<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-14T17:18:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-drops-hormuz-tolls-1784046770"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-drops-hormuz-tolls-1784046770</id>
            <summary type="text">ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களும் ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தலாம் எனவும், வளைகுடா நாடுகளுடன் மிகப்பெரிய முதலீட்டு ஒப்பந்தங்களைச் செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களும் ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தலாம் எனவும், வளைகுடா நாடுகளுடன் மிகப்பெரிய முதலீட்டு ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><h2>முழுமையான முற்றுகை</h2><p>
தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல் போக்குவரத்திற்கும் ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d39e79a-4bbb-4cb9-9479-a07b4938a26e/26-6a566beee6681.webp' /></p><p> </p><p>அதற்குக் காரணம், அவர்களை முழுமையான அழிவை நோக்கிய பாதையில் இட்டுச் செல்லும் அவர்களின் பொய்யான, வன்முறை மற்றும் தீய எண்ணம் கொண்ட தலைமைதான் என்றார். </p><p>எனவே, ஈரானியத் துறைமுகங்களுக்கு வரும் அல்லது அங்கிருந்து வெளியேறும் கப்பல்கள், அல்லது ஈரானிய சரக்குகள் தொடர்பான பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது மட்டுமே அமெரிக்கா முழுமையான முற்றுகையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன், வளைகுடா நாடுகளுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள், அந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 20 சதவீதம் கட்டணம் விதிக்க வேண்டும் என்று தான் முந்தைய நாள் முன்மொழிந்திருந்த திட்டத்திற்கு மாற்றாக அமையும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>மேலும், மத்திய கிழக்குத் தலைவர்களுடனான மிகவும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், அமெரிக்காவிற்குச் செலுத்தப்பட வேண்டிய 20 சதவீத கட்டணத்திற்கு பதிலாக, பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடன் மேற்கொள்ளவிருக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தாம் முடிவு செய்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வர்த்தகம் மற்றும் முதலீடு</h2><p> </p><p>வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் முன்னெடுக்கும் முதலீடுகள் மிகப் பிரம்மாண்டமானவையாக இருக்கும்; அதே வேளையில், அவர்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் அவை மிகச் சிறந்தவையாகவும் அமையும். </p><p>அனைவருக்கும் தெரிந்தபடி, வரலாற்றிலேயே எந்தவொரு நாடும் செய்யாத அளவிற்கு அமெரிக்காவில் நாம் மிகப்பெரிய அளவிலான டொலர் முதலீடுகளைச் செய்துள்ளோம்; ஆனால் இந்த புதிய முதலீடுகள் அந்த அளவை இன்னும் அதிகரிக்கச் செய்யும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b303b350-73e4-463f-b13f-50a754220cb9/26-6a566befcd76f.webp' /></p><p> </p><p>இதன் விளைவாக, தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க அளவில் அமெரிக்காவிற்குள் குவியும்; இது அதிக ஊதியம் தரும் லட்சக்கணக்கான கூடுதல் அமெரிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும்! </p><p>அமெரிக்கா மீண்டும் வெற்றி பெற்று வருகிறது; முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெறுகிறது. 52,000 போராட்டக்காரர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்களை ஈரான் கொன்று குவித்த காலம் முடிந்துவிட்டது; எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது எனவும் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>ஆனால், வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் முதலீடு மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனவா அல்லது சந்தைப் போக்கை கட்டுப்படுத்த வழ்க்கமான ட்ரம்பின் வணிக உத்தியா என்பது உறுதி செய்யப்படவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T16:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் மீண்டும் WhatsApp-ல் ChatGPT., மெட்டாவிற்கு EU உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chatgpt-back-on-whatsapp-in-eu-1784042515"></link>
            <id>https://news.lankasri.com/article/chatgpt-back-on-whatsapp-in-eu-1784042515</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உத்தரவின் பேரில், ChatGPT மீண்டும் WhatsApp-ல் அறிமுகமாகியுள்ளது.கடந்த ஆறு மாதங்களுக்கு WhatsApp-ல் ChatGPT பயன்படுத்த முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உத்தரவின் பேரில், ChatGPT மீண்டும் WhatsApp-ல் அறிமுகமாகியுள்ளது.</p><p>கடந்த ஆறு மாதங்களுக்கு WhatsApp-ல் ChatGPT பயன்படுத்த முடியாமல் இருந்த நிலையில், ஜூலை 13, 2026 முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
Meta நிறுவனம், 2025 அக்டோபரில் WhatsApp Business API விதிகளை மாற்றி, ChatGPT, Microsoft Copilot போன்ற AI உதவியாளர்களை தடை செய்தது.

இதற்கு காரணமாக “சர்வர் சுமை அதிகரிப்பு” என விளக்கம் அளித்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a1c433e-f450-4d94-854f-ab948e02a519/26-6a56541582b8f.webp' /></p><p>ஆனால், விமர்சகர்கள் இதை Meta-வின் சொந்த AI-ஐ முன்னிறுத்தும் முயற்சி எனக் கூறினர்.

இதற்கு எதிராக, ஜூன் 9, 2026 அன்று EU, Meta-க்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து, WhatsApp API-யை மீண்டும் திறக்க கட்டாயப்படுத்தியது. </p><p>விதிகளை மீறினால் Meta-க்கு வருடாந்திர வருமானத்தின் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
</p><p>
இப்போது, EU பயனர்கள் WhatsApp-ல் 1-800-CHATGPT என்ற சரிபார்க்கப்பட்ட எண்ணின் மூலம் ChatGPT-ஐ நேரடியாகப் பயன்படுத்த முடிகிறது. இதில் உரையாடல், குரல் உள்ளீடு, படங்களைப் பதிவேற்றம், AI பட உருவாக்கம் போன்ற வசதிகள் WhatsApp-இல் கிடைக்கின்றன.</p><p></p><p>சில பயனர்கள், ChatGPT-ஐ பயன்படுத்திய பின் WhatsApp கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். OpenAI, “சரிபார்க்கப்பட்ட எண்ணை மட்டுமே பயன்படுத்துங்கள்” என அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T15:20:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஜ்தபா கமேனி 90 சதவீதம் போய்விட்டார்., ட்ரம்ப் அதிர்ச்சியூட்டும் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-claims-iran-leaders-killed-mojtaba-hit-1784041690"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-claims-iran-leaders-killed-mojtaba-hit-1784041690</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமாகும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் முக்கிய இராணுவத் தலைவர்கள் அழிக்கப்பட்டதாகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமாகும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் முக்கிய இராணுவத் தலைவர்கள் அழிக்கப்பட்டதாகவும், உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி 90 சதவீதம் போய்விட்டார் (90% gone) என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.</p><p>

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் கடற்படை, விமானப்படை, எதிர்வான்படை அனைத்தும் அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் Fox News-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67f027f6-0f63-44a2-97d8-7a48b5a5526e/26-6a5650dc4b112.webp' /></p><p>

“அவர்களின் சிறந்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கமேனி இல்லை” என அவர் கூறினார்.
</p><p>
மொஜ்தபா கமேனி, தந்தையின் மரணத்திற்குப் பின் ஈரானின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டனர். சமீபத்திய விமானத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்ததால், தந்தையின் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p></p><p>மேலும், ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீதான முற்றுகையை (Iranian blockade) அமுல்படுத்தும் என்றும், அந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் பாதுகாப்புக்காக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்தார்.
</p><p>
“ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும். ஈரானின் கப்பல்கள் மட்டும் தடுக்கப்படும். மற்ற நாடுகள் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம்” என Truth Social-ல் பதிவிட்டார்.</p><p>

இதற்கு பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “ஹார்முஸ் நீரிணையின் காவலர் எப்போதும் ஈரானே. அமெரிக்கா அல்ல” எனக் கூறினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T15:06:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் அணுகுண்டு வீசுவதை மோடி தடுத்தாரா? போலந்து அமைச்சர் சொன்ன தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/poland-minister-says-modi-stops-putin-use-nukes-1784040945"></link>
            <id>https://news.lankasri.com/article/poland-minister-says-modi-stops-putin-use-nukes-1784040945</id>
            <summary type="text">&amp;nbsp;புடின் அணு ஆயுதம் பயன்படுத்துவதை மோடி தடுத்தார் என போலந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புடின் அணுஆயுத பயன்பாட்டை தடுத்த மோடி 

இந்தியாவிற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;புடின் அணு ஆயுதம் பயன்படுத்துவதை மோடி தடுத்தார் என போலந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><h3>
புடின் அணுஆயுத பயன்பாட்டை தடுத்த மோடி</h3><p> 

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள போலந்து துணை வெளியுறவு அமைச்சர் விளாடிஸ்லாவ் பார்டோசெவ்ஸ்கி, இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a096d1f-3af2-4d25-8ff0-2db74482386b/26-6a564df372ceb.webp' /></p><p>
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிராக ரஷ்யாவை இணங்க வைப்பதில் பிரதமர் மோடி முக்கிய பங்கு வகித்தார் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81855257-1188-41c4-9138-9f86335b5be3/26-6a564df42b265.webp' /></p><p>

இது குறித்து பேசிய அவர், "நரேந்திர மோடி மிகவும் பிரபலமான மற்றும் மதிக்கப்படும் ஒரு உலகத்தரம் வாய்ந்த தலைவர். மேலும், இந்தியாவுக்கு ரஷ்ய கூட்டமைப்புடனும், அதற்கு முன்பாக சோவியத் யூனியனுடனும் அணிசேரா நாடாக நீண்டகால உறவு இருந்து வருகிறது.&nbsp;</p><p></p><p>

போரின்போது தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என ரஷ்யாவை இணங்க வைப்பதில், 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரதமர் மோடி பங்கு வகித்தார்.
</p><p>
மோடி தன்னிடம் கூறுவதை ரஷ்ய ஜனாதிபதி புடின் உண்மையில் கவனத்தில் கொள்கிறார். புடின் மீது உண்மையில் அழுத்தம் கொடுக்கவும் செல்வாக்கு செலுத்தவும் கூடிய ஒரு சிலரில் பிரதமர் மோடியும் ஒருவர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/644f112c-828b-4b51-8168-a35fd66b63e1/26-6a564df4cfc0c.webp' /></p><p> 

மோடி மட்டுமல்ல, சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் உட்பட அனைவரும் பதற்றத்தை அதிகரிப்பதற்கு எதிராக உள்ளனர். குறிப்பாக, ரஷ்யாவிற்கு விரோதமானவையாகக் கருதப்படாத நாடுகளில் இருந்து இது வரும்போது, ​​அது முக்கியமானதாகிறது. இதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது" என பேசியுள்ளார். </p><p>

2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் இரு தரப்பிலும் சுமார் 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் பணக்காரர்கள் விரும்பும் 10 ஆடம்பர சுற்றுலா தலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/top-10-luxury-billionaire-holiday-spots-1784038916"></link>
            <id>https://news.lankasri.com/article/top-10-luxury-billionaire-holiday-spots-1784038916</id>
            <summary type="text">உலகின் பணக்காரர்கள், பில்லியனர்கள், பிரபலங்கள் விடுமுறைக்கு செல்லும் இடங்கள் சாதாரண சுற்றுலா தலங்களல்ல.தனியார் ஜெட் விமான நிலையங்கள், மெகா சொகுசுப் பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் பணக்காரர்கள், பில்லியனர்கள், பிரபலங்கள் விடுமுறைக்கு செல்லும் இடங்கள் சாதாரண சுற்றுலா தலங்களல்ல.</p><p>தனியார் ஜெட் விமான நிலையங்கள், மெகா சொகுசுப் படகுகள், அரண்மனை ஹோட்டல்கள், தனியார் கிளப்புகள், மற்றும் தனிமையை உறுதி செய்யும் வசதிகள் கொண்ட இடங்களே இவர்களின் விருப்பம்.
</p><p></p><p>அவ்வாறு, உலகின் பணக்காரர்கள் விரும்பும் 10 ஆடம்பர சுற்றுலா தலங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.&nbsp;</p><h2>1.பிரெஞ்சு ரிவியாரா (France)
</h2><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1df418df-bc95-478d-ae08-51f3aa9850de/26-6a5646a242f0d.webp' /></p><p>French Riviera உலகின் முதலிடம் பெற்ற பில்லியனர் விடுமுறை தலமாகும்.
</p><p>
அழகிய கடற்கரை, சொகுசுப் படகு (Yacht) பயண வசதி, அரண்மனை ஹோட்டல்கள், பிரபல உணவகங்கள் ஆகியவை இங்கு முக்கிய அம்சங்களாக உள்ளன. ஜெஃப் பெசோஸ், எல்டன் ஜான் போன்றோர் இங்கு அடிக்கடி வருகை தருகின்றனர்.
</p><h2>2.மொனாக்கோ (Monaco)
</h2><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e5d80e-f293-4fa3-8b5b-d4c096e8e5c6/26-6a5646a31b99a.webp' /></p><p>மிகச் சிறிய நாடாக இருந்தாலும், உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல்கள் இங்கு உள்ளன. ஒரு இரவு தங்கும் செலவு சுமார் 2,440 டொலர் ஆகும். கேசினோ, ஃபார்முலா 1, சூப்பர் யாட்கள் ஆகியவை இங்கு பிரபலமானவை.
</p><h2>3.மியாமி (USA)</h2><p>அமெரிக்காவின் ரிவியாரா என அழைக்கப்படும் மியாமி (Miami), கலை, கலாச்சாரம், ஆடம்பர ஹோட்டல்கள், கடற்கரை வாழ்க்கை ஆகியவற்றால் பிரபலமானது.
</p><h2>4.ஹாம்ப்டன்ஸ் (USA)</h2><p>Hamptons நியூயார்க் பில்லியனர்களின் கோடை விடுமுறைக்கான சிறந்த ஸ்பாட் ஆகும். தனியார் கிளப்புகள், கடற்கரை, பெரிய எஸ்டேட்கள், சமூக நிகழ்ச்சிகள் ஆகியவை இங்கு முக்கியதத்துவம் பெறுகின்றன.</p><h2>5.அமால்ஃபி கோஸ்ட் (Italy)</h2><p>Amalfi Coast உள்ள கடற்கரை பாறைகள், பழமையான ஹோட்டல்கள், யாட் பயணங்கள், இத்தாலிய விருந்தோம்பல் ஆகியவை இங்கு ஆடம்பரத்தை வெளிப்படுத்துகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eec595b-1367-47b6-9c94-9adbffeb8080/26-6a5646a3cb1d5.webp' /></p><p>
</p><h2>6.பாலி (Indonesia)</h2><p>Bali ஆசியாவின் முன்னணி சுற்றுலா தலமாகும். தனியார் வில்லாக்கள், காடு சூழ்ந்த ஹோட்டல்கள், யோகா, ஸ்பா, ஆன்மீக அனுபவங்கள் ஆகியவை பில்லியனர்களை இங்கு கவர்கின்றன.</p><h2>7.குர்செவல் (France)</h2><p>Courchevel பனிச்சறுக்கு விடுமுறை தலமாகும். அரண்மனை ஹோட்டல்கள், தனியார் மர் வீடுகள், உயர்தர உணவகங்கள், ஸ்கீ வசதிகள் ஆகியவை இங்கு உள்ளன.
</p><h2>8.மஜோர்கா (Spain)</h2><p>Majorca- மலைகள், ஆலிவ் தோட்டங்கள், தனிமையான கடற்கரை, யாட் துறைமுகங்கள் ஆகியவை இங்கு பிரபலமானவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4eb4633-3144-470b-9de6-b6ecb72a98cd/26-6a5646a480a26.webp' /></p><h2>9.மாலத்தீவு (Maldives)</h2><p>தனியார் தீவுகள், நீர்மீது கட்டப்பட்ட வில்லாக்கள், seaplane பயணங்கள் ஆகியவை உலகின் பணக்காரர்களை கவர்கின்றன.
</p><h2>10.காப்ரி (Italy)</h2><p>பழமையான கவர்ச்சி, Blue Grotto கடல் குகை, சூப்பர் யாட் பயணங்கள், பிரபல ஷாப்பிங், இரவு வாழ்க்கை ஆகியவை காப்ரியின் சிறப்பு அம்சங்களாக யுள்ளன.</p><p>

இந்த 10 தலங்கள் உலக பணக்காரர்கள் மிகவும் விரும்பி செல்லும் இடங்களாக உள்ளன. தனிமை, ஆடம்பரம், தனித்துவமான அனுபவம் ஆகியவை செல்வந்தர்களை இங்கே இழுக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:23:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை - கடைசிக்கு முந்தைய இடத்தில் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-second-lowest-in-environment-performance-1784035929"></link>
            <id>https://news.lankasri.com/article/india-second-lowest-in-environment-performance-1784035929</id>
            <summary type="text">சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை பட்டியலில், இந்தியா கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.

சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை

சுற்றுசூழல் ஆரோக்கியம் என்ற நோக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை பட்டியலில், இந்தியா கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.
</p><h3>
சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை
</h3><p>
சுற்றுசூழல் ஆரோக்கியம் என்ற நோக்கத்தில், ஏல் பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் இணைந்து உலகளாவிய சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு தரவரிசைப் பட்டியலை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிட்டு வருகிறது.
</p><p>
இதில், காற்றின் தரம், சுற்றுப்புறத்தில் உள்ள நுண்ணிய துகள்களின் அளவு, மரங்களின் அடர்த்தி இழப்பு, பருவநிலை மாற்றத் தணிப்பு உள்ளிட்ட 47 குறிகாட்டிகளின் அடிப்படையில் 177 நாடுகளை மதிப்பீடு செய்து, இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cc4a7dc-ca23-4a69-9fac-60e0b3bcc592/26-6a563a5a9eae5.webp' /></p><p>
இதில், சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு அடிப்படையில், 100க்கு 74.79 மதிப்பெண்களுடன் எஸ்டோனியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. </p><p>

74.24 மதிப்பெண்களுடன் லக்சம்பர்க் 2வது இடத்திலும், 71.51 மதிப்பெண்களுடன் பிரித்தானியா 3வது இடத்திலும், 71.04 மதிப்பெண்களுடன் பின்லாந்து 4வது இடத்திலும், 71.04 மதிப்பெண்களுடன் நெதர்லாந்து 5வது இடத்திலும், உள்ளது.&nbsp;</p><p></p><p>

ஜெர்மனி 6வது இடத்திலும், பிரான்ஸ் 7வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 15வது இடத்திலும், அவுஸ்திரேலியா 25வது இடத்திலும், அமெரிக்கா 27வது இடத்திலும், கனடா 29வது இடத்திலும் உள்ளது. </p><h3>

கடைசிக்கு முந்தைய இடத்தில்&nbsp;இந்தியா </h3><p>39.58 மதிப்பெண்களுடன் இலங்கை 94 வது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில், 38.8 மதிப்பெண்களுடன்134வது இடத்தில் இருந்துள்ளது. </p><p>

இதே போல், இந்த பட்டியலில் 22.46 மதிப்பெண்களுடன் இந்தியா கடைசிக்கு முந்தைய இடமான 176வது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில், 180 நாடுகள் இருந்த நிலையில், 27.6 மதிப்பெண்களுடன் 176வது இடத்தில் இருந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f669fc-69e0-47f2-b55c-badead8c1a10/26-6a563a5b523aa.webp' /></p><p>

2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில், 25.5 மதிப்பெண்களுடன் 179வது இடத்தில் இருந்த பாகிஸ்தான், தற்போது 29.03 மதிப்பெண்களுடன் 157வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.</p><p>

லாவோஸ் 21.78 மதிப்பெண்களுடன் 177வது இடத்தில் கடைசி நாடாக உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T13:48:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை முற்றுகையிட்டது தவறு., அமெரிக்காவின் செயலுக்கு சீனா எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-condemns-for-us-action-in-hormuz-1784020407"></link>
            <id>https://news.lankasri.com/article/china-condemns-for-us-action-in-hormuz-1784020407</id>
            <summary type="text">ஈரான் கடற்படைக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை சீனா கண்டித்துள்ளது. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்...</summary>
            <content type="html"><![CDATA[<h3>ஈரான் கடற்படைக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை சீனா கண்டித்துள்ளது.</h3><h2> மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்</h2><p>
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து அதற்கு பதிலடியாக அமெரிக்க படைகள் ஈரானிய இராணுவ இருப்புகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது.</p><p> அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளை குறிவைத்து ஈரானும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குரலை முன்னெடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e7f6067-b5e1-486f-ba8a-bf056292cb1d/26-6a55fdb8b3b2a.webp' /></p><p></p><h4> அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு</h4><p>இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜுயான் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p> மீண்டும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க படைகளின் கடற்படை முற்றுகை நடவடிக்கையை சீனா எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லின், அமெரிக்கா - ஈரான் ஆகிய இரண்டு நாடுகள் இடையிலும் மீண்டும் ஆயுத மோதல் தொடங்கி இருப்பது கவலையையும், அக்கறையையும் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர முயற்சிகள் மூலம் இருதரப்பும் தீர்வு காண வேண்டும் என்றும் லின் வலியுறுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:47:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடொன்றிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய தடை: உள்நாட்டு யுத்தப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eu-bans-gold-imports-from-sudan-to-curb-money-war-1784032662"></link>
            <id>https://news.lankasri.com/article/eu-bans-gold-imports-from-sudan-to-curb-money-war-1784032662</id>
            <summary type="text">ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

தங்கம் இறக்குமதி செய்ய தடை

ஆப்பிரிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.</p><h3>

தங்கம் இறக்குமதி செய்ய தடை
</h3><p>
ஆப்பிரிக்க நாடுகளிலேயே, அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில் சூடானும் ஒன்று.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d3e15ff-87b0-481b-981c-cc6650607425/26-6a562d97889ba.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், சூடானில் 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல், ராணுவத்துக்கும், போராளிக்குழுவான Rapid Support Forces (RSF) என்னும் அமைப்புக்கும் இடையே உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுவருகிறது.
</p><p>
யுத்தம் காரணமாக, 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு தப்பியோட நேர்ந்துள்ளது. கடுமையான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துவருகின்றன.</p><p> 

இந்த இரு பிரிவினரும், நாட்டிலுள்ள தங்கச் சுரங்கங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். நாட்டின் மேற்கு மற்றும் மையப் பகுதிகளில் உள்ள தங்கச் சுரங்கங்களை RSFஅமைப்பும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தங்க உற்பத்தியை ராணுவமும் கட்டுப்படுத்துகின்றன.&nbsp;</p><p></p><p>
ஆக, இருதரப்பும் போர் செய்வதற்குத் தேவையான பணம், இந்த தங்க ஏற்றுமதி மூலம்தான் கிடைக்கிறது.
</p><p>
ஆகவே, சூடானிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c1c7cde-81ab-4377-970e-9e2430686e2c/26-6a562d98377df.webp' /></p><p>

ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சூடானில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில், யுத்தத்துக்கான முக்கிய நிதி ஆதாரமாக தங்கம்தான் விளங்குகிறது.
</p><p>
ஆகவே, சூடானிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தால், அது வன்முறைக்குக் காரணமாக இருப்போருக்கு பணம் கிடைப்பது குறைய வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தடை நடவடிக்கைகள், யுத்தத்துக்கு நிதி வழங்கும் ஆதாரத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், யுத்தத்தை தூண்டுவோர் மீது அழுத்தத்தை அதிகரிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:44:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணியில் உள்ளவருடன் சேர்ந்து துரோகம் செய்த மனைவி - அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/partner-accuse-aus-cricketer-gardner-affair-voll-1784031968"></link>
            <id>https://news.lankasri.com/article/partner-accuse-aus-cricketer-gardner-affair-voll-1784031968</id>
            <summary type="text">அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் அணியில் உள்ள சக வீராங்கனையுடன் சேர்ந்து தனது மனைவி துரோகம் செய்துவிட்டதாக மோனிகா ரைட் குற்றநச்சட்டியுள்ளார்.

துரோகம் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் அணியில் உள்ள சக வீராங்கனையுடன் சேர்ந்து தனது மனைவி துரோகம் செய்துவிட்டதாக மோனிகா ரைட் குற்றநச்சட்டியுள்ளார்.</p><h3>

துரோகம் செய்த அவுஸ்திரேலிய வீராங்கனை</h3><p> 

இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற 2026 மகளிர் உலக கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
</p><p>
தற்போது அவுஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c73dd0ed-b303-4ecc-be05-59d9a2ba35ea/26-6a562ae32b543.webp' /></p><p>
அவுஸ்திரேலிய அணியின் துணை கேப்டனான ஆஷ்லே கார்ட்னர், தனது நீண்டகால காதலியான மோனிகா ரைட்டை ஏப்ரல் 2025 ஆம் ஆண்டில் தன்பாலின திருமணம் செய்து கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23e71980-4301-4167-a9c8-470ef0f95cd8/26-6a562ae273ec0.webp' /></p><p>

இவர்கள் இருவருக்குமிடையே பிரிவு உள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், ஆஷ்லே கார்ட்னர் தனக்கு துரோகம் செய்துள்ளதாக மோனிகா ரைட் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். </p><p>

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையான ஜார்ஜியா வோலின் புகைப்படத்தை பதிவிட்ட மோனிகா ரைட், இவருடன் தான் என் மனைவி துரோகம் செய்தார் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8aeac9e-d5a1-49d5-8eb4-6c4529566ff5/26-6a562ae3ccd3e.webp' /></p><p> 

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஒருநாள் உலகக்கிண்ண தொடரின் பின்னர் இவர்களுக்குள் பிரிவு தொடங்கியதாகக் கூறப்படுகிறது.</p><p> 

இந்தியாவில் இருந்த போதே கார்டனர் மற்றும் வோல்க்கு இடையே உறவு இருந்ததாகவும், அது தெரியாமல் உலககிண்ணத்தில் கார்டனருக்கு ஆதரவளிக்க மோனிகா இந்தியா வந்துள்ளார்.</p><p>
அவுஸ்திரேலியா திரும்பிய பின்னர் மோனிகாவிடம் அவருக்கு துரோகம் செய்ததை கார்டனர் ஒப்புக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>
இருவரும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டு அதற்கான மருத்துவமனை முன்பதிவையும் செய்திருந்த நிலையில், இந்த பிரிவால் அந்த முன்பதிவை மோனிகா ரத்து செய்துள்ளார்.
</p><p>
இதன் பின்னர் தனது திருமண மோதிரத்தை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு, அங்கிருந்த மற்ற பொருட்களை எடுத்துக்கொண்டு சொல்லாமல் கார்ட்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். </p><p>

இந்த விவகாரம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:26:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவின் புதிய Package Visa- விமானம், ஹோட்டல், விசா அனைத்தும் ஒரே இடத்தில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-arabia-launches-all-in-one-travel-visa-1784031105"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-arabia-launches-all-in-one-travel-visa-1784031105</id>
            <summary type="text">சவுதி அரேபியா சுற்றுலா பயணிகளுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.பேக்கேஜ் விசா (Package Visa) எனப்படும் இந்த திட்டம் மூலம் பயணிகள் விமான டிக்கெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியா சுற்றுலா பயணிகளுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>பேக்கேஜ் விசா (Package Visa) எனப்படும் இந்த திட்டம் மூலம் பயணிகள் விமான டிக்கெட், ஹோட்டல் முன்பதிவு, சுற்றுலா விசா ஆகியவற்றை ஒரே இடத்தில் எளிதாக பெற முடியும்.
</p><p>
இந்த சேவை முழுமையாக டிஜிட்டல் முறையில் செயல்படுகிறது. பயணிகள் தனித்தனியாக விமானம், ஹோட்டல், விசா ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரே பிளாட்ஃபார்மில் அனைத்தையும் ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். இதன் மூலம் சுற்றுலா திட்டமிடுதல் மிகவும் எளிதாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57af52c1-d9e9-40af-bf01-e9598dfd6684/26-6a562782d78cc.webp' /></p><h2>பேக்கேஜ் விசாவின் அம்சங்கள்</h2><ul><li>இரு வழி விமான டிக்கெட்
</li><li>ஹோட்டல் வசதி
</li><li>சுற்றுலா e-விசா
</li><li>வழிகாட்டியுடன் சுற்றுலா அனுபவங்கள்
</li><li>கலாச்சார நிகழ்ச்சிகள், என பல சேவைகளை ஒரே முன்பதிவில் பெற முடியும்.</li></ul><p>இந்த திட்டம் தற்போது இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இந்தோனேஷியா, ஜோர்டான், எகிப்து, மெக்சிகோ போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டத்தில் மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.</p><p></p><p>சவுதி அரேபியாவின் ‘விஷன் 2030’ சுற்றுலா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>உலகளாவிய சுற்றுலா தலமாக சவுதி அரேபியாவை மாற்றும் நோக்கத்துடன், பயணிகளுக்கு எளிதான, சீரான அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த பேக்கேஜ் விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T12:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருங்கால கணவனை கொலை செய்த பெண் வழக்கு: இந்தியப் பிரதமருக்கு ஒரு கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ketan-agarwal-mother-letters-to-modi-for-justice-1784029266"></link>
            <id>https://news.lankasri.com/article/ketan-agarwal-mother-letters-to-modi-for-justice-1784029266</id>
            <summary type="text">இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், பெண்ணொருவர் தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கில், கொல்லப்பட்ட இளைஞரின் தாய் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், பெண்ணொருவர் தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கில், கொல்லப்பட்ட இளைஞரின் தாய் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
</p><h3>
வருங்கால கணவனை கொலை செய்த பெண்</h3><p>

மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேயைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் என்பவருக்கும், சியா கோயல் (20) என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1442703-1bbb-44f0-a4d4-37e22afea322/26-6a562053af3f8.webp' /></p><p>இந்நிலையில், தனது பிறந்தநாளைக் காரணம் காட்டி கேத்தனை கோட்டை ஒன்றிற்கு அழைத்துச் சென்ற சியா, தன் காதலனான சேத்தன் சௌத்ரி (22) என்பவருடைய உதவியுடன் அவரை பள்ளத்தில் தள்ளிக் கொலை செய்தார்.&nbsp;</p><p></p><h3>
பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள தாய்
</h3><p>
கேத்தனின் தாயாகிய ராக்கி அகர்வால், இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DaxBvo6iaLQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DaxBvo6iaLQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DaxBvo6iaLQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Times Now (@timesnow)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
அந்தக் கடிதத்தில், எல்லா தாய்மார்களையும்போல, என் மகன் திருமணம் செய்துகொள்ளவேண்டும், அவன் குடும்பமாக வாழ்வதை பார்க்கவேண்டும் என்றுதான் நானும் விரும்பினேன்.
</p><p>
ஆனால், அவனுக்கு இறுதிச்சடங்கு செய்யும் நிலை எங்களுக்கு உருவாகிவிட்டது.
</p><p>
நாங்கள் உங்களிடம் சிறப்பு சலுகை எதையுமோ அல்லது எங்கள் மீது இரக்கம் காட்டவேண்டும் என்றோ கேட்கவில்லை. எங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் கேட்கிறேன்.
</p><p>
கேத்தனை திருப்பிக் கொண்டுவர முடியாது என்பது உண்மைதான். ஆனால், அவனது உயிரைப் பறித்தவர்களுக்கு சட்டப்படி கடும் தண்டனை வழங்கவேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15a81481-480c-4c0a-a136-fdb33d2af415/26-6a5620546024b.webp' /></p><p>மகனை இழந்த ஒரு தாயின் உங்களுக்குக் கேட்கும் என்று நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் கேத்தனின் தாய்.
</p><p>
அத்துடன், கேத்தன் இரந்த துயரம் தாங்காமல், அவரது தாத்தாவும் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், சில நாட்களுக்குள், இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த இரண்டு உயிர்களை பறிகொடுத்துவிட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், கேத்தனின் தந்தையான விஷால் அகர்வால், தன் மகனுடைய மரணத்துக்கு நீதி கேட்டு ஏற்கனவே ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:41:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா ஏவிய 5 பாலிஸ்டிக் ஏவுகணைகள்: உக்ரைனிய ராணுவம் காட்டிய அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kyiv-targeted-by-5-russian-ballistic-missiles-1784028977"></link>
            <id>https://news.lankasri.com/article/kyiv-targeted-by-5-russian-ballistic-missiles-1784028977</id>
            <summary type="text">ரஷ்யா ஏவிய 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்&amp;nbsp;உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா ஏவிய 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.</p><h2>உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்</h2><p>&nbsp;உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்யா ஏவிய 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைனிய விமானப்படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.</p><p> இருப்பினும் சில ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனிய படைகளின் வான் பாதுகாப்பு வளையத்தை தாண்டி விழுந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> ரஷ்ய நடத்திய இந்த திடீர் தாக்குதலில், தலைநகரில் உள்ள இரண்டு கிடங்குகள் தீப்பிடித்துள்ளது மற்றும் பள்ளி கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது என அந்நகர மேயர் கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7cb53f6-aeab-4b68-968c-3ea5a880447e/26-6a561f32aa00f.webp' /></p><p> மேலும் இந்த தாக்குதலானது உக்ரைனிய படைகளின் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தயாரிக்கும் ராணுவ உற்பத்தி ஆலையை குறிவைத்து நடத்தப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>ட்ரோன்களை விட பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீழ்த்துவது சவாலான நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் முதல்முறையாக பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக வீழ்த்தி இருப்பதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> உக்ரைன் தெரிவித்துள்ள தகவலின் படி, 25 ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனின் 17 இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c1764f-3a89-4888-9d60-a1f34dd2ed94/26-6a561f335aa3f.webp' /></p><p> இதில் இடை மறிக்கப்பட்ட ஏவுகணை பாகங்கள் மட்டும் கிட்டத்தட்ட 10 இடங்களில் விழுந்துள்ளது.</p><p> ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக உக்ரைன் அமெரிக்காவின் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தும் நிலையில், அதன் தற்போதைய உலகளாவிய தேவைகளின் அதிகரிப்பால், உக்ரைனுக்கு வெடிமருந்து கிடைப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>இருப்பினும் குளிர்காலத்திற்கு முன்பாக உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதில் உக்ரைன் தீவிரம் காட்டி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:36:29+00:00</updated>
        </entry>
    </feed>
