<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-18T16:34:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள் - பேரழிவுகள் அதிகரிக்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/himalayan-glaciers-near-dangerous-tipping-point-1789749105"></link>
            <id>https://news.lankasri.com/article/himalayan-glaciers-near-dangerous-tipping-point-1789749105</id>
            <summary type="text">Himalayan glaciers melting accelerates: இமயமலை பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகிறது.

புதிய ஆய்வு&amp;nbsp;எச்சரிக்கைஇமயமலைப் பனிப்பாறைகள் கடந்த பத்து ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Himalayan glaciers melting accelerates: இமயமலை பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகிறது.</p><p>
</p><h2>
புதிய ஆய்வு&nbsp;எச்சரிக்கை</h2><p>இமயமலைப் பனிப்பாறைகள் கடந்த பத்து ஆண்டுகளை விட 65 சதவீதம் வேகமாக உருகி வருகின்றன என்று புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
</p><p>
இதனால் பனிப்பாறை ஏரிகள், நிலச்சரிவு, திடீர் வெள்ளம் போன்ற பேரழிவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43a4a35-0e31-4eb8-bba1-5f94b0a63e8b/26-6aad67742bf05.webp' /></p><p>தெற்கு ஆசியாவில் இருந்து வெளிப்படும் Black Carbon புகைத் துகள்கள், பனிப்பாறை உருக மூன்றில் ஒரு பங்கு காரணமாக உள்ளன. குறிப்பாக, செங்கல் அடுக்குகள் (brick kilns) மற்றும் தொழிற்சாலைகள் 32 முதல் 42 சதவீதம் வரை கார்பன் உமிழ்வை ஏற்படுத்துகின்றன. </p><p>இந்த துகள்கள் பனி மீது படிந்து, சூரிய வெப்பத்தை அதிகம் உறிஞ்சி, உருகலை வேகப்படுத்துகின்றன.
</p><p></p><h2>மிகுந்த ஆபத்தில் 56 ஏரிகள்&nbsp;</h2><p>இந்த அறிக்கை இந்தியாவில் உள்ள 189 ஆபத்தான பனிப்பாறை ஏரிகளை ஆய்வு செய்து, 56 ஏரிகள் மிகுந்த ஆபத்தானவை என வகைப்படுத்தியுள்ளது.</p><p> இவை உடைந்து போனால், கிராமங்கள், சாலைகள், பாலங்கள், அடிப்படை வசதிகள் அனைத்தும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம்.

மேலும், இமயமலைப் பகுதியில் சுமார் 40,000 பனிப்பாறைகள் உள்ளன.</p><p> ஆனால், 0.1 சதவீதம் மட்டுமே முறையாக கண்காணிக்கப்படுகின்றன. இதனால் எதிர்கால பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த மாற்றங்கள் மலைப்பகுதிகளை மட்டுமல்லாமல், தெற்காசியாவின் நீர்வளத்தையும் பாதிக்கின்றன. </p><p>2050-க்குள் பெரும்பாலான இமயமலை நதிகள் “peak water” நிலையை அடைந்து, பின்னர் நீர்வரத்து குறையும் அபாயம் உள்ளது. நூற்றாண்டின் இறுதிக்குள் பனிப்பாறைகளின் 80 சதவீதம் வரை இழக்கப்படும் அபாயம் உள்ளது.
</p><p></p><p>இமயமலை சூழல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20 சதவீதத்திற்கும் மேல் ஆதரவு அளிக்கிறது. விவசாயம், உணவு உற்பத்தி, மின்சாரம், சுற்றுலா, வாழ்வாதாரம் அனைத்தும் இதனைச் சார்ந்துள்ளன.
</p><p>
கார்பன் உமிழ்வை குறைப்பது, பனிப்பாறைகளை கண்காணிப்பது, முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துவது, வன மேலாண்மை மற்றும் நிலையான சுற்றுலா திட்டங்களை உருவாக்குவது அவசியம் என இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T16:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவில் நடக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-holds-first-election-since-ukraine-war-1789746803"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-holds-first-election-since-ukraine-war-1789746803</id>
            <summary type="text">Russia holds first election since Ukraine war: ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியுள்ளது.

ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல்2022-ஆம் ஆண்டு உக்ரைன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia holds first election since Ukraine war: ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியுள்ளது.</p><h2>

ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல்</h2><p>2022-ஆம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவில் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது.
</p><p>
செப்டம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தேர்தலில், சுமார் 111 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/602da3b1-e75c-4956-a17d-f1cfc7dfb56a/26-6aad5e753cf7e.webp' /></p><p>இந்த தேர்தல் மூலம் 450 இடங்களைக் கொண்ட ஸ்டேட் டூமா (State Duma) எனப்படும் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் பாதி இடங்கள் கட்சிப் பட்டியல் மூலம், மற்ற பாதி தனிப்பட்ட தொகுதிகள் மூலம் நிரப்பப்படுகின்றன.</p><p>
வாக்குப்பதிவு முறைமைகள் பாரம்பரிய வாக்குச்சாவடிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

யுனைடெட் ரஷ்யா கட்சி (United Russia Party) பெரும்பான்மையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p></p><p>போருக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்த யாப்லோகோ கட்சி (Yabloko Party) கட்சிப் பட்டியலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. சிலர் தனிப்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
</p><h2>
மக்கள் ஆதரவு</h2><p>ஜனாதிபதி விளாடிமிர் புடின், தொலைக்காட்சி உரையில், இந்த தேர்தலை ரஷ்ய படைகளுக்கு மக்கள் ஆதரவு காட்டும் நிகழ்வாக&nbsp;இருக்கும் என கூறினார்.</p><p> அவர், “உங்கள் வாக்கு, எங்கள் வீரர்களுக்கு பின்னால் கோடிக்கணக்கான மக்கள் நிற்கிறார்கள் என்பதை உலகிற்கு காட்டும்” என்று தெரிவித்தார் .</p><p></p><p>இந்த தேர்தல், ரஷ்யாவின் பொருளாதார சவால்களுக்கும், மேற்கத்திய தடைகளுக்கும், எரிபொருள் பற்றாக்குறைகளுக்கும் நடுவே நடைபெறுகிறது.</p><p> உக்ரைன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், ரஷ்யா தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டதாகக் கூறும் உக்ரைனின் நான்கு பிராந்தியங்களிலும், கிரிமியாவிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.</p><p> உக்ரைன் அரசு, இந்த தேர்தலை சட்டவிரோதமானது எனக் கூறி, சர்வதேச சமூகத்தை அங்கீகரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
முதல் நிலை முடிவுகள் செப்டம்பர் 20 இரவு வெளியாகும் எனவும், முழுமையான முடிவுகள் செப்டம்பர் 21 அன்று அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T16:06:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதியுதவியை குறைத்த பிரித்தானிய அரசு - ஏழை நாடுகள் கடும் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-aid-cuts-hit-poorest-nations-hardest-1789741548"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-aid-cuts-hit-poorest-nations-hardest-1789741548</id>
            <summary type="text">UK aid cuts hit poorest nations hardest: ஏழ்மையான நாடுகளுக்கான நிதியுதவியை பிரித்தானிய அரசு குறைத்துள்ளது.

ஏழை நாடுகள் கடும் பாதிப்புமுன்னாள் பிரதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK aid cuts hit poorest nations hardest: ஏழ்மையான நாடுகளுக்கான நிதியுதவியை பிரித்தானிய அரசு குறைத்துள்ளது.
</p><h2>
ஏழை நாடுகள் கடும் பாதிப்பு</h2><p>முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசின் நிதியுதவி குறைப்புகள், உலகின் மிக ஏழை நாடுகளை கடுமையாக பாதித்துள்ளன.
</p><p>
புதிய புள்ளிவிவரங்களின்படி, குறைந்த வருமான நாடுகளுக்கான நிதியுதவி 6.7 சதவீதம் குறைக்கப்பட்டு, 118 மில்லியன் பவுண்டு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70d148f1-7782-4cad-b828-7af808f1d33b/26-6aad49eeb177e.webp' /></p><p>2025-ஆம் ஆண்டில், பிரித்தானியாவின் மொத்த உதவி நிதி (Official Development Assistance) தேசிய வருமானத்தின் 0.44 சதவீதமாகக் குறைந்தது. இது 2024-இல் இருந்த 0.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 987 மில்லியன் பவுண்டு குறைவு. </p><p>ஸ்டார்மர் அரசு, இந்த நிதியை பாதுகாப்புத் துறைக்கு மாற்றும் திட்டத்தை அறிவித்திருந்தது.
</p><p></p><p>Bond என்ற தொண்டு அமைப்பின் கொள்கை இயக்குநர் கிடியன் ராபினோவிட்ஸ், “இந்த நிதி குறைப்புகள் ஏழை நாடுகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சியாரா லியோனில் தாய்மை சுகாதார சேவைகள், ஆப்பிரிக்காவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி திட்டங்கள் மூடப்படுகின்றன” என்று தெரிவித்தார்.</p><p>

உதவி நிதியின் மிகப்பெரிய பகுதி (18.4%) பிரித்தானியாவில் அகதிகளுக்கான செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. உக்ரைன், ஏமன், ஆப்கானிஸ்தான் ஆகியவை முக்கிய உதவி பெறும் நாடுகளாகும். ஆனால், எதிர்காலத்தில் ஏமனுக்கு 28 சதவீதம் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு 39 சதவீதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p></p><p>அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் உதவி குறைப்புகளும் சேர்ந்து, உலகளாவிய மனிதாபிமான அமைப்புகள் மிகப்பெரிய நிதி பற்றாக்குறையை சந்திக்கின்றன. கடந்த ஆண்டு, 64 மில்லியன் மக்கள் உதவி பெற முடியாமல் போனதாக Alnap அறிக்கை தெரிவித்துள்ளது.</p><p>

Bond அமைப்பு, புதிய பிரதமர் ஆன்டி பர்னாம், ஸ்டார்மர் அரசு மேற்கொண்ட உதவி குறைப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T15:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்ஸர் மழைபொழிந்த உகாண்டா வீரர்! நொறுங்கிய கென்யா அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uganda-player-olipa-gerald-95-in-52-balls-1789742221"></link>
            <id>https://news.lankasri.com/article/uganda-player-olipa-gerald-95-in-52-balls-1789742221</id>
            <summary type="text">Olipa Gerald 95 runs vs kenya: கென்யா அணிக்கு எதிரான டி20 போட்டியில் உகாண்டா 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆப்பிரிக்க கண்ட கிண்ணப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Olipa Gerald 95 runs vs kenya: கென்யா அணிக்கு எதிரான டி20 போட்டியில் உகாண்டா 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p><p>

ஆப்பிரிக்க கண்ட கிண்ணப் போட்டியில் உகாண்டா அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது.
</p><h2>
ஒலிபா ஜெரால்ட்</h2><p>உகாண்டா மற்றும் கென்யா அணிகளுக்கு இடையிலான ஆப்பிரிக்க கண்ட கிண்ண டி20 போட்டி கிகாலி சிட்டியில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46dc159f-6ef4-44db-b6e5-e371f744e72c/26-6aad4d19b634a.webp' />&nbsp;</p><p></p><p> 

முதலில் ஆடிய உகாண்டா அணியில் சரவெடி ஆட்டம் ஆடிய ஒலிபா ஜெரால்ட் (Olipa Gerald), 52 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 95 ஓட்டங்கள் விளாசினார். </p><p>

அணித்தலைவர் ரியாஸத் அலி ஷா 19 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாச, உகாண்டா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><h2>உகாண்டா வெற்றி </h2><p>

பின்னர் ஆடிய கென்யா 19 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, உகாண்டா அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>

கென்யா அணியில் அதிகபட்சமாக ராகேப் பட்டேல் 33 ஓட்டங்களும், சச்சின் கில் 22 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>ஜுமா மியாகி மற்றும் எனோக் காசைஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.&nbsp;மியூசிங்யுசி மற்றும் பகுமா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fb8e050-f3a5-4259-8a82-dd400ff7348c/26-6aad4d1a723bf.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T14:36:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் நிழல் போர் குறித்து உண்மைகள்: பிரித்தானியர்களிடம் வெளிப்படுத்தும் கட்டாயத்தில் பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-faces-of-clarify-russian-war-reflects-1789739518"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-faces-of-clarify-russian-war-reflects-1789739518</id>
            <summary type="text">Uk pm burnham faces of clarify russian war reflects: பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், ரஷ்யாவின் நிழல் போர் குறித்த விடயங்களை வெளிப்படுத்தும் கோரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uk pm burnham faces of clarify russian war reflects: பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், ரஷ்யாவின் நிழல் போர் குறித்த விடயங்களை வெளிப்படுத்தும் கோரிக்கைகளை எதிர்கொள்கிறார். </p><p>

நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் நிழல் போரினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து, பிரித்தானியர்களிடம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை ஆண்டி பர்ன்ஹாம் எதிர்கொள்கிறார்.&nbsp;</p><h2>ரஷ்யாவின் நிழல் போர்&nbsp;</h2><p>

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடுகள் (நேட்டோ) மீது ரஷ்யா ட்ரோன் விமானங்கள் அல்லது ரொக்கெட்டுகளைக் கொண்டு கலப்புத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f667a8e9-330e-4287-8acb-3890958677c1/26-6aad441283b29.webp' /></p><p>
அதனைத் தொடர்ந்து, பெலாரஸில் இருந்து லிதுவேனியாவின் வான்வெளிக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்ட ஒரு ட்ரோன் விமானத்தை நேட்டோ போர் விமானிகள் இந்த வாரம் சுட்டு வீழ்த்தினர்.&nbsp;</p><p></p><p>
இந்த நிலையில், பிரித்தானிய பிரதமரான ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் நிழல் போரினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து, மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்கொள்கிறார்.
</p><p>
இதுகுறித்து பேசியுள்ள டோரி தலைவர் கெமி பேடனோக் மற்றும் Reform UK-வின் நைஜல் ஃபாரேஜ் ஆகிய இருவரும், பிரித்தானியாவை எவ்வாறு பாதுகாக்க வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளார் என்பதை பிரதமர் இன்னும் விரிவாக விளக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;</p><h2>அவசரத்திற்கு ஈடுகொடுக்குமாறு</h2><p>

பேடனோக்கின் பதிவில் இராணுவ ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்துவதிலும், பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதாலும் நேட்டோ கூட்டாளிகளின் வளர்ந்து வரும் அவசரத்திற்கு ஈடுகொடுக்குமாறு பர்ன்ஹாம் மற்றும் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/538246be-664f-4110-a211-824ebcecf5ff/26-6aad4592e8eb8.webp' /></p><p>
ரஷ்யா லிதுவேனியாவின் வான்வெளியை மீறியதாக வெளியான சமீபத்திய தகவல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. 

இந்த நிலையில் மேக்ரோன் மற்றும் டஸ்க் ஆகியோர் காட்டும் அவசரமான செயல்பாடுகள் அந்த கவலையை மேலும் அதிகரிக்கின்றன.</p><p>

ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலை அரசு போதுமான அளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறதா என்பது தெளிவாக இல்லை.</p><p> 

நேட்டோ மீது 2030-க்குள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அரசின் சொந்த உளவுத்துறை மதிப்பீடு கூறுகிறது; அதேவேளையில் சிறிய அளவிலான ஊடுருவல்களும் ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58e89cad-fb31-4ce1-a2cb-3692c6cb57c0/26-6aad4411c4582.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T13:57:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய விளையாட்டு வீரர்கள் தங்க ரூ.268 கோடிக்கு கப்பலை வாடகைக்கு எடுத்துள்ள ஜப்பான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-rent-268-cr-cruise-ship-for-asian-games-1789739371"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-rent-268-cr-cruise-ship-for-asian-games-1789739371</id>
            <summary type="text">japan rent rs 268 crores cruise ship for asian games: ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்குவதற்காக ஜப்பான் ரூ.268 கோடிக்கு சொகுசு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>japan rent rs 268 crores cruise ship for asian games: ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்குவதற்காக ஜப்பான் ரூ.268 கோடிக்கு சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்துள்ளது.</p><h3> 

ஆசிய விளையாட்டு போட்டி
</h3><p>
20 வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நாளை தொடங்கி, அக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/763561e5-315d-4688-805d-d3975bb8db97/26-6aad416c85319.webp' /></p><p> 

இந்தத் தொடரில், 45 நாடுகளை சேர்ந்த 17,000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். </p><p>

வழக்கமாக சர்வதேச விளையாட்டு தொடர்களின் போது, வீரர்கள் தங்குவதற்கு பல அடுக்கு குடியிருப்புகளுடன் கூடிய விளையாட்டு கிராமம் உருவாக்கப்படும்.</p><h3> 

ரூ.268 கோடிக்கு வாடகையில் சொகுசு கப்பல்</h3><p> 

ஆனால் ஜப்பான், வீரர்களை தங்க வைக்க ‘கோஸ்டா செரீனா’ என்ற இத்தாலிய சொகுசு கப்பலை வாடகைக்கு அமர்த்தியுள்ளது. </p><p>

சுமார் 300 மீட்டர் நீளமும், 100,000 டன்களுக்கும் அதிகமான எடையும், 1,500 அறைகளும் கொண்ட இந்தக் கப்பலில், சுமார் 4,000 விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளும் தங்க வைக்கப்படுவார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73c478f0-7825-4dc0-a141-bd37c7e100b8/26-6aad416d3acdc.webp' /></p><p>

28 மில்லியன் டொலர்( இந்திய மதிப்பில் ரூ.268 கோடி) செலவில் அந்த கப்பல் வாடகைக்கு எடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h3>

வசதி குறைபாடு
</h3><p>
நகோயா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில், தங்குமிட வசதி குறைபாடு குறித்து பல்வேறு நாடுகளும் புகார் தெரிவித்துள்ளன.</p><p> 

2 வீரர்களுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதை 3 பேர் பகிர்ந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

போட்டியை நடத்தும் ஜப்பானை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கும் இந்த பிரச்சினை உள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dccab355-0e2a-4d09-bbd5-68f096f1980d/26-6aad416de2b82.webp' /></p><p>

மேலும், தென் கொரியா அணியைச் சேர்ந்த ஒரு வீரர் தனது குடிலில் தண்ணீர் கசியும் தொட்டியையும், தரை முழுவதும் ஈரமாக இருப்பதையும் காட்டும் காணொளியை, "தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்" என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.&nbsp;</p><p></p><p>
இதே போல், தாய்லாந்து வீரர்கள் சொகுசு கப்பலின் வரவேற்பு மையத்தில் தரையில் படுத்து உறங்கிய காட்சிகள் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. </p><p>

சில பயிற்சியாளர்கள் போன்ற சில அதிகாரிகள், வெளியே வெவ்வேறு ஹொட்டல்களுக்கு சென்று தங்கியுள்ளனர். </p><p>

ஜப்பானில் ஒரு பெரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுக்கு, ஒரு சொகுசுக் கப்பல் தங்குமிடமாகப் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை," என்று அந்த சொகுசுக் கப்பலை வரவேற்கும் விழாவில் ஏற்பாட்டாளர் ஓமுரா தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T13:49:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிவியாவில் புதிய காட்டுப் பூனை இனம் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-tiger-cat-species-found-in-bolivia-1789737789"></link>
            <id>https://news.lankasri.com/article/new-tiger-cat-species-found-in-bolivia-1789737789</id>
            <summary type="text">New tiger cat species found in Bolivia: பொலிவியாவில் புதிய காட்டுப்பூனை இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

புதிய காட்டுப்பூனை இனம்பொலிவியாவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>New tiger cat species found in Bolivia: பொலிவியாவில் புதிய காட்டுப்பூனை இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
</p><h2>
புதிய காட்டுப்பூனை இனம்</h2><p>பொலிவியாவின் யுங்காஸ் (Yungas) மலைப்பகுதியில், மேகக் காடுகளில் வாழும் சிறிய காட்டுப் பூனை ஒன்று, புதிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

“லியோபார்டஸ் டில்காயோ” (Leopardus tilcayo) என அறிவிக்கப்பட்ட இந்த புலி பூனை, கடந்த நூற்றாண்டுக்கு பிறகு உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் புதிய பூனை இனமாகும்.

உள்ளூர் மக்கள் இதனை “டில்காயோ” என்று அழைக்கின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6162224-1a76-4503-8426-737bc3e47b2f/26-6aad3b3f253c5.webp' /></p><h2>புலி பூனை</h2><p>இது தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் காணப்படும் புலி பூனைகளின் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த பூனை சுமார் 46 செ.மீ. நீளமும், 1.4 கிலோ எடையும் கொண்டது.</p><p> சாதாரண வீட்டுப் பூனையைக் காட்டிலும் சிறியது. இதன் தோல் வெளிர் பழுப்பு நிறத்தில், உடலெங்கும் ஒழுங்கற்ற வடிவிலான புள்ளிகளுடன் காணப்படுகிறது.</p><p>
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573b3f46-3a37-4184-88ac-94e5de3c8491/26-6aad3c42365d4.webp' /></p><p>அதன் வாழ்க்கை முறைகள் குறித்து விஞ்ஞானிகள் இன்னும் முழுமையான தகவல்களை கொண்டிருக்கவில்லை. ஆனால், அதன் கழிவுகளில் எலிகள் போன்ற சிறிய விலங்குகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவை அதன் உணவாக இருக்கலாம் என கருதப்படுகிறது. </p><p>மேலும், கேமரா-வலைகள் மூலம், இது இரவில் அதிகமாகச் செயல்படும் விலங்காக இருக்கலாம் என அறியப்பட்டுள்ளது.</p><p>

இந்த ஆய்வை முன்னெடுத்த தேசிய புவியியல் ஆராய்ச்சியாளர் பாவ்லா நோகல்ஸ் அஸ்கர்ருன்ஸ், “பொலிவியாவில் காணப்படும் இந்த பூனை, பிரேசிலில் காணப்படும் புலி பூனைகளின் விவரங்களுடன் பொருந்தவில்லை. அதனால், இது தனித்த இனமாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகித்தோம்” என்று கூறினார்.</p><p>
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64546fb5-c3a7-4152-9855-8053c6dfd17c/26-6aad3c42e3a46.webp' /></p><p>DNA ஆய்வுகள் மூலம், புலி பூனைகள் ஐந்து தனித்த இனங்களாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதில், டில்காயோ சுமார் 14 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மற்ற புலி பூனைகளிலிருந்து பிரிந்தது என கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், பெருவின் யுங்காஸ் பகுதியில் “லியோபார்டஸ் டிக்ரினஸ் ஆன்டிசுயோ” (Leopardus tigrinus antisuyo) என்ற புதிய துணை இனமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, உலக விலங்கியல் வரலாற்றில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T13:19:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிலிருந்து வேலை பார்ப்பது தொடர்பில் பிரித்தானியா அரசு எடுக்க இருக்கும் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-to-major-change-in-work-from-home-1789735598"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-to-major-change-in-work-from-home-1789735598</id>
            <summary type="text">Major change for anyone working from home announced: வீட்டிலிருந்து வேலை பார்ப்பது தொடர்பில் பிரித்தானிய அரசு முக்கிய முடிவொன்றை அறிவிக்க உள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Major change for anyone working from home announced: வீட்டிலிருந்து வேலை பார்ப்பது தொடர்பில் பிரித்தானிய அரசு முக்கிய முடிவொன்றை அறிவிக்க உள்ளது.
</p><p>

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் விடயத்தை எளிதாக்க, அல்லது, வீட்டிலிருந்து வேலை பார்க்க கோரும் பணியாளர்களின் கோரிக்கையை பணி வழங்குவோர் நிராகரிப்பதை கடினமாக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
</p><h3>
மீண்டும் அதிகாரம் வேலை செய்வோர் கையில்...
</h3><p>
இந்த விடயம் குறித்து விளக்கிய பிரித்தானிய மாகாண முதன்மைச் செயலரான Louise Haigh, பணியாளர் ஒருவர் வீட்டிலிருந்தவண்ணம் வேலை பார்க்கக் கோரும்போது, பணி வழங்கும் நிறுவனம் அதை நிராகரிக்கவேண்டுமானால், பணியாளரின் கோரிக்கையை முறையாக கருத்தில் கொண்டதை நிரூபித்தாகவேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3df68c9c-0002-4aa7-8e0e-9717410e5ed9/26-6aad32b01fff5.webp' /></p><p>
அதாவது, ஒருவர் தனது பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துவரவேண்டியிருக்கலாம், மற்றொருவருக்கு, வயதான தன் பெற்றோரை பார்த்துக்கொள்ளவேண்டியிருக்கலாம்.&nbsp;&nbsp;</p><p></p><p>
ஆக, இதையெல்லாம் கருத்தில் கொண்டே, வீட்டிலிருந்து வேலை செய்யக் கோரும் அவரது கோரிக்கை குறித்து அலுவலகம் முடிவு செய்யவேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என அவரது கோரிக்கையை நிராகரிக்க முடியாது.</p><p>

எல்லா வகையான பணிகளையும் வீட்டிலிருந்து செய்ய முடியாது என்பது உண்மைதான், என்றாலும், பணியாளர் வீட்டிலிருந்து வேலை பார்க்க கோரும்போது அவரது கோரிக்கையை நிறுவனம் சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் Louise Haigh.</p>]]></content>
            <updated>2026-09-18T12:46:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 வாரத்தில் யூடியூப் விளம்பரத்தில் ரூ.1.1 கோடி செலவு செய்த 9 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/9-year-old-spend-1-cr-in-youtube-ad-for-game-1789735132"></link>
            <id>https://news.lankasri.com/article/9-year-old-spend-1-cr-in-youtube-ad-for-game-1789735132</id>
            <summary type="text">9 வயது சிறுவன் 3 வாரங்களில் யூடியூப் விளம்பரத்தில் ரூ.1.1 கோடி செலவு செய்துள்ளது அவரின் தந்தைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 யூடியூப் விளம்பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>9 வயது சிறுவன் 3 வாரங்களில் யூடியூப் விளம்பரத்தில் ரூ.1.1 கோடி செலவு செய்துள்ளது அவரின் தந்தைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h3>

 யூடியூப் விளம்பரத்தில் ரூ.1.1 கோடி செலவு செய்த 9 வயது சிறுவன் </h3><p>

 Mike என்ற 9 வயது சிறுவன் மைன்கிராஃப்ட் மற்றும் ராப்லாக்ஸ் விளையாட்டுகளை விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர். </p><p>

யூடியூபில் அந்த விளையாட்டுகளை பார்க்கும் போது, அவருக்கும் தனது விளையாட்டுகளை யூடியூபில் பதிவேற்ற ஆசை வந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e62b6c2e-ef5c-48bc-9795-6a9475faf773/26-6aad30de00fdc.webp' /></p><p>

இது பற்றி அவரது தந்தை டேவ்விடம் தெரிவிக்க, அவரும் Mighty Mike Play என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி, மகன் விளையாடும் வீடியோக்களை பதிவேற்றினார். </p><p>

ஆனால் அந்த வீடியோக்கள் போதிய பார்வைகளை பெறாததால் மகன் ஏமாற்றமடைந்த நிலையில், தனது நிறுவன கிரெடிட் கார்டை பயன்படுத்தி, 20 டொலர் செலுத்தி ஒரு வீடியோவிற்கு சிறிய விளம்பரப் பிரச்சாரத்தை நடத்தியுள்ளார். </p><p>

ஆனால், அதன் பிறகு தனது கிரெடிட் கார்டுக்கான அணுகலை நீக்க மறந்து விட்டார்.&nbsp;</p><p></p><p>

3 வாரங்கள் கழித்து, அவரது நிறுவன மேலாளர்கள், நிறுவனப் பணியாளர்கள் மற்றும் நிதிக் குழுவினர் தனக்காகக் காத்திருந்த ஓர் அறைக்கு அழைக்கப்பட்ட பின்னரே அவருக்கு விடயத்தின் தீவிரம் புரிந்தது. </p><p>

3 வாரங்களில் அவரது கிரெடிட் கார்டில் இருந்து தோராயமாக 1,18,000 டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1.13 கோடி) வீடியோ கேமை விளம்பரப்படுத்த யூடியூபில் செலவிடப்பட்டிருந்தது குறித்து விளக்குமாறு அவரிடம் கேட்டுள்ளனர்.
</p><p>
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது மகன் அந்த கிரெடிட் அட்டையை பயன்படுத்தி அதில் உள்ள எண்கள் பணம் என்பது கூட தெரியாமல் செலவிட்டது தெரியவந்துள்ளது. </p><p>

தனது மகன் செய்ததை எண்ணி புலம்பி ஒரு வீடியோ வெளியிட்டுள்ள டேவ், தனது சேனலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளார்.</p><p> 

அதைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்கப்படுவாரா அல்லது தனது வேலை தொடருமா என்பது அவருக்கு இன்னும் தெரியவில்லை.</p>]]></content>
            <updated>2026-09-18T12:38:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிம்பாப்வேவிற்கு எதிராக அதிவேக சதம்: சாதனை படைத்த அவுஸ்திரேலிய வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/travis-head-fastest-century-against-zimbabwe-1789731537"></link>
            <id>https://news.lankasri.com/article/travis-head-fastest-century-against-zimbabwe-1789731537</id>
            <summary type="text">Travis head 112 runs in 84 balls vs zimbabwe: அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் விளாசினார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Travis head 112 runs in 84 balls vs zimbabwe: அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் விளாசினார்.
</p><p>
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்தார்.&nbsp;</p><h2>அதிவேக சதம்</h2><p>
ஹராரேயில் அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A magnificent knock by Travis Head! 🔥 He scored a brilliant 112 runs. 💯<a href="https://x.com/hashtag/TravisHead?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TravisHead</a> <a href="https://x.com/hashtag/AUSvsZIM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AUSvsZIM</a><br> <a href="https://t.co/aHlk5KYIb6">pic.twitter.com/aHlk5KYIb6</a></p>&mdash; CREX (@Crex_live) <a href="https://x.com/Crex_live/status/2100881735781318686?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p></p><p> 

டிராவிஸ் ஹெட், கூப்பர் கோனொலி கூட்டணி நிதானமாக ஓட்டங்களை சேர்த்தது. அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய டிராவிஸ் ஹெட் (Travis Head) 75 பந்துகளில் சதம் விளாசினார்.
</p><p>
இதன்மூலம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை ஹெட் படைத்தார்.&nbsp;</p><h2>86 பந்துகளில்</h2><p>
இதற்கு முன் சக அணி வீரர் மேட் ரென்ஷா 86 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. 

டிராவிஸ் ஹெட் 84 பந்துகளில் 3 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0edc51-46d1-43ed-b309-e6fa29aaa1eb/26-6aad24e034468.webp' /></p><p>பின்னர் இங்கிலிஸ் 21 ஓட்டங்களிலும், கேரி 20 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

அரைசதம் அடித்த கூப்பர் கோனொலி 69 பந்துகளில் 78 ஓட்டங்கள் விளாசினார். </p><p>ஆலிவர் பீக் 18 பந்துகளில் 41 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாச, அவுஸ்திரேலியா 356 ஓட்டங்கள் குவித்தது.

பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளும், மஸகட்சா 2 விக்கெட்டுகளும், மாத்வேரே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ffd48bc-6a70-485b-b538-ea9081ba0395/26-6aad24e106188.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T11:40:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவர் இல்லாத நேரத்தில் நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைத்த சாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kanpur-doctor-driver-caught-for-prescribe-medicine-1789731033"></link>
            <id>https://news.lankasri.com/article/kanpur-doctor-driver-caught-for-prescribe-medicine-1789731033</id>
            <summary type="text">Doctor&#039;s driver caught prescribing medicines to patients: மருத்துவர் ஒருவரின் சாரதி ஒருவர் நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைக்கும் காட்சி ஒன்று வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Doctor's driver caught prescribing medicines to patients: மருத்துவர் ஒருவரின் சாரதி ஒருவர் நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.</p><p>
 

மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத நேரத்தில், அவரது சாரதி, நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><h3>
நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைத்த சாரதி</h3><p>

உத்தரப்பிரதேசத்திலுள்ள கான்பூரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணிபுரிபவர் Dr. ராம்கேஷ்.

புதன்கிழமையன்று, ராம்கேஷ் தன் நோயாளி ஒருவர் தொடர்புடைய வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c46be2bf-b41c-4d4e-ab50-fd1f0e311e42/26-6aad20da5ba0a.webp' /></p><p>
அந்த நேரத்தில், ராம்கேஷின் சாரதி, மருத்துவரின் இருக்கையில் அமர்ந்து நோயாளிகளுக்கு மருந்துச்சீட்டில் மருந்து எழுதிக்கொடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
</p><p>
அத்துடன், அந்த மருந்துகளில் சில மருத்துவமனையில் கிடைக்காது என்றும், அவற்றை வெளியிலிருந்துதான் வாங்கவேண்டும் என்றும் அந்த சாரதி கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
இந்த வீடியோ, மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியின் கவனத்தை எட்டிய நிலையில், அவர் மருத்துவர் ராம்கேஷை அழைத்து அவரது சாரதி செய்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
</p><p>
அந்த விடயம் குறித்து ராம்கேஷ் விளக்கமளிக்கவேண்டும் என்று கூறியுள்ள தலைமை மருத்துவ அதிகாரி, அவரது விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லையெனில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசுக்கு இந்த விடயம் குறித்து தகவலளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், தனது சாரதியை பணீநீக்கம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார் மருத்துவர் ராம்கேஷ்.</p>]]></content>
            <updated>2026-09-18T11:34:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப் போருக்கு ஆதரவாக தென் கொரியா இராணுவத்தை அனுப்பாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sending-military-to-hormuz-1789730293"></link>
            <id>https://news.lankasri.com/article/sending-military-to-hormuz-1789730293</id>
            <summary type="text">Seoul resolves recent speculation over sending military: இராணுவத்தை அனுப்புவது குறித்த சமீபத்திய யூகங்களுக்கு சியோல் முற்றுப்புள்ளி வைத்தது.
ஈரானுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Seoul resolves recent speculation over sending military: இராணுவத்தை அனுப்புவது குறித்த சமீபத்திய யூகங்களுக்கு சியோல் முற்றுப்புள்ளி வைத்தது.</p><p>
ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-ம்யுங் நிராகரித்துள்ளார்.</p><h2>ஆதரவை அளிக்கவில்லை</h2><p>
நாட்டை மோதலில் சிக்கவைக்கக்கூடிய வகையில் மத்திய கிழக்குக்கு ராணுவத்தை அனுப்பப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc61cb6-8746-461a-a53b-b4a2b1feeb23/26-6aad1df77baba.webp' /></p><p> </p><p>இருப்பினும், அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதில் கூடுதல் பங்காற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக லீ கூறியுள்ளார். கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் தென் கொரியா தனது கடற்படை இருப்பைப் பராமரித்து வருகிறது. </p><p>ஈரான் விவகாரத்தில் போதுமான ஆதரவை அளிக்கவில்லை என்று கூறி சியோலை விமர்சித்த ட்ரம்ப், இந்த கோடையில் இரு நாடுகளின் படைகளும் இணைந்து நடத்திய முக்கிய கூட்டு ராணுவப் பயிற்சிகளையும் குறைத்துக்கொண்டார்; இச்செயல் அமெரிக்காவின் கூட்டாளியான தென் கொரியாவை அதிருப்திக்குள்ளாக்கியது. </p><p>ஹார்முஸ் நீரிணைக்கு ராணுவப் படைகளை அனுப்புவது குறித்து தென் கொரிய அரசு பரிசீலித்து வருகிறது; இருப்பினும், உள்நாட்டில் இத்திட்டத்திற்குப் போதிய ஆதரவு இல்லை.</p><p></p><p> </p><p>அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கான தென் கொரியாவின் உறுதிப்பாடுகள் குறித்து அமெரிக்காவுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிக் கேட்டபோது, ​​அந்த முதலீட்டுத் திட்டத்தின் வணிக ரீதியான சாத்தியத்தன்மை குறித்த கவலையே முக்கிய முட்டுக்கட்டையாக உள்ளதாக லீ கூறினார். </p><p>சியோல் ஏற்றுக்கொள்வதற்குச் சிரமமான அம்சங்கள் இருந்தபோதிலும், இரு தரப்பினரும் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருக்கமாக இருப்பதாக லீ கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7769bbd3-d3a5-4782-a32a-862e38659845/26-6aad1df82cb39.webp' /></p><p> கொரிய இறக்குமதிகள் மீதான சுங்க வரிகளை 15 சதவீதமாகக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதற்குப் பதிலாக, அமெரிக்க உற்பத்தித் துறையில் 350 பில்லியன் டொலர் முதலீடு செய்வதாகத் தென் கொரியா கடந்த ஆண்டு உறுதியளித்தது. </p><p>முதலீட்டுத் திட்டங்கள் குறித்த நாடாளுமன்ற விளக்கக் கூட்டத்தை சியோல் இந்த வாரம் ஒத்திவைத்தது; அதற்குப் பதிலாக அடுத்த வாரம் இக்கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-18T11:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பிரித்தானிய மண்ணில்.. ஆனாலும் நாங்கள் - இளவரசர் ஹரி கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-said-back-on-british-soil-really-nice-1789727472"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-said-back-on-british-soil-really-nice-1789727472</id>
            <summary type="text">Prince harry said back on british soil really nice: பிரித்தானிய மண்ணில் மீண்டும் இருப்பது அருமையாக உள்ளதாக இளவரசர் ஹரி ஊடகத்திடம் தெரிவித்தார். 

பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prince harry said back on british soil really nice: பிரித்தானிய மண்ணில் மீண்டும் இருப்பது அருமையாக உள்ளதாக இளவரசர் ஹரி ஊடகத்திடம் தெரிவித்தார். </p><p>

பிரித்தானியாவில் ஊடகத்திடம் பேசிய இளவரசர் ஹரி, தாய் மண்ணிற்கு திரும்பியது மகிழ்ச்சி என்று கூறியதுடன் சர்ச்சைக்குரிய புத்தகம் குறித்த கேள்விகளை புறக்கணித்தார்.&nbsp;</p><h2>சவால்கள்</h2><p>

இளவரசர் ஹரி மற்றும் மேகன் பிரித்தானியா திரும்பியதில் இருந்து பல சவால்களை சந்தித்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e9d0812-6153-4036-9d0b-ad7b56c691d7/26-6aad14f34ab83.webp' />&nbsp;</p><p></p><p>

இந்த சூழலில், கிரீன்விச்சின் வரலாற்று சிறப்புமிக்க Old Royal Naval College வளாகத்தில் நடைபெற்ற முதல் Invictus Spirit Awards விழாவில் ஹரி கலந்துகொண்டார்.
</p><p>
அப்போது சிவப்பு கம்பள வரவேற்பு பாதையில் நின்றிருந்த செய்தியாளர் ஒருவர், "ஹரி, ஹரி...உங்கள் மாமாவின் புத்தகம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று உரக்கக் கேட்டார். அதற்கு தீவிர முகபாவனையை ஹரி பதிலாக தந்தார். </p><h2>

நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்</h2><p>எனினும், நேற்றிரவு அவர் அளித்த முதல் பேட்டியில், "இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் பிரித்தானிய மண்ணில் இருப்பதும், பல பழைய முகங்களையும், நண்பர்களையும் காண்பதும் மிகவும் அருமையாக இருக்கிறது.</p><p>

பல நிகழ்வுகள் நிறைந்ததாக இது அமைந்திருக்கிறது; ஆனாலும் நாங்கள் எங்கள் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடத் தொடங்கியுள்ளோம்.

குழந்தைகள் பாடசாலைகளில் இருக்கிறார்கள். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். </p><p>மேலும், நான் கூறியது போல் மீண்டும் பிரித்தானிய மண்ணிற்கு திரும்புவது அற்புதமாக இருக்கிறது. 

பிரித்தானியா திரும்பிய முதல் இரண்டு வாரங்கள் 'விறுவிறுப்பான நிகழ்வுகள் நிறைந்ததாக' இருந்தது. அடுத்த ஆண்டு பர்மிங்காமிற்கு செல்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fd2b7f6-cc54-4dc2-a15b-7281fcdd9695/26-6aad14f405ae6.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T11:05:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆழமாகும் டாடா அறக்கட்டளை உடனான விரிசல்... நீண்ட சட்டப் போராட்டத்திற்கு டாடா சன்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deepens-rift-with-tata-trusts-1789728190"></link>
            <id>https://news.lankasri.com/article/deepens-rift-with-tata-trusts-1789728190</id>
            <summary type="text">The deepening confrontation between Tata Sons and Tata Trusts: டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளை இடையே ஆழமடைந்து வரும் மோதல்.
நிர்வாகத் தலைவராக என்....</summary>
            <content type="html"><![CDATA[<p>The deepening confrontation between Tata Sons and Tata Trusts: டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளை இடையே ஆழமடைந்து வரும் மோதல்.
</p><p>நிர்வாகத் தலைவராக என். சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்படுவது தொடர்பாக டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளை இடையே தீவிரமடைந்து வரும் மோதல் ஒரு நீண்ட சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கக்கூடும் என்றே கூறப்படுகிறது.</p><h2>நிர்வாகக் குழு</h2><p>
</p><p>இறுதியில் நீதிமன்றத்தின் விளக்கம் தேவைப்படக்கூடிய பல கேள்விகள் இதில் அடங்கியுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a91c16a7-198e-46e9-ac66-9a8156e6bb38/26-6aad15c01272c.webp' /></p><p> </p><p>பிப்ரவரி 20, 2027 அன்று சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு, அவருக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நீட்டித்து வழங்க டாடா சன்ஸ் நிர்வாகக் குழு செப்டம்பர் 17 அன்று எடுத்த முடிவே இந்த உடனடி மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. </p><p>இந்த விவகாரத்தில் நான்கு இயக்குநர்கள் ஆதரவாக வாக்களித்தனர்; அதேவேளையில், டாடா அறக்கட்டளைத் தலைவர் நோயல் டாடா அந்தத் தீர்மானத்தை எதிர்த்தார். </p><p>டாடா சன்ஸ் நிறுவனத்தின் சுமார் 66 சதவீதப் பங்குகளைக் கூட்டாக வைத்திருக்கும் டாடா அறக்கட்டளை, அந்தத் தீர்மானத்தை சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி செல்லாதது என்று கூறியதுடன், ஒரு தலைவரின் நியமனம் அல்லது மறுநியமனத்திற்கு அறக்கட்டளையின் நியமன இயக்குநர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு தேவை என்று நிறுவனத்தின் சங்க விதிகளில் வாதிடுகிறது.</p><p></p><p> </p><p>ஆனால், டாடா சன்ஸ் நிறுவனம் ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், மற்றொரு பதவிக்காலத்தைப் பெற வேண்டாம் என்று ஆகஸ்ட் மாதம் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய சந்திரசேகரன் ஒப்புக்கொண்டதாகவும், அதைத் தொடர்ந்து அவரது மறுநியமனத்திற்கு நிர்வாகக் குழு பெரும்பான்மை வாக்குகளுடன் ஒப்புதல் அளித்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. </p><p>முற்றிலும் முரண்பட்ட இந்த நிலைப்பாடுகள், 'டாடா சன்ஸ்' நிறுவனத்தின் விதிமுறைகளை (Articles) விளக்குவது குறித்தும், நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிற்கும் அதன் கட்டுப்பாட்டைக் கொண்ட பங்குதாரருக்கும் இடையிலான அதிகாரச் சமநிலை குறித்தும் ஒரு சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கக்கூடும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>வாக்களிக்க வேண்டும்</h2><p> </p><p>இந்த சர்ச்சையின் மையத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு நிர்வாகக் கட்டமைப்பு உள்ளது. ஒரு தலைவரின் முதல் நியமனத்திற்கும், பதவியில் இருப்பவரின் மறுநியமனத்திற்கும், நிறுவனத்தின் விதிகளில் பரிந்துரைக்கப்பட்ட செயல்முறையே பொருந்தும் என்று டாடா அறக்கட்டளை வலியுறுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72a6443e-137f-4fb8-a05b-f67b8bcee1e9/26-6aad15c0be611.webp' /></p><p> மேலும், தலைவரை நியமிக்கும் அல்லது மறுநியமனம் செய்யும் தீர்மானம் செல்லுபடியாவதற்கு, அதன் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர்கள் இருவரும் ஆஜராக வேண்டும் என்றும், அந்தப் பரிந்துரைக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது. </p><p>சந்திரசேகரனுக்கு எதிராக நோயல் வாக்களித்த நிலையில், செப்டம்பர் 17-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அந்தச் சோதனையில் தோல்வியடைந்துவிட்டதாக அறக்கட்டளைகள் வாதிடுகின்றன.</p><p></p><p> </p><p>டாட்டா அறக்கட்டளையின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழங்கிய சட்டக் கருத்து ஒன்றையும் நோயல் வாரியத்தின் முன் சமர்ப்பித்தார். </p><p>டாட்டா அறக்கட்டளையின் கூற்றுப்படி, வாரியம் அந்தக் கருத்தைக் கருத்தில் கொள்ளவில்லை. இரு நியமனதாரர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடே, எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் ஒரு முக்கிய அங்கமாக மாறக்கூடும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T10:39:56+00:00</updated>
        </entry>
    </feed>
