<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-18T08:23:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.1943 கோடிக்கு வாடகை ட்ரோன்களை வாங்கும் இந்தியா: MQ-9B Sea Guardian சிறப்பம்சங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-leased-mq-9b-seaguardian-valued-at-rs-1943-c-1787040800"></link>
            <id>https://news.lankasri.com/article/india-leased-mq-9b-seaguardian-valued-at-rs-1943-c-1787040800</id>
            <summary type="text">India leased MQ-9B Sea Guardian valued at Rs 1,943 crore: கடல்சார் கண்காணிப்பை பலப்படுத்தும் விதமாக MQ-9B Sea Guardian ட்ரோன்களை வாடகைக்கு எடுக்க இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>India leased MQ-9B Sea Guardian valued at Rs 1,943 crore: கடல்சார் கண்காணிப்பை பலப்படுத்தும் விதமாக MQ-9B Sea Guardian ட்ரோன்களை வாடகைக்கு எடுக்க இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.</p><h2>இந்திய அரசின் வாடகை ட்ரோன் ஒப்பந்தம்</h2><p>இந்தியாவின் நீண்ட தூர உளவு மற்றும் வான் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் பாதுகாப்பு தளவாட நிறுவனமான ஜெனரல் அட்டாமிக்ஸிடம் (General Atomics) இருந்து இரண்டு MQ-9B SeaGuardian ட்ரோன்களை வாடகைக்கு எடுக்கும் புதிய ஒப்பந்தத்தை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.</p><p> 30 மாத வாடகை என்ற திட்டத்தின் கீழ் டெல்லியில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1943 கோடியாகும்.</p><p> இந்த தற்காலிக ஏற்பாடானது இந்திய பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளுக்கான உடனடி தயார் நிலையை உறுதிப்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa40befc-2bbd-462e-b6b9-e52a172fe908/26-6a84142183d62.webp' /></p><h2> MQ-9B Sea Guardian ட்ரோன்களின் சிறப்பம்சங்கள்</h2><p>MQ-9B Sea Guardian ட்ரோன்கள் நீண்ட தூரம் பறந்து உளவு பணிகள் மேற்கொள்வதிலும், மிக துல்லியமான தாக்குதல்களையும் முன்னெடுக்க இது அதி நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டதாகும்.</p><p> கிட்டத்தட்ட 40,000 அடிக்கு மேல் திறம்பட இயங்கக்கூடிய MQ-9B Sea Guardian ட்ரோன்கள் இடைவிடாமல் 30 மணி நேரத்திற்கும் மேலாக பறக்க கூடியது.</p><p> நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டு இருப்பதால் கடல் ரோந்து பணிகளில் இது சிறப்புடையதாக விளங்குகிறது.</p><p> வாடகை ஒப்பந்தம் தவிர, இந்திய ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளுக்கும் 31 MQ-9B ட்ரோன்களை வாங்க சுமார் $3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T08:13:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sixth-heatwave-people-hit-with-1786990554"></link>
            <id>https://news.lankasri.com/article/sixth-heatwave-people-hit-with-1786990554</id>
            <summary type="text">Another 1.4m people are hit with hosepipe ban: ஆறாவது வெப்ப அலை வீசவுள்ள நிலையில், மேலும் 1.4 மில்லியன் மக்கள் குழாய் நீர் பயன்பாட்டுத் தடையைச் சந்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Another 1.4m people are hit with hosepipe ban: ஆறாவது வெப்ப அலை வீசவுள்ள நிலையில், மேலும் 1.4 மில்லியன் மக்கள் குழாய் நீர் பயன்பாட்டுத் தடையைச் சந்திக்கின்றனர்.
</p><p>செப்டம்பர் மாதம் பிரித்தானியா இந்த ஆண்டின் ஆறாவது வெப்ப அலைக்கு இலக்காகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><h2>சராசரிக்கு மேல்</h2><p>
</p><p>பரவலான வறட்சிக்கு மத்தியில் நாடு மழைக்காக ஏங்கும் வேளையில், ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 14 வரையிலான காலகட்டத்திற்கான வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய கணிப்பின் அடிப்படையில், அக்காலகட்டத்தில் வெப்பநிலை ஒட்டுமொத்தமாக சராசரிக்கு மேல் இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e120af9-2e9f-4c62-82e4-ba9ec37a4111/26-6a834fdd5b11a.webp' /></p><p> </p><p>மேலும், பிரித்தானியாவின் தெற்குப் பகுதிக்கு அருகில் உயர் அழுத்த மையம் உருவாகக்கூடும் என்றும், அதே வேளையில் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் நிலையற்ற வானிலை உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதற்கிடையில், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வறண்ட, நிலையான வானிலை நிலவ சற்றே அதிக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>
மேலும், இந்தக் கோடையில் நிலவிய தீவிர வானிலை காரணமாக நாடு முழுவதும் ஐந்து வெப்ப அலைகள் ஏற்பட்டன; இவற்றில் இறுதியாக ஏற்பட்ட வெப்ப அலையின்போது, ​​பிரித்தானியாவில் இந்த ஆண்டின் மிக அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.</p><p></p><p> </p><p>ஆகஸ்ட் 13 அன்று கியூ கார்டன்ஸில் (Kew Gardens) 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தற்காலிகமாகப் பதிவானது. வெப்ப அலை என்பது ஆண்டின் அந்தப் பருவத்திற்கு எதிர்பார்க்கப்படும் இயல்பான வானிலையை விட அதிக வெப்பம் நிலவும் ஒரு நீண்ட காலப்பகுதியாகும்; </p><p>ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து குறைந்தது மூன்று நாட்களுக்கு வெப்ப அலைக்கான வரம்பு அளவிலோ அல்லது அதற்கு மேலோ பதிவாகும்போதே இது வெப்ப அலையாகக் கருதப்படுகிறது. </p><p>பிரித்தானியாவில் 2026-ஆம் ஆண்டின் கோடைக்காலம், பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து மிக வெப்பமானதாக அமையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் வெப்ப அலை குறித்த எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளது.</p><h2>செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல்</h2><p> </p><p>இந்த நிலையில், மற்றொரு நீர் நிறுவனமான 'வெசெக்ஸ் வாட்டர்' (Wessex Water), குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. </p><p>பாத், சோமர்செட், டோர்செட் மற்றும் வில்ட்ஷயர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 14 லட்சம் வாடிக்கையாளர்களுக்கும் இந்தத் தற்காலிக நடவடிக்கை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc825080-d56a-4861-a15d-5ac81f47d9d6/26-6a834fdca580b.webp' /></p><p> </p><p>வெசெக்ஸ் வாட்டர் நிறுவனம் கடைசியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1976-ல் தற்காலிகத் தடையை அமுல்படுத்தியிருந்தது. வெசெக்ஸ் வாட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான ரூத் ஜெபர்சன் தெரிவிக்கையில், அத்தியாவசியப் பயன்பாட்டிற்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவில்லை என்றாலும், இந்த சாதனை அளவிலான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், </p><p>விநியோக வலையமைப்பு முழுவதும் தண்ணீரை போதுமான வேகத்தில் கொண்டு சேர்ப்பதே எங்களுக்கு சவாலாக இருந்து வருகிறது என்றார். </p><p>வேறு ஒன்பது நீர் நிறுவனங்கள் பிரித்தானியாவில் சுமார் 27 மில்லியன் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளன, ஆனால் விரைவில் கார் கழுவும் நிலையங்கள் மற்றும் தனியார் நீச்சல் குளங்களிலும் இந்தத் தடைகள் விதிக்கப்படலாம் என்று அமைச்சர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T07:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா மாகாணமொன்றில் இளம்பெண்ணொருவருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/16-year-old-women-shot-dead-in-edmonton-1787039271"></link>
            <id>https://news.lankasri.com/article/16-year-old-women-shot-dead-in-edmonton-1787039271</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இளம்பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பொலிசார் குற்றவாளியை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.


கனடாவில் ஆல்பர்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இளம்பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பொலிசார் குற்றவாளியை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
</p><p>

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
</p><h3>
சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்
</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ad024b-505e-4175-8740-0388979e0eda/26-6a840e28eb6c9.webp' /></p><p>பொலிசார் அந்த வீட்டுக்கு விரைந்த நிலையில், அங்கு படுகாயமடைந்த நிலையில் 16 வயதுப்பெண்ணொருவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.
</p><p>
அந்தப் பெண்ணின் பெயர் ஜாஸ்மின் தேசி என்பதும் அவருக்கு இரண்டு தங்கைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22f30c1e-3423-494e-a279-3c3ce04841be/26-6a840e299d996.webp' /></p><p>
இந்த சம்பவம் தொடர்பில் யாருக்காவது தகவல் ஏதேனும் தெரியுமானால், அல்லது, தங்கள் வாகனங்களில் உள்ள கமெராக்களில் இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் ஏதேனும் பதிவாகியிருக்குமானால், தங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் செல்வந்தர்களின் வீடுகளைக் குறிவைத்துக் கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thieves-target-geneva-super-riches-luxury-home-1787038593"></link>
            <id>https://news.lankasri.com/article/thieves-target-geneva-super-riches-luxury-home-1787038593</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஏரியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் வாழும் செல்வந்தர்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் அச்சத்தை உருவாக்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஏரியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் வாழும் செல்வந்தர்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் அச்சத்தை உருவாக்கியுள்ளன.</p><p>


சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஏரியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில், வங்கியாளர்கள், பெரு வர்த்தகர்கள் முதலான பெரும் செல்வந்தர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.</p><p>

இந்நிலையில், அப்பகுதியில் செல்வந்தர்களைக் குறிவைத்து பயங்கர கொள்ளைச் சம்பவங்கள் நடந்துவருகின்றன.
</p><h3>
செல்வந்தர்களின் வீடுகளைக் குறிவைத்துக் கொள்ளை
</h3><p>
செல்வந்தர்களின் வீடுகளுக்குள் ஆயுதங்களுடன் நுழையும் கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் வீடுகளில் இருப்பவர்களை மிரட்டி, பணம், நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் முதலான விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் செல்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dce1968d-8628-4f3b-b6a5-7061033fad23/26-6a840b82c4722.webp' /></p><p>
தடுத்தால் அடி உதைதான். அத்துடன், ஒரு செல்வந்தர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள், அந்தக் குடும்பத்திலுள்ள ஒரு பதின்ம வயதுப் பிள்ளையையும் கடத்திச் சென்றுள்ளார்கள்.
</p><p>
பிரான்ஸ் எல்லை அருகே அந்தப் பிள்ளையை விடுவித்துள்ளது அந்தக் கொள்ளைக் கூட்டம்.</p><p>

அதாவது, இந்தக் கொள்ளையர்கள், சுவிட்சர்லாந்தை ஒட்டியுள்ள பிரான்ஸ் பகுதிகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதாக நம்பப்படுகிறது.&nbsp;</p><p></p><p>
கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே ஜெனீவா ஏரி பகுதியில் இப்படி சுவிஸ் செல்வந்தர்களைக் குறிவைத்து 18 கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
</p><p>
பலர் பொலிசாரை நம்பாமல், தனியார் பாதுகாவலர்களை ஏற்பாடு செய்துவருகிறார்கள்.</p><p>

விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்தில் ஜெனீவா ஏரி பகுதி, செல்வந்தர்களையும், பெரும் வர்த்தக நிறுவனங்களையும் ஈர்க்கும் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
</p><p>
ஆனால், இந்த கொள்ளைச் சம்பவங்கள் அந்த பகுதியின் புகழைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆகவே, அதிகாரிகள் அந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:36:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட உள்ள பாதிப்பு - ஆராய்ச்சியாளர் வெங்கடேசன் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scientist-venkatesan-about-el-nino-in-tamilnadu-1787038038"></link>
            <id>https://news.lankasri.com/article/scientist-venkatesan-about-el-nino-in-tamilnadu-1787038038</id>
            <summary type="text">El Nino in tamil naduஎல் நினோவால் தமிழ்நாடு எதிர்கொள்ள உள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சியாளர் வெங்கடேசன் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். 

எல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>El Nino in tamil naduஎல் நினோவால் தமிழ்நாடு எதிர்கொள்ள உள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சியாளர் வெங்கடேசன் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். </p><h3>

எல் நினோவில் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு? </h3><p>

இது குறித்து பேசிய அவர், "எல் நினோ உருவாகிவிட்டது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வழக்கமான வெப்பநிலையை விட 2.2 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. 

இதன் காரணமாக இந்தியாவில் வறட்சி, வெள்ளம் ஆகியவை ஏற்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f02e6db-5f26-4f29-b178-61f7e7a54fb1/26-6a84095866fce.webp' /></p><p>தமிழ்நாட்டில் இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை குறையும். வடகிழக்கு பருவ மழை அதிகரிக்கும்" என தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், எல் நினோ காலத்தில் புயல் வலிமையாக மற்றும் தீவிரமாக இருக்கும். அதிக மழைப்பொழிவு ஏற்படும் போது, அந்த நீரை வெளியேற்றுவதற்கான திட்டத்துடன் தயாராக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

சூப்பர் எல் நினோ ஏற்படுவது உறுதி, ஆனால் அதன் பாதிப்பை குறைக்ககூடிய வகையில் indian ocean dipole உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், எல் நினோ சென்னைக்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா?, indian ocean dipole என்றால் என்ன என பல்வேறு தகவல்களை ஆராய்ச்சியாளர் வெங்கடேசன் விரிவாக வழங்கியுள்ளார். </p><p>

மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க</p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HYAY5fFh4XI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:27:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் உதவியாளருடன் ட்ரம்பின் உறவு என பேச்சு: செனட்டரை விளாசிய பெண் பிரமுகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anna-luna-oppose-ossoff-speech-about-trump-harp-1787037101"></link>
            <id>https://news.lankasri.com/article/anna-luna-oppose-ossoff-speech-about-trump-harp-1787037101</id>
            <summary type="text">Anna luna oppose ossoff speech about trump: உதவியாளருடனான ட்ரம்பின் உறவு குறித்து பேசத் தொடங்கிய செனட்டர் மீது MAGA அமைப்பினர் கடுமையான வசவுகளை வீசினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Anna luna oppose ossoff speech about trump: உதவியாளருடனான ட்ரம்பின் உறவு குறித்து பேசத் தொடங்கிய செனட்டர் மீது MAGA அமைப்பினர் கடுமையான வசவுகளை வீசினர்.&nbsp;&nbsp;</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இளம் உதவியாளர் உறவு குறித்து கேலி செய்த செனட்டர் ஜான் ஓஸோஃபை கன்சர்வேடிவ்கள் சாடினர்.&nbsp; &nbsp;</p><h2>நடாலி ஹார்ப்&nbsp;குறித்து கேலி </h2><p>ஜார்ஜியாவில் நடந்த ஒரு பேரணியில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜோன் ஓஸோஃப்பும் (Jon Ossoff) இருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eed02690-a704-4dc3-86c8-03f106ee4659/26-6a84074120a7f.webp' />&nbsp;</p><p></p><p>
இவர் 2028யில் தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பரிந்துரைக்கான போட்டியாளராக கருதப்படுகிறார்.</p><p> 

ஓஸோஃப் தனது பேச்சின்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இளம் உதவியாளர் நடாலி ஹார்ப்பின் உறவு குறித்து கேலி செய்தார்.</p><p> 

அவர் தனது ஆதரவாளர்களிடம், ட்ரம்ப் பறக்கும் மாளிகையில் நடாலியுடன் பயணிக்க விரும்புகிறார் என்று குறிப்பிட்டார். 

அவரது இந்தப் பேச்சு கன்சர்வேடிவ்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.&nbsp;</p><h2>கடுமையான வசவுகளை</h2><p>ஓஸோஃப்பின் பேச்சினை அவர்கள் கடுமையாக சாடினர். மேலும், MAGA அமைப்பினர் அவர் மீது கடுமையான வசவுகளை வீசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0abdfae1-c799-48b0-a6c1-b9f61185b0e5/26-6a8407405af16.webp' /></p><p>
 
குறிப்பாக, 'ஓஸோஃப் திமிர்பிடித்தவர்' என்று குறிப்பிட்ட காங்கிரஸின் அன்னா பவுலினா லூனா, கவர்ச்சிகரமான இளம் பெண்கள் தங்கள் வேலையில் நல்லவர்களாக இருக்க முடியாதா? இந்தப் பதவிகளுக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்ற உண்மையின் அடிப்படையில் அதிகாரப் பதவிகளுக்கு உயர்த்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.</p><p>

முக்கியமான பிரச்சனைகளை கையாள்வதற்கு பதிலாக, ஹார்ப்பை பற்றி முரட்டுத்தனமான, அருவருப்பான வதந்தியைப் பரப்புவதில் ஓஸோஃப் கவனம் செலுத்துவதாக லூனா குற்றம்சாட்டினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3e4f7b0-e2f8-4186-bb4f-e67175e17664/26-6a84094cab161.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:17:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெங்களூருவில் தந்தை, 4 வயது மகன் படுகொலை: காதலனுடன் இணைந்து மனைவி நடத்திய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wife-killed-husband-and-son-in-chikkabanavara-1787037335"></link>
            <id>https://news.lankasri.com/article/wife-killed-husband-and-son-in-chikkabanavara-1787037335</id>
            <summary type="text">பெங்களூருவில் கணவன் மற்றும் 4 வயது மகனை காதலனுடன் இணைந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மற்றும் மகனை கொன்ற மனைவி
பெங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெங்களூருவில் கணவன் மற்றும் 4 வயது மகனை காதலனுடன் இணைந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> கணவன் மற்றும் மகனை கொன்ற மனைவி</h2><p>
பெங்களூருவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சிக்பனாவாராவில்(Chikkabanavara) 34 வயது கணவன் அபிநந்தன் மற்றும் அவரது 4 வயது மகன் யதுவீர் இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர்.</p><p>பொலிஸார் விசாரணையில், மனைவி ஹரிணிக்கும் கணவன் அபிநந்தனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஹரிணி கரண்டியால் அபிநந்தனை தாக்கியுள்ளார்.</p><p> இதையடுத்து இருவரும் தனித்தனி அறைகளுக்கு சென்ற நிலையில், ஹரிணி தன்னுடைய காதலன் வினய்யை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d966da3-9447-49f7-b0d7-a5997a69f30e/26-6a840699549a6.webp' /></p><p> மேலும் வினய் வருவதற்கு முன்னதாக வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஹரிணி அணைத்துள்ளார்.</p><p>பின்னர் இருவரும் இணைந்து அபிநந்தனை தாக்கி மூச்சு திணறடித்து கொலை செய்துள்ளனர்.</p><p></p><p> வீட்டில் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு எழுந்த 4 வயது சிறுவன் யதுவீரையும் சாட்சி இல்லாமல் செய்வதற்காக தலையணையை வைத்து அமுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.</p><p> இந்த சம்பவத்தை தொடர்ந்து மனைவி ஹரிணி உடனடியாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த முழு கொலைச் சதியும் தெரியவந்துள்ளது.</p><p> தலைமறைவாக உள்ள காதலன் வினய் கைது செய்யப்பட்ட பிறகே இந்த சம்பவம் தொடர்பான முழு உண்மையும் தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-18T07:15:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2009 இல் 3 மணி நேர உண்ணாவிரதம் நாடகம் - திமுகவை சீண்டிய அமைச்சர் நிர்மல் குமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nirmal-kumar-say-2009-karunanidhi-hunger-strike-1787033086"></link>
            <id>https://news.lankasri.com/article/nirmal-kumar-say-2009-karunanidhi-hunger-strike-1787033086</id>
            <summary type="text">2009 இல் 3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம் என அமைச்சர் நிர்மல் குமார் திமுகவை சீண்டும் வகையில் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

கர்நாடகாவில் சுட்டுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2009 இல் 3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம் என அமைச்சர் நிர்மல் குமார் திமுகவை சீண்டும் வகையில் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.</p><h3>

கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்கள்</h3><p> 

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
</p><p>
இந்த தீர்மானம் மீது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42f1fe2-709d-4192-b12b-21b60c6dd8bd/26-6a83f601792be.webp' /></p><p>

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும். </p><p>

கர்நாடகா வழங்கிய ரூ.5 லட்சம் நிதியுதவி மிக குறைவானது, தமிழக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடக்காத வகையில் தமிழக அரசு கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என பேசினார்.</p><p>

இதனையடுத்து பேசிய பாமக எம்எல்ஏ கணேஷ் குமார், "தங்கள் மாடுகளை தேடி சென்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் இந்த சம்பவம் தற்காப்புக்காக நடைப்பெற்ற சம்பவம் என கர்நாடக வனத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் பதிவு செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/223d93d1-ec8c-4c83-a221-23c38a3c1447/26-6a83f600c3c63.webp' /></p><p>
இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் மட்டும் தான் உரிய நீதி கிடைக்கும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><h3> 

3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம்</h3><p>

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "3 தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக அரசு உறுதி அளித்தது. 

உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p>

இடைக்கால நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கிய கர்நாடக அரசு விசாரணைக்கு பின் கூடுதல் நிவாரணம் தருவதாக கூறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/044e72b2-8e67-4ac1-8de2-ea7aa3b3c566/26-6a83f6001aa00.webp' /></p><p>

கர்நாடக வனத்துறை நடத்தியது படுகொலை என குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்தார். தமிழர்கள் கொலை தொடர்பாக கர்நாடக அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல, விசாரணை தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார்.</p><p>
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கை தமிழக முதல்வர் மட்டுமே. இன்று தமிழர்களுக்கு எங்கு தீங்கு ஏற்பட்டாலும், முதல் குரல் முதல்வரின் குரலாக இருக்கும்.&nbsp;</p><p>

ஒரு சிலருக்கு திடீர் தமிழ் தமிழர் பாசம் இருக்கும் இதெல்லாம் நாம் வரலாற்றில் பார்த்தது தான்.&nbsp;</p><p></p><p>

2009 ஆம் ஆண்டில் 3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம். அதைத்தொடர்ந்து நடைபெற்ற கேள்விகளில், மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என பேசினார். </p><p>

இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அமைச்சரை உட்கார சொன்ன சபாநாயகர் தீர்மானம் தவிர்த்து மற்ற வார்த்தைகளை அவைகுறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T06:55:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-dies-in-philippines-school-gun-shooting-1787033772"></link>
            <id>https://news.lankasri.com/article/2-dies-in-philippines-school-gun-shooting-1787033772</id>
            <summary type="text">Philippines school gun shooting: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார்.


தென்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Philippines school gun shooting: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார்.
</p><p>

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் துப்பாக்கிக் கலாச்சாரம் மெல்ல பரவி வருகிறது.
</p><p>
இந்நிலையில், தெற்கு பிலிப்பைன்ஸிலுள்ள பள்ளி ஒன்றிற்குள் இன்று காலை இரண்டு துப்பாக்கிகளுடன் நுழைந்துள்ளார் மாணவர் ஒருவர்.</p><h3>

பள்ளியில் துப்பாக்கிச்சூடு</h3><p>

வகுப்பு ஒன்றில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஒரு ஆசிரியரை அவர் துப்பாக்கியால் சுட, குறி தப்பியதால் ஆசிரியர் உயிர் பிழைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abdd153f-802a-462a-830e-7b2dafc60ad8/26-6a83f8ae1ae8d.webp' /></p><p>
உடனே மற்றொரு வகுப்புக்குச் சென்ற அந்த மாணவர், அங்கிருந்த ஒரு மாணவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தன்னைத்தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
அவர்கள் இருவருமே பலியாகிவிட்டுள்ளார்கள். மேலும் இருவர் காயமடைந்துள்ளார்கள்.
</p><p>
தாக்குதலை தாக்குதல்தாரி இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
உடனடியாக பள்ளியிலிருந்த மற்ற மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
தாக்குதல்தாரி, உயிரிழந்த மாணவர், காயமடைந்தவர்கள் என யாருடைய பெயர் முதலான விவரங்களும் வெளியாகவில்லை.
</p><p>
விடயம் என்னவென்றால், ஜூன் மாதம், 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்கள், பிலிப்பைன்ஸ் பள்ளி ஒன்றில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டார்கள், சுமார் 20 மாணவர்கள் காயமடைந்தார்கள்.
</p><p>
அதைத்தொடர்ந்து, பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிசார் உறுதியளித்திருந்த நிலையில் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T06:17:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாஸ்கோவை குறிவைத்த 620 ட்ரோன்கள்: கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/620-ukrainian-drones-attack-moscow-1787033483"></link>
            <id>https://news.lankasri.com/article/620-ukrainian-drones-attack-moscow-1787033483</id>
            <summary type="text">ரஷ்ய தலைநகரை குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய தலைநகரை குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.</p><h2> உக்ரைன் ட்ரோன் தாக்குதல்</h2><p>
திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணி வரை ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து சுமார் 620 உக்ரைனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தயுள்ளன.</p><p>ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட முன்னோடி இல்லாத மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இதுவாகும்.</p><p> மாஸ்கோ நகர மேயர் செர்கே சோபியான்னின் தகவல்படி, கிட்டத்தட்ட 180 ட்ரோன்களை ரஷ்ய வான் படை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி அழித்ததாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7a22d91-7505-491e-989a-2ccc33a6df1a/26-6a83f78c7ed19.webp' /></p><p> மேலும் மாஸ்கோவை நோக்கி அடுத்தடுத்து ட்ரோன்கள் படை எடுத்ததாகவும் மேயர் சோபியான்ன் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> கடந்த 2 ஆண்டுகளில் தலைநகர் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இது என்று ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ் (TASS) தகவல் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-18T06:11:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[Glass Skin வேண்டுமா? உங்களுக்கான குறிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/glass-skin-korean-tips-in-tamil-1787032421"></link>
            <id>https://news.lankasri.com/article/glass-skin-korean-tips-in-tamil-1787032421</id>
            <summary type="text">Korean Glass Skin Tips: இன்றைய இளசுகளுக்கு கொரியன் நட்சத்திரங்கள் என்றால் அலாதி பிரியம், இதற்கு அவர்களது பளபளப்பான சருமமும் வசீகரமான தோற்றமும் முக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Korean Glass Skin Tips: இன்றைய இளசுகளுக்கு கொரியன் நட்சத்திரங்கள் என்றால் அலாதி பிரியம், இதற்கு அவர்களது பளபளப்பான சருமமும் வசீகரமான தோற்றமும் முக்கிய காரணமாக இருக்கும்.</p><h2>Glass Skin</h2><p>

Glass Skin என்றழைக்கப்படும் முகத்தில் துளைகளே இல்லாத கண்ணாடி போன்ற சருமத்திற்காக பலரும் மெனெக்கெடுகின்றனர், இதற்காக அவர்கள் விலையுயர்ந்த க்ரீம்களை பயன்படுத்துவதில்லை, மாறாக அழகு பராமரிப்பு என்பது அவர்களது வாழ்க்கை முறையுடன் ஒன்றிணைந்தது.
</p><p>
சீரான பராமரிப்பும், சருமத்திற்கு ஆழமான ஈரப்பதமும் இயல்பாகவே கண்ணாடி போன்ற சருமத்தை உங்களுக்கு வழங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09949ee6-07c6-402d-9240-7c665ca5859c/26-6a83f58b6d2f8.webp' /><br></p><p>
</p><p>
இதற்காக நீங்கள் பின்பற்ற வேண்டிய ஆறு முக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.</p><h2>Korean Beauty Tips</h2><p>
</p><p>* இரவில் படுப்பதற்கு முன்பாக இரண்டு முறை முகத்தை கழுவ வேண்டும், முதலில் சன்ஸ்கிரீன் பயன்படுத்தி கொள்ளுங்கள், இது அதிகப்படியான எண்ணெயை நீக்கும், தொடர்ந்து water-based foaming cleanserயை பயன்படுத்துங்கள்.
</p><p>
* முகத்தை கழுவிமுடித்தவுடன் துண்டை வைத்து வேகமாக துடைக்க வேண்டாம், மாறாக மென்மையாக ஈரப்பதத்தை போக்கவும்.
</p><p>
* பின்னர் watery toner பயன்படுத்திவிட்டு சீரம் பயன்படுத்தலாம், தொடர்ந்து லோஷன் பயன்படுத்தவும், இவ்வாறு செய்யும் போது சருமத்துறைகளை அடைக்காமல் உள்ளிருந்து பாதுகாக்கிறது.
</p><p>
* வெயில் காலங்களில் மட்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் எல்லா காலநிலைகளிலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தை காக்கிறது.
</p><p>
* மிக முக்கியமாக சருமத்தை சுத்தப்படுத்த மெலிதான face scrubs பயன்படுத்தவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85e72fee-6d54-434a-9d56-e1f89837f819/26-6a83f58c341e9.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-18T06:03:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல்: அமெரிக்கா நடத்தும் தீவிர ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-plans-to-nuclear-attack-on-iran-1787025070"></link>
            <id>https://news.lankasri.com/article/us-plans-to-nuclear-attack-on-iran-1787025070</id>
            <summary type="text">ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரான் மீது அணு ஆயுதம்ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><h2> ஈரான் மீது அணு ஆயுதம்</h2><p>ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட கருத்தில், அமெரிக்கா இனி வெளிநாட்டு போர்களில் ஈடுபடாது என்று டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்து இருப்பதாகவும், ஆனால் ஈரான் மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கான வரம்பை அவரது அரசு நிர்வாகம் குறைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca35f0b2-8627-4764-8368-adb0120d945e/26-6a83d6afd71a9.webp' /></p><p style="margin-left: 25px;"></p><p> அமெரிக்க உளவுத்துறை வழங்கும் அறிக்கைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக இஸ்ரேல் அளிக்கும் எச்சரிக்கைகளை கேட்டு மட்டுமே செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>அமெரிக்கா ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதுடன், அது மிகப்பெரிய உலகப் போராக மாறி தாங்க முடியாத பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p> முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை மாளிகை இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T06:00:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொறுங்கிய இஸ்ரேல் கிரிக்கெட் அணி: 7.3 ஓவரில் 95 ஓட்டங்கள் விளாசி ஜேர்மனி வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-beat-israel-by-9-wickets-qualifier-1787032556"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-beat-israel-by-9-wickets-qualifier-1787032556</id>
            <summary type="text">Germany beat Israel by 9 Wickets: கேரவாவில் நடந்த டி20 போட்டியில் ஜேர்மனி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இஸ்ரேலை வீழ்த்தியது.  

ஐசிசி ஆடவர் டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany beat Israel by 9 Wickets: கேரவாவில் நடந்த டி20 போட்டியில் ஜேர்மனி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இஸ்ரேலை வீழ்த்தியது. </p><p> 

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ண துணை மண்டல ஐரோப்பிய குவாலிஃபையர் போட்டியில் ஜேர்மனி அணி இஸ்ரேலை வீழ்த்தியது.&nbsp;</p><h2>ஐரோப்பிய குவாலிஃபையர் போட்டி</h2><p>
ஜேர்மனி மற்றும் இஸ்ரேல் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ண துணை மண்டல ஐரோப்பிய குவாலிஃபையர் போட்டி கேரவாவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a3f9c1e-517a-4efe-9304-ee2832c3a8e8/26-6a83f3ef52168.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் களமிறங்கிய இஸ்ரேல் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 94 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
அதிகபட்சமாக நிவ் நகவ்கர் 21 ஓட்டங்களும், யைர் நகவ்கர் 16 ஓட்டங்களும் எடுத்தனர். ஜதிந்தர் குமார் மற்றும் அஹ்மதுல்லா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><h2>ஜேர்மனி&nbsp;அபார வெற்றி</h2><p>
பின்னர் ஆடிய ஜேர்மனி அணி 7.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 95 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. </p><p>

பென் கோஹ்லர்-கேட்மோர் (Ben Kohler-Cadmore) 26 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் விளாசினார்.</p><p> 

ஜோஷுவா வான் ஹீர்டென் (Joshua van Heerden) 17 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/122ae486-a593-4b27-8701-7fd98b1ba8c2/26-6a83f58b29c50.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T06:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய தேர்தல் நடைமுறைகளை பாராட்டிய டொனால்ட் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-praises-indian-election-system-1787030241"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-praises-indian-election-system-1787030241</id>
            <summary type="text">Trump Praises India&#039;s Voting Process: இந்திய தேர்தல் நடைமுறைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார். டிரம்ப் பாராட்டுஅமெரிக்காவில் தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Praises India's Voting Process: இந்திய தேர்தல் நடைமுறைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.</p><h2> டிரம்ப் பாராட்டு</h2><p>அமெரிக்காவில் தீவிரமான வாக்காளர் அடையாள சட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய தேர்தல் நடைமுறைகளை வெகுவாக பாராட்டியுள்ளார்.</p><p> &nbsp;அமெரிக்காவில் தேர்தல்களில் கட்டாய புகைப்பட அடையாள அட்டை நடைமுறை இல்லாதது குறித்து இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்(Gyanesh Kumar) உடன் நடைபெற்ற உரையாடல் குறித்து ட்ருத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27b0c661-1fd5-4cf4-8e76-adf51c383255/26-6a83eae3346b3.webp' /></p><p>அந்த உரையாடலின் போது, கட்டாய புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் எப்படி பாதுகாப்பான தேர்தலை நடத்த முடியும் என்று ஞானேஷ்குமார் தன்னிடம் கேள்வி எழுப்பியதாக டிரம்ப் மேற்கோள் காட்டினார்.</p><p></p><p> இந்தியாவில் நடந்த கடைசி தேர்தலில் 642 மில்லியன் மக்கள் தங்களது புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்கு செலுத்தியுள்ளனர். 1%க்கும் குறைவான மக்கள் மின்னஞ்சல் மூலமாக வாக்கு செலுத்தியுள்ளனர்.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Earlier this month, India’s Chief Election Commissioner, Gyanesh Kumar, asked our Administration — How can you have Elections in the U.S. without a valid Photo ID? India’s last Election had 646,000,000 Voters! Less than 1% voted by mail, and every single Voter had to have a VALID… <a href="https://t.co/dWtL287nkk">pic.twitter.com/dWtL287nkk</a></p>&mdash; Commentary Donald J. Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) <a href="https://x.com/TrumpTruthOnX/status/2089488950079668319?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>வாக்களித்த ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள&nbsp; அட்டையை வைத்துள்ளனர். </p><p>&nbsp;இந்த உரையாடல் டிரம்ப் தீவிரமாக வலியுறுத்தி வரும் The save america act மசோதாவிற்கு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-08-18T05:17:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு: குடும்பங்களின் இன்றைய நிலையைக் கூறும் ஒரு செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-skeleton-found-in-bengaluru-house-1787029712"></link>
            <id>https://news.lankasri.com/article/women-skeleton-found-in-bengaluru-house-1787029712</id>
            <summary type="text">பெங்களூருவில் வீடொன்றிற்குள் பெண்ணொருவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவரை யாரும் தேடவில்லை என்பது தெரியவந்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெங்களூருவில் வீடொன்றிற்குள் பெண்ணொருவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவரை யாரும் தேடவில்லை என்பது தெரியவந்துள்ளது.
</p><p>

கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் வீடொன்றில் தனியாக வசித்துவந்துள்ளார் தாக்‌ஷாயினி (52) என்னும் பெண்.
</p><p>
நீண்ட காலமாக அவரது வீடு திறக்கப்படாமலே இருந்த நிலையில், இம்மாதம் 7ஆம் திகதி, பொலிசாருக்கு அது குறித்து தகவலளிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
வீட்டுக்குள் பெண்ணின் எலும்புக்கூடு
</h3><p>
பொலிசார் அந்த வீட்டை சோதனையிட, அந்த வீட்டுக்குள் ஒரு எலும்புக்கூடு இருப்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffdd97b8-8434-4f05-ac9d-a9e1fd09343f/26-6a83e8d1effb4.webp' /></p><p>
பொலிசார் விசாரணையில் இறங்க, உயிரிழந்து எலும்புக்கூடாக கண்டுபிடிக்கப்பட்டது தாக்‌ஷாயினி என்பது அவரது சகோதரரான மகேஷ் என்பவர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், 2005ஆம் ஆண்டு தன் மகனை இழந்துள்ளார் தாக்‌ஷாயினி. அந்த இழப்பு அவருக்கு மன நல பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
2017ஆம் ஆண்டு தாக்‌ஷாயினியின் கணவரும் மரணமடைய, குடும்பத்தில் யாருடனும் எந்த தொடர்பும் இல்லாமல் தனியாகவே வாழ்ந்துவந்துள்ளார் அவர்.</p><p>

விடயம் என்னவென்றால், தாக்‌ஷாயினிக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணமாகி வேறொரு இடத்தில் வாழ்ந்துவரும் அந்தப் பெண் தன் தாயை நீண்ட காலமாக வந்து பார்க்கவே இல்லையாம்.&nbsp;</p><p></p><p>
ஆக, தாக்‌ஷாயினி எப்படி வாழ்ந்தார், எப்படி உயிரிழந்தார், எப்போது உயிரிழந்தார், எதனால் உயிரிழந்தார் என எந்த தகவல்களும் குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல், இறந்து, உடல் எலும்புக்கூடான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் அவர்.
</p><p>
கூட்டுக்குடும்பங்கள் என்னும் ஒரு முறை மாறி, குடும்பங்கள் சின்னச் சின்னக் குடும்பங்களாகி, ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு இடத்தில் குடியேறி, உற்றார் உறவினர்கள் யார், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துவிட்டது தெரிந்த விடயம்தான்.</p><p>

ஆனால், மிக வயது முதிர்ந்து தள்ளாடும் வயது அல்ல, வெறும் 52 வயதில் ஒரு பெண் வீட்டுக்குள் மரணமடைந்து, எலும்புக்கூடாகும் வரை அவரை யாரும் தேடவில்லை என்றால், இன்றைய குடும்பங்களின் நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பது மிகத் தெளிவாக புரிகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T05:11:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-to-bomb-oman-1786984671"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-to-bomb-oman-1786984671</id>
            <summary type="text">Donald Trump threatens to bomb Oman: ஓமான் இடையூறு செய்தால், அதன் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Donald Trump threatens to bomb Oman: ஓமான் இடையூறு செய்தால், அதன் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
</p><p>ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தனது முயற்சிக்கு ஓமான் நாடு தடையாக நின்றால், அந்நாட்டின் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மிரட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43ff41fc-ff1d-407f-a8a9-8a65287c751b/26-6a8338e24b290.webp' /></p><p>
</p><p>ஓமான் குறுக்கிட்டால், அவர்களைக் குண்டுமழையால் சின்னாபின்னமாக்குவோம் என்று ட்ரம்ப் திங்களன்று ஃபாக்ஸ் நியூஸிடம் கூறியுள்ளார்.</p><p> 
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாரம்பரியமாக ஒரு முக்கிய மறைமுகத் தொடர்பாளராகச் செயல்பட்டு வரும், அமெரிக்காவின் நீண்டகால உத்திசார்ப் பங்காளியான ஓமானை நோக்கி, அவர் இதுபோன்ற அச்சுறுத்தலை விடுப்பது இது இரண்டாவது முறையாகும். </p><p>இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக போர் தொடங்கி, 
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், </p><p>ஈரானுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட இராஜதந்திர வாய்ப்புக்கான காலக்கெடு முடிந்து, இறுதி உடன்பாடு எதுவும் தென்படாத நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி கடும் விரக்தியில் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என்றே கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>ஆனால், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு தமக்கு அவசரம் இல்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான அந்த இரண்டு மாத கால அவகாசம், எந்தவொரு திருப்புமுனையும் இன்றி திங்களன்று முடிவடைந்தது. </p><p>போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ட்ரம்ப் தொடர்ச்சியாக கூறிவந்தாலும், அத்தகைய ஒரு திருப்புமுனை எதுவும் ஏற்படாத நிலையில், சமீப மாதங்களில் ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் பேசி வந்துள்ளார். </p><p>ஈரான் விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் ட்ரம்ப் நிர்வாகம், போரில் இருந்து வெளியேற முடியாமலும் திணறி வருகிறது. ஆனால், ஈரான் சரணடைய வேண்டும் என்ற கோரிக்கையை ட்ரம்ப் தற்போது முன்வைத்துள்ளார். </p><p>இருப்பினும்
ஈரான் மீது புதிய காலக்கெடுவை விதிக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். ஈரான் விவகாரத்தில் தாம் அவசரப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>கிட்டத்தட்ட ஆறு மாத கால சண்டையால் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருகிறது என்ற கவலைகளையும் ட்ரம்ப் நிராகரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72fd95b-6795-47f1-9d7d-63b2b2e369d1/26-6a8338e19b1e0.webp' /></p><p> </p><p>ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இதுவரை செலவிட்ட ஆயுதங்கள் வெறும் சிறு அளவு மட்டுமே என்றும் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறியுள்ளார். மேலும், ஜோ பைடன் நிர்வாகத்தால் மேம்பட்ட ஆயுதங்கள் பல உக்ரைனுக்கு வழங்கப்பட்டதால் சிறு நெருக்கடி ஏற்பட்டது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>இதனிடையே, ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஈரானும் ஓமானும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் முன்னேற்றம் ஏற்படுவதாக தகவல் வெளியான நிலையிலேயே, ஓமான் மீது குண்டுவீசப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். </p><p>அமெரிக்காவுடன் ஓமானுக்கு இருக்கும் பல தசாப்த கால இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளுக்கு மேலதிகமாக, 53 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த வளைகுடா நாடு, போரில் ஒரு மத்தியஸ்தப் பாத்திரத்தை வகித்துள்ளதுடன், ஈரானின் தாக்குதலுக்கும் உள்ளானது. </p><p>ட்ரம்பின் சமீபத்திய சீற்றத்தையும் மீறி, ஓமானுடன் பேச்சுவார்த்தைகள் தீவிரமாகத் தொடர்வதாக ஈரான் வெளிவிவகார அமைச்சகம் திங்களன்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T03:25:26+00:00</updated>
        </entry>
    </feed>
