<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-08T17:39:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B திட்டத்தில் வழங்கப்பட்ட 60 நாள் அவகாசம் ரத்து: அமெரிக்கா பரிசீலனை: இந்தியர்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-plan-to-eliminate-60-days-grace-period-in-h-1b-1786210120"></link>
            <id>https://news.lankasri.com/article/us-plan-to-eliminate-60-days-grace-period-in-h-1b-1786210120</id>
            <summary type="text">H-1B வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 60 நாட்கள் வேலை தேடும் அவகாசத்தை அமெரிக்க அரசு ரத்து செய்ய திட்டமிட்டு வருகிறது. H-1B வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 60 நாட்கள் வேலை தேடும் அவகாசத்தை அமெரிக்க அரசு ரத்து செய்ய திட்டமிட்டு வருகிறது.</p><h2> H-1B வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்</h2><p>வேலையில் இருந்து நீக்கப்பட்ட H-1B வெளிநாட்டு தொழிலாளர்களும் அவரது குடும்பத்தினரும் அடுத்த வேலையை தேடிக் கொள்ள கொடுக்கப்பட்டுள்ள 60 நாட்கள் கால அவகாசத்தை ரத்து செய்வது குறித்து அமெரிக்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.</p><p>அமெரிக்க அரசின் பரிசீலனையில் உள்ள இந்த முன்மொழிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எப்போது சட்டமாக்கப்படும் அல்லது இதன் முழுமையான விவரங்கள் குறித்து இன்னும் தெளிவாக வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2c7dc41-5776-42b4-929a-85187154b5f6/26-6a776749782ee.webp' /></p><p> இந்த நடைமுறை உறுதி செய்யப்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட காலம் முடிவதற்கும் வேலை இழந்தவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.</p><p></p><h2> இந்திய வம்சாவளியினருக்கு மிகப்பெரிய பாதிப்பு</h2><p>அமெரிக்காவின் H-1B திறமை வாய்ந்த தொழிலாளர் திட்டத்தில் இந்த மாற்றம் இறுதி செய்யப்பட்டால் அமெரிக்காவில் பணிபுரியும் பல இந்தியர்கள் பாதிக்கப்படக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4604610-290f-4357-bf3e-1cb9bb1c0ef8/26-6a77674a2f9b6.webp' /></p><p> அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்வு சேவைகளின்(USCIS) சமீபத்திய தரவுகள் படி, கிட்டத்தட்ட 71% அங்கீகரிக்கப்பட்ட H-1B திட்டங்கள் இந்தியர்களுக்கே கடந்த 2024ம் நிதியண்டில் வழங்கப்பட்டுள்ளது.</p><p> சமீபத்திய அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் படி, அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 52 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T17:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/school-girl-jail-visit-with-live-ammunition-in-up-1786207308"></link>
            <id>https://news.lankasri.com/article/school-girl-jail-visit-with-live-ammunition-in-up-1786207308</id>
            <summary type="text">துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பள்ளிச் சிறுமியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.சிறைக்குள் அத்துமீறி நுழைந்த பெண்உத்தர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பள்ளிச் சிறுமியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><h2>சிறைக்குள் அத்துமீறி நுழைந்த பெண்</h2><p>உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள கிளைச் சிறைக்குள் வியாழக்கிழமை போலி அடையாள அட்டை காண்பித்து சிறைக் கைதி ஒருவரை பள்ளி மாணவி ஒருவர் சந்திக்க சென்ற நிலையில்&nbsp; பாதுகாப்பு பணியாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.</p><p> மேலும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது பயன்படுத்தாத துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக சிறைக் காவலர் அஃப்தாப் ஆலம் அன்சாரி வழங்கிய தகவலில், சிறுமியும் அவருடன் வந்த ஆண் ஒருவரும் இணைந்து சிறையில் இருந்த ஹர்ஷு காஷ்யப் என்ற கைதியை சந்திக்க வந்தது தெரியவந்துள்ளது.</p><p></p><p> முதன்மை நுழைவாயிலில் நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின் போது, அடையாள அட்டையில் இருந்த விவரங்களுக்கு மாறான தகவல்களை இருவரும் கூறிய நிலையில் நிலைமை தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca36d863-7c59-48e8-b100-21185a08ed7d/26-6a775c4de6937.webp' /></p><p> இதையடுத்து அவர்களிடம் உடல் பரிசோதனை நடத்தப்பட்ட போது, அவரின் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 தோட்டாக்களை கண்டுபிடித்தனர்.</p><p>இதையடுத்து சிறைக் காவல் நிலைய பொறுப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, இருவரும் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p><h2>விசாரணையில் கூறப்பட்ட தகவல்</h2><p>கண்டறியப்பட்ட 10 துப்பாக்கிகளும்&nbsp; சிறுமியின் தந்தையுடைய உரிமம் பெற்ற துப்பாக்கிக்கு சொந்தமானது என்று அந்த சிறுமி பொலிஸார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் சிறையில் உள்ள தன்னுடைய நண்பரை சந்திக்க சென்றது தன்னுடைய தந்தைக்கு தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடும் என்ற பயத்தினால் அதனை தன்னுடன் எடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T16:42:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL 2026 இறுதிபோட்டி: ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jaffna-kings-123-all-out-vs-gag-lpl-2026-final-1786205901"></link>
            <id>https://news.lankasri.com/article/jaffna-kings-123-all-out-vs-gag-lpl-2026-final-1786205901</id>
            <summary type="text">காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான LPL 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 

லங்கா பிரீமியர் லீக் 2026 இறுதிப்போட்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான LPL 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. </p><p>

லங்கா பிரீமியர் லீக் 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><h2>இறுதிப்போட்டி&nbsp;</h2><p>

கொழும்பில் லங்கா பிரீமியர் லீக் 2026 தொடரின் இறுதிபோட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கல்லன்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8982dc5e-f409-4428-bf49-b17570cd17e2/26-6a7756d08fb65.webp' />&nbsp;</p><p></p><p>

நாணய சுழற்சியில் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.

அவிஷ்கா பெர்னாண்டோ 20 (16) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கவாஜா நபாய் டக்அவுட் ஆனார். </p><p>கமில் மிஷாரா (Kamil Mishara) பொறுப்புடன் ஆட ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.&nbsp;</p><h2>ஜாஃப்னா கிங்ஸ்</h2><p>
அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தபோது, கமில் மிஷாரா 41 (32) ஓட்டங்களில் இஷான் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். </p><p>

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சமிந்து விக்ரமசிங்கே 16 பந்துகளில் 24 ஓட்டங்கள் விளாசினார். ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><p>

காலி அணியின் தரப்பில் சரித் அசலங்கா, இஷான் மலிங்கா தலா 3 விக்கெட்டுகளும், தரிந்து ரத்னாயகே 2 விக்கெட்டுகளும், ஆகிப் மற்றும் சச்சிந்து தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/448b2aea-b517-406a-a8d7-80b852679583/26-6a775795bb306.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T16:16:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைந்த டயானாவின் வைரம், நீலக்கல் காதணிகளை அணிந்திருந்த மேகன் மார்க்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/meghan-spotted-with-diana-s-earrings-in-canada-1786203967"></link>
            <id>https://news.lankasri.com/article/meghan-spotted-with-diana-s-earrings-in-canada-1786203967</id>
            <summary type="text">கனடாவில் ஹாரியுடன் நிகழ்வில் கலந்துகொண்ட மேகன் மார்க்கல், மறைந்த இளவரசி டயானாவின் வைரம் மற்றும் நீலக்கல் காதணிகளை அணிந்திருந்ததாக புகைப்படம் எடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் ஹாரியுடன் நிகழ்வில் கலந்துகொண்ட மேகன் மார்க்கல், மறைந்த இளவரசி டயானாவின் வைரம் மற்றும் நீலக்கல் காதணிகளை அணிந்திருந்ததாக புகைப்படம் எடுக்கப்பட்டார்.</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற்ற விழாவில் கணவர் ஹரியுடன் கலந்துகொண்ட மேகன் மார்க்கல், மறைந்த இளவரசி டயானாவின் அணிகலன்களை அணிந்திருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. </p><h2>ஹரி மற்றும் மேகன் </h2><p>

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இசைத்துறையில் ஜாம்பவானான டேவிட் ஃபாஸ்டரின் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் நடந்தது.

அதில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1834d1a0-7b09-46a2-ae87-481b18d5effe/26-6a774f42d91fb.webp' />&nbsp;</p><p></p><p>இந்தத் தம்பதியினர் டேவிட் ஃபாஸ்டர் மற்றும் அவரது மனைவி கேத்தரின் மெக்ஃபீ ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
</p><p>
ஹரி, மேகன் இருவரும் டேவிட் மற்றும் கேத்தரினின் நீண்டகால நண்பர்கள் ஆவர். 

அப்போது மேகன் மார்க்கல், மறைந்த தனது மாமியார் இளவரசி டயானாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது வைரம் மற்றும் நீலக்கல் காதணிகளை அணிந்திருந்தார்.</p><h2> 

தனிப்பட்ட சேகரிப்பில்</h2><p>மேகனின் கூந்தல் கொண்டையாகப் பின்னி விடப்பட்டிருந்ததால், அவர் அணிந்திருந்த காதணிகள் தனித்து தெரிந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65247a68-d824-41d1-bc19-681f4d17756f/26-6a774f4389dc3.webp' /></p><p>

இளவரசி மேகன் மார்க்கல், மறைந்த டயானாவின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்து பல நகைகளை வைத்திருக்கிறார். </p><p>மேலும், இதற்கு முன்பும் பொது நிகழ்ச்சிகளில் டயானாவின் காதணிகளை அணிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0e7d650-c652-41ee-aa11-64c802d6ac33/26-6a774f4236eaa.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T15:43:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையை இழந்த லியோனல் மெஸ்ஸி..ரசிகர்கள் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lionel-messi-father-jorge-died-at-68-1786199639"></link>
            <id>https://news.lankasri.com/article/lionel-messi-father-jorge-died-at-68-1786199639</id>
            <summary type="text">பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் தனது 68 வயதில் காலமானார்.

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் தனது 68 வயதில் காலமானார்.
</p><p>
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி உடல்நலப் பிரச்சனையால் காலமானார்.</p><h2>

லியோனல் மெஸ்ஸி</h2><p>உலகளவில் கால்பந்து ஜாம்பவானாக விளங்குபவர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi). பிபா 2026 உலகக்கிண்ணத் தொடரில் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b1e63d-9b54-4074-ad26-b33750ca24d9/26-6a773e5ac76c3.webp' />&nbsp;</p><p></p><p>
தற்போது மெஸ்ஸி தனது இன்டர் மியாமி கிளப் அணிக்காக லீக்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடி வருகிறார்.
</p><p>
இந்த நிலையில், மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி 68 வயதில் காலமானார். இந்த செய்தியை அர்ஜென்டினாவின் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன.
</p><p>
பின்னர் மெஸ்ஸி விளையாடிய அணியான நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>

ஜோர்ஜ் மெஸ்ஸி 7ஆம் திகதி அன்று, குடும்ப இல்லத்திற்கு அருகிலுள்ள ரொசாரியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் காலமானதாக கூறப்படுகிறது.
</p><p>
சமீபத்திய மாதங்களில் மெஸ்ஸியின் தந்தை உறுதிப்படுத்தப்படாத உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். </p><p>

இதன் காரணமாக, அவர் தனது சொந்த நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசரமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df680724-fa9f-4f2e-bdfa-4b6c5903fa5e/26-6a773e5b7e1d8.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T14:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷம் முதல் கன்னி வரை.., செய்யக்கூடாத விடயங்கள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mesham-to-kanni-rasi-palan-in-tamil-1786192127"></link>
            <id>https://news.lankasri.com/article/mesham-to-kanni-rasi-palan-in-tamil-1786192127</id>
            <summary type="text">ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். 

அவர்களின் ராசிக்குரிய அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட கிழமை என தனித்தனியாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். </p><p>

அவர்களின் ராசிக்குரிய அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட கிழமை என தனித்தனியாக இருக்கும்.</p><p>

அதேபோல், ஒவ்வொரு ராசிக்கும் நல்ல குணங்கள் என்றும் சில இருக்கும், எதிர்மறை குணங்கள் என்றும் சில இருக்கும்.</p><p> 

இந்நிலையில், 12 ராசிக்காரர்களும் தங்கள் இயல்புக்கு மாறாகத் தவிர்க்க வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில செயல்கள் உள்ளன.</p><p> 

ஒவ்வொரு ராசியும் தனது பலவீனமான குணங்களைத் தவிர்க்க வேண்டும். </p><p>

அந்தவகையில், மேஷம் முதல் கன்னி வரை உள்ள ராசிகள் செய்யக்கூடாத சில விடயங்களை இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
</p><h2>
மேஷம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MIgPijL2nTI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>ரிஷபம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EKNbnT-i4Cw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மிதுனம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/p_erJ9akPwI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கடகம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TChUhD8alaI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>சிம்மம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qIbv766UlTg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கன்னி&nbsp;</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-vXOtXWQgug" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T14:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோயினால் அவதியுற்ற குழந்தை: எலிசபெத் மகாராணியின் உறவினர் எடுத்த பயங்கர முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/queen-elizabeth-cousin-kill-daughter-dies-aged-89-1786193181"></link>
            <id>https://news.lankasri.com/article/queen-elizabeth-cousin-kill-daughter-dies-aged-89-1786193181</id>
            <summary type="text">தன் குழந்தை பயங்கர நோயால் அவதியுற்றுவந்ததை காண சகியாமல், குழந்தையைக் கொன்றுள்ளார் எலிசபெத் ராணியாரின் உறவினர் ஒருவர்.


மறைந்த பிரித்தானிய மகாராணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன் குழந்தை பயங்கர நோயால் அவதியுற்றுவந்ததை காண சகியாமல், குழந்தையைக் கொன்றுள்ளார் எலிசபெத் ராணியாரின் உறவினர் ஒருவர்.
</p><p>

மறைந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் சகோதரி முறை உறவினரான பெண்ணொருவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதியுற்றுவந்த தன் குழந்தையைக் கொன்றதைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
</p><h3>
நோயினால் அவதியுற்ற குழந்தை</h3><p>

எலிசபெத் மகாராணியின் சகோதரி உறவு முறையினரான எலிசபெத் ஆலிஸ் வைஸ் (89), இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 2ஆம் திகதி மரணமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd4af423-2737-4a2a-bf55-14365c611d6d/26-6a77251e71230.webp' /></p><p>

ஆலிஸ் வைஸைக் குறித்து நினைவுகூரும்போது, அவரது வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக அவர் தனது குழந்தையைக் கொன்ற விடயம் நினைவுகூரப்படுவதை மறுப்பதற்கில்லை.</p><p>

ஆலிஸ் வைஸுக்கு 36 வயது இருக்கும்போது, அவர், எம்மா சார்லட் என்னும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.</p><p>

நீண்ட காலம் காத்திருந்து, கடவுளிடம் பிரார்த்தனை செய்து பெற்ற தன் மகள் மீது உயிரையே வைத்திருந்தார் ஆலிஸ் வைஸ்.
</p><p>
துரதிர்ஷ்டவசமாக, பிறந்து ஒன்பதே நாட்களில் சார்லட்டை வைரஸ் காய்ச்சல் தாக்கியது.

இருபத்து நான்கே மணி நேரத்தில் கோமாவுக்குச் சென்றாள் சார்லட்.</p><p> வைரஸ் பதிப்பு மூளையை எட்ட, மருத்துவமவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் குழந்தையை விட்டு அக்கம் பக்கம் நகரவில்லை ஆலிஸ் வைஸ்.

வைரஸ் தொற்று காரணமாக, குழந்தையின் மூளை அனுப்பும் தகவல்கள் அதன் கை கால்களை எட்டவில்லை.&nbsp;</p><p></p><p>

அவளது வயிறும் தசைகளும் சரியாக வேலை செய்யாததால், குழந்தைக்கு மிகமெதுவாகவே உணவு ஊட்ட முடிந்தது. இல்லையென்றால் குழந்தை வாந்தியெடுக்கத் துவங்கிவிடுவாள்.
</p><p>
வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட ஆலிஸ் வைஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
</p><p>
சில மாதங்களில் வைரஸ் தொற்று குழந்தையின் மூளையின் முக்கால் பாகத்தை நாசம் செய்துவிட்டது.
</p><p>
அப்போது ஒரு முடிவெடுத்தார் ஆலிஸ் வைஸ். ஆம், இப்படி தன் குழந்தை அவஸ்தைப்படுவதைக் காண சகிக்காமல், குழந்தையைக் கொன்றுவிட முடிவு செய்தார் அவர்.
</p><p>
1974ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 3ஆம் திகதி, தன் மகள் தூக்கத்தில், அமைதியாக, வலியில்லாமல் இந்த உலகத்தை விட்டுக் கடந்து செல்லட்டும் என, அவளுக்கு அவளுக்கு மீறி தூக்கமாத்திரைகளைக் கொடுத்தார் ஆலிஸ் வைஸ்.
</p><p>
சில மாதங்களுக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் தன் குழந்தையைக் கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார் ஆலிஸ் வைஸ்.
</p><p>
அவர் குழந்தையைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகளை அனைவரும் அறிந்திருந்ததால், அவர் மீது பலரும் இரக்கப்பட்டார்கள்.
</p><p>
நீதிபதியும், இது வழக்கத்துக்கு மாறான வழக்குகளிலேயே மிகவும் அசாதாரண வழக்கு என்று கூறி, ஆலிஸ் வைஸுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கினார். ஆனால், அவர் சிறை செல்லவேண்டியதில்லை என்றும், ஓராண்டுக்கு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இருக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
</p><p>
ஆலிஸ் வைஸ், தனது 89ஆவது வயதில், யார்க்‌ஷையரிலுள்ள ஒரு மருத்துவமனையில், இம்மாதம் 2ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T14:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ODI கிரிக்கெட்டில் எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ள ரஷீத் கான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rashid-khan-record-as-take-3-6-wickets-haul-in-odi-1786196543"></link>
            <id>https://news.lankasri.com/article/rashid-khan-record-as-take-3-6-wickets-haul-in-odi-1786196543</id>
            <summary type="text">ஒருநாள் போட்டிகளில் 3 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் படைத்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருநாள் போட்டிகளில் 3 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் படைத்துள்ளார். </p><h3>

ஆப்கானிஸ்தான் வெற்றி </h3><p>

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்திற்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி, நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.</p><p> 

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 47 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccd15442-febb-4387-aec4-853c3388b686/26-6a773240afb92.webp' /></p><p>

இதன்படி, 300 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து, 33.4 ஓவர்களில் 207 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p></p><p>

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p><h3>

ரஷீத் கான் சாதனை</h3><p>

இந்த போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் புதிய சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caae3c36-b193-4135-b8ee-710d7f41240b/26-6a77324163955.webp' /></p><p>

இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் 3 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். </p><p>

முன்னதாக 2017 ஆம் ஆண்டிலும், இதே அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.</p><p>

2017 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 7 விக்கெட்களை வீழ்த்தினார். </p><p>

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யூனிஸ், ஒருநாள் போட்டிகளில் 5 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T13:43:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு எதிராக சதம் விளாசிய தேவ்தத் படிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/devdutt-padikkal-century-vs-sri-lanka-cricket-xi-1786194123"></link>
            <id>https://news.lankasri.com/article/devdutt-padikkal-century-vs-sri-lanka-cricket-xi-1786194123</id>
            <summary type="text">இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் தேவ்தத் படிக்கல் சதம் விளாசினார்.

கொழும்பில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் தேவ்தத் படிக்கல் சதம் விளாசினார்.
</p><p>
கொழும்பில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் தேவ்தத் படிக்கல் சதம் அடித்தார்.</p><h2>

இலங்கை&nbsp;363 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்</h2><p>இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் லெவன் அணிகளுக்கு இடையிலான பயிற்சி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbf7c92c-8288-4a81-b53a-8fecbd1e856e/26-6a7728cdb7dbc.webp' />&nbsp;</p><p></p><p>
இலங்கை கிரிக்கெட் லெவன் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 363 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

ரவிந்து ரஸந்த 71 ஓட்டங்களும், நிஷான் மதுஷ்கா 66 ஓட்டங்களும், சோனல் தினுஷா 52 ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p> 

இந்திய அணியின் தரப்பில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் மானவ் சுதர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
</p><p>
பின்னர் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டக்அவுட் ஆக, கே.எல்.ராகுல் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><h2>

தேவ்தத் படிக்கல்&nbsp;சதம் </h2><p>ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) 63 ஓட்டங்கள் எடுத்து ரிடையர் ஹர்ட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய ரிஷாப் பண்ட் (2), துருவ் ஜுரேல் (1) ஆகியோர் சொதப்பினர்.
</p><p>
எனினும் தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) அபாரமாக ஆடி சதம் விளாசினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ஓட்டங்கள் குவித்துள்ளது.
</p><p>
படிக்கல் 142 ஓட்டங்களுடனும், பிரார் 36 (18) ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். ரமேஷ் மெண்டிஸ், அசங்கா மனோஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4797af11-a99f-4a26-83a2-467c9b564394/26-6a7728ce6a226.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T12:59:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு ரயில் பாதை - ரஷ்யா முன்மொழிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-propose-rail-route-to-india-via-pakistan-1786192238"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-propose-rail-route-to-india-via-pakistan-1786192238</id>
            <summary type="text">பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு நேரடி ரயில் பாதை அமைப்பதற்கு ரஷ்யா முன்மொழிந்துள்ளது. 

ரஷ்யா இந்தியா இடையே ரயில் பாதை

அமெரிக்கா மற்றும் ஈரான் இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு நேரடி ரயில் பாதை அமைப்பதற்கு ரஷ்யா முன்மொழிந்துள்ளது. </p><h3>

ரஷ்யா இந்தியா இடையே ரயில் பாதை</h3><p>

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையில் கப்பல்கள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது.&nbsp;</p><p>

இதன் காரணமாக எரிபொருள் விநியோகம் தடைபட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. </p><p>

இந்நிலையில், இந்த பாதிப்பை குறைக்கும் வகையில், இந்தியா உடன் ரயில் போக்குவரத்தை உருவாக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியுள்ளது. </p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர் மராட் குஸ்னுல்லின்(Marat Khusnullin), "இந்தியப் பெருங்கடலுக்கு ஒரு ரயில் இணைப்பு ஏற்படுத்துவது குறித்தும் ஆராயப்பட வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b1a9b43-e5ff-4a9a-a64f-77ae84381241/26-6a772170741be.webp' /></p><p>

போஸ்பரஸ் மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்பான அபாயங்கள் காரணமாக, துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக மாற்று வழிகள் தேவைப்படலாம். இந்தியாவிற்கு அணுகலை வழங்கும் எந்தவொரு வழியும் ஏற்றுக்கொள்ளத்தக்கது" என தெரிவித்துள்ளார்.</p><p>

இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக ரஷ்ய எண்ணெயின் இரண்டாவது பெரிய இறக்குமதியாளராக மாறியுள்ளது. மேலும், இரு நாடுகளும் 2030 ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டொலர் வர்த்தக இலக்கை நிர்ணயித்துள்ளன.&nbsp;</p><p></p><p>
ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சுமூகமான உறவுகள் இல்லாததால் இந்த திட்டத்தினை முன்னெடுத்து செல்வதில் சிக்கல்கள் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4014045-30b0-4a01-b95c-6dd2ad839412/26-6a77216fbf9a3.webp' /></p><p>

முன்னதாக 2024 ஆம் ஆண்டில், ரஷ்யா ஈரானைக் கடந்து செல்லும் INSTC வழித்தடத்தின் மூலம் 2 ரயில் பெட்டிகளில் நிலக்கரியை இந்தியாவிற்கு அனுப்பியது.

ஈரானின் தெற்கு துறைமுகங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் காரணமாக அந்த வழித்தடம் தற்போது பயன்பாட்டில் இல்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T12:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவூறும் சுவையில் பட்டன் பஜ்ஜி.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/button-bajji-recipe-in-tamil-1786190857"></link>
            <id>https://news.lankasri.com/article/button-bajji-recipe-in-tamil-1786190857</id>
            <summary type="text">பஜ்ஜி என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதுவும் மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சாப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பஜ்ஜி என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
</p><p>
அதுவும் மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு நிறைவாக இருக்கும்.
</p><p>
அந்தவகையில், நாவூறும் சுவையில் பட்டன் பஜ்ஜி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>தேவையான பொருட்கள் </h2><ul><li>

பீர்க்கங்காய்- 1
</li><li>கடலை மாவு- ½ கப் </li><li>
அரிசி மாவு- ½ கப்</li><li> 
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்</li><li> 
பெருங்காயம்- ¼ ஸ்பூன்</li><li> 
உப்பு- தேவையான அளவு </li><li>
தண்ணீர்- சிறிதளவு</li><li> 
எண்ணெய்- தேவையான அளவு
</li></ul><h2>
செய்முறை </h2><p>

முதலில் பீர்க்கங்காயை கழுவி தோலுரித்து சிறிய சிறிய வட்டமாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயம், உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd877ee5-f578-4f5f-ad2d-ceaf228970c5/26-6a771c1418188.webp' /></p><p>

பின் அடுப்பில் ஒரு வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.</p><p>

இறுதியாக வெட்டிவைத்த பீர்க்கங்காயை மாவில் நனைத்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான பட்டன் பஜ்ஜி தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T12:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீவ் பிராந்தியத்தில் ரஷ்யாவின் பயங்கர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-strike-on-kyiv-three-killed-include-child-1786191071"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-strike-on-kyiv-three-killed-include-child-1786191071</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகருக்கு வடகிழக்கில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர். மூன்று பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகருக்கு வடகிழக்கில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
</p><p>
உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர். </p><h2>மூன்று பேர் கொல்லப்பட்டதாக
</h2><p>
உக்ரைனின் கீவ்வின் வடகிழக்கில் உள்ள புரோவரி மாவட்டத்தில் ரஷ்யத் தாக்குதல் நடத்தியது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02986a55-324b-4559-9877-052bdbfd0924/26-6a771ce1b0a65.webp' /></p><p></p><p>
இதில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய இராணுவ அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.</p><p> 

மேலும், மூன்று பேர் காயமடைந்ததாக பிராந்திய இராணுவ நிர்வாகத் தலைவர் டைமூர் தகாச்சென்கோ டெலிகிராமில் எழுதியுள்ளார்.&nbsp;</p><h2>கணிசமாக அதிகரித்துள்ள&nbsp;தாக்குதல்</h2><p>

சமீபத்திய மாதங்களில், மாஸ்கோ உக்ரைன் தலைநகர் மீதான தனது தாக்குதல்களை கணிசமாக அதிகரித்துள்ளது.
</p><p>
அடிக்கடி, இடைமறிக்க கடினமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை குறுகிய நேரத் தாக்குதல்களாக நடத்தி வருகிறது. </p><p>

இந்த சூழலில் வரவிருக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து கீவ் எச்சரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903cb01d-9908-42aa-8ac3-ece925ef5301/26-6a771ce261f92.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T12:09:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 முறை சிறுபடகுகளை தடுத்து நிறுத்திய பிரான்ஸ் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/french-officers-stop-10-small-boats-1786188888"></link>
            <id>https://news.lankasri.com/article/french-officers-stop-10-small-boats-1786188888</id>
            <summary type="text">பிரான்ஸ் அதிகாரிகள் சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதில்லை என கூறப்படுவதில் உண்மையில்லை என எல்லை பாதுகாப்பு அதிகாரி விளக்கம்....</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் அதிகாரிகள் சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதில்லை என கூறப்படுவதில் உண்மையில்லை என எல்லை பாதுகாப்பு அதிகாரி விளக்கம்.
</p><p>

கடந்த சில வாரங்களாக பிரித்தானிய தரப்பிலிருந்து கன்சர்வேட்டிவ் கட்சியினரும், ரீஃபார்ம் கட்சியினரும், பிரான்ஸ் அதிகாரிகள் சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதில்லை என குற்றச்சாட்டு முன்வைத்துவருகிறார்கள்.
</p><h3>
உண்மை இல்லை...
</h3><p>
ஆனால், அவர்கள் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்கிறார் பிரித்தானிய எல்லை பாதுகாப்பு அமைப்பின் சிறுபடகுகள் கட்டுப்பாட்டு பிரிவின் இயக்குநரான சார்லி (Charlie Eastaugh).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e9af52-86cc-4dd7-b48a-0ccd9385be7d/26-6a77145a4742e.webp' /></p><p>
இளவேனிற்காலத்துக்குப் பிறகு மட்டுமே, பிரான்ஸ் அதிகாரிகள், பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோரை 10 முறை தடுத்து நிறுத்தியுள்ளார்கள் என்கிறார் அவர்.
</p><p>
கடந்த சில வாரங்களாக ஆங்கிலக்கால்வாயில் நாம் கண்ட விடயங்கள், மக்களை சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஆட்கடத்தல்காரர்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்து உணர்த்துகின்றன.&nbsp;</p><p></p><p>
ஊடகங்களில் வெளியாகிவரும் புகைப்படங்களை வைத்து, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வோரை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் நடக்கவில்லை என கூறுவது எளிது.
</p><p>
ஆனால், புலம்பெயர்ந்தோர் பிரித்தானியக் கரையை அடைவதற்கு முன், அவர்களை தடுத்து நிறுத்த பிரான்ஸ் அதிகாரிகள் எப்படி அயராது உழைக்கிறார்கள் என்பது தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும் என்கிறார் சார்லி.
</p><p>
பிரான்ஸ் அதிகாரிகள், புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்த எடுக்கும் நடவடிக்கைகளின்போது ஆயுதங்களுடன் வரும் வன்முறையாளர்களை எதிர்கொள்வது, பெரும் கூட்டத்தை கலைப்பது, கடத்தல்காரர்களைக் கைது செய்வது, ஆயுதங்களை பறிமுதல் செய்வது, எங்கள் வழக்குகளுக்கு உதவும் ஆதாரங்களைத் திரட்டுவது என பல விடயங்களைச் செய்கிறார்கள்.
</p><p>
புகலிடக்கோரிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை அவர்கள் எதிர்கொள்ளும் முன்பும், பிரான்ஸ் பொலிசாரின் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை உள்ள அனைத்து பிரிவினரும் அதற்காக திட்டமிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அதை நடைமுறைப்படுத்தும்போது, அதாவது, எரிச்சலிலிருக்கும் மக்களையும், ஆபத்தான ஆட்கடத்தல் கும்பல்களையும் எதிர்கொள்ளும்போது, அவர்கள் தங்கள் அதிகாரிகளின் பதுகாப்பையும், மக்களுடைய பாதுகாப்பையும் சம அளவில் உறுதி செய்யவேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார் சார்லி.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T11:50:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாதந்தோறும் ரூ.6000 வருமானம்.., அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/post-office-mis-invest-scheme-details-in-tamil-1786189337"></link>
            <id>https://news.lankasri.com/article/post-office-mis-invest-scheme-details-in-tamil-1786189337</id>
            <summary type="text">பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர் பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். 

அந்தவகையில், அஞ்சலகத்தின் மாதாந்திர வருமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர் பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.</p><p> 

அந்தவகையில், அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) பாதுகாப்பான முதலீட்டு திட்டமாக உள்ளது.
</p><p>
இந்தத் திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. 

குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் முதலீடு செய்யும் இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.</p><p>

தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் முதலீடு செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a58c4f6a-2e20-48be-be43-64077c0d2162/26-6a77161b5e85a.webp' /></p><p>உதாரணமாக, ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.37,000 வட்டி கிடைக்கும். இதன் மூலம் மாதந்தோறும் சுமார் ரூ.3,083 வருமானம் கிடைக்கும்.
</p><p>
பெரியவர்கள் தங்கள் பெயரில் தனிநபர் கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சம் 3 பெரியவர்கள் இணைந்து கூட்டுக் கணக்கையும் தொடங்கலாம்.
</p><p>
மேலும், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மைனர் குழந்தையின் பெயரில் கணக்கு தொடங்கலாம். </p><p>கணக்கு தொடங்கிய முதல் ஒரு ஆண்டுக்குள் பணத்தை திரும்பப் பெற முடியாது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71dd10c0-3138-4e46-8cd2-5cd9f762cd5b/26-6a77161c12ba0.webp' /></p><p>1 முதல் 3 ஆண்டுகளுக்குள் கணக்கை முடித்தால், முதலீட்டுத் தொகையில் 2% பிடித்தம் செய்யப்படும். மேலும், 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் முடித்தால், 1% பிடித்தம் செய்யப்படும்.</p><p>
ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், 7.4% வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ.74,000 வட்டி கிடைக்கும். அதாவது, மாதந்தோறும் சுமார் ரூ.6,167 வருமானமாக கிடைக்கும்.
</p><p>
5 ஆண்டுகள் முடிவடைந்ததும் முதலீடு செய்த ரூ.10 லட்சம் முழுமையாக திரும்ப வழங்கப்படும்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T11:44:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடு மேய்த்தவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி: தமிழச்சியின் சாதனை பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vanmathi-ias-officer-success-story-1786189144"></link>
            <id>https://news.lankasri.com/article/vanmathi-ias-officer-success-story-1786189144</id>
            <summary type="text">Vanmathi Success Story: ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்த சாதாரண ஓட்டுநரின் மகள் இன்று தமிழகமே போற்றும் அதிகாரியாக உயர்ந்து நிற்கிறார்.

வறுமை காரணமாக ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vanmathi Success Story: ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்த சாதாரண ஓட்டுநரின் மகள் இன்று தமிழகமே போற்றும் அதிகாரியாக உயர்ந்து நிற்கிறார்.
</p><p>
வறுமை காரணமாக ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டே படிப்பால் உயர்ந்து இன்று உயர் அதிகாரியாகி இருக்கிறார்.
</p><p>
தன் சாதனை பயணத்துக்கு வறுமையை காரணம் காட்டாமல் கலெக்டராக உயர்ந்து ஜொலிக்கிறார் வான்மதி ஐஏஎஸ்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/390c3202-ecab-48dc-8b0e-6e487681d0aa/26-6a771623b19de.webp' /><br></p><p>
</p><p>
வான்மதியின் தந்தை ஓட்டுநர், காலையில் பள்ளிக்கு செல்லும் வான்மதி மாலை நேரங்களில் ஆடு, மாடுகளை மேய்க்கச் சென்றுவிடுவார்.
</p><p>
கையோடு புத்தகத்தையும் எடுத்து சென்றுவிடுவார், படிப்பில் அதீத கவனம், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், இப்படியே பள்ளிக்கால நாட்கள் கடந்தோடின.
</p><p>
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைக்கலாம் என குடும்பத்தினர் ஆலோசித்தனர், ஆனால் வான்மதிக்கு அவரது பெற்றோர் உறுதுணையாய் இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c51c09e-2000-4c63-9c36-4eb18a997bb6/26-6a7716246262f.webp' /><br></p><p>
</p><p>
தனது விடாமுயற்சியில் முதுகலை பட்டம் பெற்ற வான்மதி யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரானார்.

பல ஆண்டு கனவு அவருக்கு நனவாகிப்போனது, 2015ம் ஆண்டு நடந்த தேர்தவில் அகில இந்திய அளவில் 152வது இடத்தை பிடித்து ஐஏஎஸ் அதிகாரியானார்.
</p><p>
அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பு அளித்த வான்மதி தற்போது மகாராஷ்டிராவின் வர்தா மாவட்ட ஆட்சியராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.<br></p>]]></content>
            <updated>2026-08-08T11:42:57+00:00</updated>
        </entry>
    </feed>
