<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-23T18:39:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் ஈராக்கின் எண்ணெய் கப்பல்களுக்கு சிறப்பு அனுமதி: ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iraqi-oil-tankers-to-pass-1787503534"></link>
            <id>https://news.lankasri.com/article/iraqi-oil-tankers-to-pass-1787503534</id>
            <summary type="text">Iran grants permission for Iraqi oil tankers: ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல பல ஈராக்கிய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி.
பல்வேறு வழிகள் மூலம் ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran grants permission for Iraqi oil tankers: ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல பல ஈராக்கிய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி.
</p><p>பல்வேறு வழிகள் மூலம் ஈராக் விடுத்த தொடர்ச்சியான கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அந்த நாட்டின் பல எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d69cb413-0aa8-462f-bc70-b710e4ba5543/26-6a8b23b148f44.webp' /></p><p>
</p><p>குறித்த தகவலை ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஈராக்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, ​​ஈராக்கிய எண்ணெய் கப்பல்களுக்கு சிறப்பு அனுமதி பெறுவது பாக்தாத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது என்றும் IRNA குறிப்பிட்டுள்ளது. </p><p>சமீப நாட்களில் ஈராக்கிய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் வழிவகை செய்துள்ளதாகவும், ஹார்முஸ் வழியாக ஈராக்கிய எண்ணெயை ஏற்றுமதி செய்வது குறித்து பாக்தாத் ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஈராக்கிய ஜனாதிபதி நிசார் அமேதி சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, பாக்தாத் உரையாடல் கொள்கை மாநாட்டில் பேசிய அவர், இந்த விவகாரம் சிக்கலானதாகவே நீடிக்கிறது என்றும் கூறிப்பிட்டிருந்தார். </p><p>இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கையை அடுத்து ஈரான் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கியதால், மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈராக்கும் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e217293-bbc2-42e4-9575-6a72b0a1c67f/26-6a8b23b099847.webp' /></p><p> </p><p>நீரிணையில் கப்பல் போக்குவரத்து போருக்கு முந்தைய நிலைகளை விட கணிசமாகக் குறைவாகவே உள்ளது, மேலும் அப்பகுதியில் கப்பல்கள் தொடர்ந்து தாக்குதல்களை எதிர்கொள்கின்றன. </p><p>ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு ஈராக் ஒரு நாளைக்கு சுமார் 4 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்து வந்தது. </p><p>இந்த நிலையில், துருக்கியின் செஹான் துறைமுகம் வழியாக தனது ஏற்றுமதியை விரிவுபடுத்தவும், சிரியாவின் பனியஸ் துறைமுகம் மற்றும் ஜோர்டானின் அகாபா துறைமுகம் வழியாக எண்ணெய் ஏற்றுமதியைத் தொடங்கவும் பாக்தாத் முயற்சிகள் முன்னெடுத்து வருகிறது என்று பிரதமர் அலி அல்-ஜைதி வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T16:43:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 லட்சம் படை வீரர்களை கூடுதலாக அனுப்ப ரஷ்யா திட்டம் - ஜெலென்ஸ்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-warns-russia-mobilizing-300000-troops-1787499817"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-warns-russia-mobilizing-300000-troops-1787499817</id>
            <summary type="text">Zelensky warns Russia mobilizing 3,00,000 troops to Ukraine war: உக்ரைன் போரில் ரஷ்யாவின் அடுத்த நகரவே குறித்து ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

3 லட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zelensky warns Russia mobilizing 3,00,000 troops to Ukraine war: உக்ரைன் போரில் ரஷ்யாவின் அடுத்த நகரவே குறித்து ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.</p><h2>

3 லட்சம் படை&nbsp;வீரர்கள்</h2><p>உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தது 3 லட்சம் படையினரை கூடுதலாக உக்ரைன் போருக்கு அனுப்பும் வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06b85222-1961-4256-a1f5-de4c5c15dfe9/26-6a8b152aeb33f.webp' /></p><p>அவர் கூறியதாவது, “ரஷ்யா ஏற்கனவே 2,67,000 படைவீரர்களை இழந்துள்ளது. அதில் 1,55,000 பேர் உயிரிழந்துள்ளனர். இருந்தாலும், அவர்கள் டொனெட்ஸ்க் பகுதியை முழுமையாக கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். தேர்தலுக்குப் பிறகு புதிய படையினரை அனுப்புவார்கள்” என்று கூறியுள்ளார்.</p><h2> ஜெலென்ஸ்கி&nbsp;எச்சரிக்கை</h2><p>ஜெலென்ஸ்கி, “இந்த 3 லட்சம் புதிய படைவீரர்களையும் நாங்கள் அழித்துவிடுவோம். டொனெட்ஸ்க் பகுதியை முழுமையாக கைப்பற்ற ரஷ்யாவால் முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது உக்ரைன் படைகள் டொனெட்ஸ்க் பகுதியின் 20 சதவீத இடங்களை, குறிப்பாக ஸ்லாவியன்ஸ்க் மற்றும் கிரமடோர்ஸ்க் போன்ற தொழிற்சாலை நகரங்களை பாதுகாத்து வருகின்றன.

மேலும், ரஷ்யா கார்கிவ் மற்றும் சுமி பகுதிகளிலும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.
</p><p></p><p>வான்வழி பாதுகாப்பு குறித்து பேசிய அவர், “2023-இல் 675 Patriot ஏவுகணைகள் கிடைத்தன. ஆனால் இந்த ஆண்டு 264 மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவின் முடிவுகளால் பாதிக்கப்படுகிறது” என்றார்.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், உக்ரைன் Patriot ஏவுகணைகளை உரிமம் பெற்று தயாரிக்கலாம் என்று கூறியிருந்தாலும், பின்னர் அந்த யோசனையை வாபஸ் பெற்றதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
</p><p>
ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் Aster ஏவுகணைகள் குறைவாக கிடைக்கின்றன. இதனால், உக்ரைன் தனது சொந்த ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை உருவாக்கி, ரஷ்யாவின் பல்வேறு இலக்குகளை தாக்கி வருகிறது.</p><p>

ஜெலென்ஸ்கி, “இந்த போருக்கு முடிவு காணும் வாய்ப்பு அடுத்த கோடைக்காலம் வரை உள்ளது. அதற்குப் பிறகு அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் தொடங்கும்” என்று கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T15:41:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் 416 திருமணங்கள் - கேரளா குருவாயூர் கோயிலில் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/416-weddings-in-one-day-at-guruvayur-1787496383"></link>
            <id>https://news.lankasri.com/article/416-weddings-in-one-day-at-guruvayur-1787496383</id>
            <summary type="text">416 weddings in one day at Guruvayur temple: குருவாயூர் கோயிலில் இன்று 416 திருமணங்கள் நடந்துள்ளன.

கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>416 weddings in one day at Guruvayur temple: குருவாயூர் கோயிலில் இன்று 416 திருமணங்கள் நடந்துள்ளன.
</p><p>
கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ஒரே நாளில் 416 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இது அந்த கோயிலின் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dde296e-24a2-4067-bc1b-b0a73f3ab3f3/26-6a8b095e6bc68.webp' /></p><p><b>கோயில் நிர்வாகம் தெரிவித்ததாவது,
</b></p><p>
மலையாள மாதமான சிங்கம் (Chingam) மாதத்தின் முதல் ஞாயிறு திருமணங்களுக்கு மிகவும் சுப நாளாக கருதப்படுகிறது. அதனால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் திருமண நிகழ்ச்சிக்காக கோயிலுக்கு வந்தனர்.</p><p>

திருமண நிகழ்ச்சிகள் காலை 4.10 மணிக்கு தொடங்கி, மதியம் 12.45 மணி வரை நடைபெற்றன. இடையில் உஷபூஜை மற்றும் பந்தீரடி பூஜை காரணமாக சிறிய இடைவெளி இருந்தது.</p><p>
</p><p></p><p>முதல் திருமணத்தை கோயில் தேவஸ்வம் வாரியத் தலைவர் ஏ.வி. கோபிநாத் கிழக்கு வாசலில் விளக்கேற்றி தொடங்கினார். பின்னர், பல மண்டபங்களில் திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றன.</p><p>
</p><h2>
முறியடிக்கப்பட்ட சாதனை&nbsp;</h2><p>முன்னதாக, 2024 செப்டம்பர் 8-ஆம் திகதி 334 திருமணங்கள் நடைபெற்றது சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p>

மொத்தம் 442 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 416 திருமணங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன.
</p><p>
திருமண நிகழ்ச்சிகள் பாரம்பரிய இசையுடன், மங்கள்யதார அணிவிக்கும் சடங்குகளுடன் நடைபெற்றன. தலசேரியைச் சேர்ந்த அர்னவ் மோகன் குமார் மற்றும் பாழயங்காடியைச் சேர்ந்த வித்யா ஆனந்த் ராஜ் ஆகியோரின் திருமணம், முதல் நிகழ்வாக அமைந்தது.
</p><p>
இந்த சாதனை, குருவாயூர் கோயிலின் ஆன்மீக முக்கியத்துவத்தையும், திருமண நிகழ்ச்சிகளுக்கான மக்கள் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T14:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிரி நாடாக கருதப்படும் - அமெரிக்காவின் பொருளாதார போர் தொடர்பில் ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-warns-nations-on-us-economic-war-1787494997"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-warns-nations-on-us-economic-war-1787494997</id>
            <summary type="text">Iran warns nations on US economic war: அமெரிக்காவின் பொருளாதார போரில் இணையும் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் எச்சரிக்கைஅமெரிக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran warns nations on US economic war: அமெரிக்காவின் பொருளாதார போரில் இணையும் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><h2>
ஈரான் எச்சரிக்கை</h2><p>அமெரிக்கா, ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சியில் தனது கூட்டாளிகளை அழைத்துள்ள நிலையில், ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a58bf5d3-c5e4-4bf3-a258-dbb034233b90/26-6a8b0256dd487.webp' /></p><p>ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மொஹ்சன் ரெசாய், “அமெரிக்கா நடத்தும் பொருளாதார போரில் எந்த நாடும் கலந்து கொண்டால், அது எங்களின் எதிரி நாடாக கருதப்படும்” என்று அரசுத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நிறுவனங்களை தாக்கப்படும்</h2><p>

அவர் மேலும், “அமெரிக்கா எங்கள்மீது பொருளாதார தடைகள் விதிக்க முயன்றால், அவர்களின் எண்ணெய் மற்றும் பொருளாதார நிறுவனங்களை தாக்குவோம். இதுவரை நாங்கள் அமெரிக்க இராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்துள்ளோம். ஆனால், பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால், எங்கள் பதில் நிலநடுக்கம் போல இருக்கும்” என்று எச்சரித்தார்.
</p><p>
இந்த எச்சரிக்கை, அமெரிக்கா தனது கூட்டாளிகளை ஈரானின் பொருளாதாரத்தை தனிமைப்படுத்தும் முயற்சியில் இணைக்க அழைத்துள்ள சூழலில் வந்துள்ளது.
</p><p>
குறிப்பாக, சீனாவிடம் அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. ஆனால், சீனா இந்த முயற்சியை விமர்சித்து, “தடைகள் மத்திய கிழக்கு பிரச்சினையை தீர்க்காது” என்று தெரிவித்துள்ளது.
</p><p></p><p>ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளியான ஐக்கிய அரபு அமீரகம், கடந்த வாரம் ஈரானுடன் உள்ள அனைத்து வர்த்தக மற்றும் நிதி பரிவர்த்தனைகளையும் நிறுத்துவதாக அறிவித்தது.</p><p>

இந்த நிலைமை, அமெரிக்கா-ஈரான் உறவுகளை மேலும் மோசமாக்குவதோடு, உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T14:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உளவு செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கிய இந்திய ஸ்டார்ட்அப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-startup-tracks-spy-satellites-in-space-1787491841"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-startup-tracks-spy-satellites-in-space-1787491841</id>
            <summary type="text">Indian startup Digantara tracks spy satellites in space: உளவு பார்க்கும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian startup Digantara tracks spy satellites in space: உளவு பார்க்கும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது.</p><h2>

இந்திய ஸ்டார்ட்அப் டிகந்தரா</h2><p>லடாக்கில் அமைக்கப்பட்டுள்ள MOSAIC எனும் விண்வெளி கண்காணிப்பு அமைப்பு, இந்திய ஸ்டார்ட்அப் டிகந்தரா (Digantara) உருவாக்கிய புதிய தொழில்நுட்பமாகும்.
</p><p>
இது வானில் இயங்கும் செயற்கைக்கோள்கள், விண்வெளி கழிவுகள் மற்றும் நட்சத்திரங்களை தானாகவே பிரித்து கண்காணிக்கும் திறன் கொண்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e07dad87-c179-4040-abc1-11d38df82b99/26-6a8af60417390.webp' /></p><h2>MOSAIC&nbsp;அமைப்பு</h2><p>இந்த அமைப்பு, செயற்கைக்கோள்களின் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து, அவற்றின் பாதையை கணக்கிடுகிறது. இதன் மூலம், எந்த செயற்கைக்கோள் எப்போது இந்தியாவின் முக்கிய பகுதிகளை கண்காணிக்கிறது என்பதை அறிய முடிகிறது. </p><p>இது தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு மிக முக்கியமான தகவல்களை வழங்குகிறது.
</p><p></p><p>முன்னதாக, போக்ரான் அணு பரிசோதனைகளின் போது வெளிநாட்டு உளவு செயற்கைக்கோள்களை தவிர்க்க இந்தியா மிகுந்த சிரமங்களை சந்தித்தது.</p><p> அந்த அனுபவம், “முதலில் எப்போது உளவு செயற்கைக்கோள் மேலே பறக்கிறது என்பதை அறிய வேண்டும்” என்ற பாடத்தை கற்றுக் கொடுத்தது.
</p><p>
MOSAIC அமைப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (machine learning) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வானில் பறக்கும் பொருட்களை தானாகவே அடையாளம் காண்கிறது. ஒரு இரவில் 400-500 பொருட்களை கண்காணிக்க முடியும்.
</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">India gets new eyes on orbit. 🇮🇳<br><br>Introducing MOSAIC, our AI-powered Wide Area Sensing Architecture, built to search, detect and track hundreds of objects simultaneously, turning observations into orbital intelligence.<br><br>Mobile. Autonomous. Built in India for the scale of modern… <a href="https://t.co/pr6Fu2iIdj">pic.twitter.com/pr6Fu2iIdj</a></p>&mdash; Digantara (@Digantarahq) <a href="https://x.com/Digantarahq/status/2088475774693347451?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்தியாவில் மட்டுமல்லாமல், நமீபியா, சிலி, நியூ மெக்சிகோ, ஹவாய் போன்ற இடங்களிலும் இந்த அமைப்புகள் நிறுவப்படுகின்றன. இதன் மூலம் உலகளாவிய அளவில் செயற்கைக்கோள்களின் இயக்கத்தை கண்காணிக்க இந்தியாவுக்கு தனித்துவமான திறன் கிடைக்கிறது.
</p><p>
மேலும், இந்த அமைப்பு “லேசர் டாஸ்லிங்” எனப்படும் தொழில்நுட்பத்தையும் சோதனை செய்கிறது. இது உளவு செயற்கைக்கோள்களின் கமெரா அமைப்பை தற்காலிகமாக பாதித்து, அவை முக்கிய இடங்களை படம் பிடிப்பதைத் தடுக்க உதவும்.
</p><p>
இந்தியாவின் பாதுகாப்பு கணக்கீடுகள் நிலம், கடல், வானம், சைபர் வலைப்பின்னல்கள் மட்டுமல்லாமல், இப்போது விண்வெளியையும் உள்ளடக்கியுள்ளன. </p><p>டிகந்தரா உருவாக்கிய MOSAIC அமைப்பு, இந்தியாவிற்கு சுயாதீனமான விண்வெளி கண்காணிப்பு திறனை வழங்கி, உலகளாவிய தரவுகளின் மீது சார்ந்திருப்பதை குறைக்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T14:15:56+00:00</updated>
        </entry>
    </feed>
