<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-01T05:56:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போர்... எதிரிகளால் தூக்கிலிடப்படலாம் என அஞ்சும் விளாடிமிர் புடின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-fears-enemies-will-1788236221"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-fears-enemies-will-1788236221</id>
            <summary type="text">Putin fears enemies will hang him: எதிரிகள் தன்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள் எனப் பீதியடைந்த புடின்.

உக்ரைன் மீதான தனது இடைவிடாத போரை வெற்றி இல்லாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin fears enemies will hang him: எதிரிகள் தன்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள் எனப் பீதியடைந்த புடின்.
</p><p>
உக்ரைன் மீதான தனது இடைவிடாத போரை வெற்றி இல்லாமல் முடித்துக்கொள்வது தனது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று புடின் அஞ்சுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>தூக்கிலிட்டு விடுவார்கள்</h2><p>
</p><p>கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியுடன் தனது போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், தான் கொல்லப்படலாம் என்று புடின் தனது நெருங்கிய வட்டாரத்தினரிடம் கூறியதாகத் தகவல் கசிந்துள்ளது. </p><p>தி எகனாமிஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், பீதியடைந்த புடின், தான் டான்பாஸ் பகுதியின் கட்டுப்பாட்டை வெல்லவில்லை என்றால், அவர்கள் தன்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள் என்று தனக்கு ஆதரவான பெரும் கோடீஸ்வரர்களிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4d8124c-bad7-4659-8ecb-72ee323e3141/26-6a9651bfbd496.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, உக்ரைன் மீதான படையெடுப்பு தோல்வியடைந்துவிட்டதாகவும், அது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக நீடித்து ரஷ்யாவின் பொருளாதாரத்தைச் சீரழித்துவிட்டதாகவும் புடினின் முக்கிய கூட்டாளிகளும் கருதுகின்றனர்.
</p><p>இணையவழி சில்லறை விற்பனையாளர்களின் கிடங்குகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கி உக்ரைன் சமீபத்தில் நடத்திய முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்கள், பேரழிவுகரமான பெட்ரோல் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, போரின் விலையை புடினின் குடிமக்களுக்கு நேரடியாக உணர்த்தியுள்ளன.</p><p></p><p> </p><p>ஆனால் இதற்கு மிக மோசமான பதிலடி உறுதி என விளாடிமிர் புடின் மிரட்டல் விடுத்திருந்தாலும், புடின் ஒரு இக்கட்டான முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்டு, அதிலிருந்து வெளியேற ஆபத்தான வழியைத் தெரிவு செய்துள்ளதாக கிரெம்ளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>தீவிர நெருக்கடியில் சிக்கியுள்ள புடின், நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் மீது ஆவேசமாகப் பாய்வதன் மூலம் தனது அண்டை நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தில் உள்ளார். </p><p>இந்த நிலையில், உக்ரைன் மீதான தனது கொடூரமான போரை நிறுத்துமாறு நரேந்திர மோடி புடினிடம் வெளிப்படையாக கூறியதால், அவர் இன்று உலக அரங்கில் தலைகுனியும் நிலை ஏற்பட்டது.</p><h2>தீவிரப்படுத்துவதில் உறுதி</h2><p> </p><p>ரஷ்யாவின் மிக நெருக்கமான நட்பு நாடான இந்தியா, நாம் ஒரு முடிவில்லாத போரிலிருந்து போரின் முடிவை நோக்கி நகர வேண்டும் என கூறியுள்ளது. </p><p>இதில் கடும் கோபமடைந்த விளாடிமிர் புடின்,
தனது மொழிபெயர்ப்புக் கருவியை (earpiece) கழற்றி வீசிவிட்டு, பற்களைக் கடித்தவாறே, மிக்க நன்றி, பிரதமரே. நாங்கள் அந்தத் திசையில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்று பதிலளித்துள்ளார். </p><p>ரஷ்யாவிற்கு இந்தப் பேரழிவுகரமான போரினால் ஏற்படும் பெரும் இழப்புகள் இருந்தபோதிலும், புடின் மோதலைத் தீவிரப்படுத்துவதில் உறுதியாகத் தெரிகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7b3b109-f2a1-4ee5-831e-120c5b75526d/26-6a9651c07124b.webp' /></p><p> 2022-இல் உக்ரைன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கியதிலிருந்து, அவரது படைகளைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் பேர் உயிரிழந்தோ அல்லது காயமடைந்தோ போரில் இழக்கப்பட்டுள்ளனர். </p><p>எதிரிகளைப் பின்னுக்குத் தள்ளுவதற்கு இன்றியமையாததான, 50 கி.மீ அகலமுள்ள நகரங்களைக் கொண்ட பாதுகாப்பு அரணான, டான்பாஸின் எஞ்சிய பகுதியை முழுமையாகக் கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய இலக்காக மாறியுள்ளது. டான்பாஸ் பகுதியை அவர் கைப்பற்றும் வரையில் போர் நீடிக்கலாம் என்றே கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T05:35:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியா செல்லும் முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-to-visit-uk-sep-10-attract-investments-1788240744"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-to-visit-uk-sep-10-attract-investments-1788240744</id>
            <summary type="text">cm vijay to visit uk in september 10 for attract investments: முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay to visit uk in september 10 for attract investments: முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><h3>

பிரித்தானியா செல்லும் முதல்வர் விஜய் </h3><p>

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள முதல்வர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/881748e4-cd19-49a4-9ac9-be7daf1f5f13/26-6a96636ac8f79.webp' /></p><p> 

சமீபத்தில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p></p><p>

ஆனால், பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிட்டப்பட்டதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள், அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கு செல்லும் என தொழில்துறையினர் கவலை தெரிவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/643764c6-8bb1-45f4-b3c0-13798ce09383/26-6a96636a1a167.webp' /></p><p>

இந்நிலையில், முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p> 

செப்டம்பர் 16 ஆம் திகதி வரை முதல்வர் விஜய் பிரித்தானியாவில் இருந்து, தொழில்துறையினர் மற்றும் பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a46aaad-2417-4acf-aff0-7f6c6842ce4f/26-6a96636b7b52c.webp' /></p><p> 

இதே போல், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு, வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி தைவானில் நடைபெற உள்ள செமி கண்டக்டர், செயற்கை நுண்ணறிவு சிப் உள்ளிட்ட தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் செமிகான் மாநாட்டில் கலந்து கொண்டு முதலீடுகளை ஈர்க்க உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T05:33:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராண்ட் கேன்யன் வெள்ளப்பெருக்கு... காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/person-missing-in-grand-canyon-1788240496"></link>
            <id>https://news.lankasri.com/article/person-missing-in-grand-canyon-1788240496</id>
            <summary type="text">Desperate search for person missing in Grand Canyon: கிராண்ட் கேன்யனில் காணாமல் போன நபரைத் தேடும் பணி தீவிரம்.
கிராண்ட் கேன்யன் பகுதியில் ஏற்பட்ட கடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Desperate search for person missing in Grand Canyon: கிராண்ட் கேன்யனில் காணாமல் போன நபரைத் தேடும் பணி தீவிரம்.
</p><p>கிராண்ட் கேன்யன் பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், 80 மலையேற்ற வீரர்களும் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5baf0a5a-3c7d-4a06-b9fe-085d20411698/26-6a96627282380.webp' /></p><p>
</p><p>உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், ரம்மியமான பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால், கொலராடோ நதிக்கு அருகிலுள்ள பாதைகளில் இருந்து மலையேறுபவர்களும், சுற்றுலா செல்பவர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்.</p><p> இந்த நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கவும் அவர்களைக் கண்டறியவும், தேடுதல் குழுவினர் இரவு நேரப் பார்வைக் கண்ணாடிகள் மற்றும் பிற உபகரணங்களைப் பயன்படுத்தியதாக, திங்கள்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சம்பவ இடக் கட்டளை அதிகாரி டேவ் பிளாக் தெரிவித்தார். </p><p>சனிக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குள் 45 பேர் மீட்கப்பட்டனர்; ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் 37 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><p></p><p> அதேவேளையில், காணாமல் போன 15 மலையேற்ற வீரர்களைத் தேடும் பணியை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டனர். திங்கட்கிழமை முழுவதும் தேடுதல் பணிகள் தொடர்ந்த நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய பூங்காவின் அனுமதி முறையைப் பார்வையிட்டும், வாகனங்களின் பதிவு எண்களைச் சரிபார்த்தும் பூங்காப் பாதுகாவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். </p><p>இருப்பினும், திடீர் வெள்ளப்பெருக்கு பள்ளத்தாக்கிற்குள் செல்லும் ஒரேயொரு நீர்க் குழாயை கடுமையாக சேதப்படுத்தியதால் ஆபத்துகள் நீடித்தன, மேலும் இரவு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்தனர். </p><p>முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிராண்ட் கேன்யன் தேசியப் பூங்காவிற்குள் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஹொட்டல்களில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு அதிகாரிகள் தற்போது தடை விதித்துள்ளனர். </p><p>மேலும், ஆண்டு முழுவதும் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு அவசரகால நீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e92ffee5-f157-48b2-93ca-8cdbe348a793/26-6a966273368c8.webp' /></p><p> </p><p>கிராண்ட் கேன்யனின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு மலையேற்றம் செய்பவர்கள் இரவில் தங்கும் பிரபலமான விடுதிகள் மற்றும் முகாம் பகுதிகளைச் சுற்றி, கொலராடோ நதி பாயும் இடத்திற்கு அருகே பள்ளத்தாக்கின் ஆழத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. </p><p>செங்குத்தான சரிவுள்ள பாறைப் பகுதியில், வெறும் அரை மணி நேரத்திற்குள் சுமார் அரை முதல் ஒரு அங்குலம் வரை மழை பெய்துள்ளது. கிராண்ட் கேன்யன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் நிலப்பரப்பைச் சிதைத்துக்கொண்டு செல்வதை, மேலே இருந்த தொங்கு பாலத்திலிருந்து மலையேற்றப் பயணிகள் படம்பிடித்த காட்சிகள் மிகவும் பயங்கரமாக இருந்தன. </p><p>பழுப்பு நிற நீரில் பெரிய குப்பைக் குவியல்களும் மிதந்து கொண்டிருந்தன. பின்னர், அப்பகுதியிலிருந்து ஏராளமான பார்வையாளர்கள் ஹெலிகொப்டர் மூலம் வெளியேற்றப்பட்டனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T05:26:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் இருந்து இன்னொரு துயரமான செய்தி வெளிவரலாம்... சுரங்கத்தில் சிக்கிய 900 பேர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-search-hydropower-workers-1788233441"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-search-hydropower-workers-1788233441</id>
            <summary type="text">Nepal rescuers in search of hydropower workers: நேபாளத்தில் நீர்மின் தொழிலாளர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal rescuers in search of hydropower workers: நேபாளத்தில் நீர்மின் தொழிலாளர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
நேபாளத்தின் திரிசூலி ஆற்றின் ஓரத்தில் உள்ள, சேறு மூடியுள்ள சுரங்கத்தில் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் கிட்டத்தட்ட 900 தொழிலாளர்களின் குடும்பத்தினர், தங்கள் அன்புக்குரியவர்கள் உயிருடன் மீட்கப்படலாம் என்ற நம்பிக்கையைக் கைவிடாமல் உள்ளனர்.</p><h2>ஏழில் ஒருவர்</h2><p>
</p><p>சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களைச் 
 சென்றடைவதற்கான முக்கியமான வாய்ப்பு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்ற அச்சத்தில், மீட்புக் குழுவினர் திங்கட்கிழமையன்றும் கடுமையாக போராடினர்;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cdd56af-3794-40e7-aedc-b0321509dd71/26-6a9646e3a987c.webp' /></p><p> </p><p>மலைச்சரிவை வெடிவைத்துத் தகர்த்த அவர்கள், பின்னர் திரிசூலி-3A பகுதிக்குள் காற்று நுழையும் வழி செய்தனர். நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 939-ஐ எட்டியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ள நிலையிலேயே, நீர்மின் தொழிலாளர்கள் 900 பேர்கள் தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது.
</p><p>மேலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3,925 ஆக அந்த முகமை திருத்தியுள்ளது, அவர்களில் 592 பேர் வெளிநாட்டினர் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><p> காணாமல் போனவர்களில் ஏறக்குறைய ஏழில் ஒருவர் நீர்மின் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என நம்பப்படுகிறது. அவ்விடங்களிலிருந்து 279 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா திங்களன்று தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>சீன மற்றும் நேபாள இராணுவத்தினரைக் கொண்ட ஒரு சர்வதேசக் குழு இந்த மீட்பு நடவடிக்கையை முன்னின்று நடத்துகிறது, அதேவேளையில் இந்தியா, கொரியா மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர். </p><p>நேபாளம் நீர்மின்சக்தியை பெருமளவில் சார்ந்துள்ளதுடன், தனது மலைப்பாங்கான ஆற்றுப் படுகைகளில் இத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக செலவிட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட அல்லது கட்டுமானத்தில் இருந்த குறைந்தது 11 திட்டங்கள் வெள்ளத்தில் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b88c4db-4839-4481-9cbf-c75a0b709ec4/26-6a9646e45bd2a.webp' /></p><p> </p><p>இதனிடையே, மீட்புக் குழுவினர் வார இறுதியில் சுரங்கத்திற்குள் காற்று நுழையும் வகை செய்தனர், ஆனால் அது முன்னதாகவே செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று உள்ளே சிக்கியவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர். </p><p>திங்கள்கிழமை பகல், ஒரு நீர்மின் நிலையத்திற்குச் செல்லும் சுரங்கப்பாதைக்குள் ஒரு குழுவால் நுழைய முடிந்தது, ஆனால் அங்கு யாரும் இல்லாததைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.</p><h2>நான்கு உடல்கள்</h2><p> </p><p>இந்த நிலையில், நிலத்தடி தேடுதல் பணிகளில் நேபாள அதிகாரிகளுக்குத் தொலைதூரத்திலிருந்து உதவி வரும் அவுஸ்திரேலியப் பொறியாளர் அர்னால்ட் டிக்ஸ், சுரங்கப்பாதைகளைக் கண்டறிவதில் மீட்புக் குழுவினர் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறினார். </p><p>சேறு மூடியுள்ளதால், மீட்புக் குழுவினரால் சுரங்கப்பாதைகளை அடையாளம் காண முடியாமல் உள்ளது என்றும், 
அவை எங்கு அமைந்துள்ளன என்பதை அறிந்த பிறகு, அவற்றைச் சென்றடைவதற்கான சிறந்த வழியை மீட்புக் குழுவினரால் தீர்மானிக்க முடியும் என்றும்; பொதுவாக இதற்காக நிலத்தைத் தோண்டுவதும் பாறைகளை வெடிவைத்துத் தகர்ப்பதும் அவசியமாகிறது என்றார். </p><p>மட்டுமின்றி, மேலே கொட்டிய பெருமழையிலிருந்து நிலத்தடிச் சூழல் ஒருவிதப் பாதுகாப்பை அளித்திருக்கக்கூடும் என்பதால், நிலத்தடியில் சிக்கியுள்ளவர்கள் குறித்து தனக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13488f67-8c04-4e39-af55-565fe50abd07/26-6a9646e513c6b.webp' /></p><p> </p><p>ஆனால், சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 7 நாட்களாகியுள்ளதால், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் நிலை தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது. மேலும், ஒரு சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களுக்கு ஆக்ஸிஜன் வசதி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் எஞ்சிய பலரது நிலை மோசமாக இருக்கவும் வாய்ப்புள்ளது என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>இதனிடையே, மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், சேறு நிரம்பிய மூன்று சுரங்கப் பாதைகளிலிருந்து நான்கு உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்தது. </p><p>கடந்த புதன்கிழமை பேரழிவு ஏற்பட்டபோது, ​​சில தொழிலாளர்களால் உதவிக்கு அழைப்பு விடுக்க முடிந்தது. மேலும், தப்பிய மற்றவர்கள், தங்கள் சக ஊழியர்களில் பலர் இன்னும் சுரங்கங்களில் சிக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T03:29:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்ட 2 கேரளாவை சேர்ந்த பெண்கள்: கொலையாளி அதிரடி கைது2]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-women-killed-in-california-milpitas-1788226630"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-women-killed-in-california-milpitas-1788226630</id>
            <summary type="text"> kerala women killed in California Milpitas :கலிபோர்னியாவில் கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.என்ன நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p> kerala women killed in California Milpitas :கலிபோர்னியாவில் கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>என்ன நடந்தது?</h2><p>ஆகஸ்ட் 28ம் திகதி கலிபோர்னியாவின் மில்பிடாஸ்(Moonnilavu in Kottayam) நகரில் மில் கிரிக் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி ஆன் மேரி மேத்யூ(40) என்ற திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> அதே அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே உள்ள டிக்சன் சாலையில் ஏற்பட்ட வாகன மோதல் தொடர்பாக&nbsp; முதலில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.</p><p> சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கேரளாவின் திருச்சூரை சேர்ந்த 35 வயது அஞ்சனா ஹரி என்ற பெண் ஒருவர் வாகனம் மோதியதில் சிக்கி பலத்த காயங்களுடன் வாகன நிறுத்துமிடத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b13936a2-0777-4eee-bfcb-585949392b68/26-6a962c4836bbe.webp' /></p><p></p><p> மேலும் இது தொடர்பாக விசாரணையை தொடங்கிய அதிகாரிகள், அஞ்சனா ஹரி மீது மோதி விட்டு தப்பிச் சென்ற நீல நிற எஸ்.யூ.வி (SUV) வாகனத்தை அடையாளம் கண்டனர்.</p><p>இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், தேடப்படும் நீல நிற எஸ்.யூ.வி (SUV) வாகனம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.</p><p> மேலும் அதன் ஓட்டுநரான கோட்டயத்தின் மூன்னிலவு பகுதியை சேர்ந்த 32 வயது அனிலா என்பவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.</p><p> இதற்கிடையில் வாகன மோதலில் உயிரிழந்த அஞ்சனாவும், அடுக்குமாடி குடியிருப்பில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மேரி மேத்யூவும், இந்த இரண்டு குற்றச்செயல்களை செய்ததாக சந்தேகிக்கப்படும் அனிலா மூவரும் ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>அத்துடன் கைது செய்யப்பட்ட அனிலாவும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தான் வசித்து வருகின்றனர் என்பதை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p> உயிரிழந்த இருவருக்கும் கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தங்கள் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகை கொண்டாடியுள்ளனர்.</p><p> இந்த கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. ஆனால் இது தொடர்பான தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T01:37:36+00:00</updated>
        </entry>
    </feed>
