<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-14T12:18:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவின் புதிய Package Visa- விமானம், ஹோட்டல், விசா அனைத்தும் ஒரே இடத்தில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-arabia-launches-all-in-one-travel-visa-1784031105"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-arabia-launches-all-in-one-travel-visa-1784031105</id>
            <summary type="text">சவுதி அரேபியா சுற்றுலா பயணிகளுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.பேக்கேஜ் விசா (Package Visa) எனப்படும் இந்த திட்டம் மூலம் பயணிகள் விமான டிக்கெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியா சுற்றுலா பயணிகளுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>பேக்கேஜ் விசா (Package Visa) எனப்படும் இந்த திட்டம் மூலம் பயணிகள் விமான டிக்கெட், ஹோட்டல் முன்பதிவு, சுற்றுலா விசா ஆகியவற்றை ஒரே இடத்தில் எளிதாக பெற முடியும்.
</p><p>
இந்த சேவை முழுமையாக டிஜிட்டல் முறையில் செயல்படுகிறது. பயணிகள் தனித்தனியாக விமானம், ஹோட்டல், விசா ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரே பிளாட்ஃபார்மில் அனைத்தையும் ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். இதன் மூலம் சுற்றுலா திட்டமிடுதல் மிகவும் எளிதாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57af52c1-d9e9-40af-bf01-e9598dfd6684/26-6a562782d78cc.webp' /></p><h2>பேக்கேஜ் விசாவின் அம்சங்கள்</h2><ul><li>இரு வழி விமான டிக்கெட்
</li><li>ஹோட்டல் வசதி
</li><li>சுற்றுலா e-விசா
</li><li>வழிகாட்டியுடன் சுற்றுலா அனுபவங்கள்
</li><li>கலாச்சார நிகழ்ச்சிகள், என பல சேவைகளை ஒரே முன்பதிவில் பெற முடியும்.</li></ul><p>இந்த திட்டம் தற்போது இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இந்தோனேஷியா, ஜோர்டான், எகிப்து, மெக்சிகோ போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டத்தில் மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.</p><p></p><p>சவுதி அரேபியாவின் ‘விஷன் 2030’ சுற்றுலா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>உலகளாவிய சுற்றுலா தலமாக சவுதி அரேபியாவை மாற்றும் நோக்கத்துடன், பயணிகளுக்கு எளிதான, சீரான அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த பேக்கேஜ் விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T12:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருங்கால கணவனை கொலை செய்த பெண் வழக்கு: இந்தியப் பிரதமருக்கு ஒரு கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ketan-agarwal-mother-letters-to-modi-for-justice-1784029266"></link>
            <id>https://news.lankasri.com/article/ketan-agarwal-mother-letters-to-modi-for-justice-1784029266</id>
            <summary type="text">இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், பெண்ணொருவர் தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கில், கொல்லப்பட்ட இளைஞரின் தாய் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், பெண்ணொருவர் தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கில், கொல்லப்பட்ட இளைஞரின் தாய் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
</p><h3>
வருங்கால கணவனை கொலை செய்த பெண்</h3><p>

மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேயைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் என்பவருக்கும், சியா கோயல் (20) என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1442703-1bbb-44f0-a4d4-37e22afea322/26-6a562053af3f8.webp' /></p><p>இந்நிலையில், தனது பிறந்தநாளைக் காரணம் காட்டி கேத்தனை கோட்டை ஒன்றிற்கு அழைத்துச் சென்ற சியா, தன் காதலனான சேத்தன் சௌத்ரி (22) என்பவருடைய உதவியுடன் அவரை பள்ளத்தில் தள்ளிக் கொலை செய்தார்.&nbsp;</p><p></p><h3>
பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள தாய்
</h3><p>
கேத்தனின் தாயாகிய ராக்கி அகர்வால், இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DaxBvo6iaLQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DaxBvo6iaLQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DaxBvo6iaLQ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Times Now (@timesnow)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
அந்தக் கடிதத்தில், எல்லா தாய்மார்களையும்போல, என் மகன் திருமணம் செய்துகொள்ளவேண்டும், அவன் குடும்பமாக வாழ்வதை பார்க்கவேண்டும் என்றுதான் நானும் விரும்பினேன்.
</p><p>
ஆனால், அவனுக்கு இறுதிச்சடங்கு செய்யும் நிலை எங்களுக்கு உருவாகிவிட்டது.
</p><p>
நாங்கள் உங்களிடம் சிறப்பு சலுகை எதையுமோ அல்லது எங்கள் மீது இரக்கம் காட்டவேண்டும் என்றோ கேட்கவில்லை. எங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் கேட்கிறேன்.
</p><p>
கேத்தனை திருப்பிக் கொண்டுவர முடியாது என்பது உண்மைதான். ஆனால், அவனது உயிரைப் பறித்தவர்களுக்கு சட்டப்படி கடும் தண்டனை வழங்கவேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15a81481-480c-4c0a-a136-fdb33d2af415/26-6a5620546024b.webp' /></p><p>மகனை இழந்த ஒரு தாயின் உங்களுக்குக் கேட்கும் என்று நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் கேத்தனின் தாய்.
</p><p>
அத்துடன், கேத்தன் இரந்த துயரம் தாங்காமல், அவரது தாத்தாவும் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், சில நாட்களுக்குள், இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த இரண்டு உயிர்களை பறிகொடுத்துவிட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், கேத்தனின் தந்தையான விஷால் அகர்வால், தன் மகனுடைய மரணத்துக்கு நீதி கேட்டு ஏற்கனவே ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:41:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா ஏவிய 5 பாலிஸ்டிக் ஏவுகணைகள்: உக்ரைனிய ராணுவம் காட்டிய அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kyiv-targeted-by-5-russian-ballistic-missiles-1784028977"></link>
            <id>https://news.lankasri.com/article/kyiv-targeted-by-5-russian-ballistic-missiles-1784028977</id>
            <summary type="text">ரஷ்யா ஏவிய 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்&amp;nbsp;உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா ஏவிய 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.</p><h2>உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்</h2><p>&nbsp;உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்யா ஏவிய 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைனிய விமானப்படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.</p><p> இருப்பினும் சில ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனிய படைகளின் வான் பாதுகாப்பு வளையத்தை தாண்டி விழுந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> ரஷ்ய நடத்திய இந்த திடீர் தாக்குதலில், தலைநகரில் உள்ள இரண்டு கிடங்குகள் தீப்பிடித்துள்ளது மற்றும் பள்ளி கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது என அந்நகர மேயர் கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7cb53f6-aeab-4b68-968c-3ea5a880447e/26-6a561f32aa00f.webp' /></p><p> மேலும் இந்த தாக்குதலானது உக்ரைனிய படைகளின் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தயாரிக்கும் ராணுவ உற்பத்தி ஆலையை குறிவைத்து நடத்தப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>ட்ரோன்களை விட பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீழ்த்துவது சவாலான நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் முதல்முறையாக பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக வீழ்த்தி இருப்பதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> உக்ரைன் தெரிவித்துள்ள தகவலின் படி, 25 ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனின் 17 இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c1764f-3a89-4888-9d60-a1f34dd2ed94/26-6a561f335aa3f.webp' /></p><p> இதில் இடை மறிக்கப்பட்ட ஏவுகணை பாகங்கள் மட்டும் கிட்டத்தட்ட 10 இடங்களில் விழுந்துள்ளது.</p><p> ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக உக்ரைன் அமெரிக்காவின் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தும் நிலையில், அதன் தற்போதைய உலகளாவிய தேவைகளின் அதிகரிப்பால், உக்ரைனுக்கு வெடிமருந்து கிடைப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>இருப்பினும் குளிர்காலத்திற்கு முன்பாக உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதில் உக்ரைன் தீவிரம் காட்டி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:36:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் கடலில் மூழ்கிய குழந்தைகள்: காப்பாற்ற முயன்று உயிரிழந்த தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/father-die-in-rescue-attempt-in-seaton-carew-1784025751"></link>
            <id>https://news.lankasri.com/article/father-die-in-rescue-attempt-in-seaton-carew-1784025751</id>
            <summary type="text">பிரித்தானிய கடற்கரையில் குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தந்தை மற்றும் அந்நிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் மூழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய கடற்கரையில் குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தந்தை மற்றும் அந்நிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> கடலில் மூழ்கிய குழந்தைகள்</h2><p>
ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் சீட்டன் கேரு(Seaton Carew) கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென உருவான பெரிய அலையில் சிக்கி ஆபத்தான நிலைக்கு இழுத்து செல்லப்பட்டனர்.</p><p> பிற்பகல் 3.45 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, கடற்கரையில் இருந்த குழந்தைகளின் தந்தை மற்றும் அந்நிய நபர்கள் 3 பேர் உடனடியாக கடலுக்குள் இறங்கி குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.</p><p> இறுதியில் கடலில் சிக்கிய இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.</p><p></p><p> அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாத நிலையிலும், முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b01fd79-1a46-4504-aeaf-bc497b19fabd/26-6a561298b446b.webp' /></p><h2> தந்தை உயிரிழப்பு</h2><p>
இந்த சம்பவத்தில் குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தந்தை வெய்ன் டெய்லர் மற்றும் பெயர் தெரியாத மற்றொரு நபர் நீரில் மூழ்கி துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர்.</p><p> சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த RNLI மீட்பு குழுவினர் இருவரையும் மீட்ட நிலையிலும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை என அறிவித்துள்ளனர்.</p><p> குழந்தைகளை காப்பாற்ற முயன்று உயிரிழந்த இரண்டாவது நபர், கடற்கரைக்கு தன்னுடைய செல்லப்பிராணியுடன் நடைபயிற்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-14T10:42:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது: வீட்டில் கண்ட அதிரவைத்த காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ex-mp-inky-mark-charged-for-firearms-trafficking-1784022657"></link>
            <id>https://news.lankasri.com/article/ex-mp-inky-mark-charged-for-firearms-trafficking-1784022657</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீட்டில் பொலிசார் நடத்திய சோதனையின்போது, நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் முதலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீட்டில் பொலிசார் நடத்திய சோதனையின்போது, நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் முதலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><h3>
பொலிசார் கண்ட அதிரவைத்த காட்சி
</h3><p>
மனித்தோபாவில் பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, கடைசியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் இங்கி மார்க் (78).&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/403d2e4c-451a-41ce-bc89-1da9b01e41c8/26-6a56068300251.webp' /></p><p>

இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 7ஆம் திகதி, மார்க் வீட்டில் பொலிசார் சோதனை மேற்கொண்டனர்.&nbsp;</p><p>
அப்போது, அவர் வீட்டில் நூற்றுக்கணக்கான துப்பாக்கி முதலான ஆயுதங்கள் இருப்பதும், அவை முறைப்படி பாதுகாப்பாக வைக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அவற்றில் சில, கடத்தப்பட்டவை என பொலிசார் கருதுகிறார்கள்.
</p><p>
அத்துடன், மார்க் வீட்டிலிருந்து துப்பாக்கி குண்டுகளும், 300,000 டொலர்கள் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>

மார்க் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது ஆயுதக் கடத்தல் முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
அவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், ஆகத்து மாதம் 11ஆம் திகதி, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:51:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எகிப்து உலகக் கோப்பை அணிக்கு 59 SUV கார்களை பரிசளிக்கும் UAE தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uae-billionaire-gifts-59-cars-to-egypt-team-1784022664"></link>
            <id>https://news.lankasri.com/article/uae-billionaire-gifts-59-cars-to-egypt-team-1784022664</id>
            <summary type="text">உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியை கிட்டத்தட்ட தோற்கடித்த எகிப்து அணிக்கு UAE தொழிலதிபர் ஒருவர் SUV கார்களை பரிசாக அறிவித்துள்ளார்.

59 Mi...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியை கிட்டத்தட்ட தோற்கடித்த எகிப்து அணிக்கு UAE தொழிலதிபர் ஒருவர் SUV கார்களை பரிசாக அறிவித்துள்ளார்.
</p><h2>
59 Mitsubishi SUV</h2><p>

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரபல தொழிலதிபர் கலாஃப் அல் ஹப்தூர் (Khalaf Al Habtoor), எகிப்து உலகக் கோப்பை கால்பந்து அணிக்கும் அவர்களின் ஆதரவு குழுவினருக்கும் மொத்தம் 59 Mitsubishi SUV கார்கள் பரிசளிக்க உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52599292-69c4-40b9-b18d-2e6a29d5eef2/26-6a560689d74b3.webp' /></p><p>
</p><h2>
வரலாற்றில் முதன்முறை
</h2><p>
எகிப்து அணி, உலகக் கோப்பை போட்டிகளில் வரலாற்றில் முதன்முறையாக Round-Off 16 சுற்றுக்கு முன்னேறியது.</p><p> இறுதியில் அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தாலும், அவர்களின் வீரத்தையும் உறுதியையும் உலகம் முழுவதும் பாராட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afba2475-4c62-4b1d-a1fd-2abdf26e209c/26-6a56068a8e36b.webp' /></p><h2>

அன்பும் நன்றியும்</h2><p>

எகிப்தின் மகிழ்ச்சி இன்று அனைத்து அரபு மக்களின் மகிழ்ச்சி என்றும், அதனால் எகிப்தின் வீரர்களுக்கு அன்பையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக இந்த பரிசை வழங்குவதாக அல் ஹப்தூர் குழுமத்தின் தலைவர் கலாஃப் அல் ஹப்தூர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>

வீரர்கள் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப, நிர்வாக மற்றும் மருத்துவ குழுவினருக்கும் கார்கள் வழங்கப்பட உள்ளன.</p><p></p><p>
</p><h2>
Order of Merit விருது</h2><p>

அணி எகிப்து திரும்பியபோது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்று கொடியசைத்து, வீரர்களின் பெயர்களை முழங்கினர். </p><p>எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தாஹ் எல் சிசி, அணியினருக்கு ‘Order of Merit’ விருதையும் வழங்கினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-14T09:49:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் விமானத்திலிருந்து வெளியே இழுக்கப்பட இருந்த நபர்: காப்பாற்றிய மனைவி இவர்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wife-saved-husband-in-flight-window-break-1784022165"></link>
            <id>https://news.lankasri.com/article/wife-saved-husband-in-flight-window-break-1784022165</id>
            <summary type="text">நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் ஜன்னல் கண்ணாடி திடீரென உடைய, பயணி ஒருவர் விமானத்திலிருந்து வெளியே இழுக்கப்பட இருந்த சம்பவம் பெரும் பரபரப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் ஜன்னல் கண்ணாடி திடீரென உடைய, பயணி ஒருவர் விமானத்திலிருந்து வெளியே இழுக்கப்பட இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம்.
</p><p>
அந்த பயணி மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்கள் முதலான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
</p><h3>
நடுவானில் நிகழ்ந்த பயங்கரம்...
</h3><p>
கடந்த வெள்ளிக்கிழமை காலை 5.55 மணிக்கு, கிரீஸ் நாட்டிலிருந்து RYANAIR விமானம் ஒன்று ஜேர்மனி நோக்கிப் புறப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54f18324-f6d1-4f85-b227-9924d2e609bc/26-6a5604980efc8.webp' /></p><p>
விமானம் உயர எழுந்து 20,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென டமார் என பயங்கர சத்தம் ஒன்று கேட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
அதாவது, அந்த விமானத்தின் எஞ்சினிலிருந்து ஒரு துண்டு உடைந்து வந்து ஜன்னல் கண்ணாடியில் மோத, ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்க, திடீரென ஜன்னல் திறந்ததால் ஏற்பட்ட அழுத்தக்குறைவு காரணமாக, ஜன்னல் அருகே உட்கார்ந்திருந்த பயணி ஒருவர், ஜன்னல் வழியாக வெளியே இழுக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28f1cfed-74e9-4eb5-81d7-aaf41f38c097/26-6a56049758e89.webp' /></p><p>

உடனே அவரது மனைவி அவரை இரு கைகளாலும் இறுக அணைத்துப் பிடித்துக்கொண்டுள்ளார். அருகிலிருந்த சிலரும் அவரைப் பிடித்துக்கொள்ள, அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததாலும் அவர்கள் அவரை பிடித்துக்கொண்டதாலும் உயிர் தப்பினார் அந்தப் பயணி.
</p><h3>
அவர்கள் இவர்கள்தான்...
</h3><p>
தற்போது, அந்த பயணி மற்றும் அவரைக் காப்பாற்றிய அவரது மனைவி தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அந்தப் பயணியின் பெயர் Ljubiša Karović (61) அவரது உயிரைக் காப்பாற்றிய அவரது மனைவியின் பெயர் Svetlana Grković. அவர்கள் இருவரும் செர்பியா நாட்டவர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/accbb8d5-be1a-44e8-be68-2d2e4b7c3ae0/26-6a560496a7c22.webp' /></p><p>
அந்த நெரத்தில், இறந்தால் இருவரும் சேர்ந்தே இறப்போம் என்னும் எண்ணம் மட்டும்தான் எனக்கு இருந்தது என்று கூறும் ஸ்வெட்லானா, அது ஒரு பயங்கர அனுபவம் என்கிறார்.
</p><p>
இதற்கிடையில், தன் கணவரான Ljubišaவுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அதிர்ச்சியில் இருப்பதாகவும், அவரால் பேச முடியவில்லை என்றும் கூறும் ஸ்வெட்லானா, அவருக்கு நடந்தது முழுமையாக நினைவில்லை என்றும் கூறுகிறார்.</p><p>

அத்துடன், தான் தன் கணவரைப் பிடித்துக்கொண்டபோது, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கூட தன் கணவரின் கால்களைப் பிடித்துக்கொண்டதாகவும், அவர்களுக்கு தான் நன்றி சொல்ல விரும்புவதாகவும் தெரிவிக்கிறார் ஸ்வெட்லானா.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:42:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயிற்சியின் போது பேசுவதை தவிர்த்த கோலி - கம்பீர்; தொடரும் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kohli-gambhir-avoid-interaction-in-england-1784021528"></link>
            <id>https://news.lankasri.com/article/kohli-gambhir-avoid-interaction-in-england-1784021528</id>
            <summary type="text">பயிற்சியின் போது விராட் கோலி மற்றும் கம்பீர் பேசிக்கொள்வதை தவிர்த்துள்ளனர். 

இங்கிலாந்து தொடர் 

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயிற்சியின் போது விராட் கோலி மற்றும் கம்பீர் பேசிக்கொள்வதை தவிர்த்துள்ளனர். </p><h3>

இங்கிலாந்து தொடர் </h3><p>

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 T20 மற்றும் 3 ODI போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. </p><p>

கடைசியாக ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய கோலி, தொடை தசைநார் காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3696ac37-6c06-4bf7-831e-6ded0123d58d/26-6a56021be0060.webp' /></p><p>

இன்று பர்மிங்காமில் நடைபெற உள்ள முதல் ODI போட்டியில் களமிறங்க உள்ள விராட் கோலி மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். </p><h3> 

பேசுவதை தவிர்த்த கோலி - கம்பீர்
</h3><p>
ஆனால், விராட் கோலி மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் இடையே தற்போதும் சுமூகமான உறவு இல்லை என கூறப்படுகிறது.&nbsp;</p><p>

இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்சி அமர்வில் கோலியும், கம்பீரும் பேசுவதை தவிர்த்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3e6fc25-3789-4ed7-b86c-a25f0b12ec2f/26-6a560219dc302.webp' /></p><p> 

மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோருடன் உரையாடிய கம்பீர் விராட் கோலியுடன் பேசவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e01b620-2f7c-49a8-9c12-79a63e8e5eb2/26-6a56021b3dcb6.webp' /></p><p> 

இதே போல், துடுப்பாட்ட பயிற்சியாளரான சிதான்ஷு கோடக், கோலி மற்றும் கம்பீர் ஆகிய இருவரிடமும் தனித்தனியாகப் பேசியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

விராட் கோலி மற்றும் கம்பீர் இடையே நீண்டகாலமாக சுமூகமான உறவு இல்லை. ஐபிஎல் போட்டியின் போது நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். </p><p>

நியூசிலாந்து தொடரின் போது கூட இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர். ஆனால் எந்த மோதலும் இல்லை என பிசிசிஐ விளக்கம் அளித்தது.&nbsp;</p><p>
2027 உலக கிண்ணத்தில் எந்த வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டும் என்பது குறித்து விராட் கோலியுடன் விவாதித்ததாக ஷுப்மன் கில் தெரிவித்தார்.</p><p> 

இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீதான விமர்சனமும் அதிகரித்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/988ea4eb-b5fe-4629-9831-2c9e96bbc9c1/26-6a56021a8ce03.webp' /></p><p>இந்த போட்டி 

வரவிருக்கும் 2027 ஒருநாள் உலகக்கிண்ண தயாரிப்புகளுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாக இருப்பதால், கம்பீருக்கு இது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
</p><p>
கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற மூத்த வீரர்கள் அணிக்குத் திரும்பிய போதிலும், சிறப்பாகச் செயல்படத் தவறினால், கம்பீர் தலைமையிலான நிர்வாகம் மேலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:32:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை முற்றுகையிட்டது தவறு., அமெரிக்காவின் செயலுக்கு சீனா எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-condemns-for-us-action-in-hormuz-1784020407"></link>
            <id>https://news.lankasri.com/article/china-condemns-for-us-action-in-hormuz-1784020407</id>
            <summary type="text">ஈரான் கடற்படைக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை சீனா கண்டித்துள்ளது. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்...</summary>
            <content type="html"><![CDATA[<h3>ஈரான் கடற்படைக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை சீனா கண்டித்துள்ளது.</h3><h2> மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்</h2><p>
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து அதற்கு பதிலடியாக அமெரிக்க படைகள் ஈரானிய இராணுவ இருப்புகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது.</p><p> அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளை குறிவைத்து ஈரானும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குரலை முன்னெடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e7f6067-b5e1-486f-ba8a-bf056292cb1d/26-6a55fdb8b3b2a.webp' /></p><p></p><h4> அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு</h4><p>இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜுயான் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p> மீண்டும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க படைகளின் கடற்படை முற்றுகை நடவடிக்கையை சீனா எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லின், அமெரிக்கா - ஈரான் ஆகிய இரண்டு நாடுகள் இடையிலும் மீண்டும் ஆயுத மோதல் தொடங்கி இருப்பது கவலையையும், அக்கறையையும் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர முயற்சிகள் மூலம் இருதரப்பும் தீர்வு காண வேண்டும் என்றும் லின் வலியுறுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:14:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் வேகமாக பரவும் Cyclosporiasis: 31 மாகாணங்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cyclosporiasis-spread-across-31-usa-states-1784019160"></link>
            <id>https://news.lankasri.com/article/cyclosporiasis-spread-across-31-usa-states-1784019160</id>
            <summary type="text">சைக்ளோஸ்போரியாசிஸ் என்ற ஒட்டுண்ணித் தொற்றுப் பரவல் அமெரிக்காவில் 31 மாநிலங்களுக்கு பரவியுள்ளது. அமெரிக்காவில் பரவும் சைக்ளோஸ்போரியாசிஸ்சைக்ளோஸ்போரியாச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சைக்ளோஸ்போரியாசிஸ் என்ற ஒட்டுண்ணித் தொற்றுப் பரவல் அமெரிக்காவில் 31 மாநிலங்களுக்கு பரவியுள்ளது.</p><h2> அமெரிக்காவில் பரவும் சைக்ளோஸ்போரியாசிஸ்</h2><p>சைக்ளோஸ்போரியாசிஸ்(Cyclosporiasis) என்ற கடுமையான குடல் சார்ந்த பாக்டீரியா ஒட்டுண்ணித் தொற்றானது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.</p><p> கிட்டத்தட்ட 31 மாகாணங்களில் இந்த தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3000 பேர் இந்த ஒட்டுண்ணி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e14cc58-4cea-49a4-8f89-c5ebaf5acf76/26-6a55f8d95e9e5.webp' /></p><p> இதில் 86 பேர் கடுமையான பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2> சைக்ளோஸ்போரியாசிஸ் என்பது என்ன?</h2><p>
சைக்ளோஸ்போரியாசிஸ் என்ற நுண்ணிய ஒட்டுண்ணியால் உணவுகள் வழியாக பரவக் கூடிய நோயாகும்.</p><p></p><p> இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான சோர்வு, உடல் வலி, வயிற்றுப் பிடிப்பு, வாயு தொல்லை, காய்ச்சல், பசியின்மை மற்றும் குமட்டல் ஆகியவற்றால் அறிகுறிகளாக தென்படும்.</p><p> பொதுவாக அசுத்தமான உணவு பொருட்களை சாப்பிடும் போது ஒட்டுண்ணி பரவலானது ஏற்படும். ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகு தான் இதற்கான அறிகுறியை வெளிப்படுத்தும்.</p><h2>பரவுவது எப்படி?</h2><p>இது மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு நேரடியாக சுவாச வழி பாதை வழியாகவோ அல்லது தொடுதல் மூலமாகவோ பரவாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c906563d-c2cd-4283-9b5a-dfcbb4988504/26-6a55f8da115f5.webp' /></p><p> அசுத்தமான காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றின் மேல்புறத்தில் சைக்ளோஸ்போரியாசிஸ் ஒட்டுண்ணி ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையில்&nbsp; அதை உட்கொள்ளும் போது தொற்றானது பரவுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T08:52:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trumps-20-pct-hormuz-fee-shakes-global-oil-trade-1784017905"></link>
            <id>https://news.lankasri.com/article/trumps-20-pct-hormuz-fee-shakes-global-oil-trade-1784017905</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 20 சதவீதம் &#039;பாதுகாப்புக் கட்டணம்&#039; விதிக்கப்படும் என அறிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 20 சதவீதம் 'பாதுகாப்புக் கட்டணம்' விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.</p><p>உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாக விளங்கும் இந்த நீரிணை, தினசரி சுமார் 21 மில்லியன் பீப்பாய் எண்ணெய் எடுத்துச்செல்லப்படும் இடமாகும்.</p><p></p><h2>ஆசிய நாடுகள் அதிக&nbsp;பாதிப்பு</h2><p>இந்த புதிய கட்டணம், உலகளாவிய எண்ணெய் விலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன.

குறிப்பாக, இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் அதிக அளவில் ஹார்முஸ் வழியாக எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. இதனால், அவர்களின் எண்ணெய் செலவுகள் 15-20 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff957f63-f382-48d9-8680-37c2c68ca298/26-6a55f3f9a340b.webp' /></p><p>“அமெரிக்கா ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. அதற்கான செலவை உலகம் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் ஈரான் மீது அழுத்தம் கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.</p><h2>

இந்தியாவிற்கு பாதிப்பு</h2><p>இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு மட்டும் ஆண்டுக்கு 10 பில்லியன் டொலர் வரை கூடும் என மதிப்பிடப்படுகிறது. இதனால், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
</p><p></p><p>உலகளாவிய வர்த்தக வல்லுநர்கள், இந்த கட்டணம் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை உயர்த்தும் என்றும், பல நாடுகளின் பொருளாதாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.
</p><p>
ஹார்முஸ் நீரிணை, உலகின் முக்கியமான எரிசக்தி நரம்பு எனக் கருதப்படுகிறது. அதில் அமெரிக்காவின் புதிய நடவடிக்கை, உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T08:50:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் காட்டுத்தீ... சதிவேலையா? இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-arrested-for-france-fontainebleau-wild-fire-1784016282"></link>
            <id>https://news.lankasri.com/article/2-arrested-for-france-fontainebleau-wild-fire-1784016282</id>
            <summary type="text">பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு அருகே அமைந்துள்ள காடு ஒன்றில் காட்டுத்தீ வேகமாக பரவிவரும் நிலையில், அது சதிவேலையாக இருக்கலாம் என்னும் கோணத்தில் அதிகாரிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு அருகே அமைந்துள்ள காடு ஒன்றில் காட்டுத்தீ வேகமாக பரவிவரும் நிலையில், அது சதிவேலையாக இருக்கலாம் என்னும் கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
</p><h3>
பிரான்ஸ் காட்டுத்தீ...
</h3><p>
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ, சுமார் 1,200 ஹெக்டேர் காட்டை கபளீகரம் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7b8d7e9-2b06-4973-8712-2cb044c6f824/26-6a55ed9c19af0.webp' /></p><p>
காட்டுத்தீ தொடர்ந்து பரவிவரும் நிலையில், 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
</p><p>
கடுமையான வெப்பமும் காற்றும் தீயை அணைப்பதற்கு சவாலாக அமைந்துள்ள நிலையில், புதிதாக ஒரு இடத்திலும் தீப்பற்றியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p>
காட்டுத்தீயைத் தொடர்ந்து, பாரீஸை தெற்கு பிரான்சுடன் இணைக்கும் நெடுஞ்சாலை, புகை காரணமாக மூடப்பட்டுள்ளது.
</p><h3>
சதிவேலையா?
</h3><p>
இதற்கிடையில், இந்த காட்டுத்தீ சதிவேலையாக இருக்கலாம் என்னும் கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில், சந்தேகத்துக்கிடமான இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T08:05:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு தம்பதிக்கு ஜேர்மனியில் சிறை: பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iraq-couple-sentenced-for-enslaving-yazidi-girls-1784015857"></link>
            <id>https://news.lankasri.com/article/iraq-couple-sentenced-for-enslaving-yazidi-girls-1784015857</id>
            <summary type="text">யாஸிடிகள் என்னும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஈராக் நாட்டவர்களான ஒரு தம்பதிக்கு ஜேர்மனியில் சிறைத்தண்டனை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாஸிடிகள் என்னும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஈராக் நாட்டவர்களான ஒரு தம்பதிக்கு ஜேர்மனியில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த தம்பதி</h3><p>

2015க்கும் 2017க்கும் இடையில் ஐ எஸ் அமைப்பு, யாஸிடிகள் என்னும் சிறுபான்மை இனத்தவரை இனப்படுகொலை செய்தபோது, ஈராக் நாட்டவர்களான ட்வானா (Twana H.S.) மற்றும் ஆசியா (Asia R.A.) என்னும் தம்பதியர், யாஸிடி இனத்தவர்களான 5 மற்றும் 12 வயதுள்ள இரண்டு சிறுமிகளை அடிமைகளாக வாங்கியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a47d9dd-7f97-40dd-a627-c18a3d686630/26-6a55ebf29ff32.webp' /></p><p>

அந்த தம்பதியர் அந்த பிள்ளைகளை கடினமாக வேலை வாங்கியதுடன், சித்திரவதையும் செய்த நிலையில், ட்வானா அந்தச் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ய, கணவருக்கு உதவியாக செயல்பட்டுள்ளார் ஆசியா.&nbsp;</p><p>
2024ஆம் ஆண்டு ட்வானா, ஆசியா தம்பதியர் பவேரியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனித இனத்துக்கெதிரான குற்றங்கள் மற்றும் சிறுபிள்ளைகளை சீரழித்தல், அதற்கு உதவுதல் ஆகிய விடயங்களில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
அதைத் தொடர்ந்து, ட்வானாவுக்கு ஆயுள் தண்டனையும், ஆசியாவுக்கு ஒன்பதரை ஆண்டுகள் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்படும் வகையில் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குற்றச்செயலில் ஈடுபடும்போது ஆசியா 20 வயதுக்குக் குறைவானவராக இருந்ததால் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T07:57:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஐடியில் ஒரே மேடையில் மகன் உடன் பட்டம் பெற்ற 42 வயது தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mother-45-son-21-graduate-together-at-iit-madras-1784015498"></link>
            <id>https://news.lankasri.com/article/mother-45-son-21-graduate-together-at-iit-madras-1784015498</id>
            <summary type="text">22 வயது மகனுடன் 42 வயது தாய் ஐஐடியில் ஒரே மேடையில் பட்டம் பெற்று கற்றலுக்கு வயது தடையில்லை என நிரூபித்துள்ளார்.

ஐஐடியில் ஒரே மேடையில் பட்டம் பெற்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 வயது மகனுடன் 42 வயது தாய் ஐஐடியில் ஒரே மேடையில் பட்டம் பெற்று கற்றலுக்கு வயது தடையில்லை என நிரூபித்துள்ளார்.
</p><h3>
ஐஐடியில் ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய் மகன்</h3><p>குஜராத்தை சேர்ந்த ஜிகிஷா டெய்லர், அங்குள்ள பொறியியல் கல்லூரியில் 16 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிவிட்டு, குடும்ப சூழ்நிலை காரணமாக 2019 ஆம் ஆண்டில் வேலையை விட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900a4440-7bb4-4a96-a6c4-a7b39ea97ab0/26-6a55ea8ba5ce2.webp' /></p><p>

அப்போது கோரோனோ காலகட்டம் என்பதால் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் இணையவழி பட்டப்டிப்பை வழங்க தொடங்கியது. </p><p>

அப்போது ஜிகிஷா டெய்லரின் மூத்த மகனான ஆதித்யா கபாடியா தனது 18 வது வயதில் சென்னை ஐ.ஐ.டி.யின் ஆன்லைன் தரவு அறிவியல் (Data Science) படிப்பில் சேர்ந்துள்ளார். </p><p>

மகன் படிக்கும் பாடங்களை கவனித்த ஜிகிஷாவுக்கு அந்தப் படிப்பின் மீது ஆர்வம் ஏற்பட, 2022 ஆம் ஆண்டில் அவரும் அதே படிப்பில் சேர்ந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து, காலை ஏழு மணிக்குள் படிப்பை முடித்துவிட்டு, அதன்பின் வீட்டு வேலைகளை பார்ப்பார். மதியத்திற்கு மேல் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்துவார்.
</p><p>
சென்னை ஐ.ஐ.டி. நடத்திய நேரலை சந்தேக நிவர்த்தி வகுப்புகள், மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் அவருக்கு பெரிய ஆதரவாக இருந்துள்ளது. </p><p>

இந்த வயதில் ஏன் படிக்கிறாய்? வேலைக்குப் போக வேண்டுமா?" என்று பலரும் கேட்டபோதும், அவரது கணவர் மாமியார், மாமனார் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.</p><h2>தாய்- மகனுக்கு இடையே போட்டி</h2><p> </p><p>

யார் 'S' Grade பெறுவது? யார் 'A' Grade வாங்குவது? என மகன் மற்றும் தாய் போட்டி போட்டு படித்துள்ளனர். மகன் மற்றும் தாய் ஒரே படத்தை படிக்கும் போது ஒருவருக்கொருவர் உதவி சந்தேகங்களை நிவர்த்தி செய்துள்ளனர். </p><p>

சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 21 வயது மகனும் 45 வயது தாயும் ஒரே மேடையில் பட்டம் பெற்றுள்ளனர். </p><p>

2024 ஆம் ஆண்டில் பட்டத்தை முடித்த ஆதித்யா, Syngenta நிறுவனத்தில் டேட்டா சயின்ஸ் பயிற்சியாளராக பணியாற்றி, பின்னர் வேலையில் சேர்ந்துள்ளார்.</p><p>

ஜிகிஷா பட்டம் பெற்றுவிட்டாலும், தற்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் இளைய மகனின் கல்வியில் கவனம் செலுத்துவதற்காக வேலை தேடுவதை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். </p><p>

எதிர்காலத்தில் மீண்டும் கற்பித்தல் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ள ஜிகிஷா "இப்போது எனக்கு புதிய கல்விப் பின்னணி கிடைத்துள்ளது. அதனால் முன்பைவிட இன்னும் சிறப்பாக கற்பிக்க முடியும் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
</p><p>
இது குறித்து பேசிய ஆதித்யா, "அம்மா எப்படி கடினமாக உழைத்தார் என்பதைப் பார்த்து நானும் ஊக்கமடைந்தேன். எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கும் என் அம்மாவின் இன்னொரு முகத்தை நான் பார்த்தேன்," என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T07:51:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருவர் Savings Accountல் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/what-is-saving-account-and-mastering-your-finance-1784014157"></link>
            <id>https://news.lankasri.com/article/what-is-saving-account-and-mastering-your-finance-1784014157</id>
            <summary type="text">உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்ற பொதுவான குழப்பமானது நம்மில் அனைவருக்கும் இருக்கும்.
அப்படி இருக்கையில் பணவீக்கம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்ற பொதுவான குழப்பமானது நம்மில் அனைவருக்கும் இருக்கும்.
அப்படி இருக்கையில் பணவீக்கம் மற்றும் எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் சவால்களை சமாளிக்க சரியான சேமிப்பு திட்டம் உங்களுக்கு அவசியமான ஒன்றாக மாறுகிறது.</p><h2> சேமிப்பு கணக்கு ஏன் அவசியமானது?</h2><p>
சேமிப்பு கணக்கு உங்களின் தினசரி செலவுகள் மற்றும் நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் திட்டத்திற்கு பாலமாக செயல்படுகிறது.</p><p>சேமிப்பு கணக்குகள் மூலம் அவசர காலங்களில் உங்களின் பணத்தை உடனடியாக எடுத்து பயன்படுத்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa9be963-914c-48ae-9c52-08ed990fe710/26-6a55e54f7e576.webp' /></p><p>கையில் ரொக்கமாக பணத்தை வைத்திருப்பதுடன் வங்கி கணக்கில் செலுத்துவதன் மூலம் வங்கி நமது பணத்திற்கான வட்டியை வழங்குகிறது.</p><p> சேமிப்பு கணக்குகள் நமது வருமானத்தை பெறவும், மாதாந்திர செலவு கட்டணங்களை நிர்வகிக்கவும் உதவுகிறது.</p><p></p><h2> சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும்?</h2><p>பொருளாதார வல்லுநர்களின் அறிவுறுத்தலின் படி, உங்கள் வருமானத்தின் ஒன்று முதல் இரண்டு மடங்கு தொகையை சேமிப்பு கணக்கில் வைத்திருப்பது போதுமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.</p><p> இதனுடன் அவசர தேவைகளுக்கு சிறிய தொகையை வைத்துக் கொள்ளலாம்.</p><h2> வருமானத்தை நிர்வகிப்பது எப்படி?</h2><p>வருமானத்தை 50/30/20 என்ற விகிதத்தில் பிரிப்பது பண நிர்வாகத்திற்கு உதவியாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91974661-c9c5-4817-b41b-1b2ccd27f9ea/26-6a55e54ecc17b.webp' /></p><p> வருமானத்தில் 50 சதவீதம் வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், மளிகைச் சாமான்கள், காப்பீடு போன்ற செலவுகளுக்கு ஒதுக்கலாம்.</p><p> வருமானத்தில் 50 சதவீதம் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்கு அதாவது ஹோட்டலில் உணவருந்தது, பொழுதுபோக்கு மற்றும் பயணம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம்.</p><p> வருமானத்தில் 20 சதவீதம் நிச்சயம் சேமிப்பு மற்றும் எதிர்கால இலக்குகளுக்கு ஒதுக்க வேண்டும்.</p><h2> சேமிப்பு கணக்கில் ஏன் அதிக பணம் வைத்திருக்க கூடாது?</h2><p>சேமிப்பு கணக்கில் நீங்கள் அதிக பணத்தை வைத்திருக்கும் போது, உங்களது வருமானத்தை சரியான முறையில் முதலீடு செய்வது அதிக லாபம் தரும்.</p><p> மேலும் சேமிப்பு கணக்கின் வட்டி விகிதத்தை விட பணவீக்கம் அதிகமாக இருப்பதால் உங்கள் பணத்தின் மதிப்பு காலப்போக்கில் குறையலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T07:29:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா-சுவிட்சர்லாந்து புதிய ஒப்பந்தம்: ரோமிங் கட்டணங்கள் நீக்கம், e-gates வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-swiss-deal-ends-roaming-adds-airport-e-gates-1784013469"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-swiss-deal-ends-roaming-adds-airport-e-gates-1784013469</id>
            <summary type="text">பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.e-gates வசதிஇந்த ஒப்பந்தத்தின் மூலம் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.</p><h2>e-gates வசதி</h2><p>இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரித்தானிய குடிமக்கள் சுவிட்சர்லாந்து விமான நிலையங்களில் e-gates பயன்படுத்தி விரைவாகச் செல்லும் வசதி பெறுகின்றனர்.</p><p>முதலில் சூரிக் விமான நிலையத்தில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது. பின்னர் ஜெனீவா மற்றும் பாசல் விமான நிலையங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6be0a942-549d-4eca-b630-f1977776a748/26-6a55e29f08b6d.webp' /></p><h2>ரோமிங் கட்டணங்கள் நீக்கம்</h2><p>இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, மொபைல் ரோமிங் கட்டணங்கள் முழுமையாக நீக்கப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் தொழில்முனைவோர் சுவிட்சர்லாந்தில் தங்கள் மொபைல் போன்களை கூடுதல் செலவில்லாமல் பயன்படுத்த முடியும்.</p><p>பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த ஒப்பந்தத்தை தனது ஆட்சிக் காலத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அவர் கூறியதாவது: “இந்த ஒப்பந்தம் தொழில்முனைவோருக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் வாழ்க்கையை எளிதாக்கும். மேலும், பிரித்தானிய நிறுவனங்கள் தங்கள் சேவைகளை சுவிட்சர்லாந்தில் எளிதாக வழங்கும் வாய்ப்பு கிடைக்கும்.”</p><p></p><h2>

வர்த்தகம் அதிகரிக்கும்</h2><p>இந்த ஒப்பந்தத்தின் மூலம், 5.2 பில்லியன் பவுண்டு மதிப்பிலான சேவைகள் வர்த்தகம் நீண்ட காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

சுவிட்சர்லாந்து, பிரித்தானியாவின் ஆறாவது பெரிய சேவை சந்தை ஆகும். ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பிரித்தானிய குடிமக்கள் சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்கின்றனர்.
</p><p>
மேலும், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், கட்டிடக் கலைஞர்கள் போன்ற தொழில்முனைவோர் 90 நாட்கள் வரை வேலை அனுமதி இல்லாமல் சேவைகளை வழங்கும் சலுகையும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளது.
</p><p>
இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதோடு, பயணிகளுக்கும் தொழில்முனைவோருக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T07:16:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் 6 கோடி ரூபாய் வேலையை உதறிய நபர்: இப்போது என்ன சொல்கிறார் பாருங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-man-quits-6-cr-content-creation-job-1784012152"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-man-quits-6-cr-content-creation-job-1784012152</id>
            <summary type="text">உலக அளவில் பிரபலமான ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கிடைக்கும் அதிக சம்பளம் தரும் ஒரு வேலை, பலருக்கும் கனவு.

ஆனால், தன் மனதுக்குப் பிடித்த பாதைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக அளவில் பிரபலமான ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கிடைக்கும் அதிக சம்பளம் தரும் ஒரு வேலை, பலருக்கும் கனவு.
</p><p>
ஆனால், தன் மனதுக்குப் பிடித்த பாதையை தொடர்வதற்காக அத்தகைய வேலை ஒன்றை உதறினார் மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர் ஒருவர்.
</p><p>
இந்நிலையில், தான் செய்ததிலேயே அதுதான் முட்டாள்தனமாக செயல் என்று கூறி இப்போது வருந்துகிறார் அவர்!
</p><h3>
6 கோடி ரூபாய் வேலையை உதறிய நபர்</h3><p>

சுவிட்சர்லாந்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு 200,000 டொலர்கள் சம்பாதிக்கும் வேலையில் இருந்தார் கிறிஸ்டியன் ஹார்ம்ஸ்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f89c845d-83f3-4942-a904-4bf17792dce6/26-6a55dd7a5a15e.webp' /></p><p>

200,000 டொலர்கள் என்பது, இலங்கை மதிப்பில் 6,74,84,720.00 ரூபாய் ஆகும்.
</p><p>
தனது 26ஆவது வயதில் மைக்ரோசாஃப்ட் வேலையை விட்டு விட்டு, உள்ளடக்க உருவாக்கத் துறையில் (content creation) தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார் ஹார்ம்ஸ்.
</p><p>
உள்ளடக்கத்தை உருவாக்குவது, பிராண்டுகளுடன் பணியாற்றுவது மற்றும் இணையத்தில் வாய்ப்புகளைக் கண்டறிவது ஆகியவற்றில் கவனம் செலுத்திய நிலையிலும், பல மாத திட்டமிடலும் பரிசோதனைகளும் ஹார்ம்ஸ் எதிர்பார்த்த முடிவுகளைக் கொடுக்கவில்லை.&nbsp;</p><p>
தான் மைக்ரோசாஃப்ட் வேலையை விடுவது தொடர்பில் எடுத்த முடிவைப் பற்றி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ள ஹார்ம்ஸ், அந்த வேலையில் கிடைத்த சம்பளம், நிலைத்தன்மை மற்றும் அடையாளம் முதலான விடயங்களை எண்ணும்போது, மைக்ரோசாஃப்ட்டை விட்டு வெளியேறியதுதான், தான் செய்ததிலேயே மிகவும் முட்டாள்தனமான செயலாக இருக்கக்கூடும் என்று தான் இப்போது கருதுவதாக தெரிவித்துள்ளார்.</p><p>

<blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DZsiiCmzY_Z/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DZsiiCmzY_Z/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DZsiiCmzY_Z/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Christian Harms | Quit Corporate &amp; UGC (@charmsescapes)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
விடயம் என்னவென்றால், அவர் பேசுவதைப் பார்க்கும்போது, தான் எடுத்த முடிவு சரியானதா இல்லையா என்பது அவருக்கே புரியவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.</p><p>
இதற்கிடையில், அவரது கதையைப் படித்த பலரும், அவரை உறசாகப்படுத்துவது போல் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஒருவர், நீ நிச்சயம் அதை அடைந்துவிடுவாய் சகோதரா என்று கூற, மற்றொருவரோ, எனக்கு இது துணிச்சலானதாகத் தெரிகிறது என்கிறார்.
</p><p>
மற்றொருவர், சில நேரங்களில் இதுபோன்ற விடயங்கள் கடினமாகத்தான் இருக்கும். இருந்தாலும், உங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றி நீங்கள் துணிந்து இறங்கியது பாராட்டுக்குரியது என்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:56:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்தநாளை வைத்து தேர்வு செய்த லொட்டரி எண் - ரூ.78 கோடி வென்ற இந்தியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-man-won-78-cr-in-lottery-by-birthdate-1784011557"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-man-won-78-cr-in-lottery-by-birthdate-1784011557</id>
            <summary type="text">பிறந்தநாளை வைத்து லொட்டரி எண் தேர்வு செய்த இந்தியர் ரூ.78 கோடி வென்றுள்ளார்.

ரூ.78 கோடி லொட்டரி 

கேரளாவைச் சேர்ந்த 52 வயதான, சுனில் குமார் சதாசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிறந்தநாளை வைத்து லொட்டரி எண் தேர்வு செய்த இந்தியர் ரூ.78 கோடி வென்றுள்ளார்.
</p><h3>
ரூ.78 கோடி லொட்டரி </h3><p>

கேரளாவைச் சேர்ந்த 52 வயதான, சுனில் குமார் சதாசிவன் அபுதாபியில் பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநரான பணியாற்றி வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/378374f9-1ac7-45c2-b87a-bb1149ff61b1/26-6a55db272487a.webp' /></p><p>

சமீபத்தில் தன்னுடன் லொட்டரி விளையாடத் தொடங்கிய ஒரு நண்பருடன் சேர்ந்து டிக்கெட் வாங்கியதில் அவர்களுக்கு 100 திர்ஹாம் கிடைத்தது.
</p><p>
அந்த வெற்றியால் கிடைத்த நம்பிக்கையில், அடுத்த குலுக்கலுக்காக மற்றொரு டிக்கெட்டை வாங்கி, 30 மில்லியன் திர்ஹாம்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.78 கோடி) ஜாக்பாட்டை வென்றுள்ளார். </p><h3>

பிறந்தநாள் எண் </h3><p>

அந்த லொட்டரி எண்ணை தேர்வு செய்தது குறித்து பேசிய சுனில் குமார், "எனக்கு மிகவும் முக்கியமான தேதிகளை ஏன் பயன்படுத்தக்கூடாது என்று நினைத்தேன். என் மகளின் பிறந்தநாளில் தொடங்கி, பிறகு என்னுடையதைச் சேர்த்து, பின்னர் என் மனைவியின் பிறந்தநாளைச் சேர்த்தேன்" என தெரிவித்தார்.
</p><p>
மேலும், "குலுக்கலுக்குப் பிறகு இரவு 9.45 மணியளவில் என் கைபேசியைப் பார்த்தேன். நான் ஒரு சிறிய பரிசை மட்டுமே எதிர்பார்த்திருந்தேன். வெற்றி எண்களைப் பார்த்தபோது, ​​நான் முழு அதிர்ச்சியில் உறைந்து போனேன்.&nbsp;</p><p></p><p>

நான் கண்டதை என்னால் நம்ப முடியவில்லை, அதனால் மனைவியை அழைப்பதற்கு முன் அந்த டிக்கெட்டை நண்பரிடம் காட்டினேன்.

என் மகளுக்குக் கல்வி கற்பித்து, அவள் ஒரு மருத்துவராவதைப் பார்ப்பதே எனது மிகப்பெரிய கனவு. </p><p>என் மனைவிக்கு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதே அவளுடைய விருப்பமாக எப்போதும் இருந்து வந்துள்ளது. நாங்கள் இந்தத் தொகையை வென்றபோது, ​​'நாம் என்ன செய்வோம்? என்று அவள் கேட்டாள். </p><p>

நாங்கள் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அதனால் மற்றவர்களுக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நம்புகிறோம்.

பணம் கையில் கிடைத்தவுடன், முதலில் என் மகளுக்குப் பரிசு வாங்கச் செல்வேன். வீட்டில் உள்ள பழுதுபார்க்கும் பணிகளை முடிக்க வேண்டும்.</p><p>

நான் சிறு வயதிலிருந்தே உழைத்து வருகிறேன். இப்போது, ​​நான் சிறிது ஓய்வெடுக்கப் போகிறேன். எனக்குத் தெரிந்த சிலருக்கு வீடுகள் இல்லை, அவர்களுக்காக நான் வீடுகளைக் கட்டிக் கொடுக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:46:56+00:00</updated>
        </entry>
    </feed>
