<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-31T15:59:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்தரப்பு டி20: நமீபியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஜிம்பாப்வே வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ryan-burl-smash-57-runs-helps-zim-195-vs-namibia-1788186985"></link>
            <id>https://news.lankasri.com/article/ryan-burl-smash-57-runs-helps-zim-195-vs-namibia-1788186985</id>
            <summary type="text">Zimbabwe 195 vs namibia in tri-series t20: நமீபிய அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில், ரியான் பர்ல் 32 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசினார்.

Wi...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zimbabwe 195 vs namibia in tri-series t20: நமீபிய அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில், ரியான் பர்ல் 32 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
Windhoek-யில் நடந்து வரும் நமீபிய அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில், ரியான் பர்ல் அரைசதம் விளாச ஜிம்பாப்வே 195 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><h2>கர்ரன்,&nbsp;பென்னெட் </h2><p>
முத்தரப்பு டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c1bee6-c3f0-4943-b208-dee6718f5b1d/26-6a95916c96f23.webp' /></p><p></p><p>

முதலில் துடுப்பாடிய ஜிம்பாப்வே அணியில் பென் கர்ரன் 38 (22) ஓட்டங்களும், பிரையன் பென்னெட் 32 (21) ஓட்டங்களும் விளாசினர். </p><p>

பின்னர் வந்த மயேர்ஸ் (2), ரஸா (0), மதேவேரே (2) ஆகியோர் சொதப்பினர். அப்போது கைகோர்த்த ரியான் பர்ல், பிராட் எவன்ஸ் நமீபியா பந்துவீச்சை சிதறடித்தனர்.&nbsp;</p><h2>பர்ல்&nbsp;சரவெடி </h2><p> 

இந்தக் கூட்டணியின் மிரட்டலான ஆட்டத்தின் மூலம் சரிவில் இருந்து மீண்ட ஜிம்பாப்வே, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

ரியான் பர்ல் 32 பந்துகளில் 57 ஓட்டங்களும் (1 சிக்ஸர், 7 பவுண்டரிகள்), பிராட் எவன்ஸ் 25 பந்துகளில் 37 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசினர்.

எராஸ்மஸ் 3 விக்கெட்டுகளும், பெர்னார்ட், ஜேஜே ஸ்மித் மற்றும் மேக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5d98a80-ebad-417c-a2f3-724738c10127/26-6a959202001f0.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் பெண் ஓட்டிய காரினால் 9 மாத குழந்தை பரிதாப மரணம்: விசாரணையில் தெரிய வந்த விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-arrested-in-usa-child-death-of-car-hitting-1788178781"></link>
            <id>https://news.lankasri.com/article/women-arrested-in-usa-child-death-of-car-hitting-1788178781</id>
            <summary type="text">Two women arrested in new jersey for child death of car hitting: அமெரிக்காவில் பெண்ணொருவர் காரினால் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two women arrested in new jersey for child death of car hitting: அமெரிக்காவில் பெண்ணொருவர் காரினால் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.</p><p>


அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பார்க்கிங் பகுதியில் பெண்ணொருவர், கார் மூலம் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்தது.</p><p>


</p><h2>நியூ ஜெர்சி</h2><p>நியூ ஜெர்சியின் ஜாக்சன் டவுன்ஷிப்பில் உள்ள 'NPGS' என்ற Kosher மாளிகைக்கடை உள்ளது. 

இதன் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண் தனது 9 மாத ஆண் குழந்தையையும், 5 வயது மகளையும் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e359451-0f3a-43f4-a405-ef2d11abffc8/26-6a95716166910.webp' />&nbsp;</p><p></p><p>
அப்போது கார் ஒன்று அவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் குறித்த ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. </p><p>

மேலும் குழந்தையும் தாயும், அவரது ஐந்து வயது மகளும் காயமடைந்தனர். இதனையடுத்து மரியா கோபோன்-குஸ்மான் (20) என்ற பெண்ணும், லசாரோ ஃப்ளோரஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். </p><h2>

குற்றச்சாட்டுகள் </h2><p>மரியாவிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. </p><p>

பின்னர் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே வாகனத்தை இயக்கியது, மனித உயிரிழப்பிற்கு காரணமான செயல் மற்றும் வாகனத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் ஃப்ளோரஸ் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>

 தற்போது அவர்கள் ஓஷன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் மற்றும் சிறைக்காவல் தொடர்பான விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர். 

இதற்கிடையில், இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06579ce1-9c0b-41ef-a283-b3113246b448/26-6a9571609f0d3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:05:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிர்கிஸ்தான் வந்தடைந்த புடின்: தலைவர்கள் ஜி ஜின்பிங், நரேந்திர மோடியுடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vladimir-putin-arrives-in-kyrgyzstan-sco-summit-1788184598"></link>
            <id>https://news.lankasri.com/article/vladimir-putin-arrives-in-kyrgyzstan-sco-summit-1788184598</id>
            <summary type="text">Vladimir Putin arrives in kyrgyzstan for sco summit: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் SCO உச்சிமாநாட்டிற்காக கிர்கிஸ்தான் வந்தடைந்தார். 

SCO உச்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vladimir Putin arrives in kyrgyzstan for sco summit: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் SCO உச்சிமாநாட்டிற்காக கிர்கிஸ்தான் வந்தடைந்தார். </p><p>

SCO உச்சி மாநாடு மற்றும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை ஆகியவற்றில் கலந்துகொள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிர்கிஸ்தான் வந்தடைந்தார்.&nbsp;</p><h2>கிர்கிஸ்தான்&nbsp;வருகை </h2><p> 

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் SCO எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். 

இதற்காக அவர் கிர்கிஸ்தான் நாட்டிற்கு திங்களன்று வந்தடைந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f4c3ed2-edda-4489-a061-02c4ecf00e91/26-6a9589ac45ad8.webp' />&nbsp;</p><p></p><p>உச்சி மாநாடு மட்டுமின்றி சீனா, இந்தியா மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்பிலும் புடின் கலந்துகொள்கிறார்.
</p><p>
தலைவர்களிடையே நீண்ட காலமாக தாமதமாகி வரும் Power of Siberia 2 இயற்கை எரிவாயு குழாய் திட்டம் குறித்த விவாதம் நடைபெற உள்ளது.
</p><p>
முதலில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்கும் புடின், அதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச உள்ளார். </p><p>

SCO உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 2026-யில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய போர் தொடங்கியதில் இருந்து, முதன்முறையாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்திக்கவுள்ளார். </p><p>

அத்துடன் கருங்கடல் பாதுகாப்பு மற்றும் உக்ரைன் போர் குறித்தும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் புடின் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ள நிவாரணம்: சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடி செய்த நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-uses-chatgpt-for-nepal-flood-relief-scam-1788182900"></link>
            <id>https://news.lankasri.com/article/man-uses-chatgpt-for-nepal-flood-relief-scam-1788182900</id>
            <summary type="text">nepal man uses chatgpt to fake nepal flood donation: நேபாள வெள்ள நிவாரணத்தில் சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை நேபாள காவல்துறை கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>nepal man uses chatgpt to fake nepal flood donation: நேபாள வெள்ள நிவாரணத்தில் சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை நேபாள காவல்துறை கைது செய்துள்ளது.
</p><h3>
நேபாள வெள்ள நிவாரணம்
</h3><p>
சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72e108c3-8757-49ce-b185-90292988248c/26-6a95817668498.webp' /></p><p>
இதற்கான மீட்பு பணிகளை நேபாள ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா மற்றும் சீனாவிலிருந்து சுரங்க மீட்பு குழு நேபாளம் சென்று மீட்பு பணிகளில் உதவி வருகிறது. </p><p>

மேலும், புனரமைப்புப் பணிகளுக்கு 5 பில்லியன் டொலர் வரை செலவாகும் என அரசு ஆரம்பகட்ட மதிப்பீடு செய்துள்ளதாக நேபாள நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

இந்நிலையில், நேபாள வெள்ள நிவாரணத்திற்கு நிதியளிப்பவர்களை குறிவைத்து நடக்கும் இணைய மோசடி குறித்து நேபாள காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. </p><h3> 

சாட்ஜிபிடி மூலம் மோசடி </h3><p>

நேபாளத்தின் ராமேச்சாப் மாவட்டத்தில் உள்ள கோகுல்கங்கா ஊரக நகராட்சியைச் சேர்ந்த 32 வயதான பகவான் கர்கி என்பவர், பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு, 1,20,000 நேபாள ரூபாய் பணம் நன்கொடை வழங்கியதாக சாட்ஜிபிடி மூலம் போலியான பரிவர்த்தனை அறிக்கையை உருவாக்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12963b82-9eaa-45b9-af28-dbf1a787bef5/26-6a9581757f87c.webp' /></p><p>

அந்த அறிக்கையை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த அவர், நிவாரண நிதி திரட்டுவதாகக் கூறி தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட ஒரு க்யூஆர் குறியீட்டையும் இணைத்திருந்தார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ne" dir="ltr">प्रधानमन्त्री दैवी प्रकोप उद्धार कोषको नाममा नक्कली स्टेटमेन्ट बनाएर ठगी गर्ने एक जना पक्राउ<a href="https://x.com/hashtag/NepalPolice?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NepalPolice</a> <a href="https://x.com/hashtag/BelieveinBlue?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BelieveinBlue</a> <a href="https://x.com/hashtag/ToServeandProtect?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ToServeandProtect</a> <a href="https://x.com/hashtag/%E0%A4%A8%E0%A5%87%E0%A4%AA%E0%A4%BE%E0%A4%B2%E0%A4%AA%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%B9%E0%A4%B0%E0%A5%80?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#नेपालप्रहरी</a> <a href="https://t.co/CAOx4EExco">pic.twitter.com/CAOx4EExco</a></p>&mdash; Nepal Police (@NepalPoliceHQ) <a href="https://x.com/NepalPoliceHQ/status/2093921566786813957?ref_src=twsrc%5Etfw">August 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இது குறித்து தகவலறிந்த நேபாள காவல்துறை, மோசடி மற்றும் டிஜிட்டல் தவறான சித்தரிப்பு சட்டங்களின் கீழ் அவரை கைது செய்துள்ளது. </p><p>

இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நேபாள காவல்துறை, இணையத்தில் பகிரப்படும் இணைப்புகளுக்குப் பதிலாக பிரதம மந்திரி பேரிடர் நிவாரண நிதி என்ற பெயரில் உள்ள அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டும் நன்கொடை வழங்குமாறு தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறு படகொன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/french-police-investigate-small-boat-migrant-death-1788179231"></link>
            <id>https://news.lankasri.com/article/french-police-investigate-small-boat-migrant-death-1788179231</id>
            <summary type="text">French police investigating the death of a migrant on a small boat: சிறு படகொன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர் தொடர்பில் பிரான்ஸ் பொலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>French police investigating the death of a migrant on a small boat: சிறு படகொன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர் தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><p>


பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர், பிரான்ஸ் நாட்டு பொலிசாரை தாக்கும் காட்சிகள் வெளியானது நினைவிருக்கலாம்.
</p><p>
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புலம்பெயர்வோர் வன்முறையைக் கையில் எடுக்கிறார்களோ என கேள்வி எழுந்துள்ளது.</p><h3>

சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர்
</h3><p>
இந்நிலையில், புலம்பெயர்வோர் வன்முறையைக் கையில் எடுக்கக்கூடும் என்னும் சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46cdaf75-1282-41e8-81ea-2731d52d524a/26-6a957320b5ea2.webp' /></p><p>

வெள்ளிக்கிழமையன்று, பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட சிறுபடகொன்றில் ஆப்கன் நாட்டவரான 34 வயது புலம்பெயர்வோர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அவரை, சக புலம்பெயர்வோர் தாக்கியிருக்கலாம் என பிரான்ஸ் பொலிசார் கருதுகிறார்கள்.
</p><p>
அத்துடன், அதே படகிலிருந்து காயமடைந்த மூவரையும் பிரான்ஸ் பொலிசார் மீட்டுள்ளார்கள். அவர்களில் ஒரு ஆண் கத்தியால் குத்தப்பட்டுள்ளார், இரண்டு பெண்களுக்கு தீக்காயங்கள் இருந்துள்ளன.&nbsp;</p><p></p><p>
இந்த சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
</p><p>
ஏற்கனவே, சென்ற மாதம் பிரான்சிலுள்ள கலாயிஸ் நகருக்கருகிலுள்ள கடற்கரை ஒன்றில் புலம்பெயர்வோர் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:27:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பெண்: தொடர்ந்து ஒலிக்கும் மொபைல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/family-hopes-women-phone-ringing-missed-in-flood-1788177640"></link>
            <id>https://news.lankasri.com/article/family-hopes-women-phone-ringing-missed-in-flood-1788177640</id>
            <summary type="text">&amp;nbsp;Family clings to hope for missing Toronto based techie: ரொரன்றோவில் வாழ்ந்துவந்த பெண்ணொருவர் நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நிலையில், அவரது மொபைல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Family clings to hope for missing Toronto based techie: ரொரன்றோவில் வாழ்ந்துவந்த பெண்ணொருவர் நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நிலையில், அவரது மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>

ரொரன்றோவில் வாழ்ந்துவந்த பெண்ணொருவர் நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நிலையில், அவரது மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளதால் அவர் பத்திரமாக இருக்கக்கூடும் என அவரது குடும்பத்தினருக்கு நம்பிகை ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56d9fc28-449c-47cf-aadc-e23dda730083/26-6a956ce98db74.webp' /></p><h3>
நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பெண்</h3><p>

ரொரன்றோவில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண்ணான ஸ்வாதி (Swati Bagrecha, 50), நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமானவர்களில் ஒருவர்.</p><p>

ஸ்வாதி நேபாளத்துக்கு புனித யாத்திரை சென்ற நிலையில், அவரது மகளான அனுஷ்கா (14), ஸ்வாதியின் சகோதரியுடன் இந்தியாவின் மும்பை நகரில் தங்கியுள்ளார்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஸ்வாதியை அவரது மொபைலில் தொடர்பு கொள்ள முயலும்போது, அவரது மொபைல் இன்னமும் ஒலிக்கிறது. அதாவது, மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அவருக்கு என்ன ஆயிற்று என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ள அதே நேரத்தில், அவரது மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளதால், அவர் பத்திரமாக இருக்கக்கூடும் என அவரது குடும்பத்தினருக்கு நம்பிக்கை உருவாகியுள்ளது.
</p><p>
கடைசியாக அவரது மொபைல் சீன எல்லையருகே பயன்பாட்டில் இருந்ததாக தெரிவித்துள்ள ஸ்வாதியின் சகோதரரான ப்ரஷாந்த், என்றாலும், அவரது மொபைல் எண் ரொரன்றோவில் பதிவு செய்யப்பட்டது என்பதால், அதை கண்காணிப்பது கடினமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்.
</p><p>
ஆகவே, ஸ்வாதியைக் கண்டுபிடிக்க உதவுமாறு, நேபாளத்தில் உள்ள இந்திய மற்றும் சீன தூதரங்களை அணுகியுள்ளதாக ஸ்வாதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> <b>WHATSAPP CHANNEL</b></a><b> </b>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்து - ஆந்திராவில் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apsrtc-plans-doorstep-bus-pickup-in-vijayawada-1788176874"></link>
            <id>https://news.lankasri.com/article/apsrtc-plans-doorstep-bus-pickup-in-vijayawada-1788176874</id>
            <summary type="text">apsrtc plan doorstep bus pickup in vijayawada: அரசு பேருந்து மூலம் வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் திட்டத்தை அறிமுகப்பட்ட ஆந்திராவின் APSRTC ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>apsrtc plan doorstep bus pickup in vijayawada: அரசு பேருந்து மூலம் வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் திட்டத்தை அறிமுகப்பட்ட ஆந்திராவின் APSRTC முன்வந்துள்ளது. </p><h3> 

வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்து</h3><p>

பொதுமக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில் அரசு சார்பில் பெரும்பாலும் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகிறது. </p><p>

ஆனால், பேருந்தில் பயணம் செய்வதற்கு நாம் குறிப்பிட்ட பேருந்து நிலையம் அல்லது பேருந்து நிறுத்தம் சென்றுதான் பேருந்தில் ஏற வேண்டி இருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/442aad8e-ff7f-4f87-bfaf-b3803fbf9e2b/26-6a9569eb7a666.webp' /></p><p> 

பொதுவாக குடும்பத்துடன் வெளியூர்களுக்கு செல்லும் போது அதிகப் பயணப் பொருட்களுடன் பேருந்து நிலையத்திற்கு பயணிகளுக்கு சிரமமாக இருக்கும்.</p><p> 

இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு, பயணிகளின் வீட்டு வாசலுக்கு வந்து பேருந்தை ஏற்றி செல்லும் திட்டம் ஆந்திராவில் தொடங்கப்பட உள்ளது.&nbsp;</p><p></p><p>

ஆந்திராவின் அரசு போக்குவரத்து கழகமான APSRTCயின், சூப்பர் சொகுசு, ஏசி மற்றும் ஸ்லீப்பர் பேருந்துகள் தொலைதூர இடங்களுக்குச் சேவை வழங்குகின்றன.
</p><p>
இதில், தொலைதூர பயணம் மேற்கொள்ள, 10க்கும் மேற்பட்ட டிக்கெட்களை மொத்தமாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வீட்டிற்கே பேருந்தை அனுப்பி ஏற்றி வர APSRTC முன்வந்துள்ளது. </p><p>

மொத்தமாக முன்பதிவு செய்யும் பயணிகள் இது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். </p><p>

முதற்கட்டமாக இந்த சேவை, சோதனை முறையில் விஜயவாடா நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:48:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... மொத்தமாக மூடி மறைக்கும் சீனா: திபெத் ஆர்வலர்கள் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-is-concealing-tibet-campaigners-1788174965"></link>
            <id>https://news.lankasri.com/article/china-is-concealing-tibet-campaigners-1788174965</id>
            <summary type="text">China is concealing scale of flood disaster: நேபாள - திபெத் வெள்ளப் பேரிடரை மூடி மறைக்கும் சீனா.
நேபாள வெள்ளப் பேரிடரில் திபெத்தில் மட்டும் 300 குடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>China is concealing scale of flood disaster: நேபாள - திபெத் வெள்ளப் பேரிடரை மூடி மறைக்கும் சீனா.
</p><p>நேபாள வெள்ளப் பேரிடரில் திபெத்தில் மட்டும் 300 குடியிருப்புகள் மொத்தமாக அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சீனாவின் உத்தியோகப்பூர்வ இறப்பு எண்ணிக்கை சமூக ஆர்வலர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed23013a-e28f-4f92-9158-bba3f39d7421/26-6a95627720d4c.webp' /></p><p>
</p><p>திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்த பொது விவாதங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன; பேரிடர் தொடர்பான தவறான தகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்காக குறைந்தது 10 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.</p><p> என்ன தண்டனை அளிக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், 16 பேர் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 261 வெளிநாட்டினர் உட்பட 546 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>ஆனால், குறைந்தது 300 வீடுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கும் என்றும் தங்களது தரப்பு நம்புவதாக திபெத்துக்கான சர்வதேச ஆர்வலர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.
</p><p>
நேபாளத்தில் காணக்கூடிய காட்சிகள், திபெத்தில் மறைக்கப்பட்டுள்ள உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>திபெத்தில் சேல் (Sale), செர்சுங் (Serchung), லாபி (Labi) மற்றும் ரிசி (Rizi) ஆகிய நான்கு கிராமங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன; அங்கு சுமார் 300 வீடுகள் மொத்தமாக சேதமடைந்திருப்பதாகவும், பலர் இன்னும் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும், திபெத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீன அதிகாரிகள் தெரிவித்ததை விட மிக அதிகமாக இருக்கலாம் என்றே திபெத்துக்கான சர்வதேச ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
</p><p>ஆகஸ்ட் 26 அன்று, நேபாள-திபெத் எல்லையில் பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் முழு கிராமங்களையும் அழித்து உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca6b6e9f-51d3-4ca4-a283-29632426f0f2/26-6a956277c99d5.webp' /></p><p> </p><p>நேபாளப் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐக் கடந்துள்ளது; மேலும் 4,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. மலையேற்றப் பயணிகளுக்கும் யாத்ரீகர்களுக்கும் புகழ்பெற்ற இப்பகுதிகளில், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் நிலை குறித்த தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. </p><p>இதனிடையே, எல்லையின் இருபுறமும் வழங்கப்பட்ட தகவல்களின் அளவில் பெரும் வித்தியாசம் காணப்படுவதாக திபெத் ஆதரவு அமைப்புகள் கூறுகின்றன.</p><p> வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் திபெத்தில், சுயாதீனமான சரிபார்ப்பு மிகவும் கடினமானது. சீனாவுக்கு வெளியே உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காகத் திபெத்தியர்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0df968c-2b05-4621-9f47-a2e5adb33cf0/26-6a9562787c28d.webp' /></p><p> </p><p>அரசு நடத்தும் Tibet Daily நாளிதழில் ஆகஸ்ட் 27 அன்று வெளியான ஒரு செய்தியின்படி, எல்லைக்கு அருகே 1,000-க்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டதாக வதந்திகளைப் பரப்பியதற்காக இரண்டு திபெத்தியர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர். </p><p>வெள்ளப் பேரிடர் நேபாளத்தில் மட்டுமே நடந்ததாகவும், திபெத்தில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் சீன அரசாங்கம் சித்தரிக்கிறது என திபெத்துக்கான சர்வதேச ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T11:14:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலுக்குத் தயாராகும் பிரான்ஸ்: அடுத்த பிரதமர் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/who-will-be-the-next-president-in-france-election-1788173734"></link>
            <id>https://news.lankasri.com/article/who-will-be-the-next-president-in-france-election-1788173734</id>
            <summary type="text">France Elections: Far-right party lead polls: பிரான்ஸ் ஜனாதிபதியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த பிரதமராகும் வாய்ப்பு, த...</summary>
            <content type="html"><![CDATA[<p>France Elections: Far-right party lead polls: பிரான்ஸ் ஜனாதிபதியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த பிரதமராகும் வாய்ப்பு, தீவிர வலதுசாரிக் கட்சி ஒன்றின் வேட்பாளருக்கு அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.</p><p>


பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து இப்போதே ஊடகங்களில் விவாதங்கள் துவங்கிவிட்டன.</p><h3>

தேர்தலுக்குத் தயாராகும் பிரான்ஸ்</h3><p>

இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம், 2027ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது.&nbsp;</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39e65546-9a28-4552-bc49-f39afeb3f2bc/26-6a955da961555.webp' /></p><p>
மேக்ரான் ஏற்கனவே இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்துவிட்டதால், பிரான்ஸ் சட்டப்படி இனி அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாது.
</p><p>
ஆக, அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்த விவாதங்களை ஊடகங்களும், பதவியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியை அரசியல் கட்சிகளும் துவங்கிவிட்டன.</p><h3>

அடுத்த பிரதமர் யார்?
</h3><p>
இந்நிலையில், National Rally கட்சியின் தலைவரான மரீன் லெ பென்னுக்கு (Marine Le Pen) அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57e11b71-3845-46d3-a75a-463cb8c71f80/26-6a955da8aee9e.webp' /></p><p>

விடயம் என்னவென்றால், இமானுவல் மேக்ரானைப் பொருத்தவரை, அவர் பணக்காரர்களின் ஜனாதிபதி என்ற கருத்தே நிலவுகிறது.

10 ஆண்டுகள் பிரான்சை ஆண்டும், அவர் சராசரி மக்களின் கஷ்டங்களை புரிந்துகொள்ளவில்லை என மக்கள் கருதுகிறார்கள்.
</p><p>
மாறாக, மரீன் லெ பென்னோ, மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்ய இருப்பதாகவும், அர்சு அதிகாரிகளின் ஊதியத்தை உயர்த்த இருப்பதாகவும், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரான்சிலிருந்து நாடுகடத்த உள்ளதாகவும் வாக்குறுதிகள் அளித்துவருகிறார்.&nbsp;</p><p></p><p>
ஆக, மரீன் லெ பென்னின் கட்சி தீவிர வலதுசாரிக் கட்சியாக இருந்தாலும், மேக்ரானுக்கு மாற்றாக அவருக்கு வாக்களிக்க மக்கள் திட்டமிட்டுவருகிறார்கள்.</p><p>

அடுத்ததாக, ஜான் லூக் மெலன்ஷான் (Jean-Luc Mélenchon) என்பவருக்கு ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0435fa5e-b166-43e1-a5f5-d33803263c94/26-6a955da8089c6.webp' /></p><p>
இந்த ஜான், ஏழைகளுக்கு வரி குறைப்பு, பணக்கார்களுக்கு அதிக வரி விதித்து ஏழைகளுக்கு உதவுவது என்னும் கருத்தை முன்வைத்துவருகிறார். ஆகவே, அவருக்கும் ஆதரவு நிலவிவருகிறது.</p><p>
விடயம் என்னவென்றால், தேர்தலுக்கு இன்னமும் 7 மாதங்கள் உள்ளன. ஆக, அந்த காலகட்டத்தில் மக்கள் எண்ணங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T10:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்கு கல்வி கற்கச் செல்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-study-permit-rules-changes-from-september-1-1788167658"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-study-permit-rules-changes-from-september-1-1788167658</id>
            <summary type="text">Canada Study Permit Rules changes from September 1: செப்டம்பர் 1ஆம் திகதி முதல், கனடா கல்வி அனுமதி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

கனடாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada Study Permit Rules changes from September 1: செப்டம்பர் 1ஆம் திகதி முதல், கனடா கல்வி அனுமதி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.</p><p>

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக கனடாவில் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக, அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றொரு விதி உண்டு.</p><p>

இந்நிலையில், அது தொடர்பான விதிகளில், நாளை முதல், அதாவது, 2026ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் சில மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன.
</p><h3>
கல்வி அனுமதி தொடர்பில் சில மாற்றங்கள்</h3><p>

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக தங்கள் வங்கிக்கணக்கில் 22,895 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fd50aea-7019-4dfd-80ed-b1b816ab54d2/26-6a9545ebdfc0f.webp' /></p><p>
தற்போது மீண்டும் அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆம், இனி வெளிநாட்டு மாணவர்கள் தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்கான தங்கள் வங்கிக்கணக்கில் 23,448 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இது மாணவர்கள் கல்வி கற்பது, போக்குவரத்து போன்ற விடயங்களை உள்ளடக்கிய கல்விக் கட்டணம் அல்ல. அது, தனிச் செலவு!
</p><p>
அத்துடன், கனடாவில் கல்வி கற்பதற்காக உரிமம் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களுடன் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேரை அழைத்துவருகிறார்களோ, அதற்கேற்ப அவர்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகையும் அதிகரிக்கும்.&nbsp;</p><p></p><p>
ஒரு மாணவர் தன்னுடன் தன் உறவினர்கள் இரண்டு பேரை கனடாவுக்கு அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 29,192 டொலர்கள் வைத்திருக்கவேண்டும்.</p><p>

மூன்று பேரை அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 35,888 டொலர்களும், நான்கு பேரை அழைத்துவர விரும்பினால் தன் வங்கிக்கணக்கில் 43,572 டொலர்களும் வைத்திருக்கவேண்டும்.
</p><p>
இப்படியே இந்த தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும். அதாவது, ஒரு மாணவர் கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்தால், அவர் கனடாவில் வேலை செய்யாமலே, தனது மற்றும் தன்னுடன் அழைத்துவந்துள்ள குடும்ப உறுப்பினர்களின் செலவுகளை சந்திக்கும் வகையில் தன்னிடம் போதுமான பணம் உள்ளது என்பதை நிரூபித்தாகவேண்டும் என்கிறது, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T10:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
