<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-23T09:48:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு பவுன் தங்க விலை எவ்வளவு?(23-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784799911"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784799911</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (23-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (23-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,321,003.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,600.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 372,800.00.</p><p>

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,720.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 341,750.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,780.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 326,200.00.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T09:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் எசெக்ஸ் கடலில் தத்தளித்த சிலர்: சிறுமியும், பெண்ணும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/essex-coast-tragedy-teen-girl-and-woman-dead-1784799318"></link>
            <id>https://news.lankasri.com/article/essex-coast-tragedy-teen-girl-and-woman-dead-1784799318</id>
            <summary type="text">பிரித்தானியாவின் எசெக்ஸ் கடற்கரை பகுதியில் நீரில் மூழ்கி சிறுமியும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.பிரித்தானிய கடற்கரையில் சோகம்புதன்கிழமை மாலை பிரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் எசெக்ஸ் கடற்கரை பகுதியில் நீரில் மூழ்கி சிறுமியும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.</p><h2>பிரித்தானிய கடற்கரையில் சோகம்</h2><p>புதன்கிழமை மாலை பிரித்தானியாவின் எசெக்ஸ் கடற்கரையில் சிறுமி ஒருவரும், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கடல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p> கோல்செஸ்டர் பகுதிக்கு அருகில் உள்ள வெஸ்ட் மெர்சியா பகுதியில் சிலர் கடலில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.</p><p></p><p> காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் தீவிரமாக செயல்பட்டும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்பது எசெக்ஸ் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0cb0515-9167-4044-9e97-3ec1b4c4d5fc/26-6a61e05805190.webp' /></p><p> ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் இரண்டு பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>கடலில் நிகழ்ந்த இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பரிச்சயமானவர்கள் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அதே சமயம் சம்பந்தப்பட்ட கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளை சுற்றி பொலிஸார் மற்றும் மருத்துவ சேவை படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T09:35:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுப் பேருந்தை திருடிச் சென்ற நபர்: துரத்திப் பிடித்த பொலிசார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drunk-man-steals-bus-in-telangana-police-chased-1784799310"></link>
            <id>https://news.lankasri.com/article/drunk-man-steals-bus-in-telangana-police-chased-1784799310</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், அரசு பேருந்தை ஒருவர் திருடிச் செல்ல, பொலிசார் அவரை துரத்திப் பிடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அரசுப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், அரசு பேருந்தை ஒருவர் திருடிச் செல்ல, பொலிசார் அவரை துரத்திப் பிடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
</p><h3>
அரசுப் பேருந்தை திருடிச் சென்ற நபர்
</h3><p>
தெலங்கானா மாநிலத்தில், பேருந்து நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றைக் காணாத அலுவலர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் மூலம் பேருந்து பயணிக்கும் இடத்தை அறிந்துகொண்ட பொலிசார் பேருந்தை துரத்திச் சென்றுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨Shocking! A man allegedly stole a parked <a href="https://x.com/hashtag/TGSRTC?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TGSRTC</a> bus from <a href="https://x.com/hashtag/Korutla?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Korutla</a> bus stand in <a href="https://x.com/hashtag/Jagtial?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Jagtial</a>, triggering an 18-km police chase. After ramming vehicles, the bus crashed near <a href="https://x.com/hashtag/Metpalli?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Metpalli</a>. Accused Sambayya was arrested. Motive under probe. <a href="https://x.com/hashtag/Telangana?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Telangana</a> Crime <a href="https://x.com/TGSRTCHQ?ref_src=twsrc%5Etfw">@TGSRTCHQ</a> <a href="https://x.com/hashtag/Crime?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Crime</a> <a href="https://x.com/hashtag/Sambayya?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Sambayya</a> <a href="https://t.co/W74GiFqriR">pic.twitter.com/W74GiFqriR</a></p>&mdash; Rajesh Kumar Reddy E V (@rajeshreddyega) <a href="https://x.com/rajeshreddyega/status/2079843114794340658?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பேருந்தை இயக்கிய நபர் கண்மூடித்தனமாக பேருந்தை இயக்கியதுடன், மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோத, சாலையில் பயணித்துக்கொண்டிருந்த மற்ற வாகன ஓட்டிகள் திகிலடைந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96e9df03-7608-4fd3-b9fe-3cd84f8a0273/26-6a61e0510adcc.webp' /></p><p>

ஒரு இடத்தில் பொலிசார் சாலையின் குறுக்கே தடுப்புகளை ஏற்படுத்த, பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த மரம் ஒன்றில் மோதி நின்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99441e75-ec56-4f61-824e-b5641572b83e/26-6a61e0505a6cc.webp' /></p><p>

ஏற்கனவே பொலிசார் 18 கிலோமீற்றர் தூரம் பேருந்தை துரத்திப் பிடித்த நிலையில், பேருந்து நின்றதும் அதிலிருந்த அந்த நபர் பேருந்திலிருந்து இறங்கி தப்பியோடியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
மீண்டும் பொலிசார் அவரை துரத்திப் பிடித்த நிலையில், அவர் மது போதையிலிருந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், பேருந்து நிலையத்தில் நுழைந்து ஒருவர் யாருக்கும் தெரியாமல் பேருந்தை வெளியே எடுத்துச் சென்றது எப்படி என்னும் கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T09:35:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாடகை மோசடி... கனடாவில் இந்திய வம்சாவளி இளம்பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-woman-arrested-in-canada-rental-scam-1784798120"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-woman-arrested-in-canada-rental-scam-1784798120</id>
            <summary type="text">கனடாவில், வாடகை மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாடகை மோசடி...

கனடாவின் ப்ராம்டனில் வாழும் சவ்ரீத் கௌர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், வாடகை மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h3>

வாடகை மோசடி...
</h3><p>
கனடாவின் ப்ராம்டனில் வாழும் சவ்ரீத் கௌர் (27) என்னும் பெண், வீடு வாடகைக்கு இருப்பதாக விளம்பரம் செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/051ce274-a2c5-4fa7-b6ba-1651dc23392d/26-6a61dba98deaa.webp' /></p><p>
அந்த விளம்பரத்தை நம்பி, பலர் கௌரை அணுகி வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன், டெபாசிட் தொகையும் செலுத்தியுள்ளனர்.</p><p>

ஆனால், அவர்கள் சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் செல்லும்போதுதான் தெரிந்துள்ளது, அந்த வீட்டில் ஏற்கனவே ஒரு குடும்பம் வாடகைக்கு இருப்பதும், அந்த வீட்டை வாடகைக்கு விடும் திட்டமே அந்த வீட்டுக்காரருக்கு இல்லை என்பதும்!
</p><p>
இதில் சிலர் தாங்கள் ஏற்கனவே வசித்த வீட்டை காலி செய்துவிட்டு தங்கள் உடைமைகளுடன் புறப்பட்டு வந்துள்ளார்கள். ஆனால், அவர்கள் வாடகை ஒப்பந்தம் செய்து, குடியிருப்பதற்காக வந்த வீட்டில் ஏற்கனவே வேறொரு குடும்பம் வசித்துவருவது தெரியவந்ததால், என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்ற சம்பவங்களும் நடந்துள்ளன.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், அப்படி சுமார் 17 பேரை ஏமாற்றிய சவ்ரீத் கௌர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சுமார் 60,000 டொலர்களுக்கும் அதிகமான தொகையை இந்த வகையில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் மீது 38 மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடயம் என்னவென்றால், வீடு வாடகைக்கு இருப்பதாக அவருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 17 பேரில் ஒருவருக்குக் கூட அவர் உறுதியளித்தபடி வீடும் கிடைக்கவில்லையாம், அவர் வாங்கிய டெபாசிட்டும் திருப்பிக் கொடுக்கப்படவில்லையாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T09:15:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thoothukudi-arunchalam-dies-after-police-enquiry-1784797290"></link>
            <id>https://news.lankasri.com/article/thoothukudi-arunchalam-dies-after-police-enquiry-1784797290</id>
            <summary type="text">தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் உயிரிழந்துள்ள நிலையில், காவல்துறை விளக்கமளித்துள்ளது. 


தொடரும் காவல் மரணம் 

கன்னி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் உயிரிழந்துள்ள நிலையில், காவல்துறை விளக்கமளித்துள்ளது. </p><h3>


தொடரும் காவல் மரணம் </h3><p>

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் குட்கா வழக்கில் விசாரணை கைதியாக இருந்த சபரிவர்மன், கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de6341fa-eb62-421e-9e67-9e1219a71ff6/26-6a61d86c92e97.webp' /></p><p>

முதலில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் கடுமையான தாக்குதல் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. </p><p>

சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், காவலர் சிவகுமார் ஆகிய மூவர் மற்றும் 8 கைதிகள் தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h3>

தூத்துக்குடியில் அருணாச்சலம் உயிரிழப்பு</h3><p> 

இந்நிலையில், தூத்துக்குடியில் ஒரு விசாரணை கைதி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>தூத்துக்குடி, அமுதா நகரை சேர்ந்த 27 வயதான அருணாச்சலம் அரசு மதுபான கடை பாரில் வேலை பார்த்து வந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cd1f703-7b9b-4780-898d-6dd53c031a37/26-6a61d86be1558.webp' /></p><p>

கடந்த 17ஆம் தேதி கடையை மூடிய பின்பும், சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக தென்பாகம் காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். </p><p>

அதே நாளில் உங்களது மகன் மயங்கி விழுந்து விட்டதாக அருணாச்சலத்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், தற்போது அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 4 காவலர்கள் எனது மகனை அடித்து கொன்று விட்டதாக அருணாசலத்தின் தாய் தெரிவித்துள்ளார்.</p><p>

இது குறித்து பேசிய அவர், எனது மகனை 4 காவலர்கள் அடித்ததாக அவன் தெரிவித்தான். எனது மகனுக்கு இதற்கு முன்பு வலிப்பு வந்ததே இல்லை. எனக்கு நீதி வேண்டும். அந்த 4 காவலர்கள் வர வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.</p><p> 

மேலும், அருணாச்சலம் காவலர்கள் தன்னை அடித்ததாக மருத்துவமனையில் இருந்தபடி பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது. </p><h3> 

காவல்துறை விளக்கம் </h3><p>

இந்நிலையில், அருணாச்சலம் மரணமடைந்தது லாக்-அப் டெத் அல்ல என மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் விளக்கமளித்துள்ளார். </p><p>

இது குறித்து பேசிய அவர், "காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அருணாச்சலத்தை மருத்துவமனை அழைத்துச் சென்றபோது அங்கு மீண்டும் மயங்கி விழுந்தார். 

கைது செய்யப்பட்ட அன்றைய தினமே அருணாச்சலம் மயங்கி விழுந்த தகவலை உறவினர்களுக்கு அளித்தோம். </p><p>மயங்கி விழுந்த அருணாச்சலத்தை பெற்றோர் மற்றும் காவலர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். 

அருணாசலத்தின் தலையில் கட்டி இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். அருணாசலத்தை அடிக்கவில்லை, இது லாக்-அப் மரணம் இல்லை” என தெரிவித்துள்ளார்.
</p><h3>
 கனிமொழி கண்டனம் </h3><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, "நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8b8f4fd-a085-4462-afa6-a9154e822546/26-6a61d86d41418.webp' /></p><p>

காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.<br><br>காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில்… <a href="https://t.co/jNm4rPKFWq">https://t.co/jNm4rPKFWq</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2080201827338076527?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T09:01:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர வெப்பத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடொன்று: பல நகரங்களில் வெப்பநிலை உச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-suffers-heat-disaster-1784796959"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-suffers-heat-disaster-1784796959</id>
            <summary type="text">ஜப்பானிய நகரங்கள் பல 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் மேலான வெப்பத்தைப் பதிவு செய்துள்ளதால், கொடுமையான வெப்ப நாட்கள் என&amp;nbsp;அதிகாரிகளால் குறிப்பிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானிய நகரங்கள் பல 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் மேலான வெப்பத்தைப் பதிவு செய்துள்ளதால், கொடுமையான வெப்ப நாட்கள் என&nbsp;அதிகாரிகளால் குறிப்பிடப்படுகிறது.</p><h2>கொடுமையான வெப்பம்</h2><p>
</p><p>புதன்கிழமையன்று நிலவிய கடும் வெப்பத்தை அவசரக்கால அதிகாரிகள் ஒரு பேரிடர் என்றே குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, நாடு முழுவதும் வெப்பவாதம் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aae1c257-5d41-43fc-949d-66799b9651ff/26-6a61db678cbf9.webp' /></p><p> </p><p>கடந்த ஒரு வாரத்தில்&nbsp;மட்டும் வெப்பம் தொடர்பான காரணங்களால் குறைந்தது 14 பேர் மரணமடைந்துள்ளதாக அவசரக்காலப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>செவ்வாய்க்கிழமையன்று மூன்று முக்கிய நகரங்களில் வெப்பநிலை கொடுமையான வெப்பம் கொண்ட நாள் என்று பொருள்படும் கொகுஷோபி (kokushobi) என்ற புதிய உச்ச வரம்பைத் தாண்டியதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>நகோயாவின் மையப்பகுதி மற்றும் கிழக்கே டோக்கியோவுக்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட பெரும் பகுதிகளில், புதன்கிழமையன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நெருங்கின அல்லது அதைத் தாண்டியுள்ளன.</p><p></p><p> </p><p>இதனிடையே, ஜப்பானின் 47 மாகாணங்களில் 41-ல் வெப்பவாதம் (heatstroke) குறித்த எச்சரிக்கைகளை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) விடுத்துள்ளது; மேலும், பொதுமக்கள் - குறிப்பாக முதியவர்கள் - உடல் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது. </p><p>தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை முகமையின் தகவலின்படி, கடந்த வாரத்தில் ஜப்பானில் சுமார் 11,000 பேர் அவசர மருத்துவ சிகிச்சையை நாடியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b64c95f4-00fe-4677-8843-36c7ae45a2de/26-6a61db684abef.webp' /></p><h2>சுமார் 1,300 பேர்கள்</h2><p> </p><p>அவர்களில் 14 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோதே மரணமடைந்திருந்ததாகத் தெரிவித்த அந்த அமைப்பு, கடும் வெப்பநிலையை மக்கள் ஒரு பேரிடர் என்றே கருத வேண்டும் என்றும் கூறியுள்ளது. </p><p>இதனிடையே, பள்ளிகளின் உடற்பயிற்சிக் கூடங்களில் குளிர்சாதன வசதிகளை அமைத்தல் மற்றும் பணிபுரியும் இடங்களில் முறையான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வணிக நிறுவனங்களை வலியுறுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், கடும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க ஜப்பான் அரசாங்கம் முயற்சித்து வருவதாக அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6eac1e9-642c-4094-88d7-9a78a55fbb26/26-6a61db68ef9a1.webp' /></p><p> </p><p>மேலும், ஜப்பானில் ஆண்டுதோறும் சுமார் 1,300 பேர் வெப்பம் தொடர்பான காரணங்களால் உயிரிழக்கின்றனர் என்றும், 2030-ஆம் ஆண்டிற்குள் அந்த எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>அத்துடன், அனைத்து குடிமக்களும் தங்கள் பகுதிகளில் உள்ள வெப்பவாதம் (heatstroke) குறித்த எச்சரிக்கைகளின் நிலையைச் சரிபார்க்குமாறும், குளிர்ச்சியான சூழலில் இருக்க ஏர் கண்டிஷனர்கள் மற்றும் பிற குளிர்விக்கும் சாதனங்களைச் சரியாகப் பயன்படுத்துமாறும், அடிக்கடி தண்ணீர் அருந்தி சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T08:54:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிறுவனம் தொடங்கும் அதானி? விதியை தளர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/adani-seek-rule-change-for-launch-airline-1784793220"></link>
            <id>https://news.lankasri.com/article/adani-seek-rule-change-for-launch-airline-1784793220</id>
            <summary type="text">அதானி குழுமம் விமான நிறுவனம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய உள்நாட்டு விமான சந்தை 

இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் இண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதானி குழுமம் விமான நிறுவனம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><h3>

இந்திய உள்நாட்டு விமான சந்தை </h3><p>

இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து சுமார் 90% பங்கைக் கொண்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ad1de41-cae5-41b0-8f46-4ae0c3250670/26-6a61c8854196d.webp' /></p><p> 

இந்த நிறுவனங்களின் சேவையில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், இந்தியா முழுவதும் விமானபயணிகள் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை உள்ளது. </p><p>

கடந்த ஆண்டு இண்டிகோ விமானசேவையில் ஏற்பட்ட பாதிப்பால், நாடு முழுவதும் பயணிகள் பாரிய சிக்கலை எதிர்கொண்டனர்.&nbsp;</p><p></p><p>

இதன் காரணமாக, விமான சேவையில் உள்ள இருமுனை ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி, புதிய விமான நிறுவனங்களின் வருகை மூலம் போட்டியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. </p><h3> 

விமான நிறுவனம் தொடங்கும் அதானி?</h3><p> 

இந்நிலையில், இந்தியாவில் பல்வேறு துறைகளில் கோலாச்சி வரும் அதானி குழுமம், விமான நிறுவனம் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/205647fd-04ad-4413-b2cd-031192a3eede/26-6a61c885e4f93.webp' /></p><p>

அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், அகமதாபாத், லக்னோ, மும்பை, குஜராத், ஜெய்ப்பூர், குவஹாத்தி, மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் நவி மும்பை உள்ளிட்ட 8 விமான நிலையங்களை இயக்கி வருகிறது. </p><p>

மேலும், மும்பை சர்வதேச விமான நிலைய லிமிடெட்டில் 73% பங்குகளையும், நவி மும்பை சர்வதேச விமான நிலைய லிமிடெட்டில் 74% பங்குகளையும் கொண்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

இதே போல், ஜிஆர்எம் நிறுவனம் டெல்லி, ஹைதராபாத், கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையம், பீதர் மற்றும் நாக்பூர் ஆகிய விமான நிலையங்களை இயக்கி வருவதோடு, போகபுரத்தில் புதிய விமான நிலையத்தை கட்டி வருகிறது.
</p><p>
தற்போதுள்ள விதிமுறைகள், விமான நிலையங்களை இயக்கும் நிறுவனங்கள், விமான நிறுவனத்தில் 10% க்கும் அதிகமான பங்குகளை வைத்திருப்பதைத் தடுக்கின்றன.</p><p>

இந்நிலையில், இந்த விதியில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை அதானி குழுமம் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p> 

இதன் காரணமாக, அதானி குழுமம் விமான நிறுவனத்தை தொடங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
அதேவேளையில், விமான நிலையங்கள் நிர்வகிக்கும் நிறுவனங்கள், விமான சேவையை தொடங்கினால் விமானங்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் என விமான சேவை நிறுவனங்கள் இந்த திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். </p><p>

அவ்வாறு விதிகள் திருத்தப்பட்டால், விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனங்களின் வணிகங்களுக்கு இடையே ஒரு நடுநிலையான உறவைப் பேணுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T08:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் வீடொன்றில் பயங்கர தீ: 5 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/peru-residential-fire-10-dead-1784794013"></link>
            <id>https://news.lankasri.com/article/peru-residential-fire-10-dead-1784794013</id>
            <summary type="text">பெருவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.வீடொன்றில் பயங்கர தீபெரு தலைநகர் லீமாவில் உள்ள வீடு ஒன்றில் அதிகாலை ஏற்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2>வீடொன்றில் பயங்கர தீ</h2><p>பெரு தலைநகர் லீமாவில் உள்ள வீடு ஒன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் மற்றும் 5 பெரியவர்கள் என மொத்தம் 10 பேர்&nbsp; பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p> லீமாவின் லா விக்டோரியா மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த கோர சம்பவமானது அரங்கேறியுள்ளது.</p><p> குடிமை பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்த தகவலின் படி, இந்த சம்பவத்தில் மேலும் 2 பேர் காயமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca80c6e-47d3-4909-95d1-7aba020f3a50/26-6a61cb9ead826.webp' /></p><p> சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.&nbsp;
மேலும் முதற்கட்ட விசாரணையில், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த எரியக்கூடிய மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மின்சார வாகனங்கள் காரணமாக தீ மிகவும் வேகமாக பரவியது என தெரியவந்துள்ளது.</p><p></p><p> தீ விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதியை பெரு ஜனாதிபதி கெய்கோ கியூமோரி பார்வையிட்டார்.</p><p> தீ விபத்துக்கான மூல காரணத்தை கண்டறிய சூழ்நிலைகள் மற்றும் காரணங்களை முழுமையாக கண்டறிய விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-23T08:07:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-transit-1784793653"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-transit-1784793653</id>
            <summary type="text">நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
</p><p>
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.</p><p>

இந்நிலையில். செவ்வாய் ஜூலை 24ஆம் திகதியான நாளை மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.&nbsp;</p><p> மேலும், செவ்வாய் இந்த நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை இருப்பார்.
</p><p>
அந்தவகையில், நாளை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாயால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.&nbsp;</p><p></p><h2>மேஷம் </h2><ul><li>மங்களகரமானதாக இருக்கும். </li><li>தொழில் ரீதியாக நல்ல பலனைப் பெறுவார்கள்.</li><li> நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். </li><li>பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.</li><li>பதவி உயர்வு கிடைக்கும்.</li><li> தலைமைத்துவ திறன்கள் மேம்படும். </li><li>புதிய வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.</li><li> சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். </li><li>புதிய வேலை யை தொடங்கினால் வெற்றி கிடைக்கும். </li><li>ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1d80d6d-6c9d-49eb-9ce7-77cf3fb38e60/26-6a61ca3742f08.webp' /></p><h2>சிம்மம்</h2><ul><li>அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். </li><li>வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். </li><li>வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.</li><li>புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.</li><li> சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். </li><li>பணியிடத்தில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். </li><li>சிலருக்கு நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0e7f856-c295-4c88-92e2-4de9905f9930/26-6a61ca37e67e1.webp' /></p><p>
</p><h2>விருச்சிகம் </h2><ul><li>தைரியம் அதிகரிக்கும். </li><li>முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். </li><li>போட்டி தேர்வுகளில் மாணவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். </li><li>அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால்&nbsp; பாராட்டைப் பெறுவார்கள். </li><li>வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். </li><li>பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f262c58-b698-4325-81db-d99a0b4710ef/26-6a61ca3898ad0.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T08:01:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் இருந்து தூதர்களை திரும்ப பெரும் பிரித்தானியா: 12வது நாளாக தொடரும் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-withdraws-embassy-staff-from-iran-1784790267"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-withdraws-embassy-staff-from-iran-1784790267</id>
            <summary type="text">ஈரானில் உள்ள தூதரக அதிகாரிகளை பிரித்தானிய தற்காலிகமாக திரும்ப பெற்றுள்ளது. தூதர்களை திரும்ப பெரும் பிரித்தானியாமத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் உள்ள தூதரக அதிகாரிகளை பிரித்தானிய தற்காலிகமாக திரும்ப பெற்றுள்ளது.</p><h2> தூதர்களை திரும்ப பெரும் பிரித்தானியா</h2><p>மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஈரானில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை தற்காலிகமாக திரும்ப பெறுவதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.</p><p> பிரித்தானிய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகம் தங்களுடைய செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5818852-cc25-4335-8750-b001d586c7e7/26-6a61bcfd5aa0e.webp' /></p><p> மேலும் இணைய வழியில் தூதரக பணிகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஈரானை குறிவைத்து தொடர்ந்து 12 வது நாளாக அமெரிக்கா தங்களது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.</p><p></p><p> &nbsp;அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானிய தலைநகரில் உள்ள மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினரும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f1ab89d-d3ab-4c11-9ef1-790a18bbf3cf/26-6a61bcfe266bf.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T07:04:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள்.., ஏன் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/why-air-hostess-are-always-female-in-tamil-1784789863"></link>
            <id>https://news.lankasri.com/article/why-air-hostess-are-always-female-in-tamil-1784789863</id>
            <summary type="text">பொதுவாக, விமானத் துறையில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். 

குறிப்பாக, விமானங்களில் பணிபுரியும் கேபின் குழுவினரில் பெண்களின் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, விமானத் துறையில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.</p><p> 

குறிப்பாக, விமானங்களில் பணிபுரியும் கேபின் குழுவினரில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.</p><p>

ஆனால், விமானப் போக்குவரத்து தொடங்கிய காலத்தில் நிலைமை வேறுபட்டிருந்தது. </p><p>

1912ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த DELAG விமான நிறுவனத்தில் பணியாற்றிய ஹென்ரிச் குபிஸ், வரலாற்றின் முதல் விமானப் பணிப்பாளராகக் கருதப்படுகிறார்.&nbsp;&nbsp;</p><p>அந்தக் காலகட்டத்தில் கேபின் குழுவினராக ஆண்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b25279-35fb-42d6-b669-b87181916ba2/26-6a61bb6a1c6cd.webp' /></p><p>பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதைவிட, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே கேபின் குழுவினரின் முக்கியப் பணியாக இருந்தது. </p><p>

இதனால், விமான நிறுவனங்கள் ஆண்களையே அதிகம் பணியமர்த்தின.

இதில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் எலன் சர்ச். </p><p>பதிவு பெற்ற செவிலியரான இவர், 1930ஆம் ஆண்டு போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக இணைந்தார்.&nbsp;&nbsp;</p><p>இதன் பின்னர், பயணிகளைக் கவனித்துக்கொள்ள பெண் செவிலியர்களை விமான நிறுவனங்கள் அதிகளவில் பணியமர்த்தத் தொடங்கின.
</p><p>
இதன் காரணமாக, விமானப் பணிக்குழுவில் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95fd25b9-4f90-4095-9954-0b5addde9737/26-6a61bb696acee.webp' /></p><p>மேலும், பெண்களின் வரவேற்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை திறன்களும் இந்தத் துறையில் அவர்களுக்கு சாதகமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.&nbsp;</p><p>20ஆம் நூற்றாண்டின் மத்தியில், விமான நிறுவனங்கள் பெண் பணியாளர்களின் வயது, எடை, திருமண நிலை மற்றும் தோற்றம் தொடர்பாக கடுமையான விதிமுறைகளை வகுத்தன.
</p><p>
பெண்களின் தோற்றத்தை வணிக ரீதியாக பயன்படுத்தியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.</p><p>

தற்போது, பல விமான நிறுவனங்களில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் கேபின் குழுவில் பணியாற்றுகின்றனர். </p><p>இதனால், விமானப் பணிக்குழு என்றாலே பெண்கள் என்ற பிம்பம் உருவாகியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசுக்களுக்கு மேய்ச்சலுக்குப் புல் இல்லாததால் சுவிஸ் விவசாயிகள் எடுத்துள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cows-brought-down-from-mountains-early-for-drought-1784789831"></link>
            <id>https://news.lankasri.com/article/cows-brought-down-from-mountains-early-for-drought-1784789831</id>
            <summary type="text">சுவிஸ் மாகாணமொன்றில், மலைகளில் பசுக்களுக்கு மேய்ச்சலுக்குப் புல் இல்லாததால், முன்கூட்டியே அவற்றை கீழே கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள் விவச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிஸ் மாகாணமொன்றில், மலைகளில் பசுக்களுக்கு மேய்ச்சலுக்குப் புல் இல்லாததால், முன்கூட்டியே அவற்றை கீழே கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள் விவசாயிகள்.
</p><h3>
சுவிஸ் விவசாயிகள் எடுத்துள்ள முடிவு
</h3><p>
சுவிட்சர்லாந்தில், விவசாயிகள் தங்கள் பசுக்களை ஆல்ப்ஸ் மலையில் மேய்ப்பது வழக்கம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67540987-eede-48b3-a058-69a46e78922f/26-6a61bb485bce2.webp' /></p><p>
அப்படி ஆல்ப்ஸ் மலையில் மேயும் பசுக்கள் பலதரப்பட்ட தாவரங்களை உட்கொள்வதால், அவை தரும் பாலுக்கும், அதிலிருந்து தயாரிக்கப்படும் ஆல்ப்ஸ் பாலாடைக்கட்டிக்கும் அதிக மதிப்பு உள்ளது.&nbsp;</p><p>
ஆகவே, மலைகளில் மேய்க்கப்படும் பசுக்களுக்கு அரசு நிதி உதவியும் செய்கிறது.&nbsp;</p><p></p><p>

இப்படி மலையில் மேயும் பசுக்களை, பொதுவாக செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில்தான் கீழே இறக்கிக் கொண்டுவருவார்கள் விவசாயிகள்.
</p><p>
ஆனால், ஜூன் மாதம் கல்மழை பெய்ததால் புல்வெளிகள் பாதிக்கப்பட்டதுடன், வறட்சி காரணமாக மீண்டும் புல் வளரவும் இல்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56c4f989-185b-4d75-af37-249587116216/26-6a61bb490c9a9.webp' /></p><p>
ஆகவே, Fribourg மாகாண விவசாயிகள் புல் இல்லாததால் இப்போதே தங்கள் பசுக்களை மலையிலிருந்து இறக்கி கீழே கொண்டுவரத் துவங்கிவிட்டார்கள்.</p><p>

இதனால் விவசாயிகளுக்கு இரண்டு இழப்புகள்: ஒன்று, மலையில் மேயாமல் பண்ணையில் மாட்டுத்தீவனம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் பாலுக்கு குறைவான விலையே கிடைக்கும். இரண்டு, அரசு வழங்கும் நிதி உதவி கிடைக்காது.
</p><p>
ஆக, சில விவசாயிகள் தங்கள் பசுக்களில் சிலவற்றை விற்கத் துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதனால் பசு ஒன்றிற்கு சுமார் 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுமாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:57:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு நிறமாக மாறிய மெல்போர்ன் நகரம்... பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/melbourne-teachers-strike-1784788457"></link>
            <id>https://news.lankasri.com/article/melbourne-teachers-strike-1784788457</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அதிக சம்பளம் கோரி வீதிகளில் இறங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேலைநிறுத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அதிக சம்பளம் கோரி வீதிகளில் இறங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>வேலைநிறுத்தப் போராட்டம்</h2><p>
</p><p>சிறந்த ஊதியம் மற்றும் பணிச் சூழலைக் கோரி, விக்டோரியா மாகாணப் பாடசாலைகளின் 35,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பாடசாலை முதல்வர்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்த ஊழியர்கள் மெல்போர்ன் நகரின் மையப்பகுதியில் வியாழக்கிழமை கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd0c83d-2f34-4958-ac2d-461f3a2af8b1/26-6a61b750812b2.webp' /></p><p> அவுஸ்திரேலியக் கல்விச் சங்கத்தின் மாகாண உறுப்பினர்கள், ஆலன் அரசாங்கத்தின் சமீபத்திய சலுகையை வாக்களித்து நிராகரித்ததாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>நான்கு ஆண்டுகளில் 28.3 சதவீத ஊதிய உயர்வுக்கான திருத்தப்பட்ட முன்மொழிவு, 51.18 சதவீத உறுப்பினர்களின் எதிர்ப்பால் மிகக் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.</p><p></p><p> </p><p>வியாழக்கிழமை நடைபெறவுள்ள பேரணிக்கு முன்னதாக, வாக்கெடுப்பு முடிவுகள் மிக நெருக்கமாக இருந்ததை ஒப்புக்கொண்ட தொழிற்சங்கத்தின் விக்டோரியப் பிரிவுத் தலைவர் ஜஸ்டின் முல்லாலி, இருப்பினும் கல்வியாளர்கள் பெருமளவில் இதில் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ளார். </p><p>சமீபத்திய ஊதிய உயர்வுச் சலுகை குறிப்பிடத்தக்கது என்பதை முல்லாலி ஒப்புக்கொண்டார்; இருப்பினும், அதிக பணிச்சுமை மற்றும் குறைவான ஊதியம் கொண்ட கல்வியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அது போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>நடவடிக்கைக்கு ஆதரவு</h2><p>
</p><p>இதனிடையே, ஆசிரியர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறிய ஃபெடரல் கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர், அதைச் செயல்படுத்தும் விக்டோரிய மாகாண அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். </p><p>ஆசிரியர்கள் போராட்டம் ஒருபக்கம் நடந்தாலும், வியாழக்கிழமையன்று அனைத்து அரசுப் பள்ளிகளும் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் பல வகுப்புகள் பாதிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c75af29e-d5a5-415f-824a-2affa4e44c42/26-6a61b74fb98ec.webp' /></p><p> </p><p>ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அரசாங்கத்துடன் ஊதியத் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்; இதில், நாட்டின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் பிரிவினரான பட்டதாரி ஆசிரியர்கள், அதிகபட்ச ஊதியம் வழங்கப்படும் 'நார்தர்ன் டெரிட்டரி' (Northern Territory) பகுதி ஆசிரியர்களை விட 13,000 டொலர்கள் குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T06:32:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைப்ரஸ் ஹோட்டல் விபத்து: மாடியில் இருந்து விழுந்த 2 வயது சிறுவன்: தந்தை மீது வழக்குப்பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/son-window-fall-in-cyprus-father-face-charges-1784787636"></link>
            <id>https://news.lankasri.com/article/son-window-fall-in-cyprus-father-face-charges-1784787636</id>
            <summary type="text">சைப்ரஸ் நாட்டில் பாஃபோஸ் நகரில் உள்ள விடுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தில் பிரித்தானிய தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சைப்ரஸ் நாட்டில் பாஃபோஸ் நகரில் உள்ள விடுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தில் பிரித்தானிய தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2> மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுவன்</h2><p>ஞாயிற்றுக்கிழமை சைப்ரஸ் நாட்டின் பாஃபோஸ் நகருக்கு அருகிலுள்ள கிங் எவெல்தன் பீச் ஹோட்டல் அண்ட் ரெசார்ட்டில் தந்தையும் அவரது 2 வயது மகனும் நான்காவது மாடியில் லிப்டுக்காக காத்திருந்துள்ளனர்.</p><p>அப்போது மகனை இடுப்பில் வைத்து இருபுறமும் ஆட்டி விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மகன் திடீரென பிடியில் இருந்து நழுவி அருகில் இருந்த ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a61bc20-77bc-4d7b-8150-6c9b962a86ae/26-6a61b2b66f5b2.webp' /></p><p>சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2> தந்தை மீது வழக்குப்பதிவு</h2><p>இந்நிலையில், இந்த விவகாரத்தில் தந்தையின் பொறுப்பற்ற செயல் மற்றும் அலட்சியம் சிறுவனின் உயிருக்கு ஆபத்து விளைவித்ததாக கூறி அவர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யுமாறு அட்டர்னி ஜெனரல் ஜார்ஜ் சவிடிஸ் உத்தரவிட்டுள்ளார்.</p><p> இந்த வழக்கில் தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> விசாரணையின் போது, தந்தையின் ரத்தத்தில் மிக குறைவான அளவு மது அருந்தியதற்கான தடயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.</p><p> குழந்தையின் பெற்றோர் 20,000 யூரோக்களை செலுத்தி ஜாமீன் பெற்றுள்ள போதிலும், அவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-23T06:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தூதரக அலுவலர்களை ஈரானிலிருந்து திரும்ப அழைத்துக்கொண்ட பிரித்தானியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-withdraws-diplomatic-staffs-from-iran-1784787496"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-withdraws-diplomatic-staffs-from-iran-1784787496</id>
            <summary type="text">பிரித்தானியா, தனது தூதரக அலுவலர்களை ஈரானிலிருந்து திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது.

பின்னணி

அமெரிக்கா, தொடர்ந்து 11 இரவுகளாக ஈரான் மீது தாக்குதல் நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா, தனது தூதரக அலுவலர்களை ஈரானிலிருந்து திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது.
</p><h3>
பின்னணி
</h3><p>
அமெரிக்கா, தொடர்ந்து 11 இரவுகளாக ஈரான் மீது தாக்குதல் நிகழ்த்திவருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9d08ac-018d-4720-8e86-1cf158f9ba05/26-6a61b22a0d1e8.webp' /></p><p>
அத்துடன், ஈரான், ஏவுகணையையோ, ரொக்கெட்டையோ, ட்ரோனையோ அல்லது எந்த வித ஆயுதத்தையானாலும்,
ஹோர்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் ஒரு கப்பலை நோக்கி ஏவுமானால், பதிலுக்கு, ஈரானின் தலைநகர் அல்லது அதன் அருகிலுள்ள ஒரு பாலம் அல்லது ஒரு அணு மின் நிலையத்தை அமெரிக்கா குண்டு வீசி அழிக்கும் என அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் எச்சரித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02943a2-697d-4ec8-b9b6-d41d9a0916a3/26-6a61b2295be42.webp' /></p><p>ஆக, இப்படியொரு பதற்றமான சூழல் நிலவுவதைத் தொடர்ந்தே, பிரித்தானியா தனது தனது தூதரக அலுவலர்களை ஈரானிலிருந்து திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

ஈரானின் நிலவும் பாதுகாப்புச் சூழலை கருத்தில் கொண்டு தனது தூதரக அலுவலர்களை ஈரானிலிருந்து தற்காலிகமாக திரும்ப அழைத்துக்கொள்வதாக தெரிவித்துள்ள பிரித்தானியா, தூதரகப் பணிகள் ஈரானுக்கு வெளியிலிருந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், பிரித்தானியர்கள் ஈரானுக்கு பயணிக்கவேண்டாம் என்றும், ஈரானிலிருக்கும் பிரித்தானியர்கள் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரித்தானிய அரசு அறிவுறுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:20:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் படம் பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minister-parvace-crying-watch-vijay-jananayagan-1784786278"></link>
            <id>https://news.lankasri.com/article/minister-parvace-crying-watch-vijay-jananayagan-1784786278</id>
            <summary type="text">முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் படத்தை திரையரங்கில் பார்த்து அமைச்சர் பர்வேஷ் தேம்பி தேம்பி அழுதுள்ளார். 

முதல்வர் விஜய்யின் ஜனநாயகன்

முதல்வர் விஜய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் படத்தை திரையரங்கில் பார்த்து அமைச்சர் பர்வேஷ் தேம்பி தேம்பி அழுதுள்ளார். </p><h3>

முதல்வர் விஜய்யின் ஜனநாயகன்
</h3><p>
முதல்வர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவானது ஜனநாயகன் திரைப்படம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b48f5fc-c47d-4a7f-a7dd-e65420892d85/26-6a61af9f8853d.webp' /></p><p>

விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் இது அவரது கடைசிப்படம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.&nbsp;</p><p>

கடந்த ஜனவரி 9 ஆம் திகதி இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சென்சார் காரணங்களால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, விஜய் முதல்வராக பொறுப்பேற்று 2 மாதங்கள் கழித்து இன்று வெளியாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6a6c8e2-0678-40b0-8a2e-c3112fb629d7/26-6a61af9def6ef.webp' /></p><p>

ரசிகர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் பலரும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க திரையரங்குகளில் குவிந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/653f3806-3aa8-4f89-bf09-0becafefdfef/26-6a61af9ecbc40.webp' /></p><p>

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் அமைச்சரும், விஜய் ரசிகர் மன்ற தலைவருமான புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், நடிகை திரிஷாவின் தாயார், நடிகர் அர்ஜூன் தாஸ் படத்தை பார்த்தனர்.&nbsp;</p><p></p><p>

சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுடன் ஜனநாயகன் FDFS பார்த்தனர். </p><h3> 

அழுத அமைச்சர் பர்வேஷ்
</h3><p>
புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஷ், ஜனநாயகன் படத்தை பார்த்தார். </p><p>

ஜனநாயகன் படத்தின் தொடக்கத்தில், கடந்த 30 வருடங்களாக விஜய் நடித்த படங்களின் தொகுப்பானது ஒளிபரப்பபட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3303fb14-df70-4a2e-a44d-4ff45ea93489/26-6a61ad674e751.webp' /></p><p>

தனது தலைவனின் கடைசி படத்தை பார்த்த அமைச்சர் பர்வேஷ், திரையரங்கில் தேம்பி தேம்பி கண்ணீர் விட்டு அழுதார். </p><p>

அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரான பர்வேஷ், அதற்கு முன்னர் விஜய் ரசிகர் மன்றத்தில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பொறுப்புகளை வகித்தார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T05:58:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் பானம்.., எப்படி தயாரிப்பது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/herbal-tea-for-control-diabetes-permanently-1784783970"></link>
            <id>https://news.lankasri.com/article/herbal-tea-for-control-diabetes-permanently-1784783970</id>
            <summary type="text">இரத்த சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும் ஒரு நிலை ஆகும். 

இது இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் அதனை பயன்படுத்தாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்த சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும் ஒரு நிலை ஆகும். </p><p>

இது இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் அதனை பயன்படுத்தாதபோது ஏற்படுகிறது. </p><p>

உணவு கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.</p><p>
</p><p></p><p>அதன்படி, இரும்புச்சத்து நிறைந்த முருங்கை இலைகள் சர்க்கரையை நிரந்தரமாகக் கட்டுக்குள் வைப்பதில் உதவியாக இருக்கும்.</p><p>

அந்தவகையில், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் முருங்கை இலை டீ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.&nbsp;</p><h2>தேவையான பொருட்கள்
</h2><ul><li>
முருங்கை இலை- ½ கைப்பிடி</li><li>
தண்ணீர்- 2 கப்
</li><li>இஞ்சி - 1 சிறிய துண்டு
</li><li>தேன்- 1 ஸ்பூன்
</li></ul><h2>
எப்படி தயாரிப்பது?
</h2><p>
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் இஞ்சியை துருவி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.</p><p>

கொதித்து வரும் வேலையில் அதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை இலைகளை சேர்த்து கொதிக்க விடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0a55e3e-7941-412d-a2b1-b427edbdf1eb/26-6a61a52d946fe.webp' /></p><p>

கொதிக்கின்ற தண்ணீர் பாதி அளவிற்கு சுண்டும் வரை கொதிக்க விடவும்.
</p><p>
பின் இதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
</p><p>
இந்த பணத்தை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T05:23:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் வழக்கு: முக்கிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/female-friend-charged-kills-of-brit-girl-in-france-1784782848"></link>
            <id>https://news.lankasri.com/article/female-friend-charged-kills-of-brit-girl-in-france-1784782848</id>
            <summary type="text">பிரான்சில் வாழ்ந்துவந்த பிரித்தானியப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் வாழ்ந்துவந்த பிரித்தானியப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர முடிவு</h3><p>

2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, பிரான்சிலுள்ள Tremolat என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த கேரன் கார்ட்டர் (Karen Carter, 65) என்னும் பிரித்தானியப் பெண், தனது காரின் அருகே படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/920b6209-709a-43a7-bfe2-54f155fd4d65/26-6a61a0017c6a8.webp' /></p><p>
அவர், மார்பு, கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் கூர்மையான ஒரு ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
</p><h3>
ஒரு வேடிக்கையான முக்கோணக் காதல்
</h3><p>
இதற்கிடையில், கேரனுடைய கொலைக்குக் காரணம், அவர் முக்கோணக் காதல் ஒன்றில் ஈடுபட்டிருந்ததே என கூறப்பட்டது.</p><p>

கேரன், திருமணமானவர். அவரது கணவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவருகிறார்.
</p><p>
இந்நிலையில், கேரன் பிரான்சில் வாழும் ஜீன் (Jean-François Guerrier, 75) என்பவருடன் காதலில் விழுந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dee21cae-c293-4684-aeb3-efba3dcc93b8/26-6a61a002314b5.webp' /></p><p>விடயம் என்னவென்றால், ஏற்கனவே மேரீ (Marie-Laure Autefort, 70) என்னும் பெண் ஜீனை கண்மூடித்தனமாக காதலித்துவந்துள்ளார். ஜீனோ அவரை விட கேரன் மீதுதான் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளார்.
</p><p>
ஆக, பொறாமையால் மேரீ கேரனைக் கொலை செய்துவிட்டாரா என்பதை அறிவதற்காக அவரை காவலில் எடுத்து 40 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தினார்கள் பொலிசார்.&nbsp;&nbsp;</p><p></p><p>

அதே நேரத்தில், மற்றொரு 70 வயது பெண்ணும் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அவரும் கேரன் வீட்டின் அருகில் வாழும் அவரது தோழிகளில் ஒருவர். ஆனால், அவரை பொலிசார் அப்போது விடுவித்துவிட்டார்கள்.
</p><h3>
வழக்கில் முக்கிய திருப்பம்</h3><p>

இந்நிலையில், 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அதே 70 வயது பெண்ணை, தற்போது மீண்டும் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.</p><p>

கேரனை திட்டமிட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
</p><p>
வேடிக்கை என்னவென்றால், கேரன் காதலித்த ஜீனை, இந்தப் பெண்ணும் காதலித்ததாக கருதப்படுகிறது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T05:07:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகக்கடுமையான வெப்பம்... தீவிர வறட்சி தாக்கும் நிலையில் ஐரோப்பா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/extreme-drought-hits-europe-1784783024"></link>
            <id>https://news.lankasri.com/article/extreme-drought-hits-europe-1784783024</id>
            <summary type="text">பருவநிலை நெருக்கடியால் தீவிரமடைந்த கடும் வெப்பம், கோடைக்காலத்தில் ஐரோப்பாவை வறண்டு போகச் செய்வதோடு, கண்டத்தைப் பாதிக்கும் வறட்சியைத் தீவிரப்படுத்துவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருவநிலை நெருக்கடியால் தீவிரமடைந்த கடும் வெப்பம், கோடைக்காலத்தில் ஐரோப்பாவை வறண்டு போகச் செய்வதோடு, கண்டத்தைப் பாதிக்கும் வறட்சியைத் தீவிரப்படுத்துவதாக ஒரு அறிவியல் ஆய்வு கண்டறிந்துள்ளது.</p><h2>வறட்சி தீவிரமானதாக</h2><p>
</p><p>சாதனை அளவிலான வெப்ப அலைகளால், வெப்பமான வளிமண்டலம் ஆறுகள், ஏரிகள், மண் மற்றும் தாவரங்களிலிருந்து நீரைத் தீவிரமாக ஆவியாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af9fda4c-4e26-400f-8c2b-8200a9afd92e/26-6a61a1f742091.webp' /></p><p> </p><p>உலக வெப்பமயமாதலால் மேற்கு ஐரோப்பாவில் இத்தகைய சூழல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 80 மடங்கும், கிழக்கு ஐரோப்பாவில் 40 மடங்கும் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்தது. </p><p>மேற்குப் பகுதியில் நிலவிய மண் வறட்சி நிலைக்கான வாய்ப்பு, அப்பகுதியில் புதைபடிவ எரிபொருட்களால் ஏற்பட்ட மாசுபாட்டினால் ஐந்து மடங்கும், கிழக்குப் பகுதியில் 11 மடங்கும் அதிகரித்துள்ளது. </p><p>வறட்சி பொதுவாகக் குறைந்த மழைப்பொழிவோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது; ஆனால், மேற்கு ஐரோப்பாவில் அண்மையில் கடந்து சென்ற குளிர்காலம் அதிக மழையைக் கொண்டதாக இருந்தது. </p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், மேற்கு ஐரோப்பாவில் தற்போது நிலவும் வறட்சி தீவிரமானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது; ஆனால் பருவநிலை நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்தில் இது மிதமானதாகவே இருந்திருக்கும்.</p><p></p><p> </p><p>கோடைக்காலத்தின் தொடக்கமான ஜூன் மாத இறுதி வரை வறட்சி குறித்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது; ஆனால், அது தற்போதே பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. </p><p>பல நாடுகள் நீர் பயன்பாடு குறித்த அவசரக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன; தற்போது தெற்கு இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் கொடிய காட்டுத்தீ பரவித் தாக்கியுள்ள நிலையில், வரலாற்றிலேயே மிக வறண்ட நிலப்பகுதிகளை எதிர்கொள்ளும் சூழலில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd41bcb-c029-4a65-b805-d6c2d4faf8a2/26-6a61a1f8a36ec.webp' /></p><p>
</p><p>ஐரோப்பா முழுவதும் சுமார் 9 மில்லியன் டன் தானியங்களின் இழப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இதில் பிரான்சில் கடந்த 50 ஆண்டுகளிலேயே மிக மோசமான சோள விளைச்சல் இருக்கும் என்றும், ருமேனிய விவசாயிகள் 10 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பயிர்களை இழக்க நேரிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.</p><h2>விலைகளை உயர்த்தக்கூடும்</h2><p> </p><p>ஐரோப்பா முழுவதும் ஆறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், தூய்மையான நீர்மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், சரக்குக் கப்பல்களின் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>நெதர்லாந்தின் லோபித் (Lobith) பகுதியில் ரைன் ஆற்றின் நீர்மட்டம், 1976-ஆம் ஆண்டின் வெப்பமான கோடைக்காலத்தில் பதிவான மிகக்குறைந்த அளவை விடவும் தற்போது குறைவாக உள்ளது.</p><p>
இந்த நெருக்கடி உணவு மற்றும் எரிசக்தி விலைகளை உயர்த்தக்கூடும் என்றும், இதனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a5e4dc-f1b4-4a6e-9b69-b369fcdea914/26-6a61a1f7f1832.webp' /></p><p> </p><p>2022-இல் ஏற்பட்ட வறட்சியை விட, 2026-ஆம் ஆண்டின் வறட்சி இரண்டு மாதங்கள் முன்னதாகவே வந்துவிட்டது என Dr Dominik Schumacher தெரிவித்துள்ளார். கணிக்கப்பட்டபடி, உலகளாவிய உமிழ்வுகள் வெப்பநிலையை 2.8 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தினால், இந்தத் தீவிர ஆவியாதல் நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இரட்டிப்பாகலாம் என்கிறார் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் மரியம் ஜக்காரியா. </p><p>உமிழ்வைக் குறைக்க விரைவான மற்றும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், சுட்டெரிக்கும் வெப்பமும் வறட்சியும் கொண்ட கோடைக்காலங்கள் மீண்டும் மீண்டும் நிகழும் ஒரு எதிர்காலத்தை நோக்கி ஐரோப்பா தள்ளப்படுகிறது என்றும் அவர் எச்சரிக்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T05:02:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய அமெரிக்கா-சவுதி அரேபியா அணுசக்தி ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-saudi-deal-causing-concern-1784780039"></link>
            <id>https://news.lankasri.com/article/us-saudi-deal-causing-concern-1784780039</id>
            <summary type="text">அமெரிக்கத் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சவுதி அரேபியாவில் சிவில் அணுசக்தித் திட்டத்தை நிறுவுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் ஒன்றை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கத் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சவுதி அரேபியாவில் சிவில் அணுசக்தித் திட்டத்தை நிறுவுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் ஒன்றை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.</p><h2>விளைவுகளை ஏற்படுத்தும்</h2><p>
</p><p>குறித்த ஒப்பந்தமானது மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவின் அதிகார மையங்கள் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ள ஒரு நகர்வாகவே பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/005741cc-3f87-4f19-b8ac-31cb1d1f6a99/26-6a61961f2ea0a.webp' /></p><p>
</p><p>ஒப்பந்தத்தின் பெரும்பகுதி இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் சவுதி அரேபியா உள்நாட்டிலேயே யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனைக் கொண்டிருக்குமா என்பதும், அது அணு ஆயுதப் பெருக்கத்திற்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் குறித்த கவலைகளே நிலவுகின்றன. </p><p>அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவின் எரிசக்தித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே இந்த 30 ஆண்டு கால ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பொருளாதாரத் திட்டத்தின் கீழ், சவுதி அரேபியா சில மின்சார உற்பத்திக்கு அணுசக்தியைப் பயன்படுத்தவும், அதன் மூலம் ஏற்றுமதிக்கான எண்ணெய் விநியோகத்தை அதிகரித்து, எண்ணெய் விற்பனையை உயர்த்தவும் இலக்கு கொண்டுள்ளது. </p><p>இந்த ஒப்பந்தம் அந்நாட்டின் அணுசக்தி உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அமெரிக்க நிறுவனங்களை முக்கியப் பங்காற்றச் செய்வதோடு, சீனா மற்றும் ரஷ்யா போன்ற போட்டியாளர்கள் அங்கு காலூன்றுவதையும் தடுக்கும்.</p><p></p><p> </p><p>இந்த ஒப்பந்தம் பல பில்லியன் டொலர் மதிப்புடையதாகக் கருதப்படுகிறது; மேலும், இது பைடன் நிர்வாகத்தின் காலத்தில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின் தொடர்ச்சியாகும். </p><p>இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தை அமைப்பதற்கு வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது; எனினும், அத்தகைய நிலையம் அவசியமானது என்று அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இணைந்து மேற்கொள்ளும் ஆய்வு முடிவு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். </p><p>மட்டுமின்றி, அணுசக்தித் துறையைக் கொண்ட பல நாடுகள் யுரேனியத்தை உள்நாட்டிலேயே செறிவூட்டுவதில்லை; அதற்குப் பதிலாக, அணு உலைகளுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதையே அவை சார்ந்திருக்கின்றன.</p><h2>அணு ஆயுதத்தை உருவாக்கும்</h2><p> </p><p>ஆனால், இத்தகைய ஒப்பந்தம் சவுதி அரேபியாவை அணு ஆயுதத்தை உருவாக்கும் பாதையில் இட்டுச் செல்லக்கூடும் என்று அணு ஆயுதப் பரவல் தடுப்பு அமைப்புகள் பல ஆண்டுகளாக எச்சரித்து வந்துள்ளன. </p><p>மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலிடம் மட்டும் அணு ஆயுதங்கள் இருக்கும் நிலையில், தனது பிராந்தியப் போட்டியாளரான ஈரான் அணு ஆயுதத்தைப் பெற்றால், தானும் அணு ஆயுதத்தைப் பெற வேண்டியிருக்கும் என்று சவுதி முன்பு கூறியுள்ளது. </p><p>மேலும், இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதைக் கண்டுகொள்ளாத அமெரிக்கா, ஈரான் அணு ஆயுதங்களை அடைவதையோ அல்லது ஆயுதத் தரத்திற்குத் தேவையான அளவிற்கு யுரேனியத்தை செறிவூட்டுவதையோ தடுப்பதற்காகவே தற்போது ஒரு போரில் ஈடுபட்டு வருவதாக விளக்கமளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b9cbed-b61a-472a-856a-55fca5c6d0e1/26-6a61961e6fee4.webp' /></p><p> இந்த நிலையில், அணு ஆயுதப் பரவலுக்கான அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு ஒப்பந்தத்தையும் உலகின் எந்தவொரு நாட்டுடனும் அமெரிக்கா மேற்கொள்ளப்போவதில்லை என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ சவுதி ஒப்பந்தம் குறித்த கவலைகளை நிராகரித்துள்ளார்.&nbsp;</p><p>ஆனால், முந்தைய அணுசக்தி ஒப்பந்தங்களில் இருந்த கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இல்லை என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். </p><p>அமெரிக்கா ஐக்கிய அரபு அமீரகத்துடன் இதேபோன்ற ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டபோது, ​​அணுசக்தியை விரும்பும் நாடுகளுக்கான தங்கத் தரநிலை என்று அறியப்பட்ட ஒரு நடவடிக்கையாக, ஐக்கிய அரபு அமீரகம் செறிவூட்டலை நாடவோ அல்லது பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளைப் பதப்படுத்தவோ கூடாது என்று ஒப்புக்கொண்டது. சவுதி-அமெரிக்க ஒப்பந்தத்தில் இந்தத் தங்கத் தரநிலை இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T04:12:22+00:00</updated>
        </entry>
    </feed>
