<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-22T03:34:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்களை கடைசியாக பார்க்கும் தருணமென நினைக்கவில்லை: கணவர் மரணம்.. மனைவியின் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wife-post-of-us-soldier-found-who-died-in-iraq-1784644562"></link>
            <id>https://news.lankasri.com/article/wife-post-of-us-soldier-found-who-died-in-iraq-1784644562</id>
            <summary type="text">ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி பதிவிட்டுள்ளார்.அமெரிக்க வீரர்&amp;nbsp;மரணம்
ஈரானிய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி பதிவிட்டுள்ளார்.</p><h2>அமெரிக்க வீரர்&nbsp;மரணம்</h2><p>
ஈரானிய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be204840-a794-4852-82df-ee0f5bfb0e72/26-6a5f867d4dc6c.webp' /></p><p></p><p>
அவர் வட கரோலினாவின் Fayetteville-வைச் சேர்ந்த சார்ஜென்ட் மைக்கேல் இமானுவெல் ஸ்வின்டன் (30) என தேறிய வந்தது.</p><p> 

மேலும், அவர் ஈராக்கின் எர்பில் விமானப்படைத் தளத்தில் நடந்த பணியின்போது கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வர, இதுகுறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.</p><h2>

 நான் கடைசியாக பார்க்கும் தருணம் </h2><p>இந்த நிலையில், உயிரிழந்த வீரரின் மனைவி மியா கோன்சலஸ்-ஸ்வின்டன் தனது கணவர் பணிக்கு செல்லும் முன் சீருடையில் ஒரு குழந்தையை ஏந்தியிருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.</p><p> 

அந்த பதிவில், "உங்களை நான் கடைசியாக பார்க்கும் தருணம் இதுவாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. </p><p>ஈராக்கில் பணியில் இருந்தபோது எனது கணவர் மைக்கேல் கொல்லப்பட்டதாக இன்று காலை எனக்கு தெரிவிக்கப்பட்டது. </p><p>

இந்த துயரச் செய்தியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவித்து வருகிறேன்; எனவே தயவுசெய்து என் நிலையை புரிந்துகொள்ளுங்கள்" என எழுதியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/164b868f-052e-4bd4-8efa-8e1832aba1ad/26-6a5f867e22d3b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T03:05:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி துறைமுகங்களைத் தவிர்க்க கப்பல் நிறுவனங்களுக்கு ஹவுதிகள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-warn-ships-to-avoid-saudi-ports-1784682218"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-warn-ships-to-avoid-saudi-ports-1784682218</id>
            <summary type="text">யேமனின் ஹவுதி கிளர்ச்சிக் குழு, சவுதி அரேபிய துறைமுகங்களை நோக்கி செல்லும் கப்பல் நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹவுதிகள் அனுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமனின் ஹவுதி கிளர்ச்சிக் குழு, சவுதி அரேபிய துறைமுகங்களை நோக்கி செல்லும் கப்பல் நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

ஹவுதிகள் அனுப்பிய மின்னஞ்சலில், “சவுதி துறைமுகங்களுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகலாம்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த மின்னஞ்சல் ஹவுதிகளின் சனா-அடிப்படையிலான மனிதாபிமான நடவடிக்கை ஒருங்கிணைப்பு மையம் (HOCC) மூலம் அனுப்பப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7922a8f-640b-45e8-bede-d809fa672337/26-6a6016ebca2d3.webp' /></p><p>புதிய விதிமுறைகள் திங்கட்கிழமை 12:01 GMT முதல் அமுலுக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹவுதிகள், சவுதி அரேபியாவை ஆதரிக்கும் கப்பல்கள் அல்லது நிறுவனங்கள் மீது தண்டனைகள் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.
</p><p>
இந்த எச்சரிக்கை, செங்கடல் வழியாகச் செல்லும் சர்வதேச வர்த்தக பாதைகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். </p><p></p><p>சவுதி அரேபியா, செங்கடல் வழியாக எண்ணெய் மற்றும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இருப்பதால், இந்த எச்சரிக்கை உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கு புதிய சவாலாக உள்ளது.
</p><p>
ஹவுதிகள், 2024 முதல் யேமனில் நடந்து வரும் போரில் ஈடுபட்டு, சவுதி அரேபியாவை எதிர்த்து பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். தற்போது, இந்த மின்னஞ்சல் எச்சரிக்கை, மத்திய கிழக்கின் கடல்வழி பாதுகாப்பு நிலைமை குறித்து சர்வதேச அளவில் கவலைகளை அதிகரித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T01:01:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டம்: ஆசியாவை விஞ்சிய ஆப்பிரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/africa-tops-hunger-list-surpasses-asia-un-1784662087"></link>
            <id>https://news.lankasri.com/article/africa-tops-hunger-list-surpasses-asia-un-1784662087</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த வருடாந்திர அறிக்கையில், உலகளவில் பட்டினி குறையும் நிலையில் இருந்தாலும், அந்த முன்னே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த வருடாந்திர அறிக்கையில், உலகளவில் பட்டினி குறையும் நிலையில் இருந்தாலும், அந்த முன்னேற்றம் சமமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2026 ஜூலை 21 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், ஆப்பிரிக்கா கண்டம், ஆசியாவை விட அதிகமான மக்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதன் மூலம், முதன்முறையாக உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டமாக ஆப்பிரிக்கா மாறியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ef1fb7d-305e-4bd5-8bfe-0f2126d4eabc/26-6a5fc8c67d0aa.webp' /></p><p>ஆப்பிரிக்காவில் பல கோடி மக்கள் போதுமான உணவின்றி வாழ்ந்து வருவதாகவும், குறிப்பாக சஹாரா தெற்குப் பகுதிகள் மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் உணவு உதவிக்கு மக்கள் அதிகமாக சார்ந்துள்ளனர்.
</p><p>
ஐ.நா. அறிக்கையில், உலகளவில் பட்டினி குறைப்பதில் முன்னேற்றம் இருந்தாலும், அது சமமாக இல்லை. சில பகுதிகளில் உணவு பாதுகாப்பு மேம்பட்டாலும், ஆப்பிரிக்காவில் நிலைமை மோசமடைந்துள்ளது.</p><p>

இதனால், ஆப்பிரிக்கா கண்டத்தில் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சர்வதேச உதவி, அரசியல் நிலைத்தன்மை, வேளாண் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T00:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தொடர்பில் ஜேர்மனி-ரஷ்யா ரகசிய சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/secret-baku-talks-germany-russia-on-ukraine-war-1784679962"></link>
            <id>https://news.lankasri.com/article/secret-baku-talks-germany-russia-on-ukraine-war-1784679962</id>
            <summary type="text">அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் ஜூலை 21, 2026 அன்று பெர்லினில் ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் ஜூலை 21, 2026 அன்று பெர்லினில் ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார்.</p><p>

அப்போது, ஜேர்மனி மற்றும் ரஷ்யாவின் முன்னாள் உயர் அதிகாரிகள் பாகுவில் (Baku) ரகசியமாக சந்தித்ததாக உறுதிப்படுத்தினார்.
</p><p>
அலியேவ் கூறியதாவது: “எங்கள் நாட்டின் நிலப்பரப்பை, எங்களுக்குத் தெரியாமல் இந்த சந்திப்புக்கு பயன்படுத்தினர். விமானப் பதிவுகள் மூலம் அந்த சந்திப்பு நடந்தது உறுதியாகிறது” என தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42180a05-c6e8-4753-872d-efa473f2380a/26-6a600e1c2b345.webp' /></p><p>இந்த சந்திப்பு ஜூலை 12 முதல் 14 வரை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், ஜேர்மனியின் முன்னாள் சேன்சலர் அங்கேலா மேர்கலின் முன்னாள் தலைமைச் செயலாளர் ரோனால்ட் போஃபல்லா, பிராண்டன்பர்க் மாநில முன்னாள் தலைவர் மத்தியாஸ் பிளாட்செக் ஆகியோர் பங்கேற்றனர்.</p><p>

ரஷ்ய தரப்பில், விக்டர் சூப்கோவ் (Gazprom தலைவர், முன்னாள் பிரதமர்) மற்றும் வலெரி ஃபடேயேவ் (ரஷ்ய குடியரசுத் தலைவரின் மனித உரிமை கவுன்சில் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
</p><p></p><p>ஆனால், ஜேர்மன் அரசுக்கு இந்த சந்திப்பில் எந்தவித பங்கும் இல்லை என்று சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்தார். தனக்கு இப்படியான சந்திப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று அவர் கூறினார்.
</p><p>
இந்த சந்திப்பு, ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவு காணும் வழிகளை ஆராய்வதற்காக நடந்ததாக ஊடகங்கள் கூறுகின்றன. </p><p>அலியேவ், “இந்த சந்திப்பு உண்மையில் போருக்கு முடிவு காண உதவுவதாக இருந்தால், அதை வரவேற்கிறோம்” என்றார்.
</p><p></p><p>அசர்பைஜான், 2022-இல் ரஷ்யா உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்த பிறகு, இரு தரப்புடனும் உறவை சமநிலைப்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால், 2024-இல் ரஷ்ய விமானப்படை தவறுதலாக அசர்பைஜான் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய சம்பவம் இரு நாடுகளின் உறவை பாதித்தது.
</p><p>
இந்த ரகசிய சந்திப்பு, ஜேர்மனி-ரஷ்யா இடையிலான பின்வழி (back-channel) தொடர்பு முயற்சியாக கருதப்படுகிறது. இது, உக்ரைன் போருக்கான அமைதி முயற்சிகளில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T00:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Whoop-க்கு போட்டியாக Garmin-ன் புதிய திரை இல்லாத ஸ்மார்ட் பேண்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/garmin-cirqa-smart-band-launch-like-whoop-1784677065"></link>
            <id>https://news.lankasri.com/article/garmin-cirqa-smart-band-launch-like-whoop-1784677065</id>
            <summary type="text">Garmin நிறுவனம் தனது புதிய Cirqa Smart Band-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது Whoop போன்ற பிரபலமான fitness tracker-க்கு போட்டியாக வந்துள்ளது.

முக்கியமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Garmin நிறுவனம் தனது புதிய Cirqa Smart Band-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது Whoop போன்ற பிரபலமான fitness tracker-க்கு போட்டியாக வந்துள்ளது.</p><p>

முக்கியமாக, Cirqa-வில் subscription கட்டணம் தேவையில்லை. ஒருமுறை வாங்கினால் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்தலாம்.</p><p>

இந்த பேண்ட் திரை (screen) இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் வரை நீடிக்கும் battery life கொண்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c850eee-4576-4e0c-be19-3f5bbc4febf7/26-6a6002caebe0c.webp' /></p><p>பயனர்கள் சேகரிக்கப்பட்ட தரவுகளை Garmin Connect app-இல் காணலாம். இதில் heart rate, Body Battery energy monitoring, Pulse Ox, stress, skin temperature போன்ற முக்கியமான biometrics தரவுகள் கிடைக்கும்.
</p><p>
மேலும், பெண்களின் health &amp; cycle tracking வசதியும் உள்ளது. Cirqa-வில் திரை இல்லாவிட்டாலும், activity detection மற்றும் recording செய்யும்.
</p><p>
இந்த பேண்ட் citron gray, mauve, French gray, dark olive, captain blue, French blue, black போன்ற நிறங்களில் கிடைக்கிறது. </p><p></p><p>wrist band அல்லது arm band ஆக அணியலாம். இரண்டு அளவுகளில் (small/medium மற்றும் large/extra-large) கிடைக்கிறது.
</p><p>
Cirqa-வின் விலை 199.99 டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24, 2026 முதல் வாங்க கிடைக்கும். Subscription இல்லாததால், fitness tracking-க்கு எளிய, குறைந்த செலவிலான தீர்வாக இது பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T23:36:02+00:00</updated>
        </entry>
    </feed>
