<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-08T10:25:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் எல் நினோ ஏற்படுத்தவிருக்கும் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/el-nino-could-affects-canada-winter-1788862294"></link>
            <id>https://news.lankasri.com/article/el-nino-could-affects-canada-winter-1788862294</id>
            <summary type="text">&amp;nbsp;El Niño could affect Canada’s winter, climatologists say: எல் நினோ கனடாவின் குளிர் காலத்தை பாதிக்கக்கூடும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;El Niño could affect Canada’s winter, climatologists say: எல் நினோ கனடாவின் குளிர் காலத்தை பாதிக்கக்கூடும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.
</p><p>

எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட தீவிரமாக வெப்பமடையும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வு ஆகும். ஆனால், அதன் தாக்கம் உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடும். </p><p> 

அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. வெறும் தகவலாக அதைக் குறித்து அறிந்துகொண்டவர்கள், அதன் தாக்கத்தை கண்ணால் பார்த்துகொண்டிருக்கிறோம்.
</p><h3>
எல் நினோவால் ஏற்படும் பாதிப்பு
</h3><p>
இந்நிலையில், இம்முறை உருவாகியுள்ள எல் நினோவை, எல் நினோக்களின் காட்ஸில்லா என அழைக்கிறார்கள்.
</p><p>
அதாவது, இம்முறை நிகழும் எல் நினோ பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்துமாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6040c088-ec9d-443e-b53a-ec80f27ef0f0/26-6a9fdf579cc58.webp' /></p><p>
ஏற்கனவே, எல் நினோ காரணமாக ஏற்பட்ட மழையால், சிலி நாட்டில் கடந்த வார இறுதியில் 10 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
</p><p>
மத்திய அமெரிக்காவில், ஹோண்டுராஸ், எல் சால்வடார் மற்றும் பனாமா ஆகிய பகுதிகளில் வறட்சி காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
பனாமா கால்வாயில் போதுமான தண்ணீர் இல்லாததால் கப்பல் போக்குவரத்து பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
</p><h3>
கனடாவில் எல் நினோ ஏற்படுத்தவிருக்கும் பாதிப்பு</h3><p>

கனடாவைப் பொருத்தவரை, எல் நினோவின் தாக்கத்தால், குளிர்காலத்தின் அளவு குறைவாக இருக்கும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.
</p><p>
குறைவான பனி, மேற்கில் அதிக மழை, அதனால் வசந்த காலத்தில் ஏற்பட இருக்கும் பாதிப்புகள், சீக்கிரமாக காட்டுத்தீ உருவாகும் அபாயம் மேலும் கூடுதல் வறட்சி ஆகியவற்றை கனடா எதிர்கொள்ள நேரிடும் என்கிறார்கள் அவர்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4af8adc3-9cf4-48d6-b272-07fb9cdd7421/26-6a9fdf5852bae.webp' /></p><p>
பரந்த, வளமான புல்வெளி சமவெளிகளில் பயிர்களை வளர்த்து, கால்நடைகளை வளர்க்கும் வழக்கம் கொண்ட விவசாயிகளுக்கு இம்முறை ஏமாற்றம் ஏற்படலாம்.&nbsp;</p><p>
ஆக மொத்தத்தில், எல் நினோவால் அதிகரித்த வெப்பம் காரணமாக 2024ஆம் ஆண்டுதான் வரலாற்றிலேயே அதிக வெப்பம் கொண்ட ஆண்டு என்றார்கள்.
</p><p>
ஆனால், இம்முறை உருவாகியுள்ள எல் நினோவால், 2027ஆம் ஆண்டு அந்த சாதனையை முறியடிக்கலாம் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T10:11:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் அறியப்படும் பிரபலத்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/egyptian-tv-star-sentenced-to-death-1788862415"></link>
            <id>https://news.lankasri.com/article/egyptian-tv-star-sentenced-to-death-1788862415</id>
            <summary type="text">Egyptian TV star pleaded for mercy: எகிப்திய தொலைக்காட்சி நட்சத்திரம் கருணை காட்டும்படி மன்றாடினார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் பேரில் மரண தண்டன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Egyptian TV star pleaded for mercy: எகிப்திய தொலைக்காட்சி நட்சத்திரம் கருணை காட்டும்படி மன்றாடினார்.
</p><p>போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் கருணை காட்ட வேண்டும் என கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7485653c-5872-456a-9430-ed6d5c31273e/26-6a9fdfd14aca2.webp' /></p><p>
</p><p>செயற்கை போதைப்பொருட்களைத் தயாரித்தல், ஊக்குவித்தல் மற்றும் வர்த்தகம் செய்தல், அத்துடன் உரிமம் இல்லாமல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருத்தல்,</p><p> மற்றும் எடுத்துச் செல்லுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சாரா கலிஃபா மற்றும் மேலும் 11 பேருக்கு தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. </p><p>குற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான 'மிஷன் இம்பாசிபிள்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் எகிப்தில் நன்கு அறியப்பட்ட 39 வயதான கலீஃபா, கெய்ரோ நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். </p><p>ஆனால், தாம் தவறேதும் செய்யவில்லை என்றே கலீஃபா தொடர்ச்சியாக கூறி வருகிறார். தண்டனை அறிவிப்பின்போது, ​​அவர் கருணை காட்ட வேண்டும் என நீதிமன்றத்தில் அழுதுள்ளார்.</p><p></p><p> </p><p>மரண தண்டனை வழக்குகளில் எகிப்திய சட்டப்படி அவசியமான ஒரு நடைமுறையாக, எகிப்தின் தலைமை முஃப்தியிடம் அவரது மதரீதியான கருத்தையும் நீதிமன்றம் கலந்தாலோசித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. </p><p>இந்தக் கட்டத்தில் தீர்ப்பு இறுதியானதல்ல, மேலும் இது மேல்முறையீட்டிற்கு உட்பட்டது. கலீஃபாவின் குற்றச் செயல்கள் எனக் கூறப்படும் செயல்கள் தொடர்பான 20 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் அந்த விசாரணை நடைபெற்றது. </p><p>அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கையில், விசாரணை அதிகாரிகள் 750 கிலோகிராமுக்கும் அதிகமான செயற்கை போதைப்பொருட்களையும், அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களையும் கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89fc3e86-d653-4a9c-8553-0a0ee1b01f9a/26-6a9fdfd1f1254.webp' /></p><p> </p><p>இந்த வழக்கில் கூடுதலாக ஒன்பது பிரதிவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், மேலும் ஏழு பேர் விடுவிக்கப்பட்டனர். </p><p>கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கலீஃபா கைது செய்யப்பட்டார். பயங்கரவாதம், திட்டமிட்ட கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எகிப்தில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. </p><p>கடந்த ஆண்டு மட்டும் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக எகிப்திய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான ஆணையம் கூறியுள்ளது. மட்டுமின்றி 23 கைதிகளைத் தூக்கிலிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T10:10:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நாடு இடம்பெறவில்லை; ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டும் - MLA சிந்து கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mla-sindhu-request-eezham-tamil-citizenship-1788861137"></link>
            <id>https://news.lankasri.com/article/mla-sindhu-request-eezham-tamil-citizenship-1788861137</id>
            <summary type="text">
Mla sindhu request eezham tamil citizenship in assembly: இந்தியாவில் ஈழத்தமிழர்களின் குடியுரிமை குறித்து எம்.எல்.ஏ சிந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>
Mla sindhu request eezham tamil citizenship in assembly: இந்தியாவில் ஈழத்தமிழர்களின் குடியுரிமை குறித்து எம்.எல்.ஏ சிந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தார்.</p><p>

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, போக்குவரத்து உள்ளிட்ட மானிய கோரிக்கை குறித்த சட்டமன்ற கூட்டத்தில், ஈழத்தமிழர்கள் குடியுரிமை பெற வலியுறுத்த வேண்டும் என குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து கோரிக்கை வைத்தார்.&nbsp;</p><h2>ஈழத்தமிழர்கள் குறித்த கோரிக்கை&nbsp;</h2><p>

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, போக்குவரத்து உள்ளிட்ட மானிய கோரிக்கை குறித்த கூட்டம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd9d6263-ea04-45a6-9e58-59ad07403867/26-6a9fdd8f5f761.webp' />&nbsp;</p><p></p><p>

இதில் பேசிய குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து, தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் குறித்த கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். </p><p>

அவர் கூறும்போது, "நமது ஈழத்தமிழர்கள் நெடுங்காலமாக அகதிகள் முகாமில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டை தாய்நாடாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். 

ஆனால் அவர்களுக்கு நிலையான வாழ்வு இல்லை; குடியுரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.</p><p> ஒன்றிய அரசு கொண்டுவந்த CAA சட்டத்திலும் இலங்கை நாடு இடம்பெறவில்லை. 

யாதும் ஊரும் யாவரும் கேளிர் என்று உரைத்த தமிழ் உறவுகளுக்கு நிலையான வாழ்வு வாழ இங்கு இடமில்லை. </p><p>


ஆகையால், ஈழத்தமிழர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று தங்கள் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.</p><p>

அவருக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், 'எங்கெல்லாம் தமிழ்மொழி பேசப்படுகிறதோ அவர்கள் அத்தனை பேருமே எங்களது சகோதரர்கள். எனவே ஈழத்தமிழர்களின் நலம் சார்ந்து, சட்டமன்ற உறுப்பினரின் அவர்களது அத்தனை கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்' என்று உறுதியளித்தார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/604ce4b2-d058-462d-afe1-c759f82db174/26-6a9fdcc3f260d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T09:57:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாடா கெமிக்கல்ஸ் விவகாரம்... கென்யாவில் மக்களிடையே வெடித்த சண்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fight-over-tata-soda-ash-mine-1788859569"></link>
            <id>https://news.lankasri.com/article/fight-over-tata-soda-ash-mine-1788859569</id>
            <summary type="text">Fight over Tata soda-ash mine divides Kenya region: டாட்டாவின் சோடா-ஆஷ் சுரங்க விவகாரம், கென்யப் பகுதியை பிளவுபடுத்தியுள்ளது.

இந்தியாவின் டாடா கெமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Fight over Tata soda-ash mine divides Kenya region: டாட்டாவின் சோடா-ஆஷ் சுரங்க விவகாரம், கென்யப் பகுதியை பிளவுபடுத்தியுள்ளது.
</p><p>
இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கென்யா நாட்டிற்குப் பயனளிக்கும் எந்தவொரு பொருளாதார நன்மைகளையும் கொண்டுவரவில்லை என்பதை குறிப்பிட்டு, நூற்றாண்டு கால சலுகையை ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ திரும்பப் பெற்றார்.</p><h2>பிளவுபட்டுள்ளனர்</h2><p>
</p><p>தான்சானியா அருகே மசாய் மேய்ப்பர்கள் வசிக்கும் பகுதியில் சோடா சாம்பலை வெட்டியெடுப்பதற்காகவே, இந்தியப் பெரும் நிறுவனமான டாடா குழுமத்திற்கு சலுகை வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b32f886-24a4-455a-a60a-37ce960cfd89/26-6a9fd4b354a43.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், சோடா சாம்பலாக மாற்றப்படும் ட்ரோனா கனிமத்தின் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஆதாரமான மகாடி ஏரியைச் சுற்றியுள்ள கிராமவாசிகள், டாடா நிறுவனம் அங்கேயே தொடர வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பதில் பிளவுபட்டுள்ளனர். </p><p>நிறுவனத்தின் இரசாயனப் பிரிவு, வறுமையில் வாடும் கஜியாடோ மாவட்டத்தில் உள்ள நான்கு பள்ளிகளுக்கு நிதியுதவி அளிக்கிறது, ஒரு மருத்துவமனைக்கு ஊழியர்களை வழங்குகிறது மற்றும் மகாடி நகரில் பயன்படுத்தப்படும் சுத்தமான நீரை வழங்குகிறது. </p><p>அதன் தனியார் இரயில் பாதை, 145 கிலோமீட்டர் (90 மைல்) நீளமுள்ள வழித்தடத்தில் கால்நடைகளுக்கான நீர்நிலைகளுக்கு இலவசமாக நீரை நிரப்புகிறது.</p><p></p><p> மேலும், அது நீண்ட தூரப் பயணங்களுக்கு, சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் வெறும் 0.30 டொலர் கட்டணம் வசூலிக்கும் இரயில் சேவையையும் இயக்குகிறது.</p><p> ஜனாதிபதி ரூட்டோவைப் பொறுத்தவரை, இது போதாது: ஏரியிலிருந்து எடுக்கப்படும் கனிமங்களிலிருந்து தயாரிக்கப்படும் சோடா சாம்பலை, கண்ணாடி, துப்புரவுப் பொருட்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் போன்றவற்றைத் தயாரிக்க உள்நாட்டில் பதப்படுத்துவதற்குப் பதிலாக ஏற்றுமதி செய்து வருவதால், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை மொத்தமாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். </p><p>மார்ச் மாதம் வரையிலான ஓராண்டில் சுமார் 185 பில்லியன் டொலர் கூட்டு வருவாயை ஈட்டியதும், உப்பு முதல் எஃகு மற்றும் கார்கள் வரை அனைத்தையும் தயாரிப்பதுமான டாடா நிறுவனத்தின் 32 நிறுவனங்களுடன் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு, இயற்கை வளங்களைச் சுரண்டுவது தொடர்பாக சமூகங்கள், அரசாங்கங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே நிலவும் பதற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. </p><p>அதே சமயம், பொருளாதார வல்லுநர்கள் 'வளச் சாபம்' அல்லது அந்த வளத்தை சிறந்த வாழ்க்கைத்தரமாக மாற்றத் தவறுதல் என்று அழைக்கும் ஒரு நிகழ்வைத் தவிர்க்கவும் அவர்கள் முயல்கின்றனர்.</p><h2>வெளியேற்றக் கூடாது</h2><p> </p><p>உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதார நாடாகவும், அங்கு பரிமாறப்படும் ஒவ்வொரு ஐந்து குளிர்பான போத்தல்களில் ஒன்றுக்கு டாடா நிறுவனம் கனிமத்தை வழங்குவதாகவும் உள்ள இந்தியாவிற்கு சோடா சாம்பலை ஏற்றுமதி செய்வதன் மூலம், கென்யா அந்த வர்த்தகத்தின் பொருளாதாரப் பலன்களை இழக்கிறது என்று அரசு அதிகாரிகள் வாதிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f26f5cae-0cc7-4e5a-856b-7ca83f70c04d/26-6a9fd4b40cc75.webp' /></p><p> </p><p>மேலும், இது சாத்தியமான தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் நமது பொறியாளர்கள், வேதியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், போக்குவரத்துத் துறையினர், தொழில்முனைவோர்கள் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை ஏற்றுமதி செய்வதற்குச் சமம் என்று தொழில்மயமாக்கல் துறை முதன்மைச் செயலாளர் ஜுமா முக்வானா கூறியுள்ளார். </p><p>மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு மூலப்பொருளையும், அதை இங்கேயே போட்டித்தன்மையுடன் பதப்படுத்தி மாற்றியமைக்க முடியுமா என்று முதலில் ஆராயாமல் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேற்றக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதனிடையே, கென்ய அரசாங்கத்தால் எழுப்பப்பட்ட விடயங்களுக்கு, ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்குவது குறித்த தகவல்களை வழங்குவது உள்ளிட்டவற்றில் டாடா கெமிக்கல்ஸ் மகாடி லிமிடெட் பதிலளித்துள்ளது என்றும், சுரங்க அமைச்சகத்தின் ஆய்வு மற்றும் மேலதிக வழிகாட்டுதலுக்காகக் காத்திருப்பதாகவும் டாடா கெமிக்கல்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த ஆண்டு, டாடா நிறுவனம் சுமார் 57 மில்லியன் டொலர் மதிப்புள்ள சோடா சாம்பலை ஏற்றுமதி செய்தது. தலைநகரான நைரோபிக்கு சேவை வழங்கும் நிறுவனம் உட்பட, குடிநீரின் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையை ஒழுங்குபடுத்துவதற்காக நீர் பயன்பாட்டு நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனத்தின் ஒரே உள்நாட்டு உற்பத்தியாளர் இதுவே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a5e1f5e-68f5-4909-b165-afb957b01ab2/26-6a9fd4b4b755e.webp' /></p><p> </p><p>இன்னொருபுறம், நீண்ட காலமாகச் செலுத்தப்படாத நில வரிகளாக 12.2 பில்லியன் ஷில்லிங் (94 மில்லியன் டொலர்) தொகையை கோரும் கஜியாடோ (Kajiado) மாவட்ட நிர்வாகத்துடனான சர்ச்சையிலும் டாடா நிறுவனம் சிக்கியுள்ளது. </p><p>ராயல்டி கட்டணங்களைச் செலுத்தத் தவறியதையும், பிற ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதையும் காரணம் காட்டி, டாடா நிறுவனத்தின் செயல்பாடுகளை இடைநிறுத்துமாறு கென்யா அரசாங்கம் ஜூலை மாதம் உத்தரவிட்டது. </p><p>இந்த நிலையில், கென்யாவின் சுரங்கத்துறை அமைச்சகத்தால் எழுப்பப்பட்ட விடயங்களுக்கு, பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்குவது தொடர்பான தகவல்கள் உட்பட, ஒரு விரிவான பதிலை வழங்கியுள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T09:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் அஜித் பங்குபெறும் கார் பந்தயம் - முதல்வர் விஜய் நேரில் பார்க்க வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-may-to-watch-ajith-car-race-in-uk-visit-1788859142"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-may-to-watch-ajith-car-race-in-uk-visit-1788859142</id>
            <summary type="text">cm vijay to watch ajith car race in uk visit: பிரித்தானியா செல்ல உள்ள முதல்வர் விஜய், அங்கு நடைபெறும் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்க வாய்ப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay to watch ajith car race in uk visit: பிரித்தானியா செல்ல உள்ள முதல்வர் விஜய், அங்கு நடைபெறும் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</p><h3> 

அஜித்தின் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் பார்க்க வாய்ப்பு </h3><p>

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி அரசுமுறை பயணமாக பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82f72776-0e80-4383-9874-bc34d249ebcb/26-6a9fd3076baa7.webp' /></p><p> 

அவருடன் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றும் பிரதானியாவிற்கு செல்ல உள்ளது.</p><p> 

செப்டம்பர் 16 ஆம் திகதி வரை பிரித்தானியாவில் இருக்க உள்ள முதல்வர் விஜய், தொழில்துறையினர் மற்றும் பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p> 

 இந்த பயணத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொள்ளும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் நேரில் பார்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>

பிரித்தானியாவில் உள்ள Silverstone Circuit ல் வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் MICHELIN LE MANS CUP கார் பந்தயம் நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4b4d542-932b-4a31-83de-f670619c012d/26-6a9fd3081dc17.webp' /></p><p>

இதில் நடிகர் அஜித்குமாரின் அஜித்குமார் ரேசிங் அணியின் பங்குபெற உள்ளது. இதற்காக அஜித்குமார் தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.</p><p>

சமீபத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டா முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் எனவும், ஃபார்முலா உள்ளிட்ட பன்னாட்டு பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். </p><p> 

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்தார். </p><p>

இந்நிலையில், முதல்வர் விஜய்யின் அதிகாரபூர்வ பயணத்திட்டத்தில் இந்த நிகழ்வு இருக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. </p><h3>

பிரித்தானிய பயணம் தள்ளிப்போகவும் வாய்ப்பு</h3><p>

அதேவேளையில் , முதல்வர் விஜய்யின் பிரித்தானிய பயணம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

செப்டம்பர் 11 முதல் 13 வரை டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசிய பிரதமர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்தியா வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6d37615-3ae2-46d2-9597-6401c097bdce/26-6a9fd308c94ad.webp' /></p><p>

13 ஆம் திகதி மாநாடு முடிந்த பின்னர் அவர் சென்னை வந்து முதல்வர் விஜய்யை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p> 

இந்நிலையில், மலேசிய பிரதமரை சந்திப்பதற்காக முதல்வர் விஜய் சென்னையில் இருக்க வேண்டும் என்பதால், பிரித்தானிய பயணத்தை ஒத்திவைக்குமாறு ஆளுநர் அர்லேகர் முதல்வர் விஜய்யை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p> 

முதல்வர் விஜய் பிரித்தானியா சென்று அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் கண்டு களிப்பாரா அல்லது பயணம் ஒத்திவைக்கப்படும் என்பது ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T09:19:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் - 2027ஆம் ஆண்டிற்கு பாபா வங்காவின் கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/baba-vanga-prediction-about-2027-humans-superpower-1788853590"></link>
            <id>https://news.lankasri.com/article/baba-vanga-prediction-about-2027-humans-superpower-1788853590</id>
            <summary type="text">baba vanga prediction about 2027 humans get super power: 2027ஆம் ஆண்டில் சிலருக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் கிடைக்கும் என பாபா வங்கா கணிப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>baba vanga prediction about 2027 humans get super power: 2027ஆம் ஆண்டில் சிலருக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் கிடைக்கும் என பாபா வங்கா கணிப்பு தெரிவித்துள்ளார்.</p><h3> 

2027ஆம் ஆண்டிற்கு பாபா வங்காவின் கணிப்பு</h3><p> 

பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்கா, 1911ஆம் ஆண்டில் பல்கேரியாவில் பிறந்து, 1996 ஆம் ஆண்டில் மரணமடைந்தவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/493b1ce9-d43d-49b6-a46b-968a0c182506/26-6a9fbd580ecaa.webp' /></p><p>
சிறு வயதிலேயே கண்பார்வையை இழந்த பாபா வங்கா, அதன் பின்னர் எதிர்காலத்தை கணிக்கும் திறனை பெற்றதாக கூறப்படுகிறார். </p><p>

9/11 இரட்டைக்கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம், கோவிட் என இவர் பல்வேறு நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக நம்பப்படுவதால், பாபா வங்கா உலகளவில் கவனம் பெற்றார்.&nbsp;</p><p>

இந்நிலையில், 2027 ஆம் ஆண்டில் நடக்கப்போவதாக கூறப்படும் இவரின் விசித்திரமான கணிப்பு ஒன்று குறித்து அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.&nbsp;</p><p></p><p> 

 2027 ஆம் ஆண்டில் ஒரு மர்மமான நோய் அல்லது மரபணுப் பரிசோதனை சில மனிதர்களுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களை வழங்கும் என அவர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது. </p><p>

இந்த நோய் அல்லது பரிசோதனை பலரை பாதித்தாலும், ஒரு சிலருக்கு மட்டுமே இந்த சக்திகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. </p><p>

ஆனால், அவர்களின் சக்திகள் என்னவாக இருக்கும் அல்லது இது எப்படி நிகழும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. </p><p>

இதே போல் 2026 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் வேற்று கிரகவாசிகள் மனிதர்களை தொடர்பு கொள்ளக்கூடும் என கணிப்பு தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், புதிய உலகப் போர், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பெரும் இயற்கை பேரழிவுகள், தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்தும் கணிப்பு தெரிவித்திருந்தார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T08:45:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் பள்ளிப்பிள்ளைகளின் புத்தகப்பைகள் ஏன் மிக பளுவானவையாக உள்ளன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/school-bags-weight-recommendations-in-france-1788854494"></link>
            <id>https://news.lankasri.com/article/school-bags-weight-recommendations-in-france-1788854494</id>
            <summary type="text">The problem of heavy school bags persists despite official weight recommendations in France: பிரான்சில் இந்த அளவுக்குதான் மாணவர்களின் புத்தகப்பைகளின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>The problem of heavy school bags persists despite official weight recommendations in France: பிரான்சில் இந்த அளவுக்குதான் மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை இருக்கவேண்டும் என பரிந்துரை இருந்தபோதிலும், அந்தப் பிரச்சினை நீண்ட காலமாக நீடிக்கிறது.
</p><p>

பளுவான புத்தகப்பைகள் என்னும் பிரச்சினை, உலக நாடுகள் பலவற்றில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
</p><p>
பிள்ளைகள் முதுகில் பையைத் தொங்கவிட்டுக்கொண்டு, தூக்க முடியாமல், கூன் போட்டபடி பையை இழுத்துக்கொண்டு நடப்பதைப் பார்த்தால் எந்த பெற்றோருக்கும் மனம் வருந்தும்.</p><h3>

பளுவான புத்தகப்பைகள்
</h3><p>
பிரான்சைப் பொருத்தவரை, ஒரு மாணவன் அல்லது மாணவியின் பையின் எடை, அவர்களுடைய உடல் எடையில் 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்ககூடாது என பிரான்ஸ் கல்வி அமைச்சகத்தின் பரிந்துரை ஒன்று கூறுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78555fe7-aa80-489a-abbb-6d4fa5b34b81/26-6a9fc0dfa3ac1.webp' /></p><p>
அதாவது, 25 கிலோ உடல் எடையுள்ள ஒரு மாணவரின் புத்தகப்பை, 2.5 கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது.
</p><p>
ஆனால், பல பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள், பைல்கள், லேப்டாப், விளையாட்டு உபகரணங்கள், உணவு மற்றும் தண்ணீர் என இத்தனை பொருட்களை மாணவ மாணவியர் ஒரு பையில் அடைத்துக்கொண்டு செல்வதால், அவர்கள் சுமக்கும் சுமை 17 சதவிகிதத்தைத் தாண்டிவிடுவதாக கூறுகிறார்கள் துறைசார் நிபுணர்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், இவ்வளவு எடையுள்ள பையைத்தான் பிள்ளைகள் சுமக்கவேண்டும் என்பது வெறும் பரிந்துரைதான். அது விதி அல்ல.
</p><p>
ஆக, அதை விதியாக்கவேண்டும் என்கிறார்கள் பெற்றோரும், துறைசார் நிபுணர்களும்.&nbsp;</p><p></p><p>
மேலும், சில புத்தகங்களை பள்ளியிலேயே வைத்துவிட்டுவரும் வகையில் லாக்கர்களை அமைக்கலாம் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த பளுவான புத்தகப்பைகள், பிள்ளைகளின் முகுகுக்கு பிரச்சினையை உருவாக்குவதுடன், நிலைமையை மேலும் மோசமாக்கவும் கூடும்.
</p><p>
ஆக, பெற்றோரும், பிள்ளைகளின் பைகளை சோதித்து, இன்று எந்தெந்த புத்தகங்களைக் கொண்டு சென்றால் போதும் என்பதை கவனித்து தினமும் தேவையான புத்தகங்கள், நோட்டுகளைக் கொடுத்துவிடுவதாலும் பிரச்சினைகளை சிறிது குறைக்கலாம்.
</p><p>
சில நாடுகளில், ஒரு முழு புத்தகத்தையும் ஆண்டு முழுவதும் ஒரு மாணவன் அல்லது மாணவி தூக்கிக்கொண்டு செல்லாமல், ஒரு பருவத்துக்கு (Term) இவ்வளவு பாடம் என திட்டமிட்டு புத்தகங்களை அச்சிடும் நிலை உள்ளது. அதையும் பின்பற்றலாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T08:03:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[AfD கட்சியின் வெற்றி எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்: ஜேர்மன் சேன்ஸலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/merz-warns-afd-victory-changes-all-of-germany-1788851579"></link>
            <id>https://news.lankasri.com/article/merz-warns-afd-victory-changes-all-of-germany-1788851579</id>
            <summary type="text">Chancellor Merz says recent election result changes all of Germany: சமீபத்திய தேர்தல் முடிவுகள் முழு ஜேர்மனி மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chancellor Merz says recent election result changes all of Germany: சமீபத்திய தேர்தல் முடிவுகள் முழு ஜேர்மனி மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் சேன்ஸலர் மெர்ஸ்.
</p><p>

ஞாயிற்றுக்கிழமை வெளியான Saxony-Anhalt மாகாண தேர்தல் முடிவுகள், ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் முதல், பல தரப்பு அரசியல்வாதிகளையும் ஆட்டம் காணச் செய்துள்ளன.
</p><h3>
AfD கட்சியின் வெற்றி
</h3><p>
பொதுவாகவே, கிழக்கு ஜேர்மனியைப் பொருத்தவரை, ஒவ்வொரு முறை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பும் கருத்துக்கணிப்புகள் நடத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6386bcb5-b4c4-4e00-b096-d8968f762bad/26-6a9fb57c9efad.webp' /></p><p>

கருத்துக்கணிப்புகளில் தீவிர வலதுசாரி புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சிக்கு அதிக ஆதரவு என முடிவுகள் வெளியாகும்.
</p><p>
ஆனால், கடைசி நேரத்தில் வேறொரு கட்சி வெற்றி பெற்று AfD கட்சியை பின்னுக்குத் தள்ளிவிடும்.
</p><p>
இம்முறை Saxony-Anhalt மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதும், AfD கட்சிக்கு அதிக ஆதரவு என்றே முடிவுகள் வெளியாகின.&nbsp;</p><p></p><p>
ஆனால், இது வழக்கமாக நடப்பதுதானே என மற்ற கட்சிகள் அலட்சியமாக இருந்துவிட்டனவோ என்னவோ தெரியாது. இம்முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் AfD கட்சி அமோக வெற்றி பெற்றுவிட்டது.
</p><h3>
ஜேர்மன் சேன்ஸலரின் கருத்து
</h3><p>
Saxony-Anhalt மாகாண தேர்தல் முடிவுகள், பல தரப்பு அரசியல்வாதிகளையும் ஆட்டம் காணச் செய்துள்ள நிலையில், ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் ஆடிப்போனது வெளிப்படையாகவே தெரிகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a160959-f87c-4e78-987e-489858d6db2c/26-6a9fb57d53902.webp' /></p><p>
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மெர்ஸ், Saxony-Anhalt மாகாண தேர்தல் முடிவுகளால், அம்மாகாணத்தில் மட்டுமல்ல, ஜேர்மனி முழுவதிலுமே சில விடயங்கள் மாறிவிட்டன என்று கூறியுள்ளார்.
</p><p>
மேலும், சர்வதேச அரங்கிலும், இந்த தேர்தல் முடிவுகள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார் மெர்ஸ்.</p><p>

ஏனென்றால், ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஜேர்மனி ஆதரவளிக்கிறது. ஆனால், வெற்றி பெற்றுள்ள AfD கட்சியினர், அதை எதிர்க்கிறார்கள். அத்துடன், AfD கட்சியினரில் பலர், ரஷ்ய ஜனாதிபதி புடின் அரசுடன் நெருக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் அவர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T07:13:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் இருந்து வட கொரியாவுக்கு... முதல் முறையாக பாலம் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-russia-first-bridge-1788850816"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-russia-first-bridge-1788850816</id>
            <summary type="text">North Korea and Russia open their first road bridge: வட கொரியாவும் ரஷ்யாவும் தங்கள் முதல் சாலைப் பாலத்தைத் திறந்துள்ளன.
வட கொரியாவும் ரஷ்யாவும், நட்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>North Korea and Russia open their first road bridge: வட கொரியாவும் ரஷ்யாவும் தங்கள் முதல் சாலைப் பாலத்தைத் திறந்துள்ளன.
</p><p>வட கொரியாவும் ரஷ்யாவும், நட்புறவின் வெளிப்பாடாக, திங்கட்கிழமை அன்று தங்களது முதல் சாலைப் போக்குவரத்துக்கான பாலத்தைத் திறந்து வைத்துள்ளனர்.</p><h2>இருவழிப் பாலம்</h2><p>
</p><p>துமென் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த பாலமானது, இரு தரப்பினரும் தங்களின் ஆழமடைந்து வரும் கூட்டாண்மையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc57fe0-2d2b-4f07-ad99-be5b42f23863/26-6a9fb282d9b3f.webp' /></p><p>ரஷ்யப் பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் மற்றும் வட கொரியப் பிரதமர் பாக் தே சோங் ஆகியோர் காணொளிக் காட்சி மூலம் இரு நாடுகளின் தொழிலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் உரையாற்றியபோது,</p><p>​​கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட முதல் சரக்கு லொறிகள் 1 கி.மீ தொலைவுள்ள இருவழிப் பாலத்தைக் கடந்து சென்றன. </p><p>பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள், 2024-ஆம் ஆண்டு வட கொரியாவிற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கொண்ட பயணத்தின்போது இத்திட்டம் ஒப்புக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கின.</p><p></p><p> </p><p>மாஸ்கோவிற்கும் பியாங்யாங்கிற்கும் இடையே ஏற்கனவே நேரடி விமான மற்றும் ரயில் இணைப்புகள் உள்ளன, ஆனால் திங்கட்கிழமை வரை முறையான சாலை இணைப்பு இருக்கவில்லை. </p><p>மாறாக, 1959 ஆம் ஆண்டு முதல் ஒரு சிறப்பு ஏற்பாட்டின் மூலம், பல தசாப்தங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைக் கடந்து வாகனங்களை நகர்த்துவதற்காக, அருகிலுள்ள ரயில் பாலத்தின் மீது பலகைகள் போடப்பட்டிருந்தன - அந்தப் பாலம்தான் எல்லையைக் கடக்கும் ஒரே இடமாக இருந்தது. </p><p>இந்த நிலையில், தினமும் 300 வாகனங்கள் வரை கடந்து செல்ல முடியும் என்றும், இந்தப் பாலம் ரஷ்யாவின் ஃபெடரல் சாலை வலையமைப்புடன் இணைக்கப்பட்டு, தூர கிழக்கு நகரமான விளாடிவோஸ்டோக்கிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வரை செல்லும் போக்குவரத்து வழித்தடத்திற்கு எளிதில் அணுகக்கூடியதாக இருக்கும் என்றும் ரஷ்ய பிரதமர் மிஷுஸ்டின் கூறியுள்ளார். </p><p>மேலும், சரக்குகளை ஏற்றிச் செல்ல லொறிகள் உடனடியாக இந்தப் பாலத்தைப் பயன்படுத்தத் தொடங்கும் என்று ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>பொருளாதார ஒத்துழைப்பு</h2><p> </p><p>இந்த ஆண்டின் இறுதியில், இந்தப் பாலம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்றும், பயணிகள் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படலாம் என்றும் அது கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31b8900a-fbf1-4d4a-8740-a60ff093c1f6/26-6a9fb282322e9.webp' /></p><p> </p><p>மக்கள் இடையிலான பரிமாற்றங்கள், சுற்றுலா மற்றும் சரக்கு வர்த்தகம் உள்ளிட்ட பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முக்கிய உள்கட்டமைப்புகளை இந்த இரு தரப்பினரும் ஏற்படுத்தியிருப்பதை அந்தப் பாலம் வெளிப்படுத்தியுள்ளதாக, வட கொரியாவின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ (KCNA) செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது. </p><p>2022-இல் உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்துள்ளன; குறிப்பாக, 2024-இல் ரஷ்யாவின் குர்ஸ்க் (Kursk) பகுதியில் உக்ரைன் நடத்திய ஊடுருவலை முறியடிக்க உதவும் வகையில் வட கொரியா ஆயிரக்கணக்கான துருப்புகளை அங்கு அனுப்பியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2622c343-cc9b-4c01-ae7e-8c3a19c39608/26-6a9fb28394a6d.webp' /></p><p> ஆனால் வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகள் எவ்வாறு அர்த்தமற்றதாகி வருகின்றன என்பதை இந்தப் பாலம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று தென் கொரியாவின் கியுங்னாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொலை கிழக்கு ஆய்வுகளுக்கான முகமையின் பேராசிரியர் லிம் யுல்-சுல் கூறியுள்ளார். </p><p>இனி இந்த பாலத்தினூடாக வட கொரியாவும் ரஷ்யாவும் ஆயுதங்கள், இராணுவம் மற்றும் ஆள்பலத்தையும் பரிமாறிக் கொள்வார்கள் என்றும், உக்ரைன் விவகாரம் இனி மேல் அடுத்தகட்டத்திற்கு நகரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T06:57:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் பொதுக்கழிவறையை பயன்படுத்திய இந்திய இளம்பெண் பகிர்ந்துள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/influencer-on-cost-of-using-public-toilet-in-swiss-1788848974"></link>
            <id>https://news.lankasri.com/article/influencer-on-cost-of-using-public-toilet-in-swiss-1788848974</id>
            <summary type="text">Influencer reveals the surprising cost of using a public toilet in Switzerland: சுவிட்சர்லாந்தில் பொதுக்கழிவறையை பயன்படுத்திய இளம்பெண்ணொருவர், கழிவறைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Influencer reveals the surprising cost of using a public toilet in Switzerland: சுவிட்சர்லாந்தில் பொதுக்கழிவறையை பயன்படுத்திய இளம்பெண்ணொருவர், கழிவறைக்கான கட்டணம் தன்னை வியப்படைய வைத்ததாகத் தெரிவிக்கிறார்.</p><p>


உலகம் சுற்றுவதற்காக வேலையையும் விட்டு, சொத்துக்களையும் விற்ற இந்திய இளம்பெண், சோனி சலோனி.
</p><h3>
கழிவறையை பயன்படுத்துவதற்கான கட்டணம்</h3><p>

சமீபத்தில் சோனி சுவிட்சர்லாந்துக்குச் சென்றுள்ளார். இயற்கை உபாதையைத் தீர்த்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதால், கட்டணக் கழிப்பிடம் ஒன்றிற்குச் சென்றுள்ளார் சோனி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1980f5a6-3baf-4bdf-8efe-5f18ceb2befe/26-6a9fab501ad15.webp' /></p><p>

பார்த்தால், அங்கு கழிவறையை ஒரு முறை பயன்படுத்த 1.50 சுவிஸ் ஃப்ராங்குகள் என எழுதப்பட்டிருந்திருக்கிறது.
</p><p>
பொதுவாகவே வெளிநாடு செல்லும் பலரும் அங்கு ஏற்படும் செலவுகளை தங்கள் நாட்டுப் பணமாக மாற்றி யோசிப்பதுண்டு என்பதால், 1.50 சுவிஸ் ஃப்ராங்குகள் என்பது இந்திய மதிப்பில் எவ்வளவு என கணக்குப் பார்த்துள்ளார் சோனி.</p><p>

ஆக, கழிவறையை பயன்படுத்த ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் வரை செலவிடவேண்டியுள்ளதே என வியக்கிறார் சோனி.&nbsp;</p><p></p><p>
அவர் தனது அனுபவத்தை சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொள்ள, தங்களுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டதாக சிலர் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
வேறு சிலர், சுவிட்சர்லாந்தில் இலவச கழிப்பறைகளும் உண்டு என்று கூற, அப்படி இலவச கழிப்பறையை பயன்படுத்திவிட்டு, பிறகு நோய் வந்து எக்கச்சக்கமாக செலவு செய்வதைவிட, நல்ல, சுத்தமான ஒரு கழிவறைக்கு இவ்வளவு பணம் கொடுப்பது எவ்வளவோ மேல் என்கிறார் ஒருவர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹொங்கொங் சீனா அணியை பந்தாடிய பாகிஸ்தான் மகளிர் படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-pakistan-beat-hong-kong-china-by-72-runs-1788848614"></link>
            <id>https://news.lankasri.com/article/women-pakistan-beat-hong-kong-china-by-72-runs-1788848614</id>
            <summary type="text">மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாயில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், பாகிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

துபாயில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், பாகிஸ்தான் அணி 72 ஹொங்கொங் சீனாவை வீழ்த்தியது.&nbsp;</p><h2>ஷாவால் ஸுல்ஃபிகர் 47</h2><p>
பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் சீனா அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டி துபாயில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37f88047-ecd2-4e2a-946c-77bd97ee587c/26-6a9fa9e97199f.webp' /></p><p></p><p>

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. ஷாவால் ஸுல்ஃபிகர் 47 (35) ஓட்டங்களும், ஆயிஷா ஜாஃபர் 26 (19) ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

ஜோய்லின் கவுர் 4 விக்கெட்டுகளும், இக்ரா சாகர் மற்றும் கேரி சான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். </p><h2>சுருண்ட ஹொங்கொங் சீனா 
</h2><p>
பின்னர் ஆடிய ஹொங்கொங் சீனா அணி 19 ஓவர்களில் 71 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேரி சான் (Kary Chan) 30 ஓட்டங்கள் எடுத்தார்.
</p><p>
மிரட்டலாக பந்துவீசிய நஷ்ரா சந்து (Nashra Sandhu) 6 விக்கெட்டுகளும், ஃபாத்திமா சனா, சாதியா இக்பால், உம்-இ-ஹனி மற்றும் ஆயிஷா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aef9add8-3ac5-497e-8fd7-dd6d44ed9d41/26-6a9fa9e8be70b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:21:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான்கு மாதம்... ஹார்முஸ் நீரிணையில் ரகசிய இரவு நேர நடவடிக்கையில் அமெரிக்கக் கடற்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hormuz-us-navy-night-mission-1788847024"></link>
            <id>https://news.lankasri.com/article/hormuz-us-navy-night-mission-1788847024</id>
            <summary type="text">US Navy launched top secret four-month mission: அமெரிக்கக் கடற்படை மிக ரகசியமான நான்கு மாத கால நடவடிக்கையில் ஈடுபட்டது.
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>US Navy launched top secret four-month mission: அமெரிக்கக் கடற்படை மிக ரகசியமான நான்கு மாத கால நடவடிக்கையில் ஈடுபட்டது.
</p><p>ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக, அமெரிக்கக் கடற்படை நான்கு மாத கால ஆபத்தான மற்றும் அதீத ரகசியத் திட்டம் ஒன்றை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>அகற்றப்பட்டுவிட்டன</h2><p>
</p><p>கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் மிக முக்கியமான நீர்வழியில் ஈரானியப் படைகள் கண்ணிவெடிகளைப் பதித்துள்ளதாக நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3daf388-ea5a-48a6-a7c9-bf294a818203/26-6a9fa3b243b21.webp' /></p><p> </p><p>சர்வதேச கடல்சார் அமைப்பின் கூற்றுப்படி, ஜூன் மாத நிலவரப்படி, முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் சுமார் 80 கண்ணிவெடிகள் பதிக்கப்பட்டிருந்தன. </p><p>ஆனால் கடந்த வாரம், ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கப் பகுதி என்று அறிவித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சர்வதேச நீர்ப்பரப்பில் இருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடிக்கச் செய்யப்பட்டுவிட்டன என்று அறிவித்தார்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சியில், கடற்படை சீல் வீரர்கள் நான்கு மாதங்களாக இருளின் மறைவில் பணியாற்றினர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. </p><p>அவர்கள் இரவில் சிறு குழுக்களாகப் பணிபுரிந்து, நீர்மூழ்கிக் கப்பல்களின் உதவியுடன் நீரிணையின் அடிப்பகுதியில் இருந்த கண்ணிவெடிகளைக் கண்டறிந்துள்ளனர். </p><p> வெடிபொருட்களைக் கொண்டு கண்ணிவெடிகளை அழிக்க, பிரித்தானியாவின் சீஃபாக்ஸ் (SeaFox) அல்லது புதிய அமெரிக்க AN/ASQ-235 ஆங்கர்ஃபிஷ் (Anchorfish) போன்ற ரோபோ நீர்மூழ்கிக் கப்பல்களையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.</p><p> நீருக்கடியில் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் பணிகளையே அவர்கள் மேற்கொண்டுள்ளனர் என நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கண்ணிவெடிகள்</h2><p> அதிர்ஷ்டவசமாக, கண்ணிவெடி அகற்றும் பணியில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதனிடையே, அமெரிக்கா கப்பல்களை வழிநடத்தி வந்த, ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீரிணையின் தென்பகுதி உண்மையாகவே கண்ணிவெடிகள் அற்றது என்று கப்பல் உரிமையாளர்களும் பாதுகாப்பு ஆலோசகர்களும் தற்போது நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4dafb7e-a70d-4deb-a849-960bea5a00c8/26-6a9fa3b2ec9d9.webp' /></p><p> </p><p>ஆனால், போர் தொடங்கியதிலிருந்து ஒரு சில வணிகக் கப்பல்கள் மட்டுமே அந்த நீர்வழிப்பாதை வழியாகப் பயணித்துள்ளதால், 104 மைல் நீளமுள்ள அந்த நீர்வழிப்பாதை முழுவதும் தெளிவாக உள்ளதா என்பதில் அவர்கள் தங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தினர்.
</p><p>மேலும், கண்ணிவெடிகளின் அச்சுறுத்தல் கூட காப்பீட்டு நிறுவனங்களை, போருக்கு முந்தைய கட்டணங்களை விட 10 மடங்கு வரை உயர்த்தும்படி கட்டாயப்படுத்தியுள்ளது. </p><p>ஒரு சாதாரண சூப்பர்டேங்கர் கப்பலைப் பொறுத்தவரை, ஈரானின் அனுமதியின்றி அந்த நீர்வழியைக் கடப்பதற்கு சுமார் 10 மில்லியன் டொலர் காப்பீட்டுச் செலவுகள் ஏற்படக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19fb2ae4-c50a-4328-b12f-8f937c34870f/26-6a9fa3b3a062d.webp' /></p><p> </p><p>ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் இல்லை என்ற அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் அதிகாரிகளும் நிராகரித்துள்ளனர். மேலும், இந்தக் கண்ணிவெடிகளின் இருப்பிடம் ஈரானைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்றும் வெளிவிவகார அமைச்சர் காசெம் கரிபாபாடி ஆகஸ்ட் மாத இறுதியில் கூறியுள்ளார். </p><p>மேலும், இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற ஆயிரக்கணக்கான மஹாம் கண்ணிவெடிகள் ஈரானிடம் இருப்பதாக இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். </p><p>அமெரிக்கப் படைகள் சரக்குக் கப்பல்களை இயக்கி வரும் ஓமானுக்கு அருகிலுள்ள பகுதிகளில், ஈரான் மேலும் கண்ணிவெடிகளைப் புதைத்துள்ளதாக ஈரான் இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T06:15:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமன்றத்திலிருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dmk-mla-s-forcibly-evicted-from-the-tn-assembly-1788847672"></link>
            <id>https://news.lankasri.com/article/dmk-mla-s-forcibly-evicted-from-the-tn-assembly-1788847672</id>
            <summary type="text">சட்டமன்றத்தில்&amp;nbsp; அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.சட்டமன்றத்திலிருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டமன்றத்தில்&nbsp; அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.</p><h3>சட்டமன்றத்திலிருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம் </h3><p>

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானியக்கோரிக்கையில் பதிலுரை வழங்கிய முதல்வர் விஜய், வீராணம் திட்டத்திற்கு கருணாநிதியின் மருமகன் மாறன் லஞ்சம் வாங்கியதாக சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் உள்ளதாக பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fa9344c-0e23-44b5-ab85-54e665594427/26-6a9fa63a3ef6b.webp' /></p><p>

முதல்வர் விஜய்யின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>

முதல்வரின் பேச்சை அவைகுறிப்பிலிருந்து நீக்க முடியாது என சபாநாயர் தெரிவித்தார். இதனையடுத்து, சபாநாயகரை சுற்றி நின்று கொண்டும், அவரது இருக்கைக்கு முன்பும் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.</p><p></p><p>
இதனைத்தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d7f0de7-1a7f-44c4-b70e-75514c1d51bf/26-6a9fa6a051c07.webp' /></p><p> 

சபாநாயகரின் உத்தரவையடுத்து திமுக எம்.எல்.ஏ.க்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zwhHa14VsPQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:09:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளவரசர் ஹரி, மேகன் தொடர்பில் மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-charles-say-harry-meghan-be-as-normal-citizen-1788845482"></link>
            <id>https://news.lankasri.com/article/king-charles-say-harry-meghan-be-as-normal-citizen-1788845482</id>
            <summary type="text">Harry, Meghan will be treated as private citizens, King Charles says: ஹரியும் மேகனும் சாதாரண குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என மன்னர் சார்லஸ் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry, Meghan will be treated as private citizens, King Charles says: ஹரியும் மேகனும் சாதாரண குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>

பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரியும் அவரது மனைவி மேகனும், ஆறு ஆண்டுகளுக்கு முன் கோபித்துக்கொண்டு ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார்கள்.</p><h3>

Sandringham ஒப்பந்தம்</h3><p>

ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு, அவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
</p><p>
அந்த விடயம், Sandringham ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5baf596-88ee-4e86-b04e-5e60e0448215/26-6a9f9dac5351f.webp' /></p><p>
அதாவது, இனி ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தவோ, ராஜ குடும்ப பொறுப்புகளை மேற்கொள்ளவோ முடியாது.
</p><p>
அவர்கள், ‘His/Her Royal Highness’ என்னும் பட்டங்களை பயன்படுத்தக்கூடாது.

தங்கள் வருவாய்க்கான விடயங்களை, தாங்களே கவனித்துக்கொள்ளவேண்டும்.
</p><p>
அத்துடன், அவர்கள் ஏதேனும் தொண்டு நிறுவனப் பணிகளில் ஈடுபட்டால், அது தனிப்பட்ட முறையிலானதாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய, அதற்கும் ராஜ குடும்பத்துக்கும் சம்பந்தம் கிடையாது.
</p><p>
இந்த நிபந்தனைகளின்பேரிலேயே ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியதுடன், பிரித்தானியாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவிலும் குடியேறினார்கள்.&nbsp;</p><p></p><h3>
மீண்டும் பிரித்தானியா திரும்பிய தம்பதியர்</h3><p>

இந்நிலையில், ஹரியும் மேகனும் தங்கள் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார்கள். அவர்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22bd08d0-85fc-4590-9787-4c976cfe4925/26-6a9f9daba01c2.webp' /></p><p>

இந்நிலையில், ஹரிக்கும் மேகனுக்கும் மீண்டும் ராஜ குடும்ப பொறுப்புகள் வழங்கப்படுமா என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
ஆனால், ஹரியும் மேகனும் சாதாரண குடிமக்களாகவே கருதப்படுவார்கள், அவர்களுக்கு மீண்டும் ராஜ குடும்ப பொறுப்புகள் வழங்கப்படாது என்பதை மன்னர் சார்லஸ் உறுதி செய்துள்ளார்.</p><p>

ஹரி, மேகன் தம்பதியருக்கும், அரசுத் துறைகளுக்கும், ராணுவ அதிகாரிகள் மற்றும் மன்னரின் பிரதிநிதிகளுக்கும் மன்னர் சார்லஸ் அனுப்பிய கடிதம் ஒன்றில் இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அதாவது, ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு, அவர்களுக்கு Sandringham ஒப்பந்தத்தின் கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் நீடிக்கின்றன என்பதை மன்னர் சார்லஸ் தனது கடிதத்தில் உறுதி செய்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T05:33:18+00:00</updated>
        </entry>
    </feed>
