<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-21T04:11:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-declares-full-scale-war-1784606987"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-declares-full-scale-war-1784606987</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் மீண்டும் முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ள ஈரான், அமெரிக்கா படையெடுப்பைத் தொடங்கும் என்பதையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் மீண்டும் முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ள ஈரான், அமெரிக்கா படையெடுப்பைத் தொடங்கும் என்பதையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.</p><h2>தீவிரமடையக்கூடும்</h2><p>
</p><p>மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அப்பகுதிக்கு மேலும் பல போர் விமானங்களை அனுப்பியதைத் தொடர்ந்து ஈரான் இதை அறிவித்துள்ளது. </p><p>இந்த நிலையில் மோதல் தீவிரமடையக்கூடும் என்பதைக் குறிக்கும் வகையில், ஐரோப்பாவில் உள்ள தளங்களிலிருந்து கூடுதல் F-16 மற்றும் F-35 போர் விமானங்களையும், மேலும் பல வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் அமெரிக்கா நிலைநிறுத்தி வருகிறது. </p><p>தற்போது முறிந்துவிட்ட அமைதி ஒப்பந்தம் கடந்த வாரம் சிதைந்து கொண்டிருந்த நிலையில், போரைத் தீவிரப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இராணுவத் தலைவர்களிடமிருந்து விளக்கம் கோரியிருந்தார். </p><p>ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கர்க் தீவைக் (Kharg Island) கைப்பற்றுவது அல்லது பிக்காக்ஸ் மலையில் (Pickaxe Mountain) உள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசுவது ஆகியவை இதில் அடங்கும். </p><p>இப்போர் பிராந்தியம் தழுவிய மோதலாக மாறக்கூடும் என்பதற்கான மற்றொரு அறிகுறியாக, ஈரானை ஆதரிக்கும் ஏமன் நாட்டின் ஹவுதிகள், சவுதி அரேபியா மீது கடல்வழித் தடையை அறிவித்துள்ளனர். </p><p>கடந்த வாரம் சவுதி தரப்பினர் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டிய அந்த அமைப்பு, இது கண்ணுக்குக் கண் நடவடிக்கை என்றும் கூறியுள்ளது.</p><p> இதனிடையே, ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாகத் தாக்குதல் நீடித்த நிலையில், ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அறிவித்துள்ளார். </p><p>உண்மையில், ஈரான் தற்போது ஒரு முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளது என்றும், நாம் யதார்த்தத்தை உணர்ந்து, இந்த எதிர்ப்பின் இயல்பான விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>அத்துடன், அமெரிக்க இராணுவம் எந்த நேரத்திலும் ஈரானுக்குள் களமிறங்கும் என்றும், அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது.</p><h2>விளைவுகள் மோசமாக இருக்கும்</h2><p> </p><p>இந்த நிலையில், அமெரிக்கப் படைகளைத் தரைவழித் தாக்குதலில் எதிர்கொண்டு வரவேற்கத் தங்கள் நாடு ஆவலுடன் எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாய் தெரிவித்தார். </p><p>மேலும், கர்க் தீவை அமெரிக்கா தொட முயன்றால், அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்கா தனது சமீபத்திய தாக்குதல்களில், ஈரானின் தென்மேற்குப் பகுதியில் பகுதியளவு கட்டப்பட்டிருந்த டார்கோவின் (Darkhovin) அணுமின் நிலையத்தையும் இலக்கு வைத்தது. </p><p>ஆனால், ஈரானின் 
ராணுவக் கட்டளை மையங்கள், வான் பாதுகாப்புத் தளங்கள் மற்றும் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்களை மட்டுமே இலக்கு வைத்ததாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் தெரிவித்துள்ளது. </p><p>மேலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை எட்டும் வாய்ப்புகளை தமது நிர்வாகம் நிராகரிக்காது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>மட்டுமின்றி, ஈரான் மீது படையெடுப்பது சிக்கலில் முடியும் என்பதையும் இராணுவ அதிகாரிகள் தரப்பு ட்ரம்பிடம் விளக்கமளித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T04:08:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு மாதங்களில் திருமணம்... உக்ரைன் அருகே ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட கேரள மாலுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-sailor-killed-russian-atack-1784603717"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-sailor-killed-russian-atack-1784603717</id>
            <summary type="text">துறைமுக நகரமான ஒடெசா கடற்பகுதியில் ரஷ்யா முன்னெடுத்த மின்னல் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு இந்தியர்களில், கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயனும் ஒருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுக நகரமான ஒடெசா கடற்பகுதியில் ரஷ்யா முன்னெடுத்த மின்னல் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு இந்தியர்களில், கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயனும் ஒருவர்.</p><h2>இரண்டு மாதங்களில்</h2><p> </p><p>
உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திற்கு அப்பால் 'எம்வி கோல்டன் லியோ' (MV Golden Leo) என்ற சரக்குக் கப்பல் மீது ரஷ்யா மின்னல்&nbsp;தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/868e4b88-ac39-4a13-aa12-a3e2663d40ac/26-6a5ee5a3dc671.webp' /></p><p> </p><p>இதில் கொல்லப்பட்ட அகில் ஜோயன்
காசர்கோடு மாவட்டத்தின் வெள்ளரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர். 26 வயதான இவர், அடுத்த இரண்டு மாதங்களில் திருமணம் செய்துகொள்ள இருந்தார். </p><p>ஜோயன் கடந்த ஆறு ஆண்டுகளாகக் கப்பலில் மாலுமியாகப் பணியாற்றி வருகிறார்; அவர் விரைவில் தனது வேலையை மாற்றிக்கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்களின் தகவல்படி, அந்த இளம் மாலுமி, மின்சாதனக் கடையில் பணிபுரியும் ஜோயன் மற்றும் காப்பீட்டு முகவரான சாலி ஆகியோரின் ஒரே மகன் என்றே தெரிய வருகிறது. </p><p>மட்டுமின்றி, 

அவர்கள் ஒரு சாதாரணக் குடும்பம் எனவும், அவர்களின் எதிர்காலம் பெரும்பாலும் அகிலைச் சார்ந்தே இருந்தது எனவும், மிக சமீபத்தில்தான் சொந்தமாக ஒரு வீட்டை கட்டியிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>மேலும், அகில் ஜோயன் தனது நிச்சயதார்த்த விழாவிற்காக சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்ததாகவும், இன்னும் இரண்டு மாதத்தில் அகிலின் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. </p><p>அகில் பணிபுரிந்த கப்பல் நிறுவனத்திடமிருந்து திங்கட்கிழமை மாலையில் வந்த மின்னஞ்சல் மூலமாகவே அவரது குடும்பத்தினர் அவரது இறப்புச் செய்தியை அறிந்துகொண்டனர். </p><p>இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கூடுதல் விவரங்களைச் சேகரித்து, தேவையான நடைமுறைகளை நிறைவு செய்ய முயற்சித்து வருவதாக கிராம நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.</p><h2>கேரள முதலமைச்சர்</h2><p> </p><p>அகில் தனது 19-வது வயதில் வணிகக் கப்பலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனிடையே, கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவலில், </p><p>ரஷ்யத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த மாலுமி கொல்லப்பட்ட விவகாரத்தில், கூடுதல் தகவல்களைத் திரட்டுவதற்காக ரஷ்யத் தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்துடன் வெளிநாடு வாழ் கேரளத்தவர் விவகாரத் துறை (NORKA) அமைப்பு ஒருங்கிணைந்து செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ebe614f-ee23-4ac2-ae25-579bd2df94f7/26-6a5ee5a4a5662.webp' /></p><p> </p><p>இதனிடையே, சர்வதேச செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், 
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசாவின் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் ஒன்று, ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஞாயிற்றுக்கிழமையன்று ரஷ்யப் படைகளால் மின்னல் தாக்குதலுக்கு இலக்கானதாகவும், </p><p>இதில் சிரியாவைச் சேர்ந்த ஐந்து மாலுமிகள் உட்பட 10 பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் உக்ரைனின் கடல்சார் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. உக்ரேனில் இருந்து சோளம் ஏற்றிச் சென்ற அந்தக் கப்பலிலிருந்து காயங்களுடன் எட்டு பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T03:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வணிக கப்பல் மீது பாய்ந்த 3 ஏவுகணைகள்: ஒடேசாவில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/4-indian-sailors-killed-by-odessa-port-attack-1784589659"></link>
            <id>https://news.lankasri.com/article/4-indian-sailors-killed-by-odessa-port-attack-1784589659</id>
            <summary type="text">உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். ஒடேசா துறைமுகம் மீது தாக்குதல்உக்ரைனிய துறைமுகமான ஒடேசாவில் இருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.</p><h3> ஒடேசா துறைமுகம் மீது தாக்குதல்</h3><p>உக்ரைனிய துறைமுகமான ஒடேசாவில் இருந்து புறப்பட்ட வணிக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 4 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> ஜூலை 19ம் திகதி நடந்த இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றொரு இந்தியர் &nbsp;படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cba4ea1-b78a-4408-8ebc-7754f7cd7368/26-6a5ead5de6f44.webp' /></p><p> </p><p>&nbsp;ரஷ்ய ஏவுகணை நடத்திய இந்த தாக்குதலினால் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் இந்தியர்கள் மற்றும் சிரியர்கள் என மொத்தம் 17 பேர் வரை பணியாற்றியுள்ளனர்.</p><p> தாக்குதலுக்கு பிறகு இரவு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல் பணியில் 8 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்.</p><p> இதில், 9 மாலுமிகள் மற்றும் 1 கடல் வழி காட்டி என 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> இந்திய கப்பலின் விவரம்</h2><p>
</p><p>ரஷ்ய தாக்குதலில் பாதிக்கப்பட்ட கப்பல், மும்பை சேர்ந்த “ஓஷன் கிரேஸ் ஷிப்பிங் நிறுவனத்தின் M V&nbsp; கோல்டன் லியோ ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/628641b2-b008-4c5e-9a6d-c4c0958773bd/26-6a5ead5d41df2.webp' /></p><p> ஒடேசா தறைமுகத்தில் இருந்து மக்காச்சோளம் போன்ற பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட M V&nbsp; கோல்டன் லியோ கப்பல் மீது 3 ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியுள்ளன.</p><p> மேலும் இந்த கப்பல் கினியா - பிசாவ் கொடியுடன் இயங்கியது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T00:14:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிப்லைன் சவாரியில் திடீரென கழன்ற பாதுகாப்பு பூட்டு: 40 அடி உயரத்தில் இருந்து சுற்றுலா பயணி: வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dandeli-zipline-collapse-karnataka-tourist-injurie-1784592823"></link>
            <id>https://news.lankasri.com/article/dandeli-zipline-collapse-karnataka-tourist-injurie-1784592823</id>
            <summary type="text">ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். ஜிப்லைன் விபத்துடான்டேலி ரிசார்ட் ஒன்றில் ஜிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.</p><h2> ஜிப்லைன் விபத்து</h2><p>டான்டேலி ரிசார்ட் ஒன்றில் ஜிப்லைன் சவாரியின் போது பாதுகாப்பு சாதனம் பழுதடைந்ததால் 40 அடி உயரத்தில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் கீழே விழுந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> விஜயபுராவை சேர்ந்த குபேர் சுர்பூர்(Kuber Surpur) என்ற நபர் ஜிப்லைன் சவாரியை தொடங்கிய சில நொடிகளில் அவரது பாதுகாப்பு பூட்டு திடீரென கழன்று விழுந்தது.</p><p> இதனால் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த குபேர் சுர்பூர் பலத்த காயமடைந்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">📍Karnataka | <a href="https://x.com/hashtag/Watch?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Watch</a>: A tourist from Vijayapura sustained severe injuries after allegedly falling nearly 40 feet during a zipline ride at a resort in Dandeli after the safety lock reportedly failed mid-ride. <a href="https://t.co/AdZJUeur3K">pic.twitter.com/AdZJUeur3K</a></p>&mdash; NDTV (@ndtv) <a href="https://x.com/ndtv/status/2079057658674639021?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அவருக்கு கை, கால்களில்&nbsp; எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதுடன், நரம்பு பாதிப்புகளும் ஏற்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் சம்பந்தப்பட்ட ரிசார்ட்டில் இருந்த உபகரணங்கள் துருப்பிடித்தும், முறையாக பராமரிக்கப்படாமலும் இருந்ததாக குபேரின் குடும்பத்தினர் ரிசார்ட் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccf4e1c6-79ad-4f76-a79b-ae7b944dbdba/26-6a5eb9b9493e2.webp' /></p><p> விபத்தில் பாதிக்கப்பட்ட குபேர் முதலில் டான்டேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக மிராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p> இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-21T00:13:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025ம் ஆண்டிற்குள் 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றம்: நாடொன்று எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkey-removed-1-million-stray-dogs-from-cities-1784579694"></link>
            <id>https://news.lankasri.com/article/turkey-removed-1-million-stray-dogs-from-cities-1784579694</id>
            <summary type="text">துருக்கிய நகரங்களில் இருந்து 2025ம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தெரு நாய்களின் எண்ணிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துருக்கிய நகரங்களில் இருந்து 2025ம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திய துருக்கி</h2><p>
துருக்கி அரசு தங்களது நகரங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.</p><p> துருக்கியின் உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃபிலி தெரிவித்த தகவலில், 2025ம் ஆண்டிற்குள் துருக்கியின் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 10 லட்சம் தெரு நாய்களை அகற்றப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p> துருக்கியில் விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றமே இந்த தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வர பட்டதற்கான முக்கிய காரணம் என்று பால்கன் இன்சைட் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae4de92a-6f84-4a3e-8180-3d90f2207b43/26-6a5e87624260d.webp' /></p><h2> துருக்கிய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகள்</h2><p>தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து மீண்டும் தெருக்களில் விடும் நடைமுறை பயன் அளிக்காததை தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய விதிகளின் படி, ஒவ்வொரு நகராட்சி தெருக்களிலும் உள்ள நாய்களை நிரந்தரமாக நீக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> நாய்களை தத்தெடுப்பதே முதன்மையான குறிக்கோளாக இருந்தாலும், தீவிரமான ஆக்ரோஷமான குணம் கொண்ட நாய்கள் மற்றும் தீர்க்க முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை கருணை கொலை செய்ய சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் தெரு நாய்களை பராமரிக்க பிரம்மாண்டமான புதிய காப்பகங்கள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T22:56:58+00:00</updated>
        </entry>
    </feed>
