<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-01T05:30:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய நாடொன்றில் நிலநடுக்கம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/4-7-magnitude-earthquake-hits-italy-1785560780"></link>
            <id>https://news.lankasri.com/article/4-7-magnitude-earthquake-hits-italy-1785560780</id>
            <summary type="text">இத்தாலி நாட்டில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இத்தாலி நாட்டில் நிலநடுக்கம்

இத்தாலி நாட்டிலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலி நாட்டில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f9b8515-cfb9-432e-8bc9-12d16783e15d/26-6a6d7ece2c11e.webp' /></p><h3>இத்தாலி நாட்டில் நிலநடுக்கம்</h3><p>

இத்தாலி நாட்டிலுள்ள Naples நகரத்துக்கு மேற்கே, நேற்றிரவு உள்ளூர் நேரப்படி 7.46 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
</p><p>
அதைத் தொடர்ந்து பாறைகள் பெயர்ந்து விழுந்ததில், வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பல சேதமடைந்துள்ளன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="it" dir="ltr"><a href="https://x.com/hashtag/CampiFlegrei?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CampiFlegrei</a>: dalle prime immagini che circolano sembra che gran parte dei danni più importanti siano stati causati dal crollo dei costoni di roccia che bordano gran parte dei crateri della caldera. <a href="https://t.co/s8PLrMo1LD">pic.twitter.com/s8PLrMo1LD</a></p>&mdash; Il Mondo dei Terremoti (@mondoterremoti) <a href="https://x.com/mondoterremoti/status/2083266825836511405?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட, மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளார்கள். சில இடங்களில் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதைத் தொடர்ந்து, இரவு 10.00 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 3.8ஆக பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eada84f2-0f1f-4fc1-b9e1-3295c7db1232/26-6a6d7eced3e80.webp' /></p><h3>ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவான நிலநடுக்கம்
</h3><p>
விடயம் என்னவென்றால், பொதுவாக ரிக்டர் அளவுகோலில் 4.0 முதல் 4.9ஆக பதிவாகும் நிலநடுக்கம் பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என கூறப்படுவதுண்டு.</p><p>

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Significant damage following a M4.7 earthquake that struck the Campi Flegrei, west of Naples, Campania, southern Italy. <a href="https://t.co/6yivOZbb3J">pic.twitter.com/6yivOZbb3J</a></p>&mdash; Weather Monitor (@WeatherMonitors) <a href="https://x.com/WeatherMonitors/status/2083270100136997141?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

ரிக்டர் அளவுகோலில் 6.0 முதல் 6.9ஆக பதிவாகும் நிலநடுக்கத்தை வலிமையானது என்றும், ரிக்டர் அளவுகோலில் 7.0 முதல் அதற்கு அதிகமான அளவாக பதிவாகும் நிலநடுக்கம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
</p><p>
என்றாலும், எவ்வளவு ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படுகிறதோ, அதற்கேற்ப பாதிப்பும் இருக்கும் என்பதும் உண்மை.&nbsp;</p><p></p><p>
அதாவது, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் உருவாகும் நிலநடுக்கத்தை விட, குறைந்த ஆழத்தில் உருவாகும் நிலநடுக்கம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
</p><p>
அதனால்தான், இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இம்முறை உருவான நிலநடுக்கம், வெறும் 3 மீற்றர் ஆழத்தில் உருவாகியுள்ளது.</p><p>

ஆக, இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில், 40 ஆண்டுகளில் இதுதான் வலிமையான நிலநடுக்கம் என்கிறது துறைசார் நிறுவனம்.
</p><p>
இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 4 பேர் காயமடைந்துள்ளனர். என்றாலும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="it" dir="ltr">🟠 <a href="https://x.com/hashtag/CampiFlegrei?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CampiFlegrei</a>: purtroppo iniziano ad arrivare anche immagini di edifici chiaramente inagibili. Per fortuna al momento si contano soltanto 4 feriti NON gravi.<br><br>C&#39;è stato anche un lungo blackout dovuto al crollo di un traliccio dell&#39;alta tensione dell&#39;area di Agnano. <a href="https://t.co/lxSUuazKJx">pic.twitter.com/lxSUuazKJx</a></p>&mdash; Il Mondo dei Terremoti (@mondoterremoti) <a href="https://x.com/mondoterremoti/status/2083280651604599147?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாறைகள் பெயர்ந்து விழுந்து கார்கள் நசுங்கிக் கிடக்கும் காட்சிகளும், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதையும், அதிர்ச்சியடைந்த மக்கள் சாலைகளுக்கு ஓடும் காட்சிகளும் வெளியாகிவருகின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:09:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ணத்திற்கான முதலீட்டுத் திட்டம்... இறுதியில் ஃபிஃபா எடுத்துள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fifa-scraps-investment-plan-1785557971"></link>
            <id>https://news.lankasri.com/article/fifa-scraps-investment-plan-1785557971</id>
            <summary type="text">பரவலான கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, உலகக் கிண்ணம் தொடரின் பங்குகளை விற்பனை செய்வதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தைக் கைவிட்டுள்ளதாக ஃபிஃபா (FIFA) தலைவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பரவலான கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, உலகக் கிண்ணம் தொடரின் பங்குகளை விற்பனை செய்வதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தைக் கைவிட்டுள்ளதாக ஃபிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.</p><h2>முன்னெடுத்துச் செல்லப்படாது</h2><p>
</p><p>இந்தத் திட்டம், அதன் அசல் நோக்கத்திற்கு இனி உதவாத பிளவுகளை உருவாக்கியுள்ளது என்பது தெளிவாகிவிட்டது என்றும் இன்ஃபான்டினோ கூறியுள்ளார். இதன் விளைவாக, இந்த முன்மொழிவு முன்னெடுத்துச் செல்லப்படாது என்றும் ஃபிஃபா அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/818910e6-752d-4c5d-8cc8-b1c426c483b1/26-6a6d751c2dc3a.webp' /></p><p>ஆண்கள் மற்றும் மகளிர் உலகக் கிண்ணம் தொடர் உள்ளிட்ட போட்டிகளில் தனியார் முதலீட்டை அனுமதிக்கும் முன்மொழிவுக்கு ஆதரவளித்தால், 211 உறுப்புச் சங்கங்கள் ஒவ்வொன்றிற்கும் 40 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக இன்ஃபான்டினோ முன்மொழிந்திருந்தார். </p><p>இந்த நிலையில், ஐரோப்பிய கால்பந்து அமைப்பான யூஈஎஃப்ஏ (UEFA)-வின் 55 உறுப்புச் சங்கங்கள், அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் உலகக் கிண்ணம் தொடரைப் புறக்கணிப்பது குறித்து வியாழக்கிழமையன்று வாக்களித்தன.</p><p></p><p> </p><p>இதனிடையே, அந்தத் திட்டம் குறித்து நிர்வாக அமைப்பையே ஏமாற்றப்பட்டுள்ளதாக ஃபிஃபாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி கெவின் லாமூர் தெரிவித்தார். </p><p>மட்டுமின்றி, வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் கால்பந்தை நிர்வகித்து, சமீபத்திய உலகக் கிண்ணம் தொடரை நடத்திய கான்சாகாஃப் (Concacaf), அதன் உறுப்பினர்கள் இன்ஃபான்டினோவின் திட்டத்தை நிராகரித்ததாகக் கூறியது.</p><h2>எதிராக 136 நாடுகள்</h2><p> </p><p>ஆசிய கால்பந்து கூட்டமைப்பான AFCயும் UEFA மற்றும் Concacaf-ன் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாக அறிவித்தது. இந்த நிலையில், மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஃபிஃபா (FIFA) மாநாட்டில் நான்காவது முறையாகத் தலைவராகத் தெரிவு செய்யப்பட முயன்று வரும் 56 வயதான இன்ஃபான்டினோ, தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். </p><p>இன்ஃபான்டினோவின் முதலீட்டுத் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்திருந்தாலும், ​​ஃபிஃபாவின் உறுப்புச் சங்கங்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு தனக்குத் தேவை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்; அதாவது, அதன் 211 உறுப்பினர்களில் 106 பேர் ஆதரவாக வாக்களிக்க வேண்டியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fc629c1-94b9-49a2-bab0-1d748cd447aa/26-6a6d751d2839e.webp' /></p><p> </p><p>AFCயும் கைவிட்டதால் தமது திட்டம் நிறைவேறாது என்பதை அவர் உணர்ந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. UEFA-விடம் 55 வாக்குகளும், CONCACAF-இடம் 35 வாக்குகளும், AFC-இடம் 46 வாக்குகளும் உள்ளன. </p><p>அனைத்து உறுப்புச் சங்கங்களும் தங்கள் நிர்வாக அமைப்பின் நிலைப்பாட்டை ஆதரித்திருந்தால், இன்ஃபான்டினோவின் திட்டத்திற்கு எதிராக 136 நாடுகள் வாக்களித்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T04:17:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் விரக்தியில் ட்ரம்ப்... ஈரான் போரில் இருந்து வெளியேறத் தீவிர ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-seeks-exit-from-iran-war-1785555364"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-seeks-exit-from-iran-war-1785555364</id>
            <summary type="text">ஈரானுடனான மோதலை மீண்டும் தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை வைத்துள்ள நிலையில், மோதலை நீட்டிப்பது பெரும் அபாயத்தில் முடியும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான மோதலை மீண்டும் தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை வைத்துள்ள நிலையில், மோதலை நீட்டிப்பது பெரும் அபாயத்தில் முடியும் என சவுதி அரேபியா தரப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மோதல் தணிய வேண்டும்</h2><p>
</p><p>ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி ட்ரம்ப்புடன் விவாதித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுடனான பேச்சுவார்த்தை முன்னெடுப்புகள் பலனளிக்கும் என்பது குறித்துச் சந்தேகம் வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e902279d-376e-4e9a-8029-13a9f62055a9/26-6a6d6bca5b523.webp' /></p><p> </p><p>மேலும், பேச்சுவார்த்தைகளுக்குப் பதிலாக, முழு அளவிலான போரை மீண்டும் தொடங்குவது உட்பட, ஈரானின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான வழிகள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். </p><p>ஆனால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்த சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான், தமது சகோதரர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் விருப்பத்தை இருவருடனும் விவாதித்துள்ளார். </p><p>அதில், ஈரான் தொடர்பான மோதல் தணிய வேண்டும் என்று சவுதி அரேபியா விரும்புகிறது என்றும், இம்மோதல் நீடிப்பது பெரும் அபாயங்களுக்கு காரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>ஆனால், தனது காலக்கெடுவையும் கடந்து நீண்டுவிட்ட ஒரு மோதலில் இருந்து வெளியேறுவதற்கான வழியை ட்ரம்ப் தீவிரமாகவே தேடும் வேளையில், அவர் எதிர்கொள்ளும் முரண்பட்ட சூழ்நிலைகளை இவை வலியுறுத்துவதாகவே அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது. </p><p>போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு சக குடியரசுக் கட்சியினரிடமிருந்து அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அப்போர் உண்மையில் விரிவடைந்து வருவதாகவே தோன்றுகிறது; பிராந்தியத்தில் உள்ள ஏறக்குறைய அனைத்து நாடுகளும் இதில் இழுக்கப்பட்டுள்ளன.</p><p> போரை நிறுத்தும் ஒரு ஒப்பந்தத்திற்கு ஈரான் கெஞ்சுவதாக ட்ரம்ப் கூறி வந்தாலும், உண்மையில் ஜனாதிபதி ட்ரம்ப் இதில் இருந்து வெளியேற முடியாமல் கடும் விரக்தியில் இருப்பதாகவே அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் பேசுபொருளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6d4c3c4-b86a-4e34-9f2c-7990d947909a/26-6a6d6bc852600.webp' /></p><p> </p><p>மேலும், ஹார்முஸ் நீரிணை மீது தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்தவும், அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைகளை வீசவும் ஈரான் நிர்வாகத்தின் முக்கியப் பிரமுகர்கள் முன்னெப்போதையும் விட அதிக உறுதியுடன் இருப்பதாகச் சில அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர். </p><p>தனது கோரிக்கைகளுக்கு ஈரான் பணிய மறுப்பதால் ட்ரம்ப் விரக்தியடைந்துள்ளார். இதன் விளைவாக, அவர் திரைமறைவில் ஆத்திரம் கொண்ட சந்திப்புகளையும், தனது நேச நாடுகளுடன் வசவுகள் நிறைந்த தொலைபேசி உரையாடல்களையும் நடத்தியுள்ளார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். </p><p>மேலும், அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ஈரான் போரில் வெற்றியுடன் வெளியேற வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுப்பதே அதற்கான ஒரே வழி என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ட்ரம்பின் ஜனாதிபதி பதவியையே</h2><p> </p><p>உண்மையில், ஈரானிடமிருந்து தொடரும் அச்சுறுத்தல்களால், ட்ரம்ப் தனது சொந்தத் திட்டங்களையே மாற்றியமைக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.மிக சமீபத்தில் துருக்கியிலிருந்து அவர் திரும்பும் பயணத்தின்போது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்களை மாற்றியமைத்தது இதில் குறிப்பிடத்தக்கதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a6e48c-7fde-45e8-b887-2a7a44f9fb11/26-6a6d6bc903ba4.webp' /></p><p> </p><p>ஈரானுக்கு பயந்து அமெரிக்க ஜனாதிபதி தனது பயணத் திட்டத்தையே மாற்றும் நிலை ஏற்பட்டது. மட்டுமின்றி, ஈரான் போர், ட்ரம்பின் ஜனாதிபதி பதவியையே முற்றிலுமாக விழுங்கிவிடும் என்று அவரது ஆதரவாளர்கள் பலர் தற்போது கவலைப்படுகிறார்கள். </p><p>அமெரிக்க மக்களில் வெறும் 23 சதவீதம் பேர்கள் மட்டுமே ஈரானுடனான ட்ரம்பின் போரை ஆதரிக்கின்றனர். இந்தப் மோதலின்போது ட்ரம்பை பெருமளவில் ஆதரித்து வந்தாலும், எரிபொருள் விலை உயர்வு இடைக்காலத் தேர்தல்களில் தங்கள் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று குடியரசுக் கட்சியினர் கவலை கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb72d4cd-5fb7-4f36-a3e0-72a234b9105d/26-6a6d6bc9a9343.webp' /></p><p> </p><p>இதை ட்ரம்பிடமும் அவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கத்தார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட மத்தியஸ்தர்கள் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அவசரமாக முயற்சித்து வரும் நிலையில், தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் மிகக் குறைவாகவே உள்ளன. </p><p>மாறாக, ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் முடிவெடுக்கும் அதிகாரத்தை உறுதியாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பேசி வந்த அரசியல் பிரமுகர்கள் வெறும் பெயரளவிலான தலைவர்களாக மட்டுமே நீடிப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு தற்போது அஞ்சுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T03:34:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்: 34 வயதுடையவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-marissa-shooting-1-man-injured-1785541036"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-marissa-shooting-1-man-injured-1785541036</id>
            <summary type="text">இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மாத்தறை - மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு
இலங்கையில் மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><h2> மாத்தறை - மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு</h2><p>
இலங்கையில் மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில் வெள்ளிக்கிழமையன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களால் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நபர் காயமடைந்ததாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d781954-d708-49ad-9748-c9649bcdc6b0/26-6a6d31ae27a68.webp' /></p><p>துப்பாக்கிச்சூடு தாக்குதலில் காயமடைந்த நபர் உடனடியாக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> இந்த சம்பவத்தில் ரிவால்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.</p><p></p><p> இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T00:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 மணி நேரம் இடைவிடாமல் வான்வழித் தாக்குதல்: ஈரானுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057"></link>
            <id>https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057</id>
            <summary type="text">ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><h2>அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்</h2><p>ஈரானின் முக்கிய இலக்குகளை குறிவைத்து அமெரிக்க மத்திய கட்டளை பீடம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் விடாமல் தீவிர தாக்குதல் நடத்தி முடித்து இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம்(CENTCOM) தெரிவித்துள்ளது.</p><p>CENTCOM வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய வியூக மையங்கள் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b81e468-9e15-4068-bc7c-369a8285fec7/26-6a6cef5ac2501.webp' /></p><p>அதில் முக்கியமாக இராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், அதிநவீன ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகள், கடற்கரை கண்காணிப்பு மையங்கள் மற்றும் முக்கிய கடல்சார் பாதுகாப்பு திறன்கள் அழிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தாக்குதலுக்கான பின்னணி</h2><p>செவ்வாய்க்கிழமை அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52e64c48-69da-43b9-a0ad-ef04a7432d20/26-6a6cef5b72f9c.webp' /></p><p>மேலும் ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதல்களை அமெரிக்க பாதுகாப்பு திறன்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகவும், இதனால் அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகளுக்கு எந்தவொரு சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> ஈரானிய படைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை தடுத்து அமெரிக்க பணியாளர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க அமெரிக்கா உறுதியுடன் இருப்பதை இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுவதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T23:38:39+00:00</updated>
        </entry>
    </feed>
