<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-18T14:25:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்குரிய தீவுக்கு புடின் முதல் பயணம்: எதிர்ப்பைத் தொடர்ந்து..ஜப்பானியத் தூதர் வரவழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-ambassador-summons-by-russia-1787061027"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-ambassador-summons-by-russia-1787061027</id>
            <summary type="text">Japan ambassador summons by russia: குரில் தீவுகள் தொடர்பிலான சர்ச்சையைத் தொடர்ந்து, ஜப்பானியத் தூதர் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Japan ambassador summons by russia: குரில் தீவுகள் தொடர்பிலான சர்ச்சையைத் தொடர்ந்து, ஜப்பானியத் தூதர் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார்.</p><p> 

விளாடிமிர் புடினின் சர்ச்சைக்குரிய குரில் தீவுகள் பயணத்திற்கு எழுந்த கண்டனத்தைத் தொடர்ந்து, ஜப்பானியத் தூதர் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார்.&nbsp;</p><h2>குரில் தீவுகளுக்கு&nbsp;பயணம் </h2><p>

 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) சர்ச்சைக்குரிய குரில் தீவுகளுக்கு முதன்முறையாக பயணம் மேற்கொண்டார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b51271d-5ad0-439d-a8fd-01fdad0c279e/26-6a84638bcb059.webp' /></p><p></p><p>
இந்தப் பயணத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜப்பானிய பிரதமர் சனாயே டகாயிச்சி கண்டித்தார். </p><p>

மேலும், தலைநகர் டோக்கியோவில் உள்ள ரஷ்யத் தூதரை வரவழைத்தார்.

அதன் விளைவாக, ஜப்பானுக்கு பதிலளிக்கும் விதமாக தனது எதிர்ப்பின் மூலம் மரியாதைக்குரிய வரம்பை மீறிவிட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம்சாட்டினார்.&nbsp;</p><h2>ஜப்பானியத் தூதர்&nbsp;</h2><p>

இந்த நிலையில், மாஸ்கோவில் உள்ள ஜப்பானியத் தூதர் அகிரா முட்டோவை வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைத்துள்ளார் செர்ஜி லாவ்ரோவ்.</p><p>

 Interfax செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, செவ்வாய்க்கிழமையன்று மாஸ்கோவில் உள்ள வெளியுறவு அமைச்சகக் கட்டிடத்திற்குள் சுமார் 20 நிமிடங்கள் இருந்த முட்டோ, அங்கிருந்து வெளியேறும்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். </p><p>

அதே சமயம், தகாய்ச்சி வெளியிட்ட ரஷ்ய-எதிர்ப்பு கருத்துகள் தொடர்பாக முட்டோ வரவழைக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca4c8c36-fbf6-45e5-a99f-af722d14f8c0/26-6a84638cbaab0.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T13:49:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்மோஸ் நீரிணை இனி அமெரிக்காவின் பகுதி - வரைபடத்தை வெளியிட்ட ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-shares-image-hormuz-as-new-us-territory-1787059073"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-shares-image-hormuz-as-new-us-territory-1787059073</id>
            <summary type="text">trump declare strait of hormuz as us territory : ஹார்மோஸ் நீரிணை அமெரிக்காவின் புதிய பகுதி என குறிப்பிடும் ஒரு வரைபடத்தை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>trump declare strait of hormuz as us territory : ஹார்மோஸ் நீரிணை அமெரிக்காவின் புதிய பகுதி என குறிப்பிடும் ஒரு வரைபடத்தை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.</p><h3> 

ஹார்மோஸை அமெரிக்காவின் பகுதியாக அறிவித்த ட்ரம்ப்</h3><p>

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பின்னர், உலகின் 20% எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/123d8e0f-2e81-4920-80c8-24d70f548f84/26-6a845b82b4381.webp' /></p><p>
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதன் பின்னர், தனது நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியது.</p><p>

அதன் பின்னர், அமெரிக்காவும் தனது கப்பல்கள் மூலம் ஹார்மோஸ் நீரிணையை முற்றுகையிட்டு அதனை கட்டுப்படுத்த நினைத்தது.&nbsp;</p><p></p><p> 

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதிமொழிகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரான் சபாநாயகர் முகமது காலிபாஃப் தெரிவித்துள்ளார். </p><p> 

நீரிணையை திறக்க அமெரிக்கக் கடற்படை முற்றுகையை நீக்க வேண்டும், எண்ணெய் மீதான தடைகளை அகற்ற வேண்டும், மேலும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aedb397-96e1-4cc6-8761-516d2a379b6d/26-6a845b836592d.webp' /></p><p>

இந்த நீர்வழித்தடத்தில் கடற்கரைகளைக் கொண்டுள்ள ஈரான் மற்றும் ஓமன், கப்பல் போக்குவரத்துக்கு கட்டணம் விதிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.&nbsp;&nbsp;</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117116198386080523/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>

இந்நிலையில், ஹார்மோஸ் நீரிணை அமெரிக்காவின் புதிய பகுதி என குறிப்பிடும் ஒரு வரைபடத்தை 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T13:18:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலவச பஸ் பாஸ் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-pm-announced-free-bus-pass-for-disable-peoples-1787056207"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-pm-announced-free-bus-pass-for-disable-peoples-1787056207</id>
            <summary type="text">Prime Minister has announced that disabled people will be entitled to free bus from next year: அடுத்த ஆண்டு முதல் இங்கிலாந்து முழுவதும் மாற்றுத்திறனாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prime Minister has announced that disabled people will be entitled to free bus from next year: அடுத்த ஆண்டு முதல் இங்கிலாந்து முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பேருந்துப் பயணம் என பிரதமர் ஆன்டி பர்னாம் அறிவிப்பு.
</p><p>

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
</p><h3>
இலவச பஸ் பாஸ் தொடர்பில் ஒரு செய்தி</h3><p>

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், இங்கிலாந்து முழுவதும் மாற்றுத்திறனாளிகள் 24 மணி நேரமும் இலவசப் பேருந்துப் பயணத்திற்குத் தகுதி பெறுவார்கள் என பிரதமர் ஆன்டி பர்னாம் அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45f76d79-34f7-4db0-b1ac-9079762fe999/26-6a845050946c3.webp' /></p><p>
அன்றாட செலவுகள் ஏற்படுத்தும் அழுத்தங்களைக் குறைப்பதற்கான பிரதமரின் சமீபத்திய முயற்சிகளின் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பாஸ்களில் தற்போது உள்ள கால வரம்புகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நீக்கப்பட உள்ளன.
</p><p>
தற்போது, இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பாஸ்கள், வார நாட்களில், காலை 9.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
</p><p>
இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் இங்கிலாந்து முழுவதிலுமே ஒழிக்கப்பட உள்ளன.&nbsp;</p><p></p><p>
இது குறித்து பேசிய பிரதமர் ஆன்டி பர்னாம், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் பஸ் பாஸை பயன்படுத்திப் பயணிக்க முடியாதது சரியல்ல.</p><p>

எனவே, நாங்கள் அதைச் சரிசெய்கிறோம். இனி மாற்றுத்திறனாளிகள் 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் வரம்பற்ற இலவசப் பேருந்துப் பயணத்தை மேற்கொள்ளலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/017d8337-d103-4ff4-839e-9e9faa6172ed/26-6a8450515054e.webp' /></p><p>

நான் இதை முன்பே கிரேட்டர் மான்செஸ்டரில் செய்திருக்கிறேன், இப்போது நாடு முழுவதற்குமாக அதைச் செய்வதில் நான் பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
</p><p>
அத்துடன், மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்குவதற்காகவும், விலைவாசி குறித்து கவலையில் இருப்பவர்களுக்கு மிகவும் தேவையானதான நிம்மதியை அளிப்பதற்காகவும் நாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதி இது என்றும் கூறியுள்ளார் ஆன்டி பர்னாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T12:32:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் மிரட்டலுக்கு பிரித்தானியா பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-react-to-russia-warning-regard-ukraine-support-1787054926"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-react-to-russia-warning-regard-ukraine-support-1787054926</id>
            <summary type="text">UK responds after Russia warns of inevitable consequences: ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானிய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK responds after Russia warns of inevitable consequences: ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானிய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்ததற்கு பிரித்தானியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
</p><p> 

ரஷ்யா மீது தாக்குதல் நடத்த பிரித்தானிய தயாரிப்புகளான ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்துவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது ரஷ்யா.
</p><h3>
ரஷ்யா மிரட்டல்

லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி</h3><p> ஒன்றில், லண்டன் ஒருபக்கம் அமைதி வேண்டும் என கூறிக்கொண்டே மறுபக்கம் வேண்டுமென்றே உக்ரைன் பிரச்சினையை பெரிதுபடுத்த முனைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fa10ac9-5f55-4cf8-b0e8-15716c40c409/26-6a844b4f4e1f7.webp' /></p><p>
மேலும், லண்டனின் நடவடிக்கைகள் தவிர்க்கமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், ரஷ்யாவுடனான மோதலில் பிரித்தானியாவின் ஈடுபாடு எந்த அளவுக்கு அதிகமாகிறதோ, உக்ரைனுக்கு அது எந்த அளவுக்கு ஆதரவளிக்கிறதோ, அந்த அளவுக்கு பிரித்தானியா விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.</p><h3>

பிரித்தானியாவின் பதில்</h3><p>

இந்நிலையில், ரஷ்யாவின் மிரட்டலைத் தொடர்ந்து செய்தி ஒன்றை வெளியிட்ட பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர், பிரித்தானியா உக்ரைனுடன் தோளோடு தோளாக நிற்கிறது என்றும், ரஷ்யாவின் சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிராக உக்ரைன் தன்னைக் காத்துக்கொள்வதற்குத் தேவையான தளவாடங்களை உக்ரைனுக்குக் கொடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
அத்துடன், உக்ரைனிலும், பிரித்தானியா மற்றும் எங்கள் கூட்டாளிகளுக்கு எதிராகவும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நிற்பதில் இந்த அரசாங்கத்தின் உறுதியைப் பற்றி ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது பிரித்தானிய தரப்பு.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T12:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபோதையில் வாகனம் ஓட்டிய வார்னருக்கு அபராதம் - சிக்கலில் கேப்டன் பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cricketer-david-warner-fined-for-drunk-and-drive-1787054161"></link>
            <id>https://news.lankasri.com/article/cricketer-david-warner-fined-for-drunk-and-drive-1787054161</id>
            <summary type="text">david warner fined for drunk and drive: மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் டேவிட் வார்னருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

வார்னருக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>david warner fined for drunk and drive: மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் டேவிட் வார்னருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
</p><h3>
வார்னருக்கு அபராதம்
</h3><p>
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற PSL தொடரில், கராச்சி கிங்ஸ் அணியின் அணித்தலைவராக விளையாடினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/898d5369-99f6-40b0-af28-7dc67f626a9a/26-6a844852833b4.webp' /></p><p>

இந்த தொடரின் இடையே கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட அவுஸ்திரேலியாவிற்கு சென்ற டேவிட் வார்னர், சிட்னி புறநகரில் உள்ள மரோவ்பிரா பகுதியில் மது அருந்திவிட்டு கார் ஓட்டியுள்ளார்.
</p><p>
அங்கு காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் நடத்திய சுவாசப் பரிசோதனையின் போது, வார்னர் சட்ட வரம்பை விட 2 மடங்குக்கும் அதிகமான மது அளவுடன் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது.
</p><p>
கடந்த மாதம், சிட்னி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை வார்னர் ஒப்புக்கொண்டார்.&nbsp;</p><p></p><p>

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வார்னர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, 1,066 அவுஸ்திரேலிய டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1,01,912) அபராதம் விதிக்கப்பட்டது.
</p><p>
மேலும், டேவிட் வார்னர் இனி இன்டர்லாக் கருவியை பொருத்திய பின்னரே வாகனம் ஓட்ட வேண்டும். 

இந்த இன்டர்லாக் கருவியானது ஓட்டுநரின் உடலில் மதுவின் அளவை கண்டறிந்தால், கார் இயங்குவதைத் தடுத்துவிடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4daa958-aabb-4067-8c57-6376b260eee7/26-6a84485334076.webp' /></p><p>

வார்னர் அணித்தலைவராக உள்ள சிட்னி தண்டர் அணியை NSW கிரிக்கெட் நிர்வகிக்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான பிரச்சாரத்தில் NSW கிரிக்கெட் ஒரு மாநிலப் பங்காளராக உள்ளது.</p><p>

இந்த தண்டனைக்கு பின்னர் வார்னரின் கேப்டன் பதவி கூட பறிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:57:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி டெஸ்டில் முன்னெச்சரிக்கையாக பாதியில் விலகிய தினேஷ் சந்திமால்: மாற்றாக இளம் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dinesh-chandimal-shoulder-neck-injury-concussion-1787052211"></link>
            <id>https://news.lankasri.com/article/dinesh-chandimal-shoulder-neck-injury-concussion-1787052211</id>
            <summary type="text">Dinesh Chandimal concussion in galle test: காலி டெஸ்டில் ஃபீல்டிங்கின்போது காயமுற்றதால் இலங்கையின் மூத்த வீரரான தினேஷ் சந்திமால் பாதியில் விலகினார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Dinesh Chandimal concussion in galle test: காலி டெஸ்டில் ஃபீல்டிங்கின்போது காயமுற்றதால் இலங்கையின் மூத்த வீரரான தினேஷ் சந்திமால் பாதியில் விலகினார்.
</p><p>
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கையின் தினேஷ் சந்திமால் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். </p><h2>தினேஷ் சந்திமால் 
</h2><p>
காலியில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில், இலங்கையின் தினேஷ் சந்திமால் (Dinesh Chandimal) பவுண்டரியைத் தடுக்க பாய்ந்து சென்றபோது தோள்பட்டை மற்றும் கழுத்தில் காயமடைந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/085baa30-6a33-4577-8be6-c06a5ceb1ead/26-6a8441dc4bfe3.webp' />&nbsp;</p><p></p><p>

இதனால் பாதியில் விலகிய அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்கேன் செய்ய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.</p><p> 

Concussion சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பதிலாக பசிந்து சூரியபண்டார (Pasindu Sooriyabandara) நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
</p><p>
இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக Concussion மாற்று வீரராக பசிந்து சூரியபண்டாரா அணியில் இணைகிறார். 

ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அதில் உள் காயங்கள் ஏதுவுமில்லை என்பது தெரிய வந்தது" என தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98a61744-daad-4952-a384-b4226a48fb99/26-6a8441dd0b3cf.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[M9 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்து: திருமணத்திற்கு சென்ற 5 இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/m9-highway-car-accident-5-teen-dead-1787052052"></link>
            <id>https://news.lankasri.com/article/m9-highway-car-accident-5-teen-dead-1787052052</id>
            <summary type="text">M9 Highway Accident 5 teen dead: அயர்லாந்தில் கில்டேர் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் M9 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 இளைஞர் பரிதாபமாக உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>M9 Highway Accident 5 teen dead: அயர்லாந்தில் கில்டேர் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் M9 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><h2> சாலை விபத்து</h2><p>அயர்லாந்தின் கில்டேர் மாகாணத்தில் உள்ள&nbsp; M9 நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த கார் மோதியதில் இங்கிலாந்தில் திருமணத்திற்கு&nbsp;சென்ற 5 இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p>மேலும் 4 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக ஐரிஷ் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be89c724-5dba-4eca-bd3f-e37ab7ffbde2/26-6a8440165d02a.webp' /></p><p>ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த கோர விபத்தானது ஏற்பட்டுள்ளது. 5 இளைஞர்களுடன் வந்த BMW காரும், 3 பெண்கள் மற்றும் 7 வயது சிறுவன் வந்த Hyundai காரும்&nbsp; 74 மைல்களுக்கும் அதிகமான வேகத்தில் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த கோர விபத்தானது ஏற்பட்டுள்ளது.</p><p>சம்பவ இடத்திலேயே 5 இளைஞர்களும் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p> Hyundai காரில் பயணித்த அனைவரும் தற்போது தீவிரமான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> விபத்தில் பலியானவர்களின் விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, ஜெரமி ஓ பிரையன்(18), அலெக்ஸ் மெக்கார்த்தி(17), ஜோய் கார்தி(15), ஜாக் கென்னடி(17), கமில் புஸ்ட்கோவ்ஸ்கி(17) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5225af5b-81b6-478f-8707-c9614078afc4/26-6a844015a9dbe.webp' /></p><p> இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.</p><p> அதே சமயம் குறிப்பிட்ட வாகனம் எப்படி எதிர் திசையில் நுழைந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-18T11:21:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்த தமிழ் வம்சாவளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lakshmanan-meyyappan-record-youngest-ca-at-age16-1787044059"></link>
            <id>https://news.lankasri.com/article/lakshmanan-meyyappan-record-youngest-ca-at-age16-1787044059</id>
            <summary type="text">lakshmanan meyyappan as youngest ca: தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன் 16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

16 வயதில் CA ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>lakshmanan meyyappan as youngest ca: தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன் 16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். </p><h3>

16 வயதில் CA படம் பெற்ற தமிழ் வம்சாவளி</h3><p>

இந்தியாவை சேர்ந்த தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன்(lakshmanan meyyappan) என்பவர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். </p><p>

தனது 10 ஆம் வகுப்பு பள்ளி விடுமுறையின் போது, ஏசிசிஏ பட்டம் பெற்ற அவரது தாயார், அடிப்படை கணக்கியல் கருத்துக்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4e6e294-462a-4e72-9ca3-eb07748453fa/26-6a8420dc9012f.webp' /></p><p> 

இதன் மூலம், கணக்கியல் மீது ஆர்வம் கொண்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் சான்றிதழான ACCA தகுதியைப் பெற முடிவு செய்து, ஒரு ஆண்டிலே அதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, தகுதி பெற்றார். </p><p>

அத்துடன் நில்லாமல், முதலீட்டு மேலாண்மையில் மிகவும் மதிக்கப்படும் தகுதிகளில் ஒன்றான CFA பட்டயத்தையும் அவர் பெற்றார்.&nbsp;உலகளவில் 2 லட்சத்திற்கும் குறைவானவர்களே இந்த பட்டத்தை பெற்றுள்ளனர்.</p><p>
இதன் மூலம், 16 வயது 141 நாட்களில் பட்டய கணக்காளர் பட்டம் பெற்ற உலகின் இளம் வயது ஆண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் லக்ஷ்மணன் மெய்யப்பன்.&nbsp;</p><p></p><p> 

oxford brookes பல்கலைக்கழகத்தில் Applied science பிரிவில் Bachelor of Science பட்டம் பெற்றுள்ள அவர், தற்போது american university of sharjah ல் நிதி பிரிவில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.</p><p> 

தற்போது செஞ்சுரி ஃபைனான்சியல் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
</p><p>
இது குறித்து பேசிய அவர், "இந்த மைல்கல் எனக்கு மிகவும் முக்கியமானது, ஆனால் நான் தகுதிகளை ஒருபோதும் ஒரு பந்தயமாக அணுகியதில்லை. 

நிஜ உலகில் நிதி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதும், காலப்போக்கில் பொருத்தமானதாக இருக்கும் திறன்களை வளர்த்துக்கொள்வதுமே முக்கியமாக இருந்தது. </p><p>

வேகத்தை விட ஆர்வத்தால் கற்றல் உந்தப்படும்போது, ​​அதன் விளைவு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைகிறது. உலக சாதனை படைப்பது ஒருபோதும் தனது இலக்காக இருந்ததில்லை" என தெரிவித்துள்ளார்.</p><p> 

தனது தொழில்முறை தவிர்த்து ஓய்வு நேரங்களில் கைக்கடிகாரங்களை உருவாக்கி வருகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர்: ஜேர்மனி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-raids-warehouses-crack-down-smugglers-1787049903"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-raids-warehouses-crack-down-smugglers-1787049903</id>
            <summary type="text">Germany carries out raids to crack down on smugglers: சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஜேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany carries out raids to crack down on smugglers: சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஜேர்மனி ரெய்டுகள் நடத்தியுள்ளது.
</p><p>

ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த ஏதேதோ நடவடிக்கைகளை எடுத்துவருகிறது பிரித்தானியா.</p><p>

ஆனாலும், முழுமையாக சட்டவிரோத கடத்தலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
</p><h3>
காரணம் என்ன?
</h3><p>
அதாவது, பொதுவாக பிரான்சிலிருந்து சிறிய ரப்பர் படகுகள் மூலம் சட்டவிரோத புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbefd8f2-78ec-419d-b298-5550f88e820d/26-6a8437b0dc8fa.webp' /></p><p>

ஆனால், உண்மையில், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோத புலம்பெயர்வோர் நுழைவதன் பின்னணியில் பிரான்ஸ் மட்டும் இல்லை.
</p><p>
ஆம், பிரித்தானியாவுக்குள் நுழையும் சிறு ரப்பர் படகுகள், சீனாவில் தயாராகின்றன. அவை பல்கேரியா நில எல்லை வழியாக துருக்கிக்குள் கொண்டுவரப்படுகின்றன.&nbsp;</p><p></p><p>
அங்கிருந்து ட்ரக்குகள் மூலம் ஜேர்மனிக்குக் கொண்டுவரப்படும் இந்த சிறுபடகுகள், லைஃப் ஜாக்கெட்கள் போன்றவை, ஜேர்மனியிலுள்ள கிடங்குகளில் சேமித்துவைக்கப்படுகின்றன.
</p><p>
அங்கிருந்து அவை பிரான்சுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆட்கடத்தல்காரர்கள் உதவியுடன் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்வோர் நுழைய அந்தப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.</p><p>

ஆக, பிரித்தானியாவுக்குள் சட்டவிரோத புலம்பெயர்வோர் நுழைவதில் இத்தனை நாடுகளுக்குப் பங்குள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ad7d481-fe21-4abb-ab29-a9327147809d/26-6a8437b190610.webp' /></p><p>
எனவே, வெறும் பிரான்சும் பிரித்தானியாவும் மட்டும் கைகோர்த்தால் இந்த சட்டவிரோத புலம்பெயர்தலை முழுமையாகக் கட்டுப்படுத்தமுடியாது.
</p><p>
இந்த விடயங்கள் தெரியவந்ததைத் தொடர்ந்து, பிரித்தானியா ஜேர்மனியுடனும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள, 2024ஆம் ஆண்டு, இந்த சட்டவிரோத புலம்பெயர்வோருக்கு உதவுவோரை தண்டிக்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்க இருப்பதாக ஜேர்மனி உறுதியளித்தது.
</p><p>
அதைத் தொடர்ந்து, சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட, அதன் மூலமாக, ஆட்கடத்தல்காரர்கள் ஜேர்மனியில் சிறுபடகுகளை மறைத்துவைத்துள்ள கிடங்குகளில், சமீபத்தில் ஜேர்மன் அதிகாரிகள் ரெய்டுகள் நடத்தியுள்ளார்கள்.
</p><p>
முதன்முறையாக ஜேர்மன் அதிகாரிகள் நடத்திய அந்த ரெய்டுகளில், 9,000க்கும் அதிகமான லைஃப் ஜாக்கெட்கள், நிறைய ரப்பர் படகுகள், அவற்றிற்கான எஞ்சின்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
அதாவது, சுமார் 2,000 சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதை ஜேர்மன் அதிகாரிகள் தடுத்துவிட்டார்கள் எனலாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் வீட்டிற்கு வரவேண்டாம்: பிரித்தானியாவில் 22 குழந்தைகளின் தாய் வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/22-kids-and-counting-sue-radford-demands-privacy-1787049322"></link>
            <id>https://news.lankasri.com/article/22-kids-and-counting-sue-radford-demands-privacy-1787049322</id>
            <summary type="text">22 kids and counting sue radford demands privacy: பார்வையாளர் ஒருவர் புகைப்படம் கேட்டதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் 22 குழந்தைகளின் தாய் வேண்டுகோள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 kids and counting sue radford demands privacy: பார்வையாளர் ஒருவர் புகைப்படம் கேட்டதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் 22 குழந்தைகளின் தாய் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
</p><p>
பிரித்தானியாவில் 22 Kids and Counting நிகழ்ச்சியின் பார்வையாளர் ஒருவர், தங்கள் வீட்டிற்கு வந்து குழந்தைகளில் ஒருவரிடம் புகைப்படம் கேட்டதைத் தொடர்ந்து, மிகப்பெரிய குடும்பத்தின் தாயான சூ ராட்ஃபோர்ட் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><h2>தனியுரிமையை மதிக்க வேண்டும்&nbsp;</h2><p>

22 குழந்தைகளின் தாயான சூ ராட்ஃபோர்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரித்தானியாவில் பிரபலமானவர்களாக மாறினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c486ecf-0866-4840-931d-4e963203dfa5/26-6a84356e8250c.webp' />&nbsp;</p><p></p><p>
Channel 5-யின் 22 Kids and Counting என இந்த குடும்பத்தைப் பற்றிய ரியாலிட்டி நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது.

இந்நிகழ்ச்சியின் பார்வையாளர் ஒருவர் சூ ராட்ஃபோர்ட்டின் வீட்டிற்கு சென்றுள்ளார். </p><p>அங்கு அவர் சூ ராட்ஃபோர்ட்டின் குழந்தைகளில் ஒருவரிடம் புகைப்படம் கேட்டது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் 51 வயதான சூ ராட்ஃபோர்ட் (Sue Radford) சமூக ஊடகங்கள் வாயிலாக தங்கள் வீட்டிற்கு வர வேண்டாம் என பின்தொடர்பாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.&nbsp;</p><h2>பாதுகாப்பு சிக்கல்</h2><p> 

ரசிகர்கள் தங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்ற அவர், தங்கள் வீட்டிற்கு வருவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும், உண்மையான பாதுகாப்பு சிக்கலை உருவாக்குவதாகவும் கூறியுள்ளார்.</p><p>

மேலும் அவர் தனது பதிவில், "இதைப்பற்றி மீண்டும் பேச வேண்டிய அவசியம் இருப்பதாக நான் உணர்கிறேன்; எங்கள் தரப்பு நியாயத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.</p><p> 

நாங்கள் வெளியே செல்லும்போதெல்லாம் மக்களை சந்திப்பதை மிகவும் விரும்புகிறோம். நின்று பேசுவதிலும், புகைப்படம் எடுத்துக்கொள்வதிலும், நலம் விசாரிப்பதிலும் எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியே; அது எங்களுக்கு உண்மையிலேயே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa52e89b-a576-44b3-aff8-86579ffe03fc/26-6a84356dc18f6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:33:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சச்சின், தோனி தோனியை முந்தி..ரிஷாப் பண்ட் படைத்த பிரம்மாண்ட சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rishabha-pant-first-indian-100-sixes-record-1787045208"></link>
            <id>https://news.lankasri.com/article/rishabha-pant-first-indian-100-sixes-record-1787045208</id>
            <summary type="text">Rishabh Pant first indian achieve 100 sixes:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை ரிஷாப் பண்ட் படைத்தார். 

இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rishabh Pant first indian achieve 100 sixes:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை ரிஷாப் பண்ட் படைத்தார். </p><p>

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய துடுப்பாட்ட வீரர் ரிஷாப் பண்ட் 100வது சிக்ஸரை அடித்து சாதனை படைத்தார்.</p><h2>ரிஷாப் பண்ட்&nbsp;</h2><p> </p><p>இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலியில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c3905ca-ea8e-4d0e-936c-a5b71e031d30/26-6a84267d7f5a8.webp' />&nbsp;</p><p></p><p>

நான்காம் நாளான இன்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (Rishabh Pant) அதிரடி ஆட்டத்தை ஆடினார். </p><p>

பண்ட் 69 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் தனது 100வது சிக்ஸரை அடித்தார்.</p><h2>முதல் இந்தியர்
</h2><p>
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற இமாலய சாதனையை ரிஷாப் பண்ட் படைத்தார். 89 இன்னிங்ஸ்களில் அவர் இந்த மைல்கல்லினை எட்டியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c95fc3d7-0b9d-4ef1-b43a-6b8e3233e74a/26-6a84267e37982.webp' /></p><p><b> 

அதிக டெஸ்ட் சிக்ஸர் அடித்த இந்திய வீரர்கள்</b></p><p> 

ரிஷாப் பண்ட் - 100 </p><p>விரேந்தர் ஷேவாக் - 91 </p><p>ரோஹித் ஷர்மா - 88</p><p> ரவீந்திர ஜடேஜா - 82</p><p> எம்.எஸ்.தோனி - 78&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/228ab8af-3483-4629-b348-160761cb9499/26-6a84267c9bc24.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<b> </b><a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b> </a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T09:37:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் இரண்டு படகுகள் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-missing-in-yacht-boat-crash-in-france-1787044748"></link>
            <id>https://news.lankasri.com/article/man-missing-in-yacht-boat-crash-in-france-1787044748</id>
            <summary type="text">One missing after boat crash in south of France: பிரான்சில் இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் தண்ணீரில் விழுந்த ஒருவரைக் காணவில்லை.


ஞாயிற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>One missing after boat crash in south of France: பிரான்சில் இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் தண்ணீரில் விழுந்த ஒருவரைக் காணவில்லை.</p><p>


ஞாயிற்றுக்கிழமை இரவு, பிரான்சுக்கு தெற்கே அமைந்துள்ள கேன்ஸ் வளைகுடாவில் ஒரு ஆடம்பர படகும், ரப்பர் படகொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
</p><h3>
நான்கு பேர் கவலைக்கிடம்</h3><p>

அந்த ரப்பர் படகில் 10 பேர் பயணித்த நிலையில், அவர்கள் தண்ணீரில் தூக்கியெறியப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67dc1200-dee6-4333-8105-a5784912542b/26-6a84238dce6e5.webp' /></p><p> அவர்களில் பெரும்பாலானோர் பதின்மவயதினர் என கூறப்படுகிறது.

தகவலறிந்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், ஒரு 24 வயது இளைஞரைக் காணவில்லை.</p><p>

மற்றவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன அந்த இளைஞரைத் தேடும் பணி தொடர்கிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T09:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரீஸ் ஹெலிகாப்டர் விபத்து: தேனிலவு சென்ற பிரித்தானிய தம்பதிக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/greek-helicopter-crash-british-couple-killed-1787044563"></link>
            <id>https://news.lankasri.com/article/greek-helicopter-crash-british-couple-killed-1787044563</id>
            <summary type="text">Greek Helicopter Crash Newlywed British Couple killed: கிரீஸில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தேனிலவு சென்ற பிரித்தானிய தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Greek Helicopter Crash Newlywed British Couple killed: கிரீஸில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தேனிலவு சென்ற பிரித்தானிய தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> ஹெலிகாப்டர் விபத்து</h2><p>கிரீஸின் புகழ்பெற்ற சிஃப்னோஸ்(Sifnos) சுற்றுலாத் தீவில் நிகழ்ந்த கோரமான ஹெலிகாப்டர் விபத்தில் தேனிலவுக்காக சென்ற பிரித்தானிய தம்பதி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p> இந்த விபத்தில் புதிதாக திருமணம் ஆன பிரித்தானிய தம்பதிகளான அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபெர்ட் ஆகியோர் உயிரிழந்து இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨 Private helicopter crashes in Sifnos<br><br>A private helicopter has crashed in the Tholos area of Sifnos, near the island’s helipad, triggering a major emergency response.<br><br>🔥 A fire broke out following the crash, while initial reports say three people were on board. Emergency… <a href="https://t.co/j8kv5CshrJ">pic.twitter.com/j8kv5CshrJ</a></p>&mdash; Greek City Times (@greekcitytimes) <a href="https://x.com/greekcitytimes/status/2089399683651174423?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இவர்கள் ஹெலிகாப்டர் மூலம் வான் வழி சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த மூன்றாவது நபர் முன்னாள் இராணுவ வீரரும், 3 குழந்தைகளின் தந்தையுமான ஜோர்ஜோஸ் ராய்கோஸ் என்ற விமானி ஆவார்.</p><p> Bellavia Aviation Services என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் சிக்னோஸ் பகுதியில் தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக உள்ளூர் நேரப்படி மாலை 6.00 மணிக்கு விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9687da99-4700-48d6-8634-6c82cd819914/26-6a8422d56e468.webp' /></p><p> விபத்தை தொடர்ந்து அவசர கால மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p> தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரின் உடல்களையும் பத்திரமாக மீட்டெடுத்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-18T09:16:13+00:00</updated>
        </entry>
    </feed>
