<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-19T07:35:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ராவிட் மகனின் அதிரடி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய U19 அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anvay-dravid-strikes-india-u19-beat-australia-u19-1789803034"></link>
            <id>https://news.lankasri.com/article/anvay-dravid-strikes-india-u19-beat-australia-u19-1789803034</id>
            <summary type="text">anvay dravid strikes india u19 beat australia u19: ட்ராவிட் மகனின் அதிரடி ஆட்டத்தில் இந்திய U19 அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.  

ட்ராவிட் மகன...</summary>
            <content type="html"><![CDATA[<p>anvay dravid strikes india u19 beat australia u19: ட்ராவிட் மகனின் அதிரடி ஆட்டத்தில் இந்திய U19 அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. </p><h3> 

ட்ராவிட் மகனின் அதிரடி ஆட்டம்</h3><p> 

3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக, அவுஸ்திரேலியா U19 அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது.</p><p> 

நேற்று ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற முதல் ODI போட்டி, மழை காரணமாக 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.</p><p> 

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a610eae-4105-48a7-aa22-0081b3101d6e/26-6aae3a1c4275f.webp' /></p><p>

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய U19 அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்துள்ளது. </p><p>

அதிகபட்சமாக, இந்திய அணி தரப்பில் யாஷ்பர்தன் சவுகான் 54 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><p></p><p>

இதே போல் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர்களான விரேந்திர சேவாக் மற்றும் ராகுல் ட்ராவிட்டின் மகன்கள் இடம் பெற்றிருந்தனர். </p><p>

சேவாக்கின் மகன் ஆர்யவிர் சேவாக், 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 28 ஓட்டங்கள் குவித்தார்.</p><p> 

ராகுல் ட்ராவிட்டின் மகன் அன்வே டிராவிட், தனது தந்தையை போல் நிதானமாக ஆடாமல் அதிரடியாக ஆடி, 18 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 38 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/545ce93c-c86b-48df-b5ea-f47f7d4e520f/26-6aae3a1b8e8a1.webp' /></p><p>

183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா U19 அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது. </p><p>

இதன் மூலம், இந்திய U19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce0f21c-80a8-48a7-8c08-e4dce963425d/26-6aae3a1cea97d.webp' /></p><p>தனது மகன் விளையாடும் முதல் போட்டியை நேரில் காண ராஜ்கோட் நிரஞ்சன் ஷா மைதானத்திற்கு விரேந்திர சேவாக் வருகை தந்திருந்தார்.</p>]]></content>
            <updated>2026-09-19T07:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் கச்சா எண்ணெய் இல்லை... ஐரோப்பிய சுத்திகரிப்பு நிலையங்களிடம் சவுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudis-european-refiners-no-crude-1789802313"></link>
            <id>https://news.lankasri.com/article/saudis-european-refiners-no-crude-1789802313</id>
            <summary type="text">no crude next month Saudis tell European refiners: அடுத்த மாதம் கச்சா எண்ணெய் இல்லை என ஐரோப்பிய சுத்திகரிப்பு ஆலைகளிடம் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>no crude next month Saudis tell European refiners: அடுத்த மாதம் கச்சா எண்ணெய் இல்லை என ஐரோப்பிய சுத்திகரிப்பு ஆலைகளிடம் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
</p><p>செங்கடலுக்குச் செல்லும் சவுதி அரேபியாவின் முக்கியக் குழாய்வழித் தாக்குதலுக்கு இலக்கானதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் தங்களுக்குக் கச்சா எண்ணெய் ஒதுக்கப்படாது என ஐரோப்பாவில் உள்ள குறைந்தபட்சம் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு வாடிக்கையாளர்களுக்கு சவுதி அரம்கோ தெரிவித்துள்ளது.</p><h2>அனைத்து ஐரோப்பிய&nbsp;</h2><p>
</p><p>ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் பொதுவாக 'காலமுறை ஒப்பந்தங்கள்' (term contracts) மூலம் சவுதி அரேபிய கச்சா எண்ணெயைப் பெறுகின்றனர்; இது ஒவ்வொரு மாதமும் சீரான விநியோகத்தை உறுதி செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5a0cb81-2875-468a-8f74-b48be0cd9f8e/26-6aae374badbc1.webp' /></p><p> </p><p>ஆனால் அடுத்த மாதம் குறைந்தபட்சம் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் விநியோகிக்க வாய்ப்பில்லை என்பதை சவுதி அறிவித்துள்ளது. இந்த முடிவு அனைத்து ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>ட்ரோன் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா கடந்த வாரம் தனது கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p><p> இந்த வழித்தடம் இன்னும் சில நாட்களில் பகுதியளவு மீண்டும் இயங்கத் தொடங்கி, ஆறு வாரங்களுக்குள் முழுமையாக மீண்டும் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>ஐரோப்பிய சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுவாக, குழாய் வழியாக செங்கடலுடன் இணைக்கப்பட்டுள்ள எகிப்தின் மத்திய தரைக்கடல் துறைமுகமான சிடி கெரிரிலிருந்து சவுதி கச்சா எண்ணெயை எடுத்துக்கொள்கின்றன.
</p><p>குழாய்வழி விநியோகம் நிறுத்தப்பட்டதால், அரம்கோவின் சில வாடிக்கையாளர்கள் மத்தியில் பீதி கொள்முதல் ஏற்பட்டது. மாற்று விநியோகங்களைப் பெறுவதற்கான போட்டியில், போலந்தின் ஓர்லென் எஸ்.ஏ. நிறுவனம் வெள்ளிக்கிழமை முதல் பத்துக்கும் மேற்பட்ட டெண்டர்களை வெளியிட்டுள்ளது. </p><p>OECD கூட்டமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடுகள், ஜூன் மாதத்தில் சவுதி அரேபியாவிலிருந்து ஒரு நாளைக்கு 577,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தன என்று சர்வதேச எரிசக்தி முகமை தனது மாதாந்திர எண்ணெய் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T07:15:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்போர்ட் மலேரியா: ஜேர்மனியில் கவனம் ஈர்த்துவரும் ஒரு விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/outbreak-of-malaria-at-frankfurt-airport-1789800608"></link>
            <id>https://news.lankasri.com/article/outbreak-of-malaria-at-frankfurt-airport-1789800608</id>
            <summary type="text">An outbreak of malaria at Frankfurt Airport this summer has raised alarm: ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் விமான நிலையத்தில் மலேரியா தொற்று பரவும் விடயம் கவனம...</summary>
            <content type="html"><![CDATA[<p>An outbreak of malaria at Frankfurt Airport this summer has raised alarm: ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் விமான நிலையத்தில் மலேரியா தொற்று பரவும் விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
</p><p>

ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் விமான நிலையத்தில் ஏர்போர்ட் மலேரியா என்னும் விடயம் கவனம் ஈர்த்துவருகிறது.
</p><h3>
ஏர்போர்ட் மலேரியா</h3><p>

ஜூலை மாதம் முதல், மத்திய ஜேர்மனியிலுள்ள ஃப்ராங்பர்ட் விமான நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பரவும் மலேரியா தொற்றால் எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bc11f04-9674-4930-8b3d-e40378417d8e/26-6aae30a1d4ebf.webp' /></p><p>
அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால், அவர்களில் மூன்று பேர் உயிரிழந்துவிட்டார்கள்!
</p><p>
இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஃப்ராங்பர்ட் விமான நிலைய ஊழியர்கள்.&nbsp;</p><p></p><p>
இந்த தொற்று பரவல், ஏர்போர்ட் மலேரியா என்னும் நிகழ்வால் ஏற்படுவதாக ஃப்ராங்பர்ட் சுகாதாரத்துறை நம்புகிறது.</p><p>

அதாவது, மலேரியா தொற்று பரவல் அதிகம் உள்ள ஒரு நாட்டுக்குச் செல்லும் விமானங்களிலிருக்கும் பயணிகளின் உடைமைகளில் அமர்ந்துகொள்ளும் மலேரியா கிருமிகளைக் கொண்ட கொசுக்கள், அந்த நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பரவி, அங்குள்ளவர்களைக் கடிப்பதால் இந்த மலேரியா தொற்று அங்குள்ளவர்களுக்கு பரவுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffbf3f1e-fa05-4fac-87a0-85e060ed51cd/26-6aae30a287979.webp' /></p><p>
ஃப்ராங்பர்ட்டில் பரவும் மலேரியா தொற்று, Plasmodium falciparum என்னும் கிருமி மூலம் பரவும் அபாயகரமான, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், Malaria tropica என்னும் ஒருவகை தொற்று ஆகும்.
</p><p>
இந்நிலையில், ஃப்ராங்பர்ட் விமான நிலையத்துக்கு அருகில் வாழும் மக்கள் யாருக்காவது மலேரியா தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணூகுமாறு ஃப்ராங்பர்ட் சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-19T06:52:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[45 பந்தில் 102 ஓட்டங்கள்! ருத்ரதாண்டவமாடிய ஷிம்ரான் ஹெட்மையர்..கடைசி ஓவரில் தோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hetmyer-smash-102-runs-vs-jamaica-kingsmen-1789800844"></link>
            <id>https://news.lankasri.com/article/hetmyer-smash-102-runs-vs-jamaica-kingsmen-1789800844</id>
            <summary type="text">Shimron Hetmyer 102 runs in 45 balls: CPL டி20 போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையர் 45 பந்துகளில் 102 ஓட்டங்கள் விளாசினார்.

ஜமைக்கா கிங்ஸ்மென் அணிக்கு எதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shimron Hetmyer 102 runs in 45 balls: CPL டி20 போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையர் 45 பந்துகளில் 102 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

ஜமைக்கா கிங்ஸ்மென் அணிக்கு எதிரான CPL டி20 போட்டியில், கயானா அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் 45 பந்துகளில் 102 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>ருத்ரதாண்டவம் ஆடிய ஷிம்ரான்&nbsp;</h2><p>கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த CPL டி20 போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c37ca3a2-8740-444c-94ca-1d69abb3862d/26-6aae318f61bf6.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய கயானா அணி 206 ஓட்டங்கள் குவித்தது. சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ரதாண்டவம் ஆடிய ஷிம்ரான் ஹெட்மையர் 102 (45) ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.</p><p>ஷாய் ஹோப் 33 பந்துகளில் 40 ஓட்டங்களும், சாம்ப்ஸன் 17 பந்துகளில் 29 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7355f7e9-a16e-40a7-8f23-2eae5a8ab70a/26-6aae347a00fef.webp' /></p><h2>ஜமைக்கா வெற்றி&nbsp;</h2><p>ஹசன் கான், ஆந்த்ரே ரஸல் மற்றும் ஹுனைன் ஷா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><p>
பின்னர் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
</p><p>
கேசி கார்ட்டி 40 பந்துகளில் 56 ஓட்டங்களும், மாஸ் சதாகத் 41 (17) ஓட்டங்களும், ரோவ்மன் பௌல் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 40 ஓட்டங்களும் (4 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8bf00c4-c846-4ab9-9394-eb2b86d57fbd/26-6aae347ae8a86.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T06:52:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனவரியில் சுவிட்சர்லாந்து செல்ல உள்ள முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-to-attend-swiss-davos-meet-in-jan-2027-1789798835"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-to-attend-swiss-davos-meet-in-jan-2027-1789798835</id>
            <summary type="text">cm vijay to attend davos meet in swiss in january 2027: முதல்வர் விஜய் தனது 2வது வெளிநாட்டு பயணமாக சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay to attend davos meet in swiss in january 2027: முதல்வர் விஜய் தனது 2வது வெளிநாட்டு பயணமாக சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

ஜனவரியில் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெறவிருக்கும் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். </p><h3> 

 சுவிட்சர்லாந்து செல்ல உள்ள முதல்வர் விஜய் </h3><p>

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கடந்த வாரம் தொழில் முதலீடுகளை ஈர்க்க 5 நாள் பயணமாக பிரித்தானியாவிற்கு சென்று வந்தார். </p><p>

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக சில்வர்ஸ்டோர் சர்க்யூட் மைதானத்தில், நடிகர் அஜித்குமார் கலந்துகொண்ட கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/951216f8-1c2b-4714-9f65-19ec6907606d/26-6aae29b486174.webp' /></p><p>

மேலும், சுமார் ரூ.12,300 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் அலுவகம் தெரிவித்துள்ளது. </p><p>

இந்நிலையில், முதல்வர் விஜய் அடுத்த வெளிநாட்டு பயணமாக ஜனவரியில் சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>

ஜனவரி 18 முதல் 22 வரை சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெறவிருக்கும் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/649bd933-ac5f-42b0-bb14-e4c66ede4944/26-6aae29b542da3.webp' /></p><p>

உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் அலோயிஸ் ஸ்விங்கி மற்றும் நிர்வாக இயக்குநர் மருன் கைரூஸ் ஆகியோர் முதல்வர் விஜய்க்கு விடுத்துள்ள அழைப்பைத் தொடர்ந்து இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. </p><p>

முன்னதாக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஒன்றுக்கு மேற்பட்ட முறை தமிழ்நாடு சார்பில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2429871d-efe8-4c48-812e-269c322066e9/26-6aae29b5ec0db.webp' /></p><p> 

2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்ற குழு, வாகனங்கள், மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உலகளாவிய திறன் மையங்கள், சுகாதாரம், உயிர் அறிவியல் மற்றும் மேம்பட்ட உற்பத்தி உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கி, உலகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் கூட்டாளர்களுடன் 50க்கும் மேற்பட்ட சந்திப்புகளை நடத்தியது.</p><p>

இதே போல், 2025 ஆம் ஆண்டும் 'தமிழ்நாட்டை மேம்படுத்துவோம்' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததுடன், மாநிலத்தின் உற்பத்தித் தளம், மின்னணு மற்றும் வாகனத் துறைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன், திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் தொழில்நுட்பத்திற்குத் தயாரான பணியாளர்களை உருவாக்கும் திட்டங்கள் ஆகியவற்றையும் எடுத்துரைத்தது.
</p><p>
இந்த கூட்டத்தில் பங்கேற்ற 6 இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை மாநிலங்களும் கலந்து கொண்டன.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T06:20:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தேர்தலில் தலையிட புதிய AI ஆயுதத்தை பயன்படுத்த ரஷ்யா திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-plotting-to-meddle-election-1789798885"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-plotting-to-meddle-election-1789798885</id>
            <summary type="text">Russia plotting to deploy sinister new AI weapon: ரஷ்யா தீய நோக்கம் கொண்ட புதிய AI ஆயுதத்தை பயன்படுத்த சதி செய்கிறது.
மீண்டும் அமெரிக்கத் தேர்தலில் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia plotting to deploy sinister new AI weapon: ரஷ்யா தீய நோக்கம் கொண்ட புதிய AI ஆயுதத்தை பயன்படுத்த சதி செய்கிறது.
</p><p>மீண்டும் அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட முயற்சிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>புதிய டிஜிட்டல் நடவடிக்கை</h2><p>
</p><p>நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக, பிளவை ஏற்படுத்தவும் நம்பிக்கையைச் சிதைக்கவும் வடிவமைக்கப்பட்ட ரகசிய இணையவழித் தாக்கப் பிரச்சாரம் ஒன்றை ரஷ்யா கட்டவிழ்த்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8841c2f-a23e-4e31-8f06-f2a5deb8bc59/26-6aae29e7acee8.webp' /></p><p>
</p><p>வாக்காளர்கள் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கத் தயாராகி வரும் வேளையில், அமெரிக்கர்களை இலக்காகக் கொண்ட ஒரு புதிய டிஜிட்டல் நடவடிக்கைக்கு ரஷ்யா அங்கீகாரம் அளித்துள்ளது என்றும், </p><p>அதன் மூலம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தித் தூண்டிவிடும் அரசியல் கருத்துக்களைப் பரப்பவோ அல்லது வலுப்படுத்தவோ அது முயன்றுள்ளது என்றும் சமீபத்திய இரகசிய அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகள் உறுதி செய்துள்ளன. </p><p>2016-ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தலையீட்டிற்குப் பிறகு, அமெரிக்காவில் ரஷ்யா தொடர்ச்சியாக கையாண்ட உத்தியையே இந்த நடவடிக்கையும் பின்பற்றுவதாகத் தெரிகிறது; ஆனால் இம்முறை செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.</p><p></p><p> </p><p>சீனாவின் நடவடிக்கைகளும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன; சீன நலன்களுக்கு எதிராகக் கருதப்படும் குறிப்பிட்ட நாடாளுமன்றத் தேர்தல் போட்டிகள் அல்லது உறுப்பினர்களை சீனா குறிவைக்கக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். </p><p>அத்தகைய நடவடிக்கை அம்பலமானால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளின் காரணமாக, சீனா இறுதியில் பின்வாங்கக்கூடும் என்று உளவுத்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும், ரஷ்யா அல்லது ஈரானை விட, கண்டறியப்படுவது குறித்துப் பொதுவாக அதிக எச்சரிக்கையுடன் செயல்படும் நாடாகவே சீனா திகழ்வதாகத் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். </p><p>தேர்தல் பிரச்சாரத்தையும் தாண்டி, சீனாவுடனான அமெரிக்காவின் உறவுகளில் செயற்கை நுண்ணறிவு ஒரு மிகவும் நிலையற்ற காரணியாக உருவெடுத்து வரும் சூழலில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>வெளிப்படையான நோக்கம்</h2><p>
</p><p>செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் பெறப்பட்ட தவறான உளவுத் தகவலால், மத்திய கிழக்குப் பகுதியில் சீனக் கப்பல் ஒன்றில் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய பாகங்கள் இருப்பதாகத் தவறாகக் கருதப்பட்டு, அந்தக் கப்பலை இடைமறித்து ஏறிச் சோதனையிடும் நிலைக்கு அமெரிக்க ராணுவம் கிட்டத்தட்ட தள்ளப்பட்ட விவரம் வெள்ளிக்கிழமையன்று தெரியவந்தது. </p><p>தேர்தலில் தலையிடுவது தொடர்பான விவகாரத்தில், ரஷ்யா வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதிக்கவோ அல்லது வாக்குகள் அளிக்கப்படும் அல்லது எண்ணப்படும் முறையைத் திசைதிருப்பவோ முயன்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உளவுத் தகவல் குறித்த விவரம் அறிந்த அதிகாரிகள் 'நியூயார்க் டைம்ஸ்' இதழிடம் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/484c9721-b211-4d92-80c9-f4c01df1f870/26-6aae29e86038b.webp' /></p><p> </p><p>அதற்குப் பதிலாக, ஏற்கனவே கடும் போட்டி நிலவும் தேர்தல் காலத்தில், இணையத்தில் அமெரிக்கர்கள் எதைப் பார்க்கிறார்கள் மற்றும் எதை நம்புகிறார்கள் என்பதில் செல்வாக்கு செலுத்தி, அவர்களிடையே ஏற்கனவே உள்ள அரசியல் பிளவுகளை மேலும் ஆழப்படுத்துவதே ரஷ்யாவின் வெளிப்படையான நோக்கமாக உள்ளது. </p><p>இருப்பினும், ரஷ்யாவுடன் தொடர்புடைய சக்திகளால் இயக்கப்படுவதாகத் தனிப்பட்ட முறையில் கூறப்படும் சமீபத்திய சம்பவங்கள், போட்டி நிறைந்த மாகாணங்களில் உள்ள ஜனநாயகக் கட்சியின் செனட் வேட்பாளர்களைக் குறிவைத்துள்ளன. </p><p>மேலும்,
ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு உதவுவதை விட, குழப்பத்தை ஏற்படுத்துவதும் அவநம்பிக்கையை ஆழப்படுத்துவதுமே ரஷ்யாவின் பரந்த நோக்கம் என்பதை உளவுத்துறை மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுவதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-19T06:18:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிருடன் இருக்கும்போதே உடல் உறுப்பு தானம் செய்த கனேடிய இளம்பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/alberta-woman-saves-2-by-living-organ-donations-1789796646"></link>
            <id>https://news.lankasri.com/article/alberta-woman-saves-2-by-living-organ-donations-1789796646</id>
            <summary type="text">Canadian woman saves 2 strangers with organ donations: உடல் உறுப்பு தானம் மூலம் இரண்டு உயிர்களைக் காப்பாற்றியுள்ளார் கனேடிய இளம்பெண்ணொருவர்.


உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canadian woman saves 2 strangers with organ donations: உடல் உறுப்பு தானம் மூலம் இரண்டு உயிர்களைக் காப்பாற்றியுள்ளார் கனேடிய இளம்பெண்ணொருவர்.</p><p>


உயிருடன் இருக்கும்போதே இரண்டு உடல் உறுப்புகளை தானம் செய்த முதல் பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர்.
</p><h3>
உயிருடன் இருக்கும்போதே உடல் உறுப்பு தானம்</h3><p>

ஒருவர் விபத்தில் மூளைச்சாவு அடையும்போது அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce5e8765-33e1-4a98-9d56-0d433ee2162a/26-6aae21276beb9.webp' /></p><p>
அல்லது, தன் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு சிறுநீரகம் செயலிழந்தால் ஒரு சிறுநீரகத்தை தானம் கொடுக்கும் நபர்கள் குறித்தும் கேள்விப்பட்டிருக்கிறோம்.</p><p>

ஆனால், உயிருடன் இருக்கும்போதே, இரண்டு உறுப்புகளை தானம் செய்துள்ளார் கனேடிய பெண்ணொருவர், அதுவும், தன் உறவினர்களுக்கு அல்ல, முன் பின் தெரியாத நபர்களுக்கு!
</p><p>
அந்தப் பெண்ணின் பெயர், மேகன் ரொஸேமா (Meghan Rozema). ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த மேகன், சிறு பிள்ளையாக இருக்கும்போது, தன் பெற்றோர் இரத்த தானம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதை நன்கறிந்தவர்.&nbsp;</p><p></p><p>
இரத்த தானம் செய்யும் வயதை அடைந்தபின், தன் பெற்றோரைப்போலவே, தானும் இரத்த தானம் செய்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார் மேகன்.
</p><p>
அப்போது, சிறு குழந்தை ஒன்றிற்கு கல்லீரல் தானம் தேவைப்படுவது குறித்து அறிந்துகொண்ட மேகன், ஏற்கனவே தன் குடும்பத்துடன் உடல் உறுப்பு தானம் குறித்து பேசி, தன் பெற்றோரின் அனுமதியையும் பெற்றிருந்ததால், அந்தக் குழந்தைக்கு தன் கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், தங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்து அறிந்துகொண்டுள்ளார் மேகன். அவருக்கு சிறுநீரக தானம் தேவைப்பட்டுள்ளது.
</p><p>
அதைத் தெரிந்துகொண்ட மேகன், தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்ய முன்வந்துள்ளார். ஆனால், அவர் சமீபத்தில்தான் கல்லீரல் தானம் செய்திருந்ததால், மீண்டும் உடல் உறுப்பொன்றை தானம் செய்ய இரண்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
</p><p>
சோகம், என்னவென்றால், அதற்குள் அந்த குடும்ப நண்பரின் தாய் மரணமடைந்துவிட்டார்!
</p><p>
பின்னர், முன் பின் தெரியாத ஒருவருக்கு சிறுநீரகம் ஒன்று தேவைப்படவே, அவருக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்துள்ளார் மேகன்.
</p><p>
என் குடும்ப நண்பரின் தாயின் நினைவாக, அவரை கௌரவிக்கும் வகையில் நான் அந்த நபருக்கு என சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்தேன் என்கிறார் மேகன்.
</p><p>
ஆல்பர்ட்டா மாகாணத்தைப் பொருத்தவரை, உயிருடன் இருக்கும்போதே இரண்டு உறுப்புகளை தானம் செய்த முதல் பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் மேகன்.
</p><p>
அத்துடன், மொத்த கனடாவிலும் உயிருடன் இருக்கும்போதே இப்படி இரண்டு உறுப்புகளை தானம் செய்தவர்கள் வெகு சிலர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T05:44:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 15 உணவுகள்.., என்னென்ன உணவுகள்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/15-best-foods-to-eat-on-an-empty-stomach-1789793445"></link>
            <id>https://news.lankasri.com/article/15-best-foods-to-eat-on-an-empty-stomach-1789793445</id>
            <summary type="text">15 best foods to eat on an empty stomach-&amp;nbsp;காலையில் எழுந்ததும் சாப்பிடும் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

ஆரோக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>15 best foods to eat on an empty stomach-&nbsp;காலையில் எழுந்ததும் சாப்பிடும் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><p> </p><p>

ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் தரும் உணவுகளைக் காலை உணவாகச் சாப்பிட வேண்டும். </p><p>சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.</p><p>இந்நிலையில், காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடிய 15 உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1465ca4-6d4b-4796-ae21-a2a6fe5b768e/26-6aae157a072d0.webp' /></p><h2>என்னென்ன உணவுகள்?
</h2><p><b>
1. வெதுவெதுப்பான நீர்- </b>காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரை குடிப்பது உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும். மேலும், இது செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவக்கூடும்.</p><p><b> 

2. துளசி- </b>காலையில் துளசி இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது நீரில் கலந்து குடிக்கலாம். துளசியில் உள்ள சில சேர்மங்கள் இரத்த சர்க்கரை மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவக்கூடும்.</p><p><b>

3. கறிவேப்பிலை-</b> காலையில் 5 கறிவேப்பிலைகளை மென்று சாப்பிடலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. </p><p><b>

4. சீரக நீர்- </b>இரவு ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் வடிகட்டி குடிக்கலாம். இது வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற செரிமானப் பிரச்சனைகளுக்கு உதவக்கூடும். </p><p><b>

5. இஞ்சி நீர்- </b>ஒரு சிறிய துண்டு இஞ்சியை வெந்நீரில் கலந்து குடிப்பது குமட்டல் போன்ற அறிகுறிகளை குறைக்க உதவக்கூடும். </p><p><b>

6. மோர்-</b> தயிர், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தயாரிக்கப்படும் மோரில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் உள்ளது. </p><p><b>

7. பச்சைப்பயறு</b>- முளைக்கட்டிய பச்சைப்பயறில் புரதம், நார்ச்சத்து மற்றும் சில வைட்டமின்கள் உள்ளன.</p><p></p><p> </p><p><b>

8. கொண்டைக்கடலை- </b>இரவு முழுவதும் ஊற வைத்த கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்க உதவும். </p><p><b>

9. பேரிச்சம்பழம்-</b> இரவு 3 பேரிச்சம்பழங்களை நீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து மற்றும் சில தாதுச்சத்துக்கள் உள்ளன. </p><p><b>

10. கருப்பு உலர் திராட்சை- </b>கருப்பு உலர் திராட்சையில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இதை சாப்பிடுவது மலச்சிக்கலை கட்டுப்படுத்த உதவக்கூடும். </p><p><b>11. பப்பாளி- </b>காலையில் ஒரு கப் பப்பாளி சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து மற்றும் பப்பாயின் என்ற நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவக்கூடும்.</p><p><b>

12. முருங்கை இலை சூப்- </b>முருங்கை இலை சூப்பில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை காலையில் சாப்பிட்டு வருவதால் உடலிற்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
</p><p><b>
13. நெல்லிக்காய்- </b>நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும். </p><p><b>

14. வெந்தய நீர்-</b> ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் நீருடன் சாப்பிடலாம். வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும்.
</p><p><b>
15. பாதாம்- </b>இரவு 6 பாதாமை நீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். பாதாமில் புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T04:57:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய வெளிநாட்டவர்: 15ஆண்டுகள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-attacker-jailed-15-years-for-stab-children-1789792505"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-attacker-jailed-15-years-for-stab-children-1789792505</id>
            <summary type="text">Swiss knife attacker jailed for 15 years for stabbing children: சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய வெளிநாட்டவருக்கு 15ஆண்டுகள் சிறைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss knife attacker jailed for 15 years for stabbing children: சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய வெளிநாட்டவருக்கு 15ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>


2024ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 1ஆம் திகதி, சீன நாட்டவர் ஒருவர், சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரில், நர்சரி பள்ளிப் பிள்ளைகள் சிலரை கத்தியால் குத்தினார்.</p><h3>

15ஆண்டுகள் சிறை</h3><p>

அந்த நபர் தாக்கியதில், ஐந்து வயது சிறுவர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். சிலருக்கு பயங்கர காயங்கள் ஏற்பட்டதால், அவர்கள் தப்பிப் பிழைத்ததே பெரிய விடயம் என அப்போது கூறப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e60105ed-647d-4d6a-ab3e-ca56772190d2/26-6aae10fad53ba.webp' /></p><p>
திடீரென பிள்ளைகள் மீது ஒருவர் தாக்குதல் நடத்துவதை கவனித்த பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் பணியாளர் ஒருவர், ஓடோடிச் சென்று அந்த நபரைத் தடுத்துள்ளார்.</p><p>

இந்நிலையில், தற்போது 25 வயதாகும் அந்த நபருக்கு, சூரிக் நீதிமன்றம் ஒன்று 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அத்துடன், அவர் கட்டாய மன நல ஆலோசனை பெறவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதுடன், தண்டனைக்காலத்துக்குப் பின், சுவிட்சர்லாந்துக்குள் நுழைய அவருக்கு 15 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T04:38:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரீன்லாந்து மீது வரம்பற்றக் கட்டுப்பாடு: டென்மார்க் - அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் ட்ரம்ப் பெருமிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/permanent-control-over-greenland-1789791549"></link>
            <id>https://news.lankasri.com/article/permanent-control-over-greenland-1789791549</id>
            <summary type="text">US and Denmark reach deal over Greenland: கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவும் டென்மார்க்கும் ஒப்பந்தம் செய்துகொண்டன.
கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாகக...</summary>
            <content type="html"><![CDATA[<p>US and Denmark reach deal over Greenland: கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவும் டென்மார்க்கும் ஒப்பந்தம் செய்துகொண்டன.
</p><p>கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களால் எழுந்த கடும் குழப்பத்திற்குத் தீர்வு காணும் வகையில், கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவும் டென்மார்க்கும் அறிவித்துள்ளன.</p><h2>பல மாத அச்சுறுத்தல்</h2><p>
</p><p>கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் பிற அனைத்துத் தேவைகள் மீதும் அமெரிக்காவிற்கு நிரந்தரக் கட்டுப்பாட்டை இந்த ஒப்பந்தம் வழங்கும் என்று ட்ரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b08e7385-2781-47be-b9da-d57fc8af3786/26-6aae0d3fa6f1c.webp' /></p><p> </p><p>இந்த ஒப்பந்தம் ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக டென்மார்க் பிரதமர் கூறினார்; ஆனால், சமூக ஊடகப் பதிவு ஒன்றில் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை. </p><p>பாதுகாப்பு நோக்கங்களுக்கான அதன் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் மற்றும் கனிம வளங்களைச் சுட்டிக்காட்டி, கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவது குறித்து ட்ரம்ப் பல மாதங்களாக விடுத்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னரே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
</p><p>ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவிற்கு எந்தச் செலவும் இல்லை என்றும், கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆற்றலை இது அமெரிக்காவிற்கு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், அமெரிக்காவின் வெளிப்படையான எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, தங்களின் எந்தவொரு எதிரி நாடும் கிரீன்லாந்தில் ராணுவ இருப்பைப் பராமரிக்கவோ அல்லது அங்கு முக்கியத்துவம் வாய்ந்த முதலீடுகளை மேற்கொள்ளவோ ​​கூடாது என்ற விதி இதில் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p> இதனிடையே, அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் உறுதிப்படுத்தினார். </p><p>மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை என்றும்; இது நடைமுறைக்கு வருவதற்குத் தேவையான நாடாளுமன்ற நடைமுறைகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட எதிரிகளிடமிருந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய நிலையில் அப்பகுதி இருப்பதாகக் கூறி, கனிம வளம் மிக்க அந்த டேனிஷ் பிரதேசத்தை விலைக்கு வாங்கவோ அல்லது வலுக்கட்டாயமாக இணைத்துக்கொள்ளவோ ​​ட்ரம்ப் பல மாதங்களாக முயன்று வந்துள்ளார். </p><p>கிரீன்லாந்தில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அவர் மிரட்டினார்; இது டென்மார்க் மக்களிடமிருந்தும் பிற நேட்டோ நாடுகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பை வரவழைத்தது.</p><h2>ஒருதலைப்பட்சமான அதிகாரம்</h2><p> </p><p>ஒப்புக்கொள்ளப்பட்ட விதிகளுள், எதிர்காலத்தில் கிரீன்லாந்து ஒரு சுதந்திர நாடாக மாறினாலும் இந்த ஒப்பந்தம் காலாவதியாகாது என்று கூறும் விதியும் உட்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fc8cb8d-f0e4-42d1-a04a-6822e984b191/26-6aae0d405a533.webp' /></p><p> </p><p>இந்த ஒப்பந்தத்தின் கீழ், கிரீன்லாந்து அல்லது டென்மார்க்கின் ஒப்புதல் ஏதுமின்றி கூடுதல் ராணுவக் கட்டமைப்புகளை அமைப்பதற்கான ஒருதலைப்பட்சமான அதிகாரம் அமெரிக்காவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. </p><p>ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து ஏவப்படும் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட 'கோல்டன் டோம்' (Golden Dome) பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் தனது திட்டத்திற்கு கிரீன்லாந்து அவசியமானது என்றும், இம்முயற்சியில் ஐரோப்பிய நட்பு நாடுகள் ஒத்துழைக்க முடியும் என்றும் ட்ரம்ப் கூறுகிறார்.</p>]]></content>
            <updated>2026-09-19T04:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொத்தம் 1,399 நிலநடுக்கங்களுக்கு காரணமான வட கொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-triggered-earthquakes-1789788501"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-triggered-earthquakes-1789788501</id>
            <summary type="text">Nuclear Tests May Have Triggered 1,399 Earthquakes: அணு ஆயுதச் சோதனைகள் 1,399 நிலநடுக்கங்களைத் தூண்டியிருக்கலாம்.
வட கொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nuclear Tests May Have Triggered 1,399 Earthquakes: அணு ஆயுதச் சோதனைகள் 1,399 நிலநடுக்கங்களைத் தூண்டியிருக்கலாம்.
</p><p>வட கொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள், அதன் முக்கிய அணு ஆயுதச் சோதனைத் தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்களின் அதிகரிப்பைத் தூண்டியிருக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>1,399 நிலநடுக்கங்கள்</h2><p>
</p><p>2017-இல் வட கொரியா நடத்திய கடைசிச் சோதனைக்குப் பிறகும் இந்தச் செயல்பாடுகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be7a77a4-fbf2-4263-85ca-5fd74358863b/26-6aae0157e67fc.webp' /></p><p> மேலும், இந்த நிலநடுக்கங்களின் நிகழ்வெண்ணும் தீவிரமும் காலப்போக்கில் அதிகரித்து வருவதாகவும் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. </p><p>கடந்த 2,000 ஆண்டுகளாக வட கொரியாவின் மந்தாப் மலையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியும் அமைதியாக இருந்து, எந்த நிலநடுக்கங்களும் அப்பகுதியில் பதிவு செய்யப்பட்டதில்லை. </p><p>இந்த நிலையில், விஞ்ஞானிகள் 2008 முதல் 2025 வரையிலான நில அதிர்வுத் தரவுகளை ஆய்வுசெய்து, அந்த மலையைச் சுற்றி 1,399 நிலநடுக்கங்களைக் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><p> </p><p>இந்த மலையில்தான் வட கொரியா 2006 முதல் 2017 வரை ஆறு நிலத்தடி அணு சோதனைகளை நடத்தியது. இந்தக் கண்டுபிடிப்புகள் வழக்கத்திற்கு மாறானவை; ஏனெனில், அணுசக்தி வெடிப்புகளுடன் தொடர்புடைய நிலநடுக்கங்கள் பொதுவாக ஒரு சோதனைக்குப் பிறகு பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அதிகரிப்பதில்லை. </p><p>வட கொரியாவின் மூன்றாவது அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு, 2013-ல் அப்பகுதியில் முதல் நிலநடுக்கம் பதிவானது. ஆனால், அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் மிகக் குறைவான நிலநடுக்கங்களே ஏற்பட்டன. </p><p>2017-இல் வட கொரியா தனது ஆறாவது மற்றும் மிகப்பெரிய அணு ஆயுதச் சோதனையை மேற்கொண்ட பிறகு நிலைமை மாறியது. </p><p>நிலநடுக்கங்களின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தைக் குறிக்கும் நிலநடுக்கச் செயல்பாடு 2017-ஆம் ஆண்டு வரை குறைவாகவே இருந்ததாகவும், ஆனால் ஆறாவதும் மிகப்பெரியதுமான அணு ஆயுதச் சோதனையை மேற்கொண்ட பிறகு அச்செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்ததாகவும் ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>அதன் முந்தைய நிலை</h2><p> </p><p>2017-இல் நடத்தப்பட்ட சோதனையானது 6.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது. இது சுரங்கப்பாதை இடிந்து விழுவதற்கும், மலை உச்சியின் வடிவத்தை சுமார் 3 மீற்றர் அளவிற்கு மாற்றுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b729fc45-c3fe-42df-aaaa-cb2477e1f3ce/26-6aae0158abcee.webp' /></p><p> </p><p>சோதனைகளுக்குப் பிறகு பதிவான நிலநடுக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவு வலிமையானவையாக இருக்கவில்லை. வட கொரியா தனது அணு சோதனைகளைத் தொடங்குவதற்கு முன்பு, அப்பகுதியில் நில அதிர்வு செயல்பாடு மிகக் குறைவாகவே இருந்தது என்பதும் அறியப்பட்டிருந்தது. </p><p>2017-ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சோதனைக்குப் பிறகு, மந்தாப் மலைக்குக் கீழே உள்ள தரை அதன் முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை என்பதையே நிலநடுக்கங்களின் அதிகரிப்பு உணர்த்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e953950-7734-42c7-a876-5aca270ffea7/26-6aae01596982e.webp' /></p><p> </p><p>இந்த வெடிப்பு, மலைக்குள் இருந்த பழைய மற்றும் செயலற்ற நிலையில் இருந்த விரிசல்களை மீண்டும் செயல்பட வைத்துள்ளது. மேலும், வெடிப்பினால் பாறைகளில் உருவான புதிய விரிசல்கள் நீரால் நிரம்பியுள்ளன. </p><p>இந்த நுண்துளை அழுத்தத்தால் பாறைகள் ஒன்றோடொன்று சரியும், இதன் விளைவாகத் தொடர்ச்சியாகச் சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்றே பூசான் தேசியப் பல்கலைக்கழகத்தின் புவியியல் அறிவியல் துறையின் பேராசிரியரான கிம் விளக்கமளிக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-19T03:25:24+00:00</updated>
        </entry>
    </feed>
