<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-30T18:34:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-threat-to-boycott-fifa-world-cup-1785435271"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-threat-to-boycott-fifa-world-cup-1785435271</id>
            <summary type="text">ஃபிபா பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்தால் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து விலகுவதாக ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன. உலகக் கோப்பையை புறக்கணிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிபா பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்தால் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து விலகுவதாக ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.</p><h2> உலகக் கோப்பையை புறக்கணிக்கும் ஐரோப்பா?</h2><p>ஃபிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ(Gianni Infantino) முன்மொழிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் சர்ச்சைக்குரிய திட்டத்தை ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான UEFA எதிர்த்துள்ளது.</p><p>உலகக் கோப்பை பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை ஃபிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ முன் நகர்த்தி சென்றால் UEFA உறுப்பு நாடுகள் இனி ஃபிபா உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்காது என எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f8e9f20-bb1d-4254-acd6-45b8298f040e/26-6a6b948901139.webp' /></p><p> ஃபிபா பங்குகளை விற்பனை செய்யும் வணிக திட்டத்திற்கும், வெளிநாடு முதலீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 55 உறுப்பு நாடுகளை கொண்ட UEFA கூட்டமைப்பு&nbsp; இந்த வாரம் அவசர கூட்டம் ஒன்றை கூட்டி ஃபிபா நடத்தும் தொடர்களை புறக்கணிப்பது தொடர்பான முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.</p><p> மேலும் உலகக் கோப்பை போட்டிகளை முதலீட்டு பொருளாக மாற்றக்கூடாது என்றும் UEFA திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.</p><p></p><h2> 20 பில்லியன் டொலரில் புதிய துணை நிறுவனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d77493b-f57d-42b8-bb4c-96eb2e1b1adb/26-6a6b9489ab6b2.webp' /></p><p>ஃபிபா தலைவர்&nbsp; ஜியானி இன்பான்டினோ 20 பில்லிய்ன் டொலர் மதிப்பிலான துணை நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதை செவ்வாய்க்கிழமை ஃபிபா உறுதிப்படுத்தியது.</p><p> மேலும் ஃபிபா பார்வர்ட் என்டர்பிரைஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய முயற்சியின் கீழ் நிறுவனத்தின் 20%-க்கும் அதிகமான பங்குகளை விற்று கிட்டத்தட்ட 4.2 பில்லியன் டொலர்களை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T18:14:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் ஏற்றுமதிக்கான தடையை நீட்டித்த ரஷ்யா: அறிவிக்கப்பட்ட சில முக்கிய தளர்வுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-extent-fuel-export-ban-to-2027-january-1785430050"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-extent-fuel-export-ban-to-2027-january-1785430050</id>
            <summary type="text">உள்நாட்டு விநியோக சந்தையை பாதுகாக்க எரிபொருள் ஏற்றுமதிக்கான தடையை ரஷ்யா நீட்டித்துள்ளது. அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி
உக்ரைன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்நாட்டு விநியோக சந்தையை பாதுகாக்க எரிபொருள் ஏற்றுமதிக்கான தடையை ரஷ்யா நீட்டித்துள்ளது.</p><h2> அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி</h2><p>
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மற்றும் பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யாவில் வழக்கத்திற்கு மாறாக எரிபொருள் விநியோகம் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறது.</p><p>இந்நிலையில் உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தும் விதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள்களுக்கு ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/820fb5c9-8ad7-4524-9011-e3555e789354/26-6a6b8023abc70.webp' /></p><p>இது தொடர்பாக வியாழக்கிழமை வெளியான அறிவிப்பில், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் ஏற்றுமதிக்கான தடை 2027ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> முன்னர் அறிவிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி தடை ஜூலை மாத இறுதியுடன் நிறைவடையும் நிலையில், தற்போது எரிபொருள் ஏற்றுமதிக்கான தடை 2027 ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>சமீபத்தில் உள்நாட்டு சந்தை நிலவரம் சீரடைந்த பிறகே எரிபொருள் ஏற்றுமதி மீதான தடை தளர்த்தப்படும் என்று ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf2b6783-0b97-41df-8dd5-f2deedeb12e9/26-6a6b80247e1dd.webp' /></p><h2>எரிபொருள் ஏற்றுமதியில் சில முக்கிய தளர்வுகள்</h2><p>அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஏற்றுமதி தடையில் சில முக்கிய விதிவிலக்குகளும் வழங்கப்பட்டுள்ளது.</p><p> அதன்படி, நேரடியாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் எரிபொருள் ஏற்றுமதி மீதான தடை செப்டம்பர் 1, 2026 வரை மட்டுமே அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதைப்போல நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களில் கீழ் எரிபொருள் ஏற்றுமதிக்கு அனுமதி உண்டு.</p><p> மேலும் மனிதாபிமான நோக்கில் வழங்கப்படும் உதவிகளுக்கு அரசு ஒப்புதலுடன் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table><p> &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-30T17:39:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saransh-jain-said-33-is-just-a-number-1785422358"></link>
            <id>https://news.lankasri.com/article/saransh-jain-said-33-is-just-a-number-1785422358</id>
            <summary type="text">இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள சரன்ஷ் ஜெயின், களத்தில் வயது தடையில்லை என தெரிவித்துள்ளார்.&amp;nbsp;சரன்ஷ் ஜெயின்
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள சரன்ஷ் ஜெயின், களத்தில் வயது தடையில்லை என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>சரன்ஷ் ஜெயின்</h2><p>
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் விளையாட சரன்ஷ் ஜெயின் 33 வயதில் இடம்பிடித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76b97199-50f0-4562-92f2-067bf8fd36e0/26-6a6b62acbb855.webp' />&nbsp;</p><p></p><p>மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சரன்ஷ் ஜெயின் (Saransh Jain) 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வயதில் இந்திய அணியில் இடம்பிடித்த வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.
</p><h2>வயது ஒரு தடையாகவோ </h2><p>இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து பேசிய சரன்ஷ் ஜெயின், "வயது என்பது வெறும் ஒரு எண் மட்டுமே; இன்றைய காலகட்டத்தில் களத்தடுப்பு (fielding) தரநிலைகள் மிக உயர்ந்த நிலையில் இருப்பதால், 33 வயதும் வெறும் ஒரு எண்ணாகவே கருதப்படுகிறது.</p><p>அதாவது களத்தில் உங்கள் வயது ஒரு தடையாகவோ அல்லது வெளிப்படையாகவோ தெரிவதில்லை.</p><p>ஒருவேளை இன்று இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்காமல் போயிருந்தாலும், அடுத்த ஓராண்டு அல்லது இரண்டாண்டுகளுக்குள் நான் அதில் இடம்பிடித்திருப்பேன் என்று எனக்குத் தெரியும்.
</p><p>
ஆனால், நான் நிச்சயம் அணியில் இடம்பெறுவேன் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது" என தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae4ff400-57c1-406e-9f78-73d410212ddc/26-6a6b634d079f6.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a543f3b-aee0-4b72-bdc0-84c11817e30e/26-6a6b62abd97b9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p>

&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T14:42:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[படிக்க மறுக்கப்பட்ட வாய்ப்பு - ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்து வாய்ப்பு கேட்ட மாணவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/denied-admission-student-hacks-iit-kanpur-website-1785421896"></link>
            <id>https://news.lankasri.com/article/denied-admission-student-hacks-iit-kanpur-website-1785421896</id>
            <summary type="text">படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டநிலையில், மாணவர் ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்து வாய்ப்பு கேட்டுள்ளார்.

ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்த மாணவர் 

கான்பூர் ஐஐடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டநிலையில், மாணவர் ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்து வாய்ப்பு கேட்டுள்ளார்.</p><h3>

ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்த மாணவர் </h3><p>

கான்பூர் ஐஐடி, இளநிலை சைபர் செக்யூரிட்டி’ என்ற பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b92447e2-480a-4bd2-9de4-9aa02c71c2b3/26-6a6b60497b228.webp' /></p><p> 

கோடிங் மற்றும் சைபர் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட மாணவர் ஒருவர், இந்த படிப்பில் சேர விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து, தேவையான கட்டணத்தைச் செலுத்தி, தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி சேர்க்கை செயல்முறையை நிறைவு செய்துள்ளார். </p><p>

ஆனால், அவர் தேர்வுப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதால், அந்தத் திட்டத்திற்கான தேர்வுச் செயல்முறையின் ஒரு பகுதியாக உள்ள ஹேக்கத்தானில் அவரால் பங்கேற்க இயலவில்லை.&nbsp;</p><p></p><p>

தனக்கு சைபர் பாதுகாப்பில் உள்ள திறமையை காட்ட முயற்சித்த அவர், கான்பூர் ஐஐடி மற்றும் சென்னை ஐஐடியின் இணையதளத்தை முடக்கி, "எனக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கும் நோக்கம் இல்லை. எனக்குத் தேவை ஒரு நியாயமான வாய்ப்பு மட்டுமே" என்ற செய்தியை பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a52371d-8d41-4ff4-ae53-635c739c6b3e/26-6a6b604a30098.webp' /></p><p> 

இதனை கண்டறிந்த ஐஐடி குழுவினர், உடனடியாகச் செயல்பட்டு இணையதளத்தை மீட்டனர்.
</p><p>
இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய ஐஐடி கான்பூர் இயக்குநர் மனிந்திர அகர்வால், "அந்த மாணவருக்கு சைபர் பாதுகாப்பில் போதுமான முன் அனுபவம் இல்லாததால் அவர் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e1d003-a930-491c-8d16-4567e68fe0ca/26-6a6b604ad688d.webp' /></p><p>

இந்தக் கல்வி அமர்வுக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை ஏற்கனவே முடிவடைந்துவிட்டது, எனவே இப்போது சேர்க்கை சாத்தியமில்லை.</p><p> 

இருப்பினும், அந்த மாணவரை அழைத்து, முறையான சோதனை மூலம் அவரது தொழில்நுட்பத் திறன்களை மதிப்பீடு செய்வோம். அவர் தனது திறமையை நிரூபித்தால், அடுத்த மாணவர் சேர்க்கைச் சுற்றில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

இவ்வாறு இணையதளத்தை ஹேக் செய்வது சட்டவிரோதம் என்றாலும், மாணவரின் திறமை மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:31:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற மூன்று பெண்களுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-migrants-dies-try-to-cross-english-channel-1785416674"></link>
            <id>https://news.lankasri.com/article/france-migrants-dies-try-to-cross-english-channel-1785416674</id>
            <summary type="text">ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் புலம்பெயர்வோர் நால்வர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.

புலம்பெயர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் புலம்பெயர்வோர் நால்வர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.</p><h3>

புலம்பெயர்வோர் நான்கு பேர் பலி
</h3><p>
இன்று காலை 6.00 மணியளவில், பிரான்சிலுள்ள Dunkirk துறைமுகத்தினருகே சிறிய ரப்பர் படகொன்று புறப்படுவதைக் கண்டதாக பிரான்ஸ் கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d7e581-6e93-41d2-bf62-286092a9841d/26-6a6b4be3a516d.webp' /></p><p>
சிறிது நேரத்திற்குள், அந்த படகில் மூன்று பெண்கள் சுயநினைவிழந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
</p><p>
உடனடியாக அவர்களை மீட்டு கரைக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்ததாக தெரிவித்துள்ள பிரான்ஸ் கடலோரக் காவல் படையினர், ஆனாலும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்று கூறியுள்ளனர்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், அவர்கள் மூவரும் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், அவர்கள் முறையே சுமார் 30, 40 மற்றும் 50 வயதுடையவர்கள் என்றும் தி டெலிகிராஃப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், Dannes என்னுமிடத்தில், மற்றொரு புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, அவரது படகில் பழுது ஏற்பட, அவரும் பலியாகியுள்ளார்.</p><p>

ஆக, இன்று ஒரே நாளில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது புலம்பெயர்வோர் நான்கு பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:16:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் மாத ராசிபலன்.., கடைசி 6 ராசிகளுக்கு எப்படி இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/august-month-rasi-palan-in-tamil-1785413810"></link>
            <id>https://news.lankasri.com/article/august-month-rasi-palan-in-tamil-1785413810</id>
            <summary type="text">நாளையுடன் ஜூலை மாதம் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கின்றது.

ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன.

இந்த பெயர்ச்சிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளையுடன் ஜூலை மாதம் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கின்றது.
</p><p>
ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன.
</p><p>
இந்த பெயர்ச்சிகளின் தாக்கம் 12 ராசிகள் மீது தாக்கங்களை ஏற்படுத்த உள்ளன.
</p><p>
குறிப்பாக ஆகஸ்ட் 1ஆம் திகதி சுக்கிரன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஆகஸ்ட் 2ஆம் திகதி செவ்வாய் மிதுன ராசிக்கு மாறுகிறார்.
</p><p>
மேலும், ஆகஸ்ட் 5ஆம் திகதி புதன் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஆகஸ்ட் 17ஆம் திகதி சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் மற்றும் ஆகஸ்ட் 22ஆம் திகதி புதன் சிம்ம ராசிக்கு மாறுகிறார்.
</p><p>
இந்த மாதத்தில் கடக ராசியில் புதன் நுழையும் போது குருவுடன் இணைந்து கஜலட்சுமி யோகம் மற்றும் சூரியனுடன் இணைந்து புதாதித்ய யோகங்கள் உருவாகும்.
</p><p>
அந்தவகையில், பிறக்கப்போகும் ஆகஸ்ட் மாதம் முதல் 6 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று இராம்ஜி சுவாமிகள் பகிர்ந்துள்ளார்.
</p><h2>

துலாம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ar4jnUiCu7w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>விருச்சிகம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2eqdbWI5J38" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>தனுசு&nbsp;</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zyv_tH_-v-I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மகரம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/91jV4YsazgU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><h2>கும்பம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jUG9EWzEvWg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><h2>மீனம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/V4n_DkqqVEQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெலிகிராம் நிறுவனரை பயங்கரவாதி பட்டியலில் சேர்த்த ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-adds-pavel-durov-to-terrorist-list-1785417528"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-adds-pavel-durov-to-terrorist-list-1785417528</id>
            <summary type="text">கைது செய்ய பிடியாணை பிறப்பித்த ஒரு நாள் கழித்து, டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவை ரஷ்யா பயங்கரவாதி பட்டியலில் சேர்த்தது.&amp;nbsp;டெலிகிராம் நிறுவனர்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்ய பிடியாணை பிறப்பித்த ஒரு நாள் கழித்து, டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவை ரஷ்யா பயங்கரவாதி பட்டியலில் சேர்த்தது.&nbsp;</p><h2>டெலிகிராம் நிறுவனர்&nbsp;</h2><p>
உலகம் முழுவதும் தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/067d8f1d-ff80-4262-8938-1fc9c186ba97/26-6a6b50bc9bdc0.webp' />&nbsp;</p><p></p><p>

இந்த நிறுவனத்தின் தலைவரான பாவெல் துரோவ் துபாயில் வசித்து வருகிறார். 

ரஷ்யாவில் பிறந்த துரோவ் பயங்கரவாதத்திற்கு உதவியதாக ரஷ்ய அரசு குற்றம்சாட்டியது.
</p><p>
அத்துடன் ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது.&nbsp;</p><h2>பயங்கரவாதிகள் பட்டியல்&nbsp;</h2><p>

இந்த நிலையில், ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு அமைப்பான ரோஸ்ஃபின்மானிட்டரிங், வியாழக்கிழமை அன்று பாவெல் துரோவை (Pavel Durov) தனது பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
</p><p>
இதற்கிடையில் சட்ட அமலாக்க அதிகாரிகள், பாவெல் துரோவின் டெலிகிராம் ரஷ்யாவிற்குள் நாசவேலைகள், இணையவழி மோசடி மற்றும் ஆயுதத் தாக்குதல்களை ஒருங்கிணைக்க, உக்ரேனிய உளவுத்துறை மற்றும் பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்படும் உள்ளடக்கத்தை அகற்றத் தவறியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ef52ddb-33b2-46a5-9689-87940c2cb163/26-6a6b50bd70443.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழித்தெறியப்பட்ட முதல்வர் விஜய் போஸ்டர் - கர்நாடகாவில் தீவிரமடையும் காவேரி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karnataka-protest-against-open-cauvery-water-to-tn-1785415567"></link>
            <id>https://news.lankasri.com/article/karnataka-protest-against-open-cauvery-water-to-tn-1785415567</id>
            <summary type="text">தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது.

தமிழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது.</p><h3>

தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க உத்தரவு </h3><p>

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவேரி பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. </p><p>

மேலும், காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடகா அரசு தீவிர முயற்சித்து வருகிறது. 

இதனை எதிர்த்து முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/362aa4ab-9e02-43e4-9d21-29acb0663e78/26-6a6b47951f6f0.webp' /></p><p>

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3,500 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டிருந்தது.</p><p>

ஆனால், இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யவில்லை என்பதால், எங்களின் குடிநீர்த் தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறி கர்நாடக அரசு தண்ணீர் திறக்கத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.&nbsp;</p><p></p><p> 

இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவித்தபடி 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p><h3>

தீவிரமடையும் போராட்டம் </h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e821173b-28fa-4b4f-a727-cfe7f9614155/26-6a6b47946fe43.webp' /></p><p>ஆனால், தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ef360c8-5083-487a-a40f-8a277903e9b0/26-6a6b47931a5f2.webp' /></p><p>

இதில், மாண்டியாவில் முதல்வர் விஜய் பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, ஜனநாயகன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முற்றுகையிட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc6d9802-fb16-4a97-9966-198430780c6e/26-6a6b47926b380.webp' /></p><p>

கர்நாடக ரக்ஷண வேதிகை மாநிலத் தலைவர் டி.ஏ. நாராயண கௌடா, "இந்த தீர்ப்பு கர்நாடகாவின் நலன்களுக்குப் பாதகமானது, இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். 

முழு பந்த் நடத்தி மக்களை சிரமப்படுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அது ஒரு கடைசி கட்ட போராட்டமாகவே இருக்கும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f0c7710-088c-4e93-b3d8-22791775ec87/26-6a6b4793bede3.webp' /></p><p> 

கர்நாடகாவில் இருந்து ஒரு துளி நீர் கூட தமிழ்நாட்டிற்கு செல்லகூடாது என தெரிவித்துள்ள கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ், பந்த் அறிவிப்பது குறித்து நாளை ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c6208a-1d11-49ea-a9f2-f613953948be/26-6a6b4791baad6.webp' /></p><h3>

கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்</h3><p> 

காவேரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகா வர உள்ளதாக கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc37027-59b8-4483-8fef-122221b20570/26-6a6b47911778d.webp' /></p><p> 

இது குறித்து பேசிய அவர், "காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின்மூலம் தீர்வுகாண தமிழக முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள நீர்நிலைகளைப் பார்வையிட அவருக்கு என் தனி ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது. அவருக்கு விளக்கம் அளிக்க வழக்கறிஞர்கள், அதிகாரிகள் குழுவும் தயார்நிலையில் உள்ளது." என தெரிவித்துள்ளார். </p><p>

முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு செல்ல தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b088ee29-4710-468c-9ea2-6a3ee94b199f/26-6a6b4790682ab.webp' /></p><p>

ஆனால் இந்த சூழலிலும், முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் திகதி கர்நாடகாவிற்கு செல்வதில் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>அதற்கு முந்தைய தினம், ஆகஸ்ட் 2 ஆம் திகதி, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் காவேரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:47:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு: வெப்பத்துடன் போராடும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-earthquake-death-toll-increased-34-1785414723"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-earthquake-death-toll-increased-34-1785414723</id>
            <summary type="text">ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்தென்மேற்கு ஜப்பானை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
</p><h2>
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்</h2><p>தென்மேற்கு ஜப்பானை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அதில் குறைந்தது 13 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b3cfea1-6c1c-4365-b98f-a289999c789b/26-6a6b45bbe961c.webp' />&nbsp;</p><p></p><p>
இந்த நிலையில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளதாக குமாமோட்டோ மாகாண அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். </p><p>

ஒரு வணிக வளாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாலும், சுமார் ஒரு மணிநேரம் கழித்து அந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தாலும் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில், இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது வெளியேற்ற முகாம்களில் தங்கியுள்ளனர்.</p><h2> கடும் வெப்பத்துடன் போராட்டம் 
</h2><p>இருப்பினும், இப்பகுதி கடும் வெப்பத்துடன் போராடி வருவதால், அவர்களைக் குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்திருப்பதே சவாலாக உள்ளது.</p><p> 

ஆனால், இனி வரும் நாட்களில் மாகாணத்தில் வெப்பநிலை 39 டிகிரி செல்ஸியஸ்-ஐ எட்டக்கூடும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதன் காரணமாக உயிர் பிழைத்தவர்களையும், மீட்புக் குழுவினரையும் வெப்பத்தாக்கத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3b38101-ad21-42c2-894e-7405e9173449/26-6a6b45bcbcb77.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:36:31+00:00</updated>
        </entry>
    </feed>
