<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-16T05:25:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகொப்டர் விபத்து - 3 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nbc-news-helicopter-crashes-in-live-bus-accident-1789535933"></link>
            <id>https://news.lankasri.com/article/nbc-news-helicopter-crashes-in-live-bus-accident-1789535933</id>
            <summary type="text">nbc news helicopter crashes during live coverage of los angeles bus crash: பேருந்து விபத்தை நேரலை செய்து கொண்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>nbc news helicopter crashes during live coverage of los angeles bus crash: பேருந்து விபத்தை நேரலை செய்து கொண்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். </p><h3>

பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகொப்டர் விபத்து
</h3><p>
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் சாட்ஸ்வொர்த் பகுதியில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5:03 மணிக்கு ஒரு மெட்ரோ பேருந்தும், SUV வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/516c6429-0705-469a-a593-944256700eae/26-6aaa26be9a91d.webp' /></p><p>

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்திருந்தனர். தீயணைப்பு வீரர்கள் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.</p><p> 

இந்த விபத்து சம்பவத்தை நேரலை செய்ய NBC செய்தி நிறுவனத்தின் ஹெலிகொப்டர் ஒன்று உள்ளூர் நேரப்படி மாலை 7 மணியளவில் நேரலையின் போதே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>

ஹெலிகொப்டர் இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் உள்ள வாகன நிறுத்தத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">NBC LOS ANGELES HELICOPTER CRASHES WHILE COVERING METRO BUS CRASH<br><br>An NBC Los Angeles news (KNBC-TV) helicopter reportedly crashed in Chatsworth, California, while covering a Metro bus crash.<br><br>Further details on injuries and the circumstances of the helicopter crash are awaited. <a href="https://t.co/skIAkYVChe">pic.twitter.com/skIAkYVChe</a></p>&mdash; Subodh Kumar (@kumarsubodh_) <a href="https://x.com/kumarsubodh_/status/2100051119271752040?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்த விபத்தில், ஹெலிகொப்டர் விமானி, செய்தியாளர், மற்றும் சாலையில் இருந்த நபர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca91e3c-4675-493b-b1f8-fdc8e7061a8f/26-6aaa26bf4e299.webp' /></p><p>

மேலும், ஹெலிகொப்டர் விழுந்ததில், ஹெலிகொப்டர் மற்றும் அங்குள்ள வாகனங்களில் தீ பற்றியது. அங்கிருந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர்.</p><p>

ஹெலிகொப்டர் விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் விசாரணையில் ஈடுபடுத்தப்படும் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. </p><p>

நேரலையின் போதே ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T05:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு புகலிடக்கோரிக்கையாளருக்கு 56,000 பவுண்டுகள்: உள்துறைச் செயலர் பரபரப்பு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-paying-56-000-pound-for-each-returned-to-france-1789533714"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-paying-56-000-pound-for-each-returned-to-france-1789533714</id>
            <summary type="text">UK paying £56,000 for each person returned to France: பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பிரித்தானியா 56,000 பவுண...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK paying £56,000 for each person returned to France: பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பிரித்தானியா 56,000 பவுண்டுகள் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>


One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பிரித்தானியா 56,000 பவுண்டுகள் கொடுப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.
</p><h3> 
One in, one out திட்டம்</h3><p>

பிரான்சும் பிரித்தானியாவும் செய்துகொண்டுள்ள One in, one out என்னும் ஒப்பந்தத்தின்கீழ், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், தனக்கு பிரித்தானியாவில் குடும்பம் இருப்பதை நிரூபிக்க இயலாதபட்சத்தில் பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7de005f8-ccc4-463d-85ec-7067fd8fdd01/26-6aaa1e13c2805.webp' /></p><p>

அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரித்தானியாவில் குடும்பம் உள்ளதை நிரூபிக்கக்கூடிய, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.&nbsp;</p><p></p><h3>
ஒரு புகலிடக்கோரிக்கையாளருக்கு 56,000 பவுண்டுகள்</h3><p>

இந்நிலையில், அப்படி One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பிரித்தானியா 56,000 பவுண்டுகள் கொடுப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7df070-82b0-45cf-8c47-3ca300098de9/26-6aaa1e147ce3f.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், இதுவரை சுமார் 1,400 பேர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.
</p><p>
ஆக, மக்கள் வரிப்பணத்தில் இவ்வளவு பெரிய தொகை பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக செலவிடப்படும் நிலையில், அத்திட்டத்தால் உண்மையாகவே பலன் உள்ளதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
ஆனால், ஒரு புகலிடக்கோரிக்கையாளரை பிரித்தானியாவில் ஓராண்டுக்கு ஹொட்டல் ஒன்றில் தங்கவைப்பதற்கு ஆகும் செலவை விட இது குறைவுதான் என தனது வாதத்தை நியாயப்படுத்தியுள்ளார் ஷபானா.</p>]]></content>
            <updated>2026-09-16T04:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைரஸ் காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருக்கிறேன்- மு.க ஸ்டாலின் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mk-stalin-being-rest-due-to-viral-fever-1789531850"></link>
            <id>https://news.lankasri.com/article/mk-stalin-being-rest-due-to-viral-fever-1789531850</id>
            <summary type="text">M. K Stalin rests at home due to viral fever- வைரஸ் காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>M. K Stalin rests at home due to viral fever- வைரஸ் காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
</p><p>
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என செய்திகள் பரவி வந்த நிலையில், அவர் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>

வைரஸ் காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருப்பதாகவும், நலம் விசாரித்த உறவுகளுக்கு நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e69bcc8f-40af-4acc-891d-1833d57440fa/26-6aaa183340750.webp' /></p><h2>வெளியிட்ட பதிவு..,</h2><p>எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி!
</p><p>வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.</p><p>
</p><p>தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி!<br><br>வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச் செயலாளர்…</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2100057418885726266?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;&nbsp;</p><p>மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்.
</p><p>பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். அதேபோல், நாளை செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
</p><p>நாளை தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கழக அலுவலகங்களிலும் ஏற்றிட வேண்டும். கழகத்தின் 78-ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கழகக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்&nbsp;என தெரிவித்துள்ளார். </p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்காது... ட்ரம்ப் கூறிய விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/not-having-us-involved-1789518070"></link>
            <id>https://news.lankasri.com/article/not-having-us-involved-1789518070</id>
            <summary type="text">Houthis had called his admnistration and indicated they did not want: ஹவுதிகள் அவரது நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, தலையிட வேண்டாம் என்று தெரிவித்திருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis had called his admnistration and indicated they did not want: ஹவுதிகள் அவரது நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, தலையிட வேண்டாம் என்று தெரிவித்திருந்தனர்.
</p><p>சவுதி அரேபியா ஹவுதிகளுக்கு எதிராக உதவி கோரியிருந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளதுடன், ஹவுதிகள் கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54655d01-201e-4ae2-9db7-1e48ec19d661/26-6aa9e0f85307b.webp' /></p><p> </p><p>மேலும், சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய்வழியை முடக்கிய வான்வழித் தாக்குதலுக்கு ஈரானே காரணமாக இருக்கலாம் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p> ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து, கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான சவுதி அரேபியாவின் முக்கிய வழித்தடங்களில் ஒன்று இந்தக் கிழக்கு-மேற்கு குழாய்வழி. </p><p>முக்கியமான எண்ணெய் குழாய் வழித்தடத்தின் மீதான தாக்குதலுக்கு ஈரான் காரணமா என்று டப்ளினில் செய்தியாளர்கள் கேள்விக்கு, ​​அவர்கள் தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்; அநேகமாக அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளார். </p><p>மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில், தாம் ஒரு நல்ல நண்பராகக் கருதும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேசியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b3b0fb3-a41b-46e5-a67a-c45e11d5b157/26-6aa9e0f90d0d6.webp' /></p><p> </p><p>மேலும், ஏமனில் ஈரானுடன் இணக்கமான போக்கைக் கொண்ட ஹவுதிகள் தமது நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, இந்த மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடுவதை தாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஏற்கனவே, ஹவுதிகளுக்கு எதிராக ட்ரம்பிடம் உதவிக் கோரிய சவுதி பட்டத்து இளவரசருக்கு அவர் கைவிரித்தது சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்தன. </p><p>தற்போது ஹவுதிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே ட்ரம்ப் அந்த முடிவுக்கு வந்துள்ளது உறுதியாகியுள்ளது. மட்டுமின்றி, நாங்கள் இதில் ஈடுபடாமல் இருப்பதே ஹவுதிகளுக்கு மிகவும் விருப்பமாக உள்ளது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-16T03:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றிய நியூசிலாந்து நாடாளுமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-zealand-passes-india-trade-deal-1789519064"></link>
            <id>https://news.lankasri.com/article/new-zealand-passes-india-trade-deal-1789519064</id>
            <summary type="text">New Zealand parliament passes India trade deal: நியூசிலாந்து நாடாளுமன்றம் இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றியது.
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>New Zealand parliament passes India trade deal: நியூசிலாந்து நாடாளுமன்றம் இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றியது.
</p><p>இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை நியூசிலாந்து நாடாளுமன்றம் புதன்கிழமை நிறைவேற்றியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98b81f8f-64ac-4348-82ac-71484bf22573/26-6aa9e4daaa89a.webp' /></p><p>
</p><p>இதன் கீழ், நியூசிலாந்திலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 95 சதவீதத்தின் மீதான சுங்கவரிகள் நீக்கப்படும் அல்லது கணிசமாகக் குறைக்கப்படும். </p><p>எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் ஆதரவுடன், இந்தச் சட்டம் 93-29 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டம் அமுலுக்கு வரும் நாளிலிருந்து, இதன் கீழ் வரும் அனைத்துப் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை வரி விலக்கு பெறும்.</p><p></p><p> </p><p>ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் உடனடியானவை மற்றும் கணிசமானவை என நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்ளே ஓர் அறிக்கையில் தெரிவித்தார். </p><p>இந்த உயர்தரமான ஒப்பந்தம் இந்த ஆண்டு நடைமுறைக்கு வரும் என்றும், இதன்மூலம் இந்தியாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தக் காலக்கட்டத்தில் நிறைவு செய்வோம் என்ற நமது வாக்குறுதி நிறைவேறும் என்றும் எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82754aab-befd-4d0a-9c6b-18e3ff4770d7/26-6aa9e4db5efd0.webp' /></p><p> </p><p>இந்த ஒப்பந்தத்தின்படி, அனைத்து இந்தியப் பொருட்களும் நியூசிலாந்திற்கு வரியின்றி கொண்டு செல்லப்படும். மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டொலர் முதலீடு செய்யவும் வெலிங்டன் ஒப்புக்கொண்டுள்ளது. </p><p>இரு நாடுகளும் முதலில் ஏப்ரல் மாதத்தில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஜூன் 2026-ல் முடிவடைந்த ஆண்டில், இருதரப்பு வர்த்தகம் மொத்தம் 3.99 பில்லியன் நியூசிலாந்து டொலராக (2.29 பில்லியன் அமெரிக்க டொலர்) இருந்தது; இதில் நியூசிலாந்தின் சரக்கு மற்றும் சேவைகளுக்கான ஒன்பதாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக இந்தியா திகழ்ந்தது. </p><p>இரு நாடுகளும் தங்கள் தரப்பிலான ஒப்புதல் நடைமுறைகளை நிறைவு செய்த பிறகு, அந்த வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.</p>]]></content>
            <updated>2026-09-16T00:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பதற்றம் சவுதியின் முக்கிய எண்ணெய் கப்பல் வழித்தடங்களுக்கு அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/crude-tops-109-as-drone-attacks-1789516498"></link>
            <id>https://news.lankasri.com/article/crude-tops-109-as-drone-attacks-1789516498</id>
            <summary type="text">Brent crude tops $109 as latest drone attacks: சமீபத்திய ட்ரோன் தாக்குதல்களால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 109 டாலரைக் கடந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Brent crude tops $109 as latest drone attacks: சமீபத்திய ட்ரோன் தாக்குதல்களால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 109 டாலரைக் கடந்தது.</p><p>
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கின; இதில் பிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை பீப்பாய்க்கு 3.7 டொலர் அதிகரித்து 109.39 டொலரை எட்டியது.</p><h2>மூட வேண்டிய கட்டாயம்</h2><p>
</p><p>ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்துச் செல்லும் ஒரு முக்கிய குழாய் வழித்தடத்தை சவுதி அரேபியா கடந்த வாரம் மூடியதைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை வர்த்தகர்கள் மதிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25365fbd-9dd5-415c-9e9a-10889a73b7d2/26-6aa9dad4867c8.webp' /></p><p> </p><p>ஈராக்கிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் வியாழக்கிழமையன்று 'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடத்தைச் சேதப்படுத்தியதால், சவுதி அரசாங்கம் அந்த முக்கியமான கச்சா எண்ணெய் விநியோகப் பாதையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. </p><p>பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அந்த எரிவாயுக் குழாய் பல வாரங்களுக்குப் பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்காது என்றே கசிந்துள்ள தகவலின் அடிப்படையில் 'அசோசியேட்டட் பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>இந்தக் குழாய்வழி, செங்கடலுக்கு எண்ணெய் ஏற்றுமதிகளைக் கொண்டு செல்ல சவுதி அரேபியாவுக்கு ஒரு மாற்று வழியை வழங்குகிறது. இதன்மூலம், ஈரானியத் தாக்குதல்களால் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டிருந்த பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையை அது கடந்து செல்ல முடிகிறது. </p><p>இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட போரை அடுத்து, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அப்போதிருந்து, கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்குச் செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப்-எல்-மண்டேப் நீரிணையைச் சவூதி அரேபியா அதிகளவில் நம்பியுள்ளது. </p><p>போர் தொடங்கிய பிறகு, சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதியை கிழக்கு-மேற்கு குழாய்வழி முன்னெடுத்துள்ளது. தற்போது குழாய் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தடை, கச்சா எண்ணெயை சர்வதேசச் சந்தைகளுக்குக் கொண்டு செல்வதற்கான சவுதி அரேபியாவின் முயற்சிகளை மேலும் சிக்கலாக்கக்கூடும்.</p><h2>முழுமையாக நின்றால்</h2><p> </p><p>ஜூலை மாத இறுதியில் பாப் அல்-மண்டேப் நீரிணையில் ஹவுதிகள் தாக்குதல் தொடங்கியபோது, ​​யான்பு (Yanbu) துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் செங்கடலில் வடக்கு நோக்கித் திரும்பி மத்தியதரைக் கடலை நோக்கின; அவை தங்கள் சரக்குகளை சூயஸ் கால்வாய் அல்லது எகிப்தியக் குழாய் வழித்தடம் வழியாக அனுப்பின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a61c07b-6e6e-4465-8a13-a82c9f5b1d38/26-6aa9dad556c5a.webp' /></p><p> </p><p>ஆகஸ்ட் மாத இறுதி முதல், இந்த எரிபொருள் குழாய் வழித்தடம் நாளொன்றுக்கு சராசரியாக 2.6 மில்லியன் முதல் 4 மில்லியன் பீப்பாய்கள் வரையிலான அளவைக் கொண்டு செல்கிறது; இதன் ஓட்டம் முழுமையாக நின்றால், அந்த அளவு எண்ணெய் சந்தைக்குக் கிடைக்காமல் போகக்கூடும். </p><p>குழாய்வழித் தாக்குதல் பிராந்திய பதட்டங்களையும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையின் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, ஈரான் மற்றும் வளைகுடா அரபு நாடுகளுக்கு இடையே திங்கட்கிழமை ஓமானில் நடைபெறவிருந்த தூதரக சந்திப்பு, இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து திடீரென ஒத்திவைக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>ஒரு மாதத்திற்கும் மேலாக, ஹவுதிகள் செங்கடலில் உள்ள சவுதி எண்ணெய் உள்கட்டமைப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து மீது தாக்குதல் நடத்தி, உலகளாவிய எண்ணெய் விலைகள் மீதான அழுத்தத்தை அதிகரித்து, அமெரிக்காவுடனான போரில் ஈரானின் செல்வாக்கை வலுப்படுத்தி வருகின்றனர். </p><p>ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் ஒன்றின் மீது சவுதி அரேபியா முன்னெடுத்த குண்டு வீச்சே முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது.</p><p> இந்த நிலையில், ஏமனின் மேற்கு கடற்கரையில் உள்ள மோச்சா துறைமுக நகரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, பாப்-எல்-மண்டேப் நீரிணையில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த பெரிம் தீவையும் ஹவுதிகள் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன; இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கான மற்றொரு முக்கிய வழித்தடத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T23:51:45+00:00</updated>
        </entry>
    </feed>
