<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-06T03:59:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-war-data-leaker-1788665161"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-war-data-leaker-1788665161</id>
            <summary type="text">Polygraph Tests Of Top Army Officials: ஈரான் போர் விவகாரத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை.
நவீன வரலாற்றிலேயே முதன்முறையாக, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Polygraph Tests Of Top Army Officials: ஈரான் போர் விவகாரத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை.
</p><p>நவீன வரலாற்றிலேயே முதன்முறையாக, அமெரிக்க அரசாங்கத்தின் விசாரணை அதிகாரிகள், 50 உயர்மட்ட அமெரிக்க இராணுவ அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைகளை (polygraph tests) நடத்தியுள்ளனர்.</p><h2>கசியவிட்டார்களா</h2><p>
</p><p>ஈரான் போரின் காரணமாக அமெரிக்காவில் முக்கிய ஆயுதங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்த தகவல்கள் உட்பட, ரகசியத் தரவுகள் பத்திரிகையாளர்களுக்குக் கசிந்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c8289d-4959-4f2e-b1d8-605c4a1421a2/26-6a9cdd4b2dd6a.webp' /></p><p> </p><p>அமெரிக்க இராணுவத்தின் கூட்டுப் படைப் பிரிவின் இராணுவ அதிகாரிகள் மற்றும் குடிமைப் பணியாளர்களிடம், அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு இரகசியத் தகவல்களைக் கசியவிட்டார்களா என்று விசாரிக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனைகளின் நோக்கம், இரகசியத் தகவல்களை வெளியிட்ட நபர்களைக் கண்டறிவதும், எதிர்காலத்தில் அவ்வாறு செய்திருக்கக்கூடிய மற்றவர்களை அச்சுறுத்துவதுமாகும்.</p><p></p><p> </p><p>ஈரான் போரால் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகள் போன்றவற்றின் எண்ணிக்கைப் பெருமளவில் குறைந்துவிட்டதாக வெளியான தொடர்ச்சியான செய்திகளுக்குப் பிறகு இந்த உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில், பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உள் பணியாளர்கள் அல்லது விசாரணை விவகாரங்கள் குறித்துத் துறை கருத்துத் தெரிவிக்காது என்றும், ஆனால் வகைப்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்புத் தகவல்கள் கசிவதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு அதற்கேற்ப விசாரிக்கும் என்றும் கூறினார். </p><p>மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பையும், உலகம் முழுவதும் களமிறக்கப்பட்டுள்ள நமது படைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு, ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பது மிக அவசியமாகும் என்றார்.</p><h2>மோசமடைந்து வரும் சூழல்</h2><p> </p><p>மே 5-ஆம் திகதி முதல், ஈரான் போர் குறித்த செய்தியாளர் சந்திப்பு எதையும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் நடத்தவில்லை; அத்துடன் பென்டகனில் செய்தியாளர்களின் அணுகலையும் அவர் மட்டுப்படுத்தியுள்ளார். </p><p>ஈரான் போரில் அமெரிக்கா பெரும் சாதனைப் படைத்து வருவதாக திரைப்பட பாணியில் நாளும் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தவர் இந்த பீட் ஹெக்செத்.</p><p> USS ஆபிரகாம் லிங்கன் கப்பலில் மோசமடைந்து வரும் சூழல் குறித்து 'ஸ்டார்ஸ் அண்ட் ஸ்ட்ரைப்ஸ்' (Stars and Stripes) இதழ் வெளியிட்ட விமர்சன ரீதியான செய்திகள் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, கடந்த மாதம் பென்டகன் அதன் தலைமை ஆசிரியர் எரிக் ஸ்லாவின், வெளியீட்டாளர் மேக்ஸ் லெடெரர் மற்றும் மத்திய கிழக்கு செய்தியாளர் லாரா கோர்டே ஆகியோரை உத்தியோகப்பூர்வமாகப் பணிநீக்கம் செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e85f3747-c33e-448f-a062-33dda2c7df61/26-6a9cdd4bd3498.webp' /></p><p>
</p><p>வியாழக்கிழமை அன்று, ஜனாதிபதி ட்ரம்ப் பெயர் குறிப்பிடப்படாத நபர்களையும் அமைப்புகளையும் தேசத்துரோக இழிபிறவிகள் என்று கடுமையாகச் சாடியதோடு, ஈரானுடனான போருக்கு மத்தியில் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.</p><p> அத்துடன், அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஆயுதத் தளவாடங்களை உற்பத்தி செய்து வருவதாகவும் ட்ரம்ப் வியாழக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார். </p><p>மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஆயுத விற்பனைகள் தற்போது முன்னெடுக்கப்படாது என்றும், நேச நாடுகளுக்கு மட்டும் ஆயுத விற்பனைத் தொடரும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T03:24:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்டில் அதிகம் விற்பனையான Top 10 மின்சார இருசக்கர வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/top-10-electric-two-wheeler-brands-august-2026-1788657178"></link>
            <id>https://news.lankasri.com/article/top-10-electric-two-wheeler-brands-august-2026-1788657178</id>
            <summary type="text">இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை ஆகஸ்ட் 2026-இல் 1.83 லட்சம் யூனிட்கள் என பதிவாகியுள்ளது.

இது ஜூலை மாத விற்பனையை (2.05 லட்சம்) விட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை ஆகஸ்ட் 2026-இல் 1.83 லட்சம் யூனிட்கள் என பதிவாகியுள்ளது.
</p><p>
இது ஜூலை மாத விற்பனையை (2.05 லட்சம்) விட 11 சதவீதம் குறைவாக இருந்தாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2025 (1.10 லட்சம்) விற்பனைக்கு ஒப்பிடும்போது 67 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5fdda99-0f58-4329-95cd-4376d4811a06/26-6a9cbe1b97afe.webp' /></p><p>
</p><h2>
முக்கிய பிராண்டுகள் மற்றும் விற்பனை விவரங்கள்:
</h2><ul><li>
TVS Motor Company - 48,873 யூனிட்கள் (91 சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி (YoY) வளர்ச்சி). மார்க்கெட் ஷேர் 27 சதவீதம்.
</li><li>
Bajaj Auto - 41,019 யூனிட்கள் (235 சதவீதம் YoY வளர்ச்சி). 2026-இல் 3 லட்சம் யூனிட்களை கடந்த இரண்டாவது நிறுவனம்.
</li><li>
Ather Energy - 28,708 யூனிட்கள் (16 சதவீதம் மார்க்கெட் ஷேர்).
</li><li>
Hero MotoCorp (Vida) - 18,978 யூனிட்கள் (10 சதவீதம் மார்க்கெட் ஷேர்).
</li><li>
Ola Electric - 13,849 யூனிட்கள் (29 சதவீதம் YoY குறைவு). மார்க்கெட் ஷேர் 18-8 சதவீதமாக குறைந்தது.
</li><li>
Greaves Electric Mobility (Ampere) - 8,612 யூனிட்கள் (89 சதவீதம் YoY வளர்ச்சி).
</li><li>
River Mobility - 5,134 யூனிட்கள் (170 சதவீதம் YoY வளர்ச்சி).
</li><li>
BGauss Auto - 4,844 யூனிட்கள்.
</li><li>
Simple Energy - 1,635 யூனிட்கள்.
</li><li>
Motovolt Mobility - 1,365 யூனிட்கள்.</li></ul><p></p><p>
</p><h2>
சந்தை நிலை:
</h2><p>TVS மற்றும் Bajaj முன்னணி இடங்களை பிடித்துள்ளன. Ather மற்றும் Hero Vida தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால் Ola Electric மட்டும் YoY விற்பனையில் வீழ்ச்சி கண்டுள்ளது.
</p><p>
இந்த தரவுகள், இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருவதை காட்டுகின்றன. புதிய பிராண்டுகள் (River, BGauss, Simple Energy) கூட Top 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T01:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் டிரம்ப் போட்டுள்ள மிகப்பெரிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-plans-bigger-strategy-post-iran-war-1788655453"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-plans-bigger-strategy-post-iran-war-1788655453</id>
            <summary type="text">Trump plans bigger middle east strategy after Iran war:


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுடன் நடைபெற்று வரும் போருக்குப் பிறகு மத்திய கிழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump plans bigger middle east strategy after Iran war:


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுடன் நடைபெற்று வரும் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் “மிகப் பெரிய திட்டம்” ஒன்றை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக Axios வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
</p><p>
இந்த புதிய திட்டம் இன்னும் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcaa1678-9782-454e-bd1d-0d3eb99d03f0/26-6a9cb75f55394.webp' /></p><p>இதன் முக்கிய நோக்கம், ஈரானை கட்டுப்படுத்த பிராந்திய கூட்டணியை உருவாக்குவது மற்றும் இஸ்ரேலை அதன் அண்டை நாடுகளுடன் ஆழமான உறவுகளுக்கு அழைத்துச் செல்வது ஆகும்.
</p><p>
டிரம்ப் தனது நெருங்கிய ஆலோசகர்களிடம், “ஈரான் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
</p><p></p><h2>திட்டத்தின் மூன்று முக்கிய அம்சங்கள்:
</h2><p><b>ஈரானுக்கு எதிரான பிராந்திய கூட்டணி:</b> அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் வகையில், தனது கூட்டாளிகளை ஒருங்கிணைக்க முயற்சி.</p><p><b>
பிராந்திய மோதல்களை குறைத்தல்:</b> காசா திட்டத்தின் அடுத்த கட்டம், இஸ்ரேல்-சிரியா பாதுகாப்பு ஒப்பந்தம், இஸ்ரேல்-லெபனான் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல்.</p><p><b>

Abraham Accords விரிவாக்கம்:</b> இஸ்ரேல்-சவுதி அரேபியா இடையே உறவை சாதாரணப்படுத்தும் ஒப்பந்தம். இது டிரம்ப் நிர்வாகத்துக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.</p><p>
</p><p></p><p>இஸ்ரேல் தேர்தல் அக்டோபர் 27 அன்று நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு உருவாகும் அரசாங்கம் அமெரிக்காவின் புதிய திட்டத்துடன் இணைந்து செயல்படுமா என்பது கேள்வியாக உள்ளது. ஆனால், டிரம்ப் நிர்வாகம் தேர்தல் முடிவுகளை காத்திருக்காமல் திட்டத்தை முன்னெடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:59:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் 64 வயது பெண் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-mudslide-64-year-old-woman-rescued-1788653734"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-mudslide-64-year-old-woman-rescued-1788653734</id>
            <summary type="text">Nepal mudslide 64-year-old woman rescued: நேபாள பேரழிவிலிருந்து மற்றோரு பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

 64 வயது நேபாள பெண்&amp;nbsp;மீட்புநேபாளத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal mudslide 64-year-old woman rescued: நேபாள பேரழிவிலிருந்து மற்றோரு பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
</p><h2>
 64 வயது நேபாள பெண்&nbsp;மீட்பு</h2><p>நேபாளத்தின் Nuwakot மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மண்சரிவில் சிக்கியிருந்த 64 வயது நேபாள பெண் 10 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டார்.</p><p>மீட்பு குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அந்த பெண்ணை சனிக்கிழமை உயிருடன் வெளியே கொண்டு வந்தனர். ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, அவரை காத்மாண்டுவுக்கு மாற்றி மேலதிக சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be2ee565-7afb-4984-ad11-ed91e1106301/26-6a9cb0a82c65b.webp' /></p><p>சனிக்கிழமையன்று, நேபாள சுரங்கத்தில் சிக்கியிருந்த சீன தொழிலாளி ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>
நேபாள பொலிஸ் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4,898 பேர் தொடர்பில் இல்லை என்றும், 8,631 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🇳🇵 Nepal | Woman Alive After 11 Days Under the Rubble<br><br>In a scene that restored hope, Nepal&#39;s Armed Police Force rescued a 68-year-old woman alive from inside a house destroyed by floods in Bhitravati, on the eleventh day of the disaster.<br><br>She was found in a state of severe… <a href="https://t.co/2sdmSnfxLE">pic.twitter.com/2sdmSnfxLE</a></p>&mdash; Siraj Noorani (@sirajnoorani) <a href="https://x.com/sirajnoorani/status/2096197674055995594?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேபாள இராணுவம், ஆயுத பொலிஸ் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T00:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய நிலத்தில் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் - வரலாறு படைத்த ஜேர்மன் ரொக்கெட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-rocket-makes-first-eu-orbital-launch-1788651477"></link>
            <id>https://news.lankasri.com/article/german-rocket-makes-first-eu-orbital-launch-1788651477</id>
            <summary type="text">German rocket makes first EU orbital launch: முதல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவி ஜேர்மனி வரலாறு படைத்துள்ளது.


வரலாறு படைத்த ஜேர்மனி ஜேர்மனியின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>German rocket makes first EU orbital launch: முதல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவி ஜேர்மனி வரலாறு படைத்துள்ளது.
</p><h2>

வரலாறு படைத்த ஜேர்மனி </h2><p>ஜேர்மனியின் தனியார் விண்வெளி நிறுவனம் Isar Aerospace, தனது Spectrum ரொக்கெட்டை நோர்வேயின் Andoya Spaceport-இல் இருந்து 2026 செப்டம்பர் 5 அன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4787aa85-e99f-4e56-8006-da094d9435bf/26-6a9ca7d75c9bd.webp' /></p><p>இது ஐரோப்பிய நிலத்தில் இருந்து நடந்த முதல் orbital launch ஆகும். இதன் மூலம், ஐரோப்பா தனது செயற்கைக்கோள் ஏவுதல் திறனில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
</p><p>
இந்த ரொக்கெட், ஐந்து CubeSats மற்றும் ஒரு அறிவியல் பரிசோதனையை எடுத்துச் சென்றது. TU Berlin, University of Maribor, NTNU Norway போன்ற பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்கள் இதில் அடங்கும். </p><p>European Space Agency-யின் Boost! திட்டத்தின் கீழ் இந்த முயற்சி நடைபெற்றது.
</p><p></p><h2>இரண்டாவது முயற்சி&nbsp;வெற்றி </h2><p>2025-இல் நடந்த முதல் முயற்சி தோல்வியடைந்தது. புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் ரொக்கெட் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. ஆனால், Isar Aerospace அந்த பிழைகளை சரிசெய்து, 2026-இல் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றது.
</p><p>
இந்த வெற்றியால், ஐரோப்பா SpaceX மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் மீது வைத்திருந்த சார்பை குறைக்க முடியும். Isar Aerospace நிறுவனம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான செயற்கைக்கோள்களை சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பும் திறனை பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6855e1c2-5e40-4e0a-bdbc-e80a719daf7e/26-6a9ca7d818f36.webp' /></p><p>
நிறுவனத்தின் CEO Daniel Metzler கூறியதாவது: “விண்வெளிக்கு அணுகுதல் என்பது தேசிய பாதுகாப்புக்கும், தொழில்துறைக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த வெற்றி, ஐரோப்பாவுக்கு தன்னாட்சி வழங்கும்” என்று தெரிவித்தார்.
</p><p>
இந்த முயற்சி, ஐரோப்பிய விண்வெளி துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. பிரித்தானியா, சுவீடன் போன்ற நாடுகளும் விரைவில் தங்கள் சொந்த spaceports-இல் இருந்து செயற்கைக்கோள் ஏவுதலை தொடங்க திட்டமிட்டுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><br>]]></content>
            <updated>2026-09-05T23:34:55+00:00</updated>
        </entry>
    </feed>
