<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-21T10:18:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணைய வசதி இல்லாமல் யுபிஐ பரிவர்த்தனை.., விரைவில் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/upi-transactions-without-internet-access-scheme-1784628658"></link>
            <id>https://news.lankasri.com/article/upi-transactions-without-internet-access-scheme-1784628658</id>
            <summary type="text">இந்தியாவில் இணைய வசதி இல்லாமலேயே யுபிஐ மூலம் பணம் செலுத்தும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அறிமுகம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இணைய வசதி இல்லாமலேயே யுபிஐ மூலம் பணம் செலுத்தும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>

விரைவில் அறிமுகம்</h2><p> 

நாட்டில் பெரும்பாலானோர் யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p> 

ஆனால், இணைய வசதி இல்லாத மலைப்பகுதிகள், விமானங்கள் மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களில் யுபிஐ பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை உள்ளது.
</p><p>
இதற்காக, இணையம் இல்லாமலேயே யுபிஐ பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc6d2b06-07b5-4b8d-bb7b-fe67469fd5b1/26-6a5f463bbe292.webp' /></p><p>இதற்காக, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் உள்ள NFC (Near Field Communication) தொழில்நுட்பத்தை யுபிஐ சேவையிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>

இதன் மூலம், POS இயந்திரங்களில் இணைய வசதி இல்லாமலேயே மொபைல் போன் மூலம் பணம் செலுத்த முடியும்.</p><p>

முதற்கட்டமாக, இணையம் இல்லாமல் ரூ.2,000 வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T10:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஆண்டில் ஜேர்மனியை விட்டு வெளியேறிய 288,000 ஜேர்மானியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/288000-germans-moves-to-abroad-in-a-year-1784625950"></link>
            <id>https://news.lankasri.com/article/288000-germans-moves-to-abroad-in-a-year-1784625950</id>
            <summary type="text">ஒரே ஆண்டில் 288,000 ஜேர்மானியர்கள் ஜேர்மனியை விட்டு வெளியேறியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியை விட்டு வெளியேறிய ஜேர்மானியர்கள்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரே ஆண்டில் 288,000 ஜேர்மானியர்கள் ஜேர்மனியை விட்டு வெளியேறியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h3>

ஜேர்மனியை விட்டு வெளியேறிய ஜேர்மானியர்கள்</h3><p>

ஒரே ஆண்டில் 288,000 ஜேர்மானியர்கள் ஜேர்மனியை விட்டு வெளியேறியதாக ஜேர்மன் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0237cd38-43e6-4fff-917a-8d74eef81de1/26-6a5f3b1fddbb6.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், அவர்களில் பாதி பேர் ஜேர்மனியில் அதிக வருவாய் தரும் பணிகளில் இருந்தவர்கள்.
</p><p>
சமீபத்திய ஆய்வொன்றில், ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் இரண்டில் ஒருவர், தாங்கள் வெளிநாடுகளில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். </p><p></p><p>

30 சதவிகிதம் பேர், ஏற்கனவே வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பம் அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
இந்நிலையில், வெளிநாட்டு அனுபவமும் அறிவும் புத்தாக்கத்துக்கும் புதிய தொழில் வாய்ப்புகளுக்கும் உத்வேகத்தை அளிக்கும் என்பதால், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை நேர்மறையான விடயமாக கருதலாம் என்று கூறும் பொருளாதார நிபுணர்கள், அதே நேரத்தில், ஒரு நாட்டிலுள்ள பணியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள் என்றால், ஏதோ பிரச்சினை என்றுதான் அர்த்தம்.
</p><p>
ஜேர்மனியில் நிலவும் சூழல், வேலை செய்யவும், வாழவும் ஏற்றதாக இல்லை என்னும் திருப்தியின்மையின் அடையாளமே அவர்கள் வெளியேறக் காரணம் என்பதை புரிந்துகொள்ளலாம் என்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0946a41-c751-40b0-98d2-eab2f9d7f899/26-6a5f3b208c7e8.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், வேலை வழங்கும் ஒரு முதலாளி, ஒரு பணியாளருக்கு 100 யூரோக்கள் செலவு செய்தால், அதில் 50.70 யூரோக்கள் மட்டுமே அந்தப் பணியாளர் கையில் கிடைக்கிறதாம்.</p><p>

மீதமுள்ள தொகை, வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்புகளுக்காக சென்றுவிடுகிறதாம்.
</p><p>
ஆக, ஆய்வில் பங்கேற்றவர்களில் 70 சதவீதம் பேர், ஜேர்மனியில் வருமானத்துடன் ஒப்பிடும்போது வரிச்சுமை மிகவும் அதிகமாக இருப்பதாகவும், வேலையில் காட்டும் தனிப்பட்ட அர்ப்பணிப்பு போதுமான பலனைத் தருவதில்லை என்றும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
ஆகவேதான், ஜேர்மானியர்கள் பலர் ஜேர்மனியை விட்டு வெளியேறுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T10:05:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்கா விடுத்த திடீர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-issues-alert-for-citizens-1784626031"></link>
            <id>https://news.lankasri.com/article/us-issues-alert-for-citizens-1784626031</id>
            <summary type="text">ஈரானுடனான போர் சூழல் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான போர் சூழல் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><h2>மறுபரிசீலனை செய்ய</h2><p>
</p><p>அதில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளதால், பாதுகாப்புச் சூழல் சிக்கலானதாக நீடிப்பதாகவும், எதிர்பாராத விதமாக நிலைமை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24dc6372-4923-4404-bb0b-216708f7cda5/26-6a5f41612ffd3.webp' /></p><p> </p><p>அத்துடன், மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள், அப்பகுதிக்குச் செல்வதையும் அதன் வழியாகப் பயணம் செய்வதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
</p><p>அமெரிக்கத் தூதரக வளாகங்கள் அல்லது உலகம் முழுவதும் அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தால் சில வாரங்கள் நீடித்த அமைதிக்குப் பிறகு மத்திய கிழக்கில் போர் மீண்டும் தொடங்கியுள்ளது; ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற அமெரிக்கா மோதத் தொடங்கியதால், கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.</p><h2>படையெடுக்கலாம்</h2><p>
அமெரிக்காவுடனான போர்நிறுத்தம் முறிந்ததால், ஈரான் ஹார்முஸ் நீர்வழிப்பாதையை மீண்டும் முற்றுகையிட்டது; இதற்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானின் துறைமுகங்களை மீண்டும் முற்றுகையிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81ea164e-6dea-42f1-8d49-efa7f658fba9/26-6a5f416066dc9.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மிக விரைவில் படையெடுக்கலாம் என்ற கருத்தும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. இதனிடையே, அமெரிக்காவுடன் முழுமையான போரில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் தனது நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது. </p><p>மேலும், அமெரிக்க இராணுவம் எந்த நேரத்திலும் ஈரானுக்குள் ஊடுருவலாம் எனவும், அதை எதிர்கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T09:25:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேற்கிந்திய தீவுகளில் கெத்து காட்டும் பாபர் அஸாம்: 455 ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/babar-azam-century-as-captain-in-west-indies-2026-1784625469"></link>
            <id>https://news.lankasri.com/article/babar-azam-century-as-captain-in-west-indies-2026-1784625469</id>
            <summary type="text">மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் பாகிஸ்தான் அணி 455 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.பாபர் அஸாம் 

பாகிஸ்தான் ஆடவர் அணி மேற்கிந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் பாகிஸ்தான் அணி 455 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.</p><h2>பாபர் அஸாம் 
</h2><p>
பாகிஸ்தான் ஆடவர் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான பயிற்சி டெஸ்ட் ட்ரினிடாட்டில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🚨 CENTURY FOR BABAR AZAM! 🇵🇰💯<br><br>Babar Azam brings up a magnificent century in Pakistan’s warm-up match with a composed and classy innings. 👑🔥<br><br>🏏 Babar Azam: 100 (151)*<br>🇵🇰 Pakistan: 326/2 (96.1 overs)<br><br>A captain’s knock filled with patience, timing, and trademark elegance as…</p>&mdash; Iru Iqbal 🇵🇰 (@IrtazaIqbal167) <a href="https://x.com/IrtazaIqbal167/status/2078921917982277667?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 455 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.&nbsp;</p><p></p><p>

அணித்தலைவர் பாபர் அஸாம் (Babar Azam) 100 ஓட்டங்களும், அஸான் அவைஸ் 100 ஓட்டங்களும், ஷான் மசூத் 70 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர் கூப்பர் 1 ரன்னில் அவுட் ஆனார். </p><h2>

கவேம் ஹோட்ஜ் 92 ஓட்டங்களில் அவுட் </h2><p>தகெனரின் சந்தர்பால் நிதானமாக ஆட, கவேம் ஹோட்ஜ் வேகமாக பவுண்டரிகளை விரட்டினார். இந்தக் கூட்டணி 148 ஓட்டங்கள் குவிக்க, தகெனரின் சந்தர்பால் 51 (155) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பெகி ஜோஸப் (5), ஜோஷுவா (0) சொதப்பினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17f24e56-ed66-470a-8349-216207fd90b2/26-6a5f3ae24f127.webp' /></p><p>மறுமுனையில் சதத்தை நோக்கி பயணித்த கவேம் ஹோட்ஜ் 92 ஓட்டங்களில் lbw ஆகி வெளியேறினார்.</p><p> 

ஜித் கூலி 44 ஓட்டங்களுடன் களத்தில் நிற்க, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 268 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
</p><p>
மொஹம்மது அலி 3 விக்கெட்டுகளும், ஆமீர் ஜமால் மற்றும் அலி உஸ்மான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd14fa1e-6d59-410a-a2b4-5f3711b83112/26-6a5f3ae19358c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T09:23:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்ணீர் திறக்க மறுக்கும் இந்தியா - தமிழ் வம்சாவளி கனேடிய அமைச்சரிடம் உதவி கேட்ட பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-seeks-support-indus-water-to-canada-fm-1784625275"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-seeks-support-indus-water-to-canada-fm-1784625275</id>
            <summary type="text">சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக கனடாவிடம் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது.

 பாகிஸ்தான் சென்றுள்ள அனிதா ஆனந்த்

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள கனடா வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக கனடாவிடம் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது.
</p><h3>
 பாகிஸ்தான் சென்றுள்ள அனிதா ஆனந்த்</h3><p>

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்ததோடு, 47 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86daf200-8904-4c8f-96b3-0102da7bd685/26-6a5f387d64e85.webp' /></p><p>
கடந்த 20 ஆண்டுகளில் கனடாவின் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது இதுவே முதல்முறை ஆகும். </p><p>

மேலும், இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடிய அமைச்சர் பாகிஸ்தானுக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.&nbsp;&nbsp;</p><p>அனிதா ஆனந்தின் தந்தை தமிழநாட்டை பூர்விகமாக கொண்டவர் ஆவார். அவரது தாயார் பஞ்சாபை சேர்ந்தவர் ஆவார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c8e2052-4387-49b0-aef3-d87b0cd5a510/26-6a5f387e1524d.webp' /></p><p> 

இந்த பயணத்தின் போது, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் துணை பிரதமர் இஷாக் டார் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

கனடாவிடம் கோரிக்கை 

இந்த சந்திப்பின் போது இஷாக் டார், அனிதா ஆனந்திடம் சிந்து நதி நீர் பிரச்சினையை எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a4c4ca-1412-4a42-b3e2-280f8ffac8e1/26-6a5f387cb4d4f.webp' /></p><p>

இது குறித்து பேசிய இஷாக் டார், "சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) நிறுத்தி வைப்பதாக அறிவித்ததன் மூலம், ஏற்கனவே நிலையற்ற பாதுகாப்புச் சூழலில் இந்தியா ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது.&nbsp;</p><p>

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக மீட்டெடுப்பதற்கும், நீரை ஆயுதமாக்குவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சர்வதேச சட்டம் மற்றும் ஒப்பந்தக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கும் எங்கள் நட்பு நாடுகளின் ஆதரவை நாங்கள் நாடுகிறோம்" என்று கூறினார்.</p><h3> 

சிந்து நதி நீர் ஒப்பந்தம்</h3><p> 

கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.</p><p> 

 சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) என்பது, 1960 ஆம் ஆண்டில் உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d5af983-cbae-48fe-9a61-a5371233eb43/26-6a5f387eb8f38.webp' /></p><p>
இது சிந்துப் படுகையின் 6 நதிகளின் நீரைப் பகிர்வதை நிர்வகித்து, கிழக்கு நதிகளை இந்தியாவுக்கும், மேற்கு நதிகளைப் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கும் ஒதுக்குகிறது.
</p><p>
சிந்து நதி நீர் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய ஆதாரம் ஆகும். இந்தியா இந்த நீரை நிறுத்தியுள்ளதால் பாகிஸ்தான் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது. </p><p>

சிந்து நதி நீரை திறக்க மறுத்தால் ரத்த ஆறு ஓடும், இந்தியா மீது போர் தொடுப்போம் என முன்னதாக பாகிஸ்தானின் மூத்த அரசியல் தலைவர்கள் பேசி வந்தனர்.</p><p> 

பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் நதிநீர் பகிர்வு குறித்து மீண்டும் விவாதிக்கப்பட்டாலும், அது புதிய மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ் மட்டுமே நடக்கும் என்றும் இந்தியா உறுதியாக உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T09:15:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உத்திர நட்சத்திரத்தில் சுக்கிரன்.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sukran-peyarchi-1784624269"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sukran-peyarchi-1784624269</id>
            <summary type="text">நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.</p><p>

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
</p><p>
இந்நிலையில், ஜூலை 29ஆம் திகதி அன்று அதிகாலை 4:56 மணிக்கு சுக்கிரன், பூர நட்சத்திரத்திலிருந்து உத்திர நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியடைகிறார்.</p><p>

மேலும், சுக்கிரன் ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை இந்த நட்சத்திரத்திலேயே நிலைபெற்றிருப்பார்.
</p><p>
அந்தவகையில், உத்திர நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.&nbsp;</p><p></p><h2>ரிஷபம்</h2><ul><li> 

வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். </li><li>வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாய்ப்பு பெறுவீர்கள். </li><li>தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும்.</li><li> இந்த காலகட்டத்தில் லாபம் ஈட்ட முடியும். </li><li>நிதிநிலை நன்றாக இருக்கும். </li><li>அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும்.</li><li>புதிய வேலைகளை மாற்ற முயற்சித்தால் வெற்றி பெறலாம். </li><li>குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். </li><li>வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இது சிறப்பான காலம்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6228eab0-48b3-4d78-8602-13cffb749084/26-6a5f348fbdf5a.webp' /></p><h2>மிதுனம் </h2><ul><li>

தன்னம்பிக்கையை அளிக்கும். </li><li>நிலுவையில் உள்ள பணிகள் நடந்து முடியும். </li><li>திருமண வாழ்க்கையில் இணக்கமான சூழல் மேம்படும்.</li><li>மனதில் இருந்த குழப்பம் முடிவுக்கு வரும். </li><li>கல்வித் துறையில் நிறைய நன்மைகள் கிடைக்கும். </li><li>வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். </li><li>மூத்த அதிகாரிகளுடன் உறவு சிறப்பாக இருக்கும். </li><li>லட்சியங்களை சிரமமின்றி அடையும் வாய்ப்பு அதிகரிக்கும். </li><li>பொருளாதரரீதியாக இந்த காலகட்டம் சிறப்பானதாக இருக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0b02a9-3866-4dd5-a345-f97d501c0296/26-6a5f34907108e.webp' /></p><h2>சிம்மம் </h2><ul><li>

சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும்.</li><li> பொருத்தமான வாழ்க்கைத் துணை கிடைக்கும். </li><li>அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். </li><li>சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம்.</li><li> நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.</li><li> பணியிடத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். </li><li>திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். </li><li>வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும். </li><li>இந்த காலம் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும். </li><li>வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவடையும்.</li></ul><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f63582b-3a6b-4b9d-af37-23baabe5cf3c/26-6a5f34911ee6f.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T09:01:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் என்ன? (21-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784622560"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784622560</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (21-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (21-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,302,477.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 45,950.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 367,550.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,130.00.</p><p>

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 337,000.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,210.00.</p><p>

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 321,650.00.</p>]]></content>
            <updated>2026-07-21T08:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான திசையில் காரை செலுத்திய கனேடியர்: விபத்தில் இந்திய இளைஞர் உட்பட இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-death-accident-in-canadian-drives-wrong-way-1784621582"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-death-accident-in-canadian-drives-wrong-way-1784621582</id>
            <summary type="text">கனடாவில் கார் விபத்தொன்றில் இருவர் பலியான நிலையில், அவர்களில் ஒருவர் இந்தியர் என்பதும் மற்றவர் கனேடிய கால்பந்து விளையாட்டு வீரர் என்பதும் தெரியவந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் கார் விபத்தொன்றில் இருவர் பலியான நிலையில், அவர்களில் ஒருவர் இந்தியர் என்பதும் மற்றவர் கனேடிய கால்பந்து விளையாட்டு வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.</p><h3>

கார் விபத்தில் இருவர் பலி</h3><p>

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலை 11இல், சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில், தவறான திசையில் சென்ற ஒரு கார், எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது.
</p><p>
அந்த கோர விபத்தில், இரண்டு கார்களின் சாரதிகளும் பலியானார்கள்.
</p><p>
அவர்களில், தவறான திசையில் காரை செலுத்தியவர் ஒரு கனேடியர். அவரது பெயர் ஜேடன் (Jayden Dalke, 30). ஜேடன், பிரபல கால்பந்து அணியான Saskatchewan Roughriders அணி வீரர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51b0675f-32aa-4a53-864c-4dd60493e864/26-6a5f2a0f7bdaa.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், ஜேடனின் காரில் கஞ்சாவும், மதுபானமும் இருந்துள்ளன. அவர் பெட்ரோல் நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமலே அங்கிருந்து சென்றுவிட்டதாக பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
ஆனால், அவர் போதையிலிருந்தாரா என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஜேடனின் கார் மோதி உயிரிழந்தவர், பீஷ்மா ராஜ்யகுரு (22) என்னும் இந்தியர். பொலிசார் ராஜ்யகுருவைக் குறித்து தெரிவித்த தகவல் அவ்வளவே!&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd342388-cee6-4b79-ae36-c586a68d11ac/26-6a5f2a102da94.webp' /></p><p>

இதற்கிடையில், இந்தியாவிலிருக்கும் ராஜ்யகுருவின் பெற்றோர், தங்கள் மகனுடைய மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது நண்பர்கள், பணம் திரட்டி அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் தாங்கள் இறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.</p><p>
ராஜ்யகுருவின் பெற்றோருக்கு தங்கள் மகனை அணைத்துக்கொள்ளும் ஒரு இறுதி வாய்ப்பையும், அவருக்கு இறுதிச்சடங்கு செய்யும் வாய்ப்பையும் எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுவது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:13:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய மக்களுக்கு மகிழ்வான செய்தி... புதிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-scraps-vat-1784618511"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-scraps-vat-1784618511</id>
            <summary type="text">வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்கக் குடும்பங்களுக்கு உதவும் வகையில், அக்டோபர் முதல் மின்சாரக் கட்டணங்களுக்கான வரிகளை ஆன்டி பர்னாம் பெருமளவு குறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்கக் குடும்பங்களுக்கு உதவும் வகையில், அக்டோபர் முதல் மின்சாரக் கட்டணங்களுக்கான வரிகளை ஆன்டி பர்னாம் பெருமளவு குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>மதிப்புக்கூட்டு வரி</h2><p>
</p><p>மின்சாரக் கட்டணங்களிலிருந்து மதிப்புக்கூட்டு வரியை (VAT) நீக்குவதாக அவர் உறுதியளித்துள்ளார், இதன்மூலம் இலையுதிர் காலம் முதல் ஆண்டுக்கான உச்சவரம்பு விலையிலிருந்து 45 பவுண்டுகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78dce1c6-382c-4a68-8066-9fedec3c8dce/26-6a5f1f9377496.webp' /></p><p> </p><p>மத்திய கிழக்கு மோதலின் விளைவாக, இந்த ஆண்டின் பிற்பகுதியில் எரிசக்தி கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கக்கூடும். இந்த நிலையில், மின்சாரக் கட்டணங்கள் மீதான மதிப்புக்கூட்டு வரி (VAT) 5 சதவீதத்திலிருந்து 0 சதவீதமாகக் குறைக்கப்படும். </p><p>மட்டுமின்றி, அதிகரித்து வரும் கட்டணச் சுமையுடன் போராடும் மக்களுக்குச் சற்று நிம்மதி அளிப்பதாகவும், பணவீக்கத்தைக் குறைக்க உதவுவதாகவும் புதிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், கடந்த பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்ட 150 பவுண்டுகள் குறைப்புக்கு மேலதிகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்திற்கு 2026-27 ஆம் ஆண்டில் 850 மில்லியன் பவுண்டுகள் செலவாகும்; 1.8 பில்லியன் பவுண்டுகள் செலவாகவிருந்த 'டிஜிட்டல் அடையாள அட்டை' (Digital ID card) திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் இதற்கான நிதி திரட்டப்படும். </p><p>வாழ்க்கைச் செலவு உயர்வால் குடும்பங்கள் திண்டாடி வரும் நிலையில், அரசாங்கம் நீண்ட காலமாகவே மக்களுக்கான பலனளிக்கும் வகையில் செயல்படவில்லை.</p><h2>பேருந்து கட்டணங்கள்</h2><p> </p><p>அந்த நிலைமை மாற வேண்டும். மக்களுக்குச் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடிய சூழலை உருவாக்க விரும்புவதாக நான் கூறியிருந்தேன்; அதையே பிரதமராகப் பொறுப்பேற்ற இரண்டாம் நாளான இன்று நான் அறிவிக்கிறேன் என ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.</p><p> இதனிடையே, பேருந்து கட்டணங்களைக் குறைத்தல் மற்றும் வாடகைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பிற கொள்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bd34483-f1db-43ce-a179-fe832ad5b56a/26-6a5f1f92af49b.webp' /></p><p> </p><p>நீண்ட கால நடவடிக்கையாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக 12,570 பவுண்டுகள் என்ற அளவில் மாற்றமின்றி இருக்கும் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது. </p><p>எரிசக்தி நிறுவனங்கள் மதிப்புக்கூட்டு வரி (VAT) குறைப்பின் பலனை நுகர்வோருக்குக் கொண்டுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>வீட்டு உபயோக எரிசக்திக்குத் தகுதிபெறும் சிறு வணிகங்களுக்கும் இந்தக் குறைப்பு நீட்டிக்கப்படும். அத்துடன், தகுதிவாய்ந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் இந்த நீட்டிப்பு பொருந்தும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T07:50:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அணிக்கு எதிராக சதம் விளாசிய இருவர்: இந்தியா முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kushagra-and-manal-ton-vs-sri-lanka-u19-test-1784619568"></link>
            <id>https://news.lankasri.com/article/kushagra-and-manal-ton-vs-sri-lanka-u19-test-1784619568</id>
            <summary type="text">இலங்கைக்கு எதிரான U19 டெஸ்டில் இந்தியா அணி 355 ஓட்டங்கள் குவித்துள்ளது.&amp;nbsp;யஷ்பர்த்தன்&amp;nbsp;அதிரடி
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் U19 டெஸ்ட் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு எதிரான U19 டெஸ்டில் இந்தியா அணி 355 ஓட்டங்கள் குவித்துள்ளது.&nbsp;</p><h2>யஷ்பர்த்தன்&nbsp;அதிரடி</h2><p>
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் U19 டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68d183ec-f9e0-440c-9eff-be25eaa56c6f/26-6a5f23f2b53e4.webp' />&nbsp;</p><p></p><p>

துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களான லக்ஷ்யா, சாகர் டக்அவுட் ஆகினர்.
</p><p>
அடுத்து வந்த யஷ்பர்த்தன் சௌஹான் அதிரடியாக 78 (89) ஓட்டங்கள் விளாசி வெளியேற, குஷாக்ரா ஓஜ்ஹா மற்றும் மானல் சௌஹான் வலுவான கூட்டணி அமைத்தனர்.</p><p> 

இவர்களது பார்ட்னர்ஷிப் 155 ஓட்டங்கள் சேர்க்க, சதம் விளாசிய குஷாக்ரா ஓஜ்ஹா 111 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார்.</p><p> 

மறுமுனையில் மானல் சௌஹான் 122 ஓட்டங்களுடன் களத்தில் நிற்க, இந்திய அணி தற்போது வரை 355 ஓட்டங்கள் குவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7433a0b-756b-492b-a788-1b6730ffbf3c/26-6a5f23f3643c4.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1967f9e4-3bbf-4458-9729-1291ac3a1952/26-6a5f23f211020.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e09793d9-3a82-491c-b35d-8ed322b654a6/26-6a5f24738c6e6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T07:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த சர்ச்சைக்கு தயாராகும் புலம்பெயர்தல் எதிர்ப்பு சுவிஸ் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-people-party-anti-campaign-on-eu-treaty-1784619467"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-people-party-anti-campaign-on-eu-treaty-1784619467</id>
            <summary type="text">புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி என்னும் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி என்னும் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்னும் பிரேரணையை முன்வைத்து தோல்வியடைந்தது நினைவிருக்கலாம்.
</p><p>
இந்நிலையில், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடனான சில ஒப்பந்தங்கள் தொடர்பில் வாக்கெடுப்புக்குத் தயாராகிவருகிறது.
</p><h3>
அடுத்த வாக்கெடுப்புக்கு தயார்
</h3><p>
சுவிஸ் மக்கள் கட்சி இம்முறை குறிவைத்துள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான அந்த ஒப்பந்தங்களைத்தான்.
</p><p>
சுவிட்சர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும், Bilaterals III என அழைக்கப்படும் சில ஒப்பந்தங்களைச் செய்துகொள்வது தொடர்பில் 2024ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகளைத் துவக்கின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a581e758-73d7-4cdb-8588-b7c76e9a3bb9/26-6a5f21cd21e57.webp' /></p><p>
இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, மார்ச் மாதம் அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.&nbsp;</p><p></p><p>
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தை முறை, மின்சாரம், உணவுப்பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நிதி வழங்கல், இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள நடுவர் மன்றம் போன்ற பல்வேறு விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
</p><p>
அந்த ஒப்பந்தங்கள், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகவும், மக்கள் வாக்களிப்பதற்காகவும் காத்திருக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1b35278-e5b4-4953-8571-d1abb256a145/26-6a5f21cdc5bd1.webp' /></p><p>
இந்நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி, அந்த ஒப்பந்தங்களுக்கு எதிராக பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளது.
</p><p>
ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்கள், குற்றவாளிகள் தடையின்றி சுவிட்சர்லாந்துக்குள் நுழைய வழிவகுக்கும் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவரான ரோமன் பர்கி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29d101b7-2cde-4cb2-bab7-affcaab4662a/26-6a5f21cc72ed3.webp' /></p><p>
சமீப காலமாக பிரான்ஸ் நாட்டு வாகனப் பதிவு எண்களுடன் சுவிட்சர்லாந்துக்கு வந்து ஆயுதம் ஏந்திக் கொள்ளையடித்துவிட்டு சில மணி நேரத்துக்குள் தப்பிச் செல்லும் விடயங்கள் அதிகரித்துள்ளதை அதற்கு ஆதாரமாக முன்வைத்துள்ளார் அவர்.
</p><p>
சுவிஸ் மக்கள் கட்சி குறிவைத்துள்ள, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்கள் குறித்த அந்த வாக்கெடுப்பு, அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T07:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப் பெட்டி - விலை என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-human-refrigerator-cools-body-in-5-minutes-1784618105"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-human-refrigerator-cools-body-in-5-minutes-1784618105</id>
            <summary type="text">ஜப்பானில் மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப் பெட்டி

பருவநிலை மாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><h3> 

மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப் பெட்டி</h3><p>

பருவநிலை மாற்றம் காரணமாக உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.</p><p> 

அலுவலங்களில் பணிபுரிபவர்கள் அங்குள்ள குளிர்சாதன அமைப்புகளின் மூலம், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6dcdf1-95f0-4c2c-b7ba-fa52b81a67b1/26-6a5f1c7bb5e43.webp' /></p><p> 

ஆனால், தொழிற்சாலைகள் மற்றும் திறந்த வெளிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். </p><p>

இந்நிலையில், ஜப்பானில் மனித குளிர்சாதனப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p> 

ஜப்பானை சேர்ந்த ட்ரஸ்கோ நகாயாமா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் உருவாக்கிய இந்த சாதனத்திற்கு டோ ரெய்மோன் பெட்டி(Do Reimon Box) என பெயரிட்டுள்ளது.&nbsp;</p><p>

இது ஒரு நேரத்தில் ஒருவர் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட, சிறிய குளிரூட்டும் அறையாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f83bf35f-b8b0-4050-acc1-35b00f9ffd23/26-6a5f1c7b12e8e.webp' /></p><p>

பயனர்கள் உள்ளே நுழைந்து, அங்குள்ள நாற்காலியில் அமர்ந்து கதவை மூடினால் போதும். </p><p>உள்ளே வெப்பநிலை சுமார் 15°C ஆகப் பராமரிக்கப்படுகிறது. 

கிட்டத்தட்ட 5°C வரை குளிர்விக்கப்பட்ட காற்று கழுத்து, தலை மற்றும் முதுகுப் பகுதிகளை நோக்கிச் செலுத்தப்படுகிறது. </p><p>

உடல் வெப்பநிலையைச் சீராக்குவதில் உடலின் இந்தப் பகுதிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> 

இந்த அறைக்குள் 5 முதல் 10 நிமிடங்கள் செலவிடுவதன் மூலம், வெப்பத்திலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணத்தைப் பெற போதுமானது என கூறப்படுகிறது.</p><p> 

அதிகமாக குளிர்வடைவதை தடுக்க ஒவ்வொரு குளிர்விக்கும் அமர்விலும் 20 நிமிடங்களுக்கு பிறகு தானாகவே அணைந்து விடும். </p><p>

இது வழக்கமான குளிரூட்டப்பட்ட அறைகளை விட வேகமாக உடலை குளிர்விப்பதோடு, வழக்கமான ஏசியை விட பாதியளவே மின்சாரம் தேவைப்படுகிறது.</p><p> 

கட்டுமானத் தளங்கள் அல்லது திறந்த தொழிற்சாலைப் பகுதிகளில் வழக்கமான குளிர்சாதன வசதி சாத்தியமில்லாத இடங்களில் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
</p><p>
இதனை எளிதாக நகர்த்தும் வகையில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், எங்கு வேண்டுமோ அங்கு வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். </p><p>

இருப்பினும், இது நீரேற்றம், ஓய்வு அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படாது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d3ed153-de49-48e9-907b-cc3b589de7ec/26-6a5f1c7a5d659.webp' /></p><p>

ஆனால், பணியிடத்தில் ஏற்படும் வெப்ப வெளிப்பாட்டை நிர்வகிப்பதற்கும், அதீத வெப்பநிலையுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைப்பதற்கும் உதவுகிறது.</p><p> 

இது கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வந்த நிலையில், குன்மா மாகாணத்தில் உள்ள மேபாஷி நகர மன்றத்தில், பார்வையாளர்கள் இதை இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>

 இதன் சாதாரண மாடலின் விலை 1.5 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ. 9 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T07:20:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி அமைச்சர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-indian-orgin-ministers-in-andy-burnham-cabinet-1784613633"></link>
            <id>https://news.lankasri.com/article/2-indian-orgin-ministers-in-andy-burnham-cabinet-1784613633</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளார்.

அவ்வகையில், தனது அமைச்சரவையில் இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளார்.</p><p>

அவ்வகையில், தனது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினர் இரண்டு பேருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார் ஆன்டி பர்னாம்.</p><h3>

அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி அமைச்சர்கள்</h3><p>

ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் பொறுப்பு வாங்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியினரில் ஒருவர், கனிஷ்கா நாராயண்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02fbdf3a-debb-471d-80d7-0236d3c256ce/26-6a5f0b02a7e8c.webp' /></p><p>
செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராக நாராயணுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, முதன்முறையாக பிரதமரின் அமைச்சரவைக் கூட்டத்திலும் பங்கேற்கும் வாய்ப்பும் நாராயணுக்கு கிடைத்துள்ளது.
</p><p>
நாராயண், இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பிறந்தவர் ஆவார். தனது 12ஆவது வயதில் வேல்ஸ் நாட்டின் தலைநகரான கார்டிஃபுக்கு புலம்பெயர்ந்தார் அவர்.</p><p>

2024ஆம் ஆண்டு Vale of Glamorgan தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயண், குறுகிய காலத்திலேயே பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்து, தற்போது செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.&nbsp;</p><p></p><p>
ஏற்கனவே, லிசா நந்தி என்னும் இந்திய வம்சாவளியினர் ஒருவரும் ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caa08cff-bedd-4f87-9e55-122ff0456017/26-6a5f0b035bf1f.webp' /></p><p>
அவர், கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவையில் கலாச்சாரத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஆவார். ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் அவர் அதே பொறுப்பில் நீடிக்கிறார்.
</p><p>
2010ஆம் ஆண்டு Wigan தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் லிசா.
</p><p>
லிசாவின் தந்தையான தீபக் நந்தி, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T06:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானின் பொருளாதார நீர்ப்பரப்பிற்குள் நுழைந்து பயிற்சியில் ஈடுபட்ட சீன போர் கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chinese-warship-inside-japan-1784615089"></link>
            <id>https://news.lankasri.com/article/chinese-warship-inside-japan-1784615089</id>
            <summary type="text">ஜப்பானின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) நுழைந்து சீன ஏவுகணை அழிப்புக் கப்பல் ஒன்று முதன்முறையாக நேரடித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) நுழைந்து சீன ஏவுகணை அழிப்புக் கப்பல் ஒன்று முதன்முறையாக நேரடித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தொடர்ந்து கண்காணிப்போம்</h2><p>
</p><p>தென் சீனக் கடலில் சீன மற்றும் பிலிப்பைன்ஸ் மாலுமிகள் வாய்த்தகராறில் ஈடுபடுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு ஞாயிறன்று இந்தத் தாக்குதல் பயிற்சி நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9167473b-b0d5-4748-b157-b445c6a20831/26-6a5f14a35d14a.webp' /></p><p> </p><p>வியாழக்கிழமையன்று ஒகினாவாவின் முதன்மைத் தீவுக்கும் மியாகோ தீவுக்கும் இடையே பசிபிக் பெருங்கடலை நோக்கிச் சென்ற மூன்று சீனப் போர்க்கப்பல்களும் ஒரு ரஷ்யப் போர்க்கப்பலும், பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் ஒகினோடோரிக்குத் தென்மேற்கே சுமார் 330 கி.மீ தொலைவில் மீண்டும் காணப்பட்டன. </p><p>அதனைத் தொடர்ந்து, சீன ஏவுகணை அழிப்புக் கப்பல் ஒன்று தாங்கள் பயிற்சியை மேற்கொள்ளவிருப்பதாகக் கப்பல் போக்குவரத்திற்கு எச்சரிக்கை விடுத்தது; இப்பயிற்சியில் நேரடி வெடிமருந்து பயன்படுத்தும் இயந்திரத் துப்பாக்கிகளும் அடங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>இந்த ஒத்திகையானது ஓகினோடோரியிலிருந்து சுமார் 180 கி.மீ. தொலைவில் நடத்தப்பட்டது. இப்பகுதியானது ஜப்பானின் பிரத்யேகப் பொருளாதார மண்டலமாக (EEZ) விரிவுபடுத்தப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில், அந்தப் பயிற்சியானது அருகிலுள்ள கப்பல்களின் போக்குவரத்திற்கு ஆபத்தை விளைவித்திருக்கக்கூடும் என்று ஜப்பான் நிர்வாகம் தனது தூதரக வழிகள் வாயிலாக சீனாவிடம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b17ed08e-f122-4ef4-b194-27bcb8ab3ed7/26-6a5f14a424558.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, எங்கள் நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் சீன மற்றும் ரஷ்யக் கப்பல்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கவலையுடன் கண்காணிப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சீனாவுடன் மோதல்</h2><p> </p><p>ஆனால், ஓகினோடோரி ஒரு தீவு என்ற அங்கீகாரத்தை சீனா மறுக்கிறது; அத்துடன் அது ஒரு பவளப்பாறை மட்டுமே என்றும், அதைச் சுற்றியுள்ள நீர்ப்பகுதி ஜப்பானின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தின் (EEZ) ஒரு பகுதி அல்ல என்றும், எனவே அங்கு செயல்படத் தங்களுக்கு உரிமை உண்டு என்றும் சீனா வாதிடுகிறது. </p><p>2025ல் சீனாவின் விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் ஆய்வுக் கப்பல் ஆகியவை அப்பகுதிக்கு வந்திருந்தாலும், அந்நியக் கடற்படைக் கப்பல் ஒன்று பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில் (EEZ) நேரடித் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டதை ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aceb9519-1ab1-4d97-899e-4b66055012af/26-6a5f14a4c918f.webp' /></p><p>
</p><p>உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுடனான ஜப்பானின் உறவு மோசமடைந்ததாலும், தைவான் குறித்த சனே தகைச்சியின் கருத்துகளால் சீனாவுடன் மோதல் வெடித்ததாலும், ஜப்பானைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனா மற்றும் ரஷ்யாவின் ராணுவப் பயிற்சிகள் தீவிரமடைந்துள்ளன. </p><p>தன்னாட்சி பெற்ற தைவான் மீதான சீனத் தாக்குதல், ஜப்பானிய இராணுவத்தின் பதிலடியைத் தூண்டக்கூடும் என்று ஜப்பானியப் பிரதமர் சனே தகைச்சி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். </p><p>தென் சீனக் கடலில் ஆறு நாடுகளுடனும், அத்துடன் ஜப்பான், இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடனும் சீனாவுக்குப் பிரதேச ரீதியான எல்லைத் தகராறுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T06:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலுவலகத்திலே உயிரை மாய்த்த திரிபுரா டிஜிபி - யார் இந்த அனுராக் தன்கர்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/who-is-anurag-dhankar-tripura-dgp-end-his-life-1784612827"></link>
            <id>https://news.lankasri.com/article/who-is-anurag-dhankar-tripura-dgp-end-his-life-1784612827</id>
            <summary type="text">திரிபுரா டிஜிபி அலுவலகத்திலே உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 உயிரை மாய்த்த திரிபுரா டிஜிபி

திரிபுரா மாநில காவல்துறைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திரிபுரா டிஜிபி அலுவலகத்திலே உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h3>

 உயிரை மாய்த்த திரிபுரா டிஜிபி</h3><p>

திரிபுரா மாநில காவல்துறைத் தலைவராக(DGP) பணியாற்றி வருபவர் அனுராக் தன்கர்(60).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3810cd5-cbd3-4d77-bbe1-792822ee6524/26-6a5f07dc6a82b.webp' /></p><p>

நேற்று காவல்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற அவர், நீண்ட நேரம் வெளியே வராத நிலையில், அவரது உதவியாளர் கூச்சலிட்டுள்ளார். </p><p>

அதன் பின்னர் கதவு உடைக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். </p><p>

தகவலறிந்த திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா, தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு விரைந்தார்.&nbsp;</p><p></p><p>

ஒரு மாநில டிஜிபியே தனது அலுவலகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் திரிபுராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I am deeply shocked and saddened by the tragic demise of Anurag, IPS, Director General of Police, Tripura, who was found hanging in the washroom of his official chamber today.<br><br>Upon receiving the information, I, along with the Chief Secretary and Home Secretary, immediately…</p>&mdash; Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) <a href="https://x.com/DrManikSaha2/status/2079186832542388639?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
எதிர்கட்சிகளின் நீதித்துறை விசாரணைக்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து, அரசு ஒரு நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
</p><p>
திரிபுரா அரசு செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மாநில துக்கத்தை அறிவித்துள்ளது.&nbsp;</p><p>குறிப்புகள் அடங்கிய கடிதம் எதுவும் கைப்பற்றப்பட்டதா என தெரிவிக்க காவல்துறை மறுத்து விட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டாரா? அல்லது பணியில் ஏற்பட்ட அழுத்தமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h3> 

அனுராக் தன்கர்</h3><p>

1994 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அனுராக் தன்கர், உளவுத்துறை டிஜிபி கூடுதல் டிஜிபி மற்றும் சட்டம் ஒழுங்கு ஐஜி உள்ளிட்ட பல மூத்த பதவிகளில் பணியாற்றிய பிறகு, தங்கர் கடந்த ஆண்டு மே 18 அன்று திரிபுரா டிஜிபியாகப் பொறுப்பேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00bed1d0-ff96-4b4a-9a4f-1c4e587b0067/26-6a5f07dd1a749.webp' /></p><p>

சிபிஐ மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஆகியவற்றில் மத்தியப் பிரதிநிதியாகப் பணியாற்றியதுடன், 2003-04 காலகட்டத்தில் கொசோவோவில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியிலும் தன்கர் அங்கம் வகித்தார். </p><p>

மேலும், சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் காவல்துறைப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p>குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி சம்பந்தப்பட்ட ரூ.13,000 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குறித்த சிபிஐ விசாரணை 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை மறுவிசாரணை செய்த சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு (SIT) தலைமை தாங்கியுள்ளார். </p><p>

ஜூன் மாதம் அவரது பதவிக்காலத்தை நிறைவடடைந்த நிலையில், 11 மாத கால நீட்டிப்பைப் பெற்றிருந்தார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T05:52:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் உள்துறைச் செயலராக ஷபானா மஹ்மூத்... மக்கள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shabana-mahmood-retained-as-uk-home-secretary-1784610272"></link>
            <id>https://news.lankasri.com/article/shabana-mahmood-retained-as-uk-home-secretary-1784610272</id>
            <summary type="text">பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சியில் உள்துறைச் செயலராக பொறுப்பு வகித்த ஷபானா மஹ்மூதே, புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் உள்துறைச் செயலராக நீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சியில் உள்துறைச் செயலராக பொறுப்பு வகித்த ஷபானா மஹ்மூதே, புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் உள்துறைச் செயலராக நீடிக்கிறார்.</p><h3>

ஷபானா வெளியிட்டுள்ள செய்தி</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f897f3-9a8e-4c4d-bd87-02b89993451e/26-6a5efde19ca3a.webp' /></p><p>ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் தான் உள்துறைச் செயலராக நீடிப்பது உறுதியானதைத் தொடர்ந்து சமூக ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ஷபானா, ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் உள்துறைச் செயலராக நீடிப்பதை தான் கௌரவமாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshabanamahmoodforladywood%2Fposts%2Fpfbid027B95Eu2P3B3QqEHcwTqy7R3ML9AGutnr6p3xpm5nDmerE9axjqNS9da2tqmuWdLBl&show_text=true&width=500" width="500" height="660" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>


மேலும், என் கருத்து ஒருதலைப்பட்சமாக இருக்கலாம், ஆனால் இந்தத் துறையிலேயே இதுதான் சிறந்த வேலை என்றும் குறிப்பிட்டுள்ள ஷபானா, நமது தெருக்களைப் பாதுகாப்பானவையாகவும், நமது புலம்பெயர்தல் அமைப்பை அனைவருக்கும் நியாயமானதாகவும் மாற்றுவதற்கான பெரும் சீர்திருத்தப் பணியை நாம் தொடங்கியுள்ளோம். இப்போது அந்த வேலையை நாம் முடிப்போம் என்றும் கூறியுள்ளார்.</p><p>
ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் ஷபானா மஹ்மூதுக்கு சேன்ஸலர் பதவி கொடுக்கப்படலாம் என பிரித்தானிய ஊடகங்கள் எழுதிவந்தன.
</p><p>
அத்துடன், எரிசக்திச் செயலரான எட் மிலிபேண்ட், முன்னாள் சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங், வெளியுறவுச் செயலரான யெவட் கூப்பர் என பலரது பெயர்கள் அடிபட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக, பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஜான் ஹீலியை சேன்ஸலராக்கியுள்ளார் ஆன்டி பர்னாம்.&nbsp;</p><p></p><p>
இதற்கிடையில், ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் தான் உள்துறைச் செயலராக நீடிப்பது குறித்து ஷபானா வெளியிட்டுள்ள செய்தியின் கீழ் கருத்து தெரிவித்துள்ளவர்கள், ஷபானா, நீங்கள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் விடயத்தில் எடுத்த நடவடிக்கைகள் நியாயமானவை.
</p><p>
ஆனால், நீங்கள் சட்டப்படி புலம்பெயர்ந்தோரை அங்கீகரிக்கவில்லை. மீண்டும் உள்துறைச் செயலராக பொறுப்பேற்றுள்ள நீங்கள், அவர்கள் பிரித்தானியாவுக்கு அளித்துவரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T05:14:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழங்கால் வரை முடி வளர உதவும் நெல்லிக்காய் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/home-made-hair-oil-for-hair-growth-in-tamil-1784608946"></link>
            <id>https://news.lankasri.com/article/home-made-hair-oil-for-hair-growth-in-tamil-1784608946</id>
            <summary type="text">நெல்லிக்காய் உடலுக்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும், இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது.

வைட்டமின் சி முடிக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெல்லிக்காய் உடலுக்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும், இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது.
</p><p>
வைட்டமின் சி முடிக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து என்பதால் நெல்லிக்காய் எண்ணெய் முடி ஆரோக்கியத்துக்கு நல்லது.</p><p>இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மயிர்க்கால்களைத் தூண்டி, முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவுகின்றன.</p><p>அந்தவகையில், முழங்கால் வரை முடி வளர உதவும் நெல்லிக்காய் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li>

நெல்லிக்காய்- 10
</li><li>தேங்காய் எண்ணெய்- 2 கப்
</li></ul><h2>
எப்படி தயாரிப்பது?</h2><p>
முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் அடுப்பில் ஒரு இரும்பு வாணல் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவைக்கவும்.
</p><p>
அடுத்து இதில் நெல்லிக்காய் அரைத்த சாற்றை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d60a4bfd-6d02-41d5-82a7-cf86faf31b49/26-6a5ef8b449a87.webp' /></p><p>இதற்கடுத்து எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து எண்ணெய் ஆறியதும் இதனை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
</p><p>
நெல்லிக்காய் எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி, இரண்டு கைகளாலும் தேய்த்து முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும்.
</p><p>
பின்னர் 10 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்து ஊறவிட்டு கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T04:45:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் ஏற்க முடியாத நடத்தை... 50 சதவீதம் வரி விதித்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-slaps-50-per-cent-tariffs-1784609203"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-slaps-50-per-cent-tariffs-1784609203</id>
            <summary type="text">அமெரிக்கக் கார்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் மீதான கனடாவின் சமமற்ற நடத்தையை சுட்டிக்காட்டி, அதிரடியாக 50 சதவீதம் வரி விதித்துள்ளார் டொனால்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கக் கார்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் மீதான கனடாவின் சமமற்ற நடத்தையை சுட்டிக்காட்டி, அதிரடியாக 50 சதவீதம் வரி விதித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.</p><h2>முக்கிய ஏற்றுமதிகளுக்கு</h2><p>
</p><p>ட்ரம்பின் இந்த அதிரடி நகர்வால் ஒயின் போன்ற அன்றாட நுகர்வுப் பொருட்கள் மற்றும் ஹாக்கி மட்டைகள், சிமெண்ட் போன்ற தொழில்சார் பொருட்கள் ஆகியவை குறிவைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a69db7-8f4f-4aba-b5e7-9276414583f7/26-6a5efb29b920c.webp' /></p><p> </p><p>இருப்பினும், எரிசக்தி, பொட்டாஷ், முக்கிய கனிமங்கள் மற்றும் மீன் போன்ற பல முக்கிய ஏற்றுமதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் வாரங்களில் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்த கனடா தயாராக இருப்பதாகப் பிரதமர் மார்க் கார்னி பதிலளித்துள்ளார்.</p><p> இந்த வரிகள் 30 நாட்களில் அமுலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், வட அமெரிக்க அண்டை நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பதற்றங்கள் கணிசமாக அதிகரிப்பதைக் இது குறிக்கிறது. </p><p>கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு இடையிலான தற்போதைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான USMCA-வின் கீழ் அந்தப் பொருட்கள் இடம்பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும், சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்கள் மீதும் புதிய வரிகள் பொருந்தும்.</p><p></p><p> </p><p>இதனிடையே, ட்ரம்பின் இந்த நகர்வு கனடிய இறையாண்மைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்றும் பிரதமர் கார்னி குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நடைமுறையில் உள்ள வர்த்தகத் தடைகளை, திங்கட்கிழமை விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகள் மேலும் வலுப்படுத்துகின்றன. </p><p>கனடிய எஃகு, அலுமினியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் மீது அமெரிக்கா 15 முதல் 50 சதவீதம் வரையிலான சுங்கவரிகளைத் தொடர்ந்து விதித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d758b70-53da-4bf9-9947-cfc9f05b96c9/26-6a5efb2a7fdb1.webp' /></p><p> </p><p>மேலும், கனடிய மென்மரக் கட்டைகள் (softwood lumber) மீது 35 சதவீதம் சுங்கவரியையும், கார்களில் பயன்படுத்தப்படும் அமெரிக்கத் தயாரிப்பு அல்லாத உதிரிபாகங்கள் மீது 25 சதவீதம் வரியையும் அமெரிக்கா விதிக்கிறது.</p><h2>இது நியாயமற்றது</h2><p> </p><p>அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில எஃகு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீது கனடா தனது சொந்த 25 சதவீத சுங்கவரிகளையும் கொண்டுள்ளது. </p><p>கனடாவில் ஏற்படும் காட்டுத்தீயின் புகை அமெரிக்க நகரங்களுக்குள் பரவுவது தொடர்பாக, கனடா மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து திங்கள்கிழமை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், திங்கள்கிழமை ட்ரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவுகளில் காட்டுத்தீ பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6766c3f7-63c6-4d80-8ca5-e53961ca5a3e/26-6a5efb2b2d30e.webp' /></p><p> </p><p>அதற்குப் பதிலாக, கார்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் தொடர்பாக கனடாவுக்கு ஏற்கனவே தெரிந்திருந்த அமெரிக்க வர்த்தகச் சிக்கல்களை அந்த மூன்று அறிவிப்புகளும் பட்டியலிடுகின்றன; இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைக் குறிப்பதாக கூறுகின்றனர்.
</p><p>கார்களைப் பொறுத்தவரை, USMCA ஒப்பந்தத்தின் கீழ் வராத அமெரிக்க வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் மீது கனடா வரி விதிப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டுகிறார். இது நியாயமற்றது என்றும், மற்ற நாடுகளுக்கு இத்தகைய வரியை விதிக்காததன் மூலம் கனடா அமெரிக்காவை பாகுபாட்டுடன் நடத்தியுள்ளது என்றும் அவர் வாதிடுகிறார். </p><p>வட அமெரிக்காவில் வாகன உற்பத்தித் துறையானது கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு இடையே மிகவும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T04:45:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-declares-full-scale-war-1784606987"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-declares-full-scale-war-1784606987</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் மீண்டும் முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ள ஈரான், அமெரிக்கா படையெடுப்பைத் தொடங்கும் என்பதையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் மீண்டும் முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ள ஈரான், அமெரிக்கா படையெடுப்பைத் தொடங்கும் என்பதையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.</p><h2>தீவிரமடையக்கூடும்</h2><p>
</p><p>மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அப்பகுதிக்கு மேலும் பல போர் விமானங்களை அனுப்பியதைத் தொடர்ந்து ஈரான் இதை அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce2c704f-946c-46c0-842b-264e14091003/26-6a5ef23d479b7.webp' /></p><p> </p><p>இந்த நிலையில் மோதல் தீவிரமடையக்கூடும் என்பதைக் குறிக்கும் வகையில், ஐரோப்பாவில் உள்ள தளங்களிலிருந்து கூடுதல் F-16 மற்றும் F-35 போர் விமானங்களையும், மேலும் பல வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் அமெரிக்கா நிலைநிறுத்தி வருகிறது. </p><p>தற்போது முறிந்துவிட்ட அமைதி ஒப்பந்தம் கடந்த வாரம் சிதைந்து கொண்டிருந்த நிலையில், போரைத் தீவிரப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இராணுவத் தலைவர்களிடமிருந்து விளக்கம் கோரியிருந்தார். </p><p>ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கர்க் தீவைக் (Kharg Island) கைப்பற்றுவது அல்லது பிக்காக்ஸ் மலையில் (Pickaxe Mountain) உள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசுவது ஆகியவை இதில் அடங்கும்.</p><p></p><p> </p><p>இப்போர் பிராந்தியம் தழுவிய மோதலாக மாறக்கூடும் என்பதற்கான மற்றொரு அறிகுறியாக, ஈரானை ஆதரிக்கும் ஏமன் நாட்டின் ஹவுதிகள், சவுதி அரேபியா மீது கடல்வழித் தடையை அறிவித்துள்ளனர். </p><p>கடந்த வாரம் சவுதி தரப்பினர் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டிய அந்த அமைப்பு, இது கண்ணுக்குக் கண் நடவடிக்கை என்றும் கூறியுள்ளது.</p><p> இதனிடையே, ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாகத் தாக்குதல் நீடித்த நிலையில், ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f2da14f-7347-4001-8edb-a9a5ca7add30/26-6a5ef23ed8a45.webp' /></p><p> </p><p>உண்மையில், ஈரான் தற்போது ஒரு முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளது என்றும், நாம் யதார்த்தத்தை உணர்ந்து, இந்த எதிர்ப்பின் இயல்பான விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>அத்துடன், அமெரிக்க இராணுவம் எந்த நேரத்திலும் ஈரானுக்குள் களமிறங்கும் என்றும், அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது.</p><h2>விளைவுகள் மோசமாக இருக்கும்</h2><p> </p><p>இந்த நிலையில், அமெரிக்கப் படைகளைத் தரைவழித் தாக்குதலில் எதிர்கொண்டு வரவேற்கத் தங்கள் நாடு ஆவலுடன் எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாய் தெரிவித்தார். </p><p>மேலும், கர்க் தீவை அமெரிக்கா தொட முயன்றால், அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்கா தனது சமீபத்திய தாக்குதல்களில், ஈரானின் தென்மேற்குப் பகுதியில் பகுதியளவு கட்டப்பட்டிருந்த டார்கோவின் (Darkhovin) அணுமின் நிலையத்தையும் இலக்கு வைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef075222-dd55-40a2-b050-a47a9f435111/26-6a5ef23e307a7.webp' /></p><p> </p><p>ஆனால், ஈரானின் 
ராணுவக் கட்டளை மையங்கள், வான் பாதுகாப்புத் தளங்கள் மற்றும் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்களை மட்டுமே இலக்கு வைத்ததாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் தெரிவித்துள்ளது. </p><p>மேலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை எட்டும் வாய்ப்புகளை தமது நிர்வாகம் நிராகரிக்காது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>மட்டுமின்றி, ஈரான் மீது படையெடுப்பது சிக்கலில் முடியும் என்பதையும் இராணுவ அதிகாரிகள் தரப்பு ட்ரம்பிடம் விளக்கமளித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T04:30:50+00:00</updated>
        </entry>
    </feed>
