<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-09T03:36:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழு சூரிய கிரகணம்... ஐரோப்பா முழுவதும் மின் கட்டமைப்புகளில் அழுத்தம் ஏற்படலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/full-solar-eclipse-power-grids-1786246457"></link>
            <id>https://news.lankasri.com/article/full-solar-eclipse-power-grids-1786246457</id>
            <summary type="text">புதன்கிழமை நிகழவிருக்கும் முழு சூரிய கிரகணம், ஐரோப்பா முழுவதும் உள்ள மின் கட்டமைப்புகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
புதன்கிழமை மாலையில் நிகழவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதன்கிழமை நிகழவிருக்கும் முழு சூரிய கிரகணம், ஐரோப்பா முழுவதும் உள்ள மின் கட்டமைப்புகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>புதன்கிழமை மாலையில் நிகழவுள்ள முழு சூரிய கிரகணம், ஐரோப்பா முழுவதும் ஏற்கனவே சிரமங்களை எதிர்கொண்டுள்ள மின் கட்டமைப்புகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><h2>பாதிக்கக்கூடும்</h2><p> </p><p>கிரகணத்தால் சூரிய மின்சக்தியில் ஏற்படும் சரிவு, இந்த கோடைகாலத்தின் கடுமையான வானிலையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டமைப்பைப் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a253d7-c0d8-42db-9ca1-a145fa6d0115/26-6a77f53c90a80.webp' /></p><p> கண்டம் முழுவதும் வெப்ப அலைகள் காரணமாக அணு மற்றும் நிலக்கரி மின் நிலையங்கள் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் குறைந்த நீர் மட்டம் காரணமாக நீர்மின் நிலையங்கள் செயலிழந்துள்ளன. </p><p>பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள மின்கட்டமைப்பு இயக்குநர்கள், சூரிய மின் உற்பத்தியில் இழப்புகளை எதிர்பார்த்து, மற்ற மின் திட்டங்களிலிருந்து அமைப்பைச் சமநிலைப்படுத்தத் தயாராக உள்ளனர். </p><p>ஸ்பெயின் மின் கட்டமைப்பு நிறுவனமான ரெட் எலெக்ட்ரிகா, இந்த கிரகணத்தால் ஸ்பெயினின் சூரிய மின்சக்தி 5 ஜிகாவாட் வரை குறையக்கூடும் என்றும், இது ஆகஸ்ட் மாதத்தில் ஒரு வழக்கமான புதன்கிழமையின் அதிகபட்ச தேவையில் 13 சதவீதத்திற்குச் சமம் என்றும் கூறுகிறது.</p><p></p><p> </p><p>பிரித்தானியாவில், சூரிய ஆற்றல் உற்பத்தி 1.3 ஜிகாவாட் வரை குறையக்கூடும் என்றும், இது இரண்டு அணு உலைகளின் உற்பத்தியை இழப்பதற்கு ஒப்பானது என்றும் தேசிய எரிசக்தி அமைப்பு இயக்குநகம் கூறுகிறது. </p><p>இந்த நூற்றாண்டில் ஐரோப்பாவில் தெரியும் முதல் கிரகணம், மாலை 6 மணிக்குச் சற்றுப் பிறகு பிரித்தானியாவில் தொடங்கும். 2081-ஆம் ஆண்டு வரை முழு சூரிய கிரகணம் மீண்டும் நிகழாது.</p><h2>லண்டனில் 91 சதவீதம்</h2><p> </p><p>நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சூரிய கிரகணத்தின் அளவு 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்; அதாவது, சூரியனின் ஒன்பது பங்குகளுக்கும் அதிகமான பகுதியை நிலவு மறைக்கும். </p><p>ஆகஸ்ட் 1999-ல் முற்பகலில் இங்கிலாந்து முழுவதும் இருள் சூழ்ந்ததற்குப் பிறகு, இங்கு நிகழவிருக்கும் மிக முழுமையான கிரகணம் இதுவாகவே இருக்கும்.</p><p> இம்முறை, மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் சூரியன் அதிக அளவில் மறைக்கப்படுவதைக் காண முடியும்; பிளைமவுத் (Plymouth) நகரில் 95 சதவீதம் மறைக்கப்படும். லண்டனில் 91 சதவீத கிரகணத்தைக் காண முடியும், ஆனால் ஷெட்லாண்டில் இந்த அளவு 88 சதவீதமாகக் குறைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b495a7db-a040-4b62-9839-f89456bfc2b4/26-6a77f53bdded8.webp' /></p><p> ஸ்பெயினின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள், பலேரிக் தீவுகள் மற்றும் வடகிழக்கு போர்த்துகல் ஆகிய இடங்களில் இது முழு சூரிய கிரகணமாக அமையும்; அப்போது சூரியன் இரண்டு நிமிடங்களுக்கும் மேலாக முழுமையாக மறைக்கப்படும். </p><p>முழு சூரிய கிரகணம் நெருங்கி வரும் நிலையில், இபிசாவில் உள்ள இரவு விடுதிகள் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த விருந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T03:32:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போரில் 50,000 வடகொரிய வீரர்கள்: ரஷ்யா போடும் திட்டம்: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-deploy-50000-troops-to-russia-1786224016"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-deploy-50000-troops-to-russia-1786224016</id>
            <summary type="text">உக்ரைனுக்கு எதிரான போரில் 50000 வடகொரிய வீரர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படலாம் என்று ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் போரில் வட கொரிய வீரர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கு எதிரான போரில் 50000 வடகொரிய வீரர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படலாம் என்று ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h2> உக்ரைன் போரில் வட கொரிய வீரர்கள்</h2><p>உக்ரைன் போரில் களமிறக்கப்படுவதற்காக ரஷ்ய நிலப்பரப்பில் 30,000 முதல் 50,000 வடகொரிய வீரர்கள் நிலை நிறுத்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளது.</p><p>ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள இந்த தகவல், ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே அதிகரித்து வரும் ராணுவ உறவுகள் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bac35ac-73b1-4797-8708-e351b9f1c466/26-6a779d9203cca.webp' /></p><p>யுனைடெட் நியூஸ் என்ற உக்ரைனிய செய்தி ஊடகத்திற்கு ஜெலென்ஸ்கி வழங்கிய தகவலில், வட கொரிய வீரர்கள் நிலைநிறுத்தப்படும் இந்த திட்டமானது உக்ரைன், ஐரோப்பிய பிராந்தியம் மட்டுமின்றி பரந்த அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரித்துள்ளார்.</p><p></p><p> நவீன போர் குறித்த ஆழமான அனுபவங்களை வடகொரிய வீரர்களுக்கு இந்த போர் நடவடிக்கை&nbsp; வழங்கும், அத்துடன் ரஷ்யாவிடம் இருந்து நவீன ஆயுதங்களை இதன் மூலம் பெறவும் வட கொரியா திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இதனை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம்.</p><p> இது எதிர்காலத்தில் ஆசிய பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் ஆபத்தாக அமையலாம் என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.</p><h2>வட கொரிய வீரர்களின் பங்களிப்பு</h2><p>உக்ரைன் போரில் வட கொரிய வீரர்கள் செயல்படுவது என்பது பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5179bab4-63c5-44d5-adec-d6bab2717045/26-6a779d92ac796.webp' /></p><p> ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் போரில் களமிறக்கப்பட்டனர். அது பின்னர் ஆயிரங்களாகவும் தற்போது பல்லாயிரக்கணக்காகவும் அதிகரித்து இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் உக்ரைனிய நிலப்பரப்பில் ஏற்கனவே வட கொரிய ஏவுகணைகள் நாங்கள் கண்டுபிடித்து இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-09T00:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் ட்ரோன் அச்சுறுத்தல்: கவலையில் பாதுகாப்புத் துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drone-threats-increases-in-european-nations-1786236198"></link>
            <id>https://news.lankasri.com/article/drone-threats-increases-in-european-nations-1786236198</id>
            <summary type="text">ஐரோப்பிய நாடுகளில் அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்கும் சம்பவம் அதிகரித்து இருப்பது பாதுகாப்புத் துறைக்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய நாடுகளில் அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்கும் சம்பவம் அதிகரித்து இருப்பது பாதுகாப்புத் துறைக்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.</p><h2> ஐரோப்பிய நாடுகளின் கவலை</h2><p>ஐரோப்பிய நாடுகளில் அனுமதியின்றி பறக்கும் ட்ரோன்கள் மற்றும் வெடிபொருள் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.</p><p> ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நாடுகள் மற்றும் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன.</p><p> பல்கேரியாவில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் வெடித்த சம்பவத்தில் தீவிர விசாரணையானது நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f32a035d-e4c4-4cd6-83ab-fa8a4cfd704c/26-6a77cd278e418.webp' /></p><p>இந்த ட்ரோன் எங்கிருந்து வந்தது மற்றும் உக்ரைன் போருடன் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.</p><p> இந்த விவகாரம் குறித்து நேட்டோ கவின்சில் விவாதிக்கப்படும் என்றும்&nbsp;பல்கேரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் டிமித்திரி ஸ்டோயனோவ் தெரிவித்துள்ளார்.</p><p>அதைப்போல உக்ரைனுடன் நேரடியாக எல்லையை பகிர்ந்து கொள்ளும் ருமேனியாவும் தொடர்ச்சியான வான்வழி தாக்குதலை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p> போர் நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் உள்ள நாடுகளில் மட்டும் இத்தகைய ட்ரோன் அத்துமீறல் நடவடிக்கைகள் பதிவாகவில்லை.</p><p>உதாரணமாக ஜேர்மனியின்&nbsp; லீப்ஜித் விமான நிலையத்தில் வெடி மருந்துகள் கொண்ட ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டு செயலிழக்க செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.</p><p> இந்த சம்பவமானது பாதுகாப்பு துறையில் புதிய ஆபத்தை குறிப்பதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T00:43:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wildfire-crisis-in-british-columbia-mass-evacuatio-1786225687"></link>
            <id>https://news.lankasri.com/article/wildfire-crisis-in-british-columbia-mass-evacuatio-1786225687</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவியதையடுத்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கனடாவில் காட்டுத் தீகனடாவின் மேற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவியதையடுத்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2> கனடாவில் காட்டுத் தீ</h2><p>கனடாவின் மேற்குப் பகுதியில் காட்டுத்தீயானது வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p> பால்ட் ரேஞ்ச்(Bald Range) என்ற இடத்தில் தொடங்கிய இந்த காட்டுத் தீ சம்பவமானது கிட்டத்தட்ட 13,300 கால்பந்து மைதானங்களின் அளவிற்கு சமமான 9,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவி தொடர்ந்து கட்டுப்பாடின்றி எரிந்து வருகிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a25d6ce-7a93-42b0-8089-d2f96fdaf08b/26-6a77a418e0f7c.webp' /></p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் சம்மர் லேண்ட்(Summerland) மாவட்டத்திற்கு முதல் நிலை அவசர பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அது மாகாணம் முழுவதுமாக விரிவுபடுத்தப்பட்டது.</p><p>நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் சொத்துக்கள் காட்டுத்தீயில் நாசமாகி இருப்பதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதலமைச்சர் டேவிட் எபி தகவல் தெரிவித்துள்ளார்.</p><h2> மீட்பு மற்றும் பாதிப்புகள்</h2><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thousands of people in Summerland, B.C., are being evacuated as intense wildfires threaten their community.<br><br>To the brave firefighters and first responders working tirelessly to keep people safe: thank you.<br><br>The federal government stands ready to help and support the Government…</p>&mdash; Mark Carney (@MarkJCarney) <a href="https://x.com/MarkJCarney/status/2086162340941287641?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>காட்டுத் தீயை அணைக்க மாகாணம் முழுவதும் கிட்டத்தட்ட 1500 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.</p><p>காட்டுத் தீ பரவல் தீவிரமாக உள்ள பகுதிகளில் 39 வெளியேற்ற உத்தரவுகளையும், 49 பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் அதிகாரிகள் விடுத்துள்ளனர்.</p><p> அத்துடன் சனிக்கிழமை சம்மர்லேண்ட் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. குடிநீரில் சுத்திகரிக்கப்படாத நீர் விநியோக அமைப்பு கலந்ததால் மக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T23:32:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொசோவோ நாட்டு பிரதமர் மீது முட்டை வீசிய எதிர்க்கட்சி எம் பி: பரபரப்பான நாடாளுமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-mp-through-egg-to-pm-in-kosovo-parliamentary-1786231931"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-mp-through-egg-to-pm-in-kosovo-parliamentary-1786231931</id>
            <summary type="text">கொசேவோ நாடாளுமன்றத்தில் இடைக்கால பிரதமர் மீது எதிர்க்கட்சி எம்பி முட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முட்டை வீசிய எம்பி
கொசேவோ(Kosovo) நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொசேவோ நாடாளுமன்றத்தில் இடைக்கால பிரதமர் மீது எதிர்க்கட்சி எம்பி முட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>முட்டை வீசிய எம்பி</h2><p>
கொசேவோ(Kosovo) நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ள அல்பின் குர்தி மீது எதிர்க்கட்சி எம்பி முட்டை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce17bdc4-c54b-4516-b725-26b4711ce9d7/26-6a77bc7cf40bd.webp' /></p><p> ஜூன் மாத தேர்தலுக்கு பிறகு நாட்டின் நாடாளுமன்றத்தை கட்டமைப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டத் தொடரின் போது இந்த சம்பவமானது அரங்கேறியுள்ளது.</p><p> நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கூடுதல் அவகாசம் தேவை என்றும், இதுகுறித்து நடவடிக்கையில் எதிர்கட்சிகளுடன் அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் தற்காலிக பிரதமர் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து சலசலப்பு ஏற்பட்டது,</p><p></p><p> இதனை தொடர்ந்து அலையன்ஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டைம் காத்ரிஜாஜ் தன்னுடைய பள்ளியில் வைத்திருந்த பழுப்பு நிற முட்டைகளை துக்கி அவர் மீது வீசத் தொடங்கினார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">An opposition lawmaker threw eggs at Kosovo&#39;s acting Prime Minister Albin Kurti after he told parliament he needed more time to hold talks with other parties before proposing a candidate for speaker following the June snap election <a href="https://t.co/iPBaV6cQij">pic.twitter.com/iPBaV6cQij</a></p>&mdash; Reuters (@Reuters) <a href="https://x.com/Reuters/status/2086157997399785745?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> முட்டைகள் வீசியதோடு, தற்காலிக பிரதமரை நோக்கி “அவமானம், அவமானம்” என உரக்க கத்தியதும் குறிப்பிடத்தக்கது.</p><p> உடனடியாக இதில் தலையீட்டு சக எம்பி-களும், நாடாளுமன்ற பாதுகாப்பு பணியாளர்களும் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.</p><p>இந்த எதிர்பாராத திடீர் சம்பவம் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL இ</a>ல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T23:32:20+00:00</updated>
        </entry>
    </feed>
