சீனாவில் 1700 கோடி பணம் ஊழல் செய்து சொகுசாக வாழ்ந்த வங்கித் தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
China Huarong Asset Management என்ற வங்கியின் தலைவராக இருந்தவர் லாய் ஜியாமின். அந்த சமயத்தில் பல்வேறு விதமான நிதி முறைகேட்டில் லாய் ஈடுபட்டார்.
இதோடு லஞ்சம், பலதார மணம் என 1700 கோடி ரூபாய் வரை ஊழல் செய்திருக்கிறார். அவர் செய்த குற்றங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து லாய் மீது டியான்ஜின் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் லாய் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விஷ ஊசி போட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும். சீனாவின் மிகவும் ஊழல்வாதியான நிதித்துறை அதிகாரி என அழைக்கப்படும் இவர் நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மைக்கு பெரும் ஆபத்து விளைவித்தார் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.