பிரியங்கா வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரையும் சுட்டு கொன்றது தவறு என தமிழக அரசியல் விமர்சகர் சுமந்த்ராமன் வெளியிட்ட பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது கால்நடை மருத்துவர் பிரியங்கா கடந்த வாரம் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் செர்லபலி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை தப்பி ஓட முயன்றதாக சுட்டு கொல்லப்பட்டனர்.This is wrong and deeply disturbing. Their guilt was yet to be established. They should have been given the strictest punishment under law if found guilty but this is just shocking. https://t.co/hl8aFchyu5
— Sumanth Raman (@sumanthraman) December 6, 2019
இது தொடர்பான செய்தி சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கிரிக்கெட் விமர்சகர், அரசியல் விமர்சகர், தமிழ் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட சுமந்த்ராமன் இந்த என்கவுண்டர் குறித்து டுவிட்டரில் பதிவிட்டார்.
அதில், இது தவறு மற்றும் எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. அவர்கள் குற்றவாளிகள் என முழுவதுமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
அவர்கள் குற்றவாளி இல்லை என்று சொல்கிறீர்களா? காவல்துறை இவர்களை மிரட்டி குற்றவாளி என ஒப்புதல் தர வைத்துள்ளதாக நினைக்கிறீர்களா? குற்றவாளிகளே வாக்குமூலம் அளித்த பிறகு இன்னும் என்ன நிரூபிக்கப்பட வேண்டும். பாலியல் வழக்கில் விரைவில் தீர்ப்பு மட்டுமே பயத்தைக் கொடுக்கும்
— Devakumaar 🇮🇳 (@DrDevakumaar) December 6, 2019
அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கொடுத்திருக்கலாம், இது எனக்கு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இந்தியாவில் நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி இன்னும் வழங்கப்படவில்லை, இது போன்ற கொடூரன்களுக்கு என் கவுண்டர் தான் சரியான தண்டனை என பதிவிட்டு வருகின்றனர்.
நிர்பயா வழக்கு என்ன ஆச்சு? பல வருடம் ஆகியும் குற்றவாளிங்க சிறைல ஜாலியா தான இருக்காங்க, இதுல சிறுவன் ஒருத்தன வெளிய விட்டாச்சு,
— ↪️ Raam ↩️ (@RamDaaaa) December 6, 2019
இப்பதான் பொண்ணுக மேல கைவைக்க யோசிபானுக !! தண்டனை கொடுத்து அப்பால தையல் மெசின் வாங்கி கொடுத்து !!! யப்பபா எவ்லோ செலவு மிச்சம்
— நிமிர்ந்து நில் (@akr_l) December 6, 2019