<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-18T09:28:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல ஆண்டுகளாக ஒரே எண் வரிசை கொண்ட லொட்டரிச்சீட்டு வாங்கிவந்த நபர்: அடித்த அதிர்ஷ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ontario-man-owns-25-million-lotto-max-jackpot-1789723433"></link>
            <id>https://news.lankasri.com/article/ontario-man-owns-25-million-lotto-max-jackpot-1789723433</id>
            <summary type="text">Ontario man snags $25M Lotto Max jackpot: கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த ஒருவருக்கு லொட்டரில் 25 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.


ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ontario man snags $25M Lotto Max jackpot: கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த ஒருவருக்கு லொட்டரில் 25 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.
</p><p>

ஒன்ராறியோவைச் சேர்ந்த ஸ்டான்லி என்பவர், பல ஆண்டுகளாக ஒரே எண் வரிசை கொண்ட லொட்டரிச் சீட்டு வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.</p><h3>

ஒரே நாளில் கோடீஸ்வரரான கனேடியர்
</h3><p>
இந்நிலையில், சமீபத்தில் ஸ்டான்லி வாங்கிய லொட்டரிச் சீட்டுக்கு 25 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12e54c1a-ad6f-4c3e-8f17-37aacbb0fd6e/26-6aad032aba4b9.webp' /></p><p>
25 மில்லியன் கனேடிய டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 5,92,33,40,855.00 ரூபாய் ஆகும்.</p><p>

தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையில் ஒரு பெரும் தொகையை தன் மகளுக்கும் பேத்திக்கும் கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
ஒரு பிளம்பராக இவ்வளவு ஆண்டுகள் பணி செய்துவந்த நிலையில், தனக்கென ஒரு சொந்த வீடு வாங்கவேண்டும், கார் வாங்கவேண்டும் என்னும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார் ஸ்டான்லி.
</p><p>
அத்துடன், தன் காதலியுடன் உலகம் சுற்றிப் பார்க்கவும் திட்டமிட்டுள்ளார் ஸ்டான்லி!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T09:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2வது குழந்தை பெற்றால் ரூ.3.6 லட்சம் பரிசு, வரி விலக்கு வழங்கும் ஹாங்காங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hong-kong-reward-bonus-tax-free-for-birth-2nd-baby-1789722552"></link>
            <id>https://news.lankasri.com/article/hong-kong-reward-bonus-tax-free-for-birth-2nd-baby-1789722552</id>
            <summary type="text">hong kong reward bonus tax free for rise birth rate: குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க 2வது குழந்தை பெற்றால் ரூ.3.6 லட்சம் பரிசு, வரி விலக்கு உள்ளிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>hong kong reward bonus tax free for rise birth rate: குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க 2வது குழந்தை பெற்றால் ரூ.3.6 லட்சம் பரிசு, வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.</p><h3> 

2வது குழந்தை பெற்றால் ரூ.3.5 லட்சம்</h3><p>

உலக நாடுகள் குழந்தை பிறப்பு விகித சரிவை எதிர்கொண்டு வரும் சூழலில், இளம் தலைமுறையினரை விட முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.</p><p> 

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நாடுகளும் ஊக்கத்தொகை வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8ad63b6-6ab7-4b28-8c27-184b2646d509/26-6aacffba9390a.webp' /></p><p>
தற்போது இந்த ஊக்கத்தொகை திட்டத்தை நீட்டித்துள்ள ஹாங்காங், ஊக்கத்தொகையை அதிகரித்துள்ளது. </p><p>

2023 ஆம் ஆண்டு முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தகுதியுள்ள பெற்றோருக்கு 20,000 ஹாங்காங் டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 2.44 லட்சம்) வழங்கப்பட்டு வந்தது.&nbsp;</p><p></p><p> 

இந்த திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. </p><p>

செப்டம்பர் 16, 2026 மற்றும் அக்டோபர் 24, 2029 க்கு இடையில் ஹாங்காங்கில் பிறக்கும் இரண்டாவது அல்லது அதற்குப் பிறகான ஒவ்வொரு குழந்தைக்கும் ஒருமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93df6dc4-2323-4caa-ad50-c5d5a3c0f8b7/26-6aacffb9d797a.webp' /></p><p>

2வது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைக்கு, 30,000 ஹாங்காங் டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 3.66 லட்சம்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

ஹாங்காங்கிற்கு வெளியே பிறக்கும் குழந்தைக்கு இந்த உதவித்தொகை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதேவேளையில், பெற்றோரில் ஒருவர் ஹாங்காங்கில் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.</p><h3> 

வரி விலக்கு </h3><p>

மேலும், அத்தகைய குழந்தைகளுக்கான வரி விலக்கு 1,40,000 ஹாங்காங் டொலரிலிருந்து 1,60,000 ஹாங்காங் டொலராக(இந்திய மதிப்பில் ரூ.19.55 லட்சம்) உயர்த்தப்பட்டுள்ளது. </p><p>

குழந்தை பிறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பும், 2 வருடங்களுக்குப் பிறகும் சொத்துக்களை வாங்கும் குடும்பங்களுக்கு ரூ.2.5 லட்சம் என்ற உச்சவரம்புடன் முத்திரைக் கட்டணம் ரத்து செய்யப்படும்.&nbsp;</p><p></p><p>
வீட்டு உரிமைத் திட்டத்தின் (HOS) கீழ் மானிய விலையில் வழங்கப்படும் குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கும் பச்சிளம் குழந்தைகளைக் கொண்ட வெள்ளை படிவக் குடும்ப விண்ணப்பதாரர்களின், முன்பணச் சுமையைக் குறைக்கும் வகையில் அடமானக் கடன் மதிப்பு விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.</p><p> 

2023 ஆம் ஆண்டில் இந்த குழந்தை ஊக்கத்தொகையை அறிமுகப்படுத்திய நிலையில் 2024 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 35,723 ஆக உயர்ந்தது. </p><p>

ஆனால், 2025 ஆம் ஆண்டில் 31,000க்கும் சற்று அதிகமாக ஆக குறைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 19,255 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட கிட்டத்தட்ட 10 சதவீதம் குறைவாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T09:11:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் நகரமொன்றில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mysterious-explosions-reported-in-frankfurt-1789707386"></link>
            <id>https://news.lankasri.com/article/mysterious-explosions-reported-in-frankfurt-1789707386</id>
            <summary type="text">Mysterious explosions reported in Frankfurt: ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில் தொடர்ந்து மர்ம குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன.


ஜேர்மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mysterious explosions reported in Frankfurt: ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில் தொடர்ந்து மர்ம குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன.</p><p>


ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் நகர மக்கள், தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
</p><h3>
தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்
</h3><p>
ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில், வியாழக்கிழமை அதிகாலை வெடிச்சத்தம் கேட்டு கண்விழித்தார்கள் மக்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfcf4b50-1c29-47b7-9af2-0eaae5526bf5/26-6aacc47b836d9.webp' /></p><p>
அதிகாலை 4.00 மணியளவில் கேஃப் ஒன்றின் முன் ஒரு குண்டு வெடிக்க, சிறிது நேரத்திற்குள் சிற்றி சென்டர் ஒன்றின் முன் ஒரு குண்டு வெடித்துள்ளது.</p><p>

கடந்த சில நாட்களில் ஃப்ராங்பர்ட் நகரில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களும் Offenbach நகரில் ஒரு குண்டு வெடிப்புச் சம்பவமும் நிகழ்ந்துள்ளன.&nbsp;</p><p></p><p>

ஏற்கனவே திங்கட்கிழமை அதிகாலை Bockenheim நகரில் ஒரு குண்டு வெடித்துள்ளது.
</p><p>
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Sachsenhausen மாவட்டத்திலும் Offenbach நகரிலும் குண்டுகள் வெடித்தன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae68ee6c-5ad7-4621-8f49-ea623dc63051/26-6aacc47c371ca.webp' /></p><p>
இந்த சம்பவங்கள் அனைத்திலுமே யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை, கட்டிடங்களுக்கு மட்டுமே சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
Sachsenhausen என்னுமிடத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பில் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளான்.</p><p>

அதாவது, குற்றவாளிக் கும்பல் ஒன்று பதின்மவயதினரையும் இளைஞர்களையும் இந்த செயல்களில் ஈடுபட வைப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

இந்த வெடிகுண்டு தாக்குதல்களின் பின்னணியில் இருப்பது யார், அவர்களுடைய நோக்கம் என்ன என்பது குறித்து பொலிசார் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T08:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற விரும்பும் கிராமம்: உள்துறைச் செயலரை கொந்தளிக்கவைத்துள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shabana-angry-over-danny-tommo-link-in-piddington-1789717640"></link>
            <id>https://news.lankasri.com/article/shabana-angry-over-danny-tommo-link-in-piddington-1789717640</id>
            <summary type="text">Home secretary says she wants to distinguish between far-right extremism and legitimate local concerns over asylum sites: பிரித்தானியாவிலிருந்து கிராம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Home secretary says she wants to distinguish between far-right extremism and legitimate local concerns over asylum sites: பிரித்தானியாவிலிருந்து கிராமம் ஒன்று சுதந்திரம் பெற விரும்பும் விடயம் தொடர்பில் ஒரு சம்பவம் உள்துறைச் செயலரை கொந்தளிக்கவைத்துள்ளது.
</p><p>
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரிலுள்ள கிராமம், பிடிங்டன்.

350 பேர் மட்டுமே வாழும் அச்சிறு கிராமத்தில் ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்க வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அக்கிராம மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5e59fa0-9265-4e5a-a015-c97d2747d609/26-6aacec8a2944d.webp' /></p><p>

ஆகவே, அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளனர் அக்கிராம மக்கள்.</p><h3>

உள்துறைச் செயலரை கொந்தளிக்கவைத்துள்ள விடயம்</h3><p>

விடயம் என்னவென்றால், ஏற்கனவே பிடிங்டன் கிராம மக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கோபத்திலிருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>
சமீபத்தில், இங்கிலாந்திலுள்ள டோவர் மற்றும் போர்ட்ஸ்மௌத் ஆகிய இடங்களில் முகமூடி அணிந்த ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af5bd255-256e-4ec7-9c46-d09804a86929/26-6aacec8b8841d.webp' /></p><p>

அந்தக் கூட்டத்தினர், Patriot Platform என்னும் புலம்பெயர்தல் எதிர்ப்பு தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
</p><p>
அந்த அமைப்பின் தலைவர், டேனியல் தாமஸ். டேனி டாமோ என அழைக்கப்படும் இந்த தாமஸ், ஒரு கடத்தல் வழக்கு தொடர்பில் சிறை சென்றவர் ஆவார்.&nbsp;</p><p>

அவர்தான், புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அமைப்பான Patriot Platform என்னும் அமைப்பை உருவாக்கி புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்.&nbsp;</p><p></p><p>
இந்த டேனியல் தாமஸ், சமீபத்தில் பிடிங்டன் கிராமத்துக்குச் சென்று அக்கிராம நிர்வாகிகளை சந்தித்துள்ளார். </p><p>அவர் ஆயிரக்கணக்கான தனது குழுவினருடன் பிடிங்டன் கிராமத்துக்குச் சென்று அக்கிராமத்துக்குள் புகலிடக்கோரிக்கையாளர்கள் நுழையாமல் தடுக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விடயம்தான் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதை கொந்தளிக்கச் செய்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cccac283-5922-45c1-985a-bc84b311367e/26-6aacec8ad5221.webp' /></p><p>

புகலிடக்கோரிக்கையாளர்கள் மையம் ஒன்று தங்கள் கிராமத்தில் அமைக்கப்பட இருப்பது தொடர்பில் பிடிங்டன் கிராம மக்களின் நியாயமான கவலைகளுக்கும், பயங்கரவாத எண்ணம் கொண்டவர்கள் அதை பயன்படுத்திக்கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை தான் காட்டவிரும்புவதாக தெரிவித்துள்ளார் ஷபானா.</p><p>

அவ்வகையில், தீவிர வலதுசாரி இனவெறுப்பாளர்களான டேனியல் தாமஸ் போன்றவர்கள் சமுதாயத்தில் பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையில் பிடிங்டன் கிராம பிரச்சினையை எடுப்பது என்னும் விடயம் ஏற்றுக்கொள்ளமுடியாதது என்றும், அவர்கள் சட்டத்தை மீறும் நிலையில், அவர்கள் மீது சட்டம் முழுவீச்சில் பாயும் என்றும் கூறியுள்ளார் ஷபானா.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 பெண்களுக்கு மார்பகம் அகற்றும் அறுவை சிகிச்சை... தவறை ஒப்புக்கொண்ட NHS அறக்கட்டளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/twenty-women-had-mastectomies-1789717885"></link>
            <id>https://news.lankasri.com/article/twenty-women-had-mastectomies-1789717885</id>
            <summary type="text">Twenty women had mastectomies they didn&#039;t need: இருபது பெண்களுக்குத் தேவையற்ற மார்பக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
NHS அறக்கட்டளை ஒன்றில் பெற்ற புற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Twenty women had mastectomies they didn't need: இருபது பெண்களுக்குத் தேவையற்ற மார்பக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
</p><p>NHS அறக்கட்டளை ஒன்றில் பெற்ற புற்றுநோய் சிகிச்சையால் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>514 மருத்துவச் சம்பவம்</h2><p>
</p><p>அவர்களில் குறைந்தது 20 பேர்களுக்கு தேவையற்ற மார்பக அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fac3814-9dc8-4288-8cf0-533e66fedc6d/26-6aaced7f64756.webp' /></p><p> </p><p>தங்கள் மார்பகத்தை அகற்றியிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்கவில்லை என்று தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது தாங்கள் அடைந்த அதிர்ச்சியை நோயாளிகள் விவரித்துள்ளனர்; இது அவர்களுக்கு உளவியல் ரீதியான மற்றும் உடல் ரீதியான வலியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> கவுண்டி டர்ஹாம் மற்றும் டார்லிங்டன் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (CDDFT) ஆய்வு செய்த 514 மருத்துவச் சம்பவங்களில், 315-ல் நோயாளிகள் பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளது; இதில் 77 பேர் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>ஒரு நோயாளி மரணமடைந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், சில நோயாளிகளுக்குப் புற்றுநோய் கண்டறிதலில் ஏற்பட்ட தவறுகள் அல்லது தாமதங்கள் காரணமாக, பின்னர் அவர்களது புற்றுநோய் பரவியதையும் அந்த அறக்கட்டளை கண்டறிந்துள்ளது.</p><p></p><p> </p><p>டர்ஹாம் கவுன்டியில் உள்ள கான்செட்டைச் சேர்ந்த 51 வயதான டெனிஸ் ஹோவர்த், அவரது மார்பக அறுவை சிகிச்சை தேவையற்றது என NHS-ஆல் அறிவிக்கப்பட்ட பல பெண்களில் ஒருவர் ஆவார். </p><p>தொடர்புடைய தகவல் அறிந்து அதிர்ந்துபோனதாகவும், தன்னால் அதை நம்பவே முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது மார்பகத்தில் ஒரு கட்டியைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டில் ஹோவர்த்திற்கு நிலை 1 (grade 1) புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. </p><p>அவருக்கு லம்பக்டமி (lumpectomy) மற்றும் மாஸ்டெக்டமி (mastectomy) ஆகிய அறுவை சிகிச்சைகளும், அத்துடன் எட்டு சுற்றுகள் கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபியும் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>தவிர்த்திருக்கலாம்</h2><p> </p><p>இருப்பினும், செப்டம்பர் 2025-ல், அவருக்கு NHS-இலிருந்து ஒரு அழைப்பு வந்தது; அதனைத் தொடர்ந்து உடனடியாக CDDFT-இடமிருந்து ஒரு கடிதமும் வந்தது. அதில், முழு மார்பக அகற்றலுக்குப் பதிலாக இரண்டாவது கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87393691-17d0-40af-a6e8-91fac5321eb9/26-6aaced801789c.webp' /></p><p> இன்னொரு பெண்மணி, இந்த ஆண்டின் தொடக்கத்தில், தான் 2021-ல் செய்துகொண்ட மார்பக அகற்றும் அறுவை சிகிச்சையைத் தவிர்த்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது குறித்து அந்த அறக்கட்டளையின் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டார். </p><p>தன்னுடன் பணிபுரிபவர்களாகக் கருதியவர்கள் தனக்காகச் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள் என்று தான் நம்பியிருந்ததாக அந்த முன்னாள் NHS ஊழியர் கூறினார். </p><p>அந்த இருவரின் புற்றுநோய் சிகிச்சையையும் மேற்பார்வையிட்ட மருத்துவ நிபுணர் அமீர் பாட்டி ஆவார்; இவர் 2013 முதல் 2024 வரை CDDFT-இன் மார்பகச் சிகிச்சை சேவைகளுக்கான மருத்துவப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றினார்.</p><p> மருத்துவர் பாட்டி தற்போது மருத்துவப் பணிகளை மேற்கொள்வதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்; இருப்பினும், அவர் தொடர்ந்து முழு ஊதியத்துடன் அந்த அறக்கட்டளையில் பணியில் உள்ளார்.</p><p></p><p> </p><p>CDDFT முகமை, ஜனவரி 2023 முதல் பிப்ரவரி 2025 வரையிலான மார்பகப் புற்றுநோய் பாதிப்புச் சம்பவங்கள் குறித்தும், இதற்கென ஒதுக்கப்பட்ட உதவி எண்ணைத் தொடர்புகொண்ட 640 முன்னாள் நோயாளிகளின் வழக்குகள் குறித்தும் ஓர் உள்நிலை ஆய்வை மேற்கொண்டு வருகிறது. </p><p>2015-ஆம் ஆண்டு வரையிலான வழக்குகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த ஆய்வின் வரம்பை விரிவுபடுத்துவது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. இதனால், 10,000 வரையிலான மருத்துவப் பதிவுகள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தக்கூடும் என்பதாகும். </p><p>முன்னாள் நோயாளிகள் அளித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளனவா என்பதை விசாரிப்பதற்காக, தேசிய குற்றவியல் முகமை தற்போது டர்ஹாம் காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:48:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[57 ஓட்டங்களுக்கு சுருண்ட ஜப்பான் மகளிர் அணி: 5 ஓவர்களில் இந்தியா வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-india-beat-japan-by-8-wickets-in-t20-1789717688"></link>
            <id>https://news.lankasri.com/article/women-india-beat-japan-by-8-wickets-in-t20-1789717688</id>
            <summary type="text">மகளிர் ஆசிய போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது.

ஜப்பான் அணிக்கு எதிரான மகளிர் ஆசிய போட்டியில், இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசிய போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது.
</p><p>
ஜப்பான் அணிக்கு எதிரான மகளிர் ஆசிய போட்டியில், இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><h2>சுருண்ட ஜப்பான் </h2><p>

இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய போட்டி நிஸ்ஷினில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a978ef2-7da7-43bf-bffd-c756a0fa4b62/26-6aacecbb41be2.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ஜப்பான் அணி, இந்தியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 57 ஓட்டங்களுக்கு சுருண்டது. </p><p>அயாகா 25 ஓட்டங்கள் எடுத்தார். ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகளும், ஷபாலி வெர்மா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.</p><p>

பின்னர் ஆடிய இந்தியா 5 ஓவர்களில் 59 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷபாலி வெர்மா (Shafali Verma) 40 (15) ஓட்டங்கள் விளாசினார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7d9e2d-22e5-45f4-af2f-ab38351c91fe/26-6aacecbbf39bc.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T07:46:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் அடித்துக்கொண்ட பயணிகள் - லண்டன் டு வங்காளதேச விமானத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mid-air-fight-shocks-london-bang-flight-passengers-1789717161"></link>
            <id>https://news.lankasri.com/article/mid-air-fight-shocks-london-bang-flight-passengers-1789717161</id>
            <summary type="text">Mid-air fight shocks London to Bangladesh flight passengers: நடுவானில் விமானத்தில் இரு பயணிகள் அடிதடி சண்டை போட்டுக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mid-air fight shocks London to Bangladesh flight passengers: நடுவானில் விமானத்தில் இரு பயணிகள் அடிதடி சண்டை போட்டுக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.</p><p>
</p><h2>
இரண்டு பயணிகள் இடையே&nbsp;அடிதடி சண்டை</h2><p>லண்டனில் இருந்து வங்காளதேசம் நோக்கி பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு பயணிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் சில நிமிடங்களில் உடல் ரீதியான மோதலாக மாறி, விமானத்தின் உள்ளே பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">AIRPLANE BRAWL: Two male passengers got into a physical fight aboard a Biman Bangladesh Airlines flight from London to Bangladesh after an argument escalated, frightening nearby passengers, including children and elderly travelers.<br><br>Cabin crew and other passengers stepped in and… <a href="https://t.co/q1ZAqvZuY6">pic.twitter.com/q1ZAqvZuY6</a></p>&mdash; Breaking911 (@Breaking911) <a href="https://x.com/Breaking911/status/2100630585488105724?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவில், இருவரும் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருப்பது தெளிவாகக் காணப்படுகிறது.</p><p> சண்டையின் போது, ஒருவரின் டி-ஷர்ட் கிழிந்தது. இந்த சம்பவம் நடந்தபோது, விமானத்தில் இருந்த மற்ற பயணிகள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள், கடும் பதற்றத்திற்கு உள்ளானார்கள்.</p><p>
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9bf4651-e589-49b6-8502-da9948cdbe4b/26-6aaceaaad5111.webp' /></p><p>சண்டை நீண்டுகொண்டிருந்த நிலையில், விமான பணியாளர்கள் மற்றும் பிற பயணிகள் இடைமறித்து, இருவரையும் பிரித்தனர். </p><p>சம்பவம் நடந்த காரணம் தெளிவாக தெரியவில்லை. மேலும், சம்பவத்திற்குப் பிறகு அந்த பயணிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றிய தகவலும் வெளிவரவில்லை.
</p><p>
பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் பொது தொடர்பு மேலாளர் மஹ்புபுத்தீன் அஹ்மத், இந்த சம்பவம் குறித்து தமக்கு தகவல் இல்லை என்று தெரிவித்தார்.</p><p></p><p>இந்த சம்பவம் விமானப் பயணங்களில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பயணிகள் இடையே ஏற்படும் சண்டைகள், விமானத்தில் உள்ள அனைவரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், விமான நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T07:36:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் முன்னிலை வகிக்கும் தீவிர வலதுசாரிக் கட்சி: வெளிநாட்டவர்கள் நிலை என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/marine-priority-french-citizens-in-public-service-1789715677"></link>
            <id>https://news.lankasri.com/article/marine-priority-french-citizens-in-public-service-1789715677</id>
            <summary type="text">Marine Le Pen has reaffirmed that national priority for French citizens for public services: அரசு வழங்கும் உதவிகளில், பிரெஞ்சுக் குடிமக்களுக்கே முன்னு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Marine Le Pen has reaffirmed that national priority for French citizens for public services: அரசு வழங்கும் உதவிகளில், பிரெஞ்சுக் குடிமக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என மரீன் லெ பென் தெரிவித்துள்ளார்.
</p><p>

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்து யார் ஜனாதிபதியாவார் என்பது தொடர்பான கருத்துக்கணிப்புகளில், தீவிர வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சேர்ந்த மரீன் லெ பென்னே முன்னிலை வகிக்கிறார்.
</p><h3>
முன்னிலை வகிக்கும் தீவிர வலதுசாரிக் கட்சி
</h3><p>
இந்நிலையில், தேர்தலில் National Rally கட்சி வெற்றிபெறுமானால், பிரெஞ்சு மக்களுக்கே பிரான்ஸ் நாட்டில் முன்னுரிமை என்னும் நிலைப்பாட்டை தான் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார் அக்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கலாம் என எதிர்பார்க்கப்படும் மரீன் லெ பென்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76e73f8b-ac67-4c4b-8d5a-199bc80ac337/26-6aace4dec9495.webp' /></p><p>

தன் கட்சிக் கொள்கைகள் குறித்து உரையாற்றிய மரீன் லெ பென், பிரெஞ்சுக் குடிமக்கள், அவர்கள் என்ன நிறத்தில் இருந்தாலும் சரி, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த நாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய சொந்த நாடான பிரான்சில், அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.</p><p>

குறிப்பாக, மக்களுக்கு வீடுகள் கிடைக்கும் விடயம் குறித்து பேசிய மரீன் லெ பென், பிரெஞ்சு மக்களுக்கே முன்னுரிமை என்று கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
ஆக, பிரெஞ்சுக் குடிமக்களல்லாத வெளிநாட்டவர்களுக்கு பல சலுகைகள் மறுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
அத்துடன், வேலை விடயத்திலும், வேலைக்கு விண்ணப்பிப்பவர் எந்த நாட்டுக் குடிமகன் என பார்த்து, அந்த வேலைக்கு தகுதியான பிரெஞ்சுக் குடிமகன் இருக்கும் நிலையில், பிரெஞ்சுக் குடிமகன் அல்லாதவரை விட, பிரெஞ்சுக் குடிமகனுக்கே வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படும்.</p><p>

National Rally கட்சி, தீவிர புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட கட்சி. ஆக, அக்கட்சியைச் சார்ந்த மரீன் லெ பென் தேர்தலில் வெற்றி பெற்று பிரான்ஸ் ஜனாதிபதியாவாரானால், அதனால் வெளிநாட்டவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படலாம் என்றே கருதப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:17:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவில் 728 அடி அகலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nasa-discovered-728-foot-crater-in-moon-1789714587"></link>
            <id>https://news.lankasri.com/article/nasa-discovered-728-foot-crater-in-moon-1789714587</id>
            <summary type="text">nasa discovers 728 foot creator in moon: நிலவில் 728 அடி அகலத்திலான பாரிய பள்ளம் கண்டறியப்பட்டுள்ளது. 

நிலவில் 728 அடி அகலத்தில் பள்ளம்

நிலவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>nasa discovers 728 foot creator in moon: நிலவில் 728 அடி அகலத்திலான பாரிய பள்ளம் கண்டறியப்பட்டுள்ளது. </p><h3>

நிலவில் 728 அடி அகலத்தில் பள்ளம்</h3><p>

நிலவின் மேற்பரப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான புதிய பள்ளம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டறிந்துள்ளது.
</p><p>
இந்த பள்ளம் 2024 ஆம் ஆண்டிலே உருவாகியிருந்தாலும், தற்போதே இதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f35e613a-80d6-494a-8260-5e8ac6ffd4e5/26-6aace09e8e028.webp' /></p><p>

லூனார் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் கேமராவிலிருந்து (LROC) கிடைக்கும் தரவுகளுடன் பணிபுரியும், ராபர்ட் வாக்னர், நிலவின் மேற்பரப்பின் ஒரு பிரம்மாண்டமான வரைபடத்தை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, ​​வழக்கத்திற்கு மாறான பெரிய பிரகாசமான புள்ளி ஒன்றைக் கவனித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40c26291-6b23-4922-b3b1-162f3bc3bd97/26-6aace09f53185.webp' /></p><p> 

சந்தேகிக்கப்படும் சிறுகோள் மோதலுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட படங்களை ஒப்பிட்டுப் பார்த்து, மோதல் நிகழ்ந்த இடத்தை கண்டறிந்துள்ளனர். </p><p>

பின்னர், LRO கேமரா அந்த இடத்தின் மீது பறந்து சென்றபோது எடுத்த ​​உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள், பள்ளத்தின் அளவு, வடிவம் மற்றும் சுற்றியுள்ள மோதல் சிதைவுகளை அறிய உதவியது.&nbsp;&nbsp;</p><p></p><p>

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 22 வரையிலான காலகட்டத்தில் நிலவின் கிழக்கு விளிம்பில், 3 முதல் 6 மாடிக் கட்டிடம் அளவிலான ஒரு வால் நட்சத்திரம் அல்லது சிறுகோள் மோதியுள்ளது. </p><p>

இந்த மோதல் 728 அடி அகலமும் , 141 அடி ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7378c197-2176-4502-82bb-2357bc662207/26-6aace09dbbdbe.webp' /></p><p>

இந்தப் பள்ளம் ஏறக்குறைய 2 கால்பந்து மைதானங்களின் நீளத்திற்குப் பரவியுள்ளது எனவும், செங்குத்தாக அடுக்கப்பட்ட 3 மஞ்சள் பள்ளிப் பேருந்துகளை உள்ளடக்கக்கூடிய அளவுக்கு ஆழமாக உள்ளது என்றும் நாசா தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த மோதலால், நிலவில் தூசு மற்றும் பாறை துகள்கள் 100 கிமீ தூரத்திற்கு மேலாக பல்வேறு பகுதிகளில் தூக்கி எறியப்பட்டு உள்ளது.</p><p> 

மேலும், சூரிய மண்டலத்திலேயே இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகப்பெரிய, புதிதாக உருவான பள்ளமாக இது அறியப்படுகிறது. </p><p>

நிலவு குறித்து ஆய்வில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானியான டாம் மெக்கெட்சினின் நினைவாக இந்தப் பள்ளம் அதிகாரப்பூர்வமாக மெக்கெட்சின் எனப் பெயரிடப்பட்டுள்ளது. </p><p>

இந்த அளவிலான ஒரு மோதல் நிலவில் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை அல்லது அதற்கும் மேலாக நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.</p><p>
மோதிய பொருள் குறித்த மேலும் விரிவான பகுப்பாய்வு செய்து அதன் விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-18T06:59:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12.1 ஓவரிலேயே 146 ஓட்டங்கள் எடுத்து வெற்றி: இலங்கைக்கு எதிராக பட்லர் இமாலய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jos-buttler-record-first-batter-15000-runs-in-t20-1789714184"></link>
            <id>https://news.lankasri.com/article/jos-buttler-record-first-batter-15000-runs-in-t20-1789714184</id>
            <summary type="text">இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் சாதனை படைத்தார். 

இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இலங்கைக்கு எதிரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் சாதனை படைத்தார். </p><p>

இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சாதனை படைத்தார்.&nbsp;</p><h2>லியாம் டாவ்ஸன்&nbsp;&nbsp;</h2><p>
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கார்டிஃப்பில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4fa779a-ebca-45be-8294-302279d6c394/26-6aacdfe3debb7.webp' /></p><p></p><p>
 
முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்தது. நிசங்க 37 (21) ஓட்டங்களும், அசலங்கா 31 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

அபாரமாக பந்துவீசிய லியாம் டாவ்ஸன் 3 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட்டுகளும், பேக்கர், ரஷீத் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
</p><p>
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 12.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4b76678-28ac-4e21-848f-ae2f83cbb8dc/26-6aace3d50b57d.webp' /></p><p>

டாம் பான்டன் 52 (24) ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 30 (16) ஓட்டங்களும், ஹாரி ப்ரூக் 23 (8) ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><h2>ஜோஸ் பட்லர்&nbsp;சாதனை</h2><p> 

டி20யில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற இமாலய சாதனையை ஜோஸ் பட்லர் (Jos Buttler) படைத்தார். </p><p> 

கிரோன் பொல்லார்ட் 14,999 ஓட்டங்கள் குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், ஜோஸ் பட்லர் 15,000 ஓட்டங்கள் எடுத்து அதனை முறியடித்தார். </p><p>

இந்தப் பட்டியலில் அலெக்ஸ் ஹால்ஸ், கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், விராட் கோஹ்லி ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fabe9f21-5594-4344-a535-36a9cf2bef8a/26-6aacdfe3010f5.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d6e8d56-ccf9-40da-adfc-de9529567726/26-6aace3d5ed82b.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T06:50:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகள்: சுவிஸ் நாடாளுமன்றம் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-house-support-tighter-measures-on-asylum-1789710427"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-house-support-tighter-measures-on-asylum-1789710427</id>
            <summary type="text">The Swiss House of Representatives has voted in favour of tighter measures on asylum: சுவிஸ் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கடுமையான புகலிடக் கட்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Swiss House of Representatives has voted in favour of tighter measures on asylum: சுவிஸ் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
</p><p>

நேற்று வியாழக்கிழமையன்று, சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில், புகலிடக்கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வகையிலான தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது.</p><h3>

கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகள்
</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1f7a500-0a94-4285-8199-30606ad4bbfc/26-6aacd05d44926.webp' /></p><p>சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்த அந்த தீர்மானம், எல்லை கடந்து பயணிக்கும் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குதல் தொடர்பான விதிகளை மாற்றுதல், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பயங்கர குற்றங்களில் ஈடுபடும் நிலையில், அவர்களுடைய குடியுரிமையை ரத்து செய்து அவர்களை நாடுகடத்துதல் முதலான நடவடிக்கைகளை எடுக்க அரசைக் கோருகிறது.&nbsp;</p><p></p><p>
மேலும், ஆப்கன் நாட்டுப் பெண்கள் புகலிடம் கோரும் விடயத்தில், தாமாகவே அவர்கள் புகலிடம் பெற தகுதிபெறும் நிலையை மாற்றி, தற்காலிக அனுமதி நிலை மட்டுமே வழங்குதல், புகலிடம் தொடர்பான விடயங்களில் ஒத்துழைக்காத நாடுகளுக்கு தடைகள் விதித்தல் ஆகிய விடயங்களும் அந்த தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>
மொத்தத்தில், புகலிடம் தொடர்பான விதிகளை கடுமையாக்க அந்த தீர்மானம் கோரிய நிலையில், சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில் பெரும்பான்மை ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T06:35:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் விவாதங்களுக்கு மத்தியில்... முதல் விமானம் தாங்கி கப்பலைப் பெறும் இந்தோனேசியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesia-first-aircraft-carrier-1789712754"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesia-first-aircraft-carrier-1789712754</id>
            <summary type="text">Indonesia gets its first aircraft carrier: இந்தோனேசியா தனது முதல் விமானம் தாங்கி கப்பலைப் பெறுகிறது.
இந்தோனேசியா தனது முதல் விமானம் தாங்கி கப்பலைப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indonesia gets its first aircraft carrier: இந்தோனேசியா தனது முதல் விமானம் தாங்கி கப்பலைப் பெறுகிறது.
</p><p>இந்தோனேசியா தனது முதல் விமானம் தாங்கி கப்பலைப் பெற்றுள்ளது. இது ஒரு முன்னாள் இத்தாலிய போர்க்கப்பலாகும். இக்கப்பல் இந்தோனேசியாவின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்புத் திறன்களை வலுப்படுத்தும் என்று அந்நாட்டு அரசு கூறுகிறது.</p><h2>பாதுகாப்பு உறவுகளை</h2><p>
</p><p>குறுகிய தூரத்தில் புறப்பட்டு செங்குத்தாகத் தரையிறங்கும் திறன் கொண்ட விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களைக் கையாளும் வசதி கொண்ட, 41 வருடங்கள் பழமையான முன்னாள் 'ஐடிஎஸ் ஜியுசெப்பே கரிபால்டி' (ITS Giuseppe Garibaldi) கப்பல், </p><p>வெள்ளிக்கிழமை காலை வடக்கு ஜகார்த்தாவின் தஞ்சங் பிரியோக் துறைமுகத்தில் உள்ள கடற்படைத் தளத்தை வந்தடைந்தது; அங்கு அதற்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5625958d-e1ca-4516-928e-63616efefecf/26-6aacd974423ac.webp' /></p><p> </p><p>தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவுடனான தனது பரந்த அளவிலான பாதுகாப்புத் துறை உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், 2024-இல் சேவையிலிருந்து விலக்கப்பட்ட அந்த விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்தோனேசியாவிடம் வழங்க இத்தாலி கடந்த மார்ச் மாதம் ஒப்புக்கொண்டது.</p><p></p><p> </p><p>மேலும், இத்தாலி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மீதான ஒப்பந்தங்களை நாடி வரும் நிலையில், அந்த விமானம் தாங்கிக் கப்பலை இந்தோனேசியாவுக்குப் பரிசாக வழங்குவது, அக்கப்பலைச் சேவையிலிருந்து விலக்குவதற்கான செலவையும் மிச்சப்படுத்துகிறது. </p><p>இந்த பரிமாற்றத்தின் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் தனது கப்பல் தொகுப்பில் ஒரு விமானம் தாங்கி கப்பலைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தோனேசியா திகழும். </p><p>முதலாவது தாய்லாந்தின் HTMS சக்ரி நருபெட் ஆகும், இது விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயங்கக்கூடிய AV-8S மட்டடோர் ஜம்ப்-ஜெட்களுடன் ஸ்பெயினிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பின்னர் 1997-ல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83411546-53a0-41c8-ae9d-88f92da2d155/26-6aacd974e5c6e.webp' /></p><p> </p><p>14-ஆம் நூற்றாண்டின் மஜாபஹித் காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இராணுவத் தலைவரும், தனது போர்ப் பயணங்களாலும் ஒருங்கிணைந்த தீவுக்கூட்டம் குறித்த தொலைநோக்குப் பார்வையாலும் இந்தோனேசியாவின் மிகவும் கொண்டாடப்படும் வரலாற்று ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்பவருமான கே.ஆர்.ஐ. கஜா மாடாவின் நினைவாக, இந்த விமானம் தாங்கி கப்பல் அடுத்த வாரம் இந்தோனேசிய கடற்படையில் 'கே.ஆர்.ஐ. கஜா மாடா' என்ற பெயரில் முறைப்படி சேர்க்கப்படவுள்ளது.</p><h2>நிதி நெருக்கடி</h2><p>
</p><p>ஆனால், கரிபால்டி கப்பலின் கையகப்படுத்தல் என்பது, பாதுகாப்பு ஆய்வாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மத்தியில் கடும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e215900a-45ec-41ea-8f14-44971ea08fde/26-6aacd97598ee7.webp' /></p><p> </p><p>இந்தோனேசியாவுக்கு ஒரு விமானம் தாங்கி கப்பல் தேவையா என்றும், உள்நாட்டில் அதிகரித்து வரும் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வேளையில், பழமையான ஒரு போர்க்கப்பலைப் புதுப்பித்து இயக்குவதற்காக அரசாங்கம் மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவிட வேண்டுமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். </p><p>இந்தோனேசியாவின் நிதி அமைச்சகம் 2025 ஆம் ஆண்டில் விமானம் தாங்கி கப்பல் திட்டத்திற்கு 450 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்திருந்தது.</p>]]></content>
            <updated>2026-09-18T06:22:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபிஷேக் சர்மாவின் சாதனை சதம் - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/abhishek-sharma-record-ton-india-won-series-vs-afg-1789710044"></link>
            <id>https://news.lankasri.com/article/abhishek-sharma-record-ton-india-won-series-vs-afg-1789710044</id>
            <summary type="text">abhishek sharma record ton lead india won t20 series vs afg: அபிஷேக் சர்மாவின் சாதனை சதத்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது T20 போட்டியில் வெற்றி பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>abhishek sharma record ton lead india won t20 series vs afg: அபிஷேக் சர்மாவின் சாதனை சதத்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது T20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.</p><h3> 

தொடரை கைப்பற்றிய இந்தியா </h3><p>

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான 3வது T20 போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்றது.</p><p> 

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/168274b4-477c-4ff7-80e8-4205a0948349/26-6aaccee043fec.webp' /></p><p> 

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d09a736e-497e-46a0-adf7-3aebc3676e8f/26-6aaccede2e342.webp' /></p><p>
 222 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 14.1 ஓவர்களில் 94 ஓட்டங்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p></p><p>இதன் மூலம், 127 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e04bbafe-88bb-42e4-a756-bb90ccc82b78/26-6aacceded9064.webp' /></p><p> 

34 பந்துகளில், 9 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் உட்பட 108 ஓட்டங்கள் குவித்த அபிஷேக் சர்மா, ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.</p><h3> 

சாதனைகள் </h3><p>

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்தியர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக, 2017 ஆம் ஆண்டில் ரோகித் சர்மா 35 பந்துகளில் சதமடித்திருந்தார்.&nbsp;</p><p>

மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 30 பந்துகளில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/194d8fed-ec31-45a6-8fa2-7d73b0ba9954/26-6aaccedf8d1d5.webp' /></p><p> 

எஸ்டோனியா வீரர் சாஹில் சவுகான் சைப்ரஸ் அணிக்கு எதிராக வெறும் 27 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். </p><p> 

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில், டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரராக அபிஷேக் சர்மா சாதனை படைத்துள்ளார். முன்னதாக சிக்கந்தர் ராசா மற்றும் பின் ஆலன் 33 பந்துகளில் சதம் அடித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p> 

மேலும், டி20 கிரிக்கெட்டில், 10 சதங்களை அடித்து அதிக சதங்களை அடித்த இந்தியராக விராட் கோலி இருந்தார். தற்போது அபிஷேக் சர்மா இந்த சாதனையை சமன் செய்துள்ளார். </p><p>

இதே போல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில், இந்திய அணி, முதல் முறையாக பவர் பிளேவில் 100 ஓட்டங்களை அடித்துள்ளது.</p><p>

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணிகளின் பட்டியலில், கனடாவின் சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. 

இரு அணிகளும் தலா 10 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளன.</p><p>இந்திய அணி 221 ரன்களை அடித்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில், அதிக 200+ ஓட்டங்களை அடித்த அணிகளின் பட்டியலில் இந்திய அணி இதுவரை 53 முறை 200+ ஓட்டங்களை அடித்து முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 31 முறை 200+ ஓட்டங்களை கடந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T05:40:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிட்ட அமெரிக்கா... சவுதியின் கோரிக்கையை அடுத்து ஹவுதிகள் தொடர்பில் உதவ முன்வந்த சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/to-help-rein-in-houthis-1789706309"></link>
            <id>https://news.lankasri.com/article/to-help-rein-in-houthis-1789706309</id>
            <summary type="text">China presses Iran to help rein in Houthis: ஹவுதிகளைக் கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானை சீனா வலியுறுத்தியுள்ளது.
ஈரான் ஆதரவு ஹவுதிகள் நடத்திய அதிரடி இராண...</summary>
            <content type="html"><![CDATA[<p>China presses Iran to help rein in Houthis: ஹவுதிகளைக் கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானை சீனா வலியுறுத்தியுள்ளது.
</p><p>ஈரான் ஆதரவு ஹவுதிகள் நடத்திய அதிரடி இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து, சவுதி அரேபியா சீனாவிற்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று, யேமனின் ஹவுதிகளைக் கட்டுப்படுத்த உதவுமாறு சீனா ஈரானிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2>தனிப்பட்ட முறையில்</h2><p>
</p><p>செங்கடல் கடற்கரை மற்றும் பாப்-எல்-மண்டேப் நீரிணைப் பகுதிகளில் ஹவுதிகள் மின்னல் வேகத்தில் முன்னேறியதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவை அதிக பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவானது; இதனைத் தொடர்ந்து சவுதி சீனாவின் உதவியை நாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2afa21a-27c4-459e-b807-4021bf573d6e/26-6aacc04738fe5.webp' /></p><p> </p><p>ஏற்கனவே ஹவுதிகளுக்கு எதிராக உதவ முன்வர வேண்டும் என்ற சவுதி அரேபியாவின் கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்திருந்தது. இந்த நிலையில், சீனா பகிரங்கமாக நிதானம், பேச்சுவார்த்தை மற்றும் பாதுகாப்பான கடல்வழிப் போக்குவரத்தை மீட்டெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது, ஆனால் சீனா தனிப்பட்ட முறையில் ஹவுதிகள் தொடர்பில் ஈரானிடம் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. </p><p>உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா சார்ந்திருக்கும் எரிசக்திப் போக்குவரத்துப் பாதைகளில் மோதல் மேலும் பரவுவதைத் தடுக்க, ஹவுதி அமைப்பினர் மீதான தனது செல்வாக்கைப் பயன்படுத்துமாறு ஈரான் அரசை சீனா கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p> </p><p>சீனா இந்த விவகாரத்தை எவ்வாறு முன்னெடுத்தது என்பது உள்ளிட்டத் தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி புதன்கிழமையன்று சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது அது தெரிவிக்கப்பட்டதா என்பதும் உறுதி செய்யப்படவில்லை. </p><p>ஆனால், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலேயே இப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையும் அமைதியும் தங்கியுள்ளன என்பதே ஈரானின் பதில் என்று தெரிய வந்துள்ளது. </p><p>மேலும், ஹவுதிகள் மீதான தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தத் தவறினால், ஈரானுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்க முயலும் என்று சீன அதிகாரிகள் வெளிப்படையான அச்சுறுத்தல்களை விடுக்கவோ அல்லது குறிப்பிடவோ இல்லை என்றும் கூறப்படுகிறது. </p><p>சீனா ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஈரானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்து வருகிறது; மேலும், ஈரானிய எண்ணெயின் முக்கிய வாடிக்கையாளராகவும் அது தொடர்ந்து திகழ்கிறது.</p><h2>எந்தவொரு அச்சுறுத்தலும்</h2><p> </p><p>2025-ஆம் ஆண்டில் ஈரானின் கடல்வழி எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை சீனாவிற்கே மேற்கொள்ளப்பட்டன; இது நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 1.4 மில்லியன் பீப்பாய்கள் ஆகும். </p><p>ஏமனில் சவுதி அரேபியாவின் சுன்னி மத ஆதிக்கத்தை எதிர்த்து 1990-களில் உருவான ஹவுதி அமைப்பினர், ஈரானால் ஆயுதங்கள், பயிற்சி மற்றும் நிதியுதவிகளைப் பெற்று வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcb7d733-d488-481c-ad1f-bda24ac17711/26-6aacc047e44d0.webp' /></p><p> </p><p>மேலும் இவர்கள் ஈரானின் மேற்கத்திய மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட 'எதிர்ப்பு அச்சு' (Axis of Resistance) கூட்டணியின் ஒரு பகுதியாகவும் உள்ளனர்.
</p><p>ஈரான் ஹார்முஸ் நீரிணையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதிலிருந்து, செங்கடலிலும் பாப் அல்-மண்டேப் நீரிணை வழியாகவும் செல்லும் கப்பல் போக்குவரத்திற்கு ஹவுதிகளால் ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் கடுமையாக மோசமாக்குவதோடு, ஒரு பரந்த பிராந்திய மோதலுக்கான அபாயத்தையும் அதிகரிக்கும்.</p><p></p><p> </p><p>ஈரானும் அதன் கூட்டாளிகளும் இப்பிராந்தியத்தின் முக்கிய கடல்வழிப் பாதையின் இரு முனைகளிலும் தற்போது அழுத்தத்தைச் செலுத்தி வரும் நிலையில், சீனா இவ்விரு முனைகளையும் சார்ந்திருக்கிறது. </p><p>சீனாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏறக்குறைய பாதி இப்பகுதியிலிருந்தே வருகிறது; அதேவேளையில், சீனாவுக்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் 300 பில்லியன் டொலராக உள்ளது. </p><p>இருப்பினும், ஹவுதிகள் விவகாரத்தில் சீனாவின் அழுத்தத்தால் ஈரான் நடவடிக்கை எடுக்குமா என்பது, ஹவுதிகளின் அடுத்த நகர்வுகளில் இருந்து தெரியவரும் என்கிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-18T04:35:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிஞ்சு சிறார்கள்... ஈரானில் அமெரிக்கா போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐ.நா. நிபுணர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-committed-war-crimes-1789702587"></link>
            <id>https://news.lankasri.com/article/us-committed-war-crimes-1789702587</id>
            <summary type="text">UN experts say US committed war crimes: அமெரிக்கா போர்க்குற்றங்களைச் செய்ததாக ஐ.நா. நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஈரானில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில...</summary>
            <content type="html"><![CDATA[<p>UN experts say US committed war crimes: அமெரிக்கா போர்க்குற்றங்களைச் செய்ததாக ஐ.நா. நிபுணர்கள் கூறுகின்றனர்.
</p><p>ஈரானில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் குறைந்தது 177 பேர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களில், அமெரிக்கா போர்க்குற்றங்களை இழைத்திருப்பதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><h2>அமெரிக்கா நம்பவில்லை</h2><p>
</p><p>ஈரான் மீதான சுதந்திரமான சர்வதேச உண்மை கண்டறியும் குழுவின் புதிய அறிக்கை ஒன்றின்படி, மினாபில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மற்றும் லமெர்டில் உள்ள ஒரு விளையாட்டு வளாகத்தின் மீது பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள், பொதுமக்கள் உயிரிழப்புகளையும் பொது உள்கட்டமைப்புகளுக்கு சேதத்தையும் ஏற்படுத்திய பாகுபாடற்ற தாக்குதல்களாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1911fdcd-091d-40ce-9308-383ecec98815/26-6aacb1bd6ee7c.webp' /></p><p> </p><p>லாமெர்ட் (Lamerd) மீது தாக்குதல் நடத்தியதை அமெரிக்கா முன்னதாக மறுத்திருந்ததுடன், மினாபில் (Minab) என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியிருந்தது. </p><p>அந்த அறிக்கையில் உள்ள தரவுகளை அமெரிக்கா நம்பவில்லை என்று வெளிவிவகரா அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். ஜனவரி மாதம் அரசாங்கத்திற்கு எதிரான பெருந்திரள் போராட்டங்களை ஒடுக்கியபோது, ​​ஈரானிய அதிகாரிகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததையும் நிபுணர்கள் கண்டறிந்தனர்.</p><p></p><p> </p><p>31 மாகாணங்கள் முழுவதிலும் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட கொலைகள், மலைக்க வைக்கும் மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிலானதாக இருந்தன என்று அவர்கள் கூறினர். </p><p>இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்து ஈரானும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை; இருப்பினும், மனித உரிமைகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் மீறப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அது முன்னரே நிராகரித்துள்ளது. </p><p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான தங்கள் சமீபத்திய அறிக்கையைத் தயாரிப்பதற்காக, அந்தத் தூதுக்குழுவின் மூன்று சுயாதீன நிபுணர்கள், மோதலின் போது பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதல்கள் இரண்டை குறித்து விசாரணை நடத்தினர்.</p><h2>120 பிஞ்சு சிறார்கள்</h2><p> </p><p>பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கியபோது, ​​மினாப் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஷஜரே தைய்யெபே (Shajareh Tayyebeh) தொடக்கப் பள்ளியின் மீது ஏவப்பட்ட டொமாஹாக் (Tomahawk) ஏவுகணைகள் தாக்கியதில், 120 பிஞ்சு சிறார்கள் உட்பட குறைந்தது 156 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>அன்று தாக்குதலுக்குள்ளான 'இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை'யின் (IRGC) கடற்படை வளாகத்திற்கு அருகிலேயே அந்தப் பள்ளி அமைந்திருந்தாலும், அப்பள்ளியைத் தெளிவாக அடையாளம் காண முடிந்தது என்றும், அது ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதைக் குறிக்கும் எந்தத் தகவலும் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழுவின் நிபுணர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90efc2d9-2217-4f50-854b-a325cb5ab7f0/26-6aacb1be2fd93.webp' /></p><p>
</p><p>அமெரிக்கப் படைகளே இதற்குப் பொறுப்பு என்று அமெரிக்க ராணுவத்தின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாகக் கூறும் ஊடகச் செய்திகள் மற்றும் மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரில் 'டொமாஹாக்' (Tomahawk) ஏவுகணைகளைக் கொண்ட ஒரே தரப்பு அமெரிக்கா ஆகியவற்றை உள்ளடக்கிய திரட்டப்பட்ட சான்றுகளின் அடிப்படையில், அப்பள்ளி மீதான தாக்குதல் அமெரிக்காவாலேயே நடத்தப்பட்டது என்று நம்புவதற்குத் தகுந்த காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். </p><p>மட்டுமின்றி, தொடர்புடையப் பள்ளி இரண்டு முறை தாக்கப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் கூறியுள்ளனர். மினாப் தாக்குதல் குறித்த தங்களது விசாரணையின் முடிவுகளை அமெரிக்க ராணுவம் இன்னும் வெளியிடவில்லை; இருப்பினும், பொதுமக்களைக் குறிவைத்து ஒருபோதும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், பிப்ரவரி 28 அன்று துல்லியத் தாக்குதல் ஏவுகணைகள் (PrSM) லாமெர்ட் (Lamerd) நகரில் உள்ள ஒரு விளையாட்டு வளாகம் மற்றும் குடியிருப்புப் பகுதியின் மீது டங்ஸ்டன் குண்டுகளை (tungsten pellets) வீசின; இதில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 21 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>மீண்டும், விளையாட்டு வளாகத்தை தெளிவாக அடையாளம் காண முடிவதாகவும், அது இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதைக் குறிக்கும் எந்தத் தகவலும் இல்லை என்றும் அந்த உண்மை கண்டறியும் குழுவின் நிபுணர்கள் கூறியுள்ளனர். </p><p>அந்தத் தாக்குதலை அமெரிக்காதான் நடத்தியது என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக அவர்கள் தங்கள் முடிவாகத் தெரிவித்தனர்; இதற்குச் சான்றாக, மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரில் 'PrSM' ஏவுகணைகளைக் கொண்ட ஒரே தரப்பு அமெரிக்கா மட்டுமே என்ற உண்மையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T03:33:11+00:00</updated>
        </entry>
    </feed>
