<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-21T07:26:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐந்து நிமிடங்கள் குளித்த பெண்ணுக்கு 1.20 லட்ச ரூபாய் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-fined-1-20-lakh-for-5-minutes-bath-1787295174"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-fined-1-20-lakh-for-5-minutes-bath-1787295174</id>
            <summary type="text">Indian woman in Australia fined RS.1.20 lakh after 5 minute shower triggers fire alarm: அவுஸ்திரேலியாவில் இந்திய இளம்பெண்ணொருவர் சுடுதண்ணீரில் குளித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian woman in Australia fined RS.1.20 lakh after 5 minute shower triggers fire alarm: அவுஸ்திரேலியாவில் இந்திய இளம்பெண்ணொருவர் சுடுதண்ணீரில் குளித்ததைத் தொடர்ந்து தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அவருக்கு 1.20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் வாமிகா என்னும் இந்திய இளம்பெண் குளித்து முடித்து குளியலறையிலிருந்து வெளியேறும்போது திடீரென தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளது.
</p><h3>
ஐந்து நிமிடங்கள் குளித்த பெண்ணுக்கு 1.20 லட்ச ரூபாய் அபராதம்
</h3><p>
வாமிகா வசித்துவரும் குடியிருப்பின் மேலாளர் வந்து கதவைத் தட்ட, வெளியே தீயணைப்புத்துறையினர் ஏதோ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாகவும், மேலாளர் தன்னை பாதுகாப்பாக வீட்டிலிருந்து வெளியேற்ற வந்துள்ளதாகவும் எண்ணியுள்ளார் அவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b47f2a79-625f-4804-9f39-ae7d3cb269c3/26-6a87f5c7a0a7c.webp' /></p><p>
ஆனால், பிரச்சினையே அவரது வீட்டில்தான் என அவருக்குத் தெரியவந்துள்ளது.

அதாவது, வாமிகா தன் குளியலறையிலுள்ள exhaust ஃபேனை ஆன் செய்யாமலே சுடுதண்ணீரில் குளித்துள்ளார்.
</p><p>
ஐந்து நிமிடக் குளியலுக்குப் பின் அவர் குளியலறையிலிருந்து வெளியேற, குளியலறையிலிருந்து வெளியேறிய நீராவி, அருகிலிருந்த தீ எச்சரிக்கை அலாரத்தை தூண்ட, அலாரம் ஒலிக்கத் துவங்கியுள்ளது. </p><p></p><p>
சிறிது நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
</p><p>
பின்னர் வாமிகா சுடுதண்ணீரில் குளித்ததால் ஏற்பட்ட நீராவியே தீ எச்சரிக்கை அலாரம் ஒலிக்கக் காரணம் என தெரியவரவே, தங்களை வரவழைத்ததற்காக 1,800 டொலர்கள் கட்டச் சொல்லியிருக்கிறார்கள் தீயணைப்புத்துறையினர்!
</p><p>
1,800 அவுஸ்திரேலிய டொலர்கள் என்பது இந்திய மதிப்பில் 1,23,085.17 ரூபாய் ஆகும்.</p><p>

ஐந்து நிமிடம் குளித்ததற்கு 1.20 லட்ச ரூபாய் அபராதமா என வேடிக்கையாகக் கேட்கும் வாமிகா, அது குறித்த இடுகை ஒன்றை சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
</p><p>
அதை பார்வையிட்ட பலரும், இது அநியாயம், யாராவது குளியலறைக்கு அருகில் தீ எச்சரிக்கை அலாரத்தை பொருத்துவார்களா என்று கேள்வி எழுப்ப, சிலர், முதல் முறை நிகழ்ந்த தவறுக்கே அபராதமா என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T06:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுட்டு வீழ்த்தப்பட்ட 443 உக்ரைனிய ட்ரோன்கள்: அசத்திய நவீன ரஷ்ய ரேடார் அமைப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-shot-down-443-ukraine-drones-1787294571"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-shot-down-443-ukraine-drones-1787294571</id>
            <summary type="text">உக்ரைன் முன்னெடுத்த மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை ரஷ்யாவின் பாதுகாப்பு படைப்பிரிவினர் வெற்றிகரமாக தடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.உக்ரைனின் ட்ரோன் தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் முன்னெடுத்த மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை ரஷ்யாவின் பாதுகாப்பு படைப்பிரிவினர் வெற்றிகரமாக தடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><h2>உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்</h2><p>
இரவோடு இரவாக ரஷ்ய பிராந்தியத்தை குறிவைத்து ஏவப்பட்ட 443 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த உக்ரைனிய ட்ரோன்கள் ரஷ்ய பிராந்தியத்தை நோக்கி சீறிப்பாய்ந்தன.</p><p> இந்த ட்ரோன்களை நகர்வுகளை துல்லியமாக கண்காணித்து வந்த ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை இடைமறித்து அழித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d2a368c-5ff1-42c4-b0ea-885a3b44c429/26-6a87f36c8ec14.webp' /></p><p> ரஷ்ய எல்லை நோக்கி வந்த இந்த ஆளில்லா விமானங்களை நவீன ரேடார் அமைப்புகள் முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை விடுத்ததாக ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> இதையடுத்து வான் பாதுகாப்பு படை வீரர் விரைந்து செயல்பட்டு ட்ரோன்கள் தாக்குதல் இலக்கை அடைவதற்கு முன்பு தடுத்து அழித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-21T06:47:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் மாறிய வானிலை... உயிர் பலி வாங்கிய மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-dies-in-powerful-storms-in-germany-1787293733"></link>
            <id>https://news.lankasri.com/article/2-dies-in-powerful-storms-in-germany-1787293733</id>
            <summary type="text">Powerful storms in Germany kills two: ஜேர்மனியில் அடித்த புயலில் இருவர் பலியாகியுள்ளார்கள்.


நேற்று வரை வெப்பத்தால் தவித்த சில நாடுகளில் மழை கொட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Powerful storms in Germany kills two: ஜேர்மனியில் அடித்த புயலில் இருவர் பலியாகியுள்ளார்கள்.
</p><p>

நேற்று வரை வெப்பத்தால் தவித்த சில நாடுகளில் மழை கொட்டித் தீர்க்கத் துவங்கியுள்ளது.
</p><p>
பிரித்தானியாவில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. ஜேர்மனியிலும் இரண்டு நாட்களாக புயலடித்துவரும் நிலையில், இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் பலியாகியுள்ளார்கள்.</p><h3>ஜேர்மனியில் மாறிய வானிலை</h3><p>

மேற்கு ஜேர்மனியிலுள்ள Rhineland-Palatinate மாகாணத்தில், இரண்டு பெண்கள் வாக்கிங் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென புயலடிக்கத் துவங்க, அவர்கள் மழைக்காக ஓரிடத்தில் ஒதுங்க, அப்போது மரம் ஒன்று சாய, அந்தப் பெண்களில் ஒருவர் அங்கேயே உயிரிழந்துவிட்டார். மற்றொரு பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
மேலும், புயலால் பல இடங்களில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba696b2d-7925-4565-903c-b91989ae8ea2/26-6a87f026bd732.webp' /></p><p>பவேரியாவில் விழா ஒன்றிற்காக சுமார் 3,500 பேர் மைதானம் ஒன்றில் கூடியிருந்த நிலையில், புயல் காரணமாக அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad173189-c763-4c94-b6d7-3cdafbae7c76/26-6a87f02824ffc.webp' /></p><p>Thuringia மாகாணத்தில், ஒரு தந்தை தன் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கும்போது மரம் ஒன்று உடைந்து விழ, அந்த தந்தை உயிரிழந்துவிட்டார், குழந்தை தப்பிவிட்டது.&nbsp;</p><p></p><p>
ஆக, வெப்பத்தால் மக்கள் தவித்த நிலை மழையால் மாறினாலும், பல இடங்களில் கட்டிடங்களுக்கும் சில இடங்களில் மக்கள் உயிருக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T06:29:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்துள்ளது - அமைச்சர் நிர்மல் குமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ctr-nirmal-kumar-about-yellow-bandana-by-astro-1787292714"></link>
            <id>https://news.lankasri.com/article/ctr-nirmal-kumar-about-yellow-bandana-by-astro-1787292714</id>
            <summary type="text">ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்துள்ளது என அமைச்சர் நிர்மல் குமார் பேசியுள்ளார். 

ஜோசியக்காரர் சொன்னால்தான்&amp;nbsp;கோப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்துள்ளது என அமைச்சர் நிர்மல் குமார் பேசியுள்ளார்.</p><h3> 

ஜோசியக்காரர் சொன்னால்தான்&nbsp;<span style="color: inherit; font-size: 1.5rem;">கோப்புகளை திறப்பீர்களா?</span></h3><p>

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. </p><p>

இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "சில தினங்களுக்கு முன் பேரவையில் பேசிய முதலமைச்சர், தனது டேபிளில் 3 கோப்புகள் இருப்பதாகவும், அதனை திறந்து பார்க்க வைத்துவிட வேண்டாம் என எதிர்க்கட்சிகளை நோக்கி குற்றம்சாட்டியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0fd2766-83b3-4739-b41c-e739f2b78389/26-6a87ec2b6f1af.webp' /></p><p>
அந்த கோப்புகளை தயவு செய்து திறந்து பாருங்கள். ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள், இதையே 3 மாதமாக சொல்கிறீர்கள். ஜோசியக்காரர் சொன்னால்தான் அந்த கோப்புகளை திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? என பேசியுள்ளார்.&nbsp;</p><p></p><h3> 

ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு
</h3><p>
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "ஜோசியம் என சொன்னார். ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d70526-9237-42dc-b9ec-875e7cf6a389/26-6a87ec2c235ad.webp' /></p><p>அதனால் எதை செய்தாலும், வெளிப்படையாக எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் செய்ய தெரியும். 

எதை எப்போது எடுக்க வேண்டும் என தெரியும். எல்லா துறைகளிலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பேசியுள்ளார். </p><p>

முன்னாள் திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி மஞ்சள் துண்டு அணியும் வழக்கமுடையவர். ஆத்தீகரான அவர் ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு அணிபவர் என மறைமுகமாக திமுகவை சீண்டும் வகையில் அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T06:12:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வன்முறையைக் கையில் எடுக்கும் புலம்பெயர்வோர்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/migrants-attcked-cops-on-france-beach-1787287695"></link>
            <id>https://news.lankasri.com/article/migrants-attcked-cops-on-france-beach-1787287695</id>
            <summary type="text">Migrants on a French beach attacked cops as they tried to set sail for Britain: பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Migrants on a French beach attacked cops as they tried to set sail for Britain: பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர் பிரான்ஸ் நாட்டு பொலிசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
</p><p>

பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர், பிரான்ஸ் நாட்டு பொலிசாரை தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
</p><h3>
அதிர்ச்சிக் காட்சிகள்
</h3><p>
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் இந்தக் காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டு கடற்கரை ஒன்றில் நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdda8ed2-2c44-4ffa-a7fc-c9dc2ffcf5bc/26-6a87d891e15e4.webp' /></p><p>
ஆம், கடத்தல்காரர்கள் வன்முறையை பயன்படுத்தி, புலம்பெயர்வோரை கட்டாயப்படுத்தி சிறுபடகுகளில் ஏற்றி அனுப்புவது குறித்த செய்திகளை கேள்விப்பட்டுள்ளோம்.
</p><p>
ஆனால், முதன்முறையாக, புலம்பெயர்வோர் வன்முறையைக் கையில் எடுக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a5f78b-d280-4e33-99f4-b4670fcd736f/26-6a87d89125948.webp' /></p><p>

பிரான்ஸ் நாட்டு பொலிசார், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரை தடுக்க போதுமான முயற்சிகள் மேற்கொள்வதில்லை என பலமுறை பிரித்தானிய தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
ஆனால், இந்த காட்சிகளைப் பார்க்கும்போது, அந்தக் குற்றச்சாட்டு முழுமையாக உண்மையானது அல்ல என்பது தெளிவாகியுள்ளது.
</p><p>
தற்போது வெளியிடப்பட்டுள்ள காட்சிகளில், புலம்பெயர்வோர் சிலர் ரப்பர் படகொன்றை தூக்கிக்கொண்டு கடலுக்குள் இறங்க முயல்வதையும், பொலிசார் அவர்களைத் தடுக்க முயல, புலம்பெயர்வோரில் சிலர் பொலிசாரை தாக்குவதையும் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1LoilLwwSjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

அவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே போன்ற ஒரு ஸ்பிரேயை தெளிக்கும் பொலிசார், அவர்களுடைய ரப்பர் படகுகளை கத்தியால் கீறுவதையும் அந்த வீடியோவில் பார்க்கமுடிகிறது.</p><p>

ஏப்ரல் மாதம் 27ஆம் திகதிக்கும் ஆகத்து மாதம் 2ஆம் திகதிக்கும் இடையில் இதுபோல 185 சிறுபடகுகளை தடுத்து நிறுத்தியதாக பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதாவது, மூன்று மாதங்களில், சுமார் 4,300 சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தியுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T05:40:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேற்கு கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்றத் திட்டம்: E4 கூட்டமைப்பு கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/e4-nations-condemn-israel-s-e1-settlement-plan-1787290362"></link>
            <id>https://news.lankasri.com/article/e4-nations-condemn-israel-s-e1-settlement-plan-1787290362</id>
            <summary type="text">E4 Nations Condemn Israel’s West Bank E1 Settlement Expansion&amp;nbsp;Plan: மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலின் E1 குடியேற்றத் திட்டத்தை E4 நாடுகளின் கூட்டமைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>E4 Nations Condemn Israel’s West Bank E1 Settlement Expansion&nbsp;Plan: மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலின் E1 குடியேற்றத் திட்டத்தை E4 நாடுகளின் கூட்டமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது.</p><h2>இஸ்ரேலின் E1 குடியேற்றத் திட்டம்</h2><p>
மேற்கு கரையின் E1 பகுதியில் புதிய கட்டுமானத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிடும் இஸ்ரேலின் முடிவை எதிர்த்து பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய E4 நாடுகளின் கூட்டமைப்பு கண்டித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p> இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என E4 நாடுகளின் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.</p><p> மேலும் இத்தகைய குடியேற்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரமாக எதிர்த்து வருவதையும் அந்த கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1aa0320-4927-43a0-8d66-3b9d929c4331/26-6a87e2fb8f7c9.webp' /></p><p> அத்துடன் இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான தீர்வுகளுக்கு நேரடி அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாகவும் E4 நாடுகள் எச்சரித்துள்ளன.</p><p> பாலஸ்தீனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ள E4 நாடுகள்,&nbsp; இந்த நேரத்தில் விரிவாக்க நடவடிக்கை என்பது கவலை ஏற்படுத்துவதாக உள்ளது என தெரிவித்துள்ளது.</p><p></p><h2> E4 நாடுகளின் நேரடி வேண்டுகோள்கள்</h2><p>E1 குடியேற்றத் திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று E4 நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன.</p><p>மேலும் வணிக நிறுவனங்கள் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-21T05:32:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தப்பட்ட 2 வணிக கப்பல்கள்: கேள்விக்குறியாகும் 22 இந்தியர்களின் நிலை?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-merchant-ships-hijacked-22-indians-in-peril-1787283635"></link>
            <id>https://news.lankasri.com/article/2-merchant-ships-hijacked-22-indians-in-peril-1787283635</id>
            <summary type="text">2 merchant ships hijacked off Yemen, Somalia sea 22 Indians in peril : ஏமன் மற்றும் சோமாலியா கடற்கரை பகுதியில் 2 வணிக கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2 merchant ships hijacked off Yemen, Somalia sea 22 Indians in peril : ஏமன் மற்றும் சோமாலியா கடற்கரை பகுதியில் 2 வணிக கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளன.</p><h2> ஏமன் கடற்கரையில் கடத்தப்பட்ட வணிக கப்பல்கள்</h2><p>
ஏமன் கடற்கரைக்கு 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவிற்கு சென்று கொண்டிருந்த “எம்டி ஷிபு 1”(M.T. Sibu 1) என்ற எண்ணெய் வணிக கப்பல் ஆயுதமேந்திய 6 கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.</p><p> எரித்திரியா நாட்டு கொடியுடன் பயணித்த இந்த படகில் மொத்தம் 20 பணியாளர்கள் இருந்த நிலையில் அதில் 16 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4b2ba0f-721f-45ff-8a9e-3dc77b410899/26-6a87c8b480e27.webp' /></p><p>வணிக கப்பலானது நேற்று கடத்தப்பட்ட நிலையில், கப்பலின் தற்போதைய நிலை குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. </p><p>&nbsp;ஆனால் 16 இந்தியர்களுடன் சேர்த்து மொத்தம் 20 பணியாளர்களும் பத்திரமாக இருப்பதாக தகவல் கிடைத்து இருப்பதாக இந்திய கடல்சார் நிர்வாக தலைமை இயக்குநரகம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><h2> சோமாலியாவில் கடத்தப்பட்ட மற்றொரு கப்பல்</h2><p>திங்கட்கிழமையன்று சோமாலியாவின் பண்ட்லேன்ட் கடற்கரைக்கு அருகே கேமரூன் கொடியுடன் சென்ற வணிக கப்பலான “எம்வி லுடிப்”(M/V LUTUF) கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0d6c0c3-c2e2-4d3b-9ad2-5eff101863c0/26-6a87c8b5339df.webp' /></p><p> இதில் மொத்தம் 10 பணியாளர்கள்&nbsp; இருந்த நிலையில் அவர்களில் 6 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.</p><p> வணிக கப்பலானது பண்ட்லேண்ட்டில் உள்ள Eyl மாவட்டத்தில் உள்ள மராரையாவுக்கு 3.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளது.</p><p></p><p> சோமாலிய அதிகாரிகளின் தகவல் படி, கடத்தப்பட்ட கப்பல் வடக்கு சோமாலியாவில் Nugaal கடற்கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.</p><p> கடத்தப்பட்ட போலார் மூவ்மெண்ட் ஷிப்பிங் கப்பலானது சோமாலியாவில் உள்ள துருக்கி ராணுவ பயிற்சி மையத்திற்கான ஆயுதங்கள், பயிற்சி உபகரணங்கள் சேட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு சென்றதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் 8 கடற்கொள்ளையர்கள் இணைந்து இந்த வணிக கப்பலை கடத்தி இருப்பதாகவும், இவர்கள் கடந்த ஏப்ரலில் ஸ்வார்ட் என்ற கப்பலை கடத்தியவர்கள் என்றும் சோமாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T04:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலாஸ்காவில் 8 பேருடன் பறந்த Charter விமானம் விபத்து: தேடுதல் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/alaska-charter-plane-crashed-near-cape-newenham-1787285029"></link>
            <id>https://news.lankasri.com/article/alaska-charter-plane-crashed-near-cape-newenham-1787285029</id>
            <summary type="text">Alaska Charter plane crashed near cape newenham: &amp;nbsp;அலாஸ்காவில் 8 பேருடன் பறந்த Charter விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானம்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Alaska Charter plane crashed near cape newenham: &nbsp;அலாஸ்காவில் 8 பேருடன் பறந்த Charter விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2> விபத்துக்குள்ளான விமானம்</h2><p>மேற்கு அலாஸ்காவின் தொலைதூர ரேடார் நிலையம் அருகே 2 விமானிகள் மற்றும் 6 பயணிகள் என 8 பேருடன் சென்ற Charter விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதாக என தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தகவல் படி தெரியவந்துள்ளது.</p><p> விமானம் ஆங்கரேஜில்(Anchorage) இருந்து புறப்பட்டு கேப் நியூஹாம்(Cape Newenham) நோக்கிச் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7431b4e1-5b44-4867-9fda-de6c7d74f597/26-6a87ce26c4a61.webp' /></p><p></p><p> விபத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அதில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் தற்போதைய நிலைமை குறித்தும் எந்தவொரு தகவலும் தெரியவரவில்லை.</p><p> விபத்தை தொடர்ந்து அலாஸ்கா மீட்பு ஒருங்கிணைப்பு மையம் விபத்து தொடர்பான தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தொடங்கியுள்ளது.</p><p> விபத்துக்கான காரணத்தை கண்டறிய உள்ளூர் அதிகாரிகள் மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்களை திரட்டி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T04:04:34+00:00</updated>
        </entry>
    </feed>
