<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-09T15:36:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-bans-canadian-alcohol-bikes-dairy-imports-1788939333"></link>
            <id>https://news.lankasri.com/article/us-bans-canadian-alcohol-bikes-dairy-imports-1788939333</id>
            <summary type="text">US bans Canadian alcohol bikes dairy imports: கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இறக்குமதி தடைஅ...</summary>
            <content type="html"><![CDATA[<p>US bans Canadian alcohol bikes dairy imports: கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.</p><h2>

இறக்குமதி தடை</h2><p>அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு கனடா விதித்த எதிர் வரி நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, கனடாவில் இருந்து வரும் பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ளார்.
</p><p>
செப்டம்பர் 29 முதல் அமுலுக்கு வரும் இந்த தடை, மதுபானங்கள், பால் சார்ந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உள்ளடக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa8674c-1077-4b41-86b6-af655a03a614/26-6aa10c46f2a08.webp' /></p><p> </p><p>மேலும், சில பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சீஸ், மோட்டார் படகு, உலோகங்கள், மரச்சாமான்கள் போன்றவை அதிக வரி சுமையுடன் அமெரிக்க சந்தையில் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
கனடா தனது பக்கம், அமெரிக்காவின் எஃகு, ஆடை, மரச்சாமான்கள் போன்ற பொருட்களுக்கு டொலருக்கு-டொலர் வரி விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளின் வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. விலைகள் உயர்ந்து, வாடிக்கையாளர்கள் குறையும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><p>
அமெரிக்கா-கனடா உறவு வரலாற்று ரீதியாக நெருக்கமானது. கனடாவின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவிற்கே செல்கிறது. ஆனால் தற்போதைய வர்த்தகப் போர், இரு நாடுகளின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
</p><p>
பொருளாதார நிபுணர்கள், இந்த வர்த்தகப் போர் இரு தரப்புக்கும் இழப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என எச்சரிக்கின்றனர். வாடிக்கையாளர்களே மிகப்பெரிய இழப்பாளர்ககளாக இருப்பார்கள் என அவர்கள் கூறுகின்றனர்.
</p><p></p><p>கனடா பிரதமர் மார்க் கார்னி, “செயல்படுவதற்கு எப்போதும் செலவு இருக்கும். ஆனால் செயல்படாமல் இருப்பதற்கான செலவு அதைவிட அதிகம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த வர்த்தகப் போர் எப்போது முடிவடையும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினாலும், புதிய பேச்சுவார்த்தைக்கான திகதிகள் அறிவிக்கப்படவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T15:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்திரன் எங்களுடையது - டிரம்ப் பதிவால் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trumps-moon-claim-vs-space-law-reality-1788967005"></link>
            <id>https://news.lankasri.com/article/trumps-moon-claim-vs-space-law-reality-1788967005</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் Truth Social-ல் “The Moon is ours” எனும் வாசகத்துடன் சந்திரனின் படத்தை வெளியிட்டார். இந்த பதிவு உலகளவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் Truth Social-ல் “The Moon is ours” எனும் வாசகத்துடன் சந்திரனின் படத்தை வெளியிட்டார். </p><p>இந்த பதிவு உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

ஆனால், சட்ட ரீதியாக எந்த நாட்டுக்கும் சந்திரனை சொந்தமாக்கும் உரிமை இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894a6fc0-1dbe-4ff8-9546-cda1acf5ce31/26-6aa1785eccb79.webp' /></p><p>

1967 Outer Space Treaty எனப்படும் ஐ.நா. உடன்படிக்கை, சந்திரன் உட்பட விண்வெளி பகுதிகளை எந்த நாடும் தன் சொந்தமாகக் கொள்ள முடியாது எனத் தெளிவாகக் கூறுகிறது.</p><p> Article II-இல், “விண்வெளி, சந்திரன் போன்றவை எந்த நாட்டின் ஆட்சியிலும், ஆக்கிரமிப்பிலும், சொந்த உரிமையிலும் இருக்க முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது. Article I-இல், விண்வெளி ஆராய்ச்சி அனைத்து நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>

இதனால், சந்திரனில் தேசியக் கொடி நாட்டுவது அந்த நிலப்பரப்பை அந்த நாட்டின் சொத்தாக்காது. நாடுகள் தங்கள் விண்கலங்கள், கருவிகள் போன்றவற்றை சொந்தமாகக் கொள்ளலாம், ஆனால் சந்திரனின் நிலப்பரப்பை உரிமை கோர முடியாது.
</p><p>
இப்போது, NASA Artemis திட்டம் மற்றும் Artemis Accords மூலம் 71 நாடுகள் சந்திரன் ஆராய்ச்சியில் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் சந்திரனில் ஆராய்ச்சி நிலையங்கள், வளங்கள், நிரந்தர கட்டமைப்புகள் உருவாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் Outer Space Treaty, நாடுகள் சந்திரனை தங்கள் சொத்தாக்குவதைத் தடுக்கிறது.
</p><p>
அதனால், டிரம்ப் கூறிய “The Moon is ours” என்பது அரசியல் கூற்றாக இருந்தாலும், சட்டப்படி சந்திரன் யாருக்கும் சொந்தமில்லை. அது மனிதகுலத்தின் பொதுச் சொத்து எனக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T15:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாபர் அஸாம் உட்பட 8 வீரர் ஒற்றை இலக்கத்தில் அவுட்: 133 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-133-all-out-vs-england-3rd-test-edgbaston-1788964086"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-133-all-out-vs-england-3rd-test-edgbaston-1788964086</id>
            <summary type="text">Pakistan 133 all out vs england in 3rd test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பர்மிங்காமில் தொடங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pakistan 133 all out vs england in 3rd test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
பர்மிங்காமில் தொடங்கியுள்ள டெஸ்டில், இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.&nbsp;</p><h2>விக்கெட்டுகள் சரிவு</h2><p>
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமின் எட்ஜ்பஸ்டனில் தொடங்கியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Robinson gets another ☝️<br><br>Click here for live updates 👉<a href="https://t.co/VUdUehsgT2">https://t.co/VUdUehsgT2</a> <a href="https://t.co/aBBEhObETK">pic.twitter.com/aBBEhObETK</a></p>&mdash; England Cricket (@englandcricket) <a href="https://x.com/englandcricket/status/2097638864215015535?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.&nbsp;</p><p></p><p>
சைம் அயூப் டக்அவுட் ஆக, அஸான் அவைஸ் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஷாஃபிக் (3), ஷான் மசூத் (5) ஆகியோர் நடையைக் கட்டினர்.
</p><p>
அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் பாபர் அஸாம் 9Babar Azam) 7 ஓட்டங்களில் ஜோஷ் டங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>133 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் </h2><p>

சவுத் ஷகீல் மட்டும் நின்று ஆட, ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்களுக்கு சுருண்டது. </p><p>

அதிகபட்சமாக சவுத் ஷகீல் (Saud Shakeel) 47 பந்துகளில் 43 ஓட்டங்களும், மொஹம்மது அப்பாஸ் 21 ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p> 

ஜோஷ் டங் (Josh Tongue) 4 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஓலி ராபின்ஸன் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6225c0d-2ce1-4ca2-815c-96f01fb383af/26-6aa16df222676.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T15:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏஐயால் 2030க்குள் மனிதகுலம் அழியும் - ஆந்த்ரோபிக்கிலிருந்து வெளியேறிய வல்லுநர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anthropic-expert-says-ai-could-kill-humans-2030-1788963875"></link>
            <id>https://news.lankasri.com/article/anthropic-expert-says-ai-could-kill-humans-2030-1788963875</id>
            <summary type="text">anthropic researcher says ai could kill humans before 2030:செயற்கை நுண்ணறிவு எனஅழைக்கப்படும் AIயின் வளர்ச்சி நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>anthropic researcher says ai could kill humans before 2030:செயற்கை நுண்ணறிவு எனஅழைக்கப்படும் AIயின் வளர்ச்சி நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. </p><h3>

ஏஐயால் 2030க்குள் மனிதகுலம் அழியும்</h3><p>

AI வளர்ச்சியால் மனிதர்களில் சிலர் வேலை இழப்பை சந்தித்து வரும் சூழலில், எதிர்காலத்தில் AI மனிதர்களின் கட்டுப்பாடின்றி செயல்பட சாத்தியம் உள்ளதாக அச்சம் நிலவி வந்தது. </p><p>

இந்நிலையில், AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள Open AI மற்றும் Anthropic ஆகிய 2 நிறுவனங்களில் பணியாற்றியுள்ள ஜேக்கப் காக்சன் என்ற 27 வயது AI ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c0ed57-1c58-43b9-b421-97de516515b7/26-6aa16c24ade5b.webp' /></p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் இன்று ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளேன். கடந்த 3 ஆண்டுகளாக நான் ஓப்பன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய இரு நிறுவனங்களிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன்.&nbsp;</p><p>

இந்த இரண்டு நிறுவனங்களுமே பொறுப்புடன் செயல்படவில்லை. அவை தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ளும் சூப்பர் இன்டெலிஜென்ட்ஸை உருவாக்குவதில் போட்டியிடுகின்றன.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I resigned from Anthropic today. I spent the last three years doing pretraining research at both OpenAI and Anthropic. Neither company is acting responsibly. They are racing straight to self-improving superintelligence and gambling with our lives. More thoughts below.</p>&mdash; Jacob Coxon (@hilbertspaess) <a href="https://x.com/hilbertspaess/status/2097476196791709843?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p>

இந்தத் தொழில்நுட்பத்தின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். இவை விரைவில், எதையும் ஊடுருவி அறியக்கூடிய, ஒரே இரவில் எந்தத் துறையிலும் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய, உண்மையான சக்தியையும் வளங்களையும் பெறக்கூடிய மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அமைப்புகளாக மாறும். </p><p>

இந்த AI ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாம் அனைவரும் கண்டிருக்கிறோம், மேலும் அந்த முன்னேற்றத்தின் வேகம் குறையவில்லை.&nbsp;</p><p>

இந்த செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவர்களே, அது இந்த தசாப்தத்தின் முடிவில் நம் அனைவரையும் கொன்றுவிடும் என்று உண்மையாகவே நம்புகிறார்கள். இது ஒரு சந்தைப்படுத்தல் தந்திரம் அல்ல.&nbsp;</p><p></p><p>

சொல்லப்போனால், பல நிர்வாகிகளும் மூத்த ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகைகளில் தங்கள் வார்த்தைகளை அறிவுப்பூர்வமாகத் தோன்றும் வகையில் பேசுவார்கள். ஆனால் அதே நபர்கள் AI குறித்த பயத்தை வெளிப்படுத்துவதை நான் கேட்டிருக்கிறேன். </p><p>

OpenA Iயில் பலர் இதனால் ஏற்படக்கூடிய அபாயங்களை ஆழமாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஆனால். ஆந்த்ரோபிக்கில், அந்த அபாயங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தாலும் அதை முதலில் அடைவதற்கான ஒரு போட்டியில் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.</p><p> 

ஆந்த்ரோபிக்கின் சீரமைப்பு அறிவியல் தலைவரான இவான் ஹூபிங்கர், அடுத்த பத்தாண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு அனைத்து மனிதர்களையும் கொன்றுவிடுவதற்கான நிகழ்தகவு 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகத் தனிப்பட்ட முறையில் மதிப்பிடுவதாக தெரிவித்துள்ளார். </p><p>

ஜேக்கப் காக்சன் AI எந்த முறையில் மனித குலத்தை அழிக்கும் என்பதை குறிப்பிடவில்லை. ஆனால், AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள 2 நிறுவனங்களின் உள்ளே பணியாற்றியுள்ளவர் கூறியது மனிதர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T14:25:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[iPhone 17 Pro விலை குறைப்பு - Cosmic Orange நிறம் விரைவில் நிறுத்தப்படலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iphone-17-pro-deal-rs-75810-exchange-offer-1788962792"></link>
            <id>https://news.lankasri.com/article/iphone-17-pro-deal-rs-75810-exchange-offer-1788962792</id>
            <summary type="text">Apple நிறுவனத்தின் iPhone 17 Pro (256GB Cosmic Orange) மாடல் தற்போது Flipkart-இல் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது.

ரூ.75,810-க்கு iPhone 17 Pro...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apple நிறுவனத்தின் iPhone 17 Pro (256GB Cosmic Orange) மாடல் தற்போது Flipkart-இல் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது.
</p><h2>
ரூ.75,810-க்கு iPhone 17 Pro</h2><p>இந்த மாடல், ஆரம்ப விலை 1,34,900 ரூபாயாக இருந்த நிலையில், பழைய iPhone 16 Pro-வை மாற்றி கொடுத்தால் ரூ.55,100 வரை எக்சேஞ்ச் மதிப்பு கிடைக்கிறது. </p><p>அதற்கு மேலாக, Flipkart Axis Bank Credit Card மூலம் ரூ.3,990 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதனால், iPhone 17 Pro-வின் இறுதி விலை 75,810 ரூபாயாக குறைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04945e3e-1bd4-421a-a955-72aa3d743aac/26-6aa167e9ec65d.webp' /></p><p> EMI முறையில் வாங்க விரும்புவோருக்கு மாதம் ரூ.3,907 முதல் தவணை வசதி வழங்கப்படுகிறது.
</p><p>
இந்த சலுகை, குறிப்பாக iPhone 16 Pro வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், பழைய போனின் நிலைமை (சேதம், செயல்பாடு) அடிப்படையில் எக்சேஞ்ச் மதிப்பு மாறுபடும்.</p><p></p><p>
</p><h2>
இறுதி வாய்ப்பு</h2><p>Apple நிறுவனம், புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max வெளியீட்டுக்குப் பிறகு, பழைய Pro மாடல்களை நிறுத்தும் பழக்கத்தை பின்பற்றுகிறது. அதனால், Cosmic Orange நிறம் விரைவில் சந்தையில் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.
</p><p>
இந்த சலுகை, iPhone 17 Pro வாங்க விரும்புவோருக்கு இறுதி வாய்ப்பாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T14:03:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் சதமே 150 ஓட்டங்கள் விளாசிய 24 வயது வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jordan-hermann-maiden-century-150-runs-vs-namibia-1788959376"></link>
            <id>https://news.lankasri.com/article/jordan-hermann-maiden-century-150-runs-vs-namibia-1788959376</id>
            <summary type="text">Jordan hermann 150 runs vs namibia: தென் ஆப்பிரிக்காவின் ஜோர்டன் ஹெர்மன் நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.

நமீபியா அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jordan hermann 150 runs vs namibia: தென் ஆப்பிரிக்காவின் ஜோர்டன் ஹெர்மன் நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.
</p><p>
நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க தொடக்க வீரரான ஜோர்டன் ஹெர்மன் 150 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>டோனி டி ஸோர்சி&nbsp;72</h2><p>
தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி Windhoek-யில் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/281f418b-84d3-43ac-889b-175340ad6a2b/26-6aa15c0166218.webp' />&nbsp;</p><p></p><p>நாணய சுழற்சியில் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, தென் ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.</p><p>

கோன்னோர் எஸ்டர்ஹுய்ஸன் 10 ஓட்டங்களில் வெளியேற, ஜோர்டன் ஹெர்மன் மற்றும் டோனி டி ஸோர்சி கூட்டணி 190 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p>அரைசதம் அடித்த டோனி 72 ஓட்டங்களில் வெளியேற, டெவால்ட் பிரேவிஸ் 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e32fa0-893e-4438-a190-579e3fe3348a/26-6aa15c007fd7e.webp' />&nbsp;&nbsp;</p><h2>ஜோர்டன் ஹெர்மன்&nbsp;150 </h2><p>மறுமுனையில் அதிரடி மிரட்டிய ஜோர்டன் ஹெர்மன் முதல் சதத்தை பதிவு செய்தார். அணியின் ஸ்கோர் 275 ஓட்டங்களாக உயர்ந்தபோது, ஜோர்டன் ஹெர்மன் 126 பந்துகளில் 150 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 17 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p>கார்பின் போஷ் அதிரடியாக 24 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 39 ஓட்டங்கள் விளாச, தென் ஆப்பிரிக்க அணி 348 ஓட்டங்கள் குவித்தது. ரூபென் ட்ரம்பல்மன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d39ca20-34cb-4ac3-b07f-36b1e2c5e460/26-6aa15a93b4f85.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df839f7-6147-4f60-9448-99cc0bf86a71/26-6aa1625c0e6d6.webp' /></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A Debut For The Books! 📝<br><br>Jordan Hermann’s day just keeps getting better as the debutant brings up an extraordinary 150! 🤯<br><br>A sensational innings of exquisite stroke play as Hermann makes his mark on the international stage. 🇿🇦🙌<a href="https://x.com/hashtag/Unbreakable?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Unbreakable</a> <a href="https://t.co/QdNfetlj9F">pic.twitter.com/QdNfetlj9F</a></p>&mdash; Proteas Men (@ProteasMenCSA) <a href="https://x.com/ProteasMenCSA/status/2097635146153218105?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் நகரமொன்றில் பாரிய தீவிபத்து: ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/person-dies-in-fire-at-swiss-commercial-building-1788959278"></link>
            <id>https://news.lankasri.com/article/person-dies-in-fire-at-swiss-commercial-building-1788959278</id>
            <summary type="text">Person dies in fire at Swiss fruit and vegetable wholesaler building: சுவிட்சர்லாந்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Person dies in fire at Swiss fruit and vegetable wholesaler building: சுவிட்சர்லாந்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானார்.</p><p>


சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்திலுள்ள Bellach என்னுமிடத்தில், காய்கறிகள், பழங்கள் மொத்த விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்று உள்ளது.
</p><h3>
ஒருவர் பலி</h3><p>

இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் அந்தக் கட்டிடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6457589-5265-46fa-95b2-c26584fb927c/26-6aa15a2f6510d.webp' /></p><p>
</p><p>
தகவலறிந்து தீயணைப்புக்குழுவினர் அங்கு வரும் முன், தீ கட்டிடத்தை கபளீகரம் செய்துவிட்டிருக்கிறது.&nbsp;</p><p></p><p>
கட்டிடம் தீயில் முழுமையாக சேதமடைந்துவிட, பொலிசார் மேற்கொண்ட ஆய்வில், அந்தக் கட்டிடத்துக்குள் ஒருவர் உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் யார், எதனால் தீப்பற்றியது என்பது போன்ற விடயங்கள் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 டொலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை - மத்திய கிழக்கு மோதல் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brent-oil-tops-100-dollars-amid-middle-east-war-1788959020"></link>
            <id>https://news.lankasri.com/article/brent-oil-tops-100-dollars-amid-middle-east-war-1788959020</id>
            <summary type="text">Brent oil tops 100 dollars amid middle east war: மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்ததால், உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

100 டொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Brent oil tops 100 dollars amid middle east war: மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்ததால், உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.</p><h2>

100 டொலரை தாண்டிய&nbsp;கச்சா எண்ணெய்</h2><p>ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை செப்டம்பர் 9 அன்று ஒரு பீப்பாய் 100 டொலரை தாண்டியது. கடந்த ஜூலை 24-க்குப் பிறகு முதல் முறையாக 100 டொலரை கடந்துள்ளது.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஆறு மாதங்களாக நீடிக்கும் மோதல், எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eafbe0ea-f0cd-4eea-bc08-8e908025515a/26-6aa1592daf61f.webp' /></p><p>ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் சவுதி அரேபியாவின் எரிசக்தி நிலையங்களை தாக்கியதால், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தீப்பற்றி சேதமடைந்தன. இதனால் செங்கடல் வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்கள் கூட அபாயத்தில் உள்ளன.
</p><p>
சந்தை நிபுணர்கள், இந்த மோதல் நீண்ட காலம் நீடிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர். இது தற்காலிக உயர்வு அல்ல, பாதுகாப்பு அபாயம் காரணமாக உருவான நிலையான விலை உயர்வு என Abaxx Markets நிறுவனத்தின் ஜெஃப்ரி கர்ரி தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>எண்ணெய் விநியோகம் குறையும்</h2><p>அமெரிக்கா, கனடா, கயானா போன்ற OPEC கூட்டமைப்பில் அல்லாத நாடுகள் உற்பத்தியை அதிகரித்தாலும், சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) உலகளாவிய எண்ணெய் விநியோகம் இந்த ஆண்டு 4.3 மில்லியன் பீப்பாய் குறையும் என எச்சரித்துள்ளது.
</p><p>
Goldman Sachs, Bank of America, HSBC போன்ற முக்கிய வங்கிகள், எண்ணெய் விலை முன்னறிவிப்புகளை உயர்த்தியுள்ளன.
</p><p>
இந்த விலை உயர்வு உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பணவீக்கம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. குறிப்பாக, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T13:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி - தவெக தலைமையிலான கூட்டணிக்கு பெயர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tvk-to-led-secular-social-justice-victory-alliance-1788958803"></link>
            <id>https://news.lankasri.com/article/tvk-to-led-secular-social-justice-victory-alliance-1788958803</id>
            <summary type="text">tvk led alliance named as secular social justice victory alliance: தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப...</summary>
            <content type="html"><![CDATA[<p>tvk led alliance named as secular social justice victory alliance: தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. </p><h3>

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி
</h3><p>
தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் இன்று மாலை சென்னை பனையூரில் நடைபெற்றது. </p><p>

இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9df255b-ea65-48ab-a118-883c35ee2c31/26-6aa1585469af3.webp' /></p><p> 

மேலும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டனர். </p><p>

இந்நிலையில், தவெக தலைமையிலான இந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், "மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் செயல்படும். 

கூட்டணியின் தலைவராக விஜய் இருப்பார். புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும்.</p><p> இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என யாரையும் இதுவரை முன்னிறுத்தியது கிடையாது. கடந்த தேர்தலிலும் அப்படி யாரையும் அறிவிக்கவில்லை. 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை இந்தியா கூட்டணி முடிவு செய்யும்.</p><p> 

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்.அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐசிசியின் முடிவால் ரூ.656 கோடி இழப்பை சந்திக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-cricket-to-face-rs-656-cr-revenue-loss-1788958061"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-cricket-to-face-rs-656-cr-revenue-loss-1788958061</id>
            <summary type="text">இலங்கையில் நடைபெறவிருந்த மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவிற்கு மாற்றப்பட்டதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் 656 கோடி இலங்கை ரூபாய் இழப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நடைபெறவிருந்த மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவிற்கு மாற்றப்பட்டதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் 656 கோடி இலங்கை ரூபாய் இழப்பை சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. </p><h3>

ரூ.656 கோடி இழப்பை சந்திக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம் </h3><p>

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் தொடர்ச்சியான அரசாங்கத் தலையீடு மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் (SLC) தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாததால், அரசு இடைக்கால குழு அமைத்து நிர்வகித்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8a2ebf6-b349-465c-83b5-4033718c6aaa/26-6aa1556e8c027.webp' /></p><p>
இதன் காரணமாக இலங்கையில் நடைபெறவிருந்த மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை இந்தியாவிற்கு மாற்றுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. </p><p>

6 அணிகள் பங்கேற்க உள்ள இந்தத் தொடர், 2027 பிப்ரவரி 14 முதல் 28 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்த தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்ததால், நேரடியாகவும் சுற்றுலா உள்ளிட்டவை மூலமும் இலங்கை கிரிக்கெட் வாரியம் சுமார் 20 மில்லியன் டொலர்(இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.656 கோடி) இழப்பை சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐசிசி தொடரை நடத்தும் உரிமையை இழப்பது இது முதல் முறை இல்லை.</p><p> 

முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் நிர்வாகக் கவலைகள் காரணமாக ஐசிசி இலங்கை கிரிக்கெட்டை இடைநீக்கம் செய்ததுடன், 2024 ஆம் ஆண்டுக்கான U19 உலகக் கிண்ணத்தை இலங்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றியது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T12:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவள் ஒரு தேவதையாக இருந்தாள்: கோர விபத்தில் பலியான சிறுமிகள்..உறவினர் உருக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/children-identified-in-car-crash-west-of-melbourne-1788954732"></link>
            <id>https://news.lankasri.com/article/children-identified-in-car-crash-west-of-melbourne-1788954732</id>
            <summary type="text">Two Children killed in car crash west of melbourne: அவுஸ்திரேலியாவில் கோர விபத்தில் பலியான சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two Children killed in car crash west of melbourne: அவுஸ்திரேலியாவில் கோர விபத்தில் பலியான சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு மேற்கே நிகழ்ந்த கோர விபத்தில் பலியான சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2> 

கோர விபத்து</h2><p>கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு மேற்கே, பாடசாலையில் இருந்து 4WD வாகனம் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கோர விபத்திற்குள்ளானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/701946c4-e7de-4668-84dc-25728979454c/26-6aa14b25cd8a4.webp' /></p><p></p><p>
இதில் சாரா எல் ஹவ்லி (7) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, ஓசாமா உட்பட பிற குழந்தைகள் காயங்களுடன் மருத்துவானைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.</p><p> 

அங்கு கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்ட சிறுமி ஓசாமா (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். </p><h2>

சிறந்த மாணவி</h2><p>இந்த நிலையில் உயிரிழந்த சிறுமிகள் சாரா, ஓசாமா இருவரும் உறவினர்கள் என்பது தெரிய வந்துள்ளது. </p><p>

அவர்கள் இருவரும் மெல்டன் சவுத்தில் உள்ள அல் இமான் பாடசாலையில் பயின்றனர். சிறுமி சாரா 'வாரத்தின் சிறந்த மாணவி' என்ற விருதை பெற்றவர் ஆவார்.
</p><p>
அவரது உறவினர் ஒருவர் சாரா குறித்து பேசும்போது, 'அவள் பாடசாலையிலேயே மிகவும் புத்திசாலியான மாணவி. அவள் ஒரு தேவதையாக இருந்தாள்... இப்போதும் ஒரு தேவதையாக இருக்கிறாள். 

நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன், அவள் இறந்துவிட்டாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. </p><p>நாங்கள் அங்கு செல்ல முயன்றோம். 

ஆனால், அவளைப் பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. எனினும் என் மகளை அவர்கள் (பொலிஸார்) அனுமதித்தார்கள்; அவள் சாராவை பார்த்துவிட்டாள்' என்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0b01fc0-885e-46f4-8f70-f64387928d1a/26-6aa14b25237ab.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T12:01:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா திரும்பிய இளவரசர் ஹரி: ஒரு புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-charles-know-harry-uk-returns-48-hrs-before-1788954474"></link>
            <id>https://news.lankasri.com/article/king-charles-know-harry-uk-returns-48-hrs-before-1788954474</id>
            <summary type="text">King Charles learnt about Harry Meghan’s UK relocation plan, only 48 Hours Before: ஹரி, மேகன் தம்பதியர் பிரித்தானியா திரும்புவது குறித்து, 2 அல்லது மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>King Charles learnt about Harry Meghan’s UK relocation plan, only 48 Hours Before: ஹரி, மேகன் தம்பதியர் பிரித்தானியா திரும்புவது குறித்து, 2 அல்லது மூன்று நாட்களுக்கு முன்புதான் மன்னர் அறிந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>

பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரியும் அவரது மனைவி மேகனும், ஆறு ஆண்டுகளுக்கு முன் கோபித்துக்கொண்டு ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa408dd9-9d72-4312-b91c-06b1262eaf25/26-6aa1476c0f9ac.webp' /></p><p>
இந்நிலையில், ஹரியும் மேகனும் தங்கள் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார்கள். அவர்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><h3>
ஒரு புதிய தகவல்
</h3><p>
விடயம் என்னவென்றால், எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றே முடிவு செய்யும், ஹரி, தான் பிரித்தானியா திரும்பும் விடயம் குறித்து, வழக்கம்போல முன் கூட்டியே மன்னருக்குத் தெரியப்படுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
ஆம், ஹரியும் மேகனும் தங்கள் பிள்ளைகளுடன் பிரித்தானியா திரும்ப இருக்கிறார்கள் என்னும் விடயம் சமூக ஊடகங்களில் லீக் ஆவதற்கு 48 அல்லது 72 மணி நேரம் முன்புதான் அந்த தகவல் மன்னருக்கும் தெரியுமாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87a9fe8c-64c4-4e57-9a7d-9f3ea6044280/26-6aa1476cba8ed.webp' /></p><p>
ஜூலை மாதம் பிரித்தானியா வந்து தன் தந்தையை ஹரி சந்தித்தபோது கூட, தாங்கள் பிரித்தானியா திரும்பும் திட்டம் குறித்து அவர் மன்னரிடம் கூறவில்லை என்றும் கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><p>
ஆகவே, பிரித்தானியா திரும்பியதும் எசகு பிசகாக ஹரி எதையாவது செய்துவிடுவாரோ என்னவோ என்று எண்ணித்தானோ என்னவோ, அவசர அவசரமாக அரண்மனை வட்டாரம், ஹரியும் மேகனும் சராசரி மக்களாகவே கருதப்படுவார்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>
அதேபோல, தங்களை சாதாரண மக்கள் என மன்னர் அறிவித்துள்ள விடயம் தங்களை ஆச்சரியமடையவைத்ததாக ஹரியும் மேகனும் கூறியுள்ளதைப் பார்த்தால், மன்னர் எடுத்த முடிவு சரிதானோ என்றே தோன்றுகிறது!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:48:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/products-to-affect-in-canada-to-us-counter-tariff-1788940867"></link>
            <id>https://news.lankasri.com/article/products-to-affect-in-canada-to-us-counter-tariff-1788940867</id>
            <summary type="text">List of products from the United States subject to counter tariffs: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள் குறித்த வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>List of products from the United States subject to counter tariffs: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள் குறித்த விவரம்.
</p><p>
கனடா அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப்போர் மும்முரமாகிவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bba6c30-caed-4872-9b29-c3fba2581d5a/26-6aa112449e40f.webp' /></p><p>

27.6 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான கனேடியப் பொருட்கள் மீது 50 சதவிகித சுங்க வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.&nbsp;</p><p>
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே 27.6 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 15 முதல் 50 சதவிகித சுங்க வரி விதிக்க கனடா முடிவு செய்துள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இந்த வரிவிதிப்பால் கனேடிய மக்களும்தான் பாதிக்கப்பட உள்ளார்கள். ஏனென்றால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அந்தப் பொருட்களை கனேடியர்கள்தான் வாங்கப்போகிறார்கள்!
</p><h3>
எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்?
</h3><p>
கனடாவின் பதிலடி வரி விதிப்பால் அதிக அளவில் பாதிக்கப்படப்போவது உணவு மற்றும் பானங்கள்தான். உணவு தயாரிக்கத் தேவையான பொருட்கள், பால் பொருட்கள், ஆகியவை அதிகம் பாதிக்கப்பட உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac3ee1c8-b3c0-4797-8f58-5bc9b6f325ff/26-6aa112454fe53.webp' /></p><p>
அடுத்தபடியாக, வீட்டு உபயோகப் பொருட்களும், விவசாயத்துக்குத் தேவையான பொருட்களும் விலை உயர இருக்கின்றன.
</p><p>
விவசாயத்துக்குத் தேவையான பொருட்கள் விலை உயர உள்ளதால், அதுவும் உணவுப்பொருட்கள் விலையை பாதிக்கக்கூடும்.&nbsp;</p><p></p><p>
மேலும், கடல் உணவுகள், மரச்சாமான்கள், அழகு சாதனப்பொருட்கள், ஆண்களுக்கான உடைகள், பாதுகாப்பு உடைகள் போன்றவையும் விலை அதிகரிக்கலாம்.</p><p>

இதுபோக, கிரேன்கள், ஜாக் மற்றும் ஃபோர்க்லிஃப்ட், ரயில் பெட்டிகள், இயந்திரங்களில் பொருத்தப்படும் பம்புகள், மின்விசிறிகள் ஆகியவையும் விலை உயரலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86c87021-067e-4a18-b2dc-5a9d1facdf67/26-6aa1124601b2d.webp' /></p><p>

இவற்றை எல்லா பொதுமக்களும் வாங்குவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அவற்றை வாங்கும் நிறுவனங்கள் அவற்றிற்கான செலவை நுகர்வோர் மீதுதான் திணிக்கும். ஆக, அதிலும் மக்கள்தான் பாதிக்கப்பட உள்ளார்கள்.
</p><p>
மேலும், அமெரிக்க ஸ்டீல், காப்பர் தயாரிப்புகளும் விலை அதிகமாக உள்ளன.
</p><p>
ட்ரம்ப் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அமெரிக்கா கனடா மீது வரிகள் விதிக்கத் துவங்கியதிலிருந்தே கனேடிய மக்கள் பலர் கனேடிய தயாரிப்புகளையே வாங்கத் துவங்கியுள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இந்த வரிப்போரால், அவைகளும் விலை உயர உள்ளன.
</p><p>
ஆனாலும், தாங்கள் கனேடியப் பொருட்களையே வாங்கப்போகிறோம் என உறுதியாகக் கூறுகிறார்களாம் 60 சதவிகித கனேடியர்கள்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழலையர் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை சுட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gunman-killed-kindergarten-teacher-in-thailand-1788949637"></link>
            <id>https://news.lankasri.com/article/gunman-killed-kindergarten-teacher-in-thailand-1788949637</id>
            <summary type="text">A gunman shot and killed a kindergarten teacher in Thailand: தாய்லாந்து நாட்டில், மழலையர் பள்ளி ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர், ஆசிரியை ஒருவரை சுட்டுக்கொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>A gunman shot and killed a kindergarten teacher in Thailand: தாய்லாந்து நாட்டில், மழலையர் பள்ளி ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர், ஆசிரியை ஒருவரை சுட்டுக்கொன்ற விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p>

புதன்கிழமையன்று, தாய்லாந்திலுள்ள Chonburi என்னுமிடத்தில் அமைந்துள்ள மழலையர் பள்ளி ஒன்றிற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.</p><h3>

பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவம்</h3><p>

வகுப்பொன்றில் குழந்தைகள் அமர்ந்திருக்க, அந்த நபர் அந்த வகுப்பாசிரியையை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22f36c16-ec55-417e-813d-f7902f4d9b91/26-6aa1348756f2a.webp' /></p><p>
அந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, துப்பாக்கியால் சுட்ட நபர் தப்பியோடியுள்ளார்.
</p><p>
விசாரணையில், அவர் அந்த ஆசிரியையின் கணவர் என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>
பள்ளியிலிருந்த பிள்ளைகள் அனைவரும், மற்ற ஆசிரியர்களும் பாதுகாப்பாக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள்.
</p><p>
என்றாலும், அந்த பயங்கரக் காட்சியைக் கண்ட பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து அவர்கள் விடுபடுவதற்காக, மன நல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
பட்டப்பகலில் ஒருவர் மழலையர் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை ஒருவரை சுட்டுகொன்ற விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:27:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் மயமாகும் BBL - அணிகளை வாங்க IPL உரிமையாளர்கள் ஆர்வம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ipl-owners-eye-on-bbl-after-privatisation-1788949195"></link>
            <id>https://news.lankasri.com/article/ipl-owners-eye-on-bbl-after-privatisation-1788949195</id>
            <summary type="text">ipl owners eye on bbl after -privatisation: BBL தொடரில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தனியார் மயத்தை அனுமதித்துள்ள நிலையில், இந்திய IPL உரிமையாளர்கள் அணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ipl owners eye on bbl after -privatisation: BBL தொடரில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தனியார் மயத்தை அனுமதித்துள்ள நிலையில், இந்திய IPL உரிமையாளர்கள் அணிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது.
</p><h3>
தனியார் மயமாகும் BBL&nbsp;</h3><p>
2011 ஆம் ஆண்டு முதல் பிக் பாஸ் லீக் (Big Bash League - BBL) T20 தொடரை அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், நடத்தி வருகிறது. இதில் 8 அணிகள் பங்கு பெற்று வருகின்றன. </p><p>

BBL தொடரை இந்தியாவில் பிரபலப்படுத்தும் வகையில், 2026 BBL தொடரின் தொடக்கப்போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1cd7b87-7ebb-46cf-974f-5809d1bb4cb6/26-6aa132cd2dcb1.webp' /></p><p>

இந்நிலையில், Big Bash League போட்டிகளில் தனியார் முதலீட்டை அனுமதிக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது. </p><p>

அதேவேளையில். சர்வதேசப் போட்டிகளின் அட்டவணை, வீரர்களின் பங்கேற்பு, ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் சம்பள உச்சவரம்புகள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை அவுஸ்திரேலிய வாரியம் தக்கவைத்துக் கொள்ள உள்ளது. </p><p>

மேலும், வருங்கால வாங்குபவர்களை அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ தெளிவான அதிகாரத்தையும் கொண்டுள்ளது. </p><p>

இந்திய உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 2 அல்லது 3 அணிகள் மட்டுமே விற்கப்படலாம் என கூறப்படுகிறது. </p><p>

2027-28 BBL தொடரில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை முழுமையாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் விற்பனை வெற்றிகரமாக நிறைவேறினால், மற்ற அணிகளும் இதே முறையை பின்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.</p><h3>

ஐபிஎல் உரிமையாளர்கள் ஆர்வம் </h3><p>

தங்களது உலகளாவிய கிரிக்கெட் வணிகங்களை விரிவுபடுத்த விரும்பும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு ஒரு பெரிய புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab8b127c-420b-4efa-a424-5ab6d68f59ae/26-6aa132cc751c6.webp' /></p><p>
ஐபிஎல் உரிமையாளர்கள், SA20, ILT20, MLC ஆகிய கிரிக்கெட் லீக்களில் ஏற்கனவே சொந்தமாக அணிகளை வைத்துள்ளன. </p><p>

இந்திய ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள் தற்போது வெளிநாட்டு ஃபிரான்சைஸ் லீக்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. </p><p>

எதிர்காலத்தில் இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டால், ஐபிஎல் உரிமையாளர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக அமையும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த கேப்டன்: சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tilak-varma-99-runs-ezone-336-all-out-1788948566"></link>
            <id>https://news.lankasri.com/article/tilak-varma-99-runs-ezone-336-all-out-1788948566</id>
            <summary type="text">துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

சேப்பாக்கத்தில் நடந்து வரும் துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99...</summary>
            <content type="html"><![CDATA[<p>துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
</p><p>
சேப்பாக்கத்தில் நடந்து வரும் துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99 ஓட்டங்கள் எடுக்க, தென் மண்டல அணி 336 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><h2>திலக் வர்மா&nbsp;99 </h2><p> 

துலீப் கிண்ண இறுதிப்போட்டியின் நான்காவது நாளில் கிழக்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03e9507-0183-4a60-9159-2cc8f66b38cd/26-6aa1327161581.webp' /></p><p></p><p>

முன்னதாக, தென் மண்டல அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாற, அணித்தலைவர் திலக் வர்மா (Tilak Varma) பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்தார். </p><p>

சாமா வி மிலிந்த் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைக்க, தென் மண்டல அணி 300 ஓட்டங்களை கடந்தது. </p><p>

அதன் பின்னர் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. சாமா 43 ஓட்டங்களில் வெளியேற, திலக் வர்மா 99 ஓட்டங்கள் எடுத்த நிலையில் குரைஷி பந்துவீச்சில் அவுட் ஆனார்.&nbsp;</p><h2>இஷான் கிஷன்&nbsp;அரைசதம் </h2><p> 

தென் மண்டல அணி 336 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், ஷமி, குரைஷி மற்றும் ஷிகர் மோகன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c32b4a38-7c0a-4784-960d-9a3468f2c7b0/26-6aa1326fd5001.webp' /></p><p>
பின்னர் 372 ஓட்டங்கள் முன்னிலையுடன் கிழக்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

அபிமன்யு ஈஸ்வரன் 3 ஓட்டங்களில் சிராஜ் பந்துவீச்சில் அவுட் ஆக, வைபவ் சூர்யவன்ஷி 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;இறங்கி சிக்ஸர் அடிக்க முயன்ற அவர் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். </p><p>

அடுத்து கைகோர்த்த ஷிகர் கான், இஷான் கிஷன் கூட்டணி வேகமாக ஓட்டங்களை சேர்த்தது. அணித்தலைவர் இஷான் கிஷன் (Ishan Kishan) அரைசதம் அடித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0db85c8-5bc0-4760-a56a-ee233c1fa0ea/26-6aa13270a990a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகள்: நாடாளுமன்றம் வரை சலசலப்பை ஏற்படுத்திய விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/parliment-debate-in-120-migrants-in-rnli-boats-1788948029"></link>
            <id>https://news.lankasri.com/article/parliment-debate-in-120-migrants-in-rnli-boats-1788948029</id>
            <summary type="text">Ports denied request to land 120 migrants in RNLI boats: 120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகளுக்கு துறைமுகங்கள் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ports denied request to land 120 migrants in RNLI boats: 120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகளுக்கு துறைமுகங்கள் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


இங்கிலாந்திலுள்ள துறைமுகங்கள் இரண்டிற்கு 120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விடயம் நாடாளுமன்றம் வரை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h3>

120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகள்</h3><p>

இங்கிலாந்தின் Isle of Wight தீவினருகே 120 பேருடன், பாரம் தாங்காமல், மெல்ல நகர்ந்துகொண்டிருந்த புலம்பெயர்வோர் படகொன்றை, RNLI (Royal National Lifeboat Institution) என்னும் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு படகுகள் கவனித்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/450293bd-ccd0-411a-8438-0b3ccc1fdc3e/26-6aa12e3ec15ba.webp' /></p><p>
உடனடியாக அந்த படகிலிருந்தவர்கள் தங்கள் படகுகளில் ஏற்றிக்கொண்டு கரை திரும்ப முயன்றுள்ளன அந்த RNLI அமைப்பின் படகுகள்.
</p><p>
ஆனால், இங்கிலாந்திலுள்ள போர்ட்ஸ்மௌத் துறைமுகமோ, சௌதாம்டன் துறைமுகமோ, தங்களுக்கு அனுமதியளிக்கவில்லை என RNLI அமைப்பு கூறுகிறது.&nbsp;</p><p></p><p>

கடைசியாக, லாங்ஸ்டோன் துறைமுகத்துக்கு வந்தால், அங்கு புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு சாலையை மறித்துக்கொண்டு நின்றதாகவும் கூறுகிறது RNLI அமைப்பு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58c06170-03d0-499c-85fb-e11720c41424/26-6aa12e3f73e5a.webp' /></p><p>
இந்த விடயம் நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது.
</p><p>
போர்ட்ஸ்மௌத் நகர கவுன்சில் தலைவரான ஸ்டீவ் பிற், உள்துறை அலுவலகத்தில் சரியான திட்டமிடல் இல்லாததால் நிகழ்ந்த சம்பவங்களுக்கு உள்துறை அலுவலகம் பதில் கூறவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.
</p><p>
அத்துடன், கோஸ்போர்ட் நாடாளுமன்ற உறுப்பினரான Dame Caroline Dinenage, Solent பகுதியிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களை சேகரிக்க முயன்றோம், உள்துறை அலுவலக தரப்பிலிருந்து மௌனம் மட்டுமே கிடைத்தது என்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a062aa-7aba-452f-903f-18f5242aab02/26-6aa12e4026b45.webp' /></p><p>
ஆகவே, பதற்றத்தையும் பயத்தையும் கட்டுப்படுத்தும் நிலையில் நாங்கள் இல்லை என்கிறார் அவர்.
</p><p>
அதாவது, கடலில் பயணித்துக்கொண்டிருந்த அந்த 120 புலம்பெயர்ந்தோர் எதற்காக சம்பந்தப்பட்ட துறைமுகங்களுக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.
</p><p>
அதற்கு உள்துறை அலுவலகம் அனுமதியளித்ததா, ஏன் அந்த துறைமுகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஏன் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு தகவல் அளிக்கப்படவில்லை என கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்துறை அலுவலகத் தரப்பில் திருப்திகரமான பதிலிலில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:01:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமன் போர் சவுதி அரேபியாவை எட்டினால், மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை செயல்படும்: பாகிஸ்தான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-warns-mecca-pact-may-trigger-war-1788946175"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-warns-mecca-pact-may-trigger-war-1788946175</id>
            <summary type="text">Pakistan warns mecca pact may trigger war: ஏமன் போர் சவுதி அரேபியாவை எட்டினால், மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை செயல்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pakistan warns mecca pact may trigger war: ஏமன் போர் சவுதி அரேபியாவை எட்டினால், மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை செயல்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
</p><p>
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ஏமன் போரின் தாக்கம் சவுதி அரேபியாவை எட்டினால், கடந்த மாதம் மெக்காவில் கையெழுத்திடப்பட்ட மெக்கா கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை உடனடியாக செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60e1d4b9-236f-4ef7-8ec9-530e60d1ed09/26-6aa12bc1e9fd9.webp' /></p><p>

இந்த உடன்படிக்கை ஆகஸ்ட் 7 அன்று பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. ஒரு உறுப்புநாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுவது, மூன்று நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது போலவே கருதப்படும் என ஆசிப் எச்சரித்துள்ளார்.
</p><p>
“இதில் எந்த குழப்பமும் இருக்கக் கூடாது. இது ஒரு கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை. சவுதி அரேபியாவிற்கு எதிரான தாக்குதல், மூன்று நாடுகளின் மீதும் தாக்குதல் என கருதப்படும்” என ஆசிப் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்த அறிவிப்பு, ஏமனின் ஹவுதி படைகள் சவுதி அரேபியாவின் நகரங்கள் மற்றும் எரிசக்தி அமைப்புகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. இதில் குறைந்தது 73 பொதுமக்கள் காயமடைந்தனர்.
</p><p>
இந்த நிலைமை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஏமன் போரின் தாக்கம் சவுதி அரேபியாவை எட்டினால், துருக்கி மற்றும் பாகிஸ்தான் நேரடியாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகும் அபாயம் உள்ளது.
</p><p>
பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள், இந்த உடன்படிக்கை செயல்படுத்தப்பட்டால், பிராந்தியத்தில் பெரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T09:47:04+00:00</updated>
        </entry>
    </feed>
