<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-25T04:33:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதல் கட்டணம்: டிரம்பின் அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-proposes-additional-fee-for-h-1b-visa-1787630051"></link>
            <id>https://news.lankasri.com/article/us-proposes-additional-fee-for-h-1b-visa-1787630051</id>
            <summary type="text">H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதல் கட்டணம்H-1B விசா ஒதுக்கீடு உட்பட அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.</p><h2>H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதல் கட்டணம்</h2><p>H-1B விசா ஒதுக்கீடு உட்பட அனைத்து விண்ணப்பங்களுக்கும் கூடுதலாக 1,03,265 டொலர் கட்டணமாக விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.</p><p> மேலும் H-1B விசா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 65,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றம் வழக்கமான வரம்பை நிர்ணயித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0511cba7-f9fe-4ca3-bef9-dd2b601a24b6/26-6a8d11e47a8fe.webp' /></p><p> &nbsp; முதுகலை ஒதுக்கீடு வரம்பு என அழைக்கப்படும் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் முதுகலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்றவர்களுக்கான பணியாளர் விசாக்கள் கூடுதலாக 20000 விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2> புதிய முன்மொழிவு</h2><p>
H-1B விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டொலராக நிர்ணயம் செய்யும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை ரத்து செய்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69a319b1-b0c5-4e35-a934-7e0a11ced9cc/26-6a8d11e52cd2c.webp' /></p><p></p><p> இந்த உத்தரவை நிறுத்தி வைக்க கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதனையும் நீதிமன்றம் ஒரு மாதத்திற்கு முன்பு நிராகரித்தது.</p><p> இந்நிலையில் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் இந்த புது முன்மொழிவு வந்துள்ளது.</p><p>கூடுதல் கட்டணத்தை தற்போதுள்ள H-1B விசா விண்ணப்ப கட்டணத்துடன் இணைப்பதற்கு பதிலாக, தனிப்பட்ட கூடுதல் கட்டணமாக 1,03,265 என்ற அமெரிக்க டொலர் தொகையை செலுத்தும் முறையை செயல்படுத்த உள்நாட்டு பாதுகாப்பு துறை முன்மொழிந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-25T03:54:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு பிரித்தானியா அளிக்கும் ஏவுகணை உதவி: ரஷ்யா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-missile-help-for-ukraine-1787589802"></link>
            <id>https://news.lankasri.com/article/british-missile-help-for-ukraine-1787589802</id>
            <summary type="text">British missile help for Ukraine: உக்ரைனுக்கு பிரித்தானியா ஏவுகணை உதவி அளிப்பது நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போன்றது.
SCALP ரக நீண்ட தூர ஏவுகணைகளைத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>British missile help for Ukraine: உக்ரைனுக்கு பிரித்தானியா ஏவுகணை உதவி அளிப்பது நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போன்றது.
</p><p>SCALP ரக நீண்ட தூர ஏவுகணைகளைத் தயாரிக்கப் பயன்படும் பிரித்தானிய தயாரிப்பு உதிரிபாகங்கள் குறித்த ரகசியத் தகவல்களை உக்ரைனிடம் வழங்க அந்த நாடு எடுத்துள்ள முடிவு, நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6e0bc67-3f2d-4832-8bd2-04b7d51d2b6b/26-6a8c74ad45739.webp' /></p><p>
</p><p>பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம், பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக திங்களன்று கீவ் நகரை வந்தடைந்தார்; நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த கீவ்விற்கு உதவுவதற்கான பிரித்தானியாவின் ஆதரவையும் அவர் அங்கு அறிவிக்கவிருக்கிறார்.</p><p> பிரதமரின் அந்தப் பயணம் மற்றும் அளிக்கவிருக்கும் ஆதரவு குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இறுதி அமைதி ஒப்பந்தத்தை நோக்கிய எந்தவொரு முன்னேற்றத்தையும் தடுப்பதற்கு பிரித்தானியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாகக் குற்றம் சாட்டினார். </p><p>மேலும்,
இந்த போரில் பிரித்தானியா உக்ரைனுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளது.
பிரித்தானியா திட்டமிட்டபடியும் தொடர்ச்சியாகவும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுடன், அமைதித் தீர்வுக்கான முயற்சியில் மிகச்சிறிய முன்னேற்றம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான திட்டங்களையும் திட்டமிட்டபடியும் தொடர்ச்சியாகவும் தீட்டி வருகிறது என்று பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, உக்ரைனில் ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அழிப்பதற்காக, ரஷ்ய ராணுவம் ஏற்கனவே முறையாகத் தகவல்களைச் சேகரித்து வருவதாக பெஸ்கோவ் கூறினார். +</p><p>பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் ரஷ்யாவுக்கு எதிரான நீண்ட தூரத் தாக்குதல்களுக்கு முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, போரில் பிரித்தானியா தனது ஈடுபாட்டை அதிகரிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியது;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f5e661c-5da3-4340-baf5-a0388df39a53/26-6a8c74aded7c1.webp' /></p><p> </p><p>அத்துடன், உக்ரைனுக்கு ட்ரோன்களை வழங்குவதால் ஏற்படக்கூடிய குறிப்பிடப்படாத விளைவுகள் குறித்தும் கடந்த வாரம் பிரித்தானியாவை ரஷ்யா எச்சரித்தது. </p><p>ஆனால், இந்தச் சட்டவிரோதப் போருக்கு எதிராக உக்ரைனுக்கு நூறு சதவீதம் ஆதரவளிக்க பிரித்தானியா உறுதியுடன் இருப்பதாக பிரதமர் பர்னாம் அப்போது பதிலளித்திருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T03:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு ஆண்டுத் திட்டம் தயார்... ட்ரம்பின் திட்டம் தோல்வி: ஈரான் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/to-counter-us-sanctions-1787608940"></link>
            <id>https://news.lankasri.com/article/to-counter-us-sanctions-1787608940</id>
            <summary type="text">Two-Year Plan To Counter US Sanctions: அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள இரண்டு ஆண்டுத் திட்டம் உள்ளது என ஈரான்.
அமெரிக்கா மற்றொரு தோல்வியை எதிர்பார்க்கலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two-Year Plan To Counter US Sanctions: அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள இரண்டு ஆண்டுத் திட்டம் உள்ளது என ஈரான்.
</p><p>அமெரிக்கா மற்றொரு தோல்வியை எதிர்பார்க்கலாம் என ஈரான் பொருளாதார அமைச்சர் அலி மதனிசாதே திங்களன்று கணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/266d5c24-45a7-4b19-9440-d60a75613c96/26-6a8cbf6e405eb.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவின் புதிய தடைகளை எதிர்கொள்வதற்கு ஈரான் நிர்வாகம் ஒரு ஈராண்டுத் திட்டத்தை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>ஈரானிய மக்கள் மற்றும் அதிகாரிகளின் உறுதியைச் சோதிக்க அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் தோல்வியுற்றார்கள். </p><p>அவர்கள் மற்றுமொரு தோல்வியைச் சந்திக்க விரும்பியது போல் தெரிகிறது என்று மதனிசாதே அரசு தொலைக்காட்சியிடம் கூறினார். </p><p>மேலும், நாங்கள் இந்தத் தடைகள் தொடர்பில் நீண்ட காலமாக காத்திருந்தோம், மட்டுமின்றி இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருந்ததுடன், ஒரு இரண்டாண்டுத் திட்டத்தையும் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.</p><p></p><p> </p><p>எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்காவின் தடையால் ஏற்பட்ட மிகையான பணவீக்கம் மற்றும் அந்நியச் செலாவணி வருவாய் பற்றாக்குறை ஆகியவற்றின் விளைவாக, ஈரானின் பொருளாதாரம் மீண்டும் ஒருமுறை சரிவின் விளிம்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை கருதுகிறது. </p><p>கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஈரானுக்கு எதிராகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்ததிலிருந்து 4.5 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ள ரியால் நாணயம், திங்களன்று கட்டுப்பாடற்ற சந்தையில் ஒரு டொலருக்கு 1.992 மில்லியன் என்ற விகிதத்தில் வர்த்தகமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52b866fd-5dfd-48fb-9de4-cc0d3cf04e79/26-6a8cbf6ee5d27.webp' /></p><p> </p><p>இதனிடையே, ஈரான் முற்றிலுமாகச் சரிந்து கொண்டிருக்கிறது என ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். ஆனால், ஈரான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையான அமெரிக்காவின் உச்சபட்ச பொருளாதார அழுத்தத்தின் கீழ் இருந்து வந்துள்ளதுடன், இதுவரை அந்த நாடு தப்பிப் பிழைத்துள்ளது. </p><p>இந்த நிலையில், அமெரிக்கா இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், பூகம்பம் போன்ற பதிலடியுடன் ஈரான் பதிலளிக்கும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெஸாயி கூறியுள்ளார். </p><p>அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கையில் சேர வேண்டாம் என ஈரானின் வளைகுடா அண்டை நாடுகளுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T00:14:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரெஞ்சு கிராமத்தைத் தாக்கிய சூறாவளி... பலர் காயம், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tornado-tears-french-village-1787616967"></link>
            <id>https://news.lankasri.com/article/tornado-tears-french-village-1787616967</id>
            <summary type="text">Tornado tears through French village: பிரெஞ்சு கிராமம் ஒன்றை மொத்தமாகப் புரட்டிய சூறாவளி.
பிரெஞ்சு கிராமம் ஒன்றை சூறாவளி தாக்கியதில், டசின் கணக்கானோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tornado tears through French village: பிரெஞ்சு கிராமம் ஒன்றை மொத்தமாகப் புரட்டிய சூறாவளி.
</p><p>பிரெஞ்சு கிராமம் ஒன்றை சூறாவளி தாக்கியதில், டசின் கணக்கானோர் காயமடைந்ததுடன் நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aeffe07-6ee6-4a5c-9b04-1820f7116215/26-6a8cdec955dea.webp' /></p><p>
</p><p>தென்மேற்கு பிரான்சில் உள்ள ஒரு கிராமத்தை சூறாவளி தாக்கியதில் சுமார் 41 பேர் காயமடைந்தனர். பிரெஞ்சு அதிகாரிகள் நாட்டின் தென்மேற்குப் பகுதியின் பெரும் பாகங்களுக்கு புயல் அபாய ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்ததால், பல பகுதிகளில் மின்வெட்டும் போக்குவரத்து குழப்பமும் ஏற்பட்டன.</p><p> போமாஸ் கிராமமே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது, அங்கு சுமார் 300 வீடுகள் சேதமடைந்தன. சுமார் 1,000 மக்கள்தொகை கொண்ட அந்த கிராமத்தில் சூறாவளியால் சில வீடுகளின் கூரைகள் பெயர்த்துப் போயின. </p><p>வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்களில் கர்ப்பிணிப் பெண்ணும் ஒருவர். காயமடைந்தவர்களில் பதினைந்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். </p><p>ஆட் பிராந்தியத்தில் உள்ள ஒரு பிரெஞ்சு நகரில், சூறாவளி பெரிதாக வளர்ந்து மண்ணைக் கிளப்புவதை திகைக்க வைக்கும் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன.</p><p></p><p> </p><p>120க்கும் மேற்பட்ட அவசரக்காலப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். </p><p>அதேவேளையில், தங்கள் வீடுகளில் தங்க முடியாத குடியிருப்பாளர்களுக்காக போமாஸ் மற்றும் லிமூக்ஸ் ஆகிய இடங்களில் தலா ஒரு தங்குமிடமும், மற்ற இரண்டு தங்குமிடங்களும் திறக்கப்பட்டன. </p><p>மரங்கள் மற்றும் கார்கள் வீதிகளில் சிதறிக் கிடந்ததால் பல சாலைகள் மூடப்பட்டன. இதனிடையே ஆட் பிராந்தியத்தில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55b81907-bb45-4c3a-b7df-5a12d8ebae8c/26-6a8cdeca0b2ad.webp' /></p><p> அருகிலுள்ள பகுதிகளில் 3 முதல் 5 செ.மீ வரை அளவுள்ள ஆலங்கட்டிகள் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அருகிலுள்ள Arquettes-en-Val கிராமத்தில் காற்றின் வேகம் மணிக்கு 73 மைல்கள் வரை எட்டியதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.</p><p> தெற்கு பிரான்ஸ் முழுவதும் வீசிய புயல்கள் போக்குவரத்து கட்டமைப்பைச் சீர்குலைத்தன; இதனால் ரயில்கள் தாமதமடைந்தன, சாலைகள் மூடப்பட்டன, மேலும் போர்டோ, மார்சேய், நீஸ், டுலூஸ் மற்றும் வடக்கே உள்ள பாரிஸ் ஆகிய நகரங்களின் விமான நிலையங்களிலும் விமானச் சேவைகளில் தாமதங்களும் ரத்துகளும் ஏற்பட்டன என்று போக்குவரத்து அமைச்சர் பிலிப் டபரோட் தெரிவித்தார். </p><p>புயல் காரணமாக பத்து கிராமங்களில் சுமார் 2,800 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T00:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமேசான், ஸ்விக்கி நிறுவனங்களின் உணவு உரிமங்களை இடைநிறுத்திய கர்நாடகா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karnataka-suspends-food-licences-of-1787614052"></link>
            <id>https://news.lankasri.com/article/karnataka-suspends-food-licences-of-1787614052</id>
            <summary type="text">Karnataka suspends food licences of Amazon, Swiggy: கர்நாடகாவில் அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்கள் இடைநீக்கம். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Karnataka suspends food licences of Amazon, Swiggy: கர்நாடகாவில் அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்கள் இடைநீக்கம். </p><p>
நச்சுத்தன்மை வாய்ந்த ஊமத்தையை ஒன்லைனில் விற்பனை செய்ததைத் தொடர்ந்து, அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்களை கர்நாடகா இடைநீக்கம் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e287156-0d28-448a-ad2b-0e3dec184f75/26-6a8cd366b4d4b.webp' /></p><p>
</p><p>மனித நுகர்வுக்காக நச்சுத்தன்மையுள்ள ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகளை ஒன்லைனில் விற்பனை செய்ததன் காரணமாக, கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்கள் மற்றும் பதிவுகளை மறு அறிவிப்பு வரும் வரை இடைநீக்கம் செய்துள்ளது. </p><p>மேலும், மூன்று மின் வணிகத் தளங்கள், ஊமத்தை தொடர்பான அனைத்துப் பட்டியல்களையும் விளம்பரங்களையும் உடனடியாக நீக்குமாறும், அதனை ஒரு உணவுப் பொருளாக விற்பனை செய்வதையும் விநியோகிப்பதையும் நிறுத்துமாறும் அத்துறை உத்தரவிட்டுள்ளது. </p><p>இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) பதிவு அல்லது உரிம எண்களைப் பயன்படுத்தி, மின்னணு வர்த்தகத் தளங்கள் வாயிலாக ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகள் சேமித்து விற்கப்படுவதை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளின்போது கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஆகஸ்ட் 24 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் தீர்ப்பளிக்கும் அதிகாரியின் முன் ஆஜரானார்கள். </p><p>நடைபெற்ற நடவடிக்கைகளின்படி, அந்த அறிவிப்புக்கு அமேசான் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. துறையின் அறிவிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க ஸ்விகி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) கூடுதல் அவகாசம் கோரியது. </p><p>இதனிடையே, ஊமத்தை விற்பனையை நிறுத்திவிட்டதாகவும், விற்பனை முறையை மாற்றிவிட்டதாகவும் பிக்பாஸ்கெட் அதிகாரிகளிடம் தெரிவித்தது. மேலும், மனித நுகர்வுக்கு அல்ல என்பதைத் தெளிவாகக் குறிப்பிடும் வகையில் அதன் லேபிளிங் மாற்றப்படும் என்றும் அது கூறியது. </p><p>இருப்பினும், ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகளின் நச்சுத்தன்மை மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்து ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, ​​பெறப்பட்ட பதில்கள் திருப்திகரமாக இல்லை என்று அந்தத் துறை தெரிவித்தது. </p><p>அத்துடன், வர்த்தகத் தளங்களுக்கு இதுபோன்ற பொருட்களை வழங்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66be45cb-19d5-4c4d-a302-2f588a94c307/26-6a8cd36767e3d.webp' /></p><p> </p><p>மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் அவர்களின் உணவு உரிமங்கள் மற்றும் பதிவுகளை இடைநீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>சம்பந்தப்பட்ட உணவு வணிக நிறுவனங்கள் மற்றும் மின்னணு வர்த்தகத் தளங்கள் ஆகியவை இந்த அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று துறை தெரிவித்துள்ளது. </p><p>இந்த உத்தரவை மீறினால், பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆய்வுகளின்போது, ​​உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகளைக் கொண்ட, உணவுப் பதிவு எண்கள் பொறிக்கப்பட்ட பொதிகளைக் கண்டறிந்தனர். </p><p>மேலும், இப்பொருட்கள் ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும், இணையவழி வணிகத் தளங்கள் மூலம் விற்பனை அல்லது விநியோகம் செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T23:24:59+00:00</updated>
        </entry>
    </feed>
