<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-05T10:45:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவச் சேர்ப்பு அலுவலத்தின் மீது தாக்குதல் திட்டம்: சந்தேக நபர்கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-arrested-by-fsb-who-plan-attack-1785926161"></link>
            <id>https://news.lankasri.com/article/man-arrested-by-fsb-who-plan-attack-1785926161</id>
            <summary type="text">உக்ரைனின் உத்தரவின் பேரில் இராணுவச் சேர்ப்பு அலுவலகம் மீது தாக்குதல் திட்டமிட்டதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கலுகா பிராந்தியத்தில், இராணுவச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் உத்தரவின் பேரில் இராணுவச் சேர்ப்பு அலுவலகம் மீது தாக்குதல் திட்டமிட்டதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.</p><p>

கலுகா பிராந்தியத்தில், இராணுவச் சேர்ப்பு அலுவலத்தின் மீது தீவைப்புத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை ரஷ்யா கைது செய்துள்ளது. </p><h2>சந்தேக நபர்&nbsp;கைது </h2><p> 

ரஷ்யாவின் FSB பாதுகாப்புப் பிரிவு புதன்கிழமையன்று, கலுகா பிராந்தியத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததாக தெரிவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb95ad30-d322-4050-8a03-4535aba56b93/26-6a73121436f89.webp' />&nbsp;</p><p></p><p>
குறித்த நபர், உக்ரைனின் உத்தரவின் பேரில் மத்திய கலுகா பிராந்தியத்தில் உள்ள இராணுவச் சேர்ப்பு அலுவலகம் ஒன்றின் மீது தீவைப்புத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p><p>

உக்ரைனின் இராணுவ உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பல்வேறு குற்றச் செயல்களைச் செய்வதற்காக தனக்கு பணம் தருவதாகக் கூறியதாக, கைது செய்யப்பட்ட குறித்த 22 வயது நபர் தெரிவித்த காணொளியை அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.</p><h2>10 ஆண்டுகள் சிறைத்தண்டனை </h2><p>

மேலும் அந்த நபர், "முதலில் ரஷ்ய அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலான வாசகங்களை சுவர்களில் எழுதுவதும் (Graffiti), பின்னர் இராணுவச் சேர்ப்பு அலுவலகம் ஒன்றை எரிப்பதும் எனது பணிகளாக இருந்தன.

கைது செய்யப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே தன்னை வழிநடத்திய நபருடன் தொடர்பில் இருந்ததாகவும்" அவர் குறிப்பிட்டார்.
</p><p>
பயங்கரவாத செயலை மேற்கொள்ளத் திட்டமிட்டதாகக் கூறப்படும் கலுகா பகுதியைச் சேர்ந்த அந்த நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86de578d-3ed4-4a85-8834-b8c7100579c2/26-6a731214dfd7f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T10:34:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெட்ரோல், மின்சாரம் தேவை இல்லை - சூரிய சக்தி மூலம் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/otherlab-launched-solar-power-charging-scooter-1785923446"></link>
            <id>https://news.lankasri.com/article/otherlab-launched-solar-power-charging-scooter-1785923446</id>
            <summary type="text">சூரிய சக்தி மூலம் இயங்கும் ஸ்கூட்டரை அமெரிக்காவை சேர்ந்த அதர்லேப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

சூரிய சக்தியில் இயங்கும் ஸ்கூட்டர் 

பெட்ரோல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரிய சக்தி மூலம் இயங்கும் ஸ்கூட்டரை அமெரிக்காவை சேர்ந்த அதர்லேப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><h3> 

சூரிய சக்தியில் இயங்கும் ஸ்கூட்டர்</h3><p> 

பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் அறிமுகமாகியுள்ள நிலையில், பலரும் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f97e59b3-626b-4bc7-8397-4ad67ea85914/26-6a7307785b8c3.webp' /></p><p> 

தற்போது அதற்கு மாற்றாக சூரிய சக்தி மூலமும் இயங்கும் ஸ்கூட்டரை அமெரிக்காவை சேர்ந்த அதர்லேப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு 'லைட்ஃபூட்' என்று பெயரிடப்பட்டுள்ளது.</p><p>

குறுகிய தூர பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டரில் இருவர் அமர்வதற்கான இருக்கை வசதியுடன், பொருட்களை வைப்பதற்கான இடவசதியும் உள்ளது. </p><p> 

இதன் இரு பக்கத்திலும் தலா 120 வாட் திறன் கொண்ட 2 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாகனத்தை வெயிலில் நிறுத்தி வைப்பதன் மூலம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஒரு மணி நேரம் வெயிலில் நிறுத்தி வைப்பதன் மூலம், 5 கிமீ ஓடும் பயண வரம்பைப் பெற முடியும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfd8e97-6da3-4309-8af6-6c6e85671f4a/26-6a7307790bb8a.webp' /></p><p>

இது முற்றிலுமாக சூரிய சக்தியில் மட்டுமல்லாது, மின்சார சார்ஜ் செய்து அதன் மூலமும் இயக்கி கொள்ளலாம்.

இதற்காக 1.1 kWh திறன் கொண்ட சக்திவாய்ந்த 48-வோல்ட் லித்தியம்-அயன் பேட்டரியும் உள்ளது.</p><p> இதன் மூலம் ஸ்கூட்டரை வீட்டில் உள்ள எலக்ட்ரிக் போர்டிலும் எளிதாக சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்கூட்டர் வெறும் 90 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7562f9d6-ea8f-410a-b376-e8e963d43671/26-6a730779b62ec.webp' /></p><p> 

 இந்த பேட்டரி ஒரு முழு சார்ஜில் சுமார் 60 கிலோமீட்டர்தூரம் பயணிக்க முடியும். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 32 கி.மீ. என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த ஸ்கூட்டரின் பின்புறத்தில், 45.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்பு பெட்டி உள்ளது. இதில் 20 கிலோகிராம் வரை பொருட்களை வைக்க முடியும். மளிகைப் பொருட்கள், ஹெல்மெட்கள் அல்லது பிற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை இதில் எளிதாக வைக்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c38ba45-4a2d-4805-a2a9-832a84de764a/26-6a730777abaec.webp' /></p><p>
முன்பக்கத்தில் 2.8-அங்குல நீர் புகாத தொடுதிரை எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது வேகம், பேட்டரி நிலை மற்றும் விளக்கு குறித்த தகவல்களை வழங்குகிறது.</p><p> 

மேலும், 2,000 லூமன் முகப்பு விளக்கு, ஆக்சிலரோமீட்டர் மூலம் இயங்கும் பின்பக்க விளக்கு, 120 டெசிபல் ஹார்ன் மற்றும் எலக்ட்ரானிக் வீல் லாக் போன்ற அம்சங்களும் உள்ளன. </p><p>

இதன் ஆரம்ப விலை 4,995 டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 4.75 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்கூட்டர் அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:50:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/400-ww2-shells-in-france-village-amid-wildfire-1785922206"></link>
            <id>https://news.lankasri.com/article/400-ww2-shells-in-france-village-amid-wildfire-1785922206</id>
            <summary type="text">பிரான்சின் சில பகுதிகளில், காட்டுத்தீக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



பிரான்சில் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் சில பகுதிகளில், காட்டுத்தீக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p>



பிரான்சில் காட்டுத்தீ பற்றியெரிந்துகொண்டிருந்தபோது, தீயின் நடுவே வெடிச்சத்தம் கேட்டதாக அதிகாரிகள் கூறியிருந்த நிலையில், நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.</p><h3>காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்
</h3><p>
தென்மேற்கு பிரான்சிலுள்ள Le Porge என்னும் கிராமத்தில் காட்டுத்தீ எரிந்துகொண்டிருக்கும்போது வெடிச்சத்தம் கேட்டதாக வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்திருந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fa6ed11-2022-48c7-a9d2-50401ea84d2e/26-6a73029f5cc8c.webp' /></p><p>
இந்நிலையில், காட்டுத்தீக்குப் பின் வீடு திரும்பிய மக்கள், தீ எரிந்த இடத்தில் வெடிகுண்டுகள் கிடப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.</p><p>

உடனடியாக, மக்கள் அப்பகுதிக்கு வரமுடியாதபடி தடுப்புகளை ஏற்படுத்திய உள்ளூர் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>

வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, 400க்கும் மேற்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88b7ac89-0f29-4eca-90d9-a722f5e42c45/26-6a7302a01101e.webp' /></p><p>
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், இரண்டாம் உலகப்போருக்குப் பின் நாங்கள் எதிர்கொள்ளும் மிக பயங்கரமான விடயம் இந்த காட்டுத்தீதான் என கூறியிருந்த நிலையில், இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயமும் நிகழ்ந்துள்ளது கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:40:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் பாதுகாப்பில் கேள்விக்குறி., கோல்ஃப் மைதானத்தில் ஆயுதத்துடன் நுழைந்த நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/armed-man-arrested-at-trump-golf-course-1785922546"></link>
            <id>https://news.lankasri.com/article/armed-man-arrested-at-trump-golf-course-1785922546</id>
            <summary type="text">ட்ரம்ப் கோல்ஃப் மைதானத்தில் ஆயுதத்துடன் நுழைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோல்ஃப் மைதானத்தில் நிதி திரட்டும் விருந்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ட்ரம்ப் கோல்ஃப் மைதானத்தில் ஆயுதத்துடன் நுழைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h2>கோல்ஃப் மைதானத்தில் நிதி திரட்டும் விருந்து</h2><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கலிபோர்னியாவில் உள்ள ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸ் பகுதியில் அமைந்துள்ள அவரது சொந்த Trump National Golf Course-இல் நிதி திரட்டும் விருந்தில் பங்கேற்க இருந்தார். </p><p>

அதற்கு சற்று முன், அப்பகுதியில் ஆயுதத்துடன் நுழைந்த அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/236e0b41-1308-4baf-8735-2d83b00f3491/26-6a7303f3c8c1a.webp' /></p><p>ஜீனின் ஜான் டேல் (38) என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர், துப்பாக்கி மற்றும் சட்டவிரோத குண்டுகள் வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெரிஃப் துறை கூறியதாவது:</h2><p>

அந்த நபர் மைதானத்தில் சுற்றி நடந்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
</p><p>
அவரிடம் 16 குண்டுகள் கொண்ட ஹாலோ பாயிண்ட் குண்டுகள் மற்றும் ஏற்கனவே லோடு செய்யப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

அவரது வாகனத்திலும் கூடுதல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p> பின்னர் அவரது வீட்டில் FBI மற்றும் LA கவுண்டி ஷெரிஃப் துறை சோதனை நடத்தியதில், சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட ரைபிள், பிஸ்டல், உடற்கவசம் மற்றும் பல்வேறு குண்டுகள் கைப்பற்றப்பட்டன.</p><p></p><p>அதிகாரிகள் தெரிவித்ததாவது, “இந்த சம்பவம் சமூகத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக இல்லை. ஆனால், சந்தேகத்திற்கிடமான செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம்” எனக் கூறினர்.
</p><p>
ட்ரம்ப், கலிபோர்னியாவில் நடைபெறும் குடியரசுக் கட்சி நிதி திரட்டும் விருந்தில் பங்கேற்க வந்துள்ளார். அங்கு அவர், கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் மீது கடுமையான விமர்சன உரையாற்ற உள்ளார்.</p><p>

இந்த சம்பவம், ட்ரம்ப் மீது கடந்த சில ஆண்டுகளில் நடந்த பல தாக்குதல் முயற்சிகளுக்குப் பிறகு, அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T09:33:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்திய ரிஷப் பண்ட்! மாநிலத்திலேயே முதல் நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rishabh-pant-highest-taxpayer-in-uttarakhand-1785921436"></link>
            <id>https://news.lankasri.com/article/rishabh-pant-highest-taxpayer-in-uttarakhand-1785921436</id>
            <summary type="text">இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பண்ட் ரூ.23.84 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார்.&amp;nbsp; 

உத்தரகாண்ட் மாநிலத்திலேயே அதிக வருமான வரி செலுத்திய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பண்ட் ரூ.23.84 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார்.&nbsp;</p><p> 

உத்தரகாண்ட் மாநிலத்திலேயே அதிக வருமான வரி செலுத்திய நபராக கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ளார்.&nbsp;</p><h2>ரிஷப் பண்ட்&nbsp;</h2><p>

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரராக விளையாடி வரும் ரிஷப் பண்ட் (Rishabh Pant), இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fad98e4-4360-4528-8db8-def1d09885f7/26-6a72ff9f0bc5c.webp' /></p><p></p><p> 

இந்த சூழலில், உத்தர்காண்டின் அதிகபட்ச வரி செலுத்துபவராக ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p> 

அதாவது, 2025-26 நிதியாண்டிற்காக ரிஷப் பண்ட் ரூ.23.84 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார். இதன்மூலம் மாநிலத்திலேயே அதிகபட்ச தனிநபர் வரி செலுத்துபவராக திகழ்கிறார். 

மேலும், ஒரு நிதியாண்டில் அதிக வரி செலுத்தியவராக அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக திகழ்கிறார்.</p><p> 

ரிஷப் பண்டின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.150 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இதில், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் கிரிக்கெட் மூலம் ஈட்டிய வருமானம் ஆகியவை அடங்கும். </p><p>

குறிப்பாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடனான ரூ.27 கோடி மதிப்பிலான ஒப்பந்தமும் இதில் அடங்கும்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44141664-7ada-4b3a-8953-d487ab3f439e/26-6a72ff9fb6355.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> <b>WHATSAPP CHANNEL</b></a><b> </b>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:15:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று தங்கத்தின் விலை எவ்வளவு? (05-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785920669"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785920669</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (05-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (05-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,316,362.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,440.00.</p><p>

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 371,500.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,570.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 340,600.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,640.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 325,100.00.</p>]]></content>
            <updated>2026-08-05T09:05:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாயில் தொழிற்சாலை பகுதியில் ஏற்பட்ட 7 குண்டு வெடிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dubai-jebel-ali-explosions-spark-massive-fire-1785918285"></link>
            <id>https://news.lankasri.com/article/dubai-jebel-ali-explosions-spark-massive-fire-1785918285</id>
            <summary type="text">துபாயின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜெபெல் அலி தொழிற்சாலை மண்டலம் இன்று அதிகாலை பல குண்டு வெடிப்புகளால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

ஏழு வெடிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜெபெல் அலி தொழிற்சாலை மண்டலம் இன்று அதிகாலை பல குண்டு வெடிப்புகளால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.</p><p>
</p><h2>
ஏழு வெடிப்புகள்</h2><p>20 நிமிடங்களில் குறைந்தது ஏழு வெடிப்புகள் நிகழ்ந்ததாக அரபு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெடிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டதால், அந்த பகுதியில் பெரிய அளவில் புகை மூட்டம் பரவியது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3731d5a6-39eb-433c-8601-47dfd1007733/26-6a72f34ec5032.webp' /></p><p>சம்பவம் நடந்த இடம் ஜெபெல் அலி துறைமுகம் மற்றும் ஜெபெல் அலி சுதந்திர வணிக மண்டலம் (Jafza) அருகே அமைந்துள்ளது. இது 1985-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கும் முக்கிய வணிக மையமாகும்.</p><p>

வெடிப்புகளுக்குப் பிறகு தீ பரவிய நிலையில், அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதுவரை எந்த அமைப்பும் சம்பவத்திற்குப் பொறுப்பேற்கவில்லை. </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BREAKING: Yemen&#39;s Houthis have struck the industrial area of Jebel Ali in Dubai, UAE, per initial reports. Widespread fires and plumes of smoke over the area and multiple explosions in Dubai in the past few minutes. <a href="https://t.co/eMH9ASsNeT">pic.twitter.com/eMH9ASsNeT</a></p>&mdash; The Hormuz Letter (@HormuzLetter) <a href="https://x.com/HormuzLetter/status/2084798929317613584?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>இரண்டு நபர்கள் கைது</h2><p>மேலும், தீ விபத்தை படம் பிடித்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஜெபெல் அலி துறைமுகம், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த சம்பவம் உலகளாவிய வணிகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
</p><p>
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர், “ஹார்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும். இல்லையெனில் ஈரான் கடுமையாக தாக்கப்படும்” என எச்சரித்தார்.
</p><p>
இந்த வெடிப்புகள் மற்றும் தீ விபத்து, மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றங்களை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T08:22:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் திரைத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-govt-to-cut-film-funding-for-cost-saving-1785918064"></link>
            <id>https://news.lankasri.com/article/german-govt-to-cut-film-funding-for-cost-saving-1785918064</id>
            <summary type="text">அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், கலாச்சாரம் மற்றும் ஊடகங்களுக்காக ஒதுக்கப்படும் தொகை 8 சதவிகிதம் குறைக்கப்பட உள்ளது.


ஜேர்மனியின் 2027ஆம் ஆண்டுக்கான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், கலாச்சாரம் மற்றும் ஊடகங்களுக்காக ஒதுக்கப்படும் தொகை 8 சதவிகிதம் குறைக்கப்பட உள்ளது.</p><p>


ஜேர்மனியின் 2027ஆம் ஆண்டுக்கான ஃபெடரல் பட்ஜெட் திரைத்துறையினருக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h3>

திரைத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட்
</h3><p>
ஜேர்மனியின் 2027ஆம் ஆண்டுக்கான ஃபெடரல் பட்ஜெட்டில், கலாச்சாரம் மற்றும் ஊடகத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகை, 2.57 பில்லியன் யூரோக்களிலிருந்து 2.36 பில்லியன் யூரோக்களாக குறைக்கப்படும் என அரசின் வரைவு மசோதா ஒன்று தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/921be116-11df-4f94-adca-d617a09b4fbb/26-6a72f2727a507.webp' /></p><p>

செலவுகளைக் குறைப்பதற்காக ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க இருக்கும் நிலையில், German Federal Film Fund (DFFF) மற்றும் German Motion Picture Fund (GMPF) என்னும் அரசின் நிதியுதவிகள், 50 மில்லியன் யூரோக்கள் குறைக்கப்பட உள்ளதால், 250 மில்லியன் யூரோக்களாக இருந்த நிதியுதவி, 200 மில்லியன் யூரோக்களாக குறைய உள்ளது.&nbsp;</p><p></p><p>
விடயம் என்னவென்றால், இதற்கு முன் அரசின் நிதியுதவி 133 மில்லியன் யூரோக்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் அதை 250 மில்லியன் யூரோக்களாக அதிகரிப்பதாக கலாச்சாரத் துறை அமைச்சரான Wolfram Weimer அறிவித்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a505c1c4-fa22-44e5-ac53-217c3101b7e0/26-6a72f271c571b.webp' /></p><p>

அதை நம்பி சர்வதேச அளவில் ஜேர்மன் சினிமாவை சிறப்புறச் செய்ய திரைத்துறையினர் திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு திரைத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகை 8 சதவிகிதம் குறைய இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:21:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பையில் வீசப்பட்ட லொட்டரி சீட்டுக்கு ரூ.10.98 கோடி - தேடி கண்டுபிடித்த தூய்மை பணியாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/italian-garbagemen-recover-rs-10cr-lottery-ticket-1785917027"></link>
            <id>https://news.lankasri.com/article/italian-garbagemen-recover-rs-10cr-lottery-ticket-1785917027</id>
            <summary type="text">இத்தாலியில், பெண் ஒருவர் குப்பையில் வீசிய லொட்டரி சீட்டுக்கு ரூ.10.98 கோடி பரிசு விழுந்ததையடுத்து, அதனை குப்பையில் தேடி கண்டுபிடித்துள்ளனர். 

குப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியில், பெண் ஒருவர் குப்பையில் வீசிய லொட்டரி சீட்டுக்கு ரூ.10.98 கோடி பரிசு விழுந்ததையடுத்து, அதனை குப்பையில் தேடி கண்டுபிடித்துள்ளனர். </p><h3>

குப்பையில் இருந்த ரூ.10.98 கோடி லொட்டரி டிக்கெட்
</h3><p>
இத்தாலியை சேர்ந்த பெண் ஒருவர், குலுக்கலுக்கு பின்னர் அருகிலுள்ள கடைக்குச் சென்று லொட்டரி சீட்டை சரிபார்த்தபோது, அங்கிருந்த இயந்திரம் பணம் வழங்க முடியாது என்று காட்டியது. </p><p>

மிகப்பெரிய தொகைகளை சிறிய கடைகளில் பெற முடியாது என அந்த இயந்திரம் காட்டியதை, தனக்கு பரிசு விழவில்லை என தவறாக நினைத்த அந்த பெண் லொட்டரி சீட்டை கடையிலே விட்டு வந்துவிட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b839051c-8bbd-47d6-a408-eec0b6d2ac1c/26-6a72ee6445ddf.webp' /></p><p>

வீட்டிற்கு சென்ற பின்னர், அவர் வழக்கமாகத் தேர்வு செய்யும் எண்களே வெற்றி பெற்றுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.&nbsp;அந்த எண்ணிற்கு 1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.10.98 கோடி) பரிசு கிடைத்துள்ளது.</p><p>
அவர் மீண்டும் கடைக்கு சென்ற போது, ஏற்கனேவே அந்த சீட்டை குப்பையில் வீசி அதனை குப்பை லொறி எடுத்து சென்று விட்டது.&nbsp;</p><p></p><p> 

ஆனால் அந்த குப்பை லொறியை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்ததால் ஒரு கழிவு மேலாண்மை நிறுவனத்தின் உதவியுடன் பாதுகாப்பாக குப்பைகளை ஆராய்ந்து, ஒரு நாளுக்கு மேலாக தேடி, அந்த லொட்டரி சீட்டை கண்டறிந்துள்ளனர். </p><p>

ஆனால், அதிசயமாக அந்த லொட்டரி சீட் எந்த சேதமும் இல்லாமல் அப்படியே இருந்தது" என அதனை தேடிய SANB நிறுவனத்தின் நிர்வாகியான ராபர்டோ நிக்கோலா டோஸ்கானோ தெரிவித்துள்ளார். </p><p>

இதனை அந்த வெற்றி பெற்ற பெண்ணிடம் தெரிவித்த போது அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளார். தேடியதற்கான செலவை SANB நிறுவனதிற்கு வழங்க உள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:05:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் மோசமான வறட்சி: உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-drought-to-affect-food-production-1785912294"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-drought-to-affect-food-production-1785912294</id>
            <summary type="text">பிரித்தானியாவில் மோசமான வறட்சி காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.


பிரித்தானியாவில், சுமார் 190 ஆண்டுகளில் இல்லாத அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் மோசமான வறட்சி காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
</p><p>

பிரித்தானியாவில், சுமார் 190 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது வறண்ட வானிலை நிலவிவருகிறது.
</p><p>
இந்நிலையில், அதன் காரணமாக உணவு உற்பத்தி கணிசமாக பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><h3>
உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்</h3><p>

வறட்சி காரணமாக, பாண், பியர், காலை உணவுக்கான தானியங்கள் மற்றும் கால்நடைகளுக்கான தீவனங்கள் தயாரிக்கத் தேவையான, பார்லி, ஓட்ஸ், சிலவகை எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் உற்பத்தி, இந்த ஆண்டில் 19.5 மில்லியன் டன்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக Energy and Climate Intelligence Unit (ECIU) என்னும் ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16695edb-87dc-4911-b2aa-773e81d8a891/26-6a72dbe8295d1.webp' /></p><p>

1984ஆம் ஆண்டு, உணவு தானிய உற்பத்தி தொடர்பில் ஆவணப்படுத்தல் துவங்கியபிறகு, இதற்கு முன் 2020ஆம் ஆண்டு மேற்குறிப்பிட்ட தானியங்களின் உற்பத்தி 19.8 மெட்ரிக் டன்களாக இருந்ததே இதற்கு முன் குறைவான உற்பத்தியாக கருதப்படுகிறது. தற்போதைய நிலை அதைவிட மோசமாக காணப்படுகிறது.&nbsp;</p><p></p><p>

இதனால், விவசாயிகளுக்கு 390 மில்லியன் பவுண்டுகள் வரை வருவாய் இழப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த சூழலிலும், சில எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி ஓரளவு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதே சற்றே ஆறுதலைக் கொடுக்கும் விடயமாகும்.
</p><p>
பிரித்தானியாவின் முக்கிய சாகுபடி பயிரான கோதுமையைப் பொருத்தவரை, மழையின்மையால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cba08af9-86aa-40f5-b230-3c84533995ff/26-6a72dbe8cdb83.webp' /></p><p>
தங்களால் முடிந்ததை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்னும் தீவிர முயற்சியில் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்ய, கிடைத்தது, வழக்கமான அளவில் பாதிதான் உள்ளது.
</p><p>
வழக்கமாக, சராசரியாக ஹெக்டேர் ஒன்றிற்கு 7.9 டன் கோதுமை விளையும் நிலையில், இம்முறை, வெறும் 6.8 டன் கோதுமைதான் விளைந்துள்ளதாக Agriculture and Horticulture Development Board (AHDB) என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>

ஆக, பிரித்தானியா தேசிய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், அதில் உணவு உற்பத்தி என்னும் விடயத்தையும் சேர்த்துக்கொள்ளுமாறு உணவுப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:05:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையும் சனி.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sani-transit-1785914615"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sani-transit-1785914615</id>
            <summary type="text">நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.</p><p>

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
</p><p>
இந்நிலையில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி சனிபகவான் கடைசி நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.</p><p>

அந்தவகையில், சனி ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>மிதுனம் </h2><ul><li>

அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப் போகிறது.</li><li> நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்.</li><li> வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். </li><li>தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்.</li><li> வாழ்க்கையின் பல அம்சங்களில் வளர்ச்சி உண்டாகும். </li><li>பொருள் வசதிகள் மற்றும் நிதி நிலை மேம்படும். </li><li>நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆசைகள் நிறைவேறும். </li><li>திருப்தி மற்றும் மனநிறைவை அளிக்கும். </li><li>குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.</li><li> அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிடலாம். </li><li>வீட்டில் அமைதியான சூழ்நிலை உண்டாகும்.</li><li> மகிழ்ச்சியையும் மன அமைதியையும் அதிகரிக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b77707c-ed60-4dcf-ab57-06826f11f684/26-6a72e4f902910.webp' /></p><p>
</p><h2>
துலாம்</h2><ul><li> 

எதிர்பாராத நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். </li><li>நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.</li><li> உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும்.</li><li> முன்னேற்றத்திற்கான பாதை உருவாகும். </li><li>தொழில் ரீதியாக பல நன்மைகளை வழங்குவார்.</li><li> கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.</li><li> நீண்ட காலமாக நடந்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். </li><li>திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். </li><li>தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். </li><li>நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும்.</li><li> வீட்டில் மகிழ்ச்சி பெருகும். </li><li>மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். </li><li>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.</li><li> வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.</li><li> காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be57422f-2e04-4b0f-981c-ff5ad4db0110/26-6a72e4f9a6e62.webp' /></p><p>
</p><h2>
கும்பம்</h2><ul><li> 

நேரடிப் பலன்களைக் கொடுக்கும். </li><li>வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பார்கள்.</li><li> ஒத்திவைக்கப்பட்ட சில பணிகளை முடிக்க முடியும். </li><li>தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். </li><li>நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். </li><li>அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைக் கொண்டுவரும். </li><li>இலக்கை அடைய முடியும். </li><li>வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற விருப்பங்கள் நிறைவேறும். </li><li>குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.&nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec866b41-5fd7-4682-a90f-ea630d4fcf4c/26-6a72e4fa57f46.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T07:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[49 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/abdullah-shafique-160-not-out-record-in-wi-1785914199"></link>
            <id>https://news.lankasri.com/article/abdullah-shafique-160-not-out-record-in-wi-1785914199</id>
            <summary type="text">மேற்கிந்திய தீவுகளில் டெஸ்டில் 160 ஓட்டங்கள் விளாசி பாகிஸ்தானின் அப்துல்லா ஷாஃபிக் சாதனை படைத்துள்ளார். 

பாகிஸ்தானின் அப்துல்லா ஷாஃபிக் மேற்கிந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கிந்திய தீவுகளில் டெஸ்டில் 160 ஓட்டங்கள் விளாசி பாகிஸ்தானின் அப்துல்லா ஷாஃபிக் சாதனை படைத்துள்ளார்.</p><p> 

பாகிஸ்தானின் அப்துல்லா ஷாஃபிக் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 160 ஓட்டங்கள் குவித்து, 49 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்துள்ளார்.&nbsp;</p><h2>கடைசி டெஸ்ட் போட்டி</h2><p>
மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ட்ரினிடாட்டில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/229f2de7-a86a-4a5f-8ebb-6103d91ab4ee/26-6a72e35a485a3.webp' />&nbsp;</p><p></p><p>
மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸில் 344 ஓட்டங்கள் குவிக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 387 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
அணித்தலைவர் பாபர் அஸாம் (Babar Azam) 88 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அப்துல்லா ஷாஃபிக் ஆட்டமிழக்காமல் 160 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள்) எடுத்தார். </p><h2>அப்துல்லா ஷாஃபிக் 
</h2><p>
இதன்மூலம் 49 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் இன்னிங்ஸில் 150 ஓட்டங்களை கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/821158c2-b6d5-4f6c-915b-8d6f0f17adf7/26-6a72e35b00670.webp' /></p><p>

1977ஆம் ஆண்டில் மஜீத் கான் மேற்கிந்திய தீவுகளின் கயானாவில் 167 ஓட்டங்கள் குவித்திருந்தார்.</p><p> 1958யில் ஹனீப் மொஹம்மது (பாகிஸ்தான்) 337 ஓட்டங்கள் குவித்ததே இதுவரை அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6586c6c6-db0f-4fa4-b3b2-6ebbaff0e39d/26-6a72e35bac0f0.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T07:14:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தவறான திசையில் வாகனத்தை செலுத்திய நபர்: 4 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/4-dies-in-canada-car-crash-drives-in-wrong-route-1785912967"></link>
            <id>https://news.lankasri.com/article/4-dies-in-canada-car-crash-drives-in-wrong-route-1785912967</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் நிகழ்ந்த விபத்தொன்றில் குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.


கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் நிகழ்ந்த விபத்தொன்றில் குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.
</p><p>

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரில் நிகழ்ந்த விபத்தொன்றில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.</p><h3>

தவறான திசையில் வாகனத்தை செலுத்திய நபர்
</h3><p>
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணியளவில், கால்கரி நகரிலுள்ள Stoney Trail என அழைக்கப்படும் நெடுஞ்சாலையில், கார் ஒன்று தவறான திசையில் வேகமாக சென்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03170a6c-e99d-4564-bb0f-8795902e56b1/26-6a72de8817b74.webp' /></p><p>
அதிவேகத்தில் சென்ற அந்தக் கார், எதிரே வந்துகொண்டிருந்த இரண்டு கார்களுடன் மோதியதில், இரண்டு கார்களில் தீப்பற்றியுள்ளது, ஒரு கார் கடும் சேதமடைந்துள்ளது.
</p><p>
துயரம் என்னவென்றால், தவறான திசையில் பயணித்து விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியான 30 வயது மதிக்கத்தக்க நபரும், அவரது காரிலிருந்த பெண்ணும், ஒரு குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள்.
</p><p>
அந்தக் கார் மோதிய மற்றொரு காரின் சாரதியான 43 வயது நபரும் பலியாகிவிட்டார். </p><p></p><p>

விபத்தில் சிக்கிய மூன்றாவது காரிலிருந்த 52 வயது பெண்ணும், அவருடன் பயணித்த மூன்று பிள்ளைகளும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
இந்நிலையில், தவறான திசையில் பயணித்து விபத்தை ஏற்படுத்திய நபர் மது அருந்தியிருந்தாரா என்பது போன்ற விடயங்கள் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் அம்பலமான இளநிலை மருத்துவரின் மோசடி: பணியைத் தொடரை தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/melbourne-junior-doctor-theft-specialist-s-pad-1785910483"></link>
            <id>https://news.lankasri.com/article/melbourne-junior-doctor-theft-specialist-s-pad-1785910483</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில், பல ஆண்டுகளாக போலியாக தயாரிக்கப்பட்ட மருந்துச்சீட்டுகளை பயன்படுத்திய இளநிலை மருத்துவரின் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில், பல ஆண்டுகளாக போலியாக தயாரிக்கப்பட்ட மருந்துச்சீட்டுகளை பயன்படுத்திய இளநிலை மருத்துவரின் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மெல்போர்ன் இளநிலை மருத்துவர் 90-மருந்துச்சீட்டு மோசடியில் ஈடுபட்டதும், மருத்துவராக பதிவு செய்யப்படுவதற்கு முன்பே குழந்தைகள் இதயநோய் நிபுணரின் மருந்துச்சீட்டுப் புத்தகத்தைத் திருடியதும் தெரிய வந்துள்ளது. </p><h2>டசின் கணக்கான மருந்துச்சீட்டுகளை போலியாக
</h2><p>




மெல்போர்னில் இளநிலை மருத்துவரான அகஸ்டின் எர்-யாங் லோசானோ கியூ, டசின் கணக்கான மருந்துச்சீட்டுகளை போலியாக தயாரித்து, மருத்துவமனை மருந்துச்சீட்டுத் தாள்களை தவறாக பயன்படுத்தியதும் விக்டோரியன் குடிமை மற்றும் நிர்வாகத் தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8056e288-e2f6-447a-8412-9f23a0ba9f52/26-6a72d4d5d26cd.webp' /></p><p></p><p>
மேலும், கியூ மருத்துவராகப் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே ஒரு குழந்தைகள் இதயநோய் நிபுணரின் மருத்துச்சீட்டுப் புத்தகத்தைத் திருடிய ஒரு இளநிலை மருத்துவர், பல ஆண்டுகளாக அதைத் தனக்காக அதிக அளவில் பென்சோடியாசெபைன்கள் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளைப் பெறுவதற்கு பயன்படுத்தியுள்ளார் என்பதையும் கண்டறிந்துள்ள தீர்ப்பாயம், 'இது உண்மையிலேயே தீவிரமானது மற்றும் நேர்மையற்றது' என்று விவரித்துள்ளது.
</p><p>
அதேபோல் VCAT (Victorian Civil and Administrative Tribunal), திருடப்பட்ட மருந்துச்சீட்டுப் புத்தகங்கள் (Prescription Pads), பிற மருத்துவர்களின் சான்றுகள் மற்றும் புனையப்பட்ட மருந்துச்சீட்டு விவரங்களைப் பயன்படுத்தி, 2018 மற்றும் 2021-க்கு இடையில் 90 தவறான அல்லது முறையற்ற மருத்துவச்சீட்டுகளை வழங்கியுள்ளார் அல்லது வழங்க முயன்றுள்ளார் என்று கேட்டறிந்துள்ளது.</p><p>


 


நான்கு ஆண்டுகளில் பெரும்பாலான காலம் இந்த முறைகேடு நிகழ்ந்ததால், தற்போது கியூ கண்டிப்பட்டு பதிவுக்கு விண்ணப்பிக்கத் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளது. </p><p>

ஆறு மாதங்களுக்கு மீண்டும் பணியில் சேர்வதற்கான உத்தரவைக் கோருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளார். கியூ தனது பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு, அக்டோபர் 11, 2021 அன்று ராஜினாமா செய்தார்.
</p><p>
அவர் பொதுமக்களுக்கு ஒரு கடுமையான ஆபத்தை விளைவிப்பார் என்று தாங்கள் நியாயமாக நம்புவதாகக் கூறி, மருத்துவ வாரியம் அவரது மருத்துவப் பணியைத் தடைசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுத்தது.</p><h2>மருத்துவம் பார்க்க மாட்டேன்
</h2><p>
கியூ இந்த நடவடிக்கையை எதிர்க்கவில்லை, மேலும் மருத்துவம் பார்க்க மாட்டேன் என்று ஒரு உறுதிமொழியையும் அளித்தார்.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் மெல்போர்னில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து பொதுவான மருந்துச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்தியதையும் ஒப்புக்கொண்டார். </p><p>

அவர் போலியாக உருவாக்கப்பட்ட மருந்துச்சீட்டு வழங்கும் சான்றுகளைப் பயன்படுத்தி, அந்தத் தாள்களைக் கொண்டு தனக்காக 30 மருத்துவச்சீட்டுகளை அவர் எழுதியுள்ளார். 

மருத்துவர் கியூ, தனது அறிகுறிகள் தோன்றி நோய் கண்டறியப்படுவதற்கு முன்பே மருந்துச்சீட்டுப் புத்தகத்தைத் திருடி, சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருந்தார் என்பதைத் தீர்ப்பாயம் குறிப்பிட்டது.
</p><p>
அத்துடன் கியூவின் முறைகேடு என்பது அவர் பெற்ற மருந்துகளின் வகைகளைப் பற்றியது அல்ல, மாறாக அவற்றை அடைவதற்காக பயன்படுத்தப்பட்ட தொடர்ச்சியான ஏமாற்று வித்தையைப் பற்றியது என்று அது வலியுறுத்தியது.
</p><p>

தண்டனையை விதிக்கும்போது, மருத்துவர் கியூ தனது நடத்தை குறித்துப் புரிதலை வெளிப்படுத்தியுள்ளார்; குறிப்பிடத்தக்க மறுவாழ்வை மேற்கொண்டுள்ளார். 

மேலும் 2021 முதல் மருத்துவம் பார்க்கவில்லை என்று VCAT கூறியது. </p><p>அதேசமயம், பொதுமக்களின் நம்பிக்கையை மீறும் மருத்துவர்கள் 'மிகக் கடுமையான விளைவுகளை' சந்திக்க நேரிடும் என்றும் அது எச்சரித்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/731efd51-134c-40ee-92c3-ad3d0aa6c2b6/26-6a72d4d683e64.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சில நிமிடங்களில் 30,000 பேரைக் கொன்ற கொடிய எரிமலை... பல தசாப்த கால அமைதிக்குப் பிறகு மீண்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deadly-volcano-reawakens-after-1785881563"></link>
            <id>https://news.lankasri.com/article/deadly-volcano-reawakens-after-1785881563</id>
            <summary type="text">வரலாற்றிலேயே மிகவும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்றான இது, மீண்டும் சீற்றமடைவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகிறது.மவுண்ட் பெலி (Mount Pelée) எரிமலை கரீப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றிலேயே மிகவும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்றான இது, மீண்டும் சீற்றமடைவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகிறது.</p><p>மவுண்ட் பெலி (Mount Pelée) எரிமலை கரீபியன் தீவான மார்டினிக்கில் அமைந்துள்ளது; இது புளோரிடாவிலிருந்து தென்கிழக்கே சுமார் 1,500 மைல் தொலைவிலும், இப்பகுதியை அமெரிக்காவுடன் இணைக்கும் அதிக போக்குவரத்து கொண்ட வான்வழிப் பாதைகளிலும் அமைந்துள்ளது.</p><h2>குறிப்பிடத்தக்க அதிகரிப்பு</h2><p>
</p><p>இந்த எரிமலையின் மிகவும் மோசமான சீற்றம் 1902-இல் நிகழ்ந்தது; அப்போது அதீத வெப்பம் கொண்ட மேகம் ஒன்று செயின்ட்-பியர் (Saint-Pierre) நகரை ஊடுருவிச் சென்று, சில நிமிடங்களிலேயே சுமார் 30,000 பேரின் உயிரைப் பறித்தது; மேலும் சமீபத்தில் 1929 மற்றும் 1932-க்கு இடைப்பட்ட காலத்திலும் இதன் சீற்றம் வெளிப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39e4e6ba-240a-4892-a438-3ae44f180ae7/26-6a7263de28d65.webp' /></p><p> </p><p>தற்போது, இப்பகுதியில் ​​நில அதிர்வு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்; அதன்படி, ஜூலை 24 முதல் ஜூலை 31 வரையிலான காலத்தில் 124 நிலநடுக்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>இது முந்தைய வாரத்தில் பதிவான 45 நிலநடுக்கங்களை விட ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகமாகும். ஜூலை மாதம் முழுவதும் 331 எரிமலை சார்ந்த நிலநடுக்கங்கள் கண்டறியப்பட்டதாகவும், வாரத்திற்குச் சராசரியாக சுமார் 85 நிலநடுக்கங்கள் பதிவாகியதாகவும் மார்டினிக் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>மேலே எழும் எரிமலைக்குழம்பு அல்லது அழுத்தப்பட்ட திரவங்கள், எரிமலைக்கு அடியில் உள்ள திடமான பாறையை அழுத்திப் பிளக்கும்போது இதுபோன்ற நிலநடுக்கங்கள் ஏற்படலாம்.</p><p></p><p> </p><p>இருப்பினும், நில அதிர்வு ஏற்படுவதால் மட்டுமே ஒரு எரிமலை வெடிப்பு நிகழும் என்று அர்த்தமல்ல. ஒரு பெரிய வெடிப்பு வடக்கு மார்டினிக் முழுவதும் சுட்டெரிக்கும் வாயு மேகங்களையும், சாம்பல் மற்றும் பாறைகளையும் பரப்பக்கூடும், அதே நேரத்தில் உயர்ந்து எழும் சாம்பல் மேகம் கரீபியனின் சில பகுதிகளில் விமான நிறுவனங்களை மாற்றுப் பாதையில் இயக்கவோ அல்லது விமானங்களை ரத்து செய்யவோ கட்டாயப்படுத்தக்கூடும். </p><p>நுண்ணிய எரிமலைச் சாம்பல் விமான இயந்திரங்களுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தவும், பார்வைத்திறனைக் குறைக்கவும் கூடியது; அத்துடன், வலிமையான காற்றினால் வளிமண்டலத்தின் உயரமான பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படும்போது, ​​இது நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் வரை பரவக்கூடியது.</p><h2>எரிமலை வெடிப்பு</h2><p> </p><p>இருப்பினும், எரிமலை வெடிப்பு உடனடி ஆபத்தாக உள்ளது என்று அதிகாரிகள் எச்சரிக்கவில்லை; மேலும், புளோரிடாவுக்கு நேரடி அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை. </p><p>ஆனால், எரிமலையின் உச்சிக்குக் கீழே சுமார் 0.6 மைல் ஆழத்தில் உள்ள, அதிக அழுத்தத்தை வெளிப்படுத்தும் ஒரு மூலப்பகுதியால் எரிமலை உள்ளிருந்து வீங்கிக் கொண்டிருப்பதை இந்த உருமாற்றம் உணர்த்துவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். </p><p>மேலும், குறுகிய காலத்தில் எரிமலை வெடிப்புச் செயல்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என மார்டினிக் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு மையம் ஒரு எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளது. </p><p>பெலி மலையின் எச்சரிக்கை நிலை தற்போது மஞ்சள் நிறத்தில் உள்ளது. இதன் பொருள், அந்த எரிமலை அதிகரித்த கொந்தளிப்பின் அறிகுறிகளைக் காட்டுகிறது, இது ஒரு ஆலோசனை நிலையாகும் அல்லது உயர் எச்சரிக்கைக்குப் பிறகு அதன் செயல்பாடு குறைந்து வருகிறது என்பதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22aeff0e-e6ea-4fc5-8424-16e6dbbde2c2/26-6a7263ded39a6.webp' /></p><p> </p><p>ஒரு ஆழமான நிலநடுக்கம் ஏற்படுவது, எரிமலை வெடிப்பு உடனடியானது என்பதற்கான அறிகுறி அல்ல; ஆனால், அந்தப் பகுதியில் மீண்டும் மீண்டும் ஏற்படும் நில அதிர்வுகள், எரிமலைக்கு அடியில் என்ன நடக்கிறது என்பது பற்றிய ஒரு முக்கியமான தகவலை வழங்கக்கூடும். </p><p>இதற்கிடையில், மவுண்ட் பெலியின் (Mount Pelée) உச்சியைச் சுற்றியுள்ள நிலப்பகுதி தொடர்ந்து வெளிப்புறமாக வீங்கிக்கொண்டிருக்கிறது. </p><p>நிலம் உப்பி வருவது எரிமலை வெடிப்பின் அறிகுறியாகும், ஏனெனில் மேலே எழும் எரிமலைக் குழம்பு நிலத்தடி அறைகளை நிரப்பி, அழுத்தத்தை அதிகரித்து, மேற்பரப்பை மேல்நோக்கித் தள்ளுகிறது. </p><p>உச்சியின் கீழே சுமார் அரை மைல் ஆழத்தில் உள்ள, அழுத்தத்திற்கு உட்பட்ட ஒரு மூலத்தினால் இந்த வீக்கம் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T06:10:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[PPF திட்டத்தில் மாதம் ரூ.5,000 முதலீடு.., எவ்வளவு தொகை கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/public-provident-fund-details-in-tamil-1785909393"></link>
            <id>https://news.lankasri.com/article/public-provident-fund-details-in-tamil-1785909393</id>
            <summary type="text">பொதுவாக, பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களின் முதல் தேர்வாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன.

குழந்தையின் உயர்கல்வி மற்றும் எதிர்கால செலவுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களின் முதல் தேர்வாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன.
</p><p>
குழந்தையின் உயர்கல்வி மற்றும் எதிர்கால செலவுகளை கருத்தில் கொண்டு பல பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே சேமிக்கத் தொடங்குகின்றனர். </p><p>பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களுக்கு, மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஒரு நல்ல தேர்வாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71358de3-ab5f-4af1-b1a2-01f06317dcc2/26-6a72d09397a1c.webp' />
</p><p>
இதில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.60,000 சேமிக்கப்படும். இது PPFன் ஆண்டு முதலீட்டு உச்சவரம்பான ரூ.1.5 லட்சத்திற்குள் வருகிறது.</p><p>தற்போது PPFக்கு ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள்.</p><p>

நீண்ட காலம் தொடர்ந்து முதலீடு செய்வதால் கூட்டு வட்டி மூலம் நல்ல சேமிப்பை உருவாக்க முடியும்.&nbsp;</p><p>குழந்தை 1 அல்லது 2 வயதில் இருக்கும்போதே முதலீட்டைத் தொடங்கினால், காலத்தின் பலனால் அதிக நிதி சேர்க்கும் வாய்ப்பு கிடைக்கும். </p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9248ad-a591-4966-afcf-9776ec34ec55/26-6a72d094478de.webp' />
</p><p>
தாமதமாக தொடங்கினால் அதே இலக்கை அடைய அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.</p><p>
</p><p>PPF மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படுவதால் மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.</p><p>

மேலும், இந்த திட்டத்தில் வருமான வரிச் சட்டம் 80Cன் கீழ் வரிச் சலுகை கிடைக்கும்.</p><p> 

குறிப்பாக, வட்டி வருமானம் மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு வழங்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:57:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் பசுக்களிடையே பரவும் நோய்: மர்மம் விலகியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-cows-affected-by-virus-midges-1785907922"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-cows-affected-by-virus-midges-1785907922</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் பசுக்களிடையே பரவி வரும் மர்ம நோய் எதனால் ஏற்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.


ஆல்ப்ஸ் மலையில் மாடுகளுக்கு சரியான மேய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் பசுக்களிடையே பரவி வரும் மர்ம நோய் எதனால் ஏற்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
</p><p>

ஆல்ப்ஸ் மலையில் மாடுகளுக்கு சரியான மேய்ச்சல் இல்லாததால் ஏற்கனவே பல விவசாயிகள் இழப்பை எதிர்கொண்டுவரும் நிலையில், தற்போது பசுக்களிடையே பரவிவரும் மர்ம நோய் ஒன்று அவர்களுடைய பிரச்சினையை அதிகமாக்கியுள்ளது.
</p><p>
இந்நிலையில், அது என்ன நோய் என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்!</p><h3>

பசுக்களிடையே பரவும் நோய்
</h3><p>
சுவிஸ் விவசாயிகள் பலர், தங்கள் பசுக்களுக்கு காய்ச்சலும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளதாகவும், பசுக்கள் கொடுக்கும் பாலின் அளவு குறைந்துள்ளதாகவும் புகார் தெரிவித்திருந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad108622-c57a-4e78-97ff-edc7dde1ed11/26-6a72cad39b452.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், என்னவென்றே தெரியாத ஒரு காய்ச்சல் அல்லது வயிற்றுபோக்கு பசுக்களுக்கு ஏற்படுமானால், அது பயங்கர தொற்றுநோய் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம் என்பதே அச்சத்தையூட்டும் விடயம்!</p><p>

அதைத் தொடர்ந்து, சுவிஸ் அதிகாரிகள், பசுக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மர்ம நோய் என்ன என்பதைக் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார்கள்.&nbsp;</p><p></p><p>

மர்மம் விலகியது

உண்மை என்னவென்றால், நோயை ஏற்படுத்தும் கிருமி எது என்பது தெரிந்துவிட்டாலே, பிரச்சினையில் பெரும் பகுதி சரியாவிடும் என்பது மருத்துவ உலகுக்கு பரிச்சயமான விடயம்.</p><p>

ஆக, அவ்வகையில், தற்போது சுவிட்சர்லாந்தில் பசுக்களிடையே பரவி வரும் நோய்க்கு என்ன காரணம் என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee4807c7-f5d9-4588-89ac-82df50772206/26-6a72cad44f584.webp' /></p><p>

ஆம், Orthobunyavirus என்னும் ஒரு வைரஸின் துணைப்பிரிவான வைரஸ் ஒன்றே இந்த நோயை உருவாக்குகிறது என்பதை வைரஸ் மற்றும் நோய் எதிர்ப்பியல் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
</p><p>
இந்த நோய், midges என்னும், இரத்தத்தை உறிஞ்சும் சிறிய பூச்சிகள் மூலம் பரவுகிறது.
</p><p>இந்த நோய், விலங்குகளுக்கு ஏற்படும் நோய்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள நோயோ, ’விலங்கு நோய்கள் அவசரச் சட்டத்தின்’ கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நோயோ அல்ல.</p><p>
அது, பயங்கர தொற்று நோயும் அல்ல, அதனால், மனிதர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படாது என்பதும் உறுதியாகியுள்ளது.

எனவே, தங்கள் பசுக்களில் வழக்கத்துக்கு மாறான நோய் அறிகுறிகள் ஏதாகிலும் தென்பட்டால், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகுமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:32:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 தமிழ்நாடு பட்ஜெட் - வெளியான முக்கிய அறிவிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamil-nadu-budjet-2026-announcements-1785906993"></link>
            <id>https://news.lankasri.com/article/tamil-nadu-budjet-2026-announcements-1785906993</id>
            <summary type="text">2026 - 2027 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாசித்து வருகிறார். 

2026 தமிழ்நாடு பட்ஜெட்

2...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 - 2027 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாசித்து வருகிறார். </p><h3>

2026 தமிழ்நாடு பட்ஜெட்</h3><p>

2026 - 2027 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c805253f-b8b0-4b89-951f-2fcd0cf1a874/26-6a72c73287d04.webp' /></p><p>

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும். </p><p>

பட்ஜெட்டை வாசித்து வரும் நிதி அமைச்சர் மரிய வில்சன், "வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, 2026ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>

மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>
அரசின் பல்வேறு நடவடிக்கை மூலம் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழுவை விரைவில் அரசு அமைக்கவுள்ளது. </p><p>

அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும். முதல் கட்டமாக 10,000 பள்ளிகளில் இப்பணிகளை மேற்கொள்ள ரூ.129 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும், 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பள்ளி பாடத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
போதைப் பொருள் மற்றும் அதன் தவறான பயன்பாடு குறித்து விழிப்புணர்வு எற்படுத்த 10581 என்ற எண், பள்ளி வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும். இதை செயல்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைப்பதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>

ரூ.277 கோடி மதிப்பீட்டில், 5.32 இலட்சம் 11ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு 2026-27 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஹெல்மெட் &amp; வாட்டர் பாட்டில் வசதியுடன் நவீன மிதிவண்டிகள் வழங்கப்படும்.</p><p> 

கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட வெற்றி மடிக்கணினித் திட்டம் ரூ..2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AEQtNahUvog" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகப்பொலிவை அதிகரிக்க உதவும் ஆயுர்வேத பேஸ்பேக்.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/homemade-ayurvedic-face-pack-for-glowing-skin-1785905083"></link>
            <id>https://news.lankasri.com/article/homemade-ayurvedic-face-pack-for-glowing-skin-1785905083</id>
            <summary type="text">பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள். இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள். </p><p>இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.</p><p> அந்தவகையில், முகப்பொலிவை அதிகரிக்க உதவும் ஆயுர்வேத பேஸ்பேக்கை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>1. தேவையான பொருட்கள் </h2><ul><li>

தேன்- 2 ஸ்பூன்</li><li> 
மஞ்சள்- 1 ஸ்பூன்</li></ul><h2> 

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். </p><p>

பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62e857c8-f6b4-4b5a-97e0-07896176215a/26-6a72c049c8959.webp' /></p><p>பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். </p><p>

இந்த கலவை பொலிவிழந்த மற்றும் சீரற்ற சருமத்தைக் கொண்டவர்களுக்கு ஏற்றது.</p><h2>

2. தேவையான பொருட்கள்</h2><ul><li> 

முல்தானி மெட்டி - 1 ஸ்பூன்</li><li> 
சந்தன- 1 ஸ்பூன் </li><li>
ரோஸ் வாட்டர்- 5 ஸ்பூன்</li></ul><h2> 

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டி, சந்தன பவுடரை எடுத்து கொள்ள வேண்டும். </p><p>

பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.</p><p></p><p> 

பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.</p><p> 

இந்த கலவை எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T04:47:14+00:00</updated>
        </entry>
    </feed>
