<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-31T05:43:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு இனி பணம் கொடுக்கக்கூடாது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-mps-urge-to-stop-paid-to-france-stop-migrants-1785475159"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-mps-urge-to-stop-paid-to-france-stop-migrants-1785475159</id>
            <summary type="text">புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இனி பிரான்சுக்கு பணம் கொடுக்கக்கூடாது என பிரித்தானிய நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இனி பிரான்சுக்கு பணம் கொடுக்கக்கூடாது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.</p><h3>

பிரான்சுக்கு கொடுக்கப்படும் பெரும் தொகை
</h3><p>
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரை பிரான்சிலேயே தடுத்து நிறுத்துவதற்காக பிரான்சுக்கு பிரித்தானியா பெரும் தொகை ஒன்றைக் கொடுத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c875aa4-f620-4f1d-8304-b7a0c50fb54f/26-6a6c305921880.webp' /></p><p>
இருந்தாலும் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை.
</p><p>
புதன்கிழமை மட்டுமே, 752 புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்ததாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
சமீபத்தில், இப்படி சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் புறப்படுவதைத் தடுக்காமல், பிரான்ஸ் பொலிசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை பிரித்தானிய ஊடகவியலாளர்கள் கண்ணால் பார்த்துள்ளார்கள்.
</p><h3>
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்</h3><p>

இந்நிலையில், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு இனி பணம் கொடுக்கக்கூடாது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/828668da-ba56-4ba9-bc2d-27be0fd91a94/26-6a6c3059c772b.webp' /></p><p>
ரீஃபார்ம் கட்சி கருவூல செய்தித்தொடர்பாளரான ராபர்ட் ஜென்ரிக், பிரான்ஸ் பொலிசார், சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் புறப்படுவதைத் தடுக்காமல் அவர்களை கையசைத்து அனுப்பி வைக்கிறார்கள்.</p><p>

பொறுத்தது போதும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு இனி பணம் கொடுக்கக்கூடாது, சொல்லப்போனால், இதுவரை கொடுத்த பணத்தை பிரான்சிடம் திருப்பிக் கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
</p><p>
அதேபோல, நிழல் உள்துறைச் செயலரான கிறிஸ் பிலிப்பும், பெல்ஜியம் நாட்டு அதிகாரிகள் வெற்றிகரமாக சட்டவிரோத புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69c6a4fd-c731-4439-9720-f005b660f21b/26-6a6c305a76b0f.webp' /></p><p>
அதேபோல் பிரான்ஸ் அதிகாரிகளும் செய்யவேண்டும் என்று கூறியுள்ள பிலிப், அப்படிச் செய்ய பிரான்ஸ் மறுத்தால், நம் பிரதமர் ஆன்டி பர்னாம், பிரான்சுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9ef1f1a-248e-474e-beeb-8f6616358a02/26-6a6c305b24d84.webp' /></p><p>

பிரான்சுக்கு பிரித்தானியா புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் 160 மில்லியன் பவுண்டுகள் கொடுப்பதாக உறுதியளித்துள்ள நிலையில், பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியா வரும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்தால் மட்டுமே அந்த 160 மில்லியன் பவுண்டுகள் கொடுக்கப்படும் என உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T05:22:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைட்டமின் சி குறைபாடு இருப்பதை எச்சரிக்கும் 5 அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-common-symptoms-of-vitamin-c-deficiency-1785473346"></link>
            <id>https://news.lankasri.com/article/5-common-symptoms-of-vitamin-c-deficiency-1785473346</id>
            <summary type="text">உடல் ஆரோக்கியமாக செயல்பட வைட்டமின்கள் அவசியம். அவற்றில் முக்கியமானது வைட்டமின் சி. 

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, கொலாஜன் உற்பத்தி மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடல் ஆரோக்கியமாக செயல்பட வைட்டமின்கள் அவசியம். அவற்றில் முக்கியமானது வைட்டமின் சி. </p><p>

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, கொலாஜன் உற்பத்தி மற்றும் இரும்புச் சத்தை உடல் உறிஞ்சவும் உதவுகிறது.</p><p> 

இந்த வைட்டமினை உடலால் தானாக உருவாக்க முடியாது. எனவே உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்கள் மூலம் பெற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49f4f8bf-aadf-4d06-bca1-d400a81d0907/26-6a6c2944af71c.webp' /></p><p>

நெல்லிக்காய், கொய்யாப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற பல இயற்கை உணவுகளில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.</p><p> 

அந்தவகையில், வைட்டமின் சி குறைபாடு இருப்பதை எச்சரிக்கும் 5 அறிகுறிகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.</p><h2> 

1. அடிக்கடி சளி, இருமல்
</h2><p>
வைட்டமின் சி குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். இதனால் சளி, இருமல் மற்றும் தொற்றுநோய்கள் அடிக்கடி ஏற்படும்.</p><p>
</p><h2>
2. ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு</h2><p>

பல் துலக்கும் போது ஈறுகளில் ரத்தம் வருதல் அல்லது வீக்கம் இருந்தால், அது வைட்டமின் சி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff1e802c-aef7-4e71-a897-6490d1edc784/26-6a6c294576e61.webp' /></p><h2>3. உடல் சோர்வு
</h2><p>
போதுமான ஓய்வு எடுத்தும் சோர்வாக இருந்தால், அது வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் இரும்புச்சத்து உறிஞ்சும் திறன் குறைவின் காரணமாக இருக்கும்.</p><h2>

4. சருமம் வறட்சி
</h2><p>
வைட்டமின் சி குறைந்தால் சருமம் வறண்டு, சுருக்கங்கள் தோன்றலாம். காயங்கள் ஆறவும் அதிக நேரம் ஆகும்.
</p><h2>
5. மூட்டு வலி
</h2><p>
கொலாஜன் உற்பத்தி குறைவதால் மூட்டுகளில் வலி, வீக்கம் மற்றும் நடப்பதில் சிரமம் ஏற்படும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T04:50:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறப்புறுப்புச் சிதைப்பு உட்பட... உக்ரைன் போரில் ரஷ்யாவின் கொடூரங்கள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-uses-torture-as-war-weapon-1785471898"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-uses-torture-as-war-weapon-1785471898</id>
            <summary type="text">ரஷ்யா, உக்ரேனிய கைதிகளுக்கு எதிராக பாலியல் வன்முறையை ஒரு திட்டமிட்ட போர் ஆயுதமாக பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது.ஆண் கைதிகளை ரஷ்ய இராணுவத்தின் கொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா, உக்ரேனிய கைதிகளுக்கு எதிராக பாலியல் வன்முறையை ஒரு திட்டமிட்ட போர் ஆயுதமாக பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது.</p><h2>ஆண் கைதிகளை</h2><p> ரஷ்ய இராணுவத்தின் கொடூர நடவடிக்கைகளில் இருந்து தப்பிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இருதரப்பும், தங்களை அவமானப்படுத்தவும் மனரீதியாக துன்புறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பாலியல் வன்கொடுமை மற்றும் பிறப்புறுப்பு சிதைப்பு உள்ளிட்ட கொடுமைகளை முன்னெடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9f5367-e66b-4e0c-92f5-dd363be09d1c/26-6a6c25e1c4761.webp' /></p><p>
</p><p>தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்கள் மற்றும் உக்ரேனிய அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் ஐ.நா. விசாரணை அதிகாரிகளின் சாட்சியங்களின் அடிப்படையில், </p><p>ரஷ்யா 2022-ல் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து அதன் இராணுவப் படைகள் உக்ரேனிய ஆண் கைதிகளை முதன்மையாகப் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. </p><p>முன்னாள் உக்ரேனியப் போர் கைதியான Serhii Boychuk தெரிவிக்கையில், 2022-இல் ரஷ்யர்கள் அவரைச் சிறைபிடித்ததாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அவர் அடைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாமில் ரஷ்யக் காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதுடன் பாலியல் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>தற்போது 33 வயதாகும் அவர், மிக மோசமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், தனது பிறப்புறுப்பின் மீது கத்தி வைக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்துள்ளார். </p><p>அவர்கள் ஒரு நபரை அவமானப்படுத்தவும் மனதளவில் சிதைக்கவும் பாலியல் ரீதியான துன்புறுத்தலை ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று, அக்டோபர் 2024-இல் கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்ட அந்த நபர் கூறியுள்ளார். </p><p>உக்ரைனின் முன்னாள் போர்க்கைதிகளில் மற்றொருவரும், ரஷ்யாவின் போர்க்கைதிகள் முகாம்களில் இருந்தபோது பாலியல் ரீதியான சித்திரவதைக்கு ஆளான இதே போன்ற அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b235a7fd-8355-4961-98ec-4c64636d1d14/26-6a6c25e277492.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், இதுவரை விசாரணைகளில் இருந்து உறுதி செய்யப்பட்டத் தகவல்களின் அடிப்படையில், போர்க்கைதிகள் மற்றும் பொதுமக்கள் கைதிகளுக்கு எதிரான ரஷ்யாவின் பாலியல் வன்முறைகள் திட்டமிட்ட முறையில் நடைபெற்று வந்துள்ளதும்; இவை பெரும்பாலும் ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரிகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளதும் விசாரணை அதிகாரிகள் குழுவால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>போரின்போது பொதுமக்களை அடக்கி ஒடுக்கவும் அவர்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்தவும் எதிரிப் படைகள் நீண்ட காலமாகப் பாலியல் வன்முறையைப் பயன்படுத்தி வருகின்றன.</p><h2>உள்நோக்கம் கொண்டவை</h2><p> </p><p>இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெண்கள் மற்றும் சிறார்களே முக்கிய இலக்குகளாக உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நடத்திய விசாரணைகளின் அடிப்படையில், </p><p>2022-இல் ரஷ்யா தொடங்கிய முழு அளவிலான படையெடுப்பின் ஆரம்பக் கட்டத்தில் நகரங்களையும் கிராமங்களையும் கைப்பற்றியபோது, ​​ரஷ்யப் படைகள் உக்ரேனியப் பெண்களையும் குறிவைத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c8de35-c518-4ec4-87f2-59ba182dbc6d/26-6a6c25e10033e.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், போர் தற்போது இரு தரப்பினரின் வளங்களையும் படிப்படியாகச் சிதைக்கும் வகையிலான மோதலாக மாறியுள்ள நிலையில், போர்க்களத்தில் சிறைபிடிக்கப்பட்ட உக்ரேனிய ஆண் வீரர்களே பாதிக்கப்பட்டவர்களில் அதிகமாக உள்ளனர். </p><p>ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, போரின்போது ரஷ்யப் படைகளால் பாலியல் வன்முறை இழைக்கப்பட்டதாகக் கூறப்பட்டு விசாரணையில் உள்ள 310 சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களில் 280 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள் மற்றும் நான்கு பேர் சிறுமிகள் என்றே தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/468174a3-6a73-415c-8363-e46172c543e2/26-6a6c25e32b66c.webp' /></p><p> </p><p>பட்டியலிடப்பட்ட பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பிறப்புறுப்பு சிதைப்பு, மின் அதிர்ச்சி மற்றும் பிறப்புறுப்புகளில் தாக்குதல் உள்ளிட்ட சித்திரவதை உத்திகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. </p><p>இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ரஷ்ய அதிகாரிகள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறி, ரஷ்யா ஏற்கனவே அவற்றை மறுத்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T04:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/naval-coalition-protect-red-sea-1785468358"></link>
            <id>https://news.lankasri.com/article/naval-coalition-protect-red-sea-1785468358</id>
            <summary type="text">செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதல்களிலிருந்து கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, 14 நாடுகளை உள்ளடக்கிய கடல்சார் தற்காப்புக் கூட்டமைப்பை அமைப்பதற்கான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதல்களிலிருந்து கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, 14 நாடுகளை உள்ளடக்கிய கடல்சார் தற்காப்புக் கூட்டமைப்பை அமைப்பதற்கான திட்டங்களை சவுதி அரேபியா அறிவித்துள்ளது.</p><h2>43 நாடுகளின்...</h2><p>
பாப் அல்-மண்டேப் நீரிணை, செங்கடல் மற்றும் ஏதன் வளைகுடா வழியாக முன்னெடுக்கப்படும் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b858a63f-1bf7-4a43-be6b-72b8e028e2bb/26-6a6c17ae54907.webp' /></p><p> </p><p>ஈரான் ஆதரவு ஹவுதிகள் சவுதிக்கு எதிரான தங்களது கடற்படை முற்றுகையைத் தொடர்வதாலும், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் மற்றும் அமெரிக்க இராணுவத்தால் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாலும், </p><p>உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகள் அதிகரித்து, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 90 டொலர் என்ற அளவை எட்டியுள்ள நிலையில் இந்த முன்னெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஜோர்தான், ஏமன், வங்கதேசம், நைஜீரியா, சூடான், ஜிபூட்டி மற்றும் சோமாலியா ஆகிய 14 நாடுகள் இதில் கையெழுத்திட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்தக் கூட்டணியின் வரைவு சாசனத்தை ஆய்வு செய்வதற்காக ரியாத்தில் நடைபெற்ற கூட்டத்தில், 43 நாடுகளின் ராணுவத் தலைமை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் ஆகியோர் நேரில் அல்லது காணொளி வாயிலாகப் பங்கேற்றுள்ளனர். </p><p>சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டபடி, சவுதி அரேபியா இக்கூட்டணியின் நிறுவன நாடாகச் செயல்படுவதோடு, அதன் தலைமையகத்தையும் தனது நாட்டில் அமைக்கும். கூட்டத்தைத் தொடர்ந்து, அந்த 14 நாடுகளும் இந்த முயற்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. </p><p>கூட்டணியை அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அந்த அறிக்கை வரவேற்றதோடு, கூடுதல் நாடுகள் முறையாக இணைவதற்கு முன்பு உள்நாட்டு நடைமுறைகளை இன்னும் முடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a5fd4e9-4791-4879-929a-b416d0d85760/26-6a6c17accfad6.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கும் ஒரு முக்கிய கடல்வழிப் பாதையாகத் திகழும் மூன்று நீர்வழிகள் வழியாக, சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதைகளைப் பாதுகாப்பதோடு, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் காப்பதற்கான தங்கள் நோக்கத்தையும் அந்த நாடுகள் அறிவித்துள்ளன.</p><h2>அமெரிக்காவின் பங்கு</h2><p> </p><p>மேலும், ஈரானை மையமாகக் கொண்ட மோதலுக்கு மத்தியில் ஒத்த பாதுகாப்பு நோக்கங்களைக் கொண்டிருந்த போதிலும், ஐக்கிய அரபு அமீரகம் அல்லது ஓமன் ஆகிய நாடுகள் சவுதி அரேபியாவின் இந்த கூட்டமைப்பில் இணையவில்லை.
</p><p>
ஆனால், இந்தப் புதிய கூட்டமைப்பில் அமெரிக்காவின் பங்கு அல்லது, அமெரிக்கா தரப்பில் அதிகாரிகள் கலந்துகொண்டார்களா என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. மாறாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு அதிகாரிகள் குழு இந்தக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f320891c-64a7-47a1-ae02-eb3ab47cee14/26-6a6c17ada0d45.webp' /></p><p> பாலஸ்தீனம், லெபனான் மற்றும் ஈரான் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்தின் செயற்பாடுகள் பல வளைகுடா நாடுகளை அதிருப்திகொள்ள வைத்துள்ளதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. </p><p>மட்டுமின்றி, ட்ரம்ப் காரணமாகவே வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டதுடன், தற்போது இஸ்ரேல் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T03:24:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியை வாட்டிய வரலாறு காணாத வெப்பம்: 10000ஐ தொட்ட உயிரிழப்பு எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-reach-10000-heat-related-deaths-1785447872"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-reach-10000-heat-related-deaths-1785447872</id>
            <summary type="text">ஜேர்மனியில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தொட்டுள்ளது. 10,000-ஐ தொட்ட உயிரிழப்பு
ஜேர்மனியில் இந்த ஆண்டு பதிவான மிகத் தீவிரமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தொட்டுள்ளது.</p><h2> 10,000-ஐ தொட்ட உயிரிழப்பு</h2><p>
ஜேர்மனியில் இந்த ஆண்டு பதிவான மிகத் தீவிரமான வெப்ப அலைகள் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.</p><p> ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் (RKI) என்ற நிறுவனம் வெளியிட்ட தரவுகளில், இந்த ஆண்டு அதிகமான வெப்பத்தில்&nbsp; பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa39c3c-4ef1-412d-a9a3-91a41fde6693/26-6a6bc5c27bd6a.webp' /></p><p>கோடை காலம் நிறைவடைவதற்கு முன்பே பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கை கடந்த கால உச்சபட்ச&nbsp; உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகமாகும்.</p><p></p><p> கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 19ம் திகதி வரை மட்டும் கிட்டத்தட்ட 9800 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.</p><p> ஜூன் மாதத்தில் மட்டும் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000க்கும் அதிகமாகும்.</p><p> ஜூன் காலக்கட்டத்தில் ஜேர்மனியின் வெப்ப அலை சில பகுதிகளில் 42°C (107.6°F) வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 19ம் திகதி வரை பதிவான இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு பதிவான 9000 என்ற அதிகபட்ச உயிரிழப்புகளின் எண்ணிக்கையை முந்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cb16ecc-7a5b-47e2-a8f7-9084b06b4bec/26-6a6bc5c330b9c.webp' /></p><p> ஜூன் 22 முதல் 28ம் திகதி வரை பதிவான உயிரிழப்புகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையை விட 32% அதிகமாகும்.</p><p> ஜூலை 19 க்கு பிந்தைய வெப்ப நிலைகள் மற்றும் உயிரிழப்புகள் இன்னும் இதில் சேர்க்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> ஜேர்மனியில் பதிவான தீவிரமான வெப்ப அலையில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-30T23:52:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டினர்: சியூட்டா எல்லையில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/morocco-migrants-cross-ceuta-border-viral-video-1785455419"></link>
            <id>https://news.lankasri.com/article/morocco-migrants-cross-ceuta-border-viral-video-1785455419</id>
            <summary type="text">மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் எல்லைப்புற நகரான சியூட்டாவிற்குள் நுழைந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பெயினுக்குள் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் எல்லைப்புற நகரான சியூட்டாவிற்குள் நுழைந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டினர்</h2><p>வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய ஆதிக்கப் பகுதியான சியூட்டாவின்(Ceuta) எல்லைப் பகுதிக்குள் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a12c048-670a-465d-8f83-7b0a2cdbbd9d/26-6a6be33d03b07.webp' /></p><p> ஆயிரக்கணக்கானோரின் அத்துமீறிய நுழைந்ததை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு முற்றிலும் சிதைப்பட்டு இருப்பதாகவும், உடனே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு எல்லை பாதுகாப்பிற்கு இராணுவத்தை அனுப்ப வேண்டும் எனவும் உள்ளூர் அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p> அத்துமீறி நுழையும் ஆயிரக்கணக்கானோர்(பெரும்பாலானோர் மொராக்கோவை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை சேர்ந்தவர்கள்) இளைஞர், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் நுழையும் குடும்பத்தினர் ஆவார்க்ள்.</p><p></p><p> தாராஜல் எல்லை வழியாகவும், கடற்கரை வழியாகவும் சியூட்டாவிற்குள் நுழையும் இந்த மக்களில் சிலர் “விவா எஸ்பானா”(Viva España!) என்ற கோஷங்களை எழுப்பியும், சாலைகளில் நடனமாடியும் வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p> எல்லை காவலில் இருந்த அதிகாரிகள் நிலைமையை மிகவும் மோசமானதாக விவரித்துள்ளனர்.</p><p>இதற்கு முந்தைய புதன்கிழமை அன்று, ஆபத்தான முறையில் பலர் கடலில் நீந்தி சென்று ஸ்பெயின் நாட்டிற்கு நுழைய முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><iframe width="988" height="556" src="https://www.youtube.com/embed/hne9e6SKCl4" title="Migrants storm Ceuta to get into Europe | DW News" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><h2> மொராக்கோ மெளனம்</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக மொராக்கோ அதிகாரிகள் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.</p><p>அதே நேரத்தில் இந்த நெருக்கடிக்கு பதிலளித்த ஸ்பெயின் உள்துறை அமைச்சகம், குடிமக்களும் எல்லை பாதுகாப்பும் முதன்மையானவை என்று உறுதிப்படுத்தினார்.</p><p> ஆனால் குடி பெயர்வு தொடர்பான பிரச்சனைகளுக்கு எல்லாம் தேசிய அளவிலான அவசரநிலை பிரகடனம் செய்ய முடியாது என மறுத்துவிட்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T23:50:31+00:00</updated>
        </entry>
    </feed>
