<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-05T06:53:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக ட்ரம்பின் புதிய அச்சுறுத்தல்: இலக்கு எதுவென பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-pickaxe-mountain-1788591032"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-pickaxe-mountain-1788591032</id>
            <summary type="text">Trump threatens to hit Iran’s Pickaxe Mountain: ஈரானின் பிக்காக்ஸ் மலையைத் தாக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
ஈரானின் முக்கிய அணுசக்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump threatens to hit Iran’s Pickaxe Mountain: ஈரானின் பிக்காக்ஸ் மலையைத் தாக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
</p><p>ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையமான 'பிக்காக்ஸ் மலை' (Pickaxe Mountain) மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தி வந்த நிலையில், மிக விரைவில் அதன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><h2>பிக்காக்ஸ் மலை</h2><p>
</p><p>ஈரானுடனான தீவிரமடைந்து வரும் போரை, தங்களுக்கு இது ஒரு அற்பமான விடயம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். </p><p>ஈரான் மீதான புதிய தாக்குதல் தொடர்பில் வெள்ளிக்கிழமை அறிவித்த ட்ரம்ப், பிக்காக்ஸில் ஏதாவது நடந்துகொண்டிருந்தால், நாங்கள் மிக விரைவில் பிக்காக்ஸ் மலையைத் தாக்கக்கூடும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a307385e-d0df-4198-a2cd-7bda9b636b13/26-6a9bbbbaa5522.webp' /></p><p> </p><p>மேலும், ஈரனுடனானது போர் அல்ல, வெறும் இராணுவ மோதல் மட்டுமே என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். பிக்காக்ஸ் மலை மீதான தாக்குதல்கள் குறித்து ஆலோசித்து வருவதாக ட்ரம்ப் கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தார். </p><p>தற்போது மீண்டும் அந்த மலை மீதான தாக்குதல் குறித்து ட்ரம்ப் தீவிரம் காட்டுவதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவே வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p><p> </p><p>பிக்காக்ஸ் மலையின் ஆழத்தில் உள்ள சுரங்கங்களுக்குள், ஈரான் ஆயிரக்கணக்கான யுரேனியம் செறிவூட்டும் மையவிலக்கிகளை நகர்த்தியுள்ளதாக இஸ்ரேல் நம்புகிறது. </p><p>இந்த நிலையம், நதன்ஸ் அணுசக்தி நிலையத்திற்கு அருகில், கோலாங் மலைக்குக் கீழே 300 அடிக்கும் அதிகமான ஆழத்தில் அமைந்துள்ளது. இது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு தளமாகும்; இங்கு ஆழமாக அமைக்கப்பட்ட இரண்டு சுரங்கப்பாதை வளாகங்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/073f8727-979b-40cc-a5cd-3f0eb2b0dc1c/26-6a9bbbbb586ba.webp' /></p><p> </p><p>ஜூன் 2025-இல் நடைபெற்ற 12 நாள் போரின்போது, ​​ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் நிர்வாகம் இந்த இடமாற்றத்தைச் செய்ததாகக் கருதப்படுகிறது. </p><p>ஈரானின் மற்ற முக்கிய அணுசக்தி பதுங்குகுழிகள் மீது குண்டுவீசியபோது, ​​டிரம்ப் இதற்கு முன்னர் இந்த இடத்தை சேதப்படுத்தாமல் விட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T06:48:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேக வைத்த முட்டையை எவ்வளவு மணி நேரத்திற்குள் சாப்பிட்ட வேண்டும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/reason-why-should-eat-boiled-egg-before-this-time-1788588749"></link>
            <id>https://news.lankasri.com/article/reason-why-should-eat-boiled-egg-before-this-time-1788588749</id>
            <summary type="text">பொதுவாக, ஒவ்வொரு உணவையும் சாப்பிடுவதற்கு என்று உரிய கால நேரம் இருக்கிறது. அந்த நேரத்திற்கு நாம் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அப்படியாக, வேக வைத்த முட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, ஒவ்வொரு உணவையும் சாப்பிடுவதற்கு என்று உரிய கால நேரம் இருக்கிறது. அந்த நேரத்திற்கு நாம் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அப்படியாக, வேக வைத்த முட்டையை நாம் எவ்வளவு நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்? என்பதை பார்ப்போம்.
</p><p>

 சமீப காலமாக மக்களிடையே ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இது ஒரு நல்ல ஆரோக்கியமான அணுகுமுறை. அதிலும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை தேர்வு செய்கின்ற பொழுது பலருக்கும் எளிதான மற்றும் குறைந்த செலவிலான தீர்வாக இருப்பது முட்டைதான்.</p><p>

 இவை குறைந்த விலையில் கிடைப்பதோடு சமைப்பதும் மிக மிக எளிது. முட்டையை வேக வைப்பதற்கு அதிக நேரமும் எடுப்பது இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80614388-bf9e-4aeb-9dc0-6468c362239b/26-6a9bb2cf56fa3.webp' /></p><p> சில நிமிடங்களில் நாம் வேகவைத்து சத்தான மூட்டையை சாப்பிட்டு விடலாம். முட்டையை அவரவர் வசதிக்கேற்ப சமைத்துக் கொள்வது உண்டு. இருப்பினும் வேகவைத்த முட்டையை சாப்பிடுவதின் வழியாக நம்முடைய உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நன்மைகளும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. </p><p>ஆனால், வேகவைத்த முட்டையை குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
</p><p>
 பொதுவாக, வேக வைத்த முட்டை அரை வெப்ப நிலையில் வைத்திருந்தால் இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே நாம் சாப்பிட்டு முடித்தாக வேண்டும். ஒரு வேலை வெயில் காலத்தில் சுற்றி உள்ள வெப்பநிலை 32°C (90°F)மிக அதிகமாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்குள் நாம் சாப்பிடுவது அவசியம் ஆகும். </p><p>இதற்கு பின்னால் சில காரணங்கள் சொல்லப்படுகிறது. அதையும் தெரிந்து கொள்வோம்.

 முட்டையின் ஓட்டின் மீது இயற்கையாகவே 'கியூட்டிக்கிள்' என்ற என்ற மெல்லிய பாதுகாப்பு படலம் உண்டு. இது பாக்டீரியாக்கள் முட்டைகுள் செல்வதை தடுக்கிறது. ஆனால், முட்டையை நீரில் போட்டு வேக வைக்கின்ற பொழுது இந்த அடுக்கு முற்றிலும் அழிந்து விடுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3795dbc8-8495-42b0-9dfc-8e22fcaafdff/26-6a9bb2d00c2b9.webp' /></p><p> </p><p>இதனால் காற்றில் இருக்கக்கூடிய கிருமிகள் மிக எளிதாக ஓட்டில் உள்ள நுண் துளைகள் வழியாக நுழைய கூடும். மேலும், சமைத்த உணவுகளை 4°C முதல் 60°C வரையிலான வெப்பநிலையில் நீண்ட நேரமாக வைக்கின்ற பொழுது அவை பாக்டீரியாக்கள் வேகமாக வருவதற்கான அபாயம் உள்ளது.</p><p> குறிப்பாக, சால்மோனெல்லா&nbsp;ஆபத்தான பாக்டீரியாக்கள் வேகவைத்த முட்டைகள் மிக வேகமாக பரவிகிறது. வெப்ப நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வைக்கப்பட்ட முட்டையை நாம் சாப்பிடுகின்ற பொழுது வாந்தி வயிற்றுப்போக்கு காய்ச்சல் போன்ற உணவு நச்சுத்தன்மை பாதிப்புகள் வரலாம். </p><p>ஒருவேளை இரண்டு மணி நேரத்திற்குள் சாப்பிட முடியவில்லை என்றால் அந்த முட்டையை பாதுகாப்பாக பயன்படுத்தக்கூடிய சில குறிப்புகளையும் தெரிந்து கொள்வோம். 


வேகவைத்த முட்டையை ஓடு உரிக்காமல் அவ்வாறே குளிர்சாதன பெட்டியில் வைத்தால் ஏழு நாட்கள் வரை பாதுகாப்பாக வைத்து சாப்பிடலாம் என்று சொல்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8452320d-6ffe-41ef-9a9c-075692548636/26-6a9bb2d0b7355.webp' /></p><p> நாம் ஓட்டை உரிக்காமல் அப்படியே பிரிட்ஜில் வைப்பது நல்லது. அதை போல், முட்டையை குளிர்சாதனர்பட்டியின் கதவு பகுதிகளில் வைக்க கூடாது. காரணம் அடிக்கடி பிரிட்ஜ் கதவுகளை திறந்து மூடுவதால் அங்கு வெப்பநிலை மாறிக்கொண்டே இருக்கும். உள் பகுதியில் உள்ள அடுக்கு பகுதிகளில் வைப்பது பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். </p><p>இது மட்டும் இல்லாமல் வேகவைத்த முட்டையை உடைக்கும் போது கசப்பு அல்லது அழுகிய வாசனை வந்தால் அல்லது வழுவழுப்பு தன்மை இருந்தாலும் எந்த காரணத்தை கொண்டும் சாப்பிடாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T06:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய உலக வரைபடத்தை ஏற்றுக் கொண்ட ஐ.நா: பெரிதான ஆப்பிரிக்கா: அமெரிக்கா எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/un-accepts-equal-earth-map-164-votes-in-favour-1788589352"></link>
            <id>https://news.lankasri.com/article/un-accepts-equal-earth-map-164-votes-in-favour-1788589352</id>
            <summary type="text">c: ஆப்பிரிக்க கண்டம் பெரிதாக சித்தரிக்கப்பட்ட புதிய வரைபடத்தை ஐ.நா ஒப்புக் கொண்டுள்ளது. புதிய உலக வரைபடம்
பாரம்பரிய உலக வரைபடத்திற்கு மாற்றாக புதிய ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>c: ஆப்பிரிக்க கண்டம் பெரிதாக சித்தரிக்கப்பட்ட புதிய வரைபடத்தை ஐ.நா ஒப்புக் கொண்டுள்ளது.</p><h2> புதிய உலக வரைபடம்</h2><p>
பாரம்பரிய உலக வரைபடத்திற்கு மாற்றாக புதிய ஈக்வல் எர்த்(Equal Earth) என்ற புதிய வரைபட முறையை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டுள்ளது.</p><p> உலக வரைபடத்தில் கண்டங்களின் பரப்பளவை சமச்சீராக காட்டுவது மற்றும் வரலாற்று ரீதியான தவறுகளை திருத்திக் கொள்வதை புதிய வரைபடம் நோக்கமாக கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/923a1c5b-cb10-4369-9e8d-fbd3e172e927/26-6a9bb529ce036.webp' /></p><p> இதில், ஆப்பிரிக்க கண்டம் பெரிதாகவும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டம் சற்று சிறியதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>1569 ம் ஆண்டு கடல்வழிப் பயணத்திற்காக பிளெமிஷ் நிலவரைபட வல்லுநர் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கிய வரைபட முறைக்கு மாற்றாக இந்த புதிய வரைபட முறை கொண்டு வரப்பட்டுள்ளது.</p><h2> 164 நாடுகளின் ஆதரவும், அமெரிக்காவின் எதிர்ப்பும்</h2><p>இந்த புதிய வரைபடம் தொடர்பான வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட நிலையில், இதற்கு ஆதரவாக 164 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது(1), மற்றும் 6 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🎉Congratulations to the delegation of Togo 🇹🇬 on the adoption this morning by the <a href="https://x.com/hashtag/UNGA?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#UNGA</a> of resolution A/80/L.104, “Correct the Map”, an <a href="https://x.com/_AfricanUnion?ref_src=twsrc%5Etfw">@_AfricanUnion</a> initiative promoting more accurate and equitable global cartographic representation, particularly of <a href="https://x.com/hashtag/Africa?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Africa</a>.<br><br>A significant… <a href="https://t.co/oxZCbeMUTt">pic.twitter.com/oxZCbeMUTt</a></p>&mdash; African Union Mission to the UN (@AfricanUnionUN) <a href="https://x.com/AfricanUnionUN/status/2095902709933121824?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> தீவிரமான சர்வதேச பிரச்சினைகளை விட்டுவிட்டு 16ம் நூற்றாண்டு வரைபடங்கள் குறித்து விவாதிப்பது ஐ.நா மீதான நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாக உள்ளது என்று அமெரிக்க பிரதிநிதி யாரினா பெரென்செவிச் வாக்கெடுப்புக்கு முன்பு விமர்சித்து இருந்தார்.</p><p> அதே நேரம், வரைபடம் கல்வி மற்றும் கலாச்சார ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 சிக்ஸர்களுடன் 53 பந்தில் 101 விளாசிய இளம் வீரர்: நமீபியாவிடம் போராடி தென் ஆப்பிரிக்கா வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lhuan-dre-pretorius-101-runs-in-53-balls-namibia-1788589443"></link>
            <id>https://news.lankasri.com/article/lhuan-dre-pretorius-101-runs-in-53-balls-namibia-1788589443</id>
            <summary type="text">South africa beat namibia by 11 runs: நமீபியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முத்தரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>South africa beat namibia by 11 runs: நமீபியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
முத்தரப்பு டி20 தொடரின் 6வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது.</p><h2>தொடக்க வீரர்கள் ருத்ரதாண்டவம் </h2><p>

தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி Windhoek-யில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/983987a1-96e4-48c2-9761-a2d16869a77e/26-6a9bb586c3453.webp' /></p><p></p><p>

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் ருத்ரதாண்டவம் ஆடினர்.

கோன்னோர் எஸ்தர்ஹுய்ஸன் (Connor Esterhuizen) 40 பந்துகளில் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். </p><p>

கடைசி ஓவர் வரை களத்தில் நின்ற லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், 53 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>தென் ஆப்பிரிக்கா வெற்றி</h2><p>
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 228 ஓட்டங்கள் குவித்தது. ஜென் பால்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய நமீபிய அணியில் ஸ்டீன்கேம்ப், ஃப்ரைலிங்க் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர்.</p><p> 

எனினும் கடைசி ஓவரை மோகோயெனா (Mokoena) சிறப்பாக வீச, நமீபியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ஓட்டங்கள் எடுக்க தென் ஆப்பிரிக்க அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
ஜென் ஃப்ரைலிங்க் (Jan Frylinck) 36 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்களும், லௌரன் ஸ்டீன்கேம்ப் (Louren Steenkamp) 44 பந்துகளில் 61 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாசினர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:21:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 வயது இளைஞரைக் காதலிக்கும் பிரிஜிட் மேக்ரானின் 42 வயது மகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brigitte-macron-daughter-dating-1788588805"></link>
            <id>https://news.lankasri.com/article/brigitte-macron-daughter-dating-1788588805</id>
            <summary type="text">22-year-old dating the 42-year-old daughter of Brigitte Macron: பிரிஜிட் மேக்ரானின் 42 வயது மகளுடன் டேட்டிங் செய்யும் 22 வயது சர்ஃபிங் பயிற்சியாளர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>22-year-old dating the 42-year-old daughter of Brigitte Macron: பிரிஜிட் மேக்ரானின் 42 வயது மகளுடன் டேட்டிங் செய்யும் 22 வயது சர்ஃபிங் பயிற்சியாளர்.</p><p>
பிரான்ஸின் முதல் பெண்மணியான பிரிஜிட் மேக்ரானின் 42 வயது மகள் தற்போது 22 வயதேயான சர்ஃபிங் பயிற்சியாளரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25cf853e-d082-4ab0-9480-57b5eb102ef6/26-6a9bb3072b070.webp' /></p><p> </p><p>
பிரிஜிட் மேக்ரானின் மகள் Tiphaine Auzière என்பவர் பிரபலமான சட்டத்தரணி என்பதுடன், தனது தாயார் மற்றும் வளர்ப்பு தந்தை ஆகியோரின் மிகப் பெரிய ஆதரவாளருமாவார். </p><p>Tiphaine Auzière-விட இமானுவல் மேக்ரானுக்கு வெறும் 6 வயது தான் அதிகம். உடல் தோற்றத்திலும் தாயும் மகளும் ஒரே மாதிரியான பொன்னிற முடி, இளமையான முகம் மற்றும் மெலிந்த உடல்வாகு ஆகியவற்றைக் கொண்டுள்ளனர்; அதோடு, அந்தத் தனித்துவமான, வசீகரமான புன்னகையையும் அவர்கள் பெற்றுள்ளனர். </p><p>பிரிஜிட் தன்னைவிட 24 வயது இளையவரான இமானுவல் மேக்ரானைக் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில், திஃபைன், தன்னைவிட 20 வயது இளையவரான ஒரு சர்ஃபிங் பயிற்சியாளருடன் தீவிரமான காதல் உறவில் ஆழ்ந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>இருபதுகளின் பிற்பகுதியில் இருக்கும் அன்டோயின் லெகோம்ட் (Antoine Lecomte), கைட்சர்ஃபிங் (kitesurfing) உலகில் ஒரு சிறந்த சாதனையாளராகத் திகழ்வதுடன், ஒரு உயர்தர வணிகப் பள்ளியிலும் பயின்றவர்; </p><p>இவர் சமீபத்தில், பிரான்சின் புகழ்பெற்ற கடற்கரை நகரமான 'லெ டூக்கெட்'டில் (Le Touquet) இருந்து, சர்ஃபர்களுக்கான உயர்தர கைட்களைத் (kites) தயாரிக்கும் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். </p><p>இந்த நிலையில், நாளேடு ஒன்று அன்டோயினைத் தொடர்புகொண்டதை அடுத்து, மக்கள் ஏன் இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என குறிப்பிட்டதுடன், எங்கள் உறவும் அவருடைய தாயார் பிரிஜிட் மற்றும் ஜனாதிபதி மேக்ரான் ஆகியோரின் உறவைப் போன்றதுதான் என்று அந்த 22 வயது இளைஞர் புன்னகைத்தபடியே ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>மேலும், இது வெறும் கோடைக்காலப் பொழுதுபோக்கல்ல. இது உண்மையான காதல், தீவிரமானது. எதிர்காலத்திற்காக எங்களிடம் திட்டங்கள் உள்ளது என்றும் அவர் பதிலளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a9d7859-2597-4a23-9c51-956b8bb0caee/26-6a9bb307d0dda.webp' /></p><p> இந்த வாரத் தொடக்கத்தில் இன்ஸ்டாகிராமில் தங்களது மலரும் காதலைப் பகிரங்கப்படுத்த அந்த ஜோடி எடுத்த முடிவில், நிச்சயமாக ஒரு தனித்துவமான வாழ்க்கைப் பேரானந்தம் காணப்பட்டது என்றே கூறுகின்றனர்.
</p><p>வயது வித்தியாசம் யாருக்காவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தால், அது இரண்டு பிள்ளைகளின் தாயான திஃபைனையோ, அல்லது தனக்கு இதற்கு முன்பு இரண்டு உறவுகள் இருந்ததாக டெய்லி மெயிலிடம் கூறும் அன்டோயினையோ சற்றும் பாதிக்கவில்லை. </p><p>கோடையின் தொடக்கத்தில் Tiphaine தன்னிடம் ஈஃபாயில் சர்ஃபிங் பயிற்சிக்காக வந்தபோது, ​​அவர் யார் என்றே தனக்கு உண்மையில் தெரியாது என்று அந்த வசீகரமான இளம் தொழிலதிபர் ஒப்புக்கொள்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7bbd464-d26c-4816-9fe1-28087ccf39d2/26-6a9bb308845ff.webp' /></p><p> </p><p>ஆனால், அவர் பிரிஜிட் மேக்ரானின் மகள் என்பது எனக்குப் பின்னர்தான் தெரியவந்தது; அது எனக்கு ஒரு பொருட்டல்ல, நாங்கள் மிகவும் நன்றாகப் பழகுகிறோம், அதுதான் மிக முக்கியமான விடயம், நாங்கள் ஒருவரையொருவர் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறோம் என்றார். </p><p>மேலும், Tiphaine ஒரு சட்டத்தரணி; இலங்கையில் எனது தொழிற்சாலையை நான் விரிவுபடுத்த வேண்டியிருப்பதால் அவர் எனக்கு உதவுவார், நாங்கள் இருவரும் சேர்ந்து அங்கு செல்வோம். இந்தத் தொழில் மேலும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன் என Antoine Lecomte குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T06:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கர விபத்து; சுற்றுலா சென்ற 8 தமிழ்நாடு மாணவர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/8-dindugal-students-dies-in-thrissur-accident-1788585922"></link>
            <id>https://news.lankasri.com/article/8-dindugal-students-dies-in-thrissur-accident-1788585922</id>
            <summary type="text">8 dindugal college students dies in thirssur car accident: திருச்சூர் அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா சென்ற 8...</summary>
            <content type="html"><![CDATA[<p>8 dindugal college students dies in thirssur car accident: திருச்சூர் அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா சென்ற 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். </p><h3>

திருச்சூர் விபத்தில் 8 மாணவர்கள் உயிரிழப்பு
</h3><p>
தமிழ்நாட்டின் திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படிக்கும் 8 மாணவர்கள் கார் மூலமாக கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78ee2ad3-c413-4785-8db8-ee09418db85b/26-6a9ba7c3ec9f6.webp' /></p><p> 

நேற்று இரவு 11;42 மணிக்கு கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலத்தில் மாணவர்கள் சென்று கொண்டிருந்த கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியுள்ளது.&nbsp;</p><p></p><p>

மோதிய வேகத்தில் கார் நொறுங்கியுள்ளது. மேலும், பயங்கர சத்தத்துடன் கார் மோதியதால் அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee2e17e7-2c49-4ef1-8e9e-706f22796ab3/26-6a9ba7c34651e.webp' /></p><p>
கார் நொறுங்கியதில் காரின் பாகங்களை வெட்டியெடுத்தே மாணவர்களின் உடல்களை மீட்க முடிந்துள்ளது. 

8 மாணவர்களும் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 5 மாணவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. </p><p>ஒரு மாணவரின் உடல் மோதிய வேகத்தில் லாரியின் மீது தூக்கி வீசப்பட்டுள்ளது.
</p><p>
மாணவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><h3>விபத்துக்கான காரணம்&nbsp;</h3><p>தேசிய நெடுஞ்சாலை NH 66-ல் விரிவாக்கப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் பல இடங்களில் தற்காலிகமாகப் பாதைகள் திருப்பி விடப்பட்டுள்ளன. </p><p>

ஆனால், சாலை முடிகிறது, சாலை திருப்பம் என்பது போன்ற முன்னெச்சரிக்கை பலகைகள், போதிய விளக்குகள் அந்த பகுதிகளில் இல்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

கார் அதிவேகத்தில் வந்த நிலையில், இருள் சூழ்ந்த பகுதியில் லாரி நிறுத்தப்பட்டிருந்ததால், ஓட்டுநரால் உடனடியாக பிரேக் பிடித்து காரை நிறுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது.
</p><p>
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்திற்கு தேசிய நெடுஞ்சாலைப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியப் போக்கு காரணமா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T05:25:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் கருங்கடல் தாக்குதல்... உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் என அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/escalation-in-black-sea-attacks-1788581707"></link>
            <id>https://news.lankasri.com/article/escalation-in-black-sea-attacks-1788581707</id>
            <summary type="text">Deadly escalation in Black Sea attacks: அபாயகரமாக அதிகரித்துள்ள கருங்கடல் தாக்குதல்.
ரஷ்யாவும் உக்ரைனும் கருங்கடலில் மாறி மாறி தாக்குதலை முன்னெடுப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Deadly escalation in Black Sea attacks: அபாயகரமாக அதிகரித்துள்ள கருங்கடல் தாக்குதல்.
</p><p>ரஷ்யாவும் உக்ரைனும் கருங்கடலில் மாறி மாறி தாக்குதலை முன்னெடுப்பதால், முக்கியமான தானிய ஏற்றுமதி பாதிக்கப்படுவதுடன், இமோதல் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தக்கூடும் என்ற கவலையும் அதிகரிக்க செய்துள்ளது.</p><h2>மிகவும் ஆபத்தானதாக</h2><p>
</p><p>சமீபத்திய வாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்ததால், அதற்கு முந்தைய போர்க் காலம் முழுவதிலும் கருங்கடலில் கொல்லப்பட்டவர்களை விட, ஜூலை மாதத்தில் கருங்கடலில் அதிகமான மாலுமிகள் மரணமடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da72e053-7e85-4def-a22e-09090b9ecd4c/26-6a9b974da7646.webp' /></p><p> </p><p>இதனால், அந்தக் நீர்நிலையானது வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு உலகின் மிகவும் ஆபத்தானதாக மாறியது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் நிலவி வந்தபோதிலும், ஹார்முஸ் நீரிணை, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா ஆகிய பகுதிகளில் கப்பல்கள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகின்றன. </p><p>துருக்கிய மாலுமிகள் சங்கத்தின் மதிப்பீடுகளின்படி, ஜூலை மாதத்தில் கருங்கடலில் 35 கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் விளைவாக 23 பேர் வரை மரணமடைந்தனர். ஆகஸ்ட் மாதத்திலும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. </p><p>மேலும், உக்ரைன் போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஐ.நா. கப்பல் போக்குவரத்து அமைப்பான சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர், உலகெங்கிலும் கடல்சார் பாதுகாப்பு மோசமடைந்து வருவதைக் கண்டித்துள்ளார்.</p><p></p><p> </p><p>2022-இல் உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து வந்த மாதங்களில், உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல்கள் மற்றும் துறைமுகக் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது; இதன் மூலம் தானியங்களை ஏற்றுமதி செய்வதிலிருந்து உக்ரைன் தடுக்கப்பட்டது. </p><p>ஜூலை மாதத்தில், உக்ரைனின் முக்கிய தானிய ஏற்றுமதி மையங்களான ஒடெசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியது.</p><p> இருப்பினும், கருங்கடல் மற்றும் அதனுடன் கெர்ச் நீரிணையால் இணைக்கப்பட்டுள்ள அசோவ் கடல் பகுதிகளில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள பதற்ற அதிகரிப்புக்கு, உக்ரைனின் பதிலடித் தாக்குதல்களும் ஒரு காரணமாக அமைந்துள்ளன. </p><p>மேலும், தனது எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளைத் தவிர்ப்பதற்காக ரஷ்யா பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான கப்பல்களைக் கொண்ட ஒரு மறைமுகக் கப்பற்படைக்குச் சொந்தமானவை என்று உக்ரைன் கூறும் எண்ணெய்க் கப்பல்கள் உட்பட, ரஷ்யக் கப்பல்களை ட்ரோன்களால் உக்ரைன் தாக்கியுள்ளது.</p><p> மட்டுமின்றி, எண்ணெய் மற்றும் தானிய ஏற்றுமதிக்கு மிக முக்கியமான ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்கில் உள்ள கப்பல்கள் மற்றும் துறைமுகக் கட்டிடங்களை உக்ரைன் குறிவைத்துள்ளது.</p><h2>தானிய ஏற்றுமதி</h2><p> </p><p>நிலையற்ற கடல்சார் நிலைமையானது, ரஷ்ய மற்றும் உக்ரேனிய தானிய ஏற்றுமதிகளை ஏற்கனவே கணிசமாகக் குறைத்துள்ளது. இந்த இடையூறு, மற்ற உணவு விலை அதிர்ச்சிகளின் தாக்கத்தை மேலும் மோசமாக்கி, இறக்குமதி செய்யப்படும் கோதுமை, பார்லி மற்றும் மக்காச்சோளத்தை நம்பியிருக்கும் நாடுகளைப் பாதிக்கும் என்ற கவலைகளை இது எழுப்பியுள்ளது. </p><p>ரஷ்யா உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராகத் திகழ்கிறது; அதன் விளைபொருட்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக்கும் (குறிப்பாக துருக்கி மற்றும் எகிப்துக்கும்) அனுப்பப்படுகின்றன. </p><p>அதேவேளையில், உக்ரைன் ஐந்தாவது மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களின் தொடர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஜூலை மாதத்தில் ரஷ்யா அசோவ் கடலில் கப்பல் போக்குவரத்தை நிறுத்தியது; பின்னர், காஸ்பியன் மற்றும் பால்டிக் கடல்கள் மற்றும் பசிபிக் பெருங்கடல் போன்ற மாற்றுப் பாதைகள் வழியாகத் தனது தானிய ஏற்றுமதியில் ஒரு பகுதியைத் திருப்பிவிட முடிவு செய்தது.
</p><p>இருப்பினும், ரஷ்யாவின் கடல்வழி தானிய ஏற்றுமதியில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை கருங்கடல் துறைமுகங்களிலிருந்தும், மேலும் 20 சதவீதத்தவை அசோவ் கடலிலிருந்தும் அனுப்பப்படுகின்றன என்றே ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் (Oxford Economics) அமைப்பு கண்டறிந்துள்ளது. </p><p>இந்த ஆண்டு முன்கூட்டியே அதிக அளவில் தானிய அறுவடை செய்த உக்ரைன், தனது கருங்கடல் துறைமுகங்கள் வழியாக அதிக அளவில் தானியங்களை ஏற்றுமதி செய்ய இயலாத நிலையையும் சந்தித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07a729c9-579b-42c9-92e4-25a216d8a2f9/26-6a9b974e5fdd5.webp' /></p><p> </p><p>உக்ரைனின் உணவுத்துறை அமைச்சரின் சமீபத்திய கருத்துக்களின்படி, கடல், ரயில், நதி மற்றும் சாலைப் போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தி ஏற்றுமதி செய்யக்கூடிய தானியத்தில் மூன்றில் ஒரு பங்கை, அதாவது சுமார் 1.4 மில்லியன் டன்களை மட்டுமே அந்த நாடு ஏற்றுமதி செய்துள்ளது. </p><p>சமீபத்திய வாரங்களில் உலகளாவிய கோதுமை விலைகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன, ஆனால் 2022-ல் உக்ரைன் போர் தொடங்கிய காலகட்டத்தில் இருந்த அளவுகளை விடக் குறைவாகவே உள்ளன. </p><p>இந்த ஆண்டு உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கிட்டத்தட்ட 12 சதவீதம் உயரும் என்றும், 2027-ஆம் ஆண்டில் மேலும் 4.8 சதவீதம் உயரும் என்றும் ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T04:13:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யர்களுக்கான சுற்றுலா விசா... ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தும் ஜேர்மனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eu-cut-russians-holiday-visas-1788578267"></link>
            <id>https://news.lankasri.com/article/eu-cut-russians-holiday-visas-1788578267</id>
            <summary type="text">Germany urges EU to cut Russians’ holiday visas: ரஷ்யர்களுக்கான சுற்றுலா விசாக்களைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியத்தை ஜேர்மனி வலியுறுத்துகிறது.
சமீபத்திய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany urges EU to cut Russians’ holiday visas: ரஷ்யர்களுக்கான சுற்றுலா விசாக்களைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியத்தை ஜேர்மனி வலியுறுத்துகிறது.</p><p>
சமீபத்திய நாசவேலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, சுற்றுலா விசாக்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் ரஷ்யர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜேர்மனி தனது ஐரோப்பிய சகாக்களை வலியுறுத்தி வருகிறது.</p><h2>அதிக விசாக்கள்</h2><p>
</p><p>ட்ரோன்கள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி லைப்சிக் (Leipzig) விமான நிலையத்தைத் தாக்க முயன்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, ரஷ்யக் கடவுச்சீட்டையும் வைத்திருக்கும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை ஜேர்மன் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். </p><p>பெலாரஸின் தலைநகரான மின்ஸ்கில் உள்ள இத்தாலியத் தூதரகம் வழங்கிய சுற்றுலா விசாவில், அந்த நபர் ஷெங்கன் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87cda2e3-c03b-4821-9472-45cf70a1bacc/26-6a9b89dd188b5.webp' /></p><p> </p><p>ஆனால் அவர் ஒருபோதும் இத்தாலி வழியாகப் பயணம் செய்ததாகத் தெரியவில்லை என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ரஷ்யர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான விசாக்கள் வழங்கப்படுவதாக ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சகம் புகார் தெரிவித்துள்ளது.
</p><p>அரசுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், ரஷ்யர்களுக்கு வழங்கப்படும் அதிக எண்ணிக்கையிலான விசாக்கள் உக்ரைன் போர் தொடர்பான தடைகளின் நோக்கத்திற்கு முரணாக அமைவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் யார், எந்த நோக்கத்திற்காக நுழைகிறார்கள் என்பதை அறிவதையும் சாத்தியமற்றதாக்குகின்றன.</p><p></p><p> </p><p>2025-ஆம் ஆண்டில், ஷெங்கன் கூட்டமைப்பில் உள்ள மற்ற எந்த நாட்டையும் விட இத்தாலி அதிக விசாக்களை வழங்கியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன; இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து, ரஷ்யர்களிடமிருந்து வந்த மொத்த விசா விண்ணப்பங்களில் முக்கால் பங்கைப் பெற்றன. </p><p>கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற எந்தவொரு நாட்டையும் விட இத்தாலி பெலாரஸ் நாட்டவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான விசாக்களை வழங்கியுள்ளது; உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்புக்குப் பிறகு இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. </p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு 50,709 விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், 2021-ல் இத்தாலி பெலாரஸ் குடிமக்களுக்கு வெறும் 2,968 விசாக்களை மட்டுமே வழங்கியுள்ளது. ரஷ்யர்களுக்கும் இதேபோன்ற போக்கைக் காணலாம்.</p><h2>22-வது சுற்றுத் தடை</h2><p> </p><p>போர் இருந்தபோதிலும், ரஷ்ய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட இத்தாலிய விசாக்களின் எண்ணிக்கை 2021-ல் 63,894-ஆக இருந்து, 2025-ல் 165,000-க்கும் அதிகமாக உயர்ந்து, கிட்டத்தட்ட மும்மடங்காகியுள்ளது.
</p><p>இதனிடையே, லைப்சிக் விமான நிலையத்தின் மீது திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டத்தின் பின்னணியில் ரஷ்ய உளவுத்துறை இருந்திருக்கக்கூடும் என்று கூறியதைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்குப் பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை ஜேர்மன் அரசாங்கம் இந்த வாரம் அறிவித்தது.
</p><p>பான் (Bonn) நகரில் உள்ள ரஷ்யத் தூதரகத்தை மூடுவது, வெளிவிவகார அமைச்சகத்திற்கு ரஷ்யத் தூதரை வரவழைப்பது, மற்றும் பால்டிக் கடலில் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபடும் ரஷ்யாவின் மறைமுகக் கப்பல் படையின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0adef1f3-9976-4323-b529-e575c4d13f9c/26-6a9b89ddc2fcf.webp' /></p><p> இந்த நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் 22-வது சுற்றுத் தடைகளை அறிவித்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாத ரஷ்யர்களின் பட்டியலை விரிவுபடுத்துவதாகவும் தெரிவித்தது. </p><p>லைப்சிக் விவகாரத்தில் 
தொடர்புடைய பெலாரஸ் சந்தேக நபர் ஒருவருக்கு வழங்கப்பட்ட விசா குறித்து ஆய்வு செய்ய இத்தாலியின் வெளிவிவகார அமைச்சர் அன்டோனியோ தஜானி உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/319aa099-1f91-48f0-8810-f1025940cbfe/26-6a9b89de77898.webp' /></p><p> </p><p>எஸ்டோனியா, பின்லாந்து, லாட்வியா, லிதுவேனியா, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளையும் தாண்டிய தேசிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி, ரஷ்யர்களுக்கு விசா வழங்குவதை ஏறக்குறைய நிறுத்திவிட்டன. </p><p>ஆனால், வேறு பல உறுப்பு நாடுகள் தொடர்ந்து பெருமளவிலான விசாக்களை வழங்கி வருகின்றன; சில சந்தர்ப்பங்களில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரித்தும் உள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T03:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹூண்டாயின் புதிய மின்சார வேன் - ஐரோப்பாவில் ஆர்டர் தொடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hyundai-staria-electric-van-orders-begin-66k-euro-1788571153"></link>
            <id>https://news.lankasri.com/article/hyundai-staria-electric-van-orders-begin-66k-euro-1788571153</id>
            <summary type="text">Hyundai Staria Electric Van: ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய மின்சார வேன் Staria Electric க்கு ஆர்டர்களை ஐரோப்பாவில் தொடங்கியுள்ளது.

ஜேர்மனியில் இதன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hyundai Staria Electric Van: ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய மின்சார வேன் Staria Electric க்கு ஆர்டர்களை ஐரோப்பாவில் தொடங்கியுள்ளது.</p><p>

ஜேர்மனியில் இதன் ஆரம்ப விலை 57,450 யூரோ (சுமார் $66,500) ஆகும். இந்த மின்சார வேன், Kia PV5 மற்றும் Volkswagen ID. Buzz-ஐ விட பெரியதாகவும், 9 பயணிகள் வரை அமரக்கூடிய வசதியுடனும் வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/633e1bc1-1a10-419d-8630-6c26264b5ef7/26-6a9b6e12c80e1.webp' /></p><p>Staria Electric, ஹூண்டாய் நிறுவனத்தின் பெட்ரோல் மாடலின் மின்சார பதிப்பாகும். 5,253 மில்லிமீட்டர் நீளம், 1,997 மில்லிமீட்டர் அகலம், 1,990 மில்லிமீட்டர் உயரம் கொண்ட இந்த வேன், IONIQ 9 SUV-ஐ விட சற்று நீளமாக உள்ளது. </p><p>வெளிப்புறத்தில் EV-க்கு ஏற்ற மூடிய கிரில், முழு நீள LED லைட் பார் போன்ற அம்சங்கள் உள்ளன.</p><p>
</p><p></p><h2>உட்புற வடிவமைப்பு</h2><p>இதில் 7 மற்றும் 9 சீட் அமைப்புகள், 1,303 லிட்டர் வரை லக்கேஜ் ஸ்பேஸ், 24 லிட்டர் முன்புற சேமிப்பு இடம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. </p><p>12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், Apple CarPlay, Android Auto ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ro" dir="ltr">Hyundai Staria 2026 Electric <a href="https://t.co/Ssy1f6gc4U">pic.twitter.com/Ssy1f6gc4U</a></p>&mdash; g4far (@lekan897) <a href="https://x.com/lekan897/status/2084532818785276226?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><h2>
பேட்டரி </h2><p>84 kWh பேட்டரி மற்றும் 160 kW (218 hp) மின்மோட்டார் கொண்ட Staria Electric, WLTP தரத்தில் 430 கிமீ (267 மைல்) வரை பயணிக்க முடியும். </p><p>800V சார்ஜிங் தொழில்நுட்பத்தால், 350 kW DC சார்ஜரில் 10 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை வெறும் 20 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்.</p><p></p><p>
</p><h2>விலை</h2><p>அடிப்படை Trend 9-seater மாடல் 57,450 யூரோ ($66,500) விலையில் கிடைக்கிறது. Prime மாடல் 63,350 யூரோ ($73,500) விலையில் கூடுதல் வசதிகளுடன் வருகிறது. Calligraphy 7-seater மாடல் 66,950 யூரோ ($77,800) விலையில், Bose சவுண்ட் சிஸ்டம், Nappa லெதர் சீட், LED ஹெட்லைட்ஸ் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் வழங்கப்படுகிறது.
</p><p>
இந்த மின்சார வேன், பெரிய குடும்பங்கள், ஹோட்டல் மற்றும் ஏர்போர்ட் ஷட்டில்கள், வணிக பயன்பாடுகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என ஹூண்டாய் நம்புகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T01:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026-இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்கள் - சிங்கப்பூர் முதலிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/singapore-tops-2026-global-competitiveness-ranking-1788564479"></link>
            <id>https://news.lankasri.com/article/singapore-tops-2026-global-competitiveness-ranking-1788564479</id>
            <summary type="text">Singapore tops 2026 global competitiveness ranking: 2026 இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்களின் தரவரிசையை இங்கே பார்க்கலாம்.

சிங்கப்பூர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Singapore tops 2026 global competitiveness ranking: 2026 இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்களின் தரவரிசையை இங்கே பார்க்கலாம்.</p><h2>

சிங்கப்பூர்&nbsp;முதலிடம்</h2><p>சிங்கப்பூர், 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் மிகப் போட்டித்திறன் வாய்ந்த பொருளாதாரமாக (Most Competitive Economy) தேர்வாகியுள்ளது.</p><p>

IMD World Competitiveness Ranking வெளியிட்ட பட்டியலில், சிங்கப்பூர் 100 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/259fa4da-2bc6-4880-9f49-4af2a4662953/26-6a9b560c0ea16.webp' /></p><p>இரண்டாம் இடத்தில் ஹொங்ஹொங் (95.6), மூன்றாம் இடத்தில் சுவிட்சர்லாந்து (95.3), நான்காம் இடத்தில் தைவான் (94.3), ஐந்தாம் இடத்தில் டென்மார்க் (94.1) ஆகியவை உள்ளன. </p><p>

தொடர்ந்து அயர்லாந்து (94.1), ஐக்கிய அரபு அமீரகம் (94.1), நெதர்லாந்து (90.1), ஸ்வீடன் (88.5) அடுத்ததடுத்த இடங்கைப் பிடித்துள்ளன.
</p><p></p><h2>அமெரிக்கா</h2><p>அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், இந்த பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. இது, பொருளாதாரத்தின் அளவும் போட்டித்திறனும் ஒன்றல்ல என்பதை காட்டுகிறது.
</p><p>
முதல் 10 இடங்களில் 5 இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. இந்தியா இந்த தரவரிசையில் 44-வது இடத்தையே பிடித்துள்ளது.
</p><p>
IMD, போட்டித்திறனை மதிப்பீடு செய்ய 341 அளவுகோல்கள் பயன்படுத்துகிறது. இதில் பொருளாதார செயல்திறன், அரசின் திறன், வணிக திறன், அடிப்படை வசதிகள் ஆகிய நான்கு முக்கிய தூண்கள் அடங்கும்.
</p><p></p><p>சிங்கப்பூர், 2026-இல் வணிக திறன் (Business Efficiency) பிரிவில் முதலிடத்தைப் பெற்றதால், மொத்தத்தில் மீண்டும் உலகின் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசியா இணைந்து 10 இடங்களில் 9 இடங்களை பிடித்துள்ளன. காரணம், திறமையான தொழிலாளர்கள், மேம்பட்ட அடிப்படை வசதிகள், சட்டத்தின் நம்பகத்தன்மை, மற்றும் புதுமை (Innovation) ஆகியவை.
</p><p>
இந்த பட்டியலில் வியட்நாம் முதல் முறையாக இடம் பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 7-வது இடத்தில், சவுதி அரேபியா 13-வது இடத்தில் உள்ளது.

இந்த தரவரிசை, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், நிறுவனங்களின் நீண்டகால முதலீடு மற்றும் போட்டித்திறனை உருவாக்கும் சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T01:06:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மூழ்கடிக்கப்பட்ட Airbus விமானம் - டைவிங் சுற்றுலாவின் புதிய கவர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkeys-sunken-airbus-a300-becomes-dive-spot-1788570027"></link>
            <id>https://news.lankasri.com/article/turkeys-sunken-airbus-a300-becomes-dive-spot-1788570027</id>
            <summary type="text">Turkeys sunken Airbus A300 becomes dive spot: துருக்கியில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஏர்பஸ் விமானம் இப்போது சிறந்த சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

கடலுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Turkeys sunken Airbus A300 becomes dive spot: துருக்கியில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஏர்பஸ் விமானம் இப்போது சிறந்த சுற்றுலா தலமாக மாறியுள்ளது.</p><h2>

கடலுக்குள்&nbsp;ஏர்பஸ் A300 விமானம்</h2><p>2016-ஆம் ஆண்டு துருக்கியின் குசாதாசி கடற்கரையில் ஓய்வு பெற்ற ஏர்பஸ் A300 விமானம் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது. </p><p>

கடலுக்கடியில் செயற்கை பாறையை உருவாக்கி, கடல் உயிரினங்களுக்கு புதிய வாழ்விடமாகவும், சுற்றுலா பயணிகளுக்கு தனித்துவமான டைவிங் அனுபவமாகவும் மாற்றுவதற்காக இவாறு செய்யப்பது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af953499-4389-41b9-b852-4906ee757774/26-6a9b69addbe14.webp' /></p><p>54 மீட்டர் நீளமுடைய இந்த விமானம், மூன்று மணி நேரத்தில் 22 மீட்டர் ஆழத்தில் கடலடியில் நிலை கொண்டது.</p><p> 

1980-ஆம் ஆண்டு பிரான்சில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் முதலில் கிரீஸின் ஒலிம்பிக் ஏர்வேஸில் பயணிகள் சேவையில் இருந்தது. பின்னர் சரக்கு விமானமாக துருக்கியில் பணி செய்தது. அதிக பராமரிப்பு செலவினால் ஓய்வு பெற்றபோது, அய்டின் நகராட்சி இதனை வாங்கி, கடலடியில் மூழ்கடிக்கும் திட்டத்தை மேற்கொண்டது.
</p><p></p><p>மூழ்கடிக்கும் முன், விமானத்தின் ஆபத்தான பாகங்கள், கண்ணாடிகள், கூர்மையான உதிரிகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால் டைவிங் செய்யும் பயணிகள் பாதுகாப்பாக உள்ளே சென்று ஆராய முடிகிறது. </p><p>விமானத்தின் உட்புறம் வழியாக நீந்திச் சென்று, காக்பிட் வரை சென்று அமர்வது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகப்பெரிய அனுபவமாக உள்ளது.
</p><p>
இந்த செயற்கை பாறை, கடலடியில் பல்வேறு மீன்கள் மற்றும் கடல் உயிரினங்களை ஈர்க்கிறது. துருக்கி இதற்கு முன் சிறிய விமானங்களை மூழ்கடித்திருந்தாலும், இவ்வளவு பெரிய அளவிலான விமானம் கடலடியில் வைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
</p><p></p><p>இன்று, குசாதாசி கடற்கரை, டைவிங் ஆர்வலர்களுக்கு உலகின் முக்கியமான இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது. </p><p>கடலடியில் விமானம் வழியாக நீந்திச் செல்லும் அனுபவம், சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத நினைவாக உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T00:57:26+00:00</updated>
        </entry>
    </feed>
