<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-07T17:42:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சியூட்டா விவகாரம்: இத்தாலிக்கு கெடு விதித்த ஸ்பெயின்: பதிலடி நடவடிக்கை உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-italy-diplomatic-friction-over-ceuta-1786124101"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-italy-diplomatic-friction-over-ceuta-1786124101</id>
            <summary type="text">சியூட்டா தொடர்பான விவகாரத்தில் இத்தாலிக்கு ஸ்பெயின் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. சியூட்டா விவகாரம்
கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சியூட்டா தொடர்பான விவகாரத்தில் இத்தாலிக்கு ஸ்பெயின் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2> சியூட்டா விவகாரம்</h2><p>
கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமான சியூட்டாவிற்குள் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அத்துமீறி நுழைந்தனர்.</p><p> இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53dfef55-7c2b-4b9a-ad4e-ffe074bc40b4/26-6a761746ab023.webp' /></p><p> இதையடுத்து ஸ்பெயினில் இருந்து வரும் பயணிகளுக்கு எல்லை சோதனைகளை அமல்படுத்தி இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உத்தரவிட்டு இருந்தது.</p><p> இந்த விவகாரம் ஸ்பெயின் மற்றும் இத்தாலி இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.</p><p> ஸ்பெயினில் இருந்து வரும் மக்களை சோதனைக்கு உட்படுத்தப்படும் என்ற இத்தாலியின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று ஸ்பெயின் நேரடியாக குற்றஞ்சாட்டியது.</p><p> அத்துடன் இந்த நடவடிக்கை தேவையற்றது, மற்றும் ஐரோப்பிய யூனியனின் நலனுக்கு எதிரானது மற்றும் ஸ்பெயின் மக்களுக்கு எதிரானது என்று ஸ்பெயின் அரசு கண்டித்தது.</p><p></p><h2> இத்தாலிக்கு கெடு விதித்த ஸ்பெயின்</h2><p>
இந்நிலையில் இத்தாலி தன்னுடைய புதிய எல்லை கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்காவிட்டால், இத்தாலிய பயணிகளுக்கு எதிராக அதே போன்ற சோதனை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் விதிக்கும் என்று அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a27ffe9-b16d-4a29-8961-7ffe975cc779/26-6a7617475ef7f.webp' /></p><p> அத்துடன் ஆகஸ்ட் 9ம் திகதிக்குள் இத்தாலிய அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் ஸ்பெயின் கெடு விதித்துள்ளது.</p><p> இத்தாலி அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஸ்பெயின் நாட்டு மக்களின் நலன்களையும், கவுரவத்தையும் பாதுகாக்க அதற்கான தக்க நடவடிக்கையை ஸ்பெயின் அரசு முன்னெடுக்கும் என்று ஸ்பெயின் அரசு தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T17:35:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை: குறைக்கப்படும் வரிகள்: எதிர்பார்க்கப்படும் சலுகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-usa-interim-trade-deal-talk-happens-1786120266"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-usa-interim-trade-deal-talk-happens-1786120266</id>
            <summary type="text">வரியை குறைப்பது தொடர்பான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து கனடாவும், அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.கனடா - அமெரிக்கா இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரியை குறைப்பது தொடர்பான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து கனடாவும், அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>கனடா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை</h2><p>
&nbsp;விகிதாச்சார வரிகள் மற்றும் கட்டண மோதல்களை குறைப்பது தொடர்பான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து கனடாவும், அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தி குளோப் அண்ட் மெயில் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.</p><p> வரிகளை குறைப்பதற்காக அல்லது விலக்கு பெறுவதற்காக அமெரிக்காவின் சில வர்த்தக கோரிக்கைகளுக்கு கனடா இணங்க கூடும் என்று தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34511ba8-814d-4a7e-8f53-642555a1f6c9/26-6a76084c5a42c.webp' /></p><h2>கனடாவின் சாத்தியமான சலுகைகள்</h2><p>அமெரிக்க கார்கள் மீதான வரிகளை திரும்ப பெறுதல், அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்குதல், அமெரிக்க நிறுவனங்களுக்கான கொள்முதல் தடையை தளர்த்துவது. பால் பொருட்கள் ஒதுக்கீட்டை தீர்மானிப்பதில் அமெரிக்காவிற்கு கூடுதல் பங்கு வழங்குவது, சீனாவுடனான வர்த்தக கொள்கையை சீரமைப்பது ஆகியவற்றில் கனடா சலுகைகள் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4036562a-5b19-48b9-b2c0-aab047ebf43b/26-6a76084ba9bc1.webp' /></p><p></p><h2> அமெரிக்காவின் பதில் நடவடிக்கை</h2><p>கனடாவின் இந்த சலுகைகளுக்கு மாற்றாக, ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீதான தற்போதைய வரியை அமெரிக்கா நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> அத்துடன் ஆகஸ்ட் 19ம் திகதி முதல் அமெரிக்கா அமுல்படுத்தும் என எச்சரித்துள்ள வரிகளில் இருந்தும் கனடாவுக்கு விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-07T16:31:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[UPI கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு இல்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/upi-charges-only-merchants-not-customers-1786119093"></link>
            <id>https://news.lankasri.com/article/upi-charges-only-merchants-not-customers-1786119093</id>
            <summary type="text">UPI கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வணிகர்களுக்கு மட்டுமேபுதிய வரி திருத்த மசோதா தொடர்பாக, UPI...</summary>
            <content type="html"><![CDATA[<p>UPI கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
</p><h2>
வணிகர்களுக்கு மட்டுமே</h2><p>புதிய வரி திருத்த மசோதா தொடர்பாக, UPI பரிவர்த்தனைகளில் கட்டணம் (Merchant Discount Rate - MDR) வணிகர்களுக்கு மட்டுமே விதிக்கப்படும், வாடிக்கையாளர்களுக்கு எந்தச் செலவும் இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0785faf2-9970-4c20-8f62-ca163e5b0ee2/26-6a7603b7db95f.webp' /></p><p>காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், “சாதாரண மக்கள் UPI பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்” எனக் கூறியதற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். </p><p>

அவர், MDR வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும், வாடிக்கையாளர்களுக்கு எந்தச் செலவும் இல்லை என்று உறுதிசெய்தார். </p><p>மேலும், இந்தக் கட்டணம் வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் தங்களது உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் புதுமை முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்றும் தெரிவித்தார்.</p><p></p><h2>எப்போது நடைமுறைக்கு வரும்</h2><p>

UPI மற்றும் சேவைகள் தொடர்பான Steering Committee, NPCI தலைமையில் MDR குறித்து முடிவு எடுக்கும். ஆனால் அது, நாடாளுமன்றத்தில் Taxation and Other Laws (Amendment) Bill, 2026 நிறைவேற்றப்பட்ட பிறகே நடைமுறைக்கு வரும். </p><p>இந்த மசோதா, Payment and Settlement Systems Act, 2007-இல் திருத்தம் செய்து, UPI மற்றும் RuPay கார்டு பரிவர்த்தனைகளில் zero-MDR அமைப்பை மாற்றுவதற்கு சட்ட ஆதாரம் வழங்குகிறது.
</p><p>
அதாவது, மசோதா MDR-ஐ நேரடியாக அறிமுகப்படுத்தவில்லை, ஆனால் எதிர்காலத்தில் அரசு அறிவிப்புகள் மூலம் zero-MDR அமைப்பை மாற்றுவதற்கு சட்ட அடிப்படை ஏற்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T16:09:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியின் பழமையான மரம்: 1100 ஆண்டுகள் வாழ்ந்த யூ மரம் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germanys-1100-year-old-yew-tree-found-1786117456"></link>
            <id>https://news.lankasri.com/article/germanys-1100-year-old-yew-tree-found-1786117456</id>
            <summary type="text">ஜேர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 1100 ஆண்டுகள் பழமையான யூ (Yew) மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் பழமையான மரம்ஸ்டீபிஸ் என்ற கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 1100 ஆண்டுகள் பழமையான யூ (Yew) மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2>

ஜேர்மனியின் பழமையான மரம்</h2><p>ஸ்டீபிஸ் என்ற கிராமம் அருகே, ஆஸ்திரிய எல்லைக்கு அருகில் உள்ள பசுமை மேடுகளில் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த மரம், ஜேர்மனியின் பழமையான மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8298b698-3704-4e86-af66-6c153cd5b984/26-6a75fd527a5ec.webp' /></p><p>இந்த மரத்தின் வயது, அதன் வளர்ச்சி வளையங்களை (growth rings) ஆய்வு செய்வதன் மூலம் கண்டறியப்பட்டது. ஆய்வாளர்கள் எடுத்த மாதிரிகள் அடிப்படையில், மரத்தின் வயது 900 முதல் 1300 ஆண்டுகளுக்குள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், சராசரியாக 1100 ஆண்டுகள் பழமையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த யூ மரம், Taxus baccata எனப்படும் ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தது. இயற்கை சூழலில் இவ்வளவு நீண்ட காலம் வாழும் யூ மரங்கள் மிக அரிது. </p><p></p><h2>இன்றும் பழங்களைத் தருகிறது!</h2><p>1100 மீட்டர் உயரத்தில், குளிரான வடமேற்கு சரிவில் வளர்ந்தாலும், இன்றும் இலைகள் மற்றும் பழங்களைத் தருகிறது.

மரத்தின் தண்டு சுமார் 5.10 மீட்டர் சுற்றளவு கொண்டது. இதனால், ஜேர்மனியில் பதிவான மிகப் பெரிய யூ மரமாகவும் இது அறியப்படுகிறது.</p><p>இதற்கு முன்பு, லோயர் சாக்ஸனியில் உள்ள Upstedt கிராமத்தின் லைம் மரம் (சுமார் 1000 ஆண்டுகள்) பழமையானதாக கருதப்பட்டது. ஆனால், ஸ்டீபிஸ் யூ மரம் அதனை மிஞ்சியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
தேசிய பாரம்பரிய மரம்</h2><p>ஜேர்மன் டெண்ட்ராலஜிக்கல் சொசைட்டி, இந்த மரத்தை “தேசிய பாரம்பரிய மரம்” (National Heritage Tree) என அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மரம் நீண்ட காலம் பாதுகாக்கப்பட்டு, இயற்கையாக வளர்ந்து கொண்டிருக்க வழிவகுக்கும்.
</p><p>
இந்த மரம், பல்லாயிரம் ஆண்டுகளாக சூழல் மாற்றங்கள், மனித வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் கடந்து வாழ்ந்து வந்துள்ளது. பறவைகள், பூச்சிகள், பூஞ்சைகள் போன்ற உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:42:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[190 ஆண்டுகளில் மிக வறட்சியான ஜூலை., இங்கிலாந்தில் பதிவான வானிலை சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-faces-record-drought-heatwave-alerts-1786113811"></link>
            <id>https://news.lankasri.com/article/england-faces-record-drought-heatwave-alerts-1786113811</id>
            <summary type="text">இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் நீண்ட காலமாக மழை பெய்யாமல் வறட்சி நிலை தொடர்கிறது.

கடந்த 190 ஆண்டுகளில் பதிவான மிக வறட்சியான ஜூலை மாதமாக இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் நீண்ட காலமாக மழை பெய்யாமல் வறட்சி நிலை தொடர்கிறது.</p><p>

கடந்த 190 ஆண்டுகளில் பதிவான மிக வறட்சியான ஜூலை மாதமாக இந்த 2026 ஜூலை மாதத்தை பிரித்தானிய வானிலை மையம் (Met Office) அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/461229bd-ce5d-46c8-a930-19c1a0ff97d9/26-6a75f3a9c8f01.webp' /></p><h2>சாதனை&nbsp;</h2><p>பிரித்தானியாவில் பல வானிலை நிலையங்கள் தங்களது பழைய சாதனைகளை முறியடித்துள்ளன.

சர்ரேயில் உள்ள விஸ்லி பகுதியில் தொடர்ந்து 51 நாட்கள் மழையின்றி வறட்சி நிலவுகிறது. </p><p>லின்கன்ஷையரில் உள்ள கோனிங்ஸ்பி பகுதியில் 42 நாட்கள் மழையின்றி சாதனை படைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், வசந்த காலத்திலிருந்து நிலவும் உயர் அழுத்த மண்டலம். இது மேகங்கள் உருவாகாமல் தடுப்பதால், மழை பெய்யாமல் போயுள்ளது.</p><p></p><p>

சில இடங்களில் சிறிய அளவில் மழை பெய்தாலும், வறட்சி பாதித்த பகுதிகளில் அது போதுமானதாக இல்லை. இதனால் புல்வெளிகள் வாடி, பசுமை நிலங்கள் மஞ்சள் நிறமாக மாறியுள்ளன.
</p><p>
1893-ஆம் ஆண்டு லண்டனின் மைல் எண்ட் பகுதியில் 73 நாட்கள் மழையின்றி இருந்தது மிக நீண்ட சாதனையாகும். அதனைத் தொடர்ந்து 1976-ஆம் ஆண்டு விஸ்லியில் 36 நாட்கள், 2018-ஆம் ஆண்டு கோனிங்ஸ்பியில் 33 நாட்கள் மழையின்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79ed4db2-bdd6-48b0-a2ad-fdaa3127a8d9/26-6a75f3aa821ce.webp' /></p><h2>வானிலை:&nbsp;மழை பெய்யும் வாய்ப்பு இல்லை</h2><p>வரும் வாரங்களில் வானிலை சிறிது மாறுபடும் என கணிக்கப்பட்டாலும், வறட்சியை முடிவுக்கு கொண்டு வரும் அளவுக்கு மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. வறட்சி முடிவடைய, தொடர்ந்து மற்றும் பரவலாக மழை பெய்ய வேண்டும். ஆறுகள், நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர் ஆகியவை நிரம்பும் அளவுக்கு மழை பெய்யும் போது மட்டுமே வறட்சி முடிவடையும்.
</p><p>
மேலும், அடுத்த வாரங்களில் வெப்பநிலை மீண்டும் 30 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 35 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் UK Health Security Agency பல இடங்களில் மஞ்சள் நிற வெப்ப எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
</p><p></p><p>இந்த வெப்ப அலை காரணமாக, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல் நலக்குறைவுள்ளவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. மருத்துவ சேவைகள் மீது அழுத்தம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவூறும் சுவையில் பாய் வீட்டு நெய்ச்சோறு.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ghee-rice-recipe-in-tamil-1786105810"></link>
            <id>https://news.lankasri.com/article/ghee-rice-recipe-in-tamil-1786105810</id>
            <summary type="text">பொதுவாக பாய் வீட்டு ஸ்பெஷல் உணவுவகைகளில் பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது நெய் சோறுதான்.

நெய்ச்சோறுடன் மிளகு முட்டை கிரேவி, செட்டிநாடு சிக்கன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக பாய் வீட்டு ஸ்பெஷல் உணவுவகைகளில் பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது நெய் சோறுதான்.</p><p>

நெய்ச்சோறுடன் மிளகு முட்டை கிரேவி, செட்டிநாடு சிக்கன், மட்டன் சுக்கா சேர்த்து சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும்.</p><p>

அந்தவகையில், நாவூறும் சுவையில் பாய் வீட்டு ஸ்டைல் நெய்ச்சோறு எப்படி செய்வதென்று பார்ப்போம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li> 
 
நெய் - 2 ஸ்பூன்</li><li> 
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் </li><li>பிரியாணி இலை</li><li> 
பட்டை- 1 துண்டு</li><li> 
கிராம்பு- 3</li><li> ஏலக்காய்- 2</li><li> 
அன்னாசிப்பூ- 1</li><li>
 ஜாவித்ரி- 2 </li><li>
கல்பாசி- 2
</li><li>வெங்காயம் - 2 </li><li>
முந்திரி - 10</li><li> 
பச்சை மிளகாய் - 4 </li><li>
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்</li><li> 
புதினா இலை </li><li>
கொத்தமல்லி இலை</li><li> 
உப்பு - 1 ஸ்பூன்
</li><li>தக்காளி - 1&nbsp;</li><li> தண்ணீர் - 1¾ கப்</li><li> 
பாஸ்மதி - 1 கப்
</li></ul><h2>
செய்முறை</h2><p> 

முதலில் ஒரு பாத்திரத்தில் நெய், தேங்காய் எண்ணெய், பட்டை , கிராம்பு, அன்னாசிபூ, ஏலக்காய், பிரியாணி இலை, ஜாவித்ரி, கல்பாசி சேர்த்து கிளற வேண்டும்.
</p><p>
பின் இதில் வெங்காயம், முந்திரி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cd8c904-7aba-4539-951f-3d7abd9fc366/26-6a75d03670269.webp' /></p><p>பின்னர் இதில் புதினா, கொத்தமல்லி, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும்.</p><p>

அடுத்து இதில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் 20 நிமிடம் ஊறவைத்த அரிசியை சேர்த்து வேகவைக்கவும்.</p><p>

இதற்கடுத்து தண்ணீர் முழுவதையும் அரிசி உறியும் போது மூடி போட்டு 20 நிமிடம் தம் போட வேண்டும்.
</p><p>
இறுதியாக இதன் மேல் லேசாக நெய், எண்ணெய்யில் பொரித்த வெங்காயம் சேர்த்து கிளறினால் சுவையான நெய்ச்சோறு தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T15:00:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டி; ரசிகர்கள் இலவசமாக காண அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fans-get-free-entry-on-india-vs-srilanka-test-1786113448"></link>
            <id>https://news.lankasri.com/article/fans-get-free-entry-on-india-vs-srilanka-test-1786113448</id>
            <summary type="text">இந்தியா - இலங்கை இடையே நடைபெற்ற உள்ள டெஸ்ட் தொடரை மைதானத்தில் இலவசமாக காண இலங்கை கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது. 

இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டி
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா - இலங்கை இடையே நடைபெற்ற உள்ள டெஸ்ட் தொடரை மைதானத்தில் இலவசமாக காண இலங்கை கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது. </p><h3>

இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டி
</h3><p>
இந்தியா கிரிக்கெட் அணி, இலங்கை சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.&nbsp;</p><p> 

முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதி கொழும்பில் உள்ள SSC மைதானத்திலும் தொடங்க உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c2161bb-4792-4c03-a9b8-934197c8d108/26-6a75eda9ae0af.webp' /></p><p> 

இந்த டெஸ்ட் தொடர், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2025-2027 சுழற்சியின் ஒரு பகுதியாகும்.</p><p>இந்த 2 டெஸ்ட் போட்டிகளையும் இலவசமாக மைதானத்தில் பார்க்கலாம் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான பொது அனுமதி இலவசம் என்பதை இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவிக்கிறது. இதன் மூலம், உலகத் தரம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட்டைக் காண கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.</p><p> 

இந்த முன்னெடுப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் உற்சாகத்தை அனுபவிக்குமாறு, நாடு முழுவதிலுமிருந்து கிரிக்கெட் ஆர்வலர்கள், இளம் கிரிக்கெட் வீரர்கள், குடும்பங்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்களை இலங்கை கிரிக்கெட் அன்புடன் அழைக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T14:37:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனம் - முதற்கட்ட சோதனை முயற்சி வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uttarakhand-man-builds-electric-flying-car-1786109689"></link>
            <id>https://news.lankasri.com/article/uttarakhand-man-builds-electric-flying-car-1786109689</id>
            <summary type="text">இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனத்தின் முதற்கட்ட சோதனை முயற்சி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.  

மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனத்தின் முதற்கட்ட சோதனை முயற்சி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. </p><h3> 

மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனம்
</h3><p>
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், அல்மோராவில் உள்ள காஃப்லிகான் கிராமத்தைச் சேர்ந்த ரவி தம்டா(Ravi Tamta), ஹபிடா ஸ்கை(HAPIDA SKY) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தினை நடத்தி வருகிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fd5e991-06de-4e1e-9494-c51b278bc39a/26-6a75defb0c244.webp' /></p><p>

இவர் தற்போது HAPIDA SKYNeX என்ற ஒற்றை இருக்கை மின்சார பறக்கும் வாகனத்தின் முன்மாதிரியை வெற்றிகரமாக சோதனை ஓட்டம் செய்துள்ளார்.</p><p> 

அல்மோராவில் உள்ள திறந்தவெளியில் நடத்தப்பட்ட இந்த சோதனைப் பறப்பு வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.</p><p> 

ரவி தம்டா அவரது கிராமத்திற்கும் வீட்டிற்கும் இடையிலான சுமார் 40 கிலோமீட்டர் சாலைப் பயணத்திற்கு கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் ஆகும். ஆனால் ஒரு தனிநபர் பறக்கும் வாகனம் மூலம் அதே தூரத்தை சுமார் 10 முதல் 15 நிமிடங்களில் கடந்துவிட முடியும்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="hi" dir="ltr">📍बधाई अल्मोड़ा, उत्तराखंड<br><br>अल्मोड़ा के युवा नवप्रवर्तक रवि टम्टा और उनकी टीम ने HAPIDA SKYNeX के प्रोटोटाइप का सफल प्रारंभिक परीक्षण कर उत्तराखंड का नाम गौरवान्वित किया है।<a href="https://x.com/hashtag/Uttarakhand?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Uttarakhand</a> <a href="https://x.com/hashtag/Almora?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Almora</a> <a href="https://x.com/hashtag/RaviTamta?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RaviTamta</a> <a href="https://x.com/hashtag/HapidaSkynex?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HapidaSkynex</a> <a href="https://x.com/hashtag/MadeInIndia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MadeInIndia</a> <a href="https://x.com/hashtag/Innovation?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Innovation</a> <a href="https://x.com/hashtag/FutureOfMobility?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#FutureOfMobility</a> <a href="https://x.com/hashtag/StartupIndia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#StartupIndia</a> <a href="https://t.co/CVsV3tgXen">pic.twitter.com/CVsV3tgXen</a></p>&mdash; Mahipal Singh Rawat (@MahipalRawat18) <a href="https://x.com/MahipalRawat18/status/2085618491625988200?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இந்தியாவில் பாதுகாப்பான, மலிவான மற்றும் நீடித்த தனிநபர் வான்வழிப் போக்குவரத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். 

இது ஒருமுறை மட்டும் செய்யப்பட்ட சோதனை அல்ல. பல ஆண்டுகளாகத் தான் துரத்தி வந்த ஒரு கனவின் விளைவு இது என அவர் தெரிவித்துள்ளார். </p><p> 

தனிநபர் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பாதுகாப்பான, மின்சாரப் பறக்கும் வாகனத்தை உருவாக்குவதே அவருடைய நீண்டகால இலக்காக உள்ளது. </p><p>

இந்த வாகனத்தின் பேட்டரி திறன், பறக்கும் நேரம், வேகம், சுமக்கும் திறன் மற்றும் மின்னேற்றும் நேரம் உள்ளிட்ட தொழில்நுட்பத் தகவல்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. </p><p>

இந்த சோதனை மேம்பட்ட பதிப்பிற்குச் செல்வதற்கு முன்பு, தூக்குவிசை, சமநிலை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பறத்தல் போன்ற அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்த குழுவிற்கு உதவுகிறது.&nbsp;</p><p></p><p>

இது வழக்கமான போக்குவரத்திற்காக பயன்பாட்டிற்கு வரும் முன்பு, விமானப் போக்குவரத்து அனுமதிகள், பாதுகாப்புச் சான்றிதழ், வான்வெளி விதிகள் மற்றும் இயக்க நடைமுறைகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும்.
</p><p>
இது பயன்பாட்டிற்கு வரும் போது, தொலைதூர மலைக் கிராமங்களில் இணைப்பை மேம்படுத்தவும், நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பேரிடர் நிவாரணம் மற்றும் அவசரகால மீட்புப் பணிகளுக்கு உதவவும், சாலை உள்கட்டமைப்பு குறைவாக உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு விரைவான பயணம் மேற்கொள்ளவும் பயன்படும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T13:37:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமேசானின் Great Freedom Sale 2026 - பல பொருட்களுக்கு 80 சதவீதம் தள்ளுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/amazon-freedom-sale-2026-80-percent-off-deals-1786109082"></link>
            <id>https://news.lankasri.com/article/amazon-freedom-sale-2026-80-percent-off-deals-1786109082</id>
            <summary type="text">இந்தியாவில் அமேசான் Great Freedom Sale 2026 அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள், மின்சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன், அழகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் அமேசான் Great Freedom Sale 2026 அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
</p><p>
ஸ்மார்ட்போன்கள், மின்சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன், அழகு சாதனங்கள் மற்றும் அன்றாடம் தேவைப்படும் பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86a5a2e9-acea-4f42-9eb5-901810b78c5b/26-6a75dc9ccb5e7.webp' /></p><p>
</p><h2>
முக்கிய அம்சங்கள்:</h2><ul><li>

HDFC Bank கிரெடிட் கார்டு மற்றும் EasyEMI பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி.
</li><li>
No-Cost EMI, Amazon Pay Rewards, Exchange Offers, Coupons ஆகியவை கூடுதலாக கிடைக்கும்.
</li><li>
Prime உறுப்பினர்களுக்கு 15 சதவீதம் கூடுதல் சேமிப்பு மற்றும் பிரத்யேக சலுகைகள் வழங்கப்படும்.
</li><li>
AI Tools (Rufus, Lens AI, Price History, Review Highlights) மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக பொருட்களை தேர்வு செய்யலாம்.
</li></ul><p></p><h2>பிரபல சலுகைகள்:
</h2><p>
Samsung Galaxy S25 Ultra - ரூ.1,29,999 விலையிலிருந்து ரூ.94,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. HDFC தள்ளுபடி மற்றும் Exchange Offer மூலம் விலை ரூ.90,000-க்கு கீழ் குறையலாம்.</p><p>
OnePlus N6x - ரூ.17,499, Nord CE6 - ரூ.31,999, iQOO Z11 Lite - ரூ.17,999.
</p><p>
5G ஸ்மார்ட்போன்கள் ரூ.12,999 முதல் கிடைக்கின்றன.
</p><p></p><p>Samsung, LG, Bosch, Haier போன்ற பிராண்டுகளின் Washing Machine, Refrigerator, TV, Laptop, Tablet, Audio Products ஆகியவற்றில் 65 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விற்பனை, வாடிக்கையாளர்களுக்கு விலை குறைவுடன் மட்டுமல்லாமல், AI அடிப்படையிலான ஷாப்பிங் அனுபவத்தையும் வழங்குகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T13:22:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்து விசா விதிகளில் தளர்வு - ஹெபடைட்டிஸ் B, C இனி தடையில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-zealand-relaxes-visa-health-rules-2026-1786102874"></link>
            <id>https://news.lankasri.com/article/new-zealand-relaxes-visa-health-rules-2026-1786102874</id>
            <summary type="text">நியூசிலாந்து அரசு குடியேற்ற விசா விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 3, 2026 முதல், ஹெபடைட்டிஸ் B மற்றும் ஹெபடைட்டிஸ் C நோய்கள் இனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்து அரசு குடியேற்ற விசா விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. </p><p>

ஆகஸ்ட் 3, 2026 முதல், ஹெபடைட்டிஸ் B மற்றும் ஹெபடைட்டிஸ் C நோய்கள் இனி குடியேற்ற விண்ணப்பங்களுக்கு தானாகவே தடையாக இருக்காது.</p><p>

இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து விண்ணப்பிக்கும் மக்களுக்கு இது இனிமையான செய்தியாக இருக்கும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4991a586-20fd-4296-a042-9a88e6c07e5b/26-6a75c57268835.webp' /></p><p>முன்பு, இந்த நோய்களுக்கு விலை உயர்ந்த சிகிச்சை தேவைப்படும் நிலையில், விண்ணப்பதாரர்கள் “அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிலை” விதிகளை பூர்த்தி செய்யவில்லை என கருதப்பட்டனர்.</p><p>ஆனால், தற்போது அதற்கான சிகிச்சை செலவுகள் குறைந்துள்ளதால், 81,000 நியூசிலாந்து டொலர் செலவு வரம்பை மீறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனால், ஹெபடைட்டிஸ் B அல்லது C இருப்பது மட்டும் குடியேற்ற விண்ணப்பத்தை நிராகரிக்க காரணமாக இருக்காது. </p><p></p><p>இருப்பினும், விண்ணப்பதாரர்கள் தங்கள் மருத்துவ வரலாற்றை முழுமையாக தெரிவிக்க வேண்டும். தேவையானால், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கூடுதல் தகவல்கள் கேட்கப்படலாம்.
</p><p>
இது முழுமையான சுகாதார விதிகளை நீக்குவது அல்ல. சிறுநீரக, கல்லீரல் நோய்கள், புற்றுநோய், நரம்பியல், இதய நோய்கள், மனநிலை பிரச்சினைகள் போன்றவை இன்னும் சுகாதார மதிப்பீட்டில் முக்கியமாக கருதப்படும்.
</p><p>
இந்த மாற்றம், நியூசிலாந்தின் குடியேற்ற சுகாதார கொள்கையை சீரமைத்து, உண்மையில் அதிக செலவுகளை ஏற்படுத்தும் நோய்களையே கவனத்தில் கொள்ளும் வகையில் செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T13:12:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடிக் கிருத்திகை.., 12 ராசிக்கும் முருகர் சொல்லும் செய்தி என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/12-rasipalan-for-aadi-krittikai-in-tamil-1786107421"></link>
            <id>https://news.lankasri.com/article/12-rasipalan-for-aadi-krittikai-in-tamil-1786107421</id>
            <summary type="text">ஆடிக் கிருத்திகை என்பது தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளாகும். 

2026 ஆம் ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை திருவிழா ஆகஸ்ட் 6 மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடிக் கிருத்திகை என்பது தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளாகும். </p><p>

2026 ஆம் ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை திருவிழா ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 7 ஆகிய தேதிகளில் அதாவது இன்று நடைபெற்று கொண்டுள்ளது.
</p><p>
கிருத்திகை நட்சத்திரம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை தொடங்கி பக்தர்களால் முருகப்பெருமானை வழிபட உகந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. </p><p>

இது முருகப்பெருமானை வழிபடவும், விரதம் இருக்கவும் உகந்த மிக முக்கியமான புனித நாளாகும். </p><p>

கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட முருகப்பெருமானை இத்திருநாளில் வழிபடுவது பல நன்மைகளைத் தரும்.</p><p> 

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றி, சரவணப் பொய்கையில் மலர்ந்த முருகப்பெருமானை கார்த்திகை பெண்கள் ஆறு பேர் அரவணைத்து வளர்த்தனர்.
</p><p>
கார்த்திகை பெண்களுக்குச் சிறப்புச் செய்யும் நாளாகவும், அவர்களின் பெயரால் கிருத்திகை விரதம் அனுசரிக்கப்படுகிறது.</p><p>

இத்திருநாளில், கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் மற்றும் முருகனின் திருநாமங்களைச் சொல்லி வழிபடலாம்.
</p><p>
அந்தவகையில், ஆடிக் கிருத்திகை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று டாரட் வாசிப்பாளர் சாரா இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PVXRfDAi6SY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T12:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்ட்: கெத்து காட்டிய இலங்கை வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-xi-scored-363-vs-india-day-1-1786105554"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-xi-scored-363-vs-india-day-1-1786105554</id>
            <summary type="text">இந்திய அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இலங்கை லெவன் 363 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கொழும்பு பயிற்சி டெஸ்டில் இலங்கை அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இலங்கை லெவன் 363 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
</p><p>
கொழும்பு பயிற்சி டெஸ்டில் இலங்கை அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 363 ஓட்டங்கள் குவித்துள்ளது.&nbsp;</p><h2>மதுஷ்கா,&nbsp;ரவிந்து </h2><p>



இலங்கை லெவன் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான பயிற்சி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6112834d-664e-485f-aa04-6af6a7a99760/26-6a75ced595d32.webp' />&nbsp;</p><p></p><p>
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை லெவன் அணியில் தொடக்க வீரர்கள் அதிரடி காட்டினர்.

இந்தக் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 110 ஓட்டங்கள் குவித்தது. </p><p>நிஷான் மதுஷ்கா ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். 

அடுத்து பசிந்து சூரியபந்தாரா 35 ஓட்டங்களில் வெளியேற, ரவிந்து ரசந்த 71 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். </p><p>

பின்னர் வந்த பவன் ரத்னயாகே 39 ஓட்டங்களும், அஹன் 31 ஓட்டங்களும் எடுத்தனர். அரைசதம் அடித்த அணித்தலைவர் சோனல் தினுஷா (Sonal Dinusha) 52 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
</p><p>
முதல் நாள் முடிவில் இலங்கை லெவன் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 363 ஓட்டங்கள் குவித்துள்ளது. ஜடேஜா, குல்தீப் மற்றும் மானவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/377b8e6c-194c-427f-a249-3ccf29761150/26-6a75ced64866c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T12:50:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணுகுண்டு வீச்சுக்கு தப்பிப் பிழைத்தவர்கள் ஜப்பான் அரசுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hiroshima-survivors-warns-japan-rearmament-bomb-1786106589"></link>
            <id>https://news.lankasri.com/article/hiroshima-survivors-warns-japan-rearmament-bomb-1786106589</id>
            <summary type="text">அமெரிக்கா வீசிய அணுகுண்டுக்கு தப்பிய ஜப்பானியர்கள், ஆயுதமயமாக்கலுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.


1945ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6ஆம் திகதி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா வீசிய அணுகுண்டுக்கு தப்பிய ஜப்பானியர்கள், ஆயுதமயமாக்கலுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.</p><p>


1945ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6ஆம் திகதி, அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது அணுகுண்டு வீசியது. அதில், 80,000 பேர் உயிரிழந்தார்கள்.</p><p>

மூன்று நாட்களுக்குப் பின் அமெரிக்கா நாகசாகி நகரின் மீது இரண்டாவது அணுகுண்டை வீசியது!</p><h3>

ஜப்பான் அரசுக்கு எச்சரிக்கை</h3><p>

மீண்டும் போரில் ஈடுபடுவதில்லை என அப்போது ஜப்பான் வாக்குறுதி அளித்து, சர்வதேச சமுதாயத்தின் நம்பிக்கையை பெற்றது என்கிறார் அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டமைப்பான Nihon Hidankyo என்னும் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரலான மசாக்கோ வாடா.
</p><p>
அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசும்போது, வாடாவுக்கு வயது ஒன்று!&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f918ac3b-c10a-428e-9f45-2e267d9be828/26-6a75d2de7d720.webp' /></p><p>
ஆனால், இப்போது ஜப்பான் மீண்டும் ஆயுதமயமாக்கலுக்கு திரும்பிவருகிறது என்று கூறும் வாடா, கொடுத்த வாக்குறுதியால் ஏற்படுத்திய நம்பிக்கையை இப்போதைய அரசு நிர்வாகம் அழித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்.</p><p>

வாடாவைப்போலவே அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பிய மசாஷி லெஷிமா (84) என்பவரும், ஜப்பானின் தற்போதைய ராணுவ பலப்படுத்துதலுக்கும், இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்த ஆயுதப் பந்தயத்துக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை என்கிறார்.&nbsp;</p><p></p><p>

அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசும்போது லெஷிமாவுக்கு வயது 3.
</p><p>
குண்டு வீச்சின் பாதிப்பு காரணமாக தைராய்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லெஷிமாவுக்கு, அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தையும் தொண்டைப் புற்றுநோயால்தான் உயிரிழந்தார் என்பது ஆறாத காயம்.</p><p>

போரில் அணுகுண்டு வீசப்பட்டு, 81ஆண்டுகள் ஆனபிறகும் அதன் பாதிப்புகள் நீடித்துவரும் நிலையில், மீண்டும் ஜப்பான் ராணுவமயமாக்கலை நியாயப்படுத்திவருவது என் இரத்தத்தைக் கொதிக்கவைக்கிறது என்கிறார் லெஷிமா.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2722d05-ff89-40ac-aef8-04f84ad7e6d3/26-6a75d2df2ccbc.webp' /></p><p>

ஜப்பான் தொடர்ந்து இதே பாதையில் பயணிக்குமானால், அது போரில்தான் முடியும் என்று கூறும் லெஷிமா, இன்னொரு போர் வெடித்தால் அது அணு ஆயுதப் போராகத்தான் இருக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவிக்கிறார்.</p><p>

ஆகத்து மாதம் 6ஆம் திகதி, ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் 81ஆவது ஆண்டு நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T12:46:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே கட்டுமரப் படகு சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-catamaran-crossing-between-france-and-uk-1786104403"></link>
            <id>https://news.lankasri.com/article/new-catamaran-crossing-between-france-and-uk-1786104403</id>
            <summary type="text">பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே புதிய கட்டுமரப் படகு சேவை ஒன்று, சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட உள்ளது.


பிரான்சிலுள்ள நார்மாண்டிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே புதிய கட்டுமரப் படகு சேவை ஒன்று, சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட உள்ளது.
</p><p>

பிரான்சிலுள்ள நார்மாண்டிக்கும் பிரித்தானியாவிலுள்ள சசெக்ஸ் நகருக்கும் இடையே கட்டுமரப் படகு சேவை ஒன்று, சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட உள்ளது.
</p><h3>
புதிய கட்டுமரப் படகு சேவை
</h3><p>
இந்த சோதனை முயற்சி அடுத்த மாதம் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அதில், காற்றின் உதவியால் செலுத்தப்படும் கட்டுமரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d42a8b5a-88de-4dc0-b1db-f851ed8ea248/26-6a75ca550c219.webp' /></p><p>

செப்டம்பர் 8ஆம் திகதி முதல், 13ஆம் திகதி வரை, பிரான்சிலிருந்து இரு சேவைகளும், பிரித்தானியாவிலிருந்து மூன்று சேவைகளும் முயற்சிக்கப்பட உள்ளன.</p><p>

ஒரு பயணத்தின் போது படகில் 12 பயணிகள் வரை அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் தங்கள் சைக்கிள்களையும் உடன் கொண்டுவரலாம்.
</p><p>
இந்த கட்டுமரப்பயணத்தை தலைமை தாங்குபவர் பிரபல மாலுமியான Michel Desjoyeaux என்பவர்.&nbsp;</p><p></p><p>
இந்த பயணத்துக்கான கட்டணம், ஒரு முறை பயணிக்க 220 பவுண்டுகள்.
</p><p>
முக்கிய விடயம் என்னவென்றால், இந்த படகில் பயணிக்கவும் பயணிகளுக்கு பாஸ்போர்ட் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T12:06:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைட்டமின் B12 குறைபாட்டை எச்சரிக்கும் முக்கிய அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/6-warning-signs-of-vitamin-b12-deficiency-1786103704"></link>
            <id>https://news.lankasri.com/article/6-warning-signs-of-vitamin-b12-deficiency-1786103704</id>
            <summary type="text">வைட்டமின் B12 என்பது இரத்த சிவப்பணுக்கள், டிஎன்ஏ உருவாக்கம் மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்குத் தேவையான உயிர்ச்சத்து ஆகும். 

மனித உடல் இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வைட்டமின் B12 என்பது இரத்த சிவப்பணுக்கள், டிஎன்ஏ உருவாக்கம் மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்குத் தேவையான உயிர்ச்சத்து ஆகும். </p><p>

மனித உடல் இதனைத் தானே உற்பத்தி செய்யாது என்பதால் உணவுகள் மூலம் மட்டுமே பெற வேண்டும்.</p><p>

உடலில் தேவையான அளவு வைட்டமின் B12 இல்லாத நிலை வைட்டமின் B12 குறைபாடு எனப்படும்.</p><p> 

இது சோர்வு, நரம்பு பலவீனம், கை-கால்களில் கூச்ச உணர்வு மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af900339-75bf-4b24-a1f7-37480f7a043f/26-6a75c79a95906.webp' /></p><p>போதுமான உணவை உட்கொள்ளாமை அல்லது உடல் அதனை உறிஞ்சப் பற்றாக்குமையால் இது உண்டாகிறது.
</p><p>
அதன்படி முட்டை, மீன், இறைச்சி, செறிவூட்டப்பட்ட தானியங்கள், பருவகால பழங்கள் போன்ற வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
</p><p>
அந்தவகையில், வைட்டமின் B12 குறைபாட்டை எச்சரிக்கும் முக்கிய அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.</p><h2>என்னென்ன அறிகுறிகள்?
</h2><p><b>உடல் சோர்வு-</b> வைட்டமின் B12 குறைந்தால், இரத்த சிவப்பணுக்கள் குறைவாக உருவாகும். இதனால் உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் அதிக சோர்வு மற்றும் மந்தநிலை ஏற்படும்.
</p><p><b>சருமம் வெளிறுதல்-</b> சருமம் வழக்கத்தை விட வெளிறி காணப்பட்டால், அது இரத்தசோகை அல்லது வைட்டமின் B12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கும்.</p><p><b>மூச்சுத்திணறல்-</b> வைட்டமின் B12 குறைபாட்டால் உடலுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் குறைவதால், உடற்பயிற்சி செய்யும்போது அல்லது ஓய்வில் இருக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்படும்.</p><p></p><p>
</p><p><b>கை, கால்களில் கூச்ச உணர்வு-</b> கை, கால்களில் மரத்துப்போதல், ஊசி குத்துவது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்பட்டால், அது நரம்புகளை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கும். </p><p><b>நடப்பதில் சிரமம்-</b> நரம்பு பாதிப்பால் தள்ளாடி நடப்பது அல்லது நடப்பதில் சிரமம் ஏற்படுவது வைட்டமின் B12 குறைபாட்டால் ஏற்படும்.
</p><p><b>மனநிலை மாற்றங்கள்-</b> பதட்டம், எரிச்சல், மனச்சோர்வு போன்ற மனநிலை மாற்றங்களும் வைட்டமின் B12 குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T12:01:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடுகடத்தப்பட்ட 50 புகலிடக்கோரிக்கையாளர்கள் மீண்டும் பிரித்தானியாவில்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/50-deported-asylum-seekers-returned-to-uk-1786103283"></link>
            <id>https://news.lankasri.com/article/50-deported-asylum-seekers-returned-to-uk-1786103283</id>
            <summary type="text">பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட 50 புகலிடக்கோரிக்கையாளர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பிவிட்டுள்ளார்கள்.


One in, one out ஒப்பந்தத்தின் கீழ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட 50 புகலிடக்கோரிக்கையாளர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பிவிட்டுள்ளார்கள்.
</p><p>

One in, one out ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட முதல் புகலிடக்கோரிக்கையாளர் பிரித்தானியாவிலிருப்பதை பிரித்தானிய ஊடகம் ஒன்று கண்டறிந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a48ce4b-3f7d-4e17-93e2-bc70270064a4/26-6a75c5f5d764a.webp' /></p><p>
அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்டார்.
</p><p>
அப்படியானால், அவரைப்போலவே எத்தனை பேர் மீண்டும் பிரித்தானியா திரும்பியிருப்பார்கள் என்னும் கேள்வி அப்போது எழுந்தது. ஆனால், அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை!
</p><h3>
50 புகலிடக்கோரிக்கையாளர்கள்
</h3><p>
இந்நிலையில், One in, one out ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானியாவால் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட சுமார் 50 புகலிடக்கோரிக்கையாளர்கள் மீண்டும் பிரித்தானியா திரும்பிவிட்டதாக தி கார்டியன் பத்திரிகை தற்போது தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf6e73ad-7cc9-404e-b000-1cf8b821ec8b/26-6a75c5f52defd.webp' /></p><p>
அப்படி பிரித்தானியா திரும்பியவர்களில் சிலர் உள்துறை அலுவலகத்தால் கைது செய்யப்பட்டாலும், அவர்களைப்போலவே மீண்டும் பிரித்தானியா திரும்பிய மேலும் பலர் பிரித்தானியாவில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.&nbsp;</p><p></p><p>

உள்துறை அலுவகத் தரவுகளின்படி, one in one out திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 30ஆம் திகதி நிலவரப்படி, 1,117 பேர் பிரான்சிலிருந்து பிரித்தானியா வந்தடைந்துள்ளார்கள், 1,087 பேர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T11:52:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புல் வெட்ட செல்கிறேன் என பெருமையாக பதிவு: கோடிக்கணக்கிலான கஞ்சாவுடன் சிக்கிய பிரித்தானிய பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/45-year-old-uk-woman-arrested-for-cannabis-smuggle-1786103493"></link>
            <id>https://news.lankasri.com/article/45-year-old-uk-woman-arrested-for-cannabis-smuggle-1786103493</id>
            <summary type="text">பிரித்தானியப் பெண்ணொருவர் 5,00,000 பவுண்ட் மதிப்புள்ள கஞ்சாவை கடத்தும்போது பிடிபட்டார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த 45 வயது பெண் 5,00,000 பவுண்ட் மதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியப் பெண்ணொருவர் 5,00,000 பவுண்ட் மதிப்புள்ள கஞ்சாவை கடத்தும்போது பிடிபட்டார்.
</p><p>
பிரித்தானியாவைச் சேர்ந்த 45 வயது பெண் 5,00,000 பவுண்ட் மதிப்புள்ள தாய்லாந்து கஞ்சாவை கடத்தியதை ஒப்புக்கொண்டார்.</p><h2>

பிரித்தானியப் பெண் </h2><p>45 வயதான ஏமி ஜேன் டர்பன் என்ற பிரித்தானியப் பெண் தாய்லாந்திற்கு பயணம் செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54ce0b6a-a137-4a8d-a452-cea630fea449/26-6a75c6c9026f4.webp' />&nbsp;</p><p></p><p>

அப்போது அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், "புல் வெட்ட வீட்டிற்கு செல்கிறேன் - நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிந்தால் சரி. எப்போது வருவேன் என்ற நேரம் குறிப்பிடப்படவில்லை. எனவே உங்கள் புல்வெளிக்கு நான் எப்போது வரப்போகிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது" என பதிவிட்டிருந்தார்.
</p><p>

அதனைத் தொடர்ந்து, தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் வந்த அவரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.</p><p>

அப்போது கிளாஸ் பி வகையைச் சேர்ந்த போதைப்பொருள் நிரப்பப்பட்ட இரண்டு சூட்கேஸ்களில் 51.2 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதன் சந்தை மதிப்பு 5,12,000 பவுண்ட் எனவும் தெரிய வந்துள்ளது. </p><p> 
 
பின்னர் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், தேசிய குற்றவியல் முகமையின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.&nbsp;</p><h2>கஞ்சா கடத்திய குற்றம்</h2><p>

Uxbridge மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தான் கஞ்சா கடத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஏமி, வியாழக்கிழமை அன்று காவலில் வைக்கப்பட்டார். 

அவருக்கு அக்டோபர் மாதம் 14ஆம் திகதி அன்று தண்டனை விதிக்கப்படவுள்ளது. </p><p> 

தேசிய குற்றவியல் தகவலின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் பிரித்தானியாவிற்குள் கஞ்சாவைக் கடத்த முயலும் கடத்தல்காரர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே, பிரித்தானிய விமான நிலையங்களில் 600 கடத்தல்காரர்கள்கைது செய்யப்பட்டுள்ளதால், நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று NCA தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c983a272-9d2d-4dc2-96a1-34d168e20e21/26-6a75c6c84b7a6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T11:49:29+00:00</updated>
        </entry>
    </feed>
