<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-18T22:42:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் பாதுகாப்பு எச்சரிக்கை உயர்வு: தாக்குதல் அபாயம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-raises-security-alert-to-high-threat-1784408231"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-raises-security-alert-to-high-threat-1784408231</id>
            <summary type="text">ஜேர்மனி தனது தேசிய பாதுகாப்பு நிலையை abstract threat level என்ற நிலைமையிலிருந்து &quot;அதிக அச்சுறுத்தல் நிலை&quot; (high threat level) என உயர்த்தியுள்ளது.ஜேர்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனி தனது தேசிய பாதுகாப்பு நிலையை abstract threat level என்ற நிலைமையிலிருந்து "அதிக அச்சுறுத்தல் நிலை" (high threat level) என உயர்த்தியுள்ளது.</p><p>ஜேர்மன் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட், சமீபத்தில் கிடைத்துவரும் உளவுத்துறை தகவல்கள் நாட்டில் தாக்குதல் திட்டங்கள் இருப்பதை தெளிவாக காட்டுவதாக தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab6a0eac-07fa-4499-88f5-58c3f150d24d/26-6a5be8a96100c.webp' /></p><p>அவர் கூறியதாவது: "ஜேர்மனியில் எப்போதும் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருக்கிறது. நம் நாட்டின் அடிப்படை அமைப்புகள், மக்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தாக்குதல் திட்டங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன." என்று தெரிவித்துள்ளார்.</p><p>

இதனைத் தொடர்ந்து, ஜேர்மன் அமைச்சரவை ஆகஸ்ட் 13 அன்று உளவுத்துறை சட்டங்களில் பெரிய மாற்றங்களை பரிசீலிக்க உள்ளது.</p><p>

புதிய சட்டங்கள் மூலம் உளவுத்துறை அதிகாரிகள் ஆபத்தான சூழ்நிலைகளில் நேரடியாக தலையீடு செய்ய அனுமதி பெறலாம். ஆனால் கைது செய்வது பொலிஸின் பொறுப்பாகவே இருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>கடந்த சில ஆண்டுகளில் ஜேர்மனியில் பல்வேறு தாக்குதல்கள் நடந்துள்ளன. 2024-இல், சவுதி மருத்துவர் ஒருவர் கிறிஸ்துமஸ் சந்தையில் வாகனம் ஓட்டி ஆறு பேரை கொன்று நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே ஆண்டில், சிரிய நாட்டு நபர் ஒருவர் "ஐ.எஸ்.ஐ.எஸ்" தாக்குதலால் மூன்று பேரை கொன்ற சம்பவமும் நடந்தது.
</p><p>
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஜேர்மனியின் பாதுகாப்பு நிலையை கடுமையாக உயர்த்தியுள்ளன. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T20:55:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பையில் 70 லட்சம் துஷ்பிரயோக கருத்துகள்- FIFA தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fifa-flags-7m-abusive-posts-in-world-cup-1784402629"></link>
            <id>https://news.lankasri.com/article/fifa-flags-7m-abusive-posts-in-world-cup-1784402629</id>
            <summary type="text">2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் காலத்தில், வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைத்து 70 லட்சத்திற்கும் மேற்பட்ட துஷ்பிரய...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் காலத்தில், வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைத்து 70 லட்சத்திற்கும் மேற்பட்ட துஷ்பிரயோக மற்றும் ஆபத்தான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பதிவானதாக FIFA தெரிவித்துள்ளது.</p><p>

FIFA-வின் Social Media Protection Service (SMPS), செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இந்த கருத்துகளை கண்டறிந்துள்ளது. </p><p></p><p>2022 உலகக் கோப்பையுடன் ஒப்பிடும்போது, இந்த முறை கண்டறியப்பட்ட துஷ்பிரயோக பதிவுகள் 14 மடங்கு அதிகம்.
</p><p>
இதுவரை 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட AI-ஆல் கண்டறியப்பட்ட செய்திகளை SMPS குழு ஆய்வு செய்துள்ளது. 1,000-க்கும் மேற்பட்ட மிரட்டல் பதிவுகள் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dd0cb8b-e160-4c81-bd45-22af38a50a15/26-6a5bd2c7a4726.webp' /></p><p>மொத்தத்தில், உலகக் கோப்பை தொடங்கியதிலிருந்து 53 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவுகள் மற்றும் கருத்துகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இனவெறி சார்ந்த அவமதிப்பு பதிவுகள் மட்டும் 11 சதவீதம் என FIFA தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கைகள், வீரர்கள் மற்றும் அணிகள் சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பாக இருக்க உதவுவதாக FIFA தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T19:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானின் புதிய அதிநவீன போர் விமானம்., முதல்முறையாக வானில் பறந்த Kawasaki EC-2]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japans-kawasaki-ec-2-jet-challenges-china-1784396536"></link>
            <id>https://news.lankasri.com/article/japans-kawasaki-ec-2-jet-challenges-china-1784396536</id>
            <summary type="text">ஜப்பான் தனது புதிய அதிநவீன மின்னணு போர்த் தொழில்நுட்ப விமானமான Kawasaki EC-2ஐ கிஃபு விமானத் தளத்தில் முதல் முறையாக பறக்கவிட்டு சோதனை மேற்கொண்டது.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் தனது புதிய அதிநவீன மின்னணு போர்த் தொழில்நுட்ப விமானமான Kawasaki EC-2ஐ கிஃபு விமானத் தளத்தில் முதல் முறையாக பறக்கவிட்டு சோதனை மேற்கொண்டது.</p><p>

சீனா தைவான் நீரிணை மற்றும் கிழக்கு சீனக் கடலில் தனது வான்வழி பாதுகாப்பு வலையமைப்புகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்த விமானம் ஜப்பானின் பாதுகாப்புத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fadfb29-c9a2-42be-a073-d0b481b43154/26-6a5bbc4552394.webp' /></p><p>

EC-2, பழைய EC-1 விமானத்தை விட அதிக திறன் கொண்டதாகும். “பிளாட்டிபஸ்” (Platypus) என அழைக்கப்படும் தனித்துவமான முன்பகுதி, J/ALQ-5 மின்னணு எதிர்ப்பு அமைப்பு மற்றும் தொஷிபா நிறுவனத்தின் ஜாமிங் ஆன்டினாக்களைக் கொண்டுள்ளது.
</p><p>
இது எதிரி ரேடார் மற்றும் தொடர்பு அமைப்புகளை தொலைவிலிருந்தே குழப்பக்கூடிய திறன் பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ce2060e-f8d7-40f4-a215-693b20f9b6b8/26-6a5bbc449db2e.webp' /></p><p>ஜப்பான் 2022 தேசிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மின்னணு போர்த் திறனை மேம்படுத்த 260 மில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்தை மேற்கொண்டுள்ளது. </p><p>EC-2 விமானங்கள் 2027-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக சேவையில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35188121-4768-4146-9bb1-85bbbdac64b7/26-6a5bbc46058b0.webp' /></p><p>இந்த திட்டம், 1986 முதல் செயல்பட்ட EC-1 விமானம் ஓய்வு பெற்ற பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புகிறது. ஜப்பான், Iruma Air Base-இல் அமைந்துள்ள மின்னணு போர்த் பிரிவின் கீழ் நான்கு EC-2 விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம் ஜப்பான், சீனாவின் வலுவான வான்வழி பாதுகாப்பு வலையமைப்புகளுக்கு எதிராக தனது நிலையை வலுப்படுத்துகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T18:56:34+00:00</updated>
        </entry>
    </feed>
