<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-11T03:27:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளால் செங்கடலில் சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-threaten-saudi-oil-exports-1789097174"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-threaten-saudi-oil-exports-1789097174</id>
            <summary type="text">Houthis threaten Saudi oil exports in the Red Sea: செங்கடலில் சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு ஹவுதிகள் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.
ஈரான் ஆதரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis threaten Saudi oil exports in the Red Sea: செங்கடலில் சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு ஹவுதிகள் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.
</p><p>ஈரான் ஆதரவு ஹவுதிகள் யேமனின் துறைமுக நகரமான மோச்சாவைக் கைப்பற்றி, செங்கடல் கடற்கரையோரமாக அதி முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளை நோக்கி முன்னேறி வருவதாக இராணுவ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>எண்ணெய் விலை</h2><p>
</p><p>அமெரிக்க இடைத் தேர்தல்களுக்குப் பிறகு ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa765b64-663d-4aec-bf25-28ee525376e5/26-6aa374d8640a1.webp' /></p><p> </p><p>இதனிடையே, செங்கடலின் தெற்கு முனையும், உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றானதுமான பாப் அல்-மண்டேப் நீரிணையின் மீது ஹவுதிகள் மேலும் ஆதிக்கம் செலுத்தி, ஹனிஷ் தீவுகளை நெருங்கிவிட்டதாக யேமன் அரசாங்க இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
ஹார்முஸ் நீரிணைக்கு எதிர்ப்புறத்தில், அரேபிய தீபகற்பத்தில் உள்ள நீர்வழியை ஹவுதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தால், அது அமெரிக்காவுடனான போரில் அவர்களின் ஆதரவாளரான ஈரானுக்கு ஒரு முக்கிய சாதகத்தை அளித்து, இரண்டாவது பெரிய போக்குவரத்து வழித்தடத்தின் வழியாக விநியோகங்களைக் குறைத்து, எண்ணெய் விலைகளை கடுமையாக உயரச் செய்யும். </p><p>நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களுக்கு முன்னதாக, தனது குடியரசுக் கட்சியின் தேர்தல் வாய்ப்புகளைப் பாதித்துள்ள ஒரு போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டறிவதை இது ட்ரம்ப்புக்கு மேலும் கடினமாக்கக்கூடும்.</p><p></p><p> </p><p>இதனிடையே, சவுதி கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல் நிறுவனங்களுக்கும் செங்கடல் வழித்தடப் போக்குவரத்து பாதுகாப்பானது என்று ஏமனில் ஹவுதி அமைப்பால் நடத்தப்படும் மனிதாபிமானப் பணிகள் ஒருங்கிணைப்பு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. </p><p>உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா, செங்கடல் வழித்தடத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது; ஏனெனில், உலகளாவிய எண்ணெய் பயன்பாட்டில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து சென்ற ஹார்முஸ் நீரிணைப் பாதை, ஈரானுடனான மோதலால் நடைமுறையில் முடக்கப்பட்டுள்ளது.</p><h2>இராணுவ நடவடிக்கை</h2><p>
</p><p>ஏமன் அரசுப் படைகளும் அவற்றின் கூட்டாளிகளும் செங்கடல் கடற்கரையோரமாகத் தெற்கு நோக்கி நகர்ந்து, பாப்-எல்-மண்டேப் நீரிணையில் உள்ள துபாப் (Dhubab) பகுதிக்குச் சென்று கொண்டிருப்பதாக அரசு இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p>துபாப் மற்றும் அப்பகுதியிலுள்ள பெரிம் தீவு (Perim Island) ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, அந்த நீரிணையின் மீதான ஆதிக்கத்தைப் பெறுவதற்கு மிக முக்கியமானது என்று அவர்கள் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14270300-b0aa-4bb6-ac32-d8e533e906d3/26-6aa374d915e45.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், ஹவுதிகளுக்கு எதிரான முற்றுகை அல்லது இராணுவ நடவடிக்கை மூலம் ஏமன் மோதலுக்குத் தீர்வு காண முடியாது என்று கூறிய ஈரானின் வெளிவிவகார அமைச்சகம், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது; அதேவேளையில், இதில் ஈரானின் உரிமை என்ன என்பது குறித்து அது எதுவும் குறிப்பிடவில்லை. </p><p>இந்த வாரம் கடற்கரையோரமாக ஹவுதிகள் முன்னேறியது, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் நேரடி வழிகாட்டுதலின்படியே நிகழ்ந்தது என யேமன் அரசாங்கம், ஈரான் மற்றும் பிராந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T03:23:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - அமெரிக்கா வர்த்தக பதட்டங்களுக்கு இடையில், டிரம்ப்- கார்னி நடுவே தொடரும் உரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-and-us-continue-international-dialogue-1789078950"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-and-us-continue-international-dialogue-1789078950</id>
            <summary type="text">வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது. பதட்டங்களுக்கு மத்தியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது.</p><h2> பதட்டங்களுக்கு மத்தியில் தொடர்பு</h2><p>இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சில முக்கிய உத்தரவுகளைப் அறிவித்து இருந்தார்.</p><p>இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பதற்றமானது அதிகரித்தது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே புதிய வரி விதிப்புகளும் தீவிரமடைந்தன.</p><p> இந்த நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்(Donald Trump) மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி(&nbsp;Mark Carney) இருவரும் முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22d907d8-db67-4cb1-ad90-289411402c4b/26-6aa32da7d538d.webp' /></p><p> கல்கரியில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் கார்னி, பொருளாதார முரண்பாடுகளையும், சர்வதேச விவகாரங்களையும் பிரித்து பார்க்கும் திறன் கனடாவிடம் இருப்பதாக தெரிவித்தார்.</p><p></p><p> சர்வதேச விவகாரங்களில் கனடாவின் பங்கை நிறைவேற்றுவது தொடர்பில் அமெரிக்காவுடன் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன், உக்ரைன் மற்றும் ஈரான் விவகாரங்கள் குறித்தும், முக்கிய புவிசார் அரசியல் குறித்தும் கடந்த சில நாட்களில் மட்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பலமுறை கலந்துரையாடி இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> ஏனென்றால் இது தங்களின் பொறுப்புகளில் ஒன்று என்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T00:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின்: முக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு திட்டமிடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-president-putin-arrives-in-india-1789081118"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-president-putin-arrives-in-india-1789081118</id>
            <summary type="text">Russian President Putin Arrives In India: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியா வந்து சேர்ந்துள்ளார். இந்தியா வந்தடைந்த புடின்சர்வதேச ஒத்துழைப்பை மை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian President Putin Arrives In India: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியா வந்து சேர்ந்துள்ளார்.</p><h2> இந்தியா வந்தடைந்த புடின்</h2><p>சர்வதேச ஒத்துழைப்பை மையமாக கொண்டு நடத்தப்படும் 18 வது BRICS மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியா வந்திறங்கியுள்ளார்.</p><p> இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய பகுதியாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Putin steps off plane to red carpet HONOR GUARD in New Delhi <br><br>BRICS Summit 2026 kicks off September 12<br><br>Russian leader in India for summit and KEY talks, including with Indian PM Modi <a href="https://t.co/Pjw5FkNOus">https://t.co/Pjw5FkNOus</a> <a href="https://t.co/uDghfbgcxQ">pic.twitter.com/uDghfbgcxQ</a></p>&mdash; RTRussia (@RT_Russia_) <a href="https://x.com/RT_Russia_/status/2098167214218113483?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> குறிப்பாக இந்தியா - ரஷ்யா இடையிலான உத்திசார் கூட்டாண்மைமை உறுதி செய்வது குறித்து இருநாட்டு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக சந்தித்து பேச உள்ளார்.</p><p></p><h2> 18 வது BRICS மாநாடு</h2><p> புவிசார் அரசியல், பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறித்து உலகளாவிய விவாதங்களை முன்னெடுத்து செல்ல உலக தலைவர்களை ஒருங்கிணைக்கும் மேடையாக இந்த 18 வது BRICS மாநாடு நடத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91e3b8f2-3b4e-41ee-bbf6-8587cfd3afba/26-6aa33620cd470.webp' /></p><p>18 வது BRICS மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T23:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தின் என்ஜினில் சிக்கிய பறவைகள்: நடுவானில் தீப்பற்றியதால் பீதியடைந்த பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/flight-emergency-landing-in-cardiff-after-birds-1789074858"></link>
            <id>https://news.lankasri.com/article/flight-emergency-landing-in-cardiff-after-birds-1789074858</id>
            <summary type="text">Flight Emergency Landing in Cardiff after Birds Strikes: பறவை கூட்டத்தின் மீது விமானம் மோதி இன்ஜினில் தீ பற்றியதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Flight Emergency Landing in Cardiff after Birds Strikes: பறவை கூட்டத்தின் மீது விமானம் மோதி இன்ஜினில் தீ பற்றியதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.</p><h2> பறவை கூட்டத்தில் சிக்கிய விமானம்</h2><p>TUI விமானம் ஒன்று சைப்ரஸ் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை கூட்டத்தில் மோதி இன்ஜினில் தீ பற்றியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.</p><p> செப்டம்பர் 9ம் திகதி மதியம் கார்டிஃப்பில்(Cardiff) இருந்து பாஃபோஸ்(Paphos) நோக்கி செல்ல திட்டமிட்டிருந்த TOM5TN என்ற விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவைகள் மீது மோதியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61618896-53ca-43f1-a305-f4c6bd2d4292/26-6aa31dac8c592.webp' /></p><p> இதனால் விமானத்தின் வலது பக்க இன்ஜினில் தீப்பிடித்தது. விமானத்தில் இருந்து ஆரஞ்சு நிற தீப்பிழம்பு வெளியேறியதை விமானத்தில் இருந்த பயணிகள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p>அத்துடன் விமானம் முழுவதும் தீப்பற்றிய வாடை மற்றும் புகை சூழ்ந்ததால் பயணிகள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகினர்.</p><h2>அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்</h2><p>
இதையடுத்து விமானம் அவசர அவசரமாக மீண்டும் கார்டிஃப் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1ec1691-900c-4934-9b02-60f3514fc0b2/26-6aa31dabd3347.webp' /></p><p> அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிர் சேதமும் இல்லாமல் விமானம் தரையிறக்கப்பட்டதாக கார்டிப் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>மேலும் விமான நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு விமானத்தில் பற்றிய தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p> இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் அடுத்த நாள் மாற்று விமானத்தில் பாஃபோஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T22:59:16+00:00</updated>
        </entry>
    </feed>
