<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-14T21:14:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தையை தொடங்கியது அமெரிக்கா: ஜே.டி வான்ஸ் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-starts-direct-talks-with-houthis-1789416325"></link>
            <id>https://news.lankasri.com/article/us-starts-direct-talks-with-houthis-1789416325</id>
            <summary type="text">US Starts Direct Talks with Houthis Following Perim Island Seizure: ஹவுதிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>US Starts Direct Talks with Houthis Following Perim Island Seizure: ஹவுதிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><h2> பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்</h2><p>செங்கடலின் கிழக்கு கடற்கரைக்கு அருகே இராஜதந்திர ரீதியில் முக்கியமாக அமைந்துள்ள பெரிம்(Perim) தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p> இந்த பெரிம் தீவானது முக்கியமான சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து பாதையான பாப் எல்-மண்டப் ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ளது. எனவே இந்த கைப்பற்றல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு முக்கிய ராணுவ பலத்தை பெற்றுத் தந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/524d768d-a419-4f81-ba24-6d97cbda9595/26-6aa853873c11a.webp' /></p><h2> அமெரிக்கா தலையீடு</h2><p>இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் நேரடித் தொடர்புகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது.</p><p> கான்சாஸ் மாகாணத்திற்கு புறப்படுவதற்கு சற்று முன்பு ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடியை அமெரிக்கா தீவிரமாக கையாண்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> அத்துடன் இது தொடர்பாக சவுதி அரேபியா, எமிரேட்ஸ் மற்றும் அப்பகுதியை சுற்றி பாதிக்கப்பட்ட மற்ற தரப்பினருடனும் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-14T20:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI-க்கு எதிரான அபத்தமான சதி! செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஒழுங்குமுறைக்கு டிரம்ப் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966</id>
            <summary type="text">Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2> ஆந்த்ரோபிக் CEO-யின் எச்சரிக்கை</h2><p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி(Dario Amodei) சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.</p><p> செயற்கை நுண்ணறிவுத் துறையின் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் மனித குலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடும் அபாயம் இருப்பதாகவும் டாரியோ அமோடி எச்சரித்து இருந்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We Must Pace the Frontier: I’ve written a new essay on why the AI industry should slow down, with a three-part plan for doing so.<br><br>Anthropic is unilaterally committing to the first of these steps. We’ll provide third-party evaluators with permanent, employee-level access to our…</p>&mdash; Dario Amodei (@DarioAmodei) <a href="https://x.com/DarioAmodei/status/2098773920774074715?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி முன்வைத்த செயற்கை நுண்ணறிவுக்கான கூடுதல் பாதுகாப்பு தேவைகளை ஓபன் ஏஐ(Open AI) நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோரும் அங்கீகரித்து இருந்தனர்.</p><h2> டிரம்பின் நிலைப்பாடு</h2><p>
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> &nbsp;ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி முன்வைத்த கடுமையான தடைகள் தொடர்பான தேவைகள் மற்றும் வாதங்களை டிரம்ப் கடுமையாக நிராகரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a780ac8-aa70-4014-ab6c-4826558b588a/26-6aa84a4fa7e4c.webp' /></p><p> இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட கருத்தில், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி(Sick Conspiracy) என்று தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் அந்த பதிவில், ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி-வை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> குறிப்பாக, டாரியோ அமோடியை கிண்டல் செய்யும் வகையில், “அவர் தன்னை பரிசுத்தமான சிறிய தேவதை போல் காட்டிக் கொள்வதாக” குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T19:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம்! ஒப்புக் கொண்ட உக்ரைன் - ரஷ்யா: டிரம்ப் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-says-ukraine-russia-accept-to-halt-attacks-1789407597"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-says-ukraine-russia-accept-to-halt-attacks-1789407597</id>
            <summary type="text">Trump Says Ukraine and Russia Accept to Halt Attacks: &amp;nbsp;ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம் என்று ரஷ்யாவும்,&amp;nbsp; உக்ரைனும் ஒப்புக் கொண்டதாக டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Says Ukraine and Russia Accept to Halt Attacks: &nbsp;ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம் என்று ரஷ்யாவும்,&nbsp; உக்ரைனும் ஒப்புக் கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2> எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்க மாட்டோம்</h2><p>
உக்ரைனும், ரஷ்யாவின் இனி எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்கிக் கொள்ள மாட்டோம் என்று ஒப்புக் கொண்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>மேலும், உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணம் இல்லை என்றும், உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்து வரும் மோதல்களே காரணம் என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ள டிரம்ப், ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என்று உக்ரைன் தெரிவித்து இருப்பதாகவும், ரஷ்யாவும் அவ்வாறே ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf003e7d-46e1-47fb-b6c8-d5389ae829eb/26-6aa8316ed80fa.webp' /></p><p> மேலும் அதில் உலகின் டீசல் விலை ஏற்றத்திற்கு ரஷ்யா - உக்ரைன் போர் தான் காரணம், ஈரான் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>நேட்டோ ஆதரவை பெறும் உக்ரைன்</h2><p>இதற்கிடையில் உக்ரைனுக்கான ஆதரவை நேட்டோ அதிகரிக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.</p><p> உக்ரைனுக்கு எதிராக மோசமான தாக்குதல்களை ரஷ்யா தொடர்ந்து வருகிறது. இதன்மூலம் மேலும் மேலும் ரஷ்ய பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது.</p><p> உக்ரைனுக்கு நேட்டோ ஆதரவு அளிப்பதை யாராலும் தடுத்துவிட முடியாது என்றும், நேட்டோவின் ஒற்றுமையை சிதைத்து விட முடியும் என்று ரஷ்யா நினைக்கிறது. ஆனால் அது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T19:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சோகம்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-participants-dies-in-great-north-run-1789411762"></link>
            <id>https://news.lankasri.com/article/2-participants-dies-in-great-north-run-1789411762</id>
            <summary type="text">2 Participants Dies in Great North Run: பிரித்தானியாவில் நடைபெற்ற கிரேட் நார்த் ரன் போட்டியில் இரண்டு பங்கேற்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2 Participants Dies in Great North Run: பிரித்தானியாவில் நடைபெற்ற கிரேட் நார்த் ரன் போட்டியில் இரண்டு பங்கேற்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> இருவர் உயிரிழப்பு</h2><p>உலகின் மிகப்பெரிய அரை மாரத்தான் போட்டியாக கருதப்படும் கிரேட் நார்த் ரன்(Great North Run) போட்டியில் இரண்டு பங்கேற்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> நியூகேஸில்(Newcastle) முதல் சவுத் ஷீல்ட்ஸ்(South Shields) வரை நடைபெற்ற 13.1 மைல் தூரப் அரை மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் வடகிழக்கு பகுதியை நேர்ந்த இரண்டு 25 வயது இளைஞர்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d08605f5-3365-44b7-ab06-388ac54e0839/26-6aa841b3aa132.webp' /></p><p> அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட போதிலும் இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக கிரேட் ரன் கம்பெனி அறிவித்துள்ளது.</p><p> உயிரிழப்புக்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கருத்தில் கொண்டு மேற்கண்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற இந்த அரை மாரத்தான் போட்டியில் கிட்டத்தட்ட 63,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.</p><p> மேலும் இந்த ஓட்டப் பந்தயத்தில் மற்றொரு முக்கியமான நிகழ்வாக, இதில் பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ஹாம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.</p><p> இதன் மூலம் இந்த போட்டியில் பங்கேற்ற முதல் பிரித்தானிய பிரதமர் என்ற பெருமையை அவர் ஆண்டி பர்ஹாம் பெற்றுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T18:49:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/abu-dhabi-prince-thanks-indian-car-driver-1789404132"></link>
            <id>https://news.lankasri.com/article/abu-dhabi-prince-thanks-indian-car-driver-1789404132</id>
            <summary type="text">விமானத்தில் ஏற சென்ற அபுதாபி இளவரசர் திடீரென திரும்பி வந்து இந்திய ஓட்டுநருக்கு கைகுலுக்கி பேசி விட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.பிரிக்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமானத்தில் ஏற சென்ற அபுதாபி இளவரசர் திடீரென திரும்பி வந்து இந்திய ஓட்டுநருக்கு கைகுலுக்கி பேசி விட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.</p><h2>பிரிக்ஸ் உச்சி மாநாடு</h2><p>இந்திய தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13ம் திகதிகளில் 18 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது.</p><p> 13 உலகத் தலைவர்களும், 17 தூதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாட்டில் மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை உருவாக்குதல் ஆகியவை முக்கிய கருப்பொருளாக இருந்தது.</p><p></p><p> இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அந்நாட்டின் பட்டத்து இளவரசராக ஷேக் காலித் பங்கேற்றார்.</p><p> உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி முறைப்படி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.</p><h2>அபுதாபி இளவரசரின் வியப்பூட்டிய செயல்</h2><p>இந்நிலையில் மாநாட்டை முடித்து விட்டு தன்னுடைய நாட்டிற்கு செல்வதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பட்டத்து இளவரசர் ஷேக் காலித், புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏறுவதற்காக சென்றார்.</p><p> ஆனால் விமானத்தில் இருந்து திடீரென காரை நோக்கி திரும்பிய பட்டத்து இளவரசர் ஷேக் காலித், தனக்கான காரை ஓட்டி வந்த இந்திய ஓட்டுநரை நோக்கி நடந்து சென்றார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Crown Prince Sheikh Khalid bin Mohammed bin Zayed Al Nahyan<br>of <a href="https://x.com/hashtag/AbuDhabi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AbuDhabi</a>, Upon departing <a href="https://x.com/hashtag/India?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#India</a> and before boarding the plane, turns around and goes to bid farewell to the Indian driver who was with him <a href="https://t.co/oj5Fs6DRJ1">pic.twitter.com/oj5Fs6DRJ1</a></p>&mdash; Siddhant Mishra (@siddhantvm) <a href="https://x.com/siddhantvm/status/2099147010842718433?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அத்துடன் அந்த ஓட்டுநருடன் கை குலுக்கி விட்டு சில வார்த்தைகளைப் பேசிவிட்டு சென்ற மீண்டும் தன்னுடைய விமானத்தில் ஏறிச் சென்றார்.</p><p>இதையடுத்து அபுதாபி இளவரசரின் செயல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஓட்டுநரை அங்கீகரிப்பதற்காக நேரம் ஒதுக்கிய அபுதாபி இளவரசரின் செயலை பாராட்டி வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T16:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-iran-oil-like-venezuela-1789369714"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-iran-oil-like-venezuela-1789369714</id>
            <summary type="text">US could stay in Iran and keep oil, like Venezuela deal: வெனிசுலா ஒப்பந்தத்தைப் போலவே, அமெரிக்கா ஈரானின் எண்ணெயைத் தன்வசம் வைத்துக்கொள்ளக்கூடும்.

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>US could stay in Iran and keep oil, like Venezuela deal: வெனிசுலா ஒப்பந்தத்தைப் போலவே, அமெரிக்கா ஈரானின் எண்ணெயைத் தன்வசம் வைத்துக்கொள்ளக்கூடும்.
</p><p>
அமெரிக்கா ஈரானில் தங்கி அங்கிருக்கும் எண்ணெயைத் தன்வசம் வைத்துக்கொள்ளக்கூடும் என்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>முடிவுக்கு வரும்</h2><p>
</p><p>வெனிசுலாவின் மொத்த எண்ணெய் இருப்புகளில் ஐந்தில் ஒரு பங்கைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியுடன் ஒப்பிட்டுப் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப் இதைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b3b5999-8860-4e4f-ae4e-863b3551683a/26-6aa79d7452b91.webp' /></p><p> </p><p>அயர்லாந்து சென்றிருந்த ட்ரம்ப், ​​ஈரான் தொடர்பான போர் இந்த ஆண்டிலேயே - அநேகமாக நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களுக்குப் பிறகு - முடிவுக்கு வரும் என்று தான் தொடர்ந்து எதிர்பார்ப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார். </p><p>ஐரிஷ் ஓபன் கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டியில் பேசிய ட்ரம்ப், ஈரான் போர் முடிவுக்கு வந்தவுடன் பெட்ரோல் விலை மிக வேகமாகச் சரியும் என்றும் குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><p>மத்திய கிழக்கில் நிலவும் கொந்தளிப்பு எண்ணெய் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது; சவுதி எண்ணெய் குழாய் வழித்தடம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, திங்கட்கிழமையன்று மீண்டும் விலை உயரும் என்று எண்ணெய் வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். </p><p>இதனிடையே, ஈரானுடன் சரியான ஒப்பந்தத்தை மட்டுமே மேற்கொள்வதாகவும், பயனற்ற ஒப்பந்தங்களைச் செய்யப்போவதில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்; அத்துடன் ஈரான் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b530145-e70d-475d-afdc-e764c7607ea8/26-6aa79d75072f1.webp' /></p><p> </p><p>ஆனால், இந்தக் கூற்றை ஈரான் ஏற்கனவே பல முறை மறுத்துள்ளது. 
இருப்பினும், ஈரானுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது என்ற மற்றொரு திட்டத்தையும் ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்தார். </p><p>ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட வெனிசுலாவுடனான அமெரிக்க ஒப்பந்தத்தை இதற்கு அவர் ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டார்.
மேலும், வெனிசுலா போன்றதொரு முடிவுக்கு அமெரிக்கா வராவிட்டால், இறுதியில் (ஈரானிலிருந்து) நாம் வெளியேற்றப்படுவோம் என்று கூறிய ட்ரம்ப், வெனிசுலாவிலிருந்து கிடைக்கும் அமெரிக்க வருவாய் பலமுறை போருக்கான செலவை ஈடுகட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-14T15:52:52+00:00</updated>
        </entry>
    </feed>
