<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-20T20:58:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025ம் ஆண்டிற்குள் 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றம்: நாடொன்று எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkey-removed-1-million-stray-dogs-from-cities-1784579694"></link>
            <id>https://news.lankasri.com/article/turkey-removed-1-million-stray-dogs-from-cities-1784579694</id>
            <summary type="text">துருக்கிய நகரங்களில் இருந்து 2025ம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தெரு நாய்களின் எண்ணிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துருக்கிய நகரங்களில் இருந்து 2025ம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திய துருக்கி</h2><p>
துருக்கி அரசு தங்களது நகரங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.</p><p> துருக்கியின் உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃபிலி தெரிவித்த தகவலில், 2025ம் ஆண்டிற்குள் துருக்கியின் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 10 லட்சம் தெரு நாய்களை அகற்றப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p> துருக்கியில் விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றமே இந்த தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வர பட்டதற்கான முக்கிய காரணம் என்று பால்கன் இன்சைட் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae4de92a-6f84-4a3e-8180-3d90f2207b43/26-6a5e87624260d.webp' /></p><h2> துருக்கிய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகள்</h2><p>தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து மீண்டும் தெருக்களில் விடும் நடைமுறை பயன் அளிக்காததை தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய விதிகளின் படி, ஒவ்வொரு நகராட்சி தெருக்களிலும் உள்ள நாய்களை நிரந்தரமாக நீக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> நாய்களை தத்தெடுப்பதே முதன்மையான குறிக்கோளாக இருந்தாலும், தீவிரமான ஆக்ரோஷமான குணம் கொண்ட நாய்கள் மற்றும் தீர்க்க முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை கருணை கொலை செய்ய சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் தெரு நாய்களை பராமரிக்க பிரம்மாண்டமான புதிய காப்பகங்கள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T20:35:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை: 28 வயது இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ann-widdecombe-death-case-joshua-kerry-arrested-1784575996"></link>
            <id>https://news.lankasri.com/article/ann-widdecombe-death-case-joshua-kerry-arrested-1784575996</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆன் விட்கோம்ப் கொலை வழக்கில் 28 வயது நபர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ஆன் விட்கோம்ப்
டெவோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆன் விட்கோம்ப் கொலை வழக்கில் 28 வயது நபர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><h2> கொல்லப்பட்ட ஆன் விட்கோம்ப்</h2><p>
டெவோனில் உள்ள ஹேடரில் வசித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ரீஃபார்ம் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஆன் விட்கோம்ப்(Ann Widdecombe) கடந்த ஜூலை 9ம் திகதி அவரது வீட்டில் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார்.</p><p> ஜூலை 8ம் திகதி மதியம் 12.30 மணியளவில் அவர் தாக்கப்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86fdf4ae-87bc-46ad-9f7c-0fbf2f7f2f4c/26-6a5e77fe3eb74.webp' /></p><p> இந்த சம்பவத்தில் முதலில் நியூட்டன் அபோட்டைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணைக்கு பிறகு அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.</p><p></p><h2> ஜோசுவா கெர்ரி என்பவர் மீது வழக்குப்பதிவு</h2><p>
இந்நிலையில் ஆன் விட்கோம்ப் கொலை வழக்கில் ரோதர்ஹேமைச் சேர்ந்த 28 வயது ஜோசுவா கெர்ரி மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p> குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜோசுவா கெர்ரி செவ்வாய்க்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று இந்த வழக்கை விசாரித்த கிரவுன் பிராசிகியூசன் சர்வீஸ் அறிவித்துள்ளது.</p><p> மேலும் இந்த குற்ற சம்பவத்தில் வேறு ஏதேனும் அரசியல் பின்னணியோ, பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T19:33:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் புதிய நிதி அமைச்சராக ஹான் ஹீலி நியமனம்: பதவி விலகும் முக்கிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-new-chancellor-of-the-exchequer-is-john-healey-1784572420"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-new-chancellor-of-the-exchequer-is-john-healey-1784572420</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய நிதி அமைச்சராக ஹான் ஹீலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பிரித்தானியாவுக்கு புதிய நிதி அமைச்சர்
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய நிதி அமைச்சராக ஹான் ஹீலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பிரித்தானியாவுக்கு புதிய நிதி அமைச்சர்</h2><p>
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்னாம்(Andy Burnham) பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து அரசாங்கத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.</p><p> இந்நிலையில் நாட்டின் புதிய நிதியமைச்சராக (Chancellor of the Exchequer) ஜான் ஹீலி(John healey) நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38f9ab9a-a3d9-40d6-b387-135317e12d91/26-6a5e6a061fbcb.webp' /><br></p><p>இதற்கு முன்னதாக பிரித்தானியாவின் நிதி அமைச்சராக ரேச்சல் ரீவ்ஸ்(Rachel Reeves) இந்த பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> பிரித்தானியாவின் மூத்த அரசியல்வாதியும், கடந்த 1997ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் ஜான் ஹீலி கடந்த அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.</p><p>இந்நிலையில் ஜான் ஹீலி தற்போது நாட்டின் கருவூல தலைமை பொறுப்புக்கு முன்னேறியுள்ளார்.</p><p>ஜான் ஹீலி நியமனம் தொடர்பான அறிவிப்பை டவுனிங் ஸ்ட்ரீட் தங்களது அதிகாரப்பூர்வ X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcdb0ac1-697c-4dd1-91c0-6641ce265133/26-6a5e6a06c402a.webp' /></p><h2> பதவி விலகும் முக்கிய அதிகாரிகள்</h2><p>கடந்த ஆட்சியில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த பல அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.</p><p>குறிப்பாக துணை பிரதமர் டேவிட் லாமி மற்றும் வீட்டுவசதி, சமூகங்கள் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டீவ் ரீட் ஆகியோர் இதில் அடங்குவர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-20T19:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மாயோ கைது: ஆயுள் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cartel-founder-el-mayo-sentenced-to-life-in-prison-1784571330"></link>
            <id>https://news.lankasri.com/article/cartel-founder-el-mayo-sentenced-to-life-in-prison-1784571330</id>
            <summary type="text">மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் வியாபாரி எல் மாயோ சாம்பாடாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவருக்கு ஆயுள் தண்டனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் வியாபாரி எல் மாயோ சாம்பாடாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2> போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவருக்கு ஆயுள் தண்டனை</h2><p>
மெக்சிகோவில் இருந்து அதிகளவிலான போதைப்பொருள்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஸ்மாயேல் எல் மாயோ சாம்பாடாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> கடந்த 2024ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் மன்னனாக அறியப்பட்ட இஸ்மாயேல் எல் மாயோ சாம்பாடா கைது செய்யப்பட்டார்.</p><p> இவர், சினலோவா கார்டெல்லின் முக்கிய பொறுப்பில் இருந்த நிலையில், கோகைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஃபெண்டானில் போன்ற மிகவும் மோசமான போதைப்பொருள்களை அமெரிக்காவுக்கு கடத்தியதில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ef437f-3d24-4341-b3c4-2da3aadec5fd/26-6a5e65c40c152.webp' /></p><p> எல் மாயோ கைது செய்யப்பட்ட போது, தான் மெக்ஸிகோவில் இருந்து கடத்தப்பட்டு அமெரிக்காவின் டெக்சாஸிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>ஆனால் இறுதியில் மரண தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார்.</p><p> இந்நிலையில் புருக்ளின் கூட்டாட்சி நீதிமன்றம் திங்கட்கிழமை வழங்கிய தீர்ப்பில் இஸ்மாயேல் எல் மாயோ சாம்பாடாவுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.</p><p> அத்துடன் அவருக்கு $15 பில்லியன் டொலர் அபராதமும் விதித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T18:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.50000க்கு வேலை: ஓமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்திய பெண்: கண்ணீருடன் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hyderabad-woman-trapped-in-oman-without-salary-1784565420"></link>
            <id>https://news.lankasri.com/article/hyderabad-woman-trapped-in-oman-without-salary-1784565420</id>
            <summary type="text">ஹைதராபாத் சேர்ந்த பெண் ஒருவரை அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி&amp;nbsp; ஓமனில் சித்திரவதை செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலி ஏஜெண்டுகளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹைதராபாத் சேர்ந்த பெண் ஒருவரை அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி&nbsp; ஓமனில் சித்திரவதை செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><h2> போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்ட பெண்</h2><p>தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஹாடி ஷெரீப் பகுதியை சேர்ந்த ஷப்னம் பேகம் என்ற 26 வயது இளம்பெண்ணுக்கு ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் ரூ 50,000 க்கு வேலை வாங்கி தருவதாக போலி ஏஜெண்டுகள் ஏமாற்றியுள்ளனர்.</p><p>போலி ஏஜெண்டின் ஆசை வார்த்தைகளை நம்பி கடந்த மார்ச் 26ம் திகதி ஷப்னம் ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார்.</p><p>ஆனால், அங்கு சென்றதும் ஏஜெண்டுகளின் உண்மையான ரூபம் ஷப்னத்திற்கு தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/535f23b0-6303-4d25-87ed-5b44d505241e/26-6a5e4eadd8cec.webp' /></p><p>ஷப்னம் அங்கு வெவ்வெறு வீடுகளுக்கு வேலைக்காக 12 முதல் 15 மணி நேரம் எந்தவொரு ஓய்வும் இல்லாமல் அனுப்பப்பட்டுள்ளார்.</p><p> மேலும், அவருக்கு உண்ணுவதற்கு போதுமான உணவு, தங்குவதற்கு சரியான இடம் கூட கொடுக்கவில்லை.</p><p> இதனை தொடர்ந்து ஷப்னம் வேலை செய்ய மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த முதலாளிகள் அவரை கடுமையாக தாக்கியதோடு, வெளி உலகிற்கு தகவல் சொல்லி விட கூடாது என்பதற்காக அவரிடம் இருந்து மொபைல் போனையும் பறித்துள்ளனர்.</p><p></p><p>அத்துடன்&nbsp; கடந்த 4 மாதங்களாக அவருக்கு 1 ரூபாய் கூட சம்பளம் கொடுக்கவில்லை.</p><h2> தூதரகத்தில் தஞ்சம்</h2><p>
இந்நிலையில், அங்கிருந்து எப்படியோ தப்பிய ஷப்னம், மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அடைந்துள்ளார். ஆனால் பாஸ்போர்ட் போன்ற எந்தவொரு ஆவணமும் அவரிடம் இல்லாததால் அவரால் இந்தியாவுக்கு திரும்ப முடியவில்லை.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Urgent Appeal to Hon&#39;ble Dr. <a href="https://x.com/DrSJaishankar?ref_src=twsrc%5Etfw">@DrSJaishankar</a>, Minister for External Affairs, Govt. of India<br><br>Mrs. Shabnam Begum, a resident of Pahadi Shareef, Hyderabad, was allegedly lured to Muscat, Oman by a local agent with the promise of a housemaid job offering 200 Omani Riyals/month. After… <a href="https://t.co/UNrKXbv3QS">pic.twitter.com/UNrKXbv3QS</a></p>&mdash; Amjed Ullah Khan MBT (@amjedmbt) <a href="https://x.com/amjedmbt/status/2078220201620086954?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதையடுத்து ஹைதராபாத்தை சேர்ந்த மஜ்லில் பச்சாவ் தெஹ்ரீக் கட்சி தலைவர் அம்ஜத் உல்லா கானுக்கு ஷப்னம் கண்ணீருடன் வீடியோ ஒன்றை அனுப்பி தன்னை மீட்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.</p><p> இதனை தன்னுடைய X தளத்தில் மஜ்லில் பச்சாவ் தெஹ்ரீக் கட்சி தலைவர் அம்ஜத் உல்லா பகிர்ந்துள்ளார். மேலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஷப்னமை மீட்கும் படி கோரிக்கை வைத்துள்ளார்.</p><p> இந்நிலையில், அவரை மீட்க மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-20T16:37:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக பதவியேற்றார் ஆன்டி பர்னாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-sworn-as-59th-pm-of-uk-1784550432"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-sworn-as-59th-pm-of-uk-1784550432</id>
            <summary type="text">பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார் ஆன்டி பர்னாம்.

பிரதமராக பதவியேற்றார் ஆன்டி பர்னாம்

கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார் ஆன்டி பர்னாம்.</p><h3>

பிரதமராக பதவியேற்றார் ஆன்டி பர்னாம்</h3><p>

கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்துவந்த ஆன்டி பர்னாம், சமீபத்தில் மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
</p><p>
அதைத் தொடர்ந்து, லேபர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆன்டி பர்னாம், சற்று முன் மன்னரை சந்தித்து பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1584e5d8-f391-49d3-b6fb-2f1afe9dbac3/26-6a5e14224174d.webp' /></p><p>ஆன்டி பர்னாம், பிரித்தானியாவின் 59ஆவது பிரதமர் ஆவார். அவருக்கு முன் பிரதமராக பதவி வகித்த சர் கெய்ர் ஸ்டார்மர் சற்று முன் மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமாவைக் கையளிக்க, மன்னர் அதை ஏற்றுக்கொண்டார்.
</p><p>
அதைத் தொடர்ந்து, பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்ற ஆன்டி பர்னாம் மன்னர் சார்லசை சந்தித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d57ef349-120d-4165-8a58-08a33e55ec82/26-6a5e1423b781e.webp' /></p><p>மன்னர் சார்லஸ் முறைப்படி பிரித்தானியாவின் பிரதமராக பொறுப்பேற்கும்படி ஆன்டி பர்னாமைக் கேட்டுக்கொள்ள, அதை ஏற்றுக்கொண்ட ஆன்டி பர்னாம் பிரித்தானியாவின் பிரதமராகியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
அதற்கு அடையாளமாக, ஆன்டி பர்னாம், மன்னர் சார்லசுடன் கைகுலுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d511e8aa-81b1-4f2c-b2c7-2d788a0ff59c/26-6a5e1422f3a9c.webp' /></p><p>ஆன்டி பர்னாம் பிரித்தானியாவின் பிரதமராக முறைப்படி மன்னர் சார்லசால் நியமிக்கப்பட்டதைக் குறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு ஆன்டி பர்னாம், மேன்மை தங்கிய மன்னரை சந்தித்த நிலையில், புதிய நிர்வாகத்தை அமைக்குமாறு ஆன்டி பர்னாமை மன்னர் கேட்டுக்கொண்டார்.
</p><p>
மன்னரின் அழைப்பை ஏற்ற ஆன்டி பர்னாம், பிரதமராகவும் கருவூலத்தின் முதல் பிரபுவாகவும் பதவி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மன்னரின் கைகளில் முத்தமிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அடுத்ததாக, ஆன்டி பர்னாம், பிரதமர் இல்லம் முன் உரையாற்ற இருக்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T16:06:13+00:00</updated>
        </entry>
    </feed>
