<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-31T03:13:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளம் - திபெத்தை அடுத்து... கிராண்ட் கேன்யனைப் புரட்டிப் போட்ட பெருவெள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/flash-flood-in-grand-canyon-1788145947"></link>
            <id>https://news.lankasri.com/article/flash-flood-in-grand-canyon-1788145947</id>
            <summary type="text">US Grand Canyon Flash Floods: அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் பகுதியில் திடீர் வெள்ளத்தில் பலர் காணாமல் போயினர்.
அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் தேசியப...</summary>
            <content type="html"><![CDATA[<p>US Grand Canyon Flash Floods: அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் பகுதியில் திடீர் வெள்ளத்தில் பலர் காணாமல் போயினர்.
</p><p>அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் தேசியப் பூங்காவில் ஏற்பட்ட பெரும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>காணாமல் போனவர்கள்</h2><p>
</p><p>பிரைட் ஏஞ்சல் கேன்யன் மற்றும் ஃபாண்டம் ராஞ்ச் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, பெரிய பாறைகள், உலோகக் கட்டமைப்புகள் மற்றும் பிற குப்பைகளை அதன் வழியாகப் பாயும் கொலராடோ ஆற்றில் அடித்துச் சென்றதாக தேசிய பூங்கா சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. </p><p>பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றவும், அங்குள்ளவர்களின் விவரங்களை உறுதிப்படுத்தவும் அரிசோனா அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தேசிய பூங்கா சேவை அமைப்பு தெரிவித்துள்ளது;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b3a4b35-7660-4b25-94c4-43693146c2df/26-6a94f11d49c81.webp' /></p><p> </p><p>அத்துடன், காணாமல் போனவர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த மலையேற்றப் பயணிகள் குறித்த ஏதேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் அது கேட்டுக்கொண்டது. </p><p>கொலராடோ ஆற்றில் கலக்கும் பிரைட் ஏஞ்சல் ஓடையில், சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2:30 மணியளவில் திடீர் வெள்ளப்பெருக்கு தொடங்கியது.</p><p></p><p> பெருக்கெடுத்த நீர், ஓடையின் மீதான நடைப்பாலங்களை அடித்துச் சென்றதுடன், நிலப்பரப்பையும் கணிசமாக மாற்றியது. இதனிடையே, உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை, பூங்கா ஊழியர்களும் அரிசோனா பொதுப் பாதுகாப்புத் துறையினரும் 60-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளனர். </p><p>தேசிய பூங்கா சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றே குறிப்பிட்டுள்ளது. </p><p>சனிக்கிழமையன்று 'பிரைட் ஏஞ்சல் கிரீக்' (Bright Angel Creek) வழித்தடத்தையொட்டிய பள்ளத்தாக்கின் உட்பகுதியில் இருந்த மலையேற்றப் பயணிகள் அல்லது 'பேக்-பேக்கர்கள்' (backpackers) குறித்தோ, </p><p>அல்லது பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் முகாமிடுவதற்கான முன்பதிவு செய்திருந்தவர்கள் குறித்தோ ஏதேனும் தகவல் தெரிந்தால் அரசு அமைப்பிற்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்ட பூங்கா அதிகாரிகள்,</p><h2>கொலராடோ ஆற்றில்</h2><p> </p><p>காணாமல் போன அல்லது விவரம் அறியப்படாதவர்களின் எண்ணிக்கையையும் தனி அறிக்கை ஒன்றில் வெளியிட்டனர். பிரைட் ஏஞ்சல் ஓடையின் (Bright Angel Creek) குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ஏறக்குறைய அனைத்து நடைபாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்; </p><p>உலோகக் கட்டமைப்புகளும் இடிபாடுகளும் ஆற்றில் கலப்பதால், அடுத்த அறிவிப்பு வரும் வரை கொலராடோ ஆற்றில் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. </p><p>திங்கட்கிழமை வரையிலும் அப்பகுதியில் மேலும் மழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்குத்தான சரிவுள்ள பாறைப் பகுதியில், சுமார் 30 நிமிடங்களுக்குள் அரை அங்குலம் முதல் 1 அங்குலம் (1 சென்டிமீட்டர் முதல் 2.5 சென்டிமீட்டர்) வரை மழை பெய்ததாக ஃபிளாக்ஸ்டாஃபில் உள்ள தேசிய வானிலை சேவை வானிலை ஆய்வாளர் ஜஸ்டின் ஜான்ட்ரோ கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a29e6749-a820-4fe9-bfe9-519a8307bb79/26-6a94f11e00715.webp' /></p><p>
</p><p>கிராண்ட் கேன்யனின் வடக்குப் பகுதியில் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டதாக கூறியுள்ள அவர்; அப்பகுதியில் 'பிரைட் ஏஞ்சல் கிரீக்' நீரோடையானது வடக்குப் விளிம்பிலிருந்து (North Rim) கொலராடோ நதியை நோக்கி சுமார் 6,000 அடி (1,828 மீட்டர்) உயரத்தில் இருந்து கீழே இறங்கி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p> ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க உணவகம் மற்றும் தங்குமிடங்களைக் கொண்டதும், படகு சவாரி செய்பவர்கள் ஆற்றில் ஏறி இறங்குவதற்கான பொதுவான இடமாகவும் விளங்கும் ஃபாண்டம் ராஞ்சிலிருந்து 62 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்; மேலும் பலர் வெளியேற்றப்படவிருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d62bb6d-0f1e-4a7a-ae00-6ce1e6c207f6/26-6a94f11eba1e4.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T03:09:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI மூன்றாம் உலகப் போர் - ஆப்பிளின் தந்திரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apple-ai-strategy-amid-tech-war-1788139403"></link>
            <id>https://news.lankasri.com/article/apple-ai-strategy-amid-tech-war-1788139403</id>
            <summary type="text">Apples AI strategy amid tech war: Apple முதலில் வருவது முக்கியமல்ல, சரியான தயாரிப்பை உருவாக்குவது தான் முக்கியம் என்ற அணுகுமுறையை AI-யிலும் பின்பற்றுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apples AI strategy amid tech war: Apple முதலில் வருவது முக்கியமல்ல, சரியான தயாரிப்பை உருவாக்குவது தான் முக்கியம் என்ற அணுகுமுறையை AI-யிலும் பின்பற்றுகிறது.</p><p>
</p><h2>
AI மூன்றாம் உலகப் போர்</h2><p>தொழில்நுட்ப உலகில் தற்போது AI (Artificial Intelligence) மீது முன்னிலை பெறும் போட்டி, “AI மூன்றாம் உலகப் போர்” என அழைக்கப்படுகிறது.
</p><p>
OpenAI, Google, Anthropic, Meta, xAI, Microsoft போன்ற நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்கள் முதலீடு செய்து, மிகப்பெரிய AI மாடல்கள் மற்றும் தரவு மையங்களை உருவாக்கி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bf8f62a-c653-425f-b0d8-07ca49236ca6/26-6a94d78c8881b.webp' /></p><p>
</p><h2>
பில்லியன்களில் முதலீடு&nbsp;செய்யும் டெக் நிறுவனங்கள்</h2><p>OpenAI-யின் Stargate Project மட்டும் அடுத்த நான்கு ஆண்டுகளில் 500 பில்லியன் டொலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

Google, Meta, Amazon, Microsoft ஆகியவை 2026-இல் மட்டும் 150-220 பில்லியன் டொலர் வரை செலவழிக்கின்றன. Anthropic, xAI போன்ற புதிய நிறுவனங்களும் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து வருகின்றன.
</p><p>
இந்த போட்டி வெறும் மென்பொருள் மட்டுமல்ல, சிப்கள், மின்சாரம், தரவு மையங்கள், பொறியாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியவற்றை கைப்பற்றும் போராட்டமாக மாறியுள்ளது.
</p><p></p><p>ஆனால், Apple வேறு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. OpenAI, Google போன்ற நிறுவனங்கள் பெரும் முதலீடு செய்து AI-யை முன்னெடுத்து வரும் நிலையில், Apple காத்திருந்து சரியான தருணத்தில் தன் AI-யை வலுப்படுத்தும் தந்திரத்தை பின்பற்றுகிறது.</p><p>

Apple, Google-ன் Gemini AI உடன் கூட்டாண்மை செய்து, தன் Apple Intelligence மற்றும் புதிய Siri-யை அறிமுகப்படுத்தியுள்ளது. Tim Cook-ன் பழைய வாக்குமூலத்தைப் போல, Apple “முதலில் வருவது முக்கியமல்ல, சரியான தயாரிப்பை உருவாக்குவது தான் முக்கியம்” என்ற அணுகுமுறையை AI-யிலும் பின்பற்றுகிறது.
</p><p></p><p>Apple-க்கு 2.5 பில்லியன் சாதனங்கள் என்ற வலுவான விநியோக வலையமைப்பு உள்ளது. AI-யின் இறுதி வெற்றியாளர்கள் யார் என்ற தெளிவு கிடைக்கும் வரை, Apple காத்திருந்து, பின்னர் தன் சாதனங்கள் மூலம் AI-யை உலகளாவிய பயனர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது.
</p><p>
இதனால், Apple-ன் தந்திரம் சரியான தருணத்தில் களமிறங்கும் பொறுமையான காத்திருப்பாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T01:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் முக்கிய பெட்ரோல் வழங்குநராக உருவெடுத்துள்ள இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-key-petrol-supplier-to-russia-1788135560"></link>
            <id>https://news.lankasri.com/article/india-key-petrol-supplier-to-russia-1788135560</id>
            <summary type="text">India becomes key petrol supplier to Russia: ரஷ்யாவிற்கு முக்கிய பெட்ரோல் விநியோக நாடாக இந்தியா மாறியுள்ளது.

உக்ரைனின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>India becomes key petrol supplier to Russia: ரஷ்யாவிற்கு முக்கிய பெட்ரோல் விநியோக நாடாக இந்தியா மாறியுள்ளது.
</p><p>
உக்ரைனின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், ரஷ்யா தனது தேவைகளை பூர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
</p><p>
ஆகஸ்ட் மாதத்தில், ரஷ்யா தினசரி 1,25,000 பீப்பாய் பெட்ரோல் (சுமார் 4.7 லட்சம் டன்) இறக்குமதி செய்துள்ளது. இதில் இந்தியா, துருக்கி, மொராக்கோ ஆகிய மூன்று நாடுகள் முக்கிய பங்காற்றின.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af75b6a7-312e-4733-9ea6-1739eb63c03c/26-6a94c88ab2c75.webp' /></p><p>குஜராத்தில் அமைந்துள்ள Nayara Energy-யின் Vadinar சுத்திகரிப்பு நிலையம் ரஷ்யாவின் Rosneft நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு ரஷ்யாவிற்கு பெருமளவில் பெட்ரோல் அனுப்பியுள்ளது.</p><p> கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியா சுமார் 10 லட்சம் பீப்பாய் பெட்ரோல் ரஷ்யாவுக்கு வழங்கியுள்ளது.</p><p></p><p>

2022 முதல் இந்தியா ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியா தினசரி 2.6 மில்லியன் பீப்பாய் ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. இதன் மூலம் தயாரிக்கப்பட்ட பெட்ரோல் மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p>

ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் பெட்ரோல் இறக்குமதியில் 55 சதவீதம் (சுமார் 2.6 லட்சம் டன்) தடை செய்யப்பட்ட கப்பல்கள் மூலம், 40 சதவீதம் இரகசிய ship-to-ship (STS) transfers மூலம் வந்ததாக எரிசக்தி ஆய்வு நிறுவனம் Vortexa தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>உக்ரைன் தாக்குதலால் ரஷ்யாவின் உள்நாட்டு பெட்ரோல் உற்பத்தி 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான ரஷ்யா, தனது உள்நாட்டு தேவைக்காகவே பெட்ரோல் இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில் இந்தியா, ரஷ்யாவிற்கு எரிபொருள் வழங்கும் முக்கிய கூட்டாளியாக உருவெடுத்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T00:16:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்தான்புலில் துருக்கி, சவுதி, பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkiye-saudi-pakistan-meet-in-istanbul-1788134238"></link>
            <id>https://news.lankasri.com/article/turkiye-saudi-pakistan-meet-in-istanbul-1788134238</id>
            <summary type="text">Turkiye Saudi Pakistan meet in Istanbul: இஸ்தான்புலில் துருக்கி, சவுதி, பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர்.

துருக்கி, சவுதி அரேபியா மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>Turkiye Saudi Pakistan meet in Istanbul: இஸ்தான்புலில் துருக்கி, சவுதி, பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர்.
</p><p>
துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று இஸ்தான்புலில் சந்திக்க உள்ளனர்.</p><p>

இந்த சந்திப்பு, மூன்று நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cea65d4f-8c7b-4bc9-935e-b41bdbfd9142/26-6a94c3602b302.webp' /></p><p>அல்ஜசீரா வெளியிட்ட தகவலின்படி, இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு, பிராந்திய நிலைத்தன்மை, மற்றும் இராணுவ ஒத்துழைப்பு குறித்து முக்கியமான விவாதங்கள் நடைபெறவுள்ளன.
</p><p>
குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் தென் ஆசியாவில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள் குறித்து மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை, கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன. இந்த சந்திப்பு, அந்த உறவுகளை மேலும் மேம்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
</p><p>
சவுதி அரேபியா, சமீபத்தில் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் ஆயுத உற்பத்தி துறையில் துருக்கியுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. பாகிஸ்தானும், துருக்கி மற்றும் சவுதியுடன் இராணுவ பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வருகிறது.
</p><p>
இந்த சந்திப்பு, பிராந்தியத்தில் புதிய பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கும் வாய்ப்பாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T23:54:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் ஆயுதக் கிடங்கில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் - 38 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-strike-on-ukraine-ammunition-depot-kills-38-1788125393"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-strike-on-ukraine-ammunition-depot-kills-38-1788125393</id>
            <summary type="text">Russia strike on Ukraine ammunition depot: உக்ரைனின் ஆயுதக் கிடங்கில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆயுதக் கிடங்கில்...உக்ரைனின் தலைநகர் கீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia strike on Ukraine ammunition depot: உக்ரைனின் ஆயுதக் கிடங்கில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><h2>
ஆயுதக் கிடங்கில்...</h2><p>உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே உள்ள மைலா பகுதியில் அமைந்திருந்த ஆயுதக் கிடங்கில் ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல், இந்த ஆண்டின் மிகப்பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa4c4ecc-f053-430e-a9eb-d731123bba46/26-6a94a0d3143f0.webp' /></p><p>இந்த தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். </p><p>

தாக்குதலுக்குப் பிறகு கிடங்கில் இருந்த வெடிமருந்துகள் தீப்பற்றி, தொடர் வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
</p><p></p><h2>குடியிருப்பு பகுதிகள் சேதம்</h2><p>கிடங்கில் ஆர்டிலரி குண்டுகள், கண்ணிவெடிகள், ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. வெடிப்பின் தாக்கம் காரணமாக வீடுகள் சேதமடைந்ததோடு, வெடிக்காத குண்டுகள் குடியிருப்பு பகுதிகளில் சிதறியுள்ளன.</p><p>

ஜெலென்ஸ்கி, அதிகாரிகள் மீது கடும் விமர்சனம் செய்து, “பெரிய அளவில் வெடிமருந்துகளை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் வைத்திருப்பது தவறு” என்று கூறினார். இதனால் உக்ரைன் பாதுகாப்புத்துறை, நாடு முழுவதும் உள்ள ஆயுதக் கிடங்குகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
</p><p></p><h2>முதல் முறையல்ல</h2><p>இது முதல் சம்பவமல்ல. கடந்த ஜூலை மாதத்தில், கீவ் அருகே உள்ள விஷ்னேவே பகுதியில் நடந்த ஆயுதக் கிடங்கு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர்.
</p><p>
ரஷ்யா கடந்த வாரம் மட்டும் 2,000 ட்ரோன்கள், 1,600 குண்டுகள், 31 ஏவுகணைகள் உக்ரைனின் இராணுவ, ஆற்றல், தொழில் மற்றும் போக்குவரத்து அமைப்புகளை குறிவைத்து தாக்கியதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த தாக்குதல், உக்ரைனின் ஏற்கனவே சிரமப்பட்டு வரும் வான்வழி பாதுகாப்பு அமைப்பிற்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T23:31:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க சிறையில் இருந்து புகைப்படம் வெளியிட்ட முன்னாள் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ex-venezuela-president-maduro-shares-jail-photo-1788132492"></link>
            <id>https://news.lankasri.com/article/ex-venezuela-president-maduro-shares-jail-photo-1788132492</id>
            <summary type="text">Maduro shares jail photo stands firm: சிறையில் இருக்கும் முன்னாள் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Maduro shares jail photo stands firm: சிறையில் இருக்கும் முன்னாள் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.</p><h2>

முன்னாள் ஜனாதிபதி மதுரோ&nbsp;புகைப்படங்கள்</h2><p>வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்க சிறையில் இருந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு “நாங்கள் உறுதியாக நிற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c675350f-4408-4855-8eef-70917dffc0b3/26-6a94bc8e45abf.webp' /></p><p>மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ், கடந்த ஜனவரியில் காரகஸ் நகரில் நடந்த அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். </p><p>தற்போது அவர்கள் நியூயார்க், ப்ரூக்லின் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி வைத்திருப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>டெலிகிராம் வழியாக செய்தி</h2><p> ஆனால், இருவரும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

மதுரோ, டெலிகிராம் வழியாக வெளியிட்ட செய்தியில், “என் பேரக்குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் எங்களை நேசிக்கும் நல்ல மனிதர்களுக்கு இந்த புகைப்படங்களை ஒரு சிறிய பரிசாக அனுப்புகிறேன். நாங்கள் உறுதியாக நிற்கிறோம், உங்கள் அன்பால் எங்கள் இதயம் நிரம்பியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
</p><p>
புகைப்படங்களில் அவர் சாம்பல் நிற ட்ராக் சூட் அணிந்து, கைகளை அமைதியின் சின்னமாக உயர்த்தியுள்ளார். கைது செய்யப்பட்டதிலிருந்து அவர் அதிக எடை இழந்ததாகத் தெரிகிறது.
</p><p>
அவரது மகன் நிக்கோலஸ் மதுரோ குவேரா, “அவர் நல்ல உடல் நிலையில் உள்ளார். பைபிள் படிப்பதில் நேரத்தை செலவிடுகிறார்” என்று கூறினார்.</p><p></p><p>அமெரிக்க நீதிமன்றம், மதுரோ மற்றும் அவரது மனைவியின் வழக்கை ஜூன் 1, 2027 அன்று விசாரிக்கத் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.</p><p>

இந்த புகைப்படங்கள் வெளியாகிய இரண்டு நாட்களுக்கு முன்பு, வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகஸ், அமெரிக்காவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணெய் ஒப்பந்தத்தை அறிவித்தார். இதன் மூலம் அமெரிக்கா வெனிசுலாவில் எண்ணெய் களங்களை இயக்க அனுமதி பெற்றுள்ளது.</p><p>

மதுரோ, “நாங்கள் வலிமையாகவும் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருப்போம். கடவுள் எங்களுடன் இருக்கிறார். வெனிசுலா மீண்டும் எழும்” என்று தனது செய்தியை முடித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T23:25:22+00:00</updated>
        </entry>
    </feed>
