<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-24T07:46:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் அமைச்சரான முதல் தமிழ் பெண் - யார் இந்த உமா குமரன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamil-mp-uma-kumaran-become-minister-in-uk-1784877057"></link>
            <id>https://news.lankasri.com/article/tamil-mp-uma-kumaran-become-minister-in-uk-1784877057</id>
            <summary type="text">பிரித்தானிய அமைச்சரவையில் தமிழ் பெண் உமா குமரன் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய அமைச்சரவையில் முதல் தமிழ் பெண் 

பிரித்தானியாவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய அமைச்சரவையில் தமிழ் பெண் உமா குமரன் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><h3>
பிரித்தானிய அமைச்சரவையில் முதல் தமிழ் பெண் </h3><p>

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம், அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce50a4d2-2423-468c-902f-66cb04786775/26-6a63100263ba3.webp' /></p><p>
இதில், இலங்கை தமிழ் வம்சாவளியான உமா குமரனுக்கு வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு இணைஅமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. </p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில் நாடாளுமன்ற துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Honoured to be appointed as Parliamentary Under-Secretary of the State in the Foreign, Commonwealth and Development Office. <br><br>At a volatile time globally, Britain’s voice and international leadership matters. <br><br>Looking forward to serving our great country in <a href="https://x.com/FCDOGovUK?ref_src=twsrc%5Etfw">@FCDOGovUK</a> 🇬🇧 <a href="https://t.co/aL2nxLWosP">pic.twitter.com/aL2nxLWosP</a></p>&mdash; Uma Kumaran MP (@Uma_Kumaran) <a href="https://x.com/Uma_Kumaran/status/2080330355538563211?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

உலகளவில் நிலையற்ற ஒரு காலகட்டத்தில், பிரித்தானியாவின் குரலும் சர்வதேசத் தலைமைத்துவமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நமது மாபெரும் நாட்டிற்கு சேவையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h3>

 யார் இந்த உமா குமரன்?
</h3><p>
உமா குமரனின் பெற்றோர், இலங்கையில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக 1980களில் அங்கிருந்து வெளியேறி லண்டனில் குடியேறியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aea967e-f5a1-40c1-b1e4-9d74d2dd990d/26-6a631003c0431.webp' /></p><p>

லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில், கலைத்துறையில் அரசியல் சிறப்பு இளங்கலைப் பட்டப்படிப்பையும், பொதுக் கொள்கை முதுகலைப் பட்டப்படிப்பையும் கற்றுள்ளார். </p><p> 

இங்கிலாந்தின் தேசிய சுகாதாரத்துறை ஊழியராக (NHS) தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய உமா, இளவயதிலேயே லேபர் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார். </p><p> 

லண்டன் மேயர் சாதிக் கானின் மூத்த ஆலோசர், கெய்ர் ஸ்டார்மரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குநர், C40 நகரங்களின் காலநிலை தலைமைத்துவக் குழுவின் இராஜதந்திர மற்றும் சர்வதேச உறவுகளுக்கான இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f81d7019-4941-4246-817b-73c533310469/26-6a63100313dd0.webp' /></p><p>

2009 ஆம் ஆண்டில் போர் நடந்து கொண்டிருந்த போது, ​​அப்போதைய பிரதமர் கோர்டன் பிரவுனை சந்திக்கச் சென்ற தமிழர்கள் குழுவில் உமாவும் இருந்தார்.</p><p> 

2024 ஆம் ஆண்டில் கிழக்கு லண்டனில் புதிதாக உருவாக்கபட்ட Stratford and Bow தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.</p><p>

இதன் மூலம், முதல் முறையாக பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் எம்பி என்ற பெருமையை பெற்றார்.</p><p> 

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவரது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, இலங்கையில் போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மக்னிட்ஸ்கி பாணியிலான தடைகளை விதிக்குமாறு அழைப்பு விடுத்தார். </p><p>

போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்க தொடர்ந்து வலியுறுத்துவதோடு, தமிழ் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T07:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டினாவை நீக்க எழுந்த கோரிக்கை..திடீர் ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/argentina-defender-player-nicholas-otamendi-retire-1784875240"></link>
            <id>https://news.lankasri.com/article/argentina-defender-player-nicholas-otamendi-retire-1784875240</id>
            <summary type="text">அர்ஜென்டினாவின் Defender வீரர் நிக்கோலஸ் ஒடாமெண்டி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.நிக்கோலஸ் ஒடாமெண்டி 


அர்ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினாவின் Defender வீரர் நிக்கோலஸ் ஒடாமெண்டி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.</p><h2>நிக்கோலஸ் ஒடாமெண்டி </h2><p>


அர்ஜென்டினா கால்பந்து அணிக்காக 139 போட்டிகளில் விளையாடிய Defender வீரர் நிக்கோலஸ் ஒடாமெண்டி (Nicholas Otamendi).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0b1c4e8-5961-4631-b62c-d2796422a6ea/26-6a630a3f00015.webp' />&nbsp;</p><p></p><p>
38 வயதாகும் இவர் 2009ஆம் ஆண்டு முதல் அர்ஜென்டினா அணிக்காக விளையாடி வருகிறார். </p><p>FIFA 2026 உலகக்கிண்ணத் தொடரிலும் இவர் விளையாடியிருக்கிறார்.

தற்போது ஒடாமெண்டி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். </p><h2>

தலைநிமிர்ந்து விடைபெறுகிறேன்</h2><p>இதுகுறித்த அவரது பதிவில், "இன்று என் தொழில் வாழ்க்கையின் மிகவும் கடினமான வார்த்தைகளை நான் எழுத வேண்டியுள்ளது. 

விதிவசத்தால் எனது கடைசிப் போட்டி ஒரு உலகக்கிண்ண இறுதிப் போட்டியாக அமைந்தது. இது நாங்கள் விரும்பிய முடிவு அல்ல.</p><p> 

ஆனாலும், இந்த அணி கடைசி நொடி வரை தங்களால் இயன்ற அனைத்தையும் கொடுத்தது என்பதை அறிந்து, நான் தலைநிமிர்ந்து விடைபெறுகிறேன். 

உலக சாம்பியன் ஆகும் கனவை நிறைவேற்ற எனக்கு வாய்ப்பளித்த அர்ஜென்டினாவுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69bc374c-90e1-4416-8077-d10afc9c7783/26-6a630a3d76ed7.webp' /></p><p>
அர்ஜென்டினா அணியை உலகக்கிண்ணத்தில் இருந்து வெளியேற்ற ஆதரவு பெருகி வரும் சூழலில், நட்சத்திர வீரரான ஒடாமெண்டியின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/022d7f51-dbbc-460a-a74c-fd973f456cd3/26-6a630a3e4c2a7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T07:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Number 10 North... பிரித்தானிய பிரதமரின் அடுத்த அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-to-hold-ministry-no-10-north-in-manchester-1784876254"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-to-hold-ministry-no-10-north-in-manchester-1784876254</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம், தான் பதவியேற்ற நாள் முதல் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

இந்நிலையில், அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம், தான் பதவியேற்ற நாள் முதல் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.</p><p>

இந்நிலையில், அவரது அடுத்த அதிரடி திட்டமான Number 10 North என்னும் விடயத்தை இன்று துவக்குகிறார் ஆன்டி பர்னாம்.
</p><h3>
Number 10 North
</h3><p>
பிரித்தானிய அரசியலைப் பொருத்தவரை, Number 10 என்பது பிரதமர் இல்லத்தைக் குறிக்கும். அதாவது அது பிரதமர் வாழும் வீடு மட்டுமல்ல, அது, அரசு தொடர்புடைய பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் பிரதமரின் அலுவலகமுமாகும்!&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53ecc2b4-3718-414d-b55b-ed34762b0212/26-6a630cdfe0976.webp' /></p><p>
இந்நிலையில், பிரதமர் இல்லத்தில் செய்யப்பட்டுவந்த பல பணிகளை, புதிய பிரதமரான ஆன்டி பர்னாம், மான்செஸ்டருக்கு மாற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகிவந்தன. அதுதான், Number 10 North என அழைக்கப்படுகிறது. </p><p>

அதாவது, அரசின் மையமாக செயல்படும் வெஸ்ட்மின்ஸ்டரில் நடைபெற்றுவந்த பணிகள் பலவற்றை Number 10 North என அழைக்கப்படும் மான்செஸ்டரிலுள்ள அலுவலகத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளார் ஆன்டி பர்னாம்.&nbsp;</p><p></p><p>
அத்துடன், அதிகாரத்தை, மேயர்களுக்கு பகிர்ந்தளிக்கவும் ஆன்டி பர்னாம் முடிவு செய்துள்ளார்.</p><p>

மான்செஸ்டரிலுள்ள Heron House என்னும் கட்டிடத்தில்தான் இந்த Number 10 North அமைய உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fba46d8a-1f7c-49c7-a722-17358e5a899e/26-6a631658a951e.webp' /></p><p>
முதல் கட்டமாக, ஆன்டி பர்னாம், இன்று, Number 10 North அலுவலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் மேயர்களுடன் கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்குகிறார்.
</p><p>
கூட்டத்தின் நோக்கம், பிரித்தானியாவை மேலும் சிறந்த நாடாக ஆக்குவதற்காக, அதிகாரப் பகிர்வை, அரசின் மைய இலக்காக மாற்றுவதாகும்.
</p><p>
அதாவது, அரசின் அனைத்துப் பணிகளும் லண்டனை மையமாகக் கொண்டு செயல்பட்டுவந்த நிலையில், அதிகாரத்தை, மேயர்கள், உள்ளூர் தலைவர்கள் முதலானோருடன் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுவரும் ஆன்டி பர்னாம், முதல் கட்டமாக இன்று Number 10 North அலுவலகத்தில் கூட்டம் ஒன்றை நடத்துவதுடன், இனி வாரந்தோறும் அங்கு சென்று பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T06:57:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுவரை இல்லாத மிக மோசமானதாக இருக்கும்... ஈரானுக்கு எதிராக வியூகம் வகுக்கும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/massive-attack-against-iran-1784875949"></link>
            <id>https://news.lankasri.com/article/massive-attack-against-iran-1784875949</id>
            <summary type="text">ஈரான் மீது இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமானத் தாக்குதல் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் முடிவெடுத்து வருவதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமானத் தாக்குதல் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் முடிவெடுத்து வருவதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.</p><h2>அனைத்து ஏற்பாடுகளையும்</h2><p> </p><p>
ஆக்சியோஸ் (Axios) செய்தித் தளத்திடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 
தாம் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றைப் பற்றிப் பரிசீலித்து வருவதாகவும், முன்னெப்போதையும் விடப் பெரிய அளவிலான தாக்குதலாக அது இருக்கும் எனவும்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1fcb82f-a569-461c-938a-61ad7bd440b0/26-6a630fc272a63.webp' /></p><p> </p><p>அது தொடர்பில் ஒரு முடிவை எடுக்கும் நிலைக்கு நெருங்கிவிட்டதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமது நிர்வாகம் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>சர்வதேச அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டொலர் என்ற குறியீட்டு அளவைத் தாண்டி மீண்டும் உயர்ந்த நிலையில், விலை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளுக்கு மத்தியிலேயே ட்ரம்ப் இக்கருத்துகளைத் தெரிவித்துள்ளார். </p><p>ஈரானுக்கு எதிராக அத்தகைய முடிவால் விளைவுகள் ஏற்படும் என்பதை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஆனால், அப்படியாக ஒரு தாக்குதல் குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், அப்படியான ஓரு மோசமானத் தாக்குதல் முன்னெடுக்க இஸ்ரேலின் உதவி கோரினால், அவர்கள் இரண்டே நிமிடத்தில் பதிலளிப்பார்கள் என்றும், ஆனால் எவரின் உதவியையும் அமெரிக்கா இந்த விவகாரத்தில் நாடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>ஈரான் மீது தொடர்ந்து 13-வது இரவாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தாக்குதல்களை அமெரிக்கா நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு புதிய வியூகம் அமைத்து வருவது குறித்து ட்ரம்ப் பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9253b6f7-e18c-4a5d-b853-922d504ba63c/26-6a630fc32bc1f.webp' /></p><h2>ஈரானுக்கு எதிராக</h2><p> </p><p>இருப்பினும், ஈரான் மீது நாளுக்கு நாள் தீவிரமானத் தாக்குதலையே அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. மேலும், செங்கடலில் சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஏமன் போராளிக் குழுவினர் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்தே தற்போது ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p> முன்னதாக ஈரானில் இருந்து தனது தூதரகப் பணியாளர்களைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதாக புதன்கிழமை பிரித்தானியா அறிவித்தது. மேலும், செங்கடலில் இருந்து இரண்டு கப்பல்களைத் திரும்பப் பெறுவதாக ஜேர்மானிய இராணுவம் வியாழக்கிழமை அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6033c1fd-797c-4633-bcff-976ff640937b/26-6a630fc3d5509.webp' /></p><p> </p><p>இதனிடையே
இஸ்ரேலிய நகரங்கள் குண்டுத் தடுப்புப் புகலிடங்களைத் திறந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்படக்கூடும் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் எச்சரித்தது. </p><p>சூயஸ் கால்வாயை செங்கடல் மற்றும் ஏதன் வளைகுடாவுடன் இணைக்கும் இரண்டாவது முக்கிய கடல் வழித்தடத்தின் பாதுகாப்பிற்கு ஹவுதிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. </p><p>மட்டுமின்றி, ஈரான் 10 நாட்களுக்கு முன்பு ஹவுதிகளுக்கு ராணுவ ஆலோசகர்களையும் ட்ரோன் பாகங்களையும் அனுப்பியதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், சவுதி அரேபியா கப்பல்கள் மீது தாக்குதல் நடந்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T06:50:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா மீது புதிதாக 10% இறக்குமதி வரி: இதற்கு மட்டும் வரியில் இருந்து விலக்கு: அமெரிக்கா அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-sets-10-per-cent-tariffs-on-indian-goods-1784874834"></link>
            <id>https://news.lankasri.com/article/us-sets-10-per-cent-tariffs-on-indian-goods-1784874834</id>
            <summary type="text">இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 10% வரியை விதித்துள்ளது.இந்தியா மீது 10% வரி விதிப்புகட்டாய உழைப்பு மூலம் உற்பத்தி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 10% வரியை விதித்துள்ளது.</p><h2>இந்தியா மீது 10% வரி விதிப்பு</h2><p>கட்டாய உழைப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மீதான தடையை முழுமையாக நிறைவேற்றாத இந்தியா, சீனா, மற்றும் பிரித்தானியா உட்பட 60 வர்த்தக கூட்டாளி நாடுகள் மீது அமெரிக்கா இறக்குமதி வரியை விதித்துள்ளது.</p><p>இதில் 10% முதல் 12.5% வரையிலான இறக்குமதியை வரியை அமெரிக்கா அரசு விதிக்கவுள்ளது.</p><p>இறக்குமதிகளை சார்ந்து இருக்கும் அமெரிக்கர்களின் தன்மையை குறைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அடுத்தடுத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30bf6859-29e5-4fca-bffb-6ddb529c7a94/26-6a630754365d2.webp' /></p><p>அதிக ஊதியம் பெறும் அமெரிக்கர்களின் பொருட்களுக்கு பதிலாக கட்டாய உழைப்பும் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதை தடுக்கும் சட்டங்கள் இல்லாத நாடுகள் மீது புதிய வரியானது விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> அதில் சீனா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு 12.5% வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><p> கட்டாய உழைப்பும் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதை தடுக்கும் சட்டங்கள் கொண்டிருந்தாலும் அவற்றை முறையாக நடைமுறைப்படுத்தாத இந்தியா, இலங்கை மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 10% வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்கா-கனடா-மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் வரும் பொருட்கள் மற்றும் எண்ணெய், எரிவாயு பொருட்கள் ஆகியவை இந்த புதிய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>டிரம்பின் உத்தரவு படி, 1974ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வர்த்தக சட்டம் 301-ன் கீழ் 60 நாடுகள் மீதான புதிய வரியை கொண்டு வருவதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி(USTR) ஜேமிசன் கிரீர் அறிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T06:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலையை வெட்டினாலும் ஒரு வாரத்திற்கு உயிர் வாழும் உயிரினம்.., எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cockroach-survival-without-head-in-tamil-1784872684"></link>
            <id>https://news.lankasri.com/article/cockroach-survival-without-head-in-tamil-1784872684</id>
            <summary type="text">ஒரு உயிரினத்தின் தலை துண்டிக்கப்பட்டால், அது உடனடியாக இறந்துவிடும் என்று பொதுவாக அனைவராலும் நம்பப்படுகிறது.

இருப்பினும், தலை இல்லாமல் ஒரு வாரம் கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு உயிரினத்தின் தலை துண்டிக்கப்பட்டால், அது உடனடியாக இறந்துவிடும் என்று பொதுவாக அனைவராலும் நம்பப்படுகிறது.</p><p>

இருப்பினும், தலை இல்லாமல் ஒரு வாரம் கூட உயிர் வாழக்கூடிய ஒரு உயிரினம் கரப்பான் பூச்சி.
</p><p>
கரப்பான் பூச்சி பொதுவாக நம் வீடுகளில் பெரும்பாலும் சமையலறை, கழிவறைகளில் காணப்படுகிறது.</p><p>
</p><p>
உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால், பொதுவாக ஒரு வாரத்திற்குப் பிறகு கரப்பான் பூச்சி இறந்துவிடும். இதற்கு அதன் பரவலான நரம்பு மண்டலம் மற்றும் உடல் அமைப்பே முக்கிய காரணமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e2f5a84-bb8d-4866-9074-0246443e1671/26-6a62feef57ece.webp' /></p><p>
கரப்பான் பூச்சியின் தலை துண்டிக்கப்பட்டாலும், அது அடுத்த ஒரு வாரத்திற்கு தலை இல்லாமல் வாழ முடியும்.</p><p>கரப்பான் பூச்சியின் மூளை அதன் தலையில் மட்டுமல்லாமல் அதன் முழு உடலிலும் பரவியுள்ளது என்று கூறப்படுகிறது.</p><p></p><p>கரப்பான் பூச்சியின் உடலில் திறந்த சுற்றோட்ட அமைப்பு உள்ளது. </p><p>மேலும், அதன் உடலில் உள்ள சிறிய துளைகள் மூலம் சுவாசிக்க முடிவதால், தலை துண்டிக்கப்பட்ட பிறகும் சில காலம் உயிர்வாழ முடிகிறது.</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0ecb802-add2-4537-8fa2-d6479304f0a0/26-6a62feeea953f.webp' />
</p><p>
அதன் உடலில் உள்ள திறந்த சுற்றோட்ட அமைப்பு இரத்த அழுத்தத்தை உறுதிப்படுத்தாமல் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை வழங்குகிறது.</p><p>
</p><p>இதனால் கரப்பான் மூக்கில் மட்டுமல்லாமல் அதன் உடல் முழுவதிலும் சுவாசிக்கின்றன.</p><p> 

தலை இல்லாமல் சாப்பிட முடியாமல் போனாலும் அதன் உடலில் சேமிக்கப்படும் ஆற்றல் அதை உயிருடன் வைத்திருக்கிறது.</p><p>

இருந்தாலும், உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் கரப்பான் பூச்சி ஒரு வாரத்திற்குப் பிறகு இறந்துவிடுகிறது.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T06:01:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்: நீடிக்கும் மர்மமான பின்னணி: இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-man-found-dead-in-israel-jerusalem-1784872615"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-man-found-dead-in-israel-jerusalem-1784872615</id>
            <summary type="text">இஸ்ரேலின் ஜெருசலேமில் இந்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர் சடலமாக மீட்பு
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் உள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலின் ஜெருசலேமில் இந்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> இந்தியர் சடலமாக மீட்பு</h2><p>
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் உள்ள கட்டமோன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் செய்தி படி, தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், 40 வயது மதிக்கத்தக்க நபர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டுபிடித்தனர்.</p><p> மோரியா காவல் நிலையத்தின் தலைவர் யுவால் ரூவன், இந்த சோக சம்பவத்தை உறுதிப்படுத்தி இருப்பதுடன் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/895b64bc-6846-4312-8502-15e95734fedc/26-6a62fea95605f.webp' /></p><p></p><p> விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதில் குற்றப் பின்னணி இருக்கலாம் என்று Ynetnews செய்தி வெளியிட்டுள்ளது.</p><p> அத்துடன் உயிரிழந்தவரின் அடையாளத்தை இதுவரை அதிகாரிகள் வெளியிடவில்லை.</p><p> அதே சமயம் இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய நபராக கருதப்படும் எலாட்டைச் சேர்ந்த 31 வயது நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.</p><p> கடந்த அக்டோபர் 2024ம் ஆண்டு நிலவரப்படி, 32,000 இந்திய தொழிலாளர்கள்&nbsp; இஸ்ரேலில்&nbsp; வசித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-24T05:57:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் 19 வயதுப்பெண் கொல்லப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில்..குப்பைக் கிடங்கில் உடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/melbourne-girl-found-dead-case-foredoomed-fail-1784872023"></link>
            <id>https://news.lankasri.com/article/melbourne-girl-found-dead-case-foredoomed-fail-1784872023</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபரின் விடுதலை முயற்சி தோல்வியடைந்தது.குளிர்சாதனப் பெட்டியில் மறைக்கப்பட்டுமெல்போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபரின் விடுதலை முயற்சி தோல்வியடைந்தது.</p><h2>குளிர்சாதனப் பெட்டியில் மறைக்கப்பட்டு</h2><p>மெல்போர்னைச் சேர்ந்த 19 வயதுப்பெண்ணான ஐலா பெல், கடந்த 2024ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6734e07-966b-4d3d-bb93-6e01ee871859/26-6a62fde89691f.webp' />&nbsp;</p><p></p><p> 

அவரது உடல் ஒரு குளிர்சாதனப் பெட்டியில் மறைக்கப்பட்டு, சில வாரங்களுக்குபிறகு ஒரு குப்பைக் கிடங்கில் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p> 

அதன் பின்னர் மராட் கானியேவ் (55) என்பவர் அவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். முதலில் அவர் மீது கொலைக் குற்றம்சாட்டு சுமத்தப்பட்டது.</p><h2>எதிர்பாராத விதமாக 
</h2><p>
ஆனால், அவரது வழக்கு விக்டோரியா உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது அது திட்டமிடாமல் அல்லது எதிர்பாராத விதமாக நடந்த கொலை என்று தரம் குறைக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6734e07-966b-4d3d-bb93-6e01ee871859/26-6a62fde89691f.webp' /></p><p>
மே மாதம் அவர் விசாரணைக்கு ஆஜராக இருந்த சில நாட்களுக்கு முன்பு, அந்தக் குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டது. </p><p>

அதற்கு பதிலாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அவர் மீது நீதியின் போக்கைத் திசை திருப்ப முயன்றதாகக் குற்றம் சாட்டினர்.
</p><p>
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று விக்டோரியா உச்ச நீதிமன்ற நீதிபதி, மீதமுள்ள கடைசி குற்றச்சாட்டையும் நீக்க வேண்டும் என்று நம்பவைப்பதில், குற்றம்சாட்டப்பட்டவரின் (கானியேவ்) சட்டக்குழு தோல்வியடைந்ததால் அவர் வெஸ்டர்ன் ப்ளைன்ஸ் சீர்திருத்த மையத்திலேயே தொடர்ந்து இருப்பார் என்று அவரிடம் கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f54b516-0586-4f2e-bbc9-c85e733f2e3b/26-6a62fdea20abc.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:52:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணைக்கொலை நிறுவனத் தலைவர்: சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-euthanasia-firm-head-dies-hike-mount-fuji-1784872094"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-euthanasia-firm-head-dies-hike-mount-fuji-1784872094</id>
            <summary type="text">நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, வேதனையில் தவிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், கடைசியாக, நிம்மதியாக தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வதற்காக ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, வேதனையில் தவிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், கடைசியாக, நிம்மதியாக தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வதற்காக நாடி வரும் இடம், சுவிட்சர்லாந்திலுள்ள எக்ஸிட் நிறுவனம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e592758-056e-460d-bd0d-e0d872e5c8d1/26-6a62fc9fcaf76.webp' /></p><p>அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தவர் பெர்னார்ட் சட்டர் (58).
</p><h3>
சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த துயரம்</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/672f2c51-dbde-4881-8366-b52047c80df4/26-6a62fca07add3.webp' /></p><p>எக்ஸிட் என்னும் கருணைக்கொலை நிறுவனத்தில் 2007ஆம் ஆண்டு இணைந்த சட்டர், சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்தில் வாழ்ந்துவந்தார்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், தன் குடும்பத்துடன் ஜப்பானுக்கு சுற்றுலா சென்றிருந்த சட்டர், செவ்வாய்க்கிழமை, ஜப்பானின் உயர்ந்த மலையான ஃபூஜி மலையில் ((Mount Fuji) மலையேற்றத்துக்குச் சென்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/530c661e-b60d-4678-98a6-bc4e724308f2/26-6a62fca12bdd4.webp' /></p><p>கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,010 மீற்றர் உயரத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென சட்டரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உடனடியாக, மருத்துவ உதவிக்குழுவினர் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து, அவரை மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.</p><p>

ஆனால், மருத்துவமனையில் சட்டரின் உயிர் பிரிந்துவிட்டது. அவரது மரணத்துக்கான காரணம் வெளியிடப்படவில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:48:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் சில பகுதிகளில் உத்தியோகப்பூர்வமாக வறட்சி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drought-declared-in-uk-regions-1784869461"></link>
            <id>https://news.lankasri.com/article/drought-declared-in-uk-regions-1784869461</id>
            <summary type="text">குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான தடைகளால் 23 மில்லியன் பிரித்தானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வட வேல்ஸ் மற்றும் அப்பர் செவர்ன் (Upper Seve...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான தடைகளால் 23 மில்லியன் பிரித்தானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வட வேல்ஸ் மற்றும் அப்பர் செவர்ன் (Upper Severn) பகுதிகளில் வறட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மிக வெப்பமான கோடை</h2><p>
</p><p>இப்பகுதியில் இம்மாதத்திற்கான எதிர்பார்க்கப்பட்ட மழையளவில் 2 சதவீதத்திற்கும் குறைவான அளவே இதுவரை பதிவாகியுள்ளது; மேலும், இப்பகுதியின் பெரும்பகுதிகளில் ஆறுகளில் பாயும் நீரின் அளவு மிகக் குறைவாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cebd191-36b6-4605-890e-8ec00518aac1/26-6a62f382849ca.webp' /></p><p> </p><p>இந்தக் கோடையில் நாட்டின் பல பகுதிகளில் பரவலான வறண்ட வானிலை நிலவியதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் வறட்சி நிலையை அறிவிக்கும் முதல் பகுதியாக இது அமைந்துள்ளது. </p><p>மேலும், பதிவு செய்யப்பட்டதிலேயே மிக வெப்பமான கோடைக்காலங்களில் ஒன்றை மக்கள் அனுபவித்து வரும் நிலையில், வறட்சி நிலையை அறிவித்த பிரித்தானியாவின் முதல் பகுதி இதுவாகும். </p><p>ஜூலை மாதத்திற்கான சராசரி மழையளவில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே பிரித்தானியா பெற்றுள்ளதால், நாட்டின் பல பகுதிகள் நீண்டகால வறண்ட வானிலை நிலையை எதிர்கொண்டுள்ளன.</p><p></p><p> </p><p>பிரித்தானியாவின் சில பகுதிகள் இதற்கு முன்பும், குறிப்பாக 2018 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளிலும் வறட்சியைச் சந்தித்துள்ளன. தொடர்ந்து நிலவும் வெப்பமான வானிலையால், லட்சக்கணக்கான குடும்பங்கள் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான தடையைச் சந்திக்க நேர்ந்துள்ளது. +</p><p>தேம்ஸ் வாட்டர் (Thames Water) நிறுவனம், தனது குடிநீர் வாடிக்கையாளர்களில் 10 மில்லியன் பேருக்குத் தற்காலிகமாக ஹோஸ்பைப் (hosepipe) பயன்பாட்டுத் தடையை விதித்துள்ளது. மேலும் 2.4 மில்லியன் வாடிக்கையாளர்கள் கட்டுப்பாடுகளுக்குள் வருவார்கள் என்று சவுத் ஈஸ்ட் வாட்டர் (South East Water) நிறுவனமும் இந்த வாரம் அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c996f0e-1051-4885-879e-648db9ebf7a0/26-6a62f3833c4ff.webp' /></p><h2>1,000 பவுண்டுகள் அபராதம்</h2><p> </p><p>சசெக்ஸ், சர்ரே, ஹாம்ப்ஷயர் மற்றும் பெர்க்ஷயர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வீடுகளும் தற்போது இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிரித்தானியர் ஒருவர் ஹோஸ்பைப்பைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும்; இருப்பினும், இதிலிருந்து சில விலக்குகளும் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad7023b0-b7f7-4d4d-80e6-fa4af85eff87/26-6a62f383dfe24.webp' /></p><p> 'புளூ பேட்ஜ்' (Blue Badge) வைத்திருப்பவர்கள், முன்னுரிமைச் சேவைகள் பதிவேட்டில் (Priority Services Register) உள்ளவர்கள் மற்றும் மருத்துவத் தேவைக்காகக் குழாய் (hose) மூலம் தண்ணீர் பயன்படுத்த வேண்டியவர்கள் ஆகியோருக்கு இவிதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p> மட்டுமின்றி, புதிதாகப் பதிக்கப்பட்ட புல்வெளியில் நான்கு வாரங்களுக்குப் பிறகு தண்ணீர் பாய்ச்சவும், செல்லப்பிராணிகளைச் சுத்தம் செய்யவும், மீன் குளங்களை நிரப்பவும் குழாயைப் (hose) பயன்படுத்தலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T05:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த உதவும் நல்லெண்ணெய்.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-to-use-sesame-oil-to-stop-hair-fall-1784867395"></link>
            <id>https://news.lankasri.com/article/how-to-use-sesame-oil-to-stop-hair-fall-1784867395</id>
            <summary type="text">பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.

தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.</p><p>

தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது.</p><p>

அந்தவகையில், முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த நல்லெண்ணெய்யை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><p>நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ, மக்னீசியம், மற்றும் துத்தநாகம் (ஜிங்க்) போன்ற உடல் நலத்திற்கு உதவும் சத்துக்கள் நிறைந்துள்ளன.</p><p>&nbsp;</p><h2>

எப்படி பயன்படுத்துவது?</h2><p>

முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெயை எடுத்து மிதமாக சூடுபடுத்தவும்.
</p><p>
பின் மிதமான சூட்டில் உள்ள எண்ணெயை உச்சந்தலை மற்றும் முடியின் வேர்வரை நன்கு தேய்க்கவும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f80fcc9f-a9ab-444d-8936-963ee056a7fd/26-6a62ea458698b.webp' /></p><p>அடுத்து விரல் நுனிகளால் உச்சந்தலையில் வட்ட வடிவில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
</p><p>
இதற்கடுத்து 40 நிமிடங்கள் அப்படியே ஊறவிடவும். பின்னர் மென்மையான ஷாம்பூவை பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.</p><h2>

கிடைக்கும் நன்மைகள்
</h2><p>
நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் குளிர்கால முடி உதிர்வை குறைகிறது.
</p><p>
நல்லெண்ணெய் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பதோடு, அரிப்பு மற்றும் பொடுகு தொல்லையை குறைக்கிறது.</p><p>
</p><p></p><p>முடியில் ஏற்படும் வறட்சி, முடியின் நுனியில் ஏற்படும் பிளவுகள் மற்றும் மாசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை இது சரிசெய்கிறது.</p><p>

இந்த எண்ணெய் நரைப்பதை தடுத்து, முடியின் கருமை நிறத்தை பாதுகாக்க உதவுகிறது.</p><p>

மேலும், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T04:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்ச அளவை எட்டிய வெப்பநிலை... பிரான்ஸ், ஸ்பெயினில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/temperatures-reach-extreme-levels-1784864955"></link>
            <id>https://news.lankasri.com/article/temperatures-reach-extreme-levels-1784864955</id>
            <summary type="text">தெற்கு ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கடும் வெப்பம் காரணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க சுமார் 30,000 பேர் வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கடும் வெப்பம் காரணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க சுமார் 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2>தேசிய அவசரநிலை</h2><p>
</p><p>தகிக்கும் வெப்பம் மற்றும் கடல்சார் வெப்ப அலை மத்தியதரைக் கடலைச் சுட்டெரிக்கும் வேளையில், 
பெருந்தீயின் தீவிரம் மோசமடைவதால், டான்டேவின் காவியம் போன்ற சூழ்நிலைகளை நிராகரிக்க முடியாது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a52457a-4496-4cfc-b6c1-9bf6b1b7fc47/26-6a62e1d22a600.webp' /></p><p> </p><p>இதனிடையே, பிரான்ஸின் தென்மேற்கு அட்லாண்டிக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட மிகத் தீவிரமான காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில், </p><p>முகாம்கள் மற்றும் விடுமுறைக்கால இல்லங்களில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உட்பட 18,800-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். </p><p>இந்த நிலையில், கட்டுக்கடங்காமல் பரவி வரும் பல காட்டுத்தீயினைக் கருத்தில் கொண்டு, ஸ்பெயின் வியாழக்கிழமை இரவு மாட்ரிட் பிராந்தியத்திலும் தலைநகருக்கு அருகிலுள்ள அவிலா மாகாணத்திலும் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>மாட்ரிட் பிராந்தியத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 10,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்; இதனால், இக்கட்டான சூழலைச் சமாளிக்கும் பொறுப்பு ராணுவத்தின் அவசரக்காலப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>ஐரோப்பிய வனத்தீ தகவல் அமைப்பின் (European Forest Fire Information System) தரவுகளின்படி, கடந்த ஆண்டு முழுவதும் 3,93,000 ஹெக்டேர் நிலம் காட்டுத்தீயால் எரிந்துபோன நிலையில், இந்த ஆண்டில் இதுவரை ஸ்பெயினில் ஏறக்குறைய 1,25,000 ஹெக்டேர் நிலம் எரிந்துபோயுள்ளது. </p><p>ஸ்பெயின் வானிலை ஆய்வு நிறுவனமான ஏமெட்டின் தகவல்படி, ஸ்பெயினின் முர்சியா மாகாணத்தில் உள்ள சீசா நகரில் வியாழக்கிழமையன்று 44.7 டிகிரி செல்சியஸ் என்ற உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. </p><p>முந்தைய நாள், ஸ்பெயினின் அல்பாசெட், அவிலா மற்றும் டெருவல் ஆகிய நகரங்களில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டியதன் மூலம், ஜூலை மாதத்திற்கான வெப்பநிலை சாதனைகள் முறியடிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/879e2dc6-1f96-4a3f-a65e-ad892cdbf7bc/26-6a62e1d315b6f.webp' /></p><p> </p><p>இதனிடையே, மத்திய தரைக்கடல் கண்காணிப்பு அமைப்பின் (Mediterranean Monitoring System) தகவலின் அடிப்படையில், மத்திய தரைக்கடலின் மேற்பரப்புப் பரப்பில் 80 சதவீதப் பகுதியை கடல்சார் வெப்ப அலை (marine heatwave) பாதித்து வருகிறது. </p><p>செவ்வாய்க்கிழமையன்று பல பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை உச்சத்தை எட்டியது; சில இடங்களில் 1991 முதல் 2020 வரையிலான சராசரி அளவை விட 5 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் பதிவானது.</p><h2>கட்டுக்குள் வரவில்லை</h2><p> </p><p>தீயினால் எரிந்த பரப்பளவைப் பொறுத்தவரை பிரான்ஸ் மிக மோசமாகவே பாதித்துள்ளது; தீ விபத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் சாதனைகளை முறியடித்துள்ளன. </p><p>பிரான்சில் ஏற்பட்ட தீ விபத்து, போர்டோ (Bordeaux) நகருக்கு மேற்கே சுமார் 40 கி.மீ தொலைவிலும், பிரபலமான சுற்றுலாத் தலமான ஆர்காச்சோன் (Arcachon) வளைகுடாவிற்கு வடக்கேயும் அமைந்துள்ள சாமோஸ் (Saumos) கிராமத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த பைன் மரக் காட்டில் தொடங்கியது. </p><p>24 மணி நேரத்திற்கும் சற்று அதிகமான காலத்தில் 3,700 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்துவிட்டதாகத் தீயணைப்பு வீரர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b39ec38e-3f88-4231-8327-b0dfdad00241/26-6a62e1d3b8b3e.webp' /></p><p> </p><p>தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 800 தீயணைப்பு வீரர்களும் நான்கு நீர் வீசும் விமானங்களும் போராடி வரும் நிலையில், நிலைமை இன்னும் சாதகமற்ற நிலையிலேயே இருப்பதாகவும், தீயின் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.</p><p> காலநிலைச் சீர்குலைவு காரணமாக அடிக்கடி நிகழும் தீவிர வானிலை நிகழ்வுகள் ஆயிரக்கணக்கானோரின் கூடுதல் உயிரிழப்புகளுக்கும், மண் மற்றும் நீர்நிலைகள் வறண்டு போவதற்கும், காட்டுத்தீ பரவுவதற்கும் வழிவகுத்துள்ள நிலையில், மே மாதம் முதல் பிரான்ஸ் ஒன்றன் பின் ஒன்றாக கிட்டத்தட்ட மூன்று வெப்ப அலைகளை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T03:47:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-women-beat-sri-lanka-by-5-wickets-1st-odi-1784864703"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-women-beat-sri-lanka-by-5-wickets-1st-odi-1784864703</id>
            <summary type="text">பாகிஸ்தான் மகளிர் அணி முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.சமரி அதப்பத்து 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் மகளிர் அணி முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.</p><h2>சமரி அதப்பத்து 
</h2><p>
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹம்பந்தோதாவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8ca1263-ee41-4231-a97b-d39bf957c4f6/26-6a62e2487b943.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ஓட்டங்கள் எடுத்தது. </p><p>அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 46 ஓட்டங்களும், நிலக்ஷிகா 46 ஓட்டங்களும் எடுத்தனர். </p><h2>

பாகிஸ்தான் வெற்றி </h2><p>நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளும், தஸ்மியா ருபாப் 2 விக்கெட்டுகளும், ஃபாத்திமா சனா, உம்-இ-ஹனி மற்றும் சயீதா அரூப் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae346180-ccf2-40c9-aaa7-321411862ac6/26-6a62e247c93dd.webp' /></p><p>

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. </p><p>

குல் ஃபெரோஸா 78 (77) ஓட்டங்களும், சிட்ரா அமின் 57 ஓட்டங்களும் விளாசினர். கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18793008-8538-4788-bec7-dd6cd97079ac/26-6a62e24719748.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T03:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா, கனடா உட்பட 80 நாடுகளின் மீது இடியை இறக்கிய டொனால்ட் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-tariffs-80-countries-1784862715"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-tariffs-80-countries-1784862715</id>
            <summary type="text">வெள்ளிக்கிழமை அதிகாலையுடன் காலாவதியாகவிருந்த 10 சதவீத உலகளாவிய சுங்கவரிக்கு மாற்றாக, அமெரிக்காவின் டசின் கணக்கான வர்த்தக நட்பு நாடுகள் மீது பரவலான புத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளிக்கிழமை அதிகாலையுடன் காலாவதியாகவிருந்த 10 சதவீத உலகளாவிய சுங்கவரிக்கு மாற்றாக, அமெரிக்காவின் டசின் கணக்கான வர்த்தக நட்பு நாடுகள் மீது பரவலான புதிய சுங்கவரிகளை விதிக்க டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>80-க்கும் மேற்பட்ட</h2><p>
</p><p>அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் சவால்களுக்கு மத்தியிலும், தீவிரமான வர்த்தகக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான ட்ரம்பின் மிகச் சமீபத்திய முயற்சி இதுவென்றே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3db8020-e887-4178-85f6-1bbdd967e3f5/26-6a62d9cc9a44d.webp' /></p><p> </p><p>வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல், பிரித்தானியா, மெக்சிகோ, கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா, இஸ்ரேல், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நாடுகளின் மீது அமெரிக்கா 10 சதவீதம் முதல் 12.5 சதவீதம் ​​சுங்க வரியை விதிக்கவுள்ளது.</p><p> ட்ரம்ப் விதித்த முந்தைய பல வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, பிப்ரவரியில் அவர் விதித்த 10 சதவீதப் பொதுவான வரியை தற்போதைய இந்த வரி விதிப்பு மாற்றி அமைக்கின்றது.</p><p></p><p> </p><p>மேலும், வியாழக்கிழமை பிற்பகல் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீரால் அறிவிக்கப்பட்ட இந்தப் புதிய வரிகள், கட்டாய உழைப்பில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் வரும் என்றே கூறுகின்றனர். </p><p>பிப்ரவரி மாத உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடனேயே, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மீது நிரந்தர வரிகளை விதிப்பதற்காகத் தனது நிர்வாகம் அது குறித்து விசாரணை நடத்தும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.</p><h2>நியாயமற்ற நடைமுறை</h2><p> </p><p>இதனிடையே, அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றான கனடா, கட்டாய உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னணியில் இருப்பதாகக் குறிப்பிட்டு, தங்களை இதில் குறிவைக்கக் கூடாது என்று உடனடியாகப் பதிலளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0343e1c7-a3c9-469e-a610-e13e2a004019/26-6a62d9cbdce8c.webp' /></p><p>
</p><p>அமெரிக்க வேலைவாய்ப்புகளையும் உற்பத்தியையும் பாதுகாக்கவும், வர்த்தப் பற்றாக்குறையைக் குறைக்கவும், அமெரிக்க வர்த்தப் பங்காளிகள் பின்பற்றுவதாக அவர் கருதும் நியாயமற்ற நடைமுறைகளைத் தடுக்கவும், இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் எல்லை வரிகளான சுங்க வரிகளை ஒரு முக்கியக் கருவியாக ட்ரம்ப் நீண்ட காலமாகவே கருதி வந்துள்ளார். </p><p>உண்மையில், அரசியலமைப்பின் கீழ் வரிகளை விதிக்கும் அதிகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. மார்ச் மாதத்தில் ப்ரூக்கிங்ஸ் (Brookings) அமைப்பு மேற்கொண்ட சட்டப் பகுப்பாய்வின்படி, சமீபத்திய சுங்கவரி விதிப்புகள் 'பிரிவு 301'-ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளன; நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் இப்பிரிவு, இதுவரை மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T03:10:16+00:00</updated>
        </entry>
    </feed>
