<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-13T08:22:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிக்ஸ் அமைப்பில் இணைய காத்திருக்கும் பாகிஸ்தான் - முட்டுக்கட்டை போடும் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-blocks-pakistan-to-join-in-brics-1789287447"></link>
            <id>https://news.lankasri.com/article/india-blocks-pakistan-to-join-in-brics-1789287447</id>
            <summary type="text">india blocks pakistan to join in brics: பிரிக்ஸ் அமைப்பில் இணைய 3 ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு இந்தியாவின் எதிர்ப்பு தடையாக உள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>india blocks pakistan to join in brics: பிரிக்ஸ் அமைப்பில் இணைய 3 ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு இந்தியாவின் எதிர்ப்பு தடையாக உள்ளது. </p><h3> 

பிரிக்ஸ் மாநாடு </h3><p>

18வது பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெற்றது.&nbsp;</p><p>

இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/058c365b-64a4-4f6b-8621-db2781e5fd30/26-6aa65c18e4693.webp' /></p><p> 

2009 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகள் இணைந்து BRIC அமைப்பை உருவாக்கியது.</p><p> 

2010 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவும் இந்த அமைப்பில் இணைய BRICS என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. </p><p>

அதன் பின்னர், ஈரான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா என 7 நாடுகள் இணைய தற்போது 11 நாடுகளுடன் இந்த அமைப்பு BRICS+ என உள்ளது.</p><h3> 

பாகிஸ்தான் இணைய இந்தியா எதிர்ப்பு</h3><p> 

இந்த அமைப்பில் இணைய மேலும் 23 நாடுகள் விண்ணப்பித்துள்ளன. இதில், 2023 ஆம் ஆண்டிலே பாகிஸ்தான் விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது வரை BRICS அமைப்பில் அதனால் இணைய முடியவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1892568e-df5a-4dbc-8422-b7bbdda550f4/26-6aa65c1a66663.webp' /></p><p> 

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் ஆதரவு பெற்ற புதிய மேம்​பாட்டு வங்​கி​யில் 580 மில்​லியன் டொலர் பங்​கு​களை பாகிஸ்​தான் வாங்​கி​ இருந்தது. </p><p>

நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான் BRICS அமைப்பில் இணைந்தால், உலக வங்கி போன்ற மேற்​கத்​திய நாடு​கள் தலை​மையி​லான நிறு​வனங்​களின் நிதி சார்பை தவிர்த்​து, பிரிக்ஸ் ஆதரவு பெற்ற புதிய மேம்​பாட்டு வங்கி (NDB) வாயி​லாக கடன்​கள் மற்​றும் உள்​கட்​டமைப்பு நிதி​யுத​வியை பெற முடி​யும். </p><p>

பாகிஸ்தான் BRICS அமைப்பில் இணைய சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு தெரிவித்தாலும், இந்தியா தனது வீடோ அதிகாரம் மூலம் பாகிஸ்தான் அமைப்பில் இணைய தடையாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1892568e-df5a-4dbc-8422-b7bbdda550f4/26-6aa65c1a66663.webp' /></p><p> 

பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் சேர்க்கை விதி​களின்​படி, உறுப்பு நாடு​களின் ஒரு​மித்த ஆதரவு இருந்​தால் மட்​டுமே புதிய உறுப்​பினர்​களை கூட்​டமைப்​பில்​ சேர்க்​க முடி​யும்​.</p>]]></content>
            <updated>2026-09-13T08:17:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைசி பந்தில் பார்படோஸ் அணி த்ரில் வெற்றி: மோட்டி ஆட்டநாயகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gudakesh-motie-took-last-ball-run-barbados-won-1789285517"></link>
            <id>https://news.lankasri.com/article/gudakesh-motie-took-last-ball-run-barbados-won-1789285517</id>
            <summary type="text">Barbados Tridents qualified for playoff: CPL டி20 போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Barbados Tridents qualified for playoff: CPL டி20 போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.</p><p>

கென்சிங்டன் ஓவலில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், ஜமைக்கா கிங்ஸ்மெனை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் வீழ்த்தியது.&nbsp;</p><h2>மாஸ் சதாகத்&nbsp;47 ஓட்டங்கள் </h2><p>
பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகளுக்கு இடையிலான CPL டி20 போட்டி கென்சிங்டன் ஓவலில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/050b425a-f7b6-4f11-9617-1020fe87aa79/26-6aa65657b080e.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்தது. 

மாஸ் சதாகத் 34 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் விளாசினார். </p><p>ஜஹீம் பொல்லார்ட் 3 விக்கெட்டுகளும், குடாகேஷ் மோட்டி மற்றும் டேனியல் சாம்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;</p><h2>மோட்டி ஆட்டநாயகன்&nbsp;</h2><p>
பின்னர் ஆடிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்க, சாட்ரக் டெஸ்கார்ட் 42 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட, குடாகேஷ் மோட்டி (Gudakesh Motie) அணியை வெற்றி பெற வைத்தார். </p><p>

8 பந்துகளில் 17 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) மற்றும் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய குடாகேஷ் மோட்டி ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1526364-13fd-4e1e-ac17-bb5f6bff01e3/26-6aa65656e7554.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:49:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 பில்லியன் டொலர் முதலீட்டில் உருவாக்கப்பட்ட நகரம் - இன்று பேய் நகரம் என அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/forest-city-ghost-city-tech-dream-collapses-1789285145"></link>
            <id>https://news.lankasri.com/article/forest-city-ghost-city-tech-dream-collapses-1789285145</id>
            <summary type="text">Ghost City Tech Dream Collapses: டெக் தொழில்முனைவோரின் கனவு நகரமாக கட்டப்பட்ட Forest City இப்போது Ghost City-யாக மாறியுள்ளது.

Forest City-Ghost Cit...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ghost City Tech Dream Collapses: டெக் தொழில்முனைவோரின் கனவு நகரமாக கட்டப்பட்ட Forest City இப்போது Ghost City-யாக மாறியுள்ளது.</p><h2>

Forest City-Ghost City-யாக மாறியது</h2><p>மலேசியாவின் ஜோகூர் பகுதியில், சிங்கப்பூர் எல்லைக்கு அருகில் உருவாக்கப்பட்ட Forest City உலகின் மிகப்பெரிய நகரத் திட்டங்களில் ஒன்றாகும். </p><p>சுமார் 100 பில்லியன் டொலர் முதலீட்டில் கட்டப்பட்ட இந்த நகரம், உயரமான குடியிருப்புகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் என அனைத்தையும் கொண்டிருந்தது.
</p><p>
ஆனால் மக்கள் வசிப்பதற்கான ஆர்வம் குறைவதால், இது “கோஸ்ட் சிட்டி” என அழைக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f91f07-cca4-4768-98a8-17c60f752b89/26-6aa6531b33701.webp' /></p><p>2024-இல், Balaji Srinivasan உருவாக்கிய Network School என்ற தொழில்நுட்ப சமூக முயற்சி இங்கு தொடங்கப்பட்டது. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், டிஜிட்டல் நோமேட்கள், இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் ஒன்றாக வாழ்ந்து, வேலை செய்து, கற்றுக்கொள்ளும் புதிய வாழ்க்கை முறையை சோதிக்க முயன்றனர்.

பங்கேற்பாளர்கள் மாதம் சுமார் 1,500 டொலர் செலுத்தி, தங்குமிடம், உணவு, வகுப்புகள், உடற்பயிற்சி மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளை பெற்றனர். </p><p></p><h2>சிக்கல்கள்&nbsp;</h2><p>ஆனால், ஈரப்பதமான காலநிலை காரணமாக வீடுகளில் பூஞ்சை, உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் குறைவு, பெண்கள்-ஆண்கள் பங்கேற்பில் சமநிலை இல்லாமை போன்ற சிக்கல்கள் எழுந்தன.

மேலும், மலேசிய அதிகாரிகளின் அனுமதி பிரச்சினைகள், சட்ட சிக்கல்கள் காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்குள் Network School மூடப்பட்டது.
</p><p>
Forest City-யின் வெறிச்சோடிய கட்டிடங்கள், தொழில்நுட்ப சமூகத்துக்கு ஒரு பெரிய சோதனை மேடையாக இருந்தாலும், அது முழுமையான நகரமாக மாற முடியவில்லை. சில நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் இருந்தாலும், நூற்றுக்கணக்கான மக்களை தங்க வைக்கும் அளவுக்கு கட்டப்பட்ட நகரம் வெறிச்சோடியே இருந்தது.</p><p>
</p><p></p><p>இந்த முயற்சி, தொழில்நுட்ப சமூகங்கள் எவ்வாறு ஒன்றாக வாழ்ந்து, வேலை செய்து, புதிய சமூக வடிவங்களை உருவாக்க முடியும் என்பதை சோதித்தது.</p><p> ஆனால், நடைமுறை சிக்கல்கள் மற்றும் அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக, Forest City-யின் கனவு குறுகிய காலத்திலேயே முறிந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T07:35:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வானிலையில் சிக்கிய இந்தோனேசியப் படகு... 140 பேர்களைத் தேடும் மீட்புக் குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesian-ferry-searching-140-people-1789284194"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesian-ferry-searching-140-people-1789284194</id>
            <summary type="text">Indonesian rescue crews searching for 140 people: 140 பேரைத் தேடும் இந்தோனேசிய மீட்புக் குழுவினர்.
ஜாவா கடலில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட பயணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indonesian rescue crews searching for 140 people: 140 பேரைத் தேடும் இந்தோனேசிய மீட்புக் குழுவினர்.
</p><p>ஜாவா கடலில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட பயணிகள் படகில் இருந்த 140 பேரைத் தேடும் பணியில் இந்தோனேசிய மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/195aabbf-595f-4e3d-b50f-cfdaf95897fe/26-6aa64f64b3ea3.webp' /></p><p> தொடர்புடையக் கப்பலில் இருந்த மற்ற 103 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் மரணமடைந்ததாகத் தேடல் மற்றும் மீட்புப் பணி முகமையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 240 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு ஒன்று ஜாவா கடலில் மோசமான வானிலையில் சிக்கி தொடர்பை இழந்து காணாமல் போனதாக அந்நாட்டின் தேடல் மற்றும் மீட்பு முகமை தெரிவித்திருந்தது. </p><p>விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 (Virgo Transport 8) கப்பல் சனிக்கிழமையன்று கிழக்கு ஜாவாவின் சுரபாயா நகரிலிருந்து தெற்கு கலிமந்தானின் பன்ஜார்மாசின் நகருக்குப் புறப்பட்ட நிலையில், அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. </p><p>இந்த நிலையில் தற்போது பல்வேறு கப்பல்களைப் பயன்படுத்தி 103 பேர் மீட்கப்பட்டதாகவும்; அவர்களில் சிலர் கிழக்கு ஜாவாவில் உள்ள ஒரு துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதும், அதிகாரிகள் தரப்பு ஒரு மீட்புக் குழுவினர் குழு, கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டரை அப்பயணிகள் கப்பல் கடைசியாக இருந்த இடத்திற்கு அனுப்பி தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். </p><p>போர்னியோ தீவில் அமைந்துள்ள தெற்கு கலிமந்தானின் பன்ஜார்மாசின் நகரில் உள்ள தேடல் மற்றும் மீட்புப் பிரிவு அலுவலகம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் 'விர்கோ டிரான்ஸ்போர்ட் 8' (Virgo Transport 8) உடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு இது குறித்த தகவலைப் பெற்றதாகத் தெரிவித்தது. தற்போது எஞ்சிய 140 பேர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T07:20:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சச்சினின் டெஸ்ட் சாதனையை முறியடித்துள்ள ஜோ ரூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/joe-root-breaks-sachin-test-half-century-record-1789283172"></link>
            <id>https://news.lankasri.com/article/joe-root-breaks-sachin-test-half-century-record-1789283172</id>
            <summary type="text">joe root breaks sachin test half century record: சச்சினின் டெஸ்ட் அரை சத சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.

சச்சினின் டெஸ்ட் சாதனையை முறியடித்த ஜோ ...</summary>
            <content type="html"><![CDATA[<p>joe root breaks sachin test half century record: சச்சினின் டெஸ்ட் அரை சத சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.
</p><h3>
சச்சினின் டெஸ்ட் சாதனையை முறியடித்த ஜோ ரூட்
</h3><p>
எட்ஜ்பாஸ்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.</p><p> 

இந்த போட்டியில் 69 பந்துகளில் 62 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்தின் ஜோ ரூட் (Joe Root), சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனையை முறியடித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47363730-5c10-49a6-9345-3abcefdb3631/26-6aa64b65664b6.webp' /></p><p> 

நேற்று அடித்த அரைசதம் மூலம், ஜோ ரூட்டின் டெஸ்ட் அரைசதங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.</p><p> 

இதன் மூலம், டெஸ்ட் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 68 அரைசதங்களுடன் இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது ஜோ ரூட் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.</p><p>

மேற்கிந்தியத் தீவுகளின்ஷிவ்நரைன் சந்தர்பால் 66 அரைசதங்களுடன் 3வது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், இந்தியாவின் ராகுல் டிராவிட் தலா 63 அரைசதங்களுடன் அடுத்தத இடங்களில் உள்ளனர். </p><p>

இதே போல், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ஓட்டங்களுடன் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட்டில் அதிகபட்ச ஓட்டங்கள் வைத்துள்ள வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
</p><p>
தற்போது 14,278 ஓட்டங்களை குவித்துள்ள ஜோ ரூட்டிற்கு இந்த சாதனையை முறியடிக்க 1,643 ஓட்டங்களே தேவைப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T07:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற நிதி வேண்டும்... ஜேர்மனியின் AfD கட்சி புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/afd-party-wants-arms-factory-1789278519"></link>
            <id>https://news.lankasri.com/article/afd-party-wants-arms-factory-1789278519</id>
            <summary type="text">Germany&#039;s AfD party wants arms factory in their state: ஜேர்மனியின் AfD கட்சி தங்கள் மாகாணத்தில் ஆயுதத் தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறது.
ஜேர்மனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany's AfD party wants arms factory in their state: ஜேர்மனியின் AfD கட்சி தங்கள் மாகாணத்தில் ஆயுதத் தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறது.
</p><p>ஜேர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான AfD, தாங்கள் திட்டமிட்டுள்ள கட்டாய வெளியேற்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக, தங்கள் மாகாணங்களில் ஒன்றில் ஆயுதத் தொழிற்சாலையை அமைக்க விரும்புகிறது.</p><h2>எதிர்க்கவில்லை</h2><p>
</p><p>கிழக்கு ஜேர்மன் மாகாணமான Saxony-Anhalt-ன் வருங்காலத் தலைவரான உல்ரிச் சிக்மண்ட், சங்கர்ஹவுசன் நகரில் திட்டமிடப்பட்ட பாதுகாப்புத் தொழில் முதலீட்டின் எதிர்காலம் குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டபோது, ​​உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான ஆயுத உற்பத்தியை AfD கட்சி எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0c1ce8d-9921-48a2-9ca8-15fafa43f505/26-6aa6393919983.webp' /></p><p> </p><p>மேலும், ராணுவ உபகரணங்களின் உற்பத்தியை ஒட்டுமொத்தமாக எதிர்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர்; எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள தாயகம் திரும்பும் மற்றும் நாடு கடத்தும் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி இயல்பாகவே எங்களுக்குத் தேவைப்படும் என்றார். </p><p>அத்துடன் இது உள்நாட்டுப் பாதுகாப்பு, நமது சொந்த ஸ்திரத்தன்மை மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றின் நலனுக்கும் உகந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>இதனிடையே, வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் (Elbit Systems) நிறுவனம், பிற ஜேர்மானிய நிறுவனங்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அங்கு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. </p><p>ஆனால், சுமார் 400 வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய அந்த இடத்தில், முழுமையான ஆயுத அமைப்புகள், ட்ரோன்கள் அல்லது பீரங்கி குண்டுகள் எதுவும் தயாரிக்கப்படாது என்று நகர அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். </p><p>இதனிடையே, எல்பிட் சிஸ்டம்ஸ் தெரிவிக்கையில், ஜேர்மனியில் மேலும் விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகளை தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாகவும்; இருப்பினும், எதிர்கால விரிவாக்கத்திற்காக இதுவரை எந்த இடங்களும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><h2>எதிராகப் பிரச்சாரம்</h2><p> </p><p>குடியேற்றத்தை எதிர்க்கும் AfD கட்சியானது, முழுமையான பெரும்பான்மைக்குச் சற்று குறைவான ஆசனங்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றியைப் பெற்று மாகாணத்தில் அரசமைக்க முயன்று வரும் நிலையில், </p><p> ஆட்சிக்கு வந்த முதல் நிமிடத்திலிருந்தே, நாடு கடத்தல் நடவடிக்கைகள், குடிமக்கள் ரோந்துப் பணிகள் மற்றும் அகதி குழந்தைகளுக்கெனத் தனி வகுப்பறைகள் ஆகியவற்றைச் செயல்படுத்த உறுதியளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/209388d3-240b-485f-b3bf-6821c48dc260/26-6aa63939c0701.webp' /></p><p> </p><p>இதனிடையே, துல்லியமாக என்ன தயாரிக்கப்படுகிறது, எந்தச் சூழலில் தயாரிக்கப்படுகிறது என்பதையும், இது நம்மை வெளிநாட்டு மோதல்களில் ஈடுபடுத்தும் அபாயத்தைக் கொண்டிருக்கிறதா என்பதையும் நாங்கள் உன்னிப்பாக ஆராய விரும்புகிறோம் என்று உல்ரிச் சிக்மண்ட் கூறியுள்ளார். </p><p>இத்திட்டத்திற்கு அளிக்கப்படும் எந்தவொரு ஆதரவும், AfD கட்சியுடனான ஒத்துழைப்பை நிராகரிக்காத ஒரே கட்சியான இடதுசாரி மக்கள்வாதக் கட்சியான BSW-வுடனான பேச்சுவார்த்தைகளைச் சிக்கலாக்கக்கூடும். </p><p>AfD-ஐப் போலவே, உக்ரைனுக்கான ஜேர்மன் இராணுவ ஆதரவை எதிர்க்கும் BSW கட்சியானது, வெளிநாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்கான பொருளாதார வாதங்களை நிராகரித்து, சங்கர்ஹவுசன் திட்டத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-13T05:45:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[243 பேர்களுடன் கடலில் மாயமான இந்தோனேசியப் பயணிகள் கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesia-passenger-ship-missing-1789272093"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesia-passenger-ship-missing-1789272093</id>
            <summary type="text">Indonesian passenger ship missing at sea: கடலில் காணாமல் போன இந்தோனேசியப் பயணிகள் கப்பல்.
ஜாவா கடற்பகுதியில் தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indonesian passenger ship missing at sea: கடலில் காணாமல் போன இந்தோனேசியப் பயணிகள் கப்பல்.
</p><p>ஜாவா கடற்பகுதியில் தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 243 பேருடன் சென்ற இந்தோனேசியப் பயணிகள் கப்பல் ஒன்று காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தொடர்பு துண்டிப்பு</h2><p>
</p><p>முதற்கட்ட தகவலில், மோசமான வானிலை நிலவிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இச்சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed973b3f-eda4-4abe-983d-db42c45cc725/26-6aa6201f5a5aa.webp' /></p><p> இந்தோனேசியாவின் தேடுதல் மற்றும் மீட்புப் பணி முகமை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 (Virgo Transport 8) என்ற அந்த கப்பல், கிழக்கு ஜாவா நகரமான சுரபாயாவிலிருந்து தெற்கு கலிமந்தன் நகரமான பன்ஜார்மாசின் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அந்த முகமை தெரிவித்துள்ளது. </p><p>மேலும், அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில், அந்தக் கப்பலைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அது எங்குள்ளது என்பது தெரியவில்லை என்றும் அந்த முகமை தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இதனிடையே, மீட்புக் குழுவினர் தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளதாகவும், அது கடைசியாக அறியப்பட்ட இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளதாகவும் அந்த முகமை குறிப்பிட்டுள்ளது.
</p><p>17,000 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமான இந்தோனேசியா, போக்குவரத்தின் முக்கிய வழியாகப் படகு சேவைகளை பெரிதும் நம்பியுள்ளது; ஏனெனில், விமானப் பயணத்தை விடக் கடல் வழிப் பயணங்கள் குறைந்த செலவுடையதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளன. </p><p>இருப்பினும், பாதுகாப்புத் தரநிலைகள் எப்போதும் கடுமையாக அமுல்படுத்தப்படுவதில்லை; இதன் விளைவாக விபத்து விகிதம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T03:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியா மீது ட்ரோன் தாக்குதல்... ஈரானுடனான மூன்று எல்லைக்கடவைகளை மூடிய ஈராக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shuts-three-crossings-to-iran-1789270540"></link>
            <id>https://news.lankasri.com/article/shuts-three-crossings-to-iran-1789270540</id>
            <summary type="text">Iraq shuts three crossings to Iran.
ஈரானுடனான மூன்று எல்லைக் கடவைகளை ஈராக் மூடியது.
சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் மீதான ட்ரோன் தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iraq shuts three crossings to Iran.
ஈரானுடனான மூன்று எல்லைக் கடவைகளை ஈராக் மூடியது.
</p><p>சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் மீதான ட்ரோன் தாக்குதல்கள் தங்கள் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்டதை உறுதிசெய்துள்ள நிலையில், ஈராக் அது குறித்து விசாரித்து வரும் வேளையில், ஈரானுடனான சில எல்லைக் கடவைகளை மூடியுள்ளது.</p><h2>எல்லைக் கடவை</h2><p>
</p><p>ஈரானில் ட்ரோன் ஏவுதளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஈரானுடனான தனது மூன்று எல்லைக் கடவைகளை ஈராக் அரசாங்கம் தற்காலிகமாக மூடியதாக, ஈராக்கிய பாதுகாப்பு வட்டாரம் ஒன்று சனிக்கிழமையன்று தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ce403a2-2649-464f-88b5-bd798d9f0af8/26-6aa61a0edb05f.webp' /></p><p> </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், மூடப்பட்ட கடப்புப் பாதைகள்: பஸ்ரா மாகாணத்தில் ஷலம்கே (Shalamcheh), மைசான் மாகாணத்தில் அல்-ஷிப் (al-Shib) மற்றும் தியலா மாகாணத்தில் மண்டலி (Mandali) ஆகியவையாகும். </p><p>மட்டுமின்றி, தாக்குதல்களை நடத்தியவர்கள் ஈரானுக்குத் தப்பிச் சென்றுவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே, எல்லைக் கடவைகளை மூடுமாறு ஈராக் முக்கியமாக உத்தரவிட்டிருந்தது. </p><p>தென்கிழக்கு மாகாணமான மைசானின் அல்-தய்ப் எல்லைப் பகுதியில் ட்ரோன் ஏவுதளங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மூடப்பட்டது; அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.</p><p></p><p>
</p><p>இதற்கிடையில், எல்லைக்கு அருகே ட்ரோன்களை ஏவும் தளங்கள் கண்டறியப்பட்டது குறித்து கூட்டு விசாரணை நடத்துவதற்கான ஈரானின் கோரிக்கைக்கு ஈராக் பிரதமர் அலி அல்-சைதி ஒப்புதல் அளித்துள்ளதாக, ஈராக் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியின் செய்தித் தொடர்பாளர் சபா அல்-நுமான் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். </p><p>அந்த ட்ரோன்கள் எங்கே கண்டெடுக்கப்பட்டன அல்லது எத்தனை இருந்தன என்பது குறித்த கூடுதல் விவரங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.</p><p> முன்னதாக, அந்தத் தாக்குதல் மைசான் மாகாணத்திலிருந்து நடத்தப்பட்டதாகப் பிரதமர் அலுவலகம் கூறியது; அதனைத் தொடர்ந்து பிரதமர் அல்-சைதி அங்குள்ள ராணுவத் தளபதியை அப்பதவியிலிருந்து நீக்கினார். </p><p>கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய்த்தொடர் மீதான தாக்குதல் வியாழக்கிழமையன்று நடைபெற்றது; அதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழித்தடத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சவுதி அரேபியா மறுநாள் அறிவித்தது.</p><h2>சவுதி குற்றச்சாட்டு</h2><p> </p><p>இந்த நிலையில், ஈரான் ஆதரவு ஆயுதமேந்திய குழுக்கள் உட்பட கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ள ஈராக்கிலிருந்தே அந்த ட்ரோன்கள் ஏவப்பட்டதாக சவுதி அரேபியா வெள்ளிக்கிழமை தெரிவித்தது. </p><p>இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஈரான் ஆதரவு ஆயுதப் போராளிகளின் கூட்டமைப்பான ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் (IRI), ஓர் அறிக்கையில், இந்தத் தாக்குதல் நாங்கள் உரிமை கோராத ஒரு கௌரவம் என்று கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/875bd499-d397-43e5-b54c-1f1d2876bb61/26-6aa61a0f90988.webp' /></p><p> </p><p>இருப்பினும், ஈராக்கில் உள்ள ஈரானுடன் தொடர்புடைய குழுக்கள் தங்களது எண்ணெய் உள்கட்டமைப்பை இலக்கு வைப்பதாக சவுதி அரேபியா ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே, தற்போது அதிகாரப்பூர்வமற்ற பயணமாக அயர்லாந்தில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குழாய்வழித் தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் இருக்கக்கூடும் என்று கூறினார். </p><p>ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை ஆதரிக்க ட்ரம்ப் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.
குழாய்வழித் திட்டத்தின் தற்காலிக நிறுத்தம் சவுதி அரேபியாவுக்கு ஒரு பெரும் பின்னடைவாகும். </p><p>அமெரிக்காவும் ஈரானும் ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டிற்காகப் போராடுவதால், பகுதியளவு மூடப்பட்டிருக்கும் அந்த நீரிணைக்கு சவுதி அரேபியா கொண்டிருந்த ஒரே முக்கிய மாற்று வழி இந்த வழித்தடமே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02a56df3-4925-4277-ab7a-3f139f7aa988/26-6aa61a10424d2.webp' /></p><p> </p><p>அந்தக் குழாய் வழித்தடம் இல்லாவிட்டால், இடைநிறுத்தம் நீக்கப்படும் வரை அல்லது ஹார்முஸ் நீரிணை உத்தியோகப்பூர்வமாக மீண்டும் திறக்கப்படும் வரை, சவுதி அரேபியா தனது எண்ணெயை கணிசமான அளவில் ஏற்றுமதி செய்வதற்குச் சாத்தியமான வழி ஏதுமில்லை. </p><p>வளைகுடாப் பகுதியிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி மேலும் குறைவது மொத்த விற்பனை விலைகளை உயர்த்தக்கூடும்; அதேவேளையில், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் ஏழு மாதங்களை நெருங்கும் சூழலில், இது ஈரானின் பேரம் பேசும் சக்தியையும் அதிகரிக்கக்கூடும்.
</p><p>சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் இராணுவப் படைகளைத் தோற்கடித்து, ஏமனின் முழு செங்கடல் கடற்கரைப் பகுதியையும் கைப்பற்றியுள்ள, ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதிகளின் மின்னல் வேகத் தாக்குதல்களுக்கு மத்தியிலேயே குழாய் வழித்தடத்தின் மீதான இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
</p><p>சவுதி அரேபியா ஏமன் அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளராக உள்ளது; சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான கப்பல்கள் செங்கடல் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது என்று ஹவுதிகள் அறிவித்துள்ளதும் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T03:32:35+00:00</updated>
        </entry>
    </feed>
