<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-20T23:45:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வணிக கப்பல் மீது பாய்ந்த 3 ஏவுகணை: ஒடேசாவில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/4-indian-sailors-killed-by-odessa-port-attack-1784589659"></link>
            <id>https://news.lankasri.com/article/4-indian-sailors-killed-by-odessa-port-attack-1784589659</id>
            <summary type="text">உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். ஒடேசா துறைமுகம் மீது தாக்குதல்உக்ரைனிய துறைமுகமான ஒடேசாவில் இருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.</p><h3> ஒடேசா துறைமுகம் மீது தாக்குதல்</h3><p>உக்ரைனிய துறைமுகமான ஒடேசாவில் இருந்து புறப்பட்ட வணிக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 4 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> ஜூலை 19ம் திகதி நடந்த இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றொரு இந்தியர் &nbsp;படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cba4ea1-b78a-4408-8ebc-7754f7cd7368/26-6a5ead5de6f44.webp' /></p><p> </p><p>&nbsp;ரஷ்ய ஏவுகணை நடத்திய இந்த தாக்குதலினால் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் இந்தியர்கள் மற்றும் சிரியர்கள் என மொத்தம் 17 பேர் வரை பணியாற்றியுள்ளனர்.</p><p> தாக்குதலுக்கு பிறகு இரவு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல் பணியில் 8 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்.</p><p> இதில், 9 மாலுமிகள் மற்றும் 1 கடல் வழி காட்டி என 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> இந்திய கப்பலின் விவரம்</h2><p>
</p><p>ரஷ்ய தாக்குதலில் பாதிக்கப்பட்ட கப்பல், மும்பை சேர்ந்த “ஓஷன் கிரேஸ் ஷிப்பிங் நிறுவனத்தின் M V&nbsp; கோல்டன் லியோ ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/628641b2-b008-4c5e-9a6d-c4c0958773bd/26-6a5ead5d41df2.webp' /></p><p> ஒடேசா தறைமுகத்தில் இருந்து மக்காச்சோளம் போன்ற பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட M V&nbsp; கோல்டன் லியோ கப்பல் மீது 3 ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியுள்ளன.</p><p> மேலும் இந்த கப்பல் கினியா - பிசாவ் கொடியுடன் இயங்கியது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T23:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025ம் ஆண்டிற்குள் 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றம்: நாடொன்று எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkey-removed-1-million-stray-dogs-from-cities-1784579694"></link>
            <id>https://news.lankasri.com/article/turkey-removed-1-million-stray-dogs-from-cities-1784579694</id>
            <summary type="text">துருக்கிய நகரங்களில் இருந்து 2025ம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தெரு நாய்களின் எண்ணிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துருக்கிய நகரங்களில் இருந்து 2025ம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திய துருக்கி</h2><p>
துருக்கி அரசு தங்களது நகரங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.</p><p> துருக்கியின் உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃபிலி தெரிவித்த தகவலில், 2025ம் ஆண்டிற்குள் துருக்கியின் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 10 லட்சம் தெரு நாய்களை அகற்றப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p> துருக்கியில் விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றமே இந்த தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வர பட்டதற்கான முக்கிய காரணம் என்று பால்கன் இன்சைட் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae4de92a-6f84-4a3e-8180-3d90f2207b43/26-6a5e87624260d.webp' /></p><h2> துருக்கிய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகள்</h2><p>தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து மீண்டும் தெருக்களில் விடும் நடைமுறை பயன் அளிக்காததை தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய விதிகளின் படி, ஒவ்வொரு நகராட்சி தெருக்களிலும் உள்ள நாய்களை நிரந்தரமாக நீக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> நாய்களை தத்தெடுப்பதே முதன்மையான குறிக்கோளாக இருந்தாலும், தீவிரமான ஆக்ரோஷமான குணம் கொண்ட நாய்கள் மற்றும் தீர்க்க முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை கருணை கொலை செய்ய சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் தெரு நாய்களை பராமரிக்க பிரம்மாண்டமான புதிய காப்பகங்கள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T22:56:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் பயணிகள் பேருந்தை குறிவைத்த உக்ரைன்: சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-attack-russia-s-passenger-bus-5-dead-1784582531"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-attack-russia-s-passenger-bus-5-dead-1784582531</id>
            <summary type="text">ரஷ்யாவில் பயணிகள் பேருந்தை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரமடையும் மோதல்உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவில் பயணிகள் பேருந்தை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> தீவிரமடையும் மோதல்</h2><p>உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் இந்த வாரம் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன.</p><p> இருநாடுகளும் மாறி மாறி நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றன.</p><p> இந்நிலையில் ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இருந்த பயணிகள் பேருந்து மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் சிறுவன் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b83efc9b-0beb-41ee-9e88-a20f743c46dd/26-6a5e918512b22.webp' /></p><p></p><p> மேலும் இந்த தாக்குதலில் 23 பேர் காயமடைந்து இருப்பதாகவும், அவர்களின் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அதே நேரத்தில் உக்ரைனிய நகரங்களான பாவ்லோக்ராட் மற்றும் கிரமடோர்க் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> மேலும் ஸபோரிஷியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T21:22:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை: 28 வயது இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ann-widdecombe-death-case-joshua-kerry-arrested-1784575996"></link>
            <id>https://news.lankasri.com/article/ann-widdecombe-death-case-joshua-kerry-arrested-1784575996</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆன் விட்கோம்ப் கொலை வழக்கில் 28 வயது நபர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ஆன் விட்கோம்ப்
டெவோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆன் விட்கோம்ப் கொலை வழக்கில் 28 வயது நபர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><h2> கொல்லப்பட்ட ஆன் விட்கோம்ப்</h2><p>
டெவோனில் உள்ள ஹேடரில் வசித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ரீஃபார்ம் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஆன் விட்கோம்ப்(Ann Widdecombe) கடந்த ஜூலை 9ம் திகதி அவரது வீட்டில் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார்.</p><p> ஜூலை 8ம் திகதி மதியம் 12.30 மணியளவில் அவர் தாக்கப்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86fdf4ae-87bc-46ad-9f7c-0fbf2f7f2f4c/26-6a5e77fe3eb74.webp' /></p><p> இந்த சம்பவத்தில் முதலில் நியூட்டன் அபோட்டைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணைக்கு பிறகு அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.</p><p></p><h2> ஜோசுவா கெர்ரி என்பவர் மீது வழக்குப்பதிவு</h2><p>
இந்நிலையில் ஆன் விட்கோம்ப் கொலை வழக்கில் ரோதர்ஹேமைச் சேர்ந்த 28 வயது ஜோசுவா கெர்ரி மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p> குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜோசுவா கெர்ரி செவ்வாய்க்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று இந்த வழக்கை விசாரித்த கிரவுன் பிராசிகியூசன் சர்வீஸ் அறிவித்துள்ளது.</p><p> மேலும் இந்த குற்ற சம்பவத்தில் வேறு ஏதேனும் அரசியல் பின்னணியோ, பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T19:33:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் புதிய நிதி அமைச்சராக ஹான் ஹீலி நியமனம்: பதவி விலகும் முக்கிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-new-chancellor-of-the-exchequer-is-john-healey-1784572420"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-new-chancellor-of-the-exchequer-is-john-healey-1784572420</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய நிதி அமைச்சராக ஹான் ஹீலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பிரித்தானியாவுக்கு புதிய நிதி அமைச்சர்
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய நிதி அமைச்சராக ஹான் ஹீலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பிரித்தானியாவுக்கு புதிய நிதி அமைச்சர்</h2><p>
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்னாம்(Andy Burnham) பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து அரசாங்கத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.</p><p> இந்நிலையில் நாட்டின் புதிய நிதியமைச்சராக (Chancellor of the Exchequer) ஜான் ஹீலி(John healey) நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38f9ab9a-a3d9-40d6-b387-135317e12d91/26-6a5e6a061fbcb.webp' /><br></p><p>இதற்கு முன்னதாக பிரித்தானியாவின் நிதி அமைச்சராக ரேச்சல் ரீவ்ஸ்(Rachel Reeves) இந்த பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> பிரித்தானியாவின் மூத்த அரசியல்வாதியும், கடந்த 1997ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் ஜான் ஹீலி கடந்த அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.</p><p>இந்நிலையில் ஜான் ஹீலி தற்போது நாட்டின் கருவூல தலைமை பொறுப்புக்கு முன்னேறியுள்ளார்.</p><p>ஜான் ஹீலி நியமனம் தொடர்பான அறிவிப்பை டவுனிங் ஸ்ட்ரீட் தங்களது அதிகாரப்பூர்வ X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcdb0ac1-697c-4dd1-91c0-6641ce265133/26-6a5e6a06c402a.webp' /></p><h2> பதவி விலகும் முக்கிய அதிகாரிகள்</h2><p>கடந்த ஆட்சியில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த பல அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.</p><p>குறிப்பாக துணை பிரதமர் டேவிட் லாமி மற்றும் வீட்டுவசதி, சமூகங்கள் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டீவ் ரீட் ஆகியோர் இதில் அடங்குவர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-20T19:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மாயோ கைது: ஆயுள் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cartel-founder-el-mayo-sentenced-to-life-in-prison-1784571330"></link>
            <id>https://news.lankasri.com/article/cartel-founder-el-mayo-sentenced-to-life-in-prison-1784571330</id>
            <summary type="text">மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் வியாபாரி எல் மாயோ சாம்பாடாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவருக்கு ஆயுள் தண்டனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் வியாபாரி எல் மாயோ சாம்பாடாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2> போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவருக்கு ஆயுள் தண்டனை</h2><p>
மெக்சிகோவில் இருந்து அதிகளவிலான போதைப்பொருள்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஸ்மாயேல் எல் மாயோ சாம்பாடாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> கடந்த 2024ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் மன்னனாக அறியப்பட்ட இஸ்மாயேல் எல் மாயோ சாம்பாடா கைது செய்யப்பட்டார்.</p><p> இவர், சினலோவா கார்டெல்லின் முக்கிய பொறுப்பில் இருந்த நிலையில், கோகைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஃபெண்டானில் போன்ற மிகவும் மோசமான போதைப்பொருள்களை அமெரிக்காவுக்கு கடத்தியதில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ef437f-3d24-4341-b3c4-2da3aadec5fd/26-6a5e65c40c152.webp' /></p><p> எல் மாயோ கைது செய்யப்பட்ட போது, தான் மெக்ஸிகோவில் இருந்து கடத்தப்பட்டு அமெரிக்காவின் டெக்சாஸிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>ஆனால் இறுதியில் மரண தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார்.</p><p> இந்நிலையில் புருக்ளின் கூட்டாட்சி நீதிமன்றம் திங்கட்கிழமை வழங்கிய தீர்ப்பில் இஸ்மாயேல் எல் மாயோ சாம்பாடாவுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.</p><p> அத்துடன் அவருக்கு $15 பில்லியன் டொலர் அபராதமும் விதித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T18:15:39+00:00</updated>
        </entry>
    </feed>
