<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-18T04:37:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான சுனாமி அலைகள் தாக்கக்கூடும்: மெக்சிகோவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்: மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mexico-7-3-earthquake-tsunami-warning-issued-1784349014"></link>
            <id>https://news.lankasri.com/article/mexico-7-3-earthquake-tsunami-warning-issued-1784349014</id>
            <summary type="text">மெக்சிகோவில் 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெக்சிகோவில் 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2> மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்</h2><p>மெக்சிகோ கடற்கரையை ஒட்டிய பகுதியில்&nbsp; 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.</p><p> ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தை ரிக்டர் 7.4 என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டு இருந்தாலும், பின்னர் அதன் அளவை ரிக்டர் 7.3 ஆக மாற்றி அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5aeb09d4-6095-4aae-87f4-f7532e9c9740/26-6a5b015914557.webp' /></p><p> &nbsp;மேலும் இந்த நிலநடுக்கம் சுமார் 10 கி.மீ ஆழத்தில் Aquiles serdan-க்கு தென்மேற்கே 48 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மிக முக்கியமான நில அதிர்வாக விஞ்ஞானிகள் இதனை வகைப்படுத்தும் நிலையில் பல உயர்மட்ட கட்டிடங்கள் மற்றும் சொகுசு விடுதிகள் ஆகியவையுடன் வேகமாக வளர்ந்து வரும் புவேர்ட்டோ மடேரோ பகுதிக்கு அருகில் இது ஏற்பட்டு இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2> சுனாமி எச்சரிக்கை</h2><p>&nbsp;7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்பட கூடும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2cb0557-9dbc-40fa-b890-d8eedd8cd86f/26-6a5b0157b3f47.webp' /></p><p>மேலும் ஏற்படும் சுனாமி அலைகள் நிலநடுக்க மையத்தில் இருந்து 186 மைல் சுற்றளவில் உள்ள பகுதிகளை தாக்கலாம் என்றும், அலைகள் கடல் மட்டத்தில் இருந்து 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் உயரம் வரை எழக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈக்வடார், எல் சால்வடார், நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ் மற்றும் பெரு ஆகிய நாடுகளின் கடற்கரையில் 0.3 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சுனாமி எச்சரிக்கை தொடர்ந்து பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கடற்கரை பகுதிகளை தவிர்க்குமாறு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T04:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு: 8 பேர் உயிரிழப்பு, டஜன் கணக்கானோர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-landslides-8-dead-several-missing-1784345745"></link>
            <id>https://news.lankasri.com/article/china-landslides-8-dead-several-missing-1784345745</id>
            <summary type="text">சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இதுவரை 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சீனாவில் நிலச்சரிவுவெள்ளிக்கிழமை தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரின் பெங்ஷுய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இதுவரை 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> சீனாவில் நிலச்சரிவு</h2><p>வெள்ளிக்கிழமை தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரின் பெங்ஷுய் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9.10 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p> இந்த நிலச்சரிவில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 34 பேர் வரை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e924613-eb7f-47f4-bfa1-50d9f3dec1df/26-6a5af49260a66.webp' /></p><p> நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 18 பேர் மீட்கப்பட்டதாகவும், அதில் 8 பேர் உயிரிழந்து விட்டதாகவும் மாவட்ட தலைவர் ரென் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.</p><p> இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2> மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 800க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் தீவிர பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக அங்குள்ள ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fc51f00-d48c-43e8-9a18-ee061a003525/26-6a5af4931070b.webp' /></p><p> மேலும் மலையடிவாரத்தில் அமைந்திருந்த வீடுகள் மற்றும் வணிக கடைகள் மண் மற்றும் பாறை சரிவில் மூடியிருப்பதை CCTV வெளியிட்ட காட்சிகளில் பார்க்க முடிகிறது.</p><p> மீட்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 50 மில்லியன் யுவான் தொகையை இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக அரசு ஒதுக்கியுள்ளது என்று நிதி மற்றும் அவசரகால மேலாண்மை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T03:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை பரிமாறிக் கொண்ட உக்ரைன் -ரஷ்யா: இதுவரை தெரியவராத உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-and-russia-exchange-dead-soldiers-body-1784278170"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-and-russia-exchange-dead-soldiers-body-1784278170</id>
            <summary type="text">போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர். வீரர்களின் உடல் பரிமாற்றம்உக்ரைன் ரஷ்யா இடையிலான போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர்.</p><h2> வீரர்களின் உடல் பரிமாற்றம்</h2><p>உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள்&nbsp; நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>இந்த போர் நடவடிக்கையில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் அவ்வப்போது பரிமாறிக் கொள்ளும் நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை போர்க்களத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் முறைப்படி பரிமாறிக் கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c26c8114-4a92-479f-992e-992dd5f72f00/26-6a59ec9c0fb34.webp' /></p><p> இந்த பரிமாற்றத்தில் கிட்டத்தட்ட 501 வீரர்களின் உடல்களை மீட்டு இருப்பதாக உக்ரைனிய அரசு தரப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.</p><p> அதே நேரத்தில் 31 வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் இருந்து பெற்று இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p></p><p> 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இருநாடுகளும் திரும்ப பெறும் உடல்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab62840-53f4-467e-b15b-0f123a6d8f68/26-6a59ec9cb25a8.webp' /></p><p> உக்ரைனிய அரசு இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 21,000 வீரர்களின் உடல்களை ரஷ்யாவிடம் இருந்து மீட்டுள்ளது.</p><p> ஆனால், இந்த ஆண்டில் ரஷ்யா சுமார் 600 உடல்களை மட்டுமே திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p> கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதே வேளையில் இருநாடுகளும் தங்கள் தரப்பு உயிரிழப்புகள் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவல்களையும் இதுவரை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்துள்ளனர்.</p><p>இதனால் இந்த போரில் ஏற்பட்டுள்ள உண்மையான உயிர் சேதம் குறித்த எந்தவொரு தகவலும் வெளிப்படையாக கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T03:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Nudify ஆப்ஸ்களை நீக்க Google, Apple நிறுவனங்களுக்கு உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apple-google-ordered-to-remove-nudify-apps-1784335946"></link>
            <id>https://news.lankasri.com/article/apple-google-ordered-to-remove-nudify-apps-1784335946</id>
            <summary type="text">அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு, “Nudify” எனப்படும் செயலிகளை (Apps) தங்களது App Store-களில் இருந்து ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு, “Nudify” எனப்படும் செயலிகளை (Apps) தங்களது App Store-களில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்த செயலிகள், புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி, அதில் உள்ளவர்களை நிர்வாணமாக காட்டும் திறன் கொண்டவை.
</p><p>
காலிஃபோர்னியா சட்டப்படி, “அனுமதி இல்லாமல் உருவாக்கப்படும் deepfake p0rn” தொடர்பான எந்தச் செயலையும் ஊக்குவிப்பது குற்றமாகும். 2025-இல், பாதிக்கப்பட்டவர்கள் மூன்றாம் தரப்பினரை எதிர்த்து வழக்கு தொடரும் உரிமையும் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc00222a-7233-41cc-82d3-cb5d9935aaeb/26-6a5ace4c3932b.webp' /></p><p>

சான் பிரான்சிஸ்கோ நகர சட்டத்தரணி டேவிட் சியூ, “ஆப்பிள் மற்றும் கூகுள், பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி, அனுமதி இல்லாத deepfake படங்களை உருவாக்கும் செயலிகளிலிருந்து லாபம் பெற்றுள்ளன. இவை உடனடியாக நீக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
Tech Transparency Project (TTP) வெளியிட்ட அறிக்கைகளில், கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில், ஆப்பிள் மற்றும் கூகுள் தங்களது App Store-களில் டசன் கணக்கான Nudify செயலிகளை வைத்திருந்ததாகவும், அவற்றின் மூலம் “non-consensual intimate images” விற்பனை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>ஆப்பிள், “இந்த செயலிகள் எங்கள் App Store விதிமுறைகளுக்கு எதிரானவை. மூன்று செயலிகளை ஏற்கனவே நீக்கியுள்ளோம். மேலும் நான்கு செயலிகள் விதிகளை மீறினால் அவற்றையும் நீக்குவோம்” என்று தெரிவித்துள்ளது.
</p><p>
கூகுள், “குறிப்பிட்ட ஐந்து செயலிகள் Google Play-இல் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ‘Nudify’ போன்ற தேடல் சொற்களையும் தடை செய்துள்ளோம்” என்று தெரிவித்தது.
</p><p>
இந்த நடவடிக்கை, deepfake தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை கட்டுப்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T00:50:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீ, வறட்சி, புயல்., வெப்ப அலை குறைந்தாலும் ஐரோப்பாவிற்கு தொடரும் ஆபத்துகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-battles-wildfires-droughts-storms-heatwaves-1784333829"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-battles-wildfires-droughts-storms-heatwaves-1784333829</id>
            <summary type="text">ஐரோப்பாவில் சமீபத்திய வெப்ப அலை குறைந்தாலும், காட்டுத்தீ, வறட்சி மற்றும் புயல் தாக்கங்கள் தொடர்ந்து மக்களை அச்சுறுத்துகின்றன.

ஸ்பெயினின் வடகிழக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவில் சமீபத்திய வெப்ப அலை குறைந்தாலும், காட்டுத்தீ, வறட்சி மற்றும் புயல் தாக்கங்கள் தொடர்ந்து மக்களை அச்சுறுத்துகின்றன.
</p><p>
ஸ்பெயினின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, சான் பிரான்சிஸ்கோ நகரின் பரப்பளவுக்கு இணையான பகுதியை எரித்துள்ளது. 1,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 30 விமானங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>பிரான்சில், மே மாத இறுதியிலிருந்து வறட்சி மோசமடைந்தது. மத்திய தரைக்கடலின் அதிக வெப்பம் காரணமாக, தெற்கு பிரான்சில் உள்ள எரிவாயு மின் நிலையம் மூடப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
</p><p>
ஜேர்மனியில், ரைன் நதியின் நீர் மட்டம் குறைந்ததால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், புயல் தாக்கம் காரணமாக பிரான்சில் இரண்டு பேர், ஜேர்மனியில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். ஸ்டுட்கார்ட் அருகே 'supercell' புயல் தாக்கத்தால், 5 செ.மீ. அளவிலான ஆலங்கட்டி மழை பெய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7191f3d7-64e5-4bc1-9c59-b89dfcefa1fa/26-6a5ac607488a5.webp' /></p><p>

ஸ்பெயினின் அரகோன் பகுதியில் 12,000 ஹெக்டேருக்கும் மேற்பட்ட காடு எரிந்துள்ளது. வீடுகள் காப்பாற்றப்பட்டன, மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால், விலை நிலம் அனைத்தும் எரிந்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கிரீஸின் அத்தென்ஸ் நகரில், காட்டுத்தீ அபாயம் அதிகரித்ததால், ட்ரோன்கள் மற்றும் நீர்த்துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
</p><p>
உலக சுகாதார நிறுவனம் (WHO), “ஐரோப்பாவில் இன்னும் பல உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக 10,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளன” என்று எச்சரித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T00:15:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை சூழும் கனடா காட்டுத்தீ புகை., புதிய சுங்க வரி விதிக்க ட்ரம்ப் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-warns-tariffs-on-canada-wildfire-smoke-1784330794"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-warns-tariffs-on-canada-wildfire-smoke-1784330794</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ புகை அமெரிக்காவை பாதித்துள்ளதாகக் கூறி, கனடாவிற்கு எதிராக புதிய சுங்க வரிகளை விதிக்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ புகை அமெரிக்காவை பாதித்துள்ளதாகக் கூறி, கனடாவிற்கு எதிராக புதிய சுங்க வரிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளார்.
</p><p>
ட்ரம்ப் தனது Truth Social தளத்தில், “கனடா தனது காடுகளை சரியாக பராமரிக்கவில்லை. இதனால் அமெரிக்கா தேவையில்லாமல், அசுத்தமான, மாசுபட்ட ஆபத்தான காற்றால் ஆக்கிரமிக்கப்படுகிறது. இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பதிவிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce4bd3c0-b2c8-47f2-a56e-37f9d4e804e1/26-6a5aba2d1eb61.webp' /></p><p>அவர், கனடா காட்டுத்தீ காரணமாக அமெரிக்கா சந்திக்கும் செலவுகள் “பில்லியன் டொலர்களில்” உள்ளன என்றும், அந்த செலவுகளை சமநிலைப்படுத்த சுங்க வரிகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கு பதிலளித்த கனேடிய பிரதமர் மார்க் கார்னி, “குற்றச்சாட்டுகள் விடுவதற்குப் பதிலாக உதவி அனுப்புவது தான் சரியான வழி. நாங்கள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா காட்டுத்தீயை அணைக்க உதவியுள்ளோம். அதேபோல், அமெரிக்காவும் எங்களுக்கு உதவ வேண்டும்” என்று கூறியுள்ளார்.</p><p></p><p>கனடாவில் 100-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் எரிந்து கொண்டிருப்பதால், புகை அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களுக்கு பரவி, நியூயார்க், வாஷிங்டன் DC, சிகாகோ போன்ற நகரங்களில் காற்றுத் தரம் மோசமடைந்துள்ளது. வாஷிங்டன் DC-யில் “Code Red” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
ட்ரம்ப், 2023-இல் மீண்டும் பதவியேற்ற பிறகு, கனடாவுக்கு எதிராக பல்வேறு சுங்க வரிகளை விதித்துள்ளார். இதனால், கனடியர்கள் அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த புதிய எச்சரிக்கை, அமெரிக்கா-கனடா உறவுகளை மேலும் பதற்றப்படுத்தும் அபாயம் உள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T23:47:59+00:00</updated>
        </entry>
    </feed>
