கோடிக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்., மர்மத்தை தீர்க்க போலந்துடன் கைகோர்த்த ஜேர்மனி
ஐரோப்பாவின் ஓடர் ஆற்றில் 100 டன்களுக்கும் அதிகமான செத்த மீன்கள் அகற்றப்பட்டுள்ளன.
மீன்கள் இருப்பதற்கான காரணத்தை கண்டறிய போலந்து மற்றும் ஜேர்மனி ஆகிய இரு நாடுகளும் ஒன்றிணைந்துள்ளன.
போலந்து மற்றும் ஜேர்மனி இடையே ஓடும் ஓடர் ஆற்றில் இருந்து கோடிக்கணக்கான (100 டன்கள்) இறந்த மீன்களை போலந்து அதிகாரிகள் அகற்றி சுத்தம் செய்துள்ளனர்.
மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவாக கருதப்படும் இந்த கோடிக்கணக்கான மீன்களின் இறப்பு இரு நாடுகளிலும் உள்ள விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே இதற்கு பின்னால் உள்ள காரணங்களை கண்டுபிடிக்கவும், நதியை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவும், செயல்படவும் இரு நாட்டு அரசாங்கமும் தூண்டப்பட்டுள்ளது.
dpa/ Alle Rechte vorbehalten
ஜூலை பிற்பகுதியில் இருந்து ஆற்றில் மீன்கள் இறந்து கிடைக்கும் நிலையில், இப்போது போலந்தும் ஜேர்மனியும் அதன் மர்மத்தைத் தீர்க்க கைகோர்த்துள்ளன. இதற்கிடையில், இறந்த மீன்களை தண்ணீரில் இருந்து அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக 500-க்கும் மேற்பட்ட போலந்து தீயணைப்பு வீரர்கள் படகுகள், குவாட் பைக்குகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றின் உதவியுடன் இறந்த மீன்களை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்தனர்.
கிட்டத்தட்ட இருநாடுகளுக்குமான எல்லைக்கோடாக இருக்கும் ஓடர் நதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், பெருமளவில் மீன்கள் கொல்லப்படுவது பயமுறுத்துகிறது என்றும் ஜேர்மனியின் பிராண்டன்பர்க் மாநிலத்தின் விவசாய அமைச்சர் ஆக்செல் வோஜெல் கூறியுள்ளார்.
Marcin Bielecki/AFP/Getty Images
பல ஜேர்மன் நகராட்சிகள் ஆற்றில் குளிப்பதற்கும் மீன்பிடிப்பதற்கும் தடை விதித்துள்ளன. இந்த மீன்களின் உயிரிழப்பு ஆற்றின் சுற்றுச்சூழல் அமைப்பில் அழிவை ஏற்படுத்தக்கூடும் என்று சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் நம்புகிறார்கள்.
இதற்கிடையில், "இந்தச் சுற்றுச்சூழல் பேரழிவிற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு" போலந்து அரசாங்கம் 1 மில்லியன் ஸ்லோட்டி அல்லது 210,000 யூரோ வெகுமதியாக அறிவித்துள்ளது.
Lisi Niesner/Reuters
போலந்து பிரதம மந்திரி Mateusz Morawiecki "அதிக அளவு இரசாயன கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுகின்றன" என்று அஞ்சுகிறார்.
ஆனால், ஆற்றில் இருந்து சோதனை செய்யப்பட்ட மாதிரிகள் நச்சு பொருட்கள் இருப்பதைக் காட்டவில்லை. போலந்து விஞ்ஞானிகள் தண்ணீரில் உயர்ந்த உப்பு அளவை மட்டுமே கண்டறிந்துள்ளனர் .
செக் குடியரசு, நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கும் தண்ணீர் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன, அவை வெகுஜன இறப்புக்கான காரணத்தை அடையாளம் காண முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளன.
Etwa 20 Tonnen tote Fische in der Oder: Das #Fischsterben durch Chemie-Abfälle hat Frankfurt Oder schon erreicht, bald auch die Ostsee, befürchten die Behörden. pic.twitter.com/uydRfFtyE8
— ZDFheute (@ZDFheute) August 13, 2022
dpa/ Alle Rechte vorbehalten