல்ப் கிளப் மேலே பறந்த 2 சிறிய விமானங்கள்: களத்தில் இறங்கிய F-16 ரக போர் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/norad-intercepts-2-small-plane-near-president-even-1786310999"></link>
            <id>https://news.lankasri.com/article/norad-intercepts-2-small-plane-near-president-even-1786310999</id>
            <summary type="text">டிரம்ப் கோல்ஃப் கிளப்பிற்கு மேலே அத்துமீறி பறந்த இரண்டு சிறிய ரக விமானங்களை அமெரிக்க விமானப்படை F-16 ரக போர் விமானங்கள் இடைமறித்து வெளியேற்றினர். அத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிரம்ப் கோல்ஃப் கிளப்பிற்கு மேலே அத்துமீறி பறந்த இரண்டு சிறிய ரக விமானங்களை அமெரிக்க விமானப்படை F-16 ரக போர் விமானங்கள் இடைமறித்து வெளியேற்றினர்.</p><h2> அத்துமீறி நுழைந்த சிறிய விமானங்கள்</h2><p>
அமெரிக்காவின் பெட்மின்ஸ்டர் நகருக்கு மேல் வான்வெளி தடையை மீறி இரண்டு சிறிய ரக விமானங்கள் பறந்தன.</p><p> ஞாயிற்றுக்கிழமை பெட்மின்ஸ்டர் நகரில் அமைந்துள்ள டிரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">WATCH: US F-16 jet intercepts aircraft over Bedminster, New Jersey, where President Trump is present <a href="https://t.co/gS4gTP9Lbo">pic.twitter.com/gS4gTP9Lbo</a></p>&mdash; Rapid Report (@RapidReport2025) <a href="https://x.com/RapidReport2025/status/2086524153348104470?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதையடுத்து அமெரிக்கா விமானப்படை பிரிவான NORAD தங்களது&nbsp; F-16 ரக போர் விமானங்கள் கொண்டு அத்துமீறிய இரண்டு சிறிய ரக விமானங்களையும் வெற்றிகரமாக இடைமறித்து அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர் என்று பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p></p><p> இந்த வான்வெளி அத்துமீறல் நடைபெற்ற போது ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கோல்ஃப் கிளப்பில் நேரடியாக இருந்தாரா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p>மேலும் அத்துமீறி தடை செய்யப்பட்ட பகுதிக்குள் விமானத்தை செலுத்தியவர் யார்? அவர்களின் இந்த செயலுக்கு என்ன காரணம்? என்பது குறித்தும்&nbsp; அதிகாரிகள் எந்தவொரு விளக்கத்தையும் வெளியிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fe36dbb-a031-4df1-9425-55b248509003/26-6a78f15995aec.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T23:45:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸை திறந்தால்., ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட டிரம்ப் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-plan-to-quit-nuclear-stand-with-iran-1786318970"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-plan-to-quit-nuclear-stand-with-iran-1786318970</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டால் ஈரான் உடனான புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட டிரம்ப் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பின் புதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டால் ஈரான் உடனான புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட டிரம்ப் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> டிரம்பின் புதிய திட்டம்</h2><p>வணிக கப்பலின் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் ஈரான் திறந்து விட்டால் ஈரானிடம் பெற திட்டமிட்டு இருந்த புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தயாராக இருப்பதாக The Wall Street Journal செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57476c62-dcb0-4fbd-b8bd-f64980b37776/26-6a79107c9b2cd.webp' /></p><p>அணுசக்தி ஒப்பந்தத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக, சர்வதேச அளவில் முக்கியமான நீர்வழி வணிக பாதையான ஹார்முஸை எந்தவொரு தடையும் இன்றி மீண்டும் திறந்து விடுவதற்காக பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ முற்றுகையை கைவிடவும், தற்போதுள்ள போர் நிறுத்தத்தை தொடரவும் டிரம்ப் அரசு ஒப்புக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> கடந்த சில வாரங்களாக இதற்கான சூழலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உருவாக்கி வருவதாகவும், ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை பெற முடியாவிட்டாலும், போர் நடவடிக்கைகளில் இருந்து விலகிச் செல்லலாம் என்று தன்னுடைய மூத்த ஆலோசகர்களுடன் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p> இருப்பினும் ஹார்முஸ் நீரிணையை திறப்பது குறித்து ஈரான் பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாக கூறப்படுகிறது.</p><h2> ஈரானின் நிபந்தனைகள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd5f01f7-6f99-4d29-87ab-6dd52fa4bf53/26-6a79107d4e0b7.webp' /></p><p>
போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கல், அமெரிக்க கடற்படை முற்றுகையை திரும்ப பெறுதல், பொருளாதார தடைகளை நீக்குதல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஈரானிய சொத்துகளை விடுவித்தல் ஆகியவற்றை ஈரான் கோருவதாக கூறப்படுகிறது.</p><p> இந்த கோரிக்கைகளின் காரணமாக அமெரிக்காவின் ராஜதந்திர முடிவுகளில் தெளிவு குறைந்து இருப்பதாகவும், ஈரான் நீண்ட கால மோதலுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது என்று The Wall Street Journal தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T23:43:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய கிராமங்களை சூறையாடிய உக்ரைன்: சுட்டு வீழ்த்தப்பட்ட 285 ட்ரோன்கள்: 6 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-massive-drone-attack-in-belgorod-1786315324"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-massive-drone-attack-in-belgorod-1786315324</id>
            <summary type="text">ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில்&amp;nbsp; 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சுட்டு வீழ்த்தப்பட்ட 285 ட்ரோன்கள்ஞாயிற்றுக்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில்&nbsp; 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> சுட்டு வீழ்த்தப்பட்ட 285 ட்ரோன்கள்</h2><p>ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோ நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ரஷ்ய பகுதிகளை குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p>ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலில், கிட்டத்தட்ட 285 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தி உள்ளன.</p><p>இந்த தாக்குதல் உக்ரைனின் எல்லையை ஒட்டிய பெல்கோரோட், பிரியான்ஸ்க் மற்றும் குர்ஸ்க் ஆகியவற்றை மையமாக கொண்டு நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bedc2a4f-d031-4721-8661-87fd977b93f6/26-6a79023e792aa.webp' /></p><h2> அதிகரிக்கும் உயிரிழப்பு</h2><p>உக்ரைனின் சமீபத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>கிட்டத்தட்ட 30 குடியிருப்பு வீடுகள் உக்ரைன் தாக்குதலில் சிதைக்கப்பட்டுள்ளன.</p><p> &nbsp;உக்ரைனிய ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் பணியாளர்கள் மேலும் ஒரு ஆணின் உடலை பத்திரமாக மீட்டுள்ளனர்.</p><p>பேரழிவுகரமான இந்த தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T22:42:18+00:00</updated>
        </entry>
    </feed>
