தமிழகத்தில் ஒரே நாளில் 48 பேர் பலி! இன்றும் 11,000-ஐ நெருங்கியது கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,000-ஐ நெருங்கியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று ஏப்ரல் 20-ம் திகதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என புதிய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,986 ஆக அதிகரித்துள்ளது, 48 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் புதிதாக 3711 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி(ஏப்ரல் 15) மொத்தம் 10,13,378 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளனர், அதில் 9,20,369 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர்.
10,986 patients test positive for #COVID19 in Tamil Nadu today (April 20). Here is the update. #Corona pic.twitter.com/PgTRCrEeWk
— D Suresh Kumar (@dsureshkumar) April 20, 2021
வீட்டில் உட்பட மொத்தம் 79,804 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், மொத்த பலி எண்ணிக்கை 13,205 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.