<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-15T07:18:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருநாள் பிச்சைக்காரராக மாறிய ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள எம்.எல்.ஏ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rs-3000-crore-worth-mla-turns-begger-in-mumbai-1789451925"></link>
            <id>https://news.lankasri.com/article/rs-3000-crore-worth-mla-turns-begger-in-mumbai-1789451925</id>
            <summary type="text">3000 crore worth mumbai mla turns begger for a day: ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள மும்பை எம்.எல்.ஏ ஒருவர் ஒரு நாள் பிச்சைக்காரராக மாறி தெருவோரத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>3000 crore worth mumbai mla turns begger for a day: ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள மும்பை எம்.எல்.ஏ ஒருவர் ஒரு நாள் பிச்சைக்காரராக மாறி தெருவோரத்தில் அமர்ந்து யாசகம் பெற்றுள்ளார். </p><h3>

ஒரு நாள் பிச்சைக்காரராக மாறிய எம்.எல்.ஏ </h3><p>

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள காட்கோபர் கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்ஏ வாக இருப்பவர் பாஜகவை சேர்ந்த பராக் ஷா(parag shah).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4de0076-2aba-4f28-b345-90057d775230/26-6aa8de978b4cd.webp' /></p><p>

ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அவர், 2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனது சொத்துமதிப்பு ரூ. 3,383 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். </p><p>

இந்நிலையில், தனது தோற்றத்தை ஒரு பிச்சைக்காரர் போல் மாற்றிக்கொண்டு, பாதுகாப்பை துறந்து விட்டு, காட்கோபர் வீதிகளில் அமர்ந்து யாசகம் பெற்றுள்ளார். </p><p>

பிரபல அரசியவாதியாக இருந்தாலும் மக்கள் யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a288660-7464-41ea-bf54-23c9b792a845/26-6aa8de98421da.webp' /></p><p>

ஜைன மதத்தின் சதுர்மா பண்டிகைகள் நடைபெறும் சூழலில், வாழ்க்கையையும், மக்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களையும் உண்மையாக அனுபவிப்பதற்காக, ஒரு நாள் பிச்சைக்காரராக ஆகும்படி தனது ஆன்மீக குருவான நம்ரமுனி மகாராஜின் ஆலோசனையின் பேரில் இதனை செய்துள்ளார். </p><p>

இந்த அனுபவம் குறித்து தனது குருவிடமும் மக்களிடமும் பகிர்ந்து கொண்ட பராக் ஷா, "ஒரு நபர் எனக்கு ரூ.20 வழங்கி சாப்பிடுமாறு கூறியுள்ளார். </p><p>ஒரு சமோசா கடைக்கு சென்று தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி விட்டு சமோசா கேட்டபோது, அந்த ஏழை வியாபாரி முகம் சுழிக்காமல் எனக்கு இலவசமாகவே சமோசா வழங்கினார்.</p><p>

நான் கவனித்த ஒரு விஷயம், மும்பை நகரம் அப்படிப்பட்டது, இங்குள்ள மக்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் உதவத் தயாராக இருப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">🙏 पवित्र पर्युषण पर्व पर एक प्रेरणादायी अनुभव 🙏<br><br>परम पूज्य राष्ट्रसंत श्री नम्रमुनि महाराज साहेब ने अपने प्रवचन में समाज के जरूरतमंद लोगों के प्रति संवेदनशीलता, करुणा और मानवता का संदेश दिया।<br><br>गुरुदेव की आज्ञा का पालन करते हुए वेशभूषा बदलकर घाटकोपर रेलवे स्टेशन परिसर में आम… <a href="https://t.co/mFL2cWWfne">pic.twitter.com/mFL2cWWfne</a></p>&mdash; Parag Shah (@ParagShahBJP) <a href="https://x.com/ParagShahBJP/status/2099357542535319818?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மேலும், "நான் பிச்சைக்காரன் வேடத்தில் என் சொந்த வளாகத்திற்குள் சென்றபோது, ​​என் காவலாளியே என்னை வெளியே தள்ளிவிட்டார். 

என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி மக்களுக்கு உதவுவார், மேலும் எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எப்போதும் வற்புறுத்துவார். </p><p>

ஆனால் நான் பிச்சைக்காரன் வேடத்தில் அவரிடம் சென்றபோது, ​​அவர் என்னை விரட்டிவிட்டார். மக்கள் தனிநபரை விட பணம், பதவி மற்றும் அதிகாரத்திற்கே அதிக மதிப்பு கொடுக்கிறார்கள்" என கூறியுள்ளார்.</p><p>

பராக் ஷா யாசகம் பெற்றது மட்டுமில்லாமல் ஒரு பிச்சைக்காரரை போல் சாலை ஓரத்தில் அமர்ந்து தனது கிடைத்த உணவை சாப்பிட்டார்.</p><p> 

அதன் பிறகு தனது பிச்சைக்காரர் தோற்றதை கலைத்துவிட்டு தான் யாசகம் பெற்ற பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T06:45:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலில் ரப்பர் ரசாயனங்கள்: சுவிஸ் ஆய்வு முடிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rubber-related-chemicals-found-in-swiss-milk-1789452487"></link>
            <id>https://news.lankasri.com/article/rubber-related-chemicals-found-in-swiss-milk-1789452487</id>
            <summary type="text">Researchers find rubber related chemicals in Swiss milk: சுவிட்சர்லாந்தில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Researchers find rubber related chemicals in Swiss milk: சுவிட்சர்லாந்தில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.</p><p>


சுவிஸ் ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்றில், சுவிட்சர்லாந்தில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.</p><h3>

பாலில் ரப்பர் ரசாயனங்கள்
</h3><p>
சுவிட்சர்லாந்திலுள்ள 17 பண்ணைகளிலிருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் ஏழு பால் மாதிரிகளில் ரப்பர் தொடர்புடைய ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/177be8aa-9748-423a-8b37-d4e33c52cf85/26-6aa8e0c8d978e.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், பால் கறக்க பயன்படுத்தப்படும் ரப்பர் குழாய்கள் காலப்போக்கில் பழமையாவதால், அதிலிருந்து இந்த ரப்பர் ரசாயனங்கள் வந்திருக்கலாம் என்னும் எதிர்பாராத ஒரு தகவல் சற்றே யோசிக்க வைத்துள்ளது.
</p><p>
அத்துடன், பொதுவாகவே உலக நாடுகள் பலவற்றில், சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது வாகனங்களின் டயர்கள் தேய்வதால் எக்கச்சக்கமான அளவில் ரப்பர் துகள்கள் சுற்றுச்சூழலில் கலக்கின்றன.&nbsp;</p><p></p><p>
இந்த ரப்பர் துகள்கள், காற்று, தண்ணீர் மற்றும் உரம் வாயிலாக விவசாய நிலத்தை அடைந்து உணவுச்சங்கியில் கலக்கலாம் என்றும் கருதப்படுகிறது.</p><p>

இதற்கிடையில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பது தெரியவந்தாலும், இந்த ரசாயனங்களால் மனித உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை அறிய மேலதிக ஆய்வுகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T06:13:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள்: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/asylum-seekers-came-in-france-with-injure-from-uk-1789448903"></link>
            <id>https://news.lankasri.com/article/asylum-seekers-came-in-france-with-injure-from-uk-1789448903</id>
            <summary type="text">Asylum seekers arriving in France injured after being deported from UK: பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள் இருக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>Asylum seekers arriving in France injured after being deported from UK: பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள் இருக்கும் விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p>

பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட One in, one out என்னும் ஒப்பந்தத்தின்கீழ், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், தனக்கு பிரித்தானியாவில் குடும்பம் இருப்பதை நிரூபிக்க இயலாதபட்சத்தில், அவர் பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.
</p><p>
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரித்தானியாவில் குடும்பம் உள்ளதை நிரூபிக்கக்கூடிய, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.
</p><h3>
புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள்
</h3><p>
விடயம் என்னவென்றால், அப்படி One in, one out ஒப்பந்தத்தின்கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள், பிரித்தானியாவிலிருக்கும்போது கடுமையாக தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d77d770c-45f0-40f5-9baa-6b86ec62cf0b/26-6aa8d2c98ea43.webp' /></p><p>

ஆம், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்ஸ் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர்கள் உடலில் காயங்கள் முதல் எலும்பு முறிவு வரை இருப்பது தெரியவந்துள்ளது.
</p><p>
சிலர், பயங்கர மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, தான் தங்கியிருக்கும் இடத்தின் அறைக்கதவு எங்குள்ளது என்பதைக் கண்டுபிடிக்கக்கூட முடியாமல் திணறும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
சிலர் வயிற்றில் பலமாக மிதிக்கப்பட்டதால் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
இந்த விடயங்கள், சமீபத்தில், அதாவது, அவர்கள் பிரித்தானியாவில் தடுப்புக்காவலில் இருக்கும்போது நடந்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், வழக்கம்போல உள்துறை அலுவலகம், அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், புகலிடக்கோரிக்கையாளர்களை மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்த அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T05:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI-க்கு எதிரான அபத்தமான சதி! செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஒழுங்குமுறைக்கு டிரம்ப் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966</id>
            <summary type="text">Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2> ஆந்த்ரோபிக் CEO-யின் எச்சரிக்கை</h2><p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி(Dario Amodei) சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.</p><p> செயற்கை நுண்ணறிவுத் துறையின் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் மனித குலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடும் அபாயம் இருப்பதாகவும் டாரியோ அமோடி எச்சரித்து இருந்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We Must Pace the Frontier: I’ve written a new essay on why the AI industry should slow down, with a three-part plan for doing so.<br><br>Anthropic is unilaterally committing to the first of these steps. We’ll provide third-party evaluators with permanent, employee-level access to our…</p>&mdash; Dario Amodei (@DarioAmodei) <a href="https://x.com/DarioAmodei/status/2098773920774074715?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி முன்வைத்த செயற்கை நுண்ணறிவுக்கான கூடுதல் பாதுகாப்பு தேவைகளை ஓபன் ஏஐ(Open AI) நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோரும் அங்கீகரித்து இருந்தனர்.</p><h2> டிரம்பின் நிலைப்பாடு</h2><p>
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> &nbsp;ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி முன்வைத்த கடுமையான தடைகள் தொடர்பான தேவைகள் மற்றும் வாதங்களை டிரம்ப் கடுமையாக நிராகரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a780ac8-aa70-4014-ab6c-4826558b588a/26-6aa84a4fa7e4c.webp' /></p><p> இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட கருத்தில், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி(Sick Conspiracy) என்று தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் அந்த பதிவில், ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி-வை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> குறிப்பாக, டாரியோ அமோடியை கிண்டல் செய்யும் வகையில், “அவர் தன்னை பரிசுத்தமான சிறிய தேவதை போல் காட்டிக் கொள்வதாக” குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-15T05:00:35+00:00</updated>
        </entry>
    </feed>
