<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-18T12:32:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் மிரட்டலுக்கு பிரித்தானியா பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-react-to-russia-warning-regard-ukraine-support-1787054926"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-react-to-russia-warning-regard-ukraine-support-1787054926</id>
            <summary type="text">UK responds after Russia warns of inevitable consequences: ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானிய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK responds after Russia warns of inevitable consequences: ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானிய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்ததற்கு பிரித்தானியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
</p><p> 

ரஷ்யா மீது தாக்குதல் நடத்த பிரித்தானிய தயாரிப்புகளான ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்துவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது ரஷ்யா.
</p><h3>
ரஷ்யா மிரட்டல்

லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி</h3><p> ஒன்றில், லண்டன் ஒருபக்கம் அமைதி வேண்டும் என கூறிக்கொண்டே மறுபக்கம் வேண்டுமென்றே உக்ரைன் பிரச்சினையை பெரிதுபடுத்த முனைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fa10ac9-5f55-4cf8-b0e8-15716c40c409/26-6a844b4f4e1f7.webp' /></p><p>
மேலும், லண்டனின் நடவடிக்கைகள் தவிர்க்கமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், ரஷ்யாவுடனான மோதலில் பிரித்தானியாவின் ஈடுபாடு எந்த அளவுக்கு அதிகமாகிறதோ, உக்ரைனுக்கு அது எந்த அளவுக்கு ஆதரவளிக்கிறதோ, அந்த அளவுக்கு பிரித்தானியா விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.</p><h3>

பிரித்தானியாவின் பதில்</h3><p>

இந்நிலையில், ரஷ்யாவின் மிரட்டலைத் தொடர்ந்து செய்தி ஒன்றை வெளியிட்ட பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர், பிரித்தானியா உக்ரைனுடன் தோளோடு தோளாக நிற்கிறது என்றும், ரஷ்யாவின் சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிராக உக்ரைன் தன்னைக் காத்துக்கொள்வதற்குத் தேவையான தளவாடங்களை உக்ரைனுக்குக் கொடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
அத்துடன், உக்ரைனிலும், பிரித்தானியா மற்றும் எங்கள் கூட்டாளிகளுக்கு எதிராகவும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நிற்பதில் இந்த அரசாங்கத்தின் உறுதியைப் பற்றி ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது பிரித்தானிய தரப்பு.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T12:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபோதையில் வாகனம் ஓட்டிய வார்னருக்கு அபராதம் - சிக்கலில் கேப்டன் பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cricketer-david-warner-fined-for-drunk-and-drive-1787054161"></link>
            <id>https://news.lankasri.com/article/cricketer-david-warner-fined-for-drunk-and-drive-1787054161</id>
            <summary type="text">david warner fined for drunk and drive: மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் டேவிட் வார்னருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

வார்னருக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>david warner fined for drunk and drive: மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் டேவிட் வார்னருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
</p><h3>
வார்னருக்கு அபராதம்
</h3><p>
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற PSL தொடரில், கராச்சி கிங்ஸ் அணியின் அணித்தலைவராக விளையாடினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/898d5369-99f6-40b0-af28-7dc67f626a9a/26-6a844852833b4.webp' /></p><p>

இந்த தொடரின் இடையே கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட அவுஸ்திரேலியாவிற்கு சென்ற டேவிட் வார்னர், சிட்னி புறநகரில் உள்ள மரோவ்பிரா பகுதியில் மது அருந்திவிட்டு கார் ஓட்டியுள்ளார்.
</p><p>
அங்கு காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் நடத்திய சுவாசப் பரிசோதனையின் போது, வார்னர் சட்ட வரம்பை விட 2 மடங்குக்கும் அதிகமான மது அளவுடன் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது.
</p><p>
கடந்த மாதம், சிட்னி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை வார்னர் ஒப்புக்கொண்டார்.&nbsp;</p><p></p><p>

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வார்னர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, 1,066 அவுஸ்திரேலிய டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1,01,912) அபராதம் விதிக்கப்பட்டது.
</p><p>
மேலும், டேவிட் வார்னர் இனி இன்டர்லாக் கருவியை பொருத்திய பின்னரே வாகனம் ஓட்ட வேண்டும். 

இந்த இன்டர்லாக் கருவியானது ஓட்டுநரின் உடலில் மதுவின் அளவை கண்டறிந்தால், கார் இயங்குவதைத் தடுத்துவிடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4daa958-aabb-4067-8c57-6376b260eee7/26-6a84485334076.webp' /></p><p>

வார்னர் அணித்தலைவராக உள்ள சிட்னி தண்டர் அணியை NSW கிரிக்கெட் நிர்வகிக்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான பிரச்சாரத்தில் NSW கிரிக்கெட் ஒரு மாநிலப் பங்காளராக உள்ளது.</p><p>

இந்த தண்டனைக்கு பின்னர் வார்னரின் கேப்டன் பதவி கூட பறிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:57:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி டெஸ்டில் முன்னெச்சரிக்கையாக பாதியில் விலகிய தினேஷ் சந்திமால்: மாற்றாக இளம் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dinesh-chandimal-shoulder-neck-injury-concussion-1787052211"></link>
            <id>https://news.lankasri.com/article/dinesh-chandimal-shoulder-neck-injury-concussion-1787052211</id>
            <summary type="text">Dinesh Chandimal concussion in galle test: காலி டெஸ்டில் ஃபீல்டிங்கின்போது காயமுற்றதால் இலங்கையின் மூத்த வீரரான தினேஷ் சந்திமால் பாதியில் விலகினார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Dinesh Chandimal concussion in galle test: காலி டெஸ்டில் ஃபீல்டிங்கின்போது காயமுற்றதால் இலங்கையின் மூத்த வீரரான தினேஷ் சந்திமால் பாதியில் விலகினார்.
</p><p>
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கையின் தினேஷ் சந்திமால் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். </p><h2>தினேஷ் சந்திமால் 
</h2><p>
காலியில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில், இலங்கையின் தினேஷ் சந்திமால் (Dinesh Chandimal) பவுண்டரியைத் தடுக்க பாய்ந்து சென்றபோது தோள்பட்டை மற்றும் கழுத்தில் காயமடைந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/085baa30-6a33-4577-8be6-c06a5ceb1ead/26-6a8441dc4bfe3.webp' />&nbsp;</p><p></p><p>

இதனால் பாதியில் விலகிய அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்கேன் செய்ய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.</p><p> 

Concussion சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பதிலாக பசிந்து சூரியபண்டார (Pasindu Sooriyabandara) நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
</p><p>
இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக Concussion மாற்று வீரராக பசிந்து சூரியபண்டாரா அணியில் இணைகிறார். 

ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அதில் உள் காயங்கள் ஏதுவுமில்லை என்பது தெரிய வந்தது" என தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98a61744-daad-4952-a384-b4226a48fb99/26-6a8441dd0b3cf.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[M9 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்து: திருமணத்திற்கு சென்ற 5 இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/m9-highway-car-accident-5-teen-dead-1787052052"></link>
            <id>https://news.lankasri.com/article/m9-highway-car-accident-5-teen-dead-1787052052</id>
            <summary type="text">M9 Highway Accident 5 teen dead: அயர்லாந்தில் கில்டேர் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் M9 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 இளைஞர் பரிதாபமாக உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>M9 Highway Accident 5 teen dead: அயர்லாந்தில் கில்டேர் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் M9 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><h2> சாலை விபத்து</h2><p>அயர்லாந்தின் கில்டேர் மாகாணத்தில் உள்ள&nbsp; M9 நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த கார் மோதியதில் இங்கிலாந்தில் திருமணத்திற்கு&nbsp;சென்ற 5 இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p>மேலும் 4 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக ஐரிஷ் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be89c724-5dba-4eca-bd3f-e37ab7ffbde2/26-6a8440165d02a.webp' /></p><p>ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த கோர விபத்தானது ஏற்பட்டுள்ளது. 5 இளைஞர்களுடன் வந்த BMW காரும், 3 பெண்கள் மற்றும் 7 வயது சிறுவன் வந்த Hyundai காரும்&nbsp; 74 மைல்களுக்கும் அதிகமான வேகத்தில் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த கோர விபத்தானது ஏற்பட்டுள்ளது.</p><p>சம்பவ இடத்திலேயே 5 இளைஞர்களும் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p> Hyundai காரில் பயணித்த அனைவரும் தற்போது தீவிரமான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> விபத்தில் பலியானவர்களின் விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, ஜெரமி ஓ பிரையன்(18), அலெக்ஸ் மெக்கார்த்தி(17), ஜோய் கார்தி(15), ஜாக் கென்னடி(17), கமில் புஸ்ட்கோவ்ஸ்கி(17) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5225af5b-81b6-478f-8707-c9614078afc4/26-6a844015a9dbe.webp' /></p><p> இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.</p><p> அதே சமயம் குறிப்பிட்ட வாகனம் எப்படி எதிர் திசையில் நுழைந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-18T11:21:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்த தமிழ் வம்சாவளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lakshmanan-meyyappan-record-youngest-ca-at-age16-1787044059"></link>
            <id>https://news.lankasri.com/article/lakshmanan-meyyappan-record-youngest-ca-at-age16-1787044059</id>
            <summary type="text">lakshmanan meyyappan as youngest ca: தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன் 16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

16 வயதில் CA ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>lakshmanan meyyappan as youngest ca: தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன் 16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். </p><h3>

16 வயதில் CA படம் பெற்ற தமிழ் வம்சாவளி</h3><p>

இந்தியாவை சேர்ந்த தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன்(lakshmanan meyyappan) என்பவர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். </p><p>

தனது 10 ஆம் வகுப்பு பள்ளி விடுமுறையின் போது, ஏசிசிஏ பட்டம் பெற்ற அவரது தாயார், அடிப்படை கணக்கியல் கருத்துக்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4e6e294-462a-4e72-9ca3-eb07748453fa/26-6a8420dc9012f.webp' /></p><p> 

இதன் மூலம், கணக்கியல் மீது ஆர்வம் கொண்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் சான்றிதழான ACCA தகுதியைப் பெற முடிவு செய்து, ஒரு ஆண்டிலே அதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, தகுதி பெற்றார். </p><p>

அத்துடன் நில்லாமல், முதலீட்டு மேலாண்மையில் மிகவும் மதிக்கப்படும் தகுதிகளில் ஒன்றான CFA பட்டயத்தையும் அவர் பெற்றார்.&nbsp;உலகளவில் 2 லட்சத்திற்கும் குறைவானவர்களே இந்த பட்டத்தை பெற்றுள்ளனர்.</p><p>
இதன் மூலம், 16 வயது 141 நாட்களில் பட்டய கணக்காளர் பட்டம் பெற்ற உலகின் இளம் வயது ஆண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் லக்ஷ்மணன் மெய்யப்பன்.&nbsp;</p><p></p><p> 

oxford brookes பல்கலைக்கழகத்தில் Applied science பிரிவில் Bachelor of Science பட்டம் பெற்றுள்ள அவர், தற்போது american university of sharjah ல் நிதி பிரிவில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.</p><p> 

தற்போது செஞ்சுரி ஃபைனான்சியல் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
</p><p>
இது குறித்து பேசிய அவர், "இந்த மைல்கல் எனக்கு மிகவும் முக்கியமானது, ஆனால் நான் தகுதிகளை ஒருபோதும் ஒரு பந்தயமாக அணுகியதில்லை. 

நிஜ உலகில் நிதி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதும், காலப்போக்கில் பொருத்தமானதாக இருக்கும் திறன்களை வளர்த்துக்கொள்வதுமே முக்கியமாக இருந்தது. </p><p>

வேகத்தை விட ஆர்வத்தால் கற்றல் உந்தப்படும்போது, ​​அதன் விளைவு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைகிறது. உலக சாதனை படைப்பது ஒருபோதும் தனது இலக்காக இருந்ததில்லை" என தெரிவித்துள்ளார்.</p><p> 

தனது தொழில்முறை தவிர்த்து ஓய்வு நேரங்களில் கைக்கடிகாரங்களை உருவாக்கி வருகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர்: ஜேர்மனி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-raids-warehouses-crack-down-smugglers-1787049903"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-raids-warehouses-crack-down-smugglers-1787049903</id>
            <summary type="text">Germany carries out raids to crack down on smugglers: சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஜேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany carries out raids to crack down on smugglers: சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஜேர்மனி ரெய்டுகள் நடத்தியுள்ளது.
</p><p>

ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த ஏதேதோ நடவடிக்கைகளை எடுத்துவருகிறது பிரித்தானியா.</p><p>

ஆனாலும், முழுமையாக சட்டவிரோத கடத்தலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
</p><h3>
காரணம் என்ன?
</h3><p>
அதாவது, பொதுவாக பிரான்சிலிருந்து சிறிய ரப்பர் படகுகள் மூலம் சட்டவிரோத புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbefd8f2-78ec-419d-b298-5550f88e820d/26-6a8437b0dc8fa.webp' /></p><p>

ஆனால், உண்மையில், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோத புலம்பெயர்வோர் நுழைவதன் பின்னணியில் பிரான்ஸ் மட்டும் இல்லை.
</p><p>
ஆம், பிரித்தானியாவுக்குள் நுழையும் சிறு ரப்பர் படகுகள், சீனாவில் தயாராகின்றன. அவை பல்கேரியா நில எல்லை வழியாக துருக்கிக்குள் கொண்டுவரப்படுகின்றன.&nbsp;</p><p></p><p>
அங்கிருந்து ட்ரக்குகள் மூலம் ஜேர்மனிக்குக் கொண்டுவரப்படும் இந்த சிறுபடகுகள், லைஃப் ஜாக்கெட்கள் போன்றவை, ஜேர்மனியிலுள்ள கிடங்குகளில் சேமித்துவைக்கப்படுகின்றன.
</p><p>
அங்கிருந்து அவை பிரான்சுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆட்கடத்தல்காரர்கள் உதவியுடன் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்வோர் நுழைய அந்தப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.</p><p>

ஆக, பிரித்தானியாவுக்குள் சட்டவிரோத புலம்பெயர்வோர் நுழைவதில் இத்தனை நாடுகளுக்குப் பங்குள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ad7d481-fe21-4abb-ab29-a9327147809d/26-6a8437b190610.webp' /></p><p>
எனவே, வெறும் பிரான்சும் பிரித்தானியாவும் மட்டும் கைகோர்த்தால் இந்த சட்டவிரோத புலம்பெயர்தலை முழுமையாகக் கட்டுப்படுத்தமுடியாது.
</p><p>
இந்த விடயங்கள் தெரியவந்ததைத் தொடர்ந்து, பிரித்தானியா ஜேர்மனியுடனும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள, 2024ஆம் ஆண்டு, இந்த சட்டவிரோத புலம்பெயர்வோருக்கு உதவுவோரை தண்டிக்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்க இருப்பதாக ஜேர்மனி உறுதியளித்தது.
</p><p>
அதைத் தொடர்ந்து, சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட, அதன் மூலமாக, ஆட்கடத்தல்காரர்கள் ஜேர்மனியில் சிறுபடகுகளை மறைத்துவைத்துள்ள கிடங்குகளில், சமீபத்தில் ஜேர்மன் அதிகாரிகள் ரெய்டுகள் நடத்தியுள்ளார்கள்.
</p><p>
முதன்முறையாக ஜேர்மன் அதிகாரிகள் நடத்திய அந்த ரெய்டுகளில், 9,000க்கும் அதிகமான லைஃப் ஜாக்கெட்கள், நிறைய ரப்பர் படகுகள், அவற்றிற்கான எஞ்சின்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
அதாவது, சுமார் 2,000 சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதை ஜேர்மன் அதிகாரிகள் தடுத்துவிட்டார்கள் எனலாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் வீட்டிற்கு வரவேண்டாம்: பிரித்தானியாவில் 22 குழந்தைகளின் தாய் வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/22-kids-and-counting-sue-radford-demands-privacy-1787049322"></link>
            <id>https://news.lankasri.com/article/22-kids-and-counting-sue-radford-demands-privacy-1787049322</id>
            <summary type="text">22 kids and counting sue radford demands privacy: பார்வையாளர் ஒருவர் புகைப்படம் கேட்டதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் 22 குழந்தைகளின் தாய் வேண்டுகோள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 kids and counting sue radford demands privacy: பார்வையாளர் ஒருவர் புகைப்படம் கேட்டதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் 22 குழந்தைகளின் தாய் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
</p><p>
பிரித்தானியாவில் 22 Kids and Counting நிகழ்ச்சியின் பார்வையாளர் ஒருவர், தங்கள் வீட்டிற்கு வந்து குழந்தைகளில் ஒருவரிடம் புகைப்படம் கேட்டதைத் தொடர்ந்து, மிகப்பெரிய குடும்பத்தின் தாயான சூ ராட்ஃபோர்ட் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><h2>தனியுரிமையை மதிக்க வேண்டும்&nbsp;</h2><p>

22 குழந்தைகளின் தாயான சூ ராட்ஃபோர்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரித்தானியாவில் பிரபலமானவர்களாக மாறினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c486ecf-0866-4840-931d-4e963203dfa5/26-6a84356e8250c.webp' />&nbsp;</p><p></p><p>
Channel 5-யின் 22 Kids and Counting என இந்த குடும்பத்தைப் பற்றிய ரியாலிட்டி நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது.

இந்நிகழ்ச்சியின் பார்வையாளர் ஒருவர் சூ ராட்ஃபோர்ட்டின் வீட்டிற்கு சென்றுள்ளார். </p><p>அங்கு அவர் சூ ராட்ஃபோர்ட்டின் குழந்தைகளில் ஒருவரிடம் புகைப்படம் கேட்டது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் 51 வயதான சூ ராட்ஃபோர்ட் (Sue Radford) சமூக ஊடகங்கள் வாயிலாக தங்கள் வீட்டிற்கு வர வேண்டாம் என பின்தொடர்பாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.&nbsp;</p><h2>பாதுகாப்பு சிக்கல்</h2><p> 

ரசிகர்கள் தங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்ற அவர், தங்கள் வீட்டிற்கு வருவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும், உண்மையான பாதுகாப்பு சிக்கலை உருவாக்குவதாகவும் கூறியுள்ளார்.</p><p>

மேலும் அவர் தனது பதிவில், "இதைப்பற்றி மீண்டும் பேச வேண்டிய அவசியம் இருப்பதாக நான் உணர்கிறேன்; எங்கள் தரப்பு நியாயத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.</p><p> 

நாங்கள் வெளியே செல்லும்போதெல்லாம் மக்களை சந்திப்பதை மிகவும் விரும்புகிறோம். நின்று பேசுவதிலும், புகைப்படம் எடுத்துக்கொள்வதிலும், நலம் விசாரிப்பதிலும் எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியே; அது எங்களுக்கு உண்மையிலேயே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa52e89b-a576-44b3-aff8-86579ffe03fc/26-6a84356dc18f6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:33:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சச்சின், தோனி தோனியை முந்தி..ரிஷாப் பண்ட் படைத்த பிரம்மாண்ட சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rishabha-pant-first-indian-100-sixes-record-1787045208"></link>
            <id>https://news.lankasri.com/article/rishabha-pant-first-indian-100-sixes-record-1787045208</id>
            <summary type="text">Rishabh Pant first indian achieve 100 sixes:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை ரிஷாப் பண்ட் படைத்தார். 

இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rishabh Pant first indian achieve 100 sixes:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை ரிஷாப் பண்ட் படைத்தார். </p><p>

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய துடுப்பாட்ட வீரர் ரிஷாப் பண்ட் 100வது சிக்ஸரை அடித்து சாதனை படைத்தார்.</p><h2>ரிஷாப் பண்ட்&nbsp;</h2><p> </p><p>இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலியில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c3905ca-ea8e-4d0e-936c-a5b71e031d30/26-6a84267d7f5a8.webp' />&nbsp;</p><p></p><p>

நான்காம் நாளான இன்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (Rishabh Pant) அதிரடி ஆட்டத்தை ஆடினார். </p><p>

பண்ட் 69 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் தனது 100வது சிக்ஸரை அடித்தார்.</p><h2>முதல் இந்தியர்
</h2><p>
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற இமாலய சாதனையை ரிஷாப் பண்ட் படைத்தார். 89 இன்னிங்ஸ்களில் அவர் இந்த மைல்கல்லினை எட்டியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c95fc3d7-0b9d-4ef1-b43a-6b8e3233e74a/26-6a84267e37982.webp' /></p><p><b> 

அதிக டெஸ்ட் சிக்ஸர் அடித்த இந்திய வீரர்கள்</b></p><p> 

ரிஷாப் பண்ட் - 100 </p><p>விரேந்தர் ஷேவாக் - 91 </p><p>ரோஹித் ஷர்மா - 88</p><p> ரவீந்திர ஜடேஜா - 82</p><p> எம்.எஸ்.தோனி - 78&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/228ab8af-3483-4629-b348-160761cb9499/26-6a84267c9bc24.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<b> </b><a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b> </a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T09:37:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் இரண்டு படகுகள் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-missing-in-yacht-boat-crash-in-france-1787044748"></link>
            <id>https://news.lankasri.com/article/man-missing-in-yacht-boat-crash-in-france-1787044748</id>
            <summary type="text">One missing after boat crash in south of France: பிரான்சில் இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் தண்ணீரில் விழுந்த ஒருவரைக் காணவில்லை.


ஞாயிற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>One missing after boat crash in south of France: பிரான்சில் இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் தண்ணீரில் விழுந்த ஒருவரைக் காணவில்லை.</p><p>


ஞாயிற்றுக்கிழமை இரவு, பிரான்சுக்கு தெற்கே அமைந்துள்ள கேன்ஸ் வளைகுடாவில் ஒரு ஆடம்பர படகும், ரப்பர் படகொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
</p><h3>
நான்கு பேர் கவலைக்கிடம்</h3><p>

அந்த ரப்பர் படகில் 10 பேர் பயணித்த நிலையில், அவர்கள் தண்ணீரில் தூக்கியெறியப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67dc1200-dee6-4333-8105-a5784912542b/26-6a84238dce6e5.webp' /></p><p> அவர்களில் பெரும்பாலானோர் பதின்மவயதினர் என கூறப்படுகிறது.

தகவலறிந்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், ஒரு 24 வயது இளைஞரைக் காணவில்லை.</p><p>

மற்றவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன அந்த இளைஞரைத் தேடும் பணி தொடர்கிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T09:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரீஸ் ஹெலிகாப்டர் விபத்து: தேனிலவு சென்ற பிரித்தானிய தம்பதிக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/greek-helicopter-crash-british-couple-killed-1787044563"></link>
            <id>https://news.lankasri.com/article/greek-helicopter-crash-british-couple-killed-1787044563</id>
            <summary type="text">Greek Helicopter Crash Newlywed British Couple killed: கிரீஸில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தேனிலவு சென்ற பிரித்தானிய தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Greek Helicopter Crash Newlywed British Couple killed: கிரீஸில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தேனிலவு சென்ற பிரித்தானிய தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> ஹெலிகாப்டர் விபத்து</h2><p>கிரீஸின் புகழ்பெற்ற சிஃப்னோஸ்(Sifnos) சுற்றுலாத் தீவில் நிகழ்ந்த கோரமான ஹெலிகாப்டர் விபத்தில் தேனிலவுக்காக சென்ற பிரித்தானிய தம்பதி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p> இந்த விபத்தில் புதிதாக திருமணம் ஆன பிரித்தானிய தம்பதிகளான அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபெர்ட் ஆகியோர் உயிரிழந்து இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨 Private helicopter crashes in Sifnos<br><br>A private helicopter has crashed in the Tholos area of Sifnos, near the island’s helipad, triggering a major emergency response.<br><br>🔥 A fire broke out following the crash, while initial reports say three people were on board. Emergency… <a href="https://t.co/j8kv5CshrJ">pic.twitter.com/j8kv5CshrJ</a></p>&mdash; Greek City Times (@greekcitytimes) <a href="https://x.com/greekcitytimes/status/2089399683651174423?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இவர்கள் ஹெலிகாப்டர் மூலம் வான் வழி சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த மூன்றாவது நபர் முன்னாள் இராணுவ வீரரும், 3 குழந்தைகளின் தந்தையுமான ஜோர்ஜோஸ் ராய்கோஸ் என்ற விமானி ஆவார்.</p><p> Bellavia Aviation Services என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் சிக்னோஸ் பகுதியில் தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக உள்ளூர் நேரப்படி மாலை 6.00 மணிக்கு விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9687da99-4700-48d6-8634-6c82cd819914/26-6a8422d56e468.webp' /></p><p> விபத்தை தொடர்ந்து அவசர கால மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p> தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரின் உடல்களையும் பத்திரமாக மீட்டெடுத்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-18T09:16:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.1943 கோடிக்கு வாடகை ட்ரோன்களை வாங்கும் இந்தியா: MQ-9B Sea Guardian சிறப்பம்சங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-leased-mq-9b-seaguardian-valued-at-rs-1943-c-1787040800"></link>
            <id>https://news.lankasri.com/article/india-leased-mq-9b-seaguardian-valued-at-rs-1943-c-1787040800</id>
            <summary type="text">India leased MQ-9B Sea Guardian valued at Rs 1,943 crore: கடல்சார் கண்காணிப்பை பலப்படுத்தும் விதமாக MQ-9B Sea Guardian ட்ரோன்களை வாடகைக்கு எடுக்க இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>India leased MQ-9B Sea Guardian valued at Rs 1,943 crore: கடல்சார் கண்காணிப்பை பலப்படுத்தும் விதமாக MQ-9B Sea Guardian ட்ரோன்களை வாடகைக்கு எடுக்க இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.</p><h2>இந்திய அரசின் வாடகை ட்ரோன் ஒப்பந்தம்</h2><p>இந்தியாவின் நீண்ட தூர உளவு மற்றும் வான் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் பாதுகாப்பு தளவாட நிறுவனமான ஜெனரல் அட்டாமிக்ஸிடம் (General Atomics) இருந்து இரண்டு MQ-9B SeaGuardian ட்ரோன்களை வாடகைக்கு எடுக்கும் புதிய ஒப்பந்தத்தை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.</p><p> 30 மாத வாடகை என்ற திட்டத்தின் கீழ் டெல்லியில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1943 கோடியாகும்.</p><p> இந்த தற்காலிக ஏற்பாடானது இந்திய பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளுக்கான உடனடி தயார் நிலையை உறுதிப்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa40befc-2bbd-462e-b6b9-e52a172fe908/26-6a84142183d62.webp' /></p><h2> MQ-9B Sea Guardian ட்ரோன்களின் சிறப்பம்சங்கள்</h2><p>MQ-9B Sea Guardian ட்ரோன்கள் நீண்ட தூரம் பறந்து உளவு பணிகள் மேற்கொள்வதிலும், மிக துல்லியமான தாக்குதல்களையும் முன்னெடுக்க இது அதி நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டதாகும்.</p><p> கிட்டத்தட்ட 40,000 அடிக்கு மேல் திறம்பட இயங்கக்கூடிய MQ-9B Sea Guardian ட்ரோன்கள் இடைவிடாமல் 30 மணி நேரத்திற்கும் மேலாக பறக்க கூடியது.</p><p> நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டு இருப்பதால் கடல் ரோந்து பணிகளில் இது சிறப்புடையதாக விளங்குகிறது.</p><p> வாடகை ஒப்பந்தம் தவிர, இந்திய ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளுக்கும் 31 MQ-9B ட்ரோன்களை வாங்க சுமார் $3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T08:13:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sixth-heatwave-people-hit-with-1786990554"></link>
            <id>https://news.lankasri.com/article/sixth-heatwave-people-hit-with-1786990554</id>
            <summary type="text">Another 1.4m people are hit with hosepipe ban: ஆறாவது வெப்ப அலை வீசவுள்ள நிலையில், மேலும் 1.4 மில்லியன் மக்கள் குழாய் நீர் பயன்பாட்டுத் தடையைச் சந்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Another 1.4m people are hit with hosepipe ban: ஆறாவது வெப்ப அலை வீசவுள்ள நிலையில், மேலும் 1.4 மில்லியன் மக்கள் குழாய் நீர் பயன்பாட்டுத் தடையைச் சந்திக்கின்றனர்.
</p><p>செப்டம்பர் மாதம் பிரித்தானியா இந்த ஆண்டின் ஆறாவது வெப்ப அலைக்கு இலக்காகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><h2>சராசரிக்கு மேல்</h2><p>
</p><p>பரவலான வறட்சிக்கு மத்தியில் நாடு மழைக்காக ஏங்கும் வேளையில், ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 14 வரையிலான காலகட்டத்திற்கான வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய கணிப்பின் அடிப்படையில், அக்காலகட்டத்தில் வெப்பநிலை ஒட்டுமொத்தமாக சராசரிக்கு மேல் இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e120af9-2e9f-4c62-82e4-ba9ec37a4111/26-6a834fdd5b11a.webp' /></p><p> </p><p>மேலும், பிரித்தானியாவின் தெற்குப் பகுதிக்கு அருகில் உயர் அழுத்த மையம் உருவாகக்கூடும் என்றும், அதே வேளையில் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் நிலையற்ற வானிலை உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதற்கிடையில், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வறண்ட, நிலையான வானிலை நிலவ சற்றே அதிக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>
மேலும், இந்தக் கோடையில் நிலவிய தீவிர வானிலை காரணமாக நாடு முழுவதும் ஐந்து வெப்ப அலைகள் ஏற்பட்டன; இவற்றில் இறுதியாக ஏற்பட்ட வெப்ப அலையின்போது, ​​பிரித்தானியாவில் இந்த ஆண்டின் மிக அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.</p><p></p><p> </p><p>ஆகஸ்ட் 13 அன்று கியூ கார்டன்ஸில் (Kew Gardens) 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தற்காலிகமாகப் பதிவானது. வெப்ப அலை என்பது ஆண்டின் அந்தப் பருவத்திற்கு எதிர்பார்க்கப்படும் இயல்பான வானிலையை விட அதிக வெப்பம் நிலவும் ஒரு நீண்ட காலப்பகுதியாகும்; </p><p>ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து குறைந்தது மூன்று நாட்களுக்கு வெப்ப அலைக்கான வரம்பு அளவிலோ அல்லது அதற்கு மேலோ பதிவாகும்போதே இது வெப்ப அலையாகக் கருதப்படுகிறது. </p><p>பிரித்தானியாவில் 2026-ஆம் ஆண்டின் கோடைக்காலம், பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து மிக வெப்பமானதாக அமையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் வெப்ப அலை குறித்த எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளது.</p><h2>செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல்</h2><p> </p><p>இந்த நிலையில், மற்றொரு நீர் நிறுவனமான 'வெசெக்ஸ் வாட்டர்' (Wessex Water), குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. </p><p>பாத், சோமர்செட், டோர்செட் மற்றும் வில்ட்ஷயர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 14 லட்சம் வாடிக்கையாளர்களுக்கும் இந்தத் தற்காலிக நடவடிக்கை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc825080-d56a-4861-a15d-5ac81f47d9d6/26-6a834fdca580b.webp' /></p><p> </p><p>வெசெக்ஸ் வாட்டர் நிறுவனம் கடைசியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1976-ல் தற்காலிகத் தடையை அமுல்படுத்தியிருந்தது. வெசெக்ஸ் வாட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான ரூத் ஜெபர்சன் தெரிவிக்கையில், அத்தியாவசியப் பயன்பாட்டிற்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவில்லை என்றாலும், இந்த சாதனை அளவிலான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், </p><p>விநியோக வலையமைப்பு முழுவதும் தண்ணீரை போதுமான வேகத்தில் கொண்டு சேர்ப்பதே எங்களுக்கு சவாலாக இருந்து வருகிறது என்றார். </p><p>வேறு ஒன்பது நீர் நிறுவனங்கள் பிரித்தானியாவில் சுமார் 27 மில்லியன் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளன, ஆனால் விரைவில் கார் கழுவும் நிலையங்கள் மற்றும் தனியார் நீச்சல் குளங்களிலும் இந்தத் தடைகள் விதிக்கப்படலாம் என்று அமைச்சர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T07:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா மாகாணமொன்றில் இளம்பெண்ணொருவருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/16-year-old-women-shot-dead-in-edmonton-1787039271"></link>
            <id>https://news.lankasri.com/article/16-year-old-women-shot-dead-in-edmonton-1787039271</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இளம்பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பொலிசார் குற்றவாளியை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.


கனடாவில் ஆல்பர்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இளம்பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பொலிசார் குற்றவாளியை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
</p><p>

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
</p><h3>
சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்
</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ad024b-505e-4175-8740-0388979e0eda/26-6a840e28eb6c9.webp' /></p><p>பொலிசார் அந்த வீட்டுக்கு விரைந்த நிலையில், அங்கு படுகாயமடைந்த நிலையில் 16 வயதுப்பெண்ணொருவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.
</p><p>
அந்தப் பெண்ணின் பெயர் ஜாஸ்மின் தேசி என்பதும் அவருக்கு இரண்டு தங்கைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22f30c1e-3423-494e-a279-3c3ce04841be/26-6a840e299d996.webp' /></p><p>
இந்த சம்பவம் தொடர்பில் யாருக்காவது தகவல் ஏதேனும் தெரியுமானால், அல்லது, தங்கள் வாகனங்களில் உள்ள கமெராக்களில் இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் ஏதேனும் பதிவாகியிருக்குமானால், தங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் செல்வந்தர்களின் வீடுகளைக் குறிவைத்துக் கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thieves-target-geneva-super-riches-luxury-home-1787038593"></link>
            <id>https://news.lankasri.com/article/thieves-target-geneva-super-riches-luxury-home-1787038593</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஏரியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் வாழும் செல்வந்தர்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் அச்சத்தை உருவாக்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஏரியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் வாழும் செல்வந்தர்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் அச்சத்தை உருவாக்கியுள்ளன.</p><p>


சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஏரியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில், வங்கியாளர்கள், பெரு வர்த்தகர்கள் முதலான பெரும் செல்வந்தர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.</p><p>

இந்நிலையில், அப்பகுதியில் செல்வந்தர்களைக் குறிவைத்து பயங்கர கொள்ளைச் சம்பவங்கள் நடந்துவருகின்றன.
</p><h3>
செல்வந்தர்களின் வீடுகளைக் குறிவைத்துக் கொள்ளை
</h3><p>
செல்வந்தர்களின் வீடுகளுக்குள் ஆயுதங்களுடன் நுழையும் கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் வீடுகளில் இருப்பவர்களை மிரட்டி, பணம், நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் முதலான விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் செல்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dce1968d-8628-4f3b-b6a5-7061033fad23/26-6a840b82c4722.webp' /></p><p>
தடுத்தால் அடி உதைதான். அத்துடன், ஒரு செல்வந்தர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள், அந்தக் குடும்பத்திலுள்ள ஒரு பதின்ம வயதுப் பிள்ளையையும் கடத்திச் சென்றுள்ளார்கள்.
</p><p>
பிரான்ஸ் எல்லை அருகே அந்தப் பிள்ளையை விடுவித்துள்ளது அந்தக் கொள்ளைக் கூட்டம்.</p><p>

அதாவது, இந்தக் கொள்ளையர்கள், சுவிட்சர்லாந்தை ஒட்டியுள்ள பிரான்ஸ் பகுதிகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதாக நம்பப்படுகிறது.&nbsp;</p><p></p><p>
கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே ஜெனீவா ஏரி பகுதியில் இப்படி சுவிஸ் செல்வந்தர்களைக் குறிவைத்து 18 கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
</p><p>
பலர் பொலிசாரை நம்பாமல், தனியார் பாதுகாவலர்களை ஏற்பாடு செய்துவருகிறார்கள்.</p><p>

விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்தில் ஜெனீவா ஏரி பகுதி, செல்வந்தர்களையும், பெரும் வர்த்தக நிறுவனங்களையும் ஈர்க்கும் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
</p><p>
ஆனால், இந்த கொள்ளைச் சம்பவங்கள் அந்த பகுதியின் புகழைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆகவே, அதிகாரிகள் அந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:36:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட உள்ள பாதிப்பு - ஆராய்ச்சியாளர் வெங்கடேசன் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scientist-venkatesan-about-el-nino-in-tamilnadu-1787038038"></link>
            <id>https://news.lankasri.com/article/scientist-venkatesan-about-el-nino-in-tamilnadu-1787038038</id>
            <summary type="text">El Nino in tamil naduஎல் நினோவால் தமிழ்நாடு எதிர்கொள்ள உள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சியாளர் வெங்கடேசன் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். 

எல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>El Nino in tamil naduஎல் நினோவால் தமிழ்நாடு எதிர்கொள்ள உள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சியாளர் வெங்கடேசன் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். </p><h3>

எல் நினோவில் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு? </h3><p>

இது குறித்து பேசிய அவர், "எல் நினோ உருவாகிவிட்டது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வழக்கமான வெப்பநிலையை விட 2.2 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. 

இதன் காரணமாக இந்தியாவில் வறட்சி, வெள்ளம் ஆகியவை ஏற்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f02e6db-5f26-4f29-b178-61f7e7a54fb1/26-6a84095866fce.webp' /></p><p>தமிழ்நாட்டில் இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை குறையும். வடகிழக்கு பருவ மழை அதிகரிக்கும்" என தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், எல் நினோ காலத்தில் புயல் வலிமையாக மற்றும் தீவிரமாக இருக்கும். அதிக மழைப்பொழிவு ஏற்படும் போது, அந்த நீரை வெளியேற்றுவதற்கான திட்டத்துடன் தயாராக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

சூப்பர் எல் நினோ ஏற்படுவது உறுதி, ஆனால் அதன் பாதிப்பை குறைக்ககூடிய வகையில் indian ocean dipole உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், எல் நினோ சென்னைக்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா?, indian ocean dipole என்றால் என்ன என பல்வேறு தகவல்களை ஆராய்ச்சியாளர் வெங்கடேசன் விரிவாக வழங்கியுள்ளார். </p><p>

மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க</p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HYAY5fFh4XI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:27:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் உதவியாளருடன் ட்ரம்பின் உறவு குறித்து பேச்சு: செனட்டரை விளாசிய பெண் பிரமுகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anna-luna-oppose-ossoff-speech-about-trump-harp-1787037101"></link>
            <id>https://news.lankasri.com/article/anna-luna-oppose-ossoff-speech-about-trump-harp-1787037101</id>
            <summary type="text">Anna luna oppose ossoff speech about trump: உதவியாளருடனான ட்ரம்பின் உறவு குறித்து பேசத் தொடங்கிய செனட்டர் மீது MAGA அமைப்பினர் கடுமையான வசவுகளை வீசினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Anna luna oppose ossoff speech about trump: உதவியாளருடனான ட்ரம்பின் உறவு குறித்து பேசத் தொடங்கிய செனட்டர் மீது MAGA அமைப்பினர் கடுமையான வசவுகளை வீசினர்.&nbsp;&nbsp;</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இளம் உதவியாளர் உறவு குறித்து கேலி செய்த செனட்டர் ஜான் ஓஸோஃபை கன்சர்வேடிவ்கள் சாடினர்.&nbsp; &nbsp;</p><h2>நடாலி ஹார்ப்&nbsp;குறித்து கேலி </h2><p>ஜார்ஜியாவில் நடந்த ஒரு பேரணியில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜோன் ஓஸோஃப்பும் (Jon Ossoff) இருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eed02690-a704-4dc3-86c8-03f106ee4659/26-6a84074120a7f.webp' />&nbsp;</p><p></p><p>
இவர் 2028யில் தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பரிந்துரைக்கான போட்டியாளராக கருதப்படுகிறார்.</p><p> 

ஓஸோஃப் தனது பேச்சின்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இளம் உதவியாளர் நடாலி ஹார்ப்பின் உறவு குறித்து கேலி செய்தார்.</p><p> 

அவர் தனது ஆதரவாளர்களிடம், ட்ரம்ப் பறக்கும் மாளிகையில் நடாலியுடன் பயணிக்க விரும்புகிறார் என்று குறிப்பிட்டார். 

அவரது இந்தப் பேச்சு கன்சர்வேடிவ்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.&nbsp;</p><h2>கடுமையான வசவுகளை</h2><p>ஓஸோஃப்பின் பேச்சினை அவர்கள் கடுமையாக சாடினர். மேலும், MAGA அமைப்பினர் அவர் மீது கடுமையான வசவுகளை வீசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0abdfae1-c799-48b0-a6c1-b9f61185b0e5/26-6a8407405af16.webp' /></p><p>
 
குறிப்பாக, 'ஓஸோஃப் திமிர்பிடித்தவர்' என்று குறிப்பிட்ட காங்கிரஸின் அன்னா பவுலினா லூனா, கவர்ச்சிகரமான இளம் பெண்கள் தங்கள் வேலையில் நல்லவர்களாக இருக்க முடியாதா? இந்தப் பதவிகளுக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்ற உண்மையின் அடிப்படையில் அதிகாரப் பதவிகளுக்கு உயர்த்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.</p><p>

முக்கியமான பிரச்சனைகளை கையாள்வதற்கு பதிலாக, ஹார்ப்பை பற்றி முரட்டுத்தனமான, அருவருப்பான வதந்தியைப் பரப்புவதில் ஓஸோஃப் கவனம் செலுத்துவதாக லூனா குற்றம்சாட்டினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3e4f7b0-e2f8-4186-bb4f-e67175e17664/26-6a84094cab161.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:17:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெங்களூருவில் தந்தை, 4 வயது மகன் படுகொலை: காதலனுடன் இணைந்து மனைவி நடத்திய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wife-killed-husband-and-son-in-chikkabanavara-1787037335"></link>
            <id>https://news.lankasri.com/article/wife-killed-husband-and-son-in-chikkabanavara-1787037335</id>
            <summary type="text">பெங்களூருவில் கணவன் மற்றும் 4 வயது மகனை காதலனுடன் இணைந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மற்றும் மகனை கொன்ற மனைவி
பெங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெங்களூருவில் கணவன் மற்றும் 4 வயது மகனை காதலனுடன் இணைந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> கணவன் மற்றும் மகனை கொன்ற மனைவி</h2><p>
பெங்களூருவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சிக்பனாவாராவில்(Chikkabanavara) 34 வயது கணவன் அபிநந்தன் மற்றும் அவரது 4 வயது மகன் யதுவீர் இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர்.</p><p>பொலிஸார் விசாரணையில், மனைவி ஹரிணிக்கும் கணவன் அபிநந்தனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஹரிணி கரண்டியால் அபிநந்தனை தாக்கியுள்ளார்.</p><p> இதையடுத்து இருவரும் தனித்தனி அறைகளுக்கு சென்ற நிலையில், ஹரிணி தன்னுடைய காதலன் வினய்யை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d966da3-9447-49f7-b0d7-a5997a69f30e/26-6a840699549a6.webp' /></p><p> மேலும் வினய் வருவதற்கு முன்னதாக வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஹரிணி அணைத்துள்ளார்.</p><p>பின்னர் இருவரும் இணைந்து அபிநந்தனை தாக்கி மூச்சு திணறடித்து கொலை செய்துள்ளனர்.</p><p></p><p> வீட்டில் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு எழுந்த 4 வயது சிறுவன் யதுவீரையும் சாட்சி இல்லாமல் செய்வதற்காக தலையணையை வைத்து அமுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.</p><p> இந்த சம்பவத்தை தொடர்ந்து மனைவி ஹரிணி உடனடியாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த முழு கொலைச் சதியும் தெரியவந்துள்ளது.</p><p> தலைமறைவாக உள்ள காதலன் வினய் கைது செய்யப்பட்ட பிறகே இந்த சம்பவம் தொடர்பான முழு உண்மையும் தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-18T07:15:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2009 இல் 3 மணி நேர உண்ணாவிரதம் நாடகம் - திமுகவை சீண்டிய அமைச்சர் நிர்மல் குமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nirmal-kumar-say-2009-karunanidhi-hunger-strike-1787033086"></link>
            <id>https://news.lankasri.com/article/nirmal-kumar-say-2009-karunanidhi-hunger-strike-1787033086</id>
            <summary type="text">2009 இல் 3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம் என அமைச்சர் நிர்மல் குமார் திமுகவை சீண்டும் வகையில் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

கர்நாடகாவில் சுட்டுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2009 இல் 3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம் என அமைச்சர் நிர்மல் குமார் திமுகவை சீண்டும் வகையில் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.</p><h3>

கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்கள்</h3><p> 

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
</p><p>
இந்த தீர்மானம் மீது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42f1fe2-709d-4192-b12b-21b60c6dd8bd/26-6a83f601792be.webp' /></p><p>

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும். </p><p>

கர்நாடகா வழங்கிய ரூ.5 லட்சம் நிதியுதவி மிக குறைவானது, தமிழக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடக்காத வகையில் தமிழக அரசு கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என பேசினார்.</p><p>

இதனையடுத்து பேசிய பாமக எம்எல்ஏ கணேஷ் குமார், "தங்கள் மாடுகளை தேடி சென்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் இந்த சம்பவம் தற்காப்புக்காக நடைப்பெற்ற சம்பவம் என கர்நாடக வனத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் பதிவு செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/223d93d1-ec8c-4c83-a221-23c38a3c1447/26-6a83f600c3c63.webp' /></p><p>
இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் மட்டும் தான் உரிய நீதி கிடைக்கும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><h3> 

3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம்</h3><p>

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "3 தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக அரசு உறுதி அளித்தது. 

உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p>

இடைக்கால நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கிய கர்நாடக அரசு விசாரணைக்கு பின் கூடுதல் நிவாரணம் தருவதாக கூறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/044e72b2-8e67-4ac1-8de2-ea7aa3b3c566/26-6a83f6001aa00.webp' /></p><p>

கர்நாடக வனத்துறை நடத்தியது படுகொலை என குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்தார். தமிழர்கள் கொலை தொடர்பாக கர்நாடக அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல, விசாரணை தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார்.</p><p>
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கை தமிழக முதல்வர் மட்டுமே. இன்று தமிழர்களுக்கு எங்கு தீங்கு ஏற்பட்டாலும், முதல் குரல் முதல்வரின் குரலாக இருக்கும்.&nbsp;</p><p>

ஒரு சிலருக்கு திடீர் தமிழ் தமிழர் பாசம் இருக்கும் இதெல்லாம் நாம் வரலாற்றில் பார்த்தது தான்.&nbsp;</p><p></p><p>

2009 ஆம் ஆண்டில் 3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம். அதைத்தொடர்ந்து நடைபெற்ற கேள்விகளில், மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என பேசினார். </p><p>

இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அமைச்சரை உட்கார சொன்ன சபாநாயகர் தீர்மானம் தவிர்த்து மற்ற வார்த்தைகளை அவைகுறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T06:55:04+00:00</updated>
        </entry>
    </feed>
