12 முதல் 17 வயதினர் வருக்கு... 100 சதவீத கொரோனாவை அழிக்கும் மருந்து எது தெரியுமா? வெளியான தகவல்
அமெரிக்காவின் மாடர்னா மருந்து நிறுவனம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 வயது முதல் 17 வயதிற்குள்ளவர்களுக்கு எங்கள் தடுப்பு மருந்து 100 சதவீதம் பாதுகாப்பு அளிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு நிரந்தர தீர்வு தடுப்பூசி தான், இதனால் இந்த தடுப்பூசியை பல்வேறு தனியார் நிறுவனம் கண்டுபிடித்து, அதை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் பின் அனுமதி பெற்று மக்களுக்கு போட்டு வருகிறது.
அதன் படி அமெரிக்காவின் மாடர்னா நிறுவனமும், தடுப்பூசி கண்டுபிடிப்பில் தீவிரமாக இறங்கி வருகிறது. இந்நிலையில், மாடர்னா மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபானே பான்செல், எங்களின் எம்ஆர்என்ஏ-1273 தடுப்பூசி 12 வயது முதல் 17 வயதுள்ள பிரிவினருக்குச் சிறப்பாகச் செயல்படுகிறது.
குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 100 சதவீதம் முழுமையாகப் பாதுகாப்பது பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எங்களின் ஆய்வு முடிவுகளை அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் ஜூன் முதல் வாரத்தில் வழங்கி அனுமதி பெறுவோம்.
கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான பணியில் எங்களின் பணியைத் தொடர்ந்து செய்வோம். 12 வயது முதல் 17 வயதுள்ள 3,732 பேருக்கு எங்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில், இதுவரை எந்த நபருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.
உடல்ரீதியான பாதிப்பும், பாதுகாப்புக் குறைபாடும் இல்லை. முதல் டோஸ் செலுத்திக்கொண்ட இரு வாரங்களுக்குப் பின் 93 சதவீதம் பாதுகாப்பும், 2-வது டோஸ் செலுத்திக்கொண்ட பின் 100 சதவீதம் முழுமையான பாதுகாப்பும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.