<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-25T19:50:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய அமைச்சரவை மாற்றம்: முக்கிய பதவிகளில் மூன்று இந்திய வம்சாவளி எம்.பிக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-cabinet-3-indian-origin-mps-rise-1785006564"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-cabinet-3-indian-origin-mps-rise-1785006564</id>
            <summary type="text">பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம் தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில் மூன்று இந்திய வம்சாவளி லேபர் எம்.பிக்கள் முக்கிய முன்னணி பதவிகளை பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம் தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில் மூன்று இந்திய வம்சாவளி லேபர் எம்.பிக்கள் முக்கிய முன்னணி பதவிகளை பெற்றுள்ளனர்.
</p><h2>
கனிஷ்கா நாராயண் (Kanishka Narayan)</h2><p>கனிஷ்கா நாராயண், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
பீகாரின் முசஃபர்பூரில் பிறந்த அவர், 12 வயதில் குடும்பத்துடன் வேல்ஸுக்கு குடிபெயர்ந்தார். ஈட்டன் கல்லூரி, ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றார். 2024-இல் எம்.பி. ஆனார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Kanishka Narayan has been appointed as Minister of State (Minister for Artificial Intelligence) jointly in the <a href="https://x.com/cabinetofficeuk?ref_src=twsrc%5Etfw">@cabinetofficeuk</a> and the Department for Business, Innovation, Science and Trade. He will attend Cabinet. <a href="https://t.co/IWxGwmSt2E">pic.twitter.com/IWxGwmSt2E</a></p>&mdash; UK Prime Minister (@10DowningStreet) <a href="https://x.com/10DowningStreet/status/2079350751965376774?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><h2>
சத்வீர் கௌர் (Satvir Kaur)</h2><p>சத்வீர் கௌர், சவுதாம்ப்டன் டெஸ்ட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி போன்ற துறைகளில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெற்றோர் பஞ்சாபில் இருந்து வந்தவர்கள். சவுதாம்ப்டனில் புடவைக் கடை நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1785215c-cfbf-44fb-89e2-91806f9d1a0f/26-6a650c0fd9628.webp' /></p><p>
</p><h2>ஹர்ப்ரீத் உப்பால் (Harpreet Uppal)</h2><p>ஹர்ப்ரீத் உப்பால், ஹட்ஸ்ஃபீல்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் துணை கொறடா (Assistant Whip) பதவியை பெற்றுள்ளார். இது லேபர் கட்சியின் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய பொறுப்பு ஆகும்.
</p><p></p><p>இந்திய வம்சாவளி எம்.பிக்கள் முன்னணி பதவிகளில் இடம் பெற்றிருப்பது, பிரித்தானிய அரசியலில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
</p><p>
மேலும், உமா குமரன் (இலங்கைத் தமிழ் வம்சாவளி) வெளிவிவகாரத் துறை அலுவலகத்தில் ஜூனியர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>

முன்னாள் அமைச்சர்கள் சீமா மல்ஹோத்ரா மற்றும் ப்ரீத் கௌர் கில் பின்புறப் பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த மாற்றம், பிரித்தானிய அரசியலில் இந்திய வம்சாவளி எம்.பிக்களின் செல்வாக்கை வலுப்படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T19:16:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா விதித்த கூடுதல் வரி- சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய உணவுப் பொருளின் விற்பனை பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-cheese-sales-hit-by-us-tariffs-1785001886"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-cheese-sales-hit-by-us-tariffs-1785001886</id>
            <summary type="text">அமெரிக்கா விதித்த கூடுதல் வரியால் சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய உணவுப் பொருளான சீஸ் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற க்ருயேரே (G...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விதித்த கூடுதல் வரியால் சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய உணவுப் பொருளான சீஸ் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற க்ருயேரே (Gruyere) சீஸ் தயாரிப்பாளர்கள், அமெரிக்கா விதித்த புதிய இறக்குமதி வரிகளால் விற்பனை குறைந்ததால், உலகின் பிற பகுதிகளில் புதிய சந்தைகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
அமெரிக்கா கடந்த ஆண்டு 10 சதவீதம் வரி விதித்திருந்த நிலையில், இவ்வாண்டு அது 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்க சந்தையில் சுவிஸ் சீஸின் தேவை பெருமளவில் குறைந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9276337e-0f9e-429d-a7b6-b4af4439a134/26-6a64f7a00688d.webp' /></p><p>அமெரிக்கா, க்ருயேரே சீஸின் மொத்த விற்பனையில் சுமார் 13 சதவீதம் பங்கைக் கொண்டிருந்தது.

விற்பனை குறைவால், தயாரிப்பாளர்கள் 5 சதவீதம் உற்பத்தியை குறைத்துள்ளனர். இதன் மூலம் விலை நிலைத்தன்மையைப் பேணுவதோடு, அதிகப்படியான கையிருப்பு உருவாகாமல் தடுக்க முயற்சி செய்கிறார்கள்.
</p><p>
“சீஸ் விற்பனை குறைந்தாலும், விலையை குறைத்து விற்காமல், தரத்தைப் பேணுவது முக்கியம்,” என தயாரிப்பாளர் அலெக்சாண்டர் முரித் தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>சீஸ் வியாபாரிகள், அமெரிக்க சந்தையை மாற்றும் வகையில் புதிய சந்தைகளை உலகம் முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமெரிக்கா போன்ற பெரிய சந்தையை உடனடியாக மாற்றுவது சாத்தியமில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
</p><p>
சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் பசுக்களை மேய்த்து, இயற்கை பால் மூலம் தயாரிக்கப்படும் க்ருயேரே சீஸ், சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய உணவுப் பொருளாகும். அமெரிக்க வரி காரணமாக, இந்த பாரம்பரிய தொழில் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T17:49:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-to-give-exempt-for-existing-care-workers-1784980082"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-to-give-exempt-for-existing-care-workers-1784980082</id>
            <summary type="text">பிரித்தானியாவின் பிரதமராக லேபர் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், தொடர்ச்சியாக மக்களுக்கு நன்மை தரும் சில நடவடிக்கைகளை எடுத்துவருகிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் பிரதமராக லேபர் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், தொடர்ச்சியாக மக்களுக்கு நன்மை தரும் சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
</p><p>
இந்நிலையில், அவர், புலம்பெயர்தல் தொடர்பில் ஒரு நல்ல முடிவை எடுக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் லட்சக்கணக்கானோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
</p><h3>
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு...
</h3><p>
உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், தொடர்ச்சியாக புலம்பெயர்தலுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகள் ஏராளமானோருக்கு கவலையை ஏற்படுத்துபவையாக அமைந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7cfb2f3-73e8-48c4-8de2-c4e6e61ccd8f/26-6a64a273b3c5e.webp' /></p><p>
அவற்றில் ஒன்று, ஏற்கனவே பிரித்தானியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்து, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான விதி ஆகும்.
</p><p>
அதாவது, ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 10 ஆண்டுகளுக்கும்மேல் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என்னும் ரீதியிலான புது விதி ஒன்றை ஷபானா அறிவிக்க, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள். </p><p></p><p>
இந்நிலையில், அந்த விதியிலிருந்து முதியவர்களை கவனித்துக்கொள்ளும் பணியை மேற்கொள்ளும் care workers என்னும் பணியாளர்களுக்கு, அதாவது, ஏற்கனவே பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோருக்கு, விலக்கு அளிக்க பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்த செய்தி, லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
</p><h3>
என்ன காரணம்?
</h3><p>
இப்படி தன் அரசில் உள்துறைச் செயலராக இருக்கும் ஷபானாவின் முடிவுக்கு எதிராக பிரதமர் ஆன்டி பர்னாம் முடிவெடுக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb6b03c-d9e4-44b1-bf21-43bbfb6c634f/26-6a64a274625d9.webp' /></p><p>
அதை ஆன்டி பர்னாமே கூறியும் உள்ளார். அதாவது, ஆன்டி பர்னாமின் தந்தையான ராய், அல்ஸீமர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
தன் மகன் பிரித்தானியாவின் பிரதமரானதுகூட அவருக்கு தெரியாது என்னும் ரீதியில் சில செய்திகள் வெளியாகியிருந்தன.
</p><p>
இந்நிலையில், ஷபானாவின் கட்டுப்பாடுகளிலிருந்து care worker பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கும் திட்டம் குறித்து பேசிய ஆன்டி பர்னாம், என் தந்தைக்கு அல்ஸீமர் பிரச்சினை உள்ளது.
</p><p>
அவரை கவனித்துக்கொள்ள care worker பணியாளர்கள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். அது அவர்கள் தவறல்ல, சிஸ்டமே தவறு என்று கூறியிருந்தார் ஆன்டி பர்னாம்.
</p><p>
அத்துடன், சமூக பாதுகாப்பு அமைப்பை இப்படியே விட்டுவிட முடியாது என்றும் கூறியிருந்தார் ஆன்டி பர்னாம்.
</p><p>
ஆக, விரைவில் அது குறித்து ஆன்டி பர்னாம் அறிவிப்பு ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், புலம்பெயர்ந்தோர், சுகாதாரப் பணியாளர்கள் உட்பட ஏராளமானோருக்கு நல்ல செய்தி ஒன்று காத்திருக்கிறது என்று மட்டும் இப்போதைக்குக் கூறலாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T17:24:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் அமெரிக்காவை பேரழிவுக்கு..தயாராக அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-could-devastate-america-in-single-day-warning-1784995679"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-could-devastate-america-in-single-day-warning-1784995679</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால், அமெரிக்கா இணையப் பேரழிவுக்கு தயாராகுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


செயற்கை நுண்ணறிவு கடந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால், அமெரிக்கா இணையப் பேரழிவுக்கு தயாராகுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>

செயற்கை நுண்ணறிவு </h2><p>கடந்த 21ஆம் திகதி, தனது மேம்பட்ட மாதிரிகளில் ஒன்று கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்து, இணையத்தை அணுகி மற்றொரு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் அமைப்புகளை ஹேக் செய்ததாக, ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் வெளிப்படுத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/289fbc29-86f7-4758-9310-f4a3c00c1f3f/26-6a64e15d1b91d.webp' />&nbsp;</p><p></p><p>
மனித அறிவுறுத்தல்கள் இன்றி, ஒரு AI மாதிரி மற்றொரு நிறுவனத்தின் தரவுத்தளங்களில் தன்னிச்சையாக ஊடுருவியது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது. </p><p>

இந்த முன்னெப்போதும் இல்லாத மீறல், உலகளாவிய கவலையைத் தூண்டியுள்ளதுடன், திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்ட ரோபோ கிளர்ச்சிகளுடன் ஒப்பிட்டும் பேசப்படுகிறது.&nbsp;</p><h2>பேரழிவுக்கு உள்ளாக்கக்கூடும்</h2><p> 

இந்த நிலையில், "செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஹேக்கிங் நிரல்கள், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெருநிறுவன மற்றும் அரசாங்க நெட்வொர்க்குகளுக்குள் ஊடுருவி, முக்கியமான தரவுகளைத் திருடி, Ransomware மூலம் முக்கிய அமைப்புகளை முடக்கி, ஒரே நாளில் ஒரு தேசத்தையே பேரழிவுக்கு உள்ளாக்கக்கூடும்" என்று DigitalWarefare.com-யின் ஜேம்ஸ் நைட் எச்சரித்துள்ளார்.</p><p> 

மேலும் அவர், 'வளர்ந்து வரும் இந்த ஆயுதங்கள், ஒரு சூப்பர்கம்ப்யூட்டரின் வேகத்தில், வணிகங்களுக்கும் சாதாரண மக்களுக்கும் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் வகையில், விரைவில் தன்னிச்சையாக திட்டமிட்டு, செயல்பட்டு தங்கள் உத்திகளை மாற்றியமைக்கும் திறன் கொண்டவை' என்றும் விளக்கியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b037d4e0-94d0-48b1-b324-0b0d5ab156f2/26-6a64e1b42d78e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T16:16:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷான் கிஷன், திலக் வர்மா ருத்ரதாண்டவம்! ஜிம்பாப்வேயை சரித்த அபிஷேக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ishan-blast-81-and-abhishek-took-3-wkts-vs-zim-1784992514"></link>
            <id>https://news.lankasri.com/article/ishan-blast-81-and-abhishek-took-3-wkts-vs-zim-1784992514</id>
            <summary type="text">ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா 219 ஓட்டங்கள்  

ஹராரேயில் நடந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. </p><h2>இந்தியா 219 ஓட்டங்கள் </h2><p> 

ஹராரேயில் நடந்த டி20 போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b869d81-826d-4f61-b997-30a4bfa22d1b/26-6a64d5d532be0.webp' />&nbsp;</p><p></p><p>

இஷான் கிஷன் (Ishan Kishan) 44 பந்துகளில் 81 ஓட்டங்களும் (2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள்), திலக் வர்மா (Tilak Varma) 29 பந்துகளில் 60 ஓட்டங்களும் (3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c438387-bc17-450c-b1d7-973a2f475b48/26-6a64d3dd995f3.webp' /></p><p>
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 17.5 ஓவர்களில் 129 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பிரையன் பென்னெட் 32 (19) ஓட்டங்களில் எடுத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9211647b-7fc8-42a9-b3c0-65e9359bf80a/26-6a64d5d5da474.webp' /></p><p>

அபிஷேக் ஷர்மா 3 விக்கெட்டுகளும், யஷ் தாக்கூர் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், பிஷ்னாய், ஷிவம் தூபே மற்றும் திலக் வர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a72e7502-f66a-408a-90ed-61107cb8ce12/26-6a64d3dccb9fd.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25c292a0-a6b9-46ac-8e14-e169773dd702/26-6a64d5d4540a9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T15:25:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் சைக்கிள் பந்தயத்தில் வீரருக்கு நேர்ந்த அசம்பாவிதம்: அதிர்ச்சி காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/colombian-rider-rubio-crashing-face-to-car-video-1784990199"></link>
            <id>https://news.lankasri.com/article/colombian-rider-rubio-crashing-face-to-car-video-1784990199</id>
            <summary type="text">பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் கொலம்பியா வீரர் படுகாயமடைந்ததால் பாதியில் விலகினார்.கொலம்பிய வீரர்

பிரான்ஸ், பாரிஸ் மற்றும் பார்சிலோனாவில் நடந்து வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் கொலம்பியா வீரர் படுகாயமடைந்ததால் பாதியில் விலகினார்.</p><h2>கொலம்பிய வீரர்
</h2><p>
பிரான்ஸ், பாரிஸ் மற்றும் பார்சிலோனாவில் நடந்து வரும் டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில், கொலம்பிய வீரர் ஐனர் ரூபியோ (Einer Rubio) கலந்துகொண்டார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">The crash of 🇨🇴 Einer Rubio from another angle...<br><br>Read more:<br>📰 <a href="https://t.co/TjchzYFuDV">https://t.co/TjchzYFuDV</a><br><br>🎥 IG Pamezcycling <a href="https://t.co/2Ay9VSFWIk">pic.twitter.com/2Ay9VSFWIk</a></p>&mdash; Domestique (@Domestique___) <a href="https://x.com/Domestique___/status/2080753347607269467?ref_src=twsrc%5Etfw">July 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
நேற்றைய 19-வது கட்டப் பந்தயத்தின்போது ரூபியோவிற்கு முன்பு சென்றுகொண்டிருந்த கார், பார்வையாளர்கள் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக திடீரென நின்றது.&nbsp;</p><p></p><p>
இதனை சற்றும் எதிர்பாராத ஐனர் ரூபியோ காரின் பின்பக்க கண்ணாடியில் பலமாக மோதினார். 

இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட இரத்தம் கொட்டியது. </p><p>உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கிரெனோபில்லில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.</p><h2> 

மேலாளர் பகிரங்க மன்னிப்பு </h2><p>அங்கு அவரது காயங்களின் தீவிரத்தைக் கண்டறிய புதிய சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில் ரூபியோ மோதிய காரினை ஒட்டிய XRG அணியின் மேலாளர் ஜோக்சியன் பெர்னாண்டஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார்.</p><p> 

எனினும், பார்வையாளர்களின் உயிரைக் காப்பாற்றவே அவ்வாறு செய்ததாகவும் தெளிவுபடுத்தினார்.

ரூபியோவிற்கு ஏற்பட்ட விபத்து குறித்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ff7033f-c8d5-4468-b92c-81a2b7add29f/26-6a64cab74c4eb.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T14:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அன்று காய்கறி விற்றவர், இன்று இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார் - யார் இந்த ஜண்டு குமார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vegtable-seller-jhandhu-kumar-won-medal-for-india-1784989549"></link>
            <id>https://news.lankasri.com/article/vegtable-seller-jhandhu-kumar-won-medal-for-india-1784989549</id>
            <summary type="text">&amp;nbsp;காய்கறி விற்று, இ-ரிக்ஸா ஓட்டி வறுமையில் இருந்த ஜண்டு குமார் காமன்வெல்த் தொடரில் இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார்.

கிளாஸ்கோ காமன்வெல்த்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;காய்கறி விற்று, இ-ரிக்ஸா ஓட்டி வறுமையில் இருந்த ஜண்டு குமார் காமன்வெல்த் தொடரில் இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார்.</p><h3>

கிளாஸ்கோ காமன்வெல்த்
</h3><p>
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், இந்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 ஆம் திகதி ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dcd56d8-5a67-447f-a990-a8e63cc9431d/26-6a64c76e65819.webp' /></p><p> 

74 நாடுகளை சேர்ந்த சுமார் 3000 வீரர், வீராங்கனைகல் இதில் கலந்து கொள்கின்றனர். </p><h3> 

ஜண்டு குமார்</h3><p>

இதில், ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிப்டிங் பிரிவில் இந்தியாவின் ஜண்டு குமார்(jhandu kumar) வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6d7c27e-9026-472c-966a-8bb0437feccc/26-6a64c76f17b3c.webp' /></p><p>

இது, 2026 காமன்வெல்த் விளையாட்டு தொடரில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள முதல் பதக்கம் ஆகும். </p><p>

பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டம், ஹர்நாத் என்ற ஊரில் பிறந்த 28 வயதான ஜண்டு குமார், தனது 5 வயதிலே போலியோ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

அவரது பெற்றோர் சிறிய காய்கறி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அவரது பெற்றோருக்கு பக்கபலமாக இவரும் காய்கறி விற்று வந்துள்ளார். </p><p>

தினமும் காய்கறிகள் வாங்குவதற்காக பீகார் ஷெரீஃபிற்கு சுமார் 20 கி.மீ பயணம் செய்து, அவற்றை மீண்டும் கொண்டு வந்து சந்தையில் விற்பேன் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9459fd53-1985-42b9-8568-ac26aa7757bb/26-6a64c76fbd255.webp' /></p><p> 

அதன்பின்னர், மேம்பாலம் கட்டுவதற்காக அவரது காய்கறி கடை அங்கிருந்து அகற்றப்பட்டபோது தனது வருமானத்திற்காக, நண்பர்களிடம் கடன் பெற்று மின்சார ரிக்ஸா வாங்கி ஓட்டி வந்துள்ளார். </p><p>

2016 ஆம் ஆண்டு முதல் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லும் ஜண்டு குமாருக்கு அப்போது பாரா பவர்லிஃப்டிங் பற்றி எதுவும் தெரியவில்லை. 

2018 ஆம் ஆண்டில் அதுகுறித்து தெரிய வந்த போது, அதற்காக கடுமையாக பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார்.
</p><p>
2023 ஆம் ஆண்டில் தேசிய பாரா பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக அவர் தனது மின்சார ஆட்டோவை விற்றார். </p><p>

ஜண்டுவின் ஆர்வத்தை கவனித்த தேசியப் பயிற்சியாளர் ராஜேந்தர் சிங் ரஹேலு, காந்திநகரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய சிறப்பு மையத்தில் பயிற்சி பெறுமாறு ஜண்டுவை அழைத்தார்.
</p><p>
அதைத்தொடர்ந்து, முதல் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம், ஆசியா-ஓசியானியா திறந்தநிலை பாரா பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் என பல்வேறு போட்டிகளை பதக்கங்களை குவிக்க தொடங்கியுள்ளார். </p><p> 

பதக்கம் வென்ற பின்னர் பேசிய ஜண்டு குமார், "நான் பறப்பது போல் உணர்கிறேன். இது எனது முதல் பதக்கம். என் மனதில் ஒரே ஒரு எண்ணம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது: நான் இந்தப் பதக்கத்தை வென்றே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், தனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் மற்றும் தனது விளையாட்டு வாழ்க்கை முழுவதும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.</p><p> 

அவர்கள் என்னை இவ்வளவு பயிற்சி செய்ய அனுமதித்ததற்கும், என் மீது இவ்வளவு அன்பு காட்டியதற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்பேன் என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) குறித்து பேசிய அவர், "நான் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாங்கள் அங்கே பயிற்சி செய்கிறோம், ஒரு வகையில் இந்தப் பதக்கம் அவர்களுக்கே சொந்தமானது," என்று கூறினார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A spectacular performance by Jhandu Kumar, who has opened India’s medal tally at the <a href="https://x.com/hashtag/CWG2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CWG2026</a> by winning a Bronze in the Men’s Heavyweight Para Powerlifting event! Congratulations to him. His achievement is a powerful reflection of immense strength, unwavering determination and… <a href="https://t.co/kMdkU6RRAF">pic.twitter.com/kMdkU6RRAF</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2080873132559323405?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
பதக்கம் வென்றுள்ள ஜண்டு குமாருக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T14:25:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபூர்வ மருத்துவ பிரச்சினையால் வெளிநாட்டில் இந்தியர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-techie-dies-in-us-rare-aortic-dissection-1784984558"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-techie-dies-in-us-rare-aortic-dissection-1784984558</id>
            <summary type="text">அமெரிக்காவில் வாழ்ந்துவந்த மென்பொருள் பொறியாளரான இந்தியர் ஒருவர், அபூர்வ மருத்துவ பிரச்சினை ஒன்றின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் வாழ்ந்துவந்த மென்பொருள் பொறியாளரான இந்தியர் ஒருவர், அபூர்வ மருத்துவ பிரச்சினை ஒன்றின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.</p><h3>

வெளிநாட்டில் இந்தியர் மரணம்</h3><p>

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் வாழ்ந்து வந்தவர், வெங்கட ரவிதேஜா ரவிபதி (34).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/856ed422-088a-4c58-8f3d-1e4b5cfc99a4/26-6a64b3f00c31a.webp' /></p><p>
கடந்த வாரம், ரவிக்கு திடீரென இடது காலில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. வலி அப்படியே நெஞ்சு வரை பரவ, உடனடியாக அவரது குடும்பத்தினர் அவசர உதவியை அழைத்துள்ளனர்.
</p><p>
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ’Type A Aortic Dissection’ என்னும் அபூர்வ பிரச்சினை இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
</p><p>
திடீரென ரவி இப்படி ஒரு அபூர்வ பிரச்சினையால் உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
</p><p>
ரவிக்கு 26 வயதில் மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T14:00:58+00:00</updated>
        </entry>
    </feed>
