<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-26T17:25:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பமாக பிரித்தானியாவில் குடியேறிய இளவரசர் ஹரி-மேகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-meghan-return-for-uk-stay-1787764609"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-meghan-return-for-uk-stay-1787764609</id>
            <summary type="text">Harry Meghan return for UK stay: பிரித்தானியாவில் நீண்டகாலம் தங்கும் திட்டத்துடன் ஹரி-மேகன் தம்பதி குழந்தைகளுடன் வந்து இறங்கியுள்ளனர்.

குடும்பத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry Meghan return for UK stay: பிரித்தானியாவில் நீண்டகாலம் தங்கும் திட்டத்துடன் ஹரி-மேகன் தம்பதி குழந்தைகளுடன் வந்து இறங்கியுள்ளனர்.</p><h2>

குடும்பத்துடன்...</h2><p>இளவரசர் ஹரி மற்றும் மேகன், தங்கள் குழந்தைகள் ஆர்ச்சியும் லிலிபெட் ஆகியோருடன், கலிஃபோர்னியாவிலிருந்து தனியார் விமானத்தில் புறப்பட்டு, பிரித்தானியாவின் பர்மிங்காம் விமான நிலையத்தில் இறங்கினர்.
</p><p>அவர்கள் பிரித்தானியாவில் நீண்ட காலம் தங்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/075e0264-9bc4-41ac-ae1e-0785556b1022/26-6a8f1f83332f4.webp' /></p><p>2020-ஆம் ஆண்டு அரச குடும்ப பொறுப்புகளை விட்டு விலகிய பிறகு, அவர்கள் அமெரிக்காவில் குடியேறியிருந்தனர். இப்போது, அவர்கள் மீண்டும் பிரித்தானியாவில் குடியேற முடிவு செய்துள்ளனர்.
</p><p>
ஆனால், அவர்கள் “non-working royals” எனப்படும் நிலையில், அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ பணிகளில் ஈடுபடமாட்டார்கள்.</p><p></p><p>அவர்கள் லண்டன் நகரத்திற்கு வெளியே, கோட்ஸ்வோல்ட்ஸ் பகுதியில் உள்ள தனியார் வீட்டில் தங்க உள்ளனர். குழந்தைகள் ஆர்ச்சியும் லிலிபெட்டும் அங்குள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர், புதிய கல்வியாண்டு அடுத்த வாரம் தொடங்க உள்ளது.
</p><h2>
பாதுகாப்பு </h2><p>அவர்களின் பாதுகாப்பு குறித்து விவாதம் எழுந்துள்ளது. ஹரி, முன்னதாக தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியிருந்தார். தற்போது, அவர்களுக்கு எந்த அளவிலான பாதுகாப்பு வழங்கப்படும், அதை யார் ஏற்க வேண்டும் என்பது தெளிவாகவில்லை.
</p><p>
இந்த வருகை, அரச குடும்பத்துடன் உள்ள உறவுகளை மீண்டும் சீரமைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிறகு, ஹரி மற்றும் மேகன் இருவரும் ஒன்றாக பிரித்தானியாவிற்கு வருவது இதுவே முதல் முறை.
</p><p>
அவர்களின் நீண்ட காலம் தங்குவது குறித்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் பல்வேறு எதிர்வினைகள் எழுந்துள்ளன. பலரும், அவர்களின் பாதுகாப்பு செலவுகளை அரசாங்கம் ஏற்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T17:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் கொசுவால் ஜேர்மனி ஊழியர் உயிரிழப்பு: ஐவர் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-airport-worker-dies-after-mosquito-bite-1787753495"></link>
            <id>https://news.lankasri.com/article/german-airport-worker-dies-after-mosquito-bite-1787753495</id>
            <summary type="text">German airport worker dies after mosquito bite: விமானம் மூலம் வந்த கொசுவால் பாதிக்கப்பட்ட ஜேர்மனி விமான ஊழியர் உயிரிழந்தார்.

ஜேர்மனியில் கொசுவால் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>German airport worker dies after mosquito bite: விமானம் மூலம் வந்த கொசுவால் பாதிக்கப்பட்ட ஜேர்மனி விமான ஊழியர் உயிரிழந்தார்.
</p><p>
ஜேர்மனியில் கொசுவால் பாதிக்கப்பட்ட விமான ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>விமான ஊழியர்&nbsp;</h2><p>
ஜேர்மனியில் விமானத்தில் சிக்கி வந்ததாகக் கருதப்படும் கொசுவால் விமான ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11cdcdca-cc0a-4aac-b8ee-a67447ae8c55/26-6a8ef4b59899d.webp' />&nbsp;</p><p></p><p>
அரிதான மலேரியா பரவல் சூழலில், குறித்த ஊழியர் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டதாக 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, பிராங்பேர்ட் விமான நிலைய வளாகத்தைச் சுற்றி கொசுக்களைப் பிடிக்கும் பொறிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை எங்கிருந்து வந்தன என்பதை அறிய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>4 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக</h2><p>
ஜேர்மனியின் பரபரப்பான இந்த விமான நிலையத்தில் ஜூலை மாதத்தில் 4 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>

இதுகுறித்து Robert Koch Institute என்ற நோய்க் கட்டுப்பாடு மற்றும் பொது சுகாதாரத்திற்கான ஜேர்மன் கூட்டாட்சி அரசு நிறுவனம், விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட Anopheles வகை கொசுவே இதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830137b3-1156-4720-aead-69ae727a7611/26-6a8ef4b65ff6d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T15:02:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[413 ஓட்டங்கள் வித்தியாசத்தில்..வங்காளதேச ஏ அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க ஏ அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-africa-a-team-won-by-innings-and-413-runs-1787756473"></link>
            <id>https://news.lankasri.com/article/south-africa-a-team-won-by-innings-and-413-runs-1787756473</id>
            <summary type="text">South africa A team won by innings and 413 runs: வங்காளதேச ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>South africa A team won by innings and 413 runs: வங்காளதேச ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
பிரிட்டோரியாவில் நடந்த முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேச ஏ அணியை வீழ்த்தியது.&nbsp;&nbsp;</p><h2>தென் ஆப்பிரிக்க ஏ அணி 647 ஓட்டங்கள்</h2><p>
தென் ஆப்பிரிக்கா ஏ மற்றும் வங்காளதேச ஏ அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்டோரியா நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec7db11-4563-42e8-a0dd-d00a89615317/26-6a8effbbce86a.webp' /></p><p></p><p>

வங்காளதேச ஏ அணி முதல் இன்னிங்ஸில் 122 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, தென் ஆப்பிரிக்க ஏ அணி 647 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
</p><p>
அணித்தலைவர் மார்க்கியூஸ் அக்கர்மன் 256 ஓட்டங்களும், சினேதேம்பா கிஷிலே 200 ஓட்டங்களும் விளாசினர். </p><h2>

இமாலய வெற்றி</h2><p>பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்காளதேச அணி 112 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நைம் 30 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

கோடி யூசுஃப், ஷெபோ மற்றும் டெலனோ தலா 3 விக்கெட்டுகளும், ஜெரால்டு ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><p>
தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27a3448e-273e-46cb-93f0-9db266d661b7/26-6a8efff8abeac.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T14:58:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[360 டன் எடையுள்ள கோட்டையை கயிறு கட்டி 2 மீட்டர் நகர்த்திய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/people-moved-360-ton-japan-hirosaki-castle-by-rope-1787752251"></link>
            <id>https://news.lankasri.com/article/people-moved-360-ton-japan-hirosaki-castle-by-rope-1787752251</id>
            <summary type="text">people moved 360 ton castle by ropes ஜப்பானில் 360 டன் எடையுள்ள கோட்டையை பொதுமக்கள் 2 மீட்டர் தூரம் கயிறு கட்டி நகர்த்தியுள்ளனர்.

360 டன் எடையுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>people moved 360 ton castle by ropes ஜப்பானில் 360 டன் எடையுள்ள கோட்டையை பொதுமக்கள் 2 மீட்டர் தூரம் கயிறு கட்டி நகர்த்தியுள்ளனர்.
</p><h3>
360 டன் எடையுள்ள கோட்டையை கயிறு கட்டி நகர்த்திய மக்கள்</h3><p>

ஜப்பானின் ஆவோமோரி மாகாணத்தில் உள்ள ஹிரோசாகி கோட்டை(hirosaki castle) 1611 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.</p><p> ஆனால், 1627 ஆம் ஆண்டில் மின்னல் தாக்கியதில் வெடிமருந்துக் கிடங்கு தீப்பற்றிக்கொண்டதால், அதன் அசல் மையக்கோட்டை எரிந்துபோனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d57a813-e887-4e31-9082-beb3d1d36501/26-6a8eef3cc5568.webp' /></p><p> 

தற்போதைய கோபுரம் 1810 ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.</p><p> 

நிலநடுக்கத்தில் இந்த கோட்டையின் சுவர்கள் சேதமடைந்தால் அதனை பலப்படுத்த கோட்டையை இடிக்காமல் அதனை ஹிக்கியா என்று அழைக்கப்படும் கீழ் பகுதியில் தண்டவாளங்களை பொருத்தி நகர்த்தும் தொழில்நுட்பம் மூலம் நகர்த்தி சீரமைக்க முயற்சித்தனர்.&nbsp;</p><p></p><p>

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த கோட்டை மனிதர்கள் மற்றும் எந்திரங்களின் உதவியுடன் நகர்த்தப்பட்டு, 2024 ஆம் ஆண்டில் இந்த சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. அப்போது 2,185 கற்களும் அவற்றின் அசல் இடங்களில் மீண்டும் அடுக்கப்பட்டன.&nbsp;</p><p>
சீரமைப்பு பணி நிறைவடைந்த நிலையில், கோட்டையை அதன் பழைய இடத்திற்கே மீண்டும் கொண்டுவர அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c6bd9c0-f389-4a7f-8fed-e1bfdec128a2/26-6a8eef3d79a4b.webp' /></p><p> 

சுமார் 1800 பேர் இதற்கு தேவைப்பட்ட நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட 4000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Hirosaki Castle in northern Japan is being returned to its original site after being moved for earthquake repairs. Using ropes and rollers, 1,800 people manually moved the structure over the weekend. <a href="https://t.co/O4mdc8SiZW">pic.twitter.com/O4mdc8SiZW</a></p>&mdash; South China Morning Post (@SCMPNews) <a href="https://x.com/SCMPNews/status/2092492241474289974?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

தற்போது 1800 பேர் 80 குழுக்களாக பிரிந்து கயிறு மூலம் இழுக்கும் பணியை தொடங்கினர். 30 மீட்டர் நீளமுள்ள கயிறுகளை பயன்படுத்தி 2 மீட்டர் வரை நகரத்தியுள்ளனர். </p><p>

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 5 மீட்டர் தூரம் மக்கள் நகர்த்திய பின்னர், மீதமுள்ள சுமார் 73 மீட்டர் தூரம், இந்த ஆண்டின் இறுதிக்குள் இயந்திரங்களைப் பயன்படுத்தி நகர்த்தப்படும். மீதமுள்ள பணிகள் முடிந்த பின்னர், 2033 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படும்.</p><p>

தனது தலைப்பாகையில் 2 ஜப்பானியக் கொடிகளைச் செருகிக்கொண்டு இந்த முயற்சியில் இணைந்த 82 வயதான கட்சுமி டெராடா, 11 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டை இடமாற்றம் செய்யப்பட்டபோதும் பங்கேற்றிருந்தார்.
</p><p>
இந்த கோட்டையை நகர்த்திய போது, மீண்டும் கோட்டை பழைய இடத்திற்கு வருவதை பார்க்க நான் அவ்வளவு காலம் வாழ்வேனா என கவலைப்பட்டேன். ஆனால் பாருங்கள், நான் விடாமுயற்சியுடன் இருந்தேன். நான் உயிருடனும் நலமுடனும் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T13:50:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தத் தயாராகலாம்: சிஐஏ தலைவர் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cia-chief-warning-to-putin-revealed-1787746181"></link>
            <id>https://news.lankasri.com/article/cia-chief-warning-to-putin-revealed-1787746181</id>
            <summary type="text">CIA Chief&#039;s mystery trip to moscow: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு CIA தலைவர் எச்சரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது.

ஐரோப்பாவுடன் விளாடிமிர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>CIA Chief's mystery trip to moscow: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு CIA தலைவர் எச்சரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது.</p><p>

ஐரோப்பாவுடன் விளாடிமிர் புடின் போரைத் தொடங்கக்கூடும் என்ற அச்சத்திற்கு இடையே, CIA தலைவர் அவருக்கு விடுத்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.&nbsp;</p><h2>ஐரோப்பாவுடன் போரைத் தொடங்கக்கூடும்</h2><p>
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஐரோப்பாவுடன் போரைத் தொடங்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2a46e7c-c43c-4b3c-9b85-6fed16685b63/26-6a8ed843d42d3.webp' />&nbsp;</p><p></p><p>

இந்த சூழலில், அமெரிக்காவின் CIA இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் (John Ratcliffe) ரஷ்யாவிற்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.</p><p> 

அவர் புடினிடம், அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது உக்ரைனின் மேற்கத்திய நட்பு நாடுகளை குறிவைப்பதன் மூலமோ உக்ரைன் மோதலை தீவிரப்படுத்த வேண்டாம்; அதை செய்யாதீர்கள் என்று எச்சரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

உக்ரேனிய போர்க்களத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மீண்டும் தேக்கமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாகவும், தீவிரமாகவும் செயல்படத் தயாராக உள்ளனர் என்ற அமெரிக்க உளவுத்துறையின் தகவலின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கூறியதாக தெரிய வந்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3637dfe7-b47c-42bf-b39d-2dfb20cb9c28/26-6a8ed7886fd12.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T13:02:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சதத்தை தவறவிட்ட வீரர்: கொழும்பில் போராடும் இலங்கை அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-struggle-2nd-test-vs-india-with-229-runs-1787749317"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-struggle-2nd-test-vs-india-with-229-runs-1787749317</id>
            <summary type="text">இலங்கையின் பசிந்து சூரியபண்டார கொழும்பு டெஸ்டில் 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 
 
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பசிந்து சூரியபண்டார கொழும்பு டெஸ்டில் 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். </p><p>
 
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையின் பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>ஃபாலோ-ஆன்</h2><p>

கொழும்பில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஃபாலோ-ஆன் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ff4d4ce-12a9-4b56-9408-cc34f39941ad/26-6a8ee3c98274a.webp' /></p><p></p><p>
அதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் லஹிரு உதார 3 ஓட்டங்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
</p><p>
பின்னர் கமில் மிஷாரா 32 ஓட்டங்களில் வெளியேற, பசிந்து சூரியபண்டார (Pasindu Sooriyabandara) மற்றும் கமிந்து மெண்டிஸ் இருவரும் வலுவான கூட்டணி அமைத்தனர். </p><p>

இவர்களின் கூட்டணி 115 ஓட்டங்கள் குவிக்க, கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) 55 ஓட்டங்களில் (3 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். </p><h2>

ரிஷாப் பண்ட்டினால் ஸ்டம்பிங்</h2><p>அடுத்து தனஞ்செய டி சில்வா 23 ஓட்டங்களிலும் மானவ் சுதர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பசிந்து சூரியபண்டார சதத்தை நோக்கி பயணித்தார். 

ஆனால், அவர் 92 ஓட்டங்களில் இருந்தபோது மானவ் சுதர் பந்துவீச்சில் ரிஷாப் பண்ட்டினால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
</p><p>
அதன் பின்னர் களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்லவை 6 ஓட்டங்களில் சரன்ஷ் ஜெயின் வெளியேற்ற, இலங்கை அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ஓட்டங்கள் எடுத்துள்ளது. </p><p>

மேலும் 16 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. மானவ் சுதர் 2 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா, மொஹம்மது சிராஜ், சரன்ஷ் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e444407-eeec-4893-9fb9-892139870b3a/26-6a8ee3c8ce374.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T12:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் திடீர் வெள்ளம் - சுற்றுலா சென்ற 57 தமிழர்களின் நிலை என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/57-tamilnadu-tourists-stuck-in-nepal-flood-1787747810"></link>
            <id>https://news.lankasri.com/article/57-tamilnadu-tourists-stuck-in-nepal-flood-1787747810</id>
            <summary type="text">57 tamilnadu tourists stuck in nepal flood: நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>57 tamilnadu tourists stuck in nepal flood: நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர். </p><h3>

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு</h3><p>

நேபாளத்தின் கோடாரி பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிப்பாறை உடைந்து கடும் 
 வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3449d06e-bb9f-43b0-aaf8-bcfc6a232bb5/26-6a8edde35c47c.webp' /></p><p>

வெள்ளத்தில் பாலங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்படுவதும், வீடுகள் மூழ்கடிக்கப்படும் வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

நேபாளத்திற்கு சென்றுள்ள 100க்கும் மேற்பட்ட இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 400க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><h3> 

நேபாளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்</h3><p> 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 57 பேர் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், நேபாளத்திற்கு சென்றுள்ளனர். </p><p>

அங்கு அவர்கள் 3 பேருந்துகளில் பயணித்துள்ள நிலையில், ஒரு வாகனத்தில் பயணித்த 20 பேர் வெள்ளத்தில் சிக்காமல் அங்குள்ள ராணுவ முகாமில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>

மீதமுள்ள 2 வாகனங்களில் சென்ற 37 தமிழர்களின் நிலை குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. </p><p>

வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை இந்தியா தூதரகம் மூலம் நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T12:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட்டரின் மகன் - அவுஸ்திரேலியாவில் விளையாட ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-approve-trans-cricketer-anaya-bangar-1787743931"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-approve-trans-cricketer-anaya-bangar-1787743931</id>
            <summary type="text">trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட்டில் பங்குபெற அவுஸ்திரேலியா ஒப்புதல் வழங்கியுள்ளது. 

தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட்டில் பங்குபெற அவுஸ்திரேலியா ஒப்புதல் வழங்கியுள்ளது. </p><h3>

திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட்டரின் மகன்</h3><p>

இந்திய கிரிக்கெட் அணியில் 2001-2004 காலகட்டத்தில் விளையாடி வந்தவர் சஞ்சய் பங்கர். ஓய்வுக்கு பிறகு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.&nbsp;</p><p> 

இவரின் மகனான ஆர்யன், உள்ளூர் போட்டிகளில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக விளையாடி வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4b0848e-1596-40be-a633-7d653422065c/26-6a8ecebde283e.webp' /></p><p>
2023 ஆம் ஆண்டில் தான் பெண்ணாக மாற விரும்புவதாக கூறி, ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பின்னர் பாலின மாற்று சிகிச்சை செய்து கொண்டு தனது பெயரை அனயா பங்கர்(anaya bangar) என மாற்றிக்கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b1c009a-0680-48f6-b81d-5420f0d9ceab/26-6a8ecebd39bab.webp' /></p><h3> 

அவுஸ்திரேலியா ஒப்புதல்</h3><p> 

இவர் திருநங்கையாக மகளிர் கிரிக்கெட்டில் விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கோரினார். பிசிசிஐ எந்த பதிலும் தராத நிலையில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பை அணுகியுள்ளார். அவுஸ்திரேலியா அனயாவின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
ஆண் பருவமடைதலை அடைந்த திருநங்கை பெண்கள் உயர்மட்ட மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதைத் தடுக்கும் விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7b37c7a-5f03-4b2b-b48c-81a84906c0a6/26-6a8ecebe99c6d.webp' /></p><p> 

மகளிர் பிக்பாஸ் தொடரில் விளையாட அவர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அதற்காக ஒப்புதல் தரப்பட்டுள்ளது. உயர்மட்ட கிரிக்கெட்டில் விளையாட டெஸ்ட்ரோஜென் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.</p><p>

ஐசிசி விதிப்படி உயர்மட்ட கிரிக்கெட்டிற்குத் தகுதிபெற, அவரது இரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் செறிவு குறைந்தது 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்குக் குறைவாக இருக்க வேண்டும்.</p><p>
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நேர்மைப் பிரிவுத் தலைவர் ஜாக்கி பார்ட்ரிட்ஜ், "உயர்மட்ட கிரிக்கெட்டில் விளையாடுவது மார்ச் 2027 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த டெஸ்டோஸ்டிரோன் சோதனை முடிவுகளை பொறுத்து உள்ளது.&nbsp;</p><p></p><p> 

மார்ச் 2027 வரை, அவுஸ்திரேலியாவின் எந்தவொரு மாநிலம் அல்லது பிராந்தியத்திலும் நடைபெறும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையவராக தொடர்வார்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T11:37:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி, 384 பேரை காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flood-8-dead-384-people-missing-1787743420"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flood-8-dead-384-people-missing-1787743420</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி&amp;nbsp; 8 பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு
திபெத் எல்லையில் இருந்து வந்த திடீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி&nbsp; 8 பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு</h2><p>
திபெத் எல்லையில் இருந்து வந்த திடீர் மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு வடக்கு நேபாள பகுதிகளை தீவிரமாக உலுக்கியுள்ளது.</p><p>போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p> இந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் இதுவரை குறைந்தது 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போய் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16fff331-d8e8-4808-8f4a-5e99c6e77b1d/26-6a8eccbe096f1.webp' /></p><p> நேபாள சுற்றுலா வாரியம் வழங்கிய தகவல்படி, 291 வெளிநாட்டினர் மற்றும் 93 உள்நாட்டு மக்கள் என&nbsp; மொத்தம் 384 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர்.</p><p> மாயமான சுற்றுலா பயணிகளில் 105 பேர் இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p></p><p> ராசுவா மாவட்டத்தில் நேபாள காவல்துறையை சேர்ந்த &nbsp; 26 அதிகாரிகளும், 7 ஆயுதப்படை வீரர்களும் இந்த வெள்ளப்பெருக்கில் காணாமல் போயுள்ளனர்.</p><p> இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவம், பேரிடர் மீட்புப் படைகள் ஆகியவை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப் பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த வெள்ளம் காரணமாக ராசுவகதி, சிலிமே, திரிசூலி ஆகிய துணை மின் நிலையங்கள் மற்றும் ஆறு முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் இதில் சேதமடைந்து இருப்பதாக நேபாள மின்சார வாரியம் அறிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T11:25:48+00:00</updated>
        </entry>
    </feed>
