<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-25T02:33:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோண்டா அறிமுகம் செய்துள்ள புதிய QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/honda-qc3-ev-scooter-with-145-km-range-1784941257"></link>
            <id>https://news.lankasri.com/article/honda-qc3-ev-scooter-with-145-km-range-1784941257</id>
            <summary type="text">இந்தியாவில் ஹோண்டா தனது புதிய QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது QC1 மற்றும் Activa-e மாடல்களுக்கு மேல் நிலை மாடலாக, அதிக ரேஞ்சும், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் ஹோண்டா தனது புதிய QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது QC1 மற்றும் Activa-e மாடல்களுக்கு மேல் நிலை மாடலாக, அதிக ரேஞ்சும், மேம்பட்ட அம்சங்களும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>
QC3-இல் 3 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. IDC சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் 145 கிலோமீட்டர் என ஹோண்டா தெரிவித்துள்ளது. இது ஹோண்டாவின் இந்திய சந்தையில் அதிக ரேஞ்ச் வழங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும்.</p><p>பேட்டரி 0 முதல் 80 சதவீதம் வரை சுமார் 2 மணி 40 நிமிடங்களில் சார்ஜ் ஆகும். முழு சார்ஜ் பெற 5 மணி நேரம் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/377ec814-32d6-48a9-a2ce-671b64f0eb03/26-6a640acb1b4ed.webp' /></p><p>
</p><h2>
வடிவமைப்பு
</h2><p>
QC1-இன் அடிப்படையை பின்பற்றினாலும், புதிய ஹெட்லாம்ப், அலாய் வீல்கள், சாடில் டெயில் செக்ஷன் போன்ற மாற்றங்கள் QC3-க்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கின்றன.</p><h2>

முக்கிய அம்சங்கள்</h2><p>

QC3-இல் TFT டிஸ்ப்ளே, Honda RoadSync இணைப்பு, ஸ்மார்ட்போன் இன்டிக்ரேஷன், Turn-by-Turn Navigation ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
ஹோண்டா QC3-இன் விலை மற்றும் வெளியீட்டு திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், FY2027-க்கு முன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T00:59:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஹ்ரைனில் அமேசான் டேட்டா சென்டரை குறிவைத்து ஈரான் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-claims-attack-on-amazon-bahrain-centre-1784939712"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-claims-attack-on-amazon-bahrain-centre-1784939712</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஈரான் புரட்சிகர காவல்படை (Revolutionary Guards), பஹ்ரைனில் உள்ள அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஈரான் புரட்சிகர காவல்படை (Revolutionary Guards), பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசானுக்கு சொந்தமான டேட்டா சென்டரை குறிவைத்து தாக்கியதாக அறிவித்துள்ளது.
</p><p>
ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அமெரிக்க இராணுவத்திற்கான தகவல் சேகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசான் டேட்டா சென்டர் கட்டிடம் அழிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளனர். </p><p></p><p>ஆனால், இதுவரை அமேசான் அல்லது பஹ்ரைன் அதிகாரிகள் எந்தவிதமான கருத்தும் வெளியிடவில்லை.
</p><p>
மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் எந்த வசதியும், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கச் சரியான இலக்காக இருக்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29e3320d-b4ee-4492-8721-4656e73942e6/26-6a6404c216d72.webp' /></p><p>இதற்கு முன்னர், கடந்த புதன்கிழமையும் அதே டேட்டா சென்டரை குறிவைத்து தாக்கியதாக IRGC தெரிவித்திருந்தனர்.
</p><p>
இந்தச் சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளது. </p><p>அமெரிக்கா, சமீபத்தில் ஈரானின் பல இடங்களில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் பல்வேறு இடங்களில் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகள், இந்த நிலைமை காரணமாக பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளன. </p><p>குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய தொழில்நுட்ப மற்றும் எரிசக்தி நிறுவனங்கள், சைபர் மற்றும் உடல் தாக்குதல்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T00:33:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் லொட்டரி டிக்கெட்டிலேயே 3 கோடி வென்ற இளம்பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gastonia-woman-wins-100k-dollars-lottery-first-try-1784936689"></link>
            <id>https://news.lankasri.com/article/gastonia-woman-wins-100k-dollars-lottery-first-try-1784936689</id>
            <summary type="text">அமெரிக்காவில் இளம் பெண்ணொருவர் வாங்கிய முதல் லொட்டரி டிக்கெட்டிலேயே அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
 நார்த் கரோலினா மாநிலம் காஸ்டோனியாவில் வசிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் இளம் பெண்ணொருவர் வாங்கிய முதல் லொட்டரி டிக்கெட்டிலேயே அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
</p><p> நார்த் கரோலினா மாநிலம் காஸ்டோனியாவில் வசிக்கும் காலா ஜெஃப்ரிஸ் (Kahla Jeffries) என்ற பெண், தனது வாழ்க்கையில் முதல் முறையாக வாங்கிய லொட்டரி டிக்கெட்டிலேயே 100,000 டொலர் (இலங்கை பணமதிப்பில் 3.36 கோடி ரூபா) வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.</p><p>காலா, ஹிக்கரி க்ரோவ் ரோடில் உள்ள Will’s Food Store-ல் பெட்ரோல் நிரப்பச் சென்றபோது, தனது அதிர்ஷ்டத்தை ஒருமுறை சோதனை செய்து பார்க்கலாம் என “Cash Payday” என்ற ஸ்கிராட்ச்-ஆஃப் டிக்கெட்டை வாங்கினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f780a48d-19e4-4d55-a290-3d39b0dbbb00/26-6a63f8f341836.webp' /></p><p>அதைச் சுரண்டியபோது, அவர் வெற்றி பெற்றிருப்பதை அறிந்தார். “நான் பார்த்தது சரி தானா என்று முதலில் நம்பவே முடியவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.
</p><p>
அவர் வெற்றியை உறுதிப்படுத்திய பின், நார்த் கரோலினா எஜுகேஷன் லொட்டரி அலுவலகத்தில் சென்று பரிசை பெற்றார். மாநில மற்றும் கூட்டாட்சி வரிகள் கழிக்கப்பட்ட பின், அவர் 72,018 டொலர் தொகையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
</p><p>
காலா, இந்த வெற்றித் தொகையைப் பயன்படுத்தி ஒரு புதிய கார் வாங்கவும், தனது கல்விக்காக சேமிக்கவும் திட்டமிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம், Beginner’s Luck என்ற சொல்லை மீண்டும் உண்மையாக்கியுள்ளது. மக்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும் என்றும், அதிர்ஷ்டம் எப்போது, எங்கு வந்து சேரும் என்பதை யாரும் கணிக்க முடியாது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T23:43:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஏற்பட்ட 900-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ., அர்ஜென்டினாவில் சாதனை வெப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-900-plus-wildfires-argentina-heat-records-1784932165"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-900-plus-wildfires-argentina-heat-records-1784932165</id>
            <summary type="text">கனடாவில் சமீபத்திய வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக 900-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் பரவியுள்ளன.

இதுவரை சுமார் 30 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் சமீபத்திய வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக 900-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் பரவியுள்ளன.
</p><p>
இதுவரை சுமார் 30 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்துள்ளது. குறிப்பாக நார்த் வெஸ்ட் டெரிட்டரீஸ் மற்றும் ஒன்டாரியோ பகுதிகளில் தீயை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
</p><p>
இந்த தீயின் புகை, காற்றின் வழியாக அமெரிக்காவிலும், வடக்கு ஐரோப்பாவிலும் பரவியதால், பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்தது.</p><p> வட அமெரிக்காவில் தீ பரவல் அதிகரிக்கும் காலம் தொடங்கியுள்ளதால், மேலும் தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec92ea85-8da3-4fab-ad06-7fa99c5255b7/26-6a63e74704fa7.webp' /></p><p>இதே நேரத்தில், அர்ஜென்டினாவின் சால்டா நகரம் வரலாற்றிலேயே அதிகமான இரவு வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. குளிர்காலத்தில் இருந்தபோதும், வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியஸுக்கு கீழே குறையாமல் இருந்தது.
</p><p>
சாதாரணமாக அந்த பகுதியில் குளிர்கால இரவு வெப்பநிலை 3 டிகிரி செல்ஸியஸ் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த மாற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த அசாதாரண வெப்பம், சோண்டா காற்று (Zonda Wind) மற்றும் எல் நினோ (El Niño) காரணமாக ஏற்பட்டதாக வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p> எல் நினோ வலுப்பெறுவதால், பசிபிக் பகுதியில் கடும் புயல் செயல்பாடு அதிகரிக்கும் எனவும், பிலிப்பைன்ஸ் அருகே உருவான டிராபிக்கல் ஸ்டார்ம் Noul சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் புயலாக மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T22:28:13+00:00</updated>
        </entry>
    </feed>
