<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-28T07:24:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்: மாயமான சுவிஸ் குடிமகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/missing-swiss-women-in-nepal-flood-found-alive-1787899890"></link>
            <id>https://news.lankasri.com/article/missing-swiss-women-in-nepal-flood-found-alive-1787899890</id>
            <summary type="text">A Swiss woman missing in Nepal flash flood has been found alive: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமான சுவிஸ் குடிமகள் ஒருவர் உயிருடன் இருப்பது தெரியவந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>A Swiss woman missing in Nepal flash flood has been found alive: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமான சுவிஸ் குடிமகள் ஒருவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.</p><p>


நேபாள - திபெத் பெருவெள்ளம் 400க்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கியுள்ள விடயம் உலகை உலுக்கியுள்ள நிலையில், 1,000க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளார்கள்.
</p><h3>
மாயமான சுவிஸ் குடிமகள்
</h3><p>
அப்படி மாயமானவர்களில், இந்தியா, இத்தாலி, பல்கேரியா, அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சுவிஸ் ஊடகமான 20 Minuten செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/561a914e-877c-4257-b77a-fdcf1c193b84/26-6a912ff41942f.webp' /></p><p> அவர்களில், சுவிஸ் குடிமகள் ஒருவரும் அடங்குவார்.&nbsp;</p><p></p><p>
சுவிஸ் குடிமகள் ஒருவர் பெருவெள்ளத்தின்போது மாயமானதாக நேபாள சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அந்தப் பெண் தற்போது உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 20 Minuten ஊடகம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:54:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் தாக்குதல் 25வது நினைவேந்தல்... விழாவிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-backed-out-of-attending-1787899928"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-backed-out-of-attending-1787899928</id>
            <summary type="text">Trump backed out of attending 25th anniversary: செப்டம்பர் தாக்குதல் 25வது நினைவேந்தல் நிகழ்விலிருந்து ட்ரம்ப் பின்வாங்கியுள்ளார்.
நியூயார்க்கில் செப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump backed out of attending 25th anniversary: செப்டம்பர் தாக்குதல் 25வது நினைவேந்தல் நிகழ்விலிருந்து ட்ரம்ப் பின்வாங்கியுள்ளார்.
</p><p>நியூயார்க்கில் செப்டம்பர் 11 தாக்குதலின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>அனுமதி மறுப்பு</h2><p>
</p><p>நியூயார்க் நகரை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், தாக்குதல் நடந்த 2001 முதல் ஒவ்வொரு வருடமும் அங்குள்ள நினைவிடத்தில் அடிக்கடி விஜயம் செய்து வந்துள்ளார். </p><p>ஆனால், 2026-ல் பென்டகனில் நடைபெறும் நினைவேந்தலில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அவர் மரணமடைந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்த இருக்கிறார்; ஏனெனில், நியூயார்க் நினைவிடத்தில் அவருக்கு உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c369da39-ed99-4173-bcf5-1a4d99234492/26-6a91301b15eee.webp' /></p><p> </p><p>ட்ரம்ப் 'செப்டம்பர் 11 நினைவகம் மற்றும் தேசிய அருங்காட்சியகத்தில்' உரையாற்ற விரும்பி, இதற்காகத் தனது குழுவினரை முன்கூட்டியே அங்கு சென்று பார்வையிடவும் செய்திருந்தார். </p><p>ஆனால், நினைவேந்தலின்போது எந்தவொரு கட்சிச் சார்புத்தன்மையையும் தவிர்ப்பதே அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கம் என்று பல தரப்பினரும் தெரிவித்தனர்; இதன்காரணமாக, 2012-ஆம் ஆண்டு முதல் அரசியல்வாதிகள் உரையாற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>நியூயார்க் விழாவில் ட்ரம்ப் நிர்வாகத்தின் சார்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், பராக் ஒபாமா மற்றும் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது. </p><p>செப்டம்பர் 11-ஆம் திகதிக்கு முந்தைய இரண்டு நாட்களில், டெக்சாஸில் நடைபெறும் குடியரசுக் கட்சியின் இடைக்கால மாநாட்டிலிருந்து ட்ரம்ப் வாஷிங்டனுக்குத் திரும்புவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd8faade-d3bf-4648-bd21-d0e16affa4d6/26-6a91301bbc75a.webp' /></p><p> </p><p>கடந்த ஆண்டைப் போலவே, அரசியல்வாதிகள் உரையாற்ற அனுமதிக்கப்படும் பென்டகன் விழாக்களில் ட்ரம்ப் உரை நிகழ்த்துவார். அதன்பிறகு, 'ஐரிஷ் ஓபன்' போட்டி நடைபெறவுள்ள தனது கோல்ஃப் மைதானத்தைப் பார்வையிட அவர் அயர்லாந்துக்குச் செல்வார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T06:49:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சடலங்களில் நகைகளை திருடிய இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-arrested-for-steal-earring-nepal-flood-victims-1787898734"></link>
            <id>https://news.lankasri.com/article/2-arrested-for-steal-earring-nepal-flood-victims-1787898734</id>
            <summary type="text">man stealing ear rings from dead nepal flood victims: நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சடலத்தில் இருந்து நகைகளை திருடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>man stealing ear rings from dead nepal flood victims: நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சடலத்தில் இருந்து நகைகளை திருடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><h3>
வெள்ளத்தில் உயிரிழந்த சடலங்களில் நகை திருட்டு</h3><p> 

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. 1,468 பேர் மாயமாகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/127fc839-3324-424f-b52f-4f50e5b362ae/26-6a912b70eecbd.webp' /></p><p>

நேபாள காவல்துறை மற்றும் ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு மக்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாயமாகியுள்ளனர். </p><p>

இந்நிலையில் வெள்ளத்தில் உயிரிழந்து நாராயணி ஆற்றில் கரை ஒதுங்கிய சடலத்தின் காதுகளில் இருந்த தங்க காதணிகளை 2 இளைஞர்கள் அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ne" dir="ltr">मृतकको कानको मुन्द्रा चोरी गर्ने व्यक्तिहरु नियन्त्रणमा लिएको सम्बन्धमा । <a href="https://t.co/pnPlnQPn9j">pic.twitter.com/pnPlnQPn9j</a></p>&mdash; Nepal Police (@NepalPoliceHQ) <a href="https://x.com/NepalPoliceHQ/status/2092950217138339990?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதனைத்தொடர்ந்து, பரத்பூர் மாநகராட்சி-1 இல் உள்ள பொக்காரா பேருந்து நிலையம் அருகே அந்த வீடியோவில் இருந்த நபர்களான 25 வயதான மதன் குருங் மற்றும் 38 வயதான உமேஷ் சௌத்ரி ஆகியோரை நேபாள காவல்துறை அடையாளம் கண்டு கைது செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e69a3e1-1365-4587-b719-ed8887bc672d/26-6a912b7048858.webp' /></p><p>
இந்த மாதிரியான இக்கட்டான நேரத்தில் உயிரிழந்தவர்களை குறிவைத்து நடைபெறும் கொள்ளை அல்லது வேறு எந்த மனிதாபிமானமற்ற செயலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
நேபாளம் சந்தித்த மிக மோசமான வெள்ளப் பேரழிவுகளில் ஒன்றாக இது கருதப்படும் நிலையில், சேதமடைந்த சாலைகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள், மலைபோல் குவிந்துள்ள மண் மற்றும் இடிபாடுகளுக்கு இடையே மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p><p>

மேலும், நேபாளத்தின் எல்லை அருகே சோசென் கோலா - புரேபு சாங்போ ஆறுகள் இணையுமிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, இயற்கையான தடுப்பு ஏரி உருவாகியுள்ளது. இது உடைந்தால் 2ஆம் கட்ட வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... மாயமான பிரித்தானியரின் பெற்றோர்: சீனாவிடம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/briton-ask-china-for-help-missing-parents-in-flood-1787895262"></link>
            <id>https://news.lankasri.com/article/briton-ask-china-for-help-missing-parents-in-flood-1787895262</id>
            <summary type="text">Briton whose parents are missing in Nepal flash floods appeals to China for help: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமான தன் பெற்றோரை மீட்க உதவுமாறு பிரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>Briton whose parents are missing in Nepal flash floods appeals to China for help: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமான தன் பெற்றோரை மீட்க உதவுமாறு பிரித்தானியர் ஒருவர் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
நேபாள - திபெத் பெருவெள்ளம் 400க்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கியுள்ள விடயம் உலகை உலுக்கியுள்ள நிலையில், 1,400க்கு மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளார்கள், அவர்களுடைய நிலை தெரியவில்லை!
</p><h3>
மாயமான பிரித்தானியரின் பெற்றோர்
</h3><p>
அப்படி மாயமானவர்களில் 33 பிரித்தானியர்களும் அடங்குவர். இந்நிலையில், பிரித்தானியக் குடிமகனான ஆனந்த் பட்டேல் என்பவர், நேபாள பெருவெள்ளத்தின்போது மாயமான தன் பெற்றோர் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82e2ebaf-e34f-4cb7-9e80-39415fe6cdd0/26-6a911ddf5defc.webp' /></p><p>

அதாவது, நேபாளத்துக்கு புனித யாத்திரை சென்ற தன் பெற்றோரான பிபின் பட்டேல் மற்றும் மாலா பட்டேல் ஆகியோர், பெருவெள்ளம் தாக்கும் முன்பே நேபாள சீன எல்லையைக் கடந்து திபெத்துக்குள் நுழைந்திருக்கக்கூடும் என்பது, எல்லை ஆவணங்களின்படி தெரியவந்துள்ளதாக ஆனந்த் தெரிவித்துள்ளார்.
</p><h3>
சீனாவிடம் கோரிக்கை
</h3><p>
ஆகவே, தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தன் பெற்றோரைக் கண்டுபிடிக்க உதவுமாறு சீன அதிகாரிகளிடம் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார் ஆனந்த்.&nbsp;</p><p></p><p>
தன் பெற்றோரைக் காணவில்லை என்னும் விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, அவர்களுடைய நிலைமை என்ன என்பது தெரியாத விடயம், மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், மற்றும் ஒரு பிரித்தானியக் குடிமகனான சுனில் அமின் என்பவர், தன் மனைவியாகிய ஹேமா அமினும் அவரது சகோதரியும் நேபாள பெருவெள்ளத்தின்போது காணாமல் போய்விட்டதாகவும், அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[6000 மின்சார கையுறைகளை வாங்கும் ICE: 16.7 மில்லியன் டொலர் ஒதுக்கிய அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ice-did-contract-for-6000-shock-delivering-gloves-1787897876"></link>
            <id>https://news.lankasri.com/article/ice-did-contract-for-6000-shock-delivering-gloves-1787897876</id>
            <summary type="text">ICE Executed contract for 6000 shock-delivering gloves: மின்சார கையுறைகளை வாங்க அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ICE Executed contract for 6000 shock-delivering gloves: மின்சார கையுறைகளை வாங்க அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> மின்சார கையுறைகள்</h2><p>
சுமார் 16.7 மில்லியன் டொலர் மதிப்பில் மின் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய 6000 கையுறைகளை வாங்க அமெரிக்க குடிநுழைவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை(ICE) ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> மின்சார கையுறைகளை உள்நாட்டு பாதுகாப்புத் துறை பயன்படுத்த போவதாக அறிவித்ததில் இருந்து எதிர்க்கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><p> குடியேற்ற பாதுகாப்பு கொள்கையின் கீழ் ஏற்கனவே ICE கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> சமீபத்திய காலங்களில் கடுமையான குடியேற்ற கொள்கையின் கீழ் அதிகாரிகளுக்கும் புலம்பெயர்ந்தோர் மற்றும் போராட்டகாரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d57b60b8-3fe1-4b6d-8045-7349204177d1/26-6a9128163ca96.webp' /></p><h2>மின்சார கையுறையின் செயல்பாடுகள்</h2><p>இந்த மின்சார கையுறைகள் வழக்கமான&nbsp; ரோந்து பணியில் பயன்படுத்தப்படும் கையுறைகளை போன்றே இருக்கும்.</p><p> ஆனால் அதில் உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் மின்சார கையுறை வாயிலாக தொடும் நபருக்கு கடுமையான மின்சார அதிர்ச்சிகள் ஏற்படும்.</p><p> இந்த கையுறைகள் கைது நடவடிக்கை, கலவரம் மற்றும் கைதிகளை அழைத்து செல்லும் போது பயன்படுத்தப்படும்.</p><p> அதிகாரிகளுக்கு ஏற்படும் காயங்களை தவிர்க்கவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும் இந்த கையுறைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:18:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... பிரித்தானியா, அமெரிக்கா உட்பட 35 நாடுகளின் பயணிகள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-floods-35-countries-citizens-1787896553"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-floods-35-countries-citizens-1787896553</id>
            <summary type="text">35 Countries Citizens Are Missing After Nepal Floods: நேபாள வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு காணாமல் போன 35 நாடுகளின் பயணிகள்.
நேபாளம்-திபெத் எல்லைப் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>35 Countries Citizens Are Missing After Nepal Floods: நேபாள வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு காணாமல் போன 35 நாடுகளின் பயணிகள்.
</p><p>நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதுடன், 469 பேர்கள் மரணமடைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.</p><h2>பேரிடர் மேலாண்மை</h2><p>
</p><p>இந்த எண்ணிக்கைகள் அடுத்த சில மணி நேரங்களில் மாறுபடக்கூடும்; ஒரு பெரும் பேரிடருக்குப் பிறகு இது இயல்பான ஒன்று என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். </p><p>இரட்டை குடியுரிமை கொண்டவர்களை இருமுறை கணக்கில் சேர்ப்பது, கண்டெடுக்கப்பட்ட உடல்களைக் காணாமல் போனவர்களின் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மற்றும் பேரிடர் காலச் சூழலில் நிலவும் குழப்பம் ஆகியவை புள்ளிவிவரங்களில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6416a3a-6acc-4e87-a429-22acbd8d47bf/26-6a9122ebda4fd.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், குறைந்தது 517 வெளிநாட்டினர் உட்பட 910 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது. </p><p>திபெத்துடனான எல்லைப் பகுதியில், 260 வெளிநாட்டினர் உட்பட 558 பேர் காணாமல் போயுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இவ்விரு எல்லைப் பகுதிகளிலும் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை 1,468 எனக் கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>நேபாள சுற்றுலா வாரியம் வியாழக்கிழமையன்று, காணாமல் போன நேபாள மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகளின் மொத்த எண்ணிக்கையை 667 என்று தெரிவித்தது. </p><p>நேபாளத்தில் காணாமல் போனவர்களில் சுமார் 100 சீனர்களும் அடங்குவர் என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 24 சீனர்கள் குறித்த தகவல் ஏதும் இல்லை என்று நேபாள சுற்றுலா வாரியம் கூறியுள்ளது. </p><p>நேபாளத்தின் சுற்றுலா வாரியத்தின் புதிய புள்ளிவிவரங்களில், இந்தியாவில் இருந்து வந்தவர்களில் 290 பேர் காணாமல் போனதைக் காட்டின; மேலும் 84 பேர் மீட்கப்பட்டுள்ளனர். </p><p>அமெரிக்கக் குடிமக்கள் 90 பேர்கள் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது; அவர்களில் மூவர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கர்கள் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நேபாள சுற்றுலா வாரியம்</h2><p> </p><p>முன்னதாக வியாழக்கிழமையன்று, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 65 என்று நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்திருந்தது. உக்ரைன் தரப்பில் 56 பயணிகளை இதுவரை தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். </p><p>இதனிடையே, நேபாளத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் வியாழக்கிழமை தெரிவித்தார். வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போன அவுஸ்திரேலியக் குடிமக்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். </p><p>பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியத்தின் புள்ளிவிவரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. கனேடியர்கள் 25 பேர் மாயமாகியுள்ளதாக நேபாளம் தரப்பில் தெரிவித்துள்ள நிலையில், </p><p>நேபாளம் மற்றும் திபெத்தில் உள்ள 30 கனேடியர்கள் மற்றும் நிரந்தர வசிப்பாளர்கள் தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது என்று கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியுள்ளார். </p><p>இதனிடையே, தென் கொரியா, சிங்கப்பூர், ஜேர்மனி, ரஷ்யா உட்பட 35 நாடுகளின் பயணிகள் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T05:53:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினில் வில்லேனா தங்க பொக்கிஷம் கொள்ளை: சில நிமிடங்களில் நடந்த துணிகர திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thieves-steal-treasure-of-villena-in-spain-1787893324"></link>
            <id>https://news.lankasri.com/article/thieves-steal-treasure-of-villena-in-spain-1787893324</id>
            <summary type="text">ஸ்பெயின் நாட்டின் அருங்காட்சியகத்தில் இருந்து வெண்கல காலத்து தங்கப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையடிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் நாட்டின் அருங்காட்சியகத்தில் இருந்து வெண்கல காலத்து தங்கப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> கொள்ளையடிக்கப்பட்ட வெண்கல காலத்து தங்கம்</h2><p>
ஸ்பெயின் நாட்டின் அலிகாண்ட் மாகாணத்தில் உள்ள வில்லேனா(Villena) தொல்லியல் அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை அதிகாலை 5:20 மணி அளவில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> தொழில்முறை கொள்ளையர்கள் சில நிமிடங்களில் அரங்கேற்றிய கொள்ளை சம்பவத்தில் உலகப் புகழ்பெற்ற வில்லேனா பொக்கிஷம்(Treasure of Villena) முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93236bd7-f452-4cf7-8ff6-b5a7e0bb7fee/26-6a91164ddf736.webp' /></p><p>பல வாகனங்களில் வந்த கொள்ளையர்கள் அருங்காட்சியகத்தின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து 4 நிமிடங்களுக்குள் ஒட்டுமொத்த வில்லேனா பொக்கிஷத்தையும் கொள்ளையடித்து விட்டு சென்றனர்.</p><p></p><h2> கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள்</h2><p>

பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செயல்பட்ட போதிலும், துல்லியமான திட்டமிடலுடன் வந்த கொள்ளையர்கள் வில்லேனா பொக்கிஷத்தின் பெரும்பாலான பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6b116de-f1c5-4ea2-b659-4694fc4b87f7/26-6a91164e910ea.webp' /></p><p> 3 வெள்ளிப் பாத்திரங்கள், ஒரு வளையல், ஒரு தோடு, மற்றும் சேகரிப்பில் இருந்த 4 கிரீடங்களில் ஒன்றை மட்டுமே கொள்ளையர்கள் தவறவிட்டு விட்டு சென்றுள்ளனர்.</p><p> கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷம் கி.மு 1300 முதல் கி.மு 1000 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது ஆகும். &nbsp;
1963ம் ஆண்டு தொல்லியல் நிபுணர் ஜோஸ் மரியா சோலர் என்பவரால் வறண்ட நதிக்கரையொட்டி வில்லேனா பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p> இதில் 50க்கும் மேற்பட்ட தங்கம் சார்ந்த பொருட்களை கொண்ட இதில்&nbsp; பாட்டில்கள், 28 வளையல்கள், 11 கிண்ணங்கள் ஆகியவை இருந்தன.</p><p> இதன் தங்க மதிப்பு மட்டும் சுமார் 1.7 மில்லியன் யூரோக்கள் ஆகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T05:02:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுடன் இறுக்கும் மோதல்... ஒன்ராறியோ ஏரியின் பெயரை மாற்றிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-rename-lake-ontario-1787890061"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-rename-lake-ontario-1787890061</id>
            <summary type="text">Trump rename Lake Ontario as Lake America: ஒன்ராறியோ ஏரியை அமெரிக்கா ஏரி எனப் பெயர் மாற்றுவதற்கான உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
ஒன்ராறியோ ஏரியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump rename Lake Ontario as Lake America: ஒன்ராறியோ ஏரியை அமெரிக்கா ஏரி எனப் பெயர் மாற்றுவதற்கான உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.</p><p>
ஒன்ராறியோ ஏரியின் பெயரை 'அமெரிக்கா ஏரி' என மாற்றக் கோரும் நிர்வாக உத்தரவு ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.</p><h2>அச்சுறுத்தல்</h2><p>
</p><p>கடந்த வார இறுதியில் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததையடுத்து, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதப் புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>கனடா அடுத்த மாதம் சமமான அளவிலான பதிலடி வரி விதிப்புகளை அமுல்படுத்தும் எனவும் அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைந்துள்ள ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான அந்த ஏரிக்கு மறுபெயரிடுவது குறித்து, வர்த்தகப் பிரச்சினைக்கு மத்தியில் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களைப் பதிவிட்டு வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9105186-5123-4ceb-a9f8-461a03526771/26-6a91098ff3820.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், தாம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை உத்தியோகப்பூர்வமானது என்றும், உடனடியாக அமுலுக்கு வருகிறது என்றும், இந்த மாற்றத்தைச் செய்வதற்கான அனைத்துத் தேவையான ஆவணங்களையும் தனது நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது என்றும் ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.</p><p>அமெரிக்காவின் உள்நாட்டுப் புவியியல் பெயர்களுக்கான உத்தியோகப்பூர்வத் தரவுத்தளமாகத் திகழும் 'புவியியல் பெயர்கள் தகவல் சேவை'யில் (Geographic Names Information Service) பெயர் மாற்றத்தைப் புதுப்பிப்பதற்கு, அமெரிக்க உள்விவகார அமைச்சகத்திற்கு 30 நாட்கள் அவகாசம் அளிப்பதாக அந்த நிர்வாக உத்தரவு குறிப்பிடுகிறது. </p><p>இதனிடையே, லேக் ஒன்ராறியோ (Lake Ontario) என்ற பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்று குறிப்பிட்ட கனேடியப் பிரதமர் மார்க் கார்னி, கனேடியக் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் ஆகியவை உருவாவதற்கு முன்பே இப்பெயர் புழக்கத்தில் இருந்ததாகவும் வியாழக்கிழமையன்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>மேலும் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா மாறிக்கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும்; அவர்களின் வர்த்தக உறவுகள், வெளியுறவுக் கொள்கை, தேசிய நினைவுச் சின்னங்கள், நீர்நிலைகளின் பெயர்கள் ஆகியவை மாறி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>மட்டுமின்றி, எதையும் அதன் பெயரைக் கொண்டே அழைக்க வேண்டும் என்பது கனேடிய மக்களுக்கு தெரியும்; அந்த வகையில், இந்த ஏரி 'லேக் ஒன்ராறியோ' என்றே அழைக்கப்படும், அது இன்றும் என்றும் மாறாது என்றார். </p><p>2025-இல் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்புக்கு வந்தபோது, ​​மெக்சிகோ வளைகுடாவை 'அமெரிக்க வளைகுடா' என்று மாற்றும் அதே போன்றதொரு உத்தரவில் கையெழுத்திட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db97d282-944d-445f-81a1-9de2e2afe8d1/26-6a910990b3344.webp' /></p><p> </p><p>உடனடியாக எதிர்வினையாற்றிய மெக்சிகோ நிர்வாகம், பகிரப்பட்ட ஒரு சர்வதேச நீர்ப்பரப்பிற்கு ஒரு நாடு மட்டும் பெயர் மாற்றம் செய்ய முடியாது என்று வாதிட்டதுடன், அந்தப் பெயர் மாற்றத்தையும் மெக்சிகோ நிராகரித்தது. </p><p>மட்டுமின்றி, மெக்ஸிகோவிற்கும், தனது வரைபடச் செயலியில் அந்த வளைகுடாவின் பெயரை மாற்றிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கும் இடையே ஒரு சட்டரீதியான மோதலுக்கும் அது வழிவகுத்தது. </p><p>சர்வதேச நீர்நிலைகளுக்குப் பெயரிடுவதற்கென உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்பு எதுவும் இல்லை. புவியியல் அடையாளங்களை அமெரிக்கா உத்தியோகப்பூர்வமாக எவ்வாறு அங்கீகரிக்கிறது என்பது குறித்து அந்நாட்டு ஜனாதிபதிக்குப் பரந்த அளவிலான அதிகார வரம்பு இருந்தாலும், மற்ற நாடுகள் அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. </p><p>பிற நாடுகள் செய்யும் பெயர் மாற்றங்களை கனடா அங்கீகரிக்க வேண்டிய கட்டாயமில்லை, மேலும் அங்குள்ள அதிகாரிகள் ட்ரம்பின் இந்த நகர்வை நிராகரித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T04:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்: 15,800-ஐ தாண்டிய உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-heat-related-death-toll-reach-15800-1787889031"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-heat-related-death-toll-reach-15800-1787889031</id>
            <summary type="text">Germany Heat Related Death Toll Reach 15800: ஜேர்மனியில் வெப்ப அலைகள் காரணமாக கிட்டத்தட்ட 15,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.பத்தாண்டுகளில் இல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany Heat Related Death Toll Reach 15800: ஜேர்மனியில் வெப்ப அலைகள் காரணமாக கிட்டத்தட்ட 15,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.</p><h2>பத்தாண்டுகளில் இல்லாத உயிரிழப்பு</h2><p>ஜேர்மனியில் இந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெப்பம் காரணமாக இதுவரை 15,800 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p>இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிலான அதிகமான உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77465748-afd3-4e75-9b6a-d35a0d49f819/26-6a910588a9735.webp' /></p><p> ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள தீவிர வானிலை நிலைமைகள் நாட்டின் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக ஜேர்மனியின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு முகாமையான ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p></p><h2> அதிகமான வெப்பம் பதிவான நாட்கள்</h2><p>ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகளில் கிட்டத்தட்ட 9600 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.</p><p> அதைப்போல ஆகஸ்ட் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் ஏற்பட்ட தீவிரமான வெப்ப அலைகளில் கிட்டத்தட்ட 4000 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இதற்கு முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு அதிகமான வெப்பம் காரணமாக சுமார் 9500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> இந்த ஆண்டின் உயிரிழப்புகளின்&nbsp; தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட குறைவான மதிப்பீடுகள் மட்டுமே, கூடுதல் தரவுகள் கிடைக்கப்பெறும் போது உயிரிழப்புகளின் இறுதி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் எச்சரித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T03:50:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள-திபெத் பெருவெள்ளம்... சீனா விடுத்த 72 மணி நேர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-warns-within-72-hours-1787887173"></link>
            <id>https://news.lankasri.com/article/china-warns-within-72-hours-1787887173</id>
            <summary type="text">China Warns Barrier Lake Breach: திபெத்-நேபாள எல்லையில் உள்ள தடுப்பு ஏரி உடையலாம் என சீனா எச்சரிக்கை.
இமயமலை எல்லைக் கடக்கும் இடத்திற்கு மேலே உள்ள ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>China Warns Barrier Lake Breach: திபெத்-நேபாள எல்லையில் உள்ள தடுப்பு ஏரி உடையலாம் என சீனா எச்சரிக்கை.
</p><p>இமயமலை எல்லைக் கடக்கும் இடத்திற்கு மேலே உள்ள ஒரு தடுப்பு ஏரியால் மீட்புப் பணிகளைச் சிக்கலாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக சீன அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக சிசிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>நிரம்பிய தடுப்பு ஏரி</h2><p>
</p><p>சீன அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 
பேரிடர் நிகழ்ந்த இடத்தின் வடகிழக்கில், சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள அந்த ஏரியின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டை சீனாவின் நீர்வள அமைச்சகம் அதிகரித்துள்ளது. </p><p>மேலும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும், இரண்டாம் நிலை சம்பவங்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> வியாழக்கிழமை நிலவரப்படி 2 மில்லியன் கன மீற்றர் நீர் கொள்ளளவு கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ள அந்தத் தடுப்பு ஏரி, ஏற்கனவே நிரம்பி வழிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49f0c5b5-84c3-424a-86da-7075dc6b6378/26-6a90fe4795032.webp' /></p><p> அடுத்த மூன்று நாட்களில் ஏரிக்குள் மேலும் 3 மில்லியன் கன மீற்றர் தண்ணீர் வந்து சேரும் என்று சீன மத்திய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.</p><p> இதற்கிடையில், மீட்புப் பணிகளில் உள்ளூர் காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளுக்கு உதவ, பெய்ஜிங் மற்றும் செங்டுவிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்களை சீனா அனுப்பியுள்ளது.</p><p></p><p> </p><p>கிரிசாங் (Gyirong) நகரின் மைய நகர்ப்புறப் பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும், துறைமுகத்துடன் தொடர்புடைய பகுதிகளில் அவை துண்டிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் ஒரு தனித்த நிகழ்வு அல்ல. நிலையற்றதாகி வரும் இமயமலைப் பனி மண்டலமானது, உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றில் உள்ள சமூகங்கள், உள்கட்டமைப்பு மற்றும் நீர் விநியோகம் ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.</p><p> புதன்கிழமையன்று நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கு, பள்ளத்தாக்குகள் வழியாக இரைச்சலுடன் பாய்ந்து வந்து முழு கிராமங்களையும் அழித்ததில், குறைந்தது 389 பேர் உயிரிழந்தனர்; மேலும் 1,300-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. </p><p>மலையேற்றப் பயணிகளுக்கும் யாத்ரீகர்களுக்கும் மிகவும் பிரபலமான மலைப்பகுதியில், டசின் கணக்கான பாலங்களும் 25 மைல் நீளமுள்ள சாலைகளும் சேதமடைந்துள்ளதால், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உட்பட, காணாமல் போனவர்களைக் கண்டறியும் முயற்சிகள் சிக்கலுக்குள்ளாகியுள்ளன.</p><h2>டசின் கணக்கானோர்</h2><p> </p><p>இதனிடையே, திபெத்திய எல்லைக்கு அருகிலுள்ள நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில், பேரிடர் பகுதியிலிருந்து பல மைல்கள் தொலைவில் ஆற்றின் கீழ்ப்பகுதியில் நூற்றுக்கணக்கான சடலங்களை மீட்புக் குழுவினர் கண்டெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>காயமடைந்த டசின் கணக்கானோர் மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக காத்மாண்டுவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் நேபாள இராணுவத்தினரால் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca9efe0-a428-4a30-82c1-f44b36150d08/26-6a90fe4849a61.webp' /></p><p> </p><p>அசுர வேகத்தில் வந்த பெருவெள்ளத்தினால் நேபாளத்தில் லொறிகள் கவிழ்ந்தன; குடியிருப்புகள், சாலைகள் மற்றும் மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன. </p><p>அதேவேளையில், எல்லைக் கடப்புப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் திபெத் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T03:16:55+00:00</updated>
        </entry>
    </feed>
