<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-11T08:36:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் இதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.,இல்லையென்றால்:அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-ask-public-guarantee-from-iran-to-stop-attack-1783758906"></link>
            <id>https://news.lankasri.com/article/us-ask-public-guarantee-from-iran-to-stop-attack-1783758906</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதல் நடத்தப்படாது என்று ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என&amp;nbsp; அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் மீண்டும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதல் நடத்தப்படாது என்று ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என&nbsp; அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.</p><h2> மத்திய கிழக்கில் மீண்டும் தொற்றிய பதற்றம்</h2><p>ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் 3 வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டி ஈரான் சமீபத்தில் வான்வழித் தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் முன்னெடுத்தார்.</p><p> இதையடுத்து ஈரானும் பதிலடியாக குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46ae11bb-f3e7-4263-9972-e7e8886bef0c/26-6a52003b91f38.webp' /></p><p> இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் சிதைந்து, மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் தொற்றியுள்ளது.</p><p></p><h2> ஈரான் இதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்</h2><p>இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் இனி நடத்தப்படாது என்று ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> ஈரானிய உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், இருதரப்பு தூதரக முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றால் ஹார்முஸ் ஜலசந்தியில் இனி தாக்குதல் நடத்தப்படாது என்ற நிலைப்பாட்டை ஈரான் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98d7ecf3-7135-4d9d-8aeb-c36662fdb561/26-6a52003ce92d4.webp' /></p><p> ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் தடையின்றி செல்வதை ஈரான் உறுதிப்படுத்த வேண்டும்.</p><p> இந்த வாக்குறுதிகளை ஈரான் வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கவில்லை என்றால் அது ஈரானுக்கு நல்ல முடிவாக இருக்காது என்று இது குறித்து பேசிய அமெரிக்க அதிகாரி எச்சரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T08:35:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பக்கத்து நாட்டு பாதுகாப்புக்கு பணம் கொடுக்க பிரான்ஸ் மறுப்பு: பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-refuses-to-pay-g7-security-costs-to-swiss-1783758429"></link>
            <id>https://news.lankasri.com/article/france-refuses-to-pay-g7-security-costs-to-swiss-1783758429</id>
            <summary type="text">பிரான்சில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டின்போது சுவிட்சர்லாந்தில் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது சுவிஸ் அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டின்போது சுவிட்சர்லாந்தில் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது சுவிஸ் அரசு.
</p><p>
அதற்கான செலவுகளை பகிர்ந்துகொள்ளுமாறு பிரான்ஸ் அரசை சுவிஸ் அரசு கேட்டுக்கொண்டிருந்த நிலையில், செலவை பகிர்ந்துகொள்ள பிரான்ஸ் மறுத்துவிட்டது.</p><h3>

பின்னணி
</h3><p>
2003ஆம் ஆண்டு, பிரான்சிலுள்ள Évian-les-Bains என்னுமிடத்தில் G8 உச்சி மாநாடு நடைபெற்றது.
</p><p>
மாநாட்டுக்கு முந்தைய இரவு, உலகமயமாக்கலுக்கு எதிரான அமைப்பொன்றைச் சேர்ந்த சிலர் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1e388df-f6f6-4f2d-8e63-2ec3648c0ed1/26-6a51fe5fe55af.webp' /></p><p>
ஆர்ப்பாட்டமாக துவங்கிய விடயம், சூறையாடலில் முடிந்தது. ஆடம்பர பொருட்கள் விற்பனை நிலையங்கள், கடைகள் என அனைத்தையும் நொறுக்கிய ஒரு கூட்டம் பொருட்களை சூறையாடியது.</p><p>

இந்நிலையில், சென்ற மாதம், அதாவது, ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை, அதே Évian-les-Bains என்னுமிடத்தில், G7 உச்சி மாநாடு நடைபெற்றது.&nbsp;</p><p></p><p>

2003ஆம் ஆண்டைப்போலவே இம்முறையும் வன்முறை வெடிக்கக்கூடும் என அஞ்சிய சுவிஸ் அதிகாரிகள் அதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
</p><p>
மாநாடு நடைபெறும் Evian-les-Bains நகரை ஒட்டியுள்ள ஜெனீவா மாகாணத்தின் எல்லைகளில் சுமார் 30 எல்லைகள் மூடப்பட்டன.</p><p>

பாதுகாப்புக்காக ஏராளமான பொலிசாரும், 4,000 ராணுவத்தினரும் ஜெனீவாவில் குவிக்கப்பட்டார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b09e963-bd9e-459f-8fa3-971363b105ac/26-6a51fe5f3e6d9.webp' /></p><p>பாதுகாப்புக்காக ஜெனீவா மாகாணம் 30 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிட்டுள்ளதாக ஜெனீவா பாதுகாப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், அந்த பாதுகாப்புச் செலவுகளை பகிர்ந்துகொள்ளுமாறு சுவிஸ் அரசு பிரான்ஸ் அரசைக் கேட்டுக்கொண்டது.
</p><p>
அதாவது, பிரான்சில் நடைபெறும் உச்சி மாநாட்டால் சுவிட்சர்லாந்தில் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுப்பதற்காக சுவிஸ் அரசுக்கு செலவு ஏற்பட்டதால், அந்த செலவை பிரான்சும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என சுவிஸ் அரசு கோரியது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது, என்றாலும், பிரான்ஸ் பணம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவே என்றும் சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T08:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 கோடி பரிசு விழுந்த லொட்டரி சீட்டை குப்பையில் வீசிய கடைக்காரர்- அதிர்ஷ்டத்தை இழக்கவிருக்கும் பிரித்தானிய பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-woman-may-lose-rs-150-crore-lottery-jackpot-1783757338"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-woman-may-lose-rs-150-crore-lottery-jackpot-1783757338</id>
            <summary type="text">பிரித்தானியாவில் பெண்ணொருவர் தனது லொட்டரிச் சீட்டிற்கு சுமார் ரூ.500 கோடி பரிசு விழுந்தும், அதிர்ஷ்டத்தை இழக்கவுள்ளார்.இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் மாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் பெண்ணொருவர் தனது லொட்டரிச் சீட்டிற்கு சுமார் ரூ.500 கோடி பரிசு விழுந்தும், அதிர்ஷ்டத்தை இழக்கவுள்ளார்.</p><p>இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த காத் மெயின் (Kath Main) என்ற 46 வயது பெண், தனது வாழ்க்கையை மாற்றக்கூடிய 12 மில்லியன் பவுண்ட் (இலங்கை பணமதிப்பில் ரூ.540 கோடி) லொட்டரி பரிசை இழக்கும் நிலையில் உள்ளார்.</p><p>காரணம், அவர் வாங்கிய லொட்டரி சீட்டை அந்தக் கடைக்காரர் தவறுதலாக குப்பையில் போட்டுவிட்டார்.</p><p>காத், கடந்த 20 ஆண்டுகளாக ஒரே ஆறு எண்களில் தொடர்ந்து லொட்டரி சீட்டை வாங்கி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ef21e49-e9ea-49c1-acee-69ded57de7aa/26-6a51ff117f02b.webp' /></p><p>பொதுவாக அவரது தாயாரே சீட்டை வாங்குவார்.

ஜூன் 6-ஆம் திகதி நடந்த லொட்டரி டிராவில் பெரிய பரிசு வென்ற சீட்டு இன்னும் பெறப்படவில்லை என்ற செய்தியை பார்த்தபோது தான், காத் தனது எண்கள் வெற்றி பெற்றிருப்பதை உணர்ந்தார்.

அவர் தாயாரிடம் கேட்டபோது, “சீட்டை சரிபார்த்தேன், வெற்றிபெறவில்லை” என்று கூறியுள்ளார். </p><p>ஆனால் காத், “இல்லை நாம் வாங்கிய சீட்டு வெற்றி பெற்றது, 12 மில்லியன் பவுண்டு” என்று உறுதியாகச் சொன்னார்.

அதற்கு தாயார், “சீட்டை கடை உரிமையாளர் குப்பையில் போட்டுவிட்டார்” என்று பதிலளித்தார்.</p><p>
</p><p></p><p>கடை உரிமையாளர் கரண் குமார், “சீட்டை ஸ்கேன் செய்த இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் வெற்றி எண் காட்டப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

National Lottery ஆப்பரேட்டரான Allwyn தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது.</p><p>பொதுவாக, லொட்டரி சீட்டை இழந்தாலும், திருடப்பட்டாலும், அழிந்தாலும், உரிய சான்றுகள் இருந்தால் பரிசு வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில் காத், “இந்த 30 நாட்கள் காத்திருப்பு மிகவும் கடினமாக உள்ளது. வெற்றி உறுதி ஆனால், முதலில் நியூசிலாந்து பயணம் செய்து 2029-ல் நடைபெறும் பிரிட்டிஷ் &amp; ஐரிஷ் லயன்ஸ் சுற்றுப்போட்டியை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
</p><p>
இந்த அதிர்ஷடம் அவரை வந்து சேருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T08:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cinema-attendance-is-rise-in-switzerland-1783757111"></link>
            <id>https://news.lankasri.com/article/cinema-attendance-is-rise-in-switzerland-1783757111</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

திரையரங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
</p><h3>
திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு
</h3><p>
திரையரங்குகள் என்பவை மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல. அவை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு விடயமும் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f42ba687-d2e5-4575-ade8-cf4c29069ee9/26-6a51f938b3abd.webp' /></p><p>
திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் முதல், திரையரங்குகளுக்கு அருகிலிருக்கும் உணவகங்கள், கடைகளில் நடக்கும் வியாபாரம், திரையரங்குகள் மற்றும் அது சார்ந்த தொழில்கள் உருவாக்கும் வருவாய் என நாட்டின் பொருளாதாரத்தில் திரைப்படங்களுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.</p><p>

கோவிட் காலகட்டத்தில் திரைத்துறை சந்தித்த இழப்பும், அதைத் தொடர்ந்து பலர் OTT வாயிலாக தங்கள் திரைப்படங்களைத் திரையிட முடிவு செய்ததும் நினைவிருக்கலாம்.&nbsp;</p><p></p><p>
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
</p><p>
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 5,300,000 பேர் திரைப்படங்களைக் காண திரையரங்குகளுக்குச் சென்றுள்ளார்கள்.
</p><p>
2026ஐப் பொருத்தவரை, குறிப்பாக, இத்தாலி மொழி பேசும் Ticino மாகாணத்தில், திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8adea214-4c08-45dd-a600-e2e2300f5609/26-6a51f9396242f.webp' /></p><p>
பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் மாகாணங்களில் திரையரங்குகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை 29 சதவிகிதமும், ஜேர்மன் மொழி பேசும் மாகாணங்களில் 16 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
</p><p>
ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், சுவிஸ் திரைப்படங்களைவிட, மற்ற நாடுகளின் தயாரிப்பான திரைப்படங்களைக் காணச் சென்றவர்கள் எண்ணிக்கை 49 சதவிகிதம் அதிகரித்துள்ளது.</p><p>

குறிப்பாக, மே மாதத்தின் நடுப்பகுதியில், 20ஆவது சினிமா வாரத்தின்போது சுமார் 365,000 பேர் திரைப்படங்களைக் காண திரையரங்குகளுக்குச் சென்றுள்ளார்கள்.
</p><p>
அந்த நேரத்தில் திரையிடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று, பெரிதும் கவனம் ஈர்த்துவரும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை சித்தரிக்கும் மைக்கேல் என்னும் திரைப்படம் ஆகும்!
</p><p>
என்றாலும், கோவிடுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவுதான். ஏனென்றால், 2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சுமார் 6,000,000 பேர் திரைப்படங்கள் காண திரையரங்குகளுக்குச் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T08:05:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை குறிவைத்து காத்திருக்கும் 1000 ஏவுகணைகள்: என்னை தொட்டால் சர்வநாசம்: டிரம்ப் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-stated-1000-missiles-ready-to-attack-iran-1783756884"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-stated-1000-missiles-ready-to-attack-iran-1783756884</id>
            <summary type="text">1000 ஏவுகணைகள் ஈரானை குறிவைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஜனாதிபதி டிரம்பை கொல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>1000 ஏவுகணைகள் ஈரானை குறிவைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2> ஜனாதிபதி டிரம்பை கொல்ல ஈரான் சதி?</h2><p>ஈரான் தன்னை கொல்ல சதி திட்டம் தீட்டி வருவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p> உலகின் பல முனைகளில் இருந்து என்னை கொல்ல அல்லது கொல்ல முயற்சித்து ஈரான் அரசு தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a18fd0ae-4084-4e0d-82c6-8cc2df7ef952/26-6a51f8563a9fc.webp' /></p><p> சமீபத்தில் ஈரானிய உச்ச தலைவர் அலி காமேனியின் இறுதி ஊர்வத்தில் பொதுமக்கள் சிலர் டிரம்ப்பை கொல்ல வேண்டும் என்று கோஷமிட்டதும், “Kill Trump” என்ற வாசகம் எழுதிய பதாகைகளை ஏந்திச் சென்றதை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டானது வெளிவந்துள்ளது.</p><p></p><h2>டிரம்பின் அதிரடி உத்தரவு</h2><p>இந்நிலையில் ஈரான் என்னை கொலை செய்தால் அல்லது முயற்சி செய்தால் அமெரிக்க ராணுவம் மிக கடுமையான தாக்குதல்&nbsp; நடவடிக்கையை எடுக்க தயார் நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e86ecbd-d699-4412-ae39-ae0bddbc3478/26-6a51f85582a8a.webp' /></p><p>மேலும் ஏற்கனவே 1000 ஏவுகணைகள் ஈரானை குறிவைத்து தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டு இருப்பதாகவும், ஈரான் தன்னை கொல்ல முயற்சி செய்தால் மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஈரான் மீது பாயும் என்று எச்சரித்துள்ளார்.</p><p>அத்துடன் ஒருவேளை இந்த தாக்குதல் நடந்தால் ஈரானின் அனைத்து பகுதிகளையும் தரைமட்டமாக அழிப்பதற்கான உத்தரவு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும், இந்த இராணுவ உத்தரவுகள் ஒரு வருட காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T08:01:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி அனில் மேனன் - என்ன திட்டம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-anil-menon-to-travel-to-iss-space-1783755979"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-anil-menon-to-travel-to-iss-space-1783755979</id>
            <summary type="text">இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரரான அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஜூலை 14 ஆம் திகதி பயணம் மேற்கொள்ள உள்ளார். 

நாசா வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரரான அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஜூலை 14 ஆம் திகதி பயணம் மேற்கொள்ள உள்ளார். </p><h3>

நாசா விண்வெளி பயணம்</h3><p> 

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/587cae5c-c123-410e-804b-d84b63cdd5a7/26-6a51f4ce4aaa2.webp' /></p><p>கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ரோஸ்கோஸ்மோஸ் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.</p><p> 

அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோத்ர் துப்ரோவ், அன்னா கிகினா ஆகியோர் செல்ல உள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d81890ac-2b82-45ac-8ea7-921aa6ee2bc8/26-6a51f4ccea37d.webp' /></p><p>விண்வெளி நிலையத்தில் 8 மாதங்கள் தங்கி, நீண்ட கால விண்வெளிப் பயணம் மனித உடலியலில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்ய உள்ளார். மேலும், எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கான புதிய மருத்துவ தொழில்நுட்பங்களைச் சோதிப்பார்.
</p><p>
மேலும், உயர் செயல்திறன் கொண்ட கணினிகளுக்குத் தேவையான பாகங்களின் பெருமளவு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் குறைக்கடத்திப் படிகங்களை விண்வெளியில் உற்பத்தி செய்வது குறித்து ஆய்வு செய்வார்.&nbsp;</p><p></p><h3>
யார் இந்த அனில் மேனன்?
</h3><p> 

கேரளாவைச் சேர்ந்த சங்கரன் மேனன் என்பவருக்கும், உக்ரைனைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அமெரிக்காவின் மினுசோட்டா மாநிலத்தில் உள்ள மின்னியாபொலிஸ் என்ற நகரத்தில் 1976 ஆம் ஆண்டில் பிறந்தவர் அனில் மேனன்.
</p><p>
1999 ஆம் ஆண்டில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நியூரோபயாலஜியில் இளங்கலைப் பட்டமும், 2004 ஆம் ஆண்டில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் முதுகலைப் பட்டமும், 2006 ஆம் ஆண்டில் ஸ்டான்போர்டு மெடிகல் ஸ்கூலில் MD (Doctor of Medicine) பட்டமும் பெற்றிருக்கிறார்.</p><p> மருத்துவரான இவர், 2010 ஆம் ஆண்டில் ஹைட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம், 2015 ஆம் ஆண்டில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் 2011 ஆம் ஆண்டில் ரெனோ விமானக் கண்காட்சி விபத்து ஆகியவற்றின் போது முதல் மீட்பாளராகப் பணியாற்றியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5659ebf-41f5-491b-831d-a3c4401bb3a5/26-6a51f4cd98dd6.webp' /></p><p>

இமயமலை மீட்பு சங்கத்துடன் இணைந்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் மலையேறுபவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி பணியாற்றியுள்ளார். 

மேலும், இந்தியாவில் ஓராண்டு காலம் தங்கியிருந்து, போலியோ தடுப்பூசி முயற்சிகளைப் பற்றி ஆய்வு செய்து ஆதரவளித்துள்ளார். </p><p> 

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதல் ஃப்ளைட் சர்ஜனாக இருந்த இவர், முதன் முதலில் ஸ்பேஸ் எக்ஸ் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பிய Demo-2 மிஷனிலும் பங்காற்றியிருக்கிறார்.&nbsp;</p><p>நாசாவின் பல்வேறு திட்டங்களிலும் Crew Flight Surgeon ஆகவும் பணியாற்றியிருக்கிறார். 

முன்னதாக அமெரிக்கா விமானப்படையில், ஃப்ளைட் சர்ஜனாகவும் (Flight Surgeon) பணியாற்றியிருக்கிறார்.&nbsp;</p><p>

ஜனவரி 2022 ஆம் ஆண்டில் நாசா விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2 ஆண்டுகள் விண்வெளி வீரருக்கான பயிற்சியை பெற்றார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7401d180-15c6-4bed-825e-5d05dc36fccf/26-6a51f4ceec949.webp' /></p><p>

இவரின் மனைவி அண்ணா மேனனும் நாசா விண்வெளி வீரர் ஆவார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T07:47:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம்: பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/letter-to-andy-burnaham-for-soft-on-migrants-1783752482"></link>
            <id>https://news.lankasri.com/article/letter-to-andy-burnaham-for-soft-on-migrants-1783752482</id>
            <summary type="text">பிரித்தானியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் முன்பே ஆன்டி பர்னாமுக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கிவிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் முன்பே ஆன்டி பர்னாமுக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கிவிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.</p><h3>

பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம்</h3><p>

ஆன்டி பர்னாம், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/789106b4-c5af-4f8a-9883-392ceb96c4e2/26-6a51e7239f339.webp' /></p><p>
ஆனால், அவர் பிரதமராவதற்கு முன்பே ஆன்டி பர்னாமுக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கிவிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
</p><p>
ஆம், லேபர் கட்சியைச் சேர்ந்த சுமார் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆன்டி பர்னாமுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அந்தக் கடிதத்தில், புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம் என அவர்கள் ஆன்டி பர்னாமை வலியுறுத்தியுள்ளார்கள்.
</p><p>
அதாவது, ஏற்கனவே பிரித்தானியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்து, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான விதி ஒன்றை அறிமுகம் செய்தார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a38a8a4-3187-4215-8e3d-1353ff984e7c/26-6a51e7244b96a.webp' /></p><p>
ஆம், ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 10 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என ஷபானா புது விதி ஒன்றை அறிவிக்க, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
</p><p>
எனவே, இது சரியல்ல, ஏற்கனவே பல ஆண்டுகள் பிரித்தானியாவில் விதிகளைப் பின்பற்றி சட்டப்படி வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோரை குறிவைக்கவேண்டாம். புதிய விதிகளைக் கொண்டுவந்து அவர்களை கடினமான சூழலுக்கு உள்ளாக்கவேண்டாம் என ஆன்டி பர்னாமுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.</p><p>
ஆக, பதவிக்கு வரும் முன்பே, ஆன்டி பர்னாமுக்கு சிக்கல் துவங்கிவிட்டது, அதுவும், அவரது கட்சிக்குள்ளிருந்தே!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T07:30:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - கனடாவை இணைக்கும் புதிய சர்வதேச பாலம்: திறக்கப்படுவது எப்போது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-gordie-howe-bridge-set-for-opening-1783752546"></link>
            <id>https://news.lankasri.com/article/new-gordie-howe-bridge-set-for-opening-1783752546</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் கனடாவை இணைக்கும் கார்டி ஹோவ் சர்வதேச பாலம் ஜூலை மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட பாலம் திறப்புஅமெரிக்காவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் கனடாவை இணைக்கும் கார்டி ஹோவ் சர்வதேச பாலம் ஜூலை மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> பிரம்மாண்ட பாலம் திறப்பு</h2><p>அமெரிக்காவின் டெட்ராய்ட்(மிச்சிகன்) நகரையும், கனடாவின் வின்ட்சர் (ஒன்ராறியோ) நகரையும் இணைக்கும் பிரம்மாண்ட சர்வதேச பாலமான “கார்டி ஹோவ்” (Gordie Howe) திட்டமிட்டப்படி ஜூலை 27ம் திகதி திறக்கப்பட உள்ளது.</p><p>இந்த திட்டத்தில் எந்தவொரு தடையும் ஏற்படாமல் நிறைவேறுவதை உறுதி செய்த புதிய ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd851aac-f2a2-4b58-b38c-2dd4d53656a9/26-6a51e763f2038.webp' /></p><p></p><h2> கனடா அரசுக்கு டிரம்ப் கருத்து</h2><p>
சர்வதேச பாலமான “கார்டி ஹோவ்” தொடர்பான முந்தைய ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருந்ததாகவும், தற்போது திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ள கூடியதாகவும் நியாயமானதாகவும் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e9373d5-c52d-4f57-b692-33b012080f89/26-6a51e764a282c.webp' /></p><p> மேலும், சர்வதேச பாலமான கார்டி ஹோவ்-விற்கு ஒத்துழைப்பு வழங்கிய கனடா அரசுக்கு நன்றி எனவும், பாலத் திட்டத்தை முன்னெடுத்து சென்று வெற்றிகரமாக முடித்ததற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் இந்த சிறப்பான முன்னேற்றத்தின் மூலம் இரண்டு நாடுகளும் தொடர்ந்து பல ஆண்டுகள் வெற்றியை பெறட்டும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:49:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓயோவில் கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்பு- ஜனாதிபதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nigeria-rescues-abducted-schoolchildren-teachers-1783752593"></link>
            <id>https://news.lankasri.com/article/nigeria-rescues-abducted-schoolchildren-teachers-1783752593</id>
            <summary type="text">நைஜீரியாவின் தென்மேற்கு ஒயோ மாநிலத்தில் கடந்த மே மாதம் ஆயுத கும்பலால் கடத்தப்பட்ட 39 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜீரியாவின் தென்மேற்கு ஒயோ மாநிலத்தில் கடந்த மே மாதம் ஆயுத கும்பலால் கடத்தப்பட்ட 39 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் மே 15 அன்று ஒயோ மாநிலத்தின் ஓரிரே மாவட்டத்தில் பல பள்ளிகளை குறிவைத்து நடந்தது.</p><p>அரசாங்கத்தின் தகவலின்படி, கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம், கடத்தப்பட்ட ஆசிரியர்களில் ஒருவர் சிறையில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72e59f41-a7fb-4a29-9e7e-7a0ee55e99e9/26-6a51e792d02e5.webp' /></p><p>
நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு தனது அறிக்கையில், “இந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நீதி கிடைக்கும். கொல்லப்பட்ட ஆசிரியரின் குடும்பத்திற்கும் அரசு நியாயம் செய்து தரும்” என்று உறுதியளித்தார்.</p><p>கடந்த சில ஆண்டுகளில் நைஜீரியாவில் ஆயுத கும்பல்களின் பெருமளவு கடத்தல்கள் முக்கிய பாதுகாப்பு சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக பள்ளிகள் அடிக்கடி குறிவைக்கப்படுகின்றன. ஆனால் தென்மேற்கு பகுதியில் இத்தகைய தாக்குதல்கள் குறைவாகவே நடந்துள்ளன.</p><p>

இந்த மீட்பு நடவடிக்கை, நைஜீரியாவில் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T06:48:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் ஒரு கப் வெண்டைக்காய் நீர்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/health-benefits-of-drinking-lady-s-finger-water-1783751301"></link>
            <id>https://news.lankasri.com/article/health-benefits-of-drinking-lady-s-finger-water-1783751301</id>
            <summary type="text">வெண்டைக்காய் குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும் கொண்ட ஒரு சிறந்த காய்கறி ஆகும். 

இது செரிமானத்தை மேம்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெண்டைக்காய் குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும் கொண்ட ஒரு சிறந்த காய்கறி ஆகும். </p><p>

இது செரிமானத்தை மேம்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியத்தை பாதுகாத்தல், மற்றும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் கே போன்ற பல முக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
</p><p>
அதன்படி, இரவு முழுவதும் வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதால் பல நன்மைகள் கிடைக்கும்.</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c8000ca-a469-4df0-aced-86a9f16a1745/26-6a51e28778549.webp' />
</p><p>
அந்தவகையில், ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு கப் வெண்டைக்காய் நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.</p><p></p><h2>கிடைக்கும் நன்மைகள் </h2><p><b>உடல் சோர்வு நீங்கும்-</b> எலுமிச்சை சேர்த்த வெண்டைக்காய் நீரை தொடர்ந்து ஒரு மாதம் குடித்தால் உடல் சோர்வு குறைந்து, சுறுசுறுப்பு அதிகரிக்க உதவலாம்.
</p><p><b>
சிறுநீரகங்களுக்கு நல்லது- </b>வெண்டைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சிறுநீரக செல்களை பாதுகாக்க உதவக்கூடும். இருப்பினும், இதற்கான மனிதர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இன்னும் குறைவாகவே உள்ளன.
</p><p><b>
இதய ஆரோக்கியம்- </b>வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் கோழைப் பொருள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4db154d1-ed8d-4570-9340-a3bd76d1ed35/26-6a51e2882cf48.webp' /></p><p>
</p><p><b>
இரத்த சர்க்கரை&nbsp;கட்டுப்பாடு- </b>வெண்டைக்காய் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை குறைக்கவும் உதவக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p><b>
கல்லீரல் சுத்தம்-</b> வெண்டைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாத்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்.</p><p><b>

நோய் எதிர்ப்பு சக்தி- </b>வைட்டமின் A, C, K, ஃபோலேட் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவக்கூடும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:29:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதம் மாற மறுத்த இந்திய மாணவி - உஸ்பெகிஸ்தானில் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-student-killed-in-uzbekistan-due-conversion-1783750831"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-student-killed-in-uzbekistan-due-conversion-1783750831</id>
            <summary type="text">உஸ்பெகிஸ்தானில் படித்து வந்த இந்திய மாணவி மதம் மாற மறுத்தால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உஸ்பெகிஸ்தானில் கொல்லப்பட்ட இந்திய மனைவி 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>உஸ்பெகிஸ்தானில் படித்து வந்த இந்திய மாணவி மதம் மாற மறுத்தால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h3>

உஸ்பெகிஸ்தானில் கொல்லப்பட்ட இந்திய மனைவி</h3><p> 

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாடு பகுதியைச் சேர்ந்தவர் பசந்த்-மினி தம்பதியின் மகளான சவரியா பசந்த்(21), உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dab6a699-6294-4b3e-b2d7-7e9c5cf30a2e/26-6a51e0b0804e2.webp' /></p><p> </p><p>

அதே கல்லூரியில், மலப்புரம் மாவட்டம் பெரிந் தல்மண்ணா பகுதியை சேர்ந்த சாதருள் அனாம் (21) என்ற மாணவரும் படித்து வந்துள்ளார். </p><p>

மாணவ, மாணவிகள் ஒரே விடுதியில் வேறு வேறு தளங்களில் வசித்து வந்துள்ளனர். </p><p>

இந்நிலையில், கடந்த ஜூலை 3 ஆம் திகதி சவரியாவை, சாதருல் அனாம் மடிக்கணினியால் அடித்ததில் உயிரிழந்து விட்டதாக சாகர்யாவின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.</p><p> 

சாதருல் அனாமை உஸ்பெகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>சவரியாவின் உறவினர்கள் உஸ்பெகிஸ்தான் சென்ற நிலையில், அவரது உடல் விமானம் மூலம் கேரளாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p> 

உறவினர்களின் கோரிக்கையை ஏற்று, ஆலப்புழை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சவரியாவின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உடல் தகனம் செய்யப்பட்டது.</p><h3>

மதம் மாற வற்புறுத்தல் </h3><p>

இது குறித்து பேசிய சவரியாவின் மாமா ஜனீஷ், "உஸ்பெகிஸ்தானில் உள்ள ஒரு விசாரணை அதிகாரி, மடிக்கணினி மூலம் தலையில் அடித்ததில் அவர் உயிரிழக்கவில்லை. 

சவரியாவின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், இது அவர் நீண்ட நேரத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்பதைக் காட்டுவதாகவும் என்னிடமே தெரிவித்தார். </p><p>

மேலும், சாதருள் அனாம் சவரியாவை மதம் மாற கட்டாயப்படுத்தியதை அங்குள்ள மாணவர்கள் பலரும் பார்த்ததாக என்னிடம் தெரிவித்தனர் என விசாரணை அதிகாரி கூறினார்" என்று தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பாக ஹரிபாடு காவல்நிலையத்தில் அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பகையை மிஞ்சிய பாசம்... நான்கு ஆண்டுகளுக்குப் பின் பேரப்பிள்ளைகளை சந்தித்த மன்னர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-charles-meet-harry-kids-after-4-years-1783746945"></link>
            <id>https://news.lankasri.com/article/king-charles-meet-harry-kids-after-4-years-1783746945</id>
            <summary type="text">சார்லஸ்



பிரித்தானிய மன்னர் சார்லஸ், நான்கு ஆண்டுகளுக்குப் பின் தனது இளைய மகனான ஹரியின் பிள்ளைகளை சந்தித்துள்ளார்.

பகையை மிஞ்சிய பாசம்...

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சார்லஸ்



பிரித்தானிய மன்னர் சார்லஸ், நான்கு ஆண்டுகளுக்குப் பின் தனது இளைய மகனான ஹரியின் பிள்ளைகளை சந்தித்துள்ளார்.
</p><h3>
பகையை மிஞ்சிய பாசம்...
</h3><p>
ராஜ குடும்ப மரபுக்கு மாறாக, விவாகரத்து பெற்ற, நடிகையான ஒரு பெண்ணை ராஜ குடும்பத்துக்குள் கொண்டு வந்த இளவரசர் ஹரி, அதன் தொடர்ச்சியாக உருவான பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல், ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f85fda3a-7cd9-4ac8-9838-a9a898175afc/26-6a51d1842c546.webp' /></p><p>
ராஜ குடும்பத்தை விட்டு மட்டுமல்ல, பிரித்தானியாவை விட்டே வெளியேறி அமெரிக்காவில் குடியமர்ந்த ஹரி மேகன் தம்பதியர், ராஜ குடும்பத்தைக் குறித்தும், ராணி கமீலா, இளவரசர் வில்லியம், இளவரசி கேட் குறித்தும் மோசமாக விமர்சனங்கள் முன்வைக்க, அவர்களுக்கும் ராஜ குடும்பத்துக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது.
</p><p>
ஹரி, தனது சுய சரிதைப் புத்தகமான ‘ஸ்பேர்’ எனும் புத்தகத்தில், தன் பங்குக்கு தன் குடும்பத்தைக் குறித்து மோசமாக எழுதி நிலைமையை மேலும் மோசமாக்கினார்.
</p><p>
ஒருபக்கம் ராஜ குடும்பத்துக்கும் ஹரி குடும்பத்துக்கும் இடையிலான பிளவு அதிகரித்துக்கொண்டே செல்ல, இன்னொரு பக்கம், ஹரியின் பிள்ளைகளான தனது பேரப்பிளைகளைக் காண ஏங்கினார் மன்னர் சார்லஸ்.
</p><p>
இந்நிலையில், ஹரி தனது இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்காக பிரித்தானிய வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
</p><p>
அப்படி அவர் பிரித்தானியா வரும்போது மன்னரை சந்திப்பது என ஒரு திட்டம் உருவாக, இதை ஒரு வாய்ப்பாக வைத்து தன் பேரப்பிள்ளைகளை சந்திக்க திட்டமிட்டார் மன்னர்.&nbsp;</p><p></p><p>
அதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை மதியம், மன்னரும் ராணி கமீலாவும், ஹரி மேகன் தம்பதியர் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டை சந்தித்துள்ளார்கள்.
</p><h3>
சந்திப்பு நிகழ்ந்த இடம்</h3><p>

விடயம் என்னவென்றால், இந்த சந்திப்பு ஊடகவியலாளர்கள் காண லண்டனில் நடைபெறவில்லை. மன்னரின் தனிப்பட்ட இல்லமான ஹைக்ரோவ் இல்லம் என்னும் இடத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/389e09cb-d8fd-4377-ac4a-782d88fd3649/26-6a51d182ccbdc.webp' /></p><p>
இந்த ஹைக்ரோவ் இல்லம், லண்டனிலிருந்து சுமார் 2 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது.</p><h3>

எதனால் இப்படி ஒரு ரகசிய சந்திப்பு?
</h3><p>
மன்னர் சார்லஸ், ஹரி குடும்பத்தை சந்திக்க இந்த ஹைக்ரோவ் இல்லத்தை தேர்ந்தெடுக்க பல காரணங்கள் உள்ளன.
</p><p>
அதாவது, இது ஒரு தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. மன்னர் தன் மகன் குடும்பத்தை சந்திக்கிறார் அவ்வளவுதான். அதனால், அங்கு ஊடகவியலாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ஆகவே, அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் வெளியாகாது.
</p><p>
அத்துடன், ஹரியின் இன்விக்டஸ் நிகழ்ச்சி நடக்கும் இடம் பர்மிங்காம். அது ஹைக்ரோவ் இல்லத்திலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e8e01c-42a0-4efb-b516-ff1a5adc2da9/26-6a51d1837c04a.webp' /></p><p>

மன்னரை சந்தித்தபின் ஹரி குடும்பம் இளவரசி டயானாவின் கல்லறையைக் காணச் செல்வதாக திட்டம். ஹைக்ரோவ் இல்லத்திலிருந்து அங்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆகும்.
</p><p>
அதேபோல, மன்னர் சார்லஸ் நிகழ்ச்சி ஒன்றிற்காக ஆக்ஸ்ஃபோர்ட்ஷையருக்கு வந்திருந்தார், அங்கிருந்து ஹைக்ரோவ் இல்லம் வர ஒரு மணி நேரம் ஆகும். ஆக, எல்லோருக்கும் பயணிக்க வசதியான ஒரு இடமாக ஹைக்ரோவ் இல்லம் அமைந்துவிட்டது.
</p><p>
எல்லாவற்றிற்கும் மேல், சிறு வயதில் இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் மகிழ்ச்சியுடன் செலவிட்ட வீடு ஹைக்ரோவ் இல்லம் என்பது கூடுதல் சிறப்பு!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:14:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்: தலைநகர் கீவ்வில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-missiles-targets-kyiv-6-injured-1783748492"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-missiles-targets-kyiv-6-injured-1783748492</id>
            <summary type="text">உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை ரஷ்ய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.அதிகாலை 3.38 மணியளவில் தொடங்கிய இந்த வான்வழித் தாக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை ரஷ்ய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.</p><p>அதிகாலை 3.38 மணியளவில் தொடங்கிய இந்த வான்வழித் தாக்குதலில் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெடி சத்தம் கேட்கப்பட்டது.</p><p>இதையடுத்து கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.</p><p> கீவ் நகர இராணுவ நிர்வாக தலைவர் டைமூர் டகாசென்கோ டெலிகிராமில் தெரிவித்துள்ள தகவலில், தலைநகர் கீவ்வை குறிவைத்து எதிரிப் படைகள் ஏவுகணை தாக்குதல் தொடங்கியுள்ளனர். எனவே பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dfa4c0d-f732-47cc-a6ad-3435e275b882/26-6a51d78de5b39.webp' /></p><p> கீவ் நகர மேயர் இந்த தாக்குதலில் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>பாதிக்கப்பட்டவர்கள் விவரம்</h2><p>
இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.</p><p>ரஷ்ய படைகளின் தாக்குதலில் டிப்ரோவ்ஸ்கி மற்றும் ஸ்வியாடோஷின்ஸ்கி மாவட்டங்கள் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.</p><p> சேதத்தின் முழு அளவை மதிப்பீடும் பணியில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.</p><p> தாக்குதலுக்கு ரஷ்ய படைகள் பயன்படுத்திய ஏவுகணைகள் வகை குறித்து உக்ரைனிய படைகள் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.</p><p> இருப்பினும் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை Iskander-M அல்லது S-300/S-400 ஏவுகணையாக இருக்கலாம் என உக்ரைன் தரப்பு சந்தேகம் எழுப்பி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:41:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை .., தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/live-broadcast-of-tvk-event-at-a-government-school-1783747126"></link>
            <id>https://news.lankasri.com/article/live-broadcast-of-tvk-event-at-a-government-school-1783747126</id>
            <summary type="text">கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தவெக நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பிய விவகாரத்தில், தலைமை ஆசிரியை மல்லிகா பணியிடை நீக்கம் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தவெக நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பிய விவகாரத்தில், தலைமை ஆசிரியை மல்லிகா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
முதலமைச்சரின் கரூர் நிகழ்ச்சியை பள்ளியில் ஒளிபரப்பியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.</p><p>

இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு கடுமையாக எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574f8b0e-50ef-430e-9f3f-91b887f0fb08/26-6a51d23842b09.webp' /></p><h2>அவர் வெளியிட்ட பதிவு..,</h2><p>அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!
</p><p>
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு. </p><p>

இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.</p><p>இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">செய்தி அறிக்கை: <br><br>அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!<br><br>அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித்… <a href="https://t.co/f7bWenCFu0">pic.twitter.com/f7bWenCFu0</a></p>&mdash; Rajmohan (@imrajmohan) <a href="https://x.com/imrajmohan/status/2075588357690990726?ref_src=twsrc%5Etfw">July 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மேலும் ஒரு காணொளி குறித்தும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. “கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை” என்ற மாண்புமிகு முதல்வரின் ஆணையை நாங்கள் தொடர்ந்து உறுதியாக கடைப்பிடிப்போம். பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல என்பதே பள்ளிக்கல்வித் துறையின் தெளிவான கொள்கையாகும்.</p><p>இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துக்கிறேன்.</p><p>எனதருமை ஆசிரியர்களே.. கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T05:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் உடைந்த ஜன்னல் விமானம்: வெளியே இழுக்கப்பட்ட சுற்றுலா பயணி: திக் திக் நிமிடங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-sacked-out-from-flight-after-window-detaches-1783743529"></link>
            <id>https://news.lankasri.com/article/man-sacked-out-from-flight-after-window-detaches-1783743529</id>
            <summary type="text">நடுவானில் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்த நிலையில் அதிர்ஷடவசமாக பயணி ஒருவர் உயிர் தப்பியுள்ளார். திடீரென உடைந்த விமானத்தின் ஜன்னல்அயர்லாந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடுவானில் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்த நிலையில் அதிர்ஷடவசமாக பயணி ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.</p><h2> திடீரென உடைந்த விமானத்தின் ஜன்னல்</h2><p>அயர்லாந்தின் ரயன்ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கிரீஸ் நாட்டில் இருந்து ஜேர்மனிக்கு பறந்து கொண்டிருந்தது.</p><p> அப்போது செர்பியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அமர்ந்து இருந்த இருக்கையின் ஜன்னல் மீது ஏதோ வேகமாக மோதி ஜன்னல் கண்ணாடி உடைத்துள்ளது.</p><p> இதனால் விமானத்திற்குள் காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடைந்த ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த செர்பியா சுற்றுலா பயணி விமானத்திற்கு வெளியே இழுக்கப்பட்டுள்ளார்.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/519634dc-fb19-4956-bdb4-957e54e1acb2/26-6a51c42aa4645.webp' /></p><p> அவரின் தலை மற்றும் தோள்பட்டை ஆகியவை விமானத்திற்கு வெளியே கிட்டத்தட்ட வெளியே சென்று விட்ட நிலையில், சீட் பெல்ட் அணிந்திருந்த காரணத்தினால் அவர் முழுமையாக வெளியே இழுத்து செல்ல முடியவில்லை.</p><p> மேலும் திடீரென எழுந்த பெரும் சத்தத்தை அடுத்து விழித்துக் கொண்ட சக பயணிகள், வெளியே இழுக்கப்பட்டு கொண்டிருந்த பயணியை பிடித்து விமானத்திற்குள் இழுத்தனர்.</p><p></p><p> இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதையடுத்து ரயன்ஏர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விமானத்தின் ஜன்னல் ஒன்று திடீரென கழன்று விழுந்ததால் விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதாக தெரிவித்துள்ளது.</p><p> விமானம் வழக்கமான முறையில் தரையிறங்கியதாகவும், பயணிகள் முனையத்திற்கு பாதுகாப்பாக திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> விமானத்தின் இயந்திரம் ஒன்றில் இருந்து பிரிந்த பாகம் ஒன்று ஜன்னலில் மோதியதால் அந்த ஜன்னல் உடைந்திருக்கலாம் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T04:18:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அவரைக் கொலை செய்தால்... ட்ரம்ப் அதிகாரிகளுக்கு இட்டுள்ள ஒரேயொரு கட்டளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-instructions-bomb-them-1783714995"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-instructions-bomb-them-1783714995</id>
            <summary type="text">ஈரான் தன்னைத் தாக்கிக் கொல்லும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது மிகப் பெரிய அளவில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தன்னைத் தாக்கிக் கொல்லும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது மிகப் பெரிய அளவில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2>இதுவரை கண்டிராத</h2><p>
</p><p>நியூயார்க் போஸ்ட் இதழிடம் பேசிய ட்ரம்ப், நீண்ட காலமாகவே தான் ஈரானின் கொலைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறினார்.
நீண்ட காலமாகவே தாம் அவர்களின் பட்டியலில் இருப்பதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், இதுதான் தற்போதைய நிலைமை என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6511293-6572-4510-b879-769f7f37a3f3/26-6a5158267c685.webp' /></p><p> </p><p>ஒரே ஒரு விடயம் என்னவென்றால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அவர்கள் இதுவரை கண்டிராத அளவுக்கு அவர்கள் மீது குண்டுவீசுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
</p><p>தன்னைக் கொலை செய்ய ஈரான் தீட்டியுள்ள புதிய சதித்திட்டம் குறித்து இஸ்ரேல் எச்சரித்தது பற்றி அவரிடம் கேட்டபோது, ​​அத்தகைய புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று அவர் கூறினார். </p><p>இருப்பினும், பல ஆண்டுகளாகவே ஈரான் தன்னை ஒழித்துக்கட்ட விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு, அமெரிக்காவுக்குத் திரும்பும் வழியில் ட்ரம்ப் தனது பயணத் திட்டங்களை மாற்றிக்கொண்டார்.</p><p></p><p> </p><p>இது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கான ஒரு பாதுகாப்பு உத்தி என்று வெள்ளை மாளிகை பின்னர் ஒப்புக்கொண்டது. ஈரானிய இராணுவ அதிகாரி காசெம் சுலைமானியைக் கொன்ற தாக்குதலை ட்ரம்ப் முன்னெடுத்ததிலிருந்து, அவர் ஈரானின் இலக்காக இருந்து வருவதாக நம்புகிறார். </p><p>ஈரானின் கொலைப் பட்டியல் என்று சொல்லப்படுவதில், தாம் முதன்மையான இலக்கு என்று ட்ரம்ப் கூறுவது இது முதல் முறையல்ல. இத்தனை நாளும் தனக்கு அதிர்ஷ்டம் இருந்தபோதிலும், அந்த நிலை தொடராமல் போகலாம் என்றும் ட்ரம்ப் உருக்கமாக தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/928a2ef0-fc93-4377-86a1-07ca95003aa2/26-6a5158251c5a6.webp' /></p><p> </p><p>ட்ரம்பின் இந்த குழப்பமான மனநிலைக்கு இஸ்ரேல் உளவு அமைப்புகள் காரணம் என்றும் அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.</p><h2>வன்முறை குணம்</h2><p> </p><p>ஈரான் மீதான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள திட்டமிட்டு வரும் இஸ்ரேல், ட்ரம்பை ஒரு உறுதியான முடிவெடுக்க விடாமல் செய்துள்ளது. இஸ்ரேலின் திட்டத்தின்படியே ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, கொலைப்பட்டியல், முதன்மையான இலக்கு உள்ளிட்டக் கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார். </p><p>ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களை அற்பர்கள் என்று குறிப்பிட்ட ட்ரம்ப், அவர்களைத் தமக்குச் சிறிதளவும் பிடிக்காது என்றும் கூறினார். ஈரானின் 80 பகுதிகளில் குண்டுவீச்சு நடத்தியதன் பின்னர், அவர்கள் கொடூரமான, வன்முறை குணம் கொண்டவர்கள்... என்னைப் பொறுத்தவரை, எல்லாம் முடிந்துவிட்டது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/326a2ffd-8d02-4dc8-becb-a1e4573d9db7/26-6a515825cbfc8.webp' /></p><p> </p><p>இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் கூட, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைக் கொல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள், தெஹ்ரானில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்த கிராண்ட் மொசல்லா தொழுகை வளாகம் முழுவதும் எதிரொலித்தன. </p><p>கிராண்ட் மொசல்லாவில் இருந்த சுவரொட்டிகள் மற்றும் சுவரெழுத்துக்கள், டிரம்ப் மற்றும் நெதன்யாகுவைக் கொலை செய்யக் கோரியதோடு, கூட்டத்தினரிடையேயும் அதுபோன்ற முழக்கங்கள் எதிரொலித்தன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T03:15:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஹாமஸில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்: 10 பேர் வரை உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bahamas-small-plane-crash-10-dead-1783739551"></link>
            <id>https://news.lankasri.com/article/bahamas-small-plane-crash-10-dead-1783739551</id>
            <summary type="text">பஹாமஸில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்
பிளமிங்கோ ஏர் விமான சேவை நிறுவனத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பஹாமஸில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்</h2><p>
பிளமிங்கோ ஏர் விமான சேவை நிறுவனத்தின் சிறிய ரக விமானம் பஹாமஸில் விபத்துக்குள்ளானதில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்த விமான விபத்து சம்பவம் தலைநகர் நஸ்ஸாவிற்கு மேற்கே உள்ள கடற்கரையை ஒட்டிய வடக்கு ஆண்ட்ரோஸில் பகுதியில் நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7962f846-1f15-4856-b372-c39755acb70c/26-6a51b4a14374d.webp' /></p><p> மேலும் இந்த விபத்தில் ஒருவர் உயிர் தப்பி இருப்பதாக காவல்துறை தனக்கு தகவல் தெரிவித்து இருப்பதாக பஹாமிய பிரதமர் பிலிப் பிரேவ் டேவிஸ் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காகவும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்காகவும் நானும் என்னுடைய மனைவியும் பிரார்த்திக்கிறோம் என்றும் பிரதமர் டேவிஸ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p></p><h2> விமான நிறுவனத்தின் உரிமம் ரத்து</h2><p>
விபத்து தொடர்பான விசாரணையை அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40bf3a9f-3097-4626-82ce-d885e1f3d564/26-6a51b4a092d0c.webp' /></p><p>இந்நிலையில் பிளமிங்கோ ஏர் விமான சேவை நிறுவனத்தின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதுடன், அந்த நிறுவனத்தின் விமான இயக்க சான்றிதழும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.</p><p> இந்த நடவடிக்கை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமே என்று அந்நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T03:12:41+00:00</updated>
        </entry>
    </feed>
