<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-13T07:31:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பான் உரிமைகோரும் குரில் தீவுக்கு ரஷ்ய அதிபர் புடின் பயணம்: டோக்கியோ எதிர்ப்பால் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-visits-kuril-islands-claimed-by-japan-1786605119"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-visits-kuril-islands-claimed-by-japan-1786605119</id>
            <summary type="text">ஜப்பானின் வடக்கு பிரதேசம் என்று அழைக்கப்படும் குரில்(Kuril) தீவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புடின் சர்ச்சைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் வடக்கு பிரதேசம் என்று அழைக்கப்படும் குரில்(Kuril) தீவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><h2> புடின் சர்ச்சைக்குரிய பயணம்</h2><p>ஜப்பானின் வடக்கு பிரதேசம் என அழைக்கப்படும் குரில் தீவுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வரலாற்று சிறப்புமிக்க முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.</p><p> இந்த குரில் தீவுகள் 1945 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் கடைசி நாட்களில் சோவியத் யூனியன் படைகளால் கைப்பற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ac49ef-40c4-4852-badd-935780e29861/26-6a7d6e4099e88.webp' /></p><p> நீண்ட காலமாக ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள இந்த தீவுக் கூட்டம் ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உரசல் புள்ளியாக இருந்து வருகிறது.</p><p> புடின் இந்த தீவு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதை கிரெம்ளின் வெளியிட்ட வீடியோ காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><p>மேலும் குரில் தீவில் ரஷ்ய ஜனாதிபதி புடின் உள்ளூர் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சென்றுள்ளார், அங்கு அவருக்கு கேவியர் என்ற மீன் முட்டை உணவு வழங்கப்பட்டது.</p><h2> &nbsp;ஜப்பான் கடும் கண்டனம்</h2><p>புடினின் இந்த சுற்றுப்பயணத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/436dc68b-7d7b-464c-ba60-0fcfb4463364/26-6a7d6e414e008.webp' /></p><p> அத்துடன் வடக்கு பிரதேசம் வரலாற்றிலும், சர்வதேச சட்டத்தின் படியும் ஜப்பானிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதி. எனவே ஜப்பானிய அரசு புடினின் இந்த சுற்றுப்பயணத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறது என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொட்டெகி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">Whatsapp</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T07:13:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் அச்சுறுத்தலுக்கு அமெரிக்கா பயந்தது எப்படி? பத்திரிக்கையாளர் Sufiyan விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/journalist-sufiyan-about-us-iran-war-1786603937"></link>
            <id>https://news.lankasri.com/article/journalist-sufiyan-about-us-iran-war-1786603937</id>
            <summary type="text">iran - us war : ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே உள்ள தற்போதையை நிலை குறித்து பத்திரிக்கையாளர் Sufiyan விரிவாக பேசியுள்ளார்.  

ஈரான் - அமெரிக்கா போர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>iran - us war : ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே உள்ள தற்போதையை நிலை குறித்து பத்திரிக்கையாளர் Sufiyan விரிவாக பேசியுள்ளார். </p><h3> 

ஈரான் - அமெரிக்கா போர் </h3><p>

கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44ad573d-2459-4a77-a806-c83471448c98/26-6a7d69a33aa36.webp' /></p><p>

ஈரான் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, உலகின் முக்கிய உலகின் 20% எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையையம் மூடியது. </p><p>

இதன் பின்னர் இரு நாடுகளுக்குமிடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டாலும், மீண்டும் அவ்வப்போது தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்கா தற்போது தாக்குதலை நிறுத்தியுள்ளது.
</p><p>
ஈரான் உச்சத்தலைவர் கொல்லப்பட்ட பின்னர் குர்திஷ் போராளிகளை உள்ளே அனுப்பி ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு திட்டமிட்ட அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியில் முடிந்தது. </p><p>

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த தாக்குதல் தற்போது ஈரானுக்கு சாதகமாகியுள்ளது. </p><p>

அமெரிக்காவில் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தாக்குதலை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>

அமெரிக்கா தாக்குதலை நிறுத்தியது ஏன்?, ஈரானுக்கு இந்த போரினால் ஏற்பட்டுள்ள அனுகூலம் என்ன?, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவு எவ்வாறு உள்ளது என்பது குறித்து பத்திரிக்கையாளர் சூஃபியன் விளக்கமளித்துள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JGaVRzs_l6A" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T06:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/couple-attacked-by-pitbull-dog-in-punjab-1786599710"></link>
            <id>https://news.lankasri.com/article/couple-attacked-by-pitbull-dog-in-punjab-1786599710</id>
            <summary type="text">பஞ்சாப்பில் வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதியை பிட்புல் நாய் பயங்கரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தம்பதியை தாக்கிய பிட்புல் நாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பஞ்சாப்பில் வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதியை பிட்புல் நாய் பயங்கரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தம்பதியை தாக்கிய பிட்புல் நாய்</h2><p>பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள குமான் நகரில் அங்கித் சபர்வால் மற்றும் அவரது மனைவி ஷிபாலி ஆகியோர் வாடகைக்கு வீடு ஒன்றை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.</p><p> அப்போது அங்கிருந்த வீட்டின் கதவை திறந்த போது உள்ளிருந்து பாய்ந்து வந்த பிட்புல் ரக நாய் ஒன்று ஷிபாலியை கடுமையாக கடிக்க தொடங்கியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Patiala, Punjab - A couple was attacked by a pitbull dog in Patiala while they were visiting a property with a real estate dealer. The husband and wife had gone to inspect a house for purchase. When they rang the doorbell, a pitbull inside the premises suddenly lunged at them.… <a href="https://t.co/FEP3VVyKoU">pic.twitter.com/FEP3VVyKoU</a></p>&mdash; NextMinute News (@nextminutenews7) <a href="https://x.com/nextminutenews7/status/2087498309552500875?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதில் படுகாயமடைந்த ஷிபாலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.</p><p> மனைவியை காப்பாற்ற முயன்ற அங்கித்திற்கும் கால்கள் மற்றும் முதுகில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளது.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில், தம்பதியை நாய் விடாமல் கடிப்பதும், அவர்களை காப்பாற்ற அருகிலிருந்தவர்கள் குச்சியால் நாயை அடித்து விலக்குவதையும் பார்க்க முடிகிறது.</p><p></p><h2>பொலிஸார் வழக்குப்பதிவு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57ab2304-f71f-49aa-95ff-07f324afd5b3/26-6a7d5920111e8.webp' /></p><p>
இந்நிலையில் நாயை சுதந்திரமாக சுற்ற அனுமதித்ததே இதற்கு முக்கிய காரணம் என்று சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் நகரத்தில் ஆக்ரோஷமான நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று பாட்டியாலா மேயர் குந்தன் கோகியா தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-13T05:42:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகிலேயே அதிக ஊதியம் வழங்கும் நாடுகள்: முதலிடம் பிடித்துள்ள நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-tops-in-highest-salary-paying-countries-1786597545"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-tops-in-highest-salary-paying-countries-1786597545</id>
            <summary type="text">highest salary paying countries: உலகிலேயே பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியலில், சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.


2025ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>highest salary paying countries: உலகிலேயே பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியலில், சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.</p><p>


2025ஆம் ஆண்டுக்கான, பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகள் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
</p><h3>
அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகள்</h3><p> பட்டியல்

சுவிட்சர்லாந்து, சராசரியாக பணியாளர்களுக்கு வழங்கும் ஆண்டு ஊதியம், 131,416 டொலர்கள் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69f97f91-d935-4613-aef0-aa11b75614b5/26-6a7d50aad1905.webp' /></p><p>
பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நாடு, லக்ஸம்பர்க், அந்நாடு, தன் பணியாளர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம், 108,672 டொலர்கள்.</p><p>

அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தை அமெரிக்காவும், நான்காவது இடத்தை டென்மார்க்கும் பிடித்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b019491-6805-462c-b91a-3fb09a1f234f/26-6a7d50ab85286.webp' /></p><p>
அமெரிக்கா தன் பணியாளர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம், 105,482 டொலர்கள், டென்மார்க் வழங்கும் ஆண்டு ஊதியம், 93,305 டொலர்கள்.</p><p>

பட்டியலில் ஐஸ்லாந்து ஐந்தாவது இடத்தையும், அவுஸ்திரேலியா ஆறாவது இடத்தையும், பெல்ஜியம் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன.&nbsp;</p><p></p><p>அந்நாடுகள் தங்கள் பணியாளர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம், முறையே, 89,075, 87,156, 86,773 டொலர்கள்.
</p><p>
அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகள் பட்டியலில் பிரித்தானியாவுக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது. அந்நாடு தன் பணியாளர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம், 82,403 டொலர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce909199-7c48-4209-b093-bed53d132650/26-6a7d50ac4d97d.webp' /></p><p>

டாப் 10 பட்டியலில் ஒன்பதாவது இடத்தை அமீரகமும், பத்தாவது இடத்தை ஜேர்மனியும் பெற்றுள்ளன. அந்நாடுகள் தங்கள் பணியாளர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம், முறையே, 82,076, 81,534 டொலர்கள்.
</p><p>
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், நாட்டிலுள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் இதே ஊதியம் கிடைக்கும் என உறுதியாக கூறமுடியாது.
</p><p>
அதேபோல, சுவிட்சர்லாந்து, லக்ஸம்பர்க் போன்ற நாடுகள் அதிக ஊதியம் வழங்கினாலும், அந்த நாடுகளில் விலைவாசியும், வீட்டு வாடகை மற்றும் விலையும் அதிகம் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
</p><p>
ஆகவே, ஒரு நாடு தன் பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்குகிறது என்பதாலேயே, அந்நாட்டில் வாழ்க்கைத்தரம் உயர்வாக இருக்கும் என்னும் முடிவுக்கும் வந்துவிடமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T05:12:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் மற்றும் தம்பியை கொன்ற இந்திய வம்சாவளி சிறுவன்: ChatGPT-யில் தேடிய சர்ச்சைக்குரிய விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-teen-kiled-mom-and-brother-in-us-1786596343"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-teen-kiled-mom-and-brother-in-us-1786596343</id>
            <summary type="text">அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பகுதியில் தாய் மற்றும் தம்பியை கொன்றதாக 17 வயது இந்திய வம்சாவளி சிறுவன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தாய் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பகுதியில் தாய் மற்றும் தம்பியை கொன்றதாக 17 வயது இந்திய வம்சாவளி சிறுவன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><h2> தாய் மற்றும் தம்பியை கொன்ற இந்திய வம்சாவளி சிறுவன்</h2><p>அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம் ஆக்டன் பகுதியில் குடும்பம் ஒன்றிற்கு சொந்தமான சொத்தில் வசித்து வந்த 45 வயது தயது சுதா வெங்கடேசன் மற்றும் அவரது 14 வயது மகன் சித்தார்த் அரவிந்த் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இந்த கொலை வழக்கில் கொல்லப்பட்டவர்களின் மகன் மற்றும் சகோதரரான 17 வயது இந்திய வம்சாவளி சிறுவன் அர்ஜுன் அரவிந்த் மீது முறைப்படி கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">WATCH: 17-year-old Arjun Aravind arrested overnight in Wayland, charged with murdering his mother, brother inside their Acton home. <br><br>District Attorney Marian Ryan says evidence suggests the teen used ChatGPT to research “fantasy stories regarding killing his family”<br><br>🔗:… <a href="https://t.co/CrUPnkgY0R">pic.twitter.com/CrUPnkgY0R</a></p>&mdash; Stephen Quinn (@stephenquinntv) <a href="https://x.com/stephenquinntv/status/2087633374240284997?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அர்ஜுன் அரவிந்த் மீது இரண்டு கொலை வழக்குகள், இரண்டு தாக்குதல் வழக்குகள் மற்றும் அனுமதியின்றி மோட்டார் வாகனத்தை திருடிச் சென்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p> கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், உயிரிழந்தவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணம் மற்றும் முறை குறித்து தலைமை மருத்துவ பரிசோதகர்கள் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2> கைது நடவடிக்கை மற்றும் சர்ச்சைக்குரிய இணையதள தேடல்</h2><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">WATCH: 17-year-old Arjun Aravind arrested overnight in Wayland, charged with murdering his mother, brother inside their Acton home. <br><br>District Attorney Marian Ryan says evidence suggests the teen used ChatGPT to research “fantasy stories regarding killing his family”<br><br>🔗:… <a href="https://t.co/CrUPnkgY0R">pic.twitter.com/CrUPnkgY0R</a></p>&mdash; Stephen Quinn (@stephenquinntv) <a href="https://x.com/stephenquinntv/status/2087633374240284997?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தாயாரின் காரில் சந்தேகத்திற்குரிய அர்ஜுன் தப்பியோடியதை உறுதிப்படுத்தினர்.</p><p> இதையடுத்து தேடுதல் வேட்டை முடக்கி விட்டிருந்த அதிகாரிகள், வேலாண்ட் பகுதி வாகன நிறுத்துமிடத்திற்கு அருகே சந்தேகத்திற்குரிய காரை கண்டுபிடித்து அர்ஜுனையும் எந்தவொரு எதிர்ப்பும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> மேலும் சொந்த குடும்பத்தினரையே கொல்வது தொடர்பான தத்துவார்த்த கருத்துகளையும் கற்பனைகளையும் அர்ஜுன் அரவிந்த் இணையம் மற்றும் ChatGPT-யில் தேடி இருப்பதாக டிஜிட்டல் தடயவியல் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:45:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய என்.சந்திரசேகரன் - பங்குகள் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/n-chandrasekaran-step-down-as-tata-sons-chairman-1786517952"></link>
            <id>https://news.lankasri.com/article/n-chandrasekaran-step-down-as-tata-sons-chairman-1786517952</id>
            <summary type="text">N.Chandrasekaran resigns tata sons chairman : டாடா சன்ஸ் தலைவர் பதவியை தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ள நிலையில், டாடா குழும பங...</summary>
            <content type="html"><![CDATA[<p>N.Chandrasekaran resigns tata sons chairman : டாடா சன்ஸ் தலைவர் பதவியை தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ள நிலையில், டாடா குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளது.</p><h3> 

டாடா சன்ஸ் தலைவர் பதவி விலகல்</h3><p> 

400 பில்லியன் டொலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் தாய் நிறுவனமாக டாடா சன்ஸ் உள்ளது. 

இது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டாடா மோட்டார்ஸ் மற்றும் ஏர் இந்தியா உட்பட 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DoDeWAGUz9s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66% பங்குகள், குழுமத்தின் தொண்டுப் பிரிவான டாடா டிரஸ்ட்ஸுக்குச் சொந்தமானது.
</p><p>
கடந்த 2017 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d60c043-2735-4bf5-9063-76fc6ec81d95/26-6a7c19c135852.webp' /></p><p>

அவரது பதவிக்காலம் பிப்ரவரி 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.</p><p> 

ஆகஸ்ட் 18 அன்று நடைபெறவுள்ள நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த ராஜினாமா நடைபெற்றுள்ளது. </p><p>

டாடா டிரஸ்ட்ஸின் தலைவர் நோயல் டாடா உடனான கருத்து வேறுபாடு மற்றும் எதிர்ப்பு காரணமாகவே இந்த ராஜினாமா முடிவை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாடா குழுமத்தில் எனது 40 ஆண்டுகால தொழில் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளேன். இந்த மதிப்புமிக்க நிறுவனத்திற்குப் பங்களிக்கும் மிகுந்த மனநிறைவைத் தரும் வாய்ப்பிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். </p><p>

கடந்த 10 ஆண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது ஒரு பெரும் கௌரவமாகவும் ஆழ்ந்த பொறுப்பாகவும் இருந்துள்ளது.</p><p>

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக எனது தற்போதைய பதவிக்காலம் பிப்ரவரி 20, 2027 அன்று முடிவடைகிறது. சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியவை எனது அடுத்த பதவிக்காலத்தை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க ஒருமனதாகத் தீர்மானித்துப் பரிந்துரைத்தன. இதனை டாடா சன்ஸ் நியமனம் மற்றும் ஊதியக் குழு மற்றும் இயக்குநர்கள் குழு பதிவுசெய்து பரிந்துரைத்தது. </p><p>

அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 24, 2026 அன்று டாடா சன்ஸ் இயக்குநர்கள் குழுவில் அந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இயக்குநர்கள் குழு உறுப்பினர்களில் ஒருவர் அதற்கு ஆதரவளிக்காததால் அந்த முன்மொழிவு நிறைவேற்றப்படவில்லை. ஒருமித்த ஆதரவு இல்லாத நிலையில், நான் அந்த முடிவை ஒத்திவைக்கத் தேர்ந்தெடுத்தேன்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Tata Sons Chairman, N Chandrasekaran, released a statement, &quot;I have communicated to the Tata Sons Board that I have decided not to offer myself for reappointment when my term ends on Feb 20, 2027. I have asked the Board to decide on the succession soon to ensure a proper… <a href="https://t.co/cG5eBoftOg">pic.twitter.com/cG5eBoftOg</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2087419418230104302?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அந்த இயக்குநர் குழுக் கூட்டம் நடந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் இன்றுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. டாடா சன்ஸ் ஒரு மிகப் பெரிய நிறுவனம், மேலும் பல முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.</p><p> 

பிப்ரவரி 2027 க்கு அப்பால் குழுமத்தை வழிநடத்த ஒரு தலைவர் இருப்பது அவசியம் என்பது மட்டுமல்லாமல், ஊழியர்கள், முதலீட்டாளர்கள், கூட்டாளிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தலைமைத்துவம் குறித்த தெளிவும் முக்கியமானது. </p><p>

இந்தச் சூழ்நிலைகளில், 2027 பிப்ரவரி 20 அன்று எனது பதவிக்காலம் முடிவடையும்போது, ​​மறுநியமனத்திற்கு என்னை முன்மொழியப் போவதில்லை என முடிவு செய்துள்ளதை, இன்று காலை டாடா சன்ஸ் வாரியத்திற்குத் தெரிவித்துள்ளேன். </p><p>முறையான அதிகாரப் பரிமாற்றத்தை உறுதி செய்வதற்காக, அடுத்த வாரிசு நியமனம் குறித்து விரைவில் முடிவெடுக்குமாறு வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.</p><h3> 

பங்குகள் வீழ்ச்சி</h3><p> 

சந்திரசேகரனின் ராஜினாமாவையடுத்து, டாடா குழுமப் பங்குகள் இன்று 4% வரை சரிவை சந்தித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e57f18d-aceb-46e8-bea9-5fcb9875d71f/26-6a7c19c2918af.webp' /></p><p>

ஜாகுவார் லேண்ட் ரோவரின் உரிமையாளரான டாடா மோட்டார்ஸ், 2.8 சதவீதமும், TCS 4.1 சதவீதம் சரிவையும் சந்தித்துள்ளது. </p><h3>

யார் இந்த என்.சந்திரசேகரன்?
</h3><p>
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்த என்.சந்திரசேகரன், தனது பள்ளிக்கல்வியை மோகனூரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddef3a49-af30-4558-9b16-c69a9e76c814/26-6a7c19c1db96e.webp' /></p><p> 

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கணினிப் பிரிவில் முதுகலையில் பட்டம் பெற்றுள்ளார்.&nbsp;</p><p> 

1987 ஆம் ஆண்டு, டாடா குழுமத்தின் TCS நிறுவனத்தில் பயிற்சியாளராக வாழ்க்கையை தொடங்கி, 2009 ஆம் ஆண்டு அதன் தலைமை செயல் அதிகாரியாக(CEO) நியமிக்கப்பட்டார்.
</p><p>
2024-25 நிதியாண்டில் ரூ.155.81 கோடி சம்பளம் பெற்ற என்.சந்திரசேகரன், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நிறுவனத் தலைவர் என்ற பெருமையை பெற்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[புல்வெளியில் விழுந்து வெடித்து சிதறிய அமெரிக்கா ராணுவ ஹெலிகாப்டர்: பரவிய கட்டுக்கடங்காத காட்டுத்தீ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-army-apache-helicopter-crash-in-texas-1786591311"></link>
            <id>https://news.lankasri.com/article/us-army-apache-helicopter-crash-in-texas-1786591311</id>
            <summary type="text">அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர் விபத்துஅமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் புல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2> ராணுவ ஹெலிகாப்டர் விபத்து</h2><p>அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் புல்வெளி ஒன்றில் ராணுவத்தின் அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது.</p><p> இந்த ஹெலிகாப்டர் விபத்து சம்பவத்தில் அதில் பயணித்த இரண்டு பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8615e1e5-20f3-4ad1-8ad7-119fbefea5be/26-6a7d385098271.webp' /></p><p> புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஷெரீப் அலுவலகத்திற்கு அவசர அழைப்பு வந்துள்ளது.</p><p> இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அமெரிக்க ராணுவத்தின் அப்பாட்சி ஏ.எச் 64 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தினர்.</p><p> மேலும் விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர் போர்ட் ஹுட் தளத்தை மையமாக கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் அவசர விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><p></p><h2> காட்டுத்தீ</h2><p>ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதி புல்வெளி நிறைந்த பகுதி என்பதால் அப்பகுதியில் பயங்கர தீ விபத்தானது ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2778173c-7f13-444a-8d8c-af3927cc4876/26-6a7d38514be44.webp' /></p><p>இந்த தீ விபத்து பின்னர் கட்டுக்கடங்காத காட்டுத்தீயாக அதிகரித்ததை அடுத்து அப்பகுதியை சுற்றி இருந்த பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.</p><p> இந்த விபத்தின் போது ஹெலிகாப்டர் ஆனது வேறு எந்த கட்டிடத்தின் மீதோ அல்லது வீடுகள் மீதோ மோதவில்லை என்பதை பெல் கவுண்டி ஷெரிஃப் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் கிளிஃப் கோல்மன் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T03:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-hundreds-of-flights-cancelled-1786570530"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-hundreds-of-flights-cancelled-1786570530</id>
            <summary type="text">Flights have been cancelled across Europe: ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து.
ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Flights have been cancelled across Europe: ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து.
</p><p>ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பல குடும்பங்கள் வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>முழுமையாக முன்பதிவு</h2><p>
</p><p>எட்னா எரிமலையின் தற்போதைய சீற்றம் சிசிலியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது; இதன் காரணமாக வார இறுதி முதல் கட்டானியா விமான நிலையம் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13828a81-12f9-4f5b-bcba-0357adb2854c/26-6a7ce72640a5a.webp' /></p><p> </p><p>இதன் விளைவாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர். </p><p>விமானங்கள் ரத்து மட்டுமல்லாமல், பேருந்துகள் மற்றும் ரயில்களில் இடங்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, வாடகை வாகனங்களின் கட்டணம் மிக அதிகமாக உள்ளது, மேலும் விடுதிகளும் நிரம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p> </p><p>தீவின் வடக்குப் பகுதியில் உள்ள பலெர்மோ விமான நிலையத்திலிருந்து விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன; ஆனால், அங்கிருந்து செல்லும் விமானங்களில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97799ff-d12b-428a-b614-d86f162b4d8a/26-6a7ce724d9442.webp' /></p><h2>மாலை 4 மணி வரை</h2><p> </p><p>உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, ஆகஸ்ட் 8 முதல் 11-ஆம் திகதி வரை சுமார் 400 புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; இன்று மேலும் 52 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85a540e-5da6-40f6-89a1-cf3a10ad4f6e/26-6a7ce7258b5a5.webp' /></p><p> </p><p>250-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. கட்டானியா விமான நிலையத்திற்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் குறைந்தது நாளை மாலை 4 மணி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. </p><p>எரிமலை சீற்றம் காரணமாக மால்டாவிற்கான விமானங்களும் ரத்து செய்யப்பட்டு தாமதமாவதால், சிசிலி மட்டுமல்லாமல் மால்டாவும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T03:20:00+00:00</updated>
        </entry>
    </feed>
