<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-08T02:48:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள்: அமெரிக்க செனட் சபையில் கிடைத்த ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-sanctions-against-russia-us-senate-approves-1786131424"></link>
            <id>https://news.lankasri.com/article/new-sanctions-against-russia-us-senate-approves-1786131424</id>
            <summary type="text">ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளுக்கு அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைஅமெரிக்க செனட் சபையில் கொண்டு வரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளுக்கு அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2> ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை</h2><p>அமெரிக்க செனட் சபையில் கொண்டு வரப்பட்ட ரஷ்யாவிற்கு எதிராக புதிய மற்றும் கடுமையான பொருளாதார தடைக்கு எதிரான வாக்கெடுப்பு பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.</p><p> ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளுக்கு ஆதரவு அளித்து 86 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f27629dc-14d4-4ac3-ae8c-ce98e1fda19a/26-6a7633e2aa8e1.webp' /></p><p> ரஷ்யாவுக்கு எதிராக இந்த முன்னெடுப்பை மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம்(Lindsey Graham) தீவிரமாக முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் குறித்து பேசிய ஜனநாயக கட்சி செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்டால்(Richard Blumenthal) முக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p> அதில், உக்ரைனிய மக்களுக்கு நாம் இன்று சொல்வது இதுதான், “நீங்கள் தனியாக இல்லை”. அத்துடன் ரஷ்யாவிற்கு நாம் இன்று சொல்வது இதுதான், “உங்களால் உக்ரைனை வெல்ல முடியாது” என குறிப்பிட்டார்.</p><h2> விதிக்கப்படும் புதிய தடைகள்</h2><p>
ரஷ்யாவின் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ரஷ்யாவிற்கு வருவாய் பெற்று தரும் பொருட்களை இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகளையும் இந்த புதிய பொருளாதார தடை நடவடிக்கை தண்டிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dfc8fb2-e50d-4b42-b06c-8543856ac1af/26-6a7633e35c66a.webp' /></p><p>செனட் சபையில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் இந்த மசோதா பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.</p><p> புதிய சட்டம் பிரதிநிதிகள் சபையிலும் வெற்றி பெற்று என்னுடைய மேஜைக்கு வந்தால் கண்டிப்பாக நானும் அதனை ஏற்று கையெழுத்திட தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T00:28:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெங்களூருவில் வீடு ஒன்றில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: யாருமின்றி உயிரிழந்த மூதாட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-skeletal-found-in-duplex-home-in-bengaluru-1786145078"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-skeletal-found-in-duplex-home-in-bengaluru-1786145078</id>
            <summary type="text">பெங்களூருவில் வீடு ஒன்றில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.52 வயது வயது பெண்ணின் எலும்புக்கூடு
பெங்களூரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெங்களூருவில் வீடு ஒன்றில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>52 வயது வயது பெண்ணின் எலும்புக்கூடு</h2><p>
பெங்களூருவின் பகலகும்டே(Bagalagunte) பகுதியில் ஹவானூர் லேஅவுட் என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் 52 வயது வயது பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p> தாக்‌ஷாயிணி என்று அடையாளம் காணப்பட்டுள்ள இந்த பெண், உயிரிழந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> தாக்‌ஷாயிணி உடல் நீண்ட நாட்களாக யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள்ளேயே கிடந்து இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e136acec-c6ff-40e6-af72-6613bcec2501/26-6a7669380937f.webp' /></p><p></p><h2>குடும்ப பின்னணி</h2><p>மகன் மற்றும் கணவன் உயிரிழந்த பிறகு தாக்‌ஷாயிணி தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.</p><p> மகன் மற்றும் கணவனின் மறைவுக்கு பிறகு தாக்‌ஷாயிணி மிகுந்த மன அழுத்தத்தில் அவதியடைந்து வந்தாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> தாக்‌ஷாயிணியின் கணவர் 10 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார், அவரது மகனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><p>தாக்‌ஷாயிணியின் மகளும், மருமகனும் இந்த காலக்கட்டத்தில் இங்கு வந்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T00:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்து போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு.,மைதானத்தை தாக்கிய ரஷ்ய ஏவுகணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-missile-hits-odesa-stadium-before-match-1786143689"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-missile-hits-odesa-stadium-before-match-1786143689</id>
            <summary type="text">ஓடேசா கால்பந்து மைதானம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. கால்பந்து மைதானம் மீது ரஷ்யா தாக்குதல்உக்ரைனின் ஓடேசா(Odesa) நகரில் அமைந்துள்ள செர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓடேசா கால்பந்து மைதானம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2> கால்பந்து மைதானம் மீது ரஷ்யா தாக்குதல்</h2><p>உக்ரைனின் ஓடேசா(Odesa) நகரில் அமைந்துள்ள செர்னோமோரெட்ஸ் மைதானம்(Chornomorets Stadium) மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p> மைதானத்தில் உக்ரைன் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f36b0d4-9094-49ca-bdfb-790376fcef23/26-6a7663cb0afda.webp' /></p><p>இதில் குறைந்தது ஒருவர் காயமடைந்து இருப்பதுடன், மைதானம் பலத்த சேதம் அடைந்துள்ளது.</p><h2> மைதானத்தில் ஏற்பட்டுள்ள சேதம்</h2><p>34,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய செர்னோமோரெட்ஸ் மைதானத்தின் கூரை பெருமளவு சேதமடைந்துள்ளது.</p><p></p><p> மைதானத்தில் உள்ள கண்ணாடிகள் மற்றும் பார்வையாளர்கள் மாடங்கள் பலத்த சேதமடைந்து இருப்பதாக அவசரகால சேவைப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் சிதறிய வெடிகுண்டு சில்லுகளால் 29 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்து இருப்பதை ஓடேசா ஆளுநர் ஒலெக் கிப்பர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5865d822-21ca-4731-866b-f6a68e586d7d/26-6a7663cbb4d97.webp' /></p><p>சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்காக உள்ளூர் அதிகாரிகளும், அவசர கால மீட்பு படையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.</p><h2>போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா?</h2><p>செர்னோமோரெட்ஸ் மைதானத்தில் நாளை உக்ரைன் பிரீமியர் லீக்கின் இரண்டாவது சுற்று ஆட்டம் நடைபெற இருந்தது.</p><p> நாளை மதியம் 1 மணிக்கு இந்த மைதானத்தில் செர்னோமோரெட்ஸ் மற்றும் கோலோஸ் அணிகள் மோத இருந்தன.</p><p> இந்த தாக்குதலை அடுத்து இந்த போட்டி ஒத்திவைக்கப்படுமா? அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்று இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T23:01:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலி - ஸ்பெயின் உறவில் விரிசல்: இத்தாலிய குடிமக்களுக்கு புதிய எல்லை கட்டுப்பாடுகள் அமுல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-implement-new-border-controls-for-italy-1786142244"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-implement-new-border-controls-for-italy-1786142244</id>
            <summary type="text">இத்தாலி மக்களுக்கு தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு&amp;nbsp; அறிவித்துள்ளது. இத்தாலி - ஸ்பெயின் உறவில் விரிசல்சியூட்டா விவகாரம் இத்தாலி - ஸ்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலி மக்களுக்கு தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு&nbsp; அறிவித்துள்ளது.</p><h2> இத்தாலி - ஸ்பெயின் உறவில் விரிசல்</h2><p>சியூட்டா விவகாரம் இத்தாலி - ஸ்பெயின் இடையே இராஜதந்திர விரிசலை ஏற்படுத்திய நிலையில், இத்தாலிய மக்களுக்கு தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு விதித்துள்ளது.</p><p> இந்த எல்லை கட்டுப்பாடானது ஆகஸ்ட் 8ம் திகதி நள்ளிரவு முதல் செப்டம்பர் 7ம் திகதி நள்ளிரவு வரை அமுலில் இருக்கும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ad578da-f970-4828-bb4d-2be698cbe987/26-6a765e262d631.webp' /></p><p> &nbsp;ஸ்பெயினின் 2 நாட்கள் கெடுவை இத்தாலி திட்டவட்டமாக மறுத்ததை அடுத்து ஸ்பெயினின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p> மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2> ஸ்பெயின் விடுத்த எச்சரிக்கை</h2><p>
&nbsp;கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமான சியூட்டாவிற்குள் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து ஸ்பெயினில் இருந்து வரும் பயணிகளுக்கு எல்லை சோதனைகளை அமல்படுத்தி இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உத்தரவிட்டு இருந்தார்.</p><p> இந்த நடவடிக்கை ஸ்பெயின் மக்களுக்கு எதிரானது என்று ஸ்பெயின் அரசு கண்டித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95a338b9-e9e1-4e74-8024-e7e6c895ba07/26-6a765e26de7b9.webp' /></p><p> அத்துடன் இத்தாலி தன்னுடைய புதிய எல்லை கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்காவிட்டால், இத்தாலிய பயணிகளுக்கு எதிராக அதே போன்ற சோதனை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் விதிக்கும் என்று அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.
</p><p>
மேலும் அத்துடன் ஆகஸ்ட் 9ம் திகதிக்குள் இத்தாலிய அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் ஸ்பெயின் கெடு விதித்து இருந்தது ஆனால் அதனை இத்தாலி திட்டவட்டமாக மறுத்துவிட்டது.</p><p> இதனை தொடர்ந்தே ஸ்பெயின் நாட்டின் புதிய&nbsp; தற்காலிக எல்லைக் கட்டுப்பாட்டு அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T22:55:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/serious-offender-hunt-underway-in-scotland-1786129909"></link>
            <id>https://news.lankasri.com/article/serious-offender-hunt-underway-in-scotland-1786129909</id>
            <summary type="text">ஸ்காட்லாந்து கொடூர குற்றவாளி தப்பியோடியதை அடுத்து அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது. தப்பியோடிய கொடூர குற்றவாளிசிறுவர்கள் மீதான பாலியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்காட்லாந்து கொடூர குற்றவாளி தப்பியோடியதை அடுத்து அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.</p><h2> தப்பியோடிய கொடூர குற்றவாளி</h2><p>சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்ற வழக்கில் தண்டனை பெற்றவரும், மனநல காப்பகத்தில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டவருமான கிளிஃபோர்ட் லியான்ஸ்(Clifford Lyons) பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து தப்பியோடியுள்ளார்.</p><p> பெர்த் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு பாதுகாப்புகளுடன் அழைத்து செய்யப்பட்ட கிளிஃபோர்ட் லியான்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் பாதுகாப்பாளர்களின் கண்ணில் படாமல் தப்பியோடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bef75d5-ce32-4669-817f-c10997cf6947/26-6a762df6e7b49.webp' /></p><p>கிளிஃபோர்ட் லியான்ஸ் என்ற இவர் கிளிஃபோர்ட் டொப்பி(Clifford Dobbie) என்றும் அழைக்கப்படுகிறார். </p><p>கிளிஃபோர்ட் லியான்ஸ் தப்பியோடியதை அடுத்து அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.</p><p> இதையடுத்து, அவரை பிடிக்க தேடுதல் வேட்டை ஒன்றை காவல்துறை முன்னெடுத்து வருகிறது. அதிகாரிகள் பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.</p><p> அதில், கிளிஃபோர்ட் லியான்ஸை பொதுமக்கள் யாரும் பார்த்தால் அவரின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் உடனடியாக ஸ்காட்லாந்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p> &nbsp;காஸ்டேர்ஸ் மாநில மருத்துவமனை மற்றும் கிளாஸ்கோ ரோவன் பேங்க் கிளினிக் ஆகியவற்றில் உள்ள உயர் பாதுகாப்பு மனநல மையங்களில் கிளிஃபோர்ட் லியான்ஸ் கடந்த பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75769faf-39de-42d2-a59e-dbbe960620cb/26-6a762df79a827.webp' /></p><p> 1990ம் ஆண்டு 12 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்து இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே இருந்த போது 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.</p><p>இதில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து&nbsp; குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.</p><p></p><h2> கிளிஃபோர்ட் லியான்ஸ் அடையாளங்கள்</h2><p>கிளிஃபோர்ட் லியான்ஸ் 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் என்றும் வழுக்கைத் தலை, நீல நிறக் கண்கள் கொண்டவர்.</p><p> வலது கையில் இரண்டு நீல நிற புலிகள் போன்ற கண்கள் மற்றும் இடது கையில் ரேஞ்சர்ஸ் கால்பந்து அணியின் சின்னம் ஆகியவை பச்சை குத்தப்பட்டு(Tattoos) இருக்கும்.</p><p> மேலும், நீல நிற கிழிந்த ஜீன்ஸ் பேண்ட். நீல நிற கோல்ஃப் சட்டை அத்துடன் லேசான நீல நிற ஸ்வெட்டர், கருப்பு நிற தொப்பி ஆகியவற்றை அணிந்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T22:37:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சியூட்டா விவகாரம்: இத்தாலிக்கு கெடு விதித்த ஸ்பெயின்: பதிலடி நடவடிக்கை உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-italy-diplomatic-friction-over-ceuta-1786124101"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-italy-diplomatic-friction-over-ceuta-1786124101</id>
            <summary type="text">சியூட்டா தொடர்பான விவகாரத்தில் இத்தாலிக்கு ஸ்பெயின் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. சியூட்டா விவகாரம்
கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சியூட்டா தொடர்பான விவகாரத்தில் இத்தாலிக்கு ஸ்பெயின் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2> சியூட்டா விவகாரம்</h2><p>
கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமான சியூட்டாவிற்குள் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அத்துமீறி நுழைந்தனர்.</p><p> இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53dfef55-7c2b-4b9a-ad4e-ffe074bc40b4/26-6a761746ab023.webp' /></p><p> இதையடுத்து ஸ்பெயினில் இருந்து வரும் பயணிகளுக்கு எல்லை சோதனைகளை அமல்படுத்தி இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உத்தரவிட்டு இருந்தார்..</p><p> இந்த விவகாரம் ஸ்பெயின் மற்றும் இத்தாலி இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.</p><p> ஸ்பெயினில் இருந்து வரும் மக்களை சோதனைக்கு உட்படுத்தப்படும் என்ற இத்தாலியின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று ஸ்பெயின் நேரடியாக குற்றஞ்சாட்டியது.</p><p> அத்துடன் இந்த நடவடிக்கை தேவையற்றது, மற்றும் ஐரோப்பிய யூனியனின் நலனுக்கு எதிரானது மற்றும் ஸ்பெயின் மக்களுக்கு எதிரானது என்று ஸ்பெயின் அரசு கண்டித்தது.</p><p></p><h2> இத்தாலிக்கு கெடு விதித்த ஸ்பெயின்</h2><p>
இந்நிலையில் இத்தாலி தன்னுடைய புதிய எல்லை கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்காவிட்டால், இத்தாலிய பயணிகளுக்கு எதிராக அதே போன்ற சோதனை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் விதிக்கும் என்று அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a27ffe9-b16d-4a29-8961-7ffe975cc779/26-6a7617475ef7f.webp' /></p><p> அத்துடன் ஆகஸ்ட் 9ம் திகதிக்குள் இத்தாலிய அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் ஸ்பெயின் கெடு விதித்துள்ளது.</p><p> இத்தாலி அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஸ்பெயின் நாட்டு மக்களின் நலன்களையும், கவுரவத்தையும் பாதுகாக்க அதற்கான தக்க நடவடிக்கையை ஸ்பெயின் அரசு முன்னெடுக்கும் என்று ஸ்பெயின் அரசு தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T21:36:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு: பெற்றோர்கள் மீது குற்ற வழக்கு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/parents-charged-over-1-year-old-son-in-st-helens-1786138481"></link>
            <id>https://news.lankasri.com/article/parents-charged-over-1-year-old-son-in-st-helens-1786138481</id>
            <summary type="text">பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் செயின்ட் ஹெலன்ஸ் பகுதியை சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p> பிரித்தானியாவின் செயின்ட் ஹெலன்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு வயது குழந்தை மா எரோ ஜான்சன்(Maero Johnson) உயிரிழந்த சம்பவத்தில், குழந்தையின் பெற்றோர்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71409ebb-2052-42bc-87cb-d60f8e0c5d07/26-6a764f7357f06.webp' /></p><p> குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் கிரிமினல் வழக்கை எதிர்&nbsp; கொள்ளும் தாய் மற்றும் தந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>மெர்சிசைடு காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கைலி ஸ்மித்(25) மற்றும் ஆடம் &nbsp;ஜான்சன்(26) ஆகிய இருவரும் குழந்தை மா எரோ ஜான்சன் உயிரிழந்ததற்கு காரணமானவர்கள் அல்லது அனுமதித்தவர்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> கடந்த 2023ம் ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததை அடுத்து பெற்றோர்கள் மீது இந்த குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0655f35f-302a-4886-86bd-262220c8f3f4/26-6a764f7408d8c.webp' /></p><p>குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இந்த உயிரிழப்பு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கீட்டோனிக் ஹைப்போகிளிசீமியா இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p> இதையடுத்து பெற்றோர் மீது குழந்தையை பராமரிக்க தவறியது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருளை வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>ஆகஸ்ட் 13ம் திகதி இந்த வழக்கு லிவர்பூல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில் பெற்றோர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T21:35:53+00:00</updated>
        </entry>
    </feed>
