<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-27T09:43:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை எவ்வளவு?(27-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785144175"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785144175</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (27-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (27-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><p>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</p></td></tr></tbody></table><p>&nbsp;தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,317,667.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,480.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 371,850.00.</p><p>

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,610.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 340,900.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,670.00.</p><p>

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 325,400.00. </p>]]></content>
            <updated>2026-07-27T09:23:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[CJP பாணியில் உருவான E20 ஜனதா கட்சி - சிக்கலில் அடுத்த அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/e20-janta-party-demands-resign-nitin-gadkari-1785141525"></link>
            <id>https://news.lankasri.com/article/e20-janta-party-demands-resign-nitin-gadkari-1785141525</id>
            <summary type="text">CJP பாணியில் உருவாகியுள்ள E20 ஜனதா கட்சி, மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை ராஜினாமா செய்ய கோரியுள்ளது.

CJP பாணியில் உருவான E20 ஜனதா கட்சி

வேலை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>CJP பாணியில் உருவாகியுள்ள E20 ஜனதா கட்சி, மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை ராஜினாமா செய்ய கோரியுள்ளது.</p><h3>

CJP பாணியில் உருவான E20 ஜனதா கட்சி
</h3><p>
வேலை இல்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 2 மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் தொடங்கப்பட்டது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(CJP).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1978d2d-ee42-48ce-a1db-a45167b10533/26-6a6719174f7fd.webp' /></p><p>

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக, CJP நடத்திய போராட்டம் மோடி அரசையே அசைத்து பார்த்துள்ளது. </p><p>

12 வருட மோடி அரசில் முதல்முறையாக, மக்களின் போராட்டத்திற்கு பணிந்து ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். </p><p>

தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூடுதலாக கல்வி அமைச்சர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். </p><p>

இதனை தொடர்ந்து, E20 ஜனதா கட்சி என்ற புதிய கட்சி இணையத்தில் உருவெடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p> 

இந்தியாவில் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் அரசின் கொள்கைக்கு வாகன ஓட்டிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். </p><p>

எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனத்தின் மைலேஜ் குறைகிறது, என்ஜின் பாதிக்கப்படுகிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை வாகன ஓட்டிகள் முன்வைத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56e6d91c-42b2-4beb-bb32-99ed63a075d5/26-6a671918002bd.webp' /></p><p> 

ஆனால் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி நிராகரித்துள்ளார். </p><h3>

சிக்கலில் நிதின் கட்காரி</h3><p>

இந்நிலையில், புதிதாக தொடங்கப்பட்ட E20 ஜனதா கட்சி, பெட்ரோல் பங்குகளில் 100% தூய்மையான பெட்ரோலையும் கிடைக்கச் செய்ய வேண்டும், எந்த பெட்ரோல் வேண்டுமோ அதை தேர்வு செய்யும் உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது.</p><p> 

CJP கட்சியை போல் E20 ஜனதா கட்சியை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. </p><p>

E20 பிரச்சாரமானது, CJPயின் "எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்னவாகும்?" என்பதை மேற்கோள் காட்டி, "எல்லா பைக்/கார் உரிமையாளர்களும் ஒன்று சேர்ந்தால் என்னவாகும்?" என்று E20 ஜனதா கட்சி கேட்டுள்ளதோடு, நிதின் கட்காரி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ht" dir="ltr">Nitin Gadkari ji must Resign!</p>&mdash; E20 JANTA PARTY (@E20Party) <a href="https://x.com/E20Party/status/2081449703854702787?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>டெல்லி டாக்சி, சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா நடத்துநர்கள் சங்கம், E20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p>
நிதின் கட்கரியின் மகன் நிகில் கட்கரி, Cian Agro என்ற எத்தனால் உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

E20 கொள்கை அமலுக்கு வந்தபோது, ரூ.40 ஆக இருந்த இந்நிறுவனத்தின் பங்கு விலை, ஒன்றரை ஆண்டுகளில் ரூ.3,600 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2baca0c3-f746-437a-b10a-fa1d23972b69/26-6a6719169fe99.webp' /></p><p>நிதின் கட்காரி தனது குடும்பத்தினரின் வணிக வருவாயில் எத்தனால் உற்பத்தி மூலம் கிடைக்கும் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது, பெருமளவில் லாபம் பெறுவதாக அவதூறு பரப்பப்படுகிறது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T08:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை தவறவிட்ட ஷாய் ஹோப்: 311 ஓட்டங்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shai-hope-missed-ton-vs-pak-1st-test-1785137972"></link>
            <id>https://news.lankasri.com/article/shai-hope-missed-ton-vs-pak-1st-test-1785137972</id>
            <summary type="text">பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் 311 ஓட்டங்கள் எடுத்தது.&amp;nbsp;ஷாய் ஹோப்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் 311 ஓட்டங்கள் எடுத்தது.&nbsp;</p><h2>ஷாய் ஹோப்</h2><p>
மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ட்ரினிடாட்டில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2466088-bc1c-45f5-ba4e-a2e6ba7f42d9/26-6a670cae44924.webp' /></p><p>

முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் கவேம் ஹாட்ஜ் 84 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p> அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். 

எனினும், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் (Shai Hope) 92 ஓட்டங்களில் இருந்தபோது மொஹம்மது அலி பந்துவீச்சில் அவுட் ஆகி சதத்தை தவறவிட்டார்.
</p><p>
மேற்கிந்திய தீவுகள் அணி 311 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மொஹம்மது அலி 4 விக்கெட்டுகளும், மொஹம்மது அப்பாஸ் 3 விக்கெட்டுகளும், குர்ரம் ஷாஷத் 2 விக்கெட்டுகளும், ஆமீர் ஜமால் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><p>
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் எடுத்துள்ளது. </p><p>

இமாம் உல் ஹக் 63 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷான் மசூத் 88 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4c95091-f93b-4342-8d0d-627c687f507e/26-6a670cad945dd.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T08:13:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் - ஸ்பெயினில் பரவும் காட்டுத்தீ: 3,00,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-france-wildfire-300000-people-evacuated-1785138538"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-france-wildfire-300000-people-evacuated-1785138538</id>
            <summary type="text">பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். பிரான்ஸ் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.</p><h2> பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பரவும் காட்டுத்தீ</h2><p>தென்மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தீயணைப்பு வீரர்கள் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் பயங்கரமான காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> தீயணைப்பு வீரர்கள் தற்போது முதன்மையாக பிரான்ஸின் போர்டோ(Bordeaux) நகரின் தெற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac94b6f2-42cf-4ce1-b4a5-71cad5a04634/26-6a670d6b6e24a.webp' /></p><p> காட்டுத்தீயின் தீவிரத்தன்மை காரணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளில் இருந்தும் 3,00,000க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p> வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட பலர் விளையாட்டு அரங்கங்களிலும், கண்காட்சி மையங்களிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2> வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை</h2><p>
காட்டுத்தீ வேகமாக பரவி வரும் போர்டோ பகுதியில் இரவு நேரங்களில் காற்று குறைந்து சிறிய அளவில் மழை பெய்து இருப்பதால் காட்டுத்தீ பரவல் தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7046ca29-0026-4295-b0c1-1a355557975c/26-6a670d6c32b03.webp' /></p><p> ஆனால் இந்த நிலைமை நீடிக்காது என்றும், செவ்வாய்க்கிழமை வெப்பநிலை 40°C (104°F) வரை உயரும் என்றும் வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-27T07:49:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-us-pause-attacks-for-diplomatic-efforts-1785135680"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-us-pause-attacks-for-diplomatic-efforts-1785135680</id>
            <summary type="text">அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை வழங்கும் முயற்சியாக அமெரிக்கா மற்றும் ஈரான் தங்களது மோதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அமெரிக்கா - ஈரான் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை வழங்கும் முயற்சியாக அமெரிக்கா மற்றும் ஈரான் தங்களது மோதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.</p><h2> அமெரிக்கா - ஈரான் தாக்குதல் நிறுத்தம்</h2><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில், இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக ஈரான் மீதான வான்வழித் தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.</p><p> இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p><p> Fox நியூஸ் தொலைக்காட்சிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் அளித்த பேட்டியில், இந்த தற்காலிக தாக்குதல் நிறுத்த நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b15a156-b47d-4502-a06d-093218fefb2e/26-6a670242143d4.webp' /></p><p> மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பேச்சுவார்த்தைக்கான இடத்தையும் அவகாசத்தையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>அத்துடன் இந்த தற்காலிக தாக்குதல் நிறுத்தம் தீர்வல்ல என்றும், ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய மேஜையில்&nbsp; அனைத்து விதமான சாத்தியக்கூறுகளும் வைத்து இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.</p><p> அதே நேரம் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு தளவாடங்களின் கையிருப்பு குறைந்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p><p> அமெரிக்காவின் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, பிராந்தியத்தில் தற்காப்புத் தாக்குதல்களை இடைக்காலமாக நிறுத்தி வைத்து இருப்பதாக ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T07:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[குர்பாஸ் சிக்ஸர் மழை! 35 பந்தில் 65 ஓட்டங்கள்..சரிந்த லாகூர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gurbaz-blast-65-runs-guyana-beat-lahore-1785135994"></link>
            <id>https://news.lankasri.com/article/gurbaz-blast-65-runs-guyana-beat-lahore-1785135994</id>
            <summary type="text">குளோபல் சூப்பர் லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லாகூர் கிளாண்டர்ஸை வீழ்த்தியது.&amp;nbsp;ரஹ்மனுல்லா குர்பாஸ்

ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>குளோபல் சூப்பர் லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லாகூர் கிளாண்டர்ஸை வீழ்த்தியது.&nbsp;</p><h2>ரஹ்மனுல்லா குர்பாஸ்</h2><p>

ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் லாகூர் கிளாண்டர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🤯 Rahmanullah Gurbaz went absolutely berserk!<br><br>5 sixes in a single over — pure destruction. 🚀🔥<a href="https://x.com/hashtag/GSL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#GSL</a> <a href="https://x.com/hashtag/Cricket?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Cricket</a> <a href="https://t.co/jU0zkjCUEp">pic.twitter.com/jU0zkjCUEp</a></p>&mdash; Cricket Room (@cricket__room) <a href="https://x.com/cricket__room/status/2081238825934745737?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
முதலில் களமிறங்கிய கயானா அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.

அவர் 35 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><p></p><p>
பின்னர் வந்த மொஹம்மது ஹாரிஸ் 34 ஓட்டங்களும், ஷெப்பர்ட் 29 ஓட்டங்களும் விளாச, கயானா அணி 164 ஓட்டங்கள் குவித்தது.
</p><h2>
சுருண்ட லாகூர் </h2><p>மைக்கேல் பிரேஸ்வெல், மெஹ்ரான் மும்தாஸ் தலா 2 விக்கெட்டுகளும், ரந்தவா, உஸமா மிர் மற்றும் டெலானோ போட்கிடர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><p>
பின்னர் ஆடிய லாகூர் கிளாண்டர்ஸ் அணி 17.2 ஓவர்களில் 111 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஃபர்ஹான் யூசப் 28 (19) ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
குடாகேஷ் மோட்டி 4 விக்கெட்டுகளும், டிவைன் பிரிட்டோரியஸ் 2 விக்கெட்டுகளும், ஃபோர்டே, ஷெப்பர்ட், இம்ரான் தாஹிர் மற்றும் மொஹம்மது நபி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e15acf4b-aa36-40b5-a754-2a5486e47504/26-6a6704631fd39.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T07:08:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேடிய மாகாணமொன்றில் 12 நாட்களில் 12 விபத்துகள்: 17 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/12-collisions-in-12-days-17-death-in-saskatchewan-1785135565"></link>
            <id>https://news.lankasri.com/article/12-collisions-in-12-days-17-death-in-saskatchewan-1785135565</id>
            <summary type="text">கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் 12 நாட்களில் நிகழ்ந்த 12 விபத்துகளில் 17 பேர் பலியாகியுள்ளதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

12 நாட்களில் 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் 12 நாட்களில் நிகழ்ந்த 12 விபத்துகளில் 17 பேர் பலியாகியுள்ளதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
</p><h3>
12 நாட்களில் 12 விபத்துகள்
</h3><p>
கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில், ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையிலான 12 நாட்களில், 12 விபத்துகள் தொடர்பில் தங்களுக்கு அழைப்புகள் வந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c368ea52-948b-4b82-b408-98ffc30fbbd0/26-6a6701cf159d9.webp' /></p><p>
</p><p>
அந்த 12 விபத்துகளில், 17 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

விடயம் என்னவென்றால், அந்த விபத்துகளில் பாதிக்கு, மது அல்லது போதைப்பொருள் அருந்திய சாரதிகளே காரணம்!
</p><p>
மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டிய சாரதி ஒருவர் ஏற்படுத்திய விபத்தில் தன் 17 வயது மகனான க்வினை இழந்தார் போனி ஸ்டீவென்சன் என்னும் பெண்.&nbsp;</p><p></p><p>
யாராவது மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவதைக் கண்டால், மக்கள் அவசர உதவியை அழைக்கவேண்டும் என்று கூறும் போனி, நாங்கள் எங்கள் மகனை இழந்துவிட்டோம்.
</p><p>
ஆனால், ஒரு குடும்பத்தில் இப்படி ஒரு இழப்பு ஏற்படுவதால் என்ன நடக்கும் என்பதை, விபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்று எனக்குத் தெரியவில்லை என்கிறார் அவர்.</p><p>

இந்நிலையில், சாலையில் வாகனம் ஓட்டும் சாரதிகள், பாதுகாப்பு தொடர்பில் சரியான முடிவெடுக்கும்படி பொலிசார் வலியுறுத்தியுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T06:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிற்காக வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் - யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/weightlifter-raja-muthupandi-won-silver-in-cwg2026-1785132477"></link>
            <id>https://news.lankasri.com/article/weightlifter-raja-muthupandi-won-silver-in-cwg2026-1785132477</id>
            <summary type="text">காமன்வெல்த் விளையாட்டு தொடரில், பளுதூக்கும் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

 வெள்ளிப்பதக்கம் வென...</summary>
            <content type="html"><![CDATA[<p>காமன்வெல்த் விளையாட்டு தொடரில், பளுதூக்கும் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.</p><h3> 

 வெள்ளிப்பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி</h3><p>

2026 காமன்வெல்த் விளையாட்டு தொடர், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p> 

இதில், ஆண்களுக்கான பளுதூக்குதல் 65 கிலோ பிரிவில், இந்தியா சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1b20b68-b729-4012-9be4-86f742340040/26-6a66f5bf1cd93.webp' /></p><p> 

ஸ்னாட்ச் (Snatch) முறையில் 126 கிலோவையும், கிளீன் அண்ட் ஜெர்க் (Clean and jerk) முறையில் 160 கிலோவையும் என மொத்தமாக 286 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1469cfec-4d6b-4534-8e30-9618a5b11015/26-6a66f5bfcd5f2.webp' /></p><p>

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப் பாண்டி சிறு வயது முதலேபளுதூக்குதலில் ஆர்வம் காட்டி வருகிறார்.
</p><p>
2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்குபெற்ற அவர், 62 கிலோ எடைப்பிரிவில் 266 கிலோ எடையைத் தூக்கி 6வது இடத்தைப் பிடித்திருந்தார்.&nbsp;</p><p></p><p> 

2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக சில ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டியில் விளையாட முடியாத நிலை இருந்தது. 2022 காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பங்குபெறும் வாய்ப்பை இழந்தார்.</p><p>
அகமதாபாத்தில் நடைபெற்ற 2025 காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் 296 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 299 கிலோதூக்கி ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Proud Moment for Indian Weightlifting!<br><br>Many congratulations to Raja Muthupandi for clinching Silver in Men&#39;s 65kg Weightlifting. <a href="https://x.com/hashtag/Cheer4Bharat?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Cheer4Bharat</a> <a href="https://x.com/hashtag/CWG2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CWG2026</a> <a href="https://t.co/qjldVR9ja5">pic.twitter.com/qjldVR9ja5</a></p>&mdash; Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) <a href="https://x.com/mansukhmandviya/status/2081552652031385645?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ளராஜா முத்துப்பாண்டி, "தங்கம் வெல்வதற்காக நாங்கள் முழு முயற்சியையும் வெளிப்படுத்துவோம் என்று என் பயிற்சியாளர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்.ஆனால், நான் சிறப்பாகச் செயல்படவில்லை. அதனால் நான் நிச்சயமாக ஏமாற்றமடைந்துள்ளேன்.</p><p>

இந்த வெற்றியை என் பெற்றோருக்கும், என் பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கும் சமர்ப்பிக்கிறேன். இங்கு கற்றுக்கொண்ட பாடங்களில் கவனம் செலுத்தி, என் பயிற்சியாளரின் அறிவுறுத்தல்களின்படி பயிற்சி செய்து, இனிவரும் காலங்களில் கடினமாக உழைப்பேன்," என்று தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது… <a href="https://t.co/elI9Q6dUhN">pic.twitter.com/elI9Q6dUhN</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2081621610168205752?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இந்திய அணி, ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T06:08:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/berlin-pride-terror-attack-suspect-shot-dead-1785130993"></link>
            <id>https://news.lankasri.com/article/berlin-pride-terror-attack-suspect-shot-dead-1785130993</id>
            <summary type="text">பெர்லினில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் விழாவில் கார் வைத்து மோதி தாக்குதலில் ஈடுபட்ட நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பெர்லின் தன்பாலின ஈர்ப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெர்லினில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் விழாவில் கார் வைத்து மோதி தாக்குதலில் ஈடுபட்ட நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.</p><h2> பெர்லின் தன்பாலின ஈர்ப்பாளர்கள் விழாவில் புகுந்த கார்</h2><p>
கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தியர்கார்டன்(Tiergarten) பூங்கா பகுதிக்கு அருகில் நடைபெற்ற தன்பாலின ஈர்பாளர்கள் விழாவில் புகுந்த வெள்ளை நிற வாகனம் ஒன்று மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.</p><p> இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 29 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p> கார் மோதலை தொடர்ந்து கத்திக்குத்து தாக்குதலும் அரங்கேறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8854608a-afb7-4782-a968-74a225c67370/26-6a66f12d40c68.webp' /></p><p>தாக்குதலை தொடர்ந்து இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட் உறுதிப்படுத்தி இருந்தார்.</p><p></p><h2>பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தாக்குதல்தாரி</h2><p>
தன்பாலின ஈர்ப்பாளர்கள் விழாவில் நடந்த வன்முறை சம்பவத்தின் சந்தேகத்திற்குரிய நபரும், ஜேர்மன் குடிமகனுமான 21 வயது அப்துல் பலூத்(Abdul Ballout) காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.</p><p> பெர்லினின் ஸ்பாண்டெள(Spandau) பகுதியில் காவல்துறையினரை தாக்க முயன்றதை அடுத்து பொலிஸார் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7acb86a-7438-4b18-9227-ff80e189e673/26-6a66f12e0297e.webp' /></p><p> கொல்லப்பட்ட சந்தேக நபர் லெபனான் நாட்டு வம்சாவளியை சேர்ந்தவர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p> மேலும் அப்துல் பலூத்திற்கு தீவிரமான குற்ற பின்னணிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T05:48:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் நாட்டுக்கு வராதீர்கள்... சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக நாடொன்றில் வெடித்த கலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mallorca-thousands-of-protesters-against-tourists-1785129047"></link>
            <id>https://news.lankasri.com/article/mallorca-thousands-of-protesters-against-tourists-1785129047</id>
            <summary type="text">பல நாடுகளில், நாட்டின் வருவாய்க்கு முக்கிய காரணிகளில் ஒன்று சுற்றுலா என்னும் நிலை காணப்படுகிறது.

ஆனால், பெருந்திரளாக சுற்றுலாப்பயணிகள் தங்கள் ஊர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல நாடுகளில், நாட்டின் வருவாய்க்கு முக்கிய காரணிகளில் ஒன்று சுற்றுலா என்னும் நிலை காணப்படுகிறது.
</p><p>
ஆனால், பெருந்திரளாக சுற்றுலாப்பயணிகள் தங்கள் ஊர்களுக்கு வருவதை சில நாடுகளில் உள்ளவர்கள் தொல்லையாக நினைக்கிறார்கள்.
</p><p>
சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளில் ஆங்காங்கே சுற்றுலா எதிர்ப்பு குறித்த செய்திகள் வெளியாகிவரும் நிலையில், நாடொன்றின் மக்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட விடயம் கலவரத்தில் முடிந்துள்ளது.</p><h3>

எங்கள் நாட்டுக்கு வராதீர்கள்...
</h3><p>
ஆம். நேற்று மாலை, ஸ்பெயினுக்கு சொந்தமான மஜோர்க்கா தீவின் தலைநகரான பால்மாவில் 25,000க்கும் அதிகமான பொதுமக்கள் சாலைகளில் கூடி சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2c0ad77-29ea-452d-aa54-6ceacde3a09b/26-6a66e8586fbb1.webp' /></p><p>ஒரு கட்டத்தில், பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்த, கூட்டத்தில் சிலர் தடையை மீற முயல, பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களும் இடையே மோதல் வெடித்தது.&nbsp;</p><p></p><p>
பொலிசார் தடியடி நடத்தியதுடன், ஒரு கட்டத்தில் கூட்டத்தினரை நோக்கி ரப்பர் குண்டுகளை சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6826eccd-7fe9-4fca-9574-903caeefb123/26-6a66e8591df2d.webp' /></p><p>இருதரப்பினரும் மோதிக்கொண்டதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும், பொலிசாரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் மோதிக்கொள்வதையும் காட்டும் ஏராளமான காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63983c80-15a6-43ec-b2a1-664f51d4d4a5/26-6a66e859c1a9a.webp' /></p><p>சுற்றுலாப்பயணிகள் வராதீர்கள், சுற்றுலாப்பயணிகளே திரும்பிச் செல்லுங்கள், மஜோர்க்காவை காப்பாற்றுங்கள், சுற்றுலாவால் பேரழிவு, எனக்கூறும் பதாகைகளை மக்கள் ஏந்தியிருந்தையும் காணமுடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/979b1d47-29fc-4871-9afa-a27fa5cbf159/26-6a66e85a6ffb0.webp' /></p><p>விடயம் என்னவென்றால், இப்படி சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக மஜோர்க்கா மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த மூன்று ஆண்டுகளாக, கோடையின்போது இதேபோல் சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T05:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் உணவுகள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/liver-health-top-10-foods-that-detox-liver-1785128810"></link>
            <id>https://news.lankasri.com/article/liver-health-top-10-foods-that-detox-liver-1785128810</id>
            <summary type="text">நம் உடலில் கல்லீரல் மிகவும் கடினமாக உழைக்கும் உறுப்புகளில் ஒன்றாகும்.

இது உடலிலிருந்து நச்சுக்களை வடிகட்டுகிறது, ஊட்டச்சத்துக்களை வளர்சிதை மாற்றம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம் உடலில் கல்லீரல் மிகவும் கடினமாக உழைக்கும் உறுப்புகளில் ஒன்றாகும்.</p><p>

இது உடலிலிருந்து நச்சுக்களை வடிகட்டுகிறது, ஊட்டச்சத்துக்களை வளர்சிதை மாற்றம் செய்கிறது, இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் செரிமானத்திற்காக பித்தநீரை உற்பத்தி செய்கிறது.
</p><p>
இருப்பினும் தவறான உணவுப் பழக்கம், அதிகப்படியான சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், மது, மன அழுத்தம் போன்றவை கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d93645d-925e-4de2-bf99-069181c6a128/26-6a66e76c6b3d9.webp' /></p><p>கல்லீரலுக்கு இயற்கையாகவே நச்சு நீக்கும் திறன் இருந்தாலும், சரியான உணவுகள் இந்த செயல்முறையை மேம்படுத்தும்.</p><p>

அந்தவகையில், கல்லீரல் நச்சுக்களை வெளியேற்ற உதவும் 10 உணவுகள் குறித்து பார்க்கலாம்.</p><h2>என்னென்ன தெரியுமா?</h2><p><b>
கீரை வகைகள்- </b>உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. அவை செரிமானத்தையும் மேம்படுத்துகின்றன.
</p><p><b>
பீட்ரூட்- </b>கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது. இது கல்லீரல் செல்களை பாதுகாக்கிறது மற்றும் கொழுப்பு மாற்றத்தை சீராக்குகிறது.</p><p><b>

பூண்டு- </b>கல்லீரல் நச்சு நீக்கும் செயல்பாட்டை தூண்டுகிறது. இது கல்லீரல் சேதத்தை குறைக்க உதவுகிறது.
</p><p><b>
எலுமிச்சை- </b>எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் பித்தநீர் உற்பத்தியை அதிகரித்து நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன.</p><p>
</p><p></p><p><b>மஞ்சள்- </b>மஞ்சளில் உள்ள குர்குமின் கல்லீரல் அழற்சியை குறைத்து அதை பாதுகாக்கிறது.
</p><p><b>
ஆப்பிள்- </b>உடலில் உள்ள நச்சுக்களை பிணைத்து வெளியேற்ற உதவுகிறது. இது கல்லீரலின் சுமையை குறைக்கிறது.
</p><p><b>
அவகாடோ- </b>கல்லீரல் நச்சு நீக்கத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.
</p><p><b>
சிலுவை காய்கறிகள்- </b>ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
</p><p><b>
க்ரீன் டீ-</b> கல்லீரல் செல்களை பாதுகாத்து கொழுப்பு சேர்வதை குறைக்க உதவுகிறது.
</p><p><b>
தக்காளி- </b>கல்லீரலை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து காக்கிறது மற்றும் அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T05:07:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சியாட்டில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/seattle-centre-food-festival-shooting-2-dead-1785127428"></link>
            <id>https://news.lankasri.com/article/seattle-centre-food-festival-shooting-2-dead-1785127428</id>
            <summary type="text">அமெரிக்காவின் சியாட்டில் நடைபெற்ற உணவு திருவிழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் சியாட்டில் நடைபெற்ற உணவு திருவிழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு</h2><p>
சியாட்டில் நகரின் புகழ்பெற்ற சியாட்டில் சென்டரில் நடைபெற்ற பிரம்மாண்ட உணவுத் திருவிழாவில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது.</p><p> ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p> மேலும் ஒரு குழந்தை உட்பட 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58633893-d48e-4be7-9d5d-0e48d5c92a2a/26-6a66e2b85f8bc.webp' /></p><p> தீயணைப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலின் படி, மாலை 18.00 மணி அளவில் இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><p></p><p> உணவு திருவிழாவில் கலந்து கொண்ட நபர்கள் வழங்கிய தகவலில், கொண்டாட்டத்தின் போது பலமுறை துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும், இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அலறி அடித்துக் கொண்டு ஓடியதாக தெரிவித்துள்ளனர்.</p><p> சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் நிலைமையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தாக்குதல்தாரிகள் குறித்து விரைவில் தகவல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T04:49:14+00:00</updated>
        </entry>
    </feed>
