<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-13T06:01:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சதம் விளாசிய வீராங்கனைகள்: அயர்லாந்திற்கு எதிரான தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-west-indies-win-odi-series-vs-ireland-1783920643"></link>
            <id>https://news.lankasri.com/article/women-west-indies-win-odi-series-vs-ireland-1783920643</id>
            <summary type="text">மகளிர் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியது.&amp;nbsp;இரண்டாவது ஒருநாள் போட்டி 

மகளிர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியது.&nbsp;</p><h2>இரண்டாவது ஒருநாள் போட்டி</h2><p> 

மகளிர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ப்ரெடியில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bb3d407-8de4-42dc-b7a9-e6bb4ed478d4/26-6a547af9120ed.webp' /></p><p></p><p>

முதலில் ஆடிய அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ஓட்டங்கள் எடுத்தது. ஏமி ஹன்டர் 67 ஓட்டங்களும், ரெபெக்கா 57 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 38.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ஹேலே மேத்யூஸ்,&nbsp;ஸ்டாஃபானி&nbsp;சதம் </h2><p>
அணித்தலைவர் ஹேலே மேத்யூஸ் (Hayley Matthews) 94 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களும், ஸ்டாஃபானி டெய்லர் (Stafanie Taylor) 100 ஓட்டங்களும் குவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a992d783-a9ef-439e-b069-10f3fc875400/26-6a547af863632.webp' /></p><p>

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/290a8260-9d48-43d2-bbb4-96774072d4a9/26-6a547af7b2d04.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef8a0940-504d-448f-a82b-62b0679aff3d/26-6a5478e4238b9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p> 
</p>]]></content>
            <updated>2026-07-13T05:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லைகளில் நிலவும் குழப்பம்: பிரான்சும் பிரித்தானியாவும் எடுத்துள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-uk-solution-for-avert-travel-chaos-border-1783919164"></link>
            <id>https://news.lankasri.com/article/france-uk-solution-for-avert-travel-chaos-border-1783919164</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகம் செய்த Entry/Exit System (EES) என்னும் திட்டம் முழுமையாக அமுலுக்கு வந்துள்ளது அனைவரும் அறிந்ததே.

Entry/Exit System (EES)...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகம் செய்த Entry/Exit System (EES) என்னும் திட்டம் முழுமையாக அமுலுக்கு வந்துள்ளது அனைவரும் அறிந்ததே.</p><h3>

Entry/Exit System (EES)
</h3><p>
Entry/Exit System (EES) திட்டத்தின்படி, ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் குறுகிய கால பயணத்துக்காக பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், எல்லையில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c62cc62e-b5d4-450e-ab56-971d4156db1a/26-6a54723d88e36.webp' /></p><p>

விடயம் என்னவென்றால், இப்படி ஏராளமானோரின் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்யவேண்டியுள்ளதால் அதற்கு அதிக நேரம் பிடிக்கிறது.</p><p>

இதனால், பயணிகள் எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. கால தாமதத்தால் தங்கள் விமானத்தை தவறவிடுபவர்களும் இருக்கிறார்கள்.&nbsp;</p><p></p><h3>

பிரான்சும் பிரித்தானியாவும் எடுத்துள்ள முடிவு</h3><p>

எல்லையில் நிலவும் இந்த குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, EES திட்டத்தை ரத்து செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், அதை ஏற்க ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6be7f3a9-ebae-42c1-826b-e8a956506dba/26-6a54723e3bc00.webp' /></p><p>
இந்நிலையில், அடுத்த வார இறுதியிலிருந்து கோடை விடுமுறை துவங்குவதால், சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அதனால் எல்லைகளில் மேலும் கூட்டம் அதிகரிக்கும், குழப்பமும் அதிகரிக்கும்.
</p><p>
ஆகவே, இந்த குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக எல்லைகளில் அதிக அலுவலர்களை பணிக்கு அமர்த்த பிரான்சும் பிரித்தானியாவும் முடிவு செய்துள்ளன.</p><p>

அதற்காக, பிரித்தானியா 20 மில்லியன் பவுண்டுகள் செலவிட இருப்பதாக பிரித்தானிய போக்குவரத்துச் செயலரான ஹெய்டி அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஆக, எல்லைகளில் பாஸ்போர்ட், புகைப்படம் மற்றும் கைரேகைகளை சோதிக்கும் அலுவலர்களை அதிகப்படுத்துவதன் மூலம் தாமதத்தைக் குறைக்கவும், குழப்பங்களைத் தவிர்க்கவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T05:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நரைமுடியை கருப்பாக்க உதவும் காபி பொடி.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/coffee-hairpack-for-grey-hair-in-tamil-1783919469"></link>
            <id>https://news.lankasri.com/article/coffee-hairpack-for-grey-hair-in-tamil-1783919469</id>
            <summary type="text">பொதுவாக அனைவருக்கும் முடி உதிர்தல், வறண்ட முடி, பொடுகு மற்றும் நரைமுடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.

அதேபோன்று, இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக அனைவருக்கும் முடி உதிர்தல், வறண்ட முடி, பொடுகு மற்றும் நரைமுடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.</p><p>

அதேபோன்று, இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
</p><p>
அந்தவகையில், நரைமுடியை நிரந்தமாக கருப்பாக்க காபி தூளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>
தேவையான பொருட்கள்
</h2><ul><li>
காபி பவுடர்- 2 ஸ்பூன்
</li><li>தேன்- 1 ஸ்பூன்
</li><li>தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
</li></ul><h2>
எப்படி பயன்படுத்துவது?</h2><p>

முதலில் ஒரு கிண்ணத்தில் காபி பவுடர், தேன், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.</p><p>

பின் இந்த பேஸ்ட்டை முடியின் வேர்கள் முதல் நுனி வரை தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டுவிடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/855d0d6f-2fb2-4010-a617-df3b671ff67b/26-6a54736fb9edb.webp' /></p><p>

அடுத்து மென்மையான ஷாம்பூ கொண்டு தலைமுடியை நன்றாக அலசிக்கொள்ளலாம்.
</p><p>
இந்த கலவையை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் நரைமுடி பிரச்சனை நிரந்தமாக குணமாகும்.
</p><p>
மேலும், தலைமுடி மென்மையாக மற்றும் ஆரோக்கியமாக மாற உதவும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T05:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்ஸர் மழைபொழிந்த நிக்கோலஸ் பூரன்! 44 பந்துகளில் 86 ஓட்டங்கள் விளாசல்..தவறிய வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nicholas-pooran-86-vs-washington-freedom-1783914231"></link>
            <id>https://news.lankasri.com/article/nicholas-pooran-86-vs-washington-freedom-1783914231</id>
            <summary type="text">மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்தின் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் MI நியூயார்க் அணியை வீழ்த்தியது.&amp;nbsp;நிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்தின் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் MI நியூயார்க் அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>நிக்கோலஸ் பூரன்&nbsp;ருத்ரதாண்டவம் </h2><p>

வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் MI நியூயார்க் அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் போட்டி நேற்று நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae3eb63-7fe5-4ece-bf70-9b718fa3ab12/26-6a5460712f665.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய MI நியூயார்க்கில் அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) ருத்ரதாண்டவம் ஆடினார்.
</p><p>
மொத்தம் 44 பந்துகளை எதிர்கொண்ட அவர், 8 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>கோஸ்,&nbsp;ரவீந்திரா&nbsp;அரைசதம் </h2><p>
இதன்மூலம் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது. நெத்ராவால்கர், பென் ட்வர்ஷுய்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
</p><p>
பின்னர் ஆடிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 18.3 ஓவர்களில் 190 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆன்ரிஸ் கோஸ் 96 (54) ஓட்டங்களும், ரச்சின் ரவீந்திரா 60 (30) ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/308a69ff-4662-4d60-9ace-a17d992a8f9b/26-6a5460708207f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T03:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் உலகளாவிய உணவுப் பஞ்சம் ஏற்படும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/super-el-nino-global-food-shock-1783874538"></link>
            <id>https://news.lankasri.com/article/super-el-nino-global-food-shock-1783874538</id>
            <summary type="text">இந்த ஆண்டு ஏற்படக்கூடிய &#039;சூப்பர்&#039; எல் நினோ வானிலைச் சுழற்சியானது, உலகளாவிய உணவு விலைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு ஏற்படக்கூடிய 'சூப்பர்' எல் நினோ வானிலைச் சுழற்சியானது, உலகளாவிய உணவு விலைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><h2>பேரழிவுகரமான வறட்சி</h2><p>
</p><p>இந்த விலை உயர்வு 2028-ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஈரான் போரினால் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், </p><p>புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய தீவிர வானிலைச் சூழலால் விநியோகம் ஒரே நேரத்தில் இரண்டு அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4b5c3d7-694e-459d-94de-24c3f2ed063b/26-6a53cacfba036.webp' /></p><p>
</p><p>காற்றின் திசை மற்றும் வேகத்தில் ஏற்படும் மாற்றங்களால், வெப்பமான நீர் மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பகுதி முழுவதும் பரவும்போது உருவாகும் 2026-27 ஆம் ஆண்டிற்கான 'எல் நினோ' நிகழ்வு குறித்து விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். </p><p>கடுமையான வெப்ப அலைகள், பெருவெள்ளம் மற்றும் கடும் புயல் சூழலைத் தூண்டக்கூடிய மிகவும் தீவிரமான நிகழ்வாக உருவெடுப்பதற்கான, வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பை சூப்பர் எல் நினோ கொண்டுள்ளது.
</p><p>உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் ஏற்கனவே வாழ்க்கைச் செலவு உயர்வால் சிரமங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், தீவிரமான எல் நினோ நிகழ்வு அந்த நெருக்கடியை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். </p><p>அத்துடன், மீண்டும் ஒரு பணவீக்க அதிர்ச்சி ஏற்படக்கூடும் என்ற சூழல் மத்திய வங்கிகளை நிலைகுலையச் செய்வதோடு, வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர் மட்டத்திலேயே வைத்திருக்கப்படலாம் என்ற கவலையையும் அதிகரிக்கிறது.</p><p></p><p> </p><p>ஐரோப்பாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெப்ப அலைகள், காலநிலை அடிப்படை நிலை ஏற்கனவே மாறி வருவதை நினைவூட்டுகின்றன. எல் நினோ புவி வெப்பமயமாதலின் விளைவுகளைப் பெருக்குவதால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இது மேலும் ஒரு புதிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>இயற்கையாக நிகழும் இந்த எல் நினோ நிகழ்வு, அறுவடை மற்றும் உணவு விநியோகக் கட்டமைப்பைப் பாதித்த வரலாற்றைக் கொண்டுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் முன்பு, வரலாற்றிலேயே மிகவும் கடுமையானதாக இருந்திருக்கக்கூடிய ஒரு எல் நினோ நிகழ்வானது, சீனா, தெற்கு ஆப்பிரிக்கா, பிரேசில், எகிப்து மற்றும் இந்தியா முழுவதும் பேரழிவுகரமான வறட்சிகளை ஏற்படுத்தியது. </p><p>காலனித்துவ ஆட்சியால் மோசமடைந்த சூழலில் ஏற்பட்ட பஞ்ச நிலைமைகளால் லட்சக்கணக்கானோர் மரணமடைந்தனர்; இதில் 1876-78 காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்தனர். </p><p>1981-82, 1996-97, 2015-16 மற்றும் 2023-24 ஆகிய காலகட்டங்களில் நிகழ்ந்த எல் நினோ நிகழ்வுகள், பதிவானவற்றிலேயே மிகவும் தீவிரமானவற்றுள் சிலவாகும். </p><p>இந்த நிலையில், நிபுணர்கள் தரப்பு 2026-27 எல் நினோ காலகட்டம் இன்னும் தீவிரமானதாக அமையக்கூடும் என்பதையும், இது உலகெங்கிலும் பயிர் விளைச்சலையும் உணவு விநியோகத்தையும் பாதிக்கும் வகையிலான வறட்சி மற்றும் வெள்ள அபாயத்தை அதிகரிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p> தற்போது உருவாகியுள்ள இந்த எல் நினோவின் தீவிரத்தன்மை, உலகளாவிய உணவுப் பொருட்களின் விலையில் 15.8 சதவீத உயர்வை ஏற்படுத்தக்கூடும். இது ஐரோப்பா உள்ளிட்ட உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்; குறிப்பாக யூரோ மண்டலத்தில் உணவுப் பொருட்களின் விலை 1.3 சதவீதம் வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.</p><h2>பாதிக்கத் தொடங்கியுள்ளது</h2><p> </p><p>இருப்பினும், காலநிலை தாக்கத்தின் செலவானது உலகளாவிய உணவு விநியோகத்தில் பரவும் விதத்தின் காரணமாக, அதன் முழுமையான விளைவை உணர நேரம் எடுக்கும். இதன் விளைவுகள் முழுமையாக வெளிப்பட 2028-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி வரை ஆகலாம் என்று Goldman Sachs தெரிவித்துள்ளது.</p><p> பொதுவாக எல் நினோ நிகழ்வுகள் தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளில் வறட்சி அபாயங்களை அதிகரிக்கின்றன, ஆனால் தெற்கு பிரேசில், அர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகின்றன. </p><p>ஈரான் போரினால் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளே, எல் நினோவால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d397cbed-a494-4175-8a0f-d102dca2d320/26-6a53cad0751af.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், எல் நினோ ஏற்கனவே பயிர்களைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் பருவமழை வறண்டு, சில பகுதிகளில் வழக்கமான மழையில் 25 சதவீதம் மட்டும், மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் 50 சதவீதம் மட்டும் பெய்து, கோதுமை, அரிசி மற்றும் கரும்பு விநியோகத்தைப் பாதிக்கக்கூடும். </p><p>இதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்பட வாய்ப்புள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஏற்படும் வறட்சியானது, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருளான பாமாயில் விநியோகத்தைப் பாதிக்கக்கூடும் என்றும், அதேவேளையில் காபி மற்றும் கோகோ அறுவடைகளும் பாதிக்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். </p><p>வட அமெரிக்காவில், எல் நினோவின் தாக்கம் குளிர்காலத்தில் மிகவும் வலுவாக இருக்கும், அதே சமயம் ஐரோப்பாவில் இந்த வானிலை நிகழ்வால் நிலைமைகள் பாதிக்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
</p><p>மூன்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு வலுவான எல் நினோ நிகழ்வானது உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளை 9 சதவீதம் வரை உயர்த்தக்கூடும் என்றும், சோயாபீன்ஸ், மக்காச்சோளம் மற்றும் அரிசி ஆகியவற்றில் மிகப்பெரிய விலை உயர்வுகள் காணப்படும் என்றும் ஐரோப்பிய மத்திய வங்கி மதிப்பிட்டிருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T03:05:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் அதி தீவிர எச்சரிக்கையின் கீழ் 22 மில்லியன் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/22-million-people-maximum-alert-1783902230"></link>
            <id>https://news.lankasri.com/article/22-million-people-maximum-alert-1783902230</id>
            <summary type="text">பிரான்சில் மே மாதத்திற்குப் பிறகு நாட்டைத் தாக்கிய மூன்றாவது வெப்ப அலையின் பிடியில் நாட்டின் கால் பகுதி மக்கள் தவிக்கும் நிலையில், முக்கிய அறிவிப்புகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் மே மாதத்திற்குப் பிறகு நாட்டைத் தாக்கிய மூன்றாவது வெப்ப அலையின் பிடியில் நாட்டின் கால் பகுதி மக்கள் தவிக்கும் நிலையில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.</p><h2>24 நிர்வாகப் பிரிவுகள்</h2><p>
</p><p>இந்த வார இறுதியில் பிரான்சில், ஈபிள் கோபுரம் மற்றும் பாரிஸின் பிற முக்கிய இடங்கள் முன்கூட்டியே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab491805-63da-4d12-ba8a-7c733c5b2ae6/26-6a54323c7d701.webp' /></p><p> வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், 22.2 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டின் இருபத்து நான்கு நிர்வாகப் பிரிவுகள், ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்ட உச்சகட்ட எச்சரிக்கை நிலைக்கு உட்படுத்தப்பட்டன. </p><p>அதிக வெப்பநிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈபிள் கோபுரம் பிற்பகல் 4 மணிக்கே மூடப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>ஆண்டுதோறும் 70 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் 1,083 அடி உயரமுள்ள ஈபிள் கோபுரம், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பருவக்காலங்களில் வழக்கமாக நள்ளிரவு வரையிலும் திறந்திருக்கும்.</p><p></p><p> </p><p>பிரெஞ்சுத் தலைநகரின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகங்களில் இரண்டான லூவ்ர் (Louvre) மற்றும் மியூஸே டி ஓர்சே (Musée d’Orsay) ஆகியவை இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. </p><p>உலகில் அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகமான லூவர், வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் திங்கட்கிழமை வரை மூடப்படும் என்று வியாழக்கிழமை அறிவித்தது. </p><p>இதனிடையே, கடுமையான வெப்பம் காரணமாக, சனிக்கிழமை மாலை 5 மணி முதல் புதன்கிழமை வரை மியூஸே டி'ஓர்சே (Musée d’Orsay) அருங்காட்சியகம் முன்னதாகவே மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb32d05-e515-44a6-b15b-f1d2a0d75ebb/26-6a54323df075c.webp' /></p><p> </p><p>தீவிர வெப்பம் காரணமாக, 'டூர் டி பிரான்ஸ்' (Tour de France) மிதிவண்டிப் பந்தயத்தின் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 185.5 கி.மீ தூரப் பிரிவில், மலைப்பாங்கான ஒரு பகுதிப் பாதையை நீக்கி 30 கி.மீ தூரம் குறைக்கப்படுவதாகப் பந்தய ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்; இப்போட்டியின் வரலாற்றிலேயே இத்தகைய முடிவு எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p><h2>மனித நடவடிக்கைகளால்</h2><p> </p><p>பிரான்ஸ் முழுவதும் உள்ள பல நகரங்கள், வறண்ட வானிலையால் தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், ஜூலை 14 அன்று கொண்டாடப்படும் தேசிய விடுமுறை நாளான 'பாஸ்டில் தின' (Bastille Day) வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன. </p><p>இதனிடையே, பத்து காட்டுத்தீச் சம்பவங்களில் ஒன்பது மனித நடவடிக்கைகளால் ஏற்படுபவை என்று எச்சரித்த பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், விழிப்புடன் இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa39635b-ca28-4d27-942c-9c888a03f09f/26-6a54323d4b374.webp' /></p><p> </p><p>ஒரு நொடி கவனக்குறைவு கூட குடும்பங்களை ஆபத்தில் ஆழ்த்தலாம், நம்மைப் பாதுகாப்பவர்களை ஆபத்துக்குள்ளாக்கலாம் மற்றும் நமது கிராமப்புறச் சூழலை அழிக்கலாம் என அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஜூன் மாதத்தில் நிலவிய வெப்ப அலையின்போது 2,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மரணங்களும், மே மாத இறுதியில் நிலவிய அதிக வெப்பத்தின்போது 300 மரணங்களும் பிரான்ஸில் பதிவாகியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T00:22:34+00:00</updated>
        </entry>
    </feed>
