<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-10T20:59:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drought-declared-in-11-areas-of-england-1786394114"></link>
            <id>https://news.lankasri.com/article/drought-declared-in-11-areas-of-england-1786394114</id>
            <summary type="text">இங்கிலாந்தின் பல பகுதிகள் வறட்சி பகுதிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் வறட்சி அறிவிப்புஇங்கிலாந்தின் பல பகுதிகளில் நிலவி வரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் பல பகுதிகள் வறட்சி பகுதிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இங்கிலாந்தில் வறட்சி அறிவிப்பு</h2><p>இங்கிலாந்தின் பல பகுதிகளில் நிலவி வரும் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நெருக்கடிகள் காரணமாக நாட்டின் 71.3 சதவீத பகுதிகள் அதிகாரப்பூர்வ வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 1836 ம் ஆண்டு பதிவுகள் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த 190 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வறட்சி மாதமாக ஜூலை பதிவானதை அடுத்து இந்த நெருக்கடியானது ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5075de32-44d8-4f8e-9ed7-5664d6412ea0/26-6a7a360379b43.webp' /></p><p> இந்த வறட்சியின் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் 45 மில்லியன் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> இவர்களில் 27 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தற்போது தண்ணீர் பயன்பாட்டை கட்டுப்பாடாக பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளனர்.</p><p> இந்த ஆண்டு 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் வெப்பநிலை பதிவான நாட்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 13 நாட்கள் வெப்பநிலை அதிகமான அளவு பதிவாகி மக்களை வாட்டியுள்ளது.</p><p> அமைச்சர்கள், நீர் நிறுவனங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்கள் உள்ளடக்கிய தேசிய வறட்சிக் குழு அவசர கூட்டத்தை நடத்திய பிறகு, நிலைமை மிகவும் மோசமாக மாறி வருவதாக எச்சரித்துள்ளனர்.</p><p> நாட்டின் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a77fbe8e-b6b6-4ce4-9185-89ce579c4ac3/26-6a7a360436a6b.webp' /></p><h2>வறட்சி அறிவிக்கப்பட்ட பகுதிகள்</h2><p>கிழக்கு மிட்லாண்ட்ஸ், லிங்கன்ஷயர் &amp; நார்தம்ப்டன்ஷயர், கென்ட் 7 கிழக்கு சசெக்ஸ், சோலென்ட் &amp; சவுத் டவுன்ஸ், கிழக்கு ஆங்லியா, ஹார்ட்போர்ட்ஷயர், லண்டன், தேம்ஸ் பள்ளத்தாக்கு, டெவோன் &amp; கார்ன்வால், வெசெக்ஸ் மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆகிய பகுதிகள் வறட்சி பகுதிகளாக அவசர வறட்சிக் குழு அறிவித்துள்ளது.</p><p> கூடுதலாக வறண்ட வானிலை நிலவும் கும்ப்ரியா &amp; லங்காஷயர், கிரேட்டர் மான்செஸ்டர், மெர்சிசைடு &amp; செஷயர், வடகிழக்கு மற்றும் யார்க்ஷயர் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T20:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் லாங் மார்ச் 7ஏ ராக்கெட் வெடித்து சிதறியது: கடலில் விழுந்த ChinaSat-4B செயற்கைக்கோள் பாகங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-long-march-7a-rocket-exploded-after-liftoff-1786392214"></link>
            <id>https://news.lankasri.com/article/china-long-march-7a-rocket-exploded-after-liftoff-1786392214</id>
            <summary type="text">லாங் மார்ச் 7ஏ ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய சம்பவம் சீனாவின் விண்வெளி துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வெடித்து ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>லாங் மார்ச் 7ஏ ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய சம்பவம் சீனாவின் விண்வெளி துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> வெடித்து சிதறிய சீன ராக்கெட்</h2><p>
சீனாவின் தெற்கிலுள்ள ஹைனான்(Hainan) தீவின் வென்சாங்(Wenchang) விண்வெளி தளத்தில் இருந்து பெய்ஜிங் நேரப்படி திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு அடுத்த தலைமுறை லாங் மார்ச் 7ஏ(Long March 7A) ராக்கெட் புறப்பட்டது.</p><p> உயர் பூமி சுற்றுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருந்த ராக்கெட் துரதிர்ஷ்டவசமாக புறப்பட்ட 90 வது நிமிடத்தில் வெடித்து சிதறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89b779f6-226a-48a9-a8ee-2fecb30e3264/26-6a7a2e9793e06.webp' /></p><p> இதன் காரணமாக ராக்கெட்டில் இருந்த ChinaSat-4B தகவல் தொடர்பு செயற்கைக்கோளும் முழுமையாக வெடித்து சிதறி சேதமடைந்தது.</p><p> ராக்கெட் ஏவுதலை ஏவுதளத்திற்கு அருகில் இருந்து பார்த்தவர்கள் இந்த காட்சிகளை தங்களுடைய செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.</p><h2> விசாரணை தொடக்கம்</h2><p>இந்நிலையில் லாங் மார்ச் 7ஏ ராக்கெட்டில் ஏற்பட்ட தீவிர கோளாறு காரணமாகவே அதன் அவசர கால பாதுகாப்பு அமைப்புகள் தானாக செயல்பாட்டுக்கு வந்து ஒட்டுமொத்த பயணத்தையும் அழித்து இருக்கலாம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c29dcc4-98be-4aca-90f0-b5f0b2f63462/26-6a7a2e98488f8.webp' /></p><p> வெடித்து சிதறிய ராக்கெட் பாகங்கள் மற்றும் செயற்கைக்கோள் உதிரி பாகங்கள் தென் சீனக் கடலில் விழுந்து நாசமாகியுள்ளன.</p><p> விபத்து நடைபெற்ற 3 மணி நேரத்திற்கு பிறகு இந்த தோல்வியை சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான Xinhua உறுதிப்படுத்தி இருப்பதுடன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டம் தோல்வியடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.</p><p> அதே சமயம் விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய தற்போது விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T20:03:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூட்கேஸில் இருந்து மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/high-end-sex-doll-found-in-suitcase-in-australia-1786384813"></link>
            <id>https://news.lankasri.com/article/high-end-sex-doll-found-in-suitcase-in-australia-1786384813</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் உயர் ரக செக்ஸ் பொம்மை(Sex Toy) என்பது தெரியவந்துள்ளது. கைவிடப்பட்ட சூட்கேஸினால் பரபரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் உயர் ரக செக்ஸ் பொம்மை(Sex Toy) என்பது தெரியவந்துள்ளது.</p><h2> கைவிடப்பட்ட சூட்கேஸினால் பரபரப்பு</h2><p>ஞாயிற்றுக்கிழமை மாலை அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கிராமப் பகுதியில் கிடந்த கைவிடப்பட்ட சூட்கேஸில் மனித சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.</p><p> ஓலன்(Oallen) பகுதியில் மண் பாதைக்கு அருகே சந்தேகத்திற்கு உரிய வகையில் கிடந்த சூட்கேஸை கொடூரமான குற்றப் புள்ளி என்று நம்பி சந்தேகத்தின் பேரில் வோல்கான் சாலையை சுற்றி வளைத்து உள்ளூர் அதிகாரிகள் தடயங்களை பாதுகாத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24c82192-0d86-4c59-b68a-2751f18df8f5/26-6a7a11af573ed.webp' /></p><h2> 20 மணி நேர தடயவியல் விசாரணையில் தெரியவந்த உண்மை</h2><p>சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் அதிகாரிகள், 20 மணி நேரத்திற்கு மேலாக ஆராய்ந்த பிறகு திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளிப்படுத்தினர்.</p><p> அதில், சூட்கேஸில் இருந்தது மனித எச்சங்கள் என்று நம்பப்பட்ட நிலையில், அது உண்மையில் மிகவும் தத்ரூபமாக உயர் ரக செக்ஸ் பொம்மை என்பது தெரியவந்துள்ளது.</p><p> ஆரம்பத்தில் அந்த பொருள் மனிதனைப் போலவே தத்ரூபமாக இருந்ததால் ஆய்வகத்திற்கு எடுத்து சென்று சோதனை செய்வதற்கு முன்பு வரை நிபுணர்களுமே அதனை மனித சடலம் என்று நம்பி ஏமாந்ததாக ஹியூம் காவல்துறை மாவட்டத்தின் தளபதி சூப்பிரண்டு லிண்டா பிராட்பரி(Superintent linda bradbury) தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc19b18c-4198-4209-8acc-5cf779ddaade/26-6a7a11b00b7fc.webp' /></p><p> நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் கூற்றுப்படி, சடலம் என்று நம்பப்பட்ட அந்த பொம்மைக்கு ஆடைகள் அணிவிக்கப்பட்டு இருந்ததோடு, அவற்றில் முடி, மூக்குத்தி மற்றும் உடல் காயங்கள் ஆகியவை துல்லியமாக மனித உருவத்துடன் ஒத்திருக்கும் வகையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T19:33:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் தாக்குவதற்கா? தற்காப்பிற்கா? பாகிஸ்தான் பிரதமர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-pm-sharif-clarify-mecca-defence-agreement-1786390380"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-pm-sharif-clarify-mecca-defence-agreement-1786390380</id>
            <summary type="text">மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தமானது முழுக்க முழுக்க தற்காப்பிற்காக மட்டுமே என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் விளக்கியுள்ளார். மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தமானது முழுக்க முழுக்க தற்காப்பிற்காக மட்டுமே என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் விளக்கியுள்ளார்.</p><h2> மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்</h2><p>
பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் 3 நாடுகளும் இணைந்து மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை சமீபத்தில் கையெழுத்திட்டன.</p><p> துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் முன்னெடுத்த இந்த ஒப்பந்தமானது இஸ்லாத்தின் மிகப் புனிதமான நகரமும், நபிகள் நாயகம் பிறந்த இடமுமான மெக்காவில் கையெழுத்தானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/118b9e03-b35c-4108-badd-8eb860b79196/26-6a7a276f43850.webp' /></p><p> இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான தாக்குதல், அவை அனைத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>பாகிஸ்தான் பிரதமர் விளக்கம்</h2><p>
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து அந்நாட்டின் பிரதமர் முகமது ஷாபாஸ் ஷெரீப் தெளிப்படுத்தியுள்ளார்.</p><p> அதில், இந்த பாதுகாப்பு ஒப்பந்தமானது எந்தவொரு ஆக்கிரமிப்பு நோக்கமும் கொண்டது அல்ல, மாறாக முற்றிலும் தற்காப்பு சார்ந்தது மட்டுமே என்று வலியுறுத்தியுள்ளார்.
பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டி வளர்ச்சி மற்றும் செழிப்பை அதிகரிக்க செய்வதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்றும் எடுத்துரைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74acf280-4428-4eea-b1ff-67b8cad13647/26-6a7a276e8f51c.webp' /></p><p> மேலும் இந்த மெக்கா ஒப்பந்தத்தை “முஸ்லிம் உம்மாவின் வலிமையான ஆதாரம்” என்றும் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வர்ணித்துள்ளார்.</p><p>பல வருட தூதரக மற்றும் இராஜதந்திர முயற்சிகளுக்கு பிறகே இந்த ஒப்பந்தமானது எட்டப்பட்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T19:33:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[456 உக்ரைன், 126 ரஷ்யா: எல்லையில் வெடித்த சண்டை: கொல்லப்பட்ட 17 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-russia-cross-border-drone-fight-17-dead-1786382613"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-russia-cross-border-drone-fight-17-dead-1786382613</id>
            <summary type="text">உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்த ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதலில் 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் - ரஷ்யா எல்லையில் தீவிர சண்டை
ரஷ்யா மற்றும் உக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்த ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதலில் 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> உக்ரைன் - ரஷ்யா எல்லையில் தீவிர சண்டை</h2><p>
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் எல்லையில் நடந்த கடுமையான ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதலில் குறைந்தது 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> ரஷ்யாவின் டாடர்ஸ்தான்(Tatarstan) பகுதியில் உக்ரைன் நடத்திய மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதலில் 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> டாடர்ஸ்தான் பகுதியில் ரஷ்யாவின் முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றாகவும், இங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உக்ரைனின் தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளாகின்றன. சமீபத்திய 75 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக அப்பிராந்திய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10c3c542-926c-471c-8362-5f339c4dc1f8/26-6a7a0917386ad.webp' /></p><p>உக்ரைனின் தாக்குதலை தொடர்ந்து டாடர்ஸ்தான் பகுதியில் உள்ள எண்ணெய் ஆலை ஒன்றில் இருந்து கரும்புகை எழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><p> உக்ரைனிய எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Nizhnekamsk என்ற தொழில்துறை நகரத்தை வெற்றிகரமாக தாக்கி இருப்பதாக கீவ் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2> சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்</h2><p>
நேற்று இரவு மட்டும் கிட்டத்தட்ட 456 உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>அதே நேரத்தில் உக்ரைனுக்குள் அத்துமீறி நுழைந்த&nbsp; ரஷ்ய 126 ட்ரோன்களை உக்ரைனிய விமானப்படை இடைமறித்து அழித்து இருப்பதாக அறிவித்துள்ளது.</p><p> உக்ரைனின் எல்லைப் புற நகரமான கார்கிவ்-வில் ரஷ்யா நடத்திய பீரங்கி தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T17:23:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: இடிந்து விழுந்த பல கட்டிடங்கள்: 50 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/colombia-hit-by-7-4-magnitude-earthquake-1786380284"></link>
            <id>https://news.lankasri.com/article/colombia-hit-by-7-4-magnitude-earthquake-1786380284</id>
            <summary type="text">கொலம்பியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அந்நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொலம்பியாவில் நிலநட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அந்நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.</p><h2> கொலம்பியாவில் நிலநடுக்கம்</h2><p>மேற்கு கொலம்பியாவில் உள்ளூர் நேரப்படி காலை 7.34 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> பசிபிக் கடலோர பகுதியான சோகோ மாகாணத்தில் இந்த 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af16efe-d49b-4650-bbe0-9dd0661f2591/26-6a7a018f068a2.webp' /></p><p> சான் ஜோஸ் டெல் பால்மார் என்ற கிராமத்திற்கு அருகில் கிட்டத்தட்ட 107 கிலோமீட்டர் மையத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p></p><p>சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக சோகோ மாகாணத்தின் தலைநகர் கிப்டோ மற்றும் பிற பகுதிகளில் உள்ள பல கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p> மேலும் இந்த நிலநடுக்கத்தில் &nbsp;இதுவரை 50 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும் பலர் காயமடைந்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99255d79-69f0-4197-bc26-c5375023e655/26-6a7a018fd3648.webp' /></p><h2>மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>சாண்டியாகோ நகரில் குறைந்து 20 கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருப்பதாகவும், இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அந்நகர மேயர் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> கொலம்பியாவில் முக்கியமாக உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் வரை உணரப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T16:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிசில் மின்சார ஸ்கூட்டர் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/paris-helmet-law-for-e-scooter-riders-1786365190"></link>
            <id>https://news.lankasri.com/article/paris-helmet-law-for-e-scooter-riders-1786365190</id>
            <summary type="text">Paris orders e-scooter riders wear helmets: பாரிசில் மின்சார ஸ்கூட்டர் பயணிகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. 

பிரான்ஸ் தலைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Paris orders e-scooter riders wear helmets: பாரிசில் மின்சார ஸ்கூட்டர் பயணிகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.</p><p> 

பிரான்ஸ் தலைநகரான பாரிசில், இனி, மின்சார ஸ்கூட்டர், செக்வே, ஹோவர்போர்டு போன்ற மின்சார இயக்கக் கருவிகளை பயன்படுத்தும் அனைவரும் ஹெல்மெட் மற்றும் பிரதிபலிப்பு உடை அணிய வேண்டும்.
</p><p>
விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56909f22-b7c4-4775-bcf5-048b68000611/26-6a79c72472369.webp' /></p><p>கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்த விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
2025-ஆம் ஆண்டில் மட்டும், 79 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2024-இல் ஏற்பட்ட 45 உயிரிழப்புகளை விட அதிகம். மேலும், 1,100-க்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான விபத்துகளில் தலையில் காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>
விதிகளை மீறுவோருக்கு அபராதம்</h2><p>

ஹெல்மெட் அணியாமல் சென்றால் 135 யூரோ அபராதம் விதிக்கப்படும். பிரதிபலிப்பு உடை அல்லது ஹை-விசிபிலிட்டி ஜாக்கெட் அணியாமல் சென்றால் 35 யூரோ அபராதம் விதிக்கப்படும். </p><p>இந்த விதிகள், பாரிசிலும் அதன் புறநகரங்களிலும் பொதுச் சாலைகளில் எப்போதும் அமுலில் இருக்கும்.
</p><p>
2023-ஆம் ஆண்டில், பாதுகாப்பு சிக்கல்களால் வாடகை e-scooter-கள் பாரிசில் தடைசெய்யப்பட்டன. ஆனால், தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் e-scooter-கள் இன்னும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால், விபத்துகள் அதிகரித்துள்ளன.

மற்ற ஐரோப்பிய நகரங்களும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. </p><p></p><p>2024-இல் மாட்ரிட் நகரம் வாடகை e-scooter-களை தடை செய்தது. 2026-இல் பிரஸ்ஸல்ஸ் நகரமும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது.</p><p>

இந்த புதிய விதிகள், பாரிசில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T16:05:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்ந்தோரால் நிகழ்ந்த சாதனை: ஒரே படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்த 230 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/230-migrants-cross-channel-in-one-boat-1786374294"></link>
            <id>https://news.lankasri.com/article/230-migrants-cross-channel-in-one-boat-1786374294</id>
            <summary type="text">Record 230 migrants cross channel in single Boat: 230 பேர் ஒற்றை படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவை அடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் புல...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Record 230 migrants cross channel in single Boat: 230 பேர் ஒற்றை படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவை அடைந்துள்ளனர்.</b></p><p>

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பான புதிய சாதனை நிகழ்ந்துள்ளது.
</p><h2>
சாதனை </h2><p>பிரான்சிலிருந்து புறப்பட்ட ஒரு பெரிய படகில் 230 பேர் ஒரே நேரத்தில் ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19c2ea82-f062-4b73-9b88-6222d7601eb2/26-6a79e8988bc73.webp' /></p><p>திங்கள்கிழமை அதிகாலை, பிரிட்டிஷ் அதிகாரிகள் அந்த படகை தடுத்து கரைக்கு அழைத்துச் சென்றனர்.

இது கடந்த மாதம் 165 பேர் கடந்த சாதனையை முறியடித்துள்ளது.</p><p>
</p><h2>
அதிகாரிகள் தெரிவித்ததாவது,
</h2><p>
மனிதக் கடத்தல் கும்பல்கள் “பாதுகாப்பற்ற படகுகளில் அதிகமானவர்களை நிரப்பி அனுப்புவதால்” உயிர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது. சமீபத்தில் 173 பேரை ஏற்றிச் சென்ற ஒரு படகு இயந்திரம் தீப்பற்றியதால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p>
</p><p></p><p>பிரித்தானிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த சம்பவம், குற்றவியல் கும்பல்கள் பயன்படுத்தும் ஆபத்தான முறைகளை வெளிப்படுத்துகிறது. அவர்கள் உயிர்களை ஆபத்துக்குள் தள்ளுகின்றனர். ஆனால், சிறிய படகுகள் மூலம் வரும் புலம்பெயர்ந்தோர் இந்த ஆண்டில் குறைந்துள்ளனர். ஜூலை மாதத்தில் 2020-க்கு பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>பிரித்தானிய அரசு, பிரான்ஸ் கடற்கரையில் 40 சதவீதம் கூடுதல் பாதுகாப்பு பணியாளர்களை நியமிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. </p><p>இதுவரை 2026-ஆம் ஆண்டில் 14,819 பேர் பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடும்போது 43 சதவீதம் குறைவாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T15:04:09+00:00</updated>
        </entry>
    </feed>
