<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-19T10:28:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்டான் மீது பாய்ந்த ஈரான் ஏவுகணை: கொல்லப்பட்ட 2 அமெரிக்க வீரர்கள், ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-attacked-jordan-2-us-soldiers-killed-1784454613"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-attacked-jordan-2-us-soldiers-killed-1784454613</id>
            <summary type="text">ஜோர்டான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
ஜோர்டான் மீது வெள்ளிக்கிழமை ஈரான் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்டான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்</h2><p>
ஜோர்டான் மீது வெள்ளிக்கிழமை ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம்(CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> ஜூலை 17ம் திகதி இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p> இதில் 2 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதுடன், ஒருவர் காணாமல் போய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aad089e-f5ec-4060-863a-a55bccb07ceb/26-6a5c9dd752e85.webp' /></p><p> அத்துடன் காயமடைந்த 4 அமெரிக்க வீரர்கள் உடனடியாக ஜோர்டானில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.</p><p> அமெரிக்க ராணுவத்தின் நெறிமுறைகள் படி, தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு பிறகே உயிரிழந்த வீரர்களின் விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் (CENTCOM) அறிவித்துள்ளது.</p><p> ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த மோதல் தொடங்கியதில் இருந்து 16 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 430 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p></p><h2> அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை</h2><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CENTCOM Statement on Recently Fallen, Missing U.S. Service Members<br><br>TAMPA, Fla. — On July 17, two U.S. service members in Jordan were killed in action as U.S. Central Command (CENTCOM) and partner forces defended against Iranian ballistic missile and drone attacks. Additionally,…</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2078530691109974522?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script><br></p><p>அமெரிக்க வீரர்களின் உயிரிழப்பு தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ள அதே நேரத்தில், அமெரிக்காவுக்கு ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.</p><p> அதில், ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடங்களை ஈரான் கற்பிக்கும் என்று எச்சரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T09:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கென்ட் பகுதியில் 7000 வீடுகளில் குடிநீர் விநியோக தடை: நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/7000-homes-in-kent-affected-in-water-outage-1784451730"></link>
            <id>https://news.lankasri.com/article/7000-homes-in-kent-affected-in-water-outage-1784451730</id>
            <summary type="text">கென்ட் பகுதியில் உள்ள சுமார் 7000 வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மார்ட்டின் தகவல் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கென்ட் பகுதியில் உள்ள சுமார் 7000 வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மார்ட்டின் தகவல் தெரிவித்துள்ளார்.</p><h2> பிரித்தானியாவில் குடிநீர் தட்டுப்பாடு</h2><p>
பிரித்தானியாவின் கென்ட்(Kent) பகுதியில் கிட்டத்தட்ட 7000 வீடுகளுக்கு குடிநீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.</p><p> நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட கருவி கோளாறு காரணமாக இந்த தற்காலிக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> கிடைத்துள்ள தகவல்களின் படி, Sandhurst, Pembury மற்றும் South Tunbridge wells ஆகிய பகுதிகளில் தற்காலிக குடிநீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/980839ee-2afe-4535-9024-de041d086e70/26-6a5c9294282f0.webp' /></p><p></p><p> 7000 வீடுகளுக்கு குடிநீர் விநியோகத் தடை ஏற்பட்டு இருப்பதாக சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 8000 ஆக இருக்கலாம் என்று உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மார்ட்டின் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> குடிநீர் தடையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக டன்பிரிட்ஜ் வெல்ஸில் உள்ள பெம்புரி சாலையில் இருக்கும் Tesco சூப்பர் ஸ்டோரில் இலவச குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.</p><p> மேலும் மற்றொரு குடிநீர் விநியோக மையமும் விரைவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T09:02:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத இறுதியில் இடம்பெயரும் சனி- புதன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-sani-transit-1784449898"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-sani-transit-1784449898</id>
            <summary type="text">நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

அதேபோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.</p><p>

அதேபோல், நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனி நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.</p><p> 

இந்நிலையில், ஜூலை 24 அன்று புதன் கிரகம் தனது வக்ர நிலையை முடித்துக்கொண்டு மீண்டும் நேரடி இயக்கத்தைத் தொடங்கப்போகிறார் .
</p><p>
அதேசமயம், ஜூலை 27 அன்று சனி பகவான் தனது வக்ர பயணத்தைத் தொடங்கப்போகிறார்.
</p><p>
அந்தவகையில், இந்த மாத இறுதியில் இடம்பெயரும் புதன் மற்றும் சனியால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலனங்களை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>மிதுனம் </h2><ul><li>

சாதகமான பலன்களை கொடுக்கும். </li><li>
தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.</li><li>
நிதி நிலைத்தன்மை இருக்கும். </li><li>
நிலுவையில் உள்ள பணிகள் முன்னேற்றம் காணக்கூடும்.</li><li>அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.</li><li>
மேலம் நீண்ட கால முதலீடுகள் நல்ல பலன்களை தரும்.
</li><li>வருமான ஆதாரங்கள் உருவாகும். </li><li>
மன வலிமை அதிகரிக்கும். </li><li>
பணத்தை வெற்றிகரமாக சேமிக்க முடியும். </li><li>
ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/565812ec-5d81-4e6d-8930-d5f7e39a83b5/26-6a5c8e3ebc608.webp' /></p><h2>சிம்மம்</h2><ul><li> 

தொழில் வளர்ச்சியைக் கொடுக்கும்.</li><li> 
வாழ்க்கையில் முன்னேற முடியும்.
</li><li>கடின உழைப்பின் மூலம் நற்பெயரைப் பெறுவார்கள். </li><li>
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
</li><li>பல்வேறு திசைகளில் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். </li><li>
தடைப்பட்டிருந்த வேலைகள் முடிவுக்கு வரும்.
</li><li>அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
</li><li>தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.</li><li>
அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
</li><li>நினைத்த விஷயங்களை சாதிக்க முடியும்.</li><li> 
அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக முடியும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e11644e-b008-4fc9-a573-e95b9e1cb0c1/26-6a5c8e3f7e385.webp' /></p><h2>விருச்சிகம் </h2><ul><li>

புதிய தொழில் வாய்ப்புகளை பெறக்கூடும்.</li><li> 
புதிய வீடு, சொத்து வாங்க சிறந்த நேரமாகும். </li><li>
வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டுவரும்.</li><li>வேலை தேடுபவர்களுக்கு நேர்மறையான செய்தி வரும். </li><li>
சமூக அந்தஸ்து மேம்படும்.</li><li>
முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். </li><li>
முதலீடுகள் லாபத்தைத் தரக்கூடும். </li><li>
ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும்.
</li><li>மிகவும் உற்சாகமாக உணருவீர்கள்.</li></ul><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34cfdfd6-dda6-41e6-8f54-e2933f5a0321/26-6a5c8e402d5e5.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>
&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T08:44:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டீவ் ஸ்மித்தின் படையை வீழ்த்தி..முதல் முறையாக மகுடம் சூடிய ஹோல்டர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/los-angeles-knight-riders-won-major-league-title-1784449631"></link>
            <id>https://news.lankasri.com/article/los-angeles-knight-riders-won-major-league-title-1784449631</id>
            <summary type="text">மேஜர் லீக் தொடர் இறுதிப் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்று மகுடம் சூடியது.மிரட்டிய சுனில் நரைன்லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேஜர் லீக் தொடர் இறுதிப் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்று மகுடம் சூடியது.</p><h2>மிரட்டிய சுனில் நரைன்</h2><p>லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் இறுதிப் போட்டி ஆக்லாந்தில் நடந்தது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Spot on 🎯<br><br>Sunil Narine takes his third wicket🔥 <a href="https://t.co/XQb9s5T2vp">pic.twitter.com/XQb9s5T2vp</a></p>&mdash; Cognizant Major League Cricket (@MLCricket) <a href="https://x.com/MLCricket/status/2078662278078218736?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய நைட் ரைடர்ஸ் அணி 164 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 

ஆண்ட்ரே ஃப்ளெட்ஸர் 47 ஓட்டங்களும், கோலின் முன்ரோ 40 ஓட்டங்களும், மேத்யூ ட்ரோம்ப் 39 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>பென் ட்வர்ஷுய்ஸ் 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஓவன், நிகில் சௌத்ரி மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
</p><h2>
1 ரன்னில் </h2><p>பின்னர் ஆடிய வாஷிங்டன் அணியில் ஓவன், ஸ்மித், ரவீந்திரா மூவரும் சுனில் நரைனின் சுழலில் மூழ்கினர். 

ஆன்ட்ரிஸ் கோஸ் 40 ஓட்டங்களும், நிகில் 25 ஓட்டங்களும் எடுத்து ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஓபஸ் பியனார் (Obus Pienaar) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார். </p><p>

வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 

முதல் பந்தில் சிக்ஸர் அடித்த பியனார், அடுத்த பந்தில் 53 (24) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.</p><p> கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஸ்கால்க்விக் பந்துவீச்சில் மிலந்தா அவுட் ஆக, 1 ரன் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
</p><p>
ஹோல்டர் (Holder) தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் முதல் முறையாக மகுடம் சூடியது. சுனில் நரைன் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை பெற்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5828bfc9-6613-46ba-a9d1-443a92616269/26-6a5c8c0d86a52.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T08:32:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு வெளியேறிய ஈரானிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி? சவுதி ஊடகம் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mojtaba-khamenei-residing-outside-iran-1784446998"></link>
            <id>https://news.lankasri.com/article/mojtaba-khamenei-residing-outside-iran-1784446998</id>
            <summary type="text">ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டை விட்டு வெளியேறிய உச்சத் தலைவர்ஈரான் - அமெரிக்கா இடையே ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> நாட்டை விட்டு வெளியேறிய உச்சத் தலைவர்</h2><p>ஈரான் - அமெரிக்கா இடையே போர் தாக்குதல் தீவிரமடைந்து இருக்கும் இந்த சூழ்நிலையில், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி ஈரான் நாட்டிற்கு வெளியே இருப்பதாக சவுதி அரேபியாவின் Al Hadath செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த தகவலை Al Hadath செய்தி நிறுவனம் இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97ef759a-edf1-4661-90ae-1ce71fd94205/26-6a5c80182dfef.webp' /></p><p> மேலும் அந்த அறிக்கையில், உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி பெயரில் வெளியாகும் எந்தவொரு அறிக்கையும், செய்திகளும் அவர் எழுதியது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>முந்தைய உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியை குறிவைத்து அமெரிக்க நடத்திய தாக்குதலுக்கு பிறகு, புதிய உச்சத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா காமேனி பெயரில் வெளிவரும் அனைத்து செய்திகளும் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைவர் அகமது வஹிதி மற்றும் முக்கிய பிற அதிகாரிகளால் எழுதப்படுவது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> </h2><h2>பொதுவெளியில் இருந்து தலைமறைவு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3993ab7d-59ee-4f40-ba00-f1fd9192c427/26-6a5c8018d4fa1.webp' /></p><p>அதே நேரத்தில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் முஜ்தபா காமேனியின் உருவம் பொறித்த பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தாலும் அவர் நாட்டின் உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை.
</p><p>
குறிப்பாக அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது தந்தை மற்றும் நாட்டின் உச்சத் தலைவரான அயதுல்லா அலி காமேனி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் இறுதிச் சடங்கில் கூட முஜ்தபா காமேனி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T08:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை வரலாற்றில் 22 கோல்கள் அடித்த முதல் வீரர்: கிலியன் எம்பாப்வே சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mbappe-historic-milestone-in-fifa-world-cup-1784443572"></link>
            <id>https://news.lankasri.com/article/mbappe-historic-milestone-in-fifa-world-cup-1784443572</id>
            <summary type="text">உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே படைத்துள்ளார். உலகக் கோப்பை கால்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.</p><h2> உலகக் கோப்பை கால்பந்து போட்டி</h2><p>
2026ம் ஆண்டின் உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.</p><p>விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற இந்த போட்டியில் 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கலப் பட்டம் வென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2d49f23-c261-4151-a095-1551704c9fa1/26-6a5c72b63f7fa.webp' /></p><p></p><h2>எம்பாப்பே சாதனை</h2><p>இந்த போட்டியில் பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே(Kylian Mbappe) 2 கோல்களை அடித்து அசத்தினார்.</p><p> இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 22 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.</p><p>அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸியின்(&nbsp;Lionel Messi) சாதனையை பின்னுக்கு தள்ளி எம்பாப்பே முதலிடம் பிடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceaff77a-b762-433b-97b4-49683b559dc5/26-6a5c72b58bbf5.webp' /></p><p> அத்துடன் இந்த தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களுக்கான கோல்டன் பூட்(Golden Boot) விருதுக்கான போட்டியிலும் முன்னிலையில் உள்ளார்.</p><p>ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை விட பிரான்ஸ் வீரர் எம்பாப்வே 2 கோல்கள் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T06:47:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீவ் நகரை குறிவைத்து சக்தி வாய்ந்த ஏவுகணை தாக்குதல்: ரஷ்ய படைகள் கொடுத்த பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-massive-ballistic-missile-attack-on-kyiv-1784440363"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-massive-ballistic-missile-attack-on-kyiv-1784440363</id>
            <summary type="text">உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்ய படைகள் சக்திவாய்ந்த ராக்கெட் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. குறிவைக்கப்பட்ட கீவ் நகரம்ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்ய படைகள் சக்திவாய்ந்த ராக்கெட் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.</p><h2> குறிவைக்கப்பட்ட கீவ் நகரம்</h2><p>ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உக்ரைன் தலைநகரான கீவ்வை குறிவைத்து ரஷ்ய படைகள் சக்தி வாய்ந்த ஏவுகணை தாக்குதலை நடத்தி இருப்பதாக உக்ரைனிய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.</p><p> இந்த தாக்குதலின் போது தலைநகரின் பல பகுதிகளில் வெடி சத்தங்கள் கேட்டதாகவும், தொடர்ந்து வான் தாக்குதலுக்கான சைரன் ஒலிகள் கேட்டதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d890367f-9377-463e-aca6-43da01d5cf67/26-6a5c662ccb027.webp' /></p><p> இதில், வணிக வளாகங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் என பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.</p><p>ரஷ்ய படைகளின் ஏவுகணை தாக்குதலில் 7 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p> கீவ் நகர மேயர் வெளியிட்ட தகவலில், இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உக்ரைனிய ராணுவ நிர்வாகம் டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்ட முதற்கட்ட தகவலில் ஒருவர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ மற்றும் தம்போவ் பகுதிகளில் உள்ள இ-காமர்ஸ் கிடங்குகளை உக்ரைனிய படைகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர்.</p><p> இதில் 8 பேர் உயிரிழந்ததுடன் பல உள்கட்டமைப்புகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:52:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-on-coffin-tehran-billboard-controversial-1784432851"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-on-coffin-tehran-billboard-controversial-1784432851</id>
            <summary type="text">ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி இருப்பது போன்ற விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி இருப்பது போன்ற விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தெஹ்ரானில் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகை</h2><p>
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் நீர்த்துப் போனதை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.</p><p> இந்நிலையில் ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் “ரத்தத்திற்கு ரத்தம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகை ஒன்று வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c6e097e-ddfb-4b7e-98fb-79b353872e31/26-6a5c48d48603f.webp' /></p><p> தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பதாகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, அவர்களது பிள்ளைகளான இவான்கா, டொனால்ட் டிரம்ப் ஜூனியர், எரிக், டிஃப்பனி மற்றும் பாரோன் ஆகியோரின் புகைப்படங்கள் சவப்பெட்டியின் மீது வைக்கப்பட்டது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> பொதுவாக தெஹ்ரானில் அமைக்கப்படும் மிகப்பெரிய சுவரோவியங்கள் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினரின் ஓவ்ஜ் கலை மற்றும் ஊடக அமைப்பினால் வடிவமைக்கப்பட்டவை ஆகும்.</p><p>இந்த விளம்பர பலகை சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஈரான் தன்னை கொலை செய்ய சதி செய்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p style="margin-left: 25px;"><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Iran has installed a billboard in the capital Tehran showing US President Donald Trump lying in a coffin. <br><br>A statue nearby depicts the fist of late Supreme Leader Ayatollah Ali Khamenei, who was assassinated at the start of the US-Israeli war on Iran. <a href="https://t.co/ILvE0RAXrF">pic.twitter.com/ILvE0RAXrF</a></p>&mdash; Al Jazeera Breaking News (@AJENews) <a href="https://x.com/AJENews/status/2077462033662947605?ref_src=twsrc%5Etfw">July 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மேலும் இதற்கு முன்னதாக தெஹ்ரானில் ஏங்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்ட மற்றொரு விளம்பர பலகையில் டிரம்பை நாங்கள் கொல்லுவோம் என்று பாரசீக மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.</p><p> அத்துடன் அதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திறந்த கருப்பு நிற சவப்பெட்டியில் படுத்து இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:36:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[குதிகால் வெடிப்பை போக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/home-remedies-for-cracked-heels-in-tamil-1784436166"></link>
            <id>https://news.lankasri.com/article/home-remedies-for-cracked-heels-in-tamil-1784436166</id>
            <summary type="text">குதிகால் வெடிப்பு என்பது சருமத்தில் ஈரப்பதம் குறைவதாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். 

வெடிப்பு லேசாக இருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>குதிகால் வெடிப்பு என்பது சருமத்தில் ஈரப்பதம் குறைவதாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். </p><p>

வெடிப்பு லேசாக இருக்கும்போது வலியோ அசௌகரியமோ இருக்காது, ஆனால் அது தீவிரமடையும் போது கடுமையான வலி, அரிப்பு மற்றும் ரத்தப்போக்கு ஏற்படலாம்.
</p><p>
இது ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் தீவிரமான சரும வறட்சி, அதிக உடல் எடை, உடலில் நீர்ச்சத்து குறைபாடு, மற்றும் தவறான காலணிகளைத் தொடர்ந்து அணிவது.</p><p>

அந்தவகையில், குதிகால் வெடிப்பை போக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம் 
 குறித்து பார்க்கலாம்.</p><p></p><h2>&nbsp;1. தேவையான பொருட்கள்</h2><ul><li> 

அரிசி மாவு- 1 ஸ்பூன்</li><li> 
தேன்- 1 ஸ்பூன் </li><li>
வினிகர்- 1 ஸ்பூன் </li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, தேன் மற்றும் வினிகரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.</p><p> 

பின் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து உலர்த்தி, இந்த கலவையை பாதங்களில் தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26632ca8-08e5-4183-ba68-2c6cf90a1b51/26-6a5c55c85fd80.webp' /></p><p> 

பிறகு குளிர்ந்த நீரால் பாதங்களை கழுவ வேண்டும். </p><p>

இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர பாதங்களில் உள்ள வெடிப்புகள் மறையும்.</p><h2>

2. தேவையான பொருட்கள் </h2><ul><li>

வேஸ்லின்- 2 ஸ்பூன் </li><li>
எலுமிச்சை- 1</li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊறவைத்து பின் உலர்த்த வேண்டும். </p><p>

பின்பு வேஸ்லினை எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.</p><p></p><p> 

பிறகு அதை பாதங்களில் தடவி, சாக்ஸ் அணித்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். </p><p>

பின் காலையில் சாக்ஸை நீக்கிவிட்டு, பாதங்களை கழுவ வேண்டும். 

இப்படி அடிக்கடி செய்து வந்தால், குதிகால் வெடிப்பு மறைவதைக் காணலாம்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T04:43:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக வர்த்தகத்தை தீர்மானிக்கும் டிரம்பின் ட்ரூத் சோஷியல்: பதிவுகளை விரைவாக பெற ரூ.1 கோடி கட்டணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-truth-social-charge-1-crore-for-speed-post-1784435885"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-truth-social-charge-1-crore-for-speed-post-1784435885</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவுகளை முன்னதாக பெற ரூ.1 கோடி வரை கட்டணம் பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. டிரம்பின் ட்ரூத் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவுகளை முன்னதாக பெற ரூ.1 கோடி வரை கட்டணம் பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.</p><h2> டிரம்பின் ட்ரூத் சோஷியல்</h2><p>
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது விதிமுறைகளை டிரம்ப் மீறியதாக குறிப்பிட்டு அவரது X தள கணக்கு பிளாக் செய்யப்பட்டது.</p><p> இதையடுத்து அவர் சொந்தமாக ட்ரூத் சோஷியல் என்ற சமூக வலைதள செயலியை உருவாக்கி அதில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea5df867-4c7d-4601-ac9b-88a63cc22c3f/26-6a5c54af18775.webp' /></p><p> டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் வெளியிடும் சில பதிவுகள் உலக வர்த்தகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது.</p><p> உதாரணமாக, தற்போது பங்குகளை வாங்க சிறந்த தருணம் என்று டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதை அடிப்படையாக கொண்டு அப்போது பங்குகள் வாங்கியவர்கள் சிறந்த பலனை அடைந்தனர்.</p><p> </p><p></p><p>அதைப்போல ஈரான் - அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு கச்சா எண்ணெய் விற்பனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.</p><p>இதனால் டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிடும் கருத்துகள் முக்கியமான ஒன்றாக வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் கருதுகின்றனர்.</p><p>டிரம்பின் பதிவு மில்லி வினாடி முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ கிடைத்தால் அது மிகப்பெரிய லாபமோ அல்லது நஷ்டமோ ஏற்படுத்த கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.</p><h2> ரூ.1 கோடி கட்டணம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87b67ea4-f3f1-44b3-9b46-be922a9aceea/26-6a5c54afbc307.webp' /></p><p>இந்நிலையில், டிரம்பின் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இருந்து அவரது பதிவுகளை விரைவாக ட்ரூத் ஏபிஐ தரவு சேவையை வழங்கி வருகிறது.</p><p> மேலும் ட்ரூத் ஏபிஐ மூலம் டிரம்பின் கருத்துகளை மில்லி விநாடிகளில் பெற முடியும். இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ட்ரூத் ஏபிஐ-யை வாங்குவது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.</p><p> இந்நிலையில் இந்த சேவைக்கு ரூ.1 கோடி வரை வசூலிக்க டிரம்பின் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.</p><p> மேலும் ட்ரூத் ஏபிஐ-யின் 3 ஆண்டு திட்டத்தில் இணைந்தால் ரூ.60 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும் எனவும் முன்மொழியப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-19T04:38:16+00:00</updated>
        </entry>
    </feed>
