<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-09T13:30:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் சதமே 150 ஓட்டங்கள் விளாசிய 24 வயது வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jordan-hermann-maiden-century-150-runs-vs-namibia-1788959376"></link>
            <id>https://news.lankasri.com/article/jordan-hermann-maiden-century-150-runs-vs-namibia-1788959376</id>
            <summary type="text">Jordan hermann 150 runs vs namibia: தென் ஆப்பிரிக்காவின் ஜோர்டன் ஹெர்மன் நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.

நமீபியா அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jordan hermann 150 runs vs namibia: தென் ஆப்பிரிக்காவின் ஜோர்டன் ஹெர்மன் நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.
</p><p>
நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க தொடக்க வீரரான ஜோர்டன் ஹெர்மன் 150 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>டோனி டி ஸோர்சி&nbsp;72</h2><p>
தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி Windhoek-யில் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/281f418b-84d3-43ac-889b-175340ad6a2b/26-6aa15c0166218.webp' />&nbsp;</p><p></p><p>நாணய சுழற்சியில் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, தென் ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.</p><p>

கோன்னோர் எஸ்டர்ஹுய்ஸன் 10 ஓட்டங்களில் வெளியேற, ஜோர்டன் ஹெர்மன் மற்றும் டோனி டி ஸோர்சி கூட்டணி 190 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p>அரைசதம் அடித்த டோனி 72 ஓட்டங்களில் வெளியேற, டெவால்ட் பிரேவிஸ் 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e32fa0-893e-4438-a190-579e3fe3348a/26-6aa15c007fd7e.webp' />&nbsp;&nbsp;</p><h2>ஜோர்டன் ஹெர்மன்&nbsp;150 </h2><p>மறுமுனையில் அதிரடி மிரட்டிய ஜோர்டன் ஹெர்மன் முதல் சதத்தை பதிவு செய்தார். அணியின் ஸ்கோர் 275 ஓட்டங்களாக உயர்ந்தபோது, ஜோர்டன் ஹெர்மன் 126 பந்துகளில் 150 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 17 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p>கார்பின் போஷ் அதிரடியாக 24 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 39 ஓட்டங்கள் விளாச, தென் ஆப்பிரிக்க அணி 348 ஓட்டங்கள் குவித்தது. ரூபென் ட்ரம்பல்மன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d39ca20-34cb-4ac3-b07f-36b1e2c5e460/26-6aa15a93b4f85.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் நகரமொன்றில் பாரிய தீவிபத்து: ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/person-dies-in-fire-at-swiss-commercial-building-1788959278"></link>
            <id>https://news.lankasri.com/article/person-dies-in-fire-at-swiss-commercial-building-1788959278</id>
            <summary type="text">Person dies in fire at Swiss fruit and vegetable wholesaler building: சுவிட்சர்லாந்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Person dies in fire at Swiss fruit and vegetable wholesaler building: சுவிட்சர்லாந்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானார்.</p><p>


சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்திலுள்ள Bellach என்னுமிடத்தில், காய்கறிகள், பழங்கள் மொத்த விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்று உள்ளது.
</p><h3>
ஒருவர் பலி</h3><p>

இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் அந்தக் கட்டிடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6457589-5265-46fa-95b2-c26584fb927c/26-6aa15a2f6510d.webp' /></p><p>
</p><p>
தகவலறிந்து தீயணைப்புக்குழுவினர் அங்கு வரும் முன், தீ கட்டிடத்தை கபளீகரம் செய்துவிட்டிருக்கிறது.&nbsp;</p><p></p><p>
கட்டிடம் தீயில் முழுமையாக சேதமடைந்துவிட, பொலிசார் மேற்கொண்ட ஆய்வில், அந்தக் கட்டிடத்துக்குள் ஒருவர் உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் யார், எதனால் தீப்பற்றியது என்பது போன்ற விடயங்கள் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 டொலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை - மத்திய கிழக்கு மோதல் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brent-oil-tops-100-dollars-amid-middle-east-war-1788959020"></link>
            <id>https://news.lankasri.com/article/brent-oil-tops-100-dollars-amid-middle-east-war-1788959020</id>
            <summary type="text">Brent oil tops 100 dollars amid middle east war: மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்ததால், உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

100 டொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Brent oil tops 100 dollars amid middle east war: மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்ததால், உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.</p><h2>

100 டொலரை தாண்டிய&nbsp;கச்சா எண்ணெய்</h2><p>ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை செப்டம்பர் 9 அன்று ஒரு பீப்பாய் 100 டொலரை தாண்டியது. கடந்த ஜூலை 24-க்குப் பிறகு முதல் முறையாக 100 டொலரை கடந்துள்ளது.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஆறு மாதங்களாக நீடிக்கும் மோதல், எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eafbe0ea-f0cd-4eea-bc08-8e908025515a/26-6aa1592daf61f.webp' /></p><p>ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் சவுதி அரேபியாவின் எரிசக்தி நிலையங்களை தாக்கியதால், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தீப்பற்றி சேதமடைந்தன. இதனால் செங்கடல் வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்கள் கூட அபாயத்தில் உள்ளன.
</p><p>
சந்தை நிபுணர்கள், இந்த மோதல் நீண்ட காலம் நீடிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர். இது தற்காலிக உயர்வு அல்ல, பாதுகாப்பு அபாயம் காரணமாக உருவான நிலையான விலை உயர்வு என Abaxx Markets நிறுவனத்தின் ஜெஃப்ரி கர்ரி தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>எண்ணெய் விநியோகம் குறையும்</h2><p>அமெரிக்கா, கனடா, கயானா போன்ற OPEC கூட்டமைப்பில் அல்லாத நாடுகள் உற்பத்தியை அதிகரித்தாலும், சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) உலகளாவிய எண்ணெய் விநியோகம் இந்த ஆண்டு 4.3 மில்லியன் பீப்பாய் குறையும் என எச்சரித்துள்ளது.
</p><p>
Goldman Sachs, Bank of America, HSBC போன்ற முக்கிய வங்கிகள், எண்ணெய் விலை முன்னறிவிப்புகளை உயர்த்தியுள்ளன.
</p><p>
இந்த விலை உயர்வு உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பணவீக்கம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. குறிப்பாக, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T13:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி - தவெக தலைமையிலான கூட்டணிக்கு பெயர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tvk-to-led-secular-social-justice-victory-alliance-1788958803"></link>
            <id>https://news.lankasri.com/article/tvk-to-led-secular-social-justice-victory-alliance-1788958803</id>
            <summary type="text">tvk led alliance named as secular social justice victory alliance: தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப...</summary>
            <content type="html"><![CDATA[<p>tvk led alliance named as secular social justice victory alliance: தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. </p><h3>

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி
</h3><p>
தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் இன்று மாலை சென்னை பனையூரில் நடைபெற்றது. </p><p>

இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9df255b-ea65-48ab-a118-883c35ee2c31/26-6aa1585469af3.webp' /></p><p> 

மேலும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டனர். </p><p>

இந்நிலையில், தவெக தலைமையிலான இந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், "மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் செயல்படும். 

கூட்டணியின் தலைவராக விஜய் இருப்பார். புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும்.</p><p> இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என யாரையும் இதுவரை முன்னிறுத்தியது கிடையாது. கடந்த தேர்தலிலும் அப்படி யாரையும் அறிவிக்கவில்லை. 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை இந்தியா கூட்டணி முடிவு செய்யும்.</p><p> 

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்.அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐசிசியின் முடிவால் ரூ.656 கோடி இழப்பை சந்திக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-cricket-to-face-rs-656-cr-revenue-loss-1788958061"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-cricket-to-face-rs-656-cr-revenue-loss-1788958061</id>
            <summary type="text">இலங்கையில் நடைபெறவிருந்த மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவிற்கு மாற்றப்பட்டதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் 656 கோடி இலங்கை ரூபாய் இழப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நடைபெறவிருந்த மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவிற்கு மாற்றப்பட்டதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் 656 கோடி இலங்கை ரூபாய் இழப்பை சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. </p><h3>

ரூ.656 கோடி இழப்பை சந்திக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம் </h3><p>

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் தொடர்ச்சியான அரசாங்கத் தலையீடு மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் (SLC) தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாததால், அரசு இடைக்கால குழு அமைத்து நிர்வகித்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8a2ebf6-b349-465c-83b5-4033718c6aaa/26-6aa1556e8c027.webp' /></p><p>
இதன் காரணமாக இலங்கையில் நடைபெறவிருந்த மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை இந்தியாவிற்கு மாற்றுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. </p><p>

6 அணிகள் பங்கேற்க உள்ள இந்தத் தொடர், 2027 பிப்ரவரி 14 முதல் 28 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்த தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்ததால், நேரடியாகவும் சுற்றுலா உள்ளிட்டவை மூலமும் இலங்கை கிரிக்கெட் வாரியம் சுமார் 20 மில்லியன் டொலர்(இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.656 கோடி) இழப்பை சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐசிசி தொடரை நடத்தும் உரிமையை இழப்பது இது முதல் முறை இல்லை.</p><p> 

முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் நிர்வாகக் கவலைகள் காரணமாக ஐசிசி இலங்கை கிரிக்கெட்டை இடைநீக்கம் செய்ததுடன், 2024 ஆம் ஆண்டுக்கான U19 உலகக் கிண்ணத்தை இலங்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றியது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T12:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவள் ஒரு தேவதையாக இருந்தாள்: கோர விபத்தில் பலியான சிறுமிகள்..உறவினர் உருக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/children-identified-in-car-crash-west-of-melbourne-1788954732"></link>
            <id>https://news.lankasri.com/article/children-identified-in-car-crash-west-of-melbourne-1788954732</id>
            <summary type="text">Two Children killed in car crash west of melbourne: அவுஸ்திரேலியாவில் கோர விபத்தில் பலியான சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two Children killed in car crash west of melbourne: அவுஸ்திரேலியாவில் கோர விபத்தில் பலியான சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு மேற்கே நிகழ்ந்த கோர விபத்தில் பலியான சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2> 

கோர விபத்து</h2><p>கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு மேற்கே, பாடசாலையில் இருந்து 4WD வாகனம் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கோர விபத்திற்குள்ளானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/701946c4-e7de-4668-84dc-25728979454c/26-6aa14b25cd8a4.webp' /></p><p></p><p>
இதில் சாரா எல் ஹவ்லி (7) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, ஓசாமா உட்பட பிற குழந்தைகள் காயங்களுடன் மருத்துவானைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.</p><p> 

அங்கு கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்ட சிறுமி ஓசாமா (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். </p><h2>

சிறந்த மாணவி</h2><p>இந்த நிலையில் உயிரிழந்த சிறுமிகள் சாரா, ஓசாமா இருவரும் உறவினர்கள் என்பது தெரிய வந்துள்ளது. </p><p>

அவர்கள் இருவரும் மெல்டன் சவுத்தில் உள்ள அல் இமான் பாடசாலையில் பயின்றனர். சிறுமி சாரா 'வாரத்தின் சிறந்த மாணவி' என்ற விருதை பெற்றவர் ஆவார்.
</p><p>
அவரது உறவினர் ஒருவர் சாரா குறித்து பேசும்போது, 'அவள் பாடசாலையிலேயே மிகவும் புத்திசாலியான மாணவி. அவள் ஒரு தேவதையாக இருந்தாள்... இப்போதும் ஒரு தேவதையாக இருக்கிறாள். 

நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன், அவள் இறந்துவிட்டாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. </p><p>நாங்கள் அங்கு செல்ல முயன்றோம். 

ஆனால், அவளைப் பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. எனினும் என் மகளை அவர்கள் (பொலிஸார்) அனுமதித்தார்கள்; அவள் சாராவை பார்த்துவிட்டாள்' என்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0b01fc0-885e-46f4-8f70-f64387928d1a/26-6aa14b25237ab.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T12:01:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா திரும்பிய இளவரசர் ஹரி: ஒரு புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-charles-know-harry-uk-returns-48-hrs-before-1788954474"></link>
            <id>https://news.lankasri.com/article/king-charles-know-harry-uk-returns-48-hrs-before-1788954474</id>
            <summary type="text">King Charles learnt about Harry Meghan’s UK relocation plan, only 48 Hours Before: ஹரி, மேகன் தம்பதியர் பிரித்தானியா திரும்புவது குறித்து, 2 அல்லது மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>King Charles learnt about Harry Meghan’s UK relocation plan, only 48 Hours Before: ஹரி, மேகன் தம்பதியர் பிரித்தானியா திரும்புவது குறித்து, 2 அல்லது மூன்று நாட்களுக்கு முன்புதான் மன்னர் அறிந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>

பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரியும் அவரது மனைவி மேகனும், ஆறு ஆண்டுகளுக்கு முன் கோபித்துக்கொண்டு ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa408dd9-9d72-4312-b91c-06b1262eaf25/26-6aa1476c0f9ac.webp' /></p><p>
இந்நிலையில், ஹரியும் மேகனும் தங்கள் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார்கள். அவர்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><h3>
ஒரு புதிய தகவல்
</h3><p>
விடயம் என்னவென்றால், எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றே முடிவு செய்யும், ஹரி, தான் பிரித்தானியா திரும்பும் விடயம் குறித்து, வழக்கம்போல முன் கூட்டியே மன்னருக்குத் தெரியப்படுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
ஆம், ஹரியும் மேகனும் தங்கள் பிள்ளைகளுடன் பிரித்தானியா திரும்ப இருக்கிறார்கள் என்னும் விடயம் சமூக ஊடகங்களில் லீக் ஆவதற்கு 48 அல்லது 72 மணி நேரம் முன்புதான் அந்த தகவல் மன்னருக்கும் தெரியுமாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87a9fe8c-64c4-4e57-9a7d-9f3ea6044280/26-6aa1476cba8ed.webp' /></p><p>
ஜூலை மாதம் பிரித்தானியா வந்து தன் தந்தையை ஹரி சந்தித்தபோது கூட, தாங்கள் பிரித்தானியா திரும்பும் திட்டம் குறித்து அவர் மன்னரிடம் கூறவில்லை என்றும் கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><p>
ஆகவே, பிரித்தானியா திரும்பியதும் எசகு பிசகாக ஹரி எதையாவது செய்துவிடுவாரோ என்னவோ என்று எண்ணித்தானோ என்னவோ, அவசர அவசரமாக அரண்மனை வட்டாரம், ஹரியும் மேகனும் சராசரி மக்களாகவே கருதப்படுவார்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>
அதேபோல, தங்களை சாதாரண மக்கள் என மன்னர் அறிவித்துள்ள விடயம் தங்களை ஆச்சரியமடையவைத்ததாக ஹரியும் மேகனும் கூறியுள்ளதைப் பார்த்தால், மன்னர் எடுத்த முடிவு சரிதானோ என்றே தோன்றுகிறது!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:48:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/products-to-affect-in-canada-to-us-counter-tariff-1788940867"></link>
            <id>https://news.lankasri.com/article/products-to-affect-in-canada-to-us-counter-tariff-1788940867</id>
            <summary type="text">List of products from the United States subject to counter tariffs: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள் குறித்த வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>List of products from the United States subject to counter tariffs: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள் குறித்த விவரம்.
</p><p>
கனடா அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப்போர் மும்முரமாகிவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bba6c30-caed-4872-9b29-c3fba2581d5a/26-6aa112449e40f.webp' /></p><p>

27.6 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான கனேடியப் பொருட்கள் மீது 50 சதவிகித சுங்க வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.&nbsp;</p><p>
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே 27.6 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 15 முதல் 50 சதவிகித சுங்க வரி விதிக்க கனடா முடிவு செய்துள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இந்த வரிவிதிப்பால் கனேடிய மக்களும்தான் பாதிக்கப்பட உள்ளார்கள். ஏனென்றால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அந்தப் பொருட்களை கனேடியர்கள்தான் வாங்கப்போகிறார்கள்!
</p><h3>
எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்?
</h3><p>
கனடாவின் பதிலடி வரி விதிப்பால் அதிக அளவில் பாதிக்கப்படப்போவது உணவு மற்றும் பானங்கள்தான். உணவு தயாரிக்கத் தேவையான பொருட்கள், பால் பொருட்கள், ஆகியவை அதிகம் பாதிக்கப்பட உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac3ee1c8-b3c0-4797-8f58-5bc9b6f325ff/26-6aa112454fe53.webp' /></p><p>
அடுத்தபடியாக, வீட்டு உபயோகப் பொருட்களும், விவசாயத்துக்குத் தேவையான பொருட்களும் விலை உயர இருக்கின்றன.
</p><p>
விவசாயத்துக்குத் தேவையான பொருட்கள் விலை உயர உள்ளதால், அதுவும் உணவுப்பொருட்கள் விலையை பாதிக்கக்கூடும்.&nbsp;</p><p></p><p>
மேலும், கடல் உணவுகள், மரச்சாமான்கள், அழகு சாதனப்பொருட்கள், ஆண்களுக்கான உடைகள், பாதுகாப்பு உடைகள் போன்றவையும் விலை அதிகரிக்கலாம்.</p><p>

இதுபோக, கிரேன்கள், ஜாக் மற்றும் ஃபோர்க்லிஃப்ட், ரயில் பெட்டிகள், இயந்திரங்களில் பொருத்தப்படும் பம்புகள், மின்விசிறிகள் ஆகியவையும் விலை உயரலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86c87021-067e-4a18-b2dc-5a9d1facdf67/26-6aa1124601b2d.webp' /></p><p>

இவற்றை எல்லா பொதுமக்களும் வாங்குவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அவற்றை வாங்கும் நிறுவனங்கள் அவற்றிற்கான செலவை நுகர்வோர் மீதுதான் திணிக்கும். ஆக, அதிலும் மக்கள்தான் பாதிக்கப்பட உள்ளார்கள்.
</p><p>
மேலும், அமெரிக்க ஸ்டீல், காப்பர் தயாரிப்புகளும் விலை அதிகமாக உள்ளன.
</p><p>
ட்ரம்ப் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அமெரிக்கா கனடா மீது வரிகள் விதிக்கத் துவங்கியதிலிருந்தே கனேடிய மக்கள் பலர் கனேடிய தயாரிப்புகளையே வாங்கத் துவங்கியுள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இந்த வரிப்போரால், அவைகளும் விலை உயர உள்ளன.
</p><p>
ஆனாலும், தாங்கள் கனேடியப் பொருட்களையே வாங்கப்போகிறோம் என உறுதியாகக் கூறுகிறார்களாம் 60 சதவிகித கனேடியர்கள்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழலையர் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை சுட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gunman-killed-kindergarten-teacher-in-thailand-1788949637"></link>
            <id>https://news.lankasri.com/article/gunman-killed-kindergarten-teacher-in-thailand-1788949637</id>
            <summary type="text">A gunman shot and killed a kindergarten teacher in Thailand: தாய்லாந்து நாட்டில், மழலையர் பள்ளி ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர், ஆசிரியை ஒருவரை சுட்டுக்கொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>A gunman shot and killed a kindergarten teacher in Thailand: தாய்லாந்து நாட்டில், மழலையர் பள்ளி ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர், ஆசிரியை ஒருவரை சுட்டுக்கொன்ற விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p>

புதன்கிழமையன்று, தாய்லாந்திலுள்ள Chonburi என்னுமிடத்தில் அமைந்துள்ள மழலையர் பள்ளி ஒன்றிற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.</p><h3>

பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவம்</h3><p>

வகுப்பொன்றில் குழந்தைகள் அமர்ந்திருக்க, அந்த நபர் அந்த வகுப்பாசிரியையை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22f36c16-ec55-417e-813d-f7902f4d9b91/26-6aa1348756f2a.webp' /></p><p>
அந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, துப்பாக்கியால் சுட்ட நபர் தப்பியோடியுள்ளார்.
</p><p>
விசாரணையில், அவர் அந்த ஆசிரியையின் கணவர் என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>
பள்ளியிலிருந்த பிள்ளைகள் அனைவரும், மற்ற ஆசிரியர்களும் பாதுகாப்பாக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள்.
</p><p>
என்றாலும், அந்த பயங்கரக் காட்சியைக் கண்ட பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து அவர்கள் விடுபடுவதற்காக, மன நல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
பட்டப்பகலில் ஒருவர் மழலையர் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை ஒருவரை சுட்டுகொன்ற விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:27:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் மயமாகும் BBL - அணிகளை வாங்க IPL உரிமையாளர்கள் ஆர்வம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ipl-owners-eye-on-bbl-after-privatisation-1788949195"></link>
            <id>https://news.lankasri.com/article/ipl-owners-eye-on-bbl-after-privatisation-1788949195</id>
            <summary type="text">ipl owners eye on bbl after -privatisation: BBL தொடரில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தனியார் மயத்தை அனுமதித்துள்ள நிலையில், இந்திய IPL உரிமையாளர்கள் அணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ipl owners eye on bbl after -privatisation: BBL தொடரில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தனியார் மயத்தை அனுமதித்துள்ள நிலையில், இந்திய IPL உரிமையாளர்கள் அணிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது.
</p><h3>
தனியார் மயமாகும் BBL&nbsp;</h3><p>
2011 ஆம் ஆண்டு முதல் பிக் பாஸ் லீக் (Big Bash League - BBL) T20 தொடரை அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், நடத்தி வருகிறது. இதில் 8 அணிகள் பங்கு பெற்று வருகின்றன. </p><p>

BBL தொடரை இந்தியாவில் பிரபலப்படுத்தும் வகையில், 2026 BBL தொடரின் தொடக்கப்போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1cd7b87-7ebb-46cf-974f-5809d1bb4cb6/26-6aa132cd2dcb1.webp' /></p><p>

இந்நிலையில், Big Bash League போட்டிகளில் தனியார் முதலீட்டை அனுமதிக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது. </p><p>

அதேவேளையில். சர்வதேசப் போட்டிகளின் அட்டவணை, வீரர்களின் பங்கேற்பு, ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் சம்பள உச்சவரம்புகள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை அவுஸ்திரேலிய வாரியம் தக்கவைத்துக் கொள்ள உள்ளது. </p><p>

மேலும், வருங்கால வாங்குபவர்களை அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ தெளிவான அதிகாரத்தையும் கொண்டுள்ளது. </p><p>

இந்திய உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 2 அல்லது 3 அணிகள் மட்டுமே விற்கப்படலாம் என கூறப்படுகிறது. </p><p>

2027-28 BBL தொடரில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை முழுமையாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் விற்பனை வெற்றிகரமாக நிறைவேறினால், மற்ற அணிகளும் இதே முறையை பின்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.</p><h3>

ஐபிஎல் உரிமையாளர்கள் ஆர்வம் </h3><p>

தங்களது உலகளாவிய கிரிக்கெட் வணிகங்களை விரிவுபடுத்த விரும்பும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு ஒரு பெரிய புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab8b127c-420b-4efa-a424-5ab6d68f59ae/26-6aa132cc751c6.webp' /></p><p>
ஐபிஎல் உரிமையாளர்கள், SA20, ILT20, MLC ஆகிய கிரிக்கெட் லீக்களில் ஏற்கனவே சொந்தமாக அணிகளை வைத்துள்ளன. </p><p>

இந்திய ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள் தற்போது வெளிநாட்டு ஃபிரான்சைஸ் லீக்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. </p><p>

எதிர்காலத்தில் இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டால், ஐபிஎல் உரிமையாளர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக அமையும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த கேப்டன்: சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tilak-varma-99-runs-ezone-336-all-out-1788948566"></link>
            <id>https://news.lankasri.com/article/tilak-varma-99-runs-ezone-336-all-out-1788948566</id>
            <summary type="text">துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

சேப்பாக்கத்தில் நடந்து வரும் துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99...</summary>
            <content type="html"><![CDATA[<p>துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
</p><p>
சேப்பாக்கத்தில் நடந்து வரும் துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99 ஓட்டங்கள் எடுக்க, தென் மண்டல அணி 336 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><h2>திலக் வர்மா&nbsp;99 </h2><p> 

துலீப் கிண்ண இறுதிப்போட்டியின் நான்காவது நாளில் கிழக்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03e9507-0183-4a60-9159-2cc8f66b38cd/26-6aa1327161581.webp' /></p><p></p><p>

முன்னதாக, தென் மண்டல அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாற, அணித்தலைவர் திலக் வர்மா (Tilak Varma) பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்தார். </p><p>

சாமா வி மிலிந்த் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைக்க, தென் மண்டல அணி 300 ஓட்டங்களை கடந்தது. </p><p>

அதன் பின்னர் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. சாமா 43 ஓட்டங்களில் வெளியேற, திலக் வர்மா 99 ஓட்டங்கள் எடுத்த நிலையில் குரைஷி பந்துவீச்சில் அவுட் ஆனார்.&nbsp;</p><h2>இஷான் கிஷன்&nbsp;அரைசதம் </h2><p> 

தென் மண்டல அணி 336 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், ஷமி, குரைஷி மற்றும் ஷிகர் மோகன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c32b4a38-7c0a-4784-960d-9a3468f2c7b0/26-6aa1326fd5001.webp' /></p><p>
பின்னர் 372 ஓட்டங்கள் முன்னிலையுடன் கிழக்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

அபிமன்யு ஈஸ்வரன் 3 ஓட்டங்களில் சிராஜ் பந்துவீச்சில் அவுட் ஆக, வைபவ் சூர்யவன்ஷி 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;இறங்கி சிக்ஸர் அடிக்க முயன்ற அவர் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். </p><p>

அடுத்து கைகோர்த்த ஷிகர் கான், இஷான் கிஷன் கூட்டணி வேகமாக ஓட்டங்களை சேர்த்தது. அணித்தலைவர் இஷான் கிஷன் (Ishan Kishan) அரைசதம் அடித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0db85c8-5bc0-4760-a56a-ee233c1fa0ea/26-6aa13270a990a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகள்: நாடாளுமன்றம் வரை சலசலப்பை ஏற்படுத்திய விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/parliment-debate-in-120-migrants-in-rnli-boats-1788948029"></link>
            <id>https://news.lankasri.com/article/parliment-debate-in-120-migrants-in-rnli-boats-1788948029</id>
            <summary type="text">Ports denied request to land 120 migrants in RNLI boats: 120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகளுக்கு துறைமுகங்கள் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ports denied request to land 120 migrants in RNLI boats: 120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகளுக்கு துறைமுகங்கள் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


இங்கிலாந்திலுள்ள துறைமுகங்கள் இரண்டிற்கு 120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விடயம் நாடாளுமன்றம் வரை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h3>

120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகள்</h3><p>

இங்கிலாந்தின் Isle of Wight தீவினருகே 120 பேருடன், பாரம் தாங்காமல், மெல்ல நகர்ந்துகொண்டிருந்த புலம்பெயர்வோர் படகொன்றை, RNLI (Royal National Lifeboat Institution) என்னும் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு படகுகள் கவனித்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/450293bd-ccd0-411a-8438-0b3ccc1fdc3e/26-6aa12e3ec15ba.webp' /></p><p>
உடனடியாக அந்த படகிலிருந்தவர்கள் தங்கள் படகுகளில் ஏற்றிக்கொண்டு கரை திரும்ப முயன்றுள்ளன அந்த RNLI அமைப்பின் படகுகள்.
</p><p>
ஆனால், இங்கிலாந்திலுள்ள போர்ட்ஸ்மௌத் துறைமுகமோ, சௌதாம்டன் துறைமுகமோ, தங்களுக்கு அனுமதியளிக்கவில்லை என RNLI அமைப்பு கூறுகிறது.&nbsp;</p><p></p><p>

கடைசியாக, லாங்ஸ்டோன் துறைமுகத்துக்கு வந்தால், அங்கு புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு சாலையை மறித்துக்கொண்டு நின்றதாகவும் கூறுகிறது RNLI அமைப்பு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58c06170-03d0-499c-85fb-e11720c41424/26-6aa12e3f73e5a.webp' /></p><p>
இந்த விடயம் நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது.
</p><p>
போர்ட்ஸ்மௌத் நகர கவுன்சில் தலைவரான ஸ்டீவ் பிற், உள்துறை அலுவலகத்தில் சரியான திட்டமிடல் இல்லாததால் நிகழ்ந்த சம்பவங்களுக்கு உள்துறை அலுவலகம் பதில் கூறவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.
</p><p>
அத்துடன், கோஸ்போர்ட் நாடாளுமன்ற உறுப்பினரான Dame Caroline Dinenage, Solent பகுதியிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களை சேகரிக்க முயன்றோம், உள்துறை அலுவலக தரப்பிலிருந்து மௌனம் மட்டுமே கிடைத்தது என்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a062aa-7aba-452f-903f-18f5242aab02/26-6aa12e4026b45.webp' /></p><p>
ஆகவே, பதற்றத்தையும் பயத்தையும் கட்டுப்படுத்தும் நிலையில் நாங்கள் இல்லை என்கிறார் அவர்.
</p><p>
அதாவது, கடலில் பயணித்துக்கொண்டிருந்த அந்த 120 புலம்பெயர்ந்தோர் எதற்காக சம்பந்தப்பட்ட துறைமுகங்களுக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.
</p><p>
அதற்கு உள்துறை அலுவலகம் அனுமதியளித்ததா, ஏன் அந்த துறைமுகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஏன் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு தகவல் அளிக்கப்படவில்லை என கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்துறை அலுவலகத் தரப்பில் திருப்திகரமான பதிலிலில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:01:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமன் போர் சவுதி அரேபியாவை எட்டினால், மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை செயல்படும்: பாகிஸ்தான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-warns-mecca-pact-may-trigger-war-1788946175"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-warns-mecca-pact-may-trigger-war-1788946175</id>
            <summary type="text">Pakistan warns mecca pact may trigger war: ஏமன் போர் சவுதி அரேபியாவை எட்டினால், மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை செயல்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pakistan warns mecca pact may trigger war: ஏமன் போர் சவுதி அரேபியாவை எட்டினால், மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை செயல்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
</p><p>
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ஏமன் போரின் தாக்கம் சவுதி அரேபியாவை எட்டினால், கடந்த மாதம் மெக்காவில் கையெழுத்திடப்பட்ட மெக்கா கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை உடனடியாக செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60e1d4b9-236f-4ef7-8ec9-530e60d1ed09/26-6aa12bc1e9fd9.webp' /></p><p>

இந்த உடன்படிக்கை ஆகஸ்ட் 7 அன்று பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. ஒரு உறுப்புநாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுவது, மூன்று நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது போலவே கருதப்படும் என ஆசிப் எச்சரித்துள்ளார்.
</p><p>
“இதில் எந்த குழப்பமும் இருக்கக் கூடாது. இது ஒரு கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை. சவுதி அரேபியாவிற்கு எதிரான தாக்குதல், மூன்று நாடுகளின் மீதும் தாக்குதல் என கருதப்படும்” என ஆசிப் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்த அறிவிப்பு, ஏமனின் ஹவுதி படைகள் சவுதி அரேபியாவின் நகரங்கள் மற்றும் எரிசக்தி அமைப்புகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. இதில் குறைந்தது 73 பொதுமக்கள் காயமடைந்தனர்.
</p><p>
இந்த நிலைமை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஏமன் போரின் தாக்கம் சவுதி அரேபியாவை எட்டினால், துருக்கி மற்றும் பாகிஸ்தான் நேரடியாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகும் அபாயம் உள்ளது.
</p><p>
பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள், இந்த உடன்படிக்கை செயல்படுத்தப்பட்டால், பிராந்தியத்தில் பெரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T09:47:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thousands-of-people-protest-after-afd-election-win-1788943422"></link>
            <id>https://news.lankasri.com/article/thousands-of-people-protest-after-afd-election-win-1788943422</id>
            <summary type="text">Thousands of people took to the streets across Germany after the AfD paty&#039;s election win: AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானோர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thousands of people took to the streets across Germany after the AfD paty's election win: AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
</p><p>


ஜேர்மன் கட்சிகள் பலவும், பொதுமக்களில் ஒரு பிரிவினரும் பயந்ததுபோலவே, ஜேர்மன் மாகாணமொன்றில் நடைபெற்ற தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஒன்று அமோக வெற்றி பெற்றுவிட்டது.</p><h3>

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி அமோக வெற்றி</h3><p>

ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி, தேர்தல் நடைபெற்றது.
</p><p>
அந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60e1a3f3-772d-469e-92cf-8858702d12f8/26-6aa11c3fa4579.webp' /></p><p>

வழக்கமாக இந்த விடயத்தில் கருத்துக்கணிப்புகள் பொய்யாகும் நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக, 44 சதவிகித வாக்குகளைப் பெற்று AfD கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><h3>
ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
</h3><p>
இந்நிலையில், ஜேர்மனியில் பல்வேறு நகரங்களில் AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக பொதுமக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.</p><p>

AfD கட்சி, ரஷ்ய ஆதரவுக் கட்சியான BSW கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
</p><p>
அப்படி, AfD கட்சி ஆட்சி அமைக்குமானால், Saxony-Anhalt மாகாணம், தீவிர வலதுசாரி, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஆளும் முதல் ஜேர்மன் மாகாணமாகிவிடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ad91c3e-c8b5-4549-8533-59bba1083261/26-6aa11c4057146.webp' /></p><p>

ஆக, ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி ஆட்சி அமைப்பதைப் பார்த்துக்கொண்டு மக்கள் அமைதியாக இருந்துவிடக்கூடாது என்கிறார்கள் ஆர்பாட்டங்களில் பேசுபவர்கள்.&nbsp;</p><p>
AfD கட்சி, கடுமையான புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட கட்சி ஆகும்.
</p><p>
புலம்பெயர்ந்தோரை மட்டுமின்றி, புலம்பெயர்தல் பின்னணி கொண்ட ஜேர்மன் குடிமக்களையும் நாடுகடத்துவது போன்ற தீவிரக் கொள்கைகள் அக்கட்சிக்கு உண்டு.
</p><p>
அத்துடன், AfD கட்சியினரில் பலர் ரஷ்ய ஜனாதிபதியான புடினுக்கு நெருக்கமானவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c08334d5-04cf-4a20-81ad-d08b1c908062/26-6aa11c410f88b.webp' /></p><p>
</p><p>
ஆக, AfD கட்சி அரசு அமைக்குமானால், அரசு, உளவுத்துறை தொடர்பான தகவல்களைப் பெற முயற்சிக்கலாம்.
</p><p>
அப்படி முக்கிய தகவல்களை அணுக AfD கட்சி அரசுக்கு அனுமதி கிடைக்கும் நிலையில், அது நாட்டுக்கு பாதுகாப்பானதாக அமையுமா என ஏற்கனவே பாதுகாப்புத்துறை மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T08:52:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் - கொழும்பில் ராஜ்நாத் சிங் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rajnath-singh-say-india-always-stand-with-srilanka-1788935597"></link>
            <id>https://news.lankasri.com/article/rajnath-singh-say-india-always-stand-with-srilanka-1788935597</id>
            <summary type="text">இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் என கொழும்பு சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். 

இலங்கை வந்த ராஜ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் என கொழும்பு சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். </p><h3>

இலங்கை வந்த ராஜ்நாத் சிங்</h3><p> 

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb043bfe-fa37-4707-8b4a-e9a0e9860de7/26-6aa0fdaf29a42.webp' /></p><p>
38 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை வருகை தந்துள்ளார். </p><p>

கடைசியாக ராஜிவ்காந்தி அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.சி. பந்த் 1988 ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கை சென்றார்.</p><p> 

2023 ஆம் ஆண்டில் ராஜ்நாத் சிங் இலங்கை வர திட்டமிட்டிருந்த போது, இலங்கை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் வந்ததற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்ததால் அந்த கொழும்பு பயணம் ரத்தானது. </p><h3>

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு</h3><p>

அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், "ஆன்மிகமும் கலாசாரமும் இரண்டறக் கலந்த இலங்கை மண்ணில் உங்களைச் சந்திப்பதில் பெருமையடைகிறேன். 

தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாடு, வளர்ச்சி மீது பிரதமர் நரேந்திர மோடியும் நாங்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cbf0f67-cb7d-4589-aea9-fa47188c84bf/26-6aa0fdafd40d7.webp' /></p><p>

நேர்மையான ஆட்சியின் அடையாளமாக நாடாளுமன்றத்தில் "செங்கோல்' நிறுவப்பட்டதும், திருவள்ளுவர், பாரதியாரின் கொள்கைகளை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதும் தமிழ்ப் பாரம்பரியத்துக்கு மத்திய அரசு அளிக்கும் உயர் மரியாதையாகும்.
</p><p>
இந்தியாவின் எல்லைகள் இன்று முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. நாம் யாரையும் முதலில் தாக்க மாட்டோம். ஆனால், நம்மைத் தாக்கத் துணிந்தால் விட்டுவைக்கவும் மாட்டோம் என்ற நமது கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது.&nbsp;</p><p></p><p>
தற்சார்பு பாரதம் திட்டத்தால் இந்தியா சொந்தமாக ஆயுதங்களைத் தயாரிக்கிறது. தமிழகத்தில் அமைக்கப்படும் "பாதுகாப்புத் தொழில்வழித்தடம்' நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கிறது.
</p><p>
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பகிரப்பட்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம். மேலும் இரு நாடுகளின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியுடன் இருக்கிறோம்.
</p><p>
இரு நாடுகளும் நெருங்கிய கலாச்சார மற்றும் நாகரிகப் பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அவை இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளன.&nbsp;</p><p> 2014 ஆம் ஆண்டில் சுமார் 2 டிரில்லியன் டொலர் மதிப்புடையதாக இருந்த இந்தியாவின் பொருளாதாரம், கடந்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாகி சுமார் 4 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. </p><p>

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு 4 நாடுகளுடன் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா 38 நாடுகளுடன், 8 முக்கிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உட்பட, வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T08:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகத்தில் ட்ரோன் தாக்குதல்: குழந்தை உட்பட நால்வர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-drones-strikes-russia-s-largest-port-1788941313"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-drones-strikes-russia-s-largest-port-1788941313</id>
            <summary type="text">Ukraine&#039;s drone strikes on largest port of russia: ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகத்தில் உள்ள எரிபொருள் எண்ணெய் முனையம் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukraine's drone strikes on largest port of russia: ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகத்தில் உள்ள எரிபொருள் எண்ணெய் முனையம் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் நடத்தியது.</p><p> 

உக்ரேனிய நடத்திய ட்ரோன் தாக்குதலில், ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.&nbsp;</p><h2>எரிபொருள் எண்ணெய் முனையம்</h2><p>

Novorossiysk-யில் ரஷ்யாவின் மிகப்பெரிய கடல் துறைமுகம் அமைந்துள்ளது. இதில் உள்ள எரிபொருள் எண்ணெய் முனையம், இரயில் பாதையில் இருந்து கடல் வழியாக எரிபொருள் எண்ணெயை பெறுதல், சேமித்தல் மற்றும் இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றதாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f572afb-339d-4ba9-bb2c-f38417df516f/26-6aa114fce6d7b.webp' /></p><p></p><p>இதன் ஆண்டு கையாளும் திறன் சுமார் 4 மில்லியன் டன்கள் ஆகும். 

இந்த எண்ணெய் முனையத்தின் மீது 9ஆம் திகதி இரவு உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.</p><p>

இந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் கிராஸ்னோடார் கிராயின் தலைவர் வெனியாமின் கொன்ட்ராட் யேவ் தெரிவித்தார்.
</p><p>
மேலும் அவரது கூற்றுப்படி, மூன்று தனியார் மற்றும் ஐந்து அடுக்குமாடிக் கட்டிடங்கள், அத்துடன் ஒரு ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் மற்றும் ஒரு மழலையர் பாடசாலை ஆகியவை சேதமடைந்தன.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7ee8850-ded3-437f-86f4-c294335335d2/26-6aa114fdc9a99.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T08:09:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த திமுக]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dmk-announced-candidates-for-by-election-1788939245"></link>
            <id>https://news.lankasri.com/article/dmk-announced-candidates-for-by-election-1788939245</id>
            <summary type="text">dmk announced candidates for madurantakam and dharapuram by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>dmk announced candidates for madurantakam and dharapuram by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. </p><h3>

இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த திமுக</h3><p> 

தமிழ்நாட்டில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியானாதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd4a5756-594d-4f02-991a-6ef0525d7999/26-6aa10bef28636.webp' /></p><p>

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அக்டோபர் 6 ஆம் திகதி வாக்குப்பதிவும், அக்டோபர் 8 ஆம் திகதி வாக்கு எண்னிக்கையும் நடைபெற உள்ளது.&nbsp;</p><p></p><p> 

இந்நிலையில் 2 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.</p><p>

மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் ஐ.பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-bans-canadian-alcohol-bikes-dairy-imports-1788939333"></link>
            <id>https://news.lankasri.com/article/us-bans-canadian-alcohol-bikes-dairy-imports-1788939333</id>
            <summary type="text">US bans Canadian alcohol bikes dairy imports: கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இறக்குமதி தடைஅ...</summary>
            <content type="html"><![CDATA[<p>US bans Canadian alcohol bikes dairy imports: கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.</p><h2>

இறக்குமதி தடை</h2><p>அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு கனடா விதித்த எதிர் வரி நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, கனடாவில் இருந்து வரும் பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ளார்.
</p><p>
செப்டம்பர் 29 முதல் அமுலுக்கு வரும் இந்த தடை, மதுபானங்கள், பால் சார்ந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உள்ளடக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa8674c-1077-4b41-86b6-af655a03a614/26-6aa10c46f2a08.webp' /></p><p> </p><p>மேலும், சில பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சீஸ், மோட்டார் படகு, உலோகங்கள், மரச்சாமான்கள் போன்றவை அதிக வரி சுமையுடன் அமெரிக்க சந்தையில் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
கனடா தனது பக்கம், அமெரிக்காவின் எஃகு, ஆடை, மரச்சாமான்கள் போன்ற பொருட்களுக்கு டொலருக்கு-டொலர் வரி விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளின் வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. விலைகள் உயர்ந்து, வாடிக்கையாளர்கள் குறையும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><p>
அமெரிக்கா-கனடா உறவு வரலாற்று ரீதியாக நெருக்கமானது. கனடாவின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவிற்கே செல்கிறது. ஆனால் தற்போதைய வர்த்தகப் போர், இரு நாடுகளின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
</p><p>
பொருளாதார நிபுணர்கள், இந்த வர்த்தகப் போர் இரு தரப்புக்கும் இழப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என எச்சரிக்கின்றனர். வாடிக்கையாளர்களே மிகப்பெரிய இழப்பாளர்ககளாக இருப்பார்கள் என அவர்கள் கூறுகின்றனர்.
</p><p></p><p>கனடா பிரதமர் மார்க் கார்னி, “செயல்படுவதற்கு எப்போதும் செலவு இருக்கும். ஆனால் செயல்படாமல் இருப்பதற்கான செலவு அதைவிட அதிகம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த வர்த்தகப் போர் எப்போது முடிவடையும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினாலும், புதிய பேச்சுவார்த்தைக்கான திகதிகள் அறிவிக்கப்படவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T07:32:24+00:00</updated>
        </entry>
    </feed>
