<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-03T12:30:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Tesla, SpaceX பங்குகள் வீழ்ச்சி- எலான் மஸ்க் சொத்து மதிப்பு கடும் சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/elon-musk-loses-600-billions-still-worlds-richest-1785757815"></link>
            <id>https://news.lankasri.com/article/elon-musk-loses-600-billions-still-worlds-richest-1785757815</id>
            <summary type="text">Elon Musk net worth: எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டொலர் குறைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Elon Musk net worth</b>: எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டொலர் குறைந்துள்ளது.
</p><p>
உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஒரு மாதத்தில் தனது சொத்து மதிப்பில் 600 பில்லியன் அமெரிக்க டொலரை இழந்துள்ளார்.
</p><p>
SpaceX மற்றும் Tesla நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியே இதற்கு காரணம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dea54488-29cb-4baa-80d6-9edc5444ca79/26-6a70825f79947.webp' /></p><h2>உலகின் முதல் டிரில்லியனர்</h2><p>ஜூன் 16 அன்று SpaceX பங்குகள் IPO-வில் மிகப்பெரிய வரலாற்றை படைத்தன. IPO விலை 135 டொலராக இருந்த நிலையில், பங்குகள் 150 டொலருக்கு பட்டியலிடப்பட்டன. முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் பங்குகள் 202 டொலர் வரை உயர்ந்தன.

இதனால், மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் ஆனார். ஆனால், அந்த பெருமை நீடிக்கவில்லை. தற்போது SpaceX பங்குகள் 108 டொலர் வரை சரிந்துள்ளன.</p><p>

இதனால், மஸ்கின் செல்வம் 1.33 டிரில்லியன் டொலரிலிருந்து 684 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி, மற்ற பில்லியனர்களின் மொத்த செல்வத்தை விட அதிகம்.
</p><p>
மேலும், Tesla நிறுவனத்தின் பங்குகளும் 17 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. இரண்டாம் காலாண்டு (Q2) முடிவுகளில், Tesla எதிர்பார்த்த லாபத்தை எட்டவில்லை. AI மற்றும் ரோபோடிக்ஸ் துறையில் அதிக முதலீடு செய்ததால், செலவுகள் அதிகரித்தன. வாகன விற்பனை அதிகரித்திருந்தாலும், குறைந்த விலை மற்றும் குறைந்த regulatory credits காரணமாக லாபம் குறைந்தது.
</p><p></p><h2>முதலீடு </h2><p>இவ்வளவு பெரிய இழப்புகளுக்கு மத்தியில், மஸ்க் தனது AI, சுய இயக்க வாகனங்கள், ரோபோடாக்ஸி, மனித வடிவ ரோபோட்கள் போன்ற திட்டங்களில் 25 பில்லியன் டொலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார். </p><p>இது கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிகம்.

மஸ்கின் செல்வம் குறைந்தாலும், அவர் இன்னும் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையைத் தக்க வைத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T11:56:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் சொல்வதில் உண்மை இல்லை... பேச்சுவார்த்தை குறித்து ஈரான் தரப்பு மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/no-current-talks-with-us-1785754460"></link>
            <id>https://news.lankasri.com/article/no-current-talks-with-us-1785754460</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் எதுவும் முடிவு செய்யவில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது.
திங்களன்று ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்க இருப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் எதுவும் முடிவு செய்யவில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது.
</p><p>திங்களன்று ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், அமெரிக்காவுடன் தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>அமைச்சகம் மறுப்பு</h2><p>
</p><p>ஈரான் மீது நடத்தவிருந்த மிகப்பெரிய தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி ரத்து செய்ததைத் தொடர்ந்து, மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை தொடங்க இருப்பதாக அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டு வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cdac63f-4817-468c-9542-8d0d1f18c45d/26-6a70735f0bf07.webp' /></p><p> </p><p>ஞாயிறன்று 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' (Air Force One) விமானத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தாக்குதல் உருவாவதை நேரில் கண்டதால் அதன் தீவிரத்தை ஈரான் அறிந்திருந்தது. </p><p>இதனையடுத்தே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்ததாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார். முன்னதாக தமது ட்ரூத சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், 
ஒப்பந்தம் ஒன்று ஏற்கப்பட்டுவிட்ட நிலையில், காத்திருக்குமாறு ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் அவரிடம் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். </p><p>ஆனால், தாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதையோ அல்லது அவ்வாறு செய்வதற்கான திட்டங்கள் ஏதேனும் இருப்பதையோ திங்களன்று ஈரானின் வெளிவிவகார அமைச்சகம் மறுத்துள்ளது.</p><p></p><p> </p><p>மேலும் ட்ரம்பின் பேச்சில் உண்மை இல்லை என்றும், ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறை குறித்து ஒரு புரிதலை எட்ட, ஓமனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈரானின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார். </p><p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான முந்தைய பேச்சுவார்த்தைகள் மத்தியஸ்தர்கள் மூலமே முன்னெடுக்கப்பட்டன. மேலும், பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவருவது நெருங்கிவிட்டதாக ட்ரம்ப் பலமுறை உறுதியளித்த போதிலும், பதிலுக்குப் பதில் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0702f71e-4cc3-4caf-ae9b-83a2f4540705/26-6a70735e58956.webp' /></p><p> </p><p>இதனிடையே, திங்களன்று நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையில் யார் யார் கலந்துக்கொள்வார்கள் அல்லது பேச்சுவார்த்தை எங்கே முன்னெடுக்கப்படுகிறது என்பது தொடர்பானத் தகவல் எதையும் ட்ரம்ப் வெளிப்படுத்தவில்லை. </p><p>ஈரான் மீது வார இறுதியில் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற அமெரிக்காவின் நட்பு வட்டாரம் தன்னிடம் வலியுறுத்தியதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T11:55:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழைப்பெண்ணின் வங்கிக்கணக்கில் நூறு கோடி ரூபாய்: பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bank-mistakenly-credit-100-crores-in-women-account-1785757373"></link>
            <id>https://news.lankasri.com/article/bank-mistakenly-credit-100-crores-in-women-account-1785757373</id>
            <summary type="text">பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் தவறுதலாக டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏழைப்பெண்ணொருவரின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் தவறுதலாக டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏழைப்பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.</p><h3>

ஏழைப்பெண்ணின் வங்கிக்கணக்கில் நூறு கோடி ரூபாய்
</h3><p>
கொல்கொத்தாவில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட வீடொன்றில் வாழ்ந்துவருபவர் கஷ்மிரா ஷா (36).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81aec61d-5292-4c93-a027-c8d8cfee63c8/26-6a707ebe56487.webp' /></p><p>

க‌ஷ்மிராவின் கணவர் பை தைக்கும் வேலை செய்ய, கணவருக்கு உதவியாக சேலைகளுக்கு எம்ப்ராய்டரி செய்யும் வேலை செய்கிறார் கஷ்மிரா.
</p><p>
சமீபத்தில், தனது வங்கிக்கணக்கில் வீட்டு எரிவாயுவுக்கான உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுவிட்டதா என்பதை அறிவதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார் கஷ்மிரா.
</p><p>
அப்போது வங்கி அலுவலர் ஒருவர் கஷ்மிராவின் வங்கிக்கணக்கில் 99,99,99,997 ரூபாய் இருப்பதாகக் கூற, அதிர்ச்சியடைந்துள்ளார் அவர்.
</p><p>
விடயம் என்னவென்றால், அவரது வங்கிக்கணக்கில் தவறுதலாக அந்தத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

கணினி அல்லது மென்பொருள் கோளாறால் அந்த தவறு நடைபெற, அதனால் அந்த மாவட்டத்திலுள்ள மொத்த வங்கிப் பரிவர்த்தனைகளும் முடங்கிவிட்டனவாம்.
</p><p>
இன்னொரு விடயம் என்னவென்றால், கொல்கொத்தாவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணான நுபூர் குப்தா என்னும் கணக்கிலும் இதேபோல 47 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்க, அவர் அது குறித்து வங்கிக்கு புகாரளிக்க, வங்கி ஊழியர்கள், பொலிசார், வருமான வரித்துறை அதிகாரிகள் என ஒரு பெருங்கூட்டமே அவரது வீட்டுக்கு வர அங்கு பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
</p><p>
எதனால் இந்த தவறு நேர்ந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T11:45:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேல்ஸை அடுத்து இன்ஃபான்டினோவுக்கு இடியை இறக்கிய இங்கிலாந்து கால்பந்துச் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fa-withdraw-support-infantino-1785756560"></link>
            <id>https://news.lankasri.com/article/fa-withdraw-support-infantino-1785756560</id>
            <summary type="text">ஃபிஃபா (Fifa) தலைவர் கியானி இன்ஃபான்டினோவுக்கான ஆதரவை இங்கிலாந்து கால்பந்து சங்கம் (FA) விலக்கிக்கொள்ள முடிவு.
கால்பந்து உலகக் கிண்ணம் பங்குகளை விற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிஃபா (Fifa) தலைவர் கியானி இன்ஃபான்டினோவுக்கான ஆதரவை இங்கிலாந்து கால்பந்து சங்கம் (FA) விலக்கிக்கொள்ள முடிவு.
</p><p>கால்பந்து உலகக் கிண்ணம் பங்குகளை விற்பனை செய்யும் அவரது திட்டங்களால் ஏற்பட்ட விளைவுகளுக்கு மத்தியில், இங்கிலாந்து கால்பந்து சங்கம், ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவுக்குத் தனது ஆதரவைத் திரும்பப் பெறுவதாகக் கடிதம் எழுத உள்ளது.</p><h2>இன்ஃபான்டினோவின் தலைமை</h2><p> </p><p>இன்ஃபான்டினோவின் அந்த திட்டம் தொடர்பாக Uefa சட்ட நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தியுள்ள நிலையிலும், ஃபிஃபா தலைவராக இன்ஃபான்டினோ தொடர்வதற்கான முயற்சிக்கு வேல்ஸ் பகிரங்கமாக ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ள நிலையிலும் இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d69592c9-7f4f-4d1f-b33c-bfd1861f8387/26-6a707b92a0b5a.webp' /></p><p> </p><p>ஐரோப்பா, வட மற்றும் மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியங்களில் உள்ள கால்பந்து நிர்வாக அமைப்புகளால் இன்ஃபான்டினோவின் தலைமைத்துவம் ஏற்கனவே பகிரங்கமாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கத்தார், லெபனான், குவைத் மற்றும் இலங்கை ஆகியவை ஃபிஃபா (FIFA) தலைவராக இன்ஃபான்டினோ தொடர்வதற்குத் தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளன.</p><p></p><p> </p><p>அவர் மார்ச் மாதம் வரை பதவியில் நீடித்தால், நான்காவது மற்றும் இறுதிக் கட்டமாக தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட முடியும்; வெற்றிபெற ஃபிஃபாவின் (FIFA) 211 உறுப்பினர்களில் 106 பேரின் வாக்குகள் அவருக்குத் தேவைப்படும். </p><p>இதில் Uefa 55 வாக்குகளையும், ஆப்பிரிக்கா 54, ஆசியா 46, Concacaf 35, Oceania 11 மற்றும் Conmebol 10 வாக்குகளையும் பெற்றுள்ளன. 46 வாக்குகள் கொண்ட ஆசிய கால்பந்து கூட்டமைப்பு Uefa எடுக்கும் முடிவுக்கு ஆதரவளித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16c4c4d0-08f8-4ac7-841f-b724456af7a0/26-6a707b91ef2e1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T11:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்வோரை பிரான்ஸ் திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும்: பிரித்தானிய அரசியல்வாதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-politician-says-will-return-migrants-to-france-1785756155"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-politician-says-will-return-migrants-to-france-1785756155</id>
            <summary type="text">தாங்கள் ஆட்சிக்கு வந்தால், புலம்பெயர்வோரை தூக்கிக்கொண்டு போய் பிரான்சில் விட்டுவிடுவோம் என்றும், பிரான்ஸ் அவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாங்கள் ஆட்சிக்கு வந்தால், புலம்பெயர்வோரை தூக்கிக்கொண்டு போய் பிரான்சில் விட்டுவிடுவோம் என்றும், பிரான்ஸ் அவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார் பிரித்தானிய அரசியல்வாதி ஒருவர்.
</p><p>

சமீபத்தில், மொராக்கோ நாட்டிலிருந்து புலம்பெயர்வோர் சுமார் 60,000 பேர் ஸ்பெயினுக்கு சொந்தமான சியூட்டா என்னும் நகருக்குள் நுழைந்தது நினைவிருக்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7abcc771-0959-4cf8-8efc-8cd0303d81e5/26-6a7079fd344cb.webp' /></p><p>
அப்போது ஸ்பெயின் அவர்களைக் கையாண்ட விதத்தைப் பார்த்து, தங்களுக்கும் ஒரு திட்டம் உருவாகியுள்ளது என பிரித்தானிய அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.
</p><h3>
புலம்பெயர்வோரை பிரான்ஸ் திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும்</h3><p>

ஸ்பெயின், புலம்பெயர்வோர் விடயத்தில் கிட்டத்தட்ட ஒரு ராணுவ நடவடிக்கை எடுப்பது போல நடந்துகொண்டதாகக் கூறுகிறார் யூகே ரீஃபார்ம் கட்சியின் செய்தித்தொடர்பாளரான ஸியா யூசஃப்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af01ea8e-8d87-41ab-a3c2-dc8c719e0502/26-6a7079fddccf0.webp' /></p><p>
புலம்பெயர்வோர் ஸ்பெயினுக்குள் நுழைய முற்பட்டபோது, ஸ்பெயின் ராணுவ வீரர்கள் போராயுதங்களைக் கையில் வைத்திருந்தது போல் இருந்தது என்றும், அவர்கள் புலம்பெயர்வோர் மீது நேரடியாக பெப்பர் ஸ்பிரே அடித்ததை தான் கண்டதாகவும், ஒரே நாளில் சுமார் 40,000 சட்ட விரோத புலம்பெயர்வோரை ஸ்பெயினால் திருப்பி அனுப்ப முடிந்ததை தான் கண்டதாகவும் தெரிவித்துள்ளார் யூசஃப். </p><p></p><p>
ரீஃபார்ம் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிரித்தானிய கடற்படை ஆங்கிலக்கால்வாயில் பயணிக்கும் புலம்பெயர்வோரை தூக்கிக்கொண்டு போய் பிரான்சில் விட்டுவிடும் என்றும், பிரான்ஸ் அவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார் யூசஃப்.
</p><p>
ஸ்பெயின் மொராக்கோ நாட்டு புலம்பெயர்வோரைக் கையாண்ட விதத்தைப் பார்த்தே தங்களுக்கு இப்படி ஒரு யோசனை உருவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T11:25:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-police-data-leak-100000-officers-exposed-1785750701"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-police-data-leak-100000-officers-exposed-1785750701</id>
            <summary type="text">UK Police Data Leaked: பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது.பிரித்தானிய காவல்துறையின் சுமார் 1 லட்சம் அத...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>UK Police Data Leaked:</b> பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது.</p><p>பிரித்தானிய காவல்துறையின் சுமார் 1 லட்சம் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் டார்க் வெப்பில் வெளியானது.</p><p></p><p>
</p><p>
Police National Legal Database (PNLD) எனப்படும் முக்கிய சட்ட தரவுத்தளத்தில் நடந்த சைபர் தாக்குதலின் விளைவாக இந்த தகவல் கசிவு ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த தாக்குதலுக்கு ExfilSquad எனப்படும் ஹேக்கர் குழு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதற்கு முன்பு, Department for Education (DfE) தரவுத்தளத்தில் இருந்து 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் கசிந்திருந்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e663574f-6a2b-4bd5-8522-c0a76c87f327/26-6a7064af61833.webp' /></p><p>இந்த சம்பவம், Ministry of Defense, Home Office, National Crime Agency (NCA), Crown Prosecution Service (CPS) போன்ற முக்கிய அமைப்புகளின் தரவுகளும் ஆபத்துக்குள்ளாகியுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.</p><p>

“நான் பல ஆண்டுகளாக குற்றவாளிகளை கைது செய்துள்ளேன். எனது தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருப்பது மிகவும் ஆபத்தானது. இது எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு சவாலை ஏற்படுத்தியுள்ளது” என அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>பணத்திற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
</p><p>
ஹேக்கர்கள், “ஒருமுறை உங்கள் தரவு வெளியானால் அது எப்போதும் இணையத்தில் இருக்கும். வழக்குச் செலவுகளை விட எங்களுக்குக் கட்டணம் செலுத்துவது எளிது” என்று எச்சரித்துள்ளனர்.
</p><p>
பிரித்தானியாவில் தற்போது 1,45,550 காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இந்த தரவுத்தளத்தை பயன்படுத்தியிருப்பதால், இந்த கசிவு மிகப்பெரிய பாதுகாப்பு சவாலாக உள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T09:58:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழு நிமிடங்களில் ரூ. 15 கோடி மதிப்பிலான பிட்காயிணைப் பறிகொடுத்த கனேடியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bitcoin-gone-in-7-minutes-1785751076"></link>
            <id>https://news.lankasri.com/article/bitcoin-gone-in-7-minutes-1785751076</id>
            <summary type="text">கனேடியருக்குச் சொந்தமான 1.6 மில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயின் மாயம்கனேடியத் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ரூ 15 கோடி மதிப்பிலான பிட்காயின்கள் ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனேடியருக்குச் சொந்தமான 1.6 மில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயின் மாயம்</p><p>கனேடியத் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ரூ 15 கோடி மதிப்பிலான பிட்காயின்கள் ஏழே நிமிடங்களில் கொள்ளைப்போன சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>18.25245043 பிட்காயின்</h2><p>
</p><p>Coldcard வன்பொருள் வாலட்களுடன் (hardware wallets) தொடர்புடைய பாதுகாப்பு மீறல் ஒன்று கிரிப்டோகரன்சி சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55740950-3418-44ec-ba7e-97b21364a212/26-6a706626e29c5.webp' /></p><p> </p><p>இதில் சுமார் 1,367.05 பிட்காயின்கள் (BTC) திருடப்பட்டிருக்கலாம் என்று பிளாக்செயின் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பு மீறல் நடத்தியவர்கள், வாலட்டின் 'சீட் ஃப்ரரேஸ்' (seed phrase) உருவாக்கச் செயல்முறையில் இருந்த ஒரு குறைபாட்டைப் பயன்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. </p><p>பலர் தங்களின் பிட்காயின் சேமிப்புகள் கொள்ளையிடப்பட்டுள்ளதை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒருவர் கனடிய தொழில்முனைவோரான ஜொனாதன் குட்மேன்.</p><p></p><p> </p><p>இவருக்குச் சொந்தமான 1.6 மில்லியன் டொலர் மதிப்பிலான 18.25245043 பிட்காயின்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ 15 கோடி என்றே தெரிய வருகிறது. </p><p>குட்மேன் தெரிவிக்கையில், தனக்குச் சொந்தமான பிட்காயின் அனைத்தும் கோல்ட் ஸ்டோரேஜில் சேமிக்கப்பட்டிருந்ததால் அவை பாதுகாக்கப்படுவதாக நம்பியதாக கூறியுள்ளார்.</p><h2>வெறும் ஏழே நிமிடங்களில்</h2><p> </p><p>கோல்ட் ஸ்டோரேஜ் என்பது, பிரைவேட் கீகள் உருவாக்கப்பட்டு, ஒரு ஹார்டுவேர் வாலட்டில் ஆஃப்லைனில் வைக்கப்படும் ஒரு முறையாகும். ஆனால், பாதுகாப்பு மீறல் நடத்தியவர்கள் கோல்ட் ஸ்டோரேஜில் சேமிக்கப்பட்டிருந்ததையும் திருடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f782db4-6ac2-4055-98e4-15519382afbf/26-6a7066279c802.webp' /></p><p> </p><p>மேலும், வெறும் ஏழே நிமிடங்களில் தமக்குச் சொந்தமான பிட்காயின்கள் பறிபோனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட Coldcard சாதனங்களில் 'சீட் ஃபிரேஸ்களை' (seed phrases) உருவாக்கும் குறியீட்டில் உள்ள ஒரு சிக்கலை பாதுகாப்பு மீறல் நடத்தியவர்கள் பயன்படுத்திக்கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>கொள்ளைபோன பிட்காயின்கள் திரும்பக் கிடைக்கும் என்று எதிர்பார்க்காவிட்டாலும், காவல்துறை மற்றும் ஒன்ராறியோ பாதுகாப்பு ஆணையத்திடம் (Ontario Securities Commission) புகாரளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குட்மேன் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T09:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக நாடுகள் பலவற்றின் கவனம் ஈர்த்துவரும் ஜேர்மன் கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-war-ship-attract-peoples-attention-1785750744"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-war-ship-attract-peoples-attention-1785750744</id>
            <summary type="text">ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துவருகிறது.
</p><p>
ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், தற்போது அந்தக் கப்பல் கனடா வந்தடைந்துள்ளது.</p><h3>

கவனம் ஈர்த்துவரும் ஜேர்மன் கப்பல்</h3><p>

கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்திலுள்ள ஹாலிஃபாக்ஸ் நகரம் நிறுவப்பட்டதன் நினைவாக, ஒவ்வோராண்டும், ஆகத்து மாதத்தின் முதல் திங்கட்கிழமையில், Natal Day என்னும் தினம் கொண்டாடப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2193f3bd-f02c-4ede-94af-fc252b69b411/26-6a7064d9cec58.webp' /></p><p>
இந்நிலையில், அன்று விடுமுறை தினம் என்பதால் வார இறுதியில் மக்கள் ஹாலிஃபாக்ஸ் துறைமுகத்தில் குவிந்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அவர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்தும் வகையில், பிரான்ஸ், ஸ்பெயின், பெர்முடா, பல அமெரிக்க நகரங்கள் உட்பட 60 நாடுகளைச் சுற்றிவந்துள்ள Gorch Fock என்னும் ஜேர்மன் கப்பல் ஹாலிஃபாக்ஸை வந்தடைய, மக்கள் அந்தக் கப்பலில் ஏறி அதை பார்வையிட்டுவருகிறார்கள்.
</p><p>
81 மீற்றர் நீளமுள்ள அந்த கப்பலில் 18,000க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் பயிற்சி எடுத்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
இம்முறை, ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி ஜேர்மனியின் Kiel நகரிலிருந்து புறப்பட்ட Gorch Fock கப்பல், தற்போது கனடாவை வந்தடைந்துள்ளது.
</p><p>
இது அக்கப்பல் மேற்கொள்ளும் 189ஆவதும், நீளமானதும் ஆன கடற்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T09:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் போகும் பூச்சி வகைகள்: ஒரு கனேடிய ஆய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canadian-researcher-found-insect-decline-1785748999"></link>
            <id>https://news.lankasri.com/article/canadian-researcher-found-insect-decline-1785748999</id>
            <summary type="text">உலக நாடுகள் பலவற்றில், பல வகை பூச்சிகள் மாயமாகிக்கொண்டே வருகின்றன.
இரவு நேரத்தில் தெரு விளக்குகளின் அருகே வகைவகையான பூச்சிகள் பறப்பதையும், வாகனத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக நாடுகள் பலவற்றில், பல வகை பூச்சிகள் மாயமாகிக்கொண்டே வருகின்றன.</p><p>
இரவு நேரத்தில் தெரு விளக்குகளின் அருகே வகைவகையான பூச்சிகள் பறப்பதையும், வாகனத்தில் செல்லும்போது, பறந்துவரும் பல வகை பூச்சிகள் வாகனங்களின் கண்ணாடியில் மோதுவதையும் கண்ணால் கண்டவர்கள் நாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14ab8c24-0901-4dce-b9e4-75a427d00691/26-6a705e0bc6921.webp' /></p><p>
ஆனால், அந்த பூச்சி வகைகளில் பல இப்போது மாயமாகிவருகின்றன.
</p><h3>
ஒரு கனேடிய ஆய்வு
</h3><p>
கனடாவின் யார்க் பல்கலையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் ஹடில் எல்சயத் (Hadil Elsayed) என்னும் மாணவி, பாதுகாக்கப்பட்ட இரண்டு இடங்களில் பூச்சிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e1ffe71-047e-430d-a156-f0781bbd4d3b/26-6a705e09ba419.webp' /></p><p>
அப்போது, 1990களில் இருந்ததைவிட, பூச்சிகளின் எண்ணிக்கை தற்போது பாதியாகக் குறைந்துள்ளதை அவர் கண்டறிந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c49baa67-3411-462f-8572-bcfb848664cd/26-6a705e0b1a85b.webp' /></p><p>
</p><p>
இந்த கண்டுபிடிப்பு கனடாவில் மட்டுமல்ல, பிரித்தானியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து என பல நாடுகளில் பூச்சிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துவருவது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2b3b9ac-19b5-4846-8ee7-9eb31e903e92/26-6a705e0915b86.webp' /></p><p>
பூச்சிகளைப் பொருத்தவரை, அவை மீன்கள் போன்ற உயிரினங்களுக்கு உணவாக பயன்படுவதுடன், தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும், இறந்த விலங்குகள், தாவரங்கள் மட்குவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.&nbsp;</p><p></p><p>
ஆக, இந்த பூச்சிகள் அழிந்துவருவதால் பிற உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் அதனால் பெரும் பாதிப்பு உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/464326a9-79e0-4a74-a531-eb080e5a331f/26-6a705e0a6b238.webp' /></p><p>
இந்நிலையில், மக்கள் அதிக தாவரங்களை வளர்ப்பது, பூச்சி மருந்துகள் பயன்பாட்டைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளால் பூச்சி இனங்கள் அழிந்துவருவதை தடுக்கலாம் என்கிறார்கள் எல்சயத் முதலான ஆய்வாளர்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T09:23:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய டெஸ்ட் அணியில் இணையும் முதல் காஷ்மீர் வீரர் ஆகிப் நபி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kashmir-auqib-nabi-joins-in-indian-test-team-1785747354"></link>
            <id>https://news.lankasri.com/article/kashmir-auqib-nabi-joins-in-indian-test-team-1785747354</id>
            <summary type="text">இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளஆகிப் நபி அணியில் இடம்பிடித்துள்ள முதல் காஷ்மீர் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் ஆகிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளஆகிப் நபி அணியில் இடம்பிடித்துள்ள முதல் காஷ்மீர் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.</p><h3>

இந்திய டெஸ்ட் அணியில் ஆகிப் நபி
</h3><p>
இந்தியா கிரிக்கெட் அணி, இலங்கை சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் திகதியும், 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதியும் தொடங்க உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf7fed1d-e331-4567-956c-efb724a0e8c9/26-6a70579c088a9.webp' /></p><p>

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ஏற்பட்ட இடது முழங்கால் காயத்திலிருந்து ஜஸ்பிரித் பும்ரா இன்னும் முழுமையாக குணமடையாததால், இந்த தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அவருக்கு பதிலாக அவுகிப் நபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ஜம்மு காஷ்மீரிலிருந்து இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.&nbsp;</p><p></p><p> 

கடந்த 2 ரஞ்சி கிண்ண சீசன்களில் மொத்தம் 104 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகிப் நபி, 2025-26 ரஞ்சி கிண்ண தொடரில் மட்டும் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜம்மு காஷ்மீர் அணி முதல் ரஞ்சி கிண்ண பட்டத்தை வெல்ல முக்கியப் பங்கு வகித்தார்.&nbsp;</p><p>
சமீபத்தில் இலங்கைக்கு சென்ற இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த அவர், 2 முதல் தரப் போட்டிகளில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
</p><p>
2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்டார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T08:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-about-controlling-small-boat-migrants-1785743632"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-about-controlling-small-boat-migrants-1785743632</id>
            <summary type="text">சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுக்கும் பிரித்தானியாவின் நடவடிக்கைகள் தளராது என்கிறார் பிரதமர்.


பிரித்தானியாவின் பிரதமரான ஆன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுக்கும் பிரித்தானியாவின் நடவடிக்கைகள் தளராது என்கிறார் பிரதமர்.</p><p>


பிரித்தானியாவின் பிரதமரான ஆன்டி பர்னாம், சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரை தடுக்க, பிரித்தானிய அரசு தளராமல் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்துள்ளார்.
</p><h3>
பிரித்தானிய பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி
</h3><p>
சட்டவிரோத புலம்பெயர்தலைத் தடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ஆன்டி பர்னாம், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான அணுகுமுறையையே அரசு முழுமையாக மாற்றிக்கொண்டிருப்பதாகவும், ஆட்கடத்தல்காரர்களை கட்டுப்படுத்தும் அதிகாரிகளின் எண்ணிக்கை பிரான்ஸ், பிரித்தானியா என இருதரப்பிலும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbba7ec9-4fa4-4a38-9dcb-a23ee041ba4f/26-6a704911a6a0d.webp' /></p><p>
புலம்பெயர்தல் பிரச்சினையை அரசு கையாள்கிறது என்பதை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள் என்று கூறியுள்ள ஆன்டி பர்னாம், அதே நேரத்தில், பிரித்தானியாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்காக பாதுகாப்பான பாதைகளையும் உருவாக்கவேண்டும் என்றும், அப்படிச் செய்வதால், ஆட்கடத்தல் கும்பல்கள் புலம்பெயர்வோரை நம்பி பணம் பார்க்கும் வாய்ப்பை அது தட்டிப் பறித்துவிடும் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

மேலும், தான் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் விடயத்தை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்க விரும்பவில்லை என்றும், அதை எதிர்கொள்ளவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிரித்தானியாவின் எல்லை, கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது போல் தோன்றுகிறது என்னும் எண்ணம் பொதுமக்களுக்குப் பிடித்தது அல்ல என்று கூறியுள்ள ஆன்டி பர்னாம், நாம் எல்லையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அதே நேரத்தில், உண்மையாகவே ஆதரவு தேவைப்படும் மக்களுக்கு நாம் ஆதரவும் அளிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T08:45:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞர்கள் நடத்திய பார்ட்டி: சுவிஸ் மாகாண விவசாயிகள் புகார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-farmers-complaint-illegal-rave-hits-pastures-1785742635"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-farmers-complaint-illegal-rave-hits-pastures-1785742635</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் புல்வெளியில் நடத்திய பார்ட்டி தொடர்பில் விவசாயிகள் புகார்


சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், இளைஞர்கள் புல்வெளியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் புல்வெளியில் நடத்திய பார்ட்டி தொடர்பில் விவசாயிகள் புகார்</p><p>


சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், இளைஞர்கள் புல்வெளியில் நடத்திய பார்ட்டி தொடர்பில் விவசாயிகள் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.
</p><h3>
விவசாயிகள் புகார்
</h3><p>
வெள்ளிக்கிழமை இரவு, சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடி புல்வெளிகளில் சட்டவிரோதமாக பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d609f150-644a-46ee-8e67-8226468840d7/26-6a70452cd2dc2.webp' /></p><p>
அதைத் தொடர்ந்து பொலிசில் புகாரளிக்கப்பட, பொலிசார் வந்து பார்ட்டி ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பார்ட்டியை ஞாயிற்றுக்கிழமை காலை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஏற்கனவே சுவிஸ் விவசாயிகள் பலர் தங்கள் பசுக்களுக்கு புல் இல்லாததால் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புல்வெளியில் பார்ட்டி நடத்தியதால், புல்வெளி நாசமாகிவிட்டதாகவும், அதனால் தங்கள் பசுக்கள் கோடையில் மேய்வதற்கு புல் இல்லாமல் போய்விட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
சம்பந்தப்பட்ட முனிசிபாலிட்டியும் பார்ட்டி நடத்தியவர்கள் மீது புகாரளித்துள்ள நிலையில், பார்ட்டி ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்தநாள் எண் மூலம் ரூ.9.5 கோடி லொட்டரி வென்ற நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-man-wins-million-dollar-lottery-by-lucky-no-7-1785741620"></link>
            <id>https://news.lankasri.com/article/us-man-wins-million-dollar-lottery-by-lucky-no-7-1785741620</id>
            <summary type="text">தனது பிறந்தநாள் எண் கொண்ட லொட்டரியை வாங்கிய நபர் ரூ.9.5 கோடி பரிசு வென்றுள்ளார்.பிறந்தநாள் எண் மூலம் ரூ.9.5 கோடி லொட்டரி

அமெரிக்காவின் வட கரோலினா க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது பிறந்தநாள் எண் கொண்ட லொட்டரியை வாங்கிய நபர் ரூ.9.5 கோடி பரிசு வென்றுள்ளார்.</p><h3>பிறந்தநாள் எண் மூலம் ரூ.9.5 கோடி லொட்டரி</h3><p>

அமெரிக்காவின் வட கரோலினா கல்வி லொட்டரி, புதிதாக டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட் என்ற லொட்டரியை தொடங்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e86ae45d-84e5-4db5-86ed-8e5b180ce63d/26-6a704135b6cb6.webp' /></p><p>மாண்ட்கோமெரி கவுன்டியில் உள்ள பிஸ்கோவைச் சேர்ந்த தோமஸ் முனோஸ் என்பவர், கேண்டரில் உள்ள சவுத் மெயின் தெருவில் இருக்கும் கேண்டர் வி மார்ட் கடையில் 10 டொலர் மதிப்புள்ள 'டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட்' டிக்கெட்டை பார்த்துள்ளார்.</p><p> 

அவரின் பிறந்த ஆண்டு 1977 மற்றும் பிறந்தநாள் 7 ஆம் திகதி என்பதால் அதனை தனது வாழ்வின் அதிர்ஷ்டமான எண்ணாக கருதி வந்துள்ளார். 

அதனால் இந்த டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட்டை கண்டதும் அதனை உடனே வாங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><p>அந்த கடையில் வைத்தே லொட்டரி டிக்கெட்டை சுரண்டிய அவர், 1 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.9.5 கோடி) முதல் பரிசு வென்றதை நினைத்து சந்தோஷத்தில் குதித்துள்ளார். </p><p>

அதன் பின்னர் முனோஸ் லொட்டரி தலைமையகத்திற்கு சென்ற அவருக்கு பெறுவதற்கு 2 வாய்ப்புகள் வழங்கப்பட்டது.</p><p>

பரிசை 20 ஆண்டுகளுக்கு 50,000 டொலர் தவணையாகவோ அல்லது டொலர் 600,000 மொத்தத் தொகையாகவோ பெறலாம். 

அவர் 600,000 டொலர் மொத்தத் தொகையைத் தேர்ந்தெடுத்து, வரிப் பிடித்தங்களுக்குப் பிறகு, 396,060 டொலரை பெற்றார்.</p><p>

பரிசுப் பணம் குறித்த தனது திட்டங்களைப் பற்றிப் பேசிய முனோஸ், பணத்தின் ஒரு பகுதியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், தனக்குத் தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தோன்றும் பழங்காலக் கார்களைப் புதுப்பிக்க தொடர்ந்து நிதியளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

1 மில்லியன் டொலர் மதிப்புள்ள மூன்று முதல் பரிசுகளுடன் அறிமுகமான டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட் விளையாட்டில் இன்னும் 2 பரிசுகள் வெல்லப்படாமல் உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் ஒருபக்கம்... உச்சம் தொடும் ரஷ்யாவின் உற்பத்தி வளர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-manufacturing-growth-1785740196"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-manufacturing-growth-1785740196</id>
            <summary type="text">உக்ரைனுடனான போர் ஒருபக்கம் நீடிக்கும் நிலையிலும் ஜூலை மாதத்தில் ரஷ்யாவின் உற்பத்தித் துறை மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.வேகமான வளர்ச்சி
உள்நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுடனான போர் ஒருபக்கம் நீடிக்கும் நிலையிலும் ஜூலை மாதத்தில் ரஷ்யாவின் உற்பத்தித் துறை மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.</p><h2>வேகமான வளர்ச்சி</h2><p>
உள்நாட்டுத் தேவை அதிகரித்ததன் விளைவாக உற்பத்தி மற்றும் புதிய ஆர்டர்கள் உயர்ந்ததால், ஜூலை மாதத்தில் ரஷ்யாவின் உற்பத்தித் துறை கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7795f190-350c-4a58-8dae-e78a52b3e379/26-6a703e3f13b98.webp' /></p><p> </p><p>S&amp;P Global நடத்திய ஆய்வின் அடிப்படையில், ரஷ்யாவின் உற்பத்தித் துறைக்கான 'பர்ச்சேசிங் மேனேஜர்ஸ் இன்டெக்ஸ்' (PMI) ஜூன் மாதத்தில் இருந்த 50.3 புள்ளிகளிலிருந்து ஜூலை மாதத்தில் 50.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. </p><p>இதில் 50 புள்ளிகள் என்பது வளர்ச்சி மற்றும் சுருக்க நிலைகளை வேறுபடுத்தும் அளவுகோலாக உள்ளது. ஜூலை மாதத்தில் உற்பத்தி தொடர்ந்து மூன்றாவது மாதமாக அதிகரித்தது; அத்துடன், விரிவாக்கத்தின் வேகம் ஜனவரி 2025-க்குப் பிறகு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. </p><p>புதிய ஒப்பந்தங்களும் தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகரித்ததோடு, மே 2025-க்குப் பிறகு மிக வேகமான விகிதத்தில் உயர்ந்துள்ளன. இருப்பினும், வெளிநாட்டுத் தேவை மந்தமாகவே நீடித்து வருகிறது.</p><p></p><p> </p><p>புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்கள் மீண்டும் கடுமையாகக் குறைந்துள்ளன; அக்டோபர் 2022-க்குப் பிறகு மிக வேகமான சரிவு இதுவாகும். அதேவேளையில், முக்கிய சர்வதேசச் சந்தைகளில் வாடிக்கையாளர் தேவை குறைவாக இருந்ததே வெளிநாடுகளிலிருந்தான விற்பனையைப் பாதித்ததாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. </p><p>மேலும், தாமாகவே வேலையை விட்டுச் சென்றவர்களின் இடங்களை உற்பத்தியாளர்கள் நிரப்பாததால் வேலைவாய்ப்பு மீண்டும் குறைந்தது; இருப்பினும், வேலைவாய்ப்பு குறைப்பு வேகம் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு மிதமானதாக இருந்தது.</p><h2>விலையேற்ற விகிதம்</h2><p> </p><p>நிறுவனங்களிடம் போதுமான உற்பத்தித் திறன் இருந்ததால், தொடர்ந்து 18-வது மாதமாகவும் நிலுவையில் உள்ள பணிகளின் அளவு குறைந்தது.
விலை உயர்வு அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளன. </p><p>எரிபொருள் பற்றாக்குறை, போக்குவரத்துச் சிக்கல்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் விலை உயர்வு ஆகியவற்றால், உள்ளீட்டுச் செலவு பணவீக்கம் ஜனவரி 2026-க்குப் பிறகு மிக வேகமான வளர்ச்சியை எட்டியது; அதேவேளையில், உற்பத்திப் பொருட்களுக்கான விலையேற்ற விகிதம் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f19ca41c-10b4-4b62-8dbb-7ac1a5fa034c/26-6a703e3fd7fc8.webp' /></p><p> </p><p>விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது; இதன்படி, விநியோகஸ்தர்களின் சரக்கு விநியோக நேரம் பிப்ரவரி 2025-க்குப் பிறகு மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. </p><p>வாடிக்கையாளர்களிடையே நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகரித்த போட்டி ஆகிய காரணங்களை நிறுவனங்கள் சுட்டிக்காட்டிய நிலையில், வணிக நம்பிக்கை மே 2020-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T06:54:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு கவலையை உருவாக்கியுள்ள பிரித்தானியாவின் செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-to-strip-some-eu-citizens-residency-rights-1785738989"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-to-strip-some-eu-citizens-residency-rights-1785738989</id>
            <summary type="text">பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள் பலருக்கு, பிரித்தானியாவில் வாழ உரிமையில்லை என்னும் செய்தி அளிக்கப்படலாம்.


ஐரோப்பிய ஒன்றிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள் பலருக்கு, பிரித்தானியாவில் வாழ உரிமையில்லை என்னும் செய்தி அளிக்கப்படலாம்.</p><p>


ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பலர், பல ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.
</p><h3>
ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு...
</h3><p>
முன்னர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்ததும், 2020ஆம் ஆண்டு அது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதும் அனைவரும் அறிந்ததே. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94dc209a-3c50-4cc0-b40e-2655eeccc205/26-6a7036eedd6f5.webp' /></p><p>

இந்நிலையில், பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்களான பலருக்கு, உள்துறை அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
</p><p>
அதில், உங்களுக்கு, ’பிரெக்சிட்டுக்குப் பின் பிரித்தானியாவில் வாழ்வதற்கான உரிமைகள் தவறுதலாக வழங்கப்பட்டுவிட்டது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இவர்கள் பிரெக்சிட்டுக்கு முன்பிருந்தே பிரித்தானியாவில் வாழ்ந்துவருபவர்கள். தங்களது ’pre-settled status’ என்னும் நிலை, ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்துவந்ததைத் தொடர்ந்து ’settled status’ என்னும் நிரந்தர நிலையாக மாறிவிடும் என அவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள்.&nbsp;</p><p></p><p>
ஆனால், அப்படி அவர்கள் நம்பிக்கையுடன் இருந்த நேரத்தில், அவர்களுக்கு ஏற்கனவே பிரித்தானியாவில் வாழ கொடுக்கப்பட்ட உரிமைகள் தவறுதலாக கொடுக்கப்பட்டுவிட்டது என உள்துறை அலுவலகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
</p><p>
தங்கள் வேலை, தங்கள் வங்கிக் கணக்குகள், தங்கள் பிள்ளைகளின் படிப்பு என பல விடயங்களை இந்த கடிதம் மாற்றிவிடக்கூடும் என்பதால் அவர்கள் கவலை அடைந்துள்ளார்கள்.</p><p>

தற்போதைக்கு இப்படி சிலருக்கு கடிதம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஐரோப்பிய ஒன்றியத்தோர் இதே நிலையை எதிர்கொள்ளக்கூடும் என தொண்டு நிறுவனங்கள் கருதுகின்றன.
</p><p>
விடயம் என்னவென்றால், இதே நிலைமையில், 1.3 மில்லியன் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள் பிரித்தானியாவில் வாழ்ந்துவருவதால், அவர்களில் எத்தனை பேர் இப்படி பாதிக்கப்படப்போகிறார்கள் என்பது இப்போதைக்கு தெரியவில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T06:36:36+00:00</updated>
        </entry>
    </feed>
