<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-06T08:41:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து ஒரு புதிய மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fake-taxi-driver-target-tourists-in-france-1786003694"></link>
            <id>https://news.lankasri.com/article/fake-taxi-driver-target-tourists-in-france-1786003694</id>
            <summary type="text">பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து டெக்சி மோசடி ஒன்று துவங்கியுள்ளது.


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் போலி டெக்சி சாரதிகள் சுற்றுலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து டெக்சி மோசடி ஒன்று துவங்கியுள்ளது.
</p><p>

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் போலி டெக்சி சாரதிகள் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து மோசடி ஒன்றில் ஈடுபட்டுவருவதாக எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.</p><h3>
அது என்ன மோசடி?</h3><p>

பிரபல பிரெஞ்சு ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர்கள் சிலர், நீண்ட காலமாக பாரீஸில் வாழ்ந்துவரும் அமெரிக்க சமூக ஊடகவியலாளர்கள் சிலர் உதவியுடன் இப்படி ஒரு மோசடி நடைபெறுவதை உறுதி செய்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/027838eb-e133-4fd1-8d1a-0560867b17d4/26-6a7440efdaba4.webp' /></p><p>
வழக்கமாக அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் எப்படி உடை அணிவார்களோ அதேபோல உடையணிந்த இந்த குழு, விமான நிலையமொன்றின் வாசலில் ஒன்றும் தெரியாததுபோல் விழித்துக்கொண்டு நிற்க, உடனே அவர்களை அணுகியுள்ளார் மோசடியாளர் ஒருவர்.
</p><p>
அவர் ஏற்பாடு செய்த டெக்சி, நேரடியாக பாரீஸிலுள்ள ஒரு இடத்துக்குச் செல்வதற்கு பதிலாக, வேண்டுமென்றே பல தெருக்களை சுற்றிவர, டெக்சியின் மீற்றரில் கட்டணம் ஏறிக்கொண்டே சென்றுள்ளது.</p><p>
பயணிகள் இறங்கியதும், அவர்களிடம் 190 யூரோக்கள் கேட்டுள்ளார் டெக்சியின் சாரதி.&nbsp;</p><p></p><p>
விடயம் என்னவென்றால், விமான நிலையத்திலிருந்து இவ்வளவு தொலைவுக்கு 56 முதல் 65 யூரோக்கள்தான் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆக, அந்த சாரதி ஏமாற்றுகிறார் என்பது தெள்ளத்தெளிவாக புரிந்துள்ளது. அத்துடன், இந்த மோசடியாளர்கள் குற்றச்செயல்கள் புரியும் ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் தனியாக செயல்படவில்லை, பலர் இணைந்தே இத்தகைய மோசடிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
</p><p>
இந்நிலையில், இந்த டெக்சி மோசடியில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 45,000 யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்படுவதுடன், அவர்களுடைய வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
இந்த மோசடியிலிருந்து தப்புவது எப்படி?</h3><p>

பாரீஸ் விமான நிலையத்திலிருந்து நகருக்குள் பயணிக்க இவ்வளவு தொகைதான் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பயணிகளின் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் கிடையாது.
</p><p>
சுற்றுலாப்பயணிகள் இந்த விடயங்களை நினைவில் வைத்துக்கொள்வதுடன், அதிகாரப்பூர்வ டெக்சி நிறுத்துமிடங்களில் நிறுத்தப்பட்டுள்ள டெக்சிகளை பயன்படுத்துமாறும், யாராவது தன்னை டெக்சி சாரதி என்று கூறி அணுகினால் அவர்களை தவிர்க்குமாறும் பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
</p><p>
முறைப்படி உரிமம் பெற்ற டெக்சி சாரதிகளுக்கு கட்டணம் குறித்து பேரம் பேச அனுமதி இல்லை. ஆக, யாராவது உங்களிடம் டெக்சி கட்டணம் குறித்து பேரம் பேசினாலே அவர் உரிமம் பெறாதவராக இருக்கலாம் என உஷாராகிவிடுவது நல்லது என்கிறார்கள் அதிகாரிகள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T08:09:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன் சாதாரண ட்ரோன் அல்ல: அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minister-says-explosive-drone-at-german-airport-1786002626"></link>
            <id>https://news.lankasri.com/article/minister-says-explosive-drone-at-german-airport-1786002626</id>
            <summary type="text">ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையத்தில், கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன்களுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.


ஜேர்மன் விமான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையத்தில், கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன்களுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p>


ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், உக்ரைன் விமானம் ஒன்றினருகே மர்ம ட்ரோன் ஒன்று காணப்பட்டதால் பரபரப்பு உருவான நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் கூடுதல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன!
</p><h3>
விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்</h3><p>

ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.</p><p>

மேலும், வானில் மர்மப் பொருள் ஒன்று தென்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் விமானம் ஒன்று உட்பட பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7930b5ad-6359-4686-93a9-fed138807e1d/26-6a743cc421ce4.webp' /></p><p>
இதற்கிடையில், விமான நிலையத்தின் ஓடுபாதை ஒன்றில் மர்மப் பொருள் ஒன்று கிடப்பது தெரியவரவே, கூடுதல் பரபரப்பு உருவானது.&nbsp;</p><p></p><p>
மொத்தத்தில், நேற்று Leipzig-Halle விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
</p><h3>
அதிர்ச்சித் தகவல்</h3><p>

இந்நிலையில், Leipzig-Halle விமான நிலையத்தின் ஓடுபாதையில், கண்டுபிடிக்கப்பட்ட மர்மப் பொருள், வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் என தெரியவந்துள்ளதால் கடும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa66180-4663-4863-957a-babaa925fdee/26-6a743cc4ca320.webp' /></p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் தோப்ரின்ட், ஏற்கனவே ட்ரோன்களால் பிரச்சினைகள் நிலவிவரும் நிலையில், இப்போது வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டுள்ள ட்ரோன்கள் விமான நிலையங்களில் கண்டுபிடிக்கப்படுவது புதிய அச்சுறுத்தல் ஆகும் என்று கூறியுள்ளார்.</p><p>

அத்துடன், ட்ரோன்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களின்போது, அவை எங்கிருந்து வந்தது என்பது உடனடியாக தெரியவராதது கூடுதல் பிரச்சினையாகும் என்றும் கூறியுள்ளார் அலெக்சாண்டர்.</p><p>

ஆக, விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன் எங்கிருந்து வந்தது, அதன் பின்னணியில் இருப்பது யார், அந்த ட்ரோனுடன் இனைக்கப்பட்டிருந்தது என்ன வகையான வெடிப்பொருள் என்பது போன்ற விடயங்கள் குறித்து விசாரணை துவக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T07:51:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் தாக்கி உயிரிழந்த கால்பந்து வீரர்., பலர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thai-footballer-lightning-strike-during-match-1786002399"></link>
            <id>https://news.lankasri.com/article/thai-footballer-lightning-strike-during-match-1786002399</id>
            <summary type="text">தாய்லாந்தில் மின்னல் தாக்கி கால்பந்தாட்ட வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
24 வயது கால்பந்து வீரர்தாய்லாந்தின் நரதிவாட் மாகாணத்தில் நடைபெற்ற நட்பு ரீதியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தில் மின்னல் தாக்கி கால்பந்தாட்ட வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
</p><h2>24 வயது கால்பந்து வீரர்</h2><p>தாய்லாந்தின் நரதிவாட் மாகாணத்தில் நடைபெற்ற நட்பு ரீதியான கால்பந்து போட்டி ஒன்றில், மின்னல் தாக்கியதில் 24 வயது கால்பந்து வீரர் சஃப்வான் அவாயே (Sofwan Awae) உயிரிழந்தார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ar" dir="rtl">🔴: قبل ساعات في تايلاند واثناء مباراة ودية ضربت صاعقة برق مهاجم في نادي يالا التايلاندي اثناء المباراة ومات على الفور…<br><br>المهاجم اسمه صفوان أواي &quot;Safwan Awae&quot; وعمره 24 عام وهنا المقطع للحظة ضرب الصاعقة له مباشره في الملعب تصور بالكامل، والله مشهد مرعب ومهيب <a href="https://t.co/zQcpUwVtHS">pic.twitter.com/zQcpUwVtHS</a></p>&mdash; MOATH | معاذ (@M0ATH) <a href="https://x.com/M0ATH/status/2084978894550294909?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்த சம்பவம் சுங்காய் கோலோக் நகரில் உள்ள சாந்திபாப் மைதானத்தில், மாலை 5.30 மணியளவில் கடும் மழை பெய்துகொண்டிருந்தபோது நடந்தது.</p><p>Abu x Nong Sirin மற்றும் SAMCOLT அணிகள் இடையே நடைபெற்ற Golok FA Cup அரையிறுதி போட்டியின் போது, திடீரென மைதானத்தில் மின்னல் விழுந்தது. அதனால் வீரர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.</p><p>

சஃப்வான், Yala FC அணிக்காக விளையாடியவர். அவர் முன்னதாக Pattani FC-க்கும் விளையாடியிருந்தார். சில நாட்களுக்கு முன்பே Yala FC-யுடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dea0652-3e77-43b8-8f8a-ccc953bd155a/26-6a743be25065a.webp' /></p><p></p><h2>மலேசிய வீரர் உட்பட பலர் காயம்</h2><p>மின்னல் தாக்கியதும் அவசர மருத்துவ குழு விரைந்து உதவி செய்தது. ஆனால் கடுமையான காயங்களால் சஃப்வான் உயிரிழந்தார். மேலும், 22 வயது மலேசிய வீரர் Mohammad Alif Ezzahan Zulkifli உட்பட பலர் காயமடைந்தனர்.</p><p>இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, உலகம் முழுவதும் ரசிகர்கள், நண்பர்கள், கால்பந்து சங்கங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். </p><p>தாய்லாந்து கால்பந்து சங்கமும், யாலா FC-யும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளன.

சஃப்வானின் மரணம் கால்பந்து உலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4f3ddf2-0773-4650-92d8-4a12dbaa2e11/26-6a743be30683b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T07:44:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[T20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்துள்ள ஜாஸ் பட்லர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jos-buttler-record-highest-run-scorer-in-t20-1786001630"></link>
            <id>https://news.lankasri.com/article/jos-buttler-record-highest-run-scorer-in-t20-1786001630</id>
            <summary type="text">T20 கிரிக்கெட்டி அதிக ஓட்டங்கள் குவித்துள்ள வீரர் என்ற சாதனையை ஜாஸ் பட்லர்(Jos Buttler) படைத்துள்ளார்.

WF vs MSG 

&#039;தி ஹண்ட்ரட்&#039; கிரிக்கெட் தொடரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>T20 கிரிக்கெட்டி அதிக ஓட்டங்கள் குவித்துள்ள வீரர் என்ற சாதனையை ஜாஸ் பட்லர்(Jos Buttler) படைத்துள்ளார்.</p><h3>

WF vs MSG</h3><p> 

'தி ஹண்ட்ரட்' கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் வெல்ஷ் பயர் அணிகள் மோதியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df8ebd35-cc1d-49d1-90f1-a4a425c2a12c/26-6a7438e0f3840.webp' /></p><p>

முதலில் துடுப்பாட்டம் ஆடிய வெல்ஷ் பயர் அணி 100 பந்துகள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் குவித்தது. </p><p>

156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், 69 பந்துகளில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 156 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.</p><h3> 

ஜோஸ் பட்லர் சாதனை</h3><p> 

இதில், ஜோஸ் பட்லர் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 51 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865ec186-5a3b-45aa-83b8-cc4ffabc2814/26-6a7438e04e9ee.webp' /></p><p> 

இந்த போட்டியில், 51 ஓட்டங்கள் குவித்துள்ளதன் மூலம், T20 போட்டியில் மொத்தமாக 14,833 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.</p><p> 

இதன் மூலம், T20 போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்துள்ள வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

முன்னதாக பொல்லார்ட் 746 போட்டிகளில் விளையாடி 14,803 ஓட்டங்களுடன் முதலிடத்தில் இருந்தார். </p><p>

பட்லர் 522 போட்டிகளில் 14,833 ஓட்டங்கள் குவித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T07:33:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெலென்ஸ்கியின் எச்சரிக்கை... உக்ரைனுக்கு உதவ தீவிரமாகக் களமிறங்கிய நேட்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nato-air-defences-for-ukraine-1785999523"></link>
            <id>https://news.lankasri.com/article/nato-air-defences-for-ukraine-1785999523</id>
            <summary type="text">ரஷ்யாவின் ஏவுகணை உற்பத்தி அதிகரிப்பு குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா ஏவிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையைக் கூட உக்ரைனால...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் ஏவுகணை உற்பத்தி அதிகரிப்பு குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>ரஷ்யா ஏவிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையைக் கூட உக்ரைனால் சுட்டு வீழ்த்த முடியாததை அடுத்து, பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளின் விநியோகத்தை அதிகரிக்குமாறு உக்ரைன் ஜனாதிபதி தனது நட்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.</p><h2>ரஷ்யா தீவிரம்</h2><p>
</p><p>புதன்கிழமையன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்ய ஏவுகணை எதையும் சுட்டு வீழ்த்த உக்ரைன் தரப்பு தவறிய நிலையில், உக்ரைனுக்கு அவசரமாகத் தேவைப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெற்றுத் தருவதற்கான பணிகளில் நேட்டோ (NATO) ஈடுபட்டு வருவதாக அதன் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d01a243-faf6-4aff-82bc-d3d475a8337f/26-6a7430a5b06a1.webp' /></p><p> </p><p>குளிர்காலத்திற்கு முன்னதாக ஏவுகணை உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க ரஷ்யா தீவிரம் காட்டி வருவதாக ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். </p><p>நேட்டோ அமைப்பின் மார்க் ரூட்டைச் சந்தித்த பிறகு ஜெலன்ஸ்கி தெரிவிக்கையில், அலுவலக ரீதியான தேவையற்ற நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, அவசியமான அரசியல் முடிவுகளை எடுப்பது முக்கியம். </p><p>சொல்லப்போனால், உக்ரைனில் உள்ள மக்களின் உயிர்கள் ஒவ்வொரு நாளும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள நமது கூட்டாளிகளின் உறுதியான மனப்பான்மையையே சார்ந்திருக்கின்றன என்றார்.</p><p></p><p> </p><p>புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்யா 24 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதில், குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யா இரவு முழுவதும் ஏவிய 115 ட்ரோன்களில் 98-ஐத் தங்கள் தற்காப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகவும், ஆனால் பாலிஸ்டிக் ஏவுகணைகள் எதையும் வீழ்த்த முடியவில்லை என்றும் உக்ரேனிய விமானப்படையின் ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbcbee16-b449-403a-897b-105f74df0e17/26-6a7430a662d2f.webp' /></p><p> </p><p>2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில், உக்ரைனின் நட்பு நாடுகளிடமிருந்து பெறப்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் விநியோகம் 2025-ஆம் ஆண்டின் அளவில் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டதாக புதன்கிழமையன்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். </p><p>மேலும், உக்ரைனின் எரிசக்தித் துறைக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், பாலிஸ்டிக் ஏவுகணைகளின் உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாகவும் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77ea194d-245f-453d-83f9-f126a38ed765/26-6a7430a71529d.webp' /></p><p> மட்டுமின்றி, இடைமறிக்கும் ஏவுகணைகளின் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் மத்திய கிழக்கில் நடைபெறும் போர் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><h2>பேட்ரியாட் ஏவுகணை</h2><p> உக்ரைனிய விமானப்படையின் தகவலின் அடிப்படையில், ரஷ்யாவின் இஸ்கந்தர்-எம், எஸ்-400 மற்றும் சிர்கான் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்ட ஒரே அமைப்பு, உக்ரைனியப் படையில் உள்ள பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள் மட்டுமே. </p><p>ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரில் பெருமளவிலான பேட்ரியாட் மற்றும் பிற இடைமறிப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக, இடைமறிப்பு ஏவுகணைகளின் பற்றாக்குறை மேலும் தீவிரமடைந்துள்ளது. </p><p>அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் முன்னெடுத்த ஒரு பகுப்பாய்வின்படி, போருக்கு முன்பிருந்ததை விட அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை இருப்பு குறைந்தது 65 சதவீதம் சரிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e74e4592-0470-428b-8547-c7920fd41821/26-6a7430a7ba412.webp' /></p><p> </p><p>ஆனால் ஆயுதப் பற்றாக்குறை என்பதே இல்லை என பென்டகன் கூறுகிறது. இதனிடையே, ஐரோப்பாவின் முதல் பேட்ரியாட் ஏவுகணை உற்பத்தி நிலையம் ஜேர்மனியில் செப்டம்பர் மாதம் திறக்கப்படவுள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது. </p><p>கடந்த மாதம் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில், உக்ரைன் 'பேட்ரியாட்' ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான உரிமத்தை அமெரிக்கா வழங்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் உறுதி அளித்திருந்தார். </p><p>சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு, அது குறித்து தான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். உரிமம் பெற்றிருந்தாலும், உக்ரைனில் உற்பத்தியைத் தொடங்க பல ஆண்டுகள் ஆகும் என்றே அதிகாரிகளும் நிபுணர்களும் மதிப்பிடுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T07:20:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வந்தே பாரத் ரயிலை ஓட்டும் லோகோ பைலட்டின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vande-bharat-loco-pilot-salary-details-1785998860"></link>
            <id>https://news.lankasri.com/article/vande-bharat-loco-pilot-salary-details-1785998860</id>
            <summary type="text">இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில் சேவைகள் நாடு முழுவதும் வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது காச்சிகுடா–யஸ்வந்த்பூர், விஜயவாடா–எம்.ஜி....</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில் சேவைகள் நாடு முழுவதும் வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
</p><p>
தற்போது காச்சிகுடா–யஸ்வந்த்பூர், விஜயவாடா–எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல், செகந்திராபாத்–நாக்பூர், விசாகப்பட்டினம்–புவனேஸ்வர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
மேலும், 2026 விஜயதசமிக்குள் விஜயவாடாவில் இருந்து முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.</p><p> 

வந்தே பாரத் ரயிலுக்கு அனுபவம் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற லோகோ பைலட்டுகள் நியமிக்கப்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b4d9c88-05fb-46b2-a569-1fc731b7060a/26-6a74307c8e148.webp' /></p><p>லோகோ பைலட்டாக பணியில் சேர முதலில் RRB நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று Assistant Loco Pilot (ALP) ஆக வேண்டும்.</p><p>

இதற்கு 10அம வகுப்பு தேர்ச்சி, தொடர்புடைய ITI சான்றிதழ் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறைகளில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு அவசியம்.</p><p>

விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். மேலும், ரயில்வே நிர்ணயித்த மருத்துவ மற்றும் கண்பார்வைத் தகுதிகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.</p><p>

Assistant Loco Pilotகளின் அடிப்படை ஊதியம் ரூ.19,900. அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட சலுகைகளுடன் மாதம் சுமார் ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் கிடைக்கும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5fe5416-cff2-4957-b788-df3fafb94d07/26-6a74307bc187e.webp' /></p><p>அனுபவம், பதவி உயர்வு மற்றும் சிறப்புப் பயிற்சிக்குப் பிறகே வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்களை இயக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
</p><p>
வந்தே பாரத் ரயிலை இயக்கும் அனுபவம் வாய்ந்த லோகோ பைலட்டுகள் மாதம் ரூ.1 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக சம்பளம் பெறலாம்.
</p><p>
இதனுடன் Running Allowance, Night Duty Allowance, மருத்துவ வசதி, ஓய்வூதியம், ரயில் பயணச் சலுகை, ஊதியத்துடன் கூடிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு நலன்களும் வழங்கப்படுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T06:59:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் நகரமொன்றில் பரவும் நோய்: 28 பேர் பாதிப்பு, ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/28-affected-one-dies-in-legionnaires-in-swiss-1785996997"></link>
            <id>https://news.lankasri.com/article/28-affected-one-dies-in-legionnaires-in-swiss-1785996997</id>
            <summary type="text">பாஸல் நகரில் பரவும் லீஜியோனேர்ஸ் என்னும் நோயால் 28 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பரவும் நோய் ஒன்றினால் 28 பேர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாஸல் நகரில் பரவும் லீஜியோனேர்ஸ் என்னும் நோயால் 28 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பரவும் நோய் ஒன்றினால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் பலியாகிவிட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
</p><h3>
அது என்ன நோய்?
</h3><p>
லீஜியோனெல்லா நீமோபிலா என்னும் பாக்டீரியாவால் உருவாகும், லீஜியோனேர்ஸ் என்னும் நோயே பாஸலில் பரவிவருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b5c1a8-5f6a-4bdc-af67-2940bf867195/26-6a7426c7043ed.webp' /></p><p>

விடயம் என்னவென்றால், மத்திய பாஸலில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை மையமாகக் கொண்டே இந்த நோய் பரவல் அதிகம் காணப்படுகிறது.
</p><p>
இந்த லீஜியோனெல்லா கிருமி, கட்டிடங்களை குளிர்விக்க பயன்படுத்தும் கருவிகள் மூலம் பரவக்கூடும்.
</p><p>
ஆகவே, குறிப்பிட்ட பகுதியிலுள்ள கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள கூலிங் டவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.&nbsp;</p><p></p><p>
அப்போது, இரண்டு அலுவலகங்களில் உள்ள கூலிங் டவர்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் இந்த லீஜியோனெல்லா கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளது.</p><p>

உடனடியாக அவை செயலிழக்கச் செய்யப்பட்டு அவற்றை சீரமைக்கும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
</p><h3>
ஒருவர் பலி
</h3><p>
இந்த லீஜியோனேர்ஸ் நோயால் இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துரதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்துவிட்டார்.</p><p>

காய்ச்சல், தலைவலி, சோர்வு, தசை வலி, வயிற்றுப்போக்கு, சில நேரங்களில் இருமும்போது இரத்தம் வருதல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
</p><p>
ஒரு நல்ல விடயம் என்னவென்றால், சரியான நேரத்தில் கண்டுபிடித்துவிட்டால், இந்த நோயை ஆன்டிபயாட்டிக்குகள் மூலம் குணப்படுத்திவிடலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T06:16:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் சூப்பர் எல் நினோவால் விவசாயம் பாதிக்கும் - வேளாண் பட்ஜெட்டில் கூறிய அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamil-nadu-agriculture-budget-2026-1785995435"></link>
            <id>https://news.lankasri.com/article/tamil-nadu-agriculture-budget-2026-1785995435</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் சூப்பர் எல் நினோவால் விவசாயம் பாதிக்கும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட்

நேற்று முதலமைச்சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் சூப்பர் எல் நினோவால் விவசாயம் பாதிக்கும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
</p><h3>
வேளாண் பட்ஜெட்
</h3><p>
நேற்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.</p><p> 

இதனையடுத்து இன்று சட்டமன்றத்தில் வேளாண்மை துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449e63cd-0c8b-4ddb-a9ce-269a3048d1b8/26-6a7420ae0169e.webp' /></p><p> 

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்தனர்.
</p><p>
உரையை தொடங்கிய அமைச்சர் வினோத், நீண்ட நேரமாக முதல்வர் விஜய்யை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்ததால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p> 

இதனையடுத்து, உரையில் உள்ளதை மட்டும் வாசிங்க என சபாநாயகர் அறிவுறுத்திய பின்னர் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார். </p><p>

விவசாயிகளுக்கான மும்முனை இலவச மின்சாரம் தொடரும். விவசாயிகளின் மும்முனை மின்சார திட்டத்துக்கு ரூ.7,432 கோடி மின்வாரியத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p> 

எல் நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சூப்பர் எல் நினோவால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
</p><p>
ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் கிடைக்கும் வகையில் AI அடிப்படையிலான உழவர் செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p><p> 

மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும்.
</p><p>
மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும். மாவட்டந்தோறும் வழங்கப்படும் வெற்றி விவசாயி விருதுக்கு ரூ.67.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. </p><p>

5 விவசாயிகளுக்கு சிறந்த விவசாயிக்கான நம்மாழ்வார் விருது ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f5dbe81-b517-4f69-82b5-6e09572818a8/26-6a7420ad47343.webp' /></p><p> 

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும். </p><p>அஞ்சலையம்மாள் விருதில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.</p><p>தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p><p> 

 தொழில்நுட்பமும், பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக வேளாண் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p><p> 

மழை, வெயிலிலிருந்து விளைப் பொருட்களை பாதுகாக்க 43,500 தார்ப் பாய்கள் திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p><p> 

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க ரூ.7.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. </p><p>

வீடுகளின் மாடிகளில் தோட்டம் அமைக்க வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.&nbsp; &nbsp; &nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7_paz_0aWCM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T05:50:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[எடை குறைப்பு ஊசிகளால் பிரித்தானியாவில் 300 சதவீதம் அதிகரித்த இறப்பு எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deaths-linked-weight-loss-jabs-1785993332"></link>
            <id>https://news.lankasri.com/article/deaths-linked-weight-loss-jabs-1785993332</id>
            <summary type="text">பிரித்தானியாவில் எடை குறைப்பு ஊசிகளால் இதுவரை 216 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்.
மௌஞ்சாரோ மற்றும் வெகோவி போன்ற உடல் எடை குறைப்பு ஊசிகளால...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் எடை குறைப்பு ஊசிகளால் இதுவரை 216 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்.
</p><p>மௌஞ்சாரோ மற்றும் வெகோவி போன்ற உடல் எடை குறைப்பு ஊசிகளால், பிரித்தானியாவில் குறைந்தது 216 பேர்கள் மரணமடைந்துள்ளதாக டெய்லி மெயில் நாளேடு அம்பலப்படுத்தியுள்ளது.</p><h2>300 சதவீதம்</h2><p>
</p><p>பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், மௌஞ்சாரோ (Mounjaro) மருந்தின் முக்கிய மூலப்பொருளான 'டிர்செபடைடு' (tirzepatide)-ஐப் பயன்படுத்தியவர்களே என டெய்லி மெயில் உறுதி செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08480240-be3c-42e2-9679-99bc30d158d4/26-6a741877d7d6b.webp' /></p><p> </p><p>மேலும், அரசு புள்ளிவிவரங்கள் இறப்பு எண்ணிக்கைகளில் அதிர்ச்சியூட்டும் அதிகரிப்பையும் காட்டுகின்றன; அதன்படி, 2024 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் தடுப்பூசி தொடர்பான ஆண்டு இறப்புகள் 22-லிருந்து 94-ஆக, அதாவது 300 சதவீதம் அதிகரித்துள்ளது. </p><p> 
இதற்கிடையில், 2010-ல் முதல்முறையாகப் புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்பட்டதிலிருந்து, இந்த மருந்துகளால் மொத்தம் 150,000 பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன; அவற்றில் 18,000 விளைவுகள் தீவிரமானவையாகவோ அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியவையாகவோ இருந்துள்ளன. </p><p>இவற்றில் பெரும்பாலானவை செரிமான மண்டலத்தைப் பாதிக்கும் நிலைகளை உள்ளடக்கியவை; உதாரணமாக, கணைய அழற்சி (pancreatitis) மற்றும் இரைப்பை செயலிழப்பு அல்லது இரைப்பை முடக்கம் (gastroparesis) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.</p><p></p><p> </p><p>மௌன்ஜாரோ மருந்தின் அளவை அதிகரித்ததைத் தொடர்ந்து, 73 வயதான பிரித்தானியப் பெண்மணி ஒருவர் மரணமடைந்ததாக விசாரணை ஒன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்தே, இந்த விவகாரம் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><p>கரோலின் சாவேஜ் என்பவரின் மரணம், மலக்கழிவுப் பெரிட்டோனிடிஸ் எனப்படும் நோயால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நோயின்போது, ​​குடலில் உள்ள ஒரு துளை வழியாக பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் கசிந்து செல்கின்றன.</p><p> இது பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தான செப்சிஸ் (sepsis) நிலையைத் தூண்டுகிறது; இந்நிலைக்கு ஆளாகும் நோயாளிகளில் பாதியளவினர் மரணமடைகின்றனர். நோயாளிகள் அதிகம் அறியப்படாத இந்தச் சிக்கல் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1af3167c-512b-40d5-823c-f6e92b7b28ca/26-6a741876808bc.webp' /></p><p> லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மருந்தியல் நிபுணர் ஒருவர் கூறுகையில், இந்த ஊசிகள் குடலின் செயல்பாட்டை மந்தமாக்கக்கூடும் என்றும், இதனால் தேங்கும் கழிவுப் பொருட்கள் குடலின் மென்மையான உட்புறச் சுவரில் அழுத்தத்தை ஏற்படுத்தி, அங்கு கிழிவு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், இம்மருந்துகளை உட்கொண்ட பிறகு குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுவது மிகவும் இயல்பானது; ஆனால், கடுமையான வயிற்று வலி திடீரென ஏற்பட்டால், அது கவலைக்குரிய ஏதோ ஒரு தீவிரமான நிலையைக் குறிப்பதாக இருக்கலாம் என்பதால், அது குறித்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><h2>பக்க விளைவுகள்</h2><p> </p><p>இந்த நிலையில், டெய்லி மெயில் முன்னெடுத்த ஆய்வுகளின் அடிப்படையில், 2024-இல் டிர்செபடைடுக்கு (tirzepatide) அனுமதி அளிக்கப்பட்டதிலிருந்து, அந்த மருந்துடன் தொடர்புடைய மொத்தம் 120 இறப்புகள் MHRA-விடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. </p><p>Wegovy மற்றும் Ozempic ஆகிய வணிகப் பெயர்களில் விற்பனை செய்யப்படும் செமாக்ளுடைட் (semaglutide) தொடர்பான இறப்பு எண்ணிக்கை 59 ஆக உள்ளது; அதேவேளையில், Saxenda என்று அறியப்படும் லிராக்ளுடைட் (liraglutide) 37 இறப்புகளுடன் தொடர்புடையதாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431bc362-a6fb-48ed-ba1a-c6a3665f7400/26-6a741877323ca.webp' /></p><p> </p><p>பதிவுசெய்யப்பட்ட 18,000 தீவிரமான அல்லது இறப்பை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளில், 11,500 பாதிப்புகள் குறிப்பாக 'டிர்செபடைட்' (tirzepatide) அல்லது மௌன்ஜாரோ (Mounjaro) மருந்துடன் தொடர்புடையவை; இம்மருந்து மற்ற மருந்துகளை விட விரைவான மற்றும் குறிப்பிடத்தக்க உடல் எடை குறைப்பை ஏற்படுத்துகிறது. </p><p>மௌன்ஜாரோ (Mounjaro) தொடர்பான இந்த அறிக்கைகளில் சுமார் 8,000 அறிக்கைகள் பெண்களைச் சார்ந்தவை. </p><p>இந்த நிலையில், Wegovy, Ozempic மற்றும் Saxenda ஆகிய மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனமான 'நோவோ நோர்டிஸ்க்' (Novo Nordisk) அளித்துள்ள விளக்கத்தில், </p><p>எல்லா மருந்துகளையும் போலவே, நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகளிலும் பக்க விளைவுகள் ஏற்படலாம்; மேலும், இந்த விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடலாம் என குறிப்பிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T05:25:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடல் எடையை குறைக்க சீரக நீர் அல்லது சியா விதை நீர்.., எது சிறந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jeera-water-vs-chia-seeds-water-for-weight-loss-1785992695"></link>
            <id>https://news.lankasri.com/article/jeera-water-vs-chia-seeds-water-for-weight-loss-1785992695</id>
            <summary type="text">உடல் பருமன் தற்போது பலருக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. 

இதனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புகள் ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடல் பருமன் தற்போது பலருக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. </p><p>

இதனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.</p><p> 

எனவே உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல வாழ்க்கை முறை அவசியம்.
</p><p>
இயற்கை முறையில் எடையைக் குறைக்க பலர் சீரக நீர் மற்றும் சியா விதை நீரை அருந்துகின்றனர்.</p><p>

அந்தவகையில், உடல் எடையை குறைக்க சீரக நீர் அல்லது சியா விதை நீரில் எது சிறந்தது என்பதை பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf94516-7ee6-454a-9a54-7aef39d6d461/26-6a74185b97f19.webp' /></p><h2>சீரக நீரின் நன்மைகள்
</h2><ul><li>
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது.</li><li>
செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
</li><li>உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.
</li><li>ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
</li><li>கலோரிகள் குறைவாக உள்ளன.
</li></ul><h2>
சியா விதை நீரின் நன்மைகள்
</h2><ul><li>
நார்ச்சத்து, தாவர புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
</li><li>கால்சியம், மக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.</li><li>
நீரில் ஊறிய பிறகு விரிவடைந்து வயிறு நிறைந்த உணர்வை தருகிறது.</li><li>
பசியைக் கட்டுப்படுத்தி, அதிகமாக சாப்பிடுவதை குறைக்க உதவுகிறது.
</li><li>எடை குறைக்கும் காலத்தில் தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c58bc6e7-95a9-48d7-9ede-0b2ef0320938/26-6a74185c53aa9.webp' /></p><h2>
எப்போது குடிக்கலாம்?
</h2><p><b>
சீரக நீர்: </b>காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். நாள் முழுவதும் சாதாரண நீருக்கு பதிலாகவும் அருந்தலாம்.
</p><p><b>
சியா விதை நீர்: </b>காலை உணவுக்குப் பிறகு அல்லது டீ, காபி நேரத்தில் குடிக்கலாம். இதனால் ஜங்க் உணவுகளின் மீதான விருப்பம் குறையலாம்.
</p><h2>
எது சிறந்தது?
</h2><p>
செரிமானத்தை மேம்படுத்தவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் விரும்பினால் சீரக நீர் நல்ல தேர்வாகும்.</p><p> நீண்ட நேரம் பசி இல்லாமல் இருக்கவும், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் விரும்பினால் அதிக நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் கொண்ட சியா விதை நீர் சிறந்த தேர்வாக இருக்கும். </p><p>

இரண்டையும் சமநிலையான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T05:15:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 45 கோடி ரூபாய் மதிப்பிலான தெருவிளக்குகளைத் திருடிய இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-man-accused-for-steal-45cr-worth-street-lamps-1785992351"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-man-accused-for-steal-45cr-worth-street-lamps-1785992351</id>
            <summary type="text">பிரித்தானியாவில் ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தெருவிளக்குகளைத் திருடிய இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்.


பிரித்தானிய இளைஞர் ஒருவர் பிரித்தானியாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தெருவிளக்குகளைத் திருடிய இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்.</p><p>


பிரித்தானிய இளைஞர் ஒருவர் பிரித்தானியாவின் பல பகுதிகளில் தெருவிளக்குகளைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
</p><h3>
45 கோடி ரூபாய் மதிப்பிலான தெருவிளக்குகள்</h3><p>

அவரது பெயர், ஜான் ஓ சலைவன் (20). சலைவன், பெட்ஃபோர்ட்ஷையர், கேம்பிரிட்ஜ்ஷையர், டர்ஹாம், தேம்ஸ் வேலி, எசெக்ஸ் மற்றும் ஹெர்ற்போர்ஃப்ஷையர் ஆகிய இடங்களிலிருந்து தெருவிளக்குகளைத் திருடியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/222ca7f1-1ab9-4de3-9468-d30360f725c1/26-6a7414a097ae3.webp' /></p><p>
அவர் திருடிய தெருவிளக்குகளின் மதிப்பு சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகள் ஆகும். ஒரு மில்லியன் பவுண்டுகள் என்பது இலங்கை மதிப்பில் 45,12,44,500.00 கோடி ரூபாய் ஆகும்.&nbsp;</p><p></p><p>

சலைவன், தெருக்கள், கவுன்சில்கள், பள்ளிகள் மற்றும் தேவாலயங்களிலும் விளக்குகளைத் திருடிய நிலையில், அவர் திருடிய தெருவிளக்குகளில், புகழ் பெற்ற பழங்கால விளக்குகளும் அடங்கும். </p><p> 

நேற்று சலைவன் Stevenage மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் தான் கையாள்வதற்கு மிகவும் சீரியஸானவை என்று கூறிய நீதிபதி, வழக்கை Albans க்ரௌன் நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளார். </p><p>செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, அங்கு வழக்கு விசாரணை துவங்க உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T05:01:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரோன் ஏற்றுமதி கட்டுப்பாடுகளுடன் அமெரிக்கா மீது தடைகளையும் விதித்த சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-hits-us-with-sanctions-1785988496"></link>
            <id>https://news.lankasri.com/article/china-hits-us-with-sanctions-1785988496</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் அதன் நிறுவனங்களுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை சீனா அதிரடியாக அறிவித்துள்ளது.
சீன நிறுவனங்களைக் குறிவைத்து அமெரிக்கா சமீபத்தில் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் அதன் நிறுவனங்களுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை சீனா அதிரடியாக அறிவித்துள்ளது.
</p><p>சீன நிறுவனங்களைக் குறிவைத்து அமெரிக்கா சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, அமெரிக்கா மற்றும் அந்நாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக சீனா அறிவித்துள்ளது.</p><h2>பதிலுக்குப் பதில்</h2><p>
</p><p>தொழில்நுட்பத் துறையில் போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில், ஆக்கபூர்வமான மற்றும் உத்திசார் ரீதியிலான ஸ்திரத்தன்மையைத் தக்கவைக்க உலகின் மிகப்பெரிய இரு பொருளாதார நாடுகளும் போராடி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00f64115-8a17-4bc6-9876-a22b49f3dfd1/26-6a74059333fbd.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், அடுத்த மாதம் அமெரிக்காவில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே நடைபெறவுள்ள உச்சிமாநாட்டிற்குச் சில வாரங்களே எஞ்சியிருக்க, இந்த பதிலுக்குப் பதில் என்ற வகையிலான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. </p><p>உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வளப் பகுப்பாய்வு நிறுவனம் உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் மீது தடைகளை விதிப்பதாகவும், அமெரிக்காவிற்கான ட்ரோன்கள் மற்றும் அது தொடர்பான உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவதாகவும் சீனாவின் வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. </p><p>மேலும், உய்குர் மற்றும் பிற சிறுபான்மைக் குழுக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில், 43 சீன நிறுவனங்களின் இறக்குமதிக்கு கடந்த வாரம் அமெரிக்கா தடை விதித்ததற்குப் பதிலடியாக, அந்த நிறுவனங்களில் ஆறு சீனாவின் எதிர் நடவடிக்கைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>ஏழாவது நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருப்பது, பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்படும் புதிய மனித உருவம் கொண்ட மற்றும் நான்கு கால்கள் கொண்ட ரோபோக்கள் (humanoid and quadruped robots) மற்றும் மின்மாற்றிகள் (power converters) ஆகியவற்றின் இறக்குமதி மீது கடந்த மாதம் அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) விதித்த தடையுடன் தொடர்புடையதாக உள்ளது.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, சீனாவிற்குள் உள்ள அமைப்புகளும் மக்களும், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுடன் வணிகம் செய்வதிலிருந்தோ அல்லது ஒத்துழைப்பதிலிருந்தோ தடுக்கப்படுகிறார்கள். </p><p>தேசியப் பாதுகாப்புக் காரணங்களைக் குறிப்பிட்டு, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் தயாரித்த புதிய ட்ரோன் மொடல்கள் மற்றும் முக்கிய உபகரணங்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு அமெரிக்காவின் FCC அமைப்பு கடந்த டிசம்பரிலேயே தடை விதித்திருந்தது.</p><h2>பிடிவாதமாக இருந்தால்</h2><p> </p><p>உலகின் மிகப்பெரிய ட்ரோன் உற்பத்தியாளரான சீனா, சமீபத்திய ஆண்டுகளில் தனது தயாரிப்புகள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகிறது. </p><p>புதன்கிழமை அன்று சீனா எடுத்த நடவடிக்கைகளில், வெளிநாட்டு கணினி மென்பொருள்களைக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட அலுவலக உபகரணங்கள் குறித்து தேசிய பாதுகாப்பு விசாரணையைத் தொடங்குவதும், அமெரிக்காவுடனான சில தொழிற்சாலை கண்காணிப்பு ஆய்வு ஒத்துழைப்பை இடைநிறுத்துவதும் அடங்கும். </p><p>சீன நிறுவனங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, அவசியமான எதிர் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர சீனாவிற்கு வேறு வழியில்லை என்றே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd654a34-d472-4d23-a1b7-4c395c70f7cf/26-6a740592831c6.webp' /></p><p> </p><p>சீனாவுக்கு எதிராகப் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதில் அமெரிக்கா பிடிவாதமாக இருந்தால், சீனா மேலும் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>கட்டாய உழைப்பால் செய்யப்படும் ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கடந்த மாதம் அமெரிக்கா 10 சதவீதம் அல்லது 12.5 சதவீதம் ​​வரி விதித்த பல நாடுகளில் சீனாவும் ஒன்று. </p><p>மேலும், சீன செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்போவதாக ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் சமீபத்தில் அச்சுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T03:52:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து பெரும் ஆதாயம் ஈட்டும் இந்தோனேசியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesia-salt-fields-bloom-1785985972"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesia-salt-fields-bloom-1785985972</id>
            <summary type="text">எல் நினோவின் சுட்டெரிக்கும் வெப்பத்தால் இந்தோனேசியாவின் உப்பு வயல்கள் மீண்டும் செழிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில், கடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோவின் சுட்டெரிக்கும் வெப்பத்தால் இந்தோனேசியாவின் உப்பு வயல்கள் மீண்டும் செழிக்கத் தொடங்கியுள்ளது.
</p><p>இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில், கடும் வெப்பத்தால் வேளாண் மக்கள் நீண்டகால சவாலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், உப்பு உற்பத்தியாளர்கள் 'எல் நினோ' (El Niño) நிகழ்வால் ஏற்பட்ட வறட்சியின் மூலம் பலனடைந்து வருகின்றனர்.</p><h2>உப்பு உற்பத்தி</h2><p>
</p><p>பரந்து விரிந்த தென்கிழக்கு ஆசிய வெப்பமண்டலத் தீவுக்கூட்டமானது, தீவிரமடைந்து வரும் எல் நினோ என்ற காலநிலை நிகழ்வை எதிர்கொண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea1567ba-e7de-4fa9-840a-8128a3107567/26-6a73fbb726b71.webp' /></p><p> </p><p>இது பொதுவாக தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும் வெப்பமான, வறண்ட சூழலைக் கொண்டுவந்து, வறட்சி, காட்டுத்தீ மற்றும் பயிர் இழப்புகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. </p><p>இதன் விளைவாக, ஜூலை மாதத்திற்குள் நாட்டின் பருவகால மண்டலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடித்த வறண்ட காலநிலைக்குள் சிக்கிக்கொண்டன; இந்தக் காலநிலை ஆகஸ்ட் மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இந்த நிலையில், எல் நினோ நிகழ்வு 2027-ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கும் என்று இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><p></p><p> </p><p>கடந்த மாத நிலவரப்படி, நாடு முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட வெப்பப் புள்ளிகள் (hotspots) கண்டறியப்பட்டுள்ளன; முந்தைய எல் நினோ ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். </p><p>இந்தோனேசியாவின் பெரும்பாலான உப்பு உற்பத்தி, வறண்ட பருவத்தில் ஆழமற்ற கடற்கரைக்குளம் போன்ற பகுதிகளில் கடல்நீரை ஆவியாக்கும் எளிய தொழில்நுட்ப முறைகளையே சார்ந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55e6b4c7-296a-4f82-ad77-4b4fc40b4f96/26-6a73fbb7cb952.webp' /></p><p> </p><p>ஜாவா தீவின் வடக்குக் கடற்கரைப் பகுதியான மேற்கு ஜாவாவின் சிரெபோன் (Cirebon) ரீஜென்சியில் உள்ள விவசாயிகள், உப்புப் பாத்திகளின் அடிப்பகுதியிலிருந்து படிகமான உப்பைச் சுரண்டி எடுத்து, அவற்றைச் சேகரிப்பதற்காகக் குவித்து வைப்பதற்கு மணிக்கணக்கில் செலவிடுகின்றனர்.</p><h2>எதிர்பாராத பெரும் லாபம்</h2><p> </p><p>ஆனால், லேசான மழை கூட இச்செயல்முறையைத் தடைசெய்து, உற்பத்தியையும் தரத்தையும் குறைக்கக்கூடும். கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 25 முதல் 30 மெட்ரிக் டன்களாக மட்டுமே இருந்த உற்பத்தி, ஜூலை மாதத்தில் சிரெபோனில் (Cirebon) கிட்டத்தட்ட 600 மெட்ரிக் டன்களை எட்டியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8b5f8bb-9713-4ba9-9764-442c37ba2e13/26-6a73fbb87b8a3.webp' /></p><p> 17,000 தீவுகளையும் நீண்ட கடற்கரையையும் கொண்ட இந்தோனேசியாவில் உள்ள 10 உப்பு உற்பத்திப் பகுதிகளில், சிரெபோனில் 3,460 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உப்பு வயல்கள் ஒரு சிறிய பகுதியாகவே பார்க்கப்படுகிறது. </p><p>இதனிடையே, வழக்கத்தை விடக் குறுகிய காலமே நீடித்த வறண்ட பருவநிலை மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த, அதிக மழையுடன் தொடர்புடைய 'லா நினா' (La Niña) காலநிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாக, கடந்த ஆண்டு நாட்டின் உற்பத்தி 1 மில்லியன் டன்னாகக் குறைந்ததாக இந்தோனேசியாவின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/385940d8-49f8-4516-b322-f371729326e2/26-6a73fbb92d8b7.webp' /></p><p> </p><p>கடைசியாக 'எல் நினோ' (El Niño) நிலவிய 2023-ஆம் ஆண்டில், உற்பத்தி 2.5 மில்லியன் டன்னாக இருந்தது. உப்பு உற்பத்தியாளர்கள் அடைந்துள்ள இந்த எதிர்பாராத பெரும் லாபம், அந்நாட்டின் பாரம்பரிய விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது. </p><p>பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பயிரிடும் கால அட்டவணைகளையும் விவசாய நடவடிக்கைகளையும் மாற்றியமைத்துக்கொள்ளுமாறு அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88e2f59b-00d8-40f3-9f22-5d1264ca5ebe/26-6a73fbb9d3b03.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T03:10:55+00:00</updated>
        </entry>
    </feed>
