<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-07T22:48:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி - சிறிய தவறால் பணி நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-techie-fired-over-sauna-towel-mix-up-1788817298"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-techie-fired-over-sauna-towel-mix-up-1788817298</id>
            <summary type="text">Swiss techie fired over sauna towel mix-up: சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி, மூத்த நிர்வாகியுடன் ஏற்பட்ட சிறிய சம்பவத்தால் வேலை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss techie fired over sauna towel mix-up: சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி, மூத்த நிர்வாகியுடன் ஏற்பட்ட சிறிய சம்பவத்தால் வேலை இழந்ததாக கூறியுள்ளார்.</p><p>
</p><h2>சுவிட்சர்லாந்தில் ரூ.1 கோடி சம்பளம்</h2><p>சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய மென்பொருள் பொறியாளர், சுமார் ரூ.1 கோடி வருடச்சம்பளம் பெற்றிருந்தார்.
</p><p>
ஆனால், உடற்பயிற்சி மையத்தில் சோனாவில் நடந்த ஒரு சிறிய தவறால் அவர் வேலை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab5a3152-7ad1-4a69-a41f-03421ebc9485/26-6a9f2f93d63a4.webp' /></p><h2>தவறுதலாக துண்டை எடுத்ததற்காக</h2><p>அவரது விளக்கத்தின் படி, மே 8 அன்று ஜிம் சோனாவில் பயிற்சி முடிந்தபின் தவறுதலாக ஒரு மூத்த நிர்வாகியின் துண்டை எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த நிர்வாகி அமைதியாக நடந்துகொண்டாலும், “புதிய வேலை தேடத் தொடங்குங்கள்” என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.
</p><p>
ஐந்து நாட்களுக்குப் பிறகு, மே 13 அன்று, HR குழுவினரிடமிருந்து “பொருளாதார காரணங்களால்” பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சோனா சம்பவமே உண்மையான காரணமாக இருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.</p><p></p><h2>வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்காது..</h2><p>அவர் 2022 முதல் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பல திட்டங்களில் ஈடுபட்டிருந்தபோதும், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் திட்டங்கள் தாமதமானதாகவும், தான் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் உழைந்திருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று அவர் மனவருத்தம் தெரிவித்தார்.
</p><p>
மேலும், “என்னை ‘சமூக விரோத’ (antisocial) பட்டியலில் சேர்த்துள்ளனர், இதனால் எதிர்காலத்தில் வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்காது” என்று அவர் குற்றம்சாட்டினார்.</p><p> தற்போது மூன்று மாதங்களாக வேலை இழந்த நிலையில், தனியார் வியாபாரம் தொடங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>இந்த சம்பவம், ஊழியர்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு உயர்நிலை நிர்வாகத்தின் முடிவுகளின் கீழ் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.</p><p>அவர் இந்த சம்பவத்தை Reddit பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T21:38:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் கிரிப்டோ பரிவர்த்தனை 350 பில்லியன் டொலராக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/middle-east-crypto-surges-to-350-bn-dollars-1788809175"></link>
            <id>https://news.lankasri.com/article/middle-east-crypto-surges-to-350-bn-dollars-1788809175</id>
            <summary type="text">Middle East Crypto Surges to 350 Bn dollars: மத்திய கிழக்கில் கிரிப்டோ பரிவர்த்தனை பல மடங்கு உயர்ந்துள்ளது.மூன்று மடங்கு அதிகரிப்பு

மத்திய கிழக்கில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Middle East Crypto Surges to 350 Bn dollars: மத்திய கிழக்கில் கிரிப்டோ பரிவர்த்தனை பல மடங்கு உயர்ந்துள்ளது.</p><h2>மூன்று மடங்கு அதிகரிப்பு</h2><p>

மத்திய கிழக்கில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>

Bitcoin Policy Institute வெளியிட்ட தகவலின்படி, 2022-இல் சுமார் 100 பில்லியன் டொலராக இருந்த பரிவர்த்தனை மதிப்பு, 2025–2026-இல் 350 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db5d72a2-cafa-4802-b0c3-c6c8062e7089/26-6a9f13048f80b.webp' /></p><h2>பாதுகாப்பான சொத்தாக Bitcoin...</h2><p>ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல்கள், எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம், வட்டி விகிதம் போன்ற பொருளாதார சவால்கள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் செல்வத்தை பாதுகாக்க கிரிப்டோகரன்சிகளுக்கு மாறியுள்ளனர்.
</p><p>
ஆரம்பத்தில் Bitcoin விலை உலக பங்குச் சந்தைகளுடன் இணைந்து குறைந்தாலும், பின்னர் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக Bitcoin-ஐ தேர்வு செய்ததால் அதன் சந்தை பங்கு 64.8 சதவீதம் வரை உயர்ந்தது.</p><p>
</p><p></p><p>எகிப்து, துருக்கி, லெபனான், ஈரான் போன்ற நாடுகளில் நாணய மதிப்பு குறைவதால் மக்கள் Bitcoin மற்றும் அமெரிக்க டொலருடன் இணைக்கப்பட்ட Stablecoins-ஐ அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். </p><p>அதேசமயம், UAE மற்றும் பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகள் கிரிப்டோ நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் ஒழுங்குமுறை சட்டங்களை உருவாக்கி, டிஜிட்டல் சொத்து மையங்களாக தங்களை வலுப்படுத்தி வருகின்றன.</p><p>

சண்டைகள், தடைகள், நாணய நிலையற்ற தன்மை போன்ற சூழ்நிலைகளில் கிரிப்டோகரன்சிகள் செல்வத்தை பாதுகாக்கவும், மதிப்பை மாற்றவும் முக்கிய கருவியாக மாறியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T19:36:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடாவில் புதிய கட்டுப்பாட்டு மண்டலம் - ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-to-declare-new-gulf-restricted-zone-soon-1788801835"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-to-declare-new-gulf-restricted-zone-soon-1788801835</id>
            <summary type="text">Iran to declare new gulf restricted zone soon: வளைகுடா பகுதியில் முக்கிய முடிவை ஈரான் எடுத்துள்ளது.
புதிய கட்டுப்பாட்டு மண்டலம்ஈரான் விரைவில் வளைகுடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran to declare new gulf restricted zone soon: வளைகுடா பகுதியில் முக்கிய முடிவை ஈரான் எடுத்துள்ளது.
</p><h2>புதிய கட்டுப்பாட்டு மண்டலம்</h2><p>ஈரான் விரைவில் வளைகுடாவில் புதிய கட்டுப்பாட்டு மண்டலத்தை அறிவிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்த மண்டலம் அமெரிக்கா ஈரானுக்கு விதித்துள்ள தடைகள் தொடங்கும் இடத்திலிருந்து வளைகுடா பகுதிகளுக்கு விரிவடையும் என்று ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சன் ரெசாயி தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbe7adaa-ba68-48a3-863e-58bb9a54881c/26-6a9ef32ca1434.webp' /></p><p>இந்த புதிய மண்டலத்தில் நுழையும் எந்தக் கப்பலும் தடைப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும், ஹார்முஸ் நீரிணையில் புதிய சர்வதேச கடற்பாதை வரைபடங்கள் ஈரான் மற்றும் ஓமன் இணைந்து ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
“அமெரிக்கா தனது சபோட்டாஜ் மற்றும் தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும்” என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p>சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான Kharg Island பலமுறை தாக்குதலுக்கு உள்ளானாலும் இன்னும் செயல்பட்டு வருவதாக ஈரான் எண்ணெய் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, விலை உயர்வு தொடர்கிறது.
</p><p>
ஈரான் பாராளுமன்றத் தலைவர் காளிபாப், “இனி ஈரானின் நலன்களுக்கு எதிரான எந்தத் தாக்குதலும் வேகமான, கடுமையான பதிலை சந்திக்கும்” என்று எச்சரித்துள்ளார். அதேசமயம், ஈரான் பொருளாதார சவால்களை சமாளிக்க சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என பொருளாதார அமைச்சர் தெரிவித்தார்.
</p><p>
இந்த அறிவிப்பு வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் வணிகப் போக்குவரத்துக்கு புதிய சவால்களை உருவாக்கும் நிலையில், சர்வதேச சமூகத்தின் கவனம் ஈரானின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் நிலைகொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T17:20:49+00:00</updated>
        </entry>
    </feed>
