அமெரிக்காவின் நியூயார்க்கை தனிமைப்படுத்த தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அவ்வாறு செய்வது முட்டாள்தனமானது என்று நியூயார்க் மாநில ஆளுநர் கூறிய பின்னர் , கொரோனா வைரஸ் பணிக்குழுவின் பரிந்துரையின் பேரில் சமீபத்திய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.
நியூயார்க்கில் 52,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளில் பாதி நியூயார்க் மாநிலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவுவதை குறைக்க நியூயார்க்கிலும், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட்டின் சில பகுதிகளிலும் தனிமைப்படுத்தலை விதிக்கலாம் என்று ஜனாதிபதி முன்பு கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது தனிமைப்படுத்தலுக்கு பதிலாக, நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய மாநிலங்களுக்கு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) ஒரு ‘வலுவான பயண ஆலோசனை’ வழங்கப்படும் என்று டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

On the recommendation of the White House CoronaVirus Task Force, and upon consultation with the Governor’s of New York, New Jersey and Connecticut, I have asked the @CDCgov to issue a strong Travel Advisory, to be administered by the Governors, in consultation with the....
— Donald J. Trump (@realDonaldTrump) March 29, 2020
இதனையடுத்து சி.டி.சி ஒரு அறிக்கையை வெளியிட்டது, அந்த மூன்று மாநிலங்களில் வசிப்பவர்கள் 14 நாட்களுக்கு அனைத்து அத்தியாவசிய உள்நாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும், சுகாதார வல்லுநர்கள் மற்றும் உணவு சப்ளையர்கள் உள்ளிட்ட முக்கியமான உள்கட்டமைப்பு சேவை வழங்குபவர்களுக்கு இந்த ஆலோசனை பொருந்தாது என்று நிறுவனம் கூறியது.