<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-08T06:40:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் பொதுக்கழிவறையை பயன்படுத்திய இந்திய இளம்பெண் பகிர்ந்துள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/influencer-on-cost-of-using-public-toilet-in-swiss-1788848974"></link>
            <id>https://news.lankasri.com/article/influencer-on-cost-of-using-public-toilet-in-swiss-1788848974</id>
            <summary type="text">Influencer reveals the surprising cost of using a public toilet in Switzerland: சுவிட்சர்லாந்தில் பொதுக்கழிவறையை பயன்படுத்திய இளம்பெண்ணொருவர், கழிவறைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Influencer reveals the surprising cost of using a public toilet in Switzerland: சுவிட்சர்லாந்தில் பொதுக்கழிவறையை பயன்படுத்திய இளம்பெண்ணொருவர், கழிவறைக்கான கட்டணம் தன்னை வியப்படைய வைத்ததாகத் தெரிவிக்கிறார்.</p><p>


உலகம் சுற்றுவதற்காக வேலையையும் விட்டு, சொத்துக்களையும் விற்ற இந்திய இளம்பெண், சோனி சலோனி.
</p><h3>
கழிவறையை பயன்படுத்துவதற்கான கட்டணம்</h3><p>

சமீபத்தில் சோனி சுவிட்சர்லாந்துக்குச் சென்றுள்ளார். இயற்கை உபாதையைத் தீர்த்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதால், கட்டணக் கழிப்பிடம் ஒன்றிற்குச் சென்றுள்ளார் சோனி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1980f5a6-3baf-4bdf-8efe-5f18ceb2befe/26-6a9fab501ad15.webp' /></p><p>

பார்த்தால், அங்கு கழிவறையை ஒரு முறை பயன்படுத்த 1.50 சுவிஸ் ஃப்ராங்குகள் என எழுதப்பட்டிருந்திருக்கிறது.
</p><p>
பொதுவாகவே வெளிநாடு செல்லும் பலரும் அங்கு ஏற்படும் செலவுகளை தங்கள் நாட்டுப் பணமாக மாற்றி யோசிப்பதுண்டு என்பதால், 1.50 சுவிஸ் ஃப்ராங்குகள் என்பது இந்திய மதிப்பில் எவ்வளவு என கணக்குப் பார்த்துள்ளார் சோனி.</p><p>

ஆக, கழிவறையை பயன்படுத்த ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் வரை செலவிடவேண்டியுள்ளதே என வியக்கிறார் சோனி.&nbsp;</p><p></p><p>
அவர் தனது அனுபவத்தை சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொள்ள, தங்களுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டதாக சிலர் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
வேறு சிலர், சுவிட்சர்லாந்தில் இலவச கழிப்பறைகளும் உண்டு என்று கூற, அப்படி இலவச கழிப்பறையை பயன்படுத்திவிட்டு, பிறகு நோய் வந்து எக்கச்சக்கமாக செலவு செய்வதைவிட, நல்ல, சுத்தமான ஒரு கழிவறைக்கு இவ்வளவு பணம் கொடுப்பது எவ்வளவோ மேல் என்கிறார் ஒருவர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹொங்கொங் சீனா அணியை பந்தாடிய பாகிஸ்தான் மகளிர் படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-pakistan-beat-hong-kong-china-by-72-runs-1788848614"></link>
            <id>https://news.lankasri.com/article/women-pakistan-beat-hong-kong-china-by-72-runs-1788848614</id>
            <summary type="text">மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாயில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், பாகிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

துபாயில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், பாகிஸ்தான் அணி 72 ஹொங்கொங் சீனாவை வீழ்த்தியது.&nbsp;</p><h2>ஷாவால் ஸுல்ஃபிகர் 47</h2><p>
பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் சீனா அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டி துபாயில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37f88047-ecd2-4e2a-946c-77bd97ee587c/26-6a9fa9e97199f.webp' /></p><p></p><p>

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. ஷாவால் ஸுல்ஃபிகர் 47 (35) ஓட்டங்களும், ஆயிஷா ஜாஃபர் 26 (19) ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

ஜோய்லின் கவுர் 4 விக்கெட்டுகளும், இக்ரா சாகர் மற்றும் கேரி சான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். </p><h2>சுருண்ட ஹொங்கொங் சீனா 
</h2><p>
பின்னர் ஆடிய ஹொங்கொங் சீனா அணி 19 ஓவர்களில் 71 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேரி சான் (Kary Chan) 30 ஓட்டங்கள் எடுத்தார்.
</p><p>
மிரட்டலாக பந்துவீசிய நஷ்ரா சந்து (Nashra Sandhu) 6 விக்கெட்டுகளும், ஃபாத்திமா சனா, சாதியா இக்பால், உம்-இ-ஹனி மற்றும் ஆயிஷா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aef9add8-3ac5-497e-8fd7-dd6d44ed9d41/26-6a9fa9e8be70b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:21:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான்கு மாதம்... ஹார்முஸ் நீரிணையில் ரகசிய இரவு நேர நடவடிக்கையில் அமெரிக்கக் கடற்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hormuz-us-navy-night-mission-1788847024"></link>
            <id>https://news.lankasri.com/article/hormuz-us-navy-night-mission-1788847024</id>
            <summary type="text">US Navy launched top secret four-month mission: அமெரிக்கக் கடற்படை மிக ரகசியமான நான்கு மாத கால நடவடிக்கையில் ஈடுபட்டது.
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>US Navy launched top secret four-month mission: அமெரிக்கக் கடற்படை மிக ரகசியமான நான்கு மாத கால நடவடிக்கையில் ஈடுபட்டது.
</p><p>ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக, அமெரிக்கக் கடற்படை நான்கு மாத கால ஆபத்தான மற்றும் அதீத ரகசியத் திட்டம் ஒன்றை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>அகற்றப்பட்டுவிட்டன</h2><p>
</p><p>கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் மிக முக்கியமான நீர்வழியில் ஈரானியப் படைகள் கண்ணிவெடிகளைப் பதித்துள்ளதாக நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3daf388-ea5a-48a6-a7c9-bf294a818203/26-6a9fa3b243b21.webp' /></p><p> </p><p>சர்வதேச கடல்சார் அமைப்பின் கூற்றுப்படி, ஜூன் மாத நிலவரப்படி, முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் சுமார் 80 கண்ணிவெடிகள் பதிக்கப்பட்டிருந்தன. </p><p>ஆனால் கடந்த வாரம், ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கப் பகுதி என்று அறிவித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சர்வதேச நீர்ப்பரப்பில் இருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடிக்கச் செய்யப்பட்டுவிட்டன என்று அறிவித்தார்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சியில், கடற்படை சீல் வீரர்கள் நான்கு மாதங்களாக இருளின் மறைவில் பணியாற்றினர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. </p><p>அவர்கள் இரவில் சிறு குழுக்களாகப் பணிபுரிந்து, நீர்மூழ்கிக் கப்பல்களின் உதவியுடன் நீரிணையின் அடிப்பகுதியில் இருந்த கண்ணிவெடிகளைக் கண்டறிந்துள்ளனர். </p><p> வெடிபொருட்களைக் கொண்டு கண்ணிவெடிகளை அழிக்க, பிரித்தானியாவின் சீஃபாக்ஸ் (SeaFox) அல்லது புதிய அமெரிக்க AN/ASQ-235 ஆங்கர்ஃபிஷ் (Anchorfish) போன்ற ரோபோ நீர்மூழ்கிக் கப்பல்களையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.</p><p> நீருக்கடியில் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் பணிகளையே அவர்கள் மேற்கொண்டுள்ளனர் என நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கண்ணிவெடிகள்</h2><p> அதிர்ஷ்டவசமாக, கண்ணிவெடி அகற்றும் பணியில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதனிடையே, அமெரிக்கா கப்பல்களை வழிநடத்தி வந்த, ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீரிணையின் தென்பகுதி உண்மையாகவே கண்ணிவெடிகள் அற்றது என்று கப்பல் உரிமையாளர்களும் பாதுகாப்பு ஆலோசகர்களும் தற்போது நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4dafb7e-a70d-4deb-a849-960bea5a00c8/26-6a9fa3b2ec9d9.webp' /></p><p> </p><p>ஆனால், போர் தொடங்கியதிலிருந்து ஒரு சில வணிகக் கப்பல்கள் மட்டுமே அந்த நீர்வழிப்பாதை வழியாகப் பயணித்துள்ளதால், 104 மைல் நீளமுள்ள அந்த நீர்வழிப்பாதை முழுவதும் தெளிவாக உள்ளதா என்பதில் அவர்கள் தங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தினர்.
</p><p>மேலும், கண்ணிவெடிகளின் அச்சுறுத்தல் கூட காப்பீட்டு நிறுவனங்களை, போருக்கு முந்தைய கட்டணங்களை விட 10 மடங்கு வரை உயர்த்தும்படி கட்டாயப்படுத்தியுள்ளது. </p><p>ஒரு சாதாரண சூப்பர்டேங்கர் கப்பலைப் பொறுத்தவரை, ஈரானின் அனுமதியின்றி அந்த நீர்வழியைக் கடப்பதற்கு சுமார் 10 மில்லியன் டொலர் காப்பீட்டுச் செலவுகள் ஏற்படக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19fb2ae4-c50a-4328-b12f-8f937c34870f/26-6a9fa3b3a062d.webp' /></p><p> </p><p>ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் இல்லை என்ற அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் அதிகாரிகளும் நிராகரித்துள்ளனர். மேலும், இந்தக் கண்ணிவெடிகளின் இருப்பிடம் ஈரானைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்றும் வெளிவிவகார அமைச்சர் காசெம் கரிபாபாடி ஆகஸ்ட் மாத இறுதியில் கூறியுள்ளார். </p><p>மேலும், இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற ஆயிரக்கணக்கான மஹாம் கண்ணிவெடிகள் ஈரானிடம் இருப்பதாக இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். </p><p>அமெரிக்கப் படைகள் சரக்குக் கப்பல்களை இயக்கி வரும் ஓமானுக்கு அருகிலுள்ள பகுதிகளில், ஈரான் மேலும் கண்ணிவெடிகளைப் புதைத்துள்ளதாக ஈரான் இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T06:15:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமன்றத்திலிருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dmk-mla-s-forcibly-evicted-from-the-tn-assembly-1788847672"></link>
            <id>https://news.lankasri.com/article/dmk-mla-s-forcibly-evicted-from-the-tn-assembly-1788847672</id>
            <summary type="text">சட்டமன்றத்தில்&amp;nbsp; அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.சட்டமன்றத்திலிருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டமன்றத்தில்&nbsp; அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.</p><h3>சட்டமன்றத்திலிருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம் </h3><p>

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானியக்கோரிக்கையில் பதிலுரை வழங்கிய முதல்வர் விஜய், வீராணம் திட்டத்திற்கு கருணாநிதியின் மருமகன் மாறன் லஞ்சம் வாங்கியதாக சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் உள்ளதாக பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fa9344c-0e23-44b5-ab85-54e665594427/26-6a9fa63a3ef6b.webp' /></p><p>

முதல்வர் விஜய்யின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>

முதல்வரின் பேச்சை அவைகுறிப்பிலிருந்து நீக்க முடியாது என சபாநாயர் தெரிவித்தார். இதனையடுத்து, சபாநாயகரை சுற்றி நின்று கொண்டும், அவரது இருக்கைக்கு முன்பும் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.</p><p></p><p>
இதனைத்தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d7f0de7-1a7f-44c4-b70e-75514c1d51bf/26-6a9fa6a051c07.webp' /></p><p> 

சபாநாயகரின் உத்தரவையடுத்து திமுக எம்.எல்.ஏ.க்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zwhHa14VsPQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:09:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளவரசர் ஹரி, மேகன் தொடர்பில் மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-charles-say-harry-meghan-be-as-normal-citizen-1788845482"></link>
            <id>https://news.lankasri.com/article/king-charles-say-harry-meghan-be-as-normal-citizen-1788845482</id>
            <summary type="text">Harry, Meghan will be treated as private citizens, King Charles says: ஹரியும் மேகனும் சாதாரண குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என மன்னர் சார்லஸ் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry, Meghan will be treated as private citizens, King Charles says: ஹரியும் மேகனும் சாதாரண குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>

பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரியும் அவரது மனைவி மேகனும், ஆறு ஆண்டுகளுக்கு முன் கோபித்துக்கொண்டு ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார்கள்.</p><h3>

Sandringham ஒப்பந்தம்</h3><p>

ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு, அவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
</p><p>
அந்த விடயம், Sandringham ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5baf596-88ee-4e86-b04e-5e60e0448215/26-6a9f9dac5351f.webp' /></p><p>
அதாவது, இனி ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தவோ, ராஜ குடும்ப பொறுப்புகளை மேற்கொள்ளவோ முடியாது.
</p><p>
அவர்கள், ‘His/Her Royal Highness’ என்னும் பட்டங்களை பயன்படுத்தக்கூடாது.

தங்கள் வருவாய்க்கான விடயங்களை, தாங்களே கவனித்துக்கொள்ளவேண்டும்.
</p><p>
அத்துடன், அவர்கள் ஏதேனும் தொண்டு நிறுவனப் பணிகளில் ஈடுபட்டால், அது தனிப்பட்ட முறையிலானதாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய, அதற்கும் ராஜ குடும்பத்துக்கும் சம்பந்தம் கிடையாது.
</p><p>
இந்த நிபந்தனைகளின்பேரிலேயே ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியதுடன், பிரித்தானியாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவிலும் குடியேறினார்கள்.&nbsp;</p><p></p><h3>
மீண்டும் பிரித்தானியா திரும்பிய தம்பதியர்</h3><p>

இந்நிலையில், ஹரியும் மேகனும் தங்கள் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார்கள். அவர்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22bd08d0-85fc-4590-9787-4c976cfe4925/26-6a9f9daba01c2.webp' /></p><p>

இந்நிலையில், ஹரிக்கும் மேகனுக்கும் மீண்டும் ராஜ குடும்ப பொறுப்புகள் வழங்கப்படுமா என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
ஆனால், ஹரியும் மேகனும் சாதாரண குடிமக்களாகவே கருதப்படுவார்கள், அவர்களுக்கு மீண்டும் ராஜ குடும்ப பொறுப்புகள் வழங்கப்படாது என்பதை மன்னர் சார்லஸ் உறுதி செய்துள்ளார்.</p><p>

ஹரி, மேகன் தம்பதியருக்கும், அரசுத் துறைகளுக்கும், ராணுவ அதிகாரிகள் மற்றும் மன்னரின் பிரதிநிதிகளுக்கும் மன்னர் சார்லஸ் அனுப்பிய கடிதம் ஒன்றில் இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அதாவது, ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு, அவர்களுக்கு Sandringham ஒப்பந்தத்தின் கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் நீடிக்கின்றன என்பதை மன்னர் சார்லஸ் தனது கடிதத்தில் உறுதி செய்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T05:33:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் வர்த்தக மோதல்... அமுலுக்கு வரும் அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-retaliatory-us-tariffs-1788841395"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-retaliatory-us-tariffs-1788841395</id>
            <summary type="text">Canada’s retaliatory US tariffs set to take effect: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரி விதிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada’s retaliatory US tariffs set to take effect: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரி விதிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.
</p><p>செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல், பல பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது கனடா பதிலடி நடவடிக்கையாகக் கூடுதல் வரிகளை விதிக்கவுள்ளது.</p><h2>எதிர் நடவடிக்கை</h2><p>
</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆகியோருக்கு இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தங்களது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியுடனான வர்த்தக மோதலை அது தீவிரப்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92541240-6203-40be-b7f8-1015fe4cfd5f/26-6a9f8db55558f.webp' /></p><p> </p><p>செவ்வாய்க்கிழமை அதிகாலை அமுலுக்கு வரவுள்ள இந்த இறக்குமதி வரிகள் 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இருக்கும்; இவை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 27.6 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான பொருட்களுக்குப் பொருந்தும். </p><p>அமெரிக்காவின் இறக்குமதி வரிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள எஃகு, பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாய உபகரணங்கள், கூழ் மற்றும் காகிதம், மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளை இந்த நடவடிக்கைகள் குறிவைக்கும். </p><p>ஆகஸ்ட் 22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 27.6 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்கள் மீது 50 சதவீதம் சுங்க வரியை விதிக்க அமெரிக்கா எடுத்த முடிவின் விளைவாகவே இந்த எதிர் நடவடிக்கைக்கான சுங்க வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்று கனடிய அரசு தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>அத்துடன், கனடாவின் எதிர்நடவடிக்கைகள், அவை நடைமுறைக்கு வரும் நாளன்று கனடாவிற்குப் போக்குவரத்தில் இருக்கும் அமெரிக்கப் பொருட்களுக்குப் பொருந்தாது என்றும் அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. </p><p>ட்ரம்ப்பும் மூத்த அமெரிக்க அதிகாரிகளும் கனடாவையும் அதன் தலைமையையும் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையில், ஒன்ராறியோ ஏரிக்கு அமெரிக்கா ஏரி எனப் பெயர் மாற்றும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டது உட்பட, ட்ரம்ப் கனடாவைக் குறிவைத்து தொடர்ச்சியான மறைமுகத் தாக்குதல்களை நடத்தியுள்ளார். </p><p>அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸும் பிரதமர் கார்னியை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் மூலப்பொருட்கள் மீது 50 சதவீதம் புதிய வரியை ட்ரம்ப் அறிவித்தார்.</p><h2>கனடா தேவையில்லை</h2><p> </p><p>பல ஆண்டுகளாக அமெரிக்காவை கனடா சுரண்டி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், நமக்கு கனடா தேவையில்லை, அவர்களுக்குத்தான் நாம் தேவை என்றும் கூறினார். </p><p>இந்த நிலையில், பிரெஞ்சு மொழிப் பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கனடா ஏற்காது என்று கடந்த மாதம் கார்னி கூறினார்.</p><p> அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் இந்த நடவடிக்கைகளை ஒரு தொந்தரவாகக் கருதுவதாகவும், ஆனால் கியூபெக்கில் இவை உரிமைகளாகக் கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d2a6cd5-e838-4230-8ac3-80e2fca0fb8b/26-6a9f8db609bb8.webp' /></p><p> </p><p>கியூபெக் மாகாணம், பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதையும் அதன் தனித்துவமான கலாச்சார அடையாளத்தைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்ட சட்டங்களை நீண்ட காலமாக நிலைநிறுத்தி வருகிறது. </p><p>இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஒரு முட்டுக்கட்டையாக மாறியுள்ளன. ஏனெனில், இந்த விதிகள் அமெரிக்க வணிகங்களுக்குப் பாதகமாக அமையக்கூடும் என்று அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T04:20:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 ஆம் ஆண்டில்... சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் வெளியிட்ட 5 பயங்கரமான கணிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/xueqin-makes-5-grim-predictions-1788839253"></link>
            <id>https://news.lankasri.com/article/xueqin-makes-5-grim-predictions-1788839253</id>
            <summary type="text">China’s Nostradamus makes 5 grim predictions: சீனாவின் நாஸ்ட்ராடமஸ் 5 மோசமான கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சீனாவின் நாஸ்ட்ராடமஸ் என்று அழைக்கப்படும் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>China’s Nostradamus makes 5 grim predictions: சீனாவின் நாஸ்ட்ராடமஸ் 5 மோசமான கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
</p><p>சீனாவின் நாஸ்ட்ராடமஸ் என்று அழைக்கப்படும் ஒருவர், 2027-ஆம் ஆண்டில் அமெரிக்கா எதிர்கொள்ளக்கூடிய ஐந்து மிகவும் மோசமான கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.</p><h2>உள்நாட்டுப் போர்</h2><p>
</p><p>கட்டாய இராணுவச் சேவை மற்றும் நாடு தழுவிய போராட்டங்கள் ஆகியவை உட்பட, முழுமையான பொருளாதாரச் சரிவையும் அவர் கணித்துள்ளார்.</p><p> இஸ்ரேலின் அழுத்தத்தால் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் என பல மாதங்களுக்கு முன்னரே கணித்திருந்த ஜியாங் சுவேகின், ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வருவார் என்று 2024 மே மாதம் கணித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/128590fd-5504-44e6-8fb6-4c82fbc9558d/26-6a9f85579cba7.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, ஈரான் போரில் அமெரிக்கா பின்னடைவை எதிர்கொள்ளும் என்றும், அவர்களால் ஈரானை வெல்ல முடியாது என்றும் ஜியாங் சுவேகின் தமது கணிப்புகளை வெளியிட்டிருந்தார். </p><p>தற்போது, 2027-ஆம் ஆண்டில் அமெரிக்கா எதிர்கொள்ளக்கூடிய ஐந்து மிகவும் மோசமான கணிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். 2027-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்கான அனைத்துக் கூறுகளும் அமையக்கூடும் என்று ஜியாங் சுவேகின் (Jiang Xueqin) கருதுகிறார்.</p><p></p><p> </p><p>இருப்பினும், நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இரண்டு எதிரெதிர் படைகள் மோதிக்கொள்ளும் என்று தான் கணிக்கவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். </p><p>
சீன-கனடியக் கல்வியாளரான ஜியாங் சுவேகின், அமெரிக்கக் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறைக்கு (இது ICE என்று பரவலாக அறியப்படுகிறது) ஜனாதிபதி ட்ரம்ப் வரும் வருடத்தில் கூடுதல் அதிகாரங்களை வழங்குவார் என்று கணிக்கிறார். </p><p> குடியேற்றச் சட்டங்களை அமுல்படுத்துவதற்குப் பொறுப்பான இந்த ஃபெடரல் முகமை, ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றியுள்ளது.
</p><p>பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டாய இராணுவச் சேவைக்கான ஆயத்த நடவடிக்கையாக, அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தேசியப் பாதுகாப்புப் படை களமிறக்கப்படலாம் என்றும் சுவேகின் கருதுகிறார்.</p><h2>கட்டாய ஆட்சேர்ப்பு</h2><p> </p><p>2027ல் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள், கலவரங்கள் மற்றும் அமைதியின்மை ஏற்படும் என சிவேகின் கணித்துள்ளார். அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்கான அனைத்துக் கூறுகளும் அமையக்கூடும் என்றும் அவர் கருதுகிறார்.
</p><p>ட்ரம்ப் நிர்வாகம் 2027-ஆம் ஆண்டில் தேசிய இராணுவக் கட்டாய ஆட்சேர்ப்புக்கான கட்டமைப்பை உருவாக்கும் என்பதே அவருடைய மூன்றாவது கணிப்பாகும். </p><p>ஈரானுடனான தொடரும் மற்றும் தீவிரமடைந்து வரும் மோதலுக்குப் படைகளை அனுப்புவதற்காக இது அறிமுகப்படுத்தப்படும் என்று சுவேகின் நம்புகிறார்.</p><p> பொருளாதார நெருக்கடிகளாலும் குண்டு வீச்சுகளாலும் ஈரானை வெல்ல முடியாத சூழலில்,
தரைப்படையினரை அமெரிக்கா பயன்படுத்தவுள்ளது என்றே சிவேகின் கணிக்கிறார். இதற்குத் தேசிய அளவில் கட்டாய இராணுவச் சேவை முறை தேவைப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79fb3d76-a898-41a5-b048-e1c636f00c82/26-6a9f85584f037.webp' /></p><p> </p><p>18 வயதுடைய இளைஞர்கள் கூட இதில் கட்டாயமாகச் சேர்க்கப்படுவார்கள் என சுவேகின் குறிப்பிடுகிறார். மேலும், தேசிய கட்டாய ராணுவச் சேவைக்கான சட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே இயற்றியிருக்கலாம், அல்லது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஏற்கனவே ஆட்கள் அதில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றார். </p><p>அவரது மற்றொரு கணிப்பு, 2026 நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தல் தொடர்பானது; இத்தேர்தல் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கவுள்ளன. இதில் பல ஆச்சரியங்கள் இருக்கும் என்றும், முடிவு மக்கள் எதிர்பார்ப்பது போல அமையாது என்றும் அவர் நம்புகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af0ed889-eed6-4690-a151-2de53c228238/26-6a9f85590181b.webp' /></p><p> 2027-ஆம் ஆண்டிற்கான அவரது இறுதி எச்சரிக்கை என்னவென்றால், ஈரானுடனான நீண்டகால போர் அமெரிக்கப் பொருளாதாரத்தை முற்றிலுமாகச் சீர்குலைக்கக்கூடும்; இதன் விளைவுகள் அமெரிக்காவையும் தாண்டி பல நாடுகளின் பொருளாதாரங்களைப் பாதிக்கும். </p><p>ஈரானில் பல ஆண்டுகளுக்குத் தரைப்படையினரை ஈடுபடுத்துவது குறிப்பாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கருதுகிறார். </p><p>அமெரிக்கா தரைப்படையுடன் ஈரானுக்குள் நுழைந்து, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு அதில் ஈடுபட நேர்ந்து, அந்தப் போரில் தோல்வியடைந்தால், அது அமெரிக்கப் பொருளாதாரத்தின் முழுமையான சரிவுக்கே வழிவகுக்கும் என்கிறார் கல்வியாளரான சுவேகின்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T03:44:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030-க்குள் மனிதர்கள் விலங்குகளுடன் பேச AI உதவும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-may-let-humans-talk-to-animals-by-2030-1788830558"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-may-let-humans-talk-to-animals-by-2030-1788830558</id>
            <summary type="text">AI help humans talk to animals by 2030: புதிய தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI help humans talk to animals by 2030: புதிய தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.</p><p>
</p><h2>
விலங்குகளுடன் உரையாட முடியும்</h2><p>செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் 2030-க்குள் மனிதர்கள் விலங்குகளின் மொழியைப் புரிந்து கொண்டு அவர்களுடன் உரையாட முடியும் என சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/607c87b9-8221-477d-8867-b7c67c82fda3/26-6a9f635fcf333.webp' /></p><p>இந்த ஆய்வில், விலங்குகள் உபயோகிக்கும் ஒலிகள், சைகைகள் மற்றும் உடல் மொழியை AI மூலம் பகுப்பாய்வு செய்து, அதனை மனிதர்களுக்குப் புரியும் வகையில் மொழிபெயர்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது. </p><p>அதேபோல், மனிதர்களின் சொற்கள் மற்றும் உணர்வுகளை விலங்குகள் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றவும் AI உதவும்.
</p><p></p><p>விலங்குகளின் தொடர்பு முறைகள் மிகவும் சிக்கலானவை. அவற்றை மனிதர்கள் நேரடியாகப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் AI, பெரும் அளவிலான தரவுகளை சேகரித்து, ஒலியியல் மற்றும் நடத்தைப் படிமுறைகளை ஆராய்ந்து, விலங்குகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டது என்று 
ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, விலங்குகள் பாதுகாப்பு, பண்ணை வளர்ப்பு, செல்லப்பிராணி பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, வனவிலங்கு பாதுகாப்பு துறையில், விலங்குகளின் தேவைகள் மற்றும் எச்சரிக்கைகளை நேரடியாக அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
</p><p></p><p>மேலும், மனிதர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் ஆழமான உறவை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். நாய், பூனை போன்றவை எதை உணர்கின்றன, எதை விரும்புகின்றன என்பதை நேரடியாக அறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இத்திட்டம் இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தாலும், 2030-க்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T01:19:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை - மூடப்பட்ட ஈபிள் கோபுரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eiffel-tower-shut-over-women-staff-row-1788829834"></link>
            <id>https://news.lankasri.com/article/eiffel-tower-shut-over-women-staff-row-1788829834</id>
            <summary type="text">Eiffel tower shut over women staff row: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் அடையாளமாக விளங்கும் ஈபிள் கோபுரம் திங்கட்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.காரணம், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Eiffel tower shut over women staff row: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் அடையாளமாக விளங்கும் ஈபிள் கோபுரம் திங்கட்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.</p><p>காரணம், இந்து மத குழுவான BAPS (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) சார்பில் சுமார் 100 பேர் கொண்ட குழு ஈபிள் கோபுரத்திற்கு வந்த போது, பெண் பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75752ab8-500b-49bb-804a-97f9e3b15e72/26-6a9f608c6b8c8.webp' /></p><p>

சம்பவம் குறித்து ஊழியர் சங்க பிரதிநிதி டயான் டாவோயின் தெரிவித்ததாவது:</p><p>

“அந்த குழுவினர் கோபுரம் வழியாகச் சென்றபோது, பெண் பணியாளர்கள் தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேறும்படி கூறப்பட்டனர். அவர்களின் இடத்தில் ஆண்கள் பணியாற்றினர்” என்றார். இதனால் ஊழியர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.
</p><p>
இந்த சம்பவம் வார இறுதியில் நடந்ததால், திங்கட்கிழமை காலை ஊழியர்கள் கூட்டம் நடத்தி, மேலாண்மையுடன் உரையாடி, இனி பெண்கள் இவ்வாறு புறக்கணிக்கப்படக்கூடாது என வலியுறுத்தினர். இதனால் கோபுரம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
</p><p></p><p>பாரிஸ் மேயர் இம்மானுவேல் கிரெகாயர் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். “பெண்கள் புறக்கணிக்கப்பட்டது மிகுந்த கவலைக்குரியது. உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும்” என அவர் தெரிவித்தார்.
</p><p>
ஈபிள் கோபுர நிர்வாகம் SETE இந்த சம்பவம் தவறானது என ஒப்புக்கொண்டது. “பெண்களுடன் தொடர்புகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டது தவறு” என SETE தலைவர் அரியல் வேயில் கூறினார்.

இந்த சர்ச்சை பிரான்ஸ் அரசியல்வாதிகளிடமும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

இதேவேளை, BAPS அமைப்பு பாரிஸ் புறநகரில் தனது முதல் பெரிய இந்துக் கோவிலை திறந்து வைத்தது. இதில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த கோவில் இந்தியாவின் பண்பாட்டு மதிப்புகளை பிரான்சுக்கு கொண்டு செல்லும் பாலமாக இருக்கும் எனக் கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T01:07:27+00:00</updated>
        </entry>
    </feed>
