<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-24T03:35:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா, கனடா உட்பட 80 நாடுகளின் மீது இடியை இறக்கிய டொனால்ட் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-tariffs-80-countries-1784862715"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-tariffs-80-countries-1784862715</id>
            <summary type="text">வெள்ளிக்கிழமை அதிகாலையுடன் காலாவதியாகவிருந்த 10 சதவீத உலகளாவிய சுங்கவரிக்கு மாற்றாக, அமெரிக்காவின் டசின் கணக்கான வர்த்தக நட்பு நாடுகள் மீது பரவலான புத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளிக்கிழமை அதிகாலையுடன் காலாவதியாகவிருந்த 10 சதவீத உலகளாவிய சுங்கவரிக்கு மாற்றாக, அமெரிக்காவின் டசின் கணக்கான வர்த்தக நட்பு நாடுகள் மீது பரவலான புதிய சுங்கவரிகளை விதிக்க டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>80-க்கும் மேற்பட்ட</h2><p>
</p><p>அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் சவால்களுக்கு மத்தியிலும், தீவிரமான வர்த்தகக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான ட்ரம்பின் மிகச் சமீபத்திய முயற்சி இதுவென்றே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3db8020-e887-4178-85f6-1bbdd967e3f5/26-6a62d9cc9a44d.webp' /></p><p> </p><p>வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல், பிரித்தானியா, மெக்சிகோ, கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா, இஸ்ரேல், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நாடுகளின் மீது அமெரிக்கா 10 சதவீதம் முதல் 12.5 சதவீதம் ​​சுங்க வரியை விதிக்கவுள்ளது.</p><p> ட்ரம்ப் விதித்த முந்தைய பல வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, பிப்ரவரியில் அவர் விதித்த 10 சதவீதப் பொதுவான வரியை தற்போதைய இந்த வரி விதிப்பு மாற்றி அமைக்கின்றது.</p><p></p><p> </p><p>மேலும், வியாழக்கிழமை பிற்பகல் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீரால் அறிவிக்கப்பட்ட இந்தப் புதிய வரிகள், கட்டாய உழைப்பில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் வரும் என்றே கூறுகின்றனர். </p><p>பிப்ரவரி மாத உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடனேயே, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மீது நிரந்தர வரிகளை விதிப்பதற்காகத் தனது நிர்வாகம் அது குறித்து விசாரணை நடத்தும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.</p><h2>நியாயமற்ற நடைமுறை</h2><p> </p><p>இதனிடையே, அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றான கனடா, கட்டாய உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னணியில் இருப்பதாகக் குறிப்பிட்டு, தங்களை இதில் குறிவைக்கக் கூடாது என்று உடனடியாகப் பதிலளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0343e1c7-a3c9-469e-a610-e13e2a004019/26-6a62d9cbdce8c.webp' /></p><p>
</p><p>அமெரிக்க வேலைவாய்ப்புகளையும் உற்பத்தியையும் பாதுகாக்கவும், வர்த்தப் பற்றாக்குறையைக் குறைக்கவும், அமெரிக்க வர்த்தப் பங்காளிகள் பின்பற்றுவதாக அவர் கருதும் நியாயமற்ற நடைமுறைகளைத் தடுக்கவும், இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் எல்லை வரிகளான சுங்க வரிகளை ஒரு முக்கியக் கருவியாக ட்ரம்ப் நீண்ட காலமாகவே கருதி வந்துள்ளார். </p><p>உண்மையில், அரசியலமைப்பின் கீழ் வரிகளை விதிக்கும் அதிகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. மார்ச் மாதத்தில் ப்ரூக்கிங்ஸ் (Brookings) அமைப்பு மேற்கொண்ட சட்டப் பகுப்பாய்வின்படி, சமீபத்திய சுங்கவரி விதிப்புகள் 'பிரிவு 301'-ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளன; நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் இப்பிரிவு, இதுவரை மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T03:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டினாவை FIFA உலகக் கோப்பையிலிருந்து நீக்க கோரிக்கை- கின்னஸ் சாதனையை நெருங்கிய மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/petition-to-ban-argentina-nears-record-1784855350"></link>
            <id>https://news.lankasri.com/article/petition-to-ban-argentina-nears-record-1784855350</id>
            <summary type="text">2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியின் நடத்தை மற்றும் FIFA சாதகமான இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, உலகம் முழுவதும் ரசிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியின் நடத்தை மற்றும் FIFA சாதகமான இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, உலகம் முழுவதும் ரசிகர்கள் அர்ஜென்டினாவை நிரந்தரமாக உலகக் கோப்பையிலிருந்து நீக்க வேண்டும் என்ற மனுவை தொடங்கினர்.</p><p>

இந்த மனு, இறுதிப் போட்டிக்கு முன்பே தொடங்கப்பட்டது. </p><p>இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியபோதும், போட்டி முடிந்தவுடன் வீரர்களிடையே ஏற்பட்ட மோதல்கள், குறிப்பாக லியாண்ட்ரோ பாரேடஸ் ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவை தாக்கிய சம்பவம், அணியின் பெயருக்கு மேலும் களங்கம் ஏற்படுத்தியது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/486a5a00-5a00-481d-85a9-c9d5e1158e99/26-6a62bb37d26b9.webp' /></p><p>“Argentina Out” எனப் பெயரிடப்பட்ட இந்த மனுவில் 170 நாடுகளில் இருந்து 2.33 கோடி (23,316,108) கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன. இது உலகளாவிய அளவில் மிக அதிகமாக கையொப்பமிடப்பட்ட மனுக்களில் ஒன்றாகும்.
</p><p>
கின்னஸ் உலக சாதனையில் 2.43 கோடி கையொப்பங்களுடன் “Jubilee 2000” இயக்கம் முதலிடத்தில் உள்ளது. இன்னும் சில நாட்கள் மனு தொடர்ந்திருந்தால், இந்த சாதனையை முறியடித்திருக்கும்.
</p><p></p><p>மனுவில், “வெற்றியாளர் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தால் மற்ற அணிகள் ஏன் விளையாட வேண்டும்? அர்ஜென்டினாவை நீக்கி, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அர்ஜென்டினா, 2026 உலகக் கோப்பையில் ரசிகர்களால் “மிகவும் வெறுக்கப்பட்ட அணி” என அழைக்கப்பட்டதாகவும், போட்டி முழுவதும் நடுவர் சாதகமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T01:07:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனுக்கு பறந்த விமானம்- ஹவுதிகளுக்கு ஈரான் அனுப்பிய உபகரணங்கள்., கசிந்த ரகசியங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-sent-irgc-missiles-to-houthis-1784853528"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-sent-irgc-missiles-to-houthis-1784853528</id>
            <summary type="text">ஈரான் ஜூலை 13-ஆம் திகதி ஹவுதி இயக்கத்திற்கு ஆதரவாக, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தளபதிகள், இராணுவ ஆலோசகர்கள் மற்றும் ஏவுகணை, ட்ரோன் தொடர்பான உபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஜூலை 13-ஆம் திகதி ஹவுதி இயக்கத்திற்கு ஆதரவாக, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தளபதிகள், இராணுவ ஆலோசகர்கள் மற்றும் ஏவுகணை, ட்ரோன் தொடர்பான உபகரணங்களை ஏமனுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்த விமானம் முதலில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையத்தை நோக்கிச் சென்றது. ஆனால், சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கத்தின் தாக்குதலால், ஹோடெய்தா நகரத்திற்கு மாற்றப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56e8adcd-9d01-452d-995b-fdcbc8841639/26-6a62b41a17b84.webp' /></p><p>தகவல்களின்படி, 10 முதல் 21 IRGC அதிகாரிகள், அதில் மூத்த தளபதிகளும் அடங்குவர். அவர்கள் ஹவுதி படைகளுக்கு புதிய ஏவுகணை அமைப்புகள் குறித்து பயிற்சி அளிக்கவும், நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் சென்றதாக கூறப்படுகிறது.
</p><p>
மேலும், ஹவுதி இயக்கத்திற்கு நிதி உதவியாக தங்கமும் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p></p><p>இந்த நடவடிக்கை ஹவுதி படைகளின் இராணுவ திறன்களை மேம்படுத்தி, செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தப் கடல்சாலையில் சர்வதேச கடல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக ஏமன் தகவல்தொடர்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
</p><p>ஹவுதி இயக்கம், “இவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள். விமானத்தில் இருந்தவர்கள் பொதுமக்கள் மட்டுமே” என்று மறுத்துள்ளது. ஆனால், பாதுகாப்பு ஆய்வாளர்கள், விமானத்தில் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள், ட்ரோன் பாகங்கள் இருந்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>
இந்த சம்பவம், செங்கடல் வழியாக செல்லும் உலகளாவிய எண்ணெய் மற்றும் வர்த்தக பாதைகளுக்கு புதிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T00:37:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவைப்பட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வோம்., அமெரிக்காவிற்கு கனடா பிரதமர் கார்னி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-eyes-retaliation-on-trump-tariffs-1784851096"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-eyes-retaliation-on-trump-tariffs-1784851096</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய வரிகள் (Tariffs) குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆகஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய வரிகள் (Tariffs) குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

ஆகஸ்ட் 19 முதல் அமுலுக்கு வரும் 50 சதவீத வரிகள், 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள கனேடிய பொருட்களை பாதிக்கும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
</p><p>
கார்னி, “ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன. எங்கள் நாட்டின் நலன்களை காக்க தேவையான பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edaadd2a-d333-4f7d-badf-e66ffec5b1ce/26-6a62aa9976ab5.webp' /></p><p>இந்த விவகாரம் குறித்து கனடாவின் 13 மாநில முதல்வர்களுடன் கார்னி சந்திப்பு நடத்தினார். ஒ</p><p>ன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு, “அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை. கனடாவின் எண்ணெய், Potash போன்ற வளங்களை தடுத்து அமெரிக்காவை அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார். </p><p>ஆனால், அல்பெர்டா முதல்வர் டேனியல் ஸ்மித், “எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவது மிகப்பெரிய தவறு. இது கனடாவையே பாதிக்கும்” என்று எச்சரித்தார்.
</p><p></p><p>இந்த புதிய வரிகள், கனடாவின் மதுபானம், மின்சாதனங்கள், ஹாக்கி ஸ்டிக் போன்ற பொருட்களை அதிகமாக பாதிக்கும். குறிப்பாக ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
கார்னி, “இது ஒரு அழுத்தம் கொடுக்கும் உத்தி என்றாலும், அதே நேரத்தில் முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வாய்ப்பும் உள்ளது” என்று தெரிவித்தார்.
</p><p>
மாநில முதல்வர்கள், “Team Canada” என்ற ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, கூட்டாக அமெரிக்காவிற்கு எதிராக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T23:58:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட சோனம் வாங்சுக்., மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sonam-wangchuk-ends-26-day-hunger-strike-1784840082"></link>
            <id>https://news.lankasri.com/article/sonam-wangchuk-ends-26-day-hunger-strike-1784840082</id>
            <summary type="text">பிரபல சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், 26 நாட்கள் நீடித்த உண்ணாவிரதத்தை ஜூலை 23-ஆம் திகதி இரவு குருகிராமில் உள்ள மெடாண்டா மருத்துவமனையில் முடித்தார...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், 26 நாட்கள் நீடித்த உண்ணாவிரதத்தை ஜூலை 23-ஆம் திகதி இரவு குருகிராமில் உள்ள மெடாண்டா மருத்துவமனையில் முடித்தார்.
</p><p>
மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில், அவரது மனைவி கீதாஞ்சலி அங்க்மோ உடன், வாங்சுக் ஒரு கப் பானத்தை அருந்தியதன் மூலம் உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.
</p><p>
வாங்சுக், “நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நாட்டில் வன்முறை ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு, உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01cde41c-205e-4fce-995a-c956905a79e9/26-6a6283e167007.webp' /></p><p>

அவர் விரைவில் தனது முடிவுக்கான நிபந்தனைகளை விரிவாக விளக்கும் வீடியோவை வெளியிடுவதாகவும் கூறினார்.
</p><p>
மத்திய அரசு, ஜந்தர் மந்தரில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாது என்றும், கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் தேர்வுகளில் ஏற்பட்ட கசிவுகள் தொடர்பாக தீர்வுகள் காணப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
</p><p>
மேலும், NEET தேர்வு வினாத்தாள் கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் வாய்ப்பையும் அரசு பரிசீலிக்கிறது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Just now in the presence of Union Ministers Sh. JP Nadda, Dr. Jitendra Singh and the senior leaders of Apex Body of Leh Ladakh I finally broke my fast after 26 days. Earlier 65 members of parliament from different political parties had visited or signed letters urging me to break… <a href="https://t.co/RFCet7Oksy">pic.twitter.com/RFCet7Oksy</a></p>&mdash; Sonam Wangchuk (@Wangchuk66) <a href="https://x.com/Wangchuk66/status/2080380336630800427?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>பிரதமர் நரேந்திர மோடி, வாங்சுக் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றி உடல் நலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
வாங்சுக், கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டவர். 2024-ஆம் ஆண்டு லடாக்கின் வளங்களைப் பாதுகாக்கும் சட்ட உரிமைக்காக, பனிக்கட்டிகளின் நடுவில் 21 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
</p><p>
அவரது கல்வி தத்துவம் “3 Idiots” திரைப்படத்தில் புன்சுக் வாங்டூ என்ற கதாபாத்திரத்திற்கு ஊக்கமாக இருந்ததாக கருதப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T23:04:44+00:00</updated>
        </entry>
    </feed>
