<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-20T13:26:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை சோதனை செய்த வட கொரியா - உலக நாடுகள் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-fires-two-missiles-in-3-hours-1789909593"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-fires-two-missiles-in-3-hours-1789909593</id>
            <summary type="text">North Korea fires two missiles in 3 hours: 3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது.  

பாலிஸ்டிக் ஏவுகணைக சோதனைவட கொரியா கிழக்கு கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>North Korea fires two missiles in 3 hours: 3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது. </p><h2> 

பாலிஸ்டிக் ஏவுகணைக சோதனை</h2><p>வட கொரியா கிழக்கு கடற்கரையிலிருந்து மூன்று மணி நேர இடைவெளியில் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.</p><p> இது கடந்த வாரம் நடந்த சோதனைகளுக்குப் பிறகு மீண்டும் நிகழ்ந்ததால், உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51480eb-8287-4bb4-8f1e-f77a6360190f/26-6aafda5b478eb.webp' /></p><p>
</p><h2>
3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகள்</h2><p>முதல் ஏவுகணை வோன்சான் (Wonsan) பகுதியில் இருந்து மதியம் 3 மணிக்கு ஏவப்பட்டது. இது சுமார் 450 கிமீ தூரம் பறந்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏவுகணை மாலை 5.50 மணிக்கு அதே பகுதியில் இருந்து ஏவப்பட்டு 600 கிமீ தூரம் பறந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம், இந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் வகையைச் சேர்ந்தவை என்றும், அவை ஜப்பானின் Exclusive Economic Zone-க்கு வெளியே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளது.
</p><p></p><p>தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், இந்த சோதனைகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நேரடியாக மீறுகின்றன என்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பானும் பீஜிங்கில் உள்ள தூதரக வழியாக அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
</p><p>
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கோயிசுமி, “வட கொரியாவின் இந்த நடவடிக்கைகள் ஜப்பான், பிராந்தியம் மற்றும் உலக அமைதிக்கு நேரடி அச்சுறுத்தல்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இதற்கிடையில், வட கொரியா தனது அணு திட்டத்திற்கு எதிராக ஐ.நா. அணு கண்காணிப்பு அமைப்பு எடுத்த தீர்மானத்தை நிராகரித்துள்ளது. </p><p>மேலும், அமெரிக்கா தலைமையிலான கடற்படை பயிற்சிகள் தான் தீவிர நிலையை உருவாக்குகின்றன என்று கிம் யோ ஜோங் (Kim Yo Jong) குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

இந்த சோதனைகள், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. உலக நாடுகள், வட கொரியா உடனடியாக ஏவுகணை சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T13:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shafali-verma-century-vs-bangladesh-asian-games-1789905857"></link>
            <id>https://news.lankasri.com/article/shafali-verma-century-vs-bangladesh-asian-games-1789905857</id>
            <summary type="text">Shafali verma 100 runs in 49 balls in asian games 2026: வங்காளதேச மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shafali verma 100 runs in 49 balls in asian games 2026: வங்காளதேச மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.</p><p></p><p>
மகளிர் ஆசிய கிண்ணப் போட்டியில் இந்திய அணி 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. </p><p></p><h2>மந்தனா,&nbsp;ஷபாலி&nbsp;அதிரடி</h2><p>இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண அரையிறுதிப்போட்டி நிஸ்ஷினில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5e519d8-4fca-4301-b378-5c4f6cd00a5a/26-6aafcf6c5894a.webp' /></p><p></p><p>
முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) அதிரடியாக 19 பந்துகளில் 37 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார். </p><p>

அடுத்து வந்த கமலினி 3 ஓட்டங்களில் வெளியேற, ஹர்மன்ப்ரீத் கவுர் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார். 

மறுமுனையில் ஷபாலி வெர்மா (Shafali Verma) சிக்ஸர்மழை பொழிந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/483bdebd-460b-435e-bdb1-55ef2033044b/26-6aafd6aa943d2.webp' /></p><p>இறுதிவரை களத்தில் நின்று ஷபாலி சதம் விளாசினார்.

இதன்மூலம் இந்திய அணி 195 ஓட்டங்கள் குவித்தது. ஷபாலி வெர்மா 49 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a62c29-3049-49ac-aae7-96faa1fffcef/26-6aafcc9c661f6.webp' />&nbsp;</p><h2>இந்தியா இமாலய வெற்றி </h2><p>

ஹர்மன்ப்ரீத் கவுர் 33 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் எடுத்தார். மருஃபா, ஷான்ஜிதா, ரபேயா மற்றும் நஹிதா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55cb1b50-51a7-4e93-b692-d5b9e39afef1/26-6aafcf6d50a60.webp' /></p><p>
பின்னர் ஆடிய வங்காளதேச அணி 15.4 ஓவர்களில் 81 ஓட்டங்களுக்கு சுருண்டதால், இந்தியா 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.&nbsp;</p><p>
அதிகபட்சமாக திலரா அக்தர் 27 ஓட்டங்கள் எடுத்தார். நந்தனி ஷர்மா மற்றும் தீப்தி ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகளும், ஷ்ரேயங்கா பாட்டீல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff568c53-1e5d-4689-ba48-1d820eddf888/26-6aafd6ab6ca2f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f830c8e0-2b36-43b0-88ea-2127dd666dc9/26-6aafcc9b9f22e.webp' />&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T12:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவூறும் சுவையில் காராமணி வடை.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karamani-vadai-recipe-in-tamil-1789905828"></link>
            <id>https://news.lankasri.com/article/karamani-vadai-recipe-in-tamil-1789905828</id>
            <summary type="text">&amp;nbsp;Karamani Vadai Recipe In Tamil-&amp;nbsp;வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

காரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Karamani Vadai Recipe In Tamil-&nbsp;வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
</p><p>
காராமணி சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைப்பது, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது, மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவது போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
</p><p>
அந்தவகையில், நாவூறும் சுவையில் சத்தான காராமணி வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><ul><li> 

காராமணி- 1 கப் </li><li>
உப்பு- 1 ஸ்பூன்
</li><li>வெங்காயம்- 1
</li><li>இஞ்சி- 1 துண்டு </li><li>
பச்சை மிளகாய்- 2 </li><li>
கறிவேப்பிலை- 1 கொத்து</li><li> 
சீரகம் - 1 ஸ்பூன்</li><li> 
பெருங்காயத்தூள்- ½ ஸ்பூன்</li><li> 
எண்ணெய் - தேவையான அளவு </li></ul><h2>

செய்முறை
</h2><p>
முதலில் காராமணியை 3 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
</p><p>
பின் காராமணி பாதியளவு அரைத்த பிறகு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80d394b9-5cdf-42cc-a670-546c441cef9e/26-6aafcba6c4867.webp' /></p><p>அடுத்து அரைத்த காராமணியுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.</p><p>

இதற்கடுத்து அடுப்பில் வேனல் வைத்து சூடானதும் எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்தவும்.</p><p>

இதற்கடுத்து வடை மாவை சிறிதளவு எடுத்து தட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-09-20T12:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவை அடுத்து... இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்திய சவுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-stops-crude-supplies-1789900961"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-stops-crude-supplies-1789900961</id>
            <summary type="text">Saudi Aramco stops crude supplies to India: சவுதி அராம்கோ இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியது.
சவுதி அரேபியாவின் முக்கிய கிழக்கு-மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Saudi Aramco stops crude supplies to India: சவுதி அராம்கோ இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியது.
</p><p>சவுதி அரேபியாவின் முக்கிய கிழக்கு-மேற்கு குழாய்வழித்தடத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, சவுதி அரம்கோ நிறுவனம் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தியுள்ளது.</p><h2>கிழக்கு-மேற்கு</h2><p>
</p><p>சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் சரக்குக் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில், மாற்று விநியோகத்தை நாடும் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, கச்சா எண்ணெய் கொள்முதல் செலவுகள் அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f8c74c0-3530-4e7f-9bbe-04d22542eb4e/26-6aafb8a37b3ea.webp' /></p><p> </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ஈராக் ஆயுதக் குழுவொன்றால் இயக்கப்படும் ட்ரோன்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கடந்த வார இறுதியில் 'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடம் மூடப்பட்டது. </p><p>ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெயை விநியோகிப்பதற்கான சவுதி அரேபியாவின் முக்கிய மாற்றுப் பாதையாக இந்தப் குழாய் வழித்தடம் உருவெடுத்தது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், செங்கடல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி ஆகிய இரண்டும் வழியாக இந்தியாவிற்கு வழங்குவதை அரம்கோ நிறுத்தியுள்ளது. குழாய்வழித் தாக்குதலுக்கு முன்பே ஹார்முஸ் வழியாக விநியோகம் மிகவும் குறைந்த நிலைக்குச் சரிந்திருந்தது. </p><p>கச்சா எண்ணெய் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நேரத்தில் இந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய சந்தை நிலவரத்தில், பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 1.36 டொலர் அல்லது 1.30 சதவீதம் சரிந்து 103.46 டொலர் ஆகவும், WTI கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 0.85 டொலர் அல்லது 0.83 சதவீதம் சரிந்து 101.06 டொலர் ஆகவும் இருந்தது. </p><p>சவுதி அரேபியா இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை வழங்கும் முக்கிய நாடாகத் திகழ்கிறது. போர் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 9 சதவீதத்தை 'அராம்கோ' (Aramco) நிறுவனம் வழங்கியுள்ளது. </p><p>இந்த நிலையில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் தற்போது சவுதி அரேபியாவிலிருந்து தங்களது ஒப்பந்தம் செய்யப்பட்ட காலவரையறைக்குட்பட்ட விநியோகத்தைப் பெறவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>சமீபத்திய இடையூறு</h2><p>
</p><p>அராம்கோ பொதுவாக இந்தியா மற்றும் பிற வாடிக்கையாளர்களுக்கு, 'ஸ்பாட்' சந்தை (spot market) மூலமாக அல்லாமல், அதிகாரப்பூர்வ விற்பனை விலையிலான வருடாந்திர ஒப்பந்தங்கள் மூலமாகவே கச்சா எண்ணெயை விநியோகம் செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7ad875-6ac6-47d7-b43a-acb233cedf9a/26-6aafb8a42f4d1.webp' /></p><p> </p><p>இதனால், மாற்று விநியோக வழிகளைக் கண்டறிய வேண்டிய நிலையில் உள்ள இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, ஏற்பட்டுள்ள இந்தச் சமீபத்திய இடையூறு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. </p><p>இருப்பினும், மாற்றுக் கச்சா எண்ணெயைக் கண்டறிவது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இந்திய சுத்திகரிப்பாளர்கள் மாற்று கச்சா எண்ணெய் விநியோகத்தைக் கண்டறிவதில் நம்பிக்கையுடன் உள்ளனர், ஆனால் சர்வதேச எண்ணெய் அளவுகோல்கள் உயர்ந்துள்ளதாலும், ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தள்ளுபடிகள் மறைந்துவிட்டதாலும், அந்த பீப்பாய்களின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-20T11:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூமியின் எல்லை என்று அழைக்கப்படும் இடம்..., எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-place-is-called-as-the-end-of-the-earth-1789903688"></link>
            <id>https://news.lankasri.com/article/which-place-is-called-as-the-end-of-the-earth-1789903688</id>
            <summary type="text">which place is called as the end of the earth-&amp;nbsp;நாம் வாழும் பூமி சுமார் 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. 

நாம் வாழும் பூமியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>which place is called as the end of the earth-&nbsp;நாம் வாழும் பூமி சுமார் 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. </p><p>

நாம் வாழும் பூமியில் சுமார் 800 கோடி மக்கள் மற்றும் 195 நாடுகள் உள்ளன.&nbsp; </p><p>இந்நிலையில், பூமியின் எல்லை என்று அழைக்கப்படும் இடம் குறித்து பார்க்கலாம்.
</p><p>
வட ஐரோப்பாவில் அமைந்துள்ள நார்த் கேப், கடற்கரை மற்றும் பனிப்பாறைகளுடன் கூடிய இயற்கை காட்சிகளை கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/240307da-f14f-4b3d-ae60-b2cdd40e5b64/26-6aafc34c9a6c9.webp' /></p><p>இந்த இடத்திற்குச் E-69 என்ற நெடுஞ்சாலை வழியாக சொல்லலாம்.</p><p>

நார்வேயில் உள்ள E-69 நெடுஞ்சாலை, ஐரோப்பாவின் வடகோடி முனையான நார்த் கேப் பகுதிக்குச் செல்கிறது. </p><p>

இந்த சாலை உலகின் கடைசி சாலை என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
</p><p>
இந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது, கடல் மற்றும் பனி நிரம்பிய நிலப்பரப்புகளை காணலாம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db5474d-9b97-4d98-ab6e-a4c8f320abda/26-6aafc34b2c974.webp' /></p><p>நார்த் கேப் பகுதி இந்தியாவிலிருந்து சுமார் 6,900 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
</p><p>
விமானப் பயணத்தின் மூலம் நார்வே சென்ற பிறகு, E-69 நெடுஞ்சாலை வழியாக இந்த இடத்திற்கு செல்லலாம்.
</p><p>
மேலும், ஆர்க்டிக் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், நார்த் கேப்பில் கடுமையான குளிர் நிலவுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/481159f5-468f-4a19-8fa5-8e5d49693c19/26-6aafc34bde70c.webp' /></p><p>குளிர்காலத்தில் வெப்பநிலை -45°C வரை குறையக்கூடும். கோடைக்காலத்திலும் இங்கு குளிர்ச்சியான வானிலை காணப்படும்.&nbsp;</p><p>இந்த பகுதியில் கோடைக்காலத்தில் நீண்ட நேரம் சூரியன் மறையாமல் இருக்கும் இயற்கை நிகழ்வை காணலாம்.</p><p> 

இதனால், உலகம் முழுவதும் இருந்து சாகசப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை நார்த் கேப் பகுதிக்கு வருகின்றார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-20T11:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்களிக்கவிருக்கும் இரண்டு ஜேர்மன் மாகாணங்கள்... AfD-யின் மற்றொரு வெற்றி குறித்து அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-voters-go-to-the-polls-1789903745"></link>
            <id>https://news.lankasri.com/article/german-voters-go-to-the-polls-1789903745</id>
            <summary type="text">German voters go to the polls in state elections: ஜேர்மன் வாக்காளர்கள் மாகாணத் தேர்தல்களில் வாக்களிக்கின்றனர்.
ஜேர்மனியில் இரண்டு மாகாணத் தேர்தல்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>German voters go to the polls in state elections: ஜேர்மன் வாக்காளர்கள் மாகாணத் தேர்தல்களில் வாக்களிக்கின்றனர்.
</p><p>ஜேர்மனியில் இரண்டு மாகாணத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில்; இதில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி அமைப்புகள் பெறும் முன்னேற்றம் நாட்டில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி, அரசாங்கத்தையே உலுக்கக்கூடும்.</p><h2>அவசரக் கூட்டம்</h2><p>
</p><p>ஜேர்மன் சேன்ஸலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், பெர்லின் மற்றும் மெக்லென்பர்க்-வெஸ்டர்ன் பொமரேனியா ஆகிய பிராந்தியத் தேர்தல்களிலிருந்து வெளியாகி வரும் ஆரம்பக்கட்ட முடிவுகள் குறித்து விவாதிக்க, தனது மைய-வலதுசாரி சிடியு (CDU) கட்சியின் தலைமைக்கான அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aec8231-027e-4181-8fb0-f0d842b11ac0/26-6aafc3832d088.webp' /></p><p> </p><p>16 மாதங்களாகப் பதவியில் இருக்கும் மெர்ஸ், வாக்கெடுப்பின் விளைவாக ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கையாள்வதற்காக, அடுத்தடுத்த நாட்களுக்கான தனது பணிகளை ஒத்திவைத்ததுடன், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான பயணத்தையும் ரத்து செய்துள்ளார்.
</p><p>இரண்டு வாரங்களுக்கு முன்பு Saxony-Anhalt மாகாணத்தில், தீவிர வலதுசாரி, ட்ரம்ப் ஆதரவு மற்றும் ரஷ்ய நட்புறவு கொண்ட AfD கட்சியானது, அவரது CDU கட்சிக்கு ஒரு பெரும் தோல்வியைக் கொடுத்தது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தேர்தல்களில் AfD கட்சி கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன; </p><p>இருப்பினும், Saxony-Anhalt மாகாணத்தில் தனிப்பெரும்பான்மைக்குச் சில ஆசனங்களே குறைவாக இருந்ததைப் போலன்றி, இம்முறை எந்தவொரு மாகாணத்திலும் அக்கட்சி ஆட்சியமைக்கும் நிலையை எட்ட வாய்ப்பில்லை என்றே தெரிய வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98c1375-3a09-45ec-a2a5-0357ed9e0a22/26-6aafc383d3a6c.webp' /></p><p> </p><p>ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள வாக்குப் பதிவில், அந்தந்தப் பகுதிகளுக்கே உரித்தான தனித்துவமான சவால்களை CDU எதிர்கொள்கிறது.
</p><p>வடகிழக்குக் கடற்கரை மாகாணமான மெக்லென்பர்க்-வெஸ்டர்ன் பொமரேனியாவில், பிரபலமான மாகாண முதலமைச்சர் மனுவேலா ஷ்வெசிக் தலைமையிலான SPD கட்சிக்கும் AfD கட்சிக்கும் இடையிலான முக்கியப் போட்டியை மெர்ஸின் கட்சி வெறும் பார்வையாளராகவே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.</p><h2>AfD தேர்தல் வெற்றி</h2><p>
</p><p>அரசு ஒளிபரப்பு நிறுவனமான ZDF-இன் தரவுகளின்படி, SPD கட்சி 37 சதவீத ஆதரவைப் பெற்றிருந்த நிலையில் AfD கட்சி 36 சதவீத ஆதரவைப் பெற்றிருந்தது; அதேவேளையில், மெர்ஸின் CDU கட்சி வெறும் 6 சதவீத ஆதரவுடன், மாகாண நாடாளுமன்றத்தில் நீடிப்பதற்குத் தேவையான 5 சதவீதக் குறைந்தபட்ச ஆதரவு அளவைத் தவறவிடும் அபாயகரமான நிலைக்கு மிக அருகில் இருந்தது. </p><p>கடந்த ஆண்டு மே மாதம் மெர்ஸ் பதவியேற்றபோது, ​​மந்தமடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ரஷ்யாவை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தை வலுப்படுத்தவும், வாக்காளர்களின் அச்சத்தைப் போக்கி அவர்களை AfD கட்சியிலிருந்து ஈர்க்கும் வகையில் முறையற்ற குடியேற்றத்தைக் குறைக்கவும் அவர் உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f1d5bac-3b88-4aac-acd8-7981305f266e/26-6aafc384863ed.webp' /></p><p> </p><p>ஆனால், தற்போது நாடு தழுவிய கருத்துக்கணிப்புகளில் AfD கட்சி முன்னிலையில் உள்ளது; அதேவேளையில், மெர்ஸின் தனிப்பட்ட செல்வாக்கு விகிதம் 10 சதவீதத்திற்குச் சற்று அதிகமாகவே உள்ளது—அவரது அவ்வப்போதான வெளிப்படையான மற்றும் கடுமையான கருத்துகளும் இதற்கு உதவவில்லை. </p><p>இந்த மாதத் தொடக்கத்தில் ஜேர்மனியில் AfD கட்சி பெற்ற தேர்தல் வெற்றி, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. தீவிர வலதுசாரிகள் அதிகாரத்திற்கு வருவதைத் தடுப்பதற்காக ஒரு 'கூட்டணியை' அமைக்குமாறு பிரான்ஸின் இமானுவல் மேக்ரானின் ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்தனர். </p><p>மேலும், உலகம் முழுவதும் தீவிர வலதுசாரி அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக ஸ்பெயினின் சோசலிசப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் திங்களன்று எச்சரித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-20T11:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரம் - டீசல் விலை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-fuel-crisis-diesel-hits-record-high-1789900825"></link>
            <id>https://news.lankasri.com/article/france-fuel-crisis-diesel-hits-record-high-1789900825</id>
            <summary type="text">France fuel crisis diesel price hits record high: பிரான்சில் எரிபொருள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடுபிரெஞ்சு அரசு தரவுகளின்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>France fuel crisis diesel price hits record high: பிரான்சில் எரிபொருள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.</p><h2>

எரிபொருள் தட்டுப்பாடு</h2><p>பிரெஞ்சு அரசு தரவுகளின்படி, நாட்டின் ஒவ்வொரு 9 எரிபொருள் நிலையங்களில் 1 இடத்தில் குறைந்தது ஒரு வகை பெட்ரோல் அல்லது டீசல் கிடைக்காமல் உள்ளது.
</p><p>
செப்டம்பர் 18 காலை 9 மணிக்கான அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில், 11 சதவீத எரிபொருள் நிலையங்கள் விநியோக சிக்கல்களை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f535043b-07ca-44b5-a428-2a9ea2aafd25/26-6aafb81aa5a88.webp' /></p><p>இந்த எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புதன்கிழமை 9 சதவீதம், வியாழக்கிழமை 10 சதவீதம், வெள்ளிக்கிழமை 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.
</p><p>
Grand Est பிராந்தியம் மிக மோசமான நிலையை எதிர்கொள்கிறது. அங்கு 16 சதவீத நிலையங்கள் விநியோக சிக்கல்களை சந்திக்கின்றன. Centre-Val de Loire மற்றும் Occitanie பிராந்தியங்களில் 14 சதவீத நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. Pays de la Loire 13 சதவீத நிலையங்களில் பற்றாக்குறை உள்ளது.</p><p></p><p>அரசு தரவுகள் முழுமையான நிலையை காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது. உதாரணமாக, ஒரு நிலையத்தில் SP95 இல்லாமல் SP98 கிடைத்தால், அது பற்றாக்குறையாகக் கணக்கிடப்படவில்லை. இதனால், பல வாகன ஓட்டிகள் உண்மையில் அதிக சிக்கல்களை சந்திக்கின்றனர்.</p><p>

இதற்கிடையில், டீசல் விலை சாதனை அளவுக்கு உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை டீசல் லிட்டருக்கு 2.38 யூரோவாக இருந்தது. வெள்ளிக்கிழமை அது 2.39 யூரோவை கடந்தது. சில நிலையங்களில் 2.70 யூரோ வரை விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலைகளும் அதிகரித்துள்ளன.
</p><p>
இந்த நெருக்கடியை சமாளிக்க, பிரான்ஸ் அரசு சுத்திகரிப்பு நிலைய உற்பத்தியை அதிகரித்தல், பராமரிப்பு அட்டவணைகளை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. </p><p>பிரதமர் Sebastien Lecornu, மீனவர்கள், விவசாயிகள் மற்றும் கட்டுமானத் துறைக்கு கூடுதல் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
</p><p>
இந்த எரிபொருள் நெருக்கடி, பிரான்ஸ் மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிறது. விலை உயர்வு மற்றும் விநியோக சிக்கல்கள், அரசின் நடவடிக்கைகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காட்டும் முக்கிய சோதனையாக உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T10:36:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pressure-area-forming-over-andaman-sea-1789899707"></link>
            <id>https://news.lankasri.com/article/pressure-area-forming-over-andaman-sea-1789899707</id>
            <summary type="text">Pressure area forming over andaman sea-&amp;nbsp;வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pressure area forming over andaman sea-&nbsp;வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
</p><h2>
வானிலை மையம் கூறுகையில்.., </h2><p>

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
</p><p>
அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகிற 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும்.
</p><p>
மேலும், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c60543c-6ff7-4d88-abf9-902d6ffd710a/26-6aafb3fae6132.webp' /></p><p>இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும் நாளையும் இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
</p><p>
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, மற்றும் நாகை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
</p><p>
தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். </p><p>

சூறாவளி காற்று வீசக்கூடிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-20T10:23:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி விவகாரத்தில் தலையிட்டால்... துருக்கி மற்றும் பாகிஸ்தானுக்கு ஹவுதிகள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-warn-pakistan-turkiye-1789898497"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-warn-pakistan-turkiye-1789898497</id>
            <summary type="text">Houthis warn Pakistan, Turkiye over Saudi intervention: சவுதியில் தலையீடு குறித்து பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு ஹவுதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis warn Pakistan, Turkiye over Saudi intervention: சவுதியில் தலையீடு குறித்து பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு ஹவுதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
சவுதி அரேபியாவுடன் இணைந்து இராணுவ ரீதியாகத் தலையிட வேண்டாம் என பாகிஸ்தானையும் துருக்கியையும் யேமனின் ஹவுதிகள் எச்சரித்துள்ளதுடன், இவ்விரு நாடுகளில் ஏதேனும் ஒன்று மோதலில் படைகளை ஈடுபடுத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.</p><h2>இரும்புக்கரம் கொண்டு</h2><p>
</p><p>பாகிஸ்தான் ஊடகச் செய்திகளின்படி, அன்சார் அல்லாவின் அரசியல் குழு உறுப்பினரும் தமார் (Dhamar) ஆளுநருமான முகமது அல்-புகைதி, ஈராக் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'அனதர் ரீடிங்' (Another Reading)-க்கு அளித்த பேட்டியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2b527b0-58d2-4872-bdea-964da89b8284/26-6aafaf04035d8.webp' /></p><p> </p><p>அல்லாஹ்வின் மீது ஆணையாக, துருக்கியும் பாகிஸ்தானும் இதில் தலையிட்டால், நாங்கள் அவர்களை இரும்புக்கரம் கொண்டு தாக்குவோம் என்று அல்-புகைத்தி கூறியுள்ளார். </p><p>மேலும், யேமனுக்கு எதிரான சவுதியின் ஆக்கிரமிப்பு என்று அவர் விவரித்ததில் அந்த இரு நாடுகளும் இணைந்தால், ஹவுதிகள் அவற்றுக்கு ஒரு பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>ஹவுதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே மீண்டும் தொடங்கியுள்ள சண்டைகள், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு இடையேயான மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மீது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>இந்த மோதலில் ராணுவ ரீதியாக ஈடுபடத் தீர்மானித்தால், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் அரசாங்கங்களை நோக்கியே ஹவுதி அமைப்பின் நிலைப்பாடு அமைந்திருக்கும் என்று அல்-புகைதி கூறினார். </p><p>மேலும், இவ்விரு நாடுகளிலும் ஏமன் மீதான பொதுமக்களின் அனுதாபத்தைக் குறிப்பிட்ட அவர், சண்டையிலிருந்து விலகி இருக்குமாறு இஸ்லாமாபாத் மற்றும் அங்காரா ஆகியவற்றை வலியுறுத்தினார். </p><p>சவுதி அரேபியா ஹவுதிகளின் புதிய தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள சூழலிலும், மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ள பிற உறுப்பு நாடுகளும் இதில் நேரடியாக ஈடுபடக்கூடுமோ என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> இதனிடையே, சவுதி அரேபியாவிற்கு இராணுவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க துருக்கி முன்வரக்கூடும் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஹக்கன் ஃபிடான் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>தொழில்நுட்ப உதவி</h2><p> </p><p>மக்கா கூட்டணியாக, நாங்கள் இது குறித்து பாகிஸ்தானிடம் பேசுவோம்; அத்துடன் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும் வழங்க முடியும் என்றும் ஃபிடான் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfe75d5b-3b66-4cab-a08c-9775e3e7c682/26-6aafaf04a9aee.webp' /></p><p> </p><p>சவுதி அரேபியா மீதான ஹவுதிகளின் தாக்குதல்களை பாகிஸ்தான் கண்டித்துள்ளதுடன், ரியாத் மீதான தனது ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> மக்காவுக்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டது; மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இக்குறித்த விவகாரம் எழுப்பப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-20T09:58:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளால் பதற்றத்தில் சவுதி அரேபியா... வார இறுதியில் வெள்ளை மாளிகைத் திரும்பிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-arrives-back-white-house-1789890524"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-arrives-back-white-house-1789890524</id>
            <summary type="text">Trump arrives back at White House amid tensions with: பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
சவுதி அரேபியாவில் உள்ள முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump arrives back at White House amid tensions with: பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
</p><p>சவுதி அரேபியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஹவுதிகள் பொறுப்பேற்ற நிலையில், டொனால்ட் ட்ரம்ப் விடுமுறையை முன்கூட்டியே முடித்துக்கொண்டுள்ளார்.</p><h2>கேம்ப் டேவிட் ஓய்விடத்தில்</h2><p>
</p><p>ரியாத் விமான நிலையத்தின் மீது கரும் புகை சூழ்ந்து காணப்பட்ட காணொளி வெளியானதை அடுத்து, யேமன் ஹவுதிகள் தங்கள் தலைநகரை பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்க முயன்றதை சவுதி அரேபியா சனிக்கிழமை உறுதி செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c862f5e-e5c2-4c9f-8928-5f8ca65c365c/26-6aaf8fde7fa83.webp' /></p><p>
</p><p>ட்ரம்ப் முதலில் வார இறுதி முழுவதும் கேம்ப் டேவிட் ஓய்விடத்தில் தங்கிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. </p><p>இருப்பினும், சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 7:57 மணிக்கு, ட்ரம்ப் Marine One ஹெலிகொப்டரில் வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார்.</p><p></p><p> </p><p>சவுதி அரேபியாவுக்கு எதிராக, பொதுமக்களுக்கான விமான நிலையங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, விரோத நடவடிக்கைகளில் ஹவுதிகள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் உறுதிப்படுத்தியது. </p><p>மேலும், இந்த இராணுவ மோதல் மிக வேகமாகத் தீவிரமடைய வாய்ப்புள்ளது. மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள், அப்பகுதிக்குச் செல்வது மற்றும் அதன் வழியாகப் பயணம் செய்வது குறித்துத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>சண்டை தீவிரமடைந்த பின்னர் ஹவுதிகள் ரியாத் மீது இலக்கு வைத்தது, மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஹவுதிகளுக்கு எதிராகப் போரிடும் சவுதி தலைமையிலான கூட்டணி, அதிகாலையில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் குறித்த அறிக்கையை மிகத் தாமதமாகவே வெளியிட்டது.</p><h2>தாக்கியதாக ஹவுதிகள்</h2><p> இதனிடையே, ரியாத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், யான்புவில் உள்ள சவுதி எண்ணெய் நிறுவனமான 'அராம்கோ'வின் (Aramco) வசதிகளையும் தாக்கியதாக ஹவுதிகள் முன்னதாக உரிமை கோரியிருந்தனர். </p><p>ஹார்முஸ் நீரிணையை அடுத்து, மற்றொரு முக்கியமான உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதைக்கு அருகில் அதிகரித்து வரும் மோதல், சந்தைகளுக்குப் புதிய நெருக்கடிகளைக் கொண்டுவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T09:05:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடகத்தில் உட்கார்ந்த செவ்வாய்.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-peyarchi-1789894929"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-peyarchi-1789894929</id>
            <summary type="text">நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
</p><p>
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.</p><p>

இந்நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்துள்ளார்.</p><p>

மேலும், குரு ஏற்கனவே இந்த ராசியில் இருப்பதால், செவ்வாயுடன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.</p><p>

அந்தவகையில், கடக ராசிக்கு சென்ற செவ்வாயால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.</p><p></p><p> </p><h2>

மேஷம்</h2><ul><li>சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.
</li><li>புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.
</li><li>பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு கிடைக்கும்.
</li><li>வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.</li><li>
ரியல் எஸ்டேட் துறையில் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4d27eb6-7d7c-4353-8ae4-2956b517eae2/26-6aafa113715ad.webp' /></p><p>
</p><h2>

விருச்சிகம்
</h2><ul><li>அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
</li><li>வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
</li><li>பயணங்கள் மூலம் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
</li><li>புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.</li><li>
பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
</li><li>சொத்து மூலம் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91889780-3b80-4ab8-a306-bab313ffe10d/26-6aafa11424ece.webp' /></p><p>
</p><h2>


தனுசு</h2><ul><li>
 வாழ்வில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.</li><li>
பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.</li><li>
மூதாதையர் சொத்து கைக்கு வந்து சேரும்.</li><li>
முதலீடுகளை மேற்கொள்ளும் முன் ஆவணங்களை நன்கு சரிபார்க்க வேண்டும்.
</li><li>புதிய வழிகளில் இருந்து பணவரவு கிடைக்கும்.
</li><li>இதன் மூலம் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33c051a1-241e-470b-9358-0a1a182641ba/26-6aafa114cd7fd.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T09:03:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[NATO-வின் இராணுவ குழுத் தலைவராக ஜேர்மனியின் பாதுகாப்பு தலைவர் தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nato-picks-german-general-as-military-chief-1789894132"></link>
            <id>https://news.lankasri.com/article/nato-picks-german-general-as-military-chief-1789894132</id>
            <summary type="text">NATO picks German General as military chief: நேட்டோ கூட்டணியின் இராணுவக் குழுவின் தளபதியாக ஜேர்மன் பாதுகாப்பு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜே...</summary>
            <content type="html"><![CDATA[<p>NATO picks German General as military chief: நேட்டோ கூட்டணியின் இராணுவக் குழுவின் தளபதியாக ஜேர்மன் பாதுகாப்பு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
</p><h2>
ஜேர்மன் இராணுவ தளபதி</h2><p>NATO தனது புதிய இராணுவக் குழுத் தலைவராக ஜேர்மனியின் பாதுகாப்பு தலைவரான ஜெனரல் கார்ஸ்டன் புரூயரை (Army General Carsten Breuer) தேர்வு செய்துள்ளது.</p><p>இந்த முடிவு, ஜேர்மனியின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தையும், பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்திருப்பதையும் பிரதிபலிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/948e5fe3-ef34-4ed8-9406-139c2d579727/26-6aaf9df5d5d84.webp' /></p><h2> 2027-ல் பதவியேற்பு</h2><p>NATO உறுப்புநாடுகளின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், கோபன்ஹேகனில் நடைபெற்ற வாக்கெடுப்பில் புரூயரை தேர்வு செய்தனர். </p><p>தற்போது அந்தப் பதவியில் உள்ள இத்தாலியின் அட்மிரல் ஜியூசெப்பே காவோ டிராகோனே (Giuseppe Cavo Dragone) இருக்கிறார். 2027 நடுப்பகுதியில் இவர் பதவியேற்கவுள்ளார்.</p><p>
</p><p></p><h2>ஜேர்மனியின் மாற்றம்</h2><p>உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து, ஜேர்மனி தனது பாதுகாப்பு கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. பல ஆண்டுகளாக குறைவான பாதுகாப்புச் செலவுகளும், எச்சரிக்கையான வெளிநாட்டு கொள்கையும் கொண்டிருந்த ஜேர்மனி, தற்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய பாதுகாப்புச் செலவுகளை மேற்கொள்கிறது.
</p><p>
NATO-வில், இராணுவ சக்தியை ஒருங்கிணைக்கும் Supreme Allied Commander Europe எப்போதும் அமெரிக்காவைச் சேர்ந்தவராக இருப்பார். ஆனால், இராணுவக் குழுத் தலைவர், கூட்டணியின் அரசியல் முடிவுகளுக்கான முக்கிய இராணுவ ஆலோசகராக செயல்படுகிறார்.
</p><p>
இந்த முடிவு, ஜேர்மனியின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியையும், NATO-வில் அதன் முக்கிய பங்கையும் காட்டுகிறது.</p><p>புரூயரின் தலைமையால், கூட்டணியின் இராணுவத் திட்டங்கள் மற்றும் அரசியல் ஆலோசனைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T08:45:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமரி அதப்பத்து ருத்ரதாண்டவம்! பாகிஸ்தான் அணியை தரைமட்டமாக்கி..இறுதிப்போட்டியில் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chamari-athapaththu-smash-83-runs-help-sl-beat-pak-1789891748"></link>
            <id>https://news.lankasri.com/article/chamari-athapaththu-smash-83-runs-help-sl-beat-pak-1789891748</id>
            <summary type="text">Sri Lanka women beat pakistan by 8 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

நிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sri Lanka women beat pakistan by 8 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
</p><p>
நிஸ்ஷினில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.&nbsp;</p><h2>ஆயிஷா ஜாபர்&nbsp;71</h2><p>முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 177 ஓட்டங்கள் குவித்தது. ஆயிஷா ஜாபர் 40 பந்துகளில் 71 ஓட்டங்களும், ஷாவால் ஜூல்பிகர் 54 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c006304-4471-4817-8ab3-8549b20f4de4/26-6aaf94a701d7f.webp' /></p><p></p><p>பின்னர் ஆடிய இலங்கை அணி சமரி அதப்பத்துவின் அதிரடியில், 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>சமரி அதப்பத்து&nbsp;ருத்ரதாண்டவம்</h2><p>
அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்களும், ஹாசினி பெரேரா (Hasini Perera) 26 பந்துகளில் 42 ஓட்டங்களும் விளாசினர். </p><p>இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.&nbsp;22ஆம் திகதி இந்திய அணியை கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இலங்கை எதிர்கொள்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b10a956-d41a-43a4-ba32-a47e8c501005/26-6aaf94a7ac840.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T08:07:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் ரூ.8000 முதலீடு.., எவ்வளவு பணம் கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/post-office-rd-scheme-details-in-tamil-1789889244"></link>
            <id>https://news.lankasri.com/article/post-office-rd-scheme-details-in-tamil-1789889244</id>
            <summary type="text">எதிர்காலத்திற்காகச் சேமிக்க விரும்புபவர்கள் போஸ்ட் ஆபிஸின் தொடர் வைப்பு நிதித் திட்டத்தில் (RD) முதலீடு செய்யலாம். 

அரசு சார்ந்த இத்திட்டத்தில் சந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்திற்காகச் சேமிக்க விரும்புபவர்கள் போஸ்ட் ஆபிஸின் தொடர் வைப்பு நிதித் திட்டத்தில் (RD) முதலீடு செய்யலாம். </p><p>

அரசு சார்ந்த இத்திட்டத்தில் சந்தை அபாயங்கள் இல்லாமல், நிர்ணயிக்கப்பட்ட வட்டி மூலம் வருமானம் பெறலாம்.
</p><p>
போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு நிதித் திட்டம் என்பது மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கும் அரசு திட்டமாகும்.</p><p> 

ஒரே நேரத்தில் அதிக தொகையை முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு, மாதாந்திர சேமிப்பு முறையில் முதலீடு செய்யலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83aa4e53-a20f-44b7-b3b6-9773a83ecef7/26-6aaf8ade993c4.webp' /></p><p>மனைவியின் பெயரில் மாதம் ரூ.8,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ.5.70 லட்சம் வரை பணத்தை உருவாக்கலாம்.</p><p>

இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் அல்லது 60 மாதங்கள் ஆகும். இதில் மாதம் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம்.</p><p> 

வட்டி காலாண்டு அடிப்படையில் கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது. வட்டி விகிதத்தை மத்திய அரசு நிர்ணயிக்கிறது.</p><p>RD கணக்கைத் தொடங்கி மாதம் ரூ.8,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.4.80 லட்சம் சேமிக்கப்படும். </p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4d0be0b-d6cd-49bc-a80b-4acf1d8e1ecc/26-6aaf8adf4ed03.webp' />
</p><p>
வட்டியுடன் சேர்த்து முதிர்வின்போது சுமார் ரூ.5.70 லட்சம் கிடைக்கும். இதன் மூலம் சுமார் ரூ.90,000 வரை வட்டி வருமானம் கிடைக்கும்.</p><p>
</p><p>இந்தத் திட்டத்தில் வட்டி காலாண்டு அடிப்படையில் கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது.&nbsp; &nbsp;முதலீடு செய்த அசல் தொகையுடன், ஏற்கெனவே கிடைத்த வட்டிக்கும் வட்டி கணக்கிடப்படுகிறது.</p><p>

மேலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் பெறும் வசதியும் உள்ளது.</p><p> 

அவசரத் தேவைகளில் முதிர்வுக்கு முன்பாகக் கணக்கை முடித்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T07:28:01+00:00</updated>
        </entry>
    </feed>
