<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-11T09:39:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[யூடியூப் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி - இரட்டிப்பாக்கப்பட்ட தகுதி வரம்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/youtube-doubled-eligibility-for-monetization-1786439871"></link>
            <id>https://news.lankasri.com/article/youtube-doubled-eligibility-for-monetization-1786439871</id>
            <summary type="text">youtube increase monetization eligibility : யூடியூப்பில் வருமானம் ஈட்டுவதற்கான தகுதி வரம்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது புதிய யூடியூப் படைப்பாளர்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>youtube increase monetization eligibility : யூடியூப்பில் வருமானம் ஈட்டுவதற்கான தகுதி வரம்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது புதிய யூடியூப் படைப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><h3>
யூடியூப்பில் உயர்த்தப்பட்ட தகுதி வரம்பு
</h3><p>
யூடியூப் தளம் மூலம், உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வருமானம் ஈட்டி வருகின்றனர். </p><p>

கடந்த 4 ஆண்டுகளில், 100 பில்லியன் டொலர்களை கலைஞர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு வழங்கியுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45d16b3c-e688-49c5-9b0f-1ea0ebc4274c/26-6a7ae8c0e05b1.webp' /></p><p>

இதில் வருமானம் பெறுவதற்கான தகுதி வரம்பாக 1000 சந்தாதாரர்களை பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது. </p><p>

மேலும், வீடியோக்களுக்கு 4,000 மணி நேரம் பார்வை நேரம் மற்றும் ஷார்ட் வீடியோக்களுக்கு 90 நாட்களில் 10 மில்லியன் பார்வைகள் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி வரம்பு உள்ளது. </p><p>

தற்போது, அதனை 2 மடங்காக உயர்த்தி 4,000 மணி நேரம் பார்வை நேரம் மற்றும் 20 மில்லியன் பார்வைகள் என தகுதி வரம்பை உயர்த்தி உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>அதேவேளையில், 1000 சந்தாதாரர்கள் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.</p><p>

இந்த புதிய தகுதி வரம்பு, பிப்ரவரி 2027 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வர உள்ளது.</p><p>
இது புதிய யூடியூப் படைப்பாளர்களுக்கு வருமானம் ஈட்ட தகுதி பெறுவதில் பாரிய சிக்கலாக அமையும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அச்சுறுத்தலால் ரகசிய விமானத்தில் பறந்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-flew-secretly-amid-iran-threat-1786438975"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-flew-secretly-amid-iran-threat-1786438975</id>
            <summary type="text">Trump Flew Secretly Amid Iran Threat: ஈரான் அச்சுறுத்தலால் ட்ரம்ப் ரகசியமாக சிறிய விமானத்தில் பயணித்தது தெரியவந்துள்ளது.

ஈரான் அச்சுறுத்தலின் காரணம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Flew Secretly Amid Iran Threat: ஈரான் அச்சுறுத்தலால் ட்ரம்ப் ரகசியமாக சிறிய விமானத்தில் பயணித்தது தெரியவந்துள்ளது.</p><h2>

ஈரான் அச்சுறுத்தலின் காரணமாக...</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்குப் பிறகு, ஈரான் சார்ந்த கொலை அச்சுறுத்தலின் காரணமாக, வழக்கமான Air Force One விமானத்தில் அல்லாமல், சிறிய Air Force C-32A விமானத்தில் ரகசியமாக புறப்பட்டார்.</p><p>

மிகுந்த பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cddaaed-37b4-4d69-a1ce-f0cde4612975/26-6a7ae54145cda.webp' /></p><h2>கேட்டரிங் லொறி மூலம் மறைமுகமாக..</h2><p>ஊடகங்களும், சில வெள்ளை மாளிகை அதிகாரிகளும் ட்ரம்ப் பழைய Air Force One-இல் புறப்பட்டதாக நம்பினர். ஆனால் உண்மையில், அவர் விமான நிலையத்தில் உள்ள கேட்டரிங் லொறி மூலம் மறைமுகமாக சிறிய விமானத்திற்கு மாற்றப்பட்டார்.
</p><p>
புதிய Air Force One (Qatar வழங்கிய விமானம்) மாநாட்டில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அச்சுறுத்தல் காரணமாக அதைப் பயன்படுத்தாமல், பாதுகாப்பான திட்டம் வகுக்கப்பட்டது.</p><p> </p><p></p><p>ஊடகங்களுக்கு “ஜன்னல் திரைகளை மூடிக்கொள்ளுங்கள்” என அறிவுறுத்தப்பட்டதால், அவர்கள் உண்மையான விமானத்தை அறிய முடியவில்லை.
</p><p>
ட்ரம்ப் புறப்பட்ட சிறிய விமானம் இரவு 10.20 மணிக்கு பிரித்தானியாவில் தரையிறங்கியது. சில நிமிடங்களுக்குப் பிறகு, ஊடகங்களை ஏற்றிச் சென்ற பழைய Air Force One தரையிறங்கியது.
</p><p>
இது அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றத்தை வெளிப்படுத்தும் சம்பவமாகும். ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக வெள்ளை மாளிகை மேற்கொண்ட இந்த ரகசிய நடவடிக்கை, உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T09:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 நோயாளிகளைக் கொன்ற செவிலியர்: நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கலாம் என அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-nurse-probed-for-kills-dozens-of-patients-1786436432"></link>
            <id>https://news.lankasri.com/article/german-nurse-probed-for-kills-dozens-of-patients-1786436432</id>
            <summary type="text">ஜேர்மனியில் செவிலியர் ஒருவர் 10 நோயாளிகளைக் கொன்றதாக சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கலாம் என அச்சம் உரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் செவிலியர் ஒருவர் 10 நோயாளிகளைக் கொன்றதாக சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கலாம் என அச்சம் உருவாகியுள்ளது.</p><p>


செவிலியர் ஒருவர் ஒருவர் 10 நோயாளிகளைக் கொன்றதாக கடந்த நவம்பர் மாதம் சிறையிலடைக்கப்பட்டார்.
</p><p>
இந்நிலையில், சுமார் 139 நோயாளிகள் வழக்குகளுடன் அந்த செவிலியருக்கு தொடர்பிருக்கலாம் என அச்சம் உருவாகியுள்ளது.</p><h3>

செவிலியரின் கொடூர செயல்</h3><p>

தனக்கு வேலைப்பளு அதிகமாக இருந்ததால், தன் கண்காணிப்பின் கீழிருக்கும், மிகவும் வயதான நோயாளிகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார் செவிலியர் ஒருவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88288e75-511c-4858-87e3-f8b52604254e/26-6a7adb5228963.webp' /></p><p>
Aachen நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவந்த Ulrich S என்னும் அந்த செவிலியர், இரவு ஷிஃப்டின்போது நிறைய நோயாளிகளைக் கவனிக்கவேண்டியிருந்ததால், அவர்களுடைய உடலில், குளூக்கோஸ் ஏற்றும் குழாய் மூலம் மயக்க மருந்துகள் அல்லது வலி நிவாரணிகளை எக்கச்சக்கமாக ஏற்றியுள்ளார்.
</p><p>
அதில், பல நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள். சிலர் உயிர் தப்பிவிட்டார்கள்.
</p><p>
அவ்வகையில், 10 நோயாளிகளைக் கொன்றதாகவும், 27 நோயாளிகளைக் கொலை செய்ய முயன்றதாகவும் கடந்த நவம்பரில் சிறையில் அடைக்கப்பட்டார் Ulrich.
</p><p>
இந்நிலையில், மேலும் 121 நோயாளிகள் வழக்குகளுடன் Ulrichக்கு தொடர்பிருக்கலாம் என தற்போது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
அது தொடர்பில், சுமார் 40 நோயாளிகளின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p>
விடயம் என்னவென்றால், இந்த Ulrich, Aachen நகரிலுள்ள மருத்துவமனையில் பணியாற்றும் முன், Cologne நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றிலும் பணியாற்றிவந்துள்ளார்.
</p><p>
ஆக. அந்த மருத்துவமனையிலும் 18 நோயாளிகள் உயிரிழந்த வழக்குகளிலும் Ulrichக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கும் அதிகாரிகள் அந்த வழக்குகள் தொடர்பிலும் விசாரணை துவக்கியுள்ளார்கள்.
</p><p>
ஆக, சுமார் 139 நோயாளிகள் வழக்கில் Ulrich சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
</p><p>
ஜேர்மனியைப் பொருத்தவரை, குற்றவாளிகள் 15 ஆண்டுகள் சிறையில் செலவிட்டபின், தங்களுக்கு ஜாமீன் வழங்க, அல்லது முன்கூட்டியே தங்களை விடுவிக்கக் கோரலாம்.
</p><p>
ஆனால், Ulrich, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர் ஏற்கனவே சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகளும் சேர்ந்து, அவர் 15 ஆண்டுகள் ஆனாலும் ஜாமீனில் வெளிவரமுடியாத அல்லது முன்கூட்டியே விடுவிக்கப்பட முடியாத நிலையை உருவாக்கலாம் என கருதப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T08:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் லண்டனில் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-shot-outside-of-pub-in-london-1786436241"></link>
            <id>https://news.lankasri.com/article/man-shot-outside-of-pub-in-london-1786436241</id>
            <summary type="text">லண்டனில் உள்ள மதுபானவிடுதிக்கு வெளியே கும்பல் தாக்குதலில்ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள மதுபானவிடுதி ஒன்றுக்கு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் உள்ள மதுபானவிடுதிக்கு வெளியே கும்பல் தாக்குதலில்ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். </p><p>

இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள மதுபானவிடுதி ஒன்றுக்கு வெளிய, பொதுமக்களின் கண்முன்னே நடந்ததாக சந்தேகிக்கப்படும் கும்பல் தாக்குதலில், நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.&nbsp;</p><h2>கிளாபம்</h2><p> 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் விரும்பத்தக்க இடமாக இருப்பது கிளாபம். இங்கு பல செல்வந்த குடியிருப்பாளர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் வசிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39937ee1-69ef-441d-814a-ed646acb18b2/26-6a7ada94868d8.webp' /></p><p></p><p>
திங்கட்கிழமை இரவு, கிளாபம் (Clapham) நார்த் பகுதியில் உள்ள லேண்டார் மதுபான விடுதிக்கு வெளியே, அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.</p><p>

கும்பல் தாக்குதலில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். கொல்லப்பட்டவர் 25 வயது இளைஞர் என்று நம்பப்படுகிறது. </p><h2>மூன்று துப்பாக்கிச்சூடு சத்தங்கள் </h2><p>

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும், மருத்துவ உதவியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
</p><p>
இந்த நிலையில், இன்று காலை தடயவியல் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதால், அந்தத் தெரு மூடப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் நடந்த அன்று, சுமார் 10 மணியளவில் மூன்று துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்டதாக நேரில் கண்டவர்களும், குடியிருப்பாளர்களும் பீதியுடன் தெரிவித்தனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fed7cdaf-beaf-4479-8152-b6e68d7632b0/26-6a7ada93d063a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T08:15:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்த 5 நாட்களில் ஆதார் பெற்று உலக சாதனை படைத்த குழந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karnataka-baby-record-by-get-aadhaar-in-5-days-1786435505"></link>
            <id>https://news.lankasri.com/article/karnataka-baby-record-by-get-aadhaar-in-5-days-1786435505</id>
            <summary type="text">baby record by get aadhaar in 5 days : கர்நாடகாவை சேர்ந்த குழந்தை பிறந்த 5 நாட்களில் ஆதார் அட்டை பெற்று உலக சாதனை படைத்துள்ளது.

பிறந்த 5 நாட்களில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>baby record by get aadhaar in 5 days : கர்நாடகாவை சேர்ந்த குழந்தை பிறந்த 5 நாட்களில் ஆதார் அட்டை பெற்று உலக சாதனை படைத்துள்ளது.</p><h3>

பிறந்த 5 நாட்களில் ஆதார் பெற்ற குழந்தை </h3><p>

கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம் கங்காவதிக்கு அருகே உள்ள ஸ்ரீராம்நகரை சேர்ந்தவர்கள் மருத்துவர்கள் ஏ.பவன் குமார் மற்றும் வரலட்சுமி பாலா தம்பதி.</p><p> 

இந்த தம்பதிக்கு கடந்த மே 1 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அஞ்சூரி ராயங்கா திரிநயனி என பெயரிட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9806c97-9289-4a74-a4e2-c8d939a1a1aa/26-6a7ad7b339c54.webp' /></p><p>
குழந்தை பிறந்த சில நாட்களில், பிறப்பு சான்றிதழை பெற்றதுடன், மே 6 ஆம் திகதி அதனை வைத்து ஆதாருக்கு விண்ணப்பித்துள்ளனர். </p><p>

இந்த ஆவணங்களை சரிபார்த்த மத்திய அரசின் UDI, குழந்தைக்கான ஆதார் அட்டைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p>
இதன்மூலம், இந்தியாவில் ஆதார் அட்டை பெறும் மிக இளயை குழந்தை என்ற சாதனையை அஞ்சூரி ராயங்கா படைத்தது. </p><p>

இதற்காக international book of records என்ற நிறுவனம், குழந்தைக்கு உலக சாதனை பதக்கமும், சான்றிதழும் வழங்கி கௌரவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
முன்னதாக குழந்தை பிறந்து 15 நாட்களுக்கு பிறகு ஆதார் கார்டு பெறப்பட்டதே உலக சாதனையாக இருந்த நிலையில், தற்போது 5 நாட்களில் ஆதார் பெற்று இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்தியாவில் தற்போது பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 'பால்தார்' எனப்படும் நீல நிற ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. </p><p>

இதனை பெற குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர் ஒருவரின் ஆதார் அட்டை போதுமானது. </p><p>குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயது பூர்த்தியாகும் போது, அவர்களின் கைரேகை மற்றும் கண்விழி ரேகையைப் புதுப்பிக்க வேண்டும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T08:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனி: 1,800 பாக்சர் கவச வாகனங்கள்- வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-signs-25-billion-euro-boxer-vehicle-deal-1786434410"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-signs-25-billion-euro-boxer-vehicle-deal-1786434410</id>
            <summary type="text">Germany signs 25 billion euro boxer vehicle deal: ஜேர்மனி 25 பில்லியன் டொலர் மதிப்பில் 1,800 பாக்சர் கவச வாகனங்களை வாங்கவுள்ளது.

வரலாற்றிலேயே மிகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany signs 25 billion euro boxer vehicle deal: ஜேர்மனி 25 பில்லியன் டொலர் மதிப்பில் 1,800 பாக்சர் கவச வாகனங்களை வாங்கவுள்ளது.
</p><h2>
வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம்</h2><p>ஜேர்மனி தனது தரைப்படை திறனை விரைவாக மேம்படுத்தும் நோக்கில், வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது.</p><p>

“அர்மினியஸ்” (Arminius) திட்டத்தின் கீழ், சுமார் 1,800 பாக்சர் (Boxer) கவச வாகனங்களை வாங்கும் ஒப்பந்தம் 25 பில்லியன் யூரோ மதிப்பில் கையெழுத்தாக உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/201f1a24-092e-472e-a6bc-6c4f6df9da0f/26-6a7ad36c74bdd.webp' /></p><p>இந்த வாகனங்கள் பல்வேறு போர் தேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன. அதில் படைவீரர் போக்குவரத்து வாகனங்கள், கட்டளை-கட்டுப்பாட்டு வாகனங்கள், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள், 155mm சக்கர ஹவிட்சர்கள், மருத்துவ அவசர வாகனங்கள், பாலம் அமைக்கும் வாகனங்கள், பயிற்சி வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
</p><p>
பாக்சர் வாகனங்கள் 8x8 சக்கர அமைப்புடன், “டிரைவ் மாட்யூல்” மற்றும் “மிஷன் மாட்யூல்” எனும் இரண்டு பகுதிகளைக் கொண்டவை. இதனால், ஒரே வாகனத்தை பல்வேறு போர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியும்.
</p><p></p><p>இந்த ஒப்பந்தம் 2026 டிசம்பரில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>மேலும், 2030-2035 காலப்பகுதியில் கூடுதல் வாகனங்களை வாங்கும் விருப்பமும் உள்ளது. இதனால், திட்டத்தின் மொத்த மதிப்பு 50 பில்லியன் யூரோவைத் தாண்டும் வாய்ப்பு உள்ளது.
</p><p>
இத்திட்டத்தில் ரெய்ன்மெட்டல் (Rheinmetall) நிறுவனம் முக்கிய பங்காற்றவுள்ளது. வாகன பராமரிப்பு மற்றும் சேவை ஒப்பந்தம் தனியாக 4 பில்லியன் யூரோ மதிப்பில் கையெழுத்தாகும்.
</p><p>
இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், ஜேர்மன் இரானுவத்தின் திறன் மிகுந்தளவில் விரிவடையும். பாக்சர் வாகனங்கள் எதிர்காலத்தில் ஜேர்மனியின் முக்கியமான போர் தளவாடமாக மாறும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T07:44:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டப்ஸ், ஸ்டோய்னிஸின் ருத்ரதாண்டவம்: வெற்றியுடன் வெளியேறிய சௌதர்ன் பிரேவ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/southern-brave-beat-trent-rockets-in-the-hundred-1786433000"></link>
            <id>https://news.lankasri.com/article/southern-brave-beat-trent-rockets-in-the-hundred-1786433000</id>
            <summary type="text">Southern Brave win against Trent Rockets: ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணிக்கு எதிரான the Hundred போட்டியில் சௌதர்ன் பிரேவ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Southern Brave win against Trent Rockets: ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணிக்கு எதிரான the Hundred போட்டியில் சௌதர்ன் பிரேவ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.
</p><p>
நாட்டிங்காமில் நடந்த the Hundred போட்டியில், சௌதர்ன் பிரேவ் அணி ஸ்டப்ஸ், ஸ்டோய்னிஸ் ஆகியோரின் அதிரடியில் ட்ரென்ட் ராக்கெட்ஸை வீழ்த்தியது.&nbsp;&nbsp;</p><h2>158 ஓட்டங்கள்</h2><p><span style="font-size: 14px;">சௌதர்ன் பிரேவ், ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணிகளுக்கு இடையிலான the Hundred போட்டி நாட்டிங்காமின் ட்ரென்ட் பிரிட்ஜில் நடந்தது. 

முதலில் ஆடிய ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f84f64fb-ed99-4bb3-83c6-018ca49375ce/26-6a7acdeaea95f.webp' />&nbsp;</p><p></p><p>

மிட்சேல் சான்ட்னர் 35 (23) ஓட்டங்களும், கிரேகோரி 28 (18) ஓட்டங்களும் எடுத்தனர். டேனியல், ஸ்டோய்னிஸ், ஜோர்டான், ரஷீத் மற்றும் நிகில் சௌத்ரி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
</p><p>
பின்னர் ஆடிய சௌதர்ன் பிரேவ் அணியில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs) மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis) இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட்டு எதிரணி பந்துவீச்சை சிதறடித்தனர்.&nbsp;</p><h2>ஸ்டப்ஸ்&nbsp;ஆட்டநாயகன்</h2><p>
இந்தக் கூட்டணியின் மூலம் சௌதர்ன் பிரேவ் 97 பந்துகளில் 159 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.</p><p>

ஸ்டப்ஸ் 28 பந்துகளில் 52 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 4 பவுண்டரிகள்), ஸ்டோய்னிஸ் 25 பந்துகளில் 46 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசினர்.
</p><p>
இந்த வெற்றியுடன் சௌதர்ன் பிரேவ் தொடரைவிட்டு வெளியேறியது. ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/229409fa-9c41-4622-ab6b-4337b0025992/26-6a7acdeb9ad82.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T07:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய கிரகணம் தொடர்பில் சுவிஸ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-expert-warns-watching-solar-eclipse-1786430700"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-expert-warns-watching-solar-eclipse-1786430700</id>
            <summary type="text">நாளை சூரிய கிரகணத்தின்போது பின்பற்ற சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார்கள் நிபுணர்கள்.


நாளை பகுதி சூரியகிரகணம் நிகழ இருக்கும் நிலையில், சூரிய கிரகணத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளை சூரிய கிரகணத்தின்போது பின்பற்ற சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார்கள் நிபுணர்கள்.</p><p>


நாளை பகுதி சூரியகிரகணம் நிகழ இருக்கும் நிலையில், சூரிய கிரகணத்தின்போது பாதுகாப்பாக இருக்குமாறு பாதுகாப்பு நிபுணர்கள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
</p><h3>
சூரிய கிரகணம் தொடர்பில் ஒரு எச்சரிக்கை
</h3><p>
சூரிய கிரகணத்தை பார்க்க விரும்புவோர், அதற்காக முறைப்படி தரச்சான்றிதழ் பெற்ற கண்ணாடிகளையே பயன்படுத்துமாறு பாதுகாப்பு நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d1ba916-2e3d-4d4c-b69c-bb73ab1d6482/26-6a7ac4edaeef4.webp' /></p><p>
அத்துடன், சூரிய கிரகணத்தை புகைப்படம் எடுக்க முயலவேண்டாம் என்றும், புகைப்படம் எடுப்பதை அதற்கென இருக்கும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களிடம் விட்டுவிடுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
</p><p>
கண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லாமல் சூரிய கிரகணத்தின்போது சூரியனைப் பார்ப்பது, கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் துறை சார் புகைப்படக் கலைஞரான ஏஞ்சலா (Angela Fux) என்பவர்.&nbsp;</p><p></p><p>

அத்துடன், புகைப்படம் எடுக்கும் கமெரா உதவியுடன் சூரியனைப் பார்ப்பது கூட கண்களை பாதிக்கலாம் என்றும் எச்சரிக்கிறார் அவர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T06:50:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆவிகளுடன் பேசுபவர் எனக்கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த இந்தியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-psychic-accused-crores-of-scam-in-canada-1786429094"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-psychic-accused-crores-of-scam-in-canada-1786429094</id>
            <summary type="text">கனடாவில் ஆவிகளுடன் பேசுபவர் எனக்கூறி மோசடி செய்த இந்தியரை பொலிசார் தேடிவருகிறார்கள்.


கனடாவில், ஆவிகளுடன் பேசுபவர் எனக்கூறி கோடிக்கணக்கில் மோசடி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் ஆவிகளுடன் பேசுபவர் எனக்கூறி மோசடி செய்த இந்தியரை பொலிசார் தேடிவருகிறார்கள்.
</p><p>

கனடாவில், ஆவிகளுடன் பேசுபவர் எனக்கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த இந்தியர் இந்தியாவுக்கு தப்பிவிட்டதாக கருதப்படுகிறது.
</p><h3>
கோடிக்கணக்கில் மோசடி செய்த இந்தியர்</h3><p>

கனடாவின் ரொரன்றோவில், ஆவிகளுடன் பேசுபவர், ஜோதிடர், அசாதாரண முறையில் நோய்களை குணமாக்குபவர் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார் கங்காதர் பாபு (29) என்னும் இந்தியர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d543f66-8456-4bcb-911a-06e87049b3f7/26-6a7abea837524.webp' /></p><p>
இந்த கங்காதர், 2024 ஏப்ரலுக்கும் 2025 செப்டம்பருக்கும் இடையே, ஒரு குறிப்பிட்ட நபருக்கு மரண கண்டம் இருப்பதாகக் கூறி, தான் அவருக்கு ஆவிகள் மூலம் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறியுள்ளார்.
</p><p>
அதற்கு பதிலாக அவரிடம் பெரும் தொகை பெற்றுக்கொண்ட கங்காதர், தனக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினால், அவரது குடும்பத்துக்கு தீங்கு அல்லது மரணம் ஏற்படக்கூடும் என பயம் காட்டி பணம் பெற்றுவந்துள்ளார்.
</p><p>
அவ்வகையில், அவர் சுமார் 800,000 கனேடிய டொலர்களை பெற்றதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><p>
 800,000 கனேடிய டொலர்கள் என்பது இந்திய மதிப்பில் 7,63,12,400.00 ரூபாய், இலங்கை மதிப்பில் 26,83,40,000.00 ரூபாய்!
</p><p>
இதற்கிடையில், பொலிசார் இந்த மோசடி தொடர்பில் விசாரணை துவக்கியதும், கங்காதர் தலைமறைவாகிவிட்டார். </p><p>அவர் இந்தியாவுக்குத் தப்பியிருக்கலாம் என கனேடிய பொலிசார் கருதுகிறார்கள்.
</p><p>
கங்காதரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு யாராவது இதேபோல அவரால் ஏமாற்றப்பட்டிருந்தால் தங்களை அணுகுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T06:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றம் கூடியபோது மீண்டும் முதுகைக் காட்டிய செனட்டர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/three-one-nation-senators-turn-their-back-again-1786428736"></link>
            <id>https://news.lankasri.com/article/three-one-nation-senators-turn-their-back-again-1786428736</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது செனட்டர்கள் தங்கள் முதுகைக் காட்டியது பேசுபொருளானது.

அவுஸ்திரேலியாவில் வசந்தகால நாடாளுமன்றக் கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது செனட்டர்கள் தங்கள் முதுகைக் காட்டியது பேசுபொருளானது.</p><p>

அவுஸ்திரேலியாவில் வசந்தகால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்க நாளில் 'Acknowledgement of Country ' நிகழ்வின்போது, மூன்று One Nation செனட்டர்கள் தங்கள் முதுகைக் காட்டினர்.&nbsp;&nbsp;</p><h2>ஒன் நேஷன் செனட்டர்கள்</h2><p>அவுஸ்திரேலியாவின் செனட் சபையின் ஒவ்வொரு கூட்டத்தொடரும் 'Acknowledgement of Country' நிகழ்வுடன் தொடங்குகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88be1d73-4adb-49dd-ad31-c56b3f907cfd/26-6a7abd42e2f00.webp' />&nbsp;</p><p></p><p>

அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு the Lord's Prayer நடைபெறும். ஆனால், 'Acknowledgement of Country' மற்றும் 'Welcome to Country' ஆகிய சடங்குகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை ஒன் நேஷன் தலைவர் பவுலின் ஹான்சன் தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறார்.
</p><p>
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக அவரும், ஒன் நேஷன் உறுப்பினர்களும் 'Acknowledgement of Country' நிகழ்வின்போது முதுகைக் காட்டி நின்றனர்.
</p><h2>the Lord's Prayer-க்கு நகர்ந்தபோது</h2><p>இந்த நிலையில், வசந்தகால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்க நாளில் நடைபெற்ற 'Acknowledgement of Country' நிகழ்வின்போது, மூன்று ஒன் நேஷன் (One Nation) செனட்டர்கள் தங்கள் முதுகைக் காட்டினர்.</p><p>

துணை செனட் தலைவர் ஸ்லேட் ப்ராக்மேன் 'Acknowledgement of Country' நிகழ்வை ஆற்றியபோது, குயின்ஸ்லாந்து செனட்டர் மால்கம் ராபர்ட்ஸ், நியூ சவுத் வேல்ஸ் செனட்டர் சீன பெல் மற்றும் மேற்கு அவுஸ்திரேலிய செனட்டர் டைரோன் விட்டன் ஆகியோர் முகத்தைத் திருப்பியிருந்தனர்.
</p><p>
அவர்கள், செனட் சபை the Lord's Prayer-க்கு நகர்ந்தபோது அந்த மூவரும் மீண்டும் திரும்பினர். அப்போது ஒன் நேஷன் தலைவரான பவுலின் ஹான்சன் (Pauline Hanson) சபையில் இல்லை.</p><p>கடந்த வாரம் பாடசாலைகள், அரசுத் துறைகள் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் 'Welcome to Country' விழாக்களை ரத்து செய்வதாக பவுலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c8e3c3-fd51-485e-ab3b-b2543a71512b/26-6a7abd43a52d2.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-11T06:10:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியே வந்தால் உடல் எரியும் - மீன்களை போல் குளத்தில் வாழும் சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bengal-boy-stays-in-pond-if-stepping-out-skin-burn-1786428362"></link>
            <id>https://news.lankasri.com/article/bengal-boy-stays-in-pond-if-stepping-out-skin-burn-1786428362</id>
            <summary type="text">Teen Lives in Water: இளைஞர் ஒருவர் வெளியே வந்தால் உடல் எரியும் என்பதால் ஆண்டு கணக்கில் குளத்தின் உள்ளே வசித்து வருகிறார். 

ஆண்டு கணக்கில் குளத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Teen Lives in Water: இளைஞர் ஒருவர் வெளியே வந்தால் உடல் எரியும் என்பதால் ஆண்டு கணக்கில் குளத்தின் உள்ளே வசித்து வருகிறார். </p><h3>

ஆண்டு கணக்கில் குளத்தில் இருக்கும் இளைஞர்</h3><p> 

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்டங்கா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளைஞர் இக்பால் ஷேக்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/668524b3-70f3-4177-8149-9fb6e06e2ad4/26-6a7abbcc76db0.webp' /></p><p>

இந்த இளைஞர் கிட்டதட்ட சில ஆண்டுகளாக தனது பெரும்பாலான நேரங்களில் அங்குள்ள குளத்திலே வசித்து வருகிறார். </p><p>

குளத்திலிருந்து வெளியே வந்தால் அவரது உடலில் கடும் எரிச்சல் ஏற்படுவதாகவும், குளத்தின் உள்ளே சென்றால் எரிச்சல் தணிவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கு காரணம் தனது உடலின் உள்ளே ஜின் என்னும் அமானுஷ்ய சக்தி இருப்பதாக நம்புகிறார்.&nbsp;</p><p></p><p>

நீண்ட நாட்களாக அவர் தண்ணீரில் மூழ்கி இருப்பதால், அவரது கைகள், கால்கள் மற்றும் பிற உடல் பாகங்களில் உள்ள தோல் வெளிறியுள்ளது. மேலும், சளி மற்றும் இருமலாலும் அவதிப்பட்டு வருகிறார். </p><p>

குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவருக்குத் தேவையான சிகிச்சை கிடைக்கவில்லை. 

நிதிப் பற்றாக்குறை காரணமாக அவரால் தனியார் சிகிச்சையை பெற முடியவில்லை. </p><p>

அவரை குளத்தில் இருந்து வெளியே கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.</p><p> 

இது 'அக்வாஜெனிக் ப்ருரிடஸ்' எனப்படும் ஒரு அரிய மருத்துவ நிலையா என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். </p><p>

இந்த நிலையால் பாதிக்கப்பட்ட ஒருவர் தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான அரிப்பு அல்லது எரிச்சல் உணர்வை அடைவார். ஆனால் இக்பாலின் விஷயத்தில், இதற்கே நேர்மாறாக உள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="hi" dir="ltr">मुर्शिदाबाद: 16 वर्षीय इकबाल शेख की जिंदगी तालाब में गुजर रही है<br><br>मुर्शिदाबाद के बेलडांगा में 16 वर्षीय इकबाल शेख का मामला बेहद चिंताजनक है। बताया जा रहा है कि इकबाल पिछले करीब 5 साल से अपना ज्यादातर समय तालाब के पानी में ही बिताता है।<br><br>इकबाल का कहना है कि पानी से बाहर निकलने पर… <a href="https://t.co/6DQiifosyR">pic.twitter.com/6DQiifosyR</a></p>&mdash; Mazhar Khan (@Mazhar4justice) <a href="https://x.com/Mazhar4justice/status/2086719818003255308?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

அவரது அறிகுறிகளுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய கூடுதல் மருத்துவ மதிப்பீடு தேவைப்படுகிறது.
</p><p>
இது குறித்து தகவலறிந்த உள்ளூர் மக்கள் பலரும் அவரை பார்க்க குளத்திற்கு வருகை தருகின்றனர். அப்படி வருபவர்கள் அவல், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கி வருகின்றனர். </p><p>

இன்னும் எவ்வளவு காலம் அவர் இப்படி குளத்தின் உள்ளே இருக்க முடியும் என கவலை தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T06:09:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரதச்சத்து நிறைந்த சோயா சாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/soya-rice-recipe-in-tamil-1786424634"></link>
            <id>https://news.lankasri.com/article/soya-rice-recipe-in-tamil-1786424634</id>
            <summary type="text">Soya Rice:&amp;nbsp;புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு சோயா துண்டுகளை(Soya Chunks), சைவ உணவுப்பிரியர்களின் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Soya Rice:&nbsp;புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு சோயா துண்டுகளை(Soya Chunks), சைவ உணவுப்பிரியர்களின் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.</p><p>

தசை வளர்ச்சிக்கு உதவுவதுடன் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.
</p><p>
இதிலுள்ள கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது, இதனை வைத்து சுவையான சோயா சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம்.</p><h2>தேவையான பொருட்கள்</h2><p>

பாஸ்மதி அரிசி- கால் கப் (வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்)
</p><p>சோயா - கால் கப் (வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்)
</p><p>வெங்காயம்- 1 (பொடிதாக நறுக்கியது)
</p><p>பச்சைமிளகாய்- 2 (பொடிதாக நறுக்கியது)</p><p>
சீரகம்- 1 டீஸ்பூன்</p><p>
கடுகு- சிறிதளவு</p><p>
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்</p><p>
காஸ்மீரி மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
</p><p>மல்லித்தூள்- 1 டீஸ்பூன்
</p><p>சீரகத்தூள்- 1 டீஸ்பூன்
</p><p>கரம் மசாலா தூள்- 1 டீஸ்பூன்
</p><p>எண்ணெய்- தேவையான அளவு
</p><p>உப்பு- தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbe1ffd5-e43b-4e54-9b10-ee3134c6a0b3/26-6a7aaffeb031e.webp' /><br></p><h2>

மசாலா அரைப்பதற்கு
</h2><p>
மிளகு- 1 டீஸ்பூன்
<br>சோம்பு- 1 டீஸ்பூன்
<br>பூண்டு- 6 பற்கள்
<br>இஞ்சி- சிறிய துண்டு
<br>புளி- சிறிதளவு</p><h2>

செய்முறை
</h2><p>
அரைப்பதற்கு கொடுத்துள்ள மசாலா பொருட்களை மிக்ஸி ஜாரில் மாற்றி கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
</p><p>
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றியதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும், இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
</p><p>
வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும், நன்றாக கிளறிவிடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e216a3ff-a2e4-46b1-9820-83cc7dfdf189/26-6a7aafff632d3.webp' /><br></p><p>
</p><p>
இதனுடன் மஞ்சள் தூள், காஸ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து கிளறவும், சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் மசாலா வாசனை போகும் வரை வேகவிடவும்.</p><p>

இதனுடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள சோயாவை சேர்க்கவும், நன்றாக கிளறிவிட்டு 5 நிமிடம் மிதமான தீயில் அப்படியே விட்டு விடவும்.
</p><p>
சோயா மசாலாவுடன் நன்றாக சேர்ந்த பின்னர், வேக வைத்த பாஸ்மரி அரிசி சேர்த்து கிளறவும், கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்தால் சுவையான சோயா சாதம் தயார்!!!<br></p>]]></content>
            <updated>2026-08-11T05:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய இளைஞர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-student-dies-in-us-in-road-accident-1786424770"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-student-dies-in-us-in-road-accident-1786424770</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற இந்திய இளைஞர் ஒருவர் சாலை விபத்தொன்றில் பலியாகியுள்ளார்.


அமெரிக்காவில் சாலை விபத்தொன்றில் சிக்கிய இந்திய இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற இந்திய இளைஞர் ஒருவர் சாலை விபத்தொன்றில் பலியாகியுள்ளார்.</p><p>


அமெரிக்காவில் சாலை விபத்தொன்றில் சிக்கிய இந்திய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.</p><h3>

சாலை விபத்தில் இந்திய இளைஞர் பலி</h3><p>

இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள கடப்பா என்னுமிடத்தைச் சேர்ந்த திலீப் குமார் (Dileep Kumar Bhungaravula), அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்திலுள்ள கென்ட் மாகாண பல்கலையில் கல்வி பயின்று வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27251ba4-13ff-432a-b339-8ae40a42a8c3/26-6a7aadc380c09.webp' /></p><p>

கடந்த வெள்ளிக்கிழமை, திலீப் ஓட்டிவந்த கார் எதிரே வந்த ட்ரக்குடன் மோதி விபத்துக்குள்ளானது.
</p><p>
பொலிசார் அவசர உதவிக்குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், திலீப் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

அவருடன் விபத்தில் சிக்கிய மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், நியூயார்க்கிலுள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், திலீப்பின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், தேவையான உதவிகளையும் செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We are deeply saddened to learn of the untimely demise of Mr. Dileep Kumar Bungatavula, an Indian national, who tragically lost his life in a car accident in Ohio on August 7, 2026.<br><br>Our thoughts and heartfelt condolences are with his family during this difficult time. The…</p>&mdash; India in New York (@IndiainNewYork) <a href="https://x.com/IndiainNewYork/status/2086127982502937082?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
திலீப்பின் தந்தை ஒரு விவசாயி. பிள்ளையை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கே கடன் வாங்கியிருந்த நிலையில், பிள்ளை உயிரிழந்த செய்தி கேட்டு துக்கத்தில் ஆழ்ந்துள்ளதுடன், கடனை அடைக்க என்ன செய்வது என்ற கவலையிலும் ஆழ்ந்துள்ளது திலீப் குடும்பம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T05:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண் திறந்து பார்த்த அம்மன்: அற்புத நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mariyamman-and-kaliyamman-appeared-with-eyes-open-1786419738"></link>
            <id>https://news.lankasri.com/article/mariyamman-and-kaliyamman-appeared-with-eyes-open-1786419738</id>
            <summary type="text">Mariyamman Kaliyamman Eyes Open: தமிழ்நாட்டின் நெல்லையில் மாரியம்மன்- காளியம்மன் சாமிகள் கண் திறந்து பார்த்த அற்புத நிகழ்வு பக்தர்களை பரவசமடைய வைத்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mariyamman Kaliyamman Eyes Open: தமிழ்நாட்டின் நெல்லையில் மாரியம்மன்- காளியம்மன் சாமிகள் கண் திறந்து பார்த்த அற்புத நிகழ்வு பக்தர்களை பரவசமடைய வைத்துள்ளது.</p><h2>கண்திறந்து காட்சி கொடுத்த அம்மன்</h2><p>
</p><p>
நெல்லை மேல ஊருடையார்புரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.</p><p>

100 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் மாரியம்மன் மற்றும் காளியம்மன் சாமிகளை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1378f661-3974-492e-b6ed-655a1bf867b0/26-6a7a9a6174ff9.webp' /><br></p><p>
</p><p>
அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தெய்வீக சக்தி வாய்ந்த அம்மனாக அருள்பாலிக்கிறார்கள்.
</p><p>
அம்மன்கள் திடீரென கண் திறந்து பார்த்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
இதனை காண பக்தர்கள் படையெடுத்து வருவதால் அப்பகுதி பரபரப்பாக உள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-08-11T03:43:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரியாவின் உதவி இல்லாமல் ரஷ்யாவால் போர் நடத்த முடியாது! ஜெலென்ஸ்கி காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelenskyy-alleges-n-korea-involvement-in-ukraine-1786397526"></link>
            <id>https://news.lankasri.com/article/zelenskyy-alleges-n-korea-involvement-in-ukraine-1786397526</id>
            <summary type="text">உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தங்களது படைகளில் வட கொரிய வீரர்களை இணைத்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.உக்ரைன் போரில் வட கொரியாவின் பங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தங்களது படைகளில் வட கொரிய வீரர்களை இணைத்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>உக்ரைன் போரில் வட கொரியாவின் பங்களிப்பு</h2><p>உக்ரைன் போரில் வட கொரிய வீரர்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ரஷ்யா தீவிரமாக பயன்படுத்த தொடங்கி இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p> இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வரலாற்றிலேயே முதல் முறையாக வட கொரியாவின் உதவி இல்லாமல் ரஷ்யாவால் போர் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4571a5f4-ba56-46d9-b2f0-9268ecb496c9/26-6a7a435873cfc.webp' /></p><p> உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த வடகொரியாவின் புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா பெற்று இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p></p><h2> உலக நாடுகளுக்கு எச்சரிக்கை</h2><p>
ரஷ்யா - வடகொரியா இடையிலான இந்த அபாயகரமான கூட்டணி உலக நாடுகளுக்கு மிகவும் பேராபத்து என்று சுட்டிக்காட்டினார்.</p><p> அத்துடன் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான போரில் வட கொரிய வீரர்களும் மற்றும் ஏவுகணைகளும் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதன் மூலம் அவர்கள் நேரடியாக போர் அனுபவங்களை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7318d8df-2ad5-4fcd-a1c8-276cfb27b264/26-6a7a43592a171.webp' /></p><p> இதன் மூலம் அவர்கள் தங்களது பலவீனங்களை சரிசெய்து கொண்டு மிக ஆழமான ராணுவ அனுபவங்களை பெறுவதாக எச்சரித்துள்ளார்.</p><p>இந்த அனுபவம் எதிர்காலத்தில் ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> எனவே இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும், வட கொரியாவின் இலக்குகளை கட்டுப்படுத்த உக்ரைனுக்கு சர்வதேச ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T03:42:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயர்லாந்தை தனியாளாக சம்பவம் செய்த ரஷீத் கான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rashid-khan-37-runs-helps-afghan-beat-ireland-1786419763"></link>
            <id>https://news.lankasri.com/article/rashid-khan-37-runs-helps-afghan-beat-ireland-1786419763</id>
            <summary type="text">Afghanistan beat Ireland by 3 Wickets: அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Afghanistan beat Ireland by 3 Wickets: அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
பெல்ஃபாஸ்டில் நடந்த ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>206-க்கு ஆல்அவுட்</h2><p>

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி பெல்ஃபாஸ்டில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49dd71e3-e7a4-4bdc-8955-43767bd7547f/26-6a7a9a36a52d7.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய அயர்லாந்து அணி ரஷீத் கான், காஸன்ஃபர் மற்றும் யாமினின் அபார பந்துவீச்சில் 206 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

அதிகபட்சமாக கேவின் ஹோயி 36 ஓட்டங்களும், கேட் கேர்மைக்கேல் 32 ஓட்டங்களும் எடுத்தனர். ரஷீத் கான், காஸன்ஃபர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.</p><p>

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியாக ஆட ஜட்ரான் 12 ஓட்டங்களும், அடல் 27 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

ரஹ்மத் ஷா 4 ஓட்டங்களில் வெளியேற, ஷாஹிதி 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76175605-8005-4dd8-8a71-7001ece03812/26-6a7a9a3600910.webp' />&nbsp;</p><h2>ரஷீத் கான்&nbsp;அபாரம் </h2><p> மறுமுனையில் சிக்ஸர்களை பறக்கவிட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz) அரைசதம் விளாசினார். அணியின் ஸ்கோர் 149 ஆக உயர்ந்தபோது குர்பாஸ் 71 ஓட்டங்களில் (5 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) அவுட் ஆனார்.</p><p>அடுத்து வந்த ரசூலி (13), ஓமர்சாய் (13) இருவரும் சொதப்ப, ரஷீத் கான் (Rashid Khan) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.</p><p>

அவர் 43 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் 207 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e30911-36e6-4c87-af10-d86a7fa2ec34/26-6a7a9a3753bca.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T03:41:00+00:00</updated>
        </entry>
    </feed>
