<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-04T04:43:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழைப்பெண்ணின் வங்கிக்கணக்கில் நூறு கோடி ரூபாய்: பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bank-mistakenly-credit-100-crores-in-women-account-1785757373"></link>
            <id>https://news.lankasri.com/article/bank-mistakenly-credit-100-crores-in-women-account-1785757373</id>
            <summary type="text">பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் தவறுதலாக டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏழைப்பெண்ணொருவரின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் தவறுதலாக டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏழைப்பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.</p><h3>

ஏழைப்பெண்ணின் வங்கிக்கணக்கில் நூறு கோடி ரூபாய்
</h3><p>
கொல்கொத்தாவில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட வீடொன்றில் வாழ்ந்துவருபவர் கஷ்மிரா ஷா (36).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81aec61d-5292-4c93-a027-c8d8cfee63c8/26-6a707ebe56487.webp' /></p><p>

க‌ஷ்மிராவின் கணவர் பை தைக்கும் வேலை செய்ய, கணவருக்கு உதவியாக சேலைகளுக்கு எம்ப்ராய்டரி செய்யும் வேலை செய்கிறார் கஷ்மிரா.
</p><p>
சமீபத்தில், தனது வங்கிக்கணக்கில் வீட்டு எரிவாயுவுக்கான உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுவிட்டதா என்பதை அறிவதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார் கஷ்மிரா.
</p><p>
அப்போது வங்கி அலுவலர் ஒருவர் கஷ்மிராவின் வங்கிக்கணக்கில் 99,99,99,997 ரூபாய் இருப்பதாகக் கூற, அதிர்ச்சியடைந்துள்ளார் அவர்.
</p><p>
விடயம் என்னவென்றால், அவரது வங்கிக்கணக்கில் தவறுதலாக அந்தத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

கணினி அல்லது மென்பொருள் கோளாறால் அந்த தவறு நடைபெற, அதனால் அந்த மாவட்டத்திலுள்ள மொத்த வங்கிப் பரிவர்த்தனைகளும் முடங்கிவிட்டனவாம்.
</p><p>
இன்னொரு விடயம் என்னவென்றால், கொல்கொத்தாவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணான நுபூர் குப்தா என்னும் கணக்கிலும் இதேபோல 47 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்க, அவர் அது குறித்து வங்கிக்கு புகாரளிக்க, வங்கி ஊழியர்கள், பொலிசார், வருமான வரித்துறை அதிகாரிகள் என ஒரு பெருங்கூட்டமே அவரது வீட்டுக்கு வர அங்கு பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
</p><p>
எதனால் இந்த தவறு நேர்ந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T04:15:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவை தண்டிக்கப் போவதாக எச்சரித்த ட்ரம்ப்., காட்டுத்தீ விவகாரம் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-canada-over-wildfires-1785772146"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-canada-over-wildfires-1785772146</id>
            <summary type="text">Canada Wildfires: காட்டுத்தீ விவகாரத்தில் கனடாவை தண்டிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

தண்டனை கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, அமெரிக்காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada Wildfires: காட்டுத்தீ விவகாரத்தில் கனடாவை தண்டிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>

தண்டனை </h2><p>கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, அமெரிக்காவின் வடக்கு பகுதிகள் புகை மூட்டத்தில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவிற்கு எதிராக “தண்டனை நடவடிக்கை” எடுக்கப் போவதாக மீண்டும் எச்சரித்துள்ளார்.
</p><p>
Air Force One விமானத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “நான் முடிவு செய்துவிட்டேன். நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள். கனடா கட்டாயம் விலை செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd9150e6-5b1b-4f50-8f67-6c42001f2bab/26-6a70b874535f8.webp' /></p><p>ட்ரம்ப், கடந்த மாதம் TruthSocial-ல், கனடா தனது காடுகள் மற்றும் புதர்களை சரியாக பராமரிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். “அமெரிக்கா தேவையில்லாமல் மாசான, ஆரோக்கியமற்ற காற்றால் தாக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார். இதற்காக, கனடாவிற்கு புதிய சுங்க வரிகள் (tariffs) விதிக்கலாம் என எச்சரித்தார்.
</p><p>
இதற்கிடையில், கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மனிந்தர் சிது, “நாட்டின் வணிக நிறுவனங்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெற உதவும் Strategic Exports Office ஒன்றை தொடங்குகிறோம்” என்று அறிவித்தார்.
</p><p>
இந்த அலுவலகம், அரசாங்க ஆதரவு, நிதி உதவி மற்றும் தூதரக ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கனடா நிறுவனங்களுக்கு உலக சந்தையில் போட்டியிட உதவும்.
</p><p></p><p>ட்ரம்ப் எவ்வாறு கனடாவை தண்டிக்கப் போகிறார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், அவரது தொடர்ச்சியான எச்சரிக்கைகள், அமெரிக்கா-கனடா உறவுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T03:40:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனை தாக்க 3 இடங்களை குறி வைத்தோம்: ஆனால்., ஈரான் அதிகாரி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-official-says-plan-to-strike-on-ukraine-1785802702"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-official-says-plan-to-strike-on-ukraine-1785802702</id>
            <summary type="text">உக்ரைன் மீதான தாக்குதலை கைவிட்டுவிட்டதாக ஈரானிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். ஈரானிய கப்பல் மீது தாக்குதல்சமீபத்தில் ஈரானிய வர்த்தக கப்பல்களை குறிவை...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீதான தாக்குதலை கைவிட்டுவிட்டதாக ஈரானிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.</p><h2> ஈரானிய கப்பல் மீது தாக்குதல்</h2><p>சமீபத்தில் ஈரானிய வர்த்தக கப்பல்களை குறிவைத்து உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.</p><p>இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து இருந்ததுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உக்ரைன் மூலம் ஐரோப்பிய நாடுகளையும் தங்களுக்கு எதிரான போரில் திருப்பிவிட முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59d94284-e83e-4af3-b391-1539c41715b7/26-6a712fd008010.webp' /></p><p> இந்நிலையில் ஈரான் அரசு ஊடகத்தில்(IRIB) அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியின் ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.</p><p></p><p> அதில், உக்ரைன் உள்ள 3 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், பின்னர் உக்ரைன் தரப்பு மன்னிப்பு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்த தாக்குதலானது கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.</p><h2> ஹார்முஸ் விவகாரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcf99633-67ce-49f1-8f9f-a306bd5f7acf/26-6a712fd0b4cb2.webp' /></p><p>மேலும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் குறித்து பேசிய மொஹ்சென் ரெசாய், ஈரானால் தீர்மானிக்கப்பட்ட வழித்தடத்தை தவிர வேறு எந்த புதிய பாதையும் ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதிக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நெறிமுறைகளை அமெரிக்கா மீறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T00:20:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாய்: விசாரணையில் பொலிஸாருக்கு கிடைத்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-sell-his-own-daughter-for-1-5-lakhs-1785796529"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-sell-his-own-daughter-for-1-5-lakhs-1785796529</id>
            <summary type="text">பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாயை டேராடூன் பொலிஸார் கைது செய்துள்ளனர். பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாய்
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் சிறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாயை டேராடூன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2> பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாய்</h2><p>
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் சிறுமி கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், தாய் உட்பட 4 பேரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.</p><p> கடந்த மாதம் சகஸ்தரதார ரோட்டை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் தன்னுடைய 15 வயது மகளை காணவில்லை என்று ராஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.</p><p> தாய் அளித்த புகாரின் பேரில் பாரதிய நியாய சங்கிதா (BNS) பிரிவு 137(2)-ன் கீழ் பொலிஸாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbb1fe80-9d9d-4157-9ebb-5f15433121cc/26-6a7117b2e2397.webp' /></p><p></p><p> விசாரணையின் போது அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக, பெற்ற தாயே தன்னுடைய மகளை ரூ1.5 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.</p><p> அத்துடன் சிறுமியை வாங்கியவரிடம் இருந்து முழு தொகையையும் பெற முடியதாததால் மகளை காணவில்லை என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.</p><h2> கைது நடவடிக்கை</h2><p>இதையடுத்து தாய் கைது செய்யப்பட்டதுடன் உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.</p><p> மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மனிஷ் (37), மற்றும் லிவி குமார்(24) ஆகியோரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p> இதில் இடைத்தரகராக செயல்பட்ட பின்கி மாலிக் என்பவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் நோக்கத்தில் கடத்தப்பட்டு இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T23:52:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் புதிய வர்த்தக வரி: 25 ஜனநாயக கட்சி மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/25-democratic-led-sue-trump-over-new-tariffs-1785801147"></link>
            <id>https://news.lankasri.com/article/25-democratic-led-sue-trump-over-new-tariffs-1785801147</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய மற்றும் வர்த்தக வரிகளை எதிர்த்து ஜனநாயக கட்சியினரின் தலைமையிலான 25 அமெரிக்க மாநிலங்களின் கூட்டணி நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய மற்றும் வர்த்தக வரிகளை எதிர்த்து ஜனநாயக கட்சியினரின் தலைமையிலான 25 அமெரிக்க மாநிலங்களின் கூட்டணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.</p><p> கிட்டத்தட்ட 60 வர்த்தக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த இந்த புதிய வர்த்தக வரியை எதிர்த்து ஜனநாயக கட்சியினரின் தலைமையிலான 25 அமெரிக்க மாநிலங்களின் கூட்டணி திங்கட்கிழமை வழக்கு தொடர்ந்துள்ளது.</p><p> டிரம்பின் நடுவண் அரசு இந்த வர்த்தக நடவடிக்கையில் நிர்வாக அதிகார வரம்பை மீறி இருப்பதாக மாநிலங்களின் கூட்டணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.</p><p>இந்த வழக்கானது அமெரிக்காவின் பன்னாட்டு வர்த்தக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c350ee-a939-4e40-aad2-ba890eb94c78/26-6a7129bc9793d.webp' /></p><p> பதிவு செய்யப்பட்ட வழக்கு மனுவில், வரி எவ்வாறு உருவாக்கப்பட்டது மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p> குறிப்பாக, புதிய வர்த்தக வரியை விதிப்பதற்கு முன்னதாக நாடுகள் வாரியான விசாரணை நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> மேலும் வெவ்வேறு கொள்கைகளை கொண்ட நாடுகளுக்கு ஒரே மாதிரியான வரி விதிப்பு என்பதற்கான தகுந்த நியாயங்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p> உச்சநீதிமன்றம் மற்றும் வர்த்தக நீதிமன்றம் நிராகரித்த&nbsp;வரி விதிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காக 1974ம் ஆண்டின்&nbsp; வர்த்தக சட்டத்தின் பிரிவு 301-ஐ மத்திய நிர்வாகம் முறையற்ற முறையில் பயன்படுத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p> இந்த நீதிமன்ற மனுவின் முக்கிய நோக்கமாக, சர்ச்சைக்குரிய வர்த்தக வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே ஆகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T23:52:38+00:00</updated>
        </entry>
    </feed>
