<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-26T23:30:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாவது வெள்ள அபாயம் - நேபாளத்தில் மீண்டும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-faces-second-flood-warning-by-icimod-1787785613"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-faces-second-flood-warning-by-icimod-1787785613</id>
            <summary type="text">Nepal faces second flood warning: நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம் இருப்பதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இரண்டாவது வெள்ள அபாயம்நேபாளத்தின் ரசுவா ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal faces second flood warning: நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம் இருப்பதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
</p><h2>
இரண்டாவது வெள்ள அபாயம்</h2><p>நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளம் இன்னும் முழுமையாக அடங்கவில்லை.</p><p> 

இப்போது, காத்துமாண்டுவை தலைமையிடமாகக் கொண்ட International Centre for Integrated Mountain Development (ICIMOD) நிறுவனம், “இரண்டாவது வெள்ளம் ஏற்படும் அபாயம் மிகுந்துள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p></p><p>ஆகஸ்ட் 26 அன்று, பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம், Bhote Koshi மற்றும் Trishuli ஆற்றுப் பகுதிகளை கடுமையாக பாதித்தது. சில நிமிடங்களில் நீர்மட்டம் 9 மீட்டர் வரை உயர்ந்ததால், கிராமங்கள், சாலைகள், பாலங்கள், கண்காணிப்பு நிலையங்கள் அனைத்தும் சேதமடைந்தன.
</p><p>
ICIMOD விஞ்ஞானிகள், “Lhende Khola பகுதியில் பனிச்சரிவு காரணமாக ஆற்றில் பெரிய அளவில் பனி மற்றும் கற்கள் விழுந்திருக்கலாம். இதனால் ஆற்றின் ஓட்டம் தடைபட்டு, தற்காலிக அணை உருவாகியிருக்கலாம். அது உடைந்தால், இரண்டாவது வெள்ளம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளனர்.
</p><p></p><p>நேபாள-சீனா எல்லைப் பகுதியில் இன்னும் தடுப்பு அணை இருப்பதாகவும், அது உடைந்தால் Jilong port மற்றும் கீழ்நிலப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 14 மாதங்களில் இதே பகுதியில் இரண்டாவது முறையாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நுவாகோட், தாடிங் மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

ICIMOD இயக்குநர் பெமா க்யாம்சோ, “நேபாள மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த திடீர் பேரழிவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எங்கள் பங்கு தொடரும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p>விஞ்ஞானிகள், “குளிர்பரப்பில் (Cryosphere) ஏற்படும் மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பனிச்சரிவு, பனிச்சரிவு அணைகள், நிலச்சரிவு போன்றவை மிக வேகமாக நடக்கின்றன. இதற்கு எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பு தேவை” என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், நேபாள அரசு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் வெளியேற்றம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T23:04:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான நாடுகளில் ஒன்று - கனடாவை கடுமையாக தாக்கிய டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/worst-country-trump-slams-canada-amid-trade-war-1787784019"></link>
            <id>https://news.lankasri.com/article/worst-country-trump-slams-canada-amid-trade-war-1787784019</id>
            <summary type="text">Trump slams Canada amid trade war escalation: கனடாவை மோசமான நாடுகளில் ஒன்று என டிரம்ப் கடுமையாக தாக்கியுள்ளார்.

அமெரிக்கா-கனடா இடையிலான வர்த்தக உறவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump slams Canada amid trade war escalation: கனடாவை மோசமான நாடுகளில் ஒன்று என டிரம்ப் கடுமையாக தாக்கியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா-கனடா இடையிலான வர்த்தக உறவுகள் மீண்டும் கடுமையான நிலைக்கு சென்றுள்ளன.</p><p> அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கனடாவை “உலகில் ஒப்பந்தம் செய்ய மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று” எனக் கூறியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/542d8bdf-5d03-4802-86c9-469c2a0a7a05/26-6a8f6b5534a53.webp' /></p><h2>இறுதி நேரத்தில் முறிந்த ஒப்பந்தம்</h2><p>கடந்த வாரம் இரு நாடுகளும் புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, இறுதி நேரத்தில் ஒப்பந்தம் முறிந்தது. இதனால் அமெரிக்கா, கனடாவின் சில முக்கிய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தது. </p><p>அதற்கு பதிலாக கனடா, நூற்றுக்கணக்கான அமெரிக்கப் பொருட்களுக்கு அதே அளவு வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது.</p><p></p><p>
</p><h2>
டிரம்ப்&nbsp;குற்றம்சாட்டு</h2><p>டிரம்ப், “கனடா எங்களை ஒரு மாநிலம் போல பயன்படுத்துகிறது. ஆனால் அவர்கள் அரசே அல்ல. அவர்கள் எங்களை பல ஆண்டுகளாக தவறாக பயன்படுத்தி வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார். </p><p>மேலும், “நாம் அவர்களுடன் வர்த்தகம் செய்யாமல் இருந்தாலும் பெரிய பாதிப்பு இல்லை. சில சிரமங்கள் இருந்தாலும், வேறு நாடுகளில் இருந்து பொருட்களை வாங்க முடியும்” எனக் கூறினார்.
</p><p></p><p>இந்த நிலைமை குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி, “அமெரிக்கா இறுதி நேரத்தில் கூடுதல் நிபந்தனைகளைச் சேர்த்ததால் ஒப்பந்தம் முறிந்தது” என விளக்கம் அளித்தார். </p><p>ஆனால் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், “கனடா தான் காரணம். அவர்கள் கடைசி நேரத்தில் அநியாயமான கோரிக்கைகளை வைத்தனர்” எனக் கூறினார்.</p><p>
</p><h2>
மேலும் சர்ச்சை..</h2><p>இந்நிலையில், டிரம்ப் தனது பேட்டியில் “Lake Ontario-வை Lake America என்று பெயர் மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த வர்த்தக போர் காரணமாக, இரு நாடுகளிலும் பொருட்களின் விலை உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா-கனடா உறவுகள் மீண்டும் சிக்கலான நிலைக்கு சென்றுள்ளதால், உலக வர்த்தக சந்தையிலும் அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T22:37:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2,000 அடி அகலமுள்ள பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவு - நேபாளம் வெள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/glacier-collapse-triggers-deadly-nepal-floods-1787779060"></link>
            <id>https://news.lankasri.com/article/glacier-collapse-triggers-deadly-nepal-floods-1787779060</id>
            <summary type="text">Glacier collapse triggers deadly Nepal floods: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் எதனால் நிகழ்ந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

நேபாளத்தின் வடக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Glacier collapse triggers deadly Nepal floods: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் எதனால் நிகழ்ந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
</p><p>
நேபாளத்தின் வடக்கு எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் நூற்றுக்கணக்கானோரின் உயிரை பறித்துள்ளது.</p><p></p><p>
</p><h2>
2,000 அடி அகலமான பனிப்பாறை</h2><p>விஞ்ஞானிகள் கூறுவதன்படி, இந்த வெள்ளம் 2,000 அடி அகலமான பனிப்பாறை திடீரென உடைந்து, பள்ளத்தாக்கில் விழுந்ததால் ஏற்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f6ef2c-572e-4d97-ad93-5e077bffafa7/26-6a8f57f64cb86.webp' /></p><p>17,000 அடி உயரத்தில் இருந்த பனிச்சரிவு சுமார் 4,000 அடி கீழே விழுந்து, லேந்தே கோலா ஆற்றில் பாய்ந்தது. அதன்பின் அது போதே கோஷி ஆற்றை கடந்து, கிராமங்கள், சாலைகள், பாலங்கள், நீர்மின் திட்டங்களை அழித்தது.</p><h2>

நிபுணர்கள்</h2><p>கனடா பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர் டேனியல் ஷுகர், “பனிச்சரிவு சுத்தமாக உடைந்து, பள்ளத்தாக்கில் விழுந்தது. கீழே குண்டு வெடித்தது போல காட்சியளிக்கிறது” என்று கூறினார். </p><p>டண்டீ பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணர் சைமன் குக், “பனிச்சரிவு விழுந்தபோது அது தண்ணீர் மற்றும் சிதைவுகளாக மாறி, மிக வேகமாக பாய்ந்தது” என்று விளக்கினார்.
</p><p></p><p>இந்த பேரழிவு நேபாள-சீனா எல்லையில் உள்ள பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகள் சிரமமாகியுள்ளது. அதிகாரிகள், மேல்பகுதியில் இன்னும் பனிச்சரிவு தடுப்பு சிக்கியிருப்பதால், மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர்.</p><p>

கடந்த 14 மாதங்களில் இதே பகுதியில் இதுபோன்ற பேரழிவு இருமுறை நடந்துள்ளது. கடந்த ஆண்டு திபெத்தில் உள்ள பனிக்குளம் நிரம்பி வழிந்ததால் வெள்ளம் ஏற்பட்டது. இம்முறை நேபாள பக்கம் பனிச்சரிவு உடைந்து ஆற்றை மறைத்தது.</p><p>

காலநிலை நிபுணர்கள், ஹிமாலயப் பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பதால் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன என எச்சரிக்கின்றனர். 2000-ம் ஆண்டிலிருந்து பனிப்பாறை உருகும் வேகம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த பேரழிவு, நேபாளத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையாக உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T21:14:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு, இந்தியர்கள் உட்பட பலர் காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flash-floods-kill-157-hundreds-missing-1787771009"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flash-floods-kill-157-hundreds-missing-1787771009</id>
            <summary type="text">Nepal flash floods hundreds missing: நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் 157 பேரின் உயிரை பறித்துள்ளது.

750-க்கும் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flash floods hundreds missing: நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் 157 பேரின் உயிரை பறித்துள்ளது.
</p><h2>
750-க்கும் மேற்பட்டோர்&nbsp;காணவில்லை</h2><p>750-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதில் குறைந்தது 133 இந்தியர்கள், குறிப்பாக 37 தமிழர்கள், மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அடங்குவர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44cfb45-e76f-4958-bfac-287ae0458c44/26-6a8f38840ce03.webp' /></p><p>இந்த வெள்ளம் திபெத் பகுதியில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு மூன்று நிமிடங்களில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>நிலநடுக்கத்தால் பனிச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்பதால், அதுவே வெள்ளத்திற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
</p><p></p><p>வெள்ளம் போதே கோஷி ஆற்றில் பாய்ந்து, ராசுவா மற்றும் தாடிங் மாவட்டங்களை கடுமையாக பாதித்தது. திமுரே, சியாப்ரு பேசி போன்ற பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தன. வீடுகள், வாகனங்கள், பாலங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
</p><p>
95 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 100 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, காத்மண்டுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p></p><h2>தமிழ்நாட்டைச் சேர்ந்த...</h2><p>இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற 50 யாத்திரிகர்கள் காணாமல் போயுள்ளனர். தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த 37 சுற்றுலா பயணிகளும் தொடர்பில் இல்லை.
</p><p>
இந்த பேரழிவால் 354 மெகாவாட் திறன் கொண்ட 8 நீர்மின் திட்டங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் 19 பாலங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகள் கடினமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/506b1589-90f8-4896-a639-36235a67b683/26-6a8f3884ba9ae.webp' /></p><p>
</p><h2>
பிரதமர் நரேந்திர மோடி</h2><p>இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுடன் பேசி, அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். இந்திய தூதரகம் அவசர எண்களை வெளியிட்டு, காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.</p><p>

நேபாள அரசு 12 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>சீனாவும் தன் எல்லைப் பகுதியில் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

இந்த பேரழிவு நேபாளத்தின் வடக்கு எல்லையில் மிகப்பெரிய மனிதாபிமான மற்றும் கட்டமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T19:00:45+00:00</updated>
        </entry>
    </feed>
