<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-13T04:53:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்ஸர் மழைபொழிந்த நிக்கோலஸ் பூரன்! 44 பந்துகளில் 86 ஓட்டங்கள் விளாசல்..தவறிய வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nicholas-pooran-86-vs-washington-freedom-1783914231"></link>
            <id>https://news.lankasri.com/article/nicholas-pooran-86-vs-washington-freedom-1783914231</id>
            <summary type="text">மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்தின் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் MI நியூயார்க் அணியை வீழ்த்தியது.&amp;nbsp;நிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்தின் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் MI நியூயார்க் அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>நிக்கோலஸ் பூரன்&nbsp;ருத்ரதாண்டவம் </h2><p>

வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் MI நியூயார்க் அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் போட்டி நேற்று நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae3eb63-7fe5-4ece-bf70-9b718fa3ab12/26-6a5460712f665.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய MI நியூயார்க்கில் அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) ருத்ரதாண்டவம் ஆடினார்.
</p><p>
மொத்தம் 44 பந்துகளை எதிர்கொண்ட அவர், 8 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>கோஸ்,&nbsp;ரவீந்திரா&nbsp;அரைசதம் </h2><p>
இதன்மூலம் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது. நெத்ராவால்கர், பென் ட்வர்ஷுய்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
</p><p>
பின்னர் ஆடிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 18.3 ஓவர்களில் 190 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆன்ரிஸ் கோஸ் 96 (54) ஓட்டங்களும், ரச்சின் ரவீந்திரா 60 (30) ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/308a69ff-4662-4d60-9ace-a17d992a8f9b/26-6a5460708207f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T03:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் உலகளாவிய உணவுப் பஞ்சம் ஏற்படும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/super-el-nino-global-food-shock-1783874538"></link>
            <id>https://news.lankasri.com/article/super-el-nino-global-food-shock-1783874538</id>
            <summary type="text">இந்த ஆண்டு ஏற்படக்கூடிய &#039;சூப்பர்&#039; எல் நினோ வானிலைச் சுழற்சியானது, உலகளாவிய உணவு விலைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு ஏற்படக்கூடிய 'சூப்பர்' எல் நினோ வானிலைச் சுழற்சியானது, உலகளாவிய உணவு விலைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><h2>பேரழிவுகரமான வறட்சி</h2><p>
</p><p>இந்த விலை உயர்வு 2028-ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஈரான் போரினால் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், </p><p>புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய தீவிர வானிலைச் சூழலால் விநியோகம் ஒரே நேரத்தில் இரண்டு அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4b5c3d7-694e-459d-94de-24c3f2ed063b/26-6a53cacfba036.webp' /></p><p>
</p><p>காற்றின் திசை மற்றும் வேகத்தில் ஏற்படும் மாற்றங்களால், வெப்பமான நீர் மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பகுதி முழுவதும் பரவும்போது உருவாகும் 2026-27 ஆம் ஆண்டிற்கான 'எல் நினோ' நிகழ்வு குறித்து விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். </p><p>கடுமையான வெப்ப அலைகள், பெருவெள்ளம் மற்றும் கடும் புயல் சூழலைத் தூண்டக்கூடிய மிகவும் தீவிரமான நிகழ்வாக உருவெடுப்பதற்கான, வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பை சூப்பர் எல் நினோ கொண்டுள்ளது.
</p><p>உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் ஏற்கனவே வாழ்க்கைச் செலவு உயர்வால் சிரமங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், தீவிரமான எல் நினோ நிகழ்வு அந்த நெருக்கடியை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். </p><p>அத்துடன், மீண்டும் ஒரு பணவீக்க அதிர்ச்சி ஏற்படக்கூடும் என்ற சூழல் மத்திய வங்கிகளை நிலைகுலையச் செய்வதோடு, வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர் மட்டத்திலேயே வைத்திருக்கப்படலாம் என்ற கவலையையும் அதிகரிக்கிறது.</p><p></p><p> </p><p>ஐரோப்பாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெப்ப அலைகள், காலநிலை அடிப்படை நிலை ஏற்கனவே மாறி வருவதை நினைவூட்டுகின்றன. எல் நினோ புவி வெப்பமயமாதலின் விளைவுகளைப் பெருக்குவதால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இது மேலும் ஒரு புதிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>இயற்கையாக நிகழும் இந்த எல் நினோ நிகழ்வு, அறுவடை மற்றும் உணவு விநியோகக் கட்டமைப்பைப் பாதித்த வரலாற்றைக் கொண்டுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் முன்பு, வரலாற்றிலேயே மிகவும் கடுமையானதாக இருந்திருக்கக்கூடிய ஒரு எல் நினோ நிகழ்வானது, சீனா, தெற்கு ஆப்பிரிக்கா, பிரேசில், எகிப்து மற்றும் இந்தியா முழுவதும் பேரழிவுகரமான வறட்சிகளை ஏற்படுத்தியது. </p><p>காலனித்துவ ஆட்சியால் மோசமடைந்த சூழலில் ஏற்பட்ட பஞ்ச நிலைமைகளால் லட்சக்கணக்கானோர் மரணமடைந்தனர்; இதில் 1876-78 காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்தனர். </p><p>1981-82, 1996-97, 2015-16 மற்றும் 2023-24 ஆகிய காலகட்டங்களில் நிகழ்ந்த எல் நினோ நிகழ்வுகள், பதிவானவற்றிலேயே மிகவும் தீவிரமானவற்றுள் சிலவாகும். </p><p>இந்த நிலையில், நிபுணர்கள் தரப்பு 2026-27 எல் நினோ காலகட்டம் இன்னும் தீவிரமானதாக அமையக்கூடும் என்பதையும், இது உலகெங்கிலும் பயிர் விளைச்சலையும் உணவு விநியோகத்தையும் பாதிக்கும் வகையிலான வறட்சி மற்றும் வெள்ள அபாயத்தை அதிகரிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p> தற்போது உருவாகியுள்ள இந்த எல் நினோவின் தீவிரத்தன்மை, உலகளாவிய உணவுப் பொருட்களின் விலையில் 15.8 சதவீத உயர்வை ஏற்படுத்தக்கூடும். இது ஐரோப்பா உள்ளிட்ட உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்; குறிப்பாக யூரோ மண்டலத்தில் உணவுப் பொருட்களின் விலை 1.3 சதவீதம் வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.</p><h2>பாதிக்கத் தொடங்கியுள்ளது</h2><p> </p><p>இருப்பினும், காலநிலை தாக்கத்தின் செலவானது உலகளாவிய உணவு விநியோகத்தில் பரவும் விதத்தின் காரணமாக, அதன் முழுமையான விளைவை உணர நேரம் எடுக்கும். இதன் விளைவுகள் முழுமையாக வெளிப்பட 2028-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி வரை ஆகலாம் என்று Goldman Sachs தெரிவித்துள்ளது.</p><p> பொதுவாக எல் நினோ நிகழ்வுகள் தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளில் வறட்சி அபாயங்களை அதிகரிக்கின்றன, ஆனால் தெற்கு பிரேசில், அர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகின்றன. </p><p>ஈரான் போரினால் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளே, எல் நினோவால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d397cbed-a494-4175-8a0f-d102dca2d320/26-6a53cad0751af.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், எல் நினோ ஏற்கனவே பயிர்களைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் பருவமழை வறண்டு, சில பகுதிகளில் வழக்கமான மழையில் 25 சதவீதம் மட்டும், மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் 50 சதவீதம் மட்டும் பெய்து, கோதுமை, அரிசி மற்றும் கரும்பு விநியோகத்தைப் பாதிக்கக்கூடும். </p><p>இதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்பட வாய்ப்புள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஏற்படும் வறட்சியானது, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருளான பாமாயில் விநியோகத்தைப் பாதிக்கக்கூடும் என்றும், அதேவேளையில் காபி மற்றும் கோகோ அறுவடைகளும் பாதிக்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். </p><p>வட அமெரிக்காவில், எல் நினோவின் தாக்கம் குளிர்காலத்தில் மிகவும் வலுவாக இருக்கும், அதே சமயம் ஐரோப்பாவில் இந்த வானிலை நிகழ்வால் நிலைமைகள் பாதிக்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
</p><p>மூன்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு வலுவான எல் நினோ நிகழ்வானது உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளை 9 சதவீதம் வரை உயர்த்தக்கூடும் என்றும், சோயாபீன்ஸ், மக்காச்சோளம் மற்றும் அரிசி ஆகியவற்றில் மிகப்பெரிய விலை உயர்வுகள் காணப்படும் என்றும் ஐரோப்பிய மத்திய வங்கி மதிப்பிட்டிருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T03:05:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் அதி தீவிர எச்சரிக்கையின் கீழ் 22 மில்லியன் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/22-million-people-maximum-alert-1783902230"></link>
            <id>https://news.lankasri.com/article/22-million-people-maximum-alert-1783902230</id>
            <summary type="text">பிரான்சில் மே மாதத்திற்குப் பிறகு நாட்டைத் தாக்கிய மூன்றாவது வெப்ப அலையின் பிடியில் நாட்டின் கால் பகுதி மக்கள் தவிக்கும் நிலையில், முக்கிய அறிவிப்புகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் மே மாதத்திற்குப் பிறகு நாட்டைத் தாக்கிய மூன்றாவது வெப்ப அலையின் பிடியில் நாட்டின் கால் பகுதி மக்கள் தவிக்கும் நிலையில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.</p><h2>24 நிர்வாகப் பிரிவுகள்</h2><p>
</p><p>இந்த வார இறுதியில் பிரான்சில், ஈபிள் கோபுரம் மற்றும் பாரிஸின் பிற முக்கிய இடங்கள் முன்கூட்டியே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab491805-63da-4d12-ba8a-7c733c5b2ae6/26-6a54323c7d701.webp' /></p><p> வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், 22.2 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டின் இருபத்து நான்கு நிர்வாகப் பிரிவுகள், ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்ட உச்சகட்ட எச்சரிக்கை நிலைக்கு உட்படுத்தப்பட்டன. </p><p>அதிக வெப்பநிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈபிள் கோபுரம் பிற்பகல் 4 மணிக்கே மூடப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>ஆண்டுதோறும் 70 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் 1,083 அடி உயரமுள்ள ஈபிள் கோபுரம், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பருவக்காலங்களில் வழக்கமாக நள்ளிரவு வரையிலும் திறந்திருக்கும்.</p><p></p><p> </p><p>பிரெஞ்சுத் தலைநகரின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகங்களில் இரண்டான லூவ்ர் (Louvre) மற்றும் மியூஸே டி ஓர்சே (Musée d’Orsay) ஆகியவை இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. </p><p>உலகில் அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகமான லூவர், வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் திங்கட்கிழமை வரை மூடப்படும் என்று வியாழக்கிழமை அறிவித்தது. </p><p>இதனிடையே, கடுமையான வெப்பம் காரணமாக, சனிக்கிழமை மாலை 5 மணி முதல் புதன்கிழமை வரை மியூஸே டி'ஓர்சே (Musée d’Orsay) அருங்காட்சியகம் முன்னதாகவே மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb32d05-e515-44a6-b15b-f1d2a0d75ebb/26-6a54323df075c.webp' /></p><p> </p><p>தீவிர வெப்பம் காரணமாக, 'டூர் டி பிரான்ஸ்' (Tour de France) மிதிவண்டிப் பந்தயத்தின் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 185.5 கி.மீ தூரப் பிரிவில், மலைப்பாங்கான ஒரு பகுதிப் பாதையை நீக்கி 30 கி.மீ தூரம் குறைக்கப்படுவதாகப் பந்தய ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்; இப்போட்டியின் வரலாற்றிலேயே இத்தகைய முடிவு எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p><h2>மனித நடவடிக்கைகளால்</h2><p> </p><p>பிரான்ஸ் முழுவதும் உள்ள பல நகரங்கள், வறண்ட வானிலையால் தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், ஜூலை 14 அன்று கொண்டாடப்படும் தேசிய விடுமுறை நாளான 'பாஸ்டில் தின' (Bastille Day) வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன. </p><p>இதனிடையே, பத்து காட்டுத்தீச் சம்பவங்களில் ஒன்பது மனித நடவடிக்கைகளால் ஏற்படுபவை என்று எச்சரித்த பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், விழிப்புடன் இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa39635b-ca28-4d27-942c-9c888a03f09f/26-6a54323d4b374.webp' /></p><p> </p><p>ஒரு நொடி கவனக்குறைவு கூட குடும்பங்களை ஆபத்தில் ஆழ்த்தலாம், நம்மைப் பாதுகாப்பவர்களை ஆபத்துக்குள்ளாக்கலாம் மற்றும் நமது கிராமப்புறச் சூழலை அழிக்கலாம் என அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஜூன் மாதத்தில் நிலவிய வெப்ப அலையின்போது 2,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மரணங்களும், மே மாத இறுதியில் நிலவிய அதிக வெப்பத்தின்போது 300 மரணங்களும் பிரான்ஸில் பதிவாகியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T00:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே வாரத்தில் 90 கப்பல்கள் மீது தாக்குதல்... உக்ரைன் பயத்தில் ரஷ்யா எடுத்துள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukrainian-drone-strikes-force-1783899600"></link>
            <id>https://news.lankasri.com/article/ukrainian-drone-strikes-force-1783899600</id>
            <summary type="text">ஒரே வாரத்தில்
90 கப்பல்கள் உக்ரேனிய ட்ரோன்களால் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அசோவ் கடலில் கப்பல் போக்குவரத்தை நிறுத்திவைக்க ரஷ்யா நிர்பந்திக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரே வாரத்தில்
90 கப்பல்கள் உக்ரேனிய ட்ரோன்களால் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அசோவ் கடலில் கப்பல் போக்குவரத்தை நிறுத்திவைக்க ரஷ்யா நிர்பந்திக்கப்பட்டுள்ளது.</p><h2>அசோவ் கடல்</h2><p> </p><p>
உக்ரைனின் ட்ரோன் படைப் பிரிவுகளின் தலைவர் ராபர்ட் ப்ரோவ்டி ஞாயிறன்று கூறுகையில், தங்கள் படைகள் இரவு நேரத்தில் 10 எண்ணெய் கப்பல்கள் மற்றும் நான்கு படகுகளையும், அத்துடன் சிஸ்ரான் (Syzran) நகரிலுள்ள ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் தாக்கியதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2430b3f-b1fe-4e21-9fa8-0f8dd9cd0f38/26-6a5427c0507ec.webp' /></p><p> ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவில் உள்ள மின் துணை நிலையங்கள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். [ரஷ்ய] பேரரசின் தொழில்நுட்ப ரீதியான அவமானம் தொடர்கிறது. கிரீமியாவால் ரஷ்யா வீழ்ச்சியடையும் என்று ப்ரோவ்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.</p><p>
மேலும், உலகம் முழுவதும் பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட எண்ணெய் பொருட்களைக் கொண்டு செல்லும் மாஸ்கோவின் கடத்தல் கப்பல்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் சுருங்கி வருவதாகவும், அசோவ் கடலையும் கருங்கடலையும் இணைக்கும் கெர்ச் நீரிணையை இனி ரஷ்யாவால் பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>அசோவ் கடலானது ரஷ்யாவை கிழக்கு ஐரோப்பாவுடன் இணைக்கும் ஒரு முக்கியமான நீர்வழியாகும். மாஸ்கோவிற்கு இது பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது; ஏனெனில், எண்ணெய், தானியங்கள் மற்றும் எஃகு போன்ற பிற பொருட்களை சர்வதேச சந்தைகளுக்குக் கொண்டு செல்ல ரஷ்யா இதைப் பயன்படுத்துகிறது.</p><p></p><p> </p><p>இந்த நிலையிலேயே, ரஷ்யா வெள்ளிக்கிழமை அன்று டான்-அசோவ் கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்தை நிறுத்தியதாக தகவல் வெளியானது. </p><p>இந்தக் கால்வாய் ரஷ்யாவின் ஆற்றுப் போக்குவரத்து மொத்தம் மற்றும் காஸ்பியன் கடலுடன் இணைகிறது. கெர்ச் மற்றும் துருக்கியில் உள்ள போஸ்பரஸ் நீரிணை வழியாகச் செல்லும் இந்த ஏற்றுமதிப் பாதை நடைமுறையில் முடக்கப்பட்டுள்ளது. </p><p>இதனிடையே, உக்ரைனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி ஜகோரோட்னியுக், ரஷ்யா ஒரு முக்கியமான கடல்வழிப் பாதையின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b260f470-3620-4ddc-a436-c1f1534817f0/26-6a5427c13ab9d.webp' /></p><p> </p><p>அத்துடன், ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு உக்ரைனிலிருந்து திருடப்பட்டு, பெர்டியன்ஸ்க் மற்றும் மரியுபோல் துறைமுகங்கள் வழியாகக் கொண்டு செல்லப்பட்ட தானியங்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் மற்றும் இராணுவக் கப்பல்களை இந்த முற்றுகை பாதித்ததாக அவர் கூறினார்.</p><h2>தொடர்ச்சியான கடுமையான</h2><p> </p><p>காஸ்பியன் கடலில் இருந்த ரஷ்யாவின் சிறிய கப்பல் படையும் அதேபோல சிக்கிக்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் (Novorossiysk) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரஷ்யக் கப்பல்கள் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் கணித்துள்ளார். </p><p>உக்ரைன் ரஷ்யாவின் பெரும்பாலான ரேடார் மற்றும் வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்புகளைத் திட்டமிட்டு அழித்து வருகிறது. இதன் மூலம், உக்ரேனியப் பகுதியிலிருந்து 2,700 கி.மீ தொலைவில் உள்ள சைபீரிய நகரமான ஓம்ஸ்கில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தொடர்ச்சியான கடுமையான தொலைதூரத் தாக்குதல்களை நடத்த உக்ரைனால் முடிந்துள்ளது. </p><p>ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவிற்கான தரை மற்றும் கடல்வழி விநியோகப் பாதைகள் மீது உக்ரைன் நடுத்தர தூரத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது; இதில் சரக்கு வாகனங்கள், கப்பல்கள் மற்றும் போக்குவரத்துப் பாதைகள் குறிவைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa5f8aa2-6c7f-405e-98c7-00bad4782a7a/26-6a5427c1e09ee.webp' /></p><p> </p><p>அசோவ்-கருங்கடல் கால்வாய்க்குள் நுழைந்தபோது ஒரு எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமையன்று, டகான்ரோக் (Taganrog) கடற்கரைப் பகுதியில் இரண்டு இடங்களில் பெருமளவில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. </p><p>உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் காரணமாக, கிரிமியாவில் அவசரநிலையை அறிவிக்க அதிகாரிகள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். பரவலான மின்வெட்டு மற்றும் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு ஆகியவை குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளதோடு, அப்பகுதியின் சுற்றுலாத் துறையும் முடங்கியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T23:38:41+00:00</updated>
        </entry>
    </feed>
