<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-02T14:55:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 வயது சிறுமியை கடத்திய சொந்த மாமா: ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்: பொலிஸார் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/9-years-old-kidnapped-in-assam-2-arrested-1788359326"></link>
            <id>https://news.lankasri.com/article/9-years-old-kidnapped-in-assam-2-arrested-1788359326</id>
            <summary type="text">அசாம் மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்களால் 9 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட 9 வயது சிறுமி
அசாம் மாநிலத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அசாம் மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்களால் 9 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> கடத்தப்பட்ட 9 வயது சிறுமி</h2><p>
அசாம் மாநிலத்தின் ஜோர்காட் மாவட்டத்தில் 9 வயது சிறுமி உறவினர்களால் கடத்தப்பட்ட நிலையில், சிறுமியை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.</p><p> மாரியானி பகுதியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் தேர்கான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.</p><h2> என்ன நடந்தது?</h2><p>
பொலிஸார் வெளியிட்ட தகவலின் படி, சிறுமியின் தாய் மாமா சாகர் கோஷ் மற்றும் அவரது மனைவி மனிஷா கோஷ் தம்பதி மாரியானி உள்ள லோக்நாத் பவனில் அறையை வாடகை எடுத்து மூன்று நாட்கள் தங்கியுள்ளனர்.</p><p> அங்கிருந்து உறவினர் வீட்டிற்கு சென்ற அந்த தம்பதி, பொய்யான காரணங்களை கூறி சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளனர்.</p><p> சிறுமி பல மணி நேரங்கள் ஆகியும் வீடு திரும்பாததை அடுத்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாலை 5 மணியளவில் குடும்பத்தை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் ரூ.60 லட்சம் பிணைத் தொகையாக கேட்டு மிரட்டியுள்ளனர்.</p><p> இதனை காவல் துறையினருக்கு தெரிவித்தால் சிறுமியை கொன்று விடுவதாகவும், பணத்தை இரவு 8 மணிக்குள் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/394f5caf-7269-4a46-b51e-95c5e47663e9/26-6a98329fb7636.webp' /></p><p></p><h2> காவல்துறையினர் அதிரடி</h2><p>
கடத்தல்காரரின் மிரட்டல்களுக்கு பயப்படாமல் தந்தை உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.</p><p> உடனே விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், தேர்கான் பகுதியில் உள்ள இஸ்லாம்கர் பகுதியில் இருந்து இரவு 2 மணியளவில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> மேலும் சிறுமியின் மாமா சாகர் கோஷ் கொய்லகடாவிலும், அவரது கூட்டாளி வாசிம் ரஹ்மான் இஸ்லாம்கரிலும் வைத்து&nbsp; பொலிஸார் கைது செய்தனர்.</p><p> அத்துடன் தலைமறைவாக உள்ள குற்றவாளியை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-02T14:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வினின் அணியை சம்பவம் செய்த பாப் டூ ப்ளெஸ்ஸிஸ்: அனல் பறந்த ஆட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rotterdam-dockers-win-by-7-wickets-in-european-t20-1788357889"></link>
            <id>https://news.lankasri.com/article/rotterdam-dockers-win-by-7-wickets-in-european-t20-1788357889</id>
            <summary type="text">Rotterdam Dockers win by 7 wickets: ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் போட்டியில் ரோட்டர்டாம் டக்கர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rotterdam Dockers win by 7 wickets: ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் போட்டியில் ரோட்டர்டாம் டக்கர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
டப்ளின் கார்டியன்ஸ் அணிக்கு எதிரான ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் போட்டியில், ரோட்டர்டாம் டக்கர்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p><h2>ஜேம்ஸ் வின்ஸ் 95 ஓட்டங்கள்&nbsp;&nbsp;</h2><p>
ரோட்டர்டாம் டக்கர்ஸ் மற்றும் டப்ளின் கார்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் போட்டி வூர்பர்க்கில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ace58cf-5c0a-4a27-b0b9-cb7a37b9e595/26-6a982d044ad1d.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய டப்ளின் கார்டியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் எடுத்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் வின்ஸ் (James Vince) ஆட்டமிழக்காமல் 95 (54) ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 26 (17) ஓட்டங்களும், விஜய் ஷங்கர் 26 (13) ஓட்டங்களும் எடுத்தனர். மெர்வ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
</p><p>
பின்னர் ஆடிய ரோட்டர்டாம் டக்கர்ஸ் அணியில் மைக்கேல் லேவிட் 14 பந்துகளில் 35 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>பாப் டூ பிளெஸ்ஸிஸ்&nbsp;ஆட்டநாயகன் </h2><p>
அடுத்து களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் 18 ஓட்டங்களில் வெளியேற, அணித்தலைவர் பாப் டூ பிளெஸ்ஸிஸ் (Faf du Plessis) அதிரடியாக 51 பந்துகளில் 79 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>


ஹெய்ன்ரிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 34 (28) ஓட்டங்கள் விளாச, ரோட்டர்டாம் டக்கர்ஸ் 18.4 ஓவர்களில் 179 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. </p><p>

ஜோஷுவா லிட்டில் 2 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பாப் டூ பிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24ff2dec-595e-4a0a-ab76-1789b63e9faa/26-6a982edbc605c.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08ed0ec0-be3a-412c-afbb-68eb3abea356/26-6a982edca25ae.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:09:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தள்ளிவிட்ட வாடிக்கையாளரை ரோபோ தாக்க முயன்றதால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/robot-trying-to-attack-human-in-russian-shop-1788356578"></link>
            <id>https://news.lankasri.com/article/robot-trying-to-attack-human-in-russian-shop-1788356578</id>
            <summary type="text">robot trying to attack customer in russia shop: தள்ளிவிட்ட வாடிக்கையாளரை ரோபோ தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வாடிக்கையாளரை தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>robot trying to attack customer in russia shop: தள்ளிவிட்ட வாடிக்கையாளரை ரோபோ தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><h3> 

வாடிக்கையாளரை தாக்க முயன்ற ரோபோ </h3><p>

உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனித வடிவிலான ரோபோட்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது. </p><p>எதிர்காலத்தில் ரோபோக்கள் மனிதர்களின் கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட வாய்ப்புள்ளது என்ற அச்சமும் மனிதர்களிடையே நிலவி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2ca321c-ef87-4883-accf-7d142226e81e/26-6a9827e4dd5ed.webp' /></p><p> 

அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடையில் வாடிக்கையாளரை தாக்க முயற்சித்த ரோபோவின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

ரஷ்யாவில் உள்ள மின்னணு சாதன கடை ஒன்றில் வாடிக்கையாளர் அங்கிருந்த ரோபோவிடம் கை குலுக்க கையை நீட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

ஆனால் ரோபோ கையை நீட்டாததால் கோபத்தில் ரோபோவை லேசாக தள்ளியுள்ளார். 

உடனே ரோபோ அவரை தாக்க முயற்சித்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A robot got VERY aggressive after being pushed<br><br>It’s so over<br><br>Writer: Sol<a href="https://t.co/gVWd9rFpqI">pic.twitter.com/gVWd9rFpqI</a></p>&mdash; Mario Nawfal (@MarioNawfal) <a href="https://x.com/MarioNawfal/status/2094987427933049235?ref_src=twsrc%5Etfw">September 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அங்கிருந்த ஊழியர்கள் அதனை கட்டுப்படுத்த முயற்சித்த போது அவர்களையும் தாக்க முயற்சித்தது. 

அதன் பிறகு அந்த ரோபோவின் இயக்கத்தை நிறுத்தினர்.</p><p> இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் பலரும் இதனை டெர்மினேட்டர், இயந்திரன் என கருத்து தெரிவித்துள்ளனர். </p><p>

ஆனால் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய சிலர், இந்த ரோபோ ரிமோட் மூலம் இயக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T13:45:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்ச்சுக்கல் விடுதியில் பிரித்தானிய பெண்ணுக்கு கத்திக்குத்து: 34 வயது மற்றொரு பிரிட்டிஷ் நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-woman-stabbed-to-death-at-portugal-1788354219"></link>
            <id>https://news.lankasri.com/article/british-woman-stabbed-to-death-at-portugal-1788354219</id>
            <summary type="text">British Woman Stabbed to Death at Portugal: போர்ச்சுக்கல் விடுதியில் பிரித்தானிய பெண் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.பிரித்தானிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>British Woman Stabbed to Death at Portugal: போர்ச்சுக்கல் விடுதியில் பிரித்தானிய பெண் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.</p><h2>பிரித்தானிய பெண்ணுக்கு கத்திக்குத்து</h2><p>போர்ச்சுக்கலின் அல்பூஃபிரா நகரின் அல்பாகர் ஆல்டோ டா கொலி(Alfagar Alto Da Colina) என்ற ஆடம்பர விடுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 34 வயது பிரித்தானிய பெண் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> மாலை 6.42 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர உதவி குழுவினர் சுயநினைவு இன்றி கிடந்த பெண்ணுக்கு மருத்துவ உதவிகள் செய்தனர்</p><p> இருப்பினும் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும், சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/089ba1ea-be43-45fa-a2cb-88293f56de82/26-6a981eace8507.webp' /></p><p></p><h2> கைது மற்றும் விசாரணை</h2><p>
இந்த சம்பவத்தில் பிரித்தானியாவை சேர்ந்த மற்றொரு 34 வயது நபரை உள்ளூர் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.</p><p> இந்த தாக்குதல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவருடன் இருந்த குழந்தை தற்போது உள்ளூர் அதிகாரிகளால் தற்காலிக பாதுகாப்பு பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> இதற்கிடையில் இந்த துயர சம்பவத்திற்கான பின்னணி காரணத்தை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T13:03:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கில் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்ட அவுஸ்திரேலியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/another-four-australians-found-in-nepal-1788353878"></link>
            <id>https://news.lankasri.com/article/another-four-australians-found-in-nepal-1788353878</id>
            <summary type="text">Another four australians found in nepal: நேபாள வெள்ளப்பெருக்கில் காணாமல்போன மேலும் நான்கு அவுஸ்திரேலியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Another four australians found in nepal: நேபாள வெள்ளப்பெருக்கில் காணாமல்போன மேலும் நான்கு அவுஸ்திரேலியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில், காணாமல்போன மேலும் நான்கு அவுஸ்திரேலியர்கள் மீட்கப்பட்டதன் மூலம் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.&nbsp;</p><h2>38 அவுஸ்திரேலியர்கள்&nbsp;மாயம் </h2><p>
சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்த 4,850-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 38 பேர் அவுஸ்திரேலியர்கள் என்று கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c69d30a-347d-4ca3-b801-f599f2e456b0/26-6a981e597e6b5.webp' />&nbsp;</p><p></p><p>
என்றாலும், காரா என்ற பெண் முதல் நபராக மீட்கப்பட, செவ்வாய்க்கிழமை அன்று மற்றொருவர் மீட்கப்பட்டார். </p><p> 


இந்த நிலையில், புதன்கிழமையன்று மேலும் 4 பேர் அதிசயமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>மொத்த எண்ணிக்கை 6 
</h2><p>

இதன்மூலம் இதுவரை மீட்கப்பட்ட அவுஸ்திரேலியர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இன்னும் பலரைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
</p><p>
இந்த செய்தியை வரவேற்ற பிரதமர் அந்தோணி அல்பனீஸ், "இந்தத் துயரங்களுக்கு மத்தியிலும், சில நல்ல செய்திகளைக் காண்கிறோம். இன்று மேலும் ஐந்து அவுஸ்திரேலியர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
நாங்கள் தொடர்ந்து நல்ல செய்திகளை எதிர்பார்க்கிறோம்; அத்துடன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்" என்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af470915-9c2b-427f-804e-40ea8be768f4/26-6a981e5a70166.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:59:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தை யாரிடம் வளரவேண்டும்? வழக்கொன்றில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/supreme-court-approves-return-of-child-to-father-1788353476"></link>
            <id>https://news.lankasri.com/article/supreme-court-approves-return-of-child-to-father-1788353476</id>
            <summary type="text">Supreme Court approves return of child to father in Canada after six years: குழந்தை யாரிடம் வளரவேண்டும் என்பது தொடர்பான வழக்கொன்றில், குழந்தையை கனடாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Supreme Court approves return of child to father in Canada after six years: குழந்தை யாரிடம் வளரவேண்டும் என்பது தொடர்பான வழக்கொன்றில், குழந்தையை கனடாவிலிருக்கும் தந்தையிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


ஒரு இந்திய தம்பதியர் 2015ஆம் ஆண்டு திருமணமாகி அமெரிக்காவில் வாழ்ந்துவந்த நிலையில், 2018ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29d243ba-fe59-4f12-9eb9-c2b337b2151c/26-6a981bc617a24.webp' /></p><p>
ஆனால், கனடா வந்ததிலிருந்தே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாக, 2019ஆம் ஆண்டு, கணவனிடம் சொல்லாமலே தன் 3 வயது மகனை அழைத்துக்கொண்டு இந்தியா திரும்பிவிட்டார் அந்தப் பெண்.</p><p>
2020ஆம் ஆண்டு, கனேடிய நீதிமன்றம் ஒன்றில் அந்தக் குழந்தையின் தந்தை வழக்குத் தொடர, குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்கவேண்டும் என அந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அதைத் தொடர்ந்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் அந்தக் குழந்தையின் தந்தை.&nbsp;</p><p></p><p>
ஜூலை மாதம் 3ஆம் திகதி, குழந்தையின் தற்காலிகப் பாதுகாப்பை தந்தையிடம் ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் குழந்தையின் தாய்க்கு உத்தரவிட்டது.</p><p>

ஏனெனில், வழக்காடுபவர்கள் வெளிநாட்டு நீதிமன்றத்தில் குழந்தை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை எதிர்த்துப் போராடுவதையும், பாதகமான தீர்ப்புக்குப் பிறகு மற்றொரு அதிகார வரம்பில் தஞ்சம் அடைவதையும் அனுமதிப்பது, பல்வேறு அதிகார வரம்புகளில் உள்ள நீதித்துறை நிறுவனங்களின் செயல்திறனையும் அதிகாரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தார்கள்.
</p><p>
அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் குழந்தையின் தாய்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குழந்தையை கனடாவில் இருக்கும் அதன் தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:54:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அது ரகசியம்... பிரித்தானியா மீதான தாக்குதல் குறித்த கேள்விக்கு புடின் அளித்த பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-says-it-secret-whether-russia-strike-britain-1788353001"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-says-it-secret-whether-russia-strike-britain-1788353001</id>
            <summary type="text">Putin says, it&#039;s a military secret, whether Russia will strike Britain: ரஷ்யா பிரித்தானியா மீது தாக்குதல் நடத்துமா என்பது ஒரு ராணுவ ரகசியம் என்று கூறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin says, it's a military secret, whether Russia will strike Britain: ரஷ்யா பிரித்தானியா மீது தாக்குதல் நடத்துமா என்பது ஒரு ராணுவ ரகசியம் என்று கூறியுள்ளார் புடின்.</p><p>


ரஷ்யாவுக்கு எதிராக போராடிவரும் உக்ரைனில், பிரித்தானிய படைகள் இருக்குமானால், அவர்களும் தாக்குதலுக்குள்ளாவார்கள் என்று கூறியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதியான புடின்</p><p>
</p><h3>
அது ராணுவ ரகசியம்...
</h3><p>
ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு பிரித்தானியா உதவி வருவது குறித்து புடினிடம் கேள்வி எழுப்பினார்கள் ஊடகவியலாளர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffeb5f9f-4512-4a09-bbe5-d0d37bcc15be/26-6a9819eb293d0.webp' /></p><p>
அவர்களுக்கு பதிலளித்த புடின், பிரித்தானியா மட்டும் அல்ல, உக்ரைனில் ரஷ்யாவுக்கெதிராக போராடும் எந்த நாட்டுப் படைவீரர்களும் நமது இலக்குதான் என்று கூறினார்.
</p><p>
அப்போது, ரஷ்யா பிரித்தானியாவைத் தாக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்க, ’அது ரகசியம், அது ஒரு ராணுவ ரகசியம்’ என சீரியஸாக பதிலளித்த புடின், பின் ஒரு மர்மப் புன்னகை புரிவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcxYwVSj8wN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcxYwVSj8wN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcxYwVSj8wN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Firstpost (@firstpost)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
சமீபத்தில், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு பிரித்தானியாவின் ஆதரவைத் தெரிவிப்பதற்காக உக்ரைன் சென்றிருந்தார், பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a3d8c36-f4ba-4824-925e-779049424229/26-6a9819ebd3127.webp' /></p><p>
அப்போது அவர், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளுக்கான திட்டங்களை ஜெலன்ஸ்கிக்குக் கொடுத்ததைத் தொடர்ந்தே, பிரித்தானிய தாக்குதல் குறித்து புடின் மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:43:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானிலிருந்து முதல்வர் விஜய் போல் AI வீடியோ உருவாக்கி மோசடி - காவல்துறை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/police-warns-cm-vijay-deepfake-video-from-pakistan-1788352324"></link>
            <id>https://news.lankasri.com/article/police-warns-cm-vijay-deepfake-video-from-pakistan-1788352324</id>
            <summary type="text">police warns cm&amp;nbsp; vijay deepfake video முதல்வர் விஜய் போல் AI மூலம் போலியான வீடியோக்களை உருவாக்கி மோசடி நடைபெறுவது குறித்து காவல்துறை எச்சரிக்கை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>police warns cm&nbsp; vijay deepfake video முதல்வர் விஜய் போல் AI மூலம் போலியான வீடியோக்களை உருவாக்கி மோசடி நடைபெறுவது குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><h3>

முதல்வர் விஜய்யை வைத்து மோசடி</h3><p> 

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர், முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் செயல்படுத்தியுள்ளதாக பல்வேறு போலி செய்திகளை வட இந்தியாவில் உள்ள சமூக ஊடக பக்கங்கள், பிரபலங்கள் பரப்பி வ்ருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1310e70b-61fc-4121-ad51-df6ed892ed4b/26-6a9817464e6f4.webp' /></p><p>

சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் விஜய் பவுண்டேஷன் செயல்படுவதாக கூறி அதன் மூலம் நிதியுதவி, கடன் வழங்குவதாக பதிவுக்கட்டணம், சரிபார்ப்பு கட்டணம் என பல்வேறு வகையாக கட்டணங்களை வங்கி கணக்குக்கு அனுப்ப சொல்லி கடன் வழங்காமல் சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><h3> 

தமிழ்நாடு காவல்துறையினர் எச்சரிக்கை</h3><p>

இந்நிலையில், முதல்வர் விஜய் போல் AI மூலம் DeepFake வகையிலான போலி வீடியோக்களை உருவாக்கி மோசடி நடைபெறுவது குறித்து தமிழ்நாடு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p> 

இது குறித்து வெளியான அறிக்கையில், "சிபிசிஐடி சைபர் க்ரைம் செல், ஆய்வாளர் அவர்கள் சமூக வலைதளங்களில் சைபர் குற்றம் தொடர்பாக கண்காணித்து கொண்டிருந்தபோது, பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தில் முகநூல் மற்றும் பிற சமூக ஊடகத் தளங்களில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேசுவதுபோல் Al மூலம் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்று இந்தி மொழியில் இருப்பது கண்டறியப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/748514f5-5828-4afd-a195-1ec9733fa5b2/26-6a98174599208.webp' /></p><p> 

அந்தக் காணொளியில், பொதுமக்கள் ஏதேனும் பண உதவி தேவைப்பட்டால் ஒரு வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கபட்டிருந்தது.</p><p> 

மேற்படி சந்தேகத்திற்கிடமான மோசடி காணொளி குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஆய்வாளர் சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் பிரிவில் 01.09.2026-ம் தேதியன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. </p><p>

பொய்யாக உருவாக்கப்பட்ட அந்த காணொளி தொடர்பான போலியான ID மற்றும் அது தொடர்பான பதிவுகள் (logs) குறித்த தகவல்களைப் பெற Meta நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இப்போலி காணொளியை சமூக ஊடகங்களில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

முதற்கட்ட விசாரணையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல Al காணொளிகள் பேஸ்புக் மட்டுமின்றி, மற்ற சமூக ஊடக தளங்களிலும் பரப்பப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. </p><p>மேலும், இக்காணொளிகளில் பல பாகிஸ்தானைச் சேர்ந்த பேஸ்புக் ID-களிலிருந்து பகிரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>
இவ்விவகாரத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் இதுபோன்ற போலி காணொளிகளை அகற்றவும் துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
</p><p>
இதுபோன்ற மோசடி காணொளிகளில் குறிப்பிடப்படும் தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அவற்றில் பகிரப்படும் WhatsApp குழுக்களில் இணையவோ அல்லது அவற்றின் மூலம் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவோ வேண்டாம்.
</p><p>
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் "Deep Fake" காணொளிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து வெளியிடப்படும் போலியான பதிவுகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
</p><p>
மேலும், இதுபோன்ற இணையவழி மோசடிகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாதுகொள்ளும் வகையில், தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரிடமும் இத்தகவலை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:33:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க் சதுக்கத்தில் கத்திக்குத்து: பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bank-of-america-vice-head-killed-in-times-square-1788350079"></link>
            <id>https://news.lankasri.com/article/bank-of-america-vice-head-killed-in-times-square-1788350079</id>
            <summary type="text">Bank of America Vice President Killed in Times Square: டைம்ஸ் சதுக்கத்தில் கொல்லப்பட்டது பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர் எரின் பியாசென்டி என அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bank of America Vice President Killed in Times Square: டைம்ஸ் சதுக்கத்தில் கொல்லப்பட்டது பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர் எரின் பியாசென்டி என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><h2> கொலை செய்யப்பட்ட பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர்</h2><p>நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த திடீர் கத்திக்குத்து தாக்குதலில் மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பி இருந்த பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர் எரின் பியாசென்டி(Erin Piacenti:, 32 வயது) பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்.</p><p> டைம்ஸ் சதுக்கத்தின் காவல் நிலையம் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த இடத்தில், குயின்ஸ் பகுதியை சேர்ந்த 49 வயது சிஸ்னெரோஸ் என்ற பெண் தன்னுடைய ஷாப்பிங் பையில் இருந்த இரண்டு கத்தியை எடுத்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0319bc72-8cb1-40f2-9d81-4ed1c52652fa/26-6a980e809c0b4.webp' /></p><p></p><p> முதலில் 68 வயது முதியவரை தாக்கிய சிஸ்னெரோஸ், பின்னர் எரின் பியாசென்டி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.</p><p> காவல்துறையினர் மின் அதிர்ச்சியை பயன்படுத்தி தாக்குதல்தாரியை கட்டுப்படுத்த முயன்றனர்.</p><p> இருப்பினும் அந்த பெண் கத்தியை கீழே போட மறுத்ததால் பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸார் தாக்குதல்தாரியான சிஸ்னெரோஸை சுட்டுக் கொன்றனர்.</p><p> இந்த சம்பவத்தில் தாக்குதல்தாரிக்கு எந்தவொரு பின் நோக்கங்களும் இல்லை என்றும், அவர் நீண்ட நாட்களாக மனநல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்ததாகவும் காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினர் விளக்கியுள்ளனர்.</p><p> இந்த தாக்குதலில் காயமடைந்த 68 வயது முதியவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.</p><h2> பணி திரும்பிய துணைத் தலைவர்</h2><p>இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர் எரின் பியாசென்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தன்னுடைய 5 மாத மகப்பேறு விடுமுறையை முடித்துவிட்டு பணிக்கு திரும்பியுள்ளார்.</p><p> சமீபத்திய தன்னுடைய மகளின் ஞானஸ்நானம் மற்றும் தங்களுடைய இரண்டாவது திருமண நாள் கொண்டாட்டம் தொடர்புடைய மகிழ்ச்சியான குடும்ப புகைப்படம் ஒன்றை எரின் பியாசென்டி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-02T11:54:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலியாக இருக்கும் உணவு வங்கிகள்: திகைத்துப்போயிருக்கும் கனேடிய மாகாணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/organization-anxious-bare-shelve-alberta-food-bank-1788349029"></link>
            <id>https://news.lankasri.com/article/organization-anxious-bare-shelve-alberta-food-bank-1788349029</id>
            <summary type="text">Bare shelves at Alberta food banks making the organizations anxious: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், உணவு வங்கிகள் வெறுமையாக உள்ளதால் அவற்றின் நிர்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bare shelves at Alberta food banks making the organizations anxious: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், உணவு வங்கிகள் வெறுமையாக உள்ளதால் அவற்றின் நிர்வாகிகள் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள உணவு வங்கிகளின் சேமிப்பகங்களில், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தட்டுகள் உயரமாக அடுக்கப்பட வேண்டிய இடங்களில், அலமாரிகள் காலியாக இருக்கின்றன.</p><h3>

உணவு வங்கிகளின் நிலைமை
</h3><p>
வழக்கமாக, ஸ்பான்சர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று அவற்றை கிளை உணவு வங்கிகளுக்கு அனுப்புவோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30bd9e39-78f5-467b-b9b2-2fc47699f1e9/26-6a980a6736e2b.webp' /></p><p>ஆனால், இப்போது சேமிப்பகங்கள் வெறுமையாக உள்ளன என்கிறார் Food Banks Alberta அமைப்பின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான டேரில் பர்ரி.</p><p>

இந்த அமைப்பு, ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள 112 கிளை உணவு வங்கிகளுக்கு பொருட்களை அனுப்புகிறது.
</p><p>
2025ஆம் ஆண்டு, இந்த அமைப்பு 3.36 மில்லியன் பவுண்டுகள் அளவுடைய பொருட்களை மாகாணம் முழுவதற்கும் அனுப்பியது.&nbsp;</p><p></p><p>
இந்த ஆண்டிலோ, தேவை அதிகரித்துள்ளதால், ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே முந்தைய ஆண்டு அனுப்பிய அளவில் 90 சதவிகிதத்தை அனுப்பியாயிற்று.</p><p>

விடயம் என்னவென்றால், பண்டிகை நாட்கள் நெருங்கிவரும் நிலையில், சேமிப்பகங்கள் காலியாக உள்ளதால், அடுத்து என்ன செய்வதென தெரியாமல் கவலையடைந்துள்ளனர் உணவு வங்கிகளின் நிர்வாகிகள்.
</p><p>
அதாவது, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி, மாதம் ஒன்றிற்கு சராசரியாக 210,000 பேர் உணவு வங்கிகளுக்கு வந்து உணவுப்பொருட்களைப் பெற்றுச் சென்றுள்ளார்கள்.
</p><p>
இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 22 சதவிகிதம் அதிகம்.
</p><p>
அப்படியானால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே ஏராளமானோர் உனவு வங்கிகளைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
</p><p>
அதாவது, தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக உணவு வங்கிகளை நாடும் மக்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்பது இதன் பொருள் ஆகும்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:37:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய வான்வெளி மூடல்: அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கிறோம் - ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-said-russian-airspace-closed-by-drones-1788342271"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-said-russian-airspace-closed-by-drones-1788342271</id>
            <summary type="text">Volodymyr Zelensky claims russian airspace closed: ரஷ்யா தொடங்கிய போரே, அதன் வான்வெளியை மூடும் நிலையை உருவாக்கியுள்ளது என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Volodymyr Zelensky claims russian airspace closed: ரஷ்யா தொடங்கிய போரே, அதன் வான்வெளியை மூடும் நிலையை உருவாக்கியுள்ளது என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p> 

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய வான்வெளியை உக்ரேனிய ட்ரோன்கள் மூடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>வோலோடிமிர் ஜெலென்ஸ்கி</h2><p>

தங்களது ட்ரோன் விமானங்கள் ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அபாயகரமானதாக மாற்றியுள்ளது என்று உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c8db29-9d87-4fa6-8cdc-4d4e148b176f/26-6a97f2fbe48ee.webp' />&nbsp;</p><p></p><p>


அவர் தனது இரவு நேர காணொளி உரையில், "இன்று, ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும், ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்திற்கும், முக்கிய ரஷ்ய விமான நிலையங்களை இன்னும் பயன்படுத்தும் அனைவருக்கும் நாங்கள் எச்சரிக்கை விடுக்க விரும்புகிறோம்; ரஷ்ய வானம் முற்றிலும் அபாயகரமானதாக மாறி வருகிறது" என்றார். </p><p> 

 மேலும் அவர், "உக்ரைன் பொது விமானப் போக்குவரத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், ரஷ்யாவின் வான்வெளியில் ட்ரோன் விமானங்கள் இருக்கும்; மேலும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்றும் கூறினார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbca6a82-46c9-4abf-a98a-ebf40fc28729/26-6a97f2fca4068.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:34:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-cricket-team-announce-for-england-tour-1788348750"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-cricket-team-announce-for-england-tour-1788348750</id>
            <summary type="text">Sri lanka odi and t20 squad announced: இங்கிலாந்தில் விளையாட உள்ள இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sri lanka odi and t20 squad announced: இங்கிலாந்தில் விளையாட உள்ள இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள இலங்கையின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2> 

அணி&nbsp;அறிவிப்பு </h2><p>இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c09a31e0-ccf9-432b-9af7-bd25c695d410/26-6a980950ca235.webp' /></p><p></p><p>

இரு தொடர்களுக்குமான அணியை குசால் மெண்டிஸ் (Kusal Mendis) தனது தலைமையில் வழி நடத்த உள்ளார்.
</p><p><b>
ஒருநாள் அணி விபரம்: </b>குசால் மெண்டிஸ், பதும் நிசங்க, கமில் மிஷாரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா, ஜனித் லியானகே, தசுன் ஷானகா, வணிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷணா, துஷ்மந்த சமீரா, இஷான் மலிங்கா, துனித் வெல்லலாகே, பவன் ரத்னயாகே, சசிந்து கோலோம்பாகே, அஸிதா பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷன்கா
</p><p><b>
டி20 அணி விபரம்: </b>குசால் மெண்டிஸ், பதும் நிசங்க, கமில் மிஷாரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா, ஜனித் லியானகே, தசுன் ஷானகா, வணிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷணா, துஷ்மந்த சமீரா, இஷான் மலிங்கா, துனித் வெல்லலாகே, லஹிரு உதாரா, தரிந்து ரத்னயாகே, நுவன் துஷாரா, பினுரா பெர்னான்டோ&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5ca8c2c-0024-4a91-87dc-e9aef614b54c/26-6a9809a9434fa.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா, கனடா, சிங்கப்பூரில் சேவையை விரிவுபடுத்தும் ஜியோஹாட்ஸ்டார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jiohotstar-launches-in-uk-canada-singapore-1788348324"></link>
            <id>https://news.lankasri.com/article/jiohotstar-launches-in-uk-canada-singapore-1788348324</id>
            <summary type="text">jiohotstar launches in uk, canada, singapore: பிரித்தானியா, கனடா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு ஜியோஹாட்ஸ்டார் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>jiohotstar launches in uk, canada, singapore: பிரித்தானியா, கனடா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு ஜியோஹாட்ஸ்டார் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
</p><h3>
ஜியோஹாட்ஸ்டார் 3 நாடுகளுக்கு விரிவாக்கம்</h3><p> 

ரிலையன்ஸின் ஊடக வணிகம் மற்றும் வால்ட் டிஸ்னியின் இந்திய வணிகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட கூட்டு நிறுவனமான ஜியோஸ்டாரால் ஜியோஹாட்ஸ்டார் ஒளிபரப்பு தளம் இயக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfc4a4c6-dae9-4b20-8f25-27b090c8ef4b/26-6a9807a5e85c9.webp' /></p><p>
ஜியோ ஹாட்ஸ்டார், இந்தியாவில், மாதம்தோறும் சராசரியாக 500 மில்லியன் பயனர்களையும், 3 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சி தொகுப்பையும் கொண்டுள்ளது. </p><p>

இதில் திரைப்படங்கள் முதல் நேரலை விளையாட்டு போட்டிகள் வரை ஜியோஸ்டார் நெட்வொர்க்கின் 100க்கும் மேற்பட்ட சேனல்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என 19 மொழிகளில் உள்ளடக்கங்கள் கிடைக்கின்றன.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், ஜியோஹாட்ஸ்டார் அதன் சேவையை பிரித்தானியா, கனடா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கும் விரிவுபடுத்துகிறது.</p><p> 

ஜியோஸ்டாரின் சர்வதேச வர்த்தகப் பிரிவுத் தலைவர் அமித் மல்ஹோத்ரா கூறுகையில், "ஸ்ட்ரீமிங் கடந்த பத்தாண்டுகளாகத் தனது உள்ளடக்கங்களின் எண்ணிக்கையில் போட்டியிட்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/762906b3-63bd-4bc8-a887-e472787e4461/26-6a9807a6a7a7c.webp' /></p><p>

பார்வையாளர்கள் பொழுதுபோக்கை அனுபவிக்கும் விதத்தை மறுபரிசீலனை செய்வதே இப்போதுள்ள மிகப்பெரிய வாய்ப்பு என்று நாங்கள் நம்புகிறோம்.</p><p> 

தெற்காசியப் பார்வையாளர்கள், மொழி, தலைமுறை மற்றும் குடும்பங்களைக் கடந்து இந்தியப் பொழுதுபோக்குடன் ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளனர்.</p><p>

அதே நேரத்தில், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் தங்களின் சொந்தக் கதைகளையும் கலாச்சாரங்களையும் தாண்டி, புதிய கதைகளையும் கலாச்சாரங்களையும் அதிகளவில் தேடுகின்றனர்.
</p><p>
ஒரு இந்திய ஸ்ட்ரீமிங் சேவையை புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு நின்றுவிடாமல், பரந்து விரிந்த, போதிய சேவை கிடைக்காத இந்த உலகளாவிய பார்வையாளர்களுக்காகக் கட்டமைப்பதற்கான ஒரு வாய்ப்பை நாங்கள் காண்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:25:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுக்கடலில் மோதிக் கொண்ட கப்பல்கள்: காணாமல் போன 10 மாலுமிகளை தேடும் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ship-collision-near-istanbul-10-members-missing-1788343714"></link>
            <id>https://news.lankasri.com/article/ship-collision-near-istanbul-10-members-missing-1788343714</id>
            <summary type="text">Ship Collision Near Istanbul 10 Members missing: இஸ்தான்புல் அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தில் 10 மாலுமிகள் வரை காணாமல் போயுள்ளனர். இஸ்தான்புல்லில் கப்பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ship Collision Near Istanbul 10 Members missing: இஸ்தான்புல் அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தில் 10 மாலுமிகள் வரை காணாமல் போயுள்ளனர்.</p><h2> இஸ்தான்புல்லில் கப்பல் விபத்து</h2><p>இஸ்தான்புல் நகரின் அருகே உள்ள மர்மரா கடலில் ரசாயன டேங்கர் கப்பலும், சரக்கு கப்பலும் மோதி விபத்துக்குள்ளாகின.</p><p> சிலிவ்ரி கடற்கரைக்கு அருகில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு நடந்த இந்த விபத்தை துருக்கி நாட்டு Tugberk Imamoglu என்ற சரக்கு கப்பலும், Alsu என்ற ரசாயன டேங்கர் கப்பலும் மோதிக் கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30a8290f-fe79-410e-8344-6e168ff848a0/26-6a97f5a370a45.webp' /></p><p></p><p>இந்த சம்பவத்தில் சரக்கு கப்பலில் இருந்தவர்களுடன் எந்தவொரு தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை, அவர்களின் செல்போன்களும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் அடிப்படையில் சரக்கு கப்பலானது கடலில் மூழ்கி இருக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சகத்தின் கடல்சார் இயக்குநரகம் தங்களுடைய X தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.</p><h2> 10 பேரை காணவில்லை</h2><p>
இந்நிலையில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் கப்பலில் இருந்த 10 மாலுமிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a585a22f-cc83-4437-a7cc-3bb5fed7343b/26-6a97f5a4237a2.webp' /></p><p> சம்பந்தப்பட்ட பகுதியில் கிட்டத்தட்ட 14 மீட்புக் கப்பல்களும், ஒரு ஹெலிகாப்டரும் களமிறக்கப்பட்டுள்ளன.</p><p>இதற்கிடையில் மூழ்கிய கப்பலில் இருந்து உயிர் காக்கும் படகுகள் மற்றும் பாதுகாக்கும் உபகரணங்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் BRA அணிந்து தூங்கலாமா? கூடாதா? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/can-women-sleep-wearing-bra-in-the-night-1788345493"></link>
            <id>https://news.lankasri.com/article/can-women-sleep-wearing-bra-in-the-night-1788345493</id>
            <summary type="text">பெண்கள் பலருக்கும் இரவு நேரங்களில் உள்ளாடை(BRA) அணிந்து தூங்கலாமா? கூடாதா? என்கின்ற சந்தேகங்கள் இருக்கும். அதை பற்றி பார்ப்போம். 


பொதுவாக, பெண்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள் பலருக்கும் இரவு நேரங்களில் உள்ளாடை(BRA) அணிந்து தூங்கலாமா? கூடாதா? என்கின்ற சந்தேகங்கள் இருக்கும். அதை பற்றி பார்ப்போம். </p><p>


பொதுவாக, பெண்கள் BRA அணிந்தபடி தூங்கக் கூடாது என்பதற்கான எந்த ஒரு தீவிரமான மருத்துவ காரணங்களும் இதுவரை சொல்லப்படவில்லை.</p><p> இருந்தாலும் சௌகரியம் மார்பக ஆரோக்கியம் மற்றும் ரத்தம் ஓட்டம் போன்ற சில விஷயங்கள் கருத்தில் கொண்டு சொல்லப்படுகிறது. அந்த வகையில், இரவு நேரங்களில் ஏன் BRA அணிந்து தூங்கக் கூடாது என்பதற்கான காரணங்களை பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2d706b2-0a1b-45bc-83e9-86935167d309/26-6a97fc964bc22.webp' /></p><p></p><p>

 
1. பெரும்பாலான BRA குறிப்பாக அண்டர் வயர் அல்லது டைட் பேண்ட் கொண்ட பிரா நீண்ட நேரத்திற்கு அணியும் பொழுது நாம் அசௌகரியத்தை சந்திக்கலாம், தூங்கும் பொழுது நாம் வசதியாக உறங்க முடியாது.</p><p>

2. நாம் இரவு நேரங்களில் BRA அணியும் பொழுது நம்முடைய மார்பகங்களில் நிணநீர் கால்வாயுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு சில நபர்கள் இரவு நேரம் தூங்கும் பொழுது தொடர்ந்து BRA அணிந்து கொண்டுதான் தூங்குகிறார்கள். இதனால் மார்பகங்களில் உள்ள நிணநீர் கால்வாய் கட்டுப்படுத்தப்படுகிறது. </p><p>இதனால் மார்பகங்களில் உள்ள நிணநீர் அமைப்பு திசுக்களில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. பொதுவாகவே, தடையில்லாத நிணநீர் ஓட்டம் மார்பக ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10b58107-5ac7-4734-9e93-246397107c61/26-6a97fc9747856.webp' />&nbsp;</p><p></p><p>அணியாமல் தூங்கும் பொழுது மார்பகங்கள் தடையில்லாமல் நகர்வதற்கு உதவியாக இருக்கிறது. அதோடு சேர்ந்து தடையில்லாத நிணநீர் ஓட்டம் சரியான முறையில் இயங்குவதற்கும் அவை உதவியாக அமைகிறது.</p><p>
 
3. &nbsp;முக்கியமாக இரவு நேரங்களில் இறுக்கமாக BRA அணிந்து கொள்ளும் பொழுது அதனால் மார்பக திசுக்களான ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. அதுவே இல்லாமல் தூங்கும் பொழுது உங்களுடைய மார்பகங்களுக்கு தடை இல்லாத ரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்கும். இதனால் மார்பகங்களில் ஆரோக்கியம் இன்னும் மேம்படுகிறது.
</p><p> 
இறுதியாக இரவு நேரங்களில் BRA அணிய வேண்டுமா? வேண்டாமா? என்பது ஒவ்வொருவருடைய சௌகரியத்தை பொருத்தது.</p><p> இருப்பினும் பெண்கள் மார்பகம் தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையை சந்தித்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாக இருக்கிறது. ஒரு சிலருக்கு BRA அணிகின்ற பொழுது மூச்சு திணறல் ஏற்படலாம். அதையும் நாம் கட்டாயமாக மருத்துவரை அணுகி அதற்கான ஆலோசனையை பெறுவது முக்கியம்.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T10:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா திரும்பிய ஹரி, மேகன்... மௌனம் காக்கும் வில்லியம், கேட் தம்பதியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-william-reason-for-silence-harry-uk-return-1788341310"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-william-reason-for-silence-harry-uk-return-1788341310</id>
            <summary type="text">Prince William and Kate&#039;s real reason for silence after Harry and Meghan&#039;s UK return: ஹரி தன் மனைவி பிள்ளைகளுடன் பிரித்தானியா திரும்பியுள்ள நிலையில், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prince William and Kate's real reason for silence after Harry and Meghan's UK return: ஹரி தன் மனைவி பிள்ளைகளுடன் பிரித்தானியா திரும்பியுள்ள நிலையில், இளவரசர் வில்லியமும், அவரது மனைவியான கேட்டும் ஏன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
</p><p>

இளவரசர் ஹரி, தன் மனைவி பிள்ளைகளுடன் பிரித்தானியா திரும்பியுள்ளது அனைவரும் அறிந்ததே.
</p><p>
ஆனால், அது குறித்து இதுவரை இளவரசர் வில்லியமும், அவரது மனைவியான கேட்டும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
</p><h3>
காரணம் என்ன?
</h3><p>
இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான கேட்டும், ஹரி, மேகன் குறித்து அவசரப்பட்டு ஏதாவது வார்த்தையை விட்டுவிடக்கூடாது என்பதாலேயே மௌனம் காப்பதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8d8f019-e453-4206-b5c8-f6e2bd34e58e/26-6a97ec3fe337b.webp' /></p><p>
மேலும், அது ஒரு தனிப்பட்ட விடயம் என்பதாலும், அவர்கள் எந்தக் கருத்தும் வெளிப்படையாகக் கூறவில்லை என்றும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.&nbsp;</p><p></p><p>
அவர்கள் நடப்பதைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள், எதையாவது வெளிப்படையாகச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என அவர்கள் கருதுகிறார்கள் என்கிறார்கள் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbe043bf-f1bd-4dc1-93e1-2d50f2e71ca2/26-6a97ec4097959.webp' /></p><p>

ஹரியும் வில்லியமும் ஒருவேளை சமரசம் ஆவார்கள் என்றால், அதற்கு நீண்ட காலம் ஆகலாம் என்று கூறும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள், ஏனென்றால், தங்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டது என்னும் ஒரு எண்ணம் இன்னமும் வில்லியம் கேட் தம்பதியருக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:28:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் ரயில் நிலையம் அருகே வெடித்த மர்ம பொருள்: இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/blast-near-germany-augsburg-station-2-injured-1788340804"></link>
            <id>https://news.lankasri.com/article/blast-near-germany-augsburg-station-2-injured-1788340804</id>
            <summary type="text">Blast Near Germany Augsburg Station 2 Injured : ஜேர்மனியின் ஆக்ஸ்பர்க் ரயில் நிலையம் அருகே திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Blast Near Germany Augsburg Station 2 Injured : ஜேர்மனியின் ஆக்ஸ்பர்க் ரயில் நிலையம் அருகே திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> ரயில் நிலையம் அருகில் வெடிப்பு</h2><p>
ஜேர்மனியின் ஆக்ஸ்பர்க்(Augsburg) பகுதியில் அமைந்துள்ள முக்கியமான ரயில் நிலையத்திற்கு அருகில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது பரபரப்பைக் கிளப்பியது.</p><p> அடையாளம் தெரியாத மர்ம பொருள் வெடித்ததில் 2 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு காது கேளாமை தொடர்புடைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.</p><p> புதன்கிழமை அதிகாலை 5 மணி அளவில் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த கட்டிடம் ஒன்றின் நடைபாதையில் ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவத்தினால் கடுமையான போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05968acb-84e6-4a76-8405-bf8d94beac8d/26-6a97ea4557c16.webp' /></p><p> வெடிப்பின் தாக்கம் காரணமாக அதன் அருகில் இருந்த கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்துச் சிதறின.</p><h2> காவல்துறையினர் விசாரணை</h2><p>மர்மப் பொருள் வெடிப்பை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆக்ஸ்பர்க் ரயில் நிலையத்தை முழுமையாக பாதுகாப்பு வளையத்திற்குள் அதிகாரிகள் கொண்டு வந்தனர்.</p><p> வெடி பொருள் குறித்து முழுமையாக ஆராய வெடிகுண்டு அகற்றும் ரோபோக்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.</p><p> இந்த சம்பவம் தொடர்பான எந்தவொரு தகவலையும், வெடிப்பு பொருள் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் அதிகாரிகள் இதுவரை எந்தவொரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:20:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாநிலங்களில் முதல்வர் விஜய்க்கு பெருகும் ஆதரவு - பத்திரிக்கையாளர் ராஜகோபாலன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/journalist-delhi-rajagoipal-about-cm-vijay-as-pm-1788340314"></link>
            <id>https://news.lankasri.com/article/journalist-delhi-rajagoipal-about-cm-vijay-as-pm-1788340314</id>
            <summary type="text">journalist delhi raja gopal about cm vijay: முதல்வர் விஜய்க்கு வட மாநிலங்களில் உள்ள ஆதரவு குறித்து பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் பேசியுள்ளார். 

வட மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>journalist delhi raja gopal about cm vijay: முதல்வர் விஜய்க்கு வட மாநிலங்களில் உள்ள ஆதரவு குறித்து பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் பேசியுள்ளார்.</p><h3> 

வட மாநிலங்களில் முதல்வர் விஜய்க்கு ஆதரவு
</h3><p>
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பேசி வருகின்றனர்.</p><p> 

ஆனால் இதற்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் அதனை தவெக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியை துறப்போம் என அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca9dd8f3-0276-467a-ab7b-da69df00a2e7/26-6a97e85c0732a.webp' /></p><p>

இந்நிலையில், முதல்வர் விஜய்யின் பிரித்தானியா பயணம், தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட உள்ள சட்டப்பேரவை, முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளர் ஆவது உள்ளிட்டவை குறித்து மூத்த பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபால் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். </p><p>

இதில் பேசிய அவர், கிண்டி மற்றும் நந்தனத்திற்கு இடைப்பட்ட பகுதியில் புதிய சட்டமன்ற கட்ட திட்டமிட்டுள்ளார். விரைவில் இது குறித்த அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிடுவார்.&nbsp;</p><p></p><p>

இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய சட்டமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்படும். ஜனாதிபதி இதில் கலந்துகொள்வார்.</p><p> 500க்கும் மேற்பட்ட இருக்கைகளுடன், இந்தியாவிலே சிறந்ததாக அதிநவீன வசதியில் இந்த சட்டமன்றம் அமைய உள்ளது. 

2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் சட்டமன்றம், இந்த கட்டிடத்திற்கு மாற்றப்படும்.</p><p> 

இதே போல், வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியாவிற்கு செல்ல உள்ள நிலையில், அங்கு சுமார் 10,000 பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்தித்து பேச உள்ளார். </p><p>

முதல்வர் விஜய் ஆட்சி மீது வடமாநில மக்களுக்கும் நல்ல மதிப்பு உள்ளது. அது Paid promotion இல்லை. அவரை ஒரு மாற்றாக பார்க்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகும். தவெக மற்றும் காங்கிரஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>

முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னெடுப்பதை டெல்லி காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார். </p><p>

மேலதிக தகவலுக்கு வீடியோவை காண்க&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hhcIDJmtEcg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:12:06+00:00</updated>
        </entry>
    </feed>
