<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-20T08:31:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண் மாரடைப்பால் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-died-of-heart-attack-in-canada-1787214395"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-died-of-heart-attack-in-canada-1787214395</id>
            <summary type="text">An Indian woman died of a heart attack in Canada: கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.


இந்தியாவின் பஞ்சாபைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>An Indian woman died of a heart attack in Canada: கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
</p><p>

இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்த நிலையில், அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
</p><h3>
கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்த இளம்பெண்
</h3><p>
அன்மோல்தீப் கௌர் (24), நான்கு ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cab5f88-bf7b-4842-8041-008c23b9e37d/26-6a86ba3c9909e.webp' /></p><p>
மனித்தோபா மாகாணத்தின் வின்னிபெக் நகரில் கல்வி கற்று முடித்து, நிரந்தர குடியிருப்பு அனுமதிக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தார் கௌர்.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், செவ்வாயன்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட கௌர், மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
</p><p>
கௌர் உயிரிழந்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T08:26:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் உளவு பார்க்கும் மொசாட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-mossad-spying-you-by-smartphone-1787213424"></link>
            <id>https://news.lankasri.com/article/how-mossad-spying-you-by-smartphone-1787213424</id>
            <summary type="text">ஸ்மார்ட்போன் மூலம் மொசாட் உளவு பார்க்கும் சாத்தியம் குறித்து IBC Tamil ன் நிராஜ் டேவிட் விரிவாக பேசியுள்ளார்.

போன் மூலம் உளவு பார்க்கும் மொசாட் 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்மார்ட்போன் மூலம் மொசாட் உளவு பார்க்கும் சாத்தியம் குறித்து IBC Tamil ன் நிராஜ் டேவிட் விரிவாக பேசியுள்ளார்.
</p><h3>
போன் மூலம் உளவு பார்க்கும் மொசாட் </h3><p>

இன்று உலகில் ஸ்மார்ட்போன் இல்லாத மனிதர்களை பார்ப்பது அரிதாக உள்ளது. ஸ்மார்ட் போனில் பல்வேறு வசதிகள் இருந்தாலும், போன் ஹேக் செய்யப்படுவதற்கான அபாயங்களும் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a135456-bec9-407c-9e0f-05e13c65b150/26-6a86b6718b344.webp' /></p><p>

ஐபோன் அதிகளவிலான பாதுகாப்பு அம்சங்கள் உடைய போனாக கருதப்பட்டாலும் அதனையும் ஹேக் செய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.</p><p> 

போனை ஹேக் செய்து கேமரா மூலம் நீங்கள் இருக்கும் இடத்தை எங்கோ ஒரு இடத்திலிருந்து கண்காணிக்க முடியும். நீங்கள் ரகசியமாக பேசுவதை ஒட்டுக்கேட்க முடியும். </p><p>

சில மாதங்களுக்கு முன்னர் ஈரான் உச்சத்தலைவர் காமேனி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கொல்ல இஸ்ரேலின் மொசாட் அமைப்பு அங்கிருந்த பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் அவரது பாதுகாப்பு அலுவலர்களின் போனை ஹேக் செய்ததன் மூலம் பெறப்பட்ட தகவல்களை வைத்தே அந்த தாக்குதலை மேற்கொண்டது. </p><p>

இதே போல், ஹிஸ்புல்லா அமைப்பில் உள்ளவர்கள் யாரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண்டாம், ஸ்மார்ட் போன் இருந்தால் அதனை மண்ணில் புதைத்து விடுங்கள் என அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கட்டளை பிறப்பித்தார். 

அது உங்களை உளவு பார்க்கும் ஒற்றன் என தெரிவித்திருந்தார்.</p><p> மேலும், இதனை தெரிவித்த 7 மாதங்களில் ஹிஸ்புல்லாகளிடம் இருந்த பேஜர் வெடித்து சிதறியது. </p><p>

இதே போல், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மெமரி சிப்களை ஆப்பிள் போன்களில் பயன்படுத்த கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. </p><p>

இது குறித்த பல்வேறு தகவல்களை வழங்கியுள்ள IBC Tamil ன் நிராஜ் டேவிட் தான் இஸ்ரேல் சென்ற போது, அங்கு ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர் கூறிய கருத்துகளையும் பகிர்ந்துள்ளார். </p><p>

மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNqduegvc0Y" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T08:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கை - ட்ரம்ப் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trumps-harshest-economic-war-on-iran-1787212624"></link>
            <id>https://news.lankasri.com/article/trumps-harshest-economic-war-on-iran-1787212624</id>
            <summary type="text">Trump announces economic operation against Iran: ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.


கடுமையான பொருளாதார ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump announces economic operation against Iran: ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
</p><h2>

கடுமையான பொருளாதார நடவடிக்கை</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
</p><p>
“ஈரான் ஒப்பந்த வாய்ப்பை பயன்படுத்தத் தவறிவிட்டது. இனி இது வரை இல்லாத அளவிற்கு பொருளாதார போர் மற்றும் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ளும்,” என்று அவர் Truth Social-ல் பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f2a17a3-2521-4109-81f4-96fde5c7cb51/26-6a86b351ce76f.webp' /></p><h2>ஈரானை தனிமைப்படுத்த&nbsp;திட்டம்</h2><p>ட்ரம்ப், ஈரானுடன் வணிகம் செய்யும் எந்த நாட்டுக்கும் கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
</p><p>
“எண்ணெய் வர்த்தகம், பணப் பரிமாற்றம், கப்பல் போக்குவரத்து, வணிக நிறுவனங்கள், இவை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். ஈரானை தனிமைப்படுத்த அமெரிக்க கூட்டாளிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>அமெரிக்காவின் திசை திருப்பும் முயற்சி</h2><p>ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அராக்சி, இந்த நடவடிக்கையை “அமெரிக்காவின் சொந்த நெருக்கடியிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி” எனக் கூறியுள்ளார்.

மேலும், “அமெரிக்காவின் இந்த பொருளாதார பயங்கரவாதம் உலக பொருளாதாரத்தையும் இறையாண்மையையும் அச்சுறுத்துகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
</p><p>
இதனிடையே ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் ஈரானுடன் உள்ள அனைத்து நிதி தொடர்புகளையும் நிறுத்தியுள்ளதாகவும் UAE தெரிவித்துள்ளது. ஆனால், ஈரான் இதனை மறுத்து, “தவறான குற்றச்சாட்டு” என தெரிவித்துள்ளது.</p><p></p><p>ட்ரம்ப் நடவடிக்கைகள் சீனா, ஈராக், துருக்கி போன்ற ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளையும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், சீன அரசு தனது நிறுவனங்களுக்கு அமெரிக்க தடைகளை பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதால், அமெரிக்காவிற்கு முழுமையான கட்டுப்பாடு சாத்தியமில்லை எனவும் கூறப்படுகிறது.
</p><p>
ட்ரம்பின் இந்த அறிவிப்பு, ஐந்து மாதங்களாக நீடிக்கும் அமெரிக்கா-ஈரான் மோதலில் புதிய கட்டத்தை உருவாக்கியுள்ளது. உலக பொருளாதாரத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T07:54:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உசைன் போல்ட்டின் வேகத்தை மிஞ்சிய சீனாவின் புதிய “சூப்பர்மேன்” ரோபோ: வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-s-unitree-superman-humanoid-robot-1787211180"></link>
            <id>https://news.lankasri.com/article/china-s-unitree-superman-humanoid-robot-1787211180</id>
            <summary type="text">China’s unitree superman Humanoid robot surpasses Usain Bolt top speed: உலக புகழ்பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட்டின் வேகத்தை சீனாவின் “சூப்பர்மேன் ரோபோ”...</summary>
            <content type="html"><![CDATA[<p>China’s unitree superman Humanoid robot surpasses Usain Bolt top speed: உலக புகழ்பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட்டின் வேகத்தை சீனாவின் “சூப்பர்மேன் ரோபோ” மிஞ்சியுள்ளது.</p><h2> சீனாவின் புதிய “சூப்பர்மேன்” ரோபோ</h2><p>
சீனாவின் ரோபாட்டிக்ஸ் நிறுவனமான யூனிட்ரீ(Unitree), சூப்பர்மேன்(Superman) என்ற புதிய மனித ரோபோவை அறிமுகப்படுத்தி ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.</p><p> கடந்த திங்கட்கிழமை இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோவில், 0.85 மீட்டர் நீளமுள்ள கால்களை கொண்ட இந்த “சூப்பர்மேன்” ரோபோ வினாடிக்கு 45.6 கி.மீ வேகத்தில் ஓடவும், சுமார் 2 மீட்டர் தூரம் வரை தாவி குதிக்கவும் செய்து அசத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/661f696a-2014-4690-9c71-2d7d6da2e1dd/26-6a86adadc3e5c.webp' /></p><p> வினாடிக்கு 45.6 கிலோ.மீ வேகத்தில் ஓடும் இந்த ரோபோ ஒலிம்பிக்கில் பலமுறை தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட்டின் வேகத்தை இது மிஞ்சியுள்ளது.</p><p></p><p> இந்த சூப்பர்மேன் ரோபோ வெறும் 3 மாதங்களில் வடிவமைக்கப்பட்ட நிலையில், வரும் நாட்களில் இதன் திறன் இன்னும் மேம்படுத்தப்படும் என்று Unitree நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Chinese humanoid robot named “Superman”, made by Unitree Robotics, surpassed Usain Bolt’s world record (12.42 meters/second) by running at 12.66 m/s (roughly 28.3 miles/h) <a href="https://t.co/xobXzUPDI5">pic.twitter.com/xobXzUPDI5</a></p>&mdash; Massimo (@Rainmaker1973) <a href="https://x.com/Rainmaker1973/status/2089727354302009551?ref_src=twsrc%5Etfw">August 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இந்த புள்ளிவிவரங்கள் ஆச்சரியமாக இருந்தாலும் இவை சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் உசைன் போல்ட்டின் வேகம் போட்டிகளின் போது பதிவு செய்யப்பட்டவை என்றும், ஆனால் இந்த ரோபோவின் வேகம் யூனிட்ரீ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது பெறப்பட்டது என்று விவாதம் ஆகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T07:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை ஹெலிகொப்டருடன் நடுவானில் மோதிய சிறிய விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/helicopter-and-plane-collided-in-pennsylvania-1787211078"></link>
            <id>https://news.lankasri.com/article/helicopter-and-plane-collided-in-pennsylvania-1787211078</id>
            <summary type="text">Helicopter and plane collided in pennsylvania: அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று, காவல்துறை ஹெலிகொப்டருடன் நடுவானில் மோதியது.

அமெரிக்காவின் பென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Helicopter and plane collided in pennsylvania: அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று, காவல்துறை ஹெலிகொப்டருடன் நடுவானில் மோதியது.
</p><p>
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் மாநில காவல்துறை ஹெலிகொப்டருடன் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. </p><h2>ஹெலிகொப்டர், சிறிய ரக விமானம் மோதல் </h2><p>



அமெரிக்காவில் கார்லைல் விமான நிலையம் அருகே, செஸ்னா 150 ரக விமானமும், பெல் 407 ஹெலிகொப்டரும் நடுவானில் மோதி விபத்திற்குள்ளாகின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2c79a78-602d-4d01-97e5-4e7f03756b9d/26-6a86add88239b.webp' />&nbsp;</p><p></p><p>
இதில் ஹெலிகொப்டர் மாநில காவல்துறையுடையது என்றும், அதில் இருவர் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. 

அதே சமயம் விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. </p><p>

என்றாலும், இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை; விபத்திற்கான காரணமும் இன்னும் தெரிய வரவில்லை.</p><p> 

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் FAA ஆகியவை சம்பவம் குறித்து விசாரணை நடத்த உள்ளன.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T07:31:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மாணவர்கள்: பள்ளி முதல்வரை குத்திக் கொன்ற கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nalgonda-school-murder-case-2-student-arrested-1787209468"></link>
            <id>https://news.lankasri.com/article/nalgonda-school-murder-case-2-student-arrested-1787209468</id>
            <summary type="text"> Nalgonda school principal murder case 2 student arrested: தெலுங்கானாவில் பணத்திற்காக பள்ளி முதல்வரை மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p> Nalgonda school principal murder case 2 student arrested: தெலுங்கானாவில் பணத்திற்காக பள்ளி முதல்வரை மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பள்ளி முதல்வரை குத்தி கொலை செய்த மாணவர்கள்</h2><p>தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தின் கொடமள்ளேபள்ளி பகுதியில் அமைந்துள்ள நாகார்ஜுனா பப்ளிக் பள்ளியின் முதல்வரான கள்ளூ ரூபா ரெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இந்த சம்பவத்தில் இரண்டு பள்ளி மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் பணம் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த குற்றத்தை செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3c30058-d702-446a-b1fd-7ee17abdcd70/26-6a86a6fdd4151.webp' /></p><p></p><h2> நடந்தது என்ன?</h2><p>
கடந்த ஆகஸ்ட் 12ம் திகதி ரூபா ரெட்டி அவரது இல்லத்தில் 27 முறை கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்தார்.</p><p>முன்னதாக ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர் ரூபா ரெட்டியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது பதில் கிடைக்கவில்லை என்பதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0e68a74-ee2c-4fd2-b814-bebcc4344291/26-6a86a6fea020c.webp' /></p><p> இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டிற்கு வந்த பார்த்த ரூபா ரெட்டி உயிரிழந்து கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> ரூபா ரெட்டி அவரது அத்தையுடன் கடைசியாக பேசிக் கொண்டிருந்த போது பாபு என்ற பெயரை உச்சரித்துள்ளார்.</p><p>இதனை முதன்மையாக கொண்டு விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார் ரூபா ரெட்டி பணியாற்றி வந்த பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.</p><p> அவர்கள் ரூபா ரெட்டியின் வீட்டுக்குள் நுழைந்து 2.50 லட்சத்தை திருடி விட்டு தப்பிக்க முயன்ற போது ரூபா ரெட்டி அவர்களை அடையாளம் கண்டு கொண்டதால் அந்த மாணவர் ரூபா ரெட்டியை 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T07:04:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்தியர் ஒருவர் எதிர்கொண்ட இனவெறுப்பு சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-face-racist-tirade-in-canada-1787209289"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-face-racist-tirade-in-canada-1787209289</id>
            <summary type="text">An Indian man was targeted in a racist tirade in Halifax: கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் இந்தியர் ஒருவர் இனவெறுப்புச் சம்பவம் ஒன்றை எதிர்கொண்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>An Indian man was targeted in a racist tirade in Halifax: கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் இந்தியர் ஒருவர் இனவெறுப்புச் சம்பவம் ஒன்றை எதிர்கொண்டுள்ளார்.
</p><p>

கனடாவில் வாழ்ந்துவரும் இந்தியர் ஒருவர் இனவெறுப்புச் சம்பவம் ஒன்றை எதிர்கொண்ட நிலையில், முதன்முறையாக தனக்கு அச்சம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
</p><h3>
இந்தியர் எதிர்கொண்ட இனவெறுப்பு சம்பவம்
</h3><p>
கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் வாழ்ந்துவரும் ஷாலு ஷாஜன் என்னும் இந்தியர், கடைக்குச் செல்வதற்காக தனது காரை சாலையோரமாக நிறுத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25895c1d-8bc8-4ef0-acc7-e93f4d5a3ff8/26-6a86a64b13bac.webp' /></p><p>

அப்போது அவ்வழியே வந்த கனேடியர் ஒருவர், தன் கையில் வைத்திருந்த bagpipes என்னும் கருவியைக் கொண்டு ஷாஜனின் கார் கண்ணாடியில் இடித்துள்ளார்.</p><p>

காரிலிருந்து இறங்கிய ஷாஜன் என் கார் கண்ணாடியில் இடித்துவிட்டீர்கள் என அந்த நபரிடம் கூற, அந்த நபர் திரும்பிவந்து வேண்டுமென்றே காரின் பின்பக்கத்தில் அந்தக் அக்கருவியைக் கொண்டு ஓங்கி அடித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, ஷாஜனை இனரீதியாக விமர்சிக்கத் துவங்கிய அந்த நபர், உன் நாட்டுக்குத் திரும்பிப் போ என சத்தமிட்டுள்ளார்.
</p><p>
அந்த நபர் தன் மீது இனவெறுப்புக் காட்டுகிறார் என்பது ஷாஜனுக்குத் தெளிவான நிலையில், அவர் நடந்துகொண்ட விதம் கைகலப்பில் முடிந்துவிடுமோ என தான் அஞ்சியதாக தெரிவிக்கிறார் ஷாஜன்.</p><p>

பின்னர் அந்த நபரை தான் புகைப்படம் எடுத்ததுடன், பொலிசிலும் புகாரளித்துள்ளதாக தெரிவிக்கிறார் ஷாஜன்.
</p><p>
கனடாவைப் பொருத்தவரை, தெற்காசியர்களுக்கு எதிரான இனவெறுப்பு சம்பவங்கள் அதிகரித்துவருவதாக கனடா புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
விடயம் என்னவென்றால், தான் இதற்கு முன்பும் இதேபோல இனவெறுப்பை எதிர்கொண்டதுண்டு. </p><p>ஆனால், தான் தாக்கப்படுவேனோ என பயந்தது இதுதான் முதல் முறை என்கிறார் ஷாஜன்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T07:01:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் உருகுவதால் பயங்கர விளைவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/melting-glaciers-in-the-alps-to-affect-swiss-1787208268"></link>
            <id>https://news.lankasri.com/article/melting-glaciers-in-the-alps-to-affect-swiss-1787208268</id>
            <summary type="text">Consequences of melting glaciers in the Alps: ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் உருகுவதால் மோசமான விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


கடந்த சில ஆண்டுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Consequences of melting glaciers in the Alps: ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் உருகுவதால் மோசமான விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
</p><p>

கடந்த சில ஆண்டுகளாகவே, ஆல்ப்ஸ் மலையில் போதுமான பனி இல்லாததால் பல ரிசார்ட்கள் சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் நஷ்டத்தை எதிர்கொண்டுவருகின்றன.</p><p>

மலையில் பனி உருகுவதால் ஏற்படும் பிளவுகள், மலையேற்றத்துக்குச் செல்வோருக்கு அபாயத்தை ஏற்படுத்திவருகின்றன.
</p><p>
இந்நிலையில், உருகும் பனிப்பாறைகளால் சுவிஸ் கிராமம் ஒன்றிற்கு எதிர்பாராத அபாயம் ஒன்று உருவாகியுள்ளது.
</p><h3>
சுவிஸ் கிராமம் ஒன்றிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
</h3><p>
2025ஆம் ஆண்டு மே மாதம், மலையிலிருந்து உருண்டுவந்த பாறைகளும் பனியும் Blatten என்னும் சுவிஸ் கிராமம் ஒன்றை கிட்டத்தட்ட மூழ்கடித்த சம்பவம் நினைவிருக்கலாம்.</p><p>

அந்த சம்பவம் நிகழ்வதற்கு 10 நாட்கள் முன்பே அக்கிராம மக்களை அதிகாரிகள் வெளியேற்றியிருந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/968529d7-a915-485c-9886-f1b81fa4eab7/26-6a86a24dd2f8b.webp' /></p><p>
இந்நிலையில், தற்போது Kandersteg என்னும் கிராமத்தை ஒட்டி அமைந்திருக்கும் மலையிலுள்ள பனி உருகிவருவதால், அங்கு பெரும் நிலச்சரிவு ஒன்று ஏற்படும் அபாயம் உருவாகிவருகிறது.
</p><p>
அதாவது, மலைகளிலுள்ள பாறைகள், மண், பனி இவை அனைத்துமே, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பூஜ்யம் டிகிரி செல்ஷியஸுக்கு கீழே இருக்கும்போது, அனைத்துமே இணைந்து உறைந்து பாறைபோல் மாறிவிடும். இது Permafrost என அழைக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39527bd-afb4-4fd8-ad6a-3775da3e3a79/26-6a86a24e9d353.webp' /></p><p>
பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை உயரும்போது, பாறைகளுக்கிடையிலுள்ள பனி உருக, பாறைகள் நெகிழ, மண்ணும் பாறைகளும் கீழ் நோக்கி சரியத் துவங்குகின்றன.

இப்படிப்பட்ட ஒரு அபாயம்தான் Kandersteg கிராமத்துக்கு உருவாகியுள்ளது.
</p><p>
உடனடியாக அக்கிராமத்துக்கு அபாயம் இல்லை என்பதால், கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படவில்லை.
</p><p>
என்றாலும், ஜிபிஎஸ் முதலான கருவிகள் மூலம் அந்த பகுதியை அதிகாரிகள் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆபத்து ஏற்படலாம் என கருதப்படும் நிலையில், அக்கிராம மக்கள் 48 மணி நேரத்துக்கு முன் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T06:44:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மிகப்பெரிய சிறுநீரக கல்லை அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-doctor-removed-3-1kg-kidney-stone-record-1787206936"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-doctor-removed-3-1kg-kidney-stone-record-1787206936</id>
            <summary type="text">srilanka doctors removed 3.1kg kidney stone: உலகின் மிகப்பெரிய சிறுநீரக கல்லாக 3 கிலோ 100 கிராம் எடையுள்ள கல்லை வெற்றிகரமாக அகற்றி இலங்கை மருத்துவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>srilanka doctors removed 3.1kg kidney stone: உலகின் மிகப்பெரிய சிறுநீரக கல்லாக 3 கிலோ 100 கிராம் எடையுள்ள கல்லை வெற்றிகரமாக அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
</p><h3>
3 கிலோ 100 கிராம் எடையுள்ள சிறுநீரக கல்</h3><p>

இலங்கையின் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஆண் ஒருவர் பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85aef9b-b4ed-4f3e-baa1-d2d65e5139ec/26-6a869d19e4131.webp' /></p><p>

அவரின் வயிற்றில் ஒரு பெரிய கட்டி இருப்பது தெரிந்துள்ளது. அவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p> 

இதனையடுத்து, ஆரம்பகட்ட பரிசோதனைகளில் அவருக்கு சிறுநீரகக்கல் இருந்தது கண்டறியப்பட்டது.&nbsp;</p><p></p><p>

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் கடந்த 14ம் திகதி மருத்துவர் பாலகிருஷ்ணன் பிரகலநாதன் தலைமையிலான குழு அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக சிறுநீரகக் கல்லை அகற்றினர்.
</p><p>
தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர் ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

இதே நபருக்கு 1998ம் ஆண்டில் சிறுநீரக கல்லொன்று சத்திர சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3383eba-96ab-4d2c-bf3d-eefacea12f2d/26-6a869d1a938a2.webp' /></p><p>
இந்த சிறுநீரக கல்லானது 3 கிலோ 100 கிராம் எடையில் இருந்துள்ளது. இதுவே உலகில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட அதிக எடையுடைய கல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுநீரகக் கல், கின்னஸ் உலக சாதனைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

2003 ஆம் ஆண்டு பிரேசிலில் ஒரு நோயாளிடமிருந்து 1.9 கிலோகிராம் மற்றும் நீளம் 17.9 சென்டிமீட்டர் சிறுநீரக கல் அகற்றப்பட்டது. இதுவே இதற்கு முன்பு பெரிய கல்லாக இருந்தது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T06:22:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்ஸ், ஹெட்மையரின் அதிரடி..கயானா அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/guyana-amazon-warriors-beat-saint-lucia-by-7-wkts-1787206452"></link>
            <id>https://news.lankasri.com/article/guyana-amazon-warriors-beat-saint-lucia-by-7-wkts-1787206452</id>
            <summary type="text">Guyana amazon warriors beat saint lucia by 7 wkts: செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றி பெற்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Guyana amazon warriors beat saint lucia by 7 wkts: செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றி பெற்றது.
</p><p>
டேர்ரன் சேமி மைதானத்தில் நடந்த கரீபியன் டி20 போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தியது. </p><h2>டிவைன் பிரிட்டோரியஸ் அபார பந்துவீச்சு </h2><p> 

செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதிய கரீபியன் பிரீமியர் லீக் போட்டி டேர்ரன் சேமி தேசிய மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/244c69e7-ba38-45c7-a604-214209c1f88a/26-6a869f43211d3.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்தது.

சரித் அசலங்கா 35 (28) ஓட்டங்கள் எடுத்தார். டிவைன் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளும், ஷாமர் ஜோசப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.</p><p>

பின்னர் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் க்ளென் பிலிப்ஸ் 36 (26) ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>ஹெட்மையர் சரவெடி </h2><p> 

நிதானமாக ஓட்டங்களை சேர்த்த மவேன்ரா தின்ட்யால் 50 (51) ஓட்டங்கள் (2 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) எடுத்தார். </p><p>அடுத்து வந்த ஷாய் ஹோப் 17 ஓட்டங்களில் வெளியேறினார்.

ஷிம்ரோன் ஹெட்மையர் சரவெடி ஆட்டம் ஆடி, 11 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

இதன்மூலம் கயானா அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;</p><p> <img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d23bf353-d01e-412e-a897-9689f6c3b9b5/26-6a869bdd1ded3.webp' /> &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T06:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[80,000 வெளிநாட்டவர்களை பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்திய லேபர் அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/labour-party-deported-80000-foreign-criminals-1787202253"></link>
            <id>https://news.lankasri.com/article/labour-party-deported-80000-foreign-criminals-1787202253</id>
            <summary type="text">80,000 foreigners removed from UK since the general election: தேர்தலுக்குப்பின் 80,000க்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்தியுள்ளது பிரித்தானியா.

பிரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>80,000 foreigners removed from UK since the general election: தேர்தலுக்குப்பின் 80,000க்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்தியுள்ளது பிரித்தானியா.</p><p>

பிரித்தானியா இரண்டு ஆண்டுகளில் 80,000க்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்தியுள்ளதாக உள்துறை அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><h3>
இரண்டு ஆண்டுகளில் 80,000க்கும் மேற்பட்டவர்கள்</h3><p>

2024ஆம் ஆண்டு ஜூலை மாதம், சர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றது.
</p><p>
லேபர் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, குற்றச்செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள், புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்கள் என 80,286 வெளிநாட்டவர்களை நாடுகடத்தியுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f2c1891-20b1-45c3-ad28-26d41386f0e1/26-6a868ace8e491.webp' /></p><p>
இது முந்தைய கன்சர்வேட்டிவ் ஆட்சிக்காலத்தில் நாடுகடத்தப்பட்டவர்களுடைய எண்ணிக்கையைவிட 52 சதவிகிதம் அதிகமாகும்.</p><p>

இந்நிலையில், நம் எல்லைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதிலும், நமது புலம்பெயர்தல் அமைப்பை அனைவருக்கும் நியாயமானதாக ஆக்குவதற்குமான நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய படி என்கிறார் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.&nbsp;</p><p></p><p>
மேலும், இந்த புள்ளிவிவரங்கள் ஒரு செய்தியை அனுப்புகின்றன. சட்டப்படி பிரித்தானியாவுக்கு வருபவர்களை வரவேற்போம், சட்டவிரோதமாக இங்கு வந்தால், அல்லது சட்டத்தை மீறினால், உங்களை உங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிடுவோம் என்கிறார் ஷபானா.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e597518-da62-47c1-ad9a-731e1d8e2575/26-6a868acf4e346.webp' /></p><p>
ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், 2016ஆம் ஆண்டுக்குப் பின், இவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளது இப்போதுதான்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T06:00:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை: ஜுலையில் 4.5% ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-unemployment-rate-rises-in-july-1787203469"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-unemployment-rate-rises-in-july-1787203469</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூலை மாதத்தில் உயர்ந்துள்ளது.அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூலை மாதத்தில் உயர்ந்துள்ளது.</p><h2>அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை</h2><p> அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு சந்தை ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க மந்த நிலையை அடைந்துள்ளது.</p><p> வேலையின்மை விகிதமும் உயர்ந்துள்ளதுடன், ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.</p><p> அவுஸ்திரேலியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.5% ஆக உயர்ந்து இருப்பதாக அவுஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின் படி தெரியவந்துள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a841378c-1f32-4dc2-9d6d-6535cb0f7a29/26-6a868f8f0c338.webp' /></p><p> நாட்டின் வேலைவாய்ப்புகள் 15,800 குறைந்து ஒட்டுமொத்த 1.48 கோடிகளாக நிலைபெற்றுள்ளது.</p><p> இந்த வேலை இழப்புகள் அனைத்து பகுதி நேர பணியில் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 32,200 பகுதி நேர வேலைகள் ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது.</p><p> அதே போல நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் பங்கேற்பு விகிதமும் 66.9% ஆக சற்று குறைந்துள்ளது.</p><p> அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பு சரிவுகளை பொருளாதார நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.</p><p> பகுதி நேர வேலைவாய்ப்புகளில் சரிவுகள் காணப்பட்டாலும், முழு நேர வேலைவாய்ப்புகளில் நிலையான வளர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதையும் இந்த தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T05:25:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்கன் சாப்பிடும் பொழுது தவறியும் இந்த பாகங்களை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chicken-parts-we-shouldnt-eat-for-healthy-life-1787140291"></link>
            <id>https://news.lankasri.com/article/chicken-parts-we-shouldnt-eat-for-healthy-life-1787140291</id>
            <summary type="text">பொதுவாகவே, அசைவ பிரியர்களுக்கு கோழி என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. ஒரு சிலர் வாரத்திற்கு ஒருமுறை அல்லது எப்பொழுதெல்லாம் அவர்களுக்கு பிடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே, அசைவ பிரியர்களுக்கு கோழி என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. ஒரு சிலர் வாரத்திற்கு ஒருமுறை அல்லது எப்பொழுதெல்லாம் அவர்களுக்கு பிடிக்கிறதோ அவர்கள் சிக்கன் சமைத்து சாப்பிடக்கூடிய வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். </p><p>அந்த வகையில், கோழியின் சமைக்கும் பொழுது சில பகுதிகளை மட்டும் நாம் சாப்பிடவே கூடாது என்று சொல்கிறார்கள். காரணம், அந்தப் பகுதிகளில் தான் அபாயகரமான பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02632134-d193-4fc4-acd3-d7c12e7c3e51/26-6a8598cde7c61.webp' /></p><p>
</p><h3>கோழி தலை:</h3><p> பலரும் கோழி தலைகளை சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால், இப்பொழுது காலகட்டங்களில் கோழிகள் வேகமாக வளரவும் நோய்களை தடுக்கவும் அவர்களுக்கு பல்வேறு ஹார்மோன் ஊசிகளும் நுண்ணுயிர் எதிர்ப்புகளும் கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு கொடுக்கக்கூடிய இந்த ரசாயனங்கள் அனைத்தும் கோழியின் தலைகளிலும் மூலைகளிலும் சேர்ந்து விடுகிறது. </p><p>ஆதலால், கோழி தலைகளை சாப்பிடுவதால் அந்த நச்சு ரசாயனங்கள் நம்முடைய உடலுக்குள் நுழைந்து ஹார்மோன் சம நிலையின்மையையும் அதுவே காலப்போக்கில் புற்றுநோய்ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பையும் கொடுக்கிறது.
</p><h3> கோழி நுரையீரல்:</h3><p>
 பலரும் கோழி சமைக்கின்ற பொழுது அதன் நுரையீரல் பாகங்களையும் சேர்த்து சமைத்து விடுகிறார்கள். இருப்பினும் கோழியின் நுரையீரலில் வெப்ப விரும்பும் பாக்டீரியா எனப்படும் ஏராளமான நுண்ணுயிர்கள் இருக்கின்றன. </p><p>இந்த பாக்டீரியாக்கள் அதிக வெப்பநிலையில் சமைக்க பட்டாலும் அவை முழுமையாக இறப்பதில்லை. அவற்றை நாம் எடுத்துக் கொள்கின்ற பொழுது கடுமையான நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28c8c23d-eb7b-48f6-9fb9-bd7f7fd613af/26-6a8598cea61e2.webp' /></p><p>
</p><h3> கோழி தோல்:
</h3><p> நாம் எப்பொழுதும் கோழி தோலுடன் சமைப்பது குழம்பு வைப்பது மிகவும் சுவையாகவும் சாறு நிறைந்ததாகவும் மாற்றுகிறது. ஆனால், கோழி தோலில் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளது. இந்த தோலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து விடுகிறது. இதனால், இதய நோய் பக்கவாதம் மற்றும் உடல் பருமன் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகள் வருகிறது.</p><h3> 
கோழியின் வால்:
</h3><p>கோழியின் வாலில் சுரப்பிகள் நிறைந்துள்ளன. இங்குதான் கழிவுகளும் பாக்டீரியா ஆகியவை தொடர்ந்து குவிக்கின்றது. இந்த பகுதியை நாம் சாப்பிடும் பொழுது உடலின் வளர்சிதை மாற்றத்தைச்&nbsp;சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் செயல்பாட்டிலும் மிகக் கடுமையான தாக்கங்களை உருவாக்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43eff0e6-709e-49f1-b3f2-d009ff3dd7da/26-6a8598cf5fd52.webp' /></p><p>
</p><h3> Chicken Gizzard:&nbsp;
</h3><p>கோழியின் செரிமான மண்டலத்தில் இந்த பகுதி அது உண்ணக்கூடிய கழிவுகளை சேமித்து வைத்திருக்கக்கூடிய பகுதியாகும். இது சரியாக சுத்தம் செய்யாமல் நாம் சமைத்து சாப்பிட்டு விட்டால் அதில் உள்ள பல்வேறு ஒட்டுண்ணிகளும் பாக்டீரியாக்களும் நேரடியாக நம்முடைய உடலுக்குள் சென்றுவிடும். இதனால் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் செரிமான பிரச்சனைகள் வரக்கூடும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T04:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியாவில் குடியேறும் இளவரசர் ஹரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-meghan-move-back-to-britain-1787177856"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-meghan-move-back-to-britain-1787177856</id>
            <summary type="text">Prince Harry and Meghan Markle are moving back to the UK: இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி, இந்த மாதம் பிரித்தானியாவிற்குத் திரும்புகின்றனர்.
ஆறு வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prince Harry and Meghan Markle are moving back to the UK: இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி, இந்த மாதம் பிரித்தானியாவிற்குத் திரும்புகின்றனர்.
</p><p>ஆறு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறியதன் பின்னர் தற்போது மீண்டும் பிரித்தானியாவிற்குத் திரும்ப அவர்கள் முடிவு செய்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>பணி உறுப்பினர்களாக</h2><p>
</p><p>கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், ஹரி- மேகன் தம்பதி பிரித்தானியாவில் குடியேற இருப்பதுடன்,&nbsp;பிள்ளைகள் ஆர்ச்சியும் லில்லிபெட்டும் ஒரு பிரித்தானிய பாடசாலையில் சேரவிருப்பதாகவும் தெரிய வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42371250-20a1-4038-98f1-93a767c2aa24/26-6a862b83382f1.webp' /></p><p> </p><p>இளவரசர் ஹரி குடும்பம் அரச குடும்பத்திற்கு சொந்தம் அல்லாத ஓர் இல்லத்திற்கு குடிபெயர்வார்கள், மேலும் அவர்கள் அரச குடும்பத்தின் பணி உறுப்பினர்களாக இருக்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. </p><p>இந்த மாத இறுதியில் பிரித்தானியாவுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக, மன்னர் சார்லஸுக்கு அவரது மகன் ஹரி ஞாயிற்றுக்கிழமைதான் தெரிவித்தார்.</p><p>
இளவரசர் ஹரியையும் அவரது குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் வாய்ப்பை மன்னர் வரவேற்றாலும், கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் தெளிவாக வெளிப்படுத்திய விருப்பங்கள் மற்றும் உடன்படிக்கைக்கு இணங்க, </p><p>இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோரின் தனிநபர்களாகவும், அரச குடும்பத்தின் பணிபுரியாத உறுப்பினர்களாகவும் உள்ள பங்கு மற்றும் அந்தஸ்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதில் மன்னர் தெளிவாக இருக்கிறார் என்றே அறியப்படுகிறது.</p><p></p><p> </p><p>ஹரி தம்பதி கடந்த மாதம் குளோசெஸ்டர்ஷயரில் உள்ள ஹைகிரோவ் என்ற இடத்தில் மன்னரையும் ராணி கமிலாவையும் கடைசியாகச் சந்தித்துள்ளனர் - ஆனால், தாங்கள் இடம் பெயரவிருக்கும் திட்டம் குறித்து அவர்களிடம் தெரிவிக்கவில்லை.
</p><p>இளவரசர் ஹரி 
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் வெல்சைல்ட் விருதுகள் விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா செல்ல ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தார், மேலும் அவர் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒரு அறையில் தங்கவும் இருந்தார்.</p><h2>விமர்சிக்கப்பட்டனர்</h2><p> </p><p>ஏழு வயதான ஆர்ச்சி மற்றும் ஐந்து வயதான லில்லிபெட் ஆகியோர் ஏற்கனவே ஒரு பிரித்தானிய பாடசாலையில் சேர்ந்திருப்பதாகக் கருதப்படுகிறது; மேலும், குழந்தைகள் தங்கள் கல்வியை முடிக்கும் வரை ஹரி தம்பதி பிரித்தானியாவில் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>2020-இல் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தது முதல் வசித்து வரும் கலிபோர்னியாவின் மான்டெசிட்டோவில் உள்ள 11 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள வீட்டை, ஹரியும் மேகனும் தொடர்ந்து தங்கள் வசம் வைத்திருக்க உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea95e6d9-09c3-418f-864b-08c3ac0c9479/26-6a862b83e4782.webp' /></p><p> </p><p>அவர்களுக்கு போர்த்துகலில் இன்னும் ஒரு குடியிருப்பு சொந்தமாக உள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளியேறுவதை 
அறிவிப்பதற்கு முன்பு சார்லஸ், கமிலா அல்லது இளவரசர் வில்லியம் ஆகியோரிடம் கலந்தாலோசிக்கத் தவறியதற்காக, ஹரியும் மேகனும் அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.</p><p> அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருந்தது; 2020 பிப்ரவரி 13 அன்று தொலைக்காட்சி செய்திகளில் இந்த அறிவிப்பு வெளியானபோதுதான் குடும்பத்தினர் அதைப் பற்றி அறிந்துகொண்டனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T04:25:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுப் பகுதிக்குள் நடந்த ஹெலிகாப்டர் விபத்து: 5 அமெரிக்கர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/helicopter-crash-in-kenya-7-dead-1787198419"></link>
            <id>https://news.lankasri.com/article/helicopter-crash-in-kenya-7-dead-1787198419</id>
            <summary type="text">Helicopter crash in Kenya 7 dead: கென்யாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹெலிகாப்டர் விபத்துவடக்கு கென்யாவில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Helicopter crash in Kenya 7 dead: கென்யாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><h2> ஹெலிகாப்டர் விபத்து</h2><p>வடக்கு கென்யாவில் சஃபாரி ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென விபத்துக்குள்ளானதில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p> சம்புரு மாவட்டத்தில் உள்ள லோய்சாபா வன பாதுகாப்பு பகுதியில் இருந்து இவாசோ நைரோ பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியதாக கென்யா சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec1dd14-69fe-4eeb-8020-0dc8d0b970a4/26-6a867bd59f97e.webp' /></p><p></p><p> விபத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் அதில் 6 பேர் பயணிகள் என்றும், அதில் 5 பேர் அமெரிக்கர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>உள்ளூர் சஃபாரி நிறுவனமான ட்ராபி ஏர் கென்யா, தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக தங்களுடைய இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்து இருப்பதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T04:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியா ஈரானின் புதிய பகுதி: ஹார்முஸ் விவகாரத்தில் டிரம்புக்கு பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-map-row-depicting-california-as-iran-territory-1787197487"></link>
            <id>https://news.lankasri.com/article/us-map-row-depicting-california-as-iran-territory-1787197487</id>
            <summary type="text"> Iran us map row: depicting California as iran territory: கலிபோர்னியாவை ஈரானின் ஒரு பகுதியாக அறிவித்து அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p> Iran us map row: depicting California as iran territory: கலிபோர்னியாவை ஈரானின் ஒரு பகுதியாக அறிவித்து அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.</p><h2> ஹார்முஸ் விவகாரம்</h2><p>உலகளாவிய வர்த்தக கப்பல்களின் கடல் வழித்தடமாக ஹார்முஸ் திகழ்ந்து வரும் நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதல் போக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p> இதற்கிடையில் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வரைபடம் ஒன்றில், ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டு இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf047e08-b2ec-47bf-8a74-cd7f628276cb/26-6a8678319a274.webp' /></p><p> இந்த படத்தை பின்னர் வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ கணக்கும் மறு பதிவு செய்து இருந்தது.</p><p></p><h2> ஈரான் கொடுத்த பதிலடி</h2><p>
இந்நிலையில் டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவின் முக்கியமான மாகாணங்களில் ஒன்றான கலிபோர்னியாவை ஈரானின் ஒரு பகுதியாக சித்தரித்து ஈரான் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p> ஐதராபாத்தில் உள்ள ஈரானிய தூதரகம் இந்த வரைபடத்தை தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.</p><p> அதில், நீல நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கலிபோர்னியா பகுதி “இஸ்லாமிய குடியரசின் புதிய பிராந்திய பகுதி என குறிக்கப்பட்டிருந்தது.</p><p> உலக அளவில் ஈரானிய புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாக வாழும் இடமாக அமெரிக்காவின் கலிபோர்னியா திகழ்கிறது.</p><p> லாஸ் ஏஞ்சல்ஸின் வெஸ்ட்வுட் பகுதி “தெஹ்ரான்கலெஸ்” என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T03:45:36+00:00</updated>
        </entry>
    </feed>
