<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-20T10:26:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pressure-area-forming-over-andaman-sea-1789899707"></link>
            <id>https://news.lankasri.com/article/pressure-area-forming-over-andaman-sea-1789899707</id>
            <summary type="text">Pressure area forming over andaman sea-&amp;nbsp;வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pressure area forming over andaman sea-&nbsp;வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
</p><h2>
வானிலை மையம் கூறுகையில்.., </h2><p>

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
</p><p>
அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகிற 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும்.
</p><p>
மேலும், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c60543c-6ff7-4d88-abf9-902d6ffd710a/26-6aafb3fae6132.webp' /></p><p>இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும் நாளையும் இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
</p><p>
சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, மற்றும் நாகை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
</p><p>
தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். </p><p>

சூறாவளி காற்று வீசக்கூடிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-20T10:23:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி விவகாரத்தில் தலையிட்டால்... துருக்கி மற்றும் பாகிஸ்தானுக்கு ஹவுதிகள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-warn-pakistan-turkiye-1789898497"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-warn-pakistan-turkiye-1789898497</id>
            <summary type="text">Houthis warn Pakistan, Turkiye over Saudi intervention: சவுதியில் தலையீடு குறித்து பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு ஹவுதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis warn Pakistan, Turkiye over Saudi intervention: சவுதியில் தலையீடு குறித்து பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு ஹவுதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
சவுதி அரேபியாவுடன் இணைந்து இராணுவ ரீதியாகத் தலையிட வேண்டாம் என பாகிஸ்தானையும் துருக்கியையும் யேமனின் ஹவுதிகள் எச்சரித்துள்ளதுடன், இவ்விரு நாடுகளில் ஏதேனும் ஒன்று மோதலில் படைகளை ஈடுபடுத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.</p><h2>இரும்புக்கரம் கொண்டு</h2><p>
</p><p>பாகிஸ்தான் ஊடகச் செய்திகளின்படி, அன்சார் அல்லாவின் அரசியல் குழு உறுப்பினரும் தமார் (Dhamar) ஆளுநருமான முகமது அல்-புகைதி, ஈராக் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'அனதர் ரீடிங்' (Another Reading)-க்கு அளித்த பேட்டியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2b527b0-58d2-4872-bdea-964da89b8284/26-6aafaf04035d8.webp' /></p><p> </p><p>அல்லாஹ்வின் மீது ஆணையாக, துருக்கியும் பாகிஸ்தானும் இதில் தலையிட்டால், நாங்கள் அவர்களை இரும்புக்கரம் கொண்டு தாக்குவோம் என்று அல்-புகைத்தி கூறியுள்ளார். </p><p>மேலும், யேமனுக்கு எதிரான சவுதியின் ஆக்கிரமிப்பு என்று அவர் விவரித்ததில் அந்த இரு நாடுகளும் இணைந்தால், ஹவுதிகள் அவற்றுக்கு ஒரு பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>ஹவுதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே மீண்டும் தொடங்கியுள்ள சண்டைகள், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு இடையேயான மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மீது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>இந்த மோதலில் ராணுவ ரீதியாக ஈடுபடத் தீர்மானித்தால், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் அரசாங்கங்களை நோக்கியே ஹவுதி அமைப்பின் நிலைப்பாடு அமைந்திருக்கும் என்று அல்-புகைதி கூறினார். </p><p>மேலும், இவ்விரு நாடுகளிலும் ஏமன் மீதான பொதுமக்களின் அனுதாபத்தைக் குறிப்பிட்ட அவர், சண்டையிலிருந்து விலகி இருக்குமாறு இஸ்லாமாபாத் மற்றும் அங்காரா ஆகியவற்றை வலியுறுத்தினார். </p><p>சவுதி அரேபியா ஹவுதிகளின் புதிய தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள சூழலிலும், மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ள பிற உறுப்பு நாடுகளும் இதில் நேரடியாக ஈடுபடக்கூடுமோ என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> இதனிடையே, சவுதி அரேபியாவிற்கு இராணுவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க துருக்கி முன்வரக்கூடும் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஹக்கன் ஃபிடான் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>தொழில்நுட்ப உதவி</h2><p> </p><p>மக்கா கூட்டணியாக, நாங்கள் இது குறித்து பாகிஸ்தானிடம் பேசுவோம்; அத்துடன் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும் வழங்க முடியும் என்றும் ஃபிடான் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfe75d5b-3b66-4cab-a08c-9775e3e7c682/26-6aafaf04a9aee.webp' /></p><p> </p><p>சவுதி அரேபியா மீதான ஹவுதிகளின் தாக்குதல்களை பாகிஸ்தான் கண்டித்துள்ளதுடன், ரியாத் மீதான தனது ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> மக்காவுக்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டது; மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இக்குறித்த விவகாரம் எழுப்பப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-20T09:58:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளால் பதற்றத்தில் சவுதி அரேபியா... வார இறுதியில் வெள்ளை மாளிகைத் திரும்பிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-arrives-back-white-house-1789890524"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-arrives-back-white-house-1789890524</id>
            <summary type="text">Trump arrives back at White House amid tensions with: பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
சவுதி அரேபியாவில் உள்ள முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump arrives back at White House amid tensions with: பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
</p><p>சவுதி அரேபியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஹவுதிகள் பொறுப்பேற்ற நிலையில், டொனால்ட் ட்ரம்ப் விடுமுறையை முன்கூட்டியே முடித்துக்கொண்டுள்ளார்.</p><h2>கேம்ப் டேவிட் ஓய்விடத்தில்</h2><p>
</p><p>ரியாத் விமான நிலையத்தின் மீது கரும் புகை சூழ்ந்து காணப்பட்ட காணொளி வெளியானதை அடுத்து, யேமன் ஹவுதிகள் தங்கள் தலைநகரை பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்க முயன்றதை சவுதி அரேபியா சனிக்கிழமை உறுதி செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c862f5e-e5c2-4c9f-8928-5f8ca65c365c/26-6aaf8fde7fa83.webp' /></p><p>
</p><p>ட்ரம்ப் முதலில் வார இறுதி முழுவதும் கேம்ப் டேவிட் ஓய்விடத்தில் தங்கிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. </p><p>இருப்பினும், சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 7:57 மணிக்கு, ட்ரம்ப் Marine One ஹெலிகொப்டரில் வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார்.</p><p></p><p> </p><p>சவுதி அரேபியாவுக்கு எதிராக, பொதுமக்களுக்கான விமான நிலையங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, விரோத நடவடிக்கைகளில் ஹவுதிகள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் உறுதிப்படுத்தியது. </p><p>மேலும், இந்த இராணுவ மோதல் மிக வேகமாகத் தீவிரமடைய வாய்ப்புள்ளது. மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள், அப்பகுதிக்குச் செல்வது மற்றும் அதன் வழியாகப் பயணம் செய்வது குறித்துத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>சண்டை தீவிரமடைந்த பின்னர் ஹவுதிகள் ரியாத் மீது இலக்கு வைத்தது, மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஹவுதிகளுக்கு எதிராகப் போரிடும் சவுதி தலைமையிலான கூட்டணி, அதிகாலையில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் குறித்த அறிக்கையை மிகத் தாமதமாகவே வெளியிட்டது.</p><h2>தாக்கியதாக ஹவுதிகள்</h2><p> இதனிடையே, ரியாத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், யான்புவில் உள்ள சவுதி எண்ணெய் நிறுவனமான 'அராம்கோ'வின் (Aramco) வசதிகளையும் தாக்கியதாக ஹவுதிகள் முன்னதாக உரிமை கோரியிருந்தனர். </p><p>ஹார்முஸ் நீரிணையை அடுத்து, மற்றொரு முக்கியமான உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதைக்கு அருகில் அதிகரித்து வரும் மோதல், சந்தைகளுக்குப் புதிய நெருக்கடிகளைக் கொண்டுவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T09:05:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடகத்தில் உட்கார்ந்த செவ்வாய்.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-peyarchi-1789894929"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-peyarchi-1789894929</id>
            <summary type="text">நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
</p><p>
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.</p><p>

இந்நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்துள்ளார்.</p><p>

மேலும், குரு ஏற்கனவே இந்த ராசியில் இருப்பதால், செவ்வாயுடன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.</p><p>

அந்தவகையில், கடக ராசிக்கு சென்ற செவ்வாயால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.</p><p></p><p> </p><h2>

மேஷம்</h2><ul><li>சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.
</li><li>புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.
</li><li>பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு கிடைக்கும்.
</li><li>வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.</li><li>
ரியல் எஸ்டேட் துறையில் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4d27eb6-7d7c-4353-8ae4-2956b517eae2/26-6aafa113715ad.webp' /></p><p>
</p><h2>

விருச்சிகம்
</h2><ul><li>அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
</li><li>வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
</li><li>பயணங்கள் மூலம் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
</li><li>புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.</li><li>
பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
</li><li>சொத்து மூலம் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91889780-3b80-4ab8-a306-bab313ffe10d/26-6aafa11424ece.webp' /></p><p>
</p><h2>


தனுசு</h2><ul><li>
 வாழ்வில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.</li><li>
பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.</li><li>
மூதாதையர் சொத்து கைக்கு வந்து சேரும்.</li><li>
முதலீடுகளை மேற்கொள்ளும் முன் ஆவணங்களை நன்கு சரிபார்க்க வேண்டும்.
</li><li>புதிய வழிகளில் இருந்து பணவரவு கிடைக்கும்.
</li><li>இதன் மூலம் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33c051a1-241e-470b-9358-0a1a182641ba/26-6aafa114cd7fd.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T09:03:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[NATO-வின் இராணுவ குழுத் தலைவராக ஜேர்மனியின் பாதுகாப்பு தலைவர் தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nato-picks-german-general-as-military-chief-1789894132"></link>
            <id>https://news.lankasri.com/article/nato-picks-german-general-as-military-chief-1789894132</id>
            <summary type="text">NATO picks German General as military chief: நேட்டோ கூட்டணியின் இராணுவக் குழுவின் தளபதியாக ஜேர்மன் பாதுகாப்பு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜே...</summary>
            <content type="html"><![CDATA[<p>NATO picks German General as military chief: நேட்டோ கூட்டணியின் இராணுவக் குழுவின் தளபதியாக ஜேர்மன் பாதுகாப்பு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
</p><h2>
ஜேர்மன் இராணுவ தளபதி</h2><p>NATO தனது புதிய இராணுவக் குழுத் தலைவராக ஜேர்மனியின் பாதுகாப்பு தலைவரான ஜெனரல் கார்ஸ்டன் புரூயரை (Army General Carsten Breuer) தேர்வு செய்துள்ளது.</p><p>இந்த முடிவு, ஜேர்மனியின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தையும், பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்திருப்பதையும் பிரதிபலிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/948e5fe3-ef34-4ed8-9406-139c2d579727/26-6aaf9df5d5d84.webp' /></p><h2> 2027-ல் பதவியேற்பு</h2><p>NATO உறுப்புநாடுகளின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், கோபன்ஹேகனில் நடைபெற்ற வாக்கெடுப்பில் புரூயரை தேர்வு செய்தனர். </p><p>தற்போது அந்தப் பதவியில் உள்ள இத்தாலியின் அட்மிரல் ஜியூசெப்பே காவோ டிராகோனே (Giuseppe Cavo Dragone) இருக்கிறார். 2027 நடுப்பகுதியில் இவர் பதவியேற்கவுள்ளார்.</p><p>
</p><p></p><h2>ஜேர்மனியின் மாற்றம்</h2><p>உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து, ஜேர்மனி தனது பாதுகாப்பு கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. பல ஆண்டுகளாக குறைவான பாதுகாப்புச் செலவுகளும், எச்சரிக்கையான வெளிநாட்டு கொள்கையும் கொண்டிருந்த ஜேர்மனி, தற்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய பாதுகாப்புச் செலவுகளை மேற்கொள்கிறது.
</p><p>
NATO-வில், இராணுவ சக்தியை ஒருங்கிணைக்கும் Supreme Allied Commander Europe எப்போதும் அமெரிக்காவைச் சேர்ந்தவராக இருப்பார். ஆனால், இராணுவக் குழுத் தலைவர், கூட்டணியின் அரசியல் முடிவுகளுக்கான முக்கிய இராணுவ ஆலோசகராக செயல்படுகிறார்.
</p><p>
இந்த முடிவு, ஜேர்மனியின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியையும், NATO-வில் அதன் முக்கிய பங்கையும் காட்டுகிறது.</p><p>புரூயரின் தலைமையால், கூட்டணியின் இராணுவத் திட்டங்கள் மற்றும் அரசியல் ஆலோசனைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T08:45:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமரி அதப்பத்து ருத்ரதாண்டவம்! பாகிஸ்தான் அணியை தரைமட்டமாக்கி..இறுதிப்போட்டியில் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chamari-athapaththu-smash-83-runs-help-sl-beat-pak-1789891748"></link>
            <id>https://news.lankasri.com/article/chamari-athapaththu-smash-83-runs-help-sl-beat-pak-1789891748</id>
            <summary type="text">Sri Lanka women beat pakistan by 8 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

நிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sri Lanka women beat pakistan by 8 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
</p><p>
நிஸ்ஷினில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.&nbsp;</p><h2>ஆயிஷா ஜாபர்&nbsp;71</h2><p>முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 177 ஓட்டங்கள் குவித்தது. ஆயிஷா ஜாபர் 40 பந்துகளில் 71 ஓட்டங்களும், ஷாவால் ஜூல்பிகர் 54 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c006304-4471-4817-8ab3-8549b20f4de4/26-6aaf94a701d7f.webp' /></p><p></p><p>பின்னர் ஆடிய இலங்கை அணி சமரி அதப்பத்துவின் அதிரடியில், 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>சமரி அதப்பத்து&nbsp;ருத்ரதாண்டவம்</h2><p>
அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்களும், ஹாசினி பெரேரா (Hasini Perera) 26 பந்துகளில் 42 ஓட்டங்களும் விளாசினர். </p><p>இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.&nbsp;22ஆம் திகதி இந்திய அணியை கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இலங்கை எதிர்கொள்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b10a956-d41a-43a4-ba32-a47e8c501005/26-6aaf94a7ac840.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T08:07:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் ரூ.8000 முதலீடு.., எவ்வளவு பணம் கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/post-office-rd-scheme-details-in-tamil-1789889244"></link>
            <id>https://news.lankasri.com/article/post-office-rd-scheme-details-in-tamil-1789889244</id>
            <summary type="text">எதிர்காலத்திற்காகச் சேமிக்க விரும்புபவர்கள் போஸ்ட் ஆபிஸின் தொடர் வைப்பு நிதித் திட்டத்தில் (RD) முதலீடு செய்யலாம். 

அரசு சார்ந்த இத்திட்டத்தில் சந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்திற்காகச் சேமிக்க விரும்புபவர்கள் போஸ்ட் ஆபிஸின் தொடர் வைப்பு நிதித் திட்டத்தில் (RD) முதலீடு செய்யலாம். </p><p>

அரசு சார்ந்த இத்திட்டத்தில் சந்தை அபாயங்கள் இல்லாமல், நிர்ணயிக்கப்பட்ட வட்டி மூலம் வருமானம் பெறலாம்.
</p><p>
போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு நிதித் திட்டம் என்பது மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கும் அரசு திட்டமாகும்.</p><p> 

ஒரே நேரத்தில் அதிக தொகையை முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு, மாதாந்திர சேமிப்பு முறையில் முதலீடு செய்யலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83aa4e53-a20f-44b7-b3b6-9773a83ecef7/26-6aaf8ade993c4.webp' /></p><p>மனைவியின் பெயரில் மாதம் ரூ.8,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ.5.70 லட்சம் வரை பணத்தை உருவாக்கலாம்.</p><p>

இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் அல்லது 60 மாதங்கள் ஆகும். இதில் மாதம் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம்.</p><p> 

வட்டி காலாண்டு அடிப்படையில் கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது. வட்டி விகிதத்தை மத்திய அரசு நிர்ணயிக்கிறது.</p><p>RD கணக்கைத் தொடங்கி மாதம் ரூ.8,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.4.80 லட்சம் சேமிக்கப்படும். </p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4d0be0b-d6cd-49bc-a80b-4acf1d8e1ecc/26-6aaf8adf4ed03.webp' />
</p><p>
வட்டியுடன் சேர்த்து முதிர்வின்போது சுமார் ரூ.5.70 லட்சம் கிடைக்கும். இதன் மூலம் சுமார் ரூ.90,000 வரை வட்டி வருமானம் கிடைக்கும்.</p><p>
</p><p>இந்தத் திட்டத்தில் வட்டி காலாண்டு அடிப்படையில் கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது.&nbsp; &nbsp;முதலீடு செய்த அசல் தொகையுடன், ஏற்கெனவே கிடைத்த வட்டிக்கும் வட்டி கணக்கிடப்படுகிறது.</p><p>

மேலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் பெறும் வசதியும் உள்ளது.</p><p> 

அவசரத் தேவைகளில் முதிர்வுக்கு முன்பாகக் கணக்கை முடித்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T07:28:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sivaji-daughter-shanthi-narayanasamy-passed-away-1789884036"></link>
            <id>https://news.lankasri.com/article/sivaji-daughter-shanthi-narayanasamy-passed-away-1789884036</id>
            <summary type="text">Actor sivaji daughter shanthi narayanasamy passed away-&amp;nbsp;நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி உடல்நலக்குறைவால் இன்று சென்னைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Actor sivaji daughter shanthi narayanasamy passed away-&nbsp;நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.</p><h2>உடல்நலக்குறைவால் காலமானார்</h2><p>சிவாஜி கணேசன் - கமலாம்பாள் தம்பதிக்கு ராம்குமார், பிரபு என்ற இரு மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற இரு மகள்களும் உள்ளனர். </p><p>

இவர்களில் மூத்தவர் சாந்தி, சிவாஜி கணேசன் தனது மகள் மீது கொண்ட பாசத்தால், சென்னை அண்ணா சாலையில் உள்ள தனது திரையரங்கிற்கு சாந்தி திரையரங்கம் என பெயர் வைத்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f3ddb99-1766-47f6-9226-fcf0fd056288/26-6aaf7686ea851.webp' /></p><p>சாந்தியின் திருமணம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.</p><p> 

இதில் காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5172a7a8-b7e0-46a3-8c08-c48e06c404ca/26-6aaf768640786.webp' /></p><p>இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த சாந்தி நாராயணசாமி இன்று காலமானார்.</p><p> 

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-20T06:03:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இழப்பீடு வேண்டும்... பிரித்தானியா மீது வழக்குத் தொடர கரீபியன் நாடுகள் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/caribbean-nations-plan-to-sue-1789884030"></link>
            <id>https://news.lankasri.com/article/caribbean-nations-plan-to-sue-1789884030</id>
            <summary type="text">Caribbean nations plan to sue UK for slavery reparations: அடிமைத்தனத்திற்கான இழப்பீடு கோரி பிரித்தானியா மீது வழக்குத் தொடர கரீபியன் நாடுகள் திட்டமிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Caribbean nations plan to sue UK for slavery reparations: அடிமைத்தனத்திற்கான இழப்பீடு கோரி பிரித்தானியா மீது வழக்குத் தொடர கரீபியன் நாடுகள் திட்டமிட்டுள்ளன.
</p><p>கரீபியன் நாடுகளிடமிருந்து அடிமைத்தன இழப்பீடு தொடர்பான ஒரு சாத்தியமான வழக்கை பிரித்தானியா எதிர்கொள்ள இருக்கிறது.</p><h2>இழப்பீடு கோரும்</h2><p>
</p><p>நவம்பரில் ஆன்டிகுவாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்த விவகாரம் எழுப்பப்படவுள்ளது; இதில் மன்னர் பங்கேற்க உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9daece14-bfbb-42ac-8e21-17a8a71e5db1/26-6aaf76806fc33.webp' /></p><p> வரவிருக்கும் 28-வது காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில், இழப்பீடு கோரும் விவகாரத்தை முன்னெடுக்கத் தயாராகி வருவதாக கரீபியன் சமூகக் குழு கடந்த வாரம் உறுதிப்படுத்தியது. </p><p>இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கொடூரமான குற்றமாகக் குறிப்பிடப்பட்ட அடிமை வணிகத்திற்காக, உறுப்பு நாடுகள் நீண்ட காலமாக டிரில்லியன் கணக்கான இழப்பீட்டைக் கோரி வருகின்றன. </p><p>அமெரிக்கா அடிமை முறையை ஒழிப்பதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பே, 1834-இல் பிரித்தானியா தனது பேரரசின் பெரும்பகுதிகளில் அம்முறையை ஒழித்தது. இருப்பினும், பிரித்தானியா நீண்ட காலமாக இழப்பீட்டுக் கோரிக்கைகளை நிராகரித்து வருகிறது.</p><p></p><p> </p><p>இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில், அட்லாண்டிக் கடந்த அடிமை வர்த்தகம் வெறுக்கத்தக்கது. மக்களின் உணர்வுகளின் வலிமையை நாங்கள் முழுமையாக உணர்கிறோம் என்று கூறியுள்ளது. </p><p>மேலும், இங்கிலாந்தின் நிலைப்பாடு தெளிவானது, நாங்கள் இழப்பீடு வழங்குவதில்லை, இனிமேலும் வழங்கப்போவதில்லை. மட்டுமின்றி, கடந்த காலத்தின் மரபுகள் குறித்து நமது அனைத்துக் கூட்டாளிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதில் பிரித்தானியா உறுதியுடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். </p><p>ஆனால், பார்படாஸ் பிரதமர் மியா மோட்லி, இழப்பீடு பெறுவது குறித்து விவாதிக்க இந்த வாரம் ஒரு மாநாட்டை நடத்துகிறார்; மேலும், சர்வதேச நீதிமன்றங்கள் வாயிலாகச் சட்ட நடவடிக்கை எடுப்பதை ஒரு வழியாகவும் அவர் முன்மொழிந்துள்ளார்.</p><h2>நீதி கிடைக்க வேண்டும்</h2><p> பல தலைமுறைகளாக அடிமை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகப் பிரித்தானிய அரசாங்கம் எவ்வாறு கடன் சுமையை ஏற்றுக் கொண்டதோ, அதேபோல இந்த இழப்பீட்டுத் தொகையையும் பல தலைமுறைகளாகச் செலுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0e7eeca-8428-4046-813d-681856b1db62/26-6aaf768122ddd.webp' /></p><p> </p><p>யாரையும் திவாலாக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை, ஆனால் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார். அனைத்து வகையான இனப் பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையில் பிரித்தானியா ஒரு தரப்பினராக உள்ளது. மேலும், இனப் பாகுபாட்டின் எந்தவொரு நிகழ்வுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அந்த ஒப்பந்தம் கூறுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-20T05:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே வாரத்தில் முகப்பொலிவை அதிகரிக்க அரிசி மாவு.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rice-flour-to-get-glowing-and-flawless-skin-1789880223"></link>
            <id>https://news.lankasri.com/article/rice-flour-to-get-glowing-and-flawless-skin-1789880223</id>
            <summary type="text">பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களின் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.

ஆனால் அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களின் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
</p><p>
ஆனால் அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
</p><p>
அந்தவகையில், இயற்கையான முறையில் முகத்தை பொலிவாக்க அரிசி மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbd24121-308c-4561-b716-aedaabfccad6/26-6aaf68c2229f0.webp' /></p><h3>1. தேவையான பொருட்கள்</h3><ul><li> 

அரிசி மாவு- 1 ஸ்பூன்</li><li> 
 ஓட்ஸ் பொடி- 1 ஸ்பூன் </li><li>
பால்- 1 ஸ்பூன்</li><li> 
தேன்- 1 ஸ்பூன் </li></ul><h3>

எப்படி பயன்படுத்துவது?
</h3><p>
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, ஓட்ஸ் பொடி, பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.</p><p> </p><p></p><p>இந்த கலவையை முகத்தில் தடவி 8-10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.</p><p> 

பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
</p><h3>
2. தேவையான பொருட்கள் </h3><ul><li>

அரிசி மாவு- 1 ஸ்பூன் </li><li>
சாக்லேட் பவுடர்- 1 ஸ்பூன்</li><li> 
பால்- 2 ஸ்பூன் </li></ul><h3>

எப்படி பயன்படுத்துவது?
</h3><p>
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, சாக்லேட் பவுடர் மற்றும் குளிர்ச்சியான பால் சேர்த்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0454f6d1-fa1d-425a-a18b-093a1768f797/26-6aaf6859f0ee8.webp' /></p><p> 

இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.</p><p> 

இந்த பேஸ்பேக்கை தினமும் பயன்படுத்தலாம்.
</p><h3>
3. தேவையான பொருட்கள்</h3><ul><li> 

அரிசி மாவு- 1 ஸ்பூன் </li><li>
ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன் </li></ul><h3>

எப்படி பயன்படுத்துவது?</h3><p>

ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.</p><p> </p><p></p><p>இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.</p><p> 

பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T05:02:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலில் வாக்களிக்க விரும்பும் வெளிநாட்டு வாழ் இஸ்ரேலியர்கள்... தடுத்து நிறுத்த போராடும் நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-trying-to-stop-them-1789879308"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-trying-to-stop-them-1789879308</id>
            <summary type="text">Netanyahu is trying to stop them: நெதன்யாகு அவர்களைத் தடுக்க முயற்சிக்கிறார்.
இஸ்ரேல் தேர்தலைச் சந்திக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வெளிநாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Netanyahu is trying to stop them: நெதன்யாகு அவர்களைத் தடுக்க முயற்சிக்கிறார்.
</p><p>இஸ்ரேல் தேர்தலைச் சந்திக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வெளிநாட்டு வாழ் இஸ்ரேலியர்கள் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.</p><h2>நேர்மைத்தன்மை</h2><p>
வெளிநாடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் வாக்களிப்பதற்காகத் தாயகம் திரும்பத் தயாராகி வரும் நிலையில், அவர்கள் வாக்களிக்க முடியாத வகையில் முடக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e5db0fc-298e-4883-b12e-0eedc98c66e8/26-6aaf640e11055.webp' /></p><p>
</p><p>வெளிநாட்டில் வசிக்கும் இஸ்ரேலியர்கள் தேர்தல் நாளன்று தாயகம் திரும்ப உதவும் ஒரு மக்கள் இயக்கமான Fly &amp; Vote திட்டத்தை முடக்குமாறு இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழுவிடம் லிகுட் கட்சி புதன்கிழமை அன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. </p><p>இது சட்டவிரோதமான மற்றும் வெளிநாட்டு நிதியுதவி பெறும் ஒரு நடவடிக்கை என்றும், இது தேர்தலின் நேர்மைத்தன்மைக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் லிகுட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. </p><p>மிகக் குறைந்த வாக்கு வித்தியாசங்களே பெரும்பாலும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு நாட்டில், நாட்டின் அடுத்த தலைவரைத் தீர்மானிப்பதில் இந்த வாக்குகள் முக்கியப் பங்காற்றக்கூடும்.</p><p></p><p>
</p><p>வெளிநாடுகளில் உள்ள குடிமக்கள் தபால் மூலம் வாக்களிக்கக்கூடிய பெரும்பாலான மேற்கத்திய ஜனநாயக நாடுகளைப் போலல்லாமல், இஸ்ரேல் தபால் வாக்குப்பதிவை அனுமதிப்பதில்லை; தூதர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் மட்டுமே நாட்டிற்கு வெளியே இருந்து வாக்களிக்க முடியும்.</p><p> வெளிநாடுகளில் உள்ள சாதாரண குடிமக்கள் தேர்தலில் வாக்களிக்க தாயகம் திரும்ப வேண்டும் அல்லது தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும்.</p><p> அக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்பானது, நெதன்யாகுவின் வலதுசாரி மற்றும் தீவிர மதப்பற்றுள்ள (ultra-Orthodox) கூட்டணி ஆட்சியின் கீழ் அமைதியற்ற சூழலில் கழிந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசியத் தேர்தலாக அமையும்; </p><p>இக்காலகட்டத்தில், நீதித்துறை சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக தாராளவாதக் கொள்கை கொண்ட இஸ்ரேலியர்கள் நடத்திய பெரும் போராட்டங்களும், 2023 அக்டோபர் 7 அன்று நடத்தப்பட்ட தாக்குதலும், அதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு முனைகளில் நடைபெற்ற போரும் இடம்பெற்றன.</p><h2>எதிர்க்கட்சிகளுக்கு உதவக்கூடும்</h2><p> சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி, நெதன்யாகுவின் கூட்டணி மற்றும் அவரது ஆழமாகப் பிளவுபட்ட எதிர்ப்பு ஆகிய இரண்டும் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 61-ஆசனங்களில் பெரும்பான்மையை இழக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8c0b511-038b-458c-b405-f1277e5e05e4/26-6aaf640ebccca.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், நெருக்கமான போட்டியில், இஸ்ரேலிய வெளிநாட்டவர்களின் வருகை எதிர்க்கட்சிகளுக்கு உதவக்கூடும் என்று நெதன்யாகுவின் லிகுட் கட்சி அஞ்சுகிறது. </p><p>Fly &amp; Vote திட்டத்தை முன்னெடுத்துள்ள அமைப்பு தெரிவிக்கையில், 35,000-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பதிவு செய்துள்ளதாகவும்; மேலும், 50,000-க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பதற்காகத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக உள்நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. </p><p>ஆனால், அந்தக் குழு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடையது என்று லிகுட் கட்சி கூறுகிறது; அக்குழுவும் அக்கட்சியும் அத்தகைய தொடர்பு எதையும் மறுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9975172a-e024-449c-8996-9b3a2dabb3b4/26-6aaf640f6df28.webp' /></p><p>
</p><p>வெளிநாட்டு வாழ் இஸ்ரேலியர்கள் தங்கள் பயணச்சீட்டுகளுக்குத் தாங்களே பணம் செலுத்தினாலும், முன்னுரிமை விமானப் பயண அணுகல் மற்றும் குழு தள்ளுபடி விகிதங்கள் ஆகியவை இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் தேர்தல் இலஞ்சத்திற்கு ஒப்பான, தடைசெய்யப்பட்ட சலுகைகள் என லிகுட் கட்சி வாதிடுகிறது.</p><p> இதனிடையே, லிகுட் கட்சியின் எதிர்ப்பை அடுத்து, தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற வெளிநாட்டு வாழ் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. </p><p>ஆனால், தேர்தல் நாட்களில் விமானப் போக்குவரத்தை முடக்கும் திட்டத்தையும் நெதன்யாகு முன்னெடுக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
</p><p>இருப்பினும், தீவிர பழமைவாத யூத வாக்காளர்கள் பாரம்பரியமாக இதுபோன்ற எதிர்ப்புகள் இன்றி, பெரும்பாலும் நியூயார்க்கிலிருந்து பெருந்திரளாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வாக்களித்து வந்துள்ளனர்; மேலும், வெளிநாடுகளிலிருந்து வாக்களிப்பதை சாத்தியமாக்கும் சட்டத்தை லிகுட் கட்சி முன்னரே முன்மொழிந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T04:38:28+00:00</updated>
        </entry>
    </feed>
