<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-23T07:45:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் இருந்து தூதர்களை திரும்ப பெரும் பிரித்தானியா: 12வது நாளாக தொடரும் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-withdraws-embassy-staff-from-iran-1784790267"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-withdraws-embassy-staff-from-iran-1784790267</id>
            <summary type="text">ஈரானில் உள்ள தூதரக அதிகாரிகளை பிரித்தானிய தற்காலிகமாக திரும்ப பெற்றுள்ளது. தூதர்களை திரும்ப பெரும் பிரித்தானியாமத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் உள்ள தூதரக அதிகாரிகளை பிரித்தானிய தற்காலிகமாக திரும்ப பெற்றுள்ளது.</p><h2> தூதர்களை திரும்ப பெரும் பிரித்தானியா</h2><p>மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஈரானில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை தற்காலிகமாக திரும்ப பெறுவதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.</p><p> பிரித்தானிய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகம் தங்களுடைய செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5818852-cc25-4335-8750-b001d586c7e7/26-6a61bcfd5aa0e.webp' /></p><p> மேலும் இணைய வழியில் தூதரக பணிகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஈரானை குறிவைத்து தொடர்ந்து 12 வது நாளாக அமெரிக்கா தங்களது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.</p><p></p><p> &nbsp;அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானிய தலைநகரில் உள்ள மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினரும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f1ab89d-d3ab-4c11-9ef1-790a18bbf3cf/26-6a61bcfe266bf.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T07:04:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள்.., ஏன் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/why-air-hostess-are-always-female-in-tamil-1784789863"></link>
            <id>https://news.lankasri.com/article/why-air-hostess-are-always-female-in-tamil-1784789863</id>
            <summary type="text">பொதுவாக, விமானத் துறையில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். 

குறிப்பாக, விமானங்களில் பணிபுரியும் கேபின் குழுவினரில் பெண்களின் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, விமானத் துறையில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.</p><p> 

குறிப்பாக, விமானங்களில் பணிபுரியும் கேபின் குழுவினரில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.</p><p>

ஆனால், விமானப் போக்குவரத்து தொடங்கிய காலத்தில் நிலைமை வேறுபட்டிருந்தது. </p><p>

1912ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த DELAG விமான நிறுவனத்தில் பணியாற்றிய ஹென்ரிச் குபிஸ், வரலாற்றின் முதல் விமானப் பணிப்பாளராகக் கருதப்படுகிறார்.&nbsp;&nbsp;</p><p>அந்தக் காலகட்டத்தில் கேபின் குழுவினராக ஆண்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b25279-35fb-42d6-b669-b87181916ba2/26-6a61bb6a1c6cd.webp' /></p><p>பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதைவிட, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே கேபின் குழுவினரின் முக்கியப் பணியாக இருந்தது. </p><p>

இதனால், விமான நிறுவனங்கள் ஆண்களையே அதிகம் பணியமர்த்தின.

இதில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் எலன் சர்ச். </p><p>பதிவு பெற்ற செவிலியரான இவர், 1930ஆம் ஆண்டு போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக இணைந்தார்.&nbsp;&nbsp;</p><p>இதன் பின்னர், பயணிகளைக் கவனித்துக்கொள்ள பெண் செவிலியர்களை விமான நிறுவனங்கள் அதிகளவில் பணியமர்த்தத் தொடங்கின.
</p><p>
இதன் காரணமாக, விமானப் பணிக்குழுவில் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95fd25b9-4f90-4095-9954-0b5addde9737/26-6a61bb696acee.webp' /></p><p>மேலும், பெண்களின் வரவேற்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை திறன்களும் இந்தத் துறையில் அவர்களுக்கு சாதகமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.&nbsp;</p><p>20ஆம் நூற்றாண்டின் மத்தியில், விமான நிறுவனங்கள் பெண் பணியாளர்களின் வயது, எடை, திருமண நிலை மற்றும் தோற்றம் தொடர்பாக கடுமையான விதிமுறைகளை வகுத்தன.
</p><p>
பெண்களின் தோற்றத்தை வணிக ரீதியாக பயன்படுத்தியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.</p><p>

தற்போது, பல விமான நிறுவனங்களில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் கேபின் குழுவில் பணியாற்றுகின்றனர். </p><p>இதனால், விமானப் பணிக்குழு என்றாலே பெண்கள் என்ற பிம்பம் உருவாகியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசுக்களுக்கு மேய்ச்சலுக்குப் புல் இல்லாததால் சுவிஸ் விவசாயிகள் எடுத்துள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cows-brought-down-from-mountains-early-for-drought-1784789831"></link>
            <id>https://news.lankasri.com/article/cows-brought-down-from-mountains-early-for-drought-1784789831</id>
            <summary type="text">சுவிஸ் மாகாணமொன்றில், மலைகளில் பசுக்களுக்கு மேய்ச்சலுக்குப் புல் இல்லாததால், முன்கூட்டியே அவற்றை கீழே கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள் விவச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிஸ் மாகாணமொன்றில், மலைகளில் பசுக்களுக்கு மேய்ச்சலுக்குப் புல் இல்லாததால், முன்கூட்டியே அவற்றை கீழே கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள் விவசாயிகள்.
</p><h3>
சுவிஸ் விவசாயிகள் எடுத்துள்ள முடிவு
</h3><p>
சுவிட்சர்லாந்தில், விவசாயிகள் தங்கள் பசுக்களை ஆல்ப்ஸ் மலையில் மேய்ப்பது வழக்கம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67540987-eede-48b3-a058-69a46e78922f/26-6a61bb485bce2.webp' /></p><p>
அப்படி ஆல்ப்ஸ் மலையில் மேயும் பசுக்கள் பலதரப்பட்ட தாவரங்களை உட்கொள்வதால், அவை தரும் பாலுக்கும், அதிலிருந்து தயாரிக்கப்படும் ஆல்ப்ஸ் பாலாடைக்கட்டிக்கும் அதிக மதிப்பு உள்ளது.&nbsp;</p><p>
ஆகவே, மலைகளில் மேய்க்கப்படும் பசுக்களுக்கு அரசு நிதி உதவியும் செய்கிறது.&nbsp;</p><p></p><p>

இப்படி மலையில் மேயும் பசுக்களை, பொதுவாக செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில்தான் கீழே இறக்கிக் கொண்டுவருவார்கள் விவசாயிகள்.
</p><p>
ஆனால், ஜூன் மாதம் கல்மழை பெய்ததால் புல்வெளிகள் பாதிக்கப்பட்டதுடன், வறட்சி காரணமாக மீண்டும் புல் வளரவும் இல்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56c4f989-185b-4d75-af37-249587116216/26-6a61bb490c9a9.webp' /></p><p>
ஆகவே, Fribourg மாகாண விவசாயிகள் புல் இல்லாததால் இப்போதே தங்கள் பசுக்களை மலையிலிருந்து இறக்கி கீழே கொண்டுவரத் துவங்கிவிட்டார்கள்.</p><p>

இதனால் விவசாயிகளுக்கு இரண்டு இழப்புகள்: ஒன்று, மலையில் மேயாமல் பண்ணையில் மாட்டுத்தீவனம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் பாலுக்கு குறைவான விலையே கிடைக்கும். இரண்டு, அரசு வழங்கும் நிதி உதவி கிடைக்காது.
</p><p>
ஆக, சில விவசாயிகள் தங்கள் பசுக்களில் சிலவற்றை விற்கத் துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதனால் பசு ஒன்றிற்கு சுமார் 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுமாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:57:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு நிறமாக மாறிய மெல்போர்ன் நகரம்... பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/melbourne-teachers-strike-1784788457"></link>
            <id>https://news.lankasri.com/article/melbourne-teachers-strike-1784788457</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அதிக சம்பளம் கோரி வீதிகளில் இறங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேலைநிறுத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அதிக சம்பளம் கோரி வீதிகளில் இறங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>வேலைநிறுத்தப் போராட்டம்</h2><p>
</p><p>சிறந்த ஊதியம் மற்றும் பணிச் சூழலைக் கோரி, விக்டோரியா மாகாணப் பாடசாலைகளின் 35,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பாடசாலை முதல்வர்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்த ஊழியர்கள் மெல்போர்ன் நகரின் மையப்பகுதியில் வியாழக்கிழமை கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd0c83d-2f34-4958-ac2d-461f3a2af8b1/26-6a61b750812b2.webp' /></p><p> அவுஸ்திரேலியக் கல்விச் சங்கத்தின் மாகாண உறுப்பினர்கள், ஆலன் அரசாங்கத்தின் சமீபத்திய சலுகையை வாக்களித்து நிராகரித்ததாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>நான்கு ஆண்டுகளில் 28.3 சதவீத ஊதிய உயர்வுக்கான திருத்தப்பட்ட முன்மொழிவு, 51.18 சதவீத உறுப்பினர்களின் எதிர்ப்பால் மிகக் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.</p><p></p><p> </p><p>வியாழக்கிழமை நடைபெறவுள்ள பேரணிக்கு முன்னதாக, வாக்கெடுப்பு முடிவுகள் மிக நெருக்கமாக இருந்ததை ஒப்புக்கொண்ட தொழிற்சங்கத்தின் விக்டோரியப் பிரிவுத் தலைவர் ஜஸ்டின் முல்லாலி, இருப்பினும் கல்வியாளர்கள் பெருமளவில் இதில் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ளார். </p><p>சமீபத்திய ஊதிய உயர்வுச் சலுகை குறிப்பிடத்தக்கது என்பதை முல்லாலி ஒப்புக்கொண்டார்; இருப்பினும், அதிக பணிச்சுமை மற்றும் குறைவான ஊதியம் கொண்ட கல்வியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அது போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>நடவடிக்கைக்கு ஆதரவு</h2><p>
</p><p>இதனிடையே, ஆசிரியர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறிய ஃபெடரல் கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர், அதைச் செயல்படுத்தும் விக்டோரிய மாகாண அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். </p><p>ஆசிரியர்கள் போராட்டம் ஒருபக்கம் நடந்தாலும், வியாழக்கிழமையன்று அனைத்து அரசுப் பள்ளிகளும் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் பல வகுப்புகள் பாதிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c75af29e-d5a5-415f-824a-2affa4e44c42/26-6a61b74fb98ec.webp' /></p><p> </p><p>ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அரசாங்கத்துடன் ஊதியத் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்; இதில், நாட்டின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் பிரிவினரான பட்டதாரி ஆசிரியர்கள், அதிகபட்ச ஊதியம் வழங்கப்படும் 'நார்தர்ன் டெரிட்டரி' (Northern Territory) பகுதி ஆசிரியர்களை விட 13,000 டொலர்கள் குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T06:32:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைப்ரஸ் ஹோட்டல் விபத்து: மாடியில் இருந்து விழுந்த 2 வயது சிறுவன்: தந்தை மீது வழக்குப்பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/son-window-fall-in-cyprus-father-face-charges-1784787636"></link>
            <id>https://news.lankasri.com/article/son-window-fall-in-cyprus-father-face-charges-1784787636</id>
            <summary type="text">சைப்ரஸ் நாட்டில் பாஃபோஸ் நகரில் உள்ள விடுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தில் பிரித்தானிய தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சைப்ரஸ் நாட்டில் பாஃபோஸ் நகரில் உள்ள விடுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தில் பிரித்தானிய தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2> மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுவன்</h2><p>ஞாயிற்றுக்கிழமை சைப்ரஸ் நாட்டின் பாஃபோஸ் நகருக்கு அருகிலுள்ள கிங் எவெல்தன் பீச் ஹோட்டல் அண்ட் ரெசார்ட்டில் தந்தையும் அவரது 2 வயது மகனும் நான்காவது மாடியில் லிப்டுக்காக காத்திருந்துள்ளனர்.</p><p>அப்போது மகனை இடுப்பில் வைத்து இருபுறமும் ஆட்டி விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மகன் திடீரென பிடியில் இருந்து நழுவி அருகில் இருந்த ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a61bc20-77bc-4d7b-8150-6c9b962a86ae/26-6a61b2b66f5b2.webp' /></p><p>சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2> தந்தை மீது வழக்குப்பதிவு</h2><p>இந்நிலையில், இந்த விவகாரத்தில் தந்தையின் பொறுப்பற்ற செயல் மற்றும் அலட்சியம் சிறுவனின் உயிருக்கு ஆபத்து விளைவித்ததாக கூறி அவர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யுமாறு அட்டர்னி ஜெனரல் ஜார்ஜ் சவிடிஸ் உத்தரவிட்டுள்ளார்.</p><p> இந்த வழக்கில் தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> விசாரணையின் போது, தந்தையின் ரத்தத்தில் மிக குறைவான அளவு மது அருந்தியதற்கான தடயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.</p><p> குழந்தையின் பெற்றோர் 20,000 யூரோக்களை செலுத்தி ஜாமீன் பெற்றுள்ள போதிலும், அவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-23T06:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தூதரக அலுவலர்களை ஈரானிலிருந்து திரும்ப அழைத்துக்கொண்ட பிரித்தானியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-withdraws-diplomatic-staffs-from-iran-1784787496"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-withdraws-diplomatic-staffs-from-iran-1784787496</id>
            <summary type="text">பிரித்தானியா, தனது தூதரக அலுவலர்களை ஈரானிலிருந்து திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது.

பின்னணி

அமெரிக்கா, தொடர்ந்து 11 இரவுகளாக ஈரான் மீது தாக்குதல் நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா, தனது தூதரக அலுவலர்களை ஈரானிலிருந்து திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது.
</p><h3>
பின்னணி
</h3><p>
அமெரிக்கா, தொடர்ந்து 11 இரவுகளாக ஈரான் மீது தாக்குதல் நிகழ்த்திவருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9d08ac-018d-4720-8e86-1cf158f9ba05/26-6a61b22a0d1e8.webp' /></p><p>
அத்துடன், ஈரான், ஏவுகணையையோ, ரொக்கெட்டையோ, ட்ரோனையோ அல்லது எந்த வித ஆயுதத்தையானாலும்,
ஹோர்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் ஒரு கப்பலை நோக்கி ஏவுமானால், பதிலுக்கு, ஈரானின் தலைநகர் அல்லது அதன் அருகிலுள்ள ஒரு பாலம் அல்லது ஒரு அணு மின் நிலையத்தை அமெரிக்கா குண்டு வீசி அழிக்கும் என அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் எச்சரித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02943a2-697d-4ec8-b9b6-d41d9a0916a3/26-6a61b2295be42.webp' /></p><p>ஆக, இப்படியொரு பதற்றமான சூழல் நிலவுவதைத் தொடர்ந்தே, பிரித்தானியா தனது தனது தூதரக அலுவலர்களை ஈரானிலிருந்து திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

ஈரானின் நிலவும் பாதுகாப்புச் சூழலை கருத்தில் கொண்டு தனது தூதரக அலுவலர்களை ஈரானிலிருந்து தற்காலிகமாக திரும்ப அழைத்துக்கொள்வதாக தெரிவித்துள்ள பிரித்தானியா, தூதரகப் பணிகள் ஈரானுக்கு வெளியிலிருந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், பிரித்தானியர்கள் ஈரானுக்கு பயணிக்கவேண்டாம் என்றும், ஈரானிலிருக்கும் பிரித்தானியர்கள் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரித்தானிய அரசு அறிவுறுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:20:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் படம் பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minister-parvace-crying-watch-vijay-jananayagan-1784786278"></link>
            <id>https://news.lankasri.com/article/minister-parvace-crying-watch-vijay-jananayagan-1784786278</id>
            <summary type="text">முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் படத்தை திரையரங்கில் பார்த்து அமைச்சர் பர்வேஷ் தேம்பி தேம்பி அழுதுள்ளார். 

முதல்வர் விஜய்யின் ஜனநாயகன்

முதல்வர் விஜய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் படத்தை திரையரங்கில் பார்த்து அமைச்சர் பர்வேஷ் தேம்பி தேம்பி அழுதுள்ளார். </p><h3>

முதல்வர் விஜய்யின் ஜனநாயகன்
</h3><p>
முதல்வர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவானது ஜனநாயகன் திரைப்படம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b48f5fc-c47d-4a7f-a7dd-e65420892d85/26-6a61af9f8853d.webp' /></p><p>

விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் இது அவரது கடைசிப்படம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.&nbsp;</p><p>

கடந்த ஜனவரி 9 ஆம் திகதி இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சென்சார் காரணங்களால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, விஜய் முதல்வராக பொறுப்பேற்று 2 மாதங்கள் கழித்து இன்று வெளியாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6a6c8e2-0678-40b0-8a2e-c3112fb629d7/26-6a61af9def6ef.webp' /></p><p>

ரசிகர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் பலரும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க திரையரங்குகளில் குவிந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/653f3806-3aa8-4f89-bf09-0becafefdfef/26-6a61af9ecbc40.webp' /></p><p>

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் அமைச்சரும், விஜய் ரசிகர் மன்ற தலைவருமான புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், நடிகை திரிஷாவின் தாயார், நடிகர் அர்ஜூன் தாஸ் படத்தை பார்த்தனர்.&nbsp;</p><p></p><p>

சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுடன் ஜனநாயகன் FDFS பார்த்தனர். </p><h3> 

அழுத அமைச்சர் பர்வேஷ்
</h3><p>
புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஷ், ஜனநாயகன் படத்தை பார்த்தார். </p><p>

ஜனநாயகன் படத்தின் தொடக்கத்தில், கடந்த 30 வருடங்களாக விஜய் நடித்த படங்களின் தொகுப்பானது ஒளிபரப்பபட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3303fb14-df70-4a2e-a44d-4ff45ea93489/26-6a61ad674e751.webp' /></p><p>

தனது தலைவனின் கடைசி படத்தை பார்த்த அமைச்சர் பர்வேஷ், திரையரங்கில் தேம்பி தேம்பி கண்ணீர் விட்டு அழுதார். </p><p>

அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரான பர்வேஷ், அதற்கு முன்னர் விஜய் ரசிகர் மன்றத்தில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பொறுப்புகளை வகித்தார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T05:58:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் பானம்.., எப்படி தயாரிப்பது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/herbal-tea-for-control-diabetes-permanently-1784783970"></link>
            <id>https://news.lankasri.com/article/herbal-tea-for-control-diabetes-permanently-1784783970</id>
            <summary type="text">இரத்த சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும் ஒரு நிலை ஆகும். 

இது இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் அதனை பயன்படுத்தாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்த சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும் ஒரு நிலை ஆகும். </p><p>

இது இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் அதனை பயன்படுத்தாதபோது ஏற்படுகிறது. </p><p>

உணவு கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.</p><p>
</p><p></p><p>அதன்படி, இரும்புச்சத்து நிறைந்த முருங்கை இலைகள் சர்க்கரையை நிரந்தரமாகக் கட்டுக்குள் வைப்பதில் உதவியாக இருக்கும்.</p><p>

அந்தவகையில், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் முருங்கை இலை டீ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.&nbsp;</p><h2>தேவையான பொருட்கள்
</h2><ul><li>
முருங்கை இலை- ½ கைப்பிடி</li><li>
தண்ணீர்- 2 கப்
</li><li>இஞ்சி - 1 சிறிய துண்டு
</li><li>தேன்- 1 ஸ்பூன்
</li></ul><h2>
எப்படி தயாரிப்பது?
</h2><p>
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் இஞ்சியை துருவி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.</p><p>

கொதித்து வரும் வேலையில் அதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை இலைகளை சேர்த்து கொதிக்க விடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0a55e3e-7941-412d-a2b1-b427edbdf1eb/26-6a61a52d946fe.webp' /></p><p>

கொதிக்கின்ற தண்ணீர் பாதி அளவிற்கு சுண்டும் வரை கொதிக்க விடவும்.
</p><p>
பின் இதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
</p><p>
இந்த பணத்தை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T05:23:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் வழக்கு: முக்கிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/female-friend-charged-kills-of-brit-girl-in-france-1784782848"></link>
            <id>https://news.lankasri.com/article/female-friend-charged-kills-of-brit-girl-in-france-1784782848</id>
            <summary type="text">பிரான்சில் வாழ்ந்துவந்த பிரித்தானியப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் வாழ்ந்துவந்த பிரித்தானியப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர முடிவு</h3><p>

2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, பிரான்சிலுள்ள Tremolat என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த கேரன் கார்ட்டர் (Karen Carter, 65) என்னும் பிரித்தானியப் பெண், தனது காரின் அருகே படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/920b6209-709a-43a7-bfe2-54f155fd4d65/26-6a61a0017c6a8.webp' /></p><p>
அவர், மார்பு, கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் கூர்மையான ஒரு ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
</p><h3>
ஒரு வேடிக்கையான முக்கோணக் காதல்
</h3><p>
இதற்கிடையில், கேரனுடைய கொலைக்குக் காரணம், அவர் முக்கோணக் காதல் ஒன்றில் ஈடுபட்டிருந்ததே என கூறப்பட்டது.</p><p>

கேரன், திருமணமானவர். அவரது கணவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவருகிறார்.
</p><p>
இந்நிலையில், கேரன் பிரான்சில் வாழும் ஜீன் (Jean-François Guerrier, 75) என்பவருடன் காதலில் விழுந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dee21cae-c293-4684-aeb3-efba3dcc93b8/26-6a61a002314b5.webp' /></p><p>விடயம் என்னவென்றால், ஏற்கனவே மேரீ (Marie-Laure Autefort, 70) என்னும் பெண் ஜீனை கண்மூடித்தனமாக காதலித்துவந்துள்ளார். ஜீனோ அவரை விட கேரன் மீதுதான் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளார்.
</p><p>
ஆக, பொறாமையால் மேரீ கேரனைக் கொலை செய்துவிட்டாரா என்பதை அறிவதற்காக அவரை காவலில் எடுத்து 40 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தினார்கள் பொலிசார்.&nbsp;&nbsp;</p><p></p><p>

அதே நேரத்தில், மற்றொரு 70 வயது பெண்ணும் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அவரும் கேரன் வீட்டின் அருகில் வாழும் அவரது தோழிகளில் ஒருவர். ஆனால், அவரை பொலிசார் அப்போது விடுவித்துவிட்டார்கள்.
</p><h3>
வழக்கில் முக்கிய திருப்பம்</h3><p>

இந்நிலையில், 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அதே 70 வயது பெண்ணை, தற்போது மீண்டும் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.</p><p>

கேரனை திட்டமிட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
</p><p>
வேடிக்கை என்னவென்றால், கேரன் காதலித்த ஜீனை, இந்தப் பெண்ணும் காதலித்ததாக கருதப்படுகிறது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T05:07:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகக்கடுமையான வெப்பம்... தீவிர வறட்சி தாக்கும் நிலையில் ஐரோப்பா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/extreme-drought-hits-europe-1784783024"></link>
            <id>https://news.lankasri.com/article/extreme-drought-hits-europe-1784783024</id>
            <summary type="text">பருவநிலை நெருக்கடியால் தீவிரமடைந்த கடும் வெப்பம், கோடைக்காலத்தில் ஐரோப்பாவை வறண்டு போகச் செய்வதோடு, கண்டத்தைப் பாதிக்கும் வறட்சியைத் தீவிரப்படுத்துவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருவநிலை நெருக்கடியால் தீவிரமடைந்த கடும் வெப்பம், கோடைக்காலத்தில் ஐரோப்பாவை வறண்டு போகச் செய்வதோடு, கண்டத்தைப் பாதிக்கும் வறட்சியைத் தீவிரப்படுத்துவதாக ஒரு அறிவியல் ஆய்வு கண்டறிந்துள்ளது.</p><h2>வறட்சி தீவிரமானதாக</h2><p>
</p><p>சாதனை அளவிலான வெப்ப அலைகளால், வெப்பமான வளிமண்டலம் ஆறுகள், ஏரிகள், மண் மற்றும் தாவரங்களிலிருந்து நீரைத் தீவிரமாக ஆவியாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af9fda4c-4e26-400f-8c2b-8200a9afd92e/26-6a61a1f742091.webp' /></p><p> </p><p>உலக வெப்பமயமாதலால் மேற்கு ஐரோப்பாவில் இத்தகைய சூழல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 80 மடங்கும், கிழக்கு ஐரோப்பாவில் 40 மடங்கும் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்தது. </p><p>மேற்குப் பகுதியில் நிலவிய மண் வறட்சி நிலைக்கான வாய்ப்பு, அப்பகுதியில் புதைபடிவ எரிபொருட்களால் ஏற்பட்ட மாசுபாட்டினால் ஐந்து மடங்கும், கிழக்குப் பகுதியில் 11 மடங்கும் அதிகரித்துள்ளது. </p><p>வறட்சி பொதுவாகக் குறைந்த மழைப்பொழிவோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது; ஆனால், மேற்கு ஐரோப்பாவில் அண்மையில் கடந்து சென்ற குளிர்காலம் அதிக மழையைக் கொண்டதாக இருந்தது. </p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், மேற்கு ஐரோப்பாவில் தற்போது நிலவும் வறட்சி தீவிரமானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது; ஆனால் பருவநிலை நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்தில் இது மிதமானதாகவே இருந்திருக்கும்.</p><p></p><p> </p><p>கோடைக்காலத்தின் தொடக்கமான ஜூன் மாத இறுதி வரை வறட்சி குறித்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது; ஆனால், அது தற்போதே பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. </p><p>பல நாடுகள் நீர் பயன்பாடு குறித்த அவசரக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன; தற்போது தெற்கு இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் கொடிய காட்டுத்தீ பரவித் தாக்கியுள்ள நிலையில், வரலாற்றிலேயே மிக வறண்ட நிலப்பகுதிகளை எதிர்கொள்ளும் சூழலில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd41bcb-c029-4a65-b805-d6c2d4faf8a2/26-6a61a1f8a36ec.webp' /></p><p>
</p><p>ஐரோப்பா முழுவதும் சுமார் 9 மில்லியன் டன் தானியங்களின் இழப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இதில் பிரான்சில் கடந்த 50 ஆண்டுகளிலேயே மிக மோசமான சோள விளைச்சல் இருக்கும் என்றும், ருமேனிய விவசாயிகள் 10 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பயிர்களை இழக்க நேரிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.</p><h2>விலைகளை உயர்த்தக்கூடும்</h2><p> </p><p>ஐரோப்பா முழுவதும் ஆறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், தூய்மையான நீர்மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், சரக்குக் கப்பல்களின் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>நெதர்லாந்தின் லோபித் (Lobith) பகுதியில் ரைன் ஆற்றின் நீர்மட்டம், 1976-ஆம் ஆண்டின் வெப்பமான கோடைக்காலத்தில் பதிவான மிகக்குறைந்த அளவை விடவும் தற்போது குறைவாக உள்ளது.</p><p>
இந்த நெருக்கடி உணவு மற்றும் எரிசக்தி விலைகளை உயர்த்தக்கூடும் என்றும், இதனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a5e4dc-f1b4-4a6e-9b69-b369fcdea914/26-6a61a1f7f1832.webp' /></p><p> </p><p>2022-இல் ஏற்பட்ட வறட்சியை விட, 2026-ஆம் ஆண்டின் வறட்சி இரண்டு மாதங்கள் முன்னதாகவே வந்துவிட்டது என Dr Dominik Schumacher தெரிவித்துள்ளார். கணிக்கப்பட்டபடி, உலகளாவிய உமிழ்வுகள் வெப்பநிலையை 2.8 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தினால், இந்தத் தீவிர ஆவியாதல் நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இரட்டிப்பாகலாம் என்கிறார் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் மரியம் ஜக்காரியா. </p><p>உமிழ்வைக் குறைக்க விரைவான மற்றும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், சுட்டெரிக்கும் வெப்பமும் வறட்சியும் கொண்ட கோடைக்காலங்கள் மீண்டும் மீண்டும் நிகழும் ஒரு எதிர்காலத்தை நோக்கி ஐரோப்பா தள்ளப்படுகிறது என்றும் அவர் எச்சரிக்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T05:02:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய அமெரிக்கா-சவுதி அரேபியா அணுசக்தி ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-saudi-deal-causing-concern-1784780039"></link>
            <id>https://news.lankasri.com/article/us-saudi-deal-causing-concern-1784780039</id>
            <summary type="text">அமெரிக்கத் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சவுதி அரேபியாவில் சிவில் அணுசக்தித் திட்டத்தை நிறுவுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் ஒன்றை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கத் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சவுதி அரேபியாவில் சிவில் அணுசக்தித் திட்டத்தை நிறுவுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் ஒன்றை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.</p><h2>விளைவுகளை ஏற்படுத்தும்</h2><p>
</p><p>குறித்த ஒப்பந்தமானது மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவின் அதிகார மையங்கள் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ள ஒரு நகர்வாகவே பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/005741cc-3f87-4f19-b8ac-31cb1d1f6a99/26-6a61961f2ea0a.webp' /></p><p>
</p><p>ஒப்பந்தத்தின் பெரும்பகுதி இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் சவுதி அரேபியா உள்நாட்டிலேயே யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனைக் கொண்டிருக்குமா என்பதும், அது அணு ஆயுதப் பெருக்கத்திற்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் குறித்த கவலைகளே நிலவுகின்றன. </p><p>அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவின் எரிசக்தித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே இந்த 30 ஆண்டு கால ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பொருளாதாரத் திட்டத்தின் கீழ், சவுதி அரேபியா சில மின்சார உற்பத்திக்கு அணுசக்தியைப் பயன்படுத்தவும், அதன் மூலம் ஏற்றுமதிக்கான எண்ணெய் விநியோகத்தை அதிகரித்து, எண்ணெய் விற்பனையை உயர்த்தவும் இலக்கு கொண்டுள்ளது. </p><p>இந்த ஒப்பந்தம் அந்நாட்டின் அணுசக்தி உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அமெரிக்க நிறுவனங்களை முக்கியப் பங்காற்றச் செய்வதோடு, சீனா மற்றும் ரஷ்யா போன்ற போட்டியாளர்கள் அங்கு காலூன்றுவதையும் தடுக்கும்.</p><p></p><p> </p><p>இந்த ஒப்பந்தம் பல பில்லியன் டொலர் மதிப்புடையதாகக் கருதப்படுகிறது; மேலும், இது பைடன் நிர்வாகத்தின் காலத்தில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின் தொடர்ச்சியாகும். </p><p>இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தை அமைப்பதற்கு வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது; எனினும், அத்தகைய நிலையம் அவசியமானது என்று அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இணைந்து மேற்கொள்ளும் ஆய்வு முடிவு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். </p><p>மட்டுமின்றி, அணுசக்தித் துறையைக் கொண்ட பல நாடுகள் யுரேனியத்தை உள்நாட்டிலேயே செறிவூட்டுவதில்லை; அதற்குப் பதிலாக, அணு உலைகளுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதையே அவை சார்ந்திருக்கின்றன.</p><h2>அணு ஆயுதத்தை உருவாக்கும்</h2><p> </p><p>ஆனால், இத்தகைய ஒப்பந்தம் சவுதி அரேபியாவை அணு ஆயுதத்தை உருவாக்கும் பாதையில் இட்டுச் செல்லக்கூடும் என்று அணு ஆயுதப் பரவல் தடுப்பு அமைப்புகள் பல ஆண்டுகளாக எச்சரித்து வந்துள்ளன. </p><p>மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலிடம் மட்டும் அணு ஆயுதங்கள் இருக்கும் நிலையில், தனது பிராந்தியப் போட்டியாளரான ஈரான் அணு ஆயுதத்தைப் பெற்றால், தானும் அணு ஆயுதத்தைப் பெற வேண்டியிருக்கும் என்று சவுதி முன்பு கூறியுள்ளது. </p><p>மேலும், இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதைக் கண்டுகொள்ளாத அமெரிக்கா, ஈரான் அணு ஆயுதங்களை அடைவதையோ அல்லது ஆயுதத் தரத்திற்குத் தேவையான அளவிற்கு யுரேனியத்தை செறிவூட்டுவதையோ தடுப்பதற்காகவே தற்போது ஒரு போரில் ஈடுபட்டு வருவதாக விளக்கமளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b9cbed-b61a-472a-856a-55fca5c6d0e1/26-6a61961e6fee4.webp' /></p><p> இந்த நிலையில், அணு ஆயுதப் பரவலுக்கான அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு ஒப்பந்தத்தையும் உலகின் எந்தவொரு நாட்டுடனும் அமெரிக்கா மேற்கொள்ளப்போவதில்லை என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ சவுதி ஒப்பந்தம் குறித்த கவலைகளை நிராகரித்துள்ளார்.&nbsp;</p><p>ஆனால், முந்தைய அணுசக்தி ஒப்பந்தங்களில் இருந்த கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இல்லை என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். </p><p>அமெரிக்கா ஐக்கிய அரபு அமீரகத்துடன் இதேபோன்ற ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டபோது, ​​அணுசக்தியை விரும்பும் நாடுகளுக்கான தங்கத் தரநிலை என்று அறியப்பட்ட ஒரு நடவடிக்கையாக, ஐக்கிய அரபு அமீரகம் செறிவூட்டலை நாடவோ அல்லது பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளைப் பதப்படுத்தவோ கூடாது என்று ஒப்புக்கொண்டது. சவுதி-அமெரிக்க ஒப்பந்தத்தில் இந்தத் தங்கத் தரநிலை இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T04:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களுக்கு மறுக்கப்பட்டது... எவராலும்: மத்திய கிழக்கு, அமெரிக்காவிற்கு ஈரானின் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/big-warning-to-us-middle-east-1784776786"></link>
            <id>https://news.lankasri.com/article/big-warning-to-us-middle-east-1784776786</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் சூழலை, போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப ஈரான் அனுமதிக்காது என்று அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமைப் பேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் சூழலை, போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப ஈரான் அனுமதிக்காது என்று அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.</p><h2>காலிபாஃப் எச்சரிக்கை</h2><p>
</p><p>ஹார்முஸ் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் இல்லாததில்தான் அந்த நீரிணையின் பாதுகாப்பு அடங்கியுள்ளது என்றும் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13847309-194b-448f-b0e0-35cb76023210/26-6a618ad6daa1e.webp' /></p><p> மேலும், ஈரான் தனது கச்சா எண்ணெயை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாவிட்டால், எந்தவொரு வளைகுடா நாடும் தனது எண்ணெயை விற்பனை செய்ய ஈரான் அனுமதிக்காது என்றும் காலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த மோதல் தற்போது முழு வெற்றி அல்லது முழு தோல்வி என்ற நிலையை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். </p><p>
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலின் போதெல்லாம், அமெரிக்கப் படைகள் அந்த நாட்டின் ஒரு பாலம் அல்லது மின் நிலையத்தை அழித்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே காலிபாஃப் பதிலளித்துள்ளார்.</p><p></p><p> </p><p>இரு தரப்பினரும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளைத் தொடர்ந்து குறிவைத்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராகத் தொடர்ந்து 12-வது இரவாகத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. </p><p>இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்டவும், சர்வதேச கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்கவும் அமெரிக்கா முயன்று வரும் நிலையில், </p><p>இப்பிராந்தியக் கடல் பகுதிகளில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களான மாலுமிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb5c1db-94d9-4b14-a018-2451d1ef72c5/26-6a618ad7b86c4.webp' /></p><h2>கண்ணுக்குக் கண்</h2><p> தூதுக்குழு முன்னெடுக்கும் முயற்சிகளில் பகிரங்கமாக முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையிலும், உலகளாவிய எரிசக்திக்கு மிக முக்கியமானதும் பெருமளவில் மூடப்பட்டிருப்பதுமான ஹார்முஸ் நீரிணை குறித்த சர்ச்சையில் இரு தரப்பும் தங்கள் பிடிவாதத்தில் உறுதியாக இருக்கும் நிலையிலும், அமெரிக்காவின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. </p><p>இஸ்ரேலால் தூண்டப்பட்டு, பொதுவாக அமெரிக்க மக்களாலும் நிராகரிக்கப்பட்ட இந்தப்போர், உலகளாவிய பொருளாதாரத்தில் மேலும் சீர்குலைவை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளதுடன், இந்த இலையுதிர் காலத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக எரிபொருள் விலையையும் உயர்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa96c7db-dd18-4498-bbc0-699fed158e88/26-6a618ad91678c.webp' /></p><p> </p><p>இதனிடையே, ஈரான் கண்ணுக்குக் கண் என்ற தற்காப்புக் கோட்பாடுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார். </p><p>அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வறட்சியால் வாடும் அண்டை வளைகுடா நாடுகளுக்குக் குடிநீர் வழங்கும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் ஈரான் குறிவைத்துள்ளது. </p><p>ஒரு நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்பு இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால் ஒழிய, இத்தகைய தாக்குதல்களை சர்வதேசச் சட்டம் பொதுவாகத் தடை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T03:19:58+00:00</updated>
        </entry>
    </feed>
