<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-16T05:24:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிபியா கடற்கரையில் கவிழ்ந்த அகதிகள் படகு: 50 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ship-wreck-off-libyan-coast-50-missing-1784178999"></link>
            <id>https://news.lankasri.com/article/ship-wreck-off-libyan-coast-50-missing-1784178999</id>
            <summary type="text">லிபியக் கடற்கரை அருகே படகு கவிழ்ந்த விபத்தில் 50 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.50 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம்?
லிபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லிபியக் கடற்கரை அருகே படகு கவிழ்ந்த விபத்தில் 50 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.</p><h2>50 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம்?</h2><p>
லிபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 60 அகதிகளுடன் வந்த சிறிய படகு கவிழ்ந்ததில் பெண்கள் குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்து இருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.</p><p> செவ்வாய்க்கிழமை டோப்ரூக் அருகே உள்ள பார்டா தீவு பகுதியில் இந்த விபத்து சம்பவமானது ஏற்பட்டுள்ளது.</p><p> விபத்தின் போது படகில் இருந்த 10 பேர் நீந்திச் சென்று அருகில் உள்ள தீவில் கரையேறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a8fbe1-71f6-41ca-bdc0-05df1c0c057c/26-6a58693915256.webp' /></p><p></p><p>ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீதமுள்ள 50 பேர் நிலை தற்போது வரை என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.<br></p><p> &nbsp;வாழ்வாதாரங்களை தேடி மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவிற்கு அகதிகளாக வரும் மக்கள், சிறிய படகில் இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.</p><p> கடந்த மாதம் இதே பகுதியில் நடந்த மற்றொரு படகு விபத்தில் 51 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T05:16:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய நிதி அமைச்சராக பதவி உயர்வு பெறும் ஷபானா மஹ்மூத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-to-name-mahmood-as-uk-finance-minister-1784178122"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-to-name-mahmood-as-uk-finance-minister-1784178122</id>
            <summary type="text">பிரித்தானியாவில், உள்துறைச் செயலராக அதிரடி புலம்பெயர்தல் கொள்கைகளை முன்வைத்த ஷபானா மஹ்மூத், நாட்டின் நிதி அமைச்சராக பதவி உயர்வு பெற இருப்பதாக தகவல் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில், உள்துறைச் செயலராக அதிரடி புலம்பெயர்தல் கொள்கைகளை முன்வைத்த ஷபானா மஹ்மூத், நாட்டின் நிதி அமைச்சராக பதவி உயர்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
நிதி அமைச்சராகும் ஷபானா மஹ்மூத்</h3><p>

பிரித்தானிய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக இருந்தவரான ஆன்டி பர்னாம் என்பவர் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86d76a62-749d-4d22-b99c-babbf4d223e1/26-6a5865ccec75b.webp' /></p><p>
ஆன்டி பர்னாம், வரும் திங்கட்கிழமை, லேபர் கட்சியின் தலைவராகவும், பிரித்தானியாவின் பிரதமராகவும் பொறுப்பேற்க இருக்கிறார்.</p><p>

ஆன்டி பர்னாம் பிரதமராக பொறுப்பேற்றதும், அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
குறிப்பாக, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர்ந்தோரை கலங்கடித்துவரும் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதுக்கு, பிரித்தானியாவின் நிதி அமைச்சராக பதவி உயர்வு அளிக்கப்பட இருப்பதாக ஆன்டி பர்னாமுக்கு நெருக்கமான சிலரை மேற்கோள் காட்டி Financial Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e47f6707-637b-4816-b13a-660777b01986/26-6a5865cc40ffe.webp' /></p><p>
இது ஷபானாவுக்கு பதவி உயர்வு என கூறப்பட்டாலும், இன்னொரு பக்கம், உள்துறையில் கவனம் ஈர்க்கும் வகையில் செயல்பட்ட ஷபானாவுக்கு, பொருளாதாரக் கொள்கையில் பெரிதாக அனுபவம் இல்லை என இப்போதே ஊடகங்கள் எழுதத் துவங்கிவிட்டன.
</p><p>
ஆக, ஸ்டார்மரின் வீழ்ச்சிக்கு அவர் புலம்பெயர்தலைக் கையாண்ட விதம் மட்டுமல்ல, அவரது பொருளாதாரக் கொள்கைகளும்தான் காரணம் என கூறப்படும் நிலையில், அனுபவம் குறைந்த ஷபானா எப்படி நிதி அமைச்சராக சமாளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T05:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க கடற்படை மாணவர் பட்டாலியனை வழிநடத்தும் 17 வயது ராஜஸ்தான் மாணவி: யார் இந்த ரித்தி சௌஹான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-teen-leads-us-navy-battalion-1784177195"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-teen-leads-us-navy-battalion-1784177195</id>
            <summary type="text">ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட 17 வயது மாணவி அமெரிக்க கடற்படையின் மாணவர் பிரிவை வழிநடத்தும் அதிகாரத்தை பெற்றுள்ளார். இந்திய வம்சாவளி மாணவியின் சாதனை
ராஜஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட 17 வயது மாணவி அமெரிக்க கடற்படையின் மாணவர் பிரிவை வழிநடத்தும் அதிகாரத்தை பெற்றுள்ளார்.</p><h2> இந்திய வம்சாவளி மாணவியின் சாதனை</h2><p>
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை பூர்விகமாக கொண்ட 17 வயது மாணவி ரித்தி சௌஹான், அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் பட்டாலியன் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p> நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் உள்ள பெஞ்சமின் கார்டோசோ உயர்நிலைப் பள்ளியில் ரித்தி சௌஹான் பயின்று வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2487bbab-d2f1-4377-a298-a327f3446ed9/26-6a58622ca27d4.webp' /></p><p>இவர் 2 ஆண்டுகளாக தன்னுடைய பள்ளியை கல்விப் போட்டியில் தொடர்ந்து&nbsp; இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற வைத்துள்ளார்.</p><p> மேலும், படை பிரிவின் முதல் சீபெர்ச் நீருக்கடியில் இயங்கும் ரோபோவின் உருவாக்கம் மற்றும்&nbsp; தேசிய கல்வித் தேர்வில் முதலிடம் ஆகியவற்றை பெறுவதற்கும் ரித்தி சௌஹான் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.</p><p></p><p> அத்துடன் பள்ளி தொடங்குவதற்கு முன்னதாக பள்ளிக்கு வந்து, படைப்பிரிவின் தினசரி செயல்பாடுகள் மற்றும் பயிற்சி அமர்வுகளை மேற்பார்வையிட்டு இளம் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f95f988-9b8a-4779-9bab-b8f3570f40f2/26-6a58622d54a0f.webp' /></p><p> இந்நிலையில் கிட்டத்தட்ட 300 மாணவர்களை உள்ளடக்கிய அமெரிக்க கடற்படையின் இளநிலை அதிகாரிகள் படைப்பிரிவின் பட்டாலியன் கட்டளை அதிகாரியாக ரித்தி செளஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p> இது குறித்து பேசிய ரித்தி, பிறருக்கு உதவுவதும் முன்மாதிரியாக திகழ்வதும் தான் தலைமை பண்பு என தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T04:46:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/punjab-girl-stabbed-to-death-in-london-1784171935"></link>
            <id>https://news.lankasri.com/article/punjab-girl-stabbed-to-death-in-london-1784171935</id>
            <summary type="text">பிரித்தானியாவில் உயர்கல்வி பயின்று வந்த இந்திய மாணவி கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாணவிக்கு கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் உயர்கல்வி பயின்று வந்த இந்திய மாணவி கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> இந்திய மாணவிக்கு கத்திக்குத்து</h2><p>இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் டர்ன் தாரன் பகுதியை சேர்ந்த கீரந்தீப் கவுர் என்ற 24 வயது இளம்பெண், அவர் தங்கியிருந்த லண்டன் வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 2 வருடங்களுக்கு முன்பு மாணவர் விசாவில் லண்டனுக்கு சென்ற கீரந்தீப் கவுர், படிப்பை முடித்து விட்டு லண்டன் ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் உள்ள வீடு ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf21877-9e9e-4e20-9820-382c97c2a33b/26-6a584da08e600.webp' /></p><p> இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கீரந்தீப் கவுர் தன்னுடைய அறையில் உறங்கி கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.</p><p> தாக்குதல்தாரி கீரந்தீப் கவுரின் உடம்பில் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் 5 முறை கத்தியால் குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><h2>சிக்கிய சிசிடிவி காட்சி</h2><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி குற்றவாளியை உடனடியாக கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99cfa17d-52e8-4e57-8108-822a3a23e157/26-6a584da13c676.webp' /></p><p> கைது செய்யப்பட்ட நபர் இங்கிலாந்தை சேர்ந்த 44 வயது டேனியல் சீன் ஜேம்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p> பொலிஸாரின் முதற்கட்ட தகவலில், சம்பந்தப்பட்ட நபர் லண்டனில் 20 வயது இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிப்பதற்காக ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் உள்ள கிரந்தீப் கவுரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.</p><p> உள்ளே நுழைந்த டேனியல் தன்னை கீரந்தீப் கவுர் பொலிஸில் காட்டி கொடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.</p><p> தற்போது குற்றவாளி டேனியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p><h2> பெற்றோர் வேதனை</h2><p>
தங்கள் நிலத்தை விற்று தந்தை சுக்தேவ் சிங் மற்றும் தாய் பால்ஜித் கவுர்&nbsp; மகள் கீரந்தீப் கவுரை லண்டனுக்கு படிக்க அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் தற்போது அவர் கொலை செய்யப்பட்ட செய்தி அவர்களை மிகப்பெரிய சோகத்தில் தள்ளியுள்ளது.</p><p> மேலும் தங்களது மகளின் உடலை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T04:40:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கிலிருந்து அனைத்து எரிசக்தி ஏற்றுமதிகளும் முடக்கப்படும்: அச்சுறுத்தும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/halt-middle-east-energy-exports-1784161526"></link>
            <id>https://news.lankasri.com/article/halt-middle-east-energy-exports-1784161526</id>
            <summary type="text">துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா மீண்டும் அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிலிருந்து அனைத்து எரிசக்தி ஏற்றுமதிகளையும...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா மீண்டும் அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிலிருந்து அனைத்து எரிசக்தி ஏற்றுமதிகளையும் நிறுத்திவிடுவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.</p><h2>அணுசக்தித் திட்டத்துடன்</h2><p>
</p><p>இரு நாடுகளும் ஐந்தாவது நாளாகப் பரஸ்பரம் தாக்குதல் நடத்திக்கொண்ட நிலையில், அடுத்த வாரம் அமெரிக்கத் தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்துவது குறித்து டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வந்த வேளையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e92bb75c-6b4e-4532-b9c5-9e049e60898f/26-6a5825eb3c623.webp' /></p><p> </p><p>ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய ஒரு தளம் மீது தாக்குதல் நடத்தப்போவதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார். </p><p>அமெரிக்க இராணுவத்தின் தகவலின்படி, புதன்கிழமை அதிகாலையில் அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை நடைமுறைக்கு வந்தது; அதனைத் தொடர்ந்து, ஈரானின் கடற்கரை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் மீது 90 நிமிடங்கள் நீடித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. </p><p>முந்தைய நாள் நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்; இரு நாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களிலேயே இதுதான் அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.</p><p></p><p> </p><p>ஈரானிய அரசாங்கச் செய்தித்தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானியின் கூற்றுப்படி, சமீபத்திய நாட்களில் தெற்கு ஈரானில் நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். </p><p>ஹார்முஸ் நீரிணையைத் திறக்கச் செய்வதற்காக ஈரான் மீதான தாக்குதல்களை விரிவுபடுத்தக்கூடும் என்று ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய, பலத்த பாதுகாப்புடன் கூடிய நிலத்தடி மையமான "பிக்காக்ஸ் மலை" (Pickaxe Mountain) மீது தாக்குதல் நடத்தப்போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்திருந்தார்.</p><h2>தொடர்ச்சியான பதிலடி</h2><p> </p><p>அமெரிக்காவின் தாக்குதல்கள் மற்றும் மீண்டும் விதிக்கப்பட்ட முற்றுகை காரணமாக, ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதுடன், அப்பகுதியில் அமெரிக்கத் தளங்களைக் கொண்ட நாடுகள் மீது தொடர்ச்சியான பதிலடி வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e11f034-d73b-42ac-8bd5-e7ac8cfa55ed/26-6a5825ebecbdf.webp' /></p><p> </p><p>இதனிடையே, அமெரிக்க இராணுவத்தின் பாதுகாப்பில் அந்த நீரிணையைக் கடக்கவும் கப்பல் நிறுவனங்கள் மறுத்துள்ளன. கடந்த வாரம் அந்த நீரிணையில் ஏழு வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் சுமார் பன்னிரண்டு கப்பல் பணியாளர்கள் கொல்லப்பட்டோ, காணாமலோ அல்லது காயமடைந்தோ உள்ளதாகவும் அமெரிக்கா கூறியது. </p><p>அமெரிக்கப் படைகளைத் தங்கள் மண்ணில் கொண்டுள்ள பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் மீதும் ஈரான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T02:26:57+00:00</updated>
        </entry>
    </feed>
