<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-07T20:44:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள்: அமெரிக்க செனட் சபையில் கிடைத்த ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-sanctions-against-russia-us-senate-approves-1786131424"></link>
            <id>https://news.lankasri.com/article/new-sanctions-against-russia-us-senate-approves-1786131424</id>
            <summary type="text">ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளுக்கு அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைஅமெரிக்க செனட் சபையில் கொண்டு வரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளுக்கு அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2> ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை</h2><p>அமெரிக்க செனட் சபையில் கொண்டு வரப்பட்ட ரஷ்யாவிற்கு எதிராக புதிய மற்றும் கடுமையான பொருளாதார தடைக்கு எதிரான வாக்கெடுப்பு பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.</p><p> ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளுக்கு ஆதரவு அளித்து 86 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f27629dc-14d4-4ac3-ae8c-ce98e1fda19a/26-6a7633e2aa8e1.webp' /></p><p> ரஷ்யாவுக்கு எதிராக இந்த முன்னெடுப்பை மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம்(Lindsey Graham) தீவிரமாக முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் குறித்து பேசிய ஜனநாயக கட்சி செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்டால்(Richard Blumenthal) முக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p> அதில், உக்ரைனிய மக்களுக்கு நாம் இன்று சொல்வது இதுதான், “நீங்கள் தனியாக இல்லை”. அத்துடன் ரஷ்யாவிற்கு நாம் இன்று சொல்வது இதுதான், “உங்களால் உக்ரைனை வெல்ல முடியாது” என குறிப்பிட்டார்.</p><h2> விதிக்கப்படும் புதிய தடைகள்</h2><p>
ரஷ்யாவின் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ரஷ்யாவிற்கு வருவாய் பெற்று தரும் பொருட்களை இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகளையும் இந்த புதிய பொருளாதார தடை நடவடிக்கை தண்டிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dfc8fb2-e50d-4b42-b06c-8543856ac1af/26-6a7633e35c66a.webp' /></p><p>செனட் சபையில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் இந்த மசோதா பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.</p><p> புதிய சட்டம் பிரதிநிதிகள் சபையிலும் வெற்றி பெற்று என்னுடைய மேஜைக்கு வந்தால் கண்டிப்பாக நானும் அதனை ஏற்று கையெழுத்திட தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T19:37:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/serious-offender-hunt-underway-in-scotland-1786129909"></link>
            <id>https://news.lankasri.com/article/serious-offender-hunt-underway-in-scotland-1786129909</id>
            <summary type="text">ஸ்காட்லாந்து கொடூர குற்றவாளி தப்பியோடியதை அடுத்து அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது. தப்பியோடிய கொடூர குற்றவாளிசிறுவர்கள் மீதான பாலியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்காட்லாந்து கொடூர குற்றவாளி தப்பியோடியதை அடுத்து அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.</p><h2> தப்பியோடிய கொடூர குற்றவாளி</h2><p>சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்ற வழக்கில் தண்டனை பெற்றவரும், மனநல காப்பகத்தில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டவருமான கிளிஃபோர்ட் லியான்ஸ்(Clifford Lyons) பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து தப்பியோடியுள்ளார்.</p><p> பெர்த் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு பாதுகாப்புகளுடன் அழைத்து செய்யப்பட்ட கிளிஃபோர்ட் லியான்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் பாதுகாப்பாளர்களின் கண்ணில் படாமல் தப்பியோடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bef75d5-ce32-4669-817f-c10997cf6947/26-6a762df6e7b49.webp' /></p><p>கிளிஃபோர்ட் லியான்ஸ் என்ற இவர் கிளிஃபோர்ட் டொப்பி(Clifford Dobbie) என்றும் அழைக்கப்படுகிறார். </p><p>கிளிஃபோர்ட் லியான்ஸ் தப்பியோடியதை அடுத்து அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.</p><p> இதையடுத்து, அவரை பிடிக்க தேடுதல் வேட்டை ஒன்றை காவல்துறை முன்னெடுத்து வருகிறது. அதிகாரிகள் பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.</p><p> அதில், கிளிஃபோர்ட் லியான்ஸை பொதுமக்கள் யாரும் பார்த்தால் அவரின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் உடனடியாக ஸ்காட்லாந்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p> &nbsp;காஸ்டேர்ஸ் மாநில மருத்துவமனை மற்றும் கிளாஸ்கோ ரோவன் பேங்க் கிளினிக் ஆகியவற்றில் உள்ள உயர் பாதுகாப்பு மனநல மையங்களில் கிளிஃபோர்ட் லியான்ஸ் கடந்த பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75769faf-39de-42d2-a59e-dbbe960620cb/26-6a762df79a827.webp' /></p><p> 1990ம் ஆண்டு 12 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்து இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே இருந்த போது 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.</p><p>இதில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து&nbsp; குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.</p><p></p><h2> கிளிஃபோர்ட் லியான்ஸ் அடையாளங்கள்</h2><p>கிளிஃபோர்ட் லியான்ஸ் 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் என்றும் வழுக்கைத் தலை, நீல நிறக் கண்கள் கொண்டவர்.</p><p> வலது கையில் இரண்டு நீல நிற புலிகள் போன்ற கண்கள் மற்றும் இடது கையில் ரேஞ்சர்ஸ் கால்பந்து அணியின் சின்னம் ஆகியவை பச்சை குத்தப்பட்டு(Tattoos) இருக்கும்.</p><p> மேலும், நீல நிற கிழிந்த ஜீன்ஸ் பேண்ட். நீல நிற கோல்ஃப் சட்டை அத்துடன் லேசான நீல நிற ஸ்வெட்டர், கருப்பு நிற தொப்பி ஆகியவற்றை அணிந்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T19:12:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை: குறைக்கப்படும் வரிகள்: எதிர்பார்க்கப்படும் சலுகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-usa-interim-trade-deal-talk-happens-1786120266"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-usa-interim-trade-deal-talk-happens-1786120266</id>
            <summary type="text">வரியை குறைப்பது தொடர்பான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து கனடாவும், அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.கனடா - அமெரிக்கா இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரியை குறைப்பது தொடர்பான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து கனடாவும், அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>கனடா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை</h2><p>
&nbsp;விகிதாச்சார வரிகள் மற்றும் கட்டண மோதல்களை குறைப்பது தொடர்பான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து கனடாவும், அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தி குளோப் அண்ட் மெயில் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.</p><p> வரிகளை குறைப்பதற்காக அல்லது விலக்கு பெறுவதற்காக அமெரிக்காவின் சில வர்த்தக கோரிக்கைகளுக்கு கனடா இணங்க கூடும் என்று தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34511ba8-814d-4a7e-8f53-642555a1f6c9/26-6a76084c5a42c.webp' /></p><h2>கனடாவின் சாத்தியமான சலுகைகள்</h2><p>அமெரிக்க கார்கள் மீதான வரிகளை திரும்ப பெறுதல், அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்குதல், அமெரிக்க நிறுவனங்களுக்கான கொள்முதல் தடையை தளர்த்துவது. பால் பொருட்கள் ஒதுக்கீட்டை தீர்மானிப்பதில் அமெரிக்காவிற்கு கூடுதல் பங்கு வழங்குவது, சீனாவுடனான வர்த்தக கொள்கையை சீரமைப்பது ஆகியவற்றில் கனடா சலுகைகள் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4036562a-5b19-48b9-b2c0-aab047ebf43b/26-6a76084ba9bc1.webp' /></p><p></p><h2> அமெரிக்காவின் பதில் நடவடிக்கை</h2><p>கனடாவின் இந்த சலுகைகளுக்கு மாற்றாக, ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீதான தற்போதைய வரியை அமெரிக்கா நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> அத்துடன் ஆகஸ்ட் 19ம் திகதி முதல் அமெரிக்கா அமுல்படுத்தும் என எச்சரித்துள்ள வரிகளில் இருந்தும் கனடாவுக்கு விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-07T18:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சியூட்டா விவகாரம்: இத்தாலிக்கு கெடு விதித்த ஸ்பெயின்: பதிலடி நடவடிக்கை உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-italy-diplomatic-friction-over-ceuta-1786124101"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-italy-diplomatic-friction-over-ceuta-1786124101</id>
            <summary type="text">சியூட்டா தொடர்பான விவகாரத்தில் இத்தாலிக்கு ஸ்பெயின் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. சியூட்டா விவகாரம்
கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சியூட்டா தொடர்பான விவகாரத்தில் இத்தாலிக்கு ஸ்பெயின் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2> சியூட்டா விவகாரம்</h2><p>
கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமான சியூட்டாவிற்குள் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அத்துமீறி நுழைந்தனர்.</p><p> இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53dfef55-7c2b-4b9a-ad4e-ffe074bc40b4/26-6a761746ab023.webp' /></p><p> இதையடுத்து ஸ்பெயினில் இருந்து வரும் பயணிகளுக்கு எல்லை சோதனைகளை அமல்படுத்தி இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உத்தரவிட்டு இருந்தது.</p><p> இந்த விவகாரம் ஸ்பெயின் மற்றும் இத்தாலி இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.</p><p> ஸ்பெயினில் இருந்து வரும் மக்களை சோதனைக்கு உட்படுத்தப்படும் என்ற இத்தாலியின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று ஸ்பெயின் நேரடியாக குற்றஞ்சாட்டியது.</p><p> அத்துடன் இந்த நடவடிக்கை தேவையற்றது, மற்றும் ஐரோப்பிய யூனியனின் நலனுக்கு எதிரானது மற்றும் ஸ்பெயின் மக்களுக்கு எதிரானது என்று ஸ்பெயின் அரசு கண்டித்தது.</p><p></p><h2> இத்தாலிக்கு கெடு விதித்த ஸ்பெயின்</h2><p>
இந்நிலையில் இத்தாலி தன்னுடைய புதிய எல்லை கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்காவிட்டால், இத்தாலிய பயணிகளுக்கு எதிராக அதே போன்ற சோதனை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் விதிக்கும் என்று அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a27ffe9-b16d-4a29-8961-7ffe975cc779/26-6a7617475ef7f.webp' /></p><p> அத்துடன் ஆகஸ்ட் 9ம் திகதிக்குள் இத்தாலிய அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் ஸ்பெயின் கெடு விதித்துள்ளது.</p><p> இத்தாலி அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஸ்பெயின் நாட்டு மக்களின் நலன்களையும், கவுரவத்தையும் பாதுகாக்க அதற்கான தக்க நடவடிக்கையை ஸ்பெயின் அரசு முன்னெடுக்கும் என்று ஸ்பெயின் அரசு தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T17:35:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[UPI கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு இல்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/upi-charges-only-merchants-not-customers-1786119093"></link>
            <id>https://news.lankasri.com/article/upi-charges-only-merchants-not-customers-1786119093</id>
            <summary type="text">UPI கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வணிகர்களுக்கு மட்டுமேபுதிய வரி திருத்த மசோதா தொடர்பாக, UPI...</summary>
            <content type="html"><![CDATA[<p>UPI கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
</p><h2>
வணிகர்களுக்கு மட்டுமே</h2><p>புதிய வரி திருத்த மசோதா தொடர்பாக, UPI பரிவர்த்தனைகளில் கட்டணம் (Merchant Discount Rate - MDR) வணிகர்களுக்கு மட்டுமே விதிக்கப்படும், வாடிக்கையாளர்களுக்கு எந்தச் செலவும் இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0785faf2-9970-4c20-8f62-ca163e5b0ee2/26-6a7603b7db95f.webp' /></p><p>காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், “சாதாரண மக்கள் UPI பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்” எனக் கூறியதற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். </p><p>

அவர், MDR வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும், வாடிக்கையாளர்களுக்கு எந்தச் செலவும் இல்லை என்று உறுதிசெய்தார். </p><p>மேலும், இந்தக் கட்டணம் வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் தங்களது உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் புதுமை முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்றும் தெரிவித்தார்.</p><p></p><h2>எப்போது நடைமுறைக்கு வரும்</h2><p>

UPI மற்றும் சேவைகள் தொடர்பான Steering Committee, NPCI தலைமையில் MDR குறித்து முடிவு எடுக்கும். ஆனால் அது, நாடாளுமன்றத்தில் Taxation and Other Laws (Amendment) Bill, 2026 நிறைவேற்றப்பட்ட பிறகே நடைமுறைக்கு வரும். </p><p>இந்த மசோதா, Payment and Settlement Systems Act, 2007-இல் திருத்தம் செய்து, UPI மற்றும் RuPay கார்டு பரிவர்த்தனைகளில் zero-MDR அமைப்பை மாற்றுவதற்கு சட்ட ஆதாரம் வழங்குகிறது.
</p><p>
அதாவது, மசோதா MDR-ஐ நேரடியாக அறிமுகப்படுத்தவில்லை, ஆனால் எதிர்காலத்தில் அரசு அறிவிப்புகள் மூலம் zero-MDR அமைப்பை மாற்றுவதற்கு சட்ட அடிப்படை ஏற்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T16:09:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியின் பழமையான மரம்: 1100 ஆண்டுகள் வாழ்ந்த யூ மரம் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germanys-1100-year-old-yew-tree-found-1786117456"></link>
            <id>https://news.lankasri.com/article/germanys-1100-year-old-yew-tree-found-1786117456</id>
            <summary type="text">ஜேர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 1100 ஆண்டுகள் பழமையான யூ (Yew) மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் பழமையான மரம்ஸ்டீபிஸ் என்ற கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 1100 ஆண்டுகள் பழமையான யூ (Yew) மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2>

ஜேர்மனியின் பழமையான மரம்</h2><p>ஸ்டீபிஸ் என்ற கிராமம் அருகே, ஆஸ்திரிய எல்லைக்கு அருகில் உள்ள பசுமை மேடுகளில் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த மரம், ஜேர்மனியின் பழமையான மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8298b698-3704-4e86-af66-6c153cd5b984/26-6a75fd527a5ec.webp' /></p><p>இந்த மரத்தின் வயது, அதன் வளர்ச்சி வளையங்களை (growth rings) ஆய்வு செய்வதன் மூலம் கண்டறியப்பட்டது. ஆய்வாளர்கள் எடுத்த மாதிரிகள் அடிப்படையில், மரத்தின் வயது 900 முதல் 1300 ஆண்டுகளுக்குள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், சராசரியாக 1100 ஆண்டுகள் பழமையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த யூ மரம், Taxus baccata எனப்படும் ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தது. இயற்கை சூழலில் இவ்வளவு நீண்ட காலம் வாழும் யூ மரங்கள் மிக அரிது. </p><p></p><h2>இன்றும் பழங்களைத் தருகிறது!</h2><p>1100 மீட்டர் உயரத்தில், குளிரான வடமேற்கு சரிவில் வளர்ந்தாலும், இன்றும் இலைகள் மற்றும் பழங்களைத் தருகிறது.

மரத்தின் தண்டு சுமார் 5.10 மீட்டர் சுற்றளவு கொண்டது. இதனால், ஜேர்மனியில் பதிவான மிகப் பெரிய யூ மரமாகவும் இது அறியப்படுகிறது.</p><p>இதற்கு முன்பு, லோயர் சாக்ஸனியில் உள்ள Upstedt கிராமத்தின் லைம் மரம் (சுமார் 1000 ஆண்டுகள்) பழமையானதாக கருதப்பட்டது. ஆனால், ஸ்டீபிஸ் யூ மரம் அதனை மிஞ்சியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
தேசிய பாரம்பரிய மரம்</h2><p>ஜேர்மன் டெண்ட்ராலஜிக்கல் சொசைட்டி, இந்த மரத்தை “தேசிய பாரம்பரிய மரம்” (National Heritage Tree) என அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மரம் நீண்ட காலம் பாதுகாக்கப்பட்டு, இயற்கையாக வளர்ந்து கொண்டிருக்க வழிவகுக்கும்.
</p><p>
இந்த மரம், பல்லாயிரம் ஆண்டுகளாக சூழல் மாற்றங்கள், மனித வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் கடந்து வாழ்ந்து வந்துள்ளது. பறவைகள், பூச்சிகள், பூஞ்சைகள் போன்ற உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:42:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[190 ஆண்டுகளில் மிக வறட்சியான ஜூலை., இங்கிலாந்தில் பதிவான வானிலை சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-faces-record-drought-heatwave-alerts-1786113811"></link>
            <id>https://news.lankasri.com/article/england-faces-record-drought-heatwave-alerts-1786113811</id>
            <summary type="text">இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் நீண்ட காலமாக மழை பெய்யாமல் வறட்சி நிலை தொடர்கிறது.

கடந்த 190 ஆண்டுகளில் பதிவான மிக வறட்சியான ஜூலை மாதமாக இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் நீண்ட காலமாக மழை பெய்யாமல் வறட்சி நிலை தொடர்கிறது.</p><p>

கடந்த 190 ஆண்டுகளில் பதிவான மிக வறட்சியான ஜூலை மாதமாக இந்த 2026 ஜூலை மாதத்தை பிரித்தானிய வானிலை மையம் (Met Office) அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/461229bd-ce5d-46c8-a930-19c1a0ff97d9/26-6a75f3a9c8f01.webp' /></p><h2>சாதனை&nbsp;</h2><p>பிரித்தானியாவில் பல வானிலை நிலையங்கள் தங்களது பழைய சாதனைகளை முறியடித்துள்ளன.

சர்ரேயில் உள்ள விஸ்லி பகுதியில் தொடர்ந்து 51 நாட்கள் மழையின்றி வறட்சி நிலவுகிறது. </p><p>லின்கன்ஷையரில் உள்ள கோனிங்ஸ்பி பகுதியில் 42 நாட்கள் மழையின்றி சாதனை படைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், வசந்த காலத்திலிருந்து நிலவும் உயர் அழுத்த மண்டலம். இது மேகங்கள் உருவாகாமல் தடுப்பதால், மழை பெய்யாமல் போயுள்ளது.</p><p></p><p>

சில இடங்களில் சிறிய அளவில் மழை பெய்தாலும், வறட்சி பாதித்த பகுதிகளில் அது போதுமானதாக இல்லை. இதனால் புல்வெளிகள் வாடி, பசுமை நிலங்கள் மஞ்சள் நிறமாக மாறியுள்ளன.
</p><p>
1893-ஆம் ஆண்டு லண்டனின் மைல் எண்ட் பகுதியில் 73 நாட்கள் மழையின்றி இருந்தது மிக நீண்ட சாதனையாகும். அதனைத் தொடர்ந்து 1976-ஆம் ஆண்டு விஸ்லியில் 36 நாட்கள், 2018-ஆம் ஆண்டு கோனிங்ஸ்பியில் 33 நாட்கள் மழையின்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79ed4db2-bdd6-48b0-a2ad-fdaa3127a8d9/26-6a75f3aa821ce.webp' /></p><h2>வானிலை:&nbsp;மழை பெய்யும் வாய்ப்பு இல்லை</h2><p>வரும் வாரங்களில் வானிலை சிறிது மாறுபடும் என கணிக்கப்பட்டாலும், வறட்சியை முடிவுக்கு கொண்டு வரும் அளவுக்கு மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. வறட்சி முடிவடைய, தொடர்ந்து மற்றும் பரவலாக மழை பெய்ய வேண்டும். ஆறுகள், நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர் ஆகியவை நிரம்பும் அளவுக்கு மழை பெய்யும் போது மட்டுமே வறட்சி முடிவடையும்.
</p><p>
மேலும், அடுத்த வாரங்களில் வெப்பநிலை மீண்டும் 30 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 35 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் UK Health Security Agency பல இடங்களில் மஞ்சள் நிற வெப்ப எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
</p><p></p><p>இந்த வெப்ப அலை காரணமாக, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல் நலக்குறைவுள்ளவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. மருத்துவ சேவைகள் மீது அழுத்தம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவூறும் சுவையில் பாய் வீட்டு நெய்ச்சோறு.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ghee-rice-recipe-in-tamil-1786105810"></link>
            <id>https://news.lankasri.com/article/ghee-rice-recipe-in-tamil-1786105810</id>
            <summary type="text">பொதுவாக பாய் வீட்டு ஸ்பெஷல் உணவுவகைகளில் பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது நெய் சோறுதான்.

நெய்ச்சோறுடன் மிளகு முட்டை கிரேவி, செட்டிநாடு சிக்கன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக பாய் வீட்டு ஸ்பெஷல் உணவுவகைகளில் பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது நெய் சோறுதான்.</p><p>

நெய்ச்சோறுடன் மிளகு முட்டை கிரேவி, செட்டிநாடு சிக்கன், மட்டன் சுக்கா சேர்த்து சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும்.</p><p>

அந்தவகையில், நாவூறும் சுவையில் பாய் வீட்டு ஸ்டைல் நெய்ச்சோறு எப்படி செய்வதென்று பார்ப்போம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li> 
 
நெய் - 2 ஸ்பூன்</li><li> 
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் </li><li>பிரியாணி இலை</li><li> 
பட்டை- 1 துண்டு</li><li> 
கிராம்பு- 3</li><li> ஏலக்காய்- 2</li><li> 
அன்னாசிப்பூ- 1</li><li>
 ஜாவித்ரி- 2 </li><li>
கல்பாசி- 2
</li><li>வெங்காயம் - 2 </li><li>
முந்திரி - 10</li><li> 
பச்சை மிளகாய் - 4 </li><li>
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்</li><li> 
புதினா இலை </li><li>
கொத்தமல்லி இலை</li><li> 
உப்பு - 1 ஸ்பூன்
</li><li>தக்காளி - 1&nbsp;</li><li> தண்ணீர் - 1¾ கப்</li><li> 
பாஸ்மதி - 1 கப்
</li></ul><h2>
செய்முறை</h2><p> 

முதலில் ஒரு பாத்திரத்தில் நெய், தேங்காய் எண்ணெய், பட்டை , கிராம்பு, அன்னாசிபூ, ஏலக்காய், பிரியாணி இலை, ஜாவித்ரி, கல்பாசி சேர்த்து கிளற வேண்டும்.
</p><p>
பின் இதில் வெங்காயம், முந்திரி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cd8c904-7aba-4539-951f-3d7abd9fc366/26-6a75d03670269.webp' /></p><p>பின்னர் இதில் புதினா, கொத்தமல்லி, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும்.</p><p>

அடுத்து இதில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் 20 நிமிடம் ஊறவைத்த அரிசியை சேர்த்து வேகவைக்கவும்.</p><p>

இதற்கடுத்து தண்ணீர் முழுவதையும் அரிசி உறியும் போது மூடி போட்டு 20 நிமிடம் தம் போட வேண்டும்.
</p><p>
இறுதியாக இதன் மேல் லேசாக நெய், எண்ணெய்யில் பொரித்த வெங்காயம் சேர்த்து கிளறினால் சுவையான நெய்ச்சோறு தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T15:00:10+00:00</updated>
        </entry>
    </feed>
