<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-17T18:39:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sixth-heatwave-people-hit-with-1786990554"></link>
            <id>https://news.lankasri.com/article/sixth-heatwave-people-hit-with-1786990554</id>
            <summary type="text">Another 1.4m people are hit with hosepipe ban: ஆறாவது வெப்ப அலை வீசவுள்ள நிலையில், மேலும் 1.4 மில்லியன் மக்கள் குழாய் நீர் பயன்பாட்டுத் தடையைச் சந்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Another 1.4m people are hit with hosepipe ban: ஆறாவது வெப்ப அலை வீசவுள்ள நிலையில், மேலும் 1.4 மில்லியன் மக்கள் குழாய் நீர் பயன்பாட்டுத் தடையைச் சந்திக்கின்றனர்.
</p><p>செப்டம்பர் மாதம் பிரித்தானியா இந்த ஆண்டின் ஆறாவது வெப்ப அலைக்கு இலக்காகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><h2>சராசரிக்கு மேல்</h2><p>
</p><p>பரவலான வறட்சிக்கு மத்தியில் நாடு மழைக்காக ஏங்கும் வேளையில், ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 14 வரையிலான காலகட்டத்திற்கான வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய கணிப்பின் அடிப்படையில், அக்காலகட்டத்தில் வெப்பநிலை ஒட்டுமொத்தமாக சராசரிக்கு மேல் இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e120af9-2e9f-4c62-82e4-ba9ec37a4111/26-6a834fdd5b11a.webp' /></p><p> </p><p>மேலும், பிரித்தானியாவின் தெற்குப் பகுதிக்கு அருகில் உயர் அழுத்த மையம் உருவாகக்கூடும் என்றும், அதே வேளையில் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் நிலையற்ற வானிலை உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதற்கிடையில், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வறண்ட, நிலையான வானிலை நிலவ சற்றே அதிக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>
மேலும், இந்தக் கோடையில் நிலவிய தீவிர வானிலை காரணமாக நாடு முழுவதும் ஐந்து வெப்ப அலைகள் ஏற்பட்டன; இவற்றில் இறுதியாக ஏற்பட்ட வெப்ப அலையின்போது, ​​பிரித்தானியாவில் இந்த ஆண்டின் மிக அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.</p><p></p><p> </p><p>ஆகஸ்ட் 13 அன்று கியூ கார்டன்ஸில் (Kew Gardens) 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தற்காலிகமாகப் பதிவானது. வெப்ப அலை என்பது ஆண்டின் அந்தப் பருவத்திற்கு எதிர்பார்க்கப்படும் இயல்பான வானிலையை விட அதிக வெப்பம் நிலவும் ஒரு நீண்ட காலப்பகுதியாகும்; </p><p>ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து குறைந்தது மூன்று நாட்களுக்கு வெப்ப அலைக்கான வரம்பு அளவிலோ அல்லது அதற்கு மேலோ பதிவாகும்போதே இது வெப்ப அலையாகக் கருதப்படுகிறது. </p><p>பிரித்தானியாவில் 2026-ஆம் ஆண்டின் கோடைக்காலம், பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து மிக வெப்பமானதாக அமையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் வெப்ப அலை குறித்த எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளது.</p><h2>செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல்</h2><p> </p><p>இந்த நிலையில், மற்றொரு நீர் நிறுவனமான 'வெசெக்ஸ் வாட்டர்' (Wessex Water), குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. </p><p>பாத், சோமர்செட், டோர்செட் மற்றும் வில்ட்ஷயர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 14 லட்சம் வாடிக்கையாளர்களுக்கும் இந்தத் தற்காலிக நடவடிக்கை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc825080-d56a-4861-a15d-5ac81f47d9d6/26-6a834fdca580b.webp' /></p><p> </p><p>வெசெக்ஸ் வாட்டர் நிறுவனம் கடைசியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1976-ல் தற்காலிகத் தடையை அமுல்படுத்தியிருந்தது. வெசெக்ஸ் வாட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான ரூத் ஜெபர்சன் தெரிவிக்கையில், அத்தியாவசியப் பயன்பாட்டிற்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவில்லை என்றாலும், இந்த சாதனை அளவிலான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், </p><p>விநியோக வலையமைப்பு முழுவதும் தண்ணீரை போதுமான வேகத்தில் கொண்டு சேர்ப்பதே எங்களுக்கு சவாலாக இருந்து வருகிறது என்றார். </p><p>வேறு ஒன்பது நீர் நிறுவனங்கள் பிரித்தானியாவில் சுமார் 27 மில்லியன் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளன, ஆனால் விரைவில் கார் கழுவும் நிலையங்கள் மற்றும் தனியார் நீச்சல் குளங்களிலும் இந்தத் தடைகள் விதிக்கப்படலாம் என்று அமைச்சர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T18:13:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-to-bomb-oman-1786984671"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-to-bomb-oman-1786984671</id>
            <summary type="text">Donald Trump threatens to bomb Oman: ஓமான் இடையூறு செய்தால், அதன் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Donald Trump threatens to bomb Oman: ஓமான் இடையூறு செய்தால், அதன் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
</p><p>ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தனது முயற்சிக்கு ஓமான் நாடு தடையாக நின்றால், அந்நாட்டின் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மிரட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43ff41fc-ff1d-407f-a8a9-8a65287c751b/26-6a8338e24b290.webp' /></p><p>
</p><p>ஓமான் குறுக்கிட்டால், அவர்களைக் குண்டுமழையால் சின்னாபின்னமாக்குவோம் என்று ட்ரம்ப் திங்களன்று ஃபாக்ஸ் நியூஸிடம் கூறியுள்ளார்.</p><p> 
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாரம்பரியமாக ஒரு முக்கிய மறைமுகத் தொடர்பாளராகச் செயல்பட்டு வரும், அமெரிக்காவின் நீண்டகால உத்திசார்ப் பங்காளியான ஓமானை நோக்கி, அவர் இதுபோன்ற அச்சுறுத்தலை விடுப்பது இது இரண்டாவது முறையாகும். </p><p>இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக போர் தொடங்கி, 
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், </p><p>ஈரானுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட இராஜதந்திர வாய்ப்புக்கான காலக்கெடு முடிந்து, இறுதி உடன்பாடு எதுவும் தென்படாத நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி கடும் விரக்தியில் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என்றே கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>ஆனால், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு தமக்கு அவசரம் இல்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான அந்த இரண்டு மாத கால அவகாசம், எந்தவொரு திருப்புமுனையும் இன்றி திங்களன்று முடிவடைந்தது. </p><p>போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ட்ரம்ப் தொடர்ச்சியாக கூறிவந்தாலும், அத்தகைய ஒரு திருப்புமுனை எதுவும் ஏற்படாத நிலையில், சமீப மாதங்களில் ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் பேசி வந்துள்ளார். </p><p>ஈரான் விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் ட்ரம்ப் நிர்வாகம், போரில் இருந்து வெளியேற முடியாமலும் திணறி வருகிறது. ஆனால், ஈரான் சரணடைய வேண்டும் என்ற கோரிக்கையை ட்ரம்ப் தற்போது முன்வைத்துள்ளார். </p><p>இருப்பினும்
ஈரான் மீது புதிய காலக்கெடுவை விதிக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். ஈரான் விவகாரத்தில் தாம் அவசரப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>கிட்டத்தட்ட ஆறு மாத கால சண்டையால் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருகிறது என்ற கவலைகளையும் ட்ரம்ப் நிராகரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72fd95b-6795-47f1-9d7d-63b2b2e369d1/26-6a8338e19b1e0.webp' /></p><p> </p><p>ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இதுவரை செலவிட்ட ஆயுதங்கள் வெறும் சிறு அளவு மட்டுமே என்றும் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறியுள்ளார். மேலும், ஜோ பைடன் நிர்வாகத்தால் மேம்பட்ட ஆயுதங்கள் பல உக்ரைனுக்கு வழங்கப்பட்டதால் சிறு நெருக்கடி ஏற்பட்டது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>இதனிடையே, ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஈரானும் ஓமானும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் முன்னேற்றம் ஏற்படுவதாக தகவல் வெளியான நிலையிலேயே, ஓமான் மீது குண்டுவீசப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். </p><p>அமெரிக்காவுடன் ஓமானுக்கு இருக்கும் பல தசாப்த கால இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளுக்கு மேலதிகமாக, 53 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த வளைகுடா நாடு, போரில் ஒரு மத்தியஸ்தப் பாத்திரத்தை வகித்துள்ளதுடன், ஈரானின் தாக்குதலுக்கும் உள்ளானது. </p><p>ட்ரம்பின் சமீபத்திய சீற்றத்தையும் மீறி, ஓமானுடன் பேச்சுவார்த்தைகள் தீவிரமாகத் தொடர்வதாக ஈரான் வெளிவிவகார அமைச்சகம் திங்களன்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T16:35:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டாவை முந்திய TVS - வரலாற்று சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tvs-overtakes-honda-in-july-scooter-sales-1786979288"></link>
            <id>https://news.lankasri.com/article/tvs-overtakes-honda-in-july-scooter-sales-1786979288</id>
            <summary type="text">TVS overtakes Honda in July scooter sales: ஸ்கூட்டர் விற்பனையில் TVS சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையில் ஜூலை 2026 மாதம் முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>TVS overtakes Honda in July scooter sales: ஸ்கூட்டர் விற்பனையில் TVS சாதனை படைத்துள்ளது.
</p><p>
இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையில் ஜூலை 2026 மாதம் முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது.
</p><p>
TVS மோட்டார் நிறுவனம், ஹோண்டா மோட்டார் &amp; ஸ்கூட்டர் இந்தியாவை (HMSI) முந்தி, ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eda28c9-b849-4c32-8b5b-67bcf1553742/26-6a8323daafc19.webp' /></p><h2>40 சதவீதம் அதிக&nbsp;விற்பனை</h2><p>ஜூலை மாதத்தில் மொத்தம் 7.98 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதில் TVS 2,56,675 யூனிட்களை விற்றது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகம்.
</p><p>
ஹோண்டா 2,33,337 யூனிட்களை மட்டுமே விற்றது. இது 12 சதவீதம் வீழ்ச்சி. இதனால் TVS, ஹோண்டாவை 23,338 யூனிட்கள் வித்தியாசத்தில் முந்தியது.</p><p></p><h2>சந்தைப் பங்கு</h2><p>TVS-இன் சந்தைப் பங்கு 28 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஹோண்டாவின் பங்கு 41 சதவீதத்திலிருந்து 29 சதவீதமாக குறைந்துள்ளது.</p><p><b>

TVS-இன் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்</b></p><p>ICE ஸ்கூட்டர்கள் (Jupiter, NTorq, Zest) - 1,97,289 யூனிட்கள் (23 சதவீதம் அதிகம்).
</p><p>
EV ஸ்கூட்டர்கள் (iQube, Orbiter) - 59,386 யூனிட்கள் (158 சதவீதம் அதிகம்).
</p><p></p><p>ஹோண்டாவின் Activa மற்றும் Dio மாடல்கள் 2,32,073 யூனிட்கள் விற்றன. இது 12 சதவீதம் வீழ்ச்சி. ஹோண்டாவின் EV விற்பனை 1,264 யூனிட்கள் மட்டுமே.</p><h2>

மற்ற நிறுவனங்கள்: </h2><ul><li>Suzuki (1,20,998 யூனிட்கள்)</li><li>Hero MotoCorp (61,347)</li><li> Bajaj Auto (48,684)</li><li>Yamaha (36,783)</li><li>Ather Energy (31,044)</li></ul><p>

ஜூலை மாதத்தில் மொத்த EV விற்பனை 1,70,243 யூனிட்கள். இது மொத்த ஸ்கூட்டர் விற்பனையின் 21 சதவீதம் ஆகும்.

இந்த சாதனை, இந்திய ஸ்கூட்டர் சந்தையில் TVS-இன் வலுவான நிலையை வெளிப்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T15:05:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[4,000 தங்க நாணயங்கள், தங்கக்கட்டிகள் - 18 வயது மாணவன் கண்டுபிடித்த புதையல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/belgian-student-finds-9-mn-euro-gold-treasure-1786978144"></link>
            <id>https://news.lankasri.com/article/belgian-student-finds-9-mn-euro-gold-treasure-1786978144</id>
            <summary type="text">பெல்ஜியத்தில் 18 வயது மாணவர் ஒருவர் தனது கோடை விடுமுறை காலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக 9 மில்லியன் யூரோ மதிப்புள்ள தங்கச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தில் 18 வயது மாணவர் ஒருவர் தனது கோடை விடுமுறை காலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக 9 மில்லியன் யூரோ மதிப்புள்ள தங்கச் செல்வத்தை கண்டுபிடித்துள்ளார்.</p><h2>கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியில் மாணவர்</h2><p>Sint-Gillis-Dendermonde பகுதியில் பழைய பீர் தொழிற்சாலை அருகே கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாணவர் கோபே (Kobe), முதலில் 1 யூரோ நாணயங்கள் கிடைத்ததாக நினைத்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2f37ea6-3823-46ab-8680-b25cc419b729/26-6a831f6340dcc.webp' /></p><p>ஆனால், விரைவில் அவர் மற்றும் அவரது சக தொழிலாளர்கள் தங்க நாணயங்கள் மற்றும் தங்கக்கட்டிகள் அடங்கிய பெரிய புதையலைக் கண்டுபிடித்தனர்.</p><p>
</p><h2> 4,000 தங்க நாணயங்கள் </h2><p>இந்த புதையல், பழைய வில்லாவின் அடித்தளத்தில் சுவருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையில் இருந்தது. பொலிஸார் வெளியிட்ட புகைப்படங்களில் 40 முதல் 49 தங்கக் கட்டிகள் மற்றும் சுமார் 4,000 தங்க நாணயங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>இந்த வில்லா, 1899-ஆம் ஆண்டு பீர் தொழிற்சாலை உரிமையாளர் தியோபிலஸ் வான் அச்ஷேக்காக கட்டப்பட்டது. 1970 வரை பீர் உற்பத்தி நடைபெற்ற இந்த இடம் தற்போது சமூக நல அமைப்பின் அலுவலகம் மற்றும் வீடுகளாக மாற்றப்படுகிறது.
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965aa44d-cf36-4e23-9a92-4a5ebac81691/26-6a831f62887f3.webp' /></p><h2>பெல்ஜிய சட்டப்படி...</h2><p>புதையல் தற்போது பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு, அதன் சட்டபூர்வ உரிமையாளர் யார் என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையதா அல்லது வான் அச்ஷே குடும்பத்தின் செல்வமாக இருக்கிறதா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
</p><p>பெல்ஜிய சட்டப்படி, கண்டுபிடிக்கப்பட்ட பொருளின் உரிமையாளர் வெளிப்பட சில காலம் வழங்கப்படும். அதன் பிறகு, கண்டுபிடிப்பவருக்கும் நில உரிமையாளருக்கும் உரிமை வழங்கப்படும். கோபே மற்றும் அவரது குழுவினர் புத்தியை பொலிசாரிடம் ஒப்படைத்ததால், எதிர்காலத்தில் அவர்களுக்கு “finder’s reward” வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T14:46:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை பட்டியலில் இணைந்த ஜடேஜா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ravindra-jadeja-reach-350-wicket-4000-runs-in-test-1786976300"></link>
            <id>https://news.lankasri.com/article/ravindra-jadeja-reach-350-wicket-4000-runs-in-test-1786976300</id>
            <summary type="text">jadeja test record: டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா சாதனை

காலியில் நடைபெற்று வரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>jadeja test record: டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார். </p><h3>

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா சாதனை</h3><p>

காலியில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, 284 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e567392b-785f-4a38-872c-da297e249118/26-6a83182e9eb53.webp' /></p><p>
இதில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 3 விக்கெட்களை கைப்பற்றினார்.&nbsp;</p><p></p><p>
இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்களை கைப்பற்றிய 5வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d005847b-cae4-49d4-a107-126d9d56c8c8/26-6a83182dec605.webp' /></p><p>

முன்னதாக இந்த பட்டியலில் கபில்தேவ்,ஹர்பஜன் சிங், அணி கும்பிளே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் உள்ளனர். </p><p>

மேலும், டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்கள் மற்றும் 4000 ஓட்டங்கள் எடுத்துள்ள உலகின் 4வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். </p><p>

இந்த சாதனை பட்டியலில், இந்தியாவின் கபில் தேவ், இங்கிலாந்தின் இயான் போத்தம், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோர் உள்ளனர். </p><p>

இதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் கைப்பற்றியுள்ள 3வது இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். </p><p>

 433 விக்கெட்டுகளுடன் இலங்கையின் ரங்கனா ஹெராத் முதலிடத்திலும், 362 விக்கெட்டுகளுடன் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி 2வது இடத்திலும் உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T14:20:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[365 நாட்கள் செல்லுபடியாகும் - சவுதி அரேபியாவின் புதிய உம்ரா விசா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-clarifies-one-year-umrah-visa-rules-1786975630"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-clarifies-one-year-umrah-visa-rules-1786975630</id>
            <summary type="text">Saudi clarifies One-Year Umrah Visa rules: சவுதி அரேபியா, உம்ரா பயணிகளுக்கான புதிய ஒரு வருட பலமுறை நுழைவு விசா (one-year multiple-entry visa) விதிகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Saudi clarifies One-Year Umrah Visa rules: சவுதி அரேபியா, உம்ரா பயணிகளுக்கான புதிய ஒரு வருட பலமுறை நுழைவு விசா (one-year multiple-entry visa) விதிகளை தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>இந்த விசா 365 நாட்கள் செல்லுபடியாகும். ஆனால், மொத்தம் 90 நாட்கள் மட்டுமே சவுதி அரேபியாவில் தங்க அனுமதி வழங்கப்படும்.
</p><p>
ஒவ்வொரு பயணத்திற்கும் தனித்த சேவைப் பேக்கேஜ் (Nusuk platform மூலம்) மற்றும் உம்ரா அனுமதி (Nusuk app மூலம்) பெறுவது கட்டாயமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c191bcc8-2112-43dd-b5b6-5de2d3c6b473/26-6a8315d221238.webp' /></p><p>பயணிகள் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறிய பின், மீண்டும் நுழைய விரும்பினால் புதிய பேக்கேஜ் மற்றும் அனுமதி பெற வேண்டும்.
</p><p>
முக்கியமாக, ஹஜ் 2027 காலத்தில் (1 Dhu Al-Qi’dah - 13 Dhu Al-Hijjah) இந்த விசா செல்லுபடியாக இருந்தாலும், பயணிகள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். ஹஜ் காலத்தில் உம்ரா விசா பயன்படுத்த முடியாது என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p></p><p>இந்த புதிய விதிகள், உம்ரா பயணிகளை திட்டமிட்ட முறையில் பயணிக்க ஊக்குவிக்கின்றன. பயணிகள் தங்கள் 90 நாள் வரம்பை பல பயணங்களில் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் புதிய சேவைப் பேக்கேஜ் மற்றும் அனுமதி பெற வேண்டியிருப்பதால், முன்கூட்டியே திட்டமிடுவது அவசியமாகிறது.
</p><p>
சவுதி அதிகாரிகள், இந்த விதிகள் பயணிகளின் வசதிக்கும், ஹஜ் காலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த அறிவிப்பு, உலகம் முழுவதும் உம்ரா பயணிகளை பாதிக்கும் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து அதிகமானோர் உம்ரா பயணம் மேற்கொள்வதால், இந்த விதிகள் அவர்களுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T14:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயார் டயானாவை கௌரவிக்க வாழ்நாள் முழுவதும் உறுதிமொழி: ஹரி, வில்லியம் குறித்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-and-william-lifelong-pledge-for-diana-1786974105"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-and-william-lifelong-pledge-for-diana-1786974105</id>
            <summary type="text">பிரித்தானிய இளவரசர்கள் ஹரி, வில்லியம் ஆகியோர் தங்கள் மறைந்த தாயார் டயானாவை ஒன்றாக கௌரவிப்பதாக உறுதிமொழி எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

பிரித்தானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய இளவரசர்கள் ஹரி, வில்லியம் ஆகியோர் தங்கள் மறைந்த தாயார் டயானாவை ஒன்றாக கௌரவிப்பதாக உறுதிமொழி எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p> 

பிரித்தானிய இளவரசர்கள் ஹரி மற்றும் வில்லியம் ஆகியோர் இடையே மன வருத்தங்கள் இருந்தாலும், மறைந்த அவர்களின் தாயார் இளவரசி டயானாவை ஒன்றாக கௌரவிப்பதாக வாழ்நாள் முழுவதும் உறுதிமொழி எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.&nbsp; </p><h2>வாழ்நாள் முழுவதும் உறுதிமொழி </h2><p> 

பிரித்தானிய இளவரசர்கள் பற்றிய Finding Freedom என்ற வரலாற்று நூலின் ஆசிரியர்கள் ஓமிட் ஸ்கோபி மற்றும் கரோலின் துராண்ட். 

இவர்கள் தற்போது இளவரசர்கள் ஹரி மற்றும் வில்லியம் குறித்த தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac38118e-a066-4cc8-b13a-b71c0a39a8e3/26-6a8310e6ae764.webp' />&nbsp;</p><p></p><p>

இளவரசர் ஹரியின் நெருங்கிய நண்பர் ஒருவருடனான உரையாடலை ஆசிரியர்கள் விவரித்துள்ளனர். </p><p>

அதாவது, 'இரு சகோதரர்களும் தங்கள் தாயின் பாரம்பரியத்தைத் தொடர்வதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளனர். </p><p>

மேலும், எந்த அளவு மன வருத்தங்களும் அதற்கு ஒருபோதும் தடையாக இருக்காது' என குறித்த நபர் தி இன்டிபென்டன்ட் பத்திரிகை மூலம் தெரிவித்தார். </p><p>

ஹரி மற்றும் வில்லியம் ஆகியோர் இடையே மன வருத்தங்கள் இருந்தாலும், மறைந்த அவர்களின் தாயார் இளவரசி டயானாவை ஒன்றாக கௌரவிப்பதாக வாழ்நாள் முழுவதும் உறுதிமொழி எடுத்துள்ளதாகவும் அவர் கூறியதாக தெரிய வந்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T13:45:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய மின்சார வரி திட்டம் - ஜேர்மனி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-opposes-eu-electricity-tax-plan-1786973356"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-opposes-eu-electricity-tax-plan-1786973356</id>
            <summary type="text">Germany opposes EU electricity tax plan: ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றிய மின்சார வரி திட்டம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மனி எதிர்ப்புஐரோப்பிய ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany opposes EU electricity tax plan: ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றிய மின்சார வரி திட்டம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2>

ஜேர்மனி எதிர்ப்பு</h2><p>ஐரோப்பிய ஆணையம் (European Commission) முன்வைத்துள்ள புதிய மின்சார வரி திட்டத்திற்கு ஜேர்மனி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த திட்டம், இயற்கை எரிவாயுவை விட மின்சாரத்திற்கு குறைந்த வரி விதிக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், ஜேர்மனி இதை தேசிய வரி மற்றும் பட்ஜெட் சுயாட்சியில் நேரடி தலையீடு எனக் கருதுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05763311-2d9d-4a79-b76b-378551af9f39/26-6a830e38e7889.webp' /></p><h2>தேசிய சுயாட்சிக்கு பாதிப்பு</h2><p>ஜேர்மனியின் நிதியமைச்சக இயக்குநர் பாஸ்டியன் ஃப்லெய்க் கையெழுத்திட்ட கடிதத்தில், “இந்த முன்மொழிவு, EU வரி சட்டத்தில் உள்ள ஒருமித்த ஒப்புதல் விதியை மீறுகிறது. இது தேசிய சுயாட்சியை பாதிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

ஐரோப்பிய ஒன்றியம், 2040-க்குள் 46 சதவீத மின்சார பயன்பாட்டை அதிகரிக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களை குறைக்க முயற்சிக்கிறது.
</p><p>
ஆனால், தற்போது மின்சார விலை, எரிவாயுவை விட 3 முதல் 5 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால், வீடுகள் மற்றும் தொழில்கள் சுத்தமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் சிரமம் அடைகின்றன.
</p><p></p><p>மின்சார வரி தொடர்பான விவாதம் Energy Tax Directive சட்டத்தின் கீழ் நடத்தப்பட வேண்டும் என ஜேர்மனி வலியுறுத்துகிறது.</p><p> அதேசமயம், EU ஆணையம், மின்சாரத்தை அதிகம் பயன்படுத்த மக்கள் ஊக்குவிக்க, வரி சலுகைகளை electricity market regulation மூலம் கொண்டு வர முயற்சிக்கிறது.
</p><p>
இந்த விவகாரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் மின்சார மாற்ற முயற்சிகளுக்கும், உறுப்புநாடுகளின் சுயாட்சிக்கும் இடையே பெரிய அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T13:33:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்பியை கடித்த பாம்பு - கன்னத்தில் 150 முறை அறைந்து உயிரை காப்பாற்றிய அண்ணன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/up-man-slaps-brother-150-times-after-snake-bite-1786971194"></link>
            <id>https://news.lankasri.com/article/up-man-slaps-brother-150-times-after-snake-bite-1786971194</id>
            <summary type="text">up man slaps brother 150 times after snake bite : தம்பியை பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக அவர் சுயநினைவுடன் இருக்க அவரது கன்னத்தில் 150 முறை அறைந்து அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>up man slaps brother 150 times after snake bite : தம்பியை பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக அவர் சுயநினைவுடன் இருக்க அவரது கன்னத்தில் 150 முறை அறைந்து அவர் உயிரை காப்பாற்ற அவரது அண்ணன் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
</p><h3>
பாம்பு கடித்த தம்பியை 150 முறை அறைந்த அண்ணன்
</h3><p>
உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி பகுதியிலுள்ள ஜோதி நகரில் 21 வயதான அருண் என்பவர் தனது அண்ணனின் வயலில் பயிர்களுக்குத் தண்ணீர் ஊற்றச் சென்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fec0820-d1fa-4660-97d0-629378aba45e/26-6a83043bdb804.webp' /></p><p>
மதியம் சுமார் 2 மணியளவில், அருண் வைக்கோல் மூட்டையை எடுத்துக்கொண்டிருந்தபோது, ​​அதற்குள் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது.</p><p> 

அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியதும் உடனடியாக அருணை அவரது சகோதரர் ஆகாஷ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.&nbsp;</p><p></p><p> 

பாம்பு விஷம் அவரது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கத் தொடங்கியதால், அவர் மிகுந்த தூக்கக் கலக்கத்துடன் காணப்பட்டதுடன், அடிக்கடி கண்கள் மூடிக்கொண்டிருந்தார்.</p><p>

சிகிச்சைக்கு அவர் விழித்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் அவரது குடும்பத்தினருக்கு அருவுறுத்தியதன்படி, அவர் கண் மூடும் போதெல்லாம் அவரது சகோதரர் கன்னத்தில் மீண்டும் மீண்டும் அறைந்து அவரை விழித்திருக்க வைத்தார். </p><p>

ஆகாஷ் சுமார் ஒரு மணி நேரத்தில் அருணை சுயநினைவுடன் வைத்திருக்க 150 முறைக்கு மேல் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
</p><p>
அருணின் உடல் முழுவதும் விஷம் கணிசமாகப் பரவியிருந்ததாகவும், 15 விஷமுறிவு ஊசிகளைச் செலுத்தியதாகவும் மருத்துவமனை குழுவினர் தெரிவித்தனர்.</p><p>

தனது அண்ணன் கன்னத்தில் அறைந்து சுயநினைவுடன் வைத்திருந்ததாலும், மருத்துவர்களின் உடனடி சிகிச்சையாலும் அருண் ஆபத்தான கட்டத்திலிருந்து தாண்டி உயிர் பிழைத்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T13:15:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது மன்னிப்புக் கோர இருக்கும் ஹரி: இளவரசர் வில்லியம் நிலைப்பாடு என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-william-react-harry-public-apology-1786972040"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-william-react-harry-public-apology-1786972040</id>
            <summary type="text">இளவரசர் ஹரி பொது மன்னிப்புக் கோரினாலும், இளவரசர் வில்லியம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளவரசர் ஹரி பொது மன்னிப்புக் கோரினாலும், இளவரசர் வில்லியம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>


பிரித்தானிய இளவரசரான ஹரி, மீண்டும் ராஜ குடும்பத்துடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் பொது மன்னிப்புக் கோர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
வரவேற்கும் தந்தை
</h3><p>
ஹரியின் தந்தையான மன்னர் சார்லசைப் பொருத்தவரை, தன் மகனை மீண்டும் வரவேற்பது அவருக்கு மகிழ்ச்சியே.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c631ab2f-62d0-4f1b-9a93-de48be5e45e9/26-6a83078a657fa.webp' /></p><p>
காரணம் என்னவென்றால், ஹரியின் பிள்ளைகளான தனது பேரப்பிள்ளைகளை சந்திக்க அவர் ஆவலாக உள்ளார்.&nbsp;</p><p></p><p>ஆகவே, மீண்டும் ஹரி ராஜ குடும்பத்துடன் ஒப்புரவானால், அது மன்னருக்கு மகிழ்ச்சியைத்தான் ஏற்படுத்தும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab090944-4538-4593-a538-56c525b9bab7/26-6a83078b197c9.webp' /></p><p>
ஆனால், இளவரசர் வில்லியமைப் பொருத்தவரை, ஹரி பொது மன்னிப்புக் கோருவதால் அவரிடம் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Grant Harrold என்பவர்.</p><p>

நான் கேள்விப்பட்டவரை, இளவரசர் வில்லியம் ஹரியுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளார் என்கிறார் Grant Harrold.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T13:08:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் முதல் சதம் விளாசிய இலங்கை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sonal-dinsha-maiden-test-ton-sl-avoid-follow-on-1786970540"></link>
            <id>https://news.lankasri.com/article/sonal-dinsha-maiden-test-ton-sl-avoid-follow-on-1786970540</id>
            <summary type="text">இலங்கையின் சோனல் தினுஷா இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

காலியில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சோனல் தினுஷா இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

காலியில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர் சோனல் தினுஷா சதம் அடித்தார்.</p><h2>இந்திய அணி 462 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்</h2><p>காலி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. தேவ்தத் படிக்கல் 167 ஓட்டங்களும், கே.எல்.ராகுல் 82 ஓட்டங்களும், துருவ் ஜுரேல் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/265a2214-bc21-412f-bc6b-2b93859cc89b/26-6a8302f2e8654.webp' />&nbsp;</p><p></p><p>பிரபத் ஜெயசூரியா 4 விக்கெட்டுகளும், கேஷாரா நுவந்தா 3 விக்கெட்டுகளும், அஸிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
</p><p>
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் நிஷான் பெர்னாண்டோ டக்அவுட் ஆனார். </p><p>தினேஷ் சண்டிமல் 4 ஓட்டங்களில் வெளியேற, உதாரா 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கமிந்து மெண்டிஸ் (14), தனஞ்செய டி சில்வா (21) ஆகியோர் சொதப்பினர். எனினும் சோனால் தினுஷா, நிரோஷன் திக்வெல்ல வலுவான கூட்டணி அமைத்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65024ad4-6f1a-403a-9c85-35c156343b40/26-6a8301aedfaa7.webp' /></p><h2>சோனல் தினுஷா சதம்
</h2><p>அரைசதம் அடித்த நிரோஷன் திக்வெல்ல (Niroshan Dickwella) 80 ஓட்டங்களில் அவுட் ஆனார். இதற்கிடையில் சோனல் தினுஷா (Sonal Dinusha) தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். </p><p>அவரது சதத்தின் மூலம் 'ஃபாலோ-ஆன்' செய்வதை இலங்கை அணி தவிர்த்தது.

100 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தினுஷா ஆட்டமிழக்க, இலங்கை அணி 284 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 178 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.&nbsp;&nbsp;</p><p>மானவ் சுதர் 4 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">FIRST OF MANY! 💯<a href="https://x.com/hashtag/SLvIND?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SLvIND</a> <a href="https://t.co/OlySxWBTCM">pic.twitter.com/OlySxWBTCM</a></p>&mdash; Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) <a href="https://x.com/OfficialSLC/status/2089315468209426447?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T12:39:52+00:00</updated>
        </entry>
    </feed>
