<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-25T14:33:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் திரைப்பட பாணியில் சம்பவம்: பொலிஸார் கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-dies-after-car-chase-in-warwickshire-uk-1787658602"></link>
            <id>https://news.lankasri.com/article/man-dies-after-car-chase-in-warwickshire-uk-1787658602</id>
            <summary type="text">Man dies after car chase in warwickshire uk: பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

இங்கிலாந்தின் வார்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man dies after car chase in warwickshire uk: பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
</p><p>
இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் காவல்துறை அதிகாரிகள் துரத்திச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.&nbsp;</p><h2>Audi காரினை விரட்டிச் சென்ற&nbsp;காவல்துறை</h2><p>

இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள Stratford-upon-Avonயில் காவல்துறையினர் ஒரு கருப்பு Audi காரினை விரட்டிச் சென்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ab9006a-b7c7-4f31-bc62-7e1ae0c66926/26-6a8d86222df60.webp' /></p><p></p><p> 

பர்மிங்காம் சாலையில் அந்த கார் நிற்க தவறியதைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த துரத்தலை தொடங்கினர்.</p><p>

திரைப்படத்தை விஞ்சும்படியான இந்த துரத்தலின்போது, குறித்த Audi கார் மற்றொரு வெள்ளைநிற Ford Puma கார் மீது மோதியது.&nbsp;</p><h2>ஒருவர் மரணம், மூவர் படுகாயம்&nbsp;</h2><p>

இதில் Audi காரினை இயக்கிய ஆண் நபர் உயிரிழந்தார். மேலும், Ford காரின் சாரதி உட்பட மூவர் காயமடைந்தனர்.&nbsp;</p><p> 

இதனையடுத்து, இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் துணை மருத்துவ அதிகாரிகள் உட்பட இரண்டு வான்வழி ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
</p><p>
இதற்கிடையில், துரத்தலின்போது மேலும் பல வாகனங்களும் சேதமடைய, காவல்துறையின் கண்காணிப்பு அமைப்பான Independent Office for Police Conduct இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d9af39b-1a65-47e1-903b-e9ea082ea579/26-6a8d8622eec14.webp' /></p><p>இச்சம்பவம் குறித்து உயிரிழந்த நபர் மற்றும் அப்பெண்மணி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.&nbsp;</p><h2>காவல்துறை&nbsp;</h2><p>

துரத்தல் நடவடிக்கையின்போது வேறு பல வாகனங்களும் சேதமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> காவல்துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பான சுயாதீன காவல்துறை நடத்தை அலுவலகத்திடம் (IOPC) ஒப்படைக்கப்பட்டுள்ளன. </p><p>

இதுகுறித்து கண்காணிப்பாளர் ஸ்டீவ் ஃபிளாவெல் கூறுகையில், "இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன; இக்கடினமான சூழலில் அவர்களுக்குத் தேவையான சிறப்பு உதவிகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.

காவல்துறையின் நடவடிக்கையைத் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டதால், நாங்கள் கட்டாய நடைமுறையின்படி இந்த விவகாரத்தை 'சுயாதீன காவல்துறை நடத்தை அலுவலகத்திடம்' பரிந்துரைத்துள்ளோம்" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b51b6433-28cc-4d95-a609-6434781082ee/26-6a8d8623a0c38.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T14:06:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியாளாக போராடும் இலங்கை வீரர்: சூடுபிடிக்கும் இரண்டாவது டெஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sonal-dinusha-85-not-out-vs-india-in-colombo-1787662436"></link>
            <id>https://news.lankasri.com/article/sonal-dinusha-85-not-out-vs-india-in-colombo-1787662436</id>
            <summary type="text">Sri Lanka 265-8 against india in colombo: கொழும்பு டெஸ்டின் மூன்றாம் நாளில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sri Lanka 265-8 against india in colombo: கொழும்பு டெஸ்டின் மூன்றாம் நாளில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது.</p><p>

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது.</p><h2> 

பஸிந்து சூரியபந்தரா&nbsp;80 ஓட்டங்கள்</h2><p>இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கொழும்பில் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e83ea96-48ca-4fd7-809d-a5f5d64a4a1a/26-6a8d9068704f6.webp' /></p><p></p><p>
மூன்றாவது நாளான இன்று இலங்கை அணி முதல் இன்னிங்ஸைத் தொடர, கமிந்து மெண்டிஸ் 32 ஓட்டங்களில் வெளியேறினார்.</p><p>

பின்னர் அணித்தலைவர் தனஞ்செய டி சில்வாவை 8 ஓட்டங்களில் மானவ் சுதர் பந்துவீச்சில் அவுட் ஆக, அரைசதம் அடித்த பஸிந்து சூரியபந்தரா (Pasindu Sooriyabandara) 80 ஓட்டங்களில் ரவீந்திர ஜடேஜாவின் ஓவரில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>போராடும் சோனல் தினுஷா</h2><p>

அடுத்து நிரோஷன் திக்வெல்ல டக்அவுட் ஆனார். எனினும் சோனல் தினுஷா மற்றும் கேஷாரா வலுவான கூட்டணி அமைத்தனர். </p><p>

சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டிய சோனல் அரைசதம் அடிக்க, கேஷாரா 18 (74) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.</p><p>

இலங்கை அணி நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தனியாளாக போராடி வரும் சோனல் தினுஷா (Sonal Dinusha) 85 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a668eb-369c-4afe-b2d4-25931a48fe5a/26-6a8d9067a9f51.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><i><b>WHATSAPP CHANNEL</b></i></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T12:51:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சி - உரிமையாளர்களுடன் மனக்கசப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dhoni-csk-relationship-trouble-stake-talk-fails-1787661707"></link>
            <id>https://news.lankasri.com/article/dhoni-csk-relationship-trouble-stake-talk-fails-1787661707</id>
            <summary type="text">dhoni csk relationship affect after stake talk fails: சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சித்த விவகாரத்தில் அணி உரிமையாளர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>dhoni csk relationship affect after stake talk fails: சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சித்த விவகாரத்தில் அணி உரிமையாளர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h3> 

 சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சி</h3><p>

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a3f734b-be35-4d0c-878b-b3000e348ed7/26-6a8d8d8d3e0e0.webp' /></p><p> 

2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவான போது இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் இந்த அணியை வாங்கினார்.</p><p> 

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் அணியை நிர்வகித்து வருகிறார்.</p><p>

2008 ஆம் ஆண்டு முதல் எம்.எஸ்.தோனி இந்த அணியில் விளையாடி வருகிறார். எம்.எஸ்.தோனிக்காக அதிகளவிலான ரசிகர்கள் CSK அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p> 

காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த தோனி, 2026 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 

45 வயதாகி விட்ட நிலையில், தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19910289-a5b9-4fae-97b1-e5341b7cd227/26-6a8d8d8c8cc6b.webp' /></p><p> 

இந்நிலையில், சிஎஸ்கே அணியில் தோனி பங்குகளை வாங்க முயற்சித்ததாகவும், இந்த விவகாரத்தில் அணி நிர்வாகத்துடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>

தோனி முதலில் 25% பங்குகளை வாங்க விரும்பியுள்ளார். ஆனால் சிஎஸ்கே உரிமையாளர்கள் அவருக்கு 3% பங்குகளை வழங்க முன்வந்தனர். அதன் பின்னர் தோனி 18% பங்குகளை கேட்ட நிலையில், அதிகபட்சமாக 5% வரை வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இதன் காரணமாக தோனி மற்றும் அணி உரிமையாளர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி அணியில் தொடர்வாரா என கேள்வி எழுந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T12:41:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைக்கு 17 வயது வரை ஆண்டுக்கு ரூ.1.51 லட்சம் ஊக்கத்தொகை - சிங்கப்பூர் அரசு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/singapore-gives-stipend-for-family-boost-birthrate-1787657626"></link>
            <id>https://news.lankasri.com/article/singapore-gives-stipend-for-family-boost-birthrate-1787657626</id>
            <summary type="text">singapore gives stipend for boost birthrate: சிங்கப்பூரில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கும் செயல் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.  

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>singapore gives stipend for boost birthrate: சிங்கப்பூரில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கும் செயல் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. </p><h3> 

சிங்கப்பூரில் சரிந்த பிறப்பு விகிதம்</h3><p> 

பல்வேறு உலக நாடுகள் குழந்தை பிறப்பு விகித சரிவு என்ற பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. 

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நாடுகள் ஊக்கத்தொகை வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/450b8e85-023b-4ec0-8114-0179f801ad5a/26-6a8d7d9c11e85.webp' /></p><p> 

தற்போது சிங்கப்பூர் அரசும் ஊக்கத்தொகை வழங்கும் செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. </p><p>

6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட சிங்கப்பூர், குழந்தை பிறப்பு விகித சரிவை எதிர்கொண்டு வருகிறது.</p><p> 

2025 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 29,864 பிறப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 11.4% குறைவாகும். தற்போது பிறப்புகள் 10.8% குறைந்து 26,071 ஆக உள்ளது. </p><h3>

17 வயது வரை ஊக்கத்தொகை</h3><p> 

சிங்கப்பூரின் வருடாந்திர தேசிய தினப் பேரணியின் போது இந்த நடவடிக்கைகளை அறிவித்த பிரதமர் லாரன்ஸ் வோங், "குழந்தை பிறப்பு முதல் 17 வயது வரை 70,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.52.76 லட்சம்) வழங்கும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4922f93-f706-4d01-94c2-5bb992eb5cad/26-6a8d7d9b5df04.webp' /></p><p> 

இந்த நிதியாண்டில் இந்த திட்டத்திற்கு 7 பில்லியன் சிங்கப்பூர் டொலர் அரசு செலவிடும் என அறிவித்துள்ளார்.
</p><p>
இந்த திட்டத்தின் படி, சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 2,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1.51 லட்சம்) குழந்தை உதவித்தொகை வழங்கப்படும்.&nbsp;</p><p></p><p>
குடும்பங்களுக்கு 5,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.3.7 லட்சம்) முதல் படி மானியமும் வழங்கப்படும்.&nbsp;</p><p>

இதன் மொத்த பலன்களையும் சேர்க்கும் போது, 17 வயதில் 70,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.52.76 லட்சம்) லட்சமாக இருக்கும்.&nbsp;</p><p>

இந்த திட்டத்தின் மூலம், சுமார் 3,80,000 குடும்பங்களைச் சேர்ந்த 6,10,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03ec6cce-49cd-4a24-a0b2-411e8644b67b/26-6a8d7d9cbb934.webp' /></p><p>
அரசு ஆதரவு பெற்ற முழு நாள் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் மாதக் கட்டணத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 150 சிங்கப்பூர் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.11,306) ஆகக் குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. </p><p>

இது தவிர, சிசு பராமரிப்புக் கட்டணம் மாதத்திற்கு 300 சிங்கப்பூர் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.22,611) ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

இதே போல் அதிக குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கு பராமரிப்பு விடுப்பும் வழங்கப்படும். 

12 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடைய ஒரு குழந்தையைக் கொண்ட பெற்றோருக்கு ஆண்டுக்கு 8 நாட்கள் விடுப்பு வழங்கப்படும். </p><p>2 குழந்தைகள் இருந்தால் இந்த எண்ணிக்கை 10 நாட்களாகவும், 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் 12 நாட்களாகவும் உயரும்.
</p><p>
ஆனால் இந்த அறிவிப்பிற்கு முன்பு வெளியிடப்பட்ட YouGov கணக்கெடுப்பில், 18 முதல் 44 வயதுக்குட்பட்ட சிங்கப்பூரியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர், எந்தவொரு அரசாங்கக் கொள்கையும் தங்களைக் குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பத்தை அதிகரிக்காது என்று தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் சோகத்தில் முடிந்த பொலிஸாரின் கார் துரத்தல்: ஒருவர் பலி, பெண் கவலைக்கிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-dies-in-crash-after-police-chase-in-stratford-1787657478"></link>
            <id>https://news.lankasri.com/article/man-dies-in-crash-after-police-chase-in-stratford-1787657478</id>
            <summary type="text">பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலுக்கு பிறகு நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சோகத்தில் முடிந்த காவல்துறையினரின் துரத்தல்பிரித்தானியாவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலுக்கு பிறகு நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><h2> சோகத்தில் முடிந்த காவல்துறையினரின் துரத்தல்</h2><p>பிரித்தானியாவின் வார்விக்ஷயர்(Warwickshire) பகுதியில் தப்பியோடிய காரை காவல்துறையினர் துரத்திய போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>மேலும் இந்த சம்பவத்தில் பெண் ஒருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b84887dd-36ec-423e-be4a-e2d8deacf7a2/26-6a8d7d07bf298.webp' /></p><h2> காவல்துறையினர் அளித்த தகவல்</h2><p>திங்கட்கிழமை மாலை சுமார் 5.23 மணியளவில் ஸ்ட்ராட்ஃபோர்ட்(Stratford) அருகே கருப்பு நிற ஆடி(Audi) காரை மடக்கி பிடிக்க வார்விக்ஷயர் காவல்துறையினர் முயன்றுள்ளனர்.</p><p></p><p> அப்போது பொலிஸாரின் அறிவிப்பை மதிக்காமல் அந்த கார் நிற்காமல் சென்றதை அடுத்து பொலிஸாரும் துரத்தலில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>சரியாக மாலை 5.44 மணி அளவில் தப்பியோடிய கருப்பு நிற ஆடி கார் எதிரே வந்த வெள்ளை நிற போர்ட் பூமா(Ford Puma) கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.</p><p>இதில் Ford Puma காரில் வந்த பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.</p><p> மேலும் தப்பியோடிய ஆடி காரை ஓட்டிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:31:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[167 ஓட்டங்கள் குவித்ததுடன் 4 விக்கெட் வீழ்த்திய ஷாபாஸ் அகமது: இமாலய வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shabhaz-ahmed-man-of-the-match-duleep-trophy-2026-1787652782"></link>
            <id>https://news.lankasri.com/article/shabhaz-ahmed-man-of-the-match-duleep-trophy-2026-1787652782</id>
            <summary type="text">East zone won by an innings and 210 runs in duleep trophy 2026:
பெங்களூருவில் நடந்த துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி இமாலய வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>East zone won by an innings and 210 runs in duleep trophy 2026:
பெங்களூருவில் நடந்த துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி இமாலய வெற்றி பெற்றது.
</p><p>
நார்த் ஈஸ்ட் ஸோன் அணிக்கு எதிரான துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி, இன்னிங்ஸ் மற்றும் 210 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>முதல் காலிறுதிப் போட்டி</h2><p>
துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் நார்த் ஈஸ்ட் ஸோன் மற்றும் ஈஸ்ட் ஸோன் அணிகள் மோதின.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fd6f701-fc40-4dfc-b692-7ae484ce188a/26-6a8d6b8724df7.webp' /></p><p></p><p>
ஈஸ்ட் ஸோன் அணி முதல் இன்னிங்ஸில் 467 ஓட்டங்கள் குவித்தது. ஷாபாஸ் அகமது 167 ஓட்டங்களும், சுதிப் 146 ஓட்டங்களும் குவித்தனர்.</p><p>
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நார்த் ஈஸ்ட் ஸோன் அணி, அபிஜித் சர்கார் மற்றும் ஷாபாஸ் அகமதுவின் மிரட்டலான பந்துவீச்சில் 111 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
அதிகபட்சமாக அர்பித் சுபாஷ் 32 ஓட்டங்கள் எடுத்தார். அபிஜித் சர்கார் 5 விக்கெட்டுகளும், ஷாபாஸ் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2675294-2bdd-4ca6-a308-bcad0923631c/26-6a8d6b888b6d7.webp' /></p><h2>ஷாபாஸ் அகமது&nbsp;ஆட்ட நாயகன் </h2><p>
 ஃபாலோ-ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நார்த் ஈஸ்ட் அணி 146 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><p> 

அதிகபட்சமாக பிஹெய்ரோய்ஜன் ஜோதின் 39 ஓட்டங்களும், ஆகாஷ் சௌத்ரி 27 ஓட்டங்களும் எடுத்தனர். அனுகுல் ராய் 5 விக்கெட்டுகளும், வைபவ் சூர்யவன்ஷி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
</p><p>
167 ஓட்டங்கள் எடுத்ததுடன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஷாபாஸ் அகமது (Shabhaz Ahmed) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89adf82e-2024-4452-95c7-514711a487ac/26-6a8d6b87d8034.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T10:13:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தும் - எரிபொருள் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து: துருக்கியில் பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bus-and-oil-tanker-collision-in-turkey-1787650644"></link>
            <id>https://news.lankasri.com/article/bus-and-oil-tanker-collision-in-turkey-1787650644</id>
            <summary type="text">Bus and oil tanker Collision in turkey: துருக்கியில் பேருந்து மற்றும் எரிபொருள் லொறி மோதிய விபத்தில் 40 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.பேருந்து - எரிபொர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bus and oil tanker Collision in turkey: துருக்கியில் பேருந்து மற்றும் எரிபொருள் லொறி மோதிய விபத்தில் 40 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.</p><h2>பேருந்து - எரிபொருள் லொறி விபத்து</h2><p>
மத்திய துருக்கியின் அனடோலியா பகுதியின் கைசேரி மாகாணத்தில் பேருந்தும் எரிபொருள் லொறியும் மோதிக் கொண்ட விபத்தில் கிட்டத்தட்ட 40 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p> இவர்களில் 4 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p> விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் முழுவீச்சில் மீட்பு பணிகளை முன்னெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a26772d-8516-40b1-8d40-b77dc913bc82/26-6a8d6255b9806.webp' /></p><p> அதே சமயம் விபத்துக்கான&nbsp; காரணத்தை கண்டறிய பொலிஸாரும் அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><p></p><p>பேருந்தும் எரிபொருள் லொறியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு வாகனங்களும் சாலையில் கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்த விபத்து தலைநகர் அங்காராவுக்கு தென்கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள தொழிற்துறை சாலையில் நடைபெற்றுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:37:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திமுக எம்.எல்.ஏக்கள் அடிக்க பாய்ந்து வருகிறார்கள் - அமைச்சர் ராஜ்மோகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/raj-mohan-accuse-dmk-mla-comes-to-beat-in-assembly-1787647741"></link>
            <id>https://news.lankasri.com/article/raj-mohan-accuse-dmk-mla-comes-to-beat-in-assembly-1787647741</id>
            <summary type="text">raj mohan accuse dmk mlas comes to beat in assembly : திமுக எம்.எல்.ஏக்கள் அடிக்க பாய்ந்து வருகிறார்கள் என சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>raj mohan accuse dmk mlas comes to beat in assembly : திமுக எம்.எல்.ஏக்கள் அடிக்க பாய்ந்து வருகிறார்கள் என சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியுள்ளார். </p><h3> 

தவெக எம்.எல்.ஏ முஸ்தபா சர்ச்சை பேச்சு </h3><p>

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ மதார் முஸ்தபா திமுகவை விமர்சிக்கும் போது சர்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார். சபாநாயகர் அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/016ebb23-aee0-4bb1-a681-420c54eca856/26-6a8d56feb4af8.webp' /></p><p>

முஸ்தபா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கடும்அமளியில் ஈடுபட்டனர். </p><p>

திமுக எம்.எல்.ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து ஆவேசமாக முன்னால் வந்து அமளியில் ஈடுபட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee87047-7fb0-4f46-98a0-b309e51ad4e0/26-6a8d56ff64e25.webp' /></p><p> 

திமுக கொறடா எ.வ.வேலு அவர்களை சமாதானம் செய்து இருக்கையில் அமருமாறு அறிவுறுத்தினார்.</p><p> 

பூண்டி கலைவாணன் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே சென்று இது குறித்து முறையிட்டார்.
</p><h3>
அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு</h3><p> 

இதனையடுத்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் ஆளும் கட்சி உறுப்பினர்களை நோக்கி அடிக்க பாய்ந்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cbc2ad6-b6fb-4732-a731-bc3b7ae489cf/26-6a8d5700158fb.webp' /></p><p>

இது போன்ற உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் தவெக ஒரு போதும் பயப்படாது. இது போன்ற அநாகரீகமான செயல்பாடுகளால் தான் திமுகவுக்கு மக்கள் தகுந்த தீர்ப்பு கொடுத்து எதிர்கட்சியாக உட்கார வைத்துள்ளார்கள்" என கூறியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:49:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் கொடிய தாக்குதல்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடல்: இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/two-killed-in-southern-russia-strike-refinery-1787647280"></link>
            <id>https://news.lankasri.com/article/two-killed-in-southern-russia-strike-refinery-1787647280</id>
            <summary type="text">Two killed in southern russia strike refinery: தெற்கு ரஷ்யாவில் உக்ரைன் இராணுவம் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two killed in southern russia strike refinery: தெற்கு ரஷ்யாவில் உக்ரைன் இராணுவம் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.</p><p> 

ரஷ்யாவில் உள்ள கிராஸ்னோடார் பிராந்தியத்தில் அஃபிப்ஸ்கி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.&nbsp;</p><h2>எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து&nbsp;</h2><p>

தெற்கு பகுதியில் இரண்டு எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a5763b6-05c0-4ed9-b046-e5f0e12b635e/26-6a8d55c14b61c.webp' />&nbsp;</p><p></p><p>

அப்போது ட்ரோன் விமானத்தின் பாகங்கள் விழுந்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.</p><p> 


ரோஸ்டோவ்வில் உள்ள அதிகாரிகள், மற்றொரு தாக்குதலைத் தொடர்ந்து நோவோஷக்தின்ஸ்கி சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்ததாகவும், அதன் சுத்திகரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் இதற்கு முன்னர், ட்ரோன் விமானத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. </p><p>

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தனது தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கோடையில் பரவலான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு: $80,000 எல்லையை கடந்து சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bitcon-set-new-high-clears-80-000-milestone-1787647193"></link>
            <id>https://news.lankasri.com/article/bitcon-set-new-high-clears-80-000-milestone-1787647193</id>
            <summary type="text">அமெரிக்காவின் கொள்கை மாற்றத்தால் பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. பிட்காயின் சந்தை மதிப்பு உயர்வு
பிட்காயின் மதிப்பு மே மாதத்திற்கு பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கொள்கை மாற்றத்தால் பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.</p><h2> பிட்காயின் சந்தை மதிப்பு உயர்வு</h2><p>
பிட்காயின் மதிப்பு மே மாதத்திற்கு பிறகு முதன்முறையாக $80000 என்ற எல்லையைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.</p><p> கடந்த வாரத்தில் மட்டும் பிட்காயின் மதிப்பு 23% அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் கிரிப்டோகரன்சி சந்தை மீண்டும் புதிய எழுச்சியை பெற்றுள்ளது.</p><p> சந்தையில் ஏற்பட்ட மாற்றம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி பிட்காயின் மதிப்பை 2.15% அதிகரித்துள்ளது. இதனால் இரவு 10.23 மணியளவில் பிட்காயின் மதிப்பானது $80641 என்ற புதிய விலை உச்சத்தை தொட்டுள்ளது.</p><p> பிட்காயின் ஏற்றத்தால் ஈத்தேரியம் பங்குகளும் 1.36% உயர்ந்து $2,517க்கு வர்த்தகமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25a19de3-02db-4c2f-846b-c3ae402cd387/26-6a8d54da8b2f7.webp' /></p><p></p><h3> விலை ஏற்றத்திற்கான காரணம்</h3><p>உலகளாவிய பொருளாதார மாற்றங்களே இந்த திடீர் எழுச்சிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.</p><p> குறிப்பாக அமெரிக்க கருவூலம் நீண்ட கால அரசு பத்திரங்களின் கொள்முதலை இரண்டு மடங்காக அதிகரிக்க போவதாக அறிவித்தது. இது முதலீட்டாளர்களுக்கு சந்தையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்த கொள்கை மாற்றமே நிதித்துறை முதலீட்டு மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:40:16+00:00</updated>
        </entry>
    </feed>
