<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-09T19:44:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடுபாதையில் விமானத்தை துரத்திச் சென்ற இரண்டு பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-chase-plane-in-moscow-airport-scare-1786290107"></link>
            <id>https://news.lankasri.com/article/women-chase-plane-in-moscow-airport-scare-1786290107</id>
            <summary type="text">Women Chase Plane in Moscow Airport: மாஸ்கோ விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் விமானத்தை துரத்திச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.

ஓடுபாதையில் இரண்டு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Women Chase Plane in Moscow Airport: மாஸ்கோ விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் விமானத்தை துரத்திச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.</p><h2>

ஓடுபாதையில் இரண்டு பெண்கள்</h2><p>ஜூலை 25-ஆம் திகதி, ரஷ்யாவின் ஷெரெமேட்யேவோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்த விசித்திரமான சம்பவம் தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
இரண்டு பெண்கள் தங்கள் Aeroflot விமானத்தை தவறவிட்டதால், விமானம் புறப்படும் தருணத்தில் ஓடுபாதையில் துரத்திச் சென்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Meanwhile at Moscow&#39;s Sheremetyevo International Airport two passengers who had missed their flight ran onto the tarmac on July 25 and walked directly toward an Aeroflot aircraft in an attempt to board, with one woman dragging a suitcase behind her. <a href="https://t.co/1vmHOeBrhg">pic.twitter.com/1vmHOeBrhg</a></p>&mdash; Breaking Aviation News &amp; Videos (@aviationbrk) <a href="https://x.com/aviationbrk/status/2086052750802952490?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அவர்கள் ஏற்கனவே பாதுகாப்பு சோதனையை கடந்திருந்தாலும், விமானத்தில் ஏற வேண்டிய நேரத்தை தவறவிட்டனர்.

மீண்டும் டிக்கெட் பதிவு செய்யாமல், நேரடியாக விமானம் நிறுத்தப்பட்டிருந்த apron பகுதியில் நுழைந்தனர். அப்போது விமானம் கேட்டில் இருந்து நகர்த்தப்பட்டு கொண்டிருந்தது.</p><p>

வீடியோ காட்சிகளில், பெண்களில் ஒருவர் தனது சூட் கேஸை இழுத்துக்கொண்டு விமானத்தை நோக்கி ஓடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. மற்றொருவர் விமானத்தை நோக்கி கைகளை அசைத்து பைலட் கவனத்தை ஈர்க்க முயன்றார்.</p><p>
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b27100d9-1f99-4417-8c06-ce0c5795bf09/26-6a78a07c654fb.webp' /></p><h2>விமான இயக்கம் நிறுத்தப்பட்டது</h2><p>இந்த சம்பவம் பெரும் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தியது. apron பகுதி மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இடமாகும். அங்கு விமானங்கள் நகர்த்தப்படுவதோடு, பல்வேறு வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் இயங்குகின்றனர்.</p><p>பெண்கள் அங்கு நுழைந்ததால், விமான இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

பின்னர், பணியாளர்கள் அவர்களை தடுத்து, மீண்டும் டெர்மினலுக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் ரஷ்யாவின் Federal Security Service (FSB)-க்கு ஒப்படைக்கப்பட்டனர்.
</p><p>
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பயணிகள் விமானத்தை தவறவிட்டால் எவ்வளவு ஆபத்தான முடிவுகளை எடுக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியது.</p><p></p><p>
</p><h2>
மற்றொரு சம்பவம்- 30 பவுண்டுகள் அபராதம்</h2><p>இதேபோன்ற சம்பவம் கடந்த மே மாதத்திலும் நடந்தது. அப்போது, ஒரு பயணி விமான நிலையக் கழிப்பறையில் சிக்கி, விமானத்தை தவறவிட்டார். பின்னர் அவர் ஓடுபாதையில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்றார். ஆனால், விமானம் புறப்பட்டுவிட்டது. அந்த பயணிக்கு சுமார் 30 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T19:03:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏரியில் தத்தளித்து உயிரிழந்த 19 வயது இளைஞர்: கடலில் மாயமான பெண்: தீவிர தேடுதல் வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-19-yrs-old-dies-in-grasmere-lake-1786302177"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-19-yrs-old-dies-in-grasmere-lake-1786302177</id>
            <summary type="text">பிரித்தானியாவில் வார இறுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தனித்தனி நீர்நிலை விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. லேக் மாவட்டத்தில் நடந்த சோகம்லேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் வார இறுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தனித்தனி நீர்நிலை விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன.</p><h2> லேக் மாவட்டத்தில் நடந்த சோகம்</h2><p>லேக்(Lake) மாவட்டத்தின் கிராஸ்மியர்(Grasmere) ஏரியில் 19 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> சனிக்கிழமை மாலை 4.35 மணியளவில் இளைஞர் ஒருவர் ஏரியில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கும்ப்ரியா காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p>அங்கிருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69683ad5-c219-4d8c-9996-54f3ac366101/26-6a78cee327c22.webp' /></p><p> இந்த சம்பவத்தில் யார் மீதும் சந்தேகம் இல்லை என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் சிறுவனை காப்பாற்ற உதவிய பொதுமக்களுக்கு கும்ப்ரியா காவல்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2> காணாமல் போன பெண்</h2><p>சனிக்கிழமை இரவு வேமவுத்(Weymouth) கடற்கரைப் பகுதியில் பெண் ஒருவர் கடலுக்குள் சென்றதாக பொதுமக்களில் ஒருவர் இரவு 11.05 மணிக்கு டோர்செட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> கடலுக்கு சென்ற பெண் தனியாக இருந்ததாகவும், பின்னர் அவர் திரும்பி வெளியே வரவில்லை என்றும் நம்பப்படுகிறது.</p><p>காணாமல் போனதாக கூறப்படும் பெண் நடுத்தரமான உடல் அமைப்பு கொண்டவர் என்றும், வெளிர் நிறத்தில் உள்ள நீண்ட ஆடையை அணிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p> இந்நிலையில் கடலில் இறங்கி காணாமல் போனதாக நம்பப்படும் பெண்ணை கண்டுபிடிப்பதற்காக கடல்வழி மற்றும் வான்வழி மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T19:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நைஜர் நாட்டில் கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன்: அல்ஜீரிய ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/algerian-military-rescues-german-citizen-in-niger-1786296265"></link>
            <id>https://news.lankasri.com/article/algerian-military-rescues-german-citizen-in-niger-1786296265</id>
            <summary type="text">நைஜர் நாட்டு எல்லையில் கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் அல்ஜீரிய ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளார்.கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர்நைஜர் நாட்டின் எல்லை பகுதியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜர் நாட்டு எல்லையில் கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் அல்ஜீரிய ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர்</h2><p>நைஜர் நாட்டின் எல்லை பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆயுதம் ஏந்திய குற்ற கும்பலால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார்.</p><p> இந்நிலையில் அவர் அல்ஜீரிய ராணுவ படையால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் செக்யூரிட்டி போர்சஸ் (பாதுகாப்பு படையினரால்) பாதுகாப்பாக மீட்கப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அல்ஜீரிய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4b97439-1c37-4fb2-bb70-8e3efd4e678a/26-6a78b7caed5aa.webp' /></p><p> மீட்கப்பட்ட ஜேர்மன் குடிமகன் அல்ஜீரியாவின் தென்பகுதியான இன் குஸ்ஸாம் பகுதியில் இருந்து தலைநகருக்கு அருகிலுள்ள பூஃபாரிக்(Boufarik) ராணுவ தளத்திற்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p> மீட்கப்பட்ட ஜேர்மன் நாட்டவரின் உடல் நலம் தற்போது சீராக இருப்பதாகவும், உரிய நேரத்தில் ஜேர்மன் அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் எவ்வாறு மீட்கப்பட்டார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை அல்ஜீரிய அரசு இன்னும் வெளியிடவில்லை.</p><h2>ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வழங்கிய தகவல்</h2><p>ஜேர்மன் குடிமகன் கடத்தப்பட்ட விவகாரம் தங்களுக்கு தெரியும் என்றும், வெளிநாடுகளில் கடத்தப்படும் ஜேர்மன் குடிமக்கள் குறித்து எந்தவொரு கருத்தும் அரசாங்கம் தெரிவிப்பதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T17:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டென்மார்க்கில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு: கும்பல் மோதலில் பலர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/denmark-shooting-multiple-injured-in-holbaek-1786294577"></link>
            <id>https://news.lankasri.com/article/denmark-shooting-multiple-injured-in-holbaek-1786294577</id>
            <summary type="text">டென்மார்க்கில் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். டென்மார்க்கில் துப்பாக்கிச் சூடுஞாயிற்றுக்கிழமை டென்மார்க்கின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டென்மார்க்கில் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.</p><h2> டென்மார்க்கில் துப்பாக்கிச் சூடு</h2><p>ஞாயிற்றுக்கிழமை டென்மார்க்கின் ஹோல்பேக்(Holbaek) நகரின் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> தலைநகர் கோபன்ஹேகனுக்கு(Copenhagen) மேற்கே 70 கி.மீ தொலைவில் ஹோல்பேக் நகரம் அமைந்துள்ளது.</p><p> சட்டவிரோதமான குற்ற பின்னணி கொண்ட கும்பலுக்கு இடையே நடந்த உட்கட்சி பகை அல்லது நேரடி மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது நடைபெற்று இருக்கலாம் என்று டேனிஷ் காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/787bbfc6-11bc-4847-bc79-bb2703c694d4/26-6a78b132a9f95.webp' /></p><p> ஹோல்பேக் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த அவசர அழைப்புகளை தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை என்னவென்று தகவல் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் குற்றவாளிகளை கைது செய்ய தீவிரமான விசாரணைகள் நடைபெற்று வருவதாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T16:56:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டால்பின் புயல் தாக்கம்: சீனாவில் 1,300 விமானங்கள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shanghai-cancels-flights-amid-typhoon-dolphin-1786291112"></link>
            <id>https://news.lankasri.com/article/shanghai-cancels-flights-amid-typhoon-dolphin-1786291112</id>
            <summary type="text">Shanghai Cancels 1300 Flights: டால்பின் புயல் காரணமாக சீனாவில் 1,300 விமானங்கள் ரத்து செய்யபட்டது.

60 சதவீத&amp;nbsp;விமானங்கள் ரத்துசீனாவின் கிழக்கு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shanghai Cancels 1300 Flights: டால்பின் புயல் காரணமாக சீனாவில் 1,300 விமானங்கள் ரத்து செய்யபட்டது.
</p><h2>
60 சதவீத&nbsp;விமானங்கள் ரத்து</h2><p>சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் டால்பின் புயல் காரணமாக, ஷாங்காய் நகரின் ஹொங்கியாவோ மற்றும் புதோங் விமான நிலையங்களில் 1,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்ட விமானங்களில் சுமார் 60 சதவீதம் ஆகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63707d84-ffb7-4249-9fc0-7f8b2f588a4f/26-6a78a3a961351.webp' /></p><h2>தைவானில் கடும் மழை</h2><p>புயல் 162 கிமீ வேகத்தில் காற்றுடன் நகர்ந்து, வட தைவானில் கடும் மழையை ஏற்படுத்தியுள்ளது. தைவானின் தலைநகர் தைப்பேயில் மழை பெய்ததால், சில தைவான் விமான நிறுவனங்கள் சீனாவுக்கான விமானங்களையும் ரத்து செய்துள்ளன.
</p><p>
சீன வானிலை ஆய்வாளர்கள், ஜெஜியாங் மற்றும் ஃபுஜியான் மாகாணங்களில் 200-400 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளனர். இதனால் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.
</p><p>
ஜெஜியாங் மாகாணத்தின் தைஷோ நகரில் 3,90,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஷாங்காயில் 30,000-க்கும் மேற்பட்டோர் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். </p><p></p><h2>பாதுகாப்பாக இருக்க&nbsp;அறிவுறுத்தல்</h2><p>மேலும், படகு சேவைகள், கப்பல் சுற்றுலா போன்ற அனைத்து நீர்வழி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

அதிகாரிகள், மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும், தேவையான பொருட்களை சேமித்து கொள்ளவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
டால்பின் புயல் சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காரணமாக, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T15:56:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,234 இந்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-deports-3234-indians-in-2026-1786265403"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-deports-3234-indians-in-2026-1786265403</id>
            <summary type="text">Canada Deports Indians: கனடாவிலிருந்து இந்தியர்கள் அதிகளவில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.3,234 இந்தியர்கள் 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 3,234 இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada Deports Indians: கனடாவிலிருந்து இந்தியர்கள் அதிகளவில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2>3,234 இந்தியர்கள் </h2><p>2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 3,234 இந்திய குடிமக்கள் கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கனடா எல்லை சேவை நிறுவனம் வெளியிட்ட தரவுகளை PTI தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dadbf9c-d275-4bba-aae3-3bd4938059f9/26-6a78408814c75.webp' /></p><p>
2025-ஆம் ஆண்டில், 3,779 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். </p><p>ஆனால், 2026-இன் முதல் பாதியிலேயே, இந்தியர்கள் அதிக அளவில் வெளியேற்றப்பட்டவர்களாக இருக்கின்றனர். இந்தியர்களுக்கு அடுத்ததாக 1,573 மெக்சிகோ குடிமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>இந்தியர்கள் முதலிடம்</h2><p>கடந்த ஐந்து ஆண்டுகளாக மெக்சிகோ குடிமக்களே அதிகமாக வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
</p><p>
2020-ஆம் ஆண்டில் 1,424 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். 2021-இல் 603, 2022-இல் 786, 2023-இல் 1,132, 2024-இல் 2,004 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
கனடா எல்லை சேவை நிறுவனம், வெளியேற்றப்பட்டவர்களின் காரணங்களை நாடு வாரியாக வெளியிடவில்லை. பொதுவாக, விசா விதிமுறைகளை மீறுதல், அகதி அல்லது தஞ்சம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது, விசா காலாவதியான பின்னும் தங்கியிருத்தல், விசா மோசடி போன்ற காரணங்களால் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>இன்னும்&nbsp;7,669 இந்தியர்கள்..,</h2><p>2026-இல், இந்தியர்கள் கனடாவின் “வெளியேற்றப்பட உள்ளவர்களின் பட்டியலில்” அதிகமாக இடம்பெற்றுள்ளனர். அதில் 7,669 இந்தியர்கள் இன்னும் வெளியேற்றப்படுவதற்காக காத்திருக்கின்றனர்.
</p><p>
இந்த தரவுகள், கனடாவில் இந்திய குடிமக்கள் எதிர்கொள்ளும் குடியேற்ற சவால்களை வெளிப்படுத்துகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T15:51:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறாது: ட்ரம்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-rejects-trump-s-peace-plan-of-gaza-1786282839"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-rejects-trump-s-peace-plan-of-gaza-1786282839</id>
            <summary type="text">ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p><p>

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்துள்ளார்.
</p><p>
</p><h2>அமைதித் திட்டம்</h2><p>காஸாவுக்கான அமைதித் திட்டத்தை இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) அமைதிக் குழு முன்மொழிந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d693950-762e-4cac-824b-a21e574da61e/26-6a78835a7fe05.webp' /></p><p></p><p>
ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது எனக் கூறி அதனை நிராகரித்துள்ளார்.</p><p>

இதுகுறித்து தனது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், "இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: 15 அம்சங்களைக் கொண்ட அந்த ஆவணத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது.</p><p><b> நீங்கள் அதை சொல்லவில்லை</b> என்று சிலர் கூறுவதை நான் கேட்டேன். எனவே அதை நான் மீண்டும் இங்கே கூறுகிறேன். 

ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை இஸ்ரேலியப் படைகள் எந்தவொரு படைகளையும் திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளாது" என்றார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T15:34:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்ஸர்களை பறக்கவிட்ட சிராஜ்: பயிற்சி டெஸ்டில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/siraj-smashing-sixers-india-beat-sri-lanka-xi-test-1786285267"></link>
            <id>https://news.lankasri.com/article/siraj-smashing-sixers-india-beat-sri-lanka-xi-test-1786285267</id>
            <summary type="text">இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி டெஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>

இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>

</p><h2>பயிற்சி டெஸ்ட்&nbsp;</h2><p>இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் லெவன் அணிகளுக்கு இடையிலான பயிற்சி டெஸ்ட் கொழும்பில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18d1cd61-2e21-4e36-bb37-3a056079c972/26-6a788cd694185.webp' />&nbsp;</p><p></p><p>
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 363 ஓட்டங்களும், இந்தியா அணி 357 ஓட்டங்களும் குவித்தன. இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 200 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.</p><p>

பின்னர் ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வால் 61 ஓட்டங்களும், கில் 44 ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p>

மொஹம்மது சிராஜ் (Mohammed Siraj) சிக்ஸர்களை பறக்கவிட்டு 15 பந்துகளில் 32 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 1 பவுண்டரி) விளாச, இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c2277e8-ff26-443c-bb84-180cd66bf6ca/26-6a788cd5d81f5.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T14:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[5,700 ஆண்டுகள் சார்ஜ் இல்லாமல் இயங்கும் வைர அணு பேட்டரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/diamond-nuclear-battery-lasts-5700-years-1786283378"></link>
            <id>https://news.lankasri.com/article/diamond-nuclear-battery-lasts-5700-years-1786283378</id>
            <summary type="text">Diamond Nuclear Battery: 5,700 ஆண்டுகள் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.5,700 ஆண்டுகள் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரி2024...</summary>
            <content type="html"><![CDATA[<p>Diamond Nuclear Battery: 5,700 ஆண்டுகள் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.</p><h2>5,700 ஆண்டுகள் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரி</h2><p>2024-ஆம் ஆண்டு, பிரித்தானியாவின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் UK Atomic Energy Authority இணைந்து, உலகையே ஆச்சரியப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டனர்.
</p><p>
அது, 5,700 ஆண்டுகள் சார்ஜ் செய்யாமல் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரி ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff50587-897d-4da0-9405-bad9c5091d6a/26-6a7885747d7f0.webp' /></p><h2>
semiconductor போல செயல்படும் வைரம்</h2><p>இந்த பேட்டரி, Carbon-14 எனப்படும் கதிர்வீச்சு ஐசோடோப்பை பயன்படுத்துகிறது. பொதுவாக Carbon-14 பழமையான பொருட்களின் வயதை கணக்கிடப் பயன்படுகிறது. ஆனால் இப்போது, அதே கதிர்வீச்சை சக்தி உற்பத்திக்காக பயன்படுத்தும் முயற்சி வெற்றியடைந்துள்ளது.
</p><p>
Carbon-14 மிக மெதுவாக சிதைவதால், 5,700 ஆண்டுகள் கழித்தும் பேட்டரி தனது சக்தியின் பாதியை வழங்கும். இந்த கதிர்வீச்சு, செயற்கை வைரத்தில் அடைக்கப்பட்டிருப்பதால், radiation வெளியேறாது.
</p><p>
வைரமே radiation-ஐ தடுக்கவும், semiconductor போல செயல்பட்டு, electrons-ஐ மின்சாரமாக மாற்றவும் உதவுகிறது.
</p><p></p><h2>microwatt அளவிலான சக்தி</h2><p>இந்த பேட்டரி microwatt அளவிலான சக்தி மட்டுமே உற்பத்தி செய்யும். அதனால், இது மொபைல், லேப்டாப், கார்கள் போன்ற சாதனங்களுக்கு பொருந்தாது. </p><p>ஆனால், மருத்துவ சாதனங்கள் (pacemaker, neural implants), விண்வெளி ஆராய்ச்சி (satellites, deep space probes), தொலைதூர கண்காணிப்பு கருவிகள் (Arctic stations, undersea sensors) போன்ற இடங்களில், நீண்ட காலம் பராமரிப்பு இல்லாமல் இயங்க வேண்டிய சூழலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.</p><p>

மேலும், இந்த பேட்டரி அணு கழிவுகளை பயனுள்ள சக்தியாக மாற்றும் திறன் கொண்டது. அணு உலைகளில் இருந்து எடுக்கப்படும் Carbon-14, வைரத்தில் அடைக்கப்பட்டு, நூற்றாண்டுகளுக்கு சக்தி வழங்கும். இதனால், அணு கழிவுகளை பாதுகாப்பாக கையாளும் புதிய வழி கிடைக்கிறது.</p><p></p><p>
</p><h2>
புரட்சிகர கண்டுபிடிப்பு</h2><p>ஆராய்ச்சியாளர்கள், இந்த தொழில்நுட்பத்தை வணிக ரீதியாக கொண்டு வர கூட்டாண்மைகள் மற்றும் விதிமுறை அனுமதிகள் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த வைர அணு பேட்டரி, சார்ஜ் செய்ய முடியாத சூழலில் நீண்ட கால சக்தி வழங்கும் புரட்சிகர கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T13:47:24+00:00</updated>
        </entry>
    </feed>
