<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-18T14:41:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜினாமா செய்த பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் அடுத்து என்ன செய்யப்போகிறார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/what-will-keir-starmer-do-after-resign-from-uk-pm-1784379392"></link>
            <id>https://news.lankasri.com/article/what-will-keir-starmer-do-after-resign-from-uk-pm-1784379392</id>
            <summary type="text">பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்பது குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அனைவரும் அறிந்ததே.
</p><p>
இந்நிலையில், அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து பிரித்தானிய ஊடகங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.
</p><h3>
ஸ்டார்மர் அடுத்து என்ன செய்யப்போகிறார்?
</h3><p>
ஜெரமி கார்பின் என்பவர் லேபர் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது லேபர் கட்சி.</p><p>

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கார்பின் லேபர் கட்சியின் தலைமையிலிருந்து விலக, கட்சித் தலைவராக பொறுப்பேற்றார் கெய்ர் ஸ்டார்மர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa1565de-5012-4e6f-9385-5304ee4e7071/26-6a5b7801f3699.webp' /></p><p>
அவரது கொள்கைகளும் அணுகுமுறையும், முந்தைய லேபர் கட்சி தலைவர்களைவிட வித்தியாசமாக இருந்தன.
</p><p>
பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளான வீடுகள் தட்டுப்பாடு, அரசு மருத்துவமனையிலுள்ள பிரச்சினைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற விடயங்கள் மீது அவர் கவனம் செலுத்த, அடுத்து வந்த தேர்தலில், அதாவது, 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி. </p><p></p><p>
ஆனால், சில தலைகீழ் கொள்கை மாற்றங்கள், தவறான முடிவுகள், கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு முதலான காரணங்களால் ஸ்டார்மர் பதவி விலக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, ஆன்டி பர்னாம் என்பவர் பிரித்தானிய பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.
</p><p>
இந்நிலையில், ராஜினாமா செய்துள்ள ஸ்டார்மர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து பிரித்தானிய ஊடகங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.</p><p>
ஸ்டார்மர் ராஜினாமா செய்தபோது, நீங்கள் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52627e70-a617-413d-bb9d-9cf0ce4e433f/26-6a5b7802a6a2c.webp' /></p><p>
அப்போது அவர், நான் சமையல் வகுப்புகளில் சேர்ந்து சமையல் கற்றுக்கொள்ளப்போகிறேன் என வேடிக்கையாக கூற, ஆம், அவருக்கு இரண்டே இரண்டு உணவு வகைகள்தான் சமைக்கத் தெரியும், அதனால், சமையல் வகுப்பில் சேருவது நிச்சயம் அவசியம்தான் என அவரது நண்பர் ஒருவர் விளையாட்டாகக் கூறினார்.
</p><p>
விடயம் என்னவென்றால், சில உலகத் தலைவர்களைப் போல, சொந்த நாட்டுக்குள் அதிக வரவேற்பு இல்லையென்றாலும், மற்ற நாடுகளின் தலைவர்கள் பலர் ஸ்டார்மர் மீது மரியாதை வைத்துள்ளார்கள்.
</p><p>
ஆக, ஸ்டார்மர், சர்வதேச அளவில் பொறுப்பொன்றை ஏற்கக்கூடும் என அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்துள்ளார்கள். </p><p>ஸ்டார்மருக்கும், நேட்டோ அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் பதவி மீது விருப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆக, அந்த பதவிக்கு ஆள் தேவைப்படும் பட்சத்தில், ஸ்டார்மர் அந்த திசையை நோக்கி பயணிக்கலாம்.
</p><p>
ஆனால், இப்போதைக்கு, அடுத்த சில வாரங்கள் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் செலவிட இருக்கிறார் ஸ்டார்மர்.
</p><p>
தனது பதவியை ஸ்டார்மர் ராஜினாமா செய்தபோது, நாட்டிலேயே மிக உயர்ந்த பதவியை விட்டுவிட்டு, மிக முக்கியமான பொறுப்பை ஏற்க இருக்கிறேன், அது என் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த தந்தையாகவும், என் மனைவிக்கு ஒரு சிறந்த கணவனாகவும் இருக்க முயற்சிப்பதுதான் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T12:56:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA கால்பந்து தொடர்பில் கனடாவிற்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-warns-canada-for-fifa-final-match-delay-1784374526"></link>
            <id>https://news.lankasri.com/article/us-warns-canada-for-fifa-final-match-delay-1784374526</id>
            <summary type="text">காட்டுத்தீ புகையின் காரணமாக, FIFA உலகக்கிண்ண இறுதிப் போட்டி ஒத்திவைக்கப்படலாம் என கனடாவிற்கான அமெரிக்க தூதர் எச்சரித்துள்ளார்.&amp;nbsp;இறுதிப்போட்டி&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>காட்டுத்தீ புகையின் காரணமாக, FIFA உலகக்கிண்ண இறுதிப் போட்டி ஒத்திவைக்கப்படலாம் என கனடாவிற்கான அமெரிக்க தூதர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><h2>இறுதிப்போட்டி&nbsp;</h2><p>
FIFA கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி நியூயார்க் நியூ ஜெர்ஸி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/859e2acc-a839-4de7-a468-ffe0b7542f16/26-6a5b6618841a8.webp' />&nbsp;</p><p></p><p> 

காட்டுத்தீயில் இருந்து தெற்கு நோக்கி பரவும் புகையின் காரணமாக இப்போட்டி ஒத்திவைக்கப்படலாம் என அமெரிக்கத் தூதர் எச்சரித்துள்ளார்.</p><p> 

ஒட்டாவாவுக்கான அமெரிக்கத் தூதரான பீட் ஹோக்ஸ்ட்ரா, "மாசுபாடு மிக மோசமாக இருந்து, அது வீரர்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ, ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருந்தால், போட்டியை நடத்த வேண்டாம் என்று முதலில் குரல் கொடுப்பவர் அமெரிக்க ஜனாதிபதியாகத்தான் இருப்பார்.
</p><p>

பாதுகாப்பற்ற சூழலில் போட்டியை நடத்தி, வீரர்கள் அல்லது உலகம் முழுவதிலும் இருந்து வரும் மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை நாங்கள் ஆபத்தில் ஆழ்த்தப்போவதில்லை" என கனேடிய ஊடகத்திற்கு நேர்காணலில் கூறினார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bc1943b-51e1-4de4-9801-92ce07e05cb8/26-6a5b66196c16c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T12:45:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிசை வீட்டில் வசித்தபடியே ரூ.357 கோடி மோசடி செய்த பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/meerut-woman-living-in-slum-357-cr-it-return-fraud-1784378380"></link>
            <id>https://news.lankasri.com/article/meerut-woman-living-in-slum-357-cr-it-return-fraud-1784378380</id>
            <summary type="text">குடிசை வீட்டில் வசிக்கும் பெண் வருமான வரித்துறையிடம் ரூ.357 கோடி மோசடி செய்துள்ளார். 


ரூ.357 கோடி மோசடி செய்த பெண் 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட...</summary>
            <content type="html"><![CDATA[<p>குடிசை வீட்டில் வசிக்கும் பெண் வருமான வரித்துறையிடம் ரூ.357 கோடி மோசடி செய்துள்ளார்.</p><h3> 


ரூ.357 கோடி மோசடி செய்த பெண்</h3><p> 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த நான்சி அகர்வால் என்ற பெண், 225 சதுரடி குடிசை வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். </p><p>

முன்னதாக சிறிய நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றிய அவர், வருமான வரித்துறையின் விதிமுறைகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதன் மூலம் பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a75e8c38-499c-4ad8-b6f0-fa332f51ce47/26-6a5b740d76191.webp' /></p><p>

கடந்த 3 ஆண்டுகளில் 357 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி வரி விலக்குகளை நான்சி உருவாக்கியதை வருமான வரித்துறையினர் கண்டறிந்துள்ளனர்.</p><p> 

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு கோர தனிநபர்களை அனுமதிக்கும் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80GGC-ஐ பயன்படுத்தி இந்த மோசடியை நடத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

தனது வாடிக்கையாளர்கள் சார்பாக, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்குப் பெரிய நன்கொடைகளைப் போலியாக உருவாக்கியுள்ளார். 

அதன் பின்னர் இந்த போலி நன்கொடைகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தகுதி பெறாத வரி விலக்குகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார். </p><h3> 

3,000 வாடிக்கையாளர்கள் </h3><p>

இவ்வாறாக நாடு முழுவதும் சுமார் 3,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.65.5 கோடி அளவிலான போலி வருமான வரி ரீஃபண்டை பெற்றுக்கொடுத்துள்ளார். </p><p>

பெரும்பாலும் சம்பளம் பெறும் நபர்களைத் தகுதியற்ற வரி விலக்குகளைப் பெறத் தூண்டிய அவர், புதிய வடிக்கையாளர்களை அழைத்து வரும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்கி தனது வாடிக்கையாளர் வட்டாரத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தியுள்ளார். </p><p>

இது தொடர்பாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ரூ.5 லட்சம் ரொக்கமும், ரூ. 4 கோடி மதிப்புள்ள பிக்சட் டெபாசிட்டுகளும் கண்டறிந்துள்ளனர். </p><p>

இது தொடர்பாக விரிவான விசாரணையை தொடங்கியுள்ள வருமான வரித்துறையினர், வருமான வரி ரீஃபண்டை பெற்ற நான்சியின் வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தொடங்கியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T12:42:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL 2026: ஏஞ்சலோ மேத்யூஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hendricks-blast-87-in-50-balls-vs-kandy-falcons-1784376609"></link>
            <id>https://news.lankasri.com/article/hendricks-blast-87-in-50-balls-vs-kandy-falcons-1784376609</id>
            <summary type="text">கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் 205 ஓட்டங்கள் குவித்தது. ரீஸா ஹென்ரிக்ஸ்

லங்கா பிரீமியர் லீக் 2026-யின் இரண்டாவது போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் 205 ஓட்டங்கள் குவித்தது. </p><h2>ரீஸா ஹென்ரிக்ஸ்
</h2><p>
லங்கா பிரீமியர் லீக் 2026-யின் இரண்டாவது போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37ad95f1-17ee-462d-b450-d5d2fd513605/26-6a5b72f15b453.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியில் சண்டிமல் 8 ஓட்டங்களும், திக்வெல்ல 7 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
</p><p>
ஃபர்ஹான் 23 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆக, ரீஸா ஹென்ரிக்ஸ் (Reeza Hendricks) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார். </p><h2>

குல்பதின் நைப்</h2><p>எனினும் பவன் (7), அக்கர்மன் (16), லக்ஷன் (6) ஆகியோர் சொதப்ப, குல்பதின் நைப் (Gulbadin Naib) சிக்ஸர்களை பறக்கவிட்டார். </p><p>ஹென்ரிக்ஸ், நைப் இருவரின் அதிரடி ஆட்டத்தில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் 205 ஓட்டங்கள் குவித்தது.</p><p>
இறுதிவரை களத்தில் நின்ற ஹென்ரிக்ஸ் 87 (50) ஓட்டங்களும், நைப் 46 (23) ஓட்டங்களும் விளாசினர். துஷாரா மற்றும் ஹேமந்தா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f09a18c8-e7cf-4aed-8bbb-360f028febd5/26-6a5b72f0ad642.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T12:33:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழாயிரத்தை நெருங்கும் சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று: தவிர்க்கவேண்டிய உணவுகள் எவை?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/what-to-avoid-eat-amid-cyclosporiasis-outbreak-1784376294"></link>
            <id>https://news.lankasri.com/article/what-to-avoid-eat-amid-cyclosporiasis-outbreak-1784376294</id>
            <summary type="text">அமெரிக்காவில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏழாயிரத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏழாயிரத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்நிலையில், சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவுவதை தவிர்க்க, எந்தெந்த உணவுகளைத் தவிர்க்கவேண்டும் என்பது குறித்து மருத்துவர் ஒருவர் ஆலோசனை கூறியுள்ளார்.</p><h3>

சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று
</h3><p>
சைக்ளோஸ்போரியாசிஸ் என்பது, சைக்ளோஸ்போரா என்னும் கிருமியால் ஏற்படும் தொற்று ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d26d4cd-8daf-4d1b-b2de-75d081d5330b/26-6a5b6be8c0a96.webp' /></p><p>
உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம், வாயுத்தொல்லை மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.&nbsp;</p><p></p><h3>
தவிர்க்கவேண்டிய உணவுகள் எவை?
</h3><p>
இந்நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய ஊடகமான PEOPLE Inc. என்னும் ஊடக நிறுவனத்தின் தலைமை மருத்துவ அலுவலரான Dr. சோஹாயிப் இம்தியாஸ் (Dr. Sohaib Imtiaz), சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவுவதை தவிர்க்க கீழ்க்கண்ட உணவுகளை தவிர்க்குமாறு ஆலோசனை கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deb0cceb-8c59-4792-a02f-9ece08303774/26-6a5b6be81be6a.webp' /></p><p>

லெட்டூஸ் (Lettuce) என்னும் காய்கறி மூலமாகவே தற்போது இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவியுள்ளதாக கருதப்படும் நிலையில், பேக் செய்யப்பட்ட லெட்டூஸ், சாலட்களைத் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
</p><p>
அத்துடன், ஏற்கனவே துண்டுகளாக வெட்டி பார்சல் செய்யப்பட்டுள்ள பழங்கள், காய்கறிகள், Snow Peas என்னும் பட்டாணி வகை, ராஸ்பெர்ரி பழங்கள், கொத்தமல்லிக் கீரை, மாம்பழம் ஆகியவை சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்றை பரப்பக்கூடும் என்று கூறியுள்ள Dr. இம்தியாஸ், வெங்காயத்தின் தோலில் கூட இந்த சைக்ளோஸ்போரா கிருமி இருக்கலாம் என்றும், வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதாலும் இந்த தொற்று பரவலாம் என்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T12:08:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் தேர்வில் சாதித்த மாடு மேய்ப்பவரின் மகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cowherd-worker-daughter-achieves-in-neet-exam-1784374493"></link>
            <id>https://news.lankasri.com/article/cowherd-worker-daughter-achieves-in-neet-exam-1784374493</id>
            <summary type="text">மாடு மேய்ப்பவரின் மகளான பிரியதர்சினி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார். நீட் தேர்வில் சாதித்த மாணவி 

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாடு மேய்ப்பவரின் மகளான பிரியதர்சினி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார். </p><h3>நீட் தேர்வில் சாதித்த மாணவி </h3><p>

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.</p><p> 

2026 - 2027 மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, கடந்த ஜூன் 22 ஆம் திகதி மறுதேர்வு நடத்தப்பட்டது.&nbsp;</p><p> 

20 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய இந்த மறுதேர்விற்கான முடிவுகள் நேற்று வெளியானது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e8bcf4d-82a9-4cca-8d1f-586ba595ee32/26-6a5b64df15b22.webp' /></p><p>

இதில், மாடு மேய்ப்பவரின் மகளான பிரியதர்சினி 502 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். </p><p>

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் வடக்கு குமரன் சாலையில் வசித்து வரும் தமிழரசன், பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.&nbsp;</p><p></p><p>

இவர்களது மகள் பிரியதர்ஷினி, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வரை படித்துள்ளார். </p><p>

மருத்துவராக வேண்டும் என்ற இலக்குடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த இவர், இந்த நீட் மறுதேர்வில் 502 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.</p><p> 

பிரியதர்ஷினி 7.5 சதவீத இட ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பாணை வந்த பின்னர் அதில் கலந்து கொள்வார். </p><p>

பயிற்சி மையம் சென்றாலே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் எனக்கூறப்பட்டு வரும் நிலையில், பிரியதர்ஷினி வறுமையை தாண்டி சாதித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T11:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று ஒரே நாளில் உருவாகும் 2 யோகங்கள்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-double-yogam-1784375133"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-double-yogam-1784375133</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்கள் அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

அந்தவகையில் ஜூலை 18 ஆம் திகதியான இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்கள் அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p> 

அந்தவகையில் ஜூலை 18 ஆம் திகதியான இன்று பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான ஹன்ஸ் ராஜயோகமும், கஜகேசரி ராஜயோகமும் உருவாகியுள்ளன. </p><p>

அதில் குரு பகவானால் உருவாகியுள்ள பஞ்ச மகாபுருஷ யோகமானது ஒருவரது அறிவு, மரியாதை மற்றும் செல்வத்தை அளிக்கிறது.</p><p></p><p> 

அதே சமயம் குரு மற்றும் சந்திரனால் உருவாகியுள்ள கஜகேசரி யோகமானது மகிழ்ச்சி, செழிப்பு போன்றவற்றை அளிக்கும்.</p><p> 

அந்தவகையில், இந்த இரண்டு சக்தி வாய்ந்த சுப யோகங்களும் இன்று உருவாவதால், குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது.</p><h2>மேஷம்</h2><ul><li> 

இக்காலம் சிறப்பானதாக இருக்கும். </li><li>
பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும்.</li><li> புதிய பொறுப்புக்களும், சம்பள உயர்வும் கிடக்கும்.</li><li> நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும். </li><li>பண வரவு அதிகரிக்கும். </li><li>நிதி நிலைமை வலுவடையும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/728b02e0-e7c4-41d2-822f-2127a6f0ca7b/26-6a5b675f108a2.webp' /></p><p>
</p><h2>
துலாம் </h2><ul><li>

சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். </li><li>கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.</li><li> தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும். </li><li>புதிய ஒப்பந்தங்கள் கிட்டும்.</li><li> வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2d1cf58-3105-4f4a-bbdc-dc45fb3c6fba/26-6a5b675fb7264.webp' /></p><p>
</p><h2>
மகரம் </h2><ul><li>

ஆளுமை மேம்படும்.</li><li> போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். </li><li>தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். </li><li>பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். </li><li>சிலருக்கு முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும்.&nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75752616-77e7-4fa2-98e7-a890b7071724/26-6a5b676067c3c.webp' /></p><p>&nbsp;இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T11:48:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுவெளியில் தலைக்காட்டாத ஈரானின் உச்ச தலைவர் முஜ்தபா காமேனி: பின்னணி காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/why-mojtaba-khamenei-absent-from-out-of-public-1784373790"></link>
            <id>https://news.lankasri.com/article/why-mojtaba-khamenei-absent-from-out-of-public-1784373790</id>
            <summary type="text">அமெரிக்கா உடனான மோதல் நிறைவடையும் வரை ஈரானின் உச்ச தலைவர் பொதுவெளியில் தோன்ற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.பொதுவெளியில் தலைக்காட்டாத முஜ்தபா காமேன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா உடனான மோதல் நிறைவடையும் வரை ஈரானின் உச்ச தலைவர் பொதுவெளியில் தோன்ற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>பொதுவெளியில் தலைக்காட்டாத முஜ்தபா காமேனி</h2><p>
தந்தை அயதுல்லா அலி காமேனிக்கு பிறகு ஈரானின் உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முஜ்தபா காமேனி அமெரிக்காவுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் முடியும் வரை பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது.</p><p> ஈரானின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சவுதி அரேபியாவின் அல்-அரேபியா ஊடகம் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2af6e883-d9ce-4c28-9c42-096440afe49f/26-6a5b621f92322.webp' /></p><p> ஈரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் முஜ்தபா காமேனியின் உருவம் பொறித்த பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தாலும் அவர் நாட்டின் உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை.</p><p> குறிப்பாக அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது தந்தை மற்றும் நாட்டின் உச்சத் தலைவரான அயதுல்லா அலி காமேனி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் இறுதிச் சடங்கில் கூட முஜ்தபா காமேனி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2>பின்னணி காரணம்?</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a045204-14f9-4ca0-8ede-c330fbc38477/26-6a5b6416d9362.webp' /></p><p>&nbsp;உச்சத் தலைவர் பொறுப்பில் இருக்கும் முஜ்தபா காமேனி பொதுவெளியில் தோன்றாமல் இருப்பதும், அவரின் தொடர்ச்சியான மவுனமும் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.</p><p> இந்நிலையில் தந்தை உயிரிழந்த தாக்குதலில் முஜ்தபா காமேனியும் படுகாயமடைந்து இருக்கலாம் அல்லது அவரின் உடல் சிதைந்திருக்கலாம் எனவே தான் பொதுவெளியில் அவர் இதுவரை தோன்றவில்லை என்று கருத்துகள் நிலவி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-18T11:31:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் மலர்ந்த காதல்: சிறைக்குள்ளேயே கொலைக்குற்றவாளிகளுக்கு திருமணம் செய்ய அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rajasthan-court-allows-prisoners-marriage-jodhpur-1784370333"></link>
            <id>https://news.lankasri.com/article/rajasthan-court-allows-prisoners-marriage-jodhpur-1784370333</id>
            <summary type="text">இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் கொலைக் குற்றவாளிகள் சிறைக்குள் திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கொலைக் குற்றவாளிகள்&amp;nbsp;காதல்
ராஜஸ்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் கொலைக் குற்றவாளிகள் சிறைக்குள் திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>கொலைக் குற்றவாளிகள்&nbsp;காதல்</h2><p>
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சிறைச்சாலையில், கொலை குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வருபவர் மூலாராம் (33).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c666a14d-d446-4411-8f58-5fc33234b83f/26-6a5b54a0870b9.webp' />&nbsp;</p><p></p><p>

கொலை வழக்கில் குற்றவாளியாக இருக்கும் சீமா காட்சே (31) என்ற பெண், தற்போது பிணையில் வெளியே உள்ளார்.</p><p>

மூலாராமும், சீமாவும் சிறையில் சந்தித்து காதலித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.</p><p> 

அதற்காக 'தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான' மனுவை மூலாராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். </p><h2>சிறைச்சாலையில் திருமணம்&nbsp;</h2><p>

அதனை விசாரித்த நீதிமன்றம், கைதிகள் இருவரும் ஜோத்பூர் சிறைச்சாலையில் திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்துள்ளது.
</p><p>
சிறைவாசம் என்பது அரசியலமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை ரத்து செய்யாது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், வயது வந்த இருவருக்கு இடையிலான திருமணம் என்பது அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ள வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் ஒரு அங்கம் என்றும் தெரிவித்தது.
</p><p>
இவர்களின் திருமணம் வருகிற 22ஆம் திகதி நடைபெறும் என்றும், 21 பேர் வரை வெளியில் இருந்து வந்து திருமணத்தில் கலந்துகொள்ளலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea5c00b8-ab70-4e84-8139-954baa07e773/26-6a5b549fd5c51.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T11:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவை நோக்கி பாய்ந்த 379 உக்ரைனிய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய ரஷ்ய பாதுகாப்பு படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/379-drones-overnight-attack-on-across-russia-1784369923"></link>
            <id>https://news.lankasri.com/article/379-drones-overnight-attack-on-across-russia-1784369923</id>
            <summary type="text">ரஷ்யா மீது உக்ரைனிய படைகள் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்து இருப்பதாக ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவை நோக்கி பாய்ந்த 379 ட்ரோன்கள்
ரஷ்ய எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மீது உக்ரைனிய படைகள் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்து இருப்பதாக ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன.</p><h2> ரஷ்யாவை நோக்கி பாய்ந்த 379 ட்ரோன்கள்</h2><p>
ரஷ்ய எல்லைக்கு உட்பட்ட மற்றும் ரஷ்யாவின் கடல் எல்லைகளை குறிவைத்து உக்ரைனிய படைகள் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.</p><p> நேற்று இரவிலிருந்து நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலில் குறைந்தது உக்ரைனின் 379 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p> இடை மறிக்கப்பட்ட ட்ரோன்கள் மாஸ்கோ, பெல்கோரோட், ஓரியோல், டவெர், பிஸ்கோவ், குர்ஸ்க், ரோஸ்டோவ், கிராஸ்னோடர். லெனின்கிராட் மற்றும் கிரீமியா ஆகிய பகுதியில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c146417-5a10-4966-bcfb-455858370463/26-6a5b5304d1afb.webp' /></p><p></p><p> மேலும் கருங்கடல் மற்றும் அசோவ் கடல் ஆகிய பகுதிகளை குறிவைத்தும் உக்ரைனிய ட்ரோன் தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதற்கு பதிலடியாக ரஷ்ய பாதுகாப்பு படையினரும் தங்களது வலுவான எதிர்வினையை காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T10:19:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற ஜேர்மன் அரசியல்வாதியால் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ex-minister-jens-spahn-face-criticism-surrogacy-1784367061"></link>
            <id>https://news.lankasri.com/article/ex-minister-jens-spahn-face-criticism-surrogacy-1784367061</id>
            <summary type="text">ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் கட்சி, வாடகைத்தாய் முறைக்கு எதிராக பிரச்சாரம் செய்துவரும் கட்சி ஆகும்.

ஆனால், அந்தக் கட்சியைச் சார்ந்த அரசியல்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் கட்சி, வாடகைத்தாய் முறைக்கு எதிராக பிரச்சாரம் செய்துவரும் கட்சி ஆகும்.
</p><p>
ஆனால், அந்தக் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி ஒருவரே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
</p><h3>
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற அரசியல்வாதி
</h3><p>
ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸின் கட்சியான Christian Democratic Union (CDU), மற்றும் அதன் சகோதரி கட்சியான Christian Social Union (CSU) கட்சிகளின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருப்பவர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/667381dd-eeef-4cc8-8012-4f7dae77d08e/26-6a5b47d688649.webp' /></p><p>
ஸ்பான், அமெரிக்காவில், வாடகைத்தாய் ஒருவர் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

ஜேர்மனியில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், வெளிநாடொன்றில் வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தையை ஜேர்மனிக்குக் கொண்டுவர தடையேதும் இல்லை.&nbsp;</p><p></p><p>
விடயம் என்னவென்றால், CDU கட்சி, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான தடையை நீட்டிக்க பிப்ரவரி மாதம் வாக்களித்தது.</p><p>

அப்படியிருக்கும் நிலையில், கட்சிக் கொள்கைக்கு மாறாக வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட ஸ்பானுக்கு, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருக்க தகுதியில்லை என அவர் சார்ந்த கட்சியினரே கருத்து தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஆகவே, ஸ்பான் தனது நாடாளுமன்றக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T09:31:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பக்கம் வெப்பம்... மறுபக்கம் புயல்: பிரான்சில் இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/heatwave-and-storms-affect-france-2-dies-1784366668"></link>
            <id>https://news.lankasri.com/article/heatwave-and-storms-affect-france-2-dies-1784366668</id>
            <summary type="text">பிரான்சில் ஒரு பக்கம் வெப்பம் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்க, மறுபக்கம் இடியும் மழையும் புயலும் கோரத்தாண்டவம் ஆடியுள்ளன.

ஒரு பக்கம் வெப்பம்... ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் ஒரு பக்கம் வெப்பம் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்க, மறுபக்கம் இடியும் மழையும் புயலும் கோரத்தாண்டவம் ஆடியுள்ளன.
</p><h3>
ஒரு பக்கம் வெப்பம்... மறுபக்கம் புயல்
</h3><p>
பிரான்சின் பல பகுதிகளில் நிலவிவரும் கடும் வெப்பம், காட்டுத்தீ அபாயத்தை அதிகரித்துவிடுமோ என ஒரு பக்கம் அச்சம் நிலவி வரும் நிலையில், வியாழக்கிழமையன்று பிரான்சின் பல பகுதிகளில் இடி, மின்னல், கல்மழை என புயல் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது.
</p><p>
இந்நிலையில், புயல் காரணமாக மரம் ஒன்று விழுந்ததில் மத்திய பிரான்சிலுள்ள Haute-Vienne என்னுமிடத்தில் 30 வயதுப் பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adf6a734-706e-4c34-be05-4034bde43433/26-6a5b464fa6d25.webp' /></p><p>
தென்கிழக்கு பிரான்சிலுள்ள Isère என்னுமிடத்தில், ஒருவர் தனது ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்துகொண்டிருக்கும்போது மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

நேற்று மாலை Loire பகுதியில் கல்மழை பெய்துள்ளது. விழுந்த பனிக்கட்டிகள் சில 8 சென்றிமீற்றர் அகலம் கொண்டவையாக இருந்துள்ளன. பல வீட்டுக் கூரைகள் கல்மழையால் சேதமடைந்துள்ளன. சுமார் 8,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ce8b5e3-19c5-4a20-8175-50df033c49f7/26-6a5b464e4dae3.webp' /></p><p>
Haute-Vienne பகுதியிலும் 3,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
Ille-et-Vilaine பகுதியில், அரை மணி நேரத்தில் 35 மில்லிமீற்றர் மழை பொழிந்ததால், பல பகுதிகளை பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/454a4513-9454-4cff-b28f-b7d966398718/26-6a5b464f006fb.webp' /></p><p>
ஆக, இவ்வளவு நாட்களாக பிரான்ஸ் மக்களை வெயில் வாட்டி எடுத்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை வாட்டி வதைக்க, இப்போது வானம் தெளிவாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T09:24:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனம்: விண்ணில் பாய்ந்த Vikram-1 ராக்கெட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/skyroot-aerospace-successfully-launched-vikram-1-1784365947"></link>
            <id>https://news.lankasri.com/article/skyroot-aerospace-successfully-launched-vikram-1-1784365947</id>
            <summary type="text">இந்திய விண்வெளித் துறையில் புதிய சகாப்தமாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி துறையின் வரலாற்று சாதனை
இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய விண்வெளித் துறையில் புதிய சகாப்தமாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.</p><h2> இந்திய விண்வெளி துறையின் வரலாற்று சாதனை</h2><p>
இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில், ஹைதராபாத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்(Skyroot Aerospace) நிறுவனம் தங்களது ஆக்மன்(Aagaman) திட்டத்தின் கீழ் விக்ரம் 1(Vikram-1) என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக புவி தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.</p><p> அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு தனியார் நிறுவனம் மூலம் தங்களது ராக்கெட்டை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨 Successful launch of India’s 1st private company rocket, Skyroot Aerospace. 👏🏼🇮🇳 <a href="https://t.co/8fUFvbh0ri">pic.twitter.com/8fUFvbh0ri</a></p>&mdash; Indian Tech &amp; Infra (@IndianTechGuide) <a href="https://x.com/IndianTechGuide/status/2078375618119373023?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p> முழுக்க முழுக்க தனியார் நிறுவனம் வடிவமைத்து, உருவாக்கிய, விண்ணில் செலுத்திய விக்ரம் 1 ராக்கெட்டின் இந்த வெற்றியின் மூலம், இந்திய தனியார் விண்வெளி நிறுவனங்களும் உலகளாவிய போட்டியில் தங்களை முன்னிலைப்படுத்தி கொண்டுள்ளது.</p><p> இந்த ராக்கெட் ஏவுதல் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது ஸ்கைரூட் குழுவினர் “இது விண்வெளித்துறையின் புதிய விடியல் என்று தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf420466-0ff6-4572-b787-041f2efa572d/26-6a5b437d308be.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a59fef29-2df6-46d8-9633-0ca2eb16cd69/26-6a5b437df0dc5.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T09:12:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் சதமே முச்சதம் அடித்த வீரர் - காலமான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/west-indies-cricketer-sir-garfield-sobers-died-1784365633"></link>
            <id>https://news.lankasri.com/article/west-indies-cricketer-sir-garfield-sobers-died-1784365633</id>
            <summary type="text">மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவானான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமாகியுள்ளார். 


காலமான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் 

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவானான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமாகியுள்ளார். </p><h3>


காலமான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் </h3><p>

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவானான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் தனது 89வயதில் நேற்று காலமாகியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7c0d0e3-a786-4768-98b3-fdf6a517bc7e/26-6a5b4242e219a.webp' /></p><p>

1936 ஆம் ஆண்டில் பிறந்த கார்ஃபீல்ட் சோபர்ஸ், தனது 16 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட தொடங்கி 17 வயதில் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார்.</p><p> 

சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த பீல்டர் என அந்த காலகட்டத்தின் தலை சிறந்த ஆல் ரவுண்டராக சோபர்ஸ் வலம் வந்தார்.&nbsp;</p><p></p><p>

இந்தியாவிற்கு எதிராக அறிமுகமான முதல் முதல்தர போட்டியிலே 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/233f3744-d613-4968-ae2f-9779fb544a32/26-6a5b4243a378c.webp' /></p><p>

வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என இரண்டையும் வீசி துடுப்பாட்டக்காரர்களை திணற வைத்த சோபர்ஸ். 

93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 235 விக்கெட்களையும், 383 முதல்தர போட்டிகளில் விளையாடி 1,043 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். </p><p>

சோபர்ஸ் 21 வது வயதில், 1958 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்ததோடு, ஆட்டமிழக்காமல் 365 ஓட்டங்கள் எடுத்து அப்போதைய டெஸ்ட்டில் தனிநபர் அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையை படைத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52cd4296-1626-4db4-943c-6283f8db0ca3/26-6a5b4244527df.webp' /></p><p>

36 ஆண்டுகளுக்கு பிறந்து 1994 ஆம் ஆண்டில், சக மேற்கிந்திய தீவுகள் வீரரான பிரையன் லாரா 375 ஓட்டங்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்தார். </p><p>93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 சதங்கள், 30 அரைசதங்கள் உட்பட 8,032 ஓட்டங்களையும், 383 முதல்தர போட்டிகளில் விளையாடி 86 சதங்கள், 121 அரைசதங்கள் உட்பட 	28,314 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
</p><p>
ஸ்வான்சீயில் நாட்டிங்ஹாம்ஷைர் அணிக்காக விளையாடியபோது, ​​கிளாமோர்கனின் மால்கம் நாஷின் பந்துவீச்சில் முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சோபர்ஸ் பெற்றார். </p><p> 

1966 ஆம் ஆண்டு இங்கிலாந்து கால்பந்து உலகக்கிண்ண தொடரை நடத்தி, வெற்றியை கொண்டாடியபோது, ​​சோபர்ஸ் அந்த அணிக்கு எதிரான் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 சதம் உட்பட 722 ஓட்டங்கள் குவித்ததோடு, 20 விக்கெட்டுகள் மற்றும் 10 கேட்ச் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.</p><p> 

அந்த தொடரில் அணித்தலைவராக இருந்த அவர், 5 போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வென்றதுடன் உட்பட 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினார்.</p><p> 

டெஸ்ட் வரலாற்றில் 5,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தும், 200 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியும் உள்ள 5 ஆல் ரவுண்டர்களில் சோபர்ஸும் ஒருவர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c83f2a16-087d-41b8-bb93-e8b0300f5824/26-6a5b424504371.webp' /></p><p> ஓய்வு பெற்றதும் இரண்டாம் எலிசபெத் ராணி அவருக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்தார். </p><p>

ஐசிசி அவரை கௌரவிக்கும் வகையில், ஆடவர் கிரிக்கெட்டிற்கான முதன்மையான வருடாந்திர விருதாக 'சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது', அவரது பெயரில் வழங்கி வருகிறது. </p><p>

சர் கார்ஃபீல்ட் சோபர்ஸின் மறைவிற்கு கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின், கபில்தேவ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T09:07:27+00:00</updated>
        </entry>
    </feed>
