<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-18T22:32:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணின் குடும்பத்திற்கு 40 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க Uber நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uber-ordered-to-pay-40-million-after-highway-incid-1789764066"></link>
            <id>https://news.lankasri.com/article/uber-ordered-to-pay-40-million-after-highway-incid-1789764066</id>
            <summary type="text">Uber Ordered to Pay $40 Million after Emily Parker Died in HIghway: சாலை விபத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு 40 மில்லியன் டொலர் இழப்பீடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uber Ordered to Pay $40 Million after Emily Parker Died in HIghway: சாலை விபத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு 40 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உபர்(Uber) நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2> நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பெண்கள்</h2><p>கலிபோர்னியாவில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் திகதி 23 வயது இளம் பெண்ணான எமிலி நார்மின்-பார்கர்(Emily Normandin-Parker) மற்றும் அவரது 2 தோழிகள் வீடு திரும்புவதற்காக உபர் செயலியை பயன்படுத்தி டாக்ஸியை புக் செய்துள்ளனர்.</p><p>இந்த பயணத்தின் போது எமிலியின் தோழி உடல்நலக்குறைவு காரணமாக காரில் வாந்தி எடுத்துள்ளார்.</p><p> இதையடுத்து அந்த டாக்ஸியின் ஓட்டுநரான வூ ட்ரான்(Vu Tran) என்பவர் காரை நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு, போதையில்(intoxicated) இருந்த அந்த பெண்களை வலுக்கட்டாயமாக நடுவழியில் இறக்கி விட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e30b2b0a-f6c2-4fd0-9d4e-bf480f4e664a/26-6aada1e3826d8.webp' /></p><p> அவர்கள் இறக்கிவிடப்பட்ட சிறிது நேரத்தில், அவர்களுக்கு பின்னால் வந்த வாகனம் மோதி எமிலி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p></p><h2> 40 மில்லியன் டொலர் இழப்பீடு</h2><p>
இந்த சம்பவம் தொடர்பாக எமிலியின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், எமிலி உபர் நிறுவனம் கூறிய அனைத்து வழிகாட்டுதல்களையும் முறையாக பின்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் அவளை உபர் நிறுவனம் பாதுகாப்பாக வீடு சேர்ப்பார்கள் என்று நினைத்தோம், ஆனால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் உடனடியாக உபர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு காரை சுத்தம் செய்வதற்கான கட்டணத்தை கோரியதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> இந்நிலையில் நடுவழியில் இறக்கிவிடப்பட்டு உயிரிழந்த எமிலியின் குடும்பத்தினருக்கு உபர் நிறுவனம் 40 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மத்தியஸ்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T21:46:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய கடற்கரையில் நீச்சல் வீரருக்கு நடந்த கொடூரம்: அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shark-attack-at-perth-beach-1-swimmer-dead-1789765360"></link>
            <id>https://news.lankasri.com/article/shark-attack-at-perth-beach-1-swimmer-dead-1789765360</id>
            <summary type="text">Shark Attack at Perth Beach 1 Swimmer Dead: அவுஸ்திரேலிய கடற்கரையில் நடந்த சுறா தாக்குதலில் நீச்சல் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலிய கடற்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shark Attack at Perth Beach 1 Swimmer Dead: அவுஸ்திரேலிய கடற்கரையில் நடந்த சுறா தாக்குதலில் நீச்சல் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><h2> அவுஸ்திரேலிய கடற்கரையில் சுறா தாக்குதல்</h2><p>
மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள சோரென்டோ கடற்கரையில்(Sorrento Beach) வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு சுறா மீன் தாக்குதல் நடந்து இருப்பதாக அவசர கால உதவி படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதையடுத்து ரோந்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையானது முன்னெடுக்கப்பட்டது.</p><p> இந்த சுறா தாக்குதலில் நீச்சல் வீரர் ஒருவரின் உயிரிழந்து இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c253ef0-fc2b-47b9-8963-2bd7c2cfcd25/26-6aada6f1a32b0.webp' /></p><p> கடற்கரைக்கு வெறும் 50 மீட்டர் தொலைவில் நடந்த இந்த சுறா தாக்குதல் சம்பவத்தை கரையில் இருந்த பலர் நேரில் பார்த்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.</p><p> சுறா தாக்குதலை தொடர்ந்து சோரென்டோ கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மூடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T21:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[1952-ல் அணிவகுத்த பறக்கும் தட்டுகள்: வீடியோ ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-release-1952-historic-ufo-archive-1789760679"></link>
            <id>https://news.lankasri.com/article/us-release-1952-historic-ufo-archive-1789760679</id>
            <summary type="text">US Release 1952 Historic UFO Archive: பென்டகனின் நிர்வாக உத்தரவின் கீழ் 1952ம் ஆம் ஆண்டை சேர்ந்த UFO ஆவணங்களின் ஆறாவது தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>US Release 1952 Historic UFO Archive: பென்டகனின் நிர்வாக உத்தரவின் கீழ் 1952ம் ஆம் ஆண்டை சேர்ந்த UFO ஆவணங்களின் ஆறாவது தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p><h2> டிரம்பின் அதிரடி உத்தரவு</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அரசிடம் உள்ள UFO தொடர்பான கோப்புகளை&nbsp; வெளியிடுமாறு நிர்வாக உத்தரவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.</p><p> இந்த உத்தரவின் கீழ் அமெரிக்க ராணுவத்தின் கட்டளை மையமான பென்டகன், UFO தொடர்பான வரலாற்று ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு வருகிறது.</p><p>இதுவரை 6 தொகுப்புகளாக நூற்றுக்கும் மேற்பட்ட கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.</p><p> இதன் ஒரு பகுதியாக 6 தொகுப்பில் 1952ம் ஆண்டை சேர்ந்த பழமையான காட்சிகள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04203ba8-6d55-47ba-a9b0-ffec2f6060e4/26-6aad94a8e4059.webp' /></p><p></p><h2> அணிவகுத்த பறக்கும் தட்டுகள்</h2><p>
1952 ம் ஆண்டை சேர்ந்த மேல் குறிப்பிட்ட காணொளி காட்சியை அமெரிக்க கடற்படை தலைமை வாரண்ட் அதிகாரி டெல்பெர்ட் சி. நியூஹவுஸ்(Delbert C. Newhouse) என்பவர் உட்டா(Utah) மாகாணத்தில் உள்ள ட்ரெமாண்டன்(Tremonton) அருகே பதிவு செய்துள்ளார்.</p><p>அதில் &nbsp;ஒளிரும் பறக்கும் தட்டுகள்(UFO) அணிவகுத்து செல்வது பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்ட சிறிது காலத்திற்குள் அந்த காட்சிகளானது 'ப்ராஜெக்ட் ப்ளூ புக்’(Project Blue Book) என்ற திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு விமானப்படையின் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ஆய்வு திட்ட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p> இந்த திட்டமானது 1952 முதல் 1969 வயது இயங்கி வந்த நிலையில், எடுக்கப்பட்ட வீடியோவின் தரம் மிகவும் மோசமானதாக இருந்ததாலும், அவற்றில் நிலையான அடையாள புள்ளிகள் இல்லாத காரணத்தினாலும் சம்பந்தப்பட்ட பொருளின் தன்மையை ஆய்வாளர்களால் உறுதி செய்ய. முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-09-18T19:44:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவை குறிவைக்கும் ரஷ்யா: ஜனாதிபதி மக்ரோன் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/macron-sounds-alarm-over-russian-attacks-on-eu-1789758649"></link>
            <id>https://news.lankasri.com/article/macron-sounds-alarm-over-russian-attacks-on-eu-1789758649</id>
            <summary type="text">பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா மீதான ரஷ்யாவின் கலப்பின தாக்குதல் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மக்ரோன் எச்சரிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா மீதான ரஷ்யாவின் கலப்பின தாக்குதல் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>மக்ரோன் எச்சரிக்கை</h2><p>
ரஷ்யாவின் விரோத போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் கலப்பினப் போர் ஆபத்து அதிகரித்து இருப்பதாகவும் பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p> எலிசி அரண்மனையில் செய்தியாளர்களை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ரஷ்யாவின் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தேவையான அனைத்து பாதுகாப்பு வியூகங்களை ஏற்படுத்தவும், விரிவான உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கான உத்தரவையும் வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21e56dee-44c7-460a-88fa-db3f5d0ffe7a/26-6aad8cbb295c7.webp' /></p><p> சமீபத்திய காலத்தில் ரஷ்யா முன்னெடுத்து வரும் அத்துமீறிய தாக்குதல்களை சுட்டிக்காட்டிய மக்ரோன் , இதற்கான பதிலடிகள் நிச்சயமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.</p><p> &nbsp;எங்களை அச்சுறுத்துவதும், உக்ரைனுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்பதை முடக்குவதுமே ரஷ்யாவின் நோக்கம் என்றும், ஆனால் அதற்கு நேர்மாறான பலன்கள் மட்டுமே ரஷ்யாவிற்கு கிடைக்கும் என்றும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> இன்று நம்முடைய பாதுகாப்பும், நாளை நம்முடைய பாதுகாப்பும் உக்ரைனிடம் தான் அடங்கியுள்ளது நாம் நன்கு அறிவோம் என்பதால் எதற்கும் அஞ்ச மாட்டோம் என்று மக்ரோன் தெரிவித்துள்ளார்.</p><p>உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதை தடுப்பதற்காக ரஷ்யா இத்தகைய அத்துமீறிய தாக்குதலில் ஈடுபடுவதாக பல்வேறு ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தற்போது பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் இந்த கருத்தும் அதனுடன் ஒத்துப் போகிறது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T19:11:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி விமான தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: சேதமடைந்த இத்தாலிய போர் விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/italian-fighter-jet-get-attacked-in-saudi-1789750272"></link>
            <id>https://news.lankasri.com/article/italian-fighter-jet-get-attacked-in-saudi-1789750272</id>
            <summary type="text"> Italian Fighter Jet get attacked in Saudi: சவுதி விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இத்தாலிய போர் விமானம் சேதமடைந்து இருப்பது உறுதி செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p> Italian Fighter Jet get attacked in Saudi: சவுதி விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இத்தாலிய போர் விமானம் சேதமடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2> இத்தாலிய போர் விமானம் சேதம்</h2><p>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைக்கும் சவுதி அரேபியாவின் ராணுவத்திற்கும் இடையே மோதலானது தீவிரமடைந்து வருகிறது.</p><p> இந்த சூழ்நிலையில் வியாழக்கிழமை மேற்கு சவுதி அரேபியாவின் தைஃப் பகுதியில் அமைந்துள்ள கிங் பஹ்த் விமான தளத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p> இந்த தாக்குதலில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இத்தாலிய ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.</p><p></p><p> இந்த தகவலை வெள்ளிக்கிழமை இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் குவிடோ குரோசெட்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27bf1d00-880a-4463-8fa7-010bbe0631ac/26-6aad6c022e425.webp' /></p><p> தாக்குதலுக்கு உள்ளான போர் விமானம், ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிரான கூட்டுப்படைக்காக இத்தாலியின் தரப்பாக வழங்கப்பட்ட போர் விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதில் இத்தாலிய வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், வேறு எந்தவொரு உபகரணங்களும் சேதம் அடைய வில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> மேலும் பதற்றமான இந்த பகுதியில் இத்தாலிய வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிலைமையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T18:55:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் மசூதிக்கு அருகே கார் குண்டுவெடிப்பு: 4 வயது குழந்தை உட்பட 21 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/car-bombing-at-pakistan-s-kohat-mosque-21-dead-1789755728"></link>
            <id>https://news.lankasri.com/article/car-bombing-at-pakistan-s-kohat-mosque-21-dead-1789755728</id>
            <summary type="text">Car Bombing at Pakistan’s Kohat Mosque 21 dead: பாகிஸ்தானில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கார் குண்டுவெடிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Car Bombing at Pakistan’s Kohat Mosque 21 dead: பாகிஸ்தானில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> கார் குண்டுவெடிப்பு</h2><p>வடமேற்கு பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை தொழுகையை குறிவைத்து மசூதி அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 21 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> இதில் 15 காவல்துறை அதிகாரிகளும், 4 வயது குழந்தையும் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹத் நகரில் இந்த கோர தாக்குதலானது அரங்கேறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb0e0761-6341-44c6-b6f5-43885c164f3c/26-6aad815275d39.webp' /></p><p></p><p> கார் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் சேர்த்து, அதற்கு அருகில் அமைந்துள்ள காவல்துறை முகாம் மீது ஆயுதமேந்திய கும்பல் ஒன்று திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியது.</p><p> இந்த தாக்குதல் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், சம்பவ இடம் முழுவதும் இடுபாடுகளால் குழம்பி இருப்பதாகவும்,&nbsp; காயமடைந்தவர்களுக்கு பொதுமக்கள் உதவுவதும் பதிவாகியுள்ளது.</p><p>இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில் சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.<br></p>]]></content>
            <updated>2026-09-18T18:22:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 946 மில்லியன் டொலர் ஒப்பந்தம்: விண்வெளிக்கு பறக்கும் 3 குழுக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spacex-nasa-new-946-million-contract-1789754457"></link>
            <id>https://news.lankasri.com/article/spacex-nasa-new-946-million-contract-1789754457</id>
            <summary type="text">SpaceX-Nasa New $946 Million Contract: சுமார் 1 பில்லியன் மதிப்பிலான விண்வெளி பயண ஒப்பந்தத்தை நாசாவிடம் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. நாசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>SpaceX-Nasa New $946 Million Contract: சுமார் 1 பில்லியன் மதிப்பிலான விண்வெளி பயண ஒப்பந்தத்தை நாசாவிடம் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.</p><h2> நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம்</h2><p>சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கூடுதலாக 3 விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான ஒப்பந்த திருத்தத்தை நாசா மேற்கொண்டுள்ளது.</p><p> இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் 946 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தை நாசா மேற்கொண்டுள்ளது.</p><p> இந்த ஒப்பந்த திருத்தத்தின் மூலம் நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கூட்டுப்பணி இந்த புத்தாண்டின் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e74f904c-02fc-41be-8315-67d86b0741c8/26-6aad7c5a96590.webp' /></p><p> புதிய ஒப்பந்தத்தின் கீழ் Crew-15, Crew-16 மற்றும் Crew-17 ஆகியவை புதிய பயணங்களை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதன்மூலம் நாசாவின் வணிக விண்வெளி போக்குவரத்து திட்டத்தின் கீழ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் 17வது விண்வெளி பயணம் இதுவாகும்.</p><p> விண்கலத்தை விண்ணில் செலுத்துவது,&nbsp; பூமியின் சுற்று வட்டப்பாதையில் விண்கலத்தை இயக்குவது மற்றும் வீரர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது ஆகியவை ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்ட முக்கிய பணிகள் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/807aa45d-66ae-4715-9619-cc42e0b26f6d/26-6aad7c5b4eb3a.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T18:01:09+00:00</updated>
        </entry>
    </feed>
