<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-27T17:34:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா விதித்த சுங்க வரிகளுக்கு சீனா கடும் எதிரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-slams-us-forced-labour-tariffs-1785172830"></link>
            <id>https://news.lankasri.com/article/china-slams-us-forced-labour-tariffs-1785172830</id>
            <summary type="text">பீஜிங்கில் சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா சமீபத்தில் விதித்த புதிய சுங்க வரிகள் நியாயமற்றவை என்றும், “பாதுகாப்பு வாதம்” (Prote...</summary>
            <content type="html"><![CDATA[<p>பீஜிங்கில் சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா சமீபத்தில் விதித்த புதிய சுங்க வரிகள் நியாயமற்றவை என்றும், “பாதுகாப்பு வாதம்” (Protectionism) சார்ந்தவை என்றும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்கா, ஜூலை 24, 2026 அன்று, 60 நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு 10 சதவீதம் மற்றும் 12.5 சதவீதம் சுங்க வரிகளை விதித்தது. இதில் சீனாவிற்கு 12.5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.</p><p>கட்டாய உழைப்பால் (Forced Labour) பொருட்கள் தயாரிக்கப்பட்டதன காரணமாக இந்நாடுகளுக்கு இந்த வரியை விதித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/781dd1b6-6cd0-4d96-a035-18b23e6bbc93/26-6a6793605def4.webp' /></p><p>இதற்கு சீனா, “இது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை. அமெரிக்கா மீண்டும் Section 301 விசாரணையைத் தொடங்கி, ‘கட்டாய உழைப்பு’ என்ற பெயரில் சுங்க வரிகளை விதித்துள்ளது. இது முற்றிலும் அநியாயமானது” என தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சுங்க வரிகள் உலக வர்த்தக ஒழுங்கை பாதிக்கும் அபாயம் உள்ளதாக சீனா வலியுறுத்தியுள்ளது. மேலும், அமெரிக்கா தனது உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவே இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறது என்றும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
</p><p></p><p>இந்த நிலைமை, சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பதற்றமடையச் செய்யும் அபாயம் உள்ளது. </p><p>ஏற்கனவே, இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் வர்த்தக மோதல்களை சந்தித்து வருகின்றன. புதிய சுங்க வரிகள், உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.
</p><p>
சீனா, “அமெரிக்கா உடனடியாக இந்த சுங்க வரிகளை ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T17:18:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பிரித்தானியா வரும் ஹரி: பக்கிங்காம் அரண்மனையில் தங்கப்போவதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-to-stay-in-buckingham-palace-1785155463"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-to-stay-in-buckingham-palace-1785155463</id>
            <summary type="text">பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரி மீண்டும் பிரித்தானியா வர உள்ளார்.

இந்நிலையில், அவர் இம்முறை பக்கிங்காம் அரண்மனையிலுள்ள ஒரு அறையில் தங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரி மீண்டும் பிரித்தானியா வர உள்ளார்.
</p><p>
இந்நிலையில், அவர் இம்முறை பக்கிங்காம் அரண்மனையிலுள்ள ஒரு அறையில் தங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
மீண்டும் பிரித்தானியா வரும் ஹரி</h3><p>

பிரித்தானிய இளவரசர் ஹரி, தன் மனைவி மேகன், பிள்ளைகள் ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுடன் இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 10ஆம் திகதி, பிரித்தானியா வந்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f53ce7c3-7115-4a97-b5bb-02f5aa3fe56e/26-6a674f89a97b5.webp' /></p><p>
அப்போது, அவர் குடும்பமாக மன்னர் சார்லசை சந்தித்தார்.
</p><p>
இந்நிலையில், வருடாந்திர WellChild விருதுகள் வழங்கும் விழா தொடர்பிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மீண்டும் செப்டம்பர் மாதம் பிரித்தானியா வர உள்ளார் ஹரி.&nbsp;</p><p></p><p>
கடந்த முறை அவர் பிரித்தானியா வந்தபோது, முன்கூட்டியே சரியாக திட்டமிடாததால், அவரும் அவரது குடும்பத்தினரும் பக்கிங்காம் அரண்மனையில் தங்க முடியாமல் போய் விட்டது.
</p><p>
ஆனால், இம்முறை, பக்கிங்காம் அரண்மனையில் தங்க அவருக்கு மீண்டும் அறை ஒன்று ஒதுக்கப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aaad561-9553-4193-b353-65457e0f439d/26-6a674f890424a.webp' /></p><p>
அதாவது, இளவரசர் ஹரி மன்னர் சார்லசுடைய மகனாகவே இருந்தாலும், அவர் பக்கிங்காம் அரண்மனையில் தங்க திட்டமிட்டால், பல நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கவேண்டுமாம்.&nbsp;</p><p>
அதாவது, அவருக்கு அறை ஒதுக்கி, அவருக்கு உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய நேரம் தேவை என்பதாலேயே இந்த ஏற்பாடாம்.</p><p>

இதற்கிடையில், இம்முறையும் ஹரியுடன் மேகனும் தம்பதியரின் பிள்ளைகளும் வருகிறார்களா என்பது குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T16:59:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சதமடித்த பாகிஸ்தான் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shan-masood-7th-test-ton-vs-west-indies-1785163773"></link>
            <id>https://news.lankasri.com/article/shan-masood-7th-test-ton-vs-west-indies-1785163773</id>
            <summary type="text">டிரினிடாட்டில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் ஷான் மசூத் சதம் விளாசினார்.

ஷான் மசூத்பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிரினிடாட்டில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் ஷான் மசூத் சதம் விளாசினார்.
</p><h2>
ஷான் மசூத்</h2><p>பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd1783da-9efd-471d-96ac-b32ecc17fd88/26-6a6770eeceac0.webp' />&nbsp;</p><p></p><p>

மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸில் 311 ஓட்டங்கள் எடுத்தது. ஷாய் ஹோப் 92 ஓட்டங்களும், கவேம் ஹாட்ஜ் 84 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் எடுத்தது.</p><p>

மூன்றாம் நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய பாகிஸ்தான் அணியில், ஷான் மசூத் (Shan Masood) சதத்தை பூர்த்தி செய்தார்.</p><p> 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு இது 7வது சதம் ஆகும். 162 பந்துகளை எதிர்கொண்ட மசூத் 11 பவுண்டரிகள் அடித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c57f25e-1329-4d10-8c6d-f0456f060d0f/26-6a6770ef9f854.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T14:47:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[149 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள்: போராடி அணியை காப்பாற்றிய வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jan-frylinck-100-in-149-balls-vs-nepal-1785161371"></link>
            <id>https://news.lankasri.com/article/jan-frylinck-100-in-149-balls-vs-nepal-1785161371</id>
            <summary type="text">நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜென் ஃப்ரைலிங்க் நிதானமாக ஆடி சதம் அடித்தார்.&amp;nbsp;லௌரேன் ஸ்டீன்கம்ப் அரைசதம் 

நேபாளம் மற்றும் நமீபியா அணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜென் ஃப்ரைலிங்க் நிதானமாக ஆடி சதம் அடித்தார்.&nbsp;</p><h2>லௌரேன் ஸ்டீன்கம்ப் அரைசதம் </h2><p>

நேபாளம் மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி உட்ரெச்ட்டில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3fc566b-3f7d-42d0-8885-73d0ca28cdb2/26-6a6767c2ab9d1.webp' />&nbsp;</p><p></p><p>
நாணய சுழற்சியில் வென்ற நேபாள அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. ஆனால் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்க தாமதமானது.
</p><p>
முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கிய நமீபியா அணி, மைதானத்தின் தன்மையால் நிதானமாகவே ஓட்டங்களை சேர்த்தது.
</p><p>
தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ஜென் ஃப்ரைலிங்க் மற்றும் லௌரேன் ஸ்டீன்கம்ப் வலுவான கூட்டணி அமைத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d48431d-6886-46cd-a1bf-ff28a45adebd/26-6a6768f091130.webp' /></p><p>
அரைசதம் அடித்த லௌரேன் ஸ்டீன்கம்ப் (Louren Steenkamp) 87 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>ஜென் ஃப்ரைலிங்க்&nbsp;சதம் </h2><p>
அடுத்து வந்த வீரர்கள் கரணின் பந்துவீச்சில் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, ஜென் ஃப்ரைலிங்க் (Jan Frylinck) சதம் அடித்தார். </p><p>

அதிரடியாக ஆடக்கூடிய ஃப்ரைலிங்க், வழக்கத்திற்கு மாறாக ஆடுகளத்தின் தன்மை மற்றும் நேபாளத்தின் தாக்குதல் பந்துவீச்சுக்கு ஏற்ப ஆடியதால், 149 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் குவித்தார்.
</p><p>
அவரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் நமீபியா அணி 211 ஓட்டங்கள் சேர்த்தது. நேபாளத்தின் கரண் கேசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9780398-f7b7-4746-ae17-621392aebe73/26-6a6768f17d10d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> <b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T14:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலை விபத்துக்களை குறைக்க வாகனங்களில் கட்டாயமாக உள்ள V2V தொழில்நுட்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-govt-to-mandate-v2v-technology-in-vehicles-1785160019"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-govt-to-mandate-v2v-technology-in-vehicles-1785160019</id>
            <summary type="text">சாலை விபத்தை குறைக்க வாகனங்களில் V2V தொழில்நுட்பத்தை கட்டாயம் ஆக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

வாகனங்களில் கட்டாயம் ஆக உள்ள V2V

இந்தியாவில், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாலை விபத்தை குறைக்க வாகனங்களில் V2V தொழில்நுட்பத்தை கட்டாயம் ஆக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. </p><h3>

வாகனங்களில் கட்டாயம் ஆக உள்ள V2V
</h3><p>
இந்தியாவில், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5.13 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில், 1,83,382 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

 நாட்டிலேயே அதிகபட்சமாக, தமிழ்நாட்டில் 71,387 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. </p><p>

இந்நிலையில், சாலை விபத்துகளை தடுக்க அடுத்த ஆண்டு முதல் வாகனங்களில் V2V தொழில்நுட்பத்தை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecaeba08-272e-42b0-88ca-1b974e92f2f3/26-6a67615552293.webp' /></p><p> 

Vehicle-to-Vehicle (V2V) என்பது வாகனங்கள் ஒன்றுக்கொன்று தகவல்களை தானாக பரிமாறிக்கொள்ளும் தொழில்நுட்பம் ஆகும்.&nbsp;</p><p>

இதன் மூலம், அருகிலுள்ள வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, கார் பாதை மாறுவது, திடீர் பிரேக்கிங் எச்சரிக்கை, வாகனங்களுக்கு இடையே உள்ள தூரம் ஓட்டுனருக்கு முன்கூட்டியே கிடைக்கும். </p><p>

வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும் இவை, 5.875 GHz முதல் 5.905 GHz அலைவரிசையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p> 

இதன் மூலம் விபத்துக்களை குறைத்து சாலை பாதுகாப்பை மேற்படுத்தலாம் என்ற நோக்கத்தில் இது குறித்து வரைவு விதியை வெளியிட்டுள்ள மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பொதுமக்கள் தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்றுள்ளது.</p><p> 

இந்த வரைவின்படி, அக்டோபர் 1, 2027 முதல் தயாரிக்கப்படும் L, M மற்றும் N வகை புதிய வாகனங்களில் V2V தகவல் தொடர்பு அமைப்பு நிறுவப்பட்டால், அது AIS-230 தரநிலைக்கு இணங்க இருக்க வேண்டும்.</p><p> 

L வகை – இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள்
</p><p>
M வகை – கார்கள், டாக்சிகள், பேருந்துகள் போன்ற பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள்
</p><p>
N பிரிவு – சரக்கு ஏற்றிச் செல்லும் டிரக்குகள் மற்றும் இலகுரக வர்த்தக வாகனங்கள்
</p><p>
இதைத் தொடர்ந்து, அக்டோபர் 1, 2028 முதல் இந்த வகைகளின் அனைத்து புதிய வாகனங்களிலும் இந்தத் தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் முன்மொழிகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T13:48:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களைக் கொல்ல அனுப்பினார்! பாரிஸில் மகளிரை கத்தியால் தாக்கிய நபர்..அதிர்ச்சி வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-arrested-in-paris-who-stab-women-with-knife-1785157133"></link>
            <id>https://news.lankasri.com/article/man-arrested-in-paris-who-stab-women-with-knife-1785157133</id>
            <summary type="text">பிரான்ஸின் பாரிஸ் நகரில் நபர் ஒருவர் கத்தியால் தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&amp;nbsp;கத்தியால்&amp;nbsp;தாக்குதல் 
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் Po...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் பாரிஸ் நகரில் நபர் ஒருவர் கத்தியால் தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&nbsp;</p><h2>கத்தியால்&nbsp;தாக்குதல் </h2><p>
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் Porte de Clichy பகுதியில், நபர் ஒருவர் கத்தியால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.&nbsp;</p><p><iframe allowfullscreen frameborder="0" width="698" height="573" scrolling="no" id="molvideoplayer" title="MailOnline Embed Player" src="https://www.dailymail.com/embed/video/3687845.html"></iframe></p><p>

உடனே அவரை அங்கிருந்தவர்கள் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்தனர். அவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p></p><p>
அவரிடம் இருந்து இரண்டு கத்திகள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.</p><p>

</p><h2>கவலைக்கிடமாக&nbsp;ஒருவர் </h2><p>இருவர் பலத்த காயமடைந்தாலும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் மற்றும் பாரிஸ் காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p> 

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட 31 வயது நபர் "பெண்களைக் கொல்ல கடவுள் என்னை அனுப்பினார் என்று கூறினார்" என்று Le Parisien இதழிடம் விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த இளைஞர், ஆயுதத்துடன் பெண்ணை நோக்கி செல்லும் மற்றும் மடக்கிப் பிடிக்கப்பட்ட காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95db6e56-800f-45fd-8500-7ad751dafaac/26-6a6757a794c6a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:57:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெல்லம் கொடுத்த நபரை மிதித்துக் கொன்ற யானை: பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/elephant-kills-driver-while-feed-jaggery-1785156374"></link>
            <id>https://news.lankasri.com/article/elephant-kills-driver-while-feed-jaggery-1785156374</id>
            <summary type="text">இந்தியாவின் மேற்கு வங்கத்தில், தனக்கு வெல்லம் கொடுத்த ஒருவரை யானை ஒன்று மிதித்துக் கொன்ற பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

வெல்லம் கொடுத்த நபரை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மேற்கு வங்கத்தில், தனக்கு வெல்லம் கொடுத்த ஒருவரை யானை ஒன்று மிதித்துக் கொன்ற பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
</p><h3>
வெல்லம் கொடுத்த நபரை மிதித்துக் கொன்ற யானை
</h3><p>
சனிக்கிழமையன்று, மேற்கு வங்கத்திலுள்ள சந்தன் நகர் என்னுமிடத்தில் தெருவில் வலம் வந்த யானை ஒன்றிற்கு விஜய் ஹோல்க்கர் (49) என்னும் ஆட்டோ ரிக்‌ஷா சாரதி வெல்லம் கொடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e0271b1-7318-43f3-a482-0e00bf41e8fd/26-6a6753183bcad.webp' /></p><p>
அப்போது, யானையை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக, யானைப்பாகனான உமேஷ் கோஸ்வாமி, யானையின் தலை அருகே குச்சியால் தட்டியுள்ளார்.</p><p>

கோபமடைந்த யானை தனக்கு வெல்லம் கொடுத்த விஜயை தூக்கி வீசி காலால் மிதித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.</p><p>

அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பில், யானைப்பாகனான உமேஷை பொலிசார் கைது செய்துள்ளனர்.
</p><p>
அவர் மீது, விலங்கு ஒன்று தொடர்பில் அலட்சியம் காரணமாக உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தது முதலான இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:51:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலை ரத்து - நீதிமன்றம் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/court-cancel-govt-job-for-karur-stampede-victims-1785154498"></link>
            <id>https://news.lankasri.com/article/court-cancel-govt-job-for-karur-stampede-victims-1785154498</id>
            <summary type="text">கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்கிய அரசு வேலையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை

கடந்த ஆண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்கிய அரசு வேலையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. </p><h3>

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை</h3><p>

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
</p><p>
கடந்த ஜூலை 10 ஆம் திகதி கரூர் சென்ற முதல்வர் விஜய், இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசுப்பணிக்கான ஆணையை வழங்கினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6acd6e7-19fc-4ac6-848a-986bff2eb408/26-6a674bc449237.webp' /></p><p>

கட்சி நிகழ்வில் இறந்தவர்களுக்கு அரசுப்பணி வழங்குவதா என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. </p><p> 

ஜூலை 10 ஆம் திகதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "முதல்வர் விஜய் தற்போது கரூர் பயணத்தில் இருப்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. பாதிக்கப்பட்டோருக்கு அரசுப் பணி வழங்கலாம்.&nbsp;</p><p></p><p>
ஆனால் அந்த பணி நியமன ஆணை தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும். அந்த பணியின் நிரந்தரதன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது" என இடைக்கால தீர்ப்பளித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து. </p><h3> 

ரத்து செய்த நீதிமன்றம் </h3><p>

இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், "கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை தமிழ்நாடு அரசு மீறியுள்ளது

சாலை விபத்தில் தினந்தோறும் உயிரிழப்பு நடக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b4549e7-1c0e-4f70-8a67-8b6303aa73b8/26-6a674bc388526.webp' /></p><p>அவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க முடியுமா? என கேட்டு கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை - ஒரு வாரத்தில் உயிரிழந்த சிறுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-girl-child-dies-in-gene-editing-treatment-1785153014"></link>
            <id>https://news.lankasri.com/article/china-girl-child-dies-in-gene-editing-treatment-1785153014</id>
            <summary type="text">ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளர். 

ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை

சீனாவில் மேய்(mei) என்ற புனைபெய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளர்.</p><h3> 

ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை
</h3><p>
சீனாவில் மேய்(mei) என்ற புனைபெயர் கொண்ட 6 வயது சிறுமி, அறிவாற்றல் வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்திய ஒரு அரிய மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/998b504e-2a5b-4be5-b15a-1ad2c7056a1c/26-6a6745f8becb2.webp' /></p><p> 

நரம்பியல் நிபுணர் ஜிலாங் சியு தலைமையில் இந்த சிறுமிக்கு மரபணு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

இந்த சிகிச்சையில், மூளைக்குள் ஊடுருவும் வகையில் வடிவமைக்கப்பட்ட டிரில்லியன் கணக்கான வைரஸ்களைத் தண்டுவடத்தில் செலுத்தியுள்ளனர். ஆனால் சிகிச்சை நடந்த ஒரு வாரத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>இந்த சிகிச்சைக்காக மேயின் பெற்றோர் தங்களது சேமிப்பு மற்றும் கடன் வாங்கி மொத்தமாக 8.60 லட்சம் டொலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.8.25 கோடி) அதிகமாக கட்டணம் செலுத்தியுள்ளனர்.&nbsp;</p><p>

ஆனால்,மரபணுத் திருத்த சிகிச்சைக்கான விலங்கு சோதனைகள் குறித்து எழுதிய ஆய்வு கட்டுரையில் சிறுமியின் உயிரிழப்பு குறித்து சிலோங் கியூ எதுவும் குறிப்பிடப்படவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bf301fe-555b-4cee-9575-a0de2cfc60ab/26-6a6745f8086ff.webp' /></p><p>இந்த சிகிச்சையில் உள்ள அபாயங்கள் குறித்தும் பெற்றோருக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>

இந்த உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி விசாரணை குழு அமைத்துள்ளது. விசாரணையின் முடிவுகளுக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T11:50:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பேரதிர்ச்சி: வெளியேறிய 13,000 வணிக நிறுவனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-wildfire-13000-businesses-evacuated-1785152560"></link>
            <id>https://news.lankasri.com/article/france-wildfire-13000-businesses-evacuated-1785152560</id>
            <summary type="text">பிரான்ஸில் காட்டுத்தீ பரவியதை அடுத்து 13,000 வணிக நிறுவனங்கள் வெளியேறியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியேறிய 13,000 வணிக நிறுவனங்கள்

பிரான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸில் காட்டுத்தீ பரவியதை அடுத்து 13,000 வணிக நிறுவனங்கள் வெளியேறியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> வெளியேறிய 13,000 வணிக நிறுவனங்கள்</h2><p>

பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜிரோண்ட்(Gironde) மாகாணத்தில் பரவிய காட்டுத்தீ காரணமாக அப்பகுதியில் இருந்த வணிக நிறுவனங்கள் அவசரமாக வெளியேறியுள்ளன.</p><p>கிட்டத்தட்ட 13,000 வணிக நிறுவனங்கள் வெளியேறியதால் அப்பகுதியில் தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e708915-15fb-4af2-b875-3359462dc7aa/26-6a674431672ba.webp' /></p><p> காட்டுத்தீ காரணமாக வணிக நிறுவனங்கள் வெளியேறி இருப்பதை பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் ரோலண்ட் லெஸ்குர் “பொருளாதார பேரதிர்ச்சி” என விவரித்துள்ளார்.</p><p></p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் எப்போது தங்களது வணிகங்களை தொடர முடியும் என்பது குறித்து தெளிவு இல்லாததால் நிச்சயமற்ற தன்மை வணிக நிறுவனங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.</p><h2> பொருளாதார சேதம்</h2><p>


காட்டுத்தீ காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் குறித்து இப்போதே கணக்கிட முடியாது என்பதோடு, இதன் விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று அரசு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/949d4007-0e74-40ab-aa45-0dcac4576659/26-6a6744321b282.webp' /></p><p> இந்த காட்டுதீயினால் ஏற்பட்ட பாதிப்பை இப்போதே கணக்கிடுவது என்பது முன்கூட்டிய செயல், எப்படி இருந்தாலும் நாட்டை உலுக்கி வரும் காட்டுத்தீ வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை பிரான்ஸ் அரசு பேச்சாளர் மோட் பிரெஜியோன் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> பிரான்ஸில் ஏற்பட்டுள்ள தீ விபத்தினால் கிட்டத்தட்ட 42,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகி உள்ளது.</p><p> கிட்டத்தட்ட 2,20,000 மக்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T11:42:52+00:00</updated>
        </entry>
    </feed>
