<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-11T20:37:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னை அணி பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை: CSK நிர்வாகம் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/csk-team-deny-dhoni-bid-to-buy-a-stake-1789155643"></link>
            <id>https://news.lankasri.com/article/csk-team-deny-dhoni-bid-to-buy-a-stake-1789155643</id>
            <summary type="text">Csk Deny Dhoni Bid to Buy a Stake: CSK அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை என்று சென்னை நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.சென்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Csk Deny Dhoni Bid to Buy a Stake: CSK அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை என்று சென்னை நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.</p><h2>சென்னை அணி பங்குகளை வாங்க முயற்சித்த தோனி</h2><p>ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.</p><p> 2008ம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக தோனி விளையாடி வருகிறார். எம்.எஸ்.தோனிக்காக மட்டுமே கோடிக்கணக்கான ரசிகர்கள் CSK அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.</p><p> இந்நிலையில், சிஎஸ்கே அணியில் தோனி பங்குகளை வாங்க முயற்சித்ததாகவும், இந்த விவகாரத்தில் அணி நிர்வாகத்துடனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன் அவர்களுடனும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/595970c8-c090-4396-a607-f8c56fbe6e15/26-6aa4593d576f5.webp' /></p><p>தோனி முதலில் 25% பங்குகளை வாங்க விரும்பியதாகவும். ஆனால் சிஎஸ்கே உரிமையாளர்கள் அவருக்கு 3% பங்குகளை வழங்க முன் வந்ததாகவும். அதன் பின்னர் தோனி 18% பங்குகளை கேட்ட நிலையில், அதிகபட்சமாக 5% வரை வழங்க முடியும் என்று உரிமையாளர் கூறி விட்டதாக தகவல் வெளியானது.</p><p> இதன் காரணமாக தோனி மற்றும் அணி உரிமையாளர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி அணியில் தொடர்வாரா&nbsp; என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.</p><h2> சென்னை அணி பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை</h2><p>இந்நிலையில் தோனி சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க முயன்றதாக கூறப்படும் தகவலை அணி நிர்வாகம் மறுத்துள்ளது.</p><p>இது தொடர்பாக தோனியுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், தோனியும் இது குறித்து எங்களிடம் எதுவும் கேட்கவில்லை என்று CSK-வின உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f35781ad-46e0-4cb2-bfef-9d44cce557c7/26-6aa4593e0b8b3.webp' /></p><p> மேலும் என்.சீனிவாசனிடம் தோனி இது தொடர்பாக பேசியது குறித்த எந்த தகவலும் எங்களிடம் இல்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.</p><p>ஏற்கனவே சென்னையின் பங்குகளில் தோனி சிறிய அளவு தன் வசம் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T19:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை: பிரித்தானிய உளவுத்துறை தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/half-million-russian-soldiers-killed-in-ukraine-1789149788"></link>
            <id>https://news.lankasri.com/article/half-million-russian-soldiers-killed-in-ukraine-1789149788</id>
            <summary type="text">Half Million Russian Soldiers Killed in Ukraine War: உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Half Million Russian Soldiers Killed in Ukraine War: உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><h2> அரை மில்லியன் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு</h2><p>
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் உக்ரைனுக்கு எதிராக தொடங்கப்பட்ட போரில் இதுவரை அரை மில்லியன்(5 லட்சம்) ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><p> ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பும், போரினால் ரஷ்ய பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் அழுத்தமும் உக்ரைனை ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வரும் ரஷ்ய அதிபர் புடினின் திட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62e416d0-e912-4833-bf79-344e4a907ba5/26-6aa4425dcf2d9.webp' /></p><p> பிரித்தானிய ஆயுதப் படைகளின் தலைவர் ஏர் சீப் மார்ஷல் சர் ரிச்சர்ட் நைட்டன் வழங்கிய தகவலில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போரில் காயமடைந்தவர்கள் உட்பட கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ரஷ்ய வீரர்கள் பாதிப்படைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> இதில் மிகப்பெரிய இழப்பு 2023ம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த போர் நடவடிக்கையில், உக்ரைனின் 2% நிலப்பரப்பை மட்டுமே ரஷ்யா கைப்பற்றி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> நீண்ட கால போராக தொடரும் உக்ரைன் போர்</h2><p>ரஷ்ய வீரர்கள் கிட்டத்தட்ட 1660 நாட்களாக உக்ரைனுடன் சண்டையிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f10c8b-3b2d-47bb-a2fc-67d1bf63bf12/26-6aa4425e828ed.webp' /></p><p> இதனால் முதல் மற்றும் இரண்டாம் உலக போரில் ரஷ்ய வீரர்கள் சண்டையிட்ட நாட்களை விட உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்கள் அதிக நாட்கள் சண்டையிட்டு வருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.</p><p> இந்த போரினால் ரஷ்யாவின் பணவீக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உள்நாட்டு நுகர்வோரின் தேவை பலவீனமாகியுள்ளது.</p><p> நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் படுவேகமாக சரிந்துள்ளது. இந்த போர் நடவடிக்கை தொடர்ந்தால் அது நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கு பெரும் சுமையாக மாறிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T19:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல்: சேதத்தை விவரித்த செயற்கைக்கோள் படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-arabia-s-east-west-pipeline-attacked-1789150984"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-arabia-s-east-west-pipeline-attacked-1789150984</id>
            <summary type="text">சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல்கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியாவின் முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><h2> எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல்</h2><p>கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியாவின் முக்கியமான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகமான CNN வெளியிட்ட தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>இந்த அத்துமீறிய ஏவுகணை தாக்குதலை அமெரிக்க அதிகாரிகள் இரண்டு பேர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdc0fc37-26ef-467f-9bff-6f1da9fe3e73/26-6aa44709d2632.webp' /></p><p> மேலும் இந்த ஏவுகணை தாக்குதலானது எண்ணெய் குழாய் கட்டமைப்பின் பம்பிங் நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.</p><p></p><p> தாக்குதல் தொடர்பாக வெளிவந்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களில், ஒரு பம்பிங் நிலையத்தில்&nbsp; தீவிரமான தீ சேதமும், மற்றொரு பம்பிங் நிலையத்தில் சிறிய தீ சேதமும் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.</p><h2> தாக்குதலுக்கு யார் பொறுப்பு?</h2><p>
ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கு எதிராக சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசு படைகள் சண்டையிட்டு வரும் நிலையில் இந்த எண்ணெய் குழாய் தாக்குதலானது நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574b070e-efdc-45dc-9c8f-038a8fffeeb2/26-6aa4470a88e86.webp' /></p><p> ஆனால் இந்த எண்ணெய் குழாய் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்றதாக தெரியவரவில்லை.</p><p> மேலும் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதற்கான மதிப்பீடுகளும் இன்னும் வெளிவரவில்லை.</p><p>இந்நிலையில், எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் ஈராக்கில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T18:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நார்வே இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்: சோகத்தில் ஆழ்ந்த அரச குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/norway-princess-astrid-passed-away-at-94-1789147232"></link>
            <id>https://news.lankasri.com/article/norway-princess-astrid-passed-away-at-94-1789147232</id>
            <summary type="text">நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய 94வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார். இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்வெள்ளிக்கிழமை நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய 94வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார்.</p><h2> இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்</h2><p>வெள்ளிக்கிழமை நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட்(Princess Astrid&nbsp;) தனது 94வது வயதில் காலமானார். இதனால் நார்வே அரச குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.</p><p> மறைந்த மன்னர் ஹரால்டின் சகோதரியான ஆஸ்ட்ரிட் தன்னுடைய சகோதரர் உயிரிழந்த சில வாரங்களில் உயிரிழந்துள்ளார்.</p><p> கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் புரிந்து பிறகு கடந்த மாதம் மன்னர் ஹரால்டு(89) உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a13a5a9f-e531-49f0-8866-8e578146b4b3/26-6aa43861e3c0b.webp' /></p><p>மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு கடந்த புதன்கிழமை ஓஸ்லோ பேராலயத்தில் நடைபெற்ற நிலையில், அதில் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய கடைசி பொது நிகழ்வாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p> இளவரசியின் மறைவு தொடர்பாக அரண்மனை வெளியிட்ட குறிப்பில், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய அரச குடும்பத்தை அன்பாகவும் பொறுப்புடனும் கவனித்து கொண்டதாக தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T17:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம்: முதல் நபரை கைது செய்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/portsmouth-anti-migration-protests-1-man-arrested-1789145354"></link>
            <id>https://news.lankasri.com/article/portsmouth-anti-migration-protests-1-man-arrested-1789145354</id>
            <summary type="text">Portsmouth Anti-Migration Protests 1st man arrested: போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் முதல் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Portsmouth Anti-Migration Protests 1st man arrested: போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் முதல் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> முதல் நபர் கைது</h2><p>பிரித்தானியாவில் கடந்த வாரம் நடந்த அகதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது மற்றும் காவல்துறை அதிகாரிகளை தாக்கியது ஆகிய குற்றச்சாட்டின் கீழ் பால்ஸ்ரோவ்(Paulsgrove) பகுதியை சேர்ந்த 42 வயது நபரை வெள்ளிக்கிழமை ஹாம்ப்ஷயர்(Hampshire) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>100க்கும் மேற்பட்ட அகதிகளுடன் RNLI படகுகள் துறைமுகத்திற்கு வந்த நிலையில், அதனை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணி நேரம் துறைமுக பாதையை முடக்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/058321a8-975d-49af-a29e-e9c3a2e37ba4/26-6aa4310c5d69c.webp' /></p><p>மேலும் அப்போது ஏற்பட்ட மோதலின் போது சில காவலர்கள் காயமடைந்தனர். இறுதியில் திங்கட்கிழமை காலை கூட்டம் கலைக்கப்பட்டது.</p><p>இந்த வார சனிக்கிழமை போர்ட்ஸ்மவுத் நகர மையத்தில் சவுத் கோஸ்ட் பேட்ரியாட்ஸ் அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.</p><p></p><h2>முகமூடி அணிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை</h2><p>
இந்நிலையில் போராட்டக்காரர்கள் யாரும் முகமூடி அணிந்து கொண்டு ஆர்ப்பாட்ட பகுதிக்குள் வரக்கூடாது என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p><p> உத்தரவை மீறி முகமூடி அணியும் எவரும் குற்றவாளியாக கருதப்பட்டு உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> முகமூடி அணிந்த நபர்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-11T16:49:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[47 வயதில் CPL-ல் 5 விக்கெட் - இம்ரான் தாஹிர் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/imran-tahir-47-bags-historic-cpl-five-for-1789143334"></link>
            <id>https://news.lankasri.com/article/imran-tahir-47-bags-historic-cpl-five-for-1789143334</id>
            <summary type="text">Imran Tahir (47) bags historic 5 wickets at CPL: Caribbean Premier League (CPL) போட்டியில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Imran Tahir (47) bags historic 5 wickets at CPL: Caribbean Premier League (CPL) போட்டியில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர், 47 வயதிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.</p><p>

அவர் CPL-இல் ஐந்து விக்கெட் எடுத்து, டி20 கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மிக வயதான வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9186e84c-60ec-46fd-b3e4-35f128217eec/26-6aa429279230d.webp' /></p><p>தாஹிர், Guyana Amazon Warriors அணிக்காக விளையாடி, St Lucia Kings அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் எடுத்தார். அவரது அசத்தலான பந்துவீச்சால் எதிரணி அணி குறைந்த ஓட்டங்களில் சுருண்டது.
</p><p>
போட்டிக்குப் பிறகு, தாஹிர், “என் மகன் என்னை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். அவர் தான் என்னை இன்னும் விளையாட தூண்டுகிறார். எனக்கு வயதானாலும், கிரிக்கெட்டில் ஆர்வம் குறையவில்லை” எனக் கூறினார்.
</p><p></p><p>தாஹிர் தனது வாழ்க்கையில் பல்வேறு நாடுகளில் விளையாடியுள்ளார். IPL-இல் Chennai Super Kings அணிக்காகவும், உலகம் முழுவதும் பல T20 லீக்குகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
அவரது சாதனை, வயது ஒரு தடையாக இல்லாமல், உற்சாகமும், உடல் ஆரோக்கியமும் இருந்தால் எந்த வயதிலும் விளையாட முடியும் என்பதை நிரூபிக்கிறது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Imran Tahir picks up his sixth T20 five-fer and registers his best figures in the format - all while 4⃣7⃣ years young 🫡<a href="https://t.co/dyfKFpFitV">pic.twitter.com/dyfKFpFitV</a></p>&mdash; Cricbuzz (@cricbuzz) <a href="https://x.com/cricbuzz/status/2097855827545838039?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>CPL ரசிகர்கள், தாஹிரின் சாதனையை பாராட்டி, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். “தாஹிர் இன்னும் இளம் வீரர்களுக்கு சவாலாக இருக்கிறார்” என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சாதனை, CPL வரலாற்றில் மட்டுமல்லாமல், உலகளாவிய T20 லீக்குகளிலும் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T16:12:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-capture-perim-island-oil-at-risk-1789140181"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-capture-perim-island-oil-at-risk-1789140181</id>
            <summary type="text">Houthis capture Perim island: ஏமனில் பெரிம் தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.

பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம், ஏமனின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis capture Perim island: ஏமனில் பெரிம் தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><h2>

பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்</h2><p>ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம், ஏமனின் மேற்குக் கடற்கரை பகுதியில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. அவர்கள் பாப் அல்-மந்தப் நீரிணையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள பெரிம் (Mayyun) தீவை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p></p><h2>எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பு</h2><p>இந்த தீவு, செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கியமான வர்த்தக பாதையில் அமைந்துள்ளது. உலகளாவிய பொருட்களின் சுமார் 12 சதவீதம் இந்த நீரிணை வழியாக வர்த்தகம் செய்யப்படுகிறது.</p><p>

சவுதி அரேபியா, ஏமன் அரசுப் படைகளுக்கு ஆதரவளித்து வந்த நிலையில், ஹவுதிகள் மோகா துறைமுக நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனால், சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f406672-322b-4f76-bde3-6ff80b707e71/26-6aa41cd80bf0c.webp' /></p><p>ஏற்கனவே, ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்களை நடத்தியதால், சவுதி அதிகமாக செங்கடல் பாதையை பயன்படுத்தி வந்தது.

ஹவுதிகள் பெரிம் தீவை கைப்பற்றியதால், உலகளாவிய எரிசக்தி போக்குவரத்துக்கு இரட்டை அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.</p><p></p><h2>ஈரான்&nbsp;வரவேற்பு</h2><p> </p><p>ஹார்முஸ் நீரிணை ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், பாப் அல்-மந்தப் ஹவுதிகள் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளது.

இதனால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலரை தாண்டியுள்ளது. </p><p>

ஈரான், ஹவுதிகளின் முன்னேற்றத்தை வரவேற்று, “இது சவுதி மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான எங்கள் கூட்டணியை வலுப்படுத்தும்” என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T16:08:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.1,470 கோடி லொட்டரி வென்ற பெண் - பாதி தொகையை தானமாக வழங்கினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lottery-winner-donates-half-fortune-uk-1789142086"></link>
            <id>https://news.lankasri.com/article/lottery-winner-donates-half-fortune-uk-1789142086</id>
            <summary type="text">Lottery winner donates half fortune: லொட்டரியில் வென்ற ரூ.1,470 கோடியில் பாதியை தானமாக வழங்கிய பெண்ணை பற்றி இங்கே பார்க்கலாம்.

 EuroMillions லொட்டர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Lottery winner donates half fortune: லொட்டரியில் வென்ற ரூ.1,470 கோடியில் பாதியை தானமாக வழங்கிய பெண்ணை பற்றி இங்கே பார்க்கலாம்.</p><h2>

 EuroMillions லொட்டரியில் 115 மில்லியன் பவுண்டு</h2><p>பிரித்தானியாவில் பிரான்சிஸ் கொனொலி (Frances Connolly) என்ற பெண், 2019-இல் தனது கணவர் Paddy Connolly--யுடன் சேர்ந்து EuroMillions லொட்டரியில் 115 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ.1,470 கோடி) வென்றார்.</p><p></p><p>ஆனால், அந்த பெரும் செல்வத்தை தனக்காக மட்டும் வைத்துக்கொள்ளாமல், அவர் அதில் பாதியை சமூக நலத்திற்காக தானமாக வழங்கியுள்ளார்.</p><p>

பிரான்சிஸ், சமூகப்பணியாளராகவும் ஆசிரியராகவும் இருந்தவர். “என் குடும்பத்தின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகிய பிறகு, செல்வத்தை பகிர்வது மனித இயல்பாகவே தோன்றியது” என அவர் கூறியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a80d09d-440e-4741-8cf1-af8e9ff3dcc7/26-6aa42447f2287.webp' /></p><h2>ரூ.632.5 கோடி தானம்</h2><p>Dolly Parton-ன் தானதர்ம பணிகள் அவருக்கு ஊக்கமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.</p><p>115 மில்லியன் பவுண்டுகளில், சுமார் ரூ.632.5 கோடி மதிப்புள்ள தொகையை அவர் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு வழங்கியுள்ளார். இதற்காக, PFC Trust என்ற அறக்கட்டளையையும் நிறுவியுள்ளார்.
</p><p>
அவரது வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம் இல்லை. “நாங்கள் முன்பே வாழ்ந்த வாழ்க்கையை, இப்போது சிறிது பெரிய அளவில் வாழ்கிறோம்” என Frances கூறுகிறார். அவர்கள் இன்னும் பழைய வாட்ச்கள், கார்கள் போன்றவற்றை விரும்பி வாங்குகின்றனர். தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்க்கின்றனர்.</p><p></p><h2>60-வது பிறந்தநாள்</h2><p>பிரான்சிஸ், “மனிதர்களுக்கு ‘போதும்’ என்ற அளவு வேறுபடும். ஆனால், குழந்தைகள் நிம்மதியாக வாழும் அளவு கிடைத்த பிறகு, மீதியை பகிர்வது சரியானது” எனக் கூறியுள்ளார்.
</p><p>
அவரது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு விளையாட்டு வீரர்கள் PFC Trust-க்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
</p><p>
வடக்கு அயர்லாந்தில் பிறந்த பிரான்சிஸ், சிறுவயதிலிருந்தே பிறருக்கு உதவியவர். பின்னர் Hartlepool நகரில் குடியேறி, அங்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T15:51:34+00:00</updated>
        </entry>
    </feed>
