<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-16T13:42:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனவுகளுடன் கனடாவுக்குச் செல்லும் மக்கள்: இணையம் காட்டும் காட்சிகள் உண்மையா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-return-indians-says-earned-10l-paid-tax-5l-1784209172"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-return-indians-says-earned-10l-paid-tax-5l-1784209172</id>
            <summary type="text">பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக செல்ல தேர்ந்தெடுக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்றாக உள்ளது.

ஆனால், இணையம் காட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக செல்ல தேர்ந்தெடுக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்றாக உள்ளது.</p><p>

ஆனால், இணையம் காட்டும், சுத்தமான காற்று, அமைதியான வாழ்க்கை என்னும் காட்சிகள் உண்மையா?
</p><h3>
இந்தியர் ஒருவரின் அனுபவம்</h3><p>

கனடாவில் நிரந்தரமாக வாழ்வதற்காக கனடா சென்ற இந்தியரான ஹர்ஷ் குப்தா, கனடா வாழ்க்கை இணையத்தில் காட்டப்படுவது போல் இல்லை என்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cf1da3d-7a52-4c5e-ba32-4f2ea3dec4be/26-6a58df15de777.webp' /></p><p>

நீங்கள் கனடாவுக்குச் செல்ல விரும்பும் ஒரு இந்தியர் என்றால், ஒரு அனுபவஸ்தன் என்னும் முறையில் நான் உங்களுக்கு சில ஆலோசனைகளைக் கூற விரும்புகிறேன் என்கிறார் குப்தா.&nbsp;</p><p></p><p>
கனடாவுக்குச் செல்ல விரும்புவோரின் முதல் தேவை, ஒரு நல்ல வேலை. ஆனால், பலரும் எதிர்பார்ப்பதுபோல, நல்ல சம்பளத்தில் ஒரு வேலை கிடைப்பது கனடாவில் கடினம் என்கிறார் அவர்.
</p><p>
அடுத்த அதிர்ச்சி, வரிகள் என்று கூறும் குப்தா, தான் தன் தொழில் மூலமாக மாதம் ஒன்றிற்கு 10 லட்ச ரூபாய் சம்பாதித்ததாகவும், ஆனால், 5 லட்ச ரூபாய் வரி செலுத்தியதாகவும் தெரிவிக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99186cd2-e11e-449a-b890-0383ca5eae6d/26-6a58df1691937.webp' /></p><p>
கனடாவின் மருத்துவ அமைப்பு குறித்து பேசும் குப்தா, தான் மருத்துவரை சந்திப்பதற்காக 6 மாதங்கள் காத்திருந்ததாகவும், மருந்துகளும் விலையும் அதிகம் என்றும் கூறுகிறார்.
</p><p>
வானிலை மற்றொரு சவாலான விடயம் என்று கூறும் குப்தா, கனடாவின் நீண்ட கோடை காலம், அன்றாட வாழ்வை பாதித்ததாகவும், வெறும் குளிராக மட்டுமல்ல, அது மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
</p><p>
விலைவாசியும் மிக அதிகம் என்று கூறும் குப்தா, அது மக்களுடைய வாழ்க்கைத்தரத்தையும், கனடா குறித்த பார்வையையும் மாற்றிவிடுவதாகவும் தெரிவிக்கிறார்.
</p><p>
அத்துடன், தன்னைப் பொருத்தவரை, நிரந்தரக் குடியுரிமை பெறுவது கடினமாக இருந்ததாக தெரிவிக்கும் குப்தா, கனடா வாழ்க்கை என்பது எல்லோருக்குமானது அல்ல, உணவு விநியோகம், ட்ரக் சாரதி வேலை, விவசாயம் என ஏதாவது வேலை செய்யத் தயார் என்றால், சமாளித்துக்கொள்ளலாம். </p><p>மற்றபடி கஷ்டம் என்கிறார்.

ஆக, இணையத்தில் காட்டப்படும் இயற்கைக் காட்சிகளையும், சுத்தமான காற்று, அமைதியான வாழ்க்கை என்னும் விடயங்களையும் நம்பி நீங்கள் கனடாவுக்குச் செல்வீர்களானால், முதல் 4 முதல் 5 மாதங்கள் நன்றாக இருக்கும், அப்புறம் கஷ்டம்தான் என்கிறார் குப்தா!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:39:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா - அதிரடி முடிவெடுத்த இந்திய அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/isro-scientists-mass-resignations-tighten-rules-1784208564"></link>
            <id>https://news.lankasri.com/article/isro-scientists-mass-resignations-tighten-rules-1784208564</id>
            <summary type="text">100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ள நிலையில், விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா

இந்திய விண்வெளி ஆர...</summary>
            <content type="html"><![CDATA[<p>100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ள நிலையில், விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. </p><h3>

இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா
</h3><p>
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் கடந்த சில மாதங்களில், அனுபவம் வாய்ந்த 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb3b72ef-bde2-4e51-9e5d-d3daae1fb33f/26-6a58dcb63665a.webp' /></p><p>

பெங்களூரு யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்திலிருந்து மட்டும் சுமார் 80 விஞ்ஞானிகளும், திருவனந்தபுரம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலிருந்து சுமார்30 விஞ்ஞானிகளும் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p></p><p>

எல்விஎம் 3 (LVM-3) திட்ட இயக்குநர், ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்ட இயக்குநர், சந்திரயான் - 3 திட்டத்தின் உருவகப்படுத்துதல் (simulations) பிரிவு மேலாளர் உள்ளிட்ட பல முக்கிய விஞ்ஞானிகளும் வெளியேறியுள்ளனர். </p><h3> 

என்ன காரணம்?
</h3><p>
இந்தியாவில், 400க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இவை கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 150 மில்லியன் டொலர் முதலீடுகளை ஈர்த்துள்ளன. </p><p>

விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவனங்களின் ஈடுபாட்டை அதிகரிக்க மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்கள் மூத்த விஞ்ஞானிகளை தங்களது நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் நியமிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
</p><p>
இஸ்ரோவில் இருந்து விலகும் விஞ்ஞானிகள் இது போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இணைந்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb4f55db-bef7-4034-9f5f-d9d96f90d881/26-6a58dcb6f0c51.webp' /></p><p> 

சமீபத்தில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் சென்னையை தளமாக கொண்டு இயங்கும் அக்னிகுல் என்று நிறுவனத்தில் இணைந்துள்ளார்.</p><p> 

மூத்த விஞ்ஞானிகளின் தொடர் விலகல்களால் இஸ்ரோவின் ககன்யான் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. </p><p>

இதனால், ககன்யான் போன்ற முக்கிய திட்டங்களில் பணியாற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் தன்னார்வ ஓய்வு (VRS), ராஜினாமா கோரிக்கைகளை அந்த திட்டங்கள் முடியும் வரை இனி வழக்கமான நடைமுறையாக ஏற்கக் கூடாது என்று என்று அனைத்து இஸ்ரோ மைய இயக்குநர்கள் மற்றும் பிரிவு தலைவர்களுக்கும் விண்வெளித் துறை உத்தரவிட்டுள்ளது.
</p><p>
மேலும், விஞ்ஞானி/பொறியாளர்-எஸ்ஜி நிலை வரையிலான அதிகாரிகளின் தன்னார்வ ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை மைய இயக்குநர்களே ஏற்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மாற்றி சம்பந்தப்பட்ட மைய இயக்குநர்களின் பரிந்துரையுடன் இறுதி முடிவுக்காக விண்வெளித் துறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2719ead1-3bc1-4d75-b015-12b607b6a71d/26-6a58dcb7cb298.webp' /></p><p>
இது குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், "பலர் நிறுவனங்களை விட்டு வெளியேறுவது சாதாரணமான ஒன்றுதான். 

இந்த புதிய விதியானது விஞ்ஞானிகளைத் தடுத்து வைப்பதற்காக மட்டுமின்றி, நாட்டின் முக்கியத் திட்டங்கள் திடீரெனத் தொய்வடைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இஸ்ரோ இதனைச் சீராகக் கையாண்டு வருகிறது" என விளக்கமளித்தார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:29:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றி கொண்டாட்டத்தில் பாக்லண்ட் தீவு பதாகை - சிக்கலில் அர்ஜென்டினா வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/argentina-to-face-action-for-falklands-banner-fifa-1784205700"></link>
            <id>https://news.lankasri.com/article/argentina-to-face-action-for-falklands-banner-fifa-1784205700</id>
            <summary type="text">இங்கிலாந்தை வீழ்த்திய வெற்றி கொண்டாட்டத்தில் ஃபாக்லண்ட் தீவு பதாகையை ஏந்தியது அர்ஜென்டினா வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. 

வெற்றி கொண்டாட்டத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தை வீழ்த்திய வெற்றி கொண்டாட்டத்தில் ஃபாக்லண்ட் தீவு பதாகையை ஏந்தியது அர்ஜென்டினா வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. </p><h3>

வெற்றி கொண்டாட்டத்தில் பாக்லண்ட் தீவு பதாகை</h3><p>2026 பிபா உலக கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில், அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. </p><p>

இதில், 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ள உள்ளது. </p><p>

இங்கிலாந்தை வீழ்த்திய பின்னர், அர்ஜென்டினா வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தின் போது பயன்படுத்திய பதாகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86c358ea-748a-46e2-8794-10649137ca1b/26-6a58d1858ceb9.webp' /></p><p> 

அர்ஜென்டினா வீரர்கள் "லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்" என்று எழுதப்பட்ட பதாகையை வைத்து வெற்றியை கொண்டாடினர். இதற்கு, "ஃபாக்லண்ட் தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை" என்று பொருள் ஆகும்.</p><h3> 

பாக்லாந்து தீவுகள்
</h3><p>
தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பாக்லாந்து தீவுகள் யாருக்கு சொந்தம் என்பதில் அர்ஜென்டினா மற்றும் பிரித்தானியா இடையே மோதல் நிலவி வருகிறது. </p><p>

இந்த தீவுகளுக்காக, 1982 ஆம் ஆண்டில் அர்ஜென்டினா மற்றும் பிரித்தானியா இடையே நடைபெற்ற சுமார் 2 மாத கால போரில், அர்ஜென்டினாவைச் சேர்ந்த 655 வீரர்களும், பிரித்தானியாவை சேர்ந்த 255 வீரர்களும், அந்த தீவுகளைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்தனர். இறுதியில், அர்ஜென்டினா சரணடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ccee8b5-e97f-4440-8eae-842cb6274440/26-6a58d18640ff2.webp' /></p><p> </p><p>

அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அர்ஜென்டினா துணை ஜனாதிபதி விக்டோரியா வில்லாரூயல், "ஃபாக்லண்ட் தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை, அவற்றை மைதானத்திற்குள் கொண்டு வர அவர்கள் தடை விதித்தார்கள்.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="es" dir="ltr">¡Las Malvinas son Argentinas! 🇦🇷 Prohibieron llevarlas a la cancha y se olvidaron que las llevamos en la sangre y el corazón. <a href="https://t.co/qB455HeqVX">pic.twitter.com/qB455HeqVX</a></p>&mdash; Victoria Villarruel (@VickyVillarruel) <a href="https://x.com/VickyVillarruel/status/2077519309652316181?ref_src=twsrc%5Etfw">July 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

ஆனால் நாம் அவற்றை நமது ரத்தத்திலும் இதயத்திலும் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டார்கள்" என பதிவிட்டுள்ளார். </p><p>

மேலும், அர்ஜென்டினா ராணுவ வீரர்கள் உள்ள வீடியோவை பகிர்ந்து, இது மற்றுமொரு சாதாரண போட்டி இல்லை என பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>
இந்த போட்டிக்கு முன்னதாக "நாளை நாம் அபகரிக்கும் கொள்ளையர்களுக்கு எதிராக விளையாடுகிறோம். இது மற்றுமொரு சாதாரணப் போட்டி அல்ல" என பதிவிட்டிருந்தார். </p><p>

இவ்வாறு மைதானத்தில் அரசியலை கலப்பது விதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதால், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானியாவின் வர்த்தகம் மற்றும் வணிகத்துறை செயலாளர் பீட்டர் கைல் பிபாவிடம் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a44daf91-f123-4416-8bb6-e1a937806a2d/26-6a58d186e57a6.webp' /></p><p>

 கால்பந்து மைதானங்களுக்குள் அரசியல், மதம் அல்லது தனிப்பட்ட முழக்கங்கள், சின்னங்கள் மற்றும் கொடிகளைப் பயன்படுத்துவதற்கு பிபா தடை விதித்துள்ளது. 

இதனை மீறும் அணி அல்லது வீரர்களுக்கு அபராதம் அல்லது விளையாட தடை போன்ற கடும் நடவடிக்கைகளை பிபா மேற்கொண்டுள்ளது.</p><p> 

முன்னதாக 2014 ஆம் ஆண்டிலும், ஸ்லோவேனியாவுக்கு எதிரான ஒரு நட்புப் போட்டிக்கு முன்பாக அர்ஜென்டினா வீரர்கள் இதே போன்ற பேனரை ஏந்தியதற்காக, அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திற்கு பிபா 20,000 பவுண்டுகள் அபராதம் விதித்திருந்தது.</p><p>

இந்நிலையில், அர்ஜென்டினா வீரர்கள் இந்த செயல் குறித்து பிபா விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

ஏற்கனவே, நடுவர்கள் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி, எகிப்து கால்பந்து சம்மேளனம் (EFA) பிபாவிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தது. </p><p>

argentinaout.org என்று இணையதளத்தில் அர்ஜென்டினாவை வெளியேற்றுக என்ற கையெழுத்து பிரச்சாரத்தில், தற்போது வரை 1.41 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T12:45:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோவிட் தொற்றுக்கு இருவர் பலி... பரபரப்பாகும் இந்திய மாநிலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-death-as-covid-resurfaces-in-andhra-pradesh-1784203586"></link>
            <id>https://news.lankasri.com/article/2-death-as-covid-resurfaces-in-andhra-pradesh-1784203586</id>
            <summary type="text">இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு பேர் கோவிட் தொற்றுக்கு பலியாகியுள்ளதைத் தொடர்ந்து அம்மாநிலம் பரபரப்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு பேர் கோவிட் தொற்றுக்கு பலியாகியுள்ளதைத் தொடர்ந்து அம்மாநிலம் பரபரப்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.</p><h3>

கோவிட் தொற்றுக்கு இருவர் பலி...
</h3><p>
ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் எட்டு பேருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், இரண்டு பேர் கோவிட் தொற்றுக்கு பலியாகிவிட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கோவிட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ca300ac-b4d9-4f6b-918f-01babc6ce2d7/26-6a58c944dd75d.webp' /></p><p>&nbsp;கடப்பா மாவட்டத்தில் இரண்டு பேர் கோவிடுக்கு பலியானதைத் தொடர்ந்து, ஆந்திரப்பிரதேச சுகாதாரத்துறை அந்த பகுதியிலிருந்து 40 பேரிடம் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளது.&nbsp;</p><p></p><p>
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கோவிட் பரிசோதனைகள் துவக்கப்பட்டுள்ளன.
</p><p>
இரத்த மாதிரிகள் சேகரிக்கச் செல்வோர் பாதுகாப்பு உடைகள் அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62971b0d-29e4-44e7-b567-bf211131165f/26-6a58c94438fa6.webp' /></p><p>
அரசு மருத்துவமனைகளிலும், 10 படுக்கைகள் கொண்ட வார்டுகள் கோவிட் நோயாளிகளுக்காக தயார் நிலையில் வைக்க ஆந்திரப்பிரதேச சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p>
தொற்று பரவலைத் தடுப்பதற்காக, கைகளைக் கழுவுதல், மாஸ்க் அணிதல் போன்ற நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், அருகிலுள்ள ஒடிஷா மாநிலமும், ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் கோவிட் சோதனைகளைத் துவக்கியுள்ளதுடன், சுகாதாரத்துறையினர் தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாக டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T12:06:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணைக்கொலைச் சட்டம்: பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-parliment-approves-assisted-dying-bill-1784200532"></link>
            <id>https://news.lankasri.com/article/france-parliment-approves-assisted-dying-bill-1784200532</id>
            <summary type="text">பிரான்சில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுவந்த கருணைக்கொலைச் சட்டம், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கீழவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

நாடாளுமன்ற உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுவந்த கருணைக்கொலைச் சட்டம், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கீழவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.</p><h3>

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்
</h3><p>
கருணைக்கொலை மசோதாவுக்கு ஆதரவாக 291 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 241 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க, பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f30c69a-4d15-464d-9531-f06daab21425/26-6a58bd55c591d.webp' /></p><p>
அடுத்ததாக, ஒரு சட்டம் அரசியலமைப்பிற்கு இணங்குகிறதா என்பதைச் சரிபார்க்கும் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பான அரசியலமைப்பு சபையிடம், மசோதாவின் சில விதிகளை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>
இந்த சட்டம், தீவிரமான மற்றும் குணப்படுத்த முடியாத, உயிருக்கு ஆபத்தான நோய் முற்றிய அல்லது இறுதிக்கட்டத்தில் உள்ள வயதான பிரான்ஸ் குடிமக்கள், தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள வழிவகுக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/058c8cce-0519-4b28-b3e7-327fdd56a8a5/26-6a58bd567959f.webp' /></p><p>
அந்த நோய், அவர்களால் தாங்க முடியாத நோயாகவும், சிகிச்சைக்குக் கட்டுப்படாததாகவும், தொடர்ச்சியான உடல் அல்லது மன வேதனையில் ஆழ்த்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.
</p><p>
விடயம் என்னவென்றால், இதேபோல ஏற்கனவே மூன்று முறை இந்த மசோதா கீழவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டும், மேலவையில் நிராகரிக்கப்பட்டுவிட்டது.</p><p>

என்றாலும், பெரும்பான்மை பிரான்ஸ் மக்கள் இந்த சட்டத்துக்கு ஆதரவாக இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஆக, இம்முறை மேலவை என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T11:24:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு நிற சவப்பெட்டியில் டிரம்ப்: ஈரானின் பிரம்மாண்ட விளம்பர பலகை: அதிகரிக்கும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tehran-viral-billboard-about-trump-death-1784200459"></link>
            <id>https://news.lankasri.com/article/tehran-viral-billboard-about-trump-death-1784200459</id>
            <summary type="text">ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிரான விளம்பர பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சர்ச்சைக்குள்ளான விளம்பர பலகைஈரான் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிரான விளம்பர பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சர்ச்சைக்குள்ளான விளம்பர பலகை</h2><p>ஈரான் அமெரிக்கா இடையே மோதலானது மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில் அமைந்துள்ள என்கேலாப் சதுக்கத்தில்(Enghelab Square) வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை ஒன்று சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.</p><p>அதில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருப்பு நிற சவப்பெட்டியில் கிடப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3279ba7-a89f-41de-8fa9-ab1f8027173e/26-6a58bd0cd199e.webp' /></p><p> மேலும் கருப்பு நிற சவப்பெட்டியின் மீது அச்சுறுத்தும் விதமாக பாரசீகம் மற்றும் ஆங்கில மொழியில் “டிரம்பை நாங்கள் கொல்வோம்” (we will kill trump) என எழுதப்பட்டுள்ளது.</p><p></p><p> மறைந்த ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதி சடங்கில் பயன்படுத்தப்பட்ட நினைவேந்தல் பலகையை போலவே இதுவும் வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> மேலும், காமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் பள்ளி கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் குறித்தும் அஞ்சலி வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.</p><p> மேற்கத்திய நாடுகளை ஈரான் இத்தகைய விளம்பரங்கள் மூலம் விமர்சிப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், தற்போதைய விளம்பரம் மிகவும் ஆக்ரோஷமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T11:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய நிதி அமைச்சராக பதவி உயர்வு பெறும் ஷபானா மஹ்மூத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-to-name-mahmood-as-uk-finance-minister-1784178122"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-to-name-mahmood-as-uk-finance-minister-1784178122</id>
            <summary type="text">பிரித்தானியாவில், உள்துறைச் செயலராக அதிரடி புலம்பெயர்தல் கொள்கைகளை முன்வைத்த ஷபானா மஹ்மூத், நாட்டின் நிதி அமைச்சராக பதவி உயர்வு பெற இருப்பதாக தகவல் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில், உள்துறைச் செயலராக அதிரடி புலம்பெயர்தல் கொள்கைகளை முன்வைத்த ஷபானா மஹ்மூத், நாட்டின் நிதி அமைச்சராக பதவி உயர்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
நிதி அமைச்சராகும் ஷபானா மஹ்மூத்</h3><p>

பிரித்தானிய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக இருந்தவரான ஆன்டி பர்னாம் என்பவர் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86d76a62-749d-4d22-b99c-babbf4d223e1/26-6a5865ccec75b.webp' /></p><p>
ஆன்டி பர்னாம், வரும் திங்கட்கிழமை, லேபர் கட்சியின் தலைவராகவும், பிரித்தானியாவின் பிரதமராகவும் பொறுப்பேற்க இருக்கிறார்.</p><p>

ஆன்டி பர்னாம் பிரதமராக பொறுப்பேற்றதும், அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
குறிப்பாக, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர்ந்தோரை கலங்கடித்துவரும் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதுக்கு, பிரித்தானியாவின் நிதி அமைச்சராக பதவி உயர்வு அளிக்கப்பட இருப்பதாக ஆன்டி பர்னாமுக்கு நெருக்கமான சிலரை மேற்கோள் காட்டி Financial Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e47f6707-637b-4816-b13a-660777b01986/26-6a5865cc40ffe.webp' /></p><p>
இது ஷபானாவுக்கு பதவி உயர்வு என கூறப்பட்டாலும், இன்னொரு பக்கம், உள்துறையில் கவனம் ஈர்க்கும் வகையில் செயல்பட்ட ஷபானாவுக்கு, பொருளாதாரக் கொள்கையில் பெரிதாக அனுபவம் இல்லை என இப்போதே ஊடகங்கள் எழுதத் துவங்கிவிட்டன.
</p><p>
ஆக, ஸ்டார்மரின் வீழ்ச்சிக்கு அவர் புலம்பெயர்தலைக் கையாண்ட விதம் மட்டுமல்ல, அவரது பொருளாதாரக் கொள்கைகளும்தான் காரணம் என கூறப்படும் நிலையில், அனுபவம் குறைந்த ஷபானா எப்படி நிதி அமைச்சராக சமாளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T10:04:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் கடல்வழி பாதையை முடக்கிய உக்ரைன்: 116 ரஷ்ய கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/116-russian-ships-under-ukraine-attack-in-azov-1784196201"></link>
            <id>https://news.lankasri.com/article/116-russian-ships-under-ukraine-attack-in-azov-1784196201</id>
            <summary type="text">ரஷ்யாவின் 116 கப்பல்கள் மீது உக்ரைன் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. முடங்கிய ரஷ்யாவின் கப்பல் போக்குவரத்துஉக்ரைனின் தீவிரமான ட்ரோன் மற்றும் ஏவுகண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் 116 கப்பல்கள் மீது உக்ரைன் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2> முடங்கிய ரஷ்யாவின் கப்பல் போக்குவரத்து</h2><p>உக்ரைனின் தீவிரமான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலினால் அசோவ் கடலில் ரஷ்யாவின் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.</p><p> ரஷ்யா மற்றும் உக்ரைனின் எல்லைகளில் அமைந்துள்ள கெர்ச் நீரிணை வழியாக கருங்கடலுடன் இணையும் ஒரு கடல் அசோவ் ஆகும்.</p><p> இந்நிலையில் கெர்ச் நீரிணை மற்றும் அசோவ் கால்வாய் பகுதியில் உக்ரைனிய படைகள் நடத்தி வரும் தொடர் ட்ரோன் தாக்குதல் காரணமாக இந்த வழியாக செல்லும் அனைத்து ரஷ்ய கப்பல்களும்&nbsp; தங்கள் பயணத்தை நிறுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87f72a70-b602-4e1c-8f5b-21b8430647bc/26-6a58ac6a6321a.webp' /></p><p></p><p> கப்பல் போக்குவரத்து தரவுகள் மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.</p><h2>இலக்கு வைக்கப்பட்ட 116 ரஷ்ய கப்பல்கள்</h2><p>கடந்த 9 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 116 ரஷ்ய கப்பல்கள் அசோவ் கடல் பகுதியில் உக்ரைனிய ட்ரோன்களால் தாக்கப்பட்டுள்ளன.</p><p> இந்த தகவலை உக்ரைனிய ட்ரோன் படைப்பிரிவு தளபதி ராபர்ட் ப்ரோவ்டி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> ரஷ்ய கப்பல்களின் இந்த முடக்கம் காரணமாக, ரஷ்யாவின் எண்ணெய், கோதுமை, சூரியகாந்தி எண்ணெய், எஃகு ஆகியவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.</p><p> கோதுமை ஏற்றுமதியில் மட்டும் 25%-ஐ இந்த வழித்தடம் வழியாக ரஷ்யா உலக நாடுகளுக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.</p><p> எனவே இந்த கடல் முடக்கம் நீடித்தால் ரஷ்யாவிற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T10:03:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருங்கும் தேர்தல்கள்: வாக்காளர்களுக்கு ஜேர்மன் சேன்ஸலரின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/merz-request-to-afd-voters-in-upcoming-polls-1784195180"></link>
            <id>https://news.lankasri.com/article/merz-request-to-afd-voters-in-upcoming-polls-1784195180</id>
            <summary type="text">ஜேர்மன் மாகாணங்கள் சிலவற்றில் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சி ஒன்று, ஒரு மாகாணத் தேர்தலில் பெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் மாகாணங்கள் சிலவற்றில் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சி ஒன்று, ஒரு மாகாணத் தேர்தலில் பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், அது குறித்து ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
</p><h3>
ஜேர்மன் மாகாண தேர்தல்கள்
</h3><p> 
ஜேர்மனியின், Saxony-Anhalt, Mecklenburg-Western Pomerania மற்றும் Berlin மாகாணங்களில் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f072be-82ed-4912-9acf-d94099712ec6/26-6a58a86e21b20.webp' /></p><p>
Saxony-Anhalt மாகாணத்தைப் பொருத்தவரை, புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி, 40 சதவிகித வாக்குகள் வரை பெற்று வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.</p><p>

இந்த விடயம் குறித்துத்தான் ஊடகவியலாளர்கள் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸிடம் கேள்வி எழுப்பினார்கள்.&nbsp;</p><p></p><p>
முதலில் AfD கட்சி குறித்த கேள்வியை தவிர்க்க முயன்ற மெர்ஸ், பின்னர் அதிரடியாக அக்கட்சி வாக்காளர்களுக்கே ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e3cf9af-b4da-4df1-8191-cefceacf7fab/26-6a58a86d7438c.webp' /></p><p>
AfD கட்சி வாக்காளர்களுக்கும் நான் ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கவனித்துப் பாருங்கள், நாங்கள் இந்த நாட்டின் சுதந்திரத்தையும், அமைதியையும் பாதுகாக்க பாடுபடுகிறோம், இந்த நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் நாங்கள் பாடுபடுகிறோம்.
</p><p>
ஆகவே, சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை மட்டுமே நம்பி வாக்களிக்காதீர்கள், அதையும் தாண்டி, ஃபெடரல் அரசு என்ன செய்ய முயற்சிக்கிறது என்பதை பார்த்து முடிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளார் மெர்ஸ்.</p><p>

AfD கட்சி Saxony-Anhalt மாகாணத் தேர்தலில் வெற்றி பெறுமானால், 1933ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிர வலதுசாரிக் கட்சி ஒன்றால் ஆளப்படும் முதல் மாகாணம் என்ற நிலை அந்த மாகாணத்துக்கு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T09:46:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே போட்டியில் 51 சிக்ஸர்கள், 3 சதங்கள், 8 சாதனைகள் - MI நியூயார்க் அணியை வீழ்த்திய WAF]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/multiple-records-chasen-in-miny-vs-waf-in-mlc-1784194410"></link>
            <id>https://news.lankasri.com/article/multiple-records-chasen-in-miny-vs-waf-in-mlc-1784194410</id>
            <summary type="text">MIநியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகளுக்கு இடையேயான போட்டியில், பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

 MI நியூயார்க் அணியை வீழ்த்திய WAF

...</summary>
            <content type="html"><![CDATA[<p>MIநியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகளுக்கு இடையேயான போட்டியில், பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.
</p><h3>
 MI நியூயார்க் அணியை வீழ்த்திய WAF</h3><p>

அமெரிக்காவின் T20 லீக்கான மேஜர் லீக் கிரிக்கெட்(MLC) T20 தொடர் கடந்த ஜூன் 18 ஆம் திகதி தொடங்கி ஜூலை 18 ஆம் திகதி வரை நடைபெற்றது. </p><p>

இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில், வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மோதியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/739240a4-9910-4bb5-b3ef-9d4bbcade3ec/26-6a58a56e0c7f8.webp' /></p><p> 

நாணய சுழற்சியில் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. </p><p>

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 269 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/121ec210-c2b9-4833-b63a-0552a52041a3/26-6a58a56c04376.webp' /></p><p>

அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் தரப்பில், நிக்கோலஸ் பூரன் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 13 சிக்ஸர்கள் உட்பட 106 ஓட்டங்கள் குவித்தார். </p><p>

கீரன் பொல்லார்ட், 25 பந்துகளில் 1 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 64 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/908b938a-d752-4732-a557-ed0d5462b45b/26-6a58a56ca8e6a.webp' /></p><p>

வாஷிங்டன் ஃப்ரீடம் தரப்பில், ரச்சீன் ரவீந்திரா 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.&nbsp;&nbsp;</p><p></p><p>

தொடர்ந்து, 270 ஓட்டங்கள் என்று வெற்றி இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் ஃப்ரீடம், 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்கள்குவித்து வெற்றி பெற்றுள்ளது. </p><p>

அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆண்ட்ரீஸ் கௌஸ் சதம் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a90e2ef-95b4-4028-82a9-171e1c705ac9/26-6a58a56eb2b96.webp' /></p><p>

ஸ்மித், 48 பந்துகளில், 7 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உட்பட 110 ஓட்டங்கள் குவித்தார். ஆண்ட்ரீஸ் கௌஸ் 51பந்துகளில், 10 பவுண்டரி, 12 சிக்ஸர்கள் உட்பட 132 ஓட்டங்கள் குவித்தார்.
</p><h3>
சாதனைகள் </h3><p>

இந்த வெற்றி மூலம், டி20 வரலாற்றிலேயே மிக அதிகபட்ச இலக்கை விரட்டிப் பிடித்த அணி என்ற சாதனையை வாஷிங்டன் ஃப்ரீடம் அணி படைத்துள்ளது.</p><p> 

முன்னதாக 2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்களை சேஸ் செய்ததே அதிகபட்சமாக இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e26f438-a1b4-4fc4-956f-004084823a40/26-6a58a56f62195.webp' /></p><p> 

மேலும், MLC T20 வரலாற்றில் வாஷிங்டன் ஃப்ரீடம் எடுத்துள்ள 270 ஓட்டங்களே ஒரு அணி எடுத்துள்ள மொத்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.
</p><p>
ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரு பிளேஆஃப் அல்லது நாக்-அவுட் போட்டியில் எந்தவொரு அணியும் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.</p><p>

இரு அணிகளும் சேர்ந்து இந்த போட்டியில், 51 சிக்ஸர்கள் விளாசியுள்ளதன் மூலம், ஒரு T20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை படைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a21332a9-dd2a-40f6-a42c-a89b69477869/26-6a58a56d590a0.webp' /></p><p>

முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் PBKS அணிகளும், 2024 CPL தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளும் தலா 42 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
</p><p>
நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரீஸ் கோஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகிய மூவரும் சதம் அடித்ததன் மூலம், ஒரு டி20 போட்டியில் 3 வீரர்கள் சதம் அடித்த முதல் போட்டி என்ற பெருமையை பெற்றது.&nbsp;</p><p>

31 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம், MLC T20 வரலாற்றில் அதிவேக சதமடித்த சாதனையை நிக்கோலஸ் பூரன் படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23ef24b1-c89d-4c5c-81ae-66ffef2d55a9/26-6a58a570126b2.webp' /></p><p> 

மேலும், MLC T20 வரலாற்றில் சதமடித்த முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை ஆண்ட்ரீஸ் கோஸ் பெற்றுள்ளார். </p><p>

இந்த போட்டியில் அடித்த 8 சிக்ஸர்கள் மூலம் மொத்தமாக 1001 சிக்ஸர்கள் அடித்துள்ள கீரன் பொல்லார்ட் T20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்களை கடந்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

1056 சிக்ஸர்களுடன் சக மேற்கிந்திய தீவுகள் வீரரான கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T09:33:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இந்திய இளைஞருக்கு 15 முறை கத்திக்குத்து: அரங்கேறிய மதவெறித் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-muslim-worker-stabbed-15-times-in-us-utah-1784193766"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-muslim-worker-stabbed-15-times-in-us-utah-1784193766</id>
            <summary type="text">அமெரிக்காவில் வணிக வளாகத்தில் இந்தியாவை சேர்ந்த முஸ்லிம் வாலிபர் ஒருவர் 15 முறைக்கு மேல் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் வணிக வளாகத்தில் இந்தியாவை சேர்ந்த முஸ்லிம் வாலிபர் ஒருவர் 15 முறைக்கு மேல் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> நீ ஒரு முஸ்லிமா?</h2><p>
அமெரிக்காவின் உட்டாவின் வெஸ்ட் வேலி பகுதியில் அமைந்துள்ள Valley Fair Mall என்ற வணிக வளாகத்தில் உள்ள நகைக்கடையில் இந்தியாவை சேர்ந்த சோஹைல் என்ற நபர் வேலை பார்த்து வந்துள்ளார்.</p><p>கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல அவர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, நகைக் கடைக்கு வந்த 48 வயது பீட்டர் மைக்கேல் லார்சன் என்ற நபர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.</p><p> அவருக்கு தண்ணீர் எடுப்பதற்காக சோஹைல் திரும்பிய போது அவரை மைக்கேல் கத்தியால் குத்தியுள்ளார்.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cb4a1fa-f19b-421a-8b01-c2a9fee05d61/26-6a58a2e77b410.webp' /></p><p> மேலும் அவரிடம் நீ எந்த ஊர்? உன் அடையாளம் என்ன? என பல கேள்விகளை தாக்குதல்தாரி கேட்டுள்ளார். உடனே தான் ஒரு இந்தியன் என்றும், முஸ்லிம் என்றும் சோஹைல் தெரிவித்துள்ளார்.</p><p> இதையடுத்து தாக்குதல்தாரியான மைக்கேல் கத்தியால் பல முறை சொஹைலை குத்தியுள்ளார். இதில் அவருக்கு உடலில் 15 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளது.</p><p> அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p>தாக்குதல்தாரியான பீட்டர் மைக்கேல் லார்சனை பொலிஸார் கைது செய்து சால்ட் லேக் கவுண்டி சிறையில் அடைத்துள்ளனர்.</p><h2> மனிதநேயம் முதன்மையானது</h2><p>
இந்நிலையில் “சோஹைல் 2 குழந்தைகளுக்கு அப்பா, அவர் தன்னுடைய குடும்பத்திற்காக தினமும் உழைக்க கூடிய எளிய மனிதர்.&nbsp; தாக்குதல் நடக்கும் போது நான் அந்த இடத்தில் இருந்து இருந்தால் என் உயிரை கொடுத்து கூட காப்பாற்றி இருப்பேன்.</p><p> இந்த உலகிற்கு வெறுப்பு வேண்டாம். அன்பு மட்டுமே வேண்டும். மனிதநேயமே எல்லாவற்றையும் விட முதன்மையானது” என சோஹைல் பணிபுரியும் கடையின் உரிமையாளர் அட்னான் முகமது தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T09:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் அணு மின் நிலையத்தின் அருகே பறந்த ட்ரோன்களால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/security-concern-drones-buzz-swiss-nuclear-plant-1784189016"></link>
            <id>https://news.lankasri.com/article/security-concern-drones-buzz-swiss-nuclear-plant-1784189016</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்திலுள்ள அணு மின் நிலையம் ஒன்றின் அருகே ட்ரோன்கள் பறந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

அணு மின் நிலையத்தின் அருகே பறந்த ட்ரோன்கள்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்திலுள்ள அணு மின் நிலையம் ஒன்றின் அருகே ட்ரோன்கள் பறந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><h3>
அணு மின் நிலையத்தின் அருகே பறந்த ட்ரோன்கள்</h3><p>

சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்திலுள்ள Gösgen என்னுமிடத்தில், அணு மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/863eb0e8-51e1-45e2-809d-f88f0e903630/26-6a58905962680.webp' /></p><p>
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று அந்த மின் நிலையத்தை நோக்கி ஏழு ட்ரோன்கள் பறந்துவருவதைக் கண்ட உள்ளூர்வாசி ஒருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.</p><p>

அதைத் தொடர்ந்து அங்கு பொலிசார் குவிக்கப்பட்ட நிலையில், அனு மின் நிலையத்தின் பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
அந்த ட்ரோன்கள் ஏன் அணு மின் நிலையத்தை நோக்கி வந்தன என்பது தெரியவில்லை. அவற்றை இயக்கியது யார், அவற்றை பொலிசார் கைப்பற்றினார்களா என்பது குறித்து எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
</p><p>
இதற்கிடையில், ட்ரோன்கள் அல்ல ஒரு விமானமே அந்த அணு மின் நிலையம் மீது மோதினாலும், அதனால் அணு மின் நிலையத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அந்த அளவுக்கு அந்த அணு மின் நிலையம் பாதுகாப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளது என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T08:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்முறையாக அமெரிக்காவை முந்திய சீனா - இந்தியர்கள் எந்த நாட்டை நம்புகின்றனர்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/1st-time-countries-view-positive-on-china-than-us-1784188414"></link>
            <id>https://news.lankasri.com/article/1st-time-countries-view-positive-on-china-than-us-1784188414</id>
            <summary type="text">பியூ ரிசர்ச்சின் கருத்துக்கணிப்பின்படி, முதல்முறையாக அமெரிக்காவை விட சீனாவை அதிக நாடுகள் சாதகமாக கருதுகின்றன.

அமெரிக்காவை முந்திய சீனா
உலக வல்லரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பியூ ரிசர்ச்சின் கருத்துக்கணிப்பின்படி, முதல்முறையாக அமெரிக்காவை விட சீனாவை அதிக நாடுகள் சாதகமாக கருதுகின்றன.
</p><h3>
அமெரிக்காவை முந்திய சீனா</h3><p>
உலக வல்லரசான அமெரிக்கா தற்போதையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் 2வது பதவிக்காலத்தில் வரிவிதிப்பு, ஈரான் மீது தாக்குதல் என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>

இந்நிலையில், பல உலக நாடுகள் அமெரிக்காவை விட சீனாவை நம்ப தொடங்கியுள்ளதாக பியூ ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>

ஈரான் மீதான அமெரிக்கா தாக்குதல் தொடங்கிய பிப்ரவரி 8 முதல் மே 13 வரை பியூ ரிசர்ச் நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/338a452b-4875-4448-865a-4d7b776ab43a/26-6a588dff5ec2e.webp' /></p><p>
20 ஆண்டுகளாக இது குறித்து உலகளாவிய கருத்துக்களைக் கண்காணித்து வரும் இந்த நிறுவனம், முதல் முறையாக அமெரிக்காவை விட சீனாவை உலக நாடுகள் அதிக சாதகமாகப் பார்ப்பதாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>

36 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட 25 நாடுகள் அமெரிக்காவை விட சீனாவை சாதகமாக பார்க்கின்றன.</p><p> 

பிரித்தானியா, பிரேசில் உள்ளிட்ட 5 நாடுகள் இரு நாடுகளையும் சமமாக கருதுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5298264b-8a3c-4e1e-ab00-66d9a38945b4/26-6a588e00142b2.webp' /></p><p>

இந்தியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், போலந்து ஆகிய 6 நாடுகள் மட்டுமே சீனாவை விட அமெரிக்காவை சாதகமாக கருதுகின்றன.</p><p> 

3 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவை சாதகமாக கருதும் நாடுகள் 58 சதவிகிதமும், சீனாவை சாதகமாக கருதும் நாடுகள்32 சதவிகிதமும் இருந்த நிலையில், தற்போது அமெரிக்காவை சாதகமாக கருதும் நாடுகள் 36 சதவிகிதமாக குறைந்துள்ளது. </p><h3>

ட்ரம்ப்பை முந்திய ஷி ஜின்பிங்
</h3><p>
அதேவேளையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இருவர் மீதும் நம்பிக்கையில், ஹங்கேரி, பிரேசில், கொலம்பியா, இந்தியா, இஸ்ரேல், ஜப்பான், பிலிப்பைன்ஸ், போலந்து ஆகிய 8 நாடுகள் ட்ரம்ப்பை நம்புகின்றனர்.&nbsp;</p><p>

தென் கொரியா உள்ளிட்ட 6 நாடுகள் இருவரையும் சமமாக கருதுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af1253f0-06ac-4853-b92b-a4c2795310b8/26-6a588e00b8919.webp' /></p><p>

ஆனால், பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஸ்பெயின் உள்ளிட்ட 22 நாடுகள் ட்ரம்ப்பை விட ஷி ஜின்பிங்கை நம்புகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T07:54:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்ஸியின் கையில் குழந்தையாக லாமின் யாமல்: 20 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை! வைரல் புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fifa-world-cup-messi-yamal-20-yrs-old-viral-photo-1784188179"></link>
            <id>https://news.lankasri.com/article/fifa-world-cup-messi-yamal-20-yrs-old-viral-photo-1784188179</id>
            <summary type="text">மெஸ்ஸி கையில் குழந்தையாக இருந்த லாமின் யமால் இன்று அவருக்கு எதிராகவே உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட இருப்பது ஆச்சரியத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெஸ்ஸி கையில் குழந்தையாக இருந்த லாமின் யமால் இன்று அவருக்கு எதிராகவே உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> லாமின் யமாலை கையில் ஏந்திய மெஸ்ஸி</h2><p>உலக எதிர்பார்த்து காத்திருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியும் ஸ்பெயின் அணியும் மோதவுள்ளன.</p><p> அர்ஜென்டினா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸிக்கும்(Lionel Messi), ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமான லாமின் யமாலுக்கும்(Lamine Yamal) இடையிலான விளையாட்டை காண ஒட்டு மொத்த கால்பந்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f97c05e2-8d7a-4dc4-b2e4-d6979de3eb4d/26-6a588d1547432.webp' /></p><p> மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ள இந்த மோதல், நம்மை 2007ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு அழைத்து செல்கிறது.</p><p> 20 வயது இளம் வீரராக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த லியோனல் மெஸ்ஸி, Diario Sport என்ற பத்திரிக்கைகாக UNICEF தொண்டு நிறுவனத்தின் புகைப்பட நிகழ்வில் கலந்து கொண்டார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e093028-5b9a-4a86-83ed-da0acefb4d82/26-6a588d15ede57.webp' /></p><p>அதில் மெஸ்ஸி குழந்தை ஒன்றை குளிப்பாட்டி தன் கையில் தாங்கியிருப்பது போன்ற அழகான புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.</p><p> சுமார் 20 ஆண்டுகளாக இந்த புகைப்படம் யாருக்கும் தெரியாமல் இருந்த வந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு யமாலின் தந்தை தன்னுடைய சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிறகு தான் உலக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p> ஆம். மெஸ்ஸி குளிப்பாட்டி புகைப்படம் எடுத்து கொண்ட குழந்தை, இன்று பார்சிலோனா அணியின் மிகச் சிறந்த இளம் வீரராக உருவெடுத்துள்ள லாமின் யாமல் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d247f0c-fc83-4c6a-964e-d867c0e0ca7f/26-6a588d169ebb1.webp' /></p><h2> 2026 உலகக் கோப்பை கால்பந்து</h2><p>2026 உலகக் கோப்பை கால்பந்து அதன் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கால்பந்து உலகின் ஜாம்பவானாக பார்க்கப்படும் லியோனல் மெஸ்ஸியை, அவர் கையில் சிறிய குழந்தையாக இருந்த லாமின் யமால் நேருக்கு நேர் மோதவுள்ளார்.</p><p> 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி வெறும் போட்டி மட்டுமல்ல. கால்பந்து விளையாட்டின் ஆளுமையும், கால்பந்து விளையாட்டின் எதிர்காலமும் சங்கமிக்கும் ஒரு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T07:49:55+00:00</updated>
        </entry>
    </feed>
