<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-11T02:56:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/high-end-sex-doll-found-in-suitcase-in-australia-1786384813"></link>
            <id>https://news.lankasri.com/article/high-end-sex-doll-found-in-suitcase-in-australia-1786384813</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் உயர் ரக செக்ஸ் பொம்மை(Sex Toy) என்பது தெரியவந்துள்ளது. கைவிடப்பட்ட சூட்கேஸினால் பரபரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் உயர் ரக செக்ஸ் பொம்மை(Sex Toy) என்பது தெரியவந்துள்ளது.</p><h2> கைவிடப்பட்ட சூட்கேஸினால் பரபரப்பு</h2><p>ஞாயிற்றுக்கிழமை மாலை அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கிராமப் பகுதியில் கிடந்த கைவிடப்பட்ட சூட்கேஸில் மனித சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.</p><p> ஓலன்(Oallen) பகுதியில் மண் பாதைக்கு அருகே சந்தேகத்திற்கு உரிய வகையில் கிடந்த சூட்கேஸை கொடூரமான குற்றப் புள்ளி என்று நம்பி சந்தேகத்தின் பேரில் வோல்கான் சாலையை சுற்றி வளைத்து உள்ளூர் அதிகாரிகள் தடயங்களை பாதுகாத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24c82192-0d86-4c59-b68a-2751f18df8f5/26-6a7a11af573ed.webp' /></p><h2> 20 மணி நேர தடயவியல் விசாரணையில் தெரியவந்த உண்மை</h2><p>சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் அதிகாரிகள், 20 மணி நேரத்திற்கு மேலாக ஆராய்ந்த பிறகு திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளிப்படுத்தினர்.</p><p> அதில், சூட்கேஸில் இருந்தது மனித எச்சங்கள் என்று நம்பப்பட்ட நிலையில், அது உண்மையில் மிகவும் தத்ரூபமாக உயர் ரக செக்ஸ் பொம்மை என்பது தெரியவந்துள்ளது.</p><p> ஆரம்பத்தில் அந்த பொருள் மனிதனைப் போலவே தத்ரூபமாக இருந்ததால் ஆய்வகத்திற்கு எடுத்து சென்று சோதனை செய்வதற்கு முன்பு வரை நிபுணர்களுமே அதனை மனித சடலம் என்று நம்பி ஏமாந்ததாக ஹியூம் காவல்துறை மாவட்டத்தின் தளபதி சூப்பிரண்டு லிண்டா பிராட்பரி(Superintent linda bradbury) தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc19b18c-4198-4209-8acc-5cf779ddaade/26-6a7a11b00b7fc.webp' /></p><p> நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் கூற்றுப்படி, சடலம் என்று நம்பப்பட்ட அந்த பொம்மைக்கு ஆடைகள் அணிவிக்கப்பட்டு இருந்ததோடு, அவற்றில் முடி, மூக்குத்தி மற்றும் உடல் காயங்கள் ஆகியவை துல்லியமாக மனித உருவத்துடன் ஒத்திருக்கும் வகையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T00:35:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட 2 சிறுமிகள்: தந்தை எடுத்த விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bengaluru-5star-hotel-father-killed-2-daughters-1786405267"></link>
            <id>https://news.lankasri.com/article/bengaluru-5star-hotel-father-killed-2-daughters-1786405267</id>
            <summary type="text">பெங்களூருவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 2 குழந்தைகளை கொன்று விட்டு தந்தை தானும் உயிரை&amp;nbsp; மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெங்களூருவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 2 குழந்தைகளை கொன்று விட்டு தந்தை தானும் உயிரை&nbsp; மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> சடலமாக மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகள்</h2><p>பெங்களூரு நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அறையில் இரண்டு சிறுமிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேலும் அதே அறையில் அந்த குழந்தைகளின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.</p><p> இந்த சம்பவம் கொலை மற்றும் தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ளும் முயற்சியாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c23397a-ac62-45b1-8832-51a70ee11bf1/26-6a7a619554756.webp' /></p><p></p><h2> என்ன நடந்தது?</h2><p>மாலை 4 மணிக்கு ஓட்டல் தூய்மைப் பணியாளர்கள் அறையை சுத்தம் செய்வதற்காக அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது 10 வயது மற்றும் 5 வயது சகோதரிகள் இரண்டு பேர் படுக்கையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.</p><p>அத்துடன் சிறுமிகளின் தந்தையான 40 வ்யது எஸ்.ஜி இம்ரானும் குளியலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.</p><p> இதையடுத்து அவரை மீட்டு ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2> காவல்துறையினர் விளக்கம்</h2><p>இந்த குடும்பம் முந்தைய நாள் ஹோட்டல் அறையில் வந்து தங்கியுள்ளனர். மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே இம்ரானின் இத்தகைய செயலுக்கு காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> தன்னுடைய குழந்தைகள் இப்படியொரு தாயுடன் வாழ்வதை தான் விரும்பவில்லை, எனவே தான் அவர்களையும் கொலை செய்ய முடிவு செய்தேன் என்று காவல்துறையினரிடம் இம்ரான் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.</p><p> இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T00:05:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரியாவின் உதவி இல்லாமல் ரஷ்யாவால் போர் நடத்த முடியாது! ஜெலென்ஸ்கி காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelenskyy-alleges-n-korea-involvement-in-ukraine-1786397526"></link>
            <id>https://news.lankasri.com/article/zelenskyy-alleges-n-korea-involvement-in-ukraine-1786397526</id>
            <summary type="text">உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தங்களது படைகளில் வட கொரிய வீரர்களை இணைத்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.உக்ரைன் போரில் வட கொரியாவின் பங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தங்களது படைகளில் வட கொரிய வீரர்களை இணைத்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>உக்ரைன் போரில் வட கொரியாவின் பங்களிப்பு</h2><p>உக்ரைன் போரில் வட கொரிய வீரர்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ரஷ்யா தீவிரமாக பயன்படுத்த தொடங்கி இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p> இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வரலாற்றிலேயே முதல் முறையாக வட கொரியாவின் உதவி இல்லாமல் ரஷ்யாவால் போர் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4571a5f4-ba56-46d9-b2f0-9268ecb496c9/26-6a7a435873cfc.webp' /></p><p> உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த வடகொரியாவின் புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா பெற்று இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p></p><h2> உலக நாடுகளுக்கு எச்சரிக்கை</h2><p>
ரஷ்யா - வடகொரியா இடையிலான இந்த அபாயகரமான கூட்டணி உலக நாடுகளுக்கு மிகவும் பேராபத்து என்று சுட்டிக்காட்டினார்.</p><p> அத்துடன் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான போரில் வட கொரிய வீரர்களும் மற்றும் ஏவுகணைகளும் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதன் மூலம் அவர்கள் நேரடியாக போர் அனுபவங்களை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7318d8df-2ad5-4fcd-a1c8-276cfb27b264/26-6a7a43592a171.webp' /></p><p> இதன் மூலம் அவர்கள் தங்களது பலவீனங்களை சரிசெய்து கொண்டு மிக ஆழமான ராணுவ அனுபவங்களை பெறுவதாக எச்சரித்துள்ளார்.</p><p>இந்த அனுபவம் எதிர்காலத்தில் ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> எனவே இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும், வட கொரியாவின் இலக்குகளை கட்டுப்படுத்த உக்ரைனுக்கு சர்வதேச ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T22:05:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drought-declared-in-11-areas-of-england-1786394114"></link>
            <id>https://news.lankasri.com/article/drought-declared-in-11-areas-of-england-1786394114</id>
            <summary type="text">இங்கிலாந்தின் பல பகுதிகள் வறட்சி பகுதிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் வறட்சி அறிவிப்புஇங்கிலாந்தின் பல பகுதிகளில் நிலவி வரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் பல பகுதிகள் வறட்சி பகுதிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இங்கிலாந்தில் வறட்சி அறிவிப்பு</h2><p>இங்கிலாந்தின் பல பகுதிகளில் நிலவி வரும் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நெருக்கடிகள் காரணமாக நாட்டின் 71.3 சதவீத பகுதிகள் அதிகாரப்பூர்வ வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 1836 ம் ஆண்டு பதிவுகள் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த 190 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வறட்சி மாதமாக ஜூலை பதிவானதை அடுத்து இந்த நெருக்கடியானது ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5075de32-44d8-4f8e-9ed7-5664d6412ea0/26-6a7a360379b43.webp' /></p><p> இந்த வறட்சியின் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் 45 மில்லியன் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> இவர்களில் 27 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தற்போது தண்ணீர் பயன்பாட்டை கட்டுப்பாடாக பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளனர்.</p><p> இந்த ஆண்டு 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் வெப்பநிலை பதிவான நாட்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 13 நாட்கள் வெப்பநிலை அதிகமான அளவு பதிவாகி மக்களை வாட்டியுள்ளது.</p><p> அமைச்சர்கள், நீர் நிறுவனங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்கள் உள்ளடக்கிய தேசிய வறட்சிக் குழு அவசர கூட்டத்தை நடத்திய பிறகு, நிலைமை மிகவும் மோசமாக மாறி வருவதாக எச்சரித்துள்ளனர்.</p><p> நாட்டின் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a77fbe8e-b6b6-4ce4-9185-89ce579c4ac3/26-6a7a360436a6b.webp' /></p><h2>வறட்சி அறிவிக்கப்பட்ட பகுதிகள்</h2><p>கிழக்கு மிட்லாண்ட்ஸ், லிங்கன்ஷயர் &amp; நார்தம்ப்டன்ஷயர், கென்ட் 7 கிழக்கு சசெக்ஸ், சோலென்ட் &amp; சவுத் டவுன்ஸ், கிழக்கு ஆங்லியா, ஹார்ட்போர்ட்ஷயர், லண்டன், தேம்ஸ் பள்ளத்தாக்கு, டெவோன் &amp; கார்ன்வால், வெசெக்ஸ் மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆகிய பகுதிகள் வறட்சி பகுதிகளாக அவசர வறட்சிக் குழு அறிவித்துள்ளது.</p><p> கூடுதலாக வறண்ட வானிலை நிலவும் கும்ப்ரியா &amp; லங்காஷயர், கிரேட்டர் மான்செஸ்டர், மெர்சிசைடு &amp; செஷயர், வடகிழக்கு மற்றும் யார்க்ஷயர் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T21:27:41+00:00</updated>
        </entry>
    </feed>
