<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-06T23:28:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் சரடோவ் விமான நிலையத்தில் விமானங்கள் பறக்க தடை: அதிகரிக்கும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-saratov-airport-cancelled-flight-service-1786052217"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-saratov-airport-cancelled-flight-service-1786052217</id>
            <summary type="text">உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் காரணமான ரஷ்யாவின் சரடோவ்(saratov) விமான நிலையம் தற்காலிகமாக முடங்கியுள்ளது. விமானங்கள் பறக்க தடை
உக்ரைனின் தொடர்ச்சியான ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் காரணமான ரஷ்யாவின் சரடோவ்(saratov) விமான நிலையம் தற்காலிகமாக முடங்கியுள்ளது.</p><h2> விமானங்கள் பறக்க தடை</h2><p>
உக்ரைனின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக தென்மேற்கு ரஷ்யாவில் அமைந்துள்ள சரடோவ் விமான நிலையத்தில் விமான போக்குவரத்தை ரஷ்ய அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.</p><p>முன்னதாக ரோசவியாட்சியா (Rosaviatsiya) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d705fb6-0b83-49a6-8201-ba33f39c5d82/26-6a74fe7ad69b9.webp' /></p><p>கடந்த வாரம் சரடோவ் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.</p><p>]<br></p><p> அதே நேரத்தில் அருகில் இருந்த மூலோபாய விமான தளம் அமைந்துள்ள எங்கெல்ஸ் நகரமும் உக்ரைனிய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.</p><p> இந்நிலையில் ரஷ்யாவில் பல்வேறு இடங்களை குறிவைத்து மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் மீண்டும் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T21:37:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியாவை நோக்கி ஏவுகணைகளை ஏவிய வடகொரியா: அமெரிக்கா, ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/n-korea-fires-ballistic-missiles-seoul-confirms-1786050921"></link>
            <id>https://news.lankasri.com/article/n-korea-fires-ballistic-missiles-seoul-confirms-1786050921</id>
            <summary type="text">வடகொரியா தனது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஏவுகணைகளை ஏவிய வடகொரியா
வியாழக்கிழமை தென் கொரியாவின் கிழக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரியா தனது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.</p><h2> ஏவுகணைகளை ஏவிய வடகொரியா</h2><p>
வியாழக்கிழமை தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி வடகொரியா தனது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி இருப்பதாக தென் கொரியாவின் கூட்டு படைத் தளபதிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> வடகொரியாவின் வோன்சான் பகுதியில் இருந்து உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் இந்த ஏவுகணையானது ஏவப்பட்டதாக தென் கொரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/760f5a31-63b0-470d-bf57-a1c6e13452a4/26-6a74f96b257c5.webp' /></p><p> இதையடுத்து தென் கொரியா ராணுவம் ஏவுகணை தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.</p><p> அத்துடன் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நட்பு நாடுகளுடன் இதனை பகிர்ந்து, தென் கொரியா தன்னுடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறது.</p><p style="margin-left: 25px;"></p><h2> ஜப்பானின் எச்சரிக்கை</h2><p>இந்த ஏவுகணை ஏவுதலுக்கு முன்னதாக வட கொரியா ஏவுகணைகளை ஏவி இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.</p><p>ஆனால் இந்த ஏவுகணைகள் தங்களது பயணத்தை முடித்து கொண்டதாகவும், இதனால் ஜப்பானுக்கோ அல்லது அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கோ எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dac50d58-f5df-4f55-8654-f813916a8662/26-6a74f96bcbe32.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T21:15:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: சிறுவன் உட்பட இரண்டு பேர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-police-arrest-two-over-us-embassy-attack-1786047168"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-police-arrest-two-over-us-embassy-attack-1786047168</id>
            <summary type="text">டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்கடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2> அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்</h2><p>கடந்த ஜூலை 26ம் திகதி அதிகாலை 5 மணியளவில் டொராண்டா நகரின் மையப்பகுதியான யுனிவர்சிட்டி அவென்யூவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p> இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வெள்ளை நிற கார் ஒன்று அங்கிருந்து தப்பிச் செல்வதை தூதரக காவலர் கண்டுள்ளார்.</p><p> இதனையடுத்து தகவலறிந்து வெள்ளை நிற காரை துரத்திய பொலிஸார், ஒருகட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அந்த துரத்தலை கைவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dcbbf56-8d28-4c3e-96d3-3dc570078328/26-6a74eac1c2fb4.webp' />&nbsp;<br></p><h2> இரண்டு சந்தேக நபர்கள் கைது</h2><p>இந்நிலையில் அமெரிக்க தூதரகம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் இரண்டு பேரை&nbsp; டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை தலைவர் டெம்கிவ், இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 19 வயது ஜென்-உல்-அபிதீன் சையத் என்ற இளைஞர் ஒருவரும், பெயர் வெளியிடப்படாத 15 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் அவர்கள் மீது தீவைப்பு, ஆயுதச் சட்ட மீறல்கள், சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட நபர்களை குறிவைத்து தாக்குதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், காவல்துறையிடம் இருந்து தப்பித்தல் ஆகிய பல கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p> குற்றவாளிகளை பிடிப்பதில் எந்தவொரு சமரசமும் இருக்காது என்று அப்போதே தெரிவித்தேன் என காவல்துறை தலைவர் டெம்கிவ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> முதல் சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாவது நபர் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>இவர்கள் மறைக்கப்பட்ட செய்தியியல் செயலிகள்(Encrypted messaging apps) மூலம் இந்த தாக்குதல் நடத்த அவர்கள் கட்டளை பெற்று இருப்பதாகவும், இதற்கு மாறாக அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என்றும் டெம்கிவ் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-06T20:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் உளவு பார்த்த உக்ரைனியர் கைது: நாசவேலைக்கு திட்டமிட்டது அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukrainian-arrested-by-german-police-in-bavaria-1786042488"></link>
            <id>https://news.lankasri.com/article/ukrainian-arrested-by-german-police-in-bavaria-1786042488</id>
            <summary type="text">&amp;nbsp;உளவு பார்த்த குற்றச்சாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜேர்மனியில் உளவு பார்த்த உக்ரைனியர் கைது
ஜேர்மனியின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உளவு பார்த்த குற்றச்சாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>ஜேர்மனியில் உளவு பார்த்த உக்ரைனியர் கைது</h2><p>
ஜேர்மனியின் பவேரியா(Bavaria) மாகாணத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு தளவாட நிறுவனத்தின் ரகசியங்களை உளவு பார்த்து நாச வேலைகளுக்கு திட்டமிட்டதாக கூறப்படும் வழக்கில் உக்ரைன் நாட்டவர் ஒருவர் கைது ஜேர்மனியில் செய்யப்பட்டுள்ளார்.</p><p> கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய நபர் என்றும், அவர் கடந்த ஜூன் மாதம் பவேரியாவிலுள்ள பாதுகாப்பு நிறுவனத்தின் வளாகங்களை புகைப்படம் எடுத்து வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு கொடுத்துள்ளார் என்று சந்தேகிப்பதாக மியூனிக் நகர வழக்கறிஞர்கள் மற்றும் பவேரியா காவல்துறையினர் வெளியிட்ட தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de19fddb-b240-4bea-9cf5-7451dc1e910b/26-6a74d879d4150.webp' /></p><p> கிழக்கு துரிங்கியா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபரான 33 வயதுடையர் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>திங்கட்கிழமை மியூனிக் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்த நிலையில், தற்போது அவர் பவேரியா நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>கைது செய்யப்பட்ட நபர் மீது நாசவேலையை செய்ய திட்டமிட்டு உளவு வேலையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p> ஜேர்மனியில் புதிதாக தொடங்கப்பட்ட GAZ-Hybrid அமைப்பின் ஒருங்கிணைப்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> இதற்கிடையில், உளவு வேலைக்கு உத்தரவிட்ட வெளிநாட்டு உளவு அமைப்பு எது என்பது குறித்து எந்தவொரு தகவலையும் அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.</p><p> அத்துடன் விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதால் கூடுதல் தகவல்கள் இப்போதைக்கு வெளியிடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:57:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-drones-hit-german-cargo-ship-emil-1786031510"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-drones-hit-german-cargo-ship-emil-1786031510</id>
            <summary type="text">EMIL எனும் ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்கருங்கடலில், ஜேர்மன் கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>EMIL எனும் ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><h2>
ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்</h2><p>கருங்கடலில், ஜேர்மன் கப்பல் நிறுவனமான Johann M. K. Blumenthal GmbH &amp; Co. KG-க்கு சொந்தமான ‘EMIL’ என்ற சரக்கு கப்பல் ரஷ்ய ட்ரோன்களால் பலமுறை தாக்கப்பட்டது.
</p><p>
இந்த சம்பவம் உக்ரைனின் ஓடெசா துறைமுகத்திலிருந்து சுமார் 21 கடல் மைல் தொலைவில் நடந்ததாக Bild பத்திரிகை தெரிவித்துள்ளது.</p><p>

கப்பலில் தீப்பற்றியதால், பல தொழில்நுட்ப அமைப்புகள் செயலிழந்தன. இதனால் கப்பல் இயக்க முடியாத நிலையில் சிக்கியது. 11 பேர் கொண்ட குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்களில் யாரும் ஜேர்மன் நாட்டவர்கள் அல்ல. உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffcb0d5d-4672-4ba2-a052-864631aaa760/26-6a74ad98a616d.webp' /></p><p>ஆனால், குழுவினரை வெளியேற்றும் போது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. கப்பல் தற்போது லைபீரியா நாட்டின் கொடியின் கீழ் இயங்குகிறது.
</p><p>
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது Telegram கணக்கில் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் தெரிவித்ததாவது, “கருங்கடலில் ஓடெசாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இரு சரக்கு கப்பல்களை ட்ரோன்கள் தாக்கின. அவை இராணுவப் பொருட்களை எடுத்துச் சென்றன” என்று கூறியுள்ளது.</p><p></p><h2>புதிய அச்சுறுத்தல்</h2><p>இரண்டாவது தாக்குதலில் ‘Mera Queen’ என்ற தானியக் கப்பல் குறிவைக்கப்பட்டது. இது கினி-பிசாவ் நாட்டின் கொடியின் கீழ் இயங்குகிறது. அந்த தாக்குதலில் ஒரு குழுவினர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம், கருங்கடலில் வணிகக் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது. </p><p>உக்ரைன் போரின் பின்னணியில், ரஷ்யா வணிகக் கப்பல்களை இராணுவப் பொருட்கள் எடுத்துச் செல்கின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில் குறிவைத்து தாக்குகிறது.
</p><p>
ஜேர்மன் கப்பல் ‘EMIL’ மீது நடந்த தாக்குதல், சர்வதேச கடல் போக்குவரத்து பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T18:31:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் ஷோரூமில் வெடித்த கேஸ் சிலிண்டர்: துபாயில் உயிரிழந்த கேரள இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-youth-dead-in-dubai-car-showroom-accident-1786040004"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-youth-dead-in-dubai-car-showroom-accident-1786040004</id>
            <summary type="text">துபாய் கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.துபாயில் உயிரிழந்த கேரள இளைஞர்துபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாய் கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>துபாயில் உயிரிழந்த கேரள இளைஞர்</h2><p>துபாயின் ஷேக் சையத் சாலையில் அமைந்துள்ள கார் ஷோரூமில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்த 27 வயது ஷிஜின் பால்(Shijin Paul) என்ற இளைஞர் பணியாற்றி வந்தார்.</p><p> அங்கு, மல்டிமீடியா மார்க்கெட்டிங் நிபுணராகவும், சமூக வலைதளம் மற்றும் வீடியோ கிராபி பொறுப்பாளராகவும் ஷிஜின் பால் பணியாற்றி வந்துள்ளார்.</p><p> இந்நிலையில் கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி 27 வயது ஷிஜின் பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e07aad3c-80b3-41f6-9289-06baca030157/26-6a74cec5d01ef.webp' /></p><p>இந்த விபத்தில் 6 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஷிஜின் பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2> உறுதிப்படுத்திய இந்திய தூதரகம்</h2><p>ஷிஜின் பால் உயிரிழந்ததை துபாயில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> மேலும் அவரது உடலை விரைவில் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இந்திய தூதரகம் தீவிரமாக செயல்பட்டுள்ளது.</p><p>உயிரிழந்த ஷிஜின் பாலுக்கு பெற்றோரும், மனைவியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p> ஷிஜின் பால் விரைவில் தன்னுடைய விடுமுறையில் ஊருக்கு சென்று அங்குள்ள தன்னுடைய மனைவியையும், குழந்தைகயையும் துபாய்க்கு அழைத்து வர திட்டமிட்டு இருந்ததாக அவரது முன்னாள் வசிப்பிட தோழர் நாசிர் தெரிவித்துள்ளார்.<br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:31:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் வள்ளுவன் பாடசாலை அதிபர் முருகவேள் அவர்களின் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாடு பயண அனுபவ தொகுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-valluvan-padasalai-head-murugavel-tour-blog-1786035366"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-valluvan-padasalai-head-murugavel-tour-blog-1786035366</id>
            <summary type="text">சுவிஸ் பேர்ன் மாகாணத்தின் வள்ளுவன் பாடசாலை அதிபர் முருகவேள் அவர்களின் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாடு பயணத்தின் அனுபவங்களை இந்த கட்டுரையில் பகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிஸ் பேர்ன் மாகாணத்தின் வள்ளுவன் பாடசாலை அதிபர் முருகவேள் அவர்களின் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாடு பயணத்தின் அனுபவங்களை இந்த கட்டுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.<br></p><h3>சுவிஸ் பேர்ன் மாகாணத்தின் வள்ளுவன் பாடசாலை அதிபர் முருகவேள் பயணத் தொகுப்பு</h3><p>புதிய உலகில் மனிதர்கள் வேகமான வாழ்க்கை முறையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில் மன அழுத்தத்தையும் சோர்வையும் போக்கி, புதிய அனுபவங்களையும் அறிவையும் பெறுவதற்கு சுற்றுலா முக்கியமானதாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dab5d6f8-528a-4f97-90df-aba3942d1189/26-6a74bd5503019.webp' /></p><p> அந்த வகையில், சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாட்டிற்கான எனது இந்தப் பயணம், ஒரு சாதாரண சுற்றுலாவாக அமையவில்லை. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும், பல அறிஞர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திக்கவும் இது வாய்ப்பளித்தது.</p><p> 05.07.2026 அன்று சிங்கப்பூருக்குச் சென்றடைந்தோம். அங்கு பல்வேறு முக்கிய இடங்களைப் பார்வையிட்டதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தைச் செலவிட்டோம். சிங்கப்பூரின் தேசியப் பூங்கா உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று இயற்கை அழகையும் அந்நாட்டின் சிறப்புகளையும் ரசித்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e92318ea-913f-496b-a82f-355e16165c72/26-6a74bd569140c.webp' /></p><p> பின்னர் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டோம். அங்கு தமிழறிஞர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் தொடர்புடைய பலர் அன்புடன் வரவேற்றனர். அவர்களுடன் நடைபெற்ற சந்திப்புகள் மற்றும் உரையாடல்கள் மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்தன.</p><p> மலேசியாவில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்து வளர்ப்பதில் அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளை அறிந்துகொள்ள முடிந்தது.</p><p></p><p> பினாங்கு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றதுடன், அங்குள்ள முக்கிய இடங்களையும் பார்வையிட்டோம். அதேவேளை, அங்குள்ள நண்பர்களின் அன்பான உபசரிப்பும் விருந்தோம்பலும் பயணத்தின் சிறப்பான அம்சங்களாக அமைந்தன.</p><p> மலேசியத் தமிழ் அமைப்புகளின் வரவேற்பு நிகழ்வில் பல அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். தமிழ்மொழியின் வளர்ச்சி, தமிழ் கல்வி மற்றும் தமிழர் அடையாளத்தைப் பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c176d614-926a-4a34-a57b-8e777d173b62/26-6a74bd575c515.webp' /></p><h2> தமிழ்நாட்டில் மறைமலை அடிகளார் நினைவு நிகழ்வு</h2><p>
தமிழ்நாட்டில் நடைபெற்ற மறைமலை அடிகளாரின் 150ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.</p><p> மறைமலை அடிகளார் வாழ்ந்த பல்லாவரம் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்விலும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஏற்பாடு செய்த நினைவு நிகழ்விலும் பங்கேற்றேன். தமிழ்மொழிக்காக மறைமலை அடிகளார் ஆற்றிய பணிகள் மற்றும் தனித்தமிழ் இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து நிகழ்வுகளில் கருத்துகள் பகிரப்பட்டன.</p><p> இந்த நிகழ்வுகளில் கல்வியாளர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நிகழ்வுகள் தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டும் வகையில் அமைந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc0ed12-6556-488a-876c-c7b981c36ed6/26-6a74bd582e30f.webp' /></p><h2> தஞ்சாவூர் பயணம்</h2><p>17.07.2026 அன்று தஞ்சாவூருக்குச் சென்றோம். அங்கு கல்லூரி நிகழ்வுகளில் கலந்துகொண்டு, மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.</p><p>தஞ்சாவூர் மருதபாண்டியர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் “சுவிற்சர்லாந்தில் தமிழும் தமிழர்களும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினேன். சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிக் கல்வி, தமிழ் பள்ளிகளின் செயற்பாடுகள் மற்றும் அங்கு வாழும் தமிழர்களின் சமூகப் பங்களிப்பு குறித்து கருத்துகளைப் பகிர்ந்தேன்.</p><p> சுவிற்சர்லாந்தில் தற்போது நூற்றுக்கணக்கான தமிழ் பள்ளிகள் இயங்கி வருவதுடன், பேர்ண் தமிழ்ப் பள்ளியும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக மாணவர்களிடம் எடுத்துரைத்தேன். தமிழ்மொழியை அக்கறையுடன் கற்றுக்கொள்வதன் மூலம் உலகளவில் உயர்ந்த அடையாளத்தைப் பெற முடியும் என்றும் அவர்களை ஊக்குவித்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/579e94a6-565f-4994-a5f7-048e99f249a1/26-6a74bd58f0f3b.webp' /></p><h2> மாணவர்களுடனான உரையாடல்</h2><p>பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களை சந்தித்து உரையாற்றிய போது, தமிழ் மொழியுடன் இணைந்து தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன்.</p><p>குறிப்பாக, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிலும் மாணவர்கள் தங்களுடைய துறையுடன் தமிழையும் இணைத்துச் செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தேன். மாணவர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினேன்.</p><h2> பயணத்தின் நிறைவு</h2><p>இந்தப் பயணத்தின் முழுவதும் பல தமிழ் அன்பர்களையும், அறிஞர்களையும், கல்வியாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் வழங்கிய அன்பும் மரியாதையும் இந்தப் பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது.</p><p> சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் மீது மக்கள் கொண்டுள்ள அக்கறையை நேரடியாகக் காண முடிந்தது.</p><p> இந்தப் பயணம் ஒரு சுற்றுலாவாக மட்டுமல்லாமல், தமிழ் அன்பர்களைச் சந்தித்து, அவர்களின் பணிகளை அறிந்து, மாணவர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட ஒரு அர்த்தமுள்ள பயணமாக அமைந்தது.</p><p> தமிழுக்காக உலகின் பல பகுதிகளில் பணியாற்றி வரும் அனைவரையும் சந்தித்த அனுபவம், தமிழ் மொழியுடன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:31:00+00:00</updated>
        </entry>
    </feed>
