<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-29T08:45:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2வது தலைநகரை தேடும் ஜப்பான் - என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/why-japan-searching-second-capital-outside-tokyo-1785314293"></link>
            <id>https://news.lankasri.com/article/why-japan-searching-second-capital-outside-tokyo-1785314293</id>
            <summary type="text">ஜப்பானில் 2வது தலைநகரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஜப்பான் 2வது தலைநகர் 

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் நேற்று 6.8 ரிக்டர் அளவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் 2வது தலைநகரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
</p><h3>
ஜப்பான் 2வது தலைநகர்</h3><p> 

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் நேற்று 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8d068e7-9f29-43bf-8943-43687927f155/26-6a69bbf9150a6.webp' /></p><p>

உலகளவில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது.
</p><p>
இந்நிலையில், ஜப்பானில் 2வது தலைநகரை தேர்வு செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87b2d65a-9355-46b7-85e9-60abc5fd24ad/26-6a69bbf6eabe6.webp' /></p><p>
ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சி (LDP) மற்றும் கூட்டணிக் கட்சியான ஜப்பான் இன்னோவேஷன் கட்சி (JIP) உள்ளிட்ட பல கட்சிகளும் இதற்கு ஆதரவளித்தன.</p><p>

ஜப்பானின் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி, மக்களுக்கான ஜனநாயகக் கட்சி (DPFP), கோமெயிட்டோ, சன்செய்ட்டோ, ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி (JCP) உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. </p><h3> 

2வது தலைநகரம் ஏன்?
</h3><p>
தலைநகர் டோக்கியோவில் ஒரு பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட்டால் நாடு தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab1b4423-5f27-42ba-b34b-5ff6fad59146/26-6a69bbf86060d.webp' /></p><p>

டோக்கியோவில் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் ரிக்டர் அளவுகோலில் 7-ஆம் நிலை நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சுமார் 70% வாய்ப்பு இருப்பதாக அரசாங்கம் மதிப்பிடுகிறது. </p><p>

அப்படி நிகழ்ந்தால், தலைநகரில் உள்ள பிரதமர் அலுவலகம், நாடாளுமன்றம், மத்திய அமைச்சகங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடும். </p><p>

மேலும், ஜப்பானின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 30% பேர் டோக்கியோவில் வசிக்கின்றனர். உலகளவில் அதிக மக்கள் வசிக்கும் 3வது பெருநகரமாக டோக்கியோ உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b92f0d77-17ad-4fd2-a005-5d4661a2bfb6/26-6a69bbf7af94a.webp' /></p><p>

ஜப்பானின் பொருளாதார உற்பத்தியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை உருவாக்குவதோடு, பட்டியலிடப்பட்ட ஜப்பானிய நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை கொண்டுள்ளது.</p><p> 

டோக்கியோவில் உள்ள மக்கள் மற்றும் நிறுவன குவிப்பையும் இந்த திட்டம் சரி செய்யும். </p><h3> 

எந்த நகரத்திற்கு வாய்ப்பு?
</h3><p>
2ஆம் தலைநகர், டோக்கியோவை தாக்கும் ஒரு பேரிடரால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படுவதற்கான குறைந்த வாய்ப்பை கொண்டிருக்க வேண்டும். </p><p>

மேலும், போதுமான அரசாங்க உள்கட்டமைப்பு, பொருளாதார அளவு, மக்கள்தொகை அளவு மற்றும் நிர்வாகத் திறனையும் கொண்டிருக்க வேண்டும்.</p><p>

எந்த நகரங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என்பது குறித்த இறுதி முடிவு பிரதமரிடமே உள்ளது. </p><p>ஒசாகா, ஃபுகுவோகா மற்றும் ஐச்சி ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் 2வது தலைநகருக்கான போட்டியில் ஆர்வம் காட்டியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T08:38:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயால் உருவாகும் மின்னல்: பிரான்சில் ஒரு அரிய நிகழ்வால் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pyrocumulus-cloud-lead-seveare-wild-fire-in-france-1785309434"></link>
            <id>https://news.lankasri.com/article/pyrocumulus-cloud-lead-seveare-wild-fire-in-france-1785309434</id>
            <summary type="text">பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அரிய நிகழ்வொன்றால் மேலும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.

பிரான்சில...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அரிய நிகழ்வொன்றால் மேலும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.
</p><h3>
பிரான்சில் ஒரு அரிய நிகழ்வால் ஆபத்து
</h3><p>
பொதுவாக, நீர்நிலைகளிலிருந்து எழும் நீராவி உயர சென்று குளிர்ந்து மேகங்களாகும் என நாம் பள்ளியில் படித்திருக்கிறோம்.
</p><p>
இந்நிலையில், பிரான்சில் காட்டுத்தீயால் எழும் புகை, ’தீ மேகம்’ என்னும் ஒரு விடயத்தை உருவாக்கியுள்ளதை கவனித்துள்ளார்கள் பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e229a01-5f3b-4c27-883b-fbba37df316e/26-6a69a8fc601f6.webp' /></p><p>
இந்த தீ மேகம், flammagenitus, pyrocumulus cloud என்றும் அழைக்கப்படுகிறது.
</p><p>
அதாவது, காட்டுத்தீயால் எழும் புகை, ஒரு சிறிய மேகத்தை உருவாக்க, அது மேலும் மேலும் பெரிதாகி பெரிய மேகமாக மாற, இந்த மேகம் தன் பங்குக்கு மின்னலை உருவாக்க, அந்த மின்னல் மேலும் புதிய காட்டுத்தீயை உருவாக்கும் பேரபாயம் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5941cec1-dadc-4e3b-9bf3-0e057d850b7e/26-6a69af783664b.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், பிரான்சுக்கு இந்த தீ மேகம் என்னும் நிகழ்வு ஒரு புதிய அனுபவம் என்பதால் அதை எதிர்கொள்வது பிரான்ஸ் நாட்டு தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p>
இதற்கிடையில், இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வுகளுக்கு, மனிதனால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றங்களும் காரணம் என்கிறார்கள் சில அறிவியலாளர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T08:20:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் என்ன? (29-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785312676"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785312676</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (29-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (29-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,305,929.00 ஆகும்.</p><p>

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,070.00.</p><p>

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 368,550.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,240.00.</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 337,850.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,320.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 322,500.00.</p>]]></content>
            <updated>2026-07-29T08:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 3 வருடங்களுக்கு H-1B விசா நிறுத்தப்படலாம்: ஐ.டி ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/could-halt-h-1b-visas-1785310756"></link>
            <id>https://news.lankasri.com/article/could-halt-h-1b-visas-1785310756</id>
            <summary type="text">H-1B விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றத் திட்டமிட்டிருந்தால், தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.H-1B முறைகேடு ஒழிப்பு
புதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றத் திட்டமிட்டிருந்தால், தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.</p><h2>H-1B முறைகேடு ஒழிப்பு</h2><p>
</p><p>புதிய H-1B விசாக்களை வழங்குவதை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது உட்பட, H-1B விசா திட்டத்தில் முக்கிய மாற்றங்களைக் கோரும் பிரேரணை ஒன்றை அமெரிக்க செனட் சபையில் குடியரசுக் கட்சி செனட்டர் ஒருவர் தாக்கல் செய்துள்ளார். </p><p>இந்த முன்மொழிவு தற்போதைய நிலையில் ஒரு பிரேரணையாக மட்டுமே உள்ளது. இது இன்னும் சட்டமாக மாறவில்லை; H-1B திட்டத்தில் இதுவரை எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. </p><p>ஆனால் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையிலான H-1B விசாக்களைப் பெறும் இந்தியத் தொழில்முறை நிபுணர்களை இது கணிசமாகப் பாதிக்கக்கூடும். </p><p>அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தைச் சேர்ந்த செனட்டர் டிம் ஷீஹி, செனட் சபையில் H-1B முறைகேடு ஒழிப்புச் சட்டத்தை' (End H-1B Abuse Act) அறிமுகப்படுத்தியுள்ளார். </p><p>ஷீஹியின் கூற்றுப்படி, போதுமான தகுதிவாய்ந்த பணியாளர்களைக் கண்டறிய முடியாத சிறப்புத் திறன் சார்ந்த பணிகளை நிரப்புவதற்காகவே H-1B திட்டம் உருவாக்கப்பட்டது என அவர் வாதிடுகிறார். </p><p>மேலும், குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு அமெரிக்கத் தொழிலாளர்களை இடமாற்றம் செய்வதற்கு இது பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் வாதிட்டுள்ளார். </p><p>முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் அத்திட்டத்தை அதன் அசல் நோக்கத்திற்கேற்ப மீட்டெடுக்கும் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் என்றும், மோசடிகளைக் குறைக்கும் என்றும், அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். </p><p>முன்மொழியப்பட்ட சட்ட மசோதா பல முக்கிய மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. அதில், அனைத்து புதிய H-1B விசாக்களையும் மூன்று வருடங்களுக்கு நிறுத்தி வைக்கக் கோரப்பட்டுள்ளது. </p><p>ஒவ்வொரு H-1B விண்ணப்பத்திற்கும் 100,000 அமெரிக்க டொலர் (ரூ. 96,00,000) கட்டாயக் கட்டணமாக அமுல்படுத்த வேண்டும். தற்போதைய சீரற்ற குலுக்கல் முறையை மாற்றி, ஊதியத்தின் அடிப்படையில் தெரிவு செய்யும் முறையை அமுல்படுத்த வேண்டும்; இதில் அதிக ஊதியம் தரும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><h2>இந்தியர்களையே பாதிக்கும்</h2><p> </p><p>H-1B விசா வைத்திருப்பவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் பணிபுரியும் முறையைத் தடை செய்ய வேண்டும். H-1B விசா வைத்திருப்பவர்கள் நிரந்தரக் குடியுரிமைக்கு முயற்சிக்கும் அதே வேளையில் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் 'இரட்டை நோக்கம்' (dual intent) தொடர்பான ஏற்பாட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். </p><p>H-வகை விசா வைத்திருப்பவர்கள் தங்கள் சார்ந்திருப்பவர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வருவதைத் தடுக்க வேண்டும். இந்த நிலையில், H-1B விசா தொடர்பான புதிய பிரேரணை சட்டமாக நிறைவேறினால், அது இந்தியர்களையே வெகுவாக பாதிக்கும். </p><p>H-1B திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்காவில் பணிபுரிவதற்காக, ஆயிரக்கணக்கான இந்தியப் பொறியாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற திறன்மிக்க ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் H-1B விசாக்களைப் பெறுகின்றனர். </p><p>தற்போதைக்கு, ஏற்கனவே உள்ள H-1B விசா திட்டம் தற்போதைய விதிகளின்படியே தொடர்ந்து செயல்படும். H-1B விசாவிற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ள இந்தியர்கள், இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மட்டும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்றே கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T07:37:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[88 பந்தில் 186 ஓட்டங்கள் எடுத்து வெற்றி! மூவர் சிக்ஸர்மழை..நொறுங்கிய மார்க்ரம் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sunrisers-leeds-beat-manchester-by-8-wickets-1785310236"></link>
            <id>https://news.lankasri.com/article/sunrisers-leeds-beat-manchester-by-8-wickets-1785310236</id>
            <summary type="text">The Hundred போட்டியில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது. ஜோஸ் பட்லர்

ஹெட்டிங்லே மைதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Hundred போட்டியில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது. </p><h2>ஜோஸ் பட்லர்</h2><p>

ஹெட்டிங்லே மைதானத்தில் நடந்த The Hundred போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ed8e439-aa57-499a-8687-231a784973a8/26-6a69bb149cab0.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் (Jos Buttler) 33 பந்துகளில் 63 ஓட்டங்களும், கிளாசென் 27 பந்துகளில் 53 ஓட்டங்களும் விளாசினர்.</p><p> 

இதன்மூலம் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 181 ஓட்டங்கள் குவித்தது. நேதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளும், கார்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp;</p><h2>புரூக், கிராவ்லே வாணவேடிக்கை&nbsp;</h2><p>

 அடுத்து களமிறங்கிய சன்ரைஸர்ஸ் அணியில் ரிக்கெல்டன் 13 ஓட்டங்களில் வெளியேற, மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) சிக்ஸர்களை பறக்கவிட்டு 26 பந்துகளில் 63 ஓட்டங்கள் (5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசி அவுட் ஆனார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c84746-e9d6-495f-b147-2319a6f516f6/26-6a69bb1565c38.webp' /></p><p>

பின்னர் கைகோர்த்த ஹாரி புரூக், ஜக் கிராவ்லே கூட்டணி வாணவேடிக்கை காட்டியது. 

இவர்களது அதிரடியில் சன்ரைஸர்ஸ் லீட்ஸ் அணி 88 பந்துகளில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
</p><p>
அணித்தலைவர் ஜக் கிராவ்லே (Zak Crawley) 34 பந்துகளில் 56 ஓட்டங்களும் (3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்), ஹாரி புரூக் 17 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 42 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b3b8f5e-91e2-42ac-9a14-0a3e0a7049cb/26-6a69bb162c78b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மாணவர்களுக்கு கனடா அரசிடமிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-issues-warnings-to-international-students-1785307875"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-issues-warnings-to-international-students-1785307875</id>
            <summary type="text">சர்வதேச மாணவர்கள் கனடாவில் வேலை செய்வது தொடர்பில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச மாணவர்கள் கனடாவில் வேலை செய்வது தொடர்பில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

</p><h3>சர்வதேச மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
</h3><p>
சமீபத்தில், கனடாவில் படித்து பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கு பணி அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a551b576-44c0-420f-a1eb-43624c69d10d/26-6a69a2e48fc94.webp' /></p><p>
பணம் செலவு செய்து முறைப்படி கனடாவில் கல்வி கற்றும், தங்களுக்கு பணி அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், மாணவ மாணவியர் உண்ணாவிரதம் இருந்த சம்பங்களும் நடைபெற்றன.
</p><p>
இந்நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Important information for international students who plan to work while studying:<br>• You can only work in Canada as an international student if your study permit conditions say you can.<br>• If you are eligible to work off campus, you can only work up to 24 hours per week while…</p>&mdash; IRCC (@CitImmCanada) <a href="https://x.com/CitImmCanada/status/2081545178309853251?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
அந்த அறிவிப்பின்படி, சர்வதேச மாணவர்களின் கல்வி அனுமதியில் அவர்களுக்கு வேலை செய்ய அனுமதி உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும்.</p><p>

தாங்கள் கல்வி கற்கும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பணிபுரியத் தகுதியுள்ள மாணவர்கள், வகுப்புகள் நடைபெறும் நாட்களில் மட்டும், வாரத்திற்கு 24 மணி நேரம் வரை மட்டுமே வேலை செய்யலாம்.&nbsp;</p><p></p><p>
அனுமதிக்கப்பட்ட வேலை வரம்பை மீறுவது கனடாவில் ஒரு மாணவரின் மாணவர் நிலையை பாதிக்கலாம், எதிர்காலக் கல்வி அல்லது பணி அனுமதி விண்ணப்பங்களைப் பாதிக்கலாம், அத்துடன், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் கட்டாயப்படுத்தலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

அதாவது, சர்வதேச மாணவர்கள், தங்கள் கல்வி அனுமதியில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கவனத்தில் கொள்ளுமாறும், அவற்றை சரியாக பின்பற்றுமாறும் நினைவூட்டப்படுகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T06:51:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைசிவரை நின்ற பாபர் அஸாம்: 120 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்..மே.தீவுகள் மிரட்டல் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/west-indies-beat-pakistan-by-90-runs-in-trinidad-1785307099"></link>
            <id>https://news.lankasri.com/article/west-indies-beat-pakistan-by-90-runs-in-trinidad-1785307099</id>
            <summary type="text">ட்ரினிடாட்டில் நடந்த டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.&amp;nbsp;மேற்கிந்திய தீவுகள் 311
பாகிஸ்தான் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ட்ரினிடாட்டில் நடந்த டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.&nbsp;</p><h2>மேற்கிந்திய தீவுகள் 311</h2><p>
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ட்ரினிடாட்டில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/805d9159-053c-4b20-9121-6ca753a997a8/26-6a69a0ec67a19.webp' /></p><p></p><p>
முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் 311 ஓட்டங்களும், பாகிஸ்தான் 282 ஓட்டங்களும் எடுத்தன. </p><p>

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் 181 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f41b35f9-d7c8-4497-a760-f488f8f52389/26-6a69a0eb98a27.webp' /></p><p>
211 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஜேடன் சீல்ஸ் (Jayden Seales) பந்துவீச்சில் சரிந்தது.&nbsp;</p><h2>போராடிய பாபர் அஸாம்</h2><p>

அணித்தலைவர் பாபர் அஸாம் மட்டும் போராட, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9349fd7-6cf7-4a9e-8e8e-b0d66ff8d7ea/26-6a69a0ed1de10.webp' /></p><p> 

கடைசி விக்கெட்டாக மொஹம்மது அப்பாஸ் 23 ஓட்டங்களில் அவுட் ஆக, பாகிஸ்தான் அணி 120 ஓட்டங்களுக்கு சுருண்டது. பாபர் அஸாம் (Babar Azam) ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்கள் எடுத்தார்.</p><p>

மேற்கிந்திய தீவுகள் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, ஜஸ்டின் கிரீவ்ஸ் (Justin Greaves) ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5d08948-c404-4ca1-bc8b-1d7a80a967c7/26-6a69a0edc60ec.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f03138b-fafd-4a3f-944d-09d7d5147f74/26-6a69a3072292c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T06:40:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uttar-pradesh-man-came-to-chennai-walk-meet-vijay-1785307190"></link>
            <id>https://news.lankasri.com/article/uttar-pradesh-man-came-to-chennai-walk-meet-vijay-1785307190</id>
            <summary type="text">முதல்வர் விஜய்யை சந்திக்க உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் 2,700 கி.மீ நடந்தே வந்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இருந்து நடைபயணம் 

முதல்வர் விஜய் நடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய்யை சந்திக்க உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் 2,700 கி.மீ நடந்தே வந்துள்ளார்.
</p><h3>
உத்தரபிரதேசத்தில் இருந்து நடைபயணம்</h3><p> 

முதல்வர் விஜய் நடிகராக இருந்த காலத்திலே இந்திய அளவில் பிரபலமடைந்திருந்தார்.&nbsp; தற்போது தமிழ்நாடு முதல்வரான நிலையில், வட இந்தியாவை சேர்ந்த சமூகவலைதள Influncerகள் பலரும் முதல்வர் விஜய் குறித்த பல்வேறு செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d55ff76e-e18b-4c66-9c43-2f9032aab7fb/26-6a69a038aa849.webp' /></p><p>
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அலிகாரைசேர்ந்த 24 வயது இளைஞரான அமன், முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவரை காண அலிகாரில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்துள்ளார்.&nbsp;</p><p>கடந்த ஜூலை 3 ஆம் திகதி அலிகரில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அவர், சுமார் 2700 கி.மீ க்கு மேல் நடந்து சென்னையை வந்தடைந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fa9a353-c328-4e3b-a85c-86fb324629c5/26-6a69a038067a8.webp' /></p><p> 

ஆனால், அவர் தலைமை செயலகம் வந்துள்ள நிலையில், முறையான அனுமதி இல்லாததால் முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. </p><h3> 

முதல்வர் விஜய்யை சந்திக்க அனுமதி இல்லை</h3><p> 

சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் விஜய்யை பார்ப்பதற்காக உத்தரப் பிரதேசத்தில் இருந்து சென்னை வரை நடந்தே வந்துள்ளேன். விஜய் அவர்களை இந்தியாவின் பிரதமராக பார்க்க நான் விருப்பப்படுகிறேன்.
</p><p>
நான் நடைப்பயணமாக கடந்து வந்த அனைத்து மாநிலங்களிலும் முதலமைச்சர் விஜய்க்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் விஜய் அவர்களை பிரதமராக பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbVdutUM3MZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbVdutUM3MZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbVdutUM3MZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Aman—01 (@aman_.01k)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் சமமாக மதிப்பவர் விஜய். கல்வி, குழந்தைகள் நலன் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை சிறப்பாக வழிநடத்தக்கூடிய அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன. வடஇந்தியாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அதனால், விஜய் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்பதே என் விருப்பம்.</p><p>சென்னை வந்து ஒரு நாளுக்கும் மேலாகிவிட்டது. விஜய்யைச் சந்திக்க மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். மேலும் அவரது நீலாங்கரை இல்லம், பனையூர் அலுவலகத்திற்கும் சென்றேன்.
</p><p>
ஆனால், இதுவரை அவரை சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த செய்தி விஜய்யின் கவனத்துக்கு சென்று, அவர் என்னை நேரில் சந்திப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். முதலமைச்சர் விஜய்யை பார்க்காமல் நான் சென்னையை விட்டு செல்லமாட்டேன்" என தெரிவித்துள்ளார். </p><p>

இவர் இவ்வாறு நடைபயணம் மேற்கொள்வது இது முதல்முறை இல்லை.</p><p> 

கடந்த ஆண்டில், AIMIM தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசியைச் சந்திப்பதற்காக, அவர் அலிகரிலிருந்து ஹைதராபாத்திற்கு நடைபயணம் செய்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca911a7c-eaf1-41a7-b254-12834deb4502/26-6a69a0395a56c.webp' /></p><p> 

முன்னதாக, அலிகரிலிருந்து மும்பை மற்றும் அஜ்மீர் உள்ளிட்ட நகரங்களுக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் பயண வீடியோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் வெளியிட்டு வருகிறார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T06:40:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 17 லட்சம்.., உலகின் ஆடம்பர ரயில் எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-is-the-world-s-most-luxurious-train-in-tamil-1785305587"></link>
            <id>https://news.lankasri.com/article/which-is-the-world-s-most-luxurious-train-in-tamil-1785305587</id>
            <summary type="text">உலகின் மிகப்பெரிய மற்றும் நீளமான ரயில் போக்குவரத்து நெட்வொர்க்குகளில் அமெரிக்கா, சீனா, மற்றும் ரஷ்யா ஆகியவை முன்னணியில் உள்ளன. 

நில வழியில் பயணிகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிகப்பெரிய மற்றும் நீளமான ரயில் போக்குவரத்து நெட்வொர்க்குகளில் அமெரிக்கா, சீனா, மற்றும் ரஷ்யா ஆகியவை முன்னணியில் உள்ளன.</p><p> 

நில வழியில் பயணிகளையும், சரக்குகளையும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் கொண்டு செல்ல உலகளாவிய ரயில் வலையமைப்புகள் உதவுகின்றன.
</p><p>
உலக நாடுகளில் ரயில் போக்குவரத்து முக்கியமான போக்குவரத்து முறையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e893de9d-493e-446f-b7d2-7cd3c41dd6e3/26-6a699b93cca9b.webp' /></p><p>அதன்படி, ஜப்பான் அதிவேக ரயில்களுக்கு பெயர் பெற்ற நாடாக இருந்தாலும், அந்நாட்டில் மெதுவாக இயற்கையை ரசித்தபடி பயணிக்க உருவாக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு ஆடம்பர ரயிலும் உள்ளது.
</p><p>
ஜப்பானின் கியூஷு தீவில் இயக்கப்படும் செவன் ஸ்டார்ஸ் இன் கியூஷு (Seven Stars in Kyushu) ரயில், 2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>உலகின் சிறந்த ஆடம்பர ரயில் பயணங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த சுமார் 3 பில்லியன் யென் அதாவது&nbsp; இந்திய மதிப்பில் ரூ.165 கோடி செலவில் உருவாக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b329c4e-586e-4db3-98b7-4f89de2fa7e3/26-6a699b92493bd.webp' /></p><p>செவன் ஸ்டார்ஸ் என்ற பெயர், கியூஷு பகுதியின் ஏழு மாகாணங்களையும், ரயிலின் ஏழு பெட்டிகளையும் குறிக்கிறது.</p><p>

இந்த ரயிலில் ஒரு உணவக பெட்டி, ஒரு ஓய்வறை பெட்டி மற்றும் ஐந்து படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன.&nbsp;</p><p>அனைத்து அறைகளும் கையால் செய்யப்பட்ட மர வேலைப்பாடுகளுடன், பாரம்பரிய ஜப்பானிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363c81f8-8ea0-4135-8110-9479266096b4/26-6a699b9486071.webp' /></p><p>JR கியூஷு நிறுவனம் இயக்கும் இந்த ரயிலை பிரபல வடிவமைப்பாளர் ஈஜி மிடூக்கா வடிவமைத்துள்ளார்.
</p><p>
இந்த ரயில் ஃபுகுவோகாவின் ஹகாட்டா நிலையத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் அதே நிலையத்திற்கே திரும்பும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறது.</p><p> 

பயணிகள் 2 நாட்கள், 1 இரவு அல்லது 4 நாட்கள், 3 இரவுகள் கொண்ட பயணத்தை தேர்வு செய்யலாம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c87ccea2-82b0-4223-ac68-54eba690538d/26-6a699b93195f6.webp' /></p><p>இந்த ரயிலின் டிக்கெட் கட்டணம் பயண வகையைப் பொறுத்து மாறுபடும். 

2</p><p> நாள் பயணத்திற்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.9.5 லட்சம் மற்றும் 4 நாள், 3 இரவு பயணத்திற்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதனால், உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான ரயில் பயணங்களில் ஒன்றாக செவன் ஸ்டார்ஸ் இன் கியூஷு விளங்கி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T06:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் ரஷ்யா மீதான தடைகள் பிரேரணை நிறைவேற்றம்... சீனா, இந்தியாவிற்கு கடும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-passes-russia-sanctions-bill-1785305931"></link>
            <id>https://news.lankasri.com/article/us-passes-russia-sanctions-bill-1785305931</id>
            <summary type="text">ரஷ்ய எரிபொருளின் முக்கிய வாடிக்கையாளர்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும், ஈரான் மீதான தடைகளை நீட்டிக்கவும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய எரிபொருளின் முக்கிய வாடிக்கையாளர்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும், ஈரான் மீதான தடைகளை நீட்டிக்கவும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பிரேரணை ஒன்றை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியுள்ளது.</p><h2>அதிக வரிகளை விதிக்க</h2><p>
</p><p>இந்தப் பிரேரணையானது, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷ்ய எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை வாங்கும் உலகின் முதல் ஐந்து நாடுகளின் மீது அதிக வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அனுமதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0754ce3e-29e4-49e7-80eb-f234163121b5/26-6a69a0b2a5b05.webp' /></p><p> </p><p>ஜனாதிபதி ட்ரம்பின் வெளிப்படையான ஆதரவைப் பெற்ற இந்தப் பிரேரணை 86-க்கு 12 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியது; இதில் கிட்டத்தட்ட அனைத்துக் குடியரசுக் கட்சியினரும் பெரும்பான்மையான ஜனநாயகக் கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட்டதன் மூலம், இது 60 வாக்குகள் என்ற தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கையைக் கடந்தது. </p><p>
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தீவிரமாக எதிர்த்து வந்த குடியரசுக் கட்சி செனட்டர் கிரஹாம் (இவர் இம்மாதம் திடீரென காலமானார்) நினைவுகூரப்பட்ட நிகழ்வுக்கும், நாடாளுமன்றத்தில் உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை செனட்டர்கள் சந்தித்ததற்கும் சற்றுப் பின்னரே செனட் சபையில் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.</p><p></p><p> </p><p>தொடர்புடைய பிரேரணையானது ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சட்டவிரோத கப்பல்கள் மற்றும் ரஷ்ய அதிகாரிகள், பெரும் செல்வந்தர்கள், நிதி நிறுவனங்கள் மீது தடைகளை விதிக்கும். </p><p>மட்டுமின்றி, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெருமளவில் வாங்கும் நாடுகளிலிருந்து, குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குகள் மீது 100 சதவீதம் வரையிலான சுங்கவரிகளை விதிப்பதற்கான அதிகாரத்தையும் இது ட்ரம்பிற்கு வழங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10399d25-0721-46ce-bbb3-d7d96217a38c/26-6a69a0b1f290a.webp' /></p><p> </p><p>
இருப்பினும், ரஷ்யாவிலிருந்து 15 சதவீதத்திற்கும் குறைவாகவே இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் மற்றும் அந்த இறக்குமதியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நாடுகளுக்கு இதில் விதிவிலக்குகள் அளிக்கப்படுறது.
</p><p>திருத்தப்பட்ட இந்தப் பிரேரணையில், ட்ரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க சேர்க்கப்பட்ட, ஈரானின் எரிபொருள் மற்றும் ஆயுதத் துறைகளுக்கான நிதியுதவியைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்ட தற்போதைய தடைகள் அதிகாரத்தையும் நீட்டிக்கிறது.</p><h2>ட்ரம்பிற்கு அதீத அதிகாரம்</h2><p> </p><p>நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டத்திற்கு கிரஹாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது; அவர் இதற்கான ஆதரவைத் திரட்டுவதில் ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டதோடு, இம்மாதத் தொடக்கத்தில் நிகழ்ந்த அவரது திடீர் மறைவுக்குச் சற்று முன்பு, இதன் திருத்தப்பட்ட வடிவம் குறித்து வெள்ளை மாளிகையுடன் ஓர் உடன்பாட்டையும் எட்டியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/037a752d-5e64-482d-8e9c-529b4818009f/26-6a69a0b1417b2.webp' /></p><p> </p><p>பிரேரணையை
ஆதரிப்பவர்கள் ரஷ்யாவின் எரிசக்தி வருவாயை முடக்குவது அவசியம் என்று கூறுகின்றனர், இது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போருக்கு நிதியளிக்கும் திறனை பலவீனப்படுத்துவதாக நம்பப்படுகிறது. </p><p>இந்த நிலையில், ரஷ்யாவைத் தண்டிப்பதற்கு மிகப் பெரிய ஆதரவு இருந்தபோதிலும், இந்த வரி விதிப்பு விதிகள் ட்ரம்பிற்கு அதீத அதிகாரத்தை அளிப்பதாகவும், அமெரிக்க நுகர்வோருக்கான இறக்குமதி செலவுகளை அதிகரிக்கக்கூடும் அல்லது ஐரோப்பிய நட்பு நாடுகளைப் பாதிக்கக்கூடும் என்றும் சில ஜனநாயகக் கட்சியினர் கவலை தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T06:19:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ணத்தைப் புறக்கணிக்கத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/european-nations-boycott-world-cup-1785300201"></link>
            <id>https://news.lankasri.com/article/european-nations-boycott-world-cup-1785300201</id>
            <summary type="text">ஃபிஃபாவின் ஒரு பகுதியை விற்பனை செய்வதற்கான ஜியானி இன்ஃபான்டினோவின் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஐரோப்பிய நாடுகள் உலகக் கிண்ணம் தொடரைப் புறக்கணிக்கக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிஃபாவின் ஒரு பகுதியை விற்பனை செய்வதற்கான ஜியானி இன்ஃபான்டினோவின் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஐரோப்பிய நாடுகள் உலகக் கிண்ணம் தொடரைப் புறக்கணிக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>3 பில்லியன் பவுண்டு</h2><p>
</p><p>உலகக் கிண்ணம் மற்றும் கிளப் உலகக் கிண்ணம் ஆகிய போட்டிகளை நிர்வகிக்கும் ஒரு துணை நிறுவனத்தைத் தொடங்கி, அதில் பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை ஃபிஃபா (FIFA) வகுத்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/140a70cc-7375-4a53-86c3-5d1dcca7daf6/26-6a698651f257d.webp' /></p><p> </p><p>புதிய ஃபிஃபா ஃபார்வர்ட் எண்டர்பிரைஸ் நிறுவனத்தில் 20 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், உலக கால்பந்தாட்ட நிர்வாக அமைப்புக்கு தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து 3 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் திரட்ட முடியும். </p><p>இத்திட்டங்களுக்கு பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் ஏற்கனவே கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இத்திட்டம் வெற்றிபெற்றால், தற்போது 56 வயதாகும் இன்ஃபான்டினோ கணிசமான தொகையை ஊக்கத்தொகையாகப் பெறுவார். </p><p>மட்டுமின்றி, 2031-ல் அவரது இறுதி ஃபிஃபா பதவிக்காலம் கட்டாயமாக முடிவடைந்தவுடன், அவர் புதிய துணை நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆணையர் பொறுப்பிற்கும் செல்லக்கூடும்.</p><p></p><p> </p><p>இந்தத் திட்டங்களுக்கு யுஇஎஃப்ஏ ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்பந்தின் நிர்வாக அமைப்புகள் ஒருபோதும் தாண்டக் கூடாத எல்லையை இது தாண்டுகிறது. </p><p>யுஇஎஃப்ஏ இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், ஃபிஃபாவின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகக் கிண்ணம் தொடரைப் புறக்கணிப்பது குறித்து யுஇஎஃப்ஏ நாடுகள் விவாதிக்க உள்ளன. </p><p>உறுப்பு சங்கங்கள் இந்த வாரம் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்திற்காக இணையவழியில் கூடவுள்ளன, இதில் புறக்கணிப்பு என்பதும் விவாதிக்கப்படும் தலைப்புகளில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0cc0db1-a58b-40ec-945e-ce78ef5059a3/26-6a6986538cf78.webp' /></p><p> </p><p>இந்த மாதத் தொடக்கத்தில் உலகக் கிண்ணம் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள், பல்வேறு கால்பந்து சங்கங்கள் ஃபிஃபாவைச் சந்தித்தன, ஆனால் இந்தத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை.</p><h2>ட்ரம்பிற்கும் தொடர்பு</h2><p> </p><p>யுஇஎஃப்ஏ தலைவர் அலெக்சாண்டர் செஃபெரின், சமீப வாரங்களில் இன்ஃபான்டினோவின் ஃபிஃபாவை ஏற்கனவே விமர்சித்து வருகிறார். ஃபிஃபா தலைவருக்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, உலகக் கிண்ணம் தொடரின் போது ஃபோலரின் பலோகுனின் சிவப்பு அட்டைக்கான தடை நீக்கப்பட்டதற்கு அவர் தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78f5d2c6-2588-46be-a07b-ba115d0400c7/26-6a698652dca7e.webp' /></p><p> </p><p>இன்ஃபான்டினோவின் இந்த வெட்கங்கெட்ட திட்டத்திற்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கும் தொடர்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் தம்பியான ஜோசுவா குஷ்னர் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள 'த்ரைவ் கேபிடல்' (Thrive Capital) நிறுவனம், இதில் முன்னணியில் உள்ள ஏலதாரராகக் கருதப்படுகிறது. </p><p>இந்த நிலையில், விமர்சனங்களுக்குப் பதிலளித்த இன்ஃபான்டினோ, இந்தத் திட்டங்கள் உறுப்பு சங்கங்களுக்கு ஃபிஃபா அதிக நிதியை வழங்க வழிவகுக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;மேலும், தற்போது 8 மில்லியன் டொலராக இருக்கும் நிதியுதவி 2027 மற்றும் 2030ல் 20 மில்லியன் டொலராக அதிகரிக்கும் என்றும் இன்ஃபான்டினோ வாதிடுகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T06:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீ அபாயம்: சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-restrict-fireworks-on-aug1-over-wildfire-1785301708"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-restrict-fireworks-on-aug1-over-wildfire-1785301708</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில், ஆகத்து மாதம் 1ஆம் திகதி தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தேசிய தின கொண்டாட்டங்களின்போது பல சுவிஸ் மாகாணங்கள் வாணவே...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில், ஆகத்து மாதம் 1ஆம் திகதி தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.</p><p>

இந்நிலையில், தேசிய தின கொண்டாட்டங்களின்போது பல சுவிஸ் மாகாணங்கள் வாணவேடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளன.</p><h3>

சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முக்கிய முடிவு
</h3><p>
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் காட்டுத்தீ பரவிக்கொண்டிருக்கிறது. பிரான்ஸ் போன்ற நாடுகள் தீயை அணைக்க கடுமையாக போராடிக்கொண்டிருக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23d9e8d5-56ab-480a-937c-1100387994ec/26-6a698ace23873.webp' /></p><p>

விடயம் என்னவென்றால், ஆகத்து மாதம் 1ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் தேசிய தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
</p><p>
வழக்கமாக தேசிய தினத்தின்போது நாடு முழுவதும் வாணவேடிக்கைகள் நடத்தப்படுவதுண்டு.&nbsp;</p><p></p><p>
ஆனால், இம்முறை, பிரெஞ்சு மொழி பேசும் ஆறு சுவிஸ் மாகாணங்களிலும், காட்டுத்தீ அபாயத்தைத் தவிர்ப்பதற்காக, தனிப்பட்ட முறையில் மக்கள் வாணவேடிக்கைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஜெனீவா ஏரி, Neuchâtel மற்றும் Murten ஏரிக்கரைகளில் மட்டும் அதிகாரப்பூர்வமாக, உரிமம் பெற்ற தொழில்முறை வாணவேடிக்கை நிபுணர்கள் வாணவேடிக்கைகள் நடத்த இருக்கிறார்கள்.</p><p>

Valais மற்றும் Fribourg மாகாணங்களோ, இன்னும் ஒரு படி மேலே போய், பட்டாசு விற்பனைக்கே மொத்தமாக தடை விதித்துவிட்டன.</p><p>

அத்துடன், யாராவது பட்டாசு வெடித்தாலோ, திறந்த வெளிகளில் தீப்பற்றவைத்தாலோ அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T05:11:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயதானாலும் இளமையாக இருக்க உதவும் பேஸ்பேக்.., வீட்டிலேயே தயாரிக்கலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/homemade-anti-ageing-face-packs-in-tamil-1785300180"></link>
            <id>https://news.lankasri.com/article/homemade-anti-ageing-face-packs-in-tamil-1785300180</id>
            <summary type="text">பொதுவாக பெண்கள் அனைவருக்கும் வயதானாலும் இளமையுடன் இருக்கவேண்டும் என்று இருக்கும்.

வயது அதிகரிக்கும் போது சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறைகிறது. சூரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக பெண்கள் அனைவருக்கும் வயதானாலும் இளமையுடன் இருக்கவேண்டும் என்று இருக்கும்.
</p><p>
வயது அதிகரிக்கும் போது சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறைகிறது. </p><p>சூரியனின் அதிகப்படியான புற ஊதா கதிர்கள் படுதல், புகைப்பிடித்தல் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம்&nbsp;ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.</p><p></p><p>முகத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க, போதிய தண்ணீர் குடித்தல், வெயிலிலிருந்து பாதுகாத்தல் மற்றும் இயற்கையான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துதல் ஆகியவை அவசியமாகும்.</p><p>
அந்தவகையில், எப்போதுமே இளமையாக இருக்க வீட்டிலேயே இயற்கை முறையில் பேஸ்பேக் செய்து எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><h2>1. தேவையான பொருட்கள்
</h2><ul><li>
மஞ்சள்- 1 ஸ்பூன்</li><li>தயிர்- 2 ஸ்பூன்</li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
</p><p>

பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eae61794-49ba-4379-820f-9df0748002b1/26-6a69855b397fc.webp' /></p><p> அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.</p><p>
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் எப்போதும் இளமையாக இருக்கலாம்.
</p><h2>
2. தேவையான பொருட்கள்</h2><ul><li>

முட்டை- 1
</li><li>தேன்- 1 ஸ்பூன்</li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?</h2><p>

முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து, அத்துடன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.</p><p></p><p>

பின்பு அதை முகத்தில் தடவி, நன்கு உலரவைத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும்.
</p><p>
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் எப்போதும் இளமையாக இருக்கலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T04:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பான் நிலநடுக்கம்... மீட்பு நடவடிக்கை தீவிரம்: மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-earthquake-death-toll-rises-1785297337"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-earthquake-death-toll-rises-1785297337</id>
            <summary type="text">தெற்கு ஜப்பானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஜப்பானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>ஐந்து மாகாணங்களில்</h2><p>
</p><p>ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோருக்கு மின்சாரம், தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df62b911-fa3d-445c-a942-8cbbd2a65485/26-6a697b1637926.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் சனே தகைச்சி புதன்கிழமை தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் கியூஷுவின் தெற்குத் தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தைத் தாக்கியபோது, ​​அந்த நிலநடுக்கம் ஜப்பானிய ஷிண்டோ தீவிர அளவுகோலில் அதிகபட்சமாக 7 ஆகப் பதிவானது. </p><p>புதன்கிழமை அதிகாலை நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள பேரிடர் முகாம்களில் 9,000-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>குறைந்தது 13 பேர் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் நிகழ்ந்த மறுநாளான புதன்கிழமை பகல் 7 மணி நிலவரப்படி, குமாமோட்டோ மற்றும் ஃபுகுவோகா உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் உள்ள 506 பேரிடர் முகாம்களில் 9,186 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், </p><p>ஏழு பேர் பலத்த காயங்களுடனும் 29 பேர் லேசான காயங்களுடனும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் மினோரு கிஹாரா தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98d9293e-048d-48c4-b763-a2dd4da87bca/26-6a697b17b0b0b.webp' /></p><h2>நில அதிர்வுகள்</h2><p> </p><p>இந்த நிலையில், பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக ஜப்பானிய ராணுவம் 3,600 வீரர்களைத் திரட்டியுள்ளதாகவும், வான்வழியாக சேதங்களை மதிப்பிடுவதற்காக 20 விமானங்களை அனுப்பியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a994d462-99e5-4a0c-91f9-a5e751ec5cb9/26-6a697b1709c6d.webp' /></p><p> </p><p>புதன்கிழமை காலைக்குள் 1 முதல் 4 வரையிலான ரிக்டர் அளவுகளில் 60-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகியிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p> நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் இரண்டு மணி நேரத்திற்குள் அது விலக்கிக்கொள்ளப்பட்டது. 
செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி, சுமார் 50,000 வீடுகளில் மின்சாரமும், 140,000 வீடுகளில் குடிநீரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa2c1f3-72ce-4967-b667-4ecb94fa1eb0/26-6a697b1863e5c.webp' /></p><p> </p><p>அப்பகுதியில் புதன்கிழமையன்று வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது; அதேவேளையில், அதிக ஈரப்பதம் நிலவுவதால், குளிரூட்டப்பட்ட வசதி மற்றும் குடிநீர் வசதி இல்லாதவர்களுக்கு heatstroke ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T03:53:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[காப்பாற்றுங்கள்... உக்ரைன் அருகே கப்பலில் சிக்கிய 13 இந்திய மாலுமிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-sailors-trapped-near-ukraine-1785294742"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-sailors-trapped-near-ukraine-1785294742</id>
            <summary type="text">உக்ரைன் கருங்கடல் துறைமுகத்திற்கு அருகே தொடரும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில், சரக்குக் கப்பல் ஒன்றில் குறைந்தது 13 இந்திய மாலுமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் கருங்கடல் துறைமுகத்திற்கு அருகே தொடரும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில், சரக்குக் கப்பல் ஒன்றில் குறைந்தது 13 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>தாக்கப்படலாம்</h2><p>
</p><p>கருங்கடல் துறைமுகத்திற்கு அருகே ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால், அங்கு சிக்கியுள்ள கப்பல் ஊழியர்கள் மிக மோசமான மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழலில் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் நேரடியாகத் தாக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் மாலுமிகள் சங்கம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5cb108e-88f1-4596-a532-f3133aeae2ac/26-6a69708da3b1d.webp' /></p><p> </p><p>மேலும், இந்திய அரசு, கப்பல் உரிமையாளர்கள் மற்றும் பிற அதிகார அமைப்புகள் ஆகியவை கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யவும், அவர்களை விரைவாகத் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. </p><p>மோதல் மண்டலங்களில் உள்ள இந்தியக் கடல்சார் பணியாளர்கள் எளிதில் தாக்கப்படக்கூடிய இலக்குகளாக விடப்படக்கூடாது என்றும், உடனடியாக நடவடிக்கை எடுகக வேண்டும் என்றும் அந்த அமைப்பு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p> </p><p>துறைமுகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைச் சுட்டிக்காட்டும் வகையில், கப்பலைச் சுற்றியுள்ள பகுதியில் அடர்த்தியான புகை மண்டலம் எழுவதைக் காட்டும் காணொளி ஒன்றையும் மாலுமிகள் சங்கம் வெளியிட்டுள்ளது; இக்காணொளி அக்கப்பலிலிருந்தே பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. </p><p>13 இந்திய மாலுமிகள் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்த தகவல்களுக்கு, இதுவரை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகமோ அல்லது கப்பல் நிறுவனமோ எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>உதவிக்கான அழைப்பு</h2><p>
</p><p>உக்ரைனின் தெற்கு கடற்கரைப் பகுதியில் இயங்கும் சரக்குக் கப்பல்கள் மீது சமீபத்திய நாட்களில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்திய மாலுமிகளிடம் இருந்து சமீபத்திய உதவிக்கான அழைப்பு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09e00626-9612-4b5c-a5fe-081bae7d6516/26-6a69708ea7a65.webp' /></p><p> </p><p>கடந்த வாரம் கருங்கடலில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உக்ரைன் தூதர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக்கை திங்களன்று வரவழைத்த இந்தியா தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது. </p><p>அச்சம்பவம் குறித்து இந்தியாவின் தீவிர கவலையைத் தூதரிடம் தெரிவித்ததாகவும், வணிகக் கப்பல் போக்குவரத்து மீதான இத்தகைய தாக்குதல்களை மிகக் கடுமையாகக் கண்டிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T03:10:37+00:00</updated>
        </entry>
    </feed>
