<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-11T17:25:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நார்வே இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்: சோகத்தில் ஆழ்ந்த அரச குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/norway-princess-astrid-passed-away-at-94-1789147232"></link>
            <id>https://news.lankasri.com/article/norway-princess-astrid-passed-away-at-94-1789147232</id>
            <summary type="text">நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய 94வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார். இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்வெள்ளிக்கிழமை நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய 94வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார்.</p><h2> இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்</h2><p>வெள்ளிக்கிழமை நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட்(Princess Astrid&nbsp;) தனது 94வது வயதில் காலமானார். இதனால் நார்வே அரச குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.</p><p> மறைந்த மன்னர் ஹரால்டின் சகோதரியான ஆஸ்ட்ரிட் தன்னுடைய சகோதரர் உயிரிழந்த சில வாரங்களில் உயிரிழந்துள்ளார்.</p><p> கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் புரிந்து பிறகு கடந்த மாதம் மன்னர் ஹரால்டு(89) உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a13a5a9f-e531-49f0-8866-8e578146b4b3/26-6aa43861e3c0b.webp' /></p><p>மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு கடந்த புதன்கிழமை ஓஸ்லோ பேராலயத்தில் நடைபெற்ற நிலையில், அதில் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய கடைசி பொது நிகழ்வாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p> இளவரசியின் மறைவு தொடர்பாக அரண்மனை வெளியிட்ட குறிப்பில், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய அரச குடும்பத்தை அன்பாகவும் பொறுப்புடனும் கவனித்து கொண்டதாக தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T17:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம்: முதல் நபரை கைது செய்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/portsmouth-anti-migration-protests-1-man-arrested-1789145354"></link>
            <id>https://news.lankasri.com/article/portsmouth-anti-migration-protests-1-man-arrested-1789145354</id>
            <summary type="text">Portsmouth Anti-Migration Protests 1st man arrested: போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் முதல் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Portsmouth Anti-Migration Protests 1st man arrested: போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் முதல் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> முதல் நபர் கைது</h2><p>பிரித்தானியாவில் கடந்த வாரம் நடந்த அகதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது மற்றும் காவல்துறை அதிகாரிகளை தாக்கியது ஆகிய குற்றச்சாட்டின் கீழ் பால்ஸ்ரோவ்(Paulsgrove) பகுதியை சேர்ந்த 42 வயது நபரை வெள்ளிக்கிழமை ஹாம்ப்ஷயர்(Hampshire) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>100க்கும் மேற்பட்ட அகதிகளுடன் RNLI படகுகள் துறைமுகத்திற்கு வந்த நிலையில், அதனை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணி நேரம் துறைமுக பாதையை முடக்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/058321a8-975d-49af-a29e-e9c3a2e37ba4/26-6aa4310c5d69c.webp' /></p><p>மேலும் அப்போது ஏற்பட்ட மோதலின் போது சில காவலர்கள் காயமடைந்தனர். இறுதியில் திங்கட்கிழமை காலை கூட்டம் கலைக்கப்பட்டது.</p><p>இந்த வார சனிக்கிழமை போர்ட்ஸ்மவுத் நகர மையத்தில் சவுத் கோஸ்ட் பேட்ரியாட்ஸ் அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.</p><p></p><h2>முகமூடி அணிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை</h2><p>
இந்நிலையில் போராட்டக்காரர்கள் யாரும் முகமூடி அணிந்து கொண்டு ஆர்ப்பாட்ட பகுதிக்குள் வரக்கூடாது என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p><p> உத்தரவை மீறி முகமூடி அணியும் எவரும் குற்றவாளியாக கருதப்பட்டு உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> முகமூடி அணிந்த நபர்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-11T16:49:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[47 வயதில் CPL-ல் 5 விக்கெட் - இம்ரான் தாஹிர் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/imran-tahir-47-bags-historic-cpl-five-for-1789143334"></link>
            <id>https://news.lankasri.com/article/imran-tahir-47-bags-historic-cpl-five-for-1789143334</id>
            <summary type="text">Imran Tahir (47) bags historic 5 wickets at CPL: Caribbean Premier League (CPL) போட்டியில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Imran Tahir (47) bags historic 5 wickets at CPL: Caribbean Premier League (CPL) போட்டியில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர், 47 வயதிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.</p><p>

அவர் CPL-இல் ஐந்து விக்கெட் எடுத்து, டி20 கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மிக வயதான வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9186e84c-60ec-46fd-b3e4-35f128217eec/26-6aa429279230d.webp' /></p><p>தாஹிர், Guyana Amazon Warriors அணிக்காக விளையாடி, St Lucia Kings அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் எடுத்தார். அவரது அசத்தலான பந்துவீச்சால் எதிரணி அணி குறைந்த ஓட்டங்களில் சுருண்டது.
</p><p>
போட்டிக்குப் பிறகு, தாஹிர், “என் மகன் என்னை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். அவர் தான் என்னை இன்னும் விளையாட தூண்டுகிறார். எனக்கு வயதானாலும், கிரிக்கெட்டில் ஆர்வம் குறையவில்லை” எனக் கூறினார்.
</p><p></p><p>தாஹிர் தனது வாழ்க்கையில் பல்வேறு நாடுகளில் விளையாடியுள்ளார். IPL-இல் Chennai Super Kings அணிக்காகவும், உலகம் முழுவதும் பல T20 லீக்குகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
அவரது சாதனை, வயது ஒரு தடையாக இல்லாமல், உற்சாகமும், உடல் ஆரோக்கியமும் இருந்தால் எந்த வயதிலும் விளையாட முடியும் என்பதை நிரூபிக்கிறது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Imran Tahir picks up his sixth T20 five-fer and registers his best figures in the format - all while 4⃣7⃣ years young 🫡<a href="https://t.co/dyfKFpFitV">pic.twitter.com/dyfKFpFitV</a></p>&mdash; Cricbuzz (@cricbuzz) <a href="https://x.com/cricbuzz/status/2097855827545838039?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>CPL ரசிகர்கள், தாஹிரின் சாதனையை பாராட்டி, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். “தாஹிர் இன்னும் இளம் வீரர்களுக்கு சவாலாக இருக்கிறார்” என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சாதனை, CPL வரலாற்றில் மட்டுமல்லாமல், உலகளாவிய T20 லீக்குகளிலும் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T16:12:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-capture-perim-island-oil-at-risk-1789140181"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-capture-perim-island-oil-at-risk-1789140181</id>
            <summary type="text">Houthis capture Perim island: ஏமனில் பெரிம் தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.

பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம், ஏமனின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis capture Perim island: ஏமனில் பெரிம் தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><h2>

பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்</h2><p>ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம், ஏமனின் மேற்குக் கடற்கரை பகுதியில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. அவர்கள் பாப் அல்-மந்தப் நீரிணையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள பெரிம் (Mayyun) தீவை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p></p><h2>எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பு</h2><p>இந்த தீவு, செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கியமான வர்த்தக பாதையில் அமைந்துள்ளது. உலகளாவிய பொருட்களின் சுமார் 12 சதவீதம் இந்த நீரிணை வழியாக வர்த்தகம் செய்யப்படுகிறது.</p><p>

சவுதி அரேபியா, ஏமன் அரசுப் படைகளுக்கு ஆதரவளித்து வந்த நிலையில், ஹவுதிகள் மோகா துறைமுக நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனால், சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f406672-322b-4f76-bde3-6ff80b707e71/26-6aa41cd80bf0c.webp' /></p><p>ஏற்கனவே, ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்களை நடத்தியதால், சவுதி அதிகமாக செங்கடல் பாதையை பயன்படுத்தி வந்தது.

ஹவுதிகள் பெரிம் தீவை கைப்பற்றியதால், உலகளாவிய எரிசக்தி போக்குவரத்துக்கு இரட்டை அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.</p><p></p><h2>ஈரான்&nbsp;வரவேற்பு</h2><p> </p><p>ஹார்முஸ் நீரிணை ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், பாப் அல்-மந்தப் ஹவுதிகள் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளது.

இதனால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலரை தாண்டியுள்ளது. </p><p>

ஈரான், ஹவுதிகளின் முன்னேற்றத்தை வரவேற்று, “இது சவுதி மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான எங்கள் கூட்டணியை வலுப்படுத்தும்” என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T16:08:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.1,470 கோடி லொட்டரி வென்ற பெண் - பாதி தொகையை தானமாக வழங்கினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lottery-winner-donates-half-fortune-uk-1789142086"></link>
            <id>https://news.lankasri.com/article/lottery-winner-donates-half-fortune-uk-1789142086</id>
            <summary type="text">Lottery winner donates half fortune: லொட்டரியில் வென்ற ரூ.1,470 கோடியில் பாதியை தானமாக வழங்கிய பெண்ணை பற்றி இங்கே பார்க்கலாம்.

 EuroMillions லொட்டர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Lottery winner donates half fortune: லொட்டரியில் வென்ற ரூ.1,470 கோடியில் பாதியை தானமாக வழங்கிய பெண்ணை பற்றி இங்கே பார்க்கலாம்.</p><h2>

 EuroMillions லொட்டரியில் 115 மில்லியன் பவுண்டு</h2><p>பிரித்தானியாவில் பிரான்சிஸ் கொனொலி (Frances Connolly) என்ற பெண், 2019-இல் தனது கணவர் Paddy Connolly--யுடன் சேர்ந்து EuroMillions லொட்டரியில் 115 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ.1,470 கோடி) வென்றார்.</p><p></p><p>ஆனால், அந்த பெரும் செல்வத்தை தனக்காக மட்டும் வைத்துக்கொள்ளாமல், அவர் அதில் பாதியை சமூக நலத்திற்காக தானமாக வழங்கியுள்ளார்.</p><p>

பிரான்சிஸ், சமூகப்பணியாளராகவும் ஆசிரியராகவும் இருந்தவர். “என் குடும்பத்தின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகிய பிறகு, செல்வத்தை பகிர்வது மனித இயல்பாகவே தோன்றியது” என அவர் கூறியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a80d09d-440e-4741-8cf1-af8e9ff3dcc7/26-6aa42447f2287.webp' /></p><h2>ரூ.632.5 கோடி தானம்</h2><p>Dolly Parton-ன் தானதர்ம பணிகள் அவருக்கு ஊக்கமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.</p><p>115 மில்லியன் பவுண்டுகளில், சுமார் ரூ.632.5 கோடி மதிப்புள்ள தொகையை அவர் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு வழங்கியுள்ளார். இதற்காக, PFC Trust என்ற அறக்கட்டளையையும் நிறுவியுள்ளார்.
</p><p>
அவரது வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம் இல்லை. “நாங்கள் முன்பே வாழ்ந்த வாழ்க்கையை, இப்போது சிறிது பெரிய அளவில் வாழ்கிறோம்” என Frances கூறுகிறார். அவர்கள் இன்னும் பழைய வாட்ச்கள், கார்கள் போன்றவற்றை விரும்பி வாங்குகின்றனர். தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்க்கின்றனர்.</p><p></p><h2>60-வது பிறந்தநாள்</h2><p>பிரான்சிஸ், “மனிதர்களுக்கு ‘போதும்’ என்ற அளவு வேறுபடும். ஆனால், குழந்தைகள் நிம்மதியாக வாழும் அளவு கிடைத்த பிறகு, மீதியை பகிர்வது சரியானது” எனக் கூறியுள்ளார்.
</p><p>
அவரது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு விளையாட்டு வீரர்கள் PFC Trust-க்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
</p><p>
வடக்கு அயர்லாந்தில் பிறந்த பிரான்சிஸ், சிறுவயதிலிருந்தே பிறருக்கு உதவியவர். பின்னர் Hartlepool நகரில் குடியேறி, அங்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T15:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக எரிசக்தி, உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க ரஷ்யா தயார் - BRICS மாநாட்டில் புடின் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-russia-to-aid-global-energy-food-security-1789137348"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-russia-to-aid-global-energy-food-security-1789137348</id>
            <summary type="text">Putin says Russia is ready to Aid Global Energy, Food Security: உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய ஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin says Russia is ready to Aid Global Energy, Food Security: உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், BRICS நாடுகளுடன் வணிகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcf9044c-9358-4e1e-a382-d6ff27497c5a/26-6aa411c5b1b1f.webp' /></p><p>BRICS வணிக மாநாட்டில் உரையாற்றிய புடின், “உலகம் ஆழமான மாற்றங்களை எதிர்கொள்கிறது. இந்த சூழலில், நாங்கள் எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்புக்கு பங்களிக்கவும், ஆர்க்டிக் போக்குவரத்து வழி மற்றும் வடக்கு-தெற்கு போக்குவரத்து வழி போன்ற நம்பகமான லாஜிஸ்டிக் பாதைகளை உருவாக்கவும் தயாராக உள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
மேலும், சுற்றுலா, தொழில், வணிகம், மனிதவள பயிற்சி, சுய இயக்க வாகனங்கள், ஸ்மார்ட் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ரஷ்யா புதிய முயற்சிகளை மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் மேற்கு ஆசியா நெருக்கடி சூழலில், புடின் மேற்கத்திய நாடுகளை நேரடியாக பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார்.</p><p>

மேலும், மேற்கத்திய தடைகள் பொருளாதார ஒத்துழைப்பை குறைக்கும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன எனவும், இது உலகளாவிய போட்டியை பாதிக்கிறது எனவும் புடின் குற்றம்சாட்டினார்.
</p><p>
இந்த உரை, ரஷ்யா BRICS நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்தும் முயற்சிப்பதையும், உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதையும் வெளிப்படுத்துகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T14:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் சொகுசு பதுங்குகுழிகள் - 2035-க்குள் 10 பில்லியன் டொலர் மதிப்பை எட்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/luxury-bunker-market-to-hit-10-bn-dollars-by-2035-1789133357"></link>
            <id>https://news.lankasri.com/article/luxury-bunker-market-to-hit-10-bn-dollars-by-2035-1789133357</id>
            <summary type="text">Luxury bunker market to hit 10 Bn dollar by 2035: உலகில் பெரும் செல்வந்தர்களிடையே சொகுசான பதுங்குகுழிகள் கட்டப்படுவது பிரபலமாகிவருகிறது.

மிகப்பெரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Luxury bunker market to hit 10 Bn dollar by 2035: உலகில் பெரும் செல்வந்தர்களிடையே சொகுசான பதுங்குகுழிகள் கட்டப்படுவது பிரபலமாகிவருகிறது.</p><h2>

மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் பதுங்குகுழிகள்</h2><p>உலக நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றங்கள், போர் அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், பதுங்குகுழி சந்தை (Underground Bunker Market) வேகமாக வளர்ந்து வருகிறது.</p><p>
</p><p></p><p>2024-இல் பதுங்குகுழி சந்தையின் மதிப்பு சுமார் 3.07 பில்லியன் டொலராக இருந்தது. Spherical Insights &amp; Consulting வெளியிட்ட அறிக்கையின் படி, இது 2035-க்குள் 9.49 பில்லியன் டொலராக உயரக்கூடும். இதன் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 10.8 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் போர் சூழ்நிலைகள், அணு ஆயுத தாக்குதல் அபாயங்கள், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால், பொதுமக்கள் தனிப்பட்ட பதுங்குகுழிகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ab7c06-d621-4912-9c74-ed0953f7fdfe/26-6aa4022f0e39c.webp' /></p><p>பனிப்போர் காலத்தில் மக்கள் தொகை முழுவதற்கும் பதுங்குகுழிகள் கட்டப்பட்டன. ஆனால் இப்போது, செல்வந்தர்களுக்கான தனிப்பட்ட சொகுசு பதுங்குகுழிகள் (Luxury Bunkers) அதிகமாக உருவாக்கப்படுகின்றன.
</p><p>
2025-இல் வெளியான BBC அறிக்கையின் படி, Facebook நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் ஹவாய் தீவில் உள்ள தனது 1,400-acre நிலப்பரப்பில் தனிப்பட்ட பங்கர் ஒன்றை கட்டியுள்ளார். இதில் தனி மின்சாரம் மற்றும் உணவு வசதிகளும் உள்ளன.</p><p></p><p>

உலகளாவிய பாதுகாப்பு அச்சங்கள், “Doomsday” போன்ற சூழ்நிலைகளுக்கான தயாரிப்புகள், மற்றும் செல்வந்தர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு தேவைகள் ஆகிய காரணங்களால் இந்த பதுங்குகுழி சந்தை வளர்ந்துகொண்டே போகிறது.
</p><p>
2035-க்குள், இந்த பதுங்குகுழி சந்தை 10 பில்லியன் டொலர் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் தனிப்பட்ட சொகுசு வசதிகள் இணைந்த புதிய வணிக துறையாக உருவெடுக்கிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T13:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை எதிர்கொள்ளும்போது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/federal-reserve-bank-of-england-1789129987"></link>
            <id>https://news.lankasri.com/article/federal-reserve-bank-of-england-1789129987</id>
            <summary type="text">ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் ஆகியவை தங்களது
செப்ரம்பர் மாத முடிவுகளை அடுத்தடுத்த நாளில் எடுக்கின்றன,
ஆயினும், இவற்றில் எது அதிக கண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec8ba40-1407-47ec-bbe5-9cf4c0a9e9a7/26-6aa3f61c93eea.webp' /><br></p><p>ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் ஆகியவை தங்களது
செப்ரம்பர் மாத முடிவுகளை அடுத்தடுத்த நாளில் எடுக்கின்றன,
ஆயினும், இவற்றில் எது அதிக கண்டிப்பான கொள்கையைக்
கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் GBPUSD-இன் விலை
நிர்ணயிக்கப்படவில்லை. ஒவ்வொரு வங்கியும் உண்மையில்
மேற்கொள்ள வேண்டிய டிரேட்-ஓஃப் அடிப்படையிலேயே இதன் விலை
நிர்ணயிக்கப்படுகிறது.
</p><p>
GBPUSD ஆனது வர்த்தக விலைபோலச் செயல்பட மறுத்து, 2026-ஆம்
ஆண்டின் பெரும்பகுதியைச் செலவு செய்தது. ஃபெடரல் ரிசர்வ் மற்றும்
பாங்க் ஒஃப் இங்லண்ட் (BoE) ஆகியவை ஒரே மாதிரியான கொள்கைப்
பரப்பில் செயல்படுவதால், வழக்கமாக இவற்றை ஒரே நோக்கை
நோக்கிக் கொண்டுசெல்லும் விளைவு இடைவெளி, தற்போது
அவ்வளவு தீர்க்கமானதாக இல்லை.
</p><p>வித்தியாசம் குறுகும்போது, அந்த ஜோடியானது தமது நிலையைவிட,
தமது விலைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களின் அடிப்படையில்
வர்த்தகமாகிறது. ஃபெடரல் ரிசர்வ் செப்டம்பர் 16 அன்று
முடிவெடுக்கிறது, அதைத் தொடர்ந்து பாங்க் ஒஃப் இங்லண்ட்
செப்டம்பர் 17 அன்று முடிவெடுக்கிறது, இதன்மூலம் ஒரே நாளில்
இரண்டு எதிர்வினைச் செயல்பாடுகள் ஒன்றாகவே அமைகின்றன.
</p><p>ஓர் எதிர்வினைச் செயல்பாடு என்பது ஒரு வங்கி எதைக் காண்கிறது
என்பதையும் அது எதைச் செய்கிறது என்பதையும் இணைக்கும்
விதியாகும். மேலும், இரண்டு வங்கிகளும் பணவீக்கத்தை
வளர்ச்சியுடன் வெவ்வேறு தொடக்கப் புள்ளிகளிலிருந்து ஒப்பிட்டுப்
பார்க்கும்போது, அவை ஒரே மாதிரியான எண்களை வெளியிட்டாலும்,
எதிர்மாறான செய்திகளை அனுப்பக்கூடும்.</p><h2>US தரப்பு சமன்பாடு</h2><p>US தரப்பைப் பொறுத்தவரை, பணவீக்கம் பரவலாகக் குறைகிறதா
அல்லது ஒட்டுமொத்த நிலையில் மட்டுமா என்பதைச் சந்தை
உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. முக்கியமாக எரிசக்திச்
சந்தைகளால் ஏற்படும் பலவீனமான CPI பதிவை, உள்நாட்டு விலை
அழுத்தத்தின் தெளிவான சமிக்ஞைகளில் ஒன்றாகத் திகழும் முக்கியச்
சேவைகளில் ஏற்படும் நீடித்தகாலத் தளர்விலிருந்து முற்றிலும்
மாறுபட்ட விதத்தில் புரிந்துகொள்ளலாம்.
</p><p>அந்த வேறுபாடு ஃபெடரல் ரிசர்வுக்கு முக்கியமானது. ஒட்டுமொத்தப்
பணவீக்கம் தணிந்து, அதே சமயம் சேவைத் துறைப் பணவீக்கம்
மாற்றமின்றி நீடித்தால், பணவீக்கப் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது
என்பதற்கு ஒரேயொரு தரவை ஆதாரமாகக் கருதுவதற்கு மத்திய
வங்கி தயக்கம் காட்டக்கூடும். தலைவர் கெவின் வார்ஷ் வெளியிட்ட
தகவல்கள், ஃபெடரல் ரிசர்வின் பரந்த பணவீக்க நிலைப்பாட்டை
மாற்றுவதற்கு பலவீனமான பொருளாதாரத் தரவுகள் போதுமானதா
என்பதில் சந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.</p><p>
செப்ரம்பர் மாதக் கூட்டத்தில் புதிய பொருளாதாரக் கணிப்புகளின்
சுருக்க அறிக்கையும் தாக்கல் செய்யப்பட இருப்பதால், 'டாட் பிளாட்'
வரைபடமும் சந்தையின் முக்கியக் கவனத்திற்கு உள்ளாகும். USD
வர்த்தகர்களுக்கு, வட்டி வீத முடிவைப் போலவே, கணிப்புகளும்
உண்மையான விளைவு வீதப் போக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக
இருக்கலாம். உண்மையான விளைவு வீதங்கள் உயர்ந்த
நிலையிலேயே நீடித்தால், புதிய வட்டி வீத மாற்றம் இல்லாமலேயே
டொலர் ஆதரவைப் பெற முடியும்.</p><h2>UK தரப்பு</h2><p>GBP வர்த்தகர்களுக்கு UK அதே பிரச்சனையின் வேறொரு வடிவத்தை
அளிக்கிறது. பணவீக்கம் முந்தைய அழுத்தத்திலிருந்து தணிந்துள்ளது,
ஆனால் சேவைத் துறையின் பணவீக்கமும் ஊதிய வளர்ச்சியும் பாங்க்
ஒஃப் இங்லண்ட் உடைய முடிவெடுக்கும் செயல்பாட்டில் முக்கியப்
பங்கு வகிக்கின்றன. தொழிலாளர் சந்தை தளர்வதற்கான

அறிகுறிகளைக் காட்டியுள்ளது, ஆனாலும் உள்நாட்டுப் பணவீக்க
அழுத்தம் முழுமையாக அதைப் பின்பற்றவில்லை.
</p><p>வாக்குப் பிளவே பல விஷயங்களை எடுத்துரைக்கிறது. வட்டி விகித
உயர்வை ஆதரிக்கும் சிறுபான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு
தற்போதைய நிலையைத் தொடர்வது என்பது, அனைவரும்
ஒருமனதாகத் தற்போதைய நிலையைத் தொடர்வதிலிருந்து
வித்தியாசமானது. GBP வர்த்தகர்களுக்கு, சமிக்ஞை என்பது வங்கி வீதம்
மட்டுமல்ல, MPC உறுப்பினர்களில் அதிகமானோர் நீடித்த பணவீக்கம்
குறித்துக் கவலைப்படுகிறார்களா அல்லது வளர்ச்சி அபாயம் குறித்துக்
கவலைப்படுகிறார்களா என்பதும்தான்.</p><h2>விலகுதல் அளவீடு</h2><p>இரு வங்கிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கொள்கைப் பரப்பில்
இருப்பதால், ஒன்றையொன்று பொறுத்து எந்த வங்கியின் எதிர்வினைச்
செயல்பாடு இறுக்கமடைகிறதோ, அதைப் பொறுத்தே இந்த ஜோடியின்
நகர்வு அமைய வாய்ப்புள்ளது. நான்கு சேர்க்கைகள் இந்தக் கணிப்பை
வடிவமைக்கின்றன, அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு விலை இலக்கைக்
காட்டிலும் உறுதிப்படுத்தும் சமிக்ஞையைக் கொண்டுள்ளது.</p><p>• கண்டிப்பான நிலைபாடுடைய ஃபெடரல் ரிசர்வ், மென்மையான
அணுகுமுறையுடைய BoE. ஒரு மென்மையான UK சேவைத்
துறையின் சரிவுக்கு எதிராகக் காணப்படும் ஓர் உறுதியான
புள்ளிவிபரம், டொலருக்குச் சாதகமான மறைமுக இடைவெளியை
விரிவுபடுத்துகிறது. உறுதிப்படுத்தல் என்பது ஒட்டுமொத்த வீதத்தில்
இல்லை, மாறாக நிலையான பொருளாதாரக் குறியீட்டிலும் (SEP)
மற்றும் உண்மையான விளைவு வீதங்கள் நிலைத்திருப்பதிலுமே
உள்ளது.</p><p>• மென்மையான அணுகுமுறையுடைய ஃபெடரல் ரிசர்வ், கண்டிப்பான
நிலைப்பாடுடைய BoE. தொடர்ந்து கண்டிப்பான நிலைப்பாட்டைக்
கொண்டிருக்கும், வட்டி விகிதத்தை அதிகரிக்க விரும்பும் UK
சிறுபிரிவினருக்கு எதிராக, US உடைய முக்கியச் சேவைத்

துறையின் சந்தை நிலவரம் சற்று தணிந்திருப்பது,
ஸ்ரெர்லிங்கிற்குச் சாதகமாகச் சமநிலையைச் சாய்க்கிறது. MPC
வாக்குப் பிளவையும் UK சேவைகள் பணவீக்கத்தையும்
கவனியுங்கள்.</p><p>• இரண்டுமே கண்டிப்பானவை. தொடர்பான செய்தி பெரிதாக
மாறாததால், ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்போது இந்த ஜோடி ஒரு
குறிப்பிட்ட வரம்பிற்குள் நிலைத்திருக்கிறது; நிலைப்பாடும்
தொனியுமே இந்த ஏற்ற இறக்கங்களை இயக்குகின்றன.</p><p>• இரண்டுமே மென்மையான அணுகுமுறையுடையவை. தளர்வை
நோக்கிய ஒரு பகிரப்பட்ட சூழல் மையம், குறிப்பிட்ட நாணய
இணையை மட்டும் பாதிக்காமல், பரந்த இடர் நாட்டம் மற்றும் DXY
வழியாகவே டொலர் தரப்பின் நகர்வைச் செய்ய முனைகிறது.</p><p><a href="https://www.exness.com/" target="_blank">Exness </a>நிறுவனத்தின் நிதிச் சந்தை வியூக நிபுணரான லி சிங் கான்
குறிப்பிடுவது போல, “வட்டிவீத இடைவெளி கிட்டத்தட்ட இல்லாத
அளவுக்குக் குறையும்போது, சந்தையானது முடிவை வைத்து வர்த்தகம்
செய்வதை நிறுத்திவிட்டு, எதிர்வினைச் செயல்பாட்டை வைத்து
வர்த்தகம் செய்யத் தொடங்கும். இந்த ஜோடி, எந்தக் குழு கடினமான
டிரேட்-ஓஃபை எதிர்கொள்கிறது என்பதன் அடிப்படையிலேயே
செயல்படுகிறது; எந்தக் குழு அதிக கண்டிப்பான நிலைப்பாட்டைக்
கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் அல்ல.”</p><p>பணவீக்கம் தொடர்பான ஒரேயொரு எதிர்பாராத நிகழ்வு இந்த
ஜோடியை ஓர் அமர்வுக்கு அனுப்புகிறது, ஆனால் கணிப்புகளில்
ஏற்படும் மாற்றம், வாக்குப் பிளவு அல்லது உண்மையான விளைவு
வீதப் பாதை ஆகியவை பொதுவாக நிலையாக இருக்கும். சதவீதக்
கோட்டைவிட மூன்று சரிபார்ப்புகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை:</p><p>• முடிவை மட்டும் படிக்காமல், முன்கணிப்புகளையும் படியுங்கள்.
சதவீதம் பெரும்பாலும் முன்கூட்டியே பெருமளவில்
மதிப்பிடப்பட்டுவிடுவதால், செப்ரம்பர் மாதப் புள்ளிவிபரமும்
உண்மையான-விளைவு வீதப் பாதையும், பிரதான செய்தியில்

வரும் ஒட்டுமொத்த நகர்வைவிட டொலர் தரப்பின் போக்கைப்
பற்றி அதிகமாகக் கூறுகின்றன.</p><p>
• வாக்குப் பிளவை எடைபோடுங்கள். பாங்க் ஒஃப் இங்லண்டில்
நீடித்தோ அல்லது விரிவடைந்தோ இருக்கும் வட்டி விகிதத்தை
உயர்த்த விரும்பும் சிறு பிரிவினர், வட்டி விகிதம் மாறாமல்
இருப்பதைக் காட்டிலும் சந்தைக்கு மிக வலுவான கொள்கை
சமிக்ஞையை வழங்குகிறது.</p><p>
• ஆற்றலைச் சேவைகளிலிருந்து பிரியுங்கள். எரிபொருள் விலை
வீழ்ச்சியால் ஏற்படும், மந்தமான சந்தை நிலவரமும், உள்நாட்டு
அழுத்தம் தணிவதும் ஒன்றல்ல. எனவே, சேவைகள் மற்றும்
ஊதியக் குறியீடுகள் இருபுறமும் இந்த நீடித்த நிலைத்தன்மைக்கான
சமிக்ஞையை அளிக்கின்றன.</p><h2>ஒரு முழுமையான கொள்கையைக் கருத்தில் கொண்டு
நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்யுங்கள்</h2><p>வர்த்தகர் அந்தப் பகுப்பாய்வின் அடிப்படையில் தெளிவாகச் செயல்பட
முடிந்தால் மட்டுமே, அதனால் பலன் கிடைக்கும். அதிக தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடிய ஒரு வெளியீட்டின்போது, காணப்பட்ட விலைக்கும்
பூர்த்தி செய்யப்பட்ட விலைக்கும் இடையிலான இடைவெளி
அதிகரிக்கக்கூடும், குறிப்பாகப் பணப்புழக்கம் விரைவாக மாறும்
சமயங்களில் இது நிகழலாம். இறுக்கமான செல்லாத நிலை அளவில்
செயல்படும் ஒரு வர்த்தகருக்கு, அந்த இடைவெளியானது, அந்த
வர்த்தகம் அதன் அசல் திட்டத்திற்கு இன்னும் பொருந்துகிறதா
என்பதைத் தீர்மானிக்கக்கூடும்.</p><p>பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போதுதான், Exness முக்கியத்துவம்
பெறுகிறது. இரண்டு மத்திய வங்கிகளின் முடிவுகளால் உருவாகும்
ஒரு GBPUSD வர்த்தகத்தில், நல்ல வர்த்தகச் சூழல்கள் முக்கியத்துவம்
பெறுகின்றன. ஏனெனில், வர்த்தகர் ஒரே ஒரு நாணய ஜோடியை
மட்டும் கருத்தில் கொள்வதில்லை. அவர்கள் டொலர் தரப்பின் போக்கு,
ஸ்ரெர்லிங் மீதான அழுத்தம், வட்டிவீத எதிர்பார்ப்புகள், உண்மையான

விளைவு வட்டிவீதங்கள் மற்றும் ஒவ்வொரு கொள்கைச்
சமிக்ஞைக்கும் சந்தையின் எதிர்வினை ஆகியவற்றை ஆராய்ந்து
வருகின்றனர். விலை நிர்ணயத்தைப் புரிந்துகொள்வது கடினமாக
இருந்தாலோ, செயலாக்கம் சீரற்றதாகத் தோன்றினாலோ, தளக்
கருவிகள் சிக்கலை அதிகரித்தாலோ அல்லது இடர் சூழல் தெளிவாக
இல்லாவிட்டாலோ, வர்த்தகர் உண்மையான அமைப்பிலிருந்து
பிரதிபலிக்காத தேவையற்றவற்றைப் பிரித்தறிய வேண்டியிருக்கும்.
நல்ல சூழ்நிலைகள் இருப்பதே கொள்கை நிலைப்பாட்டைச்
சரிசெய்துவிடாது. அந்த முடிவு சூழ்நிலைத் திட்டத்தின் அடிப்படையில்
எடுக்கப்பட்டதா அல்லது நிகழ்வின் அழுத்தத்தின் காரணமாக
எடுக்கப்பட்டதா என்பதை&nbsp;மதிப்பாய்வு செய்வதை அவை
எளிதாக்குகின்றன.
</p><p>Exness ரெர்மினல் இங்கும் ஒரு நடைமுறைப் பங்கைச்
செயலாற்றுகிறது, ஏனெனில் GBPUSD-ஐக் கண்காணிக்கும் ஒரு
வர்த்தகர், அதே நேரத்தில் DXY, தொடர்புடைய FX ஜோடிகள், தங்கம்,
குறியீட்டெண்கள் மற்றும் வட்டிவீத உணர்திறன் கொண்ட பிற
சொத்துகளையும் கண்காணிக்க வேண்டியிருக்கலாம். இதன் மல்ரி-
சார்ட்டிங் அம்சம், பல்வேறு கருவிகளை அருகருகே பார்க்க
அனுமதிப்பதால், ஒரு நகர்வு ஸ்ரெர்லிங்கிற்கு மட்டுமே உரியதா
அல்லது டொலரின் பரந்த எதிர்வினையின் ஒரு பகுதியா என்பதை
வர்த்தகர்கள் ஒப்பிட்டுப் பார்க்க இது உதவும். அதே பணிச்சூழல்
சார்ட்டிங், செயல்படுத்துதல், நிலை மேலாண்மை மற்றும் கணக்குக்
கட்டுப்பாடுகள் ஆகியவற்றை வலைத்தளம் மற்றும் மொபைல்
தளங்கள் வாயிலாக ஒன்றிணைத்து, சந்தை வேகமாக நகரும்போது,
​​வர்த்தகர்கள் தங்கள் பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மையை
வர்த்தக நடவடிக்கையுடன் நெருக்கமாக வைத்திருக்க உதவுகிறது.</p><p>
இடர் கட்டுப்பாடு முக்கியமானது, ஏனெனில் ஒரே நாளில் எடுக்கப்படும்
இரண்டு மத்திய வங்கி முடிவுகள், தொடர்புடைய வர்த்தக நிலைகளில்
இலாப வரம்பு அழுத்தத்தை உருவாக்கக்கூடும். ஒரு வர்த்தகர், தான்

ஒரு குறிப்பிட்ட GBPUSD வர்த்தக நிலையை நிர்வகிப்பதாக
நினைக்கலாம், ஆனால் நடைமுறையில் அந்த நிலை, டொலரின் பரந்த
வலிமை, ஸ்ரெர்லிங்கின் மறுவிலையிடல் மற்றும் யென்னின்
உணர்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும். திறந்த
வர்த்தக நிலைகள், இலாபம், கணக்கு நிலை மற்றும் வெளிப்பாடு
ஆகியவற்றின் மீதான தெளிவான பார்வை, முடிவெடுப்பதை நிகழ்வின்
தீவிரத்தன்மையிலிருந்து வர்த்தகத்தின் தீவிரத்தன்மைக்கு மாற்ற
உதவுகிறது.
</p><p>
கான் கூறுவது போல், “லேபிள் என்பது சந்தை ஏற்கனவே விலை&nbsp;நிர்ணயம் செய்த ஒரு பகுதியாகும்.” சார்புச் சான்றுகள், கணிப்புகள்,
வாக்குப் பிளவு மற்றும் சேவைகளின் நிலவரம் ஆகியவற்றில்தான்
சாதகம் உள்ளது, ஏனெனில் எந்த எதிர்வினைச் சார்பு நகர்கிறது
என்பதை அவை உங்களுக்குச் சொல்லும்.</p><h2>சார்புச் சான்றுகள் லேபிள்களை வெல்கின்றன
</h2><p>ஒரு வங்கியைக் கண்டிப்பானது என்றும் மற்றொன்றை மென்மையான
போக்குடையது என்றும் கூறுவது எளிதில் கணிக்கக்கூடிய ஒன்றாகும்,
மேலும் அது பொதுவாக ஏற்கனவே விலையில் பிரதிபலிக்கப்பட்ட
ஒன்றாகவும் இருக்கிறது. மற்றொன்றை விட எந்த எதிர்வினைச்
செயல்பாடு இறுக்கமடைகிறது என்பதே மிகவும் பயனுள்ள
கேள்வியாகும், ஏனெனில் பூச்சியத்திற்கு அருகிலுள்ள வட்டிவீத
இடைவெளி, அந்தச் சார்பு நகர்வையே GBPUSD-இன் முக்கிய உந்து
சக்தியாக ஆக்குகிறது. அதே செப்ரம்பர் மாத முடிவு, கணிப்புகள்
மற்றும் அதைச் சுற்றியுள்ள வாக்குப் பிளவைப் பொறுத்து, அந்த
ஜோடிக்கு ஆதரவளிக்கலாம் அல்லது அதன் மீது அழுத்தத்தை
ஏற்படுத்தலாம். எனவே, தரவுகள் வெளிவருவதற்கு முன்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லேபிளைவிட, சூழல் ஒழுங்குமுறை ஒரு
வர்த்தகருக்குச் சிறந்த பலனைத் தருகிறது.<br></p>]]></content>
            <updated>2026-09-11T12:38:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[9/11 தாக்குதல்களின்போது இந்தியர் ஒருவர் செய்த உதவி: வைரலாகும் செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gurvinder-singh-gave-hundreds-of-free-rides-1789129641"></link>
            <id>https://news.lankasri.com/article/gurvinder-singh-gave-hundreds-of-free-rides-1789129641</id>
            <summary type="text">Indian taxi driver’s 9/11 story goes viral: 9/11 தாக்குதல்களின்போது இந்தியர் ஒருவர் செய்த உதவி குறித்த செய்தி ஒன்று வைரலாகிவருகிறது.


அமெரிக்காவில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian taxi driver’s 9/11 story goes viral: 9/11 தாக்குதல்களின்போது இந்தியர் ஒருவர் செய்த உதவி குறித்த செய்தி ஒன்று வைரலாகிவருகிறது.
</p><p>

அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் திகதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 25 ஆண்டுகள் ஆகின்றன.
</p><p>
இந்நிலையில், அந்த பயங்கரம் குறித்த தங்கள் அனுபவங்களை பலரும் இணையத்தில் பகிர்ந்துவருகிறார்கள்.
</p><p>
இந்தியர் ஒருவர் குறித்த வைரல் செய்தி

Shabbos Kestenbaum என்னும் சமூக ஊடகப் பயனர், இந்திய டெக்சி சாரதி ஒருவர் 9/11 தாக்குதல்களின்போது செய்த உதவி குறித்த ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1236fdc-9cbf-4b45-9af3-956d810bcbdd/26-6aa3f42b3e17c.webp' /><br></p><p>
</p><p>
அதாவது, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி இரட்டைக்கோபுரங்கள் முதல் சில இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டபோது, குர்விந்தர் சிங் என்னும் இந்தியரான டெக்சி சாரதி, இரட்டைக் கோபுரங்களின் அருகே இருந்தாராம்.
</p><p>
அங்கிருந்து மக்களை அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சற்றும் சோர்வடையாமல் அழைத்துச் சென்றுள்ளார் சிங்.
</p><p>
விடயம் என்னவென்றால், அன்று மட்டுமல்ல, தாக்குதல் நிகழ்ந்த நாளிலிருந்து அடுத்த 40 நாட்களுக்கு நியூயார்க் மக்களை அவர்கள் சென்று சேரவேண்டிய இடங்களுக்கு தனது டெக்சி மூலம் கொண்டு சேர்த்துள்ளார் சிங்.
</p><p>
அது மட்டுமல்ல, அவர் யாரிடம் டெக்சி பயணத்துக்காக கட்டணமும் வாங்கவில்லையாம்.

ஒரு புலம்பெயர்ந்தோர் தன்னலம் கருதாமல் செய்த அந்த சேவையைப் பாராட்டி, அப்போதைய நியூயார்க் நகர மேயரான ரூடி கிலானி அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10472efd-b9a5-4cab-b0b2-3d312a6ebe54/26-6aa3f42be575e.webp' /><br></p><p>
</p><p>
சிங் தன்னிடம் அந்தக் கடிதத்தைத் தன்னிடம் காட்டியதாக தெரிவிக்கும் Shabbos Kestenbaum, இன்று செப்டம்பர் 11ஆம் ஆண்டு தாக்குதல் நிகழ்ந்து 25ஆண்டுகள் ஆன தினம் என்பதால், அந்த செய்தியை சமூக ஊடகம் ஒன்றில் மீண்டும் பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><p>அதைப் படித்த பலரும் சிங்கை மனதார பாராட்டி வருகிறார்கள். உலகம் முழுவதும் புலம்பெயர்ந்தோர் மீது வெறுப்பு அதிகரித்துவருகிறது. </p><p>ஆனால், சிங் போன்ற புலம்பெயர்ந்தோருக்கு தக்க கௌரவம் வழங்கப்படவேண்டும் என்கிறார் ஒருவர்.
</p><p>
சிங், பல அமெரிக்கர்களை விட சிறந்த ஒரு அமெரிக்கர் என மற்றொருவர் கூற, இத்தகைய புலம்பெயர்தல் செய்திகள்தான் அமெரிக்காவுக்குத் தேவை, கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும் என்கிறார் இன்னொருவர்!<br></p>]]></content>
            <updated>2026-09-11T12:29:52+00:00</updated>
        </entry>
    </feed>
