<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-14T17:29:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் காட்டுத்தீயை மூட்டியதாக சிறார்கள் உட்பட 500 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/500-arrested-of-starting-wildfires-1786725269"></link>
            <id>https://news.lankasri.com/article/500-arrested-of-starting-wildfires-1786725269</id>
            <summary type="text">Almost 500 arrested on starting wildfires: இந்த கோடையில் காட்டுத்தீயை மூட்டியதாக சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Almost 500 arrested on starting wildfires: இந்த கோடையில் காட்டுத்தீயை மூட்டியதாக சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><p>
பிரான்சில் கோடை தொடங்கியதிலிருந்து காட்டுத்தீயை மூட்டியதாக சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>183 சிறார்கள் உட்பட</h2><p>
</p><p>வரலாறு காணாத வெப்ப அலைக்கு மத்தியில், ஆறு ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2da77c1a-2d05-4166-b4d7-f3fa3e074b93/26-6a7f43978ee2b.webp' /></p><p> </p><p>வெள்ளிக்கிழமையன்று ஐந்து ஐரோப்பிய நாடுகளில் மூன்றில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும், சுமார் 15 கோடி மக்கள் 35 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையையும் எதிர்கொண்ட நிலையில், </p><p>பிரான்சில் ஜூலை 1 முதல் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பாக 183 சிறார்கள் உட்பட 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் வேண்டுமென்றே தீ வைத்ததாகவும், எஞ்சியவர்கள் தற்செயலாக அவ்வாறு செய்ததாகவும் சந்தேகிக்கப்படுவதாக உள்விவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p> </p><p>இதனிடையே, கடந்த ஜூலை மாதம் போர்டோ விமான நிலையம் அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் மரணமடைந்தது தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. </p><p>24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில், கிட்டத்தட்ட 1,100 ஹெக்டேர் பரப்பளவிலான, எளிதில் தீப்பற்றக்கூடிய பைன் மரக்காடுகளை ஒரு புதிய காட்டுத்தீ அழித்ததைத் தொடர்ந்து, பிரான்சின் தென்மேற்குப் பகுதியான லாண்டெஸில் உள்ள லுக்லான் கிராமத்திலிருந்து 525-க்கும் மேற்பட்ட மக்களை பிரெஞ்சு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வெளியேற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/446cf2c4-7968-48f6-a61b-c92ac0c38532/26-6a7f4398e5036.webp' /></p><p>
</p><p>பிரபலமான விடுமுறைத் தலங்களான அர்காச்சோன் வளைகுடா மற்றும் லேஜ்-கேப்-ஃபெரெட் தீபகற்பத்திலிருந்து லுக்லான் கிராமம் சுமார் 62 மைல்கள் தென்கிழக்கில் அமைந்துள்ளது. </p><p>இப்பகுதிகளில் ஜூலை மாத இறுதியில் ஏற்பட்ட இரண்டு பெரும் காட்டுத்தீ சம்பவங்கள் 50,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பை அழித்ததால், சுமார் 220,000 மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p><h2>இரண்டு மடங்கு வேகத்தில்</h2><p> </p><p>இந்த நிலையில், காலநிலை சீர்குலைவு காரணமாக, அடிக்கடி மற்றும் தீவிரமான வானிலை நிகழ்வுகள் ஏற்படுவதாகவும், மண் மற்றும் நீர்வழிகள் ஆவியாவதாகவும், காட்டுத்தீ தீவிரமடைவதாகவும், பிரான்சில் ஆயிரக்கணக்கானோர் கூடுதலாக மரணமடைவதற்கும் வழிவகுப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். </p><p>ஐரோப்பா, உலக சராசரியை விட சுமார் இரண்டு மடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருகிறது என்றே தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
குரோஷியாவில், டால்மேஷியன் கடற்கரையில் உள்ள லோக்வா ரோகோஸ்னிகா என்ற சுற்றுலா நகரத்தில், பலத்த காற்றினால் பரவிய காட்டுத்தீ இரவோடு இரவாகத் தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1939824e-7195-4769-a6a9-c04944785771/26-6a7f43983f4c0.webp' /></p><p> </p><p>இதில் வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின, சுமார் 1,000 பேர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஒருவர் மரணமடைந்தார் மற்றும் பல டசின் பேர்கள் காயமடைந்தனர் என்று தீயணைப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>வடக்கே சுமார் 15.5 மைல் தொலைவில் உள்ள ஸ்பிளிட் நகரில், ஆம்புலன்ஸ் சேவைகளால் சிகிச்சை அளிக்கப்பட்ட 36 பேரில், 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் மற்றும் ஏழு பேருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டிருந்தன. </p><p>இதனிடையே, தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத்தீயும் வியாழக்கிழமையன்று மேலும் மோசமடைந்தது. ஹுயெல்வா மாகாணத்தில் இதுவரையில் 31,000 ஹெக்டேர் பரப்பளவை எரித்துள்ள இந்தத் தீ, சுமார் 700 பேரை வெளியேறும்படி கட்டாயப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T16:32:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[5.3 விநாடிகளில் 800 கிமீ வேகம் - சீனாவின் மாக்லெவ் ரயில் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-maglev-train-hits-800-kmph-record-1786722035"></link>
            <id>https://news.lankasri.com/article/china-maglev-train-hits-800-kmph-record-1786722035</id>
            <summary type="text">China Maglev train hits 800 kmph record: சீனா உருவாக்கிவரும் மாக்லெவ் ரயில் 5.3 விநாடிகளில் 800 கிமீ வேகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.

மூன்றாவது உல...</summary>
            <content type="html"><![CDATA[<p>China Maglev train hits 800 kmph record: சீனா உருவாக்கிவரும் மாக்லெவ் ரயில் 5.3 விநாடிகளில் 800 கிமீ வேகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.</p><h2>

மூன்றாவது உலகச் சாதனை</h2><p>சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள டோங்ஹூ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 1,110 கிலோ எடையுடைய சோதனை ரயில் வண்டி, 1 கிமீ நீளமான பாதையில் 5.3 விநாடிகளில் 800 கிமீ வேகம் எட்டியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c13c2a5-11ac-4145-9e3e-2406a8c30e07/26-6a7f36f521763.webp' /></p><p>இது கடந்த ஆறு மாதங்களில் மூன்றாவது உலகச் சாதனையாகும்.

இந்த ரயில், மாக்லெவ் (Maglev) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. காந்த சக்தியின் மூலம் ரயில் பாதையுடன் நேரடி தொடர்பு இல்லாமல் மிதந்து செல்லும். இதனால், உராய்வு குறைந்து மிக வேகமாக முன்னேற முடிகிறது.
</p><p>
முன்னதாக, 2025 ஜூன் மாதத்தில் இந்த ரயில் 7.1 விநாடிகளில் 650 கிமீ வேகத்தை எட்டியது. பின்னர் 697 கிமீ, 798 கிமீ வேகங்களை எட்டியதும், இப்போது 800 கிமீ வேகத்தை கடந்துள்ளது.</p><p></p><p>
</p><h2>
பயணிகள் ரயிலுக்காக அல்ல</h2><p>ஆய்வாளர்கள், இந்த சோதனை பயணிகள் ரயிலுக்காக அல்ல எனவும், மாறாக ரொக்கெட், ட்ரோன், இராணுவ விமானங்கள் மற்றும் தொழில்துறை போக்குவரத்து போன்ற துறைகளில் பயன்படும் தொழில்நுட்பமாக வளரக்கூடும் எனவும் கூறுகின்றனர்.</p><p>இந்த வேகத்தில் செல்ல, பாதையின் சீரமைப்பு 0.5 மில்லிமீட்டர் துல்லியத்தில் இருக்க வேண்டும். மேலும், வண்டியின் நிலை, மிதப்பு, காந்த இயக்கம், அவசர பிரேக் போன்றவை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
</p><p></p><p>சீனாவின் தற்போதைய வணிக மாக்லெவ் ரயில்கள் (Fuxing system) 349 கிமீ வேகத்தில் இயங்குகின்றன. ஆனால், இந்த சோதனை ரயில் அதைவிட இருமடங்கு வேகத்தில் இயங்குகிறது.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் எரிபொருள் செலவை குறைத்து ரொக்கெட் ஏவுதலுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்படலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T15:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை அணு ஆயுதம் பெற்ற முதல் இஸ்லாமிய குடியரசு என விமர்சித்த நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-calls-uk-first-nuclear-islamic-state-1786720585"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-calls-uk-first-nuclear-islamic-state-1786720585</id>
            <summary type="text">Netanyahu calls UK First Nuclear Islamic State: பெஞ்சமின் நெதன்யாகு பிரித்தானியாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரித்தானிய இஸ்லாமிய குடியரசுஇஸ்ரேல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Netanyahu calls UK First Nuclear Islamic State: பெஞ்சமின் நெதன்யாகு பிரித்தானியாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><h2>

பிரித்தானிய இஸ்லாமிய குடியரசு</h2><p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரித்தானியாவை “the Islamic republic of Britain” எனக் குறிப்பிட்டு, அது “அணு ஆயுதம் பெற்ற முதல் இஸ்லாமிய குடியரசு” என விவரித்துள்ளார்.</p><p>இஸ்ரேல்-பிரித்தானியா இடையிலான உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் நெதன்யாகு இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7197af56-50d0-4aaf-bb7b-2bc1abef3d02/26-6a7f314ada7ff.webp' /></p><p>
</p><h2>
விளைவுகள்</h2><p>புதிய பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம், காசா போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சித்து, சட்டவிரோத குடியேற்றப் பொருட்கள் மீது தடைகள் விதிக்கலாம் என அறிவித்துள்ளார்.</p><p>

இஸ்லாமோபோபிக் பேச்சுகள் அதிகரிப்பதால், தங்கள் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவின் முஸ்லிம் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p>இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர்கள், “இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியை இழிவுபடுத்தும் வகையில் நெதன்யாகு பேசியிருப்பது, கடுமையான தூதரகத் தோல்வி” எனக் கண்டித்துள்ளனர்.</p><p>இந்த கருத்துகள், நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடியதாகவும், உலகளாவிய அளவில் இஸ்ரேலின் தனிமைப்படுத்தலை மேலும் தீவிரப்படுத்தக்கூடியதாகவும் பார்க்கப்படுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T15:14:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பயனர்களுக்கு விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ள ChatGPT]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chatgpt-users-in-india-will-start-seeing-ads-1786717094"></link>
            <id>https://news.lankasri.com/article/chatgpt-users-in-india-will-start-seeing-ads-1786717094</id>
            <summary type="text">இந்திய பயனர்களுக்கு ChatGPTயில் விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.

ChatGPTயில் விளம்பரம் 

செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பயனர்களுக்கு ChatGPTயில் விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.
</p><h3>
ChatGPTயில் விளம்பரம் </h3><p>

செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான ChatGPTயை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். </p><p>

இந்தியாவில் வாரத்திற்கு 100 மில்லியன் பயனர்கள் செயல்பாட்டில் உள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4280d8a-ba64-4716-b684-669e5416272b/26-6a7f23a85c91f.webp' /></p><p>
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற மற்ற சமூகவலைத்தளங்களை போல ChatGPTயும் பயனர்களுக்கு விளம்பரங்களை காட்டி அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறது.</p><p>

தற்போது இந்தியாவில் உள்ள பயனர்களுக்கும் விளம்பரங்களை காட்டப்போவதாக OpenAI இந்திய பயனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி வருகிறது.
</p><p>
ChatGPT இலவச மற்றும் மாதம் ரூ.399 மதிப்புள்ள Go திட்டங்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் தோன்றும் என்றும், பிரீமியம் Plus, Enterprise, Pro மற்றும் Business பதிப்புகளில் விளம்பரங்கள் இருக்காது என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p>
இந்த விளம்பரங்கள் ChatGPT-யின் பதில்களால் பாதிக்கப்படுவதில்லை என்றும், உள்ளடக்கத்தின் தன்மையை தெரிவிக்கும் லேபிள்கள், ChatGPT பயனர்களுக்கு வழங்கும் பதில்களிலிருந்து பிரிக்கப்பட்டு தோன்றும் என்றும் உறுதியளிக்கிறது.</p><p>

ChatGPTயில் சேமிக்கப்பட்டிருக்கும் முந்தைய விளம்பரத் தொடர்புகள் மற்றும் பயனர்களின் உரையாடல் சூழல் உள்ளிட்ட தகவல்களைப் பயன்படுத்தி விளம்பரங்களைத் தனிப்பயனாக்க முடியும் என்று OpenAI கூறியுள்ளது.
</p><p>
அதே நேரத்தில், பயனர்களின் உரையாடல்கள், உரையாடல் வரலாறுகள், நினைவுகள் அல்லது தனிப்பட்ட தகவல்களுக்கு விளம்பரதாரர்களுக்கு அணுகல் கிடைக்காது என்று அந்த நிறுவனம் கூறியது.
</p><p>
விளம்பரப் பார்வைகள் மற்றும் கிளிக்குகளின் எண்ணிக்கை போன்ற விளம்பரத்தின் செயல்திறன் தகவல்களை மட்டுமே விளம்பரதாரர்கள் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T14:18:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரோன்களுக்கு 100 சதவீதம் வரி - சீனாவை குறிவைத்து ட்ரம்ப் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-imposes-100-percent-tariffs-on-drones-1786716245"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-imposes-100-percent-tariffs-on-drones-1786716245</id>
            <summary type="text">Trump imposes 100 percent tariffs on drones: சீன ட்ரான்கள் இறக்குமதி செய்யப்படுவதை குறைக்க ட்ரம்ப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump imposes 100 percent tariffs on drones: சீன ட்ரான்கள் இறக்குமதி செய்யப்படுவதை குறைக்க ட்ரம்ப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், சீனாவை குறிவைத்து, ட்ரோன்கள் மற்றும் அவற்றின் கூறுகளை இறக்குமதி செய்வதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.</p><p>
</p><h2>
100 சதவீத வரி </h2><p>வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 25 கிலோ எடையைத் தாண்டும் ட்ரோன்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு பயன்பாடுகளுக்கான திறன்கள் கொண்ட ட்ரோன்களுக்கு (உதாரணமாக thermal cameras, docking stations) 100 சதவீத வரி விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0215fe3d-5141-4e73-b713-b6b5c1c34c00/26-6a7f205739a05.webp' /></p><p>சிறிய அளவிலான ட்ரோன்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்.
</p><p>
அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, வெளிநாட்டு விநியோக சங்கிலிகளின் மீது இருக்கும் சார்பை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த புதிய வரிகள் செப்டம்பர் 3, 2026 முதல் அமுலுக்கு வரும்.</p><p></p><p>இதன்மூலம், உள்நாட்டு ட்ரோன் உற்பத்தி, அனுமதியற்ற கண்காணிப்பு, தரவு திருட்டு மற்றும் தாக்குதல் அபாயங்களை குறைக்கும் என அமெரிக்காவின் Federal Communications Commission (FCC) வலியுறுத்தியுள்ளது.</p><p>
</p><h2>
சீன ட்ரோன்கள் ஆபத்தானவை</h2><p>ட்ரோன்கள் வணிகத்திற்கும், இராணுவத்திற்கும் பயன்படுத்தப்படும் “dual-use” தொழில்நுட்பம் என்பதால், சீனாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் அமெரிக்க பாதுகாப்பிற்கு ஆபத்தானவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
சீனாவின் DJI நிறுவனம் உலகளாவிய ட்ரோன் சந்தையில் மூன்றில் இரண்டு பங்கைக் கைப்பற்றியுள்ளது. இது, சீனாவின் இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளதால், அமெரிக்க சந்தையில் கடுமையான கட்டுப்பாடுகளை சந்தித்து வருகிறது.
</p><p>
சமீபத்தில், சீனாவும் அமெரிக்காவிற்கு ட்ரோன் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதித்து, ஆறு அமெரிக்க நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால், அமெரிக்கா-சீனா இடையேயான ட்ரோன் வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T14:01:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வானியலாளர்களின் புதிய கண்டுபிடிப்பு - கருந்துளை நட்சத்திரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/astronomers-discover-rare-black-hole-star-1786712682"></link>
            <id>https://news.lankasri.com/article/astronomers-discover-rare-black-hole-star-1786712682</id>
            <summary type="text">Astronomers discover rare Black Hole Star: வானியலாளர்களின் &#039;கருந்துளை நட்சத்திரம்&#039; என்ற புதிய பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

வானியலாளர்கள், ஜேம்ஸ் வெப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Astronomers discover rare Black Hole Star: வானியலாளர்களின் 'கருந்துளை நட்சத்திரம்' என்ற புதிய பொருளை கண்டுபிடித்துள்ளனர்.</p><p>

வானியலாளர்கள், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) மூலம், MoM-BH-1 எனப்படும் மிகப் பிரகாசமான சிவப்பு புள்ளியை கண்டறிந்துள்ளனர்.
</p><p>
இது பெரு வெடிப்பிற்கு (Big Bang) பிறகு 660 மில்லியன் ஆண்டுகளில் உருவானதாகக் கூறப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f31fe13-da88-4e56-a8f7-7b484611825e/26-6a7f14511b6a1.webp' /></p><p>முதலில் இது ஒரு சாதாரண நட்சத்திரம் போலத் தோன்றியது. ஆனால், அதன் ஒளி அளவீடுகள், எந்த நட்சத்திரமும் செய்ய முடியாத தன்மைகளை வெளிப்படுத்தின.</p><p>ஆய்வாளர்கள், இது ஒரு இளம் கருந்துளை மிகப் பெரிய அடர்த்தியான ஹைட்ரஜன் வாயுவில் மூடப்பட்டிருப்பதாகவும், அந்த வாயு குவியல் காரணமாக நட்சத்திரம் போல பிரகாசிக்கிறது என்றும் விளக்குகின்றனர்.
</p><p>
இந்த “கருந்துளை நட்சத்திரம்” என்ற புதிய வகை பொருள், JWST கண்டுபிடித்த “சிறிய சிவப்பு புள்ளிகள்” (Little Red Dots) எனப்படும் மர்மமான வானியல் பொருட்களை விளக்க உதவுகிறது. இவை, ஆரம்ப காலத்தில் கருந்துளைகள் எவ்வாறு மிக வேகமாக வளர்ந்தன என்பதற்கான சான்றாகக் கருதப்படுகின்றன.</p><p></p><p>ஆய்வில், MoM-BH-1-இன் ஒளி அளவீட்டில் Balmer Break எனப்படும் மிக வலுவான ஹைட்ரஜன் உறிஞ்சல் மற்றும் வெளிப்பாடு கண்டறியப்பட்டது. </p><p>இது சாதாரண நட்சத்திரங்களில் காணப்படாத அளவிற்கு வலுவானது. இதன் மூலம், கருந்துளை நட்சத்திரம் என்ற புதிய வகை வானியல் பொருள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தில் உருவான சூப்பர் மாஸிவ் கருந்துளைகள் எவ்வாறு மிக வேகமாக வளர்ந்தன என்பதற்கான விளக்கமாகவும், வானியலின் முக்கிய புதிர்களைத் தீர்க்கும் வழியாகவும் பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T13:10:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தொடரில் அவர் அதை செய்வார் என நம்புகிறேன் - சுப்மன் கில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/manav-suthar-will-be-best-no-8-batter-said-by-gill-1786712497"></link>
            <id>https://news.lankasri.com/article/manav-suthar-will-be-best-no-8-batter-said-by-gill-1786712497</id>
            <summary type="text">மானவ் சுதர் இலங்கை தொடரில் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயல்படுவார் என கில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்திய சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மானவ் சுதர் இலங்கை தொடரில் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயல்படுவார் என கில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். </p><p>

இந்திய சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர், இலங்கை டெஸ்ட் தொடரில் துடுப்பாட்டத்திலும் பங்களிப்பார் என நம்புவதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.</p><h2>மானவ் சுதர்&nbsp;</h2><p> 

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் மானவ் சுதர் இடம்பிடித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09d35394-0875-4d9e-87bd-6611d6f0a36a/26-6a7f11b4d2fd9.webp' /></p><p></p><p>
பயிற்சி ஆட்டத்தில் அவர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 41 ஓட்டங்களும் எடுத்திருந்தார். </p><p>

இந்த நிலையில், மானவ் சுதரிடம் துடுப்பாட்டம் செய்வதற்கான திறமை உள்ளதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார். </p><h2>

சிறந்த பந்துவீச்சுத் திறன் உள்ளது</h2><p>அவர் கூறுகையில், "மானவ் சுதரிடம் துடுப்பாட்ட திறமை உள்ளது. இதற்கு சற்று அனுபவமும், நம்பிக்கையும் தேவை. 

களத்தில் இறங்கி விளையாடி ஓட்டங்கள் சேர்க்கும்போதுதான் அவை கிடைக்கும். </p><p>இந்தத் தொடரில் அவர் அதை செய்வார் என்று நம்புகிறேன். 

அவரிடம் சிறந்த பந்துவீச்சுத் திறன் உள்ளது; அதே சமயம், மிகச்சிறந்த No.8 துடுப்பாட்ட வீரராக உருவெடுக்கும் திறனும் அவரிடம் இருக்கிறது" என்றார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c1809f0-8fcc-4867-9ae8-8f55e54fcc35/26-6a7f11b586af4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb787dd3-c1b0-48e4-91cc-0c7e1dec9f06/26-6a7f11b42bef1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T13:00:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழுப்பை குறைக்கும் முள் இல்லாத மீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/benefits-of-eating-squid-fish-1786701051"></link>
            <id>https://news.lankasri.com/article/benefits-of-eating-squid-fish-1786701051</id>
            <summary type="text">பலருக்கும் மீன் சாப்பிடுவது பிடிக்கும் என்றாலும் அதில் இருக்கக்கூடிய முள் அவர்களுக்கு பிடிக்காத ஒன்றாகவே இருக்கிறது. அப்படியாக, நாம் இப்பொழுது விலை கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலருக்கும் மீன் சாப்பிடுவது பிடிக்கும் என்றாலும் அதில் இருக்கக்கூடிய முள் அவர்களுக்கு பிடிக்காத ஒன்றாகவே இருக்கிறது. அப்படியாக, நாம் இப்பொழுது விலை குறைவாகவும் அதே போல் முள் இல்லாத மீன் வகைகளை பற்றியும் பார்க்கலாம். </p><p>ஆங்கிலத்தில் squid அல்லது cuttlefish என்று அழைக்கப்படும் ஒருவகை சுவையான மீனின் பெயர் கணவாய் மீன். இந்த மீன்களில் முள் மற்றும் செதில்கள் இருக்காது. இது ஒரு வகையான கடல் மீனாகும். இது நம் உடலுக்கு தேவையான புரட்சத்து ஒமேகா- 3, கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2154a429-3665-4391-8d80-e272950e0159/26-6a7ee4fcbda5d.webp' /></p><p>WQNDTO8</p><p> </p><p>இந்த மீன்களை நாம் அடையாளம் காண்பதும் எளிது. இவற்றின் கண்கள் பெரியதாகவும் பற்கள் ரம்பத்தினை போன்று காட்சியளிக்கும். முன்புறத்தில் எட்டு கரங்கள் இருக்கும். அதை போல், பிரஷ்ஷான கணவாய் மீனின் உடல் பொதுவாக வெள்ளை அல்லது இளஞ்சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கும். </p><p>தோல் பளபளப்பாகவும் சதை உறுதியாகவும் இருக்கும். இந்த மீன்களை சாப்பிடுவதால் நம் உடலுக்கு அதிகளவில் ஆரோக்கியம் கிடைக்கிறது. இந்த வகை மீன்களில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களில் மூளையின் செயல்பாட்டையும் நினைவாற்றலையும் அதிகரிக்க உதவுகிறது.</p><h2>கொழுப்பை குறைக்கும்</h2><p> </p><p>அதை போல், இந்த சத்துக்களில் இருக்கக் கூடியவை நம் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து இதய நோய் வராமல் குறைக்கிறது. அதோடு கூடுதலாக, தசைகளின் வளர்ச்சிக்கும் திசுக்களை பழுது பார்ப்பதற்கும் தேவையான அத்தியாவசிய புரதச்சத்து இந்த கணவா மீன்களில் அதிகம் உள்ளது. இதைவிட முக்கியமாக கார்போஹைட்ரேட் மட்டும் கலோரிகள் மிகக் குறைவு என்பதால் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க இவை உதவியாக இருக்கிறது.</p><h2>ரத்த சோகையை தடுக்கும்</h2><p> </p><p>மேலும், இந்த கணவா மீனில் உள்ள இரும்பு மற்றும் தாமிரம் சத்துக்கள் நம்முடைய சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகை வராமல் தடுக்கிறது. பொதுவாக, வாழ்வியல் நோய் பாதிப்பு இருப்பவர்கள் இறைச்சி வகைகளை சாப்பிடுவதற்கு அவர்கள் அஞ்சுவதுண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99966b0e-a295-4822-b94e-964daa760707/26-6a7ee4fd74ff9.webp' /></p><p></p><p> ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த மீன் ஒரு சிறந்த உணவாகும். காரணம் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. அது மட்டும் அல்லாமல் அயோடின் சத்து தைராயிடு சுரப்பியின் சீரான செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது.</p><h2>நினைவாற்றல் அதிகரிக்கும்</h2><p> </p><p>அதனால், தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் இந்த மீன் எடுத்துக் கொள்வது மிக சிறப்பு. இந்த கணவா மீன் நம்முடைய மூளை செயல்பாட்டிற்கும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. </p><p>கோலின் என்றும் அறிய ஊட்டச்சத்து இந்த மீனில் அதிகம் உள்ளது. ஆதலால், நம்முடைய நினைவாற்றல் அதிகரிக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இது மூளை டோபமைன் மகிழ்ச்சி ஹார்மோன்களை தூண்டி நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் மன அழுத்தத்திலிருந்தும் விடுவிக்கிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T12:59:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய பிரதமரின் நிபுணர் ஆலோசகராக தமிழ் வம்சாவளி - யார் இந்த கெளதம் ரங்கராஜன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamil-gautam-rangarajan-as-uk-andy-burnham-advisor-1786706354"></link>
            <id>https://news.lankasri.com/article/tamil-gautam-rangarajan-as-uk-andy-burnham-advisor-1786706354</id>
            <summary type="text">gautam rangarajan appointed as uk pm advisor: தமிழ் வம்சாவளியான கெளதம் ரங்கராஜனை கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான புதிய நிபுணர் ஆலோசகராகத் தனது நிர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>gautam rangarajan appointed as uk pm advisor: தமிழ் வம்சாவளியான கெளதம் ரங்கராஜனை கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான புதிய நிபுணர் ஆலோசகராகத் தனது நிர்வாகத்தில் சேர்த்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம்.</p><p>பிரித்தானிய பிரதமராக பதவியேற்றுள்ள ஆன்டி பர்னாம், அமைச்சரவை மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.</p><p>

அதன்படி, பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழ் வம்சாவளியான கெளதம் ரங்கராஜனை கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான புதிய நிபுணர் ஆலோசகராகத் தனது நிர்வாகத்தில் சேர்த்துள்ளார் ஆன்டி பர்னாம்.</p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">கெளதம் ரங்கராஜன்</span></p><p>கெளதம் ரங்கராஜன், தமிழ்நாட்டின் கும்பகோணத்தை பூர்விகமாக கொண்ட முன்னாள் இந்திய தூதரக அதிகாரியான என்.எல் ரங்கராஜன் என்பவரின் மகன் ஆவார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e946d9ba-1bd8-4453-bb15-03896e390139/26-6a7ef9b3a683e.webp' /></p><p>

1971 ஆம் ஆண்டில் பிறந்த ரங்கராஜன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இசையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். </p><p></p><p>

1993 ஆம் ஆண்டில் பிபிசியில் பயிற்சித் தயாரிப்பாளராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், குழும வியூகம், செயல்திறன் இயக்குநர் என 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
</p><p>
மேலும், தொழில்முறை குழுப் பாடகராகவும் இசைத் தயாரிப்பாளராகவும் உள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p>ரங்கராஜனின் பொறுப்புகளின் குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. </p><p>

இருப்பினும், பெருநிறுவன உத்தி மற்றும் உருமாற்றத்தில் அவருக்கிருக்கும் பின்னணியை இந்த நியமனம் பயன்படுத்திக்கொள்ளும் என்று பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T12:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் பற்றியெரியும் காட்டுத்தீ: 19 பேர் மருத்துவமனைகளில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/19-hospitalized-due-to-uk-wild-fire-1786710797"></link>
            <id>https://news.lankasri.com/article/19-hospitalized-due-to-uk-wild-fire-1786710797</id>
            <summary type="text">இங்கிலாந்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ பரவிவரும் நிலையில், 19 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ பரவிவரும் நிலையில், 19 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
</p><p>

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில் பல இடங்களில் காட்டுத்தீ கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
</p><h3>
பல இடங்களில் காட்டுத்தீ</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e687ac1a-69d1-4526-bba8-ccc6f180aa79/26-6a7f0b10c2b22.webp' /></p><p>Birmingham, Staffordshire மற்றும் Worcestershire ஆகிய பகுதிகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 தீயணைப்பு இயந்திரங்களுடன் தீயணைப்புவீரர்கள் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2865a1cd-2000-462b-9aef-7a319403a79c/26-6a7f0b0f68874.webp' /></p><p>பல வீடுகள் எரிந்து நாசமாகிவிட்ட நிலையில், மூன்று முதியோர் இல்லங்களில் இருந்தவர்கள் உட்பட சுமார் 300 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
சில அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றை மட்டுமே எடுக்க முடிந்ததாக கூற, சிலர் தங்கள் செல்லப்பிராணிகளை மட்டுமே தங்களுடன் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b0a9cc6-e1b8-44dd-aea6-4cd9c8f74ef9/26-6a7f0b101d1e6.webp' /></p><p>சுமார் 54 பேருக்கு அவசர உதவிக்குழுவினர் சிகிச்சையளித்த நிலையில், மூன்று தீயணைப்பு வீரர்கள், ஆறு பொதுமக்கள், ஒரு குழந்தை உட்பட 19 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பெரும்பாலும் புகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T12:33:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் விமான பணிப்பெண்களுக்கு திடீர் உடல் நல பாதிப்பு: அவசர உதவியை அழைத்த விமானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pilot-message-crew-mysteriously-falls-ill-mid-air-1786710144"></link>
            <id>https://news.lankasri.com/article/pilot-message-crew-mysteriously-falls-ill-mid-air-1786710144</id>
            <summary type="text">அமெரிக்காவில் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானமொன்றின் அனைத்து பணிப்பெண்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.


நேற்று, அதாவது, ஆகத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானமொன்றின் அனைத்து பணிப்பெண்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>

நேற்று, அதாவது, ஆகத்து மாதம் 13ஆம் திகதி காலை, ஃப்ரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, அமெரிக்காவின் Cleveland விமான நிலையத்திலிருந்து Fort Lauderdale நகரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
</p><p>
அப்போது, திடீரென ஒருவர் பின் ஒருவராக விமானத்திலிருந்த ஐந்து பணிப்பெண்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h3>

அவசர உதவியை அழைத்த விமானி
</h3><p>
உடனடியாக Fort Lauderdale விமான நிலைய விமான கட்டுப்பாட்டு அலுவலர்களை தொடர்புகொண்ட விமானி, தனது பணிப்பெண்கள் நான்கு பேருக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாகவும், ஐந்து பேருக்குமே தலைவலி இருப்பதாகவும் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b4eaff-355d-4b9d-a1cd-370b0f98ff5e/26-6a7f08823f223.webp' /></p><p>

நாங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, மருத்துவ உதவிக்குழுவினரை தயாராக நிறுத்திவைத்தால் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>

அவரது கோரிக்கையின்படி விமானம் தரையிறங்கவும் தயாராக காத்திருந்த மருத்துவ உதவிக்குழுவினர் பணிப்பெண்களுக்கு சிகிச்சையளித்துள்ளார்கள்.</p><p></p><p>

எதனால் அவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவராத நிலையில், விமானத்தில் பயன்படுத்தப்படும் எஞ்சின் ஆயில் அல்லது ஏதாவது ரசாயனப்பொருள் ஆவியாகி, அது விமானத்திலுள்ள ஏர் கண்டிஷனர் மூலம் விமானத்துக்குள் இழுக்கப்படுவதால் இப்படி நேரிடலாம் என்கிறார்கள் அனுபவம் உள்ளவர்கள்.
</p><p>
இதற்கிடையில், தானும் இதுபோன்ற அனுபவங்களை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் விமான பணிப்பெண்ணொருவர் கூற, இப்படி ஒரு அபாயம் உள்ளது, ஆனால், அதைக் குறித்து பேசாமல் விமானத் துறையினர் அமைதியாக இருக்கிறார்கள் என்கிறார் மற்றொரு பெண்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T12:22:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் நிலவு பயணத்தை தொடங்கவுள்ள பாகிஸ்தான் - நிலவுக்கு செல்லும் ஜின்னா 1]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-first-moon-rover-jinnah-1-to-launch-2029-1786709270"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-first-moon-rover-jinnah-1-to-launch-2029-1786709270</id>
            <summary type="text">&amp;nbsp;pakistan 1st moon rover jinnah-1 : ஜின்னா 1 மூலம் 2029 ஆம் ஆண்டில் தனது முதல் நிலவு பயணத்தை பாகிஸ்தான் தொடங்க உள்ளது.
 
முதல் நிலவு பயணத்தை தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;pakistan 1st moon rover jinnah-1 : ஜின்னா 1 மூலம் 2029 ஆம் ஆண்டில் தனது முதல் நிலவு பயணத்தை பாகிஸ்தான் தொடங்க உள்ளது.
</p><h3> 
முதல் நிலவு பயணத்தை தொடங்கவுள்ள பாகிஸ்தான்</h3><p>

2008 ஆம் ஆண்டிலே சந்திராயன் 1 திட்டம் மூலம் இந்தியா நிலவுக்கு செயற்கைகோளை அனுப்பி ஆய்வு செய்ததோடு, 2023 ஆம் ஆனதில் சந்திரயான்-3 மூலம், நிலவின் தென் துருவப் பகுதியில் சாஃப்ட் லேண்டிங் செய்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4752af9f-9185-4f74-8cca-cfd4ba6c3b6a/26-6a7f0518dee30.webp' /></p><p>

பாகிஸ்தான் தனது முதல் நிலவு பயணத்தை 2029 ஆம் ஆண்டில் சீனாவின் சாங் இ-8 விண்கலத்தின் மூலம் நிலவுக்கு அனுப்பப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

ஜின்னா 1(Jinnah-1) என அழைக்கப்படும் இந்த நிலவு ஊர்தியானது நிலவின் தென் துருவத்திற்கு அருகில் சவாலான நிலப்பரப்பு, முக்கியமான கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p>

பாகிஸ்தான் முழுவதிலும் இருந்து 4,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்ற, நாடு தழுவிய போட்டி ஒன்றின் மூலம் இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d69892e2-fe7d-4df4-ba71-f2d71d04dcde/26-6a7f051838453.webp' /></p><p>

7 பங்கேற்பாளர்களால் தனித்தனியாக முன்மொழியப்பட்ட “ஜின்னா-1” மிகவும் தனித்துவமான தேர்வாக உருவெடுத்தது.&nbsp;</p><p> 

இந்தப் பெயர், பாகிஸ்தானின் நிறுவனரான முகமது அலி ஜின்னாவைக் குறிக்கிறது.
</p><p>
இந்த ரோவர், பாகிஸ்தானிய பொறியாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் நிலவு அறிவியல் மற்றும் ஆழ்விண்வெளிச் செயல்பாடுகள் ஆகியவற்றில் மதிப்புமிக்க அனுபவத்தை வழங்கக்கூடும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T12:14:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசத்துரோகக் குற்றவாளி: 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த ரஷ்ய நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/moscow-court-sentence-man-jail-for-23-years-1786708747"></link>
            <id>https://news.lankasri.com/article/moscow-court-sentence-man-jail-for-23-years-1786708747</id>
            <summary type="text">போலந்திற்காக உளவு பார்த்ததாக இளைஞர் ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த&amp;nbsp; இளைஞர் ஒருவர் போலந்திற்காக உளவு பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலந்திற்காக உளவு பார்த்ததாக இளைஞர் ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.</p><p>
</p><p>ரஷ்யாவைச் சேர்ந்த&nbsp; இளைஞர் ஒருவர் போலந்திற்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.&nbsp;</p><h2>போலந்திற்காக உளவு</h2><p>
2022-யில் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ஜார்ஜி பிரோகோ என்ற ரஷ்ய இளைஞர், தொழில்துறை மலையேறுபவராக பணியாற்றுவதற்காக ஜார்ஜியாவிற்கு இடம்பெயர்ந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5be9363-96a8-4d95-8930-0b4d92138649/26-6a7f044b958ff.webp' />&nbsp;</p><p>&nbsp;</p><p>


அதன் பின்னர் 2024ஆம் ஆண்டில் அவர், உஸ்பெகிஸ்தானுக்கு ஒரு வணிகப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவர் காணாமல்போனதாக கூறப்பட்டது. </p><p>

இந்த நிலையில், மாஸ்கோவின் மாட்ரோஸ்காயா திஷினா முன்விசாரணை தடுப்புக்காவல் நிலையத்தில் அவர் மீண்டும் தென்பட்டார். 

போலந்து நாட்டிற்காக உளவு பார்த்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.</p><h2>23 ஆண்டுகள் சிறைத்தண்டனை </h2><p>இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஒருவர், பிரோகோவிற்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.</p><p> 

மேலும், அவருக்கு தண்டனையுடன் 800,000 ரூபிள்கள் அபராதமும் விதிக்கப்பட்டதாக FSB பாதுகாப்பு சேவை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. </p><p>

செய்தி நிறுவனமான TASS வெளியிட்ட FSB வீடியோவில் பிராகோவின் விசாரணை காட்டப்பட்டது. அப்போது அவர் போலந்து உளவுத்துறையுடன் இணைந்து பணியாற்றியதை ஒப்புக்கொண்டார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7983716c-d431-4c45-972b-cfac872b9809/26-6a7f044c64d52.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T12:02:21+00:00</updated>
        </entry>
    </feed>
