<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-04T07:54:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் லெபனான் நாட்டு குடிமகன் விடுவிப்பு: இஸ்ரேல் அளித்துள்ள விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/first-lebanon-prisoner-releases-from-israel-1788506636"></link>
            <id>https://news.lankasri.com/article/first-lebanon-prisoner-releases-from-israel-1788506636</id>
            <summary type="text">First Lebanon Prisoner Releases From Israel: லெபனான் நாட்டின் முதல் சிறைக்கைதியை இஸ்ரேலிய இராணுவம் விடுவித்துள்ளது. லெபனான் நாட்டவர் விடுவிப்புலெபனானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>First Lebanon Prisoner Releases From Israel: லெபனான் நாட்டின் முதல் சிறைக்கைதியை இஸ்ரேலிய இராணுவம் விடுவித்துள்ளது.</p><h2> லெபனான் நாட்டவர் விடுவிப்பு</h2><p>லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும் இடையே 6 மாதங்களாக இடைவிடாத மோதல் நிலவி வந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க தூதரக முன்நகர்வு நடந்துள்ளது.</p><p> இதில், இஸ்ரேலிய காவலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த லெபனானை சேர்ந்த ஒருவர் விடுவிக்கப்பட்டு அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8fe2f63-6afd-40e3-8e0f-a62025218598/26-6a9a720e24bf1.webp' /></p><p> சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்(ICRC), மாலிக் காசி(Malek Ghazi) என்ற லெபனான் நாட்டு குடிமகன் விடுவிக்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> மாலிக் காசி லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள டயர் நகரில் அந்நாட்டு ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p> தெற்கு லெபனானில் கிட்டத்தட்ட 5 பொதுமக்கள் இஸ்ரேலிய படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மாலிக் காசி முதல் நபராக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.</p><h2> இஸ்ரேல் தரப்பு விளக்கம்</h2><p>இந்நிலையில் லெபனான் நாட்டவர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், விசாரணையில் சம்பந்தப்பட்டவர் எந்தவொரு பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பு இல்லாத எளிய குடிமகன் என்பது தெரியவந்தது. அதன்படி அவரை தொடர்ந்து இஸ்ரேலில் தடுத்து வைப்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லை என்று விளக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/726e82eb-eed9-4597-87d1-1dfe918a1aef/26-6a9a720d6deeb.webp' /></p><p> இதற்கிடையில் மீதமுள்ள 4 லெபனான் நாட்டு குடிமகன்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என லெபனான் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அத்துடன் விடுதலைக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்க தூதரக முயற்சிகளுக்கு தன்னுடைய ஆழ்ந்த நன்றியை லெபனான் பிரதமர் நவாப் சலாம் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T07:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை வெளியேற உத்தரவிட்ட கென்ய ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tata-chemicals-ordered-out-of-kenya-1788505838"></link>
            <id>https://news.lankasri.com/article/tata-chemicals-ordered-out-of-kenya-1788505838</id>
            <summary type="text">Tata Chemicals ordered out of Kenya: டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கென்யாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது.
இந்தியாவின் முக்கிய இரசாயன நிறுவனங்களில் ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tata Chemicals ordered out of Kenya: டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கென்யாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது.
</p><p>இந்தியாவின் முக்கிய இரசாயன நிறுவனங்களில் ஒன்றான டாடா கெமிக்கல்ஸ், கென்யாவை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/758ba97e-0d3f-449f-beea-0e84d6f2e058/26-6a9a6ef0d60ac.webp' /></p><p>
நாட்டிற்குப் போதுமான பலன்களை உருவாக்கத் தவறிவிட்டதாக கென்யா அரசாங்கம் கூறியதைத் தொடர்ந்து வெளியேற உத்தரவிடப்பட்டது.</p><p>
கண்ணாடி மற்றும் இரசாயனப் பொருட்களைத் தயாரிப்பதற்காக சோடா சாம்பலை உள்நாட்டில் பதப்படுத்துவதற்குப் பதிலாக, அந்நிறுவனம் அதை ஏற்றுமதி செய்து வருவதாகக் கூறி, தனது செயல்பாடுகளை முடித்துக்கொண்டு வெளியேறுமாறு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p> கென்யர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளையும் முதலீடுகளையும் கொண்டுவரும் நோக்கத்துடன், அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை ஏற்று நடத்த புதிய முதலீட்டாளர்களை அரசு அடையாளம் கண்டுள்ளதாகவும் ரூட்டோ தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், அரசாங்கத்தின் முடிவை மதிப்பதாகவும், நிலுவையில் உள்ள விவகாரங்களுக்குத் தீர்வு காண உரிய சட்ட மற்றும் ஒழுங்குமுறை வழிமுறைகள் வாயிலாக ஆக்கபூர்வமான ஈடுபாட்டைத் தொடர உறுதிபூண்டுள்ளதாகவும் டாடா கெமிக்கல்ஸ் தெரிவித்துள்ளது. </p><p>இந்தியப் பெருநிறுவனமான டாடா குழுமத்தின் ஒரு அங்கமான இந்நிறுவனம், கென்யத் தலைநகர் நைரோபியிலிருந்து சுமார் 75 மைல்கள் தென்மேற்கே உள்ள மகாதி ஏரியில் செயல்படுகிறது. இது ஆண்டுதோறும் 3,50,000 டன்னுக்கும் அதிகமான சோடா சாம்பலை (soda ash) இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பிற பகுதிகள் உள்ளிட்ட சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d49972-777b-4504-9be2-54b26abd64b6/26-6a9a6ef189fee.webp' /></p><p> </p><p>சோடியம் கார்பனேட்டின் பொதுவான பெயரான இயற்கை சோடா சாம்பலை உற்பத்தி செய்வதில் கென்யா உலகின் நான்காவது பெரிய நாடாகும். இது உலகளாவிய உற்பத்தியில் 1% பங்களிக்கிறது. </p><p>இது முக்கியமாக இயற்கை உவர்நீர்கள் அல்லது ட்ரோனா எனும் கனிமத்திலிருந்து தயாரிக்கப்பட்டு, கண்ணாடி, இரசாயனங்கள், மின்கலங்கள் மற்றும் பிற தொழில்துறைப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.</p><p> டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கென்யாவின் மிகப்பெரிய கனிம ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகவும், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சோடா சாம்பல் உற்பத்தியாளராகவும் திகழ்கிறது. </p><p>இந்நிறுவனம் மகாதி ஏரியிலிருந்து ட்ரோனாவைப் பிரித்தெடுத்து, அதை சோடா சாம்பலாகப் பதப்படுத்துகிறது. இந்த சோடா சாம்பல், கண்ணாடி தயாரிப்பில் ஒரு முக்கிய மூலப்பொருளாக இருப்பதுடன், சவர்க்காரங்கள், இரசாயனங்கள், நீர் சுத்திகரிப்பு, ஜவுளி மற்றும் காகிதம் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.</p><p> 2024-ஆம் ஆண்டு டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், சுமார் 245,000 டன்கள் சோடா-ஆஷ் விற்பனையையும், 78.7 மில்லியன் டொலர் விற்றுமுதலையும் பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் சுமார் 500 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது; மேலும், நீர், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் பிற உதவிகள் மூலம் மகாதி (Magadi) பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 30,000 பேர் அதன் சமூக நலத் திட்டங்களால் பயனடைவதாகக் கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad852b3d-5136-418f-86b6-d34b6d7a781c/26-6a9a6ef23e0f3.webp' /></p><p> </p><p>ஆனால், அந்த நிறுவனம் கென்யாவிற்குப் போதுமான அளவு பங்களிப்பை வழங்கவில்லை என்றும், நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் ஜனாதிபதி ருட்டோ குற்றம் சாட்டியுள்ளார். </p><p>மட்டுமின்றி, ராயல்டி கட்டணங்களைச் செலுத்தத் தவறியது மற்றும் பிற ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதைக் காரணம் காட்டி, டாடா கெமிக்கல்ஸ் மகாதி நிறுவனத்தின் செயல்பாடுகளை இடைநிறுத்துமாறு கென்யாவின் சுரங்கத்துறை அமைச்சர் உத்தரவிட்ட ஐந்து வாரங்களுக்குப் பிறகு ஜனாதிபதி ரூட்டோவின் இந்தக் குற்றச்சாட்டுகள் வெளி வந்துள்ளன. </p><p>2005-ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த புரூனர் மாண்ட் குழுமத்தை டாடா கெமிக்கல்ஸ் கையகப்படுத்தியபோது, ​​இந்தச் செயல்பாட்டையும் அது பொறுப்பேற்றுக்கொண்டது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T07:09:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நிறுவனத்துடன் ஆயுத கொள்முதலில் முறைகேடு - எஸ்டோனியா அமைச்சர் ராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/estonia-minister-pevkur-resign-for-ammunition-deal-1788505429"></link>
            <id>https://news.lankasri.com/article/estonia-minister-pevkur-resign-for-ammunition-deal-1788505429</id>
            <summary type="text">estonia defence minister hanno pevkur resigns over ammunition deal with indian firm: இந்திய நிறுவனத்துடன் ஆயுத கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>estonia defence minister hanno pevkur resigns over ammunition deal with indian firm: இந்திய நிறுவனத்துடன் ஆயுத கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பொறுப்பேற்று எஸ்டோனியா பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
</p><h3>
இந்திய நிறுவனத்துடன் ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் </h3><p>

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. 

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரவளித்து வரும் நிலையில், உக்ரைன் கடுமையான வெடிமருந்து பற்றாக்குறையை எதிர்கொண்டிருந்த நேரத்தில், உக்ரைனுக்காக பீரங்கிக் குண்டுகளை வழங்க எஸ்டோனியா முன்வந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c75eda9-eb61-4f67-a5a6-47761ffe3f67/26-6a9a6d57c026f.webp' /></p><p> 

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய அமைதி வசதி நிதியிலிருந்து பணத்தைப் பயன்படுத்தி, எஸ்டோனியா பீரங்கிக் குண்டுகளை கொள்முதல் செய்ய இத்தாலியில் பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. </p><p>

இந்தியாவின் நெகோ டிஃபென்ஸ் முனிஷன்ஸ்(Neco Defence Munitions) நிறுவனத்திற்கு சொந்தமான, இத்தாலியில் பதிவுசெய்யப்பட்ட டேட்டாசெல் எஸ்.ஆர்.எல்(Datasel SRL) நிறுவனத்துடன் 2024 ஆம் ஆண்டில் எஸ்டோனியாவின் பாதுகாப்பு முதலீட்டு மையம், சுமார் 70 மில்லியன் யூரோவிற்கு(இந்திய மதிப்பில் ரூ.768.50 கோடி) முன்பணம் வழங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், இந்த நிறுவனம் தாமதமாக விநியோகம் செய்ததாகவும், தரமற்ற பீரங்கி குண்டுகளை வழங்கியதாகவும் குற்றஞ்சாட்டிய எஸ்டோனியா இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. </p><p>

விநியோக தாமதங்களை ஒப்புக்கொண்ட நிறுவனம், வெடிமருந்துகள் தரமாக இல்லை என்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. </p><p>

மேலும், 58 மில்லியன் யூரோ மதிப்பிலான பொருட்களைத் வழங்கிய நிலையில் எஸ்டோனியா ஒப்பந்தத்தை ஒருதரப்பாக ரத்து செய்தது தங்களுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நடுவர் மற்றும் சமரச மையத்தில் இந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.</p><h3> 

பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா</h3><p> 

ஆயுத தயாரிப்பில் எந்தவித முன்அனுபவமும் இல்லாத நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக எஸ்டோனியாவின் தணிக்கைத் துறை குற்றச்சாட்டியுள்ளது. </p><p> 

இந்த நிறுவனத்திற்கு வழங்கபட்ட முன்பணத்தை திரும்ப பெறும் நோக்கில் எஸ்டோனியாவும் நீதிமன்றத்தை நாடியுள்ளது. </p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியைத் திரும்பப் பெற முடியாவிட்டால், எஸ்டோனியா தனது சொந்த அரசு பட்ஜெட்டில் இருந்து சுமார் 70 மில்லியன் யூரோக்களை ஈடுசெய்ய வேண்டியிருக்கும் என்று கண்காணிப்புக் குழு எச்சரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f57c3cb8-06c2-4467-ba01-b20c300f963a/26-6a9a6d57181c8.webp' /></p><p>
இதனையடுத்து, இதில் தனக்கு தனிப்பட்ட பொறுப்பு இல்லையென்றாலும், பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்வதாக எஸ்டோனியா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹன்னோ பெவ்கூர்(Hanno Pevkur) தெரிவித்துள்ளார்.
</p><p>
“அவர் மீது தனிப்பட்ட எந்த தவறையும் காண முடியவில்லை. ஆனால் அரசியல் பொறுப்பு ஏற்படக்கூடும்" என எல்டோனியா பிரதமர் கிறிஸ்டன் மைக்கல் கருத்து தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T07:06:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய கப்பலை சிறைபிடித்த நார்வே அதிகாரிகள்: இழப்பீடு வழங்க கோரி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/norway-officers-seizure-russian-vessel-1788504681"></link>
            <id>https://news.lankasri.com/article/norway-officers-seizure-russian-vessel-1788504681</id>
            <summary type="text">ஆர்க்டிக் பகுதியில் ரஷ்ய கப்பல் ஒன்றை நார்வே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சிறை பிடித்துள்ளனர். ரஷ்ய கப்பல் சிறைப்பிடிப்புஆர்க்டிக் பகுதியில் உள்ள ஸ்வால...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆர்க்டிக் பகுதியில் ரஷ்ய கப்பல் ஒன்றை நார்வே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சிறை பிடித்துள்ளனர்.</p><h2> ரஷ்ய கப்பல் சிறைப்பிடிப்பு</h2><p>ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஸ்வால்பார் (Svalbard) தீவுக் கூட்டத்தில் ரஷ்ய கப்பல் ஒன்றை நார்வே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி முடக்கியுள்ளனர்.</p><p> இந்த சிறைப்பிடிப்பு நடவடிக்கையானது, உக்ரைன் அரசின் எரிசக்தி நிறுவனமான Naftogaz-க்கு வழங்கப்பட்ட பல மில்லியன் டொலர் இழப்பீடு தொகையை ஈடுகட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a99dc75-c7fd-4ffb-ac15-5f8cd31e65ec/26-6a9a6a6ac7e25.webp' />Image: Sergei Malgavko/TASS/picture alliance</p><p> கடந்த 2014ம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா தங்களது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்ததை அடுத்து,&nbsp; Naftogaz சொத்துகளை ரஷ்யா தன்வசப்படுத்தியது. அதற்கான இழப்பீட்டை வழங்குமாறு வலியுறுத்தியே இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.</p><p></p><h2> ரஷ்ய கப்பலின் விவரம்</h2><p>சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய கப்பல் ப்ரொபசர் மோல்ச்சனோவ்(Professor Molchanov) என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p> சிறைபிடிப்பு தொடர்பான உத்தரவை பெறுவதற்கு முன்பு அமெரிக்க சட்ட நிறுவனமான Covington பல மாதங்களாக இந்த கப்பலை கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> ப்ரொபசர் மோல்ச்சனோவ் என்ற ரஷ்ய கப்பல் ரஷ்ய நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள பாரெண்ட்ஸ்பர்க் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-04T06:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்பது நாட்களுக்குப் பிறகு... நேபாள நீர்மின் சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/workers-pulled-alive-from-tunnel-1788499731"></link>
            <id>https://news.lankasri.com/article/workers-pulled-alive-from-tunnel-1788499731</id>
            <summary type="text">Two workers pulled alive from hydropower tunnel: நீர்மின் சுரங்கத்தியிலிருந்து இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட மிக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two workers pulled alive from hydropower tunnel: நீர்மின் சுரங்கத்தியிலிருந்து இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட இருவர், ஒன்பது நாட்களுக்குப் பிறகு நீர்மின் நிலையச் சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcec984e-1ef2-486d-8465-e697de4837ec/26-6a9a5715590ca.webp' /></p><p>
</p><p>கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ள 'திரிசூலி 3A' நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில், தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்பு நடவடிக்கையின்போது தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். </p><p>மீட்கப்பட்ட முதல் நபர் சேறு பூசிய நிலையில், மீட்பாளர் ஒருவரின் தோளில் சுமந்து செல்லப்படும் காட்சிகளை உள்ளூர் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.</p><p> சஞ்சய் ஷா என்பவர் முதலில் மீட்கப்பட்டு, திரிசூலியில் உள்ள நேபாள ராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கபீர் மஹர்ஜன் என்று அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்டார். </p><p>சுரங்கத்திற்குள் 170 மீற்றர் ஆழத்திலிருந்து அவர்கள் மீட்கப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ராஜா ராம் பாஸ்நெட் உறுதிப்படுத்தினார்.</p><p></p><p> </p><p>சஞ்சய் ஷா அப்பர் திரிசூலி 3Aல் போர்மேனாகவும், கபீர் மஹர்ஜன் மேற்பார்வையாளராகவும் செயல்பட்டு வந்துள்ளனர். கடந்த வாரம் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி, ​​போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் கரையிலிருந்த பெரும்பாலான நீர்மின் திட்டங்கள் அழிந்துபோயின. </p><p>மீட்புப் பணிகள் நீர்மின் நிலையச் சுரங்கங்களை மையமாகக் கொண்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன; அங்குள்ள காற்று இடைவெளிகள் காரணமாகத் தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக உயிர் பிழைத்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். </p><p>இதுவரை 270-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அப்பர் திரிசூலி 3A (Upper Trishuli 3A) நிலையத்தில், அடர்த்தியான சேறு காரணமாக மீட்புப் பணியாளர்கள் சுரங்கங்களைக் கண்டறிய ஏறக்குறைய ஆறு நாட்கள் தேவைப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb76c8f0-73a6-4a20-9992-39149ffd76a2/26-6a9a57160d21f.webp' /></p><p> </p><p>சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் உள்ள சேறு மற்றும் பெரிய பாறைகளை அகற்றுவதற்காக, ராணுவத்தினரும் சிறப்புப் பணிக் குழுக்களும் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர். </p><p>வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உள்ளே பலருடைய குரல்கள் கேட்டது உறுதிப்படுத்தப்பட்டது. திரிசூலி ஆற்றங்கரையில் நடைபெறும் நீர்மின் திட்டத்தில் குறைந்தது 557 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர், அவர்களில் சுமார் 115 பேர் பிரதான சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. </p><p>மொத்தத்தில், இமயமலையின் உயரமான பகுதிகளில் உள்ள 12 நீர்மின் திட்டங்களில் இருந்து சுமார் 900 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அவர்களில் ஏறத்தாழ 500 பேர் சுரங்கங்களில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T06:15:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா - அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/smriti-mandhana-multiple-records-india-won-vs-hk-1788501167"></link>
            <id>https://news.lankasri.com/article/smriti-mandhana-multiple-records-india-won-vs-hk-1788501167</id>
            <summary type="text">india won hongkong qualifed for asia cup semifinal: ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய மகளிர் அணி, மகளிர் ஆசிய கிண்ண தொடரில் அரையிறுதிக்கு தகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>india won hongkong qualifed for asia cup semifinal: ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய மகளிர் அணி, மகளிர் ஆசிய கிண்ண தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. </p><h3>

அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா </h3><p>

2026 மகளிர் ஆசிய கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2818caa1-d783-4425-944a-9787606699bc/26-6a9a5cb2cefd4.webp' /></p><p>

நாணய சுழற்சியில் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.&nbsp;</p><p>

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9017d97b-728a-432b-a8a8-bfdd26a74754/26-6a9a5cb21fc7f.webp' /></p><p>

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி, 124 ஓட்டங்கள் குவித்தார்.
</p><p>
194 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தோனேசியா, 16.2 ஓவர்களில் வெறும் 56 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.&nbsp;&nbsp;</p><p></p><p>

இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 ஓவர்கள் வீசி, 9 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை கைப்பற்றினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5b427f4-553c-444c-aca6-9488b8402adc/26-6a9a5cb38196e.webp' /></p><p> 

137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. </p><h3> 

ஸ்மிருதி மந்தனா சாதனைகள்</h3><p> 

இந்த போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ஸ்மிருதி மந்தனா, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c41ada-e765-4f16-88ce-ead94ee6d714/26-6a9a5cb0b90fd.webp' /></p><p>

124 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் மகளிர் டி20 ஆசிய கிண்ணத்தில் ஒரு வீராங்கனை பதிவு செய்த அதிகபட்ச தனிநபர்&nbsp;ஓட்டங்கள்&nbsp; இதுவாகும்.</p><p>

முன்னதாக இலங்கை வீராங்கனை சாமரி அதபத்து 119 ஓட்டங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
</p><p>
இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் தனது 18வது சதத்தை பதிவு செய்த ஸ்மிருதி மந்தனா, கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91af7f5c-96ab-44cf-b170-1fe45e157828/26-6a9a5cb16d78a.webp' /></p><p>

முன்னதாக, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவி மெக் லெனிங்கின் 17 சதங்களுடன் முதலிடத்தில் இருந்தார். </p><p>

மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 வெவ்வேறு ஆண்டுகளில் தலா 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்த உலகின் முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
</p><p>
இந்த ஆண்டில் 579 ஓட்டங்களும், 2018 ஆம் ஆண்டில் 622ஓட்டங்களும், 2022 ஆம் ஆண்டில் 594 ஓட்டங்களும் மற்றும் 2024 ஆம் ஆண்டில் 763 ஓட்டங்களும் குவித்துள்ளார். </p><p>

இந்த போட்டியில் 124 ஓட்டங்கள் குவித்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 10,880 ஓட்டங்களைக் கடந்து, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். </p><p>

முன்னதாக இந்திய வீராங்கனை மிதாலி ராஜை 10868 ஓட்டங்களுடன் முதலிடத்தில் இருந்தார். </p><p>

மேலும், 2 டி20 சர்வதேச சதங்களை அடித்த ஒரே இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். </p><p>

நாளை(செப்டம்பர் 5 ஆம் திகதி) துபாயில், நடைபெற உள்ள போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T05:58:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைக் காப்பாற்றினேன்... ட்ரம்ப் மீண்டும் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-claims-he-saved-the-uk-1788497647"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-claims-he-saved-the-uk-1788497647</id>
            <summary type="text">Donald Trump claims he saved the UK from a nuclear attack: அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைத் தாம் காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப்.ஈரான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Donald Trump claims he saved the UK from a nuclear attack: அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைத் தாம் காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப்.</p><p>ஈரான் மீது போர் தொடுத்ததன் மூலம் பிரித்தானியாவை அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><h2>ஒரு மோசமான நபர்</h2><p>
</p><p>இந்தப் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக களமிறங்க மறுத்ததற்காக பிரித்தானியா மீதான தனது விமர்சனத்தையும் அவர் மீண்டும் முன்வைத்துள்ளார்.</p><p>
பிரித்தானியா ஒரு திருப்புமுனையை எட்டி வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், புலம்பெயர் மக்களால் லண்டனில் மக்கள் பயணப்பட முடியாத பகுதிகள் உருவாகியுள்ளதாகக் கூறி, அந்நகரத்தின் மீது மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea7c964b-5a1e-4538-a199-3e614c607be0/26-6a9a4ef158cc5.webp' /></p><p> </p><p>வியாழக்கிழமையன்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, ​​லண்டன் மேயர் சாதிக் கானை ஒரு மோசமான நபர்&nbsp;என வம்பிழுத்த ஜனாதிபதி ட்ரம்ப், அவருடனான தனது நீண்டகாலப் பகையை மீண்டும் கிளறினார். </p><p>ஆனால் ட்ரம்பால் எங்கள் வெற்றியைப் புரிந்துகொள்ளவே முடியாது என்று மேயர் சாதிக் கானின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஈரானுடனானப் போரை
நியாயப்படுத்திய ஜனாதிபதி ட்ரம்ப், பிரித்தானியாவையும் ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றி வருகிறேன் என்றார்.</p><p> ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அவர்கள் அமெரிக்கா மீது பயன்படுத்துவதை விட ஐரோப்பா மீதே பயன்படுத்த வாய்ப்பு என்றும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
</p><p>மத்திய கிழக்கில் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில், ட்ரம்ப் பிரித்தானியாவைக் காப்பாற்றவும் வேண்டியே போரை முன்னெடுத்து வந்ததாகத் தெரிவித்தார்.
</p><p>அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, ஹார்முஸ் நீரிணை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தது. </p><p>ஆனால், இஸ்ரேல் அழுத்தத்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னர், அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கியது. தற்போது அந்த நீரிணையை மீட்பதற்காக ட்ரம்ப் போராடி வருகிறார்.</p><h2>போர் முடிந்துவிட்டதாக</h2><p> </p><p>வளைகுடாப் பாதையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்கியுள்ள இந்த இடையூறு, பிரித்தானியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பெட்ரோல் விலையிலும் கடும் உயர்வை உருவாக்கியுள்ளது. </p><p>இதனிடையே, GB News ஊடகம் நடத்திய நேர்காணளில், மறந்துவிடாதீர்கள், உங்கள் எண்ணெயில் பெரும் பகுதியை நீங்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகவே பெறுகிறீர்கள்; ஆனால் அமெரிக்காவுக்கு உதவ நீங்கள் மறுத்து விட்டீர்கள் என்று ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe41ad5a-461a-4cc8-b098-72b48687828b/26-6a9a4ef20d525.webp' /></p><p> </p><p>ஈரான் உடனானப் போர் முடிந்துவிட்டதாக அறிவிப்பதா என்பது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி தனது மூத்த உதவியாளர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் கசிந்துள்ள நிலையிலேயே, பிரித்தானியா தமக்கு உதவ முன்வரவில்லை என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பது, இறுதியில் அந்த அரசாங்கம் தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிடவோ அல்லது வீழ்ச்சியடையவோ கட்டாயப்படுத்தும் என்று தான் நம்புவதாக ட்ரம்ப் தனது உதவியாளர்களிடம் கூறியுள்ளார் என்றே தெரிய வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T04:52:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல நாட்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைச் சேமிக்க பிரித்தானியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brits-warned-stock-up-supplies-1788492519"></link>
            <id>https://news.lankasri.com/article/brits-warned-stock-up-supplies-1788492519</id>
            <summary type="text">Brits warned to stock up on days of supplies: எல் நினோ தொடர்பில், பல நாட்களுக்குத் தேவையான பொருட்களைச் சேமித்து வைக்குமாறு பிரித்தானிய மக்கள் எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Brits warned to stock up on days of supplies: எல் நினோ தொடர்பில், பல நாட்களுக்குத் தேவையான பொருட்களைச் சேமித்து வைக்குமாறு பிரித்தானிய மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். </p><p>
மிகப்பெரிய எல் நினோ வரவிருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ள நிலையில், சாத்தியமான தேசிய அவசரநிலைகளுக்குத் தயாராகவும், அத்தியாவசியப் பொருட்களைச் சேத்து வைக்கவும் பிரித்தானிய மக்களை அமைச்சர் ஒருவர் எச்சரித்துள்ளார்.</p><h2>இதுவரை கண்டிராத</h2><p>
</p><p>காலநிலை தொடர்பான பேரிடர் ஏற்பட்டால், சில நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரை இருப்பு வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>இந்தக் கோடைக்காலத்தில் மட்டும் ஐந்து வெப்ப அலைகளை எதிர்கொண்ட நிலையில், பிரித்தானியா கடுமையான குளிர்காலத்தைச் சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேம் ஏஞ்சலா ஈகிள் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faca6fa0-56ec-4fe6-9012-39a8547960e9/26-6a9a3ae950206.webp' /></p><p> </p><p>மேலும், இதுவரை காணப்பட்டதிலேயே மிகப்பெரிய 'எல் நினோ' நிகழ்வை மக்கள் எதிர்கொள்ளவிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதனை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.</p><p>
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ், உலகம் இதுவரை கண்டிராத ஒரு சூழலில் இருப்பதாகக் கூறியதோடு, 'எல் நினோ' நிகழ்வு நம் கண்முன்னே மிகத் தீவிரமடைந்து வருவதாகவும் எச்சரித்ததைத் தொடர்ந்து பிரித்தானிய மக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p> </p><p>உருவாகி வரும் வானிலை மாற்றங்களுக்கு மத்தியில், பிரித்தானியாவைத் தாக்கக்கூடிய சாத்தியமான சுற்றுச்சூழல் அவசரநிலைகளுக்குத் தயாராக இருக்குமாறும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மக்களைக் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுவரை காணப்பட்டதிலேயே மிகப்பெரிய 'எல் நினோ' நிகழ்வை நாம் எதிர்கொள்ளவிருக்கிறோம்; இது நம் நாட்டில் கோடைக்காலங்களில் வறட்சியையும், குளிர்காலங்களில் அதிக மழையையும், அத்துடன் மிகத் தீவிரமான புயல்களையும் உருவாக்கலாம் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டேம் ஏஞ்சலா, </p><p>இது ஆசியாவில் வெள்ளப்பெருக்கின் மூலம் இன்னும் அதிக சேதத்தை ஏற்படுத்தும்; எனவே, நாம் இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன் என்றார். </p><p>மேலும், அவசரகால சேவையினர் உங்களை வந்தடைவதற்கு முன், சிறிது காலத்திற்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய உணவை நீங்கள் சேமித்து வைத்திருந்தால், அதைச் செய்யாதவர்களை விட நீங்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருப்பீர்கள் என்றார்.
</p><p>வெப்பமண்டல கிழக்கு பசிபிக் பகுதியில் கடல் நீர் வெப்பநிலை சராசரியை விட 0.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக உயரும்போது 'எல் நினோ' (El Nino) நிலை அறிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48915053-c72f-4ccb-bd51-87d5e6ed6b57/26-6a9a3aea04337.webp' /></p><p> </p><p>சுமார் 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த வானிலை அமைப்பு, உலகளாவிய மழைப்பொழிவு முறைகள் மற்றும் சராசரி வெப்பநிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. </p><p>பசிபிக் பெருங்கடலில் வழக்கமாக கிழக்கிலிருந்து மேற்காக வீசும் காற்று வலுவிழக்கவோ அல்லது நின்றுவிடவோ கூடும்; இதனால் வெப்பமான நீர் கிழக்கு நோக்கி நகர முடிகிறது. பின்னர், இந்த வெப்பம் கடலிலிருந்து வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்பட்டு, 0.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுக்கும். </p><p>எல் நினோ நிகழ்வால் ஏற்படும் வெப்பம் ஏற்கனவே பல்வேறு பகுதிகளைப் பாதித்துள்ளது; இதன்காரணமாக, இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை சராசரிக்கும் குறைவாகப் பதிவாகியுள்ளதுடன், ஜூலை மாத நடுப்பகுதி முதல் இந்தோனேசியாவின் சில பகுதிகளில் காட்டுத்தீயும் எரிந்து வருகிறது.</p><p> உருவாகியுள்ள எல் நினோ நிகழ்வு 2027-ஆம் ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்றும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்துடன் இணைந்து, அடுத்த ஆண்டு இதுவரை பதிவானதிலேயே மிக வெப்பமான ஆண்டாக அமைவதற்கு மிக அதிக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T03:27:04+00:00</updated>
        </entry>
    </feed>
