<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-17T10:31:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு: வழக்கு விசாரணை துவக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ex-french-minister-goes-trial-on-corruption-charge-1789638697"></link>
            <id>https://news.lankasri.com/article/ex-french-minister-goes-trial-on-corruption-charge-1789638697</id>
            <summary type="text">Former French culture minister goes on trial over corruption charges: பிரான்ஸ் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Former French culture minister goes on trial over corruption charges: பிரான்ஸ் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.</p><p>


பிரான்ஸ் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்.</p><h3>

பெண் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு</h3><p>

2007ஆம் ஆண்டு, ரச்சிதா டதி (Rachida Dati, 60) என்னும் பெண் பிரான்சின் நீதித்துறை அமைச்சராக பதவியேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62af7098-be2e-48bf-84e7-b68534147b33/26-6aabb82a87b32.webp' /></p><p>
பிரான்ஸ் நாட்டில் ஒரு இஸ்லாமியப் பெண்ணொருவருக்கு அவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டது அதுவே முதல்முறை.
</p><p>
அப்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் சார்க்கோஸி, பிரான்சிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும், கல்வியும் முயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்னும் ஒரு செய்தியை தெரிவிப்பதற்காகவே ரச்சிதாவுக்கு நீதித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
</p><p>
ஆனால், ரச்சிதா ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, Renault-Nissan கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.&nbsp;</p><p></p><p>

மேலும், சட்டத்தரணியாக செயல்பட்டதற்காக அந்நிறுவனக் கிளை ஒன்றிலிருந்து 900,000 யூரோக்கள் கட்டணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் அந்நிறுவனத்தில் எந்த பணியும் செய்யவில்லை.
</p><p>
பின்னர் பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சராக ரச்சிதா பொறுப்பு வகித்தார். இந்நிலையில், Renault-Nissan நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டது தொடர்பில் ரச்சிதா மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் முதலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

அந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று துவங்கியுள்ளது. வழக்கில் ரச்சிதா குற்றவாளி என நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர் 10 ஆண்டுகள் சிறை செல்லவேண்டிவரலாம்.
</p><p>
மேலும், அவருக்கு 450,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பதுடன், ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T09:51:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/arrest-warrant-issued-cricketer-aravinda-de-silva-1789638237"></link>
            <id>https://news.lankasri.com/article/arrest-warrant-issued-cricketer-aravinda-de-silva-1789638237</id>
            <summary type="text">court issued arrest warrant for ex srilankan cricketer aravinda de silva: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியை கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>court issued arrest warrant for ex srilankan cricketer aravinda de silva: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
</p><h3>
அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடியாணை</h3><p>

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா 1984 முதல் 2003 வரை இலங்கை தேசிய அணிக்காக விளையாடியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/530c99b7-5af7-464f-b10c-5632790a90d2/26-6aabb65f4abc8.webp' /></p><p> 

1996 ஆம் ஆண்டில் உலக கிண்ணம் வென்ற இலங்கை அணியிலும் இடம் பிடித்திருந்தார். </p><p>

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக ஏர்பஸ் விமானங்களைக் வாங்கிய போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர் கபில சந்திரசேன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e05e2c9f-60e1-477d-9597-b28adb5b8a40/26-6aabb65e8be1d.webp' /></p><p> 

இவர் கடந்த மே மாதம் 8 ஆம் திகதி கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள அரவிந்த டி சில்வாவின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.&nbsp;</p><p></p><p>

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்கவை கைது செய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9910aabe-ea50-4ad3-950b-0c988a3ed0c5/26-6aabb660026f4.webp' /></p><p>

அரவிந்த டி சில்வாவின் தாயார் ராணி டி சில்வா செப்டம்பர் 14 ஆம் திகதி காலமானார். நேற்று அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் தகனச் சடங்குகள் நடைபெற்ற நாளில் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.</p><p>

அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரவிந்தா டி சில்வாவின் தாயார் காலமானதாலும், அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறவிருந்ததாலும் அவர்களால் ஆஜராக இயலவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T09:44:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய எண்ணெய் வர்த்தகம்... இந்தியா, சீனாவுக்கு ட்ரம்ப் தரப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-oil-team-trump-warns-1789637956"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-oil-team-trump-warns-1789637956</id>
            <summary type="text">Team Trump Warns India, China Over Russian Oil Trade: ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுக்கு ட்ரம்ப் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Team Trump Warns India, China Over Russian Oil Trade: ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுக்கு ட்ரம்ப் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான சார்பைக் குறைத்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் அமெரிக்காவிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரத் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரு நேரடியான மிரட்டலை விடுத்துள்ளது.</p><h2>பொருளாதாரத் தடை</h2><p> </p><p> 
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்யா தடைகள் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குடியரசுக் கட்சியின் செனட்டர் ரிச்சர்ட் புளூமெண்டல், </p><p>இந்தியாவும் சீனாவும் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் வேறு எங்காவது தங்களுக்கான எரிபொருளை வாங்க வேண்டும் என்று எச்சரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e43ac23-204c-40cd-8671-527cf20ccf64/26-6aabb5464b972.webp' /></p><p> உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, ரஷ்ய எண்ணெயை அதிகளவில் வாங்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது; 2022-ல் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு ஆளான ரஷ்யாவுக்கு, இந்த எண்ணெய் விற்பனை அதன் நிதிநிலையைச் சீரமைக்க உதவுவதாகக் கருதப்படுகிறது.</p><p></p><p>
</p><p>மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் உடன் இணைந்து இந்த மசோதாவை உருவாக்கிய ப்ளூமெண்டல், இந்தத் தடைகள் புடினுக்கு அழுத்தமளித்து, போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்று நம்புவதாகக் கூறினார்.
</p><p>2026-ஆம் ஆண்டின் லிண்ட்சே கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டம், ரஷ்ய அதிகாரிகள், வங்கிகள் மற்றும் ரஷ்ய எரிசக்தியின் போக்குவரத்தை சீராக வைத்திருக்கும் ஒரு மறைமுக எண்ணெய்க் கப்பல் குழுமம் ஆகியவற்றின் மீது தடைகளை விதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p> இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட, ரஷ்ய எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளின் மீது 100 சதவீதம் வரையிலான இறக்குமதி வரிகளை விதிக்குமாறும் இது ஜனாதிபதி ட்ரம்ப்பை அறிவுறுத்துகிறது. </p><p>ஆனால், 
ரஷ்யாவின் இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் 15 சதவீதத்திற்கும் குறைவாக இறக்குமதி செய்யும் மற்றும் அந்த இறக்குமதியைக் குறைக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ள நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.</p><h2>உறுதியாக இருப்பதாக</h2><p> </p><p>புதன்கிழமை அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 262-159 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்த மசோதா பிரதிநிதிகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது. தற்போது இது, சட்டமாக கையொப்பமிடுவதற்காக ட்ரம்ப்பிடம் அனுப்பப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5121f8b-0c53-4722-90d4-03e726ae11d0/26-6aabb54701c79.webp' /></p><p> </p><p>அமெரிக்கா இத்தகைய இறக்குமதியாளர்களைத் தண்டிக்கும் வகையில் புதிய நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும், தங்கள் மக்களுக்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாகவும், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பல்வேறு விற்பனையாளர்களிடமிருந்து தொடர்ந்து எரிசக்தியைப் பெறுவோம் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. </p><p>அத்தகைய புதிய நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்று அமெரிக்காவுக்கு எச்சரித்திருந்ததாகவும் இந்தியா கூறியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T09:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்கும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-plans-israel-arms-sale-1789624991"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-plans-israel-arms-sale-1789624991</id>
            <summary type="text">Trump’s administration is planning to sell highly destructive 2,000-pound bombs to israel: அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump’s administration is planning to sell highly destructive 2,000-pound bombs to israel: அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், பல்லாயிரக்கணக்கான, அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடை கொண்ட குண்டுகள் உட்பட 2.8 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதத் தொகுப்பை இஸ்ரேலுக்கு விற்கத் திட்டமிட்டுள்ளது.</p><h2>அளவுக்கு அதிகமாக</h2><p>
முக்கிய ஆயுத விற்பனைகளை மறுஆய்வு செய்யும் தொடர்புடைய நாடாளுமன்றக் குழுக்களுக்கு முறைசாரா முறையில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டமிடப்பட்ட தொகுப்பில், 20,000 எம்.கே-84 குண்டுகளும் 20,000 பி.எல்.யூ-117 குண்டுகளும் அடங்கும் என தகவல் கசிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e750fca-295b-46f0-a114-fdc785f6ae62/26-6aab82a113726.webp' /></p><p> </p><p>2023-இல் காஸா போர் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேலுக்கான அமெரிக்கப் பொதுமக்களின் ஆதரவு, குறிப்பாக ஜனநாயகக் கட்சியினரிடையே பெருமளவில் சரிந்துள்ளது. </p><p>
ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட குவின்னிபியாக் பல்கலைக்கழகக் கருத்துக்கணிப்பு ஒன்றின்படி, அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளவுக்கு அதிகமாக ஆதரவளிப்பதாக 48 சதவீத பேர்களும் 66 சதவீத ஜனநாயகக் கட்சியினரும் கருதுகின்றனர்; 2017-இல் இந்தக் கேள்வி முதன்முதலில் கேட்கப்பட்டபோது இச்சதவீதங்கள் முறையே 16 மற்றும் 20 ஆக மட்டுமே இருந்தன.</p><p></p><p> </p><p>காஸா மற்றும் லெபனான் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகளைப் பயன்படுத்தி வருகிறது; இது மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் ஈர்த்துள்ளது.
</p><p>காஸா சுகாதாரத் துறையினரின் தகவலின்படி, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில் 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலையை நிகழ்த்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஒன்று கண்டறிந்தது; ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கிறது.
</p><p>அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 250-க்கும் மேற்பட்டோரைப் பணயக்கைதிகளாகப் பிடித்ததைத் தொடர்ந்து, தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தற்காப்புக்காகவே என்று இஸ்ரேல் கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/851654de-b10f-46c9-b070-507424bbc39c/26-6aab82a1bea45.webp' /></p><p> </p><p>உண்மையில் காஸா போரின் பின்னணி குறித்த தகவல்களை இஸ்ரேலியப் பத்திரிகை ஒன்று சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. காஸா விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்ட சூழலில், இஸ்ரேலின் பார்வை ஈரான் மீது திரும்பியது. </p><p>பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. தற்போது ஈரான் போரில் இருந்து வெளியேற முடியாமல், அமெரிக்கா திணறி வருவதுடன், கடும் பின்னடைவையும் சந்தித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T09:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய எண்ணெய் விநியோகம்... தத்தளிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-oil-uncertainty-indian-buyers-1789630231"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-oil-uncertainty-indian-buyers-1789630231</id>
            <summary type="text">Russian Oil Uncertainty Hangs Over India&#039;s Largest Buyers: ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, இந்தியாவின் மிகப்பெரிய கொள்முதல் நிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian Oil Uncertainty Hangs Over India's Largest Buyers: ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, இந்தியாவின் மிகப்பெரிய கொள்முதல் நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது.
</p><p>இந்திய அரசுக்குச் சொந்தமான சுத்திகரிப்பு ஆலைகள், கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான விநியோக நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளன.</p><h2>இந்தியாவிற்கு மட்டும்</h2><p>
</p><p>ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்வதன் மீது அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்ற சூழலானது, மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நீடிக்கும் மோதலின் தாக்கத்தை மேலும் தீவிரமாக்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd439f1f-5268-4024-8537-c35484303d63/26-6aab971976197.webp' /></p><p> </p><p>பிப்ரவரி மாத இறுதி முதல் ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது, ஆனால் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவுதி அரேபியா கடந்த வாரம் கிழக்கு-மேற்கு குழாய்வழி நடவடிக்கைகளை மூட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. </p><p>இதனால், இந்தியாவிற்கு மட்டும் ஒரு நாளைக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பீப்பாய்கள் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இருப்பினும், அந்த இடையூறுகள் தற்காலிகமானவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>மேலும், சில நாட்களுக்குள் சுமார் பாதி கொள்ளளவை மீட்டெடுப்பதற்காக, சவுதி அரேபியா தற்போது சேதமடைந்த ஒரு பகுதியைத் தவிர்த்துச் செல்ல முயற்சி செய்து வருகிறது.</p><p></p><p> </p><p>ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்கனவே கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன; ரஷ்யாவின் எண்ணெய் துறையுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீது தண்டனைக்குரிய சுங்க வரிகளை விதிக்க வழிவகுக்கும் விரிவான அமெரிக்கத் தடைகள் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் புதன்கிழமையன்று ஒப்புதல் அளித்துள்ள நிலையில், </p><p>இனி இந்த எண்ணெயைக் கையாள்வது மேலும் சவாலானதாக மாறக்கூடும். இந்திய அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன, ஆனால் நவம்பர் மற்றும் அதற்குப் பிறகான தேவைகளைப் பொறுத்தவரை, அந்நிறுவனங்கள் கடினமான முடிவுகளை எதிர்கொள்கின்றன என்று தகவல் கசிந்துள்ளது. </p><p>கடந்த சில மாதங்களாக இறக்குமதிச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்தியா தள்ளுபடி விலையிலான ரஷ்ய எண்ணெய் மற்றும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான நீண்டகால ஒப்பந்த அடிப்படையிலான மத்திய கிழக்கு எண்ணெய் விநியோகங்களை பெருமளவில் நம்பியுள்ளது.</p><h2>சுமார் 20 நாட்களுக்கான</h2><p> </p><p>தற்போது கடல்வழி கச்சா எண்ணெயை வாங்கும் ரஷ்யாவின் முதன்மை நாடாக இந்தியா உள்ளது, ஆனால் இந்தியாவின் சுத்திகரிப்பு ஆலைகள் கூடுதல் மற்றும் பலதரப்பட்ட விநியோகங்களுக்காக ஏற்கனவே அமெரிக்கா, பிரேசில், கனடா, வெனிசுலா மற்றும் ஆப்பிரிக்காவைச் சார்ந்துள்ளன. </p><p>மத்திய கிழக்கில் எரிசக்தி நெருக்கடி தொடங்கி பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நேரம் மிகவும் இக்கட்டானதாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1308102f-e7ea-4232-bd26-6625732c8f88/26-6aab971a29a1c.webp' /></p><p> 'கேப்லர்' (Kpler) அமைப்பின் தரவுகளின்படி, செப்டம்பர் 14-ல் தொடங்கிய வாரத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இருப்பு 93.5 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது; இது கடந்த மே மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகும். </p><p>இது சுமார் 20 நாட்களுக்கான இறக்குமதிக்கு இணையான அளவை ஈடுசெய்யப் போதுமானது. அதே நேரத்தில், ராஜஸ்தானில் ஒரு நாளைக்கு 180,000 பீப்பாய்கள் சுத்திகரிக்கும் திறன் கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலையம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. </p><p>மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தற்போதுள்ள ஆலைகளை விரிவுபடுத்தி, டிசம்பர் மாதத்திற்குள் ஒரு நாளைக்கு 340,000 பீப்பாய்களுக்கும் அதிகமான கொள்ளளவை சேர்க்க உள்ளதால், நாட்டின் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-17T08:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டயானா குறித்து சார்லஸ் மோசமாக பேசியதாகக் கூறும் சகோதரர்: அரண்மனை பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/buckingham-palace-deny-claims-in-earl-spencer-book-1789635089"></link>
            <id>https://news.lankasri.com/article/buckingham-palace-deny-claims-in-earl-spencer-book-1789635089</id>
            <summary type="text">Buckingham Palace denies Charles said Diana would be forgotten soon enough: இளவரசி டயானா விரைவில் மறக்கப்பட்டு போவார் என சார்லஸ் கூறியதாக கூறப்படும் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Buckingham Palace denies Charles said Diana would be forgotten soon enough: இளவரசி டயானா விரைவில் மறக்கப்பட்டு போவார் என சார்லஸ் கூறியதாக கூறப்படும் விடயத்தை பக்கிங்காம் அரண்மனை மறுத்துள்ளது.
</p><p>

இளவரசி டயானாவின் சகோதரரான எர்ல் ஸ்பென்சர், டயானா குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்: ‘Swan Song: Diana, My Sister’ என்பது அந்த புத்தகத்தின் பெயர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ceffe1c-b2b3-4123-a9b3-4428614be0f8/26-6aabaa12a7498.webp' /></p><p>
டயானாவின் இறுதிச்சடங்கின்போது, அவரது சவப்பெட்டிக்குப் பின்னால் அவரது பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியமும், ஹரியும் நடந்து செல்வதாக திட்டமிடப்பட்டிருந்துள்ளது.
</p><h3>
சார்லஸ் மோசமாக பேசியதாகக் கூறும் சகோதரர்
</h3><p>
அதற்கு டயானாவின் சகோதரரான ஸ்பென்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சார்லசிடம் தொலைபேசியில் பேசிய அவர், தன் பிள்ளைகள் இப்படி தன் சவப்பெட்டிக்குப் பின்னால் நடப்பதை டயானா விரும்பியிருக்கமாட்டார் என்று கூற, அந்த விடயம் சார்லசை கோபப்படுத்தியதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்பென்சர்.&nbsp;</p><p>

’சார்லஸ், டயானா மீது தனக்கிருந்த அடக்கிவைத்த அவமதிப்பையும், அவரது மரணத்தால் உலகம் இவ்வளவு நிலைகுலைந்து போனதைக் கண்டு ஏற்பட்ட திகிலையும் தொலைபேசியில் என்னிடம் கொட்டித் தீர்த்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b63ac55d-8264-4dc8-8e04-0452e31144c7/26-6aabb02d2d8b0.webp' /></p><p>
நிச்சயமாக டயானா விரைவில் மறக்கப்பட்டுபோவார் என்றும் சார்லஸ் கூறினார்’ என தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் ஸ்பென்சர்.
</p><h3>
அரண்மனை பதிலடி
</h3><p> 
இந்நிலையில், ஸ்பென்சரின் கூற்றுக்கு பக்கிங்காம் அரண்மனை பதிலடி கொடுத்துள்ளது. ‘கொள்கை ரீதியாக நாங்கள் புத்தகங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பதில்லை என்றாலும், சகோதரப் பிரிவின் துயரம், அத்தகைய இழப்பு நிகழ்ந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட, பகுத்தறிவை மழுங்கடித்து, முடிவெடுக்கும் திறனைப் பாதித்து, மற்றவர்கள் அடையாளம் காண முடியாத வழிகளில் நினைவுகளுக்குச் சாயம் பூசிவிடும் என்பதை மாட்சிமை பொருந்திய மன்னர் அவர்கள் உணர்ந்திருக்கிறார்’ என்றும் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
அதாவது, ஸ்பென்சரின் அந்தக் கூற்றை அரண்மனை நிராகரித்துள்ளது. ஏனென்றால், ஆழ்ந்த இரக்க குணம் கொண்டவரும், அந்த நேரத்தில் தனது சொந்தத் துயரத்தையும், தனது இரண்டு மகன்களின் துயரத்தையும் சமாளித்துக் கொண்டிருந்தவருமான ஒரு மனிதர் மீது இப்படி ஒரு கருத்தை முன்வைப்பது முற்றிலும் தவறு என அரண்மனை வட்டாரம் கருதுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8270a9c5-b67e-4ca6-977a-8a47e7cfb8a5/26-6aabb02e035e6.webp' /></p><p>
மேலும், மன்னரின் முன்னாள் தகவல் தொடர்புச் செயலாளரான ஜூலியன் பெய்ன் என்பவர், எனக்குத் தெரிந்தவரை, மன்னர் அப்படி பேசுவதில்லை என்று கூறியுள்ளார்.
</p><p>
ஆகவே, ஸ்பென்சர் கூறியுள்ள தவறான கருத்தை சரிசெய்ய வேண்டும் என அரண்மனை கருதியதே, அவர்கள் வெளியே வந்து தைரியமாக இப்படி வழக்கத்துக்கு மாறாக ஒரு கருத்தை முன்வைக்கக் காரணமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T08:51:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சிலையை கரைக்கும் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/6-students-die-during-ganesh-immersion-telangana-1789634309"></link>
            <id>https://news.lankasri.com/article/6-students-die-during-ganesh-immersion-telangana-1789634309</id>
            <summary type="text">6 students dies during ganesh immersion in telangana: தெலங்கானாவில் விநாயகர் சிலையை கரைக்கும் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 

வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>6 students dies during ganesh immersion in telangana: தெலங்கானாவில் விநாயகர் சிலையை கரைக்கும் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். </p><h3>

விநாயகர் சிலையை கரைக்கும் போது 6 மாணவர்கள் உயிரிழப்பு </h3><p>

கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி, இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட சிலைகள், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e0b183b-470e-4f46-b71b-bfd6fa4d5a10/26-6aaba7072b1f0.webp' /></p><p>

தெலங்கானா மாநிலம், படஞ்சேரு மண்டலத்தில் உள்ள இனோலே கிராமத்தில் அமைந்துள்ள சிரிஷா நினைவு அறக்கட்டளையின் சார்பில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டது. </p><p>நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், சிரிஷா நினைவு அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள், நெருடுசெர்லா ஏரியில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக உள்ளூர் மக்களுடன் சேர்ந்து ஒரு&nbsp;வாகனத்தில் விநாயகர் சிலையை கொண்டு சென்றுள்ளனர்.&nbsp;</p><p></p><p>

ஏரியில் நீருக்கு அடியில் 12 அடி ஆழத்தில் பள்ளம் இருப்பதை அறியாத 9 மாணவர்கள், ஆழமான பகுதியில் இறங்கியுள்ளனர். </p><p>அதில் நீச்சல் தெரிந்த மாணவர்கள், நீச்சலடித்தும் அங்கிருந்த மற்றவர்களின் உதவியுடன் தப்பி தங்கள் உயிரை காப்பாற்றியுள்ளனர். 

நீச்சல் தெரியாத 6 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p> உயிரிழந்த மாணவர்கள் நரசிம்ம ராஜு (18), சுமந்த் (19), கணேஷ் (20), உதய குமார் (21), ஷாம் குமார் (18) மற்றும் சித்தார்த் (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

பட்டன்செருவு காவல்துறையினர், பேரிடர் மீட்புப் படை (DRF), தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் இணைந்து 7 படகுகளைக் கொண்டு நடத்திய மீட்புப் பணியில் 2 மணி நேரத்திற்குப் பிறகு உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61c280c4-c94d-4a21-848d-82d9027b8a64/26-6aaba7088934a.webp' /></p><p> 

உயிரிழந்த 6 மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அனைத்து விதமான உதவிகளையும் வழங்குமாறு, இந்தத் துயரச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். </p><p>

இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிரிஷா நினைவு அறக்கட்டளையின் நிர்வாகம், விநாயகர் சிலை கரைப்பதற்கு அனுமதி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6c3c7cf-eb1e-47ed-94eb-c2227c413b52/26-6aaba707d495d.webp' /></p><p>
அறக்கட்டளையின் காப்பாளர் மாணவர்களுடன் சிலை கரைக்கப்படும்போதும் உடனிருந்தாலும், சிலை கரைப்பை மேற்பார்வையிட அவர் நீருக்குள் இறங்கவில்லை என தெரியவந்துள்ளது. </p><p>

இதனையடுத்து சிரிஷா நினைவு அறக்கட்டளையின் காப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T08:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு பவுன் தங்க விலை எவ்வளவு? (17-09-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1789632587"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1789632587</id>
            <summary type="text">Today gold price in sri lanka-&amp;nbsp;இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (17-09-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Today gold price in sri lanka-&nbsp;இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (17-09-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,344,607.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 47,430.00.</p><p>

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 379,450.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 43,480.00.</p><p>

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 347,850.00.</p><p>

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 41,510.00.</p><p>

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 332,050.00.&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-17T08:10:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுப்பணியாளர்கள் தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுக்கும் ஜேர்மனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-to-crack-down-worker-exploitation-1789631480"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-to-crack-down-worker-exploitation-1789631480</id>
            <summary type="text">Germany to crack down on worker exploitation: வெளிநாட்டுப்பணியாளர்கள் ஏமாற்றப்படுவது தொடர்பில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்க ஜேர்மனி திட்டமிட்டுவருகிறது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany to crack down on worker exploitation: வெளிநாட்டுப்பணியாளர்கள் ஏமாற்றப்படுவது தொடர்பில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்க ஜேர்மனி திட்டமிட்டுவருகிறது.</p><p>


ஜேர்மனியில் நிலவும் பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கு, அந்நாடு வெளிநாட்டுப் பணியாளர்களையே நம்பியுள்ளது.
</p><h3>
வெளிநாட்டுப்பணியாளர்கள் தொடர்பில் முடிவுகள்</h3><p>

அதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜேர்மனிக்கு பணியாளர்கள் வேலைக்கு வருவதை எளிதாக்கும் வகையில் விதிகளும் நடைமுறையில் உள்ளன.&nbsp;</p><p>
விடயம் என்னவென்றால், அப்படி ஜேர்மனிக்கு வேலைக்கு வரும் பணியாளர்களை ஏமாற்றுவதும் நடக்கிறது, ஏமாற்றி அரசின் உதவிகளைப் பெறும் விடயங்களும் நடக்கின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adc053db-b0d1-4d48-9ee2-771f7680cf3d/26-6aab9bf981359.webp' /></p><p>
ஆக, இப்படி வெளிநாட்டுப் பணியாளர்கள் ஏமாற்றப்படுவதையும், அவர்கள் பெயரால் மோசடிகள் நடப்பதையும் தடுக்க அரசு திட்டமிட்டுவருவதாக ஜேர்மன் தொழிலாளர் துறை அமைச்சரான Baerbel Bas தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
அதன்படி, பணியாளர்கள் ஏமாற்றப்படுவதை தவிர்க்கும் வகையில் ஏஜன்சிகளுக்கிடையில் தரவுகள் பகிரப்படுவதை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க உள்ளார்கள்.</p><p>

அத்துடன், ஏமாற்றும் பணி வழங்குவோரை தங்கள் தவறுகளுக்கு பொறுப்பேற்க வைக்கவும், அரசு உதவிகள் தவறான நபர்களைச் சென்றடைவதைத் தவிர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T07:51:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: ஒருவர் விடுவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/charge-drop-against-ali-raza-in-torondo-gold-heist-1789630133"></link>
            <id>https://news.lankasri.com/article/charge-drop-against-ali-raza-in-torondo-gold-heist-1789630133</id>
            <summary type="text">Crown drops charge against Toronto man accused in Pearson airport gold heist: பியர்சன் விமான நிலைய கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Crown drops charge against Toronto man accused in Pearson airport gold heist: பியர்சன் விமான நிலைய கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர் ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>

கனடா விமான நிலையமொன்றிலிருந்து 400 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் விலக்கிக்கொண்டுள்ளார்கள்.
</p><h3>
கனடாவில் திருடப்பட்ட 400 கிலோ தங்கக் கட்டிகள்</h3><p>

2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டன.&nbsp;</p><p>
கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தக்க ஆவணங்களுடன் வந்த ஒருவர் அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a7febab-c53d-46f9-96f6-5fa7bf085d06/26-6aab96b75e4fb.webp' /></p><p>
அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ள வேறு சிலர் வந்துள்ளார்கள். அவர்கள் அந்த பார்சல்களுக்கான ஆவணங்களைக் கொடுக்க, அப்புறம்தான் தெரியவந்துள்ளது, ஏற்கனவே வந்த நபர் மோசடியாளர் என்பது.
</p><p>
அந்த பார்சல்களில், 6,600 தங்கக் கட்டிகள் இருந்துள்ளன. 400 கிலோ எடையுள்ள அவற்றின் மதிப்பு அப்போதே சுமார் 20 மில்லியன் டொலர்கள். அத்துடன், மற்றொரு பார்சலில் 2 மில்லியன் டொலர்கள் கரன்சியும் இருந்துள்ளது.&nbsp;</p><p></p><h3>

சமீபத்திய தகவல்
</h3><p>
சினிமா பாணியில் நடந்த அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 9 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
</p><p>
இந்நிலையில், ரொரன்றோவைச் சேர்ந்த Ali Raza (40) என்னும் நபர், அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d75cc9d-881f-4bb0-8f73-547adb2feade/26-6aab96b8104a0.webp' /></p><p>
நேற்று புதன்கிழமை, Ali Razaவுக்கு எதிரான வழக்கு, சூழ்நிலை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி, அரசுத் தரப்பு அவர் மீதான குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

தீர்ப்பைக் கேட்ட Ali Raza, தான் நிரபராதி என்றும், தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

என்றாலும், இந்த வழக்கு, நகைத் தொழில் செய்யும் Ali Razaவின் நற்பெயருக்கு களங்கத்தை உருவாக்கிவிட்டது என்றும், அவருக்கு தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ள அவரது சட்டத்தரணியான Brij Mohan என்பவர், அவர் தனது நற்பெயரை திரும்பப் பெற மேலும் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T07:29:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிக்ஸ் மாநாட்டில் சீன ஜனாதிபதி மயங்கி விழுந்ததாக பரவும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/claims-on-china-xi-jinping-fainted-at-brics-summit-1789629279"></link>
            <id>https://news.lankasri.com/article/claims-on-china-xi-jinping-fainted-at-brics-summit-1789629279</id>
            <summary type="text">Wanjun Xie
claims china president xi jinping fainted at brics summit: பிரிக்ஸ் மாநாட்டிற்கு வருகை தந்த போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மயங்கி விழுந்ததா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Wanjun Xie
claims china president xi jinping fainted at brics summit: பிரிக்ஸ் மாநாட்டிற்கு வருகை தந்த போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மயங்கி விழுந்ததாக தகவல் பரவி வருகிறது.</p><h3> 

பிரிக்ஸ் மாநாட்டில் மயங்கி விழுந்த ஷி ஜின்பிங் </h3><p>

டெல்லியில் கடந்த செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் 18வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. </p><p>

இதில், இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54e43ac0-6da1-4abb-94ae-143614cbcf76/26-6aab93620bf0a.webp' /></p><p>
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உரையாற்றிக்கொண்டிருந்த போது, ஷி ஜின்பிங் அசௌகரியமாக உணர்ந்ததால் மோடி உரையை நிறுத்திவிட்டு, ஜின்பிங்கின் மொழிபெயர்ப்பாளரை நோக்கி “Is it OK?” எனக் கேட்டார். </p><p>

மைக்ரோஃபோன் கோளாறு அல்லது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டாலும், ஜின்பிங் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாரா என பலரும் சந்தேகம் எழுப்பினர்.&nbsp;&nbsp;</p><p></p><p> 

அதைத்தொடர்ந்து, அன்று இரவு பிரதமர் மோடி அளித்த இரவு விருந்திலும் ஷி ஜின்பிங் கலந்து கொள்ளாதது சந்தேகத்தை வலுப்படுத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86ab761f-65b9-47b6-a14d-fc294d0a5856/26-6aab9361557ed.webp' /></p><p>

இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டிற்கு வருகை தந்த ஜின்பிங் மயங்கி விழுந்ததாகவும், பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் சீன ஜனநாயகக் கட்சியின் தலைவர் வான்ஜுன் ஷியே எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியா நடத்திய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஷி ஜின்பிங் மயங்கி விழுந்ததாக தகவல் பரவியுள்ளது.
</p><p>
அவருடன் சென்ற மருத்துவக் குழுவினரால் அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அவர் தனது இந்தியப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஒரு சிறப்பு விமானத்தில் சீனாவுக்குத் திரும்பினார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zh" dir="ltr">据传，习近平在印度主办的金砖峰会上晕倒，经随行医疗团队的紧急救治后，提前结束对印度的访问，搭乘专机返回中国。飞机抵达北京机场后，北京当局没有安排大批官员接机，也没有组织欢迎仪式，而是用军用直升机，直接将习近平送到了北京301医院，进行急救。… <a href="https://t.co/3bfnNfoZ05">pic.twitter.com/3bfnNfoZ05</a></p>&mdash; 谢万军 Wanjun Xie (@WanjunXie) <a href="https://x.com/WanjunXie/status/2100042128390762923?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பெய்ஜிங் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது, ​​அவரை வரவேற்க பெய்ஜிங் அதிகாரிகள் ஒரு பெரிய அதிகாரிக் குழுவையோ அல்லது வரவேற்பு விழாவையோ ஏற்பாடு செய்யவில்லை. </p><p>

மாறாக, ஷி ஜின்பிங்கை அவசர சிகிச்சைக்காக பெய்ஜிங்கின் 301 மருத்துவமனைக்கு நேரடியாகக் கொண்டு செல்ல ஒரு ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.</p><p> 

பெய்ஜிங்கின் 301 மருத்துவமனையின் நிபுணர் குழுவின் பரிசோதனைக்குப் பிறகு, ஷி ஜின்பிங்கிற்கு கடுமையான இஸ்கிமிக் பக்கவாதம், அதாவது தற்காலிக பெருமூளை இரத்த உறைவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. </p><p>

தனது உடல்நிலை குறித்த தகவல்களை இந்தியத் தரப்பு பெற்றுவிடுமோ என்று ஷி ஜின்பிங் அஞ்சியதால், அவர் இந்திய மருத்துவமனையில் அவசர சிகிச்சையை மறுத்து, சிகிச்சைக்காக பெய்ஜிங்கிற்கு ஒரு சிறப்பு விமானத்தில் திரும்பினார். </p><p>

விமானப் பயணத்தின்போது, ​​அறுவை சிகிச்சைக்கான நிலைமைகள் இல்லாததால், ஷி ஜின்பிங்கின் உயிரைக் காப்பாற்ற மருத்துவக் குழுவினரால் பழமையான சிகிச்சைகளை மட்டுமே அளிக்க முடிந்தது. இதன் விளைவாக, அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கான பொன்னான வாய்ப்பை அவர் தவறவிட்டார். </p><p>

பெய்ஜிங்கின் 301 மருத்துவமனையில் கூட, ஷி ஜின்பிங்கிற்கு சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், கடுமையான பின்விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. </p><p>

தற்போது, ​​அமெரிக்கப் பயணத்திற்கு முன்பு ஷி ஜின்பிங் குணமடைவாரா என்பதை பெய்ஜிங் அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. 

எனவே, செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறவிருந்த அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருக்குமா என்பதைப் பொறுத்திருந்து அவர்கள் காத்திருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார். </p><p>

தொடர்ந்து மற்ற பதிவுகளில், ஷி ஜின்பிங்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், அவர் இன்னும் அபாயகட்டத்தில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆனால் இது ஆதாரமற்ற தகவல் என பலரும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். </p><p>இது குறித்து சீனா மற்றும் இந்தியா தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. </p><p>

சீன ஜனநாயகக் கட்சி சீனாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வான்ஜுன் ஷியே அமெரிக்காவில் வசித்து வருகிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T07:14:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நட்சத்திரத்தை மாற்றும் புதன்.., இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-peyarchi-1789628194"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-peyarchi-1789628194</id>
            <summary type="text">3 zodiac get money due to budhan peyarchi-&amp;nbsp;நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம...</summary>
            <content type="html"><![CDATA[<p>3 zodiac get money due to budhan peyarchi-&nbsp;நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.</p><p>

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.</p><p>

இந்நிலையில்,புதன் தற்போது தனது சொந்த ராசியான கன்னி ராசியில் சஞ்சரித்து வருகிறார்.</p><p>
</p><p></p><p>அதேவேளையில், புதன் கிரகம் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஹஸ்த நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.
</p><p>
மேலும், செப்டம்பர் 21ஆம் திகதி வரை புதன் ஹஸ்த நட்சத்திரத்தில் நீடிப்பார்.
</p><p>
அந்தவகையில், ஹஸ்த நட்சத்திரத்தின் வழியாக புதன் கிரகம் பயணிப்பதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.</p><h2>மிதுனம்
</h2><ul><li>
தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.</li><li>
முடிக்கப்படாமல் இருந்த பணிகளை நிறைவடையும்.
</li><li>பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.</li><li>
கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.
</li><li>தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
</li><li>பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ள முடியும்.</li><li>திருமண வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியான நேரமும் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c38ce69-e854-4539-8cca-7103053bc72a/26-6aab8fccf0d0c.webp' /></p><h2>கடகம்
</h2><p>
</p><ul><li>தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
</li><li>பணியிடத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும்.
</li><li>நிதிநிலை சீராகி, சேமிப்பு அதிகரிக்கும்.</li><li>
பல்வேறு துறைகளில் இருந்து வருமானம் கிடைக்கும்.
</li><li>புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.</li><li>
பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a015aae3-587c-452e-97b0-4f5f39e754b5/26-6aab8fcdc1daa.webp' /></p><p>
</p><h2>கன்னி
</h2><ul><li>
முதலீடுகள் மற்றும் வணிகம் மூலம் நிதி நன்மைகள் கிடைக்கும்.
</li><li>தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
</li><li>நிதிநிலை எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமையும்.</li><li>
நீண்ட கால முதலீடுகளுக்கு ஏற்ற காலமாக இருக்கும்.
</li><li>வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும்.</li><li>
திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.</li><li>
வெளிநாட்டில் வேலை செய்யம் வாய்ப்புகள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/403812a3-c84a-4f84-838b-37385e3a08fa/26-6aab8fce77039.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-17T07:01:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் தண்டவாளங்களுக்கு அடியில் கற்கள் ஏன் கொட்டப்படுகின்றன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/why-are-railway-tracks-filled-with-stones-1789625145"></link>
            <id>https://news.lankasri.com/article/why-are-railway-tracks-filled-with-stones-1789625145</id>
            <summary type="text">why are railway tracks filled with stones-&amp;nbsp;இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த தண்டவாளங்களின் அடியில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>why are railway tracks filled with stones-&nbsp;இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. </p><p>

இந்த தண்டவாளங்களின் அடியில் பெரிய பெரிய ஜல்லிக் கற்கள் கொட்டப்படுகின்றன.
</p><p>
ரயில் தண்டவாளத்தில் போடப்படும் இந்த கற்கள் டிராக் பேலஸ்ட் என்று அழைக்கப்படுகின்றன.</p><p>

இந்த கற்கள் ரயில் தண்டவாளங்களை நிலையாக வைத்திருப்பதிலும், அவற்றின் அசைவை குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fa1da4e-6961-4057-b7bb-92ba1f28b274/26-6aab84f4e2f40.webp' /></p><p>மேலும், தண்டவாளங்களை உறுதியாக நிலைநிறுத்துவதுடன், ரயிலின் எடையை சரியாக பகிர்ந்தளிக்கவும் உதவுகின்றன.</p><p>பொதுவாக ரயில்களின் எடை மற்றும் இயக்கம் காரணமாக தண்டவாளங்கள் நகரக்கூடும்.</p><p>

எனவே, தண்டவாளங்களுக்கு அடியில் உள்ள கற்கள், ஸ்லீப்பர்களை சரியான நிலையில் வைத்திருக்க உதவுகின்றதால் தண்டவாளங்களின் அசைவு குறைகிறது.
</p><p>
மேலும், ரயில் சக்கரங்கள் தண்டவாளங்களில் அதிக சுமையை ஏற்படுத்துகின்றன. </p><p>

இந்த சுமை தண்டவாளங்கள் வழியாக ஸ்லீப்பர்களுக்கும், பின்னர் பேலஸ்ட் கற்களுக்கும் செல்கின்றதால் ரயிலின் எடை பரந்த பரப்பில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8b47eff-ee93-4d19-8c2f-5c52bb3392a5/26-6aab846b32354.webp' /></p><p>மேலும், கற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகள் வழியாக மழைநீர் வெளியேறுகின்றதால் தண்டவாளங்களின் அடிப்பகுதியில் நீர் தேங்குவது குறைகிறது.
</p><p>
அதேபோல், ரயில் வேகமாகச் செல்லும்போது அதிர்வுகளும் சத்தமும் ஏற்படுகின்றன. பேலஸ்ட் கற்கள் இதனை குறைக்க உதவுகின்றன. </p><p>

குறிப்பாக, தண்டவாளங்களுக்கு அடியில் கற்கள் இருப்பதால் செடிகள் வளர்வது கடினமாகிறது.</p><p>கற்களுக்கு இடையே அதிக ஈரப்பதம் தேங்காமல் இருப்பதால், தாவரங்களின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-17T06:13:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: நாடொன்றின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-to-ban-foreign-students-bring-partners-1789620671"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-to-ban-foreign-students-bring-partners-1789620671</id>
            <summary type="text">Australia plans to stop foreign students from bringing partners and children: சர்வதேச மாணவர்கள், தங்கள் துணைவர் மற்றும் பிள்ளைகளை தங்களுடன் அழைத்துவர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Australia plans to stop foreign students from bringing partners and children: சர்வதேச மாணவர்கள், தங்கள் துணைவர் மற்றும் பிள்ளைகளை தங்களுடன் அழைத்துவர தடை விதிக்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுவருகிறது.
</p><p>

மேற்கத்திய நாடுகள் சில புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை கடினமாக்கிவரும் நிலையில், அந்த நாடுகளின் பட்டியலில் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.</p><h3>

புதிய கட்டுப்பாடுகள்</h3><p>

ஆம், அவுஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாடு திட்டமிட்டுவருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78bd71ff-3b3d-4cb7-93ec-d9d9d7ea0746/26-6aab71c172660.webp' /></p><p>

அவ்வகையில், சர்வதேச மாணவர்கள் கனடாவுக்குக் கல்வி கற்க வரும்போது, தங்கள் துணையையும், 18 வயதுக்குக் கீழுள்ள தங்கள் பிள்ளைகளையும் தங்களுடன் அழைத்துவர, தடை விதிக்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுவருகிறது.</p><p>

மேலும் விசாக்களை ஒருவகையிலிருந்து மற்றொரு வகையாக மாற்றுவதும் இனி கடினமாக்கப்பட உள்ளது.&nbsp;</p><p></p><p>

இது தொடர்பான அறிவிப்புகளை இன்று அவுஸ்திரேலிய உள்விவகாரங்கள் அமைச்சரான டோனி பர்க் வெளியிட உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/578c6201-1ff2-4543-8bdf-063f1ab83133/26-6aab71c226d69.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், ஒவ்வொரு நாட்டிலும் புலம்பெயர்தலுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சிகள் உள்ளன.
</p><p>
உதாரணமாக, சுவிட்சர்லாந்தில் சுவிஸ் மக்கள் கட்சி, பிரித்தானியாவில் யூகே ரீஃபார்ம் கட்சி, பிரான்சில், மரின் லி பென் சார்ந்த நேஷனல் ராலி, ஜேர்மனியில் AfD கட்சி என புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும் பல கட்சிகள் உள்ளன.
</p><p>
இத்தகைய கட்சிகள் கொடுக்கும் தொல்லை தாங்காமல் சில நாடுகளில் ஆளுங்கட்சியினர் தங்கள் இருக்கையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக புலம்பெயர்தலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.</p><p>

அவ்வகையில், அவுஸ்திரேலியாவில் ஒன் நேஷன் கட்சி என்னும் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி உள்ளது. அக்கட்சியின் கொள்கைகளை ட்ரம்புடைய கொள்கைகளுடன் ஒப்பிடுகிறார்கள்.</p><p>
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என கருதும் ட்ரம்பைப் போல, இந்த ஒன் நேஷன் கட்சி, அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியர்களுக்கே என்னும் கொள்கையைக் கொண்டுள்ளது.</p><p>

இந்த ஒன் நேஷன் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துவருவது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்தே, ஆளுங்கட்சி இத்தகைய அதிரடி அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக கருதப்படுகிறது.</p><p>

விடயம் என்னவென்றால், உண்மையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது.</p><p>

2023இல் அவுஸ்திரேலியாவுக்கான நிகர புலம்பெயர்தல் 518,000 ஆக இருந்தது, 2024இல் 429,000 ஆகவும், 2025இல் 306,000 ஆகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T06:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழியர்களே இல்லாத ஒரு கடை: சுவிட்சர்லாந்தில் ஒரு சுவாரஸ்யம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/this-swiss-shop-has-no-staff-tourists-pay-and-take-1789625103"></link>
            <id>https://news.lankasri.com/article/this-swiss-shop-has-no-staff-tourists-pay-and-take-1789625103</id>
            <summary type="text">This Swiss shop has no staff, Honesty is the only thing keeping it running: சுவிட்சர்லாந்தில் ஊழியர்களே இல்லாத, மக்களுடைய நேர்மையை மட்டுமே நம்பி இயங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>This Swiss shop has no staff, Honesty is the only thing keeping it running: சுவிட்சர்லாந்தில் ஊழியர்களே இல்லாத, மக்களுடைய நேர்மையை மட்டுமே நம்பி இயங்கும் கடை ஒன்று செயல்பட்டுவருகிறது.
</p><p>

சுவிட்சர்லாந்து தன் அழகாலும், அமைதியாலும் மக்களைக் கவர்ந்துவரும் ஒரு நாடு. </p><p>இந்நிலையில், சுவிஸ் கிராமம் ஒன்றில் ஊழியர்களே இல்லாத கடை ஒன்றைக் கண்டு வியந்துள்ள இந்தியர் ஒருவர் அது குறித்த செய்தி ஒன்றை சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.</p><h3>

சுவிட்சர்லாந்தில் ஒரு சுவாரஸ்யம்</h3><p>

சுவிட்சர்லாந்திலுள்ள Gimmelwald என்னும் கிராமத்தில் கடை ஒன்று உள்ளது. அதன் பெயர் நேர்மைக் கடை!</p><p>

<blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdRjxkdzf1X/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdRjxkdzf1X/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdRjxkdzf1X/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Smridhi Aggarwal (@smridhiandhersuitcase)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
இந்தக் கடையில் பணம் வாங்க காசாளர்களோ, அல்லது வாடிக்கையாளர்கள் என்ன செய்கிறார்கள் என கண்காணிக்க பாதுகாவலர்களோ இல்லை.
</p><p>
பொருட்கள் விலை குறிப்பிடப்பட்டு அழகாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்கான தொகையை வைத்துவிட்டுச் செல்லவேண்டும். அவ்வளவுதான்!&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/813d1adb-bc3f-4db9-a4ac-b56683ad21c6/26-6aab831063da7.webp' /></p><p>
சமீபத்தில் சுவிட்சர்லாந்துக்குச் சென்ற இந்தியர் ஒருவர், இந்தக் கடையைக் கண்டு வியந்துள்ளதுடன், சுவிட்சர்லாந்தில் பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன, அவற்றைவிட இந்தக் கடை எனது மனதில் மறக்கமுடியாத ஒரு அனுபவமாக பதிந்துவிட்டது என்கிறார்.&nbsp;</p><p></p><p>
இங்கிலாந்திலுள்ள கார்ன்வாலில், முன்னாட்களில் விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் விளைந்த காய்கறிகளையும் பழங்களையும் தங்கள் வீடுகளுக்கு முன் வைத்து, அருகில் பணம் போட ஒரு பெட்டியையும் வைத்துவிடுவார்களாம்.
</p><p>
மக்கள் தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, அதற்கான பணத்தை அந்த பெட்டிகளில் போடுவார்களாம்.
</p><p>
அந்த ஐடியாவைப் பின்பற்றித்தான் தான் இந்த நேர்மைக்கடையை நடத்திவருவதாகத் தெரிவிக்கிறார் கடையின் உரிமையாளரான டேவிட் வாட்டர்ஹவுஸ் என்பவர்.</p>]]></content>
            <updated>2026-09-17T06:05:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிக்டொக் நிறுவனரிடம் ஆசிய பணக்காரர் அந்தஸத்தை இழந்த அதானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/adani-loses-asia-richest-title-to-zhang-yiming-1789624554"></link>
            <id>https://news.lankasri.com/article/adani-loses-asia-richest-title-to-zhang-yiming-1789624554</id>
            <summary type="text">adani loses asia richest title to zhang yiming: கௌதம் அதானி ஆசிய பணக்காரர் அந்தஸத்தை இழந்து 2வது இடத்திற்கு சென்றுள்ளார். 

ஆசிய பணக்காரர் அந்தஸதை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>adani loses asia richest title to zhang yiming: கௌதம் அதானி ஆசிய பணக்காரர் அந்தஸத்தை இழந்து 2வது இடத்திற்கு சென்றுள்ளார். </p><h3>

ஆசிய பணக்காரர் அந்தஸதை இழந்த அதானி</h3><p> 

இந்தியாவை சேர்ந்த அதானி குழும தலைவர் கௌதம் அதானி, ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ef06667-8d10-46ce-aace-2bfb40b72f83/26-6aab80ec2bfc6.webp' /></p><p>

தற்போது டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் நிறுவனர் ஜாங் யிமிங், ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>

43 வயதான ஜாங் யிமிங், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி 105 பில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f682194d-b2ba-4366-9a2b-06966b4b49c6/26-6aab80ecd6b9b.webp' /></p><p> 

மார்ச் 2019 ஆம் ஆண்டில் 13 பில்லியன் டொலராக இருந்த, அவரது செல்வம் 8 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 40.3 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p>கௌதம் அதானி இந்த ஆண்டு 24.8 பில்லியன் டொலர்களைச் சேர்த்திருந்தபோதிலும், 105 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். </p><p>

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 81.3 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் ஆசிய பணக்காரர் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.</p><p> 

எலான் மஸ்க் 892 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். </p><p> 295 பில்லியன் டொலருடனும் லாரி பேஜ் 2வது இடத்திலும், செர்ஜி பிரின் 274 பில்லியன் டொலருடனும் 3வது இடத்திலும் உள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T05:56:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிலேயே பொலிவான முகத்தை பெற உதவும் பீட்ரூட்.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/beetroot-face-packs-to-brighten-skin-naturally-1789620211"></link>
            <id>https://news.lankasri.com/article/beetroot-face-packs-to-brighten-skin-naturally-1789620211</id>
            <summary type="text">Beetroot face packs to brighten skin naturally-&amp;nbsp;சருமத்தைப் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க பீட்ரூட்டை பயன்படுத்தலாம்.இதில் உள்ள ஆன்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Beetroot face packs to brighten skin naturally-&nbsp;சருமத்தைப் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க பீட்ரூட்டை பயன்படுத்தலாம்.</p><p>இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. </p><p>

அந்தவகையில், வீட்டிலேயே பொலிவான முகத்தை பெற பீட்ரூட்டை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>1. தேவையான பொருட்கள் </h2><ul><li>

பீட்ரூட்- 1
</li><li>தயிர்- 1 ஸ்பூன் </li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது? </h2><p>

முதலில் பீட்ரூட்டைத் துருவி, அதன் சாற்றை எடுத்துக் கொள்ளவும்.
</p><p>
அதனுடன் கெட்டியான தயிரைச் சேர்த்து நன்கு கலக்கவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7d56728-d5fb-4ab5-b782-d5d7e230e263/26-6aab6ff5b0f67.webp' /></p><p>இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும்.</p><p>

பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவவும்.</p><h2>

2. தேவையான பொருட்கள் </h2><ul><li>

பீட்ரூட்- 1
</li><li>எலுமிச்சை- 1</li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
பீட்ரூட்டைத் துருவி, அதன் சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.
</p><p>
அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றைச் சேர்த்து கலக்கவும்.</p><p>
</p><p></p><p>இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
</p><p>
பின் அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவிக்கொள்ளலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-17T04:46:23+00:00</updated>
        </entry>
    </feed>
