லண்டனில் இளம்பெண்ணை பின் தொடர்ந்து வீட்டுக்கு சென்று அவரை துஷ்பிரயோகம் செய்த நபர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு லண்டனில் தான் இந்த சம்பவம் கடந்த மாதம் 6ஆம் திகதி நடந்துள்ளது.
டோல்கேட் சாலையில் நள்ளிரவுக்கு முன்னர் சூப்பர் மார்க்கெட் வாசலில் நின்றிருந்த பெண்ணை ஒரு நபர் அணுகி பேசியுள்ளார்.
பின்னர் வீட்டுக்கு நடந்து சென்ற அப்பெண்ணை நைசாக பின் தொடர்ந்து சென்ற மர்மநபர் அவர் வீட்டுக்குள் புகுந்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அவரின் வயது 30ல் இருந்து 40க்குள் இருக்கும் என கூறியுள்ள பொலிசார் அவரிடம் பேச வேண்டும் என நினைக்கிறார்கள்.
அந்த மர்ம நபரை யாராவது அடையாளம் கண்டால் தங்களிடம் உடனடியாக தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.