<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-08T04:38:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தை உலுக்கிய சம்பவம்... 9 பேர்கள் ஆபத்தான நிலையில்: 8 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eight-killed-including-attacker-1786163337"></link>
            <id>https://news.lankasri.com/article/eight-killed-including-attacker-1786163337</id>
            <summary type="text">பேங்காக் அருகே பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், மாணவர் ஒருவர் தனது தாத்தா-பாட்டியை கொன்றுள்ளார்.
தாய்லாந்தைச் சேர்ந்த பதின்ம வயது இளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேங்காக் அருகே பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், மாணவர் ஒருவர் தனது தாத்தா-பாட்டியை கொன்றுள்ளார்.
</p><p>தாய்லாந்தைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர் ஒருவர் தனது தாத்தா-பாட்டியை கொன்ற பிறகு, தனது பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஐந்து பேரைக் கொன்று, தானும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.</p><h2>ஆபத்தான நிலையில்</h2><p>
</p><p>துப்பாக்கி வன்முறையைக் கையாள்வதில் திணறிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டை உலுக்கியுள்ள இன்னொரு தாக்குதல் சம்பவம் இது என்றே கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37444a61-6583-481a-a4b9-340785be4267/26-6a76b08bdc6e1.webp' /></p><p> பேங்காக் நகருக்கு வடமேற்கே அமைந்துள்ள புகழ்பெற்ற டெப்சிரின் நோந்தபுரி பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 14 வயதுடைய அந்த மாணவர் 30-க்கும் மேற்பட்டோரைப் காயப்படுத்தியுள்ளார். </p><p>இதில், ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தாய்லாந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு. </p><p>தாக்குதலில் ஈடுபட்ட அந்த மாணவர் தனது தாத்தாவிற்குச் சொந்தமான துப்பாக்கியைக் கொண்டு குறைந்தது 26 முறை சுட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவ்க்கப்பட்டுள்ளது; அவரிடம் மேலும் 34 தோட்டாக்கள் எஞ்சியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, ​​மாணவர்கள் வெறும் காலுறைகளுடன் ஓடும் காட்சிகள் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களில் பதிவாகியிருந்தன. </p><p>இதனிடையே, புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களைச் செயல்படுத்தப்போவதாக நாட்டின் தலைவர் உறுதியளித்த நிலையில், மதிய வேளையில், வழக்கமாக மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் விளையாட்டு மைதானம் அதிகாரிகள் மற்றும் ஊடகத்தினரால் நிறைந்திருந்தது.</p><h2>உலகளவில் 13-வது இடம்</h2><p> </p><p>தென்கிழக்கு ஆசியாவிலேயே தாய்லாந்தில்தான் பொதுமக்களிடையே துப்பாக்கி வைத்திருக்கும் விகிதம் மிக அதிகமாக உள்ளது. </p><p>மேலும், 2017-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட 'ஸ்மால் ஆர்ம்ஸ் சர்வே' என்ற அமைப்பு, சிறு ரக துப்பாக்கிகளை வைத்திருப்பதில் தாய்லாந்தை உலகளவில் 13-வது இடத்தில் தரவரிசைப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a23080cb-48d8-4d06-91c3-9bd5febb3f6d/26-6a76b08cae1f0.webp' /></p><p> </p><p>சமீபத்திய வருடங்களில் தாய்லாந்தில் பாடசாலைகள் மற்றும் பாங்காக்கில் உள்ள ஒரு பெரிய வணிக வளாகம் ஆகியவற்றில் நடந்த சம்பவங்கள் உட்பட பல துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன; </p><p>இதில் 2022-ஆம் வருடம் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 சிறார்கள் உட்பட 37 பேர் கொல்லப்பட்ட சம்பவமும் அடங்கும். </p><p>தாக்குதல் நடந்த இப்பாடசாலையானது, தாய்லாந்து அரச குடும்பத்தால் நிறுவப்பட்ட 'டெப்சிரின்' (Debsirin) கல்விக் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இதன் முன்னாள் மாணவர்களில் பிரதமர்கள், அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர் அடங்குவர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T04:26:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[காகித ஒப்பந்தங்கள் பாதுகாப்பை அளிக்காது: சவுதி அரேபியாவுக்கு ஈரான் கடும் மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/paper-agreement-iran-to-saudi-1786159992"></link>
            <id>https://news.lankasri.com/article/paper-agreement-iran-to-saudi-1786159992</id>
            <summary type="text">பாகிஸ்தான், துருக்கி உட்பட மூன்று நாடுகளின் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதிக்குப் பாதுகாப்பை அளிக்காது என ஈரான் மிரட்டல்.
பாகிஸ்தான், சவுதி அரேபியா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான், துருக்கி உட்பட மூன்று நாடுகளின் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதிக்குப் பாதுகாப்பை அளிக்காது என ஈரான் மிரட்டல்.
</p><p>பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கிக்கு இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஈரான் விமர்சித்ததுடன், இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், அது சவுதிக்கு நீடித்த பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.</p><h2>சவுதிகள் உணர வேண்டும்</h2><p>
</p><p>ஈரானின் நாடாளுமன்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கை ஆணையத்தின் உறுப்பினரே அந்த மூன்று நாடுகளின் ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளதுடன் மிரட்டலும் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74224448-3a92-45a6-903e-c0363b3a8464/26-6a76a37b177f5.webp' /></p><p> </p><p>இந்த ஒப்பந்தம் தொடர்பில் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்கர்களைப் பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக அரவணைத்து வந்தும் அது தங்களுக்குப் பாதுகாப்பைத் தரவில்லை என்பதைப் போலவே, துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான வெறும் காகித அளவிலான ஒப்பந்தமும் தங்களுக்குப் பாதுகாப்பைத் தராது என்பதை சவுதிகள் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். </p><p>அத்துடன், சவுதி அரேபியா தனது கொள்கைகளைச் சீர்திருத்தினாலே, பாதுகாப்புக்காக மற்றவர்களிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="fa" dir="rtl">سعودی‌ها باید بدانند که توافق کاغذی با ترکیه و پاکستان برای آنها امنیت‌آور نیست، همان‌طور که سال‌ها شیردهی یکطرفه به آمریکایی‌ها برایشان امنیت نیاورد. سیاست‌هایتان را اصلاح کنید تا نیاز نباشد از دیگران <a href="https://x.com/hashtag/%DA%AF%D8%AF%D8%A7%DB%8C%DB%8C_%D8%A7%D9%85%D9%86%DB%8C%D8%AA?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#گدایی_امنیت</a> کنید.</p>&mdash; ابراهیم رضایی (@EbrahimRezaei14) <a href="https://x.com/EbrahimRezaei14/status/2085694930077237398?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>முன்னதாக, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போரின் பின்னணியில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், மூன்று நாடுகளும் மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்றழைக்கப்படும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. </p><p>இஸ்ரேலின் அரசியல் ஆதாயங்களுக்காக மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்தப் போரானது, விருப்பமில்லாத வளைகுடா நாடுகளையும் உள்ளிழுத்து, ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்திற்கும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p> </p><p>துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் முன்னெடுத்த இந்த ஒப்பந்தமானது இஸ்லாத்தின் மிகப்புனிதமான நகரமும், நபிகள் நாயகம் பிறந்த இடமுமான மெக்காவில் கையெழுத்தானது. </p><p>அந்த ஒப்பந்தத்தின்படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான தாக்குதல், அவை அனைத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கையில், </p><p>இந்த ஒப்பந்தமானது, எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலுக்கும் எதிரான கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான எந்தவொரு ஆயுதத் தாக்குதலும், அவை அனைத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்றும் குறிப்பிடுகிறது.</p><p> மேலும், இது மூன்று நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது.&nbsp;</p><p> இம்மூன்று நாடுகளையும் இணைக்கும் நீடித்த சகோதரத்துவ மற்றும் இஸ்லாமிய ஒற்றுமைப் பிணைப்புகளின் அடிப்படையிலும், அவற்றின் பொதுவான உத்திசார் நலன்கள் மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், அவற்றுக்கிடையேயான நீண்டகால வரலாற்றுத் தொடர்புகளால் இது வழிநடத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>இருமுனைத் தாக்குதல்</h2><p>
</p><p>சவுதி அரேபியாவில், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
</p><p>ஈரான் மீதான போரின் ஒரு பகுதியாகப் பல தாக்குதல்களுக்கு உள்ளான சவுதி அரேபியா, தனது பாதுகாப்பு கூட்டாண்மைகளைப் பன்முகப்படுத்த முயன்று வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5756f243-4027-4362-89fc-4b34425fabe3/26-6a76a37a5f8d1.webp' /></p><p> </p><p>அதன் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் எண்ணெய் வசதிகள், ஈரான் மற்றும் ஹவுதிகள், ஈராக்கிய போராளிக் குழுக்கள் போன்ற அதன் பிராந்திய கூட்டாளிகளால் தொடர்ச்சியாக ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொண்டிருந்தன. </p><p>இதனிடையே, ஹவுதிகள் மற்றும் ஈராக்கிய போராளிக் குழுக்களிடம் இருந்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் ஒருங்கிணைப்பில் இருமுனைத் தாக்குதல் ஒன்று சவுதி அரேபியா மீது முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக உளவுத்தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T03:31:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள்: அமெரிக்க செனட் சபையில் கிடைத்த ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-sanctions-against-russia-us-senate-approves-1786131424"></link>
            <id>https://news.lankasri.com/article/new-sanctions-against-russia-us-senate-approves-1786131424</id>
            <summary type="text">ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளுக்கு அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைஅமெரிக்க செனட் சபையில் கொண்டு வரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளுக்கு அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2> ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை</h2><p>அமெரிக்க செனட் சபையில் கொண்டு வரப்பட்ட ரஷ்யாவிற்கு எதிராக புதிய மற்றும் கடுமையான பொருளாதார தடைக்கு எதிரான வாக்கெடுப்பு பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.</p><p> ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளுக்கு ஆதரவு அளித்து 86 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f27629dc-14d4-4ac3-ae8c-ce98e1fda19a/26-6a7633e2aa8e1.webp' /></p><p> ரஷ்யாவுக்கு எதிராக இந்த முன்னெடுப்பை மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம்(Lindsey Graham) தீவிரமாக முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் குறித்து பேசிய ஜனநாயக கட்சி செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்டால்(Richard Blumenthal) முக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p> அதில், உக்ரைனிய மக்களுக்கு நாம் இன்று சொல்வது இதுதான், “நீங்கள் தனியாக இல்லை”. அத்துடன் ரஷ்யாவிற்கு நாம் இன்று சொல்வது இதுதான், “உங்களால் உக்ரைனை வெல்ல முடியாது” என குறிப்பிட்டார்.</p><h2> விதிக்கப்படும் புதிய தடைகள்</h2><p>
ரஷ்யாவின் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ரஷ்யாவிற்கு வருவாய் பெற்று தரும் பொருட்களை இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகளையும் இந்த புதிய பொருளாதார தடை நடவடிக்கை தண்டிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dfc8fb2-e50d-4b42-b06c-8543856ac1af/26-6a7633e35c66a.webp' /></p><p>செனட் சபையில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் இந்த மசோதா பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.</p><p> புதிய சட்டம் பிரதிநிதிகள் சபையிலும் வெற்றி பெற்று என்னுடைய மேஜைக்கு வந்தால் கண்டிப்பாக நானும் அதனை ஏற்று கையெழுத்திட தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T00:28:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெங்களூருவில் வீடு ஒன்றில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: யாருமின்றி உயிரிழந்த மூதாட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-skeletal-found-in-duplex-home-in-bengaluru-1786145078"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-skeletal-found-in-duplex-home-in-bengaluru-1786145078</id>
            <summary type="text">பெங்களூருவில் வீடு ஒன்றில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.52 வயது வயது பெண்ணின் எலும்புக்கூடு
பெங்களூரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெங்களூருவில் வீடு ஒன்றில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>52 வயது வயது பெண்ணின் எலும்புக்கூடு</h2><p>
பெங்களூருவின் பகலகும்டே(Bagalagunte) பகுதியில் ஹவானூர் லேஅவுட் என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் 52 வயது வயது பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p> தாக்‌ஷாயிணி என்று அடையாளம் காணப்பட்டுள்ள இந்த பெண், உயிரிழந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> தாக்‌ஷாயிணி உடல் நீண்ட நாட்களாக யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள்ளேயே கிடந்து இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e136acec-c6ff-40e6-af72-6613bcec2501/26-6a7669380937f.webp' /></p><p></p><h2>குடும்ப பின்னணி</h2><p>மகன் மற்றும் கணவன் உயிரிழந்த பிறகு தாக்‌ஷாயிணி தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.</p><p> மகன் மற்றும் கணவனின் மறைவுக்கு பிறகு தாக்‌ஷாயிணி மிகுந்த மன அழுத்தத்தில் அவதியடைந்து வந்தாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> தாக்‌ஷாயிணியின் கணவர் 10 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார், அவரது மகனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><p>தாக்‌ஷாயிணியின் மகளும், மருமகனும் இந்த காலக்கட்டத்தில் இங்கு வந்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T00:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்து போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு.,மைதானத்தை தாக்கிய ரஷ்ய ஏவுகணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-missile-hits-odesa-stadium-before-match-1786143689"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-missile-hits-odesa-stadium-before-match-1786143689</id>
            <summary type="text">ஓடேசா கால்பந்து மைதானம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. கால்பந்து மைதானம் மீது ரஷ்யா தாக்குதல்உக்ரைனின் ஓடேசா(Odesa) நகரில் அமைந்துள்ள செர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓடேசா கால்பந்து மைதானம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2> கால்பந்து மைதானம் மீது ரஷ்யா தாக்குதல்</h2><p>உக்ரைனின் ஓடேசா(Odesa) நகரில் அமைந்துள்ள செர்னோமோரெட்ஸ் மைதானம்(Chornomorets Stadium) மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p> மைதானத்தில் உக்ரைன் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f36b0d4-9094-49ca-bdfb-790376fcef23/26-6a7663cb0afda.webp' /></p><p>இதில் குறைந்தது ஒருவர் காயமடைந்து இருப்பதுடன், மைதானம் பலத்த சேதம் அடைந்துள்ளது.</p><h2> மைதானத்தில் ஏற்பட்டுள்ள சேதம்</h2><p>34,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய செர்னோமோரெட்ஸ் மைதானத்தின் கூரை பெருமளவு சேதமடைந்துள்ளது.</p><p></p><p> மைதானத்தில் உள்ள கண்ணாடிகள் மற்றும் பார்வையாளர்கள் மாடங்கள் பலத்த சேதமடைந்து இருப்பதாக அவசரகால சேவைப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் சிதறிய வெடிகுண்டு சில்லுகளால் 29 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்து இருப்பதை ஓடேசா ஆளுநர் ஒலெக் கிப்பர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5865d822-21ca-4731-866b-f6a68e586d7d/26-6a7663cbb4d97.webp' /></p><p>சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்காக உள்ளூர் அதிகாரிகளும், அவசர கால மீட்பு படையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.</p><h2>போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா?</h2><p>செர்னோமோரெட்ஸ் மைதானத்தில் நாளை உக்ரைன் பிரீமியர் லீக்கின் இரண்டாவது சுற்று ஆட்டம் நடைபெற இருந்தது.</p><p> நாளை மதியம் 1 மணிக்கு இந்த மைதானத்தில் செர்னோமோரெட்ஸ் மற்றும் கோலோஸ் அணிகள் மோத இருந்தன.</p><p> இந்த தாக்குதலை அடுத்து இந்த போட்டி ஒத்திவைக்கப்படுமா? அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்று இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T23:01:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலி - ஸ்பெயின் உறவில் விரிசல்: இத்தாலிய குடிமக்களுக்கு புதிய எல்லை கட்டுப்பாடுகள் அமுல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-implement-new-border-controls-for-italy-1786142244"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-implement-new-border-controls-for-italy-1786142244</id>
            <summary type="text">இத்தாலி மக்களுக்கு தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு&amp;nbsp; அறிவித்துள்ளது. இத்தாலி - ஸ்பெயின் உறவில் விரிசல்சியூட்டா விவகாரம் இத்தாலி - ஸ்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலி மக்களுக்கு தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு&nbsp; அறிவித்துள்ளது.</p><h2> இத்தாலி - ஸ்பெயின் உறவில் விரிசல்</h2><p>சியூட்டா விவகாரம் இத்தாலி - ஸ்பெயின் இடையே இராஜதந்திர விரிசலை ஏற்படுத்திய நிலையில், இத்தாலிய மக்களுக்கு தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு விதித்துள்ளது.</p><p> இந்த எல்லை கட்டுப்பாடானது ஆகஸ்ட் 8ம் திகதி நள்ளிரவு முதல் செப்டம்பர் 7ம் திகதி நள்ளிரவு வரை அமுலில் இருக்கும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ad578da-f970-4828-bb4d-2be698cbe987/26-6a765e262d631.webp' /></p><p> &nbsp;ஸ்பெயினின் 2 நாட்கள் கெடுவை இத்தாலி திட்டவட்டமாக மறுத்ததை அடுத்து ஸ்பெயினின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p> மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2> ஸ்பெயின் விடுத்த எச்சரிக்கை</h2><p>
&nbsp;கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமான சியூட்டாவிற்குள் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து ஸ்பெயினில் இருந்து வரும் பயணிகளுக்கு எல்லை சோதனைகளை அமல்படுத்தி இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உத்தரவிட்டு இருந்தார்.</p><p> இந்த நடவடிக்கை ஸ்பெயின் மக்களுக்கு எதிரானது என்று ஸ்பெயின் அரசு கண்டித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95a338b9-e9e1-4e74-8024-e7e6c895ba07/26-6a765e26de7b9.webp' /></p><p> அத்துடன் இத்தாலி தன்னுடைய புதிய எல்லை கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்காவிட்டால், இத்தாலிய பயணிகளுக்கு எதிராக அதே போன்ற சோதனை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் விதிக்கும் என்று அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.
</p><p>
மேலும் அத்துடன் ஆகஸ்ட் 9ம் திகதிக்குள் இத்தாலிய அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் ஸ்பெயின் கெடு விதித்து இருந்தது ஆனால் அதனை இத்தாலி திட்டவட்டமாக மறுத்துவிட்டது.</p><p> இதனை தொடர்ந்தே ஸ்பெயின் நாட்டின் புதிய&nbsp; தற்காலிக எல்லைக் கட்டுப்பாட்டு அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T22:55:16+00:00</updated>
        </entry>
    </feed>
