<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-12T12:44:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/healthy-dosa-recipe-in-tamil-1783859581"></link>
            <id>https://news.lankasri.com/article/healthy-dosa-recipe-in-tamil-1783859581</id>
            <summary type="text">பச்சை பயிறு உடலிற்கு ஒரு ஆரோக்கியமான தானியம் ஆகும். 

இது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. 

முளைகட்டிய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பச்சை பயிறு உடலிற்கு ஒரு ஆரோக்கியமான தானியம் ஆகும். 

இது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. </p><p>

முளைகட்டிய பச்சைப்பயறு அதிக புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களைக் கொண்ட ஒரு சிறந்த ஆரோக்கிய உணவாகும்.</p><p> 

இது உடல் எடையைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
</p><p>
அந்தவகையில், சத்தான முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><ul><li> 

பச்சைப்பயிறு- 1 கப்</li><li>
பச்சரிசி- 50g</li><li> 
பச்சை மிளகாய்- 4</li><li> 
இஞ்சி- 1 துண்டு </li><li>
கல் உப்பு- 1 ஸ்பூன்</li><li> 
சீரகம்- 1 ஸ்பூன்</li><li> 
மஞ்சள் தூள்- ½ ஸ்பூன் </li><li>
பெருங்காயத்தூள்- ½ ஸ்பூன்</li><li> 
நெய்- சிறிதளவு</li></ul><h2> 

செய்முறை</h2><p>

முதலில் பச்சைப்பயிரில் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊறவிட்டு பின்பு தண்ணீரை வடிகட்டி
பயிரை துணியில் கட்டி இரவு முழுக்க வைக்கவும்.
</p><p>
அடுத்து பச்சரிசியை நினைக்க கழுவி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5958fa95-b928-43f1-b3ea-5709c8442a4d/26-6a53897f1efc1.webp' /></p><p>பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கல் உப்பு, சீரகம், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மற்றும் ஊறவைத்த பச்சை பயறு சேர்த்து நன்கு அரைக்கவும்.
</p><p>
பின்பு மாவை பாத்திரத்திற்கு மாற்றி அதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.</p><p>

இதற்கடுத்து தோசைக்கல்லில் கலந்த மாவை ஊற்றி நெய் சேர்த்து தோசை வெந்ததும் எடுத்தால் சத்தான முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை தயார்.

&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T12:33:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தாரை நவீனமயமாக்கி மாற்றங்களுக்கு வித்திட்ட அரசர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/qatar-former-amir-sheikh-hamad-passed-away-at-74-1783858756"></link>
            <id>https://news.lankasri.com/article/qatar-former-amir-sheikh-hamad-passed-away-at-74-1783858756</id>
            <summary type="text">கத்தார் நாட்டின் முன்னாள் ஆட்சியாளர் ஷேக் ஹமத் தனது 74வது வயதில் காலமானார்.&amp;nbsp;நவீனமயமாக்கியவர் 

1995ஆம் ஆண்டில் கத்தாரில் அதிகாரத்தைக் கைப்பற்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கத்தார் நாட்டின் முன்னாள் ஆட்சியாளர் ஷேக் ஹமத் தனது 74வது வயதில் காலமானார்.&nbsp;</p><h2>நவீனமயமாக்கியவர் </h2><p>

1995ஆம் ஆண்டில் கத்தாரில் அதிகாரத்தைக் கைப்பற்றி, நாட்டை பெருமளவில் நவீனமயமாக்கியவர் ஷேக் ஹமத் பின் கலீஃப்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02ad4f32-ece8-4c1a-b3a2-07818430aa2c/26-6a5387a31acf8.webp' />&nbsp;</p><p></p><p> 



கத்தாரின் வரலாற்றிலேயே மிக முக்கியமான காலகட்டங்களில் ஒன்றில் ஷேக் ஹமத் தலைமை வகித்தார். இதன்மூலம் கத்தாரின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.</p><p>

மன்னர் என்று பொருள்படும் "அமீர்" ஆக உச்சபட்ச அதிகாரம் கொண்டவராக 1993 முதல் 2013 வரை இவர் இருந்தார். </p><p>



சிறிய நாடான கத்தாரின் பொருளாதாரம், உலகளாவிய நற்பெயர் மற்றும் அரசியல் லட்சியங்கள் ஆகியவற்றை மறுசீரமைக்கும் வகையிலான விரைவான மாற்றங்களுக்கு வித்திட்ட இவர், 18 ஆண்டுகளுக்கு பிறகு மரபுகளை மீறி தனது மகனிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார். </p><h2>

74 வயதில்</h2><p>இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஷேக் ஹமத் (Sheikh Hamad) 74 வயதில் காலமானதாக கத்தாரின் உயர்மட்ட அரசு அமைப்பான Amiri Diwan அறிவித்தது. அவரது இறப்பிற்கான காரணம் குறித்த விவரங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை.</p><p>

கத்தாரில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஷேக் ஹமத் முக்கிய காரணகர்த்தாவாக திகழ்ந்தார்.</p><p> 

அவரது இந்த முயற்சி, நாட்டின் பிரம்மாண்டமான எரிவாயு இருப்பை உலக சந்தைகளுக்குக் கொண்டு செல்ல உதவியது.</p><p>&nbsp;அத்துடன் கத்தாரை உலகத்தின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒரு நாடாக மாற்றியது மட்டுமின்றி, அதன் அபரிமிதமான செல்வ வளத்திற்கான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f9d14de-6e21-4baf-991a-2fb6b3edc6c3/26-6a5387a3da7f8.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T12:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் அமைதியான கிராமம்.., எந்த மாவட்டத்தில் உள்ளது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-village-is-the-silent-village-of-india-1783856763"></link>
            <id>https://news.lankasri.com/article/which-village-is-the-silent-village-of-india-1783856763</id>
            <summary type="text">பொதுவாக, இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 6.50 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்தியாவின் கிராமங்கள் பெரும்பாலும் அவற்றின் இயற்கை அழகு, த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 6.50 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
</p><p>
இந்தியாவின் கிராமங்கள் பெரும்பாலும் அவற்றின் இயற்கை அழகு, திருவிழாக்கள், மக்களின் உரையாடல்களுக்காக போற்றப்படுகின்றன.
</p><p>
அந்தவகையில், இந்தியாவின் மௌன கிராமம் என்று அழைக்கப்படும் கிராமம் குறித்து பார்க்கலாம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed4e94c3-6967-45b9-9e83-780eba47b3b9/26-6a537e8417cc2.webp' /></p><p>அதன்படி, ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் உள்ள தட்காய் கிராமம், இந்தியாவின் அமைதியான கிராமம் என்று அழைக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>இந்த கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் காது கேளாதவர்கள் அல்லது பேசும் திறன் குறைபாடு கொண்டவர்கள் என்பதால் அங்கு எப்போதும் அமைதியான சூழல் நிலவுகிறது.
</p><p> 
பாதர்வாஹ் பகுதியில் இருந்து சுமார் 105 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம், மலைகள் மற்றும் பசுமையான இயற்கை காட்சிகளால் சூழப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5efa695d-1156-46db-b5cf-c6ca39e14f49/26-6a537e84b9e42.webp' /></p><p>இந்த தட்காய் கிராமத்தில் சுமார் 105 குடும்பங்கள் வசித்து வருகின்றன.&nbsp;&nbsp;</p><p>அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பிறப்பிலிருந்தே செவித்திறன் அல்லது பேச்சுத் திறன் குறைபாடுடன் வாழ்ந்து வருகின்றனர்.
</p><p>
இதனால், கிராம மக்கள் ஒருவருடன் ஒருவர் சைகை மொழி மூலம் மட்டுமே தொடர்பு கொள்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7379902-d32b-4464-8bed-226f435066df/26-6a537f52e0c23.webp' /></p><p>குழந்தைகள் விளையாடும் சத்தம் அல்லது சாதாரண உரையாடல்களின் ஒலி கூட இங்கு கேட்பது மிகவும் அரிது.</p><p>

1901ஆம் ஆண்டிலேயே இந்த நிலை குறித்த பதிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>பல தலைமுறைகளாக இந்த குறைபாடு தொடர்வதற்கு மரபணு மாற்றமே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13a66737-340f-4a58-8950-f7499c12d5af/26-6a537f5230920.webp' /></p><p>இருப்பினும், சிலர் இதை உள்ளூர் நம்பிக்கைகள் மற்றும் சாபங்களுடன் தொடர்புபடுத்தியும் நம்புகின்றனர்.
</p><p>
இந்த சூழலை கருத்தில் கொண்டு, இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவு இந்த கிராமத்தைத் தத்தெடுத்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. </p><p>

குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, சைகை மொழி பயிற்சி, மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசிய வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T11:50:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.28 கோடி சொத்தை நண்பருக்கு எழுதி வைத்த 19 வயது சிறுவன்: முடிவுக்கான பின்னணி காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shanghai-teen-bequeathing-20-m-yuan-to-his-friend-1783855535"></link>
            <id>https://news.lankasri.com/article/shanghai-teen-bequeathing-20-m-yuan-to-his-friend-1783855535</id>
            <summary type="text">சீனாவில் 19 வயது மாணவர் தனது 20 மில்லியன் யுவான் சொத்தை நண்பருக்கு உயில் எழுதி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பருக்கு ரூ.28 கோடி சொத்தை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் 19 வயது மாணவர் தனது 20 மில்லியன் யுவான் சொத்தை நண்பருக்கு உயில் எழுதி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> நண்பருக்கு ரூ.28 கோடி சொத்தை எழுதி வைத்த மாணவர்</h2><p>சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த லீ என்ற 19 வயது மாணவர் தன்னுடைய ஒட்டுமொத்த சொத்தான 20 மில்லியன் யுவானை(இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.28 கோடி) தன்னுடைய நீண்ட கால நண்பருக்கு உயில் எழுதி வைத்த சம்பவம் சமூக ஊடகங்களில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> ஷாங்காயில் உள்ள உயில் பதிவு மையத்தில் மாணவர் லீ தன்னுடைய உயிலை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/810fbe08-abd8-41ca-b047-6e80b8effe9f/26-6a5379b0e0f56.webp' /></p><p> பெற்றோர் இருவரும் விவாகரத்து பெற்று மறுமணம் செய்து கொண்ட நிலையில், அவர்கள் இருவரும் அன்பளிப்பாக வழங்கிய வீடு மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை மாணவர் லீ தன்னுடைய நீண்ட கால நண்பருக்கு எழுதி வைத்துள்ளார்.</p><p></p><h2> மாணவர் லீ-யின் இந்த முடிவுக்கான காரணம்</h2><p>
லீ-க்கு தீவிர சாகச விளையாட்டுகளில் அதிக ஆர்வம் இருப்பதால் ஏதேனும் விபத்தில் உயிரிழந்து விட்டால் அவரது சொத்துக்கள் தான் விரும்பும் நபருக்கு செல்ல வேண்டும் என்று விரும்பி இந்த முடிவை எடுத்துள்ளார்.</p><p> மேலும் தன்னுடைய பெற்றோர்களின் தற்போதைய துணைகளை அந்நியர்களாகவே கருதுவதாகவும், எனவே அவர்கள் இந்த சொத்தை அனுபவிப்பதை நான் விரும்பவில்லை என்றும் லீ வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.</p><p> பொதுவாக வாரிசு அடிப்படையில் குழந்தையின் சொத்துக்கள் அவரது பெற்றோர்களுக்கே திரும்பி செல்லும் நிலையில், சீனாவின் வாரிசுரிமைச் சட்டப்படி திருமணமாகாத மற்றும் குழந்தைகள் இல்லாத லீ-யின் சொத்துக்கள் அவரது உறவு அல்லாத பிற நபருக்கு உயில் எழுத அனுமதிக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T11:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேறொரு நாட்டிலுள்ள கடற்படைத் தளம்: செயல்பாட்டிற்கு கொண்டுவர ரஷ்யா திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-plan-to-run-commercial-logistics-hub-syria-1783854636"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-plan-to-run-commercial-logistics-hub-syria-1783854636</id>
            <summary type="text">சிரியாவில் உள்ள தனது கடற்படைத் தளத்தில், வணிக ரீதியான தளவாட மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.&amp;nbsp;சிரியாவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியாவில் உள்ள தனது கடற்படைத் தளத்தில், வணிக ரீதியான தளவாட மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.&nbsp;</p><h2>சிரியாவில்&nbsp;கடற்படைத் தளம்</h2><p> 

2024ஆம் ஆண்டில் சிரியாவின் ஜனாதிபதியாக இருந்த பஷார் அல்-அசாத் பதவியில் அகற்றப்பட்டதன் மூலம், ரஷ்யா மத்திய கிழக்கில் தனக்கு இருந்த மிக நெருக்கமான கூட்டாளியை இழந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f62076c0-28e0-444f-a261-711ed2237bd9/26-6a537a4c95672.webp' />&nbsp;</p><p></p><p>
என்றாலும், சிரியாவின் Tartus துறைமுகத்தில் ரஷ்யாவின் கடற்படைத் தளம் உள்ளது.
</p><p>
இங்குள்ள இரண்டு கப்பல் நிறுத்தங்களில் ஒன்றில் இந்த வணிக மையமும், மற்றொன்றில் ரஷ்யாவின் இராணுவ இருப்பும் தொடர்ந்து நீடிக்கும் என்று சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

அதாவது, ஜூலை மாதத்தின் மத்தியில் வணிக ரீதியான தளவாட மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். </p><h2>


2,50,000 மெட்ரிக் டன்</h2><p>இந்த மையமானது, கோதுமை மற்றும் தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ரஷ்யப் பொருட்களைக் கையாளும் என்றும், ஆரம்பகட்டமாக மாதத்திற்கு சுமார் 2,50,000 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாள்வதை இலக்காகக் கொண்டுள்ளது என்றும் அந்த அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார். </p><p>

பொருளாதார வழிகள் மூலம் சிரியாவில் தனது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ளவும், விரிவுபடுத்தவும் ரஷ்யா மேற்கொள்ளும் முயற்சிகளில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அதிகாரிகள் கூறியதாக ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d640d12d-1a88-4a53-bd6e-5283d424f8c5/26-6a5376a9ede83.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T11:11:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA உலகக்கிண்ணத்தில் விளையாடியவர் 25 வயதில் அகால மரணம்! கால்பந்து உலகம் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-african-player-jayden-adams-died-at-25-1783849284"></link>
            <id>https://news.lankasri.com/article/south-african-player-jayden-adams-died-at-25-1783849284</id>
            <summary type="text">தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி வீரர் ஜேடன் ஆடம்ஸ் 25 வயதில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;ஜேடன் ஆடம்ஸ்
நடப்பு FIFA உலகக்கிண்ணப் போட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி வீரர் ஜேடன் ஆடம்ஸ் 25 வயதில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><h2>ஜேடன் ஆடம்ஸ்</h2><p>
நடப்பு FIFA உலகக்கிண்ணப் போட்டித் தொடரில், தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடியவர் ஜேடன் ஆடம்ஸ் (Jayden Adams).&nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db2a062a-3adf-45ec-b793-e46676daf875/26-6a536251d5cb4.webp' /></p><p>

இவர் தனது 25 வயதில் திடீரென உயிரிழந்ததாக, தென் ஆப்பிரிக்க கால்பந்து வீரர்கள் சங்கம் சனிக்கிழமையன்று உறுதிப்படுத்தியது.&nbsp;</p><h2>நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு </h2><p>
இதுதொடர்பான பதிவில், "ஜேடன் சமீபத்தில்தான் FIFA உலகக்கிண்ணத்தில் தென் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தினார். நாட்டின் நம்பிக்கையை பெருமை, தைரியம் மற்றும் சிறப்பான செயல்பாட்டுடன் அவர் சுமந்து நின்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d6f6052-803e-4af4-b633-1336898653f9/26-6a5363c0c2346.webp' /></p><p>

அவரது மறைவு அவரது குடும்பத்தினர், சக வீரர்கள், கிளப் அணிகள், கால்பந்து சமூகம் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
</p><p>
ஆடம்ஸின் குடும்பத்தினர், மமெலோடி சன்டவுன்ஸ், Stellenbosch FC, Bafana Bafana மற்றும் அவரது வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509bb629-8e62-4fac-a961-880467e57496/26-6a5362529c193.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31aee0e7-1eec-40a0-9e7c-dca54c2061d5/26-6a5363c17f95b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T10:55:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் புதிய உச்சத்தை எட்டிய இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indias-russian-crude-imports-hit-record-high-1783850704"></link>
            <id>https://news.lankasri.com/article/indias-russian-crude-imports-hit-record-high-1783850704</id>
            <summary type="text">இந்தியா ஜூன் 2026-இல் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த அளவு சாதனை உயர்வை எட்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் 4.5 பில்லியன் யூரோ மதிப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா ஜூன் 2026-இல் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த அளவு சாதனை உயர்வை எட்டியுள்ளது.
</p><p>
கடந்த ஜூன் மாதத்தில் 4.5 பில்லியன் யூரோ மதிப்பிலான கச்சா எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ரஷ்ய புதைப்படிம எரிபொருள் இறக்குமதியின் 83 சதவீதம் ஆகும்.
</p><p>
மொத்தத்தில், இந்தியா ரஷ்யாவிலிருந்து 5.5 பில்லியன் யூரோ மதிப்பிலான ஹைட்ரோகார்பன்களை வாங்கியுள்ளது. இதன்மூலம், சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா ரஷ்யாவின் இரண்டாவது பெரிய வாடிக்கையாளராக உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15402c8d-2c34-4abc-9bb5-86dc29d60435/26-6a5366d1c728e.webp' /></p><p>இந்தியாவின் முக்கிய சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகளவில் ரஷ்ய எண்ணெய் பெற்றுள்ளன. ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் 150 சதவீதம், IOC பரதீப் சுத்திகரிப்பு நிலையம் 126 சதவீதம், BPCL கோச்சி சுத்திகரிப்பு நிலையம் 83 சதவீதம் மற்றும் நயாரா வடிநார் சுத்திகரிப்பு நிலையம் 45 சதவீதம் அதிகரித்துள்ளன.
</p><p>
இந்தியாவின் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி அளவு 14 சதவீதம் உயர்ந்தது. </p><p>இருப்பினும், உலக சந்தை விலை குறைந்ததால் ரஷ்யாவின் தினசரி வருவாய் 8 சதவீதம் குறைந்து 348 மில்லியன் யூரோவாக ஆனது.
</p><p></p><p>கச்சா எண்ணெய் தவிர, இந்தியா 488 மில்லியன் யூரோ மதிப்பிலான எண்ணெய் பொருட்கள் மற்றும் 444 மில்லியன் யூரோ மதிப்பிலான நிலக்கரியை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளது.
</p><p>
முக்கியமாக, இந்திய சுத்திகரிப்பு நிலையங்களில் தயாரிக்கப்பட்ட 814 மில்லியன் யூரோ மதிப்பிலான எண்ணெய் பொருட்கள் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 369 மில்லியன் யூரோ மதிப்பிலானவை ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்டவை.</p><p>

பிரித்தானியா, தடை விதிப்புகளுக்கு விதிவிலக்கு அளித்து, ஜாம்நகரில் தயாரிக்கப்பட்ட 63 மில்லியன் யூரோ மதிப்பிலான ஜெட் எரிபொருளை ஜூன் மாதத்தில் பெற்றுள்ளது.
</p><p>
இந்தியாவின் இந்த நடவடிக்கை, ஆற்றல் பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் அதன் முக்கிய பங்கைக் காட்டுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T10:03:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி கூகுள் அதிகாரி: கணவனை கைது செய்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-google-executive-killed-in-georgia-1783849094"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-google-executive-killed-in-georgia-1783849094</id>
            <summary type="text">அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த கூகுள் அதிகாரி குடும்ப வன்முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த கூகுள் அதிகாரி குடும்ப வன்முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி கூகுள் அதிகாரி</h2><p>அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் கோப் கவுண்டியில் உள்ள தன்னுடைய வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் கூகுள் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரியான 57 வயது ஷீத்தல் வர்சீயன்(Sheetal Wrzesien) குடும்ப வன்முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.</p><p> தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், காயங்களுடன் வீட்டின் வாசலில் காணப்பட்ட அவரது 23 வயது மகன் ஜேசன் வர்சீயன்(Jason Wrzesien) காவல்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46a740dc-9610-4991-ab2f-8bd3d8bb78c2/26-6a536087ebea3.webp' /></p><p> இந்த வன்முறை சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய நபராக கருதப்படும் ஷீத்தல் வர்சீயனின் கணவரான 56 வயது கிரிக் பி. வர்சீயன்(Kirk B. Wrzesien) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கோப் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p><p>கிரிக் பி. வர்சீயன் மீது ஒரு கொலைக் குற்றச்சாட்டு, இரண்டு கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டுகள் மற்றும் தாக்குதலின் போது துப்பாக்கி வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.</p><p> இது தனிப்பட்ட குடும்ப வன்முறை என்றும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2> ஷீத்தல் வர்சீயன் ஆளுமை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/372438d0-9df2-4724-80c9-027bc5eb96f1/26-6a536088999f3.webp' /></p><p>20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட ஷீத்தல் வர்சீயன். கூகுள் நிறுவனத்தின் பொறியியல் தலைவராக பணியாற்றி வந்தார். அவர் மின் வணிகம் மற்றும் நிறுவன மாற்றம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> கூகுள் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு முன்பு, ஹோம் டெப்போ நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T09:38:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணை உற்பத்தியில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி- இந்திய அரசு முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-opens-missile-production-to-private-firms-1783842967"></link>
            <id>https://news.lankasri.com/article/india-opens-missile-production-to-private-firms-1783842967</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்புத் துறை, ஏவுகணை உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை இணைக்கும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

DRDO உருவாக்கிய Astra Mark 2 ஏவுகணையை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்புத் துறை, ஏவுகணை உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை இணைக்கும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
</p><p>
DRDO உருவாக்கிய Astra Mark 2 ஏவுகணையை முதலில் தனியார் நிறுவனங்கள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.</p><p>
</p><p></p><p>இதுவரை ஏவுகணை உற்பத்தியானது அரசு நிறுவனங்களின் கீழ் மட்டுமே நடந்தது. ஆனால், விமானங்கள், ட்ரோன்கள், கடற்படை உபகரணங்கள் போன்ற துறைகளில் தனியார் பங்கேற்பு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இப்போது ஏவுகணை உற்பத்தியும் தனியார் நிறுவனங்களுக்கு திறக்கப்படுவது, பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08d304d5-4037-41d0-8308-b1020ffb57a9/26-6a53489a09e9b.webp' /></p><p>Astra Mark 2, 180 முதல் 200 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது. இது சீனாவின் PL-15E நீண்ட தூர ஏவுகணைக்கு எதிராக வடிவமைக்கப்பட்டது. </p><p>இந்த ஏவுகணை, Tejas Mark 1A, MiG-29, Su-30 MKI மற்றும் Rafale Marine போர் விமானங்களில் பொருத்தப்பட உள்ளது.</p><p></p><p>இந்த திட்டத்தில் Adani, Tata Group, Mahindra, Bharat Forge போன்ற பெரிய தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது Bharat Dynamics Ltd. மட்டுமே உற்பத்தி செய்து வந்த நிலையில், தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக தனியார் பங்கேற்பு அவசியமாகியுள்ளது.
</p><p>
மேலும், Pralay எனப்படும் 500 கிலோமீட்டர் தூரம் தாக்கும் திறன் கொண்ட டாக்டிக்கல் பாலிஸ்டிக் ஏவுகணையும் அடுத்ததாக தனியார் நிறுவனங்களுக்கு திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கை, இந்தியாவின் ஏவுகணை உற்பத்தி திறனை அதிகரித்து, ஏற்றுமதி வாய்ப்புகளையும் மேம்படுத்தும். குறிப்பாக, இந்தோனேஷியா Astra ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதால், உற்பத்தி விரிவாக்கம் அவசியமாகியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T09:35:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய டைனோசரின் எலும்புகள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rare-long-necked-dinosaur-fossils-found-thailand-1783845572"></link>
            <id>https://news.lankasri.com/article/rare-long-necked-dinosaur-fossils-found-thailand-1783845572</id>
            <summary type="text">தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள கலாசின் மாகாணத்தில் விஞ்ஞானிகள் அரிய வகை டைனோசரின் புதைவடிங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய இன டைனோசருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள கலாசின் மாகாணத்தில் விஞ்ஞானிகள் அரிய வகை டைனோசரின் புதைவடிங்களை கண்டுபிடித்துள்ளனர்.
</p><p>
இந்த புதிய இன டைனோசருக்கு “Uragasaurus kalasinensis” என பெயரிடப்பட்டுள்ளது.

சுமார் 150 மில்லியன் (15 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு ஜுராசிக் காலத்தில் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
</p><p></p><p>இந்த டைனோசர் மிக நீண்ட கழுத்து கொண்டது. இதன் நீளம் சுமார் 20 மீட்டர் (ஒரு கிரிக்கெட் மைதானத்தின் நீளத்திற்கு சமம்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தாவரங்களை உணவாகக் கொண்ட sauropod டைனோசர் குடும்பத்தைச் சேர்ந்தது.
</p><p>
2008-ஆம் ஆண்டு, ஒரு உள்ளூர் நபர் பாம்பு செதில்களைப் போல தோற்றமளிக்கும் சில துண்டுகளை கண்டுபிடித்ததில் இருந்து இந்த ஆய்வு தொடங்கியது. பின்னர் பூ நொய் (Phu Noi) எனப்படும் இடத்தில் விரிவான அகழாய்வு நடத்தப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e209ec78-00e6-4fd2-afae-3a01c318f1a2/26-6a5352c5e8a7c.webp' /></p><p>அங்கு 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட எலும்புகள் டைனோசர்களுடையவை என கண்டறியப்பட்டது.

முக்கியமாக, முதுகெலும்பின் ஒரு பகுதி (dorsal vertebra) CT scan மூலம் ஆய்வு செய்யப்பட்டதில், இது Mamenchisauridae குடும்பத்தைச் சேர்ந்தது என உறுதி செய்யப்பட்டது. இந்த குடும்பம் நீண்ட கழுத்து கொண்ட டைனோசர்களுக்குப் பிரபலமானது.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு தாய்லாந்தில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளது. இதன் Y வடிவ எலும்பு அமைப்பு மற்றும் விசித்திரமான காற்று குழி அமைப்பு உலகின் பிற டைனோசர்களில் காணப்படாத தனித்துவம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p></p><p>இந்த ஆய்வு Nature என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன், தாய்லாந்தில் Nagatitan எனப்படும் மற்றொரு நீண்ட கழுத்து கொண்ட டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டது. அது தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் எனக் கருதப்படுகிறது.
</p><p>
இந்த புதிய கண்டுபிடிப்பு, டைனோசர் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மேலும் அறிய விஞ்ஞானிகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T08:38:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸில் வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: மீட்கப்பட்ட 10 பேர்: இந்தியர் ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-attack-commercial-vessel-one-indian-missing-1783844353"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-attack-commercial-vessel-one-indian-missing-1783844353</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானிய படைகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இந்தியர் ஒருவர் மாயமாகியுள்ளார். வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்
ஹார்முஸ் ஜலசந்தியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானிய படைகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இந்தியர் ஒருவர் மாயமாகியுள்ளார்.</p><h2> வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்</h2><p>
ஹார்முஸ் ஜலசந்தியில் ஓமான் கடற்கரைக்கு அருகே சென்ற சைப்ரஸ் நாட்டிற்கு சொந்தமான GFS Galaxy என்ற வணிகக் கப்பல் மீது ஈரானிய இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p>இந்த தாக்குதலில் வணிகக் கப்பல் தீப்பிடித்து சேதமடைந்தது. அப்போது கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c35bb60-9eaf-40ab-a184-0b0cf8bac840/26-6a534e02b6045.webp' /></p><p>ஆனால் ஒரு இந்தியர் மட்டும் மாயமாகி இருப்பதால் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><h2>இந்தியா கண்டனம்</h2><p>இந்நிலையில் ஈரானின் இந்த தாக்குதலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வன்மையாக கண்டித்துள்ளது.</p><p></p><p> மாயமான இந்தியரை தேடும் பணியில் ஓமான் அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரகமும் விரைவாக செயல்பட்டு வருகிறது.</p><p> அதே நேரத்தில், பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது கவலை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c809566b-940d-43f0-b45d-acc194a7814f/26-6a534e0371226.webp' /></p><p> மேலும் வன்முறையை கைவிட்டு, தூதரக முயற்சிகள் மூலம் பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்க முன்வர வேண்டும். அத்துடன் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு வணிகக் கப்பல்களுக்கான தடையற்ற பாதையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.</p><h2> நியாயப்படுத்திய ஈரான்</h2><p>
தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பிராந்தியத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததால் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தாக்குதலை நியாப்படுத்தியுள்ளது.</p><p> மேலும் உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் மிக முக்கியமான கடல் வழித் தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-12T08:19:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூசம் நட்சத்திரத்தில் புகும் குரு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-guru-peyarchi-1783843518"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-guru-peyarchi-1783843518</id>
            <summary type="text">நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.</p><p>

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
</p><p>
இந்நிலையில், ஜூலை 19ஆம் திகதி அன்று, குருபகவான் பூசம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நுழையவுள்ளார்.</p><p>

அந்தவகையில், பூசம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.&nbsp;</p><p></p><h2>மேஷம் </h2><ul><li>

நிதி நிலை நன்றாக இருக்கும்.
</li><li>குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் கிடைக்கும். </li><li>
நிலுவையில் உள்ள பணம் திரும்பக் கிடைக்கும். </li><li>
முதலீடுகள் பெரிய லாபத்தைக் கொடுக்கும்.
</li><li>பொருளாதார நிலை வலுவடையும்.
</li><li>வேலையை மாற்ற இக்காலம் சரியாக இருக்கும்.
</li><li>இக்காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். </li><li>
குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவும்.</li><li> 
பூர்வீகச் சொத்து மூலம் ஆதாயம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ad5a7a7-9aa1-4e82-934e-175fa8ab489d/26-6a534b15f2fa1.webp' /></p><h2>கடகம்</h2><ul><li> 

சாதகமானப் பலன்களை அளிக்கும். </li><li>
அவர்களின் நற்பெயரை மேலும் உயர்த்தும். </li><li>
சுற்றியுள்ளவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். </li><li>
வியாபாரத்தில் முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வீர்கள்.
</li><li>தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது மிகச்சிறந்த காலம். </li><li>
அவர்களின் பொருளாதார நிலை மேம்படும்.</li><li> 
நிதி நிலையில் முன்னேற்றம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ea0a3d4-bd7f-4e4f-8345-afe8d54f8284/26-6a534b16dafee.webp' /></p><h2>தனுசு </h2><ul><li>

நேர்மறையான பலன்களை ஏற்படுத்தும்.</li><li> 
நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
</li><li>அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். </li><li>
வேலையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் உண்டாகும்.</li><li> 
காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். </li><li>
குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.
</li><li>இக்காலத்தில் சாதனைகளை செய்வார்கள். </li><li>
வணிகத்தில் அதிகளவு லாபம் உண்டாகும்.
</li><li>வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5f713db-1344-46a4-a4b0-2573208a2d8a/26-6a534b178a43b.webp' /></p><p>
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் 
ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. 
(லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது). </p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> 

&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T08:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையைச் சேர்ந்த முதிய தம்பதி சென்னையில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lankan-old-couple-arrested-in-chennai-1783840374"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lankan-old-couple-arrested-in-chennai-1783840374</id>
            <summary type="text">தமிழக சட்டசபை தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்ததாக, இலங்கை தம்பதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.&amp;nbsp;ஆவண சரிபார்ப்பு&amp;nbsp;

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டசபை தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்ததாக, இலங்கை தம்பதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.&nbsp;</p><h2>ஆவண சரிபார்ப்பு&nbsp;</h2><p>

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த தம்பதி குணேஸ்வரன் (69), நகுலாம்பிகை (60). 

சென்னை விமான நிலையத்திற்கு வந்த இவர்களிடம் குடியேற்றத்துறை அதிகாரிகள் ஆவண சரிபார்ப்பு செய்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c87828e-7738-472b-ba10-2385965cf162/26-6a534021e21a0.webp' /></p><p></p><p>
அப்போது இந்திய ஆதார் அட்டை, இந்திய வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. </p><h2>

இலங்கை தம்பதி&nbsp;கைது </h2><p>இதுதொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் இருவரும் வாக்களித்தது தெரிய வந்தது.
</p><p>
அதனைத் தொடர்ந்து மாம்பலம் பொலிஸாரிடம் இலங்கை தம்பதியர் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9828dc-c4b9-45f2-9f0c-2af357c16c67/26-6a5340229b661.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T07:40:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 மொழிகளில் மொத்தம் 48,000 பாடல்கள்.., பாடகி எஸ். ஜானகி படைத்த சாதனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/what-singer-s-janaki-achieve-in-tamil-1783840952"></link>
            <id>https://news.lankasri.com/article/what-singer-s-janaki-achieve-in-tamil-1783840952</id>
            <summary type="text">புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக நேற்று (ஜூலை 11) காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக நேற்று (ஜூலை 11) காலமானார்.
</p><p>
உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>தற்போது, மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fab1c19-088c-4b24-8899-e21189c7c1cf/26-6a5340bc95ffa.webp' /></p><p>

பொதுமக்கள் அஞ்சலி முடிந்த பிறகு, மைசூரு எச்.டி.கோட்டை சாலையில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
</p><p>
மேலும், எஸ். ஜானகிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது</p><p>தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் எஸ்.ஜானகி 1938 ஏப்ரல் 23ஆம் தேதி, தற்போதைய ஆந்திரப் பிரதேசம், குண்டூர் மாவட்டம் பள்ளபட்லா கிராமத்தில் பிறந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/285867ee-b12d-4910-80ef-c06ac218a85a/26-6a5340ba8f204.webp' /></p><p>

3 வயதில் இசை கற்கத் தொடங்கி, 9 வயதில் மேடையில் பாட ஆரம்பித்த&nbsp;இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான மகதலநாட்டு மேரி திரைப்படம் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.&nbsp;&nbsp;</p><p>20 மொழிகளில் சுமார் 48 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். 4 தேசிய விருதுகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகளை வென்றுள்ளார். </p><p>

16 வயதினிலே படத்தின் செந்தூரப் பூவே, தேவர் மகன் படத்தின் இஞ்சி இடுப்பழகி பாடல்களுக்காக தேசிய விருது பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de4a36c1-3608-409e-8fe8-143957cb5549/26-6a5340bbe4a8b.webp' /></p><p>எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார்.</p><p> 

குறிப்பாக இளையராஜா இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf48853e-3b00-4516-b52c-b5d2ed36ebcb/26-6a5340bb3f760.webp' /></p><p>கே.ஜே. யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட முன்னணி பாடகர்களுடன் ஏராளமான மறக்க முடியாத பாடல்களைப் பாடியுள்ளார்.</p><p>இந்நிலையில், அவரது மறைவு திரையுலகத்தையும், இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T07:28:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் உரிமைகோரலை நிராகரித்த 14 நாடுகளின் கூட்டமைப்பு: சர்வதேச தீர்ப்பை பின்பற்ற அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-s-south-sea-claims-14-nations-reasserts-1783841275"></link>
            <id>https://news.lankasri.com/article/china-s-south-sea-claims-14-nations-reasserts-1783841275</id>
            <summary type="text">தென் சீனக் கடல் தொடர்பான சீனாவின் உரிமைகோரல்களை 14 நாடுகளின் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.சீனாவின் உரிமைகோரலை நிராகரித்த 14 நாடுகள்
தென் சீனக் கடல் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் சீனக் கடல் தொடர்பான சீனாவின் உரிமைகோரல்களை 14 நாடுகளின் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.</p><h2>சீனாவின் உரிமைகோரலை நிராகரித்த 14 நாடுகள்</h2><p>
தென் சீனக் கடல் தொடர்பான சர்வதேச தீர்ப்பின் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனாவின் உரிமைகோரல்கள் தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா 14 நாடுகளின் கூட்டமைப்பு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p> அதில், தென் சீன கடல் பகுதியில் சீனாவின் விரிவான உரிமைகோரல்களுக்கு எந்தவொரு சட்டப்பூர்வமான முகாந்திரமும் இல்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7d2a8a3-cf9b-43bd-9aee-826c63131ca9/26-6a5341fd3e08e.webp' /></p><p> ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின் படி தென் சீன கடல் பிராந்தியத்தின் பெரும்பகுதி சீனாவின் வரலாற்று உரிமை என்பது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது.</p><p> நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் வலியுறுத்தும் விதமாகவே 14 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பின் இந்த அறிக்கை அமைந்துள்ளது.</p><p> 14 நாடுகள் கூட்டமைப்பில் உள்ள அமெரிக்கா, பிரித்தானியா, பிலிப்பைன்ஸ், இத்தாலி, எஸ்தோனியா, ஜப்பான், ஆவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, லாட்வியா, லிதுவேனியா, ஜேர்மனி, ருமேனியா மற்றும் ஸ்லோவேனியா ஆகியவை 1982ம் ஆண்டின் ஐ.நா சர்வதேச கடல்சார் சட்ட ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f35b0d82-f27d-4135-990f-635daaeae7c9/26-6a5341fde1788.webp' /></p><p></p><p> மேலும் சட்ட ரீதியான மோதல் தவிர, தென் சீன கடல் பகுதியில் கடலோரக் காவல்படை, ராணுவம் மற்றும் கடல்சார் போராளிகளை பயன்படுத்துதல் ஆகியவை மூலம் பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றமான சூழ்நிலை குறித்தும் கூட்டமைப்பு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.</p><p> நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான கடந்த 2016ம் ஆண்டு முதலே இந்த தீர்ப்பு சட்டவிரோதமானது மற்றும் செல்லாது என்று நிராகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-12T07:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்., பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-strikes-gulf-states-after-us-attacks-1783839025"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-strikes-gulf-states-after-us-attacks-1783839025</id>
            <summary type="text">ஈரான், அமெரிக்காவின் விமானத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, வளைகுடா நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன் மற்றும் குவைத் மீது ஞாயிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான், அமெரிக்காவின் விமானத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, வளைகுடா நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன் மற்றும் குவைத் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
</p><p>
கத்தாரின் தலைநகர் தோஹாவில் இரண்டு கட்டமாக தாக்குதல் நடந்தது. பலத்த வெடிப்புகள் நகரம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தின.
</p><p>
கத்தார் பாதுகாப்புத் துறை, “பல ஏவுகணைகளை வெற்றிகரமாக தடுத்தோம்” என்று அறிவித்தது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் தங்குமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/def8c68a-2e4c-4f45-ae1b-84a771a25f65/26-6a5339332987a.webp' /></p><p>அதே நேரத்தில், அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்கள் வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை இயக்கி, ஈரான் ஏவுகணைகளை தடுத்ததாக அறிவித்துள்ளன.
</p><p>
ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC), கத்தாரில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய Al-Udeid விமானத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறியது. ஆனால் கத்தார், அந்த ஏவுகணைகள் தடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியது.
</p><p>
மேலும், ஜோர்டான் மற்றும் ஓமன் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BREAKING: Iran has started launching a heavy wave of ballistic missile and drone attacks against U.S. and allied military sites across the Gulf in retaliation for today&#39;s U.S. strikes on Iranian territory.<br><br>Jordan: Iran reportedly fired 12 ballistic missiles toward Muwaffaq Salti… <a href="https://t.co/6gqA2KNaDk">pic.twitter.com/6gqA2KNaDk</a></p>&mdash; The Hormuz Report (@HormuzReport) <a href="https://x.com/HormuzReport/status/2076136808098967716?ref_src=twsrc%5Etfw">July 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்த தாக்குதலுக்கு முன்னதாக, அமெரிக்கா, ஹார்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஈரானில் 140 இடங்களில் விமானத் தாக்குதல் நடத்தியது. </p><p>இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த சம்பவங்கள், அமெரிக்கா-ஈரான் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதையும், வளைகுடா நாடுகள் கடுமையான பாதுகாப்பு நிலைக்கு சென்றுள்ளதையும் காட்டுகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T06:49:08+00:00</updated>
        </entry>
    </feed>
