ஜேர்மனியில் மின்னல் தாக்கி 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
ஜேர்மனியில், ஆறு ஒன்றின் அருகே நின்றுகொண்டிருந்தவர்களை மின்னல் தாக்கியதில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மின்னல் தாக்கி 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

Image: Benedict Bartsch/xcitepress/dpa/picture alliance
ஜேர்மனியின் Dresden நகரில், திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் இடியுடன் பலத்த மழை பெய்யும்போது, Elbe என்னும் நதியினருகில் சிலர் நின்றுகொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, அவர்களை மின்னல் தாக்கியுள்ளது. அதில், 26 முதல் 41 வயது வரையுள்ள 7 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 10 பேர் காயமடைந்துள்ளார்கள். மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து அவர்களில் இரண்டுபேருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவசர உதவிக்குழுவினர் அவர்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றியுள்ளார்கள்.

Image: Benedict Bartsch/xcitepress/dpa/picture alliance
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அப்பகுதியில், வேறு யாராவது மின்னலால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிவதற்காக, ஹெலிகொப்டர் ஒன்றும் அப்பகுதியில் பறந்து சோதனை மேற்கொண்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |