<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-19T08:41:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் ட்ரம்ப்: சட்டப்படி சாத்தியமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/can-trump-legally-declare-hormuz-as-us-territory-1787125501"></link>
            <id>https://news.lankasri.com/article/can-trump-legally-declare-hormuz-as-us-territory-1787125501</id>
            <summary type="text">Can Donald Trump legally declare Strait of Hormuz US territory? அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஹோர்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் நிலையில், அது சட்டப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Can Donald Trump legally declare Strait of Hormuz US territory? அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஹோர்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் நிலையில், அது சட்டப்படி சாத்தியமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
</p><p>

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தியை ஒரு அமெரிக்கப் பிராந்தியம் என அறிவித்துள்ளார்.
</p><p>
அப்படி அவர் ஹோர்முஸ் ஜலசந்தி அமெரிக்கப் பிராந்தியம் என சட்டப்படி அறிவிக்கமுடியுமா?
</p><h3>
ஹோர்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் ட்ரம்ப்</h3><p>

முதலில், டிரம்ப், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி கப்பலை பாரசீக வளைகுடாவிற்கு அருகில் நிறுத்தி ஹோர்முஸ் ஜலசந்தியை மூட முயன்றார்.</p><p>

பின்னர், அந்த நீர்வழிப்பாதை நெடுகிலும் இருந்த ஈரானிய துறைமுகங்களில் கப்பல்கள் நுழைவதையும், வெளியேறுவதையும் தடுத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/124ea61a-eeab-4bfc-ac7e-f0e150749384/26-6a855eff2faff.webp' /></p><p>

இப்போது, அவர் மேலும் ஒரு படி முன்னேறி, ஹோர்முஸ் ஜலசந்தியை ஒரு அமெரிக்கப் பிராந்தியமாக அறிவித்துள்ளார்.&nbsp;</p><p>

பாரசீக வளைகுடாவையும் ஓமான் வளைகுடாவையும் இணைக்கும் அந்த நீர்வழிப்பாதையை, ஒரு 'புதிய அமெரிக்கப் பிராந்தியமாக' காட்டும் வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார் ட்ரம்ப்!
</p><h3>
சட்டப்படி சாத்தியமா?
</h3><p>
விடயம் என்னவென்றால், ஹோர்முஸ் ஜலசந்தி, வடக்கே ஈரானுக்கும் தெற்கே ஓமானுக்கும் இடையில் அமைந்துள்ளது.
</p><p>
ஐக்கிய நாடுகள் கடல் சட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த இரண்டு நாடுகளின் கடற்கரையிலிருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவு வரையிலான பகுதி அந்த நாடுகளுக்குச் சொந்தம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1c14f80-e4cf-4ad7-bbc2-1e89fc82eada/26-6a855efe7ce51.webp' /></p><p>
அமெரிக்கா இதில் எந்த உரிமையும் கோர முடியாது.&nbsp;</p><p>
அதே நேரத்தில், ஹோர்முஸ் ஜலசந்தி இரண்டு நீர்வழிகளை இணைப்பதாலும், சர்வதேச கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுவதாலும், ஐக்கிய நாடுகள் கடல் சட்ட ஒப்பந்தத்தின் 37 - 44 பிரிவுகளின்படி அது ஒரு சர்வதேச ஜலசந்தியாகும்.&nbsp;</p><p></p><p>
போக்குவரத்து வழித்தட விதிமுறையின்படி, அனைத்துக் கப்பல்களுக்கும் விமானங்களுக்கும் இந்த நீர்வழிப்பாதை வழியாகத் தடையின்றிப் பயணிக்கும் உரிமை உண்டு, கடலோர நாடுகள் இந்த உரிமைகளை இடைநிறுத்தம் செய்ய முடியாது.</p><p>

மேலும், எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் நீர்வழியையோ அல்லது வேறு எந்த சர்வதேச நீர்நிலையையோ தனக்குச் சொந்தமானது என உரிமை கோருவதை சர்வதேச சட்டம் அனுமதிப்பதில்லை.
</p><p>
அமெரிக்கா ஐ.நா. கடல் சட்ட ஒப்பந்தத்தில் ஓர் உறுப்பினராக இல்லாவிட்டாலும், அதன் விதிகளை அதனால் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால், அந்த ஒப்பந்தம், ஒரு சர்வதேசச் சட்டமாக மதிக்கப்படுகிறது.</p><p>
ஆக, ட்ரம்ப் எதையாவது சொல்வார், சற்று நேரத்தில் அதிலிருந்து பின்வாங்கிவிடுவார். இப்போது ஹோர்முஸ் ஜலசந்தியைக் குறித்து அப்படி ஒரு விடயத்தைக் கூறியுள்ளார். இதுவும் அதேபோல்தானா என்பது தெரியவில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T08:25:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[Most Wanted குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்தியர்: அமெரிக்காவின் FBI அமைப்பு அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-gangster-major-singh-on-fbi-s-most-wanted-1787126712"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-gangster-major-singh-on-fbi-s-most-wanted-1787126712</id>
            <summary type="text">Indian gangster major Singh on FBI’s most wanted person: அமெரிக்காவின் FBI அமைப்பின் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian gangster major Singh on FBI’s most wanted person: அமெரிக்காவின் FBI அமைப்பின் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மேஜர் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><h2> தேடப்படும் மிக முக்கிய குற்றவாளியான இந்தியர்</h2><p>அமெரிக்காவின் முக்கியமான FBI அமைப்பின் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த 29 வயது மேஜர் சிங்(Major Singh) அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p> இவர் பஞ்சாப்பின் ஜக்கு பகவான்பரியா(Jaggu Bhagwanpuria) என்ற குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.</p><p> மேலும் கலிபோர்னியாவில் நடைபெற்ற பன்னாட்டுக் குற்றச் சம்பவத்தில் மேஜர் சிங்கிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இவரை அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p><p> கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் மேஜர் சிங் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a5d25be-1349-455c-b85f-18f53f646921/26-6a8563b98a9f5.webp' /></p><p></p><h2> சர்வதேச அளவிலான கைது நடவடிக்கை</h2><p>அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சட்ட அமலாக்க முகமைகள் இணைந்து நடத்தும் ஆபரேஷன் ஹார்ட்பால்(Operation Hardball) என்ற நடவடிக்கையின் கீழ் மேஜர் சிங் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.</p><p> ஆபரேஷன் ஹார்ட்பால் நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையில் பன்னாட்டு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய இந்தியர்கள் 24 பேர் இந்த மாதத்தின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p> இதில் 11 பேர் கலிபோர்னியாவில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T08:05:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோல்டர் அணி படுதோல்வி: ருத்ரதாண்டவமாடிய கீமோ பவுல், ரோவ்மன் பௌல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/keemo-paul-smash-65-runs-vs-st-kitts-1787126422"></link>
            <id>https://news.lankasri.com/article/keemo-paul-smash-65-runs-vs-st-kitts-1787126422</id>
            <summary type="text">Jaimaica Kingsmen beat St Kitts by 51 runs:
கரீபியன் தொடரில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jaimaica Kingsmen beat St Kitts by 51 runs:
கரீபியன் தொடரில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸை வீழ்த்தியது.</p><p>
சபீனா பார்க் மைதானத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ஜமைக்கா கிங்ஸ்மென்&nbsp;181 ஓட்டங்கள் </h2><p> 

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 10வது போட்டியில், செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85b75e66-781e-4980-82aa-ba546cea9965/26-6a85639723cff.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
கீமோ பவுல் 36 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்களும், ரோவ்மன் பௌல் 39 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்களும் விளாசினார். </p><p>

பின்னர் ஆடிய செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் அணி 18 ஓவர்களிகள் 130 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
அதிகபட்சமாக கெவின் விக்ஹம் 37 ஓட்டங்களும், நவின் 19 ஓட்டங்களும் எடுத்தனர். கீமோ பவுல் 3 விக்கெட்டுகளும், ஆந்த்ரே ரஸல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74d30ac1-f43b-43d3-b0d8-c1928569e488/26-6a856397db1b1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T08:02:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம் - லடாக்கில் கட்ட திட்டமிடும் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/world-hightest-cricket-stadium-to-be-in-ladakh-1787124377"></link>
            <id>https://news.lankasri.com/article/world-hightest-cricket-stadium-to-be-in-ladakh-1787124377</id>
            <summary type="text">proposal for world hightest cricket stadium in adakh: இந்தியாவின் லடாக்கில் உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

லடாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>proposal for world hightest cricket stadium in adakh: இந்தியாவின் லடாக்கில் உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.</p><h3>

லடாக்கில் உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம்</h3><p>

இந்தியா உலகளவில் அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடாக உள்ளது. உலகின் பெரிய மற்றும் உயரமான கிரிக்கெட் மைதானம் இந்தியாவிலே உள்ளது.</p><p> 

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9dd9b8b-a78f-4e53-bce8-010c0257bf0f/26-6a855a9bc4482.webp' /></p><p>

இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள தௌலாதர் மலைத்தொடருக்கு எதிரே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,780 அடி உயரத்தில் உள்ள மைதானமே உயரமான மைதானமாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa035799-95b1-4b56-9d03-7b4634c4f164/26-6a855a9a6da69.webp' /></p><p> 

தற்போது அதனை விட 2 மடங்கு உயரத்தில் கிரிக்கெட் மைதானத்தை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. </p><p>

ஜம்மு காஷ்மீரிலிருந்த 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.&nbsp;</p><p></p><p>

தற்போது இங்கு விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. </p><p>

லடாக்கில் உள்ள லே அருகே, திக்ஸே என்ற இடத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,800 அடி உயரத்தில் கிரிக்கெட் மைதானம் கட்ட முன்மொழியப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96288605-0aac-49ea-8089-2f3d36cc3334/26-6a855a9b1dd92.webp' /></p><p> இதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்கும் பணியை லடாக் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
</p><p>
இந்த திட்டத்திற்கு சுமார் ரூ.100 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மைதானம் கட்டி முடிக்கப்பட்டால் இதுவே உலகின் உயரமான கிரிக்கெட் மைதானமாக இருக்கும்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:26:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு: இருதரப்பு உச்சி மாநாடு எப்போது? கசிந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-seeks-to-meet-kim-jong-un-in-november-1787122972"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-seeks-to-meet-kim-jong-un-in-november-1787122972</id>
            <summary type="text">Trump seeks to meet Kim Jong Un in November: வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு நவம்பரில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump seeks to meet Kim Jong Un in November: வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு நவம்பரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2> கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு</h2><p>வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடன் நேரடி சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.</p><p>இலையுதிர் காலத்தில் இந்த நேரடி சந்திப்பை நடத்தவதற்காக தன்னுடைய அதிகாரிகளுடன் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p> வால் ஸ்ட்ரீட் ஜர்னல்(Wall Street Journal) அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e2667c-4fd3-44fb-8abc-5618d53cdf0d/26-6a85551d95902.webp' /></p><h2> நவம்பரில் சந்திப்பு</h2><p>
கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மிகவும் ரகசியமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.</p><p> ஆசியாவிற்கு டிரம்ப் மேற்கொள்ள இருக்கும் அடுத்த சுற்றுப்பயணத்தின் போது இந்த சந்திப்பை நடத்த சரியான நேரமாக என்று டிரம்ப் கருதுவதாக கூறப்படுகிறது.</p><p> குறிப்பாக சீனாவின் சென்சென் நகரில் நவம்பர் மாதம் நடைபெறும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் போது கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு நிகழ வாய்ப்பு இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் சர்ரே பூங்காவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்: இந்திய வம்சாவளி நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-man-arrested-after-surrey-park-assault-1787120962"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-man-arrested-after-surrey-park-assault-1787120962</id>
            <summary type="text">Indian Origin Man arrested after surrey park assault: கனடாவில் இளம்பெண் நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் சம்பவத்தில் இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian Origin Man arrested after surrey park assault: கனடாவில் இளம்பெண் நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் சம்பவத்தில் இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> இந்திய வம்சாவளி நபர் கைது</h2><p>
கனடாவின் சர்ரே நகரில் அமைந்துள்ள பூங்காவில் இளம்பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் தொடர்பாக 40 வயது மதிக்கத்தக்க இந்திய வம்சாவளி நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p> ஜகந்தர் குரானா(Jagendar Kurana) என்று அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேக நபர், சர்ரேவில் உள்ள பியர் கிரீக் பூங்காவில்(Bear Creek Park) இளம்பெண் ஒருவரை தகாத முறையில் தொட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.</p><p> &nbsp;ஆகஸ்ட் 9ம் திகதி இது தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர் மீது பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p> இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எந்தவொரு உடல் காயங்களும் ஏற்படவில்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd926498-4df0-41ec-bc45-83357fa3a959/26-6a854d4395010.webp' /></p><h2>கைது நடவடிக்கை</h2><p>பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், ஆகஸ்ட் 12ம் திகதி ஜகந்தர் குரானா-வை கைது செய்தனர்.</p><p> சந்தேக நபர் மீது போடப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா வழக்கு தொடரகம் அனுமதியளித்துள்ளது.</p><p> கைது செய்யப்பட்ட ஜகந்தர் குரானா தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு ஜாமீன் விசாரணைக்காக காத்திருக்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-19T06:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடீஸ்வரர்களுக்காக பூமிக்கு அடியில் பங்கர்களை உருவாக்கும் சுவிஸ் நாட்டவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/super-rich-building-swiss-bunkers-to-stash-wealth-1787120524"></link>
            <id>https://news.lankasri.com/article/super-rich-building-swiss-bunkers-to-stash-wealth-1787120524</id>
            <summary type="text">Wealthy people are building Swiss bunkers to stash their wealth: செல்வத்தை பதுக்கிவைப்பதற்காக சுவிட்சர்லாந்தில் பதுங்கு குழிகளை உருவாக்கிவருகிறார்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Wealthy people are building Swiss bunkers to stash their wealth: செல்வத்தை பதுக்கிவைப்பதற்காக சுவிட்சர்லாந்தில் பதுங்கு குழிகளை உருவாக்கிவருகிறார்கள் கோடீஸ்வரர்கள்.</p><p>


கோடீஸ்வரர்கள் தங்கள் செல்வத்தைப் பதுக்கி வைப்பதற்காக, ஆல்ப்ஸ் மலையில், பங்கர்கள் என்னும் பதுங்கு குழிகளை உருவாக்கிவருகிறார் சுவிஸ் நாட்டவர் ஒருவர்.
</p><h3>
ஆல்ப்ஸ் மலையில் பங்கர்கள்</h3><p>

சுவிஸ் தொழிலதிபரான தாமஸ் கேஸ்ஸர் (Thomas Gasser) என்பவர், Brünig Mega Safe என்னும் பெயரில், சுவிட்சர்லாந்திலுள்ள Lungern என்னுமிடத்தில், பதுங்கு குழிகளை உருவாக்கிவருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9eed455-caf1-4353-9668-803cc0f629be/26-6a854b8e3352f.webp' /></p><p>உலகிலுள்ள கோடீஸ்வரர்கள், தங்கள் தங்கம், விலையுயர்ந்த கார்கள், விலையுயர்ந்த உயர் தர ஒயின் முதலான தங்கள் சொத்துக்களை பாதுகாத்துவைப்பதற்காக இந்த பதுங்கு குழிகள் உருவாக்கப்பட்டுவருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58a7e8fc-5710-4e1a-9092-803e6f9eda13/26-6a854b8edc9b5.webp' /></p><p>ஆல்ப்ஸ் மலையைக் குடைந்து, சுமார் 100 மீற்றர் ஆழத்தில் 20 பதுங்கு குழிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார் தாமஸ்.&nbsp;</p><p></p><p>
100 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும் இந்த பதுங்கு குழிகளுக்கான கட்டணம், சுமார் ஒரு மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள்!&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a177d0e4-ce11-45f5-9e09-05aead0e98d9/26-6a854b8f8fedd.webp' /></p><p>அத்துடன், யாரும் நினைத்த நேரம் நேரடியாக இந்த பதுங்கு குழிகளுக்குள் சென்றுவிடமுடியாது. கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்பே இந்த பதுங்கு குழிகளை அடையமுடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0882ed41-3b7f-44a5-91f4-d6201bf66c7b/26-6a854b9043a28.webp' /></p><p>பொதுமக்கள் யாரும் அங்கு செல்லமுடியாது. ஏன், ஊடகவியலாளர்களுக்குக் கூட, இந்த பதுங்கு குழிகளின் வாசல் எங்கு உள்ளது என்பது காட்டப்படவில்லை.
</p><p>
சுவிஸ் தேசிய வங்கிக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளதோ, அதற்கு ஈடாக இந்த பதுங்கு குழிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என்கிறார் தாமஸ்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:22:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்: 30 தொழிலாளர்கள் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gold-mine-collapsed-in-central-africa-30-dead-1787112613"></link>
            <id>https://news.lankasri.com/article/gold-mine-collapsed-in-central-africa-30-dead-1787112613</id>
            <summary type="text">Gold mine collapsed in central Africa 30 miners dead: மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Gold mine collapsed in central Africa 30 miners dead: மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2>இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்</h2><p>
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய தங்கச் சுரங்கம் செவ்வாய்க்கிழமையான நேற்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>அத்துடன் பலர் இன்னும் சுரங்கத்துக்குள் சிக்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> சுரங்க இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்த நபர் ஒருவரின் தகவல்படி, நானா மாம்பெரே மாகாணத்தின் அப்பா பகுதியில் இந்த தங்கச் சுரங்கமானது இடிந்து விழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db0937d-8889-464f-bdaf-5baeb39e863b/26-6a852ca6ebe68.webp' /></p><p></p><h2>&nbsp;மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>
இந்நிலையில் சுரங்க இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் அவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என கூறப்படுகிறது.</p><p> சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ காட்சிகள் அப்பகுதியில் ஏற்பட்டு வரும் குழப்பமான மீட்பு பணிகளை பதிவு செய்துள்ளன.</p><p> இதற்கிடையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அரசு செய்தித் தொடர்பாளர் எவரிஸ்ட் என்கமானா அனுதாபம் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் உதவியும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:10:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவ காப்பீடு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்திய முதல்வர் விஜய் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-increased-medical-insurance-to-rs-25lakhs-1787119742"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-increased-medical-insurance-to-rs-25lakhs-1787119742</id>
            <summary type="text">cm vijay increased CMCHIS medical insurance to rs25 lakhs: முதல்வர் விஜய் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். 

முதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay increased CMCHIS medical insurance to rs25 lakhs: முதல்வர் விஜய் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். </p><h3>

முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்</h3><p>

தமிழ்நாடு சட்டமன்றம் தொடங்கியதும் முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். </p><p>

இதில், "முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்(CMCHIS) இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு தற்போது உள்ள ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்" என அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be58324d-022e-46d9-ace2-e7e70a4b3edb/26-6a85487fb75c0.webp' /></p><p> 

நவீன யுகத்தில் நோயும், நோயாளிகளும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சிகிச்சை கட்டணங்களும் லட்சத்தில் உள்ளது. </p><p>

நடுத்தர மக்களுக்கும் அந்த சிகிச்சை கிடைக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1 லட்சத்திற்கு இலவச சிகிச்சை பெற முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. </p><p>

இது முந்தைய ஆட்சி காலங்களில் ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது முதல்வர் அதனை ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

இந்த திட்டத்தில், அறுவை சிகிச்சைகள், மருத்துவ சிகிச்சைகள், பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு காப்பீட்டு வசதி உள்ளது.</p><h3> 

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
</h3><p>
இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

பொதுப் பிரிவில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000 க்கு குறைவாக இருக்க வேண்டும்.
</p><p>
மாற்றுத்திறனாளிகள், கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவுத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள், முதியோர் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சிறப்பு வகை தேவைகள் மூலம் தகுதி பெறலாம்.</p><p> 

தகுதி பெற்றவர்கள் குடும்ப அட்டை, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள CMCHIS அட்டை வழங்கும் மையத்தில் விண்ணப்பிக்கலாம்.</p><p>CMCHIS திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பட்டியலை cmchistn அதிகாரப்பூர்வ தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:09:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெறும் ரூ.10: புரதச்சத்து நிறைந்த சூப்பர் உணவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/protein-rich-foods-at-low-cost-1787117510"></link>
            <id>https://news.lankasri.com/article/protein-rich-foods-at-low-cost-1787117510</id>
            <summary type="text">Protein Rich Foods: நோயற்ற வாழ்வுக்கு ஆரோக்கியமான உணவும், சீரான உடற்பயிற்சியும் அவசியம், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் தசைகளின் வளர்ச்சிக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Protein Rich Foods: நோயற்ற வாழ்வுக்கு ஆரோக்கியமான உணவும், சீரான உடற்பயிற்சியும் அவசியம், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் தசைகளின் வளர்ச்சிக்கும் புரதம் அவசியமாகிறது, இந்த பதிவில் மிக குறைவான விலையில் கிடைக்கும் புரதச்சத்து நிறைந்த 6 உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
</p><h2>
வறுத்த கொண்டைக்கடலை
</h2><p>
புரதம் நிறைந்த ஆகச்சிறந்த உணவு வறுத்த கொண்டைக்கடலை, விலையும் மிக குறைவானது.

இரும்புச்சத்து, தாதுக்கள் நிறைந்த கொண்டைக்கடலை வயிறு நிறைந்த உணர்வை தருவதால் உடல் எடையை குறைப்பதிலும் உகந்தது.

இரத்தத்தில் சர்க்கரை அளவை மிக மெதுவாக அதிகரிப்பதால் சர்க்கரை அளவை சீராக வைப்பதுடன் உடனடி ஆற்றலை தருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c06ddb5-5f05-4ac1-94f0-1bf622a20e4b/26-6a85434363318.webp' /><br></p><p>
</p><h2>
அவித்த முட்டைகள்
</h2><p>
கால்சியம், விட்டமின் டி மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய அமிலங்கள் நிறைந்த அவித்த முட்டைகள் விலை குறைவான அதேசமயம் சிறந்த புரத மூலமாகும்.

கலோரிகள் குறைவானது, நீண்டநேரம் வயிறு நிறைந்த உணர்வை தருவதால் பசியை கட்டுப்படுத்துகிறது, எலும்புகளை பலப்படுத்துகிறது.
</p><h2>
வேர்க்கடலை
</h2><p>
நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு சத்து, விட்டமின் ஈ நிறைந்துள்ளதால் இதயத்தை பலப்படுத்துகிறது, உடனடி ஆற்றலை தருகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது.

இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவதால் ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படுகிறது, அவித்து கேரட், வெங்காயம், தக்காளி சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caabb8e3-536e-424e-a176-b0032707a170/26-6a854344148c3.webp' /><br></p><p>
</p><h2>
முளைக்கட்டிய தானியங்கள்
</h2><p>
புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த, சத்தான மற்றும் குறைந்த செலவிலான உணவாகும். 

இவற்றுடன் துருவிய காய்கறிகள் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கப்பெறும்.</p><p>
</p><h2>
தயிர்
</h2><p>
தயிர் மற்றும் Greek Yogurt ஆகியவை செரிமானத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் துணைபுரியும், மலிவு விலையிலான மற்றும் புரதச்சத்து நிறைந்த தேர்வுகளாகும். அலுவலகத்தில் வயிறு நிரம்பும் சிற்றுண்டியாக இவற்றை பழங்கள் அல்லது கொட்டைகளுடன் சேர்த்து உண்ணலாம்.</p><h2>பன்னீர்
</h2><p>பாலில் இருந்து கிடைக்கப்பெறும் சைவ புரத மூலம் பன்னீர் ஆகும், கால்சியமும் நிறைந்திருப்பதால் எலும்புகள் வலுப்பெறும். இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் இதயத்தின் செயல்பாட்டை சீராக வைக்கிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d1692b-f466-4806-a81c-5c40f5254347/26-6a854344bfdc8.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-19T05:46:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் மைதானத்தில் கிடந்த இளைஞர் சடலம்: கால்பந்து கிளப் அளித்துள்ள விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-body-found-at-uk-charlton-athletic-stadium-1787117486"></link>
            <id>https://news.lankasri.com/article/man-body-found-at-uk-charlton-athletic-stadium-1787117486</id>
            <summary type="text">Man body found at uk Charlton Athletic Stadium: பிரித்தானியாவின் சார்ல்டன் அத்லெடிக் கால்பந்து மைதானத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு இருப்பது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man body found at uk Charlton Athletic Stadium: பிரித்தானியாவின் சார்ல்டன் அத்லெடிக் கால்பந்து மைதானத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> கால்பந்து மைதானத்தில் மீட்கப்பட்ட சடலம்</h2><p>பிரித்தானியாவில் சாம்பியன்ஷிப் கால்பந்து கிளப்பின் சார்ல்டன் அத்லெடிக்(Charlton Athletic) அணிக்கு சொந்தமான தி வாலி(The Valley) மைதானத்தில் 33 வயதுடைய இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> ஃப்ளாய்ட்(Floyd) சாலையில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் மனிதர் ஒருவரின் நலம் தொடர்பான கவலை குறித்து அவசர சேவையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/601d606d-041a-47b5-8fe8-e91ce9fd3268/26-6a853fafd4d9a.webp' /></p><p> அப்போது 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மைதானத்தில் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.</p><p> இதையடுத்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2> தீவிர விசாரணை</h2><p>இளைஞரின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f5913d3-1694-4fb5-80f3-f25bd36c9c03/26-6a853fb089735.webp' /></p><p> மேலும் உயிரிழந்த நபர் உயரமான இடத்தில் இருந்து விழுந்ததே அவரது உயிரிழப்புக்கு காரணமாக என்றும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.</p><p> இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கால்பந்து கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p> இந்த சம்பவத்தில் கிளப் தரப்பில் எந்தவொரு தவறும் இல்லை என்றும் விளக்கியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-19T05:31:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் காவலில் உயிரிழந்த வெளிநாட்டவர்: பரபரப்பு பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/foreigner-dies-hours-after-rpf-detention-in-surat-1787115532"></link>
            <id>https://news.lankasri.com/article/foreigner-dies-hours-after-rpf-detention-in-surat-1787115532</id>
            <summary type="text">Foreigner dies in detention; வெளிநாட்டவர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்தார்.


இந்தியாவில் வெளிநாட்டவர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்த விடயம் பரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Foreigner dies in detention; வெளிநாட்டவர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்தார்.
</p><p>

இந்தியாவில் வெளிநாட்டவர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p>
இந்தியாவின் மும்பையிலிருந்து டெல்லி செல்லும் ரயில் ஒன்றில், 45 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவர் ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்திருக்கிறார்.</p><h3>

வாக்குவாதமும் கைதும்
</h3><p>
பயணத்தின்போது அந்த வெளிநாட்டவருக்கும் சக பயணிகளுக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8c8ab61-48ca-4928-9943-87f27aa302f5/26-6a85380e34506.webp' /></p><p>
தகவலறிந்த ரயில்வே பாதுகாப்பு பொலிசார் அங்கு வந்து அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.
</p><p>
ஆனால், அவர் சமாதானமாகவில்லையாம், மேலும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளத் துவங்கினாராம்.
</p><p>
ஒரு கட்டத்தில், தீயணைப்பு இயந்திரத்தை எடுத்து பயணிகள் மீது அவர் ஸ்பிரே செய்ய, ரயில் பெட்டியில் பதற்றம் உருவாகியுள்ளது. சில பயணிகள் அவரைத் தாக்கியுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
பிரச்சினை வலுப்பதைக் கண்ட பொலிசார், அவரை சூரத் ரயில் நிலையத்தில் இறக்கி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
</p><p>
அவரிடம் பொலிசார் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே அந்த வெளிநாட்டவர் மயங்கிச் சரிந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவரிடம் பாஸ்போர்ட், விசா என எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில், அவர் யார், எந்த நாட்டவர் என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஒருபக்கம் பொலிசார் இறங்க, அவர் எதனால் திடீரென உயிரிழந்தார் என்பதை அறியும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T05:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி பேச்சுக்கு இடமில்லை: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-has-no-plans-to-talk-with-iran-1787110980"></link>
            <id>https://news.lankasri.com/article/us-has-no-plans-to-talk-with-iran-1787110980</id>
            <summary type="text">Us has no plans to talk with iran: ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்தவொரு திட்டமும் தற்போது அமெரிக்காவிடம் இல்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Us has no plans to talk with iran: ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்தவொரு திட்டமும் தற்போது அமெரிக்காவிடம் இல்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h3> தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தை</h3><p>அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய பேச்சுவார்த்தை குழுவிடம் முக்கிய சில விடயங்களை அறிவுறுத்தி இருப்பதாக&nbsp; அல் ஜசீரா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p> அதில், ஈரான் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு தயாராகும் வரை எந்தவொரு பேச்சுவார்த்தையும் அமெரிக்க தரப்பில் இருந்து முன்னெடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e1cafc0-cb90-4544-aa02-03ed4606b213/26-6a8526467ea01.webp' /></p><p> பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மேற்கொண்டு முன் செல்வதற்கு காத்திருக்குமாறு டிரம்ப் அறிவுறுத்தி இருப்பதாக அதிகாரி ஒருவர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.</p><h2> இருதரப்பு பதில்கள்</h2><p>
சமீபத்தில் டிரம்ப் வெளியிட்ட கருத்தில், ஈரானுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையோ அல்லது உரையாடல்களோ நடைபெறவில்லை. மேலும் ஹார்முஸில் அமெரிக்க கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்வதாகவும், ஹார்மூஸ் நீரிணை திறந்த நிலையில் இயங்குவதாகும் தெரிவித்துள்ளார்.</p><p> ஆனால் ஹார்முஸ் முற்றுகையை நீக்குதல், ஈரானிய எண்ணெய் மீதான தடையை நீக்குதல், வெளிநாடுகளில் உள்ள ஈரானிய சொத்துகளை விடுவித்தல் ஆகிய 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹார்முஸ் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.</p><p> அமெரிக்கா தன்னுடைய வாக்குறுதிகளை மீறினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-19T04:05:59+00:00</updated>
        </entry>
    </feed>
