<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-31T12:59:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறு படகொன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/french-police-investigate-small-boat-migrant-death-1788179231"></link>
            <id>https://news.lankasri.com/article/french-police-investigate-small-boat-migrant-death-1788179231</id>
            <summary type="text">French police investigating the death of a migrant on a small boat: சிறு படகொன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர் தொடர்பில் பிரான்ஸ் பொலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>French police investigating the death of a migrant on a small boat: சிறு படகொன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர் தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><p>


பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர், பிரான்ஸ் நாட்டு பொலிசாரை தாக்கும் காட்சிகள் வெளியானது நினைவிருக்கலாம்.
</p><p>
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புலம்பெயர்வோர் வன்முறையைக் கையில் எடுக்கிறார்களோ என கேள்வி எழுந்துள்ளது.</p><h3>

சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர்
</h3><p>
இந்நிலையில், புலம்பெயர்வோர் வன்முறையைக் கையில் எடுக்கக்கூடும் என்னும் சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46cdaf75-1282-41e8-81ea-2731d52d524a/26-6a957320b5ea2.webp' /></p><p>

வெள்ளிக்கிழமையன்று, பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட சிறுபடகொன்றில் ஆப்கன் நாட்டவரான 34 வயது புலம்பெயர்வோர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அவரை, சக புலம்பெயர்வோர் தாக்கியிருக்கலாம் என பிரான்ஸ் பொலிசார் கருதுகிறார்கள்.
</p><p>
அத்துடன், அதே படகிலிருந்து காயமடைந்த மூவரையும் பிரான்ஸ் பொலிசார் மீட்டுள்ளார்கள். அவர்களில் ஒரு ஆண் கத்தியால் குத்தப்பட்டுள்ளார், இரண்டு பெண்களுக்கு தீக்காயங்கள் இருந்துள்ளன.&nbsp;</p><p></p><p>
இந்த சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
</p><p>
ஏற்கனவே, சென்ற மாதம் பிரான்சிலுள்ள கலாயிஸ் நகருக்கருகிலுள்ள கடற்கரை ஒன்றில் புலம்பெயர்வோர் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:27:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பார்க்கிங்கில் பெண் ஓட்டிய கார்..9 மாத குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-arrested-in-usa-child-death-of-car-hitting-1788178781"></link>
            <id>https://news.lankasri.com/article/women-arrested-in-usa-child-death-of-car-hitting-1788178781</id>
            <summary type="text">Two women arrested in new jersey for child death of car hitting: அமெரிக்காவில் பெண்ணொருவர் காரினால் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two women arrested in new jersey for child death of car hitting: அமெரிக்காவில் பெண்ணொருவர் காரினால் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.</p><p>


அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பார்க்கிங் பகுதியில் பெண்ணொருவர், கார் மூலம் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்தது.</p><p>


</p><h2>நியூ ஜெர்சி</h2><p>நியூ ஜெர்சியின் ஜாக்சன் டவுன்ஷிப்பில் உள்ள 'NPGS' என்ற Kosher மாளிகைக்கடை உள்ளது. 

இதன் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண் தனது 9 மாத ஆண் குழந்தையையும், 5 வயது மகளையும் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e359451-0f3a-43f4-a405-ef2d11abffc8/26-6a95716166910.webp' /></p><p>
அப்போது கார் ஒன்று அவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் குறித்த ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. </p><p>

மேலும் குழந்தையும் தாயும், அவரது ஐந்து வயது மகளும் காயமடைந்தனர். இதனையடுத்து மரியா கோபோன்-குஸ்மான் (20) என்ற பெண்ணும், லசாரோ ஃப்ளோரஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். </p><p>

மரியாவிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 

பின்னர் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே வாகனத்தை இயக்கியது, மனித உயிரிழப்பிற்கு காரணமான செயல் மற்றும் வாகனத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் ஃப்ளோரஸ் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>

 தற்போது அவர்கள் ஓஷன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் மற்றும் சிறைக்காவல் தொடர்பான விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர். 

இதற்கிடையில், இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06579ce1-9c0b-41ef-a283-b3113246b448/26-6a9571609f0d3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பெண்: தொடர்ந்து ஒலிக்கும் மொபைல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/family-hopes-women-phone-ringing-missed-in-flood-1788177640"></link>
            <id>https://news.lankasri.com/article/family-hopes-women-phone-ringing-missed-in-flood-1788177640</id>
            <summary type="text">&amp;nbsp;Family clings to hope for missing Toronto based techie: ரொரன்றோவில் வாழ்ந்துவந்த பெண்ணொருவர் நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நிலையில், அவரது மொபைல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Family clings to hope for missing Toronto based techie: ரொரன்றோவில் வாழ்ந்துவந்த பெண்ணொருவர் நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நிலையில், அவரது மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>

ரொரன்றோவில் வாழ்ந்துவந்த பெண்ணொருவர் நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நிலையில், அவரது மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளதால் அவர் பத்திரமாக இருக்கக்கூடும் என அவரது குடும்பத்தினருக்கு நம்பிகை ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56d9fc28-449c-47cf-aadc-e23dda730083/26-6a956ce98db74.webp' /></p><h3>
நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பெண்</h3><p>

ரொரன்றோவில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண்ணான ஸ்வாதி (Swati Bagrecha, 50), நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமானவர்களில் ஒருவர்.</p><p>

ஸ்வாதி நேபாளத்துக்கு புனித யாத்திரை சென்ற நிலையில், அவரது மகளான அனுஷ்கா (14), ஸ்வாதியின் சகோதரியுடன் இந்தியாவின் மும்பை நகரில் தங்கியுள்ளார்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஸ்வாதியை அவரது மொபைலில் தொடர்பு கொள்ள முயலும்போது, அவரது மொபைல் இன்னமும் ஒலிக்கிறது. அதாவது, மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அவருக்கு என்ன ஆயிற்று என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ள அதே நேரத்தில், அவரது மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளதால், அவர் பத்திரமாக இருக்கக்கூடும் என அவரது குடும்பத்தினருக்கு நம்பிக்கை உருவாகியுள்ளது.
</p><p>
கடைசியாக அவரது மொபைல் சீன எல்லையருகே பயன்பாட்டில் இருந்ததாக தெரிவித்துள்ள ஸ்வாதியின் சகோதரரான ப்ரஷாந்த், என்றாலும், அவரது மொபைல் எண் ரொரன்றோவில் பதிவு செய்யப்பட்டது என்பதால், அதை கண்காணிப்பது கடினமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்.
</p><p>
ஆகவே, ஸ்வாதியைக் கண்டுபிடிக்க உதவுமாறு, நேபாளத்தில் உள்ள இந்திய மற்றும் சீன தூதரங்களை அணுகியுள்ளதாக ஸ்வாதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> <b>WHATSAPP CHANNEL</b></a><b> </b>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்து - ஆந்திராவில் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apsrtc-plans-doorstep-bus-pickup-in-vijayawada-1788176874"></link>
            <id>https://news.lankasri.com/article/apsrtc-plans-doorstep-bus-pickup-in-vijayawada-1788176874</id>
            <summary type="text">apsrtc plan doorstep bus pickup in vijayawada: அரசு பேருந்து மூலம் வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் திட்டத்தை அறிமுகப்பட்ட ஆந்திராவின் APSRTC ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>apsrtc plan doorstep bus pickup in vijayawada: அரசு பேருந்து மூலம் வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் திட்டத்தை அறிமுகப்பட்ட ஆந்திராவின் APSRTC முன்வந்துள்ளது. </p><h3> 

வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்து</h3><p>

பொதுமக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில் அரசு சார்பில் பெரும்பாலும் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகிறது. </p><p>

ஆனால், பேருந்தில் பயணம் செய்வதற்கு நாம் குறிப்பிட்ட பேருந்து நிலையம் அல்லது பேருந்து நிறுத்தம் சென்றுதான் பேருந்தில் ஏற வேண்டி இருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/442aad8e-ff7f-4f87-bfaf-b3803fbf9e2b/26-6a9569eb7a666.webp' /></p><p> 

பொதுவாக குடும்பத்துடன் வெளியூர்களுக்கு செல்லும் போது அதிகப் பயணப் பொருட்களுடன் பேருந்து நிலையத்திற்கு பயணிகளுக்கு சிரமமாக இருக்கும்.</p><p> 

இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு, பயணிகளின் வீட்டு வாசலுக்கு வந்து பேருந்தை ஏற்றி செல்லும் திட்டம் ஆந்திராவில் தொடங்கப்பட உள்ளது.&nbsp;</p><p></p><p>

ஆந்திராவின் அரசு போக்குவரத்து கழகமான APSRTCயின், சூப்பர் சொகுசு, ஏசி மற்றும் ஸ்லீப்பர் பேருந்துகள் தொலைதூர இடங்களுக்குச் சேவை வழங்குகின்றன.
</p><p>
இதில், தொலைதூர பயணம் மேற்கொள்ள, 10க்கும் மேற்பட்ட டிக்கெட்களை மொத்தமாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வீட்டிற்கே பேருந்தை அனுப்பி ஏற்றி வர APSRTC முன்வந்துள்ளது. </p><p>

மொத்தமாக முன்பதிவு செய்யும் பயணிகள் இது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். </p><p>

முதற்கட்டமாக இந்த சேவை, சோதனை முறையில் விஜயவாடா நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:48:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... மொத்தமாக மூடி மறைக்கும் சீனா: திபெத் ஆர்வலர்கள் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-is-concealing-tibet-campaigners-1788174965"></link>
            <id>https://news.lankasri.com/article/china-is-concealing-tibet-campaigners-1788174965</id>
            <summary type="text">China is concealing scale of flood disaster: நேபாள - திபெத் வெள்ளப் பேரிடரை மூடி மறைக்கும் சீனா.
நேபாள வெள்ளப் பேரிடரில் திபெத்தில் மட்டும் 300 குடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>China is concealing scale of flood disaster: நேபாள - திபெத் வெள்ளப் பேரிடரை மூடி மறைக்கும் சீனா.
</p><p>நேபாள வெள்ளப் பேரிடரில் திபெத்தில் மட்டும் 300 குடியிருப்புகள் மொத்தமாக அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சீனாவின் உத்தியோகப்பூர்வ இறப்பு எண்ணிக்கை சமூக ஆர்வலர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed23013a-e28f-4f92-9158-bba3f39d7421/26-6a95627720d4c.webp' /></p><p>
</p><p>திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்த பொது விவாதங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன; பேரிடர் தொடர்பான தவறான தகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்காக குறைந்தது 10 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.</p><p> என்ன தண்டனை அளிக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், 16 பேர் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 261 வெளிநாட்டினர் உட்பட 546 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>ஆனால், குறைந்தது 300 வீடுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கும் என்றும் தங்களது தரப்பு நம்புவதாக திபெத்துக்கான சர்வதேச ஆர்வலர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.
</p><p>
நேபாளத்தில் காணக்கூடிய காட்சிகள், திபெத்தில் மறைக்கப்பட்டுள்ள உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>திபெத்தில் சேல் (Sale), செர்சுங் (Serchung), லாபி (Labi) மற்றும் ரிசி (Rizi) ஆகிய நான்கு கிராமங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன; அங்கு சுமார் 300 வீடுகள் மொத்தமாக சேதமடைந்திருப்பதாகவும், பலர் இன்னும் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும், திபெத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீன அதிகாரிகள் தெரிவித்ததை விட மிக அதிகமாக இருக்கலாம் என்றே திபெத்துக்கான சர்வதேச ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
</p><p>ஆகஸ்ட் 26 அன்று, நேபாள-திபெத் எல்லையில் பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் முழு கிராமங்களையும் அழித்து உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca6b6e9f-51d3-4ca4-a283-29632426f0f2/26-6a956277c99d5.webp' /></p><p> </p><p>நேபாளப் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐக் கடந்துள்ளது; மேலும் 4,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. மலையேற்றப் பயணிகளுக்கும் யாத்ரீகர்களுக்கும் புகழ்பெற்ற இப்பகுதிகளில், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் நிலை குறித்த தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. </p><p>இதனிடையே, எல்லையின் இருபுறமும் வழங்கப்பட்ட தகவல்களின் அளவில் பெரும் வித்தியாசம் காணப்படுவதாக திபெத் ஆதரவு அமைப்புகள் கூறுகின்றன.</p><p> வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் திபெத்தில், சுயாதீனமான சரிபார்ப்பு மிகவும் கடினமானது. சீனாவுக்கு வெளியே உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காகத் திபெத்தியர்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0df968c-2b05-4621-9f47-a2e5adb33cf0/26-6a9562787c28d.webp' /></p><p> </p><p>அரசு நடத்தும் Tibet Daily நாளிதழில் ஆகஸ்ட் 27 அன்று வெளியான ஒரு செய்தியின்படி, எல்லைக்கு அருகே 1,000-க்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டதாக வதந்திகளைப் பரப்பியதற்காக இரண்டு திபெத்தியர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர். </p><p>வெள்ளப் பேரிடர் நேபாளத்தில் மட்டுமே நடந்ததாகவும், திபெத்தில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் சீன அரசாங்கம் சித்தரிக்கிறது என திபெத்துக்கான சர்வதேச ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T11:14:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலுக்குத் தயாராகும் பிரான்ஸ்: அடுத்த பிரதமர் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/who-will-be-the-next-president-in-france-election-1788173734"></link>
            <id>https://news.lankasri.com/article/who-will-be-the-next-president-in-france-election-1788173734</id>
            <summary type="text">France Elections: Far-right party lead polls: பிரான்ஸ் ஜனாதிபதியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த பிரதமராகும் வாய்ப்பு, த...</summary>
            <content type="html"><![CDATA[<p>France Elections: Far-right party lead polls: பிரான்ஸ் ஜனாதிபதியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த பிரதமராகும் வாய்ப்பு, தீவிர வலதுசாரிக் கட்சி ஒன்றின் வேட்பாளருக்கு அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.</p><p>


பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து இப்போதே ஊடகங்களில் விவாதங்கள் துவங்கிவிட்டன.</p><h3>

தேர்தலுக்குத் தயாராகும் பிரான்ஸ்</h3><p>

இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம், 2027ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது.&nbsp;</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39e65546-9a28-4552-bc49-f39afeb3f2bc/26-6a955da961555.webp' /></p><p>
மேக்ரான் ஏற்கனவே இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்துவிட்டதால், பிரான்ஸ் சட்டப்படி இனி அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாது.
</p><p>
ஆக, அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்த விவாதங்களை ஊடகங்களும், பதவியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியை அரசியல் கட்சிகளும் துவங்கிவிட்டன.</p><h3>

அடுத்த பிரதமர் யார்?
</h3><p>
இந்நிலையில், National Rally கட்சியின் தலைவரான மரீன் லெ பென்னுக்கு (Marine Le Pen) அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57e11b71-3845-46d3-a75a-463cb8c71f80/26-6a955da8aee9e.webp' /></p><p>

விடயம் என்னவென்றால், இமானுவல் மேக்ரானைப் பொருத்தவரை, அவர் பணக்காரர்களின் ஜனாதிபதி என்ற கருத்தே நிலவுகிறது.

10 ஆண்டுகள் பிரான்சை ஆண்டும், அவர் சராசரி மக்களின் கஷ்டங்களை புரிந்துகொள்ளவில்லை என மக்கள் கருதுகிறார்கள்.
</p><p>
மாறாக, மரீன் லெ பென்னோ, மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்ய இருப்பதாகவும், அர்சு அதிகாரிகளின் ஊதியத்தை உயர்த்த இருப்பதாகவும், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரான்சிலிருந்து நாடுகடத்த உள்ளதாகவும் வாக்குறுதிகள் அளித்துவருகிறார்.&nbsp;</p><p></p><p>
ஆக, மரீன் லெ பென்னின் கட்சி தீவிர வலதுசாரிக் கட்சியாக இருந்தாலும், மேக்ரானுக்கு மாற்றாக அவருக்கு வாக்களிக்க மக்கள் திட்டமிட்டுவருகிறார்கள்.</p><p>

அடுத்ததாக, ஜான் லூக் மெலன்ஷான் (Jean-Luc Mélenchon) என்பவருக்கு ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0435fa5e-b166-43e1-a5f5-d33803263c94/26-6a955da8089c6.webp' /></p><p>
இந்த ஜான், ஏழைகளுக்கு வரி குறைப்பு, பணக்கார்களுக்கு அதிக வரி விதித்து ஏழைகளுக்கு உதவுவது என்னும் கருத்தை முன்வைத்துவருகிறார். ஆகவே, அவருக்கும் ஆதரவு நிலவிவருகிறது.</p><p>
விடயம் என்னவென்றால், தேர்தலுக்கு இன்னமும் 7 மாதங்கள் உள்ளன. ஆக, அந்த காலகட்டத்தில் மக்கள் எண்ணங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T10:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்கு கல்வி கற்கச் செல்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-study-permit-rules-changes-from-september-1-1788167658"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-study-permit-rules-changes-from-september-1-1788167658</id>
            <summary type="text">Canada Study Permit Rules changes from September 1: செப்டம்பர் 1ஆம் திகதி முதல், கனடா கல்வி அனுமதி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

கனடாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada Study Permit Rules changes from September 1: செப்டம்பர் 1ஆம் திகதி முதல், கனடா கல்வி அனுமதி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.</p><p>

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக கனடாவில் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக, அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றொரு விதி உண்டு.</p><p>

இந்நிலையில், அது தொடர்பான விதிகளில், நாளை முதல், அதாவது, 2026ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் சில மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன.
</p><h3>
கல்வி அனுமதி தொடர்பில் சில மாற்றங்கள்</h3><p>

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக தங்கள் வங்கிக்கணக்கில் 22,895 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fd50aea-7019-4dfd-80ed-b1b816ab54d2/26-6a9545ebdfc0f.webp' /></p><p>
தற்போது மீண்டும் அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆம், இனி வெளிநாட்டு மாணவர்கள் தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்கான தங்கள் வங்கிக்கணக்கில் 23,448 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இது மாணவர்கள் கல்வி கற்பது, போக்குவரத்து போன்ற விடயங்களை உள்ளடக்கிய கல்விக் கட்டணம் அல்ல. அது, தனிச் செலவு!
</p><p>
அத்துடன், கனடாவில் கல்வி கற்பதற்காக உரிமம் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களுடன் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேரை அழைத்துவருகிறார்களோ, அதற்கேற்ப அவர்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகையும் அதிகரிக்கும்.&nbsp;</p><p></p><p>
ஒரு மாணவர் தன்னுடன் தன் உறவினர்கள் இரண்டு பேரை கனடாவுக்கு அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 29,192 டொலர்கள் வைத்திருக்கவேண்டும்.</p><p>

மூன்று பேரை அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 35,888 டொலர்களும், நான்கு பேரை அழைத்துவர விரும்பினால் தன் வங்கிக்கணக்கில் 43,572 டொலர்களும் வைத்திருக்கவேண்டும்.
</p><p>
இப்படியே இந்த தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும். அதாவது, ஒரு மாணவர் கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்தால், அவர் கனடாவில் வேலை செய்யாமலே, தனது மற்றும் தன்னுடன் அழைத்துவந்துள்ள குடும்ப உறுப்பினர்களின் செலவுகளை சந்திக்கும் வகையில் தன்னிடம் போதுமான பணம் உள்ளது என்பதை நிரூபித்தாகவேண்டும் என்கிறது, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூட்டு விருத்தசேதனச் சடங்கில் பலியான 43 சிறுவர்கள்: நாடொன்றில் அதிரவைத்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mass-circumcision-ceremony-1788168848"></link>
            <id>https://news.lankasri.com/article/mass-circumcision-ceremony-1788168848</id>
            <summary type="text">Mass circumcision ceremony leaves 43 boys dead: கூட்டு விருத்தசேதனச் சடங்கில் 43 சிறுவர்கள் மரணமடைந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் நடந்த கூட்டு விருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mass circumcision ceremony leaves 43 boys dead: கூட்டு விருத்தசேதனச் சடங்கில் 43 சிறுவர்கள் மரணமடைந்துள்ளனர்.
</p><p>தென்னாப்பிரிக்காவில் நடந்த கூட்டு விருத்தசேதனச் சடங்கில் 43க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மரணமடைந்ததுடன் டசின் கணக்கானவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33c87310-ca6a-4596-b5a6-85164a7380a2/26-6a954a9310e7f.webp' /></p><p>
</p><p>நாடு முழுவதும் உள்ள சிறுவர்களைப் பருவ முதிர்ச்சிக்குத் தயார்படுத்தும் நோக்கில், 'உல்வாலுகோ' (Ulwaluko) என்று அழைக்கப்படும் சடங்குகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகின்றன. </p><p>இதன் ஒருபகுதியாக, தீட்சை பெறுபவர்கள் மீது வெள்ளைக் களிமண் பூசப்பட்டு, அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பு, சிறுவன் நிலையிலிருந்து முழுமையான ஆண்மை நிலைக்கு மாறுவதற்காக மூன்று வாரங்கள் செலவிடுகின்றனர். </p><p>அந்தச் சடங்கின் ஒரு பகுதியாக, பல வருட அனுபவம் வாய்ந்த பாரம்பரிய அறுவை சிகிச்சை நிபுணர்களால் சிறுவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். </p><p>ஆனால், பல உல்வாலுகோ சடங்குகள், சட்டவிரோத தீட்சைப் பள்ளிகளில் பணிபுரியும் திறமையற்ற நபர்களால் நடத்தப்படுகின்றன; அவர்கள் பழைய ஈட்டிகள், கத்தரிக்கோல்கள் அல்லது சவரக்கத்திகளைப் பயன்படுத்தி, கொடூரமான அறுவை சிகிச்சைகளைச் செய்கின்றனர். </p><p>இச்சடங்குகள் உயிருக்கே ஆபத்தானவையாக அமையக்கூடும். 2024-ஆம் ஆண்டில், குளிர்கால மற்றும் கோடைக்காலச் சடங்குகளின்போது மொத்தம் 93 சிறுவர்கள் மரணமடைந்தனர்; மேலும் 11 பேரின் ஆண் உறுப்பு துண்டிக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>தென்னாப்பிரிக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், 2021 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சிறுவர்கள் 322 பேர் மரணமடைந்ததையும், ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும், மேலும் பலரின் ஆண் உறுப்புகள் அகற்றப்படும் நிலை ஏற்பட்டதையும் பதிவு செய்துள்ளது. </p><p>முறையற்ற மற்றும் சட்டவிரோதமான சடங்குப் பயிற்சி நிலையங்களை அமைத்துள்ள குற்றவியல் குழுக்கள் மீதே இந்த அறிக்கை பழி சுமத்தியது; பயிற்சி பெறாத அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்டு செய்யப்படும் இத்தகைய விருத்தசேதனங்கள் தவறாக அமைந்து விடுகின்றன.</p><p> பள்ளிகளில் விருப்பமில்லாத சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்டும், நீரில் மூழ்கடிக்கப்பட்டும் அல்லது அடித்துக் கொல்லப்பட்டும் உள்ளதாகத் தகவல்கள் வந்தபோதிலும், திசு அழுகல், சீழ் தொற்று மற்றும் கடுமையான நீரிழப்பு ஆகியவையே மரணத்திற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff9c955-9129-4a6a-b917-33d1ef1dad04/26-6a954a925e2ce.webp' /></p><p> </p><p>பதிவு செய்யப்படாத தீட்சைப் பள்ளிகள் அமைப்பதை சட்டவிரோதமாக்கவும், அனைத்து பாரம்பரிய அறுவை சிகிச்சை நிபுணர்களும் அரசால் முழுமையாகப் பயிற்சி பெற்று தகுதி பெற்றிருக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தவும் மரபுசார் தீட்சைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. </p><p>பதிவு செய்யப்படாத தீட்சைப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்த தென்னாப்பிரிக்க காவல்துறை, அவற்றில் 42 பள்ளிகளை மூடியுள்ளதுடன், 40 பேரைக் கைது செய்து 180 சிறுவர்களை மீட்டுள்ளது. </p><p>ஆனாலும், நாடு முழுவதும் உள்ள பலருக்கு இந்தச் சடங்குகள் இன்னமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. உல்வாலுகோ எனப்படும் சடங்கிற்கு உட்படுத்தப்படாவிட்டால், சிறுவர்கள் பூர்வகுடிச் சபைக் கூட்டங்களில் அமரவோ, பல சமூக நடவடிக்கைகளில் பங்கேற்கவோ அல்லது திருமணம் செய்துகொள்வதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை. </p><p>இந்தச் சடங்குகள் பல நூற்றாண்டுகளாக, கிராமங்களிலிருந்து தொலைவில் பிரத்யேகமாகக் கட்டப்பட்ட குடில்களில் இரகசியமாக நடத்தப்பட்டு வருகின்றன; பூர்வகுடி மூத்தவர்கள், ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் தீட்சை பெற்றவர்களைத் தவிர வேறு யாரும் அங்கு நுழைய முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f83acac-cbde-4022-82d3-b638335d55b1/26-6a954a93bbdb4.webp' /></p><p> </p><p>ஆண்டுதோறும் நிகழும் அதிர்ச்சியூட்டும் இறப்பு விகிதம் இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு புனிதச் சடங்கின் மூலம் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் சிறுவர் பருவத்திலிருந்து முதிர்ந்த ஆணாக மாறும் நிலையை அடைகிறார்கள். </p><p>சட்டப்படி 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தீட்சைப் பள்ளிகளில் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் சட்டவிரோதமான அந்தத் தீட்சைப் பள்ளிகளில் பத்து வயது சிறுவர்களுக்கும் அடிக்கடி அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. </p><p>பாரம்பரிய அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிறுவர்களை மூன்று வாரங்கள் வரை அழைத்துச் சென்று, அவர்களுக்கு உயிர்வாழும் திறன்கள், பூர்வகுடியின வரலாறு மற்றும் ஒரு ஆணாக எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து, பின்னர் அந்த உயிர் பிரியும் அறுவை சிகிச்சையைச் செய்வதற்காகப் பெற்றோர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கிறார்கள். </p><p>தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு, தனது பதின்ம வயதில் மேற்கொள்ளப்பட்ட விருத்தசேதனத்தின் ஆன்மீகப் பொருள் குறித்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T09:32:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[57 ஆண்டுகால சாதனையை 15 வயதில் முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vaibhav-sooryavanshi-breaks-57-year-record-1788167298"></link>
            <id>https://news.lankasri.com/article/vaibhav-sooryavanshi-breaks-57-year-record-1788167298</id>
            <summary type="text">Vaibhav Sooryavanshi breaks 57 years old record: இந்திய கிரிக்கெட் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி துலீப் கிண்ணத்தில் புதிய சாதனை படைத்தார். 

துலீப் கிண...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vaibhav Sooryavanshi breaks 57 years old record: இந்திய கிரிக்கெட் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி துலீப் கிண்ணத்தில் புதிய சாதனை படைத்தார். </p><p>

துலீப் கிண்ணப் போட்டியில் கிழக்கு மண்டல அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி 57 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.&nbsp;</p><h2>வைபவ் சூர்யவன்ஷி&nbsp;</h2><p> 

கிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் கிண்ண அரையிறுதிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Vaibhav Sooryavanshi hitting it all around the park🤯🔥 <a href="https://t.co/lP9WGFwVDP">pic.twitter.com/lP9WGFwVDP</a></p>&mdash; Abhishek (@unfav_abhishek3) <a href="https://x.com/unfav_abhishek3/status/2094281091062628592?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மத்திய மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 266 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 60 ஓட்டங்கள் எடுத்தார். முகேஷ் குமார், அபிஜித் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.&nbsp;</p><p></p><p>
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய கிழக்கு மண்டல அணியில் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.&nbsp;</p><h2>57 ஆண்டுகால சாதனை</h2><p>
அதிரடி அரைசதம் அடித்த அவர், லக்ஷ்மண் சிங்கின் 57 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 

அதாவது, 1969ஆம் ஆண்டில் லக்ஷ்மண் சிங் தனது 16 வயது 23-வது நாளில் துலீப் கிண்ணத்தில், தனது முதல் அரை சதத்தை அடித்தார். </p><p>

ஆனால் வைபவ் சூர்யவன்ஷி 15 வயது 157 நாட்களிலேயே அரைசதம் கடந்து, துலீப் கிண்ண வரலாற்றிலேயே அரைசதம் அடித்த <b>மிக இளம் வயது துடுப்பாட்ட வீரர்</b> என்ற சாதனையைப் படைத்தார். </p><p>

தொடர்ந்து ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 81 பந்துகளில் 7 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 92 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/891078cc-1dea-4084-a26f-f87e1d6a5326/26-6a954485ac72c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:08:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்துக்குச் சென்ற நபருக்கு நேர்ந்த துயர முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hiker-dies-after-fall-from-650-feet-in-swiss-1788166941"></link>
            <id>https://news.lankasri.com/article/hiker-dies-after-fall-from-650-feet-in-swiss-1788166941</id>
            <summary type="text">Hiker dies after 650 feet fall in Switzerland: சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவர் 650 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.சனிக்கிழமையன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hiker dies after 650 feet fall in Switzerland: சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவர் 650 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.</p><p>சனிக்கிழமையன்று, மேற்கு சுவிட்சர்லாந்திலுள்ள Fribourg Pre-Alps என்னும் மலையில் மலையேற்றத்துக்குச் சென்றுள்ளார் 69 வயது நபர் ஒருவர்.
</p><h3>
துயர முடிவு
</h3><p>
இந்நிலையில், அவர் 650 அடி பள்ளத்தில் விழுந்து விட்டதாக அவசர உதவிக் குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a55924f4-3100-4a6a-933a-788faf8e16db/26-6a95431f2c9ba.webp' /></p><p>
ஹெலிகொப்டர் உதவியுடன் அவர் மேலே கொண்டுவரப்பட்ட நிலையில், காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டுள்ளார்.
</p><p>
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை அறிவதற்காக Fribourg மாகாண பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:02:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் பிரதமர் வேட்பாளரா? அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என மிரட்டும் காங்கிரஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/congress-warn-exit-from-tvk-ministry-if-vijay-pm-1788161023"></link>
            <id>https://news.lankasri.com/article/congress-warn-exit-from-tvk-ministry-if-vijay-pm-1788161023</id>
            <summary type="text">congress threat exit from tvk ministry if vijay as pm candidate: முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>congress threat exit from tvk ministry if vijay as pm candidate: முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என எச்சரித்துள்ளது.
</p><h3> 
விஜய் பிரதமர் வேட்பாளர் </h3><p>

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க தவெக முன்னெடுப்பு செய்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டில் செய்து வரும் திட்டங்கள் எனக்கூறி பல்வேறு போலி செய்திகள் வட இந்தியாவில் சமூக ஊடக பிரபலங்களால் பரப்பப்பட்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ff17c40-3ab3-43a5-85e6-2ee2e0647c71/26-6a952c0218c78.webp' /></p><p> 

இதே போல், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் வர வேண்டும் என பேசினார். 

அதனைத்தொடர்ந்து பல்வேறு தவெக அமைச்சர்களும் முதல்வர் விஜய் தான் அடுத்த பிரதமர் என பேசி வருகின்றனர். </p><p>

சமீபத்தில் தனியார் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில், மோடி, ராகுல் காந்தியை தொடர்ந்து முதல்வர் விஜய் 3வது இடம் பிடித்தார்.&nbsp;</p><p></p><p>

அமைச்சர்களின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. </p><h3>

காங்கிரஸ் எச்சரிக்கை</h3><p> 

கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ் குமார், "தவெக அமைச்சர்கள் பேசும்போது எங்கள் முதல்வர் அடுத்த பிரதமர் என்றெல்லாம் சொல்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fa5189d-e4d0-4580-9a99-12c1db65f5ac/26-6a952c00a7e61.webp' /></p><p> 

வருகிற 2029 ஆம் ஆண்டு நடைபெறுகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவார்கள்.</p><p>

ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியினுடைய இரண்டு அமைச்சர்களும் இந்த பதவியில் நீடிக்க மாட்டார்கள்" என பேசியுள்ளார். </p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "பிரதமராக வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ முதல்வர் விஜய்க்குத் துளியளவும் கிடையாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a505eddd-0631-428f-9029-3522b7f81c50/26-6a952c0163fa2.webp' /></p><p>அவருக்கு கனவிலும், கற்பனையிலும் கூட அப்படி ஒரு எண்ணம் தோன்றாது.

இதுபோன்று பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர்கள், தவெகவினருக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும். </p><p>

இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை என்பதால், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும். வேறு யாரையும் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:45:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரியின் கோபம் போகவில்லை... நண்பர்கள் வட்டாரம் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/friends-reveal-harry-still-angry-with-other-royals-1788162247"></link>
            <id>https://news.lankasri.com/article/friends-reveal-harry-still-angry-with-other-royals-1788162247</id>
            <summary type="text">&amp;nbsp;Harry still angry with other royals: இளவரசர் ஹரி இன்னமும் ராஜ குடும்பத்தில் சிலர் மீது கோபமாகவே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ராஜ குடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Harry still angry with other royals: இளவரசர் ஹரி இன்னமும் ராஜ குடும்பத்தில் சிலர் மீது கோபமாகவே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>


ராஜ குடும்பத்திலிருந்தும், பிரித்தானியாவிலிருந்தும் வெளியேறி ஆறு ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த நிலையில், பிரித்தானிய மன்னரின் இளைய மகனான ஹரி, தன் குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார்.
</p><h3>
ஹரியின் கோபம் போகவில்லை...
</h3><p>
ஆனால், ஹரி இன்னமும் கோபமாகவே இருப்பதாக அவருடைய நண்பர் வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b7acdcd-3108-4e29-9a82-0a3ef63f34be/26-6a9530c96ab22.webp' /></p><p>
ஹரி மீண்டும் தன் குடும்பத்துடன் இணைவார், சமரசமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ராஜ குடும்ப உறுப்பினர்கள் மீதும், பக்கிங்காம் அரண்மனை அலுவலர்கள் மீதும் கோபமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>
தான் தன் தந்தையுடன் சமரசம் ஆவதை கெடுக்கும் வகையில் தன் தந்தையைச் சுற்றி இருக்கும் அதிகாரிகள் சிலர் செயல்பட்டுவருவதாக ஹரி ஏற்கனவே சாடியிருந்தார்.
</p><p>
இந்நிலையில், ராஜ குடும்ப உறுப்பினர்களும், பக்கிங்காம் அரண்மனை அலுவலர்களும் தன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என ஹரி எதிர்பார்ப்பதாக அவரது நண்பர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:45:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ 2 லட்சம் கோடி... ஈரான் போரால் இந்தியா எதிர்கொண்ட இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-paid-second-highest-1788161962"></link>
            <id>https://news.lankasri.com/article/india-paid-second-highest-1788161962</id>
            <summary type="text">During Iran conflict India paid second highest:&amp;nbsp;கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான இரண்டாவது அதிகபட்ச தொகையை இந்தியா செலவிட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>During Iran conflict India paid second highest:&nbsp;கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான இரண்டாவது அதிகபட்ச தொகையை இந்தியா செலவிட்டுள்ளது.</p><p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட ஈரான் போரால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எத்தகைய பாதிப்பு மற்றும் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை CREA அமைப்பு விரிவான தரவுகளை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d809932-bc11-43aa-b394-65bb25e76f43/26-6a952fac8b82e.webp' /></p><p>
</p><p>ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களில், புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 55 பில்லியன் டொலர்களைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p> 1990-ஆம் ஆண்டு வளைகுடாப் போருக்குப் பிறகு ஏற்பட்ட மிக நீண்ட கால விலை அதிர்ச்சி இதுவாகும். சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. </p><p>கடந்த ஐந்து ஆண்டுகளில் தூய்மையான ஆற்றல் துறையில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கம் இல்லாவிட்டால், புதைபடிவ எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 36 பில்லியன் டொலர்கள் அதிகமாக இருந்திருக்கும் என்று 'ஆற்றல் மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம்' (CREA) தெரிவித்துள்ளது.</p><p> இக்காலகட்டத்தில், 35.5 பில்லியன் டொலர் செலவிட்ட சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா புதைபடிவ எரிபொருட்களுக்காகக் கூடுதலாக 22 பில்லியன் டொலரைச் செலவிட்டுள்ளது.</p><p></p><p> </p><p>அதாவது இந்தியா ரூ 2 லட்சம் கோடி அளவுக்கு அதிகமாக செலவிட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கான செலவுகள் அதிகரித்திருப்பது ஏழை நாடுகளையே மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. </p><p>மார்ச் மற்றும் ஆகஸ்ட் 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் அதிகத் தொகையைச் செலவிட்ட முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. </p><p>பிப்ரவரி மாதம் துவங்கிய போர் மூலம் கடந்த 6 மாதத்தில் உலக நாடுகள் சுமார் 330 பில்லியன் டொலர் தொகையை கூடுதலாக கொடுத்து எரிபொருளை வாங்கியுள்ளது. </p><p>போருக்கு முன்பு இருந்த விலை நிலையும், பிப்ரவரி மாதம் போர் துவங்கிய பின்பு ஏற்பட்ட விலை உயர்வை ஒப்பிடுகையில் ஆசிய நாடுகள் வாங்கும் எல்என்ஜி விலை சராசரியாக 75 சதவீதம் உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a988a05b-ef7b-4601-9e28-7a1e36c00ed5/26-6a952fad46583.webp' /></p><p> </p><p>ஐரோப்பா வாங்கும் எல்என்ஜி விலை 60 சதவீதமும், டீசல் 59 சதவீதமும், கச்சா எண்ணெய் 35 சதவீதமும் விலை அதிகரித்துள்ளது என CREA அமைப்பு கணக்கிட்டு உள்ளது. </p><p>இந்த விலை உயர்வால் உலக நாடுகள் சுமார் 330 பில்லியன் டொலர் தொகையை கூடுதலாக செலவு செய்துள்ளது. இதில் பெரும் பங்கை ஐரோப்பிய நாடுகள் செலுத்தியுள்ளது சுமார் 78 பில்லியன் டொலர் தொகையை கூடுதலாக செலவிட்டு உள்ளது. </p><p>சீனாவுக்கு அடுத்தாக உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இறக்கமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கும் வேளையில் மார்ச் மாதம் நாட்டின் LNG இறக்குமதி என்பது 49 சதவீதம் குறைந்துள்ளது. </p><p>இந்த நிலையில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் எல்என்ஜி இறக்குமதி என்பது வெறும் 8 சதவீதத்தில் இருந்து 32 சதவீதம் வரையில் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்தது. இதன் மூலம் தற்போது இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கியமான எரிவாயு சப்ளையராக மாறியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T07:37:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் பூத்த காதல்: ரஷ்யப் பெண்ணை மணமுடித்த தமிழக இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chennai-youth-married-russian-woman-in-tiruchendur-1788161297"></link>
            <id>https://news.lankasri.com/article/chennai-youth-married-russian-woman-in-tiruchendur-1788161297</id>
            <summary type="text">Chennai youth married russian woman in tiruchendur:&amp;nbsp;சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரஷ்யப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

சென்னை மயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chennai youth married russian woman in tiruchendur:&nbsp;சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரஷ்யப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
</p><p>
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உதயசங்கர் என்ற இளைஞர், ரஷ்ய பெண்ணொருவரை காதலித்து திருச்செந்தூரில் திருமணம் செய்துகொண்டார்.&nbsp;</p><h2>சீனாவில் பூத்த காதல்</h2><p>
சீனாவில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உதயசங்கர்.

இவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றிய மரியா என்ற பெண்ணும் நாட்பாக பழகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574d6352-fb7a-460d-b095-33fc77daa600/26-6a952d13ef90d.webp' />&nbsp;</p><p></p><p> நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது.

பின்னர் உதயசங்கர், மரியா ஜோடி தங்கள் காதல் குறித்து குடும்பத்தாரிடம் கூறி திருமணத்திற்கு சம்மதம் பெற்றுள்ளது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் தமிழ் பாரம்பரிய முறைப்படி உதயசங்கர், மரியாவின் திருமணம் நடந்தது.&nbsp;</p><h2>'கீர்த்தனா' என சூட்டிக்கொண்ட ரஷ்யப் பெண்</h2><p>

இதில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.</p><p> 

ரஷ்யாவைச் சேர்ந்த மரியா தனது பெயரை 'கீர்த்தனா' என சூட்டிக்கொண்டது பலரது கவனத்தை ஈர்த்தது.</p><p>

இதற்கிடையில் இந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-08-31T07:27:49+00:00</updated>
        </entry>
    </feed>
