<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-06T00:22:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் 4 ஆண்களுக்கு நடந்த கத்திக்குத்து: 47 வயதுடைய பெண் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/stabbing-incident-in-covent-garden-woman-arrested-1785964131"></link>
            <id>https://news.lankasri.com/article/stabbing-incident-in-covent-garden-woman-arrested-1785964131</id>
            <summary type="text">லண்டனின் கோவென்ட் கார்டன் பகுதியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் கத்திக்குத்துலண்டனின் கோவென்ட் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனின் கோவென்ட் கார்டன் பகுதியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> லண்டனில் கத்திக்குத்து</h2><p>லண்டனின் கோவென்ட் கார்டன் பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 4 ஆண்களை பெண் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> எண்டெல் வீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.</p><p> அங்கு, கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த ஆண்களுக்கு போதுமான முதலுதவி சிகிச்சை வழங்கி மேல் சிகிச்சைக்காக அருகில் இருந்த சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b217636b-43a2-462c-ba87-a780ffae8142/26-6a73a66551b8e.webp' /></p><p></p><p> இதில், 34, 39, 42 மற்றும் 52 வயதுடைய நான்கு ஆண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக பெருநகர காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> அதிர்ஷ்டவசமாக தாக்குதலில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என்றும், இரண்டு பேர் ஏற்கனவே வீடு திரும்பி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2> 47 வயதுடைய பெண் கைது</h2><p>கத்திக்குத்து தாக்குதலை நடத்திய 47 வயதுடைய பெண் ஒருவரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.</p><p> கத்தி போன்ற ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்தல், தாக்குதல் நடத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து ஒரு ஜோடி கத்திரிக்கோலை கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் மனநலம் சார்ந்த பிரச்சினை காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T22:51:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச குடும்பத்தின் முதல் பெண்., டென்மார்க் ராணுவத்தில் இணைந்த இளவரசி இசபெல்லா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/princess-isabella-joins-denmark-military-service-1785970272"></link>
            <id>https://news.lankasri.com/article/princess-isabella-joins-denmark-military-service-1785970272</id>
            <summary type="text">அரச குடும்பத்தில் இருந்து ராணுவ சேவையில் ஈடுபடும் முதல் இளவரசி என்ற பெருமையை இசபெல்லா பெற்றுள்ளார்.11 மாத கால இராணுவ சேவைடென்மார்க் நாட்டின் இளவரசி இச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச குடும்பத்தில் இருந்து ராணுவ சேவையில் ஈடுபடும் முதல் இளவரசி என்ற பெருமையை இசபெல்லா பெற்றுள்ளார்.</p><h2>11 மாத கால இராணுவ சேவை</h2><p>டென்மார்க் நாட்டின் இளவரசி இசபெல்லா(Princess Isabella) தன்னுடைய 11 மாத இராணுவ சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார்.</p><p>ஸ்லாகல்ஸ் நகரில் அமைந்துள்ள ஆண்ட்வோர்ஸ்கோவ்(Antvorskov Barracks) பீரங்கி படை தளத்தில் ஆகஸ்ட் 3ம் திகதி 19 வயது இளவரசியான இசபெல்லா தன்னுடைய இராணுவ கடமைக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c724670-f312-462f-b127-f7c50df616c6/26-6a73be62a67aa.webp' /></p><p> இதன் மூலம் டென்மார்க் அரச குடும்பத்தில் கட்டாய இராணுவ பணியில் ஈடுபடும் முதல் பெண் என்ற பெருமையை இளவரசி இசபெல்லா பெற்றுள்ளார்.</p><p></p><h2> சகோதரனை பின்தொடரும் இளவரசி</h2><p>மன்னர் பிரெடெரிக் எக்ஸ் மற்றும் ராணி மேரி ஆகியோரின் மூத்த மகளான இளவரசி இசபெல்லா, தன்னுடைய உயர்நிலைப் பள்ளியை முடித்துவிட்டு கோடைக்கால விடுமுறைக்கு பிறகு நேரடியாக கட்டாய இராணுவ சேவைக்காக இராணுவ முகாமிற்கு வந்து சேர்ந்துள்ளார்.</p><p> தன்னுடைய மூத்த சகோதரரும், பட்டத்து இளவரசருமான கிறிஸ்டியன், இராணுவ சேவையை தொடங்கிய அதே ராணுவ முகாமில் இளவரசி இசபெல்லாவும் இணைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/749b6f34-4e2f-4c51-8c9c-8bd7bc8ebc71/26-6a73be636abe7.webp' /></p><p> பட்டத்து இளவரசர் கிறிஸ்டியன் இந்த இராணுவ முகாமில் பயிற்சியை முடித்துவிட்டு தற்போது இரண்டாம் லெப்டினன்ட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.</p><p> டென்மார்க் அரச குடும்பத்தில் இராணுவ சேவை என்பது பாரம்பரியமாக கடைபிடித்து வந்தாலும், புதிதாக விரிவாக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் இராணுவ சேவையை நிறைவு செய்யும் முதல் அரச குடும்ப பெண் என்ற பெருமையை இளவரசி இசபெல்லா பெற்றுள்ளார்.</p><p>அத்துடன் இளவரசி இசபெல்லா எந்தவொரு ஊதியமும் இல்லாமல் இந்த இராணுவ சேவையை செய்ய தீர்மானித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL இ</a>ல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T22:51:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தவித்த 19 அகதிகள்: கேள்விக்குறியான 17 பேர்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/asylum-stuck-without-food-water-for-15-days-in-sea-1785960570"></link>
            <id>https://news.lankasri.com/article/asylum-stuck-without-food-water-for-15-days-in-sea-1785960570</id>
            <summary type="text">ஸ்பெயின் அருகே&amp;nbsp; 15 நாட்களாக உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தத்தளித்த 17 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக&amp;nbsp;அஞ்சப்படுகிறது. கடலில் தத்தளித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் அருகே&nbsp; 15 நாட்களாக உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தத்தளித்த 17 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக&nbsp;அஞ்சப்படுகிறது.</p><h2> கடலில் தத்தளித்த அகதிகள்</h2><p>வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயின் அருகே உள்ள பாலோரிக்&nbsp;தீவுகளுக்கு சென்ற படகு ஒன்று பழுதாகி நடுக்கடலில் நின்றதில், அதிலிருந்த 17 அகதிகள் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.</p><p> அந்த படகில் இருந்தவர்கள் கிட்டத்தட்ட 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி தவித்து வந்ததாக செவ்வாய்க்கிழமை ஸ்பெயின் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஸ்பெயின் கடற்படையினர், மல்லோர்கா தீவுக்கு அருகே தென்மேற்கே உள்ள 12.7 நாட்டிக்கல் தொலைவில் தத்தளித்த படகில் இருந்து இருவரை மீட்டனர்.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43a913ce-4ec7-4f3c-b32a-b5dc872b0d97/26-6a73987c3631d.webp' /></p><p> அவர்கள் இருவரும் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர்.</p><p> இந்நிலையில் அவர்கள் தகவலில், தங்களுடன் படகில் 19 பேர் பயணித்ததாகவும். என்ஜின் பழுதாகி 15 நாட்களாக நடுக்கடலில் படகு தத்தளித்ததன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் 17 பேர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><p> இதையடுத்து ஸ்பெயின் மீட்பு குழுவினர் அப்பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் தீவிரமான தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.</p><p></p><h2> அதிகரிக்கும் அகதிகள் நுழைவு</h2><p>ஸ்பெயினில் நாளுக்கு நாள் அகதிகள் வருகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.&nbsp; இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 211 படகுகளில் 3,935 பேர் அகதிகளாக பாலோரிக் தீவுக்கு வந்து இருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> கடந்த வாரம் கூட மொராக்கோவில் இருந்து கிட்டத்தட்ட 72,000 அகதிகள் செவுடாவிற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> இந்த எல்லையை கடக்கும் முயற்சியில் கிட்டத்தட்ட 75 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T20:48:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷேக் ஹசீனா நேரலை., ஷகிப் அல் ஹாசன் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/petrol-bomb-attack-at-shakib-al-hasans-house-1785962248"></link>
            <id>https://news.lankasri.com/article/petrol-bomb-attack-at-shakib-al-hasans-house-1785962248</id>
            <summary type="text">வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஷகிப் அல் ஹாசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷகிப் அல் ஹாசன் வீட்டின் மீது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஷகிப் அல் ஹாசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><h2> ஷகிப் அல் ஹாசன் வீட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல்</h2><p>வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் அவாமி லீக் கட்சியின் முன்னாள் எம்.பியுமான ஷகிப் அல் ஹாசனின் மூதாதையர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தியாவில் தங்கியுள்ள வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இணைந்து ஷகிப் அல் ஹாசன் காணொளி வாயிலாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3538239b-d691-4ee8-8b2e-ce22e96c3a8e/26-6a739f09a2976.webp' /></p><p> மகுரா நகரின் கேஷப்மோர் பகுதியில் அமைந்துள்ள ஷகிப் அல் ஹாசனின் மூதாதையர் வீட்டில் உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 8.45 மணிக்கு இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.</p><p>இதில் ஷகிப் அல் ஹாசனின் வீடு சேதமடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>இதையடுத்து தாக்குதல் தொடர்பாக அவாமி லீக் வெளியிட்ட அறிக்கையில், நவ பாசிசம் வங்கதேசத்தி சூழ்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.</p><p> காணொளி வாயிலாக அவரது நாட்டு மக்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, ஜனநாயகத்தை மீட்கும் முயற்சியில் என்னுடைய கைது நடவடிக்கை அல்லது மரணத்தை கூட எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef0af12d-d1b9-4a2c-b636-360b4ea7430b/26-6a739f0a6c53b.webp' /></p><p> அத்துடன் டிசம்பரில் நிச்சயம் வங்கதேசத்திற்கு திரும்புவேன் என்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T20:37:48+00:00</updated>
        </entry>
    </feed>
