<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-12T15:41:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI உருவாக்கிய கோப்புகளை கண்களுக்கு தெரியாத Watermarks - Anthropic புதிய முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anthropic-adds-invisible-ai-watermarks-1786548780"></link>
            <id>https://news.lankasri.com/article/anthropic-adds-invisible-ai-watermarks-1786548780</id>
            <summary type="text">Anthropic Adds Invisible AI Watermarks: AI உள்ளடக்கத்தை கண்டுபிடிக்க கண்களுக்கு தெரியாத குறியீடே Anthropic அறிமுகம் செய்கிறது.

அமெரிக்க AI நிறுவனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Anthropic Adds Invisible AI Watermarks: AI உள்ளடக்கத்தை கண்டுபிடிக்க கண்களுக்கு தெரியாத குறியீடே Anthropic அறிமுகம் செய்கிறது.</b></p><p>

அமெரிக்க AI நிறுவனம் Anthropic, தனது Claude AI மாடல்களில் Invisible Watermark தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

இதன் மூலம் AI உருவாக்கிய உரைகள் மற்றும் கோப்புகளை எளிதில் அடையாளம் காண முடியும்.

இந்த Watermarks, சாதாரணமாக மனிதர்களால் காண முடியாத, ஆனால் இயந்திரம் வாசிக்கக்கூடிய குறியீடாக இருக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e04a035f-449f-4c25-a36b-d67c19e50fbd/26-6a7c922dd9888.webp' /></p><p>Claude AI உருவாக்கும் உரைகளில், இந்த மறை குறியீடு தானாகவே சேர்க்கப்படும். உரையை copy-paste செய்தாலும், சில திருத்தங்கள் செய்தாலும் கூட, அந்த Watermark நீங்காமல் இருக்கும்.</p><p></p><p>
</p><h2>
EU AI Act</h2><p>இது ஐரோப்பிய ஒன்றியத்தின் EU AI Act-இன் வெளிப்படைத்தன்மை விதிகளின் ஒரு பகுதியாகும். ஆகஸ்ட் 2, 2026 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியிடப்படும் Claude மாடல்கள் அனைத்தும் இந்த Watermark வசதியுடன் இருக்கும். </p><p>உலகளாவிய அளவிலும் இதை விரிவாக்க Anthropic திட்டமிட்டுள்ளது.

உரை மட்டுமல்லாமல், PNG, JPG, SVG போன்ற கோப்புகளிலும் Claude, C2PA standard அடிப்படையில் டிஜிட்டல் கையொப்ப metadata-ஐ சேர்க்கும். இதன் மூலம் கோப்புகள் AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய முடியும்.</p><p></p><h2>

எச்சரிக்கை</h2><p>ஆனால் Anthropic, “Watermark இருப்பது AI உருவாக்கியது என்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்தாது” என எச்சரிக்கிறது. </p><p>ஏனெனில், ஒருவரின் சொந்த எழுத்தை Claude proofread, translate அல்லது summarize செய்தாலும், அந்த உரையில் Watermark தோன்றலாம்.

அதேபோல், பழைய மாடல்கள் அல்லது மிகச் சிறிய உரைகள் Watermark இல்லாமல் இருக்கலாம்.</p><p>

இந்த முயற்சி, AI உருவாக்கிய உள்ளடக்கங்களை பொறுப்புடன் பயன்படுத்த மற்றும் தவறான தகவல்களைத் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Anthropic, விரைவில் Watermark-யை கண்டறியும் கருவிகளை வெளியிடவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T15:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க போர்க்கப்பலில் உணவு தட்டுப்பாடு - கடலில் குதிக்க முயன்ற கடற்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-sailors-jump-ship-amid-iran-war-crisis-1786547558"></link>
            <id>https://news.lankasri.com/article/us-sailors-jump-ship-amid-iran-war-crisis-1786547558</id>
            <summary type="text">USS Abraham Lincoln sailors jump into the sea: அமெரிக்க போர்க்கப்பலில் கடற்படையினர் கடலில் குதிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் USS Abrah...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>USS Abraham Lincoln sailors jump into the sea: அமெரிக்க போர்க்கப்பலில் கடற்படையினர் கடலில் குதிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
</b></p><p>
அமெரிக்காவின் USS Abraham Lincoln என்ற விமானக் கப்பல், கடந்த 210 நாட்களாக மத்திய கிழக்கில் பணியில் உள்ளது.
</p><h2>
மன அழுத்தத்தில்&nbsp;கடற்படையினர் </h2><p>நீண்டகால பணி, கப்பல் நிலைநிறுத்தம் மற்றும் கடினமான சூழ்நிலைகள் காரணமாக, கப்பலில் பணியாற்றும் கடற்படையினர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc95d18f-063f-4a06-8115-920340b5d924/26-6a7c8d68cee11.webp' /></p><p>கப்பலில் உணவு தட்டுப்பாடு, உடைந்த கழிப்பறைகள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால், சிலர் மன உறுதியை இழந்து கடலில் குதிக்க முயன்றதாக அவர்களின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.</p><h2>

USS Abraham Lincoln போர்க்கப்பல்</h2><p>இந்த கப்பல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான ஈரான் போரில் முக்கிய பங்கு வகிக்கிறது. </p><p>ஜூன் மாதத்தில் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம் முறியடைந்த பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

முக்கியமாக, ஹார்மசு நீரிணை மீது கட்டுப்பாடு பெறுவதற்கான போராட்டமே இப்போரின் மையமாக உள்ளது. </p><p></p><p>அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டு, சுமார் 20 போர்க்கப்பல்களை மத்திய கிழக்கில் நிறுத்தியுள்ளது.
</p><p>
இந்த சூழ்நிலையில், USS Abraham Lincoln கப்பலில் பணிபுரியும் வீரர்கள், நீண்டகால பணி, உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமை காரணமாக மன அழுத்தத்தில் சிக்கியுள்ளனர். </p><p>இது அமெரிக்க கடற்படையின் மனநிலை மற்றும் போர்திறனை பாதிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T15:10:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-drone-strike-hits-russias-richest-woman-1786544680"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-drone-strike-hits-russias-richest-woman-1786544680</id>
            <summary type="text">Ukraine Drone Strike Hits Russias Richest Woman: உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Ukraine Drone Strike Hits Russias Richest Woman: உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.</b></p><p>

ரஷ்யாவின் மிகப்பெரிய ஓன்லைன் வணிக நிறுவனமான Wildberries மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>

ரஷ்யாவின் அமேசான்</h2><p>இந்த நிறுவனம் 2004-ஆம் ஆண்டு தத்யானா கிம் (Tatyana Kim) என்பவரால் தொடங்கப்பட்டது.</p><p> தற்போது ரஷ்யாவின் “அமேசான்” என அழைக்கப்படும் Wildberries, நாட்டின் ஓன்லைன் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5fc08c1-963d-4038-aeca-30279d93d522/26-6a7c822a4fcfe.webp' /></p><p>சமீபத்தில் நடந்த தாக்குதல்களில் பல கிடங்குகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை இழந்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் கிடைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p>

சிறு வியாபாரிகள் தங்கள் பங்குகளை இழந்ததால், எதிர்கால விற்பனை மற்றும் இழப்பீடு குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது.
</p><p></p><h2>உக்ரைன்&nbsp;குற்றச்சாட்டு</h2><p>உக்ரைன், இந்த கிடங்குகள் ரஷ்யாவின் போர் முயற்சிக்கு உதவுகின்றன என்று கூறுகிறது. ஆனால் ரஷ்ய அதிகாரிகள், இவை சாதாரண குடிமக்கள் பயன்பாட்டிற்கான வசதிகள் என தெரிவித்துள்ளது.
</p><p>
தத்யானா கிம், தாக்குதல்களை கண்டித்து, பாதிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு உதவ நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். </p><p>இருப்பினும், விற்பனை குறைந்து, பல விற்பனையாளர்கள் மாற்று தளங்களை தேடத் தொடங்கியுள்ளனர்.
</p><p></p><h2>புதிய யுத்தி</h2><p>ஆய்வாளர்கள், உக்ரைன் இத்தகைய தாக்குதல்களை ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் புதிய யுத்தத் திட்டமாக பார்க்கின்றனர். இது ரஷ்யாவின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கிறது.
</p><p>
தத்யானா கிம், ரஷ்யாவின் தொழில் வெற்றியின் மிகப்பெரிய அடையாளமாக இருந்தாலும், தற்போது தனது நிறுவனத்தை மீண்டும் எழுப்பி, வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T14:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் பணக்கார குடும்ப பட்டியல் - முதல் 10 இடத்தில் 2 தமிழ் குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-tn-familes-in-top-10-india-most-valuable-family-1786541705"></link>
            <id>https://news.lankasri.com/article/2-tn-familes-in-top-10-india-most-valuable-family-1786541705</id>
            <summary type="text">2026 India Most Valuable Family Businesses List : 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலில் 2 தமிழ்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 India Most Valuable Family Businesses List : 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலில் 2 தமிழ்நாடு குடும்பங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது. </p><h3>

இந்தியாவின் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்கள்</h3><p>

பார்க்லேஸ் பிரைவேட் கிளைன்ட்ஸ் ஹுருன் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. </p><p>

இந்த பட்டியலில் உள்ள 300 குடும்ப வணிகங்களின் கூட்டு மதிப்பு தற்போது 1.46 டிரில்லியன் டொலராக (இந்திய மதிப்பில் ரூ.138 லட்சம் கோடி) உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/395fa4d1-09ca-4adb-b6e5-4a6456dd8d68/26-6a7c768b17c35.webp' /></p><p>

2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் இருந்து இந்த வணிகங்களின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. </p><p>அதாவது கடந்த 2 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ. 4,076 கோடி மதிப்பு உயர்விற்குச் சமமாகும்.&nbsp;</p><p></p><p>

இதில் ரிலையன்ஸ் குழும முகேஷ் அம்பானியின் குடும்பம் ரூ. 25.83 லட்சம் கோடி மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. </p><p>ஆதித்யா பிர்லா குழும குமார் மங்கலம் பிர்லா குடும்பம் ரூ. 8.14 லட்சம் கோடி மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளது. </p><p> 

ஜிண்டால் குடும்பம் ரூ. 8.01 லட்சம் கோடி மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளது. </p><p> 

இந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த வெள்ளையன் சுப்பையா தலைமையிலான முருகப்பா குடும்பம், ரூ. 3.06 லட்சம் கோடி மதிப்புடன் 8வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c00b73-1f57-4c45-85be-dc35349f1ca9/26-6a7c768bbe123.webp' /></p><p> 

இதே போல், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஷிவ் நாடார் குடும்பம் ரூ. 2.91 லட்சம் கோடி மதிப்புடன் 9வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a79b494b-778a-4481-a1f7-0adda816ef42/26-6a7c768c703cb.webp' /></p><p>

கௌதம் அதானி குடும்பம் ரூ.19.6 லட்சம் கோடி மதிப்புடன், முதல் தலைமுறை தொழில்முனைவோர் குடும்பங்களில் மிகவும் செல்வந்தர்களாக உள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:35:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய கிரகணம் உயிர் பலி வாங்கும் எனக்கூறும் வதந்திகள்: அறிவியலாளர்கள் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scientist-debunked-solar-eclipse-conspiracy-theory-1786538062"></link>
            <id>https://news.lankasri.com/article/scientist-debunked-solar-eclipse-conspiracy-theory-1786538062</id>
            <summary type="text">இன்று சூரிய கிரகணம் நிகழ இருக்கும் நிலையில், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவத் துவங்கியுள்ளன.


சூரிய கிரகணத்தின்போது பல மில்லி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று சூரிய கிரகணம் நிகழ இருக்கும் நிலையில், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவத் துவங்கியுள்ளன.</p><p>


சூரிய கிரகணத்தின்போது பல மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என்றும், உலகமே இருளில் மூழ்கிவிடும் என்றும் பல வதந்திகள் இணையத்தில் பரவிவரும் நிலையில், அவை குறித்து அறிவியலாளர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.</p><h3>

உலாவரும் வதந்திகள்
</h3><p>
நாசாவிலிருந்து ’Project Anchor’ என்னும் ஒரு ஆவணம் லீக் ஆகியுள்ளதாகவும், அது, சூரிய கிரகணத்தின்போது பூமி 7 விநாடிகளுக்கு புவியீர்ப்பு விசையை இழக்கும் என்று கூறுவதாகவும் ஒரு வதந்தி பரவிவருகிறதாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e348be31-2e54-440a-9611-083115b80224/26-6a7c6850c6f26.webp' /></p><p>
அப்படி பூமிக்கு புவியீர்ப்பு விசை இல்லால் போவதால், 40 மில்லியன் மக்கள் கீழே விழுந்து உயிரிழப்பார்கள், உள் கட்டமைப்பு நாசமாகும், அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் என பயமுறுத்துகிறது அந்த வதந்தி.
</p><p>
இந்த வதந்தி தொடர்பில் விளக்கமளித்துள்ள நாசா, 2026ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 12ஆம் திகதி, பூமி தனது ஈர்ப்பு விசையை இழக்காது என்றும், பூமியின் ஈர்ப்பு விசை, அதன் நிறையால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளது.&nbsp;</p><p></p><p>
அதாவது, பூமியின் அமைப்பில், அதன் மையப்பகுதி, வெளிப்புறம், நடுப்பகுதி, பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலம் ஆகிய அனைத்தும் தங்கள் நிறையை இழந்தால்தான் பூமி அதன் ஈர்ப்பு விசையை இழக்கும் என்றும், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b17affc-baad-47d8-b737-994d17b9c7c2/26-6a7c68501f0d2.webp' /></p><p>

இதுபோக, பல நாட்கள் மின்தடை, தொலைபேசி சேவை பாதிப்பு ஏற்படும் என்றும் சில வதந்திகள் கூறுகின்றன.
</p><p>
ஆனால், சூரிய கிரகணம் என்பது முன்கூட்டியே கணிக்கக்கூடிய ஒரு அறிவியல் நிகழ்வு, அது ஆயுதமோ, தீய சடங்கோ அல்ல என்கிறார்கள் அறிவியலாளர்கள்.</p><p>

உண்மையில், ஒரே நேரத்தில் பலர் சூரிய கிரகணம் தொடர்பான காணொளிகளைப் பார்க்க முயல்வதால், சில இடங்களில் இணைய சேவையின் வேகம் வேண்டுமானால் குறையலாம்.
</p><p>
ஆக, சூரியனும், சந்திரனும், பூமியும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் வருவதால், பூமி மீது சந்திரனின் நிழல் விழுகிறது. இந்த நிகழ்வே சூரிய கிரகணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:30:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியா நிலநடுக்கம்: 48 மணி நேரம் கழித்து பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/baby-rescued-alive-after-colombia-earthquake-1786540350"></link>
            <id>https://news.lankasri.com/article/baby-rescued-alive-after-colombia-earthquake-1786540350</id>
            <summary type="text">Newborn baby rescued alive Colombia Earthquake: கொலம்பியா நிலநடுக்க இடிபாடுகளிலிருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவின் காலி நகரில...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Newborn baby rescued alive Colombia Earthquake: கொலம்பியா நிலநடுக்க இடிபாடுகளிலிருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
</b></p><p>
கொலம்பியாவின் காலி நகரில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நாட்டின் மேற்கு பகுதியை பெரிதும் பாதித்தது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b71bea87-af20-4684-bb76-d7095184fa5e/26-6a7c713f93c18.webp' /></p><h2>
பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது</h2><p>இந்த பேரழிவின் மூன்றாவது நாளில், லா டோரஸ் டெல் லிமோனார் என்ற ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.</p><p>

மீட்பு நடவடிக்கையின் போது, பிரையன் ஒசோரியோ சுலுவாகா என்ற இளைஞர், இடிபாடுகளின் அருகே சென்றபோது, “யாராவது உள்ளீர்களா?” என்று சத்தமாக கத்தியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨JUST IN: A newborn baby and his mother have been pulled alive from the rubble in Cali, Colombia—a symbol of hope amid the devastation of the 7.4-magnitude earthquake. The infant, just days old, survived the collapse of a five-story building. <br><br>At least 132 dead and 570 injured…</p>&mdash; Qeeb (@Qeeb_1) <a href="https://x.com/Qeeb_1/status/2087134979612442977?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அப்போது இடிபாடுகளுக்குள் இருந்து மெலிந்த குரல் ஒன்று கேட்டது:
“ஆம், நான் இங்கே இருக்கிறேன். என்னுடன் ஒரு குழந்தை இருக்கிறது.” என்று கேட்டது.</p><p>இந்த குரலைக் கேட்டதும், மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் கைகளால் கற்கள், சிமெண்டு துண்டுகளை அகற்றத் தொடங்கினர். அவர்களின் பாதையை ஒரு பெரிய கான்கிரீட் தகடு மறித்திருந்தது. முதலில் அதை தூக்க முடியவில்லை. பின்னர் அனைவரும் சேர்ந்து “ஒன்று, இரண்டு, மூன்று” என்று கூச்சலிட்டு தூக்கினர்.</p><p></p><p>
</p><h2>
சுவாசிக்கத் தொடங்கிய&nbsp;குழந்தை </h2><p>அப்போது குழந்தையின் தலையை அவர்கள் கண்டனர். சுவாசிக்க முடியாமல், ஊதா நிறத்தில் மாறியிருந்த குழந்தை, இடிபாடுகளை அகற்றியதும் சுவாசிக்கத் தொடங்கியது. அதன் நிறம் மீண்டும் இயல்பாக மாறியது.
</p><p>
வீடியோவில், தூசி படிந்திருந்த குழந்தையை கவனமாக வெளியே எடுத்து, காவல்துறையினர் ஆம்புலன்ஸுக்கு எடுத்துச் சென்ற காட்சி பதிவாகியுள்ளது.</p><p> அருகில், காயமடைந்த ஒரு மனிதர் இன்னும் சிக்கியிருந்தார். பின்னர் அவரையும் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
</p><p>
இந்த சம்பவம், பேரழிவின் நடுவிலும், ஒரு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது நம்பிக்கையின் ஒளியாக பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T13:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Castor Oil for hair growth: அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-ingredients-to-mix-with-castor-oil-for-thickhair-1786533526"></link>
            <id>https://news.lankasri.com/article/5-ingredients-to-mix-with-castor-oil-for-thickhair-1786533526</id>
            <summary type="text">5 things with Castor Oil for incredible hair growth: பொதுவாகவே, விளக்கெண்ணெய் என்பது நம்முடைய பாட்டி காலத்தில் இருந்தே நம்முடைய முடியை பராமரிக்க பயன்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>5 things with Castor Oil for incredible hair growth: பொதுவாகவே, விளக்கெண்ணெய் என்பது நம்முடைய பாட்டி காலத்தில் இருந்தே நம்முடைய முடியை பராமரிக்க பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கிய பொருளாகும்.</p><p>விளக்கெண்ணெய் அடர்த்தியாகவும், ஒட்டும் தன்மையுடன் இருப்பதால் நாம் அதனை அப்படியே நேரடியாக தலைமுடியில் தடவுவது சிரமம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c5ab8f5-db72-42b6-a987-c89c198252f6/26-6a7c569d4cd01.webp' /></p><p></p><p> </p><p>ஆனால், இயற்கையான பொருட்களை விளக்கெண்ணெயுடன் கலந்து பயன்படுத்துகின்ற பொழுது அதனுடைய தன்மை குறைவதோடு கூந்தலுக்கு கூடுதல் நன்மைகளையும் கொடுக்கிறது. </p><p>நம்முடைய உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்துக் கொள்வதோடு முடி உடைந்தோ உலர்ந்தோ போவதை தடுக்க உதவுகிறது. அப்படியாக, விளக்கெண்ணெயுடன் சேர்ந்து பயன்படுத்த வேண்டிய 5 பொருட்களை பற்றி பார்ப்போம்.
</p><h3> 
1. தேங்காய் எண்ணெய்:
</h3><p> இதனை நான் விளக்கெண்ணெயுடன் கலக்கும் பொழுது அந்த கலவையை மென்மையாக்கி தலையில் எளிதாக தடவ உதவுகிறது. தேங்காய் எண்ணெய் முடிக்குள் ஆழமாக ஊடுருவி கூந்தலில் உள்ள புரத இழப்பை குறைக்க உதவுவதாக &nbsp;Journal of Cosmetic Science ஆய்வறிக்கை&nbsp;கூறுகின்றன.</p><h4>
பயன்படுத்தும் முறை:
</h4><p> ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கலந்து தலையில் நாம் மசாஜ் செய்யலாம். பிறகு 60 நிமிடங்கள் வரை ஊற வைத்துவிட்டு பிறகு முடியை அலசிக் கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6307a98a-d21e-4779-9f04-83aa195d4cc4/26-6a7c569e086d7.webp' /></p><p>
</p><h3>2. கற்றாழை ஜெல்:</h3><p>
 கற்றாழை உடல் குளிர்ச்சியை தரக்கூடியது. வறண்ட மற்றும் எரிச்சல் வருகின்ற பொழுது தலைமுடிக்கு உடனடி தீர்வை கொடுக்க கூடியது.</p><h4>
 பயன்படுத்தும் முறை:</h4><p>
 ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெயுடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை தலையில் தடவி 30 நிமிடங்கள் வரை வைத்து பிறகு ஷாம்பு போட்டு முடியை அலசிக் கொள்ளலாம்.</p><p></p><p>
</p><h3>3. வெங்காய எண்ணெய்:
</h3><p> வெங்காயத்தில் இருக்கக்கூடிய சல்பர் சத்து முடி பராமரிப்புக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. இது முடி உதிர்வை தடுக்க கூடும் என்று சில ஆய்வுகள் வெளியிட்டு இருக்கின்றன.
</p><h4> பயன்படுத்தும் முறை:
</h4><p> ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் வெங்காய எண்ணெய் கலந்து தலையில் தடவி சுமார் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து முடிய அலசிக் கொள்ளலாம். சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக முடியை அலசி கொள்வது நல்லது.
</p><h3>4. ரோஸ்மேரி எண்ணெய்:</h3><p>
 நம்முடைய முடி பராமரிப்பு வளர்ச்சி என்றாலே சமீப காலங்களில் ரோஸ்மேரி எண்ணெய் தான் முதல் இடத்தைபிடிக்கிறது. மேலும், 2015ல் வெளியான ஆய்வில் ரோஸ்மேரி எண்ணெய் தலையில் பயன்படுத்தியவர்களுக்கு வெறும் ஆறு மாதங்களில் முடி எண்ணிக்கை அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.
</p><h4> பயன்படுத்தும் முறை:</h4><p>
 ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெயில் வெறும் இரண்டு அல்லது மூன்று துளி ரோஸ்மேரி எசென்ஷியல் எண்ணெய்&nbsp;கலந்து பயன்படுத்துவது அடர்த்தியான முடியை கொடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9ccdf2a-c9e0-4324-afcd-83cba73fa6fc/26-6a7c569eb8df2.webp' /></p><p>
</p><h3>5. கருவேப்பிலை:
</h3><p>
 பாரம்பரிய முறைப்படி கருவேப்பிலை உட்கொள்வதும் கருவேப்பிலை எண்ணெய் தடவுவதும் நமக்கு முடி வளர்ச்சியை கொடுக்கும். ஆதலால், கருவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் சேர்த்து லேசாக காய்ச்சிக் கொண்டு பிறகு அதனை நன்கு குளிர வைத்து வடிகட்டி கொண்டு அதனுடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து தலையில் தடவலாம்.</p><h3> 
உண்மையில் விளக்கெண்ணை முடி வளர்ச்சிக்கு உதவுமா?</h3><p>
 பொதுவாக, விளக்கெண்ணெய் முடி வளர்ச்சி அடர்த்திக்கு உதவுமா என்ற கேள்விக்கு இதுவரை மருத்து ஆதாரங்கள் இல்லை என்றாலும் விளக்கெண்ணை முடியை ஈரப்பதத்தோடு வைத்திருப்பதற்கும். முடி உடைவதை குறைப்பதற்கும் கூந்தல் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் தோற்றமளிப்பதற்கு உதவுகிறது. </p><p>மேலும், நாம் அளவுக்கு அதிகமாக எண்ணெய் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. சில துளிகளே போதுமானது, அதோடு, முக்கியமாக நம்முடைய தலைமுடியை நாம் எப்பொழுதும் மென்மையாக கையாள்வது அவசியம். </p><p>குறிப்பாக, திடீரென ஒருவருக்கு அதிக முடி உதிர்வு வழுக்கை அல்லது முடி மெலிதல் பிரச்சினை ஏற்பட்டால் கட்டாயம் தோல் மருத்துவரை அல்லது உங்களுடைய குடும்ப மருத்துவரனுடைய ஆலோசனை பெறுவது அவசியம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T12:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை டெஸ்டில் அஜிங்க்யா ரஹானேயின் புதிய அவதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ajinkya-rahane-debut-as-commentator-in-sri-lanka-1786537932"></link>
            <id>https://news.lankasri.com/article/ajinkya-rahane-debut-as-commentator-in-sri-lanka-1786537932</id>
            <summary type="text">இலங்கை-இந்தியா டெஸ்ட் தொடரில் அஜிங்க்யா ரஹானே வர்ணனையாளராக அறிமுகமாகவுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அஜிங்க்யா ரஹானே இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை-இந்தியா டெஸ்ட் தொடரில் அஜிங்க்யா ரஹானே வர்ணனையாளராக அறிமுகமாகவுள்ளார். </p><p>

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அஜிங்க்யா ரஹானே இந்தியா, இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.&nbsp;</p><h2>அஜிங்க்யா ரஹானே</h2><p>

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருந்த அஜிங்க்யா ரஹானே, கடந்த மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e485e925-282d-4258-915a-a03aaaa0b737/26-6a7c67cfcffae.webp' />&nbsp;</p><p></p><p>

இதன்மூலம் தனது முதல் தர கிரிக்கெட் அறிமுகத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் நீடித்த சிறப்பான விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
</p><p>
இந்த நிலையில், ரஹானே வர்ணனையாளர் எனும் புதிய பணியை தொடங்கவுள்ளார். 

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் ரஹானே வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.</p><p>

"சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் சோனி லிவ் ஆகியவற்றில் இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் கிரிக்கெட் வர்ணனையாளராக அறிமுகமாவதில் நான் மிகுந்த உற்சாகமடைகிறேன்" என ரஹானே கூறியதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62d1d896-70eb-459f-b5f3-7d0089c62084/26-6a7c683bd6cb8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35351d0b-d174-460c-8440-20ea2e6fb46e/26-6a7c67cf1b5ef.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T12:32:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரி மேகன் தம்பதியர் பொதுமன்னிப்புக் கோர திட்டம்: ஊடகவியலாளர் பரபரப்பு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-about-public-apology-to-king-charles-1786537504"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-about-public-apology-to-king-charles-1786537504</id>
            <summary type="text">ஹரியும் மேகனும், மீண்டும் ராஜ குடும்பத்துடன் இணையும் வகையில் பொதுமன்னிப்புக் கோர திட்டமிட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


பிரித்தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹரியும் மேகனும், மீண்டும் ராஜ குடும்பத்துடன் இணையும் வகையில் பொதுமன்னிப்புக் கோர திட்டமிட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>


பிரித்தானிய இளவரசரான ஹரி, ராஜ குடும்ப மரபுகளுக்கு மாறாக, அமெரிக்க நடிகையும், விவாகரத்தானவருமான மேகன் மார்க்கலை திருமணம் செய்ததும், அதைத்தொடர்ந்து ராஜ குடும்பத்தில் எழுந்த பிரச்சினைகளும் அனைவரும் அறிந்ததே.
</p><p>
ஒரு கட்டத்தில், ராஜ குடும்பத்தைவிட்டும், பின், பிரித்தானியாவை விட்டும் வெளியேறி அமெரிக்காவில் குடியேறியது ஹரி குடும்பம்.
</p><h3>
இழப்புகள்</h3><p>

ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஹரியும் மேகனும் மாறி மாறி மன்னரையும், ராணியையும், இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரையும் குறித்து மோசமாக விமர்சனங்கள் முன்வைக்க, ஹரிக்கும் ராஜ குடும்பத்துக்கும் இடையில் பெரும் பிளவு உருவானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2619935f-9dad-45b8-a6e8-94078b310544/26-6a7c6622605af.webp' /></p><p>

ஆனால், ஒரு கட்டத்தில், ராஜ குடும்பத்தை விட்டுப் பிரிந்ததால் ஏற்பட்ட இழப்புகளை ஹரி மேகன் தம்பதியருக்கு தெள்ளத்தெளிவாக புரியத் துவங்கின.&nbsp;</p><p></p><p>

இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரும், அவர்களுடைய பிள்ளைகளும் ராஜ வாழ்வு வாழ, குடும்பத்தைப் பிரிந்து எங்கோ, பணத்துக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபடி, இளவரசர்களாக ராஜ அரண்மனையில் வாழவேண்டிய தங்கள் பிள்ளைகள் தாத்தா பாட்டி கூட இல்லாமல் தனியாக வாழ, ஹரி மேகன் தம்பதியருக்கு உண்மை புரிந்துள்ளது போல் தெரிகிறது.
</p><h3>
பொதுமன்னிப்பு கோர திட்டம்</h3><p>

நடந்தது நடந்ததுதான், நடந்ததையும், இதுவரை இழந்ததையும், முன்பின் யோசிக்காமல் பேசிய வார்த்தைகளையும் யாராலும் மாற்ற முடியாது.</p><p>

இந்நிலையில், இழந்த ராஜ குடும்பத்துடனான உறவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஹரி மேகன் தம்பதியர் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
</p><p>
ஆகவே, இருவரும், மன்னர் சார்லசிடம் பொதுமன்னிப்புக் கோர திட்டமிட்டுவருவதாக, ராப் ஷட்டர் என்னும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/906237fe-6e4c-4d5a-a06d-40dcafe411df/26-6a7c6621ab7f3.webp' /></p><p>
நடந்ததை எல்லாம் சொல்லி, நாங்கள் இந்த தவறையெல்லாம் செய்தோம், எங்களை மன்னியுங்கள் என நீளமாக சொல்லிக்கொண்டிருக்க முடியாது.
</p><p>
ஆகவே, தாங்கள் என்னவெல்லாம் செய்தோம், அதற்காக தங்களை மன்னிக்கவேண்டும் என்று சொல்லாமல், கடந்து ஐந்து ஆண்டுகள் குடும்பத்தை பிரிந்திருந்த விடயம் எவ்வளவு வலியை, வேதனையை ஏற்படுத்தியது என்பதை ஒப்புக்கொள்வதுதான் இந்த பொதுமன்னிப்பின் நோக்கம் என்கிறார் ஷட்டர்.</p><p>

மன்னர் சார்லசைப் பொருத்தவரை, அவர் சமாதானத்தை விரும்புகிறார். அதே நேரத்தில் அவருக்கு மரியாதையும் அவசியம். ஆக, இவ்விரண்டு விடயங்களையும் கருத்தில் கொண்டு, எப்படி மன்னிப்புக் கோருவது என்பது குறித்துதான் ஹரி மேகன் தம்பதியர் திட்டமிட்டுவருவதாகத் தெரிவிக்கிறார் ஷட்டர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T12:25:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Amex Black Card: செலவு செய்ய வரம்பே இல்லாத கிரெடிட் கார்டு - யார் பெற முடியும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/amex-black-card-no-spending-limit-full-details-1786536639"></link>
            <id>https://news.lankasri.com/article/amex-black-card-no-spending-limit-full-details-1786536639</id>
            <summary type="text">amex black card : அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் சென்சூரியன் கார்டு என்ற பெயரில் செலவு செய்ய வரம்பே இல்லாத கிரெடிட் கார்டை வழங்கி வருகிறது.

வரம்பில்லாத கிரெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>amex black card : அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் சென்சூரியன் கார்டு என்ற பெயரில் செலவு செய்ய வரம்பே இல்லாத கிரெடிட் கார்டை வழங்கி வருகிறது.
</p><h3>
வரம்பில்லாத கிரெடிட் கார்டு
</h3><p>
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4f8a73a-2e64-45c6-bc66-486876b59f8a/26-6a7c62c21316a.webp' /></p><p>

ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும், செலவு செய்ய குறிப்பிட்ட அளவிலான வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். 

ஆனால், ஒரு கிரெடிட் கார்டு செலவு செய்வதற்கான வரம்பே இல்லாமல் உள்ளது. </p><p>

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் சென்சூரியன் கார்டு என்ற பெயரில் இதனை வழங்கி வருகிறது. “பிளாக் கார்டு” என்று அழைக்கப்படும் இந்த கார்டு, செல்வம், தனித்துவம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறது.&nbsp;</p><p></p><p>
இந்த கார்டுக்கு யாரும் விண்ணப்பிக்க முடியாது. தகுதியுடையவர்களை தேர்வு செய்து அந்த நிறுவனமே வழங்கும். </p><p>&nbsp;இந்த கார்டு உலகளவில் ஒரு லட்சத்திற்கும் குறைவான நபர்களிடமே உள்ளதாக கருதப்படுகிறது. 2013ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 200 பேரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74cdbdc7-f3ea-4728-98a6-167a1d5f4db6/26-6a7c62c1462f5.webp' /></p><p> இந்த சென்சூரியன் கார்டுகளுக்கு 5,000 டொலர் வருடாந்திர கட்டணமும், 10,000 டொலர் ஒரு முறை தொடக்கக் கட்டணமும் உண்டு.</p><p>&nbsp;இந்தியாவில் இந்த கார்டைப் பெற, பிளாட்டினம் கார்டு மூலம் ஆண்டுக்கு 3,50,000 முதல் 5,00,000 டொலர் வரை (ரூ.30 - 40 கோடி வரை) செலவு செய்து, முறையான பணப்பரிவர்த்தனை, அதிக சிபில் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும்.&nbsp;</p><p></p><p>
இந்த கார்டைப் பயன்படுத்தி செய்யப்பட்ட மிகப்பெரிய கொள்முதல், அமெடியோ மோடிக்லியானியின் ' நூ கூச்சே' ஓவியம் ஆகும். இதை தொழிலதிபர் லியு யிகியான் , 2015 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த கிறிஸ்டிஸ் ஏலத்தில் 17,04,05,000 டொலர்களுக்கு வாங்கினார்.
</p><p>
இந்தியாவில் கடந்த ஆண்டு Paytm நிறுவனர் விஜய் சர்மா இந்த கார்டை பயன்படுத்தி உணவகம் ஒன்றில் பில் செலுத்தியதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T12:10:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா-ஈரான்: 60 நாள் போர்நிறுத்தம் நீட்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-iran-extend-ceasefire-before-aug-17-deadline-1786534791"></link>
            <id>https://news.lankasri.com/article/us-iran-extend-ceasefire-before-aug-17-deadline-1786534791</id>
            <summary type="text">US-Iran to Extend Ceasefire: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொள்ளபட்டுள்ளதாக தகவல்கள தெரிவிக்கின்றன.இஸ்லாமாபாத...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>US-Iran to Extend Ceasefire: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொள்ளபட்டுள்ளதாக தகவல்கள தெரிவிக்கின்றன.</b></p><p>இஸ்லாமாபாத் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 60 நாள் போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தது.
</p><p>
இந்த ஒப்பந்தம் ஆகஸ்ட் 17, 2026 அன்று முடிவடையவிருந்த நிலையில், இரு தரப்பும் அதை நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7345362d-3269-4065-80f8-f60f92463021/26-6a7c5d8b309b2.webp' /></p><p>“இரு தரப்பும் மத்தியஸ்த குழுவிடம் போர்நிறுத்தத்தை நீட்டிக்க சம்மதம் தெரிவித்துள்ளன. ஆனால், நீட்டிப்பு காலம் எவ்வளவு என்பது குறித்து இன்னும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன” என பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><h2>
பின்னணி
</h2><p>
ஏப்ரல் 2026-இல் பாகிஸ்தான் நடுவராக செயல்பட்டு, அமெரிக்கா-ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

பின்னர் ஜூன் 17, 2026 அன்று “Memorandum of Understanding” கையெழுத்தானது.
</p><p>
ஆனால், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் Hormuz நீரிணையில் சுதந்திரமான போக்குவரத்து குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் சிக்கலில் சிக்கின.</p><p></p><p>
</p><h2>
சமீபத்திய மோதல்கள்</h2><p>ஜூலை 8 முதல் ஜூலை 24 வரை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடந்தன.</p><p>

அமெரிக்கா, ஈரானில் உள்ள இலக்குகளை தாக்கியது.

பதிலுக்கு, ஈரான் ஜோர்டான், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் அமெரிக்க இராணுவ வசதிகள் மற்றும் உபகரணங்களை தாக்கியது.
</p><p></p><h2>தற்போதைய நிலை
</h2><p>போர்நிறுத்தம் நீட்டிக்க இரு தரப்பும் சம்மதித்துள்ளதால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் குறையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.</p><p>

ஆனால், நீட்டிப்பு காலம் எவ்வளவு என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படாததால், அடுத்த சில நாட்களில் முக்கிய முடிவுகள் வெளிவரும் வாய்ப்பு உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T11:46:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விற்பனை உதவியாளராக இருந்து பல மில்லியன் டொலருக்கு..ரொனால்டோவின் மனைவி ஜார்ஜினா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ronaldo-s-wife-georgina-sales-assistant-to-rich-1786534806"></link>
            <id>https://news.lankasri.com/article/ronaldo-s-wife-georgina-sales-assistant-to-rich-1786534806</id>
            <summary type="text">கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிகஸ் குறித்த தகவல்களை இங்கே காண்போம்.

கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால உறவுக்கு பின்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிகஸ் குறித்த தகவல்களை இங்கே காண்போம்.
</p><p>
கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால உறவுக்கு பின், கிறிஸ்டியானோ ரொனால்டோவை திருமணம் செய்துள்ள ஜார்ஜினா ரோட்ரிகஸ், The Gucci விற்பனை உதவியாளராக இருந்து தற்போது பல மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆளுமையாக உயர்ந்துள்ளார்.&nbsp;</p><h2>ரொனால்டோ,&nbsp;ஜார்ஜினா&nbsp;திருமணம் </h2><p>

போர்த்துக்கலின் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜார்ஜினா ரோட்ரிகஸுடன் (Georgina Rodriguez) திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67d3f464-bfe5-4f3b-99a9-c856f74f39eb/26-6a7c5b997154e.webp' />&nbsp;</p><p></p><p>

சுமார் 10 ஆண்டுகளாக உறவில் இருந்த இந்த ஜோடி, போர்த்துகலின் காஸ்காய்ஸ் நகரில் திருமணம் செய்துகொண்டது.
</p><h2>

யார் இந்த ஜார்ஜினா ரோட்ரிகஸ்?
</h2><p>
அர்ஜென்டினாவில் பிறந்த 32 வயதாகும் ஜார்ஜினா ரோட்ரிகஸ், The Gucci விற்பனை உதவியாளராக இருந்தவர். </p><p>

மேலும் ஸ்பானிய மொடலாகவும் இருந்த ஜார்ஜினா, ஸ்பெயினின் வடகிழக்கில் அமைந்துள்ள ஜாகா என்ற நகரத்தில் தனது இளமைப் பருவத்தைக் கழித்தார். </p><p>

நடனத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த ஜார்ஜினா, தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே பாலே நடனம் பயின்றார். எனினும், நிதி நெருக்கடியால் அவரால் நீண்ட காலம் தொழில்முறைப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32611896-ffaf-4848-aeec-671e4fdefaea/26-6a7c5b9a27f39.webp' /></p><p>
பின்னாளில் இங்கிலாந்தின் பிரிஸ்டாலுக்கு குடிபெயர்ந்த அவர், அங்கு ஆங்கில மொழியில் தேர்ச்சி பெறுவதற்காக ஒரு au pair ஆக பணியாற்றினார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து, ஸ்பெயினுக்கு திரும்பிய ஜார்ஜினா, ஆடம்பர ஆடை சில்லறை வர்த்தகத்தில் ஒரு தொழிலைக் கட்டமைப்பதற்காக மாட்ரிட் நகரில் குடியேறினார்.&nbsp;</p><h2>முதன்முதலில்&nbsp;ரொனால்டோவை&nbsp;சந்தித்த&nbsp;ஜார்ஜினா </h2><p>
அங்குதான் ஜார்ஜினா The Gucci boutique-யில் குறைந்தபட்ச ஊதிய விற்பனை உதவியாளராக பணியாற்றினார். 2016-யில் அந்த கடையில்தான் ரொனால்டோவை முதன்முதலில் ஜார்ஜினா சந்தித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f6e4def-ef47-4a76-a74c-e797b34c281f/26-6a7c5dbdc0526.webp' /></p><p>

சில நாட்களுக்குப் பிறகு ஒரு பிரத்யேக பிராண்ட் நிகழ்வில் இருவரும் மீண்டும் இணைந்தனர். பின்னர் இவர்கள் காதலிக்கத் தொடங்கினர். </p><p>

இந்த விடயம் ஊடகங்களில் தீயாய் பரவ, ஜார்ஜினா தனது சில்லறை விற்பனைத் தொழிலில் இருந்து இரண்டு முறை விலகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்.
</p><p>
என்றாலும், அவருக்கு கிடைத்த ரொனால்டோவின் காதலி என்ற உலகளாவிய வெளிச்சத்தை அவர், தனது சர்வதேச மொடலிங் மற்றும் ஊடக வாய்ப்புகளாக மாற்றிக்கொண்டார். </p><p>

தற்போது அவர், Influencer மற்றும் தொழில்முனைவோர், ஒரு சுயாதீனமான தொழில் வாழ்க்கையையும் பல மில்லியன் டொலர் மதிப்புள்ள பிராண்ட் சாம்ராஜ்யத்தையும் கட்டமைத்துள்ளார். </p><h2>பிரத்யேக மாளிகை</h2><p> 

ஜார்ஜினா, ரொனால்டோ தம்பதியினர் தங்களது தனியுரிமையைப் பேண, ஊடகங்களின் கமெராக்களில் இருந்து விலகி இருந்தாலும், குயின்டா டா மரின்ஹாவில் உள்ள தனிப்பட்ட மாளிகையே அவர்களது முதன்மை இடமாக இருந்ததாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
</p><p>
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக புதிதாக கட்டப்பட்ட இந்த பிரத்யேக மாளிகை, சுமார் 12,000 சதுர மீற்றர் பரப்பளவில் அமைந்துள்ளது. </p><p>

இதில் 8 படுக்கையறைகள், 300 சதுர மீற்றர் பரப்பளவுள்ள ஒரு முதன்மை அறைத்தொகுதி, நீச்சல் குளங்கள், ஒரு உடற்பயிற்சிக் கூடம், ஒரு ஸ்பா, ஒரு திரைப்பட அரங்கம், ஒரு பந்துவீச்சு அரங்கம் மற்றும் ஒரு தரைக்கீழ் வாகன நிறுத்துமிடம் ஆகியவை உள்ளன.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d033f02-2cb1-400c-8f93-67c08f0e4a5e/26-6a7c5dbe839b1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T11:38:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் அணு ஆயுத சோதனை: சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-warning-to-china-after-missile-test-1786523191"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-warning-to-china-after-missile-test-1786523191</id>
            <summary type="text">Australia warns china after missile launch: சீனாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

பசிபிக் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Australia warns china after missile launch: சீனாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்குப் பிறகு, சீனாவிற்கு அவுஸ்திரேலியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><h2>அணு ஆயுத ஏவுகணை சோதனை</h2><p>கடந்த ஜூலை மாதம் அவுஸ்திரேலியா ஃபிஜியுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e82009b0-e054-4ff2-bf86-7f91c4812693/26-6a7c2e39cb709.webp' />&nbsp;</p><p></p><p>

அதனைத் தொடர்ந்து, சில மணி நேரங்களில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அப்பகுதிக்குள் அணு ஆயுத ஏவுகணை ஏவப்பட்டதை சீனா உறுதி செய்தது. குறித்த ஏவுகணை துவாலு அருகே தரையிறங்கியதாக நம்பப்படுகிறது.
</p><p>
இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக சர்வதேச அளவில் சீனா கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
</p><p>
மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறையால் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு குறைந்தது 24 மணி நேரமாவது முன்னறிவிப்பு வழங்க 'சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும்' உறுதியளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.</p><h2>40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்த அவுஸ்திரேலியா</h2><p>இந்த நிலையில், தென் பசிபிக் பகுதியில் சீனா நடத்திய சோதனை ஏவுதலைத் தொடர்ந்து, ஏவுகணை ஏவுதல்கள் குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வழங்க வேண்டும் என்ற அமெரிக்காவின் அழைப்பில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.
</p><p>
சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான அறிக்கையில், 'பசிபிக் பகுதியில் சமீபத்தில் நடந்த ஏவுகணை சோதனை நடவடிக்கைகள், ஏவுகணை ஏவுதல்கள் குறித்து அறிவிப்பதற்கும் மோதல் தவிர்ப்பதற்கும் பெரும்பாலான நாடுகள் பின்பற்றும் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை.
</p><p>
போதுமான முன் அறிவிப்பு மற்றும் விவரங்கள் இல்லாமல் அணு ஆயுதத் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்துவது ஆபத்தானது மற்றும் இந்த சோதனைகளுக்கு அருகிலுள்ள தொடர்புடைய நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பைக் குலைக்கிறது' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88c9330b-e2b0-441b-8d19-a75f99e5917b/26-6a7c2e3a80bfe.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T11:00:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[35 வயதாகியும் திருமணம் ஆகவில்லை: தாய் செய்த செயலால் மகள் வருத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-single-woman-reveals-mom-set-me-up-over-50-1786532172"></link>
            <id>https://news.lankasri.com/article/china-single-woman-reveals-mom-set-me-up-over-50-1786532172</id>
            <summary type="text">தன் மகளுக்கு 35 வயதாகியும் திருமணம் ஆகாததால், தன் வயதுள்ள ஒருவரை மகளுடன் சேர்த்துவைக்க முயன்றுள்ளார் ஒரு பெண்.


தனக்கு 35 வயதாகியும் திருமணம் ஆகாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன் மகளுக்கு 35 வயதாகியும் திருமணம் ஆகாததால், தன் வயதுள்ள ஒருவரை மகளுடன் சேர்த்துவைக்க முயன்றுள்ளார் ஒரு பெண்.
</p><p>

தனக்கு 35 வயதாகியும் திருமணம் ஆகாததால், 50 வயதைக் கடந்த ஒருவரை தனக்கு திருமணம் செய்துவைக்கும் நோக்கில், தங்களை சந்திக்க வைக்க தன் தாய் முயன்றதாக வருத்தப்படுகிறார் சீனப் பெண்ணொருவர்.
</p><h3>
தாய் செய்த செயலால் மகள் வருத்தம்
</h3><p>
சீனாவில் கல்வியாளர் மற்றும் சுற்றுலா வழிகாட்டியாக பணி புரிந்துவரும் லிங்லாங் என்னும் இளம்பெண்ணுக்கு 35 வயதாகியும் திருமணம் ஆகவில்லை.</p><p>

மகளுக்கு திருமணம் ஆகாததால் கவலையடைந்த அவரது தாய், சமீபத்தில் தன் மகள் ஒரு நபரை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0542b869-9807-46ce-b390-df36609c986c/26-6a7c514d65d85.webp' /></p><p>
விடயம் என்னவென்றால் அந்த நபருக்கு வயது 50ஐக் கடந்துவிட்டது. அதாவது தான் தனியாக இருப்பதால், எப்படியாவது தனக்குத் திருமணம் செய்து வைத்துவிடவேண்டும் என்பதற்காக, தன் தாய் தன்னை அந்த நபரை சந்திக்க வைத்ததாக தெரிவிக்கிறார் லிங்லாங்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Db3OEVBuFyn/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Db3OEVBuFyn/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Db3OEVBuFyn/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Linglong Mandarin Chinese (@linglongmandarin)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
என் தாய்க்கு 55 வயதாகிறது, கிட்டத்தட்ட அவரது வயதில் உள்ள ஒருவரை எனக்குத் திருமணம் செய்துவைக்க முயற்சிக்கிறார் என் தாய். 35 வயது என்பது அவ்வளவு அதிகமா என கவலையுடன் கேட்கிறார் லிங்லாங்.
</p><p>
சமூகம்தான் என் போன்றவர்களைப் புரிந்துகொள்ளவில்லை, மோசமாகப் பேசுகிறது என்றால், என் பெற்றோரே என்னைப் புரிந்துகொள்ளமாட்டேன்கிறார்களே என்பதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது என்கிறார் அவர்.&nbsp;</p><p></p><p>
நான் கடினமாக உழைக்கிறேன், சம்பாதிக்கிறேன், சுதந்திரமாக இருக்கிறேன், எனக்கு 25 வயது இல்லை என்பது உண்மைதான். அதற்காக, தனிமையாக இருப்பதால் ஏற்படும் பயத்தைத் தவிர்ப்பதற்காக மட்டுமே ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள நான் தயாரில்லை என்கிறார் லிங்லாங்.
</p><p>
எனக்கான சரியான நபரை நான் எப்போது சந்திப்பேன் என்பது எனக்கே தெரியாது, என்றாலும், அதற்காக, தனியாக வாழ பயமாக உள்ளது என்பதற்காக ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதைவிட, நான் தனியாகவே இருந்துவிட்டு போகிறேன் என்கிறார் லிங்லாங்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T10:56:19+00:00</updated>
        </entry>
    </feed>
