<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-22T04:47:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/6-cholesterol-symptoms-we-shouldnt-ignore-1787128985"></link>
            <id>https://news.lankasri.com/article/6-cholesterol-symptoms-we-shouldnt-ignore-1787128985</id>
            <summary type="text">கொலஸ்ட்ரால் நம் உடலில் அதிகமாக இருக்கின்ற பொழுது நம் தோல்களில் சில மாற்றங்கள் வரலாம் என்றும் அதற்கான ஆறு முக்கியமான அறிகுறிகளை பற்றியும் பார்ப்போம்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலஸ்ட்ரால் நம் உடலில் அதிகமாக இருக்கின்ற பொழுது நம் தோல்களில் சில மாற்றங்கள் வரலாம் என்றும் அதற்கான ஆறு முக்கியமான அறிகுறிகளை பற்றியும் பார்ப்போம்.

 பொதுவாகவே, ஆரம்ப காலகட்டங்களில் ரத்த கொதிப்பு அதிகரிக்கின்ற பொழுது நமக்கு எந்த ஒரு பிரச்சனைகளும் வருவதில்லை. </p><p>அதாவது கடுமையான வலியோ அல்லது உபாதைகளோ ஏற்படாது. அதனால்தான் இதனை மருத்துவர்கள் சைலன்ட் கில்லர் என்று சொல்கின்றனர். அமெரிக்கா இதய சங்கத்தின் கூற்றுப்படி ரத்தத்தில் உள்ள கொழுப்பை கண்டறிவதற்கு நாம் பரிசோதனை செய்வது மட்டுமே முதன்மையானது என்று சொல்கிறார்கள். </p><p>

இருப்பினும், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடுகள்&nbsp;மிக தீவிரமாக அதிகரிக்கின்ற பொழுது கண்கள் தோல் மற்றும் கால் போன்ற உறுப்புகளில் சில அறிகுறிகள் வரலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9421f93c-f5cb-4ec3-94ce-989b295ffe1f/26-6a856ca319f80.webp' /></p><p></p><h3> 

1.கண்ணிமைகளில் மஞ்சள் திட்டுகள்:
</h3><p>
கண்இமைகளை சுற்றி அல்லது கண்களின் மூலையில் மெல்லிய மஞ்சள் நிறத்தில் கொழுப்பு படிவுகள் வரலாம். அதாவது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவிற்கு அதிகமாக மாறும் பொழுது இது தோலுக்கு அடியில் படிந்து இத்தகைய தட்டையான திட்டுகளை உருவாக்குகிறது.
</p><h3>
2. கருவிழியை சுற்றிய வளம் வளையம்:</h3><p>

 கண்களின் கருவிழி பகுதியை சுற்றி சாம்பல் வெள்ளை அல்லது நீல நிறத்தில் ஒரு மெல்லிய வளையம் ஏற்படலாம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இது இயல்பான வயது முதிர்ச்சியின் அறிகுறியாகும். ஆனால், 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இது தென்பட்டால் அது மரபணு சார்ந்த அதீத கொலஸ்ட்ரால் மற்றும் இளம் வயதிலேயே இதய பாதிப்பை ஏற்படுவதற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.</p><h3>


3. தோலில் மெழுகு போன்ற கட்டிகள்:
</h3><p>
 முழங்கை, முழங்கால் கைகள், பாதங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் ஆரஞ்சு நிறத்தில் சிறிய கொப்பளங்கள் அல்லது கட்டிகள் தென்படும். குறிப்பாக, டிரைகிளிசரைடுகள்&nbsp;மிகவும் ஆபத்தான நிலைக்கு உயரும். அப்பொழுது, உடலில் திடீரென பல கட்டிகள் வரலாம். கட்டுப்படுத்தப்படாத நீரழிவு உள்ளவர்களுக்கு இந்நிலை அதிகம் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ea13de-b2f6-4f5e-86c6-bde866177f44/26-6a856ca3d0c29.webp' /></p><h3>

4. குதிகால் தசைநார் வீக்கம்:
</h3><p>காலில் பின்பகுதி குதிகாலுடன் இணையும் அகில்லெஸ் தசைநாத் அல்லது கைகளில் விரல் நரம்புகளில் கொழுப்பு படிந்து வீக்கம் உண்டாகலாம். இவர்களுக்கு காலணிகள் அணியும் பொழுது அல்லது தொடும்பொழுது இந்த தசை நார்கள் தடிமனாக உணருவது பரம்பரை கொலஸ்ட்ராலின் முக்கிய அறிகுறியாகும்.
</p><h3>
5. நடக்கும்போது கால்களில் தசை பிடிப்பு:
</h3><p> பொதுவாக, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதால் கால்களுக்கு செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இவ்வாறான நேரத்தில் சிறிது தூரம் நடக்கும்போது அல்லது மாடிப்படிகளில் ஏறும்போது தொடை மற்றும் கெண்டைக்கால் பகுதியில் தாங்கிக் கொள்ள முடியாத வலி பாரம் அல்லது பிடிப்பு ஏற்படலாம். ஓய்வெடுத்தால் இந்த வலி சற்று குறையும். இவ்வாறான அறிகுறிகள் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதற்கான மறைமுக அறிகுறியாகும்.</p><h3>


6. குளிர்ந்த பாதங்கள் மற்றும் மாறாத காயங்கள்:
</h3><p>
 நம்மை சுற்றி வெப்பநிலை சாதாரணமாக இருந்தாலும் பாதங்கள் எப்பொழுதும் குளிர்ந்து காணப்படும். காலில் ஏற்படும் சிறிய வெட்டு காயங்கள் கூட அல்லது கீரல்கள் கூட நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும். கால்களின் தோல் வெளியே உதிர்ந்து பளபளப்பாக மாறிவிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbdf86df-9752-431b-abe3-5c02d4e7a5b8/26-6a856ca489e29.webp' /></p><p></p><p>
</p><h3>
 யாரெல்லாம் உடனடி பரிசோதனை செய்ய வேண்டும்:
</h3><p>
குடும்பத்தில் யாருக்காவது இளம் வயதிலேயே மாரடைப்பு அல்லது அதிக கொலஸ்ட்ரால் வரலாறு இருந்தாலும் அல்லது சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடற்பயிற்சி அற்ற வாழ்க்கை முறை மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிச்சயமாக உடனடி சோதனை செய்ய வேண்டும்.</p><h3>

 கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் வழிகள்:
</h3><p> டிரான்ஸ் கொழுப்பு மற்றும் பொறித்த உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்து நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் நட்ஸ், காய்கறிகள் நம் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினசரியாக குறைந்தது நாம் 30 நிமிடங்கள் ஆவது உடற்பயிற்சி செய்வது அவசியம். மருத்துவரின் அறிவுரை படி தவறாமல் மருந்துகள் எடுத்துக் கொள்வதும் இதய பாதிப்பிலிருந்து நாம் நம்மை காத்துக் கொள்ளலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T04:43:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி: மருத்துவர்கள் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-years-old-girl-swallows-gold-bar-in-china-1787371308"></link>
            <id>https://news.lankasri.com/article/5-years-old-girl-swallows-gold-bar-in-china-1787371308</id>
            <summary type="text">சீனாவில் 5 வயது சிறுமி தங்கக் கட்டியை விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி
சீனாவின் வடக்குப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் 5 வயது சிறுமி தங்கக் கட்டியை விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி</h2><p>
சீனாவின் வடக்குப் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி தவறுதலாக அங்கிருந்த 4 சென்டிமீட்டர் நீளமும் 50 கிராம் எடையும் உள்ள சிறிய தங்கக் கட்டியை விழுங்கியுள்ளார்.</p><p> இதனை உடனடியாக தன்னுடைய பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவித்ததை அடுத்து, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c62a543-f9cc-4606-9c96-55be1324a7e2/26-6a891f2e7836f.webp' /></p><p> ஆனால் அங்கு போதுமான நவீன உபகரணங்கள் இல்லாததை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கேப்பிட்டல் மெடிசின் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.</p><p></p><p> அப்போது சிறுமியின் வயிற்றை எக்ஸ்-ரே செய்து பார்த்த போது சுமார் 4 செ.மீ நீளமுள்ள தங்க கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p> மேலும் அந்த தங்க கட்டியானது சிறுமியின் வயிற்றின் உள்சவ்வை கீறி, கடுமையான உள் ரத்தப்போக்கை மற்றும் உறுப்புகளின் துளைகளை ஏற்படுத்தும் அபாயத்துடன் இருந்துள்ளது.</p><p> அத்துடன் அந்த தங்க கட்டி அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பதற்கு சிக்கலான இரைப்பை குழியில் சிக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.</p><p> இறுதியில் எண்டோஸ்கோபி செய்து சுருக்குக் கயிற்றின் உதவியால் தங்க கட்டியை மீட்டு கவனமாக இரைப்பை குழியிலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.</p><p> தற்போது அந்த சிறுமி குணமடைந்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T04:04:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் அந்த முடிவு... கடுமையாக விமர்சித்த பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/criticise-israel-over-gaza-aid-1787357869"></link>
            <id>https://news.lankasri.com/article/criticise-israel-over-gaza-aid-1787357869</id>
            <summary type="text">The decision of the Israeli military authorities: குற்றவியல் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் முடிவுக்கு கடும் விமர்சனம்.
க...</summary>
            <content type="html"><![CDATA[<p>The decision of the Israeli military authorities: குற்றவியல் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் முடிவுக்கு கடும் விமர்சனம்.
</p><p>காஸாவில் தொண்டு நிறுவன வாகனங்களின் அணிவகுப்பு மீது ஏப்ரல் 2024-இல் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் குறித்துக் குற்றவியல் விசாரணை எதையும் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் எடுத்துள்ள முடிவை பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் வெட்கங்கெட்ட செயல் என்று விமர்சித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd01fb96-07fa-4865-bfda-353295323db4/26-6a88eab0a6cb4.webp' /></p><p> </p><p>இஸ்ரேலின் அந்தத் தாக்குதல், அமெரிக்காவைச் சேர்ந்த 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' (WCK) அமைப்பைச் சேர்ந்த ஏழு மனிதாபிமானப் பணியாளர்களைக் கொன்றன. </p><p>உலகளாவிய அளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்திய அந்தத் தாக்குதலில், மூன்று நாடுகளைச் சேர்ந்த WCK ஊழியர்களும் கொல்லப்பட்டனர். </p><p>காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்த பொறுப்புக்கூறல் இல்லாத எண்ணற்ற சம்பவங்களில் 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' (World Central Kitchen) மீதான தாக்குதலும் ஒன்று என்று அந்த மூன்று நாடுகளின் கூட்டறிக்கை பதிவு செய்துள்ளது. </p><p>மேலும், கொல்லப்பட்டவர்கள் சார்பாக இஸ்ரேலிடம் இருந்து தொடர்ந்து பதில்களைத் தேடுவோம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
காஸாவில், மிக ஆபத்தான சூழலில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கடும் அவசியத்தில் உள்ள பொதுமக்களுக்கு உதவ மனிதாபிமானப் பணியாளர்கள் அயராது தொடர்ந்து பணியாற்றுகின்றனர்.</p><p></p><p> </p><p>இருப்பினும், நிலையற்ற போர்நிறுத்தம் நிலவினாலும், 2025-ஆம் ஆண்டில் 186 மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், உதவிப் பொருட்களை விநியோகிப்பதற்கு காஸா தொடர்ந்து மிகவும் ஆபத்தான இடமாகவே உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். </p><p>இதனிடையே, போலந்து அரசாங்கம் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாகக் கூறியதுடன், இந்தச் சம்பவம் குறித்த போலந்து விசாரணைகளுக்கு இஸ்ரேலிய அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வியாழக்கிழமையன்று அழைப்பு விடுத்தது. </p><p>லண்டனில் வெளிவிவகார அலுவலகம் தெரிவிக்கையில், தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று பிரித்தானியக் குடிமக்களான ஜான் சாப்மேன், ஜேம்ஸ் ஹென்டர்சன் மற்றும் ஜேம்ஸ் கிர்பி ஆகியோரின் குடும்பங்களுக்காக பிரித்தானியா பேரதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளதாகத் தெரிவித்தது. </p><p>போர்க்காலம் முழுவதும் காஸாவில் உணவு விநியோகித்து வந்த WCK அமைப்பு, அந்தப் பயங்கரமான தாக்குதலுக்குப் பிறகு தங்கள் வாகனங்களின் நடமாட்டம் குறித்து இராணுவத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவே கூறியது. </p><p>மட்டுமின்றி, தங்களின் வாகனங்களில்,
வானிலிருந்து பார்க்கும்போது தெரியும் வகையில் குழுவின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளது. </p><p>ஆனால், வாகனங்களில் இருந்த பல நபர்களை ஆயுதம் ஏந்திய ஹமாஸ் படையினர் எனத் தவறாகக் கருதியதாகவும், WCK வாகன அணிவகுப்பு முன்னதாக ஒருங்கிணைக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) புதன்கிழமை தெரிவித்தது. </p><p>மேலும், தளபதிகளின் முடிவுகள் குற்றவியல் ரீதியான முறைகேடு குறித்த நியாயமான சந்தேகத்தை எழுப்பவில்லை என்று IDF முடிவு செய்தது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T00:15:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் நெருக்கடி... அதிக விலைக்கு LNG-ஐ கொள்முதல் செய்யும் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-buys-most-expensive-lng-1787353559"></link>
            <id>https://news.lankasri.com/article/india-buys-most-expensive-lng-1787353559</id>
            <summary type="text">India buys its most expensive LNG: இந்தியா பல ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிக விலைக்கு LNG-ஐ வாங்கியுள்ளது.
ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>India buys its most expensive LNG: இந்தியா பல ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிக விலைக்கு LNG-ஐ வாங்கியுள்ளது.
</p><p>ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், இந்தியாவில் உள்ள எரிசக்தி நிறுவனங்கள் 'ஸ்பாட்' சந்தையில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த விலையில் வாங்கி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0eaca66-46fa-49e7-9f29-821e784581c1/26-6a88d9d949064.webp' /></p><p>
</p><p>அரசுக்குச் சொந்தமான எரிவாயு நிறுவனமான கெயில் இந்தியா லிமிடெட், சமீபத்தில் செப்டம்பர் மாதம் விநியோகிக்கப்படவுள்ள ஒரு சரக்குக்காக, ஒரு மில்லியன் பிரிட்டிஷ் வெப்ப அலகுகளுக்கு 23 டொலருக்கும் அதிகமாக செலுத்தியுள்ளது. </p><p>செப்டம்பர் மாத விநியோகத்திற்கான சரக்குக்கு, இந்தியாவின் குஜராத் மாநில பெட்ரோலியக் கழகம் (GSPC) ஒரு mmbtu-க்கு 23 டொலருக்கும் சற்று அதிகமான விலையைச் செலுத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p>2022-ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டவற்றிலேயே மிகவும் அதிக விலை கொண்ட எல்.என்.ஜி. (LNG) சரக்குகள் இவை என்றே கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் உர உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவ முற்படுவதால், இந்தியாவில் உள்ள அரசு ஆதரவு எரிசக்தி நிறுவனங்கள் திரவ இயற்கை எரிவாயு (LNG) உடனடி சந்தையை நாடி, விலைகளை உயர்த்தி ஏலம் கேட்கின்றன. </p><p>உலகின் இரண்டாவது மிகப்பெரிய LNG விநியோகஸ்தரான கத்தாரிடமிருந்து, நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா வழக்கமாக எல்என்ஜியை கொள்முதல் செய்து வருகிறது. </p><p>ஆனால், மார்ச் மாதத்தில் ஈரான் நடத்திய தாக்குதல்களால் கத்தாரின் பிரம்மாண்டமான ஏற்றுமதி முனையம் சேதமடைந்தது; மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வது இப்போதும் பெருமளவுக்கு முடக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da06e09b-e6d8-4796-9737-b1c9ba012329/26-6a88d9d9ef747.webp' /></p><p> </p><p>ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அங்குள்ள LNG வாங்குபவர்களுடனும் இந்தியா போட்டியிட வேண்டியுள்ளது. </p><p>இதனிடையே, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனும், இந்த வாரம் ஸ்பாட் சந்தையில் இருந்து ஒரு LNG சரக்கை வாங்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விலை தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T23:03:31+00:00</updated>
        </entry>
    </feed>
