<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-10T07:27:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஸா போரின் பின்னணி... ஹாரெட்ஸ் நாளேடு மீது வழக்குத் தொடர உள்ள நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-to-sue-haaretz-over-1789023632"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-to-sue-haaretz-over-1789023632</id>
            <summary type="text">Netanyahu to sue Haaretz over claims UAE warned him: ஐக்கிய அரபு அமீரகம் தன்னை எச்சரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நெதன்யாகு ஹாரெட்ஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Netanyahu to sue Haaretz over claims UAE warned him: ஐக்கிய அரபு அமீரகம் தன்னை எச்சரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நெதன்யாகு ஹாரெட்ஸ் மீது வழக்குத் தொடர உள்ளார்.
</p><p>இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் நடத்திய தாக்குதல் தொடர்பில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஹாரெட்ஸ் நாளேடு வெளியிட்டுள்ள தரவுகள் தொடர்பாக, அந்த நாளேடு மீது வழக்கு தொடரப்போவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p><h2>10 நாட்களுக்கு முன்பே</h2><p> </p><p>
இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ள நெதன்யாகு, குறித்த செய்திகள் அனைத்தும் புனையப்பட்டது
 மற்றும் பொய்யானது என்றும், ஹாரெட்ஸ் மற்றும் அதன் ஆசிரியர்களான ஷ்லோமி எல்டார், ரூத் யாவல் மீதும் வழக்குத் தொடருமாறு தனது சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d370d39-3101-467a-82df-7fefd677b438/26-6aa255921c7d0.webp' /></p><p> </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், அக்டோபர் 7, 2023 அன்று நிகழ்ந்த சம்பவங்களுக்கு 10 நாட்களுக்கு முன்பே, ஹமாஸ் அமைப்பின் சாத்தியமான தாக்குதல் குறித்து ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத், நெதன்யாகுவை எச்சரித்திருந்தார். </p><p>அன்று இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் படைகள் குறைந்தது 1,195 பேரைக் கொன்றதுடன், சுமார் 251 பேரைச் சிறைபிடித்துச் சென்றது. கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையும் பின்னர் இஸ்ரேல் அரசாங்கத்தால் திருத்தப்பட்டது.</p><p></p><p> </p><p>அந்தத் தாக்குதல்கள் காஸா மீது இஸ்ரேல் இனப்படுகொலைக்கான போரைத் தூண்டின; இதில் குறைந்தது 73,669 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> நெதன்யாகு மற்றும் அவரது மனைவிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் விசாரணை இறுதிகட்டத்தை நெருங்கியிருந்த நிலையிலும், நெதன்யாகுவின் பதவி பறிக்கப்பட்டு அவர் சிறை செல்வார் என்ற கட்டத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. </p><p>ஹாரெட்ஸ் வெளியிட்டிருந்த தகவலில், அமீரக ஜனாதிபதி நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அப்போதைய ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரிடமிருந்து வந்த அச்சுறுத்தல் குறித்து அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. </p><p>ஹாரெட்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், கைதிகள் பரிமாற்றப் பேச்சுவார்த்தைகள் முடங்கியதாலும், காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான முற்றுகையாலும் கோபமடைந்த சின்வார், ஒரு இடைத்தரகர் மூலம் அந்த எச்சரிக்கைகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தெரிவித்திருந்தார்.</p><h2>நேதன்யாகு&nbsp;பின்தங்கியுள்ளார்</h2><p> </p><p>மேலும், ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஆயத்தம் செய்து வருவதாகவும், ஒரு நிலநடுக்கத்தை எதிர்பார்க்குமாறு இஸ்ரேலிடம் தெரிவிக்குமாறு தமக்குத் தொடர்பில் உள்ளவர்களிடம்&nbsp;சின்வார் கூறியதாகவும் ஹாரெட்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. </p><p>சின்வாரின் அந்த எச்சரிக்கை மிகப் பெரிய தாக்குதல் ஒன்றின் அறிகுறியாகவே அமீரக ஜனாதிபதியும் அவரது அதிகாரிகள் தரப்பும் புரிந்துகொண்டுள்ளனர்.</p><p> இதனையடுத்து அந்த உளவுத் தகவலை இஸ்ரேலின் 'ஷின் பெட்' (Shin Bet) அமைப்பிடம் அமீரகம் அளித்தது. ஆனால், ஷின் பெட் அமைப்பு அந்த அச்சுறுத்தலை நிராகரித்தது. இதன் பின்னரே, நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அமீரகம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2deaa686-1560-487e-a2a2-628eb0cd4096/26-6aa25592c44be.webp' /></p><p> </p><p>ஆனால் நெதன்யாகும் அதை புறந்தள்ளியுள்ளார். அக்டோபரில் நடைபெறவுள்ள நெசெட் (Knesset) தேர்தலில் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள நெதன்யாகு கடுமையாகப் போராடி வரும் வேளையில், ஹாரெட்ஸ் இதழின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. </p><p>முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட்டிடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ள நேதன்யாகு, கருத்துக்கணிப்புகளில் மிக மோசமாக பின்தங்கியுள்ளார். </p><p>இந்த நிலையில், ஹாரெட்ஸ் இதழின் அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அது இடதுசாரிகளின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் புதன்கிழமை அன்று நெதன்யாகு கூறினார். </p><p>மட்டுமின்றி, அமீரக ஜனாதிபதியுடன் இந்த விவகாரத்தில் தாம் தொலைபேசியில் உரையாடியதில்லை என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T06:57:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் மின் நிலையத்தில் வெடிவிபத்து: இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-dies-in-swiss-power-plant-explosion-1789022199"></link>
            <id>https://news.lankasri.com/article/2-dies-in-swiss-power-plant-explosion-1789022199</id>
            <summary type="text">Two workers killed in an explosion at a hydroelectric power plant in Switzerland: சுவிஸ் நீர் மின் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பணியாளர்கள் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two workers killed in an explosion at a hydroelectric power plant in Switzerland: சுவிஸ் நீர் மின் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பணியாளர்கள் இருவர்கள் பலியாகியுள்ளார்கள்.
</p><p>

சுவிட்சர்லாந்தின் Ticino மாகாணத்திலுள்ள Piotta என்னும் கிராமத்தில், நீர் மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது.
</p><h3>
மின் நிலையத்தில் வெடிவிபத்து</h3><p>

நேற்று காலை 9.30 மணியளவில் திடீரென அந்த மின் நிலையத்தில் தீப்பற்றியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03841e7c-5beb-4217-b3a4-0863c3fab7fd/26-6aa24ff8db24a.webp' /></p><p>
இரண்டு பணியாளர்கள் கட்டிடத்துக்குள் சிக்கிக்கொண்ட நிலையில், தீ வேகமாகப் பரவ, சிறிது நேரத்தில் ஏதோ வெடித்துச் சிதற, முழு கட்டிடமும் குலுங்கியுள்ளது.</p><p>

கட்டிடம் பலத்த சேதமடைய, கட்டிடத்துக்குள் சிக்கியிருந்த இருவரும் படுகாயமடைந்து சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>

உயிரிழந்தவர்களில் ஒருவர் 55 வயதுடைய சுவிஸ் குடிமகன். மற்றவரை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.
</p><p>
இந்நிலையில், எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:37:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த தவெக]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tvk-announced-candidates-for-by-election-1789021253"></link>
            <id>https://news.lankasri.com/article/tvk-announced-candidates-for-by-election-1789021253</id>
            <summary type="text">tvk announced candidates for dharapuram and madurantakam by election: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>tvk announced candidates for dharapuram and madurantakam by election: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது.
</p><h3>
இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவெக </h3><p>

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>

இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a96479a6-548f-4245-bfc9-82cf40d622d1/26-6aa24c464ed05.webp' /></p><p>

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில், மதுராந்தகத்தில் K.மரகதம் குமரவேல் போட்டியிடுவார்கள் எனவும், தாராபுரத்தில் சத்தியபாமா போட்டியிடுவார்கள் எனவும் அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>

இருவரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அவர்களுக்கே தவெக மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/nEH9s9t231">pic.twitter.com/nEH9s9t231</a></p>&mdash; TVK Vijay (@TVKVijayHQ) <a href="https://x.com/TVKVijayHQ/status/2097920532931031366?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் ஐ.பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:25:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக சுருக்கம் மற்றும் கருவளையம் போகணுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rose-water-skincare-hack-mix-to-remove-dark-1788951684"></link>
            <id>https://news.lankasri.com/article/rose-water-skincare-hack-mix-to-remove-dark-1788951684</id>
            <summary type="text">தற்போதைய காலகட்டங்களில் எல்லோருக்கும் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிப்பதற்கான நேரம் கிடைப்பதில்லை. அந்த வகையில், வீடுகளில் இருக்கக்கூடிய பொருட்களை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய காலகட்டங்களில் எல்லோருக்கும் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிப்பதற்கான நேரம் கிடைப்பதில்லை. அந்த வகையில், வீடுகளில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து நாம் சருமத்தை பாதுகாக்க கூடிய சில எளிய வழிகளை பார்க்கலாம். </p><p>அதாவது, வீட்டில் இருக்கக்கூடிய ரோஸ் வாட்டர், தேன் மற்றும் பாதாம் எண்ணெய் இந்த மூன்று பொருட்கள் இருந்தாலே போதும். நம் சருமத்திற்கு உடனடியாக புத்துணர்ச்சி அடைய செய்ய முடியும். சிலருக்கு இரவில் தூக்கம் இல்லாமலும் அல்லது எப்பொழுதும் கணினி முன்பாக இருப்பதினாலோ கருவளையம், மற்றும் வயது அதிகரிப்பு காரணமாக சுருக்கங்கள் இவைகள் எல்லாம் வருவது இயல்பு.</p><p> அந்த நேரங்களில் நாம் அதனை பராமரிக்கும் பொழுது தான் ஒரு நல்ல சருமத்தை பெறலாம். அந்த வகையில், நாம் ரோஸ் வாட்டர் பயன்படுத்தும் பொழுது நம்முடைய சருமத்திற்கு புத்துணர்ச்சியும், தேன் மற்றும் பாதாம் எண்ணெய் நம்முடைய சருமத்தில் ஈரப்பதத்தையும் கொடுக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e72d19-51d5-4e46-850d-57fc1b7d4a3c/26-6aa13c85cb214.webp' /></p><p></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">எப்படி பயன்படுத்துவது?</span></p><p>இந்த மூன்று பொருளையும் சிறிதளவு எடுத்துக்கொண்டு கலந்து கொள்ள வேண்டும். பிறகு முகத்தை சுத்தமாக கழுவி இந்த கலவையை சருமத்தின் மீது தடவிக்கொள்ள வேண்டும். முடிந்தவரை கலவையை கண்களுக்குள் செல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு கீழே தடவும் பொழுது அழுத்தம் கொடுக்காமல் தடவுவது அவசியம்.</p><p> இந்த கலவையை முகத்தில் தடவிக் கொள்வதற்கு முன்பாக சிறிதாக கழுத்து அல்லது காது பகுதிகளில் தடவி ஏதேனும் எரிச்சல் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறதா என்பதை பார்த்து பின்பு முகத்தில் தடவிக் கொள்வது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9ccea7-e00e-46a5-9b5c-6a2ba2db70c7/26-6aa13c868fd53.webp' /></p><p></p><p> </p><h3>


இது கருவளையம் மற்றும் சுருக்கங்களை நீக்குமா?
</h3><p>
 ரோஸ் வாட்டர், தேன் மற்றும் பாதாம் எண்ணெய் கலவையானது நம்முடைய கருவளையம் அல்லது சுருக்கங்களை நிரந்தரமாக நீக்கும் என்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை என்றாலும் இந்த கலவை நம்முடைய சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குவதோடு பராமரிக்க உதவியாக அமைகிறது.</p><p>

 திடீரென்று வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டும் அல்லது ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் அப்பொழுது கருவளையம் அல்லது முகம் புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கிறது என்ற சமயத்தில் கட்டாயமாக இந்த கலவையை நீங்கள் முகத்தில் தடவிக் கொள்ளலாம். அவை உங்களுக்கு ஒரு நல்ல புத்துணர்ச்சியும் ஈரப்பதமான் சருமத்தையும், நல்ல பொலிவும் கருவளையத்தை குறைத்தும் காண்பிக்க கூடிய ஒரு தன்மையை உருவாக்கும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T06:20:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[CM கிட்ட போய் சொல்லு ஒன்னும் பண்ண முடியாது - புகார் கொடுத்த மறுநாளே கொல்லப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tiruvottiyur-youth-murdered-next-day-of-complaint-1789020093"></link>
            <id>https://news.lankasri.com/article/tiruvottiyur-youth-murdered-next-day-of-complaint-1789020093</id>
            <summary type="text">tiruvottiyur youth murdered after day of complaint to police: காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மறுநாளே சென்னை திருவொற்றியூரை சேர்ந்த நபர் கொல்லப்பட்ட ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>tiruvottiyur youth murdered after day of complaint to police: காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மறுநாளே சென்னை திருவொற்றியூரை சேர்ந்த நபர் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><h3>

புகார் கொடுத்த மறுநாளே கொல்லப்பட்ட நபர்
</h3><p>
சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்த 26 வயதான பிரதீப் ராஜ் என்பவரை நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca315741-2d53-47a3-8823-2ddc55daa59f/26-6aa247bf1dac9.webp' /></p><p>
நேற்று முன்தினம் திருவொற்றியூர் காவலநிலையத்தில், சிலர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி குடும்பத்துடன் புகாரளித்துள்ளார். </p><p>

அதனைத்தொடர்ந்து வெளியே வந்த பேட்டியளித்த அவர், " என் அம்மா, நவநீதம் என்பவரிடம் கடன் வாங்கியதால் என்னை அழைத்து சம்பந்தப்பட்டவர்கள் சில ரவுடிகளை வைத்து மிரட்டினார்கள். </p><p>

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் என்னை அழைத்து உங்களுக்குள் பகை இருக்கிறது. மாறி மாறி வெட்டிக் கொள்வீர்கள் என தகவல் வருகிறது என கூறினார்.&nbsp;</p><p></p><p>
 நான் சொன்னதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என கேட்டதற்கு, நீ என்ன பெரிய ஆளா, கை, கால்களை உடைத்து விடுவேன். உயிரோட இருக்க மாட்ட, உன்னை சுட்டு விடுவேன், உன்னை வெட்டி திருச்செந்தூரில் சென்று கரைப்பேன், பொய் வழக்குப் போட்டு கைது செய்வேன் என காவல் ஆய்வாளர் என்னை மிரட்டுகிறார். </p><p>

நான் எந்த தவறும் செய்யவில்லை என கூறினேன். பதிலுக்கு ரவுடி ராதாகிருஷ்ணனிடம் என்னைப் பேச சொன்னார். </p><p>

மேலும் நீ முதலமைச்சரிடம் வேண்டுமானாலும் போய் புகார் சொல்லிக்கொள். உனக்காக வரும் வழக்கறிஞரால் என்ன செய்ய முடியும். அவர்களால் நீதிமன்றத்தில் மட்டுமே பார்க்க முடியும். இது என் காவல் நிலையம்" என கூறியுள்ளார். </p><p>

காவல் ஆய்வாளர் மிரட்டியதாக புகார் அளித்த நபர் பேட்டியளித்த மறுநாளே கொல்லப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h3> 

உதயநிதி ஸ்டாலின் கண்டனம் </h3><p>

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41b917e5-6549-4d4e-81b0-5e6f72083d97/26-6aa247bfc63f3.webp' /></p><p>
‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.</p><p>

‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.

காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?</p><p> 

காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.</p><p>

சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.
</p><p>
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.<br><br>‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2097900236282703980?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:15:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் மேலும் ஒரு நாட்டுடன் ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-deal-with-belgium-to-stop-people-smugglers-1789016839"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-deal-with-belgium-to-stop-people-smugglers-1789016839</id>
            <summary type="text">Britain has struck a deal with Belgium to stop people smugglers: ஆட்கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், பெல்ஜியம் நாட்டுடனும் ஒப்பந்தம் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Britain has struck a deal with Belgium to stop people smugglers: ஆட்கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், பெல்ஜியம் நாட்டுடனும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது பிரித்தானியா.
</p><p>

சட்டவிரோத புலம்பெயர்வோர் சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது இன்னமும் பிரித்தானியாவுக்கு சவாலாகவே உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe940d37-93fa-427f-a7c6-fccdb2f79a07/26-6aa23b0971edc.webp' /></p><p>
அதற்குக் காரணம், இந்த சட்டவிரோத புலம்பெயர்வோர் வெறுமனே பிரான்சை மட்டும் பின்னணியாகக் கொண்டு இயங்கவில்லை. </p><p>அவர்கள் பல நாடுகளிலிருந்து இயங்குகிறார்கள் என நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுண்டு.

அதை நிரூபிப்பதுபோல, சமீபத்தில், ஆட்கடத்தல்காரர்கள், பெல்ஜியம் நாட்டிலிருந்து புலம்பெயர்வோரை படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு அனுப்புவது தெரியவந்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.</p><h3>

 பெல்ஜியம் நாட்டுடன் ஒப்பந்தம்
</h3><p>
ஆக, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியா பிரான்சுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள, ஆட்கடத்தல்காரர்கள் பெல்ஜியம் நாட்டுக் கடற்கரைகளிலிருந்து படகுகள் மூலம் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்புகிறார்கள்.
</p><p>
ஆகவே, பெல்ஜியம் நாட்டிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த, பெல்ஜியம் நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளது பிரித்தானியா.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3220ef22-9db5-4fa4-96da-374959a067c2/26-6aa23b08bf590.webp' /></p><p>
ஆக, சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, இனி பிரான்ஸ், பிரித்தானிய பொலிசாருடன், பெல்ஜியம் பொலிசாரும் இணைந்துகொள்ள இருக்கிறார்கள்.
</p><p>
அத்துடன், பிரித்தானியாவும் பெல்ஜியமும் உளவுத்துறை தகவல்களையும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன.&nbsp;</p><p></p><p>

விடயம் என்னவென்றால், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில் மட்டும், 32 முறை, பெல்ஜியம் நாட்டிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சிப்பதை பெல்ஜியம் பொலிசார் கவனித்துள்ளார்கள்.
</p><p>
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், வெறும் இரண்டு முறை மட்டுமே இத்தகைய முயற்சிகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதாவது, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் பொலிசார் நடவடிக்கைகளைத் துவக்கியதால், ஆட்கடத்தல்காரர்கள், பெல்ஜியம் நாட்டுக் கடற்கரைகளிலிருந்து படகுகள் மூலம் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்பத் துவங்கியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:50:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கும் ஹொட்டலை முற்றுகையிட்ட பேட்ரியாட் போராட்டக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/protesters-surround-pakistan-cricket-team-1789019268"></link>
            <id>https://news.lankasri.com/article/protesters-surround-pakistan-cricket-team-1789019268</id>
            <summary type="text">Protesters surround Pakistan cricket team hotel: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கியிருந்த ஹொட்டலை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
புலம்பெயர்ந்தவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Protesters surround Pakistan cricket team hotel: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கியிருந்த ஹொட்டலை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.</p><p>
புலம்பெயர்ந்தவர்கள் என்ற வதந்தி பரவியதை அடுத்து, பதின்வயது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கியிருந்த ஹொட்டலை, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டக்காரர்கள் குழு ஒன்று முற்றுகையிட்டது.</p><h2>வதந்தி பரவியது</h2><p>
</p><p>இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமையன்று போர்ட்ஸ்மத்தில் உள்ள மேரியட் ஹொட்டலுக்குள் பேருந்தில் வந்திறங்கிய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியை, உள்ளூர்வாசிகள் பார்த்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10724bde-d399-4579-9eee-a62eb8b39952/26-6aa24486d10c2.webp' /></p><p> </p><p>இதனையடுத்தே அவர்கள் புலம்பெயர்ந்தோர் என வதந்தி பரவியது. ஆனால், சுமார் 50 பேர்கள் கொண்ட ஒரு குழு அதற்குள் அந்த ஹொட்டலை முற்றுகையிட்டுள்ளது. </p><p>இந்த நிலையில், Reform UK அரசியல்வாதியான George Madgwick, உண்மையில் அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் தானா என்பதை உறுதி செய்ய ஹொட்டலுக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>ஹொட்டல் நிர்வாகம், அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்பதை விளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தன்னிடம் நேரில் வந்து பேசியதாகவும்; அப்போது அதற்கான ஆதாரத்தை அவர்கள் காண்பித்ததாகவும், </p><p>பின்னர், ஹொட்டலுக்கு வெளியே கூடியிருந்த 40 முதல் 50 பேர் கொண்ட பேட்ரியாட் போராட்டக்காரர்களிடம் பேசி, அது ஒரு கிரிக்கெட் அணிதான் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தியதாகவும் George Madgwick தெரிவித்துள்ளார்.</p><p> உடனடியாகக் கூடியிருந்த கூட்டம் அதை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு, அமைதி நிலவச் செய்ததுடன், மற்றவர்களையும் அங்கிருந்து உடனடியாகக் கிளம்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டது. ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தவறாக நினைத்திருக்கலாம்</h2><p> </p><p>மேலும், போர்ட்ஸ்மவுத்தில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்ல உள்விவகார அமைச்சகம் பயன்படுத்திய அதே பேருந்து நிறுவனத்தைத்தான் கிரிக்கெட் வீரர்களும் பயன்படுத்தினார்கள் என்பதால், உள்ளூர் மக்கள் அவர்களையும் புலம்பெயர்ந்தோர் எனத் தவறாக நினைத்திருக்கலாம் என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bea637d5-b79d-4fa1-87fb-8e2fcaaa2318/26-6aa244878508e.webp' /></p><p> </p><p>இதனிடையே, போர்ட்ஸ்மவுத்தில் உள்ள RNLI தலைமையகத்திற்கு வெளியே மற்றொரு போராட்டம் நடைபெற்றது. அங்கு, கடலில் மக்களைக் காப்பாற்றியதற்காகக் கடலோரக் காவல்படையினரைக் கண்டித்து சுமார் ஒரு டசினுக்கும் அதிகமான பேட்ரியாட் போராட்டக்காரர்கள் திரண்டனர்.</p><p> ஞாயிற்றுக்கிழமை இரவு, ஆங்கிலக் கால்வாயைக் கடந்து கொண்டிருந்த ஒரு பெரிய ரப்பர் படகில் இருந்த சுமார் 140 புலம்பெயர்ந்தோரை RNLI தன்னார்வக் குழுவினர் மீட்டனர். இது, போர்ட்ஸ்மவுத்தின் ஈஸ்ட்னி பகுதியில் தீவிர வலதுசாரிகளின் கடுமையான போராட்டங்களையும் கடல் முற்றுகைகளையும் தூண்டியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T05:45:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடைத்தேர்தலில் வென்றால் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 5000 டொலர்... ட்ரம்ப் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-5000-checks-to-citizens-1789012668"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-5000-checks-to-citizens-1789012668</id>
            <summary type="text">Trump pitches $5,000 checks to U.S. citizens: ஒவ்வொரு குடிமகனுக்கும் 5,000 டொலர் வழங்குவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
குடியரசுக் கட்சியினர் பிரதிநிதிகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump pitches $5,000 checks to U.S. citizens: ஒவ்வொரு குடிமகனுக்கும் 5,000 டொலர் வழங்குவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>குடியரசுக் கட்சியினர் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டால் மட்டுமே, இடைத்தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனுக்கும் 5,000 டொலர் 'பங்குத்தொகை' வழங்க இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்தார்.</p><h2>5,000 டொலர்கள் உறுதி</h2><p>
</p><p>டல்லாஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவின் இடைக்கால மாநாட்டில் ட்ரம்ப் ஆற்றிய உரையின்போது ஏறக்குறைய ஒரு மணி நேரம் கழித்து இந்த அறிவிப்பு வெளியானது; </p><p>நவம்பர் மாதத் தேர்தல்களில் குடியரசுக் கட்சி வாக்காளர்களை ஒன்றிணைக்கவும், குறிப்பிடத்தக்க அரசியல் சவால்களை எதிர்கொள்ளவும் அவர் முயன்று வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd59d503-e2ac-466f-bcea-f6813a2a7d42/26-6aa22abe581da.webp' /></p><p> குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றால், நீங்களும் எங்களுடன் வெற்றி பெறுவீர்கள்; உங்களுக்கு 5,000 டொலர்கள் உறுதி என்றார் ஜனாதிபதி ட்ரம்ப்.
</p><p>ட்ரம்பின் ஈவுத்தொகை என்று அவர் குறிப்பிட்ட இந்தப் பணப்பரிவர்த்தனைகள் எவ்வாறு செயல்படும் என்பது குறித்த விவரங்களை ஜனாதிபதி வழங்கவில்லை; காசோலைகளுக்கு அங்கீகாரம் அளிக்குமாறு நாடாளுமன்றத்தைக் கேட்க அவர் திட்டமிட்டுள்ளாரா என்பதும் இதில் அடங்கும்.</p><p></p><p> </p><p>சுங்க வரிகள் மூலம் திரட்டப்பட்ட நிதியில் 2,000 டொலர் ஈவுத்தொகை உட்பட, அமெரிக்கக் குடிமக்களுக்குக் காசோலைகள் வழங்கும் யோசனையை அவர் கடந்த காலத்தில் முன்வைத்துள்ளார்.
</p><p>அமெரிக்கக் குடும்பங்களுக்குப் பரவலாகப் பணத்தை வழங்குவதில் சில முன்னுதாரணங்கள் உள்ளன. கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக, 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில், பைடன் மற்றும் முதல் ட்ரம்ப் நிர்வாகங்கள் அமெரிக்கக் குடும்பங்களுக்குப் பல கட்டங்களாகக் காசோலைகளை அனுப்புவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் (Congress) அனுமதி அளித்தது. </p><p>இருப்பினும், எந்தவொரு பொருளாதார ஊக்கத் திட்டமும் பணவீக்கம் திடீரென அதிகரிக்கக் காரணமாகும் அபாயத்தைக் கொண்டுள்ளது; பெருந்தொற்றுக் காலத்தில் அளிக்கப்பட்ட ஊக்க நடவடிக்கைகளே, அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நுகர்வோர் விலைகள் உயர்ந்ததற்கு ஓரளவேனும் காரணமாக இருந்தன என்று பல பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77c8479f-7775-4faf-9a72-772169716319/26-6aa22abf110be.webp' /></p><p>
</p><p>புதன்கிழமை உரையின் போது, ​​ட்ரம்ப் இந்தக் கொடுப்பனவுகளை, நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனது ட்ரம்ப் கணக்கு சிறார்கள் முதலீட்டு நிதிகளுடனும், நாடாளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட இராணுவ வீட்டுவசதி துணைநிதியின் மூலம் நிதியளிக்கப்பட்ட, கடந்த ஆண்டு அமெரிக்கப் படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட போர்வீரர் ஈவுத்தொகை ஊக்கத்தொகைகளுடனும் ஒப்பிட்டார். </p><p>புதன்கிழமை உரையின்போது, நவம்பர் மாதத் தேர்தல்களைத் தனது ஜனாதிபதி பதவிக்காலத்தின் மீதான ஒரு பொது வாக்கெடுப்பாகக் கருத வேண்டும் என்றும் வாக்காளர்களை ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். </p><p>மேலும், தாமே மீண்டும் ஒருமுறை தேர்தலில் போட்டியிடுவதாகக் கருதி அனைவரும் வாக்களிக்க முன்வரவேண்டும் என்றும் ட்ரம்ப் கோரிக்கை வைத்துள்ளார்.</p><p>
ஆனால், இடைத் தேர்தல்களில் வெள்ளை மாளிகையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கட்சியை வாக்காளர்கள் நிராகரிக்கும் வரலாற்றுரீதியான போக்கை குடியரசுக் கட்சியினர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. </p><p>ஈரான் விவகாரம் தொடர்பான போருக்கு நிலவும் எதிர்ப்பு மற்றும் பொருளாதாரத்தை ட்ரம்ப் நிர்வாகம் கையாண்ட விதம் குறித்து வாக்காளர்கள் கொண்டுள்ள அதிருப்தி ஆகியவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஜனநாயகக் கட்சியினர் முயன்று வரும் நிலையில், ட்ரம்பின் சரிந்து வரும் செல்வாக்கு விகிதமும் அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாக அமையக்கூடும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T03:54:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுக்கடலில் பற்றியெரிந்த பயணிகள் படகு... ஏராளமான மக்கள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/80-missing-philippine-ferry-fire-1789009802"></link>
            <id>https://news.lankasri.com/article/80-missing-philippine-ferry-fire-1789009802</id>
            <summary type="text">Philippines ferry fire leaves scores of people missing: பிலிப்பைன்ஸில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர்.
மேற்கு பிலிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Philippines ferry fire leaves scores of people missing: பிலிப்பைன்ஸில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர்.
</p><p>மேற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பலவான் தீவுக்கு அருகே புதன்கிழமை இரவு பயணிகள் படகு ஒன்று தீப்பிடித்ததில், ஐந்து பேர் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.</p><h2>எண்ணிக்கை மாறக்கூடும்</h2><p>
</p><p>பலவானின் கொரோன் கடற்பகுதியில் தீ விபத்தில் சிக்கிய எம்வி ஜூன் ஆஸ்டர் படகில் இருந்து நாற்பத்தி மூன்று பேர் மீட்கப்பட்டதாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c96e430b-ba1e-4623-a27a-78fa90531e74/26-6aa21f8cdde90.webp' /></p><p> </p><p>இதனிடையே, கடலோரக் காவல் படையின் செய்தித் தொடர்பாளர் கமோடோர் நோயெமி கயப்யாப் கூறுகையில், அந்தப் படகின் பயணப் பட்டியலில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவித்தார். </p><p>மேலும், பதிவுசெய்யப்பட்ட உயிர் பிழைத்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், 80-க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை; மீட்புப் பணிகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை மாறக்கூடும் என்று கயப்யாப் கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>அந்தப் படகு மணிலாவில் உள்ள பாசெக்கோவிலிருந்து புறப்பட்டு கொரோனை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். இதனிடையே, லுசோனில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒரு குடும்பம் இந்த விபத்தில் சிக்கி இன்னும் காணாமல் போயுள்ளனர். </p><p>7,100 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமான பிலிப்பைன்ஸில் கடல் விபத்துகள் சாதாரணமாக நிகழ்கின்றன. விமானம் மூலம் அணுக முடியாத சில தீவுகளுக்கு இடையே, மக்களையும் சரக்குகளையும் கொண்டு செல்ல தீவுகளுக்கு இடையேயான படகுகள் ஒரு மலிவான வழியாகும். </p><p>ஆனால், கடுமையான வானிலை, பருவமழை மற்றும் புயல்கள் காரணமாக கொந்தளிப்பான சூழல்கள் ஏற்படக்கூடிய அபாயம் எப்போதும் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a754a770-4caf-44cd-91ec-84e3115df8fd/26-6aa21f8d907b8.webp' /></p><p> பிலிப்பைன்ஸ் நாடு ஆண்டுதோறும் சராசரியாக 20 புயல்களால் பாதிக்கப்படுகிறது. மோசமான பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டங்களைச் சீரற்ற முறையில் அமுல்படுத்துதல் ஆகியவையும் கடந்த கால விபத்துகளுக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளன. </p><p>ஆனால் தற்போது, 87 பேர் காணாமல் போயுள்ள நிலையில், இந்தப் படகு விபத்து பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக அமையக்கூடும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T03:07:00+00:00</updated>
        </entry>
    </feed>
