<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-12T12:19:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா திரும்பிய ஹரி, மேகன் தம்பதியர்: எங்கு வாழ்கிறார்கள்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/where-are-prince-harry-and-meghan-staying-in-uk-1789215331"></link>
            <id>https://news.lankasri.com/article/where-are-prince-harry-and-meghan-staying-in-uk-1789215331</id>
            <summary type="text">Prince Harry and Meghan Markle rumoured staying secret farmhouse retreat: பிரித்தானியா திரும்பிய இளவரசர் ஹரியும், மேகனும், ரகசிய பண்ணை வீடொன்றில் தங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prince Harry and Meghan Markle rumoured staying secret farmhouse retreat: பிரித்தானியா திரும்பிய இளவரசர் ஹரியும், மேகனும், ரகசிய பண்ணை வீடொன்றில் தங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>

பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரியும் அவரது மனைவி மேகனும், ஆறு ஆண்டுகளுக்கு முன் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார்கள்.
</p><p>
இந்நிலையில், ஹரியும் மேகனும் தங்கள் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார்கள். </p><p>அவர்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/C66GBYdIITZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/C66GBYdIITZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/C66GBYdIITZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by 𝐑𝐨𝐛𝐞𝐫𝐭𝐨 𝐓𝐫𝐚𝐧𝐜𝐡𝐢𝐧𝐨 (@roberto_tranchino)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script><br></p><h2>

இளவரசர் ஹரி, மேகன் தம்பதியர் எங்கு வாழ்கிறார்கள்?
</h2><p>
ராஜ குடும்பத்துக்கு சொந்தமாக ஏராளமான மாளிகைகள் இருந்தும், பிரித்தானியா திரும்பியுள்ள ஹரி, மேகன் தம்பதியர் சாதாரண குடிமக்களே என மன்னர் அறிவித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு அரண்மனையில் இடமில்லை என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.
</p><p>
இந்நிலையில், அவர்கள் எங்கு தங்கியுள்ளார்கள் என்பது குறித்து செய்திகளும், வதந்திகளும் வெளியானவண்ணம் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bd5388a-fd71-4bea-80bd-a8bad284428b/26-6aa542ddf3995.webp' /><br></p><p>

சமீபத்தில், ஹரியின் மனைவியான மேகன், Cotswolds என்னும் பகுதியில் அமைந்துள்ள பண்ணை வீடு ஒன்றிற்குச் செல்லும் காட்சிகள் வெளியாகின.</p><p>

அதைத் தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரில் ஹரியும் மேகனும் தங்கக்கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.
</p><p>
Chipping Norton மற்றும் Great Tew என்னும் கிராமங்கள் அமைந்துள்ள பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள Soho Farmhouse என்னும் ஆடம்பர மாளிகையில் உள்ள ஒரு வீட்டில் ஹரி, மேகன் குடும்பம் தங்கலாம் என கூறப்படுகிறது.
</p><p>
என்றாலும், இந்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை!<br></p>]]></content>
            <updated>2026-09-12T12:17:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிக்கோலஸ் பூரன் முதல் பந்திலேயே அவுட்: புரட்டியெடுத்த ஹோப், ஹெட்மையர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hetmyer-and-hope-partnership-beat-trinbago-1789211896"></link>
            <id>https://news.lankasri.com/article/hetmyer-and-hope-partnership-beat-trinbago-1789211896</id>
            <summary type="text">Guyana amazon warriors beat trinbago: CPL டி20 போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸை வீழ்த்தியது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Guyana amazon warriors beat trinbago: CPL டி20 போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.</p><p>

ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்த CPL டி20 போட்டியில், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கயானா அமேசான் வாரியார்ஸிடம் தோல்வியுற்றது.&nbsp;</p><h2>மெஹிதி ஹசன்&nbsp;அபாரம் 
</h2><p>

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியார்ஸ் அணிகள் மோதிய CPL டி20 போட்டி ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3633aa0e-9b8b-4584-ba42-4cb3118389d1/26-6aa536c180021.webp' /></p><p>

முதலில் ஆடிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் காலின் மன்ரோ 16 பந்துகளில் 26 ஓட்டங்கள் விளாசினார்.

அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் சந்தித்த முதல் பந்திலேயே மிராஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.</p><p> பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ் 22 ஓட்டங்களில் அவுட் ஆனார். 

அதனைத் தொடர்ந்து வந்த வீரர் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ஜஸ்டின் கிரேவ்ஸ் 35 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 126 ஓட்டங்களே எடுத்தது.

மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளும், ஷாமர் ஜோஸப் 2 விக்கெட்டுகளும், பிரிட்டோரியஸ் மற்றும் தாஹிர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da5cb3d9-af22-4a89-b195-1e044aa30866/26-6aa536c00988e.webp' /></p><p>
அதன் பின்னர் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில், ஷிம்ரான் ஹெட்மையர் 19 பந்துகளில் 28 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள்) விளாசி வெளியேறினார்.
</p><p>
விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாச, கயானா அணி 18.4 ஓவர்களில் 127 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a98f30-1c31-4895-93b6-4bb9d7571d1b/26-6aa536c0ca278.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/389721e8-d741-4815-8407-2e424a275c76/26-6aa536c232162.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T11:22:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகள் கேட்டுக்கொண்டார்கள்... மோதலில் அமெரிக்கா தலையிடாது: ட்ரம்ப் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-had-called-trump-says-1789212083"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-had-called-trump-says-1789212083</id>
            <summary type="text">Houthis had called Trump admnistration: ஹவுதிகள் ட்ரம்ப் நிர்வாகத்தை தொடர்புகொண்டுள்ளனர்.சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய்வழியை முடக்கிய வான்வழி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis had called Trump admnistration: ஹவுதிகள் ட்ரம்ப் நிர்வாகத்தை தொடர்புகொண்டுள்ளனர்.</p><p>சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய்வழியை முடக்கிய வான்வழித் தாக்குதலுக்கு ஈரானே காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><h2>ஈரான் காரணமா</h2><p>
</p><p>ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து, கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான சவுதி அரேபியாவின் முக்கிய வழித்தடங்களில் ஒன்று இந்தக் கிழக்கு-மேற்கு குழாய்வழி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba364968-2bab-4acb-bc90-f28ecfd51334/26-6aa535b602183.webp' /></p><p> </p><p>முக்கியமான எண்ணெய் குழாய் வழித்தடத்தின் மீதான தாக்குதலுக்கு ஈரான் காரணமா என்று டப்ளினில் செய்தியாளர்கள் கேள்விக்கு, ​​அவர்கள் தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்; அநேகமாக அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளார். </p><p>மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில், தாம் ஒரு நல்ல நண்பராகக் கருதும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேசியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, ஏமனில் ஈரானுடன் இணக்கமான போக்கைக் கொண்ட ஹவுதிகள் தமது நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, இந்த மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடுவதை தாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>ஏற்கனவே, ஹவுதிகளுக்கு எதிராக ட்ரம்பிடம் உதவிக் கோரிய சவுதி பட்டத்து இளவரசருக்கு அவர் கைவிரித்தது சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்தன.</p><h2>அவர்களுக்கு அதிருப்தி</h2><p> </p><p>தற்போது ஹவுதிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே ட்ரம்ப் அந்த முடிவுக்கு வந்துள்ளது உறுதியாகியுள்ளது. மட்டுமின்றி, நாங்கள் இதில் ஈடுபடாமல் இருப்பதே ஹவுதிகளுக்கு மிகவும் விருப்பமாக உள்ளது; </p><p>அதனால்தான் அவர்கள் பெரும்பாலான கப்பல்களைச் செல்ல அனுமதிக்கிறார்கள். ஒரே ஒரு நாட்டின் மீதுதான் அவர்களுக்கு அதிருப்தி உள்ளது; அதை நாங்கள் சரிசெய்துவிடுவோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-12T11:21:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் சற்று வித்தியாசமானதொரு நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/java-indonesia-earthquake-september-1789211383"></link>
            <id>https://news.lankasri.com/article/java-indonesia-earthquake-september-1789211383</id>
            <summary type="text">Indonesia earthquake, different from others: இந்தோனேசியாவில் சற்று வித்தியாசமானதொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



இந்தோனேசியா நாட்டில் இன்று பகல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indonesia earthquake, different from others: இந்தோனேசியாவில் சற்று வித்தியாசமானதொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
</p><p>


இந்தோனேசியா நாட்டில் இன்று பகல் உள்ளூர் நேரப்படி 2.53 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று தாக்கியது.</p><h2>

சற்று வித்தியாசமானதொரு நிலநடுக்கம்
</h2><p>
ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது இந்த நிலநடுக்கம், ஜகார்த்தா, சுமத்ரா உட்பட பல இடங்களில் உணரப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இந்த நிலநடுக்கம் சற்று வித்தியாசமானது என அழைக்கப்படுகிறது.
</p><p>
அதாவது, நிலநடுக்கத்தைப் பொருத்தவரை, அது ரிக்டர் அளவுகோலில் எத்தனையாக பதிவாகிறது என்பதுடன், எவ்வளவு ஆழத்தில் உருவாகிறது என்பதும் முக்கியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7733e2b-d5b2-4847-b8f6-ceb882b14240/26-6aa533f3e9f50.webp' /><br></p><p>
</p><p>
இன்று உருவான நிலநடுக்கத்தைப் பொருத்தவரை, அது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானாலும், பூமியின் பரப்புக்குக்குக் கீழே 376 கிலோமீற்றர் ஆழத்தில் உருவாகியுள்ளது.
</p><p>
இதுபோல் அதிக ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால் ஏற்படும் நில அதிர்வுகள், பொதுவாக நிலப்பரப்பை அடைவதற்குள் அவற்றின் ஆற்றல் வெகுவாகக் குறைந்துவிடும்.
</p><p>
அதனால், அதிக ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால் அபாயம் இல்லை என்று கூறிவிடமுடியாது, இதே அழவில் ஆழம் குறைந்த இடத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வுகளை ஒப்பிடும்போது, ஆழம் அதிகமான இடங்களில் ஏற்படும் அதிர்வுகள் வித்தியாசமாக இருக்கும் என்று வேண்டுமானால் கூறலாம்.
</p><p>
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை!<br></p>]]></content>
            <updated>2026-09-12T11:14:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமார் 50,000 யேமன் பொதுமக்கள்... செங்கடல் கடற்கரையோரமாக முன்னேறும் ஹவுதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-advance-along-red-sea-1789208646"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-advance-along-red-sea-1789208646</id>
            <summary type="text">Nearly 50,000 Yemeni civilians flee as Houthis advance: ஹவுதிகள் முன்னேறுவதால் சுமார் 50,000 யேமன் பொதுமக்கள் வெளியேறியுள்ளனர்.
மேற்கு ஏமனில் ஹவுதிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nearly 50,000 Yemeni civilians flee as Houthis advance: ஹவுதிகள் முன்னேறுவதால் சுமார் 50,000 யேமன் பொதுமக்கள் வெளியேறியுள்ளனர்.
</p><p>மேற்கு ஏமனில் ஹவுதிகள் திடீரென முன்னேறியதைத் தொடர்ந்து, சுமார் 50,000 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்; இதனால் முழு கிராமங்களும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.</p><h2>உள்நாட்டுப் போர் மீண்டும்</h2><p>
</p><p>உதவிப் பணியாளர்களின் தகவலின்படி, உணவு இருப்பு குறைந்து வரும் நிலையில், போர்முனைக்கு அருகில் குடும்பங்கள் பல சிக்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4275ecc-6273-478b-b894-287ad7179965/26-6aa5284823119.webp' /></p><p> </p><p>உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான உலகளாவிய அதிகாரப் போட்டியால், மத்திய கிழக்கின் மிக ஏழ்மையான நாடான ஏமனின் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; இந்தப் போட்டி, அந்நாட்டில் அவ்வப்போது நிகழ்ந்துவரும் மோதலை ஒரு முடிவில்லாத போராக மாற்றும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. </p><p>இந்த வாரம் மின்னல் வேக முன்னேற்றத்தின் ஊடாக, ஹவுதிகள், அமெரிக்கா மற்றும் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கப் படைகளிடமிருந்து செங்கடல் கடற்கரையோரத்தில் உள்ள பல நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். </p><p>இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவின் தலையீட்டால் 1,50,000 பேரின் உயிரைப் பறித்து, பலரைத் தீவிரப் பஞ்சத்தின் விளிம்பிற்குக் கொண்டு சென்ற முழு அளவிலான உள்நாட்டுப் போர் மீண்டும் வந்துவிடுமோ என்றும் பலர் அஞ்சுகின்றனர்.</p><p></p><p> </p><p>தைஸ் (Taiz) மற்றும் ஹோடைடா (Hodeidah) மாகாணங்களில், 46,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) வெள்ளிக்கிழமை தெரிவித்தது. </p><p>பல குடும்பங்களைப் பொறுத்தவரை, தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படுவது இது இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாகும். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் உடைமைகளுடன் நகரத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். </p><p>அவசரகாலத் தங்குமிடங்கள், பண உதவி, உணவு, குடிநீர், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புச் சேவைகள் ஆகியவை மிக அவசரமான தேவைகளாக உள்ளன.</p><h2>பாதுகாப்பு சார்ந்த</h2><p> </p><p>
ஹவுதிகளின் முன்னேற்றம் எதிர்பாராத விதமாகவும் வேகமாகவும் நிகழ்ந்துள்ளது; குறிப்பாக, உலகளாவிய காபி வர்த்தகத்தின் பிறப்பிடமாகவும், சாக்லேட் சுவையிலான காபி வகைக்குப் பெயர்க்காரணமாகவும் பரவலாகக் கருதப்படும் 'மோச்சா' (Mocha) எனும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரம் ஹவுதிகளிடம் வீழ்ந்தது இதில் குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd7487fd-4f43-4e50-adc5-5e4d2174765f/26-6aa52848ccb10.webp' /></p><p> </p><p>ஏமன் விவகார ஆய்வாளர்கள், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஏமன் விவகாரத்தில் இராஜதந்திரம் மற்றும் மேம்பாட்டிற்குப் போதிய முக்கியத்துவம் அளிக்காமல், பாதுகாப்பு சார்ந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக நீண்டகாலமாக விமர்சித்து வருகின்றனர். </p><p>21-ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் சன்னி அல்-கொய்தா போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது; ஆனால், 2014-இல் ஷியா ஹவுதிகள் தலைநகரைக் கைப்பற்றும் வரை, அவர்களின் தீவிரவாதக் கிளர்ச்சி மீது அமெரிக்கா குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தவில்லை. </p><p>கடலோரத் தீவுகள் உட்பட முக்கியப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவதன் மூலம், ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் மிக முக்கியமான வர்த்தக மற்றும் எரிசக்திப் பாதையான 'பாப் அல்-மண்டப்' (Bab al-Mandab) நீரிணைக்கு அருகில் நேரடி இருப்பை ஏற்படுத்திக்கொள்ள மேற்கத்திய எதிர்ப்பு மனப்பான்மை கொண்ட ஹவுதிகள் நம்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69a58b93-750d-4935-8f02-12d159bec6b2/26-6aa5284984b99.webp' /></p><p> </p><p>ஆனால் ஹவுதிகள் இயற்கையான பாப் அல்-மண்டப் நீரிணையை முடக்கினால், உலகப் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும். பல வாரங்களாக ஒரு பீப்பாய் 80 டொலருக்கு அருகில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்று வரும் மோதல்கள் கச்சா எண்ணெயின் விலையை ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் அதிகமாக உயர்த்தக் காரணமாக அமைந்துள்ளன. </p><p>ஏமனில் நடைபெறும் சண்டையும், சவுதி அரேபியா மீதான ஹவுதி ஏவுகணைத் தாக்குதல்களும், 2022-ல் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு அந்நாட்டில் நிகழ்ந்த மிக முக்கியமான வன்முறைச் சம்பவங்களாகும். </p><p>ஏமனில் நிலவும் ஸ்திரமின்மையை, சவுதி அரேபியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பிராந்திய சக்திகள் மறைமுகப் போர்களை நடத்துவதற்குப் பயன்படுத்திக்கொண்டுள்ளன; மேலும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரத் தவறியது சக்திவாய்ந்த ஆயுதக் குழுக்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.</p><p> ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன், பிராந்திய அளவிலான விரோத உணர்வும் உச்சத்தை எட்டியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-12T11:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லி தெருக்களில் வலம் வந்த சீன ஜனாதிபதியின் கார்: சுவாரஸ்ய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/xi-jinping-s-car-arrives-in-delhi-1789211264"></link>
            <id>https://news.lankasri.com/article/xi-jinping-s-car-arrives-in-delhi-1789211264</id>
            <summary type="text">Xi Jinping&#039;s car arrives in Delhi under black covers: சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கின் கார், பிளாஸ்டிக் கவர்களால் சுற்றப்பட்டு டெல்லியில் வலம் வந்த விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Xi Jinping's car arrives in Delhi under black covers: சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கின் கார், பிளாஸ்டிக் கவர்களால் சுற்றப்பட்டு டெல்லியில் வலம் வந்த விடயம் கவனம் ஈர்த்துவருகிறது.
</p><p>

இன்றும் நாளையும், இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் BRICS மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்காக சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்தியா வந்துள்ளார்கள்.
</p><h2>
கவனம் ஈர்த்த கார்</h2><p>

இந்நிலையில், கருப்பு நிற கவர்களால் பொதியப்பட்ட கார் ஒன்று டெல்லி தெருக்களில் வலம் வரும் காட்சி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>

அந்தக் கார், சீன ஜனாதிபதியான ஜி ஜின்பின் பயன்படுத்துவதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கார் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/750a26fb-88bf-4b3f-bd70-1a40317a439b/26-6aa53281d9ac7.webp' /><br></p><p>

அது Hongqi N701 என்னும் பலத்த பாதுகாப்பு கொண்ட ஆடம்பர கார் ஆகும். </p><p>சீன நிறுவனமான Hongqi நிறுவனம் அந்தக் காரை தனிப்பட்ட முறையின் ஜி ஜின்பிங்குக்காக தயாரித்துள்ளது. </p><p>Hongqi என்பதன் பொருள், சிவப்புக் கொடி என்பதாகும்.

அதாவது, கவனம் ஈர்க்கக்கூடாது என்பதற்காக கவர்கள் சுற்றப்பட்டு கொண்டுவரப்பட்ட சீன ஜனாதிபதியின் கார், பெருமளவில் கவனம் ஈர்த்துவிட்டது!
</p><p>
இன்னொரு விடயம், இதேபோல மற்றொரு நாட்டின் தலைவருக்காகவும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஆடம்பரக் கார் ஒன்று இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த தலைவர், ரஷ்ய ஜனாதிபதி புடின்!&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-12T11:08:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பங்களை வழங்க முன்வந்த ரஷ்ய நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rosatom-india-nuclear-technologies-1789205382"></link>
            <id>https://news.lankasri.com/article/rosatom-india-nuclear-technologies-1789205382</id>
            <summary type="text">Russia&#039;s Rosatom offers nuclear, critical-mineral technologies: ரஷ்யாவின் Rosatom நிறுவனம் அணுசக்தி, முக்கிய கனிமங்களுக்கான தொழில்நுட்பங்களை வழங்க முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia's Rosatom offers nuclear, critical-mineral technologies: ரஷ்யாவின் Rosatom நிறுவனம் அணுசக்தி, முக்கிய கனிமங்களுக்கான தொழில்நுட்பங்களை வழங்க முன்வந்துள்ளது.
</p><p>ரஷ்ய அரசுக்குச் சொந்தமான முன்னணி அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் (Rosatom), அதிக திறன் கொண்ட அணு உலைகள் மற்றும் சிறிய மட்டுநிலை அணு உலைகள் (SMRs) உள்ளிட்ட பல்வேறு வகையான அணுசக்தி தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது.</p><h2>இருதரப்பு ஒத்துழைப்பு</h2><p>
</p><p>அத்துடன், டைட்டானியம், சிர்கோனியம் மற்றும் அரிய வகை கனிமங்கள் போன்ற முக்கிய கனிமங்கள் சார்ந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அந்த நிறுவனம் தீவிரம் காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a44f1c5a-611e-40b3-b8d4-c316fd471f75/26-6aa51b886bd97.webp' /></p><p>
</p><p>18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நிறுவனத்தின் உயர்மட்டத் தலைவர்கள் இதை தெரிவித்துள்ளனர். பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, டெல்லியில் செப்டம்பர் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. </p><p>இரு தலைவர்களும் எரிசக்தித் துறை உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ததுடன், 2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டொலராக உயர்த்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே தொழில்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் விவாதித்துள்ளனர். </p><p>இந்தியா தனது அணுசக்தித் துறையைத் தொடர்ந்து மேம்படுத்தி வருவதுடன், 2047-ஆம் ஆண்டிற்குள் தனது அணுசக்தி உற்பத்தித் திறனை 100 ஜிகாவாட்டாக (GW) உயர்த்தும் லட்சிய இலக்கையும் நிர்ணயித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்த இலக்கை அடைவதற்கு ரோசாட்டம் நிறுவனம் ஏற்கனவே ஒரு நடைமுறைப் பங்களிப்பைச் செய்து வருகிறது: இந்தியாவில் அணுமின் நிலையத்தை அமைக்கும் ஒரே வெளிநாட்டு நிறுவனம் நாங்கள்தான் என ரோசாட்டம் (Rosatom) நிறுவனத்தின் பெருநிறுவன மேம்பாடு மற்றும் சர்வதேச வணிகத்திற்கான முதல் துணைப் பொது இயக்குநர் கிரில் கொமரோவ் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், இந்தியாவின் இலக்கின் அளவைக் கருத்தில் கொண்டு, பெரிய திறன் கொண்ட மின் உற்பத்தி அலகுகள் முதல் சிறிய மட்டு அணு உலைகள் (SMRs) வரை பல்வேறு வகையான நவீன அணுசக்தித் தீர்வுகளை எங்கள் கூட்டாளர்களுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று கொமரோவ் கூறியுள்ளார்.</p><h2>அரிய-பூமி காந்தங்கள்</h2><p> இந்தியாவில் ரோசாட்டம் (Rosatom) நிறுவனம் ஒரு அணுமின் நிலையத்தை அமைத்து வருகிறது; இதில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டு அலகுகள் செயல்பாட்டில் உள்ளன, மேலும் நான்கு அலகுகள் செயல்படுத்தலின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. </p><p>தற்போது, ​​ஏற்கனவே உள்ள கூடங்குளம் திட்டத்தைத் தாண்டி அணுசக்தித் துறையிலான கூட்டுறவை விரிவுபடுத்த முற்படும் நிலையில், அந்த ரஷ்ய நிறுவனம் தனது VVER-1200 உலை தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது. </p><p>VVER-1000 ரக அணு உலைகளைக் கொண்ட குடன்குளம் அலகுகள் 1 மற்றும் 2 ஆகியவை, முறையே 2013 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் தேசிய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12cb67c8-6e3c-491e-8288-80aae926b908/26-6aa51b8939e77.webp' /></p><p> </p><p>ஏப்ரல் 2026 நிலவரப்படி, அந்த இரண்டு அலகுகளும் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து 132 பில்லியன் கிலோவாட்-மணிநேரத்திற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாக ரோசாட்டம் (Rosatom) நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>அணுசக்தித் துறையுடன் சேர்த்து, ரோசாட்டம் (Rosatom) நிறுவனம் முக்கியமான கனிமங்கள் மற்றும் மூலப்பொருட்கள் சார்ந்த வாய்ப்புகளையும் தேடி வருகிறது. </p><p>அதன் உலோகவியல் வணிகங்கள் டைட்டேனியம், சிர்கோனியம், ஹாஃப்னியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றை ஒத்துழைப்புக்கான துறைகளாக அடையாளம் கண்டுள்ள நிலையில், ரோசாட்டம் மெட்டல்டெக் நிறுவனம் அரிய-பூமி காந்தங்கள், அரிய-பூமி பொருட்களுக்கான ஒருங்கிணைந்த தேவை மற்றும் புதிய உற்பத்தித் திறன்களில் முதலீடு செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-12T09:26:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன எரிபொருள் விலை தொடர்பில் கனேடியர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gas-prices-canada-1789200045"></link>
            <id>https://news.lankasri.com/article/gas-prices-canada-1789200045</id>
            <summary type="text">&amp;nbsp;Gas prices are expected to drop soon in Canada: கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமெரிக்காவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Gas prices are expected to drop soon in Canada: கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>


அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் துவங்கியதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாத இறுதியிலிருந்தே, பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்கள் விலை உலகமெங்கும் உயர்ந்துவருகிறது.
</p><p>
இந்நிலையில், கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><h2>
என்ன காரணம்?
</h2><p>
முதலாவதாக, குளிர் காலத்தில் கனேடியர்களும் அமெரிக்கர்களும் பயணம் செய்வதை வெகுவாகக் குறைத்துவிடுகிறார்கள்.
</p><p>
ஆகவே, வாகன பயன்பாடு குறைவதால், எரிபொருள் நிரப்புவதற்கான தேவையும் குறைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/beab7243-9da1-48c0-a108-ca542edb65ea/26-6aa5071a7dd7a.webp' /><br></p><p>

இரண்டாவதாக, கனடாவைப் பொருத்தவரை, குளிர்காலம் துவங்கியதும் வாகன எரிபொருளில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்படும்.</p><p>

குளிர்காலத்தில் வாகன செயல்பாடு நன்றாக இருப்பதற்காக, எரிபொருளுடன் பியூட்டேன் போன்ற உட்பொருட்கள் கலக்கப்படுகின்றன.</p><p>

இந்த பியூட்டேன் போன்றவை கலக்கப்படும் எரிபொருள் விலை, வழக்கமாகவே குறைவாகத்தான் இருக்கும்.
</p><p>
ஆக, இந்த இரண்டு காரணங்களாலும், எரிபொருள் விலைகள் குறைய உள்ளன.
</p><p>
இந்த விலை குறைவு, இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வர அமுலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-09-12T09:05:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் AfD கட்சியின் வெற்றி... பயத்தில் ஒரு நாட்டு மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turks-in-germany-anxious-after-afd-wins-1789203418"></link>
            <id>https://news.lankasri.com/article/turks-in-germany-anxious-after-afd-wins-1789203418</id>
            <summary type="text">Turks in Germany anxious after AfD wins in Saxony-Anhalt: AfD கட்சியின் வெற்றி, ஜேர்மனியில் வாழும் துருக்கி பின்னணி கொண்ட மக்களை அச்சத்திலாழ்த்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Turks in Germany anxious after AfD wins in Saxony-Anhalt: AfD கட்சியின் வெற்றி, ஜேர்மனியில் வாழும் துருக்கி பின்னணி கொண்ட மக்களை அச்சத்திலாழ்த்தியுள்ளது.
</p><p>

ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி, தேர்தல் நடைபெற்றது.</p><p>

தேர்தலில், 43.8 சதவிகித வாக்குகள் பெற்று தீவிர வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
</p><h2>
பயத்தில் ஒரு நாட்டு மக்கள்</h2><p>

 Saxony-Anhalt மாகாணத்தில் AfD கட்சி பெற்றுள்ள வெற்றி, நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fce2a441-7f80-47d5-90af-137f8fd4f0fd/26-6aa514562b71b.webp' /><br></p><p>

இந்நிலையில், AfD கட்சி தீவிர புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட கட்சி என்பதால், அம்மாகாணத்தில் வாழும் புலம்பெயர்தல் பின்னணி கொண்ட மக்களுக்கு அச்சம் உருவாகிவருகிறது.
</p><p>
குறிப்பாக, துருக்கி பின்னணி கொண்ட மக்கள், அடுத்து என்ன செய்வதென தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார்கள்.
</p><p>
Turkish Community in Germany (TGD) என்னும் அமைப்பைச் சேர்ந்த Gökay Sofuoglu என்பவர் கூறும்போது, Saxony-Anhalt மாகாணத்தில் தொழில் செய்துவரும் துருக்கி பின்னணி கொண்டவர்கள், தங்கள் தொழில்களை மூடிவிட்டு, முதலில் மாகாணத்தை விட்டும், பிறகு ஜேர்மனியை விட்டும் வெளியேறும் திட்டத்திலிருப்பதாக தெரிவிக்கிறார்.
</p><p> 
இன்னொருபக்கம், AfD கட்சியின் வெற்றியால் ஜேர்மனியின் ஜனநாயக நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் என்றும் கூறுகிறார் Sofuoglu.
</p><p>
மேலும், AfD கட்சியின் வெற்றியால், நாடுமுழுவதும் தேசியவாத வன்முறை அதிகரிக்கலாம் என்ற அச்சமும் பரவத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42aaeb1c-cbcc-4daa-a67a-cf84c6f64c84/26-6aa51456d3d2b.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-12T08:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பென் ஸ்டோக்ஸின் இமாலய சாதனையை எட்டிப்பிடித்த பாகிஸ்தான் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/razaullah-hit-9-sixers-and-equal-stokes-1789200519"></link>
            <id>https://news.lankasri.com/article/razaullah-hit-9-sixers-and-equal-stokes-1789200519</id>
            <summary type="text">இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தானின் ரஸாவுல்லா மாஷ்வானி அரைசதம் விளாசி சாதனை படைத்தார்.

எட்ஜ்பஸ்டனில் நடந்து வரும் டெஸ்டில், பாகிஸ்தானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தானின் ரஸாவுல்லா மாஷ்வானி அரைசதம் விளாசி சாதனை படைத்தார்.</p><p>

எட்ஜ்பஸ்டனில் நடந்து வரும் டெஸ்டில், பாகிஸ்தானின் ரஸாவுல்லா மாஷ்வானி 9 சிக்ஸர்கள் விளாசி பென் ஸ்டோக்ஸ் சாதனையை சமன் செய்தார். </p><h2>ரஸாவுல்லா மாஷ்வானி</h2><p> 

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் எட்ஜ்பஸ்டனில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af30cc1d-e527-4160-a9c8-b639239d6976/26-6aa50952e76d7.webp' /></p><p></p><p>

பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 449 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. </p><p>

இளம் வீரர் ரஸாவுல்லா மாஷ்வானி 9 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 63 பந்துகளில் 81 ஓட்டங்கள் விளாசினார். </p><p>

இதன்மூலம் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த பென் ஸ்டோக்ஸின் (Ben Stokes) சாதனையை ரஸாவுல்லா சமன் செய்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f3fde1-7c87-4114-9b98-14de00c170c8/26-6aa509523092b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-12T08:08:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் AfD-யின் வெற்றி... விளாடிமிர் புடின் சொன்ன காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/afd-win-caused-by-putin-says-1789197833"></link>
            <id>https://news.lankasri.com/article/afd-win-caused-by-putin-says-1789197833</id>
            <summary type="text">Putin says events in Europe caused by Western globalists: ஐரோப்பாவில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு மேற்கத்திய உலகளாவியவாதிகளே காரணம் என்று புடின்.
ஜேர்மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin says events in Europe caused by Western globalists: ஐரோப்பாவில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு மேற்கத்திய உலகளாவியவாதிகளே காரணம் என்று புடின்.
</p><p>ஜேர்மனியில் மாகாணத் தேர்தல் ஒன்றில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றது உள்ளிட்ட ஐரோப்பாவில் நடைபெறும் நிகழ்வுகள், மேற்கத்திய நாடுகளில் உள்ள உலகளாவிய ஆதரவாளர்கள் (globalists) இழைத்த அமைப்புரீதியான தவறுகளின் விளைவே என்று விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.</p><h2>மேற்கத்திய மேல்தட்டு வர்க்கம்</h2><p>
இந்தியாவுக்கான தனது பயணத்தின் முதல் நாளில் செய்தியாளர்களிடம் பேசிய புடின், ரஷ்யா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததும், உக்ரைனை நேட்டோ (NATO) கூட்டணியில் இணைக்க முயன்றதுமே உக்ரைன் மோதலுக்குக் காரணம் என்று மேற்கத்திய நாடுகளைக் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f5f5bfc-a10e-4420-b513-7ebee4509bd9/26-6aa4fe0b27889.webp' /></p><p> </p><p>ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் AfD கட்சி பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றி குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்போவதில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி கூறினார்; இருப்பினும், அத்தேர்தல் உட்பட ஐரோப்பியக் கண்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு மேற்கத்திய மேல்தட்டு வர்க்கத்தினரே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>ஐரோப்பாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்தும், அடிப்படையில் மேற்குலகம் என்று அழைக்கப்படுபவர்களின், அதாவது அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளைச் சேர்ந்த மேற்கத்திய உலகளாவியவாதிகளின் அமைப்புரீதியான தவறுகளின் விளைவே என்று நான் கருதுகிறேன் என்று புடின் கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், நேட்டோ அமைப்பின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்திற்கு ரஷ்யா தெரிவித்த எதிர்ப்பையும் மேற்கத்திய நாடுகள் புறக்கணித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். </p><p>2014-இல் ரஷ்யாவுக்கு ஆதரவான ஜனாதிபதி ஒருவர் உக்ரைனிலிருந்து தப்பிச் செல்ல நிர்பந்திக்கப்பட்ட பிறகு, உக்ரைனை நேட்டோ (NATO) அமைப்பில் இணைப்பதையே மேற்கத்திய நாடுகள் உடனடியாகத் தங்கள் குறிக்கோளாகக் கொண்டதாக அவர் கூறினார். </p><p>இறுதியில், உக்ரைனில் இன்று நிகழ்ந்துவரும் துயரமான சம்பவங்களுக்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணமானவர்கள் மேற்கத்திய உலகளாவிய மேல்தட்டு வர்க்கத்தினரே; ஆனாலும், அவர்கள் தொடர்ந்து பழி முழுவதையும் எங்கள் மீதே சுமத்தி வருகிறார்கள் என்றார். </p><p>ஐரோப்பாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என குறிப்பிட்ட புடின், அதனால்தான் ஜேர்மனியில் இத்தகைய முடிவுகளும், ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் இத்தகைய போக்குகளும் காணப்படுகின்றன என்றார்.</p><h2>அச்சுறுத்தல் எதுவும் இல்லை</h2><p> </p><p>சோவியத் ஒன்றிய காலத்திலிருந்தே உருவானதாகக் கூறப்படும் ரஷ்யாவின் போலியான அச்சுறுத்தலைக் காட்டி மேற்கத்திய நாடுகள் தங்கள் மக்களை அச்சுறுத்தி வருவதாக குறிப்பிட்ட புடின், ஆனால், அத்தகைய அச்சுறுத்தல் எதுவும் இல்லை; ஒருபோதும் இருந்ததும் இல்லை என்றார். </p><p>இந்தியாவில் சனிக்கிழமை தொடங்கவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஆகியோருடன் புடினும் பங்கேற்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2191d23-8d6b-4424-b196-1e6a44036e9a/26-6aa4fe0bd122a.webp' /></p><p> </p><p>இதனிடையே, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதாகவும் ரஷ்யாவுடனான உறவுகளை மீட்டெடுப்பதாகவும் உறுதியளித்த AfD கட்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் முதலிடம் பிடித்தது. </p><p>ஆனால், அரசாங்கத்தை அமைக்க, AfD கட்சி தற்போது பிற கட்சிகளிலிருந்து விலகி வருபவர்களை ஈர்க்க வேண்டும் அல்லது தீவிர இடதுசாரிச் சிந்தனை கொண்ட சிறிய கட்சியான BSW-உடன் ஓர் உடன்பாட்டை எட்ட வேண்டும் என்ற நிலையில் உள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-12T07:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க சுற்றுலா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-tourism-from-switzerland-1789195015"></link>
            <id>https://news.lankasri.com/article/us-tourism-from-switzerland-1789195015</id>
            <summary type="text">US tourism from Switzerland slumps: அமெரிக்க சுற்றுலா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.


2026ஆம் ஆண்டின் முதல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>US tourism from Switzerland slumps: அமெரிக்க சுற்றுலா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>

2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்க சுற்றுலா சென்ற சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது, 16.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக சுவிஸ் பயணக் கூட்டமைப்பு என்னும் அமைப்பு தெரிவிக்கிறது.
</p><p>
அமெரிக்கா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை

2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் 120,000 சுவிஸ் நாட்டவர்கள் மட்டுமே அமெரிக்க சுற்றுலா சென்றுள்ளார்கள்.
</p><p>
முழு 2026ஐயும் கணக்கிடும்போது, அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் சுவிஸ் மக்கள் எண்ணிக்கை 300,000 ஆக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எப்படி கனடா மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதித்ததால் கோபமடைந்த கனேடியர்கள் அமெரிக்காவை புறக்கணிக்கத் துவங்கினார்களோ, அதேதான் சுவிட்சர்லாந்திலும் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bb0e539-ef06-49c3-9d4c-69de303a18f9/26-6aa4f3460d4e9.webp' /><br></p><p>

அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், சுவிஸ் தயாரிப்புகள் மீது 39 சதவிகித வரிகள் விதித்துள்ள விடயம் சுவிஸ் மக்களை கோபமடையச் செய்துள்ளது.
</p><p>
ஆகவே, அமெரிக்க சுற்றுலாவைத் தவிர்ப்பது என சுவிஸ் மக்களில் 65 சதவிகிதம் பேர் முடிவு செய்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
</p><p>
மேலும், அமெரிக்கா செல்லும் சுவிஸ் சுற்றுலாப்பயணிகள் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையங்களில் கைது செய்வதாக வெளியாகிவரும் தகவல்கள் சுவிஸ் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
ஆக மொத்தத்தில், ட்ரம்பின் நடவடிக்கைகளால், சுவிஸ் மக்களில் பெரும் எண்ணிக்கையிலானோர், அமெரிக்க சுற்றுலாவைத் தவிர்த்துவருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-12T06:38:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் தாக்குதலுக்கு முன்னர் பிரித்தானியாவைக் குறி வைத்த ஒசாமா பின் லேடன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bin-laden-plotting-attack-on-britain-1789185938"></link>
            <id>https://news.lankasri.com/article/bin-laden-plotting-attack-on-britain-1789185938</id>
            <summary type="text">Osama bin Laden was plotting terror attack on Britain before 9/11: 9/11 தாக்குதலுக்கு முன்பே ஒசாமா பின் லேடன் பிரித்தானியா மீது பயங்கரவாதத் தாக்குதல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Osama bin Laden was plotting terror attack on Britain before 9/11: 9/11 தாக்குதலுக்கு முன்பே ஒசாமா பின் லேடன் பிரித்தானியா மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வந்தார்.
</p><p>செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, பிரித்தானியா மீதே தாக்குதல் நடத்த ஒசாமா பின் லேடன் திட்டமிட்டதாக சிஐஏ-வின் (CIA) புதிய, பரபரப்பான குறிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.</p><h2>பிரித்தானியாவும்</h2><p>
</p><p>பயங்கரவாதத் தாக்குதல்களின் 25-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு CIA வெளியிட்ட அதீத ரகசிய ஆவணங்களில் உள்ள தகவல்களின்படி, அல்-கொய்தாவின் தாக்குதல் பட்டியலில் பிரித்தானியாவும் இடம்பெற்றிருந்ததற்கான வலுவான அறிகுறிகள் இருந்ததாக அமெரிக்க உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8cd7044-99ed-4937-a4ff-4cfef83c65e7/26-6aa4cf942e8ec.webp' /></p><p> </p><p>CIA வெளியிட்ட பெருமளவிலான ஆவணங்களில், பின் லேடன் பிரித்தானியாவை குறிவைக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறும் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் திகதியிட்ட ஆவணம் ஒன்றும் அடங்கும். </p><p>9/11 தாக்குதல் தொடர்பான தகவல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் வெளியிடப்பட்ட நிலையில், புதிதாக ரகசியத் தன்மை நீக்கப்பட்ட 69 விளக்கக் குறிப்புகளில் பிரித்தானியா குறித்த ஆவணமும் ஒன்றாகும்.</p><p></p><p> </p><p>பின்லேடனின் பயங்கரவாதக் கட்டமைப்பு இன்னும் ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்ற தலைப்பிலான ஆவணத்தில் பிரித்தானியா நேரடியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><p>சூடானில் உள்ள அல்-கொய்தா தளங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய பிறகு தயாரிக்கப்பட்ட அந்தக்குறிப்பு, பின் லேடன் பிரித்தானியாவைக் குறிவைக்க முயன்றதாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7c64b79-e1e1-422b-8226-611df6b900d5/26-6aa4cf94d68d5.webp' /></p><p> </p><p>அக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களுக்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு எதிராக மேலும் தாக்குதல்களை நடத்துவதற்கான வழிகளை பின்லேடன் ஆராய்ந்து கொண்டிருந்தார். </p><p>ஆனால், துல்லியமான இலக்குகளையோ அல்லது நேரத்தையோ குறிப்பிடவில்லை. மேலும், பெயர் குறிப்பிடப்படாத ஒரு நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய இலக்காக இருக்கலாம் என்றும், அமெரிக்காவில் தாக்குதல்களை நடத்துவது குறித்து ஆராய பின்லேடனால் ஒருவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.</p><h2>பின் லேடன்&nbsp;கோபம்</h2><p> </p><p>அந்த ஆண்டின் இறுதியில் எழுதப்பட்ட மற்றொரு குறிப்பில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா, இஸ்ரேல் போன்ற அதன் நட்பு நாடுகளின் சொந்த மண்ணிலேயே தாக்குதல் நடத்த அவர் விரும்புவதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>லண்டனைச் சேர்ந்த தனது கூட்டாளிகள் இருவர் பிரித்தானியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்ததைக் குறித்து பின் லேடன் கொண்டிருந்த கோபத்தை, 1999 ஆகஸ்ட் மாதத்தைச் சேர்ந்த ஒரு கோப்பு சுட்டிக்காட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f26396e-0f1b-4b18-b4da-6b41100f6895/26-6aa4cf9589c12.webp' /></p><p> </p><p>இதனிடையே, நாட்டின் மிக இருண்ட தருணங்களில் ஒன்றுக்கு முந்தைய ஆண்டுகளிலும், அந்த நிகழ்வு நடந்த மறுநாளிலும் சேகரிக்கப்பட்ட மிக முக்கியமான உளவுத்துறைத் தகவல்களைப் பற்றிய ஒரு பார்வையை அமெரிக்கர்களுக்கு வழங்குவதையே இந்த மிகப்பெரிய ஆவண வெளியீடு நோக்கமாகக் கொண்டிருந்ததாக CIA தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T06:20:17+00:00</updated>
        </entry>
    </feed>
