<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-06T15:40:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-drone-strike-hits-russian-oil-refinery-1786028783"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-drone-strike-hits-russian-oil-refinery-1786028783</id>
            <summary type="text">Ukraine-Russian war updates: உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளது.

உக்ரைன் இராணுவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukraine-Russian war updates: உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளது.</p><p>

உக்ரைன் இராணுவம், ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நீண்ட தூர ட்ரோன் தாக்குதலின் மூலம் குறிவைத்து தாக்கியுள்ளது.
</p><h2>ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்கள்</h2><p>பஷ்கோர்டோஸ்தான் பகுதியில் உள்ள Bashneft-Novoil சுத்திகரிப்பு நிலையமும், யாரோஸ்லாவ்ல் பகுதியில் உள்ள Slavneft-Yanos சுத்திகரிப்பு நிலையமும் தாக்கப்பட்டுள்ளதாக,&nbsp;உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cd45ecf-9030-43cb-9a12-263cbda4db70/26-6a74a49237829.webp' /></p><p>
Slavneft-Yanos, ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 1.5 கோடி டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது.

3,500-க்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றுகின்றனர். கார் எரிபொருள், விமான எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
</p><h2>
யாரோஸ்லாவ்ல் மாநில ஆளுநர் மிஹாயில் எவ்ராயேவ் தெரிவித்ததாவது:
</h2><p>
இது அந்த மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல். 93 ட்ரோன்களை வான்வழி பாதுகாப்பு மற்றும் மின்னணு போர்துறை அழித்ததாகவும், விழுந்த சிதைவுகள் சுத்திகரிப்பு நிலையத்தின் சேமிப்பு தொட்டிகளை தாக்கியதாகவும் கூறினார். தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றாலும், நால்வர் காயமடைந்தனர்.
</p><p>
“இந்த தாக்குதல் ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை குறைக்கும். அந்த வருவாயே உக்ரைனியர்களை கொல்லும் போருக்கு நிதியாகிறது” என்று ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><p>ரஷ்யா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். ஆனால் உக்ரைன் தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையங்கள், களஞ்சியங்கள், போக்குவரத்து அமைப்புகளை குறிவைத்து தாக்குவதால், ரஷ்யா உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b6d53f2-7b41-404d-bada-e41cb647b057/26-6a74a492e6e98.webp' /></p><p>இதற்கிடையில், ரஷ்யா உக்ரைனின் நகரங்களில் ஏவுகணை தாக்குதல்களை அதிகரித்துள்ளது. உக்ரைனின் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் குறைவாக இருப்பதை பயன்படுத்தி, ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்துகிறது.</p><p>மேலும், கருங்கடலில் ரஷ்யா தாக்கிய கப்பல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் இராணுவம் இரண்டு ரஷ்ய ராணுவ கப்பல்களையும், “shadow fleet” எனப்படும் கப்பல்களையும் தாக்கியுள்ளது.</p><p>இந்த தாக்குதல், உக்ரைன் போரின் புதிய கட்டத்தை வெளிப்படுத்துகிறது. ரஷ்யாவின் பொருளாதாரத்தை நேரடியாக குறிவைத்து, எரிசக்தி துறையை பலவீனப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T15:11:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.557 கோடி செலவு செய்துள்ள பிரதமர் மோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pm-modis-foreign-trips-cost-rs-557-crore-1786027896"></link>
            <id>https://news.lankasri.com/article/pm-modis-foreign-trips-cost-rs-557-crore-1786027896</id>
            <summary type="text">பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களுக்கு இதுவரை ரூ.557 கோடி செலவு செய்துள்ளார்.

ரூ.557.5 கோடி செலவுஇந்திய அரசின் தரவுகளின்படி, 2021 முதல் 2026 வரை பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களுக்கு இதுவரை ரூ.557 கோடி செலவு செய்துள்ளார்.
</p><h2>
ரூ.557.5 கோடி செலவு</h2><p>இந்திய அரசின் தரவுகளின்படி, 2021 முதல் 2026 வரை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கு மொத்தம் ரூ.557.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66ef2177-0202-4b64-99cc-3d5b33d1c67e/26-6a749f7b2554d.webp' /></p><p>2021-இல் ரூ.36.1 கோடி, 2022-இல் ரூ.55.8 கோடி செலவிடப்பட்டது. அப்போது கொரோனா தொற்றுநோயால் பயணங்கள் குறைவாக இருந்தன.</p><p>

2023-இல் ரூ.93.6 கோடி, 2024-இல் ரூ.109.5 கோடி, 2025-இல் ரூ.187.8 கோடி செலவிடப்பட்டது. 2026-இல் இதுவரை 13 நாடுகளை உள்ளடக்கிய 6 பயணங்களுக்கு ரூ.74.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
</p><p></p><p>இந்த காலகட்டத்தில் மிக அதிக செலவான பயணம் 2025 பிப்ரவரியில் அமெரிக்காவுக்கானது. அதற்கான செலவு ரூ.25.5 கோடிக்கு மேல். 2026-இல் நோர்வே பயணத்திற்கு மட்டும் ரூ.17 கோடி செலவாகியுள்ளது.</p><p>

வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் தங்குமிடம், போக்குவரத்து, பாதுகாப்பு, நிகழ்ச்சி இட கட்டணம் மற்றும் “miscellaneous” என குறிப்பிடப்பட்ட பிற செலவுகளை உள்ளடக்கியதாக அரசு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7d12b2b-433b-49fa-bdbe-9bac8e982a08/26-6a749f7bd5698.webp' /></p><h2>பயணம் மேற்கொள்ளப்பட்ட நாடுகள்</h2><p>2022-இல் ஜேர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நேபாளம், UAE, ஜப்பான், உஸ்பெகிஸ்தான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
2023-இல் பப்புவா நியூ கினி, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, UAE, எகிப்து, தென்னாப்பிரிக்கா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் சென்றார். </p><p>

2024-இல் UAE, பூடான், கத்தார், இத்தாலி, ஆஸ்திரியா, ரஷ்யா, போலந்து, உக்ரைன், அமெரிக்கா, சிங்கப்பூர், பிரேசில், கயானா, குவைத் உள்ளிட்ட நாடுகள் சென்றார். </p><p>2026-இல் இதுவரை இத்தாலி, இஸ்ரேல், நோர்வே, ஸ்வீடன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ், இந்தோனேஷியா, UAE, மலேசியா, நெதர்லாந்து, சேஷெல்ஸ், ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் சென்றுள்ளார்.</p><p></p><h2>வெளிநாட்டு முதலீடுகள்</h2><p>அரசு தரவுகளின்படி, 2021 முதல் 2025 வரை மோடி மேற்கொண்ட பயணங்களின் மூலம் 381.8 பில்லியன் டொலர் (ரூ.36.3 லட்சம் கோடி) வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளன.
</p><p>
இந்த தகவல்கள், பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் வெளிநாட்டு உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T14:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்த 97 வயது மூதாட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/97-old-women-record-at-wing-walking-1786024119"></link>
            <id>https://news.lankasri.com/article/97-old-women-record-at-wing-walking-1786024119</id>
            <summary type="text">97 வயது மூதாட்டி, பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

விமான இறக்கை மேல் நடந்த 97 வயது மூதாட்டி

பிரித்தானியாவின் செல்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>97 வயது மூதாட்டி, பறக்கும் விமான இறக்கை மேல் நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.</p><h3>

விமான இறக்கை மேல் நடந்த 97 வயது மூதாட்டி
</h3><p>
பிரித்தானியாவின் செல்டென்ஹாமைச் சேர்ந்தவர் 97 வயதான பெட்டி ப்ரோமேஜ் என்ற மூதாட்டி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d962fa2-7507-458c-a132-1714aaf8c4dc/26-6a7490ba02c0b.webp' /></p><p>

கடந்த ஆண்டு இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, செல்டென்ஹாம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். </p><p>

செல்டென்ஹாம் மருத்துவமனை ஊழியர்கள் தன்னை நன்றாக கவனித்து கொண்டதால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நிதிதிரட்டும் முயற்சியில் இறங்கினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe3eb363-29bd-4655-a1ee-bc633124265b/26-6a7490b9504af.webp' /></p><p>

இதற்காக பறக்கும் விமானம் ஒன்றின் ரெக்கை மேல் நடந்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A 97-year-old British woman broke her own Guinness World Record for being the oldest female wing walker.<br> <br>&quot;I&#39;d just get bored of life otherwise,&quot; Betty Bromage, who has done six wing walks in the last decade, said. <a href="https://t.co/n4OYn0jMZl">pic.twitter.com/n4OYn0jMZl</a></p>&mdash; ABC News (@ABC) <a href="https://x.com/ABC/status/2085330161323409823?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதன் மூலம் விமான இறக்கையில் நடந்த மிக வயதான பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

முன்னதாக 4 ஆண்டுகளுக்கு முன்னரே இதே சாதனையை படைத்த அவர், தற்போது தன்னுடைய சாதனையே முறியடித்துள்ளார். அதற்கு முன்னதாக 5முறை இவ்வாறு நடந்துள்ளார். </p><p>

எனக்கு நூறு வயதாகும்போது, ​​நான் ஏதாவது சிறப்பான ஒன்றைப் பற்றி யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T13:48:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூச்சிகளை உண்ணும் தாவரம்... 150 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியலாளரின் கூற்று நிரூபணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scientists-identify-an-insect-eating-plant-1786021482"></link>
            <id>https://news.lankasri.com/article/scientists-identify-an-insect-eating-plant-1786021482</id>
            <summary type="text">பிரபல அறிவியலாளரான சார்லஸ் டார்வினின் பூச்சி உண்ணும் தாவரம் குறித்த கூற்று ஒன்று தற்போது நிரூபணமாகியுள்ளது.


பிரபல அறிவியலாளரான சார்லஸ் டார்வின், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல அறிவியலாளரான சார்லஸ் டார்வினின் பூச்சி உண்ணும் தாவரம் குறித்த கூற்று ஒன்று தற்போது நிரூபணமாகியுள்ளது.
</p><p>

பிரபல அறிவியலாளரான சார்லஸ் டார்வின், 150 ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட தாவரம் குறித்து, அது பூச்சி உண்ணும் தாவரமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால், அவரால் அதை நிரூபிக்கமுடியவில்லை!
</p><h3>
அறிவியலாளரின் கூற்று நிரூபணம்</h3><p>

1875ஆம் ஆண்டு, Saxifraga rotundifolia மற்றும் S. umbrosa என்னும் தாவரங்கள் பூச்சி உண்ணும் தாவரங்கள் என்று கூறியிருந்தார் டார்வின்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec712c65-b31c-4268-8761-1452135f1301/26-6a74866b8350d.webp' /></p><p>இந்த Saxifraga வகை தாவரங்களில் மெல்லிய முடி போன்ற அமைப்புகள் காணப்படுவதுடன், அந்த தாவரங்கள் பசை போன்ற ஒரு திரவத்தையும் சுரக்கின்றன.</p><p>

ஆகவே, அந்த தாவரம் பூச்சி உண்ணும் தாவரமாக இருக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்திருந்தார் டார்வின்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஒரு தாவரம் பூச்சி உண்ணும் தாவரம் என்னும் வரையறைக்குள் வரவேண்டுமானால், அந்தத் தாவரம் பூச்சிகளை கவர்ந்திழுத்து, பிடித்து வைத்து, உட்கொள்ளவேண்டும்.&nbsp;</p><p></p><p>

ஆக, Saxifraga தாவரம் பூச்சி உண்ணும் தாவரமாக இருக்கலாம் என்று டார்வின் கூறினாலும், அவரால் அதை நிரூபிக்கமுடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c33e538-2a9b-4609-aecb-d23debd70319/26-6a74866ce2ea3.webp' /></p><p>இந்நிலையில், 150 ஆண்டுகளுக்குப் பின், டார்வினின் கூற்று உண்மைதான் என்பதை ஆய்வாளர்கள் சிலர் நிரூபித்துள்ளார்கள்.
</p><p> 
சீன தலைநகரான பீஜிங்கிலுள்ள Chinese Academy of Sciences என்னும் அமைப்பிலுள்ள Kunming Institute of Botany என்னும் நிறுவன ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள்.</p><p>

அதாவது, ஒரு தாவரம் பூச்சி உண்ணும் தாவரம் என்னும் வரையறைக்குள் வரவேண்டுமானால், அந்தத் தாவரம் பூச்சிகளை கவர்ந்திழுத்து, பிடித்து வைத்து உட்கொள்ளவேண்டும்.
</p><p>
இந்த Saxifraga தாவரம், பூச்சிகளை கவர்ந்திழுப்பதை தற்போது ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள்.
</p><p>
அதாவது, Saxifraga தாவரம் ஒருவித வாசனையை வெளியிடுவதன் மூலம் பூச்சிகளைக் கவர்வது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அது மட்டுமின்றி, சிக்கிய பூச்சிகளை, phosphatase என்னும் என்சைம் மூலம் அந்த தாவரம் ஜீரணிப்பதும் தெரியவந்துள்ளது.</p><p>

இந்த Saxifraga தாவரம் உயரமான மலைகளில், கடல் மட்டத்திலிருந்து 8,000 முதல் 18,000 அடி உயரத்தில் வளர்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4b0babc-cf0d-48b6-a8bb-fea60bbdaad3/26-6a74866c35e0c.webp' /></p><p>என்னதான் அந்த தாவரத்தால் ஒளிச்சேர்க்கை மூலம் தனக்கான உணவைத் தயாரித்துக்கொள்ளமுடியும் என்றாலும், அவ்வளவு உயரத்தில் அதற்கு நைட்ரேட்கள் கிடைக்காது.
</p><p>
அப்படியானால், நைட்ரேட்டுக்கு என்ன செய்வது? மண்ணில் நைட்ரேட் கிடைக்கவில்லை என்றால், நைட்ரேட்டுக்கு ஒரே வழி பூச்சிகள்தான். ஆக, நைட்ரேட் நிறைந்துள்ள பூச்சிகளை கவர்ந்து உட்கொண்டு, தனது நைட்ரேட் தேவையை பூர்த்தி செய்துகொள்கிறது Saxifraga தாவரம்.</p><p>

அதையும், Isotope labeling என்னும் செயல்முறை மூலம் நிரூபித்துள்ளார்கள் அறிவியலாளர்கள்.
</p><p>
நைட்ரஜன் - 15 என்னும் நைட்ரஜன் ஐசோடோப்களை பூச்சிகளின் உடலுக்குள் செலுத்தி, பின் அந்த பூச்சிகளை தாவரங்களுக்கு உணவாக்கி, அதன்பின், அந்த தாவரங்களில் அந்த நைட்ரஜன் - 15 என்னும் நைட்ரஜன் ஐசோடோப்கள் உள்ளதை ஆய்வு மூலம் உறுதி செய்து, Saxifraga தாவரம் பூச்சி உண்ணும் தாவரம்தான் என்பதை நிரூபித்துள்ளார்கள் ஆய்வாளர்கள்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T13:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தித்திக்கும் சுவையில் பருப்பு போளி.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/paruppu-poli-recipe-in-tamil-1786022258"></link>
            <id>https://news.lankasri.com/article/paruppu-poli-recipe-in-tamil-1786022258</id>
            <summary type="text">போளி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.

அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பருப்பு போளி இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>போளி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.</p><p>

அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பருப்பு போளி இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li>
மைதா- 250g
</li><li>உப்பு- 1 சிட்டிகை</li><li>
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை</li><li>
எண்ணெய்- 2 ஸ்பூன்</li><li>
கடலை பருப்பு- ¾ கப்</li><li>
தண்ணீர்- 1 கப்
</li><li>வெல்லம்- 1 கப்</li><li>
ஏலக்காய் தூள்- ¼ கப்
</li><li>நெய்- 1 ஸ்பூன்</li></ul><h2>செய்முறை
</h2><p>முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிணைந்து&nbsp; எண்ணெய் சேர்த்து 3 மணி நேரம் மூடி போட்டு ஊறவைக்கவும்.</p><p>



அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து குக்கரில்&nbsp; தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்து அரைத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9f088c6-6ddd-46c1-94f1-00579b0ac91a/26-6a74897408164.webp' /></p><p>இதனையடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் அரைத்த பருப்பு, வெல்லம், ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறி கெட்டியாகி வந்ததும் இறக்கவும்.
</p><p>
அடுத்து பிணைந்து வைத்த மாவின் உள்ளே செய்த பருப்பை வைத்து மடித்து தவாவில் நெய் சேர்த்து சுட்டு எடுத்தால் சுவையான பருப்பு போளி தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T13:19:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு எதிராக வடகொரிய ஏவுகணைகளை பயன்படுத்தும் ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-deploys-missiles-in-russia-vs-ukraine-1786020022"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-deploys-missiles-in-russia-vs-ukraine-1786020022</id>
            <summary type="text">Russia-Ukraine War: உக்ரைனுக்கு எதிராக வடகொரிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துகிறது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா, வடகொரியாவின் நேரடி உதவியை அதிகரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia-Ukraine War: உக்ரைனுக்கு எதிராக வடகொரிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துகிறது.</p><p>

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா, வடகொரியாவின் நேரடி உதவியை அதிகரித்துள்ளது.
</p><h2>
வடகொரிய ஏவுகணை பிரிவு
</h2><p>
ரஷ்யாவின் வொரோனெஷ் பகுதியில் உள்ள 112-வது ஏவுகணை பிரிகேடில், வடகொரிய ஏவுகணை பிரிவு ஒன்று தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவ உளவுத்துறை அதிகாரி ஆண்ட்ரி செர்னியாக் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9942a8cf-ee06-4da0-96f9-b3a7702d3c4b/26-6a7480b9dfd3f.webp' /></p><p>இந்த பிரிவில் சுமார் 90 வடகொரிய வீரர்கள் உள்ளனர். அவர்கள் 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 6 லாஞ்சர்களுடன் உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்த தயாராக உள்ளனர்.</p><p>

ரஷ்யா, உக்ரைனின் வலுவான வான்வழி பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி, அதிக அளவில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது.</p><p>

2023 இறுதியில் இருந்து ரஷ்யா, வடகொரியாவின் KN-23 மற்றும் KN-24 வகை ஏவுகணைகளை உக்ரைனில் பயன்படுத்தி வருகிறது. </p><p>இவை ரஷ்யாவின் Iskander ஏவுகணைகளை விட அதிக தூரம் மற்றும் அதிக வெடிமருந்து சக்தி கொண்டவை. ஆனால் துல்லியம் குறைவாக இருப்பதால், பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.
</p><p></p><h2>ரஷ்யா-வடகொரியா பாதுகாப்பு ஒப்பந்தம்</h2><p>2024-இல் ரஷ்யா-வடகொரியா இரு நாடுகளும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்பின், வடகொரியா ரஷ்யாவிற்கு கோடிக்கணக்கான குண்டுகள், ஆயிரக்கணக்கான வீரர்கள், தற்போது ஏவுகணை பிரிவுகள் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
</p><p>
சமீபத்தில், உக்ரைனின் ரடுஷ்னே கிராமத்தில் வடகொரிய ஏவுகணை தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். இது, வடகொரிய ஏவுகணைகள் உக்ரைனில் பொதுமக்கள் உயிரிழப்புகளை அதிகரிக்கின்றன என்பதற்கான சான்றாகக் கருதப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/832605f1-e553-47f9-a5cf-4b90cb36e45a/26-6a7480b92dfe0.webp' /></p><h2>வல்லுநர்கள் எச்சரிக்கை
</h2><p>
உக்ரைனின் வான்வழி பாதுகாப்பு குறைபாடு, குறிப்பாக குளிர்காலத்தில் மின்சார வலையமைப்புகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாத நிலையை உருவாக்கும். இதனால், வடகொரியாவின் பல்லிஸ்டிக் ஏவுகணைகள் உக்ரைனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p>
இந்த நடவடிக்கை, ரஷ்யா-வடகொரியா இராணுவ கூட்டாண்மை மேலும் வலுப்பெறுகிறது என்பதையும், உக்ரைனின் போராட்டம் இன்னும் கடினமாகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T12:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாறும் விதி... கடுமையாகவிருக்கும் EES திட்டம்: அதிகரிக்கவிருக்கும் குழப்பங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/choas-at-airports-due-to-tighten-ees-checks-1786015994"></link>
            <id>https://news.lankasri.com/article/choas-at-airports-due-to-tighten-ees-checks-1786015994</id>
            <summary type="text">EES திட்டம் கடுமையாக்கப்பட உள்ளதால் எல்லைகளில் குழப்பங்கள் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத்தின் EES திட்டம் கடுமையாக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>EES திட்டம் கடுமையாக்கப்பட உள்ளதால் எல்லைகளில் குழப்பங்கள் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
</p><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் EES திட்டம் கடுமையாக்கப்பட உள்ளதால், எல்லைகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைமை, மேலும் மோசமடைய உள்ளது.</p><h3>

Entry/Exit System (EES)</h3><p>

ஏப்ரல் மாதம் அறிமுகமான ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) திட்டத்தின்படி, ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் குறுகிய கால பயணத்துக்காக பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், எல்லையில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1739d2b-a7b7-4b6c-90f0-2f7ada4c9b0c/26-6a7470fc79b54.webp' /></p><p>
இப்படி ஏராளமானோரின் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்யவேண்டியுள்ளதால் அதற்கு அதிக நேரம் பிடிக்கிறது.
</p><p>
இதனால், பயணிகள் எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. கால தாமதத்தால் தங்கள் விமானத்தை தவறவிடுபவர்களும் இருக்கிறார்கள்.&nbsp;</p><p></p><p>

கடுமையாகவிருக்கும் EES திட்டம்

விடயம் என்னவென்றால், எல்லைகளில் கூட்டம் அதிகரிக்கும்போது, வரிசைகள் மிக நீளமாகும்போது, சில நாடுகள் தற்காலிகமாக EES திட்டத்தை இடைநிறுத்துகின்றன.
</p><p>
ஆனால், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி முதல், EES திட்ட விதிகள் கடுமையாக்கப்பட உள்ளன. </p><p>அதாவது, இனி எல்லைகளில் கூட்டம் எவ்வளவு அதிகமானாலும், மக்கள் எவ்வளவு நீண்ட வரிசைகளில் காத்திருந்தாலும், EES திட்டம் இடைநிறுத்தப்படாது என ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சியாகிய Frontex என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.
</p><p>
ஆக, எல்லைகளிலும், விமான நிலையங்களிலும், மீண்டும் மக்கள் மிக நீண்ட நேரம், நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை உருவாகப்போகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T11:33:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் பதின்வயது ராணுவக் கல்லூரி மீது அதிரடிக் குற்றச்சாட்டுகளை அடுக்கிய பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-allege-teen-army-college-1786016058"></link>
            <id>https://news.lankasri.com/article/women-allege-teen-army-college-1786016058</id>
            <summary type="text">பிரித்தானியாவின் மிகப்பெரிய ராணுவக் கல்லூரிகளில் ஒன்றில் நிலவும் பெண் வெறுப்பு மற்றும் பாலியல் வன்முறைக் கலாச்சாரம் தொடர்பில் புகார் எழுந்துள்ளது.
பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் மிகப்பெரிய ராணுவக் கல்லூரிகளில் ஒன்றில் நிலவும் பெண் வெறுப்பு மற்றும் பாலியல் வன்முறைக் கலாச்சாரம் தொடர்பில் புகார் எழுந்துள்ளது.
</p><p>பதின்ம வயதினருக்கான பிரித்தானியாவின் மிகப்பெரிய இராணுவப் பயிற்சிக் கல்லூரிகளில் ஒன்று, திட்டமிட்ட பெண் வெறுப்புக் கலாச்சாரமும் பாலியல் வன்முறையும் நிலவுவதாகப் பல பெண் பயிற்சிப் பெறுநர்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தீவிர விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.</p><h2>குறைந்தது நான்கு பெண்கள்</h2><p> </p><p>
இளநிலை வீரர்கள் மற்றும் ஊழியர்கள் இருவராலும் பலர் பாதிப்புக்கு உள்ளானதாக அதில் கூறப்படுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba5d2b4f-f282-4e56-beb0-4f5680bc8c4b/26-6a74713d8beb8.webp' /></p><p> </p><p>வடக்கு யார்க்ஷயரின் ஹரோகேட்டில் உள்ள 'ஆர்மி ஃபவுண்டேஷன் கல்லூரியில் (AFC) கடந்த ஐந்து வருடங்களில் பயின்ற குறைந்தது நான்கு பெண்கள், தங்களுக்கு 17 வயதாக இருந்தபோது கூட்டுப் பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல் மற்றும் மறைந்திருந்து வேடிக்கை பார்க்கும் செயல் ஆகியவற்றிற்கு ஆளாக்கப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். </p><p>மட்டுமின்றி, அக்காலகட்டத்திற்குப் பிறகு ராணுவத்திலிருந்து வெளியேறிய அனைத்துப் பெண்களும், அந்தப் போர் பயிற்சி மையத்தில் பணியாளர்களாலேயே ஊக்குவிக்கப்படும் ஆபத்தான வகையிலான பெண் வெறுப்பு மற்றும் பாலியல் வன்முறை கலாச்சாரம் நிலவுவதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். </p><p>
பிரித்தானியாவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான மிகப்பெரிய இராணுவப் பயிற்சிக் கல்லூரி AFC ஆகும். இராணுவத்தில் சேரும் 16 வயதுடைய அனைத்துப் புதிய வீரர்களும் இந்தப் பயிற்சிப் பள்ளிக்கே வருகின்றனர்; தற்போது இங்குள்ள மொத்தம் 889 பயிற்சியாளர்களில் குறைந்தது 70 பேர் பெண் இளம் வீரர்கள் ஆவர்.</p><p></p><p>
</p><p>பிரித்தானிய ராணுவத்தில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை இந்த வேதனையான தகவல்கள் மேலும் அதிகரித்துள்ளன; இது தொடர்பான நாட்டின் முதல் உத்தியோகப்பூர்வ ஆய்வில், </p><p>கடந்த ஓராண்டில் ராணுவத்தில் பணியாற்றும் பெண்களில் 67 சதவீதம் பேர் ஆண் சக ஊழியர் ஒருவரால் குறைந்தது ஒரு முறையாவது ஒப்புதலின்றி பாலியல் ரீதியான நடத்தைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. </p><p>இந்த நிலையில், AFC-யின் செயல்பாடுகள் குறித்த பிபிசி-யின் விசாரணையில், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஓராண்டு காலத்தில், அக்கல்லூரி தொடர்பான பாலியல் குற்றங்கள் குறித்த 16 புகார்கள் நார்த் யார்க்ஷயர் காவல்துறையிடம் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. </p><p>பதிவு செய்யப்பட்ட அந்தக் குற்றங்களில், உடைகள் இல்லாதக் காட்சி, மறைந்திருந்து நோக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கையில், இந்தப் புகார்கள் வழக்குத் தொடர்வதற்கு வழிவகுத்தனவா என்பதை வெளிப்படுத்தவில்லை. </p><p>ஜனவரி 2018 முதல் ஜூன் 2025 வரையிலான காலத்தில், அக் கல்லூரியில் முறையற்ற பாலியல் நடத்தை தொடர்பான மொத்தம் 176 புகார்கள் அளிக்கப்பட்டதாக பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) தரவுகள் தெரிவிக்கின்றன; இவற்றில் 32 புகார்கள் நிரந்தரப் பணியாளர்கள் மீதும், 144 புகார்கள் இளநிலை வீரர்கள் மீதும் அளிக்கப்பட்டவை ஆகும்.</p><h2>கனவு சிதைந்துபோனது</h2><p> </p><p>பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவிக்கையில், சிறுவயது முதலே ஒரு ராணுவ வீரராக விரும்பியதாகவும்; ஆனால், ராணுவப் பயிற்சி மையத்தில் சக வீரர்கள் பலரால் பல மணிநேரம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது அவளது கனவு சிதைந்துபோனது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69ca060b-b6c8-4bf8-a816-378006bb2bc9/26-6a74713cd96c8.webp' /></p><p> </p><p>தாக்குதல் நடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் ராணுவத்திலிருந்து விலகியதாகவும் குறிப்பிட்டுள்ளார்; அவரது அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அந்தத் தாக்குதல் நடந்த துல்லியமான காலப்பகுதி வெளியிடப்படவில்லை. </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், தமக்கு நேர்ந்தது தொடர்பில் அவர் பொலிசாரை நாடி புகார் அளித்தும், அதில் வழக்கு ஏதும் பதியப்படவில்லை என்றார். </p><p>பின்னர் அவர் நார்த் யார்க்ஷயர் காவல்துறையுடன் ஒரு நிதி சமரசத்தை எட்டியுள்ளார், இதில் அதிகாரிகள் தரப்பில் எந்தப் பொறுப்பையும் ஒப்புக்கொள்ளவில்லை. </p><p>கடந்த ஐந்து ஆண்டுகளில், AFC-யில் உள்ள பல மூத்த பயிற்றுனர்கள் உடல் மற்றும் பாலியல் வன்முறை குற்றங்களுக்காக இராணுவ நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T11:32:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேற்று கடகத்தில் நுழைந்த புதன்.., பணக்கார யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-peyarchi-1786014184"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-peyarchi-1786014184</id>
            <summary type="text">நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.</p><p>

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
</p><p>
இந்நிலையில், மிதுன ராசியில் பயணித்து வரும் புதன் ஆகஸ்ட் 05ஆம் திகதியான நேற்று கடக ராசிக்குள் நுழைந்துள்ளார்.
</p><p>
மேலும், கடக ராசியில் சூரியனுடன் சேர்ந்து புதாதித்ய ராஜயோகமும் உருவாகிறது.
</p><p>
அந்தவகையில், கடக ரசிக்கும் செல்லும் புதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>ரிஷபம் </h2><ul><li>கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். </li><li>தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.</li><li> பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். </li><li>மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். </li><li>வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். </li><li>திடீர் பண வரவு கிடைக்கும். </li><li>வணிகம் தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c32f13a0-33cb-44b1-8bcd-72943e16f803/26-6a746aa07cd2e.webp' /></p><h2>கடகம் </h2><ul><li>வியாபாரத்தில் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். </li><li>வருமானம் அதிகரிக்கும். </li><li>நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். </li><li>பணியிடத்தில் செயல்திறன் அதிகரிக்கும். </li><li>உயர் அதிகாரிகள் உங்கள் வேலையை பாராட்டுவார்கள்.</li><li> சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. </li><li>நிதி நிலைமை மேம்படும்.</li><li> சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். </li><li>வேலைகள் ஒவ்வொன்றும் திட்டமிட்டபடி நடக்கும். </li><li>பரம்பரை சொத்து தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b441c01a-e628-4e8c-ab32-ae30741cd922/26-6a746aa154a2b.webp' /></p><p> </p><h2>
சிம்மம் </h2><ul><li>அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.</li><li> கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். </li><li>தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். </li><li>சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.</li><li> வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.</li><li>நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.</li><li>நல்ல லாபமும் கிடைக்கும்.</li><li> குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.</li></ul><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8edfe10c-d173-4812-880f-6dec62403266/26-6a746aa20694f.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-06T11:07:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அரசு எண்ணெய் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-state-oil-company-bank-accounts-1786011522"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-state-oil-company-bank-accounts-1786011522</id>
            <summary type="text">கடன் காரணமாக ஈரான் அரசு எண்ணெய் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கடன் காரணமாக, அரசுக்குச் சொந்தமான ஒரு வங்கி, தேசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடன் காரணமாக ஈரான் அரசு எண்ணெய் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
</p><p>அதிகரித்து வரும் கடன் காரணமாக, அரசுக்குச் சொந்தமான ஒரு வங்கி, தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.</p><h2>முடக்கப்பட்ட கணக்குகள்</h2><p>
நாட்டின் மிக முக்கியமான வருவாய் ஆதாரம் எதிர்கொள்ளும் நெருக்கடியை இந்த விவகாரம் அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd119bb8-0bbd-40df-bded-e0f05f97cc4c/26-6a745f85437b7.webp' /></p><p> </p><p>'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, 'பேங்க் ஆஃப் இண்டஸ்ட்ரி அண்ட் மைன்' (Bank of Industry and Mine) நிலுவைத் தொகை அல்லது முடக்கப்பட்ட கணக்குகள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை. </p><p>மட்டுமின்றி, NIOC-இன் சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை 2027 மார்ச் மாதம் வரையான ஈரானிய நாட்காட்டி ஆண்டின் இறுதி வரை ஒத்திவைக்கும் ஈரானின் வரவு-செலவுத் திட்டச் சட்டத்தின் விதிகள் இருந்தபோதிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>இதனிடையே, ஆசாதேகன் (Azadegan) எண்ணெய் வயலிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, தேசிய மேம்பாட்டு நிதியத்திற்கு (NDF) சுமார் 17 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த NIOC-ஆல் இயலாது என்று அந்த நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். </p><p>நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான இதன் வளர்ச்சி, அதிகாரத்துவ தாமதங்கள் மற்றும் நிர்வாகத் தடைகளால் மந்தமடைந்துள்ளது.</p><p></p><p> </p><p>தடைகள், பல ஆண்டுகால முதலீட்டுக் குறைபாடு மற்றும் உள்நாட்டு நிதியுதவியை நம்பியிருத்தல் ஆகியவை NIOC-இன் இருப்புநிலைக் குறிப்பில் அழுத்தத்தை அதிகரித்துள்ளதால், அந்நிறுவனம் மீதான நிதி நெருக்கடிகள் அதிகரித்து வருவதை இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. </p><p>அமெரிக்கத் தடைகள் காரணமாக நாட்டின் எரிசக்தித் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் இல்லாத நிலையில், எண்ணெய் வயல் மேம்பாட்டுக்கு நிதியளிக்க என்.ஐ.ஓ.சி நிறுவனம், என்.டி.எஃப் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களை அதிகளவில் சார்ந்துள்ளது.</p><h2>அரசின் சட்டப் பிரிவு</h2><p> </p><p>இது, ஒரு இறையாண்மை நிதியாக (sovereign wealth fund) உருவாக்கப்பட்ட NDF-ஐத் திட்டங்களுக்கான நிதியளிப்பு ஆதாரமாக மாற்றிவிட்டது; அதேவேளையில், எண்ணெய் நிறுவனத்தை அதிகரித்து வரும் கடன் சுமைக்கு உள்ளாக்கியுள்ளது. </p><p>சமீபத்திய டிஜிட்டல் விலைப்பட்டியல் விதிகளைக் கடைபிடிப்பது தொடர்பாக என்.ஐ.ஓ.சி-க்கும் வரி அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0620e4a-85c3-44a2-abc2-ce8e1832a03e/26-6a745f848378c.webp' /></p><p> </p><p>இப்பிரச்சினை காரணமாக, வரி அதிகாரிகள் முன்னதாக NIOC-இன் சில கணக்குகளை முடக்கி, அவற்றில் இருந்த நிதியை எடுத்திருந்தனர்; எனினும், அரசின் சட்டப் பிரிவு தலையிட்டதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை பின்னர் நிறுத்தப்பட்டது. </p><p>இதனிடையே, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தனது எண்ணெய் விற்பனை மற்றும் ரகசிய ஏற்றுமதிப் பரிவர்த்தனைகளைச் சாதாரண வணிக நடவடிக்கைகளாகக் கருதக்கூடாது என்று NIOC வாதிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T10:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Ather-ன் புதிய Konarc மின்சார ஸ்கூட்டர் - ஆகஸ்ட் 29 அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ather-konarc-electric-scooter-india-launch-1786010281"></link>
            <id>https://news.lankasri.com/article/ather-konarc-electric-scooter-india-launch-1786010281</id>
            <summary type="text">Ather Energy நிறுவனம் தனது புதிய Konarc எனப்படும் மின்சார ஸ்கூட்டரின் பெயரை இன்று அறிவித்துள்ளது.

Ather Konarc ஆகஸ்ட் 29-ஆம் திகதி நடைபெறும் Commun...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ather Energy நிறுவனம் தனது புதிய Konarc எனப்படும் மின்சார ஸ்கூட்டரின் பெயரை இன்று அறிவித்துள்ளது.
</p><p>
Ather Konarc ஆகஸ்ட் 29-ஆம் திகதி நடைபெறும் Community Day நிகழ்வில் அறிமுகமாகிறது.
</p><p>
Konarc, முன்பு EL01 Concept என அறிமுகப்படுத்தப்பட்ட மாடலின் தயாரிப்பு பதிப்பாகும். இது Rizta-வின் கீழ் வரிசையில் இடம் பெறும் குடும்ப ஸ்கூட்டராகக் கருதப்படுகிறது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Presenting Ather Konarc!<br><br>Launching on 29th August 2026 at Ather Community Day. <a href="https://t.co/D6uG0bjgpw">pic.twitter.com/D6uG0bjgpw</a></p>&mdash; Tarun Mehta (@tarunsmehta) <a href="https://x.com/tarunsmehta/status/2084931493055606914?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>வடிவமைப்பு அம்சங்கள்
</h2><ul><li>
முன்புறத்தில் அகலமான LED Daytime Running Light</li><li>

ஒளிரும் வடிவில் Ather லோகோ </li><li>

முன்புற டிஸ்க் பிரேக்
</li><li>
ஒற்றை சீட், Rizta-வுடன் ஒப்பிடும்போது சற்று குறுகியது</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6ece03b-0f0f-44cb-b104-50b2f1f6967d/26-6a745cb97ade2.webp' /></p><h2>Konarc-ன்&nbsp;<span style="color: inherit; font-size: 1.75rem;">பிளாட்ஃபார்ம் &amp; சஸ்பென்ஷன்:</span></h2><ul><li>
புதிய Steel Unibody Platform
</li><li>
14-inch முன்சக்கரம் (Ather-ல் முதல் முறை)</li><li>

12-inch பின்சக்கரம்
</li><li>
முன்புறம் Telescopic Forks, பின்புறம் Single Shock Absorber</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a7c3967-a494-479b-8480-94b5599d4af7/26-6a745cba2daee.webp' /></p><p>
</p><h2>
பேட்டரி &amp; விலை:
</h2><ul><li>
2kWh முதல் 4kWh வரை பேட்டரி விருப்பங்கள்
</li><li>
எதிர்காலத்தில் 5kWh பேட்டரி கிடைக்க வாய்ப்பு
</li><li>
Built-in Charger வசதி
</li><li><b>
விலை:</b> ரூ.1 லட்சம் (அறிமுக விலை, ex-showroom)
</li><li>
மேம்பட்ட மாடல்கள் ரூ.1.25 லட்சம் வரை இருக்கலாம்
</li></ul><p></p><p>Konarc, Ather-இன் புதிய மகாராஷ்டிரா தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. விரிவான விவரங்கள், வேரியண்ட்கள், விலை விவரங்கள் ஆகஸ்ட் 29-ஆம் திகதி அறிமுக நாளில் அறிவிக்கப்படும்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T10:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[5,000க்கும் மேற்பட்ட வாடகை வீடுகள்: கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/carney-promises-5000-new-rental-homes-for-toronto-1786010547"></link>
            <id>https://news.lankasri.com/article/carney-promises-5000-new-rental-homes-for-toronto-1786010547</id>
            <summary type="text">ரொரன்றோ மக்களுக்காக சுமார் 5,600 வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.


கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து ரொரன்றோ நகர மக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரொரன்றோ மக்களுக்காக சுமார் 5,600 வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><p>


கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து ரொரன்றோ நகர மக்களுக்காக 5,600க்கும் அதிகமான வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
</p><h3>
5,000க்கும் மேற்பட்ட வாடகை வீடுகள்
</h3><p>
கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து 2.7 பில்லியன் டொலர்கள் முதலீட்டில் 18 வீடுகட்டும் திட்டங்களை செயல்படுத்த உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05b4a449-e360-4c4c-83f9-40f4c5a3471e/26-6a745bb52f0dd.webp' /></p><p>
அடுத்த மூன்று ஆண்டுகளில், 5,600க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 4,500க்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட இருப்பதாக கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் அனைத்து வீடுகளுமே வாடகைக்கு விடப்படுவதற்காகவே கட்டப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:03:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணைத் தாக்குதல்களுக்கு நடுவில் உக்ரைன் சென்றுள்ள பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-defence-sec-streeting-visit-ukraine-amid-attack-1786009664"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-defence-sec-streeting-visit-ukraine-amid-attack-1786009664</id>
            <summary type="text">ரஷ்யா, உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், உக்ரைன் சென்றுள்ளார் பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்.


ரஷ்யா, ஏவுகணைகள் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா, உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், உக்ரைன் சென்றுள்ளார் பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்.</p><p>


ரஷ்யா, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், பிரித்தானிய பாதுகாப்புச் செயலர், உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><h3>

உக்ரைன் சென்றுள்ள பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்</h3><p>

ரஷ்யா, 24 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகள், 4 ஹைப்பர்சோனிக் வகை ஆயுதங்கள் மற்றும் 100க்கும் அதிகமான ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccb93133-2e01-45bb-a8b3-01180581de38/26-6a745841e6dd4.webp' /></p><p>
ஆனால், அவை எதையும் உக்ரைன் தடுத்து நிறுத்தவில்லை! காரணம், அவற்றைத் தடுக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உக்ரைனில் தட்டுப்பாடு நிலவுகிறது.
</p><p>
இப்படிப்பட்ட ஒரு சூழலில், பிரித்தானிய பாதுகாப்புச் செயலராக பதவியேற்றுள்ள வெஸ் ஸ்ட்ரீட்டிங் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
</p><p>
அவரிடம் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உதவி கோரிய நிலையில், உக்ரைனுக்குத் தேவையான ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் சில பிரித்தானியாவிடம் இல்லை.&nbsp;</p><p></p><p>
ஆகவே, தங்களிடம் அந்த பாதுகாப்புக் கருவிகள் இல்லையென்றாலும், அவை யாரிடம் உள்ளதோ அவர்களிடம் தான் உதவி கோர உள்ளதாக ஸ்ட்ரீட்டிங் தெரிவித்துள்ளார்.
</p><p>
பின்னர் ஊடகவியலாளர்களுடன் பேசும்போது புடின் குறித்து அவர்கள் கேள்வி எழுப்ப, தங்களுக்கு ரஷ்ய மக்களுடன் பிரச்சினை இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்வதாகவும், புடினுடன் மட்டுமே தங்களுக்குப் பிரச்சினை என்றும் கூறியுள்ளார் ஸ்ட்ரீட்டிங்.</p><p>

அத்துடன், தாங்கள் ரஷ்யாவுடன் போரிட எப்போதுமே விரும்பியதில்லை என்றும், இப்போதும் விரும்பவில்லை என்றும் கூறியுள்ள ஸ்ட்ரீட்டிங், தாங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக மட்டுமே நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T09:47:52+00:00</updated>
        </entry>
    </feed>
