<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-23T05:35:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் பானம்.., எப்படி தயாரிப்பது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/herbal-tea-for-control-diabetes-permanently-1784783970"></link>
            <id>https://news.lankasri.com/article/herbal-tea-for-control-diabetes-permanently-1784783970</id>
            <summary type="text">இரத்த சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும் ஒரு நிலை ஆகும். 

இது இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் அதனை பயன்படுத்தாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்த சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும் ஒரு நிலை ஆகும். </p><p>

இது இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் அதனை பயன்படுத்தாதபோது ஏற்படுகிறது. </p><p>

உணவு கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.</p><p>
</p><p></p><p>அதன்படி, இரும்புச்சத்து நிறைந்த முருங்கை இலைகள் சர்க்கரையை நிரந்தரமாகக் கட்டுக்குள் வைப்பதில் உதவியாக இருக்கும்.</p><p>

அந்தவகையில், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் முருங்கை இலை டீ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.&nbsp;</p><h2>தேவையான பொருட்கள்
</h2><ul><li>
முருங்கை இலை- ½ கைப்பிடி</li><li>
தண்ணீர்- 2 கப்
</li><li>இஞ்சி - 1 சிறிய துண்டு
</li><li>தேன்- 1 ஸ்பூன்
</li></ul><h2>
எப்படி தயாரிப்பது?
</h2><p>
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் இஞ்சியை துருவி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.</p><p>

கொதித்து வரும் வேலையில் அதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை இலைகளை சேர்த்து கொதிக்க விடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0a55e3e-7941-412d-a2b1-b427edbdf1eb/26-6a61a52d946fe.webp' /></p><p>

கொதிக்கின்ற தண்ணீர் பாதி அளவிற்கு சுண்டும் வரை கொதிக்க விடவும்.
</p><p>
பின் இதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
</p><p>
இந்த பணத்தை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T05:23:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் வழக்கு: முக்கிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/female-friend-charged-kills-of-brit-girl-in-france-1784782848"></link>
            <id>https://news.lankasri.com/article/female-friend-charged-kills-of-brit-girl-in-france-1784782848</id>
            <summary type="text">பிரான்சில் வாழ்ந்துவந்த பிரித்தானியப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் வாழ்ந்துவந்த பிரித்தானியப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர முடிவு</h3><p>

2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, பிரான்சிலுள்ள Tremolat என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த கேரன் கார்ட்டர் (Karen Carter, 65) என்னும் பிரித்தானியப் பெண், தனது காரின் அருகே படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/920b6209-709a-43a7-bfe2-54f155fd4d65/26-6a61a0017c6a8.webp' /></p><p>
அவர், மார்பு, கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் கூர்மையான ஒரு ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
</p><h3>
ஒரு வேடிக்கையான முக்கோணக் காதல்
</h3><p>
இதற்கிடையில், கேரனுடைய கொலைக்குக் காரணம், அவர் முக்கோணக் காதல் ஒன்றில் ஈடுபட்டிருந்ததே என கூறப்பட்டது.</p><p>

கேரன், திருமணமானவர். அவரது கணவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவருகிறார்.
</p><p>
இந்நிலையில், கேரன் பிரான்சில் வாழும் ஜீன் (Jean-François Guerrier, 75) என்பவருடன் காதலில் விழுந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dee21cae-c293-4684-aeb3-efba3dcc93b8/26-6a61a002314b5.webp' /></p><p>விடயம் என்னவென்றால், ஏற்கனவே மேரீ (Marie-Laure Autefort, 70) என்னும் பெண் ஜீனை கண்மூடித்தனமாக காதலித்துவந்துள்ளார். ஜீனோ அவரை விட கேரன் மீதுதான் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளார்.
</p><p>
ஆக, பொறாமையால் மேரீ கேரனைக் கொலை செய்துவிட்டாரா என்பதை அறிவதற்காக அவரை காவலில் எடுத்து 40 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தினார்கள் பொலிசார்.&nbsp;&nbsp;</p><p></p><p>

அதே நேரத்தில், மற்றொரு 70 வயது பெண்ணும் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அவரும் கேரன் வீட்டின் அருகில் வாழும் அவரது தோழிகளில் ஒருவர். ஆனால், அவரை பொலிசார் அப்போது விடுவித்துவிட்டார்கள்.
</p><h3>
வழக்கில் முக்கிய திருப்பம்</h3><p>

இந்நிலையில், 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அதே 70 வயது பெண்ணை, தற்போது மீண்டும் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.</p><p>

கேரனை திட்டமிட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
</p><p>
வேடிக்கை என்னவென்றால், கேரன் காதலித்த ஜீனை, இந்தப் பெண்ணும் காதலித்ததாக கருதப்படுகிறது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T05:07:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகக்கடுமையான வெப்பம்... தீவிர வறட்சி தாக்கும் நிலையில் ஐரோப்பா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/extreme-drought-hits-europe-1784783024"></link>
            <id>https://news.lankasri.com/article/extreme-drought-hits-europe-1784783024</id>
            <summary type="text">பருவநிலை நெருக்கடியால் தீவிரமடைந்த கடும் வெப்பம், கோடைக்காலத்தில் ஐரோப்பாவை வறண்டு போகச் செய்வதோடு, கண்டத்தைப் பாதிக்கும் வறட்சியைத் தீவிரப்படுத்துவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருவநிலை நெருக்கடியால் தீவிரமடைந்த கடும் வெப்பம், கோடைக்காலத்தில் ஐரோப்பாவை வறண்டு போகச் செய்வதோடு, கண்டத்தைப் பாதிக்கும் வறட்சியைத் தீவிரப்படுத்துவதாக ஒரு அறிவியல் ஆய்வு கண்டறிந்துள்ளது.</p><h2>வறட்சி தீவிரமானதாக</h2><p>
</p><p>சாதனை அளவிலான வெப்ப அலைகளால், வெப்பமான வளிமண்டலம் ஆறுகள், ஏரிகள், மண் மற்றும் தாவரங்களிலிருந்து நீரைத் தீவிரமாக ஆவியாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af9fda4c-4e26-400f-8c2b-8200a9afd92e/26-6a61a1f742091.webp' /></p><p> </p><p>உலக வெப்பமயமாதலால் மேற்கு ஐரோப்பாவில் இத்தகைய சூழல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 80 மடங்கும், கிழக்கு ஐரோப்பாவில் 40 மடங்கும் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்தது. </p><p>மேற்குப் பகுதியில் நிலவிய மண் வறட்சி நிலைக்கான வாய்ப்பு, அப்பகுதியில் புதைபடிவ எரிபொருட்களால் ஏற்பட்ட மாசுபாட்டினால் ஐந்து மடங்கும், கிழக்குப் பகுதியில் 11 மடங்கும் அதிகரித்துள்ளது. </p><p>வறட்சி பொதுவாகக் குறைந்த மழைப்பொழிவோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது; ஆனால், மேற்கு ஐரோப்பாவில் அண்மையில் கடந்து சென்ற குளிர்காலம் அதிக மழையைக் கொண்டதாக இருந்தது. </p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், மேற்கு ஐரோப்பாவில் தற்போது நிலவும் வறட்சி தீவிரமானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது; ஆனால் பருவநிலை நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்தில் இது மிதமானதாகவே இருந்திருக்கும்.</p><p></p><p> </p><p>கோடைக்காலத்தின் தொடக்கமான ஜூன் மாத இறுதி வரை வறட்சி குறித்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது; ஆனால், அது தற்போதே பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. </p><p>பல நாடுகள் நீர் பயன்பாடு குறித்த அவசரக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன; தற்போது தெற்கு இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் கொடிய காட்டுத்தீ பரவித் தாக்கியுள்ள நிலையில், வரலாற்றிலேயே மிக வறண்ட நிலப்பகுதிகளை எதிர்கொள்ளும் சூழலில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd41bcb-c029-4a65-b805-d6c2d4faf8a2/26-6a61a1f8a36ec.webp' /></p><p>
</p><p>ஐரோப்பா முழுவதும் சுமார் 9 மில்லியன் டன் தானியங்களின் இழப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இதில் பிரான்சில் கடந்த 50 ஆண்டுகளிலேயே மிக மோசமான சோள விளைச்சல் இருக்கும் என்றும், ருமேனிய விவசாயிகள் 10 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பயிர்களை இழக்க நேரிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.</p><h2>விலைகளை உயர்த்தக்கூடும்</h2><p> </p><p>ஐரோப்பா முழுவதும் ஆறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், தூய்மையான நீர்மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், சரக்குக் கப்பல்களின் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>நெதர்லாந்தின் லோபித் (Lobith) பகுதியில் ரைன் ஆற்றின் நீர்மட்டம், 1976-ஆம் ஆண்டின் வெப்பமான கோடைக்காலத்தில் பதிவான மிகக்குறைந்த அளவை விடவும் தற்போது குறைவாக உள்ளது.</p><p>
இந்த நெருக்கடி உணவு மற்றும் எரிசக்தி விலைகளை உயர்த்தக்கூடும் என்றும், இதனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a5e4dc-f1b4-4a6e-9b69-b369fcdea914/26-6a61a1f7f1832.webp' /></p><p> </p><p>2022-இல் ஏற்பட்ட வறட்சியை விட, 2026-ஆம் ஆண்டின் வறட்சி இரண்டு மாதங்கள் முன்னதாகவே வந்துவிட்டது என Dr Dominik Schumacher தெரிவித்துள்ளார். கணிக்கப்பட்டபடி, உலகளாவிய உமிழ்வுகள் வெப்பநிலையை 2.8 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தினால், இந்தத் தீவிர ஆவியாதல் நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இரட்டிப்பாகலாம் என்கிறார் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் மரியம் ஜக்காரியா. </p><p>உமிழ்வைக் குறைக்க விரைவான மற்றும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், சுட்டெரிக்கும் வெப்பமும் வறட்சியும் கொண்ட கோடைக்காலங்கள் மீண்டும் மீண்டும் நிகழும் ஒரு எதிர்காலத்தை நோக்கி ஐரோப்பா தள்ளப்படுகிறது என்றும் அவர் எச்சரிக்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T05:02:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய அமெரிக்கா-சவுதி அரேபியா அணுசக்தி ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-saudi-deal-causing-concern-1784780039"></link>
            <id>https://news.lankasri.com/article/us-saudi-deal-causing-concern-1784780039</id>
            <summary type="text">அமெரிக்கத் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சவுதி அரேபியாவில் சிவில் அணுசக்தித் திட்டத்தை நிறுவுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் ஒன்றை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கத் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சவுதி அரேபியாவில் சிவில் அணுசக்தித் திட்டத்தை நிறுவுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் ஒன்றை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.</p><h2>விளைவுகளை ஏற்படுத்தும்</h2><p>
</p><p>குறித்த ஒப்பந்தமானது மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவின் அதிகார மையங்கள் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ள ஒரு நகர்வாகவே பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/005741cc-3f87-4f19-b8ac-31cb1d1f6a99/26-6a61961f2ea0a.webp' /></p><p>
</p><p>ஒப்பந்தத்தின் பெரும்பகுதி இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் சவுதி அரேபியா உள்நாட்டிலேயே யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனைக் கொண்டிருக்குமா என்பதும், அது அணு ஆயுதப் பெருக்கத்திற்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் குறித்த கவலைகளே நிலவுகின்றன. </p><p>அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவின் எரிசக்தித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே இந்த 30 ஆண்டு கால ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பொருளாதாரத் திட்டத்தின் கீழ், சவுதி அரேபியா சில மின்சார உற்பத்திக்கு அணுசக்தியைப் பயன்படுத்தவும், அதன் மூலம் ஏற்றுமதிக்கான எண்ணெய் விநியோகத்தை அதிகரித்து, எண்ணெய் விற்பனையை உயர்த்தவும் இலக்கு கொண்டுள்ளது. </p><p>இந்த ஒப்பந்தம் அந்நாட்டின் அணுசக்தி உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அமெரிக்க நிறுவனங்களை முக்கியப் பங்காற்றச் செய்வதோடு, சீனா மற்றும் ரஷ்யா போன்ற போட்டியாளர்கள் அங்கு காலூன்றுவதையும் தடுக்கும்.</p><p></p><p> </p><p>இந்த ஒப்பந்தம் பல பில்லியன் டொலர் மதிப்புடையதாகக் கருதப்படுகிறது; மேலும், இது பைடன் நிர்வாகத்தின் காலத்தில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின் தொடர்ச்சியாகும். </p><p>இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தை அமைப்பதற்கு வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது; எனினும், அத்தகைய நிலையம் அவசியமானது என்று அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இணைந்து மேற்கொள்ளும் ஆய்வு முடிவு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். </p><p>மட்டுமின்றி, அணுசக்தித் துறையைக் கொண்ட பல நாடுகள் யுரேனியத்தை உள்நாட்டிலேயே செறிவூட்டுவதில்லை; அதற்குப் பதிலாக, அணு உலைகளுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதையே அவை சார்ந்திருக்கின்றன.</p><h2>அணு ஆயுதத்தை உருவாக்கும்</h2><p> </p><p>ஆனால், இத்தகைய ஒப்பந்தம் சவுதி அரேபியாவை அணு ஆயுதத்தை உருவாக்கும் பாதையில் இட்டுச் செல்லக்கூடும் என்று அணு ஆயுதப் பரவல் தடுப்பு அமைப்புகள் பல ஆண்டுகளாக எச்சரித்து வந்துள்ளன. </p><p>மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலிடம் மட்டும் அணு ஆயுதங்கள் இருக்கும் நிலையில், தனது பிராந்தியப் போட்டியாளரான ஈரான் அணு ஆயுதத்தைப் பெற்றால், தானும் அணு ஆயுதத்தைப் பெற வேண்டியிருக்கும் என்று சவுதி முன்பு கூறியுள்ளது. </p><p>மேலும், இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதைக் கண்டுகொள்ளாத அமெரிக்கா, ஈரான் அணு ஆயுதங்களை அடைவதையோ அல்லது ஆயுதத் தரத்திற்குத் தேவையான அளவிற்கு யுரேனியத்தை செறிவூட்டுவதையோ தடுப்பதற்காகவே தற்போது ஒரு போரில் ஈடுபட்டு வருவதாக விளக்கமளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b9cbed-b61a-472a-856a-55fca5c6d0e1/26-6a61961e6fee4.webp' /></p><p> இந்த நிலையில், அணு ஆயுதப் பரவலுக்கான அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு ஒப்பந்தத்தையும் உலகின் எந்தவொரு நாட்டுடனும் அமெரிக்கா மேற்கொள்ளப்போவதில்லை என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ சவுதி ஒப்பந்தம் குறித்த கவலைகளை நிராகரித்துள்ளார்.&nbsp;</p><p>ஆனால், முந்தைய அணுசக்தி ஒப்பந்தங்களில் இருந்த கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இல்லை என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். </p><p>அமெரிக்கா ஐக்கிய அரபு அமீரகத்துடன் இதேபோன்ற ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டபோது, ​​அணுசக்தியை விரும்பும் நாடுகளுக்கான தங்கத் தரநிலை என்று அறியப்பட்ட ஒரு நடவடிக்கையாக, ஐக்கிய அரபு அமீரகம் செறிவூட்டலை நாடவோ அல்லது பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளைப் பதப்படுத்தவோ கூடாது என்று ஒப்புக்கொண்டது. சவுதி-அமெரிக்க ஒப்பந்தத்தில் இந்தத் தங்கத் தரநிலை இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T04:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களுக்கு மறுக்கப்பட்டது... எவராலும்: மத்திய கிழக்கு, அமெரிக்காவிற்கு ஈரானின் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/big-warning-to-us-middle-east-1784776786"></link>
            <id>https://news.lankasri.com/article/big-warning-to-us-middle-east-1784776786</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் சூழலை, போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப ஈரான் அனுமதிக்காது என்று அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமைப் பேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் சூழலை, போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப ஈரான் அனுமதிக்காது என்று அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.</p><h2>காலிபாஃப் எச்சரிக்கை</h2><p>
</p><p>ஹார்முஸ் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் இல்லாததில்தான் அந்த நீரிணையின் பாதுகாப்பு அடங்கியுள்ளது என்றும் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13847309-194b-448f-b0e0-35cb76023210/26-6a618ad6daa1e.webp' /></p><p> மேலும், ஈரான் தனது கச்சா எண்ணெயை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாவிட்டால், எந்தவொரு வளைகுடா நாடும் தனது எண்ணெயை விற்பனை செய்ய ஈரான் அனுமதிக்காது என்றும் காலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த மோதல் தற்போது முழு வெற்றி அல்லது முழு தோல்வி என்ற நிலையை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். </p><p>
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலின் போதெல்லாம், அமெரிக்கப் படைகள் அந்த நாட்டின் ஒரு பாலம் அல்லது மின் நிலையத்தை அழித்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே காலிபாஃப் பதிலளித்துள்ளார்.</p><p></p><p> </p><p>இரு தரப்பினரும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளைத் தொடர்ந்து குறிவைத்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராகத் தொடர்ந்து 12-வது இரவாகத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. </p><p>இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்டவும், சர்வதேச கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்கவும் அமெரிக்கா முயன்று வரும் நிலையில், </p><p>இப்பிராந்தியக் கடல் பகுதிகளில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களான மாலுமிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb5c1db-94d9-4b14-a018-2451d1ef72c5/26-6a618ad7b86c4.webp' /></p><h2>கண்ணுக்குக் கண்</h2><p> தூதுக்குழு முன்னெடுக்கும் முயற்சிகளில் பகிரங்கமாக முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையிலும், உலகளாவிய எரிசக்திக்கு மிக முக்கியமானதும் பெருமளவில் மூடப்பட்டிருப்பதுமான ஹார்முஸ் நீரிணை குறித்த சர்ச்சையில் இரு தரப்பும் தங்கள் பிடிவாதத்தில் உறுதியாக இருக்கும் நிலையிலும், அமெரிக்காவின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. </p><p>இஸ்ரேலால் தூண்டப்பட்டு, பொதுவாக அமெரிக்க மக்களாலும் நிராகரிக்கப்பட்ட இந்தப்போர், உலகளாவிய பொருளாதாரத்தில் மேலும் சீர்குலைவை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளதுடன், இந்த இலையுதிர் காலத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக எரிபொருள் விலையையும் உயர்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa96c7db-dd18-4498-bbc0-699fed158e88/26-6a618ad91678c.webp' /></p><p> </p><p>இதனிடையே, ஈரான் கண்ணுக்குக் கண் என்ற தற்காப்புக் கோட்பாடுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார். </p><p>அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வறட்சியால் வாடும் அண்டை வளைகுடா நாடுகளுக்குக் குடிநீர் வழங்கும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் ஈரான் குறிவைத்துள்ளது. </p><p>ஒரு நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்பு இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால் ஒழிய, இத்தகைய தாக்குதல்களை சர்வதேசச் சட்டம் பொதுவாகத் தடை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T03:19:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் புதிய Kimi AI- இந்தியாவிற்கு புதிய சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chinas-kimi-ai-model-challenges-indias-strategy-1784768654"></link>
            <id>https://news.lankasri.com/article/chinas-kimi-ai-model-challenges-indias-strategy-1784768654</id>
            <summary type="text">சீனாவின் Moonshot நிறுவனம் உருவாக்கிய Kimi K3 (Kimi 3.0) என்ற புதிய AI மாடல், உலக AI போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை அமெரிக்காவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் Moonshot நிறுவனம் உருவாக்கிய Kimi K3 (Kimi 3.0) என்ற புதிய AI மாடல், உலக AI போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதுவரை அமெரிக்காவின் Anthropic Mythos AI முன்னிலை வகித்த நிலையில், Kimi K3 அறிமுகமானதால் சீனாவும் அதே அளவிலான திறனை பெற்றுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a258e8-85b1-4028-acae-9e992460b100/26-6a61689026f61.webp' /></p><p>இந்த AI, 3 டிரில்லியன் பராமீட்டர்கள் கொண்ட மிகப்பெரிய மாடல் ஆகும். இது நிதி சந்தைகள், இராணுவ திட்டமிடல், சைபர் பாதுகாப்பு, உற்பத்தி, தானியங்கி ஆயுதங்கள் போன்ற துறைகளில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>அமெரிக்காவில், முன்னணி AI மாடல்களை கட்டுப்படுத்தும் விதமாக புதிய சட்டங்கள், தரவு மையங்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சீனாவின் Kimi K3, Frontend Code Arena-வில் முதலிடம் பிடித்ததால், உலக AI போட்டியில் சீனா முன்னேறியுள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p></p><p>இந்தியாவிற்கு, Kimi K3 ஒரு புதிய சவாலாக உள்ளது. AI தற்போது அணு ஆயுதம் அல்லது 5th-generation fighter jet போலவே ஒரு முக்கியமான மூலோபாய ஆயுதமாக கருதப்படுகிறது. இந்தியா, தனது சொந்த AI மாடல்களை உருவாக்காமல் இருந்தால், எதிர்காலத்தில் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை சார்ந்திருக்கும் அபாயம் உள்ளது.
</p><p>இந்தியாவில், பெரிய அளவிலான AI மாடல்களை உருவாக்க தேவையான நிதி, கணினி சக்தி, திறமையான ஆராய்ச்சியாளர்கள் குறைவாக உள்ளன.</p><p> இருப்பினும், விண்வெளி மற்றும் அணு ஆயுத திட்டங்களில் இந்தியா கடந்த காலத்தில் சவால்களை வெற்றிகரமாக சமாளித்தது போல, AI துறையிலும் முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T01:02:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா அணு ஒப்பந்தம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-saudi-nuclear-deal-for-civilian-power-1784741193"></link>
            <id>https://news.lankasri.com/article/us-saudi-nuclear-deal-for-civilian-power-1784741193</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே புதிய அணு ஒப்பந்தம் அறிவிக்கப்பட உள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவுதி அரேபியாவுக்கு முதன்முறையாக குடிமக்கள் பயன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே புதிய அணு ஒப்பந்தம் அறிவிக்கப்பட உள்ளது.</p><p>இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவுதி அரேபியாவுக்கு முதன்முறையாக குடிமக்கள் பயன்பாட்டிற்கான அணு ஆற்றல் திட்டங்களை உருவாக்க அனுமதி கிடைக்கிறது.
</p><p>
அமெரிக்க நிறுவனங்கள் சவுதி நிலப்பரப்பில் அணு மின் நிலையங்களை இயக்கும் வகையில் ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 30 ஆண்டுகள் நீடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126a0e6e-d0ed-456f-9e90-366815c7abba/26-6a60fd4ae6f05.webp' /></p><p>சவுதி அரேபியாவுக்கு தானாகவே யுரேனியத்தை செறிவூட்டும் (enrich) அதிகாரமும் வழங்கப்படலாம் என அறிக்கைகள் கூறுகின்றன.
</p><p>
இது, 2009-ல் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திலிருந்து மாறுபட்டதாகும். அப்போது அமீரகத்திற்கு தானாக எரிபொருள் தயாரிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
</p><p>
இந்நிலையில், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியாவுக்கு எதிர்காலத்தில் அணு ஆயுதம் உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்று கவலை தெரிவித்துள்ளன. </p><p>எனினும், அமெரிக்கா இந்த ஒப்பந்தம் முழுக்க குடிமக்கள் பயன்பாட்டிற்காக மட்டுமே என வலியுறுத்துகிறது.</p><p></p><p>2008-ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா-சவுதி இடையே அணு ஆற்றல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. பல தடைகள் இருந்தபோதிலும், தற்போது இரு நாடுகளும் வணிக ரீதியான ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. </p><p>அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆற்றல் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T00:54:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் துறைமுகங்கள், கப்பல்களை தாக்கியதாக ரஷ்யா அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-strikes-ukrainian-ports-cargo-ships-1784766478"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-strikes-ukrainian-ports-cargo-ships-1784766478</id>
            <summary type="text">ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் நகரங்களான ஒடெசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் துறைமுகங்களில் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.இந்த தாக்குதலில், உக்ரைன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் நகரங்களான ஒடெசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் துறைமுகங்களில் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.</p><p>இந்த தாக்குதலில், உக்ரைன் இராணுவத்திற்கு ஆதரவாக இருந்ததாகக் கூறப்படும் கப்பல்கள் மற்றும் துறைமுக வசதிகள் குறிவைக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9b77c4e-c107-4189-abb0-a97e70a36301/26-6a61600fe20ca.webp' /></p><p>அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கும் ட்ரை-கார்கோ கப்பல், இராணுவ சரக்கு கிடங்கு, எரிபொருள் மற்றும் எண்ணெய் சேமிப்பு தொட்டிகள் தாக்கப்பட்டுள்ளன.
</p><p>ஒடெசாவில், சரக்கு ஏற்றுமதி மற்றும் சேமிப்பு வசதிகள், மேலும் உக்ரைன் இராணுவத்திற்காக சரக்குகளை எடுத்துச் சென்ற ட்ரை-கார்கோ கப்பல் மற்றும் பல்க் கேரியர் ஆகியவை தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p></p><p>மேலும், ரஷ்ய ட்ரோன்கள் உக்ரைன் ட்ரோன்கள் சேமிக்கப்பட்டிருந்த மூன்று கிடங்குகளையும் தாக்கியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>Telegram-இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், கருங்கடல் மற்றும் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் நான்கு சரக்கு கப்பல்கள் மற்றும் ஒரு பல்க் கேரியர் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>சுமார் 4.5 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில், கருங்கடல் மற்றும் அசோவ் கடல் பகுதிகளில் இரு தரப்பும் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. எண்ணெய் கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்களைச் சேர்த்து, பல கப்பல்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.
</p><p>இந்த தாக்குதல், ரஷ்யா-உக்ரைன் போரின் கடல் பரப்பில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்துகிறது.
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><br>]]></content>
            <updated>2026-07-23T00:26:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்சுங் Galaxy Z Fold8 Ultra, Fold8 மற்றும் Flip8 அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/samsung-galaxy-z-fold8-ultra-fold8-flip8-launch-1784764879"></link>
            <id>https://news.lankasri.com/article/samsung-galaxy-z-fold8-ultra-fold8-flip8-launch-1784764879</id>
            <summary type="text">சம்சுங் நிறுவனம், ஜூலை 22, 2026 அன்று நடைபெற்ற Galaxy Unpacked நிகழ்வில், புதிய Galaxy Z Fold8 Ultra, Galaxy Z Fold8 மற்றும் Galaxy Z Flip8 மொடல்களை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்சுங் நிறுவனம், ஜூலை 22, 2026 அன்று நடைபெற்ற Galaxy Unpacked நிகழ்வில், புதிய Galaxy Z Fold8 Ultra, Galaxy Z Fold8 மற்றும் Galaxy Z Flip8 மொடல்களை அறிமுகப்படுத்தியது.
</p><p>
இந்த முறை, சம்சுங் தனது Foldable வரிசையை மூன்று தனித்துவமான அனுபவங்களாக விரிவாக்கியுள்ளது.</p><h2>Fold8 Ultra
</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9477007f-e32b-48fb-a590-37d7ef22eee3/26-6a615ac9ef78f.webp' /></p><p>இதில் அதிக உற்பத்தித் திறன் மற்றும் தொழில்முறை உள்ளடக்க உருவாக்கத்திற்கான 8 அங்குல பெரிய திரை, 200MP கமெரா, 5,000mAh பேற்றரி, 45W வேக சார்ஜிங் வசதி ஆகிய அம்சங்கள் உள்ளன.</p><h2>Fold8
</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a675f63b-8ea5-43b0-b3ba-a9e147c0b630/26-6a615ac934a30.webp' /></p><p>இதில் 7.6 அங்குல திரை, 201 கிராம் எடை, Snapdragon 8 Elite Gen 5 சிப், 4,800mAh பேற்றரி, 50MP இரட்டை கமெரா ஆகிய வசதிகள் உள்ளன.</p><h2>

Flip8
</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ddd7326-eb73-4a93-b2f0-2216b72097f0/26-6a615ac84c72e.webp' /></p><p>6.9 அங்குல AMOLED திரை, 180 கிராம் எடை, 50MP கமெரா, AI FlexWindow வசதி, தனிப்பட்ட வெளிப்பாட்டிற்கான சிறந்த வடிவமைப்பு ஆகிய அம்சங்கள் உள்ளன.</p><p></p><p>Galaxy AI அனைத்து மொடல்களிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. Gemini Intelligence, Now Brief, Now Nudge போன்ற AI வசதிகள், பயனர்களின் தினசரி செயல்களை எளிதாக்குகின்றன.
</p><p>
புதிய Flex Titanium தொழில்நுட்பம், மடிப்பு குறைவு மற்றும் அதிக நீடித்த தன்மையை வழங்குகிறது. Vision Booster மற்றும் 3,000 nits brightness வசதிகள் வெளிப்புற சூழலிலும் தெளிவான காட்சியை வழங்குகின்றன.
</p><h2>
விலை:</h2><p>

Fold 8 Ultra- 2,099 டொலர்
</p><p>
Fold 8- 1,899 டொலர்</p><p>

Flip 8- 1,499 டொலர்
</p><p>
முன்பதிவு, ஜூலை 22 முதல் தொடங்கியது. விற்பனை, ஆகஸ்ட் 7 முதல் உலகளவில் கிடைக்கும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T00:03:44+00:00</updated>
        </entry>
    </feed>
