<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-23T12:45:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகளைக் கடத்தி விற்கும் 18 பெண்கள் கொண்ட கும்பலுக்கு சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/19-jail-trafficking-babies-in-indonesia-singapore-1784808905"></link>
            <id>https://news.lankasri.com/article/19-jail-trafficking-babies-in-indonesia-singapore-1784808905</id>
            <summary type="text">குழந்தைகளைக் கடத்தி விற்கும் கும்பலைச் சேர்ந்த 19 பேருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

தந்தை அளித்த புகார்
2025ஆம் ஆண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகளைக் கடத்தி விற்கும் கும்பலைச் சேர்ந்த 19 பேருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
</p><h3>
தந்தை அளித்த புகார்</h3><p>
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்தோனேசியாவைச் சேர்ந்த டேனி ஹிதாயத் என்பவர், தான் ஒன்லைனில் சந்தித்த பெண்ணொருவர், தன் அனுமதியின்றி தன் குழந்தையை எடுத்துச் சென்றுவிட்டதாக பொலிசில் புகாரளித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c32ccec-2636-40cd-b5e2-4b816b93b0d8/26-6a6205cabdcff.webp' /></p><p>
பொலிஸ் விசாரணையில், டேனி தன் குழந்தையை தத்துக்கொடுக்க சம்மதித்தது தெரியவந்தது.
</p><p>
அதாவது, குழந்தையை வாங்கிக்கொண்ட பெண், தான் சொன்னபடி டேனிக்கு பணம் கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு அந்தப் பெண்ணை தொடர்புகொள்ளவும் இயலவில்லை. ஆகவேதான் டேனி பொலிசில் புகாரளித்துள்ளார்.
</p><p>
விடயம் என்னவென்றால், டேனியின் புகாரால், குழந்தைகளைக் கடத்தும் ஒரு பெரிய கும்பலே சிக்கிக்கொண்டது.&nbsp;</p><p></p><p>
2023க்கும் 2025க்கும் இடையில் அந்தக் கும்பல் 34 குழந்தைகளை வாங்கி விற்றுள்ளது.
</p><p>
அந்தக் கும்பலில் 18 பெண்களும் ஒரு ஆணும் உள்ளனர். கும்பலின் தலைவியின் பெயர் Lie Siu Luan.
</p><p>
ஏப்ரல் மாதம் முதல் இந்த வழக்கு நடந்துவந்த நிலையில், அந்தக் கும்பலைச் சேர்ந்த அனைவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
கும்பலின் தலைவியான Lie Siu Luanக்கு 7 ஆண்டுகளும், கடத்தப்பட்ட குழந்தைகளை கவனித்துக்கொண்ட ஐந்து பெண்களுக்கு மூன்று ஆண்டுகள், நான்கு மாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
கும்பலின் மற்றொரு முக்கிய நபரான Lai Siu Ha என்னும் பெண்ணுக்கு ஆறு ஆண்டுகள், ஏழு மாதங்களும், இடைத்தரகர்களாக செயல்பட்ட இரண்டு பெண்களுக்கு இரண்டு ஆண்டுகள், நான்கு மாதங்களும், குழந்தைகளை கவனித்துக்கொண்ட மற்றொரு பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளும் நான்கு மாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
கும்பலின் ஒரே ஆண் உறுப்பினரான நபருக்கு ஆறரை ஆண்டுகளும், அதிக குழந்தைகள கடத்திய Astri Fitrinika என்னும் பெண்ணுக்கு ஆறு ஆண்டுகள், ஏழு மாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளை தத்துக்கொடுக்க போலி ஆவணங்கள் தயாரித்த Lai Siu Ha என்னும் பெண் மட்டும் தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.
</p><p>
இந்த வழக்கு பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மூலம் குழந்தைகளை தத்தெடுத்தவர்கள், தங்கள் குழந்தைகள் தங்களிடமிருந்து பிரிக்கப்பட்டுவிடுமோ என்னும் அச்சம் தங்களுக்கு உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T12:17:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரட்டத்தை முடக்க டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம்? காவல்துறை விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/delhi-police-react-to-claim-invoke-nsa-in-protest-1784807887"></link>
            <id>https://news.lankasri.com/article/delhi-police-react-to-claim-invoke-nsa-in-protest-1784807887</id>
            <summary type="text">டெல்லியில் போரட்டத்தை முடக்க தேசிய பாதுகாப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளது.

டெல்லி ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெல்லியில் போரட்டத்தை முடக்க தேசிய பாதுகாப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளது.
</p><h3>
டெல்லி போராட்டம்</h3><p> 

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2897c4ff-f072-4f2f-aa77-97c63d50c424/26-6a6201d060658.webp' /></p><p>

இரு நாட்களுக்கு முன்னர், போராட்டக்குழுவினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது, காவல்துறையினர் தடியடி நடத்தியதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.&nbsp;</p><p></p><p>

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் பரவி வருகிறது.</p><h3> 

 தேசிய பாதுகாப்பு சட்டம்(NSA)</h3><p>

இந்நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்த காவல் ஆணையருக்கு துணை நிலை ஆளுநர் அனுமதி வழங்கியதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியானது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Centre has granted detention powers under the National Security Act (NSA), 1980, to Delhi Commissioner of Police. <br><br>Under the NSA, individuals can be detained without formal charges for a period ranging from 12 days to a maximum of 12 months. <br><br>The order authorises the Delhi… <a href="https://t.co/2la3nORjpX">pic.twitter.com/2la3nORjpX</a></p>&mdash; Sougat Chakraborty (@sougat18) <a href="https://x.com/sougat18/status/2080168419476078840?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இது தொடர்பாக வெளியான அரசாணையில், இந்த சட்டத்தை ஜூலை 19, 2026 முதல் அக்டோபர் 18,2026 வரையிலான 3 மாதக் காலத்துக்கு அமல்படுத்துவதற்கான அதிகாரம் காவல் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தேசிய பாதுகாப்பு சட்ட 1980ன் படி, தேசியப் பாதுகாப்புச் சட்டம், 1980-ன் கீழ், நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தனி நபர்களை, காரணம் கூறாமல் 3 மாதங்கள் வரை சிறையில் அடைக்கலாம். அதிகபட்சமாக ஒரு ஆண்டு வரை நீட்டிக்கப்படலாம்.
</p><p>
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், உடனடியாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபடுவார்கள் என்று காவல்துறை அடையாளம் காணும் எவரையும் முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வழிவகுக்கிறது.</p><h3>

டெல்லி காவல்துறை விளக்கம்</h3><p> 

இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள டெல்லி காவல்துறை, "வழக்கமாக நீட்டிக்கப்படும் இந்த நிர்வாக நடைமுறை டெல்லியில் நடைபெற்று வரும் CJP போராட்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு தவறான தகவல் பரப்பப்படுகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A routine quarterly renewal of powers under the National Security Act (NSA) has been falsely linked to the ongoing CJP protests. <br><br>The renewal predates the protests and is part of the standard administrative process. <br><br>Citizens are advised to rely only on official information and… <a href="https://t.co/t50ABgZBh0">pic.twitter.com/t50ABgZBh0</a></p>&mdash; Delhi Police (@DelhiPolice) <a href="https://x.com/DelhiPolice/status/2080210739747533240?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இது ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை நீட்டிக்கப்படும் நிர்வாக நடைமுறையே. இந்த உத்தரவு, CJP போராட்டம் தொடங்கும் முன்னர் ஜூலை 7 ஆம் திகதியே பிறப்பிக்கப்பட்டது" என தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T12:02:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லி மாணவர்கள் போராட்டம்: எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார்: இந்திய அரசு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/modi-govt-invites-delhi-protesters-for-talk-1784807771"></link>
            <id>https://news.lankasri.com/article/modi-govt-invites-delhi-protesters-for-talk-1784807771</id>
            <summary type="text">டெல்லியில் போராடும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மாணவர்களுக்கு அரசு அழைப்புநீட் தேர்வு வினாத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெல்லியில் போராடும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.</p><h2> மாணவர்களுக்கு அரசு அழைப்பு</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.</p><p> மாணவர்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p> மத்திய அரசின் தொடர் முயற்சிகளை விளக்கிய அமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று மதியம் முதல் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நான்கு முறை முயற்சித்து முன்மொழிவுகளை அனுப்பியதாக தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55386e3e-432b-4bd9-b18a-b19bedadc789/26-6a62015d1fb88.webp' /></p><p> மேலும் நமது இளைய தலைமுறை நண்பர்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது இது தொடர்பான விவாதத்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக குறிப்பிட்ட அவர். இது தங்களது திறந்த அழைப்பு என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.</p><p> பேச்சுவார்த்தை சுமுகமாகவும், எளிதாகவும் நடைபெற நம்முடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டாவும் கலந்து கொள்வார் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.</p><p> &nbsp;நாங்கள் கவுரவத்தை பற்றி கவலைப்பட வில்லை. இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலமாக படிப்படியாக தீர்வு காண தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> எனவே இந்த பேச்சுவார்த்தையில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.</p><h2> பிரதமர் மோடி அழைப்பு</h2><p>இந்திய பிரதமர் மோடி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டார்.</p><p>அதில் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து விரைவான நீதி மற்றும் கடுமையான தண்டனைகளை பெற்றுத் தர துரித நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று உத்தரவு வழங்கியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T11:56:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட 74 வருடங்களாக மாயமான பயணிகள் விமானம்... உடைந்த பாகங்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pan-am-crash-wreckage-found-1784805644"></link>
            <id>https://news.lankasri.com/article/pan-am-crash-wreckage-found-1784805644</id>
            <summary type="text">விமானப் போக்குவரத்து வரலாற்றின் மிக முக்கியமான பேரிடர்களில் ஒன்றின் நினைவைச் சுமந்தபடி, அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான பயணிகள் விமானம் ஒன்றின் உடைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமானப் போக்குவரத்து வரலாற்றின் மிக முக்கியமான பேரிடர்களில் ஒன்றின் நினைவைச் சுமந்தபடி, அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான பயணிகள் விமானம் ஒன்றின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.</p><h2>74 வருடங்களுக்குப் பிறகு</h2><p>
</p><p>அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான பான் அமெரிக்கன் வேர்ல்ட் ஏர்வேஸ் (Pan American World Airways) விமானத்தின் சிதைவுகளே தற்போது மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9903ea6-d6f0-466d-9964-903046771c8d/26-6a61fa7a24879.webp' /></p><p> </p><p>விபத்து நடந்து 74 வருடங்களுக்குப் பிறகு, புவேர்ட்டோ ரிக்கோ கடற்பகுதியில் பான் ஆம் விமானம் 526A-இன் சிதைவுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். </p><p>இந்தக் கண்டுபிடிப்பு பல தசாப்தங்களாக நீடித்திருந்த ஒரு விமானப் போக்குவரத்து மர்மத்தைத் தீர்த்தது மட்டுமல்லாமல், மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 உள்ளிட்ட காணாமல் போன பிற விமானங்கள் குறித்தும் பதில்களுக்காகக் காத்திருக்கும் குடும்பத்தினருக்குப் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.</p><p> 1952-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-அன்று, பியூர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுவானின் இஸ்லா கிராண்டே விமான நிலையத்திலிருந்து, நியூயார்க்கின் ஐடில்வைல்ட் விமான நிலையத்திற்கு (தற்போதைய ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையம்) பான் ஆம் விமானம் 526A புறப்பட்டது. </p><p>சம்பவத்தன்று, 'கிளிப்பர் என்டேவர்' (Clipper Endeavor) என்ற டக்ளஸ் DC-4 ரக அந்த விமானத்தில், 64 பயணிகளும் ஐந்து பணிக்குழு உறுப்பினர்களும் இருந்தனர்.</p><p></p><p> </p><p>விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. முதலில் மூன்றாவது இயந்திரம் செயலிழந்தது, அதைத் தொடர்ந்து நான்காவது இயந்திரமும் செயலிழந்தது. </p><p>இதனையடுத்து விமானி திரும்பிச் செல்ல முயன்றார், ஆனால் சான் ஜுவானுக்கு வடமேற்கே சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் கொந்தளிப்பான கடலில் விமானத்தை இறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. </p><p>விமானம் கடலில் மோதிய பிறகு அதன் வால் பகுதி உடைந்து பிரிந்துவிட்ட போதிலும், முக்கியப் பகுதி (கேபின்) சேதமடையாமல் இருந்தது; மேலும், விபத்துக்காலத் தரையிறக்கத்தின்போது அதில் இருந்த 69 பேரும் ஆரம்பத்தில் உயிர் தப்பினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4332b17-d752-4a60-8c4b-9afecd9b964c/26-6a61fa78a7822.webp' /></p><p> </p><p>இருப்பினும், சில நிமிடங்களிலேயே விமானத்திற்குள் தண்ணீர் புகத் தொடங்கியது. விமானம் புறப்படுவதற்கு முன் அவசரக்கால வெளியேறும் வழிகள் அல்லது உயிர் காக்கும் அங்கிகளைப் (life jackets) பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படாததால், பல பயணிகள் உள்ளேயே தங்கிவிட்டனர்.</p><p> மேலும், சிலர் மொழிப் பிரச்சினையாலும் தகவல் பரிமாற்றத்தில் சிரமத்தை எதிர்கொண்டனர். அந்த விமானம் மூன்று நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் மூழ்கியது. அமெரிக்கக் கடலோரக் காவல் படையினரும் விமானப் படையினரும் 17 பேரை உயிருடன் மீட்க முடிந்தாலும், 39 பயணிகளை மீட்கவே முடியவில்லை.</p><h2>2,000 அடி ஆழத்தில்</h2><p> </p><p>பின்னர் விசாரணை அதிகாரிகள், இயந்திரச் சிக்கல்களுக்குப் பராமரிப்புக் குறைபாடுகளே காரணம் என்று குற்றம் சாட்டினர் மற்றும் பயணிகளுக்கு விமானப் பயணத்திற்கு முந்தைய கட்டாயப் பாதுகாப்பு விளக்கங்களை பரிந்துரைத்தனர். </p><p>அந்தப் பரிந்துரைகள் நாளடைவில் உலகம் முழுவதும் உள்ள வணிக விமானப் பயணங்களில் ஒரு வழக்கமான நடைமுறையாக மாறின. </p><p>இந்த நிலையில், ஜூன் 2 அன்று நீருக்கடியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணி மூலம் அதன் சிதைந்த பாகங்கள் கண்டறியப்படும் வரை, பல தசாப்தங்களாக அந்த பான் ஆம் (Pan Am) விமானம் மூழ்கிய இடம் தெரியாமலே இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f352c1e8-5563-48bb-aebd-28729d8fe4ab/26-6a61fa79747d4.webp' /></p><p> </p><p>அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 2,000 அடி ஆழத்தில் அந்த விமானம் கண்டெடுக்கப்பட்டது. "PAA" என்ற எழுத்துக்கள் மற்றும் 'பான் அமெரிக்கன் வேர்ல்ட் ஏர்வேஸ்' நிறுவனத்தின் தனித்துவமான நீல நிற உலக உருண்டைச் சின்னம் உள்ளிட்ட கண்ணுக்குத் தெரியும் அடையாளங்கள் மூலம் ஆய்வாளர்கள் அந்த விமானத்தின் சிதைந்த பாகங்களை உறுதி செய்துள்ளனர். </p><p>'பான் ஆம்' (Pan Am) விமானம் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு, விமானப் போக்குவரத்து வரலாற்றின் மிகப்பெரிய தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்றான 'மலேசியா ஏர்லைன்ஸ்' விமானம் MH370 குறித்த கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.
</p><p>
கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்றுகொண்டிருந்த அந்த 'போயிங் 777' விமானம், 2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் திகதி மாயமானது.</p><p> பல வருடங்களாக சர்வதேச அளவில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த விமானம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T11:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரும்புள்ளிகளை நீக்க கடலை மாவு+ தக்காளி சாறு.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/homemade-face-packs-for-dark-spots-in-tamil-1784804454"></link>
            <id>https://news.lankasri.com/article/homemade-face-packs-for-dark-spots-in-tamil-1784804454</id>
            <summary type="text">முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.

சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.</p><p>

சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
</p><p>
சூரிய புற ஊதாக் கதிர்களால் சருமத்தில் மெலனின் உற்பத்தி அதிகரித்து கரும்புள்ளிகள் உருவாகின்றன.
</p><p>
அந்தவகையில், இயற்கை முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li>

கடலை மாவு- 3 ஸ்பூன்</li><li>
தக்காளி சாறு- 5 ஸ்பூன்
</li></ul><h2>
பயன்படுத்தும் முறை</h2><p>

முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் தக்காளி சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.</p><p>

பின் இதனை நன்கு கலந்த முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41cdd8a9-b59d-49b2-8b36-64019c8dece6/26-6a61f4687cd6e.webp' /></p><p>அடுத்து இதனை 20 நிமிடங்கள் முகத்தில் நன்கு உலரவைக்க வேண்டும்.
</p><p>
இறுதியாக முகத்தை தண்ணீர் பயன்படுத்து மெதுவாக மசாஜ் செய்து பின்னர் சுத்தமாக கழுவ வேண்டும்.
</p><p>
இதை வாரத்திற்கு 2 முறை தொடந்து பயன்படுத்தி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நிரந்தரமாக நீங்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T11:10:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் ரயில் நிலையங்களில் மது அருந்த தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-railway-to-ban-consuming-alcohol-at-station-1784803218"></link>
            <id>https://news.lankasri.com/article/german-railway-to-ban-consuming-alcohol-at-station-1784803218</id>
            <summary type="text">ஜேர்மன் ரயில் நிலையங்களில் மது அருந்த தேசிய ரயில்வே தடை விதித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் தூய்மையை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் ரயில் நிலையங்களில் மது அருந்த தேசிய ரயில்வே தடை விதித்துள்ளது.
</p><p>
பாதுகாப்பு மற்றும் தூய்மையை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே அமைப்பு தெரிவித்துள்ளது.
</p><h3>
ஜேர்மன் ரயில் நிலையங்களில் மது அருந்த தடை</h3><p>

சமீபத்தில், பாதுகாப்பு அலுவலர் ஒருவர் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, போதையிலிருந்த பயணி ஒருவர் அவரை தாக்கியதில், ரயிலுக்கு வெளியே போய் விழுந்த அந்த அலுவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d54d7386-e689-4198-b514-0c237bb76508/26-6a61ef93f0bd1.webp' /></p><p>
அதை சுட்டிக்காட்டிய ஜேர்மன் தேசிய ரயில்வே அமைப்பான Deutsche Bahn அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியான Evelyn Palla, அதிக மதுபானம் புரண்டோடும் இடங்களில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடப்பதை அடிக்கடி காணமுடிகிறது என்றார்.&nbsp;</p><p></p><p>
ஆக, அக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்குள், படிப்படியாக ஜேர்மனியின் அனைத்து ரயில் நிலையங்களுக்கும், இந்த மது அருந்தும் தடை அமுல் படுத்தப்பட உள்ளது.
</p><p>
தொடர்ந்து தடையை மீறுவோர், ரயில் நிலையங்களுக்குள் நுழைய நிரந்தரத் தடை விதிக்கப்படும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T10:45:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமாக விரிவடையும் ஈரான் போர்... சவுதி எண்ணெய் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-claim-red-sea-attacks-1784801622"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-claim-red-sea-attacks-1784801622</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக மீண்டும் தொடர்ச்சியாக 12 இரவுகள் அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில், சவுதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஏமனின் ஈரான் ஆதரவு ஹவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக மீண்டும் தொடர்ச்சியாக 12 இரவுகள் அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில், சவுதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><h2>விடாப்பிடியாக இருப்போம்</h2><p>
</p><p>நாசா வெளியிட்டுள்ள தரவுகளில் சவுதி கொடியுடன் கூடிய என்செலியா என்ற எண்ணெய் கப்பல் 
செங்கடலில் தீப்பிடித்து எரிவது பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4045ca2d-28ea-43a6-970e-9b981426adda/26-6a61ec20d5798.webp' /></p><p> வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், தாக்குதலுக்கு இலக்கான இரண்டு கப்பல்களின் ஊழியர்களும் காயமின்றி தப்பியுள்ளதாகவே தெரிய வருகிறது.</p><p> இந்த நிலையில், சவுதி அரேபியாவுக்கு எதிரான தங்களது கடற்படை நடவடிக்கைகளைத் தொடர்வோம் என்றும், முற்றுகைக்கு முற்றுகை என்ற சமன்பாட்டை அமுல்படுத்துவதில் விடாப்பிடியாக இருப்போம் என்றும் ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரீ கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>ஆனால், வணிகக் கப்பல்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சர்வதேசச் சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை இந்தத் தாக்குதல்கள் மீறுகின்றன என சவுதி அரேபியாவின் அரசாங்க செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p><h2>தீவிரமாக விரிவடைந்து</h2><p> </p><p>ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் முற்றுகைக்கு எதிராகவே தற்போது செங்கடலில் கடற்படை முற்றுகையை ஹவுதிகள் முன்னெடுத்துள்ளனர். மட்டுமின்றி, சவுதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதன் காரணமாக ஈரான் போர் தீவிரமாக விரிவடைந்து வருவதாகவே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34984bb1-f91f-468e-b51a-3d31512f8487/26-6a61ec2190744.webp' /></p><p> </p><p>ஏற்கனவே இஸ்ரேலின் நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகம் இரகசியமாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளிவந்து விவாதத்திற்கு காரணமானது. </p><p>மட்டுமின்றி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதும், அதற்கு பதிலடியாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T10:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை: காசோலை மோசடி வழக்கில் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/court-orders-one-year-jail-for-actor-vimal-1784800416"></link>
            <id>https://news.lankasri.com/article/court-orders-one-year-jail-for-actor-vimal-1784800416</id>
            <summary type="text">தமிழ் திரைப்பட நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசோலை மோசடிநடிகர் விமல் நடித்து, தயாரித்த மன்னன் வகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் திரைப்பட நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2> காசோலை மோசடி</h2><p>நடிகர் விமல் நடித்து, தயாரித்த மன்னன் வகையறா திரைப்படத்திற்காக பைனான்சியர் கோபி என்ற நபரிடம் இருந்து ரூ 4.5 கோடியை விமல் பெற்றுள்ளார்.</p><p>திரைப்படம் வெளியாகிய பிறகும் விமல் கொடுத்த தொகையை திருப்பி தராமல் இருந்துள்ளார்.</p><p>பின்னர் வாங்கி தொகைக்கான காசோலை ஒன்றை பைனான்சியர் கோபியிடம் கொடுத்துள்ளார் விமல், ஆனால் அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d574c7-92ea-4d62-9fd2-ee772f432325/26-6a61e4a1be2b5.webp' /></p><p></p><p> இதனால் அதிர்ச்சியடைந்த பைனான்சியர் கோபி சென்னையில் உள்ள 11வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.</p><h2>விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை</h2><p>நீதிமன்ற விசாரணையில் விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.</p><p>மேலும் வாங்கிய தொகையை முறையாக திருப்பிச் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.</p><p> இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து விமல் தரப்பினர் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.</p><p> மேலும் தண்டனை அறிவிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p> இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T09:54:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு பவுன் தங்க விலை எவ்வளவு?(23-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784799911"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784799911</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (23-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (23-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,321,003.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,600.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 372,800.00.</p><p>

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,720.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 341,750.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,780.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 326,200.00.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T09:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் எசெக்ஸ் கடலில் தத்தளித்த சிலர்: சிறுமியும், பெண்ணும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/essex-coast-tragedy-teen-girl-and-woman-dead-1784799318"></link>
            <id>https://news.lankasri.com/article/essex-coast-tragedy-teen-girl-and-woman-dead-1784799318</id>
            <summary type="text">பிரித்தானியாவின் எசெக்ஸ் கடற்கரை பகுதியில் நீரில் மூழ்கி சிறுமியும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.பிரித்தானிய கடற்கரையில் சோகம்புதன்கிழமை மாலை பிரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் எசெக்ஸ் கடற்கரை பகுதியில் நீரில் மூழ்கி சிறுமியும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.</p><h2>பிரித்தானிய கடற்கரையில் சோகம்</h2><p>புதன்கிழமை மாலை பிரித்தானியாவின் எசெக்ஸ் கடற்கரையில் சிறுமி ஒருவரும், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கடல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p> கோல்செஸ்டர் பகுதிக்கு அருகில் உள்ள வெஸ்ட் மெர்சியா பகுதியில் சிலர் கடலில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.</p><p></p><p> காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் தீவிரமாக செயல்பட்டும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்பது எசெக்ஸ் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0cb0515-9167-4044-9e97-3ec1b4c4d5fc/26-6a61e05805190.webp' /></p><p> ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் இரண்டு பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>கடலில் நிகழ்ந்த இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பரிச்சயமானவர்கள் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அதே சமயம் சம்பந்தப்பட்ட கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளை சுற்றி பொலிஸார் மற்றும் மருத்துவ சேவை படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T09:35:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுப் பேருந்தை திருடிச் சென்ற நபர்: துரத்திப் பிடித்த பொலிசார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drunk-man-steals-bus-in-telangana-police-chased-1784799310"></link>
            <id>https://news.lankasri.com/article/drunk-man-steals-bus-in-telangana-police-chased-1784799310</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், அரசு பேருந்தை ஒருவர் திருடிச் செல்ல, பொலிசார் அவரை துரத்திப் பிடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அரசுப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், அரசு பேருந்தை ஒருவர் திருடிச் செல்ல, பொலிசார் அவரை துரத்திப் பிடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
</p><h3>
அரசுப் பேருந்தை திருடிச் சென்ற நபர்
</h3><p>
தெலங்கானா மாநிலத்தில், பேருந்து நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றைக் காணாத அலுவலர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் மூலம் பேருந்து பயணிக்கும் இடத்தை அறிந்துகொண்ட பொலிசார் பேருந்தை துரத்திச் சென்றுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨Shocking! A man allegedly stole a parked <a href="https://x.com/hashtag/TGSRTC?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TGSRTC</a> bus from <a href="https://x.com/hashtag/Korutla?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Korutla</a> bus stand in <a href="https://x.com/hashtag/Jagtial?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Jagtial</a>, triggering an 18-km police chase. After ramming vehicles, the bus crashed near <a href="https://x.com/hashtag/Metpalli?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Metpalli</a>. Accused Sambayya was arrested. Motive under probe. <a href="https://x.com/hashtag/Telangana?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Telangana</a> Crime <a href="https://x.com/TGSRTCHQ?ref_src=twsrc%5Etfw">@TGSRTCHQ</a> <a href="https://x.com/hashtag/Crime?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Crime</a> <a href="https://x.com/hashtag/Sambayya?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Sambayya</a> <a href="https://t.co/W74GiFqriR">pic.twitter.com/W74GiFqriR</a></p>&mdash; Rajesh Kumar Reddy E V (@rajeshreddyega) <a href="https://x.com/rajeshreddyega/status/2079843114794340658?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பேருந்தை இயக்கிய நபர் கண்மூடித்தனமாக பேருந்தை இயக்கியதுடன், மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோத, சாலையில் பயணித்துக்கொண்டிருந்த மற்ற வாகன ஓட்டிகள் திகிலடைந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96e9df03-7608-4fd3-b9fe-3cd84f8a0273/26-6a61e0510adcc.webp' /></p><p>

ஒரு இடத்தில் பொலிசார் சாலையின் குறுக்கே தடுப்புகளை ஏற்படுத்த, பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த மரம் ஒன்றில் மோதி நின்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99441e75-ec56-4f61-824e-b5641572b83e/26-6a61e0505a6cc.webp' /></p><p>

ஏற்கனவே பொலிசார் 18 கிலோமீற்றர் தூரம் பேருந்தை துரத்திப் பிடித்த நிலையில், பேருந்து நின்றதும் அதிலிருந்த அந்த நபர் பேருந்திலிருந்து இறங்கி தப்பியோடியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
மீண்டும் பொலிசார் அவரை துரத்திப் பிடித்த நிலையில், அவர் மது போதையிலிருந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், பேருந்து நிலையத்தில் நுழைந்து ஒருவர் யாருக்கும் தெரியாமல் பேருந்தை வெளியே எடுத்துச் சென்றது எப்படி என்னும் கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T09:35:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாடகை மோசடி... கனடாவில் இந்திய வம்சாவளி இளம்பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-woman-arrested-in-canada-rental-scam-1784798120"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-woman-arrested-in-canada-rental-scam-1784798120</id>
            <summary type="text">கனடாவில், வாடகை மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாடகை மோசடி...

கனடாவின் ப்ராம்டனில் வாழும் சவ்ரீத் கௌர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், வாடகை மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h3>

வாடகை மோசடி...
</h3><p>
கனடாவின் ப்ராம்டனில் வாழும் சவ்ரீத் கௌர் (27) என்னும் பெண், வீடு வாடகைக்கு இருப்பதாக விளம்பரம் செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/051ce274-a2c5-4fa7-b6ba-1651dc23392d/26-6a61dba98deaa.webp' /></p><p>
அந்த விளம்பரத்தை நம்பி, பலர் கௌரை அணுகி வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன், டெபாசிட் தொகையும் செலுத்தியுள்ளனர்.</p><p>

ஆனால், அவர்கள் சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் செல்லும்போதுதான் தெரிந்துள்ளது, அந்த வீட்டில் ஏற்கனவே ஒரு குடும்பம் வாடகைக்கு இருப்பதும், அந்த வீட்டை வாடகைக்கு விடும் திட்டமே அந்த வீட்டுக்காரருக்கு இல்லை என்பதும்!
</p><p>
இதில் சிலர் தாங்கள் ஏற்கனவே வசித்த வீட்டை காலி செய்துவிட்டு தங்கள் உடைமைகளுடன் புறப்பட்டு வந்துள்ளார்கள். ஆனால், அவர்கள் வாடகை ஒப்பந்தம் செய்து, குடியிருப்பதற்காக வந்த வீட்டில் ஏற்கனவே வேறொரு குடும்பம் வசித்துவருவது தெரியவந்ததால், என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்ற சம்பவங்களும் நடந்துள்ளன.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், அப்படி சுமார் 17 பேரை ஏமாற்றிய சவ்ரீத் கௌர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சுமார் 60,000 டொலர்களுக்கும் அதிகமான தொகையை இந்த வகையில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் மீது 38 மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடயம் என்னவென்றால், வீடு வாடகைக்கு இருப்பதாக அவருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 17 பேரில் ஒருவருக்குக் கூட அவர் உறுதியளித்தபடி வீடும் கிடைக்கவில்லையாம், அவர் வாங்கிய டெபாசிட்டும் திருப்பிக் கொடுக்கப்படவில்லையாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T09:15:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thoothukudi-arunchalam-dies-after-police-enquiry-1784797290"></link>
            <id>https://news.lankasri.com/article/thoothukudi-arunchalam-dies-after-police-enquiry-1784797290</id>
            <summary type="text">தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் உயிரிழந்துள்ள நிலையில், காவல்துறை விளக்கமளித்துள்ளது. 


தொடரும் காவல் மரணம் 

கன்னி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் உயிரிழந்துள்ள நிலையில், காவல்துறை விளக்கமளித்துள்ளது. </p><h3>


தொடரும் காவல் மரணம் </h3><p>

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் குட்கா வழக்கில் விசாரணை கைதியாக இருந்த சபரிவர்மன், கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de6341fa-eb62-421e-9e67-9e1219a71ff6/26-6a61d86c92e97.webp' /></p><p>

முதலில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் கடுமையான தாக்குதல் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. </p><p>

சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், காவலர் சிவகுமார் ஆகிய மூவர் மற்றும் 8 கைதிகள் தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h3>

தூத்துக்குடியில் அருணாச்சலம் உயிரிழப்பு</h3><p> 

இந்நிலையில், தூத்துக்குடியில் ஒரு விசாரணை கைதி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>தூத்துக்குடி, அமுதா நகரை சேர்ந்த 27 வயதான அருணாச்சலம் அரசு மதுபான கடை பாரில் வேலை பார்த்து வந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cd1f703-7b9b-4780-898d-6dd53c031a37/26-6a61d86be1558.webp' /></p><p>

கடந்த 17ஆம் தேதி கடையை மூடிய பின்பும், சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக தென்பாகம் காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். </p><p>

அதே நாளில் உங்களது மகன் மயங்கி விழுந்து விட்டதாக அருணாச்சலத்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், தற்போது அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 4 காவலர்கள் எனது மகனை அடித்து கொன்று விட்டதாக அருணாசலத்தின் தாய் தெரிவித்துள்ளார்.</p><p>

இது குறித்து பேசிய அவர், எனது மகனை 4 காவலர்கள் அடித்ததாக அவன் தெரிவித்தான். எனது மகனுக்கு இதற்கு முன்பு வலிப்பு வந்ததே இல்லை. எனக்கு நீதி வேண்டும். அந்த 4 காவலர்கள் வர வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.</p><p> 

மேலும், அருணாச்சலம் காவலர்கள் தன்னை அடித்ததாக மருத்துவமனையில் இருந்தபடி பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது. </p><h3> 

காவல்துறை விளக்கம் </h3><p>

இந்நிலையில், அருணாச்சலம் மரணமடைந்தது லாக்-அப் டெத் அல்ல என மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் விளக்கமளித்துள்ளார். </p><p>

இது குறித்து பேசிய அவர், "காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அருணாச்சலத்தை மருத்துவமனை அழைத்துச் சென்றபோது அங்கு மீண்டும் மயங்கி விழுந்தார். 

கைது செய்யப்பட்ட அன்றைய தினமே அருணாச்சலம் மயங்கி விழுந்த தகவலை உறவினர்களுக்கு அளித்தோம். </p><p>மயங்கி விழுந்த அருணாச்சலத்தை பெற்றோர் மற்றும் காவலர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். 

அருணாசலத்தின் தலையில் கட்டி இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். அருணாசலத்தை அடிக்கவில்லை, இது லாக்-அப் மரணம் இல்லை” என தெரிவித்துள்ளார்.
</p><h3>
 கனிமொழி கண்டனம் </h3><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, "நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8b8f4fd-a085-4462-afa6-a9154e822546/26-6a61d86d41418.webp' /></p><p>

காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.<br><br>காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில்… <a href="https://t.co/jNm4rPKFWq">https://t.co/jNm4rPKFWq</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2080201827338076527?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T09:01:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர வெப்பத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடொன்று: பல நகரங்களில் வெப்பநிலை உச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-suffers-heat-disaster-1784796959"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-suffers-heat-disaster-1784796959</id>
            <summary type="text">ஜப்பானிய நகரங்கள் பல 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் மேலான வெப்பத்தைப் பதிவு செய்துள்ளதால், கொடுமையான வெப்ப நாட்கள் என&amp;nbsp;அதிகாரிகளால் குறிப்பிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானிய நகரங்கள் பல 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் மேலான வெப்பத்தைப் பதிவு செய்துள்ளதால், கொடுமையான வெப்ப நாட்கள் என&nbsp;அதிகாரிகளால் குறிப்பிடப்படுகிறது.</p><h2>கொடுமையான வெப்பம்</h2><p>
</p><p>புதன்கிழமையன்று நிலவிய கடும் வெப்பத்தை அவசரக்கால அதிகாரிகள் ஒரு பேரிடர் என்றே குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, நாடு முழுவதும் வெப்பவாதம் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aae1c257-5d41-43fc-949d-66799b9651ff/26-6a61db678cbf9.webp' /></p><p> </p><p>கடந்த ஒரு வாரத்தில்&nbsp;மட்டும் வெப்பம் தொடர்பான காரணங்களால் குறைந்தது 14 பேர் மரணமடைந்துள்ளதாக அவசரக்காலப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>செவ்வாய்க்கிழமையன்று மூன்று முக்கிய நகரங்களில் வெப்பநிலை கொடுமையான வெப்பம் கொண்ட நாள் என்று பொருள்படும் கொகுஷோபி (kokushobi) என்ற புதிய உச்ச வரம்பைத் தாண்டியதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>நகோயாவின் மையப்பகுதி மற்றும் கிழக்கே டோக்கியோவுக்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட பெரும் பகுதிகளில், புதன்கிழமையன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நெருங்கின அல்லது அதைத் தாண்டியுள்ளன.</p><p></p><p> </p><p>இதனிடையே, ஜப்பானின் 47 மாகாணங்களில் 41-ல் வெப்பவாதம் (heatstroke) குறித்த எச்சரிக்கைகளை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) விடுத்துள்ளது; மேலும், பொதுமக்கள் - குறிப்பாக முதியவர்கள் - உடல் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது. </p><p>தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை முகமையின் தகவலின்படி, கடந்த வாரத்தில் ஜப்பானில் சுமார் 11,000 பேர் அவசர மருத்துவ சிகிச்சையை நாடியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b64c95f4-00fe-4677-8843-36c7ae45a2de/26-6a61db684abef.webp' /></p><h2>சுமார் 1,300 பேர்கள்</h2><p> </p><p>அவர்களில் 14 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோதே மரணமடைந்திருந்ததாகத் தெரிவித்த அந்த அமைப்பு, கடும் வெப்பநிலையை மக்கள் ஒரு பேரிடர் என்றே கருத வேண்டும் என்றும் கூறியுள்ளது. </p><p>இதனிடையே, பள்ளிகளின் உடற்பயிற்சிக் கூடங்களில் குளிர்சாதன வசதிகளை அமைத்தல் மற்றும் பணிபுரியும் இடங்களில் முறையான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வணிக நிறுவனங்களை வலியுறுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், கடும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க ஜப்பான் அரசாங்கம் முயற்சித்து வருவதாக அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6eac1e9-642c-4094-88d7-9a78a55fbb26/26-6a61db68ef9a1.webp' /></p><p> </p><p>மேலும், ஜப்பானில் ஆண்டுதோறும் சுமார் 1,300 பேர் வெப்பம் தொடர்பான காரணங்களால் உயிரிழக்கின்றனர் என்றும், 2030-ஆம் ஆண்டிற்குள் அந்த எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>அத்துடன், அனைத்து குடிமக்களும் தங்கள் பகுதிகளில் உள்ள வெப்பவாதம் (heatstroke) குறித்த எச்சரிக்கைகளின் நிலையைச் சரிபார்க்குமாறும், குளிர்ச்சியான சூழலில் இருக்க ஏர் கண்டிஷனர்கள் மற்றும் பிற குளிர்விக்கும் சாதனங்களைச் சரியாகப் பயன்படுத்துமாறும், அடிக்கடி தண்ணீர் அருந்தி சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T08:54:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிறுவனம் தொடங்கும் அதானி? விதியை தளர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/adani-seek-rule-change-for-launch-airline-1784793220"></link>
            <id>https://news.lankasri.com/article/adani-seek-rule-change-for-launch-airline-1784793220</id>
            <summary type="text">அதானி குழுமம் விமான நிறுவனம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய உள்நாட்டு விமான சந்தை 

இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் இண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதானி குழுமம் விமான நிறுவனம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><h3>

இந்திய உள்நாட்டு விமான சந்தை </h3><p>

இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து சுமார் 90% பங்கைக் கொண்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ad1de41-cae5-41b0-8f46-4ae0c3250670/26-6a61c8854196d.webp' /></p><p> 

இந்த நிறுவனங்களின் சேவையில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், இந்தியா முழுவதும் விமானபயணிகள் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை உள்ளது. </p><p>

கடந்த ஆண்டு இண்டிகோ விமானசேவையில் ஏற்பட்ட பாதிப்பால், நாடு முழுவதும் பயணிகள் பாரிய சிக்கலை எதிர்கொண்டனர்.&nbsp;</p><p></p><p>

இதன் காரணமாக, விமான சேவையில் உள்ள இருமுனை ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி, புதிய விமான நிறுவனங்களின் வருகை மூலம் போட்டியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. </p><h3> 

விமான நிறுவனம் தொடங்கும் அதானி?</h3><p> 

இந்நிலையில், இந்தியாவில் பல்வேறு துறைகளில் கோலாச்சி வரும் அதானி குழுமம், விமான நிறுவனம் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/205647fd-04ad-4413-b2cd-031192a3eede/26-6a61c885e4f93.webp' /></p><p>

அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், அகமதாபாத், லக்னோ, மும்பை, குஜராத், ஜெய்ப்பூர், குவஹாத்தி, மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் நவி மும்பை உள்ளிட்ட 8 விமான நிலையங்களை இயக்கி வருகிறது. </p><p>

மேலும், மும்பை சர்வதேச விமான நிலைய லிமிடெட்டில் 73% பங்குகளையும், நவி மும்பை சர்வதேச விமான நிலைய லிமிடெட்டில் 74% பங்குகளையும் கொண்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

இதே போல், ஜிஆர்எம் நிறுவனம் டெல்லி, ஹைதராபாத், கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையம், பீதர் மற்றும் நாக்பூர் ஆகிய விமான நிலையங்களை இயக்கி வருவதோடு, போகபுரத்தில் புதிய விமான நிலையத்தை கட்டி வருகிறது.
</p><p>
தற்போதுள்ள விதிமுறைகள், விமான நிலையங்களை இயக்கும் நிறுவனங்கள், விமான நிறுவனத்தில் 10% க்கும் அதிகமான பங்குகளை வைத்திருப்பதைத் தடுக்கின்றன.</p><p>

இந்நிலையில், இந்த விதியில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை அதானி குழுமம் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p> 

இதன் காரணமாக, அதானி குழுமம் விமான நிறுவனத்தை தொடங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
அதேவேளையில், விமான நிலையங்கள் நிர்வகிக்கும் நிறுவனங்கள், விமான சேவையை தொடங்கினால் விமானங்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் என விமான சேவை நிறுவனங்கள் இந்த திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். </p><p>

அவ்வாறு விதிகள் திருத்தப்பட்டால், விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனங்களின் வணிகங்களுக்கு இடையே ஒரு நடுநிலையான உறவைப் பேணுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T08:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் வீடொன்றில் பயங்கர தீ: 5 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/peru-residential-fire-10-dead-1784794013"></link>
            <id>https://news.lankasri.com/article/peru-residential-fire-10-dead-1784794013</id>
            <summary type="text">பெருவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.வீடொன்றில் பயங்கர தீபெரு தலைநகர் லீமாவில் உள்ள வீடு ஒன்றில் அதிகாலை ஏற்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2>வீடொன்றில் பயங்கர தீ</h2><p>பெரு தலைநகர் லீமாவில் உள்ள வீடு ஒன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் மற்றும் 5 பெரியவர்கள் என மொத்தம் 10 பேர்&nbsp; பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p> லீமாவின் லா விக்டோரியா மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த கோர சம்பவமானது அரங்கேறியுள்ளது.</p><p> குடிமை பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்த தகவலின் படி, இந்த சம்பவத்தில் மேலும் 2 பேர் காயமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca80c6e-47d3-4909-95d1-7aba020f3a50/26-6a61cb9ead826.webp' /></p><p> சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.&nbsp;
மேலும் முதற்கட்ட விசாரணையில், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த எரியக்கூடிய மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மின்சார வாகனங்கள் காரணமாக தீ மிகவும் வேகமாக பரவியது என தெரியவந்துள்ளது.</p><p></p><p> தீ விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதியை பெரு ஜனாதிபதி கெய்கோ கியூமோரி பார்வையிட்டார்.</p><p> தீ விபத்துக்கான மூல காரணத்தை கண்டறிய சூழ்நிலைகள் மற்றும் காரணங்களை முழுமையாக கண்டறிய விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-23T08:07:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-transit-1784793653"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-transit-1784793653</id>
            <summary type="text">நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
</p><p>
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.</p><p>

இந்நிலையில். செவ்வாய் ஜூலை 24ஆம் திகதியான நாளை மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.&nbsp;</p><p> மேலும், செவ்வாய் இந்த நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை இருப்பார்.
</p><p>
அந்தவகையில், நாளை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாயால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.&nbsp;</p><p></p><h2>மேஷம் </h2><ul><li>மங்களகரமானதாக இருக்கும். </li><li>தொழில் ரீதியாக நல்ல பலனைப் பெறுவார்கள்.</li><li> நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். </li><li>பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.</li><li>பதவி உயர்வு கிடைக்கும்.</li><li> தலைமைத்துவ திறன்கள் மேம்படும். </li><li>புதிய வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.</li><li> சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். </li><li>புதிய வேலை யை தொடங்கினால் வெற்றி கிடைக்கும். </li><li>ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1d80d6d-6c9d-49eb-9ce7-77cf3fb38e60/26-6a61ca3742f08.webp' /></p><h2>சிம்மம்</h2><ul><li>அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். </li><li>வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். </li><li>வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.</li><li>புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.</li><li> சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். </li><li>பணியிடத்தில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். </li><li>சிலருக்கு நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0e7f856-c295-4c88-92e2-4de9905f9930/26-6a61ca37e67e1.webp' /></p><p>
</p><h2>விருச்சிகம் </h2><ul><li>தைரியம் அதிகரிக்கும். </li><li>முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். </li><li>போட்டி தேர்வுகளில் மாணவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். </li><li>அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால்&nbsp; பாராட்டைப் பெறுவார்கள். </li><li>வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். </li><li>பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f262c58-b698-4325-81db-d99a0b4710ef/26-6a61ca3898ad0.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T08:01:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் இருந்து தூதர்களை திரும்ப பெரும் பிரித்தானியா: 12வது நாளாக தொடரும் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-withdraws-embassy-staff-from-iran-1784790267"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-withdraws-embassy-staff-from-iran-1784790267</id>
            <summary type="text">ஈரானில் உள்ள தூதரக அதிகாரிகளை பிரித்தானிய தற்காலிகமாக திரும்ப பெற்றுள்ளது. தூதர்களை திரும்ப பெரும் பிரித்தானியாமத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் உள்ள தூதரக அதிகாரிகளை பிரித்தானிய தற்காலிகமாக திரும்ப பெற்றுள்ளது.</p><h2> தூதர்களை திரும்ப பெரும் பிரித்தானியா</h2><p>மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஈரானில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை தற்காலிகமாக திரும்ப பெறுவதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.</p><p> பிரித்தானிய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகம் தங்களுடைய செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5818852-cc25-4335-8750-b001d586c7e7/26-6a61bcfd5aa0e.webp' /></p><p> மேலும் இணைய வழியில் தூதரக பணிகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஈரானை குறிவைத்து தொடர்ந்து 12 வது நாளாக அமெரிக்கா தங்களது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.</p><p></p><p> &nbsp;அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானிய தலைநகரில் உள்ள மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினரும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f1ab89d-d3ab-4c11-9ef1-790a18bbf3cf/26-6a61bcfe266bf.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T07:04:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள்.., ஏன் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/why-air-hostess-are-always-female-in-tamil-1784789863"></link>
            <id>https://news.lankasri.com/article/why-air-hostess-are-always-female-in-tamil-1784789863</id>
            <summary type="text">பொதுவாக, விமானத் துறையில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். 

குறிப்பாக, விமானங்களில் பணிபுரியும் கேபின் குழுவினரில் பெண்களின் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, விமானத் துறையில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.</p><p> 

குறிப்பாக, விமானங்களில் பணிபுரியும் கேபின் குழுவினரில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.</p><p>

ஆனால், விமானப் போக்குவரத்து தொடங்கிய காலத்தில் நிலைமை வேறுபட்டிருந்தது. </p><p>

1912ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த DELAG விமான நிறுவனத்தில் பணியாற்றிய ஹென்ரிச் குபிஸ், வரலாற்றின் முதல் விமானப் பணிப்பாளராகக் கருதப்படுகிறார்.&nbsp;&nbsp;</p><p>அந்தக் காலகட்டத்தில் கேபின் குழுவினராக ஆண்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b25279-35fb-42d6-b669-b87181916ba2/26-6a61bb6a1c6cd.webp' /></p><p>பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதைவிட, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே கேபின் குழுவினரின் முக்கியப் பணியாக இருந்தது. </p><p>

இதனால், விமான நிறுவனங்கள் ஆண்களையே அதிகம் பணியமர்த்தின.

இதில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் எலன் சர்ச். </p><p>பதிவு பெற்ற செவிலியரான இவர், 1930ஆம் ஆண்டு போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக இணைந்தார்.&nbsp;&nbsp;</p><p>இதன் பின்னர், பயணிகளைக் கவனித்துக்கொள்ள பெண் செவிலியர்களை விமான நிறுவனங்கள் அதிகளவில் பணியமர்த்தத் தொடங்கின.
</p><p>
இதன் காரணமாக, விமானப் பணிக்குழுவில் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95fd25b9-4f90-4095-9954-0b5addde9737/26-6a61bb696acee.webp' /></p><p>மேலும், பெண்களின் வரவேற்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை திறன்களும் இந்தத் துறையில் அவர்களுக்கு சாதகமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.&nbsp;</p><p>20ஆம் நூற்றாண்டின் மத்தியில், விமான நிறுவனங்கள் பெண் பணியாளர்களின் வயது, எடை, திருமண நிலை மற்றும் தோற்றம் தொடர்பாக கடுமையான விதிமுறைகளை வகுத்தன.
</p><p>
பெண்களின் தோற்றத்தை வணிக ரீதியாக பயன்படுத்தியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.</p><p>

தற்போது, பல விமான நிறுவனங்களில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் கேபின் குழுவில் பணியாற்றுகின்றனர். </p><p>இதனால், விமானப் பணிக்குழு என்றாலே பெண்கள் என்ற பிம்பம் உருவாகியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசுக்களுக்கு மேய்ச்சலுக்குப் புல் இல்லாததால் சுவிஸ் விவசாயிகள் எடுத்துள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cows-brought-down-from-mountains-early-for-drought-1784789831"></link>
            <id>https://news.lankasri.com/article/cows-brought-down-from-mountains-early-for-drought-1784789831</id>
            <summary type="text">சுவிஸ் மாகாணமொன்றில், மலைகளில் பசுக்களுக்கு மேய்ச்சலுக்குப் புல் இல்லாததால், முன்கூட்டியே அவற்றை கீழே கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள் விவச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிஸ் மாகாணமொன்றில், மலைகளில் பசுக்களுக்கு மேய்ச்சலுக்குப் புல் இல்லாததால், முன்கூட்டியே அவற்றை கீழே கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள் விவசாயிகள்.
</p><h3>
சுவிஸ் விவசாயிகள் எடுத்துள்ள முடிவு
</h3><p>
சுவிட்சர்லாந்தில், விவசாயிகள் தங்கள் பசுக்களை ஆல்ப்ஸ் மலையில் மேய்ப்பது வழக்கம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67540987-eede-48b3-a058-69a46e78922f/26-6a61bb485bce2.webp' /></p><p>
அப்படி ஆல்ப்ஸ் மலையில் மேயும் பசுக்கள் பலதரப்பட்ட தாவரங்களை உட்கொள்வதால், அவை தரும் பாலுக்கும், அதிலிருந்து தயாரிக்கப்படும் ஆல்ப்ஸ் பாலாடைக்கட்டிக்கும் அதிக மதிப்பு உள்ளது.&nbsp;</p><p>
ஆகவே, மலைகளில் மேய்க்கப்படும் பசுக்களுக்கு அரசு நிதி உதவியும் செய்கிறது.&nbsp;</p><p></p><p>

இப்படி மலையில் மேயும் பசுக்களை, பொதுவாக செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில்தான் கீழே இறக்கிக் கொண்டுவருவார்கள் விவசாயிகள்.
</p><p>
ஆனால், ஜூன் மாதம் கல்மழை பெய்ததால் புல்வெளிகள் பாதிக்கப்பட்டதுடன், வறட்சி காரணமாக மீண்டும் புல் வளரவும் இல்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56c4f989-185b-4d75-af37-249587116216/26-6a61bb490c9a9.webp' /></p><p>
ஆகவே, Fribourg மாகாண விவசாயிகள் புல் இல்லாததால் இப்போதே தங்கள் பசுக்களை மலையிலிருந்து இறக்கி கீழே கொண்டுவரத் துவங்கிவிட்டார்கள்.</p><p>

இதனால் விவசாயிகளுக்கு இரண்டு இழப்புகள்: ஒன்று, மலையில் மேயாமல் பண்ணையில் மாட்டுத்தீவனம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் பாலுக்கு குறைவான விலையே கிடைக்கும். இரண்டு, அரசு வழங்கும் நிதி உதவி கிடைக்காது.
</p><p>
ஆக, சில விவசாயிகள் தங்கள் பசுக்களில் சிலவற்றை விற்கத் துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதனால் பசு ஒன்றிற்கு சுமார் 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுமாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:57:50+00:00</updated>
        </entry>
    </feed>
