<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-09T15:51:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடுபாதையில் விமானத்தை துரத்திச் சென்ற இரண்டு பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-chase-plane-in-moscow-airport-scare-1786290107"></link>
            <id>https://news.lankasri.com/article/women-chase-plane-in-moscow-airport-scare-1786290107</id>
            <summary type="text">Women Chase Plane in Moscow Airport: மாஸ்கோ விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் விமானத்தை துரத்திச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.

ஓடுபாதையில் இரண்டு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Women Chase Plane in Moscow Airport: மாஸ்கோ விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் விமானத்தை துரத்திச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.</p><h2>

ஓடுபாதையில் இரண்டு பெண்கள்</h2><p>ஜூலை 25-ஆம் திகதி, ரஷ்யாவின் ஷெரெமேட்யேவோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்த விசித்திரமான சம்பவம் தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
இரண்டு பெண்கள் தங்கள் Aeroflot விமானத்தை தவறவிட்டதால், விமானம் புறப்படும் தருணத்தில் ஓடுபாதையில் துரத்திச் சென்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Meanwhile at Moscow&#39;s Sheremetyevo International Airport two passengers who had missed their flight ran onto the tarmac on July 25 and walked directly toward an Aeroflot aircraft in an attempt to board, with one woman dragging a suitcase behind her. <a href="https://t.co/1vmHOeBrhg">pic.twitter.com/1vmHOeBrhg</a></p>&mdash; Breaking Aviation News &amp; Videos (@aviationbrk) <a href="https://x.com/aviationbrk/status/2086052750802952490?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அவர்கள் ஏற்கனவே பாதுகாப்பு சோதனையை கடந்திருந்தாலும், விமானத்தில் ஏற வேண்டிய நேரத்தை தவறவிட்டனர்.

மீண்டும் டிக்கெட் பதிவு செய்யாமல், நேரடியாக விமானம் நிறுத்தப்பட்டிருந்த apron பகுதியில் நுழைந்தனர். அப்போது விமானம் கேட்டில் இருந்து நகர்த்தப்பட்டு கொண்டிருந்தது.</p><p>

வீடியோ காட்சிகளில், பெண்களில் ஒருவர் தனது சூட் கேஸை இழுத்துக்கொண்டு விமானத்தை நோக்கி ஓடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. மற்றொருவர் விமானத்தை நோக்கி கைகளை அசைத்து பைலட் கவனத்தை ஈர்க்க முயன்றார்.</p><p>
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b27100d9-1f99-4417-8c06-ce0c5795bf09/26-6a78a07c654fb.webp' /></p><h2>விமான இயக்கம் நிறுத்தப்பட்டது</h2><p>இந்த சம்பவம் பெரும் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தியது. apron பகுதி மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இடமாகும். அங்கு விமானங்கள் நகர்த்தப்படுவதோடு, பல்வேறு வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் இயங்குகின்றனர்.</p><p>பெண்கள் அங்கு நுழைந்ததால், விமான இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

பின்னர், பணியாளர்கள் அவர்களை தடுத்து, மீண்டும் டெர்மினலுக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் ரஷ்யாவின் Federal Security Service (FSB)-க்கு ஒப்படைக்கப்பட்டனர்.
</p><p>
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பயணிகள் விமானத்தை தவறவிட்டால் எவ்வளவு ஆபத்தான முடிவுகளை எடுக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியது.</p><p></p><p>
</p><h2>
மற்றொரு சம்பவம்- 30 பவுண்டுகள் அபராதம்</h2><p>இதேபோன்ற சம்பவம் கடந்த மே மாதத்திலும் நடந்தது. அப்போது, ஒரு பயணி விமான நிலையக் கழிப்பறையில் சிக்கி, விமானத்தை தவறவிட்டார். பின்னர் அவர் ஓடுபாதையில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்றார். ஆனால், விமானம் புறப்பட்டுவிட்டது. அந்த பயணிக்கு சுமார் 30 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T15:42:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறாது: ட்ரம்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-rejects-trump-s-peace-plan-of-gaza-1786282839"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-rejects-trump-s-peace-plan-of-gaza-1786282839</id>
            <summary type="text">ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p><p>

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்துள்ளார்.
</p><p>
</p><h2>அமைதித் திட்டம்</h2><p>காஸாவுக்கான அமைதித் திட்டத்தை இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) அமைதிக் குழு முன்மொழிந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d693950-762e-4cac-824b-a21e574da61e/26-6a78835a7fe05.webp' /></p><p></p><p>
ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது எனக் கூறி அதனை நிராகரித்துள்ளார்.</p><p>

இதுகுறித்து தனது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், "இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: 15 அம்சங்களைக் கொண்ட அந்த ஆவணத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது.</p><p><b> நீங்கள் அதை சொல்லவில்லை</b> என்று சிலர் கூறுவதை நான் கேட்டேன். எனவே அதை நான் மீண்டும் இங்கே கூறுகிறேன். 

ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை இஸ்ரேலியப் படைகள் எந்தவொரு படைகளையும் திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளாது" என்றார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T15:34:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்ஸர்களை பறக்கவிட்ட சிராஜ்: பயிற்சி டெஸ்டில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/siraj-smashing-sixers-india-beat-sri-lanka-xi-test-1786285267"></link>
            <id>https://news.lankasri.com/article/siraj-smashing-sixers-india-beat-sri-lanka-xi-test-1786285267</id>
            <summary type="text">இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி டெஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>

இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>

</p><h2>பயிற்சி டெஸ்ட்&nbsp;</h2><p>இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் லெவன் அணிகளுக்கு இடையிலான பயிற்சி டெஸ்ட் கொழும்பில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18d1cd61-2e21-4e36-bb37-3a056079c972/26-6a788cd694185.webp' />&nbsp;</p><p></p><p>
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 363 ஓட்டங்களும், இந்தியா அணி 357 ஓட்டங்களும் குவித்தன. இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 200 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.</p><p>

பின்னர் ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வால் 61 ஓட்டங்களும், கில் 44 ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p>

மொஹம்மது சிராஜ் (Mohammed Siraj) சிக்ஸர்களை பறக்கவிட்டு 15 பந்துகளில் 32 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 1 பவுண்டரி) விளாச, இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c2277e8-ff26-443c-bb84-180cd66bf6ca/26-6a788cd5d81f5.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T14:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[5,700 ஆண்டுகள் சார்ஜ் இல்லாமல் இயங்கும் வைர அணு பேட்டரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/diamond-nuclear-battery-lasts-5700-years-1786283378"></link>
            <id>https://news.lankasri.com/article/diamond-nuclear-battery-lasts-5700-years-1786283378</id>
            <summary type="text">Diamond Nuclear Battery: 5,700 ஆண்டுகள் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.5,700 ஆண்டுகள் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரி2024...</summary>
            <content type="html"><![CDATA[<p>Diamond Nuclear Battery: 5,700 ஆண்டுகள் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.</p><h2>5,700 ஆண்டுகள் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரி</h2><p>2024-ஆம் ஆண்டு, பிரித்தானியாவின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் UK Atomic Energy Authority இணைந்து, உலகையே ஆச்சரியப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டனர்.
</p><p>
அது, 5,700 ஆண்டுகள் சார்ஜ் செய்யாமல் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரி ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff50587-897d-4da0-9405-bad9c5091d6a/26-6a7885747d7f0.webp' /></p><h2>
semiconductor போல செயல்படும் வைரம்</h2><p>இந்த பேட்டரி, Carbon-14 எனப்படும் கதிர்வீச்சு ஐசோடோப்பை பயன்படுத்துகிறது. பொதுவாக Carbon-14 பழமையான பொருட்களின் வயதை கணக்கிடப் பயன்படுகிறது. ஆனால் இப்போது, அதே கதிர்வீச்சை சக்தி உற்பத்திக்காக பயன்படுத்தும் முயற்சி வெற்றியடைந்துள்ளது.
</p><p>
Carbon-14 மிக மெதுவாக சிதைவதால், 5,700 ஆண்டுகள் கழித்தும் பேட்டரி தனது சக்தியின் பாதியை வழங்கும். இந்த கதிர்வீச்சு, செயற்கை வைரத்தில் அடைக்கப்பட்டிருப்பதால், radiation வெளியேறாது.
</p><p>
வைரமே radiation-ஐ தடுக்கவும், semiconductor போல செயல்பட்டு, electrons-ஐ மின்சாரமாக மாற்றவும் உதவுகிறது.
</p><p></p><h2>microwatt அளவிலான சக்தி</h2><p>இந்த பேட்டரி microwatt அளவிலான சக்தி மட்டுமே உற்பத்தி செய்யும். அதனால், இது மொபைல், லேப்டாப், கார்கள் போன்ற சாதனங்களுக்கு பொருந்தாது. </p><p>ஆனால், மருத்துவ சாதனங்கள் (pacemaker, neural implants), விண்வெளி ஆராய்ச்சி (satellites, deep space probes), தொலைதூர கண்காணிப்பு கருவிகள் (Arctic stations, undersea sensors) போன்ற இடங்களில், நீண்ட காலம் பராமரிப்பு இல்லாமல் இயங்க வேண்டிய சூழலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.</p><p>

மேலும், இந்த பேட்டரி அணு கழிவுகளை பயனுள்ள சக்தியாக மாற்றும் திறன் கொண்டது. அணு உலைகளில் இருந்து எடுக்கப்படும் Carbon-14, வைரத்தில் அடைக்கப்பட்டு, நூற்றாண்டுகளுக்கு சக்தி வழங்கும். இதனால், அணு கழிவுகளை பாதுகாப்பாக கையாளும் புதிய வழி கிடைக்கிறது.</p><p></p><p>
</p><h2>
புரட்சிகர கண்டுபிடிப்பு</h2><p>ஆராய்ச்சியாளர்கள், இந்த தொழில்நுட்பத்தை வணிக ரீதியாக கொண்டு வர கூட்டாண்மைகள் மற்றும் விதிமுறை அனுமதிகள் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த வைர அணு பேட்டரி, சார்ஜ் செய்ய முடியாத சூழலில் நீண்ட கால சக்தி வழங்கும் புரட்சிகர கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T13:47:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான கருப்பு எள்ளு லட்டு.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/healthy-laddu-recipe-in-tamil-1786279491"></link>
            <id>https://news.lankasri.com/article/healthy-laddu-recipe-in-tamil-1786279491</id>
            <summary type="text">Black Sesame Laddu
recipe- கருப்பு எள்ளில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது.

இது எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Black Sesame Laddu
recipe- கருப்பு எள்ளில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது.
</p><p>
இது எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் இதய நலனைப் பாதுகாக்க உதவுகிறது.
</p><p>
அந்தவகையில், உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான கருப்பு எள்ளு லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li>

கருப்பு எள்ளு- 1 கப்</li><li>
ஆளிவிதை- 1கப்
</li><li>பூசணி விதை- ¼ கப்
</li><li>கசகசா- ¼ கப்</li><li>
வெல்லம்- ½ கப்
</li><li>ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்</li><li>
நெய்- 3 ஸ்பூன்
</li></ul><h2>
செய்முறை</h2><p>

முதலில் ஒரு கடாயில் கருப்பு எள்ளை நன்கு கழுவி வறுத்து பொரிந்தவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.</p><p>
அடுத்து அதே கடாயில் ஆளிவிதையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
</p><p>
பின் பூசணி விதையை மற்றும் கசகசாவையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd228fd-f3e2-4bcc-a199-5882b42597bf/26-6a7876452ddec.webp' /></p><p>இதனை தொடர்ந்து ஒரு மிக்ஸியில் வறுத்து ஆறவைத்த எள்ளு, ஆளிவிதை, பூசணி விதை மற்றும் கசகசாவை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
</p><p>
இறுதியாக இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி நெய் சேர்த்து லட்டுவாக பிடித்தால் சத்தான கருப்பு எள் லட்டு தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T13:25:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிக்கு பலம் சேர்க்கும் எண்கள் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lucky-numbers-for-each-rasi-in-tamil-1786278383"></link>
            <id>https://news.lankasri.com/article/lucky-numbers-for-each-rasi-in-tamil-1786278383</id>
            <summary type="text">&amp;nbsp;Lucky Numbers for Each Rasi-&amp;nbsp;எண் கணிதம் என்பது எண்களின் மூலம் ஒருவருடைய எதிர்காலத்தை கணிக்கும் ஒரு முறை ஆகும்.
ஜோதிட மற்றும் எண் கணிதத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Lucky Numbers for Each Rasi-&nbsp;எண் கணிதம் என்பது எண்களின் மூலம் ஒருவருடைய எதிர்காலத்தை கணிக்கும் ஒரு முறை ஆகும்.
</p><p>ஜோதிட மற்றும் எண் கணிதத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் அதன் அதிபதி கிரகத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட பலமும் அதிர்ஷ்டமும் தரும் எண்கள் உள்ளன. </p><p>

இந்த எண்கள் ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கவும், வெற்றிக்கு உதவவும் வழிவகுக்கும்.</p><p> 

பிறந்த தேதி, பெயரை கொண்டு ஒருவருடைய அதிர்ஷ்ட எண்களை கண்டறிந்து, அதன் மூலம் அவர்களின் குணாதிசயங்கள் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்வது எண் கணிதம் ஆகும்.
</p><p>
எண் கணிதத்தில், ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் மற்ற எண்கள் அவற்றின் கூட்டுத்தொகையாகக் குறைக்கப்படுகின்றன.</p><p>

அந்தவகையில், 12 ராசிக்கு பலம் சேர்க்கும் எண்கள் என்ன என்பது குறித்து டாக்டர் மஹா தன் சேகர் ராஜா
 இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1M9Febmp4Bk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T13:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் சில இடங்களில் Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-bans-meta-smart-glasses-over-privacy-1786279652"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-bans-meta-smart-glasses-over-privacy-1786279652</id>
            <summary type="text">UK Bans Meta Smart Glasses: பிரித்தானியாவில் சில பொது இடங்களில் Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடைபிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK Bans Meta Smart Glasses: பிரித்தானியாவில் சில பொது இடங்களில் Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><h2>ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை</h2><p>பிரித்தானியாவின் பல்வேறு உயர்தர உணவகங்கள், பிரபல பப்கள் மற்றும் முக்கிய திரையரங்குகள், Meta நிறுவனத்தின் ஸ்மார்ட் கண்ணாடிகளை தடை செய்துள்ளன.</p><p>

காரணம், இந்த கண்ணாடிகளில் உள்ள கமெரா (Camera) மற்றும் மைக் (Microphone) மூலம், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை அவர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்யும் அபாயம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3ef0a88-2567-4498-b387-59c29ecdeb0f/26-6a7879779767e.webp' /></p><p>இந்த AI தொழில்நுட்ப கண்ணாடிகள் சாதாரண கண்ணாடிகளைப் போல தோன்றினாலும், அவற்றில் மறைமுகமாக வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளது.</p><p> பிரபலங்கள், குறிப்பாக கைலி ஜென்னர் (Kylie Jenner) போன்றவர்கள் இதை விளம்பரப்படுத்தியதால், இளம் தலைமுறையில் அதிக வரவேற்பு பெற்றது.</p><p></p><p>ஆனால், லண்டனின் பிரபல உணவக உரிமையாளர் ஜெரமி கிங், “விருந்தினர்களின் தனியுரிமையை கண்ணாடி மூலம் மீற அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
Soho House தனது “படம்பிடிக்கக் கூடாது” என்ற கடுமையான விதியை ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.
</p><p>
Wetherspoons பப்பின் தலைமை நிர்வாகி டிம் மார்டின், “வாடிக்கையாளர்களை அனுமதி இல்லாமல் படம் பிடிப்பது எங்கள் விதிமுறைக்கு எதிரானது. கண்ணாடிகள் கமெரா வசதியால் பொதுவான தனியுரிமையை மீறுகின்றன” என்று கூறியுள்ளார்.
</p><p></p><p>மேலும், ATG Theatres (லண்டன், எடின்பர்க், பிரிஸ்டல்), நேரடி நிகழ்ச்சிகளின் போது ஸ்மார்ட் கண்ணாடிகளை அணிந்திருந்தால், பார்வையாளர்கள் அவற்றை அகற்ற வேண்டும் என அறிவித்துள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கைகள், தனியுரிமை பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை காக்கும் நோக்கில் எடுக்கப்பட்டவை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T12:56:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்றாவது முறையாக நேரடியாக..உலகக்கிண்ண வாய்ப்பை இழந்த மேற்கிந்திய தீவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/west-indies-not-direct-qualify-for-world-cup-2027-1786278239"></link>
            <id>https://news.lankasri.com/article/west-indies-not-direct-qualify-for-world-cup-2027-1786278239</id>
            <summary type="text">2027 ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் நேரடி வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் இழந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி 2027 உலகக்கிண்ண தொடரில் நேரடியாக தக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் நேரடி வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் இழந்தது.
</p><p>
மேற்கிந்திய தீவுகள் அணி 2027 உலகக்கிண்ண தொடரில் நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை மூன்றாவது முறையாக இழந்துள்ளது.&nbsp;</p><h2>மேற்கிந்திய தீவுகள்&nbsp;</h2><p>
ஒருநாள் உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eb4ec60-ba82-4958-8c82-8b305226d766/26-6a787162d5ace.webp' /></p><p></p><p>
இந்த தொடரில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பினை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்துள்ளது.
</p><p>
ஆப்கானிஸ்தான் அணி புள்ளிகள் அடிப்படையில் நேரடியாக தகுதி பெறுவதற்கு கடைசியாக இருந்த இடத்தைப் பிடித்தது. </p><h2>

மூன்றாவது முறையாக </h2><p>மேற்கிந்திய தீவுகள் அணி 2019, 2023 தொடர்களில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்திருந்தது.
</p><p>
இதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக குவாலிஃபயர் சுற்று விளையாட வேண்டிய நிலைக்கு மேற்கிந்திய தீவுகள் தள்ளப்பட்டுள்ளது.
</p><p>
1975 மற்றும் 1979-ஆம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக்கிண்ணத்தை வென்ற முன்னாள் சாம்பியனான மேற்கிந்திய தீவுகள், மூன்றாவது முறையாக நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது ரசிகர்களுக்கு கவலையளித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7dbe3d5-2294-4bd5-a72e-dc47b5616ad9/26-6a7871622f71b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T12:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 5 பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளியை சாப்பிடக்கூடாதாம்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-people-who-should-avoid-eating-papaya-1786275499"></link>
            <id>https://news.lankasri.com/article/5-people-who-should-avoid-eating-papaya-1786275499</id>
            <summary type="text">5 Health Conditions That May Require You to Avoid Papaya- பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, ஈ உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. 

மேலும், இதில் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>5 Health Conditions That May Require You to Avoid Papaya- பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, ஈ உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. </p><p>

மேலும், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாப்பைன் என்ற நொதியும் உள்ளது.
</p><p>
தினமும் ஒரு கப் பப்பாளி சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2434a65-5161-406e-ac09-8c6d2afc28d6/26-6a78673af12dc.webp' /></p><p>இருப்பினும், சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் பப்பாளியை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p>

சிலருக்கு பப்பாளி சாப்பிடுவது உடல்நலப் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கக்கூடும். </p><p>

அந்தவகையில், எந்தெந்த உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் பப்பாளியைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.</p><h3>1. கர்ப்பிணிகள்
</h3><p>
கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பப்பாளியில் உள்ள லேடெக்ஸ் மற்றும் பாப்பைன் போன்ற சேர்மங்கள் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் முன்கூட்டிய பிரசவம் உள்ளிட்ட சில சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருக்கும்.</p><p></p><p> </p><h3>

2. இதயத் தாளக் கோளாறு உள்ளவர்கள்
</h3><p>
இதயத் தாளக் கோளாறு உள்ளிட்ட இதயப் பிரச்சனைகள் உள்ளவர்கள் பப்பாளியை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக அளவில் பப்பாளி சாப்பிடுவது சிலருக்கு இதயத் தாளத்தில் பாதிப்பை ஏற்படும். </p><h3>

3. லேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்கள்
</h3><p>
லேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்களும் பப்பாளியைத் தவிர்ப்பது நல்லது. பப்பாளியில் உள்ள சில புரதங்கள் லேடெக்ஸில் உள்ள புரதங்களுடன் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன. இதனால் சிலருக்கு பப்பாளி சாப்பிட்ட பிறகு அரிப்பு, தும்மல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b93c3c2-0170-4d28-8539-b4272102cc43/26-6a78673bac75e.webp' /></p><p>
</p><h3>
4. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள்
</h3><p>
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பப்பாளியில் உள்ள சில சேர்மங்கள் தைராய்டு ஹார்மோன்களின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும். இதனால் உடல் சோர்வு, சோம்பல் மற்றும் குளிரைத் தாங்க முடியாத நிலை போன்ற அறிகுறிகள் அதிகரிக்கும். </p><h2>

5. சிறுநீரகக் கல் உள்ளவர்கள்
</h2><p>
சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பப்பாளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதை அதிக அளவில் உட்கொள்ளும்போது உடலில் ஆக்சலேட் அளவு அதிகரிக்கக்கூடும். இது கால்சியத்துடன் சேர்ந்து சிறுநீரகக் கல் அபாயத்தை அதிகரிக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T11:41:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரால் பின்னடைவு... ட்ரம்ப் அணியில் இருந்து ஆயுத நிறுவனங்களுக்குப் பறந்த ஆணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-pushes-weapons-production-1786275188"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-pushes-weapons-production-1786275188</id>
            <summary type="text">Team Trump Pushes To Boost Weapons Production: ஆயுத உற்பத்தியை அதிகரிக்குமாறு ஆயுத நிறுவனங்களை ட்ரம்ப் குழு வலியுறுத்தியுள்ளது.
ஈரானுடனான தற்போதைய போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Team Trump Pushes To Boost Weapons Production: ஆயுத உற்பத்தியை அதிகரிக்குமாறு ஆயுத நிறுவனங்களை ட்ரம்ப் குழு வலியுறுத்தியுள்ளது.</p><p>
ஈரானுடனான தற்போதைய போரில் தீர்ந்துபோனவை உட்பட, குறைந்துவிட்ட தனது ஆயுத இருப்பை மீண்டும் நிரப்புவதற்கு உதவும் வகையில், ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்துமாறு அமெரிக்க ஆயுத நிறுவனங்களை பென்டகன் வலியுறுத்தி வருகிறது.</p><h2>ஆயுதக் கொள்முதல்</h2><p>
</p><p>பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், நமது போர் வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்களை, அச்சுறுத்தல் கோரும் வேகத்தில் வழங்குவதற்காக, ஆயுதக் கொள்முதலை அதிகரிப்பதில் எங்கள் துறை தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c770794f-c8e4-437d-be57-c9253c26a3aa/26-6a7865772292c.webp' /></p><p> </p><p>இந்தச் செயல்முறையை கணிசமாக விரைவுபடுத்துவதற்காக கடந்த வாரம் துறை மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார், ஆனால் இது, ஐந்து மாத கால மோதலுக்கு முன்பே தொடங்கிய ஒரு பரந்த நவீனமயமாக்கல் முயற்சியின் ஒரு பகுதி என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>இதனிடையே, பாதுகாப்புத் துணைச் செயலாளர் ஸ்டீவ் ஃபைன்பெர்க் புதன்கிழமை அன்று ஆயுத நிறுவனத் தலைவர்களுக்குக் கடிதம் எழுதினார். அதில், முக்கியமான திறன்களுக்கான விநியோக அட்டவணைகளை கணிசமாக வேகமாகவும், மேலும் தீவிரமாகவும் செயல்படுத்துவதற்கும் மற்றும்/அல்லது உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஆன திட்டங்களைச் சமர்ப்பிக்க அவர்களுக்கு 21 நாட்களுக்கு மேல் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. </p><p>பல ஆண்டுகள் நீடிக்கும் உருவாக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என்று குறிப்பிட்ட அவர், நாம் நமது திட்ட கால அட்டவணைகளை வெகுவாக விரைவுபடுத்தி, உற்பத்தித் திறனை தற்போதே விரிவுபடுத்த வேண்டும் என்றார்.</p><p></p><p> </p><p>ஈரானுடனான சமீபத்திய மோதல்களின்போது, ​​அமெரிக்க ராணுவத்திடம் ஏற்கனவே குறைந்திருந்த நவீன ஏவுகணை இடைமறிப்பான்களின் கையிருப்பு மேலும் கரைந்துவிட்டதாக ஒரு புதிய பகுப்பாய்வு தெரிவிக்கிறது; இதனால், மோதல்கள் மீண்டும் தொடர்ந்தால் அமெரிக்கப் படைகள் அதிக ஆபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படலாம். </p><p>பேட்ரியாட் மற்றும் தாட் இடைமறிப்பு ஏவுகணைகளின் கையிருப்பு குறைந்துள்ளதால், அதனால் அமெரிக்காவும் அதன் மத்திய கிழக்கு நட்பு நாடுகளும் அதிக இடர்களை எதிர்கொள்ள நிர்பந்திக்கப்படலாம் என்று அந்தப் பகுப்பாய்வு கூறுகிறது. </p><p>மேலும், அமெரிக்காவிடம் ஆயுதத் தளவாடங்கள் பற்றாக்குறை குறித்த பொதுவான செய்திகள் குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்திய நாட்களில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.</p><h2>பாதுகாப்புச் செலவினம்</h2><p> </p><p>ஆயுத உற்பத்தியை விரைவாக அதிகரிக்கக் கோரும் ஃபைன்பெர்க்கின் குறிப்பாணை உண்மையானது என்பதை சனிக்கிழமையன்று பார்னெல் உறுதிப்படுத்தினார்; மேலும், நிதியுதவிக்காக நாடாளுமன்ற அவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2028-ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை இது வழிநடத்தும் என்றும், </p><p>பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில் கட்டமைப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்கான எங்களின் தற்போதைய முயற்சிகளுடன் இது முழுமையாக ஒத்துப்போகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b79fb7cf-fc57-4e1b-929a-ecf213049a8f/26-6a78657671c12.webp' /></p><p>
</p><p>ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால் ஆத்திரமடைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், பென்டகனுக்கான செலவினத்தை கடந்த ஆண்டின் சுமார் 900 பில்லியன் டொலரிலிருந்து 1.5 டிரில்லியன் டொலராக கணிசமாக உயர்த்த வேண்டும் என்ற வெள்ளை மாளிகையின் கோரிக்கையை எதிர்த்து வருவதால், பாதுகாப்புச் செலவினம் தொடர்பான மசோதா ஒன்று தற்போது நாடாளுமன்றத்தில் முடங்கியுள்ளது. </p><p>போருக்கு முன்பு 2,330 ஆக இருந்த பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளின் எண்ணிக்கை, ஏப்ரல் மாத போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தபோது 1,030 ஆகக் குறைந்தது. </p><p>சமீபத்திய மோதல்களைத் தொடர்ந்து, தற்போதுள்ள கையிருப்பு 759 முதல் 827 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; இது மோதல் தொடங்குவதற்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் குறைந்தது 65 சதவீதக் குறைவு ஆகும். </p><p>போருக்கு முன்பு 452-ஆக இருந்த THAAD இடைமறிப்பு ஏவுகணைகளின் எண்ணிக்கை, ஏப்ரல் மாத போர்நிறுத்தம் தொடங்கியபோது 232 முதல் 262 வரை என்ற அளவிற்கு குறைந்தது. </p><p>ஆனால், அமெரிக்காவால் தனது இடைமறிப்பு ஏவுகணைகளின் இருப்பில் ஒரு பகுதியை 234 முதல் 278 வரையிலான எண்ணிக்கைக்கு மீண்டும் உயர்த்த முடிந்தது. இருப்பினும், இந்த இருப்பு அளவு மோதலுக்கு முந்தைய நிலையை விட இன்னும் குறைந்தது 38% குறைவாகவே உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T11:31:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் முக்கிய நகரில் ட்ரோன் தாக்குதல்: மூவர் பலி, 25 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-drone-strike-kills-3-in-belgorod-25-wound-1786274845"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-drone-strike-kills-3-in-belgorod-25-wound-1786274845</id>
            <summary type="text">ரஷ்ய நகரமான பெல்கோரோட் மீது உக்ரைன் இரவு நேர ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

ரஷ்யாவின் பெல்கோரோட் நகரின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய நகரமான பெல்கோரோட் மீது உக்ரைன் இரவு நேர ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
</p><p>
ரஷ்யாவின் பெல்கோரோட் நகரின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூவர் பலியாகினர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.&nbsp;</p><h2>ட்ரோன் தாக்குதல்</h2><p>
பெல்கோரோட் பிராந்தியத்தில், உக்ரைன் நடத்திய இரவு நேர ட்ரோன் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/817d3b27-c358-4e06-a684-750c361aeb04/26-6a78641fea431.webp' />&nbsp;</p><p></p><p>

இதுகுறித்து பேசிய தற்காலிக ஆளுநரான அலெக்சாண்டர் ஷுவாயேவ், "இந்தத் தாக்குதலால் இரண்டு அடுக்குமாடிக் கட்டிடங்களில் தீப்பிடித்தன. பின்னர் அவை அவசரகால சேவைகளால் அணைக்கப்பட்டது.

ஏராளமான குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்கள் சேதமடைந்தன" என தெரிவித்தார்.</p><p>

இதற்கிடையில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், நாட்டின் ஐரோப்பியப் பகுதி இணைக்கப்பட்ட கிரிமியா, கருங்கடல் மற்றும் அசோவ் கடல் ஆகியவற்றின் மீது பறந்த 150-க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன் விமானங்களை அழித்ததாகக் கூறியது. </p><p>

மேலும், பாஷ்கோர்டோஸ்தான் பிராந்தியத்தில் உள்ள உஃபா நகரில், கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டிடம் மற்றும் ஒரு கிரேனை உக்ரேனிய ட்ரோன் விமானம் தாக்கியதாக, உள்ளூர் அவசர சேவைகளை மேற்கோள்காட்டி அரசுக்கு சொந்தமான RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f275f4b5-effb-429d-9910-0cee4be9178b/26-6a7864209b287.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T11:25:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட கோவில்- இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/40-000-kg-of-ghee-used-to-build-a-temple-in-india-1786272669"></link>
            <id>https://news.lankasri.com/article/40-000-kg-of-ghee-used-to-build-a-temple-in-india-1786272669</id>
            <summary type="text">40,000 Kg of Ghee Used to Build a Temple - இந்தியாவில் உள்ள ஒரு கோவிலை தண்ணீருக்கு பதிலாக 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.40,000 கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>40,000 Kg of Ghee Used to Build a Temple - இந்தியாவில் உள்ள ஒரு கோவிலை தண்ணீருக்கு பதிலாக 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.</p><h2>40,000 கிலோ நெய்</h2><p>

ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள பண்டசார் சமணக் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
</p><p>
சுமார் 550 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில், சமண மதத்தின் ஐந்தாவது தீர்த்தங்கரரான சுமதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்தக் கோவில் தண்ணீருக்குப் பதிலாக நெய்யைப் பயன்படுத்தி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a01d512f-e710-41cc-acf0-7118dc2fb093/26-6a785e1e2c603.webp' /></p><p>இதன்படி, கோவில் கட்டுமானத்தில் சுமார் 40,000 கிலோ தூய நெய் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. </p><p>

பண்டசார் சமணக் கோவிலின் கட்டுமானப் பணிகள் கடந்த 1468ஆம் ஆண்டு தொடங்கியதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. &nbsp;</p><p>பண்டசா ஓஸ்வால் என்ற பணக்கார சமண வணிகர் இந்தக் கோவிலைக் கட்டத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><h2>கோவிலின் கட்டடக்கலை
</h2><p>
சுமார் 86 ஆண்டுகளுக்குப் பிறகு, 1554ஆம் ஆண்டில் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>

பண்டசார் சமணக் கோவில் சிவப்பு மணற்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9209f2db-f2a8-48ef-9a20-7acaf483c69d/26-6a785e1eedb9f.webp' /></p><p>மூன்று தளங்களைக் கொண்ட இந்தக் கோவில் ராஜஸ்தானின் பாரம்பரியக் கட்டடக்கலையை வெளிப்படுத்துகிறது.
</p><p>
கோவிலின் சுவர்களில் அழகிய சுவரோவியங்கள் காணப்படுகின்றன. மேற்கூரைகளில் தங்கத் தகடு வேலைப்பாடுகளும் உள்ளன.</p><p> 

மேலும், கண்ணாடி வேலைப்பாடுகளும், 24 சமணத் தீர்த்தங்கரர்களைச் சித்தரிக்கும் சிற்பங்களும் இக்கோவிலில் உள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T11:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[விலை உயரும் அன்றாடப் பயன்பாட்டுக்குரியப் பொருட்கள்: விரிவானப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fmcg-raise-prices-in-september-1786271036"></link>
            <id>https://news.lankasri.com/article/fmcg-raise-prices-in-september-1786271036</id>
            <summary type="text">FMCG firms set to raise prices again: மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, அன்றாடப் பயன்பாட்டுக்குரியப் பொருட்கள் (FMCG) விலை உயரும்.
அதிகரித்து வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>FMCG firms set to raise prices again: மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, அன்றாடப் பயன்பாட்டுக்குரியப் பொருட்கள் (FMCG) விலை உயரும்.
</p><p>அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவை லாப வரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டில் விலை உயர்வுகளுக்குத் தயாராகி வருகின்றன.</p><h2>லாப வரம்புகளை</h2><p>
</p><p>இருப்பினும், நெகிழ்வான நுகர்வுப் போக்கு, உயர்தரப் பொருட்களின் பயன்பாடு மற்றும் மேம்பட்டு வரும் வருவாய் வளர்ச்சி ஆகியவற்றைக் காரணம் காட்டி, நிறுவனங்கள் தேவை குறித்து நம்பிக்கையுடன் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/615bb873-7527-4461-8b69-477a3f559a00/26-6a78553e38944.webp' /></p><p> </p><p>ஜூன் காலாண்டில் சராசரியாக 2 முதல் 5 சதவீதம் வரை விலையை உயர்த்திய நுகர்வோர் பொருட்கள் (FMCG) துறை, தற்போது தங்கள் லாப வரம்புகளைப் பாதுகாத்துக்கொள்ள, தெரிவு செய்யப்பட்ட விலை மாற்றங்களுடன் சேர்த்து shrinkflation எனப்படும் தயாரிப்புகளின் அளவைக் குறைக்கும் நடவடிக்கையையும் பரிசீலித்து வருகிறது. </p><p>மட்டுமின்றி, பணவீக்கம், கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் பருவமழை, எல் நினோ போன்ற வானிலை தொடர்பான அபாயங்களையும் நிறுவனங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. </p><p>சர்க்கரை மற்றும் பாமாயில் விலைகள் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், முன்னணி பேக்கரி உணவு நிறுவனமான பிரிட்டானியா (Britannia), தனது 5 மற்றும் 10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டுகளின் அளவைக் குறைப்பதன் (shrinkflation) மூலம், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மேலும் 1.5 முதல் 2 சதவீதம் வரையிலான விலை மாற்ற நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.</p><p></p><p> </p><p>பிரிட்டானியா தனது முதல் காலாண்டு விலை-சார்ந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் shrinkflation என்று கூறியதுடன், நடப்பு காலாண்டிலும் விலை தொடர்பான கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் சுட்டிக்காட்டியது. </p><p>ஜூன் காலாண்டில் சராசரியாக சுமார் 5 சதவீத விலை உயர்வை மேற்கொண்ட கோத்ரெஜ் கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (GCPL), நடப்பு காலாண்டிலும் மற்றொரு விலை உயர்வை அமுல்படுத்தக்கூடும். </p><p>இருப்பினும், விலை நிர்ணயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னதாக, மூலப்பொருட்களின் விலை நிலவரம் குறித்த கூடுதல் தெளிவுக்காக அந்நிறுவனம் காத்திருக்கிறது.</p><h2>விலைகளை உயர்த்தும்</h2><p> </p><p>கச்சா எண்ணெய் விலையில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், விலையை கணிசமாக உயர்த்துவதைத் தவிர்த்துள்ளதாக GCPL-இன் தலைமை நிர்வாக அதிகாரி சுதிர் சீதாபதி வருவாய் குறித்த கலந்துரையாடலின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். </p><p>மேலும், பல உள்ளீட்டுச் செலவுகள் கச்சா எண்ணெயுடன் தொடர்புடையவை என்றும், பொதுவாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை இவை மூன்று முதல் நான்கு வார கால இடைவெளியுடன் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>தற்போது ஒரு பீப்பாய் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 80 முதல் 85 அமெரிக்க டொலர் என்ற அளவில் உள்ள நிலையில், தற்போதைய விலை நிர்ணயம் போதுமானதாகவே இருப்பதாக GCPL கருதுகிறது; எனவே, விலையை மேலும் கணிசமாக உயர்த்த வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்றும் அது கருதுகிறது.</p><p> அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் குறுகிய காலத்தில் நீடிக்க வாய்ப்புள்ளதால், லாப வரம்புகளைப் பாதுகாப்பதற்காக, உற்பத்தித்திறன் மற்றும் செலவுத் திறன்களில் அதிக கவனம் செலுத்துவதோடு, திட்டமிடப்பட்ட விலை உயர்வுகளும் மேற்கொள்ளப்படும் என்று டாபர் இந்தியா தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d74b0a21-29cb-4a36-af15-109373bffd41/26-6a78553ede855.webp' /></p><p> </p><p>தங்களுடைய பிராண்டுகள், புதிய கண்டுபிடிப்புத் திட்டங்கள் மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றின் துணையுடன், 2027-ஆம் நிதியாண்டில் வருவாயில் ஈரிலக்க வளர்ச்சியை எட்ட முடியும் என்று அந்நிறுவனம் உறுதியாக நம்புகிறது. </p><p>ஏப்ரல்-ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2 முதல் 5 சதவீதம் வரையிலான தொடர் விலைவாசி உயர்வை எதிர்பார்ப்பதால், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் (HUL) செப்டம்பர் காலாண்டில் பல்வேறு தயாரிப்பு வகைகளின் விலைகளை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதனிடையே, தேவைப்பட்டால் விலை தொடர்பான கூடுதல் நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படலாம் என்றும் டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் டி'சோசா குறிப்பிட்டார். </p><p>புவிசார் அரசியல் மற்றும் பணவீக்கம் சார்ந்த சவால்கள் தொடர்ந்து கவலையளிப்பதாகத் தெரிவித்த நெஸ்லே இந்தியா, குறுகிய காலத்தில் ஒட்டுமொத்த நுகர்வு குறையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T10:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் பேச்சுக்களும் தற்புகழ்ச்சியும்.., ஈரான் போரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-makes-us-isolated-in-iran-war-1786269533"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-makes-us-isolated-in-iran-war-1786269533</id>
            <summary type="text">US isolated in Iran war: ட்ரம்பின் முடிவுகளால் ஈரான் போரில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா-ஈரான் போரின் சூழலில், வளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>US isolated in Iran war: ட்ரம்பின் முடிவுகளால் ஈரான் போரில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
அமெரிக்கா-ஈரான் போரின் சூழலில், வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி உலக அரசியலை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.</p><h2>

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்&nbsp;அமெரிக்கா </h2><p>அமெரிக்கா தனது பழைய கூட்டாளிகளின் ஆதரவை இழந்து, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் போராடி வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec2beaf2-38b5-4d6a-9592-9f0798fb78b1/26-6a784f5f484a2.webp' /></p><p>கடந்த காலங்களில், ஆப்கானிஸ்தான், ஈராக், வியட்நாம் போன்ற யுத்தங்களில் அமெரிக்கா பல நாடுகளின் கூட்டணியுடன் செயல்பட்டது. </p><p>ஆனால் தற்போது ஈரானுக்கு எதிரான போரில், அமெரிக்கா தனியாக நிற்கிறது. இஸ்ரேல், நேட்டோ நாடுகள், சவுதி அரேபியா போன்ற சக்திகள் கூட அமெரிக்காவை விட்டு விலகியுள்ளன.</p><p></p><p>
</p><h2>
முக்கிய காரணம்&nbsp;ட்ரம்ப் </h2><p>இதற்கான முக்கிய காரணமாக, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எடுத்த முடிவுகள் மற்றும் அவரது பேச்சுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

ட்ரம்பின் “தற்புகழ்ச்சி” மற்றும் “தனிப்பட்ட யுத்தம்” என்ற அணுகுமுறை, அமெரிக்காவை உலகளவில் தனிமைப்படுத்தியதாக விமர்சிக்கப்படுகிறது. </p><p>முன்னாள் ஜனாதிபதிகள் யுத்தத்திற்கு முன் மக்களையும் உலகையும் தயார்படுத்திய நிலையில், ட்ரம்ப் தனது தனிப்பட்ட வெற்றிக்காக யுத்தத்தை முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.
</p><p>
அமெரிக்க ஊடகங்களே ட்ரம்புக்கு எதிராக செயல்பட்டு, ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதாகவும், இதனால் அமெரிக்கா பலவீனமடைந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p> மேலும், ட்ரம்பின் கனடா மற்றும் கிரீன்லாண்ட் தொடர்பான கருத்துக்கள், நேட்டோ நாடுகளை விலகச் செய்ததாகவும் விளக்கப்படுகிறது.
</p><p></p><p>ஈரான் தனது அரசியலை முன்னிறுத்தி போராட, அமெரிக்கா வியாபார நோக்கில் போராடுகிறது என்பதே முக்கிய குற்றச்சாட்டு. இதனால், அமெரிக்கா பெரும் இராணுவ சக்தி இருந்தும், வெற்றியைப் பெற முடியாமல் தடுமாறுகிறது.
</p><p>
ட்ரம்பின் முடிவுகள் அமெரிக்காவை உலகளவில் தனிமைப்படுத்தி, ஈரான் போரில் வெற்றியடைய முடியாத நிலைக்கு தள்ளியுள்ளதாக இந்த காணொளியில் சுட்டிக்காட்டப்படுகிறது.<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tMSf6adhW-4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T09:56:37+00:00</updated>
        </entry>
    </feed>
