<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-03T23:44:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாய்: விசாரணையில் பொலிஸாருக்கு கிடைத்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-sell-his-own-daughter-for-1-5-lakhs-1785796529"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-sell-his-own-daughter-for-1-5-lakhs-1785796529</id>
            <summary type="text">பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாயை டேராடூன் பொலிஸார் கைது செய்துள்ளனர். பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாய்
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் சிறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாயை டேராடூன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2> பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாய்</h2><p>
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் சிறுமி கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், தாய் உட்பட 4 பேரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.</p><p> கடந்த மாதம் சகஸ்தரதார ரோட்டை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் தன்னுடைய 15 வயது மகளை காணவில்லை என்று ராஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.</p><p> தாய் அளித்த புகாரின் பேரில் பாரதிய நியாய சங்கிதா (BNS) பிரிவு 137(2)-ன் கீழ் பொலிஸாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbb1fe80-9d9d-4157-9ebb-5f15433121cc/26-6a7117b2e2397.webp' /></p><p></p><p> விசாரணையின் போது அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக, பெற்ற தாயே தன்னுடைய மகளை ரூ1.5 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.</p><p> அத்துடன் சிறுமியை வாங்கியவரிடம் இருந்து முழு தொகையையும் பெற முடியதாததால் மகளை காணவில்லை என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.</p><h2> கைது நடவடிக்கை</h2><p>இதையடுத்து தாய் கைது செய்யப்பட்டதுடன் உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.</p><p> மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மனிஷ் (37), மற்றும் லிவி குமார்(24) ஆகியோரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p> இதில் இடைத்தரகராக செயல்பட்ட பின்கி மாலிக் என்பவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் நோக்கத்தில் கடத்தப்பட்டு இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T22:35:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மூழ்கிய 19 வயது கயாக்கிங் வீரர்: பிரித்தானிய கடற்கரையில் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/19-yrs-old-kayaker-body-found-in-uk-coast-1785785861"></link>
            <id>https://news.lankasri.com/article/19-yrs-old-kayaker-body-found-in-uk-coast-1785785861</id>
            <summary type="text">பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்ட் கடற்கரையில் காணாமல் போன 19 வயது இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.கயாக்கிங் வீரர் உடல் மீட்பு
நார்தம்பர்லேண்ட் கடற்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்ட் கடற்கரையில் காணாமல் போன 19 வயது இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.</p><h2>கயாக்கிங் வீரர் உடல் மீட்பு</h2><p>
நார்தம்பர்லேண்ட் கடற்கரையில் கயாக்கிங் சென்றபோது விபத்தில் சிக்கி 19 வயது மைக்கேல் ஹென்றி என்ற இளைஞர் காணாமல் போனார்.</p><p>பவுல்மர்(Boulmer) பகுதிக்கு அருகே ஜூலை 7ம் திகதி மாலை மைக்கேல் ஹென்றி சென்ற இரண்டு பேர் கொண்ட படகு கவிழ்ந்ததை அடுத்து காணாமல் போனார்.</p><p> இதில், மைக்கேல் ஹென்றியுடன் பயணம் செய்த மற்றொரு வீரர் அதிர்ஷ்டவசமாக கடலில் தத்தளித்த நிலையில் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aa2535d-fbc9-45e6-8509-9f22cd44a739/26-6a70ee075c20a.webp' /></p><p>ஆனால் மைக்கேல் ஹென்றியை மீட்க முடியவில்லை. இதையடுத்து அவரை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையானது பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.</p><p> இந்நிலையில், கடந்த ஜூலை 26ம் திகதி பிளைத் கடற்கரையில் ஹென்றியின் உடல்&nbsp; கண்டுடெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> இருப்பினும் முறையான அடையாளம் காணும் பணி நிறைவடைந்ததை அடுத்து, இது தொடர்பான அறிக்கை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><p> ஹென்றியின் மறைவை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஹென்றியின் அழகான நினைவுகளை உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p> மேலும் ஹென்றியை கண்டுபிடிக்க அயராது உழைத்த அவசரகால சேவைகளுக்கும், மீட்பு பணியாளர்களுக்கும் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T22:09:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய அதிகாரிகள் இரட்டை வேடம்: அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ்: டிரம்ப் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-control-strait-of-hormuz-trump-warns-iran-1785776458"></link>
            <id>https://news.lankasri.com/article/us-control-strait-of-hormuz-trump-warns-iran-1785776458</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் கட்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி</h2><p>
திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த தகவலில், அமெரிக்காவின் அனுமதியின்றி ஈரானுக்குள் எதுவும் நுழைய முடியாது. ஏனென்றால் தற்போதைய கடல்சார் முற்றுகை நடவடிக்கை இதனை உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.</p><p> இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eb54eb6-3b0a-4be8-9683-86f59e42bab8/26-6a70c94d0f567.webp' /></p><p> அமெரிக்காவுடன் முறையான ஒப்பந்தம் அல்லது முழுமையான சரணடைதல் எட்டப்படாமல் இந்த முற்றுகை நிலைப்பாடு தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p> அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு தற்போது எந்தவொரு அதிகாரமும், கட்டுப்பாடும் இல்லை என்று மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஈரானிய அதிகாரிகளின் நடத்தையை விமர்சித்த ட்ரம்ப்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e6ea4ab-3dbd-4f7a-b2ec-1547d6320d66/26-6a70c94c58bd1.webp' /></p><p>பேச்சுவார்த்தை தொடர்பான விஷயங்களில் ஈரானிய அதிகாரிகள் இரட்டை வேடம் போடுவதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> அதில் ஈரானிய அதிகாரிகள் தாங்களே முன்வந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்த போது அவர்களின் முயற்சி கெஞ்சுவது போல் இருந்தது.</p><p> ஆனால் மறுபுறம் நாங்கள் ஓமன் வழியாக மட்டுமே பேச்சுவார்த்தைக்கு தொடர்பு கொள்வதாக வெளிப்படையாக பொய் கூறுகின்றனர் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T19:02:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணுசக்தி மற்றும் கடல் வழி ஒப்பந்தம்: ஈரானுக்கு இது தான் கடைசி வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-says-last-chance-for-diplomatic-deal-to-iran-1785783720"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-says-last-chance-for-diplomatic-deal-to-iran-1785783720</id>
            <summary type="text">போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு இது தான் கடைசி வாய்ப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.மத்திய கிழக்கில் நீடிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு இது தான் கடைசி வாய்ப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்</h2><p>அமெரிக்கா - ஈரான் இடையிலான தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில்,&nbsp; இரு நாடுகளும் இடையில் முன்னதாக எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன.</p><p> இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமானது நீடித்து வருகிறது. திங்கட்கிழமை கூட&nbsp; ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27264863-ea90-4e6c-80dd-9286596078cd/26-6a70e5ab3f8f4.webp' /></p><p> அமெரிக்காவுடன் முறையான ஒப்பந்தம் அல்லது முழுமையான சரணடைதல் எட்டப்படாமல் இந்த முற்றுகை நிலைப்பாடு தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><h2> ஈரானுக்கு கடைசி வாய்ப்பு</h2><p>
இந்நிலையில் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “ அவர்கள் அனைவரும் இதற்கு கடைசி வாய்ப்பு ஒன்றை கொடுக்க விரும்பினர். இது சாதாரணமாக நடக்க கூடிய ஒன்றல்ல. இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு நல்ல ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும்.</p><p> அரசியல் ரீதியில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான நல்ல வாய்ப்பை ஈரான் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f498fd3-7ad2-4de2-81bc-ca8e2d47bf30/26-6a70e5aa8d8ec.webp' /></p><p> ஈரான் - அமெரிக்கா இடையிலான இராணுவ மோதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைதிக்கான இந்த புதிய பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p> தற்போது முன்வைக்கப்படும் அமைதி ஒப்பந்தத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற வர்த்தக போக்குவரத்தும், அணுசக்தி திட்டங்கள் மீதான தடையும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T19:02:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சை விட்டு வெளியேறுங்கள்: ரஷ்ய விமர்சகர் ஃபெடோரோவா-க்கு அரசு உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-commentator-ordered-to-leave-france-1785780543"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-commentator-ordered-to-leave-france-1785780543</id>
            <summary type="text">ரஷ்ய அரசியல் விமர்சகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. ரஷ்ய விமர்சகரை வெளியேற்றிய பிரான்ஸ்ரஷ்யா தொடர்பான ஆதரவு பிரச்சாரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய அரசியல் விமர்சகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2> ரஷ்ய விமர்சகரை வெளியேற்றிய பிரான்ஸ்</h2><p>ரஷ்யா தொடர்பான ஆதரவு பிரச்சாரங்களை பிரெஞ்சு ஊடகங்களில் பரப்பி வந்ததாக குற்றம்சாட்டப்பட்ட ரஷ்ய அரசியல் விமர்சகர் செனியா ஃபெடோரோவா(Xenia Fedorova) உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்சின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.</p><p> பிரான்ஸ் நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில், ரஷ்யாவின் பரப்புரையை திட்டமிட்டு ஃபெடோரோவா பரப்பி வந்ததாக பிரான்ஸ் நாட்டின் Libération நாளிதழ் தெரிவித்துள்ளது.</p><p> AFP செய்தி நிறுவனத்தின் தகவல் படி, பிரான்ஸ் அரசின் வெளியேற்ற உத்தரவை அடுத்து, ஃபெடோரோவா தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e10518e3-ddd4-4c26-9cda-5e4c7e7e110e/26-6a70d940aa198.webp' /></p><p></p><h2> ரஷ்யா டுடே-வின் ஊடக தலைவர்</h2><p>
2022ம் ஆண்டு உக்ரைனுக்கு எதிரான போர் தீவிரமடைவதற்கு முன்பு, அதாவது பல்வேறு கட்ட தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்பு ஃபெடோரோவா பிரான்ஸில் உள்ள ரஷ்யா டுடே(RT) ஊடகத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார்.</p><p> தடைக்கு பிறகு நாட்டை விட்டு வெளியேறாத ஃபெடோரோவா, அங்கே தங்கி பிரான்ஸ் கோடீஸ்வரர் வின்சென்ட் பொல்லோரே(Vincent Bolloré) ஊடக நிறுவனத்தில் ஒளிபரப்பு அலைவரிசைகளில் விமர்சகராக பணியாற்றி வந்துள்ளார்.</p><p> 'Le Journal du Dimanche' பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த ஃபெடோரோவா, உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்புவதாக அந்த பத்திரிகையின் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T18:09:14+00:00</updated>
        </entry>
    </feed>
