<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-27T04:22:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... பிரித்தானியச் சிறுமி உட்பட 400 வெளிநாட்டவர்கள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flash-flood-british-citizens-1787801788"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flash-flood-british-citizens-1787801788</id>
            <summary type="text">Nepal flash flood British citizens missing: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 13 வயது சிறுமி உட்பட பல பிரித்தானியக் குடிமக்கள் மாயம்.
நேபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flash flood British citizens missing: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 13 வயது சிறுமி உட்பட பல பிரித்தானியக் குடிமக்கள் மாயம்.</p><p>
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 13 வயது சிறுமி உட்பட 33 பிரித்தானியக் குடிமக்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fe8b3b3-450c-4654-a72a-58060445ee19/26-6a8fb0be941d6.webp' /></p><p>
</p><p>புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை சுமார் 8:30 மணியளவில், போட்டே கோஷி ஆற்றின் திபெத்தியப் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மாயாமானதாகக் கூறப்படும் வெளிநாட்டவர்களில் 33 பிரித்தானியர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>புதன்கிழமை, ஆல்பைன் ஈகோ ட்ரெக் என்ற சுற்றுலா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், காணாமல் போன பிரித்தானியர்களில் 13 வயது சிறுமி ஒருவரும், இரண்டு ஐரிஷ் குடிமக்களும் அடங்குவதாகத் தெரிவித்தது. </p><p>மேலும், பயணப் பதிவுகளின்படி, காணாமல் போன பிரித்தானியக் குடிமக்களில் 65, 64 மற்றும் 52 வயதுடைய மூன்று ஆண்களும்; 44, 47, 51, 60, 63, 63 மற்றும் 65 வயதுடைய ஏழு பெண்களும் அடங்குவர். </p><p>நேபாளத்தில் வழிகாட்டியுடனான சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களை ஏற்பாடு செய்யும் அந்த நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் நேபாளத்தைச் சேர்ந்த நான்கு சுற்றுலா வழிகாட்டிகளும் (38, 35, 45 மற்றும் 29 வயதுடையவர்கள்) காணாமல் போயுள்ளதை உறுதிப்படுத்தியது. </p><p>மட்டுமின்றி, கைலாஷ் மலைக்கு ஒன்பது நாள் பயணமாகச் சென்றிருந்த அவர்கள், நேபாளத்திலிருந்து திபெத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தபோது, ​​திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் எல்லையில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இதனிடையே, காணாமல் போனவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் எந்த நாட்டினர் என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் இதுவரை 157 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>நேபாளம் மற்றும் திபெத் இடையிலான இமயமலை எல்லையில் மண் மற்றும் பாறைகளால் ஆன சுவர் ஒன்று ஆற்றில் சரிந்து விழுந்ததாகவும், இதனால் நேபாளப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தும் வகையிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>நேபாளத்தில் வீடுகள், சாலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன; அதேவேளையில், எல்லைப் பகுதி நிலவழிப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஜிரோங் (Gyirong) மாவட்டத்தில் சிலர் காணாமல் போனதையடுத்து, திபெத் அதிகாரிகள் பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். </p><p>இந்த நிலையில், நிலநடுக்கம் ஒன்று பனிச்சரிவைத் தூண்டிவிட்டு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக நேபாள வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4aad5f6-96f0-4649-933c-8d67dc844124/26-6a8fb0bf4afbb.webp' /></p><p> </p><p>இதனிடையே, நீர்மின் நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த எட்டு தென் கொரியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 10 பேர் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>நேபாளத்தின் ரசுவா மாவட்டம் மற்றும் போட்டே கோஷி, திரிசூலி ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், தேவைப்பட்டால் உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறும் உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p> பார்வையாளர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் பயண முகவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். வரும் நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தவர்கள் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>இதனிடையே, காத்மாண்டுவில் உள்ள பிரித்தானிய தூதரகம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை உள்ளூர் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியது.
</p><p>அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், பின்லாந்து, பிரான்ஸ், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் தூதரகங்கள் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், </p><p>ராசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கு தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T03:33:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாவது வெள்ள அபாயம் - நேபாளத்தில் மீண்டும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-faces-second-flood-warning-by-icimod-1787785613"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-faces-second-flood-warning-by-icimod-1787785613</id>
            <summary type="text">Nepal faces second flood warning: நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம் இருப்பதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இரண்டாவது வெள்ள அபாயம்நேபாளத்தின் ரசுவா ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal faces second flood warning: நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம் இருப்பதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
</p><h2>
இரண்டாவது வெள்ள அபாயம்</h2><p>நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளம் இன்னும் முழுமையாக அடங்கவில்லை.</p><p> 

இப்போது, காத்துமாண்டுவை தலைமையிடமாகக் கொண்ட International Centre for Integrated Mountain Development (ICIMOD) நிறுவனம், “இரண்டாவது வெள்ளம் ஏற்படும் அபாயம் மிகுந்துள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p></p><p>ஆகஸ்ட் 26 அன்று, பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம், Bhote Koshi மற்றும் Trishuli ஆற்றுப் பகுதிகளை கடுமையாக பாதித்தது. சில நிமிடங்களில் நீர்மட்டம் 9 மீட்டர் வரை உயர்ந்ததால், கிராமங்கள், சாலைகள், பாலங்கள், கண்காணிப்பு நிலையங்கள் அனைத்தும் சேதமடைந்தன.
</p><p>
ICIMOD விஞ்ஞானிகள், “Lhende Khola பகுதியில் பனிச்சரிவு காரணமாக ஆற்றில் பெரிய அளவில் பனி மற்றும் கற்கள் விழுந்திருக்கலாம். இதனால் ஆற்றின் ஓட்டம் தடைபட்டு, தற்காலிக அணை உருவாகியிருக்கலாம். அது உடைந்தால், இரண்டாவது வெள்ளம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளனர்.
</p><p></p><p>நேபாள-சீனா எல்லைப் பகுதியில் இன்னும் தடுப்பு அணை இருப்பதாகவும், அது உடைந்தால் Jilong port மற்றும் கீழ்நிலப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 14 மாதங்களில் இதே பகுதியில் இரண்டாவது முறையாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நுவாகோட், தாடிங் மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

ICIMOD இயக்குநர் பெமா க்யாம்சோ, “நேபாள மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த திடீர் பேரழிவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எங்கள் பங்கு தொடரும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p>விஞ்ஞானிகள், “குளிர்பரப்பில் (Cryosphere) ஏற்படும் மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பனிச்சரிவு, பனிச்சரிவு அணைகள், நிலச்சரிவு போன்றவை மிக வேகமாக நடக்கின்றன. இதற்கு எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பு தேவை” என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், நேபாள அரசு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் வெளியேற்றம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T00:33:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 9 அடுத்த iPhone வெளியீடு: ஆப்பிள் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apple-sets-sept-9-date-for-next-iphone-launch-1787790923"></link>
            <id>https://news.lankasri.com/article/apple-sets-sept-9-date-for-next-iphone-launch-1787790923</id>
            <summary type="text">Apple sets next iPhone launch on Sept 9: ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை iPhone-ஐ வெளியிடும் நிகழ்ச்சியை 2026 செப்டம்பர் 9 அன்று நடத்தவுள்ளதாக அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apple sets next iPhone launch on Sept 9: ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை iPhone-ஐ வெளியிடும் நிகழ்ச்சியை 2026 செப்டம்பர் 9 அன்று நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>
இந்த நிகழ்ச்சி, புதிய CEO ஜான் டெர்னஸ் (John Ternus) தலைமையில் நடைபெறுவதால், உலகம் முழுவதும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0798903a-f266-4ce2-8c93-061a99fd0ac0/26-6a8f864d648c6.webp' /></p><p>கடந்த சில மாதங்களாக, iPhone-இன் புதிய மாடல் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, மேம்பட்ட AI அம்சங்கள், சிறந்த கமெரா தொழில்நுட்பம், மற்றும் அதிக திறன் கொண்ட பேற்றரி ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

மேலும், iPhone-இன் வடிவமைப்பில் சிறிய மாற்றங்களும், புதிய நிறங்களும் அறிமுகமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p></p><p>ஆப்பிள், தனது நிகழ்ச்சியை கூப்பர்டினோ, கலிபோர்னியா நகரில் உள்ள Apple Park-இல் நடத்த உள்ளது. உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாக காண்பிக்கப்படும்.
</p><p>
புதிய iPhone-இன் விலை மற்றும் விற்பனை திகதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், நிபுணர்கள், “இந்த முறை iPhone விலை சிறிது அதிகமாக இருக்கலாம். </p><p>அதே நேரத்தில், புதிய AI அம்சங்கள் மற்றும் மேம்பட்ட செயல்திறன் காரணமாக வாடிக்கையாளர்கள் அதை விரும்புவார்கள்” எனக் கூறுகின்றனர்.
</p><p>
ஆப்பிள் ரசிகர்கள், “டெர்னஸ் தலைமையில் வரும் முதல் iPhone எப்படியிருக்கும்?” என்ற கேள்வியுடன் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T00:32:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் தற்காலிக பாதை: ஈரான்-ஓமன் ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-oman-agree-temporary-hormuz-route-1787789640"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-oman-agree-temporary-hormuz-route-1787789640</id>
            <summary type="text">Iran-Oman agree temporary Hormuz route: ஈரான் மற்றும் ஓமன் இடையே புதிய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


புதிய பாதைஈரான் மற்றும் ஓமன், உலகின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran-Oman agree temporary Hormuz route: ஈரான் மற்றும் ஓமன் இடையே புதிய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><h2>

புதிய பாதை</h2><p>ஈரான் மற்றும் ஓமன், உலகின் முக்கியமான எரிபொருள் போக்குவரத்து வழியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில் புதிய தற்காலிக பாதையை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be18a338-3bda-4b8c-b07e-f811c41b2936/26-6a8f814a8f955.webp' /></p><h2>

தற்காலிக ஒப்பந்தம்</h2><p>ஈரான் துணை வெளிவிவகார அமைச்சர் காஜெம் கரிபாபாதி, “புதிய பாதையின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் ஈரான் நிலப்பரப்பில் இருக்கும். இது தற்காலிக ஒப்பந்தம் மட்டுமே” எனக் கூறியுள்ளார். </p><p>இந்த பாதை சுமார் 11 கிலோமீட்டர் அகலமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
ஓமன் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அல்-புசைதி, “இந்த பாதையை விரைவில் அறிவிப்போம். எதிர்காலத்தில் நிரந்தர தீர்வும் உருவாகும்” எனக் கூறியுள்ளார்.
</p><p></p><p>கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால் உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. </p><p>ஜூன் மாதத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானாலும், அதில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை அமெரிக்கா பின்பற்றவில்லை என ஈரான் குற்றம்சாட்டுகிறது.</p><p>

ஈரான், “அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தால், ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது” எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், “அமெரிக்கா விதிக்கும் புதிய பொருளாதார தடைகள் தோல்வியடையும்” எனவும் எச்சரித்துள்ளது.
</p><p></p><p>இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையில் இன்னும் கடல் கண்ணிவெடிகள் உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. </p><p>அமெரிக்கா, “கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன” எனக் கூறினாலும், ஈரான் அதை மறுத்து, “அமெரிக்க கப்பல்கள் எளிதில் இலக்காக மாறும்” என எச்சரித்துள்ளது.
</p><p>
இந்த ஒப்பந்தம், உலக எரிபொருள் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T00:11:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான நாடுகளில் ஒன்று - கனடாவை கடுமையாக தாக்கிய டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/worst-country-trump-slams-canada-amid-trade-war-1787784019"></link>
            <id>https://news.lankasri.com/article/worst-country-trump-slams-canada-amid-trade-war-1787784019</id>
            <summary type="text">Trump slams Canada amid trade war escalation: கனடாவை மோசமான நாடுகளில் ஒன்று என டிரம்ப் கடுமையாக தாக்கியுள்ளார்.

அமெரிக்கா-கனடா இடையிலான வர்த்தக உறவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump slams Canada amid trade war escalation: கனடாவை மோசமான நாடுகளில் ஒன்று என டிரம்ப் கடுமையாக தாக்கியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா-கனடா இடையிலான வர்த்தக உறவுகள் மீண்டும் கடுமையான நிலைக்கு சென்றுள்ளன.</p><p> அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கனடாவை “உலகில் ஒப்பந்தம் செய்ய மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று” எனக் கூறியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/542d8bdf-5d03-4802-86c9-469c2a0a7a05/26-6a8f6b5534a53.webp' /></p><h2>இறுதி நேரத்தில் முறிந்த ஒப்பந்தம்</h2><p>கடந்த வாரம் இரு நாடுகளும் புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, இறுதி நேரத்தில் ஒப்பந்தம் முறிந்தது. இதனால் அமெரிக்கா, கனடாவின் சில முக்கிய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தது. </p><p>அதற்கு பதிலாக கனடா, நூற்றுக்கணக்கான அமெரிக்கப் பொருட்களுக்கு அதே அளவு வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது.</p><p></p><p>
</p><h2>
டிரம்ப்&nbsp;குற்றம்சாட்டு</h2><p>டிரம்ப், “கனடா எங்களை ஒரு மாநிலம் போல பயன்படுத்துகிறது. ஆனால் அவர்கள் அரசே அல்ல. அவர்கள் எங்களை பல ஆண்டுகளாக தவறாக பயன்படுத்தி வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார். </p><p>மேலும், “நாம் அவர்களுடன் வர்த்தகம் செய்யாமல் இருந்தாலும் பெரிய பாதிப்பு இல்லை. சில சிரமங்கள் இருந்தாலும், வேறு நாடுகளில் இருந்து பொருட்களை வாங்க முடியும்” எனக் கூறினார்.
</p><p></p><p>இந்த நிலைமை குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி, “அமெரிக்கா இறுதி நேரத்தில் கூடுதல் நிபந்தனைகளைச் சேர்த்ததால் ஒப்பந்தம் முறிந்தது” என விளக்கம் அளித்தார். </p><p>ஆனால் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், “கனடா தான் காரணம். அவர்கள் கடைசி நேரத்தில் அநியாயமான கோரிக்கைகளை வைத்தனர்” எனக் கூறினார்.</p><p>
</p><h2>
மேலும் சர்ச்சை..</h2><p>இந்நிலையில், டிரம்ப் தனது பேட்டியில் “Lake Ontario-வை Lake America என்று பெயர் மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த வர்த்தக போர் காரணமாக, இரு நாடுகளிலும் பொருட்களின் விலை உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா-கனடா உறவுகள் மீண்டும் சிக்கலான நிலைக்கு சென்றுள்ளதால், உலக வர்த்தக சந்தையிலும் அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T22:37:33+00:00</updated>
        </entry>
    </feed>
