<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-09T22:35:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலுக்கு பிறகு ஈரான் போர் முடிவுக்கு வரும், எரிபொருள் விலை குறையும்: டிரம்ப் கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-predicts-after-election-iran-war-conclude-1788985409"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-predicts-after-election-iran-war-conclude-1788985409</id>
            <summary type="text">Trump Predicts After Election Iran War Will Conclude: இடைக்கால தேர்தலுக்கு பிறகு ஈரான் உடனான மோதல் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Predicts After Election Iran War Will Conclude: இடைக்கால தேர்தலுக்கு பிறகு ஈரான் உடனான மோதல் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.</p><h2> ஈரான் மோதல் எப்போது முடிவுக்கு வரும்?</h2><p>அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் இடைக்காலத் தேர்தலுக்கு பிறகு,&nbsp; ஈரானுடனான மோதல் உடனடியாக&nbsp; முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ab86c4b-cd76-49ec-8fea-b2eab6dc810d/26-6aa1c043298fd.webp' /></p><p> அத்துடன் உச்சத்தை தொட்டு வரும் எரிபொருள் விலையும் பெருமளவு குறையும் என்று டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> புதன்கிழமை டெக்சாஸ் மாநிலம் டல்லாஸுக்கு(Dallas) புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p>அப்போது புவிசார் பதற்றங்களுக்கும், உள்நாட்டு பொருளாதார நிவாரணத்திற்கும் உள்ள தொடர்பினை டிரம்ப் விளக்கினார்.</p><p></p><p>மேலும் இடைக்காலத் தேர்தலுக்கு பிறகு எண்ணெய் விலைகள்(oil prices) அதள பாதாளத்திற்கு செல்லும் என்றும், எரிவாயுகளின்(gasoline) விலை கலன்(gallon) ஒன்றுக்கு 2 டொலர்கள் வரை குறையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p> ஈரானுடனான தூதரக உறவுகள் குறித்து பேசிய டிரம்ப், மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Trump on Iran:<br><br>I think the war will end immediately after the election. <a href="https://t.co/KT1CthdgeD">pic.twitter.com/KT1CthdgeD</a></p>&mdash; Clash Report (@clashreport) <a href="https://x.com/clashreport/status/2097757200932294731?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அணுசக்தி ஒப்பந்தத்தை விட கூடுதலான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் அதே சமயம் ஈரானுடன் வழக்கமான ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா விரும்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p> போர் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பதை வெளிப்படுத்திய டிரம்ப், எத்தகைய வழிமுறைகளில் போரை முடிவுக்கு கொண்டு வரப் போகிறோம் என்பது குறித்து கூடுதல் தகவலை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T21:32:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[iPhone 18 தொடரை அறிமுகம் செய்த ஆப்பிள்: அசத்தும் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apple-unveils-iphone-18-pro-series-highlights-1788989325"></link>
            <id>https://news.lankasri.com/article/apple-unveils-iphone-18-pro-series-highlights-1788989325</id>
            <summary type="text">Apple unveils Iphone 18 Pro Series, What are the Highlights: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 ப்ரோ தொடர் ஸ்மார்ட்போனை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apple unveils Iphone 18 Pro Series, What are the Highlights: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 ப்ரோ தொடர் ஸ்மார்ட்போனை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><h2>புதிய ஸ்மார்ட்போன் தொடர்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்</h2><p>ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வு புதன்கிழமை நடைபெற்ற நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 18 ப்ரோ(iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்(iPhone 18 Pro Max) மாடல் ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்களானது Deep Black, Refined Silver, Glacier Blue, Burgundy ஆகிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">From iPhone Duo, iPhone 18 Pro, and iPhone 18 Pro Max to Apple Watch Series 12, Apple Watch Ultra 4, and AirPods 5… here&#39;s a look at all of the latest announcements dropping today! <a href="https://x.com/hashtag/AppleEvent?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AppleEvent</a> <a href="https://t.co/YvswtNEA7m">pic.twitter.com/YvswtNEA7m</a></p>&mdash; Tim Cook (@tim_cook) <a href="https://x.com/tim_cook/status/2097766713278525689?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p> ஆப்பிள் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO) ஜான் டெர்னுஸ்(John Ternus), அறிமுகமாகும் புதிய ஐபோன்களில் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு, சக்தி வாய்ந்த செயல்திறன் மற்றும் அதிக ஆற்றலை உள்ளடக்கிய பற்றரி மற்றும் சிறந்த கேமரா வசதிகள் ஆகியவை முன்னேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><h2>ஐபோன் 18 தொடரின் முக்கிய அம்சங்கள்</h2><p> ஐபோன் 18 மாடல்களில் 2 நானோமீட்டர் செயல்முறை நோட் மூலம் உருவாக்கப்பட்ட A20 ப்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் சிறந்த செயல்திறனை உறுதிப்படுத்தும் விதமாக 7-கோர் ஜிபியு (GPU) இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் மாற்றியமைக்க கூடிய கேமரா துளை(changeable Aperture Values) அம்சம் கொண்ட அதிநவீன கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/639eb9f7-25e0-4da2-8299-7bcb7b7bf41a/26-6aa1cf8eba9ab.webp' /></p><p> மேலும் ஒரே சார்ஜில் 45 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ ஓட கூடிய பிளேபேக் திறன் வழங்கப்பட்டுள்ளது.</p><h2> விலை மற்றும் விற்பனை விவரங்கள்</h2><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3025a0e-437d-4609-8fd7-a5ba4c4d894f/26-6aa1cf8f6db75.webp' /></p><p>அமெரிக்காவில் ஐபோன் 18 ப்ரோவின் விலை $1,199 ஆகவும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் விலை $1,299 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இதற்கான முன் பதிவுகள் செப்டம்பர் 12ம் திகதி தொடங்குகிறது. அத்துடன் இதன் அதிகாரப்பூர்வ விற்பனை செப்டம்பர் 18ம் திகதி முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.<br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T21:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து: தாக்குதல்தாரியை சுட்டு வீழ்த்திய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-stabbed-in-luton-man-was-shot-by-police-1788976004"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-stabbed-in-luton-man-was-shot-by-police-1788976004</id>
            <summary type="text">Woman Stabbed in Luton Man Was Shot By Police: பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு பிறகு சந்தேக நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு வீழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman Stabbed in Luton Man Was Shot By Police: பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு பிறகு சந்தேக நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.</p><h2>கத்தியை காட்டி பெண்ணை மிரட்டிய நபர்</h2><p>பிரித்தானியாவின் லூட்டன் நகரில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பெண் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானார்.</p><p> கார்டிகன் தெருவில் பிற்பகல் 12.50 மணிக்கு தாக்குதல்தாரி ஒருவர் கத்தியை காட்டி பெண் ஒருவரை மிரட்டி வருவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p> அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தாக்குதல்தாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p> இந்த சம்பவத்தில், பொலிஸாரால் சுடப்பட்ட நபர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80d54dbe-a1bd-4afc-879f-7375144fb380/26-6aa19b86387b6.webp' /></p><p> மேலும் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளான பெண்ணும் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2> விசாரணையை தொடங்கிய IOPC</h2><p>பொலிஸார் நடத்திய தாக்குதலில் துப்பாக்கி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா, தாக்குதல்தாரி மீது பயன்படுத்தப்பட்ட பலம் நியாயமானதா என்பது குறித்து சுதந்திரமான காவல்துறை ஒழுங்குமுறை குழு(IOPC) விசாரணையை நடத்தி வருகிறது.</p><p> IOPC தகவலில், இந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் 4 சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டு இருப்பதாகவும், மற்றொரு அதிகாரி லத்தியால் அடிக்கக்கூடிய ரவுண்டை பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஆரம்பக்கட்ட விசாரணையில், காவல்துறை அதிகாரிகள் எந்தவொரு குற்றவியல் நடவடிக்கைகள் அல்லது தொழில்முறை தரங்களை மீறியதற்கான அறிகுறிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T19:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் அதிபர் விமானத்தை தாக்க முயன்ற ட்ரோன்: நூலிழையில் உயிர் தப்பிய ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-s-flight-targeted-by-drone-1788982201"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-s-flight-targeted-by-drone-1788982201</id>
            <summary type="text">Zelensky’s Flight Targeted by Drone : உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் விமானத்தின் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. ஜெலென்ஸ்கி விமானத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zelensky’s Flight Targeted by Drone : உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் விமானத்தின் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது.</p><h2> ஜெலென்ஸ்கி விமானத்தை தாக்க முயற்சித்த ட்ரோன்</h2><p>உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நார்வே நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அவரது விமானத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக நார்வே நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர்(jonas Gahr Støre) தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இந்த தாக்குதலில் அவர் நூலிழையில் உயிர் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64f4bdd3-f17e-40c9-b19f-1a9a5524dcbf/26-6aa1b3bba41be.webp' /></p><p>நார்வே மன்னர் ஹரால்டின்(Harald) இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மோல்டோவாவில் இருந்து விமானம் மூலம் ஜெலென்ஸ்கி புறப்படத் தயாரான போது இந்த தாக்குதல் சம்பவமானது நடத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>உக்ரைன் மீது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில் அந்நாட்டு தலைவர் ஜெலென்ஸ்கி எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு இது ஒரு சான்று என்றும் நார்வே பிரதமர் ஸ்டோர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2> சர்வதேச ஆதரவை கோரிய ஜெலென்ஸ்கி</h2><p>நார்வே மன்னரின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்திய பிறகு, சர்வதேச தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்களுடன் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebd89fe1-9ec8-452e-bd97-37b279496993/26-6aa1b3bc5aae7.webp' /></p><p> அப்போது அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைகளுக்கு பதிலாக ஐரோப்பாவின் கூட்டு தயாரிப்பான FREYJA ஏவுகணை திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.</p><p> ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவை திரட்ட அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தொடர்ந்து உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர சர்வதேச நாடுகளின் தற்போதைய நடவடிக்கைகள் போதாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T19:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் உளவு அமைப்புடன் ரகசிய தொடர்பு: பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swindon-man-arrested-for-assisting-russia-1788977441"></link>
            <id>https://news.lankasri.com/article/swindon-man-arrested-for-assisting-russia-1788977441</id>
            <summary type="text">Man Arrested For assisting Russian intelligence in Swindon: ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் ஸ்விண்டன் பகுதியை சேர்ந்த நபர் பொலிஸாரால் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man Arrested For assisting Russian intelligence in Swindon: ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் ஸ்விண்டன் பகுதியை சேர்ந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>ரஷ்யாவுக்கு உளவு பார்த்த நபர்</h2><p>ரஷ்ய உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் ஸ்விண்டன் பகுதியை சேர்ந்த 31 வயது ஜோசுவா கேமிட்ஜ் (Joshua Cammidge) என்ற நபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கடந்த வார இறுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளும், வில்ட்ஷயர் காவல்துறை அதிகாரிகளும் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையின் கீழ் ஜோசுவா கேமிட்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59b7550c-4fc7-47af-837d-acfd09d6ba4c/26-6aa1a122ea787.webp' /></p><p></p><p>ரஷ்ய உளவு அமைப்பான GRU-யின் பிரதிநிதியுடன் ஜோசுவா கேமிட்ஜ் தொடர்பில் இருந்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட ஜோசுவா கேமிட்ஜ் உடனடியாக லண்டனுக்கு அழைத்து வரப்பட்டதுடன், அவரது முதல் விசாரணைக்காக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.</p><p> ஜோசுவா கேமிட்ஜ் வெளிநாட்டு உளவுத் துறைக்கு உதவி தொடர்பான குற்றச்சாட்டுகளை கிரவுன் ப்ராசிகியூஷன் சர்வீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T19:05:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித குலத்தை AI அழிக்கலாம்! 10% -க்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-could-wipe-out-humanity-within-the-next-10-yrs-1788980667"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-could-wipe-out-humanity-within-the-next-10-yrs-1788980667</id>
            <summary type="text">AI Could Wipe Out Humanity Within the Next 10 Years: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI Could Wipe Out Humanity Within the Next 10 Years: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2> மனித குலத்திற்கு காத்திருக்கும் பேராபத்து</h2><p>அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது(AI) மனித குலத்தையே முற்றிலுமாக அழிக்கலாம் என்றும், அதற்கான வாய்ப்புகள் 10% -க்கும் அதிகமாக இருப்பதாக முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) அமைப்பின் மூத்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எவன் ஹூபிங்கர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90f70de2-7ac7-4ad2-9ed4-1a85b0008d86/26-6aa1adbd55529.webp' /></p><p>ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இருந்து விலகியவரும், ஓபன் ஏஐ(OpenAI) நிறுவனத்தில் பணியாற்றியவருமான ஜேக்கப் காக்சன்(Jacob Coxon) வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்த எவன் ஹூபிங்கர்(Evan Hubinger) இவ்வாறு பதிலளித்துள்ளார்.</p><p> X தளத்தில் பதிலளித்துள்ள எவன் ஹூபிங்கர், தற்போதைய AI மாடல்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மிகவும் குறைவு என்றாலும், எதிர்காலத்தில் இந்த AI தொழில்நுட்பங்கள் தங்களை தாங்களே மேம்படுத்திக் கொண்டு மிகப் பெரிய ஆதிக்கத்தை செலுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரித்துள்ளார்.</p><p>மேலும் அவை மனித குலத்தின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p> ஆனால் இதில், AI மாடல்கள் எவ்வாறு மனித குலத்தை அழிக்கும் என்பதற்கான பிரத்யேக நிகழ்வுகளை அவர் விளக்கவில்லை.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c305c317-2279-41c1-bfc3-57fe13041a34/26-6aa1adbece5ef.webp' /></p><h2>விவாதங்களும், சந்தேகங்களும்</h2><p>இந்த கருத்துகள் துறைசார் வல்லுனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இடையே பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.</p><p> ஐ.நா அமைப்பின் AI ஆலோசகரும், கணினி விஞ்ஞானியுமான டேம் வெண்டி ஹால், AI அச்சுறுத்தல் தொடர்பான இந்த சமூக வலைதள பதிவை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் நிறுவனங்கள் பங்குச் சந்தைக்குள் நுழையும் போது இத்தகைய விவகாரங்களை விளம்பர உத்தியாக பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e85963a2-8514-48b9-8d9e-be7ff104e031/26-6aa1adbe0e885.webp' /></p><p> அத்துடன் இத்தகைய ஆபத்தான மதிப்பீடுகள் கொண்ட நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில்,&nbsp; இங்கிலாந்து AI பாதுகாப்பு நிறுவனத்திடம், ஆந்த்ரோபிக் நிறுவனம் தங்களது அதிநவீன புதிய AI மாடலை ஆபத்து மதிப்பீட்டிற்கு வழங்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T19:04:40+00:00</updated>
        </entry>
    </feed>
