<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-20T13:55:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர் இந்தியாவுக்கான எதிர்கால முதலீடு... சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/future-air-india-funding-will-be-1784552863"></link>
            <id>https://news.lankasri.com/article/future-air-india-funding-will-be-1784552863</id>
            <summary type="text">ஏர் இந்தியா நிறுவனத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முதலீடும், தனிப்பட்ட சூழல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்று சிங்கப்பூர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர் இந்தியா நிறுவனத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முதலீடும், தனிப்பட்ட சூழல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) தெரிவித்துள்ளது.</p><h2>கவனமாகப் பரிசீலிக்கும்</h2><p>
</p><p>தனது பல-மைய (multi-hub) வளர்ச்சி உத்தியின் முக்கியத் தூணாக, டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் உருமாற்றத்திற்கு ஆதரவளிப்பதற்கான தனது நீண்டகால உறுதிப்பாட்டை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0004644e-9ddb-4768-b493-dd147b0c8877/26-6a5e1f847bd15.webp' /></p><p> </p><p>மேலும், ஏர் இந்தியாவுக்கான முதலீட்டு வரம்புகள் எதையும் தாங்கள் முன்கூட்டியே நிர்ணயிக்கவில்லை என்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. </p><p>ஏர் இந்தியாவிடமிருந்து கூடுதல் மூதலீடுற்கான கோரிக்கைகள் ஏதேனும் வந்தால், குழுமத்தின் பிற முதலீடுத் தேவைகள் மற்றும் ஏர் இந்தியாவின் வணிக உத்தி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவற்றை வாரியம் கவனமாகப் பரிசீலிக்கும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> மட்டுமின்றி,
தங்களது முதலீடு ஒதுக்கீட்டுக் கட்டமைப்பு, செயல்பாட்டு ரொக்கப் புழக்கங்கள், விமானங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான முதலீட்டுத் தேவைகள், அத்துடன் ஏர் இந்தியா போன்ற மிக முக்கியமான முதலீடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட மதிப்பீட்டு செயல்முறையைப் பின்பற்றுகிறது என்று அந்த விமான நிறுவனம் மேலும் கூறியது.</p><p></p><p>
</p><p>ஏர் நியூசிலாந்து, விர்ஜின் அட்லாண்டிக் மற்றும் விர்ஜின் அவுஸ்திரேலியா போன்ற விமான நிறுவனங்களில் செய்த முதலீடுகளிலிருந்து ஏர் இந்தியாவில் செய்த முதலீடு எவ்வாறு வேறுபடுகிறது என்ற கேள்விக்கு, ஒவ்வொரு முதலீடும் நீண்டகால வளர்ச்சி சாத்தியம், மூலோபாய ஒருங்கிணைப்பு, செயல்பாட்டுச் சூழல் மற்றும் இடர் விவரம் ஆகியவற்றின் அடிப்படையில் சுயாதீனமாக மதிப்பிடப்படுகிறது என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பதிலளித்துள்ளது.</p><h2>நிகர இழப்பு</h2><p>
</p><p>விரிவாக்கப்பட்ட ஏர் இந்தியா குழுமத்தில் தங்களுக்குள்ள 25.1 சதவீதப் பங்குகளை, தங்களது 'பல்முனை மைய' (multi-hub) உத்தியின் ஒரு முக்கிய அங்கமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விவரித்துள்ளது; இது இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் உள்நாட்டுச் சந்தை மற்றும் இந்திய மையங்கள் வழியாகச் செல்லும் சர்வதேசப் பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றை நேரடியாக அணுகும் வாய்ப்பை அதற்கு வழங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84f42e68-e3d8-4773-aa2e-22646b2bb9d3/26-6a5e1f83b9daa.webp' /></p><p>
</p><p>2026-ஆம் நிதியாண்டில் ஏர் இந்தியா ரூ. 26,400 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது; விஸ்தாராவுடனான இணைப்புக்குப் பிந்தைய விமானக் கூட்டமைப்பு நவீனமயமாக்கல், சேவைகளை மேம்படுத்துதல், வழித்தட விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்புச் செலவுகள் ஆகியவற்றில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளே இதற்குக் காரணமாகும்.
</p><p>இதன் விளைவாக, முந்தைய ஆண்டில் விஸ்தாராவிடமிருந்து 48 மில்லியன் சிங்கப்பூர் டொலர் லாபப் பங்கைப் பெற்றிருந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 330 மில்லியன் (சுமார் ரூ. 2,180 கோடி) சிங்கப்பூர் டொலர் அளவிலான நஷ்டப் பங்கைப் பதிவு செய்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T13:06:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டல் - ஐபிஎல் வீரரை கைது செய்ய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/court-order-to-arrest-dc-cricketer-abishek-porel-1784552574"></link>
            <id>https://news.lankasri.com/article/court-order-to-arrest-dc-cricketer-abishek-porel-1784552574</id>
            <summary type="text">டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அபிஷேக் போரெலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அபிஷேக் போரெல்

மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 வயதான அபிஷேக் போரெல், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அபிஷேக் போரெலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><h3>
அபிஷேக் போரெல்</h3><p>

மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 வயதான அபிஷேக் போரெல், 2023 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e26f1f32-3720-44ad-9d16-e971c651abbc/26-6a5e1c7fb78bb.webp' /></p><p>

இந்நிலையில், அபிஷேக் போரெலை கைது செய்ய காவல்துறைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>

மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு மிரட்டியதாக தெரிவித்த புகாரில் அபிஷேக் போரெல் மற்றும் மற்றோரு நபரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

இது குறித்து மாணவி அளித்த புகாரில், மாணவியை திருமணம் செய்வதாக கூறி 3 ஆண்டுகள் அவருடன் உடல் ரீதியாக நெருக்கமாக பழகி வந்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

அபிஷேக் போரெல் கிரிக்கெட் வீரராகப் புகழ் பெறத் தொடங்கியதும், ​​அவர் தன்னை விட்டு விலகி இருப்பதை உணர்ந்த மாணவி, வாக்குறுதியளித்தபடி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கோரியுள்ளார். </p><p>

அதற்கு மறுத்த அபிஷேக் போரெல் மாணவியை அடித்ததாகவும், அவருடைய தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.</p><p> 

இந்த புகாரின் அடிப்படையில் அபிஷேக் உட்பட இருவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
</p><h3>
கைது செய்ய உத்தரவு </h3><p>
 
இந்த வழக்கு இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60c54b0e-20c0-4b74-8371-132604e8895c/26-6a5e1c8066e55.webp' /></p><p>

மாணவியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த இரு நபர்களும் இந்த மாணவியை மட்டுமல்லாமல், வேறு பல பெண்களையும் ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களை எடுத்து, பின்னர் அவர்களை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறினர்.</p><p>

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, இருவரையும் கைது செய்து, அவர்களிடம் உள்ள செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை கைப்பற்றி தனிப்பட்ட புகைப்படங்கள் அழிக்குமாறு ஹூக்ளியில் உள்ள மக்ரா காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். </p><p>

 நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்குள் ஒரு விரிவான அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T13:03:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக பதவியேற்றார் ஆன்டி பர்னாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-sworn-as-59th-pm-of-uk-1784550432"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-sworn-as-59th-pm-of-uk-1784550432</id>
            <summary type="text">பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார் ஆன்டி பர்னாம்.

பிரதமராக பதவியேற்றார் ஆன்டி பர்னாம்

கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார் ஆன்டி பர்னாம்.</p><h3>

பிரதமராக பதவியேற்றார் ஆன்டி பர்னாம்</h3><p>

கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்துவந்த ஆன்டி பர்னாம், சமீபத்தில் மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
</p><p>
அதைத் தொடர்ந்து, லேபர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆன்டி பர்னாம், சற்று முன் மன்னரை சந்தித்து பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1584e5d8-f391-49d3-b6fb-2f1afe9dbac3/26-6a5e14224174d.webp' /></p><p>ஆன்டி பர்னாம், பிரித்தானியாவின் 59ஆவது பிரதமர் ஆவார். அவருக்கு முன் பிரதமராக பதவி வகித்த சர் கெய்ர் ஸ்டார்மர் சற்று முன் மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமாவைக் கையளிக்க, மன்னர் அதை ஏற்றுக்கொண்டார்.
</p><p>
அதைத் தொடர்ந்து, பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்ற ஆன்டி பர்னாம் மன்னர் சார்லசை சந்தித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d57ef349-120d-4165-8a58-08a33e55ec82/26-6a5e1423b781e.webp' /></p><p>மன்னர் சார்லஸ் முறைப்படி பிரித்தானியாவின் பிரதமராக பொறுப்பேற்கும்படி ஆன்டி பர்னாமைக் கேட்டுக்கொள்ள, அதை ஏற்றுக்கொண்ட ஆன்டி பர்னாம் பிரித்தானியாவின் பிரதமராகியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
அதற்கு அடையாளமாக, ஆன்டி பர்னாம், மன்னர் சார்லசுடன் கைகுலுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d511e8aa-81b1-4f2c-b2c7-2d788a0ff59c/26-6a5e1422f3a9c.webp' /></p><p>ஆன்டி பர்னாம் பிரித்தானியாவின் பிரதமராக முறைப்படி மன்னர் சார்லசால் நியமிக்கப்பட்டதைக் குறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு ஆன்டி பர்னாம், மேன்மை தங்கிய மன்னரை சந்தித்த நிலையில், புதிய நிர்வாகத்தை அமைக்குமாறு ஆன்டி பர்னாமை மன்னர் கேட்டுக்கொண்டார்.
</p><p>
மன்னரின் அழைப்பை ஏற்ற ஆன்டி பர்னாம், பிரதமராகவும் கருவூலத்தின் முதல் பிரபுவாகவும் பதவி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மன்னரின் கைகளில் முத்தமிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அடுத்ததாக, ஆன்டி பர்னாம், பிரதமர் இல்லம் முன் உரையாற்ற இருக்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்டி பர்னாமின் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு? வெளிவரும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-cabinet-expected-1784547475"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-cabinet-expected-1784547475</id>
            <summary type="text">வெஸ்ட்மின்ஸ்டரில் பல வாரங்களாக நிலவி வந்த தீவிரமான ஊகங்களுக்கு மத்தியில், ஆன்டி பர்னாம் தனது முதல் அமைச்சரவையை அறிமுகப்படுத்த உள்ளார்.யார் யாருக்கு வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெஸ்ட்மின்ஸ்டரில் பல வாரங்களாக நிலவி வந்த தீவிரமான ஊகங்களுக்கு மத்தியில், ஆன்டி பர்னாம் தனது முதல் அமைச்சரவையை அறிமுகப்படுத்த உள்ளார்.</p><h2>யார் யாருக்கு வாய்ப்பு</h2><p>
</p><p>நாட்டின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் இன்று உத்தியோகப்பூர்வமாகப் பதவியேற்ற பிறகு, தனது முக்கியக் குழுவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fa9ba4a-9950-48e9-a83b-2cda177e1c8f/26-6a5e0edd5044c.webp' /></p><p> </p><p>ஆன்டி பர்னாம் வெஸ்ட்மின்ஸ்டருக்குத் திரும்பியதிலிருந்து, அரசியல் களத்தில் ஒரு கேள்விதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது: 'நம்பர் 11'-இன் சாவியைப் பெறப்போவது யார்? பல வாரங்களாக, எட் மிலிபண்ட் எதிர்பார்ப்புகளில் முன்னணியில் இருந்தார். </p><p>பர்னாமின் எழுச்சியில் லேபர் கட்சியின் முன்னாள் தலைவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்; மேலும், அரசாங்கத்தின் மிகச் சிறந்த அமைச்சர்களில் ஒருவராகவும் அவர் தனது கூட்டாளிகளால் கருதப்படுகிறார். </p><p>ஆனால், அவரது பதவி உயர்வு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் சந்தை ஆய்வாளர்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. </p><p>ஏனெனில், அவர் தொழிலாளர் கட்சியின் மிதவாத இடதுசாரிகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர் என்று கருதுவதோடு, net zero இலக்கு குறித்த அவரது உறுதிப்பாடு முதலீட்டாளர்களை நிலைகுலையச் செய்துவிடுமோ என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள்.</p><p></p><p> </p><p>இருப்பினும், அவர் நிதி விடயத்தில் கட்டுப்பாட்டுடன் செயல்படுபவர் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்; அத்துடன், அவர் அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்பதைக் குறிக்கும் வகையில் அவரது அமைச்சகப் பணிக்காலத்தில் எந்தச் சான்றும் இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். </p><p>இதனிடையே, உள்விவகாரத்திலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்பினாலும், உள்விவகாரச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தற்போது நிதி அமைச்சராக (Chancellor) நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b39df8de-3529-4830-9338-7b31d7aa5863/26-6a5e0ede19447.webp' /></p><p> </p><p>லேபர் கட்சியின் வலதுசாரிப் பிரிவைச் சேர்ந்தவராகக் கருதப்படும் இவர், நிதிச் சந்தைகளுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் தெரிவாகப் பார்க்கப்படுகிறார். ஆனால், அவருக்குப் பொருளாதாரத் துறையில் அனுபவம் இல்லாததே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. </p><p>வெளிவிவகாரத் துறையைத் தக்கவைத்துக்கொள்ள இவெட் கூப்பர் பல வாரங்களாகப் போராடி வருகிறார். ஆனால், மிலிபண்ட் நிதி அமைச்சர் பொறுப்பைப் பெறத் தவறினால், அவருக்கு ஆறுதல் பரிசாக வெளிவிவகார அமைச்சர் பொறுப்பை பர்னாம் வழங்கக்கூடும்.</p><h2>மிக முக்கியமான பதவி</h2><p> </p><p>பாதுகாப்புத் துறை முதலீட்டுத் திட்டம் தொடர்பாக சர் கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத விதமாக விலகிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலியும் இந்தப் பதவிக்குக் பரிசீலிக்கப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e047a22-9489-44b7-abdf-14828c5ed9f8/26-6a5e0edebf7ec.webp' /></p><p> </p><p>இருப்பினும், ஜான் ஹீலிக்குப் பதிலாக, சில வாரங்களுக்கு முன்புதான் டான் ஜார்விஸ் பாதுகாப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றார். அவர் அந்தப் பதவியைத் தக்கவைக்கலாம் என்றே கூறப்படுகிறது. </p><p>முன்னாள் போக்குவரத்துச் செயலாளரான லூயிஸ் ஹேக் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது. ஏஞ்சலா ரெய்னரும் அமைச்சரவைக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>பர்னாமின் தொகுதிக்கு அருகிலுள்ள தொகுதியைச் சேர்ந்தவரும், ஸ்டார்மரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மற்றொரு அமைச்சருமான லூசி பவல், அமைச்சரவைக்கு மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/454181f6-5495-42f3-a817-d884b279fc44/26-6a5e0edf72c3f.webp' /></p><p> </p><p>போக்குவரத்துத் துறை அமைச்சராகத் தொடர விரும்பினாலும், ஹைடி அலெக்சாண்டர் 'சீஃப் விப்' (Chief Whip) ஆக நியமிக்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. பர்னாமின் அரசாங்கத்தில் மிக முக்கியமான பதவிகளில் ஒன்றுக்கு, வெஸ் ஸ்ட்ரீட்டிங் பெயரும் விவாதிக்கப்படுகிறது.
</p><p>கெய்ர் ஸ்டார்மரின் மிக நெருங்கிய ஆதரவாளர்கள் பலரும் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகத் துறை அமைச்சர் பீட்டர் கைல் தனது அமைச்சரவைப் பதவியை இழக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>தொழில்நுட்பத் துறைச் செயலாளர் லிஸ் கெண்டலும் பதவி நீக்கம் செய்யப்படக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T12:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு கப் உளுந்து போதும்.., ஆரோக்கியமான பணியாரம் செய்யலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/paniyaram-recipe-in-tamil-1784549665"></link>
            <id>https://news.lankasri.com/article/paniyaram-recipe-in-tamil-1784549665</id>
            <summary type="text">உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன.

உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன.
</p><p>
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.</p><p>

குறிப்பாக இது பெண்களின் மாதவிடாய் கால வலிகளைக் குறைத்து உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது.
</p><p>
அந்தவகையில், உடல் வலுவிற்கு சாத்தான உளுந்து பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>

தேவையான பொருட்கள்</h2><ul><li>
உளுந்து- ½ கப்
</li><li>பச்சரிசி- 4 ஸ்பூன்</li><li>உப்பு- தேவையான அளவு&nbsp;
</li><li>எண்ணெய்- 2 ஸ்பூன்</li><li>
கடுகு- ½ ஸ்பூன்
</li><li>கடலை பருப்பு- 2 ஸ்பூன்</li><li>
கறிவேப்பிலை- 1 கொத்து</li><li>
வெங்காயம்- 1</li><li>
பச்சைமிளகாய்- 2
</li><li>கேரட்- 1
</li></ul><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">செய்முறை</span></h2><p>முதலில் ஒரு பாத்திரத்தில் உளுந்து, அரிசி சேர்த்து 2 முறை நன்கு கழுவி 5 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8b5f8b5-1e80-42e9-b138-61a742218380/26-6a5e112337754.webp' /></p><p>அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.
</p><p>



இதற்கடுத்து இதில் நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி துருவிய கேரட் சேர்த்து வதக்கவும்.

பின்னர் இதில் உப்பு சேர்த்து கலந்து அரைத்த மாவில் சேர்த்து கிளறவும்.
</p><p>
இறுதியாக பணியார சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மாவை ஊற்றி சுட்டு எடுத்தால் சத்தான உளுந்து பணியாரம் தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:14:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காளதேசத் தொடரில் புதிய சாதனைக்கு சொந்தக்காரரான ஜிம்பாப்வே கேப்டன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sikandar-raza-most-matches-for-zimbabwe-1784549147"></link>
            <id>https://news.lankasri.com/article/sikandar-raza-most-matches-for-zimbabwe-1784549147</id>
            <summary type="text">சிக்கந்தர் ரஸா ஜிம்பாப்வே அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையைப் பெற்றார். 

சிக்கந்தர் ரஸாவங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிக்கந்தர் ரஸா ஜிம்பாப்வே அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையைப் பெற்றார்.</p><p> 

</p><h2>சிக்கந்தர் ரஸா</h2><p>வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய ஜிம்பாப்வே, டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02e755a3-af13-4268-82ad-709b782b70a1/26-6a5e0fa7520ed.webp' /></p><p></p><p>

இந்தத் தொடரில் விளையாடியதன் மூலம் சிக்கந்தர் ரஸா (Sikandar Raza)புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.</p><p> 

அணித்தலைவராக செயல்பட்ட சிக்கந்தர் ரஸா 314 போட்டிகளில் விளையாடி, அதிக போட்டிகளில் விளையாடிய ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையை படைத்தார். </p><p>

இதற்கு முன்பு ஹாமில்டன் மஸகட்சா (Hamilton Masakadza) 313 போட்டிகளில் விளையாடி இருந்தார்.</p><p> 

ரஸா 22 டெஸ்ட், 156 ஒருநாள் போட்டிகள் மற்றும் 136 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 9,095 ஓட்டங்கள் மற்றும் 245 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7688687d-acf0-4c13-944a-33b6e31d3fe1/26-6a5e0fa840f29.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:06:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி மீது விழுந்த மின்விசிறி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/delhi-hospital-ceiling-fan-falls-on-patient-dies-1784549004"></link>
            <id>https://news.lankasri.com/article/delhi-hospital-ceiling-fan-falls-on-patient-dies-1784549004</id>
            <summary type="text">இந்தியாவின் தலை நகரான புதுடெல்லியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் மீது கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறி கழன்று விழுந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தலை நகரான புதுடெல்லியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் மீது கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறி கழன்று விழுந்தது.
</p><p>
மூன்று மணி நேரத்தில் அந்த நோயாளி உயிரிழந்ததால் பரபரப்பு உருவாகியுள்ளது!
</p><h3>
நோயாளி மீது விழுந்த மின்விசிறி
</h3><p>
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் புதுடெல்லியிலுள்ள குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில், முகம்மது அக்பர் (42) என்னும் நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f8dd6c5-a3d0-4b68-9328-f03100450ec7/26-6a5e0e8e02876.webp' /></p><p>
உயர் இரத்த அழுத்தம், மூளை வீக்கம் மற்றும் நுரையீரல் பிரச்சினை ஆகிய பிரச்சினைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
</p><p>
அக்பர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவிலுள்ள படுக்கை ஒன்றில் படுத்திருக்க, திடீரென கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறி கழன்று அவர் மீது விழுந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
சுமார் மூன்று மணி நேரத்தில், அதாவது, அதிகாலை 12.16 மணிக்கு அக்பர் உயிரிழந்துவிட்டார்.
</p><p>
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அக்பர் குடும்பத்தினர் அவரது மரணம் தொடர்பில் விசாரணை கோரியுள்ளனர்.
</p><p>
இதற்கிடையில், அக்பர் உயர் இரத்த அழுத்தம், மூளை வீக்கம் மற்றும் நுரையீரல் பிரச்சினை ஆகிய காரணங்களால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:04:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rb-udhayakumar-says-tvk-trying-vijay-pm-candidate-1784548578"></link>
            <id>https://news.lankasri.com/article/rb-udhayakumar-says-tvk-trying-vijay-pm-candidate-1784548578</id>
            <summary type="text">முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு நடப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். 


விஜய்யை வைத்து போலி செய்திகள் 

க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு நடப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். </p><h3>


விஜய்யை வைத்து போலி செய்திகள்</h3><p> 

கட்சி தொடங்கி 3 ஆண்டுகளில், சந்தித்த முதல் தேர்தலிலே இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் தவெக தலைவர் விஜய்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5997b863-704c-44f0-acbf-5dc935a4e77f/26-6a5e0ce3bd01f.webp' /></p><p>
கடந்த சில வாரங்களாக முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் செய்துள்ளதாக கூறி, பல்வேறு போலி செய்திகள் வட இந்திய மாநிலங்களில் உள்ள சமூகவலைத்தள பக்கங்களில் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பரப்பப்பட்டு வந்தது.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், அதனை சுட்டிக்காட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் ஆக்க முன்னெடுப்பு நடப்பதாக தெரிவித்துள்ளார்.</p><h3> 

விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு</h3><p>

இது குறித்து பேசிய அவர், "முதலமைச்சர் விஜய் எப்படி செய்தார் பார்த்தீர்களா? அதையும் செய்தார் இதையும் செய்தார் எதையும் செய்வார் என செய்யாததை எல்லாம் narrative செய்ய போலி வீடியோக்களை தயார் செய்து, தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் இன்ஃப்ளூயன்சர்களை வைத்துக்கொண்டு விஜய் பிம்பத்தை கட்டமைத்ததை தவிர தவெக அரசு இந்த 75 நாட்களில் வேறு எதுவும் செய்யவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657cc1f6-fe4c-470b-ad23-f0ba2ce34e50/26-6a5e0ce46f1b6.webp' /></p><p>

இந்த மாய பிம்பத்தை வைத்து தான், 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நம்ம முதல்வர் விஜய்யை முன்னிருந்த தவெக கட்சி முன்னெடுப்பு எடுத்து வருகிறது. டெல்லியில் இருப்பவர்கள் உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும்.</p><p>

பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னெடுப்பு செய்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. எந்த வித வரலாறும், தியாகமும், மக்களுக்கான உரிமை போராட்டமும் இல்லாமல் ரீல்ஸ் மூலம் மூளை சலவை செய்து, நிழல் எதுவும் நிஜம் எதுவும் தெரியாமல் குழப்பி முதலமைச்சர் ஆகியுள்ளார். </p><p></p><p> 

முதலமைச்சருக்கே தகுதியில்லாத அவரை தமிழ்நாடு முதல்வராக பெற்றுள்ள போது, போலி செய்திகளை ரீல்ஸ் மூலம் எல்லா மொழிகளிலும் இன்ஃப்ளூயன்சர்களை கூலிக்கு அமர்த்தி விஜய் விஜய் என கூப்பாடு போட வைத்து பாரத பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த தவெக முன்னெடுப்பு எடுத்து வருகிறது.</p><p>

எது எப்படி இருந்தாலும், என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் விஜய்யின் பருப்பு எங்கு வெந்தாலும், பிரதமர் மோடியிடம் வேகாது என்பதை கூறி நிறைவு செய்கிறேன்" என பேசியுள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:56:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடை பெற்றார் பிரதமர் ஸ்டார்மர்... மன்னர் சார்லசுடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/keir-starmer-meets-king-to-formally-resign-as-pm-1784546359"></link>
            <id>https://news.lankasri.com/article/keir-starmer-meets-king-to-formally-resign-as-pm-1784546359</id>
            <summary type="text">பிரித்தானிய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமாவைக் கையளித்தார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமாவைக் கையளித்தார்.</p><h3>

விடை பெற்றார் ஸ்டார்மர்...</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44d4df2-3316-4a4b-856f-c80565490fbc/26-6a5e0439d5930.webp' /></p><p>2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி மக்கள் ஆதரவுடன் பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்ற கெய்ர் ஸ்டார்மர், உள்ளாட்சித் தேர்தல் தோல்விகள், ரீஃபார்ம் யூகே கட்சியின் வளர்ச்சி, அரசில் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல்கள் மற்றும் சொந்தக் கட்சியினரிடையே ஆதரவை இழந்தது போன்ற பல்வேறு காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் பிரதமர் இல்லம் முன் உரையாடிய ஸ்டார்மர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48072c2d-8d38-4c6e-98a3-dd342000382e/26-6a5e04392ed29.webp' /></p><p>அதைத் தொடர்ந்து, பக்கிங்காம் மாளிகைக்குச் சென்ற ஸ்டார்மர், மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தன் ராஜினாமாவை கையளிக்க, மன்னரும் அதை ஏற்றுக்கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bf2c991-78f1-4bcf-abe9-a0bff85e0909/26-6a5e04387e91b.webp' /></p><p>ஸ்டார்மர் பிரதமர் இல்லம் முன் உரையாற்றும் காட்சிகளும், மன்னரை சந்திக்கும் காட்சிகளும் தற்போது வெளியாகிவருகின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:45:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் தேச துரோகக் குற்றச்சாட்டில் விண்வெளி ஆராய்ச்சியாளர்: விசாரணை காவலுக்கு உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-space-researcher-arrested-for-treason-1784545951"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-space-researcher-arrested-for-treason-1784545951</id>
            <summary type="text">ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட விண்வெளி ஆராய்ச்சியாளரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.&amp;nbsp;வான் இயக்கவியல் நிபுணர் 

ரஷ்யாவில் வான் இயக்கவியல் நிபு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட விண்வெளி ஆராய்ச்சியாளரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>வான் இயக்கவியல் நிபுணர் </h2><p>

ரஷ்யாவில் வான் இயக்கவியல் நிபுணரான மாக்சிம் கிரவ்சுக், அரசு விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் கீழ் செயல்படும், மாஸ்கோவைத் தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான மத்திய இயந்திரக் கட்டுமான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/579633b9-28e0-4ec7-8171-5f0bcd87a00e/26-6a5e02a2e809f.webp' /></p><p></p><p> 

35 வயதாகும் மாக்சிம், தேச துரோகக் குற்றச்சாட்டில் கடந்த மாதம் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக Ostorozhno Novosti செய்தி நிறுவனம் தெரிவித்தது.&nbsp; </p><h2>விசாரணைக்கு முந்தைய காவல் </h2><p>
தற்போது அவரை விசாரணைக்கு முந்தைய காவலில் வைக்க மாஸ்கோ நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
முன்னதாக, ஜூன் 29ஆம் திகதி அன்று மாக்சிம் தடுப்புக் காவல் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததாக தெரிய வந்துள்ளது.</p><p>

அந்த மேல்முறையீட்டு விசாரணை ஜூலை 29-ஆம் திகதி நடைபெற உள்ளதாக RBC செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7c5f3c6-84f7-4e3d-84fa-612494195edc/26-6a5e02a242fff.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:13:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணொருவர் காணாமல் போனதாக புகார்: பொலிஸ் விசாரணையில் தெரியவந்த உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-missing-woman-already-dies-in-2024-1784544532"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-missing-woman-already-dies-in-2024-1784544532</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண்ணொருவரைக் காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் கடந்த மாதம் பொலிசில் புகாரளித்துள்ளார்.

பொலிஸ் விசாரணையில், அந்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண்ணொருவரைக் காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் கடந்த மாதம் பொலிசில் புகாரளித்துள்ளார்.</p><p>

பொலிஸ் விசாரணையில், அந்தப் பெண் இப்போது காணாமல் போகவில்லை, பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போய்விட்டார் என்பது தெரியவந்துள்ளதுடன், ஒரு துயரச் செய்தியும் தெரியவந்துள்ளது!
</p><h3>
பெண்ணொருவர் காணாமல் போனதாக புகார்</h3><p>
ஜூன் மாதம் 14ஆம் திகதி, தன் உறவினரான மேரி (Mary Gadbois) என்னும் பெண்ணைக் காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் பொலிசில் புகாரளித்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad023b3c-09a6-494b-8b25-24088b3ce992/26-6a5dfd15c83c2.webp' /></p><p>
பொலிசார் மேரியை தேடிவந்த நிலையில், உண்மையில் அவர் இப்போது காணாமல் போகவில்லை, அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போய்விட்டார் என்பது தெரியவந்தது.</p><p>

அதாவது, 2021ஆம் ஆண்டு மேரி Mission என்னுமிடத்தில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.
</p><p>
அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை, சோகம் என்னவென்றால், அவரை யாரும் தேடியதாகவும் தெரியவில்லை. சமீபத்தில்தான் அவரது உறவினர் ஒருவர் அவரைத் தொடர்பு கொள்ள இயலாததால், அவரைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார்.
</p><p>
பொலிசார் மேரியைத் தீவிரமாக தெடியும் அவரைக் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.&nbsp;</p><p></p><p>
இதற்கிடையில், 2024ஆம் ஆண்டு Mission நகருக்கருகிலுள்ள வனப்பகுதி ஒன்றில் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. அவை யாருடைய உடல் பாகங்கள் என தெரியாமலே இருந்துள்ளது.
</p><p>
இந்நிலையில், மேரியும் கடைசியாக Mission நகரில் வாழ்ந்துவந்தது தெரியவந்ததால், 2024ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்கள் மேரியுடையவையாக இருக்குமோ என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
அதைத் தொடர்ந்து நீதிமன்ற அதிகாரிகள் உட்பட பலதரப்பினரும் மேற்கொண்ட ஆய்வில், அந்த உடல் பாகங்கள் மேரியுடையவைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T10:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கக் கனவுகளைக் கைவிட்டு... ஐரோப்பிய நாடுகளை இலக்கு வைக்கும் இந்திய மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/young-indians-interest-in-europe-1784544325"></link>
            <id>https://news.lankasri.com/article/young-indians-interest-in-europe-1784544325</id>
            <summary type="text">இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள இடப்பெயர்வு தொடர்பான அம்சங்கள் பல இளம் இந்தியர்களை அமெரிக்கக் கனவுகளைக் கைவிட வைத்துள்ளது.வேறு கல்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள இடப்பெயர்வு தொடர்பான அம்சங்கள் பல இளம் இந்தியர்களை அமெரிக்கக் கனவுகளைக் கைவிட வைத்துள்ளது.</p><h2>வேறு கல்வித் தெரிவுகள்</h2><p>
</p><p>அமெரிக்காவின் கடுமையான குடியேற்ற விதிகளால் நெருக்கடிக்கு உள்ளான இளம் இந்தியர்களுக்கு தற்போது ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bb3a235-a5c4-4a30-93bc-8af94cc56dc0/26-6a5dfd5fe1db1.webp' /></p><p> </p><p>உலகம் தற்போது பன்முனைத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. முன்பு, அமெரிக்காவைப் பற்றி மட்டுமே அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர் என்கிறார் சென்னையைச் சேர்ந்த 22 வயது பொறியியல் பட்டதாரி ஸ்ரீநிகேதன். </p><p>மேலும், அதிகச் செலவு பிடிக்கும் அமெரிக்கா மற்றும் கனடாவைத் தாண்டி, வேறு கல்வித் தெரிவுகள் இருப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>மட்டுமின்றி, அமெரிக்காவில் கல்வி பயிலும் தனது குடும்பப் பாரம்பரியத்தைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக ஜேர்மனியில் முதுகலைப் பட்டம் பயிலத் தீர்மானித்துள்ளார்.
</p><p>இந்த மாற்றம் நீடிக்கும் என்றால், அது உலகளாவிய மாணவர் நகர்வுகளை மாற்றியமைக்கக்கூடும்; வயதான மக்கள்தொகையால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியம் இளம் திறமையாளர்களைத் தேடி வருவதால், இந்திய மாணவர்களுக்கு வட அமெரிக்காவிற்கு ஒரு சிறந்த மாற்றாக ஐரோப்பா உருவெடுக்கலாம்.</p><p></p><p> </p><p>கல்வி ஆலோசகரான 'கேசி ஓவர்சீஸ்' (KC Overseas) நிறுவனத்தின் தகவலின்படி, ஐரோப்பாவில் கல்விக்கான கட்டணம் அமெரிக்காவை விட வழக்கமாக 50 முதல் 80 சதவீதம் வரை குறைவாக உள்ளது; அத்துடன் அங்கு வாழ்க்கைச் செலவும் குறைவாக இருப்பதால் ஒட்டுமொத்தச் செலவு மேலும் குறைகிறது.</p><p> மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியம் இந்திய மாணவர்களுக்கு ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். </p><p>இந்திய மாணவர்கள் தொழில்முனைவோர் மனப்பான்மை, கலாச்சாரச் செழுமை மற்றும் சிறந்த ஆராய்ச்சித் திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்ற்னர்.&nbsp;</p><p>அத்துடன், இந்திய மாணவர்கள் ஐரோப்பியக் கல்வி வளாகங்களைச் செழுமைப்படுத்துவதோடு, புத்தாக்கம், வர்த்தகம் மற்றும் தூதரக உறவுகள் ஆகியவற்றில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பிணைப்பையும் வலுப்படுத்துகின்றனர்; இப்போக்கு தொடர்ந்து வளர்ந்து, ஐரோப்பாவின் திறமையாளர் வளத்திற்கும் இந்தியாவின் உலகளவில் போட்டியிடக்கூடிய மனிதவளத்திற்கும் பயனளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பிரபலமான கல்வித் தலங்களில் நிலவும் கடுமையான விசா விதிமுறைகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் குறித்த அச்சம் காரணமாக, வெளிநாடுகளில் கல்வி பயிலச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2023-ல் 908,000-க்கும் அதிகமாக இருந்த நிலையில், 2025-ல் சுமார் 626,000-ஆகக் குறைந்துள்ளதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. </p><p>மட்டுமின்றி, ஜனவரி 2025-ல் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு தொடங்கிய விரிவான குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கால அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கையை அமெரிக்கா கடந்த வாரம் மேற்கொண்டது. </p><p>மாணவர்கள் மற்றும் திறன்மிக்க பணியாளர்கள் எளிதான விசா நடைமுறைகள், படிப்புக்குப் பிந்தைய வேலைவாய்ப்புக்கான தெளிவான வழிமுறைகள் மற்றும் இந்தியக் கல்வித் தகுதிகளுக்கான மேம்பட்ட அங்கீகாரம் ஆகியவற்றின் மூலம் ஐரோப்பாவிற்குச் செல்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஜனவரி மாத வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஐரோப்பா மீதான இந்தியர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. </p><p>மேலும், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பு நாடுகளுடனான சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர்பாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இணைந்து செயல்படவுள்ளன; இதற்காக, இந்திய மாணவர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்களுக்கு வழிகாட்ட தொழில்நுட்பம் சார்ந்த அலுவலகம் ஒன்று ஆரம்பக்கட்டமாக அமைக்கப்படவுள்ளது. </p><p>இதனிடையே, மாணவர்கள் தங்கள் தொழில் இலக்குகள் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற இடங்களைத் தெரிவு செய்வது அதிகரித்து வருவதாகவும், பொறியியலுக்கு ஜேர்மனியையும், வேலை-வாழ்க்கை சமநிலைக்கு நெதர்லாந்தையும், கட்டணச் சலுகையுடன் முதுகலை ஆராய்ச்சிக்கு போர்ச்சுகலையும், மேலாண்மைக்கு பிரான்ஸையும் தெரிவு செய்வதாகவும் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.</p><h2>மூன்றாவது பெரிய</h2><p> </p><p>அரசுத் தரவுகளின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் 121,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயில்கின்றனர்; இது அமெரிக்காவில் பயிலும் இந்தியர்களின் எண்ணிக்கையில் ஏறக்குறைய பாதியளவாகும். </p><p>இருப்பினும், அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இணையாக ஐரோப்பிய ஒன்றியமும் உயர்கல்விக்கான ஒரு முக்கிய இடமாகத் திகழும் வகையில், அங்குச் சென்று பயில்வதற்கான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
</p><p>நெதர்லாந்தில் கல்வி பயிலும் இந்தியர்களின் எண்ணிக்கை 2018-19-ல் 2,630-ஆக இருந்த நிலையில், 2025-26-ல் சுமார் 3,700-ஆக உயர்ந்துள்ளது; இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத மாணவர் குழுக்களில் இந்தியர்கள் மூன்றாவது பெரிய குழுவாகத் திகழ்கின்றனர் என்று 'ஸ்டாடிஸ்டிக்ஸ் நெதர்லாந்து' (Statistics Netherlands) தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3366af7d-38ea-47e7-9dcf-bb5b4968e733/26-6a5dfd5f2c290.webp' /></p><p>
</p><p>ஐந்தோவன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (Eindhoven University of Technology), வரவிருக்கும் கல்வியாண்டிற்காக இந்தியாவிலிருந்து சுமார் 2,140 பேர் முன்பதிவு செய்துள்ளனர்; இது முந்தைய ஆண்டின் எண்ணிக்கையான சுமார் 1,390-ஐ விட அதிகமாகும்.
</p><p>ஆராய்ச்சி சார்ந்த முதுகலைப் படிப்புகளை விடக் குறைவான சவால்களைக் கொண்ட வழக்கமான முதுகலைப் படிப்புகளில், லெய்டன் பல்கலைக்கழகத்தில் (Leiden University) சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2021-ல் 70-ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 120-ஆக உயர்ந்துள்ளது.
</p><p>இத்தாலியின் பதுவா பல்கலைக்கழகம் (Padua University) வெளியிட்ட தகவலின்படி, வழக்கமாக அமெரிக்காவிற்கு மாணவர்களை அனுப்பி வந்த பகுதிகள் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஐரோப்பாவின் மீது ஆர்வம் அதிகரித்து வருவதாக அங்குள்ள அதன் கூட்டாளர் முகமைகள் தெரிவித்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T10:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு இரவு தங்கினால் ரூ.52,000 வழங்கும் வீட்டு உரிமையாளர்கள் - ஜப்பானில் உள்ள விநோதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spend-night-in-haunted-house-earn-rs-52000-japan-1784543988"></link>
            <id>https://news.lankasri.com/article/spend-night-in-haunted-house-earn-rs-52000-japan-1784543988</id>
            <summary type="text">ஜப்பானில் உள்ள சில வீட்டு உரிமையாளர்கள், ஒரு இரவு வீட்டில் தங்குபவர்களுக்கு ரூ.52,000 வழங்கி வருகின்றனர்.

ஜிகோ புக்கென் வீடுகள் 

பிறப்பு விகிதங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் உள்ள சில வீட்டு உரிமையாளர்கள், ஒரு இரவு வீட்டில் தங்குபவர்களுக்கு ரூ.52,000 வழங்கி வருகின்றனர்.</p><h3>

ஜிகோ புக்கென் வீடுகள்</h3><p> 

பிறப்பு விகிதங்கள் குறைந்து, முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடாக ஜப்பான் உள்ளது. அங்கு தனிமையில் வசிக்கும் முதியவர்கள் உயிரிழந்தால் கூட உடனே வெளியே தெரியாத நிலை உள்ளது. </p><p>

இவ்வாறாக தனிமை மரணம், உயிரை மாய்த்துக் கொள்ளுதல், கொலை, உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து போன்ற நிகழ்வுகள் நடக்கும் வீடுகள் ஜப்பானில் ஜிகோ புக்கென் (jiko bukken) என அழைக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2417c8db-6fe4-47a2-a449-fe450640a8e0/26-6a5dfaf76dd92.webp' /></p><p>

ஜப்பானில் வீடுகளை விற்க அல்லது வாடகைக்கு விடும் முன்னர் அந்த வீடுகள் ஜிகோ புக்கென் வீடா என்பதை குறிப்பிட வேண்டும்.</p><p> 

பலரும் அந்த வீட்டில் பேய் இருக்கலாம், அமானுஷியங்கள் நடக்கலாம் என நினைத்து இந்த ஜிகோ புக்கென் வீடுகளுக்கு வாடகைக்கு வரவோ, வாங்கவோ தவிர்த்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p>

இதன் காரணமாக, பல ஆண்டுகள் காலியாக இருக்கும் ஜிகோ புக்கென் வீடுகளை 20 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்க அல்லது வாடகைக்கு விட வீட்டு உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர். </p><h3>

ஒரு இரவு தங்க ரூ.52,000
</h3><p>
இந்நிலையில், ஜிகோ புக்கென் வீடுகளை வாங்க அல்லது வாடகைக்கு வருபவர்களுக்கு அந்த வீடுகளின் மீதான பயத்தை போக்க ஜப்பானின் ரியல் எஸ்டேட் ஸ்டார்ட்அப் நிறுவனமான கச்சிமோட் புதிய முயற்சியை கையிலெடுத்துள்ளது. </p><p>

இந்த ஜிகோ புக்கென் வீடுகளில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தங்கி இந்த வீடு பாதுகாப்பானது என சான்றளி கச்சிமோட் ஒரு இரவிற்கு 88,000 யென் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.52,000) வழங்குகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1e2820b-8585-4e99-a8ea-7ac988401840/26-6a5dfaf6befde.webp' /></p><p> 

இப்படி தங்குபவர்கள், வீடியோ கேமராக்கள், ஒலிப்பதிவுக் கருவிகள், வெப்ப வரைவி உபகரணங்கள், மின்காந்த அலை கண்டறியும் கருவிகள் மற்றும் அறை வெப்பநிலை, ஈரப்பதம், வளிமண்டல அழுத்தம், இரைச்சல் அளவுகளைக் கண்காணிக்கும் உணரிகளையும் பயன்படுத்துகின்றனர்.</p><p>

துயர சம்பவத்திற்குப் பிறகு வீடு முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பது, பேய்கள் போன்ற அமானுஷ்ய நடமாட்டம் அல்லது பிற விளக்க முடியாத நிகழ்வுகளுக்கான ஏதேனும் சான்றுகள் உள்ளதா என இவர்கள் சான்றளிக்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed35b651-7b31-43d2-bf02-abf8f9e92b60/26-6a5dfaf5698b4.webp' /></p><p>

வீட்டு உரிமையாளர்கள் இந்த சான்றிதழை வீட்டிற்கு வாடகைக்கு வருபவர்கள் அல்லது வாங்க முன்வருபவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். </p><p>

ஒரு இடத்தை பேய் இல்லாத இடம் என்று அறிவித்த பிறகு, அங்கு பேய் நடமாட்டம் இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அதற்கான இழப்பீட்டையும் வழங்குவதாக உறுதியளிக்கின்றன.
</p><p>
சொத்து விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஒதுக்கப்பட்ட இந்த வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.&nbsp;</p><h3>200க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு</h3><p> 

வீடியோ கேமராக்கள் எதிர்பாராதவிதமாக நின்றுவிடுவது, மைக்ரோஃபோன்கள் செயலிழப்பது உள்ளிட்ட அசாதாரண சம்பவங்களை அந்த உபகரணம் அவ்வப்போது பதிவு செய்துள்ளது என கச்சிமோட் நிறுவனர் கொடமா ஒப்புக்கொண்டார்.</p><p>
இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அமானுஷ்யம் என்று கூறப்படும் செயலை மீண்டும் நிகழ்த்திக் காட்ட இயலாது, அது ஒரு தனிப்பட்ட நிகழ்வாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7862bea-7a56-494d-9fbd-822ec66b9dd2/26-6a5dfaf61a940.webp' /></p><p>

இப்படி 200க்கும் மேற்பட்ட வீடுகளில் கச்சிமோட் ஆய்வு நடத்தியுள்ளது.
</p><p>
டோக்கியோவிற்கு அருகிலுள்ள சிபா மாகாணத்தில், 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வயதான பெண்மணி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட மற்றும் அவரது மகன் இறந்து சுமார் 10 நாட்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த ஒரு வீட்டில் 20 இரவுகள் கொடமா தங்கி ஆய்வு செய்துள்ளார். </p><p>

அப்போது, வன்பொருள் கோளாறு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படும் அவரது மடிக்கணினி, திடீரென அணைந்துவிட்டது, மீண்டும் இயங்கவும் இல்லை.</p><p> 

மற்றொரு வீட்டில் தன் மகளை இழந்த ஒரு தந்தை கொடாமாவிடம், “அவள் இந்த அறைக்குள் வந்தால், தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று கேட்டார்.
</p><p>
கொடாமா தங்கி ஆய்வு நடத்திய பின்னர் எந்த அசாதாரணங்களும் கண்டறியப்படாததால், அந்த தந்தை அவருக்கு நன்றி தெரிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T10:40:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்ஸிக்கு ஒருமுறை இல்லை! FIFA வரலாற்றிலேயே இருமுறை Golden Boot வாங்கிய முதல் வீரர் இவர்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mbappe-record-in-fifa-got-golden-boot-2nd-time-1784541437"></link>
            <id>https://news.lankasri.com/article/mbappe-record-in-fifa-got-golden-boot-2nd-time-1784541437</id>
            <summary type="text">FIFA உலகக்கிண்ண வரலாற்றில் இருமுறை தங்க காலணி விருதுபெற்று எம்பாப்பே சாதனை படைத்துள்ளார்.&amp;nbsp;தங்க காலணி&amp;nbsp; 

2026 FIFA உலகக்கிண்ணத் தொடரில் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>FIFA உலகக்கிண்ண வரலாற்றில் இருமுறை தங்க காலணி விருதுபெற்று எம்பாப்பே சாதனை படைத்துள்ளார்.&nbsp;</p><h2>தங்க காலணி&nbsp;</h2><p> 

2026 FIFA உலகக்கிண்ணத் தொடரில் பிரான்ஸின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே 10 கோல்கள் அடித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f504696-e41e-41d2-b1b7-57c1bc906071/26-6a5df3a7924c2.webp' />&nbsp;</p><p></p><p>
இதன்மூலம், அதிக கோல் அடித்த வீரருக்கு வழங்கப்படும் தங்க காலணி (Golden Boot) விருதை அவர் பெற்றார். </p><p>

கடந்த 2022 உலகக்கிண்ணத் தொடரிலும் இந்த விருதை பெற்றிருந்த அவர், FIFA வரலாற்றில் "இருமுறை" தங்க காலணி பெற்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். </p><p>

ஒருமுறை கூட தங்க காலணி பெறாத லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) 8 கோல்கள் அடித்திருந்த நிலையில் இம்முறையும் தவறவிட்டார்.
</p><p>
2026 FIFA உலகக்கிண்ணத் தொடரில் விளையாடிய ஹாரி கேன் (இங்கிலாந்து) 2018-யிலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துகல்) 2002-ஆம் ஆண்டிலும் தங்க காலணி விருது பெற்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407e7b09-9912-4607-a88a-6b90bebfa4c0/26-6a5df3a85523b.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f06eaa41-a0cf-4a70-90f5-4aac53ed414f/26-6a5df3a906073.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T09:58:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு கிராம் தங்க விலை எவ்வளவு? (20-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784537836"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784537836</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (20-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (20-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
 தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,297,805.00 ஆகும்.</p><p>

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 45,780.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 366,250.00.</p><p>

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 41,970.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 335,750.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,060.00.</p><p>

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 320,500.00.</p>]]></content>
            <updated>2026-07-20T08:57:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வற்றிப்போன ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமான நதி... வேளாண் மக்களுக்கு கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/danube-water-levels-reach-lowest-1784533881"></link>
            <id>https://news.lankasri.com/article/danube-water-levels-reach-lowest-1784533881</id>
            <summary type="text">ருமேனியாவில் டான்யூப் ஆற்றின் நீர்மட்டம் 1996-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டிய நிலையில் வேளாண் மக்களுக்கு நீர்ப்பாசனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ருமேனியாவில் டான்யூப் ஆற்றின் நீர்மட்டம் 1996-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டிய நிலையில் வேளாண் மக்களுக்கு நீர்ப்பாசனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, கப்பல் போக்குவரத்தும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>வறட்சியால் பாதிப்பு</h2><p> </p><p>
இந்த ஆண்டு ஐரோப்பா முழுவதும் உள்ள நீர்வழிகள் நீண்டகால வெப்ப அலைகள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன; மேலும், திங்களன்று மேற்கு ஐரோப்பாவில் சராசரி உச்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7f5bef8-a9f7-463e-8b3f-1b8e10c9abdb/26-6a5dd476776ea.webp' /></p><p> </p><p>இது ஜூலை 20ம் திகதிக்கான இயல்பான அதிகபட்ச வெப்பநிலையை விட 2.7 டிகிரி அதிகமாகும்.&nbsp;இந்த நிலையில் ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமான நதி ருமேனியாவுக்குள் நுழையும் இடத்தில், ஞாயிற்றுக்கிழமையன்று நீரின் அளவு வினாடிக்கு 1,700 கன மீற்றராக இருந்ததாக அந்நாட்டின் அரசு நீர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது; ஜூலை மாதத்திற்கான சராசரி அளவு வினாடிக்கு 4,700 கன மீற்றராகும்.</p><p></p><p> </p><p>அண்டை நாடான பல்கேரியாவுடனான எல்லைக்கு அருகிலுள்ள கரைகளில் நீண்ட தூரத்திற்கு மணல் திட்டுக் காணபப்டுவதையும், பல படகு சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதையும், தானியப் படகுகள் சேவை இல்லாமல் நின்றுகொண்டிருப்பதையும் ராய்ட்டர்ஸ் காணொளிக் காட்சிகளில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf661d46-4b0a-4e82-adf0-462f8221d96c/26-6a5dd477df613.webp' /></p><h2>வேளாண் மக்கள்</h2><p> </p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய தானிய விற்பனையாளர்கள் மற்றும் தீவிர ஏற்றுமதியாளர்களில் ருமேனியாவும் முதன்மையான நாடாகும்.</p><p> இதனிடையே, தென்கிழக்கு ருமேனியாவில் பயிர் நீர்ப்பாசனத்திற்காக வேளாண் மக்கள் தண்ணீர் பெறுவதை அதிகாரிகள் கட்டுப்படுத்தியதோடு, அரசுக்குச் சொந்தமான அணுமின் உற்பத்தியாளரான நியூக்ளியர் எலக்ட்ரிகாவின் இரண்டு அணு உலைகளைக் குளிர்விக்கத் தேவையான குறைந்தபட்ச நீர் அளவை உறுதி செய்வதற்காக நீர்த்தேக்கங்களையும் கட்டுப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef85436-1b4e-4508-a215-31de0a358501/26-6a5dd47738036.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், பல மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக, திங்கட்கிழமை முதல் டான்யூப் நதியின் நீர்மட்டம் படிப்படியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக நீர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T08:50:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பூங்காவில் தீவைத்த நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/police-arrested-man-set-fire-on-paris-park-1784535920"></link>
            <id>https://news.lankasri.com/article/police-arrested-man-set-fire-on-paris-park-1784535920</id>
            <summary type="text">பிரான்சில் காட்டுத்தீ பரவி, அதனால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் விடயம் அமைதியின்மையை உருவாக்கியுள்ள நிலையில், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் காட்டுத்தீ பரவி, அதனால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் விடயம் அமைதியின்மையை உருவாக்கியுள்ள நிலையில், தலைநகர் பாரீஸிலுள்ள பூங்கா ஒன்றில் இளைஞர் ஒருவர் தீவைத்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.</p><h3>

அமைதியின்மையை உருவாக்கியுள்ள விடயம்</h3><p>

பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ மக்களிடையே அமைதியின்மையை உருவாக்கியுள்ள நிலையில், வேண்டுமென்றேயோ அல்லது தெரியாமலோ தீயை துவக்கிய பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe15641f-6558-4ad9-ba6c-c2a66f95dc5b/26-6a5ddb722e829.webp' /></p><p>
அவர்களில் ஒருவர் தன்னார்வலராக செயல்பட்ட தீயணைப்புவீரர் என்னும் செய்தி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
</p><h3>
பூங்காவில் தீவைத்த நபர் கைது
</h3><p>
காட்டுத்தீயால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற்போல், பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள பூங்கா ஒன்றில் தீவைத்துள்ளார் 23 வயது இளைஞர் ஒருவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaf1bce7-ffcb-4cde-9c5c-effa2565f5d0/26-6a5ddb72d4ddf.webp' /></p><p>
தகவலறிந்து அங்கு சென்ற பொலிசார், பாரீஸிலுள்ள மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றான அந்த பூங்காவிலுள்ள காய்ந்த சருகுகளில் வைக்கப்பட்ட தீ மரம் ஒன்றிற்குப் பரவுவதைக் கண்டுள்ளார்கள்.
</p><p>
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அந்தத் தீயை அணைத்தாலும், ஒரு சதுர மீற்றர் பரப்பளவுள்ள தாவரங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன.
</p><p>
அதைத் தொடர்ந்து தீவைத்த அந்த நபர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T08:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைனஸ் 54 செல்சியஸ் குளிரில் 500 நாட்கள் ஆய்வு - ஆர்க்டிக் நோக்கி நாயுடன் புறப்பட்ட தாரா குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tara-polar-stations-heading-to-arctic-expedition-1784534042"></link>
            <id>https://news.lankasri.com/article/tara-polar-stations-heading-to-arctic-expedition-1784534042</id>
            <summary type="text">ஆர்க்டிக் பகுதியில் ஆய்வு செய்ய 12 பேர் அடங்கிய குழு தாரா துருவ நிலையம் மூலம் புறப்பட்டுள்ளனர்.

ஆர்க்டிக் பகுதியில் ஆய்வு

நிலா, செவ்வாய் என பூமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆர்க்டிக் பகுதியில் ஆய்வு செய்ய 12 பேர் அடங்கிய குழு தாரா துருவ நிலையம் மூலம் புறப்பட்டுள்ளனர்.
</p><h3>
ஆர்க்டிக் பகுதியில் ஆய்வு</h3><p>

நிலா, செவ்வாய் என பூமியை தாண்டி விண்வெளியில் உள்ள கிரகங்களை மனிதர்கள் ஆய்வு செய்து வந்தாலும், இன்னும் பூமியில் அதிகம் ஆய்வு செய்யப்படாத பகுதிகள் நிறைய உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aad3b3b9-3798-40d8-9df8-00e9ea8d9799/26-6a5dd8332f80f.webp' /></p><p>

அப்படி பூமியில் உள்ள அதிகம் ஆய்வு செய்யப்படாத பகுதிகளில், −52 °C வரையிலான குறைந்த வெப்பநிலை நிலவும் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியும் ஒன்று. </p><p>

6 விஞ்ஞானிகள் உட்பட 12 பேர் அடங்கிய குழு தாரா துருவ நிலையம் மூலம் பிரான்ஸின் லோரியன் துறைமுகத்திலிருந்து ஆர்க்டிக் பெருங்கடல் நோக்கி புறப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd8e7cdd-80ca-4e9a-b7f2-35040d04200d/26-6a5dd41c037dc.webp' /></p><p> 

நேற்று பிரான்ஸ் கடல்சார் அமைச்சர் கேத்தரின் ஷபாட் முன்னிலையில், இந்தப் புறப்பாட்டைக் காண்பதற்காகப் பல நூறு மக்கள் துறைமுகத் தளங்களில் திரண்டிருந்தனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="fr" dir="ltr">Sciences – Mer |<br>Départ de Tara Polar Station Lorient – Le 19 juillet 2026<br><br>Catherine Chabaud, ministre de la Mer, était aujourd’hui, le 19 juillet, à Lorient à l’occasion du départ de la Tara Polar Station. <br>Guidée par Romain Troublé, directeur général de la fondation Tara… <a href="https://t.co/JUWkRyUMm6">pic.twitter.com/JUWkRyUMm6</a></p>&mdash; Préfet du Morbihan🇫🇷🇪🇺 (@Prefet56) <a href="https://x.com/Prefet56/status/2078880421883044321?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
ஆர்க்டிக் பிராந்தியம் பூமியின் மற்ற பகுதிகளை விட 3 முதல் 4 மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருகிறது. </p><p>

ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள உயிரினங்கள் மற்றும் வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள் குறித்த புரிதலை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டதுள்ளது.</p><h3> 

தாரா துருவ நிலையம்
</h3><p>
தாரா துருவ நிலையம் என்பது −52 °C வரையிலான குறைந்த வெப்பநிலையையும், விரிவடைந்து வரும் ஆர்க்டிக் கடல் பனியின் பெரும் அழுத்தத்தையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மிதவை ஆகும்.&nbsp;</p><p>

இது 285 அடி நீளமும் , 52 அடி அகலமும் கொண்டது. குளிர்காலத்தில் 12 பேரும், கோடையில் 20 பேரும் இதில் தங்கலாம். 

உள்ளே 400 சதுர மீட்டர் பரப்பளவுள்ள வசிப்பிடம் உள்ளதோடு, மருத்துவ அறை, சமையலறை ஆகியவை உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fe2fc70-12da-4d5a-aa42-9966595d4f4f/26-6a5dd833eb855.webp' /></p><p>
இந்த நிலையத்தில் சூரிய மின் தகடுகள், காற்றாலை மற்றும் பயோடீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. </p><p> 

இந்த தாரா துருவ நிலையம் ஒரு பனி உடைக்கும் கப்பலின் பாதுகாப்புடன் ஆர்க்டிக் பெருங்கடலின் ரஷ்ய/நார்வே பக்கத்திற்குக் கொண்டு செல்லப்படும்.&nbsp;</p><p></p><p>

அதன் பின்னர் தன்னை பனிக்கட்டிகளுக்குள் உறைந்து போக அனுமதித்து, கிரீன்லாந்துக்கும் ஸ்வால்பார்டுக்கும் இடையில் உள்ள ஃபிராம் நீரிணையை நோக்கி, வட துருவத்தைக் கடந்து, ஒரு நாளைக்கு சுமார் 10 கிலோமீட்டர் வேகத்தில், 350 முதல் 500 நாட்கள் வரை தொடர்ந்து மிதக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4537dc98-1251-4b19-882a-a251e40e503a/26-6a5dd8349cd3a.webp' /></p><p>
 அது 2027 ஆம் ஆண்டின் இறுதியில் அங்கு சென்றடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

இதில் செல்லும் 12 பேர் அடங்கிய குழுவிற்கு கடுமையான பனியை தாங்கும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ba76861-2578-4e80-a766-3a53b59cd71d/26-6a5dd41cac217.webp' /></p><p> 

நெருங்கி வரும் துருவ கரடி உள்ளிட்ட விலங்குகளைக் கண்டறிவதற்காக, ஒரு லப்போனிய மேய்ப்பு நாயும் இந்தப் பயணத்தில் அவர்களுடன் செல்கிறது.</p><p> 

மேலும், குழுவில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பிற்காக துப்பாக்கியும் வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த நிலையத்தின் மையத்தில் பனிக்கட்டிக்குக் கீழே உள்ள கடலுக்கு நேரடியாகத் திறக்கும் ஒரு பிரத்யேகமான 1.6 மீ விட்டம் கொண்ட செங்குத்துத் துளை உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a870ca3-90b8-4120-8ce0-a3e52dd0113d/26-6a5dd8354de16.webp' /></p><p>

விஞ்ஞானிகள் இந்தத் துளையின் வழியாக, கடுமையான குளிர்காலத்திலும்கூட 6,560 அடி ஆழம் வரை செல்லக்கூடியவை.கருவிகளை கடலுக்குள் இறக்கி, 10,000க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரிக்க உள்ளனர். </p><h3>

பங்களிக்கும் நாடுகள்</h3><p>

அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, சுவிட்சர்லாந்து ஸ்பெயின், மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கின்றன. </p><p>

தாரா பெருங்கடல் அறக்கட்டளை மற்றும் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் (CNRS) போன்ற நிறுவனங்கள் நிதி, கட்டுமானம் மற்றும் ஒருங்கிணைப்பை வழங்கியுள்ளது.</p><p> 
 
இந்த பயணத்திற்கு 6 மில்லியன் யூரோ செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2026 முதல் 2045 ஆம் ஆண்டுக்கு இடையில், 2 ஆண்டுகளுக்கு ஒரு பயணம் என்ற விகிதத்தில் திட்டமிடப்பட்ட 10 பயணங்கள் அடங்கிய ஒரு திட்டத்தின் முதல் பயணம் இதுவாகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T08:13:49+00:00</updated>
        </entry>
    </feed>
