<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-25T09:35:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திமுக எம்.எல்.ஏக்கள் அடிக்க பாய்ந்து வருகிறார்கள் - அமைச்சர் ராஜ்மோகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/raj-mohan-accuse-dmk-mla-comes-to-beat-in-assembly-1787647741"></link>
            <id>https://news.lankasri.com/article/raj-mohan-accuse-dmk-mla-comes-to-beat-in-assembly-1787647741</id>
            <summary type="text">raj mohan accuse dmk mlas comes to beat in assembly : திமுக எம்.எல்.ஏக்கள் அடிக்க பாய்ந்து வருகிறார்கள் என சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>raj mohan accuse dmk mlas comes to beat in assembly : திமுக எம்.எல்.ஏக்கள் அடிக்க பாய்ந்து வருகிறார்கள் என சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியுள்ளார். </p><h3> 

தவெக எம்.எல்.ஏ முஸ்தபா சர்ச்சை பேச்சு </h3><p>

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ மதார் முஸ்தபா திமுகவை விமர்சிக்கும் போது சர்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார். சபாநாயகர் அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/016ebb23-aee0-4bb1-a681-420c54eca856/26-6a8d56feb4af8.webp' /></p><p>

முஸ்தபா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கடும்அமளியில் ஈடுபட்டனர். </p><p>

திமுக எம்.எல்.ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து ஆவேசமாக முன்னால் வந்து அமளியில் ஈடுபட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee87047-7fb0-4f46-98a0-b309e51ad4e0/26-6a8d56ff64e25.webp' /></p><p> 

திமுக கொறடா எ.வ.வேலு அவர்களை சமாதானம் செய்து இருக்கையில் அமருமாறு அறிவுறுத்தினார்.</p><p> 

பூண்டி கலைவாணன் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே சென்று இது குறித்து முறையிட்டார்.
</p><h3>
அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு</h3><p> 

இதனையடுத்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் ஆளும் கட்சி உறுப்பினர்களை நோக்கி அடிக்க பாய்ந்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cbc2ad6-b6fb-4732-a731-bc3b7ae489cf/26-6a8d5700158fb.webp' /></p><p>

இது போன்ற உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் தவெக ஒரு போதும் பயப்படாது. இது போன்ற அநாகரீகமான செயல்பாடுகளால் தான் திமுகவுக்கு மக்கள் தகுந்த தீர்ப்பு கொடுத்து எதிர்கட்சியாக உட்கார வைத்துள்ளார்கள்" என கூறியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:49:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் கொடிய தாக்குதல்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடல்: இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/two-killed-in-southern-russia-strike-refinery-1787647280"></link>
            <id>https://news.lankasri.com/article/two-killed-in-southern-russia-strike-refinery-1787647280</id>
            <summary type="text">Two killed in southern russia strike refinery: தெற்கு ரஷ்யாவில் உக்ரைன் இராணுவம் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two killed in southern russia strike refinery: தெற்கு ரஷ்யாவில் உக்ரைன் இராணுவம் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.</p><p> 

ரஷ்யாவில் உள்ள கிராஸ்னோடார் பிராந்தியத்தில் அஃபிப்ஸ்கி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.&nbsp;</p><h2>எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து&nbsp;</h2><p>

தெற்கு பகுதியில் இரண்டு எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a5763b6-05c0-4ed9-b046-e5f0e12b635e/26-6a8d55c14b61c.webp' />&nbsp;</p><p></p><p>

அப்போது ட்ரோன் விமானத்தின் பாகங்கள் விழுந்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.</p><p> 


ரோஸ்டோவ்வில் உள்ள அதிகாரிகள், மற்றொரு தாக்குதலைத் தொடர்ந்து நோவோஷக்தின்ஸ்கி சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்ததாகவும், அதன் சுத்திகரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் இதற்கு முன்னர், ட்ரோன் விமானத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. </p><p>

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தனது தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கோடையில் பரவலான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு: $80,000 எல்லையை கடந்து சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bitcon-set-new-high-clears-80-000-milestone-1787647193"></link>
            <id>https://news.lankasri.com/article/bitcon-set-new-high-clears-80-000-milestone-1787647193</id>
            <summary type="text">அமெரிக்காவின் கொள்கை மாற்றத்தால் பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. பிட்காயின் சந்தை மதிப்பு உயர்வு
பிட்காயின் மதிப்பு மே மாதத்திற்கு பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கொள்கை மாற்றத்தால் பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.</p><h2> பிட்காயின் சந்தை மதிப்பு உயர்வு</h2><p>
பிட்காயின் மதிப்பு மே மாதத்திற்கு பிறகு முதன்முறையாக $80000 என்ற எல்லையைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.</p><p> கடந்த வாரத்தில் மட்டும் பிட்காயின் மதிப்பு 23% அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் கிரிப்டோகரன்சி சந்தை மீண்டும் புதிய எழுச்சியை பெற்றுள்ளது.</p><p> சந்தையில் ஏற்பட்ட மாற்றம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி பிட்காயின் மதிப்பை 2.15% அதிகரித்துள்ளது. இதனால் இரவு 10.23 மணியளவில் பிட்காயின் மதிப்பானது $80641 என்ற புதிய விலை உச்சத்தை தொட்டுள்ளது.</p><p> பிட்காயின் ஏற்றத்தால் ஈத்தேரியம் பங்குகளும் 1.36% உயர்ந்து $2,517க்கு வர்த்தகமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25a19de3-02db-4c2f-846b-c3ae402cd387/26-6a8d54da8b2f7.webp' /></p><p></p><h3> விலை ஏற்றத்திற்கான காரணம்</h3><p>உலகளாவிய பொருளாதார மாற்றங்களே இந்த திடீர் எழுச்சிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.</p><p> குறிப்பாக அமெரிக்க கருவூலம் நீண்ட கால அரசு பத்திரங்களின் கொள்முதலை இரண்டு மடங்காக அதிகரிக்க போவதாக அறிவித்தது. இது முதலீட்டாளர்களுக்கு சந்தையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்த கொள்கை மாற்றமே நிதித்துறை முதலீட்டு மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:40:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரில் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள்: காதலியின் செயலால் பொலிஸில் சிக்கிய காதலன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3400-lipstick-covered-car-police-fined-gwalior-man-1787646115"></link>
            <id>https://news.lankasri.com/article/3400-lipstick-covered-car-police-fined-gwalior-man-1787646115</id>
            <summary type="text">3400 Lipstick Covered Car police fined Gwalior man: &amp;nbsp;வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலி செய்த செயல் காதலனுக்கு தலைவலியாக போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>3400 Lipstick Covered Car police fined Gwalior man: &nbsp;வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலி செய்த செயல் காதலனுக்கு தலைவலியாக போய் முடிந்துள்ளது.</p><h2>காரில் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள்</h2><p>
குவாலியரில் காதலனுக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலனின் காரில் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களை காதலி வரைந்த நிலையில் போக்குவரத்து அதிகாரிகள் காரின் உரிமையாளருக்கு ரூ 5.500 அபராதமாக விதித்துள்ளனர்.</p><p> அத்துடன் காரில் உள்ள மொத்த லிப்ஸ்டிக் முத்தங்களையும் சுத்தப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Police in Gwalior seized a car with 3,400 lipstick marks by owner’s girlfriend and issued Rs 5,500 challan. They later made the man scrub lipstick marks off the vehicle<a href="https://x.com/hashtag/gwalior?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#gwalior</a> <a href="https://t.co/G78swQteqj">pic.twitter.com/G78swQteqj</a></p>&mdash; NDTV (@ndtv) <a href="https://x.com/ndtv/status/2092120380249198642?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>இணையத்தில் வைரலான விவகாரம்</h2><p>கடந்த சில நாட்களாக நகரின் முக்கிய வீதிகளில் இந்த கார் சுற்றித் திரிந்த நிலையில், இந்த கார் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்கள் வேகமாக பரவியது.</p><p> இந்நிலையில் சிட்டி சென்டர் பகுதியில் இந்த கார் செல்வதை கவனித்த போக்குவரத்து அதிகாரிகள், காரையும், காரின் உரிமையாளரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.</p><p>இதையடுத்து அவர் மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை மீறியதாக கூறி ரூ.5500 அபராதமாக விதித்துள்ளனர்.</p><p>அத்துடன் காரில் இருக்கும் முத்தக் கரைகளை முழுமையாக சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.</p><p></p><h2> செய்தியாளர்களிடம் அளித்த விளக்கம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35fdbf3e-d483-4547-a589-7b22dfc1ceb0/26-6a8d50a462928.webp' /></p><p>
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காரின் உரிமையாளர் ஆதித்யா, வெளிநாட்டு ட்ரெண்டால் கவரப்பட்ட தன்னுடைய காதலி இந்த முத்த அலங்காரத்தை செய்ததாக குறிப்பிட்டார்.</p><p> பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு பிறகு சுமார் மூன்றரை மணி நேரம் போராடி காரில் இருந்த ,400 லிப்ஸ்டிக் முத்தங்களையும் சுத்தம் செய்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அணியில் இருந்து நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brydon-carse-removed-england-squad-after-hand-cup-1787644362"></link>
            <id>https://news.lankasri.com/article/brydon-carse-removed-england-squad-after-hand-cup-1787644362</id>
            <summary type="text">brydon carse removed from england squad after hand cupped issue: விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிரைடன் கார்ஸ் டெஸ்ட் அண...</summary>
            <content type="html"><![CDATA[<p>brydon carse removed from england squad after hand cupped issue: விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிரைடன் கார்ஸ் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். </p><h3>

கைது செய்யப்பட்ட பிரைடன் கார்ஸ்</h3><p>

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. </p><p>

கவுண்டி கிரிக்கெட் விளையாடுவதற்காக முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸ்(brydon carse) 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00dd40a9-96ad-4997-bee9-210e550f9cc2/26-6a8d49cbe386c.webp' /></p><p>
கடந்த வாரம் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் டெர்பிஷயருக்கு எதிராக டர்ஹாம் அணி 338 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p><p>

இந்த வெற்றியை கொண்டாட ஆகஸ்ட் 22 ஆம் திகதி இரவு டெர்பி நகரில் உள்ள 'மோலி மலோனின் ஐரிஷ் டேவர்ன்' என்ற பிரபல நைட் கிளப்பிற்கு சக வீரர்கள் பெண் ஸ்டோக்ஸ், மேத்யூ பாட்ஸ் ஆகியோருடன் பிரைடன் கார்ஸ் சென்றுள்ளார்.</p><p> 

அங்கு மதுபோதையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக கூறி பிரைடன் கார்ஸ் காவல்துறையால் விலங்கு மாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். 

அதன் பின்னர் அங்கிருந்து வெளியேற அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, சிறிது நேரத்திலேயே கைது நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Durham bowler Brydon Carse, who is in England squad for second Test, was released without charge after a nightclub incident while celebrating victory over Derbyshire<a href="https://x.com/willis_macp?ref_src=twsrc%5Etfw">@willis_macp</a> has the details ⤵️<a href="https://t.co/4YXyQWChe5">https://t.co/4YXyQWChe5</a> <a href="https://t.co/zFKA3lgPVi">pic.twitter.com/zFKA3lgPVi</a></p>&mdash; Telegraph Cricket (@TeleCricket) <a href="https://x.com/TeleCricket/status/2091535700709515768?ref_src=twsrc%5Etfw">August 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
அவர் கைது செய்யப்படும் போது பெண் ஸ்டோக்ஸ், மேத்யூ பாட்ஸ் அருகிலுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. </p><h3>

அணியிலிருந்து நீக்கம்</h3><p> 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ECB) பரிந்துரையைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் ஒழுங்குமுறை ஆணையம் விசாரிக்க உள்ளது.</p><p> 

விசாரணை முடிவடையும் வரை டெஸ்ட் போட்டியில் பிரைடன் கார்ஸ் இடம் பெற மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. </p><p>

பிரைடன் கார்ஸுக்கு பதிலாக சோனி பேக்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:52:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல் அதிகாரியை அறைந்த எம்.எல்.ஏ மகள் - திருப்பி அறைந்த பெண் போலீஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karnataka-bjp-mla-daughter-slapped-cop-at-temple-1787641491"></link>
            <id>https://news.lankasri.com/article/karnataka-bjp-mla-daughter-slapped-cop-at-temple-1787641491</id>
            <summary type="text">karnataka bjp mla daughter slapped cop at temple: கோவிலில் வைத்து காவல் அதிகாரியை எம்.எல்.ஏ மகள் அறைந்த நிலையில், அவரை திருப்பி பெண் பெண் போலீஸ் அறைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>karnataka bjp mla daughter slapped cop at temple: கோவிலில் வைத்து காவல் அதிகாரியை எம்.எல்.ஏ மகள் அறைந்த நிலையில், அவரை திருப்பி பெண் பெண் போலீஸ் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
</p><h3>
காவல் அதிகாரியை அறைந்த எம்.எல்.ஏ மகள்
</h3><p>
கர்நாடக மாநிலம், தும்கூர் கிராமப்புற தொகுதியில் எம்.எல்.ஏ ஆக இருப்பவர் பாஜகவை சேர்ந்த பி.சுரேஷ் கௌடா.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b574e026-ef9d-4fe6-9a4a-6b58873ee22f/26-6a8d3e955abb3.webp' /></p><p> 

எம்.எல்.ஏ சுரேஷ் கௌடாவின் மகளான ஐஸ்வர்யா ஆகஸ்ட் 12 அன்று பீம அமாவாசையை முன்னிட்டு ஆர்த்தி உக்கடா கோவிலிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்துள்ளார்.</p><p> 

அப்போது சிறப்பு தரிசனம் செய்வதில் அவருக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டிலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p> 

இந்த வாக்குவாதத்தின் போது, ஐஸ்வர்யா உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டிலை அறைந்துள்ளார். பதிலுக்கு அவரும் ஐஸ்வர்யாவை அறைந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5103a38d-83c8-4564-aa61-8c7e6421dc96/26-6a8d3e960c8af.webp' /></p><p>
இது தொடர்பாக ஐஸ்வர்யா மீது உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், ஒரு அரசு ஊழியரைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல், ஐஸ்வர்யாவும் உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டில் மீது புகார் அளித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">😱The CCTV footage surfaces after 13 days! 👀<br><br>The footage appears to show an MLA’s daughter slapping Mandya PSI Savitha inside temple premises.<br><br> One message is clear: Respect the uniform. No one is above the law. 👮‍♀️🇮🇳 <a href="https://t.co/vsyBq0luup">pic.twitter.com/vsyBq0luup</a></p>&mdash; Sunanda Acharya (@Sunanda_Iam) <a href="https://x.com/Sunanda_Iam/status/2092023838620184887?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.எல்.ஏ சுரேஷ் கௌடா, "என் மகள் கோவிலுக்குச் சென்றிருந்தாள். அவள் கோவிலின் கருவறைக்குச் செல்ல அனுமதி கேட்டிருந்தாள். 

காவல்துறை அவளை உள்ளே அனுமதிக்க மறுத்தது, ஆனால் ஒரு வட்ட ஆய்வாளரை உள்ளே அனுமதித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49c2a804-ee39-4505-aa1f-8ade7b1cd52b/26-6a8d3e94ace45.webp' /></p><p>என் மகள் மீண்டும் தன்னை உள்ளே அனுமதிக்குமாறு அவர்களிடம் வேண்டினாள். 

அப்போது அந்த காவல்துறை அதிகாரி என் மகளைத் திட்டியதாகத் தெரிகிறது. </p><p>அதன் பிறகு சண்டை தொடங்கியது. என் மகள் அந்த அதிகாரியை அறைந்த காணொளியை நான் பார்க்கவில்லை. நான் மன்னிப்பு கேட்கிறேன், அதற்காக வருந்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:40:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 ஓட்டங்களில் அவுட்..ஆனால் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vaibhav-sooryavanshi-took-2-wikts-in-duleep-trophy-1787643460"></link>
            <id>https://news.lankasri.com/article/vaibhav-sooryavanshi-took-2-wikts-in-duleep-trophy-1787643460</id>
            <summary type="text">Vaibhav Sooryavanshi took 2 wickets in duleep trophy: துலீப் டிராபி டெஸ்டில் வைபவ் சூர்யவன்ஷி ஈஸ்ட் ஸோன் அணிக்காக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

து...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vaibhav Sooryavanshi took 2 wickets in duleep trophy: துலீப் டிராபி டெஸ்டில் வைபவ் சூர்யவன்ஷி ஈஸ்ட் ஸோன் அணிக்காக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். </p><p>

துலீப் டிராபி டெஸ்டில் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்த வைபவ் சூர்யவன்ஷி, பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். </p><h2>வைபவ் சூர்யவன்ஷி</h2><p>

பெங்களுருவில் நடந்து வரும் துலீப் டிராபி டெஸ்டில் ஈஸ்ட் ஸோன் அணி 467 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Vaibhav Sooryavanshi is now taking wickets too! <a href="https://t.co/17IiOuZu9q">pic.twitter.com/17IiOuZu9q</a></p>&mdash; Cricbuzz (@cricbuzz) <a href="https://x.com/cricbuzz/status/2092139525623763440?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
ஷாபாஸ் அகமது 167 ஓட்டங்களும், சுதிப் குமார் 146 ஓட்டங்களும், குமார் குஷாக்ரா 55 ஓட்டங்களும் எடுத்தனர். எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p></p><p> 

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நார்த் ஈஸ்ட் ஸோன் அணி 111 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதனால் ஃபாலோ-ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
</p><p>
துடுப்பாட்டத்தில் சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி 3 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5662c1b-b832-4119-87b9-fbce09f41b2c/26-6a8d47b204145.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p>

 </p>]]></content>
            <updated>2026-08-25T07:35:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: மகுடம் சூடிய கேரளாவை சேர்ந்த 19 வயது இளம்பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kaziah-liz-mejo-crowned-miss-universe-india-2026-1787641546"></link>
            <id>https://news.lankasri.com/article/kaziah-liz-mejo-crowned-miss-universe-india-2026-1787641546</id>
            <summary type="text">மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டத்தை கேரளாவை சேர்ந்த 19 வயது கசியா லிஸ் மெஜோ(Kaziah Liz Mejo) வென்றுள்ளார். மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026
ஜெய்ப்பூரில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டத்தை கேரளாவை சேர்ந்த 19 வயது கசியா லிஸ் மெஜோ(Kaziah Liz Mejo) வென்றுள்ளார்.</p><h2> மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026</h2><p>
ஜெய்ப்பூரில் ஜீ ஸ்டுடியோஸில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026(Miss Universe India 2026) இறுதிப்போட்டியில் கேரளாவை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவியும், மாடலுமான 19 வயது கசியா லிஸ் மெஜோ(Kaziah Liz Mejo) வென்றுள்ளார்.</p><p> இந்த வெற்றியின் மூலம் கசியா லிஸ் மெஜோ(Kaziah Liz Mejo) அதிகாரப்பூர்வமாக மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 கீரிடத்தை தலையில் சூடிக் கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67bd1fe7-80e5-4a2c-b631-fc285b9862fa/26-6a8d3ecbf2acd.webp' /></p><p></p><p> கசியா லிஸ் மெஜோவிற்கு கடந்த 2025ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற மணிகா விஸ்வகர்மா கிரீடம் அணிவித்து கவுரவித்தார்.</p><p> இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம் எதிர்வரும் 75வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக கசியா லிஸ் மெஜோ பங்கேற்கவுள்ளார்.</p><p>75வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியானது Puerto Rico-வில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><h2> கனவு நனவான தருணம்</h2><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Kaziah Liz Mejo from Kerala wins the Miss Universe India 2026 . <br><br>👸Look at the way she offered a quite moment of prayer before she wore the crown <br><br>👸She will represent India at the Miss Universe pageant in November. <a href="https://t.co/DvzT8SFdkY">pic.twitter.com/DvzT8SFdkY</a></p>&mdash; Open Trunk | CHiCory Life (@ChicoryLife) <a href="https://x.com/ChicoryLife/status/2092118423908307018?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
வெற்றிக்கு பிறகு பேசிய கசியா, இந்த உலகையே வென்றது போன்ற உணர்வில் இருப்பதாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.</p><p>அத்துடன் கடந்த மூன்று வருடங்களாக தன்னுடைய கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது என்றும், இந்த கீரிடத்தை தன்னுடைய சொந்த மாநிலமான கேரளாவிற்கு எடுத்துச் செல்வதிலும், என்னுடைய சொந்த ஊரை உலகிற்கு பெருமையுடன் காட்டுவதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-25T07:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி: வெளியான முதல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-supreme-leader-mojtaba-khamenei-rare-video-1787637791"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-supreme-leader-mojtaba-khamenei-rare-video-1787637791</id>
            <summary type="text">Iran supreme leader mojtaba khamenei rare video: ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் தொடங்கிய பிறகான ஈரானிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி முதல் வீடியோ காட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran supreme leader mojtaba khamenei rare video: ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் தொடங்கிய பிறகான ஈரானிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி முதல் வீடியோ காட்சியானது வெளியாகியுள்ளது.</p><h2> ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி</h2><p>பிப்ரவரி 28ம் திகதி அமெரிக்க முன்னெடுத்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Iran’s Supreme Leader Mojtaba Khamenei in FIRST-TIME-SEEN footage<br><br>Released publicly for the first time by Iranian media, footage shows him presiding over a religious academic study session <a href="https://t.co/iIIl0pLAgS">pic.twitter.com/iIIl0pLAgS</a></p>&mdash; RT Intl (@RT_on_X) <a href="https://x.com/RT_on_X/status/2091890841035894935?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p>ஆனால் அவர் பதவியேற்றதில் இருந்து இதுவரை வெளியுலகிற்கு தலை காட்டாமல் இருந்து வந்தார். இதையடுத்து அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா காமேனிக்கும் மிகுந்த உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அவரது முகம் மற்றும் சில உடல் பாகங்கள் சிதைந்து இருக்கலாம் என்றும் பல்வேறு கருத்துகள் வெளிவந்தன.</p><p> கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவரும், தன்னுடைய தந்தையுமான அயதுல்லா அலி காமேனியின் இறுதி சடங்கிற்கு கூட மொஜ்தபா காமேனி பங்கேற்காதது பொதுவெளியில் பரவிய கருத்துகளுக்கு வலு சேர்த்து வந்தது.</p><h2>வெளியான புதிய வீடியோ ஆதாரம்</h2><p>இந்நிலையில் பல மாதங்கள் பரவி வந்த வதந்திகள் மற்றும் ரகசியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் புதிய வீடியோ ஒன்றை ஈரானிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.</p><p> அவர் உச்ச தலைவராக பதவியேற்ற பிறகு, அவரது குரல் பொதுவெளியில் கேட்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d8e2f51-74f1-44fd-9a15-d6ebf306e060/26-6a8d302149c4f.webp' /></p><p> அந்த வீடியோவில் 56 வயதான மொஜ்தபா காமேனி, மத ரீதியான கல்வி ஆராய்ச்சி அமர்வுக்கு தலைமை தாங்குவது பதிவாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த காலம் குறிப்பிடப்படவில்லை.</p><p> மேலும் அதில் மாணவர் ஒருவரின் ஆய்வறிக்கையை கவனமாக கேட்டறிந்து அதனை குற்றமற்றது (Flawless)என்று பாராட்டியதோடு 20-க்கு 19.5 மதிப்பெண்கள் வழங்கி மதிப்பிடுகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T06:03:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு - தனித்தீர்மானம் நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/resolution-for-exemption-from-tet-exam-for-teacher-1787637681"></link>
            <id>https://news.lankasri.com/article/resolution-for-exemption-from-tet-exam-for-teacher-1787637681</id>
            <summary type="text">resolution for exemption from tet: டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்களிக்க கோரி கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>resolution for exemption from tet: டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்களிக்க கோரி கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><h3>
டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு</h3><p>

தமிழ்நாடு சட்டமன்றத்தில் டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a894a9b-4afc-482a-a986-dbabe2df8855/26-6a8d2fb326c75.webp' /></p><p> 

இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அவர், "15 முதல் 20 ஆண்டுகள் வரை மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு ஓயாது உழைத்த ஆசிரியர்களின் பணி மகத்தானது. </p><p>

ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அதனால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பணியில் உள்ள ஆசிரியர்கள் நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது. 15 முதல் 20 வருடங்கள் வரை பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை தகுதித்தேர்வு எழுதச் சொல்லுவது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்யும்.
</p><p>
மத்திய அரசு கொண்டு வந்த டெட் தேர்வு தேர்ச்சி என்ற கட்டாய நடைமுறைப்படி தமிழ்நாட்டில் 3,28,701 ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள். இருப்பினும் ஆசிரியர்களுக்கு துணையாக தமிழக அரசு இருக்கும் என்பதை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன்.&nbsp;</p><p></p><p>

இதன்படி 2010 ஆகஸ்ட் 23 ம் தேதிக்கு முன்னதாக பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தனித் தீர்மானத்தை சட்டசபையில் அரசு கொண்டு வருகிறது. </p><p>

இந்தத் தீர்மானத்தின் படி ஓய்வு பெறும் நிலையில் உள்ள தமிழக ஆசிரியர்களின் பணிப் பாதுகாக்கப்படும். இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி நல்ல முடிவைக் கொண்டு வருவோம்" என பேசினார்.</p><p>
அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T06:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: நியூசிலாந்து அரசு முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-zealand-proposes-age-limit-for-social-media-1787634600"></link>
            <id>https://news.lankasri.com/article/new-zealand-proposes-age-limit-for-social-media-1787634600</id>
            <summary type="text">New Zealand proposes age limit for social media: 16 வயதுக்கு உட்பட்டோருக்கு கடுமையான சமூக ஊடக தடைகளை விதிக்கும் நடைமுறையை நியூசிலாந்து முன்னெடுத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>New Zealand proposes age limit for social media: 16 வயதுக்கு உட்பட்டோருக்கு கடுமையான சமூக ஊடக தடைகளை விதிக்கும் நடைமுறையை நியூசிலாந்து முன்னெடுத்துள்ளது.</p><h2> சமூக ஊடக தடை</h2><p>16 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் டிஜிட்டல் நல்வாழ்வை பாதுகாக்கும் நோக்கில் சமூக ஊடக பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் புதிய சட்ட நடவடிக்கையை நியூசிலாந்து அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.</p><p> அவுஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளின் இத்தகைய நடவடிக்கையை தொடர்ந்து நியூசிலாந்தும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக ஊடக தடை நடவடிக்கையில் இணைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21964bb8-05a2-4f03-9e62-a1df50e1af4e/26-6a8d23a9cee71.webp' /></p><p> நியூசிலாந்து அரசு முன்மொழிந்துள்ள இந்த ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவின் கீழ், டிக் டாக்(TikTok), இன்ஸ்டாகிராம்(Instagram), ஸ்னாப்சாட்(Snapchat), மற்றும் பேஸ்புக்(Facebook), ஆகிய சமூக ஊடக தளங்கள் கடுமையான தடைகளை எதிர்கொள்கின்றன.</p><p></p><h2> முக்கிய அம்சங்கள்</h2><p>16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தடுப்பதற்காக டிஜிட்டல் ஐடி, முக வயது மதிப்பீடு ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.///
இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் தங்களது ஒட்டுமொத்த வருவாயில் 10% வரை அபராதமாக செலுத்த வேண்டும்.</p><p> குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்து அவற்றை குறைக்கும் நடவடிக்கையில் நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பது போன்றவை சட்டப்பூர்வ கடமையாக்கப்படுகிறது.</p><p> இந்த நடவடிக்கையானது குடும்பங்களை குறிவைக்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையே இலக்காக கொண்டு இருப்பதாக நியூசிலாந்து நாட்டின் கல்வி அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="http://உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்." target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T05:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதல் கட்டணம்: டிரம்பின் அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-proposes-additional-fee-for-h-1b-visa-1787630051"></link>
            <id>https://news.lankasri.com/article/us-proposes-additional-fee-for-h-1b-visa-1787630051</id>
            <summary type="text">H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதல் கட்டணம்H-1B விசா ஒதுக்கீடு உட்பட அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.</p><h2>H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதல் கட்டணம்</h2><p>H-1B விசா ஒதுக்கீடு உட்பட அனைத்து விண்ணப்பங்களுக்கும் கூடுதலாக 1,03,265 டொலர் கட்டணமாக விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.</p><p> மேலும் H-1B விசா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 65,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றம் வழக்கமான வரம்பை நிர்ணயித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0511cba7-f9fe-4ca3-bef9-dd2b601a24b6/26-6a8d11e47a8fe.webp' /></p><p> &nbsp; முதுகலை ஒதுக்கீடு வரம்பு என அழைக்கப்படும் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் முதுகலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்றவர்களுக்கான பணியாளர் விசாக்கள் கூடுதலாக 20000 விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2> புதிய முன்மொழிவு</h2><p>
H-1B விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டொலராக நிர்ணயம் செய்யும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை ரத்து செய்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69a319b1-b0c5-4e35-a934-7e0a11ced9cc/26-6a8d11e52cd2c.webp' /></p><p></p><p> இந்த உத்தரவை நிறுத்தி வைக்க கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதனையும் நீதிமன்றம் ஒரு மாதத்திற்கு முன்பு நிராகரித்தது.</p><p> இந்நிலையில் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் இந்த புது முன்மொழிவு வந்துள்ளது.</p><p>கூடுதல் கட்டணத்தை தற்போதுள்ள H-1B விசா விண்ணப்ப கட்டணத்துடன் இணைப்பதற்கு பதிலாக, தனிப்பட்ட கூடுதல் கட்டணமாக 1,03,265 என்ற அமெரிக்க டொலர் தொகையை செலுத்தும் முறையை செயல்படுத்த உள்நாட்டு பாதுகாப்பு துறை முன்மொழிந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-25T03:54:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு பிரித்தானியா அளிக்கும் ஏவுகணை உதவி: ரஷ்யா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-missile-help-for-ukraine-1787589802"></link>
            <id>https://news.lankasri.com/article/british-missile-help-for-ukraine-1787589802</id>
            <summary type="text">British missile help for Ukraine: உக்ரைனுக்கு பிரித்தானியா ஏவுகணை உதவி அளிப்பது நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போன்றது.
SCALP ரக நீண்ட தூர ஏவுகணைகளைத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>British missile help for Ukraine: உக்ரைனுக்கு பிரித்தானியா ஏவுகணை உதவி அளிப்பது நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போன்றது.
</p><p>SCALP ரக நீண்ட தூர ஏவுகணைகளைத் தயாரிக்கப் பயன்படும் பிரித்தானிய தயாரிப்பு உதிரிபாகங்கள் குறித்த ரகசியத் தகவல்களை உக்ரைனிடம் வழங்க அந்த நாடு எடுத்துள்ள முடிவு, நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6e0bc67-3f2d-4832-8bd2-04b7d51d2b6b/26-6a8c74ad45739.webp' /></p><p>
</p><p>பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம், பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக திங்களன்று கீவ் நகரை வந்தடைந்தார்; நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த கீவ்விற்கு உதவுவதற்கான பிரித்தானியாவின் ஆதரவையும் அவர் அங்கு அறிவிக்கவிருக்கிறார்.</p><p> பிரதமரின் அந்தப் பயணம் மற்றும் அளிக்கவிருக்கும் ஆதரவு குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இறுதி அமைதி ஒப்பந்தத்தை நோக்கிய எந்தவொரு முன்னேற்றத்தையும் தடுப்பதற்கு பிரித்தானியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாகக் குற்றம் சாட்டினார். </p><p>மேலும்,
இந்த போரில் பிரித்தானியா உக்ரைனுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளது.
பிரித்தானியா திட்டமிட்டபடியும் தொடர்ச்சியாகவும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுடன், அமைதித் தீர்வுக்கான முயற்சியில் மிகச்சிறிய முன்னேற்றம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான திட்டங்களையும் திட்டமிட்டபடியும் தொடர்ச்சியாகவும் தீட்டி வருகிறது என்று பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, உக்ரைனில் ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அழிப்பதற்காக, ரஷ்ய ராணுவம் ஏற்கனவே முறையாகத் தகவல்களைச் சேகரித்து வருவதாக பெஸ்கோவ் கூறினார். +</p><p>பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் ரஷ்யாவுக்கு எதிரான நீண்ட தூரத் தாக்குதல்களுக்கு முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, போரில் பிரித்தானியா தனது ஈடுபாட்டை அதிகரிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியது;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f5e661c-5da3-4340-baf5-a0388df39a53/26-6a8c74aded7c1.webp' /></p><p> </p><p>அத்துடன், உக்ரைனுக்கு ட்ரோன்களை வழங்குவதால் ஏற்படக்கூடிய குறிப்பிடப்படாத விளைவுகள் குறித்தும் கடந்த வாரம் பிரித்தானியாவை ரஷ்யா எச்சரித்தது. </p><p>ஆனால், இந்தச் சட்டவிரோதப் போருக்கு எதிராக உக்ரைனுக்கு நூறு சதவீதம் ஆதரவளிக்க பிரித்தானியா உறுதியுடன் இருப்பதாக பிரதமர் பர்னாம் அப்போது பதிலளித்திருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T03:40:10+00:00</updated>
        </entry>
    </feed>
