<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-04T06:10:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா - அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/smriti-mandhana-multiple-records-india-won-vs-hk-1788501167"></link>
            <id>https://news.lankasri.com/article/smriti-mandhana-multiple-records-india-won-vs-hk-1788501167</id>
            <summary type="text">india won hongkong qualifed for asia cup semifinal: ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய மகளிர் அணி, மகளிர் ஆசிய கிண்ண தொடரில் அரையிறுதிக்கு தகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>india won hongkong qualifed for asia cup semifinal: ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய மகளிர் அணி, மகளிர் ஆசிய கிண்ண தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. </p><h3>

அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா </h3><p>

2026 மகளிர் ஆசிய கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2818caa1-d783-4425-944a-9787606699bc/26-6a9a5cb2cefd4.webp' /></p><p>

நாணய சுழற்சியில் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.&nbsp;</p><p>

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9017d97b-728a-432b-a8a8-bfdd26a74754/26-6a9a5cb21fc7f.webp' /></p><p>

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி, 124 ஓட்டங்கள் குவித்தார்.
</p><p>
194 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தோனேசியா, 16.2 ஓவர்களில் வெறும் 56 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.&nbsp;&nbsp;</p><p></p><p>

இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 ஓவர்கள் வீசி, 9 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை கைப்பற்றினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5b427f4-553c-444c-aca6-9488b8402adc/26-6a9a5cb38196e.webp' /></p><p> 

137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. </p><h3> 

ஸ்மிருதி மந்தனா சாதனைகள்</h3><p> 

இந்த போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ஸ்மிருதி மந்தனா, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c41ada-e765-4f16-88ce-ead94ee6d714/26-6a9a5cb0b90fd.webp' /></p><p>

124 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் மகளிர் டி20 ஆசிய கிண்ணத்தில் ஒரு வீராங்கனை பதிவு செய்த அதிகபட்ச தனிநபர்&nbsp;ஓட்டங்கள்&nbsp; இதுவாகும்.</p><p>

முன்னதாக இலங்கை வீராங்கனை சாமரி அதபத்து 119 ஓட்டங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
</p><p>
இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் தனது 18வது சதத்தை பதிவு செய்த ஸ்மிருதி மந்தனா, கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91af7f5c-96ab-44cf-b170-1fe45e157828/26-6a9a5cb16d78a.webp' /></p><p>

முன்னதாக, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவி மெக் லெனிங்கின் 17 சதங்களுடன் முதலிடத்தில் இருந்தார். </p><p>

மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 வெவ்வேறு ஆண்டுகளில் தலா 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்த உலகின் முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
</p><p>
இந்த ஆண்டில் 579 ஓட்டங்களும், 2018 ஆம் ஆண்டில் 622ஓட்டங்களும், 2022 ஆம் ஆண்டில் 594 ஓட்டங்களும் மற்றும் 2024 ஆம் ஆண்டில் 763 ஓட்டங்களும் குவித்துள்ளார். </p><p>

இந்த போட்டியில் 124 ஓட்டங்கள் குவித்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 10,880 ஓட்டங்களைக் கடந்து, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். </p><p>

முன்னதாக இந்திய வீராங்கனை மிதாலி ராஜை 10868 ஓட்டங்களுடன் முதலிடத்தில் இருந்தார். </p><p>

மேலும், 2 டி20 சர்வதேச சதங்களை அடித்த ஒரே இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். </p><p>

நாளை(செப்டம்பர் 5 ஆம் திகதி) துபாயில், நடைபெற உள்ள போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T05:58:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்பது நாட்களுக்குப் பிறகு... நேபாள நீர்மின் சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/workers-pulled-alive-from-tunnel-1788499731"></link>
            <id>https://news.lankasri.com/article/workers-pulled-alive-from-tunnel-1788499731</id>
            <summary type="text">Two workers pulled alive from hydropower tunnel: நீர்மின் சுரங்கத்தியிலிருந்து இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட மிக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two workers pulled alive from hydropower tunnel: நீர்மின் சுரங்கத்தியிலிருந்து இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட இருவர், ஒன்பது நாட்களுக்குப் பிறகு நீர்மின் நிலையச் சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcec984e-1ef2-486d-8465-e697de4837ec/26-6a9a5715590ca.webp' /></p><p>
</p><p>கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ள 'திரிசூலி 3A' நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில், தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்பு நடவடிக்கையின்போது தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். </p><p>மீட்கப்பட்ட முதல் நபர் சேறு பூசிய நிலையில், மீட்பாளர் ஒருவரின் தோளில் சுமந்து செல்லப்படும் காட்சிகளை உள்ளூர் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.</p><p> சஞ்சய் ஷா என்பவர் முதலில் மீட்கப்பட்டு, திரிசூலியில் உள்ள நேபாள ராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கபீர் மஹர்ஜன் என்று அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்டார். </p><p>சுரங்கத்திற்குள் 170 மீற்றர் ஆழத்திலிருந்து அவர்கள் மீட்கப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ராஜா ராம் பாஸ்நெட் உறுதிப்படுத்தினார்.</p><p></p><p> </p><p>சஞ்சய் ஷா அப்பர் திரிசூலி 3Aல் போர்மேனாகவும், கபீர் மஹர்ஜன் மேற்பார்வையாளராகவும் செயல்பட்டு வந்துள்ளனர். கடந்த வாரம் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி, ​​போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் கரையிலிருந்த பெரும்பாலான நீர்மின் திட்டங்கள் அழிந்துபோயின. </p><p>மீட்புப் பணிகள் நீர்மின் நிலையச் சுரங்கங்களை மையமாகக் கொண்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன; அங்குள்ள காற்று இடைவெளிகள் காரணமாகத் தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக உயிர் பிழைத்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். </p><p>இதுவரை 270-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அப்பர் திரிசூலி 3A (Upper Trishuli 3A) நிலையத்தில், அடர்த்தியான சேறு காரணமாக மீட்புப் பணியாளர்கள் சுரங்கங்களைக் கண்டறிய ஏறக்குறைய ஆறு நாட்கள் தேவைப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb76c8f0-73a6-4a20-9992-39149ffd76a2/26-6a9a57160d21f.webp' /></p><p> </p><p>சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் உள்ள சேறு மற்றும் பெரிய பாறைகளை அகற்றுவதற்காக, ராணுவத்தினரும் சிறப்புப் பணிக் குழுக்களும் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர். </p><p>வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உள்ளே பலருடைய குரல்கள் கேட்டது உறுதிப்படுத்தப்பட்டது. திரிசூலி ஆற்றங்கரையில் நடைபெறும் நீர்மின் திட்டத்தில் குறைந்தது 557 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர், அவர்களில் சுமார் 115 பேர் பிரதான சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. </p><p>மொத்தத்தில், இமயமலையின் உயரமான பகுதிகளில் உள்ள 12 நீர்மின் திட்டங்களில் இருந்து சுமார் 900 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அவர்களில் ஏறத்தாழ 500 பேர் சுரங்கங்களில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T05:27:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைக் காப்பாற்றினேன்... ட்ரம்ப் மீண்டும் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-claims-he-saved-the-uk-1788497647"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-claims-he-saved-the-uk-1788497647</id>
            <summary type="text">Donald Trump claims he saved the UK from a nuclear attack: அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைத் தாம் காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப்.ஈரான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Donald Trump claims he saved the UK from a nuclear attack: அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைத் தாம் காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப்.</p><p>ஈரான் மீது போர் தொடுத்ததன் மூலம் பிரித்தானியாவை அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><h2>ஒரு மோசமான நபர்</h2><p>
</p><p>இந்தப் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக களமிறங்க மறுத்ததற்காக பிரித்தானியா மீதான தனது விமர்சனத்தையும் அவர் மீண்டும் முன்வைத்துள்ளார்.</p><p>
பிரித்தானியா ஒரு திருப்புமுனையை எட்டி வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், புலம்பெயர் மக்களால் லண்டனில் மக்கள் பயணப்பட முடியாத பகுதிகள் உருவாகியுள்ளதாகக் கூறி, அந்நகரத்தின் மீது மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea7c964b-5a1e-4538-a199-3e614c607be0/26-6a9a4ef158cc5.webp' /></p><p> </p><p>வியாழக்கிழமையன்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, ​​லண்டன் மேயர் சாதிக் கானை ஒரு மோசமான நபர்&nbsp;என வம்பிழுத்த ஜனாதிபதி ட்ரம்ப், அவருடனான தனது நீண்டகாலப் பகையை மீண்டும் கிளறினார். </p><p>ஆனால் ட்ரம்பால் எங்கள் வெற்றியைப் புரிந்துகொள்ளவே முடியாது என்று மேயர் சாதிக் கானின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஈரானுடனானப் போரை
நியாயப்படுத்திய ஜனாதிபதி ட்ரம்ப், பிரித்தானியாவையும் ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றி வருகிறேன் என்றார்.</p><p> ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அவர்கள் அமெரிக்கா மீது பயன்படுத்துவதை விட ஐரோப்பா மீதே பயன்படுத்த வாய்ப்பு என்றும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
</p><p>மத்திய கிழக்கில் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில், ட்ரம்ப் பிரித்தானியாவைக் காப்பாற்றவும் வேண்டியே போரை முன்னெடுத்து வந்ததாகத் தெரிவித்தார்.
</p><p>அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, ஹார்முஸ் நீரிணை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தது. </p><p>ஆனால், இஸ்ரேல் அழுத்தத்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னர், அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கியது. தற்போது அந்த நீரிணையை மீட்பதற்காக ட்ரம்ப் போராடி வருகிறார்.</p><h2>போர் முடிந்துவிட்டதாக</h2><p> </p><p>வளைகுடாப் பாதையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்கியுள்ள இந்த இடையூறு, பிரித்தானியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பெட்ரோல் விலையிலும் கடும் உயர்வை உருவாக்கியுள்ளது. </p><p>இதனிடையே, GB News ஊடகம் நடத்திய நேர்காணளில், மறந்துவிடாதீர்கள், உங்கள் எண்ணெயில் பெரும் பகுதியை நீங்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகவே பெறுகிறீர்கள்; ஆனால் அமெரிக்காவுக்கு உதவ நீங்கள் மறுத்து விட்டீர்கள் என்று ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe41ad5a-461a-4cc8-b098-72b48687828b/26-6a9a4ef20d525.webp' /></p><p> </p><p>ஈரான் உடனானப் போர் முடிந்துவிட்டதாக அறிவிப்பதா என்பது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி தனது மூத்த உதவியாளர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் கசிந்துள்ள நிலையிலேயே, பிரித்தானியா தமக்கு உதவ முன்வரவில்லை என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பது, இறுதியில் அந்த அரசாங்கம் தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிடவோ அல்லது வீழ்ச்சியடையவோ கட்டாயப்படுத்தும் என்று தான் நம்புவதாக ட்ரம்ப் தனது உதவியாளர்களிடம் கூறியுள்ளார் என்றே தெரிய வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T04:52:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல நாட்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைச் சேமிக்க பிரித்தானியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brits-warned-stock-up-supplies-1788492519"></link>
            <id>https://news.lankasri.com/article/brits-warned-stock-up-supplies-1788492519</id>
            <summary type="text">Brits warned to stock up on days of supplies: எல் நினோ தொடர்பில், பல நாட்களுக்குத் தேவையான பொருட்களைச் சேமித்து வைக்குமாறு பிரித்தானிய மக்கள் எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Brits warned to stock up on days of supplies: எல் நினோ தொடர்பில், பல நாட்களுக்குத் தேவையான பொருட்களைச் சேமித்து வைக்குமாறு பிரித்தானிய மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். </p><p>
மிகப்பெரிய எல் நினோ வரவிருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ள நிலையில், சாத்தியமான தேசிய அவசரநிலைகளுக்குத் தயாராகவும், அத்தியாவசியப் பொருட்களைச் சேத்து வைக்கவும் பிரித்தானிய மக்களை அமைச்சர் ஒருவர் எச்சரித்துள்ளார்.</p><h2>இதுவரை கண்டிராத</h2><p>
</p><p>காலநிலை தொடர்பான பேரிடர் ஏற்பட்டால், சில நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரை இருப்பு வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>இந்தக் கோடைக்காலத்தில் மட்டும் ஐந்து வெப்ப அலைகளை எதிர்கொண்ட நிலையில், பிரித்தானியா கடுமையான குளிர்காலத்தைச் சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேம் ஏஞ்சலா ஈகிள் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faca6fa0-56ec-4fe6-9012-39a8547960e9/26-6a9a3ae950206.webp' /></p><p> </p><p>மேலும், இதுவரை காணப்பட்டதிலேயே மிகப்பெரிய 'எல் நினோ' நிகழ்வை மக்கள் எதிர்கொள்ளவிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதனை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.</p><p>
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ், உலகம் இதுவரை கண்டிராத ஒரு சூழலில் இருப்பதாகக் கூறியதோடு, 'எல் நினோ' நிகழ்வு நம் கண்முன்னே மிகத் தீவிரமடைந்து வருவதாகவும் எச்சரித்ததைத் தொடர்ந்து பிரித்தானிய மக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p> </p><p>உருவாகி வரும் வானிலை மாற்றங்களுக்கு மத்தியில், பிரித்தானியாவைத் தாக்கக்கூடிய சாத்தியமான சுற்றுச்சூழல் அவசரநிலைகளுக்குத் தயாராக இருக்குமாறும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மக்களைக் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுவரை காணப்பட்டதிலேயே மிகப்பெரிய 'எல் நினோ' நிகழ்வை நாம் எதிர்கொள்ளவிருக்கிறோம்; இது நம் நாட்டில் கோடைக்காலங்களில் வறட்சியையும், குளிர்காலங்களில் அதிக மழையையும், அத்துடன் மிகத் தீவிரமான புயல்களையும் உருவாக்கலாம் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டேம் ஏஞ்சலா, </p><p>இது ஆசியாவில் வெள்ளப்பெருக்கின் மூலம் இன்னும் அதிக சேதத்தை ஏற்படுத்தும்; எனவே, நாம் இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன் என்றார். </p><p>மேலும், அவசரகால சேவையினர் உங்களை வந்தடைவதற்கு முன், சிறிது காலத்திற்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய உணவை நீங்கள் சேமித்து வைத்திருந்தால், அதைச் செய்யாதவர்களை விட நீங்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருப்பீர்கள் என்றார்.
</p><p>வெப்பமண்டல கிழக்கு பசிபிக் பகுதியில் கடல் நீர் வெப்பநிலை சராசரியை விட 0.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக உயரும்போது 'எல் நினோ' (El Nino) நிலை அறிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48915053-c72f-4ccb-bd51-87d5e6ed6b57/26-6a9a3aea04337.webp' /></p><p> </p><p>சுமார் 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த வானிலை அமைப்பு, உலகளாவிய மழைப்பொழிவு முறைகள் மற்றும் சராசரி வெப்பநிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. </p><p>பசிபிக் பெருங்கடலில் வழக்கமாக கிழக்கிலிருந்து மேற்காக வீசும் காற்று வலுவிழக்கவோ அல்லது நின்றுவிடவோ கூடும்; இதனால் வெப்பமான நீர் கிழக்கு நோக்கி நகர முடிகிறது. பின்னர், இந்த வெப்பம் கடலிலிருந்து வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்பட்டு, 0.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுக்கும். </p><p>எல் நினோ நிகழ்வால் ஏற்படும் வெப்பம் ஏற்கனவே பல்வேறு பகுதிகளைப் பாதித்துள்ளது; இதன்காரணமாக, இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை சராசரிக்கும் குறைவாகப் பதிவாகியுள்ளதுடன், ஜூலை மாத நடுப்பகுதி முதல் இந்தோனேசியாவின் சில பகுதிகளில் காட்டுத்தீயும் எரிந்து வருகிறது.</p><p> உருவாகியுள்ள எல் நினோ நிகழ்வு 2027-ஆம் ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்றும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்துடன் இணைந்து, அடுத்த ஆண்டு இதுவரை பதிவானதிலேயே மிக வெப்பமான ஆண்டாக அமைவதற்கு மிக அதிக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T03:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கத்தை வாங்கி தொடர்ந்து சேமிக்கும் சீனா., விற்கும் நிலையில் ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-leads-global-gold-buying-in-july-1788476098"></link>
            <id>https://news.lankasri.com/article/china-leads-global-gold-buying-in-july-1788476098</id>
            <summary type="text">China leads global gold buying in July: சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி கையிருப்பை அதிகரித்துவருகிறது.

 சீன&amp;nbsp;மத்திய வங்கிஉலகின் பல மத்திய வங்கிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>China leads global gold buying in July: சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி கையிருப்பை அதிகரித்துவருகிறது.
</p><h2>
 சீன&nbsp;மத்திய வங்கி</h2><p>உலகின் பல மத்திய வங்கிகள், குறிப்பாக சீனாவின் People’s Bank of China (PBoC), ஜூலை மாதத்திலும் தொடர்ந்து தங்கத்தை வாங்கியுள்ளதாக World Gold Council (WGC) தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ce3ee1a-9169-4634-9300-9bf9454d0fec/26-6a99fac3bc987.webp' /></p><h2>&nbsp;20 டன் தங்கம்</h2><p>ஜூலையில் மொத்தமாக 23 டன் தங்கம் வாங்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. அதில் சீனா மட்டும் 20 டன் தங்கம் வாங்கியுள்ளது.
</p><p>
மே 2026 முதல் சீனாவின் தங்க வாங்கும் நடவடிக்கை வேகமடைந்துள்ளது. தொடர்ந்து 21 மாதங்களாக சீனா தங்கத்தை தனது கையிருப்பில் சேர்த்துக் கொண்டிருக்கிறது.
</p><p>
தற்போது, சீனாவின் தங்க கையிருப்பு 2,366 டன்களாக உயர்ந்துள்ளது. இது உலகளவில் ஆறாவது பெரிய கையிருப்பு ஆகும்.</p><p></p><h2>மற்ற நாடுகள்</h2><p>

போலந்து 8 டன் தங்கம் வாங்கி, இந்த ஆண்டில் மொத்தமாக 90 டன் சேர்த்துள்ளது. போலந்து தனது இலக்கான 700 டன் கையிருப்பை அடைய முயற்சிக்கிறது.
</p><p>
மற்ற நாடுகளில், கசகஸ்தான், மலேசியா, போலிவியா ஆகியவை தலா 1 டன் தங்கம் வாங்கியுள்ளன. கசகஸ்தான் தனது மொத்த கையிருப்பில் 75 சதவீதம் தங்கமாக வைத்துள்ளது.
</p><p></p><h2>தொடர்ந்து தங்கத்தை விற்பனை செய்து வரும் ரஷ்யா </h2><p>ஆனால், ரஷ்யா தொடர்ந்து தங்கத்தை விற்பனை செய்து வருகிறது. ஜூலையில் 6 டன் தங்கத்தை விற்றுள்ளது. இதுவரை 2026-இல் 50 டன் தங்கத்தை விற்றுள்ளது. ரஷ்யாவின் மொத்த கையிருப்பு 2,277 டன்களாக குறைந்துள்ளது. </p><p>துருக்கி மற்றும் உஸ்பெகிஸ்தான் தலா 1 டன் தங்கத்தை விற்றுள்ளன.

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் தங்க சந்தையை பாதித்துள்ளன. </p><p>2024 முதல் மத்திய வங்கிகளின் தங்க வாங்குதல் தங்க விலையை உயர்த்தியது. ஆனால், ஈரான் போருக்குப் பிறகு தங்கத்தின் விலை 20 சதவீதம் குறைந்துள்ளது.
</p><p>
ஜூலை மாத இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,444 டொலர் விலையில் விற்பனையாகியது. அமெரிக்கா-ஈரான் மோதல், வட்டி விகித உயர்வு, மற்றும் எரிசக்தி பொருட்களில் முதலீடு ஆகியவை தங்க விலையை பாதித்துள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T01:07:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரழிவு: 2015 நிலநடுக்கத்தை விட அதிக உயிரிழப்பு ஏற்படும் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flood-toll-may-exceed-2015-quake-1788484069"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flood-toll-may-exceed-2015-quake-1788484069</id>
            <summary type="text">Nepal flood toll may exceed 2015 earthquake: நேபாளத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளம் மற்றும் திப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flood toll may exceed 2015 earthquake: நேபாளத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவு, 2015-இல் நடந்த கோர்கா நிலநடுக்கத்தை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d31ef31-eb9a-44a0-bfca-ef9b6bd2c319/26-6a9a1a62681b5.webp' /></p><p>நேபாளத்தின் Trishuli Bazaar பகுதியில், ஹைட்ரோபவர் திட்டங்கள் அமைந்துள்ள இடங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுரங்கங்கள் சேறும் மணலும் நிரம்பி, நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். </p><p>ஆகஸ்ட் 31-ஆம் திகதி கடைசியாக உயிருடன் மீட்கப்பட்டனர்.</p><p>
</p><p></p><p>நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது:

செப்டம்பர் 3-ஆம் திகதி வரை 1,259 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 5,083 பேர் காணாமல் போயுள்ளனர். மொத்தம் 6,342 பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>

சீனாவின் திபெத் பகுதியில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 541 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>இதனால், நேபாளம் மற்றும் திபெத் சேர்த்து 1,280 பேர் உயிரிழப்பு, 5,624 பேர் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வ எண்ணிக்கை உள்ளது.

ஆனால், திபெத் பகுதியில் நிலைமை குறித்து தனிப்பட்ட மதிப்பீடு செய்வது கடினம். </p><p></p><p>Reporters Without Borders அமைப்பு, “திபெத் தகவல் கருப்பு துளை (information black hole)” எனக் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
Independent Power Producers’ Association of Nepal அமைப்பின் செயலாளர் Bijay M Bhattarai கூறியதாவது: “அதிகாரப்பூர்வ பதிவுகள், சுற்றுலா விசா பட்டியல், நிறுவன ஊழியர் பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே உயிரிழப்பு கணக்கிடப்படுகிறது. ஆனால், ஆற்றங்கரையில் வசிக்கும் குடிசை மக்கள், சட்டவிரோத மணல் சுரங்கத் தொழிலாளர்கள், தற்காலிக வாகன ஓட்டிகள் போன்றவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.”
</p><p>
இதனால், உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதை விட அதிகமாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>

2015-இல் நேபாளத்தில் ஏற்பட்ட கோர்கா நிலநடுக்கத்தில் 8,800 பேர் உயிரிழந்தனர். தற்போதைய வெள்ளப் பேரழிவு அதனை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T01:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க கம்பளி போர்வை - விஞ்ஞானிகள் புதிய முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-wool-covers-aim-to-save-glaciers-1788481356"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-wool-covers-aim-to-save-glaciers-1788481356</id>
            <summary type="text">Swiss wool covers to save glaciers: சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss wool covers to save glaciers: சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.</p><p>

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதைத் தடுக்க, அந்நாட்டின் விஞ்ஞானிகள் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க கம்பளி போர்வை!</h2><p>பனிப்பாறைகளின் மேல் ஆட்டின் கம்பளி போர்வைகளை விரித்துவருகின்றனர்.</p><p>“Keep It Wool” எனப்படும் இந்த திட்டம், Tsanfleuron Glacier பகுதியில் நடைமுறைக்கு வந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7de669-dc71-483b-a0d9-ec4a4b5acaa3/26-6a9a106826bc1.webp' /></p><p>University of Lausanne, Summit Foundation மற்றும் Swiss Glacier Monitoring Network ஆகியவை இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.</p><p>

முன்பு, பனிப்பாறைகளை பாதுகாக்க பிளாஸ்டிக் அடிப்படையிலான செயற்கை போர்வைகள் பயன்படுத்தப்பட்டன. அவை சூரிய ஒளியைத் தடுப்பதால் பனி உருகும் வேகம் குறைந்தது. ஆனால், அவை காலப்போக்கில் சிதைந்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை வெளியிடுகின்றன. </p><p>இதற்கு மாற்றாக, இயற்கையான, சிதைவடையும் ஆட்டின் கம்பளி பயன்படுத்தப்படுகிறது.
</p><p></p><h2>ஆய்வு&nbsp;</h2><p>ஜூன் 2026-இல், 100 சதுர மீட்டர் அளவிலான இரண்டு கம்பளி போர்வைகள் பனிப்பாறைகளின் மேல் பரப்பப்பட்டன. அதே அளவிலான செயற்கை போர்வையும் அருகில் அமைக்கப்பட்டு, ஒப்பீட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆரம்ப முடிவுகள், கம்பளி போர்வைகள் செயற்கை போர்வைகளுக்கு இணையான பாதுகாப்பை வழங்கியதாகக் காட்டுகின்றன.
</p><p>
சுவிட்சர்லாந்தில் ஆட்டின் கம்பளி பெரும்பாலும் பயன்பாடின்றி வீணாகிறது. சுமார் 80 சதவீதம் கம்பளி வணிக மதிப்பில்லாமல் கைவிடப்படுகிறது. இந்த முயற்சி, அந்த உள்ளூர் வளத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்தும் வழியைத் திறக்கிறது.</p><p></p><p>
</p><h2>
விஞ்ஞானிகள் எச்சரிக்கை</h2><p> 

ஆனால், இந்த முயற்சி முழு பனிப்பாறைகளை காப்பாற்ற முடியாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். தற்போது, சுவிட்சர்லாந்தின் பனிப்பாறைகளில் 0.02 சதவீதம் மட்டுமே போர்வைகளால் மூடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் கன மீட்டர் பனி உருகுகிறது. போர்வைகள் மூலம் 3 லட்சம் கன மீட்டர் பனியை மட்டுமே காப்பாற்ற முடிகிறது.
</p><p>
இருப்பினும், இந்த முயற்சி, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான புதுமையான தீர்வுகளை ஆராய்வதில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T00:24:19+00:00</updated>
        </entry>
    </feed>
