<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-28T04:38:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அந்த இரண்டு நாடுகள்... புனிதப் போருக்கு அழைப்பு விடுத்த மொஜ்தபா கமேனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/khamenei-jihad-message-to-1785212556"></link>
            <id>https://news.lankasri.com/article/khamenei-jihad-message-to-1785212556</id>
            <summary type="text">ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி, 
லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுக்குத் தமது நாட்டின் அசைக்க முடியாத ஆதரவை வழங்கியுள்ளார்.வேறு வழியில்லை
அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி, 
லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுக்குத் தமது நாட்டின் அசைக்க முடியாத ஆதரவை வழங்கியுள்ளார்.</p><h2>வேறு வழியில்லை</h2><p>
</p><p>அத்துடன், இஸ்ரேலுக்கு எதிரான அவர்களின் உறுதியான நிலைப்பாட்டிற்காக அவர்களைப் பாராட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82db94db-14f0-4af5-aca3-54ad6bab4af7/26-6a68306bf321c.webp' /></p><p> </p><p>மேலும், லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படுவதோடு, அமெரிக்காவுடனான ஈரானின் மோதலும் முடிவுக்கு வரும் என பதிவு செய்துள்ள மொஜ்தபா கமேனி, புனிதப் போர் மற்றும் எதிர்த்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அறிவித்தார். </p><p>ஹிஸ்புல்லா பொதுச்செயலாளர் ஷேக் நைம் காசிம் மற்றும் அந்த அமைப்பின் போராளிகள் அனைவருக்குமான ஒரு செய்தியில் பதிவு செய்த கமேனி, லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளைப் பாதுகாப்பதை ஒரு முக்கிய உத்திசார் கடமையாகக் கருதுவதாகவும்,</p><p></p><p> </p><p>அமெரிக்காவுடனான ஈரானின் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் நிபந்தனையாக, லெபனான் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முழுமையாகவும் நிபந்தனையின்றியும் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். </p><p>ஈரானின் இஸ்லாமியக் குடியரசுக்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதியளித்து ஹிஸ்புல்லா அமைப்பு எழுதிய கடிதத்திற்குப் பதிலளிக்கும் விதமாக ஈரானியத் தலைவர் கமேனி பதிலளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d20fcd96-61b3-448a-80a5-d48fe4e6285f/26-6a68306b319a4.webp' /></p><h2>ஒரு தளராத பாறையாக</h2><p> </p><p>இன்று, அமெரிக்க அரசாங்கத்தின் மற்றும் உயிர்களையும் தலைமுறைகளையும் அழித்தொழிக்கும் கொடூர சியோனிஸ்டுகளின் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறையால் உலகின் பல நாடுகள் சோர்வடைந்துள்ள நிலையில், புனிதப் போர் மற்றும் எதிர்ப்பைத் தவிர வேறு எந்த வழியும் எஞ்சியிருக்கவில்லை என கமேனி பதிவு செய்துள்ளார். </p><p>மேலும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக புனிதப் போரில் ஈடுபட்டுள்ள குழுக்களின் முன்னோடியாக, லெபனான் ஹிஸ்புல்லா படைகள் ஒரு தளராத பாறையாக நின்றுள்ளது என்று கமேனி பாராட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecbf7d84-9cb9-405f-8580-28708997cbe7/26-6a68306ca3eaf.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, உலகளாவிய ஆணவத்திலிருந்து விடுபடுவதற்கான உலகின் சுதந்திர நாடுகளின் போராட்டத்திற்கு, இந்த உறுதியான நிலைப்பாடு ஒரு ஊக்கமளிக்கும் செய்தியாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>ஹிஸ்புல்லாவின் படைகள், முன்னாள் போராளிகள், இடம்பெயர்ந்த பொதுமக்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்கள் ஆகியோருக்காகப் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்ட அவர், அவர்களின் இறுதி வெற்றி குறித்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T04:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் உருவாகும் புதிய வெப்ப அலை... போர்க்கால நடவடிக்கையில் இரண்டு ஐரோப்பிய நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fresh-heatwave-france-spain-race-1785209811"></link>
            <id>https://news.lankasri.com/article/fresh-heatwave-france-spain-race-1785209811</id>
            <summary type="text">இந்த வாரம் உருவாகவிருக்கும் மற்றொரு வெப்ப அலையால் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு, பற்றியெரியும் காட்டுதீயைக் கட்டுப்படுத்தும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வாரம் உருவாகவிருக்கும் மற்றொரு வெப்ப அலையால் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு, பற்றியெரியும் காட்டுதீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேலும் சிக்கலாக்கக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது.</p><h2>நவம்பர்&nbsp;வரையிலும்</h2><p> </p><p>
புதன்கிழமை முதல் வெப்பநிலை மீண்டும் உயர்வதற்கு முன்பு, திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகள் மிக முக்கியமான நாட்கள் என்று ஸ்பெயினின் உள்விவகார அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லாஸ்கா கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6de616a8-a406-4a83-8b61-b37dfa6c46d8/26-6a68251c0a9af.webp' /></p><p> </p><p>அதேவேளை, நாம் கடினமான, சிக்கலான மணி நேரங்களை எதிர்கொள்ளவிருக்கிறோம் என 
பிரதமர் பெட்ரோ சான்செஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p> இதனிடையே, காட்டுத்தீயால் எரிந்த நிலப்பரப்பின் அளவைப் பொறுத்தவரை இது ஒரு சாதனை வருடமாக அமையக்கூடும் என்ற நிலையில், நவம்பர் மாதத் தொடக்கம் வரையிலும் கூட காட்டுத்தீ தொடர்ந்து எரியக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>மாட்ரிட் நகருக்கு மேற்கே உள்ள அவிலா (Ávila) மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, 50,000 ஹெக்டேர் நிலப்பரப்பை எரித்து, ஸ்பெயினின் வரலாற்றிலேயே மிகப்பெரிய காட்டுத்தீயாக மாறியுள்ளது.</p><p></p><p> </p><p>மாட்ரிட் நகருக்கு வடமேற்கே ஏற்பட்டுள்ள இரண்டு தனித்தனி காட்டுத்தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்; இதனால் தலைநகருக்கு அருகிலுள்ள தீயினால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பின் மொத்த அளவு 70,000 ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
</p><p>ஸ்பெயினின் அரசு வானிலை ஆய்வு அமைப்பான 'ஏமெட்' (Aemet) வெளியிட்டுள்ள தகவலில், புதன்கிழமை தொடங்கும் புதிய வெப்ப அலையானது குறைந்தது ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அப்பகுதியில் வீசும் பலத்த தெற்குத் திசைக் காற்று ஆகியவற்றால் தீயணைப்புப் பணிகள் மேலும் கடினமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, இந்த வாரத்தில் மற்றொரு வெப்ப அலை வீசுவதற்கு முன்னதாகவே காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் நிர்வாகம் போர்க்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் எரிக் ப்ரோகார்டி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f482f2fd-c80a-4c2d-ba3b-db1f7c673422/26-6a682519a3f2f.webp' /></p><p> </p><p>செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p> இதனிடையே, காட்டுத்தீ நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவு வரை நெருங்கிவிட்ட நிலையில், எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள தயாராகி வருவதாக போர்டோ (Bordeaux) நகர மேயர் தாமஸ் கசெனேவ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். </p><p>மேலும் மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டால், அவர்களைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>போர்டோ (Bordeaux) பகுதிக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, ​​பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரோன் தெரிவிக்கையில், வரவிருக்கும் வாரங்கள் கடினமானவையாக இருக்கும்; நாம் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.</p><h2>உலகப் போருக்குப் பிறகு</h2><p> </p><p>ஜிரோண்ட் (Gironde) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ இதுவரை 42,000 ஹெக்டேர் நிலத்தை எரித்துச் சாம்பலாக்கியுள்ளது; இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரான்சில் நிலப்பரப்புக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அழிவுகளில் ஒன்றாகும் என்றே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cdc51c2-fdbc-4579-8749-19325e56ead5/26-6a68251a96641.webp' /></p><p> </p><p>இதனிடையே, இந்த ஆண்டு எரிந்துபோன 172,000 ஹெக்டேர் வனப்பகுதியானது, 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் தீக்கிரையான அளவை விட ஆறு மடங்கு அதிகம் என்று ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>காலநிலை நெருக்கடி இல்லாவிட்டால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லாத தொடர்ச்சியான வெப்ப அலைகளாலும் (ஜூன் மாதத்தில் பதிவான சாதனை அளவிலான வெப்பம் உட்பட), அதனால் வறண்டுபோன மண் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய நிலையில் உள்ள தாவரங்களாலும் இந்த கோடைக்காலத் தீ விபத்துகள் தீவிரமடைந்துள்ளதாகவே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். </p><p>காட்டுத்தீ பருவம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி நவம்பர் தொடக்கம் வரை நீடிக்கக்கூடும் என்று ஐரோப்பிய ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p> மேலும், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் வாரத்தின் நடுப்பகுதியில் இருந்து காட்டுத்தீயை அணைப்பதற்கான அபாயங்கள் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/421ca659-8b60-486c-995a-4e775756ef15/26-6a68251b4be28.webp' /></p><p> </p><p>அதிகமானப் பரப்பளவில் மிக வேகமாகப் பரவியுள்ள அண்மைய காட்டுத்தீச் சம்பவங்களின் முன்னெப்போதும் இல்லாத தன்மையை அதிகாரிகள் வலியுறுத்திக் கூறியுள்ளனர். </p><p>தெற்கு ஸ்பெயினில் அண்மையில் 13 பேரின் உயிரைப் பறித்த காட்டுத்தீ மணிக்கு 4 மைல் வேகத்தில் பரவியதாக ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்; ஆனால், தீயணைப்பு வீரர்களால் மணிக்கு 300 மீற்றர் அல்லது அதற்கும் குறைவான வேகத்தில் பரவும் தீயை மட்டுமே எதிர்கொள்ள முடிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T03:35:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.14,000 பட்ஜெட்டில் சூப்பரான பேட்டரியுடன் புதிய Vivo மொபைல் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vivo-t5e-launched-with-5500mah-battery-1785200621"></link>
            <id>https://news.lankasri.com/article/vivo-t5e-launched-with-5500mah-battery-1785200621</id>
            <summary type="text">Vivo நிறுவனம் தனது T-சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய Vivo T5e மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மொபைல், 5,500mAh பெரிய பேட்டரி மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vivo நிறுவனம் தனது T-சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய Vivo T5e மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த மொபைல், 5,500mAh பெரிய பேட்டரி மற்றும் Unisoc T7225 சிப் செட் கொண்டதாகும்.
</p><p>
Vivo T5e, 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு வசதியுடன் ஒரே வேரியண்டில் கிடைக்கிறது. விலை ரூ.13,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09bad8de-2e19-45d7-8f93-32267283c6cd/26-6a67ffef10940.webp' /></p><p>Aero Blue மற்றும் Shadow Grey என இரண்டு நிறங்களில் வாங்கலாம். Flipkart, Vivo ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.
</p><p>
இந்த மொபைல், 6.74-இஞ்ச் HD+ LCD டிஸ்ப்ளே (90Hz refresh rate) உடன் வருகிறது. OriginOS 6 (Android 16 அடிப்படையில்) இயங்குதளம் கொண்டுள்ளது. RAM-ஐ 4GB வரை virtual RAM மூலம் விரிவாக்கலாம். மேலும், 2TB வரை microSD கார்டு ஆதரவு உள்ளது.
</p><p></p><p>புகைப்படத்திற்காக, 8MP பின்புற கேமரா மற்றும் 5MP முன்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. 15W wired fast charging வசதி கொண்ட 5,500mAh பேட்டரி, 47 மணி நேரம் இசை, 18 மணி நேரம் வீடியோ, 28 மணி நேரம் voice calls, 13.5 மணி நேரம் சமூக ஊடக பயன்பாட்டை வழங்கும் என Vivo தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், IP64 rating மற்றும் Military-Grade Durability சான்றிதழ் பெற்றுள்ளது. பேட்டரி நான்கு ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக இருக்கும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T01:01:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் வருகை உறுதியா? ரசிகர்களிடம் தனுஷ் வைத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/actor-dhanush-sparks-political-entry-buzz-1785199991"></link>
            <id>https://news.lankasri.com/article/actor-dhanush-sparks-political-entry-buzz-1785199991</id>
            <summary type="text">சென்னையில் நடைபெற்ற இரத்த தான முகாமில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், தனது ரசிகர்களிடம், சினிமா கொண்டாட்டங்களைத் தாண்டி, மக்கள் நலத்திட்டங்களில் அதிகம் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில் நடைபெற்ற இரத்த தான முகாமில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், தனது ரசிகர்களிடம், சினிமா கொண்டாட்டங்களைத் தாண்டி, மக்கள் நலத்திட்டங்களில் அதிகம் ஈடுபட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
</p><p>
இந்த உரை, அவர் அரசியலுக்கு வருவாரா என்ற புதிய ஊகங்களை தூண்டியுள்ளது.
</p><p>
தனுஷ், “இவ்வளவு மக்கள் ஒன்று கூடுவது மிகப்பெரிய சக்தி. அந்த ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் தேவை. உங்கள் பகுதியில் உள்ள மக்களின் தேவைகளை புரிந்து, அவர்களுக்கு உதவுங்கள். நான் உங்களைப் பற்றி இன்னும் பெருமைப்பட விரும்புகிறேன்” என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40f42e8a-94d2-44af-9702-c6e903f8a030/26-6a67fd799df28.webp' /></p><p>அந்த நிகழ்வில், ரசிகர் மன்றத்திற்கான புதிய கொடியையும் அவர் வெளியிட்டார். இதனால், விஜய் அரசியலுக்குள் வந்த பாதையைப் போல தனுஷும் அதே வழியில் செல்லக்கூடும் என்ற கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
</p><p>
விஜய், தனது ரசிகர் மன்றங்களை மக்கள் நல அமைப்புகளாக மாற்றி, பின்னர் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி, தமிழக முதல்வராக உயர்ந்தார்.
</p><p>
இதேபோல், தனுஷ் ரசிகர்களிடம் நலத்திட்டங்களில் ஈடுபடுமாறு கூறியிருப்பது, அவரும் அரசியலுக்குள் வருவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Dhanush?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Dhanush</a> gives a Strong hint about his Political Entry:<br><br>&quot;So many people have gathered in one place.. This kind of unity has a power..💪 You need to give that unity a purpose.. Not just through audio launches and meet ups. Join hands and do more welfare work.. Do whatever you can…</p>&mdash; Laxmi Kanth (@iammoviebuff007) <a href="https://x.com/iammoviebuff007/status/2081407645572063497?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>சமூக ஊடகங்களில் பலர், “விஜய் அரசியலுக்கு வந்தால், தனுஷ் ஏன் வரக்கூடாது?” என கருத்து தெரிவித்துள்ளனர். சிலர், “தமிழகத்திற்கு கல்வியறிவு, ஒழுக்கம், துணிச்சல் கொண்ட குரல்கள் தேவை” என தனுஷை வரவேற்றுள்ளனர்.
</p><p>
இருப்பினும், தனுஷ் இதுவரை அரசியலில் நேரடியாக ஈடுபடுவதாக உறுதிப்படுத்தவில்லை. அவர், தனது ரசிகர் மன்றங்களை இரத்த தானம், வெள்ள நிவாரணம், கல்வி உதவி போன்ற சமூக சேவைகளில் ஈடுபடுத்தி வருகிறார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T00:51:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மாணவர்களுக்கு கனடாவின் குடியேற்றத் துறை முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-clarifies-work-rules-for-students-1785192359"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-clarifies-work-rules-for-students-1785192359</id>
            <summary type="text">கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் வேலை அனுமதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனடாவின் IRCC துறை முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் வேலை அனுமதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனடாவின் IRCC துறை முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.</p><p>IRCC தெரிவித்ததாவது: “Study Permit விதிகளில் வேலை செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தால்தான் மாணவர்கள் வேலை செய்ய முடியும். வகுப்புகள் நடைபெறும் காலத்தில், மாணவர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 24 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.</p><p>இதை மீறுவது குடியேற்றச் சட்டத்தை மீறுவதாக கருதப்படும். எதிர்காலத்தில் அனுமதி மறுக்கப்படலாம் அல்லது நாடு கடத்தல் போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படலாம்” என எச்சரித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32bccffb-d7af-4beb-8d30-259e07e7011a/26-6a67dfaa7a277.webp' /></p><p>இந்த அறிவிப்பு, போர்டேஜ் கல்லூரி (Portage College) மாணவர்கள் வேலை அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தியதையடுத்து வெளியிடப்பட்டது.
</p><p>
கல்லூரி தரப்பில், “மாணவர்கள் சட்ட ஆலோசனை பெற வேண்டும். நாங்கள் தொடர்ந்து IRCC உடன் விளக்கங்களைப் பெற முயற்சித்து வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p>மேலும், மாணவர்கள் எதிர்கால விண்ணப்பங்களுக்கு தேவையான ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என கல்லூரி அறிவுறுத்தியுள்ளது.</p><p> இதில் Study Permit, சேர்க்கை கடிதங்கள் (Joining Letter), கல்வி பதிவுகள், பாடநெறி நிறைவு ஆவணங்கள், மதிப்பெண் பட்டியல், PGWP விண்ணப்பங்கள், IRCC மறுப்பு கடிதங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
</p><p>
இந்த விளக்கம், கனடாவில் படிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு மிக முக்கியமானதாகும். வேலை அனுமதி விதிகளை மீறாமல், சட்டப்படி வேலை செய்வது மட்டுமே பாதுகாப்பான வழி என IRCC தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T00:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027-க்குள் Prototype உருவாக்க வேண்டும்., ஐரோப்பிய ஒன்றியத்திடம் உக்ரைன் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-seeks-eu-missile-shield-prototype-1785197867"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-seeks-eu-missile-shield-prototype-1785197867</id>
            <summary type="text">உக்ரைன், 2027 நடுப்பகுதிக்குள் ஐரோப்பிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் (European Missile Defence System) முதல் மாதிரியை உருவாக்க வேண்டும் என கோரியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன், 2027 நடுப்பகுதிக்குள் ஐரோப்பிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் (European Missile Defence System) முதல் மாதிரியை உருவாக்க வேண்டும் என கோரியுள்ளது.</p><p>உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், “ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குவது அவசியம்” என தெரிவித்துள்ளார்.</p><p>இந்த திட்டம், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் போலந்து போன்ற நாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd26aa3-a1e8-4bbf-abf5-aa33bbc5a690/26-6a67f52cdf049.webp' /></p><p>உக்ரைன், ரஷ்யாவின் தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொள்ள, தன்னுடைய வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்த முயற்சிக்கிறது.</p><p>

“நாங்கள் 2027க்குள் ஒரு செயல்பாட்டு மாதிரியை உருவாக்க விரும்புகிறோம். இது ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டணியின் அடித்தளமாக இருக்கும்” என அந்த அதிகாரி கூறியுள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்த அமைப்பு, பல்வேறு நாடுகளின் ரேடார், ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு திறன்களை ஒருங்கிணைக்கும். இதன் மூலம், ரஷ்யாவின் நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் திறன் பெறப்படும்.</p><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு நிதியிலிருந்து இதற்கான ஆரம்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், உக்ரைன் இதனை “ஐரோப்பாவின் பாதுகாப்பு சுவராக” உருவாக்க விரும்புகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த முயற்சி, நாட்டின் பாதுகாப்பை மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T00:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துள்ள ஜேர்மனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-boosts-israel-arms-exports-1785196824"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-boosts-israel-arms-exports-1785196824</id>
            <summary type="text">ஜேர்மனி, 2026-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், இஸ்ரேலுக்கு சுமார் 800 மில்லியன் யூரோ மதிப்பிலான ஆயுத ஏற்றுமதி அனுமதிகளை வழங்கியுள்ளது.இது கடந்த 20 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனி, 2026-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், இஸ்ரேலுக்கு சுமார் 800 மில்லியன் யூரோ மதிப்பிலான ஆயுத ஏற்றுமதி அனுமதிகளை வழங்கியுள்ளது.</p><p>இது கடந்த 20 மாதங்களில் வழங்கியதை விட அதிகம் என ஜேர்மன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த அனுமதிகளில் பெரும்பாலானவை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வழங்கப்பட்டதாகவும், அதில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மதிப்பு ஒரு பெரிய கப்பல் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f03e239c-2cea-47ae-b1cc-438ce679ba1b/26-6a67f11ab313c.webp' /></p><p>அந்த திட்டம், TKMS நிறுவனம் தயாரித்த Dolphin II வகை அணு திறன் கொண்ட INS Drakon நீர்மூழ்கிக் கப்பலாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
</p><p>
இந்த நீர்மூழ்கிக் கப்பல், அணு ஆயுதங்களை ஏவக்கூடிய Vertical Launching System (VLS) வசதியுடன் இருக்கக்கூடும். இதனால், இஸ்ரேல் கடல் வழியாக இரண்டாவது தாக்குதலை நடத்தும் திறனைப் பெறும்.
</p><p></p><p>ஜேர்மனியின் இந்த நடவடிக்கை, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவை கருத்தில் கொண்டால், சர்ச்சைக்குரியதாகும்.</p><p> பல்வேறு ஆய்வாளர்கள், “இஸ்ரேல் இந்த நீர்மூழ்கிக் கப்பல்களை காசா மீது தாக்குதல் நடத்தவும், அணு ஆயுதங்களை நிலைநிறுத்தவும் பயன்படுத்துகிறது” என எச்சரித்துள்ளனர்.
</p><p></p><p>ஜேர்மனியின் ஆயுத ஏற்றுமதி கொள்கை பல முறை மாற்றம் கண்டுள்ளது. 2023 அக்டோபரில் காசா மீது இஸ்ரேல் நடத்திய போர் காரணமாக, சில அனுமதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஆனால், பின்னர் மீண்டும் அனுமதிகள் வழங்கப்பட்டன.
</p><p>
ஜேர்மனி, தற்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய இராணுவ செலவினம் செய்யும் நாடாக மாறி வருகிறது. 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில், 13.87 பில்லியன் யூரோ மதிப்பிலான ஆயுத ஏற்றுமதி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T23:58:31+00:00</updated>
        </entry>
    </feed>
