<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-17T22:25:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து: 2 பிரித்தானியர்கள் உட்பட 3 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/helicopter-crash-in-switzerland-3-dead-1789676928"></link>
            <id>https://news.lankasri.com/article/helicopter-crash-in-switzerland-3-dead-1789676928</id>
            <summary type="text">Helicopter Crash in Switzerland 3 Dead: சுவிஸ் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 பிரித்தானியர்கள் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். சுவிஸ் நாட்டில் விமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>Helicopter Crash in Switzerland 3 Dead: சுவிஸ் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 பிரித்தானியர்கள் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.</p><h2> சுவிஸ் நாட்டில் விமான விபத்து</h2><p>
சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் சிறிய ரக சிர்ரஸ் எஸ.22t என்ற விமானம் விபத்துக்குள்ளானது.</p><p> இந்த விமானம் சியான் விமான நிலையத்தில் இருந்து புறபட்டு 10வது நிமிடத்தில் விபத்தில் சிக்கியது</p><p> இந்த விபத்தானது திடீரென ஸ்விஸ் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் மோதியதில் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfe1af95-4351-49f7-bc5d-29daf39fe70d/26-6aac4d8214c9d.webp' /></p><p></p><h2> துரதிர்ஷ்டவசமாக 3 பேர் பலி</h2><p>இந்த ஹெலிகாப்டர் விபத்தில் 2 பிரித்தானியர்கள் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.</p><p>விபத்தை அடுத்து ஹெலிகாப்டரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை இன்னும் பொலிஸார் வெளியிடவில்லை.</p><p>ம்பவ பகுதியில் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.</p><p> விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது. &nbsp;&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-17T20:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் ரஷ்யா: போலந்து பிரதமர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/poland-prime-minister-warns-russia-s-striking-plan-1789662973"></link>
            <id>https://news.lankasri.com/article/poland-prime-minister-warns-russia-s-striking-plan-1789662973</id>
            <summary type="text">Poland Prime minister warns Russia’s Striking plan: உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக போலந்து பிரதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Poland Prime minister warns Russia’s Striking plan: உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக போலந்து பிரதமர் எச்சரித்துள்ளார்.</p><h2> போலந்து பிரதமர் எச்சரிக்கை</h2><p>
உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் மீது ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்த&nbsp; திட்டமிட்டு வருவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்(Donald Tusk) எச்சரித்துள்ளார்.</p><p> ரஷ்யாவின் இந்த சதி திட்டத்தில் போலந்தும் தாக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த எச்சரிக்கையை வழங்கிய உளவு அமைப்புகளின் பெயர்களை வெளியிடாமல், தற்போது உக்ரைன்-ரஷ்யா போரானது எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை போலந்து பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abc26986-5257-4e35-a973-f0916861ea71/26-6aac16ff26eb8.webp' /></p><p></p><p> நேட்டோ உறுப்பு நாடுகளின் எல்லைக்கு அருகே ரஷ்ய ராணுவத்தின் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் போலந்து பிரதமர் இந்த எச்சரிக்கையை தெரிவித்துள்ளார்.</p><p> ரஷ்யாவின் இந்த அச்சுறுத்தல் போலந்து நாட்டுடன் நின்று விடவில்லை. சமீபத்தில் ஜேர்மனியின் லீப்ஜிக் விமான நிலையத்தில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p> இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என்று ஜேர்மன் அதிகாரிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T19:58:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 9 பெண்கள் உடல்: தொடர் கொலையாளியின் செயலா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/9-women-body-found-dead-in-johannesburg-1789665959"></link>
            <id>https://news.lankasri.com/article/9-women-body-found-dead-in-johannesburg-1789665959</id>
            <summary type="text">South Africa 9 Women body Found dead in Johannesburg: ஜோகன்னஸ்பர்க் அருகில் 9 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>South Africa 9 Women body Found dead in Johannesburg: ஜோகன்னஸ்பர்க் அருகில் 9 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.</p><h2> கண்டெடுக்கப்பட்ட 9 பெண்கள் உடல்</h2><p>&nbsp;தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு வடக்கே 9 பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் மிகப்பெரிய அச்சத்தை அப்பகுதியை சுற்றியுள்ள பெண்களிடம் உருவாக்கியுள்ளது.</p><p> இரண்டு மாத இடைவெளிக்குள் மீட்கப்பட்ட இந்த உடல்களிடையே ஏதேனும் பொதுவான தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> தென்னாப்பிரிக்க காவல்துறையின் தகவல்படி, சடலமாக மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் 20 முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் இவர்களில் பலரின் உடல்கள் ஆடை இன்றி நிர்வாணமாகவோ, பாதியளவு ஆடைகளுடனோ உடலில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdb932d6-005c-4ad0-9ad6-0292c70e0792/26-6aac22a97de8c.webp' /></p><h2> தொடர் கொலையாளியின் செயலா?</h2><p>பாதிக்கப்பட்டவர்களின் வயது, சம்பவ இடங்கள் மற்றும் காலக்கெடு ஆகியவற்றில் உள்ள ஒற்றுமை இந்த கொலை சம்பவங்கள் தொடர் கொலையாளியின்(serial killer) செயலாக இருக்குமோ என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.</p><p>இருப்பினும் இவை தொடர் கொலையாளியின் செயல் என்று யாரும் முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டாம் என்றும், இதில் தனித் தனி நபர்கள் ஈடுபட்டு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> கடந்த ஜூலை 17ம் திகதி நடந்த கொலை சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் கேபிள் டை மூலம் கட்டப்பட்டு நிர்வாணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.</p><p> இதுவே கண்டெடுக்கப்பட்ட 9 உடல்களில் முதல் வழக்காகும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலன் பொலிஸார் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T17:26:10+00:00</updated>
        </entry>
    </feed>
