<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-18T12:23:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிம்பாப்வேவிற்கு எதிராக அதிவேக சதம்: சாதனை படைத்த அவுஸ்திரேலிய வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/travis-head-fastest-century-against-zimbabwe-1789731537"></link>
            <id>https://news.lankasri.com/article/travis-head-fastest-century-against-zimbabwe-1789731537</id>
            <summary type="text">Travis head 112 runs in 84 balls vs zimbabwe: அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் விளாசினார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Travis head 112 runs in 84 balls vs zimbabwe: அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் விளாசினார்.
</p><p>
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்தார்.&nbsp;</p><h2>அதிவேக சதம்</h2><p>
ஹராரேயில் அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A magnificent knock by Travis Head! 🔥 He scored a brilliant 112 runs. 💯<a href="https://x.com/hashtag/TravisHead?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TravisHead</a> <a href="https://x.com/hashtag/AUSvsZIM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AUSvsZIM</a><br> <a href="https://t.co/aHlk5KYIb6">pic.twitter.com/aHlk5KYIb6</a></p>&mdash; CREX (@Crex_live) <a href="https://x.com/Crex_live/status/2100881735781318686?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p></p><p> 

டிராவிஸ் ஹெட், கூப்பர் கோனொலி கூட்டணி நிதானமாக ஓட்டங்களை சேர்த்தது. அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய டிராவிஸ் ஹெட் (Travis Head) 75 பந்துகளில் சதம் விளாசினார்.
</p><p>
இதன்மூலம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை ஹெட் படைத்தார்.&nbsp;</p><h2>86 பந்துகளில்</h2><p>
இதற்கு முன் சக அணி வீரர் மேட் ரென்ஷா 86 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. 

டிராவிஸ் ஹெட் 84 பந்துகளில் 3 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0edc51-46d1-43ed-b309-e6fa29aaa1eb/26-6aad24e034468.webp' /></p><p>பின்னர் இங்கிலிஸ் 21 ஓட்டங்களிலும், கேரி 20 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

அரைசதம் அடித்த கூப்பர் கோனொலி 69 பந்துகளில் 78 ஓட்டங்கள் விளாசினார். </p><p>ஆலிவர் பீக் 18 பந்துகளில் 41 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாச, அவுஸ்திரேலியா 356 ஓட்டங்கள் குவித்தது.

பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளும், மஸகட்சா 2 விக்கெட்டுகளும், மாத்வேரே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ffd48bc-6a70-485b-b538-ea9081ba0395/26-6aad24e106188.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T11:40:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவர் இல்லாத நேரத்தில் நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைத்த சாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kanpur-doctor-driver-caught-for-prescribe-medicine-1789731033"></link>
            <id>https://news.lankasri.com/article/kanpur-doctor-driver-caught-for-prescribe-medicine-1789731033</id>
            <summary type="text">Doctor&#039;s driver caught prescribing medicines to patients: மருத்துவர் ஒருவரின் சாரதி ஒருவர் நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைக்கும் காட்சி ஒன்று வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Doctor's driver caught prescribing medicines to patients: மருத்துவர் ஒருவரின் சாரதி ஒருவர் நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.</p><p>
 

மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத நேரத்தில், அவரது சாரதி, நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><h3>
நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைத்த சாரதி</h3><p>

உத்தரப்பிரதேசத்திலுள்ள கான்பூரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணிபுரிபவர் Dr. ராம்கேஷ்.

புதன்கிழமையன்று, ராம்கேஷ் தன் நோயாளி ஒருவர் தொடர்புடைய வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c46be2bf-b41c-4d4e-ab50-fd1f0e311e42/26-6aad20da5ba0a.webp' /></p><p>
அந்த நேரத்தில், ராம்கேஷின் சாரதி, மருத்துவரின் இருக்கையில் அமர்ந்து நோயாளிகளுக்கு மருந்துச்சீட்டில் மருந்து எழுதிக்கொடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
</p><p>
அத்துடன், அந்த மருந்துகளில் சில மருத்துவமனையில் கிடைக்காது என்றும், அவற்றை வெளியிலிருந்துதான் வாங்கவேண்டும் என்றும் அந்த சாரதி கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
இந்த வீடியோ, மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியின் கவனத்தை எட்டிய நிலையில், அவர் மருத்துவர் ராம்கேஷை அழைத்து அவரது சாரதி செய்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
</p><p>
அந்த விடயம் குறித்து ராம்கேஷ் விளக்கமளிக்கவேண்டும் என்று கூறியுள்ள தலைமை மருத்துவ அதிகாரி, அவரது விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லையெனில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசுக்கு இந்த விடயம் குறித்து தகவலளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், தனது சாரதியை பணீநீக்கம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார் மருத்துவர் ராம்கேஷ்.</p>]]></content>
            <updated>2026-09-18T11:34:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப் போருக்கு ஆதரவாக தென் கொரியா இராணுவத்தை அனுப்பாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sending-military-to-hormuz-1789730293"></link>
            <id>https://news.lankasri.com/article/sending-military-to-hormuz-1789730293</id>
            <summary type="text">Seoul resolves recent speculation over sending military: இராணுவத்தை அனுப்புவது குறித்த சமீபத்திய யூகங்களுக்கு சியோல் முற்றுப்புள்ளி வைத்தது.
ஈரானுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Seoul resolves recent speculation over sending military: இராணுவத்தை அனுப்புவது குறித்த சமீபத்திய யூகங்களுக்கு சியோல் முற்றுப்புள்ளி வைத்தது.</p><p>
ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-ம்யுங் நிராகரித்துள்ளார்.</p><h2>ஆதரவை அளிக்கவில்லை</h2><p>
நாட்டை மோதலில் சிக்கவைக்கக்கூடிய வகையில் மத்திய கிழக்குக்கு ராணுவத்தை அனுப்பப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc61cb6-8746-461a-a53b-b4a2b1feeb23/26-6aad1df77baba.webp' /></p><p> </p><p>இருப்பினும், அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதில் கூடுதல் பங்காற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக லீ கூறியுள்ளார். கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் தென் கொரியா தனது கடற்படை இருப்பைப் பராமரித்து வருகிறது. </p><p>ஈரான் விவகாரத்தில் போதுமான ஆதரவை அளிக்கவில்லை என்று கூறி சியோலை விமர்சித்த ட்ரம்ப், இந்த கோடையில் இரு நாடுகளின் படைகளும் இணைந்து நடத்திய முக்கிய கூட்டு ராணுவப் பயிற்சிகளையும் குறைத்துக்கொண்டார்; இச்செயல் அமெரிக்காவின் கூட்டாளியான தென் கொரியாவை அதிருப்திக்குள்ளாக்கியது. </p><p>ஹார்முஸ் நீரிணைக்கு ராணுவப் படைகளை அனுப்புவது குறித்து தென் கொரிய அரசு பரிசீலித்து வருகிறது; இருப்பினும், உள்நாட்டில் இத்திட்டத்திற்குப் போதிய ஆதரவு இல்லை.</p><p></p><p> </p><p>அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கான தென் கொரியாவின் உறுதிப்பாடுகள் குறித்து அமெரிக்காவுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிக் கேட்டபோது, ​​அந்த முதலீட்டுத் திட்டத்தின் வணிக ரீதியான சாத்தியத்தன்மை குறித்த கவலையே முக்கிய முட்டுக்கட்டையாக உள்ளதாக லீ கூறினார். </p><p>சியோல் ஏற்றுக்கொள்வதற்குச் சிரமமான அம்சங்கள் இருந்தபோதிலும், இரு தரப்பினரும் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருக்கமாக இருப்பதாக லீ கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7769bbd3-d3a5-4782-a32a-862e38659845/26-6aad1df82cb39.webp' /></p><p> கொரிய இறக்குமதிகள் மீதான சுங்க வரிகளை 15 சதவீதமாகக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதற்குப் பதிலாக, அமெரிக்க உற்பத்தித் துறையில் 350 பில்லியன் டொலர் முதலீடு செய்வதாகத் தென் கொரியா கடந்த ஆண்டு உறுதியளித்தது. </p><p>முதலீட்டுத் திட்டங்கள் குறித்த நாடாளுமன்ற விளக்கக் கூட்டத்தை சியோல் இந்த வாரம் ஒத்திவைத்தது; அதற்குப் பதிலாக அடுத்த வாரம் இக்கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-18T11:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பிரித்தானிய மண்ணில்.. ஆனாலும் நாங்கள் - இளவரசர் ஹரி கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-said-back-on-british-soil-really-nice-1789727472"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-said-back-on-british-soil-really-nice-1789727472</id>
            <summary type="text">Prince harry said back on british soil really nice: பிரித்தானிய மண்ணில் மீண்டும் இருப்பது அருமையாக உள்ளதாக இளவரசர் ஹரி ஊடகத்திடம் தெரிவித்தார். 

பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prince harry said back on british soil really nice: பிரித்தானிய மண்ணில் மீண்டும் இருப்பது அருமையாக உள்ளதாக இளவரசர் ஹரி ஊடகத்திடம் தெரிவித்தார். </p><p>

பிரித்தானியாவில் ஊடகத்திடம் பேசிய இளவரசர் ஹரி, தாய் மண்ணிற்கு திரும்பியது மகிழ்ச்சி என்று கூறியதுடன் சர்ச்சைக்குரிய புத்தகம் குறித்த கேள்விகளை புறக்கணித்தார்.&nbsp;</p><h2>சவால்கள்</h2><p>

இளவரசர் ஹரி மற்றும் மேகன் பிரித்தானியா திரும்பியதில் இருந்து பல சவால்களை சந்தித்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e9d0812-6153-4036-9d0b-ad7b56c691d7/26-6aad14f34ab83.webp' />&nbsp;</p><p></p><p>

இந்த சூழலில், கிரீன்விச்சின் வரலாற்று சிறப்புமிக்க Old Royal Naval College வளாகத்தில் நடைபெற்ற முதல் Invictus Spirit Awards விழாவில் ஹரி கலந்துகொண்டார்.
</p><p>
அப்போது சிவப்பு கம்பள வரவேற்பு பாதையில் நின்றிருந்த செய்தியாளர் ஒருவர், "ஹரி, ஹரி...உங்கள் மாமாவின் புத்தகம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று உரக்கக் கேட்டார். அதற்கு தீவிர முகபாவனையை ஹரி பதிலாக தந்தார். </p><h2>

நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்</h2><p>எனினும், நேற்றிரவு அவர் அளித்த முதல் பேட்டியில், "இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் பிரித்தானிய மண்ணில் இருப்பதும், பல பழைய முகங்களையும், நண்பர்களையும் காண்பதும் மிகவும் அருமையாக இருக்கிறது.</p><p>

பல நிகழ்வுகள் நிறைந்ததாக இது அமைந்திருக்கிறது; ஆனாலும் நாங்கள் எங்கள் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடத் தொடங்கியுள்ளோம்.

குழந்தைகள் பாடசாலைகளில் இருக்கிறார்கள். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். </p><p>மேலும், நான் கூறியது போல் மீண்டும் பிரித்தானிய மண்ணிற்கு திரும்புவது அற்புதமாக இருக்கிறது. 

பிரித்தானியா திரும்பிய முதல் இரண்டு வாரங்கள் 'விறுவிறுப்பான நிகழ்வுகள் நிறைந்ததாக' இருந்தது. அடுத்த ஆண்டு பர்மிங்காமிற்கு செல்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fd2b7f6-cc54-4dc2-a15b-7281fcdd9695/26-6aad14f405ae6.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T11:05:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆழமாகும் டாடா அறக்கட்டளை உடனான விரிசல்... நீண்ட சட்டப் போராட்டத்திற்கு டாடா சன்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deepens-rift-with-tata-trusts-1789728190"></link>
            <id>https://news.lankasri.com/article/deepens-rift-with-tata-trusts-1789728190</id>
            <summary type="text">The deepening confrontation between Tata Sons and Tata Trusts: டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளை இடையே ஆழமடைந்து வரும் மோதல்.
நிர்வாகத் தலைவராக என்....</summary>
            <content type="html"><![CDATA[<p>The deepening confrontation between Tata Sons and Tata Trusts: டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளை இடையே ஆழமடைந்து வரும் மோதல்.
</p><p>நிர்வாகத் தலைவராக என். சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்படுவது தொடர்பாக டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளை இடையே தீவிரமடைந்து வரும் மோதல் ஒரு நீண்ட சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கக்கூடும் என்றே கூறப்படுகிறது.</p><h2>நிர்வாகக் குழு</h2><p>
</p><p>இறுதியில் நீதிமன்றத்தின் விளக்கம் தேவைப்படக்கூடிய பல கேள்விகள் இதில் அடங்கியுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a91c16a7-198e-46e9-ac66-9a8156e6bb38/26-6aad15c01272c.webp' /></p><p> </p><p>பிப்ரவரி 20, 2027 அன்று சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு, அவருக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நீட்டித்து வழங்க டாடா சன்ஸ் நிர்வாகக் குழு செப்டம்பர் 17 அன்று எடுத்த முடிவே இந்த உடனடி மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. </p><p>இந்த விவகாரத்தில் நான்கு இயக்குநர்கள் ஆதரவாக வாக்களித்தனர்; அதேவேளையில், டாடா அறக்கட்டளைத் தலைவர் நோயல் டாடா அந்தத் தீர்மானத்தை எதிர்த்தார். </p><p>டாடா சன்ஸ் நிறுவனத்தின் சுமார் 66 சதவீதப் பங்குகளைக் கூட்டாக வைத்திருக்கும் டாடா அறக்கட்டளை, அந்தத் தீர்மானத்தை சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி செல்லாதது என்று கூறியதுடன், ஒரு தலைவரின் நியமனம் அல்லது மறுநியமனத்திற்கு அறக்கட்டளையின் நியமன இயக்குநர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு தேவை என்று நிறுவனத்தின் சங்க விதிகளில் வாதிடுகிறது.</p><p></p><p> </p><p>ஆனால், டாடா சன்ஸ் நிறுவனம் ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், மற்றொரு பதவிக்காலத்தைப் பெற வேண்டாம் என்று ஆகஸ்ட் மாதம் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய சந்திரசேகரன் ஒப்புக்கொண்டதாகவும், அதைத் தொடர்ந்து அவரது மறுநியமனத்திற்கு நிர்வாகக் குழு பெரும்பான்மை வாக்குகளுடன் ஒப்புதல் அளித்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. </p><p>முற்றிலும் முரண்பட்ட இந்த நிலைப்பாடுகள், 'டாடா சன்ஸ்' நிறுவனத்தின் விதிமுறைகளை (Articles) விளக்குவது குறித்தும், நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிற்கும் அதன் கட்டுப்பாட்டைக் கொண்ட பங்குதாரருக்கும் இடையிலான அதிகாரச் சமநிலை குறித்தும் ஒரு சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கக்கூடும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>வாக்களிக்க வேண்டும்</h2><p> </p><p>இந்த சர்ச்சையின் மையத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு நிர்வாகக் கட்டமைப்பு உள்ளது. ஒரு தலைவரின் முதல் நியமனத்திற்கும், பதவியில் இருப்பவரின் மறுநியமனத்திற்கும், நிறுவனத்தின் விதிகளில் பரிந்துரைக்கப்பட்ட செயல்முறையே பொருந்தும் என்று டாடா அறக்கட்டளை வலியுறுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72a6443e-137f-4fb8-a05b-f67b8bcee1e9/26-6aad15c0be611.webp' /></p><p> மேலும், தலைவரை நியமிக்கும் அல்லது மறுநியமனம் செய்யும் தீர்மானம் செல்லுபடியாவதற்கு, அதன் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர்கள் இருவரும் ஆஜராக வேண்டும் என்றும், அந்தப் பரிந்துரைக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது. </p><p>சந்திரசேகரனுக்கு எதிராக நோயல் வாக்களித்த நிலையில், செப்டம்பர் 17-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அந்தச் சோதனையில் தோல்வியடைந்துவிட்டதாக அறக்கட்டளைகள் வாதிடுகின்றன.</p><p></p><p> </p><p>டாட்டா அறக்கட்டளையின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழங்கிய சட்டக் கருத்து ஒன்றையும் நோயல் வாரியத்தின் முன் சமர்ப்பித்தார். </p><p>டாட்டா அறக்கட்டளையின் கூற்றுப்படி, வாரியம் அந்தக் கருத்தைக் கருத்தில் கொள்ளவில்லை. இரு நியமனதாரர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடே, எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் ஒரு முக்கிய அங்கமாக மாறக்கூடும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T10:39:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-dies-8-injured-in-philippines-school-shooting-1789727019"></link>
            <id>https://news.lankasri.com/article/3-dies-8-injured-in-philippines-school-shooting-1789727019</id>
            <summary type="text">Three dead, eight injured in Philippines school shooting: பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் மூன்று பேர் பலியாகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Three dead, eight injured in Philippines school shooting: பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் மூன்று பேர் பலியாகியுள்ளார்கள், எட்டு பேர் காயமடைந்துள்ளார்கள்.
</p><p>

இன்று வெள்ளிக்கிழமை மதியம், பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள Banga என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><h3>
நண்பர்களை வீட்டுக்கு போகச் சொன்ன மாணவர்
</h3><p>
மதிய உணவு இடைவேளையின்போது, மாணவர் ஒருவர் தன் நண்பர்களிடம் வீட்டுக்குப் போகுமாறு கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/121297c6-d143-484e-bca6-859633c5757a/26-6aad112d5cec4.webp' /></p><p>
ஏனென்றால், தான் உணவு இடைவேளைக்குப் பிறகு துப்பாக்கிச்சூடு நடத்த இருப்பதாக அந்த 16 வயது மாணவர் கூறியுள்ளார்.
</p><p>
அவர் எப்போதும் வேடிக்கையாக பேசுபவர் என்பதால், அவர் கூறியதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.&nbsp;</p><p></p><p>
ஆனால், சொன்னதுபோலவே, உணவு இடைவேளைக்குப் பிறகு துப்பாக்கியால் மாணவர்களைத் தாக்கத் துவங்கியுள்ளார் அவர்.
</p><p>
மொத்தம் 10 மாணவர்கள் தாக்கப்பட்ட நிலையில், 14 வயதுடைய இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள், எட்டு பேர் காயமடைந்துள்ளார்கள். அவர்களில் நான்கு பேருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

சக மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மாணவர், பின் தன்னைத்தான் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழக்க, உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
</p><p>
ஜூன் மாதம் பள்ளி ஒன்றில் மாணவர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, இது பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்கும் மூன்றாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T10:24:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை - ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eu-proposes-social-media-ban-for-under-13-kids-1789726740"></link>
            <id>https://news.lankasri.com/article/eu-proposes-social-media-ban-for-under-13-kids-1789726740</id>
            <summary type="text">eu proposes social media ban for under 13 kids: 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>eu proposes social media ban for under 13 kids: 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது. </p><h3>

குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை விதிக்க உள்ள EU
</h3><p>
குழந்தைகள் சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்துவதன் காரணமாக பல்வேறு மன மற்றும் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a5cfac1-cace-408a-85b7-35c9fdde9f25/26-6aad1015dbc69.webp' /></p><p>

இதனை கருத்தில் கொண்டு, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குழந்தைகளுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அல்லது முற்றிலுமாகத் தடைசெய்ய சட்டம் இயற்றியுள்ளன.</p><p> 

தற்போது ஐரோப்பிய ஒன்றியமும், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகம் பயன்பாட்டிற்கு தடை விதிக்க முன்மொழிந்துள்ளது.</p><p> 

ஐரோப்பிய ஒன்றிய குழந்தைகள் சட்டம் (EU Kids Act) எனப்படும் இந்தச் சட்டம், "தங்கள் பிள்ளைகள் ஒரு பாதுகாப்பான உலகில் பயணிக்க உதவுவதற்கான வழிமுறைகளை பெற்றோர்களுக்கு வழங்கும்" என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a2b1d3-dbd0-4f05-bee0-6ee5754f5c33/26-6aad10169014f.webp' /></p><p> 

இந்த முன்மொழிவின்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும்.
</p><p>
13 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கணக்கு மூலம் அமைக்கப்படும் வரையறுக்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.&nbsp;</p><p></p><p>

இந்த கணக்குகளில், சமூகத் தொடர்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் வரையிலான திரைப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் இருக்கும். </p><p> 

சுயவிவர அடிப்படையிலான பரிந்துரை ஊட்டங்கள், முடிவில்லாமல் திரையைப் புரட்டுதல், சில வெகுமதி வழிமுறைகள், முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் வேண்டாத தொடர்புகள், மற்றும் உறங்கும் நேரங்களில் வரும் புஷ் அறிவிப்புகள் போன்ற அடிமையாக்கும் அம்சங்கள் கட்டுப்படுத்தப்படும். </p><p>

சிறார்களின் சுயவிவரங்கள் இயல்பாகவே தனிப்பட்டதாக இருக்க வேண்டும், மேலும் புவியிடக் கண்டறிதல், கேமரா மற்றும் ஒலிவாங்கி அணுகல், அரட்டை, செயற்கை நுண்ணறிவு உதவி ஆகியவை அணைக்கப்பட்டிருக்க வேண்டும். </p><p>

இந்த முன்மொழிவு, பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு, நிறுவனத்தின் மொத்த உலகளாவிய ஆண்டு வருவாயில் 6 சதவீதம் வரை அபராதம் விதிக்ககூடும். </p><p>

ஏற்கனவே ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இது தொடர்பான சட்டங்களை இயற்றியுள்ள நிலையில், இந்த முன்மொழிவு சட்டமாகும் போது, அந்த நாடுகளின் சட்டங்களை ரத்து செய்து விடும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T10:19:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட்டமிடும் ஹவுதிகள்... சவுதிக்கு 24.3 பில்லியன் டொலர் போர் விமானங்களை விற்கும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/usa-fighter-jet-sale-to-saudi-1789725759"></link>
            <id>https://news.lankasri.com/article/usa-fighter-jet-sale-to-saudi-1789725759</id>
            <summary type="text">US clears way for fighter jet sale to Saudi Arabia: சவுதி அரேபியாவுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா வழிவகுத்துள்ளது.
ஏமனின் ஹவுதிகளால் கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>US clears way for fighter jet sale to Saudi Arabia: சவுதி அரேபியாவுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா வழிவகுத்துள்ளது.
</p><p>ஏமனின் ஹவுதிகளால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் சவுதி அரேபியாவுக்கு 24.3 பில்லியன் டொலர் மதிப்பிலானப் போர் விமானங்களை விற்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.</p><h2>நீண்ட காலமாக ஆர்வம்</h2><p> </p><p>
சவுதி அரேபியாவுக்கு லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் எஃப்-35 லைட்னிங் II ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை வியாழக்கிழமை அன்று தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4a53b5f-4b86-4f07-b444-9b3d9dc8efd9/26-6aad0c414be23.webp' /></p><p> </p><p>சவுதி அரேபியா 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இந்த ஜெட் விமானங்களுக்காக நேரடியாக வேண்டுகோள் விடுத்ததுடன், லாக்ஹீட் மார்ட்டினின் போர் விமானத்தின் மீது நீண்ட காலமாக ஆர்வம் காட்டி வந்துள்ளது. </p><p>சுமார் 24.3 பில்லியன் டொலர் மதிப்பிலான இந்த விற்பனைக்கு இன்னும் நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படுகிறது; இதில் 48 இராணுவ விமானங்கள், 49 பிராட் &amp; விட்னி (Pratt &amp; Whitney) என்ஜின்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், உதிரி பாகங்கள் மற்றும் பிற ஆதரவுப் பொருட்கள் ஆகியவை அடங்கும் என்று வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>இஸ்ரேல் ஒரு தரமான இராணுவ மேன்மையைத் தக்கவைத்துக் கொள்வதை உறுதிசெய்யும் வகையில், அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆயுத விற்பனையை எப்போதும் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தி வந்துள்ளது; இதன்மூலம், பிராந்திய அரபு நாடுகளை விட இஸ்ரேலுக்கு மிகவும் மேம்பட்ட அமெரிக்க ஆயுதங்கள் கிடைப்பதை அது திறம்பட உறுதி செய்கிறது. </p><p>தற்போது ஹவுதிகளால் சவுதி அரேபியா பின்னடைவுகளை எதிர்கொண்டுவரும் சூழலில், அமெரிக்காவிடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>

இதனிடையே, வாஷிங்டனில் உள்ள சவுதி தூதரகம் இந்த விற்பனை முன்மொழிவை வரவேற்றதுடன், இதனை இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு கூடுதல் படியாகவும் விளக்கமளித்துள்ளது. </p><p>எதிரிகளின் கண்ணில் படாமல் தப்பிச் செல்ல உதவும் 'ஸ்டெல்த்' (stealth) தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள F-35, உலகின் அதிநவீன போர் விமானமாகக் கருதப்படுகிறது.</p><h2>வலுப்படுத்துவதில் ஆர்வம்</h2><p> </p><p>இஸ்ரேல் கடந்த பத்தாண்டுகளாக இந்த விமானங்களை இயக்கி, பல படைப்பிரிவுகளை உருவாக்கியுள்ளது; மேலும், இத்தொகுப்பைக் கொண்டுள்ள ஒரே மத்திய கிழக்கு நாடாகவும் அது திகழ்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb7f3434-8c41-4aa2-8c7e-d2959d9c47d4/26-6aad0c42012ed.webp' /></p><p> </p><p>அமெரிக்க ஆயுதங்களின் மிகப்பெரிய வாடிக்கையாளரான சவுதி அரேபியா, தனது விமானப்படையை நவீனப்படுத்தவும், குறிப்பாக ஈரானிடமிருந்து வரும் பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், பல ஆண்டுகளாக இந்தத் போர் விமானத்தைப் பெற முயன்று வருகிறது.
</p><p>சவுதி உடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாக ட்ரம்ப் நிர்வாகம் குறிப்பிட்டுள்ள நிலையில், இரண்டு படைப்பிரிவுகளுக்கு (squadrons) இணையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை சவுதி அரசு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>சவுதி விமானப்படை, போயிங் (Boeing) F-15-கள், ஐரோப்பிய டொர்னாடோக்கள் (Tornadoes) மற்றும் டைஃபூன்கள் (Typhoons) உள்ளிட்ட பல்வேறு வகையான போர் விமானங்களை இயக்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73ef202a-5420-445e-86e3-a73403c48643/26-6aad0c42ac769.webp' /></p><p> </p><p>மீண்டும் பதவியேற்றது முதல், சவுதி அரேபியாவுடனான ஆயுத விற்பனைக்கு ட்ரம்ப் முன்னுரிமை அளித்து வருகிறார். 2025-ஆம் ஆண்டில், சுமார் 142 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதத் தொகுப்பை அந்த நாட்டிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டது; அமெரிக்கா மேற்கொண்டதிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்று வெள்ளை மாளிகை இதனை வர்ணித்தது. </p><p>அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வானது எந்தவொரு F-35 விற்பனைக்கும் சவால்களை ஏற்படுத்தக்கூடும். 2018-ல் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரியாத்துடனான ஆயுத ஒப்பந்தங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னர் கேள்வி எழுப்பினர். </p><p>மேலும், நாடாளுமன்றத்தின் சில உறுப்பினர்கள் சவுதி அரேபியாவுடன் இராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் எச்சரிக்கையாகவே உள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T09:59:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் முதல் iPhone 18 Pro Max மொபைலை வாங்கிய பஞ்சாப் இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/punjab-man-buys-first-iphone-18-pro-max-india-1789725278"></link>
            <id>https://news.lankasri.com/article/punjab-man-buys-first-iphone-18-pro-max-india-1789725278</id>
            <summary type="text">Punjab man buys first iPhone 18 Pro Max India: பஞ்சாபை சேர்ந்த இளைஞர் முதல் iPhone 18 Pro Max-ஐ வாங்கியுள்ளார்.

இந்தியாவில் வெளியானது iPhone 18 ser...</summary>
            <content type="html"><![CDATA[<p>Punjab man buys first iPhone 18 Pro Max India: பஞ்சாபை சேர்ந்த இளைஞர் முதல் iPhone 18 Pro Max-ஐ வாங்கியுள்ளார்.
</p><h2>
இந்தியாவில் வெளியானது iPhone 18 series </h2><p>
ஆப்பிள் நிறுவனம் இன்று (செப்டம்பர் 18) அதன் புதிய iPhone 18, iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max மாடல்களை இந்தியாவில் வெளியிட்டது.</p><p>

டெல்லி-NCR பகுதிகளில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் அதிகாலை முதலே Apple iphone ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f92ee08a-97cb-4977-9fc4-acb5689b11c0/26-6aad0a6062558.webp' /></p><h2>முதல் iPhone 18 Pro Max</h2><p>நோய்டாவில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில், காலை 6 மணிக்கே வரிசையில் நின்று காத்திருந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், முதல் iPhone 18 Pro Max வாங்கிய வாடிக்கையாளராகத் திகழ்ந்தார்.</p><p>

வெள்ளை சட்டையும் பச்சை டர்பானும் அணிந்திருந்த அவர், “நான் முதலாவதாக iPhone வாங்கியவன். இதற்காகவே பஞ்சாப் மாநிலத்திலிருந்து வந்தேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Noida, UP: A buyer says, &quot;I bought two iPhone 18 Pro Max. I came from Punjab and have been standing in the queue since 6 AM. Mine was the very first booking; I am the first one who has got the phone...&quot; <a href="https://t.co/ZfhLUMhw5i">https://t.co/ZfhLUMhw5i</a> <a href="https://t.co/rVR3U5CNZI">pic.twitter.com/rVR3U5CNZI</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2100778860359098463?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அவர் ஒரே நேரத்தில் இரண்டு iPhone 18 Pro Max மாடல்களை வாங்கினார். மற்ற வாடிக்கையாளர்கள் புதிய மாடல்களை சோதித்து பார்த்து, பின்னர் வாங்கும் ஆர்வத்தில் இருந்தனர்.
</p><p>
ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள், வாடிக்கையாளர்களை வரவேற்று கைத்தட்டலுடன் உற்சாகமாக வரவேற்றனர். மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களிலும் இதேபோன்ற ஆர்வம் காணப்பட்டது.</p><p></p><h2>

விலை </h2><p>புதிய iPhone 18 Pro விலை ரூ.1,64,900 (256GB) முதல் தொடங்குகிறது. 512GB ரூ.1,89,900, 1TB ரூ.2,39,900 மற்றும் 2TB ரூ.3,14,900 ஆகும். iPhone 18 Pro Max விலை ரூ.1,79,900 (256GB) முதல் தொடங்கி, அதிகபட்சமாக ரூ.3,29,900 வரை உள்ளது.</p><p>

இந்த நிகழ்வு, இந்தியாவில் iPhone ரசிகர்களின் உற்சாகத்தையும், புதிய மாடல்களின் பிரபலத்தையும் வெளிப்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T09:51:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல ஆண்டுகளாக ஒரே எண் வரிசை கொண்ட லொட்டரிச்சீட்டு வாங்கிவந்த நபர்: அடித்த அதிர்ஷ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ontario-man-owns-25-million-lotto-max-jackpot-1789723433"></link>
            <id>https://news.lankasri.com/article/ontario-man-owns-25-million-lotto-max-jackpot-1789723433</id>
            <summary type="text">Ontario man snags $25M Lotto Max jackpot: கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த ஒருவருக்கு லொட்டரில் 25 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.


ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ontario man snags $25M Lotto Max jackpot: கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த ஒருவருக்கு லொட்டரில் 25 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.
</p><p>

ஒன்ராறியோவைச் சேர்ந்த ஸ்டான்லி என்பவர், பல ஆண்டுகளாக ஒரே எண் வரிசை கொண்ட லொட்டரிச் சீட்டு வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.</p><h3>

ஒரே நாளில் கோடீஸ்வரரான கனேடியர்
</h3><p>
இந்நிலையில், சமீபத்தில் ஸ்டான்லி வாங்கிய லொட்டரிச் சீட்டுக்கு 25 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12e54c1a-ad6f-4c3e-8f17-37aacbb0fd6e/26-6aad032aba4b9.webp' /></p><p>
25 மில்லியன் கனேடிய டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 5,92,33,40,855.00 ரூபாய் ஆகும்.</p><p>

தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையில் ஒரு பெரும் தொகையை தன் மகளுக்கும் பேத்திக்கும் கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
ஒரு பிளம்பராக இவ்வளவு ஆண்டுகள் பணி செய்துவந்த நிலையில், தனக்கென ஒரு சொந்த வீடு வாங்கவேண்டும், கார் வாங்கவேண்டும் என்னும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார் ஸ்டான்லி.
</p><p>
அத்துடன், தன் காதலியுடன் உலகம் சுற்றிப் பார்க்கவும் திட்டமிட்டுள்ளார் ஸ்டான்லி!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T09:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2வது குழந்தை பெற்றால் ரூ.3.6 லட்சம் பரிசு, வரி விலக்கு வழங்கும் ஹாங்காங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hong-kong-reward-bonus-tax-free-for-birth-2nd-baby-1789722552"></link>
            <id>https://news.lankasri.com/article/hong-kong-reward-bonus-tax-free-for-birth-2nd-baby-1789722552</id>
            <summary type="text">hong kong reward bonus tax free for rise birth rate: குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க 2வது குழந்தை பெற்றால் ரூ.3.6 லட்சம் பரிசு, வரி விலக்கு உள்ளிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>hong kong reward bonus tax free for rise birth rate: குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க 2வது குழந்தை பெற்றால் ரூ.3.6 லட்சம் பரிசு, வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.</p><h3> 

2வது குழந்தை பெற்றால் ரூ.3.5 லட்சம்</h3><p>

உலக நாடுகள் குழந்தை பிறப்பு விகித சரிவை எதிர்கொண்டு வரும் சூழலில், இளம் தலைமுறையினரை விட முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.</p><p> 

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நாடுகளும் ஊக்கத்தொகை வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8ad63b6-6ab7-4b28-8c27-184b2646d509/26-6aacffba9390a.webp' /></p><p>
தற்போது இந்த ஊக்கத்தொகை திட்டத்தை நீட்டித்துள்ள ஹாங்காங், ஊக்கத்தொகையை அதிகரித்துள்ளது. </p><p>

2023 ஆம் ஆண்டு முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தகுதியுள்ள பெற்றோருக்கு 20,000 ஹாங்காங் டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 2.44 லட்சம்) வழங்கப்பட்டு வந்தது.&nbsp;</p><p></p><p> 

இந்த திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. </p><p>

செப்டம்பர் 16, 2026 மற்றும் அக்டோபர் 24, 2029 க்கு இடையில் ஹாங்காங்கில் பிறக்கும் இரண்டாவது அல்லது அதற்குப் பிறகான ஒவ்வொரு குழந்தைக்கும் ஒருமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93df6dc4-2323-4caa-ad50-c5d5a3c0f8b7/26-6aacffb9d797a.webp' /></p><p>

2வது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைக்கு, 30,000 ஹாங்காங் டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 3.66 லட்சம்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

ஹாங்காங்கிற்கு வெளியே பிறக்கும் குழந்தைக்கு இந்த உதவித்தொகை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதேவேளையில், பெற்றோரில் ஒருவர் ஹாங்காங்கில் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.</p><h3> 

வரி விலக்கு </h3><p>

மேலும், அத்தகைய குழந்தைகளுக்கான வரி விலக்கு 1,40,000 ஹாங்காங் டொலரிலிருந்து 1,60,000 ஹாங்காங் டொலராக(இந்திய மதிப்பில் ரூ.19.55 லட்சம்) உயர்த்தப்பட்டுள்ளது. </p><p>

குழந்தை பிறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பும், 2 வருடங்களுக்குப் பிறகும் சொத்துக்களை வாங்கும் குடும்பங்களுக்கு ரூ.2.5 லட்சம் என்ற உச்சவரம்புடன் முத்திரைக் கட்டணம் ரத்து செய்யப்படும்.&nbsp;</p><p></p><p>
வீட்டு உரிமைத் திட்டத்தின் (HOS) கீழ் மானிய விலையில் வழங்கப்படும் குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கும் பச்சிளம் குழந்தைகளைக் கொண்ட வெள்ளை படிவக் குடும்ப விண்ணப்பதாரர்களின், முன்பணச் சுமையைக் குறைக்கும் வகையில் அடமானக் கடன் மதிப்பு விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.</p><p> 

2023 ஆம் ஆண்டில் இந்த குழந்தை ஊக்கத்தொகையை அறிமுகப்படுத்திய நிலையில் 2024 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 35,723 ஆக உயர்ந்தது. </p><p>

ஆனால், 2025 ஆம் ஆண்டில் 31,000க்கும் சற்று அதிகமாக ஆக குறைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 19,255 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட கிட்டத்தட்ட 10 சதவீதம் குறைவாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T09:11:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் நகரமொன்றில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mysterious-explosions-reported-in-frankfurt-1789707386"></link>
            <id>https://news.lankasri.com/article/mysterious-explosions-reported-in-frankfurt-1789707386</id>
            <summary type="text">Mysterious explosions reported in Frankfurt: ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில் தொடர்ந்து மர்ம குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன.


ஜேர்மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mysterious explosions reported in Frankfurt: ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில் தொடர்ந்து மர்ம குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன.</p><p>


ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் நகர மக்கள், தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
</p><h3>
தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்
</h3><p>
ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில், வியாழக்கிழமை அதிகாலை வெடிச்சத்தம் கேட்டு கண்விழித்தார்கள் மக்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfcf4b50-1c29-47b7-9af2-0eaae5526bf5/26-6aacc47b836d9.webp' /></p><p>
அதிகாலை 4.00 மணியளவில் கேஃப் ஒன்றின் முன் ஒரு குண்டு வெடிக்க, சிறிது நேரத்திற்குள் சிற்றி சென்டர் ஒன்றின் முன் ஒரு குண்டு வெடித்துள்ளது.</p><p>

கடந்த சில நாட்களில் ஃப்ராங்பர்ட் நகரில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களும் Offenbach நகரில் ஒரு குண்டு வெடிப்புச் சம்பவமும் நிகழ்ந்துள்ளன.&nbsp;</p><p></p><p>

ஏற்கனவே திங்கட்கிழமை அதிகாலை Bockenheim நகரில் ஒரு குண்டு வெடித்துள்ளது.
</p><p>
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Sachsenhausen மாவட்டத்திலும் Offenbach நகரிலும் குண்டுகள் வெடித்தன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae68ee6c-5ad7-4621-8f49-ea623dc63051/26-6aacc47c371ca.webp' /></p><p>
இந்த சம்பவங்கள் அனைத்திலுமே யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை, கட்டிடங்களுக்கு மட்டுமே சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
Sachsenhausen என்னுமிடத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பில் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளான்.</p><p>

அதாவது, குற்றவாளிக் கும்பல் ஒன்று பதின்மவயதினரையும் இளைஞர்களையும் இந்த செயல்களில் ஈடுபட வைப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

இந்த வெடிகுண்டு தாக்குதல்களின் பின்னணியில் இருப்பது யார், அவர்களுடைய நோக்கம் என்ன என்பது குறித்து பொலிசார் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T08:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற விரும்பும் கிராமம்: உள்துறைச் செயலரை கொந்தளிக்கவைத்துள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shabana-angry-over-danny-tommo-link-in-piddington-1789717640"></link>
            <id>https://news.lankasri.com/article/shabana-angry-over-danny-tommo-link-in-piddington-1789717640</id>
            <summary type="text">Home secretary says she wants to distinguish between far-right extremism and legitimate local concerns over asylum sites: பிரித்தானியாவிலிருந்து கிராம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Home secretary says she wants to distinguish between far-right extremism and legitimate local concerns over asylum sites: பிரித்தானியாவிலிருந்து கிராமம் ஒன்று சுதந்திரம் பெற விரும்பும் விடயம் தொடர்பில் ஒரு சம்பவம் உள்துறைச் செயலரை கொந்தளிக்கவைத்துள்ளது.
</p><p>
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரிலுள்ள கிராமம், பிடிங்டன்.

350 பேர் மட்டுமே வாழும் அச்சிறு கிராமத்தில் ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்க வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அக்கிராம மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5e59fa0-9265-4e5a-a015-c97d2747d609/26-6aacec8a2944d.webp' /></p><p>

ஆகவே, அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளனர் அக்கிராம மக்கள்.</p><h3>

உள்துறைச் செயலரை கொந்தளிக்கவைத்துள்ள விடயம்</h3><p>

விடயம் என்னவென்றால், ஏற்கனவே பிடிங்டன் கிராம மக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கோபத்திலிருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>
சமீபத்தில், இங்கிலாந்திலுள்ள டோவர் மற்றும் போர்ட்ஸ்மௌத் ஆகிய இடங்களில் முகமூடி அணிந்த ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af5bd255-256e-4ec7-9c46-d09804a86929/26-6aacec8b8841d.webp' /></p><p>

அந்தக் கூட்டத்தினர், Patriot Platform என்னும் புலம்பெயர்தல் எதிர்ப்பு தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
</p><p>
அந்த அமைப்பின் தலைவர், டேனியல் தாமஸ். டேனி டாமோ என அழைக்கப்படும் இந்த தாமஸ், ஒரு கடத்தல் வழக்கு தொடர்பில் சிறை சென்றவர் ஆவார்.&nbsp;</p><p>

அவர்தான், புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அமைப்பான Patriot Platform என்னும் அமைப்பை உருவாக்கி புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்.&nbsp;</p><p></p><p>
இந்த டேனியல் தாமஸ், சமீபத்தில் பிடிங்டன் கிராமத்துக்குச் சென்று அக்கிராம நிர்வாகிகளை சந்தித்துள்ளார். </p><p>அவர் ஆயிரக்கணக்கான தனது குழுவினருடன் பிடிங்டன் கிராமத்துக்குச் சென்று அக்கிராமத்துக்குள் புகலிடக்கோரிக்கையாளர்கள் நுழையாமல் தடுக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விடயம்தான் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதை கொந்தளிக்கச் செய்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cccac283-5922-45c1-985a-bc84b311367e/26-6aacec8ad5221.webp' /></p><p>

புகலிடக்கோரிக்கையாளர்கள் மையம் ஒன்று தங்கள் கிராமத்தில் அமைக்கப்பட இருப்பது தொடர்பில் பிடிங்டன் கிராம மக்களின் நியாயமான கவலைகளுக்கும், பயங்கரவாத எண்ணம் கொண்டவர்கள் அதை பயன்படுத்திக்கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை தான் காட்டவிரும்புவதாக தெரிவித்துள்ளார் ஷபானா.</p><p>

அவ்வகையில், தீவிர வலதுசாரி இனவெறுப்பாளர்களான டேனியல் தாமஸ் போன்றவர்கள் சமுதாயத்தில் பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையில் பிடிங்டன் கிராம பிரச்சினையை எடுப்பது என்னும் விடயம் ஏற்றுக்கொள்ளமுடியாதது என்றும், அவர்கள் சட்டத்தை மீறும் நிலையில், அவர்கள் மீது சட்டம் முழுவீச்சில் பாயும் என்றும் கூறியுள்ளார் ஷபானா.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 பெண்களுக்கு மார்பகம் அகற்றும் அறுவை சிகிச்சை... தவறை ஒப்புக்கொண்ட NHS அறக்கட்டளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/twenty-women-had-mastectomies-1789717885"></link>
            <id>https://news.lankasri.com/article/twenty-women-had-mastectomies-1789717885</id>
            <summary type="text">Twenty women had mastectomies they didn&#039;t need: இருபது பெண்களுக்குத் தேவையற்ற மார்பக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
NHS அறக்கட்டளை ஒன்றில் பெற்ற புற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Twenty women had mastectomies they didn't need: இருபது பெண்களுக்குத் தேவையற்ற மார்பக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
</p><p>NHS அறக்கட்டளை ஒன்றில் பெற்ற புற்றுநோய் சிகிச்சையால் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>514 மருத்துவச் சம்பவம்</h2><p>
</p><p>அவர்களில் குறைந்தது 20 பேர்களுக்கு தேவையற்ற மார்பக அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fac3814-9dc8-4288-8cf0-533e66fedc6d/26-6aaced7f64756.webp' /></p><p> </p><p>தங்கள் மார்பகத்தை அகற்றியிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்கவில்லை என்று தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது தாங்கள் அடைந்த அதிர்ச்சியை நோயாளிகள் விவரித்துள்ளனர்; இது அவர்களுக்கு உளவியல் ரீதியான மற்றும் உடல் ரீதியான வலியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> கவுண்டி டர்ஹாம் மற்றும் டார்லிங்டன் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (CDDFT) ஆய்வு செய்த 514 மருத்துவச் சம்பவங்களில், 315-ல் நோயாளிகள் பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளது; இதில் 77 பேர் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>ஒரு நோயாளி மரணமடைந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், சில நோயாளிகளுக்குப் புற்றுநோய் கண்டறிதலில் ஏற்பட்ட தவறுகள் அல்லது தாமதங்கள் காரணமாக, பின்னர் அவர்களது புற்றுநோய் பரவியதையும் அந்த அறக்கட்டளை கண்டறிந்துள்ளது.</p><p></p><p> </p><p>டர்ஹாம் கவுன்டியில் உள்ள கான்செட்டைச் சேர்ந்த 51 வயதான டெனிஸ் ஹோவர்த், அவரது மார்பக அறுவை சிகிச்சை தேவையற்றது என NHS-ஆல் அறிவிக்கப்பட்ட பல பெண்களில் ஒருவர் ஆவார். </p><p>தொடர்புடைய தகவல் அறிந்து அதிர்ந்துபோனதாகவும், தன்னால் அதை நம்பவே முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது மார்பகத்தில் ஒரு கட்டியைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டில் ஹோவர்த்திற்கு நிலை 1 (grade 1) புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. </p><p>அவருக்கு லம்பக்டமி (lumpectomy) மற்றும் மாஸ்டெக்டமி (mastectomy) ஆகிய அறுவை சிகிச்சைகளும், அத்துடன் எட்டு சுற்றுகள் கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபியும் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>தவிர்த்திருக்கலாம்</h2><p> </p><p>இருப்பினும், செப்டம்பர் 2025-ல், அவருக்கு NHS-இலிருந்து ஒரு அழைப்பு வந்தது; அதனைத் தொடர்ந்து உடனடியாக CDDFT-இடமிருந்து ஒரு கடிதமும் வந்தது. அதில், முழு மார்பக அகற்றலுக்குப் பதிலாக இரண்டாவது கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87393691-17d0-40af-a6e8-91fac5321eb9/26-6aaced801789c.webp' /></p><p> இன்னொரு பெண்மணி, இந்த ஆண்டின் தொடக்கத்தில், தான் 2021-ல் செய்துகொண்ட மார்பக அகற்றும் அறுவை சிகிச்சையைத் தவிர்த்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது குறித்து அந்த அறக்கட்டளையின் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டார். </p><p>தன்னுடன் பணிபுரிபவர்களாகக் கருதியவர்கள் தனக்காகச் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள் என்று தான் நம்பியிருந்ததாக அந்த முன்னாள் NHS ஊழியர் கூறினார். </p><p>அந்த இருவரின் புற்றுநோய் சிகிச்சையையும் மேற்பார்வையிட்ட மருத்துவ நிபுணர் அமீர் பாட்டி ஆவார்; இவர் 2013 முதல் 2024 வரை CDDFT-இன் மார்பகச் சிகிச்சை சேவைகளுக்கான மருத்துவப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றினார்.</p><p> மருத்துவர் பாட்டி தற்போது மருத்துவப் பணிகளை மேற்கொள்வதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்; இருப்பினும், அவர் தொடர்ந்து முழு ஊதியத்துடன் அந்த அறக்கட்டளையில் பணியில் உள்ளார்.</p><p></p><p> </p><p>CDDFT முகமை, ஜனவரி 2023 முதல் பிப்ரவரி 2025 வரையிலான மார்பகப் புற்றுநோய் பாதிப்புச் சம்பவங்கள் குறித்தும், இதற்கென ஒதுக்கப்பட்ட உதவி எண்ணைத் தொடர்புகொண்ட 640 முன்னாள் நோயாளிகளின் வழக்குகள் குறித்தும் ஓர் உள்நிலை ஆய்வை மேற்கொண்டு வருகிறது. </p><p>2015-ஆம் ஆண்டு வரையிலான வழக்குகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த ஆய்வின் வரம்பை விரிவுபடுத்துவது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. இதனால், 10,000 வரையிலான மருத்துவப் பதிவுகள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தக்கூடும் என்பதாகும். </p><p>முன்னாள் நோயாளிகள் அளித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளனவா என்பதை விசாரிப்பதற்காக, தேசிய குற்றவியல் முகமை தற்போது டர்ஹாம் காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:48:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[57 ஓட்டங்களுக்கு சுருண்ட ஜப்பான் மகளிர் அணி: 5 ஓவர்களில் இந்தியா வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-india-beat-japan-by-8-wickets-in-t20-1789717688"></link>
            <id>https://news.lankasri.com/article/women-india-beat-japan-by-8-wickets-in-t20-1789717688</id>
            <summary type="text">மகளிர் ஆசிய போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது.

ஜப்பான் அணிக்கு எதிரான மகளிர் ஆசிய போட்டியில், இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசிய போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது.
</p><p>
ஜப்பான் அணிக்கு எதிரான மகளிர் ஆசிய போட்டியில், இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><h2>சுருண்ட ஜப்பான் </h2><p>

இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய போட்டி நிஸ்ஷினில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a978ef2-7da7-43bf-bffd-c756a0fa4b62/26-6aacecbb41be2.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ஜப்பான் அணி, இந்தியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 57 ஓட்டங்களுக்கு சுருண்டது. </p><p>அயாகா 25 ஓட்டங்கள் எடுத்தார். ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகளும், ஷபாலி வெர்மா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.</p><p>

பின்னர் ஆடிய இந்தியா 5 ஓவர்களில் 59 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷபாலி வெர்மா (Shafali Verma) 40 (15) ஓட்டங்கள் விளாசினார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7d9e2d-22e5-45f4-af2f-ab38351c91fe/26-6aacecbbf39bc.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T07:46:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் அடித்துக்கொண்ட பயணிகள் - லண்டன் டு வங்காளதேச விமானத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mid-air-fight-shocks-london-bang-flight-passengers-1789717161"></link>
            <id>https://news.lankasri.com/article/mid-air-fight-shocks-london-bang-flight-passengers-1789717161</id>
            <summary type="text">Mid-air fight shocks London to Bangladesh flight passengers: நடுவானில் விமானத்தில் இரு பயணிகள் அடிதடி சண்டை போட்டுக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mid-air fight shocks London to Bangladesh flight passengers: நடுவானில் விமானத்தில் இரு பயணிகள் அடிதடி சண்டை போட்டுக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.</p><p>
</p><h2>
இரண்டு பயணிகள் இடையே&nbsp;அடிதடி சண்டை</h2><p>லண்டனில் இருந்து வங்காளதேசம் நோக்கி பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு பயணிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் சில நிமிடங்களில் உடல் ரீதியான மோதலாக மாறி, விமானத்தின் உள்ளே பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">AIRPLANE BRAWL: Two male passengers got into a physical fight aboard a Biman Bangladesh Airlines flight from London to Bangladesh after an argument escalated, frightening nearby passengers, including children and elderly travelers.<br><br>Cabin crew and other passengers stepped in and… <a href="https://t.co/q1ZAqvZuY6">pic.twitter.com/q1ZAqvZuY6</a></p>&mdash; Breaking911 (@Breaking911) <a href="https://x.com/Breaking911/status/2100630585488105724?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவில், இருவரும் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருப்பது தெளிவாகக் காணப்படுகிறது.</p><p> சண்டையின் போது, ஒருவரின் டி-ஷர்ட் கிழிந்தது. இந்த சம்பவம் நடந்தபோது, விமானத்தில் இருந்த மற்ற பயணிகள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள், கடும் பதற்றத்திற்கு உள்ளானார்கள்.</p><p>
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9bf4651-e589-49b6-8502-da9948cdbe4b/26-6aaceaaad5111.webp' /></p><p>சண்டை நீண்டுகொண்டிருந்த நிலையில், விமான பணியாளர்கள் மற்றும் பிற பயணிகள் இடைமறித்து, இருவரையும் பிரித்தனர். </p><p>சம்பவம் நடந்த காரணம் தெளிவாக தெரியவில்லை. மேலும், சம்பவத்திற்குப் பிறகு அந்த பயணிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றிய தகவலும் வெளிவரவில்லை.
</p><p>
பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் பொது தொடர்பு மேலாளர் மஹ்புபுத்தீன் அஹ்மத், இந்த சம்பவம் குறித்து தமக்கு தகவல் இல்லை என்று தெரிவித்தார்.</p><p></p><p>இந்த சம்பவம் விமானப் பயணங்களில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பயணிகள் இடையே ஏற்படும் சண்டைகள், விமானத்தில் உள்ள அனைவரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், விமான நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T07:36:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் முன்னிலை வகிக்கும் தீவிர வலதுசாரிக் கட்சி: வெளிநாட்டவர்கள் நிலை என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/marine-priority-french-citizens-in-public-service-1789715677"></link>
            <id>https://news.lankasri.com/article/marine-priority-french-citizens-in-public-service-1789715677</id>
            <summary type="text">Marine Le Pen has reaffirmed that national priority for French citizens for public services: அரசு வழங்கும் உதவிகளில், பிரெஞ்சுக் குடிமக்களுக்கே முன்னு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Marine Le Pen has reaffirmed that national priority for French citizens for public services: அரசு வழங்கும் உதவிகளில், பிரெஞ்சுக் குடிமக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என மரீன் லெ பென் தெரிவித்துள்ளார்.
</p><p>

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்து யார் ஜனாதிபதியாவார் என்பது தொடர்பான கருத்துக்கணிப்புகளில், தீவிர வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சேர்ந்த மரீன் லெ பென்னே முன்னிலை வகிக்கிறார்.
</p><h3>
முன்னிலை வகிக்கும் தீவிர வலதுசாரிக் கட்சி
</h3><p>
இந்நிலையில், தேர்தலில் National Rally கட்சி வெற்றிபெறுமானால், பிரெஞ்சு மக்களுக்கே பிரான்ஸ் நாட்டில் முன்னுரிமை என்னும் நிலைப்பாட்டை தான் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார் அக்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கலாம் என எதிர்பார்க்கப்படும் மரீன் லெ பென்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76e73f8b-ac67-4c4b-8d5a-199bc80ac337/26-6aace4dec9495.webp' /></p><p>

தன் கட்சிக் கொள்கைகள் குறித்து உரையாற்றிய மரீன் லெ பென், பிரெஞ்சுக் குடிமக்கள், அவர்கள் என்ன நிறத்தில் இருந்தாலும் சரி, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த நாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய சொந்த நாடான பிரான்சில், அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.</p><p>

குறிப்பாக, மக்களுக்கு வீடுகள் கிடைக்கும் விடயம் குறித்து பேசிய மரீன் லெ பென், பிரெஞ்சு மக்களுக்கே முன்னுரிமை என்று கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
ஆக, பிரெஞ்சுக் குடிமக்களல்லாத வெளிநாட்டவர்களுக்கு பல சலுகைகள் மறுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
அத்துடன், வேலை விடயத்திலும், வேலைக்கு விண்ணப்பிப்பவர் எந்த நாட்டுக் குடிமகன் என பார்த்து, அந்த வேலைக்கு தகுதியான பிரெஞ்சுக் குடிமகன் இருக்கும் நிலையில், பிரெஞ்சுக் குடிமகன் அல்லாதவரை விட, பிரெஞ்சுக் குடிமகனுக்கே வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படும்.</p><p>

National Rally கட்சி, தீவிர புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட கட்சி. ஆக, அக்கட்சியைச் சார்ந்த மரீன் லெ பென் தேர்தலில் வெற்றி பெற்று பிரான்ஸ் ஜனாதிபதியாவாரானால், அதனால் வெளிநாட்டவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படலாம் என்றே கருதப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:17:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவில் 728 அடி அகலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nasa-discovered-728-foot-crater-in-moon-1789714587"></link>
            <id>https://news.lankasri.com/article/nasa-discovered-728-foot-crater-in-moon-1789714587</id>
            <summary type="text">nasa discovers 728 foot creator in moon: நிலவில் 728 அடி அகலத்திலான பாரிய பள்ளம் கண்டறியப்பட்டுள்ளது. 

நிலவில் 728 அடி அகலத்தில் பள்ளம்

நிலவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>nasa discovers 728 foot creator in moon: நிலவில் 728 அடி அகலத்திலான பாரிய பள்ளம் கண்டறியப்பட்டுள்ளது. </p><h3>

நிலவில் 728 அடி அகலத்தில் பள்ளம்</h3><p>

நிலவின் மேற்பரப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான புதிய பள்ளம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டறிந்துள்ளது.
</p><p>
இந்த பள்ளம் 2024 ஆம் ஆண்டிலே உருவாகியிருந்தாலும், தற்போதே இதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f35e613a-80d6-494a-8260-5e8ac6ffd4e5/26-6aace09e8e028.webp' /></p><p>

லூனார் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் கேமராவிலிருந்து (LROC) கிடைக்கும் தரவுகளுடன் பணிபுரியும், ராபர்ட் வாக்னர், நிலவின் மேற்பரப்பின் ஒரு பிரம்மாண்டமான வரைபடத்தை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, ​​வழக்கத்திற்கு மாறான பெரிய பிரகாசமான புள்ளி ஒன்றைக் கவனித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40c26291-6b23-4922-b3b1-162f3bc3bd97/26-6aace09f53185.webp' /></p><p> 

சந்தேகிக்கப்படும் சிறுகோள் மோதலுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட படங்களை ஒப்பிட்டுப் பார்த்து, மோதல் நிகழ்ந்த இடத்தை கண்டறிந்துள்ளனர். </p><p>

பின்னர், LRO கேமரா அந்த இடத்தின் மீது பறந்து சென்றபோது எடுத்த ​​உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள், பள்ளத்தின் அளவு, வடிவம் மற்றும் சுற்றியுள்ள மோதல் சிதைவுகளை அறிய உதவியது.&nbsp;&nbsp;</p><p></p><p>

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 22 வரையிலான காலகட்டத்தில் நிலவின் கிழக்கு விளிம்பில், 3 முதல் 6 மாடிக் கட்டிடம் அளவிலான ஒரு வால் நட்சத்திரம் அல்லது சிறுகோள் மோதியுள்ளது. </p><p>

இந்த மோதல் 728 அடி அகலமும் , 141 அடி ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7378c197-2176-4502-82bb-2357bc662207/26-6aace09dbbdbe.webp' /></p><p>

இந்தப் பள்ளம் ஏறக்குறைய 2 கால்பந்து மைதானங்களின் நீளத்திற்குப் பரவியுள்ளது எனவும், செங்குத்தாக அடுக்கப்பட்ட 3 மஞ்சள் பள்ளிப் பேருந்துகளை உள்ளடக்கக்கூடிய அளவுக்கு ஆழமாக உள்ளது என்றும் நாசா தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த மோதலால், நிலவில் தூசு மற்றும் பாறை துகள்கள் 100 கிமீ தூரத்திற்கு மேலாக பல்வேறு பகுதிகளில் தூக்கி எறியப்பட்டு உள்ளது.</p><p> 

மேலும், சூரிய மண்டலத்திலேயே இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகப்பெரிய, புதிதாக உருவான பள்ளமாக இது அறியப்படுகிறது. </p><p>

நிலவு குறித்து ஆய்வில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானியான டாம் மெக்கெட்சினின் நினைவாக இந்தப் பள்ளம் அதிகாரப்பூர்வமாக மெக்கெட்சின் எனப் பெயரிடப்பட்டுள்ளது. </p><p>

இந்த அளவிலான ஒரு மோதல் நிலவில் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை அல்லது அதற்கும் மேலாக நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.</p><p>
மோதிய பொருள் குறித்த மேலும் விரிவான பகுப்பாய்வு செய்து அதன் விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-18T06:59:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12.1 ஓவரிலேயே 146 ஓட்டங்கள் எடுத்து வெற்றி: இலங்கைக்கு எதிராக பட்லர் இமாலய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jos-buttler-record-first-batter-15000-runs-in-t20-1789714184"></link>
            <id>https://news.lankasri.com/article/jos-buttler-record-first-batter-15000-runs-in-t20-1789714184</id>
            <summary type="text">இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் சாதனை படைத்தார். 

இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இலங்கைக்கு எதிரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் சாதனை படைத்தார். </p><p>

இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சாதனை படைத்தார்.&nbsp;</p><h2>லியாம் டாவ்ஸன்&nbsp;&nbsp;</h2><p>
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கார்டிஃப்பில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4fa779a-ebca-45be-8294-302279d6c394/26-6aacdfe3debb7.webp' /></p><p></p><p>
 
முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்தது. நிசங்க 37 (21) ஓட்டங்களும், அசலங்கா 31 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

அபாரமாக பந்துவீசிய லியாம் டாவ்ஸன் 3 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட்டுகளும், பேக்கர், ரஷீத் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
</p><p>
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 12.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4b76678-28ac-4e21-848f-ae2f83cbb8dc/26-6aace3d50b57d.webp' /></p><p>

டாம் பான்டன் 52 (24) ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 30 (16) ஓட்டங்களும், ஹாரி ப்ரூக் 23 (8) ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><h2>ஜோஸ் பட்லர்&nbsp;சாதனை</h2><p> 

டி20யில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற இமாலய சாதனையை ஜோஸ் பட்லர் (Jos Buttler) படைத்தார். </p><p> 

கிரோன் பொல்லார்ட் 14,999 ஓட்டங்கள் குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், ஜோஸ் பட்லர் 15,000 ஓட்டங்கள் எடுத்து அதனை முறியடித்தார். </p><p>

இந்தப் பட்டியலில் அலெக்ஸ் ஹால்ஸ், கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், விராட் கோஹ்லி ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fabe9f21-5594-4344-a535-36a9cf2bef8a/26-6aacdfe3010f5.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d6e8d56-ccf9-40da-adfc-de9529567726/26-6aace3d5ed82b.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T06:50:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகள்: சுவிஸ் நாடாளுமன்றம் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-house-support-tighter-measures-on-asylum-1789710427"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-house-support-tighter-measures-on-asylum-1789710427</id>
            <summary type="text">The Swiss House of Representatives has voted in favour of tighter measures on asylum: சுவிஸ் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கடுமையான புகலிடக் கட்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Swiss House of Representatives has voted in favour of tighter measures on asylum: சுவிஸ் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
</p><p>

நேற்று வியாழக்கிழமையன்று, சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில், புகலிடக்கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வகையிலான தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது.</p><h3>

கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகள்
</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1f7a500-0a94-4285-8199-30606ad4bbfc/26-6aacd05d44926.webp' /></p><p>சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்த அந்த தீர்மானம், எல்லை கடந்து பயணிக்கும் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குதல் தொடர்பான விதிகளை மாற்றுதல், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பயங்கர குற்றங்களில் ஈடுபடும் நிலையில், அவர்களுடைய குடியுரிமையை ரத்து செய்து அவர்களை நாடுகடத்துதல் முதலான நடவடிக்கைகளை எடுக்க அரசைக் கோருகிறது.&nbsp;</p><p></p><p>
மேலும், ஆப்கன் நாட்டுப் பெண்கள் புகலிடம் கோரும் விடயத்தில், தாமாகவே அவர்கள் புகலிடம் பெற தகுதிபெறும் நிலையை மாற்றி, தற்காலிக அனுமதி நிலை மட்டுமே வழங்குதல், புகலிடம் தொடர்பான விடயங்களில் ஒத்துழைக்காத நாடுகளுக்கு தடைகள் விதித்தல் ஆகிய விடயங்களும் அந்த தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>
மொத்தத்தில், புகலிடம் தொடர்பான விதிகளை கடுமையாக்க அந்த தீர்மானம் கோரிய நிலையில், சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில் பெரும்பான்மை ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T06:35:31+00:00</updated>
        </entry>
    </feed>
