<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-04T14:33:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாயுடன் தீயில் கருதி உயிரிழந்த பிரித்தானிய முதியவர்: துயர சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/88-year-old-british-man-died-with-dog-in-car-fire-1785853867"></link>
            <id>https://news.lankasri.com/article/88-year-old-british-man-died-with-dog-in-car-fire-1785853867</id>
            <summary type="text">சைப்ரஸில் உள்ள விலங்குகள் காப்பகத்திற்கு சென்றுகொண்டிருந்த பிரித்தானிய முதியவர், காரில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்தார். 

பிரித்தானிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சைப்ரஸில் உள்ள விலங்குகள் காப்பகத்திற்கு சென்றுகொண்டிருந்த பிரித்தானிய முதியவர், காரில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்தார். </p><h2>

பிரித்தானிய முதியவர் </h2><p>88 வயதான பிரித்தானிய முதியவர் ஒருவர், சைப்ரஸின் தெற்குக் கடற்கரைக்கு அருகில் உள்ள பச்னாவில் உள்ள தனது வீட்டில் இருந்து, ஃபமகுஸ்டா மாவட்டத்தில் உள்ள ஒரு நாய் காப்பகத்தை பார்வையிட சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7932fb5d-412b-46e1-ae4a-6e0b92b1f918/26-6a71f7ad8c438.webp' /></p><p></p><p>
தனது நாயுடன் அவர் 138 கிலோ மீற்றர் தூரம் காரில் பயணம் செய்துள்ளார். அவர் சென்ற கார் வழி தவறியதால் சேற்றில் சிக்கிக்கொண்டதாக நம்பப்படுகிறது.
</p><p>
அப்போது காரில் இருந்து சிதறிய தீப்பொறிகள், அருகிலிருந்த காய்ந்த நாணல்களைப் பற்றவைத்து காரை தீ முழுவதுமாக சூழ்ந்துள்ளது.

இதில் காரில் தனது நாயுடன் சிக்கிக்கொண்ட முதியவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். </p><h2>உதவி தேடுமாறு</h2><p>அவர் வாகனத்தில் இருந்து பலமுறை தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. 

அதே சமயம் அவருடன் பயணித்த பெண் பராமரிப்பாளர் தப்பித்து, அவரை வாகனத்தை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியதாக காவல்துறையிடம் கூறியிருக்கிறார்.</p><p> 


அதற்கு பதிலாக, குறித்த முதியவர் தன்னை விட்டுவிட்டு உதவி தேடுமாறு அவரிடம் கூறியதாக, அவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். </p><p>

தீ கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, அவசரகால சேவையினர் அந்த நபரின் உடலை காருக்கு அருகில் கண்டெடுத்தனர். அவரது நாயும் இந்தத் தீ விபத்தில் உயிரிழந்திருந்தது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T14:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை - காவல்நிலையம் முன்பு குவிந்த தொண்டர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/udhayanidhi-stalin-enquired-at-sengipatti-station-1785853148"></link>
            <id>https://news.lankasri.com/article/udhayanidhi-stalin-enquired-at-sengipatti-station-1785853148</id>
            <summary type="text">செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். 

செங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். </p><h3>

செங்கிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை</h3><p> 

தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர், இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e56c7761-71e8-45fe-a3c3-cabae53c8be6/26-6a71f4dda2826.webp' /></p><p>

உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><p>

விசாரணைக்காக உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் தஞ்சாவூர் அழைத்து சென்ற நிலையில், இந்த கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். </p><p></p><p>

உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்படுவதாக இருந்த தஞ்சாவூர் தெற்கு காவல்நிலையத்தை சுற்றி 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் குவிந்தததால், 5 மாவட்ட எஸ்.பிக்கள் வரவழைக்கப்பட்டடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
</p><p>
ஆனால், அங்கு கொண்ட செல்லப்படுவதற்கு பதிலாக உதயநிதி ஸ்டாலினை செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.</p><p> 

இதனால் சுமார் 20 நிமிடங்களுக்கு காவல் வாகனத்தில் இருந்து இறங்க மறுத்த உதயநிதி ஸ்டாலின், பின்னர் வாகனத்திலிருந்து இறங்கி அங்குள்ள தொண்டர்களை நோக்கி கையசைத்து, காவல்நிலையத்தின் உள்ளே சென்றார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5199602d-ecf4-4ddd-8b92-79ecc2bd78a4/26-6a71f4de56160.webp' /></p><p>
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தி வருகிறார்.</p><p> 

இதனையடுத்து செங்கிப்பட்டி காவல்நிலையம் முன்பும் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில், தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T14:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயிற்சியாளர் குழுவை வலுப்படுத்த புதிய நபர் நியமனம்: பாகிஸ்தான் வாரியத்தின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/michael-smith-appointed-batting-coach-for-pakistan-1785851571"></link>
            <id>https://news.lankasri.com/article/michael-smith-appointed-batting-coach-for-pakistan-1785851571</id>
            <summary type="text">பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக மைக்கேல் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.மைக்கேல் ஸ்மித்&amp;nbsp;
தென் ஆப்பிரிக்க முதல் தர கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக மைக்கேல் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h2>மைக்கேல் ஸ்மித்&nbsp;</h2><p>
தென் ஆப்பிரிக்க முதல் தர கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஸ்மித் (Michael Smith) பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a21c08c1-d7db-4caf-bb81-f400ea8e09ed/26-6a71eeb66977f.webp' />&nbsp;</p><p></p><p>

46 வயதாகும் மைக்கேல் ஸ்மித் டெஸ்ட் மற்றும் பிற குறைந்த ஓவர் போட்டிகள் அணிகளுக்கும் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். </p><p>

 ஆகஸ்ட் 19ஆம் திகதி தொடங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மைக்கேல் ஸ்மித் தனது பணியைத் தொடங்க உள்ளார்.</p><h2>

 திட்டங்களின் ஒரு பகுதி</h2><p>லெவல் 4 தகுதிபெற்ற பயிற்சியாளரான இவர், இதற்கு முன்பு HBL பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். </p><p>

மேலும், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் கிரிக்கெட் டாஸ்மேனியா அணிகளுக்கு துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். </p><p>

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், "நெருக்கடியான சர்வதேசப் போட்டி அட்டவணைக்கு முன்னதாக, தேசிய அணியின் பயிற்சி ஊழியர்களை வலுப்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நியமனம் அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T13:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வம்சாவளி அமெரிக்கா கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/icc-bans-india-origin-usa-cricketer-akhilesh-reddy-1785849470"></link>
            <id>https://news.lankasri.com/article/icc-bans-india-origin-usa-cricketer-akhilesh-reddy-1785849470</id>
            <summary type="text">இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க கிரிக்கெட் வீரர் போடுகம் அகிலேஷ் ரெட்டிக்கு ஐசிசி 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 

அகிலேஷ் ரெட்டிக்கு ஐசிசி 8 ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க கிரிக்கெட் வீரர் போடுகம் அகிலேஷ் ரெட்டிக்கு ஐசிசி 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. </p><h3>

அகிலேஷ் ரெட்டிக்கு ஐசிசி 8 ஆண்டுகள் தடை
</h3><p>
இந்திய வம்சாவளியான போடுகம் அகிலேஷ் ரெட்டி, அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக 4 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8788d074-41be-40b2-8e49-da0415622367/26-6a71e67fa8979.webp' /></p><p>

நவம்பர் 19, 2025 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற அபுதாபி டி10 தொடரின்போது, 'ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ்' அணியின் முதல் போட்டிக்கு முன்பாக, ஹொட்டல் அறையில் தனது சக வீரர் ஒருவரை பந்துவீச்சின்போது திட்டமிட்டு கூடுதல் ஓட்டங்களை விட்டுக்கொடுக்குமாறு வறுபுறுத்தியுள்ளார். </p><p>

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்த வீரர், உடனடியாக ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவில் (ACU) புகார் அளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

போட்டி தொடங்கும் முன்பாகவே அவர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, நவம்பர் 21 ஆம் திகதி தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.</p><p> 

 இது குறித்து ஐசிசி ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் நடத்திய விசாரணையில், போட்டியின் முடிவை அல்லது போக்கை தவறான முறையில் மாற்ற முயன்றது, மற்றொரு வீரரை சூதாட்டம் தொடர்பான ஊழலில் ஈடுபட தூண்டியது மற்றும் விசாரணைக்கு தேவையான வாட்ஸ்அப் செய்திகள் உள்ளிட்ட ஆவணங்களை அழித்தது ஆகிய 3 குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது. </p><p>

இதனையடுத்து, கிரிக்கெட் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட அகிலேஷ் ரெட்டிக்கு ஐசிசி 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. </p><p>

இந்த தடை அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 21 ஆம் திகதி முதல் பொருந்தும் என்பதால்,2033 நவம்பர் 21 வரை அவர் கிரிக்கெட் விளையாட முடியாது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T13:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[UAE-யில் பாஸ்போர்ட் புதுப்பிப்பு கட்டணம் உயர்வு- இந்தியர்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-expats-hope-passport-fee-cut-in-uae-1785848545"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-expats-hope-passport-fee-cut-in-uae-1785848545</id>
            <summary type="text">UAE: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள், பாஸ்போர்ட் புதுப்பிப்பு கட்டண (Passport renewal fee) உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள், பாஸ்போர்ட் புதுப்பிப்பு கட்டண (Passport renewal fee) உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் புதுப்பிப்பு கட்டணம் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

முன்பு AED 280 இருந்த கட்டணம் தற்போது AED 450-ஆக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72282767-4d87-4cc2-b080-7cd1d5817640/26-6a71e2e3bce19.webp' /></p><p> இதனால், மாதம் AED 800-1000 சம்பளம் பெறும் குறைந்த வருமான தொழிலாளர்கள் பெரும் சுமையைச் சந்திக்கின்றனர்.
</p><p>
இந்த உயர்வுக்கு எதிராக Pravasi Legal Cell (PLC) எனப்படும் சமூக அமைப்பு, Delhi High Court-இல் பொதுநல வழக்கு (PIL) தாக்கல் செய்தது. அவர்கள், “இந்த கட்டண உயர்வு வெளிநாடுகளில் வாழும் தொழிலாளர்களுக்கு அநியாயமான சுமையை ஏற்படுத்துகிறது” என்று வாதிட்டுள்ளனர்.
</p><p></p><p>இதனைத் தொடர்ந்து, Delhi High Court, இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சகத்துக்கு (MEA) மூன்று வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளது. தற்போது, அந்த காலக்கெடு முடிவடைய 10 நாட்கள் மட்டுமே உள்ளன.
</p><p>
UAE-யில் சுமார் 4.5 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் பாஸ்போர்ட் புதுப்பிப்பை GCC-இல் உள்ள இந்திய தூதரகங்கள் வழியாகச் செய்கிறார்கள். கட்டண உயர்வு இவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
PLC அமைப்பு, முன்னாள் நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரால் நடத்தப்படுகிறது. அவர்கள், “இந்த கட்டண உயர்வு ரத்து செய்யப்படும்” என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இந்த வழக்கு, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் சட்ட உரிமைகள் மற்றும் நிதி சுமை குறைப்பு தொடர்பான முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T13:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் சுற்றுலா செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-customs-warns-over-fake-goods-1785827785"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-customs-warns-over-fake-goods-1785827785</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் எதையெல்லாம் கொண்டுசெல்லக்கூடாது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.



சுவிட்சர்லாந்துக்கு சுற்றுல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் எதையெல்லாம் கொண்டுசெல்லக்கூடாது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
</p><p>


சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் எதையெல்லாம் கொண்டுசெல்லக்கூடாது என்பது குறித்து சுவிஸ் சுங்க அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
</p><h3>
சுவிஸ் சுற்றுலா செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை</h3><p>

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வருபவர்கள், போலி ஆடம்பர கைப்பைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகளைக் கொண்டுவரக்கூடாது என்றும், அப்படிக் கொண்டுவந்தால் அவை பறிமுதல் செய்து அழிக்கப்படும் என்றும் சுவிஸ் சுங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11507680-cb7f-42fa-b69e-58f63b5037d3/26-6a7191cb02926.webp' /></p><p>

அத்துடன், 10,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு மேல் ரொக்கமோ அல்லது பத்திரங்களோ கொண்டு வந்தால், அது குறித்து கேட்கப்பட்டால் தெரியப்படுத்தவேண்டும் என்றும், 150 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு அதிக தொகையுடைய பொருட்கள் வாங்கினால், அதற்கு மதிப்புக் கூட்டு வரி செலுத்தவேண்டியிருக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
மேலும், பவளம், சிப்பிகள், தந்தம், குறிப்பிட்ட மரங்கள் அல்லது தாவரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட உயிரினங்களிலிருந்து தயாரிக்கப்படும் நினைவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதங்களும் விதிக்கப்படலாம் என்றும் சுவிஸ் சுங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T12:40:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றங்களைத் தீர்க்க உதவும் கமெராக்களை மோசமான விடயங்களுக்காக பயன்படுத்தும் அமெரிக்க பொலிசார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-police-accused-of-misusing-cctv-cameras-1785847185"></link>
            <id>https://news.lankasri.com/article/us-police-accused-of-misusing-cctv-cameras-1785847185</id>
            <summary type="text">அமெரிக்க பொலிசாரில் பலர் குற்றவாளிகளை கண்காணிப்பதற்கான கமெராக்களை, தங்கள் முன்னாள் இந்நாள் மனைவிகள், காதலிகளை கண்காணிக்க பயன்படுத்தியது தெரியவந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க பொலிசாரில் பலர் குற்றவாளிகளை கண்காணிப்பதற்கான கமெராக்களை, தங்கள் முன்னாள் இந்நாள் மனைவிகள், காதலிகளை கண்காணிக்க பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.</p><p>


அமெரிக்கா முழுவதும், பொலிசாரில் பலர் குற்றவாளிகளை கண்காணிப்பதற்கான கமெராக்களை பயன்படுத்தி, தங்கள் முன்னாள் இந்நாள் மனைவிகள், காதலிகள், தங்களுக்குத் தெரிந்த பெண்கள் முதலானோரை பின் தொடர்ந்ததும், துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளது.
</p><h3>
கவனம் ஈர்த்த சம்பவம்</h3><p>

ஜார்ஜியாவைச் சேர்ந்த மார்ஸ்லி பேக்லீ என்னும் பெண், பொலிசாரான தன் முன்னாள் காதலர் மைக்கேல் ஸ்டெஃப்மேன் தன்னை கண்காணிப்பதை தெரிந்துகொண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c7b7339-6dc4-4938-85c4-d339704899eb/26-6a71dd93602d7.webp' /></p><p>
மார்ஸ்லி எந்த கடைக்கு செல்கிறார், எந்த மருத்துவரை சந்திக்கிறார், யார் யாரை சந்திக்கிறார் என அனைத்து விடயங்களும் மைக்கேலுக்கு தெரிந்துள்ளது.
</p><p>
தன் வீட்டில் மைக்கேல் கமெரா எதையாவது மறைத்துவைத்துள்ளாரா, அல்லது ஜிபிஎஸ் மூலம் தன்னை கண்காணிக்கிறாரா என தேடிய மார்ஸ்லி, ஒரு கட்டத்தில் மைக்கேல் தன்னைப் பின்தொடர்வதாக முடிவே செய்துள்ளார்.
</p><p>
பின்னர், தான் குற்றவாளிகளை கண்காணிக்க பயன்படும், Flock Safety camera என்னும் கமெராவைப் பயன்படுத்தித்தான் மார்ஸ்லியின் நடமாட்டத்தைக் கண்காணித்ததாக மைக்கேல் ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், மைக்கேல் 13 மாதங்களாக சுமார் 600 முறை மார்ஸ்லியையும் அவரது மகளையும் கண்காணித்தது தெரியவந்தது.&nbsp;</p><p></p><p>

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மைக்கேல் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது பெண்களை பின்தொடர்தல், துன்புறுத்துதல் மற்றும் கண்காணிப்பு கமெராக்களை தவறாக பயன்படுத்தியது முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
</p><p>
துரதிர்ஷ்டவசமாக, வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே, 2026ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மைக்கேல் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
</p><h3>
குறைந்தது 50 சம்பவங்கள்</h3><p>

விடயம் என்னவென்றால், இப்படி பெண்களை பின்தொடர்ந்து துன்புறுத்தியதாக நாடு முழுவதும் குறைந்தது 50 பொலிசார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது அல்லது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0f4dad2-10da-425f-83c4-c2d12c78ddaf/26-6a71dd92ad935.webp' /></p><p>
அவற்றில் 26 வழக்குகளில் பொலிசார் தங்கள் முன்னாள் இந்நாள் மனைவிகள், காதலிகள், தங்களுக்குத் தெரிந்த பெண்கள், தாங்கள் சந்திக்க விரும்பும் பெண்கள் என பலரை பின்தொடர்ந்ததும் துன்புறுத்தியதும் ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

இந்த விடயம் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட கமெராக்களை தயாரிக்கும் நிறுவனம், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
</p><p>
ஆனால், அதற்கு முன்பே, இந்த நடவடிக்கைகளால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
பயந்துபோய், வழக்கமான அன்றாட வேலைகளை மாற்றிக்கொண்டது, உறவினர்களின் வாகனங்களை வாங்கி பயன்படுத்துவது, தங்களைக் கண்காணிப்பது முடிந்தும், அது தெரியாமல் பயந்துகொண்டே இருந்தது என தாங்கள் அனுபவித்த துன்பங்கள், மக்களை பாதுகாக்கவேண்டிய பொலிசாரே, தங்களைத் தொடர்ந்து கண்காணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டதாக அந்தப் பெண்கள் தெரிவித்துள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T12:39:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை வழிநடத்த தயாரான தோற்றமா என விமர்சனம்: காரணமாக அமைந்த புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/louise-haigh-dressed-to-start-work-for-uk-1785846993"></link>
            <id>https://news.lankasri.com/article/louise-haigh-dressed-to-start-work-for-uk-1785846993</id>
            <summary type="text">பிரித்தானியாவின் மிக மூத்த அமைச்சராக பொறுப்பேற்றுள்ள லூயிஸ் ஹேக்கின் காலணி கேள்வியை எழுப்பியுள்ளது.&amp;nbsp;லூயிஸ் ஹேக்&amp;nbsp;
ஆண்டி பர்ன்ஹாம் விடுமுறைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் மிக மூத்த அமைச்சராக பொறுப்பேற்றுள்ள லூயிஸ் ஹேக்கின் காலணி கேள்வியை எழுப்பியுள்ளது.&nbsp;</p><h2>லூயிஸ் ஹேக்&nbsp;</h2><p>
ஆண்டி பர்ன்ஹாம் விடுமுறைக்காக வெளிநாடு சென்றதைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் மிக மூத்த அரசு அமைச்சராக லூயிஸ் ஹேக் (Louise Haigh) பொறுப்பேற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7826e2d8-6def-4efd-a045-0d5c67a86a05/26-6a71dcd42dc3f.webp' />&nbsp;</p><p></p><p>
39 வயதான லூயிஸ் ஹேக் First Secretary of State என்ற பதவியின் மூலம் செயல்பட உள்ள நிலையில், ஒயிட்ஹாலில் தனது கடமைகளை செய்துகொண்டிருந்தபோது புகைப்படம் எடுக்கப்பட்டார். </p><p>

அப்போது தேய்ந்துபோன விளையாட்டு காலணிகளுடன் நடந்து சென்றது லூயிஸ் கவனிக்கப்பட்டது. இது தற்போது பிரித்தானியாவை வழிநடத்த தயாரான தோற்றமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.&nbsp;</p><h2>முதல் அரசு செயலாளர்</h2><p>
1960-களின் பிற்பகுதியில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பார்பரா கேஸில் வகித்த 'முதல் அரசு செயலாளர்'; அதாவது மற்ற அனைத்து அரசு செயலாளர்களையும் விட உயர்ந்த அந்தஸ்தைக் குறிக்கும் பதவி - என்ற பொறுப்பை வகிக்கும் முதல் பெண்மணி இவராவார்.</p><p> 

'ரெட் லூ' என்று அழைக்கப்படும் லூயிஸ் ஹேக், இந்த வாரம் வழக்கம் போல் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

ஆனால், பிரதமர் பர்ன்ஹாம் இல்லாத நிலையில் அவர் அன்றாட முடிவுகளை எடுக்க மாட்டார் என எண் 10 (டவுனிங் ஸ்ட்ரீட்) வலியுறுத்தியுள்ளது.
</p><p>
இந்த சூழலில்தான் அவர் செவ்வாயன்று சாம்பல் நிற பேன்ட் சூட், வெளிர் நிற கை இல்லாத மேலாடை மற்றும் தேய்ந்துபோன ஒரு ஜோடி வெள்ளை அடிடாஸ் காலணிகளுடன் அமைச்சரவை அலுவலகத்திற்குள் நுழைவது காணப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5132cd59-e284-4360-848c-f2a49eae1fe2/26-6a71dcd4dfd33.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T12:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் பெருமை: 20 ஆண்டுகள் நிறைவு செய்த IndiGo]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indigo-celebrates-20-years-of-aviation-success-1785845551"></link>
            <id>https://news.lankasri.com/article/indigo-celebrates-20-years-of-aviation-success-1785845551</id>
            <summary type="text">இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான IndiGo, தனது 20-வது ஆண்டு விழாவை இன்று (ஆகஸ்ட் 4, 2026) கொண்டாடுகிறது.

2006-ல் ஒரு Airbus A320 விமானத்துடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான IndiGo, தனது 20-வது ஆண்டு விழாவை இன்று (ஆகஸ்ட் 4, 2026) கொண்டாடுகிறது.
</p><p>
2006-ல் ஒரு Airbus A320 விமானத்துடன் டெல்லி-இம்பால் வழித்தடத்தில் தொடங்கிய இந்த நிறுவனம், இன்று 430-க்கும் மேற்பட்ட விமானங்கள், தினசரி 2,200 சேவைகள், 140-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்கள், 900 மில்லியன் பயணிகள் என மிகப்பெரிய வெற்றியை கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/742bcf6d-a8f6-46f2-b5c3-620c5cd09fb8/26-6a71d73077d40.webp' /></p><p>வளர்ச்சி பயணம்

குறைந்த கட்டணம், நேர்த்தியான சேவை, நேரத்தை கடைபிடித்தல், எளிய அனுபவம் ஆகியவை IndiGo வெற்றியின் ரகசியமாகும்.
</p><p>
இந்த நான்கு தூண்கள் கடந்த இருபது ஆண்டுகளாக மாறாமல் இருந்து, நிறுவனத்தை இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக மாற்றியுள்ளன.</p><p></p><p>முன்னாள் CEO Pieter Elbers தலைமையில், IndiGo சர்வதேச விரிவாக்கத்தைத் தொடங்கியது. தற்போது, Airbus A321XLR மற்றும் A350 widebody விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. 2030-க்குள் சர்வதேச சேவைகள் இண்டிகோவின் திறனில் 40 சதவீதத பங்கைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

புதிய CEO-வின் பார்வை

புதிய CEO Willie Walsh, “IndiGo இந்தியாவை உலகளாவிய விமான மையமாக மாற்றும் திறன் கொண்டது. அடுத்த தசாப்தத்தில், சர்வதேச விரிவாக்கம், வாடிக்கையாளர் அனுபவ மேம்பாடு, உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.</p><h2>சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பு</h2><p>

IndiGo தற்போது 68,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலைவாய்ப்பில் ஈடுபடுத்தியுள்ளது. iFly Academy வழியாக தினசரி 2,000 பேருக்கு பயிற்சி அளிக்கிறது. பெண் பணியாளர்கள் 45 சதவீதம் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட பெண் விமானிகள் உள்ளனர்.</p><p></p><h2>எதிர்கால இலக்குகள்
</h2><p>
இண்டிகோ நிறுவனம் 2030-க்குள், தினசரி 3,000 சேவைகள், ஆண்டுக்கு 200 மில்லியன் பயணிகள், 550-க்கும் மேற்பட்ட விமானங்கள், சர்வதேச விரிவாக்கத்தில் முன்னணி நிலையை எட்டுதல் ஆகிய இலக்குகளைக் கொண்டுள்ளது.
</p><p>
IndiGo, 2006-ல் ஒரு விமானத்துடன் தொடங்கிய பயணத்தை, 20 ஆண்டுகளில் இந்தியாவின் பெருமைமிகு விமான நிறுவனமாக மாறியுள்ளது. அடுத்த தசாப்தம், உலகளாவிய விமானத் துறையில் இந்தியாவின் முகமாக உருவாகும் இலக்கை நோக்கி நகர்கிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T12:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்வோர் பயணித்த படகில் தீ: 157 பேரை மீட்ட பிரித்தானியாவும் பிரான்சும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/157-migrants-rescued-boat-fire-in-english-channel-1785844825"></link>
            <id>https://news.lankasri.com/article/157-migrants-rescued-boat-fire-in-english-channel-1785844825</id>
            <summary type="text">150க்கு மேற்பட்ட புலம்பெயர்வோர் பயணித்த படகில் தீப்பற்றிய நிலையில், பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து அவர்களை மீட்டுள்ளன.


இன்று காலை பிரான்சிலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>150க்கு மேற்பட்ட புலம்பெயர்வோர் பயணித்த படகில் தீப்பற்றிய நிலையில், பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து அவர்களை மீட்டுள்ளன.</p><p>


இன்று காலை பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட புலம்பெயர்வோர் படகொன்று ஆங்கிலக்கால்வாயில் பயணித்துக்கொண்டிருக்கும்போது தீப்பற்றியுள்ளது.</p><h3>

157 பேரை மீட்ட பிரித்தானியாவும் பிரான்சும்
</h3><p>
புலம்பெயர்வோர் படகில் தீப்பற்றிய தகவலறிந்து பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிலிருந்து படகுகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2635835d-51c1-4b1e-9158-1f77c5fc5eb6/26-6a71d45a85aba.webp' /></p><p>
படகின் எஞ்சினில் தீப்பற்றியதால் அதிலிருந்தவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்க, பிரான்சிலிருந்து சென்ற இரண்டு படகுகள் அவர்களில் 102 பேரை மீட்டுள்ளன.
</p><p>
பிரித்தானியாவிலிருந்து சென்ற படகு 54 புலம்பெயர்வோரை மீட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
அனைவரும், பிரான்சிலுள்ள Boulogne-sur-Mer என்னுமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என பிரித்தானிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T12:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சண்டிபுரா வைரஸ் பாதிப்பு - குஜராத்தில் 22 குழந்தைகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/22-child-death-in-gujarat-by-chandipura-virus-1785843726"></link>
            <id>https://news.lankasri.com/article/22-child-death-in-gujarat-by-chandipura-virus-1785843726</id>
            <summary type="text">சண்டிபுரா வைரஸ் பாதிப்பால் குஜராத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 

சண்டிபுரா வைரஸ் பாதிப்பு

குஜராத்தில் இந்த பருவமழைக் காலத்தில் சண்டிபுரா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சண்டிபுரா வைரஸ் பாதிப்பால் குஜராத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். </p><h3>

சண்டிபுரா வைரஸ் பாதிப்பு</h3><p>

குஜராத்தில் இந்த பருவமழைக் காலத்தில் சண்டிபுரா வைரஸ் (CHPV) காரணமாக 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் பிரஃபுல் பன்சேரியா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f348bec-4e30-47d4-a03b-bf769c28f9ea/26-6a71d01043368.webp' /></p><p>
இது குறித்து பேசிய அவர், நோய் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட 184 பேரில் 35 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
காந்திநகர், பதான், ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிறந்த மற்றும் அதி உயர் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவர்களின் உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர். </p><p></p><p>

மூளை அழற்சி வைரஸைப் பரப்புவதற்குக் காரணமான மணீ ஈக்களைக் குறிவைத்து, கால்நடை வளர்ப்பு நடைபெறும் பகுதிகளில் சுகாதாரக் குழுவினர் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

சண்டிபுரா வைரஸ் (CHPV) என்பது நோய்த்தொற்றுள்ள, இரத்தம் குடிக்கும் பூச்சிகள் மூலம் பரவுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c44618ce-a8e5-4da2-863a-5a11ab978c9c/26-6a71d010ef347.webp' /></p><p> 

இது, முதன்முதலில் 1965 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள சண்டிபுரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு நோயாளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. </p><p>தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC), மணீ ஈக்களையே இந்நோய் பரவுதலுக்கான முக்கியக் கடத்திகளாக அடையாளம் காண்கிறது. </p><p>இது காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சளி போன்ற சாதாரணமான அறிகுறிகளுடன் தொடங்கி சில நோயாளிகளுக்கு மூளையை விரைவாகத் தாக்கக்கூடும்.
</p><p>
கடுமையான மூளை அழற்சி உருவாகும்போது, ​​வலிப்பு, உணர்வு நிலை மாற்றம் மற்றும் கோமா ஆகியவை ஏற்படலாம்.
</p><p>
இந்த நோய் வேகமாகப் பரவக்கூடும் என்றும், கடுமையான பாதிப்புகள் உள்ளவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 முதல் 72 மணி நேரத்திற்குள் மரணம் ஏற்படக்கூடும் என்றும் NCDC தெரிவித்துள்ளது. </p><p>

தற்போது சண்டிபுராவுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட வைரஸ் எதிர்ப்பு சிகிச்சையோ இல்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T11:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி வீண்: மேத்யூ ஷார்ட்டின் சரவெடி ஆட்டத்தில் வெல்ஷ் ஃபயர் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/marcus-stoinis-and-matthew-short-fifty-the-hundred-1785842170"></link>
            <id>https://news.lankasri.com/article/marcus-stoinis-and-matthew-short-fifty-the-hundred-1785842170</id>
            <summary type="text">சௌதர்ன் பிரேவ் அணிக்கு எதிரான The Hundred போட்டியில் வெல்ஷ் ஃபயர் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஸ்டோய்னிஸ் அதிரடி கார்டிஃப்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சௌதர்ன் பிரேவ் அணிக்கு எதிரான The Hundred போட்டியில் வெல்ஷ் ஃபயர் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><h2> 

ஸ்டோய்னிஸ் அதிரடி </h2><p>கார்டிஃப்பில் நடந்த The Hundred போட்டியில் வெல்ஷ் ஃபயர் மற்றும் சௌதர்ன் பிரேவ் அணிகள் மோதின.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Marcus Stoinis brings up his 50 👏<a href="https://x.com/hashtag/TheHundred?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TheHundred</a> <a href="https://t.co/mx3HBp5V8j">pic.twitter.com/mx3HBp5V8j</a></p>&mdash; The Hundred (@thehundred) <a href="https://x.com/thehundred/status/2084347254907781267?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p>

முதலில் ஆடிய சௌதர்ன் பிரேவ் அணியில் ஜேமி ஸ்மித், பென் மெக்கின்னி டக்அவுட் ஆகினர். </p><p>பின்னர் நிகில் 18 ஓட்டங்களில் வெளியேற, மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி காட்டினார்.

அவர் 39 பந்துகளில் 55 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 8 பவுண்டரிகள்) எடுக்க, சௌதர்ன் பிரேவ் 115 ஓட்டங்கள் சேர்த்தது. சாம் குக் 3 விக்கெட்டுகளும், ரச்சின் ரவீந்திரா, மேத்யூ ஷார்ட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.</p><h2>
கடைசிவரை நின்ற ஷார்ட் </h2><p>பின்னர் களமிறங்கிய வெல்ஷ் ஃபயர் அணியில் பிலிப் சால்ட் (4), ஜோ ரூட் (17), ரச்சின் ரவீந்திரா (0) மற்றும் ஜோர்டான் கொக்ஸ் (6) ஆகியோர் சொதப்பினர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">What a way to bring up 50, Matt Short 🤩<a href="https://x.com/hashtag/TheHundred?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TheHundred</a> <a href="https://t.co/fVGyxKZH5S">pic.twitter.com/fVGyxKZH5S</a></p>&mdash; The Hundred (@thehundred) <a href="https://x.com/thehundred/status/2084371441680547983?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

எனினும், தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் (Matthew Short) கடைசிவரை களத்தில் நின்று 41 பந்துகளில் 60 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 6 பவுண்ரிகள்) விளாச, வெல்ஷ் ஃபயர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும், கிறிஸ் ஜோர்டான் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec18c4b-0fba-419d-96aa-217514adb968/26-6a71c9fd69cec.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T11:14:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் - நீதிபதி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/court-orderedto-release-udhayanidhi-stalin-today-1785834256"></link>
            <id>https://news.lankasri.com/article/court-orderedto-release-udhayanidhi-stalin-today-1785834256</id>
            <summary type="text">கைது செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க நீதிபதி உத்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். </p><h3>

உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க நீதிபதி உத்தரவு</h3><p> 

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba356c61-848f-425e-8b60-59cc10f6546e/26-6a71ab1242c4e.webp' /></p><p> 

உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்காக காவல்துறையினர் தஞ்சாவூர் அழைத்து செல்கின்றனர். </p><p>

இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.&nbsp;</p><p></p><p>

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188bd523-0c0c-4d5e-875f-e8a2312a98e3/26-6a71ab12e817b.webp' /></p><p>
விசாரணைக்கு பின் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கபடுவார் என அரசு தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சக இராணுவ வீரர் உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-soldier-arrested-for-kill-4-in-crimea-1785837758"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-soldier-arrested-for-kill-4-in-crimea-1785837758</id>
            <summary type="text">இணைக்கப்பட்ட கிரிமியாவில் சக இராணுவ வீரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரஷ்ய வீரர் கைது செய்யப்பட்டார்.&amp;nbsp;துப்பாக்கிச்சூடு&amp;nbsp;
இணைக்கப்பட்ட கிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இணைக்கப்பட்ட கிரிமியாவில் சக இராணுவ வீரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரஷ்ய வீரர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><h2>துப்பாக்கிச்சூடு&nbsp;</h2><p>
இணைக்கப்பட்ட கிரிமியாவில், ரஷ்ய இராணுவ வீரர் சக வீரர் மற்றும் பொதுமக்கள் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில் தாக்குதலுக்கு உள்ளான நான்கு பேருமே உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f81a00-c0fa-4806-b6a9-4426da004d6f/26-6a71b8c0ee7a6.webp' /></p><p></p><p>இதனையடுத்து குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார். 

செவாஸ்டோபோலின் ஆளுநரான மிகைல் ரஸ்வோஷா யேவ், Khmelnitskoye கிராமத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். </p><p>

அவர்களில் 71, 64 மற்றும் 59 வயதுடைய பொதுமக்கள் மற்றும் ஒரு இராணுவ வீரர் ஆகியோர் அடங்கும் என்றார்.
</p><p>
மேலும் அந்த இராணுவ வீரரின் துப்பாக்கிச்சூட்டில் ஒரு இராணுவ வீரர் உட்பட மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். </p><p>

மருத்துவப் பணியாளர்கள் அவர்களைக் காப்பாற்ற முடிந்தவரை போராடி வருகின்றனர் எனவும், தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T10:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயிலில் பயணிக்கும் இளைஞர்களுக்கு ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள நல்ல செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-youths-to-get-half-price-travel-by-railcard-1785836464"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-youths-to-get-half-price-travel-by-railcard-1785836464</id>
            <summary type="text">ரயிலில் பயணிக்கும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் பிரித்தானிய ரயில்வே அமைச்சகம் மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது.



பிரித்தானியாவில் ரயிலில் பயணிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரயிலில் பயணிக்கும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் பிரித்தானிய ரயில்வே அமைச்சகம் மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது.
</p><p>


பிரித்தானியாவில் ரயிலில் பயணிக்கும் பதின்மவயதினருக்கு பயனளிக்கும் வகையில் மாற்றம் ஒன்றைச் செய்துள்ளதாக பிரித்தானிய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><h3>
இளைஞர்களுக்கு பயனளிக்கும் விடயம்</h3><p>

பிரித்தானியாவில், ரயிலில் பயணிக்கும் 16 முதல் 17 வயதுள்ள இளைஞர்கள் ஏராளமானோர், 16-17 Saver Railcard என்னும் ரயில்வே பாஸ் ஒன்றைப் பயன்படுத்திவருகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0996d9f6-3df4-482a-b926-2f8dc3b3e738/26-6a71b3b16b87c.webp' /></p><p>

இந்த பாஸ், 16 முதல் 17 வயதுள்ள இளைஞர்களுக்காக பாதி விலையில் வழங்கப்பட்டுவருகிறது.
</p><p>
விடயம் என்னவென்றால், 17 வயதுடைய ஒரு இளைஞர் 18 வயதை எட்டிவிட்டால், அதற்குப் பிறகு இந்த ரயில்வே பாஸை பயன்படுத்தமுடியாது.
</p><p>
ஆகவே, கல்வியாண்டின் பாதியிலேயே 18 வயதைத் தொடும் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர், தங்கள் சக மாணவ மாணவியரை விட அதிக செலவு செய்து பயணம் செய்யவேண்டியிருக்கும்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், இனி இளைஞர்கள் 18 வயதை எட்டினாலும், அந்த ஆண்டு முடியும் வரை அந்த தள்ளுபடி விலை பாஸை பயன்படுத்தலாம் என பிரித்தானிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த மாற்றத்தால், மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலன் அடைய உள்ளார்கள்.
</p><p>
இந்த மாற்றம், இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 17ஆம் திகதி அமுலுக்கு வர உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T09:45:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிநீருக்காக போராடத் துவங்கியுள்ள ஜேர்மன் நகரமொன்றின் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-peoples-protest-for-drinking-water-1785835907"></link>
            <id>https://news.lankasri.com/article/german-peoples-protest-for-drinking-water-1785835907</id>
            <summary type="text">பிராண்டன்பர்க் நகரில் பல நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வரும் நிலையில், பொதுமக்கள் தண்ணீருக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.


ஜேர்மன் நக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிராண்டன்பர்க் நகரில் பல நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வரும் நிலையில், பொதுமக்கள் தண்ணீருக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.</p><p>


ஜேர்மன் நகரமொன்றில் பல நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வரும் நிலையில், பொதுமக்கள் தண்ணீருக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.</p><h3>

குடிநீருக்காக போராடும் ஜேர்மன் நகரமொன்றின் மக்கள்</h3><p>

பருவநிலை மாற்றம், நீண்ட வறட்சி முதலான பல இயற்கைக் காரணிகள் ஜேர்மனியின் பல பாகங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு வரலாம் என்னும் அச்சத்தை உருவாக்கிவருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b85a9a74-fc5c-4567-b8c1-b0346de1fed1/26-6a71b184d02be.webp' /></p><p>
இந்நிலையில், பிராண்டன்பர்க் நகரில் டெஸ்லா, ரெட் புல் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்துவருகின்றன.</p><p>

இதற்கிடையில், தாமிரச் சுரங்கம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுவருகிறது. இவற்றிற்கெல்லாம் அதிக அளவில் தண்ணீர் தேவை.&nbsp;</p><p></p><p>
இந்த நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துக்கொள்வதாலும், தொழிற்சாலைக் கழிவுகள் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்பதாலும், மேலும் தண்ணீருக்கு பிரச்சினை ஏற்படலாம் என மக்கள் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.
</p><p>
வளம் மிக்க பிராண்டன்பர்க் நகரம் வறண்ட நிலமாக மாறிவரும் நிலையில், பல்வேறு இயற்கை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களுடன் இணைந்து குடிநீருக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T09:32:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரப்பூர்வமாக பெயரை மாற்றிய பசிபிக் தீவு தேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nauru-renamed-officially-as-naoero-1785833978"></link>
            <id>https://news.lankasri.com/article/nauru-renamed-officially-as-naoero-1785833978</id>
            <summary type="text">நவூரு (Nauru) தனது பெயரை அதிகாரப்பூர்வமாக &quot;நவோரோ&quot; (Naoero) என மாற்றியது.பசிபிக் தீவுகளில் அமைந்துள்ள சிறிய நாடான நவூரு, தனது பெயரை அதிகாரப்பூர்வமாக நவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவூரு (Nauru) தனது பெயரை அதிகாரப்பூர்வமாக "நவோரோ" (Naoero) என மாற்றியது.</p><p>பசிபிக் தீவுகளில் அமைந்துள்ள சிறிய நாடான நவூரு, தனது பெயரை அதிகாரப்பூர்வமாக நவோரோ குடியரசு என மாற்றியுள்ளது. இந்த மாற்றம், நாட்டின் பாரம்பரிய மொழி மற்றும் உச்சரிப்புடன் பொருந்தும் வகையில் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/993c90d8-16f2-496d-9153-3d3af4db547d/26-6a71a9fc657a4.webp' /></p><p>இதன் மூலம், நவூரு தனது காலனித்துவ காலத்தின் அடையாளத்திலிருந்து விலகி, தாய்மொழி அடிப்படையிலான பெயருக்கு திரும்பியுள்ளது.
</p><p>
புதிய பெயர் “நவோரோ” (Naoero) என உச்சரிக்கப்படுகிறது. இதுவரை உலகளவில் “நவூரு” (Nauru) என அறியப்பட்ட இந்த நாடு, இனி NRO என்ற குறியீட்டில் சர்வதேச அளவில் பதிவு செய்யப்படும். மக்கள் இனி “dei-Naoero” என அழைக்கப்படுவார்கள்.
</p><p></p><p>நவோரோ நாட்டின் ஜனாதிபதி டேவிட் அடேங் (David Adeang), “இந்த பெயர் மாற்றம் எங்கள் பாரம்பரியம், மொழி மற்றும் அடையாளத்தை மதிக்கும் முக்கியமான படியாகும்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
சுமார் 12,000 மக்கள் கொண்ட இந்த நாடு, உலகின் மூன்றாவது சிறிய நாடாகும். ஜேர்மனி மற்றும் அவுஸ்திரேலியாவின் காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு, 1968-ல் சுதந்திர குடியரசாக உருவானது.</p><p>

1970-களில் பாஸ்பேட் சுரங்கம் மூலம் பெரும் செல்வம் ஈட்டிய இந்த நாடு, பின்னர் பொருளாதார சிக்கல்களை சந்தித்தது. தற்போது, காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வு காரணமாக ஆபத்தான நிலையை எதிர்கொள்கிறது.</p><p></p><p>இந்த பெயர் மாற்றம், தேசிய பெருமை மற்றும் அடையாளத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. </p><p>ஐ.நா., அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, சீனா ஆகியவை ஏற்கனவே புதிய பெயரை அங்கீகரித்துள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T08:57:32+00:00</updated>
        </entry>
    </feed>
