கைலாசாவின் 5 வகையான தங்க நாணயங்கள் விநாயகர் சதுர்த்திக்கு வெளியிடப்படும் என்று நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவான நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார்.
இவர் தனக்கென ஆரம்பித்துள்ள யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வருகின்றார். இந்நிலையில் கைலாசா நாடு தொடர்பாக தற்போது ஒரு முக்கிய அறிவிப்புகளை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த பரபரப்புக்கு இடையே இப்போது தனது கைலாசா நாட்டின் கரன்சியை பற்றி நித்தியானந்தா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கைலாசா நாட்டின் கரன்சி காஸ்ட்லியானது என்றும் முழுக்கவே பொற்காசுகள், ஆங்கிலத்தில் டாலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் அதற்கு பெயர் வைத்திருக்கிறார்.
இந்து மதத்தை பின்பற்றும் 56 இந்து நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம் என கூறியுள்ளார்
அதுவும், அதிலும் உள்நாட்டுக்கு ஒரு கரன்சி, வெளிநாட்டுக்கு மற்றொரு வகை கரன்சியாம். கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.