<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-31T23:22:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரியானாவில் சர்வதேச கபடி வீரரின் மனைவி எடுத்த விபரீத முடிவு: பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kabaddi-player-sheelu-balhara-wife-dies-in-rohtak-1785535664"></link>
            <id>https://news.lankasri.com/article/kabaddi-player-sheelu-balhara-wife-dies-in-rohtak-1785535664</id>
            <summary type="text">ஹரியானாவில் சர்வதேச கபடி வீரரின் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உயிரை மாய்த்துக் கொண்ட கபடி வீரரின் மனைவி
ஹரியானா மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹரியானாவில் சர்வதேச கபடி வீரரின் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>உயிரை மாய்த்துக் கொண்ட கபடி வீரரின் மனைவி</h2><p>
ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் சர்வதேச கபடி வீரர் ஷீலு பல்ஹாராவின் 23 வயது மனைவி முஸ்கான் வெள்ளிக்கிழமை அவர்களது இல்லத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முஸ்கானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p> மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் அதிகாரிகள் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3ff0090-ae83-482b-914b-af1892d67c43/26-6a6d1cb22bfc4.webp' /></p><p> மனைவி முஸ்கானின் உயிரை மாய்த்துக் கொள்ளும் இந்த முடிவுக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவரவில்லை.</p><p></p><p> சர்வதேச கபடி வீரரான ஷீலு பல்ஹாராவுக்கும் ரோஹ்தக் மேகம் பகுதியை சேர்ந்த முஸ்கானுக்கு கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.</p><p> இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹர்திக் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T22:07:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுடனான ஷெங்கன் விதியை இடைநீக்கம் செய்த இத்தாலி: பிரான்சுடன் கூட்டு ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/italy-suspends-schengen-visa-rules-for-spain-1785526967"></link>
            <id>https://news.lankasri.com/article/italy-suspends-schengen-visa-rules-for-spain-1785526967</id>
            <summary type="text">ஸ்பெயின் உடனான ஷெங்கன் விதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது. அதிருப்தியை வெளிப்படுத்திய ஸ்பெயின்வியாழக்கிழமையன்று மொராக்கோவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் உடனான ஷெங்கன் விதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது.</p><h2> அதிருப்தியை வெளிப்படுத்திய ஸ்பெயின்</h2><p>வியாழக்கிழமையன்று மொராக்கோவில் இருந்து கிட்டத்தட்ட 500000 மக்கள் ஸ்பெயினின் சியூட்டா(Ceuta) பகுதிக்குள் ஒரே நேரத்தில் முயன்றனர். இது ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.</p><p> இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் விசா இல்லாத ஷெங்கன் பயண மண்டலத்திலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்ய வேண்டும் என இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி கோரிக்கை விடுத்து இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aea8b839-1087-4c45-9577-1b84fb77fe7b/26-6a6cfab9a15c2.webp' /></p><p>இது தொடர்பாக சமூக வலைதளத்தில் மெலோனி வெளியிட்ட தகவலில், ஷெங்கன்(Schengen)&nbsp; பயண மண்டலத்திலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், மேலும் இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.</p><p> அத்துடன் சியூட்டா நகரத்தில் இருந்து வெளிவரும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் மெலோனி தெரிவித்து இருந்தார்.</p><h2> ஷெங்கன் விதியை இடைநீக்கம் செய்த இத்தாலி</h2><p>
இந்நிலையில் முக்கிய கொள்கை மாற்றமாக, ஸ்பெயின் உடனான விசா மற்றும் கடவுச் சீட்டு இல்லாத ஷெங்கன் பயண முறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9abf213-1189-4701-b4cd-bf0047616d88/26-6a6cfab8ee6b8.webp' /></p><p> சியூட்டா நகரத்தில் நடந்த நிகழ்வே இந்த அதிரடி நடவடிக்கைக்கான முக்கிய காரணம் என்று இத்தாலிய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> இந்த இடைக்கால தடை தவிர இத்தாலி - பிரான்ஸ் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> மேலும் எல்லையில் சோதனைகளை தீவிரப்படுத்த பிரான்ஸ் அரசுடன் கூட்டு ஒப்பந்தமும் செய்யப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T21:29:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் காட்டுத்தீ சம்பவம்: 308 பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-arrest-308-persons-for-wildfire-1785532980"></link>
            <id>https://news.lankasri.com/article/france-arrest-308-persons-for-wildfire-1785532980</id>
            <summary type="text">பிரான்ஸில் காட்டுத்தீ பரவலுக்குக் காரணமாக இருந்த 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸில் காட்டுத்தீபிரான்ஸில் இந்த ஆண்டு கோடை காலத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸில் காட்டுத்தீ பரவலுக்குக் காரணமாக இருந்த 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2> பிரான்ஸில் காட்டுத்தீ</h2><p>பிரான்ஸில் இந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.</p><p> அரசாங்கத்தின் புள்ளிவிவரத் தகவலின் படி, காட்டுத் தீயில் இதுவரை 1,15,000 ஹெக்டேர் நிலங்கள்&nbsp; தீயில் கருகி சாம்பலாகியுள்ளன.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ccf2705-1971-4c11-b8a0-acf973d5a85a/26-6a6d123704ff6.webp' /></p><h2> 300க்கும் மேற்பட்டோர் கைது</h2><p>இந்நிலையில் பிரான்ஸ் காட்டுத்தீ சம்பவத்திற்கு காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 308 பேர் இதுவரை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> கைது செய்யப்பட்டவர்களில் 120 பேர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் இந்த கைது நடவடிக்கையில் வேண்டும் என்றே தீ வைத்தவர்களும், கவனக்குறைவாக தீ விபத்தை ஏற்படுத்தியவர்களும் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5df52f0b-982c-4473-963a-0760709db790/26-6a6d12364cada.webp' /></p><h2> தீவிரமான சட்ட நடவடிக்கை</h2><p>வேகமாக பரவி வரும் காட்டுத்தீ அபாயத்தை கட்டுப்படுத்தும் விதமாக, தீ வைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிப்பதற்காக ரோந்து பணிகளில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.</p><p> இதுவரை 33 நபர்கள் காட்டுத்தீ தொடர்பாக வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர் அல்லது நீதிமன்ற காவலில் உள்ளனர்.</p><p> காட்டுத்தீ சம்பவத்தில் பொதுமக்களின் கவனக்குறைவு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-31T21:23:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெலாரஸ் உடனான எல்லையை மூடிய லாட்வியா: குடிமக்களுக்கு தாயகம் திரும்ப அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/latvia-close-his-border-with-belarus-1785530377"></link>
            <id>https://news.lankasri.com/article/latvia-close-his-border-with-belarus-1785530377</id>
            <summary type="text">பெலாரஸ்(Belarus) உடனான எல்லையை மூடுவதாக லாட்வியா(Latvia) அறிவித்துள்ளது. எல்லையை மூடிய லாட்வியாதொழில்நுட்ப காரணங்களால் லாட்வியா மற்றும் பெலாரஸ் நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெலாரஸ்(Belarus) உடனான எல்லையை மூடுவதாக லாட்வியா(Latvia) அறிவித்துள்ளது.</p><h2> எல்லையை மூடிய லாட்வியா</h2><p>தொழில்நுட்ப காரணங்களால் லாட்வியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் உடனடியாக மூடப்படுவதாக லாட்வியா நாட்டு உள்துறை அமைச்சர் ஜானிஸ் டோம்பிராவா(Janis Dombrava) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.</p><p>மேலும் இது தொடர்பாக டோம்பிராவா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் பெலாரஸ் நாட்டில் தங்கியுள்ள லாட்வியா குடிமக்கள் அனைவரும் உடனடியாக மாற்றுப்பாதையை பயன்படுத்தி தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.</p><p> பெலாரஸ் நாட்டுடனான எல்லை மூடல் நடவடிக்கையானது, இந்த வார தொடக்கத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை தொடர்ந்து வெளிவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04661000-4b5a-496b-a45e-d6b00dba8e1c/26-6a6d080b7940e.webp' /></p><p> X தளத்தில் டோம்பிராவா வெளியிட்ட பதிவில், பெலாரஸ் நாட்டிற்கு செல்லும் அனைத்து பயண திட்டங்களையும் உடனடியாக கைவிடுமாறு லாட்வியா குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p> பெலாரஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள அகதிகள் கலப்பினப் போர் தீவிரமடைந்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு போக்குவரத்து எப்போது வேண்டுமாலும் தடைபடலாம் என்று அவர் எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T20:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 மணி நேரம் இடைவிடாமல் வான்வழித் தாக்குதல்: ஈரானுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057"></link>
            <id>https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057</id>
            <summary type="text">ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><h2>அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்</h2><p>ஈரானின் முக்கிய இலக்குகளை குறிவைத்து அமெரிக்க மத்திய கட்டளை பீடம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் விடாமல் தீவிர தாக்குதல் நடத்தி முடித்து இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம்(CENTCOM) தெரிவித்துள்ளது.</p><p>CENTCOM வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய வியூக மையங்கள் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b81e468-9e15-4068-bc7c-369a8285fec7/26-6a6cef5ac2501.webp' /></p><p>அதில் முக்கியமாக இராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், அதிநவீன ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகள், கடற்கரை கண்காணிப்பு மையங்கள் மற்றும் முக்கிய கடல்சார் பாதுகாப்பு திறன்கள் அழிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தாக்குதலுக்கான பின்னணி</h2><p>செவ்வாய்க்கிழமை அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52e64c48-69da-43b9-a0ad-ef04a7432d20/26-6a6cef5b72f9c.webp' /></p><p>மேலும் ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதல்களை அமெரிக்க பாதுகாப்பு திறன்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகவும், இதனால் அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகளுக்கு எந்தவொரு சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> ஈரானிய படைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை தடுத்து அமெரிக்க பணியாளர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க அமெரிக்கா உறுதியுடன் இருப்பதை இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுவதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T18:54:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ceuta-crisis-37500-refugees-return-to-morocco-1785516053"></link>
            <id>https://news.lankasri.com/article/ceuta-crisis-37500-refugees-return-to-morocco-1785516053</id>
            <summary type="text">மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் எல்லைப்புற நகரான சியூட்டாவிற்குள் நுழைந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினுக்குள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் எல்லைப்புற நகரான சியூட்டாவிற்குள் நுழைந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டினர்</h2><p>வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய ஸ்பெயின் ஆதிக்கப் பகுதியான சியூட்டாவின்(Ceuta) எல்லைப் பகுதிக்குள் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p> ஆயிரக்கணக்கானோரின் அத்துமீறிய நுழைவை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு முற்றிலும் சிதைப்பட்டு இருப்பதாகவும், உடனே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு எல்லை பாதுகாப்பிற்கு இராணுவத்தை அனுப்ப வேண்டும் எனவும் உள்ளூர் அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc924ce5-96e7-4b1b-afa7-a85ba4880bf3/26-6a6cd0174126c.webp' /></p><p> ஸ்பெயின் உள்துறை அமைச்சகத்தின் தகவல் படி, சியூட்டாவிற்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை உச்சபட்சமாக 50,000ஐ கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதில் (பெரும்பாலானோர் மொராக்கோவை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்).
தாராஜல் எல்லை வழியாகவும், கடற்கரை வழியாகவும் சியூட்டாவிற்குள் நுழையும் இந்த மக்களில் சிலர் “விவா எஸ்பானா”(Viva España!) என்ற கோஷங்களை எழுப்பியும், சாலைகளில் நடனமாடியும் வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது.</p><p></p><h2> மொராக்கோவிற்கு திரும்பிய மக்கள்</h2><p>
இந்நிலையில் சியூட்டாவிற்குள் அத்துமீறி நுழைந்தவர்களில் 37,500க்கும் அதிகமானோர் மீண்டும் மொராக்கோவிற்கு திரும்பி சென்று விட்டதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a406a87d-6274-4d92-92a7-f1bea40a683d/26-6a6cd017e6a64.webp' /></p><p>ஒரே நேரத்தில் நிகழ்ந்த இந்த அதிகமான அகதிகள் இடம்பெயர்வில் கிட்டத்தட்ட 57 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> இந்த நெருக்கடியான சூழ்நிலை குறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் இது ஸ்பெயின் இறையாண்மை மீது நடந்த மிகப்பெரிய தாக்குதல் மற்றும் மீறல் என்று குற்றம்சாட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T17:47:41+00:00</updated>
        </entry>
    </feed>
