<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-21T23:23:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 நாடுகள் ஏற்றுக்கொண்ட இந்தியாவின் டிஜிட்டல் UPI கட்டண முறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/upi-growth-12-nations-adopt-india-s-payment-system-1784669432"></link>
            <id>https://news.lankasri.com/article/upi-growth-12-nations-adopt-india-s-payment-system-1784669432</id>
            <summary type="text">இந்தியாவின் Unified Payments Interface (UPI) கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.

2016-இல் தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிமுகப்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் Unified Payments Interface (UPI) கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.</p><p>

2016-இல் தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிமுகப்படுத்திய இந்த முறை, இன்று இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் முதுகெலும்பாக உள்ளது.
</p><p>
2021-22 நிதியாண்டில் 4,595 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்ற நிலையில், 2025-26-இல் இது 24,161 கோடி பரிவர்த்தனைகளாக உயர்ந்துள்ளது. பரிவர்த்தனை மதிப்பு ரூ. 314.23 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29409986-56d2-41fa-82e2-4f04b3b48e2f/26-6a5fe4f9e9618.webp' /></p><p>நிதி அமைச்சகத்தின் மாநில அமைச்சர் பங்கஜ் சௌதரி தெரிவித்ததாவது, தற்போது 55.49 கோடி பயனர்கள் UPI-யில் இணைந்துள்ளனர். பாதுகாப்பை மேம்படுத்த NPCI பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் CUISF 2025 என்ற தகவல் பாதுகாப்பு கட்டமைப்பு, மொபைல் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவை அடங்கும்.</p><p>

மேலும், NPCI International Payments Ltd. (NIPL) மூலம் UPI உலகளாவிய அளவில் விரிவடைந்துள்ளது. இதன் மூலம் இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் எளிதாக பரிவர்த்தனை செய்ய முடிகிறது.
</p><p></p><p>தற்போது இந்தியாவின் UPI முறையை பூட்டான், சிங்கப்பூர், UAE, பிரான்ஸ், மொரீஷியஸ், இலங்கை, நேபாளம், கத்தார், கிரீஸ், கம்போடியா உள்ளிட்ட 12 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T21:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் புதிய AI அமைச்சராக இந்திய வம்சாவளி எம்.பி. நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bihar-born-kanishka-narayan-named-uk-ai-minister-1784667628"></link>
            <id>https://news.lankasri.com/article/bihar-born-kanishka-narayan-named-uk-ai-minister-1784667628</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் தனது அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லேபர் கட்சி எம்.பி. கனிஷ்கா நாராயண் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் தனது அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லேபர் கட்சி எம்.பி. கனிஷ்கா நாராயண் செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கனிஷ்க நாராயண், 1989 நவம்பரில் பீஹாரின் முய்ஸாபர்பூர் நகரில் பிறந்தவர். 12 வயதில் குடும்பத்துடன் வேல்ஸ் மாநிலத்தின் கார்டிஃபுக்கு குடிபெயர்ந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ee4be1-b2c3-49bd-98d0-d0e53682b18d/26-6a5fddee49076.webp' /></p><p>அங்கு கல்வி பயின்று, பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் PPE (Philosophy, Politics, Economics) படித்தார். மேலும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் MBA முடித்துள்ளார்.
</p><p>
2024 பொதுத் தேர்தலில், அவர் வேல் ஆஃப் கிளாமார்கன் தொகுதியில் வெற்றி பெற்று, வேல்ஸ் மாநிலத்தில் முதல் இன சிறுபான்மை எம்.பி. ஆனார்.
</p><p>
2025-இல் AI மற்றும் ஓன்லைன் பாதுகாப்பு தொடர்பான அமைச்சராக நியமிக்கப்பட்டு, இப்போது அமைச்சரவை நிலை AI அமைச்சராக உயர்த்தப்பட்டுள்ளார்.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The Prime Minister, <a href="https://x.com/andyburnham?ref_src=twsrc%5Etfw">@andyburnham</a>, today asked me to attend Cabinet as Minister for AI, a sign of his deep commitment to AI&#39;s importance.<br><br>AI is likely the most significant technology in human history. Its impact will dwarf other things.<br><br>The best case for it is compelling beyond…</p>&mdash; Kanishka Narayan MP (@KanishkaNarayan) <a href="https://x.com/KanishkaNarayan/status/2079349690881970365?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அரசியலுக்கு முன்பு, அவர் UK Cabinet Office-இல் சிவில் சர்வீசில் பணியாற்றியதுடன், தனியார் துறையிலும் நிதி ஆலோசகராக இருந்துள்ளார். </p><p>சமூக சேவைகளிலும் ஆர்வம் கொண்ட அவர், Attain Wales என்ற அமைப்பை நிறுவி, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றியுள்ளார்.</p><p>

பிரித்தானியாவின் AI கொள்கை தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், Google DeepMind, ElevenLabs, Wayve போன்ற முன்னணி AI நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன. </p><p></p><p>இந்நிலையில், கனிஷ்கா நாராயண் தலைமையிலான புதிய AI அமைச்சகம், பிரித்தானியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T20:58:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டம்: ஆசியாவை விஞ்சிய ஆப்பிரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/africa-tops-hunger-list-surpasses-asia-un-1784662087"></link>
            <id>https://news.lankasri.com/article/africa-tops-hunger-list-surpasses-asia-un-1784662087</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த வருடாந்திர அறிக்கையில், உலகளவில் பட்டினி குறையும் நிலையில் இருந்தாலும், அந்த முன்னே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த வருடாந்திர அறிக்கையில், உலகளவில் பட்டினி குறையும் நிலையில் இருந்தாலும், அந்த முன்னேற்றம் சமமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2026 ஜூலை 21 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், ஆப்பிரிக்கா கண்டம், ஆசியாவை விட அதிகமான மக்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதன் மூலம், முதன்முறையாக உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டமாக ஆப்பிரிக்கா மாறியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ef1fb7d-305e-4bd5-8bfe-0f2126d4eabc/26-6a5fc8c67d0aa.webp' /></p><p>ஆப்பிரிக்காவில் பல கோடி மக்கள் போதுமான உணவின்றி வாழ்ந்து வருவதாகவும், குறிப்பாக சஹாரா தெற்குப் பகுதிகள் மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் உணவு உதவிக்கு மக்கள் அதிகமாக சார்ந்துள்ளனர்.
</p><p>
ஐ.நா. அறிக்கையில், உலகளவில் பட்டினி குறைப்பதில் முன்னேற்றம் இருந்தாலும், அது சமமாக இல்லை. சில பகுதிகளில் உணவு பாதுகாப்பு மேம்பட்டாலும், ஆப்பிரிக்காவில் நிலைமை மோசமடைந்துள்ளது.</p><p>

இதனால், ஆப்பிரிக்கா கண்டத்தில் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சர்வதேச உதவி, அரசியல் நிலைத்தன்மை, வேளாண் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T19:28:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 நாடுகளுக்கு புதிய வரிகளை விதிக்க ட்ரம்ப் அரசு திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-plans-tariffs-on-60-nations-india-included-1784655789"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-plans-tariffs-on-60-nations-india-included-1784655789</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு, உலகளாவிய வர்த்தகத்தில் கட்டாயத் தொழிலாளர் பிரச்சினையை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு, உலகளாவிய வர்த்தகத்தில் கட்டாயத் தொழிலாளர் பிரச்சினையை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், சுமார் 60 நாடுகளுக்கு புதிய வரிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.
</p><p>
ட்ரம்ப் அரசு முன்பு அறிவித்த 10 சதவீத அடிப்படை வரிகள் ஜூலை 24-ஆம் திகதி காலாவதியாக உள்ளன. </p><p>இதனைத் தொடர்ந்து, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு கூடுதல் 12.5 சதவீதம் வரி விதிக்கப்படலாம் என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரியர் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/730e76c0-87f5-48ad-8dc1-4ee0da6a56d4/26-6a5fafae9eb7b.webp' /></p><p>அமெரிக்கா, கட்டாயத் தொழிலாளர் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கும் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துகிறது. ஆனால் பல நாடுகள் இதனை பின்பற்றவில்லை என்பதே புதிய நடவடிக்கைக்கான காரணமாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த அறிவிப்பு, அமெரிக்கா-கனடா இடையிலான வர்த்தக மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>சமீபத்தில், கனடா தயாரிக்கும் கார்கள், பால் பொருட்கள், மதுபானங்கள் போன்றவற்றுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. </p><p>இதற்கு பதிலாக, கனடா தனது தொழில்களை பாதுகாக்கும் வகையில் எதிர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.</p><p>

மேலும், அமெரிக்கா-மெக்சிகோ இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p>USMCA உடன்படிக்கையை நீட்டிக்காத ட்ரம்ப் அரசின் முடிவால், வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் எதிர்காலத்தில் சீர்குலையக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.</p><p>

இந்த புதிய வரிகள் உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T17:41:42+00:00</updated>
        </entry>
    </feed>
