<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-14T05:45:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்து: 20 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/20-injured-in-uk-train-derails-incident-1786683732"></link>
            <id>https://news.lankasri.com/article/20-injured-in-uk-train-derails-incident-1786683732</id>
            <summary type="text">train derails in uk: இங்கிலாந்தில், ரயில் ஒன்று தடம்புரண்டதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.


இங்கிலாந்திலுள்ள லண்டன் விக்டோரியா ரயில் நிலையத்திலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>train derails in uk: இங்கிலாந்தில், ரயில் ஒன்று தடம்புரண்டதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>

இங்கிலாந்திலுள்ள லண்டன் விக்டோரியா ரயில் நிலையத்திலிருந்து ஈஸ்ட்போர்ன் ரயில் நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று, கிழக்கு சசெக்ஸிலுள்ள லூயிஸ் என்னும் இடத்தினருகே தடம்புரண்டது.
</p><h3>
ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்து</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e054f631-4e6f-40d9-9a0b-2b7518a6b0c1/26-6a7ea1568c4ea.webp' /></p><p>நேற்று மதியம் 3.45 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
2.24க்கு புறப்பட்ட அந்த ரயில், ஈஸ்ட்போர்ன் நிலையத்தை அடைய சிறிது நேரமே இருந்த நிலையில், திடீரென வேகமெடுத்ததாக அந்த ரயிலில் பயணித்த பயணிகள் தெரிவிக்கிறார்கள்.
</p><p>
அடுத்த கணம், ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.&nbsp;</p><p></p><p>
ரயில் மொத்தம் 150 பயணிகள் இருந்த நிலையில், கடைசி பெட்டிகளில் இருந்த 40 பேர் கவிழ்ந்த பெட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd9e945-4222-4e5b-9272-bd388823b650/26-6a7ea15752f03.webp' /></p><p>&nbsp;தகவலறிந்து ரயில்வே பொலிசார், சசெக்ஸ் பொலிசார், தீயணைப்பு வீரர்கள், மீட்புக் குழுவினர் ஆம்புலன்ஸ் சேவை, மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என அனைவரும் சம்பவ இடத்துக்கு விரைய, அதைத் தொடர்ந்து 20 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431bf453-8758-410e-85cb-9df71722573a/26-6a7ea15807b7d.webp' /></p><p>மாலை 6.00 மணி வாக்கில் ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியிருந்த அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக ஒரு உயிர்ச்சேதம் கூட ஏற்படவில்லை என்பது ஆறுதலளிக்கும் செய்தி!
</p><p>
சம்பந்தப்பட்ட ரயில் பாதை மூடப்பட்டுள்ள நிலையில், குறைந்தபட்சம் திங்கட்கிழமை வரை அந்த பாதையில் ரயில்கள் இயங்காது என்றும் மக்கள் பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68092dee-0fd5-4fcf-aed4-a1e84dcd85fd/26-6a7ea158af9c3.webp' /></p><p>இந்நிலையில், ரயில் பாதையில் ஒரு இடத்தில் தண்டவாளம் வளைந்திருப்பதைக் காணமுடிகிறது. அது ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட வளைவா அல்லது தண்டவாளம் வளைந்திருந்ததால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T05:04:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரங்கப் பாதைக்குள் பாய்ந்த வெள்ளப்பெருக்கும் சேறும் : 7 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chamoli-tunnel-accident-7-dead-rescue-going-1786683404"></link>
            <id>https://news.lankasri.com/article/chamoli-tunnel-accident-7-dead-rescue-going-1786683404</id>
            <summary type="text">உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்க பாதைக்குள் நீர் மற்றும் குப்பைகள் புகுந்ததில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.சுரங்கப்பாதை விபத்துவியாழக்கிழமையன்று உத்தராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்க பாதைக்குள் நீர் மற்றும் குப்பைகள் புகுந்ததில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2>சுரங்கப்பாதை விபத்து</h2><p>வியாழக்கிழமையன்று உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள சுரங்கப் பாதைக்குள்&nbsp; திடீரென வெள்ள நீரும், குப்பை மண் சாரலும் புகுந்ததில் குறைந்தது 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p> இதுவரை 18 தொழிலாளர்கள் வரை பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்(SDMA) தகவல் தெரிவித்துள்ளது.</p><p> அத்துடன் சுரங்கத்திற்கு சிக்கி இருப்பதாக நம்பப்படும் 3 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ddccf9a-e775-40e0-b63b-63918e225b09/26-6a7ea00d9c4e7.webp' /></p><p></p><h2> விபத்து எப்படி நடந்தது?</h2><p>
சமோலியின் பிபல்கோட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தெஹ்ரி புனல்மின் கழக திட்ட பகுதியில் இந்த கோர விபத்தானது ஏற்பட்டுள்ளது.</p><p> சுரங்கத்திற்கு கிட்டத்தட்ட 28 பேர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக வெள்ள நீர் புகுந்து பலத்த நீரோட்டம் ஏற்பட்டுள்ளது, இதில் பல தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு வெளியே அடித்து செல்லப்பட்டுள்ளனர்.</p><p> மாலை 6.30 மணியளவில் வெள்ள நீருடன் சேறும் புகுந்ததாக மாவட்ட மாஜிஸ்திரேட் கவுரவ் குமார் தெரிவித்துள்ளார்.</p><p> இந்த விபத்தை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.</p><p> கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதே இந்த கோர சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-14T04:57:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் பணக்கார குடும்ப பட்டியல் - முதல் 10 இடத்தில் 2 தமிழ் குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-tn-familes-in-top-10-india-most-valuable-family-1786541705"></link>
            <id>https://news.lankasri.com/article/2-tn-familes-in-top-10-india-most-valuable-family-1786541705</id>
            <summary type="text">2026 India Most Valuable Family Businesses List : 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலில் 2 தமிழ்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 India Most Valuable Family Businesses List : 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலில் 2 தமிழ்நாடு குடும்பங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது. </p><h3>

இந்தியாவின் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்கள்</h3><p>

பார்க்லேஸ் பிரைவேட் கிளைன்ட்ஸ் ஹுருன் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. </p><p>

இந்த பட்டியலில் உள்ள 300 குடும்ப வணிகங்களின் கூட்டு மதிப்பு தற்போது 1.46 டிரில்லியன் டொலராக (இந்திய மதிப்பில் ரூ.138 லட்சம் கோடி) உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/395fa4d1-09ca-4adb-b6e5-4a6456dd8d68/26-6a7c768b17c35.webp' /></p><p>

2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் இருந்து இந்த வணிகங்களின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. </p><p>அதாவது கடந்த 2 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ. 4,076 கோடி மதிப்பு உயர்விற்குச் சமமாகும்.&nbsp;</p><p></p><p>

இதில் ரிலையன்ஸ் குழும முகேஷ் அம்பானியின் குடும்பம் ரூ. 25.83 லட்சம் கோடி மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. </p><p>ஆதித்யா பிர்லா குழும குமார் மங்கலம் பிர்லா குடும்பம் ரூ. 8.14 லட்சம் கோடி மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளது. </p><p> 

ஜிண்டால் குடும்பம் ரூ. 8.01 லட்சம் கோடி மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளது. </p><p> 

இந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த வெள்ளையன் சுப்பையா தலைமையிலான முருகப்பா குடும்பம், ரூ. 3.06 லட்சம் கோடி மதிப்புடன் 8வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c00b73-1f57-4c45-85be-dc35349f1ca9/26-6a7c768bbe123.webp' /></p><p> 

இதே போல், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஷிவ் நாடார் குடும்பம் ரூ. 2.91 லட்சம் கோடி மதிப்புடன் 9வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a79b494b-778a-4481-a1f7-0adda816ef42/26-6a7c768c703cb.webp' /></p><p>

கௌதம் அதானி குடும்பம் ரூ.19.6 லட்சம் கோடி மதிப்புடன், முதல் தலைமுறை தொழில்முனைவோர் குடும்பங்களில் மிகவும் செல்வந்தர்களாக உள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T04:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் 2 வணிக கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஈரான்: UAE கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-attacks-2-ships-in-hormuz-uae-condemn-1786678816"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-attacks-2-ships-in-hormuz-uae-condemn-1786678816</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 2 வணிக கப்பல்களை ஈரான் தாக்கி இருப்பதாக சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. வணிக கப்பல்கள் மீது தாக்குதல்
ஹார்முஸ் ஜலசந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 2 வணிக கப்பல்களை ஈரான் தாக்கி இருப்பதாக சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது.</p><h2> வணிக கப்பல்கள் மீது தாக்குதல்</h2><p>
ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த தங்களது இரண்டு வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> இதில் கப்பல் சேதமடைந்து இருப்பதாகவும், ஆனால் பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சவுதி தேசிய எண்ணெய் நிறுவனம்(ADNOC) தகவல் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdfba723-04c8-4e6b-88e8-e004dea713c8/26-6a7e8e21a98b3.webp' /></p><p></p><p> ஒரு வார காலத்திற்குள் ADNOC நிறுவனத்தின் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.</p><p>கடந்த சனிக்கிழமை ஹார்முஸில் சவுதி அரசு எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p> இந்நிலையில், தற்போதைய பதற்றமான நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.</p><p>அதே நேரத்தில் ADNOC கப்பல்கள் மீதான தாக்குதல் மிகவும் பகைமையான தாக்குதல் என்று குறிப்பிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T03:40:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[Powerball லொட்டரியில் 1 பில்லியன் டொலர் வென்ற நபர்: உரிமை கோர ஓராண்டு அவகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/someone-won-1-billion-powerball-1786651825"></link>
            <id>https://news.lankasri.com/article/someone-won-1-billion-powerball-1786651825</id>
            <summary type="text">Someone won $1 billion in Powerball: இல்லினாய்ஸில் உள்ள ஒருவர் பவர்பால் லொட்டரியில் 1 பில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.

புதன்கிழமை இரவு நடைபெற்ற 1.0...</summary>
            <content type="html"><![CDATA[<p>Someone won $1 billion in Powerball: இல்லினாய்ஸில் உள்ள ஒருவர் பவர்பால் லொட்டரியில் 1 பில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.
</p><p>
புதன்கிழமை இரவு நடைபெற்ற 1.04 பில்லியன் டொலர் பவர்பால் குலுக்கலுக்கான வெற்றியாளர் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் மாகாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஓராண்டுக்குள்</h2><p>
</p><p>இது கடந்த ஆண்டுக்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய பெரும் பரிசுத்தொகை என லொட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>மேற்கு இல்லினாய்ஸில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்டிலிருந்து மேற்கே சுமார் 100 மைல் தொலைவில் அமைந்துள்ள குவின்சி பகுதியில் ஒரு 'ஹை-வீ' (Hy-Vee) எரிபொருள் நிலையத்தில் இருந்து அந்தச் சீட்டு வாங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfaa94e6-0aa1-4e8d-8af0-962d24bf4dd4/26-6a7e24b381b96.webp' /></p><p> </p><p>இல்லினாய்ஸ் லொட்டரி அமைப்பின் தகவலின்படி, ஜாக்பாட் பரிசை வென்ற சீட்டை விற்பனை செய்ததற்காக Hy-Vee எரிபொருள் நிலையத்திற்கு 500,000 டொலர் ரொக்கப் போனஸ் வழங்கப்படும். </p><p>இல்லினாய்ஸ் மாகாணத்தில் லொட்டரி வெற்றியாளர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமலே இருக்க முடியும் என்பதால், அந்த வெற்றியாளர், 29 ஆண்டுகளில் 30 தவணைகளாக வழங்கப்படும் 1.04 பில்லியன் டொலர் மதிப்பிலான வருடாந்திரத் தவணை முறையிலான பரிசைப் பெறுவதைத் தெரிவு செய்யலாம். </p><p>அல்லது 450.5 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்ட ஒரு தொகையை மொத்தமாகப் பெறலாம். இவ்விரு தொகைகளும் வரிக்கு உட்பட்டவை ஆகும்.</p><p> குலுக்கல் நடைபெற்ற திகதியிலிருந்து ஓராண்டுக்குள் வெற்றியாளர் பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று லொட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
மாசசூசெட்ஸில் விற்கப்பட்ட ஒரு டிக்கெட், பவர் பிளே மல்டிபிளையருடன் ஆறு எண்களில் ஐந்து எண்களைப் பொருத்தி 2 மில்லியன் டொலர்களை வென்றுள்ளது. </p><p>அதே நேரத்தில், அரிசோனா, கலிபோர்னியா, புளோரிடா மற்றும் வட கரோலினா ஆகிய நான்கு மாகாணங்களில் விற்கப்பட்ட ஐந்து டிக்கெட்டுகள் தலா 1 மில்லியன் டொலர்களை வென்றன என்று லொட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆர்கன்சாஸைச் சேர்ந்த ஒருவர் 1.8 பில்லியன் டொலர்களை வென்ற பிறகு, புதன்கிழமை நடந்த குலுக்கல்தான் முதல் பில்லியன் டொலர் பவர்பால் ஜாக்பாட் ஆகும். </p><p>மே 2 அன்று புளோரிடா மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த இருவர் 20 மில்லியன் டொலர் பரிசைப் பகிர்ந்துகொண்ட பிறகு, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒருவர் முதன்மைப் பரிசை வென்றது இதுவே முதல் முறையாகும்.</p><h2>மிகப்பெரிய பவர்பால் பரிசு</h2><p> </p><p>புதன்கிழமை நடந்த ஆட்டம், தற்போதைய ஜாக்பாட் தொடரில் நடைபெற்ற 44வது தொடர்ச்சியான குலுக்கலாகும், மேலும் அதன் பரிசுத்தொகை பவர்பால் வரலாற்றில் எட்டாவது பெரிய பரிசுத்தொகையாகப் பதிவாகியுள்ளது.</p><p> 2016-ல் 1.586 பில்லியன் டொலர் பவர்பால் பரிசைப் பிரித்துக்கொண்டதன் மூலம், புளோரிடா, கலிபோர்னியா மற்றும் டென்னசியைச் சேர்ந்த மூவர் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான ஜாக்பாட்டை வென்ற முதல் நபர்கள் ஆனார்கள். </p><p>பதிவுசெய்யப்பட்டதிலேயே மிகப்பெரிய பவர்பால் பரிசுத் தொகையான 2.04 பில்லியன் டொலர்கள் 2022-ல் கலிபோர்னியாவில் வெல்லப்பட்டது; கடந்த ஆண்டு ஆர்கன்சாஸில் வெல்லப்பட்ட 1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசு இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b418f82-c365-487f-8b3e-06bda943ebef/26-6a7e24b433dea.webp' /></p><p> </p><p>புளோரிடா, டெக்சாஸ் மற்றும் டென்னசி உள்ளிட்ட சில மாகாணங்கள் லொட்டரி பரிசுத்தொகைக்கு வரி விதிப்பதில்லை. பெரும்பாலான பவர்பால் மற்றும் பிற முக்கிய லொட்டரி வெற்றியாளர்கள், ஆண்டுத் தவணைகளை விட மொத்தத் தொகையையே தெரிவு செய்கின்றனர். </p><p>பவர்பால் சீட்டுகள் அமெரிக்காவின் 45 மாகாணங்கள், கொலம்பியா மாவட்டம், புவேர்ட்டோ ரிக்கோ, அமெரிக்க விர்ஜின் தீவுகள் மற்றும் பிரித்தானியா ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகின்றன. </p><p>குலுக்கல்கள் ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:59 மணிக்கு (ET) நடைபெறுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T03:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பைத் தொட்டியிலும்... ட்ரம்ப் விமானத்தை மாற்றியதை கேலி செய்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-mocks-trump-plane-switch-1786667223"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-mocks-trump-plane-switch-1786667223</id>
            <summary type="text">Iran Mocks Trump&#039;s Plane Switch: துருக்கி பயணத்தின்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது விமானத்தை ரகசியமாக மாற்றிக்கொண்டதை ஈரானின் அரசு ஊடகம் கேலி செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran Mocks Trump's Plane Switch: துருக்கி பயணத்தின்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது விமானத்தை ரகசியமாக மாற்றிக்கொண்டதை ஈரானின் அரசு ஊடகம் கேலி செய்துள்ளது.
</p><p>இஸ்லாமியக் குடியரசின் வலிமையைக் கண்டு அவர் எவ்வளவு பதற்றமடைந்துள்ளார் என்பதை இது காட்டுவதாகவும் கூறியுள்ளது.</p><h2>ராணுவ வலிமை</h2><p> </p><p>மீண்டும் ஒரு புதிய சர்ச்சையின் மூலம், தற்போதைய அமெரிக்க ஊடகங்களில் ட்ரம்ப் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளார். ஈரான் நாட்டின் ராணுவ வலிமை குறித்த அச்சத்திலிருந்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது; அந்த வலிமைதான்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/700dcfab-24b7-495a-a72e-05f430e9655d/26-6a7e60d98febb.webp' /></p><p> </p><p>கடந்த மாதம் துருக்கியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது ட்ரம்ப் தனது விமானத்தை ரகசியமாக மாற்றிக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியது என ஈரானிய செய்தி ஊடகம் குறிப்பிட்டுள்ளது. </p><p>ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் தோளில் வைத்துச் சுடும் ஏவுகணையால் குறிவைக்கப்படலாம் என்ற அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ரகசிய சேவைப் பிரிவு ட்ரம்ப்பை இரகசியமாக ஒரு சிறிய ராணுவ விமானத்திற்கு மாற்றியது என்ற தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. </p><p>ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கை காரணமாக பதற்றம் நிலவி வரும் சூழலில், நேட்டோ உச்சிமாநாட்டிற்காக அங்காராவுக்கு டிரம்ப் மேற்கொண்டிருந்த பயணத்தின் இறுதி நாளன்று இந்த அச்சுறுத்தல் உருவானதாக தகவல் கசிந்தது.</p><h2>அதிகாரிகள் அதிர்ச்சி</h2><p> </p><p>மேலும், அங்காராவில் ட்ரம்ப் தங்கியிருந்த ஹொட்டலின் சரியான தளம் உட்பட, அவர் எங்கு தங்கியிருந்தார் என்பது ஈரானியர்களுக்குத் தெரிந்திருந்தது கண்டு அமெரிக்க அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. </p><p>இந்த விவகாரம் தொடர்பில் ஈரான் அரசாங்கம் இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை. வெள்ளை மாளிகையும் விளக்கமளிக்கவில்லை.</p><p></p><p> </p><p>அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக அப்போது இருந்த ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரானின் புரட்சிகரப் படை உத்தரவிட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் தொடர்பாக, 2024-ல் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியது. </p><p>ஆனால், செப்டம்பர் 2024-ல் ஈரான் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது. இந்த நிலையிலேயே அச்சுறுத்தல் என்றால், குப்பைத் தொட்டியிலும் ட்ரம்ப் ஒளிந்துக் கொள்வார் என ஈரான் கேலி செய்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T00:24:46+00:00</updated>
        </entry>
    </feed>
