<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-02T10:50:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுக்கடலில் மோதிக் கொண்ட கப்பல்கள்: காணாமல் போன 10 மாலுமிகளை தேடும் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ship-collision-near-istanbul-10-members-missing-1788343714"></link>
            <id>https://news.lankasri.com/article/ship-collision-near-istanbul-10-members-missing-1788343714</id>
            <summary type="text">Ship Collision Near Istanbul 10 Members missing: இஸ்தான்புல் அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தில் 10 மாலுமிகள் வரை காணாமல் போயுள்ளனர். இஸ்தான்புல்லில் கப்பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ship Collision Near Istanbul 10 Members missing: இஸ்தான்புல் அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தில் 10 மாலுமிகள் வரை காணாமல் போயுள்ளனர்.</p><h2> இஸ்தான்புல்லில் கப்பல் விபத்து</h2><p>இஸ்தான்புல் நகரின் அருகே உள்ள மர்மரா கடலில் ரசாயன டேங்கர் கப்பலும், சரக்கு கப்பலும் மோதி விபத்துக்குள்ளாகின.</p><p> சிலிவ்ரி கடற்கரைக்கு அருகில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு நடந்த இந்த விபத்தை துருக்கி நாட்டு Tugberk Imamoglu என்ற சரக்கு கப்பலும், Alsu என்ற ரசாயன டேங்கர் கப்பலும் மோதிக் கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30a8290f-fe79-410e-8344-6e168ff848a0/26-6a97f5a370a45.webp' /></p><p></p><p>இந்த சம்பவத்தில் சரக்கு கப்பலில் இருந்தவர்களுடன் எந்தவொரு தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை, அவர்களின் செல்போன்களும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் அடிப்படையில் சரக்கு கப்பலானது கடலில் மூழ்கி இருக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சகத்தின் கடல்சார் இயக்குநரகம் தங்களுடைய X தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.</p><h2> 10 பேரை காணவில்லை</h2><p>
இந்நிலையில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் கப்பலில் இருந்த 10 மாலுமிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a585a22f-cc83-4437-a7cc-3bb5fed7343b/26-6a97f5a4237a2.webp' /></p><p> சம்பந்தப்பட்ட பகுதியில் கிட்டத்தட்ட 14 மீட்புக் கப்பல்களும், ஒரு ஹெலிகாப்டரும் களமிறக்கப்பட்டுள்ளன.</p><p>இதற்கிடையில் மூழ்கிய கப்பலில் இருந்து உயிர் காக்கும் படகுகள் மற்றும் பாதுகாக்கும் உபகரணங்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய வான்வெளி மூடல்: அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கிறோம் - ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-said-russian-airspace-closed-by-drones-1788342271"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-said-russian-airspace-closed-by-drones-1788342271</id>
            <summary type="text">Volodymyr Zelensky claims russian airspace closed: ரஷ்யா தொடங்கிய போரே, அதன் வான்வெளியை மூடும் நிலையை உருவாக்கியுள்ளது என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Volodymyr Zelensky claims russian airspace closed: ரஷ்யா தொடங்கிய போரே, அதன் வான்வெளியை மூடும் நிலையை உருவாக்கியுள்ளது என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p> 

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய வான்வெளியை உக்ரேனிய ட்ரோன்கள் மூடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>வோலோடிமிர் ஜெலென்ஸ்கி</h2><p>

தங்களது ட்ரோன் விமானங்கள் ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அபாயகரமானதாக மாற்றியுள்ளது என்று உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c8db29-9d87-4fa6-8cdc-4d4e148b176f/26-6a97f2fbe48ee.webp' />&nbsp;</p><p></p><p>


அவர் தனது இரவு நேர காணொளி உரையில், "இன்று, ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும், ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்திற்கும், முக்கிய ரஷ்ய விமான நிலையங்களை இன்னும் பயன்படுத்தும் அனைவருக்கும் நாங்கள் எச்சரிக்கை விடுக்க விரும்புகிறோம்; ரஷ்ய வானம் முற்றிலும் அபாயகரமானதாக மாறி வருகிறது" என்றார். </p><p> 

 மேலும் அவர், "உக்ரைன் பொது விமானப் போக்குவரத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், ரஷ்யாவின் வான்வெளியில் ட்ரோன் விமானங்கள் இருக்கும்; மேலும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்றும் கூறினார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbca6a82-46c9-4abf-a98a-ebf40fc28729/26-6a97f2fca4068.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:54:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா திரும்பிய ஹரி, மேகன்... மௌனம் காக்கும் வில்லியம், கேட் தம்பதியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-william-reason-for-silence-harry-uk-return-1788341310"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-william-reason-for-silence-harry-uk-return-1788341310</id>
            <summary type="text">Prince William and Kate&#039;s real reason for silence after Harry and Meghan&#039;s UK return: ஹரி தன் மனைவி பிள்ளைகளுடன் பிரித்தானியா திரும்பியுள்ள நிலையில், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prince William and Kate's real reason for silence after Harry and Meghan's UK return: ஹரி தன் மனைவி பிள்ளைகளுடன் பிரித்தானியா திரும்பியுள்ள நிலையில், இளவரசர் வில்லியமும், அவரது மனைவியான கேட்டும் ஏன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
</p><p>

இளவரசர் ஹரி, தன் மனைவி பிள்ளைகளுடன் பிரித்தானியா திரும்பியுள்ளது அனைவரும் அறிந்ததே.
</p><p>
ஆனால், அது குறித்து இதுவரை இளவரசர் வில்லியமும், அவரது மனைவியான கேட்டும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
</p><h3>
காரணம் என்ன?
</h3><p>
இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான கேட்டும், ஹரி, மேகன் குறித்து அவசரப்பட்டு ஏதாவது வார்த்தையை விட்டுவிடக்கூடாது என்பதாலேயே மௌனம் காப்பதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8d8f019-e453-4206-b5c8-f6e2bd34e58e/26-6a97ec3fe337b.webp' /></p><p>
மேலும், அது ஒரு தனிப்பட்ட விடயம் என்பதாலும், அவர்கள் எந்தக் கருத்தும் வெளிப்படையாகக் கூறவில்லை என்றும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.&nbsp;</p><p></p><p>
அவர்கள் நடப்பதைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள், எதையாவது வெளிப்படையாகச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என அவர்கள் கருதுகிறார்கள் என்கிறார்கள் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbe043bf-f1bd-4dc1-93e1-2d50f2e71ca2/26-6a97ec4097959.webp' /></p><p>

ஹரியும் வில்லியமும் ஒருவேளை சமரசம் ஆவார்கள் என்றால், அதற்கு நீண்ட காலம் ஆகலாம் என்று கூறும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள், ஏனென்றால், தங்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டது என்னும் ஒரு எண்ணம் இன்னமும் வில்லியம் கேட் தம்பதியருக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:28:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் ரயில் நிலையம் அருகே வெடித்த மர்ம பொருள்: இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/blast-near-germany-augsburg-station-2-injured-1788340804"></link>
            <id>https://news.lankasri.com/article/blast-near-germany-augsburg-station-2-injured-1788340804</id>
            <summary type="text">Blast Near Germany Augsburg Station 2 Injured : ஜேர்மனியின் ஆக்ஸ்பர்க் ரயில் நிலையம் அருகே திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Blast Near Germany Augsburg Station 2 Injured : ஜேர்மனியின் ஆக்ஸ்பர்க் ரயில் நிலையம் அருகே திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> ரயில் நிலையம் அருகில் வெடிப்பு</h2><p>
ஜேர்மனியின் ஆக்ஸ்பர்க்(Augsburg) பகுதியில் அமைந்துள்ள முக்கியமான ரயில் நிலையத்திற்கு அருகில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது பரபரப்பைக் கிளப்பியது.</p><p> அடையாளம் தெரியாத மர்ம பொருள் வெடித்ததில் 2 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு காது கேளாமை தொடர்புடைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.</p><p> புதன்கிழமை அதிகாலை 5 மணி அளவில் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த கட்டிடம் ஒன்றின் நடைபாதையில் ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவத்தினால் கடுமையான போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05968acb-84e6-4a76-8405-bf8d94beac8d/26-6a97ea4557c16.webp' /></p><p> வெடிப்பின் தாக்கம் காரணமாக அதன் அருகில் இருந்த கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்துச் சிதறின.</p><h2> காவல்துறையினர் விசாரணை</h2><p>மர்மப் பொருள் வெடிப்பை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆக்ஸ்பர்க் ரயில் நிலையத்தை முழுமையாக பாதுகாப்பு வளையத்திற்குள் அதிகாரிகள் கொண்டு வந்தனர்.</p><p> வெடி பொருள் குறித்து முழுமையாக ஆராய வெடிகுண்டு அகற்றும் ரோபோக்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.</p><p> இந்த சம்பவம் தொடர்பான எந்தவொரு தகவலையும், வெடிப்பு பொருள் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் அதிகாரிகள் இதுவரை எந்தவொரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:20:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாநிலங்களில் முதல்வர் விஜய்க்கு பெருகும் ஆதரவு - பத்திரிக்கையாளர் ராஜகோபாலன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/journalist-delhi-rajagoipal-about-cm-vijay-as-pm-1788340314"></link>
            <id>https://news.lankasri.com/article/journalist-delhi-rajagoipal-about-cm-vijay-as-pm-1788340314</id>
            <summary type="text">journalist delhi raja gopal about cm vijay: முதல்வர் விஜய்க்கு வட மாநிலங்களில் உள்ள ஆதரவு குறித்து பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் பேசியுள்ளார். 

வட மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>journalist delhi raja gopal about cm vijay: முதல்வர் விஜய்க்கு வட மாநிலங்களில் உள்ள ஆதரவு குறித்து பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் பேசியுள்ளார்.</p><h3> 

வட மாநிலங்களில் முதல்வர் விஜய்க்கு ஆதரவு
</h3><p>
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பேசி வருகின்றனர்.</p><p> 

ஆனால் இதற்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் அதனை தவெக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியை துறப்போம் என அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca9dd8f3-0276-467a-ab7b-da69df00a2e7/26-6a97e85c0732a.webp' /></p><p>

இந்நிலையில், முதல்வர் விஜய்யின் பிரித்தானியா பயணம், தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட உள்ள சட்டப்பேரவை, முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளர் ஆவது உள்ளிட்டவை குறித்து மூத்த பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபால் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். </p><p>

இதில் பேசிய அவர், கிண்டி மற்றும் நந்தனத்திற்கு இடைப்பட்ட பகுதியில் புதிய சட்டமன்ற கட்ட திட்டமிட்டுள்ளார். விரைவில் இது குறித்த அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிடுவார்.&nbsp;</p><p></p><p>

இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய சட்டமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்படும். ஜனாதிபதி இதில் கலந்துகொள்வார்.</p><p> 500க்கும் மேற்பட்ட இருக்கைகளுடன், இந்தியாவிலே சிறந்ததாக அதிநவீன வசதியில் இந்த சட்டமன்றம் அமைய உள்ளது. 

2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் சட்டமன்றம், இந்த கட்டிடத்திற்கு மாற்றப்படும்.</p><p> 

இதே போல், வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியாவிற்கு செல்ல உள்ள நிலையில், அங்கு சுமார் 10,000 பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்தித்து பேச உள்ளார். </p><p>

முதல்வர் விஜய் ஆட்சி மீது வடமாநில மக்களுக்கும் நல்ல மதிப்பு உள்ளது. அது Paid promotion இல்லை. அவரை ஒரு மாற்றாக பார்க்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகும். தவெக மற்றும் காங்கிரஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>

முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னெடுப்பதை டெல்லி காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார். </p><p>

மேலதிக தகவலுக்கு வீடியோவை காண்க&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hhcIDJmtEcg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:12:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடலுக்கு வலு தரும் உளுத்தங் கஞ்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/benefits-drinking-uluthankanji-twice-a-week-1788335192"></link>
            <id>https://news.lankasri.com/article/benefits-drinking-uluthankanji-twice-a-week-1788335192</id>
            <summary type="text">30 வருடம் முன்பு எடுத்துக் கொண்டால் பெரியவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உணவுகளை பார்த்து பார்த்து கொடுத்து வந்தார்கள். அதாவது, எந்த கிழமையில் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 வருடம் முன்பு எடுத்துக் கொண்டால் பெரியவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உணவுகளை பார்த்து பார்த்து கொடுத்து வந்தார்கள். அதாவது, எந்த கிழமையில் என்ன உணவு கொடுக்க வேண்டும்? எந்த நேரத்தில் என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று ஆரோக்கியமாக தேடி கொடுத்தார்கள். </p><p>ஆனால், தற்போதைய காலகட்டங்களில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுத்தாலும் அதை அவர்கள் காலநிலை மாற்றத்தால் துரித உணவுகளையே தேடி விரும்பி சாப்பிடுகிறார்கள். அதற்கு அடிமையாக இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே கிடைக்க வேண்டிய ஆரோக்கியம் இல்லாமல் போகிறது.</p><p> அந்த வகையில், குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான உணவுகளை சரியான இடைவெளியில் தவறாமல் எடுக்க வேண்டும். அப்படியாக, குழந்தைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சத்தான கஞ்சி வகைகளை பற்றி பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20ab23f3-7f69-48cb-ad49-7fbdbd4be709/26-6a97d45f05753.webp' /></p><p></p><h3>&nbsp;உளுந்தங்கஞ்சி:
</h3><p>
 குழந்தைகளுக்கு நிச்சயம் இந்த உளுந்தங்கஞ்சியை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். வாரத்தில் இரு முறை நாம் கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கிறது. </p><p>இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பொழுது குழந்தைகளுக்கும் பெரியவர்களும் மூட்டு வலி, இடுப்பு வலி, கை கால் வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

அதேபோல், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய சிரமங்களில் இருந்து ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கிறது. சிறுநீர் தொடர்பான தொற்றுகள் விலகுகிறது.&nbsp;</p><h3>உடல் எடை: </h3><p>
ஒரு சில குழந்தைகள் அல்லது ஒரு சிலர் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுவார்கள். எவ்வளவு சாப்பிட்டும் உடல் எடை ஆத்திகரிப்பது இல்லை. அவர்கள் இந்த கஞ்சியை தினமும் எடுத்துக் கொள்கின்ற பொழுது ஆரோக்கியமான உடல் எடை அதிகரிக்கிறது. 
குறிப்பாக இதில் சேர்க்கப்படும் உளுந்து தோல் அகற்றப்பபடமால் இருக்கும் பட்சத்தில் எலும்புகளுக்கு வலு கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90086682-8bba-46f8-958d-ed51d34c8f66/26-6a97d45fb30b3.webp' /></p><h3>&nbsp;கஞ்சி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
</h3><p> உளுந்தங்கஞ்சி செய்வதற்கு தேவையான பொருட்கள் பார்ப்போம். இந்த கஞ்சியை செய்வதற்கு 100 கிராம் கருப்பு உளுந்து, வெல்லம் அல்லது கருப்பட்டி அரிசி கால் கப், துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். </p><p>பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து உளுந்தை போட்டு சிவப்பு நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். அதே போல், அரிசியையும் தனியாக அதில் போட்டு பொரிந்து வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.&nbsp;&nbsp;</p><p></p><h3>செய்முறை: </h3><p>

இந்த இரண்டும் சூடு ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு கரையும் வரை அதனை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். </p><p>அடுத்து நாம் பொடித்து வைத்துள்ள மாவு கெட்டி சேராமல் தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ள வேண்டும். பிறகு, அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் நாம் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி கைவிடாமல் மிதமான தீயில் கொதிக்க விட்டு கிளற வேண்டும். </p><p>பின்னர் அதில் நாம் உருக்கி வைத்துள்ள வெல்ல நீரையும் ஊற்றி நன்றாக கலந்து விடவும். பிறகு வாசனைக்காக ஏலக்காய் சிறிதளவு, உப்பு சிட்டிகை சேர்த்து இறக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac6139d1-f159-450c-aeca-ac2960ca1575/26-6a97d46070216.webp' /></p><h3>முந்திரி திராட்சை:</h3><p> 

இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணமாக அதன் சுவையை இன்னும் அதிகரிக்க நெய்யில் துருவிய தேங்காய், முந்திரி திராட்சை உள்ளிட்டவைகளை சேர்த்து வறுத்து எடுத்து காஞ்சியில் சேர்த்துக் கிளறினால் நல்ல சுவையான உளுந்தங்கஞ்சி தயார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T08:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/channel-migrant-crossings-7-year-low-in-france-1788336408"></link>
            <id>https://news.lankasri.com/article/channel-migrant-crossings-7-year-low-in-france-1788336408</id>
            <summary type="text">Seven year low in Channel migrant crossings: பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை, ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Seven year low in Channel migrant crossings: பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை, ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.</p><p>


வழக்கமாக, ஜூன், ஜூலை மற்றும் ஆகத்து மாதங்களில், வானிலை ஆங்கிலக்கால்வாயில் பயணிப்பதற்கு சாதகமாக இருக்கும் என்பதால், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.</p><h3>

ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு...
</h3><p>
ஆனால், இந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகத்து மாதங்களில், 7,371 புலம்பெயர்வோர் மட்டுமே பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9f52c7a-dcd9-4bdb-ad86-97b0a71d05d2/26-6a97d919e06a7.webp' /></p><p>
பிரித்தானிய உள்துறை அலுவலகத் தரவுகளின்படி, 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு, அப்படி பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையிலேயே இதுதான் குறைவான எண்ணிக்கை ஆகும்.</p><p>

பின்னணி

அதாவது, ஏப்ரல் மாதம், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரித்தானியாவும் பிரான்சும் மூன்று ஆண்டுகளுக்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.</p><p>

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக, பிரான்சுக்கு பிரித்தானியா 766 மில்லியன் பவுண்டுகள் அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் எடுத்துவரும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தே பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நம்பப்படுகிறது.
</p><p>
விடயம் என்னவென்றால், இப்படி இந்த கோடையின்போது பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது என்றாலும், பெரிய படகுகளில் எக்கச்சக்கமான புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவது சமீபத்தில் அதிகரித்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T08:25:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[எகிப்தில் கோரமான பேருந்து விபத்து: 16 பேர் உயிரிழப்பு, 28 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/egypt-south-sinai-bus-crash-16-dead-1788336360"></link>
            <id>https://news.lankasri.com/article/egypt-south-sinai-bus-crash-16-dead-1788336360</id>
            <summary type="text"> Egypt South Sinai Bus Crash 16 Dead: எகிப்தின் தெற்கு சினாய் நகரில் நடந்த கோரமான பேருந்து விபத்தில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். பேருந்து விபத்துஎ...</summary>
            <content type="html"><![CDATA[<p> Egypt South Sinai Bus Crash 16 Dead: எகிப்தின் தெற்கு சினாய் நகரில் நடந்த கோரமான பேருந்து விபத்தில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> பேருந்து விபத்து</h2><p>எகிப்தின் தெற்கு சினாய்(Sinai) பகுதியில் நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தில் கிட்டத்தட்ட 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> அத்துடன் இந்த பேருந்து விபத்தில் 28 பேர் வரை காயமடைந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், பேருந்து விபத்தானது தாஹாப் - நுவைபா நெடுஞ்சாலையில் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83e80ce5-b58e-40c6-9654-7bfcef9d4839/26-6a97d8e9b8312.webp' /></p><p></p><p>ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெல்லிங் ஆகியவற்றிக்கு தெற்கு சினாய் தீபகற்பமானது சர்வதேச அளவில் புகழ் பெற்று வருகிறது.</p><p> தாஹாப் பிராந்தியத்தில் அமைந்துள்ள தங்க மணல் கடற்கரைகள் சுற்றுலா பயணிகளை பெரும் அளவு&nbsp; கவர்ந்து வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">HATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T08:06:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[57 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசியும் வீண்: ஷானகா, சார்லஸ் அதிரடியில் செயின்ட் கிட்ஸ் அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/quinton-de-kock-106-in-57-balls-in-cpl-t20-1788335638"></link>
            <id>https://news.lankasri.com/article/quinton-de-kock-106-in-57-balls-in-cpl-t20-1788335638</id>
            <summary type="text">Quinton de Kock blast century in cpl t20: கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் குயிண்டன் டி காக் 57 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசினார்.

வார்னர் பார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Quinton de Kock blast century in cpl t20: கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் குயிண்டன் டி காக் 57 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
வார்னர் பார்க் மைதானத்தில் நடந்த கரீபியன் டி20 போட்டியில், செயின்ட் கிட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸை வீழ்த்தியது.&nbsp;</p><h2>கார்டர், குயிண்டன் டி காக் சிக்ஸர் மழை</h2><p>

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 23வது போட்டியில், பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் அன்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/143a7afe-6965-4a5d-910c-602c0a2d310b/26-6a97d6b843911.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய பார்படோஸ் ட்ரிடென்ட் அணியில் ஸகாரி கார்டர் சிக்ஸர் மழைபொழிந்தார். அவர் 36 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 57 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

அடுத்து ரூதர்போர்டு 16 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுக்க, குயிண்டன் டி காக் மறுமுனையில் வாணவேடிக்கை காட்டினார். </p><p>

சிக்ஸர், பவுண்டரிகள் என பறக்கவிட்ட டி காக் 57 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/490e6883-d7fb-46d3-b41f-3ee52ecbaaad/26-6a97d6b78d691.webp' /></p><p>
இதன்மூலம் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 217 ஓட்டங்கள் குவித்தது. நசீம் ஷா 2 விக்கெட்டுகளும், ஹோல்டர் மற்றும் ஹசரங்கா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><h2>ருத்ரதாண்டவம் ஆடிய ஜான்சன்</h2><p>

பின்னர் ஆடிய செயின்ட் கிட்ஸ் அணியில் கைல் மேயர்ஸ் 29 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, ருத்ரதாண்டவம் ஆடிய ஜான்சன் சார்லஸ் (Johnson Charles) 45 பந்துகளில் 78 ஓட்டங்கள் (7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசினார். </p><p>

அடுத்து வந்த தசுன் ஷானகா அதிரடியில் மிரட்ட, ஹோல்டர் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 185 ஓட்டங்களாக உயர, ஷானகா (Shanaka) 36 (22) ஓட்டங்களில் அவுட் ஆனார். </p><p>

அதனைத் தொடர்ந்து ஆந்த்ரே ஃப்ளெட்சர் 8 பந்துகளில் 22 ஓட்டங்களும், ஹசரங்கா 4 பந்துகளில் 18 ஓட்டங்களும் விளாச, செயின்ட் கிட்ஸ் அணி 19.1 ஓவர்களில் 220 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb74524c-5095-491a-b791-65b895758fb8/26-6a97d6b6bf665.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T07:53:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் ஜனநாயக குறியீடு; 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பின்னுக்கு சென்ற இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-at-106th-place-in-electoral-democracy-index-1788335318"></link>
            <id>https://news.lankasri.com/article/india-at-106th-place-in-electoral-democracy-index-1788335318</id>
            <summary type="text">electoral democracy index: india at 106th place lowest since 1975: தேர்தல் ஜனநாயக குறியீட்டில் இந்தியா 179 நாடுகளில் 106 வது இடத்தை பிடித்துள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>electoral democracy index: india at 106th place lowest since 1975: தேர்தல் ஜனநாயக குறியீட்டில் இந்தியா 179 நாடுகளில் 106 வது இடத்தை பிடித்துள்ளது. </p><h3>

தேர்தல் ஜனநாயக குறியீடு</h3><p>

V-Dem Institute என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஜனநாயக குறியீட்டை வெளிட்டு வருகிறது. </p><p>

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில், 179 நாடுகளில் 0.9 புள்ளிகளுடன் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d28d97f-7415-4fd5-acae-c91f4b7d4b4c/26-6a97d4d7dbab2.webp' /></p><p>
0.38 மதிப்பெண்ணுடன் இந்தியா 106 வது இடத்தில் உள்ளது. 1975 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே இந்தியாவின் குறைந்தபட்ச மதிப்பெண் ஆகும்.&nbsp;</p><p></p><p> 

2009 ஆம் ஆண்டு முதல் இந்தக் குறியீட்டில் இந்தியாவின் செயல்திறன் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
</p><h3>
சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும்</h3><p> இந்தியா 

ஜனநாயக நிறுவனங்களைத் திட்டமிட்டுச் சிதைத்து, மெதுவாக சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் நாடுகளில் இந்தியாவையும் வி-டெம் பட்டியலிட்டுள்ளது.
</p><p>
இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐ.நா. குழு (CERD), சட்ட அமலாக்க அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட பெரிய அளவிலான மீறல்கள் குறித்த அறிக்கைகள் மீதும், வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் கீழ் பெருமளவிலான வாக்காளர்கள், குறிப்பாக முஸ்லிம்கள், விலக்கப்பட்டிருப்பது மீதும் ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a2a6ffb-831c-4bc3-b058-f30d848ba46b/26-6a97d4d88d1b7.webp' /></p><p>
மேலும் இந்த அறிக்கையில், "2009 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வாதிகாரப் போக்கு (autocratization), ஜனநாயக நிறுவனங்களை மெதுவாகவும் ஆனால் திட்டமிட்ட முறையிலும் சிதைக்கும் ஒரு செயல்முறையாகும். </p><p>

பன்முகத்தன்மையை ஏற்காத மற்றும் இந்து தேசியவாதக் கொள்கை கொண்ட ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் (BJP), பிரதமர் மோடியும் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p>

இதில் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடகச் சுதந்திரம் சீர்குலைதல், அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுதல், மற்றும் சிவில் சமூகம் மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல்கள் ஆகியவை அடங்கும். </p><p>

2017 ஆம் ஆண்டு முதல் இந்தியா 'தேர்தல் வழி சர்வாதிகாரம்' (electoral autocracy) கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T07:49:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமண விழாவின் மீது ஏவுகணை தாக்குதல்: தெற்கு ஈரானில் கொல்லப்பட்ட 4 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-air-strike-has-hit-a-wedding-in-iran-1788332232"></link>
            <id>https://news.lankasri.com/article/us-air-strike-has-hit-a-wedding-in-iran-1788332232</id>
            <summary type="text">Us Air Strike has Hit a Wedding Celebration in Iran: ஈரானில் நடைபெற்ற திருமண விழா கொண்டாட்டத்தில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Us Air Strike has Hit a Wedding Celebration in Iran: ஈரானில் நடைபெற்ற திருமண விழா கொண்டாட்டத்தில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> திருமண விழாவில் ஏவுகணை தாக்குதல்</h2><p>தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் சிரிக் மாவட்டத்தில் உள்ள குஹெஸ்டாக் நகரில் நடந்த திருமண விழாவின் போது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p>மேலும் திருமண விழாவில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Targeting a wedding and slaughtering innocent civilians in Kuhestak, Iran, is the ultimate proof of the utter desperation of the fake defenders of human rights, a repetition of their atrocities in Minab and Lamerd.<br><br>Make no mistake: these crimes will not go unpunished. Nothing… <a href="https://t.co/3EcHmkxxqZ">pic.twitter.com/3EcHmkxxqZ</a></p>&mdash; ابراهیم عزیزی (@Ebrahimazizi33) <a href="https://x.com/Ebrahimazizi33/status/2094897228208857202?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> செஞ்சிலுவை சங்கம் X தளத்தில் இது தொடர்பாக வெளியிட்ட தகவலில், அமெரிக்காவின் இந்த ஏவுகணை தாக்குதலின் போது ஏற்பட்ட சிதறல்கள் வீடு ஒன்றை கடுமையாக தாக்கியதாக தெரிவித்துள்ளது.</p><p></p><p> இந்த தாக்குதலால் குஹெஸ்டாக் பகுதியில் அமைந்துள்ள கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்து இருப்பதாக ஈரானிய அரசின் அதிகாரப்பூர்வ காணொளி காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> &nbsp;ஆரம்பத்தில் இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்து இருப்பதாக மாகாண ஆளுநர் அகமது நஃபிசி தெரிவித்திருந்த நிலையில் பின்னர் இந்த உயிரிழப்புகள் உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f60f997-0e8f-4f0c-b09f-2873c51afd23/26-6a97c8c9715ed.webp' /></p><p> அமெரிக்க படைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஈரானிய புரட்சி கர காவல் படையினரை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T06:57:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருவநிலை மாற்றத்தால் சுவிட்சர்லாந்தில் மழை பெய்வதில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/climate-change-affecting-rainfall-pattern-in-swiss-1788331619"></link>
            <id>https://news.lankasri.com/article/climate-change-affecting-rainfall-pattern-in-swiss-1788331619</id>
            <summary type="text">In Switzerland, climate change affecting rainfall patterns: பருவநிலை மாற்றத்தால், சுவிட்சர்லாந்தில், மழை பெய்யும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>In Switzerland, climate change affecting rainfall patterns: பருவநிலை மாற்றத்தால், சுவிட்சர்லாந்தில், மழை பெய்யும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>


பருவநிலை மாற்றம் குறித்து சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்கும்போதெல்லாம், அது எங்கோ யாருக்கோ, நமக்கென்ன என இருந்தவர்கள் பலர்.
</p><p>
ஆனால், இன்று பருவநிலை மாற்றம் உலகமெங்கும் என்னென்ன மோசமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது என்பதை கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறோம் நாம்.
</p><h3>
சுவிட்சர்லாந்தில் மழை பெய்வதில் ஏற்பட்டுள்ள மாற்றம்</h3><p>

பணக்காரர்கள் வெயில் காலத்தில் ரிலாக்ஸ் செய்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் முதலான நாடுகளுக்குச் செல்வது வழக்கம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b8af011-368f-4e64-bcd3-269b056739fa/26-6a97c664bf7f1.webp' /></p><p>

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, பனிப்பொழிவு இல்லாததால் பல பனிச்சறுக்கு ரிசார்ட்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
வெப்பத்தால் மலையில் பனி உருகுவதால், பெருவெள்ளம் முதலான பேரழிவுகளை உலகம் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.
</p><p>
இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் சுவிட்சர்லாந்தில் மழை பொழிவதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>
அதாவது, அளவான மழை நின்று நிதானமாக பெய்யுமானால், மழைநீர் பூமிக்குள் இறங்கும், நிலத்தடி நீர் உயரும்.&nbsp;</p><p></p><p>
ஆனால், திடீரென ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒரே மணி நேரத்தில் பெய்யுமானால், அந்த தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டுவிடும், அதனால் பயன் இருக்காது என்பது மட்டுமல்ல, அது பெருவெள்ளம் முதலான பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். </p><p>அதுதான் தற்போது சுவிட்சர்லாந்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.&nbsp;</p><p>
ஆம், எப்போதாவதுதான் மழை பெய்கிறது, ஆனால், அப்படி மழை பெய்யும்போது, கொட்டித்தீர்க்கிறது, அதனால், பெருவெள்ளம் ஏற்படுகிறது.
</p><p>
வெப்பநிலையில் ஒரு டிகிரி அதிகரிக்கும்போது, அது காற்றில் சுமார் 7 சதவிகித நீராவியை தக்கவைக்க, சக்தி வாய்ந்த புயல்களுக்கு அது வழிவகுக்கிறது.
</p><p>
வெப்பம் மூன்று டிகிரி அதிகரிக்கும் நிலையில், மணிநேர மழைப்பொழிவு 30 சதவிகிதம் வரை உயரக்கூடும்.
</p><p>
அதன் விளைவாக, திடீர் வெள்ளப்பெருக்குகள், நிலச்சரிவுகள் அதிகரிப்பதுடன், பழைய தரநிலைகளின்படி கட்டப்பட்டுள்ள சாலைகள், பாலங்கள் மற்றும் வடிகால் உள்கட்டமைப்புகளுக்கு அதிக அழுத்தமும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T06:47:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பிரித்தானியர் ஒருவர் மீட்பு: ராணுவம் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-citizen-rescued-in-nepal-flood-1788330593"></link>
            <id>https://news.lankasri.com/article/british-citizen-rescued-in-nepal-flood-1788330593</id>
            <summary type="text">An army spokesman told reporters that a British citizen has been rescued in Nepal: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமானவர்களை தேடும் பணியின்போது பிரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>An army spokesman told reporters that a British citizen has been rescued in Nepal: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமானவர்களை தேடும் பணியின்போது பிரித்தானியர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>

நேபாள திபெத் எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

அதே நேரத்தில், மீட்புப் பணியும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.</p><h3>

பிரித்தானியர் ஒருவர் மீட்பு
</h3><p>
நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 1,050 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள பேரிடர் மீட்பு ஏஜன்சி தெரிவித்துள்ள நிலையில், 583 வெளிநாட்டவர்கள் உட்பட 4,000 பேரின் நிலைமை என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9b574a5-6299-4b19-b854-adcfc58d650b/26-6a97c262b2fd4.webp' /></p><p>
அதே நேரத்தில், நேற்று 119 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 118 பேர் நேபாளக் குடிமக்கள் என்றும், ஒருவர் பிரித்தானியக் குடிமகன் என்றும் நேபாள ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
என்றாலும், அவரது அடையாளங்கள் இதுவரை வெளியாகவில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T06:29:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளம்பெண்: சமீபத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brit-woman-killed-at-german-train-station-pictured-1788324490"></link>
            <id>https://news.lankasri.com/article/brit-woman-killed-at-german-train-station-pictured-1788324490</id>
            <summary type="text">British woman stabbed to death at German train station pictured: ஜேர்மனியில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளம்பெண்ணின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>British woman stabbed to death at German train station pictured: ஜேர்மனியில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளம்பெண்ணின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p>


ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில், பிரித்தானிய இளம்பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
</p><h3>
ஜேர்மனியில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளம்பெண்
</h3><p>
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில், இளம்பெண்ணொருவர் தாக்கப்பட்டது குறித்து தகவலறிந்த பொலிசார் Rosenheim என்னும் நகரிலுள்ள ரயில் நிலையத்துக்கு விரைந்த நிலையில், அங்கு 31 வயதுடைய பிரித்தானிய இளம்பெண்ணொருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் அபாயகரமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a282398-3802-49dc-88b6-97167e583172/26-6a97aa8c0d652.webp' /></p><p>

உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.</p><p>

சமீபத்திய தகவல்

இந்நிலையில், அந்தப் பெண்ணின் பெயர் பெயர், புகைப்படம் முதலான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p>
அவரது பெயர், ரெபேக்கா புல்லக் (Rebecca Bullock, 31). ரெபேக்கா, இங்கிலாந்தின் Buckinghamshireஇலுள்ள Whitchurch என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.&nbsp;</p><p>
மதுபான விடுதி ஒன்றை நடத்திவந்த ரெபேக்கா, தொண்டு நிறுவனங்களுக்காக நிதி திரட்டும் சேவையிலும் ஈடுபட்டுவந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4b9f939-628e-4cc0-8e2b-123f6212f194/26-6a97aa8cb4ba8.webp' /></p><p>
ஆஸ்திரியா நாட்டில், தன் அன்பிற்குரியவரை இழந்த தோழி ஒருவருக்கு ஆதரவாக, இறுதிச்சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக ரெபேக்கா சென்றுகொண்டிருக்கும்போதுதான் அவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.</p><p>

பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவந்தவரான ரெபேக்காவுக்கு இரங்கல் செய்திகள் குவிந்தவண்ணம் உள்ளன. </p><p>

இந்நிலையில், ரெபேக்கா கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் 27 வயது ஜேர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T06:25:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளின் கல்விக்காக வெறும் காலுடன் மாரத்தான் ஓடிய 47 வயது தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/47-old-mother-runs-marathon-for-daughter-education-1788329419"></link>
            <id>https://news.lankasri.com/article/47-old-mother-runs-marathon-for-daughter-education-1788329419</id>
            <summary type="text">47 year old mother runs marathon with barefoot for daughter education: மகளின் கல்விக்காக 47 வயது தாய் வெறும் காலுடன் மாரத்தான் ஓடி முதலிடம் பிடித்து ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>47 year old mother runs marathon with barefoot for daughter education: மகளின் கல்விக்காக 47 வயது தாய் வெறும் காலுடன் மாரத்தான் ஓடி முதலிடம் பிடித்து பரிசு வென்றுள்ளார்.</p><h3> 

வெறும் காலுடன் மாரத்தான் ஓடிய 47 வயது தாய் </h3><p>

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் ஒரு கல்வி நிறுவனம் சார்பில் மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p> 

சத்ரபதி சிவாஜி மகாராஜ் சௌக்கில் தொடங்கி பாக்யநகர் சௌக்கில் நிறைவடையும் இந்த மாரத்தான் 3கிமீ தூரம் கொண்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a74c1a37-0e2c-4de3-977c-584f6c8c555b/26-6a97bdcd24efe.webp' /></p><p>

இப்போட்டியில் ஏராளமான உள்ளூர் இளைஞர்களும் இளம்பெண்களும் கலந்துகொண்டனர். </p><p>

பலரும் டிராக்சூட்கள் மற்றும் தொழில்முறை ஓட்டக் காலணிகளை அணிந்து போட்டியில் கலந்து கொண்ட போதிலும், 47 வயதான பெண் காலணி அணியாமல் புடவை கட்டிக்கொண்டு ஓடி வெற்றி பெற்றுள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A MOTHER’S DETERMINATION ❤️‍🩹<br><br>47-year-old Ramabai Ranveer from Beed, Maharashtra had no training and no running shoes, but she had a reason to win.<br><br>She ran a marathon barefoot and won ₹3,000, which will go towards her daughters’ education.<br><br>After losing her husband, Ramabai… <a href="https://t.co/1zlu9EAyV6">pic.twitter.com/1zlu9EAyV6</a></p>&mdash; The Bharat Post (@TheBharatPost__) <a href="https://x.com/TheBharatPost__/status/2094705754305667251?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

அம்பாஜோகாயை சேர்ந்த 47 வயதான ரமாபாய் ரன்வீர், தனது கணவர் இறந்த பின்னர் தனது ஒற்றை வருமானத்தில் தனது இரு மகள்களையும் வளர்த்து வருகிறார்.&nbsp;</p><p></p><p>
ரமாபாய் ரன்வீர் பல்வேறு வீடுகளுக்கு சென்று வீட்டு வேலை செய்யும் சமையல்காரராக பணியாற்றி வருகிறார்.
</p><p>
அவருடைய மகள்களில் ஒருவர் நாந்தேடில் பிசிஎஸ் படித்து வருகிறார், மற்றொருவர் அம்பாஜோகாயில் உள்ள ஞான்தீப் காவல் அகாதமியில் காவலர் பணிக்குத் தயாராகி வருகிறார்.
</p><p>
இவர்களின் கல்வி செலவை சமாளிக்க போராடி வரும் ரமாபாய் ரன்வீர், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ரூ.3,000 பரிசு கிடைக்கும் அதை கல்வி செலவிற்கு பயன்படுத்தலாம் என முடிவெடுத்து இந்த போட்டியில் கலந்து கொண்டார். </p><p>

மற்றவர்கள் டிராக்சூட்கள், தொழில்முறை ஓட்டக் காலணிகளை அணிந்து ஓடும் போது, ரமாபாய் சேலை அணிந்து கொண்டும் சாதராண செருப்புடன் ஓட தொடங்கினார். </p><p>

ஆனால், செருப்புகள் ஓட முடியாமல் வலுக்கியபடி இருந்த நிலையில், அதனை கழற்றி கையில் பிடித்து கொண்டு வெறும் காலுடன் 3 கி.மீ தூரம் ஓடி முதல் நபராக போட்டியை நிறைவு செய்தார்.</p><p> 

ஆனால், அவருக்கு வழக்கமான ரூ.3,000 பரிசை விட கூடுதலாக ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T06:10:46+00:00</updated>
        </entry>
    </feed>
