<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-22T07:32:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[64 ஓட்டங்களில் சுருண்ட வங்கதேசம் - தடுமாறும் அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bangladesh-all-out-in-64-runs-vs-aus-in-2nd-test-1787383330"></link>
            <id>https://news.lankasri.com/article/bangladesh-all-out-in-64-runs-vs-aus-in-2nd-test-1787383330</id>
            <summary type="text">2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை 64 ஓட்டங்களில் அவுஸ்திரேலியா சுருட்டியுள்ளது. 

64 ஓட்டங்களில் சுருண்ட வங்கதேசம்

அவுஸ்திரேலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை 64 ஓட்டங்களில் அவுஸ்திரேலியா சுருட்டியுள்ளது. </p><h3>

64 ஓட்டங்களில் சுருண்ட வங்கதேசம்</h3><p>

அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள வங்கதேச அணி 2 போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. </p><p>

முதல் டெஸ்ட்டில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d39e8f-bf1d-42ea-85a1-747d02b3e8ba/26-6a894e249b43c.webp' /></p><p>
2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய வங்கதேசம், 64 ஓட்டங்களில் ஆல் அவுட்.ஆனது.&nbsp;</p><p></p><p>

வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷோரிஃபுல் இஸ்லாம் 14 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91294ce5-b157-4400-be85-53f5cb6efbee/26-6a894e23ecf47.webp' /></p><p>

அவுஸ்திரேலியா தரப்பில் மிச்சேல் ஸ்டார்க், 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். </p><p>

இதனை தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய அவுஸ்திரேலியா 151 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்களை இழந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3caa8825-d4a3-4ec2-a421-caa036abe921/26-6a894e254c876.webp' /></p><p>
வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு: வரிவிதிப்பு மூலம் பதிலடி கொடுக்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-halts-us-trade-talks-1787380532"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-halts-us-trade-talks-1787380532</id>
            <summary type="text">Canada halts us trade talks: அமெரிக்கா - கனடா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவை சந்தித்துள்ளன.அமெரிக்கா- கனடா பேச்சுவார்த்தை முறிவு
அமெரிக்காவுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada halts us trade talks: அமெரிக்கா - கனடா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவை சந்தித்துள்ளன.</p><h2>அமெரிக்கா- கனடா பேச்சுவார்த்தை முறிவு</h2><p>
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.</p><p>கடுமையான வரி விதிப்பு கெடு முடிவடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த முடிவை கனடா அரசு எடுத்துள்ளது.</p><p> அமெரிக்காவின் தரப்பில் கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட சில திருத்தங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கனடா தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/737e3fa5-2256-423d-ae96-95996d48b1b2/26-6a8943367f941.webp' /></p><p> அமெரிக்காவின் தரப்பில் இருந்து மாற்றப்பட்ட இந்த நிபந்தனைகள் பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது மற்றும் நியாயமற்றது என்றும் எந்தவொரு ஒப்பந்தத்தின் மீதான நம்பகத்தன்மையையும் இது கேள்விக்குள்ளாக்கும் என்று கனடா பிரதமர் கார்னி கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றங்கள் கனடாவின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாததாக மாற்றிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 50% வரி விதிப்பு</h2><p>
அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடங்கியதை தொடர்ந்து கிட்டத்தட்ட 28 பில்லியன் டொலர் மதிப்பிலான கனேடிய பொருட்கள் மீது 50% வரி விதிப்பை அமெரிக்கா விதித்துள்ளது.</p><p> உள்ளூர் வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்த வரிகளுக்கு சமமான வரியானது விதிக்கப்பட்டு பதிலடி கொடுக்கப்படும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெலென்ஸ்கியின் சொந்த ஊர் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 16 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deadly-drone-strike-in-central-ukraine-16-dead-1787383269"></link>
            <id>https://news.lankasri.com/article/deadly-drone-strike-in-central-ukraine-16-dead-1787383269</id>
            <summary type="text">Deadly drone strike in central ukraine 16 dead: உக்ரைனின் மையப்பகுதியில் ஷாப்பிங் வளாகத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Deadly drone strike in central ukraine 16 dead: உக்ரைனின் மையப்பகுதியில் ஷாப்பிங் வளாகத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்</h2><p>
வெள்ளிக்கிழமை உக்ரைனின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஷாப்பிங் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.</p><p> உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ்(Kryvyi Rih) நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதை உக்ரைனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49421645-bfe1-4dd4-aa0d-8b180debd820/26-6a894de6cd154.webp' /></p><p> இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 22 பேர் குழந்தைகள் என அப்பகுதி ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் காயமடைந்தவர்களில் 5 குழந்தைகள் உட்பட 29 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 2 குழந்தைகள் உட்பட 9 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணியில் அவசர கால மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-22T07:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரியால் கொடுமைக்கார சித்தி என அழைக்கப்பட்ட ராணி கமீலா: வியப்பூட்டும் ஒரு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-blames-queen-camilla-cruel-stepmother-1787381755"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-blames-queen-camilla-cruel-stepmother-1787381755</id>
            <summary type="text">Queen Camilla will be key figure in Harry and Meghan&#039;s return to royal family: ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்குத் திரும்புவதில் ராணி கமீலா ஒரு முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Queen Camilla will be key figure in Harry and Meghan's return to royal family: ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்குத் திரும்புவதில் ராணி கமீலா ஒரு முக்கியப் பங்கு வகிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>

பிரித்தானிய இளவரசரான ஹரி ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியபோது, தன் தந்தையின் இரண்டாவது மனைவியான ராணி கமீலாவை கொடுமைக்கார சித்தி என விமர்சித்திருந்தார்.
</p><p>
ஆனால், அந்த ராணி கமீலா தொடர்பில் ஒரு வியப்பூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.
</p><h3>
ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறிய ஹரி
</h3><p>
இளவரசர் ஹரி ராஜ குடும்ப மரபை மீறி, விவாகரத்தான அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கலை திருமணம் செய்தது, மற்றும் மேகனால் ராஜ குடும்பத்தில் சமாளிக்க முடியாமல் போனதால் உருவான பிரச்சினைகள், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேற வழிவகுத்தன.
</p><p>
பின்னர் ராஜ குடும்பத்தை மட்டுமல்ல, பிரித்தானியாவை விட்டே வெளியேறி மனைவியின் நாடாகிய அமெரிக்காவில் குடியேறினார் ஹரி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4846de5f-459e-4be5-95d5-74d5ea616544/26-6a8947fce62cb.webp' /></p><p>
இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் ஹரி தன் குடும்பத்துடன் பிரித்தானியா திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கொடுமைக்கார சித்தி என அழைக்கப்பட்ட ராணி கமீலா

விடயம் என்னவென்றால், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறியதுடன் நிற்கவில்லை. </p><p>ராஜ குடும்பத்தைப் பற்றி மோசமாக விமர்சித்தனர், தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் கொடுத்தனர், அதை உலகமே பார்த்தது.
</p><p>
அது போதாதென்று, ஹரி தன் பங்குக்கு ‘ஸ்பேர்’ என்னும் பெயரில் ஒரு சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
</p><p>
அதில் தன் அண்ணன் வில்லியம், அண்ணி கேட் உட்பட அனைவரையும் மோசமாக விமர்சித்திருந்தார் ஹரி.&nbsp;</p><p></p><p>
குறிப்பாக, தன் தந்தையின் இரண்டாவது மனைவியான கமீலாவைக் குறித்து, கமீலா கொடுமைக்கார சித்தியாக இருப்பார் என்றும், ஆகவே அவரை திருமணம் செய்யவேண்டாம் என தான் தன் தந்தையான மன்னர் சார்லசைக் கெஞ்சியதாகவும் குறிப்பிட்டிருந்தார் ஹரி.</p><h3>

வியப்பூட்டும் ஒரு தகவல்
</h3><p>
விடயம் என்னவென்றால், இப்போது ஹரி, மேகன் தம்பதியர் தங்கள் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்ப முடிவு செய்துள்ள நிலையில், அவர்களை மீண்டும் ராஜ குடும்பத்துக்கு அறிமுகம் செய்வதில் கமீலா முக்கியப் பங்காற்ற இருப்பதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a529847c-2194-4262-8c9d-0b0e6b389cae/26-6a8947fd96614.webp' /></p><p>

கமீலா தன் முன்னாள் கணவரான ஆண்ட்ரூ பார்க்கரைப் பிரிந்தாலும், தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இன்னமும் நெருக்கமான உறவு வைத்துள்ளார்.</p><p>

ஆக, கமீலா குடும்பம் என்னும் விடயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். </p><p>ஆக, மன்னர் சார்லஸ், ஹரியின் பிள்ளைகளான தன் பேரப்பிள்ளைகளுக்காக ஏங்கும் நிலையில், மீண்டும் ஹரியை தங்கள் குடும்பத்துக்குள் அனுமதிக்க மன்னரைத் தூண்டியதே கமீலாவின் அமைதியை ஏற்படுத்தும் வகையிலான தாக்கம்தான் என்கிறார்கள் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர்.
</p><p>
அதாவது, ஹரி தன்னை கொடுமைக்கார சித்தி என விமர்சித்தாலும், அதை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், ஹரி மீண்டும் ராஜ குடும்பத்தில் இணைவது தன் கணவரான மன்னர் சார்லசுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமானால், அதை செய்ய அவர் தயாராக உள்ளதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:56:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்: அறுவை சிகிச்சைக்குப் பின் நிகழ்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/twin-girls-born-as-joined-head-die-after-separated-1787375591"></link>
            <id>https://news.lankasri.com/article/twin-girls-born-as-joined-head-die-after-separated-1787375591</id>
            <summary type="text">Twin girls born joined at the head die minutes after being separated: தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Twin girls born joined at the head die minutes after being separated: தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் பிள்ளைகள் உயிரிழந்துவிட்டார்கள்.
</p><p>

பிரேசில் நாட்டில், தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையிலும், குழந்தைகளை காப்பாற்றமுடியாமல் போய்விட்டது.
</p><h3>
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்</h3><p>

பிரேசில் நாட்டில் அமரில்டோ டி சில்வா (Amarildo Batista da Silva) என்னும் நபருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள், தலை ஒட்டிப் பிறந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8ef1fa7-01a7-49d4-971b-a8c826b3ed69/26-6a892fe8d175f.webp' /></p><p>
பிள்ளைகள் மூன்று வயதை எட்ட இருந்த நிலையில், பிள்ளைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.
</p><p>
உண்மை என்னவென்றால், இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளை தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருந்த மருத்துவர்கள், பிள்ளைகளை தனித்தனியாக பிரிப்பதற்கான அறுவை சிகிச்சைகளை ஓராண்டாக மேற்கொண்டு வந்துள்ளார்கள்.
</p><p>
அதாவது, இதற்கு முன் பிள்ளைகளுக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. கடைசியாக, அவர்களை தனியாக பிரிக்கும் கடைசி அறுவை சிகிச்சை, இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 15ஆம் திகதி நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TqgxS8HHJi8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
விடயம் என்னவென்றால், வெற்றிகரமாக மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளையும் தனித்தனியாக பிரித்துள்ளார்கள்.
</p><p>
ஆனால், ஒரு உடல் போல செயல்பட்டுவந்த அந்தக் குழந்தைகளின் உடல் பிரிக்கப்பட்டபோது, அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தி அந்த உடலுக்கு இல்லாமல் போயுள்ளது.
</p><p>
ஒரு குழந்தைக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்க, மற்ற குழந்தைக்கு இரத்த அழுத்தம் குறைய, உடலின் உள்ளுறுப்புகளுக்கு போதுமான இரத்தம் செல்லாமல், உள்ளுறுப்புகள் செயலிழந்து, மாரடைப்பு ஏற்பட்டு குழந்தைகள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
</p><p>
அவர்களில் ஒரு குழந்தையின் பெயர் ஹெலனா, அவளது சகோதரியின் பெயர், ஹெலோய்ஸா.

ஆகத்து மாதம் 15ஆம் திகதி, தங்கள் மூன்று வயதை எட்டும் முன், ஹெலனா 11.37 மணிக்கும், ஹெலோய்ஸா 11. 51 மணிக்கும் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
அறுவை சிகிச்சை வெற்றியாக முடிந்த நிலையிலும், பிள்ளைகளின் உடல் நிலை மிகவும் பலவீனமாக இருந்ததால், அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
</p><p>
ஏற்கனவே, பிள்ளைகள் இருவருக்கும் நிமோனியா பிரச்சினை இருந்ததால் அவர்கள் தொண்டையில் துவாரமிடப்பட்டு சுவாசிப்பதற்காக குழாய்கள் பொருத்தப்பட்டிருந்திருக்கின்றன.
</p><p>
அதேபோல, குழந்தைகளால் சாப்பிட முடியாததால், அவர்கள் வயிற்றில் துவாரமிடப்பட்டு குழாய் வழியாகத்தான் உணவு செலுத்தப்பட்டு வந்துள்ளது.
</p><p>
ஆக, நீண்ட காலமாக பலவீனமாக இருந்த உடல்கள் பிரிக்கப்பட, அதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலாமல், மாரடைப்பு ஏற்பட, பிள்ளைகள் உயிரிழந்துவிட்டார்கள்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T05:17:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி: மருத்துவர்கள் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-years-old-girl-swallows-gold-bar-in-china-1787371308"></link>
            <id>https://news.lankasri.com/article/5-years-old-girl-swallows-gold-bar-in-china-1787371308</id>
            <summary type="text">சீனாவில் 5 வயது சிறுமி தங்கக் கட்டியை விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி
5 years old girl...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் 5 வயது சிறுமி தங்கக் கட்டியை விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி</h2><p>
5 years old girl swallows gold bar in china: சீனாவின் வடக்குப் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி தவறுதலாக அங்கிருந்த 4 சென்டிமீட்டர் நீளமும் 50 கிராம் எடையும் உள்ள சிறிய தங்கக் கட்டியை விழுங்கியுள்ளார்.</p><p> இதனை உடனடியாக தன்னுடைய பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவித்ததை அடுத்து, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c62a543-f9cc-4606-9c96-55be1324a7e2/26-6a891f2e7836f.webp' /></p><p> ஆனால் அங்கு போதுமான நவீன உபகரணங்கள் இல்லாததை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கேப்பிட்டல் மெடிசின் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.</p><p></p><p> அப்போது சிறுமியின் வயிற்றை எக்ஸ்-ரே செய்து பார்த்த போது சுமார் 4 செ.மீ நீளமுள்ள தங்க கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p> மேலும் அந்த தங்க கட்டியானது சிறுமியின் வயிற்றின் உள்சவ்வை கீறி, கடுமையான உள் ரத்தப்போக்கை மற்றும் உறுப்புகளின் துளைகளை ஏற்படுத்தும் அபாயத்துடன் இருந்துள்ளது.</p><p> அத்துடன் அந்த தங்க கட்டி அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பதற்கு சிக்கலான இரைப்பை குழியில் சிக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.</p><p> இறுதியில் எண்டோஸ்கோபி செய்து சுருக்குக் கயிற்றின் உதவியால் தங்க கட்டியை மீட்டு கவனமாக இரைப்பை குழியிலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.</p><p> தற்போது அந்த சிறுமி குணமடைந்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T04:57:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய கடற்கரையில் நிகழ்ந்த சோகம்: மருத்துவமனையில் 6 வயது சிறுமி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sussex-coast-tragedy-6-years-old-girl-died-1787374488"></link>
            <id>https://news.lankasri.com/article/sussex-coast-tragedy-6-years-old-girl-died-1787374488</id>
            <summary type="text">சசெக்ஸ் கடற்கரையில் நடந்த துயர சம்பவத்தில் 6 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சசெக்ஸ் கடற்கரையில் நடந்த சோகம்Sussex coa...</summary>
            <content type="html"><![CDATA[<p>சசெக்ஸ் கடற்கரையில் நடந்த துயர சம்பவத்தில் 6 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><h2> சசெக்ஸ் கடற்கரையில் நடந்த சோகம்</h2><p>Sussex coast tragedy 6 years old girl died: சசெக்ஸ் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தை உலுக்கிய சோக சம்பவத்தில் ஏற்கனவே பெற்றொரும், மூத்த மகளும் உயிரிழந்த நிலையில் தற்போது 6 வயது சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.</p><p> மேற்கு லண்டனில் இருந்து ஷோர்ஹாம் கடற்கரைக்கு வந்த குடும்பத்தினர் பிற்பகலில் 2 மணியளவில் கடலில் நீந்துவதற்காக இறங்கியுள்ளனர்.</p><p> அப்போது எதிர்பாராத விபத்தில் குடும்பத்தினர் கடலில் சிக்கிக் கொண்டதை அடுத்து ஹோர்ஹாம் கோட்டைப் பகுதிக்கு அவசர கால மீட்புப் படையினர் அழைக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4011623a-0397-4e86-a18e-3fb47e5c7eac/26-6a892b99994cb.webp' /></p><p></p><p> பெற்றோர்களான 55 வயது ஹசன் எல் கவாஸ் மற்றும் 37 வயது ஜெய்னா அலைன் மற்றும் இவர்களின் மூத்த மகளான 14 வயது அக்கா சாரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p> உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 6 வயதான சஜா எல்-கவாஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.</p><p> ஆனால் வெள்ளிக்கிழமை 6 வயதான சஜா எல்-கவாஸ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-22T04:55:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/6-cholesterol-symptoms-we-shouldnt-ignore-1787128985"></link>
            <id>https://news.lankasri.com/article/6-cholesterol-symptoms-we-shouldnt-ignore-1787128985</id>
            <summary type="text">கொலஸ்ட்ரால் நம் உடலில் அதிகமாக இருக்கின்ற பொழுது நம் தோல்களில் சில மாற்றங்கள் வரலாம் என்றும் அதற்கான ஆறு முக்கியமான அறிகுறிகளை பற்றியும் பார்ப்போம்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலஸ்ட்ரால் நம் உடலில் அதிகமாக இருக்கின்ற பொழுது நம் தோல்களில் சில மாற்றங்கள் வரலாம் என்றும் அதற்கான ஆறு முக்கியமான அறிகுறிகளை பற்றியும் பார்ப்போம்.

 பொதுவாகவே, ஆரம்ப காலகட்டங்களில் ரத்த கொதிப்பு அதிகரிக்கின்ற பொழுது நமக்கு எந்த ஒரு பிரச்சனைகளும் வருவதில்லை. </p><p>அதாவது கடுமையான வலியோ அல்லது உபாதைகளோ ஏற்படாது. அதனால்தான் இதனை மருத்துவர்கள் சைலன்ட் கில்லர் என்று சொல்கின்றனர். அமெரிக்கா இதய சங்கத்தின் கூற்றுப்படி ரத்தத்தில் உள்ள கொழுப்பை கண்டறிவதற்கு நாம் பரிசோதனை செய்வது மட்டுமே முதன்மையானது என்று சொல்கிறார்கள். </p><p>

இருப்பினும், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடுகள்&nbsp;மிக தீவிரமாக அதிகரிக்கின்ற பொழுது கண்கள் தோல் மற்றும் கால் போன்ற உறுப்புகளில் சில அறிகுறிகள் வரலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9421f93c-f5cb-4ec3-94ce-989b295ffe1f/26-6a856ca319f80.webp' /></p><p></p><h3> 

1.கண்ணிமைகளில் மஞ்சள் திட்டுகள்:
</h3><p>
கண்இமைகளை சுற்றி அல்லது கண்களின் மூலையில் மெல்லிய மஞ்சள் நிறத்தில் கொழுப்பு படிவுகள் வரலாம். அதாவது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவிற்கு அதிகமாக மாறும் பொழுது இது தோலுக்கு அடியில் படிந்து இத்தகைய தட்டையான திட்டுகளை உருவாக்குகிறது.
</p><h3>
2. கருவிழியை சுற்றிய வளம் வளையம்:</h3><p>

 கண்களின் கருவிழி பகுதியை சுற்றி சாம்பல் வெள்ளை அல்லது நீல நிறத்தில் ஒரு மெல்லிய வளையம் ஏற்படலாம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இது இயல்பான வயது முதிர்ச்சியின் அறிகுறியாகும். ஆனால், 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இது தென்பட்டால் அது மரபணு சார்ந்த அதீத கொலஸ்ட்ரால் மற்றும் இளம் வயதிலேயே இதய பாதிப்பை ஏற்படுவதற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.</p><h3>


3. தோலில் மெழுகு போன்ற கட்டிகள்:
</h3><p>
 முழங்கை, முழங்கால் கைகள், பாதங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் ஆரஞ்சு நிறத்தில் சிறிய கொப்பளங்கள் அல்லது கட்டிகள் தென்படும். குறிப்பாக, டிரைகிளிசரைடுகள்&nbsp;மிகவும் ஆபத்தான நிலைக்கு உயரும். அப்பொழுது, உடலில் திடீரென பல கட்டிகள் வரலாம். கட்டுப்படுத்தப்படாத நீரழிவு உள்ளவர்களுக்கு இந்நிலை அதிகம் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ea13de-b2f6-4f5e-86c6-bde866177f44/26-6a856ca3d0c29.webp' /></p><h3>

4. குதிகால் தசைநார் வீக்கம்:
</h3><p>காலில் பின்பகுதி குதிகாலுடன் இணையும் அகில்லெஸ் தசைநாத் அல்லது கைகளில் விரல் நரம்புகளில் கொழுப்பு படிந்து வீக்கம் உண்டாகலாம். இவர்களுக்கு காலணிகள் அணியும் பொழுது அல்லது தொடும்பொழுது இந்த தசை நார்கள் தடிமனாக உணருவது பரம்பரை கொலஸ்ட்ராலின் முக்கிய அறிகுறியாகும்.
</p><h3>
5. நடக்கும்போது கால்களில் தசை பிடிப்பு:
</h3><p> பொதுவாக, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதால் கால்களுக்கு செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இவ்வாறான நேரத்தில் சிறிது தூரம் நடக்கும்போது அல்லது மாடிப்படிகளில் ஏறும்போது தொடை மற்றும் கெண்டைக்கால் பகுதியில் தாங்கிக் கொள்ள முடியாத வலி பாரம் அல்லது பிடிப்பு ஏற்படலாம். ஓய்வெடுத்தால் இந்த வலி சற்று குறையும். இவ்வாறான அறிகுறிகள் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதற்கான மறைமுக அறிகுறியாகும்.</p><h3>


6. குளிர்ந்த பாதங்கள் மற்றும் மாறாத காயங்கள்:
</h3><p>
 நம்மை சுற்றி வெப்பநிலை சாதாரணமாக இருந்தாலும் பாதங்கள் எப்பொழுதும் குளிர்ந்து காணப்படும். காலில் ஏற்படும் சிறிய வெட்டு காயங்கள் கூட அல்லது கீரல்கள் கூட நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும். கால்களின் தோல் வெளியே உதிர்ந்து பளபளப்பாக மாறிவிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbdf86df-9752-431b-abe3-5c02d4e7a5b8/26-6a856ca489e29.webp' /></p><p></p><p>
</p><h3>
 யாரெல்லாம் உடனடி பரிசோதனை செய்ய வேண்டும்:
</h3><p>
குடும்பத்தில் யாருக்காவது இளம் வயதிலேயே மாரடைப்பு அல்லது அதிக கொலஸ்ட்ரால் வரலாறு இருந்தாலும் அல்லது சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடற்பயிற்சி அற்ற வாழ்க்கை முறை மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிச்சயமாக உடனடி சோதனை செய்ய வேண்டும்.</p><h3>

 கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் வழிகள்:
</h3><p> டிரான்ஸ் கொழுப்பு மற்றும் பொறித்த உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்து நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் நட்ஸ், காய்கறிகள் நம் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினசரியாக குறைந்தது நாம் 30 நிமிடங்கள் ஆவது உடற்பயிற்சி செய்வது அவசியம். மருத்துவரின் அறிவுரை படி தவறாமல் மருந்துகள் எடுத்துக் கொள்வதும் இதய பாதிப்பிலிருந்து நாம் நம்மை காத்துக் கொள்ளலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T04:43:13+00:00</updated>
        </entry>
    </feed>
