<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-07T13:18:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/by-election-announced-for-madurantakam-dharapuram-1788786037"></link>
            <id>https://news.lankasri.com/article/by-election-announced-for-madurantakam-dharapuram-1788786037</id>
            <summary type="text">by election announced for madurantakam and dharapuram: தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலை தேர்தல் ஆணைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>by election announced for madurantakam and dharapuram: தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><h3> 

தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைதேர்தல்</h3><p>

தமிழ்நாட்டில் அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
</p><p>
மேலும், 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ea86c67-d613-4f54-bf24-983823ebec1c/26-6a9eb5772c3a0.webp' /></p><p>

இதனைத்தொடர்ந்து, 7 சட்டமன்ற தொகுதிகள் காலியானாதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.&nbsp;</p><p></p><p>

இதில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் தேர்தல் வழக்கு, இருப்பதால் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8604aeb-569d-444a-8ea8-2cf9632114df/26-6a9eb57679fec.webp' /></p><p> 

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 9 ஆம் திகதி தொடங்கும் எனவும், செப்டம்பர் 16ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும், வேட்பு மனுவை திரும்ப பெற செப்டம்பர் 9 ஆம் திகதி செப்டம்பர் 17ஆம் திகதி கடைசி நாள் எனவும், வேட்பு மனு பரிசீலனை செப்டம்பர் 17 நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

மேலும், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் திகதி எனவும், வாக்கு எண்னிக்கை அக்டோபர் 8 ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T13:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் துணை மின் நிலைய தாக்குதல்கள்..சந்தேக நபர் குறித்து விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-investigating-suspect-after-fire-damage-1788785801"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-investigating-suspect-after-fire-damage-1788785801</id>
            <summary type="text">Germany investigating after another substation fire: ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany investigating after another substation fire: ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p>

ரஷ்யாவின் ஹைபிரிட் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>ஜேர்மனியை குறிவைத்து</h2><p> 
ஐரோப்பிய நாடான ஜேர்மனியை குறிவைத்து சம்பவம் தொடர்ச்சியாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3751eb32-da13-46b8-8076-7dd7c3d13caf/26-6a9eb5879eea7.webp' />&nbsp;</p><p></p><p>
இந்த சூழலில், திங்களன்று பெர்லினில் உள்ள ஒரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதம் உண்டானது.</p><p> 

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், "கட்டுமானப் பணி நடைபெறும் இடம் மற்றும் துணை மின் நிலையத்தின் ஒரு பகுதி ஆகியவை தீயில் எரிந்து சேதமடைந்தன. இதனால் விநியோகத்தில் எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை" என்றனர். </p><p>

மேலும், நாசவேலை குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது நாசவேலையா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக என்றும் தெரிவித்தனர்.
</p><p>
இதற்கிடையில், நிலக்கரி மின் நிலையங்களில் இருந்து மின்சார விநியோகத்தைத் துண்டிக்கும் நோக்கில், கடந்த வாரம் ஜேர்மனி முழுவதும் உள்ள துணை மின் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்குக் காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும், தீவிரப் போக்குடைய சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38b2eedd-cc20-48db-871a-f63f41b4f39c/26-6a9eb586df47b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T12:57:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக அழகிப்போட்டியில் 3வது இடம் பிடித்த தமிழ் பெண் தனுசியா செட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/malasiyan-tamil-taanusiya-chetty-3rd-in-miss-world-1788784568"></link>
            <id>https://news.lankasri.com/article/malasiyan-tamil-taanusiya-chetty-3rd-in-miss-world-1788784568</id>
            <summary type="text">malasiyan tamil taanusiya chetty as 2nd runner up in 2026 miss world: மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண்ணான தனுசியா செட்டி உலக அழகிப்போட்டியில் 3வது இடம் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>malasiyan tamil taanusiya chetty as 2nd runner up in 2026 miss world: மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண்ணான தனுசியா செட்டி உலக அழகிப்போட்டியில் 3வது இடம் பிடித்தார்.
</p><h3>
2026 உலக அழகிப் போட்டி</h3><p>

வியட்நாமின் நஹா ட்ராங் நகரில் செப்டம்பர் 5 ஆம் திகதி, 2026ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியான 73 வது மிஸ் வேல்ட் 2026 கிராண்ட் ஃபினாலே நடைபெற்றது. </p><p> 

110 நாடுகளை சேர்ந்த பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், இறுதிசுற்றில் வெற்றி பெற்ற டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02906419-e54c-4295-8e43-30c4cfb759a6/26-6a9eafb93f9b7.webp' /></p><p> 

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எலிசபெத் ரெயினாஸ் அலபெர்ன் முதல் ரன்னர்-அப்பாகவும், மலேசியாவின் தனுசியா செட்டி இரண்டாவது ரன்னர்-அப்பாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.&nbsp;</p><p></p><p> 

மாலை நேர கவுன் பிரிவின் போது, ​​வியட்நாமிய ஆடை வடிவமைப்பாளர் மின் துவான் கோச்சர் வடிவமைத்த இளஞ்சிவப்பு கவுனில் தனுசியா செட்டி காட்சியளித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/175ce4ab-54dc-47aa-b817-7b9aa9142c33/26-6a9eafb9ee404.webp' /></p><h3>

3வது இடம் பிடித்த தனுசியா செட்டி</h3><p>

26 வயதான தனுசியா செட்டி, மலேசியாவில் பிறந்து, வசித்து வரும் தமிழ் பெண் ஆவார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aecd3bcd-956a-4fe1-a38c-2fbd9533ba06/26-6a9eafbb54e5e.webp' /></p><p>

மலாய், ஆங்கிலம், மாண்டரின் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசும் புலமையுடைய தனுசியா, தற்போது மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பித்தல் (TESL) பிரிவில் இளங்கலை கல்வியியல் படித்து வருகிறார்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc-eeEoks6h/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc-eeEoks6h/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc-eeEoks6h/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Taanusiya Chetty (@taanusiyaa_)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
2022 ஆம் ஆண்டில், 'Be The Change Malaysia' என்ற அமைப்பை நிறுவிய தனுசியா, அதன் மூலம் சுகாதார மற்றும் கல்வி அமைச்சகங்களுடன் இணைந்து பழங்குடியினக் குழந்தைகளுக்காகச் செயல்படுத்தப்பட்ட 'மருத்துவமனையிலேயே பள்ளி' திட்டம் உட்பட, குழந்தைகள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
ஆட்டிசம் பாதித்த இளைஞர்களுக்கான கலைப் பட்டறைகள் நடத்துவது, குழந்தைப் பருவ இரத்தப் புற்றுநோய் நோயாளிகளைச் சந்திப்பது ஆகிய செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். 

இந்தப் பணி இதுவரை சுமார் 8,000 குழந்தைகளைச் சென்றடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், 2028 ஆம் ஆண்டுக்குள் உலக அழகி அமைப்புடன் இணைந்து, இந்தத் தளத்தை சர்வதேச அளவில் மேலும் கொண்டு செல்லவும் அவர் விரும்புகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f29d09f-98ad-4f9f-9ed0-1be197ee0d6d/26-6a9eafbaa19a9.webp' /></p><p>
முன்னதாக, மிஸ் வேர்ல்ட் மலேசியா 2024 போட்டியில் போட்டியிட்ட அவர், மிஸ் வேர்ல்ட் மலேசியா 2024 ஆக முடிசூட்டப்பட்டார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T12:36:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் அதிகளவு தேநீர் குடிப்பவரா? உங்களுக்கான பதிவு தான் இது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-many-tea-one-can-drink-daily-1788776383"></link>
            <id>https://news.lankasri.com/article/how-many-tea-one-can-drink-daily-1788776383</id>
            <summary type="text">காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தேநீர் அருந்துவது அவர்களுடைய தினசரி பழக்கமாகவும் அதை குடிக்காவிட்டால் அந்த தினம் அவர்களுக்கு துவங்காதது போல் அவர்கள் எண்ண...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தேநீர் அருந்துவது அவர்களுடைய தினசரி பழக்கமாகவும் அதை குடிக்காவிட்டால் அந்த தினம் அவர்களுக்கு துவங்காதது போல் அவர்கள் எண்ணுகிறார்கள்.</p><p> இருப்பினும் அளவிற்கு அதிகமாக நாம் தேநீர் அருந்தும் பொழுது நமக்கு அதனால் சில பிரச்சனைகள் வருகிறது. அதில் நாம் வரக்கூடிய மூன்று முக்கியமான பிரச்சனைகளை பற்றி பார்ப்போம்.

 பொதுவாகவே, ஒருவர் அதிக அளவிலான தேநீர் அல்லது காபி குடிக்கும் நபராக இருந்தால் அவர்களுக்கு தூக்கமின்மை பாதிப்பு வரலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63588b04-8f3c-454a-80a3-2a14db8944b5/26-6a9e8fc0edb19.webp' /></p><p></p><p> ஆகையால் இரவு சரியான தூக்கம் இல்லாமல் மறுநாள் ஒரு சோர்வான சூழ்நிலையை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். இரண்டாவதாக, சிலருக்கு அமிலத்தன்மை, வாயு மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம். அதிலும், குறிப்பாக வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக்கூடிய பழக்கம் இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் இதுபோன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். </p><p>மேலும், தேநீர் குடிக்க கூடிய விளைவு எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

 ஒரு சிலருக்கு தேநீர் குடித்த பிறகு அடிக்கடி நெஞ்செரிச்சல் அல்லது வயிற்றில் அசௌகரியம் ஏற்பட்டால் அவர்கள் தேநீர் குடிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. மூன்றாவதாக தேநீரில் இருக்கக்கூடிய டானின்கள்உணவில் இருந்து இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை குறைக்க கூடும். </p><p>அதனால், ரத்த சோகை இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு உடனே தேநீர் அருந்துவதை தவிர்ப்பது அவசியம். உணவிற்கும் தேநீர் குடிக்கவும் சிறிது நேரம் இடைவேளை கொடுப்பது முக்கியம். மேலும், தேநீரில் அதிகப்படியான சர்க்கரை கிரீம் அல்லது அதிக கலோரி கொண்ட பிறப் பொருட்களை சேர்ப்பது நம் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cf8b935-65a7-4f93-8bbc-c29e0bf4a260/26-6a9e8fc1ac1ee.webp' /></p><p></p><p> </p><p>எனவே தேநீர் குடிக்கும் போது சர்க்கரை எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்திக் கொள்வது அவசியமாக பார்க்க வேண்டும். மேலும், தேநீர் பிரியர்கள் தேநீர் குடிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்கின்ற அவசியமில்லை. தேநீரை அளவோடு எடுத்துக்கொண்டு சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவுகள் எடுத்துக் கொள்வதும் அவசியம். </p><p>எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு போதுமான தினசரி உடல் செயல்பாடு உடற்பயிற்சி, நல்ல தூக்கம், நல்ல ஊட்டச்சத்து, உணவு ஆகியவை மிகவும் அவசியம். மேலும், ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு கப்புகளுக்கு மேல் அதிகமாக தேநீர் குடிக்கும் போது அவை நம்முடைய உடல் நல ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்று சொல்கிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T12:35:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: அடுத்த அலையா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/covid-19-cases-rises-in-france-1788779884"></link>
            <id>https://news.lankasri.com/article/covid-19-cases-rises-in-france-1788779884</id>
            <summary type="text">A rise in Covid-19 cases is being recorded in France: பிரான்சில் கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.


பிரான்சில், கோவிட் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>A rise in Covid-19 cases is being recorded in France: பிரான்சில் கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.
</p><p>

பிரான்சில், கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை, செப்டம்பர் மாத துவக்கம் முதல் அதிகரித்தவண்ணம் உள்ளது. அத்துடன், அது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
</p><h3>
கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை
</h3><p>
இந்த விடயம், அதாவது, கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cae78d5-8351-4af0-857a-3f9dd2c450b5/26-6a9e9d6dec3f4.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், இது புதிய கோவிட் அலை அல்ல, அது குறித்து மக்கள் அச்சப்படவேண்டாம் என்கிறார்கள் அதிகாரிகள்.</p><p>

ஏனென்றால், கோவிட் பெருந்தொற்று முடிவுக்கு வந்ததிலிருந்தே, கோவிடும் ப்ளூ தொற்று போல மாறிவிட்டது.
</p><p>
அதாவது, அதன் வீரியம் குறைந்துவிட்டது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், ப்ளூ குளிர்காலத்தில் மட்டும் தாக்கும், இந்த கோவிட் வெயில் காலத்திலும் தாக்கக்கூடும், அவ்வளவுதான்!&nbsp;</p><p></p><p>
ஆரோக்கியமான இளம் மற்றும் நடுத்தர வயதினர் இந்த கோவிட் குறித்து கவலைப்படவேண்டியதில்லை. எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலுள்ளவர்கள் மற்றும் முதியவர்களும் ஏற்கனவே தடுப்பூசி போட்டுள்ளதால் அவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கும்.
</p><p>
ஆக, எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலுள்ளவர்கள் கூட்டம் அதிகமிருக்கும் இடங்களுக்கு செல்லும்போது கையுறை, முகக்கவசம் போன்றவற்றை அணிந்துகொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது நல்லது என்கிறார்கள் அதிகாரிகள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொதப்பிய அசலங்கா..முஜீப்பின் சுழல், டி காக்கின் அதிரடியில் பார்படோஸ் அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/de-kock-blast-47-runs-bbt-won-by-8-wickets-1788779788"></link>
            <id>https://news.lankasri.com/article/de-kock-blast-47-runs-bbt-won-by-8-wickets-1788779788</id>
            <summary type="text">Barbados tridents beat saint lucia kings by 8 wickets: பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தியது.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>Barbados tridents beat saint lucia kings by 8 wickets: பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தியது.&nbsp;</p><p>


CPL டி20 போட்டியில் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தியது. </p><h2>கமில் பூரன் 37&nbsp;ஓட்டங்கள் </h2><p> 

செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான CPL டி20 போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🚨 WHAT A SIX BY KAMIL POORAN! 🤯<br><br>A stunning 91-metre straight six against the spinner!<br><br>Pooran sent the ball flying onto the roof! <a href="https://t.co/QNPDb36N3e">pic.twitter.com/QNPDb36N3e</a></p>&mdash; Pazi. (@CallMePazi1_) <a href="https://x.com/CallMePazi1_/status/2096775289875443763?ref_src=twsrc%5Etfw">September 7, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
முதலில் துடுப்பாடிய செயின்ட் லூசியா அணியில் கமில் பூரன் 37 (24) ஓட்டங்களும், ரோஸ்டோன் சேஸ் 34 (28) ஓட்டங்களும் விளாசினர். 

ஆனால் பின்னர் வந்த சரித் அசலங்கா 18 பந்துகளில் 12 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார்.&nbsp;</p><p></p><p>

முஜீப் உர் ரஹ்மானின் மிரட்டலான சுழற்பந்து வீச்சில் தடுமாறிய செயின்ட் லூசியா கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ஓட்டங்களே எடுத்தது.&nbsp;</p><h2>குயிண்டன் டி காக்&nbsp;அதிரடி </h2><p>
பின்னர் துடுப்பாடிய பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணியில் பிரண்டன் கிங் (22), ஸகாரி கார்டர் (32) நல்ல தொடக்கம் அமைத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be943bed-66a9-4742-bada-fa8329dfd53d/26-6a9e9e8b1f12f.webp' /></p><p>

அடுத்து கைகோர்த்த ரிவால்டோ கிளார்க், குயிண்டன் டி காக் 17.5 ஓவர்களிலேயே அணியை வெற்றி பெற வைத்தனர். </p><p>

குயிண்டன் டி காக் (Quinton de Kock) 31 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்களும், கிளார்க் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d5c5b1e-86df-4ac9-b75f-b81802ff047a/26-6a9e9e8a4e5ee.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் மலையேறுபவர்கள் பலர் பனிச்சரிவில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-horror-avalanche-11-climbers-1788779479"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-horror-avalanche-11-climbers-1788779479</id>
            <summary type="text">Climbers are swept away to their death in avalanche: மலை ஏறுபவர்கள் பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்துள்ளனர்.  
ரஷ்யாவின் வடக்கு காகசஸ் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Climbers are swept away to their death in avalanche: மலை ஏறுபவர்கள் பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்துள்ளனர். </p><p> 
ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் உள்ள கபர்தினோ-பால்காரியா பகுதியில், பனிச்சரிவு ஏற்பட்டதில் மலையேற்றக் குழுவினர் குறைந்தது 11 பேர் மரணமடைந்துள்ளனர்.</p><h2>ஆறு பேரின் நிலை</h2><p>
</p><p>ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில், ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பகுதியின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றான மிசிர்கி மலையில் பனிச்சரிவு ஏற்பட்டதில், மலையேற்ற வீரர்கள் 33 பேர் கொண்ட குழு அதில் சிக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91ef9cdf-6744-4203-a707-5949fb76cc1f/26-6a9e9bd93860a.webp' /></p><p> </p><p>திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9 மணி நிலவரப்படி, 10 மலையேறுபவர்கள் தாங்களாகவே மலையிலிருந்து கீழே இறங்கியிருந்தனர்; அதேவேளை 6 பேர்கள் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மற்ற ஆறு பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்று அவசரச் சேவைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். </p><p>தேடல் மற்றும் மீட்புப் பணியில் 50-க்கும் மேற்பட்ட அவசரக்காலப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்; இருப்பினும், கடினமான நிலப்பரப்பு மற்றும் மேலும் பனிச்சரிவுகள் ஏற்படும் அபாயம் ஆகியவை இப்பணிகளுக்குத் தடையாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p> </p><p>காணாமல் போன ஆறு மலையேற்ற வீரர்களுக்காக Mi-8 ரக ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்திப் பெரிய அளவிலான மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>காயமடைந்த ஆறு மலையேற்ற வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா-ஜார்ஜியா எல்லையில் சுமார் ஒன்பது மைல் நீளத்திற்குப் பரந்து விரிந்துள்ள, பனிப்பாறைகள் அடர்ந்த ஒரு பிரம்மாண்டமான மலைத் தடுப்பான பெசெங்கி பள்ளத்தாக்கில், அந்த மாபெரும் பனிச்சரிவு மலையேறுபவர்களை மொத்தமாக மூடியுள்ளது. </p><p>இரட்டைச் சிகரங்களைக் கொண்ட மிசிர்கி மலை மீது அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் ஏறுதல் பயணம், 1889-ஆம் ஆண்டில் பிரித்தானிய மலையேற்ற வீரரான ஹெர்மன் வூலியால் மேற்கொள்ளப்பட்டது. </p><p>இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஐரோப்பாவின் மிக உயரமான மலையில் உள்ள ஒரு பனிச்சறுக்கு விடுதியை மிகப்பெரிய பனிச்சரிவு ஒன்று சூழ்ந்துகொண்டது; இதனால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0b6153d-bf7c-4eb3-9c62-602a644b1ed4/26-6a9e9bd9e83d8.webp' /></p><p> </p><p>தெற்கு ரஷ்யாவில் உள்ள எல்ப்ரஸ் மலையில் வியாழக்கிழமையன்று, பனிப்பெருக்கெடுப்பு ஒன்று மலைச்சரிவில் அதிவேகமாகக் கீழே பாய்ந்து வருவதைக் காணொளி ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>5,642 மீற்றர் உயரமுள்ள மவுண்ட் எல்ப்ரஸ் ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரமாகும்; இது சவாலானதாக இருப்பினும், மலையேற்றத்திற்குப் பிரபலமான ஒரு இடமாகும். </p><p>இம்மலையில் ஆண்டுதோறும் சுமார் 15 முதல் 30 பேர் மரணமடைகின்றனர்; இவர்களில் பலர், திடீர் வானிலை மாற்றங்களால் சிக்கிக்கொள்ளும், போதிய முன்னேற்பாடுகள் இல்லாத மலையேறுபவர்கள் ஆவர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T11:08:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரியும் விவகாரம்: வாக்கெடுப்பு குறித்த தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/albertans-go-to-vote-on-october-19-for-seperation-1788778873"></link>
            <id>https://news.lankasri.com/article/albertans-go-to-vote-on-october-19-for-seperation-1788778873</id>
            <summary type="text">Albertans go to the polls on October 19 to vote on whether Alberta should stay with Canada or leave: ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Albertans go to the polls on October 19 to vote on whether Alberta should stay with Canada or leave: ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லது பிரிவதா என்பது தொடர்பில் அடுத்த மாதம் சில முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள்.
</p><p>

ஆல்பர்ட்டா மாகாணத்தை கனடாவிலிருந்து பிரித்து தனி நாடாக்குவதில் ஆல்பர்ட்டா மாகாண மக்களில் ஒரு பிரிவினர் உறுதியாக உள்ளார்கள்.
</p><h3>
அடுத்த மாதம் சில முடிவுகள்
</h3><p>
இந்நிலையில், கனடா மாகாணம் பிரிவது தொடர்பில் அக்டோபர் மாதம் 19ஆம் திகதி வாக்கெடுப்பு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6703a8d0-90f1-48cb-8558-ec9657a6d37b/26-6a9e997b2eea2.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், அந்த வாக்கெடுப்பில், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவதா என்னும் கேள்விகள் நேரடியாக கேட்கப்படப்போவது இல்லை.
</p><p>
மாறாக, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவது தொடர்பில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டுமா என்னும் கேள்விகள்தான் கேட்கப்பட உள்ளன.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், ஆல்பர்ட்டா பிரிவதற்கு ஆதரவளிக்கும் அமைப்பொன்று, வாக்கெடுப்பில் கனடாவிலிருந்து பிரிவது என ஆல்பர்ட்டா மக்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், ஆல்பர்ட்டாவில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தொடர்பான விடயங்களைக் கூறும் 214 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cce7904-0608-4463-8dc6-7ccb28b429df/26-6a9e997bd85df.webp' /></p><p>
ஏற்கனவே ஆல்பர்ட்டா மாகாணம் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது, அப்படியிருக்கும் பட்சத்தில், அது பிரிவதால் எதுவும் நின்றுவிடப்போவதில்லை என்கிறார்கள் ஆதரவாளர்கள்.
</p><p>
ஆனாலும், ராணுவம், ஆல்பர்ட்டாவிலிருந்து கனடாவின் பிற பகுதிகளுக்கு போக்குவரத்து, கடன், மின்சாரம், எரிபொருள் போன்ற விடயங்கள், ஓய்வூதியம், எல்லைகள், சொத்துக்கள் போன்ற விடயங்கள் குறித்து கனடாவுடனும், பூர்வக்குடியினர் உள்ளிட்ட மற்றவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியிருக்கும் என்கிறார்கள் பிரிவதை ஆதரிப்பவர்கள்.</p><p>

எதிர்ப்பவர்களோ, பிரிந்தால் பிரிந்ததுதான், அதற்குப் பிறகு பேச்சுவார்த்தையெல்லாம் எடுபடாது என்கிறார்கள்.

ஆக, என்ன நடக்கப்போகிறது என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரியலாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:01:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/protest-against-asylum-seekers-in-portsmouth-1788773765"></link>
            <id>https://news.lankasri.com/article/protest-against-asylum-seekers-in-portsmouth-1788773765</id>
            <summary type="text">Hundreds of protesters gathered in Portsmouth against asylum seekers: போர்ட்ஸ்மௌத் துறைமுகத்தில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக திரண்ட ஆர்ப்பாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hundreds of protesters gathered in Portsmouth against asylum seekers: போர்ட்ஸ்மௌத் துறைமுகத்தில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் பெரும் பரபரப்பு உருவானது.
</p><p>

நேற்றிரவு, சிறுபடகொன்றில் வந்துகொண்டிருந்த சுமார் 140 புகலிடக்கோரிக்கையாளர்களை, அதிகாரிகள், போர்ட்ஸ்மௌத் துறைமுகத்துக்கு அழைத்துவருவதாக செய்தி பரவியுள்ளது.
</p><h3>
துறைமுகத்தில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்</h3><p>

சிறிது நேரத்தில், நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு வந்து குவிந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da92eda1-1884-46d1-b959-07faac35cc4c/26-6a9e85864f7d0.webp' /></p><p>
அதிகாரிகள் அந்த புகலிடக்கோரிக்கையாளர்களை Manston என்னுமிடத்திலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் பரிசீலனை மையத்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள், புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணிக்கும் வாகனங்கள் நகராமல் தடுத்ததாக கூறப்படுகிறது.</p><p>

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதாகவும், பொலிஸ் வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.</p><p></p><p>

பின்னர், அதிகாலை 3.00 மணியளவில், கலைந்துபோக உத்தரவிடும் ஆணையுடன் வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்துபோக அதிகாரிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துபோயிருக்கிறார்கள்.
</p><p>
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில், டேனியல் தாமஸ் என்பவரும் ஒருவர்.

சில மாதங்களுக்கு முன், பிரித்தானியாவிலிருந்து சிலர் பிரான்சுக்கே சென்று, அங்கிருந்த சிறுபடகுகளையும், இயந்திரங்களையும் அடித்து நொறுக்கிய சம்பவம் நினைவிருக்கலாம்.</p><p>

அவர்களில், முதன்மையானவர் இதே தாமஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T10:35:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ஜேர்மனியின் AfD: வெளிப்படையாக எச்சரித்த பிரான்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/afd-thanks-elon-musk-france-warns-1788776573"></link>
            <id>https://news.lankasri.com/article/afd-thanks-elon-musk-france-warns-1788776573</id>
            <summary type="text">Germany’s far-right AfD thanks Elon Musk: ஜேர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான AfD, எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தது. 
ஜேர்மனியின் Saxony-Anhalt மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany’s far-right AfD thanks Elon Musk: ஜேர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான AfD, எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தது. </p><p>
ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றியை அடுத்து, தீவிர வலதுசாரி கட்சியான AfD-ன் முதன்மை வேட்பாளர், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.</p><h2>நன்றி</h2><p>
</p><p>ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் தங்கள் ஆதரவை இருமடங்கிற்கும் மேல் உயர்த்தியுள்ள AfD, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜேர்மனியில் மாகாண அளவில் அதிகாரத்தைக் கைப்பற்றும் முதல் தீவிர வலதுசாரி கட்சியாக உருவெடுக்கும் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34d7fa32-31f2-4440-b939-59a3e6ff6f66/26-6a9e907f5f751.webp' /></p><p> </p><p>ஞாயிற்றுக்கிழமை இரவு, AfD கட்சியின் முதன்மை வேட்பாளரான உல்ரிச் சீக்மண்ட் (Ulrich Siegmund), உங்கள் ஆதரவிற்கும், தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தெளிவான மற்றும் மிக முக்கியமான கண்ணோட்டத்திற்கும் நன்றி தெரிவித்து சமூக ஊடகப் பக்கத்தில் மஸ்க்கிற்கு நன்றி கூறியுள்ளார்.</p><p> அத்துடன், வலுவான மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புக்கான வாய்ப்பை மிகவும் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் Saxony-Anhalt மாகாணத் தேர்தல் கணிப்பின் ஸ்கிரீன்ஷாட்டை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் பதிவிட்டிருந்தார்.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, ரஷ்ய ஜனாதிபதியின் தூதர் கிரில் டிமிட்ரியேவ், ட்ரம்ப்பின் பதிவினை மீள் பதிவிட்டு, யதார்த்தவாதப் போக்குடைய AfD கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்று அதைப் பாராட்டினார். </p><p>ரஷ்ய ஆதரவு AfD உக்ரைனுக்கான ஆதரவை நிறுத்துமாறும், உக்ரைனியர்களுக்கு இனி அகதி அந்தஸ்து வழங்கப்படக்கூடாது என்றும் ஜேர்மன் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்துள்ளது. </p><p>இதனிடையே, அமோக வெற்றி பெற்ற போதிலும், AfD பெரும்பான்மையைப் பெறுவதில் சற்று பின்தங்கியுள்ளது. இறுதி முடிவுகளின்படி, 83 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 39 ஆசனங்களைப் பெற்ற AfD கட்சி, பெரும்பான்மைக்குத் தேவையான ஆசனங்களை விட மூன்று ஆசனங்கள் குறைவாகவே பெற்றுள்ளது. </p><p>பெர்லினுக்கு மேற்கே சுமார் 21 லட்சம் மக்கள் வசிக்கும் Saxony-Anhalt மாகாணத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற வாக்குகளை விட இருமடங்கிற்கும் அதிகமாக, அதாவது 43.8 சதவீத வாக்குகளை AfD கட்சி பெற்றுள்ளது.</p><h2>அந்நிய வெறுப்பு</h2><p> </p><p>இந்த நிலையில், பிரான்ஸின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சர் பெஞ்சமின் ஹடாட், இந்த வெற்றியை ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான தருணம் என்று குறிப்பிட்டதுடன், தேசியவாதமும் அந்நிய வெறுப்பும் ஒருபோதும் தீர்வாக அமையாது என்றும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79293f88-119c-4962-886c-681b0e08bd83/26-6a9e908012dd6.webp' /></p><p> </p><p>அத்துடன், கோபம், கவலைகள், அச்சங்கள் ஆகியவற்றை நாம் பணிவுடன் செவிமடுத்து, அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றார். நமது வரலாற்றை நம்மால் மறக்க முடியாது. பிரான்சும் ஜேர்மனியும் எடுத்த முடிவுகளுக்குப் பின்னால் உள்ள அர்த்தம் இதுதான் என்றார். </p><p>போலந்தின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவிக்கையில், போலந்தில், முட்டாள்கள் அல்லது துரோகிகள் மட்டுமே ஜேர்மனியில் AfD-யின் வெற்றியைக் கண்டு மகிழ முடியும் என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T10:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயது சிறுமி உட்பட 6 பேர் பலி: 306 ட்ரோன்களை இடைமறித்த ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-said-intercepted-306-ukrainian-drones-1788776005"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-said-intercepted-306-ukrainian-drones-1788776005</id>
            <summary type="text">Russia said intercepted 306 ukrainian drones: உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யா மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியாவில் 15 வயது சிறுமி உட்பட 6 பேர் பலியாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia said intercepted 306 ukrainian drones: உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யா மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியாவில் 15 வயது சிறுமி உட்பட 6 பேர் பலியாகினர்.</p><p> 

ரஷ்யா மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியா பகுதிகளை குறிவைத்து, உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ஆறு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>உக்ரைன் ட்ரோன் தாக்குதல்</h2><p>
ரஷ்யாவின் பெல்கோரோட் மற்றும் பெர்ம் பிராந்தியங்கள் மற்றும் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியா ஆகிய பகுதிகளை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இதில் எல்லை நகரமான Grayvoron-யில் ஒருவர் கொல்லப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31bac478-120f-473a-883d-e63fa26fe882/26-6a9e8e48acffd.webp' /></p><p></p><p> பெல்கோரோட் பிராந்தியத்தில் கார் ஒன்றின் மீது ட்ரோன் மோதியதில் ஒரு ஆணும், பெண்ணும் உயிரிழந்ததாக உள்ளூர் அவசரகால தலைமையகம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதேபோல் பெர்ம் பிராந்தியத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ட்ரோன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் ஆளுநர் டிமிட்ரி மஹோனின் தெரிவித்தார்.&nbsp;</p><h2>15 வயது சிறுமி&nbsp;பலி</h2><p>

இணைக்கப்பட்ட கிரிமியாவில், செவாஸ்டோபோல் துறைமுக நகரில் இரவு நேரத்தில் நடந்த தாக்குதலில் 15 வயது சிறுமியும், ஒரு ஆணும் கொல்லப்பட்டனர்.</p><p>

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை மாலைக்கும் திங்கட்கிழமை காலைக்கும் இடையில் ரஷ்யா மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியா முழுவதும் 306 உக்ரேனிய ட்ரோன்களை இடைமறித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ceeba47-b60d-40ad-b8fe-cc9424e8c09e/26-6a9e8e4961911.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p><br>]]></content>
            <updated>2026-09-07T10:10:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திமுக எம்.பியின் ஹொட்டலில் அடைத்து மிரட்டப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் - சட்டமன்றத்தில் சொன்ன அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/aadhav-says-2-iuml-mla-s-hostage-in-dmk-mp-hotel-1788772387"></link>
            <id>https://news.lankasri.com/article/aadhav-says-2-iuml-mla-s-hostage-in-dmk-mp-hotel-1788772387</id>
            <summary type="text">minister aadhav arjuna satys2 IUML mla&#039;s hostage in dmk mp hotel: 2 IUML எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்ட ஹொட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடையது என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>minister aadhav arjuna satys2 IUML mla's hostage in dmk mp hotel: 2 IUML எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்ட ஹொட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடையது என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். </p><h3>

ஹொட்டலில் அடைத்து மிரட்டப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்கள்
</h3><p>
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாருக் பாஷா, "திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை திமுகவினர் மிரட்டி கோடி கோடியாக பணம் கொடுப்பதாகவும் அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் கூறினர் என நான் கூறியதை திமுகவினர் திரித்து, தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறி வருகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61f06031-df84-42fb-8357-dee01b611687/26-6a9e802657bdf.webp' /></p><p> 

நான் யாரையும் தவறாக பேசவில்லை. மே 7ஆம் தேதி அதிமுக தலைவரை முதல்வராக்க திமுக திட்டமிட்டிருந்தது. அதை எங்கள் தலைவர் காதர் மொய்தீன் ஏற்க மறுத்தார். அவர் பேட்டியில் சொன்னதைதான் நான் எங்கள் கட்சி கூட்டத்தில் சொன்னேன்" என பேசினார்.&nbsp;</p><p></p><p>

இதனைத்தொடர்ந்து பேசிய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் ஷாஜகான், "இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. மே 7 ஆம் திகதி, அதிமுக தலைவரை முதல்வராக்கலாம் என திமுகவினர் முடிவு செய்து எங்கள் தலைவர் காதர் மொய்தீனிடம் சொன்னது.
</p><p>
அப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக ஆட்சி செய்ய ஆதரிக்க மாட்டோம் என எங்கள் தலைவர் சொன்னார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51bbaf0-203f-41ba-9a90-1b1eeafd0c2c/26-6a9e8025a36df.webp' /></p><p>இதையடுத்து முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் மே 8ஆம் தேதி ஒரு ஹொட்டலில் அடைத்து வைத்திருந்தார்கள்.

எங்களை அடைத்து வைத்தது யார்? மிரட்டி காவல் காத்தது யார், நாங்கள் வெளிப்படையாக பேசினால் யாருமே அரசியல் செய்ய முடியாது. ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதால்தான் தவெகவுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம்" என பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71e22161-85d4-4cc0-9214-acc86905dbee/26-6a9e8024eb506.webp' /></p><p> 

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "IUML எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைக்கப்பட்ட ஹொட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடையது. 2 எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்தது குறித்து விசாரணை நடத்தப்படும்" என் பேசியுள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T09:17:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[துலீப் இறுதிப்போட்டியில் இரட்டைசதம் அடித்த இஷான் கிஷன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ishan-kishan-250-runs-in-duleep-trophy-2026-1788771921"></link>
            <id>https://news.lankasri.com/article/ishan-kishan-250-runs-in-duleep-trophy-2026-1788771921</id>
            <summary type="text">Ishan Kishan double century in duleep trophy: துலீப் டிராபி இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணித்தலைவர் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசினார். 

சேப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p><p>Ishan Kishan double century in duleep trophy: துலீப் டிராபி இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணித்தலைவர் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசினார்.</p><p> 

சேப்பாக்கத்தில் நடந்து வரும் துலீப் டிராபி இறுதிப்போட்டியில், கிழக்கு மண்டல அணித்தலைவர் இஷான் கிஷன் அதிரடியாக இரட்டை சதம் விளாசினார்.&nbsp; </p><h2>குமார் குஷாக்ரா </h2><p>

கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b76592a6-fc15-4552-a83d-6a19caca780e/26-6a9e7fd41def4.webp' />&nbsp;</p><p></p><p>

முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தை தொடங்கிய கிழக்கு மண்டல அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.</p><p>

வைபவ் சூர்யவன்ஷி 44 ஓட்டங்களும், அபிமன்யு ஈஸ்வரன் 72 ஓட்டங்களும், ஷிகார் மோகன் 85 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.</p><h2>இஷான் கிஷன் இரட்டை சதம்</h2><p>
</p><p>
அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய குமார் குஷாக்ரா 132 பந்துகளில் 5 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.</p><p> </p>மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடி வரும் அணித்தலைவர் இஷான் கிஷன் (Ishan Kishan) இரட்டை சதம் அடித்தார்.</p><p>மொத்தம் 301 பந்துகளை எதிர்கொண்ட இஷான் கிஷன் 7 சிக்ஸர்கள், 27 பவுண்டரிகளுடன் 250 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c3d97b0-c9e1-4bbc-b68a-bec4cd364a69/26-6a9e7fd4cfc6a.webp' /></p><p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p></p>]]></content>
            <updated>2026-09-07T09:08:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தார் ஏர்வேஸ் விமானிகள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்... முழுத் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/qatar-airways-pilots-earn-1788772049"></link>
            <id>https://news.lankasri.com/article/qatar-airways-pilots-earn-1788772049</id>
            <summary type="text">How Much Do Qatar Airways Pilots Earn: கத்தார் ஏர்வேஸ் விமானிகள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?
2026-ஆம் ஆண்டில் கத்தார் ஏர்வேஸ் விமானிகள், விமானத் துறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>How Much Do Qatar Airways Pilots Earn: கத்தார் ஏர்வேஸ் விமானிகள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?
</p><p>2026-ஆம் ஆண்டில் கத்தார் ஏர்வேஸ் விமானிகள், விமானத் துறையிலேயே மிக அதிக சம்பளம் பெறுபவர்களாக உள்ளனர்.</p><h2>கவர்ச்சிகரமான தேர்வாக</h2><p>
</p><p>அனுபவம் வாய்ந்த விமானி ஒருவர் ஆண்டுக்கு QAR 1.6 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4.14 கோடி) வரை சம்பாதிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68bd3940-58c1-4d95-ae8b-d154496ffa4b/26-6a9e7ed362a03.webp' /></p><p> </p><p>இதற்கிடையில், முதல் அதிகாரிகள் (First officers) தங்கள் அனுபவம், விமானத்தின் வகை மற்றும் பறக்கும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து ஆண்டுக்கு 660,000 கத்தார் ரியால் (தோராயமாக ரூ. 1.71 கோடி) வரை வருமானம் ஈட்ட முடியும். </p><p>இந்தப் புள்ளிவிவரங்கள், சர்வதேச விமானப் பயண வாய்ப்புகளைத் தேடும் விமானப் போக்குவரத்துத் துறையினருக்கு, கத்தார் ஏர்வேஸில் உள்ள விமானிப் பணிகளை ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக ஆக்குகின்றன. </p><p>இந்த விமான நிறுவனம் தோஹாவைத் தலைமையிடமாகக் கொண்டு, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஓசியானியா ஆகிய பகுதிகளில் விமான சேவைகளை இயக்குகிறது.</p><p></p><p> </p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், கத்தார் ஏர்வேஸின் விமானிகளுக்கான சலுகைத் தொகுப்புகள் அடிப்படைச் சம்பளத்தையும் தாண்டியவை.</p><p> விமானிகளுக்கான வீட்டு வசதி, பயணச் சலுகைகள், போக்குவரத்து உதவி மற்றும் சர்வதேசப் பயணங்களின் இடையிலான தங்குதல்களுக்கான படிகள் ஆகியவற்றையும் பெறலாம். கத்தாரின் வேலைவாய்ப்பு நடைமுறையின் கீழ், இவர்களது ஊதியம் வரிக்கு உட்படாததுமாகும். </p><p>கத்தார் ஏர்வேஸில் பணிபுரியும் ஃபர்ஸ்ட் ஆபீசர்கள் (First officers), 2026-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 3,60,000 கத்தார் ரியால் (சுமார் ரூ. 93 லட்சம்) முதல் 6,60,000 கத்தார் ரியால் (சுமார் ரூ. 1.71 கோடி) வரை வருமானம் ஈட்ட முடியும்.
</p><p>புதிதாகப் பணியில் சேரும் first officers பொதுவாக ஊதிய வரம்பின் குறைந்தபட்ச அளவிலேயே ஊதியம் பெறுகின்றனர். அதிக அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் நீண்ட தூர விமானங்களை இயக்கும் விமானிகள் அதிக வருமானம் ஈட்ட முடியும்; குறிப்பாக, மாதாந்திர விமான இயக்க நேரம் அதிகமாக இருக்கும்போது இது சாத்தியமாகும்.</p><h2>ஊதிய வரம்பின் உயர் நிலை</h2><p> </p><p>கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் தொழில் ரீதியான முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. அனுபவம் பெறும்போது, ​​'ஃபர்ஸ்ட் ஆபீசர்'கள் உயர் பொறுப்புகளுக்குச் செல்லவும், இறுதியில் விமானி (Captain) பதவிகளை அடையவும் முடியும். </p><p>கத்தார் ஏர்வேஸ் விமானிகள் ஆண்டுக்கு 9,00,000 கத்தார் ரியால் (சுமார் ரூ. 2.33 கோடி) முதல் 1.6 மில்லியன் கத்தார் ரியால் (சுமார் ரூ. 4.14 கோடி) வரை வருமானம் ஈட்டக்கூடும் என்று கூறப்படுகிறது. </p><p>விமானத்தின் வகை, பணி மூப்பு மற்றும் பறக்கும் நேரம் ஆகியவை இறுதித் தொகையைத் தீர்மானிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏர்பஸ் A350, ஏர்பஸ் A380, போயிங் 777 மற்றும் போயிங் 787 போன்ற விமானங்களை இயக்கும் விமானிகள், ஊதிய வரம்பின் உயர் நிலையில் இருக்கக்கூடும். </p><p>பயிற்சி மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் போன்ற பணிகளுக்காகச் சில விமானிகள் கூடுதல் ஊதியத்தையும் பெறுகிறார்கள். கத்தார் ஏர்வேஸ் விமானிகள் நிறுவனத்தின் தங்குமிட வசதி அல்லது வீட்டு வசதிக்கான உதவி, மருத்துவ மற்றும் காப்பீட்டுப் பாதுகாப்பு, போக்குவரத்துச் சலுகைகள் மற்றும் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கான சலுகை விலையிலான பயண வசதி ஆகியவற்றைப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87967d81-76a7-4c8b-a59a-949d254017f8/26-6a9e7ed4211a3.webp' /></p><p> </p><p>சர்வதேச விமானங்களை இயக்கும்போது விமானிகளுக்கு 'லேஓவர்' (layover) எனப்படும் இடைவேளைக் காலப் படிகளும் வழங்கப்படுகின்றன. மேலும், கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் வழக்கமான சிமுலேட்டர் (simulator) பயிற்சியையும் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. </p><p>கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ஏர்பஸ் மற்றும் போயிங் ரக விமானங்களின் பெரிய தொகுப்பை இயக்குகிறது. இதன் விமானத் தொகுப்பில் 27 ஏர்பஸ் A320-200, ஆறு A321neo, ஐந்து A330-200, பத்து A330-300, 34- A350-900 மற்றும் 28- A350-1000 ரக விமானங்கள் அடங்கும். </p><p>இது எட்டு ஏர்பஸ் A380-கள், ஏழு போயிங் 777-200LR-கள், 57 போயிங் 777-300ER-கள், 32 போயிங் 787-8-கள் மற்றும் 27 போயிங் 787-9-களையும் இயக்குகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T09:04:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளம்... நூலிழையில் உயிர் தப்பிய சுவிஸ் பெண்ணின் திகில் அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-woman-escapes-from-nepal-floods-1788760024"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-woman-escapes-from-nepal-floods-1788760024</id>
            <summary type="text">Swiss woman escapes from Nepal floods: சுவிஸ் நாட்டவரான பெண்ணொருவர், நேபாளப் பெருவெள்ளத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.


சுவிஸ் நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss woman escapes from Nepal floods: சுவிஸ் நாட்டவரான பெண்ணொருவர், நேபாளப் பெருவெள்ளத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p>


சுவிஸ் நாட்டவரான நட்டாலியா (Natalia Rjumin-Girardet, 70), வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு சுற்றுலாப்பயணிகளுடன் கைலாச மலைக்கு புனித யாத்திரை சென்றிருந்தார்.
</p><h3>
நூலிழையில் உயிர் தப்பிய அனுபவம்</h3><p>

அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென வழியில் நிற்க, அவர்களுடைய சமையல்காரர் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0be74078-13b4-4f23-b155-b66e60844c21/26-6a9e4fd975e61.webp' /></p><p>
அனைவரும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக வெளியே எட்டிப் பார்க்க, தொலைவில் ஒரு மலையே பெயர்ந்துவருவதை கவனித்துள்ளார் அவர்.</p><p>

அப்போதுதான் நிலச்சரிவு ஏற்படுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்துள்ளது.
</p><p>
உடனடியாக உடைமைகளைக் கூட எடுக்காமல், வேகவேகமாக அனைவரும் பேருந்திலிருந்து இறங்கியுள்ளார்கள்.
</p><p>
சரியாக அவர்களுடைய பேருந்து நின்ற இடத்தின் அருகில் படிக்கட்டுகள் இருக்க, படிக்கட்டுகளில் ஏறி உயரமான ஒரு இடத்தை அடைந்துள்ளார்கள் அனைவரும்.&nbsp;</p><p></p><p>

அங்கிருந்து கீழே பார்க்கும்போது, வீடுகளும், கார்களும், ஏன் பேருந்துகளும் கூட அடித்துச் செல்லப்படும் பயங்கர காட்சிகளை கண்ணால் கண்டதை திகிலுடன் விவரிக்கும் நட்டாலியா, தாங்கள் உயிர் தப்பியது கடவுள் அனுக்கிரகம்தான் என்கிறார்.
</p><p>
ஆம், அன்றைய நிலவரப்படி, 1,100 உடல்களை மீட்புக் குழுக்கள் மீட்டிருந்தன, மேலும் 4,500 பேர் வரை மாயமாகியிருந்தார்கள்.
</p><p>
மலை உச்சியிலிருந்த சேமிப்புக் கிடங்கொன்றில், மழை, குளிருக்கு நடுவே அனைவரும் இரவைக் கழிக்க, மறுநாள் காலை ராணுவம் ஹெலிகொப்டர் ஒன்றின் உதவியுடன் அவர்களை மீட்டு காட்மாண்டுவுக்குக் கொண்டு சென்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47fb8d94-fe2e-4f79-804b-3e60f1069b13/26-6a9e4fda287d4.webp' /></p><p>
நட்டாலியா தனது மொபைலை பேருந்திலேயே தவறவிட்டிருந்ததால், வேறொரு பெண்ணிடம் தனது சகோதரியின் மொபைல் எண் இருக்க, அவரது மொபைல் உதவியுடன் தன் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு, தான் பாதுகாப்பாக இருப்பதை தெரியப்படுத்த அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.</p><p>

ஆகத்து மாதம் 26ஆம் திகதியை மறக்கமுடியாது, அது நான் மறுஜென்மம் எடுத்த நாள் என்கிறார் நட்டாலியா!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T08:55:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடந்தேவிட்டது... மாகாணத் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி அமோக வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/far-right-afd-victory-in-east-german-state-vote-1788768416"></link>
            <id>https://news.lankasri.com/article/far-right-afd-victory-in-east-german-state-vote-1788768416</id>
            <summary type="text">Anti immigrant party claims crushing victory in east German state vote: மாகாணத் தேர்தல் ஒன்றில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஒன்று அமோக வெற்றி பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Anti immigrant party claims crushing victory in east German state vote: மாகாணத் தேர்தல் ஒன்றில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஒன்று அமோக வெற்றி பெற்றுள்ளது.
</p><p>

ஜேர்மன் கட்சிகள் பலவும், பொதுமக்களில் ஒரு பிரிவினரும் பயந்ததுபோலவே, ஜேர்மன் மாகாணமொன்றில் நேற்று நடைபெற்ற தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஒன்று அமோக வெற்றி பெற்றுவிட்டது.
</p><h3>
புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி அமோக வெற்றி
</h3><p>
ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் நேற்று, அதாவது, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி, தேர்தல் நடைபெற்றது.
</p><p>
அந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cd78e8d-2b43-4a54-9f81-f1859a964cd9/26-6a9e70a1b008d.webp' /></p><p>
அதைத் தொடர்ந்து, தான் Saxony-Anhalt மாகாணத்திற்கு நேரடியாகச் சென்று, யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யாமலிருக்கும் அம்மாகாண வாக்காளர்களை AfD கட்சிக்கு வாக்களிக்காமல் தடுக்கும் வகையில் அவர்களிடம் பேச இருப்பதாக தெரிவித்திருந்தார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.</p><p>

ஆனால், தேர்தலில் 44 சதவிகித வாக்குகளைப் பெற்று AfD கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.</p><p>

ஆளும், சேன்ஸலர் மெர்ஸின் CDU கட்சிக்கோ 18 சதவிகித வாக்குகள்தான் கிடைத்துள்ளன.&nbsp;</p><p></p><p>
அதனால், AfD கட்சிக்கு ஆதரவளிக்கக்கூடாது என்பதற்காக கைகோர்த்த பல்வேறு கட்சிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
</p><p>
AfD கட்சியோ, ரஷ்ய ஆதரவுக் கட்சியான BSW கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
</p><p>
அப்படி, AfD கட்சி ஆட்சி அமைக்குமானால், Saxony-Anhalt மாகாணம், தீவிர வலதுசாரி, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஆளும் முதல் ஜேர்மன் மாகாணமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T08:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமேசான் சரக்கு விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-dies-in-amazon-cargo-plane-crash-in-miami-1788768013"></link>
            <id>https://news.lankasri.com/article/5-dies-in-amazon-cargo-plane-crash-in-miami-1788768013</id>
            <summary type="text">5 dies in amazon cargo plane crash in miami airport: மியாமி சர்வதேச விமான நிலையத்தில், அமேசான் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 5...</summary>
            <content type="html"><![CDATA[<p>5 dies in amazon cargo plane crash in miami airport: மியாமி சர்வதேச விமான நிலையத்தில், அமேசான் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். </p><h3>

அமேசான் சரக்கு விமான விபத்து
</h3><p>
அமேசான் நிறுவனத்தின் போயிங் 767-300 ரக சரக்கு விமானம் இன்று புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் உள்ள லூயிஸ் முனோஸ் மரின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38e7d3ca-751f-4c30-8e41-33c7353c1feb/26-6a9e6f0e826d2.webp' /></p><p>

இந்த விமானமானது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.</p><p> 

அதைத்தொடர்ந்து, விமான நிலையத்தின் மூலைவிட்ட ஓடுபாதையைத் தாண்டிச் சென்று, தரையில் இருந்த பல வாகனங்கள் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
</p><p>
இந்த விபத்தில், குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>வாகனத்தின் மீது மோதியதில் தீப்பற்றி கரும்புகை எழுந்துள்ளது. 60 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a41d693-5ded-4702-92ef-b15b4a35838b/26-6a9e6f0f3cd4e.webp' /></p><p>

விபத்து நடந்த உடனேயே விமான நிலையம் அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தியது. இதனால் சுமார் 250 விமானங்கள் தாமதமாகியுள்ளது.
</p><p>
விபத்துக்குள்ளான இந்த விமானம், 32 ஆண்டுகள் பழமையான போயிங் 767-300 சரக்கு விமானம் என்றும், அது 1994 முதல் 2015 வரை பல்வேறு விமான நிறுவனங்களுக்குப் பயணிகள் விமானமாகச் செயல்பட்டு வந்தது எனவும், 2015ம் ஆண்டுக்குப் பின் சரக்கு விமானமாக மாற்றப்பட்டது எனவும் தெரிய வந்துள்ளது. </p><p>

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், "எந்தவொரு விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என தெரிவித்துள்ளது. </p><p>

இந்த ஓடுபாதை விலகல் விபத்து குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளோம் என NTSB தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T08:00:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்குரிய மாற்றங்கள்.. உலக வரைபடத்தில் சாய்ந்திருக்கும் அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-appear-slightly-tilted-in-new-world-map-1788766291"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-appear-slightly-tilted-in-new-world-map-1788766291</id>
            <summary type="text">Australia appear slightly tilted in new world map: உலக வரைபடத்தில் புதிய வடிவத்தில் அவுஸ்திரேலியா சற்று சாய்ந்து காட்சியளிப்பது பேசுபொருளாகியுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Australia appear slightly tilted in new world map: உலக வரைபடத்தில் புதிய வடிவத்தில் அவுஸ்திரேலியா சற்று சாய்ந்து காட்சியளிப்பது பேசுபொருளாகியுள்ளது.</p><p>

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட புதிய உலக வரைபடத்தில், அவுஸ்திரேலியா அளவில் பெரியதாகவும், வலதுபுறமாக சற்று சாய்ந்தும் காட்சியளிக்கவுள்ளது.&nbsp;</p><h2>புதிய&nbsp;உலக வரைபடம்</h2><p>
உலகின் நிலப்பரப்புகளை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் ஒரு முயற்சியாக, Equal Earth எனப்படும் வரைபடத் திட்டத்திற்கு ஆதாரவாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வாக்களித்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75766a37-9cdd-421d-8a99-17972f025421/26-6a9e753053c2f.webp' /></p><p></p><p>

ஃப்ளெமிஷ் வரைபடவியலாளர் ஜெரடஸ் மெர்கேட்டரால் 1569-யில் வடிவமைக்கப்பட்ட, பல நூற்றாண்டுகள் பழமையான மெர்கேட்டர் வரைபடத்திற்கு பதிலாக, புதிய வரைபடத்தை பயன்படுத்துமாறு ஐ.நா உறுப்பு நாடுகளை வலியுறுத்தியது.
</p><p>

அதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியா உலக வரைபடத்தில் புதிய வடிவத்தை பெறுகிறது. ஐ.நா-வினால் அங்கீகரிக்கப்பட்ட அந்த வரைபடத்தில் அவுஸ்திரேலியா அளவில் பெரியதாகவும், வலதுபுறமாக சற்று சாய்ந்தும் காட்சியளிக்கவுள்ளது.
</p><p>
இதுவரை பெரும்பாலான மக்கள் அறிந்திருந்த தோற்றத்தில் இருந்து அவுஸ்திரேலியா குறிப்பிடத்தக்க வகையில் மாறுபட்டதாக தெரிகிறது.&nbsp;&nbsp;</p><h2>புதிய Equal Earth வரைபடம்&nbsp;</h2><p> 
மெர்கேட்டர் வரைபடம் கடற்கரைகளையும், திசைகளையும் நமக்கு நன்கு பரிச்சயமானதாக வைத்திருந்தாலும், அது நாடுகளை வட மற்றும் தென் துருவங்களுக்கு அருகில் நீட்டித்து, சில நாடுகள் உண்மையில் இருப்பதை விட பெரிதாக தோன்ற செய்கிறது.</p><p> 

 ஆனால், புதிய Equal Earth வரைபடம் நாடுகளை அவற்றின் உண்மையான அளவிற்கு நெருக்கமாகக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனினும் அவற்றின் வடிவங்களும், அளவுகளும் சற்றே வித்தியாசமாகத் தோன்றக்கூடும்.</p><p>இந்த மாற்றங்களுக்கு முன்னும் பின்னும் அவுஸ்திரேலியாவின் பக்கவாட்டு ஒப்பீடுகள் பயனர்களுக்குக் காட்டப்பட்ட பிறகு, அதன் புதிய தோற்றம் ரெட்டிட்டில் நகைச்சுவைகளைத் தூண்டியது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7909f01b-26ff-47c4-9c9e-6f2cdb514c60/26-6a9e75315dadb.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T07:28:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதயத்தை பாதுகாக்கும்: நண்டு சாப்பிடுவதன் நன்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/benefits-of-eating-crab-food-1788688884"></link>
            <id>https://news.lankasri.com/article/benefits-of-eating-crab-food-1788688884</id>
            <summary type="text">கடல் உணவுகளில் பலருக்கும் நண்டு மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்றாகும். பலரும் நண்டுகளை அதனுடைய சுவைக்காக விரும்பி சாப்பிடுகிறார். ஆனால், நண்டு இறைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடல் உணவுகளில் பலருக்கும் நண்டு மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்றாகும். பலரும் நண்டுகளை அதனுடைய சுவைக்காக விரும்பி சாப்பிடுகிறார். </p><p>ஆனால், நண்டு இறைச்சியில் நம் உடலுக்கு தேவையான அதிக அளவு சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துகளான கொழுப்பற்ற புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன என்று புகழ் பெற்ற ஊட்டச்சத்து நிபுணரும் மூத்த மருத்துவர் உளவியல் நிபுணரும் சொல்கிறார்கள்.</p><p>
 
இந்த நண்டில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக புரதம் இருப்பதால் நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பாகவும் நம்முடைய மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படியாக, நண்டு சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஆரோக்கிய நன்மைகள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0220f523-0e32-4ba3-b464-3c94c2885e2e/26-6a9d39f6b6a0b.webp' /></p><p> </p><h3>


இதயப் பாதுகாப்பு:</h3><h3>



 ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்:
</h3><p> நண்டு இறைச்சியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இதை நம்முடைய ரத்தத்தில் தேங்கி இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. மேலும், ரத்த நாளங்களில் ரத்தக் கட்டிகளை தடுக்கின்றன. ஆதலால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடிய அபாயத்தை குறைக்கிறது. </p><h3>


வைட்டமின் டி மற்றும் கால்சியம்: </h3><p>
இந்த நண்டு கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற முக்கிய கனிமங்கள் உள்ளது. அதனால் இவை நம்முடைய எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதோடு வயதாகும்போது ஏற்படக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு பலவீனப் பிரச்சனைகளைத் தடுக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/329b13cf-60ed-426a-a9d7-a61bfcd0d369/26-6a9d39f7725a9.webp' /></p><p>
</p><h3>

நினைவாற்றல் மேம்பாடு:
</h3><p>இந்த நண்டு இறைச்சியில் வைட்டமின் பி12 மற்றும் செலினியம் நிறைந்திருக்கிறது. இதை நம்முடைய மூளை செல்களை தூண்டி நினைவாற்றலையும் நம்முடைய கவனத்தையும் அதிகரிக்கிறது. அதோடு நம்முடைய மனச் சோர்வு மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. </p><h3>

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:</h3><p>

நண்டுகளில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்குகின்றன. செலினியம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, நீண்ட நாட்கள் இருந்து வந்த நோய்களை தடுக்கும் வழியாக பாதுகாப்பு கவசமாக மாறுகிறது.</p><h3>

 
உடல் எடை குறைப்பு: </h3><p>
இந்த நண்டு உணவில் கொழுப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. மற்றும் அவை தூய்மையான கொழுப்பற்ற புரதத்தை வழங்குகின்றன. ஆதலால், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசைகளை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த தீர்வாகவும் இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f960f1a3-cc84-4d25-a27e-2ed7440b9329/26-6a9d39f82e6f1.webp' /></p><p>
</p><h3>
 
நண்டுகளை உண்ணும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்: </h3><p>
ஒரு சிலருக்கு கடல் உணவு அல்லது சிப்பி வகைகளால் ஒவ்வாமை உள்ளவர்கள் நண்டுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல், நண்டுகளை சமைக்கும் போது அவற்றை நன்றாக கழுவி வேக வைக்க வேண்டும். </p><p>உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களும் குறைவான உப்பு மட்டும் எண்ணை பயன்படுத்தி அவற்றை குழம்பு அல்லது சூப் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். மேலும், நண்டு சுவையான உணவாக மட்டுமல்லாமல் சமச்சீரான ஊட்டச்சத்துக்களை அழித்து நம்முடைய உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T07:26:04+00:00</updated>
        </entry>
    </feed>
