<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-27T07:16:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு: அதிர்ச்சிகரமான தருணங்களின் கேமரா காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flood-terrifying-moments-viral-videos-1787814288"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flood-terrifying-moments-viral-videos-1787814288</id>
            <summary type="text">Nepal Flood Terrifying Moments Viral Videos: நேபாள - திபெத் எல்லையில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் கேமராவில் பதிவான அதிர்ச்சிகரமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal Flood Terrifying Moments Viral Videos: நேபாள - திபெத் எல்லையில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் கேமராவில் பதிவான அதிர்ச்சிகரமான தருணங்கள் வெளியாகியுள்ளன.</p><h2>நேபாள - திபெத் எல்லையில் திடீர் வெள்ளப்பெருக்கு</h2><p>
நேபாள - திபெத் எல்லையில் இருந்து வந்த திடீர் மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு வடக்கு நேபாள பகுதிகளை தீவிரமாக உலுக்கியுள்ளது.</p><p> போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் ரசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/279237ed-af35-4e90-9b0f-791341623e1d/26-6a8fe191650d7.webp' /></p><p></p><p> இந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் இதுவரை குறைந்தது 157 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 142 இந்தியர்கள் உட்பட 341 வெளிநாட்டினரை சேர்த்து மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><h2> வீடியோவில் பதிவான அதிர்ச்சிகரமான தருணங்கள்</h2><p>திபெத்தின் ஜிரோங்(Gyirong) துறைமுகத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில், புதன்கிழமை காலை 9 மணியளவில் தடிமான சேறு, பாறைகள், குப்பைகள், ஆகியவற்றை அடித்துக் கொண்டு பிரமாண்ட வெள்ளமானது கரைகளை துடைத்தெறிந்து செல்லும் தருணங்கள் பதிவாகியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This is seriously scary. CCTV footage from Gyirong Port in Tibet, China, directly opposite Nepal’s Rasuwa district. This flash flood hit here first and later caused massive havoc in Nepal. Can’t even imagine someone surviving this. Prayers for everyone affected. 🙏 <a href="https://t.co/o805P8KGSu">https://t.co/o805P8KGSu</a> <a href="https://t.co/31QzZ64aBD">pic.twitter.com/31QzZ64aBD</a></p>&mdash; Nikhil saini (@iNikhilsaini) <a href="https://x.com/iNikhilsaini/status/2092558888751284687?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.</p><p> அந்த பகுதிகளில் இருந்து டஜன் கணக்கான மக்கள் தப்பியோட முயன்றதும், ஆனால் சில நொடி பொழுதில் அவர்களையும் வெள்ளம் சூறையாடி இழுத்துச் செல்லும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது.</p><p>இதைப்போன்று இன்னும் பல பகுதிகள் இந்த வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T07:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: நிலநடுக்கம் காரணம் அல்ல., அமெரிக்கா வெளியிட்ட திடுக்கிடும் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-floods-caused-by-glacial-collapse-1787812351"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-floods-caused-by-glacial-collapse-1787812351</id>
            <summary type="text">Nepal Floods caused by Glacial Collapse: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெளிவுபடுத்தியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal Floods caused by Glacial Collapse: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2> நேபாள வெள்ளப்பெருக்கு</h2><p> 

திபெத் எல்லையில் இருந்து வந்த திடீர் மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு வடக்கு நேபாள பகுதிகளை தீவிரமாக உலுக்கியுள்ளது.</p><p> போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25fd99d3-36c0-4085-87f7-84706ed96e38/26-6a8fda013e446.webp' /></p><p>இந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் இதுவரை குறைந்தது 157 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 142 இந்தியர்கள் உட்பட 341 வெளிநாட்டினரை சேர்த்து மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><h2> அமெரிக்கா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்</h2><p>
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய வெள்ளப்பெருக்கிற்கு ஆரம்பத்தில் நிலநடுக்கமே காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.</p><p> ஆனால் இந்த வெள்ளப்பெருக்கு நேபாள-சீன எல்லையில் பூமிக்கடியில் பதிவான நிலநடுக்கத்தால் அல்ல. மாறாக பனிப்பாறை சரிவு(glacial collapse) மற்றும் குப்பைகள் பெருக்கெடுத்ததால்(debris flow) ஏற்பட்ட சம்பவம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெளிவுபடுத்தியுள்ளது.</p><p> ஆரம்ப கட்டத்தில், காலை 8.37 மணியளவில் காத்மாண்டுவிற்கு வடக்கே 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற முடிவுகளை தானியங்கி அமைப்புகள் பதிவு செய்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40fa7732-e0ab-48dd-a51b-82c54a49f257/26-6a8fda01e5877.webp' /></p><p>ஆனால் பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிளாண்ட் லேப்ஸ் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நடத்தப்பட்ட கூடுதல் ஆய்வுகளில், பனி மற்றும் பாறைகளில் ஏற்பட்ட சரிவே லெண்டே நதியில் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.</p><p> இந்த வெள்ளப்பெருக்கே போட்டே கோஷி நதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி ரசுவே, நுவாகோட் மற்றும் தாதிங் ஆகிய மாவட்டங்களை உலுக்கியுள்ளது.</p><p> இந்த பனிச்சரிவு நிலநடுக்கத்திற்கு நிகரான 5.2 ரிக்டர் அளவிலான நில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் இது டெக்டோனிக் தகடுகளின் நகர்வு அல்ல என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T06:32:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-tactical-nuclear-weapons-1787812015"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-tactical-nuclear-weapons-1787812015</id>
            <summary type="text">Putin will use tactical nuclear weapons: உக்ரைன் மீது புடின் தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவார் என அச்சம்.
ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக தந்திரோப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin will use tactical nuclear weapons: உக்ரைன் மீது புடின் தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவார் என அச்சம்.
</p><p>ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக தந்திரோபாய அணு ஆயுதங்களை (tactical nuclear weapons) பயன்படுத்தலாம் என்ற அச்சம் வலுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a023480a-c56d-432d-89b1-98db2a72cd8b/26-6a8fd8b1a01f3.webp' /></p><p>
</p><p>ரஷ்யாவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது; அதேவேளையில், மோதலைத் தீவிரப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஜனாதிபதி புடின் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>சமீபத்திய மாதங்களில் உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்றுக்கொன்று எதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன; குறிப்பாக, ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து உக்ரைன் வலுவானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. </p><p>இதற்கிடையில், பேச்சுவார்த்தைகள் ஏறக்குறைய முறிந்துவிட்டன; அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கை இரு தரப்பிலும் மிகக் குறைவாகவே உள்ளது. மேலும், பொருளாதாரத் தடைகள் அல்லது தனது சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் தாக்குதல்கள் ஆகியவற்றின் அழுத்தத்தால் போரை முடிவுக்குக் கொண்டுவரப் போவதில்லை என்பதில் ரஷ்யா உறுதியாக உள்ளது. </p><p>நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களையும் உளவுத் தகவல்களையும் வழங்குவது குறித்து ரஷ்யா கடும் சீற்றம் கொண்டுள்ளது - இது பிரித்தானியாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்துள்ளது, இதனை மூர்க்கத்தனமானது என இந்த வாரம் பிரதமர் ஆன்டி பர்னாம் குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p> உக்ரைன் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே புடினின் முடிவு என்று ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று வட்டாரங்கள் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன. </p><p>இதனிடையே, உங்கள் பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறைகளில் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருங்கள் என புடின் உக்ரைனை எச்சரித்துள்ளார். </p><p>தலைநகர் கீவ்வின் மையப்பகுதி மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் உட்பட, தனது வழக்கமான பாலிஸ்டிக் தாக்குதல்களை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்பது குறித்து ரஷ்யா தற்போது பரிசீலித்து வருகிறது. ஆனால், புடின் இறுதியில் நவீனப் போர்முறையின் விதிகளைக் கைவிட்டு, அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கான முடிவை எடுக்கக் கூடும் என்று ரஷ்ய அதிகாரிகள் பலர் முடிவுக்கு வந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p>உத்திசார் ஏவுகணைகளை விட, குறைந்த சக்தி மற்றும் குறைந்த வரம்பு கொண்ட தந்திரோபாய அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கூறுகின்றனர். </p><p>1945-ல் அமெரிக்கா ஜப்பான் மீது வீசிய குண்டுகளைப் போல முழு நகரங்களையும் அழிப்பதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட போர்க்களத்தில் மேலாதிக்கம் பெறுவதற்காக அவை பயன்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/137b3709-f0f5-4b9f-8c44-0678ba4587da/26-6a8fd8b252469.webp' /></p><p> </p><p>உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்தே, உக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று அவர் தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளார்; தாக்குதல் நடத்தப்படக்கூடிய பகுதிகளைக் காட்டும் வரைபடங்களைக்கூட அவர் வெளியிட்டுள்ளார். </p><p>மேலும், அவர் அந்த முடிவை எடுத்தால், அவருக்குத் தடையாக நிற்க யாரும் இருக்கமாட்டார்கள் என்றே கூறுகின்றனர். அமெரிக்கா ஈரானுடனான மோதலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது; அதேவேளையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது டொனால்ட் ட்ரம்பிற்கும் தனக்கும் இடையே உருவான புரிதல் குறித்த நம்பிக்கையை புடின் கைவிட்டுவிட்டார். </p><p>2014-இல் ஆயுத மோதல்கள் தொடங்கியதிலிருந்து உறுதியாகத் தாக்குப்பிடித்து வரும் டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்திலுள்ள தங்கள் அரண் போன்ற நகரங்களை உக்ரைன் விட்டுக்கொடுத்தால் அமைதிக்கான வழி பிறக்கக்கூடும் என்று ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது; ஆனால், அத்தகையதொரு நடவடிக்கைக்கு இடமே இல்லை என்பதை உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T06:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள-திபெத் பெருவெள்ளம்... என்ன நடந்தது: விரிவான பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-tibet-floods-1787805167"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-tibet-floods-1787805167</id>
            <summary type="text">Deadly Nepal-Tibet floods: நேபாளம்-திபெத் பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு குறித்த விரிவான பின்னணி.
நேபாள-திபெத் எல்லையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Deadly Nepal-Tibet floods: நேபாளம்-திபெத் பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு குறித்த விரிவான பின்னணி.
</p><p>நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஆகியவை பரவலான சேதத்தை ஏற்படுத்தியதோடு, நூற்றுக்கணக்கானோரின் மரணத்திற்கும் பலர் காணாமல் போவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126094cb-8daa-4ab1-a3b1-31f492983cca/26-6a8fbdf22f488.webp' /></p><p>
</p><p>தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் உயிர் அபாயங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், நேபாள அதிகாரிகள் மிகப்பெரிய அளவிலான இழப்பை எதிர்பார்க்கின்றனர்.
</p><p>நிலச்சரிவு ஏற்படுவதற்குச் சற்று முன்பு திபெத்-நேபாள எல்லையில் நிலநடுக்கம் ஒன்று பதிவானதாக நேபாள வெளிவிவகார அமைச்சர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்; இதுவே அந்தப் பேரிடரைத் தூண்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. </p><p>ஆனால், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் சமீபத்திய பகுப்பாய்வு நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்பதைக் குறிக்கிறது; இது நிலச்சரிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. </p><p>ஒரு சாத்தியம் என்னவென்றால், மழைநீர் அல்லது உருகும் பனியிலிருந்து வரும் நீர், நிலத்தையோ பனியையோ நிலை குலையச் செய்து, ஒரு தொடர் வினையைத் தூண்டியிருக்கலாம். </p><p>இந்து குஷ் இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதற்குப் பருவநிலை மாற்றம் காரணமாக அமைகிறது என்பது தெரிந்ததே; இருப்பினும், இந்த குறிப்பிட்ட நிகழ்வில் அதன் பங்கைத் துல்லியமாகக் குறிப்பிடுவதற்கு இது மிக ஆரம்பக்கட்ட நிலையே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.</p><p></p><p> விஞ்ஞானிகள் தற்போது இந்தப் பேரிடன் உண்மையானப் பின்னணி என்ன என்பது தொடர்பில் டெஹ்ரிந்துகொள்ள முயன்று வருகின்றனர். மேலும், நிலச்சரிவு சரியாக எங்கு ஏற்பட்டது, பனிப்பாறை ஏதேனும் திடீரென வற்றியதா, ஆற்றுப் பாதை எங்கு மறிக்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்த செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சமீபத்திய மழைப்பொழிவு குறித்த தரவுகள் ஆகியவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர். </p><p>நுவாகோட் (Nuwakot) பகுதியில், வேகமாக முன்னேறி வந்த சேறு மற்றும் பாறைகளின் பெருவெள்ளம் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்களை அடித்துச் செல்வதை அந்தப் பகுதி மக்கள் அங்கிருந்து தப்பி ஓடியபோது எடுக்கப்பட்ட காட்சிகளில் பதிவாகியுள்ளது. </p><p>ஒரு காணொளியில், திரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு வழியாக நீர் மற்றும் சேறு கலந்த பிரம்மாண்டமான சுவரொன்று பாய்ந்து வந்து, பல மாடிகளைக் கொண்ட ரசுவாகதி எல்லைச் சோதனைச் சாவடியை மூழ்கடிப்பது பதிவாகியுள்ளது. </p><p>போட் கோஷி, திரிசூலி மற்றும் நாராயணி நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாள எல்லையின் திபெத்தியப் பகுதியில் உள்ள கிராமங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மரணமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c8528f-d225-4995-921d-e884f1708b6a/26-6a8fbdf2d6523.webp' /></p><p>
</p><p>குறைந்தது 162 பேர் மரணமடைந்துள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில், 64 பேர் சித்வான் மாவட்டத்தின் கீழ்நிலைப் பகுதிகளிலும், மேலும் 26 பேர் நவல்பாசி கிழக்குப் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். </p><p>திபெத்தின் கியிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுப் பேரழிவில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளதாக சீனாவின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. </p><p>இவர்களில் 260 பேர் வெளிநாட்டினர் என்றும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாகவே நீடிக்கிறது என்றும் சிசிடிவி தெரிவித்துள்ளது. கியிராங்கில் உள்ள எல்லை, சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே சுற்றுலாப் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய கடக்கும் இடமாக விளங்குகிறது.</p><p> முன்னதாக, சுமார் 579 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாகவும், அவர்களில் 466 பேர் வெளிநாட்டினர் என்றும் நேபாளம் தெரிவித்திருந்தது. நேபாள மற்றும் சீனப் புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காணாமல் போனவர்களில் யாரேனும் இருமுறை கணக்கிடப்பட்டுள்ளனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. </p><p>இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால தங்குமிடம், தண்ணீர், சுகாதாரம் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக 500,000 டொலர் நிதியுதவி அளிப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e366ec0-99a4-44c5-9510-91773075bccc/26-6a8fbdf389895.webp' /></p><p> </p><p>நேபாளத்தில் உள்ள பிரித்தானியக் குடிமக்களுக்கு உதவும் வகையில், பிரித்தானிய அரசாங்கம் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார். இதுவரை வெளியாகியுள்ள தரவுகலின் அடிப்படையில், காணாமல் போனவர்களில் குறைந்தது 34 அவுஸ்திரேலிய குடிமக்கள் அடங்குவதாக பிரதமர் ஆன்றனி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>காணாமல் போனவர்களில் 54 அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் அடங்குவதாக நேபாள சுற்றுலா வாரியம் அளித்துள்ள சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. 24 கனடியர்கள் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>13 வயது சிறுமி உட்பட 33 பிரித்தானியக் குடிமக்கள் காணாமல் போயுள்ளதை நேபாள காவல்துறை உறுதி செய்துள்ளது. இதனிடையே, ஃபிஷ்டெயில் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்துடன் பயணம் செய்த 17 மலேசியர்கள் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> நேபாளத்தில் உள்ள மலேசிய தூதரக அதிகாரி ஒருவர், 50-க்கும் மேற்பட்ட மலேசியர்களை தற்போது தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறினார். 53 உக்ரேனியர்கள் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா காவல்துறை தங்களுக்குத் தெரிவித்ததாக உக்ரேனின் வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளது.</p><p> அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்த 142 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. தென் கொரியா, தென்னாப்பிரிக்கா, போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளும் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T04:30:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... பிரித்தானியச் சிறுமி உட்பட 400 வெளிநாட்டவர்கள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flash-flood-british-citizens-1787801788"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flash-flood-british-citizens-1787801788</id>
            <summary type="text">Nepal flash flood British citizens missing: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 13 வயது சிறுமி உட்பட பல பிரித்தானியக் குடிமக்கள் மாயம்.
நேபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flash flood British citizens missing: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 13 வயது சிறுமி உட்பட பல பிரித்தானியக் குடிமக்கள் மாயம்.</p><p>
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 13 வயது சிறுமி உட்பட 33 பிரித்தானியக் குடிமக்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fe8b3b3-450c-4654-a72a-58060445ee19/26-6a8fb0be941d6.webp' /></p><p>
</p><p>புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை சுமார் 8:30 மணியளவில், போட்டே கோஷி ஆற்றின் திபெத்தியப் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மாயாமானதாகக் கூறப்படும் வெளிநாட்டவர்களில் 33 பிரித்தானியர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>புதன்கிழமை, ஆல்பைன் ஈகோ ட்ரெக் என்ற சுற்றுலா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், காணாமல் போன பிரித்தானியர்களில் 13 வயது சிறுமி ஒருவரும், இரண்டு ஐரிஷ் குடிமக்களும் அடங்குவதாகத் தெரிவித்தது. </p><p>மேலும், பயணப் பதிவுகளின்படி, காணாமல் போன பிரித்தானியக் குடிமக்களில் 65, 64 மற்றும் 52 வயதுடைய மூன்று ஆண்களும்; 44, 47, 51, 60, 63, 63 மற்றும் 65 வயதுடைய ஏழு பெண்களும் அடங்குவர். </p><p>நேபாளத்தில் வழிகாட்டியுடனான சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களை ஏற்பாடு செய்யும் அந்த நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் நேபாளத்தைச் சேர்ந்த நான்கு சுற்றுலா வழிகாட்டிகளும் (38, 35, 45 மற்றும் 29 வயதுடையவர்கள்) காணாமல் போயுள்ளதை உறுதிப்படுத்தியது. </p><p>மட்டுமின்றி, கைலாஷ் மலைக்கு ஒன்பது நாள் பயணமாகச் சென்றிருந்த அவர்கள், நேபாளத்திலிருந்து திபெத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தபோது, ​​திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் எல்லையில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இதனிடையே, காணாமல் போனவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் எந்த நாட்டினர் என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் இதுவரை 157 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>நேபாளம் மற்றும் திபெத் இடையிலான இமயமலை எல்லையில் மண் மற்றும் பாறைகளால் ஆன சுவர் ஒன்று ஆற்றில் சரிந்து விழுந்ததாகவும், இதனால் நேபாளப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தும் வகையிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>நேபாளத்தில் வீடுகள், சாலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன; அதேவேளையில், எல்லைப் பகுதி நிலவழிப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஜிரோங் (Gyirong) மாவட்டத்தில் சிலர் காணாமல் போனதையடுத்து, திபெத் அதிகாரிகள் பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். </p><p>இந்த நிலையில், நிலநடுக்கம் ஒன்று பனிச்சரிவைத் தூண்டிவிட்டு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக நேபாள வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4aad5f6-96f0-4649-933c-8d67dc844124/26-6a8fb0bf4afbb.webp' /></p><p> </p><p>இதனிடையே, நீர்மின் நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த எட்டு தென் கொரியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 10 பேர் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>நேபாளத்தின் ரசுவா மாவட்டம் மற்றும் போட்டே கோஷி, திரிசூலி ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், தேவைப்பட்டால் உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறும் உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p> பார்வையாளர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் பயண முகவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். வரும் நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தவர்கள் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>இதனிடையே, காத்மாண்டுவில் உள்ள பிரித்தானிய தூதரகம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை உள்ளூர் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியது.
</p><p>அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், பின்லாந்து, பிரான்ஸ், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் தூதரகங்கள் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், </p><p>ராசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கு தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T03:33:50+00:00</updated>
        </entry>
    </feed>
