<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-26T11:37:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி, 384 பேரை காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flood-8-dead-384-people-missing-1787743420"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flood-8-dead-384-people-missing-1787743420</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி&amp;nbsp; 8 பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு
திபெத் எல்லையில் இருந்து வந்த திடீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி&nbsp; 8 பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு</h2><p>
திபெத் எல்லையில் இருந்து வந்த திடீர் மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு வடக்கு நேபாள பகுதிகளை தீவிரமாக உலுக்கியுள்ளது.</p><p>போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p> இந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் இதுவரை குறைந்தது 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போய் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16fff331-d8e8-4808-8f4a-5e99c6e77b1d/26-6a8eccbe096f1.webp' /></p><p> நேபாள சுற்றுலா வாரியம் வழங்கிய தகவல்படி, 291 வெளிநாட்டினர் மற்றும் 93 உள்நாட்டு மக்கள் என&nbsp; மொத்தம் 384 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர்.</p><p> மாயமான சுற்றுலா பயணிகளில் 105 பேர் இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p></p><p> ராசுவா மாவட்டத்தில் நேபாள காவல்துறையை சேர்ந்த &nbsp; 26 அதிகாரிகளும், 7 ஆயுதப்படை வீரர்களும் இந்த வெள்ளப்பெருக்கில் காணாமல் போயுள்ளனர்.</p><p> இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவம், பேரிடர் மீட்புப் படைகள் ஆகியவை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப் பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த வெள்ளம் காரணமாக ராசுவகதி, சிலிமே, திரிசூலி ஆகிய துணை மின் நிலையங்கள் மற்றும் ஆறு முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் இதில் சேதமடைந்து இருப்பதாக நேபாள மின்சார வாரியம் அறிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T11:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது ஆண்டி பர்ன்ஹாமின் நடவடிக்கை: கிளர்ச்சியைத் தடுக்க முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-plan-of-sanction-for-israeli-settle-1787742933"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-plan-of-sanction-for-israeli-settle-1787742933</id>
            <summary type="text">பிரித்தானியாவில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

பிரித்தானியாவின் பிரதமரான ஆண்டி பர்ன்ஹாம் பாலஸ்தீன தொழிலாளர் கட்சியின் கிளர்ச்சியைத் தடுக்கும் முயற்சியாக, இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><h2>பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம்&nbsp;</h2><p> 

பரவலாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகக் கருதப்படும் மேற்குக் கரை தொடர்பிலான, E1 திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளியை இஸ்ரேலிய அரசாங்கம் வெளியிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9470982f-e788-43ac-95c9-676baf069c3e/26-6a8ecad7d35ac.webp' />&nbsp;</p><p></p><p> 
இதற்கு பதிலடியாக, பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்த பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் விரும்புவதாகக் கூறப்படுகிறது.</p><p>

அதாவது, பாலஸ்தீனத்தில் தொழிலாளர் கட்சியின் கிளர்ச்சியைத் தணிக்க, இஸ்ரேலியக் குடியேற்றங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் திட்டத்தை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><h2>வர்த்தகத்தைத் தடை</h2><p>
தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினரான 140-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டவிரோத இஸ்ரேலியக் குடியேற்றங்களுடனான வர்த்தகத்தைத் தடை செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டு ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
</p><p>
 
இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் லிவர்பூலில் நடைபெறும் தொழிற்கட்சியின் மாநாட்டிலும் பர்ன்ஹாம் புதிய அழுத்தத்தை எதிர்கொள்வார்; அங்கு கட்சி உறுப்பினர்கள் இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கோரும் ஒரு தீர்மானத்தை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இஸ்ரேலியக் குடியேற்றங்கள் மீதான வர்த்தகத் தடை மற்றும் தனிநபர்கள் மீதான பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றுக்கான திட்டங்களுக்கு, பர்ன்ஹாம் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒரு மூத்த அரசாங்க வட்டாரம் 'தி டைம்ஸ்' பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c8c922f-ccae-4584-8340-36ca49759fa4/26-6a8ecad88d727.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T11:12:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல் - சுகாதாரத்துறை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swine-flu-rises-in-tamilnadu-what-are-the-symptoms-1787730965"></link>
            <id>https://news.lankasri.com/article/swine-flu-rises-in-tamilnadu-what-are-the-symptoms-1787730965</id>
            <summary type="text">Swine flu rises in tamilnadu: தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யுமாறு சுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swine flu rises in tamilnadu: தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. </p><h3>

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்
</h3><p>
இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.</p><p> 

டெல்லியில் 2,000க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2af8d60c-69e7-4e6b-9965-4e187157d845/26-6a8e9c16b0431.webp' /></p><p>

தற்போது தமிழ்நாட்டிலும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>

ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டில் 19 பேருக்கு மட்டுமே இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு, தற்போது அந்த எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது.&nbsp;</p><p></p><p>

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளான காய்ச்சல், தொடர் சளி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு, கடுமையான தலைவலி, மூட்டு வலி, குளிர் நடுக்கம், மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் ஆகிய பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p> 

மருந்தகங்களிலும் தானாகச் சென்று மருந்துகளை வாங்கி உட்செலுத்தும் சுய மருத்துவத்தைத் (Self-medication) கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் எனவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T09:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்: சீறிப்பாய்ந்த 162 ட்ரோன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/162-russian-targets-ukraine-major-cities-1787735269"></link>
            <id>https://news.lankasri.com/article/162-russian-targets-ukraine-major-cities-1787735269</id>
            <summary type="text">உக்ரைன் மீது இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலை உக்ரைனிய வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது. ரஷ்யாவின் வான்வழித் தாக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீது இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலை உக்ரைனிய வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.</p><h2> ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்</h2><p>
புதன்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய படைகள் இரவோடு இரவாக மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.</p><p> கிட்டத்தட்ட 162 ஆளில்லா விமானங்களை உக்ரைனிய விமானப்படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> பல்வேறு முனைகளில் இருந்து முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் ஆயுதங்கள் மற்றும் திசைதிருப்பும் ஏமாற்று அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/651dd687-eb7c-4a9c-97f4-6957299e3ff0/26-6a8eace695cd1.webp' /></p><p> இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைனிய பாதுகாப்பு படை டெலிகிராமில் வெளியிட்ட தகவலில், ரஷ்யா ஷாஹெட் ரக ட்ரோன்கள், கெர்பர் ரக ஏமாற்று ட்ரோன்கள், பரோடி ரக ட்ரோன்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p></p><p> மேலும் இந்த வான்வழித் தாக்குதல் ஆயுதங்கள் குர்ஸ்க், ஓரியல், பிரிமோர்ஸ்கோ - அக்தர்ஸ்க், ஹவார்திட்ஸ்கே மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய பல்வேறு இடங்களில் இருந்து ஏவப்பட்டுள்ளது.</p><p> ரஷ்யா ஏவிய 162 ட்ரோன்களில் 134 ட்ரோன்களை உக்ரைனிய பாதுகாப்பு படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து இருப்பதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.</p><p> இடைமறிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிய ட்ரோன்கள் 18 வெவ்வேறு இடங்களில் தாக்குதலை நடத்தியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-26T09:08:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரவெடி ஆட்டமாடிய மொயீன் அலி: ஆன்டிகுவா அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/moeen-ali-blast-56-runs-antigua-won-by-30-runs-1787732171"></link>
            <id>https://news.lankasri.com/article/moeen-ali-blast-56-runs-antigua-won-by-30-runs-1787732171</id>
            <summary type="text">Moeen ali blast 56 runs in caribbean premier league 2026: கரீபியன் டி20 போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Moeen ali blast 56 runs in caribbean premier league 2026: கரீபியன் டி20 போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸை வீழ்த்தியது.&nbsp;</p><h2>மொயீன் அலி&nbsp;வாணவேடிக்கை </h2><p>
ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணிகள் மோதிய போட்டி சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b80a0cf-f178-4a5b-9347-9dfa8caa2784/26-6a8ea1a4be49b.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணியில் ரகீம் கார்ன்வால் டக்அவுட் ஆனார். அதன் பின்னர் கரிமா கோர் 27 ஓட்டங்கள் எடுத்தார்.

ஹசன் நவாஸ் 7 ஓட்டங்களில் வெளியேற, ஆமிர் ஜான்கூ 26 ஓட்டங்கள் எடுத்து மோட்டி பந்துவீச்சில் அவுட் ஆனார்.</p><p> எனினும் அணித்தலைவர் மொயீன் அலி (Moeen Ali) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.

இதன்மூலம் சரிவில் இருந்து மீண்ட அணி 155 ஓட்டங்கள் எடுத்தது. </p><p>கடைசிவரை களத்தில் நின்ற மொயீன் அலி 37 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் விளாசினார். ஷாமர் ஸ்ப்ரிங்கர் 19 ஓட்டங்கள் எடுத்தார்.&nbsp;</p><h2>ஆன்டிகுவா வெற்றி </h2><p>
அடுத்து களமிறங்கிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 18 ஓவர்களில் 125 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><p> இதன்மூலம் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
அதிகபட்சமாக ரிவால்டோ கிளார்க் 27 ஓட்டங்களும், கெவ்லோன் ஆண்டர்சன் 22 ஓட்டங்களும் எடுத்தனர். ஜோஷுவா ஜேம்ஸ் 3 விக்கெட்டுகளும், அல்ஸாரி ஜோஸப், ஷதாப் கான் மற்றும் சுஃபியான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a29b40-2ab5-47cd-a316-de98116b711f/26-6a8ea1a5a4c48.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><i> <b>WHATSAPP CHANNEL</b></i></a><i><b> </b></i>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T08:17:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அண்டார்டிகா பனிப் பாறைகளுக்கு அடியில் பாயும் பிரம்மாண்ட நதி: நாசா செயற்கைக்கோள் அளித்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nasa-satellite-reveals-river-under-antarctic-ice-1787731459"></link>
            <id>https://news.lankasri.com/article/nasa-satellite-reveals-river-under-antarctic-ice-1787731459</id>
            <summary type="text">மேற்கு அண்டார்டிகாவில் பனிப்பாறைக்கு அடியில் பிரம்மாண்ட நதி பாய்வதை நாசா செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுள்ளது. அண்டார்டிகா பனிப் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு அண்டார்டிகாவில் பனிப்பாறைக்கு அடியில் பிரம்மாண்ட நதி பாய்வதை நாசா செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுள்ளது.</p><h2> அண்டார்டிகா பனிப் பாறைகளுக்கு அடியில் பாயும் பிரம்மாண்ட நதி</h2><p>விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செயற்கைக்கோள் தரவுகளில், அண்டார்டிகாவின் உறைபனி மற்றும் பனிப்பாறைகளுக்கு அடியில் சுறுசுறுப்பான நீரோட்ட அமைப்பும், பிரம்மாண்ட ஏரிகளும் இயங்கி வருவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.</p><p> நாசா அமைப்பினால் விண்ணில் செலுத்தப்பட்ட ஜஸ்சாட் செயற்கைக்கோள் கடந்த 2003 முதல் 2006 வரை அண்டார்டிகாவின் மேற்பரப்பை தீவிரமாக ஆராய்ச்சி செய்து வந்தது.</p><p> இதில் பொருத்தப்பட்டிருந்த லேசர் கருவிகள் பனிப்பாறைகளில் ஏற்படும் சிறிய மாற்றங்களை கூட துல்லியமாக கணக்கிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10e5ec7a-dbb1-4ce6-9e59-7af64d52524a/26-6a8e9e04da719.webp' /></p><p></p><p> இந்த ஆய்வின் முடிவில், மேற்கு அண்டார்டிகாவின் பனிப்பரப்பிற்கு அடியில் தொடர்ச்சியாக நீர் நகரும் 14 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.</p><p> மேலும் விலான்ஸ் மற்றும் மெர்சர் பனி நதிகளின் &nbsp; மேற்பரப்பில் பெரிய பள்ளங்களை ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர்.</p><p> அத்துடன் 2003 முதல் 2005 வரையிலான குறுகிய காலகட்டத்தில் இந்த பகுதியில் 9 மீட்டர் வரை பனிப்பரப்பு கீழே சரிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p> இதன் காரணத்தை தீவிரமாக ஆராய்ச்சி செய்த அறிவியலாளர்கள் “ஏங்கல்பார்ட்” என்ற மறைமுக ஏரியில் இருந்து கிட்டத்தட்ட 2 கன கிலோமீட்டர் அளவிலான நன்னீர் பெருங்கடலில் கலந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> அப்பகுதியில் உள்ள புவி வெப்பம் மற்றும் உராய்வு காரணமாக நீர் உறைந்து போகாமல் தொடர்ந்து திரவ நீராக ஓடி வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-26T08:04:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோனல் தினுஷா சாதனை சதம்; 290 ஓட்டங்கள் குவித்து பாலோ ஆன் ஆன இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sonal-dinusha-record-by-century-vs-india-2nd-test-1787727427"></link>
            <id>https://news.lankasri.com/article/sonal-dinusha-record-by-century-vs-india-2nd-test-1787727427</id>
            <summary type="text">sonal dinusha record century in india vs srilanka 2nd test: 290 ஓட்டங்கள் குவித்து இலங்கை பாலோ ஆன் ஆன நிலையில், சதமடித்த சோனல் தினுஷா சாதனை பட்டியலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>sonal dinusha record century in india vs srilanka 2nd test: 290 ஓட்டங்கள் குவித்து இலங்கை பாலோ ஆன் ஆன நிலையில், சதமடித்த சோனல் தினுஷா சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
</p><h3>
290 ஓட்டங்கள் குவித்து பாலோ ஆன் ஆன இலங்கை</h3><p> 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf0c01d7-4bd1-4d4a-a41f-9de09cfdf0a3/26-6a8e8e459efda.webp' /></p><p>

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் சதம் விளாசியுள்ளனர்.&nbsp;</p><p></p><p>

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 290 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42750cd7-aa59-46ba-a61e-8fab993631e9/26-6a8e8e44e7452.webp' /></p><p>

213 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இருந்த இலங்கை அணி பாலோ ஆன் ஆனது. இதையடுத்து, இலங்கை அணி 2வது இன்னிங்ஸை ஆடி வருகிறது.</p><h3>

 சோனல் தினுஷா சாதனை </h3><p>

இலங்கை தரப்பில் 103 ஓட்டங்கள் குவித்து சதம் விளாசிய சோனல் தினுஷா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். </p><p>

இந்தியாவுக்கு எதிரான தனது முதல் 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் 80 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை சோனல் தினுஷா பெற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fba8233-c447-4409-a9e8-08ef213293ea/26-6a8e8e443310b.webp' /></p><p>

முன்னதாக மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஜாம்பவான் ஜாகீர் அப்பாஸ் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர்.&nbsp;</p><p></p><p>
எவர்டன் வீக்ஸ் 1948 ஆம் ஆண்டிலும், ஜாகீர் அப்பாஸ் 1978 ஆம் ஆண்டிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர். </p><p>48 ஆண்டுகளுக்கு பிறகு சோனல் தினுஷா இந்த சாதனையை முறியடித்துள்ளார்.</p><p>

மேலும், இந்தியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்துள்ள வீரர்களின் பட்டியலிலும் சோனல் தினுஷா இடம் பிடித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T07:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க இராணுவ விமானம்: வாய் திறக்காத மாஸ்கோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-air-force-flight-landed-in-moscow-airport-1787714816"></link>
            <id>https://news.lankasri.com/article/us-air-force-flight-landed-in-moscow-airport-1787714816</id>
            <summary type="text">உக்ரைன் உடனான போர் பதற்றம் நீடித்து வரும் இந்த நேரத்தில் அமெரிக்க விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் உடனான போர் பதற்றம் நீடித்து வரும் இந்த நேரத்தில் அமெரிக்க விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><h2> உக்ரைன் - ரஷ்யா மோதல்</h2><p>
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p> இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.</p><p> அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பல கட்ட பொருளாதார தடைகள் விதித்து இருப்பதுடன், ரஷ்ய எண்ணெயை மற்ற நாடுகளும் வாங்க கூடாது என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ab2bdea-c950-45b8-b4a1-1a5363ea1f02/26-6a8e5d017fc02.webp' /></p><p> இருப்பினும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்த அச்சுறுத்தல்களுக்கு கவலை படாமல் தீவிரமாக சண்டை போட்டு வருகிறார்.</p><h2> ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்</h2><p>இந்நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய டிரான்ஸ்போர்ட் விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><p> இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது தொடர்பாக ரஷ்யா எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.</p><p> தரவுகளின் படி, ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம் C-17A Globemaster III என தெரியவந்துள்ளது.</p><p> மேலும் இந்த விமானம் நேரடியாக அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவிற்கு வரவில்லை.</p><p> அமெரிக்காவில் உள்ள கேம்ப் ஸ்பிரிங்ஸ் என்ற ஆண்ட்ருவ்ஸ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட&nbsp; C-17A Globemaster III விமானம், முதலில் லிட்வியாவில் உள்ள ரிகா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.</p><p> &nbsp;ஆண்ட்ருவ்ஸ் விமானப்படை தளம் அமெரிக்க ஜனாதிபதியின் ஏர் விமானப்படை தளத்தில் முக்கியமானதாகும்.</p><p> நேற்று முன்தினம் லிட்வியாவில் இருந்து புறப்பட்ட C-17A Globemaster III விமானம் ரஷ்யாவில் உள்ள வனுகோவா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.</p><p> இந்த C-17A Globemaster III விமானம் அமெரிக்கா விமானப்படையின் ராணுவ தளவாடங்கள், சரக்குகளுடன் நீண்ட தூரம் பறக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-26T06:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியா எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானம்: எச்சரித்த ரேடார் அமைப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-aircraft-enters-into-south-korea-zone-1787717275"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-aircraft-enters-into-south-korea-zone-1787717275</id>
            <summary type="text">Russian aircraft enters into South Korea zone: தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது பதற்றத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian aircraft enters into South Korea zone: தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தென் கொரிய வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய விமானம்</h2><p>

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் சில நிமிட பொழுதில் அத்துமீறி நுழைந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.</p><p> &nbsp;ரஷ்ய போர் விமானங்கள் கிழக்கு கடற்கரைக்கு மேலாக உள்ள வான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.</p><p> மேலும் இந்த விமானங்கள் டோக்டோ மற்றும் உல்லுங் தீவுகள் அருகே வந்து விட்டு அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0644acfb-fdc3-447a-bf18-98f7ba832df9/26-6a8e669cdccec.webp' /></p><p> ஆனால் இந்த சம்பவத்தில் ரஷ்ய விமானங்கள் தென் கொரியாவின் வான்வெளிக்குள் நுழையவில்லை என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2> தென் கொரியாவின் உடனடி நடவடிக்கை</h2><p>
ரஷ்ய விமானங்கள் நுழைந்ததை அடுத்து தென் கொரியா தன்னுடைய போர் விமானங்களை உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர்.</p><p> ரஷ்ய விமானங்கள் நெருங்கி வருவதை தென் கொரிய ரேடார் அமைப்புகள் முன்கூட்டியே அறிந்து போர் விமானங்களை அனுப்பியதாகவும், எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் விமானப்படை இருப்பதால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விமானங்களை உடனடியாக அந்த பகுதிக்கு அனுப்பியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:35:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 15 குழந்தைகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/15-infants-dies-in-pakistan-hospital-fire-1787723457"></link>
            <id>https://news.lankasri.com/article/15-infants-dies-in-pakistan-hospital-fire-1787723457</id>
            <summary type="text">15 infants dies in pakistan hospital fire: பாகிஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>15 infants dies in pakistan hospital fire: பாகிஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
</p><h3>
பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் தீ விபத்து</h3><p>

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக(PIMS) மருத்துவமனை இயங்கி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40851987-b260-446d-b3bb-75c223181c5a/26-6a8e7ec32e3e7.webp' /></p><p>

இங்குள்ள தாய் மற்றும் குழந்தை நலப் பிரிவின் மூன்றாவது மாடியில் உள்ள மகப்பேறு மருத்துவப் பிரிவில், இன்று காலை சுமார் 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
</p><p>
மருத்துவமனைக்கு விரைந்த மீட்புக்குழுவினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அங்கிருந்தவர்களை உடனடியாக வெளியேற்ற தொடங்கினர்.&nbsp;</p><p></p><p>

உள்ளே 16 குழந்தைகள் இருந்த நிலையில், ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். </p><p>

குளிரூட்டும் அமைப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> 

இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T05:52:45+00:00</updated>
        </entry>
    </feed>
