<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-06T20:25:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: சிறுவன் உட்பட இரண்டு பேர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-police-arrest-two-over-us-embassy-attack-1786047168"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-police-arrest-two-over-us-embassy-attack-1786047168</id>
            <summary type="text">டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்கடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2> அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்</h2><p>கடந்த ஜூலை 26ம் திகதி அதிகாலை 5 மணியளவில் டொராண்டா நகரின் மையப்பகுதியான யுனிவர்சிட்டி அவென்யூவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p> இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வெள்ளை நிற கார் ஒன்று அங்கிருந்து தப்பிச் செல்வதை தூதரக காவலர் கண்டுள்ளார்.</p><p> இதனையடுத்து தகவலறிந்து வெள்ளை நிற காரை துரத்திய பொலிஸார், ஒருகட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அந்த துரத்தலை கைவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dcbbf56-8d28-4c3e-96d3-3dc570078328/26-6a74eac1c2fb4.webp' />&nbsp;<br></p><h2> இரண்டு சந்தேக நபர்கள் கைது</h2><p>இந்நிலையில் அமெரிக்க தூதரகம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் இரண்டு பேரை&nbsp; டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை தலைவர் டெம்கிவ், இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 19 வயது ஜென்-உல்-அபிதீன் சையத் என்ற இளைஞர் ஒருவரும், பெயர் வெளியிடப்படாத 15 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் அவர்கள் மீது தீவைப்பு, ஆயுதச் சட்ட மீறல்கள், சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட நபர்களை குறிவைத்து தாக்குதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், காவல்துறையிடம் இருந்து தப்பித்தல் ஆகிய பல கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p> குற்றவாளிகளை பிடிப்பதில் எந்தவொரு சமரசமும் இருக்காது என்று அப்போதே தெரிவித்தேன் என காவல்துறை தலைவர் டெம்கிவ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> முதல் சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாவது நபர் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>இவர்கள் மறைக்கப்பட்ட செய்தியியல் செயலிகள்(Encrypted messaging apps) மூலம் இந்த தாக்குதல் நடத்த அவர்கள் கட்டளை பெற்று இருப்பதாகவும், இதற்கு மாறாக அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என்றும் டெம்கிவ் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-06T20:13:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் உளவு பார்த்த உக்ரைனியர் கைது: நாசவேலைக்கு திட்டமிட்டது அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukrainian-arrested-by-german-police-in-bavaria-1786042488"></link>
            <id>https://news.lankasri.com/article/ukrainian-arrested-by-german-police-in-bavaria-1786042488</id>
            <summary type="text">&amp;nbsp;உளவு பார்த்த குற்றச்சாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜேர்மனியில் உளவு பார்த்த உக்ரைனியர் கைது
ஜேர்மனியின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உளவு பார்த்த குற்றச்சாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>ஜேர்மனியில் உளவு பார்த்த உக்ரைனியர் கைது</h2><p>
ஜேர்மனியின் பவேரியா(Bavaria) மாகாணத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு தளவாட நிறுவனத்தின் ரகசியங்களை உளவு பார்த்து நாச வேலைகளுக்கு திட்டமிட்டதாக கூறப்படும் வழக்கில் உக்ரைன் நாட்டவர் ஒருவர் கைது ஜேர்மனியில் செய்யப்பட்டுள்ளார்.</p><p> கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய நபர் என்றும், அவர் கடந்த ஜூன் மாதம் பவேரியாவிலுள்ள பாதுகாப்பு நிறுவனத்தின் வளாகங்களை புகைப்படம் எடுத்து வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு கொடுத்துள்ளார் என்று சந்தேகிப்பதாக மியூனிக் நகர வழக்கறிஞர்கள் மற்றும் பவேரியா காவல்துறையினர் வெளியிட்ட தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de19fddb-b240-4bea-9cf5-7451dc1e910b/26-6a74d879d4150.webp' /></p><p> கிழக்கு துரிங்கியா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபரான 33 வயதுடையர் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>திங்கட்கிழமை மியூனிக் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்த நிலையில், தற்போது அவர் பவேரியா நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>கைது செய்யப்பட்ட நபர் மீது நாசவேலையை செய்ய திட்டமிட்டு உளவு வேலையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p> ஜேர்மனியில் புதிதாக தொடங்கப்பட்ட GAZ-Hybrid அமைப்பின் ஒருங்கிணைப்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> இதற்கிடையில், உளவு வேலைக்கு உத்தரவிட்ட வெளிநாட்டு உளவு அமைப்பு எது என்பது குறித்து எந்தவொரு தகவலையும் அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.</p><p> அத்துடன் விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதால் கூடுதல் தகவல்கள் இப்போதைக்கு வெளியிடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:57:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-drones-hit-german-cargo-ship-emil-1786031510"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-drones-hit-german-cargo-ship-emil-1786031510</id>
            <summary type="text">EMIL எனும் ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்கருங்கடலில், ஜேர்மன் கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>EMIL எனும் ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><h2>
ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்</h2><p>கருங்கடலில், ஜேர்மன் கப்பல் நிறுவனமான Johann M. K. Blumenthal GmbH &amp; Co. KG-க்கு சொந்தமான ‘EMIL’ என்ற சரக்கு கப்பல் ரஷ்ய ட்ரோன்களால் பலமுறை தாக்கப்பட்டது.
</p><p>
இந்த சம்பவம் உக்ரைனின் ஓடெசா துறைமுகத்திலிருந்து சுமார் 21 கடல் மைல் தொலைவில் நடந்ததாக Bild பத்திரிகை தெரிவித்துள்ளது.</p><p>

கப்பலில் தீப்பற்றியதால், பல தொழில்நுட்ப அமைப்புகள் செயலிழந்தன. இதனால் கப்பல் இயக்க முடியாத நிலையில் சிக்கியது. 11 பேர் கொண்ட குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்களில் யாரும் ஜேர்மன் நாட்டவர்கள் அல்ல. உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffcb0d5d-4672-4ba2-a052-864631aaa760/26-6a74ad98a616d.webp' /></p><p>ஆனால், குழுவினரை வெளியேற்றும் போது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. கப்பல் தற்போது லைபீரியா நாட்டின் கொடியின் கீழ் இயங்குகிறது.
</p><p>
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது Telegram கணக்கில் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் தெரிவித்ததாவது, “கருங்கடலில் ஓடெசாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இரு சரக்கு கப்பல்களை ட்ரோன்கள் தாக்கின. அவை இராணுவப் பொருட்களை எடுத்துச் சென்றன” என்று கூறியுள்ளது.</p><p></p><h2>புதிய அச்சுறுத்தல்</h2><p>இரண்டாவது தாக்குதலில் ‘Mera Queen’ என்ற தானியக் கப்பல் குறிவைக்கப்பட்டது. இது கினி-பிசாவ் நாட்டின் கொடியின் கீழ் இயங்குகிறது. அந்த தாக்குதலில் ஒரு குழுவினர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம், கருங்கடலில் வணிகக் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது. </p><p>உக்ரைன் போரின் பின்னணியில், ரஷ்யா வணிகக் கப்பல்களை இராணுவப் பொருட்கள் எடுத்துச் செல்கின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில் குறிவைத்து தாக்குகிறது.
</p><p>
ஜேர்மன் கப்பல் ‘EMIL’ மீது நடந்த தாக்குதல், சர்வதேச கடல் போக்குவரத்து பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T18:31:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் ஷோரூமில் வெடித்த கேஸ் சிலிண்டர்: துபாயில் உயிரிழந்த கேரள இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-youth-dead-in-dubai-car-showroom-accident-1786040004"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-youth-dead-in-dubai-car-showroom-accident-1786040004</id>
            <summary type="text">துபாய் கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.துபாயில் உயிரிழந்த கேரள இளைஞர்துபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாய் கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>துபாயில் உயிரிழந்த கேரள இளைஞர்</h2><p>துபாயின் ஷேக் சையத் சாலையில் அமைந்துள்ள கார் ஷோரூமில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்த 27 வயது ஷிஜின் பால்(Shijin Paul) என்ற இளைஞர் பணியாற்றி வந்தார்.</p><p> அங்கு, மல்டிமீடியா மார்க்கெட்டிங் நிபுணராகவும், சமூக வலைதளம் மற்றும் வீடியோ கிராபி பொறுப்பாளராகவும் ஷிஜின் பால் பணியாற்றி வந்துள்ளார்.</p><p> இந்நிலையில் கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி 27 வயது ஷிஜின் பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e07aad3c-80b3-41f6-9289-06baca030157/26-6a74cec5d01ef.webp' /></p><p>இந்த விபத்தில் 6 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஷிஜின் பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2> உறுதிப்படுத்திய இந்திய தூதரகம்</h2><p>ஷிஜின் பால் உயிரிழந்ததை துபாயில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> மேலும் அவரது உடலை விரைவில் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இந்திய தூதரகம் தீவிரமாக செயல்பட்டுள்ளது.</p><p>உயிரிழந்த ஷிஜின் பாலுக்கு பெற்றோரும், மனைவியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p> ஷிஜின் பால் விரைவில் தன்னுடைய விடுமுறையில் ஊருக்கு சென்று அங்குள்ள தன்னுடைய மனைவியையும், குழந்தைகயையும் துபாய்க்கு அழைத்து வர திட்டமிட்டு இருந்ததாக அவரது முன்னாள் வசிப்பிட தோழர் நாசிர் தெரிவித்துள்ளார்.<br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:31:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் வள்ளுவன் பாடசாலை அதிபர் முருகவேள் அவர்களின் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாடு பயண அனுபவ தொகுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-valluvan-padasalai-head-murugavel-tour-blog-1786035366"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-valluvan-padasalai-head-murugavel-tour-blog-1786035366</id>
            <summary type="text">சுவிஸ் பேர்ன் மாகாணத்தின் வள்ளுவன் பாடசாலை அதிபர் முருகவேள் அவர்களின் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாடு பயணத்தின் அனுபவங்களை இந்த கட்டுரையில் பகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிஸ் பேர்ன் மாகாணத்தின் வள்ளுவன் பாடசாலை அதிபர் முருகவேள் அவர்களின் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாடு பயணத்தின் அனுபவங்களை இந்த கட்டுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.<br></p><h3>சுவிஸ் பேர்ன் மாகாணத்தின் வள்ளுவன் பாடசாலை அதிபர் முருகவேள் பயணத் தொகுப்பு</h3><p>புதிய உலகில் மனிதர்கள் வேகமான வாழ்க்கை முறையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில் மன அழுத்தத்தையும் சோர்வையும் போக்கி, புதிய அனுபவங்களையும் அறிவையும் பெறுவதற்கு சுற்றுலா முக்கியமானதாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dab5d6f8-528a-4f97-90df-aba3942d1189/26-6a74bd5503019.webp' /></p><p> அந்த வகையில், சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாட்டிற்கான எனது இந்தப் பயணம், ஒரு சாதாரண சுற்றுலாவாக அமையவில்லை. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும், பல அறிஞர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திக்கவும் இது வாய்ப்பளித்தது.</p><p> 05.07.2026 அன்று சிங்கப்பூருக்குச் சென்றடைந்தோம். அங்கு பல்வேறு முக்கிய இடங்களைப் பார்வையிட்டதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தைச் செலவிட்டோம். சிங்கப்பூரின் தேசியப் பூங்கா உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று இயற்கை அழகையும் அந்நாட்டின் சிறப்புகளையும் ரசித்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e92318ea-913f-496b-a82f-355e16165c72/26-6a74bd569140c.webp' /></p><p> பின்னர் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டோம். அங்கு தமிழறிஞர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் தொடர்புடைய பலர் அன்புடன் வரவேற்றனர். அவர்களுடன் நடைபெற்ற சந்திப்புகள் மற்றும் உரையாடல்கள் மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்தன.</p><p> மலேசியாவில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்து வளர்ப்பதில் அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளை அறிந்துகொள்ள முடிந்தது.</p><p></p><p> பினாங்கு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றதுடன், அங்குள்ள முக்கிய இடங்களையும் பார்வையிட்டோம். அதேவேளை, அங்குள்ள நண்பர்களின் அன்பான உபசரிப்பும் விருந்தோம்பலும் பயணத்தின் சிறப்பான அம்சங்களாக அமைந்தன.</p><p> மலேசியத் தமிழ் அமைப்புகளின் வரவேற்பு நிகழ்வில் பல அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். தமிழ்மொழியின் வளர்ச்சி, தமிழ் கல்வி மற்றும் தமிழர் அடையாளத்தைப் பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c176d614-926a-4a34-a57b-8e777d173b62/26-6a74bd575c515.webp' /></p><h2> தமிழ்நாட்டில் மறைமலை அடிகளார் நினைவு நிகழ்வு</h2><p>
தமிழ்நாட்டில் நடைபெற்ற மறைமலை அடிகளாரின் 150ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.</p><p> மறைமலை அடிகளார் வாழ்ந்த பல்லாவரம் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்விலும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஏற்பாடு செய்த நினைவு நிகழ்விலும் பங்கேற்றேன். தமிழ்மொழிக்காக மறைமலை அடிகளார் ஆற்றிய பணிகள் மற்றும் தனித்தமிழ் இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து நிகழ்வுகளில் கருத்துகள் பகிரப்பட்டன.</p><p> இந்த நிகழ்வுகளில் கல்வியாளர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நிகழ்வுகள் தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டும் வகையில் அமைந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc0ed12-6556-488a-876c-c7b981c36ed6/26-6a74bd582e30f.webp' /></p><h2> தஞ்சாவூர் பயணம்</h2><p>17.07.2026 அன்று தஞ்சாவூருக்குச் சென்றோம். அங்கு கல்லூரி நிகழ்வுகளில் கலந்துகொண்டு, மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.</p><p>தஞ்சாவூர் மருதபாண்டியர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் “சுவிற்சர்லாந்தில் தமிழும் தமிழர்களும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினேன். சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிக் கல்வி, தமிழ் பள்ளிகளின் செயற்பாடுகள் மற்றும் அங்கு வாழும் தமிழர்களின் சமூகப் பங்களிப்பு குறித்து கருத்துகளைப் பகிர்ந்தேன்.</p><p> சுவிற்சர்லாந்தில் தற்போது நூற்றுக்கணக்கான தமிழ் பள்ளிகள் இயங்கி வருவதுடன், பேர்ண் தமிழ்ப் பள்ளியும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக மாணவர்களிடம் எடுத்துரைத்தேன். தமிழ்மொழியை அக்கறையுடன் கற்றுக்கொள்வதன் மூலம் உலகளவில் உயர்ந்த அடையாளத்தைப் பெற முடியும் என்றும் அவர்களை ஊக்குவித்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/579e94a6-565f-4994-a5f7-048e99f249a1/26-6a74bd58f0f3b.webp' /></p><h2> மாணவர்களுடனான உரையாடல்</h2><p>பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களை சந்தித்து உரையாற்றிய போது, தமிழ் மொழியுடன் இணைந்து தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன்.</p><p>குறிப்பாக, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிலும் மாணவர்கள் தங்களுடைய துறையுடன் தமிழையும் இணைத்துச் செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தேன். மாணவர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினேன்.</p><h2> பயணத்தின் நிறைவு</h2><p>இந்தப் பயணத்தின் முழுவதும் பல தமிழ் அன்பர்களையும், அறிஞர்களையும், கல்வியாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் வழங்கிய அன்பும் மரியாதையும் இந்தப் பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது.</p><p> சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் மீது மக்கள் கொண்டுள்ள அக்கறையை நேரடியாகக் காண முடிந்தது.</p><p> இந்தப் பயணம் ஒரு சுற்றுலாவாக மட்டுமல்லாமல், தமிழ் அன்பர்களைச் சந்தித்து, அவர்களின் பணிகளை அறிந்து, மாணவர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட ஒரு அர்த்தமுள்ள பயணமாக அமைந்தது.</p><p> தமிழுக்காக உலகின் பல பகுதிகளில் பணியாற்றி வரும் அனைவரையும் சந்தித்த அனுபவம், தமிழ் மொழியுடன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:31:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-drone-strike-hits-russian-oil-refinery-1786028783"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-drone-strike-hits-russian-oil-refinery-1786028783</id>
            <summary type="text">Ukraine-Russian war updates: உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளது.

உக்ரைன் இராணுவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukraine-Russian war updates: உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளது.</p><p>

உக்ரைன் இராணுவம், ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நீண்ட தூர ட்ரோன் தாக்குதலின் மூலம் குறிவைத்து தாக்கியுள்ளது.
</p><h2>ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்கள்</h2><p>பஷ்கோர்டோஸ்தான் பகுதியில் உள்ள Bashneft-Novoil சுத்திகரிப்பு நிலையமும், யாரோஸ்லாவ்ல் பகுதியில் உள்ள Slavneft-Yanos சுத்திகரிப்பு நிலையமும் தாக்கப்பட்டுள்ளதாக,&nbsp;உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cd45ecf-9030-43cb-9a12-263cbda4db70/26-6a74a49237829.webp' /></p><p>
Slavneft-Yanos, ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 1.5 கோடி டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது.

3,500-க்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றுகின்றனர். கார் எரிபொருள், விமான எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
</p><h2>
யாரோஸ்லாவ்ல் மாநில ஆளுநர் மிஹாயில் எவ்ராயேவ் தெரிவித்ததாவது:
</h2><p>
இது அந்த மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல். 93 ட்ரோன்களை வான்வழி பாதுகாப்பு மற்றும் மின்னணு போர்துறை அழித்ததாகவும், விழுந்த சிதைவுகள் சுத்திகரிப்பு நிலையத்தின் சேமிப்பு தொட்டிகளை தாக்கியதாகவும் கூறினார். தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றாலும், நால்வர் காயமடைந்தனர்.
</p><p>
“இந்த தாக்குதல் ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை குறைக்கும். அந்த வருவாயே உக்ரைனியர்களை கொல்லும் போருக்கு நிதியாகிறது” என்று ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><p>ரஷ்யா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். ஆனால் உக்ரைன் தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையங்கள், களஞ்சியங்கள், போக்குவரத்து அமைப்புகளை குறிவைத்து தாக்குவதால், ரஷ்யா உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b6d53f2-7b41-404d-bada-e41cb647b057/26-6a74a492e6e98.webp' /></p><p>இதற்கிடையில், ரஷ்யா உக்ரைனின் நகரங்களில் ஏவுகணை தாக்குதல்களை அதிகரித்துள்ளது. உக்ரைனின் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் குறைவாக இருப்பதை பயன்படுத்தி, ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்துகிறது.</p><p>மேலும், கருங்கடலில் ரஷ்யா தாக்கிய கப்பல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் இராணுவம் இரண்டு ரஷ்ய ராணுவ கப்பல்களையும், “shadow fleet” எனப்படும் கப்பல்களையும் தாக்கியுள்ளது.</p><p>இந்த தாக்குதல், உக்ரைன் போரின் புதிய கட்டத்தை வெளிப்படுத்துகிறது. ரஷ்யாவின் பொருளாதாரத்தை நேரடியாக குறிவைத்து, எரிசக்தி துறையை பலவீனப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T15:11:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.557 கோடி செலவு செய்துள்ள பிரதமர் மோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pm-modis-foreign-trips-cost-rs-557-crore-1786027896"></link>
            <id>https://news.lankasri.com/article/pm-modis-foreign-trips-cost-rs-557-crore-1786027896</id>
            <summary type="text">பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களுக்கு இதுவரை ரூ.557 கோடி செலவு செய்துள்ளார்.

ரூ.557.5 கோடி செலவுஇந்திய அரசின் தரவுகளின்படி, 2021 முதல் 2026 வரை பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களுக்கு இதுவரை ரூ.557 கோடி செலவு செய்துள்ளார்.
</p><h2>
ரூ.557.5 கோடி செலவு</h2><p>இந்திய அரசின் தரவுகளின்படி, 2021 முதல் 2026 வரை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கு மொத்தம் ரூ.557.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66ef2177-0202-4b64-99cc-3d5b33d1c67e/26-6a749f7b2554d.webp' /></p><p>2021-இல் ரூ.36.1 கோடி, 2022-இல் ரூ.55.8 கோடி செலவிடப்பட்டது. அப்போது கொரோனா தொற்றுநோயால் பயணங்கள் குறைவாக இருந்தன.</p><p>

2023-இல் ரூ.93.6 கோடி, 2024-இல் ரூ.109.5 கோடி, 2025-இல் ரூ.187.8 கோடி செலவிடப்பட்டது. 2026-இல் இதுவரை 13 நாடுகளை உள்ளடக்கிய 6 பயணங்களுக்கு ரூ.74.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
</p><p></p><p>இந்த காலகட்டத்தில் மிக அதிக செலவான பயணம் 2025 பிப்ரவரியில் அமெரிக்காவுக்கானது. அதற்கான செலவு ரூ.25.5 கோடிக்கு மேல். 2026-இல் நோர்வே பயணத்திற்கு மட்டும் ரூ.17 கோடி செலவாகியுள்ளது.</p><p>

வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் தங்குமிடம், போக்குவரத்து, பாதுகாப்பு, நிகழ்ச்சி இட கட்டணம் மற்றும் “miscellaneous” என குறிப்பிடப்பட்ட பிற செலவுகளை உள்ளடக்கியதாக அரசு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7d12b2b-433b-49fa-bdbe-9bac8e982a08/26-6a749f7bd5698.webp' /></p><h2>பயணம் மேற்கொள்ளப்பட்ட நாடுகள்</h2><p>2022-இல் ஜேர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நேபாளம், UAE, ஜப்பான், உஸ்பெகிஸ்தான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
2023-இல் பப்புவா நியூ கினி, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, UAE, எகிப்து, தென்னாப்பிரிக்கா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் சென்றார். </p><p>

2024-இல் UAE, பூடான், கத்தார், இத்தாலி, ஆஸ்திரியா, ரஷ்யா, போலந்து, உக்ரைன், அமெரிக்கா, சிங்கப்பூர், பிரேசில், கயானா, குவைத் உள்ளிட்ட நாடுகள் சென்றார். </p><p>2026-இல் இதுவரை இத்தாலி, இஸ்ரேல், நோர்வே, ஸ்வீடன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ், இந்தோனேஷியா, UAE, மலேசியா, நெதர்லாந்து, சேஷெல்ஸ், ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் சென்றுள்ளார்.</p><p></p><h2>வெளிநாட்டு முதலீடுகள்</h2><p>அரசு தரவுகளின்படி, 2021 முதல் 2025 வரை மோடி மேற்கொண்ட பயணங்களின் மூலம் 381.8 பில்லியன் டொலர் (ரூ.36.3 லட்சம் கோடி) வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளன.
</p><p>
இந்த தகவல்கள், பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் வெளிநாட்டு உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T14:51:29+00:00</updated>
        </entry>
    </feed>
