<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-19T06:38:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் சர்ரே பூங்காவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்: இந்திய வம்சாவளி நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-man-arrested-after-surrey-park-assault-1787120962"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-man-arrested-after-surrey-park-assault-1787120962</id>
            <summary type="text">Indian Origin Man arrested after surrey park assault: கனடாவில் இளம்பெண் நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் சம்பவத்தில் இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian Origin Man arrested after surrey park assault: கனடாவில் இளம்பெண் நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் சம்பவத்தில் இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> இந்திய வம்சாவளி நபர் கைது</h2><p>
கனடாவின் சர்ரே நகரில் அமைந்துள்ள பூங்காவில் இளம்பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் தொடர்பாக 40 வயது மதிக்கத்தக்க இந்திய வம்சாவளி நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p> ஜகந்தர் குரானா(Jagendar Kurana) என்று அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேக நபர், சர்ரேவில் உள்ள பியர் கிரீக் பூங்காவில்(Bear Creek Park) இளம்பெண் ஒருவரை தகாத முறையில் தொட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.</p><p> &nbsp;ஆகஸ்ட் 9ம் திகதி இது தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர் மீது பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p> இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எந்தவொரு உடல் காயங்களும் ஏற்படவில்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd926498-4df0-41ec-bc45-83357fa3a959/26-6a854d4395010.webp' /></p><h2>கைது நடவடிக்கை</h2><p>பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், ஆகஸ்ட் 12ம் திகதி ஜகந்தர் குரானா-வை கைது செய்தனர்.</p><p> சந்தேக நபர் மீது போடப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா வழக்கு தொடரகம் அனுமதியளித்துள்ளது.</p><p> கைது செய்யப்பட்ட ஜகந்தர் குரானா தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு ஜாமீன் விசாரணைக்காக காத்திருக்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-19T06:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடீஸ்வரர்களுக்காக பூமிக்கு அடியில் பங்கர்களை உருவாக்கும் சுவிஸ் நாட்டவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/super-rich-building-swiss-bunkers-to-stash-wealth-1787120524"></link>
            <id>https://news.lankasri.com/article/super-rich-building-swiss-bunkers-to-stash-wealth-1787120524</id>
            <summary type="text">Wealthy people are building Swiss bunkers to stash their wealth: செல்வத்தை பதுக்கிவைப்பதற்காக சுவிட்சர்லாந்தில் பதுங்கு குழிகளை உருவாக்கிவருகிறார்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Wealthy people are building Swiss bunkers to stash their wealth: செல்வத்தை பதுக்கிவைப்பதற்காக சுவிட்சர்லாந்தில் பதுங்கு குழிகளை உருவாக்கிவருகிறார்கள் கோடீஸ்வரர்கள்.</p><p>


கோடீஸ்வரர்கள் தங்கள் செல்வத்தைப் பதுக்கி வைப்பதற்காக, ஆல்ப்ஸ் மலையில், பங்கர்கள் என்னும் பதுங்கு குழிகளை உருவாக்கிவருகிறார் சுவிஸ் நாட்டவர் ஒருவர்.
</p><h3>
ஆல்ப்ஸ் மலையில் பங்கர்கள்</h3><p>

சுவிஸ் தொழிலதிபரான தாமஸ் கேஸ்ஸர் (Thomas Gasser) என்பவர், Brünig Mega Safe என்னும் பெயரில், சுவிட்சர்லாந்திலுள்ள Lungern என்னுமிடத்தில், பதுங்கு குழிகளை உருவாக்கிவருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9eed455-caf1-4353-9668-803cc0f629be/26-6a854b8e3352f.webp' /></p><p>உலகிலுள்ள கோடீஸ்வரர்கள், தங்கள் தங்கம், விலையுயர்ந்த கார்கள், விலையுயர்ந்த உயர் தர ஒயின் முதலான தங்கள் சொத்துக்களை பாதுகாத்துவைப்பதற்காக இந்த பதுங்கு குழிகள் உருவாக்கப்பட்டுவருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58a7e8fc-5710-4e1a-9092-803e6f9eda13/26-6a854b8edc9b5.webp' /></p><p>ஆல்ப்ஸ் மலையைக் குடைந்து, சுமார் 100 மீற்றர் ஆழத்தில் 20 பதுங்கு குழிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார் தாமஸ்.&nbsp;</p><p></p><p>
100 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும் இந்த பதுங்கு குழிகளுக்கான கட்டணம், சுமார் ஒரு மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள்!&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a177d0e4-ce11-45f5-9e09-05aead0e98d9/26-6a854b8f8fedd.webp' /></p><p>அத்துடன், யாரும் நினைத்த நேரம் நேரடியாக இந்த பதுங்கு குழிகளுக்குள் சென்றுவிடமுடியாது. கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்பே இந்த பதுங்கு குழிகளை அடையமுடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0882ed41-3b7f-44a5-91f4-d6201bf66c7b/26-6a854b9043a28.webp' /></p><p>பொதுமக்கள் யாரும் அங்கு செல்லமுடியாது. ஏன், ஊடகவியலாளர்களுக்குக் கூட, இந்த பதுங்கு குழிகளின் வாசல் எங்கு உள்ளது என்பது காட்டப்படவில்லை.
</p><p>
சுவிஸ் தேசிய வங்கிக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளதோ, அதற்கு ஈடாக இந்த பதுங்கு குழிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என்கிறார் தாமஸ்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:22:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்: 30 தொழிலாளர்கள் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gold-mine-collapsed-in-central-africa-30-dead-1787112613"></link>
            <id>https://news.lankasri.com/article/gold-mine-collapsed-in-central-africa-30-dead-1787112613</id>
            <summary type="text">Gold mine collapsed in central Africa 30 miners dead: மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Gold mine collapsed in central Africa 30 miners dead: மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2>இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்</h2><p>
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய தங்கச் சுரங்கம் செவ்வாய்க்கிழமையான நேற்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>அத்துடன் பலர் இன்னும் சுரங்கத்துக்குள் சிக்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> சுரங்க இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்த நபர் ஒருவரின் தகவல்படி, நானா மாம்பெரே மாகாணத்தின் அப்பா பகுதியில் இந்த தங்கச் சுரங்கமானது இடிந்து விழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db0937d-8889-464f-bdaf-5baeb39e863b/26-6a852ca6ebe68.webp' /></p><p></p><h2>&nbsp;மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>
இந்நிலையில் சுரங்க இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் அவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என கூறப்படுகிறது.</p><p> சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ காட்சிகள் அப்பகுதியில் ஏற்பட்டு வரும் குழப்பமான மீட்பு பணிகளை பதிவு செய்துள்ளன.</p><p> இதற்கிடையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அரசு செய்தித் தொடர்பாளர் எவரிஸ்ட் என்கமானா அனுதாபம் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் உதவியும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:10:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவ காப்பீடு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்திய முதல்வர் விஜய் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-increased-medical-insurance-to-rs-25lakhs-1787119742"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-increased-medical-insurance-to-rs-25lakhs-1787119742</id>
            <summary type="text">cm vijay increased CMCHIS medical insurance to rs25 lakhs: முதல்வர் விஜய் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். 

முதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay increased CMCHIS medical insurance to rs25 lakhs: முதல்வர் விஜய் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். </p><h3>

முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்</h3><p>

தமிழ்நாடு சட்டமன்றம் தொடங்கியதும் முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். </p><p>

இதில், "முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்(CMCHIS) இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு தற்போது உள்ள ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்" என அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be58324d-022e-46d9-ace2-e7e70a4b3edb/26-6a85487fb75c0.webp' /></p><p> 

நவீன யுகத்தில் நோயும், நோயாளிகளும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சிகிச்சை கட்டணங்களும் லட்சத்தில் உள்ளது. </p><p>

நடுத்தர மக்களுக்கும் அந்த சிகிச்சை கிடைக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1 லட்சத்திற்கு இலவச சிகிச்சை பெற முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. </p><p>

இது முந்தைய ஆட்சி காலங்களில் ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது முதல்வர் அதனை ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

இந்த திட்டத்தில், அறுவை சிகிச்சைகள், மருத்துவ சிகிச்சைகள், பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு காப்பீட்டு வசதி உள்ளது.</p><h3> 

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
</h3><p>
இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

பொதுப் பிரிவில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000 க்கு குறைவாக இருக்க வேண்டும்.
</p><p>
மாற்றுத்திறனாளிகள், கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவுத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள், முதியோர் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சிறப்பு வகை தேவைகள் மூலம் தகுதி பெறலாம்.</p><p> 

தகுதி பெற்றவர்கள் குடும்ப அட்டை, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள CMCHIS அட்டை வழங்கும் மையத்தில் விண்ணப்பிக்கலாம்.</p><p>CMCHIS திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பட்டியலை cmchistn அதிகாரப்பூர்வ தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:09:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெறும் ரூ.10: புரதச்சத்து நிறைந்த சூப்பர் உணவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/protein-rich-foods-at-low-cost-1787117510"></link>
            <id>https://news.lankasri.com/article/protein-rich-foods-at-low-cost-1787117510</id>
            <summary type="text">Protein Rich Foods: நோயற்ற வாழ்வுக்கு ஆரோக்கியமான உணவும், சீரான உடற்பயிற்சியும் அவசியம், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் தசைகளின் வளர்ச்சிக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Protein Rich Foods: நோயற்ற வாழ்வுக்கு ஆரோக்கியமான உணவும், சீரான உடற்பயிற்சியும் அவசியம், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் தசைகளின் வளர்ச்சிக்கும் புரதம் அவசியமாகிறது, இந்த பதிவில் மிக குறைவான விலையில் கிடைக்கும் புரதச்சத்து நிறைந்த 6 உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
</p><h2>
வறுத்த கொண்டைக்கடலை
</h2><p>
புரதம் நிறைந்த ஆகச்சிறந்த உணவு வறுத்த கொண்டைக்கடலை, விலையும் மிக குறைவானது.

இரும்புச்சத்து, தாதுக்கள் நிறைந்த கொண்டைக்கடலை வயிறு நிறைந்த உணர்வை தருவதால் உடல் எடையை குறைப்பதிலும் உகந்தது.

இரத்தத்தில் சர்க்கரை அளவை மிக மெதுவாக அதிகரிப்பதால் சர்க்கரை அளவை சீராக வைப்பதுடன் உடனடி ஆற்றலை தருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c06ddb5-5f05-4ac1-94f0-1bf622a20e4b/26-6a85434363318.webp' /><br></p><p>
</p><h2>
அவித்த முட்டைகள்
</h2><p>
கால்சியம், விட்டமின் டி மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய அமிலங்கள் நிறைந்த அவித்த முட்டைகள் விலை குறைவான அதேசமயம் சிறந்த புரத மூலமாகும்.

கலோரிகள் குறைவானது, நீண்டநேரம் வயிறு நிறைந்த உணர்வை தருவதால் பசியை கட்டுப்படுத்துகிறது, எலும்புகளை பலப்படுத்துகிறது.
</p><h2>
வேர்க்கடலை
</h2><p>
நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு சத்து, விட்டமின் ஈ நிறைந்துள்ளதால் இதயத்தை பலப்படுத்துகிறது, உடனடி ஆற்றலை தருகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது.

இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவதால் ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படுகிறது, அவித்து கேரட், வெங்காயம், தக்காளி சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caabb8e3-536e-424e-a176-b0032707a170/26-6a854344148c3.webp' /><br></p><p>
</p><h2>
முளைக்கட்டிய தானியங்கள்
</h2><p>
புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த, சத்தான மற்றும் குறைந்த செலவிலான உணவாகும். 

இவற்றுடன் துருவிய காய்கறிகள் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கப்பெறும்.</p><p>
</p><h2>
தயிர்
</h2><p>
தயிர் மற்றும் Greek Yogurt ஆகியவை செரிமானத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் துணைபுரியும், மலிவு விலையிலான மற்றும் புரதச்சத்து நிறைந்த தேர்வுகளாகும். அலுவலகத்தில் வயிறு நிரம்பும் சிற்றுண்டியாக இவற்றை பழங்கள் அல்லது கொட்டைகளுடன் சேர்த்து உண்ணலாம்.</p><h2>பன்னீர்
</h2><p>பாலில் இருந்து கிடைக்கப்பெறும் சைவ புரத மூலம் பன்னீர் ஆகும், கால்சியமும் நிறைந்திருப்பதால் எலும்புகள் வலுப்பெறும். இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் இதயத்தின் செயல்பாட்டை சீராக வைக்கிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d1692b-f466-4806-a81c-5c40f5254347/26-6a854344bfdc8.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-19T05:46:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் மைதானத்தில் கிடந்த இளைஞர் சடலம்: கால்பந்து கிளப் அளித்துள்ள விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-body-found-at-uk-charlton-athletic-stadium-1787117486"></link>
            <id>https://news.lankasri.com/article/man-body-found-at-uk-charlton-athletic-stadium-1787117486</id>
            <summary type="text">Man body found at uk Charlton Athletic Stadium: பிரித்தானியாவின் சார்ல்டன் அத்லெடிக் கால்பந்து மைதானத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு இருப்பது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man body found at uk Charlton Athletic Stadium: பிரித்தானியாவின் சார்ல்டன் அத்லெடிக் கால்பந்து மைதானத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> கால்பந்து மைதானத்தில் மீட்கப்பட்ட சடலம்</h2><p>பிரித்தானியாவில் சாம்பியன்ஷிப் கால்பந்து கிளப்பின் சார்ல்டன் அத்லெடிக்(Charlton Athletic) அணிக்கு சொந்தமான தி வாலி(The Valley) மைதானத்தில் 33 வயதுடைய இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> ஃப்ளாய்ட்(Floyd) சாலையில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் மனிதர் ஒருவரின் நலம் தொடர்பான கவலை குறித்து அவசர சேவையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/601d606d-041a-47b5-8fe8-e91ce9fd3268/26-6a853fafd4d9a.webp' /></p><p> அப்போது 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மைதானத்தில் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.</p><p> இதையடுத்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2> தீவிர விசாரணை</h2><p>இளைஞரின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f5913d3-1694-4fb5-80f3-f25bd36c9c03/26-6a853fb089735.webp' /></p><p> மேலும் உயிரிழந்த நபர் உயரமான இடத்தில் இருந்து விழுந்ததே அவரது உயிரிழப்புக்கு காரணமாக என்றும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.</p><p> இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கால்பந்து கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p> இந்த சம்பவத்தில் கிளப் தரப்பில் எந்தவொரு தவறும் இல்லை என்றும் விளக்கியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-19T05:31:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் காவலில் உயிரிழந்த வெளிநாட்டவர்: பரபரப்பு பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/foreigner-dies-hours-after-rpf-detention-in-surat-1787115532"></link>
            <id>https://news.lankasri.com/article/foreigner-dies-hours-after-rpf-detention-in-surat-1787115532</id>
            <summary type="text">Foreigner dies in detention; வெளிநாட்டவர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்தார்.


இந்தியாவில் வெளிநாட்டவர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்த விடயம் பரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Foreigner dies in detention; வெளிநாட்டவர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்தார்.
</p><p>

இந்தியாவில் வெளிநாட்டவர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p>
இந்தியாவின் மும்பையிலிருந்து டெல்லி செல்லும் ரயில் ஒன்றில், 45 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவர் ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்திருக்கிறார்.</p><h3>

வாக்குவாதமும் கைதும்
</h3><p>
பயணத்தின்போது அந்த வெளிநாட்டவருக்கும் சக பயணிகளுக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8c8ab61-48ca-4928-9943-87f27aa302f5/26-6a85380e34506.webp' /></p><p>
தகவலறிந்த ரயில்வே பாதுகாப்பு பொலிசார் அங்கு வந்து அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.
</p><p>
ஆனால், அவர் சமாதானமாகவில்லையாம், மேலும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளத் துவங்கினாராம்.
</p><p>
ஒரு கட்டத்தில், தீயணைப்பு இயந்திரத்தை எடுத்து பயணிகள் மீது அவர் ஸ்பிரே செய்ய, ரயில் பெட்டியில் பதற்றம் உருவாகியுள்ளது. சில பயணிகள் அவரைத் தாக்கியுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
பிரச்சினை வலுப்பதைக் கண்ட பொலிசார், அவரை சூரத் ரயில் நிலையத்தில் இறக்கி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
</p><p>
அவரிடம் பொலிசார் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே அந்த வெளிநாட்டவர் மயங்கிச் சரிந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவரிடம் பாஸ்போர்ட், விசா என எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில், அவர் யார், எந்த நாட்டவர் என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஒருபக்கம் பொலிசார் இறங்க, அவர் எதனால் திடீரென உயிரிழந்தார் என்பதை அறியும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T05:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி பேச்சுக்கு இடமில்லை: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-has-no-plans-to-talk-with-iran-1787110980"></link>
            <id>https://news.lankasri.com/article/us-has-no-plans-to-talk-with-iran-1787110980</id>
            <summary type="text">Us has no plans to talk with iran: ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்தவொரு திட்டமும் தற்போது அமெரிக்காவிடம் இல்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Us has no plans to talk with iran: ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்தவொரு திட்டமும் தற்போது அமெரிக்காவிடம் இல்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h3> தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தை</h3><p>அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய பேச்சுவார்த்தை குழுவிடம் முக்கிய சில விடயங்களை அறிவுறுத்தி இருப்பதாக&nbsp; அல் ஜசீரா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p> அதில், ஈரான் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு தயாராகும் வரை எந்தவொரு பேச்சுவார்த்தையும் அமெரிக்க தரப்பில் இருந்து முன்னெடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e1cafc0-cb90-4544-aa02-03ed4606b213/26-6a8526467ea01.webp' /></p><p> பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மேற்கொண்டு முன் செல்வதற்கு காத்திருக்குமாறு டிரம்ப் அறிவுறுத்தி இருப்பதாக அதிகாரி ஒருவர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.</p><h2> இருதரப்பு பதில்கள்</h2><p>
சமீபத்தில் டிரம்ப் வெளியிட்ட கருத்தில், ஈரானுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையோ அல்லது உரையாடல்களோ நடைபெறவில்லை. மேலும் ஹார்முஸில் அமெரிக்க கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்வதாகவும், ஹார்மூஸ் நீரிணை திறந்த நிலையில் இயங்குவதாகும் தெரிவித்துள்ளார்.</p><p> ஆனால் ஹார்முஸ் முற்றுகையை நீக்குதல், ஈரானிய எண்ணெய் மீதான தடையை நீக்குதல், வெளிநாடுகளில் உள்ள ஈரானிய சொத்துகளை விடுவித்தல் ஆகிய 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹார்முஸ் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.</p><p> அமெரிக்கா தன்னுடைய வாக்குறுதிகளை மீறினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-19T04:05:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் அனைத்து வர்த்தக, நிதி தொடர்புகளை நிறுத்திய UAE]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uae-halts-trade-with-iran-after-missile-strike-1787100796"></link>
            <id>https://news.lankasri.com/article/uae-halts-trade-with-iran-after-missile-strike-1787100796</id>
            <summary type="text">UAE halts trade with Iran: ஈரானுடன் அனைத்து தொடர்புகளையும் அமீரகம் நிறுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது வெளிநாட்டு அமைச்சகத்தின் அறிவிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE halts trade with Iran: ஈரானுடன் அனைத்து தொடர்புகளையும் அமீரகம் நிறுத்தியுள்ளது.
</p><p>
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது வெளிநாட்டு அமைச்சகத்தின் அறிவிப்பின் மூலம், ஈரானுடன் உள்ள அனைத்து வர்த்தக மற்றும் நிதி பரிவர்த்தனைகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
</p><p>
இந்த முடிவு, சமீபத்தில் ஈரான் UAE மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbbc4839-5dfa-42e6-925d-bdda8f36770b/26-6a84fe7f3e50c.webp' /></p><p>UAE வெளிநாட்டு அமைச்சக தகவல் தொடர்பு இயக்குநர் அஃப்ரா அல் ஹமேலி, “பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பதற்ற நிலை காரணமாக, ஈரானுடன் உள்ள அனைத்து வர்த்தக, வணிக மற்றும் நிதி பரிமாற்றங்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு மற்றும் அரசியல் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது.</p><p></p><p>UAE, ஈரானுடன் நீண்டகாலமாக வணிக மற்றும் நிதி தொடர்புகளை பேணி வந்த நாடாகும். குறிப்பாக, எண்ணெய், எரிவாயு, துறைமுக வணிகம் மற்றும் வங்கித் துறைகளில் இரு நாடுகளும் பரிமாற்றங்களை மேற்கொண்டு வந்தன.
</p><p>
ஆனால், சமீபத்திய ஏவுகணை சம்பவம் UAE-க்கு நேரடி அச்சுறுத்தலாக கருதப்பட்டதால், இந்த கடுமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

சர்வதேச அரசியல் வல்லுநர்கள், “இந்த முடிவு, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும். UAE-இன் இந்த நடவடிக்கை, அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெறும்” எனக் கூறுகின்றனர்.
</p><p>
இந்நிலையில், ஈரான் தனது நடவடிக்கைகள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியிடவில்லை.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T00:50:45+00:00</updated>
        </entry>
    </feed>
