<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-06T06:59:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[55 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்: ஆசியக் கிண்ணத்தில் சம்பவம் செய்த இந்திய வீராங்கனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ind-w-beat-pak-w-by-7-wkts-in-asia-cup-2026-1788676479"></link>
            <id>https://news.lankasri.com/article/ind-w-beat-pak-w-by-7-wkts-in-asia-cup-2026-1788676479</id>
            <summary type="text">India women team beat pakistan by 7 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

து...</summary>
            <content type="html"><![CDATA[<p>India women team beat pakistan by 7 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
</p><p>
துபாயில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியுற்றது.&nbsp;&nbsp;</p><h2>55 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்&nbsp;</h2><p>55 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்
மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் 9வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாயில் நேற்று மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d856003a-900b-41ae-a665-7f632f0f411f/26-6a9d0a45c6cdc.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய வீராங்கனைகள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.1 ஓவர்களில் 55 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
அதிகபட்சமாக ஷாவால் 14 ஓட்டங்களும், முனீபா அலி 13 ஓட்டங்களும் எடுத்தனர். ஏனைய 9 வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
</p><p>
ஸ்ரீசரணி மற்றும் பிரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளும், ஷபாலி வெர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><p>
பின்னர் ஆடிய இந்திய அணி 8.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 57 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47122e25-6e33-4826-aa6b-02eababa9e1d/26-6a9d0a46980ce.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T06:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: விமான சேவைகள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesia-s-anak-krakatau-volcano-erupts-1788675275"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesia-s-anak-krakatau-volcano-erupts-1788675275</id>
            <summary type="text">Indonesia&#039;s Anak Krakatau Volcano Erupts: இந்தோனேசியாவின் அனாக் கிரக்டாவ் எரிமலை வெடித்ததை அடுத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indonesia's Anak Krakatau Volcano Erupts: இந்தோனேசியாவின் அனாக் கிரக்டாவ் எரிமலை வெடித்ததை அடுத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><h2> எரிமலை வெடிப்பு</h2><p>ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தோனேசியாவின் புகழ்பெற்ற அனாக் கிரகடாவ்(Anak Krakatau) எரிமலை வெடித்து சிதறியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>எரிமலை வெடிப்பு காரணமாக வானத்தில் ராட்சத சாம்பல் மேகங்கள் உருவானதுடன், எரிமலை பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் ஜகார்த்தாவின் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/023a65f6-baec-41de-b679-afccc1d50f1b/26-6a9d04cd2876b.webp' /></p><p> கிட்டத்தட்ட 209 விமானங்கள் எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து அமைச்சகத்தின் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> இதனால் 22,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p> சுமத்ரா பகுதியில் 15,000 மீட்டர் உயரத்திலும், ஜாவா பகுதியில் 6000 மீட்டர் உயரத்திலும் சாம்பல் புகையானது எழும்பியுள்ளது.</p><p>சுகர்னோ - ஹத்தா சர்வதேச விமான நிலையம் எரிமலை வெடிப்பு காரணமாக காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T06:14:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/five-european-nations-migrants-1788668565"></link>
            <id>https://news.lankasri.com/article/five-european-nations-migrants-1788668565</id>
            <summary type="text">European nations seek deals to send migrants out of the EU: புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அனுப்ப ஒப்பந்தமிடும் ஐரோப்பிய நாடுகள்.
சட...</summary>
            <content type="html"><![CDATA[<p>European nations seek deals to send migrants out of the EU: புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அனுப்ப ஒப்பந்தமிடும் ஐரோப்பிய நாடுகள்.
</p><p>சட்டப்பூர்வ வதிவிட உரிமை இல்லாத புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றும் வகையிலான ஒப்பந்தங்களை முன்னெடுக்க ஐந்து ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளது.</p><h2>ஐவர் குழு</h2><p> டென்மார்க்கில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையைக் 
குறைப்பதற்கான ஐரோப்பிய நாடுகளின் சமீபத்திய முயற்சியாக, </p><p>ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத ஒரு நாட்டுடன் மக்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜேர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d282ebfe-887a-49aa-9432-08a2b1388d75/26-6a9cea97bea6b.webp' /></p><p>
</p><p>ஐவர் குழு (Group of Five) என்று அழைக்கப்படும் இந்த நாடுகள், திருப்பி அனுப்பப்படுவோருக்கான மையங்களை நடத்தத் தாங்கள் எதிர்பார்க்கும் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. </p><p>இந்த ஆண்டு அப்படியான நாடுகளுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட விரும்புவதாகவும், அது திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கான மையங்களை (return hubs) அமைக்க வழிவகுக்கும் என்றும் ஜேர்மனியின் உள்விவகார அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட் கோபன்ஹேகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>புலம்பெயர் மக்கள் தொடர்பான விவகாரத்தில் இந்த ஆண்டில் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியுள்ள இந்த ஐவர் குழு, செப்டம்பர் மாத இறுதியில் ஜேர்மனியின் மியூனிக் நகரில் மீண்டும் கூடத் திட்டமிட்டுள்ளது. </p><p>இதனிடையே, நாடு கடத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதையும், உறுப்பு நாடுகள் வெளிநாடுகளில் மையங்களை அமைக்க அனுமதிப்பதையும் நோக்கமாகக் கொண்ட குடியேற்றக் கொள்கை சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c532e0d8-361e-41d6-a662-3ca73124e405/26-6a9cea9871e89.webp' /></p><p> </p><p>இது புகலிடம் தேடுவோருக்கான பாதுகாப்புகளை பலவீனப்படுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், ஐரோப்பா கண்டம் முழுவதும் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஊக்குவிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத அமைப்பான 'ஐரோப்பிய அவை' (Council of Europe),</p><p> கடந்த ஜூலை மாதம் திரும்ப அனுப்பும் மையங்கள் (return hubs) குறிப்பிடத்தக்க மனித உரிமை அபாயங்களை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தது; அத்துடன் இந்த விவகாரத்தில் பல அமைப்புகளும் இத்திட்டத்தைக் விமர்சித்துள்ளன. </p><p>இந்த நிலையில், 
2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் புலம்பெயர் மக்களை வெளியேற்றும் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று டென்மார்க் எதிர்பார்ப்பதாக, குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சர் மோர்டன் போட்ஸ்கோவ் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T06:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசியக் கொடியை எரித்தால் கடுமையான தண்டனை: அவுஸ்திரேலியா முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jail-time-for-burning-the-flag-1788673687"></link>
            <id>https://news.lankasri.com/article/jail-time-for-burning-the-flag-1788673687</id>
            <summary type="text">Jail time for burning the flag: தேசியக் கொடியை எரித்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அவுஸ்திரேலியாவில் தேசியக் கொடியை எரிக்கும் அல்லது போர் நினைவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jail time for burning the flag: தேசியக் கொடியை எரித்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
</p><p>அவுஸ்திரேலியாவில் தேசியக் கொடியை எரிக்கும் அல்லது போர் நினைவிடங்களைச் சேதப்படுத்துவோர் விரைவில் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.</p><h2>புதிய ஃபெடரல் குற்றம்</h2><p>
</p><p>நாட்டின் தேசிய சின்னங்கள் மற்றும் வரலாற்று நினைவிடங்களுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பு தேவை என்று வாதிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஆங்கஸ் டெய்லர், அவுஸ்திரேலிய தேசிய சின்னங்கள் மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பு மசோதாவிற்கான திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf3cfac-4002-43d4-9724-7519d9d23476/26-6a9cfe998c81f.webp' /></p><p> </p><p>ஒருவரின் செயல்கள் வெறுப்பையோ வன்முறையையோ தூண்டுமா, பொது அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்குமா அல்லது பொதுக் குழப்பத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொருட்படுத்தாமல், அவுஸ்திரேலியக் கொடியை பொதுவெளியில் கடுமையாக அவமதிப்பதை இந்தத் திட்டம் ஒரு புதிய ஃபெடரல் குற்றமாகவே கருதும். </p><p>மேலும், அவுஸ்திரேலியா குறித்து அரசியல் கருத்துக்களைத் தெரிவிக்கவும், தாராளமாக விமர்சிக்கவும் மக்களுக்கு உரிமை உண்டு; ஆனால், தேசியக் கொடியை எரிப்பது எல்லையை மீறும் செயலாகும் என்றும் டெய்லர் கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>தேசியக் கொடி என்பது ஒரு அடையாளம்; அது நம் தேசத்தின் மற்றும் நம் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். அவுஸ்திரேலியர்கள் அது குறித்து மிகுந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் கொண்டுள்ளனர் என்பதை நான் அறிவேன் என குறிப்பிட்டுள்ள அவர், கொடி எரிக்கப்படுவதைப் பார்ப்பது பெரும்பாலான அவுஸ்திரேலியர்களுக்கு ஏற்புடையதல்ல; நிச்சயமாக எனக்கும் அது ஏற்புடையதல்ல. </p><p>எனவே, ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான ஏற்பாடு கொண்டுவரப்படுவது பொருத்தமானது என்றே நான் கருதுகிறேன் என்றார்.</p><p> மேலும், அவுஸ்திரேலியாவின் வரலாற்றைப் போற்றும் போர் நினைவுச்சின்னங்கள், சிலைகள், நினைவுப் பலகைகள் மற்றும் பிற நினைவுச்சின்னங்களை வேண்டுமென்றே சேதப்படுத்துதல், சிதைத்தல் அல்லது அவமதித்தல் ஆகியவற்றுக்குச் சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய கடுமையான புதிய ஃபெடரல் குற்றங்களையும் இந்தக் கூட்டணி அறிமுகப்படுத்தும் என்றார்.
</p><p>அவுஸ்திரேலிய தினம் காமன்வெல்த் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டதாக அமையும்; அதாவது, அதன் திகதியில் ஏதேனும் மாற்றம் செய்ய முன்மொழியப்பட்டால், அது ஒரு தேசிய வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் டெய்லர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28e538f2-bad5-4ef3-9d70-2deead2d835e/26-6a9cfe9a3f18e.webp' /></p><p> </p><p>சமீபத்திய மாதங்களில் விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் நிகழ்ந்த தொடர்ச்சியான சம்பவங்களைத் தொடர்ந்து இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>மேற்கு விக்டோரியாவின் டோபி (Dobie) பகுதியில் உள்ள போர் நினைவுச் சின்னம் ஒன்று சேதப்படுத்தப்பட்டது; இதில் உள்ளூர் முன்னாள் படைவீரர்களைக் கௌரவிக்கும் பலகை திருடப்பட்டதுடன், அப்பகுதி முழுவதும் அரசியல் வாசகங்கள் எழுதப்பட்டு, சுற்றியுள்ள தாவரங்களும் சேதப்படுத்தப்பட்டன. </p><p>இந்த ஆண்டின் தொடக்கத்தில், மெல்போர்னின் ஃபிளாக்ஸ்டாஃப் பூங்காவில் உள்ள 155 ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னமும் சேதப்படுத்தப்பட்டு, அவுஸ்திரேலியாவிற்கு எதிரான சுவரெழுத்துக்களால் மூடப்பட்டது. </p><p>மட்டுமின்றி, அவுஸ்திரேலிய தினத்தன்று, பிரிஸ்பேனில் நடைபெற்ற 'ஆக்கிரமிப்பு நாள்' (Invasion Day) போராட்டத்தின் போது அவுஸ்திரேலியக் கொடி ஒன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T05:46:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-war-data-leaker-1788665161"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-war-data-leaker-1788665161</id>
            <summary type="text">Polygraph Tests Of Top Army Officials: ஈரான் போர் விவகாரத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை.
நவீன வரலாற்றிலேயே முதன்முறையாக, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Polygraph Tests Of Top Army Officials: ஈரான் போர் விவகாரத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை.
</p><p>நவீன வரலாற்றிலேயே முதன்முறையாக, அமெரிக்க அரசாங்கத்தின் விசாரணை அதிகாரிகள், 50 உயர்மட்ட அமெரிக்க இராணுவ அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைகளை (polygraph tests) நடத்தியுள்ளனர்.</p><h2>கசியவிட்டார்களா</h2><p>
</p><p>ஈரான் போரின் காரணமாக அமெரிக்காவில் முக்கிய ஆயுதங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்த தகவல்கள் உட்பட, ரகசியத் தரவுகள் பத்திரிகையாளர்களுக்குக் கசிந்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c8289d-4959-4f2e-b1d8-605c4a1421a2/26-6a9cdd4b2dd6a.webp' /></p><p> </p><p>அமெரிக்க இராணுவத்தின் கூட்டுப் படைப் பிரிவின் இராணுவ அதிகாரிகள் மற்றும் குடிமைப் பணியாளர்களிடம், அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு இரகசியத் தகவல்களைக் கசியவிட்டார்களா என்று விசாரிக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனைகளின் நோக்கம், இரகசியத் தகவல்களை வெளியிட்ட நபர்களைக் கண்டறிவதும், எதிர்காலத்தில் அவ்வாறு செய்திருக்கக்கூடிய மற்றவர்களை அச்சுறுத்துவதுமாகும்.</p><p></p><p> </p><p>ஈரான் போரால் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகள் போன்றவற்றின் எண்ணிக்கைப் பெருமளவில் குறைந்துவிட்டதாக வெளியான தொடர்ச்சியான செய்திகளுக்குப் பிறகு இந்த உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில், பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உள் பணியாளர்கள் அல்லது விசாரணை விவகாரங்கள் குறித்துத் துறை கருத்துத் தெரிவிக்காது என்றும், ஆனால் வகைப்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்புத் தகவல்கள் கசிவதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு அதற்கேற்ப விசாரிக்கும் என்றும் கூறினார். </p><p>மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பையும், உலகம் முழுவதும் களமிறக்கப்பட்டுள்ள நமது படைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு, ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பது மிக அவசியமாகும் என்றார்.</p><h2>மோசமடைந்து வரும் சூழல்</h2><p> </p><p>மே 5-ஆம் திகதி முதல், ஈரான் போர் குறித்த செய்தியாளர் சந்திப்பு எதையும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் நடத்தவில்லை; அத்துடன் பென்டகனில் செய்தியாளர்களின் அணுகலையும் அவர் மட்டுப்படுத்தியுள்ளார். </p><p>ஈரான் போரில் அமெரிக்கா பெரும் சாதனைப் படைத்து வருவதாக திரைப்பட பாணியில் நாளும் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தவர் இந்த பீட் ஹெக்செத்.</p><p> USS ஆபிரகாம் லிங்கன் கப்பலில் மோசமடைந்து வரும் சூழல் குறித்து 'ஸ்டார்ஸ் அண்ட் ஸ்ட்ரைப்ஸ்' (Stars and Stripes) இதழ் வெளியிட்ட விமர்சன ரீதியான செய்திகள் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, கடந்த மாதம் பென்டகன் அதன் தலைமை ஆசிரியர் எரிக் ஸ்லாவின், வெளியீட்டாளர் மேக்ஸ் லெடெரர் மற்றும் மத்திய கிழக்கு செய்தியாளர் லாரா கோர்டே ஆகியோரை உத்தியோகப்பூர்வமாகப் பணிநீக்கம் செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e85f3747-c33e-448f-a062-33dda2c7df61/26-6a9cdd4bd3498.webp' /></p><p>
</p><p>வியாழக்கிழமை அன்று, ஜனாதிபதி ட்ரம்ப் பெயர் குறிப்பிடப்படாத நபர்களையும் அமைப்புகளையும் தேசத்துரோக இழிபிறவிகள் என்று கடுமையாகச் சாடியதோடு, ஈரானுடனான போருக்கு மத்தியில் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.</p><p> அத்துடன், அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஆயுதத் தளவாடங்களை உற்பத்தி செய்து வருவதாகவும் ட்ரம்ப் வியாழக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார். </p><p>மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஆயுத விற்பனைகள் தற்போது முன்னெடுக்கப்படாது என்றும், நேச நாடுகளுக்கு மட்டும் ஆயுத விற்பனைத் தொடரும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T03:24:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்டில் அதிகம் விற்பனையான Top 10 மின்சார இருசக்கர வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/top-10-electric-two-wheeler-brands-august-2026-1788657178"></link>
            <id>https://news.lankasri.com/article/top-10-electric-two-wheeler-brands-august-2026-1788657178</id>
            <summary type="text">இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை ஆகஸ்ட் 2026-இல் 1.83 லட்சம் யூனிட்கள் என பதிவாகியுள்ளது.

இது ஜூலை மாத விற்பனையை (2.05 லட்சம்) விட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை ஆகஸ்ட் 2026-இல் 1.83 லட்சம் யூனிட்கள் என பதிவாகியுள்ளது.
</p><p>
இது ஜூலை மாத விற்பனையை (2.05 லட்சம்) விட 11 சதவீதம் குறைவாக இருந்தாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2025 (1.10 லட்சம்) விற்பனைக்கு ஒப்பிடும்போது 67 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5fdda99-0f58-4329-95cd-4376d4811a06/26-6a9cbe1b97afe.webp' /></p><p>
</p><h2>
முக்கிய பிராண்டுகள் மற்றும் விற்பனை விவரங்கள்:
</h2><ul><li>
TVS Motor Company - 48,873 யூனிட்கள் (91 சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி (YoY) வளர்ச்சி). மார்க்கெட் ஷேர் 27 சதவீதம்.
</li><li>
Bajaj Auto - 41,019 யூனிட்கள் (235 சதவீதம் YoY வளர்ச்சி). 2026-இல் 3 லட்சம் யூனிட்களை கடந்த இரண்டாவது நிறுவனம்.
</li><li>
Ather Energy - 28,708 யூனிட்கள் (16 சதவீதம் மார்க்கெட் ஷேர்).
</li><li>
Hero MotoCorp (Vida) - 18,978 யூனிட்கள் (10 சதவீதம் மார்க்கெட் ஷேர்).
</li><li>
Ola Electric - 13,849 யூனிட்கள் (29 சதவீதம் YoY குறைவு). மார்க்கெட் ஷேர் 18-8 சதவீதமாக குறைந்தது.
</li><li>
Greaves Electric Mobility (Ampere) - 8,612 யூனிட்கள் (89 சதவீதம் YoY வளர்ச்சி).
</li><li>
River Mobility - 5,134 யூனிட்கள் (170 சதவீதம் YoY வளர்ச்சி).
</li><li>
BGauss Auto - 4,844 யூனிட்கள்.
</li><li>
Simple Energy - 1,635 யூனிட்கள்.
</li><li>
Motovolt Mobility - 1,365 யூனிட்கள்.</li></ul><p></p><p>
</p><h2>
சந்தை நிலை:
</h2><p>TVS மற்றும் Bajaj முன்னணி இடங்களை பிடித்துள்ளன. Ather மற்றும் Hero Vida தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால் Ola Electric மட்டும் YoY விற்பனையில் வீழ்ச்சி கண்டுள்ளது.
</p><p>
இந்த தரவுகள், இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருவதை காட்டுகின்றன. புதிய பிராண்டுகள் (River, BGauss, Simple Energy) கூட Top 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T01:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் டிரம்ப் போட்டுள்ள மிகப்பெரிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-plans-bigger-strategy-post-iran-war-1788655453"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-plans-bigger-strategy-post-iran-war-1788655453</id>
            <summary type="text">Trump plans bigger middle east strategy after Iran war:


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுடன் நடைபெற்று வரும் போருக்குப் பிறகு மத்திய கிழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump plans bigger middle east strategy after Iran war:


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுடன் நடைபெற்று வரும் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் “மிகப் பெரிய திட்டம்” ஒன்றை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக Axios வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
</p><p>
இந்த புதிய திட்டம் இன்னும் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcaa1678-9782-454e-bd1d-0d3eb99d03f0/26-6a9cb75f55394.webp' /></p><p>இதன் முக்கிய நோக்கம், ஈரானை கட்டுப்படுத்த பிராந்திய கூட்டணியை உருவாக்குவது மற்றும் இஸ்ரேலை அதன் அண்டை நாடுகளுடன் ஆழமான உறவுகளுக்கு அழைத்துச் செல்வது ஆகும்.
</p><p>
டிரம்ப் தனது நெருங்கிய ஆலோசகர்களிடம், “ஈரான் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
</p><p></p><h2>திட்டத்தின் மூன்று முக்கிய அம்சங்கள்:
</h2><p><b>ஈரானுக்கு எதிரான பிராந்திய கூட்டணி:</b> அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் வகையில், தனது கூட்டாளிகளை ஒருங்கிணைக்க முயற்சி.</p><p><b>
பிராந்திய மோதல்களை குறைத்தல்:</b> காசா திட்டத்தின் அடுத்த கட்டம், இஸ்ரேல்-சிரியா பாதுகாப்பு ஒப்பந்தம், இஸ்ரேல்-லெபனான் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல்.</p><p><b>

Abraham Accords விரிவாக்கம்:</b> இஸ்ரேல்-சவுதி அரேபியா இடையே உறவை சாதாரணப்படுத்தும் ஒப்பந்தம். இது டிரம்ப் நிர்வாகத்துக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.</p><p>
</p><p></p><p>இஸ்ரேல் தேர்தல் அக்டோபர் 27 அன்று நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு உருவாகும் அரசாங்கம் அமெரிக்காவின் புதிய திட்டத்துடன் இணைந்து செயல்படுமா என்பது கேள்வியாக உள்ளது. ஆனால், டிரம்ப் நிர்வாகம் தேர்தல் முடிவுகளை காத்திருக்காமல் திட்டத்தை முன்னெடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:59:22+00:00</updated>
        </entry>
    </feed>
