<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-26T06:52:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தடை: ரஷ்யா இந்த முடிவுக்கு என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-extends-gasoline-export-ban-1785047559"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-extends-gasoline-export-ban-1785047559</id>
            <summary type="text">எரிபொருள் ஏற்றுமதி தடையை இந்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டித்து இருப்பதாக ரஷ்யா முடிவு செய்துள்ளது. எரிபொருள் ஏற்றுமதிக்கான தடைவெளிநாடுகளுக்கு பெட்ரோல், ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் ஏற்றுமதி தடையை இந்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டித்து இருப்பதாக ரஷ்யா முடிவு செய்துள்ளது.</p><h2> எரிபொருள் ஏற்றுமதிக்கான தடை</h2><p>வெளிநாடுகளுக்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்த ஆண்டின் டிசம்பர் வரை நீட்டிக்க திட்டமிட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.</p><p> ஜூலை மாத இறுதியுடன் முன்னர் அறிவிக்கப்பட்ட தடை முடிவடைய உள்ள நிலையில், இந்த நடவடிக்கையானது திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f63d781f-ba51-47dd-b9da-350db0cf82b2/26-6a65aa0885573.webp' /></p><p> இந்த நீட்டிக்கப்பட்ட தடை எரிபொருள் உற்பத்தி செய்வோர் மற்றும் எரிபொருள் உற்பத்தி செய்யாதோர் என இருவருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> எரிப்பொருள் தடை டிசம்பர் வரை நீடிப்பது தொடர்பான தகவலை ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் செய்தியாளர்கள் சந்திப்பின் போது உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> உள்நாட்டு சந்தை நிலவரம் சீரடைந்த பிறகே எரிபொருள் ஏற்றுமதி மீதான தடை தளர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.</p><p></p><p> அதே சமயம் நாட்டில் எரிபொருள் சந்தை முழுமையான ஸ்திரத்தன்மை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தை தடையற்றதாக மாற்ற கடந்த ஏப்ரல் மாதம் ரஷ்யா பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:32:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்சீனக் கடலில் மூழ்கிய வியட்நாம் கப்பல்: 44 மாலுமிகளை பத்திரமாக மீட்ட சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-rescue-44-sailors-from-vietnamese-vessel-1785045644"></link>
            <id>https://news.lankasri.com/article/china-rescue-44-sailors-from-vietnamese-vessel-1785045644</id>
            <summary type="text">தென்சீன கடல் பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 44 மாலுமிகளை சீனா மீட்டுள்ளது. விபத்துக்குள்ளான கப்பல்சனிக்கிழமை தென்சீனக் கடல் பகுதியில் விய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்சீன கடல் பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 44 மாலுமிகளை சீனா மீட்டுள்ளது.</p><h2> விபத்துக்குள்ளான கப்பல்</h2><p>சனிக்கிழமை தென்சீனக் கடல் பகுதியில் வியட்நாமின் சரக்கு கப்பலான கோய் நிகுவென் 18(Khoi Nguyen 18) விபத்துக்குள்ளானது.</p><p> இந்த விபத்தை தொடர்ந்து கப்பலில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a442e69-1187-4c3a-88ac-162fd8f13bde/26-6a65a28e5739b.webp' /></p><p> அதன் ஒரு பகுதியாக உள்ளூர் அதிகாரிகள் விபத்துக்கு நடந்த பகுதிக்கு 6 மீட்புக் கப்பல்களையும், 1 மீட்பு ஹெலிகாப்டர்களையும் அனுப்பி வைத்தனர்.</p><p> இந்த மீட்பு பணியில் வியட்நாமிற்கு சொந்தமான கப்பல் ஒன்றும் இணைந்து செயல்பட்டு வருகிறது.</p><h2> 44 மாலுமிகள் மீட்பு</h2><p>
இந்நிலையில் வியட்நாம் சரக்கு கப்பலில் இருந்த 44 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக சீனாவின் தெற்கு ஹைனான் மாகாணத்தின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a516754-314f-48b7-b472-5416065f163c/26-6a65a28f09b72.webp' /></p><p> கப்பலில் மொத்தம் 62 பேர் இருந்த நிலையில், தற்போது 44 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p> மீதமுள்ள நபர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-26T06:27:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/typhoon-noul-china-hong-kong-1785044255"></link>
            <id>https://news.lankasri.com/article/typhoon-noul-china-hong-kong-1785044255</id>
            <summary type="text">நௌல் புயல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரையைக் கடந்த நிலையில், ஹொங்ஹொங் உள்ளிட்ட தெற்கு சீனாவில் பலத்த காற்றும் கனமழையும் இயல்பு வாழ்க்கையை மொத்தமாகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நௌல் புயல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரையைக் கடந்த நிலையில், ஹொங்ஹொங் உள்ளிட்ட தெற்கு சீனாவில் பலத்த காற்றும் கனமழையும் இயல்பு வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப்போட்டுள்ளது.</p><h2>உயர் எச்சரிக்கை</h2><p>
</p><p>நௌல் புயல் காரணமாக குவாங்டாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்; அப்பகுதி உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e32cfa0-1848-49b5-a5d3-fb2e1d020da5/26-6a659e6fe1f2f.webp' /></p><p> </p><p>தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்ஜோ நகரின் ஹுய்டோங் மாவட்டக் கடற்பகுதியில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 3:50 மணியளவில் நௌல் புயல் கரையைக் கடந்ததாக சீனாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, இந்த ஆண்டில் இதுவரை சீனாவில் கரையைக் கடந்த புயல்களிலேயே நௌல் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது என்று சீனாவின் உத்தியோகப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>மணிக்கு 110 கி.மீ வேகத்தில் அதிகபட்ச தொடர் காற்றுடன் வீசிய நௌல் புயல், ஞாயிற்றுக்கிழமையன்று குவாங்டாங்கின் உள்பகுதிக்குள் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்துள்ளதாகவும், இதனால் அப்பகுதியின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வருவதாகவும் ஹொங்ஹொங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>அரசு வானொலி வெளியிட்டுள்ள தகவலில்
குவாங்டாங் மாகாணத்தில் பாதுகாப்பு கருதி 715,000-க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b0ad86f-1893-4982-84f4-4956e1d723ef/26-6a659e6e838eb.webp' /></p><h2>பலத்த காற்றும் மழையும்</h2><p> </p><p>அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமைக்கான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குவாங்டாங் மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஹுய்லாய் (Huilai) மாவட்டத்தில் பல மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்ததாக அரசு செய்தி நிறுவனமான சிசிடிவி (CCTV) செய்தி வெளியிட்டுள்ளது.</p><p> ஞாயிற்றுக்கிழமையன்று சுமார் 350 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக ஹொங்ஹொங் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. சூறாவளி வீசிய காலத்தில் நகரம் முழுவதும் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்ததாக ஹொங்ஹொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ffd18e7-e2fe-457d-b5f7-4171cc154bc5/26-6a659e6f3f65d.webp' /></p><p>
</p><p>
இந்த மாதத் தொடக்கத்தில், Bavi சூறாவளி பலத்த காற்று மற்றும் மழையுடன் கிழக்கு சீனாவைப் புரட்டிப்போட்டதால், 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். </p><p>இது ஜூலை 11 அன்று கரையை அடைந்தது. மற்றொரு சூறாவளியான 'மேசக்' (Maysak), ஜூலை 3 அன்று தென் சீனாவில் கரையை அடைந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T05:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-foods-that-prevent-hair-fall-in-tamil-1785041716"></link>
            <id>https://news.lankasri.com/article/5-foods-that-prevent-hair-fall-in-tamil-1785041716</id>
            <summary type="text">பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.

முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
</p><p>
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரைமுடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
</p><p>
இரும்புச்சத்து, புரதம், வைட்டமின்கள் இல்லாதது, அதிகப்படியான கவலை, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றம், உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன் வேறுபாடுகள் இதற்கு முக்கிய காரணங்களாகும்.
</p><p>
அந்தவகையில், முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் 5 உணவுகள் குறித்து பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbaa48a6-5843-408d-8c5c-6e44432f979a/26-6a65944f7a847.webp' /></p><h2>என்னென்ன உணவுகள்?
</h2><p><b>
முட்டை- </b>இதில் நிறைந்துள்ள புரதம், பயோட்டின், வைட்டமின்கள் முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வை குறைத்து, அடர்த்தியாக வளர உதவுகிறது.
</p><p><b>
பசலைக் கீரை- </b>இதில் உள்ள வைட்டமின் A, C, ஃபோலேட், இரும்புச் சத்து முடி உதிர்வைத் தடுத்து, உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.</p><p></p><p><b>

சர்க்கரை வள்ளிக்கிழங்கு- </b>பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் C நிறைந்த இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடியை வலுப்படுத்துகிறது.
</p><p><b>
தயிர்- </b>தயிரை உணவில் சேர்த்தால் முடி வேர்களை வலுப்படுத்தி, பொடுகை குறைத்து, முடியை மென்மையாக்குகிறது.</p><p><b>

நெல்லிக்காய்- </b>வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நெல்லிக்காய் முடி உதிர்வை குறைத்து, முடி உடைவதைத் தடுக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெர்லின் தன்பாலின விழா கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: ஜேர்மன் சேன்சலர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/berlin-pride-van-crashes-into-1785041807"></link>
            <id>https://news.lankasri.com/article/berlin-pride-van-crashes-into-1785041807</id>
            <summary type="text">பெர்லினின் புறநகர்ப் பகுதியில் நடந்த தன்பாலின ஈர்ப்பாளர்களின் விழாவின் போது கார் ஒன்று அந்த மக்கள் மீது மோதியதில் குறைந்தது ஒருவர் மரணமடைந்ததுடன் 16 ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெர்லினின் புறநகர்ப் பகுதியில் நடந்த தன்பாலின ஈர்ப்பாளர்களின் விழாவின் போது கார் ஒன்று அந்த மக்கள் மீது மோதியதில் குறைந்தது ஒருவர் மரணமடைந்ததுடன் 16 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.</p><h2>கைது செய்யப்படவில்லை</h2><p>
</p><p>இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் உறுதி அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3bb71a9-137c-4e19-949d-870e185d36ed/26-6a6595166dd60.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், சனிக்கிழமை இரவு நடைபெற்றத் தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர், நகரின் இஸ்லாமியக் குழுக்களுடன் தொடர்புடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் பெர்லின் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>ஐரோப்பாவின் மிகப்பெரிய தன்பாலின ஈர்ப்பாளர்கள் நிகழ்வுகளில் ஒன்றை ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே நிறுத்தும்படி இந்தத் தாக்குதல் சம்பவம் கட்டாயப்படுத்தியுள்ளது.</p><p></p><p> </p><p>
சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியாக நடந்த கொடூரமான வாகன மோதல் மற்றும் கத்தியால் தாக்குதல் சம்பவங்களால் ஜேர்மனி மக்கள் பதற்றத்தில் இருக்கும் வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
</p><p>வெளிப்படையாகவே தாக்குதல் நடந்த நிலையில், பல மணி நேரங்களுக்குப் பிறகும் இதன் பின்னணி வெலியாகவில்லை, ஆனால் பிராண்டன்பர்க் கேட் அருகே உள்ள நகரின் மையப் பகுதியான டியர்கார்டன் பூங்காவிற்குள் வேகமாகப் புகுந்த அந்த வாகனம் பல பேர் மீது மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>அத்துடன், காயமடைந்தவர்கள் பலர் உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அன்று முன்னதாக நடைபெற்ற தன்பாலின மக்களின் அணிவகுப்புப் பாதைக்கு அருகில் உள்ள டியர்கார்டன் பூங்காவிற்குள், இரவு 10 மணிக்குச் சற்று முன்பு ஒரு வெள்ளை நிற வகானம் சென்று, நடைபாதையில் இருந்தவர்கள் மீது மோதியதுடன் ஒரு மரத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba1d4100-f8b0-4600-b80e-28e370285622/26-6a6595150f9a1.webp' /></p><p> ஆனால் அதன் பின்னர் அந்த வாகனத்தின் சாரதி மாயமாகியுள்ளதாகவும், அந்த சாரதி அல்லது தாக்குதலில் ஈடுபட்டவரை தீவிரமாகத் தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். </p><p>இதனிடையே, தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஒரு நபர் வாகனத்திலிருந்து வெளியேறி நடந்தே தப்பிச் சென்றதாக ஒருவர் கூறியதை Bild நாளேடு மேற்கோள் காட்டியுள்ளது.</p><h2>கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே&nbsp;</h2><p> </p><p>ஞாயிற்றுக்கிழமையன்றும் ஜேர்மனியின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஹெலிகொப்டர்களை உள்ளடக்கிய தேடுதல் நடவடிக்கை தலைநகர் முழுவதும் நடைபெற்றது. </p><p>இந்த நிலையில், இந்தக் கொடூரமான செயல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படுவதையும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் உறுதிசெய்யத் தானும் உள்விவகார அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட்-உம் வலியுறுத்துவோம் என்று சேன்சலர் மெர்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.</p><p> ஜேர்மனியில் தீவிர வெப்ப அலை தணிந்து, இதமானக் கோடை வெயிலில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களின் 
அணிவகுப்பைக் கொண்டாடுவதற்காக, தலைநகரில் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் திரண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdb1b986-bc6f-46ac-85e5-adddfc5d9cd6/26-6a659515bdd2f.webp' /></p><p> </p><p>இதனிடையே, இந்தக் கொடூரமான தாக்குதலை நமது சுதந்திரமான மற்றும் பன்னாட்டு சமூகத்தின் மீதான தாக்குதல் என்று பெர்லின் மேயர் கை வெக்னர் குறிப்பிட்டுள்ளார். </p><p>ஜேர்மனியில் இந்த விழாவினை கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே என்றே கொண்டாடுகின்றனர். அதன் வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்த ஆண்டு கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை இரவு ஒரு ஜனநாயக ஆதரவு அரசியல் பேரணியுடன் தொடங்கின. </p><p>அந்நிகழ்ச்சிக்கு எதிராக நடைபெற்ற தீவிர வலதுசாரிப் பிரிவினரின் எதிர்-போராட்டத்தின்போது, ​​காவல்துறையின் உத்தரவுகளை மீறியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T04:55:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-attack-saudi-us-holds-back-1785036646"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-attack-saudi-us-holds-back-1785036646</id>
            <summary type="text">செங்கடல் கடற்கரையோர சவுதி எண்ணெய் நிலையங்கள் மீது ஹவுதிகள் உக்கிரத் தாக்குதலை நடத்திய நிலையில், இரண்டு வாரங்களில் முதல்முறையாக ஈரான் மீதான தாக்குதலை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடல் கடற்கரையோர சவுதி எண்ணெய் நிலையங்கள் மீது ஹவுதிகள் உக்கிரத் தாக்குதலை நடத்திய நிலையில், இரண்டு வாரங்களில் முதல்முறையாக ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா திடீரென்று நிறுத்தியுள்ளது.</p><h2>தாக்குதலை நிறுத்தியது</h2><p>
</p><p>ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடங்கிய போரானது தற்போது தீவிரமாக விரிவடைந்து வருவதாகவே தெரிய வருகிறது. ஈரான் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பலமுறை தாக்குதல் நடத்தியுள்ள ஹவுதிகள், தற்போது சவுதி அரேபியா மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3735549e-faf9-4589-9170-f2b84d53a07e/26-6a6584cc4e7b5.webp' /></p><p> </p><p>இது மத்திய கிழக்கை மேலும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளதுடன், எண்ணெய் விலைகள் மீண்டும் கடும் உயர்வை எட்ட காரணமாக அமைந்துள்ளது. </p><p>இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான தங்கள் கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்வதாக சனிக்கிழமையன்று தெரிவித்த அமெரிக்க இராணுவம், கடந்த 13 இரவுகளாகத் தீவிரத் தாக்குதலை முன்னெடுத்து வந்ததை நிறுத்தியதுடன், விளக்கமளிக்கவும் மறுத்துள்ளது. </p><p>இந்த இடைநிறுத்தம் குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தூதரக ரீதியிலான அணுகுமுறையையே தாம் விரும்புவதாக ட்ரம்ப் எப்போதும் தெளிவாகக் கூறி வந்துள்ளார்; அதேவேளையில், பேச்சுவார்த்தைக்கு ஆக்கபூர்வமாக முன்வரத் தவறினால் என்ன நடக்கும் என்பதையும் அவர் ஈரானுக்கு உணர்த்தியுள்ளார் என்றார். </p><p>இதனிடையே, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்திய நிலையில், ஈரான் தரப்பில் இருந்து சனிக்கிழமை பதில் தாக்குதல் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, ஈரான் மீது ஒரு உக்கிரமானத் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக ட்ரம்ப் கூறி வந்த நிலையில், தற்போது அந்த திட்டத்தை அவர் கைவிட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது.</p><p> </p><p>ஈரான் மீது அப்படியான ஒரு நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுக்கும் என்றால், அது இந்த மோதலை இன்னும் விரிவடையச் செய்யும் என்பதுடன், ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே ஆயுதப் பற்றாக்குறையால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள அமெரிக்கா மேலும் சிக்கலை எதிர்கொள்ளும் என்பதும் ட்ரம்ப் நிர்வாகத்தை பின்வாங்க வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91e625b9-3821-4602-a68c-da4dc5b9f8d4/26-6a6584cdd475d.webp' /></p><p> </p><p>மேலும், ஈரான் மீதான கடும் நடவடிக்கைகளால் பாரசீக வளைகுடா நட்பு நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து அந்நியப்படவும் வாய்ப்பு, மட்டுமின்றி எரிசக்தி விநியோகம் மற்றும் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதும் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்களை பின்வாங்க வைத்துள்ளது என்றும் நியூயார்க் டைம்ஸ் சனிக்கிழமை இரவு செய்தி வெளியிட்டது.</p><h2>ஹவுதிகளும் முழுமையாக</h2><p> </p><p> 
வளைகுடாப் பகுதியில் அமைதி நிலவியபோதிலும், ஹவுதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே சனிக்கிழமையன்று நடந்த சண்டையானது, ஏற்கெனவே ஹார்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ள ஈரானுக்கு எதிரானப் போர், இரண்டாவது முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையையும் பாதிக்கக்கூடும் என்பதையும், யேமனின் உள்நாட்டுப் போரை மீண்டும் தூண்டிவிடக்கூடும் என்பதையும்&nbsp;அமெரிக்காவுக்கு சுட்டிக்காட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3418cf9-7209-4647-a036-d091812e698e/26-6a6584cd3163e.webp' /></p><p>ஈரான் ஆதரவு ஹவுதிகள் யேமனின் தலைநகரான சனாவைக் கைப்பற்றியதிலிருந்து, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஹவுதிகளுக்கு எதிராகப் போரிடும் அரபு கூட்டணிக்கு சவுதி அரேபியா தலைமை தாங்கி வருகிறது. </p><p>சண்டையாலும் பஞ்சத்தாலும் மில்லியன் கணக்கான மக்கள் மரணமடைந்த யேமனின் உள்நாட்டுப் போர், 2022 முதல் போர் நிறுத்தம் மூலம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. </p><p>ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆளானதிலிருந்து ஈரான் நடத்தி வரும் விரிவானப் போரில் ஹவுதிகளும் முழுமையாக இணைந்ததைத் தொடர்ந்து, அந்தப் போர்நிறுத்தம் இந்த மாதம் முறிந்துபோனது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad74c622-d3f6-4203-a4eb-522a42383af4/26-6a6584ce8488c.webp' /></p><p>
</p><p>கடந்த வாரத்தில் சவுதி அரேபியா மீது ஹவுதிகள் ஒரு கடல்வழி முற்றுகையை அறிவித்துள்ளனர்; சவுதியின் அனைத்து எண்ணெய் நிலையங்களும் தாக்குதலுக்கு இலக்காகக்கூடும் என்று ஹவுதி தலைவர் அப்துல் மாலிக் அல்-ஹவுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>வியாழக்கிழமையன்று, செங்கடலில் சவுதிக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர். ஏற்கனவே இஸ்ரேலுக்கு எதிராக செங்கடலில் ஹவுதிகள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T03:29:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Google Maps-இல் புதிய அப்டேட்., AI அடிப்படையிலான வழிகாட்டி Navigation, Speedometer]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-maps-ai-navigation-speedometer-1785027496"></link>
            <id>https://news.lankasri.com/article/google-maps-ai-navigation-speedometer-1785027496</id>
            <summary type="text">Google Maps தனது புதிய AI அடிப்படையிலான வழிகாட்டி (Immersive Navigation) மற்றும் வேகக் கணிப்பான் (Speedometer) வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Google Maps தனது புதிய AI அடிப்படையிலான வழிகாட்டி (Immersive Navigation) மற்றும் வேகக் கணிப்பான் (Speedometer) வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

இந்த அப்டேட், பயணிகளுக்கு தெளிவான வழிகாட்டுதலையும், பாதுகாப்பான ஓட்டத்தையும் வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய AI வழிகாட்டி, சாலைகளின் தெளிவான வரைபடங்கள், மேம்பட்ட காட்சிகள் மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வழிமுறைகளை வழங்குகிறது. இதனால், ஓட்டுநர்கள் தங்கள் பயணத்தை எளிதாக திட்டமிட முடியும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2199cc37-0587-4c7d-a17a-926ad1e59440/26-6a655baa51967.webp' /></p><p>ஆரம்பத்தில் சில பயனர்களுக்கே கிடைத்த இந்த வசதி, தற்போது பரவலாக Android மற்றும் iOS பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், Android Auto-வில் வேகக் கணிப்பான் சேர்க்கப்பட்டுள்ளது. </p><p>இது, வாகனத்தின் வேகத்தை நேரடியாகக் காட்டும். குறிப்பாக, டிஜிட்டல் டாஷ்போர்டு இல்லாத வாகனங்களில் பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
</p><p>
Google, இந்த வசதிகளை server-side update மூலம் வழங்குகிறது. அதனால், பயனர்கள் தனியாக update செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், சில பகுதிகளில் மற்றும் சில சாதனங்களில் இந்த வசதி படிப்படியாக கிடைக்கும்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T00:56:25+00:00</updated>
        </entry>
    </feed>
