<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-05T21:34:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் 4 ஆண்களுக்கு நடந்த கத்திக்குத்து: 47 வயதுடைய பெண் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/stabbing-incident-in-covent-garden-woman-arrested-1785964131"></link>
            <id>https://news.lankasri.com/article/stabbing-incident-in-covent-garden-woman-arrested-1785964131</id>
            <summary type="text">லண்டனின் கோவென்ட் கார்டன் பகுதியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் கத்திக்குத்துலண்டனின் கோவென்ட் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனின் கோவென்ட் கார்டன் பகுதியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> லண்டனில் கத்திக்குத்து</h2><p>லண்டனின் கோவென்ட் கார்டன் பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 4 ஆண்களை பெண் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> எண்டெல் வீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.</p><p> அங்கு, கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த ஆண்களுக்கு போதுமான முதலுதவி சிகிச்சை வழங்கி மேல் சிகிச்சைக்காக அருகில் இருந்த சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b217636b-43a2-462c-ba87-a780ffae8142/26-6a73a66551b8e.webp' /></p><p></p><p> இதில், 34, 39, 42 மற்றும் 52 வயதுடைய நான்கு ஆண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக பெருநகர காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> அதிர்ஷ்டவசமாக தாக்குதலில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என்றும், இரண்டு பேர் ஏற்கனவே வீடு திரும்பி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2> 47 வயதுடைய பெண் கைது</h2><p>கத்திக்குத்து தாக்குதலை நடத்திய 47 வயதுடைய பெண் ஒருவரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.</p><p> கத்தி போன்ற ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்தல், தாக்குதல் நடத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து ஒரு ஜோடி கத்திரிக்கோலை கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் மனநலம் சார்ந்த பிரச்சினை காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T21:09:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தவித்த 19 அகதிகள்: கேள்விக்குறியான 17 பேர்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/asylum-stuck-without-food-water-for-15-days-in-sea-1785960570"></link>
            <id>https://news.lankasri.com/article/asylum-stuck-without-food-water-for-15-days-in-sea-1785960570</id>
            <summary type="text">ஸ்பெயின் அருகே&amp;nbsp; 15 நாட்களாக உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தத்தளித்த 17 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக&amp;nbsp;அஞ்சப்படுகிறது. கடலில் தத்தளித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் அருகே&nbsp; 15 நாட்களாக உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தத்தளித்த 17 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக&nbsp;அஞ்சப்படுகிறது.</p><h2> கடலில் தத்தளித்த அகதிகள்</h2><p>வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயின் அருகே உள்ள பாலோரிக்&nbsp;தீவுகளுக்கு சென்ற படகு ஒன்று பழுதாகி நடுக்கடலில் நின்றதில், அதிலிருந்த 17 அகதிகள் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.</p><p> அந்த படகில் இருந்தவர்கள் கிட்டத்தட்ட 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி தவித்து வந்ததாக செவ்வாய்க்கிழமை ஸ்பெயின் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஸ்பெயின் கடற்படையினர், மல்லோர்கா தீவுக்கு அருகே தென்மேற்கே உள்ள 12.7 நாட்டிக்கல் தொலைவில் தத்தளித்த படகில் இருந்து இருவரை மீட்டனர்.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43a913ce-4ec7-4f3c-b32a-b5dc872b0d97/26-6a73987c3631d.webp' /></p><p> அவர்கள் இருவரும் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர்.</p><p> இந்நிலையில் அவர்கள் தகவலில், தங்களுடன் படகில் 19 பேர் பயணித்ததாகவும். என்ஜின் பழுதாகி 15 நாட்களாக நடுக்கடலில் படகு தத்தளித்ததன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் 17 பேர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><p> இதையடுத்து ஸ்பெயின் மீட்பு குழுவினர் அப்பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் தீவிரமான தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.</p><p></p><h2> அதிகரிக்கும் அகதிகள் நுழைவு</h2><p>ஸ்பெயினில் நாளுக்கு நாள் அகதிகள் வருகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.&nbsp; இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 211 படகுகளில் 3,935 பேர் அகதிகளாக பாலோரிக் தீவுக்கு வந்து இருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> கடந்த வாரம் கூட மொராக்கோவில் இருந்து கிட்டத்தட்ட 72,000 அகதிகள் செவுடாவிற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> இந்த எல்லையை கடக்கும் முயற்சியில் கிட்டத்தட்ட 75 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T20:48:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷேக் ஹசீனா நேரலை., ஷகிப் அல் ஹாசன் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/petrol-bomb-attack-at-shakib-al-hasans-house-1785962248"></link>
            <id>https://news.lankasri.com/article/petrol-bomb-attack-at-shakib-al-hasans-house-1785962248</id>
            <summary type="text">வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஷகிப் அல் ஹாசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷகிப் அல் ஹாசன் வீட்டின் மீது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஷகிப் அல் ஹாசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><h2> ஷகிப் அல் ஹாசன் வீட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல்</h2><p>வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் அவாமி லீக் கட்சியின் முன்னாள் எம்.பியுமான ஷகிப் அல் ஹாசனின் மூதாதையர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தியாவில் தங்கியுள்ள வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இணைந்து ஷகிப் அல் ஹாசன் காணொளி வாயிலாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3538239b-d691-4ee8-8b2e-ce22e96c3a8e/26-6a739f09a2976.webp' /></p><p> மகுரா நகரின் கேஷப்மோர் பகுதியில் அமைந்துள்ள ஷகிப் அல் ஹாசனின் மூதாதையர் வீட்டில் உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 8.45 மணிக்கு இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.</p><p>இதில் ஷகிப் அல் ஹாசனின் வீடு சேதமடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>இதையடுத்து தாக்குதல் தொடர்பாக அவாமி லீக் வெளியிட்ட அறிக்கையில், நவ பாசிசம் வங்கதேசத்தி சூழ்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.</p><p> காணொளி வாயிலாக அவரது நாட்டு மக்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, ஜனநாயகத்தை மீட்கும் முயற்சியில் என்னுடைய கைது நடவடிக்கை அல்லது மரணத்தை கூட எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef0af12d-d1b9-4a2c-b636-360b4ea7430b/26-6a739f0a6c53b.webp' /></p><p> அத்துடன் டிசம்பரில் நிச்சயம் வங்கதேசத்திற்கு திரும்புவேன் என்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T20:37:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் FCRA சட்டத்திருத்தம்: அமெரிக்காவில் இருந்து எழுந்த எதிர்ப்பு குரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-congressman-alleges-india-new-fcra-amendment-1785953692"></link>
            <id>https://news.lankasri.com/article/us-congressman-alleges-india-new-fcra-amendment-1785953692</id>
            <summary type="text">இந்தியாவில் கொண்டு வரப்படவுள்ள FCRA சட்டத்திருத்தத்திற்கு அமெரிக்காவின் குடியரசுக் கட்சி தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.இந்தியாவில் FCRA சட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் கொண்டு வரப்படவுள்ள FCRA சட்டத்திருத்தத்திற்கு அமெரிக்காவின் குடியரசுக் கட்சி தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.</p><h2>இந்தியாவில் FCRA சட்டத்திருத்தம்</h2><p>இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.</p><p> இந்நிலையில் இந்தியா கொண்டுவரவுள்ள இந்த FCRA சட்டத்திருத்தத்திற்கு அமெரிக்க குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரைலி மூர் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed4ea8cc-dab4-497a-9ee7-573fbd458819/26-6a737d9e62126.webp' /></p><p>அமெரிக்கா எம்.பி-யான&nbsp; ரைலி மூர் தன்னுடைய குற்றச்சாட்டில், இந்த FCRA சட்டத்திருத்தத்தின் மூலம் இந்திய அரசு இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களையும், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வழிவகுக்கும் என்று குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>அமெரிக்க எம்.பி ரைலி மூர் தெரிவித்த கருத்து</h2><p>
நம் ஆண்டவராகிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு, சில பத்தாண்டுகளில் புனித தோமையார் மலபார் கடற்கரையில் பயணம் செய்த போதே இந்தியாவில் கிறிஸ்தவம் இருந்து வருகிறது.</p><p> இவ்வளவு நீண்ட கிறிஸ்தவ வரலாறும், பாரம்பரியமும் இருக்கும் போதே, தேவாலயங்களையும், மத அறக்கட்டளைகளையும் கையகப்படுத்த அனுமதிக்கும் FCRA சட்டத்திருத்தத்திற்கு இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Christians have been in India since St. Thomas the Apostle traveled to the Malabar Coast just decades after the resurrection of our Lord Jesus Christ.<br> <br>But despite this long Christian history, India’s Parliament is considering amending Foreign Contribution Regulation Amendment…</p>&mdash; Rep. Riley M. Moore (@RepRileyMoore) <a href="https://x.com/RepRileyMoore/status/2084675064738570336?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இது கிறிஸ்தவர்கள் மீதான தெளிவான தாக்குதல் ஆகும். இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் இருநாடுகளும் இடையிலான உறவில் இது பெரும் கவலைக்குரிய விஷயமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.</p><p></p><h2> புதிய FCRA சட்ட திருத்தம் சொல்வது என்ன?</h2><p>
FCRA சட்டத்திருத்தம் 2026 என்பது ஒரு தொண்டு நிறுவனத்தின் FCRA உரிமம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது அதன் காலாவதி காலம் நிறைவடைந்து விட்டாலோ அந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து பெற்ற நிதி மற்றும் சொத்துகளை நிர்வகிக்க ஒரு நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற வழிமுறையை இந்த சட்டம் வழிவகுக்கிறது.</p><p> இந்த சொத்துகள் ஒருவேளை மத தலங்களாகவோ, கோவில், தேவாலயங்கள் போன்ற அமைப்பாக இருந்தால் அதன் தன்மை மாறாமல் பராமரிக்க வேண்டும்.</p><p> இந்த சட்ட விதிகளை மீறுபவர்களுக்கான சிறைத்தண்டனை 5 ஆண்டுகளில் 1 ஆண்டாக குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-05T18:15:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா ஏவுகணை தளங்களை அழிக்க தயாராக இருக்கிறோம்: எச்சரிக்கை விடுத்த ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-vow-to-target-russian-missile-sites-1785948296"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-vow-to-target-russian-missile-sites-1785948296</id>
            <summary type="text">ரஷ்ய ஏவுகணை தளங்களை அழிக்கப்போவதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். ரஷ்யா ஏவுகணை தளத்தை அழிக்க தயார்
உக்ரைன் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய ஏவுகணை தளங்களை அழிக்கப்போவதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.</p><h2> ரஷ்யா ஏவுகணை தளத்தை அழிக்க தயார்</h2><p>
உக்ரைன் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தும் ரஷ்ய ஏவுகணை தளங்களை முற்றிலுமாக அழிக்க தயாராக இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.</p><p> ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்கான உறுதியான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க புதன்கிழமை கீவ்விற்கு வந்த பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங்குடன் நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f41303a3-d267-4da2-9439-ba2330ba43d0/26-6a736889e43af.webp' /></p><p></p><h2> உக்ரைன் - பிரித்தானியா பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்</h2><p>
உக்ரைன் - பிரித்தானியா&nbsp; ஆகிய இருநாடுகளும் இணைந்து அதிநவீன போர் ஆயுதங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.</p><p> ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்க உதிரி பாகங்கள் வழங்கும் நிறுவனங்கள் மீது சர்வதேச தடைகளை விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த இருதரப்பு சந்திப்பின் போது, ரஷ்யாவின் போர் இயந்திரங்களையும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் செயலிழக்க செய்யக்கூடிய எந்தவொரு முயற்சியும் அவசியமானது என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acfd3221-5e2c-4ea5-9398-adafe1b6f921/26-6a73688a99561.webp' /></p><p> சமீபத்திய ரஷ்ய தாக்குதலில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து மேம்பட்ட உபகரணங்களை பெற வேண்டியதன் அவசியத்தை இந்த இராஜதந்திர சந்திப்புகள் வெளிகாட்டியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T18:15:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல் பாதை: ஈரான் - ஓமன் இடையே இறுதியான ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-oman-finalize-commercial-route-in-hormuz-1785946881"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-oman-finalize-commercial-route-in-hormuz-1785946881</id>
            <summary type="text">ஈரானும் ஓமனும் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் பாதை ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளனர். ஈரான் - ஓமன் இடையே ஒப்பந்தம்ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானும் ஓமனும் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் பாதை ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளனர்.</p><h2> ஈரான் - ஓமன் இடையே ஒப்பந்தம்</h2><p>ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கான குறிப்பிட்ட புவியியல் ஆயத்தொலைவுகளை இறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை ஈரானும் ஓமனும் இணைந்து வெற்றிகரமாக இறுதி செய்துள்ளனர்.</p><p> இந்த தகவலை ஈரானின் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பகேயி உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இருதரப்புக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3418259b-6d03-4dac-aff2-d633d7d51764/26-6a73630315537.webp' /></p><p>மூன்றாம் தரப்புகள் இதில் தலையிட்டு எந்தவொரு இடையூறும் செய்யாத பட்சத்தில், ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான கூட்டு அறிக்கை தொடர்பான இறுதிக்கட்ட மதிப்பீடு மற்றும் வரைவுப் பணிகள் நடைபெற்று வருவதாக&nbsp; அமைச்சர் இஸ்மாயில் பகேயி குறிப்பிட்டுள்ளார்.</p><p> இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டி இருந்தாலும், இந்த ஒப்பந்தம் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியில் முறையான கடல்சார் பாதுகாப்பை உறுதி அளிக்காது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.</p><p> மேலும் அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையும், ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் தான் இந்த நிலையற்ற தன்மைக்கு முக்கிய காரணம் என்று அமைச்சர் இஸ்மாயில் பகேயி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T16:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்-நினோ தாக்கம்: 4.9 கோடி மக்கள் பட்டினியில் வாடலாம்- ஐ.நா.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/strong-el-nino-may-trigger-global-hunger-1785946157"></link>
            <id>https://news.lankasri.com/article/strong-el-nino-may-trigger-global-hunger-1785946157</id>
            <summary type="text">எல்-நினோவின் தாக்கத்தால் உலகில் 4.9 கோடி மக்கள் பசிப் பட்டினியில் வாடலாம் என ஐ.நா. எச்சரித்துள்ளது.

4.9 கோடி மக்கள்உலக உணவு திட்டம் (WFP) வெளியிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்-நினோவின் தாக்கத்தால் உலகில் 4.9 கோடி மக்கள் பசிப் பட்டினியில் வாடலாம் என ஐ.நா. எச்சரித்துள்ளது.</p><h2>

4.9 கோடி மக்கள்</h2><p>உலக உணவு திட்டம் (WFP) வெளியிட்ட புதிய அறிக்கையில், வலுவான எல்-நினோ வானிலை நிகழ்வு காரணமாக, உலகில் அதிகமாக பாதிக்கப்படவுள்ள பல பகுதிகளில் கூடுதலாக 4.9 கோடி மக்கள் பசியின் கோரப்பிடியில் சிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
அறிக்கையின்படி, தற்போது 45 நாடுகளில் 22 சதவீதம் அதிகரிப்புடன் மொத்தம் 274 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ள நேரிடும் அபாயம் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f93839d-a21c-4d8d-ae9e-1ee89ef8e932/26-6a73602ed8f99.webp' /></p><p>மத்திய அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்திய அமெரிக்காவில் 83 சதவீதம் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் 75 சதவீதம் வரை பசியால் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என WFP தெரிவித்துள்ளது.
</p><p>
எல்-நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் இயற்கை நிகழ்வு. இது உலகளாவிய வானிலை மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. ஆப்பிரிக்காவில் வறட்சி, ஆசியாவில் மழை தாமதம், சில பகுதிகளில் வெள்ளம் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.</p><p></p><h2>WFP அதிகாரி ஜீன்-மார்டின் பவுயர் கூறியதாவது:
</h2><p>
“இத்தகைய நிகழ்வுகள் கடந்த காலங்களில் பெரிய அளவிலான பசியை தூண்டியுள்ளன. எனவே, முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது அவசியம்” என எச்சரித்துள்ளார்.</p><p>மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிதி உதவிகளில் ஏற்பட்ட குறைவு காரணமாக, உணவு பாதுகாப்பு தொடர்பான தரவுகள் சேகரிப்பில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இது எதிர்கால பசி நெருக்கடிகளை அடையாளம் காண சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டது.</p><p>

WFP, தற்போது 18 நாடுகளில் முன்கூட்டிய நடவடிக்கை திட்டங்களை விரிவுபடுத்தி, 13 லட்சம் மக்களுக்கு பண உதவி மற்றும் பிற ஆதரவுகளை வழங்கி வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T16:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவில் அதிவேகத்தில் மோதிய SpaceX ரொக்கெட்- உருவான புதிய குழி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spacex-rocket-crashes-into-moon-crater-1785945040"></link>
            <id>https://news.lankasri.com/article/spacex-rocket-crashes-into-moon-crater-1785945040</id>
            <summary type="text">SpaceX ரொக்கெட்டின் ஒரு பகுதி நிலவில் அதிவேகத்தில் மோதியுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;அமெரிக்க விண்வெளி நிறுவனம் SpaceX ஏவிய Falcon 9 ரொக்கெட்டின் மேல் பகுதி, கட...</summary>
            <content type="html"><![CDATA[<table class="table table-bordered"><tbody><tr><td>SpaceX ரொக்கெட்டின் ஒரு பகுதி நிலவில் அதிவேகத்தில் மோதியுள்ளது.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>அமெரிக்க விண்வெளி நிறுவனம் SpaceX ஏவிய Falcon 9 ரொக்கெட்டின் மேல் பகுதி, கட்டுப்பாட்டை இழந்து, இன்று அதிகாலை சந்திரனில் 8,700 கி.மீ வேகத்தில் மோதியது.</p><p>

இதனால், சந்திரனில் புதிய குழி உருவானதாக NASA அறிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/013579f6-f382-4f53-b891-a74f1fd04a04/26-6a735bd342332.webp' /></p><h2>விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்த&nbsp;ரொக்கெட் </h2><p>இந்த ரொக்கெட், கடந்த ஆண்டு ஜனவரியில் Hakuto-R விண்கலத்தை ஏவுவதற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதிக எடையுள்ள காரணமாக, ரொக்கெட் விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்து, சந்திரனை நோக்கி தவறுதலாகச் சென்றது.</p><h2>உருவான புதிய குழி</h2><p>Einstein Crater அருகே நடந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. 14 மீட்டர் நீளமும், 4,000 கிலோ எடையும் கொண்ட இந்த ரொக்கெட் பகுதி, சந்திரனில் 18 மீட்டர் அகலம் மற்றும் 4 மீட்டர் ஆழம் கொண்ட குழியை உருவாக்கியிருக்கலாம் என NASA தெரிவித்துள்ளது.
</p><p>
உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆய்வாளர்கள், இந்த மோதல் நிகழ்ந்த இடத்தை தொலைநோக்கிகள் மூலம் கவனித்தனர். மேலும், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் சந்திரன் சுற்றுப்பாதை விண்கலங்கள் அந்த இடத்தை ஆய்வு செய்ய உள்ளன.
</p><p></p><h2>அறிவியலாளர்களின் கருத்துக்கள்
</h2><p>லெஸ்டர்ப் பல்கலைக்கழகத்தின் ஹன்னா சார்ஜன்ட் கூறியதாவது: “இவ்வாறு விண்வெளி கழிவுகளை சந்திரனில் அனுப்புவது நல்லது அல்ல. இது அப்போலோ மிஷன் நினைவுச்சின்னங்கள் போன்ற முக்கிய இடங்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடும்” என எச்சரித்துள்ளார்.
</p><p>
ஆனால், சில விஞ்ஞானிகள், இந்த மோதல் அறிவியல் தரவுகளைப் பெறுவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படலாம் எனக் கூறுகின்றனர். மோதலின் வேகம், கோணம், தாக்கம் போன்ற விவரங்கள், சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய உதவும்.
</p><p>
மகாவ் பல்கலைக்கழகத்தின் ரோபெர்டோ புஜியோலாக்கி கூறியதாவது: “சந்திரன் ஏற்கனவே கோடிக்கணக்கான விண்கல் தாக்குதல்களை சந்தித்துள்ளது. எனவே, இந்த மோதல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால், திட்டமிட்ட ஆய்வுக்காக மேற்கொள்ளப்பட்டால், இது பயனுள்ளதாக இருக்கும்” எனக் கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T15:48:32+00:00</updated>
        </entry>
    </feed>
