<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-19T17:40:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாபர் அஸாம் இல்லை..இங்கிலாந்தில் 171 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-all-out-for-171-vs-england-leeds-2026-1787156571"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-all-out-for-171-vs-england-leeds-2026-1787156571</id>
            <summary type="text">Pakistan all out for 171 vs england: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்களுக்கு சுருண்டது.

லீட்ஸில் நடந்து வரும் இங்கிலாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pakistan all out for 171 vs england: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
லீட்ஸில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களுக்கு சுருண்டது.&nbsp;</p><h2>இமாம் உல் ஹக் 42 ஓட்டங்கள்&nbsp;</h2><p>

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லீட்ஸில் இன்று தொடங்கியது. 

வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் அணியில் பாபர் அஸாம் விளையாடவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fab0962-f771-4883-ae74-350a93f692c6/26-6a85da5392ab7.webp' /></p><p></p><p>

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. 

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அஸான் அவைஸ் டக்அவுட் ஆனார். </p><p>ஷான் மசூத் 5 ஓட்டங்களில் வெளியேற, இமாம் உல் ஹக் 42 ஓட்டங்கள் எடுத்தார். 

சவுத் ஷகீல் 5 ஓட்டங்களிலும், அரைசதம் அடித்த அப்துல்லா ஷாஃபிக் 61 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஓலி ராபின்ஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். </p><p>

ஜோஷ் டங்கின் மிரட்டலான பந்துவீச்சில் சல்மான் ஆகா (21), மொஹம்மது ரிஸ்வான் (12) மற்றும் அலி உஸ்மான் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.&nbsp; &nbsp; </p><p>48.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஓலி ராபின்ஸன், ஜோஷ் டங் தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b39a0de1-103b-49af-be9c-439b843b7dc8/26-6a85da52ad192.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf2f897f-852e-40e6-8e97-5a79fd25d300/26-6a85da544a4e7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T16:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகம் மொத்தம் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... முதல் முறையாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/israel-confirms-fired-hind-rajab-1787156801"></link>
            <id>https://news.lankasri.com/article/israel-confirms-fired-hind-rajab-1787156801</id>
            <summary type="text">The Israeli military has confirmed for the first time: ஹிந்த் ரஜாப் கொல்லப்பட்ட கார் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை இஸ்ரேல் உறுதி செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Israeli military has confirmed for the first time: ஹிந்த் ரஜாப் கொல்லப்பட்ட கார் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.
</p><p>ஐந்து வயது பாலஸ்தீனச் சிறுமி ஹிந்த் ரஜாப் பயணித்த கார் மீது தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை இஸ்ரேலிய ராணுவம் முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>குற்றவியல் விசாரணை</h2><p>
</p><p>கடந்த 2024-இல் காஸாவில் தனது ஆறு உறவினர்களுடன் குறித்த சிறுமி கொல்லப்பட்டார். ஆரம்பத்தில் ரஜப் அந்தத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பி, உதவி கோரி வந்த ஒரு தொலைபேசி அழைப்பிற்குப் பதிலளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ab9d022-2a0a-437f-84fc-b1aff6e745fa/26-6a85d94510fe6.webp' /></p><p> </p><p>அந்த அழைப்பு பல மணி நேரம் நீடித்தது. இதனிடையே, இஸ்ரேலிய இராணுவத்துடன் ஒருங்கிணைந்து அவரைச் சென்றடைய அனுப்பப்பட்ட ஆம்புலன்ஸ் மீது பின்னர் குண்டுவீச்சு நடத்தப்பட்டது, இதில் இரண்டு மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். </p><p>கொல்லப்பட்ட மற்றவர்களுடன், சிறுமி ஹிந்தின் உடலும் சில நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில், 
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF), </p><p>ஹிந்த் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொலை குறித்தும், அத்துடன் மார்ச் 2025-ல் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஐ.நா. ஊழியர் உட்பட 15 பாலஸ்தீனியர்களின் கொலை குறித்தும் குற்றவியல் விசாரணை தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>சிறுமி ஹிந்த் ரிஜப் படுகொலையும் மருத்துவப் பணியாளர்கள் மீதான குண்டுவீச்சும் சர்வதேச அளவில் கண்டனத்தைப் பெற்றன. உலகம் மொத்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் ராணுவம் முதல் முறையாக தங்கள் பங்கை ஒப்புக்கொண்டுள்ளது. </p><p>சிறுமி ஹிந்த் கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) கூறுகையில், பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் வாகனத்தின் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குறைபாடுகள் காரணமாக, இச்சம்பவம் குறித்து இராணுவக் காவல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூலம் ஒரு குற்றவியல் விசாரணையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. </p><p>ஆனால், சிறுமி ஹிந்த் கொல்லப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் தங்கள் படையினர் யாரும் இல்லை என்றே இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) ஆரம்பத்தில் கூறியது. இருப்பினும், அந்தக் கூற்று விரைவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14189e8-8baf-4586-8def-65dacf725be4/26-6a85d943a2472.webp' /></p><p>
</p><p>சிறுமி ஹிந்த் குடியிருந்த டெல் அல்-ஹவா உள்ளிட்ட காஸா நகரத்தின் சுற்றுப்புறங்களில் இயங்கும் படைகளைக் கொண்டு, பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) பின்னர் விளக்கம் அளித்தது. </p><p>பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கத்தின் (PRCS) மருத்துவ உதவியாளர்களிடம் சிறுமி ஹிந்த் துயரத்துடனும் பதற்றத்துடனும் பேசிய ஒலிப்பதிவு உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, அவரது கொலை சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.</p><h2>தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்</h2><p>
</p><p>அன்று தொலைபேசியின் மறுமுனையில் கேட்ட ஹிந்தின் மெல்லிய குரல், அவளது இறப்பிற்குப் பிறகும் 'ரெட் கிரசண்ட்' (Red Crescent) பணியாளர்களின் நினைவை விட்டு நீங்காமல் இருந்தது. </p><p>தங்களது காருக்கு நேர் முன்னால் இஸ்ரேல் பீரங்கிகள் தங்களை நோக்கி நகர்ந்து வருவதை சிறுமி ஹிந்த் அப்போது விவரித்துக் கொண்டிருந்தார்.</p><p> இதனிடையே, செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர், தங்கள் ஆம்புலன்ஸை அந்த இடத்திற்குள் செல்ல அனுமதிக்குமாறு இஸ்ரேலிய இராணுவத்திடம் வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தபோது, ​​ஆபரேட்டர் ராணா ஃபகிஹ் பல மணிநேரம் ஹிந்துடன் தொலைபேசி இணைப்பில் இருந்தார். </p><p>மட்டுமின்றி, யாராவது வந்து தங்களை மீட்க வேண்டும் என்று அந்தச் சிறுமி தன்னிடம் மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டதாக ஃபகிஹ் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d1aee60-908b-47d1-ac97-ba9b0a15f50f/26-6a85d94454d63.webp' /></p><p> </p><p>சம்பவம் நடந்து மூன்று மணி நேரம் கழித்து அப்பகுதிக்குச் செல்ல ஒரு ஆம்புலன்ஸுக்கு இறுதியாக அனுமதி அளிக்கப்பட்டு, ஹிந்தை மீட்க அனுப்பி வைக்கப்பட்டது.&nbsp;
ஆனால் அந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீதும் இஸ்ரேல் இராணுவம் குண்டுவீச்சு நடத்தியது.</p><p>இச்சம்பவம் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' (The Voice of Hind Rajab) என்ற ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படமாக பின்னர் உருவாக்கப்பட்டது.</p><p> ஐ.நா. தனது விசாரணை ஆணையம் ஒன்றில் சிறுமி ஹிந்தின் வழக்கை மேற்கோள் காட்டி, இஸ்ரேல் மீது போர்க்குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சாட்டியது; ஆனால் இஸ்ரேல் அக்குற்றங்களை மறுத்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T16:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட கோட்டை: பாரிய செலவில் புனரமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/haverfordwest-castle-in-refurb-work-1787155175"></link>
            <id>https://news.lankasri.com/article/haverfordwest-castle-in-refurb-work-1787155175</id>
            <summary type="text">Haverfordwest castle in refurb work: வேல்ஸில் 800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட கோட்டை புனரமைக்கப்பட உள்ளது.

வேல்ஸில் 800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Haverfordwest castle in refurb work: வேல்ஸில் 800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட கோட்டை புனரமைக்கப்பட உள்ளது.
</p><p>
வேல்ஸில் 800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட கோட்டை ஒன்றை, முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்ற பாரிய அளவில் செலவு செய்யப்பட உள்ளது.</p><h2>800 ஆண்டுகள் பழமையான&nbsp;கோட்டை </h2><p>

வேல்ஸில் உள்ள பெம்ப்ரோஷையரில் Cleddau நதியின் அருகேயுள்ள குன்றின் உச்சியில் Haverfordwest கோட்டை அமைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b81f2cb2-c52d-45d4-807f-3ed2bf7add60/26-6a85d3b9367c0.webp' />&nbsp;</p><p></p><p>

1188-ஆம் ஆண்டில் இந்தக் கோட்டை வெறும் மரம் மற்றும் மண்ணால் கட்டப்பட்டது.

800 ஆண்டுகள் பழமையான இந்தக் கோட்டை, பல ஆண்டுகளாக நடந்த பல்வேறு போர்கள் மற்றும் சண்டைகளில் இருந்து தப்பிப் பிழைத்தது.
</p><p>
என்றாலும், இதன் உள் முற்றம் மற்றும் சுற்றுச்சுவரின் எலும்புக்கூடும், பல கோபுரங்களும் இன்னும் எஞ்சியுள்ளன. சிதைந்த காரணத்தால் இக்கோட்டை கைவிடப்பட்டது.</p><p>

இந்த நிலையில், இதனை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்காக, பெம்ப்ரோஷையர் கவுண்டி கவுன்சிலின் நிதியுதவியுடன் 17.7 மில்லியன் பவுண்ட் செலவிடப்படுகிறது. </p><p>

மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்போது ஹேவர்ஃபோர்ட்வெஸ்ட் கோட்டை பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று டைம் அவுட் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4c481fb-f93e-43d4-b53e-7dd2bff041c0/26-6a85d3b8711fe.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T16:00:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[103 போர்க் கைதிகள் பரிமாற்றம்: வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-and-ukraine-exchange-103-prisoners-1787149587"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-and-ukraine-exchange-103-prisoners-1787149587</id>
            <summary type="text">Russia and Ukraine exchange 103 prisoners: உக்ரைனுடன் தலா 103 போர்க் கைதிகளை பரிமாறிக்கொண்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia and Ukraine exchange 103 prisoners: உக்ரைனுடன் தலா 103 போர்க் கைதிகளை பரிமாறிக்கொண்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஐக்கிய அரபு அமீரகத்தின் சமரசத்தைத் தொடர்ந்து ரஷ்யாவும், உக்ரைனும் தலா 103 போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொண்டன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>103 போர்க் கைதிகள்</h2><p>

அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவர் சமரச பேச்சுவார்த்தை மூலம் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நூற்றுக்கணக்கான போர்க் கைதிகளை விடுவித்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c7bc9b9-1620-4f36-a1d9-37c6a5f83af7/26-6a85bd161df78.webp' />&nbsp;</p><p></p><p>

அந்த வகையில், தற்போது 103 போர்க் கைதிகளை இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
</p><p>
அப்போது தனது உக்ரேனிய இணையான டிமிட்ரோ லுபினெட்ஸை சந்தித்ததாக ரஷ்யாவின் மனித உரிமைகள் ஆணையர் யானா லான்ட்ராடோவா தெரிவித்தார்.&nbsp;</p><h2>உக்ரைன் உறுதிப்படுத்தவில்லை</h2><p> 

பெலாரஸில் நடைபெற்ற லுபினெட்ஸ் உடனான சந்திப்பின் புகைப்படங்களையும், காணொளிகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
</p><p>

போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கும் இடையே ஜூன் மாதத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் கைதிகள் பரிமாற்றம் இதுவாகும். ஆனால், உக்ரைன் இதனை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை. </p><p>

அதே சமயம் ரஷ்ய இராணுவம், புதன்கிழமை விடுவிக்கப்பட்ட தங்கள் நாட்டு இராணுவ வீரர்கள் தற்போது பெலாரஸில் இருப்பதாகவும், அங்கு அவர்களுக்கு மருத்துவ மற்றும் மனநல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c7b2136-7e68-4a88-a1e7-8f7e9b8721bc/26-6a85bd16d75de.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T14:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scotland-mp-martyn-day-married-kerala-women-1787147669"></link>
            <id>https://news.lankasri.com/article/scotland-mp-martyn-day-married-kerala-women-1787147669</id>
            <summary type="text">கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் வைத்து கேரள பெண்ணை ஸ்காட்லாந்து எம்.பி திருமணம் செய்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல்

கேரள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் வைத்து கேரள பெண்ணை ஸ்காட்லாந்து எம்.பி திருமணம் செய்துள்ளார்.
</p><h3>
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல்</h3><p>

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பம்பக்குடாவைச் சேர்ந்த நிதின் சந்த்(nitin chand) என்பவர், 2008 ஆம் ஆண்டில் மாணவர் விசா மூலம் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தார். </p><p>

அங்கு, அரசாங்கத்தின் குடிவரவு விதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவரது விசா ரத்து செய்யப்பட்டது.</p><p>விசா தொடர்பான பிரச்சினைகளுக்காக 2016 ஆம் ஆண்டில், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மார்ட்டின் டே(martyn day) என்பவரை நிதின் சந்தித்து இது குறித்து பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2984bba-7f56-48a2-ad4a-8db86433c9c1/26-6a85b5976db2c.webp' /></p><p>

அப்போதே நிதின் மீது மார்ட்டின் டேவிற்கு காதல் மலர்ந்துள்ளது.
</p><p>
தான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர், தனக்கு 12 வயதில் ஒரு குழந்தை உள்ளது என நிதின் சந்த் தெரிவித்த நிலையிலும் மார்ட்டின் டே இதில் உறுதியாகி இருந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

இதனையடுத்து, மார்ட்டின் டேயின் பெற்றோர்கள் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் அவர்கள் பிரித்தானியாவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். </p><p>

குருவாயூரப்பனின் தீவிர பக்தையான நிதின் சந்த், தனது திருமணம் குருவாயூர் கோவிலில் நடைபெற வேண்டும் என்று நீண்ட காலமாகப் பிரார்த்தனை செய்து வந்துள்ளார். </p><p>

விசா நடைமுறை காரணமாக அப்போது செல்ல முடியவில்லை. அதன் பிறகு 3 முறை இந்த தம்பதிகள் குருவாயூருக்கு வந்தும் திருமணம் செய்யும் சூழல் அமையவில்லை.</p><h3> 

கேரள பெண்ணை மணந்த ஸ்காட்லாந்து எம்.பி
</h3><p>
இந்நிலையில், தற்போது கேரளாவிற்கு இந்த தம்பதி வந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 16 ஆம் திகதி கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் வைத்து 55 வயதான மார்ட்டின் டே, 49 வயதான நிதின் சந்திற்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2059c6ed-54b8-43c6-a641-4f5782a3fa82/26-6a85b598c5911.webp' /></p><p>

இந்த திருமணத்தில், நிதின் சந்திராவின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த 22 வயது மகன் வேதிக் சங்கரும் உடனிருந்தார். </p><p>

மேலாண்மை ஆலோசகராக பணியாற்றும் நிதின், தன் கணவருடன் இணைந்து ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.</p><p>கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில், ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி (SNP) சார்பில் ஃபால்கிர்க் கிழக்கு மற்றும் லின்லித்கோ தொகுதியில் போட்டியிட்ட மார்ட்டின் டே, 14,465 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ba8888-eabf-44be-9aba-a433a3670f68/26-6a85b5981fea0.webp' /></p><p>

மார்ட்டின் டே மலையாள மொழியை கற்கவும், கேரள பாரம்பரியத்தை புரிந்து கொள்ளவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T13:54:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை: முத்தரப்பு தொடர் அட்டவணை வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/schedule-out-of-sri-lanka-england-pakistan-series-1787145805"></link>
            <id>https://news.lankasri.com/article/schedule-out-of-sri-lanka-england-pakistan-series-1787145805</id>
            <summary type="text">Sri Lanka tour of pakistan tri-series: இலங்கை, இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளன.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sri Lanka tour of pakistan tri-series: இலங்கை, இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளன.
</p><p>
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள முத்தரப்பு தொடரின் அட்டவணை வெளியாகியுள்ளது.&nbsp;</p><h2>முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர்&nbsp;</h2><p>

இலங்கை, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபரில் நடைபெற உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/107a2515-76db-4e43-8769-6b14ce30bbad/26-6a85af7d5917c.webp' /></p><p></p><p>

பாகிஸ்தானின் மைதானங்களில் நடைபெற உள்ள இந்தத் தொடரில் பங்கேற்க இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன. </p><p>

அக்டோபர் 18-ஆம் திகதி தொடங்கி, 31-ஆம் திகதி வரை மொத்தம் 7 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaf6e3d1-896b-4bf5-84cb-9a1b39fc8c73/26-6a85af7e274c1.webp' /></p><p><b>
போட்டி அட்டவணை:</b></p><ul><li> 

பாகிஸ்தான் vs இலங்கை - அக்டோபர் 18 (ராவல்பிண்டி)</li><li> பாகிஸ்தான் vs இங்கிலாந்து - அக்டோபர் 20 (ராவல்பிண்டி)</li><li> 
இலங்கை vs இங்கிலாந்து - அக்டோபர் 22 (ராவல்பிண்டி) </li><li>
பாகிஸ்தான் vs இங்கிலாந்து - அக்டோபர் 25 (கடாஃபி) </li><li>

பாகிஸ்தான் vs இலங்கை - அக்டோபர் 27 (கடாஃபி)
</li><li>இலங்கை vs இங்கிலாந்து - அக்டோபர் 29 (கடாஃபி) </li><li>

இறுதிப்போட்டி - அக்டோபர் 31 (கடாஃபி)&nbsp; &nbsp; &nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3dc6774-e15e-4608-b885-6f89633c434e/26-6a85af7ee568b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T13:25:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாறும் வானிலை... பிரித்தானியாவில் கொட்டித் தீர்க்க இருக்கும் மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/climate-change-leads-to-chance-heavy-rain-in-uk-1787141892"></link>
            <id>https://news.lankasri.com/article/climate-change-leads-to-chance-heavy-rain-in-uk-1787141892</id>
            <summary type="text">Heavy rain and thunderstorms set to batter Britain: பிரித்தானியாவை மழையும் புயலும் புரட்டி எடுக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Heavy rain and thunderstorms set to batter Britain: பிரித்தானியாவை மழையும் புயலும் புரட்டி எடுக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.</p><p>

ஐரோப்பிய நாடுகள் பலவற்றை வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், பிரித்தானியா இடி மின்னலுடன் மழையை எதிர்கொள்ள இருக்கிறது.
</p><h3>
மாறும் வானிலை...
</h3><p>
ஆம், வரும் நாட்களில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மாலை 7.00 மணி முதல் நாளை காலை 10.00 மணி வரை பல பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f112e5d-7a6a-4ca1-914c-25cd51340104/26-6a859f058f5e5.webp' /></p><p>
மழை, இடி மின்னலுடன் கனமழை மற்றும் மழையின் காரணமாக திடீர் வெள்ளம், இவற்றால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஆகிய விடயங்கள் எதிர்பார்க்கப்படுவதாலேயே, மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
என்றாலும், பிரித்தானியாவில் கடும் வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், இந்த மழை உடனடியாக வறட்சியை தீர்த்துவிடப்போவதில்லை என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T12:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் நீட்டித்துள்ள ஜேர்மனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-extends-border-control-1787141539"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-extends-border-control-1787141539</id>
            <summary type="text">Germany extends border controls: ஜேர்மனி எல்லைக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

ஜேர்மனி, எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany extends border controls: ஜேர்மனி எல்லைக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
</p><p>
ஜேர்மனி, எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><h3>
எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிப்பு
</h3><p>
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்காகவும் பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டும், ஜேர்மனி எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் டொப்ரிண்ட் (Alexander Dobrindt) தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4c2a3fa-5f31-4717-a11c-7d46f5807026/26-6a859da4c80cd.webp' /></p><p>

ஏற்கனவே அமுலிலிருக்கும் ஜேர்மன் எல்லைக் கட்டுப்பாடுகள் செப்டம்பர் நடுப்பகுதியில் முடிவடைய இருக்கும் நிலையில், 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் நடுப்பகுதி வரை அவை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், ஐரோப்பாவின் எல்லைப் பகுதிகளில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைகளில் ஏற்படும் திடீர் குடியேற்ற அழுத்தங்கள் போன்ற காரணங்களாலேயே ஜேர்மனி இந்த முடிவை எடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p>
ஜேர்மனி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், தனது அனைத்து நில எல்லைகளிலும் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T12:12:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய கடல் பகுதியில் 90 ஆண்டுகளில் முதல் முறையாக..746 பவுண்டு எடைகொண்ட மீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scientists-explain-reason-of-bluefin-tuna-uk-sea-1787140621"></link>
            <id>https://news.lankasri.com/article/scientists-explain-reason-of-bluefin-tuna-uk-sea-1787140621</id>
            <summary type="text">Scientists explain reason of bluefin tuna in uk sea: பிரித்தானிய கடல் பகுதிக்கு நீலத்துடுப்பு சூரை மீண்டும் வந்துள்ளது குறித்து விஞ்ஞானிகள் வெளிப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Scientists explain reason of bluefin tuna in uk sea: பிரித்தானிய கடல் பகுதிக்கு நீலத்துடுப்பு சூரை மீண்டும் வந்துள்ளது குறித்து விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p>90 ஆண்டுகளில் முதன்முறையாக பிரித்தானியாவின் வட கடலில் 746 பவுண்டு எடையுள்ள பிரம்மாண்ட மீன் பிடிக்கப்பட்டது குறித்து விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><h2>பிரம்மாண்டமான மீன்&nbsp;</h2><p>
பிரித்தானிய வட கடல் பகுதியில் 746 பவுண்டு (338 கிலோ) எடைகொண்ட ஒரு பிரம்மாண்டமான மீன் பிடிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a9a4bb2-9ba2-4956-865b-ae00449d47b1/26-6a859b13ecae4.webp' /></p><p></p><p>

1939-ஆம் ஆண்டிற்குப் பிறகு யார்ஷையர் விட்பி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட முதல் நீலத்துடுப்பு சூரை மீன் இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
</p><p>
இந்த வகை மீன்கள், மணிக்கு 43 மைல் வேகத்தை எட்டக்கூடியவை மற்றும் இவை பொதுவாக அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் மிதவெப்ப மண்டல நீரில் காணப்படுகிறது. </p><p>

கடல் வெப்பமடைதல் மற்றும் கடுமையான மீன்பிடி கட்டுப்பாடுகள் ஆகியவை இந்த மாபெரும் வேட்டையாடும் மீன்களை எவ்வாறு மீண்டும் கொண்டு வந்துள்ளன என்பதை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.&nbsp;</p><h2>பெருமளவில் திரும்பி வந்துள்ளன</h2><p>

ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இந்த இனம் தென்மேற்குப் பகுதி கடற்பரப்புகளுக்கு பெருமளவில் திரும்பி வந்துள்ளன; டெவோன் மற்றும் கார்ன்வால் கடற்பரப்புகள் 'சூரை மீன்களால்' நிரம்பி வழிகின்றன. </p><p>

இப்போது, இது வட கடலிலும் செழித்து வளர்வதாகத் தெரிகிறது - மேலும் இதற்கு வெப்பமான கடல் நீரே ஒரு பகுதி காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e5d5ed5-da0d-47c8-a838-ce75b44eb8c5/26-6a859b14c28a0.webp' /></p><p>

அதேபோல், உயர்ந்து வரும் கடல் வெப்பநிலை மற்றும் அடிக்கடி ஏற்படும் கடல் வெப்ப அலைகள், ஐக்கிய இராச்சியத்தின் கடற்பரப்புகளை இந்த மீன்களுக்கு மிகவும் பொருத்தமானதாக மாற்றுவதாகத் தெரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். </p><p>

நீலத்துடுப்பு சூரை மீன்களின் பரவல் குறித்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய கிரேஸ் மெக்நிக்கோலஸ் கூறுகையில், 

"எதிர்பார்த்ததை விட இந்த மீன்கள் மேலும் வடக்கே நகர்கின்றன என்பதற்கான ஆரம்ப அறிகுறிகளை எங்கள் முடிவுகள் வழங்குகின்றன. மேலும், இது கடல் வெப்பமடைவதால் ஏற்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b969b13c-c42b-46a0-b51f-07a228c8c824/26-6a859b15742fd.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:58:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் மாநில முதல்வர்கள் மாநாடு - துணைத்தலைவராக முதலமைச்சர் விஜய் தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-selects-as-vice-chairman-of-south-zone-cm-1787140677"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-selects-as-vice-chairman-of-south-zone-cm-1787140677</id>
            <summary type="text">vijay as vice chairman of south zone cm: தென் மண்டல மாநில முதல்வர்கள் குழுவின்துணைத்தலைவராக தமிழ்நாடு முதல்வர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>vijay as vice chairman of south zone cm: தென் மண்டல மாநில முதல்வர்கள் குழுவின்துணைத்தலைவராக தமிழ்நாடு முதல்வர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். </p><h3>

தென் மாநில முதல்வர்கள் மாநாடு
</h3><p>
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை சென்னை கோவளத்தில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bae8a89-e4d2-4c37-8eaf-d3e18a6d1644/26-6a859a46e82f9.webp' /></p><p>
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் வி.டி.சதீசன், தெலங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். </p><p>

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பதிலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொள்கிறார்.&nbsp;</p><p>

இந்த மாநாட்டில் ஒவ்​வொரு மாநிலங்​களுக்கு இடையே​யான ஒத்​துழைப்​பு, பொருளா​தார வளர்ச்​சி, தொழில் முதலீடு​கள், கூட்​டுறவைப் பலப்​படுத்​து​வது, நீர்​வளப் பகிர்​வு, குற்​றங்​கள் தடுப்​பு, எல்​லைப் பிரச்சி​னை​கள் உள்ளிட்ட பல்​வேறு முக்​கிய விவ​காரங்​கள் குறித்து ஆலோ​சனை நடத்​தப்பட உள்​ளது.&nbsp;</p><p></p><p>
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று மாலை 6 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். </p><p>

நாளை காலை 10 மணிக்கு தொடங்கி 3 மணி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாலை 3.30 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் மத்திய அமைச்சர் அமித் ஷா வழிபாடு செய்துவிட்டு டெல்லிக்கு திரும்புகிறார்.</p><h3> 

துணைத்தலைவராக முதலமைச்சர் விஜய்
</h3><p>
காவேரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல இருந்த நிலையில், போராட்டம் காரணமாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கேட்டுக்கொண்டதன் பேரில் அந்த பயணத்தை முதல்வர் ரத்து செய்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a48c2524-8385-4bc7-8a6a-dcb900c846a8/26-6a859a47a0d60.webp' /></p><p>

தற்போது கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் சென்னை வரும் நிலையில், இரு மாநில முதல்வர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனவும், கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்தும் முதல்வர் விஜய் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்த தெற்கு மண்டல குழுவிற்கான தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், துணைத்தலைவராக முதல்வர் விஜய்யும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:58:26+00:00</updated>
        </entry>
    </feed>
