<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-01T03:59:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் இருந்து இன்னொரு துயரமான செய்தி வெளிவரலாம்... சுரங்கத்தில் சிக்கிய 900 பேர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-search-hydropower-workers-1788233441"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-search-hydropower-workers-1788233441</id>
            <summary type="text">Nepal rescuers in search of hydropower workers: நேபாளத்தில் நீர்மின் தொழிலாளர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal rescuers in search of hydropower workers: நேபாளத்தில் நீர்மின் தொழிலாளர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
நேபாளத்தின் திரிசூலி ஆற்றின் ஓரத்தில் உள்ள, சேறு மூடியுள்ள சுரங்கத்தில் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் கிட்டத்தட்ட 900 தொழிலாளர்களின் குடும்பத்தினர், தங்கள் அன்புக்குரியவர்கள் உயிருடன் மீட்கப்படலாம் என்ற நம்பிக்கையைக் கைவிடாமல் உள்ளனர்.</p><h2>ஏழில் ஒருவர்</h2><p>
</p><p>சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களைச் 
 சென்றடைவதற்கான முக்கியமான வாய்ப்பு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்ற அச்சத்தில், மீட்புக் குழுவினர் திங்கட்கிழமையன்றும் கடுமையாக போராடினர்;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cdd56af-3794-40e7-aedc-b0321509dd71/26-6a9646e3a987c.webp' /></p><p> </p><p>மலைச்சரிவை வெடிவைத்துத் தகர்த்த அவர்கள், பின்னர் திரிசூலி-3A பகுதிக்குள் காற்று நுழையும் வழி செய்தனர். நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 939-ஐ எட்டியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ள நிலையிலேயே, நீர்மின் தொழிலாளர்கள் 900 பேர்கள் தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது.
</p><p>மேலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3,925 ஆக அந்த முகமை திருத்தியுள்ளது, அவர்களில் 592 பேர் வெளிநாட்டினர் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><p> காணாமல் போனவர்களில் ஏறக்குறைய ஏழில் ஒருவர் நீர்மின் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என நம்பப்படுகிறது. அவ்விடங்களிலிருந்து 279 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா திங்களன்று தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>சீன மற்றும் நேபாள இராணுவத்தினரைக் கொண்ட ஒரு சர்வதேசக் குழு இந்த மீட்பு நடவடிக்கையை முன்னின்று நடத்துகிறது, அதேவேளையில் இந்தியா, கொரியா மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர். </p><p>நேபாளம் நீர்மின்சக்தியை பெருமளவில் சார்ந்துள்ளதுடன், தனது மலைப்பாங்கான ஆற்றுப் படுகைகளில் இத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக செலவிட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட அல்லது கட்டுமானத்தில் இருந்த குறைந்தது 11 திட்டங்கள் வெள்ளத்தில் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b88c4db-4839-4481-9cbf-c75a0b709ec4/26-6a9646e45bd2a.webp' /></p><p> </p><p>இதனிடையே, மீட்புக் குழுவினர் வார இறுதியில் சுரங்கத்திற்குள் காற்று நுழையும் வகை செய்தனர், ஆனால் அது முன்னதாகவே செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று உள்ளே சிக்கியவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர். </p><p>திங்கள்கிழமை பகல், ஒரு நீர்மின் நிலையத்திற்குச் செல்லும் சுரங்கப்பாதைக்குள் ஒரு குழுவால் நுழைய முடிந்தது, ஆனால் அங்கு யாரும் இல்லாததைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.</p><h2>நான்கு உடல்கள்</h2><p> </p><p>இந்த நிலையில், நிலத்தடி தேடுதல் பணிகளில் நேபாள அதிகாரிகளுக்குத் தொலைதூரத்திலிருந்து உதவி வரும் அவுஸ்திரேலியப் பொறியாளர் அர்னால்ட் டிக்ஸ், சுரங்கப்பாதைகளைக் கண்டறிவதில் மீட்புக் குழுவினர் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறினார். </p><p>சேறு மூடியுள்ளதால், மீட்புக் குழுவினரால் சுரங்கப்பாதைகளை அடையாளம் காண முடியாமல் உள்ளது என்றும், 
அவை எங்கு அமைந்துள்ளன என்பதை அறிந்த பிறகு, அவற்றைச் சென்றடைவதற்கான சிறந்த வழியை மீட்புக் குழுவினரால் தீர்மானிக்க முடியும் என்றும்; பொதுவாக இதற்காக நிலத்தைத் தோண்டுவதும் பாறைகளை வெடிவைத்துத் தகர்ப்பதும் அவசியமாகிறது என்றார். </p><p>மட்டுமின்றி, மேலே கொட்டிய பெருமழையிலிருந்து நிலத்தடிச் சூழல் ஒருவிதப் பாதுகாப்பை அளித்திருக்கக்கூடும் என்பதால், நிலத்தடியில் சிக்கியுள்ளவர்கள் குறித்து தனக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13488f67-8c04-4e39-af55-565fe50abd07/26-6a9646e513c6b.webp' /></p><p> </p><p>ஆனால், சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 7 நாட்களாகியுள்ளதால், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் நிலை தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது. மேலும், ஒரு சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களுக்கு ஆக்ஸிஜன் வசதி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் எஞ்சிய பலரது நிலை மோசமாக இருக்கவும் வாய்ப்புள்ளது என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>இதனிடையே, மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், சேறு நிரம்பிய மூன்று சுரங்கப் பாதைகளிலிருந்து நான்கு உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்தது. </p><p>கடந்த புதன்கிழமை பேரழிவு ஏற்பட்டபோது, ​​சில தொழிலாளர்களால் உதவிக்கு அழைப்பு விடுக்க முடிந்தது. மேலும், தப்பிய மற்றவர்கள், தங்கள் சக ஊழியர்களில் பலர் இன்னும் சுரங்கங்களில் சிக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T03:29:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்ட 2 கேரளாவை சேர்ந்த பெண்கள்: கொலையாளி அதிரடி கைது2]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-women-killed-in-california-milpitas-1788226630"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-women-killed-in-california-milpitas-1788226630</id>
            <summary type="text"> kerala women killed in California Milpitas :கலிபோர்னியாவில் கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.என்ன நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p> kerala women killed in California Milpitas :கலிபோர்னியாவில் கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>என்ன நடந்தது?</h2><p>ஆகஸ்ட் 28ம் திகதி கலிபோர்னியாவின் மில்பிடாஸ்(Moonnilavu in Kottayam) நகரில் மில் கிரிக் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி ஆன் மேரி மேத்யூ(40) என்ற திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> அதே அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே உள்ள டிக்சன் சாலையில் ஏற்பட்ட வாகன மோதல் தொடர்பாக&nbsp; முதலில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.</p><p> சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கேரளாவின் திருச்சூரை சேர்ந்த 35 வயது அஞ்சனா ஹரி என்ற பெண் ஒருவர் வாகனம் மோதியதில் சிக்கி பலத்த காயங்களுடன் வாகன நிறுத்துமிடத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b13936a2-0777-4eee-bfcb-585949392b68/26-6a962c4836bbe.webp' /></p><p></p><p> மேலும் இது தொடர்பாக விசாரணையை தொடங்கிய அதிகாரிகள், அஞ்சனா ஹரி மீது மோதி விட்டு தப்பிச் சென்ற நீல நிற எஸ்.யூ.வி (SUV) வாகனத்தை அடையாளம் கண்டனர்.</p><p>இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், தேடப்படும் நீல நிற எஸ்.யூ.வி (SUV) வாகனம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.</p><p> மேலும் அதன் ஓட்டுநரான கோட்டயத்தின் மூன்னிலவு பகுதியை சேர்ந்த 32 வயது அனிலா என்பவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.</p><p> இதற்கிடையில் வாகன மோதலில் உயிரிழந்த அஞ்சனாவும், அடுக்குமாடி குடியிருப்பில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மேரி மேத்யூவும், இந்த இரண்டு குற்றச்செயல்களை செய்ததாக சந்தேகிக்கப்படும் அனிலா மூவரும் ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>அத்துடன் கைது செய்யப்பட்ட அனிலாவும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தான் வசித்து வருகின்றனர் என்பதை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p> உயிரிழந்த இருவருக்கும் கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தங்கள் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகை கொண்டாடியுள்ளனர்.</p><p> இந்த கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. ஆனால் இது தொடர்பான தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T01:37:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு நிறப் பைக்குள் கிடந்த மூதாட்டியின் சடலம்: பிரித்தானிய பூங்காவில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-body-discovered-inside-black-bag-at-stanley-1788209262"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-body-discovered-inside-black-bag-at-stanley-1788209262</id>
            <summary type="text">Woman body discovered inside black bag at Liverpool: பிரித்தானியாவின் லிவர்பூல் பூங்காவில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman body discovered inside black bag at Liverpool: பிரித்தானியாவின் லிவர்பூல் பூங்காவில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> பிளாஸ்டிக் பைக்குள் மூதாட்டியின் சடலம்</h2><p>
லிவர்பூல் நகரின் ஸ்டான்லி பூங்காவில் மூதாட்டி ஒருவரின் சடலம் கருப்பு நிற பிளாஸ்டிக் பைக்குள் திணிக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.</p><p> வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.25 மணிக்கு பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின் படி, அன்பீல்ட்(Anfield Stadium) மற்றும் எவர்டன் குட்டிசன்(Goodison Park) இடைப்பட்ட பகுதிக்கு அவசர சேவை பிரிவினர் விரைந்தனர்.</p><p> பின்னர் அப்பகுதியில் நடத்திய சோதனையில் பூங்காவின் சுற்றுச்சுவர் உள்ள தோட்டப் பகுதிக்கு அருகில் கருப்பு நிற பிளாஸ்டிக் பைக்குள் சடலம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7bc9572-9602-407f-9242-71de60f46dab/26-6a95e870193bb.webp' /></p><p>இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று திங்கட்கிழமை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>அத்துடன் பிரேத பரிசோதனைகளுக்கு பிறகும், விசாரணை காரணங்களுக்காக விவரங்களை ரகசியமாக வைத்து இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.</p><p> ஆனால், கைப்பற்றப்பட்ட உடல் தோராயமாக 70 வயதுடைய பெண் உடல் என்றும், சுமார் 5 அடி 2 அங்குலம் உயரமும் சிறிய உடலமைப்பும் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் பல வாரங்களாக அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.</p><h2> பொலிஸார் வேண்டுகோள்</h2><p>காணாமல் போனவர்கள் குறித்த தரவு தளங்களில் உள்ள விவரங்களுடன் சரிபார்த்த போது கண்டெடுக்கப்பட்ட சடலத்துடன் பொருந்த கூடிய நபர் யாரும் இல்லை என்று அதிகாரி ரேச்சல் வில்சன் தெரிவித்துள்ளார்.</p><p> இந்நிலையில் மேல் குறிப்பிட்ட விவரங்களுடன் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள் ஏதேனும் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரிடம் தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">HATSAPP CHANNE</a>L இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T22:28:00+00:00</updated>
        </entry>
    </feed>
