<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-29T05:53:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீ அபாயம்: சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-restrict-fireworks-on-aug1-over-wildfire-1785301708"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-restrict-fireworks-on-aug1-over-wildfire-1785301708</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில், ஆகத்து மாதம் 1ஆம் திகதி தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தேசிய தின கொண்டாட்டங்களின்போது பல சுவிஸ் மாகாணங்கள் வாணவே...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில், ஆகத்து மாதம் 1ஆம் திகதி தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.</p><p>

இந்நிலையில், தேசிய தின கொண்டாட்டங்களின்போது பல சுவிஸ் மாகாணங்கள் வாணவேடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளன.</p><h3>

சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முக்கிய முடிவு
</h3><p>
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் காட்டுத்தீ பரவிக்கொண்டிருக்கிறது. பிரான்ஸ் போன்ற நாடுகள் தீயை அணைக்க கடுமையாக போராடிக்கொண்டிருக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23d9e8d5-56ab-480a-937c-1100387994ec/26-6a698ace23873.webp' /></p><p>

விடயம் என்னவென்றால், ஆகத்து மாதம் 1ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் தேசிய தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
</p><p>
வழக்கமாக தேசிய தினத்தின்போது நாடு முழுவதும் வாணவேடிக்கைகள் நடத்தப்படுவதுண்டு.&nbsp;</p><p></p><p>
ஆனால், இம்முறை, பிரெஞ்சு மொழி பேசும் ஆறு சுவிஸ் மாகாணங்களிலும், காட்டுத்தீ அபாயத்தைத் தவிர்ப்பதற்காக, தனிப்பட்ட முறையில் மக்கள் வாணவேடிக்கைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஜெனீவா ஏரி, Neuchâtel மற்றும் Murten ஏரிக்கரைகளில் மட்டும் அதிகாரப்பூர்வமாக, உரிமம் பெற்ற தொழில்முறை வாணவேடிக்கை நிபுணர்கள் வாணவேடிக்கைகள் நடத்த இருக்கிறார்கள்.</p><p>

Valais மற்றும் Fribourg மாகாணங்களோ, இன்னும் ஒரு படி மேலே போய், பட்டாசு விற்பனைக்கே மொத்தமாக தடை விதித்துவிட்டன.</p><p>

அத்துடன், யாராவது பட்டாசு வெடித்தாலோ, திறந்த வெளிகளில் தீப்பற்றவைத்தாலோ அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T05:11:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயதானாலும் இளமையாக இருக்க உதவும் பேஸ்பேக்.., வீட்டிலேயே தயாரிக்கலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/homemade-anti-ageing-face-packs-in-tamil-1785300180"></link>
            <id>https://news.lankasri.com/article/homemade-anti-ageing-face-packs-in-tamil-1785300180</id>
            <summary type="text">பொதுவாக பெண்கள் அனைவருக்கும் வயதானாலும் இளமையுடன் இருக்கவேண்டும் என்று இருக்கும்.

வயது அதிகரிக்கும் போது சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறைகிறது. சூரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக பெண்கள் அனைவருக்கும் வயதானாலும் இளமையுடன் இருக்கவேண்டும் என்று இருக்கும்.
</p><p>
வயது அதிகரிக்கும் போது சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறைகிறது. </p><p>சூரியனின் அதிகப்படியான புற ஊதா கதிர்கள் படுதல், புகைப்பிடித்தல் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம்&nbsp;ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.</p><p></p><p>முகத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க, போதிய தண்ணீர் குடித்தல், வெயிலிலிருந்து பாதுகாத்தல் மற்றும் இயற்கையான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துதல் ஆகியவை அவசியமாகும்.</p><p>
அந்தவகையில், எப்போதுமே இளமையாக இருக்க வீட்டிலேயே இயற்கை முறையில் பேஸ்பேக் செய்து எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><h2>1. தேவையான பொருட்கள்
</h2><ul><li>
மஞ்சள்- 1 ஸ்பூன்</li><li>தயிர்- 2 ஸ்பூன்</li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
</p><p>

பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eae61794-49ba-4379-820f-9df0748002b1/26-6a69855b397fc.webp' /></p><p> அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.</p><p>
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் எப்போதும் இளமையாக இருக்கலாம்.
</p><h2>
2. தேவையான பொருட்கள்</h2><ul><li>

முட்டை- 1
</li><li>தேன்- 1 ஸ்பூன்</li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?</h2><p>

முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து, அத்துடன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.</p><p></p><p>

பின்பு அதை முகத்தில் தடவி, நன்கு உலரவைத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும்.
</p><p>
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் எப்போதும் இளமையாக இருக்கலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T04:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்ஃபான்டினோவின் திட்டம்... உலகக் கிண்ணத்தைப் புறக்கணிக்கத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/european-nations-boycott-world-cup-1785300201"></link>
            <id>https://news.lankasri.com/article/european-nations-boycott-world-cup-1785300201</id>
            <summary type="text">ஃபிஃபாவின் ஒரு பகுதியை விற்பனை செய்வதற்கான ஜியானி இன்ஃபான்டினோவின் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஐரோப்பிய நாடுகள் உலகக் கிண்ணம் தொடரைப் புறக்கணிக்கக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிஃபாவின் ஒரு பகுதியை விற்பனை செய்வதற்கான ஜியானி இன்ஃபான்டினோவின் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஐரோப்பிய நாடுகள் உலகக் கிண்ணம் தொடரைப் புறக்கணிக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>3 பில்லியன் பவுண்டு</h2><p>
</p><p>உலகக் கிண்ணம் மற்றும் கிளப் உலகக் கிண்ணம் ஆகிய போட்டிகளை நிர்வகிக்கும் ஒரு துணை நிறுவனத்தைத் தொடங்கி, அதில் பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை ஃபிஃபா (FIFA) வகுத்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/140a70cc-7375-4a53-86c3-5d1dcca7daf6/26-6a698651f257d.webp' /></p><p> </p><p>புதிய ஃபிஃபா ஃபார்வர்ட் எண்டர்பிரைஸ் நிறுவனத்தில் 20 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், உலக கால்பந்தாட்ட நிர்வாக அமைப்புக்கு தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து 3 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் திரட்ட முடியும். </p><p>இத்திட்டங்களுக்கு பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் ஏற்கனவே கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இத்திட்டம் வெற்றிபெற்றால், தற்போது 56 வயதாகும் இன்ஃபான்டினோ கணிசமான தொகையை ஊக்கத்தொகையாகப் பெறுவார். </p><p>மட்டுமின்றி, 2031-ல் அவரது இறுதி ஃபிஃபா பதவிக்காலம் கட்டாயமாக முடிவடைந்தவுடன், அவர் புதிய துணை நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆணையர் பொறுப்பிற்கும் செல்லக்கூடும்.</p><p></p><p> </p><p>இந்தத் திட்டங்களுக்கு யுஇஎஃப்ஏ ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்பந்தின் நிர்வாக அமைப்புகள் ஒருபோதும் தாண்டக் கூடாத எல்லையை இது தாண்டுகிறது. </p><p>யுஇஎஃப்ஏ இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், ஃபிஃபாவின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகக் கிண்ணம் தொடரைப் புறக்கணிப்பது குறித்து யுஇஎஃப்ஏ நாடுகள் விவாதிக்க உள்ளன. </p><p>உறுப்பு சங்கங்கள் இந்த வாரம் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்திற்காக இணையவழியில் கூடவுள்ளன, இதில் புறக்கணிப்பு என்பதும் விவாதிக்கப்படும் தலைப்புகளில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0cc0db1-a58b-40ec-945e-ce78ef5059a3/26-6a6986538cf78.webp' /></p><p> </p><p>இந்த மாதத் தொடக்கத்தில் உலகக் கிண்ணம் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள், பல்வேறு கால்பந்து சங்கங்கள் ஃபிஃபாவைச் சந்தித்தன, ஆனால் இந்தத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை.</p><h2>ட்ரம்பிற்கும் தொடர்பு</h2><p> </p><p>யுஇஎஃப்ஏ தலைவர் அலெக்சாண்டர் செஃபெரின், சமீப வாரங்களில் இன்ஃபான்டினோவின் ஃபிஃபாவை ஏற்கனவே விமர்சித்து வருகிறார். ஃபிஃபா தலைவருக்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, உலகக் கிண்ணம் தொடரின் போது ஃபோலரின் பலோகுனின் சிவப்பு அட்டைக்கான தடை நீக்கப்பட்டதற்கு அவர் தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78f5d2c6-2588-46be-a07b-ba115d0400c7/26-6a698652dca7e.webp' /></p><p> </p><p>இன்ஃபான்டினோவின் இந்த வெட்கங்கெட்ட திட்டத்திற்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கும் தொடர்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் தம்பியான ஜோசுவா குஷ்னர் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள 'த்ரைவ் கேபிடல்' (Thrive Capital) நிறுவனம், இதில் முன்னணியில் உள்ள ஏலதாரராகக் கருதப்படுகிறது. </p><p>இந்த நிலையில், விமர்சனங்களுக்குப் பதிலளித்த இன்ஃபான்டினோ, இந்தத் திட்டங்கள் உறுப்பு சங்கங்களுக்கு ஃபிஃபா அதிக நிதியை வழங்க வழிவகுக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;மேலும், தற்போது 8 மில்லியன் டொலராக இருக்கும் நிதியுதவி 2027 மற்றும் 2030ல் 20 மில்லியன் டொலராக அதிகரிக்கும் என்றும் இன்ஃபான்டினோ வாதிடுகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T04:41:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பான் நிலநடுக்கம்... மீட்பு நடவடிக்கை தீவிரம்: மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-earthquake-death-toll-rises-1785297337"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-earthquake-death-toll-rises-1785297337</id>
            <summary type="text">தெற்கு ஜப்பானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஜப்பானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>ஐந்து மாகாணங்களில்</h2><p>
</p><p>ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோருக்கு மின்சாரம், தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df62b911-fa3d-445c-a942-8cbbd2a65485/26-6a697b1637926.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் சனே தகைச்சி புதன்கிழமை தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் கியூஷுவின் தெற்குத் தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தைத் தாக்கியபோது, ​​அந்த நிலநடுக்கம் ஜப்பானிய ஷிண்டோ தீவிர அளவுகோலில் அதிகபட்சமாக 7 ஆகப் பதிவானது. </p><p>புதன்கிழமை அதிகாலை நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள பேரிடர் முகாம்களில் 9,000-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>குறைந்தது 13 பேர் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் நிகழ்ந்த மறுநாளான புதன்கிழமை பகல் 7 மணி நிலவரப்படி, குமாமோட்டோ மற்றும் ஃபுகுவோகா உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் உள்ள 506 பேரிடர் முகாம்களில் 9,186 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், </p><p>ஏழு பேர் பலத்த காயங்களுடனும் 29 பேர் லேசான காயங்களுடனும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் மினோரு கிஹாரா தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98d9293e-048d-48c4-b763-a2dd4da87bca/26-6a697b17b0b0b.webp' /></p><h2>நில அதிர்வுகள்</h2><p> </p><p>இந்த நிலையில், பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக ஜப்பானிய ராணுவம் 3,600 வீரர்களைத் திரட்டியுள்ளதாகவும், வான்வழியாக சேதங்களை மதிப்பிடுவதற்காக 20 விமானங்களை அனுப்பியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a994d462-99e5-4a0c-91f9-a5e751ec5cb9/26-6a697b1709c6d.webp' /></p><p> </p><p>புதன்கிழமை காலைக்குள் 1 முதல் 4 வரையிலான ரிக்டர் அளவுகளில் 60-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகியிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p> நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் இரண்டு மணி நேரத்திற்குள் அது விலக்கிக்கொள்ளப்பட்டது. 
செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி, சுமார் 50,000 வீடுகளில் மின்சாரமும், 140,000 வீடுகளில் குடிநீரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa2c1f3-72ce-4967-b667-4ecb94fa1eb0/26-6a697b1863e5c.webp' /></p><p> </p><p>அப்பகுதியில் புதன்கிழமையன்று வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது; அதேவேளையில், அதிக ஈரப்பதம் நிலவுவதால், குளிரூட்டப்பட்ட வசதி மற்றும் குடிநீர் வசதி இல்லாதவர்களுக்கு heatstroke ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T03:53:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[காப்பாற்றுங்கள்... உக்ரைன் அருகே கப்பலில் சிக்கிய 13 இந்திய மாலுமிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-sailors-trapped-near-ukraine-1785294742"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-sailors-trapped-near-ukraine-1785294742</id>
            <summary type="text">உக்ரைன் கருங்கடல் துறைமுகத்திற்கு அருகே தொடரும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில், சரக்குக் கப்பல் ஒன்றில் குறைந்தது 13 இந்திய மாலுமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் கருங்கடல் துறைமுகத்திற்கு அருகே தொடரும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில், சரக்குக் கப்பல் ஒன்றில் குறைந்தது 13 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>தாக்கப்படலாம்</h2><p>
</p><p>கருங்கடல் துறைமுகத்திற்கு அருகே ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால், அங்கு சிக்கியுள்ள கப்பல் ஊழியர்கள் மிக மோசமான மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழலில் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் நேரடியாகத் தாக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் மாலுமிகள் சங்கம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5cb108e-88f1-4596-a532-f3133aeae2ac/26-6a69708da3b1d.webp' /></p><p> </p><p>மேலும், இந்திய அரசு, கப்பல் உரிமையாளர்கள் மற்றும் பிற அதிகார அமைப்புகள் ஆகியவை கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யவும், அவர்களை விரைவாகத் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. </p><p>மோதல் மண்டலங்களில் உள்ள இந்தியக் கடல்சார் பணியாளர்கள் எளிதில் தாக்கப்படக்கூடிய இலக்குகளாக விடப்படக்கூடாது என்றும், உடனடியாக நடவடிக்கை எடுகக வேண்டும் என்றும் அந்த அமைப்பு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p> </p><p>துறைமுகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைச் சுட்டிக்காட்டும் வகையில், கப்பலைச் சுற்றியுள்ள பகுதியில் அடர்த்தியான புகை மண்டலம் எழுவதைக் காட்டும் காணொளி ஒன்றையும் மாலுமிகள் சங்கம் வெளியிட்டுள்ளது; இக்காணொளி அக்கப்பலிலிருந்தே பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. </p><p>13 இந்திய மாலுமிகள் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்த தகவல்களுக்கு, இதுவரை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகமோ அல்லது கப்பல் நிறுவனமோ எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>உதவிக்கான அழைப்பு</h2><p>
</p><p>உக்ரைனின் தெற்கு கடற்கரைப் பகுதியில் இயங்கும் சரக்குக் கப்பல்கள் மீது சமீபத்திய நாட்களில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்திய மாலுமிகளிடம் இருந்து சமீபத்திய உதவிக்கான அழைப்பு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09e00626-9612-4b5c-a5fe-081bae7d6516/26-6a69708ea7a65.webp' /></p><p> </p><p>கடந்த வாரம் கருங்கடலில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உக்ரைன் தூதர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக்கை திங்களன்று வரவழைத்த இந்தியா தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது. </p><p>அச்சம்பவம் குறித்து இந்தியாவின் தீவிர கவலையைத் தூதரிடம் தெரிவித்ததாகவும், வணிகக் கப்பல் போக்குவரத்து மீதான இத்தகைய தாக்குதல்களை மிகக் கடுமையாகக் கண்டிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T03:10:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோனை குத்தகைக்கு விடப்போகும் ஆப்பிள்., மாதம் 17.99 டொலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apple-offers-iphone-lease-at-17-99-1785287159"></link>
            <id>https://news.lankasri.com/article/apple-offers-iphone-lease-at-17-99-1785287159</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவில் Apple, தனது iPhone-களை மாதம் 17.99 டொலருக்கு குத்தகைக்கு (lease) வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

Klarna எனும் “Buy Now...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவில் Apple, தனது iPhone-களை மாதம் 17.99 டொலருக்கு குத்தகைக்கு (lease) வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.</p><p>

Klarna எனும் “Buy Now, Pay Later” நிறுவனத்துடன் இணைந்து, Apple Upgrade எனப்படும் இந்த திட்டம், Apple-இன் ஓன்லைன் மற்றும் ரீட்டெயில் கடைகளில் கிடைக்கும்.
</p><p>
இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் ஒரு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு iPhone-ஐ குத்தகைக்கு எடுக்கலாம்.

அதேபோல், Apple Watch, Mac, iPad போன்ற சாதனங்களுக்கும் வாடகை விருப்பங்கள் வழங்கப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82ea8d07-5cdf-404e-8e9d-e69a9a157c77/26-6a6951f97a4c1.webp' /></p><p>வாடிக்கையாளர்கள் “soft credit check” முடித்த பிறகு, iPhone-ஐ 12 அல்லது 24 மாதங்களுக்கு குத்தகைக்கு எடுக்கலாம். காலம் முடிந்ததும், சாதனத்தை திருப்பித் தரலாம் அல்லது கூடுதல் தொகை செலுத்தி வாங்கலாம்.</p><p>

Apple, கடந்த மாதம் iPad மற்றும் Mac விலைகளை 100 முதல் 1000 டொலர் வரை உயர்த்தியிருந்தது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர குறைந்த கட்டணம் மூலம் சாதனங்களைப் பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
</p><p>
உதாரணமாக, iPhone 17 Pro மாதம் 31.99 டொலர் (24 மாதங்கள்) அல்லது 45.99 டொலர் (12 மாதங்கள்) ஆகும்.</p><p></p><p>ஆனால், iPhone 16 மற்றும் MacBook Neo போன்ற சில அடிப்படை மாடல்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
</p><p>
Apple, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சாதனங்களை விரைவாக மாற்றிக் கொள்ள ஊக்குவிக்கிறது. </p><p>தற்போது, iPhone-ஐ மாற்றும் சராசரி காலம் 4 ஆண்டுகளாக நீண்டுள்ளது.

இந்த திட்டம், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் (AT&amp;T, Verizon, T-Mobile) தவணை திட்டங்களுக்கு நேரடி போட்டியாக அமையும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T01:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் ஆட்சிக்கு பிறகு கனேடியர்களின் வெளிநாட்டு பயணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canadian-travel-to-us-drops-under-trump-1785284007"></link>
            <id>https://news.lankasri.com/article/canadian-travel-to-us-drops-under-trump-1785284007</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் 2025-இல் மீண்டும் பதவியேற்ற பிறகு, கனடியர்களின் அமெரிக்க பயணச் செலவு 3.3 பில்லியன் டொலர் குறைந்துள்ளது என Statistic...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் 2025-இல் மீண்டும் பதவியேற்ற பிறகு, கனடியர்களின் அமெரிக்க பயணச் செலவு 3.3 பில்லியன் டொலர் குறைந்துள்ளது என Statistics Canada வெளியிட்ட புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
2024-இல் 22.1 பில்லியன் டொலராக இருந்த அமெரிக்க பயணச் செலவு, 2025-இல் 18.8 பில்லியன் டொலராகக் குறைந்தது.</p><p>
</p><p></p><p>ஆனால், கனடியர்கள் பயணத்தை முற்றிலும் குறைக்கவில்லை, அதற்கு பதிலாக, அமெரிக்காவைத் தவிர்த்து பிற சர்வதேச இடங்களுக்கு அதிகம் சென்றுள்ளனர்.
</p><p>
2025-இல், அமெரிக்காவைத் தவிர்த்த வெளிநாட்டு பயணச் செலவு 3.6 பில்லியன் டொலர் அதிகரித்து 22.8 பில்லியனாக உயர்ந்தது.</p><p>

ஐரோப்பாவிற்கு கனடியர்களின் பயணம் 14 சதவீதம் அதிகரித்தது. ஆசியாவிற்கு 17 சதவீதம் அதிகரித்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b5f5b40-917f-4980-84c2-9e40c34918b2/26-6a6945a8dad9a.webp' /></p><p>இது, ட்ரம்ப் அரசின் “America First” கொள்கைகள் மற்றும் கனடாவை இணைத்துக்கொள்ளும் பேச்சுக்கள் போன்றவற்றுக்கு எதிரான அமைதியான எதிர்வினையாக கருதப்படுகிறது.
</p><p>
2025-இல், அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு திரும்பிய பயணங்கள் வாகனங்களிலும் விமானங்களிலும் 25 சதவீதம் குறைந்தன. குறிப்பாக ஜூலை 2025-இல், எல்லை கடப்புகள் 33 சதவீதம் குறைந்தன. இது 1972-இல் டிஜிட்டல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிகப்பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. </p><p>இதற்கு முன்பு 2001 செப்டம்பர் மாதம் 9/11 தாக்குதலுக்குப் பிறகு மட்டுமே 30 சதவீம் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
</p><p></p><p>2026-இல் இதுவரை கிடைத்த தரவுகளும், அமெரிக்காவிற்கு கனடியர்களின் பொழுதுபோக்கு பயணம் தொடர்ந்து குறைந்து கொண்டிருப்பதை காட்டுகின்றன.
</p><p>
இந்த நிலைமை, அமெரிக்காவின் வணிக மற்றும் சுற்றுலா துறைக்கு பெரிய பொருளாதார சவாலாக மாறியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T00:11:31+00:00</updated>
        </entry>
    </feed>
