<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-10T22:27:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - அமெரிக்கா வர்த்தக பதட்டங்களுக்கு இடையில், டிரம்ப்- கார்னி நடுவே தொடரும் உரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-and-us-continue-international-dialogue-1789078950"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-and-us-continue-international-dialogue-1789078950</id>
            <summary type="text">வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது. பதட்டங்களுக்கு மத்தியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது.</p><h2> பதட்டங்களுக்கு மத்தியில் தொடர்பு</h2><p>இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சில முக்கிய உத்தரவுகளைப் அறிவித்து இருந்தார்.</p><p>இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பதற்றமானது அதிகரித்தது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே புதிய வரி விதிப்புகளும் தீவிரமடைந்தன.</p><p> இந்த நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்(Donald Trump) மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி(&nbsp;Mark Carney) இருவரும் முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22d907d8-db67-4cb1-ad90-289411402c4b/26-6aa32da7d538d.webp' /></p><p> கல்கரியில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் கார்னி, பொருளாதார முரண்பாடுகளையும், சர்வதேச விவகாரங்களையும் பிரித்து பார்க்கும் திறன் கனடாவிடம் இருப்பதாக தெரிவித்தார்.</p><p></p><p> சர்வதேச விவகாரங்களில் கனடாவின் பங்கை நிறைவேற்றுவது தொடர்பில் அமெரிக்காவுடன் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன், உக்ரைன் மற்றும் ஈரான் விவகாரங்கள் குறித்தும், முக்கிய புவிசார் அரசியல் குறித்தும் கடந்த சில நாட்களில் மட்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பலமுறை கலந்துரையாடி இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> ஏனென்றால் இது தங்களின் பொறுப்புகளில் ஒன்று என்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T22:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தின் என்ஜினில் சிக்கிய பறவைகள்: நடுவானில் தீப்பற்றியதால் பீதியடைந்த பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/flight-emergency-landing-in-cardiff-after-birds-1789074858"></link>
            <id>https://news.lankasri.com/article/flight-emergency-landing-in-cardiff-after-birds-1789074858</id>
            <summary type="text">Flight Emergency Landing in Cardiff after Birds Strikes: பறவை கூட்டத்தின் மீது விமானம் மோதி இன்ஜினில் தீ பற்றியதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Flight Emergency Landing in Cardiff after Birds Strikes: பறவை கூட்டத்தின் மீது விமானம் மோதி இன்ஜினில் தீ பற்றியதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.</p><h2> பறவை கூட்டத்தில் சிக்கிய விமானம்</h2><p>TUI விமானம் ஒன்று சைப்ரஸ் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை கூட்டத்தில் மோதி இன்ஜினில் தீ பற்றியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.</p><p> செப்டம்பர் 9ம் திகதி மதியம் கார்டிஃப்பில்(Cardiff) இருந்து பாஃபோஸ்(Paphos) நோக்கி செல்ல திட்டமிட்டிருந்த TOM5TN என்ற விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவைகள் மீது மோதியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61618896-53ca-43f1-a305-f4c6bd2d4292/26-6aa31dac8c592.webp' /></p><p> இதனால் விமானத்தின் வலது பக்க இன்ஜினில் தீப்பிடித்தது. விமானத்தில் இருந்து ஆரஞ்சு நிற தீப்பிழம்பு வெளியேறியதை விமானத்தில் இருந்த பயணிகள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p>அத்துடன் விமானம் முழுவதும் தீப்பற்றிய வாடை மற்றும் புகை சூழ்ந்ததால் பயணிகள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகினர்.</p><h2>அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்</h2><p>
இதையடுத்து விமானம் அவசர அவசரமாக மீண்டும் கார்டிஃப் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1ec1691-900c-4934-9b02-60f3514fc0b2/26-6aa31dabd3347.webp' /></p><p> அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிர் சேதமும் இல்லாமல் விமானம் தரையிறக்கப்பட்டதாக கார்டிப் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>மேலும் விமான நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு விமானத்தில் பற்றிய தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p> இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் அடுத்த நாள் மாற்று விமானத்தில் பாஃபோஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T21:14:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்: நால்வர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-drone-hits-shopping-center-in-pavlohrad-1789071973"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-drone-hits-shopping-center-in-pavlohrad-1789071973</id>
            <summary type="text">உக்ரைனின் வணிக வளாகத்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில்&amp;nbsp; 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். வணிக வளாகம் மீது ட்ரோன் தாக்குதல்
உக்ரைனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் வணிக வளாகத்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில்&nbsp; 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> வணிக வளாகம் மீது ட்ரோன் தாக்குதல்</h2><p>
உக்ரைனின் ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க்(Dnipropetrovsk) பிராந்தியத்தின் பாவ்லோஹ்ராட்(Pavlohrad) நகரில் அமைந்துள்ள வணிக வளாகத்தை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p> இந்த தாக்குதலில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2166ca43-de07-4ac7-af9f-705dfdab350e/26-6aa31267428aa.webp' /></p><p> பகல் நேரத்தில் மக்கள் அதிக அளவு நடமாடும் இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக உக்ரைனின் உள்துறை அமைச்சர் இவான் விஹிவ்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள கடைகளும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன.</p><p></p><p> உக்ரைன் அவசரகால சேவையினர் வெளியிட்ட காட்சிகளில், தீயணைப்பு துறையினர் அடர் புகைக்கு மத்தியில் தீப்பற்றி எரியும் வாகனங்களை அணைப்பதை பார்க்க முடிகிறது.</p><h2> ஜெலென்ஸ்கி கண்டனம்</h2><p>ரஷ்யாவின் இந்த அத்துமீறிய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் வணிக வளாகத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்யா திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p> இதற்கிடையில் ரஷ்யாவின் சோச்சி நகரில் உள்ள சுற்றுலாத் தலத்தில் உக்ரைனின் கடல்சார் ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் காயமடைந்ததுடன் 3 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T20:26:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோகா துறைமுக நகரை கைப்பற்றிய ஹூதி படையினர்: செங்கடலில் வீழ்ந்த சவுதி ஆதரவு படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthi-s-capture-red-sea-port-of-mokha-1789070506"></link>
            <id>https://news.lankasri.com/article/houthi-s-capture-red-sea-port-of-mokha-1789070506</id>
            <summary type="text">Houthi’s Capture Red Sea Port of Mokha: செங்கடல் துறைமுக நகரான மோகாவை ஹூதி கிளர்ச்சியாளர்கள் படை கைப்பற்றியுள்ளனர். மோகாவை கைப்பற்றிய&amp;nbsp;ஹூதிகள்
ஏம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthi’s Capture Red Sea Port of Mokha: செங்கடல் துறைமுக நகரான மோகாவை ஹூதி கிளர்ச்சியாளர்கள் படை கைப்பற்றியுள்ளனர்.</p><h2> மோகாவை கைப்பற்றிய&nbsp;ஹூதிகள்</h2><p>
ஏமனின் தென்மேற்கு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி(Houthi)&nbsp;கிளர்ச்சியாளர்கள் படையினருக்கும் சவுதி ஆதரவு பெற்ற அரசு படையினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.</p><p> ஒரு வார கால மோதலில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec8e6c8-7e03-42b2-92e2-1c9cbe1e9bbb/26-6aa30cac5cfc1.webp' /></p><p> இந்நிலையில் இந்த மோதலின் முக்கிய திருப்புமுனையாக ஹூதி படையினர் செங்கடலில் உள்ள துறைமுக நகரான மோகாவை(Mokha) கைப்பற்றியுள்ளனர்.</p><p> மோகா துறைமுகம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் கடல்வழி வர்த்தக பாதையின் தெற்கு நுழைவு வாயிலான பாப் அல்-மந்தப் ஜலசந்தியில் இருந்து ஈரானிய ஆதரவு பெற்ற ஹூதி படையினர் வெறும் 46 மைல்கள் தொலைவில் மட்டுமே உள்ளனர்.</p><p> இதற்கிடையில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு எந்தவொரு தடையையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை என்று ஹூதி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> இருப்பினும் சவுதி அரேபியாவுக்கு சொந்தமான கப்பல்களை குறிவைத்து தாக்கும் நடவடிக்கை தொடரும் என்றும் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80959e20-ac0b-4596-882e-c81162c7c34d/26-6aa30cad12a4c.webp' /></p><h2> பொருளாதார சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம்</h2><p>ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை அடுத்து, எண்ணெய் ஏற்றுமதிக்கு சவுதி அரேபியா பெருமளவு செங்கடல் வழியை நம்பியிருந்தது.</p><p>ஆனால் தற்போது செங்கடலில் உள்ள முக்கிய துறைமுகமான மோகா ஹூதி படையினரிடம் வீழ்ந்துள்ளது. இதனால் சர்வதேச எண்ணெய் விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T20:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரக்கு கப்பலில் பற்றிய பயங்கர தீ: சீன துறைமுகத்தில் 20 பேர் பலி, 5 பேரை காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cargo-ship-fire-at-china-s-qingdao-port-20-dead-1789068169"></link>
            <id>https://news.lankasri.com/article/cargo-ship-fire-at-china-s-qingdao-port-20-dead-1789068169</id>
            <summary type="text">Cargo Ship Fire at china’s Qingdao Port, 20 Dead: சீன துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட கோர விபத்தில் 20 பேர் வரை பலியாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Cargo Ship Fire at china’s Qingdao Port, 20 Dead: சீன துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட கோர விபத்தில் 20 பேர் வரை பலியாகியுள்ளனர்.</p><h2> சரக்கு கப்பலில் தீ விபத்து</h2><p>வடகிழக்கு சீனாவின் முக்கிய துறைமுக நகரான சிங்டாவ்வில்(Qingdao) பழுதுபார்க்கும் பணிக்காக துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p> அத்துடன் 5 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அந்நாட்டு அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி முதல் ஓஷன் மெலடி(Ocean Melody) என்ற பெயர் கொண்ட இந்த லைபீரிய(Liberian) கொடிய ஏந்திய கப்பலானது சிங்டாவ் துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4f0ed28-14b2-4cf4-93db-c44d46bcef56/26-6aa3038ae1d28.webp' /></p><p> விபத்துக்குள்ளான இந்த கப்பலில் மொத்தம் 42 பேர் வரை இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>கடந்த வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய தீயானது இன்று மதியம் 2.30 மணிக்கு முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் அவசர கால மீட்பு படையினர் 12 பேர் பத்திரமாக மீட்டுள்ளனர். 5 பேர் வரை தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/826ef271-4dc5-4838-940f-a0fb1bc79da5/26-6aa3038b93e7b.webp' /></p><p> இந்நிலையில், கப்பலில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணத்தை விரைவாக கண்டறியவும், தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.</p><p> விபத்து ஏற்பட்ட இந்த துறைமுகம் சீனாவின் மாநில கப்பல் கட்டும் கார்ப்பரேஷன் நிறுவனத்தினால்(CSSC) நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T19:23:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் வீதியில் நடந்த கத்திக்குத்து: 4 பேர் வரை மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/london-street-stabbing-4-hospitalised-1789059949"></link>
            <id>https://news.lankasri.com/article/london-street-stabbing-4-hospitalised-1789059949</id>
            <summary type="text">லண்டனின் முக்கிய வீதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 4 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.லண்டனில் கத்திக்குத்து தாக்குதல்வியாழக்கிழமை மதியம் தென்கிழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனின் முக்கிய வீதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 4 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>லண்டனில் கத்திக்குத்து தாக்குதல்</h2><p>வியாழக்கிழமை மதியம் தென்கிழக்கு லண்டனின் பரபரப்பான வீதியில் நடந்த திடீர் கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>செப்டம்பர் 10ம் திகதி மதியம் 2 மணியளவில் ப்ராம்லி உயர் வீதியில் அரங்கேறிய கத்திக்குத்து சம்பவம் குறித்து அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p> இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த 4 பேரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ab0552a-5b1b-4985-b12b-72329fbb5a0e/26-6aa2e36f07ce5.webp' /></p><p> இந்த சம்பவத்தை தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு சிறப்பு பாராமெடிக் குழுவினர், ஆம்புலன்ஸ் குழுக்கள், வான்வழி ஆம்புலன்ஸ்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் வரவழைக்கப்பட்டனர்.</p><p>இந்த வன்முறை சம்பவத்தில் கிட்டத்தட்ட 7 சந்தேக நபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T18:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் ஈரானிய உளவுத் துறைக்கு உதவிய இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-arrested-in-london-over-ties-to-iran-intel-1789065007"></link>
            <id>https://news.lankasri.com/article/2-arrested-in-london-over-ties-to-iran-intel-1789065007</id>
            <summary type="text">2 Arrested in London Over Ties to Iran Iran&#039;s intelligence: ஈரானிய உளவுத் துறைக்கு உதவியதாக பிரித்தானியாவில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>2 Arrested in London Over Ties to Iran Iran's intelligence: ஈரானிய உளவுத் துறைக்கு உதவியதாக பிரித்தானியாவில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2> ஈரானிய உளவுத் துறைக்கு உதவிய இருவர் கைது</h2><p>
ஈரானிய உளவுத்துறைக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டின் கீழ் லண்டனில் இரண்டு பேரை லண்டன் பெருநகர காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.</p><p> தலைநகர் லண்டனில் நடத்தப்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> &nbsp;கைது செய்யப்பட்ட 42 வயது பெண்ணும், 60 வயது ஆணும் லண்டனில் வெவ்வேறு முகவரியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6680259-4b81-425e-a7eb-621133b1f178/26-6aa2f730df52b.webp' /></p><p> இருவரும் வெளிநாட்டு உளவுத்துறைக்கு உதவுவதை தடை செய்யும் 2023ம் ஆண்டின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 3-யின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p> லண்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இருவரும், அக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படும் வரை தீவிரமான நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p> இந்த நடவடிக்கையால் சமூகத்திற்கு எந்தவொரு உடனடி அச்சுறுத்தல்களும் இல்லை என்று லண்டன் பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹெலன் ஃபிளானகன் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T18:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்டானில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-missiles-damage-us-jets-in-jordan-1789047864"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-missiles-damage-us-jets-in-jordan-1789047864</id>
            <summary type="text">Iran missiles damage US jets in Jordan: ஜோர்டானில் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதமடைந்துள்ளன.

அமெரிக்க போர் விமானங்கள் சேதம்ஜோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran missiles damage US jets in Jordan: ஜோர்டானில் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதமடைந்துள்ளன.</p><h2>

அமெரிக்க போர் விமானங்கள் சேதம்</h2><p>ஜோர்டானில் உள்ள Muwaffaq Salti விமான தளம் (Al-Azraq) மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பல அமெரிக்க போர் விமானங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அமெரிக்காவின் A-10 Thunderbolt (Warthog) விமானம் கடுமையாக சேதமடைந்தது, அதன் ஒரு சிறகு முற்றிலும் அழிந்துவிட்டது. மேலும், சுமார் எட்டு F-15 போர் விமானங்கள் சிறிய அளவில் சேதங்களை சந்தித்தன. ஆனால் அவை பின்னர் சேவைக்கு திரும்பியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/287e3fff-93d3-4de8-a047-6496616859ca/26-6aa2b50007a97.webp' /></p><p>இந்த தாக்குதலின் போது, அமெரிக்க படைகள் 30-க்கும் மேற்பட்ட Patriot interceptor missiles-ஐ பயன்படுத்தி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டன.
</p><p>
ஈரான், தண்டனை நடவடிக்கை (punitive operation) என அழைக்கப்படும் இந்த தாக்குதலை, அமெரிக்கா தனது ஐந்து ஈரான் எண்ணெய் கப்பல்களை அழித்ததற்கான பதிலடி எனக் கூறியுள்ளது.
</p><p></p><p>ஜோர்டான் அரசு, “எங்கள் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் 20 ஏவுகணைகளில் 18-ஐ தடுத்து நிறுத்தின. மீதமுள்ள 2 ஏவுகணைகள் மக்கள் வசிப்பிடமற்ற பகுதிகளில் விழுந்தன. உயிரிழப்புகள் எதுவும் இல்லை” என தெரிவித்ததாவது.
</p><p>
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையேயான நீண்டகால பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. Strait of Hormuz மற்றும் Bab-el-Mandeb போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் இரு தரப்பும் தங்கள் தாக்குதல்களை அதிகரித்து வருகின்றன.
</p><p>
சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரிப்பதாவது, “இந்த தாக்குதல்கள், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றத்தை உலகளாவிய எரிபொருள் விநியோகத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தாக மாற்றுகின்றன” எனக் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T17:07:09+00:00</updated>
        </entry>
    </feed>
