<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-06T21:03:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் மீது பலமுனை தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-plans-multi-front-attack-on-israel-reported-1788717919"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-plans-multi-front-attack-on-israel-reported-1788717919</id>
            <summary type="text">Iran plans multi-front attack on Israel: இஸ்ரேலை குறிவைத்து பல திசைகளில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.

ஈரான் ஆதரவு படைகள் இணைந்து பலமுனை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran plans multi-front attack on Israel: இஸ்ரேலை குறிவைத்து பல திசைகளில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.</p><p>
</p><h2>
ஈரான் ஆதரவு படைகள் இணைந்து பலமுனை தாக்குதல்</h2><p>இஸ்ரேலை எதிர்த்து ஈரான், ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹவுதிகள் மற்றும் ஈராக் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு படைகள் இணைந்து ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c7a55c5-71ad-472a-aea1-323a15350347/26-6a9dac02da52b.webp' /></p><p>இந்தத் திட்டம், 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலை ஒத்ததாக இருக்கும் என ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
</p><p>
அந்த தாக்குதலில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஹமாஸ் மற்றும் பல பாலஸ்தீனக் குழுக்கள் நிலம், வானம், கடல் வழியாக இஸ்ரேல் எல்லையை உடைத்து, இராணுவத் தளங்கள், நகரங்கள் மற்றும் இசை விழாவை தாக்கியிருந்தனர்.</p><p>
</p><p></p><p>தற்போது, ஈரான் “Axis of Resistance” எனப்படும் கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி செய்து வருகிறது. இது இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற பிராந்திய எதிரிகளை எதிர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட கூட்டணி ஆகும்.</p><p> ஹமாஸ் புதிய தலைவர் கலீல் அல்-ஹையா, ஈரானுடன் நெருங்கிய உறவை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா சமீப வாரங்களில் ஈரான் உதவியுடன் தங்களது நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதனால், பல திசைகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
</p><p></p><p>இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 2025 அக்டோபரில் நிறுத்தப்பட்ட போர்நிறுத்தம் பலமுறை மீறப்பட்டு வருகிறது. இஸ்ரேல் இன்னும் காசா பகுதியின் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ள நிலையில், புதிய தாக்குதல் திட்டம் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T20:08:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனி மீண்டும் போரை விரும்புகிறது - ரஷ்யா குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-says-germany-wants-war-again-1788725483"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-says-germany-wants-war-again-1788725483</id>
            <summary type="text">Russia says Germany wants war again: ஜேர்மனி மீண்டும் போரை விரும்புகிறது என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

ஜேர்மனி மீது&amp;nbsp;ரஷ்யா குற்றச்சாட்டுஜேர்மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia says Germany wants war again: ஜேர்மனி மீண்டும் போரை விரும்புகிறது என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.</p><h2>

ஜேர்மனி மீது&nbsp;ரஷ்யா குற்றச்சாட்டு</h2><p>ஜேர்மனி மீது ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p><p>

லீப்சிக் விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா காரணம் என ஜேர்மனி கூறியதை அவர் முற்றிலும் நிராகரித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edba20a5-6c87-45e3-9002-2a25acfb0144/26-6a9dc8ed4fad7.webp' /></p><p>ஜேர்மனி, ரஷ்யா கீழ்மட்ட முகவர்கள் மூலம் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டியது. </p><p>இதனை “ஹைப்ரிட் தாக்குதல்” எனக் கூறி, பெர்லின் ரஷ்ய கலாச்சார மையத்தை மூடியது. அதேபோல், ரஷ்யாவும் ஜேர்மனியின் கலாச்சார மையங்களை மூடியது.</p><p>

“இது உண்மையான போரின் தொடக்கம். இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய நிலைமை போல, ஜேர்மனி மீண்டும் போரை விரும்புகிறது” என லாவ்ரோவ் கூறியுள்ளார். மேலும், ஜேர்மனியை “நாசிசம்” என குற்றம் சாட்டி, “ரஷ்யா தேவையான முடிவுகளை எடுக்கும்” என எச்சரித்த்துள்ளார்.</p><p></p><p>ஜேர்மனி தற்போது உக்ரைனின் முக்கிய கூட்டாளியாக இருப்பதால், இந்த குற்றச்சாட்டுகள் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா-ஜேர்மனி உறவு மோசமடைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்ய தூதர்களை அழைத்து விளக்கம் கேட்டுள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T20:08:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பதின்பருவ மாணவியிடம் தகாத முறையில் பேசிய ஆசிரியர்: வாழ்நாள் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/essex-teacher-duhig-banned-life-time-teaching-1788701428"></link>
            <id>https://news.lankasri.com/article/essex-teacher-duhig-banned-life-time-teaching-1788701428</id>
            <summary type="text">Essex teacher duhig banned life time teaching: பிரித்தானியாவில் மாணவியிடம் தகாத முறையில் பேசியஆசிரியருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Essex teacher duhig banned life time teaching: பிரித்தானியாவில் மாணவியிடம் தகாத முறையில் பேசியஆசிரியருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரித்தானியாவில் ஆசிரியர் ஒருவர், மாணவியுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புவதாக கூறியதற்காக, அவரது பணியில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார்.&nbsp;</p><h2>டேட்டிங் செயலி மூலம்&nbsp;</h2><p>

பிரித்தானியாவின் Dagenham-யில் உள்ள Godwin தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் டேனியல் டுஹிக் (29).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e0dc8ea-bfb0-4a92-b25c-e1e35c9f479f/26-6a9d6bd0cc983.webp' />&nbsp;</p><p></p><p> 

எசெக்ஸின் ஹார்ன்சர்ச் பகுதியைச் சேர்ந்த இவர், 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான டேட்டிங் செயலி மூலம் 16 வயதுக்கும் குறைவான சிறுமி ஒருவரிடம் பேசியுள்ளார். </p><p>

கடந்த 2023 டிசம்பர் மாதம் குறித்த சிறுமிக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை டுஹிக் அனுப்பியிருக்கிறார். அதில் பள்ளி மாணவியான அந்த சிறுமியிடம் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புவதாக டுஹிக் கூறியிருக்கிறார்.</p><p> 

அதனைத் தொடர்ந்து எழுந்த புகாரினையடுத்து டேனியில் டுஹிக் 2024-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். 

பின்னர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், பாதிக்கப்பட்டவர் ஒரு சிறுமி என்று தனக்கு தெரியாது என்று வாதிட்டார்.</p><p> 

என்றாலும், ஒரு சிறுமியுடன் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக டேனியல் தண்டிக்கப்பட்டார். 

பணியில் இருந்து நீக்கப்பட்ட டேனியல், தனது தொழில் வாழ்க்கையைத் தொடர மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு பள்ளியிடம் கோரினார்.
</p><h2>
 கற்பித்தல் பணியில் ஈடுபட தடை </h2><p>இதற்கிடையில் ஆசிரியருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அது 18 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அத்துடன் அவர் மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபடவும், 100 மணிநேரம் ஊதியமில்லா சமூக பணியை செய்யவும் உத்தரவிடப்பட்டது. </p><p>

மேலும், பாதிக்கப்பட்டவருக்கு 154 பவுண்டுகள் மற்றும் அரசுத் தரப்பு வழக்கு செலவுகளுக்காக 85 பவுண்டுகளை அவர் செலுத்த வேண்டியிருந்தது; அத்துடன் அவர் ஏழு ஆண்டுகளுக்கு 'பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில்' சேர்க்கப்பட்டார். </p><p>

இந்த நிலையில், லண்டனின் Redbridge பகுதியில் Learning Support Assistant ஆக முன்பு பணியாற்றிய டுஹிக், ஒரு தீர்ப்பாயத்தின் விசாரணையில் வாழ்நாள் முழுவதும் கற்பித்தல் பணியில் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
ஆசிரியர் ஒழுங்குமுறைக் குழு, டேனியல் டுஹிக் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களை செய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று கண்டறிந்தது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cf07ae8-e694-45b6-a4c0-8792e52510d6/26-6a9d6bd1bffe6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T17:03:09+00:00</updated>
        </entry>
    </feed>
