<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-10T19:32:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூட்கேஸில் இருந்து மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/high-end-sex-doll-found-in-suitcase-in-australia-1786384813"></link>
            <id>https://news.lankasri.com/article/high-end-sex-doll-found-in-suitcase-in-australia-1786384813</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் உயர் ரக செக்ஸ் பொம்மை(Sex Toy) என்பது தெரியவந்துள்ளது. கைவிடப்பட்ட சூட்கேஸினால் பரபரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் உயர் ரக செக்ஸ் பொம்மை(Sex Toy) என்பது தெரியவந்துள்ளது.</p><h2> கைவிடப்பட்ட சூட்கேஸினால் பரபரப்பு</h2><p>ஞாயிற்றுக்கிழமை மாலை அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கிராமப் பகுதியில் கிடந்த கைவிடப்பட்ட சூட்கேஸில் மனித சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.</p><p> ஓலன்(Oallen) பகுதியில் மண் பாதைக்கு அருகே சந்தேகத்திற்கு உரிய வகையில் கிடந்த சூட்கேஸை கொடூரமான குற்றப் புள்ளி என்று நம்பி சந்தேகத்தின் பேரில் வோல்கான் சாலையை சுற்றி வளைத்து உள்ளூர் அதிகாரிகள் தடயங்களை பாதுகாத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24c82192-0d86-4c59-b68a-2751f18df8f5/26-6a7a11af573ed.webp' /></p><h2> 20 மணி நேர தடயவியல் விசாரணையில் தெரியவந்த உண்மை</h2><p>சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் அதிகாரிகள், 20 மணி நேரத்திற்கு மேலாக ஆராய்ந்த பிறகு திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளிப்படுத்தினர்.</p><p> அதில், சூட்கேஸில் இருந்தது மனித எச்சங்கள் என்று நம்பப்பட்ட நிலையில், அது உண்மையில் மிகவும் தத்ரூபமாக உயர் ரக செக்ஸ் பொம்மை என்பது தெரியவந்துள்ளது.</p><p> ஆரம்பத்தில் அந்த பொருள் மனிதனைப் போலவே தத்ரூபமாக இருந்ததால் ஆய்வகத்திற்கு எடுத்து சென்று சோதனை செய்வதற்கு முன்பு வரை நிபுணர்களுமே அதனை மனித சடலம் என்று நம்பி ஏமாந்ததாக ஹியூம் காவல்துறை மாவட்டத்தின் தளபதி சூப்பிரண்டு லிண்டா பிராட்பரி(Superintent linda bradbury) தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc19b18c-4198-4209-8acc-5cf779ddaade/26-6a7a11b00b7fc.webp' /></p><p> நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் கூற்றுப்படி, சடலம் என்று நம்பப்பட்ட அந்த பொம்மைக்கு ஆடைகள் அணிவிக்கப்பட்டு இருந்ததோடு, அவற்றில் முடி, மூக்குத்தி மற்றும் உடல் காயங்கள் ஆகியவை துல்லியமாக மனித உருவத்துடன் ஒத்திருக்கும் வகையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T18:00:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[456 உக்ரைன், 126 ரஷ்யா: எல்லையில் வெடித்த சண்டை: கொல்லப்பட்ட 17 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-russia-cross-border-drone-fight-17-dead-1786382613"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-russia-cross-border-drone-fight-17-dead-1786382613</id>
            <summary type="text">உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்த ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதலில் 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் - ரஷ்யா எல்லையில் தீவிர சண்டை
ரஷ்யா மற்றும் உக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்த ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதலில் 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> உக்ரைன் - ரஷ்யா எல்லையில் தீவிர சண்டை</h2><p>
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் எல்லையில் நடந்த கடுமையான ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதலில் குறைந்தது 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> ரஷ்யாவின் டாடர்ஸ்தான்(Tatarstan) பகுதியில் உக்ரைன் நடத்திய மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதலில் 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> டாடர்ஸ்தான் பகுதியில் ரஷ்யாவின் முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றாகவும், இங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உக்ரைனின் தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளாகின்றன. சமீபத்திய 75 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக அப்பிராந்திய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10c3c542-926c-471c-8362-5f339c4dc1f8/26-6a7a0917386ad.webp' /></p><p>உக்ரைனின் தாக்குதலை தொடர்ந்து டாடர்ஸ்தான் பகுதியில் உள்ள எண்ணெய் ஆலை ஒன்றில் இருந்து கரும்புகை எழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><p> உக்ரைனிய எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Nizhnekamsk என்ற தொழில்துறை நகரத்தை வெற்றிகரமாக தாக்கி இருப்பதாக கீவ் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2> சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்</h2><p>
நேற்று இரவு மட்டும் கிட்டத்தட்ட 456 உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>அதே நேரத்தில் உக்ரைனுக்குள் அத்துமீறி நுழைந்த&nbsp; ரஷ்ய 126 ட்ரோன்களை உக்ரைனிய விமானப்படை இடைமறித்து அழித்து இருப்பதாக அறிவித்துள்ளது.</p><p> உக்ரைனின் எல்லைப் புற நகரமான கார்கிவ்-வில் ரஷ்யா நடத்திய பீரங்கி தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T17:23:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: இடிந்து விழுந்த பல கட்டிடங்கள்: 50 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/colombia-hit-by-7-4-magnitude-earthquake-1786380284"></link>
            <id>https://news.lankasri.com/article/colombia-hit-by-7-4-magnitude-earthquake-1786380284</id>
            <summary type="text">கொலம்பியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அந்நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொலம்பியாவில் நிலநட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அந்நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.</p><h2> கொலம்பியாவில் நிலநடுக்கம்</h2><p>மேற்கு கொலம்பியாவில் உள்ளூர் நேரப்படி காலை 7.34 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> பசிபிக் கடலோர பகுதியான சோகோ மாகாணத்தில் இந்த 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af16efe-d49b-4650-bbe0-9dd0661f2591/26-6a7a018f068a2.webp' /></p><p> சான் ஜோஸ் டெல் பால்மார் என்ற கிராமத்திற்கு அருகில் கிட்டத்தட்ட 107 கிலோமீட்டர் மையத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p></p><p>சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக சோகோ மாகாணத்தின் தலைநகர் கிப்டோ மற்றும் பிற பகுதிகளில் உள்ள பல கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p> மேலும் இந்த நிலநடுக்கத்தில் &nbsp;இதுவரை 50 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும் பலர் காயமடைந்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99255d79-69f0-4197-bc26-c5375023e655/26-6a7a018fd3648.webp' /></p><h2>மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>சாண்டியாகோ நகரில் குறைந்து 20 கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருப்பதாகவும், இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அந்நகர மேயர் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> கொலம்பியாவில் முக்கியமாக உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் வரை உணரப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T16:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிசில் மின்சார ஸ்கூட்டர் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/paris-helmet-law-for-e-scooter-riders-1786365190"></link>
            <id>https://news.lankasri.com/article/paris-helmet-law-for-e-scooter-riders-1786365190</id>
            <summary type="text">Paris orders e-scooter riders wear helmets: பாரிசில் மின்சார ஸ்கூட்டர் பயணிகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. 

பிரான்ஸ் தலைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Paris orders e-scooter riders wear helmets: பாரிசில் மின்சார ஸ்கூட்டர் பயணிகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.</p><p> 

பிரான்ஸ் தலைநகரான பாரிசில், இனி, மின்சார ஸ்கூட்டர், செக்வே, ஹோவர்போர்டு போன்ற மின்சார இயக்கக் கருவிகளை பயன்படுத்தும் அனைவரும் ஹெல்மெட் மற்றும் பிரதிபலிப்பு உடை அணிய வேண்டும்.
</p><p>
விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56909f22-b7c4-4775-bcf5-048b68000611/26-6a79c72472369.webp' /></p><p>கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்த விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
2025-ஆம் ஆண்டில் மட்டும், 79 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2024-இல் ஏற்பட்ட 45 உயிரிழப்புகளை விட அதிகம். மேலும், 1,100-க்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான விபத்துகளில் தலையில் காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>
விதிகளை மீறுவோருக்கு அபராதம்</h2><p>

ஹெல்மெட் அணியாமல் சென்றால் 135 யூரோ அபராதம் விதிக்கப்படும். பிரதிபலிப்பு உடை அல்லது ஹை-விசிபிலிட்டி ஜாக்கெட் அணியாமல் சென்றால் 35 யூரோ அபராதம் விதிக்கப்படும். </p><p>இந்த விதிகள், பாரிசிலும் அதன் புறநகரங்களிலும் பொதுச் சாலைகளில் எப்போதும் அமுலில் இருக்கும்.
</p><p>
2023-ஆம் ஆண்டில், பாதுகாப்பு சிக்கல்களால் வாடகை e-scooter-கள் பாரிசில் தடைசெய்யப்பட்டன. ஆனால், தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் e-scooter-கள் இன்னும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால், விபத்துகள் அதிகரித்துள்ளன.

மற்ற ஐரோப்பிய நகரங்களும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. </p><p></p><p>2024-இல் மாட்ரிட் நகரம் வாடகை e-scooter-களை தடை செய்தது. 2026-இல் பிரஸ்ஸல்ஸ் நகரமும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது.</p><p>

இந்த புதிய விதிகள், பாரிசில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T16:05:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்ந்தோரால் நிகழ்ந்த சாதனை: ஒரே படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்த 230 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/230-migrants-cross-channel-in-one-boat-1786374294"></link>
            <id>https://news.lankasri.com/article/230-migrants-cross-channel-in-one-boat-1786374294</id>
            <summary type="text">Record 230 migrants cross channel in single Boat: 230 பேர் ஒற்றை படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவை அடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் புல...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Record 230 migrants cross channel in single Boat: 230 பேர் ஒற்றை படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவை அடைந்துள்ளனர்.</b></p><p>

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பான புதிய சாதனை நிகழ்ந்துள்ளது.
</p><h2>
சாதனை </h2><p>பிரான்சிலிருந்து புறப்பட்ட ஒரு பெரிய படகில் 230 பேர் ஒரே நேரத்தில் ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19c2ea82-f062-4b73-9b88-6222d7601eb2/26-6a79e8988bc73.webp' /></p><p>திங்கள்கிழமை அதிகாலை, பிரிட்டிஷ் அதிகாரிகள் அந்த படகை தடுத்து கரைக்கு அழைத்துச் சென்றனர்.

இது கடந்த மாதம் 165 பேர் கடந்த சாதனையை முறியடித்துள்ளது.</p><p>
</p><h2>
அதிகாரிகள் தெரிவித்ததாவது,
</h2><p>
மனிதக் கடத்தல் கும்பல்கள் “பாதுகாப்பற்ற படகுகளில் அதிகமானவர்களை நிரப்பி அனுப்புவதால்” உயிர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது. சமீபத்தில் 173 பேரை ஏற்றிச் சென்ற ஒரு படகு இயந்திரம் தீப்பற்றியதால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p>
</p><p></p><p>பிரித்தானிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த சம்பவம், குற்றவியல் கும்பல்கள் பயன்படுத்தும் ஆபத்தான முறைகளை வெளிப்படுத்துகிறது. அவர்கள் உயிர்களை ஆபத்துக்குள் தள்ளுகின்றனர். ஆனால், சிறிய படகுகள் மூலம் வரும் புலம்பெயர்ந்தோர் இந்த ஆண்டில் குறைந்துள்ளனர். ஜூலை மாதத்தில் 2020-க்கு பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>பிரித்தானிய அரசு, பிரான்ஸ் கடற்கரையில் 40 சதவீதம் கூடுதல் பாதுகாப்பு பணியாளர்களை நியமிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. </p><p>இதுவரை 2026-ஆம் ஆண்டில் 14,819 பேர் பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடும்போது 43 சதவீதம் குறைவாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T15:04:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹீரோ மோட்டோகார்ப் 2027-ல் அறிமுகம் செய்யும் 2 மின்சார பைக்குகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hero-launch-ubex-vxz-ev-bikes-in-2027-1786373301"></link>
            <id>https://news.lankasri.com/article/hero-launch-ubex-vxz-ev-bikes-in-2027-1786373301</id>
            <summary type="text">Hero launch two new EV Bikes in 2027: ஹீரோ மோட்டோகார்ப் புதிதாக இரண்டு மின்சார மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

EICMA கண்காட்சியில் அறிமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hero launch two new EV Bikes in 2027: ஹீரோ மோட்டோகார்ப் புதிதாக இரண்டு மின்சார மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தவுள்ளது.</p><p>

EICMA கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட UBEX மற்றும் VXZ என்ற இரண்டு புதிய கான்செப்ட் பைக்குகள், இந்திய சூழ்நிலைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட தனித்துவமான பிளாட்ஃபார்ம்களில் உருவாக்கப்பட்டுள்ளன.
</p><p>
இவை 2027-ஆம் ஆண்டில் சந்தையில் அறிமுகமாக உள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c21ca074-cefa-4341-9735-057a89a92ac9/26-6a79e4b758f4c.webp' /></p><h2>UBEX Concept:
</h2><ul><li>
ஸ்போர்ட்டி ஸ்ட்ரீட் பைக் வடிவமைப்பு
</li><li>
Projector ஹெட்லைட் மற்றும் LED DRL</li><li>

Telescopic fork, alloy wheels</li><li>

Petal disc brakes
</li><li>
Single-piece seat மற்றும் exposed frame</li></ul><p></p><p>
</p><h2>
VXZ Concept:</h2><ul><li>

அமெரிக்காவின் Zero Motorcycles-உடன் இணைந்து உருவாக்கப்பட்டது
</li><li>
Aggressive LED headlight, USD fork, monoshock
</li><li>
Belt drive system (குறைந்த பராமரிப்பு)
</li><li>
Semi-faired split seats</li><li>

TFT டிஜிட்டல் கிளஸ்டர், turn-by-turn navigation வசதி</li></ul><p></p><p>

Vida ஸ்கூட்டர் தற்போது Hero-வின் நான்காவது அதிகம் விற்பனையான தயாரிப்பாக உள்ளது. UBEX மற்றும் VXZ அறிமுகம் Hero-வின் மின்சார வாகன சந்தை பங்கினை மேலும் உயர்த்தும்.</p><h2>

உற்பத்தி திட்டம்: </h2><p> 
Hero, 2026-இல் மாதத்திற்கு 15,000 யூனிட்கள் உற்பத்தி திறனை, 2027-இல் 45,000 யூனிட்களாக மூன்று மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
</p><h2>
இன்னும் அறிவிக்கப்படாத விவரங்கள்:</h2><ul><li>
இறுதி தயாரிப்பு பெயர்கள்
</li><li>
மோட்டார் பவர், பேட்டரி திறன், ரேஞ்ச்
</li><li>
விலை மற்றும் சார்ஜிங் வசதிகள்
</li></ul><p>
இந்த UBEX மற்றும் VXZ பைக்குகள், இந்திய மின்சார வாகன சந்தையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T14:46:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் நிகழவிருக்கும் 4 அரிய நிகழ்வுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rare-sky-events-align-on-august-12-1786369416"></link>
            <id>https://news.lankasri.com/article/rare-sky-events-align-on-august-12-1786369416</id>
            <summary type="text">Four rare sky events to light up Aug 12: ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் 4 அதிசய நிகழ்வுகள் நடக்கவுள்ளன.

வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) வானில் நான்கு அரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Four rare sky events to light up Aug 12: ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் 4 அதிசய நிகழ்வுகள் நடக்கவுள்ளன.
</p><p>
வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) வானில் நான்கு அரிய விண்வெளி நிகழ்வுகள் ஒரே நாளில் நடைபெற உள்ளன. இதனால் உலகம் முழுவதும் வானியல் ஆர்வலர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c356b195-a034-4b16-9dbf-a23f5c2deee3/26-6a79d663ed5b5.webp' /></p><p>
</p><h2>
6 Planet Parade
</h2><p>
முதலில், அதிகாலை நேரத்தில் ஆறு கோள்களின் பேரணி (Planet Parade) நிகழும். வியாழன், புதன், செவ்வாய், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் வானில் ஒரே வரிசையில் தோன்றும். இதில் வியாழன், புதன், செவ்வாய், சனி ஆகியவை கண்களுக்கு எளிதில் தெரியும். ஆனால் யுரேனஸைக் காண பைனாக்குலர் தேவைப்படும். நெப்டியூனை காண தொலைநோக்கி அவசியம்.</p><p></p><p>
</p><h2>
முழு சூரிய கிரகணம்
</h2><p>
அதன்பின், முழு சூரிய கிரகணம் (Total Solar Eclipse) நிகழும். சந்திரன், பூமி மற்றும் சூரியன் இடையே நேரடியாக வந்து, சூரியனை முழுமையாக மறைக்கும். இந்த கிரகணம் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயின் பகுதிகளில் முழுமையாகக் காணப்படும். ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் பகுதி கிரகணம் தெரியும். இந்தியாவில் இது இரவு நேரத்தில் நிகழுவதால் காண முடியாது.</p><p></p><p>
</p><h2>
New Moon</h2><p>

அதே நாளில், புதிய நிலவு (New Moon) நிகழும். இதனால் வானம் மிகவும் இருண்டதாக இருக்கும். இது விண்வெளி ஆர்வலர்களுக்கு விண்மீன்கள் (meteors) தெளிவாகக் காண சிறந்த வாய்ப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4caa4eda-24a5-4f79-b04b-b1c6ca478624/26-6a79d664a2af8.webp' /></p><p>
</p><h2>
விண்மீன் மழை
</h2><p>
இறுதியாக, பெர்செய்ட் விண்மீன் மழை (Perseid Meteor Shower) உச்சத்தை அடையும். ஆண்டுதோறும் நிகழும் இந்த விண்மீன் மழை, ஆகஸ்ட் மாதத்தில் அதிகமாகக் காணப்படும். இருண்ட வானத்தில், நூற்றுக்கணக்கான விண்மீன்கள் வானில் பாயும் காட்சி, பார்ப்பவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
</p><p>
இந்த நான்கு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடைபெறுவது மிகவும் அரிதானது. வானியல் ஆர்வலர்கள், தொலைநோக்கி, பைனாக்குலர் போன்ற கருவிகளுடன் தயாராகி, இந்த அற்புதமான விண்வெளி நிகழ்வுகளை ரசிக்கத் தயாராக உள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T13:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[எப்படியாவது நிலைத்து நின்று ஆட வேண்டும்: வங்காளதேசத்திற்கு எதிராக எச்சரிக்கையுடன் டிராவிஸ் ஹெட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/travis-head-alert-for-bangladesh-test-series-1786369402"></link>
            <id>https://news.lankasri.com/article/travis-head-alert-for-bangladesh-test-series-1786369402</id>
            <summary type="text">வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.</p><p>

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளுக்காக விளையாடுகிறோம்; நிச்சயமாக ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என வங்காளதேச டெஸ்ட் தொடர் குறித்து அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். </p><h2>

டிராவிஸ் ஹெட் </h2><p>வங்காளதேசத்திற்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0924b643-b5fa-49b5-a185-738858a048b5/26-6a79d57ebabe5.webp' /></p><p></p><p>
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டார்வினில் 13ஆம் திகதி தொடங்குகிறது. </p><p>இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி தனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை மீண்டும் தொடங்குகிறது.</p><p>

அவுஸ்திரேலியாவின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் (Travis Head) இந்த தொடரின் அழுத்தம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கிறார். </p><h2>

நான் நிச்சயம் ஓட்டங்கள் குவிக்க வேண்டும்</h2><p>அவர் கூறுகையில், "நடக்கவிருக்கும் நிகழ்வுகள் மீது மிகுந்த கவனம் இருக்கும் - இது ஒரு டெஸ்ட் போட்டி, மேலும் இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளுக்காக நாங்கள் விளையாடுகிறோம். 

சில சமயங்களில் வலிமையான அணிகளுக்கு எதிராக விளையாடும்போது, ஒருவித எதிர்பார்ப்புடன் களமிறங்குவோம். </p><p>

அப்போது எப்படியாவது இந்தப் போட்டியில் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கும். 

ஆனால், வங்காளதேசம் போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடும்போது நிலைமை மாறுபடும். </p><p>அந்த அணி சமீபத்தில் எதிர்கொண்ட சூழல் மற்றும் நான் நிச்சயம் ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என்ற சுய எதிர்பார்ப்பு ஆகியவை ஒருவித நெருக்கடியை உருவாக்கும். </p><p>ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்குவது சில சமயங்களில் மிகவும் சவாலானதாக அமையும். 

ஏனெனில், கிரிக்கெட் ஒரு கடுமையான விளையாட்டு. </p><p>எனவே, வரவிருக்கும் குறுகிய காலத்திலும், குறிப்பாக இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், எதிர்பார்ப்புகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதே முக்கியம் என்று நான் கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d0f3cce-c5a8-4434-a984-f2e437ece768/26-6a79d57e10709.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T13:41:19+00:00</updated>
        </entry>
    </feed>
