திரைப்பட நடிகையான டாப்ஸி தான் நிஜவாழ்க்கையில் மேற்கொண்ட துன்புறுத்தல்கள் பற்றி கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் பிற மொழிகளில் நடித்து வரும் நடிகை டாப்ஸி, அவ்வப்போது தன் வாழ்வில் நடந்த முக்கியமான சம்பவங்களை பகிர்ந்து வருகிறார்.
அதில் ஒரு பகுதியாக, தனது கல்லூரி காலத்தில் தனக்கு ஏற்பட்ட துன்பங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.அதில், நான் டெல்லியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் படித்து வந்தேன்.
கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்யும் போது ஆண்கள் பலர் கிண்டல் செய்ததுடன், தன்னை கண்ட இடங்களில் தொட்டு சில்மிஷம் செய்தனர் என கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னை ஒரு ரசிகர் பின் தொடர்ந்து வருவதாகவும், அவர் மீது பொலிசில் புகார் கொடுக்கப்போவதாகவும் டாப்ஸி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.