<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-16T14:15:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2027-ipl-auction-to-be-held-in-india-1789564947"></link>
            <id>https://news.lankasri.com/article/2027-ipl-auction-to-be-held-in-india-1789564947</id>
            <summary type="text">2027 ipl auction to be held in india: ஐபிஎல் ஏலத்தை 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாக குழு முன்வந்துள்ளது.

இந்தியாவில் நடைபெற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ipl auction to be held in india: ஐபிஎல் ஏலத்தை 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாக குழு முன்வந்துள்ளது.
</p><h3>
இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம் </h3><p>

உலக அளவில் நடைபெறும் T20 கிரிக்கெட் போட்டிகளில் பிசிசிஐ நடத்தி வரும் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமானது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f921aab-8065-4762-b9fd-41292cc695a2/26-6aaa9815200e1.webp' /></p><p>

வீரர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு மெகா ஏலமும், ஆண்டுக்கு ஒருமுறை மினி ஏலமும் நடைபெறும். </p><p>

கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் கொச்சியில் மினி ஏலம் நடைபெற்றது. அதன் பிறகு வெளிநாடுகளில் நடைபெற்று வந்தது.</p><p> 

2024 ஆம் ஆண்டு துபாயிலும், 2025 ஆம் ஆண்டு ஜெட்டாவிலும், 2026 ஆம் ஆண்டு அபுதாபியிலும் நடைபெற்றது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், 2027 ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்தை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முன்வந்துள்ளது. </p><p>

மினி ஏலத்திற்காக ஐபிஎல் அணிகள் வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் உள்ள பயண சுமையை கருத்தில் கொண்டு, இந்தியாவிலே நடத்த ஐபிஎல் நிர்வாக குழு பரிசீலித்துள்ளது. </p><p>

இந்தியாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை திருமண சீசன் என்பதால், அந்தக் காலகட்டத்தில் 5 நட்சத்திர ஹொட்டல்கள் கிடைப்பதைப் பொறுத்து ஏலம் நடைபெறும் நகரம் தேர்வு செய்யப்படும். இந்த ஏலத்திற்காக, பிசிசிஐக்கு ஓரிரு இரவுகளுக்கு 100க்கும் மேற்பட்ட அறைகள் தேவைப்படுகிறது.</p><p> 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐபிஎல் தலைவர் அருண் தூமல், "ஒவ்வொரு ஆண்டும், இதை இந்தியாவில் நடத்த நாங்கள் முயற்சிக்கிறோம், ஆனால் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் பருவம் என்பதால் எங்களுக்கு இடம் கிடைப்பதில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3fa102d-be8c-48b2-be56-a93e582c2a4c/26-6aaa9815cbf0a.webp' /></p><p>
எனவே, இந்த ஆண்டு ஏலம் சிறியதாக இருக்கும் என்பதாலும், இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், நிச்சயமாக இங்கே நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

மேலும், பல்வேறு வீரர்கள் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து அதிருப்தி தெரிவித்த நிலையில், அணிகளிடம் அது குறித்து கருத்து கேட்டுள்ள ஐபிஎல் நிர்வாகம் அந்த விதியை மறுபரிசீலனை செய்ய தயாராக உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T13:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-invited-as-eu-s-first-associate-member-1789564922"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-invited-as-eu-s-first-associate-member-1789564922</id>
            <summary type="text">Canada invited as EUs first associate member: கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக அழைக்கப்படவுள்ளது.

EU முதல் இணை உறுப்பினராக&amp;nbsp;கனட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada invited as EUs first associate member: கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக அழைக்கப்படவுள்ளது.
</p><h2>
EU முதல் இணை உறுப்பினராக&nbsp;கனடா</h2><p>ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது 27 உறுப்பினர் நாடுகளுக்குள், கனடாவை முதல் இணை உறுப்பினராக (Associate Member) அழைக்கத் தீர்மானித்துள்ளது.</p><p>

இந்த அறிவிப்பை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன், பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் நடைபெற்ற ‘State of the Union’ உரையில் வெளியிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efca419f-409f-4e69-ac39-accd5fafef28/26-6aaa97fbb1cc8.webp' /></p><p>கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்த உரையில் கலந்து கொண்டார். அவர், கனடா முழுமையான உறுப்பினராக விரும்பவில்லை என்றாலும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டாண்மை குறித்து தனித்துவமான ஒப்பந்தத்தை விரும்புவதாக தெரிவித்தார்.
</p><p>
தற்போது, கனடா-அமெரிக்கா இடையே கடுமையான வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்த சுங்க வரிகளை, கனடா ‘டொலர்-க்கு டொலர்’ என்ற முறையில் எதிர்த்து வருகிறது. இதனால், கனடா தனது பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஐரோப்பாவுடன் நெருக்கமான உறவைத் தேடுகிறது.
</p><p></p><h2>EU - கனடா&nbsp;உறவு புதிய நிலைக்கு முன்னேற்றம்</h2><p>ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஏற்கனவே CETA (Comprehensive Economic and Trade Agreement) என்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. 2017-இல் அமுலுக்கு வந்த இந்த ஒப்பந்தம், 99 சதவீத சுங்க வரிகளை நீக்கியது. இப்போது, EU-Canada உறவு, “பொது வளமும் பொருளாதார பாதுகாப்பும்” என்ற புதிய நிலைக்கு முன்னேறுகிறது.</p><p>

உர்சுலா வான் டெர்லெயன், “கனடா மற்றும் ஐரோப்பா உலகைப் பார்க்கும் பார்வை ஒன்றே. AI, காலநிலை மாற்றம், ஆர்க்டிக் பாதுகாப்பு, மற்றும் புவியியல் அரசியல் போன்ற துறைகளில் இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
</p><p></p><h2>EU-வை 40 நாடுகளாக விரிவாக்கும் திட்டம்</h2><p>பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், EU-வை 40 நாடுகளுக்கு விரிவாக்கும் யோசனையை முன்வைத்துள்ளார். அதில் கனடா, பிரித்தானியா, துருக்கி, நோர்வே, ஐஸ்லாந்து ஆகியவை சாத்தியமான உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
இந்த முடிவு, அமெரிக்கா மற்றும் சீனாவை சார்ந்திருப்பதை குறைத்து, ஜனநாயக நாடுகளுடன் வலுவான கூட்டாண்மையை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T13:18:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண்: திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-woman-dies-in-sharjah-1789561792"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-woman-dies-in-sharjah-1789561792</id>
            <summary type="text">Indian woman dies in Sharjah: ஷார்ஜாவில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண்ணொருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.


கேரளாவைச் சேர்ந்த அஃபீனா ரஹீம் (Dr. Afeena R...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian woman dies in Sharjah: ஷார்ஜாவில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண்ணொருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
</p><p>

கேரளாவைச் சேர்ந்த அஃபீனா ரஹீம் (Dr. Afeena Raheem, 32), தன் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஷார்ஜாவில் வாழ்ந்துவந்தார். அஃபீனாவின் கணவர் யாஸர் (Yasar T), ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.</p><p>
தம்பதியருக்கு மூன்றரை மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அஃபீனாவின் சகோதரியான ரம்ஷீனாவும் தன் மகனுடன் அதே வீட்டில் வாழ்ந்துவருகிறார்.</p><h3>

திடீர் மரணம்</h3><p>

திங்கட்கிழமை காலை அஃபீனாவின் இளைய பிள்ளையின் அழுகுரல் கேட்டு என்ன நடக்கிறது என பார்க்கச் சென்ற ரம்ஷீனா, தன் சகோதரியான அஃபீனா சமையலறையில் சுயநினைவிழந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe2a87f7-f868-4029-8c24-92546b136db9/26-6aaa8bc15d860.webp' /></p><p>
உடனடியாக ஆம்புலன்சை அழைத்ததுடன், அஃபீனாவுக்கு உயிர் காக்கும் சிகிச்சையும் அளித்துள்ளார் ரம்ஷீனா.</p><p>

ஆனால், அஃபீனா தனியார் மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
நல்ல ஆரோக்கியமாக இருந்த அஃபீனா எதனால் திடீரென உயிரிழந்தார் என்பது தெரியாமல் திகைத்துப்போயிருக்கும் அவரது குடும்பத்தினர், உடற்கூறு ஆய்வு முடிவுக்கான காத்திருக்கிறார்கள்.
</p><p>
அஃபீனாவின் பெற்றோரும் சகோதரிகளும் இந்தியாவிலிருப்பதால், அவரது உடலை இந்தியா கொண்டு செல்ல முடிவுசெய்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.</p><p>

அஃபீனா ஒரு பல் மருத்துவர் ஆவார். தன் பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்காக தன் வேலையிலிருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார் அஃபீனா.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T12:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற விரும்பும் கிராமம்: வாக்கெடுப்பு முடிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/piddington-villagers-vote-to-leave-for-uk-1789561091"></link>
            <id>https://news.lankasri.com/article/piddington-villagers-vote-to-leave-for-uk-1789561091</id>
            <summary type="text">English village votes to leave UK: இங்கிலாந்திலுள்ள சிறு கிராமம் ஒன்று பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.


இங...</summary>
            <content type="html"><![CDATA[<p>English village votes to leave UK: இங்கிலாந்திலுள்ள சிறு கிராமம் ஒன்று பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.</p><p>


இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரிலுள்ள கிராமம், பிடிங்டன்.

350 பேர் மட்டுமே வாழும் அச்சிறு கிராமத்தில், ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்க வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அக்கிராம மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.</p><p>

ஆகவே, அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளனர் அக்கிராம மக்கள்.</p><h3>

வாக்கெடுப்பு முடிவுகள்</h3><p>

நேற்று அது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இன்று, புதன்கிழமை காலை வாக்குகள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a82dc691-0ad1-429a-8be5-573050d86549/26-6aaa89052a776.webp' /></p><p>

வாக்கெடுப்பில் 312 வாக்காளர்கள் வாக்களித்த நிலையில், 285 பேர் பிடிங்டன் கிராமம் பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு ஆதரவாகவும், 26 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். ஒரு வாக்கு செல்லாத வாக்காகியுள்ளது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், வாக்கெடுப்பு குறித்து பேசிய கலாச்சாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரான லிசா நாண்டி, புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, அது தொடர்பான சுமையை பல இடங்களுக்கும் பகிரவேண்டியுள்ளது என்பது குறித்து அரசு மென்மையாக பிடிங்டன் மக்களுக்கு சொல்லி புரியவைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T12:18:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு கப் ஜவ்வரிசி போதும்.., மொறு மொறு தோசை செய்யலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/javvarisi-dosa-recipe-in-tamil-1789559936"></link>
            <id>https://news.lankasri.com/article/javvarisi-dosa-recipe-in-tamil-1789559936</id>
            <summary type="text">Javvarisi Dosa Recipe- தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.

அந்தவகைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Javvarisi Dosa Recipe- தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.
</p><p>
அந்தவகையில், மாவு அரைக்காமல் ஜவ்வரிசி வைத்து தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம். </p><h2>தேவையான பொருட்கள்</h2><ul><li> 

ஜவ்வரிசி- ½ கப்
</li><li>தயிர்- 1 கப்</li><li> 
ரவை- ¼ கப்
</li><li>அரிசி மாவு- ¼ கப்</li><li>
இஞ்சி- 1 துண்டு </li><li>
பச்சை மிளகாய்- 2 </li><li>
கறிவேப்பிலை- 1 கொத்து</li><li> 
உப்பு- 1 ஸ்பூன் </li><li>
தண்ணீர் - 1 கப்</li><li>
எண்ணெய்- தேவையான அளவு </li></ul><h2>

செய்முறை </h2><p>

முதலில் ஜவ்வரிசியை நன்கு கழுவி அதில் தயிர் சேர்த்து கலந்து 8 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, அரிசி மாவு, ரவை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d3e27e6-951f-4d94-8453-f85f1565b740/26-6aaa8482d3616.webp' /></p><p>அடுத்து ஊறவைத்த ஜவ்வரிசியில் அரைத்த கலவையை சேர்த்து தண்ணீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
</p><p>
இறுதியாக அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் அதில் மாவு சேர்த்து எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சுவையான ஜவ்வரிசி தோசை தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T12:01:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச எல்லையில் இந்திய கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-summons-pak-ship-collides-with-indian-navy-1789548296"></link>
            <id>https://news.lankasri.com/article/india-summons-pak-ship-collides-with-indian-navy-1789548296</id>
            <summary type="text">india summons pakistan envoy for pakistan ship collides with indian navy ship: சர்வதேச எல்லையில் இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>india summons pakistan envoy for pakistan ship collides with indian navy ship: சர்வதேச எல்லையில் இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. </p><h3>

இந்திய கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் போர் கப்பல்</h3><p>

நேற்று மாலை வடக்கு அரபிக்கடலில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்றின் மீது பாகிஸ்தான் கடற்படை கப்பல் ஒன்று மோதலில் ஈடுபட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dd492f0-d455-42cf-bd9a-d5d3b3dc99c2/26-6aaa570a14d69.webp' /></p><p>

சர்வதேச கடல் எல்லையில் நடந்த இந்த மோதல் சம்பவத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. </p><p>

பாகிஸ்தான் தூதர் சாத் அகமது வர்ரைச் டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைத்து, பாகிஸ்தான் கடற்படைப் பிரிவுகளின் "ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற நடத்தை" காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறி இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p> 

இராணுவப் பயிற்சிகள், இராணுவ அணிவகுப்புகள் மற்றும் படை நகர்வுகள் குறித்த முன் அறிவிப்பு வழங்குவது தொடர்பான, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான 1991 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 10வது பிரிவை பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் செயல்பாடு நேரடியாக மீறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. </p><p> 

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, அனைத்து இராணுவப் பிரிவுகளும் உரிய கவனத்துடன் செயல்படவும், இரு தரப்புக்கும் இடையிலான தொடர்புடைய ஒப்பந்தங்களின் விதிகளை மதிக்கவும் வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு பாகிஸ்தானின் தூதருக்கு அறிவுறுத்தப்பட்டது. </p><p>

மேலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் இதேபோன்ற ஒரு கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகப் பொறுப்பாளருக்கும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்தை மோதல் என வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டாலும், இந்திய கப்பலைகளை நோக்கி அதிவேகமாக பாதுகாப்பற்ற முறையில் பாகிஸ்தான் கடற்படை கப்பல் நெருங்கி வந்ததாகவே தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவச் சொத்துக்களுக்கு இடையே நடந்த முதல் மோதல் இதுவாகும்.</p>]]></content>
            <updated>2026-09-16T11:15:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூமியின் உண்மையான எடை.., எத்தனை கோடி கிலோ தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-much-does-earth-weigh-in-tamil-1789556890"></link>
            <id>https://news.lankasri.com/article/how-much-does-earth-weigh-in-tamil-1789556890</id>
            <summary type="text">how-much-does-earth-weigh- நாம் வாழும் பூமியில் சுமார் 800 கோடி மக்கள் மற்றும் 195 நாடுகள் உள்ளன. 

பொதுவாக பூமியின் எடை என்று கூறினாலும், அறிவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>how-much-does-earth-weigh- நாம் வாழும் பூமியில் சுமார் 800 கோடி மக்கள் மற்றும் 195 நாடுகள் உள்ளன. </p><p>

பொதுவாக பூமியின் எடை என்று கூறினாலும், அறிவியல் ரீதியாக பூமியின் நிறையைத்தான் கணக்கிட முடியும்.
</p><p>
நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவைக் குறிக்கும். இடம் மாறினாலும் நிறை மாறாது.</p><p>

எடை என்பது ஒரு பொருளின் மீது செயல்படும் ஈர்ப்பு விசையைப் பொறுத்து மாறுபடும். எனவே, வெவ்வேறு இடங்களில் எடை மாறக்கூடும்.</p><p>

இந்நிலையில், பூமியின் நிறை சுமார் 5.972 × 10²⁴ கிலோகிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b8d3f4-9f3c-4e29-97ed-d10790778fb9/26-6aaa7928813ff.webp' /></p><p>அதாவது சுமார் 13.1 செப்டில்லியன் பவுண்டுகள் ஆகும். இது, தலா 10 பில்லியன் பவுண்டுகள் (4.8 பில்லியன் கிலோகிராம்) எடை கொண்ட எகிப்தின் காஃப்ரே பிரமிட் போன்ற சுமார் 13 குவாட்ரில்லியன் பிரமிடுகளின் எடைக்குச் சமமாகும்.
</p><p>
பூமியின் நிறை மாறாத மதிப்பாகும், ஆனால், பூமியின் எடை என்பது ஈர்ப்பு விசையைப் பொறுத்து மாறுபடும்.&nbsp;</p><p>பூமியின் வளிமண்டலத்தைத் தக்கவைப்பது, கடல் அலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது மற்றும் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதைகளைப் பாதிப்பது போன்றவற்றில் ஈர்ப்பு விசை முக்கியமானதாகும்.
</p><p>
பூமியின் நிறையை அளவிடுவது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் அறிவியல் ஆய்வுகளின் விளைவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2629a30f-7bbb-4bb8-9097-1c017fe0f47a/26-6aaa79294dfd9.webp' /></p><p> 

ஆரம்பகாலத்தில் கோள்களின் இயக்கங்களை ஆய்வு செய்து, நியூட்டனின் ஈர்ப்பியல் விதியைப் பயன்படுத்தி பூமியின் நிறை மதிப்பிடப்பட்டது.&nbsp;</p><p>தற்போது செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதைகள் மற்றும் விண்வெளிப் பொருட்களின் இயக்கங்கள் மூலம் பூமியின் நிறை கணக்கிடப்படுகிறது.
</p><p>
 பூமியின் நிறை பூமியின் ஈர்ப்பு விசை, காலநிலை அமைப்பு, செயற்கைக்கோள்களின் இயக்கம் மற்றும் விண்வெளிப் பயணங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
</p><p>
மேலும், கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் போன்றவற்றை வடிவமைப்பதிலும், அறிவியல் கணக்கீடுகளிலும் பூமியின் நிறை பயன்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T11:11:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காண்டாமிருகங்களைக் கொல்ல குறிவைத்த வேட்டைக்காரர்கள்: அடுத்து நடந்த பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/elephants-attack-on-poachers-targeting-rhinos-1789555012"></link>
            <id>https://news.lankasri.com/article/elephants-attack-on-poachers-targeting-rhinos-1789555012</id>
            <summary type="text">Elephants hide behind trees, stage surprise attack on poachers targeting rhinos: காண்டாமிருகங்களைக் கொல்ல வேட்டைக்காரர்கள் குறிவைத்த நிலையில், திடீரென...</summary>
            <content type="html"><![CDATA[<p>Elephants hide behind trees, stage surprise attack on poachers targeting rhinos: காண்டாமிருகங்களைக் கொல்ல வேட்டைக்காரர்கள் குறிவைத்த நிலையில், திடீரென யானைகள் அவர்களை தாக்கிய ஆச்சரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
</p><p>

தென்னாப்பிரிக்காவில் வனவிலங்குகள் பூங்கா ஒன்றில் நுழைந்த சட்டவிரோத வேட்டைக்காரர்கள் இருவர், காண்டாமிருகங்களை அவற்றின் கொம்புகளுக்காக கொல்ல திட்டமிட்டுள்ளார்கள்.
</p><h3>
குறிவைத்த வேட்டைக்காரர்கள்</h3><p>

தென்னாப்பிரிக்காவிலுள்ள Kruger வனவிலங்குகள் பூங்காவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809c24b7-f79a-4ba2-9330-88fb3b96b9f2/26-6aaa7146377d7.webp' /></p><p>
தண்ணீர் குடிப்பதற்காக குட்டை ஒன்றில் காண்டாமிருகங்கள் திரண்டிருக்க, வேட்டைக்காரர்கள் அந்த காண்டாமிருகங்களை தங்கள் துப்பாக்கியால் குறிவைத்துள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், தங்களுக்குப் பின்னால் யானைக் கூட்டம் ஒன்று மரங்களுக்கு நடுவே மறைந்திருப்பதைக் காணத் தவறிவிட்டார்கள் அந்த வேட்டைக்காரர்கள்.&nbsp;</p><p></p><p>
வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் குறிபார்த்துக்கொண்டிருக்க, திடீரென வேகமாக ஓடிவந்த யானைக் கூட்டம் அவர்கள் இருவரையும் துரத்தத் துவங்கியுள்ளது.
</p><p>
அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட, மற்றவர் காண்டாமிருகம் ஒன்றை சுட்டுள்ளார்.</p><p>

சுடுவதற்காக அவர் நிற்க, அவரை சூழ்ந்துகொண்ட யானைகள் காலால் அவரை மிதித்துக் கொன்றுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0738babc-553b-4859-b4d3-fd197a85eca9/26-6aaa7146e9a8c.webp' /></p><p>
அந்த யானைக்கூட்டம் அங்கிருந்து அகன்றபோது, அங்கு அந்த நபரின் இரத்தம் தோய்ந்த உடைகளும் ஒரு பெரிய இரத்தக்கரையும் மட்டுமே மீதமிருந்ததாக வனவிலங்குகள் பூங்கா ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், அந்த இருவரும் ஏற்கனவே காண்டாமிருகங்களைக் கொல்வதை அந்த யானைகள் பார்த்திருக்கக்கூடும் என்கிறார் பூங்கா செய்தித்தொடர்பாளர்.</p><p>

யானைகள் நல்ல ஞாபக சக்தி உடையவை என்று கூறப்படுவதுண்டு. ஆக, அந்த இருவரும் காண்டாமிருகங்களைக் கொல்ல குறிபார்க்க, அவர்களை அடையாளம் கண்டுகொண்ட இந்த யானைகள், காண்டாமிருகங்களைக் காப்பாற்றுவதற்காக அந்த வேட்டைக்காரர்களைத் தாக்க வந்துள்ளன என்கிறார் அவர்.
</p><p>
அந்த வேட்டைக்காரர்களில் இரண்டாவது நபர் உயிர் தப்பிய நிலையில், பூங்கா அலுவலர்கள் அவரைப் பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளார்கள்.
</p><p>
ஒரு விலங்கினத்தை வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக, மற்றொரு வகை விலங்கினம் துணிந்து இறங்கி செயல்பட்ட இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T10:37:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் பயன்பாட்டிற்கு வந்த ஓட்டுநர் இல்லாத சரக்கு வாகனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-permit-cab-less-autonomous-truck-on-roads-1789554076"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-permit-cab-less-autonomous-truck-on-roads-1789554076</id>
            <summary type="text">germany permits first cab less autonomous truck on roads: ஜேர்மனியில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி சரக்கு வாகனம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஜேர்மனியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>germany permits first cab less autonomous truck on roads: ஜேர்மனியில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி சரக்கு வாகனம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
</p><h3>
ஜேர்மனியில் ஓட்டுநர் இல்லாத சரக்கு வாகனம்</h3><p> 

ஜேர்மனியில் தானியங்கி வாகன நிறுவனமான einride, பல்பொருள் அங்காடி சங்கிலியான lidl உடன் இணைந்து ஓட்டுநர் இல்லாதால் தானியங்கி சரக்கு வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47a7e212-32a0-4d12-864b-ac2ea6952551/26-6aaa6d9d7acf9.webp' /></p><p>

ஜெர்மனியின் கூட்டாட்சி மோட்டார் போக்குவரத்து ஆணையம் (KBA), விரிவான பாதுகாப்புச் சரிபார்ப்பு செயல்முறைக்குப் பிறகு முதல்முறையாக இந்த வகையான அனுமதியை வழங்கியுள்ளது. </p><p>

நிலை 4 ஓட்டுநர் இல்லாத வாகனம் ஒன்று, பெர்லின் சாலைகளில் lidl விநியோக மையத்திற்கும் ஒரு சில்லறை விற்பனைக் கடைக்கும் இடையில் பொருட்களைக் கொண்டு செல்கிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Einride and Lidl Germany have put a cab-less SAE Level 4 truck into daily operation on a German public road, under the first KBA permit of its kind. One shift a day, five days a week, moving real store deliveries. <a href="https://x.com/search?q=%24ENRD&amp;src=ctag&amp;ref_src=twsrc%5Etfw">$ENRD</a> <a href="https://t.co/a9lbbRven9">https://t.co/a9lbbRven9</a> <a href="https://t.co/miQN2IkhFe">pic.twitter.com/miQN2IkhFe</a></p>&mdash; Einride (@einrideofficial) <a href="https://x.com/einrideofficial/status/2099770766346666409?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
வர்த்தக ஓட்டுநர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், விநியோகச் சங்கிலியின் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. </p><p>

லிடிலின் தாய் நிறுவனமான ஷ்வார்ஸ் குழுமம் தனது மற்ற பிரிவுகளிலும் இதனை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-16T10:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் ஸ்மார்ட் லாக்டவுன் திட்டம் - எரிபொருள் விலை உயர்வால் மக்கள் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-plans-smart-lockdown-amid-fuel-crisis-1789553601"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-plans-smart-lockdown-amid-fuel-crisis-1789553601</id>
            <summary type="text">Pakistan Plans Smart Lockdown Amid Fuel Crisis: பாகிஸ்தானில் ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.

ஸ்மார்ட் லாக்டவுன்பாகிஸ்தானில் எரிபொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pakistan Plans Smart Lockdown Amid Fuel Crisis: பாகிஸ்தானில் ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.</p><h2>

ஸ்மார்ட் லாக்டவுன்</h2><p>பாகிஸ்தானில் எரிபொருள் விலை அதிகரிப்பால் மக்களின் வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. இதை சமாளிக்க அரசு ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ என்ற புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d6eb266-1fdf-4499-a939-637c8549c4f8/26-6aaa6bc349278.webp' /></p><p>இந்த திட்டத்தின் கீழ் வாரத்தில் நான்கு நாள் வேலை, அலுவலகங்களில் மாறி மாறி பணியாற்றும் முறைகள், மற்றும் சந்தைகள், வணிக வளாகங்கள் முன்கூட்டியே மூடுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
</p><p>
பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் பல்வேறு யோசனைகள் விவாதிக்கப்பட்டன.</p><p></p><p> தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.384.34, டீசல் விலை ரூ.415.83-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சவுதி அரேபியாவின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல், ஹார்முஸ் நீரிணை மற்றும் பாப்-எல்-மண்டெப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் ஆகியவை உலகளாவிய எண்ணெய் விலையை அதிகரித்துள்ளன. இதனால் பாகிஸ்தானின் எரிசக்தி பாதுகாப்பு சவாலுக்கு உள்ளாகியுள்ளது.</p><p>அரசு, PM’s Fuel Relief Scheme மூலம் மக்களுக்கு சலுகை பெட்ரோல் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், மோட்டார் சைக்கிள் பயணிகள் வாரத்திற்கு 5 லிட்டர், கார் பயணிகள் 10 நாட்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் சலுகை பெட்ரோல் பெறலாம்.
</p><p></p><p>எனினும், அமைச்சரவை உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறினாலும், சிலர் அதனை மறுத்துள்ளனர்.
</p><p>
பாகிஸ்தான் அரசு, தினசரி எரிபொருள் விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாராந்திர முறையை மாற்றி, உலகளாவிய எண்ணெய் விலை மாற்றங்களை உடனுக்குடன் பிரதிபலிக்கிறது.
</p><p>
இந்த நடவடிக்கைகள், எரிபொருள் பயன்பாட்டை குறைத்து, மக்களின் சுமையை ஓரளவு குறைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T10:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-inflation-hits-3-1-pct-as-fuel-prices-surge-1789547265"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-inflation-hits-3-1-pct-as-fuel-prices-surge-1789547265</id>
            <summary type="text">UK inflation hits 3.1 Percent as fuel prices surge: பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பிரித்தானியாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK inflation hits 3.1 Percent as fuel prices surge: பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><h2>

பிரித்தானியாவில் பணவீக்கம்</h2><p>பிரித்தானியாவில் ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 3.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் இது 2.9 சதவீதமாக இருந்த நிலையில், எரிபொருள் விலை கிட்டத்தட்ட 23 சதவீதம் அதிகரித்ததால் பணவீக்கம் மீண்டும் உயர்ந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f57b2d84-45d5-4d49-b2ba-73557d79fea8/26-6aaa530364b09.webp' /></p><p>தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.1 பென்ஸ் உயர்ந்து 161.3 பென்ஸ் ஆகியுள்ளது. டீசல் விலை 14.2 பென்ஸ் உயர்ந்து 181.8 பென்ஸ் ஆகியுள்ளது. </p><p>இதனால் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, குடும்பங்களும் வணிகங்களும் கடுமையான அழுத்தத்தை சந்தித்து வருகின்றன.

மேலும், விமான கட்டணங்களும் 6.2 சதவீதம் உயர்ந்துள்ளன. </p><p>எரிபொருள் விலை உயர்வு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பொருட்களின் விலையையும் அதிகரித்துள்ளது.
</p><p></p><h2>போரின் தாக்கம்</h2><p>மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் தாக்கம் காரணமாக எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 108 டொலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் உலகளாவிய நிதி சந்தைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இங்கிலாந்து வங்கி வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவை எடுக்கத் தயாராகி வருகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம், கடன் வாங்கும் செலவுகள், மற்றும் அரசின் பட்ஜெட் திட்டங்கள் மக்கள் வாழ்வில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.</p><p>
</p><p></p><p>பிரித்தானியாவின் சேன்சலர் ஜான் ஹீலி, மின்சார கட்டண வரி குறைப்பு, பஸ் கட்டணத்தை 2 பவுண்டாக நிர்ணயம் செய்தல், மற்றும் சமூக இடங்களுக்கு வரி சலுகை அளித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் குடும்பங்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
பிரித்தானிய பொருளாதாரம் சவால்களை எதிர்கொண்டு கொண்டிருந்தாலும், அரசு வளர்ச்சியை உறுதியாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T10:05:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் - முகக்கவசம் அணிய அமைச்சர் அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minister-advices-wear-mask-rise-of-dengue-fever-tn-1789551985"></link>
            <id>https://news.lankasri.com/article/minister-advices-wear-mask-rise-of-dengue-fever-tn-1789551985</id>
            <summary type="text">minister advice to wear mask over rise of dengue fever in tamilnadu: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் முகக்கவசம் அண...</summary>
            <content type="html"><![CDATA[<p>minister advice to wear mask over rise of dengue fever in tamilnadu: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். </p><h3> 

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்
</h3><p>
சென்னை மருத்துவக்கல்லூரியில், நடைபெற்ற 192 வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6637bbc-1c88-46fa-ad85-fb3ff7e4a01d/26-6aaa657244f5b.webp' /></p><p>

இதில் பேசிய அவர், தமிழ்நாட்டில் சுவாசத் தொற்று மற்றும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. 

இதனால் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். </p><p>நடப்பாண்டில் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலால் 15,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>

2025 ம் ஆண்டில் 25,585 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவாகி இருந்தது. டெங்குவை கட்டுக்குள் வைக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.</p><p>

தமிழ்நாடு முழுவதும் சுமார் 25,000 க்கும் அதிகமான கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசுப் புழுக்களை கண்டறிந்து, அழிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். </p><p>

காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணியுங்கள்" என கூறியுள்ளார்.&nbsp;</p><p> 

தீவிர காய்ச்சல், தாங்கமுடியாத தலைவலி, கண்வலி, உடல் சோர்வு, வாந்தி, மூட்டு மற்றும் தசைவலி போன்றவை டெங்குவின் பொதுவான அறிகுறிகள் ஆகும். காய்ச்சல் குறைந்த பிறகும் பொதுவாக 3 முதல் 7 நாட்களுக்குள் சிலருக்கு பாதிப்பு தீவிரமடையலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c63d75-e7a1-44cf-980b-aedbc65b2079/26-6aaa6572effb4.webp' /></p><p>
வயிற்று வலி, வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T09:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு கிராம் தங்க விலை எவ்வளவு தெரியுமா? (16-09-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1789551153"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1789551153</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (16-09-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (16-09-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,341,794.00 ஆகும்.</p><p>

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 47,340.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 378,650.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 43,400.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 347,200.00.</p><p>

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 41,430.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 331,400.00.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T09:34:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்ம ராசியில் கேது.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-ketu-peyarchi-1789550232"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-ketu-peyarchi-1789550232</id>
            <summary type="text">நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.

இவர் ஆன்மீக முன்னேற்றம், ஞானம், துறவறம் ஆகியவற்றைக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.
</p><p>
இவர் ஆன்மீக முன்னேற்றம், ஞானம், துறவறம் ஆகியவற்றைக் குறிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது.</p><p>

இந்நிலையில், கேது சமீபத்தில் சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளார். அங்கு அவர் அடுத்த 90 நாட்களுக்கு அதே நிலையில் நிலைத்திருப்பார்.</p><p> 

அந்தவகையில், சிம்ம ராசிக்குள் கேது இருப்பதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.&nbsp;</p><h2>மேஷம்
</h2><ul><li>
சாதகமான பலன்களைத் தரக்கூடும்.
</li><li>நிலுவையில் இருந்த பணப் பரிவர்த்தனைகள் முடிவுக்கு வரும்.
</li><li>முதலீடுகள் மூலம் பணவரவு கிடைக்கும்.
</li><li>ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f260389d-5cab-467a-890f-05d4e53a3d93/26-6aaa5e9a55fca.webp' /></p><p>
</p><h2>
மிதுனம்
</h2><ul><li>
தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
</li><li>வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
</li><li>வியாபாரத்தில் முன்னேற்றமும் நிதி ஆதாயமும் கிடைக்கும்.
</li><li>பொருளாதார நிலை மேம்பட வாய்ப்புள்ளது.
</li><li>முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரக்கூடும்.
</li><li>தன்னம்பிக்கை சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cab8a26-2089-4a1c-a213-46af6ae67b6b/26-6aaa5e9b0d7a8.webp' /></p><p>
</p><h2>
சிம்மம்
</h2><ul><li>
நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
</li><li>தலைமைத்துவப் பண்புகள் வலுப்பெறக்கூடும்.
</li><li>தொழிலில் அங்கீகாரம் கிடைக்கும்.
</li><li>ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
</li><li>நிதி நிலைமை மேம்படும்.
</li><li>வேலைக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளது.</li><li>
திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும்.&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e93697b0-0756-4fa9-bc71-e0835d035db6/26-6aaa5e9bc5687.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T09:18:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபலத்துக்கு உயிர் பயத்தைக் காட்டிய கொள்ளைச் சம்பவம்: ஒரு யூரோ இழப்பீடு வழங்கிய நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/court-award-kim-kardashian-1-euro-for-2016-robbery-1789549958"></link>
            <id>https://news.lankasri.com/article/court-award-kim-kardashian-1-euro-for-2016-robbery-1789549958</id>
            <summary type="text">A Paris court awards Kim Kardashian 1 euro after her 2016 robbery: கிம் கார்டாஷியன் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் சிக்கிய வழக்கில் அவருக்கு பாரீஸ் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>A Paris court awards Kim Kardashian 1 euro after her 2016 robbery: கிம் கார்டாஷியன் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் சிக்கிய வழக்கில் அவருக்கு பாரீஸ் நீதிமன்றம் ஒன்று ஒரு யூரோ இழப்பீடு வழங்கியுள்ளது.
</p><p>

அமெரிக்கத் தொலைக்காட்சிப் பிரபலமான கிம் கார்டாஷியன் என்பவர் 2016ஆம் ஆண்டு பாரீஸில் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
</p><h3>
உயிர் பயத்தைக் காட்டிய கொள்ளைச் சம்பவம்
</h3><p>
2016ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2ஆம் திகதி, முகமூடி அணிந்த எட்டு பேர் கிம் தங்கியிருந்த ஹொட்டல் அறைக்குள் நுழைந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15e64068-86db-430c-ba91-8522e7bec3c2/26-6aaa5d8846b81.webp' /></p><p>
அவர்கள் கிம்மைக் கட்டிப்போட்டு, அவரது வாயில் துணியை அடைத்து அவரிடமிருந்த 6 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்கள்.
</p><p>
அவர்கள் நடந்துகொண்ட விதத்தால் பயந்து நடுங்கிய கிம், தனக்குப் பிள்ளைகள் இருப்பதாக கூறியதுடன், என்ன வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள், என்னை மட்டும் உயிருடன் விட்டுவிடுங்கள் என கெஞ்சியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p></p><p>
அந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். என்றாலும், விசாரணைக்கு முன்பே அவர்கள் சிறையில் நீண்ட காலம் செலவிட்டிருந்ததால், வழக்கு முடிந்தும் அவர்கள் யாரும் சிறைக்குச் செல்லவில்லை.
</p><h3>
ஒரு யூரோ இழப்பீடு</h3><p>

இந்நிலையில், அந்த வழக்கில் கிம்முக்கு பாரீஸ் நீதிமன்றம் ஒன்று ஒரு யூரோ இழப்பீடு வழங்கியுள்ளது.
</p><p>
அதாவது, தங்கள் வழக்கில் தங்களுக்கு நீதி கிடைத்ததே போதும் என்று கிம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தன் வாழ்வில் மிக பயங்கரமான ஒரு சம்பவம் அது என்று குறிப்பிட்டுள்ள கிம், தங்கள் குடும்பத்தின் மீது அது நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்று கூறியுள்ளதுடன், வழக்கில் தங்களுக்கு நிதி கிடைக்க உதவிய பிரான்ஸ் அதிகாரிகளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
தனக்கு ஒரு யூரோ மட்டும் இழப்பீடு வழங்கினால் போதும் என கிம் கேட்டுக்கொண்டதையடுத்தே, அவருக்கு நீதிமன்றம் ஒரு யூரோ இழப்பீடு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-16T09:12:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்ந்துவரும் எரிபொருள் விலைகள்... ஜேர்மன் சேன்ஸலர் அளித்துள்ள உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/merz-promises-relief-plan-fuel-prices-hit-record-1789546520"></link>
            <id>https://news.lankasri.com/article/merz-promises-relief-plan-fuel-prices-hit-record-1789546520</id>
            <summary type="text">German Chancellor promises relief plan soon as pump prices hit record: ஜேர்மனியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துவரும் நிலையில், விரைவில் உதவி வருவதாக உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>German Chancellor promises relief plan soon as pump prices hit record: ஜேர்மனியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துவரும் நிலையில், விரைவில் உதவி வருவதாக உறுதியளித்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.
</p><p>

ஜேர்மன் தலைநகர் பெர்லினில், செப்டம்பர் மாதம் காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை யூரோக்களாகவும் 2.25 டீசல் விலை 2.37 யூரோக்களாகவும் இருந்தது, மதியம் மேலும் அதிகரித்துள்ளது.
</p><h3>
ஜேர்மன் சேன்ஸலர் அளித்துள்ள உறுதி
</h3><p>
இந்நிலையில், எரிபொருள் விலைகள் தொடர்பில் விரைவில் உதவி வருவதாக உறுதியளித்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/990ce9cf-3f5d-4943-97ba-95f1be954a6d/26-6aaa501a4e7d7.webp' /></p><p>
பொதுமக்கள் பலர் தங்கள் அன்றாட தேவைகளுக்காக கார்களை பயன்படுத்திவரும் நிலையில், இதற்கு மேல் எரிபொருளுக்கு செலவு செய்யமுடியாது என்னும் ஒரு நிலையை அவர்கள் எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.
</p><p>
ஆகவே, மக்களுக்கு உதவும் வகையில் விரைவில் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.&nbsp;&nbsp;</p><p></p><p>

அது தொடர்பில் 16 மாகாணங்களுடனும், கூட்டணிக்கட்சிகளுடனும் ஆலோசனைகள் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார் மெர்ஸ். </p><p>என்றாலும், அது என்ன திட்டம் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T08:15:31+00:00</updated>
        </entry>
    </feed>
