<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-20T21:25:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்திய படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-attacks-on-drug-smuggling-boat-4-dead-1789937079"></link>
            <id>https://news.lankasri.com/article/us-attacks-on-drug-smuggling-boat-4-dead-1789937079</id>
            <summary type="text">US Attacks on Drug Smuggling Boat 4 Dead: &amp;nbsp;போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>US Attacks on Drug Smuggling Boat 4 Dead: &nbsp;போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> போதைப்பொருள் கடத்தல் படகு மீது தாக்குதல்</h2><p>வெனிசுலா, மெக்சிகோ போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு போதைப் பொருளானது கடத்தப்பட்டு வருகிறது.</p><p> இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p> டிரம்பின் இந்த உத்தரவின் பேரில் அமெரிக்க கடற்படை இராணுவத்தினர்&nbsp; பசிபிக் மற்றும் கரீபியன் ஆகிய கடல் வழியாக போதைப் பொருள் கடத்தும் படகுகள் மீது தீவிரமான தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a06f7fcd-f477-43ba-b048-8826f613ffad/26-6ab045b93c9a2.webp' /></p><p></p><p> இவ்வாறு நடத்தப்படும் தாக்குதல்களில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த பலர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் பலி</h2><p>
இந்நிலையில் நேற்று கரீபியன் கடல் வழியாக சிறிய படகில் போதை பொருள் கடத்தி வந்த கும்பல் மீது அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p> இந்த தாக்குதலில் படகில் இருந்த 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக இதுவரை 69 தாக்குதல்களை அமெரிக்கா ராணுவம் நடத்தியுள்ளது.</p><p> இந்த தாக்குதலில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 231 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T20:44:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[6,000mAh பற்றரி திறன்.,Lava Bold N4 Pro இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lava-bold-n4-pro-launched-in-india-1789935829"></link>
            <id>https://news.lankasri.com/article/lava-bold-n4-pro-launched-in-india-1789935829</id>
            <summary type="text">Lava Bold N4 Pro Launched in India: Price and Specs: 6,000mAh பற்றரி திறனுடன் லாவா போல்ட் என்4 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. Lava B...</summary>
            <content type="html"><![CDATA[<p>Lava Bold N4 Pro Launched in India: Price and Specs: 6,000mAh பற்றரி திறனுடன் லாவா போல்ட் என்4 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.</p><h2> Lava Bold N4 Pro அறிமுகம்</h2><p>இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Lava நிறுவனத்தின்&nbsp; Bold N4 Pro ஸ்மார்ட்போன் அறிமுகமாகி கவனம் பெற்று வருகிறது.</p><p> பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், செப்டம்பர் 26ம் திகதி முதல் இந்திய சந்தைகளில் விற்பனையை தொடங்குகிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b44168cf-50ef-44ad-aa7e-5bfa4424b9f0/26-6ab040d6c7087.webp' /></p><h2> Lava Bold N4 Pro சிறப்பம்சங்கள்</h2><p>Lava Bold N4 Pro ஸ்மார்ட்போன் சிறப்பான&nbsp; மற்றும் துடிப்பான&nbsp; 6.75 இன்ச் ஹெச்டி+ எல்சிடி திரையை கொண்டுள்ளது.</p><p> Unisoc T8200 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கொண்டுள்ளது.</p><p>6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக Lava Bold N4 Pro ஸ்மார்ட்போனில் 6,000mAh பற்றரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 50 மெகாபிக்சல் பின்பக்க பிரதான கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த Lava Bold N4 Pro ஸ்மார்ட்போனின் விலையானது இந்திய சந்தையில் ரூ.13,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T20:24:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[19 ஆண்டுகளுக்கு பிறகு AI உதவியுடன் கொலையாளியை கைது செய்த தமிழ்நாடு பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tn-police-use-ai-to-arrest-absconding-accused-1789934402"></link>
            <id>https://news.lankasri.com/article/tn-police-use-ai-to-arrest-absconding-accused-1789934402</id>
            <summary type="text">TN Police Use AI to Arrest 19 years absconding Accused: கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தலைமறைவான நபரை நவீன AI உதவியுடன் கிட்டத்தட்ட 19 ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>TN Police Use AI to Arrest 19 years absconding Accused: கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தலைமறைவான நபரை நவீன AI உதவியுடன் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து பொலிஸார் அசத்தியுள்ளனர்.</p><h2> தலைமறைவான குற்றவாளி
</h2><p>2007ம் ஆண்டு சென்னை திருவொற்றியூர் பகுதியில் பாண்டியமணி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா(அப்போது வயது 20) உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்தனர்.</p><p> பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஷேக் அப்துல்லா பொலிஸாரின் கண்களுக்கு சிக்காமல் தலைமறைவானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e92f89-be3c-48b5-831e-2d669987228a/26-6ab03b43991c3.webp' /></p><p> இந்நிலையில் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்ட நிலையில் தனிப்படை பொலிஸார் 2007ம் ஆண்டு ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.</p><h2>AI உதவியுடன் அசத்திய பொலிஸார்</h2><p>கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவர் தற்போது எப்படி இருப்பார் என்பதை ஊகிக்க, பொலிஸார் நவீன ஏஐ உருவ அமைப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.</p><p>தொழில்நுட்ப உதவியுடன் தற்போது 39 வயதில் இருக்கும் ஷேக் அப்துல்லாவின் உருவ தோற்றத்தை பொலிஸார் இறுதி செய்தனர்.</p><p> இதையடுத்து அந்த புகைப்படங்களை வைத்து சமூக வலைதள கணக்குகள் மற்றும் அவர் முன்பு வசித்த பகுதியில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p> இறுதியில் 39 வயதான ஷேக் அப்துல்லா திருமுல்லைவாயில் சோழம்பேடு மெயின் ரோடு பகுதியில் தன்னுடைய குடும்பத்தினருடன் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p> பிறகு திருமுல்லைவாயல் பகுதியில் முகாமிட்ட தனிப்படை பொலிஸார் நேற்று முன்தினம் ஷேக் அப்துல்லாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். </p><p>&nbsp;பின்னர் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷேக் அப்துல்லா, நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p><p> நவீன AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் 19 ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவான குற்றவாளியை பொலிஸார் கைது செய்து இருப்பது பாராட்டுதலை பெற்று வருகிறது.<br></p>]]></content>
            <updated>2026-09-20T20:00:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை: இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை எம்.பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamil-man-sentenced-to-death-in-saudi-1789932834"></link>
            <id>https://news.lankasri.com/article/tamil-man-sentenced-to-death-in-saudi-1789932834</id>
            <summary type="text">Tamil man Sentenced to Death in Saudi Sri Lanka MP Urges Indian PM Modi to Rescue: சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய பிரதமர் மோடி மீட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tamil man Sentenced to Death in Saudi Sri Lanka MP Urges Indian PM Modi to Rescue: சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய பிரதமர் மோடி மீட்க வேண்டும் என்று இலங்கை எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2> சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்ட இலங்கை தமிழ் இளைஞர்</h2><p>இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்துக்கள் கதிர்காமம் முருகன் கோயிலுக்கு புனித பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். </p><p>&nbsp;அப்போது அவர்களுடன் சுப்பிரமணியம் என்ற பெயர் கொண்ட நாயும் சென்றுள்ளது. அந்த நாயை முஸ்லிம் இளைஞர் ஒருவர் மிதிப்பது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p> பலரும் அந்த வீடியோவின் கமெண்டில் தங்களது கண்டன கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f5f4ae4-f7d0-42d1-9d23-9f132941fb23/26-6ab03523e8667.webp' /></p><p> சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞரான அனோஜன் சிவராசாவும் அந்த வீடியோவின் கமெண்டில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.</p><p></p><p> இதையடுத்து சவுதி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறையும், ரூ.7.55 கோடி அபராதமும் விதித்தது.</p><p> இதனை எதிர்த்து அனோஜன் மேல்முறையீடு செய்த நிலையில், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2> இந்திய பிரதமர் மோடி தலையிட வேண்டும்</h2><p>இந்நிலையில் சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய பிரதமர் மோடி மீட்க வேண்டும் என்று இலங்கையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்.பி. யுமான&nbsp; எம்.பி மனோ கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.</p><p>[Q51ZQE
]</p><p> இது தொடர்பாக சமூக வலைதளத்தில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில், இந்திய பிரதமர் மோடியும், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் சல்மானும் மிக நெருங்கிய நட்பு கொண்டவர்கள்.</p><p> எனவே இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனிப்பட்ட முறையில் இந்திய பிரதமர் மோடியுடன் இலங்கை தமிழ் இளைஞரான அனோஜன் தொடர்பில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p> மேலும் இளைஞர் அனோஜன் சிவராசாவை மீட்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-20T19:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் பழிவாங்கும் ஆடை: ஏலம் விட ஏற்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/princess-diana-s-revenge-dress-set-to-go-auction-1789929820"></link>
            <id>https://news.lankasri.com/article/princess-diana-s-revenge-dress-set-to-go-auction-1789929820</id>
            <summary type="text">Princess Diana’s Revenge Dress Set to go Auction: &amp;nbsp;பிரித்தானிய இளவரசி டயானாவின் பழிவாங்கும் ஆடை மீண்டும் ஏலத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Princess Diana’s Revenge Dress Set to go Auction: &nbsp;பிரித்தானிய இளவரசி டயானாவின் பழிவாங்கும் ஆடை மீண்டும் ஏலத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> மீண்டும் ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் ஆடை</h2><p>மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் புகழ்பெற்ற “பழிவாங்கும் ஆடை”(Revence Dress) சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.</p><p> லண்டனில் உள்ள சோதேபிஸ்(Sotheby’s) என்ற ஏல நிறுவனத்தினால் நடத்தப்படும் கண்காட்சியில் இந்த பழிவாங்கும் ஆடை வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0add9f7c-8abc-4acd-a833-95e67b591d11/26-6ab0295e36f3e.webp' /></p><p>லண்டனில் நேற்று தொடங்கப்பட்ட இந்த கண்காட்சி செப்டம்பர் 24ம் திகதி வரை நடைபெற உள்ளது.</p><p></p><p>லண்டனை தொடர்ந்து ஹாங்காங், ஜெனிவா போன்ற நகரங்களின் கண்காட்சிகளில் வைக்கப்பட்டு இறுதியாக 2026ம் டிசம்பர் 9ம் திகதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை ஏலம் விடப்படவுள்ளது.</p><p> இப்போதைய பிரித்தானிய மன்னர் மற்றும் அப்போதைய இளவரசரான சார்லஸ் உடனான திருமணம் முறிவை சந்தித்த போது, இளவரசி டயானா சோகத்தில் மூழ்கி விடாமல், இந்த உலகத்திற்கு தன்னுடைய அழகையும், தைரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அணிந்த ஆடைகளை ஊடகங்கள் பழிவாங்கும் ஆடை என வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e1a6f65-0a40-4ab2-ad75-851c947bea89/26-6ab0295ee1307.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T18:43:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி: பேருந்து மீது குறிவைத்து தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-election-officer-killed-in-ukraine-attack-1789925970"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-election-officer-killed-in-ukraine-attack-1789925970</id>
            <summary type="text">Russia Election Officer Killed in Ukraine Attack: உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய தேர்தல் அதிகாரி கொல்லப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia Election Officer Killed in Ukraine Attack: உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய தேர்தல் அதிகாரி கொல்லப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி</h2><p> கெர்சன் மாகாணத்தில் நடைபெற்ற ரஷ்ய தேர்தல் பணியின் போது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தேர்தல் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p> இந்த தகவலை ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் எல்லா பாம்ஃபிலோவா உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>மேலும், கெர்சன் பகுதியில் பொதுமக்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் வரை கொல்லப்பட்டதாகவும், அதில் ஒருவர் Nizhneserogozsky மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையம் எண் 220 தேர்தல் ஆணைய உறுப்பினர் ஓல்கா பெட்ரோவ்னா டெம்யானென்கோ எனவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb278de-52ba-4610-9809-b8a46fd8fe51/26-6ab01a53d60ce.webp' /></p><p></p><p>ரஷ்யாவின் தேர்தல் செயல்முறைகளை சீர் குலைக்கும் விதமாக தொலைதூர கிழக்கு பகுதிகளில் உக்ரைன் நாச வேலைகளில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யாவின் டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் முன்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> உக்ரைனின் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்றது.</p><p> மாஸ்கோவில் நடைபெற்ற வாக்குப்பதிவில் காலை 10 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 3.2 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T17:39:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின்தங்கிய நிலையில் ஐரோப்பாவின் AI உள்கட்டமைப்பு - 10 ஆடுகளில் 600 பில்லியன் செலவினம் தேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-faces-600b-ai-infrastructure-gap-1789922853"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-faces-600b-ai-infrastructure-gap-1789922853</id>
            <summary type="text">Europe faces 600 billion dollar AI infrastructure gap: ஐரோப்பாவின் AI தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 600 பில்லியன் யூரோ செலவிடவேண்டியுள்ளது.

600 பில்லியன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Europe faces 600 billion dollar AI infrastructure gap: ஐரோப்பாவின் AI தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 600 பில்லியன் யூரோ செலவிடவேண்டியுள்ளது.</p><h2>

600 பில்லியன் யூரோ வரை செலவினம் தேவைப்படும்</h2><p>ஐரோப்பாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் 600 பில்லியன் யூரோ வரை செலவினம் தேவைப்படும் என ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) எச்சரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e27d438-e3b1-45cd-9088-0fea58fb87fc/26-6ab00e277be24.webp' /></p><p>ECB தலைவர் கிரிஸ்டின் லகார்ட், ஐரோப்பாவில் தற்போதைய தரவு மைய திறன் தேவைக்கு போதவில்லை. 2025-ல் 3 GW-ஆக இருந்த திறன், 2036-ல் 20 GW-ஆக அதிகரிக்கும் என்று கூறயுள்ளார்.
</p><p>
ஐரோப்பிய நிறுவனங்கள் 2026-ல் தங்களின் மொத்த முதலீட்டில் 10 சதவீதத்தை AI-க்கு செலவிட உள்ளன. மேலும், AI தொடர்பான கடன், நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட புதிய கடன்களில் 25 சதவீத வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>ஐரோப்பிய தொழிலாளர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தற்போது AI பயன்படுத்துகின்றனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த அளவை விட இரட்டிப்பு மடங்காகும். AI பயன்பாடு உற்பத்தித் திறனை அடுத்த பத்து ஆண்டுகளில் 4 சதவீதம் வரை உயர்த்தும் என ECB கணித்துள்ளது.
</p><p>
ஆனால், IMF விடுத்துள்ள எச்சரிக்கையில், AI-யின் நன்மைகள் மற்றும் செலவுகள் நாடுகள், பிராந்தியங்கள், தொழிலாளர்கள் இடையே சமமாகப் பகிரப்படாது என கூறியுள்ளது. தொழிலாளர்கள் சிலர் உற்பத்தி திறனை உயர்த்தினாலும், சிலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
</p><p></p><p>ஐரோப்பா, AI திறனில் அமெரிக்கா மற்றும் சீனாவை விட பின்தங்கியுள்ளது. 2025-ல் அமெரிக்கா 59 முக்கிய AI மாதிரிகளை உருவாக்கிய நிலையில், சீனா 35 உருவாக்கியது. ஆனால், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா தலா ஒன்றையே உருவாக்கின. உலகளாவிய AI கணினி திறனில் அமெரிக்கா 75 சதவீதத்தை வைத்திருக்க, ஐரோப்பா வெறும் 5 சதவீதம் மட்டுமே கொண்டுள்ளது.
</p><p>
இதனை சமாளிக்க, ஐரோப்பிய ஆணையம் 7 AI Gigafactories அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 10 பில்லியன் யூரோ அரசு நிதி மற்றும் 20 பில்லியன் யூரோ தனியார் முதலீடு ஈர்க்கப்படும்.

AI விரிவாக்கம், மின்சார உள்கட்டமைப்புக்கும் சவாலாக உள்ளது. தற்போது தரவு மையங்கள் ஐரோப்பாவின் மின்சார பயன்பாட்டில் 3 சதவீதம் பங்காற்றுகின்றன. இது விரைவில் அதிகரிக்கும் என IMF எச்சரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T16:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-beat-zimbabwe-by-1-wicket-in-3rd-odi-1789920941"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-beat-zimbabwe-by-1-wicket-in-3rd-odi-1789920941</id>
            <summary type="text">Australia beat zimbabwe by 1 wicket: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Australia beat zimbabwe by 1 wicket: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

ஹராரேயில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.&nbsp;</p><h2>சிக்கந்தர் ரஸா 81 ஓட்டங்கள் </h2><p>

அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரேயில் நடந்தது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 271 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c6b430-6ede-4367-9a0e-f2675f1154ea/26-6ab007b6a7d6f.webp' />&nbsp;</p><p></p><p>அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா 72 பந்துகளில் 81 ஓட்டங்களும், கிரேக் எர்வின் 59 ஓட்டங்களும் எடுத்தனர். 

நேதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca51f0b-e903-48dc-bd29-9ba408353dab/26-6ab009333c8ff.webp' /></p><p>
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் ஜோஷ் இங்கிலிஸ் (Josh Inglis) நிதானமாக ஆடி 103 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><h2>அவுஸ்திரேலியா வெற்றி </h2><p>

ஆனால், ஏனைய வீரர்கள் சொதப்பியதால் 245 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள் என அவுஸ்திரேலியா தடுமாறியது.</p><p>

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நேதன் எல்லிஸ் (Nathan Ellis), ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 272 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலிஸ் ஆட்டநாயகன் விருதும், கூப்பர் கோனொலி தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d851c868-594b-43a9-aa29-dbf48dd9f732/26-6ab00a415f0c3.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cce22224-a463-42eb-8673-cc15ff602b09/26-6ab007b77ae42.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T16:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/melinda-gates-denies-funding-daughters-startup-1789919559"></link>
            <id>https://news.lankasri.com/article/melinda-gates-denies-funding-daughters-startup-1789919559</id>
            <summary type="text">Melinda Gates denies funding daughter’s startup: 3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தும், சொந்த மகளுக்கு தொழில் தொடங்க பணம் தர மறுத்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Melinda Gates denies funding daughter’s startup: 3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தும், சொந்த மகளுக்கு தொழில் தொடங்க பணம் தர மறுத்துள்ளார் மெலிண்டா கேட்ஸ்.</p><p>
</p><h2>
மெலிண்டா கேட்ஸ்</h2><p>&nbsp;மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், 34 பில்லியன் டொலர் ( ரூ.3.30 லட்சம் கோடி) சொத்து இருந்தும், தனது மகளின் ஸ்டார்ட்அப்பிற்கு நிதி வழங்க மறுத்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74cd0447-e958-4f71-8152-32d394dafc63/26-6ab00148bde2d.webp' /></p><p>மெலிண்டா, “இது உண்மையான வியாபாரம் என்றால், பிற முதலீட்டாளர்கள் அதனை ஆதரிக்க வேண்டும். நான் பணம் கொடுக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
</p><p>
மேலும், தனது மகள் மறுப்பு மற்றும் சவால்களை எதிர்கொண்டு வளர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>பில் கேட்ஸ், தனது குழந்தைகள் தன்னுடைய செல்வத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே பெறுவார்கள் என்று முன்பே அறிவித்திருந்தார். இதே கொள்கையை மெலிண்டாவும் பின்பற்றுகிறார்.</p><h2>

இளைய மகளின்&nbsp;ஃபேஷன்-டெக் ஸ்டார்ட்அப்</h2><p>அவர்களின் இளைய மகள் ஃபீபி கேட்ஸ் (Phoebe Gates), தனது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக நண்பருடன் சேர்ந்து Phia என்ற ஃபேஷன்-டெக் ஸ்டார்ட்அப்பை தொடங்கியுள்ளார். இந்த பிளாட்ஃபார்ம், 40,000-க்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் உள்ள ஆடைகள் விலைகளை ஒப்பிட்டு, பயனாளர்களுக்கு சிறந்த சலுகைகளை கண்டுபிடிக்க உதவுகிறது.
</p><p></p><p>மெலிண்டா, பெண்கள் தொழில் முனைவோர் நிதி திரட்டுவதில் அதிக சவால்களை சந்திக்கின்றனர் என்றும், தன்னம்பிக்கை மற்றும் பொறுமையுடன் முன்னேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த முடிவு, கேட்ஸ் குடும்பத்தின் சுயமாக முன்னேற வேண்டும் என்ற கொள்கையை வெளிப்படுத்துகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T15:49:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/protesters-marched-in-crowborough-for-asylum-camp-1789919083"></link>
            <id>https://news.lankasri.com/article/protesters-marched-in-crowborough-for-asylum-camp-1789919083</id>
            <summary type="text">Protesters marched in crowborough for asylum camp: பிரித்தானியாவில் முன்னாள் இராணுவத் தளம் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகமாக மாற்றப்பட்டதையடுத்து போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Protesters marched in crowborough for asylum camp: பிரித்தானியாவில் முன்னாள் இராணுவத் தளம் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகமாக மாற்றப்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.
</p><p>
பிரித்தானியாவில் மக்களின் எதிர்ப்பை மீறி, முன்னாள் இராணுவத் தளம் ஒன்று புலம்பெயர்ந்தோருக்கான முகாமாக மாற்றப்பட்டதால் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.&nbsp;</p><h2>புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகாம் </h2><p>

சசெக்ஸின் Crowborough-யில் முன்னாள் இராணுவத் தளம் ஒன்று, ஆண் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகாமாக மாற்றப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb20abd0-93a7-433e-a7a4-6c248a65e775/26-6ab00014c4066.webp' />&nbsp;</p><p></p><p>

ஆனால், அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பு, வளங்களின் மீதான அழுத்தம் மற்றும் தளத்தின் அளவு ஆகியவற்றிற்கு எதிராக உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பு எழுந்தது.</p><p> 

அந்த எதிர்ப்பையும் மீறி புகலிட முகாம் செயல்படத் தொடங்கிய நிலையில், அதன் கொள்ளளவை 540 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>ஆர்ப்பாட்டத்தில்&nbsp;ஆயிரக்கணக்கானோர் </h2><p> </p><p>

இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் குடும்பங்கள் மற்றும் சிறு குழந்தைகள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>

'Crowborough வேண்டாம் என்கிறது' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி மக்கள் திரண்டனர்.

இந்த பேரணி இராணுவத் தளத்தில் தொடங்கி நகர மையத்திற்குள் நகர்ந்தது.
</p><p>
 அதே சமயம், 'புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படுகிறார்கள்', 'கருணையே எங்கள் பலம்' மற்றும் 'ஒன்றாக இணைந்தால் வலிமை' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி எதிர் ஆர்ப்பாட்டக்காரர்களும் வந்திருந்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5738972c-62a8-497c-b6d2-96c350805f9d/26-6ab00015b024e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T15:44:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை சோதனை செய்த வட கொரியா - உலக நாடுகள் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-fires-two-missiles-in-3-hours-1789909593"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-fires-two-missiles-in-3-hours-1789909593</id>
            <summary type="text">North Korea fires two missiles in 3 hours: 3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது.  

பாலிஸ்டிக் ஏவுகணைக சோதனைவட கொரியா கிழக்கு கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>North Korea fires two missiles in 3 hours: 3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது. </p><h2> 

பாலிஸ்டிக் ஏவுகணைக சோதனை</h2><p>வட கொரியா கிழக்கு கடற்கரையிலிருந்து மூன்று மணி நேர இடைவெளியில் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.</p><p> இது கடந்த வாரம் நடந்த சோதனைகளுக்குப் பிறகு மீண்டும் நிகழ்ந்ததால், உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51480eb-8287-4bb4-8f1e-f77a6360190f/26-6aafda5b478eb.webp' /></p><p>
</p><h2>
3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகள்</h2><p>முதல் ஏவுகணை வோன்சான் (Wonsan) பகுதியில் இருந்து மதியம் 3 மணிக்கு ஏவப்பட்டது. இது சுமார் 450 கிமீ தூரம் பறந்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏவுகணை மாலை 5.50 மணிக்கு அதே பகுதியில் இருந்து ஏவப்பட்டு 600 கிமீ தூரம் பறந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம், இந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் வகையைச் சேர்ந்தவை என்றும், அவை ஜப்பானின் Exclusive Economic Zone-க்கு வெளியே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளது.
</p><p></p><p>தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், இந்த சோதனைகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நேரடியாக மீறுகின்றன என்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பானும் பீஜிங்கில் உள்ள தூதரக வழியாக அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
</p><p>
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கோயிசுமி, “வட கொரியாவின் இந்த நடவடிக்கைகள் ஜப்பான், பிராந்தியம் மற்றும் உலக அமைதிக்கு நேரடி அச்சுறுத்தல்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இதற்கிடையில், வட கொரியா தனது அணு திட்டத்திற்கு எதிராக ஐ.நா. அணு கண்காணிப்பு அமைப்பு எடுத்த தீர்மானத்தை நிராகரித்துள்ளது. </p><p>மேலும், அமெரிக்கா தலைமையிலான கடற்படை பயிற்சிகள் தான் தீவிர நிலையை உருவாக்குகின்றன என்று கிம் யோ ஜோங் (Kim Yo Jong) குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

இந்த சோதனைகள், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. உலக நாடுகள், வட கொரியா உடனடியாக ஏவுகணை சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T15:31:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா முழுவதும் பறந்த தானியங்கி விமானம் - வரலாற்று சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/autonomous-plane-flies-across-america-1789917950"></link>
            <id>https://news.lankasri.com/article/autonomous-plane-flies-across-america-1789917950</id>
            <summary type="text">Autonomous plane flies across America: அமெரிக்காவில் முதல் முறையாக தானியங்கி (Autonomous) விமானம் மனித பைலட் இல்லாமல், நாடு முழுவதும் பறந்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Autonomous plane flies across America: அமெரிக்காவில் முதல் முறையாக தானியங்கி (Autonomous) விமானம் மனித பைலட் இல்லாமல், நாடு முழுவதும் பறந்துள்ளது.</p><p>

Joby Aviation நிறுவனம் உருவாக்கிய Cessna Caravan விமானம், 3,199 மைல்கள் தூரம் பறந்து இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b19c66c-d485-4b3f-8ad7-7fec77873ac6/26-6aaffafff2ef2.webp' /></p><p>இந்த விமானம் செப்டம்பர் 7 அன்று காலிஃபோர்னியாவின் Concord நகரில் இருந்து புறப்பட்டு, பல்வேறு இடங்களில் இடைநிறுத்தங்களுடன் பயணம் செய்தது. </p><p>புறப்படும் தருணம் முதல் தரையிறங்கும் வரை, முழுமையாக கணினி கட்டுப்பாட்டில் இயங்கியது.

விமானம் Phoenix Deer Valley போன்ற மிகப் பிஸியான விமான நிலையங்களில் பாதுகாப்பாக செயல்பட்டதோடு, புயல், இடியுடன் கூடிய மழை போன்ற கடுமையான வானிலை சவால்களையும் தானாக சமாளித்தது.</p><p></p><p>Joby Aviation நிறுவனர் JoeBen Bevirt, “இந்த பயணம் விமானத் துறையின் புதிய யுகத்தை காட்டுகிறது. தானியங்கி விமானங்கள், தொலைதூர பகுதிகளை இணைக்க, அவசர உதவிகளை வழங்க, பேரழிவுகளுக்கு விரைவாக பதிலளிக்க, இராணுவ நடவடிக்கைகளில் பைலட்டுகளை ஆபத்திலிருந்து காப்பாற்ற உதவும்” எனக் கூறினார்.</p><p>

இந்த விமானம் டெக்சாஸ் Fort Worth Alliance Airport மற்றும் South Carolina Shaw Air Force Base ஆகிய இடங்களில் தரையிறங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b65015-039a-405a-bea4-7d929cde9891/26-6aaffb00bfe08.webp' /></p><p> </p><h2>ரைட் சகோதரர்களுக்கு அஞ்சலி</h2><p>செப்டம்பர் 14 அன்று, North Carolina Kitty Hawk பகுதியில் உள்ள Wright Brothers National Memorial மேல் பறந்து, 1903-ல் முதல் முறையாக விமானத்தில் பிறந்ததற்கு Wilbur மற்றும் Orville Wright சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.
</p><p>
இப்போது, இந்த தானியங்கி விமானம் மீண்டும் California நோக்கி திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளது.</p><p> இதில் Washington D.C., Kentucky, Kansas, Oklahoma, Utah, Oregon போன்ற இடங்களில் இடைநிறுத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.</p><p>

இந்த சாதனை, விமானத் துறையில் தானியங்கி தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T15:22:22+00:00</updated>
        </entry>
    </feed>
