<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-18T17:31:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[UAE-க்கு ஏவுகணை அச்சுறுத்தல் - பாதுகாப்பான இடத்தை தேடுமாறு மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uae-missile-threat-alert-ask-people-seeks-shelter-1787073568"></link>
            <id>https://news.lankasri.com/article/uae-missile-threat-alert-ask-people-seeks-shelter-1787073568</id>
            <summary type="text">UAE issues missile threat alert: ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது குடிமக்களுக்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE issues missile threat alert: ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது குடிமக்களுக்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><h2>
பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புக எச்சரிக்கை</h2><p>நாட்டின் தேசிய அவசரநிலை, பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) வெளியிட்ட அறிவிப்பில், UAE-க்கு எதிராக ஏவுகணை தாக்குதல் அபாயம் இருப்பதாகவும், மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69b10a2a-72a2-4851-8549-6ebe74530768/26-6a849421d5128.webp' /></p><p>அமீரகத்தின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள், நாட்டை நோக்கி ஏவுகணை தாக்குதல் முயற்சி கண்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

“அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்றுங்கள், பாதுகாப்பான இடங்களில் தங்குங்கள்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>
புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>இந்த எச்சரிக்கை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மத்திய கிழக்குப் போரினை நிறுத்தும் நோக்கில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) காலாவதியான ஒரு நாளுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.
</p><p></p><p>சமீபத்தில் ஈரான், அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் (ADNOC) கப்பலை ஹார்முஸ் நீரிணையில் தாக்கியதாக UAE குற்றம் சாட்டியுள்ளது.</p><p>

முன்னதாக, பிப்ரவரி மாதம் தொடங்கிய மத்திய கிழக்கு போரில், UAE மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தப்பட்டன. ஆனால், ஜூன் மாதத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான பின் தாக்குதல்கள் குறைந்திருந்தன. தற்போது அந்த ஒப்பந்தம் முடிவடைந்ததால், மீண்டும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">UAE air defence systems detected a missile threat targeting the county. Please remain in a safe location and follow warnings and updates issued through official channels. <a href="https://t.co/aobFA9WRdw">pic.twitter.com/aobFA9WRdw</a></p>&mdash; NCEMA UAE (@NCEMAUAE) <a href="https://x.com/NCEMAUAE/status/2089728318149193837?ref_src=twsrc%5Etfw">August 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><h2>மக்களிடையே பதற்றம்</h2><p>அமீரக உள்துறை அமைச்சகம், “தற்போதைய சூழ்நிலை காரணமாக மக்கள் அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடங்களில் தஞ்சம் புக வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.</p><p>
இந்த எச்சரிக்கை, UAE மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், மக்கள் அமைதியாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T17:16:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் மிரட்டலுக்கு பிரித்தானியா பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-react-to-russia-warning-regard-ukraine-support-1787054926"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-react-to-russia-warning-regard-ukraine-support-1787054926</id>
            <summary type="text">UK responds after Russia warns of inevitable consequences: ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானிய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK responds after Russia warns of inevitable consequences: ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானிய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்ததற்கு பிரித்தானியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
</p><p> 

ரஷ்யா மீது தாக்குதல் நடத்த பிரித்தானிய தயாரிப்புகளான ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்துவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது ரஷ்யா.
</p><h3>
ரஷ்யா மிரட்டல்

லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி</h3><p> ஒன்றில், லண்டன் ஒருபக்கம் அமைதி வேண்டும் என கூறிக்கொண்டே மறுபக்கம் வேண்டுமென்றே உக்ரைன் பிரச்சினையை பெரிதுபடுத்த முனைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fa10ac9-5f55-4cf8-b0e8-15716c40c409/26-6a844b4f4e1f7.webp' /></p><p>
மேலும், லண்டனின் நடவடிக்கைகள் தவிர்க்கமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், ரஷ்யாவுடனான மோதலில் பிரித்தானியாவின் ஈடுபாடு எந்த அளவுக்கு அதிகமாகிறதோ, உக்ரைனுக்கு அது எந்த அளவுக்கு ஆதரவளிக்கிறதோ, அந்த அளவுக்கு பிரித்தானியா விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.</p><h3>

பிரித்தானியாவின் பதில்</h3><p>

இந்நிலையில், ரஷ்யாவின் மிரட்டலைத் தொடர்ந்து செய்தி ஒன்றை வெளியிட்ட பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர், பிரித்தானியா உக்ரைனுடன் தோளோடு தோளாக நிற்கிறது என்றும், ரஷ்யாவின் சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிராக உக்ரைன் தன்னைக் காத்துக்கொள்வதற்குத் தேவையான தளவாடங்களை உக்ரைனுக்குக் கொடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
அத்துடன், உக்ரைனிலும், பிரித்தானியா மற்றும் எங்கள் கூட்டாளிகளுக்கு எதிராகவும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நிற்பதில் இந்த அரசாங்கத்தின் உறுதியைப் பற்றி ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது பிரித்தானிய தரப்பு.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T16:36:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்குரிய தீவுக்கு புடின் முதல் பயணம்: எதிர்ப்பைத் தொடர்ந்து..ஜப்பானியத் தூதர் வரவழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-ambassador-summons-by-russia-1787061027"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-ambassador-summons-by-russia-1787061027</id>
            <summary type="text">Japan ambassador summons by russia: குரில் தீவுகள் தொடர்பிலான சர்ச்சையைத் தொடர்ந்து, ஜப்பானியத் தூதர் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Japan ambassador summons by russia: குரில் தீவுகள் தொடர்பிலான சர்ச்சையைத் தொடர்ந்து, ஜப்பானியத் தூதர் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார்.</p><p> 

விளாடிமிர் புடினின் சர்ச்சைக்குரிய குரில் தீவுகள் பயணத்திற்கு எழுந்த கண்டனத்தைத் தொடர்ந்து, ஜப்பானியத் தூதர் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார்.&nbsp;</p><h2>குரில் தீவுகளுக்கு&nbsp;பயணம் </h2><p>

 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) சர்ச்சைக்குரிய குரில் தீவுகளுக்கு முதன்முறையாக பயணம் மேற்கொண்டார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b51271d-5ad0-439d-a8fd-01fdad0c279e/26-6a84638bcb059.webp' /></p><p></p><p>
இந்தப் பயணத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜப்பானிய பிரதமர் சனாயே டகாயிச்சி கண்டித்தார். </p><p>

மேலும், தலைநகர் டோக்கியோவில் உள்ள ரஷ்யத் தூதரை வரவழைத்தார்.

அதன் விளைவாக, ஜப்பானுக்கு பதிலளிக்கும் விதமாக தனது எதிர்ப்பின் மூலம் மரியாதைக்குரிய வரம்பை மீறிவிட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம்சாட்டினார்.&nbsp;</p><h2>ஜப்பானியத் தூதர்&nbsp;</h2><p>

இந்த நிலையில், மாஸ்கோவில் உள்ள ஜப்பானியத் தூதர் அகிரா முட்டோவை வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைத்துள்ளார் செர்ஜி லாவ்ரோவ்.</p><p>

 Interfax செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, செவ்வாய்க்கிழமையன்று மாஸ்கோவில் உள்ள வெளியுறவு அமைச்சகக் கட்டிடத்திற்குள் சுமார் 20 நிமிடங்கள் இருந்த முட்டோ, அங்கிருந்து வெளியேறும்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். </p><p>

அதே சமயம், தகாய்ச்சி வெளியிட்ட ரஷ்ய-எதிர்ப்பு கருத்துகள் தொடர்பாக முட்டோ வரவழைக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca4c8c36-fbf6-45e5-a99f-af722d14f8c0/26-6a84638cbaab0.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T13:49:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்மோஸ் நீரிணை இனி அமெரிக்காவின் பகுதி - வரைபடத்தை வெளியிட்ட ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-shares-image-hormuz-as-new-us-territory-1787059073"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-shares-image-hormuz-as-new-us-territory-1787059073</id>
            <summary type="text">trump declare strait of hormuz as us territory : ஹார்மோஸ் நீரிணை அமெரிக்காவின் புதிய பகுதி என குறிப்பிடும் ஒரு வரைபடத்தை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>trump declare strait of hormuz as us territory : ஹார்மோஸ் நீரிணை அமெரிக்காவின் புதிய பகுதி என குறிப்பிடும் ஒரு வரைபடத்தை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.</p><h3> 

ஹார்மோஸை அமெரிக்காவின் பகுதியாக அறிவித்த ட்ரம்ப்</h3><p>

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பின்னர், உலகின் 20% எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/123d8e0f-2e81-4920-80c8-24d70f548f84/26-6a845b82b4381.webp' /></p><p>
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதன் பின்னர், தனது நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியது.</p><p>

அதன் பின்னர், அமெரிக்காவும் தனது கப்பல்கள் மூலம் ஹார்மோஸ் நீரிணையை முற்றுகையிட்டு அதனை கட்டுப்படுத்த நினைத்தது.&nbsp;</p><p></p><p> 

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதிமொழிகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரான் சபாநாயகர் முகமது காலிபாஃப் தெரிவித்துள்ளார். </p><p> 

நீரிணையை திறக்க அமெரிக்கக் கடற்படை முற்றுகையை நீக்க வேண்டும், எண்ணெய் மீதான தடைகளை அகற்ற வேண்டும், மேலும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aedb397-96e1-4cc6-8761-516d2a379b6d/26-6a845b836592d.webp' /></p><p>

இந்த நீர்வழித்தடத்தில் கடற்கரைகளைக் கொண்டுள்ள ஈரான் மற்றும் ஓமன், கப்பல் போக்குவரத்துக்கு கட்டணம் விதிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.&nbsp;&nbsp;</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117116198386080523/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>

இந்நிலையில், ஹார்மோஸ் நீரிணை அமெரிக்காவின் புதிய பகுதி என குறிப்பிடும் ஒரு வரைபடத்தை 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T13:18:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலவச பஸ் பாஸ் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-pm-announced-free-bus-pass-for-disable-peoples-1787056207"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-pm-announced-free-bus-pass-for-disable-peoples-1787056207</id>
            <summary type="text">Prime Minister has announced that disabled people will be entitled to free bus from next year: அடுத்த ஆண்டு முதல் இங்கிலாந்து முழுவதும் மாற்றுத்திறனாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prime Minister has announced that disabled people will be entitled to free bus from next year: அடுத்த ஆண்டு முதல் இங்கிலாந்து முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பேருந்துப் பயணம் என பிரதமர் ஆன்டி பர்னாம் அறிவிப்பு.
</p><p>

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
</p><h3>
இலவச பஸ் பாஸ் தொடர்பில் ஒரு செய்தி</h3><p>

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், இங்கிலாந்து முழுவதும் மாற்றுத்திறனாளிகள் 24 மணி நேரமும் இலவசப் பேருந்துப் பயணத்திற்குத் தகுதி பெறுவார்கள் என பிரதமர் ஆன்டி பர்னாம் அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45f76d79-34f7-4db0-b1ac-9079762fe999/26-6a845050946c3.webp' /></p><p>
அன்றாட செலவுகள் ஏற்படுத்தும் அழுத்தங்களைக் குறைப்பதற்கான பிரதமரின் சமீபத்திய முயற்சிகளின் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பாஸ்களில் தற்போது உள்ள கால வரம்புகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நீக்கப்பட உள்ளன.
</p><p>
தற்போது, இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பாஸ்கள், வார நாட்களில், காலை 9.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
</p><p>
இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் இங்கிலாந்து முழுவதிலுமே ஒழிக்கப்பட உள்ளன.&nbsp;</p><p></p><p>
இது குறித்து பேசிய பிரதமர் ஆன்டி பர்னாம், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் பஸ் பாஸை பயன்படுத்திப் பயணிக்க முடியாதது சரியல்ல.</p><p>

எனவே, நாங்கள் அதைச் சரிசெய்கிறோம். இனி மாற்றுத்திறனாளிகள் 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் வரம்பற்ற இலவசப் பேருந்துப் பயணத்தை மேற்கொள்ளலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/017d8337-d103-4ff4-839e-9e9faa6172ed/26-6a8450515054e.webp' /></p><p>

நான் இதை முன்பே கிரேட்டர் மான்செஸ்டரில் செய்திருக்கிறேன், இப்போது நாடு முழுவதற்குமாக அதைச் செய்வதில் நான் பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
</p><p>
அத்துடன், மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்குவதற்காகவும், விலைவாசி குறித்து கவலையில் இருப்பவர்களுக்கு மிகவும் தேவையானதான நிம்மதியை அளிப்பதற்காகவும் நாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதி இது என்றும் கூறியுள்ளார் ஆன்டி பர்னாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T12:32:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபோதையில் வாகனம் ஓட்டிய வார்னருக்கு அபராதம் - சிக்கலில் கேப்டன் பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cricketer-david-warner-fined-for-drunk-and-drive-1787054161"></link>
            <id>https://news.lankasri.com/article/cricketer-david-warner-fined-for-drunk-and-drive-1787054161</id>
            <summary type="text">david warner fined for drunk and drive: மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் டேவிட் வார்னருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

வார்னருக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>david warner fined for drunk and drive: மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் டேவிட் வார்னருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
</p><h3>
வார்னருக்கு அபராதம்
</h3><p>
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற PSL தொடரில், கராச்சி கிங்ஸ் அணியின் அணித்தலைவராக விளையாடினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/898d5369-99f6-40b0-af28-7dc67f626a9a/26-6a844852833b4.webp' /></p><p>

இந்த தொடரின் இடையே கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட அவுஸ்திரேலியாவிற்கு சென்ற டேவிட் வார்னர், சிட்னி புறநகரில் உள்ள மரோவ்பிரா பகுதியில் மது அருந்திவிட்டு கார் ஓட்டியுள்ளார்.
</p><p>
அங்கு காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் நடத்திய சுவாசப் பரிசோதனையின் போது, வார்னர் சட்ட வரம்பை விட 2 மடங்குக்கும் அதிகமான மது அளவுடன் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது.
</p><p>
கடந்த மாதம், சிட்னி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை வார்னர் ஒப்புக்கொண்டார்.&nbsp;</p><p></p><p>

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வார்னர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, 1,066 அவுஸ்திரேலிய டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1,01,912) அபராதம் விதிக்கப்பட்டது.
</p><p>
மேலும், டேவிட் வார்னர் இனி இன்டர்லாக் கருவியை பொருத்திய பின்னரே வாகனம் ஓட்ட வேண்டும். 

இந்த இன்டர்லாக் கருவியானது ஓட்டுநரின் உடலில் மதுவின் அளவை கண்டறிந்தால், கார் இயங்குவதைத் தடுத்துவிடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4daa958-aabb-4067-8c57-6376b260eee7/26-6a84485334076.webp' /></p><p>

வார்னர் அணித்தலைவராக உள்ள சிட்னி தண்டர் அணியை NSW கிரிக்கெட் நிர்வகிக்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான பிரச்சாரத்தில் NSW கிரிக்கெட் ஒரு மாநிலப் பங்காளராக உள்ளது.</p><p>

இந்த தண்டனைக்கு பின்னர் வார்னரின் கேப்டன் பதவி கூட பறிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:57:17+00:00</updated>
        </entry>
    </feed>
