<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-21T14:07:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியல் - இடம் பிடித்த ஒரே இந்திய நகரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2026-world-happiest-cities-jaipur-in-6th-place-1784641083"></link>
            <id>https://news.lankasri.com/article/2026-world-happiest-cities-jaipur-in-6th-place-1784641083</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில் ஒரு இந்திய நகரம் இடம்பிடித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள் 

உலகின் மகிழ்ச்சியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில் ஒரு இந்திய நகரம் இடம்பிடித்துள்ளது.</p><h3>

2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள்</h3><p> 

உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் டைம் அவுட் வெளியிட்டு வருகிறது. </p><p>

24,000-க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகளிடம் தங்கள் நகரம் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா என்பது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு, ஒவ்வொரு நாட்டிலும் மிக உயர்ந்த தரவரிசை பெற்ற நகரம் மட்டுமே இறுதி பட்டியலில் சேர்க்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef3632b2-8e70-450c-a818-d8ccd79e4db7/26-6a5f763c482ea.webp' /></p><p>

20 நகரங்கள் உள்ள 2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் பிரித்தானியாவின் பாத் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.&nbsp;</p><p></p><p> 

இந்த நகரின் 93 சதவீதம் பேர் தங்கள் நகரம் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும், 92 சதவீதம் பேர் மற்ற இடங்களை விட பாத்தில் தாங்கள் அதிக மகிழ்ச்சியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர். </p><p>

2வது இடத்தில் பனாமாவின் பனாமா நகரமும், 3வது இடத்தில் மெக்சிகோவின் குவாடலஹாரா நகரமும், 4வது இடத்தில் கொலம்பியாவின் மெடலின் நகரமும், 5வது இடத்தில் போலந்தின் கிராகோ நகரமும் உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5cca7a1-792f-48e8-abe4-b8cbbb801153/26-6a5f763cf0f95.webp' /></p><p>

இந்த பட்டியலில் 6வது இடத்தில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் இடம்பிடித்துள்ளது.</p><p> 

7வது இடத்தில் அமெரிக்காவின் சிகாகோவும், 8வது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனும், 9வது இடத்தில் சீனாவின் ஷாங்காயும், 10வது இடத்தில் ஸ்வீடனின் கோதென்பர்க்கும், 11வது இடத்தில் கனடாவின் மான்ட்ரியலும் உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T13:38:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரில் 2 வாரத்தில் 100 வீரர்கள் காயம் - ஒப்புக்கொண்ட அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pentagon-admit-100-us-soldiers-injured-in-iran-hit-1784639143"></link>
            <id>https://news.lankasri.com/article/pentagon-admit-100-us-soldiers-injured-in-iran-hit-1784639143</id>
            <summary type="text">ஈரான் போரில் 2 வாரத்தில் 100 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

100 அமெரிக்க வீரர்கள் காயம்

ஈரான் மற்றும் அமெரிக்கா இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் போரில் 2 வாரத்தில் 100 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.</p><h3>

100 அமெரிக்க வீரர்கள் காயம்</h3><p>

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தம் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 10 நாட்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் நிலவி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/881ffba4-2258-443d-ab7c-146413e67f6c/26-6a5f6ea954ce0.webp' /></p><p>

ஈரானின் பாந்தர் அப்பாஸ், குவாசம் தீவு, சாம்பஹார், கொனர்க், சிரிக் போன்ற துறைமுக நகரங்கள் மீது தொடர்ந்து 10வது நாளாக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. </p><p>

அதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்த போரில் காயமடைந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா மறைப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் குற்றஞ்சாட்டியது.</p><p> 

இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்த பெண்டகன் செய்தி தொடர்பாளர் ஷான் பார்னெல், " ஜூலை 7 முதல் நடைபெற்று வரும் தாக்குதலில் சுமார் 100 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஏதாவது ஒருவகையில் காயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2487004d-acdb-4778-b40b-311a79f4c58d/26-6a5f6ea89d617.webp' /></p><p>

அதில் பெரும்பாலானோருக்கு சிறிய அளவிலான காயம் என்பதால் அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டனர்" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T13:05:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்ஸி இல்லாமலே தாயகம் திரும்பிய அர்ஜென்டினா அணி: கிடைத்த உற்சாக வரவேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/argentina-team-member-back-to-home-without-messi-1784638057"></link>
            <id>https://news.lankasri.com/article/argentina-team-member-back-to-home-without-messi-1784638057</id>
            <summary type="text">உலகக்கிண்ணத்தை இழந்தாலும் தாயகம் திரும்பிய அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.&amp;nbsp;தாயகம் திரும்பிய&amp;nbsp;வீரர்கள் 

FIFA உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக்கிண்ணத்தை இழந்தாலும் தாயகம் திரும்பிய அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.&nbsp;</p><h2>தாயகம் திரும்பிய&nbsp;வீரர்கள் </h2><p>

FIFA உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வீரர்கள் தாயகம் திரும்பினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caac765a-e0fc-405f-908c-5d302c43e719/26-6a5f6ccf946b1.webp' /></p><p></p><p>
பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி மற்றும் அணியின் மற்ற வீரர்கள் விமானத்திற்கு வெளியே சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் இராணுவ இசைக்குழுவின் வரவேற்கப்பட்டனர். </p><p>

அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் உற்சாக வீரர்களை வரவேற்றனர்.&nbsp;</p><h2>பட்டாசுகளை வெடித்தும்&nbsp;</h2><p>

வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் நடனமாடியும், பாடியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.
</p><p>
முன்னதாக, அணியின் சில வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் தாயகம் திரும்பும் விமானத்தில் செல்ல மாட்டார்கள் என அர்ஜென்டினா கால்பந்து சங்கம் தெரிவித்திருந்தது.
</p><p>
அதன்படி, நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) குழுவினருடன் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ef9de71-2157-497d-8e93-4da763a426d0/26-6a5f6b2fad63e.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90929f3f-8da2-446c-8a80-b803899dd898/26-6a5f6b307c264.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3120717d-6bce-4eb3-8612-4a4de2d4e0d7/26-6a5f6cceaa167.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T12:49:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக இடம்: ஆண்களைவிட...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/more-womens-than-men-in-andy-burnham-cabinet-1784636531"></link>
            <id>https://news.lankasri.com/article/more-womens-than-men-in-andy-burnham-cabinet-1784636531</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம், தனது அமைச்சரவையில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக இடம் கொடுத்துள்ளார்.

ஆண்களை விட பெண்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம், தனது அமைச்சரவையில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக இடம் கொடுத்துள்ளார்.
</p><h3>
ஆண்களை விட பெண்களுக்கு அதிக இடம்&nbsp;</h3><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e9bf75-2d56-4c29-9bc2-4ad46e60e845/26-6a5f647582a43.webp' /></p><p>ஆம், ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் 11 ஆண் அமைச்சர்கள், 12 பெண் அமைச்சர்கள்!</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d39445ba-d012-4c74-bd3e-506f4194274d/26-6a5f6474d51e9.webp' /></p><p>அவர்களில், உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், வீட்டுவசதித்துறை அமைச்சரான ஏஞ்சலா ரெய்னர், முதல் மாநிலச் செயலரான லூயிஸ் ஹைக் மற்றும் கல்விச் செயலரான லூசி பவல் ஆகியோர் அடங்குவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef03a1a6-2c73-4108-9f15-a20c9d446a7d/26-6a5f647635947.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43964547-5872-4e7a-a784-a6d6f8eeea02/26-6a5f6476dd28a.webp' /></p><p>லூயிஸுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் மாநிலச் செயலர் பதவி என்பது, துணைப் பிரதமர் பதவிக்கு இணையான பதவியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d0a93f-288f-48e2-be29-0c5a3bfbc6b7/26-6a5f647798c0e.webp' /></p><p>மேலும், யெவட் கூப்பருக்கு சுகாதாரச் செயலர் பதவியும், பிரிட்ஜட் பிலிப்சனுக்கு பெண்கள் மற்றும் சமத்துவ அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c515acc-4bfd-4452-b598-5fc5053e39b4/26-6a5f647847bc1.webp' /></p><p>அத்துடன், ஆன்டி பர்னாம் நாடாளுமன்ற உறுப்பினராவதில் முக்கிய பங்காற்றிய ஆனலீஸ் மிட்க்லீக்கு chief whip என்னும் பொறுப்பும், இந்திய வம்சாவளியினரான லிசா நந்திக்கு கலாச்சாரச் செயலர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7967e08-9170-4418-bdce-4da10ff9508c/26-6a5f6478ea4ce.webp' /></p><p>முந்தைய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரின் முதல் அமைச்சரவையிலும் பெண்களுக்கு அதிக இடம் வழங்கப்பட்டிருந்தது. அவரது அமைச்சர்களில் 11 பேர் பெண்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T12:22:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்; பதவி விலக வேண்டும்: போராட்டத்தில் ராகுல் காந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rahul-gandhi-demand-pm-modi-resign-and-protest-1784635805"></link>
            <id>https://news.lankasri.com/article/rahul-gandhi-demand-pm-modi-resign-and-protest-1784635805</id>
            <summary type="text">நீட் முறைகேடுகளுக்குபொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.&amp;nbsp;காவல்துறை அடக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் முறைகேடுகளுக்குபொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.&nbsp;</p><h2>காவல்துறை அடக்குமுறை</h2><p>
 
CJP போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட காவல்துறை அடக்குமுறையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e49a9328-f81e-4d3e-9f9e-e1706ccf6054/26-6a5f63341871c.webp' /></p><p></p><p>


நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

கல்வி மற்றும் தேர்வு முறை தொடர்பாகவே இந்த மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>

மக்கள் தாக்கப்படும் விதம் முற்றிலும் 'இந்தியத்தன்மைக்கு முரணானது. நேற்று நடந்த சம்பவத்திற்கு மோடி ஜி இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை.

 கல்வி மற்றும் தேர்வு முறைகள் சீர்குலைந்து, அவை நடைமுறையில் இல்லாமலே போய்விட்டன என்பது நாடு முழுவதற்கும் தெரியும். </p><p>பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார்? அதற்கான காரணம் என்ன? அவர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாணவர்களைக் காவல்துறையினர் தாக்கும் இந்த அராஜகத்தை நிறுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.&nbsp;</p><h2>போராட்டத்தில் ராகுல் காந்தி</h2><p>
 அதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டத்தில் இறங்கினர்.</p><p>

நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என பிரதமர் இல்லம் நோக்கி சென்றனர். 

ஆனால், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த, காங்கிரஸ் கட்சியினர் அங்கேயே அமர்ந்து போராடி வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9583d71f-1c58-45b4-bca3-359d79472d7e/26-6a5f6334bec1b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T12:15:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு கப் மீல் மேக்கர் போதும்.., சுவையான கோலா உருண்டை செய்யலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kola-urundai-recipe-in-tamil-1784635288"></link>
            <id>https://news.lankasri.com/article/kola-urundai-recipe-in-tamil-1784635288</id>
            <summary type="text">மீல் மேக்கரில் புரதச்சத்து மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. 

மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீல் மேக்கரில் புரதச்சத்து மிக அதிக அளவில் நிறைந்துள்ளது.</p><p> 

மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், நார்ச்சத்துக்களும் காணப்படுகின்றன.
</p><p>
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த மீல் மேக்கர் கோலா உருண்டை மிகவும் பிடிக்கும்.
</p><p>
அந்தவகையில், நாவூறும் சுவையில் மீல் மேக்கர் கோலா உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>தேவையான பொருட்கள்
</h2><ul><li>
மீல் மேக்கர்- 1 கப் </li><li>
சோம்பு- 1 ஸ்பூன்
</li><li>பச்சைமிளகாய்- 2
</li><li>வெங்காயம்- 1</li><li>
புதினா- 1 கைப்பிடி</li><li>கொத்தமல்லி- சிறிதளவு</li><li>
பொட்டுக்கடலை- 2 ஸ்பூன்
</li><li>மிளகாய் தூள்- 1 ஸ்பூன்</li><li>
கரம் மசாலா- ½ ஸ்பூன்
</li><li>உப்பு- தேவையான அளவு</li><li>இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்</li><li>அரிசி மாவு- 1 ஸ்பூன்
</li><li>கறிவேப்பிலை- 1 கொத்து</li></ul><h2>செய்முறை</h2><p>

முதலில் மீல் மேக்கரை வெந்நீர் ஊற்றி 15 நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.
</p><p>
பின் ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, இஞ்சி பூண்டு, அரிசி மாவு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/949496f0-9d6e-4a2c-bbcd-69ec609ec9ce/26-6a5f5f9a9556c.webp' /></p><p>

அடுத்து இதில் ஊறவைத்த சோயாக்களை பிழிந்து சேர்த்து நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து சிறிய சிறிய உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
</p><p>
இறுதியாக வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை பொறித்து எடுத்தால் சுவையான மீல் மேக்கர் கோலா உருண்டை தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T12:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய்க்கு வீடியோவை அனுப்பவா? காவலரை மிரட்டிய வடமாநில ஓட்டுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/driver-to-police-says-will-send-video-to-cm-vijay-1784634567"></link>
            <id>https://news.lankasri.com/article/driver-to-police-says-will-send-video-to-cm-vijay-1784634567</id>
            <summary type="text">முதல்வர் விஜய்க்கு வீடியோவை அனுப்பவா என காவலரை வடமாநில லொறி ஓட்டுநர் மிரட்டிய வீடியோ இணையத்த்தில் வைரலாகி வருகிறது.

லஞ்சத்திற்கு எதிராக முதல்வர் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய்க்கு வீடியோவை அனுப்பவா என காவலரை வடமாநில லொறி ஓட்டுநர் மிரட்டிய வீடியோ இணையத்த்தில் வைரலாகி வருகிறது.
</p><h3>
லஞ்சத்திற்கு எதிராக முதல்வர் விஜய்</h3><p>

தமிழக முதல்வராக உள்ள விஜய், லஞ்சம் ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்குவேன் என உறுதியளித்துள்ளார்.&nbsp;</p><p>

சமீபத்தில் கரூரில் பேசிய முதல்வர் விஜய், "யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள். உங்களுடன் நான் இருக்கிறன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ed888d5-0d46-4a98-b6f7-6c6533505793/26-6a5f5cc90b180.webp' /></p><p> 

இதை மீறி யாராவது கட்டாயப்படுத்தினால், இது எங்க மகன், எங்க பிள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்கள் விஜியோட ஆட்சி என்று உறுதியாக சொல்லுங்கள்" என பேசினார். </p><p>

அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் உடனடியாக 94981 80936 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மெசேஜ் மூலம் புகார் அளிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. </p><p>

மேலும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு dvac@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கு அல்லது 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய எண்களுக்கும் புகார் தெரிவிக்கலாம்.</p><h3> 

காவலரை மிரட்டிய வடமாநில ஓட்டுநர்
</h3><p>
இந்நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த லொறி ஓட்டுநர் ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள காவலரிடம் தளபதிக்கு விஜய் கிட்ட சொல்லட்டுமா என மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298ed564-924b-4f68-909a-88237ad487c5/26-6a5f5cc9c76ab.webp' /></p><p>

அந்த வீடியோவில் அபராதம் விதிக்கும் மெஷின் உடன் உள்ள காவலர் பில் எங்கே? நான் சோதனையிட வேண்டும் என கேட்கிறார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">North Indian truck driver used just name of <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a> to stop this Police from taking bribe 🙏🙏<br><br>Driver : Take a photo, Vijay Thalapathy ji.<br><br>Driver : Look, our container is empty, there isn&#39;t even a seal on it...<br><br>Police Officer : Hey, let me check it first. Where is the… <a href="https://t.co/UabFQjR7Hn">pic.twitter.com/UabFQjR7Hn</a></p>&mdash; Iʀsʜᴀᴅ (@irshad5005) <a href="https://x.com/irshad5005/status/2079414563347583161?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அதனை வீடியோ எடுக்கும் வட மாநில லொறி ஓட்டுநர், "என் லாரியின் கண்டெய்னர் காலியாக இருக்கிறது. அதில் சீல் கூட இல்லை. ஆனால் இந்த காவலர் அபராதம் விதிக்கும் வகையில் பணம் கேட்கிறார். 

தளபதி விஜய் நம்பர் என்னிடம் இருக்கிறது. நான் இதை அவருக்கு அனுப்பி புகாரளிக்கிறேன்" என கூறுகிறார்.</p><p> 

இந்த வீடியோவை தவெகவினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டினாவின் வன்முறை நட்சத்திரங்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/argentina-violent-stars-face-1784633008"></link>
            <id>https://news.lankasri.com/article/argentina-violent-stars-face-1784633008</id>
            <summary type="text">ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியின் முடிவில் ஸ்பெயினுக்கு எதிராக அர்ஜென்டினா நடந்து கொண்ட அவமானகரமான விதம், FIFA மேற்கொண்டு வரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியின் முடிவில் ஸ்பெயினுக்கு எதிராக அர்ஜென்டினா நடந்து கொண்ட அவமானகரமான விதம், FIFA மேற்கொண்டு வரும் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.</p><h2>கண்டிக்கத்தக்க சம்பவங்கள்</h2><p>
</p><p>கூடுதல் நேர ஆட்ட முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஸ்பெயின் அணி உலக சேம்பியனானது உறுதியான உடனேயே, அர்ஜென்டினாவின் பல வீரர்கள் ஸ்பெயின் வீரர்களுடன் கசப்பான மோதல்களில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18648baf-e0b5-48e7-9058-ad849f8fc2cb/26-6a5f5956a8f10.webp' /></p><p> </p><p>ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோட்ரி தனது சக வீரர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபடச் சென்றபோது நஹுவேல் மோலினாவால் தாக்கப்பட்டார்; அதைத் தொடர்ந்து, அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் ராபர்டோ அயலா டேனி ஓல்மோவை தாக்கினார். </p><p>வேறொரு இடத்தில், அர்ஜென்டினா நடுக்கள வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்துத் தாக்கியதுடன், பின்னர் தனது சக வீரரான தியாகோ அல்மடாவின் உதவியுடன், ஸ்பெயின் மாற்று வீரரான காவியை தரையில் தள்ளிவிட்டார். </p><p>பந்தை அதிக நேரம் தன்வசம் வைத்திருப்பதிலும், வாய்ப்புகளை உருவாக்குவதிலும் ஸ்பெயின் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அர்ஜென்டினா கடுமையான தடுப்பாட்டங்கள், நேரத்தை வீணடித்தல் மற்றும் முறையற்ற தந்திரங்கள் மூலம் அவர்களைத் தடுக்க முயன்றது.</p><p></p><p> </p><p>அதன் பின்னரே, ஆட்டத்திற்குப் பிந்தைய கண்டிக்கத்தக்க சம்பவங்கள் நிகழ்ந்தன. இறுதிப் போட்டிக்குப் பிறகு, உலக கால்பந்தாட்ட நிர்வாக அமைப்பான ஃபிஃபா, அர்ஜென்டினாவின் போட்டிக்குப் பிந்தைய வன்முறை நடத்தை குறித்து உடனடியாக ஒரு விசாரணையைத் தொடங்கியது. </p><p>மேலும், காணொளிக் காட்சிகள், நடுவர் அறிக்கைகள் மற்றும் போட்டிப் பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய ஒரு ஒழுங்கு மற்றும் நெறிமுறை சட்டத்தரணியையும் நியமித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48c5ffb2-ff5b-49fb-9ce9-81daf7786b23/26-6a5f5957703df.webp' /></p><p> </p><p>ஃபிஃபாவின் (FIFA) ஒழுங்குமுறை விதிகளின்படி, வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படும் வீரர்களுக்குக் குறைந்தது மூன்று போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட வேண்டும்.</p><h2>தடைகள் விதிக்கப்பட்டு</h2><p> </p><p>எதிராளி மீது குத்துதல், உதைத்தல், முழங்கையால் தாக்குதல், தலையால் முட்டுதல் அல்லது பிற தாக்குதல்கள் உள்ளிட்ட ஆக்ரோஷமான செயல்களுக்கும் அதே தண்டனை பொருந்தும். </p><p>ஆனால், மோலினா, பரேடெஸ், அல்மாடா மற்றும் அயலா ஆகியோர் இந்த விதிகளை மீறியதாகத் தோன்றினாலும், ஃபிஃபா இதுவரை எந்தத் தடையும் அறிவிக்கவில்லை; இது அந்த அர்ஜென்டினா வீரர்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் கிடைக்கக்கூடும் என்பதையே உணர்த்துகிறது.</p><p> ஒழுங்கு நடவடிக்கைக் விதிகளின் 69-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, உலகக் கிண்ணம் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வீரர்களுக்கு விதிக்கப்படக்கூடிய எந்தவொரு தண்டனையும் அர்ஜென்டினாவின் அடுத்த அதிகாரப்பூர்வ போட்டிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7cfa05c-7700-49e3-85d2-e6e2c986c4ea/26-6a5f595824ce9.webp' /></p><p> </p><p>இந்தத் தடைகள் கிளப் சார்ந்த இடைநீக்கங்களுக்கு வழிவகுக்க வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும், கடந்த காலங்களில் மிகத் தீவிரமான நிகழ்வுகளில், கால்பந்து தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் வீரர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையிலான தற்காலிகத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p> இத்தாலிக்கு எதிரான உலகக் கிண்ணம் ஆட்டத்தின்போது ஜியோர்ஜியோ கியெல்லினியைக் கடித்ததற்காக, 2014-இல் லூயிஸ் சுவாரஸ் கால்பந்து விளையாட்டிலிருந்து நான்கு மாத காலத் தடைக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T11:21:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்கா விடுத்த திடீர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-issues-alert-for-citizens-1784626031"></link>
            <id>https://news.lankasri.com/article/us-issues-alert-for-citizens-1784626031</id>
            <summary type="text">ஈரானுடனான போர் சூழல் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான போர் சூழல் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><h2>மறுபரிசீலனை செய்ய</h2><p>
</p><p>அதில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளதால், பாதுகாப்புச் சூழல் சிக்கலானதாக நீடிப்பதாகவும், எதிர்பாராத விதமாக நிலைமை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24dc6372-4923-4404-bb0b-216708f7cda5/26-6a5f41612ffd3.webp' /></p><p> </p><p>அத்துடன், மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள், அப்பகுதிக்குச் செல்வதையும் அதன் வழியாகப் பயணம் செய்வதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
</p><p>அமெரிக்கத் தூதரக வளாகங்கள் அல்லது உலகம் முழுவதும் அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தால் சில வாரங்கள் நீடித்த அமைதிக்குப் பிறகு மத்திய கிழக்கில் போர் மீண்டும் தொடங்கியுள்ளது; ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற அமெரிக்கா மோதத் தொடங்கியதால், கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.</p><h2>படையெடுக்கலாம்</h2><p>
அமெரிக்காவுடனான போர்நிறுத்தம் முறிந்ததால், ஈரான் ஹார்முஸ் நீர்வழிப்பாதையை மீண்டும் முற்றுகையிட்டது; இதற்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானின் துறைமுகங்களை மீண்டும் முற்றுகையிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81ea164e-6dea-42f1-8d49-efa7f658fba9/26-6a5f416066dc9.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மிக விரைவில் படையெடுக்கலாம் என்ற கருத்தும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. இதனிடையே, அமெரிக்காவுடன் முழுமையான போரில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் தனது நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது. </p><p>மேலும், அமெரிக்க இராணுவம் எந்த நேரத்திலும் ஈரானுக்குள் ஊடுருவலாம் எனவும், அதை எதிர்கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T11:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாம்புக்கடி மோசடி... மருத்துவர் உட்பட 17 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/17-arrested-in-17-cr-snake-bite-scam-chhattisgarh-1784631213"></link>
            <id>https://news.lankasri.com/article/17-arrested-in-17-cr-snake-bite-scam-chhattisgarh-1784631213</id>
            <summary type="text">இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், விநோதமான மோசடி ஒன்று குறித்து தெரியவந்துள்ள நிலையில், அது தொடர்பில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், விநோதமான மோசடி ஒன்று குறித்து தெரியவந்துள்ள நிலையில், அது தொடர்பில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
</p><h3>
பாம்புக்கடி மோசடி...
</h3><p>
சத்தீஸ்கர் அரசு, பாம்புக்கடியால் யாராவது உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்துக்கு 4 லட்ச ரூபாய் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89c93858-8c1f-49e8-813f-ce487835b16c/26-6a5f4faf3eb2b.webp' /></p><p>
இந்நிலையில், Beltara தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சுஷாந்த் ஷுக்லா, Bilaspur மாவட்டத்தில் மட்டும் 431 பேர் பாம்புக்கடிக்கு பலியாகியுள்ளது, மற்றும் அதற்காக 17.24 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ள விவகாரத்தை சட்டமன்றத்தில் எழுப்பியுள்ளார்.
</p><p>
அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாம்புக்கடி மரணத்துக்காக அரசு நிதி வழங்குவதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஒரு கும்பல் மோசடி செய்துவந்தது தெரியவந்துள்ளது. </p><p></p><p>

அதாவது, ஏதாவது காரணத்தால் இறந்தவர்களின் உடற்கூறு ஆய்வு முடிவையும், பாம்பு கடித்தததால் மரணம் என மாற்றி, அரசு கொடுக்கும் நிதியை மோசடி செய்து வாங்கிவந்துள்ளது அந்த கும்பல்.
</p><p>
அந்தக் கும்பலில் மருத்துவர், மருத்துவ உதவியாளர்கள், வருவாய்த்துறை எழுத்தர்கள், சட்டத்தரணிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் என பலதரப்பட்டவர்கள் உள்ளனர்.</p><p>

இந்த மோசடி குறித்து தெரியவந்ததைத் தொடர்ந்து, ஒரு மருத்துவர் உட்பட மொத்தம் 17 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். மற்றொரு மருத்துவர் தலைமறைவாகிவிட்டார்.
</p><p>
வழக்கு விசாரணை தொடரும் நிலையில், இந்த வழக்கில் மேலும் பலர் சிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T10:53:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதியான SBI ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sbi-funds-employees-crorepatis-1784630805"></link>
            <id>https://news.lankasri.com/article/sbi-funds-employees-crorepatis-1784630805</id>
            <summary type="text">எஸ்பிஐ ஃபண்ட்ஸ் பங்குச் சந்தையில் நுழைவதால், அந்நிறுவனத்தில் பல வருடங்களாக ஊழியர்கள் வைத்திருந்த பங்கு உரிமையானது, பல நிர்வாகிகளுக்குப் பல கோடி ரூபாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எஸ்பிஐ ஃபண்ட்ஸ் பங்குச் சந்தையில் நுழைவதால், அந்நிறுவனத்தில் பல வருடங்களாக ஊழியர்கள் வைத்திருந்த பங்கு உரிமையானது, பல நிர்வாகிகளுக்குப் பல கோடி ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் நிலையில் உள்ளது.</p><h2>ஒரே நாளில் பல கோடி</h2><p>
</p><p>இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் ஐபிஓ வெளியிட்டு அதன் பங்குகள் இன்று பங்குச்சந்தையில் தனது வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8db58e26-9c4c-4107-9f18-050a087c371a/26-6a5f4f49e6ed7.webp' /></p><p> </p><p>இந்தியாவில் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஐபிஓ இது. இந்த ஐபிஓ வெளியீடு எஸ்பிஐ வங்கி ஊழியர்களுக்கு பெரிய ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. </p><p>பல ஊழியர்களும் ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதிகளாகியுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டில் ஒரு பங்கின் விலை 574 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. </p><p>இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 7 சதவீதம் கூடுதல் விலையில் பங்குகள் விற்பனைக்கு வந்தன. பிஎஸ்இ-யில் 610 ரூபாய்க்கும், என்எஸ்இ-யில் 613.30 ரூபாய்க்கும் பங்குகள் வர்த்தகம் செய்ய தொடங்கின. </p><p>இதன் மூலம் நிறுவனத்தின் பங்கு உரிமை திட்டத்தின் கீழ் பங்குகளை வைத்திருந்த சுமார் 13 ஊழியர்கள் ஒரே நாளில் பெரும் பணக்காரர்களாக மாறியுள்ளனர். குறிப்பாக நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் தேவிந்தர் பால் சிங் தன்னிடம் 21.14 லட்சம் பங்குகளை வைத்துள்ளார்.</p><p></p><p> </p><p>தற்போது அவற்றின் மதிப்பு 121 கோடி ரூபாய்.
முதலீட்டு பிரிவு தலைமை அதிகாரியான சீனிவாசன் ராம ஐயர் வசம் உள்ள 18.25 லட்சம் பங்குகளின் மதிப்பு சுமார் 105 கோடி ரூபாயாக உள்ளது. </p><p>தலைமை அதிகாரிகளுள் ஒருவரான சீனிவாஸ் ஜெயின் 59 கோடி ரூபாய் பங்குகளை கொண்டுள்ளார். இதே போல தொடக்க காலத்தில் நிறுவனம் கொடுத்த பங்குகளை அப்படியே வைத்திருந்த பல ஊழியர்களும் தலா 1 கோடிக்கும் அதிகமாக லாபம் பார்த்துள்ளனர்.</p><h2>மிகப்பெரிய லாபம்</h2><p> </p><p>2018ஆம் ஆண்டில் தான் எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மேண்ட் ஊழியர்களுக்கு பங்கு என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதில் பங்குகளை பெற்ற ஊழியர்கள் சிறந்த லாபம் பெற்றுள்ளனர். </p><p>இந்த திட்டம், ஊழியர்களுக்கு 39 முதல் 455 ரூபாய் வரையிலான விலையில் பங்குகளை வழங்கியது. இன்று ஐபிஓ விலை 574 ரூபாயாக உயர்ந்திருப்பது, நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் உறுதுணையாக இருந்த ஊழியர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. </p><p>மட்டுமின்றி, வலுவான நிறுவன ரீதியான தேவையை ஈர்த்த பிறகே, எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மேண்ட் நிறுவனம் சந்தையில் நுழைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3b74d91-c336-4386-a17b-89683cd26a0a/26-6a5f4f4aa2c7a.webp' /></p><p> </p><p>ஐபிஓ தொடங்குவதற்கு முன்னதாக, எஸ்பிஐ ஃபண்ட்ஸ் முக்கிய முதலீட்டாளர்களிடமிருந்து 129 முன்னணி நிறுவனங்கள் உட்பட, கிட்டத்தட்ட ரூ. 2,663 கோடியைத் திரட்டியது. மேலும் இந்த நிறுவனம், ஐபிஓ-வுக்கு முந்தைய நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறத்தாழ ரூ. 1,880 கோடியைத் திரட்டியிருந்தது. </p><p>மட்டுமின்றி, ஜூலை 14 முதல் ஜூலை 16 வரையிலான மூன்று நாள் சந்தா காலம் முழுவதும் முதலீட்டாளர்களின் ஆர்வம் வலுவாக இருந்தது. இந்த வெளியீடு ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 42 மடங்கு சந்தா பெறப்பட்டது. </p><p>இதற்கு முக்கிய காரணம் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களே ஆவர். அவர்களில், நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு சுமார் 140 மடங்கு அதிகமாக சந்தா பெறப்பட்டது. </p><p>நிறுவனம் சாராத முதலீட்டாளர் பிரிவில் 22.51 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், சில்லறை முதலீட்டாளர் பிரிவில் 3.6 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T10:45:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் தூதருக்கு அடி உதை... ஈரான் மீது குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-says-2-diplomats-detained-abused-in-iran-1784630582"></link>
            <id>https://news.lankasri.com/article/france-says-2-diplomats-detained-abused-in-iran-1784630582</id>
            <summary type="text">பிரான்ஸ் தூதரக அதிகாரி ஒருவர் ஈரான் அதிகாரிகளால் அடித்து உதைக்கப்பட்டதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பிரான்ஸ் தூதருக்கு அடி உதை...

பிரான்ஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தூதரக அதிகாரி ஒருவர் ஈரான் அதிகாரிகளால் அடித்து உதைக்கப்பட்டதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
</p><h3>
பிரான்ஸ் தூதருக்கு அடி உதை...
</h3><p>
பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் இருவர் ஈரானில் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் ஒருவருக்கு அடியும் உதையும் விழுந்ததாகவும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜீன் நோயல் பாரட் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eae5f8e-2b13-4f6f-b269-e7f5827c6dfd/26-6a5f4d380b0d6.webp' /></p><p>
ஞாயிற்றுக்கிழமை இரவு, ஈரான் அதிகாரிகள், பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் இருவரை காரணமின்றி கைது செய்து பல மணி நேரம் விசாரணைக்குட்படுத்தியதாகவும், பின்னர் அவர்கள் தூதரகம் திரும்பியதாகவும் தெரிவித்துள்ள ஜீன், தற்போது அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும், விரைவில் பிரான்ஸ் திரும்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
சமீபத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சரான அப்பாஸ் அராக்சியை தான் சந்தித்ததாக தெரிவித்துள்ள ஜீன், தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகள் நடத்தப்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளத்தகாதது என்றும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்வதாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T10:43:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருங்கால தலைமுறை குரல் எழுப்பும்போது ஒடுக்குவதா? எதிர்காலத்தை அழித்துவிடும்: பிரபல நடிகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tovino-thomas-voice-for-cjp-protest-1784629463"></link>
            <id>https://news.lankasri.com/article/tovino-thomas-voice-for-cjp-protest-1784629463</id>
            <summary type="text">கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மலையாள நடிகர் டோவினோ தாமஸ் பதிவிட்டுள்ளார்.நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் டெல்லியில் நீட் வினாத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மலையாள நடிகர் டோவினோ தாமஸ் பதிவிட்டுள்ளார்.</p><h2>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் </h2><p>டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73dffed8-be79-4700-9e6f-99d1733563ad/26-6a5f4a6725c7b.webp' />&nbsp;</p><p></p><p> 

போராட்ட களத்தில் குவிந்த இராணுவப்படை, அதிவிரைவு படையினர் நாடாளுமன்றத்தை நோக்கி சென்றவர்கள் மீது தடியடி நடத்தினர் மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.</p><p> மேலும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73d44eb1-e38f-4ee3-93b6-98f63eb4cdb1/26-6a5f4a67ca9c8.webp' />&nbsp;</p><h2>டொவினோ தாமஸ்</h2><p>
அந்த வகையில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><p> 

அதில் அவர், "சரி, தவறு என்பது ஒருவேளை சார்புடையதாக இருக்கலாம்; ஆனால், அமைதியான போராட்டத்தைக் கையாள்வதற்கு இது நிச்சயமாக சரியான வழி அல்ல.

நாட்டின் வருங்கால தலைமுறையினர் தங்கள் குரலை எழுப்பும்போது, அவர்களை ஒடுக்கும் வகையிலான இராணுவ நடவடிக்கை அந்த எதிர்காலத்தையே அழித்து விடுகிறது" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ed5096a-a0b7-4767-bb6c-13bde09e8158/26-6a5f4a6883ed8.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T10:29:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணைய வசதி இல்லாமல் யுபிஐ பரிவர்த்தனை.., விரைவில் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/upi-transactions-without-internet-access-scheme-1784628658"></link>
            <id>https://news.lankasri.com/article/upi-transactions-without-internet-access-scheme-1784628658</id>
            <summary type="text">இந்தியாவில் இணைய வசதி இல்லாமலேயே யுபிஐ மூலம் பணம் செலுத்தும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அறிமுகம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இணைய வசதி இல்லாமலேயே யுபிஐ மூலம் பணம் செலுத்தும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>

விரைவில் அறிமுகம்</h2><p> 

நாட்டில் பெரும்பாலானோர் யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p> 

ஆனால், இணைய வசதி இல்லாத மலைப்பகுதிகள், விமானங்கள் மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களில் யுபிஐ பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை உள்ளது.
</p><p>
இதற்காக, இணையம் இல்லாமலேயே யுபிஐ பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc6d2b06-07b5-4b8d-bb7b-fe67469fd5b1/26-6a5f463bbe292.webp' /></p><p>இதற்காக, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் உள்ள NFC (Near Field Communication) தொழில்நுட்பத்தை யுபிஐ சேவையிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>

இதன் மூலம், POS இயந்திரங்களில் இணைய வசதி இல்லாமலேயே மொபைல் போன் மூலம் பணம் செலுத்த முடியும்.</p><p>

முதற்கட்டமாக, இணையம் இல்லாமல் ரூ.2,000 வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T10:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஆண்டில் ஜேர்மனியை விட்டு வெளியேறிய 288,000 ஜேர்மானியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/288000-germans-moves-to-abroad-in-a-year-1784625950"></link>
            <id>https://news.lankasri.com/article/288000-germans-moves-to-abroad-in-a-year-1784625950</id>
            <summary type="text">ஒரே ஆண்டில் 288,000 ஜேர்மானியர்கள் ஜேர்மனியை விட்டு வெளியேறியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியை விட்டு வெளியேறிய ஜேர்மானியர்கள்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரே ஆண்டில் 288,000 ஜேர்மானியர்கள் ஜேர்மனியை விட்டு வெளியேறியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h3>

ஜேர்மனியை விட்டு வெளியேறிய ஜேர்மானியர்கள்</h3><p>

ஒரே ஆண்டில் 288,000 ஜேர்மானியர்கள் ஜேர்மனியை விட்டு வெளியேறியதாக ஜேர்மன் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0237cd38-43e6-4fff-917a-8d74eef81de1/26-6a5f3b1fddbb6.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், அவர்களில் பாதி பேர் ஜேர்மனியில் அதிக வருவாய் தரும் பணிகளில் இருந்தவர்கள்.
</p><p>
சமீபத்திய ஆய்வொன்றில், ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் இரண்டில் ஒருவர், தாங்கள் வெளிநாடுகளில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். </p><p></p><p>

30 சதவிகிதம் பேர், ஏற்கனவே வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பம் அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
இந்நிலையில், வெளிநாட்டு அனுபவமும் அறிவும் புத்தாக்கத்துக்கும் புதிய தொழில் வாய்ப்புகளுக்கும் உத்வேகத்தை அளிக்கும் என்பதால், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை நேர்மறையான விடயமாக கருதலாம் என்று கூறும் பொருளாதார நிபுணர்கள், அதே நேரத்தில், ஒரு நாட்டிலுள்ள பணியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள் என்றால், ஏதோ பிரச்சினை என்றுதான் அர்த்தம்.
</p><p>
ஜேர்மனியில் நிலவும் சூழல், வேலை செய்யவும், வாழவும் ஏற்றதாக இல்லை என்னும் திருப்தியின்மையின் அடையாளமே அவர்கள் வெளியேறக் காரணம் என்பதை புரிந்துகொள்ளலாம் என்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0946a41-c751-40b0-98d2-eab2f9d7f899/26-6a5f3b208c7e8.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், வேலை வழங்கும் ஒரு முதலாளி, ஒரு பணியாளருக்கு 100 யூரோக்கள் செலவு செய்தால், அதில் 50.70 யூரோக்கள் மட்டுமே அந்தப் பணியாளர் கையில் கிடைக்கிறதாம்.</p><p>

மீதமுள்ள தொகை, வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்புகளுக்காக சென்றுவிடுகிறதாம்.
</p><p>
ஆக, ஆய்வில் பங்கேற்றவர்களில் 70 சதவீதம் பேர், ஜேர்மனியில் வருமானத்துடன் ஒப்பிடும்போது வரிச்சுமை மிகவும் அதிகமாக இருப்பதாகவும், வேலையில் காட்டும் தனிப்பட்ட அர்ப்பணிப்பு போதுமான பலனைத் தருவதில்லை என்றும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
ஆகவேதான், ஜேர்மானியர்கள் பலர் ஜேர்மனியை விட்டு வெளியேறுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T10:05:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேற்கிந்திய தீவுகளில் கெத்து காட்டும் பாபர் அஸாம்: 455 ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/babar-azam-century-as-captain-in-west-indies-2026-1784625469"></link>
            <id>https://news.lankasri.com/article/babar-azam-century-as-captain-in-west-indies-2026-1784625469</id>
            <summary type="text">மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் பாகிஸ்தான் அணி 455 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.பாபர் அஸாம் 

பாகிஸ்தான் ஆடவர் அணி மேற்கிந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் பாகிஸ்தான் அணி 455 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.</p><h2>பாபர் அஸாம் 
</h2><p>
பாகிஸ்தான் ஆடவர் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான பயிற்சி டெஸ்ட் ட்ரினிடாட்டில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🚨 CENTURY FOR BABAR AZAM! 🇵🇰💯<br><br>Babar Azam brings up a magnificent century in Pakistan’s warm-up match with a composed and classy innings. 👑🔥<br><br>🏏 Babar Azam: 100 (151)*<br>🇵🇰 Pakistan: 326/2 (96.1 overs)<br><br>A captain’s knock filled with patience, timing, and trademark elegance as…</p>&mdash; Iru Iqbal 🇵🇰 (@IrtazaIqbal167) <a href="https://x.com/IrtazaIqbal167/status/2078921917982277667?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 455 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.&nbsp;</p><p></p><p>

அணித்தலைவர் பாபர் அஸாம் (Babar Azam) 100 ஓட்டங்களும், அஸான் அவைஸ் 100 ஓட்டங்களும், ஷான் மசூத் 70 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர் கூப்பர் 1 ரன்னில் அவுட் ஆனார். </p><h2>

கவேம் ஹோட்ஜ் 92 ஓட்டங்களில் அவுட் </h2><p>தகெனரின் சந்தர்பால் நிதானமாக ஆட, கவேம் ஹோட்ஜ் வேகமாக பவுண்டரிகளை விரட்டினார். இந்தக் கூட்டணி 148 ஓட்டங்கள் குவிக்க, தகெனரின் சந்தர்பால் 51 (155) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பெகி ஜோஸப் (5), ஜோஷுவா (0) சொதப்பினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17f24e56-ed66-470a-8349-216207fd90b2/26-6a5f3ae24f127.webp' /></p><p>மறுமுனையில் சதத்தை நோக்கி பயணித்த கவேம் ஹோட்ஜ் 92 ஓட்டங்களில் lbw ஆகி வெளியேறினார்.</p><p> 

ஜித் கூலி 44 ஓட்டங்களுடன் களத்தில் நிற்க, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 268 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
</p><p>
மொஹம்மது அலி 3 விக்கெட்டுகளும், ஆமீர் ஜமால் மற்றும் அலி உஸ்மான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd14fa1e-6d59-410a-a2b4-5f3711b83112/26-6a5f3ae19358c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T09:23:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்ணீர் திறக்க மறுக்கும் இந்தியா - தமிழ் வம்சாவளி கனேடிய அமைச்சரிடம் உதவி கேட்ட பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-seeks-support-indus-water-to-canada-fm-1784625275"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-seeks-support-indus-water-to-canada-fm-1784625275</id>
            <summary type="text">சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக கனடாவிடம் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது.

 பாகிஸ்தான் சென்றுள்ள அனிதா ஆனந்த்

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள கனடா வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக கனடாவிடம் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது.
</p><h3>
 பாகிஸ்தான் சென்றுள்ள அனிதா ஆனந்த்</h3><p>

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்ததோடு, 47 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86daf200-8904-4c8f-96b3-0102da7bd685/26-6a5f387d64e85.webp' /></p><p>
கடந்த 20 ஆண்டுகளில் கனடாவின் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது இதுவே முதல்முறை ஆகும். </p><p>

மேலும், இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடிய அமைச்சர் பாகிஸ்தானுக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.&nbsp;&nbsp;</p><p>அனிதா ஆனந்தின் தந்தை தமிழநாட்டை பூர்விகமாக கொண்டவர் ஆவார். அவரது தாயார் பஞ்சாபை சேர்ந்தவர் ஆவார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c8e2052-4387-49b0-aef3-d87b0cd5a510/26-6a5f387e1524d.webp' /></p><p> 

இந்த பயணத்தின் போது, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் துணை பிரதமர் இஷாக் டார் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

கனடாவிடம் கோரிக்கை 

இந்த சந்திப்பின் போது இஷாக் டார், அனிதா ஆனந்திடம் சிந்து நதி நீர் பிரச்சினையை எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a4c4ca-1412-4a42-b3e2-280f8ffac8e1/26-6a5f387cb4d4f.webp' /></p><p>

இது குறித்து பேசிய இஷாக் டார், "சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) நிறுத்தி வைப்பதாக அறிவித்ததன் மூலம், ஏற்கனவே நிலையற்ற பாதுகாப்புச் சூழலில் இந்தியா ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது.&nbsp;</p><p>

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக மீட்டெடுப்பதற்கும், நீரை ஆயுதமாக்குவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சர்வதேச சட்டம் மற்றும் ஒப்பந்தக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கும் எங்கள் நட்பு நாடுகளின் ஆதரவை நாங்கள் நாடுகிறோம்" என்று கூறினார்.</p><h3> 

சிந்து நதி நீர் ஒப்பந்தம்</h3><p> 

கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.</p><p> 

 சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) என்பது, 1960 ஆம் ஆண்டில் உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d5af983-cbae-48fe-9a61-a5371233eb43/26-6a5f387eb8f38.webp' /></p><p>
இது சிந்துப் படுகையின் 6 நதிகளின் நீரைப் பகிர்வதை நிர்வகித்து, கிழக்கு நதிகளை இந்தியாவுக்கும், மேற்கு நதிகளைப் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கும் ஒதுக்குகிறது.
</p><p>
சிந்து நதி நீர் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய ஆதாரம் ஆகும். இந்தியா இந்த நீரை நிறுத்தியுள்ளதால் பாகிஸ்தான் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது. </p><p>

சிந்து நதி நீரை திறக்க மறுத்தால் ரத்த ஆறு ஓடும், இந்தியா மீது போர் தொடுப்போம் என முன்னதாக பாகிஸ்தானின் மூத்த அரசியல் தலைவர்கள் பேசி வந்தனர்.</p><p> 

பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் நதிநீர் பகிர்வு குறித்து மீண்டும் விவாதிக்கப்பட்டாலும், அது புதிய மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ் மட்டுமே நடக்கும் என்றும் இந்தியா உறுதியாக உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T09:15:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உத்திர நட்சத்திரத்தில் சுக்கிரன்.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sukran-peyarchi-1784624269"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sukran-peyarchi-1784624269</id>
            <summary type="text">நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.</p><p>

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
</p><p>
இந்நிலையில், ஜூலை 29ஆம் திகதி அன்று அதிகாலை 4:56 மணிக்கு சுக்கிரன், பூர நட்சத்திரத்திலிருந்து உத்திர நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியடைகிறார்.</p><p>

மேலும், சுக்கிரன் ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை இந்த நட்சத்திரத்திலேயே நிலைபெற்றிருப்பார்.
</p><p>
அந்தவகையில், உத்திர நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.&nbsp;</p><p></p><h2>ரிஷபம்</h2><ul><li> 

வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். </li><li>வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாய்ப்பு பெறுவீர்கள். </li><li>தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும்.</li><li> இந்த காலகட்டத்தில் லாபம் ஈட்ட முடியும். </li><li>நிதிநிலை நன்றாக இருக்கும். </li><li>அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும்.</li><li>புதிய வேலைகளை மாற்ற முயற்சித்தால் வெற்றி பெறலாம். </li><li>குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். </li><li>வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இது சிறப்பான காலம்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6228eab0-48b3-4d78-8602-13cffb749084/26-6a5f348fbdf5a.webp' /></p><h2>மிதுனம் </h2><ul><li>

தன்னம்பிக்கையை அளிக்கும். </li><li>நிலுவையில் உள்ள பணிகள் நடந்து முடியும். </li><li>திருமண வாழ்க்கையில் இணக்கமான சூழல் மேம்படும்.</li><li>மனதில் இருந்த குழப்பம் முடிவுக்கு வரும். </li><li>கல்வித் துறையில் நிறைய நன்மைகள் கிடைக்கும். </li><li>வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். </li><li>மூத்த அதிகாரிகளுடன் உறவு சிறப்பாக இருக்கும். </li><li>லட்சியங்களை சிரமமின்றி அடையும் வாய்ப்பு அதிகரிக்கும். </li><li>பொருளாதரரீதியாக இந்த காலகட்டம் சிறப்பானதாக இருக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0b02a9-3866-4dd5-a345-f97d501c0296/26-6a5f34907108e.webp' /></p><h2>சிம்மம் </h2><ul><li>

சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும்.</li><li> பொருத்தமான வாழ்க்கைத் துணை கிடைக்கும். </li><li>அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். </li><li>சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம்.</li><li> நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.</li><li> பணியிடத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். </li><li>திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். </li><li>வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும். </li><li>இந்த காலம் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும். </li><li>வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவடையும்.</li></ul><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f63582b-3a6b-4b9d-af37-23baabe5cf3c/26-6a5f34911ee6f.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T09:01:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் என்ன? (21-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784622560"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784622560</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (21-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (21-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,302,477.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 45,950.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 367,550.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,130.00.</p><p>

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 337,000.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,210.00.</p><p>

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 321,650.00.</p>]]></content>
            <updated>2026-07-21T08:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான திசையில் காரை செலுத்திய கனேடியர்: விபத்தில் இந்திய இளைஞர் உட்பட இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-death-accident-in-canadian-drives-wrong-way-1784621582"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-death-accident-in-canadian-drives-wrong-way-1784621582</id>
            <summary type="text">கனடாவில் கார் விபத்தொன்றில் இருவர் பலியான நிலையில், அவர்களில் ஒருவர் இந்தியர் என்பதும் மற்றவர் கனேடிய கால்பந்து விளையாட்டு வீரர் என்பதும் தெரியவந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் கார் விபத்தொன்றில் இருவர் பலியான நிலையில், அவர்களில் ஒருவர் இந்தியர் என்பதும் மற்றவர் கனேடிய கால்பந்து விளையாட்டு வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.</p><h3>

கார் விபத்தில் இருவர் பலி</h3><p>

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலை 11இல், சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில், தவறான திசையில் சென்ற ஒரு கார், எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது.
</p><p>
அந்த கோர விபத்தில், இரண்டு கார்களின் சாரதிகளும் பலியானார்கள்.
</p><p>
அவர்களில், தவறான திசையில் காரை செலுத்தியவர் ஒரு கனேடியர். அவரது பெயர் ஜேடன் (Jayden Dalke, 30). ஜேடன், பிரபல கால்பந்து அணியான Saskatchewan Roughriders அணி வீரர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51b0675f-32aa-4a53-864c-4dd60493e864/26-6a5f2a0f7bdaa.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், ஜேடனின் காரில் கஞ்சாவும், மதுபானமும் இருந்துள்ளன. அவர் பெட்ரோல் நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமலே அங்கிருந்து சென்றுவிட்டதாக பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
ஆனால், அவர் போதையிலிருந்தாரா என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஜேடனின் கார் மோதி உயிரிழந்தவர், பீஷ்மா ராஜ்யகுரு (22) என்னும் இந்தியர். பொலிசார் ராஜ்யகுருவைக் குறித்து தெரிவித்த தகவல் அவ்வளவே!&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd342388-cee6-4b79-ae36-c586a68d11ac/26-6a5f2a102da94.webp' /></p><p>

இதற்கிடையில், இந்தியாவிலிருக்கும் ராஜ்யகுருவின் பெற்றோர், தங்கள் மகனுடைய மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது நண்பர்கள், பணம் திரட்டி அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் தாங்கள் இறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.</p><p>
ராஜ்யகுருவின் பெற்றோருக்கு தங்கள் மகனை அணைத்துக்கொள்ளும் ஒரு இறுதி வாய்ப்பையும், அவருக்கு இறுதிச்சடங்கு செய்யும் வாய்ப்பையும் எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுவது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:13:16+00:00</updated>
        </entry>
    </feed>
