<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-14T06:42:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கப்பல்களுக்கு வலைப் போட்ட ரஷ்யா: உக்ரைனிய ட்ரோன்களிடம் தப்பிக்க எடுத்த புதிய முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-tankers-adopt-mad-max-defence-1786687798"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-tankers-adopt-mad-max-defence-1786687798</id>
            <summary type="text">உக்ரைனிய ட்ரோன்களிடம் இருந்து தப்பிக்க மேட் மேக்ஸ் திரைப்பட பாணியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு வளையங்களை ரஷ்யா அமைத்துள்ளது.பாதுகாப்பு வளையங்கள் அமைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனிய ட்ரோன்களிடம் இருந்து தப்பிக்க மேட் மேக்ஸ் திரைப்பட பாணியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு வளையங்களை ரஷ்யா அமைத்துள்ளது.</p><h2>பாதுகாப்பு வளையங்கள் அமைக்கும் ரஷ்யா</h2><p>உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் இருந்து கப்பல்களை பாதுகாப்பதற்காக ரஷ்யா புதிய மற்றும் வித்தியாசமான முறையை கையில் எடுத்துள்ளது.</p><p> அந்த வகையில் டிஸ்டோபியன்(அறிவியல் புனைக்கதை) திரைப்பட காட்சிகளை போல, கருங்கடல் மற்றும் அதனை சுற்றிய கடல் பகுதிகளில் பயணிக்க கூடிய கப்பல்களுக்கு ட்ரோன் தடுப்பு வலைகள், இரும்பு கூண்டுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றை ரஷ்யா பொருத்தியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨🇷🇺🚩🚢🛡️ <br><br>A telling adaptation aboard Russia’s shadow fleet.<br><br>The sanctioned Suezmax 🇸🇱 CARUZO (IMO 9137648) was spotted in Istanbul with extensive netting around its superstructure and additional protection around the aft section.<br><br>The apparent purpose: mitigating the threat… <a href="https://t.co/98QMz6Rkmb">pic.twitter.com/98QMz6Rkmb</a></p>&mdash; Russian Forces Spotter (@TiaFarris10) <a href="https://x.com/TiaFarris10/status/2087774650256277934?ref_src=twsrc%5Etfw">August 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதற்கான முக்கிய உதராணமாக, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளின் கீழ் உள்ள 28 ஆண்டுகள் பழமையான கருசோ(Caruzo) என்ற எண்ணெய் கப்பல் இத்தகைய பாதுகாப்போடு வலம் வருகிறது.</p><p></p><h2> உறுதிப்படுத்திய கடல் போக்குவரத்து ஆய்வாளர்</h2><p>கடல் போக்குவரத்து ஆய்வாளர் Yoruk Isik வெளியிட்ட வீடியோ காட்சிகளை சுட்டிக்காட்டி பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், கடந்த செவ்வாய்க்கிழமை பொஸ்பரஸ் ஜலசந்தி வழியாக சென்ற Caruzo டேங்கர் கப்பல் தனது பக்கவாட்டில் ட்ரோன் தடுப்பு வலைகளை தொங்கவிட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; அத்துடன் கப்பலில் பக்கவாட்டில் தண்ணீர் தொட்டிகள் மற்றும் கூண்டு போன்ற அமைப்புகள் பொருத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/307fb4a1-2387-4d46-baf5-db78383641e4/26-6a7eb137b2d65.webp' /></p><p> ரஷ்ய படைகள் தங்களது ராணுவ வாகனங்களில் இத்தகைய இரும்பு வலைகள் மற்றும் தடுப்புகளை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்பட்டாலும், வணிக கப்பல்களில் இத்தகைய கூண்டு அமைப்புகளை பயன்படுத்து இதுவே முதல் முறையாகும்.</p><p>Caruzo போலவே, இஸ்தான்புல்லுக்கு தெற்கே உள்ள மார்மரா கடலில் ரிஸ்வெல்(Rizvel) என்ற பொருளாதார தடைக்கு கீழ் உள்ள மற்றொரு டேங்கர் கப்பலும் இதே போல் வலைகளால் மூடப்பட்டு சென்றதாக Yoruk Isik தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T06:40:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் கொல்லப்பட்ட இந்தியர்: நீடிக்கும் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-served-in-french-army-killed-in-germany-1786689488"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-served-in-french-army-killed-in-germany-1786689488</id>
            <summary type="text">ஜேர்மனியில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எதனால் அவர் கொல்லப்பட்டார் என்பது குறித்த விடயம் மர்மமாகவே நீடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எதனால் அவர் கொல்லப்பட்டார் என்பது குறித்த விடயம் மர்மமாகவே நீடிக்கின்றது.
</p><p>
ஜேர்மனியில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவரை மர்ம நபர்கள் மூன்று பேர் கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர்.
</p><h3>
ஜேர்மனியில் கொல்லப்பட்ட இந்தியர்</h3><p>

ஹரியானாவைச் சேர்ந்த விஷு ஷர்மா (25), ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட்டில் பொருட்கள் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
</p><p>
செவ்வாயன்று, அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்த மூன்று பேர், விஷுவை வெளியே வரச் சொல்லியிருக்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df59d703-c5a4-4366-9264-f347a029cfff/26-6a7eb7d207555.webp' /></p><p>
அவர் வெளியே வந்ததும், அவர்கள் அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்கள். விஷு படுகாயமடைந்த நிலையில், அவரது அறையில் தங்கியிருக்கும் கௌரவ் என்பவர் நடந்ததைக் கண்டு உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
</p><p>
ஆனால், சிகிச்சை பலனின்றி விஷு உயிரிழந்துவிட்டுள்ளார். மறுநாள் இந்தியாவிலிருக்கும் விஷுவின் பெற்றோரை அழைத்த கௌரவ், அவர்களுடைய பிள்ளை இறந்த செய்தியை அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
</p><p>
விஷு, 2022ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்றுள்ளார். பின் ஓராண்டுக்குப் பின் பிரான்ஸ் சென்ற விஷு, ராணுவப் பயிற்சி பெற்று பிரான்ஸ் ராணுவத்தில் ஓராண்டு பணியாற்றியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
அதன்பின் ஜேர்மனிக்குச் சென்ற விஷு, பொருட்கள் டெலிவரி செய்யும் வேலையைத் துவங்கி, பின் தனக்குக் கீழ் பலர் வேலை செய்யுமளவுக்கு தன் வேலையை விரிவாக்கம் செய்துள்ளார்.
</p><p>
விஷு தீபாவளிக்கு இந்தியா வர இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், பெற்றோரும் உறவினர்களும் அவர் வருவார் என காத்திருக்க, மகன் உயிரற்ற உடலாகத்தான் இந்தியா திரும்புவான் என்னும் செய்தி கேட்டு அந்தக் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், விஷுவைக் கத்தியால் குத்தியது யார், எதற்காக அவர்கள் அவரைத் தாக்கினார்கள் என்பது குறித்த விடயங்கள் மர்மமாகவே நீடிக்கின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T06:38:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரூர் அரசு வேலை ரத்து - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sc-halt-hc-order-cancel-govt-job-for-karur-victims-1786688757"></link>
            <id>https://news.lankasri.com/article/sc-halt-hc-order-cancel-govt-job-for-karur-victims-1786688757</id>
            <summary type="text">karur government job case: கரூரில் வழங்கப்பட்ட அரசு வேலை செல்லாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  

கரூரில...</summary>
            <content type="html"><![CDATA[<p>karur government job case: கரூரில் வழங்கப்பட்ட அரசு வேலை செல்லாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. </p><h3> 

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை</h3><p>

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
</p><p>
கடந்த ஜூலை 10 ஆம் திகதி கரூர் சென்ற முதல்வர் விஜய், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசுப்பணிக்கான ஆணையை வழங்கினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/535384c6-33f0-427a-84ae-45e11e0f2f8b/26-6a7eb4f71f85f.webp' /></p><p> 

இதற்கு தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை தமிழ்நாடு அரசு மீறியுள்ளது.&nbsp;</p><p></p><p>எனவே கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என தீர்ப்பளித்தது</p><h3> 

உச்சநீதிமன்றம் இடைக்கால தடை </h3><p>

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dceacc5-a047-43e7-8f6f-10e3340eefbb/26-6a7eb4f7cafc2.webp' /></p><p>

இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், "அரசின் கொள்கை முடிவில் உயர்நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்? உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்குகிறது. வழங்க கூடாது என சொல்வதற்கு நீங்கள் யார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p> 

மேலும், "உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் வேலை செய்தவர் ஒரே நபர் என்றால் குடும்பமே பாதிக்கப்படும். அப்படி இருக்கும் போது அரசுப்பணி வழங்குவதில் என்ன தவறு உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளனர்</p><p>
இதனையடுத்து, அரசு வேலை வழங்கியது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T06:26:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்து: 20 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/20-injured-in-uk-train-derails-incident-1786683732"></link>
            <id>https://news.lankasri.com/article/20-injured-in-uk-train-derails-incident-1786683732</id>
            <summary type="text">train derails in uk: இங்கிலாந்தில், ரயில் ஒன்று தடம்புரண்டதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.


இங்கிலாந்திலுள்ள லண்டன் விக்டோரியா ரயில் நிலையத்திலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>train derails in uk: இங்கிலாந்தில், ரயில் ஒன்று தடம்புரண்டதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>

இங்கிலாந்திலுள்ள லண்டன் விக்டோரியா ரயில் நிலையத்திலிருந்து ஈஸ்ட்போர்ன் ரயில் நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று, கிழக்கு சசெக்ஸிலுள்ள லூயிஸ் என்னும் இடத்தினருகே தடம்புரண்டது.
</p><h3>
ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்து</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e054f631-4e6f-40d9-9a0b-2b7518a6b0c1/26-6a7ea1568c4ea.webp' /></p><p>நேற்று மதியம் 3.45 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
2.24க்கு புறப்பட்ட அந்த ரயில், ஈஸ்ட்போர்ன் நிலையத்தை அடைய சிறிது நேரமே இருந்த நிலையில், திடீரென வேகமெடுத்ததாக அந்த ரயிலில் பயணித்த பயணிகள் தெரிவிக்கிறார்கள்.
</p><p>
அடுத்த கணம், ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.&nbsp;</p><p></p><p>
ரயில் மொத்தம் 150 பயணிகள் இருந்த நிலையில், கடைசி பெட்டிகளில் இருந்த 40 பேர் கவிழ்ந்த பெட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd9e945-4222-4e5b-9272-bd388823b650/26-6a7ea15752f03.webp' /></p><p>&nbsp;தகவலறிந்து ரயில்வே பொலிசார், சசெக்ஸ் பொலிசார், தீயணைப்பு வீரர்கள், மீட்புக் குழுவினர் ஆம்புலன்ஸ் சேவை, மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என அனைவரும் சம்பவ இடத்துக்கு விரைய, அதைத் தொடர்ந்து 20 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431bf453-8758-410e-85cb-9df71722573a/26-6a7ea15807b7d.webp' /></p><p>மாலை 6.00 மணி வாக்கில் ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியிருந்த அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக ஒரு உயிர்ச்சேதம் கூட ஏற்படவில்லை என்பது ஆறுதலளிக்கும் செய்தி!
</p><p>
சம்பந்தப்பட்ட ரயில் பாதை மூடப்பட்டுள்ள நிலையில், குறைந்தபட்சம் திங்கட்கிழமை வரை அந்த பாதையில் ரயில்கள் இயங்காது என்றும் மக்கள் பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68092dee-0fd5-4fcf-aed4-a1e84dcd85fd/26-6a7ea158af9c3.webp' /></p><p>இந்நிலையில், ரயில் பாதையில் ஒரு இடத்தில் தண்டவாளம் வளைந்திருப்பதைக் காணமுடிகிறது. அது ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட வளைவா அல்லது தண்டவாளம் வளைந்திருந்ததால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T05:04:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரங்கப் பாதைக்குள் பாய்ந்த வெள்ளப்பெருக்கும் சேறும் : 7 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chamoli-tunnel-accident-7-dead-rescue-going-1786683404"></link>
            <id>https://news.lankasri.com/article/chamoli-tunnel-accident-7-dead-rescue-going-1786683404</id>
            <summary type="text">உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்க பாதைக்குள் நீர் மற்றும் குப்பைகள் புகுந்ததில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.சுரங்கப்பாதை விபத்துவியாழக்கிழமையன்று உத்தராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்க பாதைக்குள் நீர் மற்றும் குப்பைகள் புகுந்ததில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2>சுரங்கப்பாதை விபத்து</h2><p>வியாழக்கிழமையன்று உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள சுரங்கப் பாதைக்குள்&nbsp; திடீரென வெள்ள நீரும், குப்பை மண் சாரலும் புகுந்ததில் குறைந்தது 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p> இதுவரை 18 தொழிலாளர்கள் வரை பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்(SDMA) தகவல் தெரிவித்துள்ளது.</p><p> அத்துடன் சுரங்கத்திற்கு சிக்கி இருப்பதாக நம்பப்படும் 3 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ddccf9a-e775-40e0-b63b-63918e225b09/26-6a7ea00d9c4e7.webp' /></p><p></p><h2> விபத்து எப்படி நடந்தது?</h2><p>
சமோலியின் பிபல்கோட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தெஹ்ரி புனல்மின் கழக திட்ட பகுதியில் இந்த கோர விபத்தானது ஏற்பட்டுள்ளது.</p><p> சுரங்கத்திற்கு கிட்டத்தட்ட 28 பேர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக வெள்ள நீர் புகுந்து பலத்த நீரோட்டம் ஏற்பட்டுள்ளது, இதில் பல தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு வெளியே அடித்து செல்லப்பட்டுள்ளனர்.</p><p> மாலை 6.30 மணியளவில் வெள்ள நீருடன் சேறும் புகுந்ததாக மாவட்ட மாஜிஸ்திரேட் கவுரவ் குமார் தெரிவித்துள்ளார்.</p><p> இந்த விபத்தை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.</p><p> கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதே இந்த கோர சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-14T04:57:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் பணக்கார குடும்ப பட்டியல் - முதல் 10 இடத்தில் 2 தமிழ் குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-tn-familes-in-top-10-india-most-valuable-family-1786541705"></link>
            <id>https://news.lankasri.com/article/2-tn-familes-in-top-10-india-most-valuable-family-1786541705</id>
            <summary type="text">2026 India Most Valuable Family Businesses List : 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலில் 2 தமிழ்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 India Most Valuable Family Businesses List : 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலில் 2 தமிழ்நாடு குடும்பங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது. </p><h3>

இந்தியாவின் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்கள்</h3><p>

பார்க்லேஸ் பிரைவேட் கிளைன்ட்ஸ் ஹுருன் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. </p><p>

இந்த பட்டியலில் உள்ள 300 குடும்ப வணிகங்களின் கூட்டு மதிப்பு தற்போது 1.46 டிரில்லியன் டொலராக (இந்திய மதிப்பில் ரூ.138 லட்சம் கோடி) உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/395fa4d1-09ca-4adb-b6e5-4a6456dd8d68/26-6a7c768b17c35.webp' /></p><p>

2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் இருந்து இந்த வணிகங்களின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. </p><p>அதாவது கடந்த 2 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ. 4,076 கோடி மதிப்பு உயர்விற்குச் சமமாகும்.&nbsp;</p><p></p><p>

இதில் ரிலையன்ஸ் குழும முகேஷ் அம்பானியின் குடும்பம் ரூ. 25.83 லட்சம் கோடி மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. </p><p>ஆதித்யா பிர்லா குழும குமார் மங்கலம் பிர்லா குடும்பம் ரூ. 8.14 லட்சம் கோடி மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளது. </p><p> 

ஜிண்டால் குடும்பம் ரூ. 8.01 லட்சம் கோடி மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளது. </p><p> 

இந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த வெள்ளையன் சுப்பையா தலைமையிலான முருகப்பா குடும்பம், ரூ. 3.06 லட்சம் கோடி மதிப்புடன் 8வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c00b73-1f57-4c45-85be-dc35349f1ca9/26-6a7c768bbe123.webp' /></p><p> 

இதே போல், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஷிவ் நாடார் குடும்பம் ரூ. 2.91 லட்சம் கோடி மதிப்புடன் 9வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a79b494b-778a-4481-a1f7-0adda816ef42/26-6a7c768c703cb.webp' /></p><p>

கௌதம் அதானி குடும்பம் ரூ.19.6 லட்சம் கோடி மதிப்புடன், முதல் தலைமுறை தொழில்முனைவோர் குடும்பங்களில் மிகவும் செல்வந்தர்களாக உள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T04:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் 2 வணிக கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஈரான்: UAE கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-attacks-2-ships-in-hormuz-uae-condemn-1786678816"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-attacks-2-ships-in-hormuz-uae-condemn-1786678816</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 2 வணிக கப்பல்களை ஈரான் தாக்கி இருப்பதாக சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. வணிக கப்பல்கள் மீது தாக்குதல்
ஹார்முஸ் ஜலசந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 2 வணிக கப்பல்களை ஈரான் தாக்கி இருப்பதாக சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது.</p><h2> வணிக கப்பல்கள் மீது தாக்குதல்</h2><p>
ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த தங்களது இரண்டு வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> இதில் கப்பல் சேதமடைந்து இருப்பதாகவும், ஆனால் பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சவுதி தேசிய எண்ணெய் நிறுவனம்(ADNOC) தகவல் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdfba723-04c8-4e6b-88e8-e004dea713c8/26-6a7e8e21a98b3.webp' /></p><p></p><p> ஒரு வார காலத்திற்குள் ADNOC நிறுவனத்தின் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.</p><p>கடந்த சனிக்கிழமை ஹார்முஸில் சவுதி அரசு எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p> இந்நிலையில், தற்போதைய பதற்றமான நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.</p><p>அதே நேரத்தில் ADNOC கப்பல்கள் மீதான தாக்குதல் மிகவும் பகைமையான தாக்குதல் என்று குறிப்பிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T03:40:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[Powerball லொட்டரியில் 1 பில்லியன் டொலர் வென்ற நபர்: உரிமை கோர ஓராண்டு அவகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/someone-won-1-billion-powerball-1786651825"></link>
            <id>https://news.lankasri.com/article/someone-won-1-billion-powerball-1786651825</id>
            <summary type="text">Someone won $1 billion in Powerball: இல்லினாய்ஸில் உள்ள ஒருவர் பவர்பால் லொட்டரியில் 1 பில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.

புதன்கிழமை இரவு நடைபெற்ற 1.0...</summary>
            <content type="html"><![CDATA[<p>Someone won $1 billion in Powerball: இல்லினாய்ஸில் உள்ள ஒருவர் பவர்பால் லொட்டரியில் 1 பில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.
</p><p>
புதன்கிழமை இரவு நடைபெற்ற 1.04 பில்லியன் டொலர் பவர்பால் குலுக்கலுக்கான வெற்றியாளர் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் மாகாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஓராண்டுக்குள்</h2><p>
</p><p>இது கடந்த ஆண்டுக்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய பெரும் பரிசுத்தொகை என லொட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>மேற்கு இல்லினாய்ஸில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்டிலிருந்து மேற்கே சுமார் 100 மைல் தொலைவில் அமைந்துள்ள குவின்சி பகுதியில் ஒரு 'ஹை-வீ' (Hy-Vee) எரிபொருள் நிலையத்தில் இருந்து அந்தச் சீட்டு வாங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfaa94e6-0aa1-4e8d-8af0-962d24bf4dd4/26-6a7e24b381b96.webp' /></p><p> </p><p>இல்லினாய்ஸ் லொட்டரி அமைப்பின் தகவலின்படி, ஜாக்பாட் பரிசை வென்ற சீட்டை விற்பனை செய்ததற்காக Hy-Vee எரிபொருள் நிலையத்திற்கு 500,000 டொலர் ரொக்கப் போனஸ் வழங்கப்படும். </p><p>இல்லினாய்ஸ் மாகாணத்தில் லொட்டரி வெற்றியாளர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமலே இருக்க முடியும் என்பதால், அந்த வெற்றியாளர், 29 ஆண்டுகளில் 30 தவணைகளாக வழங்கப்படும் 1.04 பில்லியன் டொலர் மதிப்பிலான வருடாந்திரத் தவணை முறையிலான பரிசைப் பெறுவதைத் தெரிவு செய்யலாம். </p><p>அல்லது 450.5 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்ட ஒரு தொகையை மொத்தமாகப் பெறலாம். இவ்விரு தொகைகளும் வரிக்கு உட்பட்டவை ஆகும்.</p><p> குலுக்கல் நடைபெற்ற திகதியிலிருந்து ஓராண்டுக்குள் வெற்றியாளர் பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று லொட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
மாசசூசெட்ஸில் விற்கப்பட்ட ஒரு டிக்கெட், பவர் பிளே மல்டிபிளையருடன் ஆறு எண்களில் ஐந்து எண்களைப் பொருத்தி 2 மில்லியன் டொலர்களை வென்றுள்ளது. </p><p>அதே நேரத்தில், அரிசோனா, கலிபோர்னியா, புளோரிடா மற்றும் வட கரோலினா ஆகிய நான்கு மாகாணங்களில் விற்கப்பட்ட ஐந்து டிக்கெட்டுகள் தலா 1 மில்லியன் டொலர்களை வென்றன என்று லொட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆர்கன்சாஸைச் சேர்ந்த ஒருவர் 1.8 பில்லியன் டொலர்களை வென்ற பிறகு, புதன்கிழமை நடந்த குலுக்கல்தான் முதல் பில்லியன் டொலர் பவர்பால் ஜாக்பாட் ஆகும். </p><p>மே 2 அன்று புளோரிடா மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த இருவர் 20 மில்லியன் டொலர் பரிசைப் பகிர்ந்துகொண்ட பிறகு, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒருவர் முதன்மைப் பரிசை வென்றது இதுவே முதல் முறையாகும்.</p><h2>மிகப்பெரிய பவர்பால் பரிசு</h2><p> </p><p>புதன்கிழமை நடந்த ஆட்டம், தற்போதைய ஜாக்பாட் தொடரில் நடைபெற்ற 44வது தொடர்ச்சியான குலுக்கலாகும், மேலும் அதன் பரிசுத்தொகை பவர்பால் வரலாற்றில் எட்டாவது பெரிய பரிசுத்தொகையாகப் பதிவாகியுள்ளது.</p><p> 2016-ல் 1.586 பில்லியன் டொலர் பவர்பால் பரிசைப் பிரித்துக்கொண்டதன் மூலம், புளோரிடா, கலிபோர்னியா மற்றும் டென்னசியைச் சேர்ந்த மூவர் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான ஜாக்பாட்டை வென்ற முதல் நபர்கள் ஆனார்கள். </p><p>பதிவுசெய்யப்பட்டதிலேயே மிகப்பெரிய பவர்பால் பரிசுத் தொகையான 2.04 பில்லியன் டொலர்கள் 2022-ல் கலிபோர்னியாவில் வெல்லப்பட்டது; கடந்த ஆண்டு ஆர்கன்சாஸில் வெல்லப்பட்ட 1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசு இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b418f82-c365-487f-8b3e-06bda943ebef/26-6a7e24b433dea.webp' /></p><p> </p><p>புளோரிடா, டெக்சாஸ் மற்றும் டென்னசி உள்ளிட்ட சில மாகாணங்கள் லொட்டரி பரிசுத்தொகைக்கு வரி விதிப்பதில்லை. பெரும்பாலான பவர்பால் மற்றும் பிற முக்கிய லொட்டரி வெற்றியாளர்கள், ஆண்டுத் தவணைகளை விட மொத்தத் தொகையையே தெரிவு செய்கின்றனர். </p><p>பவர்பால் சீட்டுகள் அமெரிக்காவின் 45 மாகாணங்கள், கொலம்பியா மாவட்டம், புவேர்ட்டோ ரிக்கோ, அமெரிக்க விர்ஜின் தீவுகள் மற்றும் பிரித்தானியா ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகின்றன. </p><p>குலுக்கல்கள் ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:59 மணிக்கு (ET) நடைபெறுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T03:30:09+00:00</updated>
        </entry>
    </feed>
