<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-09T11:40:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/products-to-affect-in-canada-to-us-counter-tariff-1788940867"></link>
            <id>https://news.lankasri.com/article/products-to-affect-in-canada-to-us-counter-tariff-1788940867</id>
            <summary type="text">List of products from the United States subject to counter tariffs: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள் குறித்த வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>List of products from the United States subject to counter tariffs: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள் குறித்த விவரம்.
</p><p>
கனடா அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப்போர் மும்முரமாகிவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bba6c30-caed-4872-9b29-c3fba2581d5a/26-6aa112449e40f.webp' /></p><p>

27.6 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான கனேடியப் பொருட்கள் மீது 50 சதவிகித சுங்க வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.&nbsp;</p><p>
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே 27.6 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 15 முதல் 50 சதவிகித சுங்க வரி விதிக்க கனடா முடிவு செய்துள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இந்த வரிவிதிப்பால் கனேடிய மக்களும்தான் பாதிக்கப்பட உள்ளார்கள். ஏனென்றால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அந்தப் பொருட்களை கனேடியர்கள்தான் வாங்கப்போகிறார்கள்!
</p><h3>
எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்?
</h3><p>
கனடாவின் பதிலடி வரி விதிப்பால் அதிக அளவில் பாதிக்கப்படப்போவது உணவு மற்றும் பானங்கள்தான். உணவு தயாரிக்கத் தேவையான பொருட்கள், பால் பொருட்கள், ஆகியவை அதிகம் பாதிக்கப்பட உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac3ee1c8-b3c0-4797-8f58-5bc9b6f325ff/26-6aa112454fe53.webp' /></p><p>
அடுத்தபடியாக, வீட்டு உபயோகப் பொருட்களும், விவசாயத்துக்குத் தேவையான பொருட்களும் விலை உயர இருக்கின்றன.
</p><p>
விவசாயத்துக்குத் தேவையான பொருட்கள் விலை உயர உள்ளதால், அதுவும் உணவுப்பொருட்கள் விலையை பாதிக்கக்கூடும்.&nbsp;</p><p></p><p>
மேலும், கடல் உணவுகள், மரச்சாமான்கள், அழகு சாதனப்பொருட்கள், ஆண்களுக்கான உடைகள், பாதுகாப்பு உடைகள் போன்றவையும் விலை அதிகரிக்கலாம்.</p><p>

இதுபோக, கிரேன்கள், ஜாக் மற்றும் ஃபோர்க்லிஃப்ட், ரயில் பெட்டிகள், இயந்திரங்களில் பொருத்தப்படும் பம்புகள், மின்விசிறிகள் ஆகியவையும் விலை உயரலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86c87021-067e-4a18-b2dc-5a9d1facdf67/26-6aa1124601b2d.webp' /></p><p>

இவற்றை எல்லா பொதுமக்களும் வாங்குவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அவற்றை வாங்கும் நிறுவனங்கள் அவற்றிற்கான செலவை நுகர்வோர் மீதுதான் திணிக்கும். ஆக, அதிலும் மக்கள்தான் பாதிக்கப்பட உள்ளார்கள்.
</p><p>
மேலும், அமெரிக்க ஸ்டீல், காப்பர் தயாரிப்புகளும் விலை அதிகமாக உள்ளன.
</p><p>
ட்ரம்ப் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அமெரிக்கா கனடா மீது வரிகள் விதிக்கத் துவங்கியதிலிருந்தே கனேடிய மக்கள் பலர் கனேடிய தயாரிப்புகளையே வாங்கத் துவங்கியுள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இந்த வரிப்போரால், அவைகளும் விலை உயர உள்ளன.
</p><p>
ஆனாலும், தாங்கள் கனேடியப் பொருட்களையே வாங்கப்போகிறோம் என உறுதியாகக் கூறுகிறார்களாம் 60 சதவிகித கனேடியர்கள்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழலையர் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை சுட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gunman-killed-kindergarten-teacher-in-thailand-1788949637"></link>
            <id>https://news.lankasri.com/article/gunman-killed-kindergarten-teacher-in-thailand-1788949637</id>
            <summary type="text">A gunman shot and killed a kindergarten teacher in Thailand: தாய்லாந்து நாட்டில், மழலையர் பள்ளி ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர், ஆசிரியை ஒருவரை சுட்டுக்கொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>A gunman shot and killed a kindergarten teacher in Thailand: தாய்லாந்து நாட்டில், மழலையர் பள்ளி ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர், ஆசிரியை ஒருவரை சுட்டுக்கொன்ற விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p>

புதன்கிழமையன்று, தாய்லாந்திலுள்ள Chonburi என்னுமிடத்தில் அமைந்துள்ள மழலையர் பள்ளி ஒன்றிற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.</p><h3>

பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவம்</h3><p>

வகுப்பொன்றில் குழந்தைகள் அமர்ந்திருக்க, அந்த நபர் அந்த வகுப்பாசிரியையை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22f36c16-ec55-417e-813d-f7902f4d9b91/26-6aa1348756f2a.webp' /></p><p>
அந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, துப்பாக்கியால் சுட்ட நபர் தப்பியோடியுள்ளார்.
</p><p>
விசாரணையில், அவர் அந்த ஆசிரியையின் கணவர் என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>
பள்ளியிலிருந்த பிள்ளைகள் அனைவரும், மற்ற ஆசிரியர்களும் பாதுகாப்பாக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள்.
</p><p>
என்றாலும், அந்த பயங்கரக் காட்சியைக் கண்ட பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து அவர்கள் விடுபடுவதற்காக, மன நல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
பட்டப்பகலில் ஒருவர் மழலையர் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை ஒருவரை சுட்டுகொன்ற விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:27:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் மயமாகும் BBL - அணிகளை வாங்க IPL உரிமையாளர்கள் ஆர்வம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ipl-owners-eye-on-bbl-after-privatisation-1788949195"></link>
            <id>https://news.lankasri.com/article/ipl-owners-eye-on-bbl-after-privatisation-1788949195</id>
            <summary type="text">ipl owners eye on bbl after -privatisation: BBL தொடரில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தனியார் மயத்தை அனுமதித்துள்ள நிலையில், இந்திய IPL உரிமையாளர்கள் அணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ipl owners eye on bbl after -privatisation: BBL தொடரில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தனியார் மயத்தை அனுமதித்துள்ள நிலையில், இந்திய IPL உரிமையாளர்கள் அணிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது.
</p><h3>
தனியார் மயமாகும் BBL&nbsp;</h3><p>
2011 ஆம் ஆண்டு முதல் பிக் பாஸ் லீக் (Big Bash League - BBL) T20 தொடரை அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், நடத்தி வருகிறது. இதில் 8 அணிகள் பங்கு பெற்று வருகின்றன. </p><p>

BBL தொடரை இந்தியாவில் பிரபலப்படுத்தும் வகையில், 2026 BBL தொடரின் தொடக்கப்போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1cd7b87-7ebb-46cf-974f-5809d1bb4cb6/26-6aa132cd2dcb1.webp' /></p><p>

இந்நிலையில், Big Bash League போட்டிகளில் தனியார் முதலீட்டை அனுமதிக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது. </p><p>

அதேவேளையில். சர்வதேசப் போட்டிகளின் அட்டவணை, வீரர்களின் பங்கேற்பு, ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் சம்பள உச்சவரம்புகள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை அவுஸ்திரேலிய வாரியம் தக்கவைத்துக் கொள்ள உள்ளது. </p><p>

மேலும், வருங்கால வாங்குபவர்களை அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ தெளிவான அதிகாரத்தையும் கொண்டுள்ளது. </p><p>

இந்திய உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 2 அல்லது 3 அணிகள் மட்டுமே விற்கப்படலாம் என கூறப்படுகிறது. </p><p>

2027-28 BBL தொடரில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை முழுமையாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் விற்பனை வெற்றிகரமாக நிறைவேறினால், மற்ற அணிகளும் இதே முறையை பின்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.</p><h3>

ஐபிஎல் உரிமையாளர்கள் ஆர்வம் </h3><p>

தங்களது உலகளாவிய கிரிக்கெட் வணிகங்களை விரிவுபடுத்த விரும்பும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு ஒரு பெரிய புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab8b127c-420b-4efa-a424-5ab6d68f59ae/26-6aa132cc751c6.webp' /></p><p>
ஐபிஎல் உரிமையாளர்கள், SA20, ILT20, MLC ஆகிய கிரிக்கெட் லீக்களில் ஏற்கனவே சொந்தமாக அணிகளை வைத்துள்ளன. </p><p>

இந்திய ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள் தற்போது வெளிநாட்டு ஃபிரான்சைஸ் லீக்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. </p><p>

எதிர்காலத்தில் இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டால், ஐபிஎல் உரிமையாளர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக அமையும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த கேப்டன்: சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tilak-varma-99-runs-ezone-336-all-out-1788948566"></link>
            <id>https://news.lankasri.com/article/tilak-varma-99-runs-ezone-336-all-out-1788948566</id>
            <summary type="text">துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

சேப்பாக்கத்தில் நடந்து வரும் துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99...</summary>
            <content type="html"><![CDATA[<p>துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
</p><p>
சேப்பாக்கத்தில் நடந்து வரும் துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99 ஓட்டங்கள் எடுக்க, தென் மண்டல அணி 336 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><h2>திலக் வர்மா&nbsp;99 </h2><p> 

துலீப் கிண்ண இறுதிப்போட்டியின் நான்காவது நாளில் கிழக்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03e9507-0183-4a60-9159-2cc8f66b38cd/26-6aa1327161581.webp' /></p><p></p><p>

முன்னதாக, தென் மண்டல அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாற, அணித்தலைவர் திலக் வர்மா (Tilak Varma) பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்தார். </p><p>

சாமா வி மிலிந்த் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைக்க, தென் மண்டல அணி 300 ஓட்டங்களை கடந்தது. </p><p>

அதன் பின்னர் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. சாமா 43 ஓட்டங்களில் வெளியேற, திலக் வர்மா 99 ஓட்டங்கள் எடுத்த நிலையில் குரைஷி பந்துவீச்சில் அவுட் ஆனார்.&nbsp;</p><h2>இஷான் கிஷன்&nbsp;அரைசதம் </h2><p> 

தென் மண்டல அணி 336 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், ஷமி, குரைஷி மற்றும் ஷிகர் மோகன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c32b4a38-7c0a-4784-960d-9a3468f2c7b0/26-6aa1326fd5001.webp' /></p><p>
பின்னர் 372 ஓட்டங்கள் முன்னிலையுடன் கிழக்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

அபிமன்யு ஈஸ்வரன் 3 ஓட்டங்களில் சிராஜ் பந்துவீச்சில் அவுட் ஆக, வைபவ் சூர்யவன்ஷி 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;இறங்கி சிக்ஸர் அடிக்க முயன்ற அவர் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். </p><p>

அடுத்து கைகோர்த்த ஷிகர் கான், இஷான் கிஷன் கூட்டணி வேகமாக ஓட்டங்களை சேர்த்தது. அணித்தலைவர் இஷான் கிஷன் (Ishan Kishan) அரைசதம் அடித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0db85c8-5bc0-4760-a56a-ee233c1fa0ea/26-6aa13270a990a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகள்: நாடாளுமன்றம் வரை சலசலப்பை ஏற்படுத்திய விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/parliment-debate-in-120-migrants-in-rnli-boats-1788948029"></link>
            <id>https://news.lankasri.com/article/parliment-debate-in-120-migrants-in-rnli-boats-1788948029</id>
            <summary type="text">Ports denied request to land 120 migrants in RNLI boats: 120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகளுக்கு துறைமுகங்கள் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ports denied request to land 120 migrants in RNLI boats: 120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகளுக்கு துறைமுகங்கள் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


இங்கிலாந்திலுள்ள துறைமுகங்கள் இரண்டிற்கு 120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விடயம் நாடாளுமன்றம் வரை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h3>

120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகள்</h3><p>

இங்கிலாந்தின் Isle of Wight தீவினருகே 120 பேருடன், பாரம் தாங்காமல், மெல்ல நகர்ந்துகொண்டிருந்த புலம்பெயர்வோர் படகொன்றை, RNLI (Royal National Lifeboat Institution) என்னும் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு படகுகள் கவனித்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/450293bd-ccd0-411a-8438-0b3ccc1fdc3e/26-6aa12e3ec15ba.webp' /></p><p>
உடனடியாக அந்த படகிலிருந்தவர்கள் தங்கள் படகுகளில் ஏற்றிக்கொண்டு கரை திரும்ப முயன்றுள்ளன அந்த RNLI அமைப்பின் படகுகள்.
</p><p>
ஆனால், இங்கிலாந்திலுள்ள போர்ட்ஸ்மௌத் துறைமுகமோ, சௌதாம்டன் துறைமுகமோ, தங்களுக்கு அனுமதியளிக்கவில்லை என RNLI அமைப்பு கூறுகிறது.&nbsp;</p><p></p><p>

கடைசியாக, லாங்ஸ்டோன் துறைமுகத்துக்கு வந்தால், அங்கு புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு சாலையை மறித்துக்கொண்டு நின்றதாகவும் கூறுகிறது RNLI அமைப்பு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58c06170-03d0-499c-85fb-e11720c41424/26-6aa12e3f73e5a.webp' /></p><p>
இந்த விடயம் நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது.
</p><p>
போர்ட்ஸ்மௌத் நகர கவுன்சில் தலைவரான ஸ்டீவ் பிற், உள்துறை அலுவலகத்தில் சரியான திட்டமிடல் இல்லாததால் நிகழ்ந்த சம்பவங்களுக்கு உள்துறை அலுவலகம் பதில் கூறவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.
</p><p>
அத்துடன், கோஸ்போர்ட் நாடாளுமன்ற உறுப்பினரான Dame Caroline Dinenage, Solent பகுதியிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களை சேகரிக்க முயன்றோம், உள்துறை அலுவலக தரப்பிலிருந்து மௌனம் மட்டுமே கிடைத்தது என்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a062aa-7aba-452f-903f-18f5242aab02/26-6aa12e4026b45.webp' /></p><p>
ஆகவே, பதற்றத்தையும் பயத்தையும் கட்டுப்படுத்தும் நிலையில் நாங்கள் இல்லை என்கிறார் அவர்.
</p><p>
அதாவது, கடலில் பயணித்துக்கொண்டிருந்த அந்த 120 புலம்பெயர்ந்தோர் எதற்காக சம்பந்தப்பட்ட துறைமுகங்களுக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.
</p><p>
அதற்கு உள்துறை அலுவலகம் அனுமதியளித்ததா, ஏன் அந்த துறைமுகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஏன் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு தகவல் அளிக்கப்படவில்லை என கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்துறை அலுவலகத் தரப்பில் திருப்திகரமான பதிலிலில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:01:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமன் போர் சவுதி அரேபியாவை எட்டினால், மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை செயல்படும்: பாகிஸ்தான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-warns-mecca-pact-may-trigger-war-1788946175"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-warns-mecca-pact-may-trigger-war-1788946175</id>
            <summary type="text">Pakistan warns mecca pact may trigger war: ஏமன் போர் சவுதி அரேபியாவை எட்டினால், மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை செயல்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pakistan warns mecca pact may trigger war: ஏமன் போர் சவுதி அரேபியாவை எட்டினால், மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை செயல்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
</p><p>
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ஏமன் போரின் தாக்கம் சவுதி அரேபியாவை எட்டினால், கடந்த மாதம் மெக்காவில் கையெழுத்திடப்பட்ட மெக்கா கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை உடனடியாக செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60e1d4b9-236f-4ef7-8ec9-530e60d1ed09/26-6aa12bc1e9fd9.webp' /></p><p>

இந்த உடன்படிக்கை ஆகஸ்ட் 7 அன்று பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. ஒரு உறுப்புநாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுவது, மூன்று நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது போலவே கருதப்படும் என ஆசிப் எச்சரித்துள்ளார்.
</p><p>
“இதில் எந்த குழப்பமும் இருக்கக் கூடாது. இது ஒரு கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை. சவுதி அரேபியாவிற்கு எதிரான தாக்குதல், மூன்று நாடுகளின் மீதும் தாக்குதல் என கருதப்படும்” என ஆசிப் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்த அறிவிப்பு, ஏமனின் ஹவுதி படைகள் சவுதி அரேபியாவின் நகரங்கள் மற்றும் எரிசக்தி அமைப்புகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. இதில் குறைந்தது 73 பொதுமக்கள் காயமடைந்தனர்.
</p><p>
இந்த நிலைமை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஏமன் போரின் தாக்கம் சவுதி அரேபியாவை எட்டினால், துருக்கி மற்றும் பாகிஸ்தான் நேரடியாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகும் அபாயம் உள்ளது.
</p><p>
பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள், இந்த உடன்படிக்கை செயல்படுத்தப்பட்டால், பிராந்தியத்தில் பெரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T09:47:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thousands-of-people-protest-after-afd-election-win-1788943422"></link>
            <id>https://news.lankasri.com/article/thousands-of-people-protest-after-afd-election-win-1788943422</id>
            <summary type="text">Thousands of people took to the streets across Germany after the AfD paty&#039;s election win: AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானோர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thousands of people took to the streets across Germany after the AfD paty's election win: AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
</p><p>


ஜேர்மன் கட்சிகள் பலவும், பொதுமக்களில் ஒரு பிரிவினரும் பயந்ததுபோலவே, ஜேர்மன் மாகாணமொன்றில் நடைபெற்ற தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஒன்று அமோக வெற்றி பெற்றுவிட்டது.</p><h3>

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி அமோக வெற்றி</h3><p>

ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி, தேர்தல் நடைபெற்றது.
</p><p>
அந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60e1a3f3-772d-469e-92cf-8858702d12f8/26-6aa11c3fa4579.webp' /></p><p>

வழக்கமாக இந்த விடயத்தில் கருத்துக்கணிப்புகள் பொய்யாகும் நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக, 44 சதவிகித வாக்குகளைப் பெற்று AfD கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><h3>
ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
</h3><p>
இந்நிலையில், ஜேர்மனியில் பல்வேறு நகரங்களில் AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக பொதுமக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.</p><p>

AfD கட்சி, ரஷ்ய ஆதரவுக் கட்சியான BSW கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
</p><p>
அப்படி, AfD கட்சி ஆட்சி அமைக்குமானால், Saxony-Anhalt மாகாணம், தீவிர வலதுசாரி, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஆளும் முதல் ஜேர்மன் மாகாணமாகிவிடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ad91c3e-c8b5-4549-8533-59bba1083261/26-6aa11c4057146.webp' /></p><p>

ஆக, ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி ஆட்சி அமைப்பதைப் பார்த்துக்கொண்டு மக்கள் அமைதியாக இருந்துவிடக்கூடாது என்கிறார்கள் ஆர்பாட்டங்களில் பேசுபவர்கள்.&nbsp;</p><p>
AfD கட்சி, கடுமையான புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட கட்சி ஆகும்.
</p><p>
புலம்பெயர்ந்தோரை மட்டுமின்றி, புலம்பெயர்தல் பின்னணி கொண்ட ஜேர்மன் குடிமக்களையும் நாடுகடத்துவது போன்ற தீவிரக் கொள்கைகள் அக்கட்சிக்கு உண்டு.
</p><p>
அத்துடன், AfD கட்சியினரில் பலர் ரஷ்ய ஜனாதிபதியான புடினுக்கு நெருக்கமானவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c08334d5-04cf-4a20-81ad-d08b1c908062/26-6aa11c410f88b.webp' /></p><p>
</p><p>
ஆக, AfD கட்சி அரசு அமைக்குமானால், அரசு, உளவுத்துறை தொடர்பான தகவல்களைப் பெற முயற்சிக்கலாம்.
</p><p>
அப்படி முக்கிய தகவல்களை அணுக AfD கட்சி அரசுக்கு அனுமதி கிடைக்கும் நிலையில், அது நாட்டுக்கு பாதுகாப்பானதாக அமையுமா என ஏற்கனவே பாதுகாப்புத்துறை மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T08:52:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் - கொழும்பில் ராஜ்நாத் சிங் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rajnath-singh-say-india-always-stand-with-srilanka-1788935597"></link>
            <id>https://news.lankasri.com/article/rajnath-singh-say-india-always-stand-with-srilanka-1788935597</id>
            <summary type="text">இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் என கொழும்பு சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். 

இலங்கை வந்த ராஜ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் என கொழும்பு சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். </p><h3>

இலங்கை வந்த ராஜ்நாத் சிங்</h3><p> 

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb043bfe-fa37-4707-8b4a-e9a0e9860de7/26-6aa0fdaf29a42.webp' /></p><p>
38 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை வருகை தந்துள்ளார். </p><p>

கடைசியாக ராஜிவ்காந்தி அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.சி. பந்த் 1988 ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கை சென்றார்.</p><p> 

2023 ஆம் ஆண்டில் ராஜ்நாத் சிங் இலங்கை வர திட்டமிட்டிருந்த போது, இலங்கை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் வந்ததற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்ததால் அந்த கொழும்பு பயணம் ரத்தானது. </p><h3>

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு</h3><p>

அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், "ஆன்மிகமும் கலாசாரமும் இரண்டறக் கலந்த இலங்கை மண்ணில் உங்களைச் சந்திப்பதில் பெருமையடைகிறேன். 

தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாடு, வளர்ச்சி மீது பிரதமர் நரேந்திர மோடியும் நாங்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cbf0f67-cb7d-4589-aea9-fa47188c84bf/26-6aa0fdafd40d7.webp' /></p><p>

நேர்மையான ஆட்சியின் அடையாளமாக நாடாளுமன்றத்தில் "செங்கோல்' நிறுவப்பட்டதும், திருவள்ளுவர், பாரதியாரின் கொள்கைகளை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதும் தமிழ்ப் பாரம்பரியத்துக்கு மத்திய அரசு அளிக்கும் உயர் மரியாதையாகும்.
</p><p>
இந்தியாவின் எல்லைகள் இன்று முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. நாம் யாரையும் முதலில் தாக்க மாட்டோம். ஆனால், நம்மைத் தாக்கத் துணிந்தால் விட்டுவைக்கவும் மாட்டோம் என்ற நமது கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது.&nbsp;</p><p></p><p>
தற்சார்பு பாரதம் திட்டத்தால் இந்தியா சொந்தமாக ஆயுதங்களைத் தயாரிக்கிறது. தமிழகத்தில் அமைக்கப்படும் "பாதுகாப்புத் தொழில்வழித்தடம்' நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கிறது.
</p><p>
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பகிரப்பட்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம். மேலும் இரு நாடுகளின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியுடன் இருக்கிறோம்.
</p><p>
இரு நாடுகளும் நெருங்கிய கலாச்சார மற்றும் நாகரிகப் பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அவை இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளன.&nbsp;</p><p> 2014 ஆம் ஆண்டில் சுமார் 2 டிரில்லியன் டொலர் மதிப்புடையதாக இருந்த இந்தியாவின் பொருளாதாரம், கடந்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாகி சுமார் 4 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. </p><p>

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு 4 நாடுகளுடன் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா 38 நாடுகளுடன், 8 முக்கிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உட்பட, வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T08:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகத்தில் ட்ரோன் தாக்குதல்: குழந்தை உட்பட நால்வர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-drones-strikes-russia-s-largest-port-1788941313"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-drones-strikes-russia-s-largest-port-1788941313</id>
            <summary type="text">Ukraine&#039;s drone strikes on largest port of russia: ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகத்தில் உள்ள எரிபொருள் எண்ணெய் முனையம் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukraine's drone strikes on largest port of russia: ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகத்தில் உள்ள எரிபொருள் எண்ணெய் முனையம் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் நடத்தியது.</p><p> 

உக்ரேனிய நடத்திய ட்ரோன் தாக்குதலில், ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.&nbsp;</p><h2>எரிபொருள் எண்ணெய் முனையம்</h2><p>

Novorossiysk-யில் ரஷ்யாவின் மிகப்பெரிய கடல் துறைமுகம் அமைந்துள்ளது. இதில் உள்ள எரிபொருள் எண்ணெய் முனையம், இரயில் பாதையில் இருந்து கடல் வழியாக எரிபொருள் எண்ணெயை பெறுதல், சேமித்தல் மற்றும் இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றதாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f572afb-339d-4ba9-bb2c-f38417df516f/26-6aa114fce6d7b.webp' /></p><p></p><p>இதன் ஆண்டு கையாளும் திறன் சுமார் 4 மில்லியன் டன்கள் ஆகும். 

இந்த எண்ணெய் முனையத்தின் மீது 9ஆம் திகதி இரவு உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.</p><p>

இந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் கிராஸ்னோடார் கிராயின் தலைவர் வெனியாமின் கொன்ட்ராட் யேவ் தெரிவித்தார்.
</p><p>
மேலும் அவரது கூற்றுப்படி, மூன்று தனியார் மற்றும் ஐந்து அடுக்குமாடிக் கட்டிடங்கள், அத்துடன் ஒரு ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் மற்றும் ஒரு மழலையர் பாடசாலை ஆகியவை சேதமடைந்தன.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7ee8850-ded3-437f-86f4-c294335335d2/26-6aa114fdc9a99.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T08:09:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த திமுக]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dmk-announced-candidates-for-by-election-1788939245"></link>
            <id>https://news.lankasri.com/article/dmk-announced-candidates-for-by-election-1788939245</id>
            <summary type="text">dmk announced candidates for madurantakam and dharapuram by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>dmk announced candidates for madurantakam and dharapuram by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. </p><h3>

இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த திமுக</h3><p> 

தமிழ்நாட்டில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியானாதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd4a5756-594d-4f02-991a-6ef0525d7999/26-6aa10bef28636.webp' /></p><p>

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அக்டோபர் 6 ஆம் திகதி வாக்குப்பதிவும், அக்டோபர் 8 ஆம் திகதி வாக்கு எண்னிக்கையும் நடைபெற உள்ளது.&nbsp;</p><p></p><p> 

இந்நிலையில் 2 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.</p><p>

மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் ஐ.பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-bans-canadian-alcohol-bikes-dairy-imports-1788939333"></link>
            <id>https://news.lankasri.com/article/us-bans-canadian-alcohol-bikes-dairy-imports-1788939333</id>
            <summary type="text">US bans Canadian alcohol bikes dairy imports: கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இறக்குமதி தடைஅ...</summary>
            <content type="html"><![CDATA[<p>US bans Canadian alcohol bikes dairy imports: கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.</p><h2>

இறக்குமதி தடை</h2><p>அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு கனடா விதித்த எதிர் வரி நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, கனடாவில் இருந்து வரும் பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ளார்.
</p><p>
செப்டம்பர் 29 முதல் அமுலுக்கு வரும் இந்த தடை, மதுபானங்கள், பால் சார்ந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உள்ளடக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa8674c-1077-4b41-86b6-af655a03a614/26-6aa10c46f2a08.webp' /></p><p> </p><p>மேலும், சில பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சீஸ், மோட்டார் படகு, உலோகங்கள், மரச்சாமான்கள் போன்றவை அதிக வரி சுமையுடன் அமெரிக்க சந்தையில் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
கனடா தனது பக்கம், அமெரிக்காவின் எஃகு, ஆடை, மரச்சாமான்கள் போன்ற பொருட்களுக்கு டொலருக்கு-டொலர் வரி விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளின் வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. விலைகள் உயர்ந்து, வாடிக்கையாளர்கள் குறையும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><p>
அமெரிக்கா-கனடா உறவு வரலாற்று ரீதியாக நெருக்கமானது. கனடாவின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவிற்கே செல்கிறது. ஆனால் தற்போதைய வர்த்தகப் போர், இரு நாடுகளின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
</p><p>
பொருளாதார நிபுணர்கள், இந்த வர்த்தகப் போர் இரு தரப்புக்கும் இழப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என எச்சரிக்கின்றனர். வாடிக்கையாளர்களே மிகப்பெரிய இழப்பாளர்ககளாக இருப்பார்கள் என அவர்கள் கூறுகின்றனர்.
</p><p></p><p>கனடா பிரதமர் மார்க் கார்னி, “செயல்படுவதற்கு எப்போதும் செலவு இருக்கும். ஆனால் செயல்படாமல் இருப்பதற்கான செலவு அதைவிட அதிகம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த வர்த்தகப் போர் எப்போது முடிவடையும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினாலும், புதிய பேச்சுவார்த்தைக்கான திகதிகள் அறிவிக்கப்படவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T07:32:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர கால எரிபொருள் கையிருப்பில் கைவைத்த சுவிட்சர்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-to-release-fuel-from-emergency-reserves-1788936695"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-to-release-fuel-from-emergency-reserves-1788936695</id>
            <summary type="text">Switzerland has officially authorized the release of fuel from its strategic emergency reserves: சுவிட்சர்லாந்து, அவசர கால தேவைகளுக்காக என வைத்திருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Switzerland has officially authorized the release of fuel from its strategic emergency reserves: சுவிட்சர்லாந்து, அவசர கால தேவைகளுக்காக என வைத்திருந்த எரிபொருள் சேமிப்பிலிருந்து எரிபொருளை விநியோகிக்க அனுமதியளித்துள்ளது.
</p><p>

சுவிட்சர்லாந்தில், எவ்வித எரிபொருள் உற்பத்தியும் நடைபெறுவதில்லை. தனக்குத் தேவையான 100 சதவிகித எரிபொருளையும் அந்நாடு இறக்குமதிதான் செய்கிறது.
</p><p>
ஆகவே, சுமார் நான்கரை மாதங்களுக்கான பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை அவசர காலத் தேவைகளுக்காக சேமித்துவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது சுவிட்சர்லாந்து.
</p><h3>
அவசர கால கையிருப்பில் கைவைத்த சுவிட்சர்லாந்து</h3><p>

இந்நிலையில், அந்த அவசர கால கையிருப்பிலிருக்கும் எரிபொருளை வெளியே எடுக்க தற்போது சுவிஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
அதாவது, வெளியிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதற்காக, சுவிட்சர்லாந்தின் Neuchâtel மாகாணத்தில் The Cressier plant என்னும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று இயங்கிவருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7033f59-b843-4832-9c54-ded6aa6a3de7/26-6aa101f848910.webp' /></p><p>
அந்த சுத்திகரிப்பு நிலையத்தில், சமீபத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஒன்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அது செயல்படவில்லை. அது சீராக, இம்மாதத்தின் பாதி வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
ஏற்கனவே நாம் குறிப்பிட்டுவருவது போல, சரக்குப் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரைன் நதியில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால், பெட்ரோலிய தயாரிப்புகளை இறக்குமதி செய்வதும் கடினமாகி உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a648b59f-7c89-4f95-8716-07dfcb2a0b89/26-6aa101f8f3602.webp' /></p><p>
ஆகவேதான், அவசர கால கையிருப்பிலிருக்கும் எரிபொருளை வெளியே எடுக்க அதிகாரப்பூர்வமாக தற்போது சுவிஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:51:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[CPL T20: 47 வயது கேப்டன் இம்ரான் தாஹிரின்..அணியை நொறுக்கிய பாகிஸ்தான் வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shadab-khan-30-runs-in-9-balls-and-2-wickets-cpl-1788936159"></link>
            <id>https://news.lankasri.com/article/shadab-khan-30-runs-in-9-balls-and-2-wickets-cpl-1788936159</id>
            <summary type="text">Antigua and barbuda falcons won by 65 runs: CPL டி20 போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Antigua and barbuda falcons won by 65 runs: CPL டி20 போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்த CPL டி20 போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் வீழ்த்தியது.&nbsp;</p><h2>ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ்&nbsp;182 ஓட்டங்கள்</h2><p>
ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான CPL டி20 போட்டி ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b35f02b-2394-447b-a77f-a157eb1a234c/26-6aa1022aace1a.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
அதிரடியில் மிரட்டிய பாகிஸ்தானின் ஹசன் நவாஸ் 36 ஓட்டங்களும், ஷதாப் கான் 30 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aabdf35-b26b-4616-b26e-d98249beaa78/26-6aa107222f87e.webp' /></p><h2>
சுருண்ட&nbsp;கயானா </h2><p>பின்னர் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 14.2 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக தின்ட்யால் 25 (13) ஓட்டங்களும், மொஹம்மது நபி 23 (22) ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6c178fd-38a0-4d9d-8da0-b65acc1d9257/26-6aa0ffe1a7c50.webp' />&nbsp;</p><p>

அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளும், ஜோஷுவா ஜேம்ஸ், ஷதாப் கான் மற்றும் சுபியன் மோகிம் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
</p><p>
9 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் விளாசியும், 2 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஷதாப் கான் (Shadab Khan) ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6efb70d9-162e-4ba1-ba7a-779d8b71095d/26-6aa10722f1e41.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bb78944-b231-48fb-9d51-0a64d05851ab/26-6aa10723ad811.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:49:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாதாரண குடிமக்களா.. மன்னரின் அறிவிப்பால் ஆச்சரியமடைந்தோம் - ஹரி, மேகன் தம்பதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-s-letter-surprised-said-by-harry-and-meghan-1788868391"></link>
            <id>https://news.lankasri.com/article/king-s-letter-surprised-said-by-harry-and-meghan-1788868391</id>
            <summary type="text">Harry and Meghan says king&#039;s letter surprised: அரச குடும்பத்தாராக இல்லாமல் சாதாரண குடிமக்களாக நடத்தப்படுவீர்கள் என்ற மன்னரின் அறிவிப்பினால் தாங்கள் ஆச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry and Meghan says king's letter surprised: அரச குடும்பத்தாராக இல்லாமல் சாதாரண குடிமக்களாக நடத்தப்படுவீர்கள் என்ற மன்னரின் அறிவிப்பினால் தாங்கள் ஆச்சரியமடைந்ததாக ஹரி, மேகன் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் சாதாரண குடிமக்களாக நடத்தப்படுவார்கள் என்ற மன்னரின் அறிவிப்பால் ஆச்சரியமடைந்துள்ளனர்.&nbsp;</p><h2>பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது</h2><p>
அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹரி வெளியேறியதைத் தொடர்ந்து அவருக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d362355c-b2fd-4eed-8505-c3b7fb471210/26-6a9ff89b1a159.webp' />
</p><p>
</p><p>

அதன் அடிப்படையில் ஹரியும், மேகனும் இனி அரசு குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டது.&nbsp;</p><p>

பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ள ஹரி மற்றும் மேகன் சாதாரண குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என்று மன்னர் சார்லஸ் அறிவிப்பு மூலம் உறுதி செய்தார்.
</p><h2>
ஆச்சரியமாக இருக்கிறது&nbsp;</h2><p>இந்த நிலையில் ஹரி, மேகன் தம்பதியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை; இது சற்று ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
</p><p>

மேலும், மன்னரின் அறிவிப்பு வெளியிடப்பட்டது தம்பதியினருக்கு எதிர்பாராத ஒன்றாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
பிரித்தானிய தம்பதியரின் புதிய வாழ்க்கைக்கான திட்டங்கள் குறித்து, அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகங்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கமளித்ததைத் தொடர்ந்து இது வந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ebe61a6-dc07-4bb8-99ad-e6281f2c32d2/26-6a9ff89c12d29.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T06:30:05+00:00</updated>
        </entry>
    </feed>
