<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-25T13:42:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபூர்வ மருத்துவ பிரச்சினையால் வெளிநாட்டில் இந்தியர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-techie-dies-in-us-rare-aortic-dissection-1784984558"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-techie-dies-in-us-rare-aortic-dissection-1784984558</id>
            <summary type="text">அமெரிக்காவில் வாழ்ந்துவந்த மென்பொருள் பொறியாளரான இந்தியர் ஒருவர், அபூர்வ மருத்துவ பிரச்சினை ஒன்றின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் வாழ்ந்துவந்த மென்பொருள் பொறியாளரான இந்தியர் ஒருவர், அபூர்வ மருத்துவ பிரச்சினை ஒன்றின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.</p><h3>

வெளிநாட்டில் இந்தியர் மரணம்</h3><p>

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் வாழ்ந்து வந்தவர், வெங்கட ரவிதேஜா ரவிபதி (34).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/856ed422-088a-4c58-8f3d-1e4b5cfc99a4/26-6a64b3f00c31a.webp' /></p><p>
கடந்த வாரம், ரவிக்கு திடீரென இடது காலில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. வலி அப்படியே நெஞ்சு வரை பரவ, உடனடியாக அவரது குடும்பத்தினர் அவசர உதவியை அழைத்துள்ளனர்.
</p><p>
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ’Type A Aortic Dissection’ என்னும் அபூர்வ பிரச்சினை இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
</p><p>
திடீரென ரவி இப்படி ஒரு அபூர்வ பிரச்சினையால் உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
</p><p>
ரவிக்கு 26 வயதில் மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T13:04:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[1997ல் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய தர்மேந்திர பிரதான் - இன்று பறிபோன அமைச்சர் பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dharmendra-pradhan-protest-for-paper-leak-in-1997-1784983409"></link>
            <id>https://news.lankasri.com/article/dharmendra-pradhan-protest-for-paper-leak-in-1997-1784983409</id>
            <summary type="text">இன்று நீட் வினாத்தாள் கசிவு காரணமாக அமைச்சர் பதவியை இழந்துள்ள தர்மேந்திர பிரதான், தனது மாணவர் பருவத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியதாக கூறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று நீட் வினாத்தாள் கசிவு காரணமாக அமைச்சர் பதவியை இழந்துள்ள தர்மேந்திர பிரதான், தனது மாணவர் பருவத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியதாக கூறப்படுகிறது. </p><h3>

தர்மேந்திர பிரதான் ராஜினாமா</h3><p> 

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(CJP) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57504a5b-5155-493b-9630-9b324bd06234/26-6a64af73aecb6.webp' /></p><p>
இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி, மோடி அரசையே அசைத்து பார்த்துள்ளது. தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><p>

12 ஆண்டுகால மோடி அரசில், ஒரு அமைச்சர் மக்களின் போராட்டதிற்கு பணிந்து பதவியை ராஜினாமா செய்துள்ளது இதுவே முதல்முறையாகும்.&nbsp;</p><p></p><p>

தங்களது 3 கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதால் நாடு முழுவதும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக CJP அறிவித்துள்ளது.</p><h3>

1997 ல் போராடிய தர்மேந்திர பிரதான்</h3><p>

ஒடிசாவை சேர்ந்த தர்மேந்திர பிரதான் தனது கல்லூரி காலத்திலே RSS அமைப்பின் மாணவர் அமைப்பான ABVPயில் இணைந்து தீவிரமாக பணியாற்றியுள்ளார். 2 முறை ABVPயின் தேசிய செயலாளராக இருந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5efcaf2-6197-4535-a5df-da16ce089eac/26-6a64af730c736.webp' /></p><p>புவனேஸ்வரில் உள்ள ஆர்எம்டி பட்டக் கல்லூரியின் முதல்வராக உள்ள பிரசாந்த் குமார் ரௌட், கல்லூரியில் தர்மேந்திர பிரதானின் ஜுனியராக இருந்துள்ளார். </p><p>

தர்மேந்திர பிரதான் குறித்து பேசிய அவர், "1997 ஆம் ஆண்டில் ஒடிசாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் ஜானகி பல்லப் பட்நாயக் முதலமைச்சராக இருந்தார். </p><p>

நாங்கள் தலைமைச் செயலகத்தின் முன்பு ஒடிசா அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினோம். அங்கு சுமார் 1,500 மாணவர்கள் எங்களுடன் இணைந்தனர்.</p><p> 

போராட்டம் அமைதியாக நடைபெற்றாலும் காவல்துறை எங்களை கடுமையாக தாக்கியது. நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம்.</p><p> அப்போது பிரதான் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவருக்கு சில எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருந்தன. 

வன்முறை நிகழ்ந்தபோதிலும், வினாத்தாள் கசிவுக்கு எதிராக பிரதான் தொடர்ந்து போராடியதே, அவரை மாநிலத்தின் மிக முக்கியமான மாணவர் தலைவர்களில் ஒருவராக நிலைநிறுத்தியது" என்று தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T12:43:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானுக்கு தரமான பதிலடி கொடுத்த இலங்கை: சதம் விளாசிய இருவர்..அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vishmi-and-harshitha-century-vs-pakistan-2nd-odi-1784981466"></link>
            <id>https://news.lankasri.com/article/vishmi-and-harshitha-century-vs-pakistan-2nd-odi-1784981466</id>
            <summary type="text">பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.&amp;nbsp;சிட்ரா அமின்&amp;nbsp;சதம் 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>சிட்ரா அமின்&nbsp;சதம் </h2><p>
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹம்பன்டோடாவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff010950-616e-4014-af30-bd1ae0e63f10/26-6a64a9d681925.webp' /></p><p></p><p> 

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி சிட்ரா அமின் (Sidra Amin) 100 ஓட்டங்களும், ஆயிஷா 49 ஓட்டங்களும் எடுக்க 273 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 1 ரன்னில் ஃபாத்திமா சனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>ஹர்ஷிதா, விஷ்மி சதம் </h2><p><span style="font-size: 14px; color: inherit;">அடுத்து களமிறங்கிய ஹர்ஷிதாவுடன் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே இணைந்து வலுவான கூட்டணி அமைத்தார்.</span></p><p> 

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விஷ்மி குணரத்னே (Vishmi Gunaratne) 123 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். </p><p>

அதனைத் தொடர்ந்து நிதானமாக ஓட்டங்களை சேர்த்த ஹர்ஷிதா சமரவிக்ரமா (Harshitha Samarawickrama) 100 ஓட்டங்களும், கவிஷா தில்ஹரி 40 ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
இதன்மூலம் இலங்கை அணி 46.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0e3dcb-55a1-4398-872e-b2399a43b18a/26-6a64a9d5c77c5.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T12:15:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-to-give-exempt-for-existing-care-workers-1784980082"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-to-give-exempt-for-existing-care-workers-1784980082</id>
            <summary type="text">பிரித்தானியாவின் பிரதமராக லேபர் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், தொடர்ச்சியாக மக்களுக்கு நன்மை தரும் சில நடவடிக்கைகளை எடுத்துவருகிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் பிரதமராக லேபர் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், தொடர்ச்சியாக மக்களுக்கு நன்மை தரும் சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
</p><p>
இந்நிலையில், அவர், புலம்பெயர்தல் தொடர்பில் ஒரு நல்ல முடிவை எடுக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் லட்சக்கணக்கானோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
</p><h3>
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு...
</h3><p>
உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், தொடர்ச்சியாக புலம்பெயர்தலுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகள் ஏராளமானோருக்கு கவலையை ஏற்படுத்துபவையாக அமைந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7cfb2f3-73e8-48c4-8de2-c4e6e61ccd8f/26-6a64a273b3c5e.webp' /></p><p>
அவற்றில் ஒன்று, ஏற்கனவே பிரித்தானியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்து, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான விதி ஆகும்.
</p><p>
அதாவது, ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 10 ஆண்டுகளுக்கும்மேல் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என்னும் ரீதியிலான புது விதி ஒன்றை ஷபானா அறிவிக்க, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள். </p><p></p><p>
இந்நிலையில், அந்த விதியிலிருந்து முதியவர்களை கவனித்துக்கொள்ளும் பணியை மேற்கொள்ளும் care workers என்னும் பணியாளர்களுக்கு, அதாவது, ஏற்கனவே பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோருக்கு, விலக்கு அளிக்க பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்த செய்தி, லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
</p><h3>
என்ன காரணம்?
</h3><p>
இப்படி தன் அரசில் உள்துறைச் செயலராக இருக்கும் ஷபானாவின் முடிவுக்கு எதிராக பிரதமர் ஆன்டி பர்னாம் முடிவெடுக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb6b03c-d9e4-44b1-bf21-43bbfb6c634f/26-6a64a274625d9.webp' /></p><p>
அதை ஆன்டி பர்னாமே கூறியும் உள்ளார். அதாவது, ஆன்டி பர்னாமின் தந்தையான ராய், அல்ஸீமர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
தன் மகன் பிரித்தானியாவின் பிரதமரானதுகூட அவருக்கு தெரியாது என்னும் ரீதியில் சில செய்திகள் வெளியாகியிருந்தன.
</p><p>
இந்நிலையில், ஷபானாவின் கட்டுப்பாடுகளிலிருந்து care worker பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கும் திட்டம் குறித்து பேசிய ஆன்டி பர்னாம், என் தந்தைக்கு அல்ஸீமர் பிரச்சினை உள்ளது.
</p><p>
அவரை கவனித்துக்கொள்ள care worker பணியாளர்கள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். அது அவர்கள் தவறல்ல, சிஸ்டமே தவறு என்று கூறியிருந்தார் ஆன்டி பர்னாம்.
</p><p>
அத்துடன், சமூக பாதுகாப்பு அமைப்பை இப்படியே விட்டுவிட முடியாது என்றும் கூறியிருந்தார் ஆன்டி பர்னாம்.
</p><p>
ஆக, விரைவில் அது குறித்து ஆன்டி பர்னாம் அறிவிப்பு ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், புலம்பெயர்ந்தோர், சுகாதாரப் பணியாளர்கள் உட்பட ஏராளமானோருக்கு நல்ல செய்தி ஒன்று காத்திருக்கிறது என்று மட்டும் இப்போதைக்குக் கூறலாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T11:48:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/yemen-escalates-attacks-after-1784978891"></link>
            <id>https://news.lankasri.com/article/yemen-escalates-attacks-after-1784978891</id>
            <summary type="text">கடந்த ஐந்து மாதங்களாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் சவுதி அரேபியாவும் ஏமனும் இழுத்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஐந்து மாதங்களாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் சவுதி அரேபியாவும் ஏமனும் இழுத்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.</p><h2>யான்பு மற்றும் ஜசான்</h2><p>
</p><p>செங்கடல் கப்பல் போக்குவரத்தின் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஏமனின் ஹொடைடாவில் உள்ள ஹவுதி இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், </p><p>வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த இலக்குகளை அழித்ததாகவும் சவுதி அரேபியா அறிவித்த மறுநாளான சனிக்கிழமையன்று, ஹவுதிகள் ஏவுகணைகளை ஏவியதில் சவுதி அரேபியாவின் யான்பு மற்றும் ஜசான் நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c65d301-91fc-449c-9de2-e3aa34b50a39/26-6a649f3ab7b59.webp' /></p><p> </p><p>பொதுவாக 'ஹவுதிகள்' என்று அழைக்கப்படும் ஏமனின் 'அன்சார் அல்லாஹ்' அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், சவுதி அரேபியா ஹொடைடா மாகாணத்தில் உள்ள கமரன் தீவு மற்றும் தொலைத்தொடர்பு நிலையங்களுக்குச் சொந்தமான வசதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டிருந்தது. </p><p>இதனிடையே, அல் ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், சவுதி எண்ணெய் கப்பல்கள் குறிவைக்கப்பட்ட ஒரு முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையான பாப் அல்-மந்தீப் நீரிணைக்கு அருகில் கமரான் தீவு அமைந்துள்ளதால், அது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.</p><p></p><p> </p><p>சவுதி கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இந்த மோதல் வெடித்தது; ஹவுதிகளின் கடல்வழி முற்றுகையானது, ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதைத் தொடர்ந்து, உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தலாக மாறியது.</p><h2>அரம்கோ எண்ணெய் நிலையங்கள்</h2><p> இந்த நிலையில், ஹொடைடாவில் உள்ள ராணுவ இலக்குகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தினால், செங்கடலில் உள்ள எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்களை மட்டுமல்லாமல், </p><p>சவுதி அராம்கோ (Saudi Aramco) நிறுவனத்தின் கட்டமைப்புகள், விமான நிலையங்கள், விமானப்படைத் தளங்கள் மற்றும் எண்ணெய் குழாய்த்தொடர்கள் ஆகியவற்றையும் குறிவைத்துத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவோம் என்று ஹவுதிகள் எச்சரித்திருந்தனர். </p><p>தற்போது சவுதி அரேபியாவின் யான்பு மற்றும் ஜசான் நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஃபார்ஸ்' (Fars) செய்தி முகமை வெளியிட்டுள்ள நாசா செயற்கைக்கோள் படங்களில், ஏவுகணைத் தாக்குதல்கள் ஜிசானில் உள்ள சவுதி அராம்கோவின் சேமிப்புக் கிடங்குகளில் தீ விபத்தை ஏற்படுத்தியதைக் காட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fe13999-ac83-4cd2-8f2b-1a24b4bb6978/26-6a649f39ee41d.webp' /></p><p> </p><p>சனிக்கிழமையன்று ஹவுதிகள் நடத்திய அரம்கோ எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, யான்பு மற்றும் ஜசான் விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. </p><p>ஏமனில் இருந்து அதிகாலையில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்கள் காரணமாக, தெற்கு சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ரியாத் பல எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T11:35:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூற்றாண்டின் விவாகரத்து - முன்னாள் மனைவிக்கு ரூ.6,245 கோடி வழங்க உள்ள தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sk-chairman-to-pay-6245-crores-part-of-divorce-1784978917"></link>
            <id>https://news.lankasri.com/article/sk-chairman-to-pay-6245-crores-part-of-divorce-1784978917</id>
            <summary type="text">தென் கொரியாவில் முன்னாள் மனைவிக்கு விவாகரத்தின் ஒரு பகுதியாக ரூ.6,245 கோடி வழங்க தொழிலதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவாகரத்தின் ஒரு பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் கொரியாவில் முன்னாள் மனைவிக்கு விவாகரத்தின் ஒரு பகுதியாக ரூ.6,245 கோடி வழங்க தொழிலதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><h3>
விவாகரத்தின் ஒரு பகுதியாக ரூ.6,245 கோடி
</h3><p>
தென் கொரியாவில், 1953 ஆம் ஆண்டில் ஒரு ஜவுளி நிறுவனமாகத் தொடங்கி, செமிகண்டக்டர், டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி நாட்டின் 2வது பெரிய கூட்டு நிறுவனமாக உள்ளது SK குழுமம் ஆகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf54340c-f41a-4036-b044-1def8afaab10/26-6a649de6d1f5a.webp' /></p><p>

இதன் சேர்மன் சேய் டே-வோன்(Chey Tae-won), கடந்த 1988 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரோ டே-வூ என்பவரின் மகளான ரோ சோ-யோங்(Roh Soh-yeong) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e62c5e2a-e9e3-4973-bfd5-2a2151dc8da1/26-6a649de781d61.webp' /></p><p>

இந்த தம்பதி 2011 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்கின்றனர். 2025 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர். </p><p>

இந்த விவாகரத்து சொத்துப் பங்கீட்டின் ஒரு பகுதியாக 944 பில்லியன் வோன் (இந்திய மதிப்பில் ரூ.6,245 கோடி) ரொக்கமாகச் செலுத்த வேண்டும் என்று தென் கொரியா மேல்முறையீடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
சியோல் உயர் நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பில் வழங்கப்பட்ட 1.38 டிரில்லியன் வோன் வழங்க உத்தரவிட்டிருந்தது. </p><p>

ஆனால், சோ-யோங்கின் தந்தை ரோ டே-வூ கள்ளப் பண நிதியிலிருந்து சேய்க்கு 30 பில்லியன் வோன் கொடுத்தது சட்டவிரோதம் என்பதால் அதைத் தம்பதியரின் சொத்துக்களின் ஒரு பகுதியாகக் கருத முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. </p><p>

ஆனால், ரோவும் இல்லறம், பிள்ளைகளை வளர்த்தல் மற்றும் SK குழுமம் தொடர்பான வெளி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பங்களித்தார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
</p><p>
ரோ அந்த இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாகப் பணமாகப் பெற வேண்டும் என்றும், சே தனது SK பங்குகளின் உரிமையைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த தீர்ப்பை எதிர்த்து இருதரப்பில் யாரேனும் ஒருவர் மேல்முறையீடு செய்தாலும், இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும்.</p><p> 

இந்த விவாகரத்து, தென் கொரியாவில் "நூற்றாண்டின் விவாகரத்து" என இது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T11:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதி தீவிரமாக... தங்கத்தை வாங்கிக் குவிக்கும் உலக நாடுகள்: வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/why-banks-buying-more-gold-1784975022"></link>
            <id>https://news.lankasri.com/article/why-banks-buying-more-gold-1784975022</id>
            <summary type="text">உலக நாடுகள் பல, திடீரென்று அதி தீவிரமாக பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தை வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏறக்குறைய இரு மடங்கு
அதிகரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக நாடுகள் பல, திடீரென்று அதி தீவிரமாக பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தை வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஏறக்குறைய இரு மடங்கு</h2><p>
</p><p>அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள், தொடர்ச்சியான பணவீக்கக் கவலைகள், நாணய அபாயங்கள் மற்றும் அமெரிக்க டொலர் போன்ற பாரம்பரிய சொத்துக்களிலிருந்து விலகி கையிருப்புகளைப் பல்வகைப்படுத்த வேண்டும் என்ற அதிகரித்து வரும் உந்துதல் ஆகியவையே முதன்மையான காரணமாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92568eb7-0bda-40f4-a25c-f49bb8593b9c/26-6a6490202dba8.webp' /></p><p> </p><p>உலக தங்க கவுன்சிலின் (WGC) சமீபத்திய மத்திய வங்கிகளின் தங்க இருப்பு குறித்த ஆய்வின் அடிப்படையில், கடந்த நான்கு ஆண்டுகளில் உத்தியோகப்பூர்வ நிறுவனங்கள் ஆண்டுக்கு சராசரியாக 1,000 டன் தங்கத்தை வாங்கியுள்ளன; இது முந்தைய பத்தாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட சராசரி ஆண்டு கொள்முதல் அளவை விட ஏறக்குறைய இரு மடங்காகும். </p><p>
இந்தக் கொள்முதல் வேகம் குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மத்திய வங்கிகளில் 89 சதவீதம், அடுத்த ஆண்டில் உலகளாவிய அதிகாரப்பூர்வ தங்கக் கையிருப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றன. </p><p>அதே நேரத்தில், 45 சதவீத வங்கிகள் தங்களின் சொந்த கையிருப்பை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றன, இது ஒரு சாதனை அளவாகும். </p><p>புவிசார் அரசியல் மோதல்கள், வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் அதிகரித்த நிதிச் சந்தை நிலையற்ற தன்மை ஆகியவற்றால் உலகப் பொருளாதாரம் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், ஒரு உத்திசார் இருப்புச் சொத்தாகத் தங்கத்தின் அதிகரித்து வரும் பங்கை இந்த ஆய்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.</p><p></p><p>மத்திய வங்கிகள் பொதுவாகத் தங்கள் சொந்த நாணயங்களுக்கு ஆதரவளிக்கவும் நிதி நிலைத்தன்மையைப் பேணவும், அமெரிக்க கருவூலப் பத்திரங்கள், அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் போன்ற சொத்துக்களை உள்ளடக்கிய அந்நியச் செலாவணிக் கையிருப்புகளைப் பராமரிக்கின்றன. </p><p>இருப்பினும், தங்கம் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது, ஏனெனில் அது கடன் அல்லது எதிர் தரப்பு இடர்பாடுகள் இல்லாத ஒரு பௌதீகச் சொத்தாகும், மேலும் ஒரு அரசாணையால் நாணயங்களை உருவாக்குவது போல தங்கத்தை விருப்பப்படி உருவாக்கவும் முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b9b5131-c12f-4cd0-bf91-0aeadf29aad6/26-6a649020def04.webp' /></p><p> </p><p>பணவீக்கம் அல்லது பண விநியோகத்தை அதிகரிக்கும் கொள்கைகளால் மதிப்பு குறையக்கூடிய காகித நாணயங்களைப் போலன்றி, தங்கத்தின் இருப்பு இயற்கையாகவே வரையறுக்கப்பட்டதாக உள்ளது.</p><h2>கையிருப்பை தங்கள் நாட்டிலேயே</h2><p> </p><p>மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், அமெரிக்க டாலரின் போக்கிலிருந்து சுயாதீனமாகவோ அல்லது அதற்கு நேர்மாறாகவோ கூட நகரும் தங்கத்தின் வரலாற்றுரீதியான போக்கு ஆகும். </p><p>உலகளாவிய அந்நியச் செலாவணிக் கையிருப்பில் டொலர் இன்னும் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருப்பதால், தங்கத்தை வைத்திருப்பது, குவிப்பு அபாயத்தைக் குறைக்கவும், டொலரின் பலவீனம் அல்லது அதிகரித்த சந்தை நெருக்கடி காலங்களில் கையிருப்புத் தொகுப்புகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது. </p><p>இதுவரையில் பெரும்பாலான மத்திய வங்கிகள் தங்களுடைய தங்கக் கையிருப்பை பேங்க் ஆப் இங்கிலாந்திலும் நியூயார்க் ஃபெடரல் ரிசர்வ் போன்ற வங்கியிலும் சேமித்து வந்தன
ஆனால் தற்போது சில மத்திய வங்கிகள் தங்களுடைய தங்கக் கையிருப்பை தங்கள் நாட்டிற்க்கே கொண்டுவரத் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a1f0975-949b-463b-b60c-7988e70506f8/26-6a64902193502.webp' /></p><p> </p><p>பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களாலும், போர் பதற்றத்தின் காரணமாகவும் தங்களுடைய கையிருப்பை தங்கள் நாட்டிலேயே வைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளன. </p><p>தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை மட்டும் வைத்து உலக நாடுகள் இந்த முடிவை எடுக்கவில்லை. தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த போதும் தொடர்ந்து மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்தன. இதே நிலை தொடர்ந்தால் டொலரின் பங்கு குறைந்து, தங்கத்தின் பங்கு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T10:21:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்கோரோடில் கிடங்கை குறிவைத்து..300 ட்ரோன்களால் தாக்கிய உக்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-strike-300-plus-drones-on-russia-1784974371"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-strike-300-plus-drones-on-russia-1784974371</id>
            <summary type="text">உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பெல்கோரோடில் இருவர் கொல்லப்பட்டனர்.300-க்கும் மேற்பட்ட ட்ரோன் 

சனிக்கிழமையன்று ரஷ்யா மீது உக்ரைன் 300-க்கும் மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பெல்கோரோடில் இருவர் கொல்லப்பட்டனர்.</p><h2>300-க்கும் மேற்பட்ட ட்ரோன் </h2><p>

சனிக்கிழமையன்று ரஷ்யா மீது உக்ரைன் 300-க்கும் மேற்பட்ட ட்ரோன் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6cd8889-61b1-4ab9-967e-208dab884716/26-6a648d514e1e6.webp' />&nbsp;</p><p></p><p>
இந்த தாக்குதலில், 328 ட்ரோன் விமானங்களை வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
</p><p>
மேலும், மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறும்போது, தலைநகர் பகுதியை மட்டும் குறிவைத்து கிட்டத்தட்ட 200 ட்ரோன் விமானங்கள் ஏவப்பட்டதாக தெரிவித்தார். </p><p>

அதே சமயம் எல்லைப் பகுதியான பெல்கோரோடில் நடந்த இரவு நேரத் தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டதாக, தற்காலிக ஆளுநர் அலெக்ஸாண்டர் ஷுவாயேவ் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T10:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: கணவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-dies-in-canada-livin-partner-arrested-1784973836"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-dies-in-canada-livin-partner-arrested-1784973836</id>
            <summary type="text">கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவர் கொல்லப்பட்ட நிலையில், அவரது கணவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு வந்த அழைப்பு

இம்மாதம், அதாவது, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவர் கொல்லப்பட்ட நிலையில், அவரது கணவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
பொலிசாருக்கு வந்த அழைப்பு
</h3><p>
இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 9ஆம் திகதி மாலை 6.44 மணியளவில், கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனிலுள்ள சில்வர் பெர்ரி என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடொன்று தொடர்பில் பொலிசாருக்கு அழைப்பொன்று வந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb20635-226d-45e3-abde-ea7371c846b7/26-6a648a0dad087.webp' /></p><p>
இளம்பெண்ணொருவர் அசைவின்றிக் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு விரைந்த பொலிசார், படுகாயமடைந்த நிலையில் சுயநினைவிழந்து கிடந்த தமன்பிரீத் கௌர் (23) என்னும் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.&nbsp;</p><p>

ஆனால், சிகிச்சை பலனின்றி கௌர் 12ஆம் திகதி உயிரிழந்துவிட்டார். கௌர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், கௌரின் கணவரான ரித்திஷ் குமார் (22) என்பவரை, புதன்கிழமையன்று, அதாவது, ஜூலை மாதம் 22ஆம் திகதி, பொலிசார் கைது செய்துள்ளனர்.
</p><p>
கௌர் கழுத்து நெறிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில், ரித்திஷ் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T10:04:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் பெண்ணொருவருக்கு ஆதரவாக ஜேர்மன் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/court-says-afghan-resettlement-cant-be-revoke-1784973406"></link>
            <id>https://news.lankasri.com/article/court-says-afghan-resettlement-cant-be-revoke-1784973406</id>
            <summary type="text">ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகளுக்கு உதவியாக பணியாற்றிவந்தவர்கள் முதலான ஆப்கன் நாட்டவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகளுக்கு உதவியாக பணியாற்றிவந்தவர்கள் முதலான ஆப்கன் நாட்டவர்களை ஜேர்மனிக்கு அழைத்துவருவதாக ஜேர்மன் அரசு வாக்களித்திருந்தது.
</p><p>
அவர்களில் ஆப்கன் நாட்டவரான பெண்ணொருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அடங்குவர்.
</p><h3>
ஜேர்மன் அளித்த ஏமாற்றம்</h3><p>

2021ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகளுக்கு உதவியாக பணியாற்றிவந்தவர்கள் முதலான ஆப்கன் நாட்டவர்கள் சுமார் 2,000 பேரை ஜேர்மனிக்கு அழைத்துவருவதாக ஜேர்மன் அரசு வாக்களித்திருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c99fdb17-1488-4808-a2cb-8da91eb2ec7d/26-6a64885f8a49c.webp' /></p><p>
அதை நம்பி ஏராளமானோர் பாகிஸ்தானுக்கு தப்பியோடினர். ஜேர்மன் விசா கிடைக்கும் என இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் காத்திருக்க, ஜேர்மனியில் புலம்பெயர்தல் அரசியலாகிவிட்ட நிலையில், அந்த ஆப்கன் நாட்டவர்களை ஜேர்மனிக்கு அழைத்துக்கொள்ள ஜேர்மன் அரசு தயக்கம் காட்டிவந்தது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், ஜேர்மன் உள்துறை அமைச்சகம், ஜேர்மனிக்கு வருவதற்காக பாகிஸ்தானில் காத்திருக்கும் 640 ஆப்கன் நாட்டவர்கள் இனி ஜேர்மனிக்கு வர முடியாது என்று கூறிவிட, அந்த அகதிகள் கடும் ஏமாற்றம் அடைந்தார்கள்.</p><h3>

புலம்பெயர் பெண்ணொருவருக்கு ஆதரவாக தீர்ப்பு
</h3><p>
தான் ஏமாற்றப்பட்டதால், ஜேர்மன் ஃபெடரல் அரசியல் சாசன நீதிமன்றத்தில் அந்தப் பெண் வழக்குத் தொடர்ந்தார்.
</p><p>
இந்நிலையில், அவருக்கு ஆதரவாக அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜேர்மனிக்கு அழைத்து வருவதாக வாக்களித்த அந்த ஆப்கன் நாட்டவர்கள் அடங்கிய குழுவுக்கு, மொத்தமாக ஜேர்மனிக்கு வர சட்டப்படி அனுமதி மறுக்கமுடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், அந்தப் பெண் மற்றும் அவரது பிள்ளைகள் வழக்கை தனியாக பரிசீலிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T09:57:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்ப்புக்கு பணிந்த அரசு - ராஜினாமாவை அறிவித்த தர்மேந்திர பிரதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dharmendra-pradhans-resigns-amid-cjp-protests-1784972260"></link>
            <id>https://news.lankasri.com/article/dharmendra-pradhans-resigns-amid-cjp-protests-1784972260</id>
            <summary type="text">மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

டெல்லி போராட்டம் 

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><h3> 

டெல்லி போராட்டம் </h3><p>

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(CJP) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac1c1f4-8e31-465f-be96-ebb4555d3d2d/26-6a6483e658ede.webp' /></p><p> 

போராட்ட குழுவினர் மீது தடியடி நடத்தியதால், போராட்டம் நாடு முழுவதும் பரவி தீவிரமடைந்துள்ளது. 

நேற்று அரசுடன் CJP பிரதிநிதிகள் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். </p><p>தர்மந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு, நாளை மதியம் வரை அரசு அவகாசம் கோரியது.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக தர்மேந்திர பிரதான் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><h3> 

ராஜினாமாவை அறிவித்த தர்மேந்திர பிரதான்</h3><p> 

இது குறித்து அவர் எழுதியுள்ள கடித்தில், “என் இளம் நண்பர்களே, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நான் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சீர்திருத்தத்திற்காக என்னை அர்ப்பணித்துள்ளேன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdba6364-c87d-4bf8-94a0-5467ef22bc27/26-6a6483e5aaddf.webp' /></p><p> 

நாட்டின் இளைஞர்களின் அபிலாஷைகள், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளை நான் ஆழ்ந்து மதிக்கிறேன்.

முதல் நாளிலிருந்தே, நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன், இந்தச் சூழ்நிலையிலிருந்து ஒருபோதும் விலகவில்லை.</p><p> எந்தவொரு திறமையான மாணவரின் ஆற்றலும் 'தேர்வு மாஃபியாவால்' பாழாக்கப்படக் கூடாது என்றும், எந்தவொரு மாணவரும் அநீதிக்கு ஆளாகக் கூடாது என்றும் நான் உறுதியாக இருந்தேன். </p><p>

 இருப்பினும், இந்தக் காலகட்டத்திலும்கூட, பொறுப்புள்ள பதவிகளில் இருந்த தனிநபர்கள் தடைகளை உருவாக்கவும் மாணவர்களைத் தவறாக வழிநடத்தவும் முயன்றனர், இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.
</p><p>
நமது ஜனநாயகத்தின் வலிமையின் மீது நான் எப்போதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன், மேலும் இளைஞர்களின் அபிலாஷைகள், கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நான் ஆழ்ந்து மதிக்கிறேன். அவர்கள் வெறும் இந்தியாவின் எதிர்காலம் மட்டுமல்ல, அவர்கள் ஒரு புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவின் வழிகாட்டிகள், உருவாக்குபவர்கள் மற்றும் சிற்பிகள்.
</p><p>
கடந்த 10 நாட்களில் நடந்த நிகழ்வுகளால் நான் வேதனைப்படுகிறேன். இது எனக்கு தனிப்பட்ட கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. இந்தியாவின் இளைஞர் சக்தியே இந்த தேசத்தின் உண்மையான பலம். நாட்டின் இளைஞர்கள் குழப்ப வலையில் சிக்கிக்கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன் என்பதே எனது உறுதி.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/VSArqS98OJ">pic.twitter.com/VSArqS98OJ</a></p>&mdash; Dharmendra Pradhan (@dpradhanbjp) <a href="https://x.com/dpradhanbjp/status/2080938216505667663?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
ஜந்தர் மந்தரிலும் நாடு முழுவதிலும் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தேசவிரோத சக்திகள் அதைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது, தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது, எந்தவொரு இந்திய மாணவரின் எதிர்காலமும் சட்டச் சிக்கல்களில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்வது, மற்றும் நமது பிள்ளைகள் தங்கள் நேரத்தைப் படிப்பில் செலவிட்டு, தங்கள் தொழில் வாழ்க்கையை உருவாக்குவதில் கவனம் செலுத்த அனுமதிப்பது ஆகிய நோக்கங்களுடன் மாண்புமிகு பிரதமரிடம் எனது ராஜினாமாவைச் சமர்ப்பித்துள்ளேன்" என தெரிவித்துள்ளார். </p><p>

இதனையடுத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வருபவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T09:37:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு எதிராக சதம்: தெறிக்கவிட்ட பாகிஸ்தான் வீராங்கனை..274 ஓட்டங்கள் இலக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sidra-amin-7th-odi-century-vs-sri-lanka-1784971329"></link>
            <id>https://news.lankasri.com/article/sidra-amin-7th-odi-century-vs-sri-lanka-1784971329</id>
            <summary type="text">இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் சிட்ரா அமின் சதம் விளாசினார்.&amp;nbsp;ஆயிஷா,&amp;nbsp;முனீபா 

பாகிஸ்தான் மற்றும் இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் சிட்ரா அமின் சதம் விளாசினார்.&nbsp;</p><h2>ஆயிஷா,&nbsp;முனீபா </h2><p>

பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹம்பன்டோடாவில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fc06dd6-4852-4fbc-8c6b-00c2bd980e7b/26-6a64810ae5920.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனைகள் சதப் ஷாமஸ் 12 ஓட்டங்களிலும், குல் பெரோஸா 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். </p><p>

அடுத்து கைகோர்த்த சிட்ரா அமின், ஆயிஷா ஜாபர் கூட்டணி இலங்கை பந்துவீச்சை சோதித்தது.

 அதிரடி காட்டிய ஆயிஷாவை 49 (45) ஓட்டங்களில் கவிஷா வெளியேற்றினார். </p><h2>சிட்ரா அமின் சதம் </h2><p>அடுத்து வந்த முனீபா அலி 45 ஓட்டங்கள் எடுக்க, அணித்தலைவர் ஃபாத்திமா சனா (Fatima Sana) 18 பந்துகளில் 25 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
மறுமுனையில் நிதானமாக ஓட்டங்கள் சேர்த்த சிட்ரா அமின், தனது 7வது ஒருநாள் சதத்தினை பதிவு செய்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ஓட்டங்கள் குவித்தது.</p><p> சிட்ரா அமின் ஆட்டமிழக்காமல் 100 (120) ஓட்டங்கள் எடுத்தார்.

சமரி அதப்பத்து, கவிஷா தில்ஹரி, இனோகா மற்றும் சேத்தனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc3656e9-d439-4b16-a4ff-94856e4e084d/26-6a64810bc76be.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T09:25:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான வரிகள் உறுதி... ஐரோப்பிய ஒன்றியத்தை அச்சுறுத்தும் டொனால்ட் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-eu-1784969737"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-eu-1784969737</id>
            <summary type="text">அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான அபராதங்களை விதித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது கடுமையான வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான அபராதங்களை விதித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது கடுமையான வரிகளை விதிக்க இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.</p><h2>சட்டங்களை மீறியதாக</h2><p>
</p><p>தனது ட்ரூத் சோஷியல் பதிவில் குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி, ஆப்பிள், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், அமேசான் மற்றும் கூகுள் உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்களை ஐரோப்பிய ஒன்றியம் நேரடியாகக் குறிவைப்பதாக குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/781ebf3c-8a09-48b7-a78e-65ba4358fccc/26-6a647cc5eaea3.webp' /></p><p>
</p><p>கூகுளின் முதன்மையான (app store) சேவைகள் இணையவழிப் போட்டிச் சட்டங்களை மீறியதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பிய ஒன்றியம் அதற்கு 890 மில்லியன் யூரோ (1 பில்லியன் டொலர்) அபராதம் விதித்தது. </p><p>கடந்த ஆண்டு ஆப்பிள் மற்றும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் உரிமையாளரான மெட்டா ஆகியவற்றுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க நிறுவனங்களையும், அதன் விளைவாக அமெரிக்க வரி செலுத்துவோரையும் கொள்ளையடிக்கும் நடைமுறை குறித்து அமெரிக்கா உடனடியாக விசாரணை தொடங்கும் என்று ட்ரம்ப் வெள்ளிக்கிழமை தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்திருந்தார்.</p><p> அத்துடன், இது போன்ற நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a836622-7b6d-4cc3-8d6c-3a570d496941/26-6a647cc754a69.webp' /></p><h2>ஐரோப்பிய ஒன்றியம்</h2><p> </p><p>ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது ட்ரம்ப் நிர்வாகம் தனித்தனியாக விரிவான வரிகளை விதித்த மறுநாளே இப்படியான மிரட்டல் வெளியாகியுள்ளது. </p><p>புதன்கிழமையன்று கூகுள் நிறுவனத்தின் மீதான அபராதத்தை அறிவித்தபோது, ​​ஷாப்பிங், ஹொட்டல்கள், போக்குவரத்து மற்றும் விளையாட்டு முடிவுகள் உள்ளிட்ட தனது சொந்தச் சேவைகளுக்கு அந்தத் தொழில்நுட்ப நிறுவனம் முன்னுரிமை அளித்திருந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a607f19b-7c16-4444-acfc-854e89453d7e/26-6a647cc6a74b4.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், ட்ரம்பின் தலையீட்டை கூகிள் வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. பொதுவாக
வர்த்தகக் கொள்கை சாராத முடிவுகளுக்காகப் பிற நாடுகளுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் ஒரு வழியாக, ட்ரம்ப் பெரும்பாலும் இறக்குமதி வரிகளையும், அல்லது வெறுமனே அவற்றை விதிப்பதாக மிரட்டுவதையும், ஒரு வாய்ப்பாகவே பயன்படுத்தி வந்துள்ளார். </p><p>எல்லைப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளைச் செயல்படுத்த மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒப்புக்கொள்ளும் வரை, அவற்றிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதிக்கப்போவதாக கடந்த ஆண்டு அவர் அச்சுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T08:53:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/savings-account-33000-britons-1784963481"></link>
            <id>https://news.lankasri.com/article/savings-account-33000-britons-1784963481</id>
            <summary type="text">வெளியாகியுள்ள புதிய தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு 33,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் சேமிப்புக் கணக்குகளில் 1 மில்லியன் பவுண்டுகள் அல்லது அதற்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளியாகியுள்ள புதிய தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு 33,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் சேமிப்புக் கணக்குகளில் 1 மில்லியன் பவுண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான தொகையை வைத்திருந்ததாக தெரிய வந்துள்ளது.</p><h2>வணிகங்களை வலுப்படுத்தும்</h2><p>
</p><p>2025-ஆம் ஆண்டில், 33,700 பேர்கள் தங்கள் வங்கி சேமிப்பு கணக்குகள் அல்லது 'பில்டிங் சொசைட்டி' (building society) கணக்குகளில் குறைந்தபட்சம் 1 மில்லியன் பவுண்டுகள் ரொக்கத்தை வைத்திருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0d72253-977c-4cd6-bff3-2ac6fce69a16/26-6a6462c6da58b.webp' /></p><p> </p><p>இது ஆண்டுக்குக் குறைந்தது 50,000 பவுண்டுகள் வட்டி வருமானம் ஈட்டியதாகத் தெரிவித்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. </p><p>ஒருவரிடம் 1 மில்லியன் பவுண்டு ரொக்கம் இருந்து, அதன் மூலம் 5 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வட்டி விகிதத்தில் வருமானம் ஈட்டினால், அவர் செலுத்தக்கூடிய தொகைக்கு ஏறக்குறைய சமமானதே அந்தத் தொகையாகும். </p><p>ஒருவரிடம் பெருமளவிலான ரொக்கப் பணம் இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்; வாழ்நாள் முழுவதும் சேமித்த பணத்தை வைத்திருக்கும் முதியவர்கள் முதல், வாரிசுரிமை மூலம் பணம் பெற்றவர்கள் அல்லது தங்கள் வீட்டைச் சிறியதாக மாற்றிக்கொண்டதன் மூலமோ அல்லது தொழிலை விற்றதன் மூலமோ பணம் கிடைத்தவர்கள் வரை இதில் அடங்குவர்.</p><p></p><p> </p><p>ஆனால்

சேமிப்பாளர்கள் பணமாக அதிகத் தொகையை வைத்திருக்காமல் பங்குகளில் (stocks and shares) அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று லேபர் கட்சி விரும்புகிறது; ஏனெனில், இது வணிகங்களை வலுப்படுத்துவதுடன் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். </p><p>மேலும், பங்குகள் (equities) அல்லது 'ஸ்டாக்ஸ்' (stocks) ஆகியவற்றில் பணத்தை முதலீடு செய்வதன் ஒரு சாத்தியமான நன்மை என்னவென்றால், நீண்ட காலத்தில் இது ரொக்கச் சேமிப்புக்கான வட்டி விகிதத்தை விட அதிக வருவாயை அளிக்கக்கூடும். </p><p>இருப்பினும், முதலீடுகளின் மீதான வருவாய் ஏற்ற இறக்கங்களுக்கு உட்படக்கூடியது; சாதாரண சேமிப்புக் கணக்கைப் போலன்றி, இதில் ஒருவர் முதலீடு செய்த தொகையில் ஒரு பகுதியை இழக்கவும் நேரிடலாம். </p><p>போமோர் (Bowmore) நிறுவனத்தின் தகவலின்படி, மே 29, 2026 வரையிலான 10 ஆண்டுகளில் பங்கு முதலீடுகளின் சராசரி ஆண்டு வருவாய் 12.9 சதவீதமாக இருந்துள்ளது. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பேங்க் ஆஃப் இங்கிலாந்து தனது அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியதாலும், தற்போது முன்னணி கணக்குகள் 4.5 சதவீதத்திற்கும் அதிகமாக வட்டி வழங்குவதாலும், வட்டி விகிதங்கள் பெருமளவில் மேம்பட்டுள்ளன. </p><p>ஏப்ரல் 2027 முதல், வருடாந்திர Cash ISA வரம்பு 20,000 பவுண்டுகளிலிருந்து 12,000 பவுண்டுகளாகக் குறைக்கப்படும். 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான Cash ISA வரம்பு 20,000 பவுண்டுகளாகவே தொடரும்.</p><h2>1,000 பவுண்டுகள் வரை</h2><p> </p><p>பொதுவாக ரொக்கக் கணக்குகள் மற்றும் பங்குகளில் (equities) முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்திற்கான வரி விதிப்பு முறை மாறுபட்டதாகும்.
பெரும்பாலான மக்கள் தங்கள் சேமிப்பின் மீதான வட்டிக்கு வரி செலுத்தாமலேயே வருமானம் ஈட்ட முடியும். </p><p>அடிப்படை வரி விகிதத்திற்கு உட்பட்டவர்கள், சாதாரண சேமிப்புக் கணக்கு ஒன்றின் மூலம் 1,000 பவுண்டுகள் வரையிலான வட்டியை எவ்வித வரியும் செலுத்தாமல் பெறலாம். </p><p>ஆண்டுக்கு 50,271 பவுண்டுகள் முதல் 125,140 பவுண்டுகள் வரையிலான வரிக்குட்பட்ட வருமானம் கொண்ட, அதிக வரி விகிதத்திற்கு உட்பட்ட வரி செலுத்துவோர், ரொக்கக் கணக்குகள் (cash accounts) மூலம் பெறும் 500 பவுண்டுகள் வரையிலான வட்டிக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d849683-88f8-4ef3-b0fa-54a62a63fb46/26-6a6462c6254e7.webp' /></p><p> </p><p>125,140 பவுண்டுகளுக்கு மேல் வரிக்குட்பட்ட வருமானம் கொண்ட 'கூடுதல் வரி விகித' (additional rate) வரி செலுத்துவோர், ஈட்டப்படும் எந்தவொரு வருமானத்தின் மீதும் வரி செலுத்த வேண்டும். </p><p>இருப்பினும், இந்தக் குழுவினர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தலா 20,000 பவுண்டுகள் என்ற ISA ஒதுக்கீட்டைப் பெறுகின்றனர்; மேலும், அதன் மூலம் ஈட்டப்படும் வட்டிக்கு மீண்டும் வட்டி செலுத்த வேண்டியதில்லை. </p><p>பங்குகள் மற்றும் பங்கு முதலீடுகள் மீதான ஆதாயங்களுக்கான வரி விகிதங்கள், அடிப்படை வரி விகிதத்தில் வரி செலுத்துவோருக்கு 18 சதவீதமாகவும், உயர் வரி விகிதத்தில் வரி செலுத்துவோருக்கு 24 சதவீதமாகவும் உள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T08:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய நபர் மர்ம மரணம்: உடற்கூறு ஆய்வில் தெரியவந்த விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/autopsy-reveals-no-attack-on-daniel-siad-1784966657"></link>
            <id>https://news.lankasri.com/article/autopsy-reveals-no-attack-on-daniel-siad-1784966657</id>
            <summary type="text">ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய ஒருவர், சமீபத்தில் பிரான்சில் சடலமாகக் கண்டெடுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய ஒருவர், சமீபத்தில் பிரான்சில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
</p><h3>
எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய நபர்</h3><p>

ஏராளம் இளம்பெண்களை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்காக இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர் டேனியல் சியாட் (69).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4899dd5-d5c4-4e97-9fd2-c560a67a90bd/26-6a646e0295384.webp' /></p><p>
பிரான்சிலுள்ள ஆட்கடத்தல் சிறப்புப் பிரிவு அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுவந்த டேனியல் மீது, வன்புணர்வு முதலான பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
</p><p>
அத்துடன், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில் டேனியல் பெயர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><p> 

இந்நிலையில், திங்கட்கிழமை மாலை, பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு அருகிலுள்ள Colombes என்னுமிடத்தில் அமைந்துள்ள தனது வீட்டில், டேனியல், உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
</p><h3>
உடற்கூறு ஆய்வு முடிவுகள்
</h3><p>
டேனியலின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவரது மரணம், சமீபத்தில் அவர் தாக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என உடற்கூறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
அத்துடன், அவருக்கு ஏற்கனவே உடல் நல பாதிப்புகள் இருந்துள்ளன என்றும், அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் உடற்கூறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதே நேரத்தில் டேனியல் மரணம் தொடர்பான நச்சியல் மற்றும் நோயியல் பரிசோதனைகளின் முடிவுகள் இனிதான் வெளியாகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T08:12:40+00:00</updated>
        </entry>
    </feed>
