43 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த 104 வயது முதியவரை நிரபராதி என விடுவித்த நீதிமன்றம்
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 43 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த 104 வயது முதியவரை நீதிமன்றம் நிரபராதி என கூறி விடுவித்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம், ஆகஸ்ட் 16, 1977 அன்று இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் பிரபு சரோஜ் என்ற நபர் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் லக்கான் உள்ளிட்ட 4 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
43 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை
1982 ஆம் ஆண்டு, நான்கு நபர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து, ப்ரக்யராஜ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நால்வரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மேல்முறையீடு வழக்கு விசாரணை நடைபெறும் போதே லக்கானை தவிர மற்ற மூவரும் உயிரிழந்து விட்டனர்.
மேல்முறையீடு வழக்கு விசாரணை முடிவடைந்து, கடந்த மே 2 ஆம் திகதி தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் 42 ஆண்டுகளுக்கு பிறகு லக்கானை நிரபராதி என கூறி விடுவித்தது.
சிறைச்சாலை பதிவுகளின்படி, கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கவுரே கிராமத்தைச் சேர்ந்த லகான், 1921 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், தற்போது தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |