<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-21T06:07:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி அமைச்சர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-indian-orgin-ministers-in-andy-burnham-cabinet-1784613633"></link>
            <id>https://news.lankasri.com/article/2-indian-orgin-ministers-in-andy-burnham-cabinet-1784613633</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளார்.

அவ்வகையில், தனது அமைச்சரவையில் இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளார்.</p><p>

அவ்வகையில், தனது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினர் இரண்டு பேருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார் ஆன்டி பர்னாம்.</p><h3>

அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி அமைச்சர்கள்</h3><p>

ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் பொறுப்பு வாங்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியினரில் ஒருவர், கனிஷ்கா நாராயண்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02fbdf3a-debb-471d-80d7-0236d3c256ce/26-6a5f0b02a7e8c.webp' /></p><p>
செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராக நாராயணுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, முதன்முறையாக பிரதமரின் அமைச்சரவைக் கூட்டத்திலும் பங்கேற்கும் வாய்ப்பும் நாராயணுக்கு கிடைத்துள்ளது.
</p><p>
நாராயண், இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பிறந்தவர் ஆவார். தனது 12ஆவது வயதில் வேல்ஸ் நாட்டின் தலைநகரான கார்டிஃபுக்கு புலம்பெயர்ந்தார் அவர்.</p><p>

2024ஆம் ஆண்டு Vale of Glamorgan தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயண், குறுகிய காலத்திலேயே பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்து, தற்போது செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.&nbsp;</p><p></p><p>
ஏற்கனவே, லிசா நந்தி என்னும் இந்திய வம்சாவளியினர் ஒருவரும் ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caa08cff-bedd-4f87-9e55-122ff0456017/26-6a5f0b035bf1f.webp' /></p><p>
அவர், கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவையில் கலாச்சாரத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஆவார். ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் அவர் அதே பொறுப்பில் நீடிக்கிறார்.
</p><p>
2010ஆம் ஆண்டு Wigan தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் லிசா.
</p><p>
லிசாவின் தந்தையான தீபக் நந்தி, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T06:06:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலுவலகத்திலே உயிரை மாய்த்த திரிபுரா டிஜிபி - யார் இந்த அனுராக் தன்கர்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/who-is-anurag-dhankar-tripura-dgp-end-his-life-1784612827"></link>
            <id>https://news.lankasri.com/article/who-is-anurag-dhankar-tripura-dgp-end-his-life-1784612827</id>
            <summary type="text">திரிபுரா டிஜிபி அலுவலகத்திலே உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 உயிரை மாய்த்த திரிபுரா டிஜிபி

திரிபுரா மாநில காவல்துறைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திரிபுரா டிஜிபி அலுவலகத்திலே உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h3>

 உயிரை மாய்த்த திரிபுரா டிஜிபி</h3><p>

திரிபுரா மாநில காவல்துறைத் தலைவராக(DGP) பணியாற்றி வருபவர் அனுராக் தன்கர்(60).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3810cd5-cbd3-4d77-bbe1-792822ee6524/26-6a5f07dc6a82b.webp' /></p><p>

நேற்று காவல்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற அவர், நீண்ட நேரம் வெளியே வராத நிலையில், அவரது உதவியாளர் கூச்சலிட்டுள்ளார். </p><p>

அதன் பின்னர் கதவு உடைக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். </p><p>

தகவலறிந்த திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா, தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு விரைந்தார்.&nbsp;</p><p></p><p>

ஒரு மாநில டிஜிபியே தனது அலுவலகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் திரிபுராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I am deeply shocked and saddened by the tragic demise of Anurag, IPS, Director General of Police, Tripura, who was found hanging in the washroom of his official chamber today.<br><br>Upon receiving the information, I, along with the Chief Secretary and Home Secretary, immediately…</p>&mdash; Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) <a href="https://x.com/DrManikSaha2/status/2079186832542388639?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
எதிர்கட்சிகளின் நீதித்துறை விசாரணைக்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து, அரசு ஒரு நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
</p><p>
திரிபுரா அரசு செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மாநில துக்கத்தை அறிவித்துள்ளது.&nbsp;</p><p>குறிப்புகள் அடங்கிய கடிதம் எதுவும் கைப்பற்றப்பட்டதா என தெரிவிக்க காவல்துறை மறுத்து விட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டாரா? அல்லது பணியில் ஏற்பட்ட அழுத்தமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h3> 

அனுராக் தன்கர்</h3><p>

1994 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அனுராக் தன்கர், உளவுத்துறை டிஜிபி கூடுதல் டிஜிபி மற்றும் சட்டம் ஒழுங்கு ஐஜி உள்ளிட்ட பல மூத்த பதவிகளில் பணியாற்றிய பிறகு, தங்கர் கடந்த ஆண்டு மே 18 அன்று திரிபுரா டிஜிபியாகப் பொறுப்பேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00bed1d0-ff96-4b4a-9a4f-1c4e587b0067/26-6a5f07dd1a749.webp' /></p><p>

சிபிஐ மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஆகியவற்றில் மத்தியப் பிரதிநிதியாகப் பணியாற்றியதுடன், 2003-04 காலகட்டத்தில் கொசோவோவில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியிலும் தன்கர் அங்கம் வகித்தார். </p><p>

மேலும், சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் காவல்துறைப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p>குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி சம்பந்தப்பட்ட ரூ.13,000 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குறித்த சிபிஐ விசாரணை 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை மறுவிசாரணை செய்த சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு (SIT) தலைமை தாங்கியுள்ளார். </p><p>

ஜூன் மாதம் அவரது பதவிக்காலத்தை நிறைவடடைந்த நிலையில், 11 மாத கால நீட்டிப்பைப் பெற்றிருந்தார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T05:52:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் உள்துறைச் செயலராக ஷபானா மஹ்மூத்... மக்கள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shabana-mahmood-retained-as-uk-home-secretary-1784610272"></link>
            <id>https://news.lankasri.com/article/shabana-mahmood-retained-as-uk-home-secretary-1784610272</id>
            <summary type="text">பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சியில் உள்துறைச் செயலராக பொறுப்பு வகித்த ஷபானா மஹ்மூதே, புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் உள்துறைச் செயலராக நீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சியில் உள்துறைச் செயலராக பொறுப்பு வகித்த ஷபானா மஹ்மூதே, புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் உள்துறைச் செயலராக நீடிக்கிறார்.</p><h3>

ஷபானா வெளியிட்டுள்ள செய்தி</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f897f3-9a8e-4c4d-bd87-02b89993451e/26-6a5efde19ca3a.webp' /></p><p>ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் தான் உள்துறைச் செயலராக நீடிப்பது உறுதியானதைத் தொடர்ந்து சமூக ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ஷபானா, ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் உள்துறைச் செயலராக நீடிப்பதை தான் கௌரவமாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshabanamahmoodforladywood%2Fposts%2Fpfbid027B95Eu2P3B3QqEHcwTqy7R3ML9AGutnr6p3xpm5nDmerE9axjqNS9da2tqmuWdLBl&show_text=true&width=500" width="500" height="660" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>


மேலும், என் கருத்து ஒருதலைப்பட்சமாக இருக்கலாம், ஆனால் இந்தத் துறையிலேயே இதுதான் சிறந்த வேலை என்றும் குறிப்பிட்டுள்ள ஷபானா, நமது தெருக்களைப் பாதுகாப்பானவையாகவும், நமது புலம்பெயர்தல் அமைப்பை அனைவருக்கும் நியாயமானதாகவும் மாற்றுவதற்கான பெரும் சீர்திருத்தப் பணியை நாம் தொடங்கியுள்ளோம். இப்போது அந்த வேலையை நாம் முடிப்போம் என்றும் கூறியுள்ளார்.</p><p>
ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் ஷபானா மஹ்மூதுக்கு சேன்ஸலர் பதவி கொடுக்கப்படலாம் என பிரித்தானிய ஊடகங்கள் எழுதிவந்தன.
</p><p>
அத்துடன், எரிசக்திச் செயலரான எட் மிலிபேண்ட், முன்னாள் சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங், வெளியுறவுச் செயலரான யெவட் கூப்பர் என பலரது பெயர்கள் அடிபட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக, பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஜான் ஹீலியை சேன்ஸலராக்கியுள்ளார் ஆன்டி பர்னாம்.&nbsp;</p><p></p><p>
இதற்கிடையில், ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் தான் உள்துறைச் செயலராக நீடிப்பது குறித்து ஷபானா வெளியிட்டுள்ள செய்தியின் கீழ் கருத்து தெரிவித்துள்ளவர்கள், ஷபானா, நீங்கள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் விடயத்தில் எடுத்த நடவடிக்கைகள் நியாயமானவை.
</p><p>
ஆனால், நீங்கள் சட்டப்படி புலம்பெயர்ந்தோரை அங்கீகரிக்கவில்லை. மீண்டும் உள்துறைச் செயலராக பொறுப்பேற்றுள்ள நீங்கள், அவர்கள் பிரித்தானியாவுக்கு அளித்துவரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T05:14:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழங்கால் வரை முடி வளர உதவும் நெல்லிக்காய் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/home-made-hair-oil-for-hair-growth-in-tamil-1784608946"></link>
            <id>https://news.lankasri.com/article/home-made-hair-oil-for-hair-growth-in-tamil-1784608946</id>
            <summary type="text">நெல்லிக்காய் உடலுக்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும், இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது.

வைட்டமின் சி முடிக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெல்லிக்காய் உடலுக்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும், இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது.
</p><p>
வைட்டமின் சி முடிக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து என்பதால் நெல்லிக்காய் எண்ணெய் முடி ஆரோக்கியத்துக்கு நல்லது.</p><p>இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மயிர்க்கால்களைத் தூண்டி, முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவுகின்றன.</p><p>அந்தவகையில், முழங்கால் வரை முடி வளர உதவும் நெல்லிக்காய் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li>

நெல்லிக்காய்- 10
</li><li>தேங்காய் எண்ணெய்- 2 கப்
</li></ul><h2>
எப்படி தயாரிப்பது?</h2><p>
முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் அடுப்பில் ஒரு இரும்பு வாணல் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவைக்கவும்.
</p><p>
அடுத்து இதில் நெல்லிக்காய் அரைத்த சாற்றை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d60a4bfd-6d02-41d5-82a7-cf86faf31b49/26-6a5ef8b449a87.webp' /></p><p>இதற்கடுத்து எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து எண்ணெய் ஆறியதும் இதனை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
</p><p>
நெல்லிக்காய் எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி, இரண்டு கைகளாலும் தேய்த்து முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும்.
</p><p>
பின்னர் 10 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்து ஊறவிட்டு கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T04:45:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் ஏற்க முடியாத நடத்தை... 50 சதவீதம் வரி விதித்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-slaps-50-per-cent-tariffs-1784609203"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-slaps-50-per-cent-tariffs-1784609203</id>
            <summary type="text">அமெரிக்கக் கார்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் மீதான கனடாவின் சமமற்ற நடத்தையை சுட்டிக்காட்டி, அதிரடியாக 50 சதவீதம் வரி விதித்துள்ளார் டொனால்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கக் கார்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் மீதான கனடாவின் சமமற்ற நடத்தையை சுட்டிக்காட்டி, அதிரடியாக 50 சதவீதம் வரி விதித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.</p><h2>முக்கிய ஏற்றுமதிகளுக்கு</h2><p>
</p><p>ட்ரம்பின் இந்த அதிரடி நகர்வால் ஒயின் போன்ற அன்றாட நுகர்வுப் பொருட்கள் மற்றும் ஹாக்கி மட்டைகள், சிமெண்ட் போன்ற தொழில்சார் பொருட்கள் ஆகியவை குறிவைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a69db7-8f4f-4aba-b5e7-9276414583f7/26-6a5efb29b920c.webp' /></p><p> </p><p>இருப்பினும், எரிசக்தி, பொட்டாஷ், முக்கிய கனிமங்கள் மற்றும் மீன் போன்ற பல முக்கிய ஏற்றுமதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் வாரங்களில் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்த கனடா தயாராக இருப்பதாகப் பிரதமர் மார்க் கார்னி பதிலளித்துள்ளார்.</p><p> இந்த வரிகள் 30 நாட்களில் அமுலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், வட அமெரிக்க அண்டை நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பதற்றங்கள் கணிசமாக அதிகரிப்பதைக் இது குறிக்கிறது. </p><p>கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு இடையிலான தற்போதைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான USMCA-வின் கீழ் அந்தப் பொருட்கள் இடம்பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும், சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்கள் மீதும் புதிய வரிகள் பொருந்தும்.</p><p></p><p> </p><p>இதனிடையே, ட்ரம்பின் இந்த நகர்வு கனடிய இறையாண்மைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்றும் பிரதமர் கார்னி குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நடைமுறையில் உள்ள வர்த்தகத் தடைகளை, திங்கட்கிழமை விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகள் மேலும் வலுப்படுத்துகின்றன. </p><p>கனடிய எஃகு, அலுமினியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் மீது அமெரிக்கா 15 முதல் 50 சதவீதம் வரையிலான சுங்கவரிகளைத் தொடர்ந்து விதித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d758b70-53da-4bf9-9947-cfc9f05b96c9/26-6a5efb2a7fdb1.webp' /></p><p> </p><p>மேலும், கனடிய மென்மரக் கட்டைகள் (softwood lumber) மீது 35 சதவீதம் சுங்கவரியையும், கார்களில் பயன்படுத்தப்படும் அமெரிக்கத் தயாரிப்பு அல்லாத உதிரிபாகங்கள் மீது 25 சதவீதம் வரியையும் அமெரிக்கா விதிக்கிறது.</p><h2>இது நியாயமற்றது</h2><p> </p><p>அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில எஃகு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீது கனடா தனது சொந்த 25 சதவீத சுங்கவரிகளையும் கொண்டுள்ளது. </p><p>கனடாவில் ஏற்படும் காட்டுத்தீயின் புகை அமெரிக்க நகரங்களுக்குள் பரவுவது தொடர்பாக, கனடா மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து திங்கள்கிழமை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், திங்கள்கிழமை ட்ரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவுகளில் காட்டுத்தீ பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6766c3f7-63c6-4d80-8ca5-e53961ca5a3e/26-6a5efb2b2d30e.webp' /></p><p> </p><p>அதற்குப் பதிலாக, கார்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் தொடர்பாக கனடாவுக்கு ஏற்கனவே தெரிந்திருந்த அமெரிக்க வர்த்தகச் சிக்கல்களை அந்த மூன்று அறிவிப்புகளும் பட்டியலிடுகின்றன; இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைக் குறிப்பதாக கூறுகின்றனர்.
</p><p>கார்களைப் பொறுத்தவரை, USMCA ஒப்பந்தத்தின் கீழ் வராத அமெரிக்க வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் மீது கனடா வரி விதிப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டுகிறார். இது நியாயமற்றது என்றும், மற்ற நாடுகளுக்கு இத்தகைய வரியை விதிக்காததன் மூலம் கனடா அமெரிக்காவை பாகுபாட்டுடன் நடத்தியுள்ளது என்றும் அவர் வாதிடுகிறார். </p><p>வட அமெரிக்காவில் வாகன உற்பத்தித் துறையானது கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு இடையே மிகவும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T04:45:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-declares-full-scale-war-1784606987"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-declares-full-scale-war-1784606987</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் மீண்டும் முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ள ஈரான், அமெரிக்கா படையெடுப்பைத் தொடங்கும் என்பதையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் மீண்டும் முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ள ஈரான், அமெரிக்கா படையெடுப்பைத் தொடங்கும் என்பதையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.</p><h2>தீவிரமடையக்கூடும்</h2><p>
</p><p>மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அப்பகுதிக்கு மேலும் பல போர் விமானங்களை அனுப்பியதைத் தொடர்ந்து ஈரான் இதை அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce2c704f-946c-46c0-842b-264e14091003/26-6a5ef23d479b7.webp' /></p><p> </p><p>இந்த நிலையில் மோதல் தீவிரமடையக்கூடும் என்பதைக் குறிக்கும் வகையில், ஐரோப்பாவில் உள்ள தளங்களிலிருந்து கூடுதல் F-16 மற்றும் F-35 போர் விமானங்களையும், மேலும் பல வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் அமெரிக்கா நிலைநிறுத்தி வருகிறது. </p><p>தற்போது முறிந்துவிட்ட அமைதி ஒப்பந்தம் கடந்த வாரம் சிதைந்து கொண்டிருந்த நிலையில், போரைத் தீவிரப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இராணுவத் தலைவர்களிடமிருந்து விளக்கம் கோரியிருந்தார். </p><p>ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கர்க் தீவைக் (Kharg Island) கைப்பற்றுவது அல்லது பிக்காக்ஸ் மலையில் (Pickaxe Mountain) உள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசுவது ஆகியவை இதில் அடங்கும்.</p><p></p><p> </p><p>இப்போர் பிராந்தியம் தழுவிய மோதலாக மாறக்கூடும் என்பதற்கான மற்றொரு அறிகுறியாக, ஈரானை ஆதரிக்கும் ஏமன் நாட்டின் ஹவுதிகள், சவுதி அரேபியா மீது கடல்வழித் தடையை அறிவித்துள்ளனர். </p><p>கடந்த வாரம் சவுதி தரப்பினர் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டிய அந்த அமைப்பு, இது கண்ணுக்குக் கண் நடவடிக்கை என்றும் கூறியுள்ளது.</p><p> இதனிடையே, ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாகத் தாக்குதல் நீடித்த நிலையில், ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f2da14f-7347-4001-8edb-a9a5ca7add30/26-6a5ef23ed8a45.webp' /></p><p> </p><p>உண்மையில், ஈரான் தற்போது ஒரு முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளது என்றும், நாம் யதார்த்தத்தை உணர்ந்து, இந்த எதிர்ப்பின் இயல்பான விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>அத்துடன், அமெரிக்க இராணுவம் எந்த நேரத்திலும் ஈரானுக்குள் களமிறங்கும் என்றும், அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது.</p><h2>விளைவுகள் மோசமாக இருக்கும்</h2><p> </p><p>இந்த நிலையில், அமெரிக்கப் படைகளைத் தரைவழித் தாக்குதலில் எதிர்கொண்டு வரவேற்கத் தங்கள் நாடு ஆவலுடன் எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாய் தெரிவித்தார். </p><p>மேலும், கர்க் தீவை அமெரிக்கா தொட முயன்றால், அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்கா தனது சமீபத்திய தாக்குதல்களில், ஈரானின் தென்மேற்குப் பகுதியில் பகுதியளவு கட்டப்பட்டிருந்த டார்கோவின் (Darkhovin) அணுமின் நிலையத்தையும் இலக்கு வைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef075222-dd55-40a2-b050-a47a9f435111/26-6a5ef23e307a7.webp' /></p><p> </p><p>ஆனால், ஈரானின் 
ராணுவக் கட்டளை மையங்கள், வான் பாதுகாப்புத் தளங்கள் மற்றும் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்களை மட்டுமே இலக்கு வைத்ததாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் தெரிவித்துள்ளது. </p><p>மேலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை எட்டும் வாய்ப்புகளை தமது நிர்வாகம் நிராகரிக்காது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>மட்டுமின்றி, ஈரான் மீது படையெடுப்பது சிக்கலில் முடியும் என்பதையும் இராணுவ அதிகாரிகள் தரப்பு ட்ரம்பிடம் விளக்கமளித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T04:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு மாதங்களில் திருமணம்... உக்ரைன் அருகே ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட கேரள மாலுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-sailor-killed-russian-atack-1784603717"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-sailor-killed-russian-atack-1784603717</id>
            <summary type="text">துறைமுக நகரமான ஒடெசா கடற்பகுதியில் ரஷ்யா முன்னெடுத்த மின்னல் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு இந்தியர்களில், கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயனும் ஒருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுக நகரமான ஒடெசா கடற்பகுதியில் ரஷ்யா முன்னெடுத்த மின்னல் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு இந்தியர்களில், கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயனும் ஒருவர்.</p><h2>இரண்டு மாதங்களில்</h2><p> </p><p>
உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திற்கு அப்பால் 'எம்வி கோல்டன் லியோ' (MV Golden Leo) என்ற சரக்குக் கப்பல் மீது ரஷ்யா மின்னல்&nbsp;தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/868e4b88-ac39-4a13-aa12-a3e2663d40ac/26-6a5ee5a3dc671.webp' /></p><p> </p><p>இதில் கொல்லப்பட்ட அகில் ஜோயன்
காசர்கோடு மாவட்டத்தின் வெள்ளரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர். 26 வயதான இவர், அடுத்த இரண்டு மாதங்களில் திருமணம் செய்துகொள்ள இருந்தார். </p><p>ஜோயன் கடந்த ஆறு ஆண்டுகளாகக் கப்பலில் மாலுமியாகப் பணியாற்றி வருகிறார்; அவர் விரைவில் தனது வேலையை மாற்றிக்கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்களின் தகவல்படி, அந்த இளம் மாலுமி, மின்சாதனக் கடையில் பணிபுரியும் ஜோயன் மற்றும் காப்பீட்டு முகவரான சாலி ஆகியோரின் ஒரே மகன் என்றே தெரிய வருகிறது. </p><p>மட்டுமின்றி, 

அவர்கள் ஒரு சாதாரணக் குடும்பம் எனவும், அவர்களின் எதிர்காலம் பெரும்பாலும் அகிலைச் சார்ந்தே இருந்தது எனவும், மிக சமீபத்தில்தான் சொந்தமாக ஒரு வீட்டை கட்டியிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>மேலும், அகில் ஜோயன் தனது நிச்சயதார்த்த விழாவிற்காக சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்ததாகவும், இன்னும் இரண்டு மாதத்தில் அகிலின் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. </p><p>அகில் பணிபுரிந்த கப்பல் நிறுவனத்திடமிருந்து திங்கட்கிழமை மாலையில் வந்த மின்னஞ்சல் மூலமாகவே அவரது குடும்பத்தினர் அவரது இறப்புச் செய்தியை அறிந்துகொண்டனர். </p><p>இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கூடுதல் விவரங்களைச் சேகரித்து, தேவையான நடைமுறைகளை நிறைவு செய்ய முயற்சித்து வருவதாக கிராம நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.</p><h2>கேரள முதலமைச்சர்</h2><p> </p><p>அகில் தனது 19-வது வயதில் வணிகக் கப்பலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனிடையே, கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவலில், </p><p>ரஷ்யத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த மாலுமி கொல்லப்பட்ட விவகாரத்தில், கூடுதல் தகவல்களைத் திரட்டுவதற்காக ரஷ்யத் தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்துடன் வெளிநாடு வாழ் கேரளத்தவர் விவகாரத் துறை (NORKA) அமைப்பு ஒருங்கிணைந்து செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ebe614f-ee23-4ac2-ae25-579bd2df94f7/26-6a5ee5a4a5662.webp' /></p><p> </p><p>இதனிடையே, சர்வதேச செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், 
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசாவின் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் ஒன்று, ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஞாயிற்றுக்கிழமையன்று ரஷ்யப் படைகளால் மின்னல் தாக்குதலுக்கு இலக்கானதாகவும், </p><p>இதில் சிரியாவைச் சேர்ந்த ஐந்து மாலுமிகள் உட்பட 10 பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் உக்ரைனின் கடல்சார் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. உக்ரேனில் இருந்து சோளம் ஏற்றிச் சென்ற அந்தக் கப்பலிலிருந்து காயங்களுடன் எட்டு பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T03:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வணிக கப்பல் மீது பாய்ந்த 3 ஏவுகணைகள்: ஒடேசாவில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/4-indian-sailors-killed-by-odessa-port-attack-1784589659"></link>
            <id>https://news.lankasri.com/article/4-indian-sailors-killed-by-odessa-port-attack-1784589659</id>
            <summary type="text">உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். ஒடேசா துறைமுகம் மீது தாக்குதல்உக்ரைனிய துறைமுகமான ஒடேசாவில் இருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.</p><h3> ஒடேசா துறைமுகம் மீது தாக்குதல்</h3><p>உக்ரைனிய துறைமுகமான ஒடேசாவில் இருந்து புறப்பட்ட வணிக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 4 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> ஜூலை 19ம் திகதி நடந்த இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றொரு இந்தியர் &nbsp;படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cba4ea1-b78a-4408-8ebc-7754f7cd7368/26-6a5ead5de6f44.webp' /></p><p> </p><p>&nbsp;ரஷ்ய ஏவுகணை நடத்திய இந்த தாக்குதலினால் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் இந்தியர்கள் மற்றும் சிரியர்கள் என மொத்தம் 17 பேர் வரை பணியாற்றியுள்ளனர்.</p><p> தாக்குதலுக்கு பிறகு இரவு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல் பணியில் 8 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்.</p><p> இதில், 9 மாலுமிகள் மற்றும் 1 கடல் வழி காட்டி என 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> இந்திய கப்பலின் விவரம்</h2><p>
</p><p>ரஷ்ய தாக்குதலில் பாதிக்கப்பட்ட கப்பல், மும்பை சேர்ந்த “ஓஷன் கிரேஸ் ஷிப்பிங் நிறுவனத்தின் M V&nbsp; கோல்டன் லியோ ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/628641b2-b008-4c5e-9a6d-c4c0958773bd/26-6a5ead5d41df2.webp' /></p><p> ஒடேசா தறைமுகத்தில் இருந்து மக்காச்சோளம் போன்ற பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட M V&nbsp; கோல்டன் லியோ கப்பல் மீது 3 ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியுள்ளன.</p><p> மேலும் இந்த கப்பல் கினியா - பிசாவ் கொடியுடன் இயங்கியது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T00:14:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிப்லைன் சவாரியில் திடீரென கழன்ற பாதுகாப்பு பூட்டு: 40 அடி உயரத்தில் இருந்து சுற்றுலா பயணி: வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dandeli-zipline-collapse-karnataka-tourist-injurie-1784592823"></link>
            <id>https://news.lankasri.com/article/dandeli-zipline-collapse-karnataka-tourist-injurie-1784592823</id>
            <summary type="text">ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். ஜிப்லைன் விபத்துடான்டேலி ரிசார்ட் ஒன்றில் ஜிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.</p><h2> ஜிப்லைன் விபத்து</h2><p>டான்டேலி ரிசார்ட் ஒன்றில் ஜிப்லைன் சவாரியின் போது பாதுகாப்பு சாதனம் பழுதடைந்ததால் 40 அடி உயரத்தில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் கீழே விழுந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> விஜயபுராவை சேர்ந்த குபேர் சுர்பூர்(Kuber Surpur) என்ற நபர் ஜிப்லைன் சவாரியை தொடங்கிய சில நொடிகளில் அவரது பாதுகாப்பு பூட்டு திடீரென கழன்று விழுந்தது.</p><p> இதனால் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த குபேர் சுர்பூர் பலத்த காயமடைந்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">📍Karnataka | <a href="https://x.com/hashtag/Watch?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Watch</a>: A tourist from Vijayapura sustained severe injuries after allegedly falling nearly 40 feet during a zipline ride at a resort in Dandeli after the safety lock reportedly failed mid-ride. <a href="https://t.co/AdZJUeur3K">pic.twitter.com/AdZJUeur3K</a></p>&mdash; NDTV (@ndtv) <a href="https://x.com/ndtv/status/2079057658674639021?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அவருக்கு கை, கால்களில்&nbsp; எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதுடன், நரம்பு பாதிப்புகளும் ஏற்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் சம்பந்தப்பட்ட ரிசார்ட்டில் இருந்த உபகரணங்கள் துருப்பிடித்தும், முறையாக பராமரிக்கப்படாமலும் இருந்ததாக குபேரின் குடும்பத்தினர் ரிசார்ட் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccf4e1c6-79ad-4f76-a79b-ae7b944dbdba/26-6a5eb9b9493e2.webp' /></p><p> விபத்தில் பாதிக்கப்பட்ட குபேர் முதலில் டான்டேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக மிராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p> இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-21T00:13:54+00:00</updated>
        </entry>
    </feed>
