<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-19T05:39:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-on-coffin-tehran-billboard-controversial-1784432851"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-on-coffin-tehran-billboard-controversial-1784432851</id>
            <summary type="text">ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி இருப்பது போன்ற விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி இருப்பது போன்ற விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தெஹ்ரானில் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகை</h2><p>
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் நீர்த்துப் போனதை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.</p><p> இந்நிலையில் ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் “ரத்தத்திற்கு ரத்தம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகை ஒன்று வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c6e097e-ddfb-4b7e-98fb-79b353872e31/26-6a5c48d48603f.webp' /></p><p> தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பதாகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, அவர்களது பிள்ளைகளான இவான்கா, டொனால்ட் டிரம்ப் ஜூனியர், எரிக், டிஃப்பனி மற்றும் பாரோன் ஆகியோரின் புகைப்படங்கள் சவப்பெட்டியின் மீது வைக்கப்பட்டது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> பொதுவாக தெஹ்ரானில் அமைக்கப்படும் மிகப்பெரிய சுவரோவியங்கள் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினரின் ஓவ்ஜ் கலை மற்றும் ஊடக அமைப்பினால் வடிவமைக்கப்பட்டவை ஆகும்.</p><p>இந்த விளம்பர பலகை சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஈரான் தன்னை கொலை செய்ய சதி செய்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p style="margin-left: 25px;"><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Iran has installed a billboard in the capital Tehran showing US President Donald Trump lying in a coffin. <br><br>A statue nearby depicts the fist of late Supreme Leader Ayatollah Ali Khamenei, who was assassinated at the start of the US-Israeli war on Iran. <a href="https://t.co/ILvE0RAXrF">pic.twitter.com/ILvE0RAXrF</a></p>&mdash; Al Jazeera Breaking News (@AJENews) <a href="https://x.com/AJENews/status/2077462033662947605?ref_src=twsrc%5Etfw">July 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மேலும் இதற்கு முன்னதாக தெஹ்ரானில் ஏங்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்ட மற்றொரு விளம்பர பலகையில் டிரம்பை நாங்கள் கொல்லுவோம் என்று பாரசீக மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.</p><p> அத்துடன் அதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திறந்த கருப்பு நிற சவப்பெட்டியில் படுத்து இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:36:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[குதிகால் வெடிப்பை போக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/home-remedies-for-cracked-heels-in-tamil-1784436166"></link>
            <id>https://news.lankasri.com/article/home-remedies-for-cracked-heels-in-tamil-1784436166</id>
            <summary type="text">குதிகால் வெடிப்பு என்பது சருமத்தில் ஈரப்பதம் குறைவதாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். 

வெடிப்பு லேசாக இருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>குதிகால் வெடிப்பு என்பது சருமத்தில் ஈரப்பதம் குறைவதாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். </p><p>

வெடிப்பு லேசாக இருக்கும்போது வலியோ அசௌகரியமோ இருக்காது, ஆனால் அது தீவிரமடையும் போது கடுமையான வலி, அரிப்பு மற்றும் ரத்தப்போக்கு ஏற்படலாம்.
</p><p>
இது ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் தீவிரமான சரும வறட்சி, அதிக உடல் எடை, உடலில் நீர்ச்சத்து குறைபாடு, மற்றும் தவறான காலணிகளைத் தொடர்ந்து அணிவது.</p><p>

அந்தவகையில், குதிகால் வெடிப்பை போக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம் 
 குறித்து பார்க்கலாம்.</p><p></p><h2>&nbsp;1. தேவையான பொருட்கள்</h2><ul><li> 

அரிசி மாவு- 1 ஸ்பூன்</li><li> 
தேன்- 1 ஸ்பூன் </li><li>
வினிகர்- 1 ஸ்பூன் </li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, தேன் மற்றும் வினிகரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.</p><p> 

பின் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து உலர்த்தி, இந்த கலவையை பாதங்களில் தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26632ca8-08e5-4183-ba68-2c6cf90a1b51/26-6a5c55c85fd80.webp' /></p><p> 

பிறகு குளிர்ந்த நீரால் பாதங்களை கழுவ வேண்டும். </p><p>

இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர பாதங்களில் உள்ள வெடிப்புகள் மறையும்.</p><h2>

2. தேவையான பொருட்கள் </h2><ul><li>

வேஸ்லின்- 2 ஸ்பூன் </li><li>
எலுமிச்சை- 1</li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊறவைத்து பின் உலர்த்த வேண்டும். </p><p>

பின்பு வேஸ்லினை எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.</p><p></p><p> 

பிறகு அதை பாதங்களில் தடவி, சாக்ஸ் அணித்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். </p><p>

பின் காலையில் சாக்ஸை நீக்கிவிட்டு, பாதங்களை கழுவ வேண்டும். 

இப்படி அடிக்கடி செய்து வந்தால், குதிகால் வெடிப்பு மறைவதைக் காணலாம்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T04:43:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக வர்த்தகத்தை தீர்மானிக்கும் டிரம்பின் ட்ரூத் சோஷியல்: பதிவுகளை விரைவாக பெற ரூ.1 கோடி கட்டணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-truth-social-charge-1-crore-for-speed-post-1784435885"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-truth-social-charge-1-crore-for-speed-post-1784435885</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவுகளை முன்னதாக பெற ரூ.1 கோடி வரை கட்டணம் பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. டிரம்பின் ட்ரூத் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவுகளை முன்னதாக பெற ரூ.1 கோடி வரை கட்டணம் பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.</p><h2> டிரம்பின் ட்ரூத் சோஷியல்</h2><p>
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது விதிமுறைகளை டிரம்ப் மீறியதாக குறிப்பிட்டு அவரது X தள கணக்கு பிளாக் செய்யப்பட்டது.</p><p> இதையடுத்து அவர் சொந்தமாக ட்ரூத் சோஷியல் என்ற சமூக வலைதள செயலியை உருவாக்கி அதில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea5df867-4c7d-4601-ac9b-88a63cc22c3f/26-6a5c54af18775.webp' /></p><p> டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் வெளியிடும் சில பதிவுகள் உலக வர்த்தகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது.</p><p> உதாரணமாக, தற்போது பங்குகளை வாங்க சிறந்த தருணம் என்று டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதை அடிப்படையாக கொண்டு அப்போது பங்குகள் வாங்கியவர்கள் சிறந்த பலனை அடைந்தனர்.</p><p> </p><p></p><p>அதைப்போல ஈரான் - அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு கச்சா எண்ணெய் விற்பனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.</p><p>இதனால் டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிடும் கருத்துகள் முக்கியமான ஒன்றாக வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் கருதுகின்றனர்.</p><p>டிரம்பின் பதிவு மில்லி வினாடி முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ கிடைத்தால் அது மிகப்பெரிய லாபமோ அல்லது நஷ்டமோ ஏற்படுத்த கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.</p><h2> ரூ.1 கோடி கட்டணம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87b67ea4-f3f1-44b3-9b46-be922a9aceea/26-6a5c54afbc307.webp' /></p><p>இந்நிலையில், டிரம்பின் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இருந்து அவரது பதிவுகளை விரைவாக ட்ரூத் ஏபிஐ தரவு சேவையை வழங்கி வருகிறது.</p><p> மேலும் ட்ரூத் ஏபிஐ மூலம் டிரம்பின் கருத்துகளை மில்லி விநாடிகளில் பெற முடியும். இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ட்ரூத் ஏபிஐ-யை வாங்குவது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.</p><p> இந்நிலையில் இந்த சேவைக்கு ரூ.1 கோடி வரை வசூலிக்க டிரம்பின் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.</p><p> மேலும் ட்ரூத் ஏபிஐ-யின் 3 ஆண்டு திட்டத்தில் இணைந்தால் ரூ.60 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும் எனவும் முன்மொழியப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-19T04:38:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Ather Energy-ல் Hero MotoCorp ரூ.1000 கோடி முதலீடு., வரவிருக்கும் புதிய மின்சார ஸ்கூட்டர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hero-invests-rs-1000-cr-in-ather-ev-scooters-1784423167"></link>
            <id>https://news.lankasri.com/article/hero-invests-rs-1000-cr-in-ather-ev-scooters-1784423167</id>
            <summary type="text">இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர் Hero MotoCorp, பெங்களூரைச் சேர்ந்த Ather Energy நிறுவனத்தில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர் Hero MotoCorp, பெங்களூரைச் சேர்ந்த Ather Energy நிறுவனத்தில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
</p><p>
Hero ஏற்கனவே Ather-இல் 29.48 சதவீதம் பங்குகளை வைத்திருக்கிறது. இந்த புதிய முதலீடு அடுத்த 15 நாட்களில் நிறைவேறும் என தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
Ather நிறுவனம் விரைவில் EL01 என்ற குறைந்த விலை மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. இது ஆகஸ்ட் 29 அன்று பெங்களூரில் நடைபெறும் Annual Community Day நிகழ்ச்சியில் வெளியிடப்படும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddfde85f-3c6c-49c8-b22c-be1d084798e8/26-6a5c2301a5f00.webp' /></p><p>EL01 மாடல், Ather-இன் தற்போதைய Rizta மற்றும் 450 மாடல்களை விட குறைந்த விலையில் கிடைக்கும். Rizta S தற்போது ரூ.1.17 லட்சம் (ex-showroom, Bengaluru) விலையில் விற்கப்படுகிறது.</p><p>

EL01 மாடலில் 14-இஞ்ச் முன் சக்கரம், 12-இஞ்ச் பின்சக்கரம், LED DRL, AEBS (Advanced Electronic Braking System), 7-இஞ்ச் TFT டிஸ்ப்ளே, voice command வசதி போன்ற அம்சங்கள் இடம்பெறும்.</p><p>
</p><p></p><p>AtherStack 7.0 சாப்ட்வேர் மூலம் இயங்கும் இந்த ஸ்கூட்டர், 2.9 kWh மற்றும் 3.7 kWh பேட்டரி விருப்பங்களுடன் 123-159 கி.மீ. வரை பயணிக்க முடியும். இந்த முதலீடு Ather Energy-க்கு விற்பனை வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.</p><p>புதிய EL platform அடிப்படையில் குடும்ப ஸ்கூட்டர், maxi-scooter மற்றும் உயர் செயல்திறன் மாடல்கள் விரைவில் சந்தையில் அறிமுகமாகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T01:04:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விலைமதிப்புள்ள உலோகங்களில் முன்னிலை வகிக்கும் நாடுகள்., இந்தியாவின் நிலை என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/worlds-precious-metals-australia-russia-s-africa-1784422121"></link>
            <id>https://news.lankasri.com/article/worlds-precious-metals-australia-russia-s-africa-1784422121</id>
            <summary type="text">உலகின் விலைமதிப்புள்ள உலோகங்களில் அவுஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்ரிக்கா முன்னிலை வகிக்கின்றன.

தங்கம்அவுஸ்திரேலியா உலகின் தங்க கையிருப்பில் சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் விலைமதிப்புள்ள உலோகங்களில் அவுஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்ரிக்கா முன்னிலை வகிக்கின்றன.</p><h2>

தங்கம்</h2><p>அவுஸ்திரேலியா உலகின் தங்க கையிருப்பில் சுமார் 20 சதவீதத்தை (13,000 மெட்ரிக் டன்) வைத்துள்ளது. ரஷ்யா 12,000 மெட்ரிக் டன் தங்கத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா 5,000 மெட்ரிக் டன் தங்கத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/448cdbc9-267e-4848-bcb3-cf0dd9eea672/26-6a5c1eeb511d9.webp' /></p><p>
</p><h2>
வெள்ளி </h2><p>வெள்ளி கையிருப்பில் பெரு (110,000 மெட்ரிக் டன்) முதலிடத்தில் உள்ளது. ரஷ்யா (92,000 மெட்ரிக் டன்) மற்றும் அவுஸ்திரேலியா (91,000 மெட்ரிக் டன்) அடுத்த இடங்களில் உள்ளன.</p><h2>பிளாட்டினம் </h2><p>பிளாட்டினம் குழு உலோகங்களில் (PGMs) தென் ஆப்ரிக்கா உலகின் 83 சதவீத கையிருப்பை வைத்துள்ளது. இது கார் உற்பத்தி, சுத்தமான எரிசக்தி போன்ற துறைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dd1526a-88fa-42c3-a217-ce3ec81d5017/26-6a5c1eec0b458.webp' /></p><p>
</p><h2>
இந்தியாவின் நிலை:</h2><p>இந்தியா உலகின் முன்னணி உலோக கையிருப்பு நாடுகளில் இல்லை.

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றில் இந்தியாவின் கையிருப்பு குறைவானது.</p><p>

ஆனால், இந்தியா உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர் நாடாகும். திருமணங்கள், நகை உற்பத்தி மற்றும் முதலீடுகள் காரணமாக தங்கத்தின் தேவை அதிகம்.</p><p></p><p>இந்தியாவில் தங்கம் முக்கியமாக கர்நாடகா (கோலார்), ஜார்கண்ட், ராஜஸ்தான் பகுதிகளில் கிடைக்கிறது. வெள்ளி ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் பகுதிகளில் உள்ளது.
</p><p>
இதனால், இந்தியா உலோக கையிருப்பில் முன்னிலை வகிக்கவில்லை என்றாலும், நுகர்வோர் சந்தையில் உலகளாவிய முக்கியத்துவம் பெற்றுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T00:47:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகா ஹாட்ரிக்! உலகக் கோப்பை வெண்கலத்தை கைப்பற்றியது இங்கிலாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saka-hat-trick-seals-england-bronze-win-1784420866"></link>
            <id>https://news.lankasri.com/article/saka-hat-trick-seals-england-bronze-win-1784420866</id>
            <summary type="text">2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் மூன்றாம் இடத்துக்கான போட்டியில், இங்கிலாந்து அணி பிரான்சை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலத்தை கைப்பற்றிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் மூன்றாம் இடத்துக்கான போட்டியில், இங்கிலாந்து அணி பிரான்சை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலத்தை கைப்பற்றியது.
</p><h2>இங்கிலாந்தின் வெற்றி</h2><p>மியாமியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், புகாயோ சாகா (Bukayo Saka) ஹாட்ரிக் அடித்து இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.</p><p>

ஆரம்பத்தில் டெக்லன் ரைஸ் (Declan Rice) தொலை தூரத்தில் இருந்து அடித்த கோலால் இங்கிலாந்து முன்னிலை பெற்றது. </p><p>பின்னர் எஸ்ரி கான்சா (Ezri Konsa) இரண்டாவது கோலை சேர்த்தார்.

முதல் பாதியில் சாகா இரண்டு கோல்கள் அடித்து இங்கிலாந்தை 4-0 முன்னிலையில் கொண்டு சென்றார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/466493f9-4360-4fa9-83bb-82af5c1b624c/26-6a5c1a04f1693.webp' /></p><p>பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் (Didier Deschamps) தனது அணியின் முதல் பாதி ஆட்டத்தை 'பேரழிவு' எனக் குறிப்பிட்டார்.</p><h2>

கிலியன் எம்பாப்பே&nbsp;சாதனை </h2><p>இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணிக்கு, கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) இரண்டு கோல்கள் அடித்து உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் (22) அடித்த வீரராக சாதனை படைத்தார்.
</p><p>
பிராட்லி பார்கோலா (Bradley Barcola) மற்றும் உஸ்மான் டெம்பெல்லே (Ousmane Dembélé) தலா ஒரு கோல் அடித்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/615de932-ed77-4150-a2b5-501bba143c4f/26-6a5c1a04471e8.webp' /></p><h2>ஹாட்ரிக் </h2><p>ஆனால், சாகா தனது மூன்றாவது கோலை பெனால்டி மூலம் அடித்து ஹாட்ரிக் நிறைவு செய்தார்.

இ</p><p>றுதியில் ஜூட் பெல்லிங்காம் (Jude Bellingham) தனிப்பட்ட முயற்சியில் ஆட்டத்தின் 10-வது கோலை அடித்து, உலகக் கோப்பையில் 7 கோல்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார்.
</p><p>
இந்த வெற்றியால், இங்கிலாந்து 1966-இல் உலகக் கோப்பையை வென்றதற்கு பிறகு, மிகச் சிறந்த முடிவை (மூன்றாம் இடம்) பெற்றுள்ளது.</p><p>பிரான்ஸ், 2018-இல் சாம்பியன் மற்றும் 2022-இல் ரன்னர்-அப் ஆனது, இம்முறை வெண்கலத்தை இழந்தது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T00:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் கையொப்பம் மதிப்பற்றது- கடுமையாக தாக்கிய மொஜ்தபா கமேனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-leader-trumps-signature-worthless-1784418511"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-leader-trumps-signature-worthless-1784418511</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், ஈரான் தனது ஒப்பந்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், ஈரான் தனது ஒப்பந்தப் பொறுப்புகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.</p><p>இந்நிலையில், ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். </p><p>

“அவரது கையொப்பம் மதிப்பற்றது, நம்பகத்தன்மையற்றது” என்று அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர்களின் கொள்கை வன்முறையை சார்ந்தே அமைந்துள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f9eac9a-6ede-402c-a19d-4db00b9da126/26-6a5c10d121246.webp' /></p><p>அமெரிக்கா தனது ஒப்பந்தப் பொறுப்புகளை மீறி, இராணுவ தளங்கள் மற்றும் முக்கிய வசதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>

இதனால் ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நீர்வழி, தற்போது உலக பொருளாதாரத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.</p><p></p><p>மொஜ்தபா கமேனி, “அமெரிக்காவின் கையொப்பம் எந்த மதிப்பும் இல்லை. அவர்கள் ஒப்பந்தங்களை மீறுவது வழக்கமாகிவிட்டது. இதற்கு ஈரான் தக்க பதில் அளிக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
</p><p>
இந்த நிலைமை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார சிக்கல்கள் அதிகரிக்கக்கூடும்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T23:46:52+00:00</updated>
        </entry>
    </feed>
