<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-31T16:59:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்தரப்பு டி20: நமீபியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஜிம்பாப்வே வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ryan-burl-smash-57-runs-helps-zim-195-vs-namibia-1788186985"></link>
            <id>https://news.lankasri.com/article/ryan-burl-smash-57-runs-helps-zim-195-vs-namibia-1788186985</id>
            <summary type="text">Zimbabwe 195 vs namibia in tri-series t20: நமீபிய அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில், ரியான் பர்ல் 32 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசினார்.

Wi...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zimbabwe 195 vs namibia in tri-series t20: நமீபிய அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில், ரியான் பர்ல் 32 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
Windhoek-யில் நடந்து வரும் நமீபிய அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில், ரியான் பர்ல் அரைசதம் விளாச ஜிம்பாப்வே 195 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><h2>கர்ரன்,&nbsp;பென்னெட் </h2><p>
முத்தரப்பு டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c1bee6-c3f0-4943-b208-dee6718f5b1d/26-6a95916c96f23.webp' /></p><p></p><p>

முதலில் துடுப்பாடிய ஜிம்பாப்வே அணியில் பென் கர்ரன் 38 (22) ஓட்டங்களும், பிரையன் பென்னெட் 32 (21) ஓட்டங்களும் விளாசினர். </p><p>

பின்னர் வந்த மயேர்ஸ் (2), ரஸா (0), மதேவேரே (2) ஆகியோர் சொதப்பினர். அப்போது கைகோர்த்த ரியான் பர்ல், பிராட் எவன்ஸ் நமீபியா பந்துவீச்சை சிதறடித்தனர்.&nbsp;</p><h2>பர்ல்&nbsp;சரவெடி </h2><p> 

இந்தக் கூட்டணியின் மிரட்டலான ஆட்டத்தின் மூலம் சரிவில் இருந்து மீண்ட ஜிம்பாப்வே, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

ரியான் பர்ல் 32 பந்துகளில் 57 ஓட்டங்களும் (1 சிக்ஸர், 7 பவுண்டரிகள்), பிராட் எவன்ஸ் 25 பந்துகளில் 37 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசினர்.

எராஸ்மஸ் 3 விக்கெட்டுகளும், பெர்னார்ட், ஜேஜே ஸ்மித் மற்றும் மேக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5d98a80-ebad-417c-a2f3-724738c10127/26-6a959202001f0.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் பெண் ஓட்டிய காரினால் 9 மாத குழந்தை பரிதாப மரணம்: விசாரணையில் தெரிய வந்த விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-arrested-in-usa-child-death-of-car-hitting-1788178781"></link>
            <id>https://news.lankasri.com/article/women-arrested-in-usa-child-death-of-car-hitting-1788178781</id>
            <summary type="text">Two women arrested in new jersey for child death of car hitting: அமெரிக்காவில் பெண்ணொருவர் காரினால் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two women arrested in new jersey for child death of car hitting: அமெரிக்காவில் பெண்ணொருவர் காரினால் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.</p><p>


அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பார்க்கிங் பகுதியில் பெண்ணொருவர், கார் மூலம் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்தது.</p><p>


</p><h2>நியூ ஜெர்சி</h2><p>நியூ ஜெர்சியின் ஜாக்சன் டவுன்ஷிப்பில் உள்ள 'NPGS' என்ற Kosher மாளிகைக்கடை உள்ளது. 

இதன் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண் தனது 9 மாத ஆண் குழந்தையையும், 5 வயது மகளையும் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e359451-0f3a-43f4-a405-ef2d11abffc8/26-6a95716166910.webp' />&nbsp;</p><p></p><p>
அப்போது கார் ஒன்று அவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் குறித்த ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. </p><p>

மேலும் குழந்தையும் தாயும், அவரது ஐந்து வயது மகளும் காயமடைந்தனர். இதனையடுத்து மரியா கோபோன்-குஸ்மான் (20) என்ற பெண்ணும், லசாரோ ஃப்ளோரஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். </p><h2>

குற்றச்சாட்டுகள் </h2><p>மரியாவிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. </p><p>

பின்னர் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே வாகனத்தை இயக்கியது, மனித உயிரிழப்பிற்கு காரணமான செயல் மற்றும் வாகனத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் ஃப்ளோரஸ் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>

 தற்போது அவர்கள் ஓஷன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் மற்றும் சிறைக்காவல் தொடர்பான விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர். 

இதற்கிடையில், இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06579ce1-9c0b-41ef-a283-b3113246b448/26-6a9571609f0d3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:05:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிர்கிஸ்தான் வந்தடைந்த புடின்: தலைவர்கள் ஜி ஜின்பிங், நரேந்திர மோடியுடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vladimir-putin-arrives-in-kyrgyzstan-sco-summit-1788184598"></link>
            <id>https://news.lankasri.com/article/vladimir-putin-arrives-in-kyrgyzstan-sco-summit-1788184598</id>
            <summary type="text">Vladimir Putin arrives in kyrgyzstan for sco summit: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் SCO உச்சிமாநாட்டிற்காக கிர்கிஸ்தான் வந்தடைந்தார். 

SCO உச்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vladimir Putin arrives in kyrgyzstan for sco summit: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் SCO உச்சிமாநாட்டிற்காக கிர்கிஸ்தான் வந்தடைந்தார். </p><p>

SCO உச்சி மாநாடு மற்றும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை ஆகியவற்றில் கலந்துகொள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிர்கிஸ்தான் வந்தடைந்தார்.&nbsp;</p><h2>கிர்கிஸ்தான்&nbsp;வருகை </h2><p> 

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் SCO எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். 

இதற்காக அவர் கிர்கிஸ்தான் நாட்டிற்கு திங்களன்று வந்தடைந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f4c3ed2-edda-4489-a061-02c4ecf00e91/26-6a9589ac45ad8.webp' />&nbsp;</p><p></p><p>உச்சி மாநாடு மட்டுமின்றி சீனா, இந்தியா மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்பிலும் புடின் கலந்துகொள்கிறார்.
</p><p>
தலைவர்களிடையே நீண்ட காலமாக தாமதமாகி வரும் Power of Siberia 2 இயற்கை எரிவாயு குழாய் திட்டம் குறித்த விவாதம் நடைபெற உள்ளது.
</p><p>
முதலில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்கும் புடின், அதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச உள்ளார். </p><p>

SCO உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 2026-யில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய போர் தொடங்கியதில் இருந்து, முதன்முறையாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்திக்கவுள்ளார். </p><p>

அத்துடன் கருங்கடல் பாதுகாப்பு மற்றும் உக்ரைன் போர் குறித்தும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் புடின் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ள நிவாரணம்: சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடி செய்த நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-uses-chatgpt-for-nepal-flood-relief-scam-1788182900"></link>
            <id>https://news.lankasri.com/article/man-uses-chatgpt-for-nepal-flood-relief-scam-1788182900</id>
            <summary type="text">nepal man uses chatgpt to fake nepal flood donation: நேபாள வெள்ள நிவாரணத்தில் சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை நேபாள காவல்துறை கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>nepal man uses chatgpt to fake nepal flood donation: நேபாள வெள்ள நிவாரணத்தில் சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை நேபாள காவல்துறை கைது செய்துள்ளது.
</p><h3>
நேபாள வெள்ள நிவாரணம்
</h3><p>
சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72e108c3-8757-49ce-b185-90292988248c/26-6a95817668498.webp' /></p><p>
இதற்கான மீட்பு பணிகளை நேபாள ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா மற்றும் சீனாவிலிருந்து சுரங்க மீட்பு குழு நேபாளம் சென்று மீட்பு பணிகளில் உதவி வருகிறது. </p><p>

மேலும், புனரமைப்புப் பணிகளுக்கு 5 பில்லியன் டொலர் வரை செலவாகும் என அரசு ஆரம்பகட்ட மதிப்பீடு செய்துள்ளதாக நேபாள நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

இந்நிலையில், நேபாள வெள்ள நிவாரணத்திற்கு நிதியளிப்பவர்களை குறிவைத்து நடக்கும் இணைய மோசடி குறித்து நேபாள காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. </p><h3> 

சாட்ஜிபிடி மூலம் மோசடி </h3><p>

நேபாளத்தின் ராமேச்சாப் மாவட்டத்தில் உள்ள கோகுல்கங்கா ஊரக நகராட்சியைச் சேர்ந்த 32 வயதான பகவான் கர்கி என்பவர், பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு, 1,20,000 நேபாள ரூபாய் பணம் நன்கொடை வழங்கியதாக சாட்ஜிபிடி மூலம் போலியான பரிவர்த்தனை அறிக்கையை உருவாக்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12963b82-9eaa-45b9-af28-dbf1a787bef5/26-6a9581757f87c.webp' /></p><p>

அந்த அறிக்கையை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த அவர், நிவாரண நிதி திரட்டுவதாகக் கூறி தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட ஒரு க்யூஆர் குறியீட்டையும் இணைத்திருந்தார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ne" dir="ltr">प्रधानमन्त्री दैवी प्रकोप उद्धार कोषको नाममा नक्कली स्टेटमेन्ट बनाएर ठगी गर्ने एक जना पक्राउ<a href="https://x.com/hashtag/NepalPolice?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NepalPolice</a> <a href="https://x.com/hashtag/BelieveinBlue?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BelieveinBlue</a> <a href="https://x.com/hashtag/ToServeandProtect?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ToServeandProtect</a> <a href="https://x.com/hashtag/%E0%A4%A8%E0%A5%87%E0%A4%AA%E0%A4%BE%E0%A4%B2%E0%A4%AA%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%B9%E0%A4%B0%E0%A5%80?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#नेपालप्रहरी</a> <a href="https://t.co/CAOx4EExco">pic.twitter.com/CAOx4EExco</a></p>&mdash; Nepal Police (@NepalPoliceHQ) <a href="https://x.com/NepalPoliceHQ/status/2093921566786813957?ref_src=twsrc%5Etfw">August 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இது குறித்து தகவலறிந்த நேபாள காவல்துறை, மோசடி மற்றும் டிஜிட்டல் தவறான சித்தரிப்பு சட்டங்களின் கீழ் அவரை கைது செய்துள்ளது. </p><p>

இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நேபாள காவல்துறை, இணையத்தில் பகிரப்படும் இணைப்புகளுக்குப் பதிலாக பிரதம மந்திரி பேரிடர் நிவாரண நிதி என்ற பெயரில் உள்ள அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டும் நன்கொடை வழங்குமாறு தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறு படகொன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/french-police-investigate-small-boat-migrant-death-1788179231"></link>
            <id>https://news.lankasri.com/article/french-police-investigate-small-boat-migrant-death-1788179231</id>
            <summary type="text">French police investigating the death of a migrant on a small boat: சிறு படகொன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர் தொடர்பில் பிரான்ஸ் பொலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>French police investigating the death of a migrant on a small boat: சிறு படகொன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர் தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><p>


பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர், பிரான்ஸ் நாட்டு பொலிசாரை தாக்கும் காட்சிகள் வெளியானது நினைவிருக்கலாம்.
</p><p>
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புலம்பெயர்வோர் வன்முறையைக் கையில் எடுக்கிறார்களோ என கேள்வி எழுந்துள்ளது.</p><h3>

சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர்
</h3><p>
இந்நிலையில், புலம்பெயர்வோர் வன்முறையைக் கையில் எடுக்கக்கூடும் என்னும் சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46cdaf75-1282-41e8-81ea-2731d52d524a/26-6a957320b5ea2.webp' /></p><p>

வெள்ளிக்கிழமையன்று, பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட சிறுபடகொன்றில் ஆப்கன் நாட்டவரான 34 வயது புலம்பெயர்வோர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அவரை, சக புலம்பெயர்வோர் தாக்கியிருக்கலாம் என பிரான்ஸ் பொலிசார் கருதுகிறார்கள்.
</p><p>
அத்துடன், அதே படகிலிருந்து காயமடைந்த மூவரையும் பிரான்ஸ் பொலிசார் மீட்டுள்ளார்கள். அவர்களில் ஒரு ஆண் கத்தியால் குத்தப்பட்டுள்ளார், இரண்டு பெண்களுக்கு தீக்காயங்கள் இருந்துள்ளன.&nbsp;</p><p></p><p>
இந்த சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
</p><p>
ஏற்கனவே, சென்ற மாதம் பிரான்சிலுள்ள கலாயிஸ் நகருக்கருகிலுள்ள கடற்கரை ஒன்றில் புலம்பெயர்வோர் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:27:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பெண்: தொடர்ந்து ஒலிக்கும் மொபைல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/family-hopes-women-phone-ringing-missed-in-flood-1788177640"></link>
            <id>https://news.lankasri.com/article/family-hopes-women-phone-ringing-missed-in-flood-1788177640</id>
            <summary type="text">&amp;nbsp;Family clings to hope for missing Toronto based techie: ரொரன்றோவில் வாழ்ந்துவந்த பெண்ணொருவர் நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நிலையில், அவரது மொபைல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Family clings to hope for missing Toronto based techie: ரொரன்றோவில் வாழ்ந்துவந்த பெண்ணொருவர் நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நிலையில், அவரது மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>

ரொரன்றோவில் வாழ்ந்துவந்த பெண்ணொருவர் நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நிலையில், அவரது மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளதால் அவர் பத்திரமாக இருக்கக்கூடும் என அவரது குடும்பத்தினருக்கு நம்பிகை ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56d9fc28-449c-47cf-aadc-e23dda730083/26-6a956ce98db74.webp' /></p><h3>
நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பெண்</h3><p>

ரொரன்றோவில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண்ணான ஸ்வாதி (Swati Bagrecha, 50), நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமானவர்களில் ஒருவர்.</p><p>

ஸ்வாதி நேபாளத்துக்கு புனித யாத்திரை சென்ற நிலையில், அவரது மகளான அனுஷ்கா (14), ஸ்வாதியின் சகோதரியுடன் இந்தியாவின் மும்பை நகரில் தங்கியுள்ளார்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஸ்வாதியை அவரது மொபைலில் தொடர்பு கொள்ள முயலும்போது, அவரது மொபைல் இன்னமும் ஒலிக்கிறது. அதாவது, மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அவருக்கு என்ன ஆயிற்று என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ள அதே நேரத்தில், அவரது மொபைல் இன்னமும் பயன்பாட்டில் உள்ளதால், அவர் பத்திரமாக இருக்கக்கூடும் என அவரது குடும்பத்தினருக்கு நம்பிக்கை உருவாகியுள்ளது.
</p><p>
கடைசியாக அவரது மொபைல் சீன எல்லையருகே பயன்பாட்டில் இருந்ததாக தெரிவித்துள்ள ஸ்வாதியின் சகோதரரான ப்ரஷாந்த், என்றாலும், அவரது மொபைல் எண் ரொரன்றோவில் பதிவு செய்யப்பட்டது என்பதால், அதை கண்காணிப்பது கடினமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்.
</p><p>
ஆகவே, ஸ்வாதியைக் கண்டுபிடிக்க உதவுமாறு, நேபாளத்தில் உள்ள இந்திய மற்றும் சீன தூதரங்களை அணுகியுள்ளதாக ஸ்வாதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> <b>WHATSAPP CHANNEL</b></a><b> </b>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்து - ஆந்திராவில் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apsrtc-plans-doorstep-bus-pickup-in-vijayawada-1788176874"></link>
            <id>https://news.lankasri.com/article/apsrtc-plans-doorstep-bus-pickup-in-vijayawada-1788176874</id>
            <summary type="text">apsrtc plan doorstep bus pickup in vijayawada: அரசு பேருந்து மூலம் வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் திட்டத்தை அறிமுகப்பட்ட ஆந்திராவின் APSRTC ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>apsrtc plan doorstep bus pickup in vijayawada: அரசு பேருந்து மூலம் வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் திட்டத்தை அறிமுகப்பட்ட ஆந்திராவின் APSRTC முன்வந்துள்ளது. </p><h3> 

வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்து</h3><p>

பொதுமக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில் அரசு சார்பில் பெரும்பாலும் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகிறது. </p><p>

ஆனால், பேருந்தில் பயணம் செய்வதற்கு நாம் குறிப்பிட்ட பேருந்து நிலையம் அல்லது பேருந்து நிறுத்தம் சென்றுதான் பேருந்தில் ஏற வேண்டி இருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/442aad8e-ff7f-4f87-bfaf-b3803fbf9e2b/26-6a9569eb7a666.webp' /></p><p> 

பொதுவாக குடும்பத்துடன் வெளியூர்களுக்கு செல்லும் போது அதிகப் பயணப் பொருட்களுடன் பேருந்து நிலையத்திற்கு பயணிகளுக்கு சிரமமாக இருக்கும்.</p><p> 

இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு, பயணிகளின் வீட்டு வாசலுக்கு வந்து பேருந்தை ஏற்றி செல்லும் திட்டம் ஆந்திராவில் தொடங்கப்பட உள்ளது.&nbsp;</p><p></p><p>

ஆந்திராவின் அரசு போக்குவரத்து கழகமான APSRTCயின், சூப்பர் சொகுசு, ஏசி மற்றும் ஸ்லீப்பர் பேருந்துகள் தொலைதூர இடங்களுக்குச் சேவை வழங்குகின்றன.
</p><p>
இதில், தொலைதூர பயணம் மேற்கொள்ள, 10க்கும் மேற்பட்ட டிக்கெட்களை மொத்தமாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வீட்டிற்கே பேருந்தை அனுப்பி ஏற்றி வர APSRTC முன்வந்துள்ளது. </p><p>

மொத்தமாக முன்பதிவு செய்யும் பயணிகள் இது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். </p><p>

முதற்கட்டமாக இந்த சேவை, சோதனை முறையில் விஜயவாடா நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:48:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... மொத்தமாக மூடி மறைக்கும் சீனா: திபெத் ஆர்வலர்கள் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-is-concealing-tibet-campaigners-1788174965"></link>
            <id>https://news.lankasri.com/article/china-is-concealing-tibet-campaigners-1788174965</id>
            <summary type="text">China is concealing scale of flood disaster: நேபாள - திபெத் வெள்ளப் பேரிடரை மூடி மறைக்கும் சீனா.
நேபாள வெள்ளப் பேரிடரில் திபெத்தில் மட்டும் 300 குடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>China is concealing scale of flood disaster: நேபாள - திபெத் வெள்ளப் பேரிடரை மூடி மறைக்கும் சீனா.
</p><p>நேபாள வெள்ளப் பேரிடரில் திபெத்தில் மட்டும் 300 குடியிருப்புகள் மொத்தமாக அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சீனாவின் உத்தியோகப்பூர்வ இறப்பு எண்ணிக்கை சமூக ஆர்வலர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed23013a-e28f-4f92-9158-bba3f39d7421/26-6a95627720d4c.webp' /></p><p>
</p><p>திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்த பொது விவாதங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன; பேரிடர் தொடர்பான தவறான தகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்காக குறைந்தது 10 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.</p><p> என்ன தண்டனை அளிக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், 16 பேர் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 261 வெளிநாட்டினர் உட்பட 546 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>ஆனால், குறைந்தது 300 வீடுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கும் என்றும் தங்களது தரப்பு நம்புவதாக திபெத்துக்கான சர்வதேச ஆர்வலர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.
</p><p>
நேபாளத்தில் காணக்கூடிய காட்சிகள், திபெத்தில் மறைக்கப்பட்டுள்ள உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>திபெத்தில் சேல் (Sale), செர்சுங் (Serchung), லாபி (Labi) மற்றும் ரிசி (Rizi) ஆகிய நான்கு கிராமங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன; அங்கு சுமார் 300 வீடுகள் மொத்தமாக சேதமடைந்திருப்பதாகவும், பலர் இன்னும் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும், திபெத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீன அதிகாரிகள் தெரிவித்ததை விட மிக அதிகமாக இருக்கலாம் என்றே திபெத்துக்கான சர்வதேச ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
</p><p>ஆகஸ்ட் 26 அன்று, நேபாள-திபெத் எல்லையில் பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் முழு கிராமங்களையும் அழித்து உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca6b6e9f-51d3-4ca4-a283-29632426f0f2/26-6a956277c99d5.webp' /></p><p> </p><p>நேபாளப் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐக் கடந்துள்ளது; மேலும் 4,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. மலையேற்றப் பயணிகளுக்கும் யாத்ரீகர்களுக்கும் புகழ்பெற்ற இப்பகுதிகளில், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் நிலை குறித்த தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. </p><p>இதனிடையே, எல்லையின் இருபுறமும் வழங்கப்பட்ட தகவல்களின் அளவில் பெரும் வித்தியாசம் காணப்படுவதாக திபெத் ஆதரவு அமைப்புகள் கூறுகின்றன.</p><p> வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் திபெத்தில், சுயாதீனமான சரிபார்ப்பு மிகவும் கடினமானது. சீனாவுக்கு வெளியே உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காகத் திபெத்தியர்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0df968c-2b05-4621-9f47-a2e5adb33cf0/26-6a9562787c28d.webp' /></p><p> </p><p>அரசு நடத்தும் Tibet Daily நாளிதழில் ஆகஸ்ட் 27 அன்று வெளியான ஒரு செய்தியின்படி, எல்லைக்கு அருகே 1,000-க்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டதாக வதந்திகளைப் பரப்பியதற்காக இரண்டு திபெத்தியர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர். </p><p>வெள்ளப் பேரிடர் நேபாளத்தில் மட்டுமே நடந்ததாகவும், திபெத்தில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் சீன அரசாங்கம் சித்தரிக்கிறது என திபெத்துக்கான சர்வதேச ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T11:14:38+00:00</updated>
        </entry>
    </feed>
