<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-22T05:41:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்: அறுவை சிகிச்சைக்குப் பின் நிகழ்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/twin-girls-born-as-joined-head-die-after-separated-1787375591"></link>
            <id>https://news.lankasri.com/article/twin-girls-born-as-joined-head-die-after-separated-1787375591</id>
            <summary type="text">Twin girls born joined at the head die minutes after being separated: தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Twin girls born joined at the head die minutes after being separated: தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் பிள்ளைகள் உயிரிழந்துவிட்டார்கள்.
</p><p>

பிரேசில் நாட்டில், தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையிலும், குழந்தைகளை காப்பாற்றமுடியாமல் போய்விட்டது.
</p><h3>
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்</h3><p>

பிரேசில் நாட்டில் அமரில்டோ டி சில்வா (Amarildo Batista da Silva) என்னும் நபருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள், தலை ஒட்டிப் பிறந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8ef1fa7-01a7-49d4-971b-a8c826b3ed69/26-6a892fe8d175f.webp' /></p><p>
பிள்ளைகள் மூன்று வயதை எட்ட இருந்த நிலையில், பிள்ளைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.
</p><p>
உண்மை என்னவென்றால், இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளை தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருந்த மருத்துவர்கள், பிள்ளைகளை தனித்தனியாக பிரிப்பதற்கான அறுவை சிகிச்சைகளை ஓராண்டாக மேற்கொண்டு வந்துள்ளார்கள்.
</p><p>
அதாவது, இதற்கு முன் பிள்ளைகளுக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. கடைசியாக, அவர்களை தனியாக பிரிக்கும் கடைசி அறுவை சிகிச்சை, இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 15ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், வெற்றிகரமாக மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளையும் தனித்தனியாக பிரித்துள்ளார்கள்.
</p><p>
ஆனால், ஒரு உடல் போல செயல்பட்டுவந்த அந்தக் குழந்தைகளின் உடல் பிரிக்கப்பட்டபோது, அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தி அந்த உடலுக்கு இல்லாமல் போயுள்ளது.
</p><p>
ஒரு குழந்தைக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்க, மற்ற குழந்தைக்கு இரத்த அழுத்தம் குறைய, உடலின் உள்ளுறுப்புகளுக்கு போதுமான இரத்தம் செல்லாமல், உள்ளுறுப்புகள் செயலிழந்து, மாரடைப்பு ஏற்பட்டு குழந்தைகள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
</p><p>
அவர்களில் ஒரு குழந்தையின் பெயர் ஹெலனா, அவளது சகோதரியின் பெயர், ஹெலோய்ஸா.

ஆகத்து மாதம் 15ஆம் திகதி, தங்கள் மூன்று வயதை எட்டும் முன், ஹெலனா 11.37 மணிக்கும், ஹெலோய்ஸா 11. 51 மணிக்கும் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
அறுவை சிகிச்சை வெற்றியாக முடிந்த நிலையிலும், பிள்ளைகளின் உடல் நிலை மிகவும் பலவீனமாக இருந்ததால், அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
</p><p>
ஏற்கனவே, பிள்ளைகள் இருவருக்கும் நிமோனியா பிரச்சினை இருந்ததால் அவர்கள் தொண்டையில் துவாரமிடப்பட்டு சுவாசிப்பதற்காக குழாய்கள் பொருத்தப்பட்டிருந்திருக்கின்றன.
</p><p>
அதேபோல, குழந்தைகளால் சாப்பிட முடியாததால், அவர்கள் வயிற்றில் துவாரமிடப்பட்டு குழாய் வழியாகத்தான் உணவு செலுத்தப்பட்டு வந்துள்ளது.
</p><p>
ஆக, நீண்ட காலமாக பலவீனமாக இருந்த உடல்கள் பிரிக்கப்பட, அதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலாமல், மாரடைப்பு ஏற்பட, பிள்ளைகள் உயிரிழந்துவிட்டார்கள்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T05:17:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி: மருத்துவர்கள் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-years-old-girl-swallows-gold-bar-in-china-1787371308"></link>
            <id>https://news.lankasri.com/article/5-years-old-girl-swallows-gold-bar-in-china-1787371308</id>
            <summary type="text">சீனாவில் 5 வயது சிறுமி தங்கக் கட்டியை விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி
5 years old girl...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் 5 வயது சிறுமி தங்கக் கட்டியை விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி</h2><p>
5 years old girl swallows gold bar in china: சீனாவின் வடக்குப் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி தவறுதலாக அங்கிருந்த 4 சென்டிமீட்டர் நீளமும் 50 கிராம் எடையும் உள்ள சிறிய தங்கக் கட்டியை விழுங்கியுள்ளார்.</p><p> இதனை உடனடியாக தன்னுடைய பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவித்ததை அடுத்து, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c62a543-f9cc-4606-9c96-55be1324a7e2/26-6a891f2e7836f.webp' /></p><p> ஆனால் அங்கு போதுமான நவீன உபகரணங்கள் இல்லாததை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கேப்பிட்டல் மெடிசின் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.</p><p></p><p> அப்போது சிறுமியின் வயிற்றை எக்ஸ்-ரே செய்து பார்த்த போது சுமார் 4 செ.மீ நீளமுள்ள தங்க கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p> மேலும் அந்த தங்க கட்டியானது சிறுமியின் வயிற்றின் உள்சவ்வை கீறி, கடுமையான உள் ரத்தப்போக்கை மற்றும் உறுப்புகளின் துளைகளை ஏற்படுத்தும் அபாயத்துடன் இருந்துள்ளது.</p><p> அத்துடன் அந்த தங்க கட்டி அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பதற்கு சிக்கலான இரைப்பை குழியில் சிக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.</p><p> இறுதியில் எண்டோஸ்கோபி செய்து சுருக்குக் கயிற்றின் உதவியால் தங்க கட்டியை மீட்டு கவனமாக இரைப்பை குழியிலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.</p><p> தற்போது அந்த சிறுமி குணமடைந்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T04:57:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய கடற்கரையில் நிகழ்ந்த சோகம்: மருத்துவமனையில் 6 வயது சிறுமி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sussex-coast-tragedy-6-years-old-girl-died-1787374488"></link>
            <id>https://news.lankasri.com/article/sussex-coast-tragedy-6-years-old-girl-died-1787374488</id>
            <summary type="text">சசெக்ஸ் கடற்கரையில் நடந்த துயர சம்பவத்தில் 6 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சசெக்ஸ் கடற்கரையில் நடந்த சோகம்Sussex coa...</summary>
            <content type="html"><![CDATA[<p>சசெக்ஸ் கடற்கரையில் நடந்த துயர சம்பவத்தில் 6 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><h2> சசெக்ஸ் கடற்கரையில் நடந்த சோகம்</h2><p>Sussex coast tragedy 6 years old girl died: சசெக்ஸ் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தை உலுக்கிய சோக சம்பவத்தில் ஏற்கனவே பெற்றொரும், மூத்த மகளும் உயிரிழந்த நிலையில் தற்போது 6 வயது சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.</p><p> மேற்கு லண்டனில் இருந்து ஷோர்ஹாம் கடற்கரைக்கு வந்த குடும்பத்தினர் பிற்பகலில் 2 மணியளவில் கடலில் நீந்துவதற்காக இறங்கியுள்ளனர்.</p><p> அப்போது எதிர்பாராத விபத்தில் குடும்பத்தினர் கடலில் சிக்கிக் கொண்டதை அடுத்து ஹோர்ஹாம் கோட்டைப் பகுதிக்கு அவசர கால மீட்புப் படையினர் அழைக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4011623a-0397-4e86-a18e-3fb47e5c7eac/26-6a892b99994cb.webp' /></p><p></p><p> பெற்றோர்களான 55 வயது ஹசன் எல் கவாஸ் மற்றும் 37 வயது ஜெய்னா அலைன் மற்றும் இவர்களின் மூத்த மகளான 14 வயது அக்கா சாரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p> உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 6 வயதான சஜா எல்-கவாஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.</p><p> ஆனால் வெள்ளிக்கிழமை 6 வயதான சஜா எல்-கவாஸ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-22T04:55:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/6-cholesterol-symptoms-we-shouldnt-ignore-1787128985"></link>
            <id>https://news.lankasri.com/article/6-cholesterol-symptoms-we-shouldnt-ignore-1787128985</id>
            <summary type="text">கொலஸ்ட்ரால் நம் உடலில் அதிகமாக இருக்கின்ற பொழுது நம் தோல்களில் சில மாற்றங்கள் வரலாம் என்றும் அதற்கான ஆறு முக்கியமான அறிகுறிகளை பற்றியும் பார்ப்போம்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலஸ்ட்ரால் நம் உடலில் அதிகமாக இருக்கின்ற பொழுது நம் தோல்களில் சில மாற்றங்கள் வரலாம் என்றும் அதற்கான ஆறு முக்கியமான அறிகுறிகளை பற்றியும் பார்ப்போம்.

 பொதுவாகவே, ஆரம்ப காலகட்டங்களில் ரத்த கொதிப்பு அதிகரிக்கின்ற பொழுது நமக்கு எந்த ஒரு பிரச்சனைகளும் வருவதில்லை. </p><p>அதாவது கடுமையான வலியோ அல்லது உபாதைகளோ ஏற்படாது. அதனால்தான் இதனை மருத்துவர்கள் சைலன்ட் கில்லர் என்று சொல்கின்றனர். அமெரிக்கா இதய சங்கத்தின் கூற்றுப்படி ரத்தத்தில் உள்ள கொழுப்பை கண்டறிவதற்கு நாம் பரிசோதனை செய்வது மட்டுமே முதன்மையானது என்று சொல்கிறார்கள். </p><p>

இருப்பினும், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடுகள்&nbsp;மிக தீவிரமாக அதிகரிக்கின்ற பொழுது கண்கள் தோல் மற்றும் கால் போன்ற உறுப்புகளில் சில அறிகுறிகள் வரலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9421f93c-f5cb-4ec3-94ce-989b295ffe1f/26-6a856ca319f80.webp' /></p><p></p><h3> 

1.கண்ணிமைகளில் மஞ்சள் திட்டுகள்:
</h3><p>
கண்இமைகளை சுற்றி அல்லது கண்களின் மூலையில் மெல்லிய மஞ்சள் நிறத்தில் கொழுப்பு படிவுகள் வரலாம். அதாவது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவிற்கு அதிகமாக மாறும் பொழுது இது தோலுக்கு அடியில் படிந்து இத்தகைய தட்டையான திட்டுகளை உருவாக்குகிறது.
</p><h3>
2. கருவிழியை சுற்றிய வளம் வளையம்:</h3><p>

 கண்களின் கருவிழி பகுதியை சுற்றி சாம்பல் வெள்ளை அல்லது நீல நிறத்தில் ஒரு மெல்லிய வளையம் ஏற்படலாம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இது இயல்பான வயது முதிர்ச்சியின் அறிகுறியாகும். ஆனால், 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இது தென்பட்டால் அது மரபணு சார்ந்த அதீத கொலஸ்ட்ரால் மற்றும் இளம் வயதிலேயே இதய பாதிப்பை ஏற்படுவதற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.</p><h3>


3. தோலில் மெழுகு போன்ற கட்டிகள்:
</h3><p>
 முழங்கை, முழங்கால் கைகள், பாதங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் ஆரஞ்சு நிறத்தில் சிறிய கொப்பளங்கள் அல்லது கட்டிகள் தென்படும். குறிப்பாக, டிரைகிளிசரைடுகள்&nbsp;மிகவும் ஆபத்தான நிலைக்கு உயரும். அப்பொழுது, உடலில் திடீரென பல கட்டிகள் வரலாம். கட்டுப்படுத்தப்படாத நீரழிவு உள்ளவர்களுக்கு இந்நிலை அதிகம் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ea13de-b2f6-4f5e-86c6-bde866177f44/26-6a856ca3d0c29.webp' /></p><h3>

4. குதிகால் தசைநார் வீக்கம்:
</h3><p>காலில் பின்பகுதி குதிகாலுடன் இணையும் அகில்லெஸ் தசைநாத் அல்லது கைகளில் விரல் நரம்புகளில் கொழுப்பு படிந்து வீக்கம் உண்டாகலாம். இவர்களுக்கு காலணிகள் அணியும் பொழுது அல்லது தொடும்பொழுது இந்த தசை நார்கள் தடிமனாக உணருவது பரம்பரை கொலஸ்ட்ராலின் முக்கிய அறிகுறியாகும்.
</p><h3>
5. நடக்கும்போது கால்களில் தசை பிடிப்பு:
</h3><p> பொதுவாக, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதால் கால்களுக்கு செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இவ்வாறான நேரத்தில் சிறிது தூரம் நடக்கும்போது அல்லது மாடிப்படிகளில் ஏறும்போது தொடை மற்றும் கெண்டைக்கால் பகுதியில் தாங்கிக் கொள்ள முடியாத வலி பாரம் அல்லது பிடிப்பு ஏற்படலாம். ஓய்வெடுத்தால் இந்த வலி சற்று குறையும். இவ்வாறான அறிகுறிகள் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதற்கான மறைமுக அறிகுறியாகும்.</p><h3>


6. குளிர்ந்த பாதங்கள் மற்றும் மாறாத காயங்கள்:
</h3><p>
 நம்மை சுற்றி வெப்பநிலை சாதாரணமாக இருந்தாலும் பாதங்கள் எப்பொழுதும் குளிர்ந்து காணப்படும். காலில் ஏற்படும் சிறிய வெட்டு காயங்கள் கூட அல்லது கீரல்கள் கூட நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும். கால்களின் தோல் வெளியே உதிர்ந்து பளபளப்பாக மாறிவிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbdf86df-9752-431b-abe3-5c02d4e7a5b8/26-6a856ca489e29.webp' /></p><p></p><p>
</p><h3>
 யாரெல்லாம் உடனடி பரிசோதனை செய்ய வேண்டும்:
</h3><p>
குடும்பத்தில் யாருக்காவது இளம் வயதிலேயே மாரடைப்பு அல்லது அதிக கொலஸ்ட்ரால் வரலாறு இருந்தாலும் அல்லது சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடற்பயிற்சி அற்ற வாழ்க்கை முறை மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிச்சயமாக உடனடி சோதனை செய்ய வேண்டும்.</p><h3>

 கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் வழிகள்:
</h3><p> டிரான்ஸ் கொழுப்பு மற்றும் பொறித்த உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்து நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் நட்ஸ், காய்கறிகள் நம் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினசரியாக குறைந்தது நாம் 30 நிமிடங்கள் ஆவது உடற்பயிற்சி செய்வது அவசியம். மருத்துவரின் அறிவுரை படி தவறாமல் மருந்துகள் எடுத்துக் கொள்வதும் இதய பாதிப்பிலிருந்து நாம் நம்மை காத்துக் கொள்ளலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T04:43:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் அந்த முடிவு... கடுமையாக விமர்சித்த பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/criticise-israel-over-gaza-aid-1787357869"></link>
            <id>https://news.lankasri.com/article/criticise-israel-over-gaza-aid-1787357869</id>
            <summary type="text">The decision of the Israeli military authorities: குற்றவியல் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் முடிவுக்கு கடும் விமர்சனம்.
க...</summary>
            <content type="html"><![CDATA[<p>The decision of the Israeli military authorities: குற்றவியல் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் முடிவுக்கு கடும் விமர்சனம்.
</p><p>காஸாவில் தொண்டு நிறுவன வாகனங்களின் அணிவகுப்பு மீது ஏப்ரல் 2024-இல் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் குறித்துக் குற்றவியல் விசாரணை எதையும் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் எடுத்துள்ள முடிவை பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் வெட்கங்கெட்ட செயல் என்று விமர்சித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd01fb96-07fa-4865-bfda-353295323db4/26-6a88eab0a6cb4.webp' /></p><p> </p><p>இஸ்ரேலின் அந்தத் தாக்குதல், அமெரிக்காவைச் சேர்ந்த 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' (WCK) அமைப்பைச் சேர்ந்த ஏழு மனிதாபிமானப் பணியாளர்களைக் கொன்றன. </p><p>உலகளாவிய அளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்திய அந்தத் தாக்குதலில், மூன்று நாடுகளைச் சேர்ந்த WCK ஊழியர்களும் கொல்லப்பட்டனர். </p><p>காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்த பொறுப்புக்கூறல் இல்லாத எண்ணற்ற சம்பவங்களில் 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' (World Central Kitchen) மீதான தாக்குதலும் ஒன்று என்று அந்த மூன்று நாடுகளின் கூட்டறிக்கை பதிவு செய்துள்ளது. </p><p>மேலும், கொல்லப்பட்டவர்கள் சார்பாக இஸ்ரேலிடம் இருந்து தொடர்ந்து பதில்களைத் தேடுவோம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
காஸாவில், மிக ஆபத்தான சூழலில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கடும் அவசியத்தில் உள்ள பொதுமக்களுக்கு உதவ மனிதாபிமானப் பணியாளர்கள் அயராது தொடர்ந்து பணியாற்றுகின்றனர்.</p><p></p><p> </p><p>இருப்பினும், நிலையற்ற போர்நிறுத்தம் நிலவினாலும், 2025-ஆம் ஆண்டில் 186 மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், உதவிப் பொருட்களை விநியோகிப்பதற்கு காஸா தொடர்ந்து மிகவும் ஆபத்தான இடமாகவே உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். </p><p>இதனிடையே, போலந்து அரசாங்கம் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாகக் கூறியதுடன், இந்தச் சம்பவம் குறித்த போலந்து விசாரணைகளுக்கு இஸ்ரேலிய அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வியாழக்கிழமையன்று அழைப்பு விடுத்தது. </p><p>லண்டனில் வெளிவிவகார அலுவலகம் தெரிவிக்கையில், தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று பிரித்தானியக் குடிமக்களான ஜான் சாப்மேன், ஜேம்ஸ் ஹென்டர்சன் மற்றும் ஜேம்ஸ் கிர்பி ஆகியோரின் குடும்பங்களுக்காக பிரித்தானியா பேரதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளதாகத் தெரிவித்தது. </p><p>போர்க்காலம் முழுவதும் காஸாவில் உணவு விநியோகித்து வந்த WCK அமைப்பு, அந்தப் பயங்கரமான தாக்குதலுக்குப் பிறகு தங்கள் வாகனங்களின் நடமாட்டம் குறித்து இராணுவத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவே கூறியது. </p><p>மட்டுமின்றி, தங்களின் வாகனங்களில்,
வானிலிருந்து பார்க்கும்போது தெரியும் வகையில் குழுவின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளது. </p><p>ஆனால், வாகனங்களில் இருந்த பல நபர்களை ஆயுதம் ஏந்திய ஹமாஸ் படையினர் எனத் தவறாகக் கருதியதாகவும், WCK வாகன அணிவகுப்பு முன்னதாக ஒருங்கிணைக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) புதன்கிழமை தெரிவித்தது. </p><p>மேலும், தளபதிகளின் முடிவுகள் குற்றவியல் ரீதியான முறைகேடு குறித்த நியாயமான சந்தேகத்தை எழுப்பவில்லை என்று IDF முடிவு செய்தது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T00:15:21+00:00</updated>
        </entry>
    </feed>
