<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-15T13:22:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வம்சாவளி இளைஞர் சாலை விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-man-dies-in-australia-road-crash-1789474842"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-man-dies-in-australia-road-crash-1789474842</id>
            <summary type="text">Indian origin man dies in Australia crash: இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் நிகழ்ந்த விபத்தொன்றில் பலியானார்.


இந்தியாவின் பஞ்சாப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian origin man dies in Australia crash: இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் நிகழ்ந்த விபத்தொன்றில் பலியானார்.</p><p>


இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷ் ஷர்மா, தன் மனைவி மகள்களுடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்தார்.
</p><h3>
சாலை விபத்தில் பலி
</h3><p>
இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி இரவு 9.40 மணியளவில், தலைநகர் கான்பெர்ரா அருகே பயணித்துக்கொண்டிருந்த ஷர்மாவின் கார் மீது ட்ரக் ஒன்று மோதியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3554e185-8b18-4f7d-956f-e41791d11907/26-6aa9381ba51c1.webp' /></p><p>
ஷர்மா விபத்தில் படுகாயமடைந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல், ஷர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
மருத்துவத் துறையில் பணியாற்றிவந்த ஷர்மாவுக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளார்கள்.
</p><p>
சோகம் என்னவென்றால், ஷர்மாவின் இரண்டாவது மகள் பிறந்து மூன்று வாரங்கள்தான் ஆகின்றன.
</p><p>
ஷர்மாவின் பெற்றோர் இந்தியாவிலிருக்கும் நிலையில், அவருடைய மரணச் செய்தி அறிந்து அந்தக் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T12:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய பிரதமரின் தந்தை மரணம்: தந்தை குறித்து மகன் கூறிய அந்த விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-father-dies-in-2-month-after-son-become-pm-1789474462"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-father-dies-in-2-month-after-son-become-pm-1789474462</id>
            <summary type="text">Andy Burnham&#039;s father dies less than two months after son becomes Prime Minister: ஆன்டி பர்னாம் பிரதமராகி இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், அவரது தந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Andy Burnham's father dies less than two months after son becomes Prime Minister: ஆன்டி பர்னாம் பிரதமராகி இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், அவரது தந்தை மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.</p><p>

ஆன்டி பர்னாமின் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர் ரத்து செய்துள்ளார்.
</p><h3>
பிரித்தானிய பிரதமரின் தந்தை மரணம்</h3><p>

இந்த செய்தி, அதை செய்தியாகப் படிப்பவர்களுக்கு, ஒரு நபரின் தந்தை மரணமடைந்ததைக் குறித்த ஒரு செய்தி போல் தோன்றலாம்.</p><p>

ஆனால், ஆன்டி பர்னாமைப் பொருத்தவரை, அவரது வாழ்வில் அது ஒரு பெரிய இழப்பு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2880bf1e-dc8f-4e0c-9b53-4f3cf50f4e8f/26-6aa936a04200d.webp' /></p><p>

தன் தந்தையை இழந்துவிட்டார் என்பதால் மட்டுமல்ல, ஆன்டி பர்னாம் இன்று பிரித்தானியாவின் பிரதமராக இருக்கிறார் என்றால், அதன் பின்னணியில் முக்கிய நபராக செயல்பட்டவர் அவரது தந்தை என்பதுதான் குறிப்பிடத்தக்க விடயம்!</p><p>

ராய் என அழைக்கப்படும் கென்னத் ராய் பர்னாம் (Kenneth Roy Burnham), ஒரு தொலைத்தொடர்பு பொறியாளராக இருந்தபோது கிளினிக் ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட் ஆக இருந்த ஐலீனை சந்தித்துள்ளார்.
</p><p>
அதாவது, இருவரும் எளிமையான பின்னணியிலிருந்து வந்தும், தங்கள் மூன்று மகன்களையும் நன்கு படிக்கவைத்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
தன் மகனான ஆன்டி பர்னாமை கேம்பிரிட்ஜ் பல்கலையில் இணைந்து படிக்க உற்சாகப்படுத்தியவரே ராய்தானாம். அது அவருக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும் என ராய் நம்பினாராம்.
</p><p>
அத்துடன், மகன் அரசியலில் ஈடுபட ராய் உற்சாகப்படுத்தியதும் ராய்தானாம்.
</p><p>
சோகம் என்னவென்றால், ராய் பின்னாட்களில் அல்ஸீமர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அதாவது, தன் மகன் அரசியலில் ஈடுபடவேண்டும் என ஆசைப்பட்டவர் ராய், ஆனால், தன் மகன் பிரித்தானிய பிரதமராகும்போது, அந்த விடயம் அவருக்குத் தெரியாது!
</p><p>
தான் பிரதமரானது தன் தந்தைக்குத் தெரியாது என சமீபத்தில் கூறி வருத்தப்பட்டிருந்தார் ஆன்டி பர்னாம்.</p><p>

இந்நிலையில், முதியோர் இல்லம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ராய் பர்னாம், தனது 86ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T12:14:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய்யின் துறையிலே டெண்டரில் முறைகேடு - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/arappor-iyakkam-alleges-tvk-govt-tender-scam-1789473757"></link>
            <id>https://news.lankasri.com/article/arappor-iyakkam-alleges-tvk-govt-tender-scam-1789473757</id>
            <summary type="text">arappor iyakkam alleges tendar scam in tambaram corporation: முதல்வரின் துறையிலே டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>arappor iyakkam alleges tendar scam in tambaram corporation: முதல்வரின் துறையிலே டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது. </p><h3>

முதல்வரின் துறையிலே டெண்டரில் முறைகேடு
</h3><p>
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டவர்களை விட மாட்டோம் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கூறி வரும் நிலையில், அவரின் துறையிலே டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04f1ab1-6cb6-41aa-aab1-bd6d059d6166/26-6aa933df1fd9a.webp' /></p><p>

முதல்வர் விஜய்யின் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இயங்கும் தாம்பரம் மாநகராட்சியில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு, அமைச்சர் சரத்தால் திறக்கப்பட்ட அசோக சின்ன சிலைக்கு அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து டெண்டர் விடப்பட்டதாகவும், மேலும் ரூ.45 லட்சத்திற்கு ஊழல் நடைபெறுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> 

இந்த முறைகேடு குறித்து அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வீடியோவில் பேசியுள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு<br><br>தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு… <a href="https://t.co/YxxeSJnoZt">pic.twitter.com/YxxeSJnoZt</a></p>&mdash; Arappor Iyakkam (@Arappor) <a href="https://x.com/Arappor/status/2099744695371104287?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள பதிவில், "தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. </p><p>ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.
</p><p> 
இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.
</p><h3>
முறைகேட்டின் பின்னணி மற்றும் ஆதாரங்கள் </h3><p>முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர். </p><p>

இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை http://tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என… <a href="https://t.co/eaebPAKc5v">pic.twitter.com/eaebPAKc5v</a></p>&mdash; Arappor Iyakkam (@Arappor) <a href="https://x.com/Arappor/status/2099781451738734639?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

ஒப்பந்தம் 1 - பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2)&nbsp;</p><p> இங்கு அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும்.
</p><p>
ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. </p><p>

இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன. </p><p>

ஒப்பந்தம் 2 - சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1) </p><p>தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும். </p><p>

ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. </p><p>டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது.
</p><h3>
அதிகாரிகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு</h3><p> இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை "To_be_opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. </p><p>

பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.</p><p>
 
மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p> ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. 

இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதை காட்டுகிறது.
</p><h3>
அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்</h3><p>இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.</p><p>

1.உடனடி பணியிடை நீக்கம் (Suspension): தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை </p><p>
2.துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை</p><p>
3.DVAC கிரிமினல் வழக்கு </p><p>4.பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment) </p><p>5. ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting) </p><p>6.டெண்டரில் வெளிப்படைத்தன்மை" என பதிவிட்டுள்ளது. </p><p>

இது குறித்து விசாரணை நடத்தி, இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தவெக ஆதரவாளர்களே சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T12:03:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI மனிதர்களை அழித்துவிடும் என்ற பயத்தில் ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-google-deepmind-researchers-quit-over-fear-on-ai-1789469182"></link>
            <id>https://news.lankasri.com/article/2-google-deepmind-researchers-quit-over-fear-on-ai-1789469182</id>
            <summary type="text">AI மனித குலத்தையே அழித்து விடும் என்ற அச்சம் தெரிவித்து ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

AI மனித குலத்தையே அழித்து விடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI மனித குலத்தையே அழித்து விடும் என்ற அச்சம் தெரிவித்து ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
</p><h3>
AI மனித குலத்தையே அழித்து விடும் என அச்சம் </h3><p>

AI வளர்ச்சியால் மனிதர்களில் சிலர் வேலை இழப்பை சந்தித்து வரும் சூழலில், இன்னும் சில ஆண்டுகளில் AI மனித குலத்தையே அழிக்கும் சாத்தியமுள்ளதாக முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p> 

Open AI மற்றும் Anthropic ஆகிய 2 நிறுவனங்களில் பணியாற்றியுள்ள ஜேக்கப் காக்சன் என்ற 27 வயது AI ஆராய்ச்சியாளர், ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, "ஏஐ விரைவில் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அமைப்புகளாக மாறும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af36eee-2ea5-40a1-a4e9-6a84d56860e7/26-6aa92200292c3.webp' /></p><p>
AI-யை உருவாக்குபவர்களே, அது இந்த தசாப்தத்தின் முடிவில் நம் அனைவரையும் கொன்றுவிடும் என்று உண்மையாகவே நம்புகிறார்கள். அவர்கள் ஊடகங்களின் முன்பு அறிவுப்பூர்வமாகத் தோன்றும் வகையில் பேசிவிட்டு AI குறித்த பயத்தை வெளிப்படுத்துவதை நான் கேட்டிருக்கிறேன்" என கூறியுள்ளார்.</p><p> 

அவரின் கருத்தை தொடர்ந்து விவாதம் எழுந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என முன்னணி AI நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>

ஆனால், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி என இந்த முடிவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். </p><h3>

கூகுள் டீப்மைண்ட் ஊழியர்கள் ராஜினாமா </h3><p>

இந்த சூழலில், AI மனிதர்களை அழித்து விடும் என்ற எச்சரிக்கையுடன் கூகுள் டீப்மைண்ட் நிறுவனத்தின் முன்னணி AGI பாதுகாப்பு மற்றும் அலைன்மென்ட் ஆராய்ச்சியாளர்களான பிலால் சுஹ்தாய் மற்றும் ஜோஷ் எங்கெல்ஸ் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66bfb4a8-6fdb-405c-afb3-0e3e5f468323/26-6aa921ff7494d.webp' /></p><p>

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிலால் சுஹ்தாய், "நான் சமீபத்தில் கூகிள் டீப்மைண்ட் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்தேன். அங்கு நான் ஏஜிஐ பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு ஆராய்ச்சியில் பணியாற்றி வந்தேன்.&nbsp;</p><p>

கூகிளில், நான் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை நேரடியாகக் கண்டேன். இந்தத் தொழில்நுட்பத்தின் இயல்பான போக்கைக் கண்டு நானும் மிகவும் கவலைப்படுகிறேன். செயற்கை நுண்ணறிவு நம்மைக் கொல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><p> 

கடந்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் முன்னேற்ற வேகம் திகைக்க வைப்பதாக உள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I recently resigned from Google DeepMind, where I worked on AGI safety and alignment research. At Google, I witnessed AI development first hand. I too am extremely concerned by the default trajectory of this technology. I earnestly believe that AI has the potential to kill us…</p>&mdash; bilal 🔶 (@bilalchughtai_) <a href="https://x.com/bilalchughtai_/status/2099592489023734085?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், அவை ஓப்பன்ஏஐ-யின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து, யாருடைய விருப்பத்திற்கும் எதிராக, ஹக்கிங்ஃபேஸ் என்ற மூன்றாம் தரப்பு நிறுவனத்தை தன்னிச்சையாக ஹேக் செய்கின்றன.</p><p> 

ஹக்கிங்ஃபேஸ் சம்பவத்தில் ஈடுபட்ட கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு முகவர்களைப் போலவே, தவறாக ஒருங்கிணைக்கப்பட்ட மீயறிவுகள் நமது கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து, மனிதகுலத்தின் நிரந்தர அதிகார இழப்பு அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும் அபாயகரமான செயல்களைச் செய்யக்கூடும். </p><p> 

என் பார்வையில், இந்த நூற்றாண்டில் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனை இதுதான்" என தெரிவித்துள்ளார்.</p><p> 

கூகுள் டீப்மைண்டின் AGI பாதுகாப்பு குழுவில் பணியாற்றிய ஆராய்ச்சியாளரான ஜோஷ் எங்கெல்ஸ், "நான் 3 வாரங்களுக்கு முன்பு கூகிள் டீப் மைண்டின் ஏஜிஐ பாதுகாப்புக் குழுவிலிருந்து விலகி இதில் சேரவிருக்கிறேன்.</p><p>

கடந்த சில வாரங்களில், செயற்கை மாதிரிகள் ஒன்றுடன் ஒன்று கூட்டுச் சதி செய்வது, நிறுவனங்களை ஹேக் செய்வது, தங்கள் தடயங்களை மறைப்பது, மற்றும் மனிதர்களைச் சமூகப் பொறியியல் மூலம் கட்டுப்படுத்துவது பற்றி நாம் அறிந்து கொண்டோம்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I left Google DeepMind&#39;s AGI safety team three weeks ago to join <a href="https://x.com/METR_Evals?ref_src=twsrc%5Etfw">@METR_Evals</a>. To some of my friends and family this seemed like a strange decision: I enjoyed the work I did at GDM and turned down offers from Anthropic and OpenAI. But I made the decision because of how high I…</p>&mdash; Josh Engels (@JoshAEngels) <a href="https://x.com/JoshAEngels/status/2098890712830169115?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பயங்கரமான வாய்ப்பு இருப்பதாக நான் இப்போது நினைக்கிறேன். </p><p>

அதன் சரியான நிகழ்தகவு எனக்குத் தெரியாது, ஆனால் இது உலகின் மிக முக்கியமான பிரச்சனையாக மாறும் அளவுக்கு அது அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T11:35:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் வீடற்ற நபரைத் தாக்கிய பொலிசார்... பூதாகரமாகும் பிரச்சினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/police-officer-in-investigation-for-violent-on-man-1789469727"></link>
            <id>https://news.lankasri.com/article/police-officer-in-investigation-for-violent-on-man-1789469727</id>
            <summary type="text">Police officer under investigation after video shows man violently thrown to ground: பொலிசார் ஒருவர் வீடற்ற நபர் ஒருவரை முரட்டுத்தனமாக தள்ளிய நிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Police officer under investigation after video shows man violently thrown to ground: பொலிசார் ஒருவர் வீடற்ற நபர் ஒருவரை முரட்டுத்தனமாக தள்ளிய நிலையில், அவர் உயிரிழக்க, அந்த பொலிசார் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
</p><p>

பிரான்சில் பொலிசார் மீதான புகார்கள் அதிகரித்துவரும் நிலையில், வீடற்ற நபர் ஒருவரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படும் பொலிசார் ஒருவர் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
</p><h3>
என்ன பிரச்சினை?
</h3><p>
ஜூன் மாதம் 21ஆம் திகதி, தெற்கு பிரான்சிலுள்ள Carcassonne நகரில், இசை நிகழ்ச்சி ஒன்றின்போது பொலிசார் ஒருவர் வீடற்ற நபர் ஒருவரைத் தூக்கி தரையில் வீசும் காட்சி ஒன்று வெளியானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d890e13-1631-4268-97da-ebc168e7f329/26-6aa924206fd64.webp' /></p><p>
அந்த நபர் தலையைப் பிடித்துக்கொண்டு தரையில் விழுந்து கிடப்பதை அந்த வீடியோவில் காணலாம்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="fr" dir="ltr">Après les propos racistes, les violences policières. À Carcassonne la police est hors de contrôle ! <a href="https://t.co/dT7k4JFhPy">pic.twitter.com/dT7k4JFhPy</a></p>&mdash; Thomas Portes (@Portes_Thomas) <a href="https://x.com/Portes_Thomas/status/2098857532663996452?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
விடயம் என்னவென்றால், அந்த 29 வயது நபர், ஜூலை மாதம் 3ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.
</p><p>
அந்த பொலிசார் அந்த வீடற்ற நபரைத் தாக்கும் காட்சியை சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான தாமஸ் (Thomas Portes) என்பவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டு Carcassonne நகரில் பொலிசார் கட்டுப்பாடின்றி நடந்துகொள்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.</p><p>

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று, சம்பந்தப்பட்ட பொலிசார் மீது நீதிமன்ற விசாரணை துவக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T10:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு - புதிய பயண விதிகள் அமுல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-tightens-tech-security-travel-rules-1789469431"></link>
            <id>https://news.lankasri.com/article/china-tightens-tech-security-travel-rules-1789469431</id>
            <summary type="text">China tightens tech security travel rules: சீனாவில் வெளிநாட்டு பயணத்தில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சீனாவில் இன்று முதல் (செப்டம்பர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>China tightens tech security travel rules: சீனாவில் வெளிநாட்டு பயணத்தில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
</p><p>
சீனாவில் இன்று முதல் (செப்டம்பர் 15, 2026) புதிய நுழைவு மற்றும் வெளியேறும் விதிகள் அமுலுக்கு வந்துள்ளன.

இந்த விதிகள், தேசிய தொழில்நுட்ப பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதப்படும் சீன குடிமக்கள் வெளிநாடு செல்லத் தடை விதிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bda5ced4-1be3-4d3b-8df9-3d80d4bad61d/26-6aa922f85e338.webp' /></p><p>முன்னதாக, சீனர்கள் பொதுவாக சுதந்திரமாக வெளிநாடு பயணம் செய்ய முடிந்திருந்தாலும், அரசாங்கம் எப்போதும் பாதுகாப்பு அபாயம் உள்ளவர்களின் பயணங்களை கண்காணித்து வந்தது. </p><p>புதிய விதிகளின்படி, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அல்லது தொழில்நுட்ப இறக்குமதி-ஏற்றுமதி விதிகளை மீறுவோருக்கு தடை விதிக்கப்படும்.

இந்த தடை, குறைந்தது ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.</p><p></p><p> வெளிநாட்டில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, தேசிய பாதுகாப்பிற்கு கேடு விளைவித்தவர்கள் சீனாவுக்கு திரும்பிய பின் வெளிநாடு செல்ல முடியாது.
</p><p>
வெளிநாட்டவர்கள் கூட, விசா விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்தால், ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சீனாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்படலாம்.
</p><p>
முன்னதாக, சீன அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வெளிநாட்டு பயணத்தில் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.</p><p></p><p>2023-இல், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தொடர்புடைய நிறுவன ஊழியர்களுக்கு தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
</p><p>
சமீபத்தில், அமெரிக்க நிபுணர் மின் சின், சீனாவில் தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தவறாக தடுத்து வைக்கப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
</p><p>
இந்த புதிய விதிகள், தைவான் மக்களிடையே பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் தைவான் குடிமக்கள் சீனாவிற்கு செல்லும்போது கூடுதல் அபாயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

சீனா, இந்த விதிகள் தைவான் மக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்கும் என தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T10:47:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதை உறுதிப்படுத்திய அமெரிக்கா - உலகளவில் பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-confirms-deployment-of-space-weapons-1789464228"></link>
            <id>https://news.lankasri.com/article/us-confirms-deployment-of-space-weapons-1789464228</id>
            <summary type="text">US confirms deployment of space weapons: விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

விண்வெளி ஆயுதங்கள்அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>US confirms deployment of space weapons: விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>

விண்வெளி ஆயுதங்கள்</h2><p>அமெரிக்கா, பூமியின் சுற்றுப்பாதையில் விண்வெளி ஆயுதங்களை நிலைநிறுத்தியிருப்பதை முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

அமெரிக்க வான்படைச் செயலாளர் ட்ராய் மெய்ன்க், “அமெரிக்க படைகளை எதிரி தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த ஆயுதம் அவசியம்” என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ae4a9ff-a4d1-42ca-849c-2b3e3e15e9b8/26-6aa90ea613d1d.webp' /></p><p>இந்த அறிவிப்பு, ரஷ்யா மற்றும் சீனா உருவாக்கி வரும் விண்வெளி தாக்குதல் திட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

சீனா, “விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தொடங்க வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
அமெரிக்க விண்வெளி படை (US Space Force), 2019-ல் தொடங்கப்பட்டது. இது, அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை பாதுகாப்பதோடு, எதிரி செயற்கைக்கோள்களைத் தாக்கும் திறனையும் கொண்டதாகக் கருதப்படுகிறது.
</p><p></p><h2>வாய்ப்பு குறைவு</h2><p>வல்லுநர்கள், இந்த ஆயுதம் 'மின்னணு போர் அல்லது ரேடியோ தடுப்பு கருவியாக' இருக்கலாம் என ஊகிக்கின்றனர். </p><p>இது எதிரி செயற்கைக்கோள்களின் தொடர்புகளை பாதிக்கக்கூடும். ஆனால், செயற்கைக்கோளை நேரடியாக அழிக்கும் “கைனெடிக் கில் வாகனம்” போன்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு, ஏனெனில் அது விண்வெளியில் அதிக அளவு சிதைவுகளை உருவாக்கும்.</p><p></p><p>டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், “Golden Dome” எனப்படும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்வெளி ஆயுதங்கள் முக்கிய பங்காற்றும் என அறிவித்துள்ளது.
</p><p>
1967-ஆம் ஆண்டு ஒப்பந்தம், விண்வெளியில் பெரும் அழிவு ஆயுதங்களைத் தடை செய்திருந்தாலும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் செயற்கைக்கோள்களை குறிவைத்து புதிய ஆயுதங்களை உருவாக்கி வருகின்றன.
</p><h2>
உலகளவில் பதற்றம் அதிகரிப்பு</h2><p>இந்த அறிவிப்பு, உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் அபாயம் உள்ளது. விண்வெளி, எதிர்காலப் போர்களில் முக்கியமான தளமாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T09:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக பெண் தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/berlin-businesswoman-charged-spying-for-russia-1789463388"></link>
            <id>https://news.lankasri.com/article/berlin-businesswoman-charged-spying-for-russia-1789463388</id>
            <summary type="text">Businesswoman charged with spying for Russia: ஜேர்மனியில், ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக பெண் தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Businesswoman charged with spying for Russia: ஜேர்மனியில், ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக பெண் தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>

ஜேர்மன் தலைநகர் பெர்லினை மையமாகக் கொண்ட தொழிலதிபராகிய பெண் ஒருவர் மீது ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h3>

பெண் தொழிலதிபர்
</h3><p>
ஜேர்மன் மற்றும் உக்ரைன் இரட்டைக் குடியுரிமை கொண்டவரான இலோனா (Ilona W, 57) என்னும் பெண், பெர்லினை மையமாகக் கொண்டு மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/059b53b7-2451-434f-9e62-fa9af1adf476/26-6aa90b5e141f3.webp' /></p><p>
ராணுவ மற்றும் அரசியல் வட்டாரத்தில் ஆலோசகராகவும் பணியாற்றுவதால், பெரும் புள்ளிகளின் தொடர்பு இருந்திருக்கிறது அவருக்கு.
</p><p>
இந்நிலையில், தனது அரசியல் மற்றும் ராணுவ தொடர்புகளை பயன்படுத்தி, தகவல்களை சேகரித்துள்ளார் இலோனா.&nbsp;</p><p></p><p>
பெர்லினிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றும் ரஷ்ய உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பிலிருந்த இலோனா, தான் சேகரித்த தகவல்களை அவருடன் பகிர்ந்துகொண்டதுடன், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க அந்த அதிகாரிக்கு உதவியும் உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df8ddc0d-8ab5-4bd0-b3dd-b16015567643/26-6aa90b5ebc6b5.webp' /></p><p>

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகத்திலும், ஆயுத தயாரிப்புத் துறையிலும் பணியாற்றியவர்களை தனக்காக வேலை செய்யவைக்கவும் முயன்றுள்ளார் இலோனா.
</p><p>
மேலும், ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பில், அந்த ரஷ்ய அதிகாரிக்காக ஜேர்மன் பாதுகாப்புக் கொள்கை மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பில் தகவல்களைப் பெறவும் முயன்றுள்ளார் இலோனா.
</p><p>
இலோனா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ரஷ்ய அதிகாரியை ஜேர்மனி வெளியேற்ற, பதிலுக்கு ஜேர்மன் தூதர் ஒருவரை ரஷ்யா வெளியேற்றியது.</p><p>

இந்நிலையில், இலோனா மீது ரஷ்யாவுக்காக உளவு பார்த்தது தொடர்பில் முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T09:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண் துணை இல்லாமல் ஆப்கானிஸ்தானில் பயணம் செய்ததால் கேரள பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-vlogger-arunima-arrest-claim-in-afghanistan-1789462792"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-vlogger-arunima-arrest-claim-in-afghanistan-1789462792</id>
            <summary type="text">kerala vlogger arunima arrest claim in afghanistan: ஆண் துணை இல்லாமல் பயணம் செய்ததால் ஆப்கானிஸ்தானில் கேரள பெண் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>kerala vlogger arunima arrest claim in afghanistan: ஆண் துணை இல்லாமல் பயணம் செய்ததால் ஆப்கானிஸ்தானில் கேரள பெண் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><h3>
ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட கேரள பெண்</h3><p> 

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள், பொதுமக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது அடக்குமுறைகளை கையாளும் வகையில் பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றனர். </p><p>

ஆண் துணையின்றி பெண்கள் வெளியே செல்லக்கூடாது என தலிபான்கள் பல்வேறு சட்டங்களை பிறப்பித்துள்ளனர். </p><p>

இந்நிலையில், பேக்பேக்கர் அருணிமா(Backpacker Arunima) என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை நடத்தி வரும் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca81481-3b00-4fea-9fb3-c12040c356b6/26-6aa9090a17a0f.webp' /></p><p>

ஒரு லாரியில் லிஃப்ட் கேட்டுப் பயணித்து இரவு 7 மணியளவில் பாமியானை அடைந்த அவரை உள்ளூர் மக்களும் அதிகாரிகளும் அணுகியுள்ளனர். </p><p>

கடவுச்சீட்டு, விசா மற்றும் பயண அனுமதியைச் சரிபார்த்த அதிகாரிகள், ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஒரு ஆண் துணையுடனோ அல்லது வழிகாட்டியுடனோதான் பயணிக்க வேண்டும் என்ற விதியை அவர் மீறிவிட்டதாகத் தெரிவித்தனர்.&nbsp;</p><p></p><p>
ஆண் துணை இல்லாததால் அவருக்கு பாமியானில் அனுமதி சீட்டு வழங்கப்படாத நிலையில், அனுமதி சீட்டு இல்லாத அவரை கைது செய்வதாக தெரிவித்துள்ளனர். </p><p>

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தான் ஆப்கானிஸ்தானின் பாமியானில் ஆபத்தில் உள்ளதாகவும், இந்திய தூதரகம் குறித்து யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும். என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3Dpfbid035TniBR1f5VX8MS2BZpcvPfddNnKMDvx8msswRySMb3GVJdJSGTmQiK3NZhGqATHXl%26id%3D100080169201601&show_text=true&width=500" width="500" height="590" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>

அதன் பின்னர் பாம்யானை அடைய தனக்கு உதவிய நபரை தொடர்பு கொண்ட பின்னர் அந்த நபர், தனக்காக அதிகாரிகளிடம் பேசியதாக தெரிவித்துள்ளார்.</p><p> 
 
அனுமதி சீட்டு இல்லாமல் இவ்வளவு நாட்கள் ஆப்கானிஸ்தானில் பயணம் செய்ததற்காக அவருக்கு அபராதம் விதித்து, விடுவித்துள்ளனர். </p><p>

தான் இங்கிருந்து உஸ்பெஸ்கிஸ்தானுக்கு செல்ல உள்ளதாக அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், அனுமதி இல்லாமல் அடுத்த நாட்டிற்கு செல்லலாம் என தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த சம்பவம் குறித்து பேசிய அவர், "பெண்கள் தனியாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படாத ஒரு நாட்டில், ஒரு பெண்ணாகத் தனியாகப் பயணம் செய்ததுதான் நான் செய்த குற்றம்

ஒவ்வொரு மாகாணத்திற்கும் அனுமதி தேவை.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3Dpfbid0uprRtcpNx8XU1KNydcXtUCbYcE3EzecdsypLWUYxJHnMBRwJ15Fw6KAs6RXk6Hg6l%26id%3D100080169201601&show_text=true&width=500" width="500" height="764" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>தனியாகப் பயணம் செய்யும் ஒரு பெண்ணுக்கு அவர்கள் அனுமதி வழங்க மாட்டார்கள் என்பதால், நான் அந்த அனுமதிகளைப் பெறவில்லை. 

நான் ஒரு பெண் என்பதால் மட்டுமே இதையெல்லாம் கடந்து செல்ல வேண்டியிருந்தது. </p><p>என் ஆண் நண்பர்கள் பலர் இந்த நாடு முழுவதும் பயணம் செய்திருக்கிறார்கள். அவர்களில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. </p><p>

இங்கு அவர்களின் முடிவுகளே சட்டங்கள். இங்கு காவல்துறையோ, சிறைச்சாலையோ அல்லது அது போன்ற எதுவும் இல்லை. இங்குள்ள தலிபான்களைப் பொறுத்தவரை, ஒவ்வொருவரும் ஒரு தலிபான்தான். அதற்காக எல்லோரும் தலிபான்கள் என்று அர்த்தமல்ல. </p><p>

நான் அந்த மனிதனின் கைகளையும் கால்களையும் பிடித்துக்கொண்டு அவரிடம் கெஞ்சினேன், அதனால்தான் அவர்கள் என்னைக் கைது செய்யவில்லை. </p><p>

சில மணிநேரங்களுக்கு, நான் உண்மையிலேயே நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தேன். நான் மிகவும் பதட்டமாக இருந்தேன், என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இறந்துவிடுவேன் என்று உணர்ந்தேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T09:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரும்புக் கூண்டுகளில் அடைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்: பதறவைக்கும் ஒரு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/immigrants-held-in-small-outdoor-cages-in-florida-1789458396"></link>
            <id>https://news.lankasri.com/article/immigrants-held-in-small-outdoor-cages-in-florida-1789458396</id>
            <summary type="text">Immigrants held in small outdoor cages in Florida: அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், புலம்பெயர்ந்தோர் இரும்புக்கூண்டுகளில் அடைக்கப்பட்டது குறித்த ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Immigrants held in small outdoor cages in Florida: அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், புலம்பெயர்ந்தோர் இரும்புக்கூண்டுகளில் அடைக்கப்பட்டது குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.</p><p>


உலக நாடுகள் பலவற்றில் புலம்பெயர்தல் அரசியலாகிவிட்டதை மறுப்பதற்கில்லை. ஒரு பக்கம் புலம்பெயர்வோர் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதால் தங்களுக்கு பிரச்சினை என அரசாங்கங்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம், புலம்பெயர்ந்தோர் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதைக் குறித்த செய்திகள் வெளியாகிக்கொண்டேதான் இருக்கின்றன.
</p><h3>
பதறவைக்கும் ஒரு தகவல்
</h3><p>
சமீபத்தில், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்ஸ் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர்கள் அடித்து உதைக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12407d4e-1827-4a4a-a797-8030818e4628/26-6aa8f7dd46c79.webp' /></p><p>
இந்நிலையில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், புலம்பெயர்ந்தோரை 1.67 சதுரமீற்றர் அளவே கொண்ட இரும்புக் கூண்டுகளில் அதிகாரிகள் அடைத்துவைத்தது தெரியவந்துள்ளது.</p><p>

விடயம் என்னவென்றால், இந்த உண்மையை வெளிக்கொணர்ந்ததே அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள்தான்.
</p><p>
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் ஆய்வுக்குழு ஒன்று நடத்திய திடீர் சோதனைகளின்போது, புலம்பெயர்ந்தோர் இந்த இரும்புக்கூண்டுகளில் அடைக்கப்பட்டதும், அவர்களுக்கு நல்ல தண்ணீரோ, மருந்துகளோ கொடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.&nbsp;</p><p></p><p>

அதைவிட மோசமான ஒரு தகவல் என்னவென்றால், புலம்பெயர்ந்தோரை அடைக்கும் அந்த தடுப்புக்காவல் மையம் அமைந்துள்ள இடம், முதலைகள் அதிகம் வாழும் சதுப்புநிலமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41c4a3ab-da1c-47fd-b732-b6f6709db79e/26-6aa8f7deab01a.webp' /></p><p>
</p><p>
அது குறித்து கேலி செய்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அங்கு அடைக்கப்படும் புலம்பெயர்ந்தோர் எப்படி ஓடுவது என கற்றுக்கொள்வார்கள் என்று கூறினாராம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/983f4eee-69ce-40b8-a90e-4dc0d935040d/26-6aa8f7de01bb8.webp' /></p><p>

விடயம் என்னவென்றால், இப்படி அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகும்போதெல்லாம், அதிகாரிகள் இரண்டு விடயங்கள் செய்கிறார்கள்.
</p><p>
ஒன்று, அது இப்போது இல்லை, முன்பு இருந்தது, இப்போது அதை ஒழித்துவிட்டோம் என்று கூறுவது.
</p><p>
இரண்டு, அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, உள்ளூர் அதிகாரிகள் அல்லது ஒப்பந்ததாரர்கள்தான் காரணம் என்று கூறிவிடுவது.
</p><p>
ஆக, தங்கள் நாட்டிலிருப்பதைவிட ஒரு மேம்பட்ட வாழ்வைத் தேடியோ, அல்லது உயிருக்கு பயந்தோ இன்னொரு நாட்டுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோர் அங்கு எப்படி மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்த செய்திகள் வெளியாகிக்கொண்டேதான் இருக்கின்றன.
</p><p>
இதுபோன்ற விடயங்களை தட்டிக் கேட்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளும், உலக நாடுகள் அவைகளும், எந்த புலம்பெயர்ந்தோர் விடயத்திலும் நேரடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டதாக வெளியாகும் செய்திகளை மட்டும் அதிகம் காணமுடிவதில்லை!</p>]]></content>
            <updated>2026-09-15T08:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதி தாக்குதலால் சவுதி அரேபியாவில் அவசர நிலை - மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthi-attacks-trigger-saudi-emergency-alerts-1789458383"></link>
            <id>https://news.lankasri.com/article/houthi-attacks-trigger-saudi-emergency-alerts-1789458383</id>
            <summary type="text">Houthi Attacks Trigger Saudi Emergency Alerts: சவுதி அரசு முக்கிய நகரங்களில் அவசர எச்சரிக்கை அறிவித்துள்ளது.

நான்கு முக்கிய நகரங்களில் அவசர எச்சரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthi Attacks Trigger Saudi Emergency Alerts: சவுதி அரசு முக்கிய நகரங்களில் அவசர எச்சரிக்கை அறிவித்துள்ளது.
</p><h2>
நான்கு முக்கிய நகரங்களில் அவசர எச்சரிக்கை</h2><p>சவுதி அரேபியாவில் ஹவுதி போராளிகள் நடத்திய தாக்குதலால் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சவுதி அரசு அல்உலா, அபா, ஜாசான், ஜெட்டா மற்றும் யான்பு ஆகிய நகரங்களில் அவசர எச்சரிக்கை அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/827afb54-a103-4c6d-abcc-3f1848b56012/26-6aa8f7d14e76c.webp' /></p><p>இந்த தாக்குதல், மேற்கு ஆசியாவில் ஏற்கனவே நிலவும் அரசியல் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி குழுக்கள், ஏமன் வழியாக சவுதி மீது தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சவுதி-ஈரான் உறவுகள் மோசமடைந்துள்ளன. </p><p>அமெரிக்கா, சவுதியின் பாதுகாப்பிற்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் அமெரிக்கா-ஈரான் உறவுகள் மேலும் சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.</p><p></p><h2>பாதிப்பு&nbsp;</h2><p>

இந்த சூழ்நிலையில், ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், இந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தால் நேரடி பாதிப்புகளை சந்திக்கக்கூடும்.
</p><p>
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நிலைமை குறித்து கவலை தெரிவித்ததுடன், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஹவுதி தாக்குதல்களை கண்டித்து, சவுதியுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளார்.
</p><p></p><p>மேற்கு ஆசியாவில் நிலவும் இந்த பதற்றம், உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச வர்த்தகத்தில் சிக்கல்கள், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு சவாலாக இருக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T07:43:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயையும் குழந்தையையும் சுட்ட கனேடியர்: பொலிசார் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-police-killed-man-after-gun-incident-1789457213"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-police-killed-man-after-gun-incident-1789457213</id>
            <summary type="text">Man killed by police after gun incident involving woman and a baby: கனடாவில் பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் சுட்டதாக நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man killed by police after gun incident involving woman and a baby: கனடாவில் பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் சுட்டதாக நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
</p><p>


கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் 36 வயது ஆண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><h3>

தாயையும் குழந்தையையும் சுட்ட கனேடியர்</h3><p>

ஞாயிற்றுக்கிழமை காலை, ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் அமைந்துள்ள அந்த வீட்டுக்கு பொலிசார் விரைந்த நிலையில், சம்பந்தப்பட்ட நபருடன் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் முயன்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a163ec5f-9bab-4cf9-a1e5-afcfede40b65/26-6aa8f33f1bacf.webp' /></p><p>
ஆனால், கதவைத் திறந்துகொண்டு கையில் துப்பாக்கியுடன் வெளியே வந்த அந்த நபர் துப்பாக்கியைக் கீழே போட மறுத்துள்ளார்.
</p><p>
ஆகவே, மூன்று பொலிசார் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
அந்த நபர் படுகாயமடைந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
இதற்கிடையில், அந்த வீட்டுக்குள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்த ஒரு பெண்ணையும், காயமடைந்திருந்த ஒரு குழந்தையையும் மீட்ட போலிசார், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
</p><p>
கொல்லப்பட்ட அந்த ஆணும், காயமடைந்த அந்தப் பெண்ணும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று கூறியுள்ள பொலிசார், குடும்பச் சண்டையே இந்த பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T07:27:03+00:00</updated>
        </entry>
    </feed>
