<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-01T16:52:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பிரித்தானியக் குடும்பம்: வழக்கில் முக்கிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pistol-found-14-years-after-brit-family-shot-dead-1788260760"></link>
            <id>https://news.lankasri.com/article/pistol-found-14-years-after-brit-family-shot-dead-1788260760</id>
            <summary type="text">Breakthrough in murders mystery as pistol found 14 years after Brit family shot dead: 14 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியக் குடும்பம் ஒன்று சுட்டுக்கொல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Breakthrough in murders mystery as pistol found 14 years after Brit family shot dead: 14 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியக் குடும்பம் ஒன்று சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளதைத் தொடர்ந்து வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.</p><p>[<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86579e78-fb30-4100-a7b9-34f2dbe4cb29/26-6a96b19af2e3a.webp' />]</p><p>பிரான்சில் நடந்த பயங்கர கொலை சம்பவம் ஒன்று தொடர்பில், ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><h3>
துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்
</h3><p>
2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி, பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு பிரித்தானியக் குடும்பம் சென்ற காரை நோக்கி, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.</p><p>

அவர் சுட்டதில், காரிலிருந்த Saad al-Hilli (50), அவரது மனைவி Iqbal (47) மற்றும் தாயார் Suhaila Al-Allaf (74) ஆகியோர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86579e78-fb30-4100-a7b9-34f2dbe4cb29/26-6a96b19af2e3a.webp' /></p><p>தம்பதியரின் ஒரு மகளான Zainab (7) காயத்துடன் உயிர் பிழைக்க, மறு நாள் தடயவியல் நிபுணர்கள் இறந்தவர்களின் உடல்களை அகற்றும்போது, தாய் Iqbalஇன் கால்களுக்கிடையில் அவரது இரண்டாவது குழந்தையான Zeena (4) பயந்து நடுங்கிக்கொண்டு ஒளிந்திருப்பது தெரியவந்தது.&nbsp;</p><p></p><p>
இந்த துப்பாக்கிச்சூட்டில், அவ்வழியே சைக்கிளில் வந்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டவரான Sylvain Mollier (45) என்பவரும் கொல்லப்பட்டிருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e47178fb-b4f3-4dab-8afb-daf1eb03c00f/26-6a96b19baa27d.webp' /></p><h3>வழக்கில் முக்கிய திருப்பம்
</h3><p>
இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள ஏரி ஒன்றின் அடியிலிருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், அது ஒரு சுவிஸ் ராணுவ துப்பாக்கி. அத்துடன், 1935ஆம் ஆண்டு, அதே மொடலில் 940 துப்பாக்கிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e5ba4aa-663d-4640-bdc4-22f155bfc54b/26-6a96b19a4bb4f.webp' /></p><p>மேலும், தாக்குதல்தாரி, ஒரு முறை தன் இலக்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அவர் உயிரிழந்ததை உறுதி செய்யும் வகையில், இரண்டாவது முறை அதே நபரை சுடும் ஒரு கைதேர்ந்த, துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற நபர்.
</p><p>
அத்துடன், இந்த வகை துப்பாக்கிகளில் ஒரு சீரியல் நம்பர் இருக்கும். ஆகவே, அது எங்கு தயாரிக்கப்பட்டது என்பது முதல், அதை யார் பயன்படுத்தினார் என்பது வரை கண்டுபிடிக்கமுடியும்.
</p><p>
எல்லாவற்றிற்கும் மேல், தண்ணீருக்குள் எத்தனை ஆண்டுகள் கிடந்திருந்தாலும், அதிலுள்ள DNAவைக் கண்டுபிடிக்கும் வழிமுறைகள் தற்போது உள்ளதால், முன்பு கிடைத்த ஆதாரங்களை, தற்போது கிடைத்துள்ள ஆதாரத்துடன் இணைத்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கக்கூடும் என்பதே நல்ல செய்தி.
</p><p>
ஆக, அந்த துப்பாக்கி தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள், Saad al-Hilli குடும்பத்தினரைக் கொல்ல குற்றவாளி பயன்படுத்திய துப்பாக்கி இதுதானா என்பதைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T15:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் மாயமான பெற்றோர் - கண்ணீருடன் நீட் தேர்வு எழுதிய மாணவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/student-appear-exam-parent-miss-in-nepal-flood-1788269676"></link>
            <id>https://news.lankasri.com/article/student-appear-exam-parent-miss-in-nepal-flood-1788269676</id>
            <summary type="text">student appears neet exam while parent missing in nepal flood நேபாள வெள்ளத்தில் தனது பெற்றோர் மாயமான நிலையிலும், மஹாராஷ்டிராவை சேர்ந்த மாணவி அழுதேகொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>student appears neet exam while parent missing in nepal flood நேபாள வெள்ளத்தில் தனது பெற்றோர் மாயமான நிலையிலும், மஹாராஷ்டிராவை சேர்ந்த மாணவி அழுதேகொண்டே நீட் தேர்வை எழுதியுள்ளார். </p><h3>

நேபாள வெள்ளத்தில் மாயமான பெற்றோர்
</h3><p>
சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், இந்தியர்கள் உட்பட 3,900 பேர் மாயமாகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02c608d0-4d5e-4640-972a-9ecba04568c8/26-6a96d46e6e8b0.webp' /></p><p>மாயமாகியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். </p><p>

இதில், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 67 பேர் கொண்ட குழு கைலாச யாத்திரை மேற்கொண்டிருந்த நிலையில் அவர்களும் வெள்ளத்தில் மாயமாகியுள்ளனர்.&nbsp;</p><p></p><p>
இதில் வெங்கட்ராம் அன்னம்தேவரா அனகா அன்னம்தேவரா தம்பதியும் மாயமாகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/796edc92-91cc-4fe9-9fff-c2cbe9ebf14e/26-6a96d46d9ee4f.webp' /></p><p>

இவர்களின் மகளான தன்வி பெற்றோர் மாயமான சோகத்திலும், ஆகஸ்ட் 30 ஆம் திகதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை எழுதியுள்ளார். </p><h3> 

கண்ணீருடன் நீட் தேர்வு எழுதிய மாணவி
</h3><p>
தேர்வுக்கு பின்னர் அழுதுகொண்டே இந்த தேர்வை எழுதியாக தன்வி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c69f4820-bb26-4fe7-88f0-aaaedb18237f/26-6a96d46f38423.webp' /></p><p>

இது குறித்து பேசிய அவர், "என் பெற்றோர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாத கவலையிலே தேர்வு எழுத சென்றேன். 

ஆனால் இந்த தேர்வை நான் எழுத வேண்டும் என எனது தந்தை விரும்பினார். என் பெற்றோருக்காக இதை செய்தேன். </p><p>

தேர்வுக்குச் சற்று முன்பு எனது அனுமதி அட்டையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்த போது என் தந்தையின் நினைவுகள் என்னை ஆட்கொண்டது. அந்த புகைப்படத்தை என் தந்தைதான் எடுத்தார். </p><p>

3 மணி நேர தேர்வில் ஒன்றரை மணி நேரம் அழுது கொண்டே இருந்தேன். என் கண்களில் கண்ணீர் பெருகியதால் சில சமயங்களில் கேள்விகளைப் படிப்பது கடினமாக இருந்தது. </p><p>இதில் தேர்வை விட மிகவும் கடினமான விடயம், தேர்வுக்கு முன்பு என் அம்மா எப்போதும் எனக்குத் தயிரும் சீனியும் கொடுப்பார், என் தந்தை என்னை வாழ்த்துவார் இந்த முறை எனக்கு அது கிடைக்கவில்லை.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcrL_ByTnbE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcrL_ByTnbE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcrL_ByTnbE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Tanvi (@tanvimakesvideos)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>

அவர்கள் கட்டாயம் திரும்பி வர வேண்டும். அவர்கள் திரும்பி வந்தே ஆக வேண்டும். அவர்கள் திரும்பி வராமல் இருக்க முடியாது. என் அம்மா எனக்கு தயிர் சீனி ஊட்டிவிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><p> 

கயிலாய யாத்திரைக்கு சென்று தனது பெற்றோர் கடைசியாகக் காணப்பட்ட இடம் குடிவரவு மையம் மற்றும் நட்புப் பாலம் ஆகியவற்றுக்கு அருகிலுள்ள பகுதி என தான்வி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T13:34:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதிரடி அரைசதம் விளாசிய 20 வயது வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lhuan-dre-pretorius-fifty-in-27-balls-vs-zim-1788268410"></link>
            <id>https://news.lankasri.com/article/lhuan-dre-pretorius-fifty-in-27-balls-vs-zim-1788268410</id>
            <summary type="text">Lhuan-dre Pretorius fifty in 27 balls vs zim: லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் அரைசதம் விளாசினார்.

முத்தரப்பு டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Lhuan-dre Pretorius fifty in 27 balls vs zim: லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் அரைசதம் விளாசினார்.
</p><p>
முத்தரப்பு டி20 தொடரின் ஜிம்பாப்வே அணிக்கு போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் அரைசதம் விளாசினார்.&nbsp;</p><h2>பிரிட்டோரியஸ்&nbsp;</h2><p>
Windhoek மைதானத்தில் நடந்து வரும் டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக துடுப்பாடி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b813e71-ff64-453d-ad13-f6b64c7faef1/26-6a96cf7ca207b.webp' />&nbsp;</p><p></p><p>
ஹெர்மன் 28 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 20 வயதான லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.
</p><p>
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 27 பந்துகளில் தனது இரண்டாவது டி20 அரைசதத்தை பதிவு செய்தார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T13:11:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சீக்கியர் மீது இனவெறுப்புத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sikh-man-stabbed-in-toronto-in-hate-motivated-1788266300"></link>
            <id>https://news.lankasri.com/article/sikh-man-stabbed-in-toronto-in-hate-motivated-1788266300</id>
            <summary type="text">Toronto police are investigating a suspected hate motivated stabbing of a Sikh man: ரொரன்றோவில் சீக்கியர் ஒருவர் மீது இனவெறுப்புத் தாக்குதல் நடத்தப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Toronto police are investigating a suspected hate motivated stabbing of a Sikh man: ரொரன்றோவில் சீக்கியர் ஒருவர் மீது இனவெறுப்புத் தாக்குதல் நடத்தப்பட்ட விடயம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><p>



சனிக்கிழமையன்று கனடாவின் ரொரன்றோவில் நடந்து சென்றுகொண்டிருந்த சீக்கியர் ஒருவர் திடீரென தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
</p><h3>
இனவெறுப்புத் தாக்குதல்</h3><p>

நபர் ஒருவர் அந்த சீக்கியரை இன ரீதியில் விமர்சித்ததுடன், சீக்கியர்களுக்கு எதிராக மோசமான வார்த்தைகளாலும் விமர்சித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aff5379-ff86-41f7-af6d-38a606c5a951/26-6a96c73dbeaa8.webp' /></p><p>

அத்துடன், திடீரென அவர் அந்த சீக்கியரை கத்தியாலும் குத்தியுள்ளார். அவரது தொடையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளதாக ரொரன்றோ பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அந்த நபர் தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து செல்லும்போது யாரோ ஒருவர் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அவரைத் தேடிவருகிறார்கள் பொலிசார்.
</p><p>
அத்துடன், அந்த நபரை பொதுமக்கள் யாராவது பார்த்திருந்தால் தங்களுக்கு தெரிவிக்குமாறும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T13:06:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாவது இன்னிங்ஸிலும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: அரையிறுதியில் அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/east-zone-win-by-4-wickets-in-duleep-semi-final-1788266066"></link>
            <id>https://news.lankasri.com/article/east-zone-win-by-4-wickets-in-duleep-semi-final-1788266066</id>
            <summary type="text">East Zone win by 4 wickets in duleep trophy semi final: துலீப் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் கிழக்கு மண்டல அணி வெற்றி பெற்றது.

பெங்களுரூவில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>East Zone win by 4 wickets in duleep trophy semi final: துலீப் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் கிழக்கு மண்டல அணி வெற்றி பெற்றது.</p><p>

பெங்களுரூவில் நடந்த துலீப் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், கிழக்கு மண்டல அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மத்திய மண்டல அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>முதல் அரையிறுதிப் போட்டி</h2><p>
கிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி பெங்களூருவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c78f250e-31c3-4bb7-9f72-4b58399e205a/26-6a96c84f74f6f.webp' />&nbsp;</p><p></p><p>
159 ஓட்டங்கள் வெற்றி இலக்கினை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய கிழக்கு மண்டல அணியில் வைபவ் சூர்யவன்ஷி வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார்.</p><p> 


அவர் 43பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அபிமன்யூ ஈஸ்வரன் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.</p><p> 

பின்னர் விராட் சிங் 12 ஓட்டங்களிலும், குமார் குஷாக்ரா 22 ஓட்டங்களிலும் வெளியேற அனுகுல் ராய் டக்அவுட் ஆனார்.</p><p> 

எனினும், இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 39 (41) ஓட்டங்கள் எடுக்க, கிழக்கு மண்டல அணி 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b7a445e-9f50-4e5e-ba93-cd9a76b0749b/26-6a96c84ebbed9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T12:40:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூசாரி வீட்டு குழாய் நீரில் அடித்த துர்நாற்றம்: தெரியவந்த திடுக் உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-body-found-in-water-tanks-in-salem-house-1788265701"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-body-found-in-water-tanks-in-salem-house-1788265701</id>
            <summary type="text">Woman’s dismembered body found in overhead tank: தண்ணீர்த்தொட்டி ஒன்றில் பெண்ணொருவரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman’s dismembered body found in overhead tank: தண்ணீர்த்தொட்டி ஒன்றில் பெண்ணொருவரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p>

தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தில் வாழ்ந்துவரும் கோயில் பூசாரியான ரமேஷ், வெளியூர் சென்றுவிட்டு திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளார்.
</p><p>
குழாய்த் தண்ணீரில் ஏதோ துர்நாற்றம் வீசுவதைக் கவனித்த ரமேஷ், வீட்டின் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர்த்தொட்டியை சோதனையிட்டுள்ளார்.</p><h3>

தெரியவந்த திடுக் உண்மை</h3><p>

அப்போது தண்ணீர்த்தொட்டிக்குள் ஒரு பிளாஸ்டிக் கவரில் மனித கைகால்கள் வைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளார் அவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff7a5f2-3a0a-41d5-a515-db8bcdd67936/26-6a96c4e6ba514.webp' /></p><p>
அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் அந்த பிளாஸ்டிக் கவரை கைப்பற்றியதுடன், அருகிலுள்ள வீடுகளின் மாடிகளிலும் சோதனையிட்டுள்ளனர்.
</p><p>
அப்போது, மற்றொரு வீட்டின் மாடியிலும் ஒரு பிளாஸ்டிக் கவரில் உடல் பாகங்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
முதல் கட்ட ஆய்வில், அவை 30 முதல் 40 வயது வரையுள்ள ஒரு பெண்ணின் உடல் என்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அத்துடன், அந்தப் பெண்ணின் உடலிலிருந்த நகைகள் மாயமாகியிருந்ததால், அவரை அவரது நகைகளுக்காக கொலை செய்திருக்கலாம் என்றும், கொலை செய்துவிட்டு, அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் அவரது உடலை பிளாஸ்டிக் பைகளில் போட்டு மாடிகளில் மறைத்துவைத்திருக்கலாம் என்றும் பொலிசார் கருதுகிறார்கள்.
</p><p>
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேரை கைது செய்துள்ள பொலிசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T12:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[H4 பணி அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம் - இந்தியர்களுக்கே அதிக பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-plans-to-end-h4-work-permit-will-affect-indians-1788264918"></link>
            <id>https://news.lankasri.com/article/us-plans-to-end-h4-work-permit-will-affect-indians-1788264918</id>
            <summary type="text">us plans to end H4 work permit it will affect indians: அமெரிக்காவில் H1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைதுணை வேலை செய்ய அனுமதி அளிக்கும் H4 பணி அனும...</summary>
            <content type="html"><![CDATA[<p>us plans to end H4 work permit it will affect indians: அமெரிக்காவில் H1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைதுணை வேலை செய்ய அனுமதி அளிக்கும் H4 பணி அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. </p><h3>

H4 பணி அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம்</h3><p>

அமெரிக்காவில் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில், டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09a69ccd-fa07-41ec-8770-8f595755281f/26-6a96c1d8c29bd.webp' /></p><p>

 முன்னதாக அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான H1B விசாவிற்கான கட்டணத்தை ரூ.1.9 லட்​சத்​தில் இருந்து
ரூ.88 லட்சமாக உயர்த்தினார்.

இதற்கு சில நீதிமன்றங்கள் தடை விதித்த நிலையில், இது தொடர்பான மேல்முறையீடு வழக்கு நடைபெற்று வருகிறது. </p><p>

தற்போது H1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணையினர் அமெரிக்காவில் வேலை செய்வதற்கான H4 பணி அனுமதியை ரத்து செய்யும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.</p><p> 

H1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு H-4 விசா அமெரிக்கா வழங்கி வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d115b27-ea15-4d87-bae8-4ae32df5379b/26-6a96c1d819261.webp' /></p><p>H-4 தகுதியானது, குடும்ப உறுப்பினர்கள் H-1B வைத்திருப்பவருடன் சென்று அமெரிக்காவில் வசிக்க அனுமதிக்கிறது. ஆனால் வேலைவாய்ப்பு உரிமைகளை வழங்குவதில்லை.
</p><p>
2015 ஆம் ஆண்டில் புதிய விதிகள் மூலம், H-4 விசா வைத்திருப்பவர்கள் வேலை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. </p><p>

தற்போது வேலைவாய்ப்பு அங்கீகாரத்திற்குத் தகுதியுள்ள வெளிநாட்டினர் பிரிவிலிருந்து H-4 சார்ந்த வாழ்க்கைத் துணைவர்களை நீக்குதல்" என்ற தலைப்பிலான முன்மொழிவை அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்பு துறை பட்டியலிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

 இந்த முன்மொழிவு சட்டமாக மாறி நடைமுறைக்கு வரும் போது, அது அமெரிக்காவில் உள்ள இந்தியர்களையே அதிகளவில் பாதிக்கும். </p><p>

2014 முதல் 2017 வரையிலான தரவுகளின்படி, H-4 வேலை அனுமதி 93% இந்தியக் குடிமக்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்த அனுமதி பெற்றவர்களில் 94% பேர் பெண்கள் ஆவர்.
</p><p>
இந்த முன்மொழிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு மக்களின் கருத்துக்களை பெற்ற பிறகே இறுதி முடிவு எடுக்கப்பட்டு சட்டமாக அமுலுக்கு வரும். அதுவரை H 4 வேலை அனுமதி பெற்றுள்ளவர்களுக்கு பாதிப்பில்லை.
</p><p>
இருப்பினும் அமெரிக்காவில் கணவர் மற்றும் மனைவி இருவரின் வருமானத்தையும் சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு இந்த முன்மொழிவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T12:15:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் காணாமல் போன மகனைத் தேடி ஒரு குடும்பத்தின் நான்கு நாள் பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/family-lost-son-in-nepal-flood-1788257804"></link>
            <id>https://news.lankasri.com/article/family-lost-son-in-nepal-flood-1788257804</id>
            <summary type="text">Nepal&#039;s floods.. A family&#039;s four-day quest for a son: நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான மகனைத் தேடி ஒரு குடும்பம் மேற்கொண்ட நான்கு நாள் பயணம்.
நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal's floods.. A family's four-day quest for a son: நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான மகனைத் தேடி ஒரு குடும்பம் மேற்கொண்ட நான்கு நாள் பயணம்.</p><p>
நேபாளத்தில் வெள்ளம் புரட்டிப்போட்டதைத் தொடர்ந்து, 21 வயதான அரசு ஊழியர் ஒருவர் தொடர்பில் அவரது குடும்பத்தினர் நான்கு நாட்களாகத் துயரமும் பதற்றமும் நிறைந்த நிலையில் தேடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad72a47a-1211-42a6-981e-6b2e4cbd1a93/26-6a96a60e3db4e.webp' /></p><p>
</p><p>நேபாளம் மற்றும் திபெத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகப் பனி, பாறை, சேறு மற்றும் சிதைவுப் பொருட்கள் கலந்த பெருவெள்ளத்தை ஏற்படுத்திய பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட மிக மோசமான சூழலிலும், நம்பிக்கையைத் தளர்த்தாமல் இருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களில் கட்கா (Khadka) குடும்பத்தினரும் அடங்குவர்.</p><p> 
வெள்ளம் ஏற்படுவதற்கு முந்தைய இரவு 21 வயதான ஆயுஷ் கட்கா தனது உறவினர்களிடம் பேசியிருந்தார்; மறுநாள் காலையிலும் அவரது சமூக ஊடகக் கணக்கு அவர் ஒன்லைனில் இருப்பதைக் காட்டியது. </p><p>அவர் உயிர் பிழைத்திருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை அவரது குடும்பத்தினருக்கு இந்தச் சிறிய அறிகுறி அளித்தது. ஆகஸ்ட் 26 அன்று பரவலான அழிவு குறித்த தகவல்கள் வெளியானதும், குடும்பத்தினர் உடனடியாக ஒரு தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்; ஆனால், அது இறுதியில் பயனற்ற முயற்சியாகவே முடிந்துள்ளது.</p><p></p><p> </p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான முக்கிய ஒருங்கிணைப்பு மையங்களில் ஒன்றான நுவாகோட்டில் உள்ள நேபாள ராணுவத்தின் மைதாலி முகாமுக்கு அருகில், அவரது தந்தையின் சகோதரரான கணேஷ் கட்கா இரண்டு நாட்களாகக் காத்திருந்தார். </p><p>இதற்கிடையில், ஆயுஷின் தாய்வழி அத்தை லட்சுமி தாபா, அவரைச் சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள சித்வானில் தேடிக்கொண்டிருந்தார்; அங்கு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் மீட்கப்பட்டு வந்தன. </p><p>இந்த நிலையில், 1,000 பேரின் உயிரைப் பறித்து, சுமார் 4,000 பேரைக் காணாமல் போகச் செய்த அந்தப் பேரிடர் நிகழ்ந்த நாளன்றே, ஆயுஷுடையது என்று கருதப்படும் ஒரு சடலத்தை அதிகாரிகள் ஏற்கனவே மீட்டிருந்தனர்; ஆனால், அந்த நேரத்தில் குடும்பத்தினர் பலருக்கும் இந்தத் தகவல் தெரிந்திருக்கவில்லை.</p><p> ஆகஸ்ட் 27 அன்று, உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக மீட்கப்பட்ட உடல்களின் புகைப்படங்கள் தொலைக்காட்சித் திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருந்த தற்காலிக முகாம் ஒன்றிற்கு லட்சுமி சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/158e3675-a761-48f3-b569-716d50be5883/26-6a96a60ee7b2d.webp' /></p><p> </p><p>ஒரு புகைப்படம் உடனடியாக அவரது கவனத்தை ஈர்த்தது. அது அவர்தான் என்று எனக்கு ஏறக்குறைய 70% உறுதியாகத் தெரிந்திருந்தது என்று அவர் கூறியுள்ளார். அவர் அந்தப் புகைப்படத்தை கணேஷ் உள்ளிட்ட பிற உறவினர்களுக்கு அவர்களின் கருத்துக்களை அறிய அனுப்பினார்; ஆனால், ஆயுஷின் தாயார் முனா கட்காவிடம் அதைக் காட்ட வேண்டாம் என்று குடும்பத்தினர் வேண்டுமென்றே முடிவு செய்தனர். </p><p>அந்தக் குடும்பத்தினர் கண்ணுக்குத் தெரிந்த ஒவ்வொரு விவரத்தையும் கூர்ந்து கவனித்தனர்: அவரது தாடியைப் போலவே, அவரது தாடையின் இடது பக்கத்தில் இருந்த மச்சமும் ஆயுஷின் மச்சத்துடன் ஒத்துப்போவது போல் தோன்றியது. </p><p>அவரது இடது கையில் அவர் வழக்கமாக அணிந்திருந்த, ஆனால் மணிக்கட்டுப் பகுதிக்கு நழுவியிருந்த கருப்பு நிற மதரீதியான பாதுகாப்புக் கயிற்றையும் அவர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். </p><p>இதனிடையே, அடையாளம் காணப்படாத உடல்களைப் பெருமளவில் அடக்கம் செய்ய அதிகாரிகள் தயாரான நிலையில், கட்கா குடும்பத்தினருக்கு அந்த நிச்சயமற்ற நிலை இன்னும் அதிக வேதனையை அளிப்பதாக அமைந்தது. </p><p>தொலைதூர மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சித்வானுக்கு வந்து அவர்களை அடையாளம் காண்பதற்குப் போதுமான நேரம் கிடைப்பதற்கு முன்பே, அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுவிடக்கூடும் என்று கட்கா குடும்பத்தினர் அஞ்சினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87622089-6747-4e4b-9384-a6f5d6031548/26-6a96a60f9f3fe.webp' /></p><p> </p><p>வெள்ளம் ஏற்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 30 அன்றுதான், மகன் இறந்துவிட்டான் என்ற தகவல் ஆயுஷின் தாய்க்கு அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டது. </p><p>மறுநாள் அதிகாலை சுமார் 1 மணியளவில், நெருங்கிய மற்றும் உறவினர்கள் சல்யானிலிருந்து புறப்பட்டு, இரவு முழுவதும் பயணித்து சித்வானை அடைந்தனர். </p><p>ஆயுஷின் உடல் அடையாளம் காணப்பட்டு, பின்னர் உடலைத் தகனம் செய்வதற்காக, சுமார் 35 உறவினர்கள் நாராயணி ஆற்றங்கரையில் கூடினர். </p><p>அவன் பிறந்தபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம், அதேபோல் இவ்வளவு இளம் வயதிலேயே அவன் அரசு ஊழியர் தேர்வில் தேர்ச்சி பெற்றபோதும் மகிழ்ச்சியடைந்தோம், இன்று எங்களைக் கண்ணீரில் விட்டுவிட்டு அவன் சென்றுவிட்டான் என்று லட்சுமி கண்கலங்கியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T11:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தை மீறிய உறவில் மனைவி: வீடியோ மூலம் நிரூபித்த கணவருக்கு சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/taiwan-man-jailed-who-captured-wife-cheating-1788262969"></link>
            <id>https://news.lankasri.com/article/taiwan-man-jailed-who-captured-wife-cheating-1788262969</id>
            <summary type="text">Taiwan man jailed who captured wife cheating with vacuum video: தைவானில் மனைவி ஏமாற்றுவதை படம்பிடித்த கணவர் தனியுரிமையை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Taiwan man jailed who captured wife cheating with vacuum video: தைவானில் மனைவி ஏமாற்றுவதை படம்பிடித்த கணவர் தனியுரிமையை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்டார். </p><p>

தைவானில் ரோபோட் Vacuum Cleaner மூலம் தன் மனைவி ஏமாற்றுவதை படம்பிடித்த நபருக்கு, தனியுரிமையை மீறியதாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது.&nbsp;</p><h2>கணவருக்கு சந்தேகம்&nbsp;</h2><p>

தைவானைச் சேர்ந்த நபர் ஒருவர், தன் மனைவியின் விடுமுறை இல்லத்தில் தொடர்பில்லாத பல் துலக்கும் தூரிகையை கண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63d88aa9-d616-4f92-9e51-8d39cf7a559b/26-6a96bb6769d2f.webp' />&nbsp;</p><p></p><p>
இதனால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட,வெளிப்புறத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். 

அதில், ஒருவர் தனது மனைவியை மீண்டும் மீண்டும் வீட்டில் கொண்டுபோய் விடுவது தெரியவந்தது. </p><p>

அதனைத் தொடர்ந்து, பல மாதங்கள் கழித்து டிசம்பர் 2023-யில் அந்தத் தம்பதியினர் வசித்து வந்த தனது பெற்றோர் வீட்டில் இருந்த செயலி மூலம், அந்த விடுமுறை இல்லத்தில் இருந்த ரிமோட் Vacuum Cleaner-ஐ அவர் இயக்கினார்.
</p><p>
ஆனால், அந்த சாதனத்தின் Audio செயல்பாட்டை இயக்க முயன்றபோது, அதற்கு பதிலாக Live கமெராவை இயக்கியுள்ளார்.</p><p> அதில் அவரது மனைவி தனது காதலருடன் இருப்பது பதிவானதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை கூறியது.</p><h2>

வீடியோவாக பதிவு</h2><p>குறித்த கணவர், தனது மனைவி மற்றும் அவரின் காதலர் இருவரும் ஆடையை களைந்து, அந்த இல்லத்தை சுற்றி நடமாடுவதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
</p><p>
பின்னர் தனது விவாகரத்து நடவடிக்கைகளின்போது, அந்த வீடியோ ஆதாரமாக சமர்ப்பித்த அவர், தனது மனைவியிடம் இருந்து 46,600 பவுண்டுகளுக்கும் சற்று அதிகமான தொகையை இழப்பீடாக கோரினார்.
</p><p>
அதனை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், குறித்த கணவரின் மனைவி 11,600 பவுண்டுகளுக்கும் சற்று அதிகமான (500,000 தைவான் டொலர்கள்) அதிகமான தொகையை செலுத்த உத்தரவிட்டது. </p><p>

என்றாலும், குறித்த பெண் தனது தனியுரிமையை கணவர் மீறிவிட்டதாகக் கூறி, குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். </p><h2>

ஐந்து மாத சிறை</h2><p>பின்னர் அந்த ஆதாரம் ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கணவர் வாதிட்டார்.&nbsp;</p><p>

ஆனாலும், குற்றவியல் நீதிமன்றம் அவரது வாதத்தை நிராகரித்து, திருமணக் கடமைகள் ஒரு தனிநபரின் தனியுரிமை உரிமையை விட மேலானவை அல்ல என்று நீதிமன்றம் கூறியது.
</p><p>
அத்துடன் கணவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், மனைவிக்கு 3,500 பவுண்டுகள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06aebc86-04b1-4e01-83d2-0c48be8a5cad/26-6a96bb669ed9f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> </b>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை தொடர் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய பிரித்தானியர்... 12 ஆண்களுக்கும் தொடர்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/husband-abusing-his-wife-stands-trial-1788261403"></link>
            <id>https://news.lankasri.com/article/husband-abusing-his-wife-stands-trial-1788261403</id>
            <summary type="text">UK husband accused of abusing his wife with 12 others: பிரித்தானியாவில், தனது மனைவியை மற்ற 12 பேருடன் சேர்ந்து துன்புறுத்தியதாக கணவன் மீது குற்றம் சாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK husband accused of abusing his wife with 12 others: பிரித்தானியாவில், தனது மனைவியை மற்ற 12 பேருடன் சேர்ந்து துன்புறுத்தியதாக கணவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணவன், பிரித்தானியாவின் மான்செஸ்டரில் விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c701a76a-ead5-4715-a859-2c3bb5c0a61a/26-6a96b41da797e.webp' /></p><p>
</p><p>துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவோ அல்லது அதற்குத் துணைபுரிந்ததாகவோ குற்றம் சாட்டப்பட்ட மற்ற பன்னிருவரும் விசாரணையை எதிர்கொள்கின்றனர். </p><p>அரசுத் தரப்பு சட்டத்தரணிகளின் தகவலின்படி, பிரித்தானியாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஸ்டாக்போர்ட்டைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க அந்த நபர் மீது, 2004-ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்ததாகக் கூறப்படும் 48 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>அவரது மனைவியின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக, காவல்துறை அந்த நபரின் அடையாளத்தை பொதுவெளியில் வெளியிடவில்லை. அந்த கணவர் ஆரம்பத்தில் அனைத்துக் குற்றங்களையும் மறுத்தார். </p><p>அரசுத் தரப்பு சட்டத்தரணிகளின் கூற்றுப்படி, அவர் பின்னர் 15 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்: ஐந்து கற்பழிப்பு குற்றங்கள், ஆறு ஊடுருவல் தாக்குதல் குற்றங்கள், மூன்று பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் மனைவியின் அனுமதியின்றி அவரது அந்தரங்கப் படங்களைப் பகிர்ந்த ஒரு குற்றம் ஆகியவை இதில் அடங்கும்.</p><p></p><p> </p><p>எஞ்சியுள்ள 33 குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். ஸ்கொட்லாந்தின் டண்டியைச் சேர்ந்த 59 வயதான கீத் ஃபோதரிங்ஹாம் (Keith Fotheringham) என்ற பதின்மூன்றாவது நபர், பாலியல் ரீதியான ஊடுருவலுடன் கூடிய தாக்குதல், அத்தகைய தாக்குதலை நடத்துவதற்கான சதி, பாலியல் வன்புணர்வுக்கான சதி ஆகிய குற்றச்சாட்டுகளைத் தனித்தனியாக ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்; அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும். முதற்கட்ட விசாரணைகளில், மான்செஸ்டரிலிருந்து தென்கிழக்கே சுமார் 30 நிமிட பயணத் தொலைவில் உள்ள ஸ்டாக்போர்ட்டில் இருக்கும் தம்பதியரின் வீட்டிற்கு, கூறப்படும் குற்றங்களைச் செய்வதற்காக அந்த நபர்களில் சிலர் அழைக்கப்பட்டதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c1c6e1f-c426-453b-9d1c-1d261fc806d6/26-6a96b41e5d31b.webp' /></p><p> </p><p>பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த, 28 முதல் 73 வயதுக்குட்பட்ட 12 இணை பிரதிவாதிகளும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
</p><p>அவர்களில், ஸ்டாக்போர்ட்டைச் சேர்ந்த 43 வயதான மருத்துவ உதவியாளர் ஜொனாதன் கிர்க்கும் ஒருவர். மான்செஸ்டர் மற்றும் சால்ஃபோர்டில் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து, 2011-ல் அப்பகுதியில் உள்ள அவசரகாலப் பணியாளர்களை இளவரசர் ஹரி சந்தித்தபோது, ​​அவருடன் கிர்க் கைகுலுக்கிய புகைப்படம் ஒன்றும் வெளியானது. </p><p>கிர்க் மீது பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை செய்ய சதி செய்தல் மற்றும் ஊடுருவித் தாக்க சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும், முன்னாள் கால்பந்து கிளப் தலைமை நிர்வாகியான 55 வயது கார்ல் லிண்ட்சே மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p></p><p> </p><p>அவர் மீது பாலியல் வன்கொடுமை செய்ய சதித்திட்டம் தீட்டியது, பாலியல் ஊடுருவல் மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது மற்றும் உள்நோக்கத்துடன் போதைப் பொருளை வழங்க சதித்திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>கென்ட்டைச் சேர்ந்த 42 வயதான டேனியல் ரேனர் மற்றும் டெர்பிஷயரைச் சேர்ந்த 59 வயதான டேவிட் கிரேவ்ஸ் ஆகிய இருவரும், பாலியல் வன்கொடுமை செய்ய சதித்திட்டம் தீட்டியது, பாலியல் ஊடுருவல் மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது மற்றும் உள்நோக்கத்துடன் போதைப் பொருளை வழங்க சதித்திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்; </p><p>செஷயரைச் சேர்ந்த 73 வயதான கிரஹாம் ப்ரோஹாம், பாலியல் வன்கொடுமை செய்தது, பாலியல் வன்கொடுமை செய்ய சதித்திட்டம் தீட்டியது மற்றும் பாலியல் ஊடுருவல் மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். </p><p>இந்த வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட 12 வார கால விசாரணையின்போது, ​​அவர்கள் மின்ஷல் ஸ்ட்ரீட் கிரவுன் நீதிமன்றத்தில் அந்த கணவருடன் இணைந்து வழக்கை எதிர்கொள்ள உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T11:15:11+00:00</updated>
        </entry>
    </feed>
