<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-28T07:47:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்டி பர்னாம் பிரதமரானதும் பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/poll-says-labour-party-overtakes-reforum-uk-1785223810"></link>
            <id>https://news.lankasri.com/article/poll-says-labour-party-overtakes-reforum-uk-1785223810</id>
            <summary type="text">&amp;nbsp;பிரித்தானிய பிரதமராக ஆன்டி பர்னாம் பொறுப்பேற்ற நேரம், லேபர் கட்சிக்கு நல்ல நேரமாக அமைந்துள்ளது.ஆன்டி பர்னாம் பிரதமரானதும்...

ஆம், ஆன்டி பர்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரித்தானிய பிரதமராக ஆன்டி பர்னாம் பொறுப்பேற்ற நேரம், லேபர் கட்சிக்கு நல்ல நேரமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/943cf304-d623-48d9-ad42-4a733443b711/26-6a685a840c02c.webp' /></p><h3>ஆன்டி பர்னாம் பிரதமரானதும்...
</h3><p>
ஆம், ஆன்டி பர்னாம் பிரதமரானதும் லேபர் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6247948e-d7fb-4ab1-bbd4-b692394486c3/26-6a685a84b3fde.webp' /></p><p>கடந்த ஆண்டின் இறுதியில் நைஜல் ஃபராஜின் யூகே ரீஃபார்ம் கட்சி, மற்ற அனைத்துக் கட்சிகளையும் விட 10 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbb1b83-5ecd-4ec5-834c-e61fa991b2f3/26-6a685a8564771.webp' /></p><p>ஆனால், ஆன்டி பர்னாம் பிரதமரானதற்குப் பின், முதன்முறையாக தற்போது லேபர் கட்சி ரீஃபார்ம் கட்சியைத் தாண்டி 4 புள்ளிகள் முன்னேற்றம் கண்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

ஆன்டி பர்னாமிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, தான் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளால் அளவுக்கு மீறி உற்சாகமடையவில்லை என்றும், அதே நேரத்தில், மக்கள் நேர்மறையாக (positive) பதிலளித்துள்ளது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T07:38:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்ம ராசியில் நுழையப்போகும் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-peyarchi-1785223975"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-peyarchi-1785223975</id>
            <summary type="text">நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
</p><p>
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
</p><p>
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் புதன் ஒரு முக்கியமான கிரக மாற்றத்திற்கு ஆளாகப்போகிறார். </p><p>

கிரகங்களின் இளவரசரான புதன் கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்குள் நுழையப்போகிறார்.</p><p>

அந்தவகையில், சிம்ம ராசிக்கு புதன் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.&nbsp;</p><p></p><h2>மிதுனம்
</h2><ul><li>இக்காலத்தில் நேரடி நன்மைகள் கிடைக்கும்.
</li><li>முதலீடுகள் பெரும் வெற்றியைத் தரும்.</li><li>
இலக்குகளை அடைய வேகமாக இருப்பார்கள்.
</li><li>வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை தரும்.
</li><li>அங்கீகாரமும், புகழும் தேடி வரும்.</li><li>
உறவுகளில் சாதகமான மாற்றங்கள் நிகழும்.</li><li>
வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சியை தரும்.
</li><li>வாழ்க்கையில் சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fb4dd6c-3110-4b43-bc1a-67346b2c185e/26-6a685c405f418.webp' />
</p><h2>
சிம்மம் </h2><ul><li>
வாழ்க்கையில் நேர்மறையான பலன் கிடைக்கும்.
</li><li>முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும்.</li><li>
பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பணம் கிடைக்கும்.</li><li>
வியாபாரத்தை விரிவாக்க ஏற்ற காலமாக இருக்கும்.</li><li>
விரும்பிய வேலையைப் பெறுவார்கள்.
</li><li>தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.</li><li>
குடும்பத்தில் அமைதி நிலவும்.</li><li>
சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.</li><li>
பேச்சாற்றல் பெரிதும் மேம்படும்.
</li><li>இக்காலத்தில் நிதி நிலை வலுவடையும்.
</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/958261b1-9fc5-49e6-a9e2-5933a894f1aa/26-6a685c4116b70.webp' />
</p><h2>
தனுசு
</h2><ul><li>நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
</li><li>வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும்.
</li><li>மற்றவர்களிடம் சிக்கியுள்ள பணம் கைக்கு வந்து சேரும்.</li><li>
வியாபாரிகள் ஒப்பந்தங்கள் மூலம் லாபத்தை பெறுவார்கள்.
</li><li>வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் வாய்ப்புள்ளன.</li><li>
வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.</li><li>
முதலீட்டிலிருந்து லாபம் கிடைக்கும்.</li><li>
குழந்தைகள் விடயத்தில் நல்ல செய்தி கிடைக்கும்.</li><li>
ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c4c23f9-3caa-49f2-93be-4e57b12f0409/26-6a685c41bdb00.webp' /></p><p>
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T07:37:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் சிக்கிய பிரித்தானிய தம்பதி: காரில் கிடைத்த பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-couple-arrested-in-australia-find-ketamine-1785224126"></link>
            <id>https://news.lankasri.com/article/british-couple-arrested-in-australia-find-ketamine-1785224126</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் வாடகைக் காரின் டிக்கியில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய தம்பதி கைது செய்யப்பட்டனர். 

போதைப்பொருள்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் வாடகைக் காரின் டிக்கியில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய தம்பதி கைது செய்யப்பட்டனர். </p><p>

</p><h2>போதைப்பொருள்&nbsp;</h2><p>அவுஸ்திரேலியாவில் தம்பதி குறித்து அண்டை வீட்டார் புகார் அளித்ததன் பேரில், ஒரு குடியிருப்பு பகுதியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4f6ade9-c680-421b-a6c4-62f1bc5dca37/26-6a685c186c8fe.webp' /></p><p></p><p>
அப்போது வாடகைக் காரின் டிக்கியில் கெட்டமைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் போதைப்பொருள் வைத்திருந்ததாக பிரித்தானிய தம்பதி கைது செய்யப்பட்டனர். </p><p>அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.&nbsp;</p><h2>பிரித்தானிய தம்பதி</h2><p>
முதற்கட்ட விசாரணையில், குறித்த பிரித்தானிய தம்பதி 30 வயது ஜாக் ஃபாரெல்லி மற்றும் இரண்டு குழந்தைகளின் தாயான 23 வயது டெமி மெக்டெய்ட் என தெரிய வந்துள்ளது.</p><p>

மேலும், இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டது சுமார் 107 கிலோகிராம் அளவிலான தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் என்றும், அதன் மதிப்பு 5.7 மில்லியன் பவுண்ட்கள் எனவும் தெரிய வந்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T07:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகு தொடர்பில் ட்ரம்பிடம் கோரிக்கை வைத்த இஸ்ரேல் முன்னாள் தளபதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/israeli-ex-generals-urge-trump-1785223302"></link>
            <id>https://news.lankasri.com/article/israeli-ex-generals-urge-trump-1785223302</id>
            <summary type="text">மேற்குக் கரையில் குடியேற்றவாசிகளின் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துமாறு நெதன்யாகுவை வலியுறுத்தும்படி ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இஸ்ரேல் முன்னாள் தளபதிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்குக் கரையில் குடியேற்றவாசிகளின் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துமாறு நெதன்யாகுவை வலியுறுத்தும்படி ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இஸ்ரேல் முன்னாள் தளபதிகள் உட்பட நூற்றுக்கணக்கான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><h2>உதவக்கூடிய ஒரே நபர்</h2><p>
</p><p>செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றில், ஏறக்குறைய 600 முன்னாள் அதிகாரிகள் ட்ரம்ப்பிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ce89b54-7d05-4537-89d7-89c989583f46/26-6a685bae066b6.webp' /></p><p> </p><p>மேற்குக் கரையில் வன்முறை அதிகரிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பேரழிவையும், அதனால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய விளைவுகளையும் தவிர்க்க உதவக்கூடிய ஒரே நபர் அவர்தான் என்று அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தனர். </p><p>மேற்குக் கரையில் தீவிரமடைந்து வரும் வன்முறையை விரைவாகவும் உறுதியாகவும் கட்டுப்படுத்தாவிட்டால், அது அப்பகுதி முழுவதிலும் பெரும் பதற்றத்தைத் தூண்டக்கூடும்; அத்துடன், இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் அப்பகுதியில் அமெரிக்காவின் நலன்கள் ஆகிய இரண்டின் மீதும் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><p> </p><p>மேலும், இந்தத் துயரத்தைத் தவிர்க்க உங்களைத் தவிர வேறு யாராலும் முடியாது என்பதே எங்கள் தொழில்முறை சார்ந்த கணிப்பு என்றும் ட்ரம்பிடம் கோரியுள்ளனர். </p><p>CIS என அறியப்படும் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான தளபதிகள் என்பது ஓய்வுபெற்ற 550-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய ராணுவ கர்னல்கள் மற்றும் ஜெனரல்கள், அத்துடன் மொசாத், ஷின் பெட், இஸ்ரேலியக் காவல்துறை, வெளிவிவகார அதிகாரிகள் மற்றும் பிற பிரிவுகளில் அதற்கு இணையான பதவிகளை வகித்தவர்களை உள்ளடக்கிய சியோனிச இயக்கமாகும். </p><p>யூத மக்களின் வலுவான ஜனநாயக இல்லமாக இஸ்ரேலின் எதிர்காலத்தை உறுதி செய்வதே இந்த அமைப்பின் குறிக்கோளாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d1dbf62-2bad-4b86-9a70-b91784cc6623/26-6a685baea9d27.webp' /></p><p> குடியேறிகள் மற்றும் இஸ்ரேலியப் படைகளைச் சட்டத்தின் கண்காணிப்பிலிருந்து பாதுகாப்பது உட்பட, இக்குழப்பத்தின் பெரும்பகுதியை அரசாங்கத்தைச் சேர்ந்த சிலரே திட்டமிட்டு நடத்துகிறார்கள் என்பது ரகசியமான ஒன்றல்ல என்றும் CIS பதிவு செய்துள்ளது.</p><h2>ஏழாவது பயணம்</h2><p> </p><p>மேலும், யூதக் குடியேறிகளின் பயங்கரவாதச் செயல்பாடுகள் அதிகரித்து வருவது, அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதல் மற்றும் அதனால் பல முனைகளிலும் ஏற்பட்ட விளைவுகளை விடவும் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. </p><p>வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பில், நெதன்யாகுவிடம் இந்த விவகாரத்தை எழுப்புமாறு அந்த அமைப்பு ட்ரம்ப்பை வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3487388b-375c-4963-a476-ae629b01006a/26-6a685bad33747.webp' /></p><p> </p><p>ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் வெள்ளை மாளிகைக்கு மேற்கொள்ளும் தனது ஏழாவது பயணத்தின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமையன்று ட்ரம்ப்பை நெதன்யாகு சந்திக்கவுள்ளார். </p><p>மேலும், ஈரானுக்கு ஆதரவாக ஹவுதிகள் செங்கடலை முற்றுகையிட்டுள்ளதுடன், ஈரான் மீதான தாக்குதலை சமீபத்தில் தீவிரப்படுத்தியதுடன், திடீரென்று அமெரிக்க இராணுவம் நிறுத்தியதன் சில நாட்களில் நெதன்யாகு அமெரிக்கா பயணப்படுகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T07:19:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவது எத்தனை பேர்? வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/givt-reveals-how-many-indians-income-above-100cr-1785222842"></link>
            <id>https://news.lankasri.com/article/givt-reveals-how-many-indians-income-above-100cr-1785222842</id>
            <summary type="text">இந்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. </p><h3>

இந்தியாவில் அதிகரிக்கும் பணக்காரர்கள்</h3><p>

நாட்டில் செல்வம் குவிந்திருப்பது மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முராரி லால் மீனா எழுப்பிய கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830c8f99-6f46-4b5d-95e6-a5329ccef390/26-6a6856bb946c2.webp' /></p><p>

அரசு தரப்பில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவதாக அறிவிக்கும் நபர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>வருமான வரி செலுத்துவதன் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இந்த அறிக்கையின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியவர்களின் எண்னிக்கை 415 ஆக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் 576 ஆக அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b5881f7-6259-421f-bea3-39dfcbd4560d/26-6a6856bc450e5.webp' /></p><p>

2021-22 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 142 ஆகவும், 2022-23 நிதியாண்டில் 301 ஆகவும், 2023-24 நிதியாண்டில் 284 ஆகவும் இருந்துள்ளது. </p><p> 

இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ளது. </p><p>

ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, 86.7 பில்லியன் டொலர் நிகர மதிப்புடன் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார். </p><p>

அவரைத் தொடர்ந்து கௌதம் அதானி 85.5 பில்லியன் டொலருடனும், சாவித்ரி ஜிண்டால் மற்றும் அவரது குடும்பத்தினர் 37.5 பில்லியன் டொலருடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T07:14:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் பந்திலேயே பூரன் அவுட்: அதிரடி காட்டிய ஜேக்ஸ்..கடைசி பந்தில் த்ரில் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mi-london-beat-southern-brave-by-three-wickets-1785221139"></link>
            <id>https://news.lankasri.com/article/mi-london-beat-southern-brave-by-three-wickets-1785221139</id>
            <summary type="text">The Hundred போட்டியில் MI லண்டன் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு சௌதர்ன் பிரேவ் அணியை வீழ்த்தியது.சௌதர்ன் பிரேவ் 129 ஓட்டங்கள்
தி ரோஸ் பௌல் மைதானத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Hundred போட்டியில் MI லண்டன் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு சௌதர்ன் பிரேவ் அணியை வீழ்த்தியது.</p><h2>சௌதர்ன் பிரேவ் 129 ஓட்டங்கள்</h2><p>
தி ரோஸ் பௌல் மைதானத்தில் நடந்த The Hundred போட்டியில் MI லண்டன் மற்றும் சௌதர்ன் பிரேவ் அணிகள் மோதின.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Elite in the field as usual, Nathan Sowter! 👏<a href="https://x.com/hashtag/MILondon?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MILondon</a> 💙💚 <a href="https://t.co/89kOlugSTB">pic.twitter.com/89kOlugSTB</a></p>&mdash; MI London (@MILondonCricket) <a href="https://x.com/MILondonCricket/status/2081829043838570504?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p></p><p>


முதலில் ஆடிய சௌதர்ன் பிரேவ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் எடுத்தது. ஜேமி ஸ்மித் 49 ஓட்டங்களும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
ட்ரெண்ட் போல்ட், டாம் கர்ரன், ரிச்சர்ட் க்ளீஸன் மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

பின்னர் களமிறங்கிய MI லண்டன் அணியில் ஸ்டோய்னிஸ் பந்துவீச்சில் ஜேம்ஸ் வின்ஸ், நிக்கோலஸ் பூரன் டக்அவுட் ஆகினர். </p><p>

அடுத்து வந்த சாம் கர்ரன், வில் ஜேக்ஸுடன் கைகோர்த்து ஓட்டங்கள் சேர்த்தார். 

அதிரடி காட்டிய வில் ஜேக்ஸ் அரைசதம் அடிக்க, சாம் கர்ரன் 30 ஓட்டங்களில் அவுட் ஆனார்.</p><h2>வில் ஜேக்ஸ் அதிரடி </h2><p>பின்னர் வில் ஜேக்ஸ் (Will Jacks) 41 பந்துகளில் 54 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/032c492b-0cc1-4808-a933-35fbd37838c4/26-6a6853aa2fc56.webp' /></p><p>

அதனைத் தொடர்ந்து ஷெர்பானே ரூதர்போர்ட் 12 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 21 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
</p><p>
டாம் கர்ரன் 7 ஓட்டங்களிலும், ரஷித் கான் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.</p><p>
கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், ஓலி போப் இலக்கினை எட்டி வெற்றி பெற வைத்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A big W on the road! 🏆<a href="https://x.com/hashtag/MILondon?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MILondon</a> 💙💚 <a href="https://t.co/cudhN5HlEY">pic.twitter.com/cudhN5HlEY</a></p>&mdash; MI London (@MILondonCricket) <a href="https://x.com/MILondonCricket/status/2081844162123518385?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T06:48:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்திய இளம்பெண்ணொருவர் சுட்டுக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-girl-shot-death-in-canada-1785215098"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-girl-shot-death-in-canada-1785215098</id>
            <summary type="text">கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவரை சுட்டுக்கொன்ற நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் அதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவரை சுட்டுக்கொன்ற நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் அதிரடியாக அவரைக் கைது செய்துள்ளார்கள்.
</p><h3>
இந்திய இளம்பெண்ணொருவர் சுட்டுக்கொலை
</h3><p>
வெள்ளிக்கிழமை காலை 7.23 மணியளவில், கனடாவின் ரொரன்றோவில், நவ்நீத் கௌர் (26) என்னும் இளம்பெண் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77fec185-b89a-4efa-a1d9-bb262e36ad6c/26-6a68387b8382a.webp' /></p><p>

கௌரை பின் தொடர்ந்த ஒருவர், திடீரென அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
</p><p>
தகவலறிந்த பொலிசார், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் அதிரடியாக அவரைக் கைது செய்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஷரன்ஜீத் சிங் (37) என்றும் அவர் பிராம்டனைச் சேர்ந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
அவர் ஏற்கனவே கௌருக்கு அறிமுகமானவரா, எதனால் கௌரை அவர் சுட்டார் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.
</p><p>
சிங் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T06:41:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் மனைவிக்கு கொலை மிரட்டல்... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-targets-melania-trump-by-assassination-threat-1785219598"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-targets-melania-trump-by-assassination-threat-1785219598</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் மனைவி மெலானியாவுக்கு ஈரான் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் மனைவி மெலானியாவுக்கு ஈரான் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.</p><h3>

ட்ரம்ப் மனைவிக்கு கொலை மிரட்டல்...
</h3><p>
ஈரான் ஊடகங்களில், ‘எங்கே வைத்து மெலானியாவை கொலை செய்யலாம்’ என்னும் தலைப்புடன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c808005d-f1ef-4db3-a49c-f7d1448156dc/26-6a684a112eb40.webp' /></p><p>

அந்த வீடியோவில் பேசுபவர், மெலானியா ஃபேஷன் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்றும், ஆகவே, அவர் ஆடைகள் வாங்கச் செல்லும் இடங்களில் வைத்து அவரைக் கொல்லலாம் என்னும் ரீதியிலும் பேசுகிறார்.&nbsp;</p><p></p><p>

ட்ரம்புக்கு ஈரான் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் வருவது புதிதல்ல. என்றாலும், இம்முறை, மெலானியா எங்கெங்கு ஆடைகள் வாங்கச் செல்வார், அவரது உதவியாளர்கள் யார் யார் என்பது போன்ற தெளிவான விளக்கங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த வீடியோ அச்சத்தை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e79e515-e934-4195-a9ef-bea35d47548a/26-6a684a10725dc.webp' /></p><p>
அதாவது, மெலானியாவின் உதவியாளர்கள் மூலம் அவர் இருக்கும் இடம் குறித்து அறிந்துகொண்டு, அவர் ஆடை வாங்கும் இடத்தில், அவருக்கு விருப்பமான நிறுவன ஆடைகளில் நச்சை தெளித்து கொல்லலாம் என்னும் அளவுக்கு அந்த வீடியோவில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
கடைசியாக, ட்ரம்ப் மெலானியா தம்பதியரின் மகனான பேரன் ட்ரம்புக்கு ஒரு செய்தியை சொல்வதுடன் வீடியோ முடிவடைகிறது.</p><p>

’பேரன் ட்ரம்ப், இது துவக்கம்தான், எங்களுக்காக காத்திரு’ என்கிறது அந்த செய்தி!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T06:20:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ச்சியாக 5 விக்கெட் மெய்டன் ஓவர் - வரலாற்று சாதனை படைத்த ஜஸ்டின் கிரீவ்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/justin-greaves-record-5-consecutive-wicket-maidens-1785218292"></link>
            <id>https://news.lankasri.com/article/justin-greaves-record-5-consecutive-wicket-maidens-1785218292</id>
            <summary type="text">&amp;nbsp;மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.

தொடர்ச்சியாக 5 விக்கெட் மெய்டன் ஓவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
</p><h3>
தொடர்ச்சியாக 5 விக்கெட் மெய்டன் ஓவர்
</h3><p>
2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி, மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ளது. </p><p>

தரூபாவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் 311 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ffd7314-3c81-4ccb-97de-691c3c955e94/26-6a6844f698720.webp' /></p><p>

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 282 குவித்து ஆல் அவுட் ஆனது. </p><p>

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஆல் ரவுண்டர் ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட்களை கைப்பற்றியதோடு எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 11 ஓவர்களை வீசி, 27 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99ce26c1-2241-4610-979b-95ba0a4cfcd6/26-6a6844f5e1c4f.webp' /></p><p>

இதில், 6 ஓவரில் ஓட்டங்கள் எதுவும் வழங்காமல் மெய்டன் ஓவர் வீசியதோடு, தொடர்ச்சியாக 5 மெய்டன் ஓவர்கள் வீசி 5 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். </p><p>

2016 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தொடர்ச்சியாக 4 விக்கெட் மெய்டன் ஓவர்கள் வீசியதே சாதனையாக இருந்தது. </p><p>

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவே அவரது முதல் 5 விக்கெட் சாதனையாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T06:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளின் செங்கடல் முற்றுகை... ஆசியாவில் மோசமடையும் எரிபொருள் நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/in-asia-worsens-energy-crisis-1785216793"></link>
            <id>https://news.lankasri.com/article/in-asia-worsens-energy-crisis-1785216793</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் மற்றொரு முக்கியமான கடல்வழிப் பாதை முற்றுகையை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த ஆறு மாதங்களில் தங்களின் இரண்டாவது பெரிய எரிபொருள் நெருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் மற்றொரு முக்கியமான கடல்வழிப் பாதை முற்றுகையை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த ஆறு மாதங்களில் தங்களின் இரண்டாவது பெரிய எரிபொருள் நெருக்கடியைத் தவிர்க்க ஆசிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.</p><h2>ஏமனின் ஹவுதிகள்</h2><p>
</p><p>அமெரிக்க இராணுவத்தின் ஹார்முஸ் நீரிணை முற்றுகை மற்றும் ஹவுதிகளின் செங்கடல் முற்றுகை ஆகியவையைத் தவிர்த்து தற்போது வளைகுடா எண்ணெய் தடையின்றிச் செல்வதற்கு சூயஸ் கால்வாய் மட்டுமே முழுமையாகத் திறந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/767e84cc-1ae8-4124-8ec7-5cd7e9f8aa2d/26-6a6843c2d5feb.webp' /></p><p> </p><p>எண்ணெய் இறக்குமதியில் 90 சதவீதம் வரையில் மத்திய கிழக்கு நாடுகளையே நம்பியுள்ள ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் பாப் அல்-மண்டப் நீரிணை வழியாகச் செல்லும் சவுதி அரேபியக் கப்பல் போக்குவரத்தை ஏமனின் ஹவுதிகள் முடக்கியதைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. </p><p>இஸ்ரேல் தாக்குதலை அடுத்து மார்ச் மாதத்தில் ஹார்முஸ் நீரிணையை ஈரான் கப்பல் போக்குவரத்திற்கு மூடியதால் ஆசியாவின் பல நாடுகள் இன்னும் அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன; இச்செயல், மத்திய கிழக்கு கச்சா எண்ணெயின் குறைந்து வரும் இருப்பைப் பெறுவதற்காக அப்பிராந்தியத்திலுள்ள அரசாங்கங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் நிலைக்குத் தள்ளியது. </p><p>ஜப்பான் உட்பட அதன் அண்டை நாடுகள் பெட்ரோலியத்தின் விலையைக் குறைவாக வைத்திருக்க எரிபொருள் மானியங்களுக்காக ஏற்கனவே பல பில்லியன் கணக்கில் செலவிட்டு வருகின்றன; இது அந்தந்த நாடுகளின் அரசு வரவு-செலவுத் திட்டங்களைப் பெரிதும் பாதிக்கிறது.</p><p></p><p> </p><p>இதற்கிடையில், இறக்குமதிச் செலவுகள் அதிகரித்திருப்பது பணவீக்கத்தை உயர்த்தியுள்ளது; இது ஜப்பான் மற்றும் இந்தோனேசியா போன்ற பிராந்தியத்தின் முக்கிய நாடுகளின் அரசாங்கங்கள் மீது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>தற்போது, ​​செங்கடல் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அழுத்தத்தை அதிகரிக்கவுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதற்குப் பதிலளிக்கும் விதமாக, மார்ச் மாதத்தில் சவுதி அரேபியா தனது வளைகுடாப் பகுதி எண்ணெய் ஏற்றுமதிக்கான வழித்தடத்தை மாற்றியமைத்தது; அதன்படி, நாட்டின் கிழக்குக் கடற்கரையிலிருந்து செங்கடலில் உள்ள யான்பு (Yanbu) துறைமுகத்திற்கு எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது.</p><h2>அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக</h2><p> </p><p>தற்போது சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை இத்துறைமுகத்தின் வழியாகவே கையாளப்படுகின்றன.</p><p> சவுதி அரேபியாவின் எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடான சீனா மற்றும் அதனைத் தொடர்ந்து இந்தியா, ஜப்பான், தென் கொரியா போன்ற பல ஆசிய நாடுகளுக்கு இது ஒரு உயிர்நாடியாக அமைந்தது. </p><p>இதனிடையே, சில ஜப்பானிய மற்றும் தென் கொரிய சுத்திகரிப்பு நிறுவனங்கள், ஹவுதிகளின் அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக, சரக்குகளை சூயஸ் கால்வாய் வழியாக வடக்கே மத்திய தரைக்கடல் மற்றும் ஆப்பிரிக்காவைச் சுற்றி திருப்பிவிட முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80dda18a-ac74-455d-977a-748ec27f91be/26-6a6843c220098.webp' /></p><p> </p><p>ஆனால், இந்த நீண்ட மாற்றுப் பாதையால் பெரும் செலவுகள் ஏற்படுகின்றன. 
மத்திய தரைக்கடல் மற்றும் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாக எண்ணெயைக் கொண்டு செல்வது, பெரும்பாலான ஆசிய இறக்குமதியாளர்களுக்குப் பயண நேரத்தை இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரிப்பதோடு, சரக்குக் கட்டணம் மற்றும் எரிபொருள் செலவுகளையும் மேலும் உயர்த்தும். </p><p>தற்போதைக்கு, இதைப் பலர் ஏற்கத் தயாராக இருக்கக்கூடிய ஒரு செலவாகும். ஹவுதிகள் கடந்த வாரம் செங்கடலிலிருந்து வெளியேறிய குறைந்தது இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்களைக் குறிவைத்ததுடன், இந்த வாரம் சவுதியின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீதும் தாக்குதல்களை நடத்தினர். </p><p>ஹவுதிகளின் அச்சுறுத்தலால் சர்வதேச கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், பாப் அல்-மண்டப் (Bab al-Mandab) வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை பல மாதங்களிலேயே மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T05:31:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயிற்றை சுத்தம் செய்ய உதவும் இயற்கை பானங்கள்.., காலையில் குடிக்கலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-morning-drinks-for-clean-stomach-in-tamil-1785214043"></link>
            <id>https://news.lankasri.com/article/5-morning-drinks-for-clean-stomach-in-tamil-1785214043</id>
            <summary type="text">மனித உடலின் இயக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தூய்மையான தண்ணீரே மிகச் சிறந்த மற்றும் அவசியமான பானமாகும்.

ஆனால் அதனுடன் சில இயற்கை பொருட்களை சேர்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனித உடலின் இயக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தூய்மையான தண்ணீரே மிகச் சிறந்த மற்றும் அவசியமான பானமாகும்.</p><p>

ஆனால் அதனுடன் சில இயற்கை பொருட்களை சேர்த்து குடித்தால், செரிமான ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.</p><p>

அடிக்கடி மலச்சிக்கல், வாய்வு, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், காலையில் வெறும் வயிற்றில் சில இயற்கை பானங்களை குடிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
</p><p>
அந்தவகையில், வயிற்றை சுத்தம் செய்ய உதவும் சில இயற்கை பானங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8bb7772-1055-4398-a909-7ef07524ccc2/26-6a683553ca0db.webp' /></p><h2>1. எலுமிச்சை - தேன் நீர்</h2><p>

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். இது செரிமானத்தை தூண்டி, மலச்சிக்கல், வாய்வு மற்றும் வயிற்று உப்புசத்தை குறைக்க உதவும். மேலும் சரும பொலிவையும் அதிகரிக்க உதவுகிறது.</p><h2>

2. நெய் கலந்த வெதுவெதுப்பான நீர்
</h2><p>ஒரு டீஸ்பூன் நெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது குடல் இயக்கத்தை சீராக்கவும், கழிவுகள் எளிதாக வெளியேறவும் உதவும். இருப்பினும், உயர் கொலஸ்ட்ரால் அல்லது ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இதை குடிக்க வேண்டும்.</p><p></p><p>
</p><h2>
3. சைலியம் (இசப்கோல்)
</h2><p>ஒரு ஸ்பூன் சைலியத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனைகளில் நிவாரணம் கிடைக்கும். இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.
</p><h2>
4. சோம்பு அல்லது சீரக நீர்
</h2><p>சிறிதளவு சோம்பு அல்லது சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை காலையில் குடிக்கலாம். இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், அசிடிட்டி, வாய்வு மற்றும் வயிற்று உப்புசத்தை குறைக்க உதவும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T04:52:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அந்த இரண்டு நாடுகள்... புனிதப் போருக்கு அழைப்பு விடுத்த மொஜ்தபா கமேனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/khamenei-jihad-message-to-1785212556"></link>
            <id>https://news.lankasri.com/article/khamenei-jihad-message-to-1785212556</id>
            <summary type="text">ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி, 
லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுக்குத் தமது நாட்டின் அசைக்க முடியாத ஆதரவை வழங்கியுள்ளார்.வேறு வழியில்லை
அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி, 
லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுக்குத் தமது நாட்டின் அசைக்க முடியாத ஆதரவை வழங்கியுள்ளார்.</p><h2>வேறு வழியில்லை</h2><p>
</p><p>அத்துடன், இஸ்ரேலுக்கு எதிரான அவர்களின் உறுதியான நிலைப்பாட்டிற்காக அவர்களைப் பாராட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82db94db-14f0-4af5-aca3-54ad6bab4af7/26-6a68306bf321c.webp' /></p><p> </p><p>மேலும், லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படுவதோடு, அமெரிக்காவுடனான ஈரானின் மோதலும் முடிவுக்கு வரும் என பதிவு செய்துள்ள மொஜ்தபா கமேனி, புனிதப் போர் மற்றும் எதிர்த்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அறிவித்தார். </p><p>ஹிஸ்புல்லா பொதுச்செயலாளர் ஷேக் நைம் காசிம் மற்றும் அந்த அமைப்பின் போராளிகள் அனைவருக்குமான ஒரு செய்தியில் பதிவு செய்த கமேனி, லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளைப் பாதுகாப்பதை ஒரு முக்கிய உத்திசார் கடமையாகக் கருதுவதாகவும்,</p><p></p><p> </p><p>அமெரிக்காவுடனான ஈரானின் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் நிபந்தனையாக, லெபனான் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முழுமையாகவும் நிபந்தனையின்றியும் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். </p><p>ஈரானின் இஸ்லாமியக் குடியரசுக்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதியளித்து ஹிஸ்புல்லா அமைப்பு எழுதிய கடிதத்திற்குப் பதிலளிக்கும் விதமாக ஈரானியத் தலைவர் கமேனி பதிலளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d20fcd96-61b3-448a-80a5-d48fe4e6285f/26-6a68306b319a4.webp' /></p><h2>ஒரு தளராத பாறையாக</h2><p> </p><p>இன்று, அமெரிக்க அரசாங்கத்தின் மற்றும் உயிர்களையும் தலைமுறைகளையும் அழித்தொழிக்கும் கொடூர சியோனிஸ்டுகளின் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறையால் உலகின் பல நாடுகள் சோர்வடைந்துள்ள நிலையில், புனிதப் போர் மற்றும் எதிர்ப்பைத் தவிர வேறு எந்த வழியும் எஞ்சியிருக்கவில்லை என கமேனி பதிவு செய்துள்ளார். </p><p>மேலும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக புனிதப் போரில் ஈடுபட்டுள்ள குழுக்களின் முன்னோடியாக, லெபனான் ஹிஸ்புல்லா படைகள் ஒரு தளராத பாறையாக நின்றுள்ளது என்று கமேனி பாராட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecbf7d84-9cb9-405f-8580-28708997cbe7/26-6a68306ca3eaf.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, உலகளாவிய ஆணவத்திலிருந்து விடுபடுவதற்கான உலகின் சுதந்திர நாடுகளின் போராட்டத்திற்கு, இந்த உறுதியான நிலைப்பாடு ஒரு ஊக்கமளிக்கும் செய்தியாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>ஹிஸ்புல்லாவின் படைகள், முன்னாள் போராளிகள், இடம்பெயர்ந்த பொதுமக்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்கள் ஆகியோருக்காகப் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்ட அவர், அவர்களின் இறுதி வெற்றி குறித்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T04:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் உருவாகும் புதிய வெப்ப அலை... போர்க்கால நடவடிக்கையில் இரண்டு ஐரோப்பிய நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fresh-heatwave-france-spain-race-1785209811"></link>
            <id>https://news.lankasri.com/article/fresh-heatwave-france-spain-race-1785209811</id>
            <summary type="text">இந்த வாரம் உருவாகவிருக்கும் மற்றொரு வெப்ப அலையால் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு, பற்றியெரியும் காட்டுதீயைக் கட்டுப்படுத்தும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வாரம் உருவாகவிருக்கும் மற்றொரு வெப்ப அலையால் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு, பற்றியெரியும் காட்டுதீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேலும் சிக்கலாக்கக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது.</p><h2>நவம்பர்&nbsp;வரையிலும்</h2><p> </p><p>
புதன்கிழமை முதல் வெப்பநிலை மீண்டும் உயர்வதற்கு முன்பு, திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகள் மிக முக்கியமான நாட்கள் என்று ஸ்பெயினின் உள்விவகார அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லாஸ்கா கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6de616a8-a406-4a83-8b61-b37dfa6c46d8/26-6a68251c0a9af.webp' /></p><p> </p><p>அதேவேளை, நாம் கடினமான, சிக்கலான மணி நேரங்களை எதிர்கொள்ளவிருக்கிறோம் என 
பிரதமர் பெட்ரோ சான்செஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p> இதனிடையே, காட்டுத்தீயால் எரிந்த நிலப்பரப்பின் அளவைப் பொறுத்தவரை இது ஒரு சாதனை வருடமாக அமையக்கூடும் என்ற நிலையில், நவம்பர் மாதத் தொடக்கம் வரையிலும் கூட காட்டுத்தீ தொடர்ந்து எரியக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>மாட்ரிட் நகருக்கு மேற்கே உள்ள அவிலா (Ávila) மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, 50,000 ஹெக்டேர் நிலப்பரப்பை எரித்து, ஸ்பெயினின் வரலாற்றிலேயே மிகப்பெரிய காட்டுத்தீயாக மாறியுள்ளது.</p><p></p><p> </p><p>மாட்ரிட் நகருக்கு வடமேற்கே ஏற்பட்டுள்ள இரண்டு தனித்தனி காட்டுத்தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்; இதனால் தலைநகருக்கு அருகிலுள்ள தீயினால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பின் மொத்த அளவு 70,000 ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
</p><p>ஸ்பெயினின் அரசு வானிலை ஆய்வு அமைப்பான 'ஏமெட்' (Aemet) வெளியிட்டுள்ள தகவலில், புதன்கிழமை தொடங்கும் புதிய வெப்ப அலையானது குறைந்தது ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அப்பகுதியில் வீசும் பலத்த தெற்குத் திசைக் காற்று ஆகியவற்றால் தீயணைப்புப் பணிகள் மேலும் கடினமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, இந்த வாரத்தில் மற்றொரு வெப்ப அலை வீசுவதற்கு முன்னதாகவே காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் நிர்வாகம் போர்க்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் எரிக் ப்ரோகார்டி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f482f2fd-c80a-4c2d-ba3b-db1f7c673422/26-6a682519a3f2f.webp' /></p><p> </p><p>செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p> இதனிடையே, காட்டுத்தீ நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவு வரை நெருங்கிவிட்ட நிலையில், எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள தயாராகி வருவதாக போர்டோ (Bordeaux) நகர மேயர் தாமஸ் கசெனேவ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். </p><p>மேலும் மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டால், அவர்களைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>போர்டோ (Bordeaux) பகுதிக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, ​​பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரோன் தெரிவிக்கையில், வரவிருக்கும் வாரங்கள் கடினமானவையாக இருக்கும்; நாம் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.</p><h2>உலகப் போருக்குப் பிறகு</h2><p> </p><p>ஜிரோண்ட் (Gironde) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ இதுவரை 42,000 ஹெக்டேர் நிலத்தை எரித்துச் சாம்பலாக்கியுள்ளது; இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரான்சில் நிலப்பரப்புக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அழிவுகளில் ஒன்றாகும் என்றே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cdc51c2-fdbc-4579-8749-19325e56ead5/26-6a68251a96641.webp' /></p><p> </p><p>இதனிடையே, இந்த ஆண்டு எரிந்துபோன 172,000 ஹெக்டேர் வனப்பகுதியானது, 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் தீக்கிரையான அளவை விட ஆறு மடங்கு அதிகம் என்று ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>காலநிலை நெருக்கடி இல்லாவிட்டால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லாத தொடர்ச்சியான வெப்ப அலைகளாலும் (ஜூன் மாதத்தில் பதிவான சாதனை அளவிலான வெப்பம் உட்பட), அதனால் வறண்டுபோன மண் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய நிலையில் உள்ள தாவரங்களாலும் இந்த கோடைக்காலத் தீ விபத்துகள் தீவிரமடைந்துள்ளதாகவே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். </p><p>காட்டுத்தீ பருவம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி நவம்பர் தொடக்கம் வரை நீடிக்கக்கூடும் என்று ஐரோப்பிய ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p> மேலும், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் வாரத்தின் நடுப்பகுதியில் இருந்து காட்டுத்தீயை அணைப்பதற்கான அபாயங்கள் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/421ca659-8b60-486c-995a-4e775756ef15/26-6a68251b4be28.webp' /></p><p> </p><p>அதிகமானப் பரப்பளவில் மிக வேகமாகப் பரவியுள்ள அண்மைய காட்டுத்தீச் சம்பவங்களின் முன்னெப்போதும் இல்லாத தன்மையை அதிகாரிகள் வலியுறுத்திக் கூறியுள்ளனர். </p><p>தெற்கு ஸ்பெயினில் அண்மையில் 13 பேரின் உயிரைப் பறித்த காட்டுத்தீ மணிக்கு 4 மைல் வேகத்தில் பரவியதாக ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்; ஆனால், தீயணைப்பு வீரர்களால் மணிக்கு 300 மீற்றர் அல்லது அதற்கும் குறைவான வேகத்தில் பரவும் தீயை மட்டுமே எதிர்கொள்ள முடிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T03:35:04+00:00</updated>
        </entry>
    </feed>
