<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-30T03:36:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-turns-to-canadian-crude-1785381473"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-turns-to-canadian-crude-1785381473</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணை ஊடாக எந்தக் கப்பலும் வெளியேற முடியாத நெருக்கடியான சூழலில், ஆசிய நாடுகள் எரிபொருள் நெருக்கடியால் தத்தளிக்கும் நிலையில், ஜப்பான் கனடா பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணை ஊடாக எந்தக் கப்பலும் வெளியேற முடியாத நெருக்கடியான சூழலில், ஆசிய நாடுகள் எரிபொருள் நெருக்கடியால் தத்தளிக்கும் நிலையில், ஜப்பான் கனடா பக்கம் திரும்பியுள்ளது.</p><h2>டிரான்ஸ் மவுண்டன் குழாய்வழி</h2><p>
</p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், 2025-ஆம் ஆண்டிற்குப் பிறகு கனடாவின் முதல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி, எக்ஸான் மொபில் நிறுவனத்தால் கப்பல் மூலம் ஜப்பானுக்குச் செல்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b32b4598-2cf0-4cf5-9acb-511d8d508311/26-6a6ac401870e5.webp' /></p><p>
</p><p>750,000 பீப்பாய்கள் வரை கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட, மார்ஷல் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட 'ஃப்ரீடம் குளோரி' என்ற கப்பல், டிரான்ஸ் மவுண்டன் குழாய்வழி (TMX) கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு புதன்கிழமை வான்கூவரிலிருந்து புறப்பட்டுள்ளது. </p><p>ஜப்பானின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான ஈனியோஸ் TMX கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. இதனிடையே, எண்ணெய் விலை உயர்வு காரணமாக, ஜப்பான் அரசாங்கம் இந்த ஆண்டிற்கான தங்களது வளர்ச்சி முன்னறிவிப்பை 1.3 சதவீதத்திலிருந்து 0.9 சதவீதமாகக் குறைத்துள்ளது.</p><p></p><p> </p><p>பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கும் வரை, ஜப்பான் தனது எண்ணெயில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை ஹார்முஸ் நீரிணை வழியாகவே இறக்குமதி செய்து வந்தது.
</p><p>போரினால் ஹார்முஸ் வழியாக எண்ணெய் விநியோகம் தடைபட்டதைத் தொடர்ந்து, தற்போது ஜப்பான் உட்பட பல ஆசிய நாடுகள் தங்களது விநியோகஸ்தர்களை அவசரமாகப் பன்முகப்படுத்த முயற்சித்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31644137-51b5-4894-8887-abcc20e9f78b/26-6a6ac40244930.webp' /></p><p> </p><p>டிரான்ஸ் மவுண்டன் குழாய்வழியானது, கனடாவின் ஆல்பர்ட்டாவிலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபியில் உள்ள ஒரு கடல் முனையத்திற்கு, ஒரு நாளைக்கு 890,000 பீப்பாய்கள் வரையிலான கச்சா எண்ணெயைக் கொண்டு செல்கிறது.</p><h2>இந்தியா, மலேசியா</h2><p> </p><p>TMX என அறியப்படும் இந்தக் குழாய்வழி ஃபெடரல் நிர்வாகத்திற்குச் சொந்தமானது, மேலும் இது 2025-ஆம் வருடத்தின் மூன்றாம் காலாண்டிலிருந்து கிட்டத்தட்ட 90 சதவீத கொள்ளளவில் இயங்கி வருகிறது. </p><p>ஆசியா நாடுகளுக்கான ஏற்றுமதி 2024-இல் சுமார் 51 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு வான்கூவரிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மொத்த எண்ணெய் ஏற்றுமதியில், TMX வழியாக ஆசியாவிற்குச் செய்யப்பட்ட ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 77 சதவீதமாக அதிகரித்துள்ளது.
</p><p>ஈரான் போர் தொடங்கியதன் பிறகு, இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அனைத்தும் TMX குழாய்வழி மூலம் கொண்டுவரப்படும் கச்சா எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1aa0f70-208f-4483-be3d-b1c7dc033e09/26-6a6ac402eca23.webp' /></p><p> </p><p>அதேவேளையில், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் கனடிய எண்ணெய் கிட்டத்தட்ட 60 சதவீதமாக உள்ளது என்று அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் (US Energy Information Administration) தெரிவித்துள்ளது. </p><p>இதற்கிடையில், கனடியப் பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் புதிய வரிகளை அறிவித்திருந்த போதிலும், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகளில் கனடாவின் எண்ணெயை ஒரு பேராயுதமாகப் பயன்படுத்துவதில் தனக்கு உடன்பாடில்லை என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T03:16:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்நாட்டில் தயாரிக்கப்படும் உக்ரைன் ட்ரோன்கள்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-drone-hits-russia-s-biggest-oil-refinery-1785375550"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-drone-hits-russia-s-biggest-oil-refinery-1785375550</id>
            <summary type="text">ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா மோதல்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் கடந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2> உக்ரைன் - ரஷ்யா மோதல்</h2><p>
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.</p><p> இந்த போர் காலகட்டத்தில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் எதிர்ப்பு தாக்குதல் நடத்தி வந்த உக்ரைன், கடந்த சில காலமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் மூலம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c816e2f5-7d4a-4808-8cab-a31a9170a8e2/26-6a6aab40565d9.webp' /></p><p> அதே நேரம் நேற்று வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பிற்கு பிறகு பேசிய உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிரான போரில் இன்னும் அதிக அளவில் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2> ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்</h2><p>இந்நிலையில் இன்று ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தின் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.</p><p>உக்ரைனில் இருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது கிட்டத்தட்ட 17 மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டதாகும்.</p><p> உக்ரைன் நடத்திய இந்த ட்ரோன் தாக்குதலில் 6 பேர் வரை படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> இடை மறிக்கப்பட்ட ட்ரோன் பாகங்களில் விழுந்ததில் அடையாளம் காணப்படாத தொழிற்சாலை இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T01:39:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கோவில் அன்னதான நிகழ்வில் வாள்வெட்டு தாக்குதல்: பலர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sword-attack-in-batticaloa-temple-in-sri-lanka-1785374489"></link>
            <id>https://news.lankasri.com/article/sword-attack-in-batticaloa-temple-in-sri-lanka-1785374489</id>
            <summary type="text">இலங்கையில் கோவில் அன்னதான நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூர ஆயுத தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு ஆலயத்தில் பரபரப்புஏறாவூர் மைலம்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கோவில் அன்னதான நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூர ஆயுத தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> மட்டக்களப்பு ஆலயத்தில் பரபரப்பு</h2><p>ஏறாவூர் மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் கோவிலில் அன்னதான நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்த போது வாள்வெட்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த வன்முறையில், பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஒருவரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இருப்பினும் மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49825b48-c939-4c6a-a3c0-a584635238dd/26-6a6aa71b28a5f.webp' /></p><p> மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் கோவிலில் வருடாந்திர உற்சவம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்ட போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p></p><h2>முற்றிய வாக்குவாதம்</h2><p>இந்த நிகழ்வின் போது அன்னதானம் வாங்கி உண்ட இளைஞர் ஒருவர், உணவு சரி இல்லை என தெரிவித்துள்ள நிலையில் அன்னதானம் வழங்கியவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p> இதையடுத்து 7 பேர் கொண்ட கும்பல் அன்னதானம் வழங்கியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p> மடக்கி பிடிக்கப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-30T01:21:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரீஸ் சூட்கேசில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பிரித்தானிய பெண்: சர்வதேச விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scottish-woman-found-dead-in-greece-1785368450"></link>
            <id>https://news.lankasri.com/article/scottish-woman-found-dead-in-greece-1785368450</id>
            <summary type="text">ஏதென்ஸில் சூட்கேஸில் பிரித்தானிய பெண்&amp;nbsp; ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூட்கேஸில் பிரித்தானிய பெண்கிரீஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏதென்ஸில் சூட்கேஸில் பிரித்தானிய பெண்&nbsp; ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> சூட்கேஸில் பிரித்தானிய பெண்</h2><p>கிரீஸ் தலைநகர் எதென்ஸில் உள்ள பழமையான கட்டிடம் ஒன்றில் இருந்த சூட்கேஸில் ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண்ணின் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> உள்ளூர் ஊடகங்கள் வழங்கிய தகவலின் படி, சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் 38 வயது எலிசபெத் என்பவருடையது என தெரியவந்துள்ளது.</p><p> இதனை பிரித்தானியாவின் காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c40770-12c4-4f39-aecf-a090076a39f6/26-6a6a8f8409968.webp' /></p><p> மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக கிரீஸ் நாட்டு அதிகாரிகளும், இண்டர்போல் மற்றும் ஸ்காட்லாந்து காவல் துறையினரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> பாதிக்கப்பட்ட பெண் சைப்ரஸ் வழியாக அமெரிக்காவில் இருந்து கிரீஸுக்கு வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.</p><p></p><p> மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய, கொலை செய்யப்பட்ட பெண் கடைசியாக எங்கு சென்றார் என்பது போன்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T00:58:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயை அணைக்க சென்ற ஹெலிகாப்டர்: விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bell-412-helicopter-accident-in-argentina-1785373092"></link>
            <id>https://news.lankasri.com/article/bell-412-helicopter-accident-in-argentina-1785373092</id>
            <summary type="text">அர்ஜென்டினாவில் காட்டுத்தீயை அணைக்க சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. &amp;nbsp;விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்அர்ஜென்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினாவில் காட்டுத்தீயை அணைக்க சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> &nbsp;விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்</h2><p>அர்ஜென்டினாவின் மேற்கு சான் ஜூவான் மாகாணத்தில் மீட்பு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>சான் ஜூவானின் இஷிகுவாலாஸ்டோ இயற்கை பூங்காவில்&nbsp; ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க மீட்பு ஹெலிகாப்டர் சென்றதாகவும், அப்போது பெல் 412 ரக ஹெலிகாப்டர்&nbsp; ஆபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbb7bb25-2fd9-4fc4-967f-a419db685dbb/26-6a6aa1a6ed9ea.webp' /></p><p></p><p>உயிரிழந்த அனைவரும் தீயணைப்பு, காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு பணியாளர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>விபத்து தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதன்கிழமை காலை ஹெலிகாப்டர் ஆனது தன்னுடைய இணைப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>சான் ஜூவான் மாகாண ஆளுநர் மார்செலோ ஒர்ரெகோ, நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தையும், அதில் 7 பேர் வரை உயிரிழந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</a><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T00:58:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-ex-police-woman-again-jailed-for-lied-1785335557"></link>
            <id>https://news.lankasri.com/article/british-ex-police-woman-again-jailed-for-lied-1785335557</id>
            <summary type="text">பிரித்தானியாவில் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொய் கூறிய பெண் காவலர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு 

கென்ட் மாகாணத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொய் கூறிய பெண் காவலர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். </p><h2>பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு </h2><p>

கென்ட் மாகாணத்தின் மெய்ட்ஸ்டோனைச் சேர்ந்த 35 வயது லாரென் எவன்ஸ். முன்னாள் காவலரான இவர், ப்ரோம்லி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5c74a02-a168-4f40-8a0b-f44228acd731/26-6a6a0f904ee45.webp' />&nbsp;</p><p></p><p>
கடந்த 2023-யில் தனது பணிக்கு தாமதமாக சென்ற எவன்ஸ், சக ஊழியர்களிடம் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார். </p><p>

காரில் வந்த காவலர் அலெக்ஸ் வாட்ஸன், தன்னை தடுத்து நிறுத்தி தனது உடலை அந்தரங்கமாக சோதனையிட்டதாக உணர்ச்சிப்பூர்வமாக எவன்ஸ் விவரித்துள்ளார்.
</p><p>
அதன் அடிப்படையில் காவலர் அலெக்ஸ் வாட்ஸன், சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். 

மேலும் 23 மணிநேரம் காவலில் வைக்கப்பட்டு, விசாரணைக்கு பின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். </p><p>

ஆனால், பின்னர் மேற்கொள்ளப்பட்ட CCTV மற்றும் ANPR பகுப்பாய்வுகளில் எந்தத் தடையும் ஏற்படவில்லை என்பதும், அவரது வாகனம் நெடுஞ்சாலையை விட்டு வெளியேறவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டதால், அவர் விடுவிக்கப்பட்டார். </p><h2>

சிறை தண்டனை</h2><p>அதே சமயம் லாரென் எவன்ஸ் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதி நடவடிக்கையைத் திசை திருப்பிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார். </p><p>

பணிக்கு தாமதமாக வந்ததை மறைக்க அவர் இவ்வாறு பொய் குற்றச்சாட்டு கூறியது தெரிய வந்ததைத் தொடர்ந்து, லாரென் எவன்ஸுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>

இந்த நிலையில், லாரென் எவன்ஸின் தண்டனை காலம் இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. </p><p>முன்னதாக சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

'அளவுக்கு மீறிய மென்மையான தண்டனை' திட்டத்தின் கீழ் மறுஆய்வு செய்யப்பட்ட பிறகு, மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்போது அவரது தண்டனையை அதிகரித்தது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><i><b>WHATSAPP CHANNEL </b></i></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T22:58:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை: ஃபிபா அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fifa-take-action-against-argentina-team-1785362697"></link>
            <id>https://news.lankasri.com/article/fifa-take-action-against-argentina-team-1785362697</id>
            <summary type="text">2026ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது பிபா ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது பிபா ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2> அர்ஜென்டினாவிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை</h2><p>நடந்து முடிந்த 2026 ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பல்வேறு விதிமீறல் நடந்து இருப்பதாக அர்ஜென்டினா&nbsp; அணி நிர்வாகம் மீது ஃபிபா ஒழுங்கு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.</p><p> அர்ஜென்டினா அணி கலந்து கொண்ட பல்வேறு போட்டிகளில் இத்தகைய விதிமீறல்கள் நடைபெற்று இருப்பதாக கூறி ஃபிபா இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.</p><p></p><p> அதில், பாரபட்சமான கோஷங்கள் மற்றும் சைகைகள், போட்டியை தாமதமாக தொடங்குதல், போட்டி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற தவறுதல், பார்வையாளர்கள் மைதானத்தில் பொருட்களால் வீசுதல் ஆகியவை குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a4fa401-add9-4e04-bf3f-306248255f7e/26-6a6a790b4526d.webp' /></p><h2>தனிப்பட்ட வீரர் மீது நடவடிக்கை</h2><p>உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மிகவும் மோசமாக செயல்பட்ட குறிப்பிட்ட வீரர்கள் மீது தனிப்பட்ட நடவடிக்கைகளை பிபா தொடங்கியுள்ளது.</p><p> அதில் குறிப்பாக, அர்ஜென்டினா அணியின் நாகுவல் மொலினா, லியாண்ட்ரோ பரேடெஸ், தியாகோ அல்மாடா மற்றும் உதவி பயிற்சியாளர் ராபர்டோ அயலா.</p><p> மற்றும் ஸ்பெயின் அணி வீரரான பாப்லோ மார்ட்டின் பாயிஸ் கவிரா ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டானது சுமத்தப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T22:05:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம் எலெக்ரிக் காரை பயன்படுத்த வேண்டுமா? கூறப்படும் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/talks-on-uk-pm-andy-burnham-may-use-electric-car-1785320179"></link>
            <id>https://news.lankasri.com/article/talks-on-uk-pm-andy-burnham-may-use-electric-car-1785320179</id>
            <summary type="text">பிரித்தானியாவில் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் ஆன்டி பர்ன்ஹாமின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;அரசாங்க ஜெட் விமானம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் ஆன்டி பர்ன்ஹாமின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><h2>அரசாங்க ஜெட் விமானம்</h2><p>
பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்ன்ஹாம் (Andy Burham), ஐந்து நாட்களுக்குள் பர்ன்ஹாம் மூன்று முறை அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்திய பிறகு, அவரது பயணம் குறித்த கேள்வி ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/647a8517-4bfe-4860-9c87-e3808690b1d3/26-6a69d4392ee9b.webp' />&nbsp;</p><p></p><p>
அதாவது, அவர் மான்செஸ்டரில் உள்ள தனது புதிய வடக்குத் தளத்திற்கும், வெஸ்ட்மின்ஸ்டருக்கும் இடையில் எப்படி பயணிக்கத் திட்டமிடுகிறார் என்பதும், அதற்கான செலவுகளை யார் ஏற்கிறார்கள் என்பதும் தற்போது பாரிய கேள்விக்குறியாக உள்ளது.</p><p>

அதேபோல், பர்ன்ஹாம் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் முடிவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ஏனெனில், இந்த நடவடிக்கைக்கு வரி செலுத்துவோரின் பணம்தான் நிதியளிக்கிறதா என்ற கேள்விகளை இது எழுப்புவதே இதற்கு முக்கியக் காரணம்.</p><p>

திங்கட்கிழமை, ஆன்டி பர்ன்ஹாம் போர்ட்ஸ்மவுத் கடற்படைத் தளத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்காக 37 நிமிட பயணமாக மீண்டும் வானில் பறந்தார். </p><h2>

பயண நேரம் </h2><p>லண்டனில் இருந்து மான்செஸ்டருக்கு இரயிலில் செல்ல சராசரியாக 2 மணிநேரம் 46 நிமிடங்கள் ஆகிறது. இதற்கான கட்டணமும் மிக அதிகமாக உள்ளது.
</p><p>
அதனால், மின்சாரக் காரைப் பயன்படுத்தினால், இதே பயணத்தை பாதிக்கும் குறைவான செலவிலேயே மேற்கொள்ள முடியும் என்று 'Carwow' நிறுவனம் கணக்கிட்டுள்ளது. </p><p>

மேலும், தற்போதைய சூழலில் இருந்து 2029 கோடையில் நடைபெறவுள்ள அடுத்த பொதுத்தேர்தல் வரை, மின்சார வாகனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பயண செலவில் 27,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக பிரதமர் சேமிக்க முடியும் என்று அந்த கார் விற்பனை இணையதளம் கூறுகிறது.
</p><p>
பிரதமர் No 10 நார்த் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் இடையே இரயிலில் பயணம் செய்வதை விட, ஒரு மின்சாரக் காரில் பயணம் செய்வது ஆண்டுக்கு 9,000 பவுண்டுகள் மலிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce0251fd-2a4a-4ec6-a10b-5ea47eeedf34/26-6a69d439e430e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<i><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> </b></i>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T22:01:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/florida-lottery-ticket-claims-803-million-us-dolla-1785351876"></link>
            <id>https://news.lankasri.com/article/florida-lottery-ticket-claims-803-million-us-dolla-1785351876</id>
            <summary type="text">புளோரிடாவை சேர்ந்த லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு $803 மில்லியன் டொலர்&amp;nbsp; மெகா ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது. புளோரிடாவை சேர்ந்த நபருக்கு அடித்த மெகா ஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p>புளோரிடாவை சேர்ந்த லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு $803 மில்லியன் டொலர்&nbsp; மெகா ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.</p><h2> புளோரிடாவை சேர்ந்த நபருக்கு அடித்த மெகா ஜாக்பாட்</h2><p>அமெரிக்காவின் புளோரிடாவில்&nbsp; வாங்கப்பட்ட லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்த குலுக்கலில் பிரம்மாண்டமான $803 மில்லியன் டொலர் என்ற மெகா ஜாக்பாட் பரிசாக விழுந்துள்ளது.</p><p>ஜூலை 28ம் திகதி நடந்த இந்த குலுக்கலில் வெள்ளை பந்துகள் 34,48, 49,59, 70 மற்றும் தங்க பந்து 12 என்ற எண்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.</p><p>வெற்றி எண்கள் ஒரு சேர அமைந்த இந்த லொட்டரி டிக்கெட் புளோரிடாவின் பிரேடன்டன் நகரின் ஸ்டேட் ரோடு 70-ல் உள்ள WaWa என்ற கன்வீனியன்ஸ் கடையில் இருந்து விற்பனையாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f59193e-3ea6-4f4c-b426-7dee7b6451f7/26-6a6a4ec584433.webp' /></p><p></p><p> இந்த வரலாற்று வெற்றியை அடைந்த நபருக்கு புளோரிடாவின் லொட்டரி செயலாளர் ரெஜினால்டு டிக்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2> பரிசு தொகையை பெறும் முறைகள்</h2><p>இந்த பிரம்மாண்ட லொட்டரி வெற்றியை பெற்ற நபர் இரண்டு முறைகளில் தன்னுடைய பரிசை பெற்றுக் கொள்ளலாம்.</p><p>முதலாவது முறை, ஒரே தவணையாக வரிக்கு முந்தைய மதிப்பின் படி மொத்தமாக $345.5 மில்லியன் ரொக்க பணத்தை பெற்றுக் கொள்ளுதல்.</p><p>இரண்டாவது முறை, மொத்த பரிசுத் தொகையான $803 மில்லியனை 30 ஆண்டுகளுக்கு ஆண்டு தவணையாக பிரித்து பெற்றுக் கொள்ளுதல்.</p><p>லொட்டரி பரிசுகளுக்கு புளோரிடாவில் மாநில வரி என்பது கிடையாது, நேரடியாக மத்திய வரி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-29T22:00:20+00:00</updated>
        </entry>
    </feed>
