<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-14T18:19:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-sinks-russian-military-ship-1784051138"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-sinks-russian-military-ship-1784051138</id>
            <summary type="text">தீவிரமடைந்து வரும் எரிபொருள் நெருக்கடியால் ரஷ்யா முழுவதும் உள்ள எண்ணெய் நிலையங்களில் குழப்பம் நிலவி வரும் நிலையில், கருங்கடலில் ஒரு ரஷ்ய ராணுவக் கப்பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவிரமடைந்து வரும் எரிபொருள் நெருக்கடியால் ரஷ்யா முழுவதும் உள்ள எண்ணெய் நிலையங்களில் குழப்பம் நிலவி வரும் நிலையில், கருங்கடலில் ஒரு ரஷ்ய ராணுவக் கப்பலை உக்ரைன் மூழ்கடித்துள்ளது.</p><h2>உக்ரைன் கடற்படை</h2><p>
</p><p>உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்யாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் தாக்கிச் சிதைத்ததைத் தொடர்ந்து, எஞ்சியிருக்கும் சொற்ப அளவு பெட்ரோலைப் பெறுவதற்காகத் தவிக்கும் ரஷ்யர்களிடையே மோதல்கள் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82e82b70-85a7-4e14-a725-b09dfb3098ea/26-6a5676f7afc60.webp' /></p><p> </p><p>உக்ரைனின் சமீபத்திய தாக்குதலால், ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவிற்கு மேற்கே உள்ள ரஷ்யத் துறைமுகமான நோவோரோசிஸ்க் (Novorossiysk) கடல் பகுதியில், புடின் தனது 'எமரால்டு' பாதுகாப்புப் படை ரோந்து கப்பலை இழந்தார். </p><p>புதிய மற்றும் இரகசியமான சர்கன்-3000 கடல் ட்ரோன் மூலம் 205 அடி நீளமுள்ள ரஷ்ய கப்பல் செவ்வாய்க்கிழமை மூழ்கடிக்கப்பட்டதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது. </p><p>மட்டுமின்றி, 'எமரால்டு' கப்பலின் பணியாளர்கள் மத்தியில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டிருந்ததையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டில் கெர்ச் நீரிணையில் மூன்று கடற்படைக் கப்பல்களைக் கைப்பற்றியதன் மூலம் இந்தக் கப்பலை உக்ரைன் நீண்டக காலமாக இலக்கு வைத்து வந்துள்ளது.</p><p></p><p> </p><p>எமரால்டு கப்பலின் குழுவினர், உக்ரேனிய இழுவை கப்பலான 'யானி கபு' (Yany Kapu) மீது மோதியதாகவும், அப்படகு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், சுமார் 24 மாலுமிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. </p><p>இன்று 'எமரால்டு' கப்பலைத் பழிவாங்கும் நோக்கில் தாக்கிய 'சர்கன்-3000' நீண்ட தூரக் கடற்படைத் தாக்குதல் பணிகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ட்ரோன் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1addafa-af93-4195-a61a-5e9ff47e3427/26-6a5676f700969.webp' /></p><h2>எரிபொருள் பற்றாக்குறை</h2><p> </p><p>எண்ணெய் கப்பல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் மீதான முந்தைய தாக்குதல்களால் பெட்ரோல் இருப்பு குறைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ளவற்றைப் பெறுவதற்காக ரஷ்யர்கள் போராடும் சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
</p><p>சாரதிகள் எரிபொருள் நிரப்பச் செல்லும்போது பாதுகாப்பிற்காக கத்திகளை உடன் எடுத்துச் செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரஷ்யா முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து வருவதால், நாடு முழுவதும் தேவைக்கு அதிகமாக எரிபொருள் வாங்குவதற்குத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c1e7ea6-304f-4294-aef3-bd947d38c75d/26-6a5676f862e7f.webp' /></p><p> </p><p>எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏற்றுமதியும் முடங்கியுள்ளது; இதனால், பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட எரிபொருள் விற்பனை மூலம் ரஷ்யாவிற்குக் கிடைத்து வந்த வருவாய் தடைபட்டுள்ளது. </p><p>எரிபொருள் பற்றாக்குறை விவசாயிகளைப் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், ரஷ்யாவின் அறுவடைக்கும் கடுமையான நெருக்கடி ஏற்படும் சூழலை புடின் எதிர்கொள்கிறார். </p><p>இதனிடையே, கம்பைன் ஹார்வெஸ்டர்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ரஷ்யாவின் தெற்குப் பகுதிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T17:44:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-drops-hormuz-tolls-1784046770"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-drops-hormuz-tolls-1784046770</id>
            <summary type="text">ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களும் ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தலாம் எனவும், வளைகுடா நாடுகளுடன் மிகப்பெரிய முதலீட்டு ஒப்பந்தங்களைச் செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களும் ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தலாம் எனவும், வளைகுடா நாடுகளுடன் மிகப்பெரிய முதலீட்டு ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><h2>முழுமையான முற்றுகை</h2><p>
தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல் போக்குவரத்திற்கும் ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d39e79a-4bbb-4cb9-9479-a07b4938a26e/26-6a566beee6681.webp' /></p><p> </p><p>அதற்குக் காரணம், அவர்களை முழுமையான அழிவை நோக்கிய பாதையில் இட்டுச் செல்லும் அவர்களின் பொய்யான, வன்முறை மற்றும் தீய எண்ணம் கொண்ட தலைமைதான் என்றார். </p><p>எனவே, ஈரானியத் துறைமுகங்களுக்கு வரும் அல்லது அங்கிருந்து வெளியேறும் கப்பல்கள், அல்லது ஈரானிய சரக்குகள் தொடர்பான பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது மட்டுமே அமெரிக்கா முழுமையான முற்றுகையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன், வளைகுடா நாடுகளுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள், அந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 20 சதவீதம் கட்டணம் விதிக்க வேண்டும் என்று தான் முந்தைய நாள் முன்மொழிந்திருந்த திட்டத்திற்கு மாற்றாக அமையும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>மேலும், மத்திய கிழக்குத் தலைவர்களுடனான மிகவும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், அமெரிக்காவிற்குச் செலுத்தப்பட வேண்டிய 20 சதவீத கட்டணத்திற்கு பதிலாக, பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடன் மேற்கொள்ளவிருக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தாம் முடிவு செய்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வர்த்தகம் மற்றும் முதலீடு</h2><p> </p><p>வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் முன்னெடுக்கும் முதலீடுகள் மிகப் பிரம்மாண்டமானவையாக இருக்கும்; அதே வேளையில், அவர்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் அவை மிகச் சிறந்தவையாகவும் அமையும். </p><p>அனைவருக்கும் தெரிந்தபடி, வரலாற்றிலேயே எந்தவொரு நாடும் செய்யாத அளவிற்கு அமெரிக்காவில் நாம் மிகப்பெரிய அளவிலான டொலர் முதலீடுகளைச் செய்துள்ளோம்; ஆனால் இந்த புதிய முதலீடுகள் அந்த அளவை இன்னும் அதிகரிக்கச் செய்யும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b303b350-73e4-463f-b13f-50a754220cb9/26-6a566befcd76f.webp' /></p><p> </p><p>இதன் விளைவாக, தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க அளவில் அமெரிக்காவிற்குள் குவியும்; இது அதிக ஊதியம் தரும் லட்சக்கணக்கான கூடுதல் அமெரிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும்! </p><p>அமெரிக்கா மீண்டும் வெற்றி பெற்று வருகிறது; முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெறுகிறது. 52,000 போராட்டக்காரர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்களை ஈரான் கொன்று குவித்த காலம் முடிந்துவிட்டது; எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது எனவும் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>ஆனால், வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் முதலீடு மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனவா அல்லது சந்தைப் போக்கை கட்டுப்படுத்த வழ்க்கமான ட்ரம்பின் வணிக உத்தியா என்பது உறுதி செய்யப்படவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T16:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் மீண்டும் WhatsApp-ல் ChatGPT., மெட்டாவிற்கு EU உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chatgpt-back-on-whatsapp-in-eu-1784042515"></link>
            <id>https://news.lankasri.com/article/chatgpt-back-on-whatsapp-in-eu-1784042515</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உத்தரவின் பேரில், ChatGPT மீண்டும் WhatsApp-ல் அறிமுகமாகியுள்ளது.கடந்த ஆறு மாதங்களுக்கு WhatsApp-ல் ChatGPT பயன்படுத்த முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உத்தரவின் பேரில், ChatGPT மீண்டும் WhatsApp-ல் அறிமுகமாகியுள்ளது.</p><p>கடந்த ஆறு மாதங்களுக்கு WhatsApp-ல் ChatGPT பயன்படுத்த முடியாமல் இருந்த நிலையில், ஜூலை 13, 2026 முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
Meta நிறுவனம், 2025 அக்டோபரில் WhatsApp Business API விதிகளை மாற்றி, ChatGPT, Microsoft Copilot போன்ற AI உதவியாளர்களை தடை செய்தது.

இதற்கு காரணமாக “சர்வர் சுமை அதிகரிப்பு” என விளக்கம் அளித்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a1c433e-f450-4d94-854f-ab948e02a519/26-6a56541582b8f.webp' /></p><p>ஆனால், விமர்சகர்கள் இதை Meta-வின் சொந்த AI-ஐ முன்னிறுத்தும் முயற்சி எனக் கூறினர்.

இதற்கு எதிராக, ஜூன் 9, 2026 அன்று EU, Meta-க்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து, WhatsApp API-யை மீண்டும் திறக்க கட்டாயப்படுத்தியது. </p><p>விதிகளை மீறினால் Meta-க்கு வருடாந்திர வருமானத்தின் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
</p><p>
இப்போது, EU பயனர்கள் WhatsApp-ல் 1-800-CHATGPT என்ற சரிபார்க்கப்பட்ட எண்ணின் மூலம் ChatGPT-ஐ நேரடியாகப் பயன்படுத்த முடிகிறது. இதில் உரையாடல், குரல் உள்ளீடு, படங்களைப் பதிவேற்றம், AI பட உருவாக்கம் போன்ற வசதிகள் WhatsApp-இல் கிடைக்கின்றன.</p><p></p><p>சில பயனர்கள், ChatGPT-ஐ பயன்படுத்திய பின் WhatsApp கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். OpenAI, “சரிபார்க்கப்பட்ட எண்ணை மட்டுமே பயன்படுத்துங்கள்” என அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T15:20:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஜ்தபா கமேனி 90 சதவீதம் போய்விட்டார்., ட்ரம்ப் அதிர்ச்சியூட்டும் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-claims-iran-leaders-killed-mojtaba-hit-1784041690"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-claims-iran-leaders-killed-mojtaba-hit-1784041690</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமாகும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் முக்கிய இராணுவத் தலைவர்கள் அழிக்கப்பட்டதாகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமாகும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் முக்கிய இராணுவத் தலைவர்கள் அழிக்கப்பட்டதாகவும், உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி 90 சதவீதம் போய்விட்டார் (90% gone) என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.</p><p>

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் கடற்படை, விமானப்படை, எதிர்வான்படை அனைத்தும் அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் Fox News-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67f027f6-0f63-44a2-97d8-7a48b5a5526e/26-6a5650dc4b112.webp' /></p><p>

“அவர்களின் சிறந்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கமேனி இல்லை” என அவர் கூறினார்.
</p><p>
மொஜ்தபா கமேனி, தந்தையின் மரணத்திற்குப் பின் ஈரானின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டனர். சமீபத்திய விமானத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்ததால், தந்தையின் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p></p><p>மேலும், ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீதான முற்றுகையை (Iranian blockade) அமுல்படுத்தும் என்றும், அந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் பாதுகாப்புக்காக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்தார்.
</p><p>
“ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும். ஈரானின் கப்பல்கள் மட்டும் தடுக்கப்படும். மற்ற நாடுகள் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம்” என Truth Social-ல் பதிவிட்டார்.</p><p>

இதற்கு பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “ஹார்முஸ் நீரிணையின் காவலர் எப்போதும் ஈரானே. அமெரிக்கா அல்ல” எனக் கூறினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T15:06:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் அணுகுண்டு வீசுவதை மோடி தடுத்தாரா? போலந்து அமைச்சர் சொன்ன தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/poland-minister-says-modi-stops-putin-use-nukes-1784040945"></link>
            <id>https://news.lankasri.com/article/poland-minister-says-modi-stops-putin-use-nukes-1784040945</id>
            <summary type="text">&amp;nbsp;புடின் அணு ஆயுதம் பயன்படுத்துவதை மோடி தடுத்தார் என போலந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புடின் அணுஆயுத பயன்பாட்டை தடுத்த மோடி 

இந்தியாவிற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;புடின் அணு ஆயுதம் பயன்படுத்துவதை மோடி தடுத்தார் என போலந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><h3>
புடின் அணுஆயுத பயன்பாட்டை தடுத்த மோடி</h3><p> 

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள போலந்து துணை வெளியுறவு அமைச்சர் விளாடிஸ்லாவ் பார்டோசெவ்ஸ்கி, இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a096d1f-3af2-4d25-8ff0-2db74482386b/26-6a564df372ceb.webp' /></p><p>
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிராக ரஷ்யாவை இணங்க வைப்பதில் பிரதமர் மோடி முக்கிய பங்கு வகித்தார் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81855257-1188-41c4-9138-9f86335b5be3/26-6a564df42b265.webp' /></p><p>

இது குறித்து பேசிய அவர், "நரேந்திர மோடி மிகவும் பிரபலமான மற்றும் மதிக்கப்படும் ஒரு உலகத்தரம் வாய்ந்த தலைவர். மேலும், இந்தியாவுக்கு ரஷ்ய கூட்டமைப்புடனும், அதற்கு முன்பாக சோவியத் யூனியனுடனும் அணிசேரா நாடாக நீண்டகால உறவு இருந்து வருகிறது.&nbsp;</p><p></p><p>

போரின்போது தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என ரஷ்யாவை இணங்க வைப்பதில், 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரதமர் மோடி பங்கு வகித்தார்.
</p><p>
மோடி தன்னிடம் கூறுவதை ரஷ்ய ஜனாதிபதி புடின் உண்மையில் கவனத்தில் கொள்கிறார். புடின் மீது உண்மையில் அழுத்தம் கொடுக்கவும் செல்வாக்கு செலுத்தவும் கூடிய ஒரு சிலரில் பிரதமர் மோடியும் ஒருவர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/644f112c-828b-4b51-8168-a35fd66b63e1/26-6a564df4cfc0c.webp' /></p><p> 

மோடி மட்டுமல்ல, சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் உட்பட அனைவரும் பதற்றத்தை அதிகரிப்பதற்கு எதிராக உள்ளனர். குறிப்பாக, ரஷ்யாவிற்கு விரோதமானவையாகக் கருதப்படாத நாடுகளில் இருந்து இது வரும்போது, ​​அது முக்கியமானதாகிறது. இதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது" என பேசியுள்ளார். </p><p>

2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் இரு தரப்பிலும் சுமார் 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் பணக்காரர்கள் விரும்பும் 10 ஆடம்பர சுற்றுலா தலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/top-10-luxury-billionaire-holiday-spots-1784038916"></link>
            <id>https://news.lankasri.com/article/top-10-luxury-billionaire-holiday-spots-1784038916</id>
            <summary type="text">உலகின் பணக்காரர்கள், பில்லியனர்கள், பிரபலங்கள் விடுமுறைக்கு செல்லும் இடங்கள் சாதாரண சுற்றுலா தலங்களல்ல.தனியார் ஜெட் விமான நிலையங்கள், மெகா சொகுசுப் பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் பணக்காரர்கள், பில்லியனர்கள், பிரபலங்கள் விடுமுறைக்கு செல்லும் இடங்கள் சாதாரண சுற்றுலா தலங்களல்ல.</p><p>தனியார் ஜெட் விமான நிலையங்கள், மெகா சொகுசுப் படகுகள், அரண்மனை ஹோட்டல்கள், தனியார் கிளப்புகள், மற்றும் தனிமையை உறுதி செய்யும் வசதிகள் கொண்ட இடங்களே இவர்களின் விருப்பம்.
</p><p></p><p>அவ்வாறு, உலகின் பணக்காரர்கள் விரும்பும் 10 ஆடம்பர சுற்றுலா தலங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.&nbsp;</p><h2>1.பிரெஞ்சு ரிவியாரா (France)
</h2><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1df418df-bc95-478d-ae08-51f3aa9850de/26-6a5646a242f0d.webp' /></p><p>French Riviera உலகின் முதலிடம் பெற்ற பில்லியனர் விடுமுறை தலமாகும்.
</p><p>
அழகிய கடற்கரை, சொகுசுப் படகு (Yacht) பயண வசதி, அரண்மனை ஹோட்டல்கள், பிரபல உணவகங்கள் ஆகியவை இங்கு முக்கிய அம்சங்களாக உள்ளன. ஜெஃப் பெசோஸ், எல்டன் ஜான் போன்றோர் இங்கு அடிக்கடி வருகை தருகின்றனர்.
</p><h2>2.மொனாக்கோ (Monaco)
</h2><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e5d80e-f293-4fa3-8b5b-d4c096e8e5c6/26-6a5646a31b99a.webp' /></p><p>மிகச் சிறிய நாடாக இருந்தாலும், உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல்கள் இங்கு உள்ளன. ஒரு இரவு தங்கும் செலவு சுமார் 2,440 டொலர் ஆகும். கேசினோ, ஃபார்முலா 1, சூப்பர் யாட்கள் ஆகியவை இங்கு பிரபலமானவை.
</p><h2>3.மியாமி (USA)</h2><p>அமெரிக்காவின் ரிவியாரா என அழைக்கப்படும் மியாமி (Miami), கலை, கலாச்சாரம், ஆடம்பர ஹோட்டல்கள், கடற்கரை வாழ்க்கை ஆகியவற்றால் பிரபலமானது.
</p><h2>4.ஹாம்ப்டன்ஸ் (USA)</h2><p>Hamptons நியூயார்க் பில்லியனர்களின் கோடை விடுமுறைக்கான சிறந்த ஸ்பாட் ஆகும். தனியார் கிளப்புகள், கடற்கரை, பெரிய எஸ்டேட்கள், சமூக நிகழ்ச்சிகள் ஆகியவை இங்கு முக்கியதத்துவம் பெறுகின்றன.</p><h2>5.அமால்ஃபி கோஸ்ட் (Italy)</h2><p>Amalfi Coast உள்ள கடற்கரை பாறைகள், பழமையான ஹோட்டல்கள், யாட் பயணங்கள், இத்தாலிய விருந்தோம்பல் ஆகியவை இங்கு ஆடம்பரத்தை வெளிப்படுத்துகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eec595b-1367-47b6-9c94-9adbffeb8080/26-6a5646a3cb1d5.webp' /></p><p>
</p><h2>6.பாலி (Indonesia)</h2><p>Bali ஆசியாவின் முன்னணி சுற்றுலா தலமாகும். தனியார் வில்லாக்கள், காடு சூழ்ந்த ஹோட்டல்கள், யோகா, ஸ்பா, ஆன்மீக அனுபவங்கள் ஆகியவை பில்லியனர்களை இங்கு கவர்கின்றன.</p><h2>7.குர்செவல் (France)</h2><p>Courchevel பனிச்சறுக்கு விடுமுறை தலமாகும். அரண்மனை ஹோட்டல்கள், தனியார் மர் வீடுகள், உயர்தர உணவகங்கள், ஸ்கீ வசதிகள் ஆகியவை இங்கு உள்ளன.
</p><h2>8.மஜோர்கா (Spain)</h2><p>Majorca- மலைகள், ஆலிவ் தோட்டங்கள், தனிமையான கடற்கரை, யாட் துறைமுகங்கள் ஆகியவை இங்கு பிரபலமானவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4eb4633-3144-470b-9de6-b6ecb72a98cd/26-6a5646a480a26.webp' /></p><h2>9.மாலத்தீவு (Maldives)</h2><p>தனியார் தீவுகள், நீர்மீது கட்டப்பட்ட வில்லாக்கள், seaplane பயணங்கள் ஆகியவை உலகின் பணக்காரர்களை கவர்கின்றன.
</p><h2>10.காப்ரி (Italy)</h2><p>பழமையான கவர்ச்சி, Blue Grotto கடல் குகை, சூப்பர் யாட் பயணங்கள், பிரபல ஷாப்பிங், இரவு வாழ்க்கை ஆகியவை காப்ரியின் சிறப்பு அம்சங்களாக யுள்ளன.</p><p>

இந்த 10 தலங்கள் உலக பணக்காரர்கள் மிகவும் விரும்பி செல்லும் இடங்களாக உள்ளன. தனிமை, ஆடம்பரம், தனித்துவமான அனுபவம் ஆகியவை செல்வந்தர்களை இங்கே இழுக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:23:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை - கடைசிக்கு முந்தைய இடத்தில் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-second-lowest-in-environment-performance-1784035929"></link>
            <id>https://news.lankasri.com/article/india-second-lowest-in-environment-performance-1784035929</id>
            <summary type="text">சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை பட்டியலில், இந்தியா கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.

சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை

சுற்றுசூழல் ஆரோக்கியம் என்ற நோக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை பட்டியலில், இந்தியா கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.
</p><h3>
சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை
</h3><p>
சுற்றுசூழல் ஆரோக்கியம் என்ற நோக்கத்தில், ஏல் பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் இணைந்து உலகளாவிய சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு தரவரிசைப் பட்டியலை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிட்டு வருகிறது.
</p><p>
இதில், காற்றின் தரம், சுற்றுப்புறத்தில் உள்ள நுண்ணிய துகள்களின் அளவு, மரங்களின் அடர்த்தி இழப்பு, பருவநிலை மாற்றத் தணிப்பு உள்ளிட்ட 47 குறிகாட்டிகளின் அடிப்படையில் 177 நாடுகளை மதிப்பீடு செய்து, இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cc4a7dc-ca23-4a69-9fac-60e0b3bcc592/26-6a563a5a9eae5.webp' /></p><p>
இதில், சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு அடிப்படையில், 100க்கு 74.79 மதிப்பெண்களுடன் எஸ்டோனியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. </p><p>

74.24 மதிப்பெண்களுடன் லக்சம்பர்க் 2வது இடத்திலும், 71.51 மதிப்பெண்களுடன் பிரித்தானியா 3வது இடத்திலும், 71.04 மதிப்பெண்களுடன் பின்லாந்து 4வது இடத்திலும், 71.04 மதிப்பெண்களுடன் நெதர்லாந்து 5வது இடத்திலும், உள்ளது.&nbsp;</p><p></p><p>

ஜெர்மனி 6வது இடத்திலும், பிரான்ஸ் 7வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 15வது இடத்திலும், அவுஸ்திரேலியா 25வது இடத்திலும், அமெரிக்கா 27வது இடத்திலும், கனடா 29வது இடத்திலும் உள்ளது. </p><h3>

கடைசிக்கு முந்தைய இடத்தில்&nbsp;இந்தியா </h3><p>39.58 மதிப்பெண்களுடன் இலங்கை 94 வது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில், 38.8 மதிப்பெண்களுடன்134வது இடத்தில் இருந்துள்ளது. </p><p>

இதே போல், இந்த பட்டியலில் 22.46 மதிப்பெண்களுடன் இந்தியா கடைசிக்கு முந்தைய இடமான 176வது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில், 180 நாடுகள் இருந்த நிலையில், 27.6 மதிப்பெண்களுடன் 176வது இடத்தில் இருந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f669fc-69e0-47f2-b55c-badead8c1a10/26-6a563a5b523aa.webp' /></p><p>

2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில், 25.5 மதிப்பெண்களுடன் 179வது இடத்தில் இருந்த பாகிஸ்தான், தற்போது 29.03 மதிப்பெண்களுடன் 157வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.</p><p>

லாவோஸ் 21.78 மதிப்பெண்களுடன் 177வது இடத்தில் கடைசி நாடாக உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T13:48:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை முற்றுகையிட்டது தவறு., அமெரிக்காவின் செயலுக்கு சீனா எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-condemns-for-us-action-in-hormuz-1784020407"></link>
            <id>https://news.lankasri.com/article/china-condemns-for-us-action-in-hormuz-1784020407</id>
            <summary type="text">ஈரான் கடற்படைக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை சீனா கண்டித்துள்ளது. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்...</summary>
            <content type="html"><![CDATA[<h3>ஈரான் கடற்படைக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை சீனா கண்டித்துள்ளது.</h3><h2> மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்</h2><p>
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து அதற்கு பதிலடியாக அமெரிக்க படைகள் ஈரானிய இராணுவ இருப்புகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது.</p><p> அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளை குறிவைத்து ஈரானும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குரலை முன்னெடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e7f6067-b5e1-486f-ba8a-bf056292cb1d/26-6a55fdb8b3b2a.webp' /></p><p></p><h4> அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு</h4><p>இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜுயான் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p> மீண்டும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க படைகளின் கடற்படை முற்றுகை நடவடிக்கையை சீனா எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லின், அமெரிக்கா - ஈரான் ஆகிய இரண்டு நாடுகள் இடையிலும் மீண்டும் ஆயுத மோதல் தொடங்கி இருப்பது கவலையையும், அக்கறையையும் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர முயற்சிகள் மூலம் இருதரப்பும் தீர்வு காண வேண்டும் என்றும் லின் வலியுறுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:47:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடொன்றிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய தடை: உள்நாட்டு யுத்தப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eu-bans-gold-imports-from-sudan-to-curb-money-war-1784032662"></link>
            <id>https://news.lankasri.com/article/eu-bans-gold-imports-from-sudan-to-curb-money-war-1784032662</id>
            <summary type="text">ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

தங்கம் இறக்குமதி செய்ய தடை

ஆப்பிரிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.</p><h3>

தங்கம் இறக்குமதி செய்ய தடை
</h3><p>
ஆப்பிரிக்க நாடுகளிலேயே, அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில் சூடானும் ஒன்று.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d3e15ff-87b0-481b-981c-cc6650607425/26-6a562d97889ba.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், சூடானில் 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல், ராணுவத்துக்கும், போராளிக்குழுவான Rapid Support Forces (RSF) என்னும் அமைப்புக்கும் இடையே உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுவருகிறது.
</p><p>
யுத்தம் காரணமாக, 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு தப்பியோட நேர்ந்துள்ளது. கடுமையான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துவருகின்றன.</p><p> 

இந்த இரு பிரிவினரும், நாட்டிலுள்ள தங்கச் சுரங்கங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். நாட்டின் மேற்கு மற்றும் மையப் பகுதிகளில் உள்ள தங்கச் சுரங்கங்களை RSFஅமைப்பும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தங்க உற்பத்தியை ராணுவமும் கட்டுப்படுத்துகின்றன.&nbsp;</p><p></p><p>
ஆக, இருதரப்பும் போர் செய்வதற்குத் தேவையான பணம், இந்த தங்க ஏற்றுமதி மூலம்தான் கிடைக்கிறது.
</p><p>
ஆகவே, சூடானிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c1c7cde-81ab-4377-970e-9e2430686e2c/26-6a562d98377df.webp' /></p><p>

ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சூடானில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில், யுத்தத்துக்கான முக்கிய நிதி ஆதாரமாக தங்கம்தான் விளங்குகிறது.
</p><p>
ஆகவே, சூடானிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தால், அது வன்முறைக்குக் காரணமாக இருப்போருக்கு பணம் கிடைப்பது குறைய வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தடை நடவடிக்கைகள், யுத்தத்துக்கு நிதி வழங்கும் ஆதாரத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், யுத்தத்தை தூண்டுவோர் மீது அழுத்தத்தை அதிகரிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:44:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணியில் உள்ளவருடன் சேர்ந்து துரோகம் செய்த மனைவி - அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/partner-accuse-aus-cricketer-gardner-affair-voll-1784031968"></link>
            <id>https://news.lankasri.com/article/partner-accuse-aus-cricketer-gardner-affair-voll-1784031968</id>
            <summary type="text">அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் அணியில் உள்ள சக வீராங்கனையுடன் சேர்ந்து தனது மனைவி துரோகம் செய்துவிட்டதாக மோனிகா ரைட் குற்றநச்சட்டியுள்ளார்.

துரோகம் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் அணியில் உள்ள சக வீராங்கனையுடன் சேர்ந்து தனது மனைவி துரோகம் செய்துவிட்டதாக மோனிகா ரைட் குற்றநச்சட்டியுள்ளார்.</p><h3>

துரோகம் செய்த அவுஸ்திரேலிய வீராங்கனை</h3><p> 

இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற 2026 மகளிர் உலக கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
</p><p>
தற்போது அவுஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c73dd0ed-b303-4ecc-be05-59d9a2ba35ea/26-6a562ae32b543.webp' /></p><p>
அவுஸ்திரேலிய அணியின் துணை கேப்டனான ஆஷ்லே கார்ட்னர், தனது நீண்டகால காதலியான மோனிகா ரைட்டை ஏப்ரல் 2025 ஆம் ஆண்டில் தன்பாலின திருமணம் செய்து கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23e71980-4301-4167-a9c8-470ef0f95cd8/26-6a562ae273ec0.webp' /></p><p>

இவர்கள் இருவருக்குமிடையே பிரிவு உள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், ஆஷ்லே கார்ட்னர் தனக்கு துரோகம் செய்துள்ளதாக மோனிகா ரைட் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். </p><p>

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையான ஜார்ஜியா வோலின் புகைப்படத்தை பதிவிட்ட மோனிகா ரைட், இவருடன் தான் என் மனைவி துரோகம் செய்தார் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8aeac9e-d5a1-49d5-8eb4-6c4529566ff5/26-6a562ae3ccd3e.webp' /></p><p> 

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஒருநாள் உலகக்கிண்ண தொடரின் பின்னர் இவர்களுக்குள் பிரிவு தொடங்கியதாகக் கூறப்படுகிறது.</p><p> 

இந்தியாவில் இருந்த போதே கார்டனர் மற்றும் வோல்க்கு இடையே உறவு இருந்ததாகவும், அது தெரியாமல் உலககிண்ணத்தில் கார்டனருக்கு ஆதரவளிக்க மோனிகா இந்தியா வந்துள்ளார்.</p><p>
அவுஸ்திரேலியா திரும்பிய பின்னர் மோனிகாவிடம் அவருக்கு துரோகம் செய்ததை கார்டனர் ஒப்புக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>
இருவரும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டு அதற்கான மருத்துவமனை முன்பதிவையும் செய்திருந்த நிலையில், இந்த பிரிவால் அந்த முன்பதிவை மோனிகா ரத்து செய்துள்ளார்.
</p><p>
இதன் பின்னர் தனது திருமண மோதிரத்தை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு, அங்கிருந்த மற்ற பொருட்களை எடுத்துக்கொண்டு சொல்லாமல் கார்ட்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். </p><p>

இந்த விவகாரம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:26:18+00:00</updated>
        </entry>
    </feed>
