<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-19T17:24:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ICU அறையில் நடந்த திருமணம் - தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-weds-partner-at-icu-for-moms-wish-1789834822"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-weds-partner-at-icu-for-moms-wish-1789834822</id>
            <summary type="text">Woman weds partner at ICU for mom’s wish: சாகும் தருவாயில் இருந்த தாயின் கடைசி ஆசையை மகள் நிறைவேற்றியுள்ளார்.

தாயின் கடைசி ஆசைஅமெரிக்காவின் புளோரிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman weds partner at ICU for mom’s wish: சாகும் தருவாயில் இருந்த தாயின் கடைசி ஆசையை மகள் நிறைவேற்றியுள்ளார்.
</p><h2>
தாயின் கடைசி ஆசை</h2><p>அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 81 வயதான டோன்னா கம்மிங்ஸ், Stage 4 கல்லீரல் புற்றுநோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.</p><p> அவர் தனது மகள் கேமி கம்மிங்ஸ் அவரது காதலர் சேண்டி ஆடம்ஸை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feab6d48-cf88-4358-b42f-18fb04fee808/26-6aaeb6479ae81.webp' /></p><h2>ICU அறையில் திருமணம்</h2><p>அந்த விருப்பத்தை நிறைவேற்ற, காமி தனது தாயின் ICU படுக்கையருகே திருமணம் செய்து கொண்டார். மருத்துவமனை ஊழியர்கள் ICU அறையை அழகாக அலங்கரித்து, கேக் மற்றும் பானங்களுடன் சிறிய குடும்ப விழாவை ஏற்பாடு செய்தனர்.</p><p>

கேமி, “என் தாயார் எப்போதும் சேண்டியை என் தேவதை என்று அழைத்தார். அவர் நன் திருமணம் செய்து கொண்டதை பார்க்க வேண்டும் என்பதே அவரது ஆசை” என்று கூறினார். </p><p>மேலும், “என் தாயார் எங்கள் குடும்பத்திற்காக பல தியாகங்கள் செய்தார். அவரின் இறுதி நாட்களில் அவரை மகிழ்விக்க இது தான் நான் செய்யக்கூடிய சிறந்த விடயம்” என்று உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce6e590-cc2e-49b8-a173-07510318d099/26-6aaeb64853c16.webp' /></p><p>திருமண விழாவுக்குப் பிறகு, டோன்னா ICU-வில் உயிரிழந்தார். கேமி, “இப்போது என் தாயார் வலியின்றி அமைதியாக இருக்கிறார்” என்று கூறினார்.
</p><p>
கேமி மற்றும் சேண்டி, வரும் ஏப்ரல் மாதத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பெரிய திருமண விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
இந்த நிகழ்வு, தாயின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் மகளின் அன்பை வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான கதையாக உலகம் முழுவதும் பரவிவருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T17:09:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டை மீறிய Google Gemini AI - 3 நிறுவனங்களை ஹேக் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-gemini-ai-hacks-firms-in-test-1789836010"></link>
            <id>https://news.lankasri.com/article/google-gemini-ai-hacks-firms-in-test-1789836010</id>
            <summary type="text">Google நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடல் Gemini குறித்து அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

மே மாதத்தில் நடைபெற்ற சைபர் பாதுகாப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Google நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடல் Gemini குறித்து அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
</p><p>
மே மாதத்தில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு சோதனையின் போது, Gemini தனது கட்டுப்படுத்தப்பட்ட சூழலை விட்டு வெளியேறி, மூன்று உண்மையான நிறுவனங்களின் நெட்வொர்க்கில் நுழைந்ததாக Google தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b148adb0-9af4-44ff-93a8-1b222d90d244/26-6aaebaebf271c.webp' /></p><p>இந்தச் சம்பவம், சோதனை நடத்தும் மூன்றாம் தரப்பு நிறுவனம் தவறுதலாக Gemini-க்கு இணைய அணுகலை வழங்கியதால் ஏற்பட்டது. </p><p>

ஆரம்பத்தில், Gemini ஒரு கற்பனை நிறுவனத்தை தாக்க வேண்டும் என்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் அந்த கற்பனை நிறுவனத்தின் பெயர், உண்மையான நிறுவனத்தின் பெயருடன் பொருந்தியதால், AI தவறுதலாக உண்மையான நிறுவனங்களின் நெட்வொர்க்கில் நுழைந்தது.
</p><p></p><p>Google-ன் அறிக்கையின்படி, இந்த ஹேக்கிங் சம்பவத்தால் எந்த நிறுவனத்திற்கும் சேதம் ஏற்படவில்லை. ஆனால், AI மாடல்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலை விட்டு வெளியேறி, இணையத்தில் சுதந்திரமாக செயல்படக்கூடிய அபாயம் இருப்பதை இது வெளிப்படுத்துகிறது.
</p><p>
இந்தச் சோதனையின் நோக்கம், Gemini எவ்வாறு சைபர் பாதுகாப்பு குறைகளை கண்டறிந்து பயன்படுத்துகிறது என்பதை மதிப்பிடுவதாகும். ஆனால் நிகழ்ந்த தவறுகள், AI-யின் சக்தி மற்றும் அபாயங்களை உலகளவில் விவாதிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன.</p><p>

AI மாடல்கள் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவது எதிர்காலத்தில் பெரிய அபாயமாக மாறக்கூடும். அதனால் சோதனைகள் மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T16:36:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கத்தை விற்று மனைவிக்காக iPhone 18 Pro வாங்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/delhi-man-sells-gold-for-iphone-18-pro-1789833230"></link>
            <id>https://news.lankasri.com/article/delhi-man-sells-gold-for-iphone-18-pro-1789833230</id>
            <summary type="text">Delhi man sells gold for iPhone 18 Pro: சமீபத்தில் வெளியான iPhone 18 சீரிஸ் மொபைல்களை பலரும் நெருக்கமானவர்களுக்கான பரிசாக வாங்கி மகிழ்ந்துள்ளனர்.

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Delhi man sells gold for iPhone 18 Pro: சமீபத்தில் வெளியான iPhone 18 சீரிஸ் மொபைல்களை பலரும் நெருக்கமானவர்களுக்கான பரிசாக வாங்கி மகிழ்ந்துள்ளனர்.
</p><h2>
அதிகாலை முதலே நீண்ட வரிசை</h2><p>நோய்டாவில் உள்ள DLF மால் ஆஃப் இந்தியா ஆப்பிள் ஸ்டோரில் iPhone 18 Pro விற்பனை தொடங்கிய முதல் நாளில், அதிகாலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்து புதிய போன் வாங்கிய வாடிக்கையாளர்களில் சிலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">MAN : I sold the gold passed down from my grandmother and great-grandmother to buy an iPhone 18 Pro Max for my wife. 🤯<br><br>REPORTER : What? 😱<br><br>MAN : Yes. The iPhone 18 Pro Max is more important than any gold.<br><br>He sold the gold not for a house, his child’s future, or an investment,…</p>&mdash; News Algebra (@NewsAlgebraIND) <a href="https://x.com/NewsAlgebraIND/status/2100911383542202566?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>தங்கத்தை விற்று iPhone 18 Pro</h2><p>அதில், டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்காக iPhone 18 Pro வாங்க தங்கத்தை விற்றதாக கூறினார்.

அவர், “முன்பு பணம் இல்லாததால் வாங்க முடியவில்லை. இப்போது வாங்க முடிகிறது. எதிர்காலத்தில் என்ன நிலைமை இருக்கும் தெரியாது. அதனால் மனைவிக்கு பரிசாக கொடுக்க விரும்பினேன்” என்று தெரிவித்தார்.</p><p>அவரது மனைவி முன்பு iPhone பயன்படுத்தியவர் அல்ல. ஆனால் புதிய Burgundy நிற மாடலை கேட்டதால், அவர் அதிகாலை முதலே ஆப்பிள் ஸ்டோருக்கு வந்தார்.
</p><p></p><h2>வருங்கால மனைவிக்கு iPhone 18 Pro&nbsp;பரிசு</h2><p>இந்த நிகழ்வு மட்டும் அல்லாமல், பஞ்சாபில் இருந்து வந்த மற்றொரு வாடிக்கையாளர் தனது வருங்கால மனைவிக்கு iPhone 18 Pro வாங்கியதோடு, தனக்காக iPhone 18 Pro Max-யும் வாங்கினார். இரண்டுக்கும் சேர்த்து ரூ.3.5 லட்சம் செலவானதாக அவர் கூறினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf90317-4ae8-4ae7-8ece-694679fc4cfe/26-6aaeb0103560b.webp' /></p><p>பலரும் தங்கள் வேலை விடுமுறையை எடுத்துக்கொண்டு, மாணவர்கள், தொழிலதிபர்கள், குடும்பத்தினர் என பல்வேறு தரப்பினரும் முதல் நாளில் போன் வாங்க வரிசையில் நின்றனர். சிலர் முன்பதிவு செய்யாததால், போன் வாங்க முடியாமல் வெளியேற வேண்டிய சூழலும் ஏற்பட்டது.</p><p>
இந்த விற்பனை நிகழ்வு, ஒரு சாதாரண மொபைல் வெளியீடாக மட்டுமல்லாமல், பரிசளிப்பு, உறவுகள், ஆசைகள் என பல நெகிழ்வான கதைகளை கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T15:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிரள வைத்த நிசங்கவின் கேட்ச்சை பாய்ந்து பிடித்த கேப்டன் (வீடியோ)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/archer-and-baker-finish-sri-lanka-as-124-runs-1789830897"></link>
            <id>https://news.lankasri.com/article/archer-and-baker-finish-sri-lanka-as-124-runs-1789830897</id>
            <summary type="text">Archer and baker finish sri lanka as 124 runs: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பதும் நிசங்க 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் விளாசினார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Archer and baker finish sri lanka as 124 runs: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பதும் நிசங்க 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
இலங்கை வீரர் பதும் நிசங்க 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில், வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>பதும் நிசங்க அதிரடி&nbsp;</h2><p>

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி எமிரேட்ஸ் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Incredible anticipation from Harry Brook 🤲 <a href="https://t.co/orGqaUWw7l">pic.twitter.com/orGqaUWw7l</a></p>&mdash; England Cricket (@englandcricket) <a href="https://x.com/englandcricket/status/2101313763215298990?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்ய, இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.

லஹிரு உதர 10 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சோனி பேக்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p></p><p> 

அடுத்து வந்த கமில் மிஷாரா 2 ஓட்டங்களில் வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் வெளியேற, பதும் நிசங்க அதிரடி ஆட்டத்தில் இங்கிலாந்தை அலறவிட்டார். </p><p>

சிக்ஸர்களை பறக்கவிட்ட பதும் நிசங்க (Pathum Nissanka) 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.
</p><h2>
சுருண்ட&nbsp;இலங்கை </h2><p>வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் அவர் அடித்த ஷாட்டினை, இங்கிலாந்தின் கேப்டன் ஹாரி ப்ரூக் டைவ் அடித்து மிரட்டலாக கேட்ச் செய்தார். </p><p>

அதனைத் தொடர்ந்து அசலங்க (16), ஷானகா (12) இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கமிந்து மெண்டிஸ் 28 பந்துகளில் 35 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, இலங்கை அணி 18.5 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு சுருண்டது. </p><p>

சோனி பேக்கர், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜேக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், லியாம் டாவ்ஸன் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8677bcf7-f3c9-4240-8e23-e4d67db4a35d/26-6aaea7e189f6f.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/912af896-8e25-4669-a5f6-082fe79fc286/26-6aaea7e259c71.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T15:16:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ப்ளாக்போர்ட் 149, சதர்லேண்ட் 100: ஒரு பந்து மீதமிருக்க..336 ஓட்டங்கள் சேஸ் செய்த அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/liam-blackford-149-runs-in-australia-domestic-1789826688"></link>
            <id>https://news.lankasri.com/article/liam-blackford-149-runs-in-australia-domestic-1789826688</id>
            <summary type="text">Victoria won by 3 wickets against queensland: அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில் விக்டோரியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Victoria won by 3 wickets against queensland: அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில் விக்டோரியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

குயின்ஸ்லேண்ட் அணிக்கு எதிரான அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விக்டோரியா வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>குயின்ஸ்லேண்ட்&nbsp;335 ஓட்டங்கள் </h2><p>
பிரிஸ்பேனில் நடந்த அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில், விக்டோரியா மற்றும் குயின்ஸ்லேண்ட் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db518fb1-ccb7-4a4b-bb2e-c9643a50816f/26-6aae985d76790.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய குயின்ஸ்லேண்ட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 335 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

ஹூகோ பர்டன் 70 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், டயலான் மெக்லாக்லன் 29 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களும் விளாசினர். </p><h2>

பிளாக்போர்ட் 149 </h2><p>பின்னர் ஆடிய விக்டோரியா அணி 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பிளாக் மெக்டொனால்ட் 17 ஓட்டங்களில் வெளியேற, வில் சதர்லேண்ட் மற்றும் லியாம் பிளாக்போர்ட் கூட்டணி அமைத்தனர். </p><p>

இவர்களது ருத்ரதாண்டவ ஆட்டத்தில் விக்டோரியா அணி 49.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
</p><p>
லியாம் பிளாக்போர்ட் (Liam Blackford) 113 பந்துகளில் 149 ஓட்டங்களும் (6 சிக்ஸர், 16 பவுண்டரிகள்), அணித்தலைவர் வில் சதர்லேண்ட் 106 பந்துகளில் 100 ஓட்டங்களும் (4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) விளாசினர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c21b63f5-4278-4020-9062-c60eb0541174/26-6aae985e67d70.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T14:09:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் மின்சார கார் விற்பனை அதிகரிப்பு - அரசுக்கு வருவாய் குறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germanys-ev-boom-cuts-fuel-tax-revenue-1789826179"></link>
            <id>https://news.lankasri.com/article/germanys-ev-boom-cuts-fuel-tax-revenue-1789826179</id>
            <summary type="text">Germany’s EV boom cuts fuel tax revenue: ஜேர்மன் அரசுக்கு எரிபொருள் வரி வருவாய் குறைந்துள்ளது.

ஜேர்மனியில் மின்சார கார்கள் அதிக அளவில் விற்பனையாகி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany’s EV boom cuts fuel tax revenue: ஜேர்மன் அரசுக்கு எரிபொருள் வரி வருவாய் குறைந்துள்ளது.
</p><p>
ஜேர்மனியில் மின்சார கார்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு குறைந்தாலும், அரசுக்கு எரிபொருள் வரி வருவாய் குறைந்து வருகிறது.</p><p>
</p><h2>
மின்சார கார் விற்பனை</h2><p>சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 முதல் காலாண்டில் ஐரோப்பாவில் மின்சார கார் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நோர்வேவில் புதிய கார்கள் 95 சதவீதம் மின்சார வாகனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c17692cb-5975-469e-8eea-d3aad85ac555/26-6aae9485c7f4f.webp' /></p><h2>அரசுக்கு வருவாய் குறைவு</h2><p>ஜேர்மனியில் டீசல் மற்றும் பெட்ரோல் மீது அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2.10 யூரோவாகும், அதில் 1.14 யூரோ அரசு வரியாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மின்சார வாகனங்களுக்கு இவ்வாறு எரிசக்தி வரி இல்லை. </p><p>இதனால் அரசின் வருவாய் குறைந்து வருகிறது. 2016-இல் 37 பில்லியன் யூரோவாக இருந்த எரிசக்தி வருவாய், கடந்த ஆண்டு 33 பில்லியன் யூரோவாக குறைந்துள்ளது.</p><p>
அறிக்கைகள் படி, 2050-க்குள் இந்த வருவாய் 5 பில்லியன் யூரோ மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான நிதி குறைவது அரசுக்கு பெரிய சவாலாக உள்ளது.
</p><p></p><p>பிரித்தானியா, நோர்வே, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் மின்சார வாகனங்களுக்கு புதிய வரி முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. ஜேர்மனியிலும் வாகனங்களுக்கு சாலை கட்டணம் அல்லது புதிய வரி விதிப்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.
</p><p>
மின்சார வாகன வளர்ச்சி சுற்றுச்சூழலுக்கு நல்லது என்றாலும், அரசின் வருவாய் குறைவு எதிர்காலத்தில் போக்குவரத்து திட்டங்களுக்கு சவாலாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T13:53:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய விளையாட்டு போட்டி; நக்வியிடம் பதக்கங்களை பெறுமா இந்தியா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/naqvi-can-give-asian-games-medals-will-india-get-1789824902"></link>
            <id>https://news.lankasri.com/article/naqvi-can-give-asian-games-medals-will-india-get-1789824902</id>
            <summary type="text">will india accept medal if naqvi gives asian games medals: ஆசிய கிண்ணத்தில் நக்வியிடம் கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி, ஆசிய விளையாட்டு போட்டியிலும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>will india accept medal if naqvi gives asian games medals: ஆசிய கிண்ணத்தில் நக்வியிடம் கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி, ஆசிய விளையாட்டு போட்டியிலும் பெற மறுக்குமா என கேள்வி எழுந்துள்ளது.</p><h3>நக்வியிடம் கிண்ணம் பெற மறுத்த இந்தியா&nbsp;</h3><p>
ஆண்கள் மற்றும் பெண்கள் ஆசியக் கிண்ண கிரிக்கெட் ஆகிய இரண்டிலும், இந்தியா நடப்பு சாம்பியனாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/200041d3-c81d-48a4-8d47-65160f8c450b/26-6aae8f88dba15.webp' /></p><p>
ஆனால் பட்டங்களை வென்ற பிறகு நடைபெற்ற அதிகாரப்பூர்வ பரிசளிப்பு விழாவில், பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மொஹ்சின் நக்வி வெற்றி கிண்ணம் வழங்கியதை இரு அணிகளும் பெற்றுக் கொள்ளவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d648285d-7fd5-46df-9d32-16eda3ded70a/26-6aae8f882d47e.webp' /></p><p>
பிசிசிஐயின் உத்தரவின் பேரிலே கிண்ணத்தை பெறவில்லை என கூறப்பட்டது.&nbsp;</p><p></p><p>
ஜப்பானில் இன்று தொடங்கியுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று, மொஹ்சின் நக்வி பதக்கம் வழங்கினால் இந்தியா பெற மறுக்குமா என கேள்வி எழுந்தது. </p><h3>

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்கம் பெறுமா?
</h3><p>
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஐசிசியின் கீழ் செயல்பட்டு வந்தது. ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் (OCA) கீழ் நடத்தப்படுகிறது.&nbsp;</p><p></p><p> 

OCA விதிகளின்படி, பதக்கங்கள் OCA தலைவரால் வழங்கப்படுகின்றன. அவர் இந்தப் பொறுப்பை மற்ற OCA உறுப்பினர்களுக்கும், தொடர்புடைய சர்வதேச அல்லது ஆசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் வழங்கலாம்.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98477b0-839f-487f-a585-c2eec37beded/26-6aae8f89905f1.webp' /></p><p>
அப்படி ஒரு சூழல் நிகழ்ந்தால் இந்திய அணி பதக்கங்களை பெற்றுக்கொள்ளுமா என பிசிசிஐ தலைவர் செயலாளர் தேவாஜித் சாய்கியா கேட்கப்பட்ட போது, நாங்கள் போட்டிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறோம். 

அணிகள் முதலில் வெற்றி மேடையை அடைய வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c75268e-d2b8-4dde-9889-ad802eeefca4/26-6aae8f8a45240.webp' /></p><p>அந்த நேரத்தில் நிலவும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, அப்போது நாங்கள் ஒரு முடிவை எடுப்போம். அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
OCA விதிகளின்படி, வெற்றி விழாக்களின் போது ஆர்ப்பாட்டங்கள், அரசியல், வணிக, மத அல்லது இனப் பிரச்சாரங்களையும் இந்த வழிகாட்டுதல்களை தடை செய்கின்றன.
</p><p>
OCA விதிகள், விளையாட்டுப் போட்டிகள், பதக்கங்கள், கொடிகள், சின்னங்கள் அல்லது சான்றிதழ்களுக்கு அவமரியாதையாகக் கருதப்படும் செயல்களுக்குத் தண்டனைகளை வழங்குகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T13:39:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை மசோதா: சட்டமாக்கிய ட்ரம்ப்..வெளியான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-signs-sanctions-bill-against-russia-1789822896"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-signs-sanctions-bill-against-russia-1789822896</id>
            <summary type="text">Trump signs sanctions bill against russia: ரஷ்யாவின் மீது விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். 

அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump signs sanctions bill against russia: ரஷ்யாவின் மீது விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.</p><p> 

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவின் மீது விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவில் கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த</h2><p>
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு விவகாரத்தில், பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த ட்ரம்பின் அமெரிக்கா முடிவு செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef1c1158-1fbb-440a-a37a-c4da8f93c33d/26-6aae888c9abd7.webp' />&nbsp;</p><p></p><p>
அத்துடன் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான சார்பை குறைத்துக் கொள்ளவில்லை என்றால், முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரத் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் ட்ரம்பின் நிர்வாகம், இந்தியா மற்றும் சீனாவிற்கு நேரடியான மிரட்டலை விடுத்தது.
</p><p>
அதனைத் தொடர்ந்து இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், அந்நாடுகள் மீது 100 சதவீதம் இறக்குமதி வரிகளை விதிக்கவும் மற்றும் ஈரான் மீதான தடைகளை நீட்டிக்கவும் அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதாவை ட்ரம்ப் அரசு கொண்டு வந்தது. </p><h2>

ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் </h2><p>இந்த நிலையில், குறித்த மசோதாவில் வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டு, அதனை சட்டமாக்கினார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.</p><p>
கடந்த ஜூலை மாதம், "ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் விதிக்கும் 2026ஆம் ஆண்டின் சட்டம்" என்று அழைக்கப்படும் இந்த மசோதா புதன்கிழமையன்று பிரதிநிதிகள் சபையிலும், கடந்த மாதம் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T13:01:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 பில்லியன் டொலரை எட்டும் Anthropic 2026 வருமானம் - விரைவில் IPO திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anthropic-revenue-hits-100-bn-dollar-ipo-nears-1789820980"></link>
            <id>https://news.lankasri.com/article/anthropic-revenue-hits-100-bn-dollar-ipo-nears-1789820980</id>
            <summary type="text">Anthropic revenue hits 100 Bn dollar: Anthropic நிறுவனத்தின் வருமானம் 100 பில்லியன் டொலரை எட்டவுள்ளது.

100 பில்லியன் டொலர்AI துறையில் வேகமாக வளர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Anthropic revenue hits 100 Bn dollar: Anthropic நிறுவனத்தின் வருமானம் 100 பில்லியன் டொலரை எட்டவுள்ளது.</p><h2>

100 பில்லியன் டொலர்</h2><p>AI துறையில் வேகமாக வளர்ந்து வரும் Anthropic நிறுவனம், 2026-இல் 100 பில்லியன் டொலர் அளவுக்கு ஆண்டு வருமானத்தை எட்டும் நிலையில் உள்ளது.</p><p>

New York Times மற்றும் Bloomberg வெளியிட்ட தகவலின்படி, Anthropic-ன் Claude AI மென்பொருளுக்கான வணிகத் தேவைகள் மிகவும் அதிகரித்துள்ளதால், வருமானம் கடந்த ஆண்டு 9 பில்லியனிலிருந்து, 2026 ஜூலை மாதத்தில் 65 பில்லியனாக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2086d9ad-2cac-4aa0-8507-f06518e678d9/26-6aae80368fb44.webp' /></p><p>
</p><h2>
IPO திட்டம்</h2><p>இந்த வளர்ச்சி, Anthropic-க்கு IPO (Initial Public Offering) நடத்தும் திட்டத்தை வலுப்படுத்தியுள்ளது. நிறுவனம் ஜூன் மாதம் SEC-க்கு (Securities and Exchange Commission) ரகசியமாக IPO ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. </p><p>Reuters மற்றும் Wall Street Journal தகவலின்படி, IPO நவம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளது.

Anthropic-ன் வாடிக்கையாளர்களில் Fortune 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் அடங்குகின்றன. </p><p></p><p>Claude AI மென்பொருள், கோடிங், அலுவலக பணிகள் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளை எளிமைப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், AI பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் கவலைகள் அதிகரித்து வருகின்றன. </p><p>Anthropic CEO Dario Amodei, “அடுத்த தலைமுறை AI மாதிரிகளை உருவாக்கும் வேகத்தை குறைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.</p><p>

Anthropic-ன் IPO, AI துறையில் மிகப்பெரிய பங்குச் சந்தை அறிமுகமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். நிறுவனம் தற்போது 965 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் உள்ளது.
</p><p>
இந்த IPO வெற்றிகரமாக நடந்தால், Anthropic நிறுவனம் OpenAI மற்றும் Google போன்ற போட்டியாளர்களை விட வலுவான நிலையைப் பெறும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T12:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து பிரித்தானிய அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ள சட்டவிரோத புலம்பெயர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/7-migrants-found-hiding-in-back-of-lorry-in-uk-1789820198"></link>
            <id>https://news.lankasri.com/article/7-migrants-found-hiding-in-back-of-lorry-in-uk-1789820198</id>
            <summary type="text">Seven migrants are found hiding in back of a lorry in England: இங்கிலாந்தில், லொறி ஒன்றின் பின்னால் புலம்பெயர்வோர் ஏழு பேர் மறைந்திருந்தது கண்டுபிடிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Seven migrants are found hiding in back of a lorry in England: இங்கிலாந்தில், லொறி ஒன்றின் பின்னால் புலம்பெயர்வோர் ஏழு பேர் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>


பிரித்தானியா சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.&nbsp;</p><p>
படகுகள் மூலம் புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் நிலையில், அந்த படகுகளை இயக்குவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் புதிதாக சட்டம் கூட இயற்றியாயிற்று.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60bd6a5b-7da4-42a8-b254-04bf264d6339/26-6aae7d28126ce.webp' /></p><p>

ஆனாலும், சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் பிரித்தானிய அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
</p><h3>
பெரும் சவாலாக உள்ள சட்டவிரோத புலம்பெயர்தல்</h3><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a9b104-632a-4630-8b38-377ce3c5c510/26-6aae7d27533af.webp' /></p><p>காரணம் என்னவென்றால், முதலில் லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் சட்டவிரோத புலம்பெயர்வோர்.&nbsp;</p><p>

ஆனால், கெடுபிடிகள் அதிகரிக்கவே, சிறு படகுகள் மூலம் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்பத் துவங்கினார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.
</p><p>
இப்போது, படகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுக்க பிரான்ஸ், பெல்ஜியம் முதலான நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளது பிரித்தானிய அரசு.&nbsp;</p><p>

விடயம் என்னவென்றால், படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய கெடுபிடிகள் அதிகரிக்கவே, மீண்டும் லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றுவருகிறார்கள் சட்டவிரோத புலம்பெயர்வோர்.

அவ்வகையில், நேற்று முன்தினம், இங்கிலாந்திலுள்ள Hertfordshireஇலுள்ள சாலை ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்றை மடக்கிச் சோதனையிட்டுள்ளனர் பொலிசார்.&nbsp;</p><p></p><p>
அப்போது, அந்த லொறிக்குள் புலம்பெயர்வோர் 7 பேர் மறைந்திருந்தது தெரியவந்துள்ளது.</p><p>

சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு உதவியாக இருந்ததாக, அந்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T12:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[96 ஓட்டங்கள் இலக்கு: 20வது ஓவரில் எட்டிய ஹொங்கொங் சீனா..திணறடித்த ஜப்பான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hongkong-china-beat-japan-by-4-wickets-1789819506"></link>
            <id>https://news.lankasri.com/article/hongkong-china-beat-japan-by-4-wickets-1789819506</id>
            <summary type="text">HongKong China beat Japan by 4 Wickets: ஜப்பான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹொங்கொங் சீனா வெற்றி பெற்றது.

ஜப்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p>HongKong China beat Japan by 4 Wickets: ஜப்பான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹொங்கொங் சீனா வெற்றி பெற்றது.
</p><p>
ஜப்பான் அணி நிர்ணயித்த 96 ஓட்டங்கள் இலக்கினை, ஹொங்கொங் சீனா 20வது ஓவரில் எட்டி வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ஜப்பான் 95 ஓட்டங்கள் &nbsp;&nbsp;</h2><p>
ஹொங்கொங் சீனா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி கான்டோவில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8344673-d249-4f9f-a05e-6080a670b4c3/26-6aae7b4a891dd.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய ஜப்பான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ஓட்டங்கள் எடுத்தது. பெஞ்சமின் இட்டோ டேவிஸ் 35 ஓட்டங்கள் எடுத்தார்.
</p><p>
எஹ்சான் கான் 3 விக்கெட்டுகளும், யாசிம் முர்தஸா 2 விக்கெட்டுகளும், அனஸ் கான் மற்றும் ராணா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
</p><p>
பின்னர் ஆடிய ஹொங்கொங் சீனா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

ஷாஹித் வாசிப் மற்றும் ஹசன் கான் இருவரும் வெற்றிக்காக போராடினர். </p><p>ஹசன் கான் 25 ஓட்டங்களில் வெளியேற, ஹொங்கொங் சீனா 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
</p><p>
மிரட்டலாக பந்துவீசிய பெஞ்சமின் இட்டோ டேவிஸ் 3 விக்கெட்டுகளும், சார்லி ஹரா 2 விக்கெட்டுகளும், மகோடோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T12:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்வோர் பயணிக்கும் பிரம்மாண்ட படகை இயக்கிய நபருக்கு சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-jails-teen-asylum-for-steering-migrant-boat-1789819228"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-jails-teen-asylum-for-steering-migrant-boat-1789819228</id>
            <summary type="text">UK jails teen asylum seeker for steering overcrowded Channel migrant boat: பிரம்மாண்ட புலம்பெயர்வோர் படகொன்றை இயக்கிய நபருக்கு பிரித்தானியாவில் சிறைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK jails teen asylum seeker for steering overcrowded Channel migrant boat: பிரம்மாண்ட புலம்பெயர்வோர் படகொன்றை இயக்கிய நபருக்கு பிரித்தானியாவில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>

பிரித்தானியா சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.</p><p>

இந்நிலையில், பிரம்மாண்ட புலம்பெயர்வோர் படகொன்றை இயக்கிய இளைஞர் ஒருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><h3>
பிரம்மாண்ட படகை இயக்கிய நபருக்கு சிறை
</h3><p>
பிரான்சிலிருந்து புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறு ரப்பர் படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சிகள் நாடாளுமன்றம் வரை ஒலித்துவரும் நிலையில், ‘சிறுபடகுகள்’ என்னும் பதம் ஊடகங்களில் முக்கிய இடம்பெற்றுவந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9008bf55-4ac4-4dd0-bf73-204e21205137/26-6aae795ddf0d0.webp' /></p><p>

அரசியல்வாதிகள், சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரால் பெரும் தொல்லை என்னும் ரீதியில் முழங்கிக்கொண்டிருக்க, அதை கேலிக்கூத்தாக்குவதுபோல, சிறு படகுகள் இல்லை, பெரிய படகுகள் மூலம் புலம்பெயர்வோரை அனுப்பத் துவங்கினார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.
</p><p>
ஆக, இந்த பிரம்மாண்ட படகுகளால் அரசுக்கு புதிய தலைவலி துவங்கிய நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், புதிய சட்டம் ஒன்றை இயற்றியது பிரித்தானியா.&nbsp;</p><p></p><p>
அதன்படி, படகுகள் மூலம் புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் நிலையில், அந்த படகுகளை இயக்குவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
</p><p>
இந்நிலையில், சமீபத்தில் 165 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்கு கொண்டுவர முயன்ற பிரம்மாண்ட படகொன்றை மடக்கிப் பிடித்தனர் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள்.
</p><p>
அந்த படகை இயக்கிய சூடான் நாட்டைச் சேர்ந்த Chan Mathok Atak (19) என்னும் இளைஞருக்கு நேற்று கேன்டர்பரி க்ரௌன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a386db-11da-446d-9511-bffa768ed182/26-6aae795eb3d35.webp' /></p><p>
Chanக்கு இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனைக்காலம் முடிவடைந்ததும், அவர் தன் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படவும் வாய்ப்புள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>
Chan இயக்கிய படகில் 31 சிறுவர்கள் உட்பட 165 புலம்பெயர்ந்தோருடன் பயணித்த நிலையில், அந்த படகில் பாதுகாப்பு உடைகளோ, உபகரணங்களோ, முதலுதவி சிகிச்சைக்கான மருந்துகளோ இல்லை.
</p><p>
அத்துடன், ஒரே ஒரு சிறிய இயந்திரத்தின் உதவியுடன், 165 புலம்பெயர்ந்தோருடன் நகர முடியாமல், மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது அந்தப் படகு.
</p><p>
ஆக, அத்தனை உயிர்களை ஆபத்தான வகையில் ஆங்கிலக்கால்வாயில் பயணிக்கவைத்ததற்காக, அந்த படகை இயக்கியதாக கருதப்படும் Chan கைது செய்யப்பட்டு அவருக்கு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T12:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக ஏதிலிகள் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/refugee-team-1st-time-participate-in-asian-games-1789818510"></link>
            <id>https://news.lankasri.com/article/refugee-team-1st-time-participate-in-asian-games-1789818510</id>
            <summary type="text">refugees team first time participate in asian games: ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக ஏதிலிகள் அணி இடம் பெற்றுள்ளது. 

ஆசிய விளையாட்டு போட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>refugees team first time participate in asian games: ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக ஏதிலிகள் அணி இடம் பெற்றுள்ளது. </p><h3>

ஆசிய விளையாட்டு போட்டியில் ஏதிலிகள் அணி</h3><p> 

20 வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் இன்று தொடங்கி, அக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
</p><p>
இந்தத் தொடரில், 45 நாடுகளை சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c32ad5bc-207a-4a9a-9eaf-40053c695b64/26-6aae76901a580.webp' /></p><p>

இந்த ஆசிய விளையாட்டு போட்டியில், முதல் முறையாக ஆசிய ஏதிலிகள் அணியும் பங்குபெற உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>

இந்த ஏதிலிகள் அணியில், டேக்வாண்டோவில் பங்கேற்கும் 2 விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Meet Tala Al-Hunaidi and Mahmoud Al Hussein.<br><br>They’re Syrian refugees living in Jordan and they’re about to make history.<br><br>They will become members of the first-ever Refugee Team to compete at an Asian Games. <a href="https://x.com/hashtag/AichiNagoya2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AichiNagoya2026</a> <a href="https://t.co/eVBvztmyhO">pic.twitter.com/eVBvztmyhO</a></p>&mdash; UNHCR, the UN Refugee Agency (@Refugees) <a href="https://x.com/Refugees/status/2101160862983548942?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
24 வயதான மஹ்மூத் அல் ஜாசிம் அல் முகமது அல் ஹுசைன் ஆடவர் 80 கிலோ கியோருகி பிரிவிலும், 18 வயதான தலாஹ் அல் ஹசன் அல் ஹினிடே மகளிர் 49 கிலோ கியோருகி பிரிவிலும் போட்டியிடுவார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67404e6c-10ab-4596-92ba-644782a99fb9/26-6aae7690c2451.webp' /></p><p>
சிரியாவை சேர்ந்த இந்த 2 விளையாட்டு வீரர்களும் ஜோர்டானில் உள்ள அஸ்ராக் ஏதிலிகள் முகாமில் வசிக்கின்றனர். </p><p>

இருவரில் யாரேனும் தங்கம் வென்றால், பதக்க வழங்கும் விழாவின் போது OCA கொடி ஏற்றப்பட்டு, OCA கீதம் இசைக்கப்படும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T11:48:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்... வழங்கப்பட்ட வாக்குச் சீட்டுகளில் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-voters-favour-of-putin-1789817772"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-voters-favour-of-putin-1789817772</id>
            <summary type="text">Russian voters are handed ballot papers with an X already marked: ரஷ்ய வாக்காளர்களுக்கு ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் வழங்கப்படுகின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian voters are handed ballot papers with an X already marked: ரஷ்ய வாக்காளர்களுக்கு ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
</p><p>ரஷ்ய வாக்காளர்களுக்கு, விளாடிமிர் புடினின் கட்சிக்கு ஆதரவாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.</p><h2>குறியீடு இடப்பட்ட</h2><p>
</p><p>போர்க்காலச் சூழலில் நடைபெறும் தனது முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான மூன்று நாள் வாக்குப்பதிவை ரஷ்யா வெள்ளிக்கிழமையன்று தொடங்கியது; இதில் குறிப்பிடத்தக்க எதிர்க்கட்சிகள் ஏதுமில்லாத நிலையில், விமர்சகர்களால் 'போலி' என்று குறிப்பிடப்படும் இத்தேர்தல் புடினின் அரசியல் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9e9df98-18a5-4025-9f4f-c8a9feabe4a4/26-6aae73ae515bb.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், சைக்‌டிவ்கார் (Syktyvkar) நகர வாக்காளர்களுக்கு, புடினின் 'யுனைடெட் ரஷ்யா' கட்சிக்கு ஆதரவாக ஏற்கனவே குறியீடு இடப்பட்ட வாக்குச்சீட்டுகள் தவறுதலாக வழங்கப்பட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒலெக் மிகைலோவ் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இதற்கிடையில், தென்மேற்கு ரஷ்யாவின் வொரோனேஷ் (Voronezh) நகரில், ஒருவர் பல வாக்குச் சீட்டுகளை வாக்குப்பெட்டியில் போடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p></p><p> </p><p>செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் இதே போன்றதொரு சம்பவம் பதிவாகியுள்ளது; அங்கு வாக்குச்சாவடி ஊழியர் ஒருவர் சுமார் 100 வாக்குச்சீட்டுகளைப் பெட்டிக்குள் திணிப்பது காணொளியில் பதிவாகியுள்ளது. </p><p>இதற்கிடையில், ஐக்கிய ரஷ்யாவுக்கு வாக்களிக்குமாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, அரசு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தாங்கள் பூர்த்தி செய்த வாக்குச் சீட்டுகளின் புகைப்படங்களை தங்கள் மேலதிகாரிகளுக்கு அனுப்பும்படி கட்டளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. </p><p>சமாரா பிராந்தியத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் கையில் வாக்குச் சீட்டுகளுடன் வெளியேறுவதைக் காண முடிந்தது, அதே சமயம் சகலின் தீவில், நடமாடும் வாக்குச் சாவடிகள் பார்வையாளர்கள் இல்லாமல் இயங்கின.</p><p></p><p> </p><p>எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய தொலைதூர ட்ரோன் தாக்குதல்கள் பரவலான எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் நடைபெற்றுள்ளது. </p><p>வைல்ட்பெர்ரீஸ் மற்றும் ஓசோன் ஆகிய இணையவழி சில்லறை விற்பனையாளர்களுக்குச் சொந்தமான கிடங்குகளும் தாக்கப்பட்டன. இந்தச் சேதம் ரஷ்யப் பொருளாதாரத்தின் சிக்கல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், லட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் போரின் தாக்கத்தை உணரச் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0aa433a-2d7e-40cf-920f-2b3e304c9e04/26-6aae73af06f92.webp' /></p><p> </p><p>கிராஸ்னோடர் பிராந்தியத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ட்ரோன் தாக்குதலால் ஜன்னல்கள் உடைந்ததைத் தொடர்ந்து, அந்த வாக்குச்சாவடி வேறொரு இடத்திற்கு மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் எல்லா பாம்ஃபிலோவா தெரிவித்தார். </p><p>போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட, ஆனால் இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இல்லாத உக்ரைனின் நான்கு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களும் முதன்முறையாக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கின்றனர். </p><p>2014-இல் ரஷ்யாவால் சட்டவிரோதமாக இணைத்துக்கொள்ளப்பட்ட கருங்கடல் தீபகற்பமான கிரீமியாவிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-19T11:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோபல் பரிசு தொடர்பில் ஒரு புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nobel-prize-money-raised-1789817361"></link>
            <id>https://news.lankasri.com/article/nobel-prize-money-raised-1789817361</id>
            <summary type="text">Nobel prize sum raised: நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.


நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது.

நோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nobel prize sum raised: நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.


நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது.</p><h3>

நோபல் பரிசு தொடர்பில் ஒரு புதிய தகவல்</h3><p>

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றவர்கள் பெயர்கள், அக்டோபர் மாதம் 5 முதல் 12ஆம் திகதிக்குள்ளான காலகட்டத்தில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நோபல் பரிசை வழங்கும் நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b9f6b4f-af68-4c75-9204-124349154b21/26-6aae72134355d.webp' /></p><p>
ஆம், இதற்கு முன் நோபல் பரிசு வென்றவர்களுக்கு 11 மில்லியன் குரோனர் (kronor) வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நோபல் பரிசு வெல்பவர்களுக்கு 12 மில்லியன் குரோனர் வழங்கப்பட உள்ளது.
</p><p>
நோர்வே பணமான 12 மில்லியன் குரோனர் என்பது, 1.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இலங்கை மதிப்பில் அது, 42,22,53,628.20 ரூபாய்.&nbsp;</p><p></p><p>

நோபல் பரிசுகள் வழங்குவது துவங்கப்பட்டு 125 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, அதைக் கொண்டாடும் வகையில் இந்த பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக நோபல் அறக்கட்டளையின் இயக்குநரான Hanna Stjarne தெரிவித்துள்ளார்.
</p><p>
முதல் நோபல் பரிசு, 1901ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அப்போது நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை 150,782 குரோனர் ஆகும்.</p>]]></content>
            <updated>2026-09-19T11:29:28+00:00</updated>
        </entry>
    </feed>
