<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-27T14:35:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[149 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள்: போராடி அணியை காப்பாற்றிய வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jan-frylinck-100-in-149-balls-vs-nepal-1785161371"></link>
            <id>https://news.lankasri.com/article/jan-frylinck-100-in-149-balls-vs-nepal-1785161371</id>
            <summary type="text">நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜென் ஃப்ரைலிங்க் நிதானமாக ஆடி சதம் அடித்தார்.&amp;nbsp;லௌரேன் ஸ்டீன்கம்ப் அரைசதம் 

நேபாளம் மற்றும் நமீபியா அணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜென் ஃப்ரைலிங்க் நிதானமாக ஆடி சதம் அடித்தார்.&nbsp;</p><h2>லௌரேன் ஸ்டீன்கம்ப் அரைசதம் </h2><p>

நேபாளம் மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி உட்ரெச்ட்டில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3fc566b-3f7d-42d0-8885-73d0ca28cdb2/26-6a6767c2ab9d1.webp' />&nbsp;</p><p></p><p>
நாணய சுழற்சியில் வென்ற நேபாள அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. ஆனால் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்க தாமதமானது.
</p><p>
முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கிய நமீபியா அணி, மைதானத்தின் தன்மையால் நிதானமாகவே ஓட்டங்களை சேர்த்தது.
</p><p>
தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ஜென் ஃப்ரைலிங்க் மற்றும் லௌரேன் ஸ்டீன்கம்ப் வலுவான கூட்டணி அமைத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d48431d-6886-46cd-a1bf-ff28a45adebd/26-6a6768f091130.webp' /></p><p>
அரைசதம் அடித்த லௌரேன் ஸ்டீன்கம்ப் (Louren Steenkamp) 87 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>ஜென் ஃப்ரைலிங்க்&nbsp;சதம் </h2><p>
அடுத்து வந்த வீரர்கள் கரணின் பந்துவீச்சில் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, ஜென் ஃப்ரைலிங்க் (Jan Frylinck) சதம் அடித்தார். </p><p>

அதிரடியாக ஆடக்கூடிய ஃப்ரைலிங்க், வழக்கத்திற்கு மாறாக ஆடுகளத்தின் தன்மை மற்றும் நேபாளத்தின் தாக்குதல் பந்துவீச்சுக்கு ஏற்ப ஆடியதால், 149 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் குவித்தார்.
</p><p>
அவரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் நமீபியா அணி 211 ஓட்டங்கள் சேர்த்தது. நேபாளத்தின் கரண் கேசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9780398-f7b7-4746-ae17-621392aebe73/26-6a6768f17d10d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> <b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T14:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலை விபத்துக்களை குறைக்க வாகனங்களில் கட்டாயமாக உள்ள V2V தொழில்நுட்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-govt-to-mandate-v2v-technology-in-vehicles-1785160019"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-govt-to-mandate-v2v-technology-in-vehicles-1785160019</id>
            <summary type="text">சாலை விபத்தை குறைக்க வாகனங்களில் V2V தொழில்நுட்பத்தை கட்டாயம் ஆக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

வாகனங்களில் கட்டாயம் ஆக உள்ள V2V

இந்தியாவில், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாலை விபத்தை குறைக்க வாகனங்களில் V2V தொழில்நுட்பத்தை கட்டாயம் ஆக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. </p><h3>

வாகனங்களில் கட்டாயம் ஆக உள்ள V2V
</h3><p>
இந்தியாவில், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5.13 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில், 1,83,382 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

 நாட்டிலேயே அதிகபட்சமாக, தமிழ்நாட்டில் 71,387 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. </p><p>

இந்நிலையில், சாலை விபத்துகளை தடுக்க அடுத்த ஆண்டு முதல் வாகனங்களில் V2V தொழில்நுட்பத்தை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecaeba08-272e-42b0-88ca-1b974e92f2f3/26-6a67615552293.webp' /></p><p> 

Vehicle-to-Vehicle (V2V) என்பது வாகனங்கள் ஒன்றுக்கொன்று தகவல்களை தானாக பரிமாறிக்கொள்ளும் தொழில்நுட்பம் ஆகும்.&nbsp;</p><p>

இதன் மூலம், அருகிலுள்ள வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, கார் பாதை மாறுவது, திடீர் பிரேக்கிங் எச்சரிக்கை, வாகனங்களுக்கு இடையே உள்ள தூரம் ஓட்டுனருக்கு முன்கூட்டியே கிடைக்கும். </p><p>

வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும் இவை, 5.875 GHz முதல் 5.905 GHz அலைவரிசையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p> 

இதன் மூலம் விபத்துக்களை குறைத்து சாலை பாதுகாப்பை மேற்படுத்தலாம் என்ற நோக்கத்தில் இது குறித்து வரைவு விதியை வெளியிட்டுள்ள மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பொதுமக்கள் தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்றுள்ளது.</p><p> 

இந்த வரைவின்படி, அக்டோபர் 1, 2027 முதல் தயாரிக்கப்படும் L, M மற்றும் N வகை புதிய வாகனங்களில் V2V தகவல் தொடர்பு அமைப்பு நிறுவப்பட்டால், அது AIS-230 தரநிலைக்கு இணங்க இருக்க வேண்டும்.</p><p> 

L வகை – இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள்
</p><p>
M வகை – கார்கள், டாக்சிகள், பேருந்துகள் போன்ற பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள்
</p><p>
N பிரிவு – சரக்கு ஏற்றிச் செல்லும் டிரக்குகள் மற்றும் இலகுரக வர்த்தக வாகனங்கள்
</p><p>
இதைத் தொடர்ந்து, அக்டோபர் 1, 2028 முதல் இந்த வகைகளின் அனைத்து புதிய வாகனங்களிலும் இந்தத் தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் முன்மொழிகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T13:48:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களைக் கொல்ல அனுப்பினார்! பாரிஸில் மகளிரை கத்தியால் தாக்கிய நபர்..அதிர்ச்சி வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-arrested-in-paris-who-stab-women-with-knife-1785157133"></link>
            <id>https://news.lankasri.com/article/man-arrested-in-paris-who-stab-women-with-knife-1785157133</id>
            <summary type="text">பிரான்ஸின் பாரிஸ் நகரில் நபர் ஒருவர் கத்தியால் தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&amp;nbsp;கத்தியால்&amp;nbsp;தாக்குதல் 
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் Po...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் பாரிஸ் நகரில் நபர் ஒருவர் கத்தியால் தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&nbsp;</p><h2>கத்தியால்&nbsp;தாக்குதல் </h2><p>
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் Porte de Clichy பகுதியில், நபர் ஒருவர் கத்தியால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.&nbsp;</p><p><iframe allowfullscreen frameborder="0" width="698" height="573" scrolling="no" id="molvideoplayer" title="MailOnline Embed Player" src="https://www.dailymail.com/embed/video/3687845.html"></iframe></p><p>

உடனே அவரை அங்கிருந்தவர்கள் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்தனர். அவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p></p><p>
அவரிடம் இருந்து இரண்டு கத்திகள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.</p><p>

</p><h2>கவலைக்கிடமாக&nbsp;ஒருவர் </h2><p>இருவர் பலத்த காயமடைந்தாலும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் மற்றும் பாரிஸ் காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p> 

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட 31 வயது நபர் "பெண்களைக் கொல்ல கடவுள் என்னை அனுப்பினார் என்று கூறினார்" என்று Le Parisien இதழிடம் விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த இளைஞர், ஆயுதத்துடன் பெண்ணை நோக்கி செல்லும் மற்றும் மடக்கிப் பிடிக்கப்பட்ட காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95db6e56-800f-45fd-8500-7ad751dafaac/26-6a6757a794c6a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:57:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெல்லம் கொடுத்த நபரை மிதித்துக் கொன்ற யானை: பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/elephant-kills-driver-while-feed-jaggery-1785156374"></link>
            <id>https://news.lankasri.com/article/elephant-kills-driver-while-feed-jaggery-1785156374</id>
            <summary type="text">இந்தியாவின் மேற்கு வங்கத்தில், தனக்கு வெல்லம் கொடுத்த ஒருவரை யானை ஒன்று மிதித்துக் கொன்ற பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

வெல்லம் கொடுத்த நபரை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மேற்கு வங்கத்தில், தனக்கு வெல்லம் கொடுத்த ஒருவரை யானை ஒன்று மிதித்துக் கொன்ற பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
</p><h3>
வெல்லம் கொடுத்த நபரை மிதித்துக் கொன்ற யானை
</h3><p>
சனிக்கிழமையன்று, மேற்கு வங்கத்திலுள்ள சந்தன் நகர் என்னுமிடத்தில் தெருவில் வலம் வந்த யானை ஒன்றிற்கு விஜய் ஹோல்க்கர் (49) என்னும் ஆட்டோ ரிக்‌ஷா சாரதி வெல்லம் கொடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e0271b1-7318-43f3-a482-0e00bf41e8fd/26-6a6753183bcad.webp' /></p><p>
அப்போது, யானையை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக, யானைப்பாகனான உமேஷ் கோஸ்வாமி, யானையின் தலை அருகே குச்சியால் தட்டியுள்ளார்.</p><p>

கோபமடைந்த யானை தனக்கு வெல்லம் கொடுத்த விஜயை தூக்கி வீசி காலால் மிதித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.</p><p>

அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பில், யானைப்பாகனான உமேஷை பொலிசார் கைது செய்துள்ளனர்.
</p><p>
அவர் மீது, விலங்கு ஒன்று தொடர்பில் அலட்சியம் காரணமாக உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தது முதலான இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:51:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பிரித்தானியா வரும் ஹரி: பக்கிங்காம் அரண்மனையில் தங்கப்போவதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-to-stay-in-buckingham-palace-1785155463"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-to-stay-in-buckingham-palace-1785155463</id>
            <summary type="text">பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரி மீண்டும் பிரித்தானியா வர உள்ளார்.

இந்நிலையில், அவர் இம்முறை பக்கிங்காம் அரண்மனையிலுள்ள ஒரு அறையில் தங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரி மீண்டும் பிரித்தானியா வர உள்ளார்.
</p><p>
இந்நிலையில், அவர் இம்முறை பக்கிங்காம் அரண்மனையிலுள்ள ஒரு அறையில் தங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
மீண்டும் பிரித்தானியா வரும் ஹரி</h3><p>

பிரித்தானிய இளவரசர் ஹரி, தன் மனைவி மேகன், பிள்ளைகள் ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுடன் இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 10ஆம் திகதி, பிரித்தானியா வந்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f53ce7c3-7115-4a97-b5bb-02f5aa3fe56e/26-6a674f89a97b5.webp' /></p><p>
அப்போது, அவர் குடும்பமாக மன்னர் சார்லசை சந்தித்தார்.
</p><p>
இந்நிலையில், வருடாந்திர WellChild விருதுகள் வழங்கும் விழா தொடர்பிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மீண்டும் செப்டம்பர் மாதம் பிரித்தானியா வர உள்ளார் ஹரி.&nbsp;</p><p></p><p>
கடந்த முறை அவர் பிரித்தானியா வந்தபோது, முன்கூட்டியே சரியாக திட்டமிடாததால், அவரும் அவரது குடும்பத்தினரும் பக்கிங்காம் அரண்மனையில் தங்க முடியாமல் போய் விட்டது.
</p><p>
ஆனால், இம்முறை, பக்கிங்காம் அரண்மனையில் தங்க அவருக்கு மீண்டும் அறை ஒன்று ஒதுக்கப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aaad561-9553-4193-b353-65457e0f439d/26-6a674f890424a.webp' /></p><p>
அதாவது, இளவரசர் ஹரி மன்னர் சார்லசுடைய மகனாகவே இருந்தாலும், அவர் பக்கிங்காம் அரண்மனையில் தங்க திட்டமிட்டால், பல நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கவேண்டுமாம்.&nbsp;</p><p>
அதாவது, அவருக்கு அறை ஒதுக்கி, அவருக்கு உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய நேரம் தேவை என்பதாலேயே இந்த ஏற்பாடாம்.</p><p>

இதற்கிடையில், இம்முறையும் ஹரியுடன் மேகனும் தம்பதியரின் பிள்ளைகளும் வருகிறார்களா என்பது குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:34:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலை ரத்து - நீதிமன்றம் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/court-cancel-govt-job-for-karur-stampede-victims-1785154498"></link>
            <id>https://news.lankasri.com/article/court-cancel-govt-job-for-karur-stampede-victims-1785154498</id>
            <summary type="text">கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்கிய அரசு வேலையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை

கடந்த ஆண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்கிய அரசு வேலையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. </p><h3>

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை</h3><p>

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
</p><p>
கடந்த ஜூலை 10 ஆம் திகதி கரூர் சென்ற முதல்வர் விஜய், இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசுப்பணிக்கான ஆணையை வழங்கினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6acd6e7-19fc-4ac6-848a-986bff2eb408/26-6a674bc449237.webp' /></p><p>

கட்சி நிகழ்வில் இறந்தவர்களுக்கு அரசுப்பணி வழங்குவதா என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. </p><p> 

ஜூலை 10 ஆம் திகதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "முதல்வர் விஜய் தற்போது கரூர் பயணத்தில் இருப்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. பாதிக்கப்பட்டோருக்கு அரசுப் பணி வழங்கலாம்.&nbsp;</p><p></p><p>
ஆனால் அந்த பணி நியமன ஆணை தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும். அந்த பணியின் நிரந்தரதன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது" என இடைக்கால தீர்ப்பளித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து. </p><h3> 

ரத்து செய்த நீதிமன்றம் </h3><p>

இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், "கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை தமிழ்நாடு அரசு மீறியுள்ளது

சாலை விபத்தில் தினந்தோறும் உயிரிழப்பு நடக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b4549e7-1c0e-4f70-8a67-8b6303aa73b8/26-6a674bc388526.webp' /></p><p>அவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க முடியுமா? என கேட்டு கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை - ஒரு வாரத்தில் உயிரிழந்த சிறுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-girl-child-dies-in-gene-editing-treatment-1785153014"></link>
            <id>https://news.lankasri.com/article/china-girl-child-dies-in-gene-editing-treatment-1785153014</id>
            <summary type="text">ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளர். 

ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை

சீனாவில் மேய்(mei) என்ற புனைபெய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளர்.</p><h3> 

ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை
</h3><p>
சீனாவில் மேய்(mei) என்ற புனைபெயர் கொண்ட 6 வயது சிறுமி, அறிவாற்றல் வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்திய ஒரு அரிய மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/998b504e-2a5b-4be5-b15a-1ad2c7056a1c/26-6a6745f8becb2.webp' /></p><p> 

நரம்பியல் நிபுணர் ஜிலாங் சியு தலைமையில் இந்த சிறுமிக்கு மரபணு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

இந்த சிகிச்சையில், மூளைக்குள் ஊடுருவும் வகையில் வடிவமைக்கப்பட்ட டிரில்லியன் கணக்கான வைரஸ்களைத் தண்டுவடத்தில் செலுத்தியுள்ளனர். ஆனால் சிகிச்சை நடந்த ஒரு வாரத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>இந்த சிகிச்சைக்காக மேயின் பெற்றோர் தங்களது சேமிப்பு மற்றும் கடன் வாங்கி மொத்தமாக 8.60 லட்சம் டொலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.8.25 கோடி) அதிகமாக கட்டணம் செலுத்தியுள்ளனர்.&nbsp;</p><p>

ஆனால்,மரபணுத் திருத்த சிகிச்சைக்கான விலங்கு சோதனைகள் குறித்து எழுதிய ஆய்வு கட்டுரையில் சிறுமியின் உயிரிழப்பு குறித்து சிலோங் கியூ எதுவும் குறிப்பிடப்படவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bf301fe-555b-4cee-9575-a0de2cfc60ab/26-6a6745f8086ff.webp' /></p><p>இந்த சிகிச்சையில் உள்ள அபாயங்கள் குறித்தும் பெற்றோருக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>

இந்த உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி விசாரணை குழு அமைத்துள்ளது. விசாரணையின் முடிவுகளுக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T11:50:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பேரதிர்ச்சி: வெளியேறிய 13,000 வணிக நிறுவனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-wildfire-13000-businesses-evacuated-1785152560"></link>
            <id>https://news.lankasri.com/article/france-wildfire-13000-businesses-evacuated-1785152560</id>
            <summary type="text">பிரான்ஸில் காட்டுத்தீ பரவியதை அடுத்து 13,000 வணிக நிறுவனங்கள் வெளியேறியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியேறிய 13,000 வணிக நிறுவனங்கள்

பிரான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸில் காட்டுத்தீ பரவியதை அடுத்து 13,000 வணிக நிறுவனங்கள் வெளியேறியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> வெளியேறிய 13,000 வணிக நிறுவனங்கள்</h2><p>

பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜிரோண்ட்(Gironde) மாகாணத்தில் பரவிய காட்டுத்தீ காரணமாக அப்பகுதியில் இருந்த வணிக நிறுவனங்கள் அவசரமாக வெளியேறியுள்ளன.</p><p>கிட்டத்தட்ட 13,000 வணிக நிறுவனங்கள் வெளியேறியதால் அப்பகுதியில் தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e708915-15fb-4af2-b875-3359462dc7aa/26-6a674431672ba.webp' /></p><p> காட்டுத்தீ காரணமாக வணிக நிறுவனங்கள் வெளியேறி இருப்பதை பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் ரோலண்ட் லெஸ்குர் “பொருளாதார பேரதிர்ச்சி” என விவரித்துள்ளார்.</p><p></p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் எப்போது தங்களது வணிகங்களை தொடர முடியும் என்பது குறித்து தெளிவு இல்லாததால் நிச்சயமற்ற தன்மை வணிக நிறுவனங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.</p><h2> பொருளாதார சேதம்</h2><p>


காட்டுத்தீ காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் குறித்து இப்போதே கணக்கிட முடியாது என்பதோடு, இதன் விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று அரசு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/949d4007-0e74-40ab-aa45-0dcac4576659/26-6a6744321b282.webp' /></p><p> இந்த காட்டுதீயினால் ஏற்பட்ட பாதிப்பை இப்போதே கணக்கிடுவது என்பது முன்கூட்டிய செயல், எப்படி இருந்தாலும் நாட்டை உலுக்கி வரும் காட்டுத்தீ வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை பிரான்ஸ் அரசு பேச்சாளர் மோட் பிரெஜியோன் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> பிரான்ஸில் ஏற்பட்டுள்ள தீ விபத்தினால் கிட்டத்தட்ட 42,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகி உள்ளது.</p><p> கிட்டத்தட்ட 2,20,000 மக்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T11:42:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனவு நனவான தருணம்: ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது பெற்ற வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vaibhav-sooryavanshi-happy-man-of-match-and-series-1785151258"></link>
            <id>https://news.lankasri.com/article/vaibhav-sooryavanshi-happy-man-of-match-and-series-1785151258</id>
            <summary type="text">வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் ஆட்டநாயகன், தொடர் நாயகனை விருதுகளை பெற்றது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.வைபவ் சூர்யவன்ஷி&amp;nbsp;

ஜிம்பாப்வே அணிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் ஆட்டநாயகன், தொடர் நாயகனை விருதுகளை பெற்றது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.</p><h2>வைபவ் சூர்யவன்ஷி&nbsp;</h2><p>

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0114bf6b-7f9f-44d3-b6bf-ef304c2fb191/26-6a673ff48e1fb.webp' /></p><p></p><p>

இந்தத் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) இரண்டு அரைசதங்களுடன் 151 ஓட்டங்கள் குவித்தார்.</p><p> 

கடைசி போட்டியில் 81 ஓட்டங்கள் விளாசியதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் அவர் பெற்றார்.</p><p>

இதுகுறித்து பேசிய சூர்யவன்ஷி, "நாங்கள் ஹராரே வந்த பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்களில் எங்கள் பயிற்சி மிகவும் சிறப்பாக இருந்தது.
</p><p>
நான் இங்கு 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்திலும் விளையாடியுள்ளேன். எனவே, இந்த மைதானத்தில் விளையாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன். 

அணித்தலைவர், பயிற்சியாளர்கள் என அனைவரும் எனக்கு ஆதரவளித்தனர் - அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். </p><p>

எனது ஆட்டம், நான் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதைப் போன்றதுதான். நான் அணிக்காக அதை செய்ய முயற்சித்தேன்.</p><p> 

மூன்று போட்டிகளிலும், அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுக்க முயன்றேன். எனக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைத்தால், அந்த இன்னிங்ஸை இன்னும் பெரிதாகக் கொண்டு செல்லவே விரும்புவேன். </p><p>அதுதான் எனது ஒரே அணுகுமுறையாக இருந்தது. 

நான் ஆடும் ஷாட்கள், நான் பயிற்சி செய்யும் ஷாட்கள்தான். பயிற்சி அமர்வுகளில் நான் என்ன செய்கிறேனோ, அதை அப்படியே போட்டியிலும் செய்ய முயற்சிக்கிறேன். </p><p>

இது உண்மையிலேயே ஒரு கனவு நனவான தருணம். எனது முதல் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14fe8ab7-6ab8-4b7b-871c-ac88830053e9/26-6a673ff3b902f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T11:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வானிலை தொடர்பில் சுவிஸ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-warns-massive-heatwave-coming-1785149219"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-warns-massive-heatwave-coming-1785149219</id>
            <summary type="text">சுவிஸ் மக்களுக்கு வானிலை தொடர்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.

வானிலை தொடர்பில் ஒரு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிஸ் மக்களுக்கு வானிலை தொடர்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.
</p><h3>
வானிலை தொடர்பில் ஒரு எச்சரிக்கை
</h3><p>
சுவிட்சர்லாந்தில், இந்த வார இறுதியில் வெப்பம் மிகக் கடுமையாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc134d97-b3a7-4010-b967-f279a146c0fb/26-6a67372487a31.webp' /></p><p>
வியாழக்கிழமை வாக்கில் வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸை தாண்டும் என்றும், வார இறுதியில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸை எட்டலாம் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
இதற்கு முன், சுவிட்சர்லாந்தில், இந்த வார இறுதியில் வெப்பம் மிகக் கடுமையாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>

வியாழக்கிழமை வாக்கில் வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸை தாண்டும் என்றும், வார இறுதியில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸை எட்டலாம் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
2003ஆம் ஆண்டு உருவான வெப்ப அலையின்போது, Graubünden மாகாணத்திலுள்ள Grono என்னும் கிராமத்தில் வெப்பநிலை 41. 5 டிகிரி செல்ஷியஸை எட்டியதே இதற்கு முன் தேசிய அளவில் அதிக வெப்பநிலையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:54:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் டாப் 20 அழகான கடற்கரைகள் பட்டியலில் இடம்: ஆனால் அங்கு செல்லமுடியாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ile-vierge-beach-ranked-beautiful-but-cant-visit-1785148380"></link>
            <id>https://news.lankasri.com/article/ile-vierge-beach-ranked-beautiful-but-cant-visit-1785148380</id>
            <summary type="text">பிரான்சின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டனியில் ஒரு அழகான கடற்கரை உள்ளது.
ஆனால், அந்தக் கடற்கரைக்குச் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி கிடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டனியில் ஒரு அழகான கடற்கரை உள்ளது.</p><p>
ஆனால், அந்தக் கடற்கரைக்குச் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி கிடையாது!
</p><h3>
அழகான கடற்கரைகள் பட்டியலில் இடம்</h3><p>

Hellotickets என்னும் இணையதளம் வெளியிட்டுள்ள உலகின் டாப் 20 அழகான கடற்கரைகள் பட்டியலில் பிரிட்டனியில் உள்ள Île Vierge ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43b3020a-8942-4ca0-a027-e9138b653a61/26-6a6733ddae497.webp' /></p><p>
ஆனால், சுற்றுலாப்பயணிகள் அங்கு செல்லமுடியாது. காரணம் என்னவென்றால், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் அந்த கடற்கரை மூடப்பட்டுள்ளது.
</p><p>
அந்த பகுதிக்கு சுற்றுலா செல்லும் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள், அங்குள்ள மலைமுகடுகளில் ஏறுவதால் பாறைகள் பெயர்ந்துவிழும் அபாயம் உள்ளதாலேயே அங்கு செல்ல தடை அறிமுகம் செய்யப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.&nbsp;</p><p></p><p>
அத்துடன், தடைக்கு முன் அங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் சென்றதால் அப்பகுதியிலுள்ள மண்ணும் தாவரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
ஆக, Île Vierge கடற்கரையை, அனுமதிக்கப்பட்ட பகுதிகளில், தொலைவிலிருந்து மட்டுமே பர்வையிடமுடியும்.
</p><p>
தடையை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்பது முக்கியமான தகவல்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:33:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலை இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங்: யார் அந்த நடிகை?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/arshdeep-samreen-kaur-reveals-their-relationship-1785147819"></link>
            <id>https://news.lankasri.com/article/arshdeep-samreen-kaur-reveals-their-relationship-1785147819</id>
            <summary type="text">இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அர்ஷ்தீப் சிங் - சம்ரீன் கவுர் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.</p><h2> அர்ஷ்தீப் சிங் - சம்ரீன் கவுர் காதல்</h2><p>நடிகையும் மாடலுமான சம்ரீன் கவுர்(Samreen Kaur) உடனான தன்னுடைய காதலை இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> சமூக ஊடக பக்கத்தில் கடந்த சில மாதங்களாக பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அர்ஷ்தீப் சிங்கின் இந்த பதிவு வெளிவந்துள்ளது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbQRs1BDbS4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbQRs1BDbS4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbQRs1BDbS4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Arshdeep Singh (@_arshdeep.singh__)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p> ஞாயிற்றுக்கிழமை அர்ஷ்தீப் சிங் வெளியிட்ட பதிவில், அவர் தன்னுடைய காதலி சம்ரீனுடன் இருக்கும் 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>மேலும் அந்த பதிவிற்கு “My Person” என்ற எளிமையான தலைப்பையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.</p><p></p><h2> யார் இந்த சம்ரீன் கவுர்?</h2><p>&nbsp;சமூக ஊடகம், நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் பிரபலமாக விளங்கும் சம்ரீன் கவுர் ஜம்மு காஷ்மீரில் 1999 செப்டம்பரில் 7ம் திகதி பிறந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d524128-10d1-4a6f-bd12-7ee1934020df/26-6a6731acbf754.webp' /></p><p> புனேவில் உள்ள Symbiosis கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BCom பட்டம் பெற்றுள்ளார்.</p><p> 2018ம் ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரதிநிதித்துவம் செய்து இறுதிப்போட்டி வரை சென்றார்.</p><p> மேலும் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியான Nail Polish தொடர் மற்றும் “83” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:23:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலிக்கு 3,000 கோடி உயில் எழுதிவைத்துவிட்டு இறந்த கோடீஸ்வரர்: யார் அந்த இளம்பெண்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karyna-shuliak-gf-of-epstein-named-heir-to-3000-cr-1785146678"></link>
            <id>https://news.lankasri.com/article/karyna-shuliak-gf-of-epstein-named-heir-to-3000-cr-1785146678</id>
            <summary type="text">ஏராளம் இளம்பெண்களை சீரழித்த மோசமான குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனை நினைவிருக்கலாம்.

அந்த நபர், தன் காதலியான ஒரு இளம்பெண்ணுக்கு 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏராளம் இளம்பெண்களை சீரழித்த மோசமான குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனை நினைவிருக்கலாம்.
</p><p>
அந்த நபர், தன் காதலியான ஒரு இளம்பெண்ணுக்கு 100 மில்லியன் டொலர்கள் சொத்தை உயில் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
யார் அந்தப் பெண்?
</h3><p>
பொதுவாக, எப்ஸ்டீனுடைய காதலி என்றாலே, கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் என்னும் பெண்ணின் முகம்தான் நினைவுக்கு வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd30272a-0863-4ec9-aa47-6da65a172b13/26-6a672d37b0725.webp' /></p><p>ஆனால், எப்ஸ்டீன் 100 மில்லியன் டொலர்கள் சொத்து எழுதிவைத்துள்ளது அந்த மேக்ஸ்வெல்லுக்கு அல்ல!
</p><p>
ஆம், காருண்யா ஷுலியாக் (37) என்னும் இளம்பெண்ணுக்குதான் எப்ஸ்டீன் உயிலில் 100 மில்லியன் டொலர்கள் சொத்து எழுதிவைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0433d0ac-84c6-4c0f-af40-ec2e3d2e0235/26-6a672d385fc07.webp' /></p><p>இந்த காருண்யாவைக் குறித்து பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பெலாரஸ் நாட்டவரான காருண்யா 2010ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்துள்ளார்.
</p><p>
அவருக்கு 21 வயது இருக்கும்போது 58 வயதான எப்ஸ்டீனை காருண்யா சந்திக்க, காருண்யாவால் ஈர்க்கப்பட்ட எப்ஸ்டீன், அவர் பல் மருத்துவம் படிப்பதற்கு கொலம்பியா பல்கலையில் இடம் வாங்கிக் கொடுத்தது முதல், அவரது குடும்பத்துக்கு பண உதவி செய்தது வரை பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79594366-e9b8-4ade-a05a-f70d19384e36/26-6a672d391044d.webp' /></p><p>2013இல் காருண்யாவின் விசா காலாவதியாகிவிட, உடனடியாக காருண்யாவுக்கும் தனது உதவியாளரான மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் செய்துவைத்துள்ளார் எப்ஸ்டீன்.
</p><p>
ஒரு பாலின திருமணத்தைக் காரணம் காட்டி அமெரிக்காவிலேயே தங்கி, கிரீன் கார்டு வாங்கிய காருண்யா, 2018இல் அமெரிக்கக் குடியுரிமையும் பெற்ற கையோடு, அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துவிட்டார்.
</p><p>
பின்னர் முழுமையாக எப்ஸ்டீனுடைய சொத்துக்கள், பணியாளர்கள், வீடு புதுப்பித்தல், மரச்சாமான்கள் வாங்குதல், நிர்வாகம் என அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார் காருண்யா.
</p><p>
இருவரும் காதலித்ததாகவும், திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் கூட கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f248c4-9498-42bc-8338-51ce4832a5a9/26-6a672d39b6019.webp' /></p><p>இந்நிலையில், 2019ஆம் ஆண்டு எப்ஸ்டீன் சிறை செல்ல, சரியாக ஒரு மாதம் கழித்து காருண்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார் எப்ஸ்டீன்.</p><p>

தனது வழக்கு முடிவடைய நீண்ட காலம் ஆகலாம் என்றும், ஆகவே, தங்குவதற்கு வேறு இடம் பார்த்துக்கொள்ளுமாறும் கூறிய எப்ஸ்டீன், பயப்படாதே, தைரியமாக இரு என்றும் காருண்யாவிடம் கூறியுள்ளார்.
</p><p>
அடுத்த நாள், அதாவது, ஆகத்து மாதம் 10ஆம் திகதி, எப்ஸ்டீன் தன் சிறை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகின.</p><h3>

காதலிக்கு 3,000 கோடி</h3><p>

இந்நிலையில், எப்ஸ்டீன் காருண்யாவுக்கு 100 மில்லியன் டொலர்கள், 33 காரட் எடையுள்ள ஒரு வைர மோதிரம் முதலான பல சொத்துக்களை உயில் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cfb7ead-37c2-4811-8326-bb8d9ba75f96/26-6a672d3a6511f.webp' /></p><p>100 மில்லியன் டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 33,54,74,60,000.00 ரூபாய் ஆகும்.
</p><p>
விடயம் என்னவென்றால், எப்ஸ்டீனுக்கு 600 மில்லியன் டொலர்கள் சொத்து என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கியது போக, தற்போது அவருடைய சொத்து மதிப்பு 120 மில்லியன் முதல் 200 மில்லியன் டொலர்கள் மட்டுமே.
</p><p>
ஆக, காருண்யாவுக்கு எதிர்பார்த்தபடி 3,000 கோடி கிடைக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா, நியூசிலாந்து நாடுகளை உள்ளடக்கிய உளவுப்பிரிவு: தொடர்புகொண்ட நபரை கைது செய்த ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-s-fsb-arrest-man-who-spying-for-new-zealand-1785146087"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-s-fsb-arrest-man-who-spying-for-new-zealand-1785146087</id>
            <summary type="text">நியூஸிலாந்து அணிக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் நபரை ரஷ்யா கைது செய்துள்ளது.&amp;nbsp;55 வயதான நபர்&amp;nbsp;கைது 
ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை திங்களன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூஸிலாந்து அணிக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் நபரை ரஷ்யா கைது செய்துள்ளது.&nbsp;</p><h2>55 வயதான நபர்&nbsp;கைது </h2><p>
ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை திங்களன்று 55 வயதான நபர் ஒருவரை, கபரோவ்ஸ்கில் கைது செய்ததாக தெரிவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a99a0c20-6f8a-4562-a0ef-a60aa6242b44/26-6a672c167e31c.webp' /></p><p></p><p>அந்த நபர் பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய the Five Eyes உளவுத் தகவல் பகிர்வு கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் நியூஸிலாந்து உளவுத்துறை சேவைகளை தொடர்பு கொண்டதாக FSB அறிக்கையில் கூறியுள்ளது.</p><h2>உளவுத் தகவல்களை சேகரிப்பதற்காக</h2><p>மேலும், குறித்த நபர் ரஷ்யாவின் தேசியப் பாதுகாப்பிற்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய தகவல்களை சேகரித்து பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.</p><p>ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடனான ரஷ்யாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த உளவுத் தகவல்களை சேகரிப்பதற்காக, அந்த நபரை நியூஸிலாந்து சேர்த்ததாகவும் FSB கூறியது.&nbsp;</p><p>அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6aaad240-0ed8-488f-84c8-72d0b90bdac5/26-6a672c1764f9d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T09:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sukran-peyarchi-1785144771"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sukran-peyarchi-1785144771</id>
            <summary type="text">நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.
</p><p>
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
</p><p>
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் சுக்கிரன் தனது சொந்த ராசிக்குள் நுழையப்போகிறார்.
</p><p>
அந்தவகையில், சொந்த ராசிக்கும் செல்லும் சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>ரிஷபம் </h2><ul><li>

வாழ்க்கையில் நேர்மறையான பலன்களை ஏற்படுத்தும். </li><li>பல வாய்ப்புகள் தேடிவரும்.</li><li>கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை எதிர்பார்க்கலாம். </li><li>அவர்கள் கடனாகக் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.</li><li>நிதி நிலைமையை வலுப்படுத்தும். </li><li>அவர்களின் உடல்நலம் சீராக இருக்கும்.</li><li>திருமண வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். </li><li>சில குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளன.</li><li>குடும்பத்தினருடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். </li><li>திட்டங்கள் அனைத்தும் வெற்றியைப் பெறும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32446ebf-d27f-4c6a-a38b-b99407df50df/26-6a672ab5b711a.webp' /></p><h2>துலாம் </h2><ul><li>வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படும். </li><li>நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் திறக்கும்.</li><li>வேலையில் செயல்திறனால் பெரிய விஷயங்களை சாதிப்பீர்கள். </li><li>கடின உழைப்புக்கான அங்கீகாரம் தேடிவரும். </li><li>மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.</li><li>மாணவர்கள் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். </li><li>பல்வேறு அம்சங்களில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். </li><li>வாழ்க்கையில் புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும்.</li><li>ஒட்டுமொத்த பொருளாதார நிலையை அதிகரிக்கும். </li><li>அனைத்து முயற்சிகளுக்கும் ஆரோக்கியம் துணையாக இருக்கும்.</li></ul><h2>மகரம் </h2><ul><li>


பல நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். </li><li>வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும்.</li><li>வேலையில் பதவி உயர்வுகளைப் பெறலாம். </li><li>கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.</li><li>வேலை அல்லது வணிகத்தில் முன்னேற்றம் கிடைக்கும். </li><li>நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.</li><li>பொருளாதாரநிலை வலுப்படும். </li><li>படைப்பாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் சிறப்பாக இருக்கும்.</li><li>பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.</li><li>சில மூதாதையர் சொத்துக்களைப் பெற வாய்ப்புள்ளது.</li><li>அவர்களின் நிதி நிலைமையை வலுப்படும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e99c67e0-6af6-4454-a50d-822c7b350287/26-6a672ab74e1fb.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T09:54:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை பதவிநீக்கம் செய்துவிடுங்கள்... ஜேர்மன் போக்குவரத்துத் துறை அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-transport-minister-schnieder-seek-dismissal-1785142017"></link>
            <id>https://news.lankasri.com/article/german-transport-minister-schnieder-seek-dismissal-1785142017</id>
            <summary type="text">ஜேர்மன் போக்குவரத்துத் துறை அமைச்சர், தன்னை பதவிநீக்கம் செய்யுமாறு ஜேர்மன் சேன்ஸலரை கேட்டுக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் போக்குவரத்துத் துறை அமைச்சர், தன்னை பதவிநீக்கம் செய்யுமாறு ஜேர்மன் சேன்ஸலரை கேட்டுக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><h3>

போக்குவரத்துத் துறை அமைச்சரின் கோரிக்கை</h3><p>

ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a47f68a-da68-4a5a-8d37-740737316c85/26-6a671b0325e9e.webp' /></p><p>

ஜேர்மன் ரயில் போக்குவரத்து தொடர்பில் நாட்டில் அதிருப்தி நிலவிவருவதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சரான பேட்ரிக் ஷ்னைடரும் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
</p><p>
ஆனால், இதுவரை சேன்ஸலர் மெர்ஸ் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
</p><p>
இதற்கிடையில், ஷ்னைடரும் மாற்றப்படலாம் என தகவல் வெளியான விடயம், அவருடைய சொந்த மாகாணமான Rhineland-Palatinate மாகாணத்தில் கோபத்தை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p></p><p>

ஷ்னைடர் கடுமையான உழைப்பாளி, தன் பதவிக்கு தகுதியானவர், அப்படியிருக்கும்போது சேன்ஸலர் மெர்ஸ் ஏன் அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும், சேன்ஸலரை புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று கூறியுள்ளார் CDU கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Michael Ludwig.
</p><p>
இந்நிலையில், தன் பெயர் இப்படி அடிடுவதால் விரக்தியடைந்துள்ள ஷ்னைடர், தனது பதவி தொடர்பில் ஒரு கண்ணியமற்ற சூழல் உருவாகியுள்ளதால், தன்னால் வேலையில் கவனம் செலுத்தமுடியவில்லை என்றும், தன்னை பதவிநீக்கம் செய்யுமாறு ஜேர்மன் சேன்ஸலரை கேட்டுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T09:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை எவ்வளவு?(27-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785144175"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785144175</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (27-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (27-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><p>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</p></td></tr></tbody></table><p>&nbsp;தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,317,667.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,480.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 371,850.00.</p><p>

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,610.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 340,900.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,670.00.</p><p>

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 325,400.00. </p>]]></content>
            <updated>2026-07-27T09:23:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[CJP பாணியில் உருவான E20 ஜனதா கட்சி - சிக்கலில் அடுத்த அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/e20-janta-party-demands-resign-nitin-gadkari-1785141525"></link>
            <id>https://news.lankasri.com/article/e20-janta-party-demands-resign-nitin-gadkari-1785141525</id>
            <summary type="text">CJP பாணியில் உருவாகியுள்ள E20 ஜனதா கட்சி, மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை ராஜினாமா செய்ய கோரியுள்ளது.

CJP பாணியில் உருவான E20 ஜனதா கட்சி

வேலை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>CJP பாணியில் உருவாகியுள்ள E20 ஜனதா கட்சி, மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை ராஜினாமா செய்ய கோரியுள்ளது.</p><h3>

CJP பாணியில் உருவான E20 ஜனதா கட்சி
</h3><p>
வேலை இல்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 2 மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் தொடங்கப்பட்டது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(CJP).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1978d2d-ee42-48ce-a1db-a45167b10533/26-6a6719174f7fd.webp' /></p><p>

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக, CJP நடத்திய போராட்டம் மோடி அரசையே அசைத்து பார்த்துள்ளது. </p><p>

12 வருட மோடி அரசில் முதல்முறையாக, மக்களின் போராட்டத்திற்கு பணிந்து ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். </p><p>

தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூடுதலாக கல்வி அமைச்சர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். </p><p>

இதனை தொடர்ந்து, E20 ஜனதா கட்சி என்ற புதிய கட்சி இணையத்தில் உருவெடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p> 

இந்தியாவில் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் அரசின் கொள்கைக்கு வாகன ஓட்டிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். </p><p>

எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனத்தின் மைலேஜ் குறைகிறது, என்ஜின் பாதிக்கப்படுகிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை வாகன ஓட்டிகள் முன்வைத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56e6d91c-42b2-4beb-bb32-99ed63a075d5/26-6a671918002bd.webp' /></p><p> 

ஆனால் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி நிராகரித்துள்ளார். </p><h3>

சிக்கலில் நிதின் கட்காரி</h3><p>

இந்நிலையில், புதிதாக தொடங்கப்பட்ட E20 ஜனதா கட்சி, பெட்ரோல் பங்குகளில் 100% தூய்மையான பெட்ரோலையும் கிடைக்கச் செய்ய வேண்டும், எந்த பெட்ரோல் வேண்டுமோ அதை தேர்வு செய்யும் உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது.</p><p> 

CJP கட்சியை போல் E20 ஜனதா கட்சியை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. </p><p>

E20 பிரச்சாரமானது, CJPயின் "எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்னவாகும்?" என்பதை மேற்கோள் காட்டி, "எல்லா பைக்/கார் உரிமையாளர்களும் ஒன்று சேர்ந்தால் என்னவாகும்?" என்று E20 ஜனதா கட்சி கேட்டுள்ளதோடு, நிதின் கட்காரி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ht" dir="ltr">Nitin Gadkari ji must Resign!</p>&mdash; E20 JANTA PARTY (@E20Party) <a href="https://x.com/E20Party/status/2081449703854702787?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>டெல்லி டாக்சி, சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா நடத்துநர்கள் சங்கம், E20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p>
நிதின் கட்கரியின் மகன் நிகில் கட்கரி, Cian Agro என்ற எத்தனால் உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

E20 கொள்கை அமலுக்கு வந்தபோது, ரூ.40 ஆக இருந்த இந்நிறுவனத்தின் பங்கு விலை, ஒன்றரை ஆண்டுகளில் ரூ.3,600 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2baca0c3-f746-437a-b10a-fa1d23972b69/26-6a6719169fe99.webp' /></p><p>நிதின் கட்காரி தனது குடும்பத்தினரின் வணிக வருவாயில் எத்தனால் உற்பத்தி மூலம் கிடைக்கும் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது, பெருமளவில் லாபம் பெறுவதாக அவதூறு பரப்பப்படுகிறது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T08:39:08+00:00</updated>
        </entry>
    </feed>
