<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-26T08:29:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரவெடி ஆட்டமாடிய மொயீன் அலி: ஆன்டிகுவா அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/moeen-ali-blast-56-runs-antigua-won-by-30-runs-1787732171"></link>
            <id>https://news.lankasri.com/article/moeen-ali-blast-56-runs-antigua-won-by-30-runs-1787732171</id>
            <summary type="text">Moeen ali blast 56 runs in caribbean premier league 2026: கரீபியன் டி20 போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Moeen ali blast 56 runs in caribbean premier league 2026: கரீபியன் டி20 போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸை வீழ்த்தியது.&nbsp;</p><h2>மொயீன் அலி&nbsp;வாணவேடிக்கை </h2><p>
ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணிகள் மோதிய போட்டி சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b80a0cf-f178-4a5b-9347-9dfa8caa2784/26-6a8ea1a4be49b.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணியில் ரகீம் கார்ன்வால் டக்அவுட் ஆனார். அதன் பின்னர் கரிமா கோர் 27 ஓட்டங்கள் எடுத்தார்.

ஹசன் நவாஸ் 7 ஓட்டங்களில் வெளியேற, ஆமிர் ஜான்கூ 26 ஓட்டங்கள் எடுத்து மோட்டி பந்துவீச்சில் அவுட் ஆனார்.</p><p> எனினும் அணித்தலைவர் மொயீன் அலி (Moeen Ali) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.

இதன்மூலம் சரிவில் இருந்து மீண்ட அணி 155 ஓட்டங்கள் எடுத்தது. </p><p>கடைசிவரை களத்தில் நின்ற மொயீன் அலி 37 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் விளாசினார். ஷாமர் ஸ்ப்ரிங்கர் 19 ஓட்டங்கள் எடுத்தார்.&nbsp;</p><h2>ஆன்டிகுவா வெற்றி </h2><p>
அடுத்து களமிறங்கிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 18 ஓவர்களில் 125 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><p> இதன்மூலம் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
அதிகபட்சமாக ரிவால்டோ கிளார்க் 27 ஓட்டங்களும், கெவ்லோன் ஆண்டர்சன் 22 ஓட்டங்களும் எடுத்தனர். ஜோஷுவா ஜேம்ஸ் 3 விக்கெட்டுகளும், அல்ஸாரி ஜோஸப், ஷதாப் கான் மற்றும் சுஃபியான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a29b40-2ab5-47cd-a316-de98116b711f/26-6a8ea1a5a4c48.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><i> <b>WHATSAPP CHANNEL</b></i></a><i><b> </b></i>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T08:17:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அண்டார்டிகா பனிப் பாறைகளுக்கு அடியில் பாயும் பிரம்மாண்ட நதி: நாசா செயற்கைக்கோள் அளித்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nasa-satellite-reveals-river-under-antarctic-ice-1787731459"></link>
            <id>https://news.lankasri.com/article/nasa-satellite-reveals-river-under-antarctic-ice-1787731459</id>
            <summary type="text">மேற்கு அண்டார்டிகாவில் பனிப்பாறைக்கு அடியில் பிரம்மாண்ட நதி பாய்வதை நாசா செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுள்ளது. அண்டார்டிகா பனிப் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு அண்டார்டிகாவில் பனிப்பாறைக்கு அடியில் பிரம்மாண்ட நதி பாய்வதை நாசா செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுள்ளது.</p><h2> அண்டார்டிகா பனிப் பாறைகளுக்கு அடியில் பாயும் பிரம்மாண்ட நதி</h2><p>விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செயற்கைக்கோள் தரவுகளில், அண்டார்டிகாவின் உறைபனி மற்றும் பனிப்பாறைகளுக்கு அடியில் சுறுசுறுப்பான நீரோட்ட அமைப்பும், பிரம்மாண்ட ஏரிகளும் இயங்கி வருவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.</p><p> நாசா அமைப்பினால் விண்ணில் செலுத்தப்பட்ட ஜஸ்சாட் செயற்கைக்கோள் கடந்த 2003 முதல் 2006 வரை அண்டார்டிகாவின் மேற்பரப்பை தீவிரமாக ஆராய்ச்சி செய்து வந்தது.</p><p> இதில் பொருத்தப்பட்டிருந்த லேசர் கருவிகள் பனிப்பாறைகளில் ஏற்படும் சிறிய மாற்றங்களை கூட துல்லியமாக கணக்கிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10e5ec7a-dbb1-4ce6-9e59-7af64d52524a/26-6a8e9e04da719.webp' /></p><p></p><p> இந்த ஆய்வின் முடிவில், மேற்கு அண்டார்டிகாவின் பனிப்பரப்பிற்கு அடியில் தொடர்ச்சியாக நீர் நகரும் 14 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.</p><p> மேலும் விலான்ஸ் மற்றும் மெர்சர் பனி நதிகளின் &nbsp; மேற்பரப்பில் பெரிய பள்ளங்களை ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர்.</p><p> அத்துடன் 2003 முதல் 2005 வரையிலான குறுகிய காலகட்டத்தில் இந்த பகுதியில் 9 மீட்டர் வரை பனிப்பரப்பு கீழே சரிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p> இதன் காரணத்தை தீவிரமாக ஆராய்ச்சி செய்த அறிவியலாளர்கள் “ஏங்கல்பார்ட்” என்ற மறைமுக ஏரியில் இருந்து கிட்டத்தட்ட 2 கன கிலோமீட்டர் அளவிலான நன்னீர் பெருங்கடலில் கலந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> அப்பகுதியில் உள்ள புவி வெப்பம் மற்றும் உராய்வு காரணமாக நீர் உறைந்து போகாமல் தொடர்ந்து திரவ நீராக ஓடி வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-26T08:04:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோனல் தினுஷா சாதனை சதம்; 290 ஓட்டங்கள் குவித்து பாலோ ஆன் ஆன இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sonal-dinusha-record-by-century-vs-india-2nd-test-1787727427"></link>
            <id>https://news.lankasri.com/article/sonal-dinusha-record-by-century-vs-india-2nd-test-1787727427</id>
            <summary type="text">sonal dinusha record century in india vs srilanka 2nd test: 290 ஓட்டங்கள் குவித்து இலங்கை பாலோ ஆன் ஆன நிலையில், சதமடித்த சோனல் தினுஷா சாதனை பட்டியலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>sonal dinusha record century in india vs srilanka 2nd test: 290 ஓட்டங்கள் குவித்து இலங்கை பாலோ ஆன் ஆன நிலையில், சதமடித்த சோனல் தினுஷா சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
</p><h3>
290 ஓட்டங்கள் குவித்து பாலோ ஆன் ஆன இலங்கை</h3><p> 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf0c01d7-4bd1-4d4a-a41f-9de09cfdf0a3/26-6a8e8e459efda.webp' /></p><p>

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் சதம் விளாசியுள்ளனர்.&nbsp;</p><p></p><p>

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 290 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42750cd7-aa59-46ba-a61e-8fab993631e9/26-6a8e8e44e7452.webp' /></p><p>

213 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இருந்த இலங்கை அணி பாலோ ஆன் ஆனது. இதையடுத்து, இலங்கை அணி 2வது இன்னிங்ஸை ஆடி வருகிறது.</p><h3>

 சோனல் தினுஷா சாதனை </h3><p>

இலங்கை தரப்பில் 103 ஓட்டங்கள் குவித்து சதம் விளாசிய சோனல் தினுஷா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். </p><p>

இந்தியாவுக்கு எதிரான தனது முதல் 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் 80 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை சோனல் தினுஷா பெற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fba8233-c447-4409-a9e8-08ef213293ea/26-6a8e8e443310b.webp' /></p><p>

முன்னதாக மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஜாம்பவான் ஜாகீர் அப்பாஸ் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர்.&nbsp;</p><p></p><p>
எவர்டன் வீக்ஸ் 1948 ஆம் ஆண்டிலும், ஜாகீர் அப்பாஸ் 1978 ஆம் ஆண்டிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர். </p><p>48 ஆண்டுகளுக்கு பிறகு சோனல் தினுஷா இந்த சாதனையை முறியடித்துள்ளார்.</p><p>

மேலும், இந்தியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்துள்ள வீரர்களின் பட்டியலிலும் சோனல் தினுஷா இடம் பிடித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T07:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க இராணுவ விமானம்: வாய் திறக்காத மாஸ்கோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-air-force-flight-landed-in-moscow-airport-1787714816"></link>
            <id>https://news.lankasri.com/article/us-air-force-flight-landed-in-moscow-airport-1787714816</id>
            <summary type="text">உக்ரைன் உடனான போர் பதற்றம் நீடித்து வரும் இந்த நேரத்தில் அமெரிக்க விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் உடனான போர் பதற்றம் நீடித்து வரும் இந்த நேரத்தில் அமெரிக்க விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><h2> உக்ரைன் - ரஷ்யா மோதல்</h2><p>
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p> இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.</p><p> அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பல கட்ட பொருளாதார தடைகள் விதித்து இருப்பதுடன், ரஷ்ய எண்ணெயை மற்ற நாடுகளும் வாங்க கூடாது என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ab2bdea-c950-45b8-b4a1-1a5363ea1f02/26-6a8e5d017fc02.webp' /></p><p> இருப்பினும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்த அச்சுறுத்தல்களுக்கு கவலை படாமல் தீவிரமாக சண்டை போட்டு வருகிறார்.</p><h2> ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்</h2><p>இந்நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய டிரான்ஸ்போர்ட் விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><p> இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது தொடர்பாக ரஷ்யா எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.</p><p> தரவுகளின் படி, ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம் C-17A Globemaster III என தெரியவந்துள்ளது.</p><p> மேலும் இந்த விமானம் நேரடியாக அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவிற்கு வரவில்லை.</p><p> அமெரிக்காவில் உள்ள கேம்ப் ஸ்பிரிங்ஸ் என்ற ஆண்ட்ருவ்ஸ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட&nbsp; C-17A Globemaster III விமானம், முதலில் லிட்வியாவில் உள்ள ரிகா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.</p><p> &nbsp;ஆண்ட்ருவ்ஸ் விமானப்படை தளம் அமெரிக்க ஜனாதிபதியின் ஏர் விமானப்படை தளத்தில் முக்கியமானதாகும்.</p><p> நேற்று முன்தினம் லிட்வியாவில் இருந்து புறப்பட்ட C-17A Globemaster III விமானம் ரஷ்யாவில் உள்ள வனுகோவா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.</p><p> இந்த C-17A Globemaster III விமானம் அமெரிக்கா விமானப்படையின் ராணுவ தளவாடங்கள், சரக்குகளுடன் நீண்ட தூரம் பறக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-26T06:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியா எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானம்: எச்சரித்த ரேடார் அமைப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-aircraft-enters-into-south-korea-zone-1787717275"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-aircraft-enters-into-south-korea-zone-1787717275</id>
            <summary type="text">Russian aircraft enters into South Korea zone: தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது பதற்றத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian aircraft enters into South Korea zone: தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தென் கொரிய வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய விமானம்</h2><p>

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் சில நிமிட பொழுதில் அத்துமீறி நுழைந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.</p><p> &nbsp;ரஷ்ய போர் விமானங்கள் கிழக்கு கடற்கரைக்கு மேலாக உள்ள வான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.</p><p> மேலும் இந்த விமானங்கள் டோக்டோ மற்றும் உல்லுங் தீவுகள் அருகே வந்து விட்டு அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0644acfb-fdc3-447a-bf18-98f7ba832df9/26-6a8e669cdccec.webp' /></p><p> ஆனால் இந்த சம்பவத்தில் ரஷ்ய விமானங்கள் தென் கொரியாவின் வான்வெளிக்குள் நுழையவில்லை என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2> தென் கொரியாவின் உடனடி நடவடிக்கை</h2><p>
ரஷ்ய விமானங்கள் நுழைந்ததை அடுத்து தென் கொரியா தன்னுடைய போர் விமானங்களை உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர்.</p><p> ரஷ்ய விமானங்கள் நெருங்கி வருவதை தென் கொரிய ரேடார் அமைப்புகள் முன்கூட்டியே அறிந்து போர் விமானங்களை அனுப்பியதாகவும், எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் விமானப்படை இருப்பதால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விமானங்களை உடனடியாக அந்த பகுதிக்கு அனுப்பியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:35:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 15 குழந்தைகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/15-infants-dies-in-pakistan-hospital-fire-1787723457"></link>
            <id>https://news.lankasri.com/article/15-infants-dies-in-pakistan-hospital-fire-1787723457</id>
            <summary type="text">15 infants dies in pakistan hospital fire: பாகிஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>15 infants dies in pakistan hospital fire: பாகிஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
</p><h3>
பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் தீ விபத்து</h3><p>

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக(PIMS) மருத்துவமனை இயங்கி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40851987-b260-446d-b3bb-75c223181c5a/26-6a8e7ec32e3e7.webp' /></p><p>

இங்குள்ள தாய் மற்றும் குழந்தை நலப் பிரிவின் மூன்றாவது மாடியில் உள்ள மகப்பேறு மருத்துவப் பிரிவில், இன்று காலை சுமார் 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
</p><p>
மருத்துவமனைக்கு விரைந்த மீட்புக்குழுவினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அங்கிருந்தவர்களை உடனடியாக வெளியேற்ற தொடங்கினர்.&nbsp;</p><p></p><p>

உள்ளே 16 குழந்தைகள் இருந்த நிலையில், ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். </p><p>

குளிரூட்டும் அமைப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> 

இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T05:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய கடற்கரையில் சோகம்: நீரில் மூழ்கி 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/40-years-old-died-in-devon-coast-1787719089"></link>
            <id>https://news.lankasri.com/article/40-years-old-died-in-devon-coast-1787719089</id>
            <summary type="text">40 years old died in Devon coast: பிரித்தானிய கடற்கரையில் நிகழ்ந்த நீச்சல் விபத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>40 years old died in Devon coast: பிரித்தானிய கடற்கரையில் நிகழ்ந்த நீச்சல் விபத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2> பிரித்தானிய கடற்கரையில் சோகம்</h2><p>
பிரித்தானியாவின் டெவோன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சோகமான சம்பவத்தில் சர்ரேயைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார்.</p><p> திங்கட்கிழமை பிளாக்நூல் சான்ட்ஸ் கடற்கரையில் ஒருவர் ஆபத்தில் சிக்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.</p><p> &nbsp;விரைவாக செயல்பட்ட கடற்கரை காவல்படையினர் நீரில் மூழ்கிய நபரை கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவருக்கு தேவையான அனைத்து முதலுதவி சிகிச்சைகளையும் அளித்தனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70ec51f3-bd3e-468f-92b0-c6700f35ea29/26-6a8e6db35ff3f.webp' /></p><p> இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் பின்னர் அறிவித்தனர்.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கிய டெவோன் மற்றும் கார்ன்வால் காவல்துறை அதிகாரிகள்,&nbsp; இது ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> வெப்பமான காலத்தில் திறந்தவெளி நீர்நிலைகளில் ஆபத்து அதிகரிப்பதால், கடற்கரை, ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற இடங்களில் நீந்தும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T04:38:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் காட்விக் விமான நிலையத்தில்... உடல் உறைந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gatwick-airport-stowaway-found-1787703459"></link>
            <id>https://news.lankasri.com/article/gatwick-airport-stowaway-found-1787703459</id>
            <summary type="text">Stowaway was found frozen to death: விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் உடல் உறைந்து இறந்து கிடந்தார். 

காட்விக் விமான நிலையத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Stowaway was found frozen to death: விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் உடல் உறைந்து இறந்து கிடந்தார். </p><p>

காட்விக் விமான நிலையத்தில், விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் அடையாளம் தெரியாத ஒருவர் பனியில் உறைந்து இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/889ff2f0-ff65-4244-ac0a-eee7c12d2ee1/26-6a8e30a5ac427.webp' /></p><p>
மொராக்கோவிலிருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தின் 'லேண்டிங் கியர்' பகுதியில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மறைந்திருந்த நிலையில் ஜூன் மாதத்தில் கண்டெடுக்கப்பட்டார். </p><p>பிரேதப் பரிசோதனையில், மாரடைப்பு, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் உடல் வெப்பநிலை குறைவு ஆகியவையே மரணத்திற்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது. </p><p>வெஸ்ட் சசெக்ஸ், பிரைட்டன் மற்றும் ஹோவ் பகுதிக்கான மரண விசாரணை அதிகாரி ஜோசப் டர்னர், சக்கர அறையின் உட்புறச் சூழல் மிகக் கடுமையான குளிருடன் இருந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><p>இந்த மரணம் இயற்கைக்கு மாறானது என்று நம்புவதற்கான காரணம் இருந்ததன் அடிப்படையில் விசாரணையை முறைப்படி தொடங்கி வைத்த அவர், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்திருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார். </p><p>சக்கரப் பகுதியிலிருந்து வெளியே தொங்கிக்கொண்டிருந்த பேக்கிங் பட்டையை (packing strap) கவனித்த தரைப்பகுதிப் பொறியாளர் ஒருவர் அந்த நபரைக் கண்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3871300e-016c-4b42-a173-397aa50736ef/26-6a8e30a65d148.webp' /></p><p> </p><p>குறிப்பிட்ட அந்த ஏர் அரேபியா விமானம் டான்ஜியர்ஸிலிருந்து வந்திருந்தது. சம்பவம் நடந்தபோது, ​​லண்டன் கேட்விக் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், </p><p>செவ்வாய்க்கிழமை, ஜூன் 16, 2026 அன்று காலை 11.30 மணிக்கு மேல், ஏர் அரேபியா விமானம் வந்திறங்கியபோது ஒரு சம்பவம் கண்டறியப்பட்டதையடுத்து, லண்டன் கேட்விக் விமான நிலையத்தின் அவசரக்காலப் பிரிவினர் அந்த விமானத்திற்குச் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். </p><p>மேலும், சசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியபடி, ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்னர், எங்கள் குழுக்கள் சசெக்ஸ் காவல்துறைக்கும் மரண விசாரணை அதிகாரிக்கும் உதவியதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விசாரணை 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T02:25:34+00:00</updated>
        </entry>
    </feed>
