<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-30T09:53:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல ஆண்டுகளாக வீசிய நாற்றம்: கனேடிய கிராமம் ஒன்று எடுத்துள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canadian-town-removes-rotten-fish-sauce-tank-1785404741"></link>
            <id>https://news.lankasri.com/article/canadian-town-removes-rotten-fish-sauce-tank-1785404741</id>
            <summary type="text">கனேடிய கிராமம் ஒன்றில், மீன் சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து பல ஆண்டுகளாக துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த நிலையில், அது தொடர்பில் உள்ளூர் நிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனேடிய கிராமம் ஒன்றில், மீன் சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து பல ஆண்டுகளாக துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த நிலையில், அது தொடர்பில் உள்ளூர் நிர்வாகம் நல்ல முடிவொன்றை எடுத்துள்ளது.</p><h3>

பல ஆண்டுகளாக வீசிய நாற்றம்
</h3><p>
கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடார் மாகாணத்தில், செயிண்ட் மேரீஸ் என்னும் சிறு கிராமம் ஒன்று உள்ளது.
</p><p>
அந்த கிராம மக்கள், பல ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரச்சினையை சந்தித்துவந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f97ff6e-9944-4e4a-aaec-16cfa37a84b8/26-6a6b1d470aa2c.webp' /></p><p>
அதாவது, அங்கு ஒரு மீன் சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் அந்த தொழிற்சாலை நிர்வாகம் அந்த தொழிற்சாலையை கைவிட்டுச் சென்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/addacb0e-bb03-4e83-8df6-daa2d880f80b/26-6a6b1d47aec95.webp' /></p><p>
அப்போது, அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள், சுமார் 11,000 லிற்றர் கொள்ளளவு கொண்ட, 110 டேங்குகளிலிருந்த மீன் சாஸை அப்படியே விட்டுச் சென்றுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>

காலப்போக்கில் ஜன்னல்கள், கதவுகள், கூரை, சுவர்கள் என அந்த தொழிற்சாலைக் கட்டிடம் சிதிலமடைய, மீன் சாஸ் டேங்குகளில் சாஸை நொதிக்கச் செய்வதற்காக சேர்க்கப்பட்ட பாக்டீரியா தவறாமல் தன் பணியைச் செய்ய, அழுகிய மீன் சாஸிலிருந்து கடும் நாற்றம் வீசத்துவங்கியுள்ளது.</p><p>

பல ஆண்டுகளாக மக்கள் அந்த துர்நாற்றத்தால் அவதியுற்றுவந்த நிலையில், தற்போது உள்ளூர் நிர்வாகம் அது தொடர்பில் ஒரு நல்ல முடிவெடுத்துள்ளது.
</p><p>
ஆம், தாங்களே அந்த மீன் சாஸை அங்கிருந்து அகற்றி, பிரம்மாண்ட பள்ளம் ஒன்று தோண்டி, அதில் ஊற்றி மண்ணைப் போட்டு மூடிவிட உள்ளூர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
</p><p>
ஆக, இத்தனை ஆண்டுகளாக நாற்றத்தால் தவித்துவந்த மக்களுக்கு விரைவில் அதிலிருந்து விடுதலை கிடைக்கப்போகிறது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T09:45:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்னாகும்? விஜய்யின் ஜோதிடர் சொன்ன பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-astrologer-about-dhanush-political-entry-1785404000"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-astrologer-about-dhanush-political-entry-1785404000</id>
            <summary type="text">தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நிகழும் என விஜய்யின் ஜோதிடர் ரதன் பண்டிட் வெற்றிவேல் கருத்து தெரிவித்துள்ளார். 

அரசியலுக்கு வரும் தனுஷ் 

தமிழக அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நிகழும் என விஜய்யின் ஜோதிடர் ரதன் பண்டிட் வெற்றிவேல் கருத்து தெரிவித்துள்ளார். </p><h3>

அரசியலுக்கு வரும் தனுஷ்</h3><p> 

தமிழக அரசியலில் சினிமா துறையில் இருந்து வந்தவர்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். </p><p>

கட்சி தொடங்கிய 3 ஆண்டுகளில், சந்தித்த முதல் தேர்தலிலே ஆட்சியை கைப்பற்றி, தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார் விஜய்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7766caa7-09f3-4ed8-8b02-84a74baf1e92/26-6a6b1a622f203.webp' /></p><p>

ஆனால், கட்சி தொடங்கிய அனைத்து நடிகர்களுக்கும் இந்த வெற்றி சாத்தியமில்லை. 

எம்ஜிஆருக்கு பின்னர், சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி. ராஜேந்தர், கார்த்திக், விஜயகாந்த், சரத்குமார், சீமான், கமலஹாசன் என பல நடிகர்கள் கட்சி தொடங்கியும் முதல்வர் ஆக முடியவில்லை.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தனது பிறந்தநாள் நிகழ்வில் நடிகர் தனுஷ் பேசியது அவர் அரசியல் கட்சியை தொடங்க உள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a1f7150-ee4a-4a46-bd56-f5a487ce7501/26-6a6b1a6383fff.webp' /></p><p>

தனுஷின் அரசியல் வருகை குறித்து முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரதன் பண்டிட் வெற்றிவேலிடம் ஒரு நிகழ்வில் கேள்வி எழுப்பப்பட்டது.</p><p> 

இதற்கு பதிலளித்த அவர், "என்ன பொறுத்தவரைக்கும் ஒருவேளை தனுஷ் அரசியலுக்கு கமிட் ஆயிட்டாருன்னு வச்சுக்கோங்க. அதன் பின்னர் திமுக, அதிமுக இருக்காது. அந்த நம்பர் 2 இடத்திற்கு தனுஷ் வந்துருவாரு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e59e27-4a96-425d-815c-45148acbdfb0/26-6a6b1a62d4174.webp' /></p><p>
அவர் ஜாதகத்தை நான் பர்சனலா பார்த்திருக்கேன். அவரு ஜாதகம் என்னான்னு எனக்கு தெரியும். உறுதியாக இன்னொரு அதிர்ஷடமிகு ஆள் தனுஷ். 

இதுல அனுபவம் இருக்கா?அறிவு இருக்கான்னா உதவி செய்ய அனுபவம் அறிவும் தேவை இல்லை. </p><p>உதவி செய்ற மனசு இருந்தா போதும். 

அரசியல் அனுபவம் தேவையே இல்லை, நல்ல மனசு இருந்தா போதும். ரிஸ்க் எடுக்க தனுஷ் சார் தயாரா இருந்தா 2031ல இது விஜய் சார் வெர்சஸ் தனுஷ் சார்ன்னு மாறும்" என தெரிவித்துள்ளார். </p><h3>

தனுஷ் தெலுங்கரா?
</h3><p>
சமீபத்தில், அவரது தனுஷ் ரசிகர் நற்பணி மன்ற கொடி, அவரது ஜாதி கொடியின் அடையாளத்தில் உள்ளதாக சமூகவலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சமீபத்தில் தனுஷ் அவர்கள் தன்னுடைய ரசிகர் மன்றத்திற்கு கொடி ஒன்றை அறிமுகம் செய்தார்.<br><br>இதில் வியப்பு என்னவென்றால் அந்த கொடியின் நிறம் அப்படியே அவரின் தெலுங்கு சமூகமான கவரா நாயுடு சங்கத்தின் கொடியின் நிறத்தை அப்படியே ஒத்து இருக்கிறது.<br><br>தனுஷ் அவர்களுக்கும் அரசியல் கனவு இருக்குமோ😮..! <a href="https://t.co/1Yjytz2Ctr">pic.twitter.com/1Yjytz2Ctr</a></p>&mdash; Senthilvelu V C (@Senthilveluvc) <a href="https://x.com/Senthilveluvc/status/2074803576761893360?ref_src=twsrc%5Etfw">July 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

தமிழ்நாட்டில் தமிழர்களை விட பிற மொழி பேசுபவர்கள் அரசியலில், அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக பல ஆண்டுகளாக தமிழர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வேதனை தெரிவித்து வரும் நிலையில், தனுஷ் தெலுங்கை மொழி பேசும் சமூகத்தை சேர்ந்தவர் எனக்கூறி, தனுஷின் அரசியல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். </p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpalakiruttinan%2Fposts%2Fpfbid02nBm4qpwQunFJ8EBVDhRpVrzVBVLNsX1bnALYQGzCZqNy9KVEHPjzMPBNuYDM8jLHl&show_text=true&width=500" width="500" height="250" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p> 

ஆனால், தனுஷ் தெலுங்கராக இருந்தாலும் அவர் அரசியலுக்கு வந்தால் அவருக்கு தான் எங்களுக்கு ஆதரவு என தனுஷ் ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T09:33:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு பவுன் தங்க விலை எவ்வளவு? (30-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785402873"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785402873</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (29-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (29-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,313,294.00 ஆகும்.</p><p>

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,330.00.</p><p>

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 370,650.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,470.00.</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 339,800.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,540.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 324,350.00.</p>]]></content>
            <updated>2026-07-30T09:14:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிர வெப்பம்... பிரித்தானியாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட வறட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drought-declared-half-of-england-1785401766"></link>
            <id>https://news.lankasri.com/article/drought-declared-half-of-england-1785401766</id>
            <summary type="text">வரலாறு காணாத குறைந்த மழைப்பொழிவு மற்றும் அசாதாரணமான அதிக வெப்பநிலை காரணமாக, பிரித்தானியாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாறு காணாத குறைந்த மழைப்பொழிவு மற்றும் அசாதாரணமான அதிக வெப்பநிலை காரணமாக, பிரித்தானியாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>மிகவும் வறண்ட&nbsp;ஜூலை</h2><p>
</p><p>அரசின் சுற்றுச்சூழல் முகமையின் தகவலின்படி, நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட மழையளவில் வெறும் ஏழு சதவிகிதமும், தெற்கு பிரித்தானியாவின் சில பகுதிகளில் ஒரு சதவிகிதமும் மட்டுமே பெய்துள்ள நிலையில், இதுவரையிலான ஜூலை மாதங்களிலேயே மிகவும் வறண்டதாக இது பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3556866-7112-4c55-a976-3687baab2241/26-6a6b12bd86c04.webp' /></p><p> மட்டுமின்றி, இந்த ஆண்டின் நான்காவது வெப்ப அலையை நாடு எதிர்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைவான மழைப்பொழிவு மற்றும் அதிக வெப்பம் உள்ளிட்டவையால் ஏற்படும் வறட்சியானது, பிரித்தானியாவைப் பொறுத்தமட்டில் இது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகும்.</p><p></p><p> </p><p>சுற்றுச்சூழல் முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது, விவசாயிகள் பயிர்களை முன்கூட்டியே அறுவடை செய்ய வேண்டியுள்ளது, காட்டுத்தீ அபாயம் அதிகரித்து வருகிறது, மேலும் மில்லியன் கணக்கான மக்கள் நீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்ந்து வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eb6b7b5-70c9-4705-be19-75e7b7dd46cc/26-6a6b12be795a2.webp' /></p><h2>நீர் நிறுவனங்களுக்கு</h2><p> </p><p>வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்ட ஏழு இடங்களில் லண்டன், அதன் வடகிழக்கில் உள்ள ஈஸ்ட் ஆங்லியா, தென்மேற்கு பிரித்தானியா முழுமையும் மற்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் ஆகியவை அடங்கும். </p><p>இவை நாட்டின் 51.4 சதவீதப் பரப்பளவைக் கொண்டுள்ளன. இந்த நிலையில், பிரித்தானியா முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகள், தயார்நிலைத் திட்டங்கள் மற்றும் வறட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு, கசிவுகளைச் சரிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்குமாறு நாட்டின் தனியார் நீர் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக அந்த முகமை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d824d24b-6ebe-451a-99dd-85fef9bf7159/26-6a6b11a99a868.webp' /></p><p> </p><p>புதன்கிழமை அன்று, நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் மாதத்திற்கான அளவீடுகளை இறுதிசெய்துவிட்டதாகவும், அதன்படி இங்கிலாந்து முழுமையும் அந்த மாதத்திற்கான தினசரி வெப்பநிலை சாதனையாக 38 டிகிரி செல்சியஸ் பதிவானதாகவும் அறிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T08:54:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவரை ரயில் நிலையத்தில் விடச் சென்ற இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hyderabad-techie-dies-accident-in-us-1785399704"></link>
            <id>https://news.lankasri.com/article/hyderabad-techie-dies-accident-in-us-1785399704</id>
            <summary type="text">அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்தியப் பெண்ணொருவர், தன் கணவரை ரயில் நிலையத்தில் விடச் சென்ற நிலையில், வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்தியப் பெண்ணொருவர், தன் கணவரை ரயில் நிலையத்தில் விடச் சென்ற நிலையில், வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.
</p><h3>
கணவரை ரயில் நிலையத்தில் விடச் சென்ற பெண்</h3><p>

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாதைச் சேர்ந்த ராமகிருஷ்ண ரெட்டி, ஸ்ரீபதி தீபா (42) தம்பதியர் அமெரிக்காவில் தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்துவருகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c05a7827-e4db-4f60-855d-724673406296/26-6a6b09998bf98.webp' /></p><p>
இந்நிலையில், செவ்வாயன்று, தன் கணவரை ரயில் நிலையம் ஒன்றில் விட்டு விட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார் தீபா.
</p><p>
அப்போது அவரது கார் மீது மற்றொரு கார் மோத, அந்த விபத்தில் தீபா உயிரிழந்துவிட்டார்.&nbsp;</p><p></p><p>
விடயம் என்னவென்றால், தீபா இரண்டு நாட்களில் இந்தியா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், அந்த விபத்து அவரை பலிவாங்கிட்டது.
</p><p>
விபத்தை ஏற்படுத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:22:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 வயது மகள் தேர்ந்தெடுத்த எண் - லொட்டரியில் ரூ.6.52 லட்சம் வென்ற சென்னை நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chennai-man-won-6-lakh-lottery-pick-by-daughter-1785399107"></link>
            <id>https://news.lankasri.com/article/chennai-man-won-6-lakh-lottery-pick-by-daughter-1785399107</id>
            <summary type="text">2 வயது மகள் தேர்ந்தெடுத்த எண் சென்னை நபர் லொட்டரியில் ரூ.6.52 லட்சம் பரிசு வென்றுள்ளார். 

மகள் தேர்ந்தெடுத்த எண் மூலம் ரூ.6.52 லட்சம்

சென்னையைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2 வயது மகள் தேர்ந்தெடுத்த எண் சென்னை நபர் லொட்டரியில் ரூ.6.52 லட்சம் பரிசு வென்றுள்ளார்.</p><h3> 

மகள் தேர்ந்தெடுத்த எண் மூலம் ரூ.6.52 லட்சம்
</h3><p>
சென்னையைச் சேர்ந்த 44 வயதான கஜினிமுகமது பஹருதீன், கடந்த 24 ஆண்டுகளாக குடும்பத்துடன் ஷார்ஜாவில் வசித்து வருகிறார்.&nbsp; </p><p>இவர் 2019 முதல், கடந்த 7 ஆண்டுகளாக பிக் டிக்கெட் லொட்டரி வாங்கி வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cad5e39-516d-4290-8fbf-05972a2a2ec2/26-6a6b0744ed861.webp' /></p><p> 

ஜூலை மாத குலுக்கலுக்கான லொட்டரி டிக்கெட் எண்ணை தனது 2வயது மகளை தேர்ந்தெடுக்குமாறு கூறியுள்ளார். </p><p>

இந்த குலுக்கலில் தனது 2 வயது மகள் தேர்வு செய்த எண்ணுக்கு 25,000 AED(இந்திய மதிப்பில் ரூ.6.52 லட்சம்) பரிசு கிடைத்துள்ளது.
</p><p>
இது குறித்து பேசிய கஜினிமுகமது, "பரிசுப் பணத்தை எப்படிச் செலவழிக்கப் போகிறேன் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், ஆனால் அடுத்த குலுக்கல்களில் பங்கேற்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதே போல், ஐக்கிய அரபு அமீரகத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த 56 வயதான லிண்டோ ஜோஸ் மெச்செரியும் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.&nbsp;</p><p></p><p>

லிண்டோ ஒவ்வொரு மாதமும் 10 பேர் கொண்ட குழுவின் ஒரு பகுதியாக 'பிக் டிக்கெட்' போட்டியில் பங்கேற்று வருகிறார். </p><p>இந்த முறை அவரது நண்பர் பிறந்தநாள் திகதியை வைத்து எண்ணை தேர்வு செய்ததில், 25,000 AED பரிசு வென்றுள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:12:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்த நெய்மர் - முறியடிக்கப்படாத சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/footballer-neymar-announced-retirement-for-brazil-1785390673"></link>
            <id>https://news.lankasri.com/article/footballer-neymar-announced-retirement-for-brazil-1785390673</id>
            <summary type="text">பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  

 ஓய்வை அறிவித்த நெய்மர்

2010 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். </p><h3> 

 ஓய்வை அறிவித்த நெய்மர்</h3><p>

2010 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் அமெரிக்காவுக்கு எதிரான நட்புறவுப் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானவர் நெய்மர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/451ccad2-c213-4bf0-bed2-45f7959cb394/26-6a6ae6533f1fb.webp' /></p><p>

பிரேசில் அணிக்காக 130 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 80 கோல்களை அடித்துள்ளார் மற்றும் 59 கோல்களுக்கு உதவியாக இருந்துள்ளார்.
</p><p>
இதன் மூலம், பிரேசில் கால்பந்து அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். </p><p>

2014 முதல் 2026 வரை தொடர்ச்சியாக 4 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற நெய்மர், 15 போட்டிகளில் 9 கோல்களை அடித்து, 4 தொடர்களிலும் கோல் அடித்த மிகச் சில வீரர்களில் ஒருவரானார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c35cad37-709b-4d84-a43f-0ae5773cad0f/26-6a6ae653edd96.webp' /></p><p>

2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில், 5 முறை சாம்பியனான பிரேசில் அணி,.காலிறுதிக்கு முந்தைய சுற்றான 'ரவுண்ட் ஆஃப் 16' ஆட்டத்தில் நார்வே அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.</p><p> 

அவர் சர்வதேச போட்டியில் அறிமுகமான அதே மெட்லைஃப் ஸ்டேடியத்தில் தனது கடைசி சர்வதேச போட்டியை விளையாடியுள்ளார்.</p><p>

கடந்த 2 ஆண்டுகளாக காயம் காரணமாக அடிக்கடி அவதிப்பட்டு வந்த நெய்மரால், இந்த தொடரின் முதல் சில போட்டிகளிலும் அவரால் முழுமையாக விளையாட முடியாமல் போனது. </p><p>

இந்நிலையில் தனது சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ள நெய்மர், "தேசிய அணியுடனான எனது காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். நான் அங்கு வரலாறு படைத்தேன், அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். </p><p>நான் அங்கே நிறைய அனுபவங்களைப் பெற்றேன், என் இரத்தத்தையும் உயிரையும் கொடுத்தேன், மேலும் அந்த மஞ்சள் ஜெர்சிக்காக எப்போதும் போராடினேன். ஆனால், எனக்கு இனி அது வேண்டும் என்று தோன்றவில்லை" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d5b8739-6125-4408-827d-2e9c173e92c2/26-6a6ae6549fc99.webp' /></p><p>

சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், தனது Santos அணிக்காக விளையாட உள்ளார். </p><p>

நெய்மர் 2017 ஆம் ஆண்டில் பார்சிலோனாவிலிருந்து பாரிஸ் செயிண்ட் ஜெர்மெயினுக்கு 222 மில்லியன் யூரோக்கு(இந்திய மதிப்பில் ரூ.2,432 கோடி) பரிமாற்றம் செய்யப்பட்டதே, தற்போது வரை சாதனை பரிமாற்றமாக உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T07:55:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆங்கில மொழி தொடர்பில் சுவிஸ் அமைப்பொன்று எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/english-over-national-languages-concern-in-swiss-1785396592"></link>
            <id>https://news.lankasri.com/article/english-over-national-languages-concern-in-swiss-1785396592</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் ஆங்கில மொழிப் பயன்பாடு அதிகரித்துவருவது தொடர்பில், மொழிசார் அமைப்பொன்று எச்சரிக்கை செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது.

அதிகரித்துவரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் ஆங்கில மொழிப் பயன்பாடு அதிகரித்துவருவது தொடர்பில், மொழிசார் அமைப்பொன்று எச்சரிக்கை செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது.</p><h3>

அதிகரித்துவரும் ஆங்கில மொழிப் பயன்பாடு
</h3><p>
சுவிட்சர்லாந்தில், ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலிய மொழி மற்றும் ரோமான்ஷ் என்னும் மொழி என, மொத்தம் நான்கு மொழிகள் தேசிய மொழிகளாக பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
</p><p>
பன்மொழித்தன்மை என்பது சுவிஸ் தேசிய அடையாளத்தின் ஓர் முக்கியத் தூணாகும்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6cf71f1-90a2-41f9-aeea-4bef0cb581ce/26-6a6afd71d7342.webp' /></p><p>
ஆனால், சமீப காலமாக, சில மாகாணங்களில், ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கற்பித்தல் அதிகரித்துவருகிறது.
</p><p>
அதாவது, ஜேர்மன் மொழி பேசும் மாகாணங்களில் இரண்டாவது மொழியாக பிரெஞ்சு மொழியும், பிரெஞ்சு மொழி பேசும் மாகாணங்களில் இரண்டாவது மொழியாக ஜேர்மன் மொழியும் கற்பிக்கப்படவேண்டும்.&nbsp;</p><p></p><p>
ஆனால், அதற்கு பதிலாக, ஆங்கிலத்துக்கு சில மாகாணங்கள் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன.
</p><p>
இந்நிலையில், Switzerland's Bilingualism Forum என்னும் மொழிசார் அமைப்பு, இரண்டாவது மொழியாக தேசிய மொழி ஒன்றிற்கு பதில் ஆங்கிலத்தைக் கற்பித்தல், தேசிய ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.</p><p>

விடயம் என்னவென்றால், உலகளாவிய தொழில் மற்றும் உயர் கல்வி என்னும் விடயங்களைக் கருத்தில் கொள்ளும்போது, ஆங்கிலம் கற்றல் அதற்கு உதவியாக இருக்கும் என மாணவர்களும் பெற்றோர்களும் கருதுகிறார்கள்.</p><p>

ஆகவே, இரண்டாவது மொழியாக தேசிய மொழி ஒன்றைக் கற்பதற்கு பதிலாக ஆங்கிலத்தைக் கற்கும் விடயம், தேசிய அளவில் விவாதப்பொருளாக மாறிவருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T07:51:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதுனத்திற்கு செல்லும் சுக்கிரன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sukran-peyarchi-1785396161"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sukran-peyarchi-1785396161</id>
            <summary type="text">நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.
</p><p>
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
</p><p>
இந்நிலையில், ஆகஸ்ட் 02ஆம் திகதி செவ்வாய் மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். </p><p>

மேலும், இந்த மிதுன ராசியில் செவ்வாய் செப்டம்பர் 18ஆம் திகதி வரை இருப்பார்.
</p><p>
அந்தவகையில், மிதுனத்திற்கு செல்லும் சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.&nbsp;</p><p></p><h2>மேஷம்</h2><ul><li> 

தன்னம்பிக்கை அதிகரிக்கும். </li><li>பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும். </li><li>வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். </li><li>அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். </li><li>நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfc65197-1d8c-4e88-9df8-c1bcf2b51b2d/26-6a6afbc3edf8f.webp' /></p><p>
</p><h2>
மிதுனம்</h2><ul><li> 

தன்னம்பிக்கை அதிகரிக்கும்.</li><li> தலைமைத்துவ திறன்கள் மேம்படும். </li><li>அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். </li><li>புதிய பொறுப்புகள் கிடைக்கும். </li><li>ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். </li><li>வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். </li><li>வணிகர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைத் தரும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7174d03-9697-44d9-a6a6-a32cac29a0f8/26-6a6afbc4a47ce.webp' /></p><p>
</p><h2>
சிம்மம்</h2><ul><li> 

இக்காலம் நன்மை தரக்கூடியதாக இருக்கும். </li><li>வருமானத்தில் உயர்வு ஏற்படும். </li><li>புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும்.</li><li> செல்வாக்குமிக்கவர்களின் நட்புகள் கிடைக்கும். </li><li>பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்பு கிடைக்கும்.&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f72ae07-154d-4e42-b75f-d3c4c604be0e/26-6a6afbc564c94.webp' /></p><p>&nbsp;இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T07:23:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்ணீருடன் ஓய்வை அறிவித்த அஜிங்கியா ரஹானே - எந்த கேப்டனும் செய்யாத சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ajinkya-rahane-announced-retirement-from-cricket-1785395571"></link>
            <id>https://news.lankasri.com/article/ajinkya-rahane-announced-retirement-from-cricket-1785395571</id>
            <summary type="text">அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஜிங்கியா ரஹானே அறிவித்துள்ளார். 

அஜிங்கியா ரஹானே ஓய்வு 

மஹாராஷ்டிராவை சேர்ந்த அஜிங...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஜிங்கியா ரஹானே அறிவித்துள்ளார். </p><h3>

அஜிங்கியா ரஹானே ஓய்வு </h3><p>

மஹாராஷ்டிராவை சேர்ந்த அஜிங்கியா ரஹானே, 2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியதால் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92f686c6-517d-4e97-869a-975704c5753c/26-6a6af97708631.webp' /></p><p>

ஒருநாள், டெஸ்ட், T20 ஆகிய 3 வகையான போட்டிகளிலும் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். 

85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 26 அரைசதம், 12 சதம் உட்பட 5,077 ஓட்டங்கள் குவித்துள்ளார்.</p><p> 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 24 அரைசதம், 3 சதம் உட்பட 2,962 ஓட்டங்களும், 20 சர்வதேச T20போட்டிகளில் விளையாடி, 1 அரைசதம் உட்பட 375 ஓட்டங்களும் குவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p> 

அஜிங்க்யா ரஹானேவின் தலைமையின் கீழ் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டியில் சமன் செய்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf448658-3258-4513-9ba4-00a1c7b1828e/26-6a6af975a3a74.webp' />&nbsp;</p><p>இதன் மூலம், 5க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கி ஒரு போட்டிகளில் கூட தோல்வியை சந்திக்காத இந்திய கேப்டனாக உள்ளார்.</p><p>

இவரது தலைமையின் கீழ் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><p>

இவரது தலைமையிலான இந்திய அணி, இதுவரை ஒரே ஒரு T20 போட்டியில் மட்டும் தோற்றுள்ளது.</p><p>

2015 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஜிங்க்யா ரஹானே 8 கேட்சுகளைப் பிடித்துள்ளார். இதுவே டெஸ்ட் வரலாற்றில் ஒரு பீல்டர் பிடித்த அதிக கேட்சுகள் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a851db1c-f26e-4343-aae5-dc617cdd906d/26-6a6af974f38cd.webp' /></p><p>

இவரது தலைமையிலான இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் 2020-21 பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை வென்றது.
</p><p>
ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d14d4af-e26b-42f8-aeaf-64b97aae1380/26-6a6af97654a21.webp' /></p><p>

2025 ஐபிஎல் தொடர் முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அணித்தலைவராக அணியை வழிநடத்தி வந்தார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbZ1f0-tcFB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbZ1f0-tcFB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbZ1f0-tcFB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Ajinkya Rahane (@ajinkyarahane)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>

இந்நிலையில்,&nbsp; சர்வதேச மற்றும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அஜிங்கியா ரஹானே இது குறித்து கண்ணீர் மல்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T07:13:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ... வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிரபலத் தம்பதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/clooney-wife-forced-to-evacuate-1785393152"></link>
            <id>https://news.lankasri.com/article/clooney-wife-forced-to-evacuate-1785393152</id>
            <summary type="text">தெற்கு பிரான்ஸ் முழுவதும் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக, ஜார்ஜ் மற்றும் அமல் குளூனி தம்பதி தங்கள் வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நிலை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு பிரான்ஸ் முழுவதும் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக, ஜார்ஜ் மற்றும் அமல் குளூனி தம்பதி தங்கள் வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>குளூனி தம்பதி</h2><p>
</p><p>ஆஸ்கார் விருது வென்றவரான 65 வயது ஜார்ஜ் குளூனி மற்றும் அவரது 48 வயதான மனைவியும் மனித உரிமைகள் சட்டத்தரணியுமான அமல் குளூனி ஆகியோர் பிரான்ஸின் 'புரோவென்ஸ்-ஆல்ப்ஸ்-கோட் டி அஸூர்' (Provence-Alpes-Côte d’Azur) பிராந்தியத்தில் உள்ள பிரிக்னோல்ஸ் (Brignoles) நகரில் வசித்து வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4866370c-3f72-43c3-95c3-3e576ad53c14/26-6a6af12a793ee.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், பிரிங்னோல்ஸ் (Brignoles) நகர மேயர் டிடியர் பிரெமோண்டிற்கு (Didier Brémond) எழுதிய கடிதத்தில், தானும் தனது மனைவியும் ஒன்பது வயதுடைய இரட்டைக் குழந்தைகளான அலெக்சாண்டர் மற்றும் எல்லா ஆகியோருடன் தங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாக குளூனி தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன், பரவி வரும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புகளைப் பொருட்படுத்தாமல், 18,000-க்கும் சற்று குறைவான மக்கள் வசிக்கும் அந்தப் பிரெஞ்சு நகரத்திற்கு உதவும் தயார் என குளூனி உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசரக்கால நடவடிக்கைப் பிரிவுத் தலைவர், காட்டுத்தீ சில நாட்களுக்குள் ஐரோப்பா முழுவதையும் சூழ்ந்துகொள்ளக்கூடும் என்று எச்சரித்த அதே நாளில்தான், குளூனி தம்பதியினர் தாங்கள் வெளியேறுவதாக அறிவித்தனர்.</p><h2>காட்டுத்தீ அபாயம்</h2><p>
</p><p>தெற்கு ஐரோப்பா முழுவதும் தீயணைப்பு வீரர்கள் பெரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து போராடி வரும் நிலையில், வரும் வாரங்களில் கிரீஸ், இத்தாலி மற்றும் மத்திய ஐரோப்பா ஆகிய பகுதிகள் மிக அதிக காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>பிரான்சில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க 2,200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்; தீயைக் கட்டுப்படுத்த 20 விமானங்கள் அவர்களுக்குத் துணையாக களமிறக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d8ab609-893d-4ca5-b22a-1a9d8c460aff/26-6a6af12b354b0.webp' /></p><p> </p><p>செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் முழுவதும் 330,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.</p><p> ஜார்ஜ் மற்றும் அமல் குளூனி ஆகியோர் 2021-ஆம் ஆண்டிலேயே பிரிக்னோல்ஸை (Brignoles) தாங்கள் குடியேறுவதற்கான ஒரு இடமாகப் பரிசீலிக்கத் தொடங்கினர்; பின்னர் அதே ஆண்டில், சுமார் 9 மில்லியன் டொலர் மதிப்பில் அங்குள்ள ஒரு தோட்டத்தை அவர்கள் வாங்கினர். </p><p>இதனையடுத்து அந்த அமெரிக்க நடிகரும் பிரித்தானிய-லெபனானிய சட்டத்தரணியும் 2025-இல் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் பிரெஞ்சு குடியுரிமையைப் பெற்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T06:30:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவர் வெளிநாட்டிலிருப்பதாக கூறிய பெண்: திரைப்பட பாணியில் ஒரு திடுக் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-buried-by-wife-family-believed-he-was-in-aus-1785391759"></link>
            <id>https://news.lankasri.com/article/man-buried-by-wife-family-believed-he-was-in-aus-1785391759</id>
            <summary type="text">இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், தன் கணவர் அவுஸ்திரேலியாவில் வேலை செய்துவருவதாகக் கூறி பெண்ணொருவர் அவரது குடும்பத்தினரை ஏமாற்றிவந்த நிலையில், தற்போது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், தன் கணவர் அவுஸ்திரேலியாவில் வேலை செய்துவருவதாகக் கூறி பெண்ணொருவர் அவரது குடும்பத்தினரை ஏமாற்றிவந்த நிலையில், தற்போது அவரது குட்டு வெளிப்பட்டுள்ளது.
</p><h3>
கணவர் வெளிநாட்டிலிருப்பதாக கூறிய பெண்</h3><p>

குஜராத்திலுள்ள ஜாம்நகர் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஜிக்னேஷ் மாவடியா. ஜிக்னேஷின் மனைவி ப்ரித்வி. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a9e3971-ec76-4b5b-86de-d3118a33f10f/26-6a6aea91330fb.webp' /></p><p>
ஜிக்னேஷின் குடும்பத்தினர் அவர் இரண்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வேலை செய்துவருவதாக நம்பிக்கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார்.
</p><p>
அங்கு சென்று ஜிக்னேஷ் தங்கியிருப்பதாக கூறப்பட்ட முகவரியில் அவரைத் தேடும்போதுதான் தெரிந்துள்ளது அவர் அவுஸ்திரேலியாவில் இல்லை என்பது.&nbsp;</p><p></p><p>

சந்தேகம் எழவே, ஜிக்னேஷின் சகோதரர் பொலிசில் புகாரளிக்க, பொலிஸ் விசாரணையில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><h3>
திரைப்பட பாணியில் ஒரு திடுக் சம்பவம்</h3><p>

ஆம், ஜிக்னேஷின் மனைவியாகிய ப்ரித்வியும், ப்ரித்வியின் காதலனான நிலேஷ் என்பவரும் சேர்ந்து ஜிக்னேஷுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து அவரைக் கொன்றுள்ளார்கள். </p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ffeedmileapp%2Fposts%2Fpfbid0Dh83pNjjdTk3SYPAfPEsk9iq1EaNmY4GaPcV5Vqsu1PtHcMG5pgyusDR5S3SApryl&show_text=true&width=500" width="500" height="731" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>
பின்னர் திரைப்படம் ஒன்றில் வரும் காட்சி ஒன்றைப்போல, அவரது உடலை தொழிற்சாலை ஒன்றிற்குக் கொண்டு சென்று, அங்கு 12 முதல் 15 அடி ஆழமுள்ள ஒரு குழியைத் தோண்டி, ஜிக்னேஷ் உடலை புதைத்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0e3408-f00f-4ad6-81c5-c48e0be63c13/26-6a6aea9082725.webp' /></p><p>

இரண்டு ஆண்டுகளாக ஜிக்னேஷ் அவுஸ்திரேலியாவில் வேலை செய்வதாகவும், மொபைல் பயன்படுத்த அவர் வேலை செய்யும் நிறுவனம் அனுமதியளிக்கவில்லை என்றும் கூறி, ஜிக்னேஷின் மனைவியாகிய ப்ரித்வி அவரது குடும்பத்தினரை ஏமாற்றி வந்துள்ளார் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தகவல்களைத் தொடர்ந்து, ஜிக்னேஷின் மனைவியாகிய ப்ரித்வியும், ப்ரித்வியின் காதலனான நிலேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
</p><p>
அவர்கள் அடையாளம் காட்டிய தொழிற்சாலையிலிருந்து ஜிக்னேஷின் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.</p><p>

திரைப்பட பாணியில் பெண்ணொருவர் தன் கணவரைக் கொன்று புதைத்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:14:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனை விட்டு வெளியேறிவரும் ஆயிரக்கணக்கான மக்கள்: காரணம் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cost-of-living-leads-peoples-to-leave-london-1785388249"></link>
            <id>https://news.lankasri.com/article/cost-of-living-leads-peoples-to-leave-london-1785388249</id>
            <summary type="text">ஆயிரக்கணக்கானோர் லண்டனை விட்டு வெளியேறிவருவதை தேசிய புள்ளியியல் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

லண்டனை விட்டு வெளியேறிவரும் மக்கள்

லண்டனை விட்டு ஆயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆயிரக்கணக்கானோர் லண்டனை விட்டு வெளியேறிவருவதை தேசிய புள்ளியியல் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
</p><h3>
லண்டனை விட்டு வெளியேறிவரும் மக்கள்
</h3><p>
லண்டனை விட்டு ஆயிரக்கணக்கானோர் வெளியேறிவருவதை உறுதி செய்துள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம், 1980களுக்குப் பிறகு, கோவிட் காலகட்டம் தவிர்த்து, இந்த அளவுக்கு லண்டன் மக்கள்தொகை குறைந்துள்ளது இப்போதுதான் என்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/687dc31a-f750-4532-aa13-7f61d9979d34/26-6a6adcdaba3c0.webp' /></p><p>

2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், சுமார் 27,000 பேர் லண்டனை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஆக, 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 9,149,646 ஆக இருந்த லண்டன் மக்கள் தொகை, 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், 9,122,909 ஆக குறைந்துள்ளது.</p><h3>

காரணம் என்ன?
</h3><p>
இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனை விட்டு வெளியேற முக்கிய காரணம், விலைவாசி உயர்வுதான்!
</p><p>
சமீபத்தில், Deutsche Bank Research Institute என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள், பிரித்தானியாவில் மட்டுமல்ல, உலகிலேயே விலைவாசி அதிகமான பல நகரங்களைவிட லண்டனில் விலைவாசி அதிகம் என்று கூறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35504163-6ae2-4e12-85c5-8dc224eda7fd/26-6a6adcdb69321.webp' /></p><p>
பிரித்தானியாவைப் பொருத்தவரை, எடின்பர்கிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் ஒரு சதுர மீற்றர் பரப்பின் விலை 5,019 பவுண்டுகள்.&nbsp;</p><p></p><p>
பர்மிங்காமில் ஒரு சதுர மீற்றர் பரப்பின் விலை 4,045 பவுண்டுகள். அதே நேரத்தில், லண்டனிலோ, ஒரு சதுர மீற்றர் பரப்பின் விலை 14,982 பவுண்டுகள்!</p><p>

அத்துடன், போக்குவரத்துச் செலவும் லண்டனில் அதிகம் என்கிறது, Deutsche Bank Research Institute ஆய்வமைப்பு.</p><p>

லண்டன், நியூயார்க், பாரீஸ் மற்றும் ஹொங்ஹொங் ஆகிய நகரங்கள் உலகின் திறமைசாலிகளையும் முதலீட்டையும் கவர்ந்திழுப்பது என்னவோ உண்மைதான். ஆனால், வீடுகள் விலை அல்லது வாடகை, காற்று மாசு, தினசரி நீண்ட பயணம் மற்றும் விலைவாசி ஆகிய விடயங்கள் இந்த நகரங்களின் வாழத்தகுந்த தன்மைக்கான மதிப்பெண்களை குறைத்துவிடுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்களான Jim Reid மற்றும் Galina Pozdnyakova.
</p><p>
அதாவது, படிப்பினை என்னவென்றால், விலைவாசி உயர்ந்த நகரங்கள் என்பதால் மட்டுமே, அவை வாழத் தகுந்த நகரங்களாகிவிடாது என்கிறார்கள் அவர்கள்.</p><p>

ஆக, விலைவாசி உயர்வால், ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனை விட்டு வெளியேறி வருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ணத்தைப் புறக்கணியுங்கள்... இங்கிலாந்து அணிக்கு ரசிகர்கள் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-fans-lead-boycott-calls-1785388030"></link>
            <id>https://news.lankasri.com/article/england-fans-lead-boycott-calls-1785388030</id>
            <summary type="text">உலகக் கிண்ணம் தொடரை விற்பனை செய்வதற்கான ஃபிஃபாவின் திட்டத்தால் ஆத்திரமடைந்துள்ள ரசிகர்கள், இங்கிலாந்து அணி உலகக் கிண்ணம் தொடரை புறக்கணிக்க வேண்டும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணம் தொடரை விற்பனை செய்வதற்கான ஃபிஃபாவின் திட்டத்தால் ஆத்திரமடைந்துள்ள ரசிகர்கள், இங்கிலாந்து அணி உலகக் கிண்ணம் தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.</p><h2>ரசிகர்கள் ஆத்திரம்</h2><p>
</p><p>திட்டமிட்டபடி உலகக் கிண்ணம் தொடருக்கான உரிமைகள் விற்கப்பட்டால், ஃபிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவும் அவரது அமெரிக்க நண்பர்களும் பல மில்லியன் டொலர் தொகையைத் தங்கள் வசப்படுத்திக்கொள்ள அது வழிவகுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eb9d907-81df-4790-bae5-7c64d45560e3/26-6a6add17d9534.webp' /></p><p> </p><p>இந்த நகர்வு முழுக்க முழுக்கப் பேராசையாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும், இன்ஃபான்டினோவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஆத்திரமடைந்த ரசிகர்கள் கூறுகின்றனர். </p><p>இந்த நிலையில், ஐரோப்பாவின் நிர்வாக அமைப்பான UEFA அவசர ஆலோசனைகளை நடத்தவுள்ளது; இதில் அதன் 55 உறுப்பு நாடுகளைக் கொண்ட குழு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள பரிசீலித்து வருகிறது, இது ஒரு கூட்டுப் புறக்கணிப்புக்கு வழிவகுக்கக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது.</p><p></p><p> </p><p>உலக கால்பந்து நிர்வாக அமைப்பான ஃபிஃபா (FIFA), தனது போட்டிகளை நடத்துவதற்காக ஒரு தனியார் நிறுவனத்தை உருவாக்கும் திட்டத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாதது குறித்துத் தங்கள் தலைவர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறி, இத்திட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இங்கிலாந்தின் கால்பந்து சங்கம் (FA) களமிறங்கியுள்ளது. </p><p>நடந்து முடிந்த உலகக் கிண்ணம் தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இன்ஃபான்டினோவின் மிக அதிகப்படியான டிக்கெட் விலைகளால் ரசிகர்கள் கொள்ளையடிக்கப்பட்டனர்.</p><h2>இறுதி எச்சரிக்கை</h2><p> </p><p>ஃபிஃபா உறுப்புச் சங்கங்கள் அனைத்திற்கும் இன்ஃபான்டினோ இறுதி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவரது மிரட்டலை முறியடிக்குமாறு இங்கிலாந்து ரசிகர்கள் தங்களின் கால்பந்து சங்கத்தை (FA) வலியுறுத்தியுள்ளனர். </p><p>ஃபிஃபாவின் 211 உறுப்பு நாடுகளும் 53 நாட்களுக்குள் தனது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அவற்றுக்குத் தலா 30 மில்லியன் பவுண்டுகள் வீதம் ஒருமுறை வழங்கப்படும் தொகையை இன்ஃபான்டினோ முன்மொழிந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96931f16-e181-446a-9d61-156b7dfc0ab0/26-6a6add18a80f4.webp' /></p><p> </p><p>'ஃபீஃபா ஃபார்வர்ட் எண்டர்பிரைஸ்' என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்க அவர் திட்டமிட்டு வருவதுடன், உலகக் கிண்ணம் தொடரை நான்கு ஆண்டுகளுக்குப் பதிலாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தவும் திட்டமிட்டு வருவதாகவும் நம்பப்படுகிறது. </p><p>மேலும், இன்ஃபான்டினோவின் நண்பரும் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்க வணிகக் கூட்டாளிகளிடம், இந்த மாற்றம் குறித்து ரகசியமாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது. </p><p>ஜனாதிபதி ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் சகோதரரான ஜோசுவா குஷ்னர் நடத்தும் 'த்ரைவ்' (Thrive) என்ற முதலீட்டு நிறுவனமும் இதில்&nbsp;முதலீடு செய்ய தீவிரம் காட்டி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T05:05:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே வாரத்தில் கருவளையம் நீங்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/home-remedies-for-dark-circle-in-tamil-1785387347"></link>
            <id>https://news.lankasri.com/article/home-remedies-for-dark-circle-in-tamil-1785387347</id>
            <summary type="text">பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.

ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
</p><p>
ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. </p><p>அந்தவகையில், முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையங்கள் நிரந்தரமாக நீங்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><ul><li>

உருளைக்கிழங்கு- 1
</li><li>காபி தூள்- 1 ஸ்பூன்</li></ul><h2>

பயன்படுத்தும் முறை</h2><p>

முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி அதனை தோலுரித்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>

பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் சாறை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
அடுத்து உருளைக்கிழங்கு சாறுடன் காபி தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25243990-1f86-48df-93fe-0d710d72e1be/26-6a6ad9b780b20.webp' /></p><p>

இப்போது இதனை கண்களுக்கு அடியில் தடவி இரண்டு நிமிடம் மெதுவாக மசாஜ் செய்து 15 நிமிடம் அப்படியே விட்டுவிடவும்.</p><p>

இறுதியாக கண்களை குளிர்ந்த நீரை பயன்படுத்தி கழுவிக்கொள்ளலாம்.
</p><p>
இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்திவர விரைவிலேயே கருவளையம் நிரந்தரமாக நீங்கி விடும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T04:57:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவுக்கு வராத ஈரான் போர்... கடும் நெருக்கடியில் அமெரிக்காவின் ஆயுத இருப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-weapons-stockpiles-dwindle-1785384938"></link>
            <id>https://news.lankasri.com/article/us-weapons-stockpiles-dwindle-1785384938</id>
            <summary type="text">சமீபத்திய வாரங்களில் ஈரானுடனான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, முக்கியமான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உட்பட அமெரிக்க ராணுவத்தின் ஆயுத இருப்புகள் கடுமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்திய வாரங்களில் ஈரானுடனான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, முக்கியமான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உட்பட அமெரிக்க ராணுவத்தின் ஆயுத இருப்புகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.</p><h2>அதிக ஆபத்தை எதிர்கொள்ள</h2><p>
</p><p>ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதியான தீர்வு இன்னும் எட்டப்படாமல் ட்ரம்ப் நிர்வாகம் தத்தளித்து வரும் நிலையில், ஏவுகணைகளின் பற்றாக்குறை, பிற முனைகளில் அமெரிக்கா மோதலில் ஈடுபடும் திறனைப் பாதிக்கக்கூடும் என்றே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1677821-2e5b-4228-83a9-a0f1ab515507/26-6a6ad161db482.webp' /></p><p> திங்களன்று வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், அமெரிக்காவிடம் தற்போது 827-க்கும் குறைவான பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளும், 278-க்கும் குறைவான தாட் பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிப்பு ஏவுகணைகளும் எஞ்சியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>போருக்கு முந்தைய அமெரிக்க ராணுவத்தின் ஆயுத இருப்பானது 
CSIS-இன் மதிப்பீட்டின்படி, சுமார் 2,200 'பேட்ரியாட்' ஏவுகணைகளும் (அவற்றின் மிகவும் நவீனமயமாக்கப்பட்ட இரண்டு வகைகளைச் சேர்ந்தவை) 452 'தாட்' (THAAD) பாலிஸ்டிக் ஏவுகணைகளும் இருந்தன. </p><p>இவை அமெரிக்க ராணுவம் தங்களை நோக்கி வரும் எதிரியின் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்கான முதன்மையான அமைப்புகளாகும்; மேலும், ஒவ்வொரு இடைமறிப்பு ஏவுகணையின் விலையும் பல மில்லியன் டொலர்கள் ஆகும்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், CSIS அறிக்கையின் ஆசிரியர்கள் குறிப்பிடுகையில், குறைந்துவிட்ட ஆயுதக் கையிருப்பு, அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் அதிக ஆபத்தை எதிர்கொள்ள நிர்பந்திக்கக்கூடும். </p><p>பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பேட்ரியாட் மற்றும் தாட் (THAAD) ஏவுகணை அமைப்புகள் போன்ற சிறந்த மாற்று வழிகள் எதுவும் இல்லை. அத்தகைய அச்சுறுத்தல்களை இடைமறிக்கக்கூடிய சாதாரண ஏவுகணைகளைக் கொண்ட கடற்படைக் கப்பல்கள், பொதுவாக மிகவும் தொலைவில் உள்ளன.</p><p> திங்களன்று ஆயுதங்களின் கையிருப்பு குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​மிகவும் மேம்பட்ட ரகங்களை மீண்டும் நிரப்ப விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார், ஆனால் கையிருப்பு மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>இதனிடையே, கூட்டுத் தலைமைப் படைத் தலைவர்களின் (Joint Chiefs of Staff) தலைவரான ஜெனரல் டான் கெய்ன், தங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் நிதி கிடைக்காவிட்டால், இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் கிடைக்காது என்று கடந்த வாரம் செனட் உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21a598fd-5d41-48f4-8446-edb5661e3418/26-6a6ad162cc33e.webp' /></p><p> </p><p>ஈரான் மீதானப் போரைத் தீவிரமாக விரிவுபடுத்துவது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் பரிசீலித்துக்கொண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று அவருடன் நடைபெற்ற கூட்டத்தில் ஆயுத இருப்பு குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டியதாக ஜெனரல் கெய்ன் கூறியதாக CNN செய்தி வெளியிட்டிருந்தது. </p><p>மோதலைத் தீவிரப்படுத்துவதால் ஏற்படக்கூடிய கூடுதல் பாதகமான விளைவுகள் குறித்து ஜெனரல் கெய்ன் மற்றும் பிற தளபதிகள் விளக்கமளித்ததைத் தொடர்ந்து, அந்தச் சந்திப்பிற்குப் பிறகு ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.</p><h2>பல ஆண்டுகள் ஆகலாம்</h2><p> </p><p>ஆனால், அந்த இடைநிறுத்தம் குறுகிய காலமே நீடித்திருக்கலாம். செவ்வாய்க்கிழமையன்று, ஈராக்கில் உள்ள ஈரானின் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்க மற்றும் சவுதிப் படைகள் கூட்டுத் தாக்குதல்களை நடத்தின. </p><p>மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதல் ஒன்றை முறியடித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த மாதத் தொடக்கத்தில், ஈரானுடனான தொடர் மோதல் ஆயுத இருப்பை மிகக் குறைந்த நிலைக்குக் குறைக்கக்கூடும்; </p><p>இது சீனா அல்லது வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அமெரிக்க ராணுவத்தின் திறனைப் பாதிக்கக்கூடியதாக அமையலாம் என ஓய்வுபெற்ற மரைன் கார்ப்ஸ் கர்னல் மார்க் கேன்சியன் எச்சரித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6739b14-db4f-4f2d-a954-cb3cf318a620/26-6a6ad1637dfe0.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகள் போன்ற அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு நீண்ட காலம் தேவைப்படுவதால், அமெரிக்காவின் ஆயுத இருப்பை முழுமையாக மீண்டும் நிரப்புவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். </p><p>ஆயுதப் பற்றாக்குறைக்கு முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகமே பெரும்பாலும் காரணம் என்று ட்ரம்ப்பும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்ஸெத்தும் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>ஆனால், இஸ்ரேல் காரணமாக ஈரானுடன் உருவானப் போரினால் இந்தப் பிரச்சினை மிகவும் மோசமடைந்துள்ளது என்றே CSIS அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T04:13:48+00:00</updated>
        </entry>
    </feed>
