சென்னையிலிருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக விமான நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் ஏற முயற்சிக்கும் ராஜீவ் கட்டியால் என்ற பயணியை விமான நிறுவன ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகியுள்ளது.
பயணிக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், பயணியை கீழே தள்ளிய ஊழியர்கள் அவரது குரல்வளையை நெறித்துள்ளனர். இந்த வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சம்பவம் நடந்து 22 நாள்கள் கடந்தபிறகு, அந்த வீடியோ வெளியான பின்னர் இண்டிகோ விமான நிறுவனம் தற்போது மன்னிப்புக் கோரியுள்ளது. இதுதொடர்பாக அந்த ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இதுதொடர்பாகப் பேசிய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, பயணியைத் தாக்கிய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இண்டிகோ விமான நிறுவன நிர்வாகத்திடம் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
#WATCH: IndiGo staff manhandle a passenger at Delhi's Indira Gandhi International Airport (Note: Strong language) pic.twitter.com/v2ola0YzqC
— ANI (@ANI) November 7, 2017