<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-08T10:30:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[54 ஓட்டங்களில் சுருண்டு படுதோல்வி: வங்காளதேசத்தை சரித்த ஒற்றை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cricket-australia-xi-beat-bangladesh-warm-up-test-1786184790"></link>
            <id>https://news.lankasri.com/article/cricket-australia-xi-beat-bangladesh-warm-up-test-1786184790</id>
            <summary type="text">வங்காளதேச அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பயிற்சி டெஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வங்காளதேச அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

பயிற்சி டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.&nbsp;</p><h2>மெஹிதி ஹசன் மிராஸ் 109 ஓட்டங்கள்&nbsp;</h2><p>




டார்வினில் நடந்த பயிற்சி டெஸ்டில் வங்காளதேசம் மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/507bc096-0559-49cc-a6a6-52d90ef0a2a2/26-6a77045a08e57.webp' />&nbsp;</p><p></p><p>
வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 263 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மெஹிதி ஹசன் மிராஸ் 109 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள்) குவித்தார். கோரி ரோச்சிச்சியொலி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். </p><p>

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் 355 ஓட்டங்கள் குவித்தது. டீகியூ வைல்லி 130 ஓட்டங்களும், ஜேக் டோரன் 76 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;</p><h2>கேம்பல் தாம்ஸன்</h2><p>

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்காளதேச அணி கேம்பல் தாம்ஸனின் (Campbell Thompson) மிரட்டலான பந்துவீச்சில் 54 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
தன்ஸித் ஹஸனை (22 ஓட்டங்கள்) தவிர ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். கேம்பல் தாம்ஸன் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/612fe833-586a-4c96-af0d-c931b23eb3eb/26-6a77045958dc9.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0ba3eb8-8382-4bb5-a95e-21fd325bd4b2/26-6a77045aae282.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T10:24:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் ராணுவ தளம் ஒன்றின் அருகே மீண்டும் ட்ரோன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-drones-spotted-over-german-military-base-1786183253"></link>
            <id>https://news.lankasri.com/article/2-drones-spotted-over-german-military-base-1786183253</id>
            <summary type="text">ஜேர்மன் ராணுவ தளம் ஒன்றின் அருகே மீண்டும் இரண்டு ட்ரோன்கள் காணப்பட்டதாக ஜேர்மன் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


ஜேர்மன் விமான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் ராணுவ தளம் ஒன்றின் அருகே மீண்டும் இரண்டு ட்ரோன்கள் காணப்பட்டதாக ஜேர்மன் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>


ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், ஜேர்மன் ராணுவ தளம் ஒன்றின் அருகே மீண்டும் இரண்டு ட்ரோன்கள் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h3>

ஜேர்மன் விமான நிலையத்தில் மர்மப் பொருள்
</h3><p>
ஜேர்மனியின் Leipzig விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf2da36-4877-42a9-8b92-2a9ceb95d269/26-6a76fe57c7766.webp' /></p><p>
பின்னர், விமான ஓடுபாதையில் மர்மப்பொருள் ஒன்று கிடப்பது தெரியவரவே, உஷாரான அதிகாரிகள், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் ரோபோ ஒன்றை அங்கு அனுப்பியுள்ளனர்.
</p><p>
அவர்கள் சந்தேகப்பட்டது போலவே, அங்கு வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கிடப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு உருவானது.&nbsp;</p><p></p><h3>
ஜேர்மன் ராணுவ தளம் ஒன்றின் அருகே மீண்டும் ட்ரோன்கள்
</h3><p>
இந்நிலையில், வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள Mechernich நகரில் அமைந்துள்ள ராணுவத் தளத்தின் மீது வியாழக்கிழமை இரவு 10.00 மணியளவில் இரண்டு ட்ரோன்கள் பறப்பதை அந்த தளத்தின் பாதுகாப்பு மையம் கண்டறிந்துள்ளதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25624cbc-05c4-4a52-8379-4bb0d58784cd/26-6a76fe57221a1.webp' /></p><p>
இந்த விடயம் தொடர்பில் ராணுவ பொலிசார் விசாரணை ஒன்றை மேற்கொண்ட நிலையில், பின்னர் அந்த வழக்கை Euskirchen நகர பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
</p><p>
விடயம் என்னவென்றால், அந்த ராணுவ தளத்தின் மீது ஆறு ட்ரோன்கள் பறந்ததாக உள்ளுர் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T10:04:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரோட்டத்தில் சிக்கிய சிறுமி: காப்பாற்றிய நபரைத் தேடும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/search-missing-swimmer-rescue-child-myrtle-beach-1786182558"></link>
            <id>https://news.lankasri.com/article/search-missing-swimmer-rescue-child-myrtle-beach-1786182558</id>
            <summary type="text">அமெரிக்காவில் கடல் நீரோட்டத்தில் சிக்கிய சிறுமி ஒருத்தியைக் காப்பாற்றிய நபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.


அமெரிக்காவின் தெற்கு கரோலினாவிலுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் கடல் நீரோட்டத்தில் சிக்கிய சிறுமி ஒருத்தியைக் காப்பாற்றிய நபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
</p><p>

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவிலுள்ள கடற்கரை ஒன்றில் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருத்தி கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டாள்.</p><h3>

நீரோட்டத்தில் சிக்கிய சிறுமி
</h3><p>
மிர்ட்டில் பீச் என்னுமிடத்தில் அமைந்துள்ள கடற்கரையில் நிகழ்ந்த அந்த சம்பவம் பரபரப்பை உருவாக்கிய நிலையில், பிள்ளையைக் காப்பாற்றுவதற்காக ஒருவர் தண்ணீரில் குதித்துள்ளார்.
</p><p>
பிள்ளையைக் கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு அவர் சத்தமிட, அங்கிருந்த சிலர் தண்ணீருக்குள் குதித்து பிள்ளையை அவரிடமிருந்து வாங்கி கரைக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d42e2ff0-6934-4239-9cf4-2b865db89878/26-6a76fb9f6cbee.webp' /></p><p>
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பிள்ளையைக் காப்பாற்றிய நபர் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
</p><p>
நேற்றிரவு உள்ளூர் நேரப்படி சுமார் 8.00 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், அவரைத் தேடும் பணி இப்போதும் தொடர்வதாகவும், அவரை இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். </p><p></p><p>

இந்நிலையில், குழந்தையைக் காப்பாற்றிவிட்டு தண்ணீரில் மூழ்கிய அந்த நபருக்காக பிராத்தனை செய்யுமாறு பலரும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
</p><p>
அமெரிக்க ஊடகங்கள் அந்த நபரின் பெயரை வெளியிடாமல், அவரை ’நல்ல சமாரியன்’ என்று மட்டுமே குறிப்பிட்டுவரும் நிலையில், அவரால் காப்பாற்றப்பட்ட பிள்ளையின் பெயரையோ, அவள் எப்படி இருக்கிறாள் என்பது குறித்த விவரங்களையோ அதிகாரிகள் வெளியிடவில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T09:51:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரிய வாய்ப்பு... விற்பனைக்கு வரும் எல்ஐசி பங்குகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lic-share-sale-begins-1786182197"></link>
            <id>https://news.lankasri.com/article/lic-share-sale-begins-1786182197</id>
            <summary type="text">இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி தனது பங்குகளில் 6.5 சதவீதத்தை விற்பனை செய்ய உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி தனது பங்குகளில் 6.5 சதவீதத்தை விற்பனை செய்ய உள்ளது.
</p><p>இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசியின் பங்குகளில், அதிகபட்சமாக 6.5 சதவீதத்தை விற்பனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>விலை 382 ரூபாய்</h2><p>
</p><p>காப்பீட்டு சேவையை இந்தியாவில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் வழங்கும் வகையில் எல்ஐசி நிறுவனமானது தொடங்கப்பட்டு மிகப்பெரிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/837434fa-b28e-4cc2-8142-31fb2993be66/26-6a76fa37f035d.webp' /></p><p> </p><p>இந்த நிலையில் எல்ஐசியின் பங்குகளை அதிகபட்சம் 6.5 சதவீதம் வரை விற்பனை செய்ய இந்திய அரசு முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>செவ்வாய்க்கிழமை முதல் நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க விண்ணப்பிக்கலாம் என்றும், சில்லறை முதலீட்டாளர்கள் புதன்கிழமை முதல் ஏலத்தில் பங்கேற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்திய அரசு முதற்கட்டமாக 2.5 சதவீத பங்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது. மேலும் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதலாக 4 சதவீத பங்குகளை விற்கும் திட்டத்திலும் ஈடுபட உள்ளது.</p><p></p><p> </p><p>ஒரு பங்கிற்கான குறைந்தபட்ச விலை 382 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது எல்ஐசி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்கு 96.5 சதவீதமாக உள்ளது. தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவின் அடிப்படையில் பங்குகள் விற்கப்பட்டால் அரசின் பங்கு 90 சதவீதமாக குறையும்.</p><h2>பொதுமக்களின் பங்கு</h2><p>பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விதிகளின்படி எல்ஐசி நிறுவனத்தில் அரசின் பங்குகளை 2027 மே மாதத்திற்குள் குறைந்தபட்சம் 90 சதவீதமாக குறைக்க வேண்டும். </p><p>இந்த இலக்கை திட்டமிட்ட காலத்திற்குள் அடைய இந்த பங்கு விற்பனை உதவும் என எல்ஐசி தெரிவித்திருக்கிறது.
ஒரு பங்கின் விலை 382 ரூபாய் என்ற அடிப்படையில் 6.5 சதவீத பங்குகளும் விற்கப்பட்டால் இந்திய அரசுக்கு சுமார் 26,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இதுவரை நடப்பு நிதியாண்டில் இந்திய அரசு ரூ 2121 கோடி அளவுக்கு முதலீட்டு விலகல் (Disinvestment) மூலம் வருவாய் ஈட்டி இருக்கிறது. எல்ஐசி பங்குகளும் வெற்றிகரமாக விற்கப்பட்டால் இந்திய அரசின் மொத்த வருவாய் ரூ 47,201 கோடியாக உயரும்.
</p><p>2026-2027-ம் நிதி ஆண்டில் முதலீட்டு விலகள் மற்றும் அரசு சொத்துக்களை பணமாக்குதல் (Asset Monetisation) மூலம் சுமார் 80,000 கோடி ரூபாயை திரட்ட இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9a10de9-f07d-4adc-8249-b61b680a5ea6/26-6a76fa373fba9.webp' /></p><p> </p><p>இதுவரை அந்த இலக்கில் சுமார் 35 சதவீதத்தை இந்திய அரசு எட்டியுள்ளது. 2022ஆம் ஆண்டு எல்ஐசியின் ஐபிஓ மூலம் அரசு 3.5 சதவீதம் பங்குகளை விற்றது.</p><p> அதன்படி பொதுமக்களின் பங்கு விகிதத்தை படிப்படியாக உயர்த்துவதற்காக செபி கால அவகாசம் வழங்கியது. 2027 மே மாதத்திற்குள் எல்ஐசியில் பொது மக்களின் பங்கு 10 சதவீதமாக இருக்க வேண்டும். </p><p>2032-குள் இது 25 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும். இந்த புதிய பங்கு விற்பனை மூலம் அந்த இலக்கை திட்டமிட்ட காலத்திற்கு முன்பே அடைய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், எல்ஐசியின் பங்குகளை வாங்க மக்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T09:41:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவிற்கு எதிரான ஒரு நடவடிக்கை... 100 சதவீத வரி அச்சுறுத்தலில் சீனாவும் இந்தியாவும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-sanctions-bill-tariff-threat-1786173388"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-sanctions-bill-tariff-threat-1786173388</id>
            <summary type="text">ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றியதை அடுத்து, இந்தியா, சீனா மீது 100 சதவீத வரி அச்சுறுத்தல்.
இந்தியா மற்றும் சீனா உட்பட, ரஷ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றியதை அடுத்து, இந்தியா, சீனா மீது 100 சதவீத வரி அச்சுறுத்தல்.
</p><p>இந்தியா மற்றும் சீனா உட்பட, ரஷ்ய எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை வாங்கும் உலகின் முதல் ஐந்து நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுமதி வழங்கும் மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2>ஜனாதிபதிக்கு அதிகாரம்</h2><p>
</p><p>உக்ரைனின் தீவிர ஆதரவாளராக இருந்து ஜூலை 11 அன்று காலமான குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் நினைவாகப் பெயரிடப்பட்ட இந்த மசோதா, செனட் சபையில் 86-11 என்ற வாக்கு வித்தியாசத்தில் அங்கீகரிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b44df48-1317-4719-8869-82ed374ca861/26-6a76d7ce3392e.webp' /></p><p> </p><p>தற்போது ஐந்தாம் ஆண்டில் இருக்கும் உக்ரைன் போரைத் தொடங்கியதற்காக ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்க வேண்டும் என கிரஹாம் வலுவாக வாதிட்டு வந்தார். </p><p>செனட் சபையில் அவருக்குப் பின் பதவியேற்ற அவரது சகோதரி டார்லின் கிரஹாம், இந்த மசோதா ஜனாதிபதி புடினுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி என்று கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>ஓராண்டுக்கும் மேலாக கிரஹாம் உடன் இணைந்து இந்த மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்திய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ரிச்சர்ட் ப்ளூமெந்தல், உக்ரைன் மக்கள் தனித்து விடப்படவில்லை என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். </p><p>இந்த இருகட்சி ஆதரவுடைய மசோதாவானது, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷ்ய எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை வாங்கும் உலகின் முதல் ஐந்து நாடுகளின் மீது சுங்கவரிகளை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.</p><h2>முதல் ஐந்து நாடுகள்</h2><p> </p><p>இந்தியா மற்றும் சீனா தவிர, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளும் தற்போது ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளில் அடங்கும். </p><p>ஆனால், ரஷ்யாவிலிருந்து 15 சதவீதத்திற்கும் குறைவான அளவு இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் மற்றும் அந்த இறக்குமதியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நாடுகளுக்கு இந்த மசோதா விதிவிலக்குகளை அளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fb0c429-3b73-4c96-a5a8-e9d3b0b5079e/26-6a76d7cf04bbf.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள், ரஷ்ய நிதி நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய எரிசக்தித் திட்டங்கள் மீதான தடைகளையும் இந்தச் சட்டம் உள்ளடக்கியுள்ளது. </p><p>அத்துடன், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி வருவாய் மீதான தற்போதைய அமெரிக்கத் தடைகளைத் தவிர்ப்பதற்காக புடின் நிர்வாகம் பயன்படுத்தும், பழைய மற்றும் பெயர் மாற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல்களை இலக்காகக் கொண்டு, இந்த மசோதா அமெரிக்கத் தடைகளை விரிவுபடுத்தும். </p><p>மேலும், தேசிய நலனுக்கு உகந்தது என்று ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சான்றளித்தால், தடைகள் அல்லது கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் இது வெள்ளை மாளிகையை அனுமதிக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T09:40:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 வயது மூத்த நடிகையை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர் ரமன்தீப் சிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cricketer-ramandeep-singh-married-charlie-chauhan-1786181570"></link>
            <id>https://news.lankasri.com/article/cricketer-ramandeep-singh-married-charlie-chauhan-1786181570</id>
            <summary type="text">கிரிக்கெட் வீரர் ரமன்தீப் சிங் தன்னை விட 7 வயது மூத்த நடிகையான சார்லி சௌஹானை திருமணம் செய்துள்ளார். 

ரமன்தீப் சிங் - சார்லி சௌஹான் திருமணம் 

சண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிக்கெட் வீரர் ரமன்தீப் சிங் தன்னை விட 7 வயது மூத்த நடிகையான சார்லி சௌஹானை திருமணம் செய்துள்ளார். </p><h3>

ரமன்தீப் சிங் - சார்லி சௌஹான் திருமணம்</h3><p> 

சண்டிகரை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ரமன்தீப் சிங்(Ramandeep Singh), 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான T20 போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b35bd1c-20bf-451a-92ce-395a5cb06730/26-6a76f7c4cf720.webp' /></p><p>

ஆல் ரவுண்டரான இவர் பஞ்சாப் மாநில அணிக்காக விளையாடி வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdb070b7-0c57-4628-b0d2-3cb0703ed6b1/26-6a76f7c57fc9b.webp' /></p><p>

ஐபிஎல் தொடரில், 2022 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இவர், 2024 முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.</p><p> 

இந்நிலையில், ரமன்தீப் சிங் நடிகையும் தனது நீண்ட நாள் காதலியுமான சார்லி சௌஹானை(Charlie Chauhan) திருமணம் செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/608a9703-ccb3-43a2-9535-c7d75620bc97/26-6a76f7c63133b.webp' /></p><p>

இந்த திருமணம் ஆகஸ்ட் 7 ஆம் திகதி குருத்வாராவில் பாரம்பரிய சீக்கிய முறைப்படி நடைபெற்றுள்ளது. </p><p></p><p>
திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbxcFnlj7vx/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbxcFnlj7vx/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbxcFnlj7vx/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Chaarlie Chaauhan (@charliechauhan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>

இந்த தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்கள் அபிஷேக் சர்மா, வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். </p><p>

2009 ஆம் ஆண்டில் MTV Roadies 7 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக அறிமுகமானவர் சார்லி சௌஹான். Kaisi Yeh Yaariaan, Best Friends Forever? போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்தன் மூலம் அறியப்படுகிறார்.</p><p> 

ரமன்தீப் சிங்கிற்கு 29 வயது, சார்லி சௌஹானிற்கு 36 வயது ஆகும். தன்னை விட 7 ஆண்டுகள் மூத்த நடிகையுடன் ரமன்தீப் சிங் 8 ஆண்டுகளாக காதலில் இருந்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T09:33:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் குற்றவியல் வழக்காக மாறியுள்ள நோய்த்தொற்று பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/legionnaires-outbreak-leads-criminal-case-in-swiss-1786177162"></link>
            <id>https://news.lankasri.com/article/legionnaires-outbreak-leads-criminal-case-in-swiss-1786177162</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக ஒருவர் பலியான வழக்கு குற்றவியல் வழக்காக மாற்றப்பட்டுள்ளது.


சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பரவும் நோய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக ஒருவர் பலியான வழக்கு குற்றவியல் வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
</p><p>

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பரவும் நோய் ஒன்றினால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் பலியாகிவிட்டதால், அந்த வழக்கு, குற்றவியல் வழக்காக மாற்றப்பட்டுள்ளது.</p><h3>

பாஸல் நகரில் பரவும் நோய்த்தொற்று</h3><p>

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில், லீஜியோனெல்லா நீமோபிலா என்னும் பாக்டீரியாவால் உருவாகும், லீஜியோனேர்ஸ் என்னும் நோய் பரவிவருகிறது.</p><p>

28 பேர் லீஜியோனெல்லா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் பலியாகிவிட்டதால், அந்த வழக்கு தற்போது குற்றவியல் வழக்காக மாற்றப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3af83ee-29a2-424b-9c68-220bb67ebeda/26-6a76e68c0f952.webp' /></p><p>
அதாவது, இந்த இந்த லீஜியோனெல்லா கிருமி, கட்டிடங்களை குளிர்விக்க பயன்படுத்தும் கருவிகள் மூலம் பரவக்கூடும்.
</p><p>
இந்நிலையில், பாஸல் நகரில் தொறு அதிகம் பரவும் பகுதியிலுள்ள கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள கூலிங் டவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.&nbsp;</p><p></p><p>

அப்போது, இரண்டு அலுவலகங்களில் உள்ள கூலிங் டவர்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் இந்த லீஜியோனெல்லா கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளது.</p><p>

ஆகவே, ஒரு உயிர் பலியானதற்கு அந்த அலுவலகத்தின் கவனக்குறைவு காரணமாக அமைந்துவிட்டதால், நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த வழக்கை குற்றவியல் வழக்காகக் கருதி வழக்கு விசாரணையைத் துவக்கியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T08:19:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றிவந்த இந்திய இளம்பெண்: விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-girl-who-works-in-canada-jail-officer-dies-1786176548"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-girl-who-works-in-canada-jail-officer-dies-1786176548</id>
            <summary type="text">கனடாவில் சிறைத்துறையில் அதிகாரியாக பணியாற்றிவந்த இளம்பெண்ணொருவர் விபத்தொன்றில் பலியானார்.

கனடாவில், கைதி ஒருவரை எட்மண்டனிலுள்ள பெண்கள் சிறையிலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் சிறைத்துறையில் அதிகாரியாக பணியாற்றிவந்த இளம்பெண்ணொருவர் விபத்தொன்றில் பலியானார்.</p><p>

கனடாவில், கைதி ஒருவரை எட்மண்டனிலுள்ள பெண்கள் சிறையிலிருந்து வேறொரு இடத்துக்கு அழைத்துச் செல்லும்போது நிகழ்ந்த விபத்தில், இந்தியப் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் பலியாகியுள்ளார்கள்.
</p><h3>
மூன்று பேர் பலி
</h3><p>
வியாழக்கிழமையன்று, எட்மண்டனிலுள்ள பெண்கள் சிறையிலிருந்து, கியாரா மூஸ்வா (Kiara Mooswa, 24) என்னும் பெண் கைதியை வேறொரு சிறைக்குக் கொண்டு செல்லும் பணியில் சிறைத்துறை அதிகாரிகள் சில ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b9a419b-7684-467f-b4ee-a8148cfefbc4/26-6a76e426cc56d.webp' /></p><p>அவர்கள் பயணித்த வேன், ஆல்பர்ட்டா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது, ட்ரக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/985bcd7f-3255-4ac9-bfd3-cc1ee8fbea14/26-6a76e4277e849.webp' /></p><p>இந்த கோர விபத்தில், கியாராவும், சிறைத்துறை அதிகாரிகளான நிக்கோலே செர்பா (Nicolae Serban, 57) மற்றும் ரமன்தீப் கௌர் மான் (Ramandeep Kaur Maan, 25) ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்கள்.&nbsp;</p><p></p><h3>

யார் இந்த ரமன்தீப் கௌர் மான்?
</h3><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FVoteBhullar%2Fposts%2Fpfbid0p9fvvnRX2k4Kdy6w5MFqwYWEfXeG8uUKYgWqSz8tEyLtejPgzYa2TdjGKFQcgwqNl&show_text=true&width=500" width="500" height="666" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான ரமன்தீப் கௌர் மான், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானாவைச் சேர்ந்தவர் ஆவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74935640-a2e7-488b-af2a-5ed7980421b9/26-6a76e42627506.webp' /></p><p>சர்வதேச மாணவியாக கனடா வந்த ரமன்தீப் கௌர், ஆறு மாதங்களுக்கு முன்தான் சிறைத்துறையில் பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T08:09:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்மத்திற்கு செல்லும் சூரியன்.., கோடிகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sun-transit-1786176392"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sun-transit-1786176392</id>
            <summary type="text">நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

ஜூலை மாதத்தில் சூரியன் தனது ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.</p><p>

ஜூலை மாதத்தில் சூரியன் தனது ராசியை மாற்றியுள்ள அதே நேரத்தில் ஜூலை 20ஆம் திகதியான இன்று தனது நட்சத்திரத்தை மாற்றியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், ஆகஸ்ட் 17ஆம் திகதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் 1 வருடம் கழித்து நுழையவுள்ளார்.</p><p>

அந்தவகையில், சிம்மத்திற்கு செல்லும் சூரியனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.&nbsp;</p><p></p><h2>சிம்மம்
</h2><ul><li>
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
</li><li>வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
</li><li>வருமானம் அதிகரிக்கும்.
</li><li>வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
</li><li>பணியில் முன்னேற்றம் ஏற்படும்.
</li><li>நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும்.
</li><li>முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c83a0992-9bb0-4e14-90c1-72cee08829c5/26-6a76e38b06a6f.webp' /></p><h2>துலாம்
</h2><ul><li>
புதிய பொன்னான வாய்ப்புகள் தேடி வரும்.
</li><li>உழைப்புக்கு முழுமையான பலன் கிடைக்கும்.
</li><li>சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும்.</li><li>
நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.</li><li>
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.</li><li>
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
</li><li>வீடு அல்லது வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும் .</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38ae4ea1-a13d-48d1-b04a-5691cb3bb750/26-6a76e38baeb3b.webp' /></p><p> </p><h2>மகரம்
</h2><ul><li>
பொற்காலமாக அமைய வாய்ப்பு உள்ளது.
</li><li>தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
</li><li>திடீர் பணவரவு கிடைக்கும்.
</li><li>நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும்.
</li><li>பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
</li><li>வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் லாபம் கிடைக்கும்.</li><li>
முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கலாம்.
</li><li>குடும்ப உறவுகள் மேம்படும்.&nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db7d4c42-3867-4b29-8ed1-1e7698537459/26-6a76e38c610f8.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T08:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எண்ணங்களை படிக்க அனுமதித்தால் லட்சத்தில் பணம் வழங்கும் AI நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-startup-conduit-pay-money-for-read-your-thought-1786175550"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-startup-conduit-pay-money-for-read-your-thought-1786175550</id>
            <summary type="text">Conduit என்ற AI நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு அமைப்புக்கு பயிற்சியளிக்க உங்களது எண்ணங்களை படிக்கச் அனுமதித்தால் சுமார் ரூ.1 லட்சம் அளவிற்கு பணம் வழங...</summary>
            <content type="html"><![CDATA[<p>Conduit என்ற AI நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு அமைப்புக்கு பயிற்சியளிக்க உங்களது எண்ணங்களை படிக்கச் அனுமதித்தால் சுமார் ரூ.1 லட்சம் அளவிற்கு பணம் வழங்குகிறது. </p><h3> 

எண்ணங்களை படிக்க அனுமதித்தால் பணம்
</h3><p>
செயற்கை நுண்ணறிவு துறை அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. ChatGPT போன்ற செயலிகள் நாம் உரை வடிவிலோ, அல்லது குரல் வழியிலோ கொடுக்கும் கட்டளைக்கு ஏற்ப படம், வீடியோக்களை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca82d00-082d-4a8d-b34c-e1de13354b12/26-6a76e0404670e.webp' /></p><p>

ஆனால், Conduit என்ற AI ஸ்டார்ட்அப் நிறுவனம் அதற்கு ஒரு படி மேலே போய், உரை அல்லது குரல் வடிவிலான கட்டளைக்கு பதிலாக நமது எண்ணங்கள் மூலம் செயல்படும் செயலியை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளது. </p><p>

இதே போன்ற முயற்சியில் எலான் மஸ்கின் neuralink நிறுவனம் ஈடுபட்டிருந்தாலும், அது மனிதனின் உடலுக்குள் சிப் ஒன்றை பொருத்தி அதன் மூலம் எண்ணங்களை வைத்து சாதனங்களை இயக்க வழி வகுக்கிறது. </p><p>

ஆனால் Conduit நிறுவனம், உடலுக்குள் ஊடுருவாத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எண்ணங்களை படிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மூலம் சாதனங்களை இயக்குவதை இலக்காக வைத்துள்ளது.&nbsp;</p><p></p><p>

இதற்காக தனது அமைப்புகளுக்குத் தேவையான பயிற்சித் தரவுகளைச் சேகரிப்பதற்காக, அந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்து பணம் வழங்குகிறது. </p><p> 

இதில் பங்குபெற, அமெரிக்காவில் உள்ள Conduit அலுவலகத்திற்குச் சென்று, மின்முனைகள் பொருத்தப்பட்ட 4 பவுண்டு எடை கொண்ட தலைக்கவசத்தை அணிந்துகொண்டு, 2 மணி நேரம் செயற்கை நுண்ணறிவுடன் (AI) உரையாட வேண்டும்.</p><p> 

மேலும், விரல்களைப் பார்க்காமல் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும். 

இந்த அமர்வுகளின் போது, ​​பங்கேற்பாளர்கள் ஒரு செயற்கை நுண்ணறிவு மாதிரியுடன் உரையாடவும், கேட்கவும் பேசவும், படிக்கவும் அல்லது தட்டச்சு செய்யவும் கேட்டுக்கொள்ளப்படலாம்.
</p><p>
இதில், ஒரு அமர்வுக்கு 55 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.5,200) வரை பணம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் 32 அமர்வுகள் வரை பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. அதாவது 32 அமர்வுகளில் பங்குபெற்றால் 1760 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.1.67 லட்சம்) வரை பணம் பெற முடியும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T07:52:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரீபியன் பிரீமியர் லீக்: முதல் போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் த்ரில் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/antigua-and-barbuda-falcons-thrill-win-cpl-2026-1786174937"></link>
            <id>https://news.lankasri.com/article/antigua-and-barbuda-falcons-thrill-win-cpl-2026-1786174937</id>
            <summary type="text">ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணியை வீழ்த்தியது.

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ஆன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணியை வீழ்த்தியது.</p><p>

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ரோவ்மன் பௌல்</h2><p>
செயின்ட் வின்சென்ட்டில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🚨 Andre Russell now has 100 CPL wickets 🔥🔥🔥<a href="https://t.co/DmpR7zV7md">pic.twitter.com/DmpR7zV7md</a></p>&mdash; Cricbuzz (@cricbuzz) <a href="https://x.com/cricbuzz/status/2085937293307642058?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் 167 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் ரோவ்மன் பௌல் 47 (37) ஓட்டங்களும், ரீஸா ஹென்ரிக்ஸ் 42 (25) ஓட்டங்களும் விளாசினர்.

அல்ஸரி ஜோஸப் 3 விக்கெட்டுகளும், உஸமா மிர் மற்றும் ஜேடன் சீல்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp;</p><p></p><p> 

அடுத்து களமிறங்கிய ஆன்டிகுவா அணியில் டிம் ராபின்சன் 40 ஓட்டங்களும், தஜிந்தர் தில்லோன் 62 (37) ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
ஆனால் பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து சொதப்பினர். 20வது ஓவரின் கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட, ஷாமர் ஸ்ப்ரிங்கர் ஆன்டிகுவா அணியை வெற்றி பெற வைத்தார்.
</p><p>
ஜமைக்கா தரப்பில் கீமோ பவுல் 3 விக்கெட்டுகளும், ரஸல் மற்றும் ஹுனைன் ஷா தலா 2 விக்கெட்டுகளும், ஹஸன் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">What a start to the CPL season 🤩🤩<a href="https://t.co/PZmYLTgG3r">pic.twitter.com/PZmYLTgG3r</a></p>&mdash; Cricbuzz (@cricbuzz) <a href="https://x.com/cricbuzz/status/2085944437637824913?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T07:40:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்: கடத்தல் பாணியை மாற்றிய ஆட்கடத்தல்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/smugglers-use-mega-dinghies-for-migrant-channels-1786166101"></link>
            <id>https://news.lankasri.com/article/smugglers-use-mega-dinghies-for-migrant-channels-1786166101</id>
            <summary type="text">பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழையும் புலம்பெயர்ந்தோர் இப்போது பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.


பிரான்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழையும் புலம்பெயர்ந்தோர் இப்போது பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.</p><p>


பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்ட விரோத புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்த இருதரப்பும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், ஆட்கடத்தல்காரர்களும் புதிய நடவடிக்கைகளை துவக்கியுள்ளார்கள்.</p><h3>

சிறுபடகுகள் மூலம் நுழையும் புலம்பெயர்ந்தோர்?
</h3><p>
பிரித்தானியாவைப் பொருத்தவரை, சட்ட விரோத புலம்பெயர்வோர் முன்பு லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்கு நுழைந்துவந்தார்கள்.&nbsp;</p><p>
அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதால், சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையத் துவங்கினார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/228a1e60-f0e0-4385-9ce7-1949cdbeed50/26-6a76bb567f3ff.webp' /></p><p>
அப்படி ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்சுக்கு 662 மில்லியன் பவுண்டுகள் கொடுக்க முன்வர, பிரான்ஸ் தரப்பு கட்டுப்பாடுகளை கடுமையாக்கிவருகிறது.
</p><p>
விடயம் என்னவென்றால், ஆட்கடத்தல்காரர்களும் அதற்கு ஈடாக தங்கள் கடத்தல் பாணியை மாற்றிவருகிறார்கள்.&nbsp;</p><p></p><p>

ஆம், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைக் குறித்து குறிப்பிடும்போது, ’சிறுபடகுகளை தடுத்து நிறுத்துதல்’ என்றே அது குறிப்பிடப்படுகிறது.
</p><p>
ஆனால், இப்போது சிறுபடகுகள் அல்ல, பிரம்மாண்டமான பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.</p><p>

அதற்கு ஆதாரமாக, செவ்வாய்க்கிழமையன்று, 173 புலம்பெயர்வோர் பயணித்த படகொன்றின் எஞ்சினில் தீப்பற்றிய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d27a15a-3920-45ab-a3f1-e2bb85115233/26-6a76bb5745a31.webp' /></p><p>
ஆக, பிரான்சிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை, சிறுபடகுகள் மூலம் கொஞ்சம் கொஞ்சம் பேராக ஆங்கிலக்கால்வாய் வழியாக அனுப்பிவந்த ஆட்கடத்தல்காரர்கள், இப்போது ஒரே நேரத்தில் நூறுக்கும் அதிகமானோர் பயணிக்கும் பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.</p><p>

அதுமட்டுமின்றி, வழக்கமாக புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து புறப்படும் இடங்கள் மட்டுமின்றி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டு கடற்கரைகளில் வெவ்வேறு இடங்களிலிருந்து புலம்பெயர்வோரை படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு அனுப்புவதும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக டெய்லி மெயில் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:55:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கொள்ளை முயற்சியின்போது கொல்லப்பட்ட இந்தியர்: நகர மேயர் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/edmonton-mayor-condolence-indian-death-in-robbery-1786170748"></link>
            <id>https://news.lankasri.com/article/edmonton-mayor-condolence-indian-death-in-robbery-1786170748</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நகர மேயர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நகர மேயர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
</p><p>

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில், கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.</p><h3>

கொள்ளை முயற்சியின்போது கொல்லப்பட்ட இந்தியர்
</h3><p>
எட்மண்டனில் மதுபான விடுதி ஒன்றை நடத்திவரும் சுக்ஜீத் சிங் ரந்தாவா (48) என்பவர், புதன்கிழமை இரவு தனது விடுதியை மூடிக்கொண்டிருந்திருக்கிறார்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FVoteBhullar%2Fposts%2Fpfbid03852M3ayajQk4fu7bDhftgZtoVdm7yzB9EEi4SB26e8DN2s32gsSwZDXQGUvxrGPsl&show_text=true&width=500" width="500" height="628" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிங் கடையில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவரை சிங் தடுக்க, அந்த நபர் சிங்கை தாக்கியுள்ளார்.
</p><p>
தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, சிங் படுகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.
</p><p>
முதலுதவி சிகிச்சைக்குப் பின் சிங்கை அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில், நிக்கோலஸ் (Nicholas Butler-Chowace, 22) என்னும் கனேடியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
நகர மேயர் இரங்கல்

சுக்ஜீத் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள எட்மண்டன் நகர மேயரான ஆண்ட்ரூ நாக், இதுபோன்ற அர்த்தமற்ற வன்முறைச் செயல்கள் நம் சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே பாதிக்கின்றன என்று கூறியுள்ளார்.
</p><p>
ஒவ்வொரு எட்மண்டன்வாசிக்கும் நம் நகரில் பாதுகாப்பாக உணர உரிமை உண்டு என்று கூறியுள்ள அவர், தன் சமூகத்துக்கு சேவை செய்யும்போதும், தம் கடமையை ஆற்றும்போதும், யாரும் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
</p><p>
வரும் புதன்கிழமை சுக்ஜீத் சிங்குக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:34:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படும் அதிசய நகரம்.., எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-city-is-called-as-the-golden-city-of-india-1786170181"></link>
            <id>https://news.lankasri.com/article/which-city-is-called-as-the-golden-city-of-india-1786170181</id>
            <summary type="text">இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திற்கும் தனித்துவமான பெயர்களும், சிறப்புகளும் உள்ளன.

அந்த வகையில் ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜெய்சல்மர் நகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திற்கும் தனித்துவமான பெயர்களும், சிறப்புகளும் உள்ளன.</p><p>

அந்த வகையில் ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜெய்சல்மர் நகரம் இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படுகிறது.
</p><p>
ஜெய்சல்மர் நகரில் உள்ள பெரும்பாலான வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் மஞ்சள் நிற மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2174ff12-6653-4dc2-aee6-abb218d7c37f/26-6a76cccf489bf.webp' /></p><p>சூரிய ஒளி இந்தக் கட்டிடங்கள் மீது படும்போது, அவை தங்க நிறத்தில் ஜொலிப்பது போல் காட்சியளிக்கின்ற காரணமாகவே ஜெய்சல்மருக்கு தங்க நகரம் என்ற பெயர் வந்தது.&nbsp;</p><p>ஜெய்சல்மரின் முக்கிய அடையாளமாக இருப்பது ஜெய்சல்மர் கோட்டை. இது சோனார் கிலா அல்லது தங்கக் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
</p><p>
கி.பி. 1156ஆம் ஆண்டு ராஜபுத்திர மன்னர் ராவல் ஜெய்சால் இந்தக் கோட்டையை கட்டினார். அப்போது இது அவரது ராஜ்ஜியத்தின் முக்கிய மையமாக இருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35e529be-2b77-4b8b-98f5-02f95f6f5b3e/26-6a76ccd031ed1.webp' /></p><p>இந்தக் கோட்டையின் மற்றொரு சிறப்பு, இது வெறும் வரலாற்றுச் சின்னமாக மட்டும் இல்லாமல் இன்றும் மக்கள் வசிக்கும் பகுதியாக இருப்பதுதான்.&nbsp;&nbsp;</p><p>பழங்காலத்தில் ஜெய்சல்மர் முக்கியமான வணிக நகரமாகவும் இருந்தது. </p><p>

இந்தியாவையும் மேற்கத்திய பகுதிகளையும் இணைக்கும் முக்கிய வணிகப் பாதைகளுக்கு அருகில் இந்த நகரம் அமைந்திருந்ததால், ஏராளமான வணிகர்கள் இங்கு வந்து சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b43e9f4-335c-48f4-8dc1-c96062ff8c03/26-6a76ccd0df779.webp' /></p><p>

இதன் மூலம் ஜெய்சல்மர் வணிகம் மட்டுமின்றி, கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கியது.
</p><p>
இன்றும் ஜெய்சல்மர் தனது பழமையான கட்டிடங்கள், நாட்டுப்புற இசை, கைவினைப் பொருட்கள், திருவிழாக்கள் மற்றும் பாலைவன வாழ்க்கை முறைக்காக பிரபலமாக உள்ளது.
</p><p>
அதன் தங்க நிறக் கட்டிடங்களும் வரலாற்றுச் சிறப்புகளும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக எம்.பிக்கள் கூட்டம் - முதல்வர் விஜய் அழைப்பை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dmk-admk-boycott-cm-vijay-mp-s-meet-delimitation-1786168685"></link>
            <id>https://news.lankasri.com/article/dmk-admk-boycott-cm-vijay-mp-s-meet-delimitation-1786168685</id>
            <summary type="text">தொகுதி மறுவரையறை குறித்து கலந்தாலோசிக்க முதல்வர் விஜய் தமிழக எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொகுதி மறுவரையறை குறித்து கலந்தாலோசிக்க முதல்வர் விஜய் தமிழக எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கின்றன.</p><h3>

தமிழக எம்.பிக்கள் கூட்டம்</h3><p>

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.</p><p> 

இதற்கு தமிழ்நாட்டில் பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்தாலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47eb9d76-e942-48f9-b708-b52b3ceaa430/26-6a76c56eaa451.webp' /></p><p>

இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது” என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.&nbsp;</p><p></p><h3>

திமுக எதிர்ப்பு </h3><p>


இந்த கூட்டத்தை அரசியல் நாடகம் என விமர்சித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, இந்த கூட்டத்தை திமுக எம்.பிக்கள் புறக்கணிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6bd9014-84df-4250-ba75-d7068906a92d/26-6a76c56f599de.webp' /></p><p>

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "DelimitationBill: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் FairDelimitation என்பதிலும் எங்கள் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.</p><p>

இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை.</p><p>

இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது, முதலமைச்சர் கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா?</p><p>
CauveryIssueக்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், MekedatuDam-க்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சினையைத் திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr"><a href="https://x.com/hashtag/DelimitationBill?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DelimitationBill</a>: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் <a href="https://x.com/hashtag/FairDelimitation?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#FairDelimitation</a> என்பதிலும் எங்கள் தலைவர் திரு.<a href="https://x.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.<br><br>இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு…</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2085957308509814952?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் MPக்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?" என தெரிவித்துள்ளார்.</p><h3> 

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு</h3><p> 

அதிமுகவும் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

இதே போல், நாடாளுமன்ற தொடர் இருப்பதால் தேமுதிக மாநிலங்களவை எம்பி சுதீஷ் கலந்து கொள்ள இயலாது என தெரிவித்துள்ளார்.</p><p> இதே போல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

கமல்ஹாசன் எம்பி அமெரிக்காவில் உள்ளதால் அவரால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் திமுக அதிமுக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது காதலிக்கு UEFA பெருந்தொகை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு: ஃபிஃபா தலைவர் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uefa-paid-off-infantino-lover-1786168043"></link>
            <id>https://news.lankasri.com/article/uefa-paid-off-infantino-lover-1786168043</id>
            <summary type="text">கியானி இன்ஃபான்டினோ UEFA-வின் பொதுச் செயலாளராக இருந்தபோது அவரது காதலி என்று கூறப்படுபவருக்கு பணிவிலகல் தொகையொன்று வழங்கப்பட்டுள்ளது.
கியானி இன்ஃபான்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கியானி இன்ஃபான்டினோ UEFA-வின் பொதுச் செயலாளராக இருந்தபோது அவரது காதலி என்று கூறப்படுபவருக்கு பணிவிலகல் தொகையொன்று வழங்கப்பட்டுள்ளது.
</p><p>கியானி இன்ஃபான்டினோ UEFA-வின் பொதுச் செயலாளராக இருந்தபோது, ​​அவரது காதலி என்று கூறப்படும் நபருக்கு அந்த அமைப்பு பணிநீக்க இழப்பீடு வழங்கியதாக டெய்லி டெலிகிராப் புலனாய்வு கண்டறிந்துள்ளது.</p><h2>உறுதிப்படுத்தும் அறிக்கை</h2><p>
</p><p>ஆனால், முற்றிலும் உண்மையற்ற இந்தக் குற்றச்சாட்டுகளை இன்ஃபான்டினோ உறுதியாக மறுப்பதாக, தற்போதைய ஃபிஃபா தலைவரின் செய்தித் தொடர்பாளர் அந்தப் பத்திரிகையிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51e4c70b-1417-4e6d-ab70-db9b5b229f7c/26-6a76c2ed6e565.webp' /></p><p> </p><p>இதனிடையே, இன்ஃபான்டினோ 2009 முதல் 2016 வரை பொதுச் செயலாளராகப் பணியாற்றிய UEFA, சம்பந்தப்பட்ட நபருக்குப் பணிவிலகல் தொகையொன்று வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
</p><p>உலகக் கிண்ணம் தொடருக்கான பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து, ஃபிஃபா தலைவராகத் தனது எதிர்காலத்தைத் தக்கவைக்க இன்ஃபான்டினோ போராடி வரும் சூழலில் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p></p><p> </p><p>ஐரோப்பிய கால்பந்து நிர்வாக அமைப்பில் பணியாற்றிய காலத்தில், திருமணமானவரான இன்ஃபான்டினோவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண்ணுக்கு, UEFA ஆறு இலக்கத் தொகையை வழங்கியதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இன்ஃபான்டினோ உறுதியாக மறுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது செய்தித்தொடர்பாளர், இன்ஃபான்டினோவின் நடத்தை குறித்து UEFA அல்லது FIFA-வில் உள்ள எந்தவொரு ஊழியரும் இதுவரை புகார் அளித்ததில்லை; ஏனெனில், அவர் சம்பந்தப்பட்ட அத்தகைய சம்பவம் எதுவும் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை என்றும் வாதிட்டுள்ளார்.</p><h2>கூடுதல் நெருக்கடி</h2><p> </p><p>இருப்பினும், குறிப்பிட்ட அந்தப் பெண்ணுக்கு ஒரு தொகை வழங்கப்பட்டதை உறுதிப்படுத்திய UEFA, உள்ளூர் கல்லூரி ஒன்றில் அவர் எம்பிஏ (MBA) படிப்பை முடிப்பதற்கான கட்டணங்களை அந்தத் தொகை உள்ளடக்கியிருந்தது என்றும் தெரிவித்துள்ளது. </p><p> 
உலகக் கிண்ணத்திற்கான தனியார் முதலீட்டுத் திட்டம் தொடர்பாக ஃபிஃபா தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கைகளை எதிர்கொண்டுள்ள இன்ஃபான்டினோவின் மீது, இந்தக் குற்றச்சாட்டுகள் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c69ce65-5ea6-4497-87a1-2d165a8c056c/26-6a76c2ee1fa33.webp' /></p><p> </p><p>இன்ஃபான்டினோ 2000-ஆம் ஆண்டில் UEFA-வில் இணைந்து, 2009-ஆம் வருடம் அதன் பொதுச் செயலாளரானார்; பின்னர் 2016-ஆம் வருடம் ஃபிஃபா தலைவராக நியமிக்கப்பட்டார். </p><p>இதனிடையே, இன்ஃபான்டினோவின் திட்டங்கள் கைவிடப்பட்ட போதிலும், சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று கூறி, ஐரோப்பிய அணிகள் ஃபிஃபா நிகழ்வுகளைப் புறக்கணிக்கப் போவதாக அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T05:45:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தை உலுக்கிய சம்பவம்... 9 பேர்கள் ஆபத்தான நிலையில்: 8 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eight-killed-including-attacker-1786163337"></link>
            <id>https://news.lankasri.com/article/eight-killed-including-attacker-1786163337</id>
            <summary type="text">பேங்காக் அருகே பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், மாணவர் ஒருவர் தனது தாத்தா-பாட்டியை கொன்றுள்ளார்.
தாய்லாந்தைச் சேர்ந்த பதின்ம வயது இளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேங்காக் அருகே பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், மாணவர் ஒருவர் தனது தாத்தா-பாட்டியை கொன்றுள்ளார்.
</p><p>தாய்லாந்தைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர் ஒருவர் தனது தாத்தா-பாட்டியை கொன்ற பிறகு, தனது பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஐந்து பேரைக் கொன்று, தானும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.</p><h2>ஆபத்தான நிலையில்</h2><p>
</p><p>துப்பாக்கி வன்முறையைக் கையாள்வதில் திணறிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டை உலுக்கியுள்ள இன்னொரு தாக்குதல் சம்பவம் இது என்றே கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37444a61-6583-481a-a4b9-340785be4267/26-6a76b08bdc6e1.webp' /></p><p> பேங்காக் நகருக்கு வடமேற்கே அமைந்துள்ள புகழ்பெற்ற டெப்சிரின் நோந்தபுரி பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 14 வயதுடைய அந்த மாணவர் 30-க்கும் மேற்பட்டோரைப் காயப்படுத்தியுள்ளார். </p><p>இதில், ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தாய்லாந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு. </p><p>தாக்குதலில் ஈடுபட்ட அந்த மாணவர் தனது தாத்தாவிற்குச் சொந்தமான துப்பாக்கியைக் கொண்டு குறைந்தது 26 முறை சுட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவ்க்கப்பட்டுள்ளது; அவரிடம் மேலும் 34 தோட்டாக்கள் எஞ்சியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, ​​மாணவர்கள் வெறும் காலுறைகளுடன் ஓடும் காட்சிகள் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களில் பதிவாகியிருந்தன. </p><p>இதனிடையே, புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களைச் செயல்படுத்தப்போவதாக நாட்டின் தலைவர் உறுதியளித்த நிலையில், மதிய வேளையில், வழக்கமாக மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் விளையாட்டு மைதானம் அதிகாரிகள் மற்றும் ஊடகத்தினரால் நிறைந்திருந்தது.</p><h2>உலகளவில் 13-வது இடம்</h2><p> </p><p>தென்கிழக்கு ஆசியாவிலேயே தாய்லாந்தில்தான் பொதுமக்களிடையே துப்பாக்கி வைத்திருக்கும் விகிதம் மிக அதிகமாக உள்ளது. </p><p>மேலும், 2017-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட 'ஸ்மால் ஆர்ம்ஸ் சர்வே' என்ற அமைப்பு, சிறு ரக துப்பாக்கிகளை வைத்திருப்பதில் தாய்லாந்தை உலகளவில் 13-வது இடத்தில் தரவரிசைப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a23080cb-48d8-4d06-91c3-9bd5febb3f6d/26-6a76b08cae1f0.webp' /></p><p> </p><p>சமீபத்திய வருடங்களில் தாய்லாந்தில் பாடசாலைகள் மற்றும் பாங்காக்கில் உள்ள ஒரு பெரிய வணிக வளாகம் ஆகியவற்றில் நடந்த சம்பவங்கள் உட்பட பல துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன; </p><p>இதில் 2022-ஆம் வருடம் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 சிறார்கள் உட்பட 37 பேர் கொல்லப்பட்ட சம்பவமும் அடங்கும். </p><p>தாக்குதல் நடந்த இப்பாடசாலையானது, தாய்லாந்து அரச குடும்பத்தால் நிறுவப்பட்ட 'டெப்சிரின்' (Debsirin) கல்விக் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இதன் முன்னாள் மாணவர்களில் பிரதமர்கள், அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர் அடங்குவர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T05:05:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடியை அடர்தியாக்க முருங்கை இலை.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/moringa-leaf-for-hair-growth-in-tamil-1786164902"></link>
            <id>https://news.lankasri.com/article/moringa-leaf-for-hair-growth-in-tamil-1786164902</id>
            <summary type="text">பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான்.

ஆனால் முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.

அந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான்.
</p><p>
ஆனால் முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.
</p><p>
அந்தவகையில், முடியின் அடர்த்தியை அதிகரிக்க முருங்கை இலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>

தேவையான பொருட்கள்</h2><ul><li>

முருங்கை இலை- 2 கைப்பிடி</li><li>
தண்ணீர்- சிறிதளவு</li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் முருங்கை இலையை நன்கு கழுவி உலரவைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>

பின்னர் இதனை ஒரு வாணலில் சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29c312c5-3fa7-43a1-acfb-41e7a926ebd6/26-6a76b6a8efeed.webp' /></p><p>அடுத்து அரைத்த பொடியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தலைமுடியில் உச்சந்தலை முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும்.</p><p>

பின் இதனை 20 நிமிடம் அப்படியே விட்டு பின் மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசலாம்.
</p><p>
இதனை தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T04:56:16+00:00</updated>
        </entry>
    </feed>
