<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-20T05:32:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை: ஜுலையில் 4.5% ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-unemployment-rate-rises-in-july-1787203469"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-unemployment-rate-rises-in-july-1787203469</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூலை மாதத்தில் உயர்ந்துள்ளது.அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூலை மாதத்தில் உயர்ந்துள்ளது.</p><h2>அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை</h2><p> அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு சந்தை ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க மந்த நிலையை அடைந்துள்ளது.</p><p> வேலையின்மை விகிதமும் உயர்ந்துள்ளதுடன், ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.</p><p> அவுஸ்திரேலியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.5% ஆக உயர்ந்து இருப்பதாக அவுஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின் படி தெரியவந்துள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a841378c-1f32-4dc2-9d6d-6535cb0f7a29/26-6a868f8f0c338.webp' /></p><p> நாட்டின் வேலைவாய்ப்புகள் 15,800 குறைந்து ஒட்டுமொத்த 1.48 கோடிகளாக நிலைபெற்றுள்ளது.</p><p> இந்த வேலை இழப்புகள் அனைத்து பகுதி நேர பணியில் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 32,200 பகுதி நேர வேலைகள் ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது.</p><p> அதே போல நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் பங்கேற்பு விகிதமும் 66.9% ஆக சற்று குறைந்துள்ளது.</p><p> அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பு சரிவுகளை பொருளாதார நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.</p><p> பகுதி நேர வேலைவாய்ப்புகளில் சரிவுகள் காணப்பட்டாலும், முழு நேர வேலைவாய்ப்புகளில் நிலையான வளர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதையும் இந்த தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T05:25:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[80,000 வெளிநாட்டவர்களை பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்திய லேபர் அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/labour-party-deported-80000-foreign-criminals-1787202253"></link>
            <id>https://news.lankasri.com/article/labour-party-deported-80000-foreign-criminals-1787202253</id>
            <summary type="text">80,000 foreigners removed from UK since the general election: தேர்தலுக்குப்பின் 80,000க்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்தியுள்ளது பிரித்தானியா.

பிரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>80,000 foreigners removed from UK since the general election: தேர்தலுக்குப்பின் 80,000க்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்தியுள்ளது பிரித்தானியா.</p><p>

பிரித்தானியா இரண்டு ஆண்டுகளில் 80,000க்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்தியுள்ளதாக உள்துறை அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><h3>
இரண்டு ஆண்டுகளில் 80,000க்கும் மேற்பட்டவர்கள்</h3><p>

2024ஆம் ஆண்டு ஜூலை மாதம், சர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றது.
</p><p>
லேபர் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, குற்றச்செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள், புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்கள் என 80,286 வெளிநாட்டவர்களை நாடுகடத்தியுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f2c1891-20b1-45c3-ad28-26d41386f0e1/26-6a868ace8e491.webp' /></p><p>
இது முந்தைய கன்சர்வேட்டிவ் ஆட்சிக்காலத்தில் நாடுகடத்தப்பட்டவர்களுடைய எண்ணிக்கையைவிட 52 சதவிகிதம் அதிகமாகும்.</p><p>

இந்நிலையில், நம் எல்லைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதிலும், நமது புலம்பெயர்தல் அமைப்பை அனைவருக்கும் நியாயமானதாக ஆக்குவதற்குமான நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய படி என்கிறார் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.&nbsp;</p><p></p><p>
மேலும், இந்த புள்ளிவிவரங்கள் ஒரு செய்தியை அனுப்புகின்றன. சட்டப்படி பிரித்தானியாவுக்கு வருபவர்களை வரவேற்போம், சட்டவிரோதமாக இங்கு வந்தால், அல்லது சட்டத்தை மீறினால், உங்களை உங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிடுவோம் என்கிறார் ஷபானா.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e597518-da62-47c1-ad9a-731e1d8e2575/26-6a868acf4e346.webp' /></p><p>
ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், 2016ஆம் ஆண்டுக்குப் பின், இவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளது இப்போதுதான்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T05:04:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்கன் சாப்பிடும் பொழுது தவறியும் இந்த பாகங்களை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chicken-parts-we-shouldnt-eat-for-healthy-life-1787140291"></link>
            <id>https://news.lankasri.com/article/chicken-parts-we-shouldnt-eat-for-healthy-life-1787140291</id>
            <summary type="text">பொதுவாகவே, அசைவ பிரியர்களுக்கு கோழி என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. ஒரு சிலர் வாரத்திற்கு ஒருமுறை அல்லது எப்பொழுதெல்லாம் அவர்களுக்கு பிடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே, அசைவ பிரியர்களுக்கு கோழி என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. ஒரு சிலர் வாரத்திற்கு ஒருமுறை அல்லது எப்பொழுதெல்லாம் அவர்களுக்கு பிடிக்கிறதோ அவர்கள் சிக்கன் சமைத்து சாப்பிடக்கூடிய வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். </p><p>அந்த வகையில், கோழியின் சமைக்கும் பொழுது சில பகுதிகளை மட்டும் நாம் சாப்பிடவே கூடாது என்று சொல்கிறார்கள். காரணம், அந்தப் பகுதிகளில் தான் அபாயகரமான பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02632134-d193-4fc4-acd3-d7c12e7c3e51/26-6a8598cde7c61.webp' /></p><p>
</p><h3>கோழி தலை:</h3><p> பலரும் கோழி தலைகளை சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால், இப்பொழுது காலகட்டங்களில் கோழிகள் வேகமாக வளரவும் நோய்களை தடுக்கவும் அவர்களுக்கு பல்வேறு ஹார்மோன் ஊசிகளும் நுண்ணுயிர் எதிர்ப்புகளும் கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு கொடுக்கக்கூடிய இந்த ரசாயனங்கள் அனைத்தும் கோழியின் தலைகளிலும் மூலைகளிலும் சேர்ந்து விடுகிறது. </p><p>ஆதலால், கோழி தலைகளை சாப்பிடுவதால் அந்த நச்சு ரசாயனங்கள் நம்முடைய உடலுக்குள் நுழைந்து ஹார்மோன் சம நிலையின்மையையும் அதுவே காலப்போக்கில் புற்றுநோய்ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பையும் கொடுக்கிறது.
</p><h3> கோழி நுரையீரல்:</h3><p>
 பலரும் கோழி சமைக்கின்ற பொழுது அதன் நுரையீரல் பாகங்களையும் சேர்த்து சமைத்து விடுகிறார்கள். இருப்பினும் கோழியின் நுரையீரலில் வெப்ப விரும்பும் பாக்டீரியா எனப்படும் ஏராளமான நுண்ணுயிர்கள் இருக்கின்றன. </p><p>இந்த பாக்டீரியாக்கள் அதிக வெப்பநிலையில் சமைக்க பட்டாலும் அவை முழுமையாக இறப்பதில்லை. அவற்றை நாம் எடுத்துக் கொள்கின்ற பொழுது கடுமையான நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28c8c23d-eb7b-48f6-9fb9-bd7f7fd613af/26-6a8598cea61e2.webp' /></p><p>
</p><h3> கோழி தோல்:
</h3><p> நாம் எப்பொழுதும் கோழி தோலுடன் சமைப்பது குழம்பு வைப்பது மிகவும் சுவையாகவும் சாறு நிறைந்ததாகவும் மாற்றுகிறது. ஆனால், கோழி தோலில் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளது. இந்த தோலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து விடுகிறது. இதனால், இதய நோய் பக்கவாதம் மற்றும் உடல் பருமன் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகள் வருகிறது.</p><h3> 
கோழியின் வால்:
</h3><p>கோழியின் வாலில் சுரப்பிகள் நிறைந்துள்ளன. இங்குதான் கழிவுகளும் பாக்டீரியா ஆகியவை தொடர்ந்து குவிக்கின்றது. இந்த பகுதியை நாம் சாப்பிடும் பொழுது உடலின் வளர்சிதை மாற்றத்தைச்&nbsp;சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் செயல்பாட்டிலும் மிகக் கடுமையான தாக்கங்களை உருவாக்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43eff0e6-709e-49f1-b3f2-d009ff3dd7da/26-6a8598cf5fd52.webp' /></p><p>
</p><h3> Chicken Gizzard:&nbsp;
</h3><p>கோழியின் செரிமான மண்டலத்தில் இந்த பகுதி அது உண்ணக்கூடிய கழிவுகளை சேமித்து வைத்திருக்கக்கூடிய பகுதியாகும். இது சரியாக சுத்தம் செய்யாமல் நாம் சமைத்து சாப்பிட்டு விட்டால் அதில் உள்ள பல்வேறு ஒட்டுண்ணிகளும் பாக்டீரியாக்களும் நேரடியாக நம்முடைய உடலுக்குள் சென்றுவிடும். இதனால் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் செரிமான பிரச்சனைகள் வரக்கூடும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T04:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியாவில் குடியேறும் இளவரசர் ஹரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-meghan-move-back-to-britain-1787177856"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-meghan-move-back-to-britain-1787177856</id>
            <summary type="text">Prince Harry and Meghan Markle are moving back to the UK: இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி, இந்த மாதம் பிரித்தானியாவிற்குத் திரும்புகின்றனர்.
ஆறு வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prince Harry and Meghan Markle are moving back to the UK: இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி, இந்த மாதம் பிரித்தானியாவிற்குத் திரும்புகின்றனர்.
</p><p>ஆறு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறியதன் பின்னர் தற்போது மீண்டும் பிரித்தானியாவிற்குத் திரும்ப அவர்கள் முடிவு செய்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>பணி உறுப்பினர்களாக</h2><p>
</p><p>கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், ஹரி- மேகன் தம்பதி பிரித்தானியாவில் குடியேற இருப்பதுடன்,&nbsp;பிள்ளைகள் ஆர்ச்சியும் லில்லிபெட்டும் ஒரு பிரித்தானிய பாடசாலையில் சேரவிருப்பதாகவும் தெரிய வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42371250-20a1-4038-98f1-93a767c2aa24/26-6a862b83382f1.webp' /></p><p> </p><p>இளவரசர் ஹரி குடும்பம் அரச குடும்பத்திற்கு சொந்தம் அல்லாத ஓர் இல்லத்திற்கு குடிபெயர்வார்கள், மேலும் அவர்கள் அரச குடும்பத்தின் பணி உறுப்பினர்களாக இருக்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. </p><p>இந்த மாத இறுதியில் பிரித்தானியாவுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக, மன்னர் சார்லஸுக்கு அவரது மகன் ஹரி ஞாயிற்றுக்கிழமைதான் தெரிவித்தார்.</p><p>
இளவரசர் ஹரியையும் அவரது குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் வாய்ப்பை மன்னர் வரவேற்றாலும், கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் தெளிவாக வெளிப்படுத்திய விருப்பங்கள் மற்றும் உடன்படிக்கைக்கு இணங்க, </p><p>இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோரின் தனிநபர்களாகவும், அரச குடும்பத்தின் பணிபுரியாத உறுப்பினர்களாகவும் உள்ள பங்கு மற்றும் அந்தஸ்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதில் மன்னர் தெளிவாக இருக்கிறார் என்றே அறியப்படுகிறது.</p><p></p><p> </p><p>ஹரி தம்பதி கடந்த மாதம் குளோசெஸ்டர்ஷயரில் உள்ள ஹைகிரோவ் என்ற இடத்தில் மன்னரையும் ராணி கமிலாவையும் கடைசியாகச் சந்தித்துள்ளனர் - ஆனால், தாங்கள் இடம் பெயரவிருக்கும் திட்டம் குறித்து அவர்களிடம் தெரிவிக்கவில்லை.
</p><p>இளவரசர் ஹரி 
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் வெல்சைல்ட் விருதுகள் விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா செல்ல ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தார், மேலும் அவர் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒரு அறையில் தங்கவும் இருந்தார்.</p><h2>விமர்சிக்கப்பட்டனர்</h2><p> </p><p>ஏழு வயதான ஆர்ச்சி மற்றும் ஐந்து வயதான லில்லிபெட் ஆகியோர் ஏற்கனவே ஒரு பிரித்தானிய பாடசாலையில் சேர்ந்திருப்பதாகக் கருதப்படுகிறது; மேலும், குழந்தைகள் தங்கள் கல்வியை முடிக்கும் வரை ஹரி தம்பதி பிரித்தானியாவில் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>2020-இல் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தது முதல் வசித்து வரும் கலிபோர்னியாவின் மான்டெசிட்டோவில் உள்ள 11 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள வீட்டை, ஹரியும் மேகனும் தொடர்ந்து தங்கள் வசம் வைத்திருக்க உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea95e6d9-09c3-418f-864b-08c3ac0c9479/26-6a862b83e4782.webp' /></p><p> </p><p>அவர்களுக்கு போர்த்துகலில் இன்னும் ஒரு குடியிருப்பு சொந்தமாக உள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளியேறுவதை 
அறிவிப்பதற்கு முன்பு சார்லஸ், கமிலா அல்லது இளவரசர் வில்லியம் ஆகியோரிடம் கலந்தாலோசிக்கத் தவறியதற்காக, ஹரியும் மேகனும் அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.</p><p> அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருந்தது; 2020 பிப்ரவரி 13 அன்று தொலைக்காட்சி செய்திகளில் இந்த அறிவிப்பு வெளியானபோதுதான் குடும்பத்தினர் அதைப் பற்றி அறிந்துகொண்டனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T04:25:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுப் பகுதிக்குள் நடந்த ஹெலிகாப்டர் விபத்து: 5 அமெரிக்கர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/helicopter-crash-in-kenya-7-dead-1787198419"></link>
            <id>https://news.lankasri.com/article/helicopter-crash-in-kenya-7-dead-1787198419</id>
            <summary type="text">Helicopter crash in Kenya 7 dead: கென்யாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹெலிகாப்டர் விபத்துவடக்கு கென்யாவில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Helicopter crash in Kenya 7 dead: கென்யாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><h2> ஹெலிகாப்டர் விபத்து</h2><p>வடக்கு கென்யாவில் சஃபாரி ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென விபத்துக்குள்ளானதில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p> சம்புரு மாவட்டத்தில் உள்ள லோய்சாபா வன பாதுகாப்பு பகுதியில் இருந்து இவாசோ நைரோ பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியதாக கென்யா சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec1dd14-69fe-4eeb-8020-0dc8d0b970a4/26-6a867bd59f97e.webp' /></p><p></p><p> விபத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் அதில் 6 பேர் பயணிகள் என்றும், அதில் 5 பேர் அமெரிக்கர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>உள்ளூர் சஃபாரி நிறுவனமான ட்ராபி ஏர் கென்யா, தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக தங்களுடைய இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்து இருப்பதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T04:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியா ஈரானின் புதிய பகுதி: ஹார்முஸ் விவகாரத்தில் டிரம்புக்கு பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-map-row-depicting-california-as-iran-territory-1787197487"></link>
            <id>https://news.lankasri.com/article/us-map-row-depicting-california-as-iran-territory-1787197487</id>
            <summary type="text"> Iran us map row: depicting California as iran territory: கலிபோர்னியாவை ஈரானின் ஒரு பகுதியாக அறிவித்து அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p> Iran us map row: depicting California as iran territory: கலிபோர்னியாவை ஈரானின் ஒரு பகுதியாக அறிவித்து அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.</p><h2> ஹார்முஸ் விவகாரம்</h2><p>உலகளாவிய வர்த்தக கப்பல்களின் கடல் வழித்தடமாக ஹார்முஸ் திகழ்ந்து வரும் நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதல் போக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p> இதற்கிடையில் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வரைபடம் ஒன்றில், ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டு இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf047e08-b2ec-47bf-8a74-cd7f628276cb/26-6a8678319a274.webp' /></p><p> இந்த படத்தை பின்னர் வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ கணக்கும் மறு பதிவு செய்து இருந்தது.</p><p></p><h2> ஈரான் கொடுத்த பதிலடி</h2><p>
இந்நிலையில் டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவின் முக்கியமான மாகாணங்களில் ஒன்றான கலிபோர்னியாவை ஈரானின் ஒரு பகுதியாக சித்தரித்து ஈரான் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p> ஐதராபாத்தில் உள்ள ஈரானிய தூதரகம் இந்த வரைபடத்தை தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.</p><p> அதில், நீல நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கலிபோர்னியா பகுதி “இஸ்லாமிய குடியரசின் புதிய பிராந்திய பகுதி என குறிக்கப்பட்டிருந்தது.</p><p> உலக அளவில் ஈரானிய புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாக வாழும் இடமாக அமெரிக்காவின் கலிபோர்னியா திகழ்கிறது.</p><p> லாஸ் ஏஞ்சல்ஸின் வெஸ்ட்வுட் பகுதி “தெஹ்ரான்கலெஸ்” என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T03:45:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா மீதான வரி விதிப்பு அச்சுறுத்தலை இடைநிறுத்திய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-pauses-canada-tariffs-threat-1787173073"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-pauses-canada-tariffs-threat-1787173073</id>
            <summary type="text">Canada has temporarily avoided 50% US tariff: கடுமையான 50 சதவீத அமெரிக்க இறக்குமதி வரியிலிருந்து கனடா தற்காலிகமாகத் தப்பியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாக அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada has temporarily avoided 50% US tariff: கடுமையான 50 சதவீத அமெரிக்க இறக்குமதி வரியிலிருந்து கனடா தற்காலிகமாகத் தப்பியுள்ளது.
</p><p>ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான சரக்குகளைப் பாதிக்கக்கூடிய ஒரு கட்டண உயர்வு நடைமுறையில் இருந்து கனடா தப்பியுள்ளது.</p><h2>கணிசமான முன்னேற்றம்</h2><p>கனடாவும் அமெரிக்காவும், ஆவணங்கள் இறுதி செய்யப்படுவதற்கு உட்பட்டு, ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டதன் அடிப்படையில், மூன்று நாட்களுக்கு சுங்க வரிகளை நிறுத்தி வைத்திருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30a3412f-5a64-4bc5-a3f2-112f75d52474/26-6a8618d33b199.webp' /></p><p> </p><p>ட்ரம்பின் அறிவிப்பிற்குப் பிறகு, கனடா பிரதமர் மார்க் கார்னி, வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளதாகவும், ஆனால் இன்னும் அதிக பணிகள் தேவைப்படுவதாகவும் கூறினார். </p><p>ட்ரம்பின் இந்த வரிகள், ஒயின் மற்றும் ஹொக்கி மட்டைகள் உள்ளிட்ட பல்வேறு கனடிய ஏற்றுமதிகளைப் பாதித்திருக்கும். இதனிடையே, அதே சமூக ஊடகப் பதிவில், சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ்எல் குழாய்வழித் திட்டம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படலாம் என்று ட்ரம்ப் கூறினார். </p><p>ஆனால், அது குறித்த மேலதிக விவரங்களை அவர் அளிக்கவில்லை அல்லது அது சுங்கவரி ஒப்பந்தத்துடன் தொடர்புடையதா என்பதையும் அவர் குறிப்பிடவில்லை. </p><p>கனடாவின் மேற்குப் பகுதி தார் மணல் படிவங்களிலிருந்து அமெரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எண்ணெயைக் கொண்டு வருவதற்காக 2008-ல் முன்மொழியப்பட்ட கீஸ்டோன் எக்ஸ்எல் திட்டமானது,</p><p></p><p> 1,200-மைல் தொலைவுள்ள அத்திட்டத்தின் அமெரிக்கப் பகுதிக்குத் தேவையான ஒரு முக்கிய அனுமதியை ஜோ பைடன் நிர்வாகம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அதன் உரிமையாளரான டிசி எனர்ஜி நிறுவனத்தால் 2021-ல் நிறுத்தப்பட்டது. </p><p>அமெரிக்க நில உரிமையாளர்கள், அமெரிக்கப் பூர்வகுடி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இது அமெரிக்க-கனடா உறவுகளில் ஒரு பதட்டமான சூழலாக உருவெடுத்தது. </p><p>இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு நிலவிய சர்ச்சைகளுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.</p><p> பதிலுக்குப் பதில் விதிக்கப்பட்ட வரிகள் மற்றும் கனடாவை அமெரிக்காவின் ஒரு மாகாணமாக மாற்றுவது குறித்து ட்ரம்ப் பயன்படுத்திய இணையவழித் தாக்குதல்கள் ஆகியவற்றால், இந்த நீண்டகாலக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.</p><h2>50 சதவீத வரி</h2><p> </p><p>பிப்ரவரி 2025-ல், எல்லை தாண்டிய சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதில் போதுமான முன்னேற்றம் இல்லை எனக் காரணம் காட்டி, ட்ரம்ப் நிர்வாகம் கனடா மீது 25 சதவீத வரியை விதித்தது. </p><p>இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவின் நடவடிக்கைகளை தேவையற்றவை மற்றும் நியாயமற்றவை என்று கூறி, கனடா ஒரு எதிர் வரியை அறிவித்தது. </p><p>அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள், மதுபானம் மற்றும் பால் பொருட்களுக்கு எதிரான பாகுபாட்டிற்கு கனடாவைப் பொறுப்பேற்கச் செய்வதே இதன் நோக்கம் என்று கூறி, ட்ரம்ப் நிர்வாகம் 50 சதவீத வரியை அறிவித்தபோது, ​​2026 ஜூலையில் பதற்றம் மேலும் அதிகரித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d1299c-0463-4652-ba0a-4136caf810a9/26-6a8618d3df890.webp' /></p><p> </p><p>இதனிடையே, சமீபத்திய நாட்களில், இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளும் தீவிரமான மற்றும் நுட்பமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர் என்று பிரதமர் கார்னி திங்களன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். </p><p>வரலாற்று ரீதியாக, கனடாவும் அமெரிக்காவும் வலுவான வர்த்தகப் பங்காளிகளாக இருந்து வருகின்றன. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் அலுவலகத் தரவுகளின் அடிப்படையில், 2024-ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் 909 பில்லியன் டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T02:25:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்ஃபான்டினோவுக்கு எதிராகத் திரும்பிய ஃபிஃபாவின் ஐந்தாவது துணைத் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vice-president-against-infantino-1787184745"></link>
            <id>https://news.lankasri.com/article/vice-president-against-infantino-1787184745</id>
            <summary type="text">Gianni Infantino has lost the support: ஃபிஃபாவின் மற்றொரு துணைத் தலைவரின் ஆதரவை கியானி இன்ஃபான்டினோ இழந்துள்ளார்.
ஹங்கேரிய கால்பந்து சம்மேளனத் தலைவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Gianni Infantino has lost the support: ஃபிஃபாவின் மற்றொரு துணைத் தலைவரின் ஆதரவை கியானி இன்ஃபான்டினோ இழந்துள்ளார்.
</p><p>ஹங்கேரிய கால்பந்து சம்மேளனத் தலைவர் சாண்டோர் சானி, ஃபிஃபா தலைவரின் தொழில்முறை சார்ந்த தீர்ப்புத் திறன், அறநெறித் தரநிலைகள் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றை விமர்சித்துள்ளார்.</p><h2>நம்பிக்கை</h2><p>
</p><p>செவ்வாய்க்கிழமையன்று இன்ஃபான்டினோவுக்கு அனுப்பப்பட்ட ஒரு காட்டமான கடிதத்தில், அவர் மீது தான் முன்பு கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள சானி,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ba632c1-bdaa-47f7-bb70-207d7ab80a33/26-6a86466c377f8.webp' /></p><p> </p><p>ஃபிஃபாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி கெவின் லாமூர் எதிர்பாராத விதமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதே இதற்கான இறுதிக் காரணம் என்றும் விவரித்துள்ளார். </p><p>உலகக் கிண்ணத்துக்கான பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் தனது திட்டத்தைக் கைவிட்ட இன்ஃபான்டினோவை கடந்த மாதம் விமர்சித்து, அமைப்பின் நிலைப்பாட்டிற்கு எதிராகச் செயல்பட்டதற்காக லாமூர் திங்களன்று ஃபிஃபாவால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.</p><p></p><p> </p><p>உலகளாவிய கால்பந்து உலகின் மூத்த நிர்வாகிகள் இன்ஃபான்டினோவிலிருந்து விலகிச் செல்லும் போக்கை சானியின் கடிதமும் தொடர்கிறது; ஃபிஃபாவின் எட்டுத் துணைத் தலைவர்களில், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் ஐந்தாவது நபர் இந்த ஹங்கேரிய வங்கி அதிகாரி சானி.</p><h2>ஃபிஃபா கவுன்சில்</h2><p> </p><p>UEFA தலைவர் அலெக்சாண்டர் செஃபெரின், CONCACAF-இன் (வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கூட்டமைப்பு) விக்டர் மாண்டாக்லியானி மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா ஆகியோர் தங்கள் நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தியுள்ளனர்; அதேபோல இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் தலைவரான டெபி ஹெவிட்டும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a2b3a2d-1f34-4915-abb9-a26f602c386b/26-6a86466b87f25.webp' /></p><p> ஃபிஃபாவின் துணைத் தலைவர்களில், தென் அமெரிக்காவின் கான்மெபோல் (Conmebol) அமைப்பைச் சேர்ந்த அலெஜான்ட்ரோ டொமிங்குஸ், ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பைச் சேர்ந்த பேட்ரிக் மோட்சேபே மற்றும் ஓசியானியாவின் லம்பார்ட் மால்டாக் ஆகியோர் மட்டுமே இன்ஃபான்டினோவை ஆதரிக்கின்றனர். </p><p>37 உறுப்பினர்களைக் கொண்ட ஃபிஃபா கவுன்சிலின் உறுப்பினராகவும் சானி உள்ளார்; கோட்பாட்டளவில் இதுவே அமைப்பின் முக்கிய முடிவெடுக்கும் குழுவாக இருந்தாலும், இன்ஃபான்டினோ இதனைத் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T00:10:01+00:00</updated>
        </entry>
    </feed>
