<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-16T17:29:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலாவியில் கடத்தப்பட்ட பிரித்தானிய பெண்: பரிசுத் தொகையை அறிவித்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-auditor-abducted-malawi-police-offer-cash-1789577772"></link>
            <id>https://news.lankasri.com/article/british-auditor-abducted-malawi-police-offer-cash-1789577772</id>
            <summary type="text">British Auditor Abducted Malawi Police offer Cash Reward: மலாவி நாட்டில் பிரித்தானிய பெண் ஒருவர் பகல் வேளையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>British Auditor Abducted Malawi Police offer Cash Reward: மலாவி நாட்டில் பிரித்தானிய பெண் ஒருவர் பகல் வேளையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> கடத்தப்பட்ட பிரித்தானிய தணிக்கையாளர்</h2><p>மலாவி(Malawi) நாட்டின் பிளான்டைர்(Blantyre) நகரில் பட்டப்பகலில் 47 வயது பிரித்தானிய பெண் கடத்தப்பட்டதை அடுத்து தீவிர தேடுதல் வேட்டையை அந்நாட்டு காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p> &nbsp;ஆடிட் கன்சல்ட் லிமிடெட் நிறுவனத்தில் தணிக்கையாளராக பணிபுரியும் நுஸ்ரத் உஸ்மான்(Nusrat Osman) என்ற பிரித்தானியா பெண்ணே இந்த கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.</p><p> மவுண்ட் ப்ளீசண்ட் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இருந்து&nbsp; நுஸ்ரத் உஸ்மான் வெள்ளிக்கிழமை 12.30 மணிக்கு அடையாளம் தெரியாத 4 சந்தேக நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e75c9bc4-bd23-44a0-8175-b9db48a75267/26-6aaaca2e08460.webp' /></p><p> கடத்தல்காரர்கள் சாம்பல் நிற நிசான் டூலிஸ் காரை பயன்படுத்தி தப்பிச் சென்று இருக்கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர்.</p><h2> பரிசுத் தொகையை அறிவித்த பொலிஸார்</h2><p>நுஸ்ரத் உஸ்மானை விரைவாக மீட்டெடுக்க எண்ணி, கடத்தல் மற்றும் நுஸ்ரத் உஸ்மான் குறித்த துப்பு கொடுப்பவர்களுக்கு 30 மில்லியன் மலாவி கவாச்ச(சுமார் £12,800) பரிசு தொகையாக வழங்கப்படும் என்று மலாவி காவல்துறை அறிவித்துள்ளது.</p><p> காவல்துறையினர் உள்ளூர் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக குறுஞ்செய்திகளை அனுப்பி தீவிர தேடுதல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், தற்போதைய மீட்பு நடவடிக்கையை பாதிக்கும் வகையில் சரிபார்க்கப் படாத எந்தவொரு வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p> உஸ்மான் கடத்தப்பட்டதை உறுதிப்படுத்திய அவரது குடும்பம், உஸ்மான் அமைதியான முறையில் தணிக்கையாளராக பணியாற்றி வந்ததாகவும், அவருக்கு யாருடனும் எந்தவொரு தனிப்பட்ட விரோதங்களும் இல்லை என்று அவரது கணவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-16T16:56:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் இரவில் இடிந்து விழுந்த சிதைக்கப்பட்ட கட்டிடம்: 21 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/war-damaged-building-collapses-in-gaza-21-dead-1789575900"></link>
            <id>https://news.lankasri.com/article/war-damaged-building-collapses-in-gaza-21-dead-1789575900</id>
            <summary type="text">War Damaged Building Collapses in Gaza 21 Dead: காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் சிதைக்கப்பட்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 21 பேர் வரை கொல்லப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>War Damaged Building Collapses in Gaza 21 Dead: காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் சிதைக்கப்பட்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 21 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2>இடிந்து விழுந்த கட்டிடம்</h2><p>காசாவில் இஸ்ரேலிய படையினரின் வெடிகுண்டு தாக்குதலில் சிதைக்கப்பட்ட கட்டிடத்தில் சில இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்தது.</p><p> இந்நிலையில் இந்த கட்டிடம் இரவில் திடீரென இடிந்து விழுந்ததில் 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> மேலும் 14 பேர் வரை படுகாயமடைந்துள்ள நிலையில், டஜன் கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர்.</p><p></p><h2> மீட்பு பணி தீவிரம்</h2><p>கட்டிடம் இடிந்து விழுந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு பணியாளர்கள் வெறும் கைகளால் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.</p><p> உயிருடன் இருப்பவர்களை மீட்கும் நம்பிக்கை தங்களிடம் இருப்பதாக காசா நகரின் சிவில் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் ராயத் அல்-தஹ்ஷான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p> காசாவில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் இஸ்ரேலின் வெடிகுண்டு தாக்குதலில் சிதைக்கப்பட்டுள்ளன.</p><p> இத்தகைய 2000க்கும் அதிகமான சிதைந்த கட்டிடங்களில் 10,000 பாலஸ்தீனியர்கள் தற்போது தங்கி வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-16T16:25:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயிரக்கணக்கான வங்காளதேச மக்களின் விசாக்களை திடீரென ரத்து செய்த UAE]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uae-cancels-5000-bangladeshis-work-visas-1789572955"></link>
            <id>https://news.lankasri.com/article/uae-cancels-5000-bangladeshis-work-visas-1789572955</id>
            <summary type="text">UAE cancels 5,000 Bangladeshis’ work visas: ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சுமார் 5,000 வங்காளதேச குடியிருப்பு மற்றும் வேலை விசாக்களை திடீரென ரத்து செய்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE cancels 5,000 Bangladeshis’ work visas: ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சுமார் 5,000 வங்காளதேச குடியிருப்பு மற்றும் வேலை விசாக்களை திடீரென ரத்து செய்துள்ளது.</p><p>

இதனால் அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் நீண்டகால குடியிருப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fa37e1b-e0bb-4fb0-8b07-68aa45910b2c/26-6aaab83cd9ece.webp' /></p><p>பலர் குடும்பத்துடன் வங்காளதேசம் சென்றிருந்தபோது, தங்களின் விசா UAE-யில் ரத்து செய்யப்பட்டிருப்பதை அங்கு இருந்தபோது தான் அறிந்தனர். இதனால் அவர்கள் மீண்டும் UAE-க்கு திரும்ப முடியாமல், வேலை, வணிகம், குடும்பம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
சிலர் மின்னஞ்சல், மொபைல் செய்தி அல்லது UAE-யில் உள்ள ஸ்பான்சர் மூலம் விசா ரத்து செய்யப்பட்ட தகவலை பெற்றதாக தெரிவித்துள்ளனர். ஆனால், முன்கூட்டியே எச்சரிக்கை அல்லது தெளிவான காரணம் எதுவும் வழங்கப்படவில்லை.</p><p></p><p>பலர் பல ஆண்டுகளாக அமீரகத்தில் வாழ்ந்து, வணிகம் நடத்தி, சொத்து வாங்கி, குடும்பத்துடன் தங்கியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்த விசா ரத்துக்கு காரணம் தெளிவாக தெரியவில்லை. பாதுகாப்பு சோதனை, ஆவண பிரச்சினைகள், ஓன்லைன் செயல்பாடுகள் தொடர்பான சோதனைகள் போன்றவை காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
</p><p>
வங்காளதேச அரசு, UAE தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, சட்டப்படி தவறு செய்யாதவர்களின் வழக்குகளை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
</p><p>
இதனால் பாதிக்கப்பட்ட வங்காளதேச வெளிநாட்டு தொழிலாளர்கள், தங்கள் குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் உடனடி தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T15:36:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் Canon EOS R8 Mark II அறிமுகம் - IBIS, 40fps ஷூட்டிங் வசதியுடன்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canon-eos-r8-mark-ii-india-launch-specs-1789570829"></link>
            <id>https://news.lankasri.com/article/canon-eos-r8-mark-ii-india-launch-specs-1789570829</id>
            <summary type="text">Canon நிறுவனம் தனது புதிய EOS R8 Mark II full-frame mirrorless கமெராவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கமெரா 24.2MP திறன் கொண்டது.

Canon E...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canon நிறுவனம் தனது புதிய EOS R8 Mark II full-frame mirrorless கமெராவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. </p><p>இந்த கமெரா 24.2MP திறன் கொண்டது.

Canon EOS R8 Mark II body விலை ரூ.1,78,995 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e075cd2d-b40e-4254-bb22-ae3500b9e227/26-6aaaaf0eddb87.webp' /></p><p>முந்தைய EOS R8 மாடலை விட, இந்த புதிய கமெராவில் In-body Image Stabilisation (IBIS), Autofocus Joystick, மற்றும் 40fps Burst Shooting போன்ற மேம்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
</p><h2>
அளவு மற்றும் எடை
</h2><p> 
EOS R8 Mark II, பேட்டரி மற்றும் கார்டுடன் சேர்த்து 546 கிராம் எடையுடன், 131.4 x 90.0 x 79.7mm அளவில் வருகிறது. இது Canon நிறுவனத்தின் சிறிய மற்றும் இலகுவான IBIS கொண்ட முழு-பிரேம் கமெரா எனக் கருதப்படுகிறது.</p><p>
</p><p></p><h2>Stabilisation மற்றும் Autofocus
</h2><p> 
5-axis IBIS, RF லென்ஸ்களுடன் இணைந்து 7.5 stops correction வழங்குகிறது. </p><p>Dual Pixel CMOS AF II தொழில்நுட்பம் DIGIC X processor மூலம் இயக்கப்படுகிறது.
</p><h2>
ஷூட்டிங் திறன்</h2><p>

Electronic shutter - 40fps
</p><p>
Pre-Continuous Shooting - shutter அழுத்துவதற்கு முன்பே படங்களைப் பதிவு செய்யும் வசதி
</p><p>
ISO - 100 முதல் 102,400 வரை, விரிவாக்கம் 204,800 வரை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36ddffd0-e43d-42e5-bd6d-34ed98944387/26-6aaaaf0f94d7f.webp' /></p><h2>வீடியோ வசதிகள்</h2><p> 6K oversampled 4K 60p
</p><p>
Full HD 180p

</p><p>anon Log 3, LUT support, Cinema EOS line-இன் Custom Picture function.</p><h2>

இணைப்பு (Connectivity)
</h2><p>
Wi-Fi 6, Bluetooth 5.3, 3.5mm mic input, micro HDMI port ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>
விலை</h2><p>
EOS R8 Mark II Body - ரூ.1,78,995
</p><p>
Extension Grip EG-E2 - ரூ.9,995
</p><p>
Tripod Grip HG-1000TBR + Bluetooth Remote - ரூ.11,495.
</p><p>
இந்த கமெரா, புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோ கிரியேட்டர்களுக்கு Canon வழங்கும் புதிய, சக்திவாய்ந்த, இலகுவான சாதனமாகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T14:57:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-invited-as-eu-s-first-associate-member-1789564922"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-invited-as-eu-s-first-associate-member-1789564922</id>
            <summary type="text">Canada invited as EUs first associate member: கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக அழைக்கப்படவுள்ளது.

EU முதல் இணை உறுப்பினராக&amp;nbsp;கனட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada invited as EUs first associate member: கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக அழைக்கப்படவுள்ளது.
</p><h2>
EU முதல் இணை உறுப்பினராக&nbsp;கனடா</h2><p>ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது 27 உறுப்பினர் நாடுகளுக்குள், கனடாவை முதல் இணை உறுப்பினராக (Associate Member) அழைக்கத் தீர்மானித்துள்ளது.</p><p>

இந்த அறிவிப்பை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன், பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் நடைபெற்ற ‘State of the Union’ உரையில் வெளியிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efca419f-409f-4e69-ac39-accd5fafef28/26-6aaa97fbb1cc8.webp' /></p><p>கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்த உரையில் கலந்து கொண்டார். அவர், கனடா முழுமையான உறுப்பினராக விரும்பவில்லை என்றாலும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டாண்மை குறித்து தனித்துவமான ஒப்பந்தத்தை விரும்புவதாக தெரிவித்தார்.
</p><p>
தற்போது, கனடா-அமெரிக்கா இடையே கடுமையான வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்த சுங்க வரிகளை, கனடா ‘டொலர்-க்கு டொலர்’ என்ற முறையில் எதிர்த்து வருகிறது. இதனால், கனடா தனது பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஐரோப்பாவுடன் நெருக்கமான உறவைத் தேடுகிறது.
</p><p></p><h2>EU - கனடா&nbsp;உறவு புதிய நிலைக்கு முன்னேற்றம்</h2><p>ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஏற்கனவே CETA (Comprehensive Economic and Trade Agreement) என்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. 2017-இல் அமுலுக்கு வந்த இந்த ஒப்பந்தம், 99 சதவீத சுங்க வரிகளை நீக்கியது. இப்போது, EU-Canada உறவு, “பொது வளமும் பொருளாதார பாதுகாப்பும்” என்ற புதிய நிலைக்கு முன்னேறுகிறது.</p><p>

உர்சுலா வான் டெர்லெயன், “கனடா மற்றும் ஐரோப்பா உலகைப் பார்க்கும் பார்வை ஒன்றே. AI, காலநிலை மாற்றம், ஆர்க்டிக் பாதுகாப்பு, மற்றும் புவியியல் அரசியல் போன்ற துறைகளில் இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
</p><p></p><h2>EU-வை 40 நாடுகளாக விரிவாக்கும் திட்டம்</h2><p>பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், EU-வை 40 நாடுகளுக்கு விரிவாக்கும் யோசனையை முன்வைத்துள்ளார். அதில் கனடா, பிரித்தானியா, துருக்கி, நோர்வே, ஐஸ்லாந்து ஆகியவை சாத்தியமான உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
இந்த முடிவு, அமெரிக்கா மற்றும் சீனாவை சார்ந்திருப்பதை குறைத்து, ஜனநாயக நாடுகளுடன் வலுவான கூட்டாண்மையை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T14:22:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய எண்ணெய் இறக்குமதி - இந்தியாவிற்கு 100 சதவீதம் வரி விதிக்கவுள்ள அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-faces-us-100-percent-tariff-on-russian-oil-1789568471"></link>
            <id>https://news.lankasri.com/article/india-faces-us-100-percent-tariff-on-russian-oil-1789568471</id>
            <summary type="text">India faces US 100 percent tariff on Russian oil: அமெரிக்கா விரைவில் இந்தியாவிற்கு 100 சதவீத இறக்குமதி வரியை விதிக்க வாய்ப்புள்ளது.

40.8 பில்லியன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>India faces US 100 percent tariff on Russian oil: அமெரிக்கா விரைவில் இந்தியாவிற்கு 100 சதவீத இறக்குமதி வரியை விதிக்க வாய்ப்புள்ளது.
</p><h2>
40.8 பில்லியன் டொலர் கச்சா எண்ணெய் இறக்குமதி</h2><p>இந்தியா 2026 நிதியாண்டில் ரஷ்யாவிலிருந்து 40.8 பில்லியன் டொலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.

இது இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியின் மூன்றில் ஒரு பங்காகும். </p><p>ஜூலை 2026-இல், ரஷ்யா இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் 51 சதவீதம் பங்கைக் கொண்டிருந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a7ff7f-713f-408c-a73e-b1891776e693/26-6aaaa5d9a4be9.webp' /></p><h2>100 சதவீத வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்</h2><p>இந்நிலையில், அமெரிக்க காங்கிரஸில் “Sanctioning Russia and Iran Act” என்ற மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. </p><p>இந்த மசோதா, ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு, ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.
</p><p></p><h2>இந்தியாவிற்கு&nbsp;சிக்கல் </h2><p>இந்த நடவடிக்கை இந்தியாவிற்கு பெரும் சவாலாக உள்ளது. ஏனெனில், ரஷ்ய எண்ணெய் குறைந்த விலையில் கிடைப்பதால், இந்தியா தனது இறக்குமதி செலவுகளை குறைத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வந்தது. ஆனால், அமெரிக்கா கூடுதல் வரி விதித்தால், ஆயிரக்கணக்கான இந்திய ஏற்றுமதி பொருட்கள் பாதிக்கப்படலாம்.
</p><p>
இந்தியா தற்போது அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வரி அச்சுறுத்தல், இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவை அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க வைக்கும் அழுத்தமாக மாறும் அபாயம் உள்ளது.
</p><p></p><p>Global Trade Research Initiative (GTRI) நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா, “இந்தியா 1.4 பில்லியன் மக்களுக்கு மலிவான எரிசக்தி வழங்க ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. இது போருக்கு நிதி வழங்க அல்ல. 100 சதவீத வரி விதிப்பது இந்திய ஏற்றுமதியாளர்களையும் அமெரிக்க நுகர்வோரையும் பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>

அமெரிக்க காங்கிரஸில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் கடுமையான சிக்கலில் சிக்கக்கூடும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T14:17:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷம் முதல் மீனம் வரை.., சொந்தத்துக்குள் யாருக்கு திருமணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/12-rasi-marriage-rasi-palan-in-tamil-1789561548"></link>
            <id>https://news.lankasri.com/article/12-rasi-marriage-rasi-palan-in-tamil-1789561548</id>
            <summary type="text">திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும். 

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்துவதாகும். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும். </p><p>

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்துவதாகும். </p><p>

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அது எந்த நேரத்திலும், காலகட்டத்திலும் நடக்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.</p><p> 

அதனால்தான் திருமணம் சுபமுகூர்த்தத்தில் நடத்தப்பட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. </p><p>

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரின் ஜாதகத்தில் உள்ள 7ஆம் வீடு மற்றும் 7ஆம் அதிபதி ஆகியோரின் நிலையை வைத்து திருமணம் மற்றும் திருமண வாழ்க்கை கணிக்கப்படுகிறது.
</p><p>
மேலும், நமது ராசியானது நம்முடைய திருமண வாழ்க்கையில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
</p><p>
ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு குருவும் திருமணத்துக்கான முக்கிய கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையான ராசிக்காரர்களுக்கு, சொந்தத்துக்குள் யாருக்கு திருமணம் நடக்கும் என்று இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AXx7F5zFksY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T14:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2027-ipl-auction-to-be-held-in-india-1789564947"></link>
            <id>https://news.lankasri.com/article/2027-ipl-auction-to-be-held-in-india-1789564947</id>
            <summary type="text">2027 ipl auction to be held in india: ஐபிஎல் ஏலத்தை 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாக குழு முன்வந்துள்ளது.

இந்தியாவில் நடைபெற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ipl auction to be held in india: ஐபிஎல் ஏலத்தை 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாக குழு முன்வந்துள்ளது.
</p><h3>
இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம் </h3><p>

உலக அளவில் நடைபெறும் T20 கிரிக்கெட் போட்டிகளில் பிசிசிஐ நடத்தி வரும் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமானது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f921aab-8065-4762-b9fd-41292cc695a2/26-6aaa9815200e1.webp' /></p><p>

வீரர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு மெகா ஏலமும், ஆண்டுக்கு ஒருமுறை மினி ஏலமும் நடைபெறும். </p><p>

கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் கொச்சியில் மினி ஏலம் நடைபெற்றது. அதன் பிறகு வெளிநாடுகளில் நடைபெற்று வந்தது.</p><p> 

2024 ஆம் ஆண்டு துபாயிலும், 2025 ஆம் ஆண்டு ஜெட்டாவிலும், 2026 ஆம் ஆண்டு அபுதாபியிலும் நடைபெற்றது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், 2027 ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்தை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முன்வந்துள்ளது. </p><p>

மினி ஏலத்திற்காக ஐபிஎல் அணிகள் வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் உள்ள பயண சுமையை கருத்தில் கொண்டு, இந்தியாவிலே நடத்த ஐபிஎல் நிர்வாக குழு பரிசீலித்துள்ளது. </p><p>

இந்தியாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை திருமண சீசன் என்பதால், அந்தக் காலகட்டத்தில் 5 நட்சத்திர ஹொட்டல்கள் கிடைப்பதைப் பொறுத்து ஏலம் நடைபெறும் நகரம் தேர்வு செய்யப்படும். இந்த ஏலத்திற்காக, பிசிசிஐக்கு ஓரிரு இரவுகளுக்கு 100க்கும் மேற்பட்ட அறைகள் தேவைப்படுகிறது.</p><p> 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐபிஎல் தலைவர் அருண் தூமல், "ஒவ்வொரு ஆண்டும், இதை இந்தியாவில் நடத்த நாங்கள் முயற்சிக்கிறோம், ஆனால் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் பருவம் என்பதால் எங்களுக்கு இடம் கிடைப்பதில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3fa102d-be8c-48b2-be56-a93e582c2a4c/26-6aaa9815cbf0a.webp' /></p><p>
எனவே, இந்த ஆண்டு ஏலம் சிறியதாக இருக்கும் என்பதாலும், இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், நிச்சயமாக இங்கே நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

மேலும், பல்வேறு வீரர்கள் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து அதிருப்தி தெரிவித்த நிலையில், அணிகளிடம் அது குறித்து கருத்து கேட்டுள்ள ஐபிஎல் நிர்வாகம் அந்த விதியை மறுபரிசீலனை செய்ய தயாராக உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T13:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண்: திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-woman-dies-in-sharjah-1789561792"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-woman-dies-in-sharjah-1789561792</id>
            <summary type="text">Indian woman dies in Sharjah: ஷார்ஜாவில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண்ணொருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.


கேரளாவைச் சேர்ந்த அஃபீனா ரஹீம் (Dr. Afeena R...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian woman dies in Sharjah: ஷார்ஜாவில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண்ணொருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
</p><p>

கேரளாவைச் சேர்ந்த அஃபீனா ரஹீம் (Dr. Afeena Raheem, 32), தன் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஷார்ஜாவில் வாழ்ந்துவந்தார். அஃபீனாவின் கணவர் யாஸர் (Yasar T), ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.</p><p>
தம்பதியருக்கு மூன்றரை மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அஃபீனாவின் சகோதரியான ரம்ஷீனாவும் தன் மகனுடன் அதே வீட்டில் வாழ்ந்துவருகிறார்.</p><h3>

திடீர் மரணம்</h3><p>

திங்கட்கிழமை காலை அஃபீனாவின் இளைய பிள்ளையின் அழுகுரல் கேட்டு என்ன நடக்கிறது என பார்க்கச் சென்ற ரம்ஷீனா, தன் சகோதரியான அஃபீனா சமையலறையில் சுயநினைவிழந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe2a87f7-f868-4029-8c24-92546b136db9/26-6aaa8bc15d860.webp' /></p><p>
உடனடியாக ஆம்புலன்சை அழைத்ததுடன், அஃபீனாவுக்கு உயிர் காக்கும் சிகிச்சையும் அளித்துள்ளார் ரம்ஷீனா.</p><p>

ஆனால், அஃபீனா தனியார் மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
நல்ல ஆரோக்கியமாக இருந்த அஃபீனா எதனால் திடீரென உயிரிழந்தார் என்பது தெரியாமல் திகைத்துப்போயிருக்கும் அவரது குடும்பத்தினர், உடற்கூறு ஆய்வு முடிவுக்கான காத்திருக்கிறார்கள்.
</p><p>
அஃபீனாவின் பெற்றோரும் சகோதரிகளும் இந்தியாவிலிருப்பதால், அவரது உடலை இந்தியா கொண்டு செல்ல முடிவுசெய்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.</p><p>

அஃபீனா ஒரு பல் மருத்துவர் ஆவார். தன் பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்காக தன் வேலையிலிருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார் அஃபீனா.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T12:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற விரும்பும் கிராமம்: வாக்கெடுப்பு முடிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/piddington-villagers-vote-to-leave-for-uk-1789561091"></link>
            <id>https://news.lankasri.com/article/piddington-villagers-vote-to-leave-for-uk-1789561091</id>
            <summary type="text">English village votes to leave UK: இங்கிலாந்திலுள்ள சிறு கிராமம் ஒன்று பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.


இங...</summary>
            <content type="html"><![CDATA[<p>English village votes to leave UK: இங்கிலாந்திலுள்ள சிறு கிராமம் ஒன்று பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.</p><p>


இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரிலுள்ள கிராமம், பிடிங்டன்.

350 பேர் மட்டுமே வாழும் அச்சிறு கிராமத்தில், ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்க வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அக்கிராம மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.</p><p>

ஆகவே, அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளனர் அக்கிராம மக்கள்.</p><h3>

வாக்கெடுப்பு முடிவுகள்</h3><p>

நேற்று அது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இன்று, புதன்கிழமை காலை வாக்குகள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a82dc691-0ad1-429a-8be5-573050d86549/26-6aaa89052a776.webp' /></p><p>

வாக்கெடுப்பில் 312 வாக்காளர்கள் வாக்களித்த நிலையில், 285 பேர் பிடிங்டன் கிராமம் பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு ஆதரவாகவும், 26 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். ஒரு வாக்கு செல்லாத வாக்காகியுள்ளது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், வாக்கெடுப்பு குறித்து பேசிய கலாச்சாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரான லிசா நாண்டி, புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, அது தொடர்பான சுமையை பல இடங்களுக்கும் பகிரவேண்டியுள்ளது என்பது குறித்து அரசு மென்மையாக பிடிங்டன் மக்களுக்கு சொல்லி புரியவைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T12:18:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு கப் ஜவ்வரிசி போதும்.., மொறு மொறு தோசை செய்யலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/javvarisi-dosa-recipe-in-tamil-1789559936"></link>
            <id>https://news.lankasri.com/article/javvarisi-dosa-recipe-in-tamil-1789559936</id>
            <summary type="text">Javvarisi Dosa Recipe- தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.

அந்தவகைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Javvarisi Dosa Recipe- தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.
</p><p>
அந்தவகையில், மாவு அரைக்காமல் ஜவ்வரிசி வைத்து தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம். </p><h2>தேவையான பொருட்கள்</h2><ul><li> 

ஜவ்வரிசி- ½ கப்
</li><li>தயிர்- 1 கப்</li><li> 
ரவை- ¼ கப்
</li><li>அரிசி மாவு- ¼ கப்</li><li>
இஞ்சி- 1 துண்டு </li><li>
பச்சை மிளகாய்- 2 </li><li>
கறிவேப்பிலை- 1 கொத்து</li><li> 
உப்பு- 1 ஸ்பூன் </li><li>
தண்ணீர் - 1 கப்</li><li>
எண்ணெய்- தேவையான அளவு </li></ul><h2>

செய்முறை </h2><p>

முதலில் ஜவ்வரிசியை நன்கு கழுவி அதில் தயிர் சேர்த்து கலந்து 8 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, அரிசி மாவு, ரவை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d3e27e6-951f-4d94-8453-f85f1565b740/26-6aaa8482d3616.webp' /></p><p>அடுத்து ஊறவைத்த ஜவ்வரிசியில் அரைத்த கலவையை சேர்த்து தண்ணீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
</p><p>
இறுதியாக அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் அதில் மாவு சேர்த்து எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சுவையான ஜவ்வரிசி தோசை தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T12:01:53+00:00</updated>
        </entry>
    </feed>
