<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-11T23:24:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலையில் எதிர் எதிரே மோதிக்கொண்ட 3 வாகனங்கள்: ரஷ்யாவில் 12 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-s-arkhangelsk-multi-vehicle-crash-12-dead-1789159928"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-s-arkhangelsk-multi-vehicle-crash-12-dead-1789159928</id>
            <summary type="text">Russia’s Arkhangelsk Multi Vehicle Crash 12 Dead: ரஷ்யாவில் நடந்த கோர சாலை விபத்தில் 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.மோதிக்கொண்ட 3 வாகனங்கள்ரஷ்யாவின் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia’s Arkhangelsk Multi Vehicle Crash 12 Dead: ரஷ்யாவில் நடந்த கோர சாலை விபத்தில் 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2>மோதிக்கொண்ட 3 வாகனங்கள்</h2><p>ரஷ்யாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஆர்காங்கெல்ஸ்க்(Arkhangelsk) மாகாணத்தில் நடந்த கோரமான சாலை விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>வெள்ளிக்கிழமை நடந்த இந்த சாலை விபத்தில் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>ரஷ்ய உள்துறை அமைச்சகத்தின் தகவலை மேற்கோள் காட்டி RIA வெளியிட்ட செய்தியில், மினி பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bef4708-1c61-4435-808c-0b921d8dd80a/26-6aa469fa1fbd6.webp' /></p><p> இந்த விபத்தின் போது முந்திச் செல்ல முயன்ற மினி பேருந்தானது, எதிரே மரக்கட்டை ஏற்றி வந்த லொறி மற்றும் காரை ஒன்றின் மீது மோதியது.</p><p> விபத்து குறித்து தகவலறிந்த அவசர கால மீட்பு குழுவினர், விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.</p><p></p><p> காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> இந்நிலையில் இந்த விபத்துக்கான பின்னணி காரணங்களை முழுமையாக கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T21:30:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல்: சேதத்தை விவரித்த செயற்கைக்கோள் படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-arabia-s-east-west-pipeline-attacked-1789150984"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-arabia-s-east-west-pipeline-attacked-1789150984</id>
            <summary type="text">சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல்கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியாவின் முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><h2> எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல்</h2><p>கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியாவின் முக்கியமான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகமான CNN வெளியிட்ட தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>இந்த அத்துமீறிய ஏவுகணை தாக்குதலை அமெரிக்க அதிகாரிகள் இரண்டு பேர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdc0fc37-26ef-467f-9bff-6f1da9fe3e73/26-6aa44709d2632.webp' /></p><p> மேலும் இந்த ஏவுகணை தாக்குதலானது எண்ணெய் குழாய் கட்டமைப்பின் பம்பிங் நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.</p><p></p><p> தாக்குதல் தொடர்பாக வெளிவந்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களில், ஒரு பம்பிங் நிலையத்தில்&nbsp; தீவிரமான தீ சேதமும், மற்றொரு பம்பிங் நிலையத்தில் சிறிய தீ சேதமும் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.</p><h2> தாக்குதலுக்கு யார் பொறுப்பு?</h2><p>
ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கு எதிராக சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசு படைகள் சண்டையிட்டு வரும் நிலையில் இந்த எண்ணெய் குழாய் தாக்குதலானது நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574b070e-efdc-45dc-9c8f-038a8fffeeb2/26-6aa4470a88e86.webp' /></p><p> ஆனால் இந்த எண்ணெய் குழாய் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்றதாக தெரியவரவில்லை.</p><p> மேலும் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதற்கான மதிப்பீடுகளும் இன்னும் வெளிவரவில்லை.</p><p>இந்நிலையில், எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் ஈராக்கில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T21:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளிர் ஆசிய கோப்பை: அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-s-asia-cup-semi-final-2-slw-beats-pakw-1789158670"></link>
            <id>https://news.lankasri.com/article/women-s-asia-cup-semi-final-2-slw-beats-pakw-1789158670</id>
            <summary type="text"> Women&#039;s Asia Cup Semi Final 2 SLW Beats PAKW: மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p> Women's Asia Cup Semi Final 2 SLW Beats PAKW: மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.</p><h2> ஆசியக் கோப்பை அரையிறுதிப் போட்டி</h2><p>வெள்ளிக்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தனர்.</p><p> நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்கள் குவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4aab182-c743-40cf-b689-0a8a2575705b/26-6aa466ae0c86d.webp' /></p><p>பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷவால் சுல்பிகர்(Shawaal Zulfiqar) 24 ஓட்டங்களையும், கேப்டன் பாத்திமா சனா(Fatima Sana) 47 ஓட்டங்களையும் குவித்து அசத்தினர்.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் 6.2 ஓவர்கள் முடிவிலேயே வெறும் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.</p><p> பின்னர் 5 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா 36 ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி 33 ஓட்டங்களையும் குவித்து அணிக்காக இணைந்து 71 ஓட்டங்களை குவித்தனர்.</p><p></p><p>ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா முக்கியமான 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார்.</p><p>இதனால் கடைசி 3 ஓவர்களுக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்ட இக்கட்டான நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/601f091b-4e86-4794-ba3d-fdaee6b53615/26-6aa4650feebaa.webp' /></p><p> அப்போது பொறுப்புடன் விளையாடிய நிலக்ஷிகா சில்வா 13 ஓட்டங்களையும், கௌஷினி நுத்யங்கனா 14 ஓட்டங்களையும் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.</p><p>இறுதியில் இலங்கை 18.4 ஓவர்கள் முடிவிலேயே 6 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.</p><h2> இறுதிப் போட்டியில் இலங்கை</h2><p>அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதை அடுத்து இறுதிப் போட்டியில்&nbsp; இலங்கை மகளிர் அணி இந்திய மகளிர் அணியை எதிர்கொள்ள உள்ளது.</p><p>ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இலங்கை அணியை வீழ்த்தி தங்களது 8 வது ஆசிய கோப்பை கனவை அடைய இந்தியா முனைப்புடன் காத்திருக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T20:38:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னை அணி பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை: CSK நிர்வாகம் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/csk-team-deny-dhoni-bid-to-buy-a-stake-1789155643"></link>
            <id>https://news.lankasri.com/article/csk-team-deny-dhoni-bid-to-buy-a-stake-1789155643</id>
            <summary type="text">Csk Deny Dhoni Bid to Buy a Stake: CSK அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை என்று சென்னை நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.சென்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Csk Deny Dhoni Bid to Buy a Stake: CSK அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை என்று சென்னை நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.</p><h2>சென்னை அணி பங்குகளை வாங்க முயற்சித்த தோனி</h2><p>ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.</p><p> 2008ம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக தோனி விளையாடி வருகிறார். எம்.எஸ்.தோனிக்காக மட்டுமே கோடிக்கணக்கான ரசிகர்கள் CSK அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.</p><p> இந்நிலையில், சிஎஸ்கே அணியில் தோனி பங்குகளை வாங்க முயற்சித்ததாகவும், இந்த விவகாரத்தில் அணி நிர்வாகத்துடனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன் அவர்களுடனும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/595970c8-c090-4396-a607-f8c56fbe6e15/26-6aa4593d576f5.webp' /></p><p>தோனி முதலில் 25% பங்குகளை வாங்க விரும்பியதாகவும். ஆனால் சிஎஸ்கே உரிமையாளர்கள் அவருக்கு 3% பங்குகளை வழங்க முன் வந்ததாகவும். அதன் பின்னர் தோனி 18% பங்குகளை கேட்ட நிலையில், அதிகபட்சமாக 5% வரை வழங்க முடியும் என்று உரிமையாளர் கூறி விட்டதாக தகவல் வெளியானது.</p><p> இதன் காரணமாக தோனி மற்றும் அணி உரிமையாளர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி அணியில் தொடர்வாரா&nbsp; என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.</p><h2> சென்னை அணி பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை</h2><p>இந்நிலையில் தோனி சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க முயன்றதாக கூறப்படும் தகவலை அணி நிர்வாகம் மறுத்துள்ளது.</p><p>இது தொடர்பாக தோனியுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், தோனியும் இது குறித்து எங்களிடம் எதுவும் கேட்கவில்லை என்று CSK-வின உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f35781ad-46e0-4cb2-bfef-9d44cce557c7/26-6aa4593e0b8b3.webp' /></p><p> மேலும் என்.சீனிவாசனிடம் தோனி இது தொடர்பாக பேசியது குறித்த எந்த தகவலும் எங்களிடம் இல்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.</p><p>ஏற்கனவே சென்னையின் பங்குகளில் தோனி சிறிய அளவு தன் வசம் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T19:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை: பிரித்தானிய உளவுத்துறை தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/half-million-russian-soldiers-killed-in-ukraine-1789149788"></link>
            <id>https://news.lankasri.com/article/half-million-russian-soldiers-killed-in-ukraine-1789149788</id>
            <summary type="text">Half Million Russian Soldiers Killed in Ukraine War: உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Half Million Russian Soldiers Killed in Ukraine War: உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><h2> அரை மில்லியன் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு</h2><p>
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் உக்ரைனுக்கு எதிராக தொடங்கப்பட்ட போரில் இதுவரை அரை மில்லியன்(5 லட்சம்) ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><p> ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பும், போரினால் ரஷ்ய பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் அழுத்தமும் உக்ரைனை ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வரும் ரஷ்ய அதிபர் புடினின் திட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62e416d0-e912-4833-bf79-344e4a907ba5/26-6aa4425dcf2d9.webp' /></p><p> பிரித்தானிய ஆயுதப் படைகளின் தலைவர் ஏர் சீப் மார்ஷல் சர் ரிச்சர்ட் நைட்டன் வழங்கிய தகவலில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போரில் காயமடைந்தவர்கள் உட்பட கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ரஷ்ய வீரர்கள் பாதிப்படைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> இதில் மிகப்பெரிய இழப்பு 2023ம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த போர் நடவடிக்கையில், உக்ரைனின் 2% நிலப்பரப்பை மட்டுமே ரஷ்யா கைப்பற்றி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> நீண்ட கால போராக தொடரும் உக்ரைன் போர்</h2><p>ரஷ்ய வீரர்கள் கிட்டத்தட்ட 1660 நாட்களாக உக்ரைனுடன் சண்டையிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f10c8b-3b2d-47bb-a2fc-67d1bf63bf12/26-6aa4425e828ed.webp' /></p><p> இதனால் முதல் மற்றும் இரண்டாம் உலக போரில் ரஷ்ய வீரர்கள் சண்டையிட்ட நாட்களை விட உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்கள் அதிக நாட்கள் சண்டையிட்டு வருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.</p><p> இந்த போரினால் ரஷ்யாவின் பணவீக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உள்நாட்டு நுகர்வோரின் தேவை பலவீனமாகியுள்ளது.</p><p> நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் படுவேகமாக சரிந்துள்ளது. இந்த போர் நடவடிக்கை தொடர்ந்தால் அது நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கு பெரும் சுமையாக மாறிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T19:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நார்வே இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்: சோகத்தில் ஆழ்ந்த அரச குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/norway-princess-astrid-passed-away-at-94-1789147232"></link>
            <id>https://news.lankasri.com/article/norway-princess-astrid-passed-away-at-94-1789147232</id>
            <summary type="text">நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய 94வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார். இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்வெள்ளிக்கிழமை நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய 94வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார்.</p><h2> இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்</h2><p>வெள்ளிக்கிழமை நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட்(Princess Astrid&nbsp;) தனது 94வது வயதில் காலமானார். இதனால் நார்வே அரச குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.</p><p> மறைந்த மன்னர் ஹரால்டின் சகோதரியான ஆஸ்ட்ரிட் தன்னுடைய சகோதரர் உயிரிழந்த சில வாரங்களில் உயிரிழந்துள்ளார்.</p><p> கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் புரிந்து பிறகு கடந்த மாதம் மன்னர் ஹரால்டு(89) உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a13a5a9f-e531-49f0-8866-8e578146b4b3/26-6aa43861e3c0b.webp' /></p><p>மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு கடந்த புதன்கிழமை ஓஸ்லோ பேராலயத்தில் நடைபெற்ற நிலையில், அதில் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய கடைசி பொது நிகழ்வாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p> இளவரசியின் மறைவு தொடர்பாக அரண்மனை வெளியிட்ட குறிப்பில், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய அரச குடும்பத்தை அன்பாகவும் பொறுப்புடனும் கவனித்து கொண்டதாக தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T17:24:44+00:00</updated>
        </entry>
    </feed>
