<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-19T18:31:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியின் ரியாத் விமான நிலையம் அருகே கரும்புகை: குண்டுவெடிப்பு மற்றும் வான்வழி அச்சுறுத்தல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/riyadh-explosions-tension-spike-and-aerial-alerts-1789839467"></link>
            <id>https://news.lankasri.com/article/riyadh-explosions-tension-spike-and-aerial-alerts-1789839467</id>
            <summary type="text">Riyadh Explosions Tension Spike and Aerial Alerts: &amp;nbsp;ரியாத் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென எழுந்த அடர்ந்த கரும்புகை பெரும் பரபரப்பை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Riyadh Explosions Tension Spike and Aerial Alerts: &nbsp;ரியாத் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென எழுந்த அடர்ந்த கரும்புகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>விமான நிலையம் அருகே அடர்ந்த கரும்புகை&nbsp;</h2><p> சனிக்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென அடர்ந்த கரும்புகை எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>இப்பகுதியில் நள்ளிரவில் விடுக்கப்பட்ட திடீர் வான்வழி அச்சுறுத்தல்களை அடுத்து சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களும் அரங்கேறியது.</p><p>ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையினருக்கும், சவுதி ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்களே தற்போதைய பதற்றமான சூழ்நிலைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b39222a-3eaf-4b43-aa65-78b98171728b/26-6aaec86cefcaf.webp' /></p><p> ஹவுதி படையினர் மெக்கா நகரை தாக்க முயற்சி செய்து வருவதாக சவுதி அரேபியா குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை ஹவுதிகள் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.</p><h2> விமான நிலையத்தில் சிக்கல்</h2><p>சவுதி தலைநகரில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு செல்வதற்கான முக்கிய நெடுஞ்சாலையில் பெரும் கரும்புகை திரண்டு எழுவது தொடர்பான புகைப்படங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.</p><p> வெடிப்பு சத்தம் மற்றும் புகை மண்டலம் போன்றவை அசாதாரண சூழ்நிலையை விளக்கினாலும் இது தொடர்பான உண்மையான காரணத்தை சவுதி அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.</p><p> இந்த பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான செயல்பாட்டு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்று FlightRadar24 தெரிவித்துள்ளது.</p><p> மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T17:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ICU அறையில் நடந்த திருமணம் - தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-weds-partner-at-icu-for-moms-wish-1789834822"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-weds-partner-at-icu-for-moms-wish-1789834822</id>
            <summary type="text">Woman weds partner at ICU for mom’s wish: சாகும் தருவாயில் இருந்த தாயின் கடைசி ஆசையை மகள் நிறைவேற்றியுள்ளார்.

தாயின் கடைசி ஆசைஅமெரிக்காவின் புளோரிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman weds partner at ICU for mom’s wish: சாகும் தருவாயில் இருந்த தாயின் கடைசி ஆசையை மகள் நிறைவேற்றியுள்ளார்.
</p><h2>
தாயின் கடைசி ஆசை</h2><p>அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 81 வயதான டோன்னா கம்மிங்ஸ், Stage 4 கல்லீரல் புற்றுநோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.</p><p> அவர் தனது மகள் கேமி கம்மிங்ஸ் அவரது காதலர் சேண்டி ஆடம்ஸை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feab6d48-cf88-4358-b42f-18fb04fee808/26-6aaeb6479ae81.webp' /></p><h2>ICU அறையில் திருமணம்</h2><p>அந்த விருப்பத்தை நிறைவேற்ற, காமி தனது தாயின் ICU படுக்கையருகே திருமணம் செய்து கொண்டார். மருத்துவமனை ஊழியர்கள் ICU அறையை அழகாக அலங்கரித்து, கேக் மற்றும் பானங்களுடன் சிறிய குடும்ப விழாவை ஏற்பாடு செய்தனர்.</p><p>

கேமி, “என் தாயார் எப்போதும் சேண்டியை என் தேவதை என்று அழைத்தார். அவர் நன் திருமணம் செய்து கொண்டதை பார்க்க வேண்டும் என்பதே அவரது ஆசை” என்று கூறினார். </p><p>மேலும், “என் தாயார் எங்கள் குடும்பத்திற்காக பல தியாகங்கள் செய்தார். அவரின் இறுதி நாட்களில் அவரை மகிழ்விக்க இது தான் நான் செய்யக்கூடிய சிறந்த விடயம்” என்று உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce6e590-cc2e-49b8-a173-07510318d099/26-6aaeb64853c16.webp' /></p><p>திருமண விழாவுக்குப் பிறகு, டோன்னா ICU-வில் உயிரிழந்தார். கேமி, “இப்போது என் தாயார் வலியின்றி அமைதியாக இருக்கிறார்” என்று கூறினார்.
</p><p>
கேமி மற்றும் சேண்டி, வரும் ஏப்ரல் மாதத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பெரிய திருமண விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
இந்த நிகழ்வு, தாயின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் மகளின் அன்பை வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான கதையாக உலகம் முழுவதும் பரவிவருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T17:09:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டை மீறிய Google Gemini AI - 3 நிறுவனங்களை ஹேக் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-gemini-ai-hacks-firms-in-test-1789836010"></link>
            <id>https://news.lankasri.com/article/google-gemini-ai-hacks-firms-in-test-1789836010</id>
            <summary type="text">Google நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடல் Gemini குறித்து அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

மே மாதத்தில் நடைபெற்ற சைபர் பாதுகாப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Google நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடல் Gemini குறித்து அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
</p><p>
மே மாதத்தில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு சோதனையின் போது, Gemini தனது கட்டுப்படுத்தப்பட்ட சூழலை விட்டு வெளியேறி, மூன்று உண்மையான நிறுவனங்களின் நெட்வொர்க்கில் நுழைந்ததாக Google தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b148adb0-9af4-44ff-93a8-1b222d90d244/26-6aaebaebf271c.webp' /></p><p>இந்தச் சம்பவம், சோதனை நடத்தும் மூன்றாம் தரப்பு நிறுவனம் தவறுதலாக Gemini-க்கு இணைய அணுகலை வழங்கியதால் ஏற்பட்டது. </p><p>

ஆரம்பத்தில், Gemini ஒரு கற்பனை நிறுவனத்தை தாக்க வேண்டும் என்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் அந்த கற்பனை நிறுவனத்தின் பெயர், உண்மையான நிறுவனத்தின் பெயருடன் பொருந்தியதால், AI தவறுதலாக உண்மையான நிறுவனங்களின் நெட்வொர்க்கில் நுழைந்தது.
</p><p></p><p>Google-ன் அறிக்கையின்படி, இந்த ஹேக்கிங் சம்பவத்தால் எந்த நிறுவனத்திற்கும் சேதம் ஏற்படவில்லை. ஆனால், AI மாடல்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலை விட்டு வெளியேறி, இணையத்தில் சுதந்திரமாக செயல்படக்கூடிய அபாயம் இருப்பதை இது வெளிப்படுத்துகிறது.
</p><p>
இந்தச் சோதனையின் நோக்கம், Gemini எவ்வாறு சைபர் பாதுகாப்பு குறைகளை கண்டறிந்து பயன்படுத்துகிறது என்பதை மதிப்பிடுவதாகும். ஆனால் நிகழ்ந்த தவறுகள், AI-யின் சக்தி மற்றும் அபாயங்களை உலகளவில் விவாதிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன.</p><p>

AI மாடல்கள் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவது எதிர்காலத்தில் பெரிய அபாயமாக மாறக்கூடும். அதனால் சோதனைகள் மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T16:36:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கத்தை விற்று மனைவிக்காக iPhone 18 Pro வாங்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/delhi-man-sells-gold-for-iphone-18-pro-1789833230"></link>
            <id>https://news.lankasri.com/article/delhi-man-sells-gold-for-iphone-18-pro-1789833230</id>
            <summary type="text">Delhi man sells gold for iPhone 18 Pro: சமீபத்தில் வெளியான iPhone 18 சீரிஸ் மொபைல்களை பலரும் நெருக்கமானவர்களுக்கான பரிசாக வாங்கி மகிழ்ந்துள்ளனர்.

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Delhi man sells gold for iPhone 18 Pro: சமீபத்தில் வெளியான iPhone 18 சீரிஸ் மொபைல்களை பலரும் நெருக்கமானவர்களுக்கான பரிசாக வாங்கி மகிழ்ந்துள்ளனர்.
</p><h2>
அதிகாலை முதலே நீண்ட வரிசை</h2><p>நோய்டாவில் உள்ள DLF மால் ஆஃப் இந்தியா ஆப்பிள் ஸ்டோரில் iPhone 18 Pro விற்பனை தொடங்கிய முதல் நாளில், அதிகாலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்து புதிய போன் வாங்கிய வாடிக்கையாளர்களில் சிலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">MAN : I sold the gold passed down from my grandmother and great-grandmother to buy an iPhone 18 Pro Max for my wife. 🤯<br><br>REPORTER : What? 😱<br><br>MAN : Yes. The iPhone 18 Pro Max is more important than any gold.<br><br>He sold the gold not for a house, his child’s future, or an investment,…</p>&mdash; News Algebra (@NewsAlgebraIND) <a href="https://x.com/NewsAlgebraIND/status/2100911383542202566?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>தங்கத்தை விற்று iPhone 18 Pro</h2><p>அதில், டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்காக iPhone 18 Pro வாங்க தங்கத்தை விற்றதாக கூறினார்.

அவர், “முன்பு பணம் இல்லாததால் வாங்க முடியவில்லை. இப்போது வாங்க முடிகிறது. எதிர்காலத்தில் என்ன நிலைமை இருக்கும் தெரியாது. அதனால் மனைவிக்கு பரிசாக கொடுக்க விரும்பினேன்” என்று தெரிவித்தார்.</p><p>அவரது மனைவி முன்பு iPhone பயன்படுத்தியவர் அல்ல. ஆனால் புதிய Burgundy நிற மாடலை கேட்டதால், அவர் அதிகாலை முதலே ஆப்பிள் ஸ்டோருக்கு வந்தார்.
</p><p></p><h2>வருங்கால மனைவிக்கு iPhone 18 Pro&nbsp;பரிசு</h2><p>இந்த நிகழ்வு மட்டும் அல்லாமல், பஞ்சாபில் இருந்து வந்த மற்றொரு வாடிக்கையாளர் தனது வருங்கால மனைவிக்கு iPhone 18 Pro வாங்கியதோடு, தனக்காக iPhone 18 Pro Max-யும் வாங்கினார். இரண்டுக்கும் சேர்த்து ரூ.3.5 லட்சம் செலவானதாக அவர் கூறினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf90317-4ae8-4ae7-8ece-694679fc4cfe/26-6aaeb0103560b.webp' /></p><p>பலரும் தங்கள் வேலை விடுமுறையை எடுத்துக்கொண்டு, மாணவர்கள், தொழிலதிபர்கள், குடும்பத்தினர் என பல்வேறு தரப்பினரும் முதல் நாளில் போன் வாங்க வரிசையில் நின்றனர். சிலர் முன்பதிவு செய்யாததால், போன் வாங்க முடியாமல் வெளியேற வேண்டிய சூழலும் ஏற்பட்டது.</p><p>
இந்த விற்பனை நிகழ்வு, ஒரு சாதாரண மொபைல் வெளியீடாக மட்டுமல்லாமல், பரிசளிப்பு, உறவுகள், ஆசைகள் என பல நெகிழ்வான கதைகளை கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T15:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிரள வைத்த நிசங்கவின் கேட்ச்சை பாய்ந்து பிடித்த கேப்டன் (வீடியோ)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/archer-and-baker-finish-sri-lanka-as-124-runs-1789830897"></link>
            <id>https://news.lankasri.com/article/archer-and-baker-finish-sri-lanka-as-124-runs-1789830897</id>
            <summary type="text">Archer and baker finish sri lanka as 124 runs: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பதும் நிசங்க 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் விளாசினார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Archer and baker finish sri lanka as 124 runs: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பதும் நிசங்க 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
இலங்கை வீரர் பதும் நிசங்க 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில், வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>பதும் நிசங்க அதிரடி&nbsp;</h2><p>

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி எமிரேட்ஸ் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Incredible anticipation from Harry Brook 🤲 <a href="https://t.co/orGqaUWw7l">pic.twitter.com/orGqaUWw7l</a></p>&mdash; England Cricket (@englandcricket) <a href="https://x.com/englandcricket/status/2101313763215298990?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்ய, இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.

லஹிரு உதர 10 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சோனி பேக்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p></p><p> 

அடுத்து வந்த கமில் மிஷாரா 2 ஓட்டங்களில் வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் வெளியேற, பதும் நிசங்க அதிரடி ஆட்டத்தில் இங்கிலாந்தை அலறவிட்டார். </p><p>

சிக்ஸர்களை பறக்கவிட்ட பதும் நிசங்க (Pathum Nissanka) 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.
</p><h2>
சுருண்ட&nbsp;இலங்கை </h2><p>வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் அவர் அடித்த ஷாட்டினை, இங்கிலாந்தின் கேப்டன் ஹாரி ப்ரூக் டைவ் அடித்து மிரட்டலாக கேட்ச் செய்தார். </p><p>

அதனைத் தொடர்ந்து அசலங்க (16), ஷானகா (12) இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கமிந்து மெண்டிஸ் 28 பந்துகளில் 35 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, இலங்கை அணி 18.5 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு சுருண்டது. </p><p>

சோனி பேக்கர், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜேக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், லியாம் டாவ்ஸன் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8677bcf7-f3c9-4240-8e23-e4d67db4a35d/26-6aaea7e189f6f.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/912af896-8e25-4669-a5f6-082fe79fc286/26-6aaea7e259c71.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T15:16:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ப்ளாக்போர்ட் 149, சதர்லேண்ட் 100: ஒரு பந்து மீதமிருக்க..336 ஓட்டங்கள் சேஸ் செய்த அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/liam-blackford-149-runs-in-australia-domestic-1789826688"></link>
            <id>https://news.lankasri.com/article/liam-blackford-149-runs-in-australia-domestic-1789826688</id>
            <summary type="text">Victoria won by 3 wickets against queensland: அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில் விக்டோரியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Victoria won by 3 wickets against queensland: அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில் விக்டோரியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

குயின்ஸ்லேண்ட் அணிக்கு எதிரான அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விக்டோரியா வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>குயின்ஸ்லேண்ட்&nbsp;335 ஓட்டங்கள் </h2><p>
பிரிஸ்பேனில் நடந்த அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில், விக்டோரியா மற்றும் குயின்ஸ்லேண்ட் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db518fb1-ccb7-4a4b-bb2e-c9643a50816f/26-6aae985d76790.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய குயின்ஸ்லேண்ட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 335 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

ஹூகோ பர்டன் 70 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், டயலான் மெக்லாக்லன் 29 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களும் விளாசினர். </p><h2>

பிளாக்போர்ட் 149 </h2><p>பின்னர் ஆடிய விக்டோரியா அணி 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பிளாக் மெக்டொனால்ட் 17 ஓட்டங்களில் வெளியேற, வில் சதர்லேண்ட் மற்றும் லியாம் பிளாக்போர்ட் கூட்டணி அமைத்தனர். </p><p>

இவர்களது ருத்ரதாண்டவ ஆட்டத்தில் விக்டோரியா அணி 49.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
</p><p>
லியாம் பிளாக்போர்ட் (Liam Blackford) 113 பந்துகளில் 149 ஓட்டங்களும் (6 சிக்ஸர், 16 பவுண்டரிகள்), அணித்தலைவர் வில் சதர்லேண்ட் 106 பந்துகளில் 100 ஓட்டங்களும் (4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) விளாசினர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c21b63f5-4278-4020-9062-c60eb0541174/26-6aae985e67d70.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T14:09:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் மின்சார கார் விற்பனை அதிகரிப்பு - அரசுக்கு வருவாய் குறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germanys-ev-boom-cuts-fuel-tax-revenue-1789826179"></link>
            <id>https://news.lankasri.com/article/germanys-ev-boom-cuts-fuel-tax-revenue-1789826179</id>
            <summary type="text">Germany’s EV boom cuts fuel tax revenue: ஜேர்மன் அரசுக்கு எரிபொருள் வரி வருவாய் குறைந்துள்ளது.

ஜேர்மனியில் மின்சார கார்கள் அதிக அளவில் விற்பனையாகி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany’s EV boom cuts fuel tax revenue: ஜேர்மன் அரசுக்கு எரிபொருள் வரி வருவாய் குறைந்துள்ளது.
</p><p>
ஜேர்மனியில் மின்சார கார்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு குறைந்தாலும், அரசுக்கு எரிபொருள் வரி வருவாய் குறைந்து வருகிறது.</p><p>
</p><h2>
மின்சார கார் விற்பனை</h2><p>சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 முதல் காலாண்டில் ஐரோப்பாவில் மின்சார கார் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நோர்வேவில் புதிய கார்கள் 95 சதவீதம் மின்சார வாகனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c17692cb-5975-469e-8eea-d3aad85ac555/26-6aae9485c7f4f.webp' /></p><h2>அரசுக்கு வருவாய் குறைவு</h2><p>ஜேர்மனியில் டீசல் மற்றும் பெட்ரோல் மீது அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2.10 யூரோவாகும், அதில் 1.14 யூரோ அரசு வரியாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மின்சார வாகனங்களுக்கு இவ்வாறு எரிசக்தி வரி இல்லை. </p><p>இதனால் அரசின் வருவாய் குறைந்து வருகிறது. 2016-இல் 37 பில்லியன் யூரோவாக இருந்த எரிசக்தி வருவாய், கடந்த ஆண்டு 33 பில்லியன் யூரோவாக குறைந்துள்ளது.</p><p>
அறிக்கைகள் படி, 2050-க்குள் இந்த வருவாய் 5 பில்லியன் யூரோ மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான நிதி குறைவது அரசுக்கு பெரிய சவாலாக உள்ளது.
</p><p></p><p>பிரித்தானியா, நோர்வே, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் மின்சார வாகனங்களுக்கு புதிய வரி முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. ஜேர்மனியிலும் வாகனங்களுக்கு சாலை கட்டணம் அல்லது புதிய வரி விதிப்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.
</p><p>
மின்சார வாகன வளர்ச்சி சுற்றுச்சூழலுக்கு நல்லது என்றாலும், அரசின் வருவாய் குறைவு எதிர்காலத்தில் போக்குவரத்து திட்டங்களுக்கு சவாலாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T13:53:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய விளையாட்டு போட்டி; நக்வியிடம் பதக்கங்களை பெறுமா இந்தியா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/naqvi-can-give-asian-games-medals-will-india-get-1789824902"></link>
            <id>https://news.lankasri.com/article/naqvi-can-give-asian-games-medals-will-india-get-1789824902</id>
            <summary type="text">will india accept medal if naqvi gives asian games medals: ஆசிய கிண்ணத்தில் நக்வியிடம் கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி, ஆசிய விளையாட்டு போட்டியிலும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>will india accept medal if naqvi gives asian games medals: ஆசிய கிண்ணத்தில் நக்வியிடம் கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி, ஆசிய விளையாட்டு போட்டியிலும் பெற மறுக்குமா என கேள்வி எழுந்துள்ளது.</p><h3>நக்வியிடம் கிண்ணம் பெற மறுத்த இந்தியா&nbsp;</h3><p>
ஆண்கள் மற்றும் பெண்கள் ஆசியக் கிண்ண கிரிக்கெட் ஆகிய இரண்டிலும், இந்தியா நடப்பு சாம்பியனாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/200041d3-c81d-48a4-8d47-65160f8c450b/26-6aae8f88dba15.webp' /></p><p>
ஆனால் பட்டங்களை வென்ற பிறகு நடைபெற்ற அதிகாரப்பூர்வ பரிசளிப்பு விழாவில், பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மொஹ்சின் நக்வி வெற்றி கிண்ணம் வழங்கியதை இரு அணிகளும் பெற்றுக் கொள்ளவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d648285d-7fd5-46df-9d32-16eda3ded70a/26-6aae8f882d47e.webp' /></p><p>
பிசிசிஐயின் உத்தரவின் பேரிலே கிண்ணத்தை பெறவில்லை என கூறப்பட்டது.&nbsp;</p><p></p><p>
ஜப்பானில் இன்று தொடங்கியுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று, மொஹ்சின் நக்வி பதக்கம் வழங்கினால் இந்தியா பெற மறுக்குமா என கேள்வி எழுந்தது. </p><h3>

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்கம் பெறுமா?
</h3><p>
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஐசிசியின் கீழ் செயல்பட்டு வந்தது. ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் (OCA) கீழ் நடத்தப்படுகிறது.&nbsp;</p><p></p><p> 

OCA விதிகளின்படி, பதக்கங்கள் OCA தலைவரால் வழங்கப்படுகின்றன. அவர் இந்தப் பொறுப்பை மற்ற OCA உறுப்பினர்களுக்கும், தொடர்புடைய சர்வதேச அல்லது ஆசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் வழங்கலாம்.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98477b0-839f-487f-a585-c2eec37beded/26-6aae8f89905f1.webp' /></p><p>
அப்படி ஒரு சூழல் நிகழ்ந்தால் இந்திய அணி பதக்கங்களை பெற்றுக்கொள்ளுமா என பிசிசிஐ தலைவர் செயலாளர் தேவாஜித் சாய்கியா கேட்கப்பட்ட போது, நாங்கள் போட்டிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறோம். 

அணிகள் முதலில் வெற்றி மேடையை அடைய வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c75268e-d2b8-4dde-9889-ad802eeefca4/26-6aae8f8a45240.webp' /></p><p>அந்த நேரத்தில் நிலவும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, அப்போது நாங்கள் ஒரு முடிவை எடுப்போம். அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
OCA விதிகளின்படி, வெற்றி விழாக்களின் போது ஆர்ப்பாட்டங்கள், அரசியல், வணிக, மத அல்லது இனப் பிரச்சாரங்களையும் இந்த வழிகாட்டுதல்களை தடை செய்கின்றன.
</p><p>
OCA விதிகள், விளையாட்டுப் போட்டிகள், பதக்கங்கள், கொடிகள், சின்னங்கள் அல்லது சான்றிதழ்களுக்கு அவமரியாதையாகக் கருதப்படும் செயல்களுக்குத் தண்டனைகளை வழங்குகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T13:39:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை மசோதா: சட்டமாக்கிய ட்ரம்ப்..வெளியான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-signs-sanctions-bill-against-russia-1789822896"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-signs-sanctions-bill-against-russia-1789822896</id>
            <summary type="text">Trump signs sanctions bill against russia: ரஷ்யாவின் மீது விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். 

அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump signs sanctions bill against russia: ரஷ்யாவின் மீது விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.</p><p> 

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவின் மீது விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவில் கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த</h2><p>
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு விவகாரத்தில், பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த ட்ரம்பின் அமெரிக்கா முடிவு செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef1c1158-1fbb-440a-a37a-c4da8f93c33d/26-6aae888c9abd7.webp' />&nbsp;</p><p></p><p>
அத்துடன் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான சார்பை குறைத்துக் கொள்ளவில்லை என்றால், முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரத் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் ட்ரம்பின் நிர்வாகம், இந்தியா மற்றும் சீனாவிற்கு நேரடியான மிரட்டலை விடுத்தது.
</p><p>
அதனைத் தொடர்ந்து இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், அந்நாடுகள் மீது 100 சதவீதம் இறக்குமதி வரிகளை விதிக்கவும் மற்றும் ஈரான் மீதான தடைகளை நீட்டிக்கவும் அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதாவை ட்ரம்ப் அரசு கொண்டு வந்தது. </p><h2>

ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் </h2><p>இந்த நிலையில், குறித்த மசோதாவில் வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டு, அதனை சட்டமாக்கினார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.</p><p>
கடந்த ஜூலை மாதம், "ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் விதிக்கும் 2026ஆம் ஆண்டின் சட்டம்" என்று அழைக்கப்படும் இந்த மசோதா புதன்கிழமையன்று பிரதிநிதிகள் சபையிலும், கடந்த மாதம் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T13:01:59+00:00</updated>
        </entry>
    </feed>
