<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-11T23:32:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலில் இரட்டை தாக்குதல்: சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்: 6 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/double-strike-on-cargo-vessel-in-red-sea-6-dead-1786488332"></link>
            <id>https://news.lankasri.com/article/double-strike-on-cargo-vessel-in-red-sea-6-dead-1786488332</id>
            <summary type="text">செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இரட்டை தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். சரக்கு கப்பல் மீது தாக்குதல்செவ்வாய்க்கிழமை செங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இரட்டை தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> சரக்கு கப்பல் மீது தாக்குதல்</h2><p>செவ்வாய்க்கிழமை செங்கடலின் பாப் எல்-மந்தேப்(Bab el-Mandeb) நீரிணை பகுதியில் சரக்கு கப்பல் மீது ஈரான் ஆதரவு ஹவுதி படையினர் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.</p><p>ஓமனின் சலாலா நகரிலிருந்து ஜிபூட்டி வழியாக வந்த எகிப்துக்கு நாட்டுக் சொந்தமான திகமா(Tihamah) என்ற சரக்குக் கப்பல் மீது இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த தாக்குதலில் நான்கு கப்பல் ஊழியர்கள் மற்றும் இரண்டு மீட்புப் படை பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a782fd5-9e7a-4de6-8a9d-d69fd97322dd/26-6a7ba60d6bd79.webp' /></p><p> உயிரிழந்தவர்களில் 3 பேர் பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒருவர் இந்தோனேசிய நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.</p><p> இந்த தாக்குதலில் மேலும் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2> இரட்டை தாக்குதல்</h2><p>ஹவுதி படையினரின் இந்த தாக்குதலானது இரண்டு கட்டங்களாக நடைபெற்றுள்ளது, முதலில் சரக்கு கப்பலானது நீரிணையை கடந்து செல்லும் போது ஏவுகணை மற்றும் வெடிமருந்து தாக்கியதில் கப்பலில்&nbsp; தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p> இந்த தாக்குதலின் போதே உயிரிழப்புகள் மற்றும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p>இதனை தொடர்ந்து சேதமடைந்த கப்பலில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது இரண்டாவது முறையாக மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p> இதில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T22:45:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரொனால்டோ - ஜார்ஜினா திருமணம்: 5 குழந்தைகள் முன்னிலையில் கோலாகலமாக நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ronaldo-georgina-wedding-in-portugal-1786484792"></link>
            <id>https://news.lankasri.com/article/ronaldo-georgina-wedding-in-portugal-1786484792</id>
            <summary type="text">போர்ச்சுக்கலில் ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் திருமணம் கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. ரொனால்டோ - ஜார்ஜினா&amp;nbsp;திருமணம்
கால்பந்து உலகின் புகழ்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர்ச்சுக்கலில் ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் திருமணம் கோலாகலமாக நிறைவடைந்துள்ளது.</p><h2> ரொனால்டோ - ஜார்ஜினா&nbsp;திருமணம்</h2><p>
கால்பந்து உலகின் புகழ்பெற்ற ஜாம்பவான் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய நீண்ட நாள் காதலியான&nbsp; ஜார்ஜினா ரோட்ரிக்ஸை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.</p><p> திருமணத்திற்கு பிறகு, தங்களுடைய திருமண மோதிரத்துடன் கூடிய புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்து இந்த மகிழ்ச்சியான திருமண செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90364054-9e2c-4f75-a99b-0545c0c57a85/26-6a7b983b475c3.webp' /></p><h2> போர்ச்சுக்கலில் நடைபெற்ற திருமணம்</h2><p>போர்ச்சுக்கல் நாட்டின் காஸ்காய்ஸ் நகரில் தங்களது 5 குழந்தைகள் சூழ மிகவும் ரகசியமாக இந்த திருமணத்தை ரொனால்டோ - ஜார்ஜினா&nbsp;ஜோடி செய்து கொண்டுள்ளனர்.</p><p> கடந்த ஆண்டு ரொனால்டோ உடன் நடைபெற்ற திருமணம் நிச்சயதார்த்தம் குறித்து ரோட்ரிக்ஸ் கருத்து தெரிவித்து இருந்தார்.</p><p> அதில், “ஆம் நான் சம்மதிக்கிறேன், இந்த மற்றும் அனைத்து பிறவிகளிலும்” என்று மறைமுகமாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.</p><p></p><h2>தசாப்த கால காதல்</h2><p>32 வயது ரோட்ரிக்ஸும், 41 வயது ரொனால்ட்டோவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாட்ரிட் நகரில் சந்தித்துக் கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eec2ea04-947c-47ba-b1d4-f9c4852346d7/26-6a7b983a95b6f.webp' /></p><p> ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய போது, ரோட்ரிக்ஸ் அங்குள்ள Gucci அங்காடியில் விற்பனை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.</p><p> மேலும், ரோட்ரிக்ஸ் மாடலாகவும் தன்னுடைய தனி முத்திரையை பதித்துள்ளார்.</p><p>ரொனால்டோ - ஜியார்ஜினா தம்பதிக்கு கிறிஸ்டியானோ ஜூனியர், ஈவா மரியா, மாட்டீயோ, அலானா, பெல்லா என்ற 5 குழந்தைகள் உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-11T21:46:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதல்: 12 பேர் வரை உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-attacks-ukraine-overnight-12-man-killed-1786480703"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-attacks-ukraine-overnight-12-man-killed-1786480703</id>
            <summary type="text">உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 12 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
நள்ளிரவில் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 12 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்</h2><p>
நள்ளிரவில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 12 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> இந்த தாக்குதலில் வட கொரிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தி இருப்பதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/480030ec-00d6-41f4-b182-0a3a496cbff4/26-6a7b8840ab417.webp' /></p><p> மாஸ்கோ மற்றும் வடகொரியா இடையே ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாகவும், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆயுதங்களையும், வீரர்களையும் வடகொரியா வழங்கி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2>உக்ரைனில் ஏற்பட்ட பாதிப்பு</h2><p>ஜபோரிஜியாவின் தென்கிழக்குப் பகுதியில் நடந்த தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டனர். மற்றும் 19 பேர் வரை காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a65ec2c-4aeb-4b63-b5dc-3f240e8e95f7/26-6a7b88415e679.webp' /></p><p> மேலும் டொனெட்ஸ்க் மற்றும் டனிபரோபெட்ரோவ்ஸ்க் ஆகிய பகுதியில் நடந்த தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> தலைநகர் கீவ் மற்றும் அங்குள்ள தொற்று நோய் மருத்துவமனை ஆகியவை மீதும் நேரடி தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T20:38:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் கோரமான சாலை விபத்து: சிறுமி பரிதாபமாக பலி: மற்றொருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/collision-on-essex-a12-claims-young-1-dead-1786477924"></link>
            <id>https://news.lankasri.com/article/collision-on-essex-a12-claims-young-1-dead-1786477924</id>
            <summary type="text">பிரித்தானியாவின் எசெக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார்.பிரித்தானியாவில் சாலை விபத்துஇங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் எசெக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார்.</p><h2>பிரித்தானியாவில் சாலை விபத்து</h2><p>இங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்தில் உள்ள வடக்கு நோக்கிச் செல்லும் கொல்செஸ்டர் A12 சாலையில் நேற்று நடந்த கோர விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> கார் மற்றும் கனரக லொறி இடையே நடந்த விபத்தில் மற்றொரு குழந்தை ஒன்றும் காயமடைந்து இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> விபத்தை தொடர்ந்து அவசரகால குழுவினரும், விமான மருத்துவக் குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.</p><p> சம்பவ இடத்தில் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27018d39-ed06-4b68-a582-daa4d51f3f40/26-6a7b7d661f63b.webp' /></p><p> காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மற்றொரு சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><h2>காவல்துறை விசாரணை</h2><p>இந்த விபத்து தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று எசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> அதே நேரத்தில் இந்த விபத்து தொடர்பான டேஷ்காம் காட்சிகள் யாரேனும் வைத்திருந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T19:52:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[95 பேருடன் கவிழ்ந்த பயணிகள் படகு: கரீபா ஏரியில் மீட்பு பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vessel-carrying-95-capsizes-in-lake-kariba-1786474142"></link>
            <id>https://news.lankasri.com/article/vessel-carrying-95-capsizes-in-lake-kariba-1786474142</id>
            <summary type="text">ஜிம்பாப்வே நாட்டில் 95 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. 95 பேருடன் கவிழ்ந்த படகு
ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரீபா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிம்பாப்வே நாட்டில் 95 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.</p><h2> 95 பேருடன் கவிழ்ந்த படகு</h2><p>
ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரீபா ஏரியில் 95 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததை அடுத்து மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.</p><p> 90 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் பயணம் செய்த இந்த படகு மாவட்ட மேம்பாட்டு நிதியத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.</p><p> ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு இடையே இந்த கரீபா ஏரி இயற்கையான எல்லையாக விளங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a639961-2f01-4192-b45e-91d2788fc9d1/26-6a7b6ea079801.webp' /></p><p></p><p> மீட்பு பணிகளில் ஜிம்பாப்வே தேசிய காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், இதுவரை விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.</p><p> மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், இது குறித்து முழுமையான தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-11T18:50:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதகுலம் அழிந்து உலகம் ரோபோட்களால் நிறையும்: 4413-ஆம் ஆண்டிலிருந்து வந்த Time Traveler எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/time-traveler-warns-humanitys-end-in-4413-1786459786"></link>
            <id>https://news.lankasri.com/article/time-traveler-warns-humanitys-end-in-4413-1786459786</id>
            <summary type="text">Time traveler claiming to be from the year 4413: பிரித்தானியாவில் 4413-ஆம் ஆண்டிலிருந்து வந்த Time Traveler என ஒருவர் தன்னை கூறுகிறார்.

சமீபத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Time traveler claiming to be from the year 4413: பிரித்தானியாவில் 4413-ஆம் ஆண்டிலிருந்து வந்த Time Traveler என ஒருவர் தன்னை கூறுகிறார்.</b></p><p>

சமீபத்தில் வெளிவந்த ஒரு விசித்திரமான பேட்டி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
லூயிஸ் வாக்கர் (Lewis Walker) என்ற நபர், தன்னை 4413-ஆம் ஆண்டிலிருந்து வந்த “Time Traveler” எனக் கூறியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7f5881-964a-4979-982a-345e2d30441f/26-6a7b368bc19e6.webp' /></p><p>அவரின் கூற்றுப்படி, 1977-இல் பிரித்தானியாவின் Ministry of Defence-இல் பணிபுரிந்தபோது, ரகசியமான Time Machine ஒன்றை சோதிக்க 2,50,000 பவுண்டு வழங்கப்பட்டது.

600 ஆண்டுகள் எதிர்காலத்திற்குச் செல்ல வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர் 4413-ஆம் ஆண்டில் விழித்தெழுந்ததாகக் கூறுகிறார்.</p><p></p><h2>2028-ஆம் ஆண்டிலிருந்து Time Travel பொதுமக்களுக்கு கிடைக்கும்</h2><p>அங்கு அவர் கண்ட காட்சிகள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்ததாகச் சொல்கிறார். வானில் பறக்கும் கார்கள்

ரோபோட்களால் நிரம்பிய தெருக்கள்

மிகக் குறைந்த மனிதர்கள்

அவர் சந்தித்த ஒருவர், 2028-ஆம் ஆண்டிலிருந்து Time Travel பொதுமக்களுக்கு கிடைக்கும் என தெரிவித்ததாகவும் கூறினார்.</p><h2>

எச்சரிக்கை</h2><p>மிகப் பெரிய எச்சரிக்கை

ஆனால், வாக்கர் மிகப் பெரிய எச்சரிக்கையொன்றை வழங்கினார். மனிதர்கள் தொழில்நுட்பத்துடன் இணைந்து, இறுதியில் “மனிதகுலம்” அழிந்து, ரோபோட்கள் மட்டுமே நிறைந்த உலகமாக மாறும் என கூறினார்.
</p><p>
</p><p>இந்தக் கூற்றுகள் உண்மையா, கற்பனையா என்பது தெரியவில்லை. ஆனால், மனிதர்கள் தொழில்நுட்பத்தில் அதிகமாக சார்ந்திருக்கும் எதிர்காலம் குறித்து சிந்திக்க வைக்கும் வகையில் இந்தக் கதை பரவுகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T18:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் துப்பாக்கிச்சூடு: கொலை செய்யப்பட்ட 25 வயது இளைஞர்: 22 வயது இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/london-clapham-shooting-one-dead-one-arrested-1786469343"></link>
            <id>https://news.lankasri.com/article/london-clapham-shooting-one-dead-one-arrested-1786469343</id>
            <summary type="text">லண்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.லண்டனில் துப்பாக்கிச் சூடுதிங்கட்கிழமை இரவு தென்மேற்கு லண்டனில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>லண்டனில் துப்பாக்கிச் சூடு</h2><p>திங்கட்கிழமை இரவு தென்மேற்கு லண்டனில் உள்ள மதுபான சாலைக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 25 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> இரவு 10.00 மணிக்கு கிளப்ஹாம் பகுதியில் உள்ள வில்லிங்டன் சாலையில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.</p><p>பாதிக்கப்பட்ட நபருக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட போதிலும், சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99df3186-a85a-4606-9cb8-0450eea3bd72/26-6a7b607190035.webp' /></p><p></p><h2>கைது நடவடிக்கை</h2><p>
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, 22 வயது மதிக்கத்தக்க மற்றொரு இளைஞர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும் அவர் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் The Landor மதுபானக் சாலைக்கு எதிரே தடயவியல் துறையினர் கூடாரங்கள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="http://உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்." target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T17:48:43+00:00</updated>
        </entry>
    </feed>
