ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரமாரி ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காபூல் நகரின் பல பகுதியில் சுமார் 10 ராக்கெட்டுகள் தாக்கியதாக கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி காலை 8:45 மணிக்கு தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
#Update1: This is how our day starts in #Kabul city.
— Ab Qadir Sediqi (@qadir_sediqi) November 21, 2020
More than 10 mortars landed in several parts of Kabul, casualties feared.
Footage: SM pic.twitter.com/pxDUKpMXmI
இத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. காயமடைந்தவர்களை அருகிலிருந்த மக்களே மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
நடத்தப்பட்டது ராக்கெட் தாக்குதல் என பொலிசார் உறுதி செய்துள்ள நிலையில், எங்கிருந்து ஏவப்பட்டது உட்பட மேலதிக தகவல்கள் ஏதும் வழங்கவில்லை.