<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-14T04:27:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த 100க்கும் அதிகமான மருத்துவர்கள் பணியிடை நீக்கம்: துருக்கி அரசு அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkey-suspended-100-doctors-for-caesarean-treatm-1784002344"></link>
            <id>https://news.lankasri.com/article/turkey-suspended-100-doctors-for-caesarean-treatm-1784002344</id>
            <summary type="text">துருக்கியில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் பணிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>துருக்கியில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2> மருத்துவர்கள் பணியிடை நீக்கம்</h2><p>துருக்கியில் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சைக்கான முறையான காரணங்கள் ஏதுவும் இல்லாமல் அதிகமான மகப்பேறு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இதன்படி, சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அபராதம், கட்டாய மறு பயிற்சி மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fbbaf5c-b257-4774-9b4a-7b01f7b23e40/26-6a55b729e1654.webp' /></p><p> கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனியார் மருத்துவமனைகளில் எந்தவொரு முறையான காரணங்கள் இன்றி மகப்பேறு அறுவை சிகிச்சை செய்வதற்கு தடை விதித்து புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p> இந்நிலையில் தான் துருக்கிய அரசின் இந்த சமீபத்திய உத்தரவானது வெளியாகியுள்ளது.</p><p> துருக்கி அரசின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம், 2023ம் ஆண்டு வெளியான தரவுகளின் படி, துருக்கி தான் மகப்பேறு அறுவை சிகிச்சையின் விகிதங்களில் அதிகமாக இருந்தது.</p><p></p><p> ஒவ்வொரு 1000 பிரசவங்களில் 615 அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாட்டில் அறுவை சிகிச்சை எண்ணிக்கையை குறைக்கும் விதமாக அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98ce6c2e-4275-48f1-b75c-9adecc8cddea/26-6a55b72a9837d.webp' /></p><h2>மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு</h2><p>இந்நிலையில் துருக்கிய அரசின் மறு பயிற்சி உத்தரவுக்கு அந்நாட்டு மருத்துவ சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.</p><p> மேலும், சுகப் பிரசவத்திற்கு 12 மணி நேரம் வரை ஆகும் நிலையில், அறுவை சிகிச்சைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.</p><p> அத்துடன் பிரசவ கால சிக்கல்கள் மற்றும் சட்ட பிரச்சினைகளில் இருந்து தவிர்க்கவே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முறைகளை தேர்ந்தெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-14T04:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளின் பழிக்குப் பழி தாக்குதல்: சவுதி சர்வதேச விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-attacked-saudi-international-airport-1784000490"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-attacked-saudi-international-airport-1784000490</id>
            <summary type="text">சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் விமான நிலையம் மீது தாக்குதல்
சமீபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> ஏமன் விமான நிலையம் மீது தாக்குதல்</h2><p>
சமீபத்தில் ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரில் அமைந்துள்ள சனா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p> ஈரானிய விமானம் ஒன்று சனா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்ததை அடுத்து தாக்குதல் நடத்தியதாக ஏமன் அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து அந்த விமானம் ஹுதைதா விமான நிலையத்தில் தரையிறங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3fc8cf-fcb5-4153-b3ee-72dd1466baf5/26-6a55afebd2bb7.webp' /></p><p>ஆனால் இந்த தாக்குதலை சவுதி அரேபியா நடத்தியதாக ஹவுதி அமைப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது.</p><p></p><h2> ஹவுதிகளின் பழிக்குப் பழி தாக்குதல்</h2><p>இந்நிலையில், சனா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிக்குப் பழி வாங்கும் விதமாக சவுதியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹவுதி படையினர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.</p><p> கடந்த 2022ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த போர்நிறுத்த உடன்படிக்கையின் பிறகு, சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b522ae6c-02c6-498b-b7fa-6f27d90640aa/26-6a55afec82b64.webp' /></p><p> இந்த தாக்குதலை ஹவுதிகளின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>டெலிகிராமில் இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், சனா விமான நிலையம் மீதான முற்றுகை நீங்கும் வரை, சவுதி அரேபியாவின் வான்வெளியை சர்வதேச சிவில் விமானங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.</p><p> இதனிடையே ஹவுதிகள் நடத்திய தாக்குதலில், அப்ஹா சர்வதேச விமான நிலையத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T03:41:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை காலம்! 50 ஆண்டுகால மைல்கல் கடந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/record-broken-heatwave-in-uk-after-50-years-1783943559"></link>
            <id>https://news.lankasri.com/article/record-broken-heatwave-in-uk-after-50-years-1783943559</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வரலாற்றிலேயே மிகவும் அதிக வெப்பநிலை கொண்ட காலமாக பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.50 ஆண்டுகளுக்கு முன்பு

1976ஆம் ஆண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வரலாற்றிலேயே மிகவும் அதிக வெப்பநிலை கொண்ட காலமாக பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>50 ஆண்டுகளுக்கு முன்பு</h2><p>

1976ஆம் ஆண்டு பிரித்தானியாவின் வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க கோடைக்காலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14f786f4-b910-4713-bee9-26098f2b1088/26-6a54d2c5283c7.webp' />&nbsp;</p><p></p><p>

அந்த ஆண்டில், அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு 14 நாட்கள் தொடர்ச்சியாக 30 டிகிரி செல்சியஸுக்கும் மேல் இருந்தது.</p><p>


ஆனால், தற்போது 15 நாட்களைக் கடந்து 50 ஆண்டுகால மைல்கல்லை பிரித்தானியா தாண்டியள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

the University of Reading-யின் வானியல் ஆய்வு மையம் 1908ஆம் ஆண்டு முதல் வெப்பநிலை குறித்த தரவுகளை பதிவு செய்து வருகிறது. </p><h2> 

முக்கியமான விடயத்தை நமக்கு உணர்த்துகிறது</h2><p>இதுகுறித்து The University of Reading-ஐ சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ சார்ல்டன்-பெரெஸ் கூறுகையில்,

"அரை நூற்றாண்டு காலமாக, ஒவ்வொரு வெப்பமான கோடைக்காலத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவுகோலாக 1976ஆம் ஆண்டு விளங்கியது. இப்போது அந்த இடத்தை 2026ஆம் ஆண்டு பிடித்துள்ளது.</p><p>1976யில் பதிவான 14 நாட்களை முறியடித்து, இந்த ஆண்டில் இதுவரை 30 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம் நிலவிய 15 நாட்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம்; மேலும் கோடைக்காலம் முடிவடைய இன்னும் ஆறு வாரங்கள் உள்ளன. இது ஒரு முக்கியமான விடயத்தை நமக்கு உணர்த்துகிறது" என்றார்.
</p><p>
 
இந்த வாரமும் வெப்பமான வானிலை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில நாட்களில் புதிய உச்சபட்ச சாதனை ஒன்று பதிவாக வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றன.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5b44a5-8724-459c-a94d-e93b1852c645/26-6a54d5dda7c81.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T03:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்றாவது இரவு தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா... ஹார்முஸ் முற்றுகை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/third-night-of-strikes-on-iran-1783988918"></link>
            <id>https://news.lankasri.com/article/third-night-of-strikes-on-iran-1783988918</id>
            <summary type="text">ஈரான் மீது கடல்வழி முற்றுகையை மீண்டும் அமுல்படுத்தப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே, அமெரிக்கா தொடர்ந்து மூன்றாவது இரவாக அந்நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது கடல்வழி முற்றுகையை மீண்டும் அமுல்படுத்தப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே, அமெரிக்கா தொடர்ந்து மூன்றாவது இரவாக அந்நாட்டின் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><h2>கடுமையாகத் தாக்குவோம்</h2><p>
</p><p>அத்துடன், ஈரான் அறிவித்திருந்த கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை, இனி அமெரிக்கா முன்னெடுத்து, பாதுகாப்பான பயணத்திற்காகக் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b51054d1-41c4-41d3-b660-d3cf18fd55aa/26-6a55836816e80.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், தற்போது முன்னெடுக்கப்படும் இந்தத் தாக்குதலானது ஈரானியப் படைகளுக்குக் கடுமையான இழப்பை ஏற்படுத்தும் என்றும் ஹார்முஸ் நீரிணையில் அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் அவர்களின் திறனைக் குறைக்கும் என்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, இன்று இரவு அவர்களை மிகக் கடுமையாகத் தாக்குவோம், நாளையும் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம், அதைப்பற்றி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
</p><p>பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான போருக்கு முன்னதாக இருந்தது போலவே, ஹார்முஸ் நீரிணை எவ்விதக் கட்டணமும் இன்றி அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா இதுவரை கூறி வந்துள்ளது.</p><p></p><p> </p><p>அமெரிக்காவோ அல்லது ஈரானோ கட்டணம் வசூலிக்க முயற்சிப்பது, கப்பல் போக்குவரத்து சுதந்திரம் குறித்த உலகளாவிய நெறிமுறைகளை மீறுவதோடு, அப்பிராந்தியத்தையும் தாண்டி மேலும் பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. </p><p>இந்த நிலையில், ஈரான் மீது மீண்டும் தாக்குதலை அமெரிக்கா தொடங்கியதை அடுத்து, சர்வதேச அளவுகோலாகக் கருதப்படும் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை திங்களன்று 7.8 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 81.92 டொலராக இருந்தது; இருப்பினும், இது போரின் உச்சக்கட்டத்தில் எட்டப்பட்ட 120 டொலர் விலையை விட மிகவும் குறைவாகவே உள்ளது.
</p><p>முன்னதாக திங்களன்று, ஹார்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகள் மீதும் 20 சதவீத சுங்க வரியை அமெரிக்கா கோரும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.</p><h2>தடை இருக்காது</h2><p> </p><p>மட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ஹார்முஸ் நீரிணையின் பாதுகாவலராக அமெரிக்கா அறியப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இஸ்ரேல் ஆதரவுடன் ஈரானுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து, ​​அடிக்கடி வெற்றி பெற்றதாகக் கூறுவது உட்பட, ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள ஈரான் கெஞ்சுவதாகவும் ட்ரம்ப் பலவிதமான தற்பெருமைகளையும் அச்சுறுத்தல்களையும் முன்வைத்துள்ளார்; அடிப்படையில், இவை எதும் உண்மை அல்ல என்பதும் வெறும் வாய்ச்சவடால் என்றே தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b30ce64e-ebac-4772-97b3-a0d96df0d223/26-6a558368da076.webp' /></p><p> </p><p>இதனிடையே, அமெரிக்கக் கடற்படையின் தலைமையிலான கூட்டு கடல்சார் தகவல் மையம் திங்கள்கிழமை மாலை வெளியிட்ட அறிவிப்பில், ஈரான் மீதான முற்றுகையை, அனைத்துத் துறைமுகங்கள், எண்ணெய் முனையங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் அமெரிக்கா அமுல்படுத்தத் தொடங்கும் என்று தெரிவித்தது. </p><p>மட்டுமின்றி, ஈரான் அல்லாத இடங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் ஹார்முஸ் நீரிணை வழியான நடுநிலையான போக்குவரத்திற்குத் தடை இருக்காது என்றும் அந்த மையம் தெரிவித்தது. ஆனால், நடைமுறையில் அமெரிக்காவின் கடற்படை இதைச் செய்வது எவ்வளவு எளிதாக இருக்கும் என்பது தெளிவாக இல்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T02:34:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணைகளிலிருந்து ஐரோப்பாவைப் பாதுகாக்க... அமைந்த 10 நாடுகள் கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/coalition-protect-europe-from-1783977410"></link>
            <id>https://news.lankasri.com/article/coalition-protect-europe-from-1783977410</id>
            <summary type="text">ஐரோப்பாவை பாலிஸ்டிக் ஏவுகணைகளிலிருந்து பாதுகாக்க ஒரு கூட்டணியை அமைப்பதாக உக்ரைனும் மேலும் ஒன்பது நாடுகளும் திங்களன்று அறிவித்துள்ளன.தற்காப்பு கட்டமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவை பாலிஸ்டிக் ஏவுகணைகளிலிருந்து பாதுகாக்க ஒரு கூட்டணியை அமைப்பதாக உக்ரைனும் மேலும் ஒன்பது நாடுகளும் திங்களன்று அறிவித்துள்ளன.</p><h2>தற்காப்பு கட்டமைப்பு</h2><p>
</p><p>நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வல்லரசு ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பை எதிர்த்துப் போராடி வரும் உக்ரைனின் அனுபவத்தைப் பயன்படுத்தவும் முடிவு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c206f106-1bc2-441b-85ab-077dc8ce0c43/26-6a5558e3e136d.webp' /></p><p>ஐரோப்பாவிற்காக ஒரு பகிரப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்புத் திறனை உருவாக்குவதே எங்கள் இலக்கு என்று, பாரிஸில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது அந்த 10 நாடுகளும் ஓர் அறிக்கையில் தெரிவித்தன. </p><p>தனது நாட்டைத் தாக்கிச் சிதைத்து, ஐரோப்பாவின் பிற பகுதிகள் மீது குறிவைத்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை உருவாக்குவதில் உதவுமாறு, ஜெலென்ஸ்கி இருபத்து நான்கு தலைவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார். </p><p>இந்த நிலையில், குரூஸ் ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களைக் காட்டிலும் இடைமறித்துத் தடுப்பதற்கு மிகவும் கடினமான பாலிஸ்டிக் ஏவுகணைகளால் ஏற்படும் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைத் தாங்கள் அங்கீகரிப்பதாக ஜெலென்ஸ்கியும் டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் தெரிவித்தனர்.</p><p></p><p> </p><p>மேலும், எதிர்கால ஏவுகணை அச்சுறுத்தல்களைத் தடுத்து முறியடிக்க, ஒருங்கிணைந்த ஏவுகணைத் தற்காப்பு கட்டமைப்பு வடிவிலான ஒரு விரிவான தீர்வு ஐரோப்பாவைப் பாதுகாப்பதற்கு அவசியமென நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் 10 தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.</p><h2>தனித்துவமான அனுபவம்</h2><p> </p><p>மட்டுமின்றி, ரஷ்யா தொடுத்த ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளின் மூலம் உக்ரைன் பெற்ற தனித்துவமான அனுபவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். </p><p>ஆனால், பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான காலக்கெடு எதுவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை; மேலும், இத்திட்டத்தில் பிற நாடுகளும் இணைய வாய்ப்புள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba4ff7b1-abdc-425a-a4d6-2287041d0c1b/26-6a5558e4ae87e.webp' /></p><p>
</p><p>இதனிடையே, பரவலான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்திய சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் முனையங்கள் மீதான உக்ரைனின் சமீபத்திய தொலைதூரத் தாக்குதல்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்களன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.</p><p>மேலும், அவர்கள் ரஷ்யப் பிரதேசத்தைத் தாக்க முயற்சிக்கும் ஒவ்வொரு இடத்திலும், நாங்கள் அதேபோல் பதிலடி கொடுப்போம், ஆனால் எங்கள் தாக்குதல்கள் பல மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று புடின் கூறியுள்ளார். </p><p>இந்த நிலையில், ஐரோப்பிய வெளிவிவகார அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் தனியாகச் சந்தித்து, உக்ரைனின் தேவைகள் மற்றும் ஐரோப்பியக் கண்டத்திற்கு ரஷ்யா விடுக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/402ae082-d69c-4b3f-9b35-d920f527b604/26-6a5558e55f0ed.webp' /></p><p> </p><p>குளிர்காலத்திற்கு முன்னதாக, தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளுடனான முயற்சிகளைத் துரிதப்படுத்த ஜெலென்ஸ்கி தீவிரமாக உள்ளார். </p><p>அக்குளிர்காலத்தில் உக்ரேனியர்களுக்கு மின்சாரம், வெப்பம் மற்றும் தண்ணீர் கிடைப்பதைத் தடுப்பதற்காக ரஷ்யா வழக்கமாகத் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T23:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[எலான் மஸ்க் நெருக்கடியில்... சரியும் பங்கு விலை: குறையும் சொத்து மதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/musk-net-worth-drops-1783984567"></link>
            <id>https://news.lankasri.com/article/musk-net-worth-drops-1783984567</id>
            <summary type="text">ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அவற்றின் ஆதாயங்களை இழந்து, பொதுப் பங்கு வெளியீட்டு விலையை நெருங்கிச் சரிந்ததால், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 900 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அவற்றின் ஆதாயங்களை இழந்து, பொதுப் பங்கு வெளியீட்டு விலையை நெருங்கிச் சரிந்ததால், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 900 பில்லியன் டொலருக்கும் கீழே குறைந்தது.</p><h2>சமீபத்திய சரிவு</h2><p>
</p><p>திங்கட்கிழமை பிற்பகல் நிலவரப்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.45 சதவீதம் சரிந்து, அதன் 135 டொலர் ஐபிஓ விலையை நெருங்கி, 140 டொலருக்கு சற்றுக் குறைவாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0622bfb3-b03b-4cc4-bc89-2def620cd065/26-6a5572c9d3e69.webp' /></p><p> </p><p>செயற்கை நுண்ணறிவு மற்றும் ராக்கெட் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், கடந்த மாதம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் 75 பில்லியன் டொலர் நிதியைத் திரட்டி அமோகமான அறிமுகத்தைக் கண்டது. </p><p>இந்த நிலையில், ஃபோர்ப்ஸின் நிகழ்நேரப் பில்லியனர்கள் பட்டியலில் உள்ள தரவுகளின்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனப் பங்கின் விலையில் ஏற்பட்ட சமீபத்திய சரிவு மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பில் சுமார் 37 பில்லியன் டொலரைக் குறைத்து, அவரது மொத்த சொத்து மதிப்பை 882.7 பில்லியன் டொலராக மாற்றியுள்ளது. </p><p>ஜூன் 12, 2026 அன்று பொதுப் பங்குச் சந்தையில் நுழைந்த பிறகு, ஸ்பேஸ்எக்ஸ் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்தது. சுமார் 1.8 டிரில்லியன் டொலர் மதிப்பீட்டுடன் அறிமுகமான இந்நிறுவனத்தின் மதிப்பு விரைவாக 2.7 டிரில்லியன் டொலருக்கும் அதிகமாக உயர்ந்தது; இதனால் சந்தை மதிப்பு அடிப்படையில் அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களை விடவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சிறிது காலம் அதிக மதிப்புடையதாகத் திகழ்ந்தது.</p><p></p><p> </p><p>டெஸ்லா மற்றும் எக்ஸ் ஆகிய நிறுவனங்களையும் வழிநடத்தும் மஸ்க், ஜூன் 16 அன்று உலகின் முதல் டிரில்லியன் டொலர் செல்வந்தராக உயர்ந்தார்; அன்று ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனப் பங்குகள் 225 டொலருக்கும் அதிகமாக உயர்ந்து சாதனை படைத்ததன் மூலம், அவரது மொத்த சொத்து மதிப்பு 1.45 டிரில்லியன் டொலராக அதிகரித்தது.</p><h2>பெரும்பாலும் நம்பிக்கை</h2><p> </p><p>அப்போதிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் பங்கின் விலை 38 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளதால், அவரது சொத்து மதிப்பும் பெருமளவு சரிந்துள்ளது.</p><p> அவரது சொத்து மதிப்பு கணிசமாகக் குறைந்திருந்தாலும், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தைத் தொடர்ந்து மஸ்க் தக்கவைத்துள்ளார்; இவருக்கு அடுத்தபடியாக, முறையே 290.7 பில்லியன் மற்றும் 268.1 பில்லியன் டொலர் சொத்து மதிப்பைக் கொண்ட கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be56768d-1dd4-4a3f-bcd0-77ead61eb369/26-6a5572caca0ab.webp' /></p><p> </p><p>
சமீபத்திய வாரங்களில் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் ஏற்றம் வேகம் குறைந்தபோதிலும், வால் ஸ்ட்ரீட் அந்தப் பங்கின் மீது பெரும்பாலும் நம்பிக்கையுடன் இருப்பதாக ஃபோர்ப்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>ரேமண்ட் ஜேம்ஸ் 800 டொலர் என்ற விலை இலக்கை நிர்ணயித்துள்ளது; இது 10 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான சந்தை மதிப்பைக் குறிக்கிறது.</p><p> FactSet தரவுகளின்படி, ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் மதிப்பு சராசரியாக 236 டொலராக இருக்கும் என்று தரகர்கள் எதிர்பார்க்கின்றனர்; இதில் Arete Research 401 டொலர், Morgan Stanley 300 டொலர் மற்றும் Goldman Sachs 205 டொலர் ஆகிய இலக்கு விலைகளை நிர்ணயித்துள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T23:14:44+00:00</updated>
        </entry>
    </feed>
