<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-21T17:54:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 நாடுகளுக்கு புதிய வரிகளை விதிக்க ட்ரம்ப் அரசு திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-plans-tariffs-on-60-nations-india-included-1784655789"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-plans-tariffs-on-60-nations-india-included-1784655789</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு, உலகளாவிய வர்த்தகத்தில் கட்டாயத் தொழிலாளர் பிரச்சினையை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு, உலகளாவிய வர்த்தகத்தில் கட்டாயத் தொழிலாளர் பிரச்சினையை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், சுமார் 60 நாடுகளுக்கு புதிய வரிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.
</p><p>
ட்ரம்ப் அரசு முன்பு அறிவித்த 10 சதவீத அடிப்படை வரிகள் ஜூலை 24-ஆம் திகதி காலாவதியாக உள்ளன. </p><p>இதனைத் தொடர்ந்து, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு கூடுதல் 12.5 சதவீதம் வரி விதிக்கப்படலாம் என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரியர் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/730e76c0-87f5-48ad-8dc1-4ee0da6a56d4/26-6a5fafae9eb7b.webp' /></p><p>அமெரிக்கா, கட்டாயத் தொழிலாளர் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கும் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துகிறது. ஆனால் பல நாடுகள் இதனை பின்பற்றவில்லை என்பதே புதிய நடவடிக்கைக்கான காரணமாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த அறிவிப்பு, அமெரிக்கா-கனடா இடையிலான வர்த்தக மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>சமீபத்தில், கனடா தயாரிக்கும் கார்கள், பால் பொருட்கள், மதுபானங்கள் போன்றவற்றுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. </p><p>இதற்கு பதிலாக, கனடா தனது தொழில்களை பாதுகாக்கும் வகையில் எதிர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.</p><p>

மேலும், அமெரிக்கா-மெக்சிகோ இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p>USMCA உடன்படிக்கையை நீட்டிக்காத ட்ரம்ப் அரசின் முடிவால், வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் எதிர்காலத்தில் சீர்குலையக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.</p><p>

இந்த புதிய வரிகள் உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T17:41:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[157 ஓட்டங்களுக்கு சுருண்ட நேபாளம்: 6 விக்கெட்டுகள் வீழ்த்தி..மொத்தமாக முடித்த ஜேஜே ஸ்மித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/namibia-beat-nepal-by-8-wickets-1784648951"></link>
            <id>https://news.lankasri.com/article/namibia-beat-nepal-by-8-wickets-1784648951</id>
            <summary type="text">நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நம்பியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சுருண்ட&amp;nbsp;நேபாளம் 
நமீபியா மற்றும் நேபாளம் அணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நம்பியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><h2>சுருண்ட&nbsp;நேபாளம் </h2><p>
நமீபியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி உட்ரேச்சில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78afac5c-ff21-4968-8923-2fa56c61987b/26-6a5f97c4824b5.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய நேபாள அணி ஜேஜே ஸ்மித்தின் மிரட்டலான பந்துவீச்சில் 157 ஓட்டங்களுக்கு சுருண்டது.</p><p> 

அதிகபட்சமாக ரோஹித் பவுடெல் 31 ஓட்டங்களும், திபேந்திர சிங் 30 ஓட்டங்களும் எடுத்தனர். ஜேஜே ஸ்மித் (JJ Smit) 27 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f09748b2-9fa7-43a0-8490-57a7aca4b830/26-6a5f97c531fc1.webp' /></p><p>
பின்னர் ஆடிய நமீபியா அணி 37 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.</p><p>ஜென் ஃப்ரைலிங்க் 76 ஓட்டங்களும், மைக்கேல் வான் லிங்கன் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c6d97d1-f6b4-404f-bc49-b51caa3cc879/26-6a5f97c5e5cfe.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T15:59:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்களை கடைசியாக பார்க்கும் தருணமென நினைக்கவில்லை: கணவர் மரணம்..மனைவியின் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wife-post-of-us-soldier-found-who-died-in-iraq-1784644562"></link>
            <id>https://news.lankasri.com/article/wife-post-of-us-soldier-found-who-died-in-iraq-1784644562</id>
            <summary type="text">ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி பதிவிட்டுள்ளார்.அமெரிக்க வீரர்&amp;nbsp;மரணம்
ஈரானிய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி பதிவிட்டுள்ளார்.</p><h2>அமெரிக்க வீரர்&nbsp;மரணம்</h2><p>
ஈரானிய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be204840-a794-4852-82df-ee0f5bfb0e72/26-6a5f867d4dc6c.webp' /></p><p></p><p>
அவர் வட கரோலினாவின் Fayetteville-வைச் சேர்ந்த சார்ஜென்ட் மைக்கேல் இமானுவெல் ஸ்வின்டன் (30) என தேறிய வந்தது.</p><p> 

மேலும், அவர் ஈராக்கின் எர்பில் விமானப்படைத் தளத்தில் நடந்த பணியின்போது கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வர, இதுகுறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.</p><h2>

 நான் கடைசியாக பார்க்கும் தருணம் </h2><p>இந்த நிலையில், உயிரிழந்த வீரரின் மனைவி மியா கோன்சலஸ்-ஸ்வின்டன் தனது கணவர் பணிக்கு செல்லும் முன் சீருடையில் ஒரு குழந்தையை ஏந்தியிருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.</p><p> 

அந்த பதிவில், "உங்களை நான் கடைசியாக பார்க்கும் தருணம் இதுவாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. </p><p>ஈராக்கில் பணியில் இருந்தபோது எனது கணவர் மைக்கேல் கொல்லப்பட்டதாக இன்று காலை எனக்கு தெரிவிக்கப்பட்டது. </p><p>

இந்த துயரச் செய்தியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவித்து வருகிறேன்; எனவே தயவுசெய்து என் நிலையை புரிந்துகொள்ளுங்கள்" என எழுதியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/164b868f-052e-4bd4-8efa-8e1832aba1ad/26-6a5f867e22d3b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T14:38:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷம் முதல் கன்னி வரை.., சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sani-vakra-peyarchi-2026-1784636880"></link>
            <id>https://news.lankasri.com/article/sani-vakra-peyarchi-2026-1784636880</id>
            <summary type="text">நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
</p><p>
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
</p><p>
இந்நிலையில், சனி பகவான் 2026ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி அன்று மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குவார்.
</p><p>
அந்தவகையில், சனி வக்ர பெயர்ச்சி மேஷம் முதல் கன்னி வரை முதல் 6 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/z4v76bNaK38" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T14:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியல் - இடம் பிடித்த ஒரே இந்திய நகரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2026-world-happiest-cities-jaipur-in-6th-place-1784641083"></link>
            <id>https://news.lankasri.com/article/2026-world-happiest-cities-jaipur-in-6th-place-1784641083</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில் ஒரு இந்திய நகரம் இடம்பிடித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள் 

உலகின் மகிழ்ச்சியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில் ஒரு இந்திய நகரம் இடம்பிடித்துள்ளது.</p><h3>

2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள்</h3><p> 

உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் டைம் அவுட் வெளியிட்டு வருகிறது. </p><p>

24,000-க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகளிடம் தங்கள் நகரம் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா என்பது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு, ஒவ்வொரு நாட்டிலும் மிக உயர்ந்த தரவரிசை பெற்ற நகரம் மட்டுமே இறுதி பட்டியலில் சேர்க்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef3632b2-8e70-450c-a818-d8ccd79e4db7/26-6a5f763c482ea.webp' /></p><p>

20 நகரங்கள் உள்ள 2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் பிரித்தானியாவின் பாத் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.&nbsp;</p><p></p><p> 

இந்த நகரின் 93 சதவீதம் பேர் தங்கள் நகரம் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும், 92 சதவீதம் பேர் மற்ற இடங்களை விட பாத்தில் தாங்கள் அதிக மகிழ்ச்சியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர். </p><p>

2வது இடத்தில் பனாமாவின் பனாமா நகரமும், 3வது இடத்தில் மெக்சிகோவின் குவாடலஹாரா நகரமும், 4வது இடத்தில் கொலம்பியாவின் மெடலின் நகரமும், 5வது இடத்தில் போலந்தின் கிராகோ நகரமும் உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5cca7a1-792f-48e8-abe4-b8cbbb801153/26-6a5f763cf0f95.webp' /></p><p>

இந்த பட்டியலில் 6வது இடத்தில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் இடம்பிடித்துள்ளது.</p><p> 

7வது இடத்தில் அமெரிக்காவின் சிகாகோவும், 8வது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனும், 9வது இடத்தில் சீனாவின் ஷாங்காயும், 10வது இடத்தில் ஸ்வீடனின் கோதென்பர்க்கும், 11வது இடத்தில் கனடாவின் மான்ட்ரியலும் உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T13:38:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரில் 2 வாரத்தில் 100 வீரர்கள் காயம் - ஒப்புக்கொண்ட அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pentagon-admit-100-us-soldiers-injured-in-iran-hit-1784639143"></link>
            <id>https://news.lankasri.com/article/pentagon-admit-100-us-soldiers-injured-in-iran-hit-1784639143</id>
            <summary type="text">ஈரான் போரில் 2 வாரத்தில் 100 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

100 அமெரிக்க வீரர்கள் காயம்

ஈரான் மற்றும் அமெரிக்கா இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் போரில் 2 வாரத்தில் 100 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.</p><h3>

100 அமெரிக்க வீரர்கள் காயம்</h3><p>

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தம் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 10 நாட்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் நிலவி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/881ffba4-2258-443d-ab7c-146413e67f6c/26-6a5f6ea954ce0.webp' /></p><p>

ஈரானின் பாந்தர் அப்பாஸ், குவாசம் தீவு, சாம்பஹார், கொனர்க், சிரிக் போன்ற துறைமுக நகரங்கள் மீது தொடர்ந்து 10வது நாளாக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. </p><p>

அதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்த போரில் காயமடைந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா மறைப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் குற்றஞ்சாட்டியது.</p><p> 

இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்த பெண்டகன் செய்தி தொடர்பாளர் ஷான் பார்னெல், " ஜூலை 7 முதல் நடைபெற்று வரும் தாக்குதலில் சுமார் 100 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஏதாவது ஒருவகையில் காயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2487004d-acdb-4778-b40b-311a79f4c58d/26-6a5f6ea89d617.webp' /></p><p>

அதில் பெரும்பாலானோருக்கு சிறிய அளவிலான காயம் என்பதால் அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டனர்" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T13:05:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்ஸி இல்லாமலே தாயகம் திரும்பிய அர்ஜென்டினா அணி: கிடைத்த உற்சாக வரவேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/argentina-team-member-back-to-home-without-messi-1784638057"></link>
            <id>https://news.lankasri.com/article/argentina-team-member-back-to-home-without-messi-1784638057</id>
            <summary type="text">உலகக்கிண்ணத்தை இழந்தாலும் தாயகம் திரும்பிய அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.&amp;nbsp;தாயகம் திரும்பிய&amp;nbsp;வீரர்கள் 

FIFA உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக்கிண்ணத்தை இழந்தாலும் தாயகம் திரும்பிய அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.&nbsp;</p><h2>தாயகம் திரும்பிய&nbsp;வீரர்கள் </h2><p>

FIFA உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வீரர்கள் தாயகம் திரும்பினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caac765a-e0fc-405f-908c-5d302c43e719/26-6a5f6ccf946b1.webp' /></p><p></p><p>
பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி மற்றும் அணியின் மற்ற வீரர்கள் விமானத்திற்கு வெளியே சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் இராணுவ இசைக்குழுவின் வரவேற்கப்பட்டனர். </p><p>

அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் உற்சாக வீரர்களை வரவேற்றனர்.&nbsp;</p><h2>பட்டாசுகளை வெடித்தும்&nbsp;</h2><p>

வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் நடனமாடியும், பாடியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.
</p><p>
முன்னதாக, அணியின் சில வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் தாயகம் திரும்பும் விமானத்தில் செல்ல மாட்டார்கள் என அர்ஜென்டினா கால்பந்து சங்கம் தெரிவித்திருந்தது.
</p><p>
அதன்படி, நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) குழுவினருடன் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ef9de71-2157-497d-8e93-4da763a426d0/26-6a5f6b2fad63e.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90929f3f-8da2-446c-8a80-b803899dd898/26-6a5f6b307c264.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3120717d-6bce-4eb3-8612-4a4de2d4e0d7/26-6a5f6cceaa167.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T12:49:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக இடம்: ஆண்களைவிட...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/more-womens-than-men-in-andy-burnham-cabinet-1784636531"></link>
            <id>https://news.lankasri.com/article/more-womens-than-men-in-andy-burnham-cabinet-1784636531</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம், தனது அமைச்சரவையில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக இடம் கொடுத்துள்ளார்.

ஆண்களை விட பெண்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம், தனது அமைச்சரவையில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக இடம் கொடுத்துள்ளார்.
</p><h3>
ஆண்களை விட பெண்களுக்கு அதிக இடம்&nbsp;</h3><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e9bf75-2d56-4c29-9bc2-4ad46e60e845/26-6a5f647582a43.webp' /></p><p>ஆம், ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் 11 ஆண் அமைச்சர்கள், 12 பெண் அமைச்சர்கள்!</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d39445ba-d012-4c74-bd3e-506f4194274d/26-6a5f6474d51e9.webp' /></p><p>அவர்களில், உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், வீட்டுவசதித்துறை அமைச்சரான ஏஞ்சலா ரெய்னர், முதல் மாநிலச் செயலரான லூயிஸ் ஹைக் மற்றும் கல்விச் செயலரான லூசி பவல் ஆகியோர் அடங்குவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef03a1a6-2c73-4108-9f15-a20c9d446a7d/26-6a5f647635947.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43964547-5872-4e7a-a784-a6d6f8eeea02/26-6a5f6476dd28a.webp' /></p><p>லூயிஸுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் மாநிலச் செயலர் பதவி என்பது, துணைப் பிரதமர் பதவிக்கு இணையான பதவியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d0a93f-288f-48e2-be29-0c5a3bfbc6b7/26-6a5f647798c0e.webp' /></p><p>மேலும், யெவட் கூப்பருக்கு சுகாதாரச் செயலர் பதவியும், பிரிட்ஜட் பிலிப்சனுக்கு பெண்கள் மற்றும் சமத்துவ அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c515acc-4bfd-4452-b598-5fc5053e39b4/26-6a5f647847bc1.webp' /></p><p>அத்துடன், ஆன்டி பர்னாம் நாடாளுமன்ற உறுப்பினராவதில் முக்கிய பங்காற்றிய ஆனலீஸ் மிட்க்லீக்கு chief whip என்னும் பொறுப்பும், இந்திய வம்சாவளியினரான லிசா நந்திக்கு கலாச்சாரச் செயலர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7967e08-9170-4418-bdce-4da10ff9508c/26-6a5f6478ea4ce.webp' /></p><p>முந்தைய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரின் முதல் அமைச்சரவையிலும் பெண்களுக்கு அதிக இடம் வழங்கப்பட்டிருந்தது. அவரது அமைச்சர்களில் 11 பேர் பெண்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T12:22:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்; பதவி விலக வேண்டும்: போராட்டத்தில் ராகுல் காந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rahul-gandhi-demand-pm-modi-resign-and-protest-1784635805"></link>
            <id>https://news.lankasri.com/article/rahul-gandhi-demand-pm-modi-resign-and-protest-1784635805</id>
            <summary type="text">நீட் முறைகேடுகளுக்குபொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.&amp;nbsp;காவல்துறை அடக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் முறைகேடுகளுக்குபொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.&nbsp;</p><h2>காவல்துறை அடக்குமுறை</h2><p>
 
CJP போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட காவல்துறை அடக்குமுறையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e49a9328-f81e-4d3e-9f9e-e1706ccf6054/26-6a5f63341871c.webp' /></p><p></p><p>


நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

கல்வி மற்றும் தேர்வு முறை தொடர்பாகவே இந்த மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>

மக்கள் தாக்கப்படும் விதம் முற்றிலும் 'இந்தியத்தன்மைக்கு முரணானது. நேற்று நடந்த சம்பவத்திற்கு மோடி ஜி இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை.

 கல்வி மற்றும் தேர்வு முறைகள் சீர்குலைந்து, அவை நடைமுறையில் இல்லாமலே போய்விட்டன என்பது நாடு முழுவதற்கும் தெரியும். </p><p>பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார்? அதற்கான காரணம் என்ன? அவர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாணவர்களைக் காவல்துறையினர் தாக்கும் இந்த அராஜகத்தை நிறுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.&nbsp;</p><h2>போராட்டத்தில் ராகுல் காந்தி</h2><p>
 அதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டத்தில் இறங்கினர்.</p><p>

நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என பிரதமர் இல்லம் நோக்கி சென்றனர். 

ஆனால், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த, காங்கிரஸ் கட்சியினர் அங்கேயே அமர்ந்து போராடி வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9583d71f-1c58-45b4-bca3-359d79472d7e/26-6a5f6334bec1b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T12:15:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு கப் மீல் மேக்கர் போதும்.., சுவையான கோலா உருண்டை செய்யலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kola-urundai-recipe-in-tamil-1784635288"></link>
            <id>https://news.lankasri.com/article/kola-urundai-recipe-in-tamil-1784635288</id>
            <summary type="text">மீல் மேக்கரில் புரதச்சத்து மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. 

மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீல் மேக்கரில் புரதச்சத்து மிக அதிக அளவில் நிறைந்துள்ளது.</p><p> 

மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், நார்ச்சத்துக்களும் காணப்படுகின்றன.
</p><p>
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த மீல் மேக்கர் கோலா உருண்டை மிகவும் பிடிக்கும்.
</p><p>
அந்தவகையில், நாவூறும் சுவையில் மீல் மேக்கர் கோலா உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>தேவையான பொருட்கள்
</h2><ul><li>
மீல் மேக்கர்- 1 கப் </li><li>
சோம்பு- 1 ஸ்பூன்
</li><li>பச்சைமிளகாய்- 2
</li><li>வெங்காயம்- 1</li><li>
புதினா- 1 கைப்பிடி</li><li>கொத்தமல்லி- சிறிதளவு</li><li>
பொட்டுக்கடலை- 2 ஸ்பூன்
</li><li>மிளகாய் தூள்- 1 ஸ்பூன்</li><li>
கரம் மசாலா- ½ ஸ்பூன்
</li><li>உப்பு- தேவையான அளவு</li><li>இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்</li><li>அரிசி மாவு- 1 ஸ்பூன்
</li><li>கறிவேப்பிலை- 1 கொத்து</li></ul><h2>செய்முறை</h2><p>

முதலில் மீல் மேக்கரை வெந்நீர் ஊற்றி 15 நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.
</p><p>
பின் ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, இஞ்சி பூண்டு, அரிசி மாவு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/949496f0-9d6e-4a2c-bbcd-69ec609ec9ce/26-6a5f5f9a9556c.webp' /></p><p>

அடுத்து இதில் ஊறவைத்த சோயாக்களை பிழிந்து சேர்த்து நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து சிறிய சிறிய உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
</p><p>
இறுதியாக வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை பொறித்து எடுத்தால் சுவையான மீல் மேக்கர் கோலா உருண்டை தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T12:01:56+00:00</updated>
        </entry>
    </feed>
