<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-13T15:42:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Chrome உபயோகிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்- இந்திய அரசு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-govt-warns-chrome-users-update-now-1783956990"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-govt-warns-chrome-users-update-now-1783956990</id>
            <summary type="text">இந்திய அரசு, Google Chrome உபயோகிப்பவர்களுக்கு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Windows, macOS மற்றும் Linux இயங்குதளங்களில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய அரசு, Google Chrome உபயோகிப்பவர்களுக்கு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

Windows, macOS மற்றும் Linux இயங்குதளங்களில் Chrome உபயோகிக்கும் கோடிக்கணக்கான பயனர்களை பாதிக்கக்கூடிய பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
</p><p>
இந்த எச்சரிக்கை, இந்திய கணினி அவசர நிலை எதிர்வினை குழு (CERT-In) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffcdb4bd-7b46-4b81-b5f3-6759c83607b1/26-6a5506014737a.webp' /></p><p>இதில், Chrome உலாவியில் “Use after free”, “Uninitialized use”, “Integer overflow”, “Out-of-bounds read/write” போன்ற பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இவை ஹேக்கர்களுக்கு, பயனர்களின் கணினியில் தீங்கிழைக்கும் குறியீடுகளை (malicious code) இயக்கும் வாய்ப்பை வழங்கக்கூடும்.

அதாவது, பயனர் தவறுதலாக ஒரு தீங்கிழைக்கும் இணையதளத்தை திறந்தால், ஹேக்கர்கள் கணினியை கட்டுப்படுத்தி, தனிப்பட்ட தகவல்களை திருடும் அபாயம் உள்ளது.</p><p></p><p>

இந்த குறைபாடுகள், Chrome 150.0.7871.114/.115 க்கு முன்பான பதிப்புகளில் காணப்படுகின்றன. எனவே, பயனர்கள் உடனடியாக Chrome-ஐ புதுப்பிக்க வேண்டும்.</p><p>Chrome-இல் “Settings--About--Update Chrome” என்ற வழியில் புதிய பதிப்பை பதிவிறக்கம் செய்யலாம். Google, புதிய அப்டேட்டில் பாதுகாப்பு திருத்தங்களை (security fixes) வெளியிட்டுள்ளது.</p><p>Chrome உலகளவில் மிகவும் பிரபலமான உலாவி என்பதால், இந்த பாதுகாப்பு குறைபாடுகள் தரவு கசிவு மற்றும் தனிப்பட்ட தகவல் திருட்டு போன்ற அபாயங்களை ஏற்படுத்தும்.
</p><p>
பயனர்கள், தங்கள் கணினி மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க உடனடியாக Chrome-ஐ அப்டேட் செய்வது மிக அவசியம்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T15:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க கட்டணம் வசூலிக்க ட்ரம்ப் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-plans-fee-for-guarding-hormuz-strait-1783956146"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-plans-fee-for-guarding-hormuz-strait-1783956146</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக உலகின் முக்கியமான நீரிணையான ஹார்முஸ் (Strait of Hormuz) தற்போது பெரும் பதற்றத்தில் உள்ளது.

அமெரிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக உலகின் முக்கியமான நீரிணையான ஹார்முஸ் (Strait of Hormuz) தற்போது பெரும் பதற்றத்தில் உள்ளது.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “இந்த நீரிணையை அமேரிக்கா காப்பாற்றி வருகிறது. ஆனால் இதுவரை எதுவும் பெறவில்லை. இனி பணக்கார நாடுகள் இதற்காக கட்டணம் செலுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>Fox &amp; Friends நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், “நாங்கள் ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றுகிறோம். இதை ‘Guardian Angel of the Strait’ என்று அழைக்கலாம். எங்கள் படைவீரர்கள் உயிரை பணயம் வைத்து பாதுகாப்பு செய்கிறார்கள். அதற்கான செலவை நாங்கள் மட்டும் ஏற்க முடியாது” என்று கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95bb7c57-2bf5-4106-9838-7446ee225cd0/26-6a5502b4613a1.webp' /></p><p>

அதே நேரத்தில், ஈரான் அரசு “அமெரிக்காவின் தாக்குதல்களால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை அனுமதி வழங்க முடியாது” என்று அறிவித்துள்ளது.
</p><p>
இந்த நீரிணை உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்துக்கு முக்கியமான பாதையாகும். அமெரிக்கா-ஈரான் மோதல் காரணமாக எரிபொருள் விலை மீண்டும் உயரக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
</p><p>
“ஈரானின் கடற்படை, விமானப்படை, ஏவுகணை திறன்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. நாங்கள் தொடர்ந்து தாக்குதலை நடத்துகிறோம்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இதனால், உலகளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.</p><p>

இந்த நிலைமை, சர்வதேச வர்த்தகத்துக்கும், உலக பொருளாதாரத்திற்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T15:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் மரணத்துக்கு தயாராகுங்கள்- ட்ரம்ப், நேதன்யாகுவிற்கு மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-warns-trump-netanyahu-of-sudden-death-1783953457"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-warns-trump-netanyahu-of-sudden-death-1783953457</id>
            <summary type="text">ட்ரம்ப் மற்றும் நேதன்யாகுவிற்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளும் மிரட்டல்களும் அதிகரித்துவருகின்றன.

ஈரானின் முக்கிய பத்திரிகைகள், அமெரிக்க செனட்டர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ட்ரம்ப் மற்றும் நேதன்யாகுவிற்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளும் மிரட்டல்களும் அதிகரித்துவருகின்றன.
</p><p>
ஈரானின் முக்கிய பத்திரிகைகள், அமெரிக்க செனட்டர் லின்ஸி கிரஹாம் மரணத்தை சுட்டிக்காட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட தலைவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளன.</p><p>
</p><p></p><p>Hamshahri என்ற தினசரி பத்திரிகை, “Get Ready for Sudden Death” என்ற தலைப்புடன், ட்ரம்ப் மற்றும் நேதன்யாகுவின் படங்களை வெளியிட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் எதிர்காலத்தில் இதேபோன்ற நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c5ed524-320d-4928-8040-0cb01d5d89d4/26-6a54f8331f504.webp' /></p><p>மற்றொரு பத்திரிகையான Vatan-e Emrooz, கிரஹாமை “Merchant of Death” என குறிப்பிட்டுள்ளது. ஈரான் அரச ஊடகங்களில், “இந்த போர்முனைவர் நரகத்திற்கு அனுப்பப்பட்டார்” எனும் கடுமையான கருத்தும் வெளிப்பட்டது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Islamic regime newspaper Hamshahri front cover for tomorrow shows President Trump holding a portrait of the late Senator Lindsey Graham, alongside Israeli PM Netanyahu, U.S. Chairman of the Joint Chiefs Gen. Dan Caine, U.S. war Secretary Hegseth, Israeli DM Israel Katz, and IDF… <a href="https://t.co/6iN9l1LZNy">pic.twitter.com/6iN9l1LZNy</a></p>&mdash; Open Source Intel (@Osint613) <a href="https://x.com/Osint613/status/2076393569254887638?ref_src=twsrc%5Etfw">July 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>லின்ஸி கிரஹாம், ஈரானுக்கு எதிரான அமெரிக்க கொள்கைகளின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அவர், ஈரான் ஆட்சியை மாற்ற வேண்டும் என்றும், இஸ்ரேல் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்றும் கூறியிருந்தார். சமீபத்தில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு அவர் வலுவான ஆதரவு அளித்தார்.
</p><p>
இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T14:38:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்து அணியை ரூ.91,895 கோடிக்கு வாங்கிய இந்திய வம்சாவளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-vinod-khosla-buys-nfl-team-9-6-bn-1783952572"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-vinod-khosla-buys-nfl-team-9-6-bn-1783952572</id>
            <summary type="text">இந்திய வம்சாவளியான வினோத் கோஸ்லா NFL அணியை ரூ.91,895 கோடிக்கு வாங்கியுள்ளார். 

NFL அணியை வாங்கிய இந்திய வம்சாவளி

அமெரிக்காவின் NFL அணியான சியாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வம்சாவளியான வினோத் கோஸ்லா NFL அணியை ரூ.91,895 கோடிக்கு வாங்கியுள்ளார். </p><h3>

NFL அணியை வாங்கிய இந்திய வம்சாவளி</h3><p>

அமெரிக்காவின் NFL அணியான சியாட்டில் சீஹாக்ஸ் அணியை இந்திய வம்சாவளியான வினோத் கோஸ்லா வாங்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc937a0-1ac9-4af9-967a-b074c7511bcd/26-6a54f4bf72b42.webp' /></p><p>

9.6 பில்லியன் டொலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.91,895 கோடி) இந்த அணியை வாங்குவதன் மூலம், NFL அணியை அதிக விலைக்கு வாங்குபவர் என்ற பெருமையை வினோத் கோஸ்லா பெறுகிறார். </p><p>

71 வயதான வினோத் கோஸ்லா, தனது குடும்பத்தினருடன் இணைந்து இந்த அணியை வாங்குகிறார்.&nbsp;</p><p></p><p>

முன்னதாக, சான் பிரான்சிஸ்கோ 49ers அணியின் 3.1% பங்குகளை வாங்கினார். NFL விதிப்படி, சியாட்டில் சீஹாக்ஸ் அணியை வாங்குவதால் 49ers அணியின் பங்குகளை விடுவிக்கிறார்.</p><h3> 

யார் இந்த வினோத் கோஸ்லே?</h3><p>

இந்தியாவின் புனேவில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த வினோத் கோஸ்லே, தனது இளம் வயதிலேஅமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து கோஸ்லா வென்ச்சர்ஸ் என்ற துணிகர மூலதன நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/005f8be1-609c-4871-b5b9-124c6fe5338c/26-6a54f4bec3e07.webp' /></p><p> 

மேலும், சன் மைக்ரோசிஸ்டம்ஸின் இணை நிறுவனராக உள்ளார்.
</p><p>
இவரின் நிறுவனம் Open AI ன் முதல் முதலீட்டாளராக இருந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு வரும் முன்னர், 2019 ஆம் ஆண்டிலே 50 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் $13.8 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T14:24:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு டூம்ஸ்டே விமானத்தை அனுப்பிய ரஷ்யா., மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-sends-doomsday-jet-to-iran-1783948004"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-sends-doomsday-jet-to-iran-1783948004</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் மோதல் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும் “டூம்ஸ்டே” விமானத்தை ஈரானுக்கு அனுப்பியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் மோதல் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும் “டூம்ஸ்டே” விமானத்தை ஈரானுக்கு அனுப்பியுள்ளது.</p><p>இந்த விமானம் சாதாரண VIP விமானம் அல்ல. இது ரஷ்யாவின் உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களை ஏற்றிச் செல்லும் Rossiya Special Flight Squadron-க்கு சொந்தமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00bf1a22-e4b2-4e81-869e-b01d0caf893c/26-6a54e2e68dc4b.webp' /></p><p>Tu-214PU, கடுமையான அச்சுறுத்தல்களிலும் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட, பாதுகாப்பான தொடர்பு மற்றும் Command-Control அமைப்புகளுடன் கூடிய 'வானில் பறக்கும் கட்டளை மையம்' ஆகும்.</p><p>அமெரிக்கா சமீபத்தில் ஈரானின் ஏவுகணை தளங்கள், ட்ரோன் அமைப்புகள், விமான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகளை தாக்கியுள்ளது.

இதற்கு பதிலளிக்க ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🇺🇸🇮🇷🇷🇺 Russia just flew their special airborne command post plane straight into Tehran.<br><br>This is the Russian version of Air Force One for crisis coordination. <br><br>Moscow is clearly rushing to back Iran while the U.S. keeps striking.<br><br>Source: <a href="https://x.com/flightradar24?ref_src=twsrc%5Etfw">@flightradar24</a> / Writer: Claudio <a href="https://t.co/c06156vfcR">pic.twitter.com/c06156vfcR</a></p>&mdash; Mario Nawfal (@MarioNawfal) <a href="https://x.com/MarioNawfal/status/2076512978413985844?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்த சூழ்நிலையில், ரஷ்யாவின் “டூம்ஸ்டே” விமானம் தெஹ்ரானில் தரையிறங்கியது, இது ரஷ்யா மற்றும் ஈரான் இடையிலான உயர் மட்ட இராணுவ மற்றும் அரசியல் ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது.
</p><p>
Tu-214PU, Tu-214 பயணிகள் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஆகும். 1989-இல் முதன்முதலாக பறந்த இந்த விமானம், பல்வேறு சிறப்பு பயன்பாடுகளுக்காக மாற்றப்பட்டுள்ளது. அதில் மிகவும் நவீனமயானது இந்த Tu-214PU விமானம்.
</p><p>
இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதைக் காட்டுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T13:35:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேஷன் கடை, பேருந்து பணிமனை - பெரம்பூர் தொகுதியில் முதல்முறையாக முதல்வர் விஜய் ஆய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-inspection-on-his-perambur-constituency-1783949068"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-inspection-on-his-perambur-constituency-1783949068</id>
            <summary type="text">&amp;nbsp;தனது பெரம்பூர் தொகுதிக்கு முதல்முறையாக சென்றுள்ள முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

 பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் ஆய்வு

2026 தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தனது பெரம்பூர் தொகுதிக்கு முதல்முறையாக சென்றுள்ள முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
</p><h3>
 பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் ஆய்வு
</h3><p>
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பெரம்பூர் எம்எல்ஏ ஆக தொடர்கிறார்.&nbsp;</p><p>

இந்நிலையில், வெற்றி பெற்ற முதல்முறையாக தனது பெரம்பூர் தொகுதிக்கு முதல்வர் விஜய் வருகை தந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f6a2986-9344-4a42-91f8-ca86d6c6b543/26-6a54e8885cf36.webp' /></p><p>

முதல்வர் வருவதால் சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.&nbsp;தெருக்களில் நடந்து சென்று முதல்வர் விஜய் மக்களிடம் நன்றி தெரிவித்தார்.</p><p>

அங்குள்ள தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் அந்த வளாகத்தில் உள்ள இ சேவை மையத்தை திறந்து வைத்துப் பார்வையிட்டார். பின்னர், அங்குள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5886d596-6bbd-4e4e-a0c1-e3382d0e1597/26-6a54e889113c8.webp' /></p><p>
அதன் பின்னர் பெரம்பூரில் உள்ள ரேஷன் கடையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். 

முதற்கட்டமாக 50 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கி விட்டு, 10 பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/302ad63f-9045-4a13-a2f9-90fb717b3bcd/26-6a54e889b8c8e.webp' /></p><p>

பிறகு, சர்மா நகர் 10ஆவது தெருவில் உள்ள ரேஷன் கடையினைப் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினை வழங்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9f9f62e-8b56-4724-8d51-17c5c6ba2b8a/26-6a54e8878b1fc.webp' /></p><p>

அங்குள்ள தவெக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய், அதன் பின்னர் வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைக்கு சென்று அங்குள்ள பேருந்துகளில் ஏறி ஆய்வு நடத்தினார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T13:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரம்பரியமான சுவையில் கருப்பட்டி பணியாரம்.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karupatti-paniyaram-recipe-in-tamil-1783946458"></link>
            <id>https://news.lankasri.com/article/karupatti-paniyaram-recipe-in-tamil-1783946458</id>
            <summary type="text">கருப்பட்டி உடலுக்கு மிகுந்த ஆற்றலையும், ஊட்டச்சத்தையும் தரக்கூடியது. 

வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் இது, ரத்தத்தை சுத்திகரித்து, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கருப்பட்டி உடலுக்கு மிகுந்த ஆற்றலையும், ஊட்டச்சத்தையும் தரக்கூடியது. </p><p>

வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் இது, ரத்தத்தை சுத்திகரித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.</p><p>

அதன்படி, கருப்பட்டி வைத்து செய்கின்ற இந்த பணியாரத்தை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.</p><p>

அந்தவகையில், தித்திக்கும் சுவையில் கருப்பட்டி பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள் </h2><ul><li>

பச்சரிசி- 2 கப் </li><li>
உளுந்து- 3 ஸ்பூன்</li><li> 
வெந்தயம்- 1 ஸ்பூன் </li><li>
கருப்பட்டி- 1½ கப் </li><li>
தண்ணீர்- ½ கப் </li><li>
ஏலக்காய்- 5</li><li>
சுக்கு பொடி- ½ ஸ்பூன்</li><li> 
உப்பு- ¼ ஸ்பூன் </li><li>
நெய்- தேவையான அளவு</li><li> 
தேங்காய் துருவல்- ¾ கப் </li><li>
கருஞ்சீரகம்- 1 ஸ்பூன் </li></ul><h2>

செய்முறை </h2><p>

முதலில் ஒரு கிண்ணத்தில் பச்சரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து கழுவி தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.</p><p>

அடுத்து ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து கரைத்து வடிகட்டி ஆறவைத்துக்கொள்ளவும்.</p><p>

பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, ஏலக்காய், சுக்கு பொடி, உப்பு மற்றும் சிறிதளவு கருப்பட்டி கரைசல் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4afe81d9-e03e-417d-8139-ee3bf56d046e/26-6a54dcdcb06a4.webp' /></p><p>இதற்கடுத்து அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி மூடிபோட்டு 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.</p><p>

பின்னர் இதில் மீதமுள்ள கருப்பட்டி கலவை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
இதனைத்தொடர்ந்து ஒரு வாணலில் நெய், தேங்காய் துருவல் மற்றும் கருஞ்சேரகம் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
</p><p>
இறுதியாக அடுப்பில் குழிப்பணியார சட்டி வைத்து நெய் சேர்த்து மாவை ஊற்றி பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான கருப்பட்டி பணியாரம் தயார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T12:43:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! சரித்திரம் படைத்த இந்திய மகளிர்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-team-beat-england-by-270-runs-1783945775"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-team-beat-england-by-270-runs-1783945775</id>
            <summary type="text">இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.&amp;nbsp;யஸ்டிகா பாட்டியா&amp;nbsp;சதம் 

இந்தியா மற்றும் இங்கிலாந்து மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.&nbsp;</p><h2>யஸ்டிகா பாட்டியா&nbsp;சதம் </h2><p>

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/193cb446-877a-44b6-a7b7-d088229e6aa8/26-6a54de9dd51aa.webp' /></p><p></p><p>
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 285 ஓட்டங்களும், இங்கிலாந்து 170 ஓட்டங்களும் எடுத்தன.
</p><p>
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 341 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. யஸ்டிகா பாட்டியா (Yastika Bhatia) 113 ஓட்டங்கள் எடுத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a372b346-7e92-45ab-b1d8-42bedd2ae2d4/26-6a54de9f75cae.webp' /></p><h2>

சரித்திர வெற்றி</h2><p>அடுத்து 457 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 186 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஸ்நேக் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59ad5977-7f31-47a4-b64b-b7354a0c758b/26-6a54dbf6a9291.webp' />&nbsp;</p><p>இதன்மூலம் இந்திய அணி 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரித்திர வெற்றி பெற்றது. </p><p>

142 ஆண்டுகால லார்ட்ஸ் கிரிக்கெட் வரலாற்றில் நடந்த முதல் மகளிர் டெஸ்டில் இந்திய வென்று சாதித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bd2aa52-74a0-41c8-b6cd-29cd7437f3d5/26-6a54de9ec26da.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0eafd354-67c3-4bbe-a476-2fa2d16fdd4d/26-6a54dbf60622e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T12:42:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-student-dies-us-crash-days-after-graduating-1783946315"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-student-dies-us-crash-days-after-graduating-1783946315</id>
            <summary type="text">கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணொருவர் சாலை விபத்தொன்றில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணொருவர் சாலை விபத்தொன்றில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.</p><h3>

கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்
</h3><p>
ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயியான அட்லூரி வசந்தராவின் மகள் பிரசன்னா அட்லூரி (25).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34843003-36b1-43b8-8cfd-bdc7f79c3547/26-6a54dc4d2c590.webp' /></p><p>
உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற அட்லூரி, சமீபத்தில்தான் தன் பட்டப்படிப்பை முடித்திருந்தார்.</p><p>

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, நியூயார்க்கிலுள்ள கோவில் ஒன்றிற்கு காரில் சென்றுள்ளார் பிரசன்னா. அவருடன் மூன்று பேர் பயணித்துள்ளார்கள்.</p><p>

நியூயார்க்கில் அவரது கார் சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார் ஒன்று நின்றுகொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது.&nbsp;</p><p></p><p>
இந்த துயர விபத்தில், பிரசன்னாவும், அவருடன் பயணித்த மற்றொருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மற்ற நபர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.</p><p>

தங்கள் சேமிப்பு முழுவதையும் செலவிட்டுத்தான் பிரசன்னாவை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளனர் அவரது பெற்றோர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95f30b53-a8ab-478f-8a69-e50c5106f143/26-6a54dc4dcf6bf.webp' /></p><p>
இந்நிலையில், மகள் படித்து முடித்தாயிற்று, இனி தாங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் பிரசன்னாவின் பெற்றோர் காத்திருக்க, மகள் உயிரிழந்துவிட்ட செய்தி கேட்டு அந்தக் குடும்பம் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது.</p><p>

ஏற்கனவே பிரசன்னாவின் கல்விக்கடனை அடைக்க பணம் தேவைப்படும் நிலையில், என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போயுள்ள அவரது குடும்பத்தினர், தங்கள் மகள் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T12:38:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பிரதமர் ராஜினாமா... மாற்றியமைக்கப்படும் கேபினட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-pm-yulia-svyrydenko-resigns-1783945589"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-pm-yulia-svyrydenko-resigns-1783945589</id>
            <summary type="text">உக்ரைன் ஜனாதிபதி கேபினட்டில் மாற்றம் செய்ய இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உக்ரைன் பிரதமர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உக்ரைன் பிரதமர் ராஜி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் ஜனாதிபதி கேபினட்டில் மாற்றம் செய்ய இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உக்ரைன் பிரதமர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
</p><h3>
உக்ரைன் பிரதமர் ராஜினாமா...</h3><p>

உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, கேபினட்டில் மாற்றங்கள் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bc55447-141c-4649-b42d-41769b886b53/26-6a54d97767219.webp' /></p><p>
ரஷ்யாவுடனான போரின்போது மேம்படுத்தப்பட்ட அரசியல் வியூகத்தை நடைமுறைப்படுத்த இந்த மாற்றங்கள் தேவை என்று கூறியிருந்தார் அவர்.
</p><p>
அதன் தொடர்ச்சியாகவே உக்ரைன் பிரதமரான யூலியா (Yulia Svyrydenko) தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
</p><p>
விடயம் என்னவென்றால், உக்ரைனைப் பொருத்தவரை, பிரதமர் ராஜினாமா செய்தார் என்றால், அவரைத் தொடர்ந்து முழு அமைச்சரவையும் ராஜினாமா செய்யவேண்டும்.&nbsp;</p><p></p><p>
யூலியா பிரதமராவதற்கு முன், நாட்டின் பொருளாதாரத்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பதவி வகித்தவர் ஆவார்.
</p><p>
யூலியா, வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க உக்ரைன் கனிமங்கள் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கியதன் மூலம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T12:29:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.1000 கடன் - 25,000 ஆக திருப்பி கொடுத்த நண்பர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-return-25000-for-1000-borrowed-35-years-ago-1783945196"></link>
            <id>https://news.lankasri.com/article/man-return-25000-for-1000-borrowed-35-years-ago-1783945196</id>
            <summary type="text">35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.1000 கடனை 25,000 ஆக அவரதுநண்பர் தற்போது திருப்பி வழங்கியுள்ளார்.

1991 ஆம் ஆண்டில் வாங்கிய ரூ.1000
கேரள மாநிலத்தை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.1000 கடனை 25,000 ஆக அவரதுநண்பர் தற்போது திருப்பி வழங்கியுள்ளார்.
</p><h3>
1991 ஆம் ஆண்டில் வாங்கிய ரூ.1000</h3><p>
கேரள மாநிலத்தை சேர்ந்த இஸ்மாயிலும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த லச்சன்னாவும், 1991 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் பணி செய்த போது ஒரே அறையில் 5 ஆண்டுகள் தங்கி நண்பர்களாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a3effc-2e67-4b1f-9936-5ba8bb42248b/26-6a54d7ee3f212.webp' /></p><p>
அப்போது, இஸ்மாயில் லச்சனாவிடம் இருந்து 120 சவூதி ரியால்களைக் கடனாக வாங்கியுள்ளார். அப்போது அதன் மதிப்பு இந்திய மதிப்பில் 1,000 ரூபாயாக இருந்தது.</p><p>

லச்சண்ணா அதன் பின்னர் இந்தியா திரும்பிய நிலையில், அந்த காலக்கட்டத்தில் கைபேசிகளோ சமூக ஊடகங்களோ இல்லாததால், இருவரிடையேயான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
ரூ.25,000 ஆக திருப்பியளித்த நண்பர்</h3><p>
ஆனால் அந்த கடனை மறக்காத இஸ்மாயில், அதனை திருப்பி தரவேண்டும் என நினைத்துள்ளார். லச்சண்ணா தெலுங்கானாவின் தர்மபுரியை சேர்ந்தவர் என்பது மட்டும் நினைவில் இருந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46688a66-529e-4098-a490-4f781f2833cf/26-6a54d7ed8c897.webp' /></p><p>
தர்மபுரிக்கு சென்ற அவர், அங்கு விசாரித்து லச்சண்ணாவின் வீட்டை கண்டுபிடித்து அப்போது வாங்கிய ரூ.1,000 ஐ, ரூ.25,000 ஆக அவரது குடும்பத்தினரிடம் திருப்பி வழங்கியுள்ளார்.</p><p>
இதனை தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் லச்சண்ணாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளார்.
</p><p>
35 ஆண்டுகளுக்கு பின்னர், ரூ.1000 த்தை ரூ.35,000 ஆக திருப்பி வழங்கிய இஸ்மாயிலின் செயலை கண்டு லச்சண்ணா வியப்படைந்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T12:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை காலம்! 50 ஆண்டுகால மைல்கல் கடந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/record-broken-heatwave-in-uk-after-50-years-1783943559"></link>
            <id>https://news.lankasri.com/article/record-broken-heatwave-in-uk-after-50-years-1783943559</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வரலாற்றிலேயே மிகவும் அதிக வெப்பநிலை கொண்ட காலமாக பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.50 ஆண்டுகளுக்கு முன்பு

1976ஆம் ஆண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வரலாற்றிலேயே மிகவும் அதிக வெப்பநிலை கொண்ட காலமாக பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>50 ஆண்டுகளுக்கு முன்பு</h2><p>

1976ஆம் ஆண்டு பிரித்தானியாவின் வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க கோடைக்காலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14f786f4-b910-4713-bee9-26098f2b1088/26-6a54d2c5283c7.webp' />&nbsp;</p><p></p><p>

அந்த ஆண்டில், அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு 14 நாட்கள் தொடர்ச்சியாக 30 டிகிரி செல்சியஸுக்கும் மேல் இருந்தது.</p><p>


ஆனால், தற்போது 15 நாட்களைக் கடந்து 50 ஆண்டுகால மைல்கல்லை பிரித்தானியா தாண்டியள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

the University of Reading-யின் வானியல் ஆய்வு மையம் 1908ஆம் ஆண்டு முதல் வெப்பநிலை குறித்த தரவுகளை பதிவு செய்து வருகிறது. </p><h2> 

முக்கியமான விடயத்தை நமக்கு உணர்த்துகிறது</h2><p>இதுகுறித்து The University of Reading-ஐ சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ சார்ல்டன்-பெரெஸ் கூறுகையில்,

"அரை நூற்றாண்டு காலமாக, ஒவ்வொரு வெப்பமான கோடைக்காலத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவுகோலாக 1976ஆம் ஆண்டு விளங்கியது. இப்போது அந்த இடத்தை 2026ஆம் ஆண்டு பிடித்துள்ளது.</p><p>1976யில் பதிவான 14 நாட்களை முறியடித்து, இந்த ஆண்டில் இதுவரை 30 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம் நிலவிய 15 நாட்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம்; மேலும் கோடைக்காலம் முடிவடைய இன்னும் ஆறு வாரங்கள் உள்ளன. இது ஒரு முக்கியமான விடயத்தை நமக்கு உணர்த்துகிறது" என்றார்.
</p><p>
 
இந்த வாரமும் வெப்பமான வானிலை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில நாட்களில் புதிய உச்சபட்ச சாதனை ஒன்று பதிவாக வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றன.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5b44a5-8724-459c-a94d-e93b1852c645/26-6a54d5dda7c81.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T11:57:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர்: சமீபத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/neuschwanstein-accust-fights-extradition-to-us-1783927780"></link>
            <id>https://news.lankasri.com/article/neuschwanstein-accust-fights-extradition-to-us-1783927780</id>
            <summary type="text">ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணொருவரை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர் ஒருவர், தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணொருவரை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர் ஒருவர், தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
</p><h3>
ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்கள்</h3><p>

அமெரிக்காவின் Illinois பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த ஈவா (Eva Liu, 21) மற்றும் கெல்சி (Kelsey Chang, 22) என்னும் இரண்டு இளம்பெண்கள், ஜேர்மனியிலுள்ள Neuschwanstein Castle என்னும் புகழ் பெற்ற மாளிகை ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e10bfeeb-df43-4d2f-a64e-7d0547ae463d/26-6a5493e6132b2.webp' /></p><p>&nbsp;இந்த மாளிகை பல்வேறு திரைப்படங்களில் காட்டப்பட்டுள்ளதுடன், டிஸ்னி திரைப்படங்கள் பலவற்றில் காட்டப்படும் மாளிகைகள் இந்த மாளிகையின் மாதிரியை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654160e6-d846-489d-b692-7aedb917ec6c/26-6a5493e6b7f57.webp' /></p><p>ஆகவே, ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Schwangau என்னுமிடத்தில் அமைந்துள்ள அந்த மாளிகையைக் காண, ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள்.
</p><h3>
கொடூர நபரிடம் சிக்கிய பெண்கள்</h3><p>

இந்நிலையில், அந்த மாளிகைக்கு சுற்றுலா சென்ற ஈவா மற்றும் கெல்சியை சந்தித்த அமெரிக்காவைச் சேர்ந்த ட்ராய் (Troy Bohling, 33) என்னும் நபர், தான் அந்த மாளிகையை ரொமாண்டிக்கான ஒரு இடத்திலிருந்து காண உதவுவதாகக் கூறி அவர்களை ஒரு பாலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63f42888-3ddf-4715-abc4-bec4e929c2d1/26-6a5493e767566.webp' /></p><p>ஆனால், அந்த இடத்துக்குச் சென்றதும் ட்ராய் ஈவாவை தரையில் தள்ளி அவரது உடைகளைக் களைய முற்பட்டிருக்கிறார். கெல்சி அவரைத் தடுக்க முயல, அவரைப் பிடித்து கீழே தள்ளியிருக்கிறார் அந்த நபர். </p><p>கெல்சி 160 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கெல்சி கீழே விழுந்ததைக் கண்டபிறகும் ஈவாவை விடாத அந்த நபர், சுயநினைவிழக்கும் வரை அவரது கழுத்தை நெறித்து, வன்புணர்ந்து, பின்னர் அவரையும் 160 அடி உயர பாலத்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். </p><p></p><p>
கீழே விழுந்த கெல்சிக்கு தலையில் அடிபட்டாலும் அவர் பிழைத்துக்கொண்டார். ஆனால், ஈவா உயிரிழந்துவிட்டார். கைது செய்யப்பட்ட ட்ராய்க்கு ஜேர்மனியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
நாடுகடத்துவதை எதிர்த்து வழக்கு
</h3><p>
ட்ராயின் தண்டனைக்காலம் முடிவடைந்ததும், அவர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட வெளியுறவு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e9e4b3-3c47-4500-b6c0-06d953754c09/26-6a5493e817ab1.webp' /></p><p>ஆனால், தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து Augsburg நகரிலுள்ள நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ட்ராய்.
</p><p>
தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்தினால், அங்கு தன் குற்றங்களுக்காக மீண்டும் ஒரு வழக்கு விசாரணையை தான் எதிர்கொள்ள நேரிடும் என்றும், அமெரிக்காவில் தனக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார் ட்ராய்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77e717e6-e2ff-44a2-aef1-37f753c5e313/26-6a5493e8c0910.webp' /></p><p>விடயம் என்னவென்றால், ஜேர்மன் சட்டப்படி, 20 முதல் 25 ஆண்டுகளுக்கு ஜேர்மன் சிறையில்தான் செலவிட இருக்கிறார் ட்ராய்.
</p><p>
ஆக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரை நாடுகடத்தும் ஆணை நிறைவேற்றப்படாமலும் போகலாம். இந்நிலையில், தனது தண்டனைக்காலத்துக்குப் பிறகு அவர் நாடுகடத்தப்படுவதைக் குறித்து, இப்போதைக்கு எந்த மறு ஆய்வு நடைமுறையும் இல்லை என அரசு சட்டத்தரணி அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T11:35:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தார் முன்னாள் மன்னர் மறைவுக்கு இந்தியாவில் தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-mourns-qatars-father-amir-1783941568"></link>
            <id>https://news.lankasri.com/article/india-mourns-qatars-father-amir-1783941568</id>
            <summary type="text">கத்தாரின் முன்னாள் மன்னர் மறைவுக்கு இந்தியாவில் தேசிய அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

கத்தாரின் தந்தை என அழைக்கப்படும் முன்னாள் மன்னர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கத்தாரின் முன்னாள் மன்னர் மறைவுக்கு இந்தியாவில் தேசிய அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
</p><p>
கத்தாரின் தந்தை என அழைக்கப்படும் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்-தானி 74 வயதில் நேற்று (ஜூலை 12) காலமானார். </p><p>அவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக இந்தியாவில் இன்று (ஜூலை 13) ஒரு நாள் தேசிய துக்கத்தை அனுசரிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f08cad15-d97b-46a1-bb1f-76211fd37359/26-6a54c9c2702e6.webp' /></p><p>இந்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அந்த நாளில் நாட்டின் அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், எந்தவிதமான அதிகாரப்பூர்வ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
பிரதமர் நரேந்திர மோடி, “ஷேக் ஹமத் ஒரு தலைவராக கத்தாரை அபாரமான வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் கொண்டு சென்றார். அவர் இந்தியாவின் உண்மையான நண்பர்” என்று சமூக ஊடகங்களில் அனுதாபம் தெரிவித்தார்.
</p><p></p><p>ஷேக் ஹமத் 1995 முதல் 2013 வரை கத்தாரை ஆட்சி செய்தார். அவரது ஆட்சிக் காலத்தில், கத்தார் உலகின் மிகப்பெரிய LNG (Liquefied Natural Gas) ஏற்றுமதி நாடாக உருவெடுத்தது.</p><p> மேலும், இந்திய-கத்தார் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் 1999, 2005 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்தார்.
</p><p>
கத்தார் அரசு நான்கு நாள் பொது துக்கத்தை அறிவித்துள்ளது. இந்திய அரசின் சார்பில், நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சரான கிரண் ரிஜிஜு விரைவில் கத்தாருக்கு சென்று அனுதாபம் தெரிவிக்க உள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T11:18:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் தலைநகர் அருகே வேகமாகப் பரவும் காட்டுத்தீ: 800 ஹெக்டேர் காடு கபளீகரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/massive-fontainebleau-wildfire-near-paris-1783940836"></link>
            <id>https://news.lankasri.com/article/massive-fontainebleau-wildfire-near-paris-1783940836</id>
            <summary type="text">பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு அருகே அமைந்துள்ள காடு ஒன்றில் காட்டுத்தீ வேகமாக பரவிவருகிறது.

வேகமாகப் பரவும் காட்டுத்தீ

பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு அருகே அமைந்துள்ள காடு ஒன்றில் காட்டுத்தீ வேகமாக பரவிவருகிறது.
</p><h3>
வேகமாகப் பரவும் காட்டுத்தீ
</h3><p>
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ளது Fontainebleau காடு.
</p><p>
மக்கள் பொழுதுபோக்குவதற்காக விரும்பிச் செல்லும் இடங்களில், இந்த Fontainebleau காடும் ஒன்றாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04663b1d-6e9b-4dc8-b559-bcf52d98a17c/26-6a54c6e599a78.webp' /></p><p>
ஆனால், தற்போது அந்தக் காட்டில் காட்டுத்தீ வேகமாகப் பரவிவருகிறது. சுமார் 800 ஹெக்டேர் காட்டை காட்டுத்தீ கபளீகரம் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
பாரீஸிலிருந்து வெளியே செல்லும் A6 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. தீ கேபிள்களை சேதப்படுத்தியதால் பாரீஸையும் Lyon நகரையும் இணைக்கும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது சீர் செய்யப்பட்டுவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், பாரீஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக தீயை அணைக்க தீயணைக்கும் விமானங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.
</p><p>
அத்துடன், கனடாவும் இரண்டு தீயணைக்கும் விமானங்களை அனுப்ப இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T11:07:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழிவாங்கும் பட்டியலில் ட்ரம்ப், மெலோனி உட்பட 13 பெயர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-newspaper-list-targets-world-leaders-1783934539"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-newspaper-list-targets-world-leaders-1783934539</id>
            <summary type="text">ஈரானில் வெளிவரும் பத்திரிக்கையொன்றில், கமேனி கொல்லப்பட்டதற்கான பழிவாங்கல் பட்டியலை வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிப்ரவரி 28 அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் வெளிவரும் பத்திரிக்கையொன்றில், கமேனி கொல்லப்பட்டதற்கான பழிவாங்கல் பட்டியலை வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா கமேனி பழிவாங்கும் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
</p><p>
இந்நிலையில், ஈரானின் தலைநகரில் இருந்து வெளிவரும் Hamshahri என்ற பத்திரிகை, 13 வெளிநாட்டு தலைவர்களின் புகைப்படங்களுடன் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது உலகளவில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40c518d3-17c2-43fa-bef2-6ee5339cc155/26-6a54ae4c6769e.webp' /></p><p>பத்திரிகையில் வெளியிடப்பட்ட பட்டியலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் ஆகியோரின் பெயர்கள் உள்ளனர்.
</p><p>
மேலும், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.</p><p></p><p>ஆனால், இந்த பட்டியல் ஈரான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லை. பத்திரிகை வெளியிட்ட தகவல் மட்டுமே. இருப்பினும், இது உலகளவில் பெரும் கவலைக்குரியதாக உள்ளது.
</p><p>
ஈரான், ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க தாக்குதல்களை கண்டிக்காததையும், அமெரிக்க விமானங்களுக்கு தங்கள் வான்வழியை பயன்படுத்த அனுமதித்ததையும் குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம், மத்திய கிழக்கு போரின் சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T10:20:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் இருந்து கிளம்பிய விமானத்தில் மோதிய பறவை: உயிர்தப்பிய 236 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-airways-flight-cancelled-for-bird-strike-1783936345"></link>
            <id>https://news.lankasri.com/article/british-airways-flight-cancelled-for-bird-strike-1783936345</id>
            <summary type="text">லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் மீது பறவை மோதியதால் ரத்து செய்யப்பட்டது. 500 அடி உயரத்தில்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் மீது பறவை மோதியதால் ரத்து செய்யப்பட்டது. </p><h2>500 அடி உயரத்தில்
</h2><p>
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 224 பயணிகள், 12 ஊழியர்களுடன் லண்டனில் இருந்து சென்னை நோக்கி பயணித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3802382e-7cbf-448a-98f5-192a70a30177/26-6a54b60505252.webp' />&nbsp;</p><p></p><p>
சென்னை சர்வதேச விமானத்தில் தரையிறங்குவதற்கு சுமார் 500 அடி உயரத்தில் விமானம் இருந்தபோது, திடீரென விமானத்தின் முன் பகுதியில் பறவை ஒன்று மோதியது.
</p><p>
விமானத்தின் எஞ்சின் பகுதிக்குள் அந்த பறவை சிக்கிக் கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கினார்.</p><h2> 

உயிர்தப்பிய&nbsp;236 பேர்</h2><p>இதன் காரணமாக, விமானத்தில் இருந்த 236 பேரும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
</p><p>
அதன் பின்னர் விமானத்தில் பறவை மோதியது குறித்து அறிந்த விமான பொறியாளர் குழுவினர், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்தனர்.
</p><p>
அப்போது பறவை மோதியதில் விமானம் சேதமடைந்திருந்ததால் அதனை உடனடியாக மீண்டும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. </p><p>

அதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு செல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc09458-e1d8-4caf-b05b-d92119d28940/26-6a54b605b2878.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T09:56:57+00:00</updated>
        </entry>
    </feed>
