<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-03T10:49:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-police-data-leak-100000-officers-exposed-1785750701"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-police-data-leak-100000-officers-exposed-1785750701</id>
            <summary type="text">UK Police Data Leaked: பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது.பிரித்தானிய காவல்துறையின் சுமார் 1 லட்சம் அத...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>UK Police Data Leaked:</b> பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது.</p><p>பிரித்தானிய காவல்துறையின் சுமார் 1 லட்சம் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் டார்க் வெப்பில் வெளியானது.</p><p></p><p>
</p><p>
Police National Legal Database (PNLD) எனப்படும் முக்கிய சட்ட தரவுத்தளத்தில் நடந்த சைபர் தாக்குதலின் விளைவாக இந்த தகவல் கசிவு ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த தாக்குதலுக்கு ExfilSquad எனப்படும் ஹேக்கர் குழு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதற்கு முன்பு, Department for Education (DfE) தரவுத்தளத்தில் இருந்து 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் கசிந்திருந்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e663574f-6a2b-4bd5-8522-c0a76c87f327/26-6a7064af61833.webp' /></p><p>இந்த சம்பவம், Ministry of Defense, Home Office, National Crime Agency (NCA), Crown Prosecution Service (CPS) போன்ற முக்கிய அமைப்புகளின் தரவுகளும் ஆபத்துக்குள்ளாகியுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.</p><p>

“நான் பல ஆண்டுகளாக குற்றவாளிகளை கைது செய்துள்ளேன். எனது தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருப்பது மிகவும் ஆபத்தானது. இது எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு சவாலை ஏற்படுத்தியுள்ளது” என அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>பணத்திற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
</p><p>
ஹேக்கர்கள், “ஒருமுறை உங்கள் தரவு வெளியானால் அது எப்போதும் இணையத்தில் இருக்கும். வழக்குச் செலவுகளை விட எங்களுக்குக் கட்டணம் செலுத்துவது எளிது” என்று எச்சரித்துள்ளனர்.
</p><p>
பிரித்தானியாவில் தற்போது 1,45,550 காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இந்த தரவுத்தளத்தை பயன்படுத்தியிருப்பதால், இந்த கசிவு மிகப்பெரிய பாதுகாப்பு சவாலாக உள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T09:58:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழு நிமிடங்களில் ரூ. 15 கோடி மதிப்பிலான பிட்காயிணைப் பறிகொடுத்த கனேடியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bitcoin-gone-in-7-minutes-1785751076"></link>
            <id>https://news.lankasri.com/article/bitcoin-gone-in-7-minutes-1785751076</id>
            <summary type="text">கனேடியருக்குச் சொந்தமான 1.6 மில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயின் மாயம்கனேடியத் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ரூ 15 கோடி மதிப்பிலான பிட்காயின்கள் ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனேடியருக்குச் சொந்தமான 1.6 மில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயின் மாயம்</p><p>கனேடியத் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ரூ 15 கோடி மதிப்பிலான பிட்காயின்கள் ஏழே நிமிடங்களில் கொள்ளைப்போன சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>18.25245043 பிட்காயின்</h2><p>
</p><p>Coldcard வன்பொருள் வாலட்களுடன் (hardware wallets) தொடர்புடைய பாதுகாப்பு மீறல் ஒன்று கிரிப்டோகரன்சி சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55740950-3418-44ec-ba7e-97b21364a212/26-6a706626e29c5.webp' /></p><p> </p><p>இதில் சுமார் 1,367.05 பிட்காயின்கள் (BTC) திருடப்பட்டிருக்கலாம் என்று பிளாக்செயின் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பு மீறல் நடத்தியவர்கள், வாலட்டின் 'சீட் ஃப்ரரேஸ்' (seed phrase) உருவாக்கச் செயல்முறையில் இருந்த ஒரு குறைபாட்டைப் பயன்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. </p><p>பலர் தங்களின் பிட்காயின் சேமிப்புகள் கொள்ளையிடப்பட்டுள்ளதை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒருவர் கனடிய தொழில்முனைவோரான ஜொனாதன் குட்மேன்.</p><p></p><p> </p><p>இவருக்குச் சொந்தமான 1.6 மில்லியன் டொலர் மதிப்பிலான 18.25245043 பிட்காயின்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ 15 கோடி என்றே தெரிய வருகிறது. </p><p>குட்மேன் தெரிவிக்கையில், தனக்குச் சொந்தமான பிட்காயின் அனைத்தும் கோல்ட் ஸ்டோரேஜில் சேமிக்கப்பட்டிருந்ததால் அவை பாதுகாக்கப்படுவதாக நம்பியதாக கூறியுள்ளார்.</p><h2>வெறும் ஏழே நிமிடங்களில்</h2><p> </p><p>கோல்ட் ஸ்டோரேஜ் என்பது, பிரைவேட் கீகள் உருவாக்கப்பட்டு, ஒரு ஹார்டுவேர் வாலட்டில் ஆஃப்லைனில் வைக்கப்படும் ஒரு முறையாகும். ஆனால், பாதுகாப்பு மீறல் நடத்தியவர்கள் கோல்ட் ஸ்டோரேஜில் சேமிக்கப்பட்டிருந்ததையும் திருடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f782db4-6ac2-4055-98e4-15519382afbf/26-6a7066279c802.webp' /></p><p> </p><p>மேலும், வெறும் ஏழே நிமிடங்களில் தமக்குச் சொந்தமான பிட்காயின்கள் பறிபோனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட Coldcard சாதனங்களில் 'சீட் ஃபிரேஸ்களை' (seed phrases) உருவாக்கும் குறியீட்டில் உள்ள ஒரு சிக்கலை பாதுகாப்பு மீறல் நடத்தியவர்கள் பயன்படுத்திக்கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>கொள்ளைபோன பிட்காயின்கள் திரும்பக் கிடைக்கும் என்று எதிர்பார்க்காவிட்டாலும், காவல்துறை மற்றும் ஒன்ராறியோ பாதுகாப்பு ஆணையத்திடம் (Ontario Securities Commission) புகாரளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குட்மேன் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T09:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக நாடுகள் பலவற்றின் கவனம் ஈர்த்துவரும் ஜேர்மன் கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-war-ship-attract-peoples-attention-1785750744"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-war-ship-attract-peoples-attention-1785750744</id>
            <summary type="text">ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துவருகிறது.
</p><p>
ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், தற்போது அந்தக் கப்பல் கனடா வந்தடைந்துள்ளது.</p><h3>

கவனம் ஈர்த்துவரும் ஜேர்மன் கப்பல்</h3><p>

கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்திலுள்ள ஹாலிஃபாக்ஸ் நகரம் நிறுவப்பட்டதன் நினைவாக, ஒவ்வோராண்டும், ஆகத்து மாதத்தின் முதல் திங்கட்கிழமையில், Natal Day என்னும் தினம் கொண்டாடப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2193f3bd-f02c-4ede-94af-fc252b69b411/26-6a7064d9cec58.webp' /></p><p>
இந்நிலையில், அன்று விடுமுறை தினம் என்பதால் வார இறுதியில் மக்கள் ஹாலிஃபாக்ஸ் துறைமுகத்தில் குவிந்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அவர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்தும் வகையில், பிரான்ஸ், ஸ்பெயின், பெர்முடா, பல அமெரிக்க நகரங்கள் உட்பட 60 நாடுகளைச் சுற்றிவந்துள்ள Gorch Fock என்னும் ஜேர்மன் கப்பல் ஹாலிஃபாக்ஸை வந்தடைய, மக்கள் அந்தக் கப்பலில் ஏறி அதை பார்வையிட்டுவருகிறார்கள்.
</p><p>
81 மீற்றர் நீளமுள்ள அந்த கப்பலில் 18,000க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் பயிற்சி எடுத்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
இம்முறை, ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி ஜேர்மனியின் Kiel நகரிலிருந்து புறப்பட்ட Gorch Fock கப்பல், தற்போது கனடாவை வந்தடைந்துள்ளது.
</p><p>
இது அக்கப்பல் மேற்கொள்ளும் 189ஆவதும், நீளமானதும் ஆன கடற்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T09:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் போகும் பூச்சி வகைகள்: ஒரு கனேடிய ஆய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canadian-researcher-found-insect-decline-1785748999"></link>
            <id>https://news.lankasri.com/article/canadian-researcher-found-insect-decline-1785748999</id>
            <summary type="text">உலக நாடுகள் பலவற்றில், பல வகை பூச்சிகள் மாயமாகிக்கொண்டே வருகின்றன.
இரவு நேரத்தில் தெரு விளக்குகளின் அருகே வகைவகையான பூச்சிகள் பறப்பதையும், வாகனத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக நாடுகள் பலவற்றில், பல வகை பூச்சிகள் மாயமாகிக்கொண்டே வருகின்றன.</p><p>
இரவு நேரத்தில் தெரு விளக்குகளின் அருகே வகைவகையான பூச்சிகள் பறப்பதையும், வாகனத்தில் செல்லும்போது, பறந்துவரும் பல வகை பூச்சிகள் வாகனங்களின் கண்ணாடியில் மோதுவதையும் கண்ணால் கண்டவர்கள் நாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14ab8c24-0901-4dce-b9e4-75a427d00691/26-6a705e0bc6921.webp' /></p><p>
ஆனால், அந்த பூச்சி வகைகளில் பல இப்போது மாயமாகிவருகின்றன.
</p><h3>
ஒரு கனேடிய ஆய்வு
</h3><p>
கனடாவின் யார்க் பல்கலையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் ஹடில் எல்சயத் (Hadil Elsayed) என்னும் மாணவி, பாதுகாக்கப்பட்ட இரண்டு இடங்களில் பூச்சிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e1ffe71-047e-430d-a156-f0781bbd4d3b/26-6a705e09ba419.webp' /></p><p>
அப்போது, 1990களில் இருந்ததைவிட, பூச்சிகளின் எண்ணிக்கை தற்போது பாதியாகக் குறைந்துள்ளதை அவர் கண்டறிந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c49baa67-3411-462f-8572-bcfb848664cd/26-6a705e0b1a85b.webp' /></p><p>
</p><p>
இந்த கண்டுபிடிப்பு கனடாவில் மட்டுமல்ல, பிரித்தானியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து என பல நாடுகளில் பூச்சிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துவருவது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2b3b9ac-19b5-4846-8ee7-9eb31e903e92/26-6a705e0915b86.webp' /></p><p>
பூச்சிகளைப் பொருத்தவரை, அவை மீன்கள் போன்ற உயிரினங்களுக்கு உணவாக பயன்படுவதுடன், தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும், இறந்த விலங்குகள், தாவரங்கள் மட்குவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.&nbsp;</p><p></p><p>
ஆக, இந்த பூச்சிகள் அழிந்துவருவதால் பிற உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் அதனால் பெரும் பாதிப்பு உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/464326a9-79e0-4a74-a531-eb080e5a331f/26-6a705e0a6b238.webp' /></p><p>
இந்நிலையில், மக்கள் அதிக தாவரங்களை வளர்ப்பது, பூச்சி மருந்துகள் பயன்பாட்டைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளால் பூச்சி இனங்கள் அழிந்துவருவதை தடுக்கலாம் என்கிறார்கள் எல்சயத் முதலான ஆய்வாளர்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T09:23:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய டெஸ்ட் அணியில் இணையும் முதல் காஷ்மீர் வீரர் ஆகிப் நபி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kashmir-auqib-nabi-joins-in-indian-test-team-1785747354"></link>
            <id>https://news.lankasri.com/article/kashmir-auqib-nabi-joins-in-indian-test-team-1785747354</id>
            <summary type="text">இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளஆகிப் நபி அணியில் இடம்பிடித்துள்ள முதல் காஷ்மீர் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் ஆகிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளஆகிப் நபி அணியில் இடம்பிடித்துள்ள முதல் காஷ்மீர் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.</p><h3>

இந்திய டெஸ்ட் அணியில் ஆகிப் நபி
</h3><p>
இந்தியா கிரிக்கெட் அணி, இலங்கை சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் திகதியும், 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதியும் தொடங்க உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf7fed1d-e331-4567-956c-efb724a0e8c9/26-6a70579c088a9.webp' /></p><p>

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ஏற்பட்ட இடது முழங்கால் காயத்திலிருந்து ஜஸ்பிரித் பும்ரா இன்னும் முழுமையாக குணமடையாததால், இந்த தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அவருக்கு பதிலாக அவுகிப் நபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ஜம்மு காஷ்மீரிலிருந்து இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.&nbsp;</p><p></p><p> 

கடந்த 2 ரஞ்சி கிண்ண சீசன்களில் மொத்தம் 104 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகிப் நபி, 2025-26 ரஞ்சி கிண்ண தொடரில் மட்டும் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜம்மு காஷ்மீர் அணி முதல் ரஞ்சி கிண்ண பட்டத்தை வெல்ல முக்கியப் பங்கு வகித்தார்.&nbsp;</p><p>
சமீபத்தில் இலங்கைக்கு சென்ற இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த அவர், 2 முதல் தரப் போட்டிகளில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
</p><p>
2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்டார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T08:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-about-controlling-small-boat-migrants-1785743632"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-about-controlling-small-boat-migrants-1785743632</id>
            <summary type="text">சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுக்கும் பிரித்தானியாவின் நடவடிக்கைகள் தளராது என்கிறார் பிரதமர்.


பிரித்தானியாவின் பிரதமரான ஆன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுக்கும் பிரித்தானியாவின் நடவடிக்கைகள் தளராது என்கிறார் பிரதமர்.</p><p>


பிரித்தானியாவின் பிரதமரான ஆன்டி பர்னாம், சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரை தடுக்க, பிரித்தானிய அரசு தளராமல் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்துள்ளார்.
</p><h3>
பிரித்தானிய பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி
</h3><p>
சட்டவிரோத புலம்பெயர்தலைத் தடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ஆன்டி பர்னாம், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான அணுகுமுறையையே அரசு முழுமையாக மாற்றிக்கொண்டிருப்பதாகவும், ஆட்கடத்தல்காரர்களை கட்டுப்படுத்தும் அதிகாரிகளின் எண்ணிக்கை பிரான்ஸ், பிரித்தானியா என இருதரப்பிலும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbba7ec9-4fa4-4a38-9dcb-a23ee041ba4f/26-6a704911a6a0d.webp' /></p><p>
புலம்பெயர்தல் பிரச்சினையை அரசு கையாள்கிறது என்பதை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள் என்று கூறியுள்ள ஆன்டி பர்னாம், அதே நேரத்தில், பிரித்தானியாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்காக பாதுகாப்பான பாதைகளையும் உருவாக்கவேண்டும் என்றும், அப்படிச் செய்வதால், ஆட்கடத்தல் கும்பல்கள் புலம்பெயர்வோரை நம்பி பணம் பார்க்கும் வாய்ப்பை அது தட்டிப் பறித்துவிடும் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

மேலும், தான் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் விடயத்தை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்க விரும்பவில்லை என்றும், அதை எதிர்கொள்ளவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிரித்தானியாவின் எல்லை, கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது போல் தோன்றுகிறது என்னும் எண்ணம் பொதுமக்களுக்குப் பிடித்தது அல்ல என்று கூறியுள்ள ஆன்டி பர்னாம், நாம் எல்லையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அதே நேரத்தில், உண்மையாகவே ஆதரவு தேவைப்படும் மக்களுக்கு நாம் ஆதரவும் அளிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T08:45:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞர்கள் நடத்திய பார்ட்டி: சுவிஸ் மாகாண விவசாயிகள் புகார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-farmers-complaint-illegal-rave-hits-pastures-1785742635"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-farmers-complaint-illegal-rave-hits-pastures-1785742635</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் புல்வெளியில் நடத்திய பார்ட்டி தொடர்பில் விவசாயிகள் புகார்


சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், இளைஞர்கள் புல்வெளியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் புல்வெளியில் நடத்திய பார்ட்டி தொடர்பில் விவசாயிகள் புகார்</p><p>


சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், இளைஞர்கள் புல்வெளியில் நடத்திய பார்ட்டி தொடர்பில் விவசாயிகள் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.
</p><h3>
விவசாயிகள் புகார்
</h3><p>
வெள்ளிக்கிழமை இரவு, சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடி புல்வெளிகளில் சட்டவிரோதமாக பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d609f150-644a-46ee-8e67-8226468840d7/26-6a70452cd2dc2.webp' /></p><p>
அதைத் தொடர்ந்து பொலிசில் புகாரளிக்கப்பட, பொலிசார் வந்து பார்ட்டி ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பார்ட்டியை ஞாயிற்றுக்கிழமை காலை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஏற்கனவே சுவிஸ் விவசாயிகள் பலர் தங்கள் பசுக்களுக்கு புல் இல்லாததால் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புல்வெளியில் பார்ட்டி நடத்தியதால், புல்வெளி நாசமாகிவிட்டதாகவும், அதனால் தங்கள் பசுக்கள் கோடையில் மேய்வதற்கு புல் இல்லாமல் போய்விட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
சம்பந்தப்பட்ட முனிசிபாலிட்டியும் பார்ட்டி நடத்தியவர்கள் மீது புகாரளித்துள்ள நிலையில், பார்ட்டி ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்தநாள் எண் மூலம் ரூ.9.5 கோடி லொட்டரி வென்ற நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-man-wins-million-dollar-lottery-by-lucky-no-7-1785741620"></link>
            <id>https://news.lankasri.com/article/us-man-wins-million-dollar-lottery-by-lucky-no-7-1785741620</id>
            <summary type="text">தனது பிறந்தநாள் எண் கொண்ட லொட்டரியை வாங்கிய நபர் ரூ.9.5 கோடி பரிசு வென்றுள்ளார்.பிறந்தநாள் எண் மூலம் ரூ.9.5 கோடி லொட்டரி

அமெரிக்காவின் வட கரோலினா க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது பிறந்தநாள் எண் கொண்ட லொட்டரியை வாங்கிய நபர் ரூ.9.5 கோடி பரிசு வென்றுள்ளார்.</p><h3>பிறந்தநாள் எண் மூலம் ரூ.9.5 கோடி லொட்டரி</h3><p>

அமெரிக்காவின் வட கரோலினா கல்வி லொட்டரி, புதிதாக டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட் என்ற லொட்டரியை தொடங்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e86ae45d-84e5-4db5-86ed-8e5b180ce63d/26-6a704135b6cb6.webp' /></p><p>மாண்ட்கோமெரி கவுன்டியில் உள்ள பிஸ்கோவைச் சேர்ந்த தோமஸ் முனோஸ் என்பவர், கேண்டரில் உள்ள சவுத் மெயின் தெருவில் இருக்கும் கேண்டர் வி மார்ட் கடையில் 10 டொலர் மதிப்புள்ள 'டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட்' டிக்கெட்டை பார்த்துள்ளார்.</p><p> 

அவரின் பிறந்த ஆண்டு 1977 மற்றும் பிறந்தநாள் 7 ஆம் திகதி என்பதால் அதனை தனது வாழ்வின் அதிர்ஷ்டமான எண்ணாக கருதி வந்துள்ளார். 

அதனால் இந்த டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட்டை கண்டதும் அதனை உடனே வாங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><p>அந்த கடையில் வைத்தே லொட்டரி டிக்கெட்டை சுரண்டிய அவர், 1 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.9.5 கோடி) முதல் பரிசு வென்றதை நினைத்து சந்தோஷத்தில் குதித்துள்ளார். </p><p>

அதன் பின்னர் முனோஸ் லொட்டரி தலைமையகத்திற்கு சென்ற அவருக்கு பெறுவதற்கு 2 வாய்ப்புகள் வழங்கப்பட்டது.</p><p>

பரிசை 20 ஆண்டுகளுக்கு 50,000 டொலர் தவணையாகவோ அல்லது டொலர் 600,000 மொத்தத் தொகையாகவோ பெறலாம். 

அவர் 600,000 டொலர் மொத்தத் தொகையைத் தேர்ந்தெடுத்து, வரிப் பிடித்தங்களுக்குப் பிறகு, 396,060 டொலரை பெற்றார்.</p><p>

பரிசுப் பணம் குறித்த தனது திட்டங்களைப் பற்றிப் பேசிய முனோஸ், பணத்தின் ஒரு பகுதியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், தனக்குத் தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தோன்றும் பழங்காலக் கார்களைப் புதுப்பிக்க தொடர்ந்து நிதியளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

1 மில்லியன் டொலர் மதிப்புள்ள மூன்று முதல் பரிசுகளுடன் அறிமுகமான டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட் விளையாட்டில் இன்னும் 2 பரிசுகள் வெல்லப்படாமல் உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் ஒருபக்கம்... உச்சம் தொடும் ரஷ்யாவின் உற்பத்தி வளர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-manufacturing-growth-1785740196"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-manufacturing-growth-1785740196</id>
            <summary type="text">உக்ரைனுடனான போர் ஒருபக்கம் நீடிக்கும் நிலையிலும் ஜூலை மாதத்தில் ரஷ்யாவின் உற்பத்தித் துறை மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.வேகமான வளர்ச்சி
உள்நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுடனான போர் ஒருபக்கம் நீடிக்கும் நிலையிலும் ஜூலை மாதத்தில் ரஷ்யாவின் உற்பத்தித் துறை மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.</p><h2>வேகமான வளர்ச்சி</h2><p>
உள்நாட்டுத் தேவை அதிகரித்ததன் விளைவாக உற்பத்தி மற்றும் புதிய ஆர்டர்கள் உயர்ந்ததால், ஜூலை மாதத்தில் ரஷ்யாவின் உற்பத்தித் துறை கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7795f190-350c-4a58-8dae-e78a52b3e379/26-6a703e3f13b98.webp' /></p><p> </p><p>S&amp;P Global நடத்திய ஆய்வின் அடிப்படையில், ரஷ்யாவின் உற்பத்தித் துறைக்கான 'பர்ச்சேசிங் மேனேஜர்ஸ் இன்டெக்ஸ்' (PMI) ஜூன் மாதத்தில் இருந்த 50.3 புள்ளிகளிலிருந்து ஜூலை மாதத்தில் 50.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. </p><p>இதில் 50 புள்ளிகள் என்பது வளர்ச்சி மற்றும் சுருக்க நிலைகளை வேறுபடுத்தும் அளவுகோலாக உள்ளது. ஜூலை மாதத்தில் உற்பத்தி தொடர்ந்து மூன்றாவது மாதமாக அதிகரித்தது; அத்துடன், விரிவாக்கத்தின் வேகம் ஜனவரி 2025-க்குப் பிறகு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. </p><p>புதிய ஒப்பந்தங்களும் தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகரித்ததோடு, மே 2025-க்குப் பிறகு மிக வேகமான விகிதத்தில் உயர்ந்துள்ளன. இருப்பினும், வெளிநாட்டுத் தேவை மந்தமாகவே நீடித்து வருகிறது.</p><p></p><p> </p><p>புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்கள் மீண்டும் கடுமையாகக் குறைந்துள்ளன; அக்டோபர் 2022-க்குப் பிறகு மிக வேகமான சரிவு இதுவாகும். அதேவேளையில், முக்கிய சர்வதேசச் சந்தைகளில் வாடிக்கையாளர் தேவை குறைவாக இருந்ததே வெளிநாடுகளிலிருந்தான விற்பனையைப் பாதித்ததாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. </p><p>மேலும், தாமாகவே வேலையை விட்டுச் சென்றவர்களின் இடங்களை உற்பத்தியாளர்கள் நிரப்பாததால் வேலைவாய்ப்பு மீண்டும் குறைந்தது; இருப்பினும், வேலைவாய்ப்பு குறைப்பு வேகம் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு மிதமானதாக இருந்தது.</p><h2>விலையேற்ற விகிதம்</h2><p> </p><p>நிறுவனங்களிடம் போதுமான உற்பத்தித் திறன் இருந்ததால், தொடர்ந்து 18-வது மாதமாகவும் நிலுவையில் உள்ள பணிகளின் அளவு குறைந்தது.
விலை உயர்வு அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளன. </p><p>எரிபொருள் பற்றாக்குறை, போக்குவரத்துச் சிக்கல்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் விலை உயர்வு ஆகியவற்றால், உள்ளீட்டுச் செலவு பணவீக்கம் ஜனவரி 2026-க்குப் பிறகு மிக வேகமான வளர்ச்சியை எட்டியது; அதேவேளையில், உற்பத்திப் பொருட்களுக்கான விலையேற்ற விகிதம் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f19ca41c-10b4-4b62-8dbb-7ac1a5fa034c/26-6a703e3fd7fc8.webp' /></p><p> </p><p>விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது; இதன்படி, விநியோகஸ்தர்களின் சரக்கு விநியோக நேரம் பிப்ரவரி 2025-க்குப் பிறகு மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. </p><p>வாடிக்கையாளர்களிடையே நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகரித்த போட்டி ஆகிய காரணங்களை நிறுவனங்கள் சுட்டிக்காட்டிய நிலையில், வணிக நம்பிக்கை மே 2020-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T06:54:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு கவலையை உருவாக்கியுள்ள பிரித்தானியாவின் செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-to-strip-some-eu-citizens-residency-rights-1785738989"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-to-strip-some-eu-citizens-residency-rights-1785738989</id>
            <summary type="text">பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள் பலருக்கு, பிரித்தானியாவில் வாழ உரிமையில்லை என்னும் செய்தி அளிக்கப்படலாம்.


ஐரோப்பிய ஒன்றிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள் பலருக்கு, பிரித்தானியாவில் வாழ உரிமையில்லை என்னும் செய்தி அளிக்கப்படலாம்.</p><p>


ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பலர், பல ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.
</p><h3>
ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு...
</h3><p>
முன்னர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்ததும், 2020ஆம் ஆண்டு அது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதும் அனைவரும் அறிந்ததே. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94dc209a-3c50-4cc0-b40e-2655eeccc205/26-6a7036eedd6f5.webp' /></p><p>

இந்நிலையில், பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்களான பலருக்கு, உள்துறை அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
</p><p>
அதில், உங்களுக்கு, ’பிரெக்சிட்டுக்குப் பின் பிரித்தானியாவில் வாழ்வதற்கான உரிமைகள் தவறுதலாக வழங்கப்பட்டுவிட்டது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இவர்கள் பிரெக்சிட்டுக்கு முன்பிருந்தே பிரித்தானியாவில் வாழ்ந்துவருபவர்கள். தங்களது ’pre-settled status’ என்னும் நிலை, ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்துவந்ததைத் தொடர்ந்து ’settled status’ என்னும் நிரந்தர நிலையாக மாறிவிடும் என அவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள்.&nbsp;</p><p></p><p>
ஆனால், அப்படி அவர்கள் நம்பிக்கையுடன் இருந்த நேரத்தில், அவர்களுக்கு ஏற்கனவே பிரித்தானியாவில் வாழ கொடுக்கப்பட்ட உரிமைகள் தவறுதலாக கொடுக்கப்பட்டுவிட்டது என உள்துறை அலுவலகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
</p><p>
தங்கள் வேலை, தங்கள் வங்கிக் கணக்குகள், தங்கள் பிள்ளைகளின் படிப்பு என பல விடயங்களை இந்த கடிதம் மாற்றிவிடக்கூடும் என்பதால் அவர்கள் கவலை அடைந்துள்ளார்கள்.</p><p>

தற்போதைக்கு இப்படி சிலருக்கு கடிதம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஐரோப்பிய ஒன்றியத்தோர் இதே நிலையை எதிர்கொள்ளக்கூடும் என தொண்டு நிறுவனங்கள் கருதுகின்றன.
</p><p>
விடயம் என்னவென்றால், இதே நிலைமையில், 1.3 மில்லியன் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள் பிரித்தானியாவில் வாழ்ந்துவருவதால், அவர்களில் எத்தனை பேர் இப்படி பாதிக்கப்படப்போகிறார்கள் என்பது இப்போதைக்கு தெரியவில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T06:36:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபிஃபா தலைவரின் மறுதேர்தல்... அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ் கால்பந்து சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wales-withdraws-support-for-1785730465"></link>
            <id>https://news.lankasri.com/article/wales-withdraws-support-for-1785730465</id>
            <summary type="text">ஃபிஃபா தலைவருக்கானத் தேர்தலில் மீண்டும் களம் காணும் கியானி இன்ஃபான்டினோவுக்கு அளிக்கப்பட்டிருந்த ஆதரவை வேல்ஸ் கால்பந்து சங்கம் அதிரடியாக விலக்கிக் கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிஃபா தலைவருக்கானத் தேர்தலில் மீண்டும் களம் காணும் கியானி இன்ஃபான்டினோவுக்கு அளிக்கப்பட்டிருந்த ஆதரவை வேல்ஸ் கால்பந்து சங்கம் அதிரடியாக விலக்கிக் கொண்டுள்ளது.</p><h2>அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ்</h2><p> </p><p>
Gianni Infantino-வின் மறுதேர்தலுக்கான ஆதரவை உத்தியோகப்பூர்வமாக விலக்கிக் கொண்ட முதல் கால்பந்து சங்கம் வேல்ஸ் என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d67e77d-4fd1-4c3c-8166-94e8190710cd/26-6a70176248a37.webp' /></p><p>
</p><p>உலகக் கிண்ணம் தொடருக்கானப் பங்குகளை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை அவர் ரகசியமாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உறவினர்களுடன் முன்னெடுத்த நிலையில், இன்ஃபான்டினோவின் தலைமையின் மீதான நம்பிக்கை தகர்ந்தது. </p><p>வேல்ஸ் கால்பந்து சங்கம் தெரிவிக்கையில், 2027-2031-ஆம் ஆண்டுக் காலத்திற்கான ஃபிஃபா (FIFA) தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்காக கியானி இன்ஃபான்டினோவின் வேட்புமனு மீதான ஆதரவை விலக்கிக்கொள்வதை இதன் மூலம் உறுதிப்படுத்துவதாக பதிவு செய்துள்ளது.</p><p></p><p> </p><p>அத்துடன், நல்லாட்சி, செயல்முறை, தலைமைத்துவம், பங்குதாரர் மேலாண்மை, தகவல் தொடர்பு மற்றும் சரியான முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் அண்மையில் ஏற்பட்ட தோல்விகள், உலக கால்பந்து விளையாட்டின் தலைமைப் பொறுப்பில் நீடிப்பதற்கு வேல்ஸ் கால்பந்து சங்கத்தின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் நிலைக்கு நம்மை இன்ஃபான்டினோ இட்டுச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc4d0ee4-6b51-473e-9203-cea43e1488b1/26-6a70176318b45.webp' /></p><p> </p><p>மேலும், கால்பந்தின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தவறுவது, எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தோல்வியாகும் என்றும் குறிப்பிட்டு வேல்ஸ் கால்பந்து சங்கம் தங்களது தலைவரைப் பற்றிய நிலைப்பாடு குறித்து ஃபிஃபாவுக்கு (FIFA) கடிதம் எழுதியுள்ளது.</p><h2>சரிந்த செல்வாக்கு</h2><p> </p><p>அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஸ்பெயினுக்கு உலகக் கிண்ணத்தைக் கையளித்த இரண்டு வாரங்களிலேயே, இன்ஃபான்டினோவின் நற்பெயர் மற்றும் செல்வாக்கு மிக வேகமாகச் சரிந்துள்ளது.
</p><p>உலகக் கிண்ணம் போட்டிகளை விற்பனை செய்வதற்கான திட்டத்திற்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக்கூறச் செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் இன்ஃபான்டினோவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான ஐரோப்பிய கால்பந்து அமைப்பின் ஒருங்கிணைந்த முயற்சியில் வேல்ஸ் (Wales) நாடும் இணைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3afc8731-8289-4f91-8213-302b1652074d/26-6a701763bdee1.webp' /></p><p> </p><p>இதனிடையே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இல்லாமலேயே இன்ஃபான்டினோ பதவியிலிருந்து விலகும் வகையிலான அழுத்தத்தை அதிகரிக்க, வேல்ஸ் கால்பந்து சங்கத்தைத் தொடர்ந்து மேலும் பல சங்கங்களும் இதே பாதையைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> இன்பான்டினோ அடுத்த ஆண்டு மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார், ஆனால் அவரது தலைவர் பதவி தற்போது கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.</p><p> 
ஏற்கனவே, இன்ஃபான்டினோ தனது மறுதேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்கும் 200-க்கும் மேற்பட்ட ஆதரவுக் கடிதங்களை பெற்றிருந்தார். அதில் தற்போது முதல் நாடாக வேல்ஸ் தனது ஆதரவை விலக்கிக் கொண்டு அதிர்ச்சியளித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T06:20:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 காமன்வெல்த் போட்டிகளில் 4வது இடம் பிடித்த இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-secure-4th-place-in-2026-glasgow-cwg-1785737029"></link>
            <id>https://news.lankasri.com/article/india-secure-4th-place-in-2026-glasgow-cwg-1785737029</id>
            <summary type="text">2026 காமன்வெல்த் போட்டிகளில், 39 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது.

2026 காமன்வெல்த் தொடர் 

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடந்த ஜூல...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 காமன்வெல்த் போட்டிகளில், 39 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது.
</p><h3>
2026 காமன்வெல்த் தொடர் </h3><p>

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடந்த ஜூலை 23 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bae307de-cb09-4abb-a300-18a95c48a686/26-6a702f482ef9b.webp' /></p><p>

10 விளையாட்டுகள் இடம்பெற்ற இந்த தொடரில், 70 தங்கம், 45 வெள்ளி, 55 வெண்கலம் என மொத்தம் 170 பதக்கங்களுடன் பதக்கபட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடம் பிடித்தது.&nbsp;</p><p> 

29 தங்கம், 45 வெள்ளி, 36 வெண்கலம் உட்பட 110 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும், 19 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் உட்பட 62 பதக்கங்களுடன் கனடா 3வது இடத்திலும் உள்ளது.&nbsp;</p><p></p><h3> 

4வது இடத்தில் இந்தியா</h3><p> 

இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் பதக்கபட்டியலில் 4வது இடத்தை பிடித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e94e415-f440-4600-8fd7-ff2e72b3ff7c/26-6a702f46cb078.webp' /></p><p>

குத்துசண்டை பிரிவில் மட்டும் இந்தியா 7 தங்கப்பதக்கங்களை வென்றது.&nbsp;</p><p>

2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா அதே 4வது இடத்தை பிடித்திருந்தாலும், 21 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கள் வென்றிருந்தது.</p><p> 

1998 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக 50 பதக்கங்களுக்கு குறைவாக வென்றுள்ளது. </p><p>

கடந்த 2022 காமன்வெல்த் தொடரில் 19 விளையாட்டுகள் இருந்த நிலையில், தற்போது 10 போட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">No Wrestling. <br>No Badminton. <br>No Table Tennis. <br>No Hockey.<br><br>Yet, India managed to finish 4th at the Commonwealth Games 2026. 🇮🇳<br><br>THANK YOU, TEAM INDIA! 🙏 <a href="https://t.co/cY2THFEkVv">pic.twitter.com/cY2THFEkVv</a></p>&mdash; The Khel India (@TheKhelIndia) <a href="https://x.com/TheKhelIndia/status/2083964735754829888?ref_src=twsrc%5Etfw">August 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம், பூப்பந்து, மேசைப்பந்து, கள ஹாக்கி என இந்தியா பதக்கங்களை அள்ளும் விளையாட்டுகள் தொடரில் இருந்து நீக்கப்பட்டது இந்தியாவிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.&nbsp;</p><p>நிறைவு விழாவின் போது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் கொடியையும், சடங்கு ரீதியான தடியையும் இந்தியாவிற்கு முறைப்படி வழங்கப்ட்டது. ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தலைவர் பி.டி. உஷா ஆகியோர் இந்தியா சார்பில் அதனை பெற்றுக்கொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a872fd6-5cc4-4a8d-a14d-f4dfb62b7889/26-6a702f477ca50.webp' /></p><p>

அடுத்த காமன்வெல்த் போட்டிகளை 2030 ஆம் ஆண்டில் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இந்தியா நடத்த உள்ளதால். இதில் அதிகளவிலான பதக்கங்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">𝐈𝐍𝐃𝐈𝐀’𝐒 𝐌𝐎𝐌𝐄𝐍𝐓 𝐇𝐀𝐒 𝐀𝐑𝐑𝐈𝐕𝐄𝐃! 🇮🇳✨<br><br>IOA President PT Usha, Gujarat Deputy CM Harsh Sanghavi, and Neeraj Chopra received the Commonwealth Games Flag.<br><br>India officially takes over as host of the 2030 Commonwealth Games! 🏟️ <a href="https://t.co/rXiT3wyKjt">pic.twitter.com/rXiT3wyKjt</a></p>&mdash; The Khel India (@TheKhelIndia) <a href="https://x.com/TheKhelIndia/status/2084124858561216652?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

முன்னதாக 2010 காமன்வெல்த் போட்டிகள் டெல்லியில் நடைபெற்ற போது, இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்களுடன் 2வது இடம் பிடித்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T06:03:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்தநாள் கொண்டாட்டம்... படுகொலை முயற்சியிலிருந்து தப்பிய புடினின் போர்த் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-war-commander-survives-1785737002"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-war-commander-survives-1785737002</id>
            <summary type="text">ரஷ்ய உணவகம் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததில் புடினின் போர்த் தளபதிகளில் ஒருவர் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய உணவகம் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததில் புடினின் போர்த் தளபதிகளில் ஒருவர் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளார்.</p><h2>பிறந்தநாள் கொண்டாட்டம்</h2><p>
</p><p>குறித்த சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 19 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். கிரெம்ளினிலிருந்து ஒரு மைலுக்கும் சற்று அதிகமான தொலைவில் உள்ள குத்ரின்ஸ்கயா சதுக்கத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/163285dc-b7dc-428d-b911-929adb19365d/26-6a70307bac60b.webp' /></p><p> </p><p>பரிசுப்பொருள் என கூரியர் மூலம் அந்த உணவகத்திற்கு வெடிகுண்டு அனுப்பப்பட்டுள்ளது. ரஷ்ய விண்வெளிப் படைகளின் தலைமைத் தளபதியும் மூத்த போர் தளபதியுமான அலெக்சாண்டர் சாய்கோவின் 55-வது பிறந்தநாள் கொண்டாட்டம் அந்த உணவகத்தில் நடைபெற்றது. </p><p>உள்ளூர் செய்திகளின் அடிப்படையில், அந்தத் தாக்குதலில் தளபதி உயிர் பிழைத்த போதிலும், அவரது மருமகன் கொல்லப்பட்டார் மற்றும் அவரது மகள் பலத்த காயமடைந்தார். </p><p>சுமார் 85,000 பவுண்ட் செலவில் நடைபெற்ற அந்த விருந்து நிகழ்ச்சியில், மாஸ்கோவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், உயர்மட்ட ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><p></p><p> </p><p>வெளியாகியுள்ள தகவலில், வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் மரணமடைந்த இருவரில், முன்னாள் தொழில்முறை ஐஸ் ஹாக்கி வீரரான 27 வயது டேனில் பெரெட்ரியும் (Daniil Peredriy) ஒருவர் எனத் தெரிய வந்துள்ளது. </p><p>அந்த வெடிவிபத்தில், அவரது மனைவியும் சாய்கோவின் மகளுமான 25 வயதுடைய மரியா பெரெட்ரி மூளைக் காயத்திற்கு ஆளானார். கடந்த ஜூன் மாதம் உக்ரைன் நிர்வாகத்தால் போர்க்குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்டவர் தளபதி சாய்கோ. </p><p>இவர் 
ரஷ்யாவில் பல விருதுகளைப் பெற்ற போர் நாயககானக் கொண்டாடப்படும் நபராவார்; மேலும், Tu-95MS ரக விமானங்களைப் பயன்படுத்தி உக்ரைன் மீது நடத்தப்பட்ட கொடூரமான வான்வழித் தாக்குதலுக்குப் பின்னணியில் செயல்பட்டவரும் இவரே.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9136fa6f-fba9-491d-8d97-715fb8af921d/26-6a70307c8c3e3.webp' /></p><p> </p><p>2022-இல் உக்ரைன் மீதான புடினின் ஆரம்பக்கட்டப் படையெடுப்பின்போது, ​​கீவ் நகருக்கு அருகிலுள்ள புச்சாவில் குறைந்தது 450 பேர் கொல்லப்பட்டதோடு, அங்குப் பரவலாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கூட்டுப் பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளை இவரது படைகள் மேற்கொண்டன; அக்காலகட்டத்தில் கீவ் முன்னணியில் ரஷ்யப் படைகளுக்குச் சாய்கோ (Chayko) தலைமை தாங்கினார். </p><p>புச்சா படுகொலை என்பது இமோதலில் ரஷ்யா இழைத்த மிக மோசமான போர்க்குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், இறப்புகள் குறித்த உத்தியோகப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகாத நிலையில், ரஷ்யப் பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய 'சேனல் 112' (Channel 112) வெளியிட்ட தகவல்கள் இந்தக் கொடூரங்களை அம்பலப்படுத்தியுள்ளன.</p><h2>இழைக்கப்பட்ட போர்க்குற்றம்</h2><p> </p><p>இதனிடையே, மாஸ்கோ காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், கிடைத்துள்ள தகவலின்படி, இரவு சுமார் 8.10 மணியளவில் பிரபலமான ஒரு உணவகத்திற்கு அருகே நிகழ்ந்த வெடிவிபத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 15 பேர் பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட காயங்களுடன் தப்பியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். </p><p>இதற்கிடையில், புடினின் மிக இளம் வயது தளபதிகளில் ஒருவரான 39 வயதுடைய டிமிட்ரி மிகைலோவ், போர்க்களத்தில் FPV ட்ரோன் தாக்குதலுக்குள்ளாகி கொல்லப்பட்டதாக உக்ரேனிய தரப்பில் இருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ee4899-7de7-477b-8cf6-886895562887/26-6a70307d3c5d2.webp' /></p><p> </p><p>இசியும் (Izium) பகுதியில் ரஷ்யாவின் கொடூரமான ஆக்கிரமிப்பின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுடன் இவர் தொடர்புடையவர் என்று உக்ரேனிய விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><p>இப்போரில் டசினுக்கும் மேற்பட்ட ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். டிமிட்ரி மிகைலோவுக்கு 36 வயதாக இருந்தபோதே ஜனாதிபதி புடின் அவரை ஜெனரலாக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T06:01:23+00:00</updated>
        </entry>
    </feed>
