<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-16T11:13:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூமியின் உண்மையான எடை.., எத்தனை கோடி கிலோ தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-much-does-earth-weigh-in-tamil-1789556890"></link>
            <id>https://news.lankasri.com/article/how-much-does-earth-weigh-in-tamil-1789556890</id>
            <summary type="text">how-much-does-earth-weigh- நாம் வாழும் பூமியில் சுமார் 800 கோடி மக்கள் மற்றும் 195 நாடுகள் உள்ளன. 

பொதுவாக பூமியின் எடை என்று கூறினாலும், அறிவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>how-much-does-earth-weigh- நாம் வாழும் பூமியில் சுமார் 800 கோடி மக்கள் மற்றும் 195 நாடுகள் உள்ளன. </p><p>

பொதுவாக பூமியின் எடை என்று கூறினாலும், அறிவியல் ரீதியாக பூமியின் நிறையைத்தான் கணக்கிட முடியும்.
</p><p>
நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவைக் குறிக்கும். இடம் மாறினாலும் நிறை மாறாது.</p><p>

எடை என்பது ஒரு பொருளின் மீது செயல்படும் ஈர்ப்பு விசையைப் பொறுத்து மாறுபடும். எனவே, வெவ்வேறு இடங்களில் எடை மாறக்கூடும்.</p><p>

இந்நிலையில், பூமியின் நிறை சுமார் 5.972 × 10²⁴ கிலோகிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b8d3f4-9f3c-4e29-97ed-d10790778fb9/26-6aaa7928813ff.webp' /></p><p>அதாவது சுமார் 13.1 செப்டில்லியன் பவுண்டுகள் ஆகும். இது, தலா 10 பில்லியன் பவுண்டுகள் (4.8 பில்லியன் கிலோகிராம்) எடை கொண்ட எகிப்தின் காஃப்ரே பிரமிட் போன்ற சுமார் 13 குவாட்ரில்லியன் பிரமிடுகளின் எடைக்குச் சமமாகும்.
</p><p>
பூமியின் நிறை மாறாத மதிப்பாகும், ஆனால், பூமியின் எடை என்பது ஈர்ப்பு விசையைப் பொறுத்து மாறுபடும்.&nbsp;</p><p>பூமியின் வளிமண்டலத்தைத் தக்கவைப்பது, கடல் அலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது மற்றும் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதைகளைப் பாதிப்பது போன்றவற்றில் ஈர்ப்பு விசை முக்கியமானதாகும்.
</p><p>
பூமியின் நிறையை அளவிடுவது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் அறிவியல் ஆய்வுகளின் விளைவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2629a30f-7bbb-4bb8-9097-1c017fe0f47a/26-6aaa79294dfd9.webp' /></p><p> 

ஆரம்பகாலத்தில் கோள்களின் இயக்கங்களை ஆய்வு செய்து, நியூட்டனின் ஈர்ப்பியல் விதியைப் பயன்படுத்தி பூமியின் நிறை மதிப்பிடப்பட்டது.&nbsp;</p><p>தற்போது செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதைகள் மற்றும் விண்வெளிப் பொருட்களின் இயக்கங்கள் மூலம் பூமியின் நிறை கணக்கிடப்படுகிறது.
</p><p>
 பூமியின் நிறை பூமியின் ஈர்ப்பு விசை, காலநிலை அமைப்பு, செயற்கைக்கோள்களின் இயக்கம் மற்றும் விண்வெளிப் பயணங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
</p><p>
மேலும், கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை வடிவமைப்பதிலும் அறிவியல் கணக்கீடுகளிலும் பூமியின் நிறை பயன்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T11:11:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காண்டாமிருகங்களைக் கொல்ல குறிவைத்த வேட்டைக்காரர்கள்: அடுத்து நடந்த பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/elephants-attack-on-poachers-targeting-rhinos-1789555012"></link>
            <id>https://news.lankasri.com/article/elephants-attack-on-poachers-targeting-rhinos-1789555012</id>
            <summary type="text">Elephants hide behind trees, stage surprise attack on poachers targeting rhinos: காண்டாமிருகங்களைக் கொல்ல வேட்டைக்காரர்கள் குறிவைத்த நிலையில், திடீரென...</summary>
            <content type="html"><![CDATA[<p>Elephants hide behind trees, stage surprise attack on poachers targeting rhinos: காண்டாமிருகங்களைக் கொல்ல வேட்டைக்காரர்கள் குறிவைத்த நிலையில், திடீரென யானைகள் அவர்களை தாக்கிய ஆச்சரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
</p><p>

தென்னாப்பிரிக்காவில் வனவிலங்குகள் பூங்கா ஒன்றில் நுழைந்த சட்டவிரோத வேட்டைக்காரர்கள் இருவர், காண்டாமிருகங்களை அவற்றின் கொம்புகளுக்காக கொல்ல திட்டமிட்டுள்ளார்கள்.
</p><h3>
குறிவைத்த வேட்டைக்காரர்கள்</h3><p>

தென்னாப்பிரிக்காவிலுள்ள Kruger வனவிலங்குகள் பூங்காவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809c24b7-f79a-4ba2-9330-88fb3b96b9f2/26-6aaa7146377d7.webp' /></p><p>
தண்ணீர் குடிப்பதற்காக குட்டை ஒன்றில் காண்டாமிருகங்கள் திரண்டிருக்க, வேட்டைக்காரர்கள் அந்த காண்டாமிருகங்களை தங்கள் துப்பாக்கியால் குறிவைத்துள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், தங்களுக்குப் பின்னால் யானைக் கூட்டம் ஒன்று மரங்களுக்கு நடுவே மறைந்திருப்பதைக் காணத் தவறிவிட்டார்கள் அந்த வேட்டைக்காரர்கள்.&nbsp;</p><p></p><p>
வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் குறிபார்த்துக்கொண்டிருக்க, திடீரென வேகமாக ஓடிவந்த யானைக் கூட்டம் அவர்கள் இருவரையும் துரத்தத் துவங்கியுள்ளது.
</p><p>
அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட, மற்றவர் காண்டாமிருகம் ஒன்றை சுட்டுள்ளார்.</p><p>

சுடுவதற்காக அவர் நிற்க, அவரை சூழ்ந்துகொண்ட யானைகள் காலால் அவரை மிதித்துக் கொன்றுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0738babc-553b-4859-b4d3-fd197a85eca9/26-6aaa7146e9a8c.webp' /></p><p>
அந்த யானைக்கூட்டம் அங்கிருந்து அகன்றபோது, அங்கு அந்த நபரின் இரத்தம் தோய்ந்த உடைகளும் ஒரு பெரிய இரத்தக்கரையும் மட்டுமே மீதமிருந்ததாக வனவிலங்குகள் பூங்கா ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், அந்த இருவரும் ஏற்கனவே காண்டாமிருகங்களைக் கொல்வதை அந்த யானைகள் பார்த்திருக்கக்கூடும் என்கிறார் பூங்கா செய்தித்தொடர்பாளர்.</p><p>

யானைகள் நல்ல ஞாபக சக்தி உடையவை என்று கூறப்படுவதுண்டு. ஆக, அந்த இருவரும் காண்டாமிருகங்களைக் கொல்ல குறிபார்க்க, அவர்களை அடையாளம் கண்டுகொண்ட இந்த யானைகள், காண்டாமிருகங்களைக் காப்பாற்றுவதற்காக அந்த வேட்டைக்காரர்களைத் தாக்க வந்துள்ளன என்கிறார் அவர்.
</p><p>
அந்த வேட்டைக்காரர்களில் இரண்டாவது நபர் உயிர் தப்பிய நிலையில், பூங்கா அலுவலர்கள் அவரைப் பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளார்கள்.
</p><p>
ஒரு விலங்கினத்தை வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக, மற்றொரு வகை விலங்கினம் துணிந்து இறங்கி செயல்பட்ட இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T10:37:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் பயன்பாட்டிற்கு வந்த ஓட்டுநர் இல்லாத சரக்கு வாகனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-permit-cab-less-autonomous-truck-on-roads-1789554076"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-permit-cab-less-autonomous-truck-on-roads-1789554076</id>
            <summary type="text">germany permits first cab less autonomous truck on roads: ஜேர்மனியில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி சரக்கு வாகனம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஜேர்மனியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>germany permits first cab less autonomous truck on roads: ஜேர்மனியில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி சரக்கு வாகனம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
</p><h3>
ஜேர்மனியில் ஓட்டுநர் இல்லாத சரக்கு வாகனம்</h3><p> 

ஜேர்மனியில் தானியங்கி வாகன நிறுவனமான einride, பல்பொருள் அங்காடி சங்கிலியான lidl உடன் இணைந்து ஓட்டுநர் இல்லாதால் தானியங்கி சரக்கு வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47a7e212-32a0-4d12-864b-ac2ea6952551/26-6aaa6d9d7acf9.webp' /></p><p>

ஜெர்மனியின் கூட்டாட்சி மோட்டார் போக்குவரத்து ஆணையம் (KBA), விரிவான பாதுகாப்புச் சரிபார்ப்பு செயல்முறைக்குப் பிறகு முதல்முறையாக இந்த வகையான அனுமதியை வழங்கியுள்ளது. </p><p>

நிலை 4 ஓட்டுநர் இல்லாத வாகனம் ஒன்று, பெர்லின் சாலைகளில் lidl விநியோக மையத்திற்கும் ஒரு சில்லறை விற்பனைக் கடைக்கும் இடையில் பொருட்களைக் கொண்டு செல்கிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Einride and Lidl Germany have put a cab-less SAE Level 4 truck into daily operation on a German public road, under the first KBA permit of its kind. One shift a day, five days a week, moving real store deliveries. <a href="https://x.com/search?q=%24ENRD&amp;src=ctag&amp;ref_src=twsrc%5Etfw">$ENRD</a> <a href="https://t.co/a9lbbRven9">https://t.co/a9lbbRven9</a> <a href="https://t.co/miQN2IkhFe">pic.twitter.com/miQN2IkhFe</a></p>&mdash; Einride (@einrideofficial) <a href="https://x.com/einrideofficial/status/2099770766346666409?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
வர்த்தக ஓட்டுநர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், விநியோகச் சங்கிலியின் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. </p><p>

லிடிலின் தாய் நிறுவனமான ஷ்வார்ஸ் குழுமம் தனது மற்ற பிரிவுகளிலும் இதனை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-16T10:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் ஸ்மார்ட் லாக்டவுன் திட்டம் - எரிபொருள் விலை உயர்வால் மக்கள் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-plans-smart-lockdown-amid-fuel-crisis-1789553601"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-plans-smart-lockdown-amid-fuel-crisis-1789553601</id>
            <summary type="text">Pakistan Plans Smart Lockdown Amid Fuel Crisis: பாகிஸ்தானில் ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.

ஸ்மார்ட் லாக்டவுன்பாகிஸ்தானில் எரிபொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pakistan Plans Smart Lockdown Amid Fuel Crisis: பாகிஸ்தானில் ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.</p><h2>

ஸ்மார்ட் லாக்டவுன்</h2><p>பாகிஸ்தானில் எரிபொருள் விலை அதிகரிப்பால் மக்களின் வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. இதை சமாளிக்க அரசு ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ என்ற புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d6eb266-1fdf-4499-a939-637c8549c4f8/26-6aaa6bc349278.webp' /></p><p>இந்த திட்டத்தின் கீழ் வாரத்தில் நான்கு நாள் வேலை, அலுவலகங்களில் மாறி மாறி பணியாற்றும் முறைகள், மற்றும் சந்தைகள், வணிக வளாகங்கள் முன்கூட்டியே மூடுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
</p><p>
பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் பல்வேறு யோசனைகள் விவாதிக்கப்பட்டன.</p><p></p><p> தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.384.34, டீசல் விலை ரூ.415.83-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சவுதி அரேபியாவின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல், ஹார்முஸ் நீரிணை மற்றும் பாப்-எல்-மண்டெப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் ஆகியவை உலகளாவிய எண்ணெய் விலையை அதிகரித்துள்ளன. இதனால் பாகிஸ்தானின் எரிசக்தி பாதுகாப்பு சவாலுக்கு உள்ளாகியுள்ளது.</p><p>அரசு, PM’s Fuel Relief Scheme மூலம் மக்களுக்கு சலுகை பெட்ரோல் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், மோட்டார் சைக்கிள் பயணிகள் வாரத்திற்கு 5 லிட்டர், கார் பயணிகள் 10 நாட்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் சலுகை பெட்ரோல் பெறலாம்.
</p><p></p><p>எனினும், அமைச்சரவை உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறினாலும், சிலர் அதனை மறுத்துள்ளனர்.
</p><p>
பாகிஸ்தான் அரசு, தினசரி எரிபொருள் விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாராந்திர முறையை மாற்றி, உலகளாவிய எண்ணெய் விலை மாற்றங்களை உடனுக்குடன் பிரதிபலிக்கிறது.
</p><p>
இந்த நடவடிக்கைகள், எரிபொருள் பயன்பாட்டை குறைத்து, மக்களின் சுமையை ஓரளவு குறைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T10:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-inflation-hits-3-1-pct-as-fuel-prices-surge-1789547265"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-inflation-hits-3-1-pct-as-fuel-prices-surge-1789547265</id>
            <summary type="text">UK inflation hits 3.1 Percent as fuel prices surge: பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பிரித்தானியாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK inflation hits 3.1 Percent as fuel prices surge: பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><h2>

பிரித்தானியாவில் பணவீக்கம்</h2><p>பிரித்தானியாவில் ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 3.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் இது 2.9 சதவீதமாக இருந்த நிலையில், எரிபொருள் விலை கிட்டத்தட்ட 23 சதவீதம் அதிகரித்ததால் பணவீக்கம் மீண்டும் உயர்ந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f57b2d84-45d5-4d49-b2ba-73557d79fea8/26-6aaa530364b09.webp' /></p><p>தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.1 பென்ஸ் உயர்ந்து 161.3 பென்ஸ் ஆகியுள்ளது. டீசல் விலை 14.2 பென்ஸ் உயர்ந்து 181.8 பென்ஸ் ஆகியுள்ளது. </p><p>இதனால் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, குடும்பங்களும் வணிகங்களும் கடுமையான அழுத்தத்தை சந்தித்து வருகின்றன.

மேலும், விமான கட்டணங்களும் 6.2 சதவீதம் உயர்ந்துள்ளன. </p><p>எரிபொருள் விலை உயர்வு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பொருட்களின் விலையையும் அதிகரித்துள்ளது.
</p><p></p><h2>போரின் தாக்கம்</h2><p>மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் தாக்கம் காரணமாக எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 108 டொலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் உலகளாவிய நிதி சந்தைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இங்கிலாந்து வங்கி வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவை எடுக்கத் தயாராகி வருகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம், கடன் வாங்கும் செலவுகள், மற்றும் அரசின் பட்ஜெட் திட்டங்கள் மக்கள் வாழ்வில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.</p><p>
</p><p></p><p>பிரித்தானியாவின் சேன்சலர் ஜான் ஹீலி, மின்சார கட்டண வரி குறைப்பு, பஸ் கட்டணத்தை 2 பவுண்டாக நிர்ணயம் செய்தல், மற்றும் சமூக இடங்களுக்கு வரி சலுகை அளித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் குடும்பங்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
பிரித்தானிய பொருளாதாரம் சவால்களை எதிர்கொண்டு கொண்டிருந்தாலும், அரசு வளர்ச்சியை உறுதியாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T10:05:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் - முகக்கவசம் அணிய அமைச்சர் அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minister-advices-wear-mask-rise-of-dengue-fever-tn-1789551985"></link>
            <id>https://news.lankasri.com/article/minister-advices-wear-mask-rise-of-dengue-fever-tn-1789551985</id>
            <summary type="text">minister advice to wear mask over rise of dengue fever in tamilnadu: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் முகக்கவசம் அண...</summary>
            <content type="html"><![CDATA[<p>minister advice to wear mask over rise of dengue fever in tamilnadu: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். </p><h3> 

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்
</h3><p>
சென்னை மருத்துவக்கல்லூரியில், நடைபெற்ற 192 வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6637bbc-1c88-46fa-ad85-fb3ff7e4a01d/26-6aaa657244f5b.webp' /></p><p>

இதில் பேசிய அவர், தமிழ்நாட்டில் சுவாசத் தொற்று மற்றும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. 

இதனால் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். </p><p>நடப்பாண்டில் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலால் 15,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>

2025 ம் ஆண்டில் 25,585 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவாகி இருந்தது. டெங்குவை கட்டுக்குள் வைக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.</p><p>

தமிழ்நாடு முழுவதும் சுமார் 25,000 க்கும் அதிகமான கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசுப் புழுக்களை கண்டறிந்து, அழிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். </p><p>

காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணியுங்கள்" என கூறியுள்ளார்.&nbsp;</p><p> 

தீவிர காய்ச்சல், தாங்கமுடியாத தலைவலி, கண்வலி, உடல் சோர்வு, வாந்தி, மூட்டு மற்றும் தசைவலி போன்றவை டெங்குவின் பொதுவான அறிகுறிகள் ஆகும். காய்ச்சல் குறைந்த பிறகும் பொதுவாக 3 முதல் 7 நாட்களுக்குள் சிலருக்கு பாதிப்பு தீவிரமடையலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c63d75-e7a1-44cf-980b-aedbc65b2079/26-6aaa6572effb4.webp' /></p><p>
வயிற்று வலி, வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T09:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு கிராம் தங்க விலை எவ்வளவு தெரியுமா? (16-09-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1789551153"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1789551153</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (16-09-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (16-09-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,341,794.00 ஆகும்.</p><p>

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 47,340.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 378,650.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 43,400.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 347,200.00.</p><p>

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 41,430.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 331,400.00.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T09:34:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்ம ராசியில் கேது.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-ketu-peyarchi-1789550232"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-ketu-peyarchi-1789550232</id>
            <summary type="text">நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.

இவர் ஆன்மீக முன்னேற்றம், ஞானம், துறவறம் ஆகியவற்றைக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.
</p><p>
இவர் ஆன்மீக முன்னேற்றம், ஞானம், துறவறம் ஆகியவற்றைக் குறிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது.</p><p>

இந்நிலையில், கேது சமீபத்தில் சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளார். அங்கு அவர் அடுத்த 90 நாட்களுக்கு அதே நிலையில் நிலைத்திருப்பார்.</p><p> 

அந்தவகையில், சிம்ம ராசிக்குள் கேது இருப்பதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.&nbsp;</p><h2>மேஷம்
</h2><ul><li>
சாதகமான பலன்களைத் தரக்கூடும்.
</li><li>நிலுவையில் இருந்த பணப் பரிவர்த்தனைகள் முடிவுக்கு வரும்.
</li><li>முதலீடுகள் மூலம் பணவரவு கிடைக்கும்.
</li><li>ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f260389d-5cab-467a-890f-05d4e53a3d93/26-6aaa5e9a55fca.webp' /></p><p>
</p><h2>
மிதுனம்
</h2><ul><li>
தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
</li><li>வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
</li><li>வியாபாரத்தில் முன்னேற்றமும் நிதி ஆதாயமும் கிடைக்கும்.
</li><li>பொருளாதார நிலை மேம்பட வாய்ப்புள்ளது.
</li><li>முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரக்கூடும்.
</li><li>தன்னம்பிக்கை சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cab8a26-2089-4a1c-a213-46af6ae67b6b/26-6aaa5e9b0d7a8.webp' /></p><p>
</p><h2>
சிம்மம்
</h2><ul><li>
நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
</li><li>தலைமைத்துவப் பண்புகள் வலுப்பெறக்கூடும்.
</li><li>தொழிலில் அங்கீகாரம் கிடைக்கும்.
</li><li>ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
</li><li>நிதி நிலைமை மேம்படும்.
</li><li>வேலைக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளது.</li><li>
திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும்.&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e93697b0-0756-4fa9-bc71-e0835d035db6/26-6aaa5e9bc5687.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T09:18:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபலத்துக்கு உயிர் பயத்தைக் காட்டிய கொள்ளைச் சம்பவம்: ஒரு யூரோ இழப்பீடு வழங்கிய நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/court-award-kim-kardashian-1-euro-for-2016-robbery-1789549958"></link>
            <id>https://news.lankasri.com/article/court-award-kim-kardashian-1-euro-for-2016-robbery-1789549958</id>
            <summary type="text">A Paris court awards Kim Kardashian 1 euro after her 2016 robbery: கிம் கார்டாஷியன் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் சிக்கிய வழக்கில் அவருக்கு பாரீஸ் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>A Paris court awards Kim Kardashian 1 euro after her 2016 robbery: கிம் கார்டாஷியன் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் சிக்கிய வழக்கில் அவருக்கு பாரீஸ் நீதிமன்றம் ஒன்று ஒரு யூரோ இழப்பீடு வழங்கியுள்ளது.
</p><p>

அமெரிக்கத் தொலைக்காட்சிப் பிரபலமான கிம் கார்டாஷியன் என்பவர் 2016ஆம் ஆண்டு பாரீஸில் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
</p><h3>
உயிர் பயத்தைக் காட்டிய கொள்ளைச் சம்பவம்
</h3><p>
2016ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2ஆம் திகதி, முகமூடி அணிந்த எட்டு பேர் கிம் தங்கியிருந்த ஹொட்டல் அறைக்குள் நுழைந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15e64068-86db-430c-ba91-8522e7bec3c2/26-6aaa5d8846b81.webp' /></p><p>
அவர்கள் கிம்மைக் கட்டிப்போட்டு, அவரது வாயில் துணியை அடைத்து அவரிடமிருந்த 6 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்கள்.
</p><p>
அவர்கள் நடந்துகொண்ட விதத்தால் பயந்து நடுங்கிய கிம், தனக்குப் பிள்ளைகள் இருப்பதாக கூறியதுடன், என்ன வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள், என்னை மட்டும் உயிருடன் விட்டுவிடுங்கள் என கெஞ்சியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p></p><p>
அந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். என்றாலும், விசாரணைக்கு முன்பே அவர்கள் சிறையில் நீண்ட காலம் செலவிட்டிருந்ததால், வழக்கு முடிந்தும் அவர்கள் யாரும் சிறைக்குச் செல்லவில்லை.
</p><h3>
ஒரு யூரோ இழப்பீடு</h3><p>

இந்நிலையில், அந்த வழக்கில் கிம்முக்கு பாரீஸ் நீதிமன்றம் ஒன்று ஒரு யூரோ இழப்பீடு வழங்கியுள்ளது.
</p><p>
அதாவது, தங்கள் வழக்கில் தங்களுக்கு நீதி கிடைத்ததே போதும் என்று கிம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தன் வாழ்வில் மிக பயங்கரமான ஒரு சம்பவம் அது என்று குறிப்பிட்டுள்ள கிம், தங்கள் குடும்பத்தின் மீது அது நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்று கூறியுள்ளதுடன், வழக்கில் தங்களுக்கு நிதி கிடைக்க உதவிய பிரான்ஸ் அதிகாரிகளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
தனக்கு ஒரு யூரோ மட்டும் இழப்பீடு வழங்கினால் போதும் என கிம் கேட்டுக்கொண்டதையடுத்தே, அவருக்கு நீதிமன்றம் ஒரு யூரோ இழப்பீடு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-16T09:12:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச எல்லையில் இந்திய கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-summons-pak-ship-collides-with-indian-navy-1789548296"></link>
            <id>https://news.lankasri.com/article/india-summons-pak-ship-collides-with-indian-navy-1789548296</id>
            <summary type="text">india summons pakistan envoy for pakistan ship collides with indian navy ship: சர்வதேச எல்லையில் இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>india summons pakistan envoy for pakistan ship collides with indian navy ship: சர்வதேச எல்லையில் இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. </p><h3>

இந்திய கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் போர் கப்பல்</h3><p>

நேற்று மாலை வடக்கு அரபிக்கடலில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்றின் மீது பாகிஸ்தான் கடற்படை கப்பல் ஒன்று மோதலில் ஈடுபட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dd492f0-d455-42cf-bd9a-d5d3b3dc99c2/26-6aaa570a14d69.webp' /></p><p>

சர்வதேச கடல் எல்லையில் நடந்த இந்த மோதல் சம்பவத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. </p><p>

பாகிஸ்தான் தூதர் சாத் அகமது வர்ரைச் டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைத்து, பாகிஸ்தான் கடற்படைப் பிரிவுகளின் "ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற நடத்தை" காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறி இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p> 

இராணுவப் பயிற்சிகள், இராணுவ அணிவகுப்புகள் மற்றும் படை நகர்வுகள் குறித்த முன் அறிவிப்பு வழங்குவது தொடர்பான, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான 1991 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 10வது பிரிவை பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் செயல்பாடு நேரடியாக மீறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. </p><p> 

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, அனைத்து இராணுவப் பிரிவுகளும் உரிய கவனத்துடன் செயல்படவும், இரு தரப்புக்கும் இடையிலான தொடர்புடைய ஒப்பந்தங்களின் விதிகளை மதிக்கவும் வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு பாகிஸ்தானின் தூதருக்கு அறிவுறுத்தப்பட்டது. </p><p>

மேலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் இதேபோன்ற ஒரு கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகப் பொறுப்பாளருக்கும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்தை மோதல் என வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டாலும், இந்திய கப்பலைகளை நோக்கி அதிவேகமாக பாதுகாப்பற்ற முறையில் பாகிஸ்தான் கடற்படை கப்பல் நெருங்கி வந்ததாகவே தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவச் சொத்துக்களுக்கு இடையே நடந்த முதல் மோதல் இதுவாகும்.</p>]]></content>
            <updated>2026-09-16T08:48:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்ந்துவரும் எரிபொருள் விலைகள்... ஜேர்மன் சேன்ஸலர் அளித்துள்ள உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/merz-promises-relief-plan-fuel-prices-hit-record-1789546520"></link>
            <id>https://news.lankasri.com/article/merz-promises-relief-plan-fuel-prices-hit-record-1789546520</id>
            <summary type="text">German Chancellor promises relief plan soon as pump prices hit record: ஜேர்மனியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துவரும் நிலையில், விரைவில் உதவி வருவதாக உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>German Chancellor promises relief plan soon as pump prices hit record: ஜேர்மனியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துவரும் நிலையில், விரைவில் உதவி வருவதாக உறுதியளித்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.
</p><p>

ஜேர்மன் தலைநகர் பெர்லினில், செப்டம்பர் மாதம் காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை யூரோக்களாகவும் 2.25 டீசல் விலை 2.37 யூரோக்களாகவும் இருந்தது, மதியம் மேலும் அதிகரித்துள்ளது.
</p><h3>
ஜேர்மன் சேன்ஸலர் அளித்துள்ள உறுதி
</h3><p>
இந்நிலையில், எரிபொருள் விலைகள் தொடர்பில் விரைவில் உதவி வருவதாக உறுதியளித்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/990ce9cf-3f5d-4943-97ba-95f1be954a6d/26-6aaa501a4e7d7.webp' /></p><p>
பொதுமக்கள் பலர் தங்கள் அன்றாட தேவைகளுக்காக கார்களை பயன்படுத்திவரும் நிலையில், இதற்கு மேல் எரிபொருளுக்கு செலவு செய்யமுடியாது என்னும் ஒரு நிலையை அவர்கள் எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.
</p><p>
ஆகவே, மக்களுக்கு உதவும் வகையில் விரைவில் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.&nbsp;&nbsp;</p><p></p><p>

அது தொடர்பில் 16 மாகாணங்களுடனும், கூட்டணிக்கட்சிகளுடனும் ஆலோசனைகள் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார் மெர்ஸ். </p><p>என்றாலும், அது என்ன திட்டம் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T08:15:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹாரி ப்ரூக் சாதனை சதம்; இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-brook-record-ton-england-beat-sri-lanka-1789545715"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-brook-record-ton-england-beat-sri-lanka-1789545715</id>
            <summary type="text">harry brook record ton leads england beat srilanka by 119 runs: ஹாரி ப்ரூக் சாதனை சதத்தில் முதல் T20 போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்திடம் படுதோல்வியடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>harry brook record ton leads england beat srilanka by 119 runs: ஹாரி ப்ரூக் சாதனை சதத்தில் முதல் T20 போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்துள்ளது. </p><h3>

இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை</h3><p>
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 T20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0807f44b-2fed-4ed9-a217-7d81988ba032/26-6aaa4cf61c181.webp' /></p><p>

நேற்று சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் T20 போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. </p><p>

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e50c26a0-c6cd-42d3-ba4c-24af2fe0915f/26-6aaa4cf4a7b9c.webp' /></p><p>

அதிகபட்சமாக இங்கிலாந்து அணி தலைவர் ஹாரி ப்ரூக் அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 114 ஓட்டங்கள் குவித்தார்.</p><p> 

தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 80 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><p></p><p>

இதனையடுத்து, 255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.</p><p> 

இதன் மூலம், 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. </p><h3> 

ஹாரி ப்ரூக் சாதனை</h3><p>

இங்கிலாந்து அணிக்காக சர்வதேச T20 போட்டிகளில் புரூக் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். </p><p>

இதன் மூலம், சர்வதேச T20 போட்டிகளில், ஒரே ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட சதமடித்த டெஸ்ட் விளையாடும் அணியை சேர்ந்த முதல் அணித்தலைவர் என்ற பெருமையை ஹாரி ப்ரூக் பெற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97c996d-2e84-4ec1-8d94-9bc8e84db5fa/26-6aaa4cf55ec64.webp' /></p><p>

முன்னதாக ஈஸ்வதினியின் அடில் பட் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஃபஹீம் நசீர் ஆகிய 2 அணித்தலைவர்கள் மட்டுமே ஒரு வருடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வதேச T20சதங்களை அடித்திருந்தனர். </p><p>

இதே போல், சர்வதேச T20 சதங்கள் அடித்த டெஸ்ட் விளையாடும் அணித்தலைவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் மற்றும் இந்தியாவின் ரோஹித் ஷர்மாவிற்கு அடித்ததாக புரூக் இணைந்துள்ளார். பாபர் அசாம் மற்றும் ரோஹித் ஷர்மா தலா 3 சதங்கள் அடித்துள்ளனர்.</p><p>

மேலும், இது இலங்கைக்கு எதிராக அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக T20 சதம் ஆகும். முன்னதாக 2017 ஆம் ஆண்டில் இந்தூரில் ரோஹித் சர்மா 35 பந்துகளில் அடித்த சதமடித்து முதலிடத்தில் உள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T08:03:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவரின் சிறிய தவறால் லொட்டரியில் ரூ.4.5 கோடி வென்ற பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/michigan-couple-wins-136000-dollar-lottery-mistake-1789542874"></link>
            <id>https://news.lankasri.com/article/michigan-couple-wins-136000-dollar-lottery-mistake-1789542874</id>
            <summary type="text">Michigan couple wins 136000 dollars lottery mistake: கணவரின் சிறிய தவறால் தம்பதிக்கு லொட்டரியில் ரூ.4.5 கோடி பரிசு கிடைத்தது.

தம்பதிக்கு&amp;nbsp;அதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Michigan couple wins 136000 dollars lottery mistake: கணவரின் சிறிய தவறால் தம்பதிக்கு லொட்டரியில் ரூ.4.5 கோடி பரிசு கிடைத்தது.</p><h2>

தம்பதிக்கு&nbsp;அதிர்ஷ்டம் </h2><p>அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வாழும் ஒரு தம்பதிக்கு, ஒரு சிறிய தவறால் பெரிய அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.
</p><p>
78 வயதான வாஷ்டெனாவ் கவுண்டி பெண், தனது கணவருடன் ஒரு உணவகத்தில் Club Keno லொட்டரி விளையாடியபோது, எதிர்பாராத சம்பவம் நடந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b0aaab5-4c17-4f8e-b658-ffd4ee8b8628/26-6aaa41dbd2852.webp' /></p><p>
</p><h2>
தவறுதலாக...</h2><p>அவர்கள் இருவரும் தனித்தனியாக டிக்கெட் வாங்கியிருந்தனர். பின்னர் மற்றொரு பார் சென்றபோது, கணவர் தவறுதலாக தனது டிக்கெட்டுக்கு பதிலாக மனைவியின் டிக்கெட்டை மீண்டும் replay செய்தார்.

அந்த டிக்கெட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 07-16-19-23-25-46-55-68-74 என்ற எண்கள், Club Keno-வின் 20 எண்களில் 9 எண்களுடன் பொருந்தின.
</p><p>
இதன் மூலம் அவர்கள் 136,660 டொலர் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.4.52 கோடி) பரிசை வென்றனர்.
</p><p></p><p>“இது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இந்த பணம் எங்களுக்கு இருக்கும் நெருக்கடியை தளர்த்தி சுவாசிக்க உதவும்,” என்று அந்த பெண் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><p>

தம்பதியினர், இந்த வெற்றிப் பணத்தின் ஒரு பகுதியை தங்கள் பேரக்குழந்தைகளின் கல்லூரி கல்விக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம், லொட்டரி விளையாட்டில் ஒரு தவறான நடவடிக்கையும் வாழ்க்கையை மாற்றக்கூடிய அதிர்ஷ்டத்தை தரலாம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T07:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏடிஎம் இயந்திரத்தைத் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: கமெராவில் சிக்கிய காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thieves-haul-atm-from-british-columbia-1789542012"></link>
            <id>https://news.lankasri.com/article/thieves-haul-atm-from-british-columbia-1789542012</id>
            <summary type="text">Thieves haul ATM from British Columbia: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.


கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thieves haul ATM from British Columbia: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
</p><p>

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கொள்ளையர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரம் ஒன்றைத் தூக்கிச் சென்றுள்ளனர்.

</p><h3>னடாவில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை
</h3><p>
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Ladysmith என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee3bd0fc-1329-40dc-ae31-b4068a2e2697/26-6aaa3e7db9753.webp' /></p><p>
இந்நிலையில், முகமூடியும் கையுறைகளும் அணிந்த இருவர், அந்த ஏடிஎம் இயந்திரத்தை சங்கிலி மூலம் தங்கள் ட்ரக்குடன் இணைத்து, இழுத்துப் பெயர்த்து, தங்கள் ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.
</p><p>
இந்தக் காட்சிகள் அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளன.&nbsp;</p><p></p><p>
கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரக் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளையர்கள் குறித்து ஏதேனும் தெரியவந்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T07:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க குவிந்த கூட்டம் - ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vijay-london-fans-meet-cancelled-after-fans-gather-1789541674"></link>
            <id>https://news.lankasri.com/article/vijay-london-fans-meet-cancelled-after-fans-gather-1789541674</id>
            <summary type="text">cm vijay london fans meet cancelled after fans gathered in streets: லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க அவர் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay london fans meet cancelled after fans gathered in streets: லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க அவர் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ள நிலையில், ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><h3>லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி ரத்து</h3><p> 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க 5 நாள் பயணமாக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். லண்டன் சென்ற முதல்வர் விஜய்க்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f71e3c1-6c07-47b1-82b7-ee9113190bac/26-6aaa3d2b70e5b.webp' /></p><p>
இந்த பயணத்தின் ஒருபகுதியாக சில்வர்ஸ்டோர் சர்க்யூட் மைதானத்தில், நடிகர் அஜித் கலந்துகொண்ட கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.</p><p> 

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ள இந்த பயணத்தில், சுமார் ரூ.12,300 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் அலுவகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/116b7073-a8cc-445c-b2cb-d246d0d211e0/26-6aaa3d2c2974e.webp' /></p><p>

முதல்வர் விஜய் லண்டனில் உள்ள உயரமான கட்டிடமான 'தி ஷார்ட்' ல் தங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

முதல்வர் விஜய் கார் பந்தயத்தை காண வந்த போது அங்கு அவரை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் குவிய தொடங்கினர். </p><p>

அப்போது முதல்வர் விஜய்யின் தணிப்பாதுகாவலரான மூஸா, இங்கு காத்திருக்க வேண்டாம். செப்டெம்பர் 15 ஆம் திகதி வாருங்கள். ரசிகர்கள் சந்திப்பு உள்ளது என கூறியிருந்தார். </p><p>

இந்த தகவல் லண்டன் வாழ் தமிழர்களிடம் பரவியதையடுத்து, முதல்வர் விஜய் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிய தொடங்கினர். மேலும், TVK, TVK என முழக்கமிட்டனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">லண்டன்லயே என்ன இவ்ளோ கூட்டம் முதல்வருக்கு🥵🔥 <a href="https://t.co/KNblC89hAQ">pic.twitter.com/KNblC89hAQ</a></p>&mdash; priya (@PriyankaSmile01) <a href="https://x.com/PriyankaSmile01/status/2099908631135404048?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அந்த பகுதி ரயில் நிலையம், மருத்துவமனைகள் அடங்கிய பகுதி என்பதால் ஏற்பட்ட இடையூறு காரணமாக அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு லண்டன் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0daea9-5b43-4d6c-b6cb-bec198a77197/26-6aaa3d2cd62d2.webp' /></p><p>

ரசிகர்கள் கலைந்து செல்ல மறுத்த போது, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியான தர்மராஜன் ஐபிஎஸ் ஒலிபெருக்கி மூலம் "பொதுப் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, எங்களுக்கு அனுமதி இல்லாததால் நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம்,"எனக்கூறி இங்கிருந்து கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a14714b1-8281-4531-95e7-fce3d732d79b/26-6aaa3d2d8bba8.webp' /></p><p> 

நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் முதல்வர் விஜய்யை சந்திக்க முடியவில்லை என ஏமாற்றமடைந்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T06:55:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-foods-that-may-help-prevent-cancer-in-tamil-1789537359"></link>
            <id>https://news.lankasri.com/article/5-foods-that-may-help-prevent-cancer-in-tamil-1789537359</id>
            <summary type="text">5-foods-that-may-help-prevent-cancer-&amp;nbsp;புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக இளம் வயதினரிடையேயும் புற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>5-foods-that-may-help-prevent-cancer-&nbsp;புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. </p><p>

குறிப்பாக இளம் வயதினரிடையேயும் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி வளரும்போது புற்றுநோய் ஏற்படுகிறது. </p><p>

வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மற்றும் சில ரசாயனங்களின் வெளிப்பாடு போன்றவை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.</p><p></p><p> 

இந்நிலையில், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
</p><p>
அந்தவகையில், புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும் 5 உணவுகள் குறித்து பார்க்கலாம்.</p><h2>1. ஊதா நிற சர்க்கரைவள்ளிக் கிழங்கு
</h2><p>
ஊதா நிற சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அந்தோசையனின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள செல்களைப் பாதுகாக்க உதவும் சேர்மமாகும்.
</p><p>
இந்த கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்வது குடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், பெருங்குடல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்க உதவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/140de95a-f458-48b0-abb6-829173ff9d22/26-6aaa2e3063cc1.webp' /></p><h2>

2. முளைக்கட்டிய ப்ராக்கோலி</h2><p>

முளைக்கட்டிய ப்ராக்கோலி மற்றும் மைக்ரோக்ரீன்களில் சல்ஃபோராபேன் என்ற சேர்மம் அதிகம் உள்ளது. </p><p>இது உடலின் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் நச்சு நீக்க செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

முளைக்கட்டிய ப்ராக்கோலியில் சல்ஃபோராபேன் அதிகமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7e12dfa-a0f4-47b5-bf25-b643b590e7d2/26-6aaa2e3131999.webp' /></p><p>
</p><h2>
3. கிவி
</h2><p>
கிவி பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனால்கள் உள்ளன. இவை செல்களை ஆக்ஸிடேட்டிவ் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
</p><p>
மேலும், கிவி பழம் செரிமானத்திற்கும் குடல் இயக்கத்திற்கும் உதவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80051984-575f-4c6c-92b1-0f69dc1f7a8c/26-6aaa2e31d8b33.webp' /></p><p>
</p><h2>4. கிரீன் டீ</h2><p>

கிரீன் டீயில் EGCG எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது செல்களைப் பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டது.
</p><p>
கிரீன் டீயில் உள்ள சில சேர்மங்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ac410f0-1fd5-4705-a683-06a550a8e7b7/26-6aaa2e328b77d.webp' /></p><p> </p><h2>

5. பீன்ஸ்
</h2><p>
பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08935aef-0f34-4bc1-9096-02b302703a51/26-6aaa2e333f28e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-16T05:51:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகொப்டர் விபத்து - 3 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nbc-news-helicopter-crashes-in-live-bus-accident-1789535933"></link>
            <id>https://news.lankasri.com/article/nbc-news-helicopter-crashes-in-live-bus-accident-1789535933</id>
            <summary type="text">nbc news helicopter crashes during live coverage of los angeles bus crash: பேருந்து விபத்தை நேரலை செய்து கொண்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>nbc news helicopter crashes during live coverage of los angeles bus crash: பேருந்து விபத்தை நேரலை செய்து கொண்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். </p><h3>

பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகொப்டர் விபத்து
</h3><p>
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் சாட்ஸ்வொர்த் பகுதியில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5:03 மணிக்கு ஒரு மெட்ரோ பேருந்தும், SUV வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/516c6429-0705-469a-a593-944256700eae/26-6aaa26be9a91d.webp' /></p><p>

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்திருந்தனர். தீயணைப்பு வீரர்கள் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.</p><p> 

இந்த விபத்து சம்பவத்தை நேரலை செய்ய NBC செய்தி நிறுவனத்தின் ஹெலிகொப்டர் ஒன்று உள்ளூர் நேரப்படி மாலை 7 மணியளவில் நேரலையின் போதே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>

ஹெலிகொப்டர் இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் உள்ள வாகன நிறுத்தத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">NBC LOS ANGELES HELICOPTER CRASHES WHILE COVERING METRO BUS CRASH<br><br>An NBC Los Angeles news (KNBC-TV) helicopter reportedly crashed in Chatsworth, California, while covering a Metro bus crash.<br><br>Further details on injuries and the circumstances of the helicopter crash are awaited. <a href="https://t.co/skIAkYVChe">pic.twitter.com/skIAkYVChe</a></p>&mdash; Subodh Kumar (@kumarsubodh_) <a href="https://x.com/kumarsubodh_/status/2100051119271752040?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்த விபத்தில், ஹெலிகொப்டர் விமானி, செய்தியாளர், மற்றும் சாலையில் இருந்த நபர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca91e3c-4675-493b-b1f8-fdc8e7061a8f/26-6aaa26bf4e299.webp' /></p><p>

மேலும், ஹெலிகொப்டர் விழுந்ததில், ஹெலிகொப்டர் மற்றும் அங்குள்ள வாகனங்களில் தீ பற்றியது. அங்கிருந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர்.</p><p>

ஹெலிகொப்டர் விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் விசாரணையில் ஈடுபடுத்தப்படும் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. </p><p>

நேரலையின் போதே ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T05:45:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் உச்சம் தொடும் எரிபொருள் விலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fuel-price-close-to-record-high-in-swiss-1789537135"></link>
            <id>https://news.lankasri.com/article/fuel-price-close-to-record-high-in-swiss-1789537135</id>
            <summary type="text">Fuel prices close to record high: சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துவருகின்றன.


2022ஆம் ஆண்டு, உக்ரைன் மீது ரஷ்யா போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Fuel prices close to record high: சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துவருகின்றன.
</p><p>

2022ஆம் ஆண்டு, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நேரத்தில், சுவிட்சர்லாந்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எரிபொருள் விலைகள் உயர்வை எட்டின.
</p><h3>
மீண்டும் உச்சம் தொடும் எரிபொருள் விலைகள்
</h3><p>
2022ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தில் பெட்ரோல் விலை 2.20 சுவிஸ் ஃப்ராங்குகளாகவும், டீசல் விலை 2.30 சுவிஸ் ஃப்ராங்குகளாகவும் உயர்ந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/124c6ca2-360d-4115-938f-d3c409ee8cf3/26-6aaa2b7138b00.webp' /></p><p>
இந்நிலையில், தற்போது மீண்டும் அதே நிலை உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
ஆம், ஈரான் போர், ரைன் நதியில் நீர்மட்டம் குறைந்ததால் சரக்குக் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு முதலான காரணங்களால் மீண்டும் சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலைகள் உயர்ந்துவருகின்றன.&nbsp;</p><p></p><p>

தற்போது, பெட்ரோல் விலை லிற்றர் ஒன்றிற்கு 2.05 சுவிஸ் ஃப்ராங்குகளாகவும், டீசல் விலை லிற்றர் ஒன்றிற்கு 2.30 சுவிஸ் ஃப்ராங்குகளாகவும் உள்ளது.</p><p>

இதற்கிடையில், குளிர் காலம் நெருங்கும் நிலையில், வீடுகளை வெப்பப்படுத்துவதற்காக எரிபொருள் தேவை அதிகரிக்க உள்ளதால், டீசல் தொடர்பில் மேலும் அழுத்தம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T05:39:03+00:00</updated>
        </entry>
    </feed>
