<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-20T11:29:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு கடலை நோக்கி பாய்ந்த வட கொரிய ஏவுகணை: தென் கொரிய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-fires-projectile-to-east-sea-1787223455"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-fires-projectile-to-east-sea-1787223455</id>
            <summary type="text">ஜப்பான் கடலை நோக்கி வட கொரியா ஏவுகணைகளை ஏவி இருப்பது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியாவின் ஏவுகணை
ஜப்பானின் கடலை நோக்கி(கிழக்கு கடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் கடலை நோக்கி வட கொரியா ஏவுகணைகளை ஏவி இருப்பது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> வட கொரியாவின் ஏவுகணை</h2><p>
ஜப்பானின் கடலை நோக்கி(கிழக்கு கடல்) வியாழக்கிழமை அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை வட கொரியா ஏவி இருப்பதாக தென் கொரிய ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> ஏவுகணை பறக்கும் பாதை, அதன் தூரம் மற்றும் உயரம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.</p><p> அதேபோல் இந்த அடையாளம் தெரியாத ஏவுகணை குறித்து வட கொரிய அரசு ஊடகமும் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> இந்த ஏவுகணை நடவடிக்கையானது சமீபத்திய ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e54cbb-3587-47bc-98c0-6a8a896700e6/26-6a86dda16df3b.webp' /></p><p>கடந்த வாரம் அமெரிக்கா-தென் கொரியா நாடுகள் இணைந்து UFS கூட்டு ராணுவ பயிற்சியை முன்னெடுத்து இருந்தனர்.</p><p></p><p> இந்த பயிற்சி தொடங்குவதற்கு சற்று முன்னதாக வட கொரியாவின் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.</p><h2> டிரம்ப் பதில் நடவடிக்கை</h2><p>

வடகொரியாவின் ஏவுகணை ஏவுதலை தொடர்ந்து அமெரிக்க - தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சியின் அளவை குறைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.</p><p> மேலும் பெரிய அளவிலான ராணுவ பயிற்சிகள் தேவையற்ற விரோத போக்கை தூண்டுவதாக அவர் வாதிட்டார்.</p><p> வட கொரியாவின் இந்த திடீர் ஏவுகணை ஏவுதல் அச்சுறுத்தலாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் கூட்டு ராணுவ பயிற்சியின் ஏற்பாடுகள் ரத்து செய்ய முடியாத அளவு ஏற்கனவே முழுமையாக செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்து இருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:57:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல்லையில் கிருத்துவ மத போதகருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nellai-preacher-got-death-sentence-in-pocso-case-1787222132"></link>
            <id>https://news.lankasri.com/article/nellai-preacher-got-death-sentence-in-pocso-case-1787222132</id>
            <summary type="text">Preacher got deah sentence in nellai: தமிழக மாவட்டம் திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில், கிருத்துவ மத போதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Preacher got deah sentence in nellai: தமிழக மாவட்டம் திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில், கிருத்துவ மத போதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

திருநெல்வேலி மாவட்டம் இலந்தை குளம் பகுதியில் மத போதகர் ஆபிரகாமிற்கு போக்ஸோ வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. </p><h2>போக்ஸோ&nbsp;வழக்கு </h2><p>

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகேயுள்ள இலந்தை குளம் பகுதியில், நான்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 50 வயதான கிருத்துவ மத போதகர் ஆபிரகாம் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5963a1a6-c704-42e7-b54e-072da8e6a956/26-6a86d91c16801.webp' />&nbsp;</p><p></p><p>
அவர் மீது போக்சோ வழக்குப் பதியப்பட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
</p><p>
இந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி இவ்வழக்கில் தீர்ப்பை வாசித்தார். சிறுமிகளை வன்கொடுமை செய்த ஆபிரகாமிற்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.</p><p> 

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் - நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேஷிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesia-woman-gives-birth-in-torchlight-1787219911"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesia-woman-gives-birth-in-torchlight-1787219911</id>
            <summary type="text">Indonesia Woman Gives Birth in torchlight: இந்தோனேஷியாவில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்ணிற்கு பிரசவம் நடந்துள்ளது.

torchlight உதவியுடன்&amp;nbsp;பிரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indonesia Woman Gives Birth in torchlight: இந்தோனேஷியாவில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்ணிற்கு பிரசவம் நடந்துள்ளது.
</p><h2>
torchlight உதவியுடன்&nbsp;பிரசவம் </h2><p>இந்தோனேஷியாவில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்கள் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.</p><p> 

மின்சாரம் துண்டிக்கப்பட்ட சூழலில், ஒரு பெண் மருத்துவமனையில் torchlight உதவியுடன் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f21e14c2-ff96-4d18-a91c-e0549d4f57a2/26-6a86cfc9417f6.webp' /></p><h2>பாதுகாப்பாக பிறந்த குழந்தை</h2><p>நிலநடுக்கம் ஏற்பட்டதும் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மருத்துவமனைகளில் அவசர சேவைகள் பாதிக்கப்பட்டன. அந்த நேரத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். மின்சாரம் இல்லாததால், மருத்துவர்கள் torchlight-ஐ பயன்படுத்தி பிரசவத்தை மேற்கொண்டனர். குழந்தை பாதுகாப்பாக பிறந்தது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">As a 7.7-magnitude earthquake tore through eastern Indonesia, Maria Florida Nogo Kelen gave birth to her daughter. Doctors performed emergency surgery by flashlight, fearing a fatal seizure if they did not act <a href="https://t.co/3clqT2yZ5D">https://t.co/3clqT2yZ5D</a> <a href="https://t.co/7GMWysYawH">pic.twitter.com/7GMWysYawH</a></p>&mdash; Reuters (@Reuters) <a href="https://x.com/Reuters/status/2089411943149056060?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்த சம்பவம், இயற்கை பேரிடர்களின் போது மருத்துவ சேவைகள் எவ்வளவு சவாலான சூழலில் நடைபெறுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து, தாயும் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.
</p><p></p><p>நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அதிகாரிகள், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர உதவிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.</p><p>இச்சம்பவம், இயற்கை பேரிடர்களின் போது மனிதர்களின் தன்னம்பிக்கை, மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மற்றும் சமூகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு உண்மையான உதாரணமாக பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T09:55:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் 5 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்: குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்ட இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/israel-criminal-probe-into-killing-hind-rajab-1787219271"></link>
            <id>https://news.lankasri.com/article/israel-criminal-probe-into-killing-hind-rajab-1787219271</id>
            <summary type="text">Israel criminal probe into killing 5 years old hind rajab: காசா நகரில் 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவியல் விசாரணைக்கு இஸ்ரேலிய ராணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Israel criminal probe into killing 5 years old hind rajab: காசா நகரில் 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவியல் விசாரணைக்கு இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்ட இஸ்ரேலிய ராணுவம்</h2><p>கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காசாவில் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் 8 பேரின் மரணம் குறித்து இஸ்ரேலிய ராணுவம் முறையான குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.</p><p> பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்க ஆம்புலன்ஸ் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட தோல்விகளே இந்த விசாரணை தொடங்குவதற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.</p><p> &nbsp;5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் கொல்லப்பட்டது தொடர்பான இந்த விசாரணை ராணுவக் காவல்துறையின் குற்றவியல் விசாரணைப் பிரிவால் நடத்தப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">💔For over three hours, Hind has desperately pleaded with our teams for rescue from the occupation tanks surrounding her, enduring gunfire and the horror of being alone, trapped among the bodies of her relatives shot by the Israeli forces in front of her eyes. The PRCS heroes… <a href="https://t.co/VT00WJaP1B">pic.twitter.com/VT00WJaP1B</a></p>&mdash; PRCS (@PalestineRCS) <a href="https://x.com/PalestineRCS/status/1753890202467160470?ref_src=twsrc%5Etfw">February 3, 2024</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><h2>2024ம் ஆண்டு நடந்த சம்பவம்</h2><p>கடுமையான மோதல்களுக்கு மத்தியில் காசா நகரின் டெல் அல்-ஹவா(Tel al Hawa) பகுதியில் இருந்து 5 வயது சிறுமி ஹிந்த் மற்றும் ஹமதா குடும்பத்தினர் 6 பேர் தப்பியோட முயன்றனர்.</p><p> அப்போது அவர்கள் பயணித்த வாகனம் மீது இஸ்ரேலிய ராணுவம் நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட ஆடியோவில் சிறுமி ஹிந்த்தின் கடைசி நேர பரிதவிப்புகள் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63d2b447-e5cc-4d1e-a08a-fae72a774795/26-6a86cd4906c3a.webp' /></p><p> ஹிந்தை காப்பாற்ற யூசப் சீனோ மற்றும் அகமது மத்ஹுன் ஆகிய 2 அவசர ஊர்திப் பணியாளர்கள்&nbsp; அனுப்பப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்தை நெருங்கிய போது பலத்த துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. பின்னர் அவர்களுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது.</p><p> கிட்டத்தட்ட 12 நாட்களுக்கு பிறகு ஹிந்த் மற்றும் அவரது 6 உறவினர்கள் மற்றும் 2 மருத்துவ பணியாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:48:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலுக்கடியில் கிடக்கும் வெடிகுண்டுகளால் புதிய பிரச்சினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-sea-munitions-contaminating-marine-life-1787218890"></link>
            <id>https://news.lankasri.com/article/german-sea-munitions-contaminating-marine-life-1787218890</id>
            <summary type="text">Scientists warn that toxic chemicals from military munitions are contaminating German marine life: ஜேர்மன் கடல் பகுதியில் கிடக்கும் துருப்பிடித்த வெடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Scientists warn that toxic chemicals from military munitions are contaminating German marine life: ஜேர்மன் கடல் பகுதியில் கிடக்கும் துருப்பிடித்த வெடிகுண்டுகள் கடலை மாசுபடுத்துவதாக எச்சரிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
</p><p>

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின்போது வீசப்பட்ட குண்டுகள், 1945ஆம் ஆண்டுக்குப் பிறகு கடலில் வீசப்பட்ட குண்டுகள் என, ஜேர்மனியை ஒட்டியுள்ள வட கடல் மற்றும் பால்டிக் கடல்களுக்கடியில் கிடக்கும் வெடிகுண்டுகள் துருப்பிடிக்கத் துவங்கியுள்ளன.
</p><h3>
கடலுக்கடியில் கிடக்கும் வெடிகுண்டுகளால் புதிய பிரச்சினை
</h3><p>
சுமார் 1.6 மில்லியன் மெட்ரிக் டன் வெடிகுண்டுகள் கடலுக்கடியில் கிடக்கும் நிலையில், அவற்றால் புதியதொரு பிரச்சினை உருவாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb142664-5783-4b82-923f-a1d633f7d637/26-6a86cbcbc3852.webp' /></p><p>

ஆம், அந்த வெடிகுண்டுகள் துருப்பிடிக்கத் துவங்கியுள்ளதால், அவற்றிலிருந்து வெளியேறும் ரசாயனங்களால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து என்கிறார் Kiel பல்கலை நச்சியல் துறை நிபுணரான Edmund Maser என்பவர்.
</p><p>
இந்த ரசாயனங்கள், நச்சுத்தன்மை கொண்டவை, புற்றுநோயை உருவாக்கக்கூடியவை, அதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்து என்கிறார் அவர்.&nbsp;</p><p></p><p>
விடயம் என்னவென்றால், வெடிகுண்டுகளில் வெடிப்பொருளாக பயன்படுத்தப்படும் TNT என்னும் ரசாயனம், மீன்கள் உடலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaa095bb-da18-4b07-99f2-42539a9a623b/26-6a86cbcc76b21.webp' /></p><p>
என்றாலும், இதுவரை அந்த ரசாயனம், மீன்கள் உடலில் சிறிய அளவிலேயே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மீன்களின் ஆரோக்கியத்தை வெளிப்படையாக பாதிக்கவில்லை.
</p><p>
ஆனால், ஆராய்ச்சிகளில், மீன்களின் கல்லீரலில் கட்டிகள் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இந்த ரசாயனங்கள் மீன்களிலும் சிப்பிகளிலும் மட்டுமல்ல, திமிங்கலங்கள் உடலிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதாவது, இந்த ரசாயனங்கள், கடல் உணவுச் சங்கிலியின் உச்சத்தில் உள்ள விலங்குகள் வரை சென்றடைந்துள்ளது என்பதுதான் சிந்திக்கவைத்துள்ள விடயம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:43:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் வீடொன்றில் பயங்கர தீ: குழந்தை பலி.. உயிர்தப்பிய 80 வயது மூதாட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/child-died-in-house-fire-of-lake-macquarie-nsw-1787218712"></link>
            <id>https://news.lankasri.com/article/child-died-in-house-fire-of-lake-macquarie-nsw-1787218712</id>
            <summary type="text">Child died in house fire of lake macquarie nsw: அவுஸ்திரேலியாவில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தை உயிரிழந்தது.

அவுஸ்திரேலியாவின் நியூ ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Child died in house fire of lake macquarie nsw: அவுஸ்திரேலியாவில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தை உயிரிழந்தது.
</p><p>
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தை பலியாக, மூதாட்டி மற்றும் ஒரு குழந்தையும் உயிர்தப்பினர். </p><h2>அவசர சேவைகளுக்கு அழைப்பு </h2><p>

அவுஸ்திரேலிய நாட்டில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மத்திய கடற்கரையில் லேக் மக்குவாரியில் இருந்து அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4521130-4dfe-408b-8c04-2c074640b9fc/26-6a86cc0442e86.webp' />&nbsp;</p><p></p><p>
அங்கிருந்த வீடொன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்க, உள்ளே இருந்தவர்களை மீட்புப்படையினர் காப்பாற்றினர்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக வீட்டினுள் குழந்தை ஒன்று இறந்து கிடந்துள்ளது.&nbsp;</p><h2>உயிருடன் மீட்பு </h2><p>மற்றொரு குழந்தையும், 80 வயது மூதாட்டியும் உயிருடன் மீட்கப்பட்டனர். காப்பாற்றப்பட்ட 5 வயது குழந்தைக்கு புகையை சுவாசித்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டது.</p><p>ஆனால், அந்த மூதாட்டி தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். </p><p>

இதற்கிடையில், தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற ஒரு பதின்வயது சிறுவனும், காலில் ஏற்பட்ட கடுமையான வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d24839b8-b1d4-483c-985a-ebc5d06c8db3/26-6a86cc037dc31.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Masala Idiyappam எளிதாக செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-to-prepare-masala-idiyapam-healthy-recepies-1787141789"></link>
            <id>https://news.lankasri.com/article/how-to-prepare-masala-idiyapam-healthy-recepies-1787141789</id>
            <summary type="text">Masala Idiyappam: தற்போதைய காலகட்டங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவையான உணவுகளை சாப்பிட விரும்புகிறார்கள். அப்படியாக, வீடுகளில் சுவையாக எளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Masala Idiyappam: தற்போதைய காலகட்டங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவையான உணவுகளை சாப்பிட விரும்புகிறார்கள். அப்படியாக, வீடுகளில் சுவையாக எளிதாக மற்றும் உடனடியாக சமைக்க கூடிய மசாலா இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.</p><p>&nbsp;</p><p> </p><h3>
தேவையான பொருட்கள்:</h3><p>
உதிர்த்த இடியாப்பம் - 1 கப் </p><p>தக்காளி -1
</p><p>பெரிய வெங்காயம்-1
</p><p>இஞ்சி- சிறுதுண்டு
</p><p>பூண்டு- 2 </p><p>பல்
பச்சை மிமிளகாய்-2
</p><p>தேங்காய்- சிறுதுண்டு
</p><p>தாளிக்க - பிரிஞ்சி இலை, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை
</p><p>எண்ணெய்- தேவையான அளவு
</p><p>உப்பு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca01ca81-5447-4874-854d-205c0ab83ec6/26-6a859e9f5b1b8.webp' /></p><p></p><h3>செய்முறை:
</h3><p> இந்த மசாலா இடியாப்பம் செய்வதற்கு முதலில் தேங்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை லேசாக நீர் தெளித்து மிருதுவாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் தக்காளியை மெலிதாக நறுக்கி கடாயில் நான்கு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை சோம்பு, பட்டை போட்டு வெடித்தவுடன் கருவேப்பிலையை போட வேண்டும். </p><p>பிறகு அரைத்த விழுதுவை போட்டு வாசம் போகும் வரை இளந்தீயில் கிளற வேண்டும். நன்கு வெந்தவுடன் வெங்காயம் தக்காளி சேர்த்து அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி கொள்ள வேண்டும். விழுது போல் எல்லாம் சேர்ந்து வெந்தபின் இடியாப்பத்தை கொட்டி நெய் சேர்த்து கிளற வேண்டும்.</p><p> கடைசியாக எலுமிச்சை பழத்தை பிழிந்து கிளறி நாம் எல்லோருக்கும் சாப்பிட பகிரலாம். இதனுடன் வெங்காய தயிர் பச்சடி சாப்பிட்டால் பிரியாணி போல் இருக்கும். விரும்பினால் கேரட் ,பட்டாணி, காலிஃப்ளவரை சிறிது துண்டுகளாக உப்பு சேர்த்து குலையாமல் வேக வைத்து கலந்து கொள்ளலாம்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T09:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ், ஈரான் இடையே மும்முரமாகும் தூதரக மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-to-expell-2-iran-diplomats-1787218252"></link>
            <id>https://news.lankasri.com/article/france-to-expell-2-iran-diplomats-1787218252</id>
            <summary type="text">France to expel two Iranian diplomats over alleged assault on French envoys: பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>France to expel two Iranian diplomats over alleged assault on French envoys: பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில், ஈரானிய தூதரக அதிகாரிகள் இருவரை பிரான்ஸ் வெளியேற்ற உள்ளது.
</p><p>

ஈரானிய தூதரக அதிகாரிகள் இருவரை பிரான்ஸ் வெளியேற்ற உள்ளதாக பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><h3>
ஈரானிய தூதரக அதிகாரிகள் இருவரை வெளியேற்றும் பிரான்ஸ்
</h3><p>
பிரான்ஸ், ஈரான் இடையே தூதரக ரீதியிலான மோதல் மும்முரமாகிவருகிறது.
</p><p>
ஜூலை மாதம் 19ஆம் திகதி, ஈரான் அதிகாரிகள், பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் இருவரை கைது செய்து காவலில் அடைத்து விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ced5a30a-ad57-4027-bd95-b373526877c5/26-6a86c94dbcbdd.webp' /></p><p>
அப்போது, அவர்களில் ஒருவரை ஈரான் அதிகாரிகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்நிலையில், ஈரான் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவரை பிரான்ஸ் வெளியேற்ற இருப்பதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
அவர் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பிரான்ஸ், ஈரான் நாட்டு மக்கள், கலைஞர்கள், அறிவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் நிற்பதாகவும், அதன் காரணமாகவே ஈரான் அதிகாரிகள் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளை தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஈரானின் இந்த நடவடிக்கை சகிக்க இயலாதது என்றும், அதற்கு தக்க பின்விளைவுகள் இல்லாமல் போகாது என்றும் ஏற்கனவே கூறியிருந்தேன் என்று குறிப்பிட்டுள்ள ஜீன் நோயல் பாரட், அது செயல்படுத்தப்பட்டுவிட்டது, ஈரான் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவரை, ஈரான் அரசு, விரும்பத்தகாத நபர்களாக (persona-non-grata) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:32:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.25.25 லட்சத்தில் அறிமுகமான Mahindra XEV 9S 6-Seater]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mahindra-xev-9s-6-seater-launched-at-rs-25-25l-1787218437"></link>
            <id>https://news.lankasri.com/article/mahindra-xev-9s-6-seater-launched-at-rs-25-25l-1787218437</id>
            <summary type="text">Mahindra XEV 9S 6-Seater: மஹிந்திரா நிறுவனம் தனது புதிய மின்சார SUV XEV 9S-க்கு 6 சீட் (Captain Seats) ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Mahindra XEV 9S 6-Seater:</b> மஹிந்திரா நிறுவனம் தனது புதிய மின்சார SUV XEV 9S-க்கு 6 சீட் (Captain Seats) ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. </p><p>இதன் ஆரம்ப விலை ரூ.25.25 லட்சம் (ex-showroom).
</p><p>
இந்த 6 சீட் ஆப்ஷன், Pack Two Above, Pack Three, மற்றும் Pack Three Above எனும் வேரியண்ட்களில் கிடைக்கிறது. 7 சீட் ஆப்ஷனை விட சுமார் ரூ.25,000 அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad9fd9a-ac26-46bb-aa63-886c58e98f7f/26-6a86ca0742662.webp' /></p><h2>புதிய அம்சங்கள்:</h2><p>

Captain seats தனித்தனி armrest-களுடன் வருகிறது.
</p><p>
மூன்றாவது வரிசை (third row) செல்லும் வசதி எளிதாகும்.</p><p>

கூடுதல் legroom மற்றும் வசதியான இருக்கை.</p><p>

Rear AC vents மற்றும் dual USB charging ports தொடர்ந்து வழங்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c4923d1-29bf-474b-a48f-765b1df972c3/26-6a86ca080618f.webp' /></p><h2>
விலை விவரங்கள் (Ex-showroom):</h2><p>Pack Two Above 70kWh – ரூ.25.25 லட்சம்
</p><p>
Pack Two Above 79kWh – ரூ.26.15 லட்சம்
</p><p>
Pack Three 70kWh – ரூ.28.05 லட்சம்</p><p>

Pack Three Above 79kWh – ரூ.30.15 லட்சம்</p><p></p><p>
</p><h2>
பவர் டிரெயின்:
</h2><p>
70kWh பேட்டரி – அதிகபட்ச ரேஞ்ச் 600km
</p><p>
79kWh பேட்டரி – அதிகபட்ச ரேஞ்ச் 679km</p><p>

380Nm டார்க், 245hp முதல் 286hp வரை பவர் output.
</p><p>
இந்த 6 சீட் ஆப்ஷன், Kia Carens Clavis EV-க்கு போட்டியாக வருகிறது. SUV-களில் luxury மற்றும் comfort-ஐ விரும்பும் குடும்பங்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-20T09:31:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் இருப்பது ஏன்? பின்னணியில் உள்ள காரணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/reason-for-stones-filled-in-railway-tracks-1787217614"></link>
            <id>https://news.lankasri.com/article/reason-for-stones-filled-in-railway-tracks-1787217614</id>
            <summary type="text">reason for stones in railway track: ரயில் தண்டவாளத்தில் ஏன் ஜல்லி கற்கள் இருக்கிறது என்பதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>reason for stones in railway track: ரயில் தண்டவாளத்தில் ஏன் ஜல்லி கற்கள் இருக்கிறது என்பதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
</p><h3>
ரயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் இருப்பது ஏன்?</h3><p>

ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது அதன் இடையே மற்றும் வெளியே ஜல்லி கற்கள் இருப்பதை கவனித்திருப்பீர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aedcd2b-d20e-43a8-834a-99a136ac647c/26-6a86c6d12b3b7.webp' /></p><p>

இந்த கற்கள் வெறும் பள்ளங்களை நிரப்புவதற்காகவோ அல்லது அலங்காரத்திற்காகவோ போடப்படவில்லை. மாறாக இதுவே ரயில் இயங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.</p><p> 

தண்டவாளத்தில் கொட்டப்பட்டுள்ள இந்த ஜல்லி கற்கள்(Ballast) என்று அழைக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p>

இந்த கற்கள் இல்லாமல் இருந்தால் ஆயிரக்கணக்கான டன் எடை கொண்ட ரயில் தண்டவாளத்தில் செல்லும் போது, தண்டவாளம் பூமிக்குள் புதைந்து விடும்.</p><p> 

இந்த கற்கள், ரயில் எடையை தாங்கி அதனை மற்ற கற்களுக்கும் அந்த எடையை பரப்பி ரயில் இயங்க உதவுகிறது. 

மேலும் இந்த கற்கள் ரயிலின் அதிர்வை உறிஞ்சி, தண்டவாளம் விலகி செல்வதை தடுக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d808946b-155b-4110-a970-a483d9a2262c/26-6a86c6d076977.webp' /></p><p>
இதே போல் மழைக்காலங்களில் தண்டவாளங்களில் நீர் தேங்குவதை தடுக்க இந்த கற்கள் உதவுகிறது. கற்களுக்கு இடையேயான சிறிய இடைவெளி மூலம், மழைநீர் எளிதாக வடிகிறது. </p><p>

இந்த கற்கள், தண்டவாளத்தைச் சேதப்படுத்தக்கூடிய புற்களோ செடிகளோ வளராமல் தடுக்க உதவுகிறது. 

சுமார் 12 முதல் 16 இன்ச் அளவுள்ள சீரற்ற வடிவத்தில் உள்ள கற்கள் பயன்படுத்தப்படுகிறது. </p><p>

கற்கள் காலப்போக்கில் தேய்ந்து, உடையக்கூடியதாக மாறி தாங்குதிறனை இழக்கும். இதனால் பராமரிப்பின் போது, ​​பழைய கற்கள் சுத்தம் செய்யப்பட்டு புதிய கற்கள் பதிக்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:20:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மாணவர்கள்: பள்ளி முதல்வரை குத்திக் கொன்ற கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nalgonda-school-murder-case-2-student-arrested-1787209468"></link>
            <id>https://news.lankasri.com/article/nalgonda-school-murder-case-2-student-arrested-1787209468</id>
            <summary type="text"> Nalgonda school principal murder case 2 student arrested: தெலுங்கானாவில் பணத்திற்காக பள்ளி முதல்வரை மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p> Nalgonda school principal murder case 2 student arrested: தெலுங்கானாவில் பணத்திற்காக பள்ளி முதல்வரை மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பள்ளி முதல்வரை குத்தி கொலை செய்த மாணவர்கள்</h2><p>தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தின் கொடமள்ளேபள்ளி பகுதியில் அமைந்துள்ள நாகார்ஜுனா பப்ளிக் பள்ளியின் முதல்வரான கள்ளூ ரூபா ரெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இந்த சம்பவத்தில் இரண்டு பள்ளி மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் பணம் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த குற்றத்தை செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3c30058-d702-446a-b1fd-7ee17abdcd70/26-6a86a6fdd4151.webp' /></p><p></p><h2> நடந்தது என்ன?</h2><p>
கடந்த ஆகஸ்ட் 12ம் திகதி ரூபா ரெட்டி அவரது இல்லத்தில் 27 முறை கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்தார்.</p><p>முன்னதாக ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர் ரூபா ரெட்டியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது பதில் கிடைக்கவில்லை என்பதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0e68a74-ee2c-4fd2-b814-bebcc4344291/26-6a86a6fea020c.webp' /></p><p> இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரூபா ரெட்டி உயிரிழந்து கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> ரூபா ரெட்டி அவரது அத்தையுடன் கடைசியாக பேசிக் கொண்டிருந்த போது பாபு என்ற பெயரை உச்சரித்துள்ளார்.</p><p>இதனை முதன்மையாக கொண்டு விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார் ரூபா ரெட்டி பணியாற்றி வந்த பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.</p><p> அவர்கள் ரூபா ரெட்டியின் வீட்டுக்குள் நுழைந்து 2.50 லட்சத்தை திருடி விட்டு தப்பிக்க முயன்ற போது ரூபா ரெட்டி அவர்களை அடையாளம் கண்டு கொண்டதால் அந்த மாணவர் ரூபா ரெட்டியை 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண் மாரடைப்பால் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-died-of-heart-attack-in-canada-1787214395"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-died-of-heart-attack-in-canada-1787214395</id>
            <summary type="text">An Indian woman died of a heart attack in Canada: கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.


இந்தியாவின் பஞ்சாபைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>An Indian woman died of a heart attack in Canada: கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
</p><p>

இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்த நிலையில், அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
</p><h3>
கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்த இளம்பெண்
</h3><p>
அன்மோல்தீப் கௌர் (24), நான்கு ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cab5f88-bf7b-4842-8041-008c23b9e37d/26-6a86ba3c9909e.webp' /></p><p>
மனித்தோபா மாகாணத்தின் வின்னிபெக் நகரில் கல்வி கற்று முடித்து, நிரந்தர குடியிருப்பு அனுமதிக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தார் கௌர்.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், செவ்வாயன்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட கௌர், மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
</p><p>
கௌர் உயிரிழந்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T08:26:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் உளவு பார்க்கும் மொசாட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-mossad-spying-you-by-smartphone-1787213424"></link>
            <id>https://news.lankasri.com/article/how-mossad-spying-you-by-smartphone-1787213424</id>
            <summary type="text">ஸ்மார்ட்போன் மூலம் மொசாட் உளவு பார்க்கும் சாத்தியம் குறித்து IBC Tamil ன் நிராஜ் டேவிட் விரிவாக பேசியுள்ளார்.

போன் மூலம் உளவு பார்க்கும் மொசாட் 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்மார்ட்போன் மூலம் மொசாட் உளவு பார்க்கும் சாத்தியம் குறித்து IBC Tamil ன் நிராஜ் டேவிட் விரிவாக பேசியுள்ளார்.
</p><h3>
போன் மூலம் உளவு பார்க்கும் மொசாட் </h3><p>

இன்று உலகில் ஸ்மார்ட்போன் இல்லாத மனிதர்களை பார்ப்பது அரிதாக உள்ளது. ஸ்மார்ட் போனில் பல்வேறு வசதிகள் இருந்தாலும், போன் ஹேக் செய்யப்படுவதற்கான அபாயங்களும் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a135456-bec9-407c-9e0f-05e13c65b150/26-6a86b6718b344.webp' /></p><p>

ஐபோன் அதிகளவிலான பாதுகாப்பு அம்சங்கள் உடைய போனாக கருதப்பட்டாலும் அதனையும் ஹேக் செய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.</p><p> 

போனை ஹேக் செய்து கேமரா மூலம் நீங்கள் இருக்கும் இடத்தை எங்கோ ஒரு இடத்திலிருந்து கண்காணிக்க முடியும். நீங்கள் ரகசியமாக பேசுவதை ஒட்டுக்கேட்க முடியும். </p><p>

சில மாதங்களுக்கு முன்னர் ஈரான் உச்சத்தலைவர் காமேனி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கொல்ல இஸ்ரேலின் மொசாட் அமைப்பு அங்கிருந்த பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் அவரது பாதுகாப்பு அலுவலர்களின் போனை ஹேக் செய்ததன் மூலம் பெறப்பட்ட தகவல்களை வைத்தே அந்த தாக்குதலை மேற்கொண்டது. </p><p>

இதே போல், ஹிஸ்புல்லா அமைப்பில் உள்ளவர்கள் யாரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண்டாம், ஸ்மார்ட் போன் இருந்தால் அதனை மண்ணில் புதைத்து விடுங்கள் என அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கட்டளை பிறப்பித்தார். 

அது உங்களை உளவு பார்க்கும் ஒற்றன் என தெரிவித்திருந்தார்.</p><p> மேலும், இதனை தெரிவித்த 7 மாதங்களில் ஹிஸ்புல்லாகளிடம் இருந்த பேஜர் வெடித்து சிதறியது. </p><p>

இதே போல், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மெமரி சிப்களை ஆப்பிள் போன்களில் பயன்படுத்த கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. </p><p>

இது குறித்த பல்வேறு தகவல்களை வழங்கியுள்ள IBC Tamil ன் நிராஜ் டேவிட் தான் இஸ்ரேல் சென்ற போது, அங்கு ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர் கூறிய கருத்துகளையும் பகிர்ந்துள்ளார். </p><p>

மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNqduegvc0Y" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T08:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கை - ட்ரம்ப் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trumps-harshest-economic-war-on-iran-1787212624"></link>
            <id>https://news.lankasri.com/article/trumps-harshest-economic-war-on-iran-1787212624</id>
            <summary type="text">Trump announces economic operation against Iran: ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.


கடுமையான பொருளாதார ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump announces economic operation against Iran: ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
</p><h2>

கடுமையான பொருளாதார நடவடிக்கை</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
</p><p>
“ஈரான் ஒப்பந்த வாய்ப்பை பயன்படுத்தத் தவறிவிட்டது. இனி இது வரை இல்லாத அளவிற்கு பொருளாதார போர் மற்றும் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ளும்,” என்று அவர் Truth Social-ல் பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f2a17a3-2521-4109-81f4-96fde5c7cb51/26-6a86b351ce76f.webp' /></p><h2>ஈரானை தனிமைப்படுத்த&nbsp;திட்டம்</h2><p>ட்ரம்ப், ஈரானுடன் வணிகம் செய்யும் எந்த நாட்டுக்கும் கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
</p><p>
“எண்ணெய் வர்த்தகம், பணப் பரிமாற்றம், கப்பல் போக்குவரத்து, வணிக நிறுவனங்கள், இவை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். ஈரானை தனிமைப்படுத்த அமெரிக்க கூட்டாளிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>அமெரிக்காவின் திசை திருப்பும் முயற்சி</h2><p>ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அராக்சி, இந்த நடவடிக்கையை “அமெரிக்காவின் சொந்த நெருக்கடியிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி” எனக் கூறியுள்ளார்.

மேலும், “அமெரிக்காவின் இந்த பொருளாதார பயங்கரவாதம் உலக பொருளாதாரத்தையும் இறையாண்மையையும் அச்சுறுத்துகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
</p><p>
இதனிடையே ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் ஈரானுடன் உள்ள அனைத்து நிதி தொடர்புகளையும் நிறுத்தியுள்ளதாகவும் UAE தெரிவித்துள்ளது. ஆனால், ஈரான் இதனை மறுத்து, “தவறான குற்றச்சாட்டு” என தெரிவித்துள்ளது.</p><p></p><p>ட்ரம்ப் நடவடிக்கைகள் சீனா, ஈராக், துருக்கி போன்ற ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளையும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், சீன அரசு தனது நிறுவனங்களுக்கு அமெரிக்க தடைகளை பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதால், அமெரிக்காவிற்கு முழுமையான கட்டுப்பாடு சாத்தியமில்லை எனவும் கூறப்படுகிறது.
</p><p>
ட்ரம்பின் இந்த அறிவிப்பு, ஐந்து மாதங்களாக நீடிக்கும் அமெரிக்கா-ஈரான் மோதலில் புதிய கட்டத்தை உருவாக்கியுள்ளது. உலக பொருளாதாரத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T07:54:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உசைன் போல்ட்டின் வேகத்தை மிஞ்சிய சீனாவின் புதிய “சூப்பர்மேன்” ரோபோ: வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-s-unitree-superman-humanoid-robot-1787211180"></link>
            <id>https://news.lankasri.com/article/china-s-unitree-superman-humanoid-robot-1787211180</id>
            <summary type="text">China’s unitree superman Humanoid robot surpasses Usain Bolt top speed: உலக புகழ்பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட்டின் வேகத்தை சீனாவின் “சூப்பர்மேன் ரோபோ”...</summary>
            <content type="html"><![CDATA[<p>China’s unitree superman Humanoid robot surpasses Usain Bolt top speed: உலக புகழ்பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட்டின் வேகத்தை சீனாவின் “சூப்பர்மேன் ரோபோ” மிஞ்சியுள்ளது.</p><h2> சீனாவின் புதிய “சூப்பர்மேன்” ரோபோ</h2><p>
சீனாவின் ரோபாட்டிக்ஸ் நிறுவனமான யூனிட்ரீ(Unitree), சூப்பர்மேன்(Superman) என்ற புதிய மனித ரோபோவை அறிமுகப்படுத்தி ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.</p><p> கடந்த திங்கட்கிழமை இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோவில், 0.85 மீட்டர் நீளமுள்ள கால்களை கொண்ட இந்த “சூப்பர்மேன்” ரோபோ வினாடிக்கு 45.6 கி.மீ வேகத்தில் ஓடவும், சுமார் 2 மீட்டர் தூரம் வரை தாவி குதிக்கவும் செய்து அசத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/661f696a-2014-4690-9c71-2d7d6da2e1dd/26-6a86adadc3e5c.webp' /></p><p> வினாடிக்கு 45.6 கிலோ.மீ வேகத்தில் ஓடும் இந்த ரோபோ ஒலிம்பிக்கில் பலமுறை தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட்டின் வேகத்தை இது மிஞ்சியுள்ளது.</p><p></p><p> இந்த சூப்பர்மேன் ரோபோ வெறும் 3 மாதங்களில் வடிவமைக்கப்பட்ட நிலையில், வரும் நாட்களில் இதன் திறன் இன்னும் மேம்படுத்தப்படும் என்று Unitree நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Chinese humanoid robot named “Superman”, made by Unitree Robotics, surpassed Usain Bolt’s world record (12.42 meters/second) by running at 12.66 m/s (roughly 28.3 miles/h) <a href="https://t.co/xobXzUPDI5">pic.twitter.com/xobXzUPDI5</a></p>&mdash; Massimo (@Rainmaker1973) <a href="https://x.com/Rainmaker1973/status/2089727354302009551?ref_src=twsrc%5Etfw">August 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இந்த புள்ளிவிவரங்கள் ஆச்சரியமாக இருந்தாலும் இவை சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் உசைன் போல்ட்டின் வேகம் போட்டிகளின் போது பதிவு செய்யப்பட்டவை என்றும், ஆனால் இந்த ரோபோவின் வேகம் யூனிட்ரீ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது பெறப்பட்டது என்று விவாதம் ஆகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T07:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை ஹெலிகொப்டருடன் நடுவானில் மோதிய சிறிய விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/helicopter-and-plane-collided-in-pennsylvania-1787211078"></link>
            <id>https://news.lankasri.com/article/helicopter-and-plane-collided-in-pennsylvania-1787211078</id>
            <summary type="text">Helicopter and plane collided in pennsylvania: அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று, காவல்துறை ஹெலிகொப்டருடன் நடுவானில் மோதியது.

அமெரிக்காவின் பென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Helicopter and plane collided in pennsylvania: அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று, காவல்துறை ஹெலிகொப்டருடன் நடுவானில் மோதியது.
</p><p>
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் மாநில காவல்துறை ஹெலிகொப்டருடன் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. </p><h2>ஹெலிகொப்டர், சிறிய ரக விமானம் மோதல் </h2><p>



அமெரிக்காவில் கார்லைல் விமான நிலையம் அருகே, செஸ்னா 150 ரக விமானமும், பெல் 407 ஹெலிகொப்டரும் நடுவானில் மோதி விபத்திற்குள்ளாகின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2c79a78-602d-4d01-97e5-4e7f03756b9d/26-6a86add88239b.webp' />&nbsp;</p><p></p><p>
இதில் ஹெலிகொப்டர் மாநில காவல்துறையுடையது என்றும், அதில் இருவர் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. 

அதே சமயம் விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. </p><p>

என்றாலும், இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை; விபத்திற்கான காரணமும் இன்னும் தெரிய வரவில்லை.</p><p> 

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் FAA ஆகியவை சம்பவம் குறித்து விசாரணை நடத்த உள்ளன.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T07:31:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்தியர் ஒருவர் எதிர்கொண்ட இனவெறுப்பு சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-face-racist-tirade-in-canada-1787209289"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-face-racist-tirade-in-canada-1787209289</id>
            <summary type="text">An Indian man was targeted in a racist tirade in Halifax: கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் இந்தியர் ஒருவர் இனவெறுப்புச் சம்பவம் ஒன்றை எதிர்கொண்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>An Indian man was targeted in a racist tirade in Halifax: கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் இந்தியர் ஒருவர் இனவெறுப்புச் சம்பவம் ஒன்றை எதிர்கொண்டுள்ளார்.
</p><p>

கனடாவில் வாழ்ந்துவரும் இந்தியர் ஒருவர் இனவெறுப்புச் சம்பவம் ஒன்றை எதிர்கொண்ட நிலையில், முதன்முறையாக தனக்கு அச்சம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
</p><h3>
இந்தியர் எதிர்கொண்ட இனவெறுப்பு சம்பவம்
</h3><p>
கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் வாழ்ந்துவரும் ஷாலு ஷாஜன் என்னும் இந்தியர், கடைக்குச் செல்வதற்காக தனது காரை சாலையோரமாக நிறுத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25895c1d-8bc8-4ef0-acc7-e93f4d5a3ff8/26-6a86a64b13bac.webp' /></p><p>

அப்போது அவ்வழியே வந்த கனேடியர் ஒருவர், தன் கையில் வைத்திருந்த bagpipes என்னும் கருவியைக் கொண்டு ஷாஜனின் கார் கண்ணாடியில் இடித்துள்ளார்.</p><p>

காரிலிருந்து இறங்கிய ஷாஜன் என் கார் கண்ணாடியில் இடித்துவிட்டீர்கள் என அந்த நபரிடம் கூற, அந்த நபர் திரும்பிவந்து வேண்டுமென்றே காரின் பின்பக்கத்தில் அந்தக் அக்கருவியைக் கொண்டு ஓங்கி அடித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, ஷாஜனை இனரீதியாக விமர்சிக்கத் துவங்கிய அந்த நபர், உன் நாட்டுக்குத் திரும்பிப் போ என சத்தமிட்டுள்ளார்.
</p><p>
அந்த நபர் தன் மீது இனவெறுப்புக் காட்டுகிறார் என்பது ஷாஜனுக்குத் தெளிவான நிலையில், அவர் நடந்துகொண்ட விதம் கைகலப்பில் முடிந்துவிடுமோ என தான் அஞ்சியதாக தெரிவிக்கிறார் ஷாஜன்.</p><p>

பின்னர் அந்த நபரை தான் புகைப்படம் எடுத்ததுடன், பொலிசிலும் புகாரளித்துள்ளதாக தெரிவிக்கிறார் ஷாஜன்.
</p><p>
கனடாவைப் பொருத்தவரை, தெற்காசியர்களுக்கு எதிரான இனவெறுப்பு சம்பவங்கள் அதிகரித்துவருவதாக கனடா புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
விடயம் என்னவென்றால், தான் இதற்கு முன்பும் இதேபோல இனவெறுப்பை எதிர்கொண்டதுண்டு. </p><p>ஆனால், தான் தாக்கப்படுவேனோ என பயந்தது இதுதான் முதல் முறை என்கிறார் ஷாஜன்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T07:01:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் உருகுவதால் பயங்கர விளைவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/melting-glaciers-in-the-alps-to-affect-swiss-1787208268"></link>
            <id>https://news.lankasri.com/article/melting-glaciers-in-the-alps-to-affect-swiss-1787208268</id>
            <summary type="text">Consequences of melting glaciers in the Alps: ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் உருகுவதால் மோசமான விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


கடந்த சில ஆண்டுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Consequences of melting glaciers in the Alps: ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் உருகுவதால் மோசமான விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
</p><p>

கடந்த சில ஆண்டுகளாகவே, ஆல்ப்ஸ் மலையில் போதுமான பனி இல்லாததால் பல ரிசார்ட்கள் சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் நஷ்டத்தை எதிர்கொண்டுவருகின்றன.</p><p>

மலையில் பனி உருகுவதால் ஏற்படும் பிளவுகள், மலையேற்றத்துக்குச் செல்வோருக்கு அபாயத்தை ஏற்படுத்திவருகின்றன.
</p><p>
இந்நிலையில், உருகும் பனிப்பாறைகளால் சுவிஸ் கிராமம் ஒன்றிற்கு எதிர்பாராத அபாயம் ஒன்று உருவாகியுள்ளது.
</p><h3>
சுவிஸ் கிராமம் ஒன்றிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
</h3><p>
2025ஆம் ஆண்டு மே மாதம், மலையிலிருந்து உருண்டுவந்த பாறைகளும் பனியும் Blatten என்னும் சுவிஸ் கிராமம் ஒன்றை கிட்டத்தட்ட மூழ்கடித்த சம்பவம் நினைவிருக்கலாம்.</p><p>

அந்த சம்பவம் நிகழ்வதற்கு 10 நாட்கள் முன்பே அக்கிராம மக்களை அதிகாரிகள் வெளியேற்றியிருந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/968529d7-a915-485c-9886-f1b81fa4eab7/26-6a86a24dd2f8b.webp' /></p><p>
இந்நிலையில், தற்போது Kandersteg என்னும் கிராமத்தை ஒட்டி அமைந்திருக்கும் மலையிலுள்ள பனி உருகிவருவதால், அங்கு பெரும் நிலச்சரிவு ஒன்று ஏற்படும் அபாயம் உருவாகிவருகிறது.
</p><p>
அதாவது, மலைகளிலுள்ள பாறைகள், மண், பனி இவை அனைத்துமே, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பூஜ்யம் டிகிரி செல்ஷியஸுக்கு கீழே இருக்கும்போது, அனைத்துமே இணைந்து உறைந்து பாறைபோல் மாறிவிடும். இது Permafrost என அழைக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39527bd-afb4-4fd8-ad6a-3775da3e3a79/26-6a86a24e9d353.webp' /></p><p>
பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை உயரும்போது, பாறைகளுக்கிடையிலுள்ள பனி உருக, பாறைகள் நெகிழ, மண்ணும் பாறைகளும் கீழ் நோக்கி சரியத் துவங்குகின்றன.

இப்படிப்பட்ட ஒரு அபாயம்தான் Kandersteg கிராமத்துக்கு உருவாகியுள்ளது.
</p><p>
உடனடியாக அக்கிராமத்துக்கு அபாயம் இல்லை என்பதால், கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படவில்லை.
</p><p>
என்றாலும், ஜிபிஎஸ் முதலான கருவிகள் மூலம் அந்த பகுதியை அதிகாரிகள் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆபத்து ஏற்படலாம் என கருதப்படும் நிலையில், அக்கிராம மக்கள் 48 மணி நேரத்துக்கு முன் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T06:44:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மிகப்பெரிய சிறுநீரக கல்லை அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-doctor-removed-3-1kg-kidney-stone-record-1787206936"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-doctor-removed-3-1kg-kidney-stone-record-1787206936</id>
            <summary type="text">srilanka doctors removed 3.1kg kidney stone: உலகின் மிகப்பெரிய சிறுநீரக கல்லாக 3 கிலோ 100 கிராம் எடையுள்ள கல்லை வெற்றிகரமாக அகற்றி இலங்கை மருத்துவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>srilanka doctors removed 3.1kg kidney stone: உலகின் மிகப்பெரிய சிறுநீரக கல்லாக 3 கிலோ 100 கிராம் எடையுள்ள கல்லை வெற்றிகரமாக அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
</p><h3>
3 கிலோ 100 கிராம் எடையுள்ள சிறுநீரக கல்</h3><p>

இலங்கையின் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஆண் ஒருவர் பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85aef9b-b4ed-4f3e-baa1-d2d65e5139ec/26-6a869d19e4131.webp' /></p><p>

அவரின் வயிற்றில் ஒரு பெரிய கட்டி இருப்பது தெரிந்துள்ளது. அவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p> 

இதனையடுத்து, ஆரம்பகட்ட பரிசோதனைகளில் அவருக்கு சிறுநீரகக்கல் இருந்தது கண்டறியப்பட்டது.&nbsp;</p><p></p><p>

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் கடந்த 14ம் திகதி மருத்துவர் பாலகிருஷ்ணன் பிரகலநாதன் தலைமையிலான குழு அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக சிறுநீரகக் கல்லை அகற்றினர்.
</p><p>
தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர் ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

இதே நபருக்கு 1998ம் ஆண்டில் சிறுநீரக கல்லொன்று சத்திர சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3383eba-96ab-4d2c-bf3d-eefacea12f2d/26-6a869d1a938a2.webp' /></p><p>
இந்த சிறுநீரக கல்லானது 3 கிலோ 100 கிராம் எடையில் இருந்துள்ளது. இதுவே உலகில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட அதிக எடையுடைய கல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுநீரகக் கல், கின்னஸ் உலக சாதனைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

2003 ஆம் ஆண்டு பிரேசிலில் ஒரு நோயாளிடமிருந்து 1.9 கிலோகிராம் மற்றும் நீளம் 17.9 சென்டிமீட்டர் சிறுநீரக கல் அகற்றப்பட்டது. இதுவே இதற்கு முன்பு பெரிய கல்லாக இருந்தது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T06:22:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்ஸ், ஹெட்மையரின் அதிரடி..கயானா அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/guyana-amazon-warriors-beat-saint-lucia-by-7-wkts-1787206452"></link>
            <id>https://news.lankasri.com/article/guyana-amazon-warriors-beat-saint-lucia-by-7-wkts-1787206452</id>
            <summary type="text">Guyana amazon warriors beat saint lucia by 7 wkts: செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றி பெற்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Guyana amazon warriors beat saint lucia by 7 wkts: செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றி பெற்றது.
</p><p>
டேர்ரன் சேமி மைதானத்தில் நடந்த கரீபியன் டி20 போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தியது. </p><h2>டிவைன் பிரிட்டோரியஸ் அபார பந்துவீச்சு </h2><p> 

செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதிய கரீபியன் பிரீமியர் லீக் போட்டி டேர்ரன் சேமி தேசிய மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/244c69e7-ba38-45c7-a604-214209c1f88a/26-6a869f43211d3.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்தது.

சரித் அசலங்கா 35 (28) ஓட்டங்கள் எடுத்தார். டிவைன் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளும், ஷாமர் ஜோசப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.</p><p>

பின்னர் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் க்ளென் பிலிப்ஸ் 36 (26) ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>ஹெட்மையர் சரவெடி </h2><p> 

நிதானமாக ஓட்டங்களை சேர்த்த மவேன்ரா தின்ட்யால் 50 (51) ஓட்டங்கள் (2 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) எடுத்தார். </p><p>அடுத்து வந்த ஷாய் ஹோப் 17 ஓட்டங்களில் வெளியேறினார்.

ஷிம்ரோன் ஹெட்மையர் சரவெடி ஆட்டம் ஆடி, 11 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

இதன்மூலம் கயானா அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;</p><p> <img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d23bf353-d01e-412e-a897-9689f6c3b9b5/26-6a869bdd1ded3.webp' /> &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T06:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[80,000 வெளிநாட்டவர்களை பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்திய லேபர் அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/labour-party-deported-80000-foreign-criminals-1787202253"></link>
            <id>https://news.lankasri.com/article/labour-party-deported-80000-foreign-criminals-1787202253</id>
            <summary type="text">80,000 foreigners removed from UK since the general election: தேர்தலுக்குப்பின் 80,000க்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்தியுள்ளது பிரித்தானியா.

பிரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>80,000 foreigners removed from UK since the general election: தேர்தலுக்குப்பின் 80,000க்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்தியுள்ளது பிரித்தானியா.</p><p>

பிரித்தானியா இரண்டு ஆண்டுகளில் 80,000க்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்தியுள்ளதாக உள்துறை அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><h3>
இரண்டு ஆண்டுகளில் 80,000க்கும் மேற்பட்டவர்கள்</h3><p>

2024ஆம் ஆண்டு ஜூலை மாதம், சர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றது.
</p><p>
லேபர் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, குற்றச்செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள், புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்கள் என 80,286 வெளிநாட்டவர்களை நாடுகடத்தியுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f2c1891-20b1-45c3-ad28-26d41386f0e1/26-6a868ace8e491.webp' /></p><p>
இது முந்தைய கன்சர்வேட்டிவ் ஆட்சிக்காலத்தில் நாடுகடத்தப்பட்டவர்களுடைய எண்ணிக்கையைவிட 52 சதவிகிதம் அதிகமாகும்.</p><p>

இந்நிலையில், நம் எல்லைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதிலும், நமது புலம்பெயர்தல் அமைப்பை அனைவருக்கும் நியாயமானதாக ஆக்குவதற்குமான நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய படி என்கிறார் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.&nbsp;</p><p></p><p>
மேலும், இந்த புள்ளிவிவரங்கள் ஒரு செய்தியை அனுப்புகின்றன. சட்டப்படி பிரித்தானியாவுக்கு வருபவர்களை வரவேற்போம், சட்டவிரோதமாக இங்கு வந்தால், அல்லது சட்டத்தை மீறினால், உங்களை உங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிடுவோம் என்கிறார் ஷபானா.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e597518-da62-47c1-ad9a-731e1d8e2575/26-6a868acf4e346.webp' /></p><p>
ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், 2016ஆம் ஆண்டுக்குப் பின், இவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளது இப்போதுதான்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T06:00:25+00:00</updated>
        </entry>
    </feed>
