<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-05T05:24:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 தமிழ்நாடு பட்ஜெட் - வெளியான முக்கிய அறிவிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamil-nadu-budjet-2026-announcements-1785906993"></link>
            <id>https://news.lankasri.com/article/tamil-nadu-budjet-2026-announcements-1785906993</id>
            <summary type="text">2026 - 2027 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாசித்து வருகிறார். 

2026 தமிழ்நாடு பட்ஜெட்

2...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 - 2027 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாசித்து வருகிறார். </p><h3>

2026 தமிழ்நாடு பட்ஜெட்</h3><p>

2026 - 2027 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c805253f-b8b0-4b89-951f-2fcd0cf1a874/26-6a72c73287d04.webp' /></p><p>

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும். </p><p>

பட்ஜெட்டை வாசித்து வரும் நிதி அமைச்சர் மரிய வில்சன், "வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, 2026ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>

மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>
அரசின் பல்வேறு நடவடிக்கை மூலம் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழுவை விரைவில் அரசு அமைக்கவுள்ளது. </p><p>

அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும். முதல் கட்டமாக 10,000 பள்ளிகளில் இப்பணிகளை மேற்கொள்ள ரூ.129 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும், 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பள்ளி பாடத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
போதைப் பொருள் மற்றும் அதன் தவறான பயன்பாடு குறித்து விழிப்புணர்வு எற்படுத்த 10581 என்ற எண், பள்ளி வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும். இதை செயல்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைப்பதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>

ரூ.277 கோடி மதிப்பீட்டில், 5.32 இலட்சம் 11ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு 2026-27 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஹெல்மெட் &amp; வாட்டர் பாட்டில் வசதியுடன் நவீன மிதிவண்டிகள் வழங்கப்படும்.</p><p> 

கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட வெற்றி மடிக்கணினித் திட்டம் ரூ..2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AEQtNahUvog" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகப்பொலிவை அதிகரிக்க உதவும் ஆயுர்வேத பேஸ்பேக்.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/homemade-ayurvedic-face-pack-for-glowing-skin-1785905083"></link>
            <id>https://news.lankasri.com/article/homemade-ayurvedic-face-pack-for-glowing-skin-1785905083</id>
            <summary type="text">பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள். இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள். </p><p>இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.</p><p> அந்தவகையில், முகப்பொலிவை அதிகரிக்க உதவும் ஆயுர்வேத பேஸ்பேக்கை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>1. தேவையான பொருட்கள் </h2><ul><li>

தேன்- 2 ஸ்பூன்</li><li> 
மஞ்சள்- 1 ஸ்பூன்</li></ul><h2> 

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். </p><p>

பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62e857c8-f6b4-4b5a-97e0-07896176215a/26-6a72c049c8959.webp' /></p><p>பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். </p><p>

இந்த கலவை பொலிவிழந்த மற்றும் சீரற்ற சருமத்தைக் கொண்டவர்களுக்கு ஏற்றது.</p><h2>

2. தேவையான பொருட்கள்</h2><ul><li> 

முல்தானி மெட்டி - 1 ஸ்பூன்</li><li> 
சந்தன- 1 ஸ்பூன் </li><li>
ரோஸ் வாட்டர்- 5 ஸ்பூன்</li></ul><h2> 

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டி, சந்தன பவுடரை எடுத்து கொள்ள வேண்டும். </p><p>

பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.</p><p></p><p> 

பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.</p><p> 

இந்த கலவை எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T04:47:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 பந்துகளில் 241 ஓட்டங்கள் விளாசிய அணி! வாணவேடிக்கை காட்டிய ரிக்கெல்டன், மார்ஷ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sunrisers-leeds-scored-241-and-win-by-37-runs-1785902971"></link>
            <id>https://news.lankasri.com/article/sunrisers-leeds-scored-241-and-win-by-37-runs-1785902971</id>
            <summary type="text">The Hundred போட்டியில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லண்டன் ஸ்பிரிட்டை வீழ்த்தியது.

லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிரான The Hundred...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Hundred போட்டியில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லண்டன் ஸ்பிரிட்டை வீழ்த்தியது.
</p><p>
லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிரான The Hundred போட்டியில் ரியான் ரிக்கெல்டன் 94 ஓட்டங்களும், மிட்செல் மார்ஷ் 76&nbsp; ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><h2>சிக்ஸர்மழை&nbsp;கூட்டணி </h2><p>

 

லீட்ஸின் ஹெட்டிங்லே மைதானத்தில் நடந்த சன்ரைசர்ஸ் லீட்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbb93076-c623-4a76-bdb9-2eca24690657/26-6a72b77df20a0.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh), ரியான் ரிக்கெல்டன் (Ryan Rickelton) கூட்டணி சிக்ஸர்மழை பொழிந்தது. </p><p>

முதல் விக்கெட்டுக்கு இந்தக் கூட்டணி 65 பந்துகளில் 148 ஓட்டங்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் 37 பந்துகளில் 76 ஓட்டங்கள் (7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார். </p><p>

அடுத்து களமிறங்கிய ஹாரி புரூக் (Harry Brook) 18 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

மறுமுனையில் ரிக்கெல்டன் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

இதன்மூலம் சன்ரைசர்ஸ் லீட்ஸ் (Sunrisers Leeds) 100 பந்துகளில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b369618-13a6-4633-8fdd-d66301085db0/26-6a72b77eaaf33.webp' /></p><p>
பின்னர் ஆடிய லண்டன் ஸ்பிரிட் (London Spirit) அணி 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. </p><p>

பிரேவிஸ் (Brevis) 38 (21) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, டேவிட் வில்லி (David Willey) சிக்ஸர்களை பறக்கவிட்டார். </p><p>

எனினும், லண்டன் ஸ்பிரிட் அணி 100 பந்துகளில் 204 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் வெற்றி பெற்றது.
</p><p>
டேவிட் வில்லி ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 83 ஓட்டங்களும், ஜேமி ஓவர்டன் 15 பந்துகளில் 27 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T04:07:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வேண்டும்... உக்ரைனிடம் கோரிய ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-planned-strikes-on-ukraine-1785889255"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-planned-strikes-on-ukraine-1785889255</id>
            <summary type="text">உக்ரைன் மீது மூன்று தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட ஈரான், ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரியுள்ளது.
உக்ரைனைத் தாக்கும் திட்டத்தில் இருந்த ஈரான், கடைசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீது மூன்று தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட ஈரான், ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரியுள்ளது.
</p><p>உக்ரைனைத் தாக்கும் திட்டத்தில் இருந்த ஈரான், கடைசி நேரத்தில் விடுக்கப்பட்ட ஒரு மன்னிப்பு, தாக்குதலை நிறுத்தும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>மன்னிப்பு</h2><p>
</p><p>காஸ்பியன் கடலில் ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் கப்பல் ஒன்றின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, மூன்று இடங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் ஆயுதப் படைகள் தயாராகி வந்ததாக மொஹ்சென் ரெசாய் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98854827-71e4-4ccf-9eb2-1eace9ee3920/26-6a7281e99919d.webp' /></p><p> </p><p>உக்ரைனில் மூன்று இடங்களைத் தாக்கத் திட்டமிட்டிருந்தோம், ஆனால் உக்ரைன் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அந்தத் தாக்குதலை ரத்து செய்தோம் என்று ரெசாய் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இது உண்மையாக இருந்தால், அண்மைக்காலத்தில் இவ்விரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போரிடும் நிலைக்கு எவ்வளவு ஆபத்தான வகையில் நெருங்கி வந்துள்ளன என்பதை இது காட்டுகிறது.</p><p> மேலும், இந்த மோதல்கள் இன்னும் நேரடியாக ஒன்றிணைந்தால், அதன் விளைவு பேரழிவை ஏற்படுத்துவதாக அமையலாம்; இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p></p><p> </p><p>இதனிடையே, ஈரானால் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்திற்கு வெளியே, ஹார்முஸ் நீரிணை வழியாக எந்தவொரு கடல்வழிப் போக்குவரத்தையும் ஈரான் அனுமதிக்காது என்றும் ரெசாய் எச்சரித்தார்.</p><h2>ஈரானுக்கு இழப்பீடு</h2><p> </p><p>அத்துடன், சட்டவிரோதப் பாதையைப் பயன்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு எதிரிக் கப்பலும் குறிவைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். </p><p>ஜூலை 25 அன்று நடைபெற்ற, முன்னெப்போதும் இல்லாத அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அவரது கருத்துகள் வெளியாகின; அத்தாக்குதலில் ஒரு ஊழியர் கொல்லப்பட்டதுடன், அந்த ஈரானியக் கப்பலும் அழிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654c0b46-fb62-483c-a008-0c8fb11c310c/26-6a7281ea4e907.webp' /></p><p> </p><p>தாக்குதலால் ஏற்பட்ட சேதத்திற்கு உக்ரைன் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி உக்ரைனிய வெளிவிவகார அமைச்சரான ஆண்ட்ரி சிபிஹாவிடம் கூறினார். </p><p>ஆனால், உக்ரைனின் நடவடிக்கைகள் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தங்களது நாட்டைப் பாதுகாப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை என்றும், அவை ஒருபோதும் பொதுமக்களின் கப்பல்களையோ அல்லது மக்களையோ குறிவைக்கும் நோக்கம் கொண்டவை அல்ல என்றும் சிபிஹா பதிலளித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T03:19:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளால் சேவையை நிறுத்திய சவுதி அரேபிய விமான நிலையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/airport-in-saudi-suspends-service-1785885126"></link>
            <id>https://news.lankasri.com/article/airport-in-saudi-suspends-service-1785885126</id>
            <summary type="text">ஹவுதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையம் தனது சேவையை நிறுத்தியது.
ஏமனில் உள்ள ஹவுதிகள் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு விமான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹவுதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையம் தனது சேவையை நிறுத்தியது.
</p><p>ஏமனில் உள்ள ஹவுதிகள் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு விமான நிலையத்தைத் தாக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கு விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>எதிரியின் முக்கிய இலக்கு</h2><p>
</p><p>கடந்த மாதம், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா மீது ஹவுதிகள் கடல்வழி முற்றுகையை அறிவித்தனர்; அதன்பின்னர், எண்ணெய் கப்பல்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான பல தாக்குதல்களுக்குத் தாங்களே காரணம் என்றும் அவர்கள் உரிமை கோரியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4acafeb4-633b-41e1-9346-95df56a93bd6/26-6a7271c884028.webp' /></p><p> இதனையடுத்து ஹவுதி நிலைகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதன் மூலம் சவுதி அரேபியா பதிலடி கொடுத்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ, செவ்வாய்க்கிழமையன்று, ட்ரோன் ஒன்றைப் பயன்படுத்தி நஜ்ரான் விமான நிலையத்தில் உள்ள சவுதி எதிரியின் முக்கிய இலக்கு ஒன்றை வெற்றிகரமாகத் தாக்கியதாகத் தெரிவித்தார். </p><p>சவுதி எதிரி தரப்பு ட்ரோன்களைப் பயன்படுத்தி சாதா மற்றும் ஹஜ்ஜா மாகாணங்களின் வான்வெளியை மீறியதற்குப் பதிலடியாகவே தெற்குப் பகுதியில் உள்ள விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.</p><p></p><p> </p><p>விமான நிலையத்தின் முக்கிய ரேடார் தாக்கப்பட்டதால், செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில நாட்களுக்குத் திட்டமிடப்பட்ட விமானங்களின் நிலையை விமான நிலைய இணையதளம் 'தெரியவில்லை' என்று குறிப்பிட்டிருந்தது.</p><h2>இதுவே முதல் முறை</h2><p> </p><p>யேமன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அந்தச் சிறிய விமான நிலையத்தில் ஒரே ஒரு முனையம் மட்டுமே உள்ளது; இது நாளொன்றுக்குச் சில விமானங்களை மட்டுமே கையாளுகிறது. </p><p>கடந்த மாதம் மோதல்கள் வெடித்த நிலையில்; 2022-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, சவுதி அரேபியாவும் ஹவுதிகளும் கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0abec206-f46e-4b1c-b900-4c3c5f40b666/26-6a7271c9378ee.webp' /></p><p> </p><p>ஹவுதிகள் ஏமன் தலைநகர் சனாவைக் கைப்பற்றி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றியதைத் தொடர்ந்து, 2015 முதல் சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணி ஒன்று ஹவுதிகளுடன் போரில் ஈடுபட்டு வந்தது. </p><p>சவுதி அரேபியாவுக்கும் ஹவுதிகளுக்கும் இடையே மீண்டும் வெடித்துள்ள மோதல்கள், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் எவ்வாறு பரவியுள்ளது என்பதற்கு ஒரு உதாரணமாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T00:27:43+00:00</updated>
        </entry>
    </feed>
