<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-31T09:44:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவுக்காக உளவு பார்த்ததாக பிரான்ஸ் முன்னாள் கடற்படை விமானி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ex-french-pilot-arrested-for-spying-china-1785490823"></link>
            <id>https://news.lankasri.com/article/ex-french-pilot-arrested-for-spying-china-1785490823</id>
            <summary type="text">பிரான்ஸ் முன்னாள் கடற்படை விமானி ஒருவர் சீனாவுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரான்ஸ் விமானி கைது

பிரான்ஸ் முன்னாள் கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் முன்னாள் கடற்படை விமானி ஒருவர் சீனாவுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
முன்னாள் பிரான்ஸ் விமானி கைது
</h3><p>
பிரான்ஸ் முன்னாள் கடற்படை விமானியான பியர் (Pierre-Henri Chuet) என்பவர், முக்கியமான இராணுவத் தகவல்களைச் சேகரித்து சீன உளவாளிகளுக்குக் கொடுத்ததாக பாரிஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1e30f36-6b17-40a5-8e08-0a5dbfad2a1f/26-6a6c6d8925da4.webp' /></p><p>
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான விசாரணை தொடர்வதாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அந்த செய்திகளின்படி, பியர் பிரான்ஸ் கடற்படையில் பணியாற்றியபோது, 2018 செப்டம்பர் மற்றும் 2019 ஆகஸ்ட் ஆகிய காலகட்டங்களில், குறைந்தது இரண்டு முறையாவது சீனாவுக்குப் பயணம் செய்ததாக அதிகாரிகள் நம்புகிறார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், பியர் இந்தப் பயணங்கள் குறித்து பிரான்ஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><p>
அந்தப் பயணங்களின் போது, தென்னாப்பிரிக்க விமான நிறுவனம் ஒன்றின் மூலம் சீன இராணுவ விமானிகளுக்குப் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்ததாக பியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், அவர் பிரான்ஸ் இராணுவ விமானப் போக்குவரத்து தொடர்பான முக்கியமான செயல்பாட்டு மற்றும் தந்திரோபாய அறிவையும் பகிர்ந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
</p><p>
இந்த பியர், சமீபத்தில், இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்களின் செயல்திறனைக் குறித்து கேள்வி எழுப்பியதுடன், சீனத் தயாரிப்பு விமானங்களைப் புகழ்ந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T09:40:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவகுமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dk-shivakumar-urge-vijay-postpone-karnataka-visit-1785490205"></link>
            <id>https://news.lankasri.com/article/dk-shivakumar-urge-vijay-postpone-karnataka-visit-1785490205</id>
            <summary type="text">முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். 


காவேரி விவகாரம் 

காவேரி நீர் திறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.</p><h3> 


காவேரி விவகாரம் </h3><p>

காவேரி நீர் திறப்பு மற்றும் காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.</p><p> 

தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e50c986-9bf5-420b-9ea2-38d544f90ad7/26-6a6c6b1f10306.webp' /></p><p>
தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.</p><p>
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய், கர்நாடகாவிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h3>விஜய் கர்நாடகா வர வேண்டாம்</h3><p> 

இந்நிலையில், தற்போது உள்ள சூழலில் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். </p><p>

 கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் நீர்வள மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97bfce64-8d2b-4e53-bb78-27d7610b836c/26-6a6c6b1fb7a20.webp' /></p><p>

இதன் பின்னர் பேசிய அவர், "இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் இது குறித்து விவாதித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரும் நானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் உள்ளோம். 

இரு மாநிலங்களுக்கும் சிக்கல் ஏற்படுத்தாத தீர்வை எட்ட முயற்சிக்கிறோம். </p><p>

போதிய நீர் இல்லை என்று கூறியும் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது வேதனை அளிக்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத சூழல் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.</p><p>

தமிழ்நாடு முதல்வர் விஜய் வரும்போது போராட்டம் நடந்தால் நன்றாக இருக்காது. வேறொரு தேதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். 

சிறிது காலம் காத்திருக்கலாம். உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிப்போம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T09:30:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானை சுழன்றடித்த 24 வயது இலங்கை வீராங்கனை! டி20யில் 64 பந்தில் 101 ஓட்டங்கள் விளாசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/imesha-dulani-century-helps-sri-lanka-beat-pak-1785489264"></link>
            <id>https://news.lankasri.com/article/imesha-dulani-century-helps-sri-lanka-beat-pak-1785489264</id>
            <summary type="text">தம்புள்ளையில் நடந்த டி20 போட்டியில், இலங்கை அணி 6 வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.&amp;nbsp;முனீபா அலி,&amp;nbsp;ஷாவால் ஸுல்ஃபிஹர்&amp;nbsp;விளாசல்

இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளையில் நடந்த டி20 போட்டியில், இலங்கை அணி 6 வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.&nbsp;</p><h2>முனீபா அலி,&nbsp;ஷாவால் ஸுல்ஃபிஹர்&nbsp;விளாசல்</h2><p>

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தம்புள்ளையில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0c46249-8d08-4642-8e90-e6fb09d2480f/26-6a6c6a8c2b082.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனைகள் முதல் விக்கெட்டுக்கு 39 பந்துகளில் 66 ஓட்டங்கள் குவித்தனர்.</p><p>

முனீபா அலி (Muneeba Ali) 24 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ரன்அவுட் ஆனார்.

பின்னர் அரைசதம் விளாசிய ஷாவால் ஸுல்ஃபிஹர் (Shawaal Zulfiqar) 41 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 176 ஓட்டங்கள் எடுத்தது.
</p><p>
அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் இமேஷா துலானி, சமரி அதப்பத்து கூட்டணி அதிரயில் மிரட்டியது.&nbsp;</p><h2>இமேஷா துலானி&nbsp;சதம் </h2><p>
அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 22 பந்துகளில் 39 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். </p><p>

அடுத்து வந்த விஷ்மி (3), ஹர்ஷிதா (7) ஆகியோர் சொதப்ப, 24 வயதான இமேஷா துலானி (Imesha Dulani) பவுண்டரிகளை விரட்டி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

63 பந்துகளில் சதம் விளாசிய இமேஷா, 19வது ஓவரில் வெற்றிக்கான இலக்கை எட்ட வைத்தார். </p><p>இலங்கை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இமேஷா துலானி ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 1 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் ஆட்டநாயகி விருது பெற்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d1bd70-8118-433b-b53c-bb6229a8daee/26-6a6c6a8b5fa6c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T09:25:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.., இலங்கையின் இன்றைய நிலவரம் (31-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785489823"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785489823</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (31-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (31-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,312,832.00 ஆகும்.</p><p>

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,310.00.</p><p>

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 370,500.00.</p><p>

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,460.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 339,650.00.</p><p>

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,530.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 324,200.00.</p>]]></content>
            <updated>2026-07-31T09:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் பனிச்சரிவு - பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nirmal-purja-led-climbers-missing-in-avalanche-1785488835"></link>
            <id>https://news.lankasri.com/article/nirmal-purja-led-climbers-missing-in-avalanche-1785488835</id>
            <summary type="text">பாகிஸ்தானின் பிராட் பீக்கில் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மலையேற்றத்தின் போது பனிச்சரிவால் மாயமாகியுள்ளனர். 

பிராட் பீக் பனிச்சரிவு 

பாகிஸ்தானின...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் பிராட் பீக்கில் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மலையேற்றத்தின் போது பனிச்சரிவால் மாயமாகியுள்ளனர்.</p><h3> 

பிராட் பீக் பனிச்சரிவு</h3><p> 

பாகிஸ்தானின் காரகோரம்(Karakoram) மலைத்தொடரில் 8,051 மீட்டர் உயரமுள்ள பிராட் பீக்(Broad Peak) உலகின் மிக உயரமான மலை சிகரங்களில் ஒன்றாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/279a3e88-e6d4-4e1c-95bd-1546fce15da9/26-6a6c65c737c18.webp' /></p><p>இது உலகின் 12வது பெரிய சிகரமாகவும், அந்த மலைத்தொடரில் 3வது உயரமான சிகரமாகவும் உள்ளது.
</p><p>
இங்கு, நேபாளத்தில் பிறந்து பிரித்தானியாவில் வசித்து வரும் உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா(Nirmal Purja) உள்ளிட்ட 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் அடங்கிய குழு மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a01cc156-0f1b-464c-a036-3bbe79c4133c/26-6a6c65c7ef544.webp' /></p><p> 

இந்த குழுவில், 5 நேபாள மலையேறுபவர்கள், ஹன்சாவைச் சேர்ந்த பாகிஸ்தானிய மலையேறுபவரான சோஹைல் சகி, ஒரு ஓமன் மலையேறுபவர், ஒரு அமெரிக்க மலையேறுபவர், ஒரு சீன மலையேறுபவரானவாங் மற்றும் மற்றொரு வெளிநாட்டு மலையேறுபவர் ஆகியோர் இருந்தனர்.</p><p>

நேற்று, பிராட் பீக்கில் ஏற்பட்ட பனிச்சரிவிற்கு பின்னர் இந்த குழுவினர் மாயமாகியுள்ளனர். </p><p>

இது குறித்து தகவலறிந்த உடன், அந்த பகுதியில் மற்ற மலைகளில் உள்ள மளியேறுபவர்கள் மற்றும் 2 ராணுவ மீட்பு ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணிக்காக அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. </p><p>இதில், 4 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், 6 பேரை தேடி வருவதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><h3> 

யார் இந்த நிர்மல் பூர்ஜா?
</h3><p>
நேபாளத்தில் பிறந்த நிர்மல் பூர்ஜா, 2003 ஆம் ஆண்டில் பிரித்தானிய இராணுவத்தில் சேர்ந்து, 2009 ல் ராயல் மரைன் ஆனார்.</p><p> 

 எவரெஸ்ட் , லோட்சே மற்றும் மகாளு சிகரங்களை 48 மணி நேரத்திற்குள் அடைந்த முதல் நபர் புர்ஜா ஆவார்.
</p><p>
நிர்மல் புர்ஜா, 2019 ஆம் ஆண்டில் 189 நாட்களில், உலகின் 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள 14 மலைகள் அனைத்திலும் ஏறியதற்காக அறியப்படுகிறார். இந்தச் சாதனை, “14 Peaks: Nothing is Impossible” என்ற நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்றது.</p><p>
மேலும், உலகின் மிக உயரமான பல சிகரங்களை மிகக் குறைந்த நேரத்தில் அடைந்ததற்காக அவர் 6 கின்னஸ் உலக சாதனைகளையும் படைத்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T09:07:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ 84,000 கோடியில் ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deep-sea-oil-gas-exploration-1785488141"></link>
            <id>https://news.lankasri.com/article/deep-sea-oil-gas-exploration-1785488141</id>
            <summary type="text">எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கான ஆழ்கடல் தேடல் பணிகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட லட்சியத் திட்டமான ‘சமுத்ரா மந்தன்’ (Samudra Manthan) திட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கான ஆழ்கடல் தேடல் பணிகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட லட்சியத் திட்டமான ‘சமுத்ரா மந்தன்’ (Samudra Manthan) திட்டத்திற்கு, இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கக்கூடும் என்று தகவல்.</p><h2>கடல்சார் ஆய்வு</h2><p>
</p><p>ஜூலை 31-ஆம் திகதி கூடவுள்ள அமைச்சரவை, ஆழ்கடல் மற்றும் மிக ஆழ்கடல் பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் ரூ 84,000 கோடி மதிப்பிலான முதற்கட்டச் செலவுத் திட்டத்தை ஆய்வு செய்யும் என்று தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfbd95b3-2b01-4f1a-846d-037ee90d3c04/26-6a6c642ece325.webp' /></p><p> </p><p>இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'சமுத்திர மந்தன்' திட்டம் ( 'தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டம்' என்று அழைக்கப்படுகிறது) 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. </p><p>அதிக செலவு மற்றும் வணிக ரீதியாக லாபகரமான ஹைட்ரோகார்பன் இருப்புகளைக் கண்டறிவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக தனியார் முதலீடு குறைவாகவே இருந்து வரும் அதிக ஆபத்துடைய கடல்சார் ஆய்வு நடவடிக்கைகளுக்கு, இத்திட்டம் கொள்கை மற்றும் நிதி ரீதியான ஆதரவை வழங்கும்.</p><p></p><p> உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பது, இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது மற்றும் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவை இந்திய அரசின் நோக்கமாகும். இம்முயற்சியானது, 'சமுத்திர மந்தன்' திட்டத்தின் கீழ் இந்தியாவின் கடல்சார் ஹைட்ரோகார்பன் வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசின் பரந்த உத்திக்கு இணங்க அமைந்துள்ளது.</p><h2>எரிசக்தித் தேவை</h2><p> </p><p>கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் புதிய உரிமச் சுற்றுகள் மூலம் உலகளாவிய பெரும் எரிசக்தி நிறுவனங்களை ஈர்ப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், இந்த அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவின் புதிய கடலோரப் படுகைகளில் ஆய்வுப் பணிகளை கணிசமாக ஊக்குவிக்கும். </p><p>இந்தியா தனது எரிசக்தித் தேவைகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது; இதனால், சமீபத்திய மாதங்களில் காணப்பட்டதைப் போல உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நாட்டின் பொருளாதாரம் ஆளாவதுடன், நிதிப் பற்றாக்குறையும் அதிகரிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d3cc65-6dc9-494b-b735-3e116eb47784/26-6a6c642f956c1.webp' /></p><p> </p><p>பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (PPAC) தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் எண்ணெய் உற்பத்தி 2.4 சதவீதம் குறைந்து 28 மில்லியன் டன்னாக இருந்தது. </p><p>2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-மே மாதங்களில், எண்ணெய் உற்பத்தி 4.6 மில்லியன் டன்னாகக் குறைந்தது; இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 4.8 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T08:53:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் வேலை இருப்பதாக ஆசை காட்டும் செய்திகள்: உண்மை நிலவரம் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indians-exploited-workforce-in-germany-1785487506"></link>
            <id>https://news.lankasri.com/article/indians-exploited-workforce-in-germany-1785487506</id>
            <summary type="text">தெற்காசியர்கள் பலருக்கு, மேலை நாடுகளில் வேலை செய்ய ஆசை எப்போதுமே இருந்துவருவதை மறுப்பதற்கில்லை.

அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்கள் மேலை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்காசியர்கள் பலருக்கு, மேலை நாடுகளில் வேலை செய்ய ஆசை எப்போதுமே இருந்துவருவதை மறுப்பதற்கில்லை.
</p><p>
அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்கள் மேலை நாடுகளில் கொடுக்கப்படும் ஊதியம், தங்கள் நாட்டுப் பணத்தில் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கிறார்கள்.&nbsp;</p><p>
உதாரணமாக, கனடாவில் ஒரு மாதத்துக்கு 2,000 டொலர்கள் ஊதியம் என்றால், அதை இலங்கை பணத்துக்கு மாற்றினால், அது 4,77,367.71 ரூபாய், இந்தியப் பணத்தில் 1,36,130 ரூபாய்.
</p><p>
அதேபோல, ஜேர்மனியில் ஒரு மாதத்துக்கு 2,000 யூரோக்கள் ஊதியம் என்றால், அதை இலங்கை பணத்துக்கு மாற்றினால், அது 7,70,740 ரூபாய், இந்தியப் பணத்தில் 2,19,712 ரூபாய்.
</p><h3>
ஜேர்மனியில் வேலை
</h3><p>
விடயம் என்னவென்றால், தெற்காசியர்களின் தேவையையும், ஆசையையும் பல மேற்கத்திய நாடுகள் பயன்படுத்திக்கொள்கின்றன எனலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfc07dbe-01ec-41f8-88a5-5095c9e0c5e4/26-6a6c6095063ae.webp' /></p><p>
அதாவது, உண்மையை வெளிப்படையாகக் கூறினால், பல மேற்கத்திய நாடுகளில், எக்கச்சக்கமான பணியாளர்கள் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள்.</p><p>

அவர்களுடைய இடத்தை நிரப்ப அங்கு போதுமான இளைஞர்கள் இல்லை, அத்துடன், சில குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய அங்குள்ள இளைஞர்கள் தயாராகவும் இல்லை.
</p><p>
ஆகவே, இந்த நாடுகள் இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளிலுள்ள இளைஞர்களை ஆசை காட்டி இழுக்கின்றன.&nbsp;</p><p></p><p>
ஆனால், அங்கு செல்லும்போது, பலரும், தாங்கள் எதிர்பார்த்துவந்த வேலை கிடைக்கவில்லை என உணரும்போது ஏமாற்றமடைகிறார்கள்.&nbsp;</p><p>
லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து வெளிநாட்டுக்கு வந்தாயிற்று. ஆகவே, அப்படியே திரும்பிப் போக முடியாது. எனவே, கிடைத்த வேலையை செய்யலாம் என்னும் ஒரு நிலை உருவாகிவிடுகிறது.
</p><h3>
ஏமாற்றப்படும் தெற்காசியர்கள்</h3><p>

இந்நிலையில், இப்படி இந்திய இளைஞர்களும், வேலைக்காக வருபவர்களும் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என ஐரோப்பிய ஊடகம் ஒன்றே செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>
இப்படி ஏமாற்றப்படுபவர்கள் பட்டியலில், திறன் மிகு பணியாளர்களை சேர்க்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
</p><p>
இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு கல்வி கற்பதற்காகவோ, அல்லது வேலைக்காகவோ வரும் பல இளைஞர்கள், கடன் வாங்கியோ அல்லது இருக்கும் சொத்தை விற்று அல்லது அடமானம் வைத்தோ அதற்கான பணத்தை தயார் செய்கிறார்கள்.
</p><p>
மாணவர் விசா மூலம் ஜேர்மனிக்கு வருவதற்கே, 20,000 யூரோக்கள் செலவாகிறது. இந்தியப்பணத்தில் அது 21,98,200 ரூபாய், இலங்கை மதிப்பில் 77,07,400 ரூபாய்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b35cb2a-09fa-4e39-a9f2-a47dc8e05956/26-6a6c6094514ce.webp' /></p><p>
அத்துடன், அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் சுமார் 12,000 யூரோக்கள் இருப்பதை நிரூபிக்கவும் வேண்டும்.
</p><p>
12,000 யூரோக்கள் என்பதி இந்திய மதிப்பில், 13,19,004 ரூபாய், இலங்கை மதிப்பில், 46,24,440 ரூபாய்!
</p><p>
ஆக, இப்படி எக்கச்சக்கமான பணத்தை செலவு செய்து ஜேர்மனிக்கு வரும் இந்தியர்கள் முதலானோர், அங்கு வந்த பிறகு நிலைமை எதிர்பார்த்ததைப்போல் இல்லை, அதாவது, தாங்கள் விளம்பரங்களில் பார்த்ததுபோலவே அல்லது தங்கள் ஏஜண்டுகள் ஆசை காட்டியதுபோலவோ இல்லை என தெரியவரும்போது, வேறு வழியில்லாமல், ஏதாவது ஒரு வேலையை செய்தாகவேண்டும் என்ற கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள்.</p><p>

அப்படி பலருக்கு கிடைக்கும் வேலை, அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, உணவு டெலிவரி செய்யும் வேலை.
</p><p>
வீடுகளில் தாய்மார்கள் பாத்திரம் கழுவச் சொல்லும்போது முகம் சுழிக்கும் பெண் பிள்ளைகள் பலர், ஜேர்மனியில் இறைச்சி வெட்டும் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
</p><p>
இதற்கிடையில், உணவு டெலிவரி நிறுவனங்கள் நேரடியாக ஆட்களை வேலைக்கு எடுக்காமல், ஏஜன்சிகளுக்கு துணை காண்ட்ராக்டில் விட, அவர்கள் வேலை செய்பவர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுப்பதும், சில நேரங்களில் சம்பளப்பணத்தை பிடித்துவைத்துக்கொள்வதும் நடக்கிறதாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8deb3ec4-d234-4ab7-b279-0c54fb374c71/26-6a6c6095ae9de.webp' /></p><p>
வேலை கொடுப்பவரை நேரடியாக சந்திக்காமல், ஒன்லைன் அல்லது சமூக ஊடகங்கள் மூலமே தொடர்பு கொள்வதால், அவர்கள் ஏமாற்றினாலும் அவர்களைக் கண்டுபிடிக்கமுடியாது.
</p><p>
இன்னொரு பக்கம், அதிகாரிகள், வேலை வழங்குபவர்களைக் கண்டுகொள்ளாமல், டெலிவரி வேலை செய்யும் பணியாளர்களை குறிவைப்பதால், அதிகாரிகளுக்கு பயந்துகொண்டே வேலை செய்யும் சூழலும் உள்ளது.</p><p>

இதில் மொழிப்பிரச்சினை இன்னொருபக்கம்!</p><p>

ஆக, மொத்தத்தில், ஜேர்மனியில் நிறைய வேலை இருக்கிறது என ஆசை காட்டும் விளம்பரங்கள், உண்மை நிலவரம் என்ன என்பதைச் சொல்வதில்லை.</p><p>

விளம்பரங்களை நம்பி ஜேர்மனிக்குச் செல்லும் இந்தியர்கள் முதலானோர், இப்படி பரிதாபங்களில் சிக்கி, நாட்டுக்கும் திரும்ப முடியாமல், ஏதோ ஒரு வேலையைப் பார்க்கிறார்கள் என்கிறது, தி லோக்கல் ஜேர்மனி என்னும் ஊடகம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T08:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீ... அண்டை நாட்டுக்கு உதவ விரையும் சுவிஸ் தீயணைப்பு வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-firefighters-head-to-france-battle-wildfire-1785486108"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-firefighters-head-to-france-battle-wildfire-1785486108</id>
            <summary type="text">&amp;nbsp;பிரான்சில் காட்டுத்தீ தொடர்ந்து பற்றியெரியும் நிலையில், தீயை அணைக்க உதவுவதற்காக சுவிஸ் தீயணைப்பு வீரர்கள் பிரான்சுக்கு செல்கிறார்கள்.

பிரான்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரான்சில் காட்டுத்தீ தொடர்ந்து பற்றியெரியும் நிலையில், தீயை அணைக்க உதவுவதற்காக சுவிஸ் தீயணைப்பு வீரர்கள் பிரான்சுக்கு செல்கிறார்கள்.</p><h3>

பிரான்ஸ் விரையும் சுவிஸ் தீயணைப்பு வீரர்கள்
</h3><p>
தென்மேற்கு பிரான்சில் பல இடங்களில் காட்டுத்தீ பயங்கரமாக பற்றியெரிந்துவரும் நிலையில், தங்கள் அண்டை நாட்டுக்கு உதவுவதற்காக சுவிஸ் தீயணைப்பு வீரர்கள் பிரான்சுக்கு செல்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bca29676-98a1-4a9c-b77e-6bb993ce3577/26-6a6c5b1d9b516.webp' /></p><p>
ஏற்கனவே, ஞாயிற்றுக்கிழமை ஒரு தீயணைப்புக் குழு பிரான்சுக்கு சென்றுள்ள நிலையில், நாளை மாலை மேலும் 33 தீயணைப்பு வீரர்கள் கொண்ட இரண்டாவது குழு பிரான்சுக்கு செல்ல உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c577fd63-42c8-407f-af47-6729375c0e85/26-6a6c5b1e4b6f4.webp' /></p><p>
பிரான்சில், சுமார் 42,000 ஹெக்டேர் பரப்பளவுள்ள வனப்பகுதி காட்டுத்தீயில் எரிந்து நாசமாகிவிட்ட நிலையில், ஆறு இடங்களில் தொடர்ந்து தீ எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T08:22:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயமாகும் குரு.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-guru-bhagavan-1785482507"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-guru-bhagavan-1785482507</id>
            <summary type="text">நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.</p><p>

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.</p><p>

இந்நிலையில், ஜூலை 14ஆம் திகதி கடக ராசியில் அஸ்தமனமாகி பயணித்து வருகிறார்.</p><p> 

மேலும், ஆகஸ்ட் 12ஆம் திகதி குரு பகவான் உதயமாகவுள்ளார்.
</p><p>
அந்தவகையில், உதயமாகும் குரு பகவானால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.&nbsp;</p><p></p><h2>மிதுனம் </h2><ul><li>

முன்னேற்ற பாதை திறக்கும்.</li><li> நீண்ட காலமாக திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.</li><li> தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைத் தரும்.</li><li>வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.</li><li> பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். </li><li>சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். </li><li>வருமானத்தில் உள்ள தடைகள் நீங்கும். </li><li>வாழ்வில் நல்ல உயரத்தை அடையலாம்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1d9cdf8-faf3-4c5b-913d-b1fa7552d822/26-6a6c4dcfec051.webp' /></p><h2>தனுசு</h2><ul><li> 

கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். </li><li>நிதி நிலை வலுவடையும். </li><li>மன அமைதி கிடைக்கும். </li><li>முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். </li><li>பணியிடத்தில் பொறுப்புக்களை திறம்பட முடிப்பீர்கள்.</li><li>அங்கீகாரம் கிடைக்கும்.</li><li>வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். </li><li>நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6c95753-22a5-41eb-8cf3-6331316936c8/26-6a6c4dd09de00.webp' /></p><h2>மீனம்</h2><ul><li> 

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். </li><li>ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</li><li> நிதி ஆதாயங்களும் கிடைக்கும். </li><li>புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். </li><li>குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். </li><li>வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். </li><li>எதிர்பாராத பண வரவைப் பெறுவீர்கள்.</li><li> முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். </li><li>நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். </li><li>வெளிநாட்டு முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.</li></ul><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a35f6b0d-c3e9-457b-9a46-5f99249aefe8/26-6a6c4dd14e781.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T08:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL 2026: சிக்ஸர்களை பறக்கவிட்ட இலங்கை வீரர்கள்..ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jaffan-kings-beat-kandy-royals-by-21-runs-1785482295"></link>
            <id>https://news.lankasri.com/article/jaffan-kings-beat-kandy-royals-by-21-runs-1785482295</id>
            <summary type="text">கண்டி ராயல்ஸ் அணிக்கு எதிரான LPL டி20 போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிக்ஸர்களை பறக்கவிட்ட கமில்,&amp;nbsp;சமிந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி ராயல்ஸ் அணிக்கு எதிரான LPL டி20 போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p><h2>சிக்ஸர்களை பறக்கவிட்ட கமில்,&nbsp;சமிந்து </h2><p>

பல்லேகேலே மைதானத்தில் நடந்த LPL டி20 போட்டியில், ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கண்டி ராயல்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Kamil Mishara and Chamindu Wickramasinghe unleash a batting blitz to power Jaffna Kings to a formidable total. 🔥<a href="https://x.com/hashtag/LPL2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#LPL2026</a> <a href="https://x.com/hashtag/JKvKR?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JKvKR</a> <a href="https://t.co/9dEUsXe2LM">pic.twitter.com/9dEUsXe2LM</a></p>&mdash; ThePapare (@ThePapareSports) <a href="https://x.com/ThePapareSports/status/2082860180380041531?ref_src=twsrc%5Etfw">July 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p>
முதலில் ஆடிய ஜாஃப்னா கிங்ஸ் அணியில் கமில் மிஷாரா, அவிஷ்கா பெர்னான்டோ கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 95 ஓட்டங்கள் குவித்தது. </p><p>

அவிஷ்கா பெர்னான்டோ 22 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட கமில் மிஷாரா (Kamil Mishara) 49 (26) ஓட்டங்களில் அவுட் ஆகி அரைசதத்தை தவறவிட்டார்.
</p><p>
அடுத்து வந்த இப்ராஹிம் (8), பனுக ராஜபக்சே (7) ஆகியோர் சொதப்ப, ஹிரோடோய் 21 ஓட்டங்கள் விளாசினார். </p><p>அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய சமிந்து விக்ரமசிங்கே (Chamindu Wickramasinghe) 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 15 பந்துகளில் 43 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A blazing cameo from Pawan Sandesh ignites Kandy Royals&#39; run chase ⚡<a href="https://x.com/hashtag/LPL2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#LPL2026</a> <a href="https://x.com/hashtag/JKvKR?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JKvKR</a> <a href="https://t.co/skkIzYrkLl">pic.twitter.com/skkIzYrkLl</a></p>&mdash; ThePapare (@ThePapareSports) <a href="https://x.com/ThePapareSports/status/2082871649523949995?ref_src=twsrc%5Etfw">July 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><h2>பவண் சந்தேஷ்&nbsp;விளாசல் </h2><p>
ஷாகிப் அல் ஹசன் 22 (16) ஓட்டங்களும், துனித் 16 (9) ஓட்டங்களும் விளாச, ஜாஃப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
மொயீன் அலி, வனிந்து ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும், அஸிதா பெர்னாண்டோ மற்றும் ஜாகிர் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>

பின்னர் ஆடிய கண்டி ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 

பவண் சந்தேஷ் 21 பந்துகளில் 48 ஓட்டங்களும் (4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்), லஹிரு உதரா 15 பந்துகளில் 30 ஓட்டங்களும் விளாசினர்.</p><p>

ஷாஹின் அப்ரிடி 24 (14) ஓட்டங்களும், வனிந்து ஹசரங்கா 24 (12) ஓட்டங்களும், விஜய் ஷங்கர் 25 (21) ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

துனித் வெல்லாலகே, ஷாகிப் அல் ஹசன் தலா 3 விக்கெட்டுகளும், தில்ஷன் மதுஷங்கா மற்றும் ஜகூர் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Jaffna Kings continue their winning streak with a third consecutive victory – their fifth of LPL 2026!<a href="https://x.com/hashtag/LPL2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#LPL2026</a> <a href="https://x.com/hashtag/JKvKR?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JKvKR</a> <a href="https://t.co/l6H8428msx">pic.twitter.com/l6H8428msx</a></p>&mdash; ThePapare (@ThePapareSports) <a href="https://x.com/ThePapareSports/status/2082884838806503781?ref_src=twsrc%5Etfw">July 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T07:29:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெண் உடல்: சமீபத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sushmita-murder-accused-in-psychiatric-evaluation-1785482175"></link>
            <id>https://news.lankasri.com/article/sushmita-murder-accused-in-psychiatric-evaluation-1785482175</id>
            <summary type="text">கனடாவில் பெண்ணொருவர் மாயமான நிலையில், அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் தற்போது மன நல மதிப்பீட்டுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் பெண்ணொருவர் மாயமான நிலையில், அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் தற்போது மன நல மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
கனடாவில் மாயமான பெண்</h3><p>

கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Lévis நகரில், சுஷ்மிதா பாஸ்கரன் (51) என்னும் பெண் காணாமல் போனதாக ஜூன் மாதம் 22ஆம் திகதி பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9096cfd-68e3-4d46-b6ca-4b5f21eeae1f/26-6a6c4bc04a518.webp' /></p><p>
கியூபெக் மற்றும் Lévis பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசாரணையில், வனப்பகுதி ஒன்றில் பெண்ணொருவரின் உயிரற்ற உடல் கிடப்பது தெரியவந்தது.</p><p>

அதைத்தொடர்ந்து, Lévisஇலுள்ள வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல் சுஷ்மிதாவுடையதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது.&nbsp;</p><p></p><p>

சமீபத்திய தகவல்

சுஷ்மிதா வழக்கு தொடர்பில், பொலிசார் மார்ட்டின் கேரியர் (61) என்பவரைக் கைது செய்துள்ளார்கள். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், தற்போது கேரியர் மன நல மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அதாவது, கேரியருக்கு ஏதாவது மன நல பாதிப்பு உள்ளதா, அதனால் அவர் செய்த குற்றச்செயல்களுக்கு அவர் பொறுப்பா இல்லையா என்பதை அறிவதற்காக இந்த மதிப்பீடு செய்யப்பட உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T07:16:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷெங்கன் மண்டலத்திலிருந்து ஸ்பெயின் நீக்கப்பட வேண்டும்... ஐரோப்பிய நாடொன்று அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/schengen-zone-spain-suspended-1785480977"></link>
            <id>https://news.lankasri.com/article/schengen-zone-spain-suspended-1785480977</id>
            <summary type="text">ஸ்பெயினின் சியூட்டா பகுதிக்குள் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நுழைந்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் விசா இல்லாத ஷெங்கன் பயண மண்டலத்திலிருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயினின் சியூட்டா பகுதிக்குள் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நுழைந்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் விசா இல்லாத ஷெங்கன் பயண மண்டலத்திலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்ய வேண்டும் என இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி கோரியுள்ளார்.</p><h2>தயாராக உள்ளோம்</h2><p>
பிரதமர் மெலோனியின் கருத்து, வெளிவிவகார அமைச்சர் அன்டோனியோ தஜானி அன்றைய தினம் முன்னதாகத் தெரிவித்ததையே பிரதிபலித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78edab1d-4c49-4d3b-a2fd-e51aea1f1c79/26-6a6c4952ca546.webp' /></p><p> பிரதமர் மெலோனி தனது சமூக ஊடகத்தில், நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்; அக்கூட்டங்கள் நிறைவடைந்ததும், ஸ்பெயினுடனான ஷெங்கன் (Schengen) ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது போன்ற சிறப்புக் நடவடிக்கைகள் உட்பட, எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என பதிவு செய்துள்ளார். </p><p>
மொராக்கோவை ஒட்டியுள்ள சியூட்டா நகரத்தில் இருந்து வெளிவரும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் மெலோனி தெரிவித்துள்ளார். குழந்தைகள் உட்பட அவர்களில் பெரும்பாலானோர் சியூட்டா பகுதிக்குச் செல்வதற்கு நீந்திச் செல்ல வேண்டியிருந்தது.</p><p></p><p> </p><p>இதனிடையே, சியூட்டாவை அடைய முயன்றவர்களில் குறைந்தது ஒன்பது பேர் மரணமடைந்துள்ளதாக ஸ்பானிய அரசாங்கக் குழுவினர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். </p><p>இந்த விவகாரத்தில் வேடிக்கை பார்க்க இத்தாலியால் முடியாது என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அன்டோனியோ தஜானி, ஸ்பெயினுடனான ஷெங்கன் பகுதியை மூடுவதற்கு நான் ஆதரவாக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். </p><p>அத்துடன், முறையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற புலம்பெயர்தலால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7f9c8e8-2766-4f48-9b79-0797d74b3294/26-6a6c4950b6e6e.webp' /></p><h2>அரசியல் நோக்கம்</h2><p> </p><p>மேலும், சியூட்டாவிலிருந்து வரும் காட்சிகள் அனைத்தும், 500,000-க்கும் மேற்பட்ட முறையற்ற குடியேறிகளுக்கு ஸ்பானியக் குடியுரிமையை, அதன் மூலம் ஐரோப்பியக் குடியுரிமையையும், வழங்குவது என்ற ஸ்பெயின் அரசாங்கத்தின் முடிவு எவ்வளவு தவறானது என்பதையும், அது மனிதக் கடத்தலை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதையும் காட்டுகின்றன என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32850f39-0c57-4d0e-8c53-c1fc42a7e396/26-6a6c495170078.webp' /></p><p> </p><p>இதனிடையே, அரசியல் நோக்கங்களுக்காகக் குடியேற்ற விவகாரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, ஸ்பானிய வெளிவிவகார அமைச்சர் ஜோஸ் லூயிஸ் அல்வாரெஸ் தஜானிக்கு பதிலளித்துள்ளார். </p><p>ஷெங்கன் பகுதி என்பது, தங்கள் பொதுவான எல்லைகளில் கட்டுப்பாடுகளை அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ள 29 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய, திறந்த எல்லைகளைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed6132d3-2837-4717-a9e8-ed4e4d0016ed/26-6a6c495222096.webp' /></p><p> </p><p>இத்தாலியின் தீவிர வலதுசாரி துணைப் பிரதமரான மத்தேயோ சால்வினி, முழு ஷெங்கன் மண்டலத்தையும் முற்றிலுமாக இடைநிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T06:54:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய எலி - CCTV காட்சிகளை பார்த்து அதிர்ந்த ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cctv-found-rat-steals-jewellery-worth-rs-10-lakh-1785480659"></link>
            <id>https://news.lankasri.com/article/cctv-found-rat-steals-jewellery-worth-rs-10-lakh-1785480659</id>
            <summary type="text">நகைக்கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை எலி திருடி சென்றுள்ளது. 

நகைகளை திருடிய எலி 

கர்நாடகா மாநிலம், துமகூருவில் விஸ்வாஸ் ஜுவல்லரி என்ற நக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நகைக்கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை எலி திருடி சென்றுள்ளது. </p><h3>

நகைகளை திருடிய எலி </h3><p>

கர்நாடகா மாநிலம், துமகூருவில் விஸ்வாஸ் ஜுவல்லரி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cfb7fc6-42c9-4e14-bbbd-674c0b63c2d9/26-6a6c45d4849a1.webp' /></p><p>

இந்த கடை ஊழியர்கள் வழக்கம் போல் தினமும் நகைகளை எண்ணும் போது, ஒரே இரவில் சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 50 கிராம் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். </p><p>

ஆனால், கடையின் ஷட்டரோ, கதவோ உடைக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் குழப்பமடைந்த ஊழியர்கள் CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர்.</p><p> 

அப்போதும், மனிதர்களின் நடமாட்டம் எதுவும் தெரியவில்லை. சில நகைகளில் விலை குறியீடுகள் காணாமல் போயிருந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b0091e1-57d2-40ed-9f75-29aa6231c78d/26-6a6c45d536a25.webp' /></p><p>

இதனையடுத்து, மீண்டும் CCTV காட்சிகளை ஆய்வு செய்த போது எலி ஒன்று நகைகளை எடுத்து செல்வதை கண்டறிந்தனர். </p><p>

அதன் பின்னர், எலியின் வழித்தடத்தை பின்தொடர்ந்து சென்ற ஊழியர்கள், எலியின் வளையை தோண்டி, அதில் இருந்த வைரம் பதிக்கப்பட்ட 10 தங்க மோதிரங்கள் மற்றும் 3 கழுத்தணிகள் உட்பட அனைத்தையும் கண்டறிந்தனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🐀 KARNATAKA | RAT HEIST<br><br>According to reports a rat allegedly dragged diamond and gold jewellery worth around ₹10 lakh from a jewellery shop in Tumakuru.<br><br>After reviewing the CCTV footage staff traced the rat&#39;s burrow and recovered the missing jewellery.<br><br>🎥 CCTV<a href="https://x.com/hashtag/Karnataka?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Karnataka</a>… <a href="https://t.co/MU9TdXNotk">pic.twitter.com/MU9TdXNotk</a></p>&mdash; contentkikamii (@contentkikamii) <a href="https://x.com/contentkikamii/status/2082769695011484012?ref_src=twsrc%5Etfw">July 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

நகைகளை எலி எடுத்து செல்லும் CCTV வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T06:51:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்ஃபான்டினோவின் திட்டம்... சர்வதேச கிளர்ச்சிக்கு ஃபிஃபா பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/international-revolt-fifa-hits-back-1785477804"></link>
            <id>https://news.lankasri.com/article/international-revolt-fifa-hits-back-1785477804</id>
            <summary type="text">உலகக் கிண்ணம் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் FIFA ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணம் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் FIFA ஊடகங்கள் மீது அதிரடியான தாக்குதலை நடத்தியுள்ளது.</p><h2>வாக்கெடுப்பை நடத்த ஃபிஃபா</h2><p>
FIFA நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்திட்டம் குறித்த தவறான செய்திகள், திட்டமிடப்பட்டிருந்த கலந்தாலோசனைச் செயல்முறையைப் பாதித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9906026f-6243-4049-8bd2-b3dc7d28c747/26-6a6c3c9203ed7.webp' /></p><p> </p><p>FIFA தலைவர்&nbsp;இன்ஃபான்டினோவின் திட்டம் தொடர்பில் கடும் 
எதிர்ப்புகள் இருந்தபோதிலும், விளையாட்டுத் துறையைச் சேர்ந்த டசின் கணக்கான சர்வதேச அமைப்புகளால் ஏற்கனவே கண்டிக்கப்பட்டுள்ள 'ஃபிஃபா ஃபார்வர்ட் என்டர்பிரைஸ்' (FFE) திட்டம் குறித்த வாக்கெடுப்பை நடத்த ஃபிஃபா (FIFA) தொடர்ந்து திட்டமிட்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. </p><p>ஊடகங்களால் திட்டமிட்டு வெளியிடப்பட்டத் தவறானத் தகவல்களால் நாங்கள் திட்டமிட்டிருந்த கலந்தாலோசனை செயல்முறைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்றே FIFA நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>மேலும், கால்பந்து தொடரை எவரும் விற்பனைக்கு வைக்கப்போவதில்லை என்றும், இதை ஃபிஃபா (FIFA) ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத ஒன்று என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் திட்டத்தின் காரணமாக, எதிர்கால உலகக் கிண்ணம் போட்டிகளைப் புறக்கணிக்க ஐரோப்பிய நாடுகள் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஃபிஃபாவின் இந்த எதிர்வினை வந்துள்ளது. </p><p>FIFA ஃபார்வர்ட் எண்டர்பிரைஸ் (FFE) அமைப்பை நிறுவுவது தொடர்பான முன்மொழியப்பட்ட திட்டம் குறித்து அந்தந்த கூட்டமைப்புகள் வழங்கிய கருத்துக்களை நாங்கள் கேட்டறிந்தோம். மேலும், செவ்வாய்க்கிழமை வெளியான ஆரம்பகட்ட ஊடக அறிக்கைகளுக்குப் பிறகு எழுந்துள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண விரும்புகிறோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f13a69e9-dcb0-4ac8-9f37-00543bca3da3/26-6a6c3c930c561.webp' /></p><p>
</p><p>சுவிட்சர்லாந்தில் உள்ள தலைமையகத்தில் இருந்து, வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஃபிஃபாவின் (FIFA) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்கால உலகக் கிண்ணம் போட்டிகளைப் புறக்கணிப்பதில் இங்கிலாந்தும் மற்ற 89 நாடுகளுடன் இணைந்ததால், பரவலாகக் கண்டிக்கப்பட்ட அந்த திட்டமானது உடனடியாகவே சீர்குலைந்தது.</p><p> FIFA போட்டிகளுக்காக 4 பில்லியன் டொலர் முதலீட்டைத் திரட்டும் நோக்கம் கொண்ட முன்மொழிவுக்கு, இங்கிலாந்தும் மற்ற 54 UEFA நாடுகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன.</p><h2>106 உறுப்புச் சங்கங்களின் ஆதரவு</h2><p> </p><p>இந்த விவகாரத்தில் வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான CONCACAF-இல் உள்ள, FIFA-வில் பதிவுசெய்யப்பட்ட 35 நாடுகள் UEFA-விற்கு ஆதரவளித்தன. ஆனால், உலகக் கிண்ணம் தொடரைப் புறக்கணிப்பதாக மட்டும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கவில்லை. </p><p>மேலும், பெரும்பாலான உறுப்புச் சங்கங்கள் இன்ஃபான்டினோ தலைமையின் மீதான நம்பிக்கையை ஏற்கனவே இழந்துவிட்டன. இந்த முன்மொழிவை நிறைவேற்ற, இன்ஃபான்டினோவுக்கு 106 உறுப்புச் சங்கங்களின் ஆதரவு தேவைப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ef06f4-1a9a-49a7-a54d-bed34917935e/26-6a6c3c93b61a2.webp' /></p><p> </p><p>தற்போது, ​​ஃபிஃபாவின் (FIFA) 90 உறுப்பு அமைப்புகள் இத்திட்டங்களை வெளிப்படையாக எதிர்க்கின்றன. மேலும் 16 அமைப்புகள் எதிர்ப்புக் குரல் கொடுத்தால், இன்ஃபான்டினோவால் தனது திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போய்விடும். </p><p>FFE திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உறுதியளிக்கப்பட்ட 10 மில்லியன் டொலர் அடிப்படை நிதியுதவி இரட்டிப்பாகி 20 மில்லியன் டொலராக உயரும் என்று இன்ஃபான்டினோ செவ்வாய்க்கிழமையன்று 211 உறுப்பினர் அமைப்புகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். </p><p>இதனிடையே, மொராக்கோவின் ரபாத் நகரில் அடுத்த மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 211 உறுப்பு நாடுகளின் தலைவர் தேர்தலுக்கான சாத்தியமான வேட்பாளர்களை அறிவிப்பதற்கு, ஃபிஃபா நவம்பர் 18-ஐ காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T06:01:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு இனி பணம் கொடுக்கக்கூடாது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-mps-urge-to-stop-paid-to-france-stop-migrants-1785475159"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-mps-urge-to-stop-paid-to-france-stop-migrants-1785475159</id>
            <summary type="text">புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இனி பிரான்சுக்கு பணம் கொடுக்கக்கூடாது என பிரித்தானிய நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இனி பிரான்சுக்கு பணம் கொடுக்கக்கூடாது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.</p><h3>

பிரான்சுக்கு கொடுக்கப்படும் பெரும் தொகை
</h3><p>
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரை பிரான்சிலேயே தடுத்து நிறுத்துவதற்காக பிரான்சுக்கு பிரித்தானியா பெரும் தொகை ஒன்றைக் கொடுத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c875aa4-f620-4f1d-8304-b7a0c50fb54f/26-6a6c305921880.webp' /></p><p>
இருந்தாலும் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை.
</p><p>
புதன்கிழமை மட்டுமே, 752 புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்ததாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
சமீபத்தில், இப்படி சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் புறப்படுவதைத் தடுக்காமல், பிரான்ஸ் பொலிசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை பிரித்தானிய ஊடகவியலாளர்கள் கண்ணால் பார்த்துள்ளார்கள்.
</p><h3>
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்</h3><p>

இந்நிலையில், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு இனி பணம் கொடுக்கக்கூடாது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/828668da-ba56-4ba9-bc2d-27be0fd91a94/26-6a6c3059c772b.webp' /></p><p>
ரீஃபார்ம் கட்சி கருவூல செய்தித்தொடர்பாளரான ராபர்ட் ஜென்ரிக், பிரான்ஸ் பொலிசார், சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் புறப்படுவதைத் தடுக்காமல் அவர்களை கையசைத்து அனுப்பி வைக்கிறார்கள்.</p><p>

பொறுத்தது போதும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு இனி பணம் கொடுக்கக்கூடாது, சொல்லப்போனால், இதுவரை கொடுத்த பணத்தை பிரான்சிடம் திருப்பிக் கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
</p><p>
அதேபோல, நிழல் உள்துறைச் செயலரான கிறிஸ் பிலிப்பும், பெல்ஜியம் நாட்டு அதிகாரிகள் வெற்றிகரமாக சட்டவிரோத புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69c6a4fd-c731-4439-9720-f005b660f21b/26-6a6c305a76b0f.webp' /></p><p>
அதேபோல் பிரான்ஸ் அதிகாரிகளும் செய்யவேண்டும் என்று கூறியுள்ள பிலிப், அப்படிச் செய்ய பிரான்ஸ் மறுத்தால், நம் பிரதமர் ஆன்டி பர்னாம், பிரான்சுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9ef1f1a-248e-474e-beeb-8f6616358a02/26-6a6c305b24d84.webp' /></p><p>

பிரான்சுக்கு பிரித்தானியா புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் 160 மில்லியன் பவுண்டுகள் கொடுப்பதாக உறுதியளித்துள்ள நிலையில், பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியா வரும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்தால் மட்டுமே அந்த 160 மில்லியன் பவுண்டுகள் கொடுக்கப்படும் என உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T05:22:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைட்டமின் சி குறைபாடு இருப்பதை எச்சரிக்கும் 5 அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-common-symptoms-of-vitamin-c-deficiency-1785473346"></link>
            <id>https://news.lankasri.com/article/5-common-symptoms-of-vitamin-c-deficiency-1785473346</id>
            <summary type="text">உடல் ஆரோக்கியமாக செயல்பட வைட்டமின்கள் அவசியம். அவற்றில் முக்கியமானது வைட்டமின் சி. 

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, கொலாஜன் உற்பத்தி மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடல் ஆரோக்கியமாக செயல்பட வைட்டமின்கள் அவசியம். அவற்றில் முக்கியமானது வைட்டமின் சி. </p><p>

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, கொலாஜன் உற்பத்தி மற்றும் இரும்புச் சத்தை உடல் உறிஞ்சவும் உதவுகிறது.</p><p> 

இந்த வைட்டமினை உடலால் தானாக உருவாக்க முடியாது. எனவே உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்கள் மூலம் பெற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49f4f8bf-aadf-4d06-bca1-d400a81d0907/26-6a6c2944af71c.webp' /></p><p>

நெல்லிக்காய், கொய்யாப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற பல இயற்கை உணவுகளில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.</p><p> 

அந்தவகையில், வைட்டமின் சி குறைபாடு இருப்பதை எச்சரிக்கும் 5 அறிகுறிகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.</p><h2> 

1. அடிக்கடி சளி, இருமல்
</h2><p>
வைட்டமின் சி குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். இதனால் சளி, இருமல் மற்றும் தொற்றுநோய்கள் அடிக்கடி ஏற்படும்.</p><p>
</p><h2>
2. ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு</h2><p>

பல் துலக்கும் போது ஈறுகளில் ரத்தம் வருதல் அல்லது வீக்கம் இருந்தால், அது வைட்டமின் சி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff1e802c-aef7-4e71-a897-6490d1edc784/26-6a6c294576e61.webp' /></p><h2>3. உடல் சோர்வு
</h2><p>
போதுமான ஓய்வு எடுத்தும் சோர்வாக இருந்தால், அது வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் இரும்புச்சத்து உறிஞ்சும் திறன் குறைவின் காரணமாக இருக்கும்.</p><h2>

4. சருமம் வறட்சி
</h2><p>
வைட்டமின் சி குறைந்தால் சருமம் வறண்டு, சுருக்கங்கள் தோன்றலாம். காயங்கள் ஆறவும் அதிக நேரம் ஆகும்.
</p><h2>
5. மூட்டு வலி
</h2><p>
கொலாஜன் உற்பத்தி குறைவதால் மூட்டுகளில் வலி, வீக்கம் மற்றும் நடப்பதில் சிரமம் ஏற்படும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T04:50:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறப்புறுப்புச் சிதைப்பு உட்பட... உக்ரைன் போரில் ரஷ்யாவின் கொடூரங்கள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-uses-torture-as-war-weapon-1785471898"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-uses-torture-as-war-weapon-1785471898</id>
            <summary type="text">ரஷ்யா, உக்ரேனிய கைதிகளுக்கு எதிராக பாலியல் வன்முறையை ஒரு திட்டமிட்ட போர் ஆயுதமாக பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது.ஆண் கைதிகளை ரஷ்ய இராணுவத்தின் கொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா, உக்ரேனிய கைதிகளுக்கு எதிராக பாலியல் வன்முறையை ஒரு திட்டமிட்ட போர் ஆயுதமாக பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது.</p><h2>ஆண் கைதிகளை</h2><p> ரஷ்ய இராணுவத்தின் கொடூர நடவடிக்கைகளில் இருந்து தப்பிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இருதரப்பும், தங்களை அவமானப்படுத்தவும் மனரீதியாக துன்புறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பாலியல் வன்கொடுமை மற்றும் பிறப்புறுப்பு சிதைப்பு உள்ளிட்ட கொடுமைகளை முன்னெடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9f5367-e66b-4e0c-92f5-dd363be09d1c/26-6a6c25e1c4761.webp' /></p><p>
</p><p>தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்கள் மற்றும் உக்ரேனிய அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் ஐ.நா. விசாரணை அதிகாரிகளின் சாட்சியங்களின் அடிப்படையில், </p><p>ரஷ்யா 2022-ல் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து அதன் இராணுவப் படைகள் உக்ரேனிய ஆண் கைதிகளை முதன்மையாகப் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. </p><p>முன்னாள் உக்ரேனியப் போர் கைதியான Serhii Boychuk தெரிவிக்கையில், 2022-இல் ரஷ்யர்கள் அவரைச் சிறைபிடித்ததாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அவர் அடைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாமில் ரஷ்யக் காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதுடன் பாலியல் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>தற்போது 33 வயதாகும் அவர், மிக மோசமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், தனது பிறப்புறுப்பின் மீது கத்தி வைக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்துள்ளார். </p><p>அவர்கள் ஒரு நபரை அவமானப்படுத்தவும் மனதளவில் சிதைக்கவும் பாலியல் ரீதியான துன்புறுத்தலை ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று, அக்டோபர் 2024-இல் கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்ட அந்த நபர் கூறியுள்ளார். </p><p>உக்ரைனின் முன்னாள் போர்க்கைதிகளில் மற்றொருவரும், ரஷ்யாவின் போர்க்கைதிகள் முகாம்களில் இருந்தபோது பாலியல் ரீதியான சித்திரவதைக்கு ஆளான இதே போன்ற அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b235a7fd-8355-4961-98ec-4c64636d1d14/26-6a6c25e277492.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், இதுவரை விசாரணைகளில் இருந்து உறுதி செய்யப்பட்டத் தகவல்களின் அடிப்படையில், போர்க்கைதிகள் மற்றும் பொதுமக்கள் கைதிகளுக்கு எதிரான ரஷ்யாவின் பாலியல் வன்முறைகள் திட்டமிட்ட முறையில் நடைபெற்று வந்துள்ளதும்; இவை பெரும்பாலும் ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரிகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளதும் விசாரணை அதிகாரிகள் குழுவால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>போரின்போது பொதுமக்களை அடக்கி ஒடுக்கவும் அவர்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்தவும் எதிரிப் படைகள் நீண்ட காலமாகப் பாலியல் வன்முறையைப் பயன்படுத்தி வருகின்றன.</p><h2>உள்நோக்கம் கொண்டவை</h2><p> </p><p>இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெண்கள் மற்றும் சிறார்களே முக்கிய இலக்குகளாக உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நடத்திய விசாரணைகளின் அடிப்படையில், </p><p>2022-இல் ரஷ்யா தொடங்கிய முழு அளவிலான படையெடுப்பின் ஆரம்பக் கட்டத்தில் நகரங்களையும் கிராமங்களையும் கைப்பற்றியபோது, ​​ரஷ்யப் படைகள் உக்ரேனியப் பெண்களையும் குறிவைத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c8de35-c518-4ec4-87f2-59ba182dbc6d/26-6a6c25e10033e.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், போர் தற்போது இரு தரப்பினரின் வளங்களையும் படிப்படியாகச் சிதைக்கும் வகையிலான மோதலாக மாறியுள்ள நிலையில், போர்க்களத்தில் சிறைபிடிக்கப்பட்ட உக்ரேனிய ஆண் வீரர்களே பாதிக்கப்பட்டவர்களில் அதிகமாக உள்ளனர். </p><p>ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, போரின்போது ரஷ்யப் படைகளால் பாலியல் வன்முறை இழைக்கப்பட்டதாகக் கூறப்பட்டு விசாரணையில் உள்ள 310 சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களில் 280 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள் மற்றும் நான்கு பேர் சிறுமிகள் என்றே தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/468174a3-6a73-415c-8363-e46172c543e2/26-6a6c25e32b66c.webp' /></p><p> </p><p>பட்டியலிடப்பட்ட பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பிறப்புறுப்பு சிதைப்பு, மின் அதிர்ச்சி மற்றும் பிறப்புறுப்புகளில் தாக்குதல் உள்ளிட்ட சித்திரவதை உத்திகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. </p><p>இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ரஷ்ய அதிகாரிகள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறி, ரஷ்யா ஏற்கனவே அவற்றை மறுத்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T04:23:06+00:00</updated>
        </entry>
    </feed>
