<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-08T08:36:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் குற்றவியல் வழக்காக மாறியுள்ள நோய்த்தொற்று பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/legionnaires-outbreak-leads-criminal-case-in-swiss-1786177162"></link>
            <id>https://news.lankasri.com/article/legionnaires-outbreak-leads-criminal-case-in-swiss-1786177162</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக ஒருவர் பலியான வழக்கு குற்றவியல் வழக்காக மாற்றப்பட்டுள்ளது.


சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பரவும் நோய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக ஒருவர் பலியான வழக்கு குற்றவியல் வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
</p><p>

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பரவும் நோய் ஒன்றினால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் பலியாகிவிட்டதால், அந்த வழக்கு, குற்றவியல் வழக்காக மாற்றப்பட்டுள்ளது.</p><h3>

பாஸல் நகரில் பரவும் நோய்த்தொற்று</h3><p>

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில், லீஜியோனெல்லா நீமோபிலா என்னும் பாக்டீரியாவால் உருவாகும், லீஜியோனேர்ஸ் என்னும் நோய் பரவிவருகிறது.</p><p>

28 பேர் லீஜியோனெல்லா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் பலியாகிவிட்டதால், அந்த வழக்கு தற்போது குற்றவியல் வழக்காக மாற்றப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3af83ee-29a2-424b-9c68-220bb67ebeda/26-6a76e68c0f952.webp' /></p><p>
அதாவது, இந்த இந்த லீஜியோனெல்லா கிருமி, கட்டிடங்களை குளிர்விக்க பயன்படுத்தும் கருவிகள் மூலம் பரவக்கூடும்.
</p><p>
இந்நிலையில், பாஸல் நகரில் தொறு அதிகம் பரவும் பகுதியிலுள்ள கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள கூலிங் டவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.&nbsp;</p><p></p><p>

அப்போது, இரண்டு அலுவலகங்களில் உள்ள கூலிங் டவர்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் இந்த லீஜியோனெல்லா கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளது.</p><p>

ஆகவே, ஒரு உயிர் பலியானதற்கு அந்த அலுவலகத்தின் கவனக்குறைவு காரணமாக அமைந்துவிட்டதால், நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த வழக்கை குற்றவியல் வழக்காகக் கருதி வழக்கு விசாரணையைத் துவக்கியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T08:19:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றிவந்த இந்திய இளம்பெண்: விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-girl-who-works-in-canada-jail-officer-dies-1786176548"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-girl-who-works-in-canada-jail-officer-dies-1786176548</id>
            <summary type="text">கனடாவில் சிறைத்துறையில் அதிகாரியாக பணியாற்றிவந்த இளம்பெண்ணொருவர் விபத்தொன்றில் பலியானார்.

கனடாவில், கைதி ஒருவரை எட்மண்டனிலுள்ள பெண்கள் சிறையிலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் சிறைத்துறையில் அதிகாரியாக பணியாற்றிவந்த இளம்பெண்ணொருவர் விபத்தொன்றில் பலியானார்.</p><p>

கனடாவில், கைதி ஒருவரை எட்மண்டனிலுள்ள பெண்கள் சிறையிலிருந்து வேறொரு இடத்துக்கு அழைத்துச் செல்லும்போது நிகழ்ந்த விபத்தில், இந்தியப் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் பலியாகியுள்ளார்கள்.
</p><h3>
மூன்று பேர் பலி
</h3><p>
வியாழக்கிழமையன்று, எட்மண்டனிலுள்ள பெண்கள் சிறையிலிருந்து, கியாரா மூஸ்வா (Kiara Mooswa, 24) என்னும் பெண் கைதியை வேறொரு சிறைக்குக் கொண்டு செல்லும் பணியில் சிறைத்துறை அதிகாரிகள் சில ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b9a419b-7684-467f-b4ee-a8148cfefbc4/26-6a76e426cc56d.webp' /></p><p>அவர்கள் பயணித்த வேன், ஆல்பர்ட்டா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது, ட்ரக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/985bcd7f-3255-4ac9-bfd3-cc1ee8fbea14/26-6a76e4277e849.webp' /></p><p>இந்த கோர விபத்தில், கியாராவும், சிறைத்துறை அதிகாரிகளான நிக்கோலே செர்பா (Nicolae Serban, 57) மற்றும் ரமன்தீப் கௌர் மான் (Ramandeep Kaur Maan, 25) ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்கள்.&nbsp;</p><p></p><h3>

யார் இந்த ரமன்தீப் கௌர் மான்?
</h3><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FVoteBhullar%2Fposts%2Fpfbid0p9fvvnRX2k4Kdy6w5MFqwYWEfXeG8uUKYgWqSz8tEyLtejPgzYa2TdjGKFQcgwqNl&show_text=true&width=500" width="500" height="666" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான ரமன்தீப் கௌர் மான், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானாவைச் சேர்ந்தவர் ஆவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74935640-a2e7-488b-af2a-5ed7980421b9/26-6a76e42627506.webp' /></p><p>சர்வதேச மாணவியாக கனடா வந்த ரமன்தீப் கௌர், ஆறு மாதங்களுக்கு முன்தான் சிறைத்துறையில் பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T08:09:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்மத்திற்கு செல்லும் சூரியன்.., கோடிகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sun-transit-1786176392"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sun-transit-1786176392</id>
            <summary type="text">நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

ஜூலை மாதத்தில் சூரியன் தனது ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.</p><p>

ஜூலை மாதத்தில் சூரியன் தனது ராசியை மாற்றியுள்ள அதே நேரத்தில் ஜூலை 20ஆம் திகதியான இன்று தனது நட்சத்திரத்தை மாற்றியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், ஆகஸ்ட் 17ஆம் திகதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் 1 வருடம் கழித்து நுழையவுள்ளார்.</p><p>

அந்தவகையில், சிம்மத்திற்கு செல்லும் சூரியனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.&nbsp;</p><p></p><h2>சிம்மம்
</h2><ul><li>
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
</li><li>வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
</li><li>வருமானம் அதிகரிக்கும்.
</li><li>வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
</li><li>பணியில் முன்னேற்றம் ஏற்படும்.
</li><li>நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும்.
</li><li>முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c83a0992-9bb0-4e14-90c1-72cee08829c5/26-6a76e38b06a6f.webp' /></p><h2>துலாம்
</h2><ul><li>
புதிய பொன்னான வாய்ப்புகள் தேடி வரும்.
</li><li>உழைப்புக்கு முழுமையான பலன் கிடைக்கும்.
</li><li>சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும்.</li><li>
நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.</li><li>
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.</li><li>
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
</li><li>வீடு அல்லது வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும் .</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38ae4ea1-a13d-48d1-b04a-5691cb3bb750/26-6a76e38baeb3b.webp' /></p><p> </p><h2>மகரம்
</h2><ul><li>
பொற்காலமாக அமைய வாய்ப்பு உள்ளது.
</li><li>தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
</li><li>திடீர் பணவரவு கிடைக்கும்.
</li><li>நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும்.
</li><li>பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
</li><li>வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் லாபம் கிடைக்கும்.</li><li>
முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கலாம்.
</li><li>குடும்ப உறவுகள் மேம்படும்.&nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db7d4c42-3867-4b29-8ed1-1e7698537459/26-6a76e38c610f8.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T08:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எண்ணங்களை படிக்க அனுமதித்தால் லட்சத்தில் பணம் வழங்கும் AI நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-startup-conduit-pay-money-for-read-your-thought-1786175550"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-startup-conduit-pay-money-for-read-your-thought-1786175550</id>
            <summary type="text">Conduit என்ற AI நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு அமைப்புக்கு பயிற்சியளிக்க உங்களது எண்ணங்களை படிக்கச் அனுமதித்தால் சுமார் ரூ.1 லட்சம் அளவிற்கு பணம் வழங...</summary>
            <content type="html"><![CDATA[<p>Conduit என்ற AI நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு அமைப்புக்கு பயிற்சியளிக்க உங்களது எண்ணங்களை படிக்கச் அனுமதித்தால் சுமார் ரூ.1 லட்சம் அளவிற்கு பணம் வழங்குகிறது. </p><h3> 

எண்ணங்களை படிக்க அனுமதித்தால் பணம்
</h3><p>
செயற்கை நுண்ணறிவு துறை அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. ChatGPT போன்ற செயலிகள் நாம் உரை வடிவிலோ, அல்லது குரல் வழியிலோ கொடுக்கும் கட்டளைக்கு ஏற்ப படம், வீடியோக்களை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca82d00-082d-4a8d-b34c-e1de13354b12/26-6a76e0404670e.webp' /></p><p>

ஆனால், Conduit என்ற AI ஸ்டார்ட்அப் நிறுவனம் அதற்கு ஒரு படி மேலே போய், உரை அல்லது குரல் வடிவிலான கட்டளைக்கு பதிலாக நமது எண்ணங்கள் மூலம் செயல்படும் செயலியை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளது. </p><p>

இதே போன்ற முயற்சியில் எலான் மஸ்கின் neuralink நிறுவனம் ஈடுபட்டிருந்தாலும், அது மனிதனின் உடலுக்குள் சிப் ஒன்றை பொருத்தி அதன் மூலம் எண்ணங்களை வைத்து சாதனங்களை இயக்க வழி வகுக்கிறது. </p><p>

ஆனால் Conduit நிறுவனம், உடலுக்குள் ஊடுருவாத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எண்ணங்களை படிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மூலம் சாதனங்களை இயக்குவதை இலக்காக வைத்துள்ளது.&nbsp;</p><p></p><p>

இதற்காக தனது அமைப்புகளுக்குத் தேவையான பயிற்சித் தரவுகளைச் சேகரிப்பதற்காக, அந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்து பணம் வழங்குகிறது. </p><p> 

இதில் பங்குபெற, அமெரிக்காவில் உள்ள Conduit அலுவலகத்திற்குச் சென்று, மின்முனைகள் பொருத்தப்பட்ட 4 பவுண்டு எடை கொண்ட தலைக்கவசத்தை அணிந்துகொண்டு, 2 மணி நேரம் செயற்கை நுண்ணறிவுடன் (AI) உரையாட வேண்டும்.</p><p> 

மேலும், விரல்களைப் பார்க்காமல் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும். 

இந்த அமர்வுகளின் போது, ​​பங்கேற்பாளர்கள் ஒரு செயற்கை நுண்ணறிவு மாதிரியுடன் உரையாடவும், கேட்கவும் பேசவும், படிக்கவும் அல்லது தட்டச்சு செய்யவும் கேட்டுக்கொள்ளப்படலாம்.
</p><p>
இதில், ஒரு அமர்வுக்கு 55 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.5,200) வரை பணம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் 32 அமர்வுகள் வரை பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. அதாவது 32 அமர்வுகளில் பங்குபெற்றால் 1760 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.1.67 லட்சம்) வரை பணம் பெற முடியும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T07:52:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரீபியன் பிரீமியர் லீக்: முதல் போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் த்ரில் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/antigua-and-barbuda-falcons-thrill-win-cpl-2026-1786174937"></link>
            <id>https://news.lankasri.com/article/antigua-and-barbuda-falcons-thrill-win-cpl-2026-1786174937</id>
            <summary type="text">ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணியை வீழ்த்தியது.

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ஆன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணியை வீழ்த்தியது.</p><p>

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ரோவ்மன் பௌல்</h2><p>
செயின்ட் வின்சென்ட்டில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🚨 Andre Russell now has 100 CPL wickets 🔥🔥🔥<a href="https://t.co/DmpR7zV7md">pic.twitter.com/DmpR7zV7md</a></p>&mdash; Cricbuzz (@cricbuzz) <a href="https://x.com/cricbuzz/status/2085937293307642058?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் 167 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் ரோவ்மன் பௌல் 47 (37) ஓட்டங்களும், ரீஸா ஹென்ரிக்ஸ் 42 (25) ஓட்டங்களும் விளாசினர்.

அல்ஸரி ஜோஸப் 3 விக்கெட்டுகளும், உஸமா மிர் மற்றும் ஜேடன் சீல்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp;</p><p></p><p> 

அடுத்து களமிறங்கிய ஆன்டிகுவா அணியில் டிம் ராபின்சன் 40 ஓட்டங்களும், தஜிந்தர் தில்லோன் 62 (37) ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
ஆனால் பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து சொதப்பினர். 20வது ஓவரின் கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட, ஷாமர் ஸ்ப்ரிங்கர் ஆன்டிகுவா அணியை வெற்றி பெற வைத்தார்.
</p><p>
ஜமைக்கா தரப்பில் கீமோ பவுல் 3 விக்கெட்டுகளும், ரஸல் மற்றும் ஹுனைன் ஷா தலா 2 விக்கெட்டுகளும், ஹஸன் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">What a start to the CPL season 🤩🤩<a href="https://t.co/PZmYLTgG3r">pic.twitter.com/PZmYLTgG3r</a></p>&mdash; Cricbuzz (@cricbuzz) <a href="https://x.com/cricbuzz/status/2085944437637824913?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T07:40:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவிற்கு எதிரான ஒரு நடவடிக்கை... 100 சதவீத வரி அச்சுறுத்தலில் சீனாவும் இந்தியாவும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-sanctions-bill-tariff-threat-1786173388"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-sanctions-bill-tariff-threat-1786173388</id>
            <summary type="text">ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றியதை அடுத்து, இந்தியா, சீனா மீது 100 சதவீத வரி அச்சுறுத்தல்.
இந்தியா மற்றும் சீனா உட்பட, ரஷ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றியதை அடுத்து, இந்தியா, சீனா மீது 100 சதவீத வரி அச்சுறுத்தல்.
</p><p>இந்தியா மற்றும் சீனா உட்பட, ரஷ்ய எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை வாங்கும் உலகின் முதல் ஐந்து நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுமதி வழங்கும் மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2>ஜனாதிபதிக்கு அதிகாரம்</h2><p>
</p><p>உக்ரைனின் தீவிர ஆதரவாளராக இருந்து ஜூலை 11 அன்று காலமான குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் நினைவாகப் பெயரிடப்பட்ட இந்த மசோதா, செனட் சபையில் 86-11 என்ற வாக்கு வித்தியாசத்தில் அங்கீகரிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b44df48-1317-4719-8869-82ed374ca861/26-6a76d7ce3392e.webp' /></p><p> </p><p>தற்போது ஐந்தாம் ஆண்டில் இருக்கும் உக்ரைன் போரைத் தொடங்கியதற்காக ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்க வேண்டும் என கிரஹாம் வலுவாக வாதிட்டு வந்தார். </p><p>செனட் சபையில் அவருக்குப் பின் பதவியேற்ற அவரது சகோதரி டார்லின் கிரஹாம், இந்த மசோதா ஜனாதிபதி புடினுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி என்று கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>ஓராண்டுக்கும் மேலாக கிரஹாம் உடன் இணைந்து இந்த மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்திய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ரிச்சர்ட் ப்ளூமெந்தல், உக்ரைன் மக்கள் தனித்து விடப்படவில்லை என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். </p><p>இந்த இருகட்சி ஆதரவுடைய மசோதாவானது, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷ்ய எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை வாங்கும் உலகின் முதல் ஐந்து நாடுகளின் மீது சுங்கவரிகளை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.</p><h2>முதல் ஐந்து நாடுகள்</h2><p> </p><p>இந்தியா மற்றும் சீனா தவிர, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளும் தற்போது ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளில் அடங்கும். </p><p>ஆனால், ரஷ்யாவிலிருந்து 15 சதவீதத்திற்கும் குறைவான அளவு இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் மற்றும் அந்த இறக்குமதியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நாடுகளுக்கு இந்த மசோதா விதிவிலக்குகளை அளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fb0c429-3b73-4c96-a5a8-e9d3b0b5079e/26-6a76d7cf04bbf.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள், ரஷ்ய நிதி நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய எரிசக்தித் திட்டங்கள் மீதான தடைகளையும் இந்தச் சட்டம் உள்ளடக்கியுள்ளது. </p><p>அத்துடன், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி வருவாய் மீதான தற்போதைய அமெரிக்கத் தடைகளைத் தவிர்ப்பதற்காக புடின் நிர்வாகம் பயன்படுத்தும், பழைய மற்றும் பெயர் மாற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல்களை இலக்காகக் கொண்டு, இந்த மசோதா அமெரிக்கத் தடைகளை விரிவுபடுத்தும். </p><p>மேலும், தேசிய நலனுக்கு உகந்தது என்று ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சான்றளித்தால், தடைகள் அல்லது கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் இது வெள்ளை மாளிகையை அனுமதிக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T07:14:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்: கடத்தல் பாணியை மாற்றிய ஆட்கடத்தல்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/smugglers-use-mega-dinghies-for-migrant-channels-1786166101"></link>
            <id>https://news.lankasri.com/article/smugglers-use-mega-dinghies-for-migrant-channels-1786166101</id>
            <summary type="text">பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழையும் புலம்பெயர்ந்தோர் இப்போது பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.


பிரான்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழையும் புலம்பெயர்ந்தோர் இப்போது பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.</p><p>


பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்ட விரோத புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்த இருதரப்பும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், ஆட்கடத்தல்காரர்களும் புதிய நடவடிக்கைகளை துவக்கியுள்ளார்கள்.</p><h3>

சிறுபடகுகள் மூலம் நுழையும் புலம்பெயர்ந்தோர்?
</h3><p>
பிரித்தானியாவைப் பொருத்தவரை, சட்ட விரோத புலம்பெயர்வோர் முன்பு லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்கு நுழைந்துவந்தார்கள்.&nbsp;</p><p>
அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதால், சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையத் துவங்கினார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/228a1e60-f0e0-4385-9ce7-1949cdbeed50/26-6a76bb567f3ff.webp' /></p><p>
அப்படி ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்சுக்கு 662 மில்லியன் பவுண்டுகள் கொடுக்க முன்வர, பிரான்ஸ் தரப்பு கட்டுப்பாடுகளை கடுமையாக்கிவருகிறது.
</p><p>
விடயம் என்னவென்றால், ஆட்கடத்தல்காரர்களும் அதற்கு ஈடாக தங்கள் கடத்தல் பாணியை மாற்றிவருகிறார்கள்.&nbsp;</p><p></p><p>

ஆம், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைக் குறித்து குறிப்பிடும்போது, ’சிறுபடகுகளை தடுத்து நிறுத்துதல்’ என்றே அது குறிப்பிடப்படுகிறது.
</p><p>
ஆனால், இப்போது சிறுபடகுகள் அல்ல, பிரம்மாண்டமான பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.</p><p>

அதற்கு ஆதாரமாக, செவ்வாய்க்கிழமையன்று, 173 புலம்பெயர்வோர் பயணித்த படகொன்றின் எஞ்சினில் தீப்பற்றிய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d27a15a-3920-45ab-a3f1-e2bb85115233/26-6a76bb5745a31.webp' /></p><p>
ஆக, பிரான்சிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை, சிறுபடகுகள் மூலம் கொஞ்சம் கொஞ்சம் பேராக ஆங்கிலக்கால்வாய் வழியாக அனுப்பிவந்த ஆட்கடத்தல்காரர்கள், இப்போது ஒரே நேரத்தில் நூறுக்கும் அதிகமானோர் பயணிக்கும் பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.</p><p>

அதுமட்டுமின்றி, வழக்கமாக புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து புறப்படும் இடங்கள் மட்டுமின்றி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டு கடற்கரைகளில் வெவ்வேறு இடங்களிலிருந்து புலம்பெயர்வோரை படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு அனுப்புவதும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக டெய்லி மெயில் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:55:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கொள்ளை முயற்சியின்போது கொல்லப்பட்ட இந்தியர்: நகர மேயர் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/edmonton-mayor-condolence-indian-death-in-robbery-1786170748"></link>
            <id>https://news.lankasri.com/article/edmonton-mayor-condolence-indian-death-in-robbery-1786170748</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நகர மேயர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நகர மேயர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
</p><p>

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில், கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.</p><h3>

கொள்ளை முயற்சியின்போது கொல்லப்பட்ட இந்தியர்
</h3><p>
எட்மண்டனில் மதுபான விடுதி ஒன்றை நடத்திவரும் சுக்ஜீத் சிங் ரந்தாவா (48) என்பவர், புதன்கிழமை இரவு தனது விடுதியை மூடிக்கொண்டிருந்திருக்கிறார்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FVoteBhullar%2Fposts%2Fpfbid03852M3ayajQk4fu7bDhftgZtoVdm7yzB9EEi4SB26e8DN2s32gsSwZDXQGUvxrGPsl&show_text=true&width=500" width="500" height="628" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிங் கடையில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவரை சிங் தடுக்க, அந்த நபர் சிங்கை தாக்கியுள்ளார்.
</p><p>
தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, சிங் படுகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.
</p><p>
முதலுதவி சிகிச்சைக்குப் பின் சிங்கை அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில், நிக்கோலஸ் (Nicholas Butler-Chowace, 22) என்னும் கனேடியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
நகர மேயர் இரங்கல்

சுக்ஜீத் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள எட்மண்டன் நகர மேயரான ஆண்ட்ரூ நாக், இதுபோன்ற அர்த்தமற்ற வன்முறைச் செயல்கள் நம் சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே பாதிக்கின்றன என்று கூறியுள்ளார்.
</p><p>
ஒவ்வொரு எட்மண்டன்வாசிக்கும் நம் நகரில் பாதுகாப்பாக உணர உரிமை உண்டு என்று கூறியுள்ள அவர், தன் சமூகத்துக்கு சேவை செய்யும்போதும், தம் கடமையை ஆற்றும்போதும், யாரும் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
</p><p>
வரும் புதன்கிழமை சுக்ஜீத் சிங்குக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:34:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படும் அதிசய நகரம்.., எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-city-is-called-as-the-golden-city-of-india-1786170181"></link>
            <id>https://news.lankasri.com/article/which-city-is-called-as-the-golden-city-of-india-1786170181</id>
            <summary type="text">இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திற்கும் தனித்துவமான பெயர்களும், சிறப்புகளும் உள்ளன.

அந்த வகையில் ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜெய்சல்மர் நகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திற்கும் தனித்துவமான பெயர்களும், சிறப்புகளும் உள்ளன.</p><p>

அந்த வகையில் ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜெய்சல்மர் நகரம் இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படுகிறது.
</p><p>
ஜெய்சல்மர் நகரில் உள்ள பெரும்பாலான வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் மஞ்சள் நிற மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2174ff12-6653-4dc2-aee6-abb218d7c37f/26-6a76cccf489bf.webp' /></p><p>சூரிய ஒளி இந்தக் கட்டிடங்கள் மீது படும்போது, அவை தங்க நிறத்தில் ஜொலிப்பது போல் காட்சியளிக்கின்ற காரணமாகவே ஜெய்சல்மருக்கு தங்க நகரம் என்ற பெயர் வந்தது.&nbsp;</p><p>ஜெய்சல்மரின் முக்கிய அடையாளமாக இருப்பது ஜெய்சல்மர் கோட்டை. இது சோனார் கிலா அல்லது தங்கக் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
</p><p>
கி.பி. 1156ஆம் ஆண்டு ராஜபுத்திர மன்னர் ராவல் ஜெய்சால் இந்தக் கோட்டையை கட்டினார். அப்போது இது அவரது ராஜ்ஜியத்தின் முக்கிய மையமாக இருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35e529be-2b77-4b8b-98f5-02f95f6f5b3e/26-6a76ccd031ed1.webp' /></p><p>இந்தக் கோட்டையின் மற்றொரு சிறப்பு, இது வெறும் வரலாற்றுச் சின்னமாக மட்டும் இல்லாமல் இன்றும் மக்கள் வசிக்கும் பகுதியாக இருப்பதுதான்.&nbsp;&nbsp;</p><p>பழங்காலத்தில் ஜெய்சல்மர் முக்கியமான வணிக நகரமாகவும் இருந்தது. </p><p>

இந்தியாவையும் மேற்கத்திய பகுதிகளையும் இணைக்கும் முக்கிய வணிகப் பாதைகளுக்கு அருகில் இந்த நகரம் அமைந்திருந்ததால், ஏராளமான வணிகர்கள் இங்கு வந்து சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b43e9f4-335c-48f4-8dc1-c96062ff8c03/26-6a76ccd0df779.webp' /></p><p>

இதன் மூலம் ஜெய்சல்மர் வணிகம் மட்டுமின்றி, கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கியது.
</p><p>
இன்றும் ஜெய்சல்மர் தனது பழமையான கட்டிடங்கள், நாட்டுப்புற இசை, கைவினைப் பொருட்கள், திருவிழாக்கள் மற்றும் பாலைவன வாழ்க்கை முறைக்காக பிரபலமாக உள்ளது.
</p><p>
அதன் தங்க நிறக் கட்டிடங்களும் வரலாற்றுச் சிறப்புகளும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக எம்.பிக்கள் கூட்டம் - முதல்வர் விஜய் அழைப்பை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dmk-admk-boycott-cm-vijay-mp-s-meet-delimitation-1786168685"></link>
            <id>https://news.lankasri.com/article/dmk-admk-boycott-cm-vijay-mp-s-meet-delimitation-1786168685</id>
            <summary type="text">தொகுதி மறுவரையறை குறித்து கலந்தாலோசிக்க முதல்வர் விஜய் தமிழக எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொகுதி மறுவரையறை குறித்து கலந்தாலோசிக்க முதல்வர் விஜய் தமிழக எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கின்றன.</p><h3>

தமிழக எம்.பிக்கள் கூட்டம்</h3><p>

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.</p><p> 

இதற்கு தமிழ்நாட்டில் பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்தாலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47eb9d76-e942-48f9-b708-b52b3ceaa430/26-6a76c56eaa451.webp' /></p><p>

இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது” என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.&nbsp;</p><p></p><h3>

திமுக எதிர்ப்பு </h3><p>


இந்த கூட்டத்தை அரசியல் நாடகம் என விமர்சித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, இந்த கூட்டத்தை திமுக எம்.பிக்கள் புறக்கணிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6bd9014-84df-4250-ba75-d7068906a92d/26-6a76c56f599de.webp' /></p><p>

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "DelimitationBill: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் FairDelimitation என்பதிலும் எங்கள் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.</p><p>

இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை.</p><p>

இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது, முதலமைச்சர் கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா?</p><p>
CauveryIssueக்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், MekedatuDam-க்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சினையைத் திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr"><a href="https://x.com/hashtag/DelimitationBill?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DelimitationBill</a>: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் <a href="https://x.com/hashtag/FairDelimitation?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#FairDelimitation</a> என்பதிலும் எங்கள் தலைவர் திரு.<a href="https://x.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.<br><br>இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு…</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2085957308509814952?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் MPக்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?" என தெரிவித்துள்ளார்.</p><h3> 

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு</h3><p> 

அதிமுகவும் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

இதே போல், நாடாளுமன்ற தொடர் இருப்பதால் தேமுதிக மாநிலங்களவை எம்பி சுதீஷ் கலந்து கொள்ள இயலாது என தெரிவித்துள்ளார்.</p><p> இதே போல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

கமல்ஹாசன் எம்பி அமெரிக்காவில் உள்ளதால் அவரால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் திமுக அதிமுக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது காதலிக்கு UEFA பெருந்தொகை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு: ஃபிஃபா தலைவர் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uefa-paid-off-infantino-lover-1786168043"></link>
            <id>https://news.lankasri.com/article/uefa-paid-off-infantino-lover-1786168043</id>
            <summary type="text">கியானி இன்ஃபான்டினோ UEFA-வின் பொதுச் செயலாளராக இருந்தபோது அவரது காதலி என்று கூறப்படுபவருக்கு பணிவிலகல் தொகையொன்று வழங்கப்பட்டுள்ளது.
கியானி இன்ஃபான்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கியானி இன்ஃபான்டினோ UEFA-வின் பொதுச் செயலாளராக இருந்தபோது அவரது காதலி என்று கூறப்படுபவருக்கு பணிவிலகல் தொகையொன்று வழங்கப்பட்டுள்ளது.
</p><p>கியானி இன்ஃபான்டினோ UEFA-வின் பொதுச் செயலாளராக இருந்தபோது, ​​அவரது காதலி என்று கூறப்படும் நபருக்கு அந்த அமைப்பு பணிநீக்க இழப்பீடு வழங்கியதாக டெய்லி டெலிகிராப் புலனாய்வு கண்டறிந்துள்ளது.</p><h2>உறுதிப்படுத்தும் அறிக்கை</h2><p>
</p><p>ஆனால், முற்றிலும் உண்மையற்ற இந்தக் குற்றச்சாட்டுகளை இன்ஃபான்டினோ உறுதியாக மறுப்பதாக, தற்போதைய ஃபிஃபா தலைவரின் செய்தித் தொடர்பாளர் அந்தப் பத்திரிகையிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51e4c70b-1417-4e6d-ab70-db9b5b229f7c/26-6a76c2ed6e565.webp' /></p><p> </p><p>இதனிடையே, இன்ஃபான்டினோ 2009 முதல் 2016 வரை பொதுச் செயலாளராகப் பணியாற்றிய UEFA, சம்பந்தப்பட்ட நபருக்குப் பணிவிலகல் தொகையொன்று வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
</p><p>உலகக் கிண்ணம் தொடருக்கான பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து, ஃபிஃபா தலைவராகத் தனது எதிர்காலத்தைத் தக்கவைக்க இன்ஃபான்டினோ போராடி வரும் சூழலில் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p></p><p> </p><p>ஐரோப்பிய கால்பந்து நிர்வாக அமைப்பில் பணியாற்றிய காலத்தில், திருமணமானவரான இன்ஃபான்டினோவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண்ணுக்கு, UEFA ஆறு இலக்கத் தொகையை வழங்கியதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இன்ஃபான்டினோ உறுதியாக மறுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது செய்தித்தொடர்பாளர், இன்ஃபான்டினோவின் நடத்தை குறித்து UEFA அல்லது FIFA-வில் உள்ள எந்தவொரு ஊழியரும் இதுவரை புகார் அளித்ததில்லை; ஏனெனில், அவர் சம்பந்தப்பட்ட அத்தகைய சம்பவம் எதுவும் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை என்றும் வாதிட்டுள்ளார்.</p><h2>கூடுதல் நெருக்கடி</h2><p> </p><p>இருப்பினும், குறிப்பிட்ட அந்தப் பெண்ணுக்கு ஒரு தொகை வழங்கப்பட்டதை உறுதிப்படுத்திய UEFA, உள்ளூர் கல்லூரி ஒன்றில் அவர் எம்பிஏ (MBA) படிப்பை முடிப்பதற்கான கட்டணங்களை அந்தத் தொகை உள்ளடக்கியிருந்தது என்றும் தெரிவித்துள்ளது. </p><p> 
உலகக் கிண்ணத்திற்கான தனியார் முதலீட்டுத் திட்டம் தொடர்பாக ஃபிஃபா தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கைகளை எதிர்கொண்டுள்ள இன்ஃபான்டினோவின் மீது, இந்தக் குற்றச்சாட்டுகள் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c69ce65-5ea6-4497-87a1-2d165a8c056c/26-6a76c2ee1fa33.webp' /></p><p> </p><p>இன்ஃபான்டினோ 2000-ஆம் ஆண்டில் UEFA-வில் இணைந்து, 2009-ஆம் வருடம் அதன் பொதுச் செயலாளரானார்; பின்னர் 2016-ஆம் வருடம் ஃபிஃபா தலைவராக நியமிக்கப்பட்டார். </p><p>இதனிடையே, இன்ஃபான்டினோவின் திட்டங்கள் கைவிடப்பட்ட போதிலும், சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று கூறி, ஐரோப்பிய அணிகள் ஃபிஃபா நிகழ்வுகளைப் புறக்கணிக்கப் போவதாக அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T05:45:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தை உலுக்கிய சம்பவம்... 9 பேர்கள் ஆபத்தான நிலையில்: 8 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eight-killed-including-attacker-1786163337"></link>
            <id>https://news.lankasri.com/article/eight-killed-including-attacker-1786163337</id>
            <summary type="text">பேங்காக் அருகே பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், மாணவர் ஒருவர் தனது தாத்தா-பாட்டியை கொன்றுள்ளார்.
தாய்லாந்தைச் சேர்ந்த பதின்ம வயது இளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேங்காக் அருகே பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், மாணவர் ஒருவர் தனது தாத்தா-பாட்டியை கொன்றுள்ளார்.
</p><p>தாய்லாந்தைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர் ஒருவர் தனது தாத்தா-பாட்டியை கொன்ற பிறகு, தனது பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஐந்து பேரைக் கொன்று, தானும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.</p><h2>ஆபத்தான நிலையில்</h2><p>
</p><p>துப்பாக்கி வன்முறையைக் கையாள்வதில் திணறிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டை உலுக்கியுள்ள இன்னொரு தாக்குதல் சம்பவம் இது என்றே கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37444a61-6583-481a-a4b9-340785be4267/26-6a76b08bdc6e1.webp' /></p><p> பேங்காக் நகருக்கு வடமேற்கே அமைந்துள்ள புகழ்பெற்ற டெப்சிரின் நோந்தபுரி பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 14 வயதுடைய அந்த மாணவர் 30-க்கும் மேற்பட்டோரைப் காயப்படுத்தியுள்ளார். </p><p>இதில், ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தாய்லாந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு. </p><p>தாக்குதலில் ஈடுபட்ட அந்த மாணவர் தனது தாத்தாவிற்குச் சொந்தமான துப்பாக்கியைக் கொண்டு குறைந்தது 26 முறை சுட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவ்க்கப்பட்டுள்ளது; அவரிடம் மேலும் 34 தோட்டாக்கள் எஞ்சியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, ​​மாணவர்கள் வெறும் காலுறைகளுடன் ஓடும் காட்சிகள் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களில் பதிவாகியிருந்தன. </p><p>இதனிடையே, புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களைச் செயல்படுத்தப்போவதாக நாட்டின் தலைவர் உறுதியளித்த நிலையில், மதிய வேளையில், வழக்கமாக மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் விளையாட்டு மைதானம் அதிகாரிகள் மற்றும் ஊடகத்தினரால் நிறைந்திருந்தது.</p><h2>உலகளவில் 13-வது இடம்</h2><p> </p><p>தென்கிழக்கு ஆசியாவிலேயே தாய்லாந்தில்தான் பொதுமக்களிடையே துப்பாக்கி வைத்திருக்கும் விகிதம் மிக அதிகமாக உள்ளது. </p><p>மேலும், 2017-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட 'ஸ்மால் ஆர்ம்ஸ் சர்வே' என்ற அமைப்பு, சிறு ரக துப்பாக்கிகளை வைத்திருப்பதில் தாய்லாந்தை உலகளவில் 13-வது இடத்தில் தரவரிசைப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a23080cb-48d8-4d06-91c3-9bd5febb3f6d/26-6a76b08cae1f0.webp' /></p><p> </p><p>சமீபத்திய வருடங்களில் தாய்லாந்தில் பாடசாலைகள் மற்றும் பாங்காக்கில் உள்ள ஒரு பெரிய வணிக வளாகம் ஆகியவற்றில் நடந்த சம்பவங்கள் உட்பட பல துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன; </p><p>இதில் 2022-ஆம் வருடம் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 சிறார்கள் உட்பட 37 பேர் கொல்லப்பட்ட சம்பவமும் அடங்கும். </p><p>தாக்குதல் நடந்த இப்பாடசாலையானது, தாய்லாந்து அரச குடும்பத்தால் நிறுவப்பட்ட 'டெப்சிரின்' (Debsirin) கல்விக் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இதன் முன்னாள் மாணவர்களில் பிரதமர்கள், அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர் அடங்குவர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T05:05:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடியை அடர்தியாக்க முருங்கை இலை.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/moringa-leaf-for-hair-growth-in-tamil-1786164902"></link>
            <id>https://news.lankasri.com/article/moringa-leaf-for-hair-growth-in-tamil-1786164902</id>
            <summary type="text">பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான்.

ஆனால் முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.

அந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான்.
</p><p>
ஆனால் முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.
</p><p>
அந்தவகையில், முடியின் அடர்த்தியை அதிகரிக்க முருங்கை இலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>

தேவையான பொருட்கள்</h2><ul><li>

முருங்கை இலை- 2 கைப்பிடி</li><li>
தண்ணீர்- சிறிதளவு</li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் முருங்கை இலையை நன்கு கழுவி உலரவைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>

பின்னர் இதனை ஒரு வாணலில் சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29c312c5-3fa7-43a1-acfb-41e7a926ebd6/26-6a76b6a8efeed.webp' /></p><p>அடுத்து அரைத்த பொடியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தலைமுடியில் உச்சந்தலை முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும்.</p><p>

பின் இதனை 20 நிமிடம் அப்படியே விட்டு பின் மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசலாம்.
</p><p>
இதனை தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T04:56:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[காகித ஒப்பந்தங்கள் பாதுகாப்பை அளிக்காது: சவுதி அரேபியாவுக்கு ஈரான் கடும் மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/paper-agreement-iran-to-saudi-1786159992"></link>
            <id>https://news.lankasri.com/article/paper-agreement-iran-to-saudi-1786159992</id>
            <summary type="text">பாகிஸ்தான், துருக்கி உட்பட மூன்று நாடுகளின் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதிக்குப் பாதுகாப்பை அளிக்காது என ஈரான் மிரட்டல்.
பாகிஸ்தான், சவுதி அரேபியா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான், துருக்கி உட்பட மூன்று நாடுகளின் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதிக்குப் பாதுகாப்பை அளிக்காது என ஈரான் மிரட்டல்.
</p><p>பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கிக்கு இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஈரான் விமர்சித்ததுடன், இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், அது சவுதிக்கு நீடித்த பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.</p><h2>சவுதிகள் உணர வேண்டும்</h2><p>
</p><p>ஈரானின் நாடாளுமன்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கை ஆணையத்தின் உறுப்பினரே அந்த மூன்று நாடுகளின் ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளதுடன் மிரட்டலும் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74224448-3a92-45a6-903e-c0363b3a8464/26-6a76a37b177f5.webp' /></p><p> </p><p>இந்த ஒப்பந்தம் தொடர்பில் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்கர்களைப் பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக அரவணைத்து வந்தும் அது தங்களுக்குப் பாதுகாப்பைத் தரவில்லை என்பதைப் போலவே, துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான வெறும் காகித அளவிலான ஒப்பந்தமும் தங்களுக்குப் பாதுகாப்பைத் தராது என்பதை சவுதிகள் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். </p><p>அத்துடன், சவுதி அரேபியா தனது கொள்கைகளைச் சீர்திருத்தினாலே, பாதுகாப்புக்காக மற்றவர்களிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="fa" dir="rtl">سعودی‌ها باید بدانند که توافق کاغذی با ترکیه و پاکستان برای آنها امنیت‌آور نیست، همان‌طور که سال‌ها شیردهی یکطرفه به آمریکایی‌ها برایشان امنیت نیاورد. سیاست‌هایتان را اصلاح کنید تا نیاز نباشد از دیگران <a href="https://x.com/hashtag/%DA%AF%D8%AF%D8%A7%DB%8C%DB%8C_%D8%A7%D9%85%D9%86%DB%8C%D8%AA?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#گدایی_امنیت</a> کنید.</p>&mdash; ابراهیم رضایی (@EbrahimRezaei14) <a href="https://x.com/EbrahimRezaei14/status/2085694930077237398?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>முன்னதாக, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போரின் பின்னணியில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், மூன்று நாடுகளும் மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்றழைக்கப்படும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. </p><p>இஸ்ரேலின் அரசியல் ஆதாயங்களுக்காக மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்தப் போரானது, விருப்பமில்லாத வளைகுடா நாடுகளையும் உள்ளிழுத்து, ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்திற்கும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p> </p><p>துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் முன்னெடுத்த இந்த ஒப்பந்தமானது இஸ்லாத்தின் மிகப்புனிதமான நகரமும், நபிகள் நாயகம் பிறந்த இடமுமான மெக்காவில் கையெழுத்தானது. </p><p>அந்த ஒப்பந்தத்தின்படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான தாக்குதல், அவை அனைத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கையில், </p><p>இந்த ஒப்பந்தமானது, எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலுக்கும் எதிரான கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான எந்தவொரு ஆயுதத் தாக்குதலும், அவை அனைத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்றும் குறிப்பிடுகிறது.</p><p> மேலும், இது மூன்று நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது.&nbsp;</p><p> இம்மூன்று நாடுகளையும் இணைக்கும் நீடித்த சகோதரத்துவ மற்றும் இஸ்லாமிய ஒற்றுமைப் பிணைப்புகளின் அடிப்படையிலும், அவற்றின் பொதுவான உத்திசார் நலன்கள் மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், அவற்றுக்கிடையேயான நீண்டகால வரலாற்றுத் தொடர்புகளால் இது வழிநடத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>இருமுனைத் தாக்குதல்</h2><p>
</p><p>சவுதி அரேபியாவில், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
</p><p>ஈரான் மீதான போரின் ஒரு பகுதியாகப் பல தாக்குதல்களுக்கு உள்ளான சவுதி அரேபியா, தனது பாதுகாப்பு கூட்டாண்மைகளைப் பன்முகப்படுத்த முயன்று வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5756f243-4027-4362-89fc-4b34425fabe3/26-6a76a37a5f8d1.webp' /></p><p> </p><p>அதன் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் எண்ணெய் வசதிகள், ஈரான் மற்றும் ஹவுதிகள், ஈராக்கிய போராளிக் குழுக்கள் போன்ற அதன் பிராந்திய கூட்டாளிகளால் தொடர்ச்சியாக ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொண்டிருந்தன. </p><p>இதனிடையே, ஹவுதிகள் மற்றும் ஈராக்கிய போராளிக் குழுக்களிடம் இருந்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் ஒருங்கிணைப்பில் இருமுனைத் தாக்குதல் ஒன்று சவுதி அரேபியா மீது முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக உளவுத்தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T03:31:08+00:00</updated>
        </entry>
    </feed>
