இந்த 12 நாடுகள் மீண்டும் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படலாம்! பிரித்தானியா மக்களுக்கு எச்சரிக்கை தகவல்
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வழக்குகள் மீண்டும் அதிகரித்து வருவதால், குறிப்பிட்ட 12 நாடுகள் மீண்டும் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் இப்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் நோயின் பாதிப்பு தீவிரம் ஆகி வருகிறது. இந்நிலையில், பிரித்தானியாவின் போக்குவரத்து செயலர் Grant Shapps, தற்போதைக்கு எந்த ஒரு நாடுகளோ மற்றும் பிரதேசங்களோ சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
ஆனால், அதே சமயம் உலகின் சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மீண்டும் சிவப்பு பட்டியலில் சில நாடுகள் சேர்க்க அரசு தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
பிரித்தானியாவால் கடைசியாக சிவப்பு பட்டியலில், Colombia, Ecuador, Dominican Republic, Haiti, Panama, Peru மற்றும் Venezuela ஆகிய நாடுகள் இருந்தன. இவையும் கடந்த அக்டோபர் 18-ஆம் திகதி அன்று நீக்கப்பட்டன.
தற்போது ஐரோப்பாவில் ஆஸ்திரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கு 10 நாட்கள் மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதே போன்று ஜேர்மனியிலும் கொரோனாவின் நான்காவது அலை தீவிரமாக பரவி வருவதால், அங்கும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஏழு நாட்களில் ஆஸ்திரியா, டென்மார்க், ஜேர்மனி, ஐஸ்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில், தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த பட்டியலில் பெல்ஜியமும் உள்ளது. பெல்ஜியமில் கடந்த 24 மணி நேரத்தில் 12,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று செக் குடியரசு, குரோஷியா, அமெரிக்காவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டால், கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் இது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இதனால், நீங்கள் ஒருவேளை பிரித்தானியாவில் இருந்து வேறொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால், அது சிவப்பு பட்டியலில் இருக்கிறதா என்பதை சரிபார்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.
சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படும் ஆபத்தில் உள்ள 12 நாடுகள்
- Croatia
- Finland
- Czech
- Republic
- Belgium
- Slovakia
- Netherlands
- Iceland
- Germany
- Denmark
- Austria
- Norway
- USA