<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-18T06:33:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-dies-in-philippines-school-gun-shooting-1787033772"></link>
            <id>https://news.lankasri.com/article/2-dies-in-philippines-school-gun-shooting-1787033772</id>
            <summary type="text">Philippines school gun shooting: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார்.


தென்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Philippines school gun shooting: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார்.
</p><p>

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் துப்பாக்கிக் கலாச்சாரம் மெல்ல பரவி வருகிறது.
</p><p>
இந்நிலையில், தெற்கு பிலிப்பைன்ஸிலுள்ள பள்ளி ஒன்றிற்குள் இன்று காலை இரண்டு துப்பாக்கிகளுடன் நுழைந்துள்ளார் மாணவர் ஒருவர்.</p><h3>

பள்ளியில் துப்பாக்கிச்சூடு</h3><p>

வகுப்பு ஒன்றில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஒரு ஆசிரியரை அவர் துப்பாக்கியால் சுட, குறி தப்பியதால் ஆசிரியர் உயிர் பிழைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abdd153f-802a-462a-830e-7b2dafc60ad8/26-6a83f8ae1ae8d.webp' /></p><p>
உடனே மற்றொரு வகுப்புக்குச் சென்ற அந்த மாணவர், அங்கிருந்த ஒரு மாணவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தன்னைத்தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
அவர்கள் இருவருமே பலியாகிவிட்டுள்ளார்கள். மேலும் இருவர் காயமடைந்துள்ளார்கள்.
</p><p>
தாக்குதலை தாக்குதல்தாரி இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
உடனடியாக பள்ளியிலிருந்த மற்ற மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
தாக்குதல்தாரி, உயிரிழந்த மாணவர், காயமடைந்தவர்கள் என யாருடைய பெயர் முதலான விவரங்களும் வெளியாகவில்லை.
</p><p>
விடயம் என்னவென்றால், ஜூன் மாதம், 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்கள், பிலிப்பைன்ஸ் பள்ளி ஒன்றில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டார்கள், சுமார் 20 மாணவர்கள் காயமடைந்தார்கள்.
</p><p>
அதைத்தொடர்ந்து, பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிசார் உறுதியளித்திருந்த நிலையில் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T06:17:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாஸ்கோவை குறிவைத்த 620 ட்ரோன்கள்: கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/620-ukrainian-drones-attack-moscow-1787033483"></link>
            <id>https://news.lankasri.com/article/620-ukrainian-drones-attack-moscow-1787033483</id>
            <summary type="text">ரஷ்ய தலைநகரை குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய தலைநகரை குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.</p><h2> உக்ரைன் ட்ரோன் தாக்குதல்</h2><p>
திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணி வரை ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து சுமார் 620 உக்ரைனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தயுள்ளன.</p><p>ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட முன்னோடி இல்லாத மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இதுவாகும்.</p><p> மாஸ்கோ நகர மேயர் செர்கே சோபியான்னின் தகவல்படி, கிட்டத்தட்ட 180 ட்ரோன்களை ரஷ்ய வான் படை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி அழித்ததாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7a22d91-7505-491e-989a-2ccc33a6df1a/26-6a83f78c7ed19.webp' /></p><p> மேலும் மாஸ்கோவை நோக்கி அடுத்தடுத்து ட்ரோன்கள் படை எடுத்ததாகவும் மேயர் சோபியான்ன் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> கடந்த 2 ஆண்டுகளில் தலைநகர் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இது என்று ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ் (TASS) தகவல் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-18T06:11:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2009 இல் 3 மணி நேர உண்ணாவிரதம் நாடகம் - திமுகவை சீண்டிய அமைச்சர் நிர்மல் குமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nirmal-kumar-say-2009-karunanidhi-hunger-strike-1787033086"></link>
            <id>https://news.lankasri.com/article/nirmal-kumar-say-2009-karunanidhi-hunger-strike-1787033086</id>
            <summary type="text">2009 இல் 3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம் என அமைச்சர் நிர்மல் குமார் திமுகவை சீண்டும் வகையில் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

கர்நாடகாவில் சுட்டுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2009 இல் 3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம் என அமைச்சர் நிர்மல் குமார் திமுகவை சீண்டும் வகையில் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.</p><h3>

கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்கள்</h3><p> 

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
</p><p>
இந்த தீர்மானம் மீது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42f1fe2-709d-4192-b12b-21b60c6dd8bd/26-6a83f601792be.webp' /></p><p>

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும். </p><p>

கர்நாடகா வழங்கிய ரூ.5 லட்சம் நிதியுதவி மிக குறைவானது, தமிழக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடக்காத வகையில் தமிழக அரசு கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என பேசினார்.</p><p>

இதனையடுத்து பேசிய பாமக எம்எல்ஏ கணேஷ் குமார், "தங்கள் மாடுகளை தேடி சென்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் இந்த சம்பவம் தற்காப்புக்காக நடைப்பெற்ற சம்பவம் என கர்நாடக வனத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் பதிவு செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/223d93d1-ec8c-4c83-a221-23c38a3c1447/26-6a83f600c3c63.webp' /></p><p>
இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் மட்டும் தான் உரிய நீதி கிடைக்கும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><h3> 

3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம்</h3><p>

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "3 தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக அரசு உறுதி அளித்தது. 

உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p>

இடைக்கால நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கிய கர்நாடக அரசு விசாரணைக்கு பின் கூடுதல் நிவாரணம் தருவதாக கூறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/044e72b2-8e67-4ac1-8de2-ea7aa3b3c566/26-6a83f6001aa00.webp' /></p><p>

கர்நாடக வனத்துறை நடத்தியது படுகொலை என குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்தார். தமிழர்கள் கொலை தொடர்பாக கர்நாடக அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல, விசாரணை தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார்.</p><p>
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கை தமிழக முதல்வர் மட்டுமே. இன்று தமிழர்களுக்கு எங்கு தீங்கு ஏற்பட்டாலும், முதல் குரல் முதல்வரின் குரலாக இருக்கும்.&nbsp;</p><p>

ஒரு சிலருக்கு திடீர் தமிழ் தமிழர் பாசம் இருக்கும் இதெல்லாம் நாம் வரலாற்றில் பார்த்தது தான்.&nbsp;</p><p></p><p>

2009 ஆம் ஆண்டில் 3 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நாடகம். அதைத்தொடர்ந்து நடைபெற்ற கேள்விகளில், மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என பேசினார். </p><p>

இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அமைச்சரை உட்கார சொன்ன சபாநாயகர் தீர்மானம் தவிர்த்து மற்ற வார்த்தைகளை அவைகுறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T06:06:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[Glass Skin வேண்டுமா? உங்களுக்கான குறிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/glass-skin-korean-tips-in-tamil-1787032421"></link>
            <id>https://news.lankasri.com/article/glass-skin-korean-tips-in-tamil-1787032421</id>
            <summary type="text">Korean Glass Skin Tips: இன்றைய இளசுகளுக்கு கொரியன் நட்சத்திரங்கள் என்றால் அலாதி பிரியம், இதற்கு அவர்களது பளபளப்பான சருமமும் வசீகரமான தோற்றமும் முக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Korean Glass Skin Tips: இன்றைய இளசுகளுக்கு கொரியன் நட்சத்திரங்கள் என்றால் அலாதி பிரியம், இதற்கு அவர்களது பளபளப்பான சருமமும் வசீகரமான தோற்றமும் முக்கிய காரணமாக இருக்கும்.</p><h2>Glass Skin</h2><p>

Glass Skin என்றழைக்கப்படும் முகத்தில் துளைகளே இல்லாத கண்ணாடி போன்ற சருமத்திற்காக பலரும் மெனெக்கெடுகின்றனர், இதற்காக அவர்கள் விலையுயர்ந்த க்ரீம்களை பயன்படுத்துவதில்லை, மாறாக அழகு பராமரிப்பு என்பது அவர்களது வாழ்க்கை முறையுடன் ஒன்றிணைந்தது.
</p><p>
சீரான பராமரிப்பும், சருமத்திற்கு ஆழமான ஈரப்பதமும் இயல்பாகவே கண்ணாடி போன்ற சருமத்தை உங்களுக்கு வழங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09949ee6-07c6-402d-9240-7c665ca5859c/26-6a83f58b6d2f8.webp' /><br></p><p>
</p><p>
இதற்காக நீங்கள் பின்பற்ற வேண்டிய ஆறு முக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.</p><h2>Korean Beauty Tips</h2><p>
</p><p>* இரவில் படுப்பதற்கு முன்பாக இரண்டு முறை முகத்தை கழுவ வேண்டும், முதலில் சன்ஸ்கிரீன் பயன்படுத்தி கொள்ளுங்கள், இது அதிகப்படியான எண்ணெயை நீக்கும், தொடர்ந்து water-based foaming cleanserயை பயன்படுத்துங்கள்.
</p><p>
* முகத்தை கழுவிமுடித்தவுடன் துண்டை வைத்து வேகமாக துடைக்க வேண்டாம், மாறாக மென்மையாக ஈரப்பதத்தை போக்கவும்.
</p><p>
* பின்னர் watery toner பயன்படுத்திவிட்டு சீரம் பயன்படுத்தலாம், தொடர்ந்து லோஷன் பயன்படுத்தவும், இவ்வாறு செய்யும் போது சருமத்துறைகளை அடைக்காமல் உள்ளிருந்து பாதுகாக்கிறது.
</p><p>
* வெயில் காலங்களில் மட்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் எல்லா காலநிலைகளிலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தை காக்கிறது.
</p><p>
* மிக முக்கியமாக சருமத்தை சுத்தப்படுத்த மெலிதான face scrubs பயன்படுத்தவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85e72fee-6d54-434a-9d56-e1f89837f819/26-6a83f58c341e9.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-18T06:03:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல்: அமெரிக்கா நடத்தும் தீவிர ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-plans-to-nuclear-attack-on-iran-1787025070"></link>
            <id>https://news.lankasri.com/article/us-plans-to-nuclear-attack-on-iran-1787025070</id>
            <summary type="text">ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரான் மீது அணு ஆயுதம்ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><h2> ஈரான் மீது அணு ஆயுதம்</h2><p>ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட கருத்தில், அமெரிக்கா இனி வெளிநாட்டு போர்களில் ஈடுபடாது என்று டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்து இருப்பதாகவும், ஆனால் ஈரான் மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கான வரம்பை அவரது அரசு நிர்வாகம் குறைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca35f0b2-8627-4764-8368-adb0120d945e/26-6a83d6afd71a9.webp' /></p><p style="margin-left: 25px;"></p><p> அமெரிக்க உளவுத்துறை வழங்கும் அறிக்கைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக இஸ்ரேல் அளிக்கும் எச்சரிக்கைகளை கேட்டு மட்டுமே செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>அமெரிக்கா ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதுடன், அது மிகப்பெரிய உலகப் போராக மாறி தாங்க முடியாத பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p> முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை மாளிகை இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T06:00:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொறுங்கிய இஸ்ரேல் கிரிக்கெட் அணி: 7.3 ஓவரில் 95 ஓட்டங்கள் விளாசி ஜேர்மனி வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-beat-israel-by-9-wickets-qualifier-1787032556"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-beat-israel-by-9-wickets-qualifier-1787032556</id>
            <summary type="text">Germany beat Israel by 9 Wickets: கேரவாவில் நடந்த டி20 போட்டியில் ஜேர்மனி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இஸ்ரேலை வீழ்த்தியது.  

ஐசிசி ஆடவர் டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany beat Israel by 9 Wickets: கேரவாவில் நடந்த டி20 போட்டியில் ஜேர்மனி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இஸ்ரேலை வீழ்த்தியது. </p><p> 

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ண துணை மண்டல ஐரோப்பிய குவாலிஃபையர் போட்டியில் ஜேர்மனி அணி இஸ்ரேலை வீழ்த்தியது.&nbsp;</p><h2>ஐரோப்பிய குவாலிஃபையர் போட்டி</h2><p>
ஜேர்மனி மற்றும் இஸ்ரேல் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ண துணை மண்டல ஐரோப்பிய குவாலிஃபையர் போட்டி கேரவாவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a3f9c1e-517a-4efe-9304-ee2832c3a8e8/26-6a83f3ef52168.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் களமிறங்கிய இஸ்ரேல் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 94 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
அதிகபட்சமாக நிவ் நகவ்கர் 21 ஓட்டங்களும், யைர் நகவ்கர் 16 ஓட்டங்களும் எடுத்தனர். ஜதிந்தர் குமார் மற்றும் அஹ்மதுல்லா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><h2>ஜேர்மனி&nbsp;அபார வெற்றி</h2><p>
பின்னர் ஆடிய ஜேர்மனி அணி 7.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 95 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. </p><p>

பென் கோஹ்லர்-கேட்மோர் (Ben Kohler-Cadmore) 26 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் விளாசினார்.</p><p> 

ஜோஷுவா வான் ஹீர்டென் (Joshua van Heerden) 17 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/122ae486-a593-4b27-8701-7fd98b1ba8c2/26-6a83f58b29c50.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T06:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய தேர்தல் நடைமுறைகளை பாராட்டிய டொனால்ட் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-praises-indian-election-system-1787030241"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-praises-indian-election-system-1787030241</id>
            <summary type="text">இந்திய தேர்தல் நடைமுறைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார். டிரம்ப் பாராட்டுஅமெரிக்காவில் தீவிரமான வாக்காளர் அடையாள சட்டங்களை கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய தேர்தல் நடைமுறைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.</p><h2> டிரம்ப் பாராட்டு</h2><p>அமெரிக்காவில் தீவிரமான வாக்காளர் அடையாள சட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய தேர்தல் நடைமுறைகளை வெகுவாக பாராட்டியுள்ளார்.</p><p> &nbsp;அமெரிக்காவில் தேர்தல்களில் கட்டாய புகைப்பட அடையாள அட்டை நடைமுறை இல்லாதது குறித்து இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்(Gyanesh Kumar) உடன் நடைபெற்ற உரையாடல் குறித்து ட்ருத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27b0c661-1fd5-4cf4-8e76-adf51c383255/26-6a83eae3346b3.webp' /></p><p>அந்த உரையாடலின் போது, கட்டாய புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் எப்படி பாதுகாப்பான தேர்தலை நடத்த முடியும் என்று ஞானேஷ்குமார் தன்னிடம் கேள்வி எழுப்பியதாக டிரம்ப் மேற்கோள் காட்டினார்.</p><p></p><p> இந்தியாவில் நடந்த கடைசி தேர்தலில் 642 மில்லியன் மக்கள் தங்களது புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்கு செலுத்தியுள்ளனர். 1%க்கும் குறைவான மக்கள் மின்னஞ்சல் மூலமாக வாக்கு செலுத்தியுள்ளனர்.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Earlier this month, India’s Chief Election Commissioner, Gyanesh Kumar, asked our Administration — How can you have Elections in the U.S. without a valid Photo ID? India’s last Election had 646,000,000 Voters! Less than 1% voted by mail, and every single Voter had to have a VALID… <a href="https://t.co/dWtL287nkk">pic.twitter.com/dWtL287nkk</a></p>&mdash; Commentary Donald J. Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) <a href="https://x.com/TrumpTruthOnX/status/2089488950079668319?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>வாக்களித்த ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள&nbsp; அட்டையை வைத்துள்ளனர். </p><p>&nbsp;இந்த உரையாடல் டிரம்ப் தீவிரமாக வலியுறுத்தி வரும் The save america act மசோதாவிற்கு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-08-18T05:17:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு: குடும்பங்களின் இன்றைய நிலையைக் கூறும் ஒரு செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-skeleton-found-in-bengaluru-house-1787029712"></link>
            <id>https://news.lankasri.com/article/women-skeleton-found-in-bengaluru-house-1787029712</id>
            <summary type="text">பெங்களூருவில் வீடொன்றிற்குள் பெண்ணொருவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவரை யாரும் தேடவில்லை என்பது தெரியவந்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெங்களூருவில் வீடொன்றிற்குள் பெண்ணொருவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவரை யாரும் தேடவில்லை என்பது தெரியவந்துள்ளது.
</p><p>

கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் வீடொன்றில் தனியாக வசித்துவந்துள்ளார் தாக்‌ஷாயினி (52) என்னும் பெண்.
</p><p>
நீண்ட காலமாக அவரது வீடு திறக்கப்படாமலே இருந்த நிலையில், இம்மாதம் 7ஆம் திகதி, பொலிசாருக்கு அது குறித்து தகவலளிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
வீட்டுக்குள் பெண்ணின் எலும்புக்கூடு
</h3><p>
பொலிசார் அந்த வீட்டை சோதனையிட, அந்த வீட்டுக்குள் ஒரு எலும்புக்கூடு இருப்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffdd97b8-8434-4f05-ac9d-a9e1fd09343f/26-6a83e8d1effb4.webp' /></p><p>
பொலிசார் விசாரணையில் இறங்க, உயிரிழந்து எலும்புக்கூடாக கண்டுபிடிக்கப்பட்டது தாக்‌ஷாயினி என்பது அவரது சகோதரரான மகேஷ் என்பவர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், 2005ஆம் ஆண்டு தன் மகனை இழந்துள்ளார் தாக்‌ஷாயினி. அந்த இழப்பு அவருக்கு மன நல பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
2017ஆம் ஆண்டு தாக்‌ஷாயினியின் கணவரும் மரணமடைய, குடும்பத்தில் யாருடனும் எந்த தொடர்பும் இல்லாமல் தனியாகவே வாழ்ந்துவந்துள்ளார் அவர்.</p><p>

விடயம் என்னவென்றால், தாக்‌ஷாயினிக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணமாகி வேறொரு இடத்தில் வாழ்ந்துவரும் அந்தப் பெண் தன் தாயை நீண்ட காலமாக வந்து பார்க்கவே இல்லையாம்.&nbsp;</p><p></p><p>
ஆக, தாக்‌ஷாயினி எப்படி வாழ்ந்தார், எப்படி உயிரிழந்தார், எப்போது உயிரிழந்தார், எதனால் உயிரிழந்தார் என எந்த தகவல்களும் குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல், இறந்து, உடல் எலும்புக்கூடான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் அவர்.
</p><p>
கூட்டுக்குடும்பங்கள் என்னும் ஒரு முறை மாறி, குடும்பங்கள் சின்னச் சின்னக் குடும்பங்களாகி, ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு இடத்தில் குடியேறி, உற்றார் உறவினர்கள் யார், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துவிட்டது தெரிந்த விடயம்தான்.</p><p>

ஆனால், மிக வயது முதிர்ந்து தள்ளாடும் வயது அல்ல, வெறும் 52 வயதில் ஒரு பெண் வீட்டுக்குள் மரணமடைந்து, எலும்புக்கூடாகும் வரை அவரை யாரும் தேடவில்லை என்றால், இன்றைய குடும்பங்களின் நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பது மிகத் தெளிவாக புரிகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T05:11:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-to-bomb-oman-1786984671"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-to-bomb-oman-1786984671</id>
            <summary type="text">Donald Trump threatens to bomb Oman: ஓமான் இடையூறு செய்தால், அதன் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Donald Trump threatens to bomb Oman: ஓமான் இடையூறு செய்தால், அதன் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
</p><p>ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தனது முயற்சிக்கு ஓமான் நாடு தடையாக நின்றால், அந்நாட்டின் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மிரட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43ff41fc-ff1d-407f-a8a9-8a65287c751b/26-6a8338e24b290.webp' /></p><p>
</p><p>ஓமான் குறுக்கிட்டால், அவர்களைக் குண்டுமழையால் சின்னாபின்னமாக்குவோம் என்று ட்ரம்ப் திங்களன்று ஃபாக்ஸ் நியூஸிடம் கூறியுள்ளார்.</p><p> 
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாரம்பரியமாக ஒரு முக்கிய மறைமுகத் தொடர்பாளராகச் செயல்பட்டு வரும், அமெரிக்காவின் நீண்டகால உத்திசார்ப் பங்காளியான ஓமானை நோக்கி, அவர் இதுபோன்ற அச்சுறுத்தலை விடுப்பது இது இரண்டாவது முறையாகும். </p><p>இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக போர் தொடங்கி, 
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், </p><p>ஈரானுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட இராஜதந்திர வாய்ப்புக்கான காலக்கெடு முடிந்து, இறுதி உடன்பாடு எதுவும் தென்படாத நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி கடும் விரக்தியில் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என்றே கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>ஆனால், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு தமக்கு அவசரம் இல்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான அந்த இரண்டு மாத கால அவகாசம், எந்தவொரு திருப்புமுனையும் இன்றி திங்களன்று முடிவடைந்தது. </p><p>போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ட்ரம்ப் தொடர்ச்சியாக கூறிவந்தாலும், அத்தகைய ஒரு திருப்புமுனை எதுவும் ஏற்படாத நிலையில், சமீப மாதங்களில் ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் பேசி வந்துள்ளார். </p><p>ஈரான் விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் ட்ரம்ப் நிர்வாகம், போரில் இருந்து வெளியேற முடியாமலும் திணறி வருகிறது. ஆனால், ஈரான் சரணடைய வேண்டும் என்ற கோரிக்கையை ட்ரம்ப் தற்போது முன்வைத்துள்ளார். </p><p>இருப்பினும்
ஈரான் மீது புதிய காலக்கெடுவை விதிக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். ஈரான் விவகாரத்தில் தாம் அவசரப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>கிட்டத்தட்ட ஆறு மாத கால சண்டையால் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருகிறது என்ற கவலைகளையும் ட்ரம்ப் நிராகரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72fd95b-6795-47f1-9d7d-63b2b2e369d1/26-6a8338e19b1e0.webp' /></p><p> </p><p>ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இதுவரை செலவிட்ட ஆயுதங்கள் வெறும் சிறு அளவு மட்டுமே என்றும் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறியுள்ளார். மேலும், ஜோ பைடன் நிர்வாகத்தால் மேம்பட்ட ஆயுதங்கள் பல உக்ரைனுக்கு வழங்கப்பட்டதால் சிறு நெருக்கடி ஏற்பட்டது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>இதனிடையே, ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஈரானும் ஓமானும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் முன்னேற்றம் ஏற்படுவதாக தகவல் வெளியான நிலையிலேயே, ஓமான் மீது குண்டுவீசப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். </p><p>அமெரிக்காவுடன் ஓமானுக்கு இருக்கும் பல தசாப்த கால இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளுக்கு மேலதிகமாக, 53 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த வளைகுடா நாடு, போரில் ஒரு மத்தியஸ்தப் பாத்திரத்தை வகித்துள்ளதுடன், ஈரானின் தாக்குதலுக்கும் உள்ளானது. </p><p>ட்ரம்பின் சமீபத்திய சீற்றத்தையும் மீறி, ஓமானுடன் பேச்சுவார்த்தைகள் தீவிரமாகத் தொடர்வதாக ஈரான் வெளிவிவகார அமைச்சகம் திங்களன்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T03:25:26+00:00</updated>
        </entry>
    </feed>
