<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-12T22:31:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் குடியிருப்பு கட்டிடத்தில் பரவிய தீ: ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fire-at-east-london-residential-building-one-dead-1789252017"></link>
            <id>https://news.lankasri.com/article/fire-at-east-london-residential-building-one-dead-1789252017</id>
            <summary type="text">Fire at East London residential building One dead: கிழக்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Fire at East London residential building One dead: கிழக்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2> லண்டனில் தீ விபத்து</h2><p>லண்டனின் பிளாக்வால் வே(Blackwall Way) பகுதியில் அமைந்துள்ள 22 மாடி கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.</p><p>கட்டிடத்தின் 17 வது மாடியில் தீ பற்றியது தொடர்பாக அதிகாலை 4.35 மணிக்கு அவசர உதவிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> கிட்டத்தட்ட 10 தீயணைப்பு வாகனங்கள், 70 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f73713d4-d1b2-42b7-8388-1fd91061e912/26-6aa5d1b339763.webp' /></p><p>தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி காலை 6.41 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.</p><p> ஆனால் அதற்குள் தீ பரவிய 17வது மாடியின் பாதி பரப்பளவு தீயில் எரிந்து சேதமடைந்தது.</p><p></p><h2> உயிரிழப்புகள் மற்றும் காயம்</h2><p>மருத்துவ சேவையினரின் துரித நடவடிக்கைக்கு மத்தியிலும் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><p> மேலும் மொத்தம் 4 பேர் காயமடைந்த நிலையில், அதில் இருவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><p> தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.</p><p> இந்நிலையில் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-12T22:27:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI வளர்ச்சி வேகத்தை குறைக்க ஆந்த்ரோபிக் CEO வலியுறுத்தல்: எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-growth-should-measured-anthropic-s-ceo-says-1789251682"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-growth-should-measured-anthropic-s-ceo-says-1789251682</id>
            <summary type="text">AI Growth Should Measured Anthropic&#039;s CEO Says: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthrop...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI Growth Should Measured Anthropic's CEO Says: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி(Dario Amodei) வலியுறுத்தியுள்ளார்..</p><h2>AI வேகத்தை குறைக்க வேண்டும்</h2><p>செயற்கை நுண்ணறிவுத் துறையின் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் மனித குலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடும் அபாயம் இருப்பதாக பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி எச்சரித்துள்ளார்.</p><p> அத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b7f5e40-5c64-4856-b0f5-6f2515326029/26-6aa5d063afc16.webp' /><br></p><p>செயற்கை நுண்ணறிவின் எதிர்கால அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்தும் வகையில் 3 கட்ட விரிவான திட்டத்தை டாரியோ அமோடி முன்வைத்துள்ளார்.</p><p>அதன்படி, வெளிப்புற குழுக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கண்காணிப்பதுடன் நிகழ்வுகளை பதிவு செய்து நுண்ணறிவு மாடல்களை சோதிப்பார்கள்.</p><p></p><p> ஏஐ நிறுவனங்கள் இணைந்து தெளிவான அளவுகோலையும், வளர்ச்சியின் வேகத்தையும் நிர்ணயிக்க வேண்டும்.</p><p>ஜனநாயக நாடுகள் ஏஐ பாதுகாப்பு தர நிலைகளில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ள வேணும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We Must Pace the Frontier: I’ve written a new essay on why the AI industry should slow down, with a three-part plan for doing so.<br><br>Anthropic is unilaterally committing to the first of these steps. We’ll provide third-party evaluators with permanent, employee-level access to our…</p>&mdash; Dario Amodei (@DarioAmodei) <a href="https://x.com/DarioAmodei/status/2098773920774074715?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி முன்வைத்த இந்த திட்ட வழிமுறைகளுக்கு, ஓபன்ஏஐ(Open AI) நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-12T22:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம்: டிரம்ப் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-says-deal-with-canada-could-come-soon-1789251401"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-says-deal-with-canada-could-come-soon-1789251401</id>
            <summary type="text"> Trump Says Deal With Canada could come fairly soon: கனடா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து டிரம்ப் நம்பிக்கையான கருத்துக்களை வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p> Trump Says Deal With Canada could come fairly soon: கனடா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து டிரம்ப் நம்பிக்கையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><h2> தடைப்பட்ட பேச்சுவார்த்தை</h2><p>
கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி அமெரிக்கா முன்வைத்த புதிய கோரிக்கைகளை அடுத்து கனேடிய பிரதமர் மார்க் கார்னி தன்னுடைய பேச்சுவார்த்தை குழுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.</p><p> இதனால் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை முற்றிலுமாக முடங்கியது.</p><p> கனடாவின் இந்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கனத்த வரிகளை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62509da5-84c4-436f-bb8f-1bb09443d579/26-6aa5cf4b58d91.webp' /></p><p> கனடாவும் இதற்கு ஈடு கொடுக்கும் விதமாக உடனடி பதில் நடவடிக்கையை அறிவித்தது.</p><p>பின்னர் இதன் தொடர்ச்சியாக மதுபானங்கள் மற்றும் மால்ட் பானங்களை இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது.</p><h2>பேச்சுவார்த்தைக்கு தயார்</h2><p>இந்த தீவிரமான மோதல்களுக்கு பிறகும், அமெரிக்கா மற்றும் கனடா தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.</p><p>செப்டம்பர் 11ம் திகதி கல்கரியில் செய்தியாளர்களிடம் பேசிய கனேடிய பிரதமர் மார்க் கார்னி, இரு தரப்பிற்கு பலனை தரக்கூடிய பேச்சுவார்த்தைக்கு கனடா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.</p><p>ஆனால் கெடுபிடிகளுக்கு பயந்து இந்த பேச்சு வார்த்தையானது நடைபெறாது என்று கார்னி உறுதிப்படுத்தினார்.</p><p>இந்நிலையில் டப்ளினில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா விவசாயப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை கனடா அரசு நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், கனடாவுடன் கூடிய விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று எட்டப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T22:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/15-year-old-boy-survives-two-days-in-bering-sea-1789234034"></link>
            <id>https://news.lankasri.com/article/15-year-old-boy-survives-two-days-in-bering-sea-1789234034</id>
            <summary type="text">15-year-old-boy-survives-two-days-in-bering-sea: 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.கடலில் உயிருக்கு போராடிய 15 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>15-year-old-boy-survives-two-days-in-bering-sea: 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.</p><h2>கடலில் உயிருக்கு போராடிய 15 வயது சிறுவன்</h2><p>

அமெரிக்காவின் அலாஸ்கா அருகில் உள்ள பெரிங் கடலில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> &nbsp;செயிண்ட லாரன்ஸ் தீவில் உள்ள சவோங்கா கிராமத்தை சேர்ந்த டெரெக் பார்க்கர் அக்னாங்கா என்ற 15 வயது சிறுவன் படகில் உறவினர்களுடன் மீன்பிடிக்க சென்ற போது அவரது படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்தது.</p><p>கடலில் நீரின் வெப்பநிலையானது வெறும் 10 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருந்த நிலையில், கவிழ்ந்த படகை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இரவு பகலாக உயிருக்கு போராடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/594c2f50-a0e6-43f1-b91f-0cecd20798d9/26-6aa58b7424b8c.webp' /></p><p></p><h2> மீட்பு மற்றும் தேடுதல் பணி</h2><p>

கடலுக்கு சென்ற 3 பேரை காணவில்லை என உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததும். அமெரிக்க கடலோரக் காவல்படை தீவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.</p><p> இதில் சிறுவனுடன் சென்ற மற்ற இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> கடலில் உயிருக்காக 2 நாட்களாக போராடிய சிறுவன் சுமார் 2 நாட்களுக்கு பிறகு செயிண்ட் லாரன்ஸ் தீவுக்கு அருகே மீட்கப்பட்டார்.</p><p> மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக கரைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.</p><p> 15 வயது சிறுவன் 2 நாட்களாக கடலில் மிதந்த படி உயிருடன் இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T21:52:27+00:00</updated>
        </entry>
    </feed>
