<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-22T15:33:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா முழுவதும் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களில் பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-massive-drone-strike-on-russia-1787411842"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-massive-drone-strike-on-russia-1787411842</id>
            <summary type="text">Ukrainian drone attacks kill multiple people in russia: உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ரஷ்யாவில் பலர் பலியானதாக தெரிய வந்துள்ளது.

ரஷ்யா முழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukrainian drone attacks kill multiple people in russia: உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ரஷ்யாவில் பலர் பலியானதாக தெரிய வந்துள்ளது.
</p><p>
ரஷ்யா முழுவதும் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் பலர் பலியானதாகவும், ஓசோன் கிடங்கு தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>ட்ரோன் தாக்குதல்கள் 
</h2><p>
ரஷ்யா முழுவதும் உக்ரைன் இரவுநேர ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f3067d7-4bc1-4d76-8c83-cb0b7e0a0727/26-6a89be05ece0e.webp' />&nbsp;</p><p></p><p>
மேலும் பலர் கொல்லப்பட்டதாகவும், சில்லறை விற்பனையாளரான ஓசோனுக்கு சொந்தமான ஒரு கிடங்கையும், சமாரா பிராந்தியத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையையும் தாக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>

இந்த தாக்குதல்கள் குறித்து சமாரா பிராந்திய ஆளுநர் வியாசெஸ்லாவ் ஃபெடோரிஷ்சேவ் கூறும்போது, உக்ரைனின் தாக்குதல்களில் பலர் காயமடைந்தனர் என்றார். </p><h2> 
 
பிராந்திய தளவாட மையத்தில்</h2><p>அத்துடன் ஓசோன் வெளியிட்ட அறிக்கையில், சாபாயேவ்ஸ்க் நகரில் உள்ள தனது சமாரா பிராந்திய தளவாட மையத்தில், தாக்குதலுக்குப் பிறகு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதலால் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறியது. </p><p>

அதேபோல் பெல்கோரோட் பிராந்தியத்தில், உக்ரேனியத் தாக்குதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
</p><p>
இதற்கிடையில், 457 உக்ரேனிய ட்ரோன் விமானங்களை இடைமறித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66458c11-7120-4f2d-b0b7-afc87f975f3a/26-6a89be050d4d8.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T15:17:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[BYD அறிமுகப்படுத்திய புதிய ஆடம்பர மின்சார கார் - 5 நிமிடபிளாஷ் சார்ஜ், 1000 கிமீ பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/byd-launches-luxury-ev-with-1000km-range-1787411846"></link>
            <id>https://news.lankasri.com/article/byd-launches-luxury-ev-with-1000km-range-1787411846</id>
            <summary type="text">BYD launches luxury EV With 1000km range: ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிலோமீற்றர் வரை ரேஞ்சு தரும் புதிய ஆடம்பர மின்சார காரை BYD அறிமுகப்படுத்தியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>BYD launches luxury EV With 1000km range: ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிலோமீற்றர் வரை ரேஞ்சு தரும் புதிய ஆடம்பர மின்சார காரை BYD அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>
</p><h2>

BYD Da Han</h2><p>சீனாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளர் BYD, தனது மிகப்பெரிய மற்றும் ஆடம்பரமான புதிய மின்சார செடான் காரை “Da Han” என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் Chengdu Auto Show-வில் வெளியிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1d40101-7acb-4067-890f-e801f848f9f2/26-6a89bd893850a.webp' /></p><p>
இந்த மாடலின் முக்கிய அம்சம், 5 நிமிடங்களில் 10 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்யும் Flash Charging தொழில்நுட்பம்.

வெறும் 9 நிமிடங்களில் முழுமையான சார்ஜ் (10 சதவீதம் முதல் 97 சதவீதம்) ஆகும்.</p><p> இதன் Blade Battery 102 kWh LFP (Lithium-Iron-Phosphate) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
Da Han மாடல் 1,008 கிமீ CLTC ரேஞ்ச் வழங்குகிறது. WLTP சைக்கிளில் இது சுமார் 750 கிமீ பயணிக்க முடியும். இதனால், உலகின் நீண்ட தூரம் செல்லக்கூடிய ஆடம்பர சொகுசு மின்சார கார்களில் இதுவும் ஒன்றாகும்.</p><p></p><p>காரின் 370 kW RWD (Rear-Wheel Drive) மற்றும் 570 kW AWD (All-Wheel Drive) என இரண்டு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>5.26 மீட்டர் நீளமும், 2,500 கிலோ எடையும் கொண்ட இந்த காரை இயக்க rear-wheel steering வசதி உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf914b87-6a7b-4f2f-9cbb-570877684809/26-6a89bd887f560.webp' /></p><p>
</p><h2>
உட்புற வடிவமைப்பு</h2><p>
உட்புறத்தில் பல டிஜிட்டல் திரைகள், 31 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், மற்றும் LiDAR unit போன்ற உயர் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன.

இது குடும்பங்களுக்கும், வணிக நிர்வாகிகளுக்கும் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஆடம்பர வசதிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னதாகா BYD Da Tang SUV மாடல் வெளியான 24 மணி நேரத்தில் 30,000 ஆர்டர்கள் பெறப்பட்டது. அதுபோல, Da Han மாடலும் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T15:14:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் வேலை லைக்ஸ் வாங்குவதல்ல: கௌதம் கம்பீர் விமர்சனங்களுக்கு பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gautam-gambhir-answer-for-criticism-1787409420"></link>
            <id>https://news.lankasri.com/article/gautam-gambhir-answer-for-criticism-1787409420</id>
            <summary type="text">டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தடுமாறவில்லை என தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறவில்லை; மாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தடுமாறவில்லை என தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறவில்லை; மாறாக ஒரு மாற்றுக் கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது என தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>இரண்டு முறை தொடரை முழுமையாக இழந்த&nbsp;இந்திய அணி </h2><p>

கௌதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் சொந்த மண்ணில் இந்திய அணி இரண்டு முறை தொடரை முழுமையாக இழந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13f566ba-ee29-40ee-9b79-b29cf9257a06/26-6a89b40fb871e.webp' />&nbsp;</p><p></p><p>

மேலும், முந்தைய சுழற்சியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவும் தவறியது.

இது இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.</p><p> 

இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள கம்பீர் (Gambhir),

"விமர்சனங்களா? கிண்ணங்களை வெல்வதுதான் என் பணி; Views மற்றும் Likes பெறுவதல்ல. அதில் மட்டுமே நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்; அதுவே எனக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வித்தியாசம்.</p><p> 

நாங்கள் பெரிய அளவில் தடுமாறவில்லை. தரவரிசைப் பட்டியல்கள் ஒரு பொருட்டல்ல. நாங்கள் ஒரு மாற்றுக் காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். சரியான திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/308f69b3-448a-4041-808a-cc0c2b49a069/26-6a89b4106d4e0.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T14:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் புதிய கலாச்சார மோதல் களமாக மாறிய ஒரு விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swimming-pool-heatwave-in-germany-1787405829"></link>
            <id>https://news.lankasri.com/article/swimming-pool-heatwave-in-germany-1787405829</id>
            <summary type="text">Swimming pool heatwave in germany: ஜேர்மனியில் நீச்சல் குளங்களை சுற்றியுள்ள அரசியல், ஒரு சூடான தேசிய விவாதமாக மாற வழிவகுத்துள்ளது.

ஜேர்மனியில் நீச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swimming pool heatwave in germany: ஜேர்மனியில் நீச்சல் குளங்களை சுற்றியுள்ள அரசியல், ஒரு சூடான தேசிய விவாதமாக மாற வழிவகுத்துள்ளது.
</p><p>
ஜேர்மனியில் நீச்சல் குளங்களை சுற்றியுள்ள பரபரப்பான சூழல், பாலினத்தை விட இனம் அல்லது அடையாளம் பற்றிய சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>நீச்சல் குளங்கள்</h2><p>
லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் ஹீத்தில் உள்ள பெண்களுக்கான பிரத்யேக குளத்தை பயன்படுத்துவது தொடர்பாக, நீச்சல் குளங்கள் குறித்த கலாச்சாரப் போர் திருநங்கை சமூகத்திற்கும், பாலினத்தை விமர்சிக்கும் பெண்களுக்கும் இடையே மோதலாக இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e06ea903-d3b0-48e1-becf-c3042152f847/26-6a89a6b14813c.webp' />&nbsp;</p><p></p><p>

அந்த வகையில் தற்போது ஜேர்மனியிலும் நீச்சல் குளங்கள் சார்ந்த சூடான விவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கு பாலினத்தை விட இனம் அல்லது அடையாளம் பற்றியதாக இருக்கிறது.</p><p>2026-ஆம் ஆண்டின் கடும் வெப்பம் நிறைந்த கோடைக்காலத்தில், வெப்பத்தில் இருந்து தப்பிக்க திறந்தவெளி நீச்சல் குளங்களை நோக்கி ஜேர்மனி மக்கள் பெருமளவில் படையெடுத்தனர். </p><p>

வெப்பநிலை உயர்ந்த அதே வேளையில், பதற்றமும் உச்சத்தை எட்டியது. அதற்கு காரணம் கறுப்பின சமூகத்தினர் தொடர்பிலான அறிவிப்புதான்.&nbsp;</p><h2>தற்காலிக திறந்தவெளி</h2><p> 

பெர்லினின் புகழ்பெற்ற வோல்க்ஸ்புனே திரையரங்கின் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக திறந்தவெளி நீச்சல் குளம், கோடை காலம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. </p><p>

ஆனால், கடந்த வாரம் ஒருநாள் மட்டும் 'கறுப்பின சமூகத்தினருக்கு மட்டுமே பிரத்யேகமாக திறந்திருக்கும்' என்று அறிவித்து, சிறுபான்மை இனத்தவரின் பங்கேற்பை அதிகரிக்க அதன் நிர்வாகிகள் முடிவு செய்தபோது, அதன் விளைவுகள் பெரும் வெடிப்பை ஏற்படுத்தின. </p><p>

இது ஒரு சூடான தேசிய விவாதமாக வெடிக்க வழிவகுக்க இடதுசாரிகளும், வலதுசாரிகளும் கட்டுப்பாட்டிற்காக ஒரு கடுமையான போரில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59e2695a-fd52-40a4-98e6-f1586abf904d/26-6a89a6b20dcd7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T14:19:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாமில் 2.8 மில்லியன் டொலர் ஜாக்பாட் வென்ற நபர்., இது 1103-வது வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vietnam-man-wins-2-8-mn-dollar-vietlott-jackpot-1787408044"></link>
            <id>https://news.lankasri.com/article/vietnam-man-wins-2-8-mn-dollar-vietlott-jackpot-1787408044</id>
            <summary type="text">Vietnam man wins 2.8 million dollar lottery: வியட்நாமில் ஒரு அதிர்ஷடசாலி நபர் 2.8 மில்லியன் டொலர் ஜாக்பாட் வென்றுள்ளார்.

Vietlott லொட்டரிவியட்நாமின...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vietnam man wins 2.8 million dollar lottery: வியட்நாமில் ஒரு அதிர்ஷடசாலி நபர் 2.8 மில்லியன் டொலர் ஜாக்பாட் வென்றுள்ளார்.
</p><h2>
Vietlott லொட்டரி</h2><p>வியட்நாமின் Quang Tri மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், கடந்த 10 ஆண்டுகளாக Vietlott லொட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார்.
</p><p>
சமீபத்தில் அவர் Power 6/55 Jackpot 1 லொட்டரியில் வெற்றி பெற்று, 71.8 பில்லியன் வியட்நாம் டாங் (சுமார் $2.8 மில்லியன்) பரிசை பெற்றார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0b6658d-b608-4bce-bbae-914e11b7cf61/26-6a89b039e5a8b.webp' /></p><h2>1103-வது வெற்றி</h2><p>இந்த வெற்றி அவரது 1,103-வது பரிசு ஆகும். இதற்கு முன்பு அவர் பல சிறிய பரிசுகளை வென்றிருந்தார். அதில் மிகப்பெரிய வெற்றிகள் என்றால் 40 மில்லியன் டாங் ($1,536) மற்றும் 10 மில்லியன் டாங் ($384) ஆகும்.
</p><p>
வெற்றியாளர் H. என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது Dong Nai நகரில் உள்ள தொழிற்சாலை பகுதியில் வேலை செய்து வருகிறார்.</p><p> லொட்டரி சீட்டுகளை அவர் தினமும் 4 முதல் 5 வாங்குவதாகவும், பெரும்பாலும் SMS மூலம் சிஸ்டம் தானாக தேர்ந்தெடுத்த எண்களை பயன்படுத்துவதாகவும் கூறினார்.

இந்த முறை வெற்றி பெற்ற எண்களும் சிஸ்டம் தானாக உருவாக்கியவை.</p><p>ஆரம்பத்தில் அவர் வெற்றி செய்தியை கவனிக்கவில்லை. அடுத்த நாள் Vietlott நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தபோது தான் அவர் ஜாக்பாட் வென்றதை அறிந்தார்.</p><p></p><p>

விதிமுறைகளின்படி, அவர் 7.1 பில்லியன் டாங் ($272,488) வரி செலுத்த வேண்டும். வரி கழித்த பின், அவர் 64.7 பில்லியன் டாங் ($2.5 மில்லியன்) பெறுகிறார்.

வெற்றி செய்தியை அறிந்ததும், அவர் உடனே தனது மனைவியிடம் தெரிவித்தார்.</p><p> முதலில் நம்ப முடியாமல் இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்தபின் தான் குடும்பம் மகிழ்ச்சியடைந்தது.
</p><p>
“நான் என் வாழ்க்கையை வழக்கம்போலவே தொடர விரும்புகிறேன். பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து என் மனைவியுடன் ஆலோசித்து முடிவு செய்வேன்.” என அந்த நபர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T14:18:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகள் தனியுரிமை விவகாரம் - ரூ.3,828 கோடி செலுத்த ஒப்புக்கொண்ட டிக்டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tiktok-to-pay-3828-cr-settlement-resolve-case-us-1787405951"></link>
            <id>https://news.lankasri.com/article/tiktok-to-pay-3828-cr-settlement-resolve-case-us-1787405951</id>
            <summary type="text">குழந்தைகள் தனியுரிமை விவகாரத்தில், டிக்டாக் அமெரிக்க நீதித்துறைக்கு ரூ.3,828 கோடி செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. 

ரூ.3,828 கோடி செலுத்த உள்ள டிக்டாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் தனியுரிமை விவகாரத்தில், டிக்டாக் அமெரிக்க நீதித்துறைக்கு ரூ.3,828 கோடி செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. </p><h3>

ரூ.3,828 கோடி செலுத்த உள்ள டிக்டாக்</h3><p>

குழந்தைகளின் தனியுரிமை மற்றும் சமூக வலைதள பாதுகாப்பு தொடர்பாக சமூகவலைதள நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88168949-2fa5-4c34-b079-542457119607/26-6a89a6812b441.webp' /></p><p>

இதே போல், 2024 ஆம் ஆண்டில் டிக்டாக்கின் தாய் நிறுவனமாக பைட் டான்ஸ், குழந்தைகளின் இணையதள தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை (COPPA) மீறியதாக அமெரிக்க நீதித்துறை அதன் மீது வழக்கு தொடர்ந்தது. </p><p>

அந்த வழக்கில் 13 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் தனிபட்ட தகவல்களை பெற்றோர் அனுமதியின்றி சேகரித்ததாகவும், குழந்தைகளின்கணக்குகளை நீக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்தும் நீக்கப்படவில்லை என குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

தற்போது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், டிக்டாக் செயலி அமெரிக்க நீதித்துறைக்கு 400 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.3,828 கோடி) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

இதில், ரூ2,871 கோடியை உடனடியாகவும், ரூ957 கோடியை மியூசிக்கலி செயலி மீதான முந்தைய உத்தரவை ரத்து செய்த பின்னரும் செலுத்துவதாக தெரிவித்துள்ளது. </p><p>
 
முன்னதாக COPPA விதிமீறலுக்காக 2019 ஆம் ஆண்டில் கூகிளின் யூடியுப் 170 மில்லியன் டொலர் செலுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:39:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் 75 நாடுகளுக்கான விசா தடை நீதிமன்றத்தில் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-judge-strikes-down-trumps-visa-ban-1787404361"></link>
            <id>https://news.lankasri.com/article/us-judge-strikes-down-trumps-visa-ban-1787404361</id>
            <summary type="text">US judge strikes down Trump’s visa ban: டிரம்பின் 75 நாடுகளுக்கான விசா தடை நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்காவின் Federal District Court...</summary>
            <content type="html"><![CDATA[<p>US judge strikes down Trump’s visa ban: டிரம்பின் 75 நாடுகளுக்கான விசா தடை நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.
</p><p>
அமெரிக்காவின் Federal District Court, Manhattan நீதிபதி Jeannette Vargas, டிரம்ப் நிர்வாகம் விதித்த 75 நாடுகளுக்கான புலம்பெயர்ந்தோர் விசா தடை, சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6532f77a-f41a-4c44-920b-32c1ad16de8a/26-6a89a04be7da5.webp' /></p><p>இந்த தடை, 2026 ஜனவரியில் அமுல்படுத்தப்பட்டது. உலகின் சுமார் 40 சதவீத நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தோருக்கான விசாக்கள் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டன.</p><p>இதில் பிரேசில், கொலம்பியா, எகிப்து, ஹைட்டி, சோமாலியா, ரஷ்யா போன்ற நாடுகள் அடங்கும்.</p><p>அந்த நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர் மக்கள் அரசு நலத்திட்டங்களை அதிகம் பயன்படுத்துவார்கள் என காரணம் கூறப்பட்டது.
</p><p></p><p>ஆனால், சட்டப்படி, ஒருவரை “Public Charge” (அரசு உதவியை சார்ந்தவர்) என நிராகரிக்க, அவரின் நிதிநிலை, வயது, உடல்நலம், திறமைகள், குடும்ப சூழல் ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும். நாட்டின் அடிப்படையில் பொதுவாக நிராகரிப்பது சட்டத்திற்கு முரணானது என நீதிபதி தெரிவித்தார்.
</p><p>
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, அமெரிக்க தூதரக அதிகாரிகள் விண்ணப்பதாரர்கள் தங்கள் நிதி நிலையை நிரூபித்தாலும், “விசா மறுக்கப்பட வேண்டும்” என உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால், குடும்ப இணைப்பு மற்றும் வேலை வாய்ப்பு அடிப்படையிலான நிரந்தர குடியேற்ற விசாக்கள் பாதிக்கப்பட்டன.</p><p>இந்த தடை, 1965-ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட தேசிய அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டத்திற்கும் முரணானது என நீதிபதி கூறினார்.</p><p></p><p>வழக்கு தொடர்ந்தவர்கள், அமெரிக்க குடிமக்கள். இவர்களின் கானா, ஜமைக்கா, குவாத்தமாலா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் உள்ள உறவுகள் விசா மறுக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், கொலம்பியாவிலிருந்து வேலை அடிப்படையிலான விண்ணப்பதாரர்களும் பாதிக்கப்பட்டனர்.</p><p>

இந்த தீர்ப்பு, டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைக்கு பெரிய பின்னடைவு என கருதப்படுகிறது. நிர்வாகம் இதற்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T13:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த ஸ்டார்க்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mitchell-starc-surpassed-sri-lankan-legend-vaas-1787402243"></link>
            <id>https://news.lankasri.com/article/mitchell-starc-surpassed-sri-lankan-legend-vaas-1787402243</id>
            <summary type="text">சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 

அவுஸ்திரேலியாவின் மிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.</p><p> 

அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.&nbsp;</p><h2>மிட்செல் ஸ்டார்க்</h2><p>

வங்காளதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 12 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b700795-b0ba-4965-aaf8-3fedee0ee9a7/26-6a89996401d56.webp' /></p><p></p><p>
டெஸ்ட்டில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது 19-வது முறையாகும். தான் வீசிய 22 பந்துகளிலேயே அவர் 5வது விக்கெட்டை வீழ்த்தினார்.
</p><p>
இதன்மூலம் அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) படைத்தார். </p><p>

அத்துடன் இலங்கை ஜாம்பவான் சமிந்த வாஸினை பின்னுத்தள்ளினார். சமிந்த வாஸ் 761 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில், ஸ்டார்க் 767 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். </p><p>

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் (Wasim Akram) 916 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd4cc7b1-ec8c-4d3f-aaa6-c04befa5a1f1/26-6a8998066e4dc.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T12:35:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு ஐபோனால் ஒரு குடும்பமே பலியான பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/maharashtra-teen-and-parents-dies-in-iphone-issue-1787402007"></link>
            <id>https://news.lankasri.com/article/maharashtra-teen-and-parents-dies-in-iphone-issue-1787402007</id>
            <summary type="text">Entire family lost their lives due to issues surrounding installment payments for an iPhone: ஐபோனுக்கு தவணை கட்டும் விவகாரத்தால் ஒரு குடும்பமே பலியான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Entire family lost their lives due to issues surrounding installment payments for an iPhone: ஐபோனுக்கு தவணை கட்டும் விவகாரத்தால் ஒரு குடும்பமே பலியான பயங்கரம் ஒன்று நிகழ்ந்துள்ளது.</p><p>


இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள சத்ரபதி சாம்பாஜிநகர் என்னுமிடத்தில் தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்த குணால் (18) என்னும் இளைஞர் ஐபோன் ஒன்றை வாங்கியுள்ளார்.
</p><h3>
ஒரு குடும்பமே மாண்ட பயங்கரம்</h3><p>

தான் வாங்கிய ஐபோனுக்கு மாதந்தோறும் தவணை செலுத்த பணம் கொடுக்குமாறு தன் குடும்பத்தினரை கேட்டுள்ளார் குணால்.
</p><p>
அதனால் சமீபத்தில் வீட்டில் வாக்குவாதம் உருவாகியுள்ளது. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய குணால், அருகிலுள்ள மலை ஒன்றின் உச்சியில் ஏறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38763ec7-e520-4350-af50-6c67ff528d2b/26-6a899718483e9.webp' /></p><p>
அவரைப் பின்தொடர்ந்த அவரது தந்தையான முரளிதரும், தாய் சங்கீதாவும், கிராம மக்களும், மலையிலிருந்து கீழே இறங்கி வருமாறு குணாலை கெஞ்சியுள்ளனர்.
</p><p>
அவரோ, வரமாட்டேன் என அடம்பிடித்ததுடன், தான் சாகவிரும்புவதாகக் கூறியுள்ளார்.

சுமார் மூன்று மணி நேரமாக பலர் அவரிடம் பல விதத்தில் கீழே இறங்குமாறு கோரியும் காலை 10.00 மணிக்கு மலையில் ஏறியவர் மதியம் 1.00 மணி வரை அடம்பிடித்துக்கொண்டிருக்க, அவரது தந்தை அவரைக் கீழே வருமாறு கையைப் பிடித்து இழுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, குணாலும் அவரது தந்தையான முரளிதரும் மலை உச்சியின் மறுபக்கம் இருந்த பள்ளத்தில் விழுந்துவிட்டார்கள்.</p><p>

கணவரும் மகனும் பள்ளத்தில் விழுந்ததைக் கண்ட சங்கீதாவும் பள்ளத்தில் குதித்ததாகக் கூறப்படுகிறது. மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்கள்.</p><p>இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஏராளமான மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T12:33:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புத்த மடாலயம் மீது குண்டு வீசிய மியான்மர் ராணுவம் - 14 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/14-dies-in-myanmar-army-bombing-buddhist-monastery-1787400979"></link>
            <id>https://news.lankasri.com/article/14-dies-in-myanmar-army-bombing-buddhist-monastery-1787400979</id>
            <summary type="text">புத்த மடாலயம் மீது மியான்மர் ராணுவம் குண்டு வீசியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

புத்த மடாலயம் மீது குண்டு வீச்சு 

மியான்மரில் 2021 ஆம் ஆண்டில் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்த மடாலயம் மீது மியான்மர் ராணுவம் குண்டு வீசியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h3>

புத்த மடாலயம் மீது குண்டு வீச்சு</h3><p> 

மியான்மரில் 2021 ஆம் ஆண்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து அவ்வப்போது ராணுவத்திற்கும் ஜனநாயக ஆதரவு அமைப்புகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
</p><p>
இதன் காரணமாக அவ்வப்போது பொதுமக்கள் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97e7fb7a-a34b-45a7-8755-8b869de753f1/26-6a899315ea976.webp' /></p><p>
மியான்மரின் மியாங் நகரிலுள்ள ஸ்வெல் லே ஓ கிராமத்தில் புத்த மடாலயம் ஒன்று உள்ளது. அதில் ஒரு வார கால தியான நிகழ்ச்சி நடைபெற்று வந்ததால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். </p><p>

நேற்று காலை ராணுவ விமானம் ஒன்று 15 நிமிட இடைவெளியில் 2 குண்டுகளை மடாலயத்தில் வீசியுள்ளது.&nbsp;</p><p></p><p>

இதில், 3 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b640722-30e0-4f00-b159-f9ec984f213a/26-6a89931545272.webp' /></p><p> 

பாதிக்கப்பட்டவர்களின் உடல்களைத் தகனம் செய்த பிறகு, குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்குத் தப்பிச் சென்றனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T12:16:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் விமான நிறுவன வேலை நிறுத்தங்கள்... பணிந்த நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/airbus-allow-staffs-keep-remote-work-after-strike-1787397902"></link>
            <id>https://news.lankasri.com/article/airbus-allow-staffs-keep-remote-work-after-strike-1787397902</id>
            <summary type="text">Airbus lets staff keep working from home after strikes: வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்ய அனுமதிக்கக் கோரி பணியாளர்கள் மேற்கொண்ட தொடர் வேலைநிறுத்தங்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Airbus lets staff keep working from home after strikes: வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்ய அனுமதிக்கக் கோரி பணியாளர்கள் மேற்கொண்ட தொடர் வேலைநிறுத்தங்களுக்குப் பணிந்தது ஏர்பஸ் நிறுவனம்.
</p><p>

பிரான்ஸ் முதலான சில நாடுகளில், ஏர்பஸ் விமான நிறுவன பணியாளர்கள் வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்வதற்கு எதிராக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29ed7862-7375-4998-900f-07ec02b4fb6d/26-6a898710dfeef.webp' /></p><h3>

ஏர்பஸ் நிறுவன வேலை நிறுத்தங்கள்...
</h3><p>
ஏர்பஸ் விமான நிறுவன தலைமை நிர்வாகியான Guillaume Faury என்பவர், வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்வது கோவிட் காலகட்டத்தில் அவசியமான ஒன்றாக இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3525b7e-a143-477b-a3e4-bd955108e187/26-6a8987103291b.webp' /></p><p>
ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது என்று கூறி, அனைவரும் மீண்டும் அலுவலகங்களுக்குத் திரும்பவேண்டும் என்று ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.</p><p>

ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் ஏர்பஸ் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டார்கள்.&nbsp;</p><p></p><p>
அதனால் பணிகள் பாதிக்கப்படவே, இனி பணியாளர்கள் வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தவண்ணம் வேலை செய்யலாம் என ஏர்பஸ் மேலாளர்கள் தற்போது தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:25:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பொலிஸ் வாகனம் மோதி A66 சாலையில் விபத்து: பலர் உயிரிழந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-a66-road-police-vehicle-crash-1787396260"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-a66-road-police-vehicle-crash-1787396260</id>
            <summary type="text">Uk A66 road police vehicle crash: பிரித்தானியாவின் A66 சாலையில் பொலிஸ் வாகனம் மோதிய சம்பவத்தில் பலர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. A6...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uk A66 road police vehicle crash: பிரித்தானியாவின் A66 சாலையில் பொலிஸ் வாகனம் மோதிய சம்பவத்தில் பலர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> A66 சாலை விபத்து</h2><p>
பிரித்தானியாவின் மிட்வோர்ஸ்பரோ அருகே A66 சாலையில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் காவல் வாகனமும், வோக்ஸ்வாகன் பாசாட்(Volkswagen Passat) காரும் மோதிக் கொண்டது.</p><p> இந்த சம்பவம் சவுத் பேங்க் பகுதியில் அதிகாலை சுமார் 3.39 மணிக்கு நடந்த நிலையில் இதில் பலர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> விபத்தை தொடர்ந்து அவசர கால மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை முன்னெடுத்ததாக கிளீவ்லேண்ட் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><p> விபத்தை தொடர்ந்து நோர்மான்பி சாலைக்கும் சர்ச் லேன் பகுதிக்கும் இடைப்பட்ட A66 சாலை முழுமையாக அடைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4a62a5d-de0f-45db-9996-3f4d4f661167/26-6a8980a54ff02.webp' /></p><p></p><p> மீட்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு அனைவரது உயிரையும் காப்பாற்ற தீவிரமாக முயற்சி செய்த நிலையில் பல நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்ட்டுள்ளனர்.</p><p> தற்போது உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> இருப்பினும் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை காவல்துறையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-22T10:57:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரியால் கொடுமைக்கார சித்தி என அழைக்கப்பட்ட ராணி கமீலா: வியப்பூட்டும் ஒரு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-blames-queen-camilla-cruel-stepmother-1787381755"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-blames-queen-camilla-cruel-stepmother-1787381755</id>
            <summary type="text">Queen Camilla will be key figure in Harry and Meghan&#039;s return to royal family: ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்குத் திரும்புவதில் ராணி கமீலா ஒரு முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Queen Camilla will be key figure in Harry and Meghan's return to royal family: ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்குத் திரும்புவதில் ராணி கமீலா ஒரு முக்கியப் பங்கு வகிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>

பிரித்தானிய இளவரசரான ஹரி ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியபோது, தன் தந்தையின் இரண்டாவது மனைவியான ராணி கமீலாவை கொடுமைக்கார சித்தி என விமர்சித்திருந்தார்.
</p><p>
ஆனால், அந்த ராணி கமீலா தொடர்பில் ஒரு வியப்பூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.
</p><h3>
ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறிய ஹரி
</h3><p>
இளவரசர் ஹரி ராஜ குடும்ப மரபை மீறி, விவாகரத்தான அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கலை திருமணம் செய்தது, மற்றும் மேகனால் ராஜ குடும்பத்தில் சமாளிக்க முடியாமல் போனதால் உருவான பிரச்சினைகள், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேற வழிவகுத்தன.
</p><p>
பின்னர் ராஜ குடும்பத்தை மட்டுமல்ல, பிரித்தானியாவை விட்டே வெளியேறி மனைவியின் நாடாகிய அமெரிக்காவில் குடியேறினார் ஹரி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4846de5f-459e-4be5-95d5-74d5ea616544/26-6a8947fce62cb.webp' /></p><p>
இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் ஹரி தன் குடும்பத்துடன் பிரித்தானியா திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கொடுமைக்கார சித்தி என அழைக்கப்பட்ட ராணி கமீலா

விடயம் என்னவென்றால், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறியதுடன் நிற்கவில்லை. </p><p>ராஜ குடும்பத்தைப் பற்றி மோசமாக விமர்சித்தனர், தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் கொடுத்தனர், அதை உலகமே பார்த்தது.
</p><p>
அது போதாதென்று, ஹரி தன் பங்குக்கு ‘ஸ்பேர்’ என்னும் பெயரில் ஒரு சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
</p><p>
அதில் தன் அண்ணன் வில்லியம், அண்ணி கேட் உட்பட அனைவரையும் மோசமாக விமர்சித்திருந்தார் ஹரி.&nbsp;</p><p></p><p>
குறிப்பாக, தன் தந்தையின் இரண்டாவது மனைவியான கமீலாவைக் குறித்து, கமீலா கொடுமைக்கார சித்தியாக இருப்பார் என்றும், ஆகவே அவரை திருமணம் செய்யவேண்டாம் என தான் தன் தந்தையான மன்னர் சார்லசைக் கெஞ்சியதாகவும் குறிப்பிட்டிருந்தார் ஹரி.</p><h3>

வியப்பூட்டும் ஒரு தகவல்
</h3><p>
விடயம் என்னவென்றால், இப்போது ஹரி, மேகன் தம்பதியர் தங்கள் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்ப முடிவு செய்துள்ள நிலையில், அவர்களை மீண்டும் ராஜ குடும்பத்துக்கு அறிமுகம் செய்வதில் கமீலா முக்கியப் பங்காற்ற இருப்பதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a529847c-2194-4262-8c9d-0b0e6b389cae/26-6a8947fd96614.webp' /></p><p>

கமீலா தன் முன்னாள் கணவரான ஆண்ட்ரூ பார்க்கரைப் பிரிந்தாலும், தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இன்னமும் நெருக்கமான உறவு வைத்துள்ளார்.</p><p>

ஆக, கமீலா குடும்பம் என்னும் விடயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். </p><p>ஆக, மன்னர் சார்லஸ், ஹரியின் பிள்ளைகளான தன் பேரப்பிள்ளைகளுக்காக ஏங்கும் நிலையில், மீண்டும் ஹரியை தங்கள் குடும்பத்துக்குள் அனுமதிக்க மன்னரைத் தூண்டியதே கமீலாவின் அமைதியை ஏற்படுத்தும் வகையிலான தாக்கம்தான் என்கிறார்கள் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர்.
</p><p>
அதாவது, ஹரி தன்னை கொடுமைக்கார சித்தி என விமர்சித்தாலும், அதை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், ஹரி மீண்டும் ராஜ குடும்பத்தில் இணைவது தன் கணவரான மன்னர் சார்லசுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமானால், அதை செய்ய அவர் தயாராக உள்ளதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:29:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[34 ஆண்டுகளுக்கு முன் மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமான நபர்கள்: புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bodies-found-of-34-years-ago-missing-hikers-1787393509"></link>
            <id>https://news.lankasri.com/article/bodies-found-of-34-years-ago-missing-hikers-1787393509</id>
            <summary type="text">Bodies of two hikers missing for years, found after Swiss glacier melts: பல ஆண்டுகளுக்கு முன் சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமான இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bodies of two hikers missing for years, found after Swiss glacier melts: பல ஆண்டுகளுக்கு முன் சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமான இரண்டு பேருடைய உடல்கள் பனிப்பாறைகள் உருகியதால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p> 

சுவிட்சர்லாந்துக்கு சமீபத்தில் மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவர், லோசான் நகருக்கு தெற்கே அமைந்துள்ள Trift பனிப்பாறையில் இரண்டு உடல்களைக் கண்டு, அதிகாரிகளுக்கு தகவலளித்துள்ளார்.
</p><h3>
தசாப்தப் பின்னணி</h3><p>

உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், அந்த உடல்களை மீட்டு, அவற்றை அடையாளம் காண்பதற்காக DNA பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33113baa-cec0-4c19-b20a-dbcd4d6c5a3c/26-6a8975e73302d.webp' /></p><p>
அப்போது, அந்த உடல்கள் பெல்ஜியம் நாட்டவர்கள் இருவரின் உடல்கள் என்பது தெரியவந்தது.
</p><p>
அதாவது, 1992ஆம் ஆண்டு, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமாகியுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அவர்களுடைய உடல்கள் பனியில் புதைந்துபோக, சமீபத்தில் பனிப்பாறைகள் உருகியதைத் தொடர்ந்து 34 ஆண்டுகளுக்குப் பின், அந்த உடல்கள் வெளியே தெரியத் துவங்கியுள்ளன.
</p><p>
விடயம் என்னவென்றால், இப்படி பனிப்பாறைகள் உருகுவதால், பல ஆண்டுகளுக்கு முன் காணாமல்போனவர்களின் உடல்கள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது இதுதான் முதல்முறையாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:12:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவிற்கு KN-30 எனும் மிகப்பெரிய ஏவுகணையை வழங்கிய வட கொரியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-sends-kn-30-missiles-to-russia-1787393125"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-sends-kn-30-missiles-to-russia-1787393125</id>
            <summary type="text">North Korea delivers Russia KN-30 Ultra-Heavy Ballistic Missile: ரஷ்யாவிற்கு KN-30 எனும் மிகப்பெரிய ஏவுகணையை வட கொரியா வழங்கியுள்ளது.

உக்ரேனிய உளவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>North Korea delivers Russia KN-30 Ultra-Heavy Ballistic Missile: ரஷ்யாவிற்கு KN-30 எனும் மிகப்பெரிய ஏவுகணையை வட கொரியா வழங்கியுள்ளது.</p><p>

உக்ரேனிய உளவுத்துறை தகவலின்படி, ரஷ்யா தனது போர்த் தேவைகளுக்காக வட கொரியாவிலிருந்து KN-30 எனப்படும் புதிய வகை மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை பெற்றுள்ளது.</p><p></p><p>

இதற்கு முன்பு ரஷ்யா KN-23 மற்றும் KN-24 எனும் குறுகிய தூர ஏவுகணைகளை ஜூலை மாதத்தில் பெற்றிருந்தது.
</p><p>
இந்த KN-30 ஏவுகணை 2,500 கிலோ எடையுடைய வெடிகுண்டை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இது ரஷ்யாவின் முக்கிய ஏவுகணையான Iskander-M-ஐ விட ஐந்து மடங்கு அதிக சக்தி கொண்டதாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a64c1e-5209-4363-9f07-9ef6f2235481/26-6a8974677a98e.webp' /></p><p>உக்ரைன் தரப்பின் தகவலின்படி, சுமார் 90 வட கொரிய இராணுவ வீரர்கள் ரஷ்யாவின் Voronezh Oblast பகுதியில் KN-30 ஏவுகணை ஏவுதளங்களை இயக்குவதற்காக அனுப்பப்பட்டுள்ளனர். </p><p>இதனால், இந்த ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா அல்லது வட கொரியாவின் நேரடி பங்களிப்பா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
</p><p>
KN-30-இன் மிகப்பெரிய வெடிகுண்டு மற்றும் உட்புகும் திறன் காரணமாக, உக்ரைன் படைகள் அமைத்துள்ள கோட்டைகளை உடைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
</p><p>
இந்த புதிய ஏவுகணை ஒப்பந்தம், ரஷ்யா தனது போர்த் தேவைகளில் வட கொரியாவின் ஆயுதங்களின் மீது அதிகமாக நம்பிக்கை வைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T10:02:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[21 இந்திய மாலுமிகள் இந்த கப்பலை தாக்கிய ஈரான்: வெளியான வீடியோ ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-seafarers-caught-in-hormuz-1787391527"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-seafarers-caught-in-hormuz-1787391527</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தியில் 21 இந்திய மாலுமிகள் இருந்த கப்பலை ஈரானிய புரட்சிகர காவல் படை சுற்றி வளைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. கப்பலை சுற்றி வளைத்த ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தியில் 21 இந்திய மாலுமிகள் இருந்த கப்பலை ஈரானிய புரட்சிகர காவல் படை சுற்றி வளைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.</p><h2> கப்பலை சுற்றி வளைத்த ஈரானியப் படைகள்</h2><p>அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி மிகவும் பதற்றமான இடமாக விளங்கி வருகிறது.</p><p> இப்பகுதியில் கப்பல்களை இயக்கும் மாலுமிகள் மிகுந்த அச்ச உணர்வுடன் தான் செயல்பட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36752e50-291f-4f35-82ed-1dc03f112d73/26-6a896e28855de.webp' /></p><p>இந்நிலையில் இப்பகுதியில் நிலவிவரும் கடுமையான ஆபத்துகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் ஏப்ரல் 22ம் திகதி நடந்த சம்பவம் தொடர்பான பழைய வீடியோ காட்சி ஒன்றை இந்திய ஃபார்வர்ட் சீமென்ஸ் யூனியன்(FSUI) வெளியிட்டுள்ளது.</p><p> பனாமா கொடி ஏந்திய இந்த கப்பலில் கிட்டத்தட்ட 21 மாலுமிகள் பணியாற்றி இருந்தனர்.</p><p> மேலும் வெளியான அந்த வீடியோவில், கப்பலை ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை சேர்ந்த கப்பல்கள் சூழ்ந்து தாக்குதல் நடத்தியதை பார்க்க முடிகிறது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">On 22 April, in the Strait of Hormuz, a vessel carrying 22 crew members, of whom 21 were Indian, faced a deeply distressing situation. <br><br>These were not pirates. <br>They were naval forces of the IRGC. <br><br>Videos show several small boats surrounding the vessel, the intensity of the… <a href="https://t.co/5UgxtZETSd">pic.twitter.com/5UgxtZETSd</a></p>&mdash; FSUI (@FSUIINDIA) <a href="https://x.com/FSUIINDIA/status/2090435030451634521?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p> அத்துடன் ஈரானிய படகுகளில் இருந்து ராக்கெட் மூலம் இயக்கப்படும் குண்டுகள் வணிக கப்பல் மீது வீசப்பட்டதும், மாலுமிகள் உடனே கப்பலுக்குள் பாதுகாப்பான இடங்களில் பதுங்குவதும் அதில் பதிவாகியுள்ளது.</p><p> அதே சமயம் கப்பலில் இருந்த 21 இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக&nbsp; இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம்&nbsp; உறுதிப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T09:39:05+00:00</updated>
        </entry>
    </feed>
