<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-15T11:29:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலையில் முடிந்த சிறுபிள்ளைகள் இருவரின் காதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/boy-15-pushes-ex-girlfriend-13-from-7th-floor-dies-1784114343"></link>
            <id>https://news.lankasri.com/article/boy-15-pushes-ex-girlfriend-13-from-7th-floor-dies-1784114343</id>
            <summary type="text">சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பாலினம், வயது, நாடு என்று எந்த வரையறைக்கும் உட்படாமல் சிறுபிள்ளைகள் குற்றச்செயல்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. </p><p>பாலினம், வயது, நாடு என்று எந்த வரையறைக்கும் உட்படாமல் சிறுபிள்ளைகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருவது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
</p><h3>
கொலையில் முடிந்த சிறுபிள்ளைகளின் காதல்</h3><p>

இத்தாலியிலுள்ள Piacenza என்னுமிடத்தில், 13 வயது சிறுமி ஒருத்தியும் 15 வயது சிறுவன் ஒருவனும் காதலித்துவந்துள்ளார்கள்!&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d43995a5-3c2a-4088-b1a8-9abf4e551ede/26-6a576ca8e4572.webp' /></p><p>
ஒரு கட்டத்தில் தன் காதலிக்கு அந்தச் சிறுவன் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க, அந்தச் சிறுமி அவனைப் பிரிந்துள்ளாள். </p><p>அதற்குப் பிறகும் அந்தச் சிறுவன் அந்தச் சிறுமியை பின்தொடர்ந்து அவனுக்கு தொல்லை கொடுத்துவந்துள்ளான்.
</p><p>
இந்நிலையில், அரோரா (Aurora Tila) என்னும் அந்தச் சிறுமி, 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு கட்டிடத்தின் ஏழாவது மாடியிலிருந்து விழுந்து இறந்துவிட்டாள்.&nbsp;</p><p></p><p>

அவள் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக அந்தச் சிறுவன் கூறியிருந்தான். ஆனால், அவன் கூறிய விடயங்கள், அந்தச் சிறுமி இறந்துகிடந்த நிலையுடன் ஒத்துப்போகவில்லை.
</p><p>
இதற்கிடையில், அந்தச் சிறுமி ஏழாவது மாடியில் பால்கனியிலிருந்த கம்பியைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்ததையும், அந்தச் சிறுவன் அவள் கையில் அடிக்க, அதனால் அவள் கீழே விழுந்ததையும் தான் பார்த்ததாக, நடந்ததைக் கண்ணால் கண்ட ஒருவர் சாட்சியமளிக்க, அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டான்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/455ce39a-2b87-4207-9bc1-7d2e44fa2e00/26-6a576ca99f5f4.webp' /></p><p>
அவனுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் அரோராவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதுடன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளான் அந்தச் சிறுவன்.
</p><p>
இவ்வளவு காலத்துக்குப் பிறகு அந்தச் சிறுவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், அதனால் அவனது தண்டனைக் காலம் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் குறையக்கூடும் என்று கூறியுள்ள அரோராவின் தாயின் சட்டத்தரணி, அது நியாயமல்ல என்று கூறியுள்ளார்.
</p><p>
அந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை, செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி துவங்க உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T11:19:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும்... கவலை தெரிவித்துள்ள ஜேர்மன் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-newspaper-lists-merz-in-hit-list-1784108783"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-newspaper-lists-merz-in-hit-list-1784108783</id>
            <summary type="text">ஈரான் தரப்பிலிருந்து உலகத்தலைவர்கள் பலருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜேர்மன் மண்ணில் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என ஜேர்மன் அரசியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தரப்பிலிருந்து உலகத்தலைவர்கள் பலருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜேர்மன் மண்ணில் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என ஜேர்மன் அரசியல்வாதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><h3>

உலகத்தலைவர்கள் பலருக்கு மிரட்டல்
</h3><p>
ஈரான் ஊடகமான Hamshahri, ஈரான் உச்சத் தலைவரான அலி கமேனி கொல்லப்பட்டதற்காக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட 13 உலக நாடுகளின் தலைவர்களை பழிவாங்க இருப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e72c6525-91ce-4593-a21d-5e911a1884ec/26-6a5756f16fcfd.webp' /></p><p>
அந்த தலைவர்களில் பட்டியலில், ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸின் பெயரும் அடங்கும்!
</p><h3>
கவலை தெரிவித்துள்ள ஜேர்மன் அரசியல்வாதிகள்</h3><p>

அந்த செய்தியைத் தொடர்ந்து, ஜேர்மன் மண்ணில் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என ஜேர்மன் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
ஜேர்மனியின் உளவு அமைப்புகளைக் கண்காணிக்கும் ஜேர்மன் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தலைவரான மார்க் ஹென்ரிச்மன் இது குறித்து கூறும்போது, ஈரானின் உளவு அமைப்புகள் ஐரோப்பாவிலும் தாக்குதல்களைத் திட்டமிடுகின்றன என்று நாம் கருத வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dd36928-e6c3-4810-8bdc-c0f659f32ec2/26-6a5756f221cd6.webp' /></p><p>
ஜேர்மன் பாதுகாப்புத்துறையினர், ’ஒருமுறை பயன்படுத்தப்படும் ஏஜண்டுகள்’ என அழைக்கப்படும், ஒரே ஒரு தாக்குதலை நடத்துவதற்காக மட்டும் பணியமர்த்தப்படும் நபர்கள் குறித்து கவலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், ஈரான் வம்சாவளியினரும், ஜேர்மன் நாடாளுமன்றத் துணைத்தலைவருமான உமித் நூரிபூர், ஈரானால் ஜேர்மனிக்கு அனுப்பப்படும் பயங்கரவாதிகள் தொடர்பில் எங்களுக்கு பல கடந்த கால அனுபவங்கள் உள்ளன.
</p><p>
அதாவது, ஈரான் அரசு, பத்திரிகைகளை தணிக்கை செய்துதான் வெளியிடும். அப்படியிருக்கும்போது, 13 உலகத் தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தியை அரசு நினைத்தால் தணிக்கை செய்திருக்கமுடியும்.
</p><p>
ஆனால், ஈரான் அரசு அப்படிச் செய்யவில்லை. அப்படியானால், தணிக்கையாளர்களின் அனுமதியுடன்தான் அந்த மிரட்டல் செய்தி வெளியாகியுள்ளது என்பதால், அதை நாம் சீரியஸாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
</p><p>
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை அல்லது ஈரான் உளவுத்துறைக்காக வேலை செய்யும் சுமார் 180 பேர் தற்போது ஜேர்மனியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளதால், அவர்கள், தனிநபருக்கு மிரட்டல் விடுப்பது முதல், தாக்குதல் நடத்துவது தொடர்பான உளவு பார்ப்பது வரையிலான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என ஜேர்மன் உள்நாட்டு உளவுத்துறையே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T11:00:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் காட்டுத்தீ... தீவைத்த தீயணைப்பு வீரர்: திடுக் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/volunteer-firefighter-behind-fontainebleau-fire-1784112643"></link>
            <id>https://news.lankasri.com/article/volunteer-firefighter-behind-fontainebleau-fire-1784112643</id>
            <summary type="text">பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ, சுமார் 1,200 ஹெக்டேர் காட்டை கபளீகரம் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ, சுமார் 1,200 ஹெக்டேர் காட்டை கபளீகரம் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

<iframe width="1012" height="569" src="https://www.youtube.com/embed/ORo0-l80NXM" title="Volunteer firefighter admits to starting a fire in the Fontainebleau forest • FRANCE 24 English" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen=""></iframe>
</p><p>
ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><h3>
திடுக் தகவல்
</h3><p>
இந்நிலையில், தீயை துவக்கியதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் தன்னார்வலராக செயல்பட்ட தீயணைப்புவீரர் என்னும் செய்தி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42951294-d97b-4b64-89fe-7046e6fc617f/26-6a5766042d597.webp' /></p><p>

ஒருவர் தான் பெட்ரோல் மூலம் தீயை துவக்கியதாகவும், மற்றொருவர் தற்செயலாக சிகரெட் துண்டை எறிந்ததன் மூலம் அறியாமல் தீயை துவக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>

மற்றொருவர், கைகளில் கரியுடன் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
</p><p>
பொலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T10:57:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[267 பந்துகளில் 233 ரன் விளாசிய இலங்கை வீரர்! பதிலடியாக இந்திய அணி தொடக்க வீரர்கள் சதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-u19-opening-pair-257-runs-vs-sri-lanka-1784109155"></link>
            <id>https://news.lankasri.com/article/india-u19-opening-pair-257-runs-vs-sri-lanka-1784109155</id>
            <summary type="text">இலங்கை அணிக்கு எதிரான U19 டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சதம் விளாசினர்.&amp;nbsp;செனுஜா வெகுனாகோடா&amp;nbsp;
இந்தியா மற்றும் இலங்கை அணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அணிக்கு எதிரான U19 டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சதம் விளாசினர்.&nbsp;</p><h2>செனுஜா வெகுனாகோடா&nbsp;</h2><p>
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான U19 டெஸ்ட் போட்டி காலியில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23bcdf57-8e83-438a-9913-071597e778c0/26-6a5758c336521.webp' />&nbsp;</p><p></p><p>

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 424 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
</p><p>

செனுஜா வெகுனாகோடா (Senuja Wekunagoda) 233 (267) ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 1 சிக்ஸர், 33 பவுண்டரிகள் அடங்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05a300b9-e0df-4ae2-862d-6c70776ebef4/26-6a57628bdb23a.webp' /></p><h2>
தொடக்க வீரர்கள் சதம்</h2><p>அணித்தலைவர் விமத் தின்சரா 52 ஓட்டங்களும், கவிஜா 49 ஓட்டங்களும், சமிகா 45 ஓட்டங்களும் எடுத்தனர். ஜெகநாதன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
</p><p>
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்களான லக்ஷ்யா ராஜேஷ் மற்றும் சாகர் விர்க் சதம் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7af323cf-9b0c-448a-bdaa-5f97d49e67da/26-6a57628b39bc8.webp' /></p><p>
இந்தக் கூட்டணி 257 ஓட்டங்கள் குவிக்க மழை குறுக்கிட்டது. லக்ஷ்யா ராஜேஷ் (Lakshya Rajesh) 134 ஓட்டங்களுடனும், சாகர் விர்க் (Sagar Virk) 112 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9d7f63c-06f8-49f9-aa60-71c5b19946e4/26-6a57628c91821.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T10:06:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை பெற்ற இந்தியர் - யார் இந்த யூசுப் அலி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/yusuff-ali-got-kuwait-1st-15-year-golden-residency-1784108068"></link>
            <id>https://news.lankasri.com/article/yusuff-ali-got-kuwait-1st-15-year-golden-residency-1784108068</id>
            <summary type="text">குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை, இந்தியரான யூசுப் அலி பெற்றுள்ளார்.

குவைத் கோல்டன் ரெசிடென்சி பெற்ற யூசுப் அலி

எண்ணெய்த் துறையைத் தாண்டி த...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை, இந்தியரான யூசுப் அலி பெற்றுள்ளார்.</p><h3>

குவைத் கோல்டன் ரெசிடென்சி பெற்ற யூசுப் அலி
</h3><p>
எண்ணெய்த் துறையைத் தாண்டி தனது பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்தவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், 15 ஆண்டு கால தங்க வதிவிட(Golden Residence) திட்டத்தை குவைத் அரசு அறிமுகப்படுத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/174fe9db-a21e-4ba1-8037-2291fcfce8d6/26-6a5754265c11c.webp' /></p><p>

இந்தியரான யூசுப் அலிக்கு, குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை குவைத்தின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசுஃப் சவுத் அல்-சபா வழங்கி கௌரவித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ar" dir="rtl">معالي النائب الأول لرئيس مجلس الوزراء ووزير الداخلية يسلم أول إقامة ذهبية لمدة 15 عام لرئيس مجلس إدارة مجموعة «لولو» العالمية يوسف علي موسليام<br><br>• الإقامة الذهبية تمثل خطوة استراتيجية لتطوير منظومة الإقامة وتعزيز البيئة الاستثمارية في دولة الكويت<br><br>• استقطاب الاستثمارات النوعية… <a href="https://t.co/223WGtIT3D">pic.twitter.com/223WGtIT3D</a></p>&mdash; وزارة الداخلية (@Moi_kuw) <a href="https://x.com/Moi_kuw/status/2077046677572133063?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h3>

 யார் இந்த யூசுப் அலி?
</h3><p>
இந்தியாவின் கேரளாவில் பிறந்த யூசுப் அலி, லூலூ குழுமத்தின் தலைவராக உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfcf4922-3053-4e50-a097-ebc8ff2d9ac7/26-6a5754270d5ce.webp' /></p><p>

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1990 களில் தொடங்கப்பட்ட லூலூ சூப்பர் மார்க்கெட், தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா என உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 250க்கும் இடங்களில் இயங்கி வருகிறது.</p><p>

ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மால்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் சொந்தமாக ஹொட்டல்களை வைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5578dede-6b74-4a82-96f1-d4697afdb10d/26-6a575427b351a.webp' /></p><p>
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிறிய அளவில் பங்குகளைக் கொண்டிருப்பதுடன், அதன் இயக்குநர் குழுவிலும் அங்கம் வகிக்கிறார்.&nbsp;</p><p></p><p>
போர்ப்ஸ் பத்திரிகையின் படி, யூசுப் அலியின் நிகர சொத்துமதிப்பு 5.4 பில்லியன் டொலர் ஆகும். உலக பணக்காரர்கள் பட்டியலில் 720வது இடத்திலும், இந்திய அளவில் 49 வது இடத்திலும் உள்ளார்.
</p><h3>
கோல்டன் ரெசிடென்சி பெற தகுதி</h3><p> 

இந்த கோல்டன் ரெசிடென்சியை பெறுவதற்கு, நிர்ணயிக்கப்பட்ட பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். </p><p>

விண்ணப்பதாரர்கள், ‘குவைத் நேரடி முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தால்’ (KDIPA) உரிமம் பெற்ற முதலீட்டு நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும். </p><p>

 உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறைந்தது 5 மில்லியன் குவைத் தினார் மதிப்பிலான முதலீடுகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். </p><p>

தகுதிபெறும் முதலீட்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள், இயக்குநர்கள் மற்றும் மூத்த நிர்வாகத்தினர், அவர்களது வாழ்க்கைத் துணை, குழந்தைகள் ஆகியோரும் இந்த கோல்டன் ரெசிடென்சியை பெறலாம்.
</p><p>
மேலும், முதலீட்டாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் 1 மில்லியன் குவைத் தினார் (KD) மூலதனத்தை முதலீடு செய்ய வேண்டும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T09:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு கப்பலில் பிரித்தானிய பயணியின் சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-man-found-dead-in-cruise-ship-near-crete-1784105316"></link>
            <id>https://news.lankasri.com/article/british-man-found-dead-in-cruise-ship-near-crete-1784105316</id>
            <summary type="text">கிரீட் தீவுப் பகுதியில் சொகுசு கப்பலில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.&amp;nbsp;அசைவற்ற நிலையில்
கிரீட் தீவுப் பகுதி வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரீட் தீவுப் பகுதியில் சொகுசு கப்பலில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.&nbsp;</p><h2>அசைவற்ற நிலையில்</h2><p>
கிரீட் தீவுப் பகுதி வழியாக சென்ற சொகுசு கப்பலில், 79 வயதான நபர் ஒருவர் தளத்தில் அசைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e840d8ae-71db-4600-b6ac-86e76872adba/26-6a574a807b715.webp' />&nbsp;</p><p></p><p>
அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது; மேலும் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார்.</p><p> ஆனால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் பிரித்தானிய சுற்றுலாப் பயணி என பின்னர் தெரிய வந்தது.
</p><h2>
கிரேக்கத் தீவில் நிறுத்தப்பட வேண்டிய நிலை</h2><p>இதுகுறித்து உள்ளூர் கடலோரக் காவல்படையினர், அந்த சொகுசு கப்பல் கிரீட் தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது; இதனால் அக்கப்பல் கிரேக்கத் தீவில் நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிவித்தனர். </p><p>

மேலும் The Chania Port கூறுகையில், "அந்த பிரித்தானியரின் மரணம் குறித்த முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. மேலும், அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.</p><p>

அத்துடன் அந்நபர் சொகுசு கப்பலில் தனியாக பயணம் செய்தாரா அல்லது குடும்பத்துடன் சென்றாரா என்பது தற்போது தெளிவாக தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T08:51:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறைய பிழைகளை செய்துவிட்டோம்: தோல்வி குறித்து எம்பாப்பே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mbappe-said-about-reason-behind-loss-with-spain-1784098282"></link>
            <id>https://news.lankasri.com/article/mbappe-said-about-reason-behind-loss-with-spain-1784098282</id>
            <summary type="text">தங்கள் திட்டத்தை செயல்படுத்தவே முடியவில்லை என பிரான்ஸ் வீரர் எம்பாபே தெரிவித்தார்.&amp;nbsp;கிலியன் எம்பாப்பே 

ஸ்பெயின் அணிக்கு எதிரான FIFA உலகக்கிண்ண ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கள் திட்டத்தை செயல்படுத்தவே முடியவில்லை என பிரான்ஸ் வீரர் எம்பாபே தெரிவித்தார்.&nbsp;</p><h2>கிலியன் எம்பாப்பே</h2><p> 

ஸ்பெயின் அணிக்கு எதிரான FIFA உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் படுதோல்வியடைந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1aaaa35-16b3-41b3-a406-badb8114c634/26-6a572ee6bc4e2.webp' />&nbsp;</p><p></p><p>

நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பேவினால் (Kylian Mbappe) ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. </p><p>

போட்டிக்கு பின் பேசிய எம்பாப்பே, "நாங்கள் நிறைய பிழைகளை செய்துவிட்டோம். திட்டமிட்ட ஆட்ட யுக்திகளை செயல்படுத்தவே முடியாமல் போய்விட்டது. 

உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு உரிய தரத்தில் ஆடாததால் இறுதிப் போட்டி என்று கனவை எட்ட முடியவில்லை" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/996eb86a-ec1f-4c45-9fb0-7340d399b93e/26-6a572ee609f16.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T08:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென இருளில் மூழ்கிய கனேடிய நகரம்: திகிலடைந்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/daylight-turns-to-dark-in-quebec-wildfires-cause-1784103287"></link>
            <id>https://news.lankasri.com/article/daylight-turns-to-dark-in-quebec-wildfires-cause-1784103287</id>
            <summary type="text">கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள ஒரு நகரம், பகல் நேரத்தில் திடீரென இருளில் மூழ்கியதால் திகில் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென இருளில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள ஒரு நகரம், பகல் நேரத்தில் திடீரென இருளில் மூழ்கியதால் திகில் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><h3>
திடீரென இருளில் மூழ்கிய நகரம்
</h3><p>
நேற்று காலை, கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள La Tuque நகரை திடீரென இருள் சூழ்ந்ததால் மக்கள் திகிலடைந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c754732-7fd0-4a8f-92f6-e78671913628/26-6a5741784f1d9.webp' /></p><p>
ஏற்கனவே காட்டுத்தீ உருவாக்கிய புகை சூரியனை மறைத்திருக்க, அதைத் தொடர்ந்து கார்மேகங்கள் சூழ, பட்டப்பகல், இரவு போல மாற, தெரு விளக்குகள் எரியத் துவங்கியுள்ளன.
</p><p>
35 ஆண்டுகளுக்கு முன் மொன்றியலில் நிகழ்ந்த தங்கள் நிச்சயதார்த்தத்தை நினைவுகூருவதற்காக அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு வந்த சாரா லெட்ஸ்கி, La Tuqueஇல் தான் சந்தித்த அந்த அனுபவம் திகிலூட்டுவதாக அமைந்திருந்ததாக தெரிவிக்கிறார்.&nbsp;</p><p></p><p>
மரச்சாமான்களை டெலிவரி செய்யும் வேலையைச் செய்யும் மார்க் லராம் என்பவர், புகை மற்றும் வெப்பம் காரணமாக தனது வேலை கடினமானதாக இருந்ததாக தெரிவிக்கிறார்.</p><p>

புகையிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, நாம்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாகவேண்டும், இல்லையென்றால் மயக்கம் போட்டு விழவேண்டியதுதான் என்கிறார் அவர்.
</p><p>
இதற்கிடையில், காட்டுத்தீயால் பரவிவரும் புகையால் சாலைகளில் போதுமான வெளிச்சம் இல்லை என்றும், காற்றின் தரம் மோசமாக உள்ளதாகவும் எச்சரித்திருந்த கனடாவின் சுற்றுச்சூழல் அமைப்பு, மக்கள் வீட்டுக்கு வெளியே நேரம் செலவிடுவதைக் குறைக்குமாறும், விளையாட்டு மைதானங்களில் விளையாடுவது முதலான நிகழ்ச்சிகளை குறைக்கவோ அல்லது மாற்றிவைக்கவோ செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T08:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டைனோசரின் எலும்புகூட்டை ரூ.482 கோடிக்கு வாங்கியுள்ள நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gus-dinosaur-fossil-sold-in-auction-for-482-crores-1784102437"></link>
            <id>https://news.lankasri.com/article/gus-dinosaur-fossil-sold-in-auction-for-482-crores-1784102437</id>
            <summary type="text">பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசர் என்ற உயிரினத்தை நாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்போம். 

டைனோசரின் புதைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசர் என்ற உயிரினத்தை நாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்போம்.</p><p> 

டைனோசரின் புதைப்படிவங்கள் அவ்வப்போது அரிதாக சில இடங்களில் அகழாய்வின் போது கண்டறியப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கபட்ட டைனோசரின் எலும்புகூடு ரூ.482 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. </p><h3>

ரூ.482 கோடிக்கு வாங்கப்பட்ட டைனோசரின் எலும்புகூடு</h3><p>

சுமார் 12.5 அடி (3.8 மீட்டர்) உயரமும் 38 அடி (11.5 மீட்டர்) நீளமும் கொண்ட கஸ்(GUS) என பெயரிடப்பட்டுள்ள இந்த டைனோசர் எலும்புக்கூடு, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைரனோசரஸ் ரெக்ஸ் மாதிரிகளில் மிகப்பெரிய மற்றும் மிகவும் முழுமையான ஒன்றாகக் கருதப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7246e03-7a23-436c-9895-e97419732dfc/26-6a573e2763956.webp' /></p><p>
இதில், கத்தி போன்ற கூர்மையான பற்களைக் கொண்ட தாடை, பாதுகாக்கப்பட்ட மண்டையோடு உள்ளது. மேலும், இதில் நன்கு பாதுகாக்கப்பட்ட 2 பாதங்களும், டி. ரெக்ஸ் புதைபடிவங்களில் அரிதாகக் காணப்படும் ஃபர்குலா அல்லது விஷ் போன் உள்ளிட்ட பல அரிய எலும்புகளும் அடங்கியுள்ளன.
</p><p>
டைரனோசரஸ் ரெக்ஸின் எலும்புக்கூடு, பல ஆண்டுகளாக ஏற்பட்ட பல்வேறு காயங்களின் அறிகுறிகளையும் காட்டுகிறது. அந்த எலும்புகளில், விலா எலும்பு மற்றும் வயிற்றுப் பகுதிக்கு அருகில் சில முறிந்த மற்றும் குணமடைந்த எலும்புகளும், மண்டை ஓட்டு எலும்புகளில் சில கடித் தடங்களும் காணப்படுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1acd7ebe-a99f-4592-8a0e-d967725b5f35/26-6a573e28186ec.webp' /></p><p>

சோத்பீஸ் நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில், 7 பங்கேற்பாளர்கள் கலந்து கொந்துள்ளனர். 20 - 30 மில்லியன் டொலருக்கு ஏலம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 50.1 மில்லியன் டொலருக்கு(இந்திய மதிப்பில் சுமார் ரூ.482 கோடி) பெயர் வெளியிட விரும்பாத நபர் வாங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

2024 ஆம் ஆண்டில் ஹெட்ஜ் ஃபண்ட் முதலீட்டாளரான கென்னத் கிரிஃபின்,ஸ்டெகோசரஸ் “அபெக்ஸ்" எனப்பயிரிடப்பட்ட டைனோசர் எலும்புக்கூட்டை 44.6 மில்லியன் டொலருக்கு வாங்கியதே அதிகபட்சமாக இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9097147-efb2-4469-9695-d923d69282a0/26-6a573e26b3ad2.webp' /></p><p>

இந்த புதைப்படிவம் Gary Gus Licking என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கண்டறியப்பட்ட நிலையில், இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை, அவர் மறைந்து விட்டதால் அவரது குடும்பத்திற்கு செல்லும்.
</p><p>
அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த புதைபடிவம், ஆராய்ச்சியாளர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதால், கஸ்ஸை ஒரு பொது அருங்காட்சியகத்தில் வைக்குமாறு முதுகெலும்பி தொல்லுயிரியல் சங்கம் அதன் புதிய உரிமையாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T08:01:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேங்காக் இசை விடுதியில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bangkok-music-pub-death-doll-reach-32-1784099638"></link>
            <id>https://news.lankasri.com/article/bangkok-music-pub-death-doll-reach-32-1784099638</id>
            <summary type="text">பேங்காக்கில் உள்ள இசை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இசை விடுதியில் தீ விபத்துபேங்காக்கின் வடக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேங்காக்கில் உள்ள இசை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.</p><h2> இசை விடுதியில் தீ விபத்து</h2><p>பேங்காக்கின் வடக்கு பகுதியில் உள்ள சத்துசாக்-கில் அமைந்துள்ள ராங் பீர் லேட் பிராவ்(Rong Beer Na Lat Phrao) என்ற இசை விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p> முதற்கட்ட விசாரணையில், இந்த தீ விபத்தானது விடுதியின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த ஏர் கண்டிஷனரில் ஏற்பட்ட மின்சகிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9387260-fb9a-4cd1-8ac6-84f374e4a3e1/26-6a573337ebde5.webp' /></p><p> இந்த சம்பவத்தின் போது பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், பின்னர் தீப்பொறிகளும் புகையும் இடத்தை முழுவதுமாக சூழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>விபத்துக்குள்ளான இசை விடுதி விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிக்காக அதிக இளைஞர்கள் கூடும் இடமாக கருதப்படுகிறது.</p><h2> உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு</h2><p>இந்த சம்பவத்தில் ஏற்கனவே 30 பேர் வரை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3846a7e2-ce8e-456e-91ff-216f45c624af/26-6a573338bdda4.webp' /></p><p> மேலும் தற்போது வரை 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 15 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> சம்பவத்தின் போது விடுதியின் அவசர கால வழி அடைக்கப்பட்டிருந்ததா மற்றும் விடுதி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="http://உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்." target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T07:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறு, ஏரிகளில் குளிப்பவர்களுக்கு சுவிஸ் அதிகாரிகளின் எச்சரிக்கை செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-officials-warns-in-bath-for-lakes-rivers-1784099096"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-officials-warns-in-bath-for-lakes-rivers-1784099096</id>
            <summary type="text">சுவிஸ் மாகாணமொன்றில், ஆறு, ஏரிகளில் குளிப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள் அதிகாரிகள்.

ஆறு, ஏரிகளில் குளிப்பவர்களுக்கு ஒரு எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிஸ் மாகாணமொன்றில், ஆறு, ஏரிகளில் குளிப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள் அதிகாரிகள்.
</p><h3>
ஆறு, ஏரிகளில் குளிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி</h3><p>

சுவிட்சர்லாந்தின் Fribourg மாகாண அதிகாரிகள், மாகாணத்திலுள்ள ஆறு, ஏரிகளில் தண்ணீர் மட்டம் குறைவாக இருப்பதும், வெப்பநிலை அதிகரித்துவருவதும், பாக்டீரியா பெருக சாதகமான சூழல் என்று தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c1341fd-ab6b-4662-a8e7-9f0fdc7eb692/26-6a57311a16d78.webp' /></p><p>
ஆகவே, மக்கள் அனுமதிக்கப்பட்ட கடற்கரைகளில் மட்டுமே குளிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
</p><p>
கடற்கரைகளில் உள்ள தண்ணீரின் தரம் முறைப்படி தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், ஆறு, ஏரிகளில் அப்படி இல்லை.&nbsp;</p><p></p><p>

ஆகவே, முறைப்படி தொடர்ச்சியாக பரிசோதனைக்குட்படுத்தப்படாத நீர் நிலைகளில் நீந்துவது உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
குறிப்பாக, எளிதில் பாதிக்கப்படும் தோல் உள்ளவர்கள், சிறுவர்கள் உட்பட, அத்தகைய ஆறு, ஏரிகளைத் தவிர்க்குமாறும், மற்றபடி ஆறு, ஏரிகளில் நீந்துபவர்கள், நீந்தி முடித்தபின் நல்ல தண்ணீரில் குளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T07:05:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.3 கோடி லிற்றர் ரசாயன பால் விநியோகம்... கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-3-crore-litre-synthetic-milk-made-in-maharashtra-1784097534"></link>
            <id>https://news.lankasri.com/article/2-3-crore-litre-synthetic-milk-made-in-maharashtra-1784097534</id>
            <summary type="text">இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், கடந்த ஆறு மாதங்களாக மக்கள் கலப்பட பாலை உட்கொண்டு வந்துள்ளார்கள் என்னும் அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், கடந்த ஆறு மாதங்களாக மக்கள் கலப்பட பாலை உட்கொண்டு வந்துள்ளார்கள் என்னும் அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.</p><h3>

கலப்பட பால்
</h3><p>
இந்த கலப்பட பால் என்பது உண்மையில் பாலே அல்ல என்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணம்!
</p><p>
ஆம், டிட்டர்ஜண்ட் பவுடர், பாமாயில் மற்றும் தரம் குறைந்த ரசாயன பவுடர் ஒன்றை பயன்படுத்தி பால் போன்ற ஒன்றை செயற்கையாக உருவாக்கியுள்ளது ஒரு நிறுவனம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34b33fae-060e-4c64-ad44-d4c38d0074bb/26-6a572affb0da7.webp' /></p><p>
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் பாலில், 100 லிற்றர் நல்ல பாலுடன் 10 லிற்றர் இந்த கலப்பட பால் கலக்கப்பட்டுள்ளது.</p><p>

அப்படியானால், 2.3 கோடி லிற்றர் கலப்படப் பால், கடந்த ஆறு மாதங்களாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுவந்திருக்கிறது.&nbsp;</p><p></p><p>
அவ்வகையில், 2,30,470 கிலோ செயற்கை பால் பவுடரை பயன்படுத்தி, சுமார் 23,04,070 லிற்றர் கலப்படப் பால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 9.21 கோடி ரூபாய் ஆகும்.
</p><p>
மஹாராஷ்ட்ராவின் Dharashiv மாவட்டத்தில் இந்த கலப்பட கும்பலை பொலிசாரும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் கண்டுபிடித்துள்ள நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரும் தலைமறைவாகிவிட்டார்கள்.
</p><p>
அவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை ஆய்வாளர் ஒருவர் தலைமையில் சிறப்பு பொலிஸ் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
</p><h3>
அதிரவைக்கும் தகவல்

விடயம் </h3><p>என்னவென்றால், இந்த டிட்டர்ஜெண்ட் மற்றும் பாமாயில் கலந்த கலப்பட பாலை அருந்துவதால், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் குடல் பயங்கரமாக பாதிக்கப்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ab03c8e-ca5a-4ba2-a8d9-25808d208651/26-6a572b0061b3f.webp' /></p><p>
குறிப்பாக, குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்களுக்கு இந்த கலப்படப் பால் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
</p><p>
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், மஹாராஷ்ட்ராவின் Dharashiv மாவட்டத்திலுள்ள Bhum தாலுகாவிலிருந்து நாளொன்றிற்கு பல லட்சம் லிற்றர் பால் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
</p><p>
அத்துடன், நாளொன்றிற்கு சுமார் 70 முதல் 80 டன் கோவாவும் தயாரிக்கப்படுகிறது. ஆக, இதே கலப்படப் பாலை பயன்படுத்தி அந்த கோவா தயாரிக்கப்பட்டுள்ளதா, அந்த கலப்படப் பால் ஏற்றுமதி செய்யப்படுவதால், அது எங்கெங்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்னும் பல கேள்விகள், நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T06:41:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய பிரதமருக்கு பிரான்சின் உயரிய விருது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/starmer-becomes-1st-uk-pm-to-receive-chevalier-1784092308"></link>
            <id>https://news.lankasri.com/article/starmer-becomes-1st-uk-pm-to-receive-chevalier-1784092308</id>
            <summary type="text">பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு, பிரான்சின் மிக உயரிய விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.

பிரித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு, பிரான்சின் மிக உயரிய விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
</p><h3>
பிரித்தானிய பிரதமருக்கு பிரான்சின் உயரிய விருது</h3><p>

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு, பிரான்சின் மிக உயரிய விருதான 'செவாலியே' (Chevalier de la Légion d'honneur) விருது வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b11d904d-d22c-4e60-9b99-d576eeb7d903/26-6a571695f10ad.webp' /></p><p>

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உக்ரைன் விவகாரங்களில் அவர் ஆற்றிய முக்கியப் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் இந்த விருதை ஸ்டார்மருக்கு நேரில் வழங்கி கெளரவித்தார்.&nbsp;</p><p></p><p>

ஸ்டார்மருக்கு இந்த உயரிய விருது வழங்கப்படும்போது, உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸும் உடன் இருந்தார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e56c9c7e-d335-4d86-b9f5-c863d77b79b2/26-6a571697570da.webp' /></p><p>

ஸ்டார்மருக்கு செவாலியே விருதை வழங்கிய மேக்ரான், பிரதமராக நீங்கள் பணியாற்றிய ஆண்டுகளுக்காக, எனது நன்றியையும் பிரெஞ்சு மக்களின் நன்றியையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4673145d-5b27-4b17-a114-695f8a0f60bb/26-6a571696a5cdf.webp' /></p><p>
அத்துடன், நாம் போற்றக் கற்றுக்கொள்ளும் மனிதப் பண்புகள் அனைத்தும் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானவையாகவே இருக்கின்றன. உங்களிடம் நாங்கள் மிகவும் நம்பகமான மற்றும் நட்பான ஒரு கூட்டாளரைக் கண்டோம் நான் சொல்லியே ஆக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbe255f6-5a66-4252-99ff-1402c44627d5/26-6a571698068d4.webp' /></p><p>பிரதமர் பதவியிலிருக்கும்போது பிரான்சின் இந்த மிக உயரிய கெளரவத்தை நேரடியாகப் பெறும் முதல் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T06:35:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா - சாதனை படைத்த சுப்மன் கில், அக்சர் படேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-beats-england-by-6-wickets-in-1st-odi-1784096474"></link>
            <id>https://news.lankasri.com/article/india-beats-england-by-6-wickets-in-1st-odi-1784096474</id>
            <summary type="text">இங்கிலாந்திற்கு எதிரான முதல் ODI போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

இந்தியா மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்திற்கு எதிரான முதல் ODI போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><h3>
இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா</h3><p>

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் ODI போட்டி நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cc0894e-542a-4053-ab12-090fe7353c48/26-6a5726db60ba5.webp' /></p><p> 

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பாட்டதை தேர்வு செய்தது. 47.5 ஓவர்கள் முடிவில், 258 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20b7cef3-1031-47ef-adef-4de1008f320b/26-6a5726dc0f540.webp' /></p><p>

இங்கிலாந்து தரப்பில், அதிகபட்சமாக ஜோ ரூட் 76 ஓட்டங்களும், லியாம் டாசன் 68 ஓட்டங்களும் குவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81c50abe-7e9a-42e3-b6b4-396ba4fdd69e/26-6a5726dcb3001.webp' /></p><p>

இந்தியா தரப்பில் அக்சர் படேல் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4742f20-9ff6-4560-bea5-36d319865c2d/26-6a5726dd61609.webp' /></p><p>
259 ஓட்டங்கள் என்று வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா 11 ஓட்டங்களுடனும், விராட் கோலி 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f055e4d-c59d-4db9-ac48-fbf7c9146568/26-6a5726de0ffb4.webp' /></p><p>

அணித்தலைவர் சுப்மன் கில் 75 பந்துகளில் 80 ஓட்டங்கள் எடுத்த நிலையில், காயம் காரணமாக வெளியேறினார். </p><p>

தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் 35 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 52 ஓட்டங்களும், அக்சர் படேல் 57 ஓட்டங்களும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.&nbsp;</p><p></p><p>

 45.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 262 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.</p><p> 

4 விக்கெட்கள் எடுத்து, 57 ஓட்டங்கள் குவித்த அக்சர் படேல் ஆட்ட நாயகன் விருது வென்றார். </p><h3>

சாதனைகள்</h3><p> 

40 ஓவர்களுக்கு பின்னர் பந்து வீச வந்து 4 விக்கெட்களை கைப்பற்றிய 2வது சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அக்சர் படேல் படைத்துள்ளார். முன்னதாக ஜடேஜா மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27510a93-80a1-41ec-8b0b-6dfd26263e25/26-6a5726e00ff6f.webp' /></p><p>
இந்த போட்டியில் சுப்மன் கில் அடித்த 80 ஓட்டங்கள் மூலம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அணித்தலைவராக 3 இன்னிங்ஸில் விளையாடி 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 510 ஓட்டங்கள் இதுவரை அடித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6a2d2b-4290-4fe7-88ca-caa33016f2b9/26-6a5726df5fa44.webp' /></p><p>

இதன் மூலம், இங்கிலாந்தில் ஒரே மைதானத்தில் 500 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்திய அணித்தலைவர் என்ற சாதனையை படைத்தார்.&nbsp;</p><p></p><p> 

முன்னதாக, விராட் கோலி இந்த மைதானத்தில், 6 இன்னிங்ஸில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 469 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.</p><p>

இதை போட்டியில் ஆடியதன் மூலம், 200 ODI போட்டிகளில் விளையாடிய 2வது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜாஸ் பட்லர் படைத்துள்ளார். 

இயோன் மோர்கன் 225 ODI போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T06:22:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா, வெனிசுலா, கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்த டிரம்ப்: சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-shares-ai-usa-map-on-truth-social-1784095598"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-shares-ai-usa-map-on-truth-social-1784095598</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் பகிர்ந்த AI புகைப்படம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> டிரம்ப் பகிர்ந்த AI புகைப்படம்</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தன்னுடைய சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியல்(Truth Social) பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள அந்த புகைப்படத்தில், கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்க எல்லைக்கு உட்பட்ட பகுதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தது.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/937c85f7-df85-460d-8c57-c7d09e42ba0d/26-6a57236f7e9d0.webp' /></p><p> இந்த புகைப்படம் உக்ரைன் - ரஷ்யா மோதல் தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் 2025ம் ஆண்டு நடைபெற்ற உலக தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மாற்றியமைக்கப்பட்ட வடிவம் என்று தெரியவந்துள்ளது.</p><p></p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa96f4f7-b957-4e62-9aef-0388f92fba7e/26-6a572370377c9.webp' /></p><p> இதில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட பல நாடுகளின் முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.</p><p> அவர்களில் முக்கியமாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T06:06:48+00:00</updated>
        </entry>
    </feed>
