<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-01T01:39:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்: 34 வயதுடையவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-marissa-shooting-1-man-injured-1785541036"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-marissa-shooting-1-man-injured-1785541036</id>
            <summary type="text">இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மாத்தறை - மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு
இலங்கையில் மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><h2> மாத்தறை - மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு</h2><p>
இலங்கையில் மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில் வெள்ளிக்கிழமையன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களால் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நபர் காயமடைந்ததாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d781954-d708-49ad-9748-c9649bcdc6b0/26-6a6d31ae27a68.webp' /></p><p>துப்பாக்கிச்சூடு தாக்குதலில் காயமடைந்த நபர் உடனடியாக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> இந்த சம்பவத்தில் ரிவால்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.</p><p></p><p> இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T00:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 மணி நேரம் இடைவிடாமல் வான்வழித் தாக்குதல்: ஈரானுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057"></link>
            <id>https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057</id>
            <summary type="text">ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><h2>அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்</h2><p>ஈரானின் முக்கிய இலக்குகளை குறிவைத்து அமெரிக்க மத்திய கட்டளை பீடம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் விடாமல் தீவிர தாக்குதல் நடத்தி முடித்து இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம்(CENTCOM) தெரிவித்துள்ளது.</p><p>CENTCOM வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய வியூக மையங்கள் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b81e468-9e15-4068-bc7c-369a8285fec7/26-6a6cef5ac2501.webp' /></p><p>அதில் முக்கியமாக இராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், அதிநவீன ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகள், கடற்கரை கண்காணிப்பு மையங்கள் மற்றும் முக்கிய கடல்சார் பாதுகாப்பு திறன்கள் அழிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தாக்குதலுக்கான பின்னணி</h2><p>செவ்வாய்க்கிழமை அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52e64c48-69da-43b9-a0ad-ef04a7432d20/26-6a6cef5b72f9c.webp' /></p><p>மேலும் ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதல்களை அமெரிக்க பாதுகாப்பு திறன்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகவும், இதனால் அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகளுக்கு எந்தவொரு சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> ஈரானிய படைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை தடுத்து அமெரிக்க பணியாளர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க அமெரிக்கா உறுதியுடன் இருப்பதை இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுவதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T23:38:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரியானாவில் சர்வதேச கபடி வீரரின் மனைவி எடுத்த விபரீத முடிவு: பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kabaddi-player-sheelu-balhara-wife-dies-in-rohtak-1785535664"></link>
            <id>https://news.lankasri.com/article/kabaddi-player-sheelu-balhara-wife-dies-in-rohtak-1785535664</id>
            <summary type="text">ஹரியானாவில் சர்வதேச கபடி வீரரின் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உயிரை மாய்த்துக் கொண்ட கபடி வீரரின் மனைவி
ஹரியானா மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹரியானாவில் சர்வதேச கபடி வீரரின் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>உயிரை மாய்த்துக் கொண்ட கபடி வீரரின் மனைவி</h2><p>
ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் சர்வதேச கபடி வீரர் ஷீலு பல்ஹாராவின் 23 வயது மனைவி முஸ்கான் வெள்ளிக்கிழமை அவர்களது இல்லத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முஸ்கானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p> மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் அதிகாரிகள் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3ff0090-ae83-482b-914b-af1892d67c43/26-6a6d1cb22bfc4.webp' /></p><p> மனைவி முஸ்கானின் உயிரை மாய்த்துக் கொள்ளும் இந்த முடிவுக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவரவில்லை.</p><p></p><p> சர்வதேச கபடி வீரரான ஷீலு பல்ஹாராவுக்கும் ரோஹ்தக் மேகம் பகுதியை சேர்ந்த முஸ்கானுக்கு கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.</p><p> இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹர்திக் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T22:07:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/naval-coalition-protect-red-sea-1785468358"></link>
            <id>https://news.lankasri.com/article/naval-coalition-protect-red-sea-1785468358</id>
            <summary type="text">செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதல்களிலிருந்து கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, 14 நாடுகளை உள்ளடக்கிய கடல்சார் தற்காப்புக் கூட்டமைப்பை அமைப்பதற்கான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதல்களிலிருந்து கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, 14 நாடுகளை உள்ளடக்கிய கடல்சார் தற்காப்புக் கூட்டமைப்பை அமைப்பதற்கான திட்டங்களை சவுதி அரேபியா அறிவித்துள்ளது.</p><h2>43 நாடுகளின்...</h2><p>
பாப் அல்-மண்டேப் நீரிணை, செங்கடல் மற்றும் ஏதன் வளைகுடா வழியாக முன்னெடுக்கப்படும் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b858a63f-1bf7-4a43-be6b-72b8e028e2bb/26-6a6c17ae54907.webp' /></p><p> </p><p>ஈரான் ஆதரவு ஹவுதிகள் சவுதிக்கு எதிரான தங்களது கடற்படை முற்றுகையைத் தொடர்வதாலும், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் மற்றும் அமெரிக்க இராணுவத்தால் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாலும், </p><p>உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகள் அதிகரித்து, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 90 டொலர் என்ற அளவை எட்டியுள்ள நிலையில் இந்த முன்னெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஜோர்தான், ஏமன், வங்கதேசம், நைஜீரியா, சூடான், ஜிபூட்டி மற்றும் சோமாலியா ஆகிய 14 நாடுகள் இதில் கையெழுத்திட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்தக் கூட்டணியின் வரைவு சாசனத்தை ஆய்வு செய்வதற்காக ரியாத்தில் நடைபெற்ற கூட்டத்தில், 43 நாடுகளின் ராணுவத் தலைமை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் ஆகியோர் நேரில் அல்லது காணொளி வாயிலாகப் பங்கேற்றுள்ளனர். </p><p>சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டபடி, சவுதி அரேபியா இக்கூட்டணியின் நிறுவன நாடாகச் செயல்படுவதோடு, அதன் தலைமையகத்தையும் தனது நாட்டில் அமைக்கும். கூட்டத்தைத் தொடர்ந்து, அந்த 14 நாடுகளும் இந்த முயற்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. </p><p>கூட்டணியை அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அந்த அறிக்கை வரவேற்றதோடு, கூடுதல் நாடுகள் முறையாக இணைவதற்கு முன்பு உள்நாட்டு நடைமுறைகளை இன்னும் முடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a5fd4e9-4791-4879-929a-b416d0d85760/26-6a6c17accfad6.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கும் ஒரு முக்கிய கடல்வழிப் பாதையாகத் திகழும் மூன்று நீர்வழிகள் வழியாக, சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதைகளைப் பாதுகாப்பதோடு, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் காப்பதற்கான தங்கள் நோக்கத்தையும் அந்த நாடுகள் அறிவித்துள்ளன.</p><h2>அமெரிக்காவின் பங்கு</h2><p> </p><p>மேலும், ஈரானை மையமாகக் கொண்ட மோதலுக்கு மத்தியில் ஒத்த பாதுகாப்பு நோக்கங்களைக் கொண்டிருந்த போதிலும், ஐக்கிய அரபு அமீரகம் அல்லது ஓமன் ஆகிய நாடுகள் சவுதி அரேபியாவின் இந்த கூட்டமைப்பில் இணையவில்லை.
</p><p>
ஆனால், இந்தப் புதிய கூட்டமைப்பில் அமெரிக்காவின் பங்கு அல்லது, அமெரிக்கா தரப்பில் அதிகாரிகள் கலந்துகொண்டார்களா என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. மாறாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு அதிகாரிகள் குழு இந்தக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f320891c-64a7-47a1-ae02-eb3ab47cee14/26-6a6c17ada0d45.webp' /></p><p> பாலஸ்தீனம், லெபனான் மற்றும் ஈரான் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்தின் செயற்பாடுகள் பல வளைகுடா நாடுகளை அதிருப்திகொள்ள வைத்துள்ளதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. </p><p>மட்டுமின்றி, ட்ரம்ப் காரணமாகவே வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டதுடன், தற்போது இஸ்ரேல் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T21:40:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுடனான ஷெங்கன் விதியை இடைநீக்கம் செய்த இத்தாலி: பிரான்சுடன் கூட்டு ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/italy-suspends-schengen-visa-rules-for-spain-1785526967"></link>
            <id>https://news.lankasri.com/article/italy-suspends-schengen-visa-rules-for-spain-1785526967</id>
            <summary type="text">ஸ்பெயின் உடனான ஷெங்கன் விதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது. அதிருப்தியை வெளிப்படுத்திய ஸ்பெயின்வியாழக்கிழமையன்று மொராக்கோவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் உடனான ஷெங்கன் விதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது.</p><h2> அதிருப்தியை வெளிப்படுத்திய ஸ்பெயின்</h2><p>வியாழக்கிழமையன்று மொராக்கோவில் இருந்து கிட்டத்தட்ட 500000 மக்கள் ஸ்பெயினின் சியூட்டா(Ceuta) பகுதிக்குள் ஒரே நேரத்தில் முயன்றனர். இது ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.</p><p> இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் விசா இல்லாத ஷெங்கன் பயண மண்டலத்திலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்ய வேண்டும் என இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி கோரிக்கை விடுத்து இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aea8b839-1087-4c45-9577-1b84fb77fe7b/26-6a6cfab9a15c2.webp' /></p><p>இது தொடர்பாக சமூக வலைதளத்தில் மெலோனி வெளியிட்ட தகவலில், ஷெங்கன்(Schengen)&nbsp; பயண மண்டலத்திலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், மேலும் இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.</p><p> அத்துடன் சியூட்டா நகரத்தில் இருந்து வெளிவரும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் மெலோனி தெரிவித்து இருந்தார்.</p><h2> ஷெங்கன் விதியை இடைநீக்கம் செய்த இத்தாலி</h2><p>
இந்நிலையில் முக்கிய கொள்கை மாற்றமாக, ஸ்பெயின் உடனான விசா மற்றும் கடவுச் சீட்டு இல்லாத ஷெங்கன் பயண முறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9abf213-1189-4701-b4cd-bf0047616d88/26-6a6cfab8ee6b8.webp' /></p><p> சியூட்டா நகரத்தில் நடந்த நிகழ்வே இந்த அதிரடி நடவடிக்கைக்கான முக்கிய காரணம் என்று இத்தாலிய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> இந்த இடைக்கால தடை தவிர இத்தாலி - பிரான்ஸ் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> மேலும் எல்லையில் சோதனைகளை தீவிரப்படுத்த பிரான்ஸ் அரசுடன் கூட்டு ஒப்பந்தமும் செய்யப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T21:29:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் காட்டுத்தீ சம்பவம்: 308 பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-arrest-308-persons-for-wildfire-1785532980"></link>
            <id>https://news.lankasri.com/article/france-arrest-308-persons-for-wildfire-1785532980</id>
            <summary type="text">பிரான்ஸில் காட்டுத்தீ பரவலுக்குக் காரணமாக இருந்த 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸில் காட்டுத்தீபிரான்ஸில் இந்த ஆண்டு கோடை காலத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸில் காட்டுத்தீ பரவலுக்குக் காரணமாக இருந்த 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2> பிரான்ஸில் காட்டுத்தீ</h2><p>பிரான்ஸில் இந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.</p><p> அரசாங்கத்தின் புள்ளிவிவரத் தகவலின் படி, காட்டுத் தீயில் இதுவரை 1,15,000 ஹெக்டேர் நிலங்கள்&nbsp; தீயில் கருகி சாம்பலாகியுள்ளன.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ccf2705-1971-4c11-b8a0-acf973d5a85a/26-6a6d123704ff6.webp' /></p><h2> 300க்கும் மேற்பட்டோர் கைது</h2><p>இந்நிலையில் பிரான்ஸ் காட்டுத்தீ சம்பவத்திற்கு காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 308 பேர் இதுவரை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> கைது செய்யப்பட்டவர்களில் 120 பேர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் இந்த கைது நடவடிக்கையில் வேண்டும் என்றே தீ வைத்தவர்களும், கவனக்குறைவாக தீ விபத்தை ஏற்படுத்தியவர்களும் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5df52f0b-982c-4473-963a-0760709db790/26-6a6d12364cada.webp' /></p><h2> தீவிரமான சட்ட நடவடிக்கை</h2><p>வேகமாக பரவி வரும் காட்டுத்தீ அபாயத்தை கட்டுப்படுத்தும் விதமாக, தீ வைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிப்பதற்காக ரோந்து பணிகளில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.</p><p> இதுவரை 33 நபர்கள் காட்டுத்தீ தொடர்பாக வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர் அல்லது நீதிமன்ற காவலில் உள்ளனர்.</p><p> காட்டுத்தீ சம்பவத்தில் பொதுமக்களின் கவனக்குறைவு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-31T21:23:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெலாரஸ் உடனான எல்லையை மூடிய லாட்வியா: குடிமக்களுக்கு தாயகம் திரும்ப அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/latvia-close-his-border-with-belarus-1785530377"></link>
            <id>https://news.lankasri.com/article/latvia-close-his-border-with-belarus-1785530377</id>
            <summary type="text">பெலாரஸ்(Belarus) உடனான எல்லையை மூடுவதாக லாட்வியா(Latvia) அறிவித்துள்ளது. எல்லையை மூடிய லாட்வியாதொழில்நுட்ப காரணங்களால் லாட்வியா மற்றும் பெலாரஸ் நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெலாரஸ்(Belarus) உடனான எல்லையை மூடுவதாக லாட்வியா(Latvia) அறிவித்துள்ளது.</p><h2> எல்லையை மூடிய லாட்வியா</h2><p>தொழில்நுட்ப காரணங்களால் லாட்வியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் உடனடியாக மூடப்படுவதாக லாட்வியா நாட்டு உள்துறை அமைச்சர் ஜானிஸ் டோம்பிராவா(Janis Dombrava) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.</p><p>மேலும் இது தொடர்பாக டோம்பிராவா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் பெலாரஸ் நாட்டில் தங்கியுள்ள லாட்வியா குடிமக்கள் அனைவரும் உடனடியாக மாற்றுப்பாதையை பயன்படுத்தி தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.</p><p> பெலாரஸ் நாட்டுடனான எல்லை மூடல் நடவடிக்கையானது, இந்த வார தொடக்கத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை தொடர்ந்து வெளிவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04661000-4b5a-496b-a45e-d6b00dba8e1c/26-6a6d080b7940e.webp' /></p><p> X தளத்தில் டோம்பிராவா வெளியிட்ட பதிவில், பெலாரஸ் நாட்டிற்கு செல்லும் அனைத்து பயண திட்டங்களையும் உடனடியாக கைவிடுமாறு லாட்வியா குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p> பெலாரஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள அகதிகள் கலப்பினப் போர் தீவிரமடைந்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு போக்குவரத்து எப்போது வேண்டுமாலும் தடைபடலாம் என்று அவர் எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T20:39:48+00:00</updated>
        </entry>
    </feed>
