<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-13T07:37:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர்: சமீபத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/neuschwanstein-accust-fights-extradition-to-us-1783927780"></link>
            <id>https://news.lankasri.com/article/neuschwanstein-accust-fights-extradition-to-us-1783927780</id>
            <summary type="text">ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணொருவரை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர் ஒருவர், தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணொருவரை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர் ஒருவர், தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
</p><h3>
ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்கள்</h3><p>

அமெரிக்காவின் Illinois பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த ஈவா (Eva Liu, 21) மற்றும் கெல்சி (Kelsey Chang, 22) என்னும் இரண்டு இளம்பெண்கள், ஜேர்மனியிலுள்ள Neuschwanstein Castle என்னும் புகழ் பெற்ற மாளிகை ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e10bfeeb-df43-4d2f-a64e-7d0547ae463d/26-6a5493e6132b2.webp' /></p><p>&nbsp;இந்த மாளிகை பல்வேறு திரைப்படங்களில் காட்டப்பட்டுள்ளதுடன், டிஸ்னி திரைப்படங்கள் பலவற்றில் காட்டப்படும் மாளிகைகள் இந்த மாளிகையின் மாதிரியை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654160e6-d846-489d-b692-7aedb917ec6c/26-6a5493e6b7f57.webp' /></p><p>ஆகவே, ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Schwangau என்னுமிடத்தில் அமைந்துள்ள அந்த மாளிகையைக் காண, ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள்.
</p><h3>
கொடூர நபரிடம் சிக்கிய பெண்கள்</h3><p>

இந்நிலையில், அந்த மாளிகைக்கு சுற்றுலா சென்ற ஈவா மற்றும் கெல்சியை சந்தித்த அமெரிக்காவைச் சேர்ந்த ட்ராய் (Troy Bohling, 33) என்னும் நபர், தான் அந்த மாளிகையை ரொமாண்டிக்கான ஒரு இடத்திலிருந்து காண உதவுவதாகக் கூறி அவர்களை ஒரு பாலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63f42888-3ddf-4715-abc4-bec4e929c2d1/26-6a5493e767566.webp' /></p><p>ஆனால், அந்த இடத்துக்குச் சென்றதும் ட்ராய் ஈவாவை தரையில் தள்ளி அவரது உடைகளைக் களைய முற்பட்டிருக்கிறார். கெல்சி அவரைத் தடுக்க முயல, அவரைப் பிடித்து கீழே தள்ளியிருக்கிறார் அந்த நபர். </p><p>கெல்சி 160 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கெல்சி கீழே விழுந்ததைக் கண்டபிறகும் ஈவாவை விடாத அந்த நபர், சுயநினைவிழக்கும் வரை அவரது கழுத்தை நெறித்து, வன்புணர்ந்து, பின்னர் அவரையும் 160 அடி உயர பாலத்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். </p><p></p><p>
கீழே விழுந்த கெல்சிக்கு தலையில் அடிபட்டாலும் அவர் பிழைத்துக்கொண்டார். ஆனால், ஈவா உயிரிழந்துவிட்டார். கைது செய்யப்பட்ட ட்ராய்க்கு ஜேர்மனியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
நாடுகடத்துவதை எதிர்த்து வழக்கு
</h3><p>
ட்ராயின் தண்டனைக்காலம் முடிவடைந்ததும், அவர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட வெளியுறவு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e9e4b3-3c47-4500-b6c0-06d953754c09/26-6a5493e817ab1.webp' /></p><p>ஆனால், தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து Augsburg நகரிலுள்ள நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ட்ராய்.
</p><p>
தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்தினால், அங்கு தன் குற்றங்களுக்காக மீண்டும் ஒரு வழக்கு விசாரணையை தான் எதிர்கொள்ள நேரிடும் என்றும், அமெரிக்காவில் தனக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார் ட்ராய்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77e717e6-e2ff-44a2-aef1-37f753c5e313/26-6a5493e8c0910.webp' /></p><p>விடயம் என்னவென்றால், ஜேர்மன் சட்டப்படி, 20 முதல் 25 ஆண்டுகளுக்கு ஜேர்மன் சிறையில்தான் செலவிட இருக்கிறார் ட்ராய்.
</p><p>
ஆக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரை நாடுகடத்தும் ஆணை நிறைவேற்றப்படாமலும் போகலாம். இந்நிலையில், தனது தண்டனைக்காலத்துக்குப் பிறகு அவர் நாடுகடத்தப்படுவதைக் குறித்து, இப்போதைக்கு எந்த மறு ஆய்வு நடைமுறையும் இல்லை என அரசு சட்டத்தரணி அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T07:29:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[563 குழந்தைகளுக்கு 25 வயது பிரித்தானியரின் பெயரை சூட்டிய பெரு மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/erling-haaland-name-for-563-peru-babies-1783927630"></link>
            <id>https://news.lankasri.com/article/erling-haaland-name-for-563-peru-babies-1783927630</id>
            <summary type="text">பெரு நாட்டில் நோர்வே கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்டின் பெயர் 563 குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.எர்லிங் ஹாலண்ட்

நடப்பு FIFA உலகக்கிண்ணக் கால்பந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரு நாட்டில் நோர்வே கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்டின் பெயர் 563 குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.</p><h2>எர்லிங் ஹாலண்ட்
</h2><p>
நடப்பு FIFA உலகக்கிண்ணக் கால்பந்து தொடரில், தனது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் எர்லிங் ஹாலண்ட்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/883aa704-4463-4987-8836-3aea0ab3028a/26-6a54944a9efe1.webp' />&nbsp;</p><p></p><p>
இங்கிலாந்தில் பிறந்த எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) பின்னாளில் நோர்வேக்கு இடம்பெயர, தற்போது அந்நாட்டு அணிக்காக விளையாடி வருகிறார்.
</p><p>
இந்த நிலையில், தென் அமெரிக்க நாடான பெருவில் எர்லிங் ஹாலண்டின் பெயர் 563 பிறந்த குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.</p><p>

நெய்மர், மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற வீரர்கள் வரிசையில் 25 வயதாகும் எர்லிங் ஹாலண்டின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.</p><p>

அதே சமயம் ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமான லமின் யமால் (Lamine Yamal), ஏற்கனவே 1,241 பெருவியர்களைத் தனது குடும்பப் பெயரை முதல் பெயராக ஏற்றுக்கொள்ளத் தூண்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/957bc6c3-7318-4519-acc2-4439506bb030/26-6a54944b6d8ff.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T07:25:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[CSK அணியில் இருந்து விலகிய பிளெமிங் - எந்த பயிற்சியாளரும் செய்யாத சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/stephen-fleming-steps-down-as-csk-head-coach-1783926618"></link>
            <id>https://news.lankasri.com/article/stephen-fleming-steps-down-as-csk-head-coach-1783926618</id>
            <summary type="text">CSK அணியிமன் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிளெமிங் விலகியுள்ளார்.

CSK அணியில் இருந்து விலகிய பிளெமிங்

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>CSK அணியிமன் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிளெமிங் விலகியுள்ளார்.
</p><h3>
CSK அணியில் இருந்து விலகிய பிளெமிங்</h3><p>

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். </p><p>

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஸ்டீபன் பிளெமிங், 10 போட்டிகளில் 196 ஓட்டங்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி 2வது இடத்தைப் பிடித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c047fbd-6ebb-408d-99fb-e676c8709241/26-6a548f5c6a408.webp' /></p><p>

பிளெமிங் 2009 ஆம் ஆண்டில் வீரராக ஓய்வு பெற்ற பின்னர், சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
</p><p>
இவர் பயிற்சியாளராக இருந்த காலகட்டதில், 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இதே போல், 2010 மற்றும் 2014 CLT20 தொடரில் CSK அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.&nbsp;</p><p>மேலும், 12 முறை பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன், 10 முறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.&nbsp;</p><p>

இது மட்டுமல்லாது, 2022 இல் SA20 தொடரின் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் 2023 இல் மேஜர் லீக் கிரிக்கெட்டின் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகிய சூப்பர் கிங்ஸ் அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ede3f19d-6a9c-4f50-b7a2-17cf231490b3/26-6a548f5d196dc.webp' /></p><p>

தற்போது பரஸ்பர ஒப்புதலுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிளமிங் விலகியுள்ளார். </p><p>

ஒரு ஐபிஎல் அணிக்கு நீண்ட காலமாக பயிற்சியாளராக இருந்தவர், அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற பயிற்சியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">OFFICIAL ANNOUNCEMENT<br><br>The Super Kings and Head Coach Stephen Fleming have mutually decided to part ways.<br>Together, we shared one of the most successful and enduring partnerships in IPL history. The legacy you&#39;ve built will continue to inspire us.<br><br>With immense respect and… <a href="https://t.co/qjvb4oZUuU">pic.twitter.com/qjvb4oZUuU</a></p>&mdash; Chennai Super Kings (@ChennaiIPL) <a href="https://x.com/ChennaiIPL/status/2076550405560111496?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "விளையாட்டுத் துறையில் 18 ஆண்டுகள் என்பது ஒரு வாழ்நாள் போன்றது, மேலும் நான் மிகுந்த நன்றியுணர்வுடன் விடைபெறுகிறேன். </p><p>

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான எனது காலம், எனது பயிற்சியாளர் வாழ்க்கையின் ஒரு பெரும் பாக்கியமாகும். நாங்கள் சாதித்த அனைத்தையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள CSK CEO காசி விஸ்வநாதன், இந்தப் பயணத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே, நாங்கள் எப்படி விளையாடினோம் என்பதை மட்டுமல்ல, ஒரு அணியாக நாங்கள் எப்படி இருக்க விரும்பினோம் என்பதையும் வரையறுக்க ஃபிளெமிங் உதவினார். </p><p>

நிலைத்தன்மை, பணிவு மற்றும் அணிக்கு முதலிடம் அளித்தல் ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு கலாச்சாரத்தை அவர் உருவாக்கினார். 

அவருடைய செல்வாக்கு எல்லைகளைக் கடந்து வெகுதூரம் பரவியுள்ளது.மேலும் இந்த அற்புதமான பயணத்தை நாம் ஒன்றாகப் பகிர்ந்துகொண்டதில் பெருமிதம் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p>CSK அணியின் நட்சத்திர வீரரான தோனி, வயோதிகம் காரணமாக அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகமாக உள்ள நிலையில், அணியின் அடுத்த பயிற்சியாளராக தோனி நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T07:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற இந்திய தம்பதி மாயம்: எழுந்துள்ள சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hyderabad-couple-missing-in-swiss-abscond-doubt-1783923114"></link>
            <id>https://news.lankasri.com/article/hyderabad-couple-missing-in-swiss-abscond-doubt-1783923114</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஒரு இந்திய தம்பதி மாயமாகியுள்ள நிலையில், அவர்கள் குறித்து ஒரு சந்தேகம் எழுந்துள்ளதால், அது குறித்து பொலிசார் விசாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஒரு இந்திய தம்பதி மாயமாகியுள்ள நிலையில், அவர்கள் குறித்து ஒரு சந்தேகம் எழுந்துள்ளதால், அது குறித்து பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.</p><h3>

சுவிட்சர்லாந்துக்குச் சென்ற இந்திய தம்பதி மாயம்</h3><p>

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பப்பா சந்திரசேகரும் (Pabba Chandrasekhar, 51) அவரது மனைவியான ஸ்வப்னாவும் (42), ஜூன் மாதம் 22ஆம் திகதி சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0041c72-eac4-4a3d-87f3-ca3c366aa1e9/26-6a5481ab7c47f.webp' /></p><p>
ஆனால், ஜூலை மாதம் 8ஆம் திகதி, அவர்கள் குடும்பத்தினருடனான தொலைபேசித் தொடர்பை நிறுத்தியுள்ளனர். </p><p>அவர்களுடைய மொபைல்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன.

ஆகவே, தன் பெற்றோரைக் காணவில்லை என தம்பதியரின் மகளான ஷ்ரேயா (23) பொலிசில் புகாரளித்துள்ளார்.&nbsp;</p><p></p><h3>
எழுந்துள்ள சந்தேகம்

விடயம் </h3><p>என்னவென்றால், தொழிலதிபரான சந்திரசேகரும் அவரது மனைவியும், 60க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து தனிப்பட்ட முறையிலும் தொழிலுக்காகவும், அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி சுமர் 50 கோடி ரூபாய் வாங்கியுள்ளனர்.</p><p>

ஆக, அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்களோ என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.
</p><p>
ஆகவே, அவர்கள் எங்கிருக்கிறார்கள், உண்மையாகவே சுவிட்சர்லாந்துக்குதான் சென்றார்களா என்பதை அறிவதற்காக, அவர்களுடைய பயணத் திட்டம், பாஸ்போர்ட் பதிவுகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சரிபார்க்கும் முயற்சிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.
</p><p>
தம்பதியரைக் குறித்து யாருக்காவது தெரியவந்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறும் பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T06:50:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாஜக - திமுக கூட்டணி? உறுதிப்படுத்தும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anitha-radhakrisnan-speech-sparks-dmk-bjp-alliance-1783922726"></link>
            <id>https://news.lankasri.com/article/anitha-radhakrisnan-speech-sparks-dmk-bjp-alliance-1783922726</id>
            <summary type="text">திமுக - பாஜக கூட்டணி அமைக்க உள்ளது என்பதை குறிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

6 மாதத்தில் கவிழும் தவெக ஆட்சி? 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுக - பாஜக கூட்டணி அமைக்க உள்ளது என்பதை குறிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
</p><h3>
6 மாதத்தில் கவிழும் தவெக ஆட்சி?</h3><p> 

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் பிற கட்சிகளின் உதவியுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba547c78-74d6-4017-ae40-c1a10a942d71/26-6a5480285539a.webp' /></p><p>

முன்னதாக திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயற்சித்ததாக திமுகவின் கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர். </p><p>

இதனைத்தொடர்ந்து, தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தாக 8 பேரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. </p><p>

இதில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பங்கு இருப்பதாக கூறி அவருக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. </p><h3> 

பாஜக - திமுக கூட்டணி?
</h3><p>
இந்த சூழலில், தவெக ஆட்சி இன்னும் 6 மாதங்கள் தான் இருக்கும் எனவும், திமுக எம்பி மத்திய அமைச்சர் ஆவார் எனவும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். </p><p>

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த ஆட்சி இருக்கும். நான் குறிப்பிட்டு சொல்கிறேன் இன்னும் 6 மாத காலத்திற்குள் இந்த ஆட்சி போகவில்லை என்றால் பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc9c4d73-75d5-48b3-abbe-f525ab2755da/26-6a548027a516f.webp' /></p><p>

கழக தோழர்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம். 6 மாத காலத்திற்குள் தமிழ்நாடு முதலமைச்சராக அண்ணன் ஸ்டாலின் வருவார்கள். </p><p>

நம்முடைய இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கட்சியை நடத்துவார்கள். நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா போன்றவர்கள் எல்லாம் டெல்லியில் அமைச்சர்களாக அமர்வார்கள்.
</p><p>
அப்படி ஒரு நிலை வரும்போது நீ சினிமாவில் என்ன தப்பு செய்தாய், வருமான வரித்துறையில் என்ன ஏமாற்றினாய் என அனைத்தும் வெளிவரும்" என தெரிவித்துள்ளார். </p><p>

திமுக எம்.பிக்கள் டெல்லியில் அமைச்சர் ஆவார்கள் என பேசியதன் மூலம், பாஜக உடன் கூட்டணி அமைக்க திமுக முயற்சித்து வருகிறதா கேள்வி எழுந்துள்ளது.</p><p> 

முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி போன்றோர் மீதான வழக்குகளை தவெக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. </p><p>

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்ட நிலையில், குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் பாஜக உடன் திமுக கூட்டணி அமைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T06:06:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சதம் விளாசிய வீராங்கனைகள்: அயர்லாந்திற்கு எதிரான தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-west-indies-win-odi-series-vs-ireland-1783920643"></link>
            <id>https://news.lankasri.com/article/women-west-indies-win-odi-series-vs-ireland-1783920643</id>
            <summary type="text">மகளிர் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியது.&amp;nbsp;இரண்டாவது ஒருநாள் போட்டி 

மகளிர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியது.&nbsp;</p><h2>இரண்டாவது ஒருநாள் போட்டி</h2><p> 

மகளிர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ப்ரெடியில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bb3d407-8de4-42dc-b7a9-e6bb4ed478d4/26-6a547af9120ed.webp' /></p><p></p><p>

முதலில் ஆடிய அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ஓட்டங்கள் எடுத்தது. ஏமி ஹன்டர் 67 ஓட்டங்களும், ரெபெக்கா 57 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 38.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ஹேலே மேத்யூஸ்,&nbsp;ஸ்டாஃபானி&nbsp;சதம் </h2><p>
அணித்தலைவர் ஹேலே மேத்யூஸ் (Hayley Matthews) 94 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களும், ஸ்டாஃபானி டெய்லர் (Stafanie Taylor) 100 ஓட்டங்களும் குவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a992d783-a9ef-439e-b069-10f3fc875400/26-6a547af863632.webp' /></p><p>

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/290a8260-9d48-43d2-bbb4-96774072d4a9/26-6a547af7b2d04.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef8a0940-504d-448f-a82b-62b0679aff3d/26-6a5478e4238b9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p> 
</p>]]></content>
            <updated>2026-07-13T05:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லைகளில் நிலவும் குழப்பம்: பிரான்சும் பிரித்தானியாவும் எடுத்துள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-uk-solution-for-avert-travel-chaos-border-1783919164"></link>
            <id>https://news.lankasri.com/article/france-uk-solution-for-avert-travel-chaos-border-1783919164</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகம் செய்த Entry/Exit System (EES) என்னும் திட்டம் முழுமையாக அமுலுக்கு வந்துள்ளது அனைவரும் அறிந்ததே.

Entry/Exit System (EES)...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகம் செய்த Entry/Exit System (EES) என்னும் திட்டம் முழுமையாக அமுலுக்கு வந்துள்ளது அனைவரும் அறிந்ததே.</p><h3>

Entry/Exit System (EES)
</h3><p>
Entry/Exit System (EES) திட்டத்தின்படி, ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் குறுகிய கால பயணத்துக்காக பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், எல்லையில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c62cc62e-b5d4-450e-ab56-971d4156db1a/26-6a54723d88e36.webp' /></p><p>

விடயம் என்னவென்றால், இப்படி ஏராளமானோரின் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்யவேண்டியுள்ளதால் அதற்கு அதிக நேரம் பிடிக்கிறது.</p><p>

இதனால், பயணிகள் எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. கால தாமதத்தால் தங்கள் விமானத்தை தவறவிடுபவர்களும் இருக்கிறார்கள்.&nbsp;</p><p></p><h3>

பிரான்சும் பிரித்தானியாவும் எடுத்துள்ள முடிவு</h3><p>

எல்லையில் நிலவும் இந்த குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, EES திட்டத்தை ரத்து செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், அதை ஏற்க ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6be7f3a9-ebae-42c1-826b-e8a956506dba/26-6a54723e3bc00.webp' /></p><p>
இந்நிலையில், அடுத்த வார இறுதியிலிருந்து கோடை விடுமுறை துவங்குவதால், சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அதனால் எல்லைகளில் மேலும் கூட்டம் அதிகரிக்கும், குழப்பமும் அதிகரிக்கும்.
</p><p>
ஆகவே, இந்த குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக எல்லைகளில் அதிக அலுவலர்களை பணிக்கு அமர்த்த பிரான்சும் பிரித்தானியாவும் முடிவு செய்துள்ளன.</p><p>

அதற்காக, பிரித்தானியா 20 மில்லியன் பவுண்டுகள் செலவிட இருப்பதாக பிரித்தானிய போக்குவரத்துச் செயலரான ஹெய்டி அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஆக, எல்லைகளில் பாஸ்போர்ட், புகைப்படம் மற்றும் கைரேகைகளை சோதிக்கும் அலுவலர்களை அதிகப்படுத்துவதன் மூலம் தாமதத்தைக் குறைக்கவும், குழப்பங்களைத் தவிர்க்கவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T05:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நரைமுடியை கருப்பாக்க உதவும் காபி பொடி.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/coffee-hairpack-for-grey-hair-in-tamil-1783919469"></link>
            <id>https://news.lankasri.com/article/coffee-hairpack-for-grey-hair-in-tamil-1783919469</id>
            <summary type="text">பொதுவாக அனைவருக்கும் முடி உதிர்தல், வறண்ட முடி, பொடுகு மற்றும் நரைமுடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.

அதேபோன்று, இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக அனைவருக்கும் முடி உதிர்தல், வறண்ட முடி, பொடுகு மற்றும் நரைமுடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.</p><p>

அதேபோன்று, இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
</p><p>
அந்தவகையில், நரைமுடியை நிரந்தமாக கருப்பாக்க காபி தூளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>
தேவையான பொருட்கள்
</h2><ul><li>
காபி பவுடர்- 2 ஸ்பூன்
</li><li>தேன்- 1 ஸ்பூன்
</li><li>தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
</li></ul><h2>
எப்படி பயன்படுத்துவது?</h2><p>

முதலில் ஒரு கிண்ணத்தில் காபி பவுடர், தேன், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.</p><p>

பின் இந்த பேஸ்ட்டை முடியின் வேர்கள் முதல் நுனி வரை தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டுவிடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/855d0d6f-2fb2-4010-a617-df3b671ff67b/26-6a54736fb9edb.webp' /></p><p>

அடுத்து மென்மையான ஷாம்பூ கொண்டு தலைமுடியை நன்றாக அலசிக்கொள்ளலாம்.
</p><p>
இந்த கலவையை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் நரைமுடி பிரச்சனை நிரந்தமாக குணமாகும்.
</p><p>
மேலும், தலைமுடி மென்மையாக மற்றும் ஆரோக்கியமாக மாற உதவும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T05:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்ஸர் மழைபொழிந்த நிக்கோலஸ் பூரன்! 44 பந்துகளில் 86 ஓட்டங்கள் விளாசல்..தவறிய வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nicholas-pooran-86-vs-washington-freedom-1783914231"></link>
            <id>https://news.lankasri.com/article/nicholas-pooran-86-vs-washington-freedom-1783914231</id>
            <summary type="text">மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்தின் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் MI நியூயார்க் அணியை வீழ்த்தியது.&amp;nbsp;நிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்தின் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் MI நியூயார்க் அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>நிக்கோலஸ் பூரன்&nbsp;ருத்ரதாண்டவம் </h2><p>

வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் MI நியூயார்க் அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் போட்டி நேற்று நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae3eb63-7fe5-4ece-bf70-9b718fa3ab12/26-6a5460712f665.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய MI நியூயார்க்கில் அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) ருத்ரதாண்டவம் ஆடினார்.
</p><p>
மொத்தம் 44 பந்துகளை எதிர்கொண்ட அவர், 8 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>கோஸ்,&nbsp;ரவீந்திரா&nbsp;அரைசதம் </h2><p>
இதன்மூலம் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது. நெத்ராவால்கர், பென் ட்வர்ஷுய்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
</p><p>
பின்னர் ஆடிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 18.3 ஓவர்களில் 190 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆன்ரிஸ் கோஸ் 96 (54) ஓட்டங்களும், ரச்சின் ரவீந்திரா 60 (30) ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/308a69ff-4662-4d60-9ace-a17d992a8f9b/26-6a5460708207f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T03:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் உலகளாவிய உணவுப் பஞ்சம் ஏற்படும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/super-el-nino-global-food-shock-1783874538"></link>
            <id>https://news.lankasri.com/article/super-el-nino-global-food-shock-1783874538</id>
            <summary type="text">இந்த ஆண்டு ஏற்படக்கூடிய &#039;சூப்பர்&#039; எல் நினோ வானிலைச் சுழற்சியானது, உலகளாவிய உணவு விலைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு ஏற்படக்கூடிய 'சூப்பர்' எல் நினோ வானிலைச் சுழற்சியானது, உலகளாவிய உணவு விலைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><h2>பேரழிவுகரமான வறட்சி</h2><p>
</p><p>இந்த விலை உயர்வு 2028-ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஈரான் போரினால் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், </p><p>புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய தீவிர வானிலைச் சூழலால் விநியோகம் ஒரே நேரத்தில் இரண்டு அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4b5c3d7-694e-459d-94de-24c3f2ed063b/26-6a53cacfba036.webp' /></p><p>
</p><p>காற்றின் திசை மற்றும் வேகத்தில் ஏற்படும் மாற்றங்களால், வெப்பமான நீர் மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பகுதி முழுவதும் பரவும்போது உருவாகும் 2026-27 ஆம் ஆண்டிற்கான 'எல் நினோ' நிகழ்வு குறித்து விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். </p><p>கடுமையான வெப்ப அலைகள், பெருவெள்ளம் மற்றும் கடும் புயல் சூழலைத் தூண்டக்கூடிய மிகவும் தீவிரமான நிகழ்வாக உருவெடுப்பதற்கான, வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பை சூப்பர் எல் நினோ கொண்டுள்ளது.
</p><p>உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் ஏற்கனவே வாழ்க்கைச் செலவு உயர்வால் சிரமங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், தீவிரமான எல் நினோ நிகழ்வு அந்த நெருக்கடியை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். </p><p>அத்துடன், மீண்டும் ஒரு பணவீக்க அதிர்ச்சி ஏற்படக்கூடும் என்ற சூழல் மத்திய வங்கிகளை நிலைகுலையச் செய்வதோடு, வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர் மட்டத்திலேயே வைத்திருக்கப்படலாம் என்ற கவலையையும் அதிகரிக்கிறது.</p><p></p><p> </p><p>ஐரோப்பாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெப்ப அலைகள், காலநிலை அடிப்படை நிலை ஏற்கனவே மாறி வருவதை நினைவூட்டுகின்றன. எல் நினோ புவி வெப்பமயமாதலின் விளைவுகளைப் பெருக்குவதால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இது மேலும் ஒரு புதிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>இயற்கையாக நிகழும் இந்த எல் நினோ நிகழ்வு, அறுவடை மற்றும் உணவு விநியோகக் கட்டமைப்பைப் பாதித்த வரலாற்றைக் கொண்டுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் முன்பு, வரலாற்றிலேயே மிகவும் கடுமையானதாக இருந்திருக்கக்கூடிய ஒரு எல் நினோ நிகழ்வானது, சீனா, தெற்கு ஆப்பிரிக்கா, பிரேசில், எகிப்து மற்றும் இந்தியா முழுவதும் பேரழிவுகரமான வறட்சிகளை ஏற்படுத்தியது. </p><p>காலனித்துவ ஆட்சியால் மோசமடைந்த சூழலில் ஏற்பட்ட பஞ்ச நிலைமைகளால் லட்சக்கணக்கானோர் மரணமடைந்தனர்; இதில் 1876-78 காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்தனர். </p><p>1981-82, 1996-97, 2015-16 மற்றும் 2023-24 ஆகிய காலகட்டங்களில் நிகழ்ந்த எல் நினோ நிகழ்வுகள், பதிவானவற்றிலேயே மிகவும் தீவிரமானவற்றுள் சிலவாகும். </p><p>இந்த நிலையில், நிபுணர்கள் தரப்பு 2026-27 எல் நினோ காலகட்டம் இன்னும் தீவிரமானதாக அமையக்கூடும் என்பதையும், இது உலகெங்கிலும் பயிர் விளைச்சலையும் உணவு விநியோகத்தையும் பாதிக்கும் வகையிலான வறட்சி மற்றும் வெள்ள அபாயத்தை அதிகரிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p> தற்போது உருவாகியுள்ள இந்த எல் நினோவின் தீவிரத்தன்மை, உலகளாவிய உணவுப் பொருட்களின் விலையில் 15.8 சதவீத உயர்வை ஏற்படுத்தக்கூடும். இது ஐரோப்பா உள்ளிட்ட உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்; குறிப்பாக யூரோ மண்டலத்தில் உணவுப் பொருட்களின் விலை 1.3 சதவீதம் வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.</p><h2>பாதிக்கத் தொடங்கியுள்ளது</h2><p> </p><p>இருப்பினும், காலநிலை தாக்கத்தின் செலவானது உலகளாவிய உணவு விநியோகத்தில் பரவும் விதத்தின் காரணமாக, அதன் முழுமையான விளைவை உணர நேரம் எடுக்கும். இதன் விளைவுகள் முழுமையாக வெளிப்பட 2028-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி வரை ஆகலாம் என்று Goldman Sachs தெரிவித்துள்ளது.</p><p> பொதுவாக எல் நினோ நிகழ்வுகள் தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளில் வறட்சி அபாயங்களை அதிகரிக்கின்றன, ஆனால் தெற்கு பிரேசில், அர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகின்றன. </p><p>ஈரான் போரினால் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளே, எல் நினோவால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d397cbed-a494-4175-8a0f-d102dca2d320/26-6a53cad0751af.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், எல் நினோ ஏற்கனவே பயிர்களைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் பருவமழை வறண்டு, சில பகுதிகளில் வழக்கமான மழையில் 25 சதவீதம் மட்டும், மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் 50 சதவீதம் மட்டும் பெய்து, கோதுமை, அரிசி மற்றும் கரும்பு விநியோகத்தைப் பாதிக்கக்கூடும். </p><p>இதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்பட வாய்ப்புள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஏற்படும் வறட்சியானது, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருளான பாமாயில் விநியோகத்தைப் பாதிக்கக்கூடும் என்றும், அதேவேளையில் காபி மற்றும் கோகோ அறுவடைகளும் பாதிக்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். </p><p>வட அமெரிக்காவில், எல் நினோவின் தாக்கம் குளிர்காலத்தில் மிகவும் வலுவாக இருக்கும், அதே சமயம் ஐரோப்பாவில் இந்த வானிலை நிகழ்வால் நிலைமைகள் பாதிக்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
</p><p>மூன்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு வலுவான எல் நினோ நிகழ்வானது உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளை 9 சதவீதம் வரை உயர்த்தக்கூடும் என்றும், சோயாபீன்ஸ், மக்காச்சோளம் மற்றும் அரிசி ஆகியவற்றில் மிகப்பெரிய விலை உயர்வுகள் காணப்படும் என்றும் ஐரோப்பிய மத்திய வங்கி மதிப்பிட்டிருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T03:05:11+00:00</updated>
        </entry>
    </feed>
