மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள சென்ற பக்தர்கள்..10 பேரும் பலியான பரிதாபம்
இந்திய மாநில உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள சென்ற 10 பக்தர்கள் விபத்தில் பலியாகினர்.
கார்-பேருந்து மோதல்
உத்தர பிரதேச மாநிலத்தின் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள பக்தர் பலர் வந்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் சத்தீஷ்காரின் கோர்பா மாவட்டத்தில் இருந்து 10 பக்தர்கள் காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
நேற்றிரவு அவர்கள் பயணித்த கார் பிரயாக்ராஜ் நகரில் பேருந்து ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.
பக்தர்கள் 10 பேரும் பலி
இதில் காரில் பயணித்த பக்தர்கள் 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகளில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அத்துடன் விபத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |