<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-02T14:44:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் இலங்கை வீராங்கனை! வரலாற்று சாதனை படைத்த சமரி அதப்பத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chamari-athapaththu-1st-sri-lankan-4000-t20-runs-1785679790"></link>
            <id>https://news.lankasri.com/article/chamari-athapaththu-1st-sri-lankan-4000-t20-runs-1785679790</id>
            <summary type="text">இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அதப்பத்து டி20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தார்.சமரி அதப்பத்து&amp;nbsp; 

பாகிஸ்தான் மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அதப்பத்து டி20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தார்.</p><h2>சமரி அதப்பத்து&nbsp;</h2><p> 

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57496f2c-6af4-4c28-8cf7-792d35fc911f/26-6a6f4fb0d3717.webp' />&nbsp;</p><p></p><p>
இப்போட்டியில் இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 15 பந்துகளில் 40 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்களை எட்டிய அவர், இந்த மைல்கல்லினை எட்டிய முதல் இலங்கை வீராங்கனை என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.&nbsp;</p><h2>4வது வீராங்கனை&nbsp;</h2><p>
மேலும், சர்வதேச அளவில் 4000 ஓட்டங்கள் குவித்த 4வது வீராங்கனை என்ற பெருமையையும் சமரி அதப்பத்து பெற்றுள்ளார்.</p><p> 

நியூஸிலாந்தின் சூஸி பேட்ஸ் (4,758), இந்திய அணியின் ஸ்ம்ரிதி மந்தனா (4,538) மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் (4,216) ஆகியோர் 4000 ஓட்டங்கள் கடந்த வீராங்கனைகள் ஆவர்.
</p><p>
சமரி அதப்பத்து இதுவரை 164 டி20 போட்டிகளில் 4003 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்கள், 14 அரைசதங்கள் அடங்கும்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/884b90c5-d751-4c85-9231-d5e59f08adf1/26-6a6f5068b7386.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T14:11:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலவச சுற்றுலா விசாவை அறிமுகம் செய்துள்ள வளைகுடா நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/oman-launches-free-14-day-tourist-visa-1785678616"></link>
            <id>https://news.lankasri.com/article/oman-launches-free-14-day-tourist-visa-1785678616</id>
            <summary type="text">இலவச சுற்றுலா விசாவை: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் புதிய விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஓமன் அரசு, சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலவச சுற்றுலா விசாவை: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் புதிய விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p><p>ஓமன் அரசு, சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய இலவச 14 நாள் சுற்றுலா விசா திட்டத்தை அறிவித்துள்ளது.
</p><p>
இந்த மாற்றம், வெளிநாட்டவர் குடியிருப்பு சட்டத்தின் நிர்வாக விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd50a0c4-df7e-4da9-be8d-950d8626aca5/26-6a6f4b1a67ef3.webp' /></p><p>இந்த புதிய திட்டம் Royal Oman Police Decision No. 109/2026 மூலம் அறிவிக்கப்பட்டது. இதனை லெப்டினன்ட் ஜெனரல் ஹசன் பின் மொஹ்சின் அல் ஷ்ரைகி, பொலிஸ் மற்றும் சுங்கத் துறை பொது ஆய்வாளர், அதிகாரப்பூர்வ கசேட்டில் வெளியிட்ட மறுநாளே அமுல்படுத்தினார்.
</p><p>
இந்த விசா, தகுதியான நாடுகளின் குடிமக்களுக்கு வழங்கப்படும். விசா காலாவதியாகும் முன், பயணிகள் இதனை மற்ற சுற்றுலா விசா வகைகளாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் தனித்தனியாக இருக்கும்.</p><p>

புதிய விதிமுறைகளின் படி, இந்த விசா Article 10 மற்றும் Article 29-இல் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், கட்டணம் பூஜ்யம் (Zero Omani Rials) என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p></p><p>இலவச விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதிகாரிகள், தகுதியான நாடுகளை விரைவில் அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை, ஓமனின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.</p><p>உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, ஓமன் தனது விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தி வருகிறது.

இதற்கு முன், ஓமன் வசிப்புக் கட்டுப்பாடுகளை தளர்த்தி, ஸ்பான்சர் இல்லாத விசாக்களை வழங்கியிருந்தது. இப்போது, குறுகிய கால பயணிகளுக்கான இலவச 14 நாள் விசா, சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்&nbsp;என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T13:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[86 ஓட்டங்கள் இலக்கு வைத்து வெற்றி! 47 வயதில் கிண்ணத்தை வென்ற இம்ரான் தாஹிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/guyana-amazon-warriors-won-2nd-global-super-title-1785675311"></link>
            <id>https://news.lankasri.com/article/guyana-amazon-warriors-won-2nd-global-super-title-1785675311</id>
            <summary type="text">குளோபல் சூப்பர் லீக் கிண்ணத்தை கயானா அமேசான் வாரியர்ஸ் அணி கைப்பற்றியது.85 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்

குளோபல் சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>குளோபல் சூப்பர் லீக் கிண்ணத்தை கயானா அமேசான் வாரியர்ஸ் அணி கைப்பற்றியது.</p><h2>85 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
</h2><p>
குளோபல் சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் சான் ஃபிரான்ஸிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e08cdc4-e5fc-484d-b5e9-f406ac488dca/26-6a6f3f6cc4830.webp' />&nbsp;</p><p></p><p> 

முதலில் ஆடிய கயானா அணி 18.5 ஓவர்களில் 85 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக மேத்யூ போர்டே (Matthew Forde) 23 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்தார்.</p><p> 

பீட்டர் சிடில், அனிருத் இமானுவல் தலா 3 விக்கெட்டுகளும், ஃபேபியன் ஆலன், கல்லம் மற்றும் கரிமா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><h2>கயானா அமேசான் வாரியர்ஸ் சாம்பியன் </h2><p>
பின்னர் ஆடிய சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 18.3 ஓவர்களில் 79 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் வெற்றி பெற்றது.
</p><p>
அதிகபட்சமாக ஓலிவர் பீக் (Oliver Peake) ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் விளாசினார்.</p><p> டிவைன் பிரிட்டோரியஸ், மொஹம்மது நபி தலா 3 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். </p><p>

47 வயதான இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் குளோபல் சூப்பர் லீக் கிண்ணத்தை வென்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/828edcf9-f567-411a-b3ec-25d161ef26dc/26-6a6f3f6c061af.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T12:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் காட்டுத்தீயைத் தொடர்ந்து..மற்றொரு நாட்டில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கானோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thousands-of-homes-are-evacuated-in-greece-1785672589"></link>
            <id>https://news.lankasri.com/article/thousands-of-homes-are-evacuated-in-greece-1785672589</id>
            <summary type="text">காட்டுத்தீயின் தீவிரத்தினால் கிரீஸ் நாட்டில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.காட்டுத்தீ பரவல்

பிரான்ஸ் முழுவதும் &#039;முன்னெப்போதும் இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காட்டுத்தீயின் தீவிரத்தினால் கிரீஸ் நாட்டில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2>காட்டுத்தீ பரவல்</h2><p>

பிரான்ஸ் முழுவதும் 'முன்னெப்போதும் இல்லாத' காட்டுத்தீ பரவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் முகாம்களைத் தவிர்க்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32d42d0a-75b6-4779-a9a8-540c9c3c6c07/26-6a6f3499c1f15.webp' />&nbsp;</p><p></p><p> 

அதே நேரத்தில், கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு கடற்கரை நகரத்தைக் காக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>

தலைநகருக்கு வடமேற்கே கொரிந்து வளைகுடாவில் உள்ள போர்டோ ஜெர்மெனோவிற்கு அருகிலுள்ள காடுகளை ஒரு மாபெரும் தீ மற்றும் புகைச்சுவர் சூழ்ந்தது.
</p><p>
ஏதென்ஸில் இருந்து 45 மைல் தொலைவில் உள்ள கிரீஸில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலத்திற்கு அருகில், காற்றால் பரவிய தீயை நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடினர். </p><p>

பலத்த காற்று தீயை மிக வேகமாக பரவச் செய்து, தீயணைப்பு வீரர்களுக்கு நிலைமையைக் கணிக்க முடியாததாக மாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb9752e5-5d13-4095-ab59-9401163b9ca2/26-6a6f349a8e3af.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T12:12:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபிஃபா தலைவர் பதவியை இழக்கும் கியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/infantino-leadership-challenge-1785663943"></link>
            <id>https://news.lankasri.com/article/infantino-leadership-challenge-1785663943</id>
            <summary type="text">ஃபிஃபா (FIFA) கவுன்சில் உறுப்பினர்களிடமிருந்து கியானி இன்ஃபான்டினோ கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்கள் ஒரு சிறப்புப் பொதுக்கூட்டத்தைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிஃபா (FIFA) கவுன்சில் உறுப்பினர்களிடமிருந்து கியானி இன்ஃபான்டினோ கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்கள் ஒரு சிறப்புப் பொதுக்கூட்டத்தைக் (EGM) கூட்ட வற்புறுத்தி வருகின்றனர்.</p><h2>கவுன்சில் உறுப்பினர்கள்</h2><p>
</p><p>இப்படியான ஒரு பொதுக்கூட்டம் முழு அளவிலான தலைமைத்துவப் போட்டியாக மாறக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/973690ee-f8df-4879-b205-e89ab036c50d/26-6a6f12db8cf3a.webp' /></p><p> </p><p>உலகக் கிண்ணம் தொடரின் பங்குகளை விற்பனை செய்வதற்கான இன்ஃபான்டினோவின் (Infantino) முயற்சி தோல்வியடைவதற்கு முன்பே, ஒரு சிறப்புப் பொதுக் கூட்டத்தைக் (EGM) கூட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருந்தன. </p><p>டொனால்ட் ட்ரம்ப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து, உலகக் கிண்ணம் தொடரின் போது ஃபோலரின் பலோகுன் (Folarin Balogun) மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்த அந்த முன்னெப்போதும் இல்லாத முடிவின் மீது சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கவுன்சில் உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். </p><p>ஃபிஃபா கவுன்சில் என்பது உலகளாவிய நிர்வாக அமைப்பின் முக்கிய முடிவெடுக்கும் மன்றமாகும்; இது ஆறு கூட்டமைப்புகளைச் சேர்ந்த 28 பிரதிநிதிகள், எட்டு துணைத் தலைவர்கள் மற்றும் தலைவர் இன்ஃபான்டினோ ஆகியோரைக் கொண்டதாகும்.</p><p></p><p> </p><p>ஃபிஃபா (FIFA) விதிகளின்படி, 37 கவுன்சில் உறுப்பினர்களில் 50 சதவீதத்தினரோ அல்லது 19 உறுப்பினர்களோ முன்வைக்கும் தீர்மானம் ஒரு சிறப்புப் பொதுக் கூட்டத்தை (EGM) கூட்ட வழிவகுக்கும்.
</p><p>புதிய உலகக் கிண்ணம் செயல்பாட்டு நிறுவனத்தின் 20 சதவீதப் பங்குகளை த்ரைவ் கேப்பிட்டல் நிறுவனத்திற்கு விற்க இன்பான்டினோ ரகசியமாக முன்மொழிந்திருந்தார் என்பது வெளிவருவதற்கு முன்பே, கவுன்சில் உறுப்பினர்கள் ஏற்கனவே இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டியிருந்ததாகவே கூறப்படுகிறது. </p><p>த்ரைவ் கேப்பிட்டல் என்பது ஜனாதிபதி ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் தம்பியான ஜோசுவா குஷ்னரால் நிறுவப்பட்ட ஒரு முதலீட்டு நிறுவனமாகும்.</p><p>
Folarin Balogun விவகாரம் குறித்து ஒரு சுதந்திரமான விசாரணைக்கு இன்ஃபான்டினோ ஒப்புதல் அளிக்க மறுத்தால், அவர் பதவி விலக வேண்டும் என்று அதிருப்தியடைந்த கவுன்சில் உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்தனர்.</p><h2>ஆசியாவின் ஆதரவு தேவை</h2><p> </p><p>இதன் விளைவாக, ட்ரம்பின் அழுத்தத்திற்குப் பணிந்து ஃபிஃபா அரசியல் நடுநிலைமை விதிகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, நார்வே கால்பந்து சங்கம் சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தது. </p><p>இந்த நிலையில், 37 கவுன்சில் உறுப்பினர்களில் 14 பேர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இன்ஃபான்டினோ மீது உண்மையான அழுத்தத்தை ஏற்படுத்த ஆசியாவின் ஆதரவு தேவைப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5af80ed6-8558-425e-b954-668f6b85cc29/26-6a6f12dc5a1a1.webp' /></p><p> </p><p>இதனிடையே, இன்ஃபான்டினோ தனது மறுதேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்கும் 200-க்கும் மேற்பட்ட ஆதரவுக் கடிதங்களை ஏற்கனவே பெற்றுள்ளார்; இருப்பினும், அந்தக் கடிதங்கள் திரும்பப் பெறப்படலாம் என்பதோடு, போட்டியிட விரும்பும் மற்ற வேட்பாளர்கள் தங்கள் விருப்பத்தை அறிவிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 18 வரை உள்ளது. </p><p>மேலும், இன்ஃபான்டினோவைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான மற்றொரு சாத்தியமான வழி, தலைவர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தூண்டுவதற்காக ஒரு அவசர ஃபிஃபா கூட்டத்தைக் கூட்டுவதாகும்; 43 சங்கங்கள் கடிதங்களைச் சமர்ப்பித்தால் இந்த வாக்கெடுப்பு கூட்டப்படலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T11:35:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் பனிச்சரிவு... பிரித்தானிய மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உடல் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nirmal-purja-body-recovered-1785669261"></link>
            <id>https://news.lankasri.com/article/nirmal-purja-body-recovered-1785669261</id>
            <summary type="text">பாகிஸ்தானின் பிராட் பீக் (Broad Peak) மலையில், புகழ்பெற்ற பிரித்தானிய-நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜாவின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் பிராட் பீக் (Broad Peak) மலையில், புகழ்பெற்ற பிரித்தானிய-நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜாவின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>புர்ஜாவும் ஒருவர்</h2><p>
</p><p>மலையில் சுமார் 5,700 மீற்றர் உயரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பாகிஸ்தானின் 'ஆல்பைன் கிளப்' ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது; அங்கு மேலும் மூன்று உடல்கள் காணப்பட்ட போதிலும், அவற்றின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/098363af-fa96-449e-bfd6-2bfc6c72fa2a/26-6a6f269001198.webp' /></p><p> </p><p>பனிச்சரிவில் சிக்கி மரணமடைந்த 10 பேரில் 43 வயதான புர்ஜாவும் ஒருவர் என்று, அவரின் நிறுவனமான 'எலைட் எக்ஸ்பெடிஷன்ஸ்' (Elite Expeditions) சனிக்கிழமையன்று அவரது இறப்பை அறிவித்தது. </p><p>அவருக்கு அஞ்சலி செலுத்தியவர்களில் வேல்ஸ் இளவரசரும் ஒருவர். நேபாளத்தில் பிறந்து பின்னர் பிரித்தானிய ராணுவத்தில் பணியாற்றிய புர்ஜா, 2019-ஆம் ஆண்டில் உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் வெறும் ஆறு மாதங்களுக்குச் சற்று அதிகமான காலத்திற்குள் ஏறி முடித்ததற்காக பிரபலமடைந்தவர்.</p><p></p><p> புர்ஜாவின் இறப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, அவருடன் மலையேற்றப் பயணத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த மல்லோரி கீஸ், ஓமனைச் சேர்ந்த நதிரா அகமது அப்துல்லா அல் ஹார்த்தி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த புர் பகதூர் குருங் ஆகிய மூவரின் உடல்களும் மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>14 மலைச்சிகரங்கள்</h2><p> </p><p>பாகிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில், உலக சாதனையாளர் நிர்மல் புர்ஜா உட்பட ஆறு நேபாளம் நாட்டவர்கள் மற்றும் நான்கு வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் மரணமடைந்த துயரச் சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா சனிக்கிழமையன்று தெரிவித்தார். </p><p>இதனிடையே, காரகோரம் மலைத்தொடரில் உள்ள 8,047 மீற்றர் உயரமான சிகரத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து, உலகின் 12-வது மிக உயர்ந்த அந்தச் சிகரத்தில் மலையேறியவர்களைத் தேடும் பணியில் பாகிஸ்தானில் உள்ள குழுக்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/079b8e7b-e0d9-41a5-8f3c-58453a5ed9c9/26-6a6f268f4f880.webp' /></p><p> </p><p>பல்நாட்டினரை உள்ளடக்கிய அந்த மலையேற்றக் குழுவை புர்ஜா வழிநடத்தியுள்ளார். 'நிம்ஸ்' என்றும் அழைக்கப்படும் இவர், 2019-ஆம் ஆண்டில் உலகின் 8,000 மீற்றருக்கும் அதிகமான உயரமுள்ள 14 மலைச்சிகரங்கள் அனைத்தையும் வெறும் 189 நாட்களில் ஏறி முடித்து, முந்தைய சாதனையை ஏழு ஆண்டுகளுக்கும் மேலான கால இடைவெளியில் முறியடித்ததன் மூலம் பெரும் புகழ்பெற்றார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T11:12:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றிய இலங்கை மகளிர்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-women-win-t20-series-vs-pakistan-women-1785666376"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-women-win-t20-series-vs-pakistan-women-1785666376</id>
            <summary type="text">இலங்கை மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் 175 ஓட்டங்கள்&amp;nbsp;

பாகிஸ்தான் மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றி பெற்றது.</p><h2>பாகிஸ்தான் 175 ஓட்டங்கள்&nbsp;</h2><p>

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி தம்புள்ளையில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a308d99-221e-4b26-970d-220fd30c7f61/26-6a6f1d1f1141a.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 175 ஓட்டங்கள் குவித்தது. ஷாவால் ஜூல்ஃபிஹர் 48 (35) ஓட்டங்களும், முனீபா அலி 45 (30) ஓட்டங்களும், எய்மான் ஃபாத்திமா 30 (19) ஓட்டங்களும் விளாசினர்.</p><p>

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. </p><h2>

தொடரை&nbsp;வென்ற&nbsp;இலங்கை அணி </h2><p>சஞ்சனா கவிந்து 46 (24) ஓட்டங்களும், சமரி அதப்பத்து 40 (15) ஓட்டங்களும், ஹர்ஷிதா சமரவிக்ரமா 37 (22) ஓட்டங்களும் விளாசினர்.</p><p>

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி தொடரை வென்றுள்ளது.
</p><p>
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி ஆகத்து 4ஆம் திகதி நடைபெற உள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1008b26e-5afe-4406-9bbf-248a82fe39f4/26-6a6f1d1e15656.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<b> <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T10:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவு விநியோக சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள ஃபிளிப்கார்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/flipkart-eyes-food-delivery-1785666179"></link>
            <id>https://news.lankasri.com/article/flipkart-eyes-food-delivery-1785666179</id>
            <summary type="text">நுகர்வோரின் பணப்பையை ஈர்ப்பதற்கான போட்டி &#039;குயிக் காமர்ஸ்&#039; துறைக்குத் தீவிரமாக மாறியுள்ளதாகத் தோன்றிய நிலையில், உணவு விநியோகத் துறையிலான போட்டி மீண்டும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுகர்வோரின் பணப்பையை ஈர்ப்பதற்கான போட்டி 'குயிக் காமர்ஸ்' துறைக்குத் தீவிரமாக மாறியுள்ளதாகத் தோன்றிய நிலையில், உணவு விநியோகத் துறையிலான போட்டி மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.</p><h2>10 சதவீத கமிஷன்</h2><p>
</p><p>வால்மார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபிளிப்கார்ட், ஆகஸ்ட் 15 முதலே பெங்களூருவில் தனது உணவு விநியோகச் சேவையைத் தொடங்கத் தயாராகி வருவதாகவும், நகரம் முழுவதும் உள்ள உணவகங்களை ஏற்கனவே இணைக்கும் பணியைத் தொடங்கிவிட்டதாகவும் பல உணவகக் கூட்டாளிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f994a2be-3966-4d78-a074-978e3bb668ca/26-6a6f1cbbee392.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, உணவகப் பங்காளர்களை ஈர்க்கும் முயற்சியாக, தற்போதுள்ள தளங்கள் வழக்கமாக வசூலிக்கும் சுமார் 16 முதல் 30 சதவீதக் கட்டணத்தை விடக் கணிசமாகக் குறைவான, அதாவது சுமார் 10 சதவீத கமிஷன் விகிதத்தை அந்நிறுவனம் முன்வைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>நீண்ட காலமாக Zomato மற்றும் Swiggy நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்த, ஆனால் சமீபத்தில் Rapido நிறுவனம் Ownly மூலம் தீவிரமாக முன்னெடுத்த முயற்சியைத் தொடர்ந்து புதிய மாற்றங்களைக் கண்ட ஒரு சந்தையில், Flipkart-இன் முறையான நுழைவை இந்த அறிமுகம் குறிக்கும்.</p><p></p><p> </p><p>இருப்பினும், பாரம்பரிய உணவு விநியோகத் தளங்களைப் போலல்லாமல், ஃபிளிப்கார்ட் ஒரு மாறுபட்ட பாதையைத் தெரிவு செய்துள்ளது. இந்த மின்வணிகப் பெருநிறுவனம், அரசாங்க ஆதரவு பெற்ற டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பின் (ONDC) மீது தனது உணவு விநியோகச் சேவையை உருவாக்கி வருகிறது. </p><p>இது அந்தத் திறந்த வலையமைப்பைப் பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கிறது. நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு முன்னதாக, இச்சேவையை முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தவுள்ளதாக அந்நிறுவனம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.</p><h2>உணவு விநியோகத் துறை</h2><p>
</p><p>இதனிடையே, ராபிடோவின் 'ஓன்லி' (Ownly) சேவை, பெங்களூருவில் சுமார் 25,000 உணவகங்கள் வாயிலாக நாளொன்றுக்கு 40,000-க்கும் மேற்பட்ட ஆர்டர்களைப் பெறும் அளவுக்கு விரைவாக வளர்ந்துள்ளது; இதன் மூலம், வெறும் சில மாதங்களிலேயே அந்நகரின் உணவு விநியோகச் சந்தையில் சுமார் 7 முதல் 10 சதவீதப் பங்கை அது கைப்பற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0159fa0-26d3-47ec-afde-6fcbd12c5691/26-6a6f1cbcd75a1.webp' /></p><p> </p><p>இந்தியாவின் உணவு விநியோகத் துறையின் பொருளாதாரம், வர்த்தகக் கூட்டாளர்களுக்கு நிலைத்தன்மையற்றதாகிவிட்டது என்று வாதிடும் அந்த பைக்-டாக்சி யூனிகார்ன் நிறுவனம், உணவகங்களுக்குக் கமிஷன் இல்லாத மாதிரியை மையமாகக் கொண்டு தனது திட்டத்தை முன்வைத்துள்ளது. </p><p>பிளிப்கார்ட், கமிஷன்களை முற்றிலுமாக நீக்கவில்லை என்றாலும், உணவகங்களுக்குக் குறைந்த விலை மாற்றாகத் தன்னை நிலைநிறுத்துவதன் மூலம், இதேபோன்ற ஒரு உத்தியைக் கையாள்வதாகத் தெரிகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T10:21:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் JioTag 2 அறிமுகம்., குறைந்த விலையில் ஸ்மார்ட் டிராக்கர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jiotag-2-launched-in-india-price-specs-1785663205"></link>
            <id>https://news.lankasri.com/article/jiotag-2-launched-in-india-price-specs-1785663205</id>
            <summary type="text">ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய ஜியோடேக் 2 (JioTag 2) சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.இது ரூ.1,249 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய ஜியோடேக் 2 (JioTag 2) சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இது ரூ.1,249 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. வங்கி சலுகையுடன் வாங்கினால், ரூ.1,199 விலையில் கிடைக்கும்.</p><p>ஜியோடேக் 2, முந்தைய ஜியோடேக் மாடலை விட மேம்பட்ட வடிவமைப்புடன் வருகிறது. இது கருப்பு, சிவப்பு, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. சாதனம் பாலிகார்பனேட் (Polycarbonate) பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64f71841-bb8e-4e7d-a542-a5853df1b549/26-6a6f0ee74da45.webp' /></p><p>முக்கியமாக, ஜியோடேக் 2 இப்போது iOS மற்றும் Android இரண்டிலும் வேலை செய்கிறது. முந்தைய மாடல் ஒரே பிளாட்ஃபார்மில் மட்டுமே இயங்கியது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் பொருட்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.</p><p>சாதனத்தில் 120dB சத்தம் உண்டாக்கும் ஸ்பீக்கர் உள்ளது. இதனால், ப்ளூடூத் வரம்புக்குள் இருக்கும் போது பொருட்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். </p><p>ப்ளூடூத் வரம்புக்கு வெளியே சென்றால், மேப் வழிகாட்டி (Map Directions) மூலம் பொருட்களின் இருப்பிடத்தை அறியலாம்.
</p><p></p><p>ஜியோடேக் 2, ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் விலை உயர்ந்த டிராக்கிங் சாதனங்களுக்கு மாற்றாக, இந்திய பயனர்களுக்கு மலிவான தேர்வாக அமைகிறது. தற்போது, இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் கிடைக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T09:31:22+00:00</updated>
        </entry>
    </feed>
