<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-27T22:31:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-couple-finds-1000-pounds-hidden-cash-stash-1785174943"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-couple-finds-1000-pounds-hidden-cash-stash-1785174943</id>
            <summary type="text">பிரித்தானியாவில் வசிக்கும் லூயிசா (Luisa) மற்றும் அவரது கணவர் டான் (Dan), தங்கள் 100 வருட பழமையான வீட்டின் அடித்தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் வசிக்கும் லூயிசா (Luisa) மற்றும் அவரது கணவர் டான் (Dan), தங்கள் 100 வருட பழமையான வீட்டின் அடித்தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணக் குவியலை கண்டுபிடித்துள்ளனர்.</p><p>அவர்கள் வீட்டின் படிக்கட்டின் கீழ் சுவரால் மூடப்பட்டிருந்த இடத்தை ஆராய்ந்தபோது, பழைய நிலக்கரி துண்டுகள் மற்றும் சிதைந்த பைன்ட் டின் ஒன்றைக் கண்டனர்.

அந்த டின் மிகவும் பழுதடைந்த நிலையில், துர்நாற்றம் வீசியது. </p><p></p><p>ஆரம்பத்தில் அதைத் திறக்க அவர்கள் தயங்கினார்கள்.

பல மாதங்கள் கழித்து, அவர்கள் அதைத் திறந்தபோது, அதில் 1970-களில் அச்சிடப்பட்டிருந்த பணத்தாள்கள் குவிந்து கிடந்தன.

அதில் மொத்தம் 1,000 பவுண்டு இருந்தது.</p><p>இந்த சம்பவம் அவர்களின் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01f4c3a2-27b7-4471-bcb9-d0078a961d2c/26-6a679ba07c0dd.webp' /></p><p>லூயிசா கூறியதாவது: “நாங்கள் இதில் பணம் இருக்கும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. குழந்தைகளுக்கு இது ஒரு அற்புதமான நினைவாக இருக்கும்.”</p><p>

இந்த பணம், குடும்பத்துக்கு சரியான நேரத்தில் உதவியாக அமைந்தது. லூயிசா வேலை இழந்திருந்ததால், அந்த பணம் மூலம் சில பில்களை செலுத்தவும், குழந்தைகளுக்கு சிறிய பரிசுகளை வழங்கவும் முடிந்தது.</p><p>

இந்த வீடியோ TikTok-இல் வைரலாகி, 2 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. பலர், பழைய நோட்டுகள் இன்னும் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும், சில நோட்டுகள் அரிய சேகரிப்புப் பொருளாக அதிக மதிப்பைப் பெறக்கூடும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
</p><p></p><p>இது போன்ற மறைந்திருக்கும் பொருட்கள் பழைய வீடுகளில் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன. சிலர் பழைய திருமண உடைகள், பழமையான ஆவணங்கள் போன்றவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T21:15:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்ல விடயங்கள் நடக்கலாம்- ஈரான் உடனான பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/good-things-can-happen-trump-on-iran-us-talks-1785187047"></link>
            <id>https://news.lankasri.com/article/good-things-can-happen-trump-on-iran-us-talks-1785187047</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஐந்து மாதங்களாக நீடித்துவரும் போர் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா தனது தாக்குதல்களை இடைநிறுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஐந்து மாதங்களாக நீடித்துவரும் போர் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>

அமெரிக்கா தனது தாக்குதல்களை இடைநிறுத்திய நிலையில், ஈரானும் பதில் தாக்குதல்களை நிறுத்தியுள்ளது.
</p><p></p><p>இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “ஈரானுடன் நல்ல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. நல்ல விடயங்கள் நடக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர், “அமெரிக்கா உலகின் மிக வலுவான இராணுவத்தை கொண்டுள்ளது. ஈரானுக்கு எதிராக பெரிய வெற்றியை அடைந்து வருகிறது. அவர்கள் ஒருபோதும் அணு ஆயுதம் பெற முடியாது” என கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b0efb76-65bd-4e91-9140-797d9450c504/26-6a67cae8dc0d9.webp' /></p><p>இதனிடையே, ஈரான், “அமெரிக்கா சிக்கலில் சிக்கியுள்ளது. இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கிய இந்த போர், அமெரிக்காவுக்கு பெரும் விலையைச் செலுத்த வைக்கும்” என எச்சரித்துள்ளது.
</p><p>
இதற்கு மத்தியில், ஏமன் வெளிவிவகார அமைச்சர், ஹார்முஸ் கடற்பகுதியில் ஈரான் பயன்படுத்திய முறைமையை பாப் அல்-மந்தேப் பகுதியில் ஹவுதிகள் பின்பற்ற முயற்சிக்கின்றனர் எனக் கூறியுள்ளார். இது சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு புதிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்.
</p><p>
மேலும், மேற்குக் கரையில் இஸ்ரேல் படைகள் பல்வேறு கிராமங்களில் தாக்குதல் நடத்தி, பலரை கைது செய்ததாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ளனர்.</p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T21:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா விதித்த சுங்க வரிகளுக்கு சீனா கடும் எதிரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-slams-us-forced-labour-tariffs-1785172830"></link>
            <id>https://news.lankasri.com/article/china-slams-us-forced-labour-tariffs-1785172830</id>
            <summary type="text">பீஜிங்கில் சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா சமீபத்தில் விதித்த புதிய சுங்க வரிகள் நியாயமற்றவை என்றும், “பாதுகாப்பு வாதம்” (Prote...</summary>
            <content type="html"><![CDATA[<p>பீஜிங்கில் சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா சமீபத்தில் விதித்த புதிய சுங்க வரிகள் நியாயமற்றவை என்றும், “பாதுகாப்பு வாதம்” (Protectionism) சார்ந்தவை என்றும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்கா, ஜூலை 24, 2026 அன்று, 60 நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு 10 சதவீதம் மற்றும் 12.5 சதவீதம் சுங்க வரிகளை விதித்தது. இதில் சீனாவிற்கு 12.5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.</p><p>கட்டாய உழைப்பால் (Forced Labour) பொருட்கள் தயாரிக்கப்பட்டதன காரணமாக இந்நாடுகளுக்கு இந்த வரியை விதித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/781dd1b6-6cd0-4d96-a035-18b23e6bbc93/26-6a6793605def4.webp' /></p><p>இதற்கு சீனா, “இது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை. அமெரிக்கா மீண்டும் Section 301 விசாரணையைத் தொடங்கி, ‘கட்டாய உழைப்பு’ என்ற பெயரில் சுங்க வரிகளை விதித்துள்ளது. இது முற்றிலும் அநியாயமானது” என தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சுங்க வரிகள் உலக வர்த்தக ஒழுங்கை பாதிக்கும் அபாயம் உள்ளதாக சீனா வலியுறுத்தியுள்ளது. மேலும், அமெரிக்கா தனது உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவே இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறது என்றும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
</p><p></p><p>இந்த நிலைமை, சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பதற்றமடையச் செய்யும் அபாயம் உள்ளது. </p><p>ஏற்கனவே, இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் வர்த்தக மோதல்களை சந்தித்து வருகின்றன. புதிய சுங்க வரிகள், உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.
</p><p>
சீனா, “அமெரிக்கா உடனடியாக இந்த சுங்க வரிகளை ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T17:18:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பிரித்தானியா வரும் ஹரி: பக்கிங்காம் அரண்மனையில் தங்கப்போவதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-to-stay-in-buckingham-palace-1785155463"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-to-stay-in-buckingham-palace-1785155463</id>
            <summary type="text">பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரி மீண்டும் பிரித்தானியா வர உள்ளார்.

இந்நிலையில், அவர் இம்முறை பக்கிங்காம் அரண்மனையிலுள்ள ஒரு அறையில் தங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரி மீண்டும் பிரித்தானியா வர உள்ளார்.
</p><p>
இந்நிலையில், அவர் இம்முறை பக்கிங்காம் அரண்மனையிலுள்ள ஒரு அறையில் தங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
மீண்டும் பிரித்தானியா வரும் ஹரி</h3><p>

பிரித்தானிய இளவரசர் ஹரி, தன் மனைவி மேகன், பிள்ளைகள் ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுடன் இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 10ஆம் திகதி, பிரித்தானியா வந்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f53ce7c3-7115-4a97-b5bb-02f5aa3fe56e/26-6a674f89a97b5.webp' /></p><p>
அப்போது, அவர் குடும்பமாக மன்னர் சார்லசை சந்தித்தார்.
</p><p>
இந்நிலையில், வருடாந்திர WellChild விருதுகள் வழங்கும் விழா தொடர்பிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மீண்டும் செப்டம்பர் மாதம் பிரித்தானியா வர உள்ளார் ஹரி.&nbsp;</p><p></p><p>
கடந்த முறை அவர் பிரித்தானியா வந்தபோது, முன்கூட்டியே சரியாக திட்டமிடாததால், அவரும் அவரது குடும்பத்தினரும் பக்கிங்காம் அரண்மனையில் தங்க முடியாமல் போய் விட்டது.
</p><p>
ஆனால், இம்முறை, பக்கிங்காம் அரண்மனையில் தங்க அவருக்கு மீண்டும் அறை ஒன்று ஒதுக்கப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aaad561-9553-4193-b353-65457e0f439d/26-6a674f890424a.webp' /></p><p>
அதாவது, இளவரசர் ஹரி மன்னர் சார்லசுடைய மகனாகவே இருந்தாலும், அவர் பக்கிங்காம் அரண்மனையில் தங்க திட்டமிட்டால், பல நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கவேண்டுமாம்.&nbsp;</p><p>
அதாவது, அவருக்கு அறை ஒதுக்கி, அவருக்கு உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய நேரம் தேவை என்பதாலேயே இந்த ஏற்பாடாம்.</p><p>

இதற்கிடையில், இம்முறையும் ஹரியுடன் மேகனும் தம்பதியரின் பிள்ளைகளும் வருகிறார்களா என்பது குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T16:59:37+00:00</updated>
        </entry>
    </feed>
