<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-20T09:08:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு கிராம் தங்க விலை எவ்வளவு? (20-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784537836"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784537836</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (20-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (20-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
 தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,297,805.00 ஆகும்.</p><p>

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 45,780.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 366,250.00.</p><p>

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 41,970.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 335,750.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,060.00.</p><p>

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 320,500.00.</p>]]></content>
            <updated>2026-07-20T08:57:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வற்றிப்போன ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமான நதி... வேளாண் மக்களுக்கு கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/danube-water-levels-reach-lowest-1784533881"></link>
            <id>https://news.lankasri.com/article/danube-water-levels-reach-lowest-1784533881</id>
            <summary type="text">ருமேனியாவில் டான்யூப் ஆற்றின் நீர்மட்டம் 1996-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டிய நிலையில் வேளாண் மக்களுக்கு நீர்ப்பாசனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ருமேனியாவில் டான்யூப் ஆற்றின் நீர்மட்டம் 1996-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டிய நிலையில் வேளாண் மக்களுக்கு நீர்ப்பாசனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, கப்பல் போக்குவரத்தும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>வறட்சியால் பாதிப்பு</h2><p> </p><p>
இந்த ஆண்டு ஐரோப்பா முழுவதும் உள்ள நீர்வழிகள் நீண்டகால வெப்ப அலைகள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன; மேலும், திங்களன்று மேற்கு ஐரோப்பாவில் சராசரி உச்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7f5bef8-a9f7-463e-8b3f-1b8e10c9abdb/26-6a5dd476776ea.webp' /></p><p> </p><p>இது ஜூலை 20ம் திகதிக்கான இயல்பான அதிகபட்ச வெப்பநிலையை விட 2.7 டிகிரி அதிகமாகும்.&nbsp;இந்த நிலையில் ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமான நதி ருமேனியாவுக்குள் நுழையும் இடத்தில், ஞாயிற்றுக்கிழமையன்று நீரின் அளவு வினாடிக்கு 1,700 கன மீற்றராக இருந்ததாக அந்நாட்டின் அரசு நீர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது; ஜூலை மாதத்திற்கான சராசரி அளவு வினாடிக்கு 4,700 கன மீற்றராகும்.</p><p></p><p> </p><p>அண்டை நாடான பல்கேரியாவுடனான எல்லைக்கு அருகிலுள்ள கரைகளில் நீண்ட தூரத்திற்கு மணல் திட்டுக் காணபப்டுவதையும், பல படகு சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதையும், தானியப் படகுகள் சேவை இல்லாமல் நின்றுகொண்டிருப்பதையும் ராய்ட்டர்ஸ் காணொளிக் காட்சிகளில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf661d46-4b0a-4e82-adf0-462f8221d96c/26-6a5dd477df613.webp' /></p><h2>வேளாண் மக்கள்</h2><p> </p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய தானிய விற்பனையாளர்கள் மற்றும் தீவிர ஏற்றுமதியாளர்களில் ருமேனியாவும் முதன்மையான நாடாகும்.</p><p> இதனிடையே, தென்கிழக்கு ருமேனியாவில் பயிர் நீர்ப்பாசனத்திற்காக வேளாண் மக்கள் தண்ணீர் பெறுவதை அதிகாரிகள் கட்டுப்படுத்தியதோடு, அரசுக்குச் சொந்தமான அணுமின் உற்பத்தியாளரான நியூக்ளியர் எலக்ட்ரிகாவின் இரண்டு அணு உலைகளைக் குளிர்விக்கத் தேவையான குறைந்தபட்ச நீர் அளவை உறுதி செய்வதற்காக நீர்த்தேக்கங்களையும் கட்டுப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef85436-1b4e-4508-a215-31de0a358501/26-6a5dd47738036.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், பல மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக, திங்கட்கிழமை முதல் டான்யூப் நதியின் நீர்மட்டம் படிப்படியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக நீர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T08:50:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பூங்காவில் தீவைத்த நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/police-arrested-man-set-fire-on-paris-park-1784535920"></link>
            <id>https://news.lankasri.com/article/police-arrested-man-set-fire-on-paris-park-1784535920</id>
            <summary type="text">பிரான்சில் காட்டுத்தீ பரவி, அதனால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் விடயம் அமைதியின்மையை உருவாக்கியுள்ள நிலையில், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் காட்டுத்தீ பரவி, அதனால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் விடயம் அமைதியின்மையை உருவாக்கியுள்ள நிலையில், தலைநகர் பாரீஸிலுள்ள பூங்கா ஒன்றில் இளைஞர் ஒருவர் தீவைத்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.</p><h3>

அமைதியின்மையை உருவாக்கியுள்ள விடயம்</h3><p>

பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ மக்களிடையே அமைதியின்மையை உருவாக்கியுள்ள நிலையில், வேண்டுமென்றேயோ அல்லது தெரியாமலோ தீயை துவக்கிய பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe15641f-6558-4ad9-ba6c-c2a66f95dc5b/26-6a5ddb722e829.webp' /></p><p>
அவர்களில் ஒருவர் தன்னார்வலராக செயல்பட்ட தீயணைப்புவீரர் என்னும் செய்தி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
</p><h3>
பூங்காவில் தீவைத்த நபர் கைது
</h3><p>
காட்டுத்தீயால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற்போல், பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள பூங்கா ஒன்றில் தீவைத்துள்ளார் 23 வயது இளைஞர் ஒருவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaf1bce7-ffcb-4cde-9c5c-effa2565f5d0/26-6a5ddb72d4ddf.webp' /></p><p>
தகவலறிந்து அங்கு சென்ற பொலிசார், பாரீஸிலுள்ள மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றான அந்த பூங்காவிலுள்ள காய்ந்த சருகுகளில் வைக்கப்பட்ட தீ மரம் ஒன்றிற்குப் பரவுவதைக் கண்டுள்ளார்கள்.
</p><p>
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அந்தத் தீயை அணைத்தாலும், ஒரு சதுர மீற்றர் பரப்பளவுள்ள தாவரங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன.
</p><p>
அதைத் தொடர்ந்து தீவைத்த அந்த நபர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T08:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைனஸ் 54 செல்சியஸ் குளிரில் 500 நாட்கள் ஆய்வு - ஆர்க்டிக் நோக்கி நாயுடன் புறப்பட்ட தாரா குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tara-polar-stations-heading-to-arctic-expedition-1784534042"></link>
            <id>https://news.lankasri.com/article/tara-polar-stations-heading-to-arctic-expedition-1784534042</id>
            <summary type="text">ஆர்க்டிக் பகுதியில் ஆய்வு செய்ய 12 பேர் அடங்கிய குழு தாரா துருவ நிலையம் மூலம் புறப்பட்டுள்ளனர்.

ஆர்க்டிக் பகுதியில் ஆய்வு

நிலா, செவ்வாய் என பூமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆர்க்டிக் பகுதியில் ஆய்வு செய்ய 12 பேர் அடங்கிய குழு தாரா துருவ நிலையம் மூலம் புறப்பட்டுள்ளனர்.
</p><h3>
ஆர்க்டிக் பகுதியில் ஆய்வு</h3><p>

நிலா, செவ்வாய் என பூமியை தாண்டி விண்வெளியில் உள்ள கிரகங்களை மனிதர்கள் ஆய்வு செய்து வந்தாலும், இன்னும் பூமியில் அதிகம் ஆய்வு செய்யப்படாத பகுதிகள் நிறைய உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aad3b3b9-3798-40d8-9df8-00e9ea8d9799/26-6a5dd8332f80f.webp' /></p><p>

அப்படி பூமியில் உள்ள அதிகம் ஆய்வு செய்யப்படாத பகுதிகளில், −52 °C வரையிலான குறைந்த வெப்பநிலை நிலவும் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியும் ஒன்று. </p><p>

6 விஞ்ஞானிகள் உட்பட 12 பேர் அடங்கிய குழு தாரா துருவ நிலையம் மூலம் பிரான்ஸின் லோரியன் துறைமுகத்திலிருந்து ஆர்க்டிக் பெருங்கடல் நோக்கி புறப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd8e7cdd-80ca-4e9a-b7f2-35040d04200d/26-6a5dd41c037dc.webp' /></p><p> 

நேற்று பிரான்ஸ் கடல்சார் அமைச்சர் கேத்தரின் ஷபாட் முன்னிலையில், இந்தப் புறப்பாட்டைக் காண்பதற்காகப் பல நூறு மக்கள் துறைமுகத் தளங்களில் திரண்டிருந்தனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="fr" dir="ltr">Sciences – Mer |<br>Départ de Tara Polar Station Lorient – Le 19 juillet 2026<br><br>Catherine Chabaud, ministre de la Mer, était aujourd’hui, le 19 juillet, à Lorient à l’occasion du départ de la Tara Polar Station. <br>Guidée par Romain Troublé, directeur général de la fondation Tara… <a href="https://t.co/JUWkRyUMm6">pic.twitter.com/JUWkRyUMm6</a></p>&mdash; Préfet du Morbihan🇫🇷🇪🇺 (@Prefet56) <a href="https://x.com/Prefet56/status/2078880421883044321?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
ஆர்க்டிக் பிராந்தியம் பூமியின் மற்ற பகுதிகளை விட 3 முதல் 4 மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருகிறது. </p><p>

ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள உயிரினங்கள் மற்றும் வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள் குறித்த புரிதலை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டதுள்ளது.</p><h3> 

தாரா துருவ நிலையம்
</h3><p>
தாரா துருவ நிலையம் என்பது −52 °C வரையிலான குறைந்த வெப்பநிலையையும், விரிவடைந்து வரும் ஆர்க்டிக் கடல் பனியின் பெரும் அழுத்தத்தையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மிதவை ஆகும்.&nbsp;</p><p>

இது 285 அடி நீளமும் , 52 அடி அகலமும் கொண்டது. குளிர்காலத்தில் 12 பேரும், கோடையில் 20 பேரும் இதில் தங்கலாம். 

உள்ளே 400 சதுர மீட்டர் பரப்பளவுள்ள வசிப்பிடம் உள்ளதோடு, மருத்துவ அறை, சமையலறை ஆகியவை உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fe2fc70-12da-4d5a-aa42-9966595d4f4f/26-6a5dd833eb855.webp' /></p><p>
இந்த நிலையத்தில் சூரிய மின் தகடுகள், காற்றாலை மற்றும் பயோடீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. </p><p> 

இந்த தாரா துருவ நிலையம் ஒரு பனி உடைக்கும் கப்பலின் பாதுகாப்புடன் ஆர்க்டிக் பெருங்கடலின் ரஷ்ய/நார்வே பக்கத்திற்குக் கொண்டு செல்லப்படும்.&nbsp;</p><p></p><p>

அதன் பின்னர் தன்னை பனிக்கட்டிகளுக்குள் உறைந்து போக அனுமதித்து, கிரீன்லாந்துக்கும் ஸ்வால்பார்டுக்கும் இடையில் உள்ள ஃபிராம் நீரிணையை நோக்கி, வட துருவத்தைக் கடந்து, ஒரு நாளைக்கு சுமார் 10 கிலோமீட்டர் வேகத்தில், 350 முதல் 500 நாட்கள் வரை தொடர்ந்து மிதக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4537dc98-1251-4b19-882a-a251e40e503a/26-6a5dd8349cd3a.webp' /></p><p>
 அது 2027 ஆம் ஆண்டின் இறுதியில் அங்கு சென்றடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

இதில் செல்லும் 12 பேர் அடங்கிய குழுவிற்கு கடுமையான பனியை தாங்கும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ba76861-2578-4e80-a766-3a53b59cd71d/26-6a5dd41cac217.webp' /></p><p> 

நெருங்கி வரும் துருவ கரடி உள்ளிட்ட விலங்குகளைக் கண்டறிவதற்காக, ஒரு லப்போனிய மேய்ப்பு நாயும் இந்தப் பயணத்தில் அவர்களுடன் செல்கிறது.</p><p> 

மேலும், குழுவில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பிற்காக துப்பாக்கியும் வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த நிலையத்தின் மையத்தில் பனிக்கட்டிக்குக் கீழே உள்ள கடலுக்கு நேரடியாகத் திறக்கும் ஒரு பிரத்யேகமான 1.6 மீ விட்டம் கொண்ட செங்குத்துத் துளை உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a870ca3-90b8-4120-8ce0-a3e52dd0113d/26-6a5dd8354de16.webp' /></p><p>

விஞ்ஞானிகள் இந்தத் துளையின் வழியாக, கடுமையான குளிர்காலத்திலும்கூட 6,560 அடி ஆழம் வரை செல்லக்கூடியவை.கருவிகளை கடலுக்குள் இறக்கி, 10,000க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரிக்க உள்ளனர். </p><h3>

பங்களிக்கும் நாடுகள்</h3><p>

அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, சுவிட்சர்லாந்து ஸ்பெயின், மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கின்றன. </p><p>

தாரா பெருங்கடல் அறக்கட்டளை மற்றும் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் (CNRS) போன்ற நிறுவனங்கள் நிதி, கட்டுமானம் மற்றும் ஒருங்கிணைப்பை வழங்கியுள்ளது.</p><p> 
 
இந்த பயணத்திற்கு 6 மில்லியன் யூரோ செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2026 முதல் 2045 ஆம் ஆண்டுக்கு இடையில், 2 ஆண்டுகளுக்கு ஒரு பயணம் என்ற விகிதத்தில் திட்டமிடப்பட்ட 10 பயணங்கள் அடங்கிய ஒரு திட்டத்தின் முதல் பயணம் இதுவாகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T08:13:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[189 ஓட்டங்களை இலக்கினை எட்ட போராட்டம்..1 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-zealand-beat-west-indies-by-1-wicket-1784532489"></link>
            <id>https://news.lankasri.com/article/new-zealand-beat-west-indies-by-1-wicket-1784532489</id>
            <summary type="text">மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அபார வெற்றி பெற்றது.188 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் 

நியூஸிலாந்து மற்றும் மேற்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அபார வெற்றி பெற்றது.</p><h2>188 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்</h2><p> 

நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி பார்படோஸில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10c4704c-462c-443d-a57b-8bbf08feb2a5/26-6a5dd0abf3ff5.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 188 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அமிர் ஜங்கூ 51 ஓட்டங்களும், மோட்டி 41 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

ஃபிஷர் 3 விக்கெட்டுகளும், சான்ட்னர் மற்றும் பிரேஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளும், லென்னொக்ஸ் மற்றும் ஸ்மித் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>மார்க் சாப்மேன்&nbsp;</h2><p>
பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் மார்க் சாப்மேன் (Mark Chapman) நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.
</p><p>
அவர் 80 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, நியூஸிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
</p><p>
அணியை காப்பாற்ற போராடிய அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர் (Mitchell Santner) 45வது ஓவரில் 1 ரன் எடுக்க, நியூஸிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83492d0c-e3d8-4d81-a747-729e16324f11/26-6a5dd0aca83de.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T07:39:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிருக்கு அஞ்சுகிறார்கள்... உக்ரைன் இராணுவத்தில் வீரர்களைச் சேர்ப்பதில் புதிய சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/recruit-soldiers-ukraine-struggle-1784531759"></link>
            <id>https://news.lankasri.com/article/recruit-soldiers-ukraine-struggle-1784531759</id>
            <summary type="text">உக்ரைன் மக்கள் மரணத்திற்கு அஞ்சுவதால், இராணுவத்தில் வீரர்களைச் சேர்ப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் திணறிவரும்
ரஷ்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மக்கள் மரணத்திற்கு அஞ்சுவதால், இராணுவத்தில் வீரர்களைச் சேர்ப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>உக்ரைன் திணறிவரும்</h2><p>
</p><p>ரஷ்ய இராணுவத்தின் கொடூரமானத் தாக்குதல் ஒருபக்கம், அதில் தப்பிப் பிழைக்கும் உக்ரைன் வீரர்கள் தங்களுக்குள் மூர்க்கத்தனமாக சண்டையிட்டுக் கொள்வது மறுபக்கம் என உக்ரைன் இராணுவத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b95c4dc-046b-4940-bf05-06860c16a638/26-6a5dcc9b3353c.webp' /></p><p> </p><p>உக்ரைன் வீரர்களிடையே இப்படியான மூர்க்கத்தனமான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாகவே உக்ரைனின் இராணுவக் குறைதீர்ப்பாளர் கூறுகிறார். </p><p>மட்டுமின்றி, ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் ஐந்தாவது மற்றும் பெரும் சோர்வை ஏற்படுத்தும் ஆண்டில், போரிடுவதற்காக ஆட்களைத் திரட்ட உக்ரைன் திணறிவரும் நிலையில் இது ஒரு முக்கியப் பிரச்சினையாக உருமாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>இது ரஷ்யா பரப்பும் வதந்தி அல்ல என குறிப்பிட்டுள்ள அவர், சமீபத்திய தேசிய காவல்துறை சேவையின் அறிக்கை ஒன்றில், இதுவரை ஆட்சேர்ப்பு அதிகாரிகள் மீது 600-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளதாகப் பதிவு செய்துள்ளதுடன், இந்த ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p> 
ஏப்ரல் மாதம் பல ஆள்சேர்ப்பாளர்கள் கத்தியால் தாக்கப்பட்டபோது முதல் பெரும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது, அவர்களில் ஒருவர் மரணமடைந்தார். பின்னர் ஜூலை மாதம் லிவிவ் நகரில், கட்டாய இராணுவச் சேவையிலிருந்து தப்பித்ததாகச் சந்தேகிக்கப்பட்ட ஒருவரைக் கைது செய்ய முயன்ற அதிகாரிகளை சுமார் 200 போராட்டக்காரர்கள் சூழ்ந்துகொண்டு, அவர்களது காரை அடித்து நொறுக்கி கவிழ்த்தனர். </p><p>பணியில் இருக்கும் வீரர்களுக்கு எதிரான வன்முறையை ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டித்த நிலையில், இந்தக் கலவரம் செய்திகளில் இடம்பிடித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c037af8b-c51d-45ab-a236-5d93630250cf/26-6a5dcc9bf0f53.webp' /></p><p>
</p><p>முன் வரிசையில் போரிடுவதைக் குறித்த வெளிப்படையான அச்சம் முதல், முடிவே தெரியாத ஒரு போரில் பங்கேற்கத் தயங்குவது வரை இதற்கான காரணங்கள் அமைந்திருப்பதாகத் தெரிகிறது.
</p><p>முன்னணிக் களத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விரைவான நகர்வுக்குப் பிறகு, 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தென்கிழக்குப்பகுதி நிலப்பரப்புகளை மீண்டும் கைப்பற்றுவதற்காக உக்ரைன் ஒரு தீவிரமான எதிர்-தாக்குதலைத் தொடங்கியபோதுதான், ஒரே ஒரு முறை உக்ரைன் மக்களிடையே உற்சாக அலை எழுந்தது.</p><h2>ஆண்களை வலுக்கட்டாயமாக</h2><p> </p><p>ஆனால் அதுவும் நீடிக்கவில்லை. அதன் பின்னரே மூர்க்கத்தனமான ஆள்சேர்ப்பு கட்டம் தொடங்கியது. அதுவும் கடும் பின்னடைவையே ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f75f196b-fb4a-4eb3-a38e-a2d6d9e268fd/26-6a5dcc9ca5e42.webp' /></p><p> ஆள்சேர்ப்பாளர்கள் தெருக்களில் மக்களைத் தேடிச் சென்றனர்; சில சமயங்களில் மிகவும் வன்முறைமிக்க முறைகளையும் கையாளத் தொடங்கினர்.</p><p> வன்முறை இன்னொரு வன்முறைக்கு காரணமானது. போர்க்களத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வேண்டியிருந்ததால், உக்ரைனின் உயர் கட்டளைப் பிரிவு பேருந்துமயமாக்கலைத் தொடங்கியது. </p><p>அதாவது ஆண்களை வலுக்கட்டாயமாகப் பேருந்துகளில் ஏற்றி ராணுவப் பணிக்கு அழைத்துச் செல்லும் நடமாடும் ரோந்துப் படைகள் களமிறக்கப்பட்டது.</p><p> போர்க்களத்தில் கூடுதலாக 5,000 பேர் தேவைப்படும்போது, ​​ஆள்சேர்ப்பாளர்கள் அப்பகுதி மக்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லத் தொடங்குகிறார்கள்; அவர்கள் மறுத்தால், அது தெருக்களில் மோதலாக மாறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5869712c-8ee8-41f1-b830-f3efac187e0b/26-6a5dcc9d57bb1.webp' /></p><p> </p><p>உக்ரைனின் மனித உரிமைகள் ஆணையர் கடந்த ஆண்டு இது போன்ற 6,000-க்கும் மேற்பட்ட புகார்களைப் பதிவு செய்தார்; இது 2024-ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட இரு மடங்கு ஆகும். </p><p>அவற்றில் துன்புறுத்தல் மற்றும் சட்டவிரோதக் காவல் தொடர்பான குற்றச்சாட்டுகளும், ஆள்சேர்ப்பு மையங்களில் நிலவும் மோசமான சூழல் குறித்த புகார்களும் அடங்கும். </p><p>நீண்ட ஐந்து வருடங்களாக நீடிக்கும் போரில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் நெருக்கடியான சூழலில், எஞ்சியிருக்கும் ஆண்கள் இறப்பதற்கு அஞ்சுவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இந்த நெருக்கடி நிலையை உக்ரைன் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T07:30:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் நாடாளுமன்றக் குழு தலைவர் ராஜினாமா: அமைச்சரவை மாற்றத்துக்கு வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jens-spahn-resigns-scrutiny-over-surrogate-baby-1784532564"></link>
            <id>https://news.lankasri.com/article/jens-spahn-resigns-scrutiny-over-surrogate-baby-1784532564</id>
            <summary type="text">ஜேர்மன் நாடாளுமன்றக் குழு தலைவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றங்களுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் நாடாளுமன்றக் குழு தலைவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றங்களுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
ஜேர்மன் நாடாளுமன்றக் குழு தலைவர் ராஜினாமா</h3><p>

ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸின் கட்சியான Christian Democratic Union (CDU), மற்றும் அதன் சகோதரி கட்சியான Christian Social Union (CSU) கட்சிகளின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருப்பவர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn).&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6684e70a-cd74-439f-a115-3935c0a3c549/26-6a5dce55c90c0.webp' /></p><p>
ஸ்பான், அமெரிக்காவில், வாடகைத்தாய் ஒருவர் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
</p><p>
ஜேர்மனியில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், வெளிநாடொன்றில் வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தையை ஜேர்மனிக்குக் கொண்டுவர தடையேதும் இல்லை.</p><p>

விடயம் என்னவென்றால், CDU கட்சி, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான தடையை நீட்டிக்க பிப்ரவரி மாதம் வாக்களித்தது.&nbsp;</p><p></p><p>

அப்படியிருக்கும் நிலையில், கட்சிக் கொள்கைக்கு மாறாக வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட ஸ்பானுக்கு, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருக்க தகுதியில்லை என அவர் சார்ந்த கட்சியினரே கருத்து தெரிவித்தனர்.</p><p>

ஆகவே, ஸ்பான் தனது நாடாளுமன்றக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என குரல்கள் வலுக்கத் துவங்கின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/936a456d-57a2-4ed2-ad16-3d59acc58c56/26-6a5dce56789ee.webp' /></p><p>
அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை தனது நாடாளுமன்றக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்பான்.
</p><p>
இந்நிலையில், ஸ்பானின் ராஜினாமாவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யலாம் என ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஆக, அமைச்சரவையில் விரைவில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என கருதப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T07:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்.., 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2026-sani-vakra-peyarchi-palangal-in-tamil-1784529851"></link>
            <id>https://news.lankasri.com/article/2026-sani-vakra-peyarchi-palangal-in-tamil-1784529851</id>
            <summary type="text">நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
</p><p>
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
</p><p>
இந்நிலையில், சனி பகவான் 2026ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி அன்று மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குவார்.
</p><p>
அந்தவகையில், சனி வக்ர பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்கள் தரும் என்று ஜோதிடர் முத்துகுமாரி பகிர்ந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>மேஷம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HOFYcHbpH-w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><h2>ரிஷபம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/m0L0hbMNzxo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>
மிதுனம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZbjRbUwKkhI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><h2>கடகம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3PtMj4V4PEQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>சிம்மம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_TCd2G6XS2A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கன்னி</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Y38N6NwDggQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>துலாம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iV-to3HEsg8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>விருச்சிகம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TLdt_yl99gE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>தனுசு</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Wz83IIg-pos" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மகரம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Cu4ApFbQkxc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கும்பம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_2cItvRcE3o" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மீனம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FusJDN6Gqjw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T06:48:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல்போன 24 வயது பெண்: பல மாதங்களுக்கு பின் கிடைத்த உடல் எச்சங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/idaho-missing-woman-found-death-as-skeletal-form-1784529705"></link>
            <id>https://news.lankasri.com/article/idaho-missing-woman-found-death-as-skeletal-form-1784529705</id>
            <summary type="text">அமெரிக்காவில் மாயமான இளம்பெண்ணின் உடல் எச்சங்கள், பல மாத தேடலுக்கு பிறகு கிடைத்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

மாயமான இளம்பெண்அமெரிக்காவின் Idaho-வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் மாயமான இளம்பெண்ணின் உடல் எச்சங்கள், பல மாத தேடலுக்கு பிறகு கிடைத்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர்.</p><p>
</p><h2>
மாயமான இளம்பெண்</h2><p>அமெரிக்காவின் Idaho-வில் கடந்த 2025ஆம் ஆண்டு, சாண்டல் வில்லியம்ஸ் என்ற 24 வயது இளம் பெண் காணாமல்போனார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f64011b-4c04-4fa4-9e01-4f8b020fb3d8/26-6a5dc52beebcf.webp' />&nbsp;</p><p></p><p> 

கடைசியாக அவர், Shoshone கவுண்டியின் Marble Creek பகுதியில் போர்வையை போர்த்தியவாறு நடந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>

முதலில் அவர் காணாமல்போனபோது, மனநல பாதிப்பு அல்லது நெருக்கடியான சூழலை எதிர்கொண்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். </p><p>

அதன் பின்னர் நீருக்கடியில் தேடும் குழுக்கள், மோப்ப நாய் படைகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற வளங்களைப் பயன்படுத்தி தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
ஆனால், சாண்டல் காணாமல்போன ஒரு வாரத்திற்குள் தேடுதல் பணி நிறுத்தப்பட்டதாக அதிகரிகள் அறிவித்தனர்.&nbsp;</p><h2>எலும்புக்கூடு எச்சங்கள்</h2><p>
இந்த நிலையில் செயின்ட் ஜோ ஆற்றில் கயாக்கிங் சென்ற ஒருவரால், எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. </p><p>

அவை சாண்டல் வில்லியம்ஸ் உடையதுதான் என்று Spokane மருத்துவப் பரிசோதகர் உறுதிப்படுத்தியதாக பீப்பிள் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
பற்களின் பதிவுகளை ஒப்பிட்டுப் பார்த்ததன் மூலம், Spokane கவுண்டி மருத்துவப் பரிசோதகர் அலுவலகம் இந்த அடையாளத்தை உறுதிப்படுத்தியதாக ஷெரிப் அலுவலகம் கூறியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/792b3add-207d-417c-84da-b695f917a796/26-6a5dc52cb8b2b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T06:48:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசுர பலத்துடன் ஸ்பெயின் அணி... 5 வருடங்களில் 16 வெற்றிக் கிண்ணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-team-sixteen-titles-1784528543"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-team-sixteen-titles-1784528543</id>
            <summary type="text">இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெர்லினில் ஐரோப்பிய சேம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி, நியூ ஜெர்சியில் நடந்த உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெர்லினில் ஐரோப்பிய சேம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி, நியூ ஜெர்சியில் நடந்த உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தற்போது உலக சேம்பியன் பட்டம் வென்றுள்ளது.</p><h2>16 பட்டங்கள்</h2><p>
</p><p>யூரோ கிண்ணம் 2008-ஐ வென்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2010-ல் அவர்கள் அதே சாதனையைப் படைத்தனர். ஸ்பெயினின் இந்தச் சமீபத்திய வெற்றி, ஆண்கள் மற்றும் மகளிர் விளையாட்டில் அவர்களின் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ece1a72-d1f8-442e-882f-2bc55b07e48e/26-6a5dbfc59dc9f.webp' /></p><p> </p><p>ஆண்கள் மற்றும் மகளிர் உலகக் கிண்ணங்களை ஒரே நேரத்தில் வென்ற முதல் நாடும் இவர்களே – 2023-ல் சிட்னியில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. </p><p>மட்டுமின்றி, ஆண்கள் அணி 2023-இல் நேஷன்ஸ் லீக் மற்றும் 2024 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றனர்; அதேவேளையில், மகளிர் அணி 2024 மற்றும் 2025 ஆகிய இரு ஆண்டுகளிலும் நேஷன்ஸ் லீக் பட்டத்தை வென்றனர்.</p><p></p><p> </p><p>உண்மையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்பெயின் கால்பந்து அணி 17 வயதுக்குட்பட்டோர் முதல் சீனியர் நிலை வரை வியக்கத்தக்க வகையில் உலகக் கிண்ணம் உட்பட 16 பட்டங்களை வென்றுள்ளது. </p><p>கடந்த 2022 முதல் 2026 வரையில் ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணி மட்டும் 11 பட்டங்களை வென்றுள்ளது. இதில், 20 வயதுக்கு உட்பட்டவர்கள் அணி 2022ல் உலகக் கிண்ணம் வென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9febd453-11c4-4e3d-8ca6-742b2afef585/26-6a5dbfc65e340.webp' /></p><h2>38 ஆட்டங்களில்</h2><p> </p><p>19 வயதுக்கு உட்பட்டவர்களின் அணி 5 முறை ஐரோப்பிய சேம்பியன்கள் பட்டம் வென்றுள்ளது. 17 வயதுக்கு உட்பட்டவர்கள் அணி கடந்த 2022ல் உலகக் கிண்ணம் வென்றதுடன், 2024ல் ஐரோப்பிய சேம்பியன்கள் பட்டம் வென்றுள்ளது. </p><p>ஆண்கள் கால்பந்து அணி கடந்த 2022 முதல் 2026 வரையில் 5 பட்டங்களை வென்றுள்ளது. இதில் ஆண்கள் சீனியர் அணி 2026ல் உலகக் கிண்ணம், 2024ல் ஐரோப்பிய சேம்பியன்கள் பட்டம், 2023ல் நேஷன்ஸ் லீக் பட்டம் வென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e21e86-8135-4dc6-b469-4fde18bdcdae/26-6a5dbfc70ef89.webp' /></p><p> </p><p>23 வயதுக்கு உட்பட்டவர்கள் அணி 2024ல் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றனர். 19 வயதுக்கு உட்பட்டவர்கள் அணி 2026ல் ஐரோப்பிய சேம்பியன்கள் பட்டம் வென்றுள்ளது. </p><p>ஸ்பெயின் அணி அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்துத் தொடர்ந்து 38 ஆட்டங்களில் தோல்வியைச் சந்திக்காமல் உள்ளது; இது வரலாற்றிலேயே ஐரோப்பிய அல்லது தென் அமெரிக்க அணி ஒன்று பதிவு செய்துள்ள மிக நீண்ட தொடர் வெற்றியாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T06:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் மாகாணமொன்றில் மின்னல் தாக்கி சுமார் 100 ஆடுகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-lightning-strike-kills-100-goats-1784527748"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-lightning-strike-kills-100-goats-1784527748</id>
            <summary type="text">சுவிஸ் மாகாணமொன்றில் மின்னல் தாக்கியதில் சுமார் 100 ஆடுகள் பலியானதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மின்னல் தாக்கி சுமார் 100 ஆடுகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிஸ் மாகாணமொன்றில் மின்னல் தாக்கியதில் சுமார் 100 ஆடுகள் பலியானதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
</p><h3>
மின்னல் தாக்கி சுமார் 100 ஆடுகள் பலி
</h3><p>
சுவிட்சர்லாந்தின் வாலே மாகாணத்திலுள்ள எக்கர்ஹார்ன் என்னுமிடத்தில், அம்மாகாணத்தின் அடையாளமாக கருதப்படும் கருப்பு மூக்கு செம்மறியாடுகள் இரவு நேரத்தில் கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a738dd41-8539-4bb3-80a7-d1b7969e31c9/26-6a5dbb85bb2ed.webp' /></p><p>
வியாழக்கிழமை இரவு புயல் வீச, சில மணி நேரங்களுக்குள் சுமார் 26,000 முறை மின்னல் உருவாக, அந்த மின்னல் தாக்கியதில், கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருந்த 97 ஆடுகள் கொல்லப்பட்டுவிட்டன.
</p><p>
அதாவது, சமீப காலமாக, ஓநாய் போன்ற விலங்குகளிடமிருந்து ஆடுகளை பாதுகாப்பதற்காக, ஆடுகளை கூட்டமாக, நெருக்கமாக கொட்டகைகளில் அடைக்கும் முறையை சுவிஸ் விவசாயிகள் பின்பற்றத் துவங்கியுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
ஆனால், அப்படி ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு நெருக்கமாக நின்றதே ஆடுகளுக்கு பிரச்சினையாகிவிட்டது.
</p><p>
ஆம், மின்னல் தாக்கியதில் ஒன்றையொன்று ஒட்டி நின்ற ஆடுகள் மொத்தமாக பாதிக்கப்பட, 97 ஆடுகள் பலியாகிவிட்டன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T06:10:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோரும் கிராமம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/village-to-hold-vote-on-leaving-uk-1784524352"></link>
            <id>https://news.lankasri.com/article/village-to-hold-vote-on-leaving-uk-1784524352</id>
            <summary type="text">இங்கிலாந்திலுள்ள கிராமம் ஒன்று பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோருவது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

சுதந்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்திலுள்ள கிராமம் ஒன்று பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோருவது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.</p><h3>

சுதந்திரம் கோரும் பிரித்தானிய கிராமம்</h3><p>

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரிலுள்ள பிடிங்டன் என்னும் கிராமம், பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோருவது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e776f1e-c04f-4922-b2e5-7748841940ab/26-6a5dae420594d.webp' /></p><p>

அதாவது, பிடிங்டனுக்கு அருகிலுள்ள பைசெஸ்டர் என்னுமிடத்தில் ஒரு ராணுவ தளம் உள்ளது.
</p><p>
அந்த ராணுவ தளத்தை சுமார் 3.750 புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கும் முகாமாக மாற்ற பிரித்தானிய உள்துறை அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
</p><p>
ஆக, தங்கள் கிராமத்துக்கு அருகில் புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே, இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர் பிடிங்டன் கிராம மக்கள்.&nbsp;</p><p></p><p>

தங்கள் கிராமத்துக்கு அருகே புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைப்பது குறித்து தங்களிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று கூறும் அக்கிராமத்தினர், பொதுவாக்கெடுப்பு நடத்தலாமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்கள்.
</p><p>
அந்த வாக்கெடுப்பில், பொதுவாக்கெடுப்பு நடத்தலாம் என மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து, பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோருவது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர் அக்கிராம மக்கள்.</p><p>

விடயம் என்னவென்றால், பிரித்தானியாவைப் பொருத்தவரை, அப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தினாலும், அரசும் நாடாளுமன்றமும் ஒப்புதலளித்தால் மட்டுமே அக்கிராமம் சுதந்திரம் பெற முடியும்.</p><p>

என்றாலும், இது தங்களைக் கலந்தாலோசிக்காமலே, தங்கள் கிராமத்துக்கு அருகே புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைக்க உள்துறை அலுவலகம் முடிவெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பிடிங்டன் மக்கள் மேற்கொள்ளும் ஒரு அடையாள நடவடிக்கை என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.</p><p>

அதாவது, தங்கள் கிராமத்துக்கு அருகே புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைவதை பிடிங்டன் மக்கள் விரும்பவில்லை என்பதை அரசுக்கு தெரியப்படுத்துவதற்காகவே இந்த வாக்கெடுப்பு குறித்த அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T06:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமன்றத்தை பூட்டும்போது எலும்பு இருக்காது - முதல்வருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dmk-mla-markandeyan-arrested-for-hate-speech-cm-1784526908"></link>
            <id>https://news.lankasri.com/article/dmk-mla-markandeyan-arrested-for-hate-speech-cm-1784526908</id>
            <summary type="text">முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். 

திமுக எம்.எல்.ஏமார்க்கண்டேயன் பேச்சு 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h3> 

திமுக எம்.எல்.ஏமார்க்கண்டேயன் பேச்சு </h3><p>

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது. </p><p>

இதில் பேசிய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
</p><p>
இதில் பேசிய அவர், "மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர், உன்னை சட்டமன்றத்திற்குள் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் என்ன கோமாளி பயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4d161c3-8579-4152-82ff-d83c366b939b/26-6a5db83e364ac.webp' /></p><p>

சட்டமன்றத்தை பூட்டும் போது உனக்கு எலும்பு இருக்காது, உடைத்துவிட்டுதான் அனுப்பி விடுவோம், சட்டமன்றத்தை பூட்டிப் பார். யார் ஓடியது? கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கரூரில் இருந்து கேராவனில் யாரை வைத்துக்கொண்டு நீ ஓடினாய்? நாங்க ஒன்னும் பயந்து ஓடவில்லை.&nbsp;&nbsp;</p><p></p><p>
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பேய் அடிச்சது போல சட்டமன்றத்தில் உட்கார்ந்திருந்தார். கொத்து புரோட்டா போட போறாராம், உன்னை போல ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்க பார்த்திருக்கிறோம்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">தவெக தலைவர் விஜய் அவர்கள் குறித்து பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களின் முழுப்பேச்சு ! <a href="https://t.co/wmAvDyGPEw">pic.twitter.com/wmAvDyGPEw</a></p>&mdash; Duraimurugan (@Saattaidurai) <a href="https://x.com/Saattaidurai/status/2079046683938500986?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
ஊழலின் மொத்த உருவம் தமிழகத்தின் முதல்வர். நூறு ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விக்கிறாங்க. 150 கோடி ரூபாய் கருப்பு பணம் வாங்கி இருக்காங்க.
</p><p>
வழக்கு போடுவேன், மிரட்டுவேன் எம்எல்ஏவிடம் விலைபேசுவேன் என்கிறான். மானங்கெட்ட பையன், தகுதி இல்லாதவன் தான் இவன் கட்சில இருக்கான். 

எங்கள் தலைவர்களை அவமரியாதை படுத்தினால் அடித்து விரட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். எந்த இடத்தில் என்ன பேசினாலும் அடிப்போம்." என பேசியுள்ளார்.</p><h3> 

கைது </h3><p>

மார்க்கண்டேயனின் இந்த பேச்சு குறித்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் தவெகவினர் புகார் அளித்தனர்.</p><p>

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0eadfec8-2e35-4490-9d79-19254f7f1e0d/26-6a5db83edb2e3.webp' /></p><p> 

அவரின் வீட்டின் முன்பு திரண்ட திமுகவினர் காவல்துறையினரின் வாகனத்தை மறித்து அமர்ந்து கோஷமிட்டனர்.</p><h3> 

கனிமொழி கண்டனம்</h3><p>

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் கைதுக்கு திமுக எம்.பி கனிமொழி, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c5d8ce7-7d60-423a-8f87-8a359a53d950/26-6a5db83d84c0f.webp' /></p><p>
திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், "விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. <a href="https://x.com/mlavilathikulam?ref_src=twsrc%5Etfw">@mlavilathikulam</a> அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.<br><br>விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க…</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2079041444044771512?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். 

உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T05:58:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக்கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய பரிசுத்தொகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-and-argentina-prize-money-of-fifa-2026-1784525340"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-and-argentina-prize-money-of-fifa-2026-1784525340</id>
            <summary type="text">FIFA உலகக்கிண்ணம் வென்ற ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.&amp;nbsp;50 மில்லியன் டொலர்கள்&amp;nbsp;

ஈஸ்ட் ரூதர்போர்ட்டில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>FIFA உலகக்கிண்ணம் வென்ற ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.&nbsp;</p><h2>50 மில்லியன் டொலர்கள்&nbsp;</h2><p>

ஈஸ்ட் ரூதர்போர்ட்டில் நடந்த FIFA உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98db8c0e-a38a-4a6b-94be-7b0f18c92154/26-6a5db3bc11018.webp' />&nbsp;</p><p></p><p>

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு பரிசுத்தொகையாக 50 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.482 கோடி ஆகும்.</p><h2>
சாம்பியன்ஷிப் மோதிரங்கள்</h2><p>அத்துடன் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி முதல் முறையாக, சுமார் 1,50,000 டொலர் (ரூ.1.4 கோடி) மதிப்புடையதாக கூறப்படும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சாம்பியன்ஷிப் மோதிரங்களையும் பெறுகிறது. </p><p>

அதேபோல் தோல்வியுற்ற அணியான அர்ஜென்டினா 33 மில்லியன் டொலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.318 கோடி) பெறுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc20a90c-326a-4c0d-a9a6-ddb6666c70bc/26-6a5db3bcb469c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T05:34:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவர் ஒரு போர்க்குற்றவாளி... நியூயார்க் மேயர் மம்தானி மீண்டும் சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-war-criminal-says-1784524889"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-war-criminal-says-1784524889</id>
            <summary type="text">இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகருக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரைத் தனது நிர்வாகத்தால் கைது செய்ய முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகருக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரைத் தனது நிர்வாகத்தால் கைது செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.</p><h2>கைது செய்ய முடியுமா</h2><p>
</p><p>எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்காக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகருக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7af8e0e-0390-4ae9-b23f-56cf79dba03b/26-6a5db1976c53a.webp' /></p><p> </p><p>இந்த நிலையிலேயே, தனது நிர்வாகத்தால் நெதன்யாகுவை கைது செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக மம்தானி கூறியுள்ளார்.</p><p> நியூயார்க் டைம்ஸின் The Interview பாட்காஸ்டின் சனிக்கிழமை அத்தியாயத்தில் மம்தானி தெரிவித்த கருத்துகள் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. </p><p>குறித்த பாட்காஸ்டில் பேசிய மம்தானி, பிரதமர் நெதன்யாகு தற்போது ஹேக் (The Hague) நகரில் இருக்க வேண்டியவர் என குறிப்பிட்டுள்ளார். காஸாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக 2024 நவம்பரில் நெதன்யாகுவைக் கைது செய்வதற்கான பிடிவாரண்டை வெளியிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள டச்சு நகரமாகும் ஹேக். </p><p>

நெதன்யாகு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போர்க்குற்றவாளி; கடந்த பல ஆண்டுகளாக அவரது நடவடிக்கைகள் ஏற்படுத்திய விளைவுகளின் காரணமாகவே, பலரும் இத்தகையதொரு கருத்தைக் கொண்டுள்ளனர் எனவும் மம்தானி அந்த பாட்காஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், நெதன்யாகு போன்ற ஒரு வெளிநாட்டுத் தலைவரைக் கைது செய்யுமாறு, தனது மேற்பார்வையில் உள்ள நியூயார்க் காவல் துறைக்கு (NYPD) உத்தரவிடும் சட்டப்பூர்வ அதிகாரம் தமக்கு உள்ளதா என்பது குறித்துத் தனக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் மாம்தானி குறிப்பிட்டுள்ளார். </p><p>ஆனால், இந்த விவகாரம் குறித்து நகரின் சட்டத் துறையுடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மம்தானி தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, நியூயார்க் நகரில் சட்டம் எதைச் செய்ய அனுமதிக்கிறதோ, அதைத்தான் நாங்கள் செய்வோம், ஆனால், அதற்காக னகரத்தின் சட்டத்தை நாங்கள் திருத்தப்போவதில்லை என்றும் மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>காஸாவில் போருக்கான ஒரு ஆயுதமாக மக்களைப் பட்டினி போடுதல், அத்துடன் கொலை, துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சாட்டி, நெதன்யாகு மற்றும் பிற இஸ்ரேலியத் தலைவர்களைக் கைது செய்ய சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிடியாணை பிறப்பித்திருந்தது.</p><h2>ஹமாஸ் ஆதரவாளர்</h2><p> </p><p>மம்தானி தனது மேயர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​காஸாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை ஒரு இனப்படுகொலை என்றும், நெதன்யாகுவை ஒரு போர்க் குற்றவாளி என்றும் சித்தரித்தார். </p><p>மேலும், செப்டம்பர் மாதம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நெதன்யாகு எப்போதாவது நெதன்யாகு நியூயார்க்கில் கால் வைத்தால், அவரைக் கைது செய்யுமாறு நியூயார்க் நகர காவல்துறைக்கு (NYPD) உத்தரவிடுவேன் என்றும் கூறினார். </p><p>ஆனால், மம்தானிக்கு அப்போது பதிலளித்த சட்ட வல்லுநர்கள், நெதன்யாகுவைக் கைது செய்வது மம்தானிக்கு நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாக இருக்கும் என்றும், அப்படியான ஒரு சம்பவம் அமெரிக்க ஃபெடரல் அரசாங்கத்துடன் நேரடி மோதலில் ஈடுபடுத்தக்கூடும் என்றும் விளக்கமளித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d603902-0b09-4110-bd05-da4b77abd122/26-6a5db1968b01f.webp' /></p><p> இதனிடையே, மம்தானியின் சூளுரைகளை தாம் கண்டுகொள்வதில்லை என தெரிவித்துள்ள நெதன்யாகு, அவர் ஒரு ஹமாஸ் ஆதரவாளர் என்றும் குற்றஞ்சாட்டினார். </p><p>அத்துடன், ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலின் தூதர் டேனி டானன் தெரிவிக்கையில், இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு நியூயார்க் வந்து, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பெருமிதத்துடன் உரையாற்றுவார்; </p><p>மேலும், இஸ்ரேலின் உண்மையை எடுத்துரைக்கவும், தனது குடிமக்களைப் பாதுகாப்பதற்கான அதன் அசைக்க முடியாத உரிமையை வலியுறுத்தவும் உலகத்தின் முன் நிற்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T05:19:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளைமுடியை கருப்பாக்க உதவும் கருஞ்சீரக எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/home-made-hair-oil-for-grey-hair-in-tamil-1784522463"></link>
            <id>https://news.lankasri.com/article/home-made-hair-oil-for-grey-hair-in-tamil-1784522463</id>
            <summary type="text">முடிக்கு இயற்கையான கருமை நிறத்தை அளிக்கும் மெலனின் உற்பத்தி குறையும்போது அல்லது நிறமி செல்கள் மந்தமாகும்போது முடி நரைக்கிறது. 

மரபியல், வைட்டமின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முடிக்கு இயற்கையான கருமை நிறத்தை அளிக்கும் மெலனின் உற்பத்தி குறையும்போது அல்லது நிறமி செல்கள் மந்தமாகும்போது முடி நரைக்கிறது. </p><p>

மரபியல், வைட்டமின் பி12 மற்றும் டி குறைபாடு, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.</p><p>

இன்றைய காலகட்டத்தில் இளநரை, நரைமுடி போன்ற பிரச்சனைகள் பலருக்கும் இருக்கிறது.
</p><p>
அந்தவகையில், ஒரே வாரத்தில் நரைமுடியை கருப்பாக்கும் கருஞ்சீரக எண்ணெய்யை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><ul><li>

கருஞ்சீரகம்- 3 ஸ்பூன்
</li><li>வெந்தயம்- 3 ஸ்பூன்
</li><li>கறிவேப்பிலை- 1 கைப்பிடி</li><li>கரிசலாங்கண்ணி பொடி- 2 ஸ்பூன் </li><li>தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்</li></ul><h2>எப்படி தயாரிப்பது?
</h2><p>
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>

அடுத்து ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்தி அரைத்த கலவைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a69cb999-0da8-424a-a46d-4f7b40b11d6b/26-6a5da786d7317.webp' /></p><p>இதற்கடுத்து நன்கு கொதித்து எண்ணெய் நிறம் மாறி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
</p><p>
எண்ணெய் நன்கு ஆறியதும் அதனை வடிகட்டி தலைமுடியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
</p><p>
இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி நிரந்தரமாக கருப்பாக மாறும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T04:44:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோஹித் ஷர்மா 138 ஓட்டங்கள் விளாசியும் வீண்: இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-win-odi-series-2-1-vs-india-1784518254"></link>
            <id>https://news.lankasri.com/article/england-win-odi-series-2-1-vs-india-1784518254</id>
            <summary type="text">இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது. இங்கிலாந்து 387 ஓட்டங்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது. </p><h2>இங்கிலாந்து 387 ஓட்டங்கள்
</h2><p>
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89ae9103-7fe0-481e-a988-e8c3650524cc/26-6a5d97f7e9eba.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 387 ஓட்டங்கள் குவித்தது. பென் டக்கெட் (Ben Duckett) 141 ஓட்டங்களும், பெத்தெல் 91 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

பின்னர் ஆடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 360 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
</p><h2>
ரோஹித் ஷர்மா&nbsp;138&nbsp;ஓட்டங்கள்</h2><p>ரோஹித் ஷர்மா (Rohit Sharma) 138 ஓட்டங்களும், கில் 77 ஓட்டங்களும், விராட் கோஹ்லி (Virat Kohli) 74 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b07b3e8-5a39-4644-90cf-bd887409a78d/26-6a5d97f72a621.webp' /></p><p>
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ஜோ ரூட் (Joe Root) ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6491a175-2abd-49a4-9452-a1403088ef1b/26-6a5d97f89ecd1.webp' />&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">COME ONNNNN ENGLAND!! 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 <a href="https://t.co/ZQsrjWZpw8">pic.twitter.com/ZQsrjWZpw8</a></p>&mdash; England Cricket (@englandcricket) <a href="https://x.com/englandcricket/status/2078908655592689777?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T03:38:31+00:00</updated>
        </entry>
    </feed>
