<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-28T12:33:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-charles-heartbroken-by-nepal-floods-1787919749"></link>
            <id>https://news.lankasri.com/article/king-charles-heartbroken-by-nepal-floods-1787919749</id>
            <summary type="text">King Charles heartbroken by deadly Nepal flash floods: நேபாளப் பெருவெள்ளம் தன் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.


நேபாள் -...</summary>
            <content type="html"><![CDATA[<p>King Charles heartbroken by deadly Nepal flash floods: நேபாளப் பெருவெள்ளம் தன் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.</p><p>


நேபாள் - திபெத் எல்லையில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தின்போது, ஒரு 13 வயது சிறுமி மற்றும் ஒரு 14 வயதுப் பையன் உட்பட 33 பிரித்தானியர்கள் மாயமாகியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a2b59d-e3b5-42f1-940b-aff52d1f1c66/26-6a917d872dba7.webp' /></p><h3>
மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள செய்தி</h3><p>

இந்நிலையில், பிரித்தானிய மன்னர் சார்லஸ், நேபாள பெருவெள்ளம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>

நேபாள பெருவெள்ளம் குறித்த செய்தி தங்கள் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் தெரிவித்துள்ள நிலையில், பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14bc57c6-0ee9-4a57-9d39-510e00eadbdb/26-6a917d87d52ac.webp' /></p><p>
மேலும், நேபாளத்துடன் பிரித்தானியர்கள் பலர் வலிமையான, ஆழ்ந்த மற்றும் தனிப்பட்ட முறையிலான உறவு வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ள மன்னர் சார்லஸ், தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல், அவர்களைக் குறித்த தகவலுக்காக கவலையுடன் காத்திருக்கும் பல குடும்பங்களுக்கு தங்கள் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும், நேபாள பெருவெள்ளம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், இந்த பயங்கர இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் நினைவுகூர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:24:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.2 லட்சம் ஊதியத்தில் தந்தையை வேலைக்கு அமர்த்திய 16 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/16-yr-old-raul-john-aju-pay-2lakh-to-father-salary-1787918487"></link>
            <id>https://news.lankasri.com/article/16-yr-old-raul-john-aju-pay-2lakh-to-father-salary-1787918487</id>
            <summary type="text">16 year old raul john aju pay 2 lakhs salary for his dad: கேரளாவை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது நிறுவனத்தில், ரூ.2 லட்சம் ஊதியத்தில் தந்தையை வேலைக்கு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>16 year old raul john aju pay 2 lakhs salary for his dad: கேரளாவை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது நிறுவனத்தில், ரூ.2 லட்சம் ஊதியத்தில் தந்தையை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
</p><h3>
16 வயதில் AI நிறுவனம் நடத்தும் சிறுவன் </h3><p>

எதிர்காலத்தில் பெரும்பாலான தொழில் மற்றும் வேலைகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இளம் தலைமுறையினர் பலரும் AI கருவிகளை பயன்படுத்த கற்று வருகின்றனர்.
</p><p>
ஆனால் 16 வயது சிறுவனான ரவுல் ஜான் அஜு(raul john aju0, 15க்கும் மேற்பட்ட AI கருவிகளை உருவாக்கி, AI நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98fbe6a7-c569-438e-8e24-f9191bf52c12/26-6a917899b4dd5.webp' /></p><p>

ரவுல் ஜான் அஜு, கேரளாவின் கொச்சி, குன்னம்புரத்தில் உள்ள வடக்கு இடப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் பிரிவில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். </p><p>

இவரின் தந்தை அஜு ஜோசப், அடோப், அமேசான், விப்ரோ, ஐபிஎம் உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். </p><p>இதனால் 9 வயதிலே ரவுலிற்கு AI கருவிகளை பயன்படுத்தும் அனுபவம் கிடைத்தது. 

அந்த ஆர்வத்தில் AI குறித்து கற்றுக்கொண்ட அவர், AI கருவிகளை உருவாக்க தொடங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

தனது 12 வயதிலேயே, பள்ளி அறிவியல் திட்டப்பணிக்காக மீபாட் (MeBot) என்ற ரோபோவை அவர் உருவாக்கியிருந்தார். 

அதைத்தொடர்ந்து, ரெஸ்க்யூ ஏஐ (RESQ AI), ஸாப்கேப் (ZapGap), இன்வெஸ்டோ ஏஐ (Investo AI) மற்றும் ஃபீட்ஃபை (FeedFye) உட்பட 15க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை உருவாக்கியுள்ளார்.
</p><p>
மேலும், AI டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி 15 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். குறிப்பாக தனது தந்தையையும் மாதம் ரூ.2 லட்சம் ஊதியத்திற்கு வேலையில் அமர்த்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3df7fc5-5f32-4a5e-9ed1-43913f7d78f1/26-6a917898439e4.webp' /></p><p>

மேலும், தனது நிறுவனத்தின் மூலம் திங்க்கிராஃப்ட் அகாடமியை நடத்தி வருகிறார். ஐஐடி, ஐஐஎம், முன்னணி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பெருநிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், இதில் விளையாட்டு மூலம் எளிதாக செயற்கை நுண்ணறிவுத் திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள். 

இதன் மூலம் உலகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் AI திறனை கற்றுக்கொண்டுள்ளார்கள். </p><p>

டெல்லியில் நடைபெற்ற 2026 இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஐநா ஏற்பாடு செய்திருந்த அமர்வில் ரவுல் ஜான் அஜு பங்கேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a204b249-37bc-4412-ab0f-71406d3a880a/26-6a917898ec557.webp' /></p><p>
என்னால் செல்போனில் அறிவை கற்றுக்கொள்ள முடிந்தாலும், சந்தைப்படுத்தல் உள்ளிட்டவற்றில் தந்தையின் அனுபவம் காரணமாக அவரை என் நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளேன்" என தெரிவித்துள்ளார். </p><p>

இளமை காலத்தில் பலரும் தன்னுடைய தேவைக்கு பெற்றோரிடம் பணம் பெற்று வரும் சூழலில், ரூ.2 லட்சம் ஊதியத்தில் தந்தைக்கு வேலை வழங்கிய சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:01:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திபெத்தில் உடைந்த அணை - மீட்பு பணிகளை நிறுத்திய சீனா, நேபாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dam-burst-in-tibet-rescue-operations-halted-1787902009"></link>
            <id>https://news.lankasri.com/article/dam-burst-in-tibet-rescue-operations-halted-1787902009</id>
            <summary type="text">dam burst in tibet rescue operations halted for fresh flood warns: திபெத்தில் அணை உடைந்துள்ளதால் மீண்டும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>dam burst in tibet rescue operations halted for fresh flood warns: திபெத்தில் அணை உடைந்துள்ளதால் மீண்டும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>திபெத்தில் உடைந்த அணை

</p><p>

சீனா - நேபாள எல்லையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. 1,468 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>

நேபாள மற்றும் காவல்துறை, ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு மக்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாயமாகியுள்ளனர்.</p><p> 

இந்நிலையில், திபெத் பக்கத்தில் உள்ள கியிராங் எல்லைத் துறைமுகத்திற்கு மேலே உள்ள ஒரு நீர்த்தேக்க அணை ஒன்று உடைந்துஉள்ளதாக நேபாள காவல்துறை அறிவித்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="no" dir="ltr">Alert !! <a href="https://t.co/grYxhc5N7Q">pic.twitter.com/grYxhc5N7Q</a></p>&mdash; Nepal Police (@NepalPoliceHQ) <a href="https://x.com/NepalPoliceHQ/status/2093216702121325051?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மேலும், "மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்துப் பாதுகாப்புப் பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது. </p><p>

இதே போல், சீனாவும் மீண்டும் பாரிய வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.&nbsp;</p><p>வெள்ள அச்சம் காரணமாக உள்ளூர் மக்கள் மலை மீது விரைந்து ஏறி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பேரிடர் வெறும் தொடக்கம்... ஆபத்தை எதிர்நோக்கும் 15 மில்லியன் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flood-million-people-danger-zone-1787916480"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flood-million-people-danger-zone-1787916480</id>
            <summary type="text">15 million people in the danger zone: சுமார் 15 மில்லியன் மக்கள் ஆபத்தான மண்டலத்தில் உள்ளனர்.
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>15 million people in the danger zone: சுமார் 15 மில்லியன் மக்கள் ஆபத்தான மண்டலத்தில் உள்ளனர்.
</p><p>நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்துள்ளதுடன் 1,500-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.</p><h2>அடிக்கடி நிகழும்</h2><p>
</p><p>லாங்டாங்-லிருங் மலையில் பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததே இந்த பேரிடருக்குக் காரணம் என்றும், அந்த நிகழ்வு ரிக்டர் அளவில் 5.2 தீவிரத்தன்மை கொண்ட நிலநடுக்கமாகப் பதிவானது என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். </p><p>இதன் உண்மையான பின்னணியைக் கண்டறிய மாதக்கணக்கில் ஆய்வு தேவைப்படலாம் என்றாலும், இது ஒரே ஒரு முறை மட்டும் நிகழும் நிகழ்வு அல்ல என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42ca267c-e0e2-4dc6-ac06-5e74c2402200/26-6a9170c28b867.webp' /></p><p> </p><p>நிபுணரின் கூற்றுப்படி, இத்தகைய நிகழ்வுகள், ஒருவேளை இன்னும் பெரிய அளவிலானவை அடிக்கடி நிகழும் சாத்தியத்தை அதிகரிக்கிறது. மொத்தத்தில், உலகம் முழுவதும் சுமார் 1.5 கோடி மக்கள் இதுபோன்ற ஆபத்தான பகுதிகளில் வசித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். </p><p>ஆசியாவில் உள்ள இமயமலை, காரகோரம், இந்துகுஷ் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைத்தொடர்கள் அதிக ஆபத்தில் இருந்தாலும், அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் மக்களும் ஆபத்தில் உள்ளனர்.</p><p></p><p> </p><p>இன்று நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரைப் போன்ற ஒரு நிகழ்வை வட அமெரிக்காவும் சந்திக்கக்கூடும் என நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். இந்தத் பேரிடரைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் இன்னும் தீவிரமாக முயன்று வரும் நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட இறப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு பனிப்பாறை சரிவின் விளைவே என்று தற்போதைய சான்றுகள் தெரிவிக்கின்றன. </p><p>சுமார் 50 முன்னணி நிபுணர்களின் கூட்டு முயற்சியால் இயங்கும் 'அண்டார்டிக் பனிப்பாறைகள்' (Antarctic Glaciers) என்ற ஆராய்ச்சி குழுவின் கூற்றுப்படி, வெள்ளப்பெருக்குக்குச் சற்று முன்னதாக நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை சரிவு ஆகியவை ஏற்பட்டிருந்ததை ஆரம்பக்கட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. </p><p>இதனால் பனிக்கட்டியும் பாறைகளும் மலையிலிருந்து சரிந்து விழுந்து, முந்தைய வெள்ளப்பெருக்குகளால் படிந்திருந்த வண்டல் மண்ணுடன் கலந்து, லெண்டே கோலா (Lhende Khola) ஆற்றை தற்காலிகமாகத் தடுத்தன. </p><p>அது தற்காலிகமாக ஒரு பெரிய ஏரி உருவாகக் காரணமானது; பின்னர் அது உடைந்து பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. இது போன்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடந்துள்ளன; பருவநிலை மாற்றம் தொடர்வதால், இத்தகைய நிகழ்வுகள் இனி மேலும் அடிக்கடி நிகழக்கூடும். </p><p>உதாரணமாக, 2021-இல் பாறை மற்றும் பனிக்கட்டியின் பெரும் சரிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய குப்பைப் பெருக்கெடுப்பு (debris flow), 200-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்ததுடன், இரண்டு நீர்மின் நிலையங்களையும் சேதப்படுத்தியது.</p><h2>விஞ்ஞானிகள் எச்சரிக்கை</h2><p> </p><p>இதற்கிடையில், கனடாவில் 2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாறைச் சரிவின்போது, ​​18 மில்லியன் கன மீற்றர் அளவிலான பாறைகள் பனிப்பாறை ஏரி ஒன்றில் சரிந்து விழுந்தன; இதனால் எழுந்த 100 மீற்றர் உயரமுள்ள அலைகள், 6 மைல் நீளமுள்ள ஒரு கால்வாயை அரித்து உருவாக்கின.</p><p> மலைப்பகுதிகளும் 'பனியாற்றுக் ஏரி உடைப்பு வெள்ளம்' (glacial lake outburst flood) எனப்படும் இதே போன்றதொரு அச்சுறுத்தலுக்கு ஆளாகும் அபாயம் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். </p><p>பனிப்பாறையிலிருந்து உருகி வரும் நீர் அதன் அடிப்பகுதியில் ஒரு பெரிய ஏரியை உருவாக்கும்போதும், அந்த ஏரி மெல்லிய மற்றும் நிலையற்ற ஒரு இயற்கையான அணையால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்போதும் இப்படியானப் பேரிடர் நிகழ்கிறது. </p><p>பனிப்பாறை சரிந்தாலோ அல்லது உருகிய நீரின் அளவு மிக அதிகமாக உயர்ந்தாலோ, அந்தத் தடுப்பு உடைந்து, மலைச்சரிவில் பேரழிவை ஏற்படுத்தும் வகையிலான பெரும் நீரோட்டம் பாய்ந்து வரக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/912b1a7b-6332-42e7-aff4-e4efd3038148/26-6a9170c33f4c4.webp' /></p><p> </p><p>இருப்பினும், உலகம் முழுவதும் உள்ள பனிப்பாறைகள் தற்போது மக்களை இத்தகைய வெள்ள அபாயத்திற்கு உள்ளாக்கி வருகின்றன; இது நேபாளத்தில் காணப்பட்டதை விடக் குறைவானதல்ல, சொல்லப்போனால் அதைவிட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமையக்கூடும். </p><p>ஆய்வாளர்கள் குழு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பனி ஏரி உடைப்பு வெள்ளத்தால் (GLOFs) அச்சுறுத்தலுக்குள்ளாகும் 1 கோடியே 50 லட்சம் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியா, பாகிஸ்தான், பெரு மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே வசிக்கின்றனர். </p><p>இமயமலை, காரகோரம், இந்துகுஷ் மற்றும் அவற்றையொட்டிய மலைத்தொடர்களை உள்ளடக்கிய 'உயர் மலை ஆசிய' (HMA) பகுதிகளில் வசிக்கும் மக்களே அதிக ஆபத்தில் உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T11:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 22,000 டன் குப்பைகள் அகற்றம்: செலவு செய்யப்பட்ட 6 மில்லியன் பவுண்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/22000-tonnes-of-illegal-dump-clears-in-oxfordshire-1787917909"></link>
            <id>https://news.lankasri.com/article/22000-tonnes-of-illegal-dump-clears-in-oxfordshire-1787917909</id>
            <summary type="text">பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயர் சட்டவிரோத குப்பை குவியல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. 22,000 டன் குப்பைகள் அகற்றம்ஆக்ஸ்போர்ட்ஷயர்(Oxfordshire) கிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயர் சட்டவிரோத குப்பை குவியல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.</p><h2> 22,000 டன் குப்பைகள் அகற்றம்</h2><p>ஆக்ஸ்போர்ட்ஷயர்(Oxfordshire) கிட்லிங்டன்(Kidlington) பகுதியில் அமைந்திருந்த மிகப்பெரிய சட்டவிரோத குப்பை குவியல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.</p><p> அரசின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 22,000 டன்னுக்கு அதிகமான வணிக மற்றும் வீட்டுக் கழிவுகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64330a69-cd6b-41db-a888-b8416e16a725/26-6a917656a5210.webp' /></p><p></p><p>A34 நெடுஞ்சாலையை ஒட்டியும், Cherwell நதியின் கரையோரமாக அமைந்திருந்த 3 ஏக்கர் நிலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய குப்பை மலையாக உருவெடுத்து இருந்தது.</p><p> செயற்கைகோள் புகைப்படங்கள் படி, இந்த இடம் 150 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்ட குப்பை குவியலாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது.</p><h2> துப்புரவு பணிகள்</h2><p>கிட்டத்தட்ட வெம்ப்லி மைதானத்தை விட மிகப்பெரிய அளவில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்ற 30 லொறி லோடு குப்பைகள் தினமும் வெளியேற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19a4c84b-efe5-4f8a-b346-2b6da02cc107/26-6a9176575a14b.webp' /></p><p> இந்த சுத்திகரிப்பு திட்டத்திற்காக சுற்றுச்சூழல் முகமை கிட்டத்தட்ட 6 மில்லியன் பவுண்டுகளை செலவு செய்துள்ளது.</p><p> இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக கண்டறியப்படும் நபர்களிடம் இருந்து இந்த தொகை மீண்டும் வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> சம்பந்தப்பட்ட பகுதியில் குப்பை கொட்டியதுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:52:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்திற்கு பயத்தை காட்டிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்: போராடிய அட்கின்ஸன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-290-runs-all-out-vs-pakistan-lord-s-test-1787917747"></link>
            <id>https://news.lankasri.com/article/england-290-runs-all-out-vs-pakistan-lord-s-test-1787917747</id>
            <summary type="text">England team allout for 290 runs at lord&#039;s ground:
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 290 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>England team allout for 290 runs at lord's ground:
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 290 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><p>

லண்டன் லார்ட்'ஸில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் 290 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;&nbsp;</p><h2>நெருக்கடி கொடுத்த அப்பாஸ்&nbsp;&nbsp;</h2><p><span style="font-size: 14px;">இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77976c10-60f9-4330-a847-9c0437b3ea6b/26-6a91762b549b6.webp' /></p><p></p><p>
துடுப்பாட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியில் எமிலியோ கே 8 ஓட்டங்களிலும், பென் டக்கெட் 17 ஓட்டங்களிலும் மொஹம்மது அப்பாஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.</p><p> 

பின்னர் வந்த அணித்தலைவர் ஜோ ரூட் 4 ஓட்டங்களில் அப்பாஸின் பந்துவீசில் lbw ஆகி வெளியேறினார். புரூக் (15), டென் லாரன்ஸ் (17) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.&nbsp;</p><h2>கோக்ஸ்&nbsp;அரைசதம் </h2><p>

நிதானமாக ஆடிய ஜோர்டன் கோக்ஸ் 55 ஓட்டங்கள் எடுக்க, அதிரடி காட்டிய ஜேமி ஸ்மித் (Jamie Smith) 80 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

கடைசி கட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கஸ் அட்கின்ஸன் 45 (46) ஓட்டங்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 290 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
ஜோஷ் டங் 30 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். மொஹம்மது அப்பாஸ் (Mohammad Abbas) 4 விக்கெட்டுகளும், மொஹம்மது அலி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdeb261c-99b5-4ef0-8430-c643eafc7e34/26-6a91762c13e50.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:48:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பேரிடர்... 5 மாதங்களுக்கு முன்னரே விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-disaster-5-months-before-1787911956"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-disaster-5-months-before-1787911956</id>
            <summary type="text">Two Reports Indicated What Lay Ahead: நேபாள மக்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை இரண்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two Reports Indicated What Lay Ahead: நேபாள மக்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை இரண்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
</p><p>இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பனி இழப்பு விகிதம் இரட்டிப்பாகியுள்ளதால், இந்து குஷ் இமயமலை முழுவதும் உள்ள பனியாறுகள் மிக வேகமாக உருகி வருவதாக ஐந்து மாதங்களுக்கு முன்பு இரண்டு அறிக்கைகள் எச்சரித்துள்ளது.</p><h2>இரண்டு பில்லியன்</h2><p>
</p><p>குறித்த ஆய்வறிக்கையை இந்து குஷ் இமயமலை (HKH) பகுதி மக்களின் நலனுக்காகச் செயல்படும், அரசுகளுக்கு இடையிலான ஓர் அறிவு மற்றும் கற்றல் மையம் முன்னெடுத்துள்ளது. </p><p>
காத்மாண்டுவை மையமாகக் கொண்டு செயல்படும் 'ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டிற்கான சர்வதேச மையம்' (ICIMOD) தனது இரண்டு அறிக்கைகளில், 1975-ஆம் ஆண்டு முதல் பனிப்பாறைகளின் தடிமன் 27 மீற்றர் வரை குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d60f06fb-243e-4dad-9a33-1876ddc2f470/26-6a915f16b7b9f.webp' /></p><p> </p><p>இந்த மையத்தின் பிராந்திய உறுப்பினர்களாக இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
இந்து குஷ்-இமயமலைப் பகுதி மற்றும் திபெத்திய பீடபூமியில் இருந்து உருகும் நீரைச் சார்ந்து வாழும், கீழ்நிலையில் உள்ள சுமார் இரண்டு பில்லியன் மக்களுக்கு எதிர்காலத்தில் ஒரு கவலைக்குரிய சூழல் நிலவக்கூடும் என அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டின. </p><p>இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு 489 பேரின் உயிரைப் பறித்த நேபாளத்தின் திடீர் வெள்ளப்பெருக்கிற்கான துல்லியமான காரணம் குறித்து விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இருப்பினும், அவர்களில் பலர் பல்வேறு காரணிகளின் கலவையையே கருத்தில் கொள்கின்றனர்; அவற்றில் மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம் என்னவென்றால், 4,000 மீற்றர் மற்றும் அதற்கு மேற்பட்ட உயரத்தில் பனிப்பொழிவுக்குப் பதிலாக மழை பெய்திருக்கிறது. </p><p></p><p>இந்த நிலையில், ஒரு காலத்தில் பனிப்பொழிவு இருந்த உயரங்களில் தற்போது மழை பெய்வதற்கும், பனியாறுகள் மிக வேகமாகப் பின்வாங்குவதற்கும் வெப்பமயமாதலே காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இதனிடையே, தனித்தனியாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இரண்டு ICIMOD அறிக்கைகளில், 1990 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்து குஷ்-இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் தங்கள் மொத்தப் பரப்பளவில் சுமார் 12 சதவீதத்தையும், மதிப்பிடப்பட்ட பனிக்கட்டி இருப்பில் 9 சதவீதத்தையும் இழந்தன என்று குறிப்பிட்டிருந்தன. </p><p>ICIMOD-இன் இரண்டு அறிக்கைகளில் ஒன்றான 'HKH Glacier Outlook 2026' (கண்காணிக்கப்பட்ட 38 பனிப்பாறைகளின் தரவுகளை இது ஆய்வு செய்தது), 2000-ஆம் ஆண்டிலிருந்து பனிப்பாறை இழப்பு இருமடங்காக அதிகரித்துள்ளதைக் கண்டறிந்துள்ளது; </p><p>இது, இமயமலையின் பனி மண்டலத்தின் (cryosphere) சில பகுதிகள், மீளமுடியாத வகையில் பின்வாங்கும் நிலையை நோக்கிய முக்கியமான திருப்புமுனைகளை நெருங்கிக்கொண்டிருக்கலாம் என்பதற்கான வலுவான அறிகுறியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98c339b1-dcec-408e-9b44-f0b0a8c61812/26-6a915f176d6c9.webp' /></p><p> </p><p>அதிக உயரத்தில் உள்ள ஒரு இடத்திலிருந்து உருவான பனி மற்றும் பாறைச் சரிவு இந்தப் பெருவெள்ளத்தைத் தூண்டியிருக்கக்கூடுமா என்பது குறித்து ICIMOD ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். </p><p>போட்டே கோஷி ஆற்றின் துணை ஆறான லெண்டே கோலாவிற்குள் பெருமளவிலான பனிக்கட்டியும் பாறைச் சிதைவுகளும் நுழைந்திருக்கலாம்; இது நீர், வண்டல் மற்றும் பெரிய பாறைகளை அடித்துக்கொண்டு கீழ்நோக்கிச் செல்லும் வகையிலான திடீர் நீரோட்டப் பெருக்கை ஏற்படுத்தியிருக்கலாம். </p><p>சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், பனியாறுகள் பின்வாங்குவதாலும் நிரந்தர உறைபனி சிதைவடைவதாலும் பனிப்பொழிவு குறைந்து வருவதையே இது அதிகமாகச் சுட்டிக்காட்டுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T11:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலில் வெற்றி பெறும் நிலையில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி: குழப்பத்தில் புலம்பெயர்ந்தோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/migrants-raising-questions-about-germany-election-1787915117"></link>
            <id>https://news.lankasri.com/article/migrants-raising-questions-about-germany-election-1787915117</id>
            <summary type="text">September 6 German state election raises questions among migrants: ஜேர்மன் மாகாணமொன்றில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ள தேர்தல் புலம்பெயர்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>September 6 German state election raises questions among migrants: ஜேர்மன் மாகாணமொன்றில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ள தேர்தல் புலம்பெயர்ந்தோருக்கு எதிர்காலம் குறித்த குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
</p><p>

ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.
</p><p>
அந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெறலாம் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.</p><h3>

குழப்பத்தில் புலம்பெயர்ந்தோர்
</h3><p>
 AfD கட்சி, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி என்பது அனைவரும் அறிந்த விடயம். அக்கட்சியின் கொள்கைகளில் முக்கியமானவை ஜேர்மனிக்கு மற்ற நாட்டவர்கள் புலம்பெயர்தலைக் குறைப்பது, புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவது முதலானவையாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b97d8c0-ed9b-4d61-adb4-41a7f94b5458/26-6a916b6f067fe.webp' /></p><p>
ஆக, அக்கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், தங்கள் நிலைமை என்ன என்பது குறித்து அம்மாகாணத்தில் வாழும் புலம்பெயர்ந்தோர் இப்போதே தீவிரமாக யோசிக்கத் துவங்கிவிட்டார்கள்.
</p><p>
ஏற்கனவே கருப்பினத்தவர் முதலானோர் இனவெறுப்பை எதிர்கொண்டுவரும் நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், அதற்குப் பிறகு நாங்கள் எப்படி பாதுகாப்பாக உணரமுடியும், எப்படி சமுதாயத்தின் ஒரு சாதாரண பாகமாக நாங்கள் அங்கீகரிக்கப்படுவோம் என்கிறார்கள் கருப்பினத்தவர்கள் சிலர்.&nbsp;</p><p></p><p>
AfD கட்சி தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், இந்த நாட்டில் தாங்கள் தொடர்ந்து வாழமுடியுமா என கேள்வி எழுப்புகிறார்கள் கருப்பின இளைய தலைமுறையினர்.
</p><p>
புலம்பெயர்தல் பின்னணி கொண்ட பலர், தாங்கள் என செய்வதென தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
</p><p>
சிரியா நாட்டவரான Batoul Nayouf என்பவர், நிலைமையை ஒரே வாக்கியத்தில் தெளிவாக உணர்த்திவிட்டார். ஆம், நாங்கள் சூட்கேஸ்களை தயாராக வைத்துக்கொண்டு, அவற்றின் மீதுதான் உட்கார்ந்திருக்கிறோம் என்கிறார் அவர்.
</p><p>
வாக்களிப்போம், AfD கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், அதன்பின் Saxony-Anhalt மாகாணத்தில் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்று பார்க்கலாம், எப்படியும் நாம் அக்கட்சி வெற்றி பெறுவதைத் தடுக்க முயற்சிக்கவேண்டும் என்கிறார் ஒருங்கிணைப்பு ஆலோசகரும் உள்ளூர் அரசியல்வாதியும், கருப்பினத்தவருமான Amidou Traore என்பவர்.
</p><p>
ஆக மொத்தத்தில், செப்டம்பர் 6ஆம் திகதி Saxony-Anhalt மாகாணத்தில் நடைபெற உள்ள தேர்தல், அம்மாகாணத்தில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு எதிர்காலம் குறித்த குழப்பத்தை உருவாக்கியுள்ளதில் சந்தேகம் இல்லை எனலாம்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:07:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய இளம்பெண்: குற்றவாளி சிக்கினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hyderabad-girl-killed-in-us-ex-bf-arrested-in-agra-1787912482"></link>
            <id>https://news.lankasri.com/article/hyderabad-girl-killed-in-us-ex-bf-arrested-in-agra-1787912482</id>
            <summary type="text">An Indian man wanted in the United States for allegedly murdering his former roommate has been arrested: இந்திய இளம்பெண்ணொருவர் அமெரிக்காவில் சடலமாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>An Indian man wanted in the United States for allegedly murdering his former roommate has been arrested: இந்திய இளம்பெண்ணொருவர் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்ட விடயத்தில், அவரைக் கொலை செய்ததாக கருதப்படும் நபரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
</p><p>

அமெரிக்காவின் மேரிலேண்டில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணான நிகிதா (Nikitha Rao Godishala, 27), டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாயமானார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b54be3e-12d6-4aeb-acd3-ba74d791c196/26-6a916124d0c7b.webp' /></p><p>
ஜனவரி மாதம் 2ஆம் திகதி, அர்ஜூன் ஷர்மா (26) என்னும் நபர், நிகிதாவைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார். இந்த அர்ஜூன், நிகிதா தங்கியிருந்த அதே குடியிருப்பில் அவருடன் தங்கியிருந்தவர் ஆவார்.</p><h3>
இந்திய இளம்பெண் சடலமாக மீட்பு
</h3><p>
நிகிதாவை தீவிரமாகத் தேடிவந்த பொலிசார், ஜனவரி மாதம் 3ஆம் திகதி, அர்ஜூன் வாழ்ந்துவந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே நிகிதாவின் உயிரற்ற உடலைக் கண்டு பிடித்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b334c142-e085-44b9-9f51-a27731d29cc2/26-6a91612427b62.webp' /></p><p>
அர்ஜூன் தலைமறைவாகிவிட, அமெரிக்க பொலிசார், அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்திருந்தார்கள்.</p><h3>

முரணான தகவல்கள்
</h3><p>
அர்ஜூன் நிகிதாவின் காதலர் என அமெரிக்க பொலிசார் தெரிவித்திருந்த நிலையில், அவர் தன் மகளுடைய காதலர் அல்ல என்றும், அவர் தன் மகளுடைய அறைத்தோழர் மட்டுமே என்றும், இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் விடயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே தன் மகளை அர்ஜூன் கொலை செய்துவிட்டதாகவும் நிகிதாவின் தந்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
அத்துடன், ஜனவரி மாதம், அர்ஜூன் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.</p><p>
ஆனால், அர்ஜூன் ஆக்ராவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 25ஆம் திகதி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்நிலையில், அர்ஜூன் கைது குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவலளிக்கட்டுள்ளதாகவும், அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T10:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் 7,492 விமானங்கள்: பிரித்தானியர்களுக்கு கடும் நெரிசல், குழப்பம் ஏற்பட வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/29592-flights-scheduled-across-spain-airports-1787912044"></link>
            <id>https://news.lankasri.com/article/29592-flights-scheduled-across-spain-airports-1787912044</id>
            <summary type="text">29592 Flights Scheduled Across Spain Airports: ஸ்பெயினில் சாதனை அளவிலான விமானங்கள் இயக்கப்பட உள்ளதால், கடும் பயண நெரிசல் மற்றும் குழப்பம் ஏற்பட வாய்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>29592 Flights Scheduled Across Spain Airports: ஸ்பெயினில் சாதனை அளவிலான விமானங்கள் இயக்கப்பட உள்ளதால், கடும் பயண நெரிசல் மற்றும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
</p><p>
ஸ்பெயின் நாட்டில் விமான நிலையங்களில் சாதனை அளவிலான விமானங்கள் இயக்கப்பட உள்ளதால், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் வழக்கத்தை விட அதிக நெரிசலான பயண சூழலை எதிர்கொள்ள நேரிடலாம்.&nbsp;</p><h2>விமானப் பயணங்களின் எண்ணிக்கை&nbsp;</h2><p>
ஸ்பெயின் நாட்டில் 29-ஆம் திகதி முதல் 31-ஆம் திகதி வரை, விமானப் பயணங்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டவுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b458168-66f7-4f31-aaef-25c7dff7a203/26-6a916052a5412.webp' />&nbsp;</p><p></p><p>
கோடை விடுமுறையின் கடைசி வார இறுதி என்பதாலும், அதே வேளையில் பிரித்தானியாவில் பொது விடுமுறை என்பதாலும், பலர் தங்கள் விடுமுறையின் ஒரு பகுதியாக வெளிநாட்டிற்கு செல்லவோ அல்லது அங்கிருந்து திரும்பவோ இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள். </p><p>

ஸ்பெயின் விமான நிலையங்களை நிர்வகிக்கும் நிறுவனமான AENA-வின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களில், இக்காலகட்டத்தில் மொத்தம் 29,592 விமானங்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக Majorca Daily Bulletin செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><h2>7,492 விமானங்கள்</h2><p>
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 28,826 விமானங்களுடன் ஒப்பிடுகையில் 2.6 சதவீத அதிகரிப்பாகும். </p><p>

மேலும், ஞாயிற்றுக்கிழமை மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அன்று மட்டும் 7,492 விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இதனால் ஸ்பெயின் நாட்டு விமான நிலையங்கள் கடும் பயண நெரிசலை சந்திக்க தயாராகி வருகின்றன.</p><p> 

அந்த விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் திரும்பும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள், வழக்கத்தை விட அதிக நெரிசலான பயண சூழலை எதிர்கொள்ள நேரிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2faf546-c100-47a5-945a-69c6fd6b8b99/26-6a9160536232b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T10:15:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா - அமெரிக்கா உறவில் நெருக்கம்: ஜவாலின் ஏவுகணைகளை வாங்கும் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-procure-javelin-anti-tank-system-from-us-1787910093"></link>
            <id>https://news.lankasri.com/article/india-procure-javelin-anti-tank-system-from-us-1787910093</id>
            <summary type="text">பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவிடம் இருந்து ஜாவலின் ஏவுகணைகளை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்கும் இந்தியாஇந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவிடம் இருந்து ஜாவலின் ஏவுகணைகளை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது.</p><h2> அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்கும் இந்தியா</h2><p>இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் புதிய முன்னேற்றமாக பல்வேறு போர்களில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட ஜாவலின் ஏவுகணைகளை வாங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p><p> இந்த ஜவாலின் ஏவுகணையானது மனிதர்களால் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய நடுத்தர தூர பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.</p><p>இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்கோ கோர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c14b8c3c-0f21-4970-94c1-42bb9f00b4d2/26-6a9157ce65638.webp' /></p><p></p><p> இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதமே FGM-148 Javelin ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><h2> அமெரிக்க தூதர் செர்கோ கோர் தகவல்</h2><p>
ஒப்பந்தம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த அமெரிக்க தூதர் செர்கோ கோர், பெரிய செய்தி! பல்வேறு போர்களில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட ஜாவலின் ஏவுகணைகளை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது.</p><p>இது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் மிகப்பெரிய முன்னேற்றமாகும். அத்துடன் இந்த ஒப்பந்தமானது எதிர்காலத்தில் கூட்டு தயாரிப்புக்கான கதவுகளையும் திறப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BIG news! India plans to buy the battle-tested Javelin anti-tank system. Just as <a href="https://x.com/SecWar?ref_src=twsrc%5Etfw">@secwar</a> highlighted at the May 2026 Shangri-La Dialogue, this is a great step forward in the U.S.-India defense relationship and opens the door to co-production possibilities. The engagement between…</p>&mdash; Ambassador Sergio Gor (@USAmbIndia) <a href="https://x.com/USAmbIndia/status/2093238732472369659?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஆனால் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த புரிந்துணர்வின் கீழ் எத்தனை ஜாவலின் ஏவுகணைகளை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது அல்லது இதற்காக எவ்வளவு செலவு செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T09:41:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் மக்கள் கூட்டத்திற்குள் காரை செலுத்திய நபர்: இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-died-car-rams-crowd-at-bus-stop-in-france-1787907789"></link>
            <id>https://news.lankasri.com/article/2-died-car-rams-crowd-at-bus-stop-in-france-1787907789</id>
            <summary type="text">Car rams crowd at bus stop in France: பிரான்சிலுள்ள பேருந்து நிலையம் ஒன்றில் மக்கள் கூட்டத்துக்குள் ஒருவர் காரைக் கொண்டு மோதியுள்ளார்.


தென்மேற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Car rams crowd at bus stop in France: பிரான்சிலுள்ள பேருந்து நிலையம் ஒன்றில் மக்கள் கூட்டத்துக்குள் ஒருவர் காரைக் கொண்டு மோதியுள்ளார்.</p><p>


தென்மேற்கு பிரான்சிலுள்ள Caen நகரில் அமைந்துள்ள பேருந்து நிலையம் ஒன்றில் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது, ஒருவர் வேண்டுமென்றே காரைக்கொண்டு மோதியுள்ளார்.
</p><h3>
இருவர் பலி
</h3><p>
ரஷ்ய வம்சாவளியினரான அந்த நபருக்கும் அந்தப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13003a4a-1d95-4da2-b630-2c309bd66fbe/26-6a914ecec07f2.webp' /></p><p>
அதைத்தொடர்ந்து அந்த 26 வயது நபர் தனது காரைக் கொண்டு பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது மோதியுள்ளார்.
</p><p>
கார் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாக, சுமார் 10 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழக்க, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
</p><p>
மேலும், காயமடைந்தவர்களில் ஆறு பேருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

காரைக்கொண்டு மக்கள் கூட்டத்தில் மோதிய நபர் தப்பி ஓடிய நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் பொலிசார் அவரை மடக்கிப் பிடித்துள்ளார்கள்.
</p><p>
எதனால் அந்த நபர் காரைக் கொண்டு மக்கள் மீது மோதினார் என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T09:03:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ 1 லட்சம் முதலீடு... ஐந்தே நிமிடத்தில் ரூ 44 லட்சம் லாபம்: வாயை பிளக்கும் முதலீட்டாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sensex-wild-swing-sparks-buzz-1787907955"></link>
            <id>https://news.lankasri.com/article/sensex-wild-swing-sparks-buzz-1787907955</id>
            <summary type="text">Trader&#039;s Claim On Sensex&#039;s Wild Swing: சென்செக்ஸின் கடும் ஏற்ற இறக்கம் குறித்த வர்த்தகர் ஒருவரின் கூற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பங்குச்சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trader's Claim On Sensex's Wild Swing: சென்செக்ஸின் கடும் ஏற்ற இறக்கம் குறித்த வர்த்தகர் ஒருவரின் கூற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>இந்திய பங்குச்சந்தையில் நேற்று வியாழக்கிழமை வர்த்தக முடிவுக்கு முன்பு சென்செக்ஸில் ஏற்பட்ட திடீர் மற்றும் மிக பெரிய ஏற்ற, இறக்கம் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/623d3c60-0739-44ea-82f6-632af924ef26/26-6a914f75983b8.webp' /></p><p>
</p><p>இந்த நிலையில், சென்செக்ஸ் 'புட் ஆப்ஷனில்' (put option) செய்யப்பட்ட 1 லட்சம் ரூபாய் முதலீடு, வெறும் ஐந்து நிமிடங்களில் 44 லட்சம் ரூபாயாக மாறியிருக்கக்கூடும் என்று ஒரு வர்த்தகர் பதிவிட்டுள்ளார். </p><p>அந்த வர்த்தகரின் கூற்றுப்படி, ஒரு முதலீட்டாளர் பிற்பகல் 3:15 மணிக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான 'சென்செக்ஸ் 76,500 புட் ஆப்ஷன்களை' (Sensex 76,500 put options) வாங்கி, அவற்றை 3:20 மணிக்கு விற்றிருந்தால், அந்த வர்த்தகத்தின் மூலம் சுமார் ரூ. 44 லட்சம் லாபம் கிடைத்திருக்கக்கூடும். </p><p>மாதாந்திர டெரிவேடிவ்ஸ் (derivatives) ஒப்பந்தங்கள் முடிவடையும் நாளில், வர்த்தக நிறைவு ஏல அமர்வின் (CAS) போது சென்செக்ஸ் குறியீட்டில் அசாதாரணமான ஏற்ற இறக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கருத்து வெளியானது. </p><p>தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமர்வின் பிற்பகுதியில் சென்செக்ஸில் ஒரு கூரான ஏற்ற இறக்கம் காணப்பட்டது. மாலை 3.17 மணியளவில் சுமார் 77,200 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ், 3.23 மணிக்குள் 74,983 புள்ளிகளுக்கு சரிந்தது. </p><p>அதாவது, சில நிமிடங்களிலேயே 2,000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் அதன்பிறகு நிலைமை மீண்டும் தலைகீழாக மாறியது. 3.23 மணி முதல் 3.30 மணி வரை அடுத்த 7 நிமிடங்களில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 2,000 புள்ளிகள் மீண்டும் ஏறியது. </p><p>இறுதியில், சென்செக்ஸ் 76,934 புள்ளிகளில் முடிவடைந்தது. இது முந்தைய நாள் முடிவை விட 539 புள்ளிகள் குறைவு என்றாலும் கூட 2000 புள்ளிகள் மீண்டு வந்தது பாசிட்டிவாகவே பார்க்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>இந்த திடீர் மாற்றங்கள் குறியீட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கும் சில நிமிடங்களில் கடுமையாக சரிந்தது. ரிலையன்ஸ் பங்கு சுமார் ரூ.1,289ல் இருந்து வெறும் 7 நிமிடங்களில் ரூ.1,250 ஆக சரிந்தது. </p><p>இருப்பினும், பின்னர் மீண்டும் வேகமாக உயர்ந்து ரூ.1,286ல் முடிந்தது. ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிசி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகளிலும் வர்த்தகத்தின் இறுதி சமயத்தில் பெரியளவில் இறங்கி, பிறகு மீண்டும் ஏறியது.
</p><p>இது முதலீட்டாளர்களிடையே மிக பெரிய கலக்கத்தை கொடுத்தது. இது புதிய குளோசிங் ஆக்ஷன் செஷன் (Closing Auction Session) முறை குறித்த விவாதத்தையும் மீண்டும் எழுப்பியுள்ளது. </p><p>சந்தை முடிவில் பங்குகளின் இறுதி விலையை நிர்ணயிக்கும் இந்த புதிய முறையை மும்பை பங்குச்சந்தை ஆகஸ்ட் 3ம் திகதி அறிமுகப்படுத்தியது. ஒரு பங்கின் விலையை செயற்கையாக கட்டுப்படுத்துவதை தடுக்கவே இந்த புதிய முறையை மும்பை பங்குச்சந்தை கொண்டு வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/828809f6-14b7-4130-81f7-0475d9ead3f5/26-6a914f764966c.webp' /></p><p> </p><p>ஈக்விட்டி டெரிவேட்டிவ்கள் வர்த்தகம் செய்யப்படும் சுமார் 200 பங்குகளுக்கு இந்த முறை தற்போது பொருந்துகிறது. மற்ற பங்குகளுக்கு பழைய முறை தொடர்கிறது.
இந்த புதிய முறை அறிமுகமானதிலிருந்து, மாலை 3.15 மணி முதல் 3.30 மணி வரை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் வழக்கத்திற்கு மாறான விலை ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து ஏற்படுகிறது. </p><p>இது ஒரு பக்கம் இருக்க சென்செக்ஸ் மற்றும் அதன் சில பங்குகளில் முறைகேடு செய்ததாக கூறி கடந்த வாரம் இரு முதலீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தது. </p><p>சம்பந்தப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து அந்த இரண்டு நிறுவனங்களையும் சந்தையிலிருந்து விலக்கி வைத்துள்ள ஒழுங்குமுறை ஆணையம், சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் சுமார் ரூ. 3.8 கோடியை திரும்பச் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T09:03:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்: மாயமான கனேடிய தம்பதியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canadian-couple-missing-in-nepal-flood-1787902799"></link>
            <id>https://news.lankasri.com/article/canadian-couple-missing-in-nepal-flood-1787902799</id>
            <summary type="text">Canadian couple missing after flash flooding on Nepal Tibet border: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான கனேடிய தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canadian couple missing after flash flooding on Nepal Tibet border: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான கனேடிய தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
</p><p>
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த, தவல், மேகா ஷா தம்பதியர், நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4caeb8b6-36ad-4f04-b4fe-24ae6d3136b7/26-6a913b5245d1b.webp' /></p><p>

புதன்கிழமை காலை உள்ளூர் நேரப்படி சுமார் 8.37 மணியளவில், நேபாள திபெத் எல்லையில், திடீரென பனிப்பாறைச் சரிவு ஏற்பட, பனி, சேறு மற்றும் பாறைகள் பெயர்ந்து நதியாக உருமாற, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
</p><p>
பெருவெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாக, 1,400க்கும் அதிகமானோர் மாயமாகிவிட்டார்கள்.</p><h3>

மாயமான கனேடிய தம்பதியர்
</h3><p>
அப்படி மாயமானவர்களில், தவல், மேகா ஷா தம்பதியரும் அடங்குவர். இந்நிலையில், தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc0f4131-2a9e-4169-8b13-55c198b3dfea/26-6a913b5183c66.webp' /></p><p>
தவலின் சகோதரி உறவு முறையினரான நிகிதா ஷா இது குறித்துக் கூறும்போது, தங்கள் உறவினர்கள் ஹொட்டல் கைலாஷ் என்னும் ஹொட்டலில் தங்கியிருந்ததாகவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
அத்துடன், தாங்கள் கனடா அரசின் உதவியை நாடியதாகவும், அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், ஏதாவது தகவல் கிடைத்தால் தெரிவிப்பதாகவும் கூறிவிட்டதாகவும் தெரிவிக்கிறார் நிகிதா.
</p><p>
அவர்களைப் பொருத்தவரை, எதுவும் தெரியவில்லை என்று கூறுவது மிகவும் எளிது என்றும், ஆனால், ஏதாவது உறுதியான தகவல் கிடைத்தால் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறுகிறார் நிகிதா.&nbsp;</p><p>
இதற்கிடையில், நேபாளப் பெருவெள்ளத்தில் காணாமல் போன கனேடியர்களின் எண்ணிக்கை 25இலிருந்து 30ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T08:55:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புழல் சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-inspection-in-puzhal-prison-1787907246"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-inspection-in-puzhal-prison-1787907246</id>
            <summary type="text">cm vijay inspection in puzhal jail: முதலமைச்சர் விஜய் புழல் சிறையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

புழல் சிறையில் முதல்வர் விஜய் ஆய்வு 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay inspection in puzhal jail: முதலமைச்சர் விஜய் புழல் சிறையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். </p><h3>

புழல் சிறையில் முதல்வர் விஜய் ஆய்வு </h3><p>

தமிழ்நாடு முதலமைச்சர் அவ்வப்போது மருத்துவமனை, மெட்ரோ ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca2f496b-bc08-4bbf-b492-5d3565c3f5af/26-6a914cb00389c.webp' /></p><p>

இந்நிலையில், இன்று காலை சென்னை புழலில் உள்ள மத்திய சிறைக்கு சிறைத்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.
</p><p>
சிறையில் கைதிகள் இருந்த பகுதிக்கு சென்ற முதல்வர் விஜய் அங்குள்ள சிறைவாசிகளிடம் நன்றாக கவனித்து கொள்கிறார்களா? என்ன குறைகள் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். </p><p></p><p>

மேலும், சிறைத்துறை அதிகாரிகளிடம் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள உணவு தயாரிக்கும் கூடத்திற்கும் சென்று ஆய்வு நடத்தினார்.
</p><p>
அதனைத்தொடர்ந்து புழலில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று அங்கும் ஆய்வு நடத்தியுள்ளார்.</p><p> 

சாலையில் நடந்து சென்ற முதல்வர் விஜய் அங்கிருந்த மக்களை பார்த்து கையசைத்த நிலையில், முதல்வரை பார்த்த மகிழ்ச்சியில் மக்கள் ஆரவாரமடைந்தனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T08:54:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இளம் இந்திய தம்பதி: டெல்லியில் நடந்த அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/young-indian-delhi-couple-arrested-for-spying-1787906592"></link>
            <id>https://news.lankasri.com/article/young-indian-delhi-couple-arrested-for-spying-1787906592</id>
            <summary type="text">பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த தம்பதியினரை டெல்லி பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த தம்பதிபாகிஸ்தானுக்கு உளவு வேலை பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த தம்பதியினரை டெல்லி பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.</p><h2>பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த தம்பதி</h2><p>பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டில் டெல்லியை சேர்ந்த இளம் தம்பதியான முகமது சாஹில் மற்றும் அவரது மனைவி சமீரா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/185c8ca6-6f6d-4b31-9945-f196b101f774/26-6a914a2216718.webp' /></p><p> கடந்த 2024ம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் உளவு முகவர்களுடன் இந்த தம்பதிகள் தொடர்பில் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> அத்துடன் அவர்களுக்கு தளவாட உதவிகளையும் செய்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> கைது செய்யப்பட்ட தம்பதி கடந்த 2024ம் ஆண்டு முதல் 2025 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 8 இந்திய சிம் கார்டுகளை துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The Northern Range of the Delhi Police Special Cell busts an alleged ISI-backed, Pakistan-based espionage network and arrests a Delhi-based couple accused of working for Pakistani Intelligence Operatives (PIOs) through social media since 2024.<br><br>According to Delhi police, the… <a href="https://t.co/6qFbGdQ9j8">pic.twitter.com/6qFbGdQ9j8</a></p>&mdash; All India Radio News (@airnewsalerts) <a href="https://x.com/airnewsalerts/status/2093218148501651655?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அத்துடன் இதற்காக அவர்கள் ரூ.30,000 வரை பணம் கை மாற்றியுள்ளனர்.</p><p> விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு பாகிஸ்தான் உளவு முகவர்களுடன் தொடர்பு ஏற்பட்டதாக சஹால் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-28T08:43:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நார்வே மன்னர் 5ம் ஹரால்டு காலமானார்: அரச அரண்மனை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/norway-king-harald-v-passes-away-1787902741"></link>
            <id>https://news.lankasri.com/article/norway-king-harald-v-passes-away-1787902741</id>
            <summary type="text">Norway King Harald V Passes Away: நார்வே நாட்டு மன்னர் 5ம் ஹரால்டு தன்னுடைய 89 வது வயதில் காலமானார். &amp;nbsp;நார்வே நாட்டு மன்னர் காலமானார்நார்வே நாட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Norway King Harald V Passes Away: நார்வே நாட்டு மன்னர் 5ம் ஹரால்டு தன்னுடைய 89 வது வயதில் காலமானார்.</p><h2> &nbsp;நார்வே நாட்டு மன்னர் காலமானார்</h2><p>நார்வே நாட்டு மன்னர் 5ம் ஹரால்டு தன்னுடைய 89 வது வயதில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக ஆஸ்லோவில் உள்ள அரச அரண்மனை அறிவித்துள்ளது.</p><p>அரிய வகை இரத்தக் கோளாறுடன் போராடி வந்த மன்னர் ஹரால்டு காலை 6.35 மணிக்கு அமைதியான முறையில் இயற்கை அடைந்தார்.</p><p> மன்னர் ஹரால்டு உயிரிழந்த இறுதி நேரங்களில் அவரது குடும்பத்தினர் படுக்கைக்கு அருகில் கூடி முறையான இறுதி மரியாதையை செலுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f4c9464-8517-438f-a05b-d6ccb8f9398e/26-6a913b1718ff3.webp' /></p><p></p><p> 14ம் நூற்றாண்டுக்கு பிறகு நார்வே மண்ணில் பிறந்த முதல் நார்வே மன்னர் பெருமையை 5ம் ஹரால்டு கொண்டுள்ளார்.</p><p> தன்னுடைய 35 ஆண்டுகால ஆட்சியை நவீன உலகத்திற்கு ஏற்ப தன்னுடைய ஆட்சியை அமைத்தவர் என்ற பெருமையும் மன்னர் ஹரால்டு பெற்றுள்ளார்.</p><p> பல்வேறு மரபுகளை மீறி சாதாரண குடிமகளை திருமணம் செய்து கொண்டதோடு எளிதில் அணுக கூடியவராக மன்னர் ஹரால்டு திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:39:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 சிக்ஸர், 6 பவுண்டரிகள்..58 பந்தில் 102 விளாசிய பாகிஸ்தான் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saim-ayub-blast-century-in-cpl-2026-1787902902"></link>
            <id>https://news.lankasri.com/article/saim-ayub-blast-century-in-cpl-2026-1787902902</id>
            <summary type="text">Saim ayub blast century in cpl 2026: கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பாகிஸ்தானின் சைம் அயூப் சதம் விளாசினார்.

செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான கரீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Saim ayub blast century in cpl 2026: கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பாகிஸ்தானின் சைம் அயூப் சதம் விளாசினார்.
</p><p>
செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில்ஜமைக்கா கிங்ஸ்மென் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;&nbsp;</p><h2>சைம் அயூப்&nbsp;</h2><p>
வார்னர் பார்க் மைதானத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், ஜமைக்கா கிங்ஸ்மென் மற்றும் செயின்ட் கிட்ஸ் அன்ட் நெவிஸ் பேட்ரியோட்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">6 fours, 8 sixes and a maiden T20 hundred for Saim Ayub in the CPL 🔥<a href="https://t.co/rK8cPAnLAz">pic.twitter.com/rK8cPAnLAz</a></p>&mdash; Cricbuzz (@cricbuzz) <a href="https://x.com/cricbuzz/status/2093160388258824507?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் கார்ட்டி டக்அவுட் ஆக, மாஸ் சதாகத் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p></p><p>

அதன் பின்னர் வந்த வீரர்களும் சொதப்ப, சைம் அயூப் (Saim Ayub) சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ரதாண்டவம் ஆடினார்.</p><p>

58 பந்துகளில் எதிர்கொண்ட அயூப் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>ஃப்ளெட்ஸர்,&nbsp;ஷானகா&nbsp;அதிரடி </h2><p>கீமோ பவுல் 13 பந்துகளில் 25 ஓட்டங்கள் விளாச, ஜமைக்கா கிங்ஸ்மென் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
நஸீம் ஷா, வணிந்து ஹசரங்கா மற்றும் ஒபேத் மெக்கோய் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.</p><p>

பின்னர் ஆடிய செயின்ட் கிட்ஸ் அன்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.</p><p>

ஆந்த்ரே ஃப்ளெட்ஸர் 38 பந்துகளில் 55 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 4 பவுண்டரிகள்), தசுன் ஷானகா 18 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 35 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">With 31 runs needed off the last over, Dasun Shanaka made things interesting with three sixes in four balls! 🤯<br><br>But it wasn&#39;t enough for St Kitts and Nevis Patriots, who went down to Jamaica Kingsmen<a href="https://t.co/lHVmHDK58h">pic.twitter.com/lHVmHDK58h</a></p>&mdash; Cricbuzz (@cricbuzz) <a href="https://x.com/cricbuzz/status/2093189682440069556?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce45ea8-840f-4a87-b0b1-9e7178759ca5/26-6a9146ca2f882.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:38:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்: மாயமான சுவிஸ் குடிமகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/missing-swiss-women-in-nepal-flood-found-alive-1787899890"></link>
            <id>https://news.lankasri.com/article/missing-swiss-women-in-nepal-flood-found-alive-1787899890</id>
            <summary type="text">A Swiss woman missing in Nepal flash flood has been found alive: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமான சுவிஸ் குடிமகள் ஒருவர் உயிருடன் இருப்பது தெரியவந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>A Swiss woman missing in Nepal flash flood has been found alive: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமான சுவிஸ் குடிமகள் ஒருவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.</p><p>


நேபாள - திபெத் பெருவெள்ளம் 400க்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கியுள்ள விடயம் உலகை உலுக்கியுள்ள நிலையில், 1,000க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளார்கள்.
</p><h3>
மாயமான சுவிஸ் குடிமகள்
</h3><p>
அப்படி மாயமானவர்களில், இந்தியா, இத்தாலி, பல்கேரியா, அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சுவிஸ் ஊடகமான 20 Minuten செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/561a914e-877c-4257-b77a-fdcf1c193b84/26-6a912ff41942f.webp' /></p><p> அவர்களில், சுவிஸ் குடிமகள் ஒருவரும் அடங்குவார்.&nbsp;</p><p></p><p>
சுவிஸ் குடிமகள் ஒருவர் பெருவெள்ளத்தின்போது மாயமானதாக நேபாள சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அந்தப் பெண் தற்போது உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 20 Minuten ஊடகம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:54:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் தாக்குதல் 25வது நினைவேந்தல்... விழாவிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-backed-out-of-attending-1787899928"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-backed-out-of-attending-1787899928</id>
            <summary type="text">Trump backed out of attending 25th anniversary: செப்டம்பர் தாக்குதல் 25வது நினைவேந்தல் நிகழ்விலிருந்து ட்ரம்ப் பின்வாங்கியுள்ளார்.
நியூயார்க்கில் செப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump backed out of attending 25th anniversary: செப்டம்பர் தாக்குதல் 25வது நினைவேந்தல் நிகழ்விலிருந்து ட்ரம்ப் பின்வாங்கியுள்ளார்.
</p><p>நியூயார்க்கில் செப்டம்பர் 11 தாக்குதலின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>அனுமதி மறுப்பு</h2><p>
</p><p>நியூயார்க் நகரை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், தாக்குதல் நடந்த 2001 முதல் ஒவ்வொரு வருடமும் அங்குள்ள நினைவிடத்தில் அடிக்கடி விஜயம் செய்து வந்துள்ளார். </p><p>ஆனால், 2026-ல் பென்டகனில் நடைபெறும் நினைவேந்தலில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அவர் மரணமடைந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்த இருக்கிறார்; ஏனெனில், நியூயார்க் நினைவிடத்தில் அவருக்கு உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c369da39-ed99-4173-bcf5-1a4d99234492/26-6a91301b15eee.webp' /></p><p> </p><p>ட்ரம்ப் 'செப்டம்பர் 11 நினைவகம் மற்றும் தேசிய அருங்காட்சியகத்தில்' உரையாற்ற விரும்பி, இதற்காகத் தனது குழுவினரை முன்கூட்டியே அங்கு சென்று பார்வையிடவும் செய்திருந்தார். </p><p>ஆனால், நினைவேந்தலின்போது எந்தவொரு கட்சிச் சார்புத்தன்மையையும் தவிர்ப்பதே அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கம் என்று பல தரப்பினரும் தெரிவித்தனர்; இதன்காரணமாக, 2012-ஆம் ஆண்டு முதல் அரசியல்வாதிகள் உரையாற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>நியூயார்க் விழாவில் ட்ரம்ப் நிர்வாகத்தின் சார்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், பராக் ஒபாமா மற்றும் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது. </p><p>செப்டம்பர் 11-ஆம் திகதிக்கு முந்தைய இரண்டு நாட்களில், டெக்சாஸில் நடைபெறும் குடியரசுக் கட்சியின் இடைக்கால மாநாட்டிலிருந்து ட்ரம்ப் வாஷிங்டனுக்குத் திரும்புவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd8faade-d3bf-4648-bd21-d0e16affa4d6/26-6a91301bbc75a.webp' /></p><p> </p><p>கடந்த ஆண்டைப் போலவே, அரசியல்வாதிகள் உரையாற்ற அனுமதிக்கப்படும் பென்டகன் விழாக்களில் ட்ரம்ப் உரை நிகழ்த்துவார். அதன்பிறகு, 'ஐரிஷ் ஓபன்' போட்டி நடைபெறவுள்ள தனது கோல்ஃப் மைதானத்தைப் பார்வையிட அவர் அயர்லாந்துக்குச் செல்வார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T06:49:32+00:00</updated>
        </entry>
    </feed>
