<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-25T06:46:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனம் ஷெட்டியிடம் மைக் பறிக்கப்பட்டதா? நீட் போராட்டத்தில் நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sanam-shetty-face-oppose-in-chennai-neet-protest-1784961552"></link>
            <id>https://news.lankasri.com/article/sanam-shetty-face-oppose-in-chennai-neet-protest-1784961552</id>
            <summary type="text">நீட் எதிர்ப்பு போராட்டத்தில் தன்னிடம் மைக்கை பறித்து வெளியே அனுப்பியதாக நடிகை சனம் ஷெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். 

சென்னை நீட் எதிர்ப்பு போராட்டம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் எதிர்ப்பு போராட்டத்தில் தன்னிடம் மைக்கை பறித்து வெளியே அனுப்பியதாக நடிகை சனம் ஷெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><h3> 

சென்னை நீட் எதிர்ப்பு போராட்டம் </h3><p>

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(CJP) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed9cc64b-0390-42e3-bf65-ece4a6b7873d/26-6a645a135c573.webp' /></p><p>

இதே போல், சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.</p><p> 

இதில், CJP கட்சியினர், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர். </p><p> 

சிலர் புரட்சிகரமான பாடல்களை பாடி வருகின்றனர். சினிமா பாடல்களை பாட வேண்டாம் என போரட்ட குழு கோரிக்கை விடுத்துள்ளது.</p><h3> 

போராட்டத்தில் தளபதி ரசிகை என பேசிய சனம் ஷெட்டி</h3><p>

நேற்று இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை சனம் ஷெட்டி, "இந்த போராட்டம் மாணவர்களுக்கான போராட்டம்,. இந்த மேடையை Political agenda க்காக பயன்படுத்துற யாராக இருந்தாலும் அவங்க தான் ஜோக்கர்ஸ். நாங்க இல்லை. நான் தளபதி ரசிகை, ஜனநாயகன் FDFS பார்த்துவிட்டு தான் வந்திருக்கிறேன்" என பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/554228ee-7dd7-4999-956d-13de16b98b2b/26-6a645a11edf90.webp' /></p><p> 

நீட் எதிர்ப்பு போராட்டத்தில், தளபதி ரசிகை, ஜனநாயகன் FDFS என போராட்டத்திற்கு சம்மந்தம் இல்லாத விடயங்கள் குறித்து பேசியதால் அங்கிருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>

அப்போது போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மைக்கை தருமாறு கேட்டு உங்களுக்கு தெளிவுபடுத்துவதாக கூறியுள்ளனர். </p><h3>

போலி போராட்டம் என விமர்சனம்</h3><p> 

ஆனால் அங்கிருந்து ஆவேசமாக வெளியேறிய நடிகை சனம் ஷெட்டி, தன்னிடம் மைக்கை பறித்து தன்னை பேச அனுமதிக்கவில்லை, இது ஒரு போலியான போராட்டம் என விமர்சித்துள்ளார். </p><p>

இது குறித்து பேசிய அவர், "மாணவர்கள் சார்ந்த போராட்டம் என்றும், அவர்களுக்காகப் குரல் கொடுக்குமாறும் கூறித்தானே என்னை அழைத்தார்கள்? அதைத்தானே நானும் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61f6b7a0-2eac-4aaf-91f7-f15449a441c5/26-6a645a12a19c9.webp' /></p><p>
ஆனால், அழைத்துப் பேச வைத்துவிட்டு, நான் ஒரு திரைப்படம் பார்த்ததற்காக என்னை 'ஜோக்கர்' என்று விமர்சிக்கிறார்கள். ஒரு திரைப்படம் பார்த்த காரணத்திற்காகவே நான் ஜோக்கர் ஆகிவிடுவேனா?

இங்கே மேடையில் இயக்குநர் வெற்றிமாறன் அமர்ந்திருக்கிறாரே, அவர் எத்தனையோ திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்; அப்படியென்றால் அவரையும் சேர்த்துத்தான் ஜோக்கர் என்று சொல்கிறீர்களா?</p><p>

இவர்கள் ஜனநாயகத்திற்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்கிறார்கள். ஆனால், நான் மைக்கில் பேசிக்கொண்டிருக்கும் போதே அதைப் பிடுங்குகிறார்கள். இதுதான் இவர்கள் பின்பற்றும் ஜனநாயகத்தின் லட்சணமா?

உண்மையில் இவர்கள் ஜனநாயகத்திற்காகப் போராடவில்லை, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை வைத்துக்கொண்டுதான் போராடுகிறார்கள். இது முற்றிலும் ஒரு போலிப் போராட்டம்</p><p>விளம்பரத்திற்காக அனுமதியின்றி தலைமை செயலகம் வெளியே போராட்டம் நடத்தினால் கைது செய்ய தான் செய்வார்கள்" என பேசியுள்ளார். </p><h3>

சனம் ஷெட்டியின் செயலுக்கு எதிர்ப்பு</h3><p>

சனம் ஷெட்டியின் செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். </p><p>

போராட்டத்தில் நீட் மற்றும் அரசியல் சார்ந்து பேசி வரும் நிலையில், அங்கு சென்று தளபதியின் தீவிர ரசிகை என போராட்டதிற்கு சம்மந்தமில்லாமல் பேசியது ஏன் எனவும், இந்த போராட்டத்தில் என்ன Political Agenda உள்ளது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். </p><p>

மேலும், இந்த போராட்டத்திற்கு யாரும் சொல்லி இங்க நான் வரவில்லை நானாக வந்திருக்கிறேன் என மேடையில் பேசிவிட்டு, வெளியே வந்து மாணவர்கள் சார்ந்த போராட்டம் அவர்களுக்காக குரல் கொடுக்குமாறும் கூறித்தானே என்னை அழைத்தார்கள்? அவ்வளவு பயம் இருந்தால் ஏன் கூப்பிட வேண்டும்?" என முரணாக பேசுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T06:41:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனைத் தாக்கிய சவுதி அரேபியா... பதிலடி உறுதி என ஹவுதிகள் சபதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-vow-retaliation-against-saudi-1784953493"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-vow-retaliation-against-saudi-1784953493</id>
            <summary type="text">பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை சவுதி அரேபியா குறிவைப்பதாக குற்றம் சாட்டிய ஹவுதிகள், அந்நாட்டிற்கு எதிராக பதிலடி உறுதி என சூளுரைத்துள்ளனர்.விரிவடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை சவுதி அரேபியா குறிவைப்பதாக குற்றம் சாட்டிய ஹவுதிகள், அந்நாட்டிற்கு எதிராக பதிலடி உறுதி என சூளுரைத்துள்ளனர்.</p><h2>விரிவடையும் போர்</h2><p>ஹவுதிகளின் இந்த நகர்வால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் விரிவடையத் தொடங்கியுள்ளதாகவே அஞ்சப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4623da53-f8e8-4914-a659-d5963fa36ce0/26-6a643c8983dba.webp' /></p><p>
</p><p>யேமனின் முன்னணி எண்ணெய் உற்பத்திப் பகுதியான ஹொடைடாவில் உள்ள ஹவுதி இராணுவ இலக்குகள் மீது சவுதி அரேபியா வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. </p><p>இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, ஹவுதிகள் கடல்வழி முற்றுகையை அறிவித்து, சவுதி அரேபியா தொடர்புடையக் கப்பல்களையும் தாக்கியது. மேலும், சவுதி அரேபியாவின் ஒரே மாற்று கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் ஒரே நேரத்தில் முடக்கியுள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.</p><p>ஹொடைடா துறைமுக நகரிலுள்ள கடற்படைத் தளம் மற்றும் கமரன் தீவிலுள்ள இராணுவ முகாம் ஆகியவை சவுதி தரப்பால் இலக்கு வைக்கப்பட்டதாக ஏமன் நாட்டுப் பாதுகாப்புத் துறை வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இதனிடையே, செங்கடல் கப்பல் போக்குவரத்தின் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹவுதி அமைப்பின் தளங்களைத் தாக்கியதாகவும், வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த இலக்குகளை அழித்ததாகவும் சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது. </p><p>இந்த வாரத்தில் இரண்டு சவுதி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் உரிமை கோரியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன; இதில் செங்கடலில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலை சவுதி அரேபியா உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4fdd3c4-1bae-471f-9240-d2f29df5018f/26-6a643c88a8b0e.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், ஈரான் தற்போது அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருவதால், அதன் மீது பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்துவதா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். </p><p>ஆனால், பேச்சுவார்த்தைக்கு இதுவரை தங்கள் தரப்பில் இருந்து தயாராகவில்லை என்றே ஈரான் அறிவித்துள்ளது. மேலும், அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் ட்ரம்ப் மட்டுமே ஈரான் பேச்சுவார்த்தைக்கு விரும்புவதாக பொய்யானத் தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><h2>அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை</h2><p> பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் ட்ரம்ப், ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை முன்னெடுக்க மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. </p><p>ஆனால், அது ஈரானை அச்சுறுத்தும் நடவடிக்கை மட்டுமே என்றும், ஈரான் மீது போர் தொடுப்பதையே விரும்பாத அமெரிக்க மக்கள் எதிர்வரும் தேர்தலின்போது ட்ரம்பிற்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். </p><p>இருப்பினும் மத்திய கிழக்கில் மோதல் தணிவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதனிடையே, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள், அங்கிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடக்கூடும் என்று அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6507c3f-e7c6-4123-b998-6ab97233e8f8/26-6a643c8a34d0a.webp' /></p><p> </p><p>அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள தளங்களைத் தவிர்க்குமாறு அண்டை நாடுகளின் மக்களுக்கு ஈரானின் புரட்சிகரப் படை அறிவுறுத்தியது.</p><p> இதற்கிடையில், குவைத்தின் உடெய்ரியில் உள்ள அமெரிக்கத் தளத்தை இலக்கு வைத்துத் தாக்கியதாகவும், அதில் மூன்று ஆயுதக் கிடங்குகளை அழித்ததாகவும் ஈரானின் புரட்சிகரப் படை தெரிவித்துள்ளது.
</p><p>பஹ்ரைனைத் தளமாகக் கொண்ட அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது கடற்படைப் பிரிவின் கண்காணிப்புக் கோபுரம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரப் படை உரிமை கோரியது. இது குறித்த கேள்விகளுக்கு அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (US Central Command) பதிலளிக்க மறுத்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T06:30:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொல்லையாக மாறிவிட்ட EES திட்டம்: புதிய பிரதமருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-to-urge-eu-waive-ees-border-controls-1784956355"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-to-urge-eu-waive-ees-border-controls-1784956355</id>
            <summary type="text">வார இறுதி நாட்களில் ஐரோப்பாவுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு பெரும் தொல்லையாக மாறிவிட்ட EES திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வார இறுதி நாட்களில் ஐரோப்பாவுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு பெரும் தொல்லையாக மாறிவிட்ட EES திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h3>

Entry/Exit System (EES)
</h3><p>
Entry/Exit System (EES) திட்டத்தின்படி, ஐரோப்பாவுக்கு, அல்லது வேறு வகையில் கூறினால், ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், எல்லைகளில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b0bf66a-ce64-4318-8f25-6b95a246b381/26-6a6445c4b1588.webp' /></p><p>
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டதால், பிரித்தானியர்களுக்கும் EES திட்டம் பெரும் தொல்லையாக மாறியுள்ளது.</p><p>

ஏராளமானோரின் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்யவேண்டியுள்ளதால் அதற்கு அதிக நேரம் பிடிக்கிறது.&nbsp;</p><p></p><p>
இதனால், பயணிகள் எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. கால தாமதத்தால் தங்கள் விமானத்தை தவறவிடுபவர்களும் இருக்கிறார்கள்.</p><h3>

பிரதமருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
</h3><p>
இந்நிலையில், இந்த EES திட்டத்தை இடைநிறுத்த, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை வலியுறுத்துமாறு பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாமுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b302671b-a2d6-4e8f-9f3c-4b925f3b82a3/26-6a6445c56085d.webp' /></p><p>
ஹீத்ரோ விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியின் வெளி விவகாரங்கள் செய்தித் தொடர்பாளரான கேலம் மில்லர் (Calum Miller), பிரதமர் ஆன்டி பர்னாம், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை அழைத்து, இந்த குழப்பமான, ஒழுங்காக செயல்படாத எல்லை திட்டத்தைக் கைவிட வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
</p><p>
பிரித்தானியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தற்போது கோடை விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை சுமார் 2.2 மில்லியன் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளுக்குச் செல்வார்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பாவிற்கு பயணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், EES திட்டத்தால் சுற்றுலாப்பயணிகள் தண்டிக்கப்படக்கூடாது என்று கூறியுள்ள மில்லர், இந்த குழப்பமான, ஒழுங்காக செயல்படாத எல்லை திட்டத்தை, செப்டம்பர் மாதம் வரையாவது இடைநிறுத்துமாறு, பிரதமர் ஆன்டி பர்னாம், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை வலியுறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T05:15:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஆயிரக்கணக்கான மின்னல் தாக்கியதால் பற்றியெரியும் புதிய காட்டுத்தீ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lightnings-trigger-fresh-wildfires-1784955940"></link>
            <id>https://news.lankasri.com/article/lightnings-trigger-fresh-wildfires-1784955940</id>
            <summary type="text">மேற்கு கனடாவில் புதிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ள அதேவேளையில் ஒன்ராறியோவில் காடுகள் தொடர்ந்து எரிந்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.கடும் வெப்பம், மின்னல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு கனடாவில் புதிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ள அதேவேளையில் ஒன்ராறியோவில் காடுகள் தொடர்ந்து எரிந்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>கடும் வெப்பம், மின்னல்</h2><p>
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 34,000 மின்னல் தாக்குதல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்ச்சியான காட்டுத்தீ சம்பவங்களுக்கும் வெளியேற்ற உத்தரவுகளுக்கும் வழிவகுத்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d2e7b15-5831-44c3-b01c-8081538869b7/26-6a6445b897279.webp' /></p><p> </p><p>வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, அந்த மாகாணத்தில் 25 வெளியேற்ற உத்தரவுகளும் 90 தீவிர காட்டுத்தீச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன; வெப்பம் மற்றும் வறண்ட வானிலை நிலவுவதால் இவை மேலும் பரவக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>அதிகரித்த வெப்பநிலையால் தூண்டப்பட்ட கடும் வெப்பம் மற்றும் மின்னலுடன் கூடிய புயல்களால் ஏற்பட்ட காட்டுத்தீ, இந்த கோடையில் கனடா முழுவதும் உள்ள தொலைதூரக் காடுகளை எரித்துச் சாம்பலாக்கியுள்ளது.</p><p></p><p> </p><p>கடந்த வாரம், அவற்றிலிருந்து எழுந்த புகை அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை மற்றும் மத்திய-மேற்குப் பகுதிகளில் உள்ள பெரிய நகரங்களின் மீது பரவியது. வடமேற்கு ஒன்ராறியோவில் 139 காட்டுத்தீ சம்பவங்கள் தீவிரமாக எரிந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>நிலைமை மேம்படும்</h2><p> </p><p>அவற்றில் 32 எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாமல் எரிந்து வருவதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில், கனடாவின் சுற்றுச்சூழல் துறை, ஆல்பர்ட்டாவின் பேன்ஃப் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மோசமான காற்றின் தரம் குறித்து வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது; இருப்பினும், வார இறுதியில் பெரும்பாலான பகுதிகளில் நிலைமை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c74d100f-381b-418e-b1c5-b2dcd1a2be67/26-6a6445b94775c.webp' /></p><p> </p><p>இதனிடையே, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட 5,300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களையும், சுமார் 300 நீர் வீசும் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் மக்களை வெளியேற்றும் விமானங்களையும் ஃபெடரல் அரசாங்கம் திரட்டும் என்று பிரதமர் கார்னி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். </p><p>இந்த ஆண்டில் சுமார் 2.95 மில்லியன் ஹெக்டேர் (7.29 மில்லியன் ஏக்கர்) நிலம் எரிந்துள்ளது; இது கடந்த 10 ஆண்டுகளின் சராசரி அளவான சுமார் 2.55 மில்லியன் ஹெக்டேரை விட அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ec7f13-58ad-4361-a54a-a78774a367e2/26-6a6445b7d8dcc.webp' /></p><p> </p><p>கடந்த இரண்டு ஆண்டுகளின் இதே காலகட்டத்தை விட, கனடாவில் தற்போது அதிக எண்ணிக்கையிலான காட்டுத்தீ எரிந்து கொண்டிருப்பதாகவே தெரிய வந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T05:04:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் தொழில்நுட்பம்... ரஷ்ய தந்திரங்கள்: அமெரிக்காவை அலற விடும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-bombing-of-us-bases-1784949740"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-bombing-of-us-bases-1784949740</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் போர் நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் மீது ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் போர் நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதலின் துல்லியம் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.</p><h2>மிக வலுவாகவே</h2><p>
</p><p>இதன் பின்னணியில் சீனாவின் செயற்கைக்கோள் பட உதவியும் உக்ரைனில் ரஷ்யா கற்றுக்கொண்ட தந்திரங்களும் இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2bccb7-39d9-4855-b34d-f6830982d104/26-6a642d9ba003c.webp' /></p><p> ஜோர்தானில் உள்ள முவாஃபக் சால்டி விமானப்படைத் தளத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்; இத்தளம் அமெரிக்காவின் சக்திவாய்ந்த 'தாட்' (THAAD) வான் பாதுகாப்பு அமைப்பால் பாதுகாக்கப்பட்டு வந்தது.</p><p> தாக்குதலுக்குப் பின்னர் ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள், பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டிருந்ததை அம்பலப்படுத்தின. ஈரான் தாக்குதலின்போது வான் பாதுகாப்பு அமைப்பு ஏன் செயலிழந்தது என்பது தற்போதும் மர்மமாகவே உள்ளது; இது குறித்து பென்டகன் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் மொத்தமாக அழிக்கப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் ஈரானின் ஏவுகணைத் திறன் தற்போதும் மிக வலுவாகவே உள்ளது என்பது சமீபத்திய தாக்குதல்கள் உறுதி செய்து வருகிறது.</p><p></p><p> </p><p>லண்டனைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் குறிப்பிடுகையில், மேம்பட்ட உளவுத் தகவல், ஏவுகணை வழிகாட்டுதல், இயக்கம் சார்ந்த நெகிழ்வுத்தன்மை மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதல் திட்டமிடல் ஆகியவற்றின் கலவையானது ஈரான் முன்னெடுக்கும் தாக்குதல்களில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும், இது ஈரானின் ஏவுகணைத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாண்டு கால தொழில்நுட்ப மேம்பாட்டின் விளைவாகும் என குறிப்பிட்டுள்ள அவர்; ஈரானின் ராணுவத் திறன்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் நிர்வாகம் முன்பு கூறியிருந்த போதிலும், </p><p>அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பீடுகளின்படி ஈரான் வசமுள்ள ஏவுகணைகள் ஏறக்குறைய 70 சதவீதம் அப்படியே பாதுகாக்கப்பட்டிருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது என்றார். </p><p>வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் பிற இடங்களில் உள்ள இலக்குகளை அடையாளம் காண உதவுவதற்கு, சீன செயற்கைக்கோள் படங்களை ஈரான் பயன்படுத்தி வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1a3fa4b-1325-4b70-806c-120bdaaa0c4c/26-6a642d9a32311.webp' /></p><p> </p><p>அத்தகைய படங்களை வழங்கியதற்காக, மே மாதத்தில் அமெரிக்கா மூன்று சீன நிறுவனங்கள் மீது தடைகளை விதித்தது. இருப்பினும், சீனாவின் உளவுத்தகவல்களை ஈரான் பயன்படுத்துவது தொடர்பில் சில நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். </p><p>மட்டுமின்றி, குண்டுவெடிப்புகளின் போது வளைகுடா முழுவதும் உள்ள சிஐஏ தளங்கள் மீது ஈரான் நடத்திய தொடர்ச்சியான துல்லியமான தாக்குதல்கள், ரஷ்யா ஈரானுடன் படங்களைப் பகிர்ந்து கொண்டதா என்ற சந்தேகத்தை அமெரிக்க ஆய்வாளர்களிடையே ஏற்படுத்தியது, ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை. </p><p>சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு தாராளமாக உதவி வருவதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், ஈரானுக்கு ஆயுதங்களை விற்கப்போவதில்லை என்று ஜி ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோர் தன்னிடம் தனிப்பட்ட முறையில் உறுதியளித்ததாகக் கூறி, டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமையன்று அவரது கருத்துக்கு முரணான தகவலைத் தெரிவித்தார்.</p><h2>தடுமாறி வருவதாக</h2><p> </p><p>ஈரானின் ஏவுகணைத் திட்டம், சீன மின்னணுவியல் மற்றும் ராக்கெட் எரிபொருளுக்கான அம்மோனியம் பெர்குளோரேட் ஆகியவற்றை பெருமளவில் சார்ந்துள்ளது. </p><p>இருப்பினும், தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், பலத்த பாதுகாப்பு கொண்ட அமெரிக்க மற்றும் வளைகுடா நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அவ்வப்போது முறியடிக்கும் அளவுக்கு அதிநவீனமானவை எனக் கருதப்படுகிறது. </p><p>ஏற்கனவே ஆயுதங்களின் பற்றாக்குறையால் அமெரிக்கா தடுமாறி வருவதாக தகவல் கசிந்துள்ள நிலையில், ஈரான் தற்போதும் வலுவான நிலையிலேயே உள்ளது என ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d601d07-46c6-479f-b6e6-4c86b710e011/26-6a642d9aee8bd.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, ஈரானும் தனது ஏவுகணைத் தாக்குதல்களில் தந்திரோபாய ரீதியாக முன்னேறியுள்ளது. உக்ரைனில் ரஷ்யா பயன்படுத்தியதைப் போன்ற முறைகளை அது பயன்படுத்துகிறது; அங்கு பெரிய தாக்குதல்களை விட சிறிய தாக்குதல்கள் அதிக பலனளிக்கக்கூடும், </p><p>மேலும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்தைத் திசைதிருப்பி, பாலிஸ்டிக் தாக்குதலுக்கு வழிவகுக்க ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. </p><p>ஈரான், ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஒருவித மேற்கத்திய எதிர்ப்புப் புரிதல் இருந்தாலும், கிளர்ச்சியின் அச்சு என்று அடையாளப்படுத்தும் வகையில் ஒரு நிலையான இராணுவக் கூட்டணியாக இந்த நாடுகள் உருவாகவில்லை என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், இந்த நாடுகள் தங்களுக்குள் தீவிரமான உறவையும் பலப்படுத்தியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T03:20:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோண்டா அறிமுகம் செய்துள்ள புதிய QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/honda-qc3-ev-scooter-with-145-km-range-1784941257"></link>
            <id>https://news.lankasri.com/article/honda-qc3-ev-scooter-with-145-km-range-1784941257</id>
            <summary type="text">இந்தியாவில் ஹோண்டா தனது புதிய QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது QC1 மற்றும் Activa-e மாடல்களுக்கு மேல் நிலை மாடலாக, அதிக ரேஞ்சும், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் ஹோண்டா தனது புதிய QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது QC1 மற்றும் Activa-e மாடல்களுக்கு மேல் நிலை மாடலாக, அதிக ரேஞ்சும், மேம்பட்ட அம்சங்களும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>
QC3-இல் 3 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. IDC சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் 145 கிலோமீட்டர் என ஹோண்டா தெரிவித்துள்ளது. இது ஹோண்டாவின் இந்திய சந்தையில் அதிக ரேஞ்ச் வழங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும்.</p><p>பேட்டரி 0 முதல் 80 சதவீதம் வரை சுமார் 2 மணி 40 நிமிடங்களில் சார்ஜ் ஆகும். முழு சார்ஜ் பெற 5 மணி நேரம் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/377ec814-32d6-48a9-a2ce-671b64f0eb03/26-6a640acb1b4ed.webp' /></p><p>
</p><h2>
வடிவமைப்பு
</h2><p>
QC1-இன் அடிப்படையை பின்பற்றினாலும், புதிய ஹெட்லாம்ப், அலாய் வீல்கள், சாடில் டெயில் செக்ஷன் போன்ற மாற்றங்கள் QC3-க்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கின்றன.</p><h2>

முக்கிய அம்சங்கள்</h2><p>

QC3-இல் TFT டிஸ்ப்ளே, Honda RoadSync இணைப்பு, ஸ்மார்ட்போன் இன்டிக்ரேஷன், Turn-by-Turn Navigation ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
ஹோண்டா QC3-இன் விலை மற்றும் வெளியீட்டு திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், FY2027-க்கு முன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T00:59:08+00:00</updated>
        </entry>
    </feed>
