<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-04T00:34:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனை தாக்க 3 இடங்களை குறி வைத்தோம்: ஆனால்., ஈரான் அதிகாரி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-official-says-plan-to-strike-on-ukraine-1785802702"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-official-says-plan-to-strike-on-ukraine-1785802702</id>
            <summary type="text">உக்ரைன் மீதான தாக்குதலை கைவிட்டுவிட்டதாக ஈரானிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். ஈரானிய கப்பல் மீது தாக்குதல்சமீபத்தில் ஈரானிய வர்த்தக கப்பல்களை குறிவை...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீதான தாக்குதலை கைவிட்டுவிட்டதாக ஈரானிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.</p><h2> ஈரானிய கப்பல் மீது தாக்குதல்</h2><p>சமீபத்தில் ஈரானிய வர்த்தக கப்பல்களை குறிவைத்து உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.</p><p>இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து இருந்ததுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உக்ரைன் மூலம் ஐரோப்பிய நாடுகளையும் தங்களுக்கு எதிரான போரில் திருப்பிவிட முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59d94284-e83e-4af3-b391-1539c41715b7/26-6a712fd008010.webp' /></p><p> இந்நிலையில் ஈரான் அரசு ஊடகத்தில்(IRIB) அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியின் ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.</p><p></p><p> அதில், உக்ரைன் உள்ள 3 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், பின்னர் உக்ரைன் தரப்பு மன்னிப்பு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்த தாக்குதலானது கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.</p><h2> ஹார்முஸ் விவகாரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcf99633-67ce-49f1-8f9f-a306bd5f7acf/26-6a712fd0b4cb2.webp' /></p><p>மேலும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் குறித்து பேசிய மொஹ்சென் ரெசாய், ஈரானால் தீர்மானிக்கப்பட்ட வழித்தடத்தை தவிர வேறு எந்த புதிய பாதையும் ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதிக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நெறிமுறைகளை அமெரிக்கா மீறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T00:20:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாய்: விசாரணையில் பொலிஸாருக்கு கிடைத்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-sell-his-own-daughter-for-1-5-lakhs-1785796529"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-sell-his-own-daughter-for-1-5-lakhs-1785796529</id>
            <summary type="text">பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாயை டேராடூன் பொலிஸார் கைது செய்துள்ளனர். பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாய்
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் சிறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாயை டேராடூன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2> பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாய்</h2><p>
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் சிறுமி கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், தாய் உட்பட 4 பேரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.</p><p> கடந்த மாதம் சகஸ்தரதார ரோட்டை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் தன்னுடைய 15 வயது மகளை காணவில்லை என்று ராஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.</p><p> தாய் அளித்த புகாரின் பேரில் பாரதிய நியாய சங்கிதா (BNS) பிரிவு 137(2)-ன் கீழ் பொலிஸாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbb1fe80-9d9d-4157-9ebb-5f15433121cc/26-6a7117b2e2397.webp' /></p><p></p><p> விசாரணையின் போது அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக, பெற்ற தாயே தன்னுடைய மகளை ரூ1.5 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.</p><p> அத்துடன் சிறுமியை வாங்கியவரிடம் இருந்து முழு தொகையையும் பெற முடியதாததால் மகளை காணவில்லை என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.</p><h2> கைது நடவடிக்கை</h2><p>இதையடுத்து தாய் கைது செய்யப்பட்டதுடன் உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.</p><p> மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மனிஷ் (37), மற்றும் லிவி குமார்(24) ஆகியோரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p> இதில் இடைத்தரகராக செயல்பட்ட பின்கி மாலிக் என்பவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் நோக்கத்தில் கடத்தப்பட்டு இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T23:52:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் புதிய வர்த்தக வரி: 25 ஜனநாயக கட்சி மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/25-democratic-led-sue-trump-over-new-tariffs-1785801147"></link>
            <id>https://news.lankasri.com/article/25-democratic-led-sue-trump-over-new-tariffs-1785801147</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய மற்றும் வர்த்தக வரிகளை எதிர்த்து ஜனநாயக கட்சியினரின் தலைமையிலான 25 அமெரிக்க மாநிலங்களின் கூட்டணி நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய மற்றும் வர்த்தக வரிகளை எதிர்த்து ஜனநாயக கட்சியினரின் தலைமையிலான 25 அமெரிக்க மாநிலங்களின் கூட்டணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.</p><p> கிட்டத்தட்ட 60 வர்த்தக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த இந்த புதிய வர்த்தக வரியை எதிர்த்து ஜனநாயக கட்சியினரின் தலைமையிலான 25 அமெரிக்க மாநிலங்களின் கூட்டணி திங்கட்கிழமை வழக்கு தொடர்ந்துள்ளது.</p><p> டிரம்பின் நடுவண் அரசு இந்த வர்த்தக நடவடிக்கையில் நிர்வாக அதிகார வரம்பை மீறி இருப்பதாக மாநிலங்களின் கூட்டணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.</p><p>இந்த வழக்கானது அமெரிக்காவின் பன்னாட்டு வர்த்தக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c350ee-a939-4e40-aad2-ba890eb94c78/26-6a7129bc9793d.webp' /></p><p> பதிவு செய்யப்பட்ட வழக்கு மனுவில், வரி எவ்வாறு உருவாக்கப்பட்டது மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p> குறிப்பாக, புதிய வர்த்தக வரியை விதிப்பதற்கு முன்னதாக நாடுகள் வாரியான விசாரணை நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> மேலும் வெவ்வேறு கொள்கைகளை கொண்ட நாடுகளுக்கு ஒரே மாதிரியான வரி விதிப்பு என்பதற்கான தகுந்த நியாயங்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p> உச்சநீதிமன்றம் மற்றும் வர்த்தக நீதிமன்றம் நிராகரித்த&nbsp;வரி விதிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காக 1974ம் ஆண்டின்&nbsp; வர்த்தக சட்டத்தின் பிரிவு 301-ஐ மத்திய நிர்வாகம் முறையற்ற முறையில் பயன்படுத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p> இந்த நீதிமன்ற மனுவின் முக்கிய நோக்கமாக, சர்ச்சைக்குரிய வர்த்தக வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே ஆகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T23:52:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவை தண்டிக்கப் போவதாக எச்சரித்த ட்ரம்ப்., காட்டுத்தீ விவகாரம் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-canada-over-wildfires-1785772146"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-canada-over-wildfires-1785772146</id>
            <summary type="text">Canada Wildfires: காட்டுத்தீ விவகாரத்தில் கனடாவை தண்டிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

தண்டனை கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, அமெரிக்காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada Wildfires: காட்டுத்தீ விவகாரத்தில் கனடாவை தண்டிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>

தண்டனை </h2><p>கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, அமெரிக்காவின் வடக்கு பகுதிகள் புகை மூட்டத்தில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவிற்கு எதிராக “தண்டனை நடவடிக்கை” எடுக்கப் போவதாக மீண்டும் எச்சரித்துள்ளார்.
</p><p>
Air Force One விமானத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “நான் முடிவு செய்துவிட்டேன். நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள். கனடா கட்டாயம் விலை செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd9150e6-5b1b-4f50-8f67-6c42001f2bab/26-6a70b874535f8.webp' /></p><p>ட்ரம்ப், கடந்த மாதம் TruthSocial-ல், கனடா தனது காடுகள் மற்றும் புதர்களை சரியாக பராமரிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். “அமெரிக்கா தேவையில்லாமல் மாசான, ஆரோக்கியமற்ற காற்றால் தாக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார். இதற்காக, கனடாவிற்கு புதிய சுங்க வரிகள் (tariffs) விதிக்கலாம் என எச்சரித்தார்.
</p><p>
இதற்கிடையில், கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மனிந்தர் சிது, “நாட்டின் வணிக நிறுவனங்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெற உதவும் Strategic Exports Office ஒன்றை தொடங்குகிறோம்” என்று அறிவித்தார்.
</p><p>
இந்த அலுவலகம், அரசாங்க ஆதரவு, நிதி உதவி மற்றும் தூதரக ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கனடா நிறுவனங்களுக்கு உலக சந்தையில் போட்டியிட உதவும்.
</p><p></p><p>ட்ரம்ப் எவ்வாறு கனடாவை தண்டிக்கப் போகிறார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், அவரது தொடர்ச்சியான எச்சரிக்கைகள், அமெரிக்கா-கனடா உறவுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T22:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மூழ்கிய 19 வயது கயாக்கிங் வீரர்: பிரித்தானிய கடற்கரையில் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/19-yrs-old-kayaker-body-found-in-uk-coast-1785785861"></link>
            <id>https://news.lankasri.com/article/19-yrs-old-kayaker-body-found-in-uk-coast-1785785861</id>
            <summary type="text">பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்ட் கடற்கரையில் காணாமல் போன 19 வயது இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.கயாக்கிங் வீரர் உடல் மீட்பு
நார்தம்பர்லேண்ட் கடற்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்ட் கடற்கரையில் காணாமல் போன 19 வயது இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.</p><h2>கயாக்கிங் வீரர் உடல் மீட்பு</h2><p>
நார்தம்பர்லேண்ட் கடற்கரையில் கயாக்கிங் சென்றபோது விபத்தில் சிக்கி 19 வயது மைக்கேல் ஹென்றி என்ற இளைஞர் காணாமல் போனார்.</p><p>பவுல்மர்(Boulmer) பகுதிக்கு அருகே ஜூலை 7ம் திகதி மாலை மைக்கேல் ஹென்றி சென்ற இரண்டு பேர் கொண்ட படகு கவிழ்ந்ததை அடுத்து காணாமல் போனார்.</p><p> இதில், மைக்கேல் ஹென்றியுடன் பயணம் செய்த மற்றொரு வீரர் அதிர்ஷ்டவசமாக கடலில் தத்தளித்த நிலையில் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aa2535d-fbc9-45e6-8509-9f22cd44a739/26-6a70ee075c20a.webp' /></p><p>ஆனால் மைக்கேல் ஹென்றியை மீட்க முடியவில்லை. இதையடுத்து அவரை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையானது பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.</p><p> இந்நிலையில், கடந்த ஜூலை 26ம் திகதி பிளைத் கடற்கரையில் ஹென்றியின் உடல்&nbsp; கண்டுடெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> இருப்பினும் முறையான அடையாளம் காணும் பணி நிறைவடைந்ததை அடுத்து, இது தொடர்பான அறிக்கை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><p> ஹென்றியின் மறைவை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஹென்றியின் அழகான நினைவுகளை உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p> மேலும் ஹென்றியை கண்டுபிடிக்க அயராது உழைத்த அவசரகால சேவைகளுக்கும், மீட்பு பணியாளர்களுக்கும் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T22:09:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் ஏரிகளில் பாசி நச்சுகளை கண்டறியும் புதிய சென்சார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-sensor-detects-algae-toxins-in-lakes-1785773013"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-sensor-detects-algae-toxins-in-lakes-1785773013</id>
            <summary type="text">Switzerland: ஏரிகளில் பரவும் நீல-பச்சை பாசி நச்சுகளை கண்டறியக்கூடிய புதிய சென்சார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Lausanne EPFL தொழில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Switzerland: ஏரிகளில் பரவும் நீல-பச்சை பாசி நச்சுகளை கண்டறியக்கூடிய புதிய சென்சார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சுவிட்சர்லாந்தின் Lausanne EPFL தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய புதிய சென்சார், ஏரிகளில் பரவும் நீல-பச்சை பாசி (Blue-Green Algae) நச்சுகளை மிகத் துல்லியமாக கண்டறியக்கூடியதாக உள்ளது.
</p><p>
கோடை காலத்தில் நீரின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த பாசிகள் வேகமாக பரவி Microcystins எனப்படும் ஆபத்தான நச்சுகளை வெளியிடுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c98fac38-99ca-44b0-8acc-1cfea6794ee3/26-6a70bbd7b6dd0.webp' /></p><p>இது மனிதர்களுக்கு, செல்லப்பிராணிகளுக்கு, குடிநீர் விநியோகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

முன்பு, துரிதமான பரிசோதனைகள் விரைவான முடிவுகளை அளித்தாலும், 300-க்கும் மேற்பட்ட நச்சு வகைகளை வேறுபடுத்த முடியவில்லை. ஆய்வக பரிசோதனைகள் மிகத் துல்லியமானவை என்றாலும், பெரிய கருவிகள், நிபுணர்கள், மற்றும் பல நாட்கள் தேவைப்பட்டன.
</p><p>
இந்த சிக்கலை தீர்க்க, EPFL ஆராய்ச்சியாளர்கள் Nanopore Sensor ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது Aerolysin Protein மூலம் உருவாக்கப்பட்ட மிகச் சிறிய சேனல். மின்சாரம் செலுத்தப்படும் போது, ஒவ்வொரு நச்சு மூலக்கூறும் தனித்துவமான மின்சார தடம் (Electrical Fingerprint) உருவாக்குகிறது. இதன் மூலம், நச்சு வகைகளை வேறுபடுத்த முடிகிறது.
</p><p></p><p>ஆய்வகத்தில், இந்த முறையைப் பயன்படுத்தி 7 வகையான Microcystins-ஐ தெளிவாக அடையாளம் காண முடிந்தது. மேலும், இது WHO குடிநீர் வழிகாட்டுதலின் அளவுக்கு 40 மடங்கு குறைவான செறிவுகளிலும் செயல்படுகிறது.
</p><p>
தற்போது, நீர் மாதிரிகளை கையால் வடிகட்டி தயாரிக்க வேண்டும். ஆனால், ஆராய்ச்சியாளர்களின் நீண்டகால இலக்கு, கைக்கேற்ற சாதனம் ஒன்றை உருவாக்குவது. இதை ஏரிக்கரையில் அல்லது படகில் நேரடியாக பயன்படுத்தலாம்.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, சுவிட்சர்லாந்தின் ஏரிகள் மற்றும் குடிநீர் பாதுகாப்பு துறையில் மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T21:21:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடினுடைய ஆடம்பர மாளிகை அருகே விழுந்து வெடித்த ட்ரோன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drone-smashes-near-putin-black-sea-palace-1785761403"></link>
            <id>https://news.lankasri.com/article/drone-smashes-near-putin-black-sea-palace-1785761403</id>
            <summary type="text">புடினுக்கு சொந்தமான ஆடம்பர மாளிகை அருகே ட்ரோன் ஒன்று விழுந்து வெடித்ததில் நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.


கருங்கடலை ஒட்டி அமைந்துள்ள, ரஷ்ய ஜனாதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>புடினுக்கு சொந்தமான ஆடம்பர மாளிகை அருகே ட்ரோன் ஒன்று விழுந்து வெடித்ததில் நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.</p><p>


கருங்கடலை ஒட்டி அமைந்துள்ள, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு சொந்தமான ஆடம்பர மாளிகை ஒன்றின் அருகே ட்ரோன் ஒன்று விழுந்து வெடிக்கும் காட்சிகள் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.</p><h3>

புடினுடைய மாளிகை அருகே விழுந்து வெடித்த ட்ரோன்</h3><p>

கருங்கடல் அருகே Krasnodar Krai என்னுமிடத்தில் புடினுக்கு சொந்தமானது என கூறப்படும் Gelendzhik lair என்னும் ஆடம்பர மாளிகை ஒன்று உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1cc2d30-cccd-46e3-a8d6-70c684107295/26-6a708e7ccdd88.webp' /></p><p>
ஒரு பில்லியன் டொலர்கள் மதிப்புடைய அந்த மாளிகையின் அருகே வந்துகொண்டிருந்த ஒரு ட்ரோனை, ட்ரோன் எதிர்ப்பு கருவி ஒன்று சுட்டு வீழ்த்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0215d06f-8394-4656-bd39-4f9659907432/26-6a708e7d7be19.webp' /></p><p>

அந்த ட்ரோன் கடற்கரையில் சூரியக்குளியல் மேற்கொண்டிருந்த மக்கள் மீது விழுந்து வெடிக்க, ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பலியானதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>
அந்த ட்ரோன் புடினுடைய மாளிகையை குறிவைத்து அனுப்பப்பட்டதா, அதை யார் ஏவியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.&nbsp;</p><p>
அதேபோல, இந்த சம்பவம் குறித்து உக்ரைனும் வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T21:00:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய அதிகாரிகள் இரட்டை வேடம்: அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ்: டிரம்ப் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-control-strait-of-hormuz-trump-warns-iran-1785776458"></link>
            <id>https://news.lankasri.com/article/us-control-strait-of-hormuz-trump-warns-iran-1785776458</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் கட்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி</h2><p>
திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த தகவலில், அமெரிக்காவின் அனுமதியின்றி ஈரானுக்குள் எதுவும் நுழைய முடியாது. ஏனென்றால் தற்போதைய கடல்சார் முற்றுகை நடவடிக்கை இதனை உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.</p><p> இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eb54eb6-3b0a-4be8-9683-86f59e42bab8/26-6a70c94d0f567.webp' /></p><p> அமெரிக்காவுடன் முறையான ஒப்பந்தம் அல்லது முழுமையான சரணடைதல் எட்டப்படாமல் இந்த முற்றுகை நிலைப்பாடு தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p> அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு தற்போது எந்தவொரு அதிகாரமும், கட்டுப்பாடும் இல்லை என்று மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஈரானிய அதிகாரிகளின் நடத்தையை விமர்சித்த ட்ரம்ப்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e6ea4ab-3dbd-4f7a-b2ec-1547d6320d66/26-6a70c94c58bd1.webp' /></p><p>பேச்சுவார்த்தை தொடர்பான விஷயங்களில் ஈரானிய அதிகாரிகள் இரட்டை வேடம் போடுவதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> அதில் ஈரானிய அதிகாரிகள் தாங்களே முன்வந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்த போது அவர்களின் முயற்சி கெஞ்சுவது போல் இருந்தது.</p><p> ஆனால் மறுபுறம் நாங்கள் ஓமன் வழியாக மட்டுமே பேச்சுவார்த்தைக்கு தொடர்பு கொள்வதாக வெளிப்படையாக பொய் கூறுகின்றனர் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T19:02:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணுசக்தி மற்றும் கடல் வழி ஒப்பந்தம்: ஈரானுக்கு இது தான் கடைசி வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-says-last-chance-for-diplomatic-deal-to-iran-1785783720"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-says-last-chance-for-diplomatic-deal-to-iran-1785783720</id>
            <summary type="text">போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு இது தான் கடைசி வாய்ப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.மத்திய கிழக்கில் நீடிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு இது தான் கடைசி வாய்ப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்</h2><p>அமெரிக்கா - ஈரான் இடையிலான தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில்,&nbsp; இரு நாடுகளும் இடையில் முன்னதாக எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன.</p><p> இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமானது நீடித்து வருகிறது. திங்கட்கிழமை கூட&nbsp; ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27264863-ea90-4e6c-80dd-9286596078cd/26-6a70e5ab3f8f4.webp' /></p><p> அமெரிக்காவுடன் முறையான ஒப்பந்தம் அல்லது முழுமையான சரணடைதல் எட்டப்படாமல் இந்த முற்றுகை நிலைப்பாடு தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><h2> ஈரானுக்கு கடைசி வாய்ப்பு</h2><p>
இந்நிலையில் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “ அவர்கள் அனைவரும் இதற்கு கடைசி வாய்ப்பு ஒன்றை கொடுக்க விரும்பினர். இது சாதாரணமாக நடக்க கூடிய ஒன்றல்ல. இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு நல்ல ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும்.</p><p> அரசியல் ரீதியில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான நல்ல வாய்ப்பை ஈரான் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f498fd3-7ad2-4de2-81bc-ca8e2d47bf30/26-6a70e5aa8d8ec.webp' /></p><p> ஈரான் - அமெரிக்கா இடையிலான இராணுவ மோதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைதிக்கான இந்த புதிய பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p> தற்போது முன்வைக்கப்படும் அமைதி ஒப்பந்தத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற வர்த்தக போக்குவரத்தும், அணுசக்தி திட்டங்கள் மீதான தடையும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T19:02:11+00:00</updated>
        </entry>
    </feed>
