<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-04T20:51:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நன்றி, டியர் மோடி - இந்தியா-இத்தாலி உறவை வலுப்படுத்தும் மெலோனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/meloni-thanks-modi-india-italy-ties-stronger-1788550134"></link>
            <id>https://news.lankasri.com/article/meloni-thanks-modi-india-italy-ties-stronger-1788550134</id>
            <summary type="text">Meloni thanks Modi, India-Italy ties stronger: இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறிய வாழ்த்துக்கு மெலோனி நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி, டியர் மோடிஇத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Meloni thanks Modi, India-Italy ties stronger: இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறிய வாழ்த்துக்கு மெலோனி நன்றி தெரிவித்துள்ளார்.
</p><h2>
நன்றி, டியர் மோடி</h2><p>இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இரண்டாம் உலகப்போருக்குப் பின் நீண்ட காலம் தொடர்ந்து பதவி வகித்த பிரதமராக சாதனை படைத்துள்ளார்.

இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். </p><p>அதற்கு பதிலளித்த மெலோனி, “நன்றி, அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி. இன்று இந்தியா-இத்தாலி உறவு இதுவரை இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது” என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/390916ed-7afc-47b4-a09b-a7fbcc76b683/26-6a9b1bf819333.webp' /></p><p>மெலோனி, 2022 அக்டோபர் 22 முதல் பிரதமராக உள்ளார். 1,413 நாட்கள் தொடர்ந்து பதவி வகித்ததால், முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
</p><p>
மெலோனி தனது பதிவில், “நாம் தொடங்கிய சிறப்பு மூலோபாய கூட்டாண்மை (Special Strategic Partnership), இரு நாடுகளின் திறமைகளை இணைத்து புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தையும் (Economic Corridor) இணைந்து வலுப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டார்.
</p><p></p><p>மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “இத்தாலி மக்களின் நம்பிக்கையும் நெருக்கமும் மெலோனியின் தலைமையில் பிரதிபலிக்கிறது. இந்தியா-இத்தாலி உறவை வலுப்படுத்தியதில் அவரது நட்பு முக்கிய பங்கு வகித்துள்ளது” என்று தெரிவித்தார்.
</p><h2>
மெலோனி+மோடி=மெலோடி</h2><p>இரு தலைவர்களின் நட்பு சமூக வலைதளங்களில் “Melodi” என்ற பெயரில் பிரபலமாகியுள்ளது.</p><p>2023-இல் COP28 மாநாட்டில் மெலோனி, மோடியுடன் எடுத்த செல்ஃபியை “Good friends at COP28 #Melodi” எனப் பகிர்ந்தபோது, இந்த ஹாஷ்டேக் வைரலானது. பின்னர் G7 மாநாட்டிலும், ரோமில் நடந்த சந்திப்பிலும் இந்த “Melodi” மீம் மீண்டும் பேசுபொருளானது.</p><p>
இந்தியாவும், இத்தாலியும், மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தி, கண்டங்கள் இடையேயான உறவை மேம்படுத்தும் முயற்சியில் முன்னேறி வருகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T19:25:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[286 நாட்கள் கடலில் - துருப்பிடித்த நிலையில் தாய்லாந்து வந்த USS Abraham Lincoln]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uss-abraham-lincoln-rusted-after-286-days-at-sea-1788542801"></link>
            <id>https://news.lankasri.com/article/uss-abraham-lincoln-rusted-after-286-days-at-sea-1788542801</id>
            <summary type="text">USS Abraham Lincoln rusted after 286 days at sea: அமெரிக்காவின் USS Abraham Lincoln கப்பல் துருப்பிடித்த நிலையில் தாய்லாந்து வந்தது.

அமெரிக்காவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>USS Abraham Lincoln rusted after 286 days at sea: அமெரிக்காவின் USS Abraham Lincoln கப்பல் துருப்பிடித்த நிலையில் தாய்லாந்து வந்தது.</p><p>

அமெரிக்காவின் பிரபலமான விமானம் தாங்கிக் கப்பலான USS Abraham Lincoln, 286 நாட்கள் கடலில் பணியாற்றிய பின், தாய்லாந்தின் Laem Chabang துறைமுகத்தில் நங்கூரமிட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a67e453-f41c-423e-aeeb-49c5c2b86337/26-6a9aff9f8675c.webp' /></p><p>சான் டியாகோவில் இருந்து கடந்த நவம்பரில் புறப்பட்ட இந்த கப்பல், ஈரானுக்கு எதிராக நடத்திய போராட்டம் மற்றும் முற்றுகை நடவடிக்கைகளில் பல மாதங்கள் ஈடுபட்டது.

கப்பலின் 1,100 அடி நீளமான உடல் முழுவதும் துருப்பிடித்திருந்தது. </p><p>இதனால் துறைமுகத்தில் கப்பலை கண்டவர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆனால் கடற்படை நிபுணர்கள், நீண்ட காலம் கடலில் செயல்படும் கப்பல்களுக்கு இது சாதாரணம் என தெரிவித்தனர்.</p><p>
</p><p></p><h3>முன்னாள் அமெரிக்க கடற்படை கேப்டன் Carl Schuster கூறியதாவது: </h3><p>“ஒரு கப்பல் 60 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கடலில் இருந்தால், நீர்மட்டத்தில் துருபிடித்தல் இயல்பானது. அதை அகற்ற, கப்பலை துறைமுகத்தில் நிறுத்தி, சுமார் 30 நாட்கள் வேலை செய்ய வேண்டும். இதில் சுத்தம் செய்தல், இரண்டு அடுக்கு ‘primer’ பூசுதல், பின்னர் இரண்டு அடுக்கு ‘naval grey paint’ பூசுதல் ஆகியவை அடங்கும்.”</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3cb829c-d52c-4711-a87d-02c9253cddb0/26-6a9affa0525c8.webp' /></p><p>தாய்லாந்தில் கப்பல் சில நாட்கள் தங்கும் போது, மிக அவசரமான பகுதிகளில் மட்டுமே சீரமைப்பு செய்யப்படும். குறிப்பாக முன்புறம் (Bow) மற்றும் Forward Hull பகுதிகள் அதிகமாக உப்பு நீர் தாக்கம் பெறுவதால் முதலில் சுத்தம் செய்யப்படும்.</p><p></p><h2>ஓய்வு&nbsp;</h2><p>இந்த நீண்ட பயணத்தின் போது, வளங்கள் குறைவாக இருந்ததால் படையினரின் மன உறுதி பாதிக்கப்பட்டது. மேலும், ஒரு படைவீரர் கடலில் குதித்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
</p><p>
இப்போது, தாய்லாந்தில் சில நாட்கள் ஓய்வு எடுத்து, கப்பல் குழுவினர் மீண்டும் பணிக்குத் தயாராக உள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T17:25:14+00:00</updated>
        </entry>
    </feed>
