<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-20T16:37:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-beat-zimbabwe-by-1-wicket-in-3rd-odi-1789920941"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-beat-zimbabwe-by-1-wicket-in-3rd-odi-1789920941</id>
            <summary type="text">Australia beat zimbabwe by 1 wicket: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Australia beat zimbabwe by 1 wicket: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

ஹராரேயில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.&nbsp;</p><h2>சிக்கந்தர் ரஸா 81 ஓட்டங்கள் </h2><p>

அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரேயில் நடந்தது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 271 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c6b430-6ede-4367-9a0e-f2675f1154ea/26-6ab007b6a7d6f.webp' />&nbsp;</p><p></p><p>அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா 72 பந்துகளில் 81 ஓட்டங்களும், கிரேக் எர்வின் 59 ஓட்டங்களும் எடுத்தனர். 

நேதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca51f0b-e903-48dc-bd29-9ba408353dab/26-6ab009333c8ff.webp' /></p><p>
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் ஜோஷ் இங்கிலிஸ் (Josh Inglis) நிதானமாக ஆடி 103 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><h2>அவுஸ்திரேலியா வெற்றி </h2><p>

ஆனால், ஏனைய வீரர்கள் சொதப்பியதால் 245 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள் என அவுஸ்திரேலியா தடுமாறியது.</p><p>

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நேதன் எல்லிஸ் (Nathan Ellis), ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 272 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலிஸ் ஆட்டநாயகன் விருதும், கூப்பர் கோனொலி தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d851c868-594b-43a9-aa29-dbf48dd9f732/26-6ab00a415f0c3.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cce22224-a463-42eb-8673-cc15ff602b09/26-6ab007b77ae42.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T16:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/melinda-gates-denies-funding-daughters-startup-1789919559"></link>
            <id>https://news.lankasri.com/article/melinda-gates-denies-funding-daughters-startup-1789919559</id>
            <summary type="text">Melinda Gates denies funding daughter’s startup: 3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தும், சொந்த மகளுக்கு தொழில் தொடங்க பணம் தர மறுத்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Melinda Gates denies funding daughter’s startup: 3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தும், சொந்த மகளுக்கு தொழில் தொடங்க பணம் தர மறுத்துள்ளார் மெலிண்டா கேட்ஸ்.</p><p>
</p><h2>
மெலிண்டா கேட்ஸ்</h2><p>&nbsp;மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், 34 பில்லியன் டொலர் ( ரூ.3.30 லட்சம் கோடி) சொத்து இருந்தும், தனது மகளின் ஸ்டார்ட்அப்பிற்கு நிதி வழங்க மறுத்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74cd0447-e958-4f71-8152-32d394dafc63/26-6ab00148bde2d.webp' /></p><p>மெலிண்டா, “இது உண்மையான வியாபாரம் என்றால், பிற முதலீட்டாளர்கள் அதனை ஆதரிக்க வேண்டும். நான் பணம் கொடுக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
</p><p>
மேலும், தனது மகள் மறுப்பு மற்றும் சவால்களை எதிர்கொண்டு வளர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>பில் கேட்ஸ், தனது குழந்தைகள் தன்னுடைய செல்வத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே பெறுவார்கள் என்று முன்பே அறிவித்திருந்தார். இதே கொள்கையை மெலிண்டாவும் பின்பற்றுகிறார்.</p><h2>

இளைய மகளின்&nbsp;ஃபேஷன்-டெக் ஸ்டார்ட்அப்</h2><p>அவர்களின் இளைய மகள் ஃபீபி கேட்ஸ் (Phoebe Gates), தனது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக நண்பருடன் சேர்ந்து Phia என்ற ஃபேஷன்-டெக் ஸ்டார்ட்அப்பை தொடங்கியுள்ளார். இந்த பிளாட்ஃபார்ம், 40,000-க்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் உள்ள ஆடைகள் விலைகளை ஒப்பிட்டு, பயனாளர்களுக்கு சிறந்த சலுகைகளை கண்டுபிடிக்க உதவுகிறது.
</p><p></p><p>மெலிண்டா, பெண்கள் தொழில் முனைவோர் நிதி திரட்டுவதில் அதிக சவால்களை சந்திக்கின்றனர் என்றும், தன்னம்பிக்கை மற்றும் பொறுமையுடன் முன்னேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த முடிவு, கேட்ஸ் குடும்பத்தின் சுயமாக முன்னேற வேண்டும் என்ற கொள்கையை வெளிப்படுத்துகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T15:49:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/protesters-marched-in-crowborough-for-asylum-camp-1789919083"></link>
            <id>https://news.lankasri.com/article/protesters-marched-in-crowborough-for-asylum-camp-1789919083</id>
            <summary type="text">Protesters marched in crowborough for asylum camp: பிரித்தானியாவில் முன்னாள் இராணுவத் தளம் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகமாக மாற்றப்பட்டதையடுத்து போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Protesters marched in crowborough for asylum camp: பிரித்தானியாவில் முன்னாள் இராணுவத் தளம் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகமாக மாற்றப்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.
</p><p>
பிரித்தானியாவில் மக்களின் எதிர்ப்பை மீறி, முன்னாள் இராணுவத் தளம் ஒன்று புலம்பெயர்ந்தோருக்கான முகாமாக மாற்றப்பட்டதால் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.&nbsp;</p><h2>புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகாம் </h2><p>

சசெக்ஸின் Crowborough-யில் முன்னாள் இராணுவத் தளம் ஒன்று, ஆண் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகாமாக மாற்றப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb20abd0-93a7-433e-a7a4-6c248a65e775/26-6ab00014c4066.webp' />&nbsp;</p><p></p><p>

ஆனால், அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பு, வளங்களின் மீதான அழுத்தம் மற்றும் தளத்தின் அளவு ஆகியவற்றிற்கு எதிராக உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பு எழுந்தது.</p><p> 

அந்த எதிர்ப்பையும் மீறி புகலிட முகாம் செயல்படத் தொடங்கிய நிலையில், அதன் கொள்ளளவை 540 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>ஆர்ப்பாட்டத்தில்&nbsp;ஆயிரக்கணக்கானோர் </h2><p> </p><p>

இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் குடும்பங்கள் மற்றும் சிறு குழந்தைகள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>

'Crowborough வேண்டாம் என்கிறது' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி மக்கள் திரண்டனர்.

இந்த பேரணி இராணுவத் தளத்தில் தொடங்கி நகர மையத்திற்குள் நகர்ந்தது.
</p><p>
 அதே சமயம், 'புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படுகிறார்கள்', 'கருணையே எங்கள் பலம்' மற்றும் 'ஒன்றாக இணைந்தால் வலிமை' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி எதிர் ஆர்ப்பாட்டக்காரர்களும் வந்திருந்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5738972c-62a8-497c-b6d2-96c350805f9d/26-6ab00015b024e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T15:44:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை சோதனை செய்த வட கொரியா - உலக நாடுகள் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-fires-two-missiles-in-3-hours-1789909593"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-fires-two-missiles-in-3-hours-1789909593</id>
            <summary type="text">North Korea fires two missiles in 3 hours: 3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது.  

பாலிஸ்டிக் ஏவுகணைக சோதனைவட கொரியா கிழக்கு கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>North Korea fires two missiles in 3 hours: 3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது. </p><h2> 

பாலிஸ்டிக் ஏவுகணைக சோதனை</h2><p>வட கொரியா கிழக்கு கடற்கரையிலிருந்து மூன்று மணி நேர இடைவெளியில் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.</p><p> இது கடந்த வாரம் நடந்த சோதனைகளுக்குப் பிறகு மீண்டும் நிகழ்ந்ததால், உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51480eb-8287-4bb4-8f1e-f77a6360190f/26-6aafda5b478eb.webp' /></p><p>
</p><h2>
3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகள்</h2><p>முதல் ஏவுகணை வோன்சான் (Wonsan) பகுதியில் இருந்து மதியம் 3 மணிக்கு ஏவப்பட்டது. இது சுமார் 450 கிமீ தூரம் பறந்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏவுகணை மாலை 5.50 மணிக்கு அதே பகுதியில் இருந்து ஏவப்பட்டு 600 கிமீ தூரம் பறந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம், இந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் வகையைச் சேர்ந்தவை என்றும், அவை ஜப்பானின் Exclusive Economic Zone-க்கு வெளியே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளது.
</p><p></p><p>தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், இந்த சோதனைகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நேரடியாக மீறுகின்றன என்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பானும் பீஜிங்கில் உள்ள தூதரக வழியாக அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
</p><p>
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கோயிசுமி, “வட கொரியாவின் இந்த நடவடிக்கைகள் ஜப்பான், பிராந்தியம் மற்றும் உலக அமைதிக்கு நேரடி அச்சுறுத்தல்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இதற்கிடையில், வட கொரியா தனது அணு திட்டத்திற்கு எதிராக ஐ.நா. அணு கண்காணிப்பு அமைப்பு எடுத்த தீர்மானத்தை நிராகரித்துள்ளது. </p><p>மேலும், அமெரிக்கா தலைமையிலான கடற்படை பயிற்சிகள் தான் தீவிர நிலையை உருவாக்குகின்றன என்று கிம் யோ ஜோங் (Kim Yo Jong) குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

இந்த சோதனைகள், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. உலக நாடுகள், வட கொரியா உடனடியாக ஏவுகணை சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T15:31:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா முழுவதும் பறந்த தானியங்கி விமானம் - வரலாற்று சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/autonomous-plane-flies-across-america-1789917950"></link>
            <id>https://news.lankasri.com/article/autonomous-plane-flies-across-america-1789917950</id>
            <summary type="text">Autonomous plane flies across America: அமெரிக்காவில் முதல் முறையாக தானியங்கி (Autonomous) விமானம் மனித பைலட் இல்லாமல், நாடு முழுவதும் பறந்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Autonomous plane flies across America: அமெரிக்காவில் முதல் முறையாக தானியங்கி (Autonomous) விமானம் மனித பைலட் இல்லாமல், நாடு முழுவதும் பறந்துள்ளது.</p><p>

Joby Aviation நிறுவனம் உருவாக்கிய Cessna Caravan விமானம், 3,199 மைல்கள் தூரம் பறந்து இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b19c66c-d485-4b3f-8ad7-7fec77873ac6/26-6aaffafff2ef2.webp' /></p><p>இந்த விமானம் செப்டம்பர் 7 அன்று காலிஃபோர்னியாவின் Concord நகரில் இருந்து புறப்பட்டு, பல்வேறு இடங்களில் இடைநிறுத்தங்களுடன் பயணம் செய்தது. </p><p>புறப்படும் தருணம் முதல் தரையிறங்கும் வரை, முழுமையாக கணினி கட்டுப்பாட்டில் இயங்கியது.

விமானம் Phoenix Deer Valley போன்ற மிகப் பிஸியான விமான நிலையங்களில் பாதுகாப்பாக செயல்பட்டதோடு, புயல், இடியுடன் கூடிய மழை போன்ற கடுமையான வானிலை சவால்களையும் தானாக சமாளித்தது.</p><p></p><p>Joby Aviation நிறுவனர் JoeBen Bevirt, “இந்த பயணம் விமானத் துறையின் புதிய யுகத்தை காட்டுகிறது. தானியங்கி விமானங்கள், தொலைதூர பகுதிகளை இணைக்க, அவசர உதவிகளை வழங்க, பேரழிவுகளுக்கு விரைவாக பதிலளிக்க, இராணுவ நடவடிக்கைகளில் பைலட்டுகளை ஆபத்திலிருந்து காப்பாற்ற உதவும்” எனக் கூறினார்.</p><p>

இந்த விமானம் டெக்சாஸ் Fort Worth Alliance Airport மற்றும் South Carolina Shaw Air Force Base ஆகிய இடங்களில் தரையிறங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b65015-039a-405a-bea4-7d929cde9891/26-6aaffb00bfe08.webp' /></p><p> </p><h2>ரைட் சகோதரர்களுக்கு அஞ்சலி</h2><p>செப்டம்பர் 14 அன்று, North Carolina Kitty Hawk பகுதியில் உள்ள Wright Brothers National Memorial மேல் பறந்து, 1903-ல் முதல் முறையாக விமானத்தில் பிறந்ததற்கு Wilbur மற்றும் Orville Wright சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.
</p><p>
இப்போது, இந்த தானியங்கி விமானம் மீண்டும் California நோக்கி திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளது.</p><p> இதில் Washington D.C., Kentucky, Kansas, Oklahoma, Utah, Oregon போன்ற இடங்களில் இடைநிறுத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.</p><p>

இந்த சாதனை, விமானத் துறையில் தானியங்கி தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T15:22:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மண்ணில் முதல் முறையாக இயங்கிய ஜப்பான் போர் விமானங்கள் - Veer Guardian 2026 பயிற்சி தொடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-jets-fly-from-india-in-historic-drill-1789913730"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-jets-fly-from-india-in-historic-drill-1789913730</id>
            <summary type="text">Japan fighter jets fly from India first time in history: இந்தியாவில் முதல் முறையாக ஜப்பான் போர் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

Veer Guardian 2026&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>Japan fighter jets fly from India first time in history: இந்தியாவில் முதல் முறையாக ஜப்பான் போர் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
</p><h2>
Veer Guardian 2026&nbsp;பயிற்சி</h2><p>ராஜஸ்தானின் ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் நடைபெறும் ‘Veer Guardian 2026’ எனும் இருதரப்பு விமானப் பயிற்சியில், இந்தியா மற்றும் ஜப்பான் விமானப்படைகள் இணைந்து பங்கேற்றுள்ளன.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Chief of the Air Staff Air Marshal AP Singh met Japan Air Self-Defense Force Chief of Staff General Takehiro Morita during the joint air exercise ‘Veer Guardian 2026’ at Air Force Station.<a href="https://x.com/IAF_MCC?ref_src=twsrc%5Etfw">@IAF_MCC</a> <a href="https://x.com/hashtag/VeerGuardian2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VeerGuardian2026</a> <a href="https://x.com/hashtag/IndiaJapan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#IndiaJapan</a> <a href="https://x.com/hashtag/IAF?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#IAF</a> <a href="https://x.com/hashtag/JASDF?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JASDF</a> <a href="https://x.com/hashtag/Defence?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Defence</a> <a href="https://t.co/2vAmotKT71">pic.twitter.com/2vAmotKT71</a></p>&mdash; DD India (@DDIndialive) <a href="https://x.com/DDIndialive/status/2101670029133860922?ref_src=twsrc%5Etfw">September 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் A.P. சிங் தனியாக தேஜஸ் விமானத்தில் பறந்தார். ஜப்பான் விமானப்படை தளபதி ஜெனரல் டகேஹிரோ மோரிடா ஒரு பைலட்டுடன் சேர்ந்து தேஜஸ் விமானத்தில் பறந்தார்.
</p><p>
இது இரு நாடுகளின் பரஸ்பர மரியாதை மற்றும் கூட்டாண்மையை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.</p><p>
</p><p></p><h2>பங்கேற்ற விமானங்கள்</h2><p>இந்த பயிற்சியில் இந்தியாவின் தேஜஸ், Su-30MKI, ரஃபேல் விமானங்கள் பங்கேற்கின்றன. ஜப்பானின் F-2A போர் விமானங்களும் இதில் இணைந்துள்ளன.</p><p>

ஏர் மார்ஷல் சிங், “ஜப்பான் விமானங்கள் இந்திய மண்ணில் செயல்படுவது எங்கள் இருதரப்பு உறவின் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாகும். இது பரஸ்பர நம்பிக்கை, தொழில்முறை ஒத்துழைப்பு மற்றும் அமைதிக்கான உறுதியை வெளிப்படுத்துகிறது” என்று கூறினார்.
</p><p>
ஜப்பான் தளபதி மோரிடா, “இந்த பயிற்சி, பரஸ்பர புரிதலை வலுப்படுத்தி, நீடித்த ஒத்துழைப்பை மேம்படுத்தும். தேஜஸ் விமானம் இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் ‘Make in India’ முயற்சியையும் பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/ExVeerGuardian26?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ExVeerGuardian26</a><br><br>As part of Exercise Veer Guardian 26, General Takehiro Morita, Chief of Staff, Japan Air Self-Defense Force (JASDF) and Air Chief Marshal AP Singh, Chief of the Air Staff, visited Air Force Station Jodhpur and flew the indigenous <a href="https://x.com/hashtag/Tejas?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Tejas</a> fighter aircraft.<br><br>Air… <a href="https://t.co/s4KTCjdkvH">pic.twitter.com/s4KTCjdkvH</a></p>&mdash; Indian Air Force (@IAF_MCC) <a href="https://x.com/IAF_MCC/status/2101673834948739143?ref_src=twsrc%5Etfw">September 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>14 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், நடவடிக்கை (Mission) திட்டமிடல், பொறியியல், விமான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன.
</p><p>
மேலும், இந்தியாவின் தேஜஸ் MK-2 மேம்பட்ட போர் விமானம் விரைவில் உருவாகும் என்றும், இது இந்தியாவின் பாதுகாப்பு விமானத் துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் ஏர் மார்ஷல் சிங் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த பயிற்சி, இந்தியா-ஜப்பான் உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T14:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் வேகத்தில் கோல் அடித்த தாமஸ் முல்லர்: வான்கூவர் வெற்றி (வீடியோ)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thomas-muller-stunning-goal-vancouver-won-in-mls-1789913487"></link>
            <id>https://news.lankasri.com/article/thomas-muller-stunning-goal-vancouver-won-in-mls-1789913487</id>
            <summary type="text">வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சால்ட் லேக்கினை வீழ்த்தியது.

MLS போட்டியில் கனடாவின் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி, சால்ட் லேக் அணியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சால்ட் லேக்கினை வீழ்த்தியது.
</p><p>
MLS போட்டியில் கனடாவின் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி, சால்ட் லேக் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.</p><h2>தாமஸ் முல்லர்</h2><p>

வான்கூவர் ஒயிட்கேப்ஸ் மற்றும் சால்ட் லேக் அணிகள் மோதிய MLS போட்டி அமெரிக்கா பர்ஸ்ட் ஃபீல்ட் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Too much space for Müller 🔥👊<br><br>Diaby and Thomas find our second of the match 🤩<a href="https://x.com/hashtag/RSLvVAN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RSLvVAN</a> | <a href="https://x.com/hashtag/RSL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RSL</a> 0 - 2 <a href="https://x.com/hashtag/VAN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VAN</a> <a href="https://t.co/TUL0oTRJH0">pic.twitter.com/TUL0oTRJH0</a></p>&mdash; Vancouver Whitecaps FC (@WhitecapsFC) <a href="https://x.com/WhitecapsFC/status/2101497720141656485?ref_src=twsrc%5Etfw">September 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் வீரர் பிரையன் ஒயிட் (Brian White) கோல் அடித்தார்.&nbsp;</p><p></p><p>

அதனைத் தொடர்ந்து, ஜேர்மானிய நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் (Thomas Muller) 29வது நிமிடத்தில் மின்னல் வேகத்தில் கோல் அடித்தார்.&nbsp;</p><h2>வான்கூவர் வெற்றி </h2><p>
பின்னர் இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணியில் யாடலி டையாபி கோல் அடித்தார்.</p><p> 

இறுதிவரை சால்ட் லேக் அணியால் கோல் அடிக்க முடியாததால், வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cc0a0af-690a-492c-86d4-fadee9daa48f/26-6aafe992ea8f9.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T14:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷம் முதல் மீனம் வரை.., திருமண பொருத்த ரகசியங்கள் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/12-rasi-marriage-rasi-palan-in-tamil-1789907349"></link>
            <id>https://news.lankasri.com/article/12-rasi-marriage-rasi-palan-in-tamil-1789907349</id>
            <summary type="text">திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அது எந்த நேரத்திலும், காலகட்டத்திலும் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும்.</p><p>

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அது எந்த நேரத்திலும், காலகட்டத்திலும் நடக்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.</p><p>

அதனால்தான் திருமணம் சுபமுகூர்த்தத்தில் நடத்தப்பட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.</p><p>

மேலும், நமது ராசியானது நம்முடைய திருமண வாழ்க்கையில் முக்கியப்பங்கு வகிக்கிறது.</p><p>

ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு குருவும் திருமணத்துக்கான முக்கிய கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையான ராசிக்காரர்களுக்கு, திருமண பொருத்த ரகசியங்கள் குறித்து இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oy7VKp1e9Mc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T14:00:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[1600 ட்ரோன்களை வீழ்த்தி..மிகப்பெரிய தாக்குதல் முறியடிப்பு - ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-said-downing-1600-ukraine-drones-1789911568"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-said-downing-1600-ukraine-drones-1789911568</id>
            <summary type="text">Russian mayor said we downing 1,600 drones: உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் 1,600 ட்ரோன்களை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian mayor said we downing 1,600 drones: உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
</p><p>
உக்ரைனின் 1,600 ட்ரோன்களை சுட்டுவீழ்த்தி, மிகப்பெரிய தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>உக்ரைன் மிகப்பெரிய தாக்குதல் </h2><p>
ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தலின் இடையே, மாஸ்கோ பகுதியில் உக்ரைன் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3dbe4da-9fbf-429f-8628-bea4ce9ed0d5/26-6aafe33ff0927.webp' /></p><p></p><p>
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதுகுறித்து மேயர் செர்ஜி சோபியானின் கூறுகையில், "1600-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதன் மூலம், மிகப்பெரிய உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டது. பல ட்ரோன்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தை அடைந்தன.</p><p>

அவற்றில் ஒன்று அடுக்குமாடிக் குடியிருப்பு மீது தாக்கியது. தேர்தல்களை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த முன்னெப்போதும் இல்லாத தாக்குதல் தெளிவாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், எதிரி இதை சாதிக்க தவறிவிட்டார்" என்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/182e812a-e688-4608-a144-21fbe91da0cb/26-6aafe340c6d7c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T13:41:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shafali-verma-century-vs-bangladesh-asian-games-1789905857"></link>
            <id>https://news.lankasri.com/article/shafali-verma-century-vs-bangladesh-asian-games-1789905857</id>
            <summary type="text">Shafali verma 100 runs in 49 balls in asian games 2026: வங்காளதேச மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shafali verma 100 runs in 49 balls in asian games 2026: வங்காளதேச மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.</p><p></p><p>
மகளிர் ஆசிய கிண்ணப் போட்டியில் இந்திய அணி 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. </p><p></p><h2>மந்தனா,&nbsp;ஷபாலி&nbsp;அதிரடி</h2><p>இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண அரையிறுதிப்போட்டி நிஸ்ஷினில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5e519d8-4fca-4301-b378-5c4f6cd00a5a/26-6aafcf6c5894a.webp' /></p><p></p><p>
முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) அதிரடியாக 19 பந்துகளில் 37 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார். </p><p>

அடுத்து வந்த கமலினி 3 ஓட்டங்களில் வெளியேற, ஹர்மன்ப்ரீத் கவுர் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார். 

மறுமுனையில் ஷபாலி வெர்மா (Shafali Verma) சிக்ஸர்மழை பொழிந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/483bdebd-460b-435e-bdb1-55ef2033044b/26-6aafd6aa943d2.webp' /></p><p>இறுதிவரை களத்தில் நின்று ஷபாலி சதம் விளாசினார்.

இதன்மூலம் இந்திய அணி 195 ஓட்டங்கள் குவித்தது. ஷபாலி வெர்மா 49 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a62c29-3049-49ac-aae7-96faa1fffcef/26-6aafcc9c661f6.webp' />&nbsp;</p><h2>இந்தியா இமாலய வெற்றி </h2><p>

ஹர்மன்ப்ரீத் கவுர் 33 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் எடுத்தார். மருஃபா, ஷான்ஜிதா, ரபேயா மற்றும் நஹிதா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55cb1b50-51a7-4e93-b692-d5b9e39afef1/26-6aafcf6d50a60.webp' /></p><p>
பின்னர் ஆடிய வங்காளதேச அணி 15.4 ஓவர்களில் 81 ஓட்டங்களுக்கு சுருண்டதால், இந்தியா 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.&nbsp;</p><p>
அதிகபட்சமாக திலரா அக்தர் 27 ஓட்டங்கள் எடுத்தார். நந்தனி ஷர்மா மற்றும் தீப்தி ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகளும், ஷ்ரேயங்கா பாட்டீல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff568c53-1e5d-4689-ba48-1d820eddf888/26-6aafd6ab6ca2f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f830c8e0-2b36-43b0-88ea-2127dd666dc9/26-6aafcc9b9f22e.webp' />&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T12:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவூறும் சுவையில் காராமணி வடை.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karamani-vadai-recipe-in-tamil-1789905828"></link>
            <id>https://news.lankasri.com/article/karamani-vadai-recipe-in-tamil-1789905828</id>
            <summary type="text">&amp;nbsp;Karamani Vadai Recipe In Tamil-&amp;nbsp;வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

காரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Karamani Vadai Recipe In Tamil-&nbsp;வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
</p><p>
காராமணி சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைப்பது, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது, மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவது போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
</p><p>
அந்தவகையில், நாவூறும் சுவையில் சத்தான காராமணி வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><ul><li> 

காராமணி- 1 கப் </li><li>
உப்பு- 1 ஸ்பூன்
</li><li>வெங்காயம்- 1
</li><li>இஞ்சி- 1 துண்டு </li><li>
பச்சை மிளகாய்- 2 </li><li>
கறிவேப்பிலை- 1 கொத்து</li><li> 
சீரகம் - 1 ஸ்பூன்</li><li> 
பெருங்காயத்தூள்- ½ ஸ்பூன்</li><li> 
எண்ணெய் - தேவையான அளவு </li></ul><h2>

செய்முறை
</h2><p>
முதலில் காராமணியை 3 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
</p><p>
பின் காராமணி பாதியளவு அரைத்த பிறகு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80d394b9-5cdf-42cc-a670-546c441cef9e/26-6aafcba6c4867.webp' /></p><p>அடுத்து அரைத்த காராமணியுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.</p><p>

இதற்கடுத்து அடுப்பில் வேனல் வைத்து சூடானதும் எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்தவும்.</p><p>

இதற்கடுத்து வடை மாவை சிறிதளவு எடுத்து தட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-09-20T12:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவை அடுத்து... இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்திய சவுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-stops-crude-supplies-1789900961"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-stops-crude-supplies-1789900961</id>
            <summary type="text">Saudi Aramco stops crude supplies to India: சவுதி அராம்கோ இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியது.
சவுதி அரேபியாவின் முக்கிய கிழக்கு-மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Saudi Aramco stops crude supplies to India: சவுதி அராம்கோ இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியது.
</p><p>சவுதி அரேபியாவின் முக்கிய கிழக்கு-மேற்கு குழாய்வழித்தடத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, சவுதி அரம்கோ நிறுவனம் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தியுள்ளது.</p><h2>கிழக்கு-மேற்கு</h2><p>
</p><p>சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் சரக்குக் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில், மாற்று விநியோகத்தை நாடும் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, கச்சா எண்ணெய் கொள்முதல் செலவுகள் அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f8c74c0-3530-4e7f-9bbe-04d22542eb4e/26-6aafb8a37b3ea.webp' /></p><p> </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ஈராக் ஆயுதக் குழுவொன்றால் இயக்கப்படும் ட்ரோன்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கடந்த வார இறுதியில் 'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடம் மூடப்பட்டது. </p><p>ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெயை விநியோகிப்பதற்கான சவுதி அரேபியாவின் முக்கிய மாற்றுப் பாதையாக இந்தப் குழாய் வழித்தடம் உருவெடுத்தது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், செங்கடல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி ஆகிய இரண்டும் வழியாக இந்தியாவிற்கு வழங்குவதை அரம்கோ நிறுத்தியுள்ளது. குழாய்வழித் தாக்குதலுக்கு முன்பே ஹார்முஸ் வழியாக விநியோகம் மிகவும் குறைந்த நிலைக்குச் சரிந்திருந்தது. </p><p>கச்சா எண்ணெய் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நேரத்தில் இந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய சந்தை நிலவரத்தில், பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 1.36 டொலர் அல்லது 1.30 சதவீதம் சரிந்து 103.46 டொலர் ஆகவும், WTI கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 0.85 டொலர் அல்லது 0.83 சதவீதம் சரிந்து 101.06 டொலர் ஆகவும் இருந்தது. </p><p>சவுதி அரேபியா இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை வழங்கும் முக்கிய நாடாகத் திகழ்கிறது. போர் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 9 சதவீதத்தை 'அராம்கோ' (Aramco) நிறுவனம் வழங்கியுள்ளது. </p><p>இந்த நிலையில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் தற்போது சவுதி அரேபியாவிலிருந்து தங்களது ஒப்பந்தம் செய்யப்பட்ட காலவரையறைக்குட்பட்ட விநியோகத்தைப் பெறவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>சமீபத்திய இடையூறு</h2><p>
</p><p>அராம்கோ பொதுவாக இந்தியா மற்றும் பிற வாடிக்கையாளர்களுக்கு, 'ஸ்பாட்' சந்தை (spot market) மூலமாக அல்லாமல், அதிகாரப்பூர்வ விற்பனை விலையிலான வருடாந்திர ஒப்பந்தங்கள் மூலமாகவே கச்சா எண்ணெயை விநியோகம் செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7ad875-6ac6-47d7-b43a-acb233cedf9a/26-6aafb8a42f4d1.webp' /></p><p> </p><p>இதனால், மாற்று விநியோக வழிகளைக் கண்டறிய வேண்டிய நிலையில் உள்ள இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, ஏற்பட்டுள்ள இந்தச் சமீபத்திய இடையூறு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. </p><p>இருப்பினும், மாற்றுக் கச்சா எண்ணெயைக் கண்டறிவது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இந்திய சுத்திகரிப்பாளர்கள் மாற்று கச்சா எண்ணெய் விநியோகத்தைக் கண்டறிவதில் நம்பிக்கையுடன் உள்ளனர், ஆனால் சர்வதேச எண்ணெய் அளவுகோல்கள் உயர்ந்துள்ளதாலும், ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தள்ளுபடிகள் மறைந்துவிட்டதாலும், அந்த பீப்பாய்களின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-20T11:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூமியின் எல்லை என்று அழைக்கப்படும் இடம்..., எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-place-is-called-as-the-end-of-the-earth-1789903688"></link>
            <id>https://news.lankasri.com/article/which-place-is-called-as-the-end-of-the-earth-1789903688</id>
            <summary type="text">which place is called as the end of the earth-&amp;nbsp;நாம் வாழும் பூமி சுமார் 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. 

நாம் வாழும் பூமியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>which place is called as the end of the earth-&nbsp;நாம் வாழும் பூமி சுமார் 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. </p><p>

நாம் வாழும் பூமியில் சுமார் 800 கோடி மக்கள் மற்றும் 195 நாடுகள் உள்ளன.&nbsp; </p><p>இந்நிலையில், பூமியின் எல்லை என்று அழைக்கப்படும் இடம் குறித்து பார்க்கலாம்.
</p><p>
வட ஐரோப்பாவில் அமைந்துள்ள நார்த் கேப், கடற்கரை மற்றும் பனிப்பாறைகளுடன் கூடிய இயற்கை காட்சிகளை கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/240307da-f14f-4b3d-ae60-b2cdd40e5b64/26-6aafc34c9a6c9.webp' /></p><p>இந்த இடத்திற்குச் E-69 என்ற நெடுஞ்சாலை வழியாக சொல்லலாம்.</p><p>

நார்வேயில் உள்ள E-69 நெடுஞ்சாலை, ஐரோப்பாவின் வடகோடி முனையான நார்த் கேப் பகுதிக்குச் செல்கிறது. </p><p>

இந்த சாலை உலகின் கடைசி சாலை என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
</p><p>
இந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது, கடல் மற்றும் பனி நிரம்பிய நிலப்பரப்புகளை காணலாம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db5474d-9b97-4d98-ab6e-a4c8f320abda/26-6aafc34b2c974.webp' /></p><p>நார்த் கேப் பகுதி இந்தியாவிலிருந்து சுமார் 6,900 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
</p><p>
விமானப் பயணத்தின் மூலம் நார்வே சென்ற பிறகு, E-69 நெடுஞ்சாலை வழியாக இந்த இடத்திற்கு செல்லலாம்.
</p><p>
மேலும், ஆர்க்டிக் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், நார்த் கேப்பில் கடுமையான குளிர் நிலவுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/481159f5-468f-4a19-8fa5-8e5d49693c19/26-6aafc34bde70c.webp' /></p><p>குளிர்காலத்தில் வெப்பநிலை -45°C வரை குறையக்கூடும். கோடைக்காலத்திலும் இங்கு குளிர்ச்சியான வானிலை காணப்படும்.&nbsp;</p><p>இந்த பகுதியில் கோடைக்காலத்தில் நீண்ட நேரம் சூரியன் மறையாமல் இருக்கும் இயற்கை நிகழ்வை காணலாம்.</p><p> 

இதனால், உலகம் முழுவதும் இருந்து சாகசப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை நார்த் கேப் பகுதிக்கு வருகின்றார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-20T11:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்களிக்கவிருக்கும் இரண்டு ஜேர்மன் மாகாணங்கள்... AfD-யின் மற்றொரு வெற்றி குறித்து அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-voters-go-to-the-polls-1789903745"></link>
            <id>https://news.lankasri.com/article/german-voters-go-to-the-polls-1789903745</id>
            <summary type="text">German voters go to the polls in state elections: ஜேர்மன் வாக்காளர்கள் மாகாணத் தேர்தல்களில் வாக்களிக்கின்றனர்.
ஜேர்மனியில் இரண்டு மாகாணத் தேர்தல்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>German voters go to the polls in state elections: ஜேர்மன் வாக்காளர்கள் மாகாணத் தேர்தல்களில் வாக்களிக்கின்றனர்.
</p><p>ஜேர்மனியில் இரண்டு மாகாணத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில்; இதில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி அமைப்புகள் பெறும் முன்னேற்றம் நாட்டில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி, அரசாங்கத்தையே உலுக்கக்கூடும்.</p><h2>அவசரக் கூட்டம்</h2><p>
</p><p>ஜேர்மன் சேன்ஸலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், பெர்லின் மற்றும் மெக்லென்பர்க்-வெஸ்டர்ன் பொமரேனியா ஆகிய பிராந்தியத் தேர்தல்களிலிருந்து வெளியாகி வரும் ஆரம்பக்கட்ட முடிவுகள் குறித்து விவாதிக்க, தனது மைய-வலதுசாரி சிடியு (CDU) கட்சியின் தலைமைக்கான அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aec8231-027e-4181-8fb0-f0d842b11ac0/26-6aafc3832d088.webp' /></p><p> </p><p>16 மாதங்களாகப் பதவியில் இருக்கும் மெர்ஸ், வாக்கெடுப்பின் விளைவாக ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கையாள்வதற்காக, அடுத்தடுத்த நாட்களுக்கான தனது பணிகளை ஒத்திவைத்ததுடன், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான பயணத்தையும் ரத்து செய்துள்ளார்.
</p><p>இரண்டு வாரங்களுக்கு முன்பு Saxony-Anhalt மாகாணத்தில், தீவிர வலதுசாரி, ட்ரம்ப் ஆதரவு மற்றும் ரஷ்ய நட்புறவு கொண்ட AfD கட்சியானது, அவரது CDU கட்சிக்கு ஒரு பெரும் தோல்வியைக் கொடுத்தது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தேர்தல்களில் AfD கட்சி கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன; </p><p>இருப்பினும், Saxony-Anhalt மாகாணத்தில் தனிப்பெரும்பான்மைக்குச் சில ஆசனங்களே குறைவாக இருந்ததைப் போலன்றி, இம்முறை எந்தவொரு மாகாணத்திலும் அக்கட்சி ஆட்சியமைக்கும் நிலையை எட்ட வாய்ப்பில்லை என்றே தெரிய வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98c1375-3a09-45ec-a2a5-0357ed9e0a22/26-6aafc383d3a6c.webp' /></p><p> </p><p>ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள வாக்குப் பதிவில், அந்தந்தப் பகுதிகளுக்கே உரித்தான தனித்துவமான சவால்களை CDU எதிர்கொள்கிறது.
</p><p>வடகிழக்குக் கடற்கரை மாகாணமான மெக்லென்பர்க்-வெஸ்டர்ன் பொமரேனியாவில், பிரபலமான மாகாண முதலமைச்சர் மனுவேலா ஷ்வெசிக் தலைமையிலான SPD கட்சிக்கும் AfD கட்சிக்கும் இடையிலான முக்கியப் போட்டியை மெர்ஸின் கட்சி வெறும் பார்வையாளராகவே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.</p><h2>AfD தேர்தல் வெற்றி</h2><p>
</p><p>அரசு ஒளிபரப்பு நிறுவனமான ZDF-இன் தரவுகளின்படி, SPD கட்சி 37 சதவீத ஆதரவைப் பெற்றிருந்த நிலையில் AfD கட்சி 36 சதவீத ஆதரவைப் பெற்றிருந்தது; அதேவேளையில், மெர்ஸின் CDU கட்சி வெறும் 6 சதவீத ஆதரவுடன், மாகாண நாடாளுமன்றத்தில் நீடிப்பதற்குத் தேவையான 5 சதவீதக் குறைந்தபட்ச ஆதரவு அளவைத் தவறவிடும் அபாயகரமான நிலைக்கு மிக அருகில் இருந்தது. </p><p>கடந்த ஆண்டு மே மாதம் மெர்ஸ் பதவியேற்றபோது, ​​மந்தமடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ரஷ்யாவை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தை வலுப்படுத்தவும், வாக்காளர்களின் அச்சத்தைப் போக்கி அவர்களை AfD கட்சியிலிருந்து ஈர்க்கும் வகையில் முறையற்ற குடியேற்றத்தைக் குறைக்கவும் அவர் உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f1d5bac-3b88-4aac-acd8-7981305f266e/26-6aafc384863ed.webp' /></p><p> </p><p>ஆனால், தற்போது நாடு தழுவிய கருத்துக்கணிப்புகளில் AfD கட்சி முன்னிலையில் உள்ளது; அதேவேளையில், மெர்ஸின் தனிப்பட்ட செல்வாக்கு விகிதம் 10 சதவீதத்திற்குச் சற்று அதிகமாகவே உள்ளது—அவரது அவ்வப்போதான வெளிப்படையான மற்றும் கடுமையான கருத்துகளும் இதற்கு உதவவில்லை. </p><p>இந்த மாதத் தொடக்கத்தில் ஜேர்மனியில் AfD கட்சி பெற்ற தேர்தல் வெற்றி, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. தீவிர வலதுசாரிகள் அதிகாரத்திற்கு வருவதைத் தடுப்பதற்காக ஒரு 'கூட்டணியை' அமைக்குமாறு பிரான்ஸின் இமானுவல் மேக்ரானின் ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்தனர். </p><p>மேலும், உலகம் முழுவதும் தீவிர வலதுசாரி அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக ஸ்பெயினின் சோசலிசப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் திங்களன்று எச்சரித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-20T11:25:45+00:00</updated>
        </entry>
    </feed>
