<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-05T12:49:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம ட்ரோன்: விமான சேவை பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drone-found-near-ukraine-plane-at-germany-airport-1785933695"></link>
            <id>https://news.lankasri.com/article/drone-found-near-ukraine-plane-at-germany-airport-1785933695</id>
            <summary type="text">ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், உக்ரைன் விமானம் ஒன்றினருகே மர்ம ட்ரோன் ஒன்று காணப்பட்டதால் பரபரப்பு


ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையத்தில், ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், உக்ரைன் விமானம் ஒன்றினருகே மர்ம ட்ரோன் ஒன்று காணப்பட்டதால் பரபரப்பு
</p><p>

ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையத்தில், நேற்று நள்ளிரவு ட்ரோன்கள் ஏற்படுத்திய பரபரப்பால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
</p><h3>
விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்</h3><p>

ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் Leipzig-Halle விமான நிலையத்தில் தரையிறங்காமல், Hanover விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33d78501-f429-4937-84f9-21f11488e7df/26-6a732f8077e07.webp' /></p><p>அது ஒரு சரக்கு விமானம்.

வானில் மர்மப் பொருள் ஒன்று தென்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் விமானம் ஒன்று உட்பட பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>

இதற்கிடையில், விமான நிலையத்தில், ஓடுபாதை ஒன்றில் மர்மப் பொருள் ஒன்று கிடப்பது தெரியவரவே, வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் ரோபோ ஒன்று அங்கு செல்வதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67cc270e-a383-423f-aad0-ef93544d82a2/26-6a732f812ae15.webp' /></p><p>
அதைத் தொடர்ந்து அங்கும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், Leipzig-Halle விமான நிலையம், ஜேர்மன் ராணுவம் மற்றும் நேட்டோ ராணுவத்துக்கான ராணுவ தளவாடங்கள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விமான நிலையம் ஆகும்.
</p><p>
அதுமட்டுமின்றி, உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி ட்ரோன்கள் மூலம் தாக்கிக்கொள்ளும் சூழலில், அந்த விமான நிலையம், உக்ரைன் நாட்டின் Antonov ஏர்லைன்ஸ் விமானங்களின் தளமாகவும் செயல்படுவதாலேயே அங்கு ட்ரோன்கள் காணப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:48:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகள் விரும்பி உண்ணும் தக்காளி சாஸ்.., வீட்டிலேயே எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tomato-ketchup-recipe-in-tamil-1785933962"></link>
            <id>https://news.lankasri.com/article/tomato-ketchup-recipe-in-tamil-1785933962</id>
            <summary type="text">தக்காளி சாஸ் என்பது தக்காளியை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையூட்டும் உணவுப் பொருள். 

இதனை சாமோசா, பிரெஞ்ச் ஃப்ரைஸ், பர்கர்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>தக்காளி சாஸ் என்பது தக்காளியை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையூட்டும் உணவுப் பொருள்.</p><p> 

இதனை சாமோசா, பிரெஞ்ச் ஃப்ரைஸ், பர்கர், சாண்ட்விச் போன்ற சில உணவுகளில் சுவை கூட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.</p><p>

அந்தவகையில், வீட்டிலேயே சுவையான தக்காளி சாஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li> 

தக்காளி- 1kg</li><li> 
வெங்காயம்- 1 துண்டு</li><li> 
பூண்டு- 2</li><li>
பட்டை- 1 துண்டு</li><li>
கிராம்பு- 2
</li><li>வினிகர்- ¼ கப்</li><li> 
சர்க்கரை- ¼ கப்</li><li> 
உப்பு- 1 ஸ்பூன் </li><li>
மிளகாய் தூள்- ½ ஸ்பூன்</li></ul><h2> 

செய்முறை </h2><p>

முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் 20 நிமிடம் வேகவைத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் இதனை நன்கு ஆறவைத்து அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f2a39cc-0cc2-420e-a53d-905338b0b369/26-6a73308c4529c.webp' /></p><p>அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவை, வினிகர், சர்க்கரை, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்கவைக்கவும்.
</p><p>
இறுதியாக நன்கு கெட்டியாகி வந்ததும் அடுப்பை அனைத்து ஆறவைத்தால் சுவையான தக்காளி சாஸ் தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T12:47:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையின் வயிற்றின் வெளியே வளர்ந்த குடல் - கருவிலே அறுவை சிகிச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/unborn-baby-has-pioneering-surgery-inside-womb-1785932623"></link>
            <id>https://news.lankasri.com/article/unborn-baby-has-pioneering-surgery-inside-womb-1785932623</id>
            <summary type="text">கருவில் உள்ள குழந்தையின் வயிற்றின் வெளியே குடல் வளர்ந்த பாதிப்பிற்கு, அந்த கரு வெளியே வரும் முன்னே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருவின் வய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கருவில் உள்ள குழந்தையின் வயிற்றின் வெளியே குடல் வளர்ந்த பாதிப்பிற்கு, அந்த கரு வெளியே வரும் முன்னே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><h3>
கருவின் வயிற்றின் வெளியே வளர்ந்த குடல்
</h3><p>
லண்டனைச் சேர்ந்த மெய்ஸி சாவேஜ் என்ற கர்ப்பிணி பெண், அவரது 20வது வார ஸ்கேன் பரிசோதனையின் போது, கருப்பையில் உள்ள குழந்தைக்கு காஸ்ட்ரோஸ்கிசிஸ் என்னும் வயிற்றுக்கு வெளியே குடல் வளரும் அரிய குறைபாடு இருந்ததை கண்டறிந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44d56a02-7dfd-4a17-b496-5900d3431683/26-6a732b516d167.webp' /></p><p>

 குழந்தைக்கு தீவிர காஸ்ட்ரோஸ்கிசிஸ் உள்ளதால் கருவில் இருக்கும் போதே அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
</p><p>
இதனையடுத்து, ஹூஸ்டனில் உள்ள ஸ்பைனா பிஃபிடா குறைபாடுள்ள குழந்தைகளுக்கான கரு அறுவை சிகிச்சையில் அனுபவமுள்ள மருத்துவர் மைக்கேல் பெல்ஃபோர்ட் தலைமையிலான குழு மூலம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்குப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d47fde1-73e5-434b-8a17-844e62f21943/26-6a732b52c4a31.webp' /></p><p>
அதற்கு முன்னதாக பெல்ஜியத்தில் உள்ள லூவன் மருத்துவமனையில் தசைகளைத் தளர்த்தி, காயம் வெற்றிகரமாகக் குணமடைவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றுச் சுவரில் போடோக்ஸ் ஊசியைச் செலுத்தினர்.
</p><p>
26வது வார கர்ப்ப காலத்தில் மெய்சிக்கு இந்த சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p></p><p>

இதில், மெய்சியின் கருப்பை பகுதியளவு திறக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கான இடத்தை விரிவுபடுத்துவதற்காக, பனிக்குட நீர் வெளியேற்றப்பட்டு அதற்குப் பதிலாக கார்பன் டை ஆக்சைடு(CO2) வாயு செலுத்தப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32388383-b983-4b37-97d0-7065376b8f8c/26-6a732b50af524.webp' /></p><p>
கீஹோல் அறுவை சிகிச்சை மூலம் கருவில் உள்ள குழந்தையின் உறுப்புகள் மெதுவாக அதனது வயிற்றுக்குள் மீண்டும் தள்ளப்பட்டு, தையல் போடப்பட்டது.</p><p> 

இதன் காரணமாக குழந்தை வெளியே வர இன்னும் 14 வாரங்கள் இருந்த நிலையில், மெய்சிக்கு சிசேரியன் தழும்பின் அளவை விட 2 மடங்கு பெரிய ஒரு தழும்பு ஏற்பட்டது. அவ்வபோது அந்த குழந்தை தழும்பை உதைத்து வலியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1032062-21b1-47d5-a794-bbc0a9f7de5f/26-6a732b5220603.webp' />&nbsp;</p><p>

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் டெக்சாஸில் வைத்து சுகப்பிரசவத்தின் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.</p><p> 

இந்த சிகிச்சை முறையால் பயனடைந்த முதல் பிரித்தானிய குழந்தை இதுவாகும். மேலும் உலகளவில் பயனடைந்த மூன்றாவது குழந்தை ஆகும். 
 இந்த குழந்தைக்கு தியோ என பெயரிட்டுள்ளனர்.</p><p>கடுமையான வயிற்றுப் பிளவு குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு வழக்கமாகத் தேவைப்படும் மருத்துவ சிகிச்சையை விட, இந்த குழந்தைக்கு மிகக் குறைவான சிகிச்சையே தேவைப்பட்டது. </p><p>

குழந்தை நன்றாகக் குணமடைந்ததாகவும், பிறந்த உடனேயே இயல்பாகப் பால் குடிக்கத் தொடங்கியதாகவும், சில நாட்களிலேயே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db24f4e9-3899-4e4a-83ab-bbf2d4a5e297/26-6a732b5372ed4.webp' /></p><p>

காஸ்ட்ரோஸ்கிசிஸ் எனப்படும் இந்தக் கடுமையான பிறவிக் குறைபாடு, பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் 3,000 குழந்தைகளில் ஒருவரைப் பாதிக்கிறது.</p><p> 

குழந்தைகளுக்கு வாரக்கணக்கில் தீவிர சிகிச்சைப் பிரிவும், குழாய் அல்லது சிரைவழி ஊட்டச்சத்து உணவூட்டமும், சரிசெய்யும் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.

தியோவின் நிலைமை போன்ற மிகவும் சிக்கலான நேர்வுகளில், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். </p><p>

இதன் காரணமாக, 6 மாதங்கள் வரை பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்குதல், பல அறுவை சிகிச்சைகள், 2 ஆண்டுகள் வரை நரம்பு வழி ஊட்டச்சத்து அளித்தல் மற்றும் குடல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.</p><p> மிக உயர்ந்த தரத்திலான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டாலும், 10 குழந்தைகளில் ஒன்று உயிரிழக்க நேரிடுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:29:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் கமில் மிஷாரா 108 நாட்அவுட்: ஜாஃப்னா கிங்ஸ் 242 ஓட்டங்கள் குவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kamil-mishara-108-in-55-not-out-in-lpl-2026-1785933006"></link>
            <id>https://news.lankasri.com/article/kamil-mishara-108-in-55-not-out-in-lpl-2026-1785933006</id>
            <summary type="text">LPL 2026 தொடரின் காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 242 ஓட்டங்கள் குவித்தது.

ஜாஃப்னா கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான கமில் மிஷார...</summary>
            <content type="html"><![CDATA[<p>LPL 2026 தொடரின் காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 242 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

ஜாஃப்னா கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான கமில் மிஷாரா 55 பந்துகளில் 108 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;&nbsp;</p><h2>கமில் மிஷாரா&nbsp;வாணவேடிக்கை </h2><p>
ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கல்லன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான LPL 2026 போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Kamil Mishara brings up a breathtaking maiden T20 century to put Jaffna Kings in a commanding position 💯🔥<a href="https://x.com/hashtag/LPL2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#LPL2026</a> <a href="https://t.co/MZkv0SU7Pk">pic.twitter.com/MZkv0SU7Pk</a></p>&mdash; ThePapare (@ThePapareSports) <a href="https://x.com/ThePapareSports/status/2084960708844999052?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணியில் அவிஷ்கா பெர்னான்டோ 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p></p><p> 

அடுத்து வந்த கவாஜா நபாஃய் அதிரடி காட்ட, கமில் மிஷாரா (Kamil Mishara) வாணவேடிக்கை காட்டினார். </p><h2> 

242 ஓட்டங்கள்</h2><p>அரைசதம் விளாசிய கவாஜா நபாஃய் (Khawaja Nafay) 32 பந்துகளில் 54 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். </p><p>

அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்திய கமில் மிஷாரா சதம் விளாசினார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த டௌஹித் ஹ்ரிடோய் அரைசதம் அடிக்க, ஜாஃப்னா கிங்ஸ் அணி 242 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
கமில் மிஷாரா 55 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்களும், ஹ்ரிடோய் 21 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04b49315-bbec-45f2-aa0e-ee6435d8b177/26-6a732d6f18ccf.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை - உக்ரைன் தலைநகரில் 17 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-missile-strike-kills-17-in-kyiv-1785932725"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-missile-strike-kills-17-in-kyiv-1785932725</id>
            <summary type="text">Ukraine-Russia War Updates: ரஷ்யா உக்ரைன் தலைநகரில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukraine-Russia War Updates: ரஷ்யா உக்ரைன் தலைநகரில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் ரஷ்யா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0da31f30-83bb-49a3-807c-c30c2636edab/26-6a732bb67dc82.webp' /></p><p>இந்த தாக்குதல், இந்த ஆண்டில் கீவ் மீது நடத்தப்பட்ட மிகவும் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
</p><p>
தாக்குதல் அதிகாலை நேரத்தில் தொடங்கியது. குடியிருப்பு கட்டிடங்கள், ரயில் நிலையம் மற்றும் கிடங்குகள் தாக்குதலுக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><h2>
ஏவுகணை தடுப்பு அமைப்புகள் கிடைப்பதில் தாமதம் </h2><p>உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “அமெரிக்கா தயாரிக்கும் பேட்ரியாட் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் கிடைத்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்” என்று கூறினார்.
</p><p>
மேலும் அவர், “சக நாடுகளிடமிருந்து தடுப்பு அமைப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், பல உயிரிழப்புகள் மற்றும் அழிவுகள் நிகழ்கின்றன” எனக் கடுமையாக விமர்சித்தார்.</p><p></p><p>
</p><h2>
உக்ரைன் விமானப்படை தெரிவித்ததாவது: </h2><p>ரஷ்யா 24 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 4 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 115 ட்ரோன்களை ஏவியுள்ளது. இதில் 98 ட்ரோன்கள் மட்டுமே தடுக்கப்பட்டன.</p><p>

கீவ் மேயர் விடாலி கிளிட்ச்கோ, “சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம்” எனக் கவலை தெரிவித்தார். </p><p>தீயணைப்பு படையினர் இன்னும் 230,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p></p><p>இதேவேளை, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், “கீவ் பகுதியில் ஆயுதங்கள் மற்றும் ட்ரோன் உற்பத்தி மையங்கள் தாக்கப்பட்டன” என தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல், உக்ரைன்-ரஷ்யா போரின் தீவிரத்தையும், சர்வதேச பாதுகாப்பு சூழ்நிலையையும் மேலும் சிக்கலாக்கியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T12:23:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கி ஊழியராக பணியாற்றும் இஷான் கிஷன்: வைரலாகும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ishan-kishan-working-in-rbi-viral-photos-1785930133"></link>
            <id>https://news.lankasri.com/article/ishan-kishan-working-in-rbi-viral-photos-1785930133</id>
            <summary type="text">இந்திய கிரிக்கெட் அணி வீரரான இஷான் கிஷன் RBI வங்கி ஊழியராக பணியாற்றும் புகைப்படங்கள் வைரலாகின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கிரிக்கெட் அணி வீரரான இஷான் கிஷன் RBI வங்கி ஊழியராக பணியாற்றும் புகைப்படங்கள் வைரலாகின்றன.
</p><p>
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான இஷான் கிஷன், இந்திய ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளராகவும் பணியாற்றி வருகிறார்.&nbsp;</p><h2>இஷான் கிஷன்&nbsp;</h2><p>
அதிரடி துடுப்பாட்ட வீரரான இஷான் கிஷனுக்கு (Ishan Kishan) விளையாட்டுப் பிரிவின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) உதவி மேலாளரர் பணி கிடைத்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e91d5522-b545-418c-b424-a1d9e6203e11/26-6a732199476b1.webp' />&nbsp;</p><p></p><p>

என்றாலும் அணியில் இருந்து விலகியிருந்த இஷான், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். </p><p>

இதன்மூலம் அவருக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்க, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டார்.&nbsp;</p><h2>புகைப்படம்&nbsp;</h2><p>
 இந்த நிலையில், சமீபத்தில் RBI வங்கிக்கு சென்ற இஷான் கிஷன் அங்குள்ள ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.</p><p> 

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாத இஷான் கிஷன், உள்நாட்டு தொடரான துலீப் கிண்ணத்தில் ஈஸ்ட் ஸோன் அணியை இஷான் கிஷன் வழிநடத்துவார் என்று தெரிய வந்துள்ளது.</p><p>

இந்தத் தொடர், ஆகஸ்ட் 23-ஆம் திகதி தொடங்க உள்ளதால் இடைப்பட்ட காலத்தில், இஷான் ஜார்கண்டில் உள்ள RBI-யின் கிளையில் தனது உதவி மேலாளர் பணிகளை மேற்கொள்வதற்காக சென்றுள்ளார். </p><p>

அப்போது வங்கியில் சக ஊழியர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec5e2c05-ffe6-41eb-b3cf-e9f3a38d69f9/26-6a7321989549b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T11:40:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏடிஎம் கொள்ளைகள்: பொலிசார் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/delhi-police-arrested-in-faridabad-atm-robbery-1785928708"></link>
            <id>https://news.lankasri.com/article/delhi-police-arrested-in-faridabad-atm-robbery-1785928708</id>
            <summary type="text">ஃபரிதாபாத் நகரில் நிகழ்ந்த ஏடிஎம் கொள்ளைகள் தொடர்பில் பொலிசார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள ஃபரிதாபாத் என்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபரிதாபாத் நகரில் நிகழ்ந்த ஏடிஎம் கொள்ளைகள் தொடர்பில் பொலிசார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள ஃபரிதாபாத் என்னுமிடத்தில், சமீபத்தில், இரண்டு ஏடிஎம் இயந்திரங்களிருந்து 12 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
</p><p>
இந்நிலையில், அந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட டெல்லி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
12 லட்ச ரூபாய் கொள்ளை
</h3><p>
ஜூலை மாதம் 3ஆம் திகதி, ஏடிஎம் இயந்திரம் ஒன்றை மின் கருவி ஒன்றின் உதவியுடன் வெட்டி அதிலிருந்த 6.53 லட்ச ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/310b7b8a-b681-44aa-aedb-9cb0c3e11e68/26-6a731c0568374.webp' /></p><p>

பின்னர், ஜூலை மாதம் 26ஆம் திகதி, அதே பகுதியிலுள்ள மற்றொரு ஏடிஎம்மிலிருந்து 5.71 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சுமார் 1,000 சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்த பொலிசார், நேற்றும், நேற்று முன்தினமும் ஹுக்கம் சந்த் (34), அவரது உறவினரான அர்விந்த் (26), விகாஸ் குமார் (24), அபிஷேக் (19) மற்றும் விஷால் குமார் (19) ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.</p><p>

இந்த கொள்ளைச் சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட ஹுக்கம் சந்த், 2016ஆம் ஆண்டு முதல் டெல்லி பொலிஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்துவருகிறார்.</p><p>

கடன் தொல்லையால் அவதியுற்றுவந்த ஹுக்கம், தன் உறவினரான அர்விந்த் உதவியுடன் ஏடிஎம்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.
</p><p>
எந்த ஏடிஎம்களில் இரவு நேரத்தில் பாதுகாவலர்கள் இருக்கமாட்டார்கள், எங்கு கொள்ளையடிப்பது எளிது என திட்டமிட்ட ஹுக்கம், வெல்டிங் வேலை செய்யும் தன் உறவினர்கள் உதவியுடன் ஏடிஎம் இயந்திரங்களை வெட்டி 12 லட்ச ரூபாயைக் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
குற்றவாளிகளை கைது செய்துள்ள அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T11:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவச் சேர்ப்பு அலுவலத்தின் மீது தாக்குதல் திட்டம்: சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-arrested-by-fsb-who-plan-attack-1785926161"></link>
            <id>https://news.lankasri.com/article/man-arrested-by-fsb-who-plan-attack-1785926161</id>
            <summary type="text">உக்ரைனின் உத்தரவின் பேரில் இராணுவச் சேர்ப்பு அலுவலகம் மீது தாக்குதல் திட்டமிட்டதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கலுகா பிராந்தியத்தில், இராணுவச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் உத்தரவின் பேரில் இராணுவச் சேர்ப்பு அலுவலகம் மீது தாக்குதல் திட்டமிட்டதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.</p><p>

கலுகா பிராந்தியத்தில், இராணுவச் சேர்ப்பு அலுவலத்தின் மீது தீவைப்புத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை ரஷ்யா கைது செய்துள்ளது. </p><h2>சந்தேக நபர்&nbsp;கைது </h2><p> 

ரஷ்யாவின் FSB பாதுகாப்புப் பிரிவு புதன்கிழமையன்று, கலுகா பிராந்தியத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததாக தெரிவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb95ad30-d322-4050-8a03-4535aba56b93/26-6a73121436f89.webp' />&nbsp;</p><p></p><p>
குறித்த நபர், உக்ரைனின் உத்தரவின் பேரில் மத்திய கலுகா பிராந்தியத்தில் உள்ள இராணுவச் சேர்ப்பு அலுவலகம் ஒன்றின் மீது தீவைப்புத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p><p>

உக்ரைனின் இராணுவ உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பல்வேறு குற்றச் செயல்களைச் செய்வதற்காக தனக்கு பணம் தருவதாகக் கூறியதாக, கைது செய்யப்பட்ட குறித்த 22 வயது நபர் தெரிவித்த காணொளியை அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.</p><h2>10 ஆண்டுகள் சிறைத்தண்டனை </h2><p>

மேலும் அந்த நபர், "முதலில் ரஷ்ய அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலான வாசகங்களை சுவர்களில் எழுதுவதும் (Graffiti), பின்னர் இராணுவச் சேர்ப்பு அலுவலகம் ஒன்றை எரிப்பதும் எனது பணிகளாக இருந்தன.

கைது செய்யப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே தன்னை வழிநடத்திய நபருடன் தொடர்பில் இருந்ததாகவும்" அவர் குறிப்பிட்டார்.
</p><p>
பயங்கரவாத செயலை மேற்கொள்ளத் திட்டமிட்டதாகக் கூறப்படும் கலுகா பகுதியைச் சேர்ந்த அந்த நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86de578d-3ed4-4a85-8834-b8c7100579c2/26-6a731214dfd7f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T10:34:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெட்ரோல், மின்சாரம் தேவை இல்லை - சூரிய சக்தி மூலம் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/otherlab-launched-solar-power-charging-scooter-1785923446"></link>
            <id>https://news.lankasri.com/article/otherlab-launched-solar-power-charging-scooter-1785923446</id>
            <summary type="text">சூரிய சக்தி மூலம் இயங்கும் ஸ்கூட்டரை அமெரிக்காவை சேர்ந்த அதர்லேப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

சூரிய சக்தியில் இயங்கும் ஸ்கூட்டர் 

பெட்ரோல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரிய சக்தி மூலம் இயங்கும் ஸ்கூட்டரை அமெரிக்காவை சேர்ந்த அதர்லேப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><h3> 

சூரிய சக்தியில் இயங்கும் ஸ்கூட்டர்</h3><p> 

பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் அறிமுகமாகியுள்ள நிலையில், பலரும் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f97e59b3-626b-4bc7-8397-4ad67ea85914/26-6a7307785b8c3.webp' /></p><p> 

தற்போது அதற்கு மாற்றாக சூரிய சக்தி மூலமும் இயங்கும் ஸ்கூட்டரை அமெரிக்காவை சேர்ந்த அதர்லேப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு 'லைட்ஃபூட்' என்று பெயரிடப்பட்டுள்ளது.</p><p>

குறுகிய தூர பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டரில் இருவர் அமர்வதற்கான இருக்கை வசதியுடன், பொருட்களை வைப்பதற்கான இடவசதியும் உள்ளது. </p><p> 

இதன் இரு பக்கத்திலும் தலா 120 வாட் திறன் கொண்ட 2 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாகனத்தை வெயிலில் நிறுத்தி வைப்பதன் மூலம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஒரு மணி நேரம் வெயிலில் நிறுத்தி வைப்பதன் மூலம், 5 கிமீ ஓடும் பயண வரம்பைப் பெற முடியும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfd8e97-6da3-4309-8af6-6c6e85671f4a/26-6a7307790bb8a.webp' /></p><p>

இது முற்றிலுமாக சூரிய சக்தியில் மட்டுமல்லாது, மின்சார சார்ஜ் செய்து அதன் மூலமும் இயக்கி கொள்ளலாம்.

இதற்காக 1.1 kWh திறன் கொண்ட சக்திவாய்ந்த 48-வோல்ட் லித்தியம்-அயன் பேட்டரியும் உள்ளது.</p><p> இதன் மூலம் ஸ்கூட்டரை வீட்டில் உள்ள எலக்ட்ரிக் போர்டிலும் எளிதாக சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்கூட்டர் வெறும் 90 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7562f9d6-ea8f-410a-b376-e8e963d43671/26-6a730779b62ec.webp' /></p><p> 

 இந்த பேட்டரி ஒரு முழு சார்ஜில் சுமார் 60 கிலோமீட்டர்தூரம் பயணிக்க முடியும். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 32 கி.மீ. என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த ஸ்கூட்டரின் பின்புறத்தில், 45.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்பு பெட்டி உள்ளது. இதில் 20 கிலோகிராம் வரை பொருட்களை வைக்க முடியும். மளிகைப் பொருட்கள், ஹெல்மெட்கள் அல்லது பிற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை இதில் எளிதாக வைக்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c38ba45-4a2d-4805-a2a9-832a84de764a/26-6a730777abaec.webp' /></p><p>
முன்பக்கத்தில் 2.8-அங்குல நீர் புகாத தொடுதிரை எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது வேகம், பேட்டரி நிலை மற்றும் விளக்கு குறித்த தகவல்களை வழங்குகிறது.</p><p> 

மேலும், 2,000 லூமன் முகப்பு விளக்கு, ஆக்சிலரோமீட்டர் மூலம் இயங்கும் பின்பக்க விளக்கு, 120 டெசிபல் ஹார்ன் மற்றும் எலக்ட்ரானிக் வீல் லாக் போன்ற அம்சங்களும் உள்ளன. </p><p>

இதன் ஆரம்ப விலை 4,995 டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 4.75 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்கூட்டர் அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:50:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/400-ww2-shells-in-france-village-amid-wildfire-1785922206"></link>
            <id>https://news.lankasri.com/article/400-ww2-shells-in-france-village-amid-wildfire-1785922206</id>
            <summary type="text">பிரான்சின் சில பகுதிகளில், காட்டுத்தீக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



பிரான்சில் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் சில பகுதிகளில், காட்டுத்தீக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p>



பிரான்சில் காட்டுத்தீ பற்றியெரிந்துகொண்டிருந்தபோது, தீயின் நடுவே வெடிச்சத்தம் கேட்டதாக அதிகாரிகள் கூறியிருந்த நிலையில், நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.</p><h3>காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்
</h3><p>
தென்மேற்கு பிரான்சிலுள்ள Le Porge என்னும் கிராமத்தில் காட்டுத்தீ எரிந்துகொண்டிருக்கும்போது வெடிச்சத்தம் கேட்டதாக வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்திருந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fa6ed11-2022-48c7-a9d2-50401ea84d2e/26-6a73029f5cc8c.webp' /></p><p>
இந்நிலையில், காட்டுத்தீக்குப் பின் வீடு திரும்பிய மக்கள், தீ எரிந்த இடத்தில் வெடிகுண்டுகள் கிடப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.</p><p>

உடனடியாக, மக்கள் அப்பகுதிக்கு வரமுடியாதபடி தடுப்புகளை ஏற்படுத்திய உள்ளூர் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>

வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, 400க்கும் மேற்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88b7ac89-0f29-4eca-90d9-a722f5e42c45/26-6a7302a01101e.webp' /></p><p>
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், இரண்டாம் உலகப்போருக்குப் பின் நாங்கள் எதிர்கொள்ளும் மிக பயங்கரமான விடயம் இந்த காட்டுத்தீதான் என கூறியிருந்த நிலையில், இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயமும் நிகழ்ந்துள்ளது கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:40:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் பாதுகாப்பில் கேள்விக்குறி., கோல்ஃப் மைதானத்தில் ஆயுதத்துடன் நுழைந்த நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/armed-man-arrested-at-trump-golf-course-1785922546"></link>
            <id>https://news.lankasri.com/article/armed-man-arrested-at-trump-golf-course-1785922546</id>
            <summary type="text">ட்ரம்ப் கோல்ஃப் மைதானத்தில் ஆயுதத்துடன் நுழைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோல்ஃப் மைதானத்தில் நிதி திரட்டும் விருந்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ட்ரம்ப் கோல்ஃப் மைதானத்தில் ஆயுதத்துடன் நுழைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h2>கோல்ஃப் மைதானத்தில் நிதி திரட்டும் விருந்து</h2><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கலிபோர்னியாவில் உள்ள ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸ் பகுதியில் அமைந்துள்ள அவரது சொந்த Trump National Golf Course-இல் நிதி திரட்டும் விருந்தில் பங்கேற்க இருந்தார். </p><p>

அதற்கு சற்று முன், அப்பகுதியில் ஆயுதத்துடன் நுழைந்த அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/236e0b41-1308-4baf-8735-2d83b00f3491/26-6a7303f3c8c1a.webp' /></p><p>ஜீனின் ஜான் டேல் (38) என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர், துப்பாக்கி மற்றும் சட்டவிரோத குண்டுகள் வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெரிஃப் துறை கூறியதாவது:</h2><p>

அந்த நபர் மைதானத்தில் சுற்றி நடந்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
</p><p>
அவரிடம் 16 குண்டுகள் கொண்ட ஹாலோ பாயிண்ட் குண்டுகள் மற்றும் ஏற்கனவே லோடு செய்யப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

அவரது வாகனத்திலும் கூடுதல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p> பின்னர் அவரது வீட்டில் FBI மற்றும் LA கவுண்டி ஷெரிஃப் துறை சோதனை நடத்தியதில், சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட ரைபிள், பிஸ்டல், உடற்கவசம் மற்றும் பல்வேறு குண்டுகள் கைப்பற்றப்பட்டன.</p><p></p><p>அதிகாரிகள் தெரிவித்ததாவது, “இந்த சம்பவம் சமூகத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக இல்லை. ஆனால், சந்தேகத்திற்கிடமான செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம்” எனக் கூறினர்.
</p><p>
ட்ரம்ப், கலிபோர்னியாவில் நடைபெறும் குடியரசுக் கட்சி நிதி திரட்டும் விருந்தில் பங்கேற்க வந்துள்ளார். அங்கு அவர், கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் மீது கடுமையான விமர்சன உரையாற்ற உள்ளார்.</p><p>

இந்த சம்பவம், ட்ரம்ப் மீது கடந்த சில ஆண்டுகளில் நடந்த பல தாக்குதல் முயற்சிகளுக்குப் பிறகு, அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T09:33:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்திய ரிஷப் பண்ட்! மாநிலத்திலேயே முதல் நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rishabh-pant-highest-taxpayer-in-uttarakhand-1785921436"></link>
            <id>https://news.lankasri.com/article/rishabh-pant-highest-taxpayer-in-uttarakhand-1785921436</id>
            <summary type="text">இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பண்ட் ரூ.23.84 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார்.&amp;nbsp; 

உத்தரகாண்ட் மாநிலத்திலேயே அதிக வருமான வரி செலுத்திய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பண்ட் ரூ.23.84 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார்.&nbsp;</p><p> 

உத்தரகாண்ட் மாநிலத்திலேயே அதிக வருமான வரி செலுத்திய நபராக கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ளார்.&nbsp;</p><h2>ரிஷப் பண்ட்&nbsp;</h2><p>

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரராக விளையாடி வரும் ரிஷப் பண்ட் (Rishabh Pant), இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fad98e4-4360-4528-8db8-def1d09885f7/26-6a72ff9f0bc5c.webp' /></p><p></p><p> 

இந்த சூழலில், உத்தர்காண்டின் அதிகபட்ச வரி செலுத்துபவராக ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p> 

அதாவது, 2025-26 நிதியாண்டிற்காக ரிஷப் பண்ட் ரூ.23.84 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார். இதன்மூலம் மாநிலத்திலேயே அதிகபட்ச தனிநபர் வரி செலுத்துபவராக திகழ்கிறார். 

மேலும், ஒரு நிதியாண்டில் அதிக வரி செலுத்தியவராக அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக திகழ்கிறார்.</p><p> 

ரிஷப் பண்டின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.150 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இதில், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் கிரிக்கெட் மூலம் ஈட்டிய வருமானம் ஆகியவை அடங்கும். </p><p>

குறிப்பாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடனான ரூ.27 கோடி மதிப்பிலான ஒப்பந்தமும் இதில் அடங்கும்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44141664-7ada-4b3a-8953-d487ab3f439e/26-6a72ff9fb6355.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> <b>WHATSAPP CHANNEL</b></a><b> </b>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:15:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று தங்கத்தின் விலை எவ்வளவு? (05-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785920669"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785920669</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (05-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (05-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,316,362.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,440.00.</p><p>

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 371,500.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,570.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 340,600.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,640.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 325,100.00.</p>]]></content>
            <updated>2026-08-05T09:05:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாயில் தொழிற்சாலை பகுதியில் ஏற்பட்ட 7 குண்டு வெடிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dubai-jebel-ali-explosions-spark-massive-fire-1785918285"></link>
            <id>https://news.lankasri.com/article/dubai-jebel-ali-explosions-spark-massive-fire-1785918285</id>
            <summary type="text">துபாயின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜெபெல் அலி தொழிற்சாலை மண்டலம் இன்று அதிகாலை பல குண்டு வெடிப்புகளால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

ஏழு வெடிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜெபெல் அலி தொழிற்சாலை மண்டலம் இன்று அதிகாலை பல குண்டு வெடிப்புகளால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.</p><p>
</p><h2>
ஏழு வெடிப்புகள்</h2><p>20 நிமிடங்களில் குறைந்தது ஏழு வெடிப்புகள் நிகழ்ந்ததாக அரபு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெடிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டதால், அந்த பகுதியில் பெரிய அளவில் புகை மூட்டம் பரவியது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3731d5a6-39eb-433c-8601-47dfd1007733/26-6a72f34ec5032.webp' /></p><p>சம்பவம் நடந்த இடம் ஜெபெல் அலி துறைமுகம் மற்றும் ஜெபெல் அலி சுதந்திர வணிக மண்டலம் (Jafza) அருகே அமைந்துள்ளது. இது 1985-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கும் முக்கிய வணிக மையமாகும்.</p><p>

வெடிப்புகளுக்குப் பிறகு தீ பரவிய நிலையில், அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதுவரை எந்த அமைப்பும் சம்பவத்திற்குப் பொறுப்பேற்கவில்லை. </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BREAKING: Yemen&#39;s Houthis have struck the industrial area of Jebel Ali in Dubai, UAE, per initial reports. Widespread fires and plumes of smoke over the area and multiple explosions in Dubai in the past few minutes. <a href="https://t.co/eMH9ASsNeT">pic.twitter.com/eMH9ASsNeT</a></p>&mdash; The Hormuz Letter (@HormuzLetter) <a href="https://x.com/HormuzLetter/status/2084798929317613584?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>இரண்டு நபர்கள் கைது</h2><p>மேலும், தீ விபத்தை படம் பிடித்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஜெபெல் அலி துறைமுகம், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த சம்பவம் உலகளாவிய வணிகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
</p><p>
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர், “ஹார்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும். இல்லையெனில் ஈரான் கடுமையாக தாக்கப்படும்” என எச்சரித்தார்.
</p><p>
இந்த வெடிப்புகள் மற்றும் தீ விபத்து, மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றங்களை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T08:22:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் திரைத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-govt-to-cut-film-funding-for-cost-saving-1785918064"></link>
            <id>https://news.lankasri.com/article/german-govt-to-cut-film-funding-for-cost-saving-1785918064</id>
            <summary type="text">அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், கலாச்சாரம் மற்றும் ஊடகங்களுக்காக ஒதுக்கப்படும் தொகை 8 சதவிகிதம் குறைக்கப்பட உள்ளது.


ஜேர்மனியின் 2027ஆம் ஆண்டுக்கான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், கலாச்சாரம் மற்றும் ஊடகங்களுக்காக ஒதுக்கப்படும் தொகை 8 சதவிகிதம் குறைக்கப்பட உள்ளது.</p><p>


ஜேர்மனியின் 2027ஆம் ஆண்டுக்கான ஃபெடரல் பட்ஜெட் திரைத்துறையினருக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h3>

திரைத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட்
</h3><p>
ஜேர்மனியின் 2027ஆம் ஆண்டுக்கான ஃபெடரல் பட்ஜெட்டில், கலாச்சாரம் மற்றும் ஊடகத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகை, 2.57 பில்லியன் யூரோக்களிலிருந்து 2.36 பில்லியன் யூரோக்களாக குறைக்கப்படும் என அரசின் வரைவு மசோதா ஒன்று தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/921be116-11df-4f94-adca-d617a09b4fbb/26-6a72f2727a507.webp' /></p><p>

செலவுகளைக் குறைப்பதற்காக ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க இருக்கும் நிலையில், German Federal Film Fund (DFFF) மற்றும் German Motion Picture Fund (GMPF) என்னும் அரசின் நிதியுதவிகள், 50 மில்லியன் யூரோக்கள் குறைக்கப்பட உள்ளதால், 250 மில்லியன் யூரோக்களாக இருந்த நிதியுதவி, 200 மில்லியன் யூரோக்களாக குறைய உள்ளது.&nbsp;</p><p></p><p>
விடயம் என்னவென்றால், இதற்கு முன் அரசின் நிதியுதவி 133 மில்லியன் யூரோக்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் அதை 250 மில்லியன் யூரோக்களாக அதிகரிப்பதாக கலாச்சாரத் துறை அமைச்சரான Wolfram Weimer அறிவித்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a505c1c4-fa22-44e5-ac53-217c3101b7e0/26-6a72f271c571b.webp' /></p><p>

அதை நம்பி சர்வதேச அளவில் ஜேர்மன் சினிமாவை சிறப்புறச் செய்ய திரைத்துறையினர் திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு திரைத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகை 8 சதவிகிதம் குறைய இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:21:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பையில் வீசப்பட்ட லொட்டரி சீட்டுக்கு ரூ.10.98 கோடி - தேடி கண்டுபிடித்த தூய்மை பணியாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/italian-garbagemen-recover-rs-10cr-lottery-ticket-1785917027"></link>
            <id>https://news.lankasri.com/article/italian-garbagemen-recover-rs-10cr-lottery-ticket-1785917027</id>
            <summary type="text">இத்தாலியில், பெண் ஒருவர் குப்பையில் வீசிய லொட்டரி சீட்டுக்கு ரூ.10.98 கோடி பரிசு விழுந்ததையடுத்து, அதனை குப்பையில் தேடி கண்டுபிடித்துள்ளனர். 

குப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியில், பெண் ஒருவர் குப்பையில் வீசிய லொட்டரி சீட்டுக்கு ரூ.10.98 கோடி பரிசு விழுந்ததையடுத்து, அதனை குப்பையில் தேடி கண்டுபிடித்துள்ளனர். </p><h3>

குப்பையில் இருந்த ரூ.10.98 கோடி லொட்டரி டிக்கெட்
</h3><p>
இத்தாலியை சேர்ந்த பெண் ஒருவர், குலுக்கலுக்கு பின்னர் அருகிலுள்ள கடைக்குச் சென்று லொட்டரி சீட்டை சரிபார்த்தபோது, அங்கிருந்த இயந்திரம் பணம் வழங்க முடியாது என்று காட்டியது. </p><p>

மிகப்பெரிய தொகைகளை சிறிய கடைகளில் பெற முடியாது என அந்த இயந்திரம் காட்டியதை, தனக்கு பரிசு விழவில்லை என தவறாக நினைத்த அந்த பெண் லொட்டரி சீட்டை கடையிலே விட்டு வந்துவிட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b839051c-8bbd-47d6-a408-eec0b6d2ac1c/26-6a72ee6445ddf.webp' /></p><p>

வீட்டிற்கு சென்ற பின்னர், அவர் வழக்கமாகத் தேர்வு செய்யும் எண்களே வெற்றி பெற்றுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.&nbsp;அந்த எண்ணிற்கு 1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.10.98 கோடி) பரிசு கிடைத்துள்ளது.</p><p>
அவர் மீண்டும் கடைக்கு சென்ற போது, ஏற்கனேவே அந்த சீட்டை குப்பையில் வீசி அதனை குப்பை லொறி எடுத்து சென்று விட்டது.&nbsp;</p><p></p><p> 

ஆனால் அந்த குப்பை லொறியை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்ததால் ஒரு கழிவு மேலாண்மை நிறுவனத்தின் உதவியுடன் பாதுகாப்பாக குப்பைகளை ஆராய்ந்து, ஒரு நாளுக்கு மேலாக தேடி, அந்த லொட்டரி சீட்டை கண்டறிந்துள்ளனர். </p><p>

ஆனால், அதிசயமாக அந்த லொட்டரி சீட் எந்த சேதமும் இல்லாமல் அப்படியே இருந்தது" என அதனை தேடிய SANB நிறுவனத்தின் நிர்வாகியான ராபர்டோ நிக்கோலா டோஸ்கானோ தெரிவித்துள்ளார். </p><p>

இதனை அந்த வெற்றி பெற்ற பெண்ணிடம் தெரிவித்த போது அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளார். தேடியதற்கான செலவை SANB நிறுவனதிற்கு வழங்க உள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:05:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் மோசமான வறட்சி: உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-drought-to-affect-food-production-1785912294"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-drought-to-affect-food-production-1785912294</id>
            <summary type="text">பிரித்தானியாவில் மோசமான வறட்சி காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.


பிரித்தானியாவில், சுமார் 190 ஆண்டுகளில் இல்லாத அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் மோசமான வறட்சி காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
</p><p>

பிரித்தானியாவில், சுமார் 190 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது வறண்ட வானிலை நிலவிவருகிறது.
</p><p>
இந்நிலையில், அதன் காரணமாக உணவு உற்பத்தி கணிசமாக பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><h3>
உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்</h3><p>

வறட்சி காரணமாக, பாண், பியர், காலை உணவுக்கான தானியங்கள் மற்றும் கால்நடைகளுக்கான தீவனங்கள் தயாரிக்கத் தேவையான, பார்லி, ஓட்ஸ், சிலவகை எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் உற்பத்தி, இந்த ஆண்டில் 19.5 மில்லியன் டன்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக Energy and Climate Intelligence Unit (ECIU) என்னும் ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16695edb-87dc-4911-b2aa-773e81d8a891/26-6a72dbe8295d1.webp' /></p><p>

1984ஆம் ஆண்டு, உணவு தானிய உற்பத்தி தொடர்பில் ஆவணப்படுத்தல் துவங்கியபிறகு, இதற்கு முன் 2020ஆம் ஆண்டு மேற்குறிப்பிட்ட தானியங்களின் உற்பத்தி 19.8 மெட்ரிக் டன்களாக இருந்ததே இதற்கு முன் குறைவான உற்பத்தியாக கருதப்படுகிறது. தற்போதைய நிலை அதைவிட மோசமாக காணப்படுகிறது.&nbsp;</p><p></p><p>

இதனால், விவசாயிகளுக்கு 390 மில்லியன் பவுண்டுகள் வரை வருவாய் இழப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த சூழலிலும், சில எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி ஓரளவு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதே சற்றே ஆறுதலைக் கொடுக்கும் விடயமாகும்.
</p><p>
பிரித்தானியாவின் முக்கிய சாகுபடி பயிரான கோதுமையைப் பொருத்தவரை, மழையின்மையால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cba08af9-86aa-40f5-b230-3c84533995ff/26-6a72dbe8cdb83.webp' /></p><p>
தங்களால் முடிந்ததை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்னும் தீவிர முயற்சியில் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்ய, கிடைத்தது, வழக்கமான அளவில் பாதிதான் உள்ளது.
</p><p>
வழக்கமாக, சராசரியாக ஹெக்டேர் ஒன்றிற்கு 7.9 டன் கோதுமை விளையும் நிலையில், இம்முறை, வெறும் 6.8 டன் கோதுமைதான் விளைந்துள்ளதாக Agriculture and Horticulture Development Board (AHDB) என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>

ஆக, பிரித்தானியா தேசிய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், அதில் உணவு உற்பத்தி என்னும் விடயத்தையும் சேர்த்துக்கொள்ளுமாறு உணவுப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:05:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையும் சனி.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sani-transit-1785914615"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sani-transit-1785914615</id>
            <summary type="text">நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.</p><p>

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
</p><p>
இந்நிலையில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி சனிபகவான் கடைசி நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.</p><p>

அந்தவகையில், சனி ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>மிதுனம் </h2><ul><li>

அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப் போகிறது.</li><li> நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்.</li><li> வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். </li><li>தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்.</li><li> வாழ்க்கையின் பல அம்சங்களில் வளர்ச்சி உண்டாகும். </li><li>பொருள் வசதிகள் மற்றும் நிதி நிலை மேம்படும். </li><li>நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆசைகள் நிறைவேறும். </li><li>திருப்தி மற்றும் மனநிறைவை அளிக்கும். </li><li>குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.</li><li> அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிடலாம். </li><li>வீட்டில் அமைதியான சூழ்நிலை உண்டாகும்.</li><li> மகிழ்ச்சியையும் மன அமைதியையும் அதிகரிக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b77707c-ed60-4dcf-ab57-06826f11f684/26-6a72e4f902910.webp' /></p><p>
</p><h2>
துலாம்</h2><ul><li> 

எதிர்பாராத நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். </li><li>நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.</li><li> உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும்.</li><li> முன்னேற்றத்திற்கான பாதை உருவாகும். </li><li>தொழில் ரீதியாக பல நன்மைகளை வழங்குவார்.</li><li> கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.</li><li> நீண்ட காலமாக நடந்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். </li><li>திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். </li><li>தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். </li><li>நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும்.</li><li> வீட்டில் மகிழ்ச்சி பெருகும். </li><li>மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். </li><li>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.</li><li> வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.</li><li> காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be57422f-2e04-4b0f-981c-ff5ad4db0110/26-6a72e4f9a6e62.webp' /></p><p>
</p><h2>
கும்பம்</h2><ul><li> 

நேரடிப் பலன்களைக் கொடுக்கும். </li><li>வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பார்கள்.</li><li> ஒத்திவைக்கப்பட்ட சில பணிகளை முடிக்க முடியும். </li><li>தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். </li><li>நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். </li><li>அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைக் கொண்டுவரும். </li><li>இலக்கை அடைய முடியும். </li><li>வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற விருப்பங்கள் நிறைவேறும். </li><li>குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.&nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec866b41-5fd7-4682-a90f-ea630d4fcf4c/26-6a72e4fa57f46.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T07:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[49 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/abdullah-shafique-160-not-out-record-in-wi-1785914199"></link>
            <id>https://news.lankasri.com/article/abdullah-shafique-160-not-out-record-in-wi-1785914199</id>
            <summary type="text">மேற்கிந்திய தீவுகளில் டெஸ்டில் 160 ஓட்டங்கள் விளாசி பாகிஸ்தானின் அப்துல்லா ஷாஃபிக் சாதனை படைத்துள்ளார். 

பாகிஸ்தானின் அப்துல்லா ஷாஃபிக் மேற்கிந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கிந்திய தீவுகளில் டெஸ்டில் 160 ஓட்டங்கள் விளாசி பாகிஸ்தானின் அப்துல்லா ஷாஃபிக் சாதனை படைத்துள்ளார்.</p><p> 

பாகிஸ்தானின் அப்துல்லா ஷாஃபிக் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 160 ஓட்டங்கள் குவித்து, 49 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்துள்ளார்.&nbsp;</p><h2>கடைசி டெஸ்ட் போட்டி</h2><p>
மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ட்ரினிடாட்டில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/229f2de7-a86a-4a5f-8ebb-6103d91ab4ee/26-6a72e35a485a3.webp' />&nbsp;</p><p></p><p>
மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸில் 344 ஓட்டங்கள் குவிக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 387 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
அணித்தலைவர் பாபர் அஸாம் (Babar Azam) 88 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அப்துல்லா ஷாஃபிக் ஆட்டமிழக்காமல் 160 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள்) எடுத்தார். </p><h2>அப்துல்லா ஷாஃபிக் 
</h2><p>
இதன்மூலம் 49 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் இன்னிங்ஸில் 150 ஓட்டங்களை கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/821158c2-b6d5-4f6c-915b-8d6f0f17adf7/26-6a72e35b00670.webp' /></p><p>

1977ஆம் ஆண்டில் மஜீத் கான் மேற்கிந்திய தீவுகளின் கயானாவில் 167 ஓட்டங்கள் குவித்திருந்தார்.</p><p> 1958யில் ஹனீப் மொஹம்மது (பாகிஸ்தான்) 337 ஓட்டங்கள் குவித்ததே இதுவரை அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6586c6c6-db0f-4fa4-b3b2-6ebbaff0e39d/26-6a72e35bac0f0.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T07:14:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தவறான திசையில் வாகனத்தை செலுத்திய நபர்: 4 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/4-dies-in-canada-car-crash-drives-in-wrong-route-1785912967"></link>
            <id>https://news.lankasri.com/article/4-dies-in-canada-car-crash-drives-in-wrong-route-1785912967</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் நிகழ்ந்த விபத்தொன்றில் குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.


கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் நிகழ்ந்த விபத்தொன்றில் குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.
</p><p>

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரில் நிகழ்ந்த விபத்தொன்றில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.</p><h3>

தவறான திசையில் வாகனத்தை செலுத்திய நபர்
</h3><p>
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணியளவில், கால்கரி நகரிலுள்ள Stoney Trail என அழைக்கப்படும் நெடுஞ்சாலையில், கார் ஒன்று தவறான திசையில் வேகமாக சென்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03170a6c-e99d-4564-bb0f-8795902e56b1/26-6a72de8817b74.webp' /></p><p>
அதிவேகத்தில் சென்ற அந்தக் கார், எதிரே வந்துகொண்டிருந்த இரண்டு கார்களுடன் மோதியதில், இரண்டு கார்களில் தீப்பற்றியுள்ளது, ஒரு கார் கடும் சேதமடைந்துள்ளது.
</p><p>
துயரம் என்னவென்றால், தவறான திசையில் பயணித்து விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியான 30 வயது மதிக்கத்தக்க நபரும், அவரது காரிலிருந்த பெண்ணும், ஒரு குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள்.
</p><p>
அந்தக் கார் மோதிய மற்றொரு காரின் சாரதியான 43 வயது நபரும் பலியாகிவிட்டார். </p><p></p><p>

விபத்தில் சிக்கிய மூன்றாவது காரிலிருந்த 52 வயது பெண்ணும், அவருடன் பயணித்த மூன்று பிள்ளைகளும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
இந்நிலையில், தவறான திசையில் பயணித்து விபத்தை ஏற்படுத்திய நபர் மது அருந்தியிருந்தாரா என்பது போன்ற விடயங்கள் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:56:40+00:00</updated>
        </entry>
    </feed>
