பிரித்தானியாவில் முழு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் 12 பேர் கொரோனாவால் மரணம்! எப்படி? வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவில், கண்டுபிடிக்கப்பட்ட இந்திய மாறுபாடு கொரோனா வைரஸால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதில் 12 பேர் இரண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வ
ரும் 21-ஆம் திகதி பிரித்தானியாவில் கொரோனாவால் விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிகள் முற்றிலுமாக தளர்த்த போரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசு முடிவு செய்திருந்தது.
ஆனால், தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், அதாவது டெல்டா என்று அழைக்கப்படும் அந்த வைரஸ் இப்போது தீவிரமாக பரவி, மற்றொரு கொரோனா அலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஊரடங்கு தளர்வுகள் குறித்து அரசு இன்னும் எந்த ஒரு தெளிவான முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், டெல்டா கொரோனா வைரஸால் இறந்த 42 பிரித்தானியர்களில், 12 பேர் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக் கொண்டவர்கள் என்று Public Health England-ன் புதிய அறிக்கை கூறுகிறது.
ஆனால் தடுப்பூசி போடப்பட்ட இறந்தவர்கள் வயதானவர்களாகவோ அல்லது முன்பே ஏதேனும் நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்கலா என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை.
இதே Public Health England, கொரோனாவின் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டால் 33 சதவீதம் பாதுகாப்பானது என்றும், அதே இரண்டாவது தடுப்பூசி 81 சதவீதம் பாதுகாப்பானது என்றும் மதிப்பிட்டுள்ளது.
ஆனால் இவை அனைத்தும் வெறும் தோராயமான மதிப்புகளே தவிர, உறுதியாக அறிந்து கொள்வதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இன்னும் வெளிவரவில்லை என்று Public Health England கூறுகிறது.
மேலும், தற்போது பிரித்தானியாவில் உள்ள 96 சதவீத புதிய கொரோனா வைரஸ் வழக்குகளில் 60 சதவீதம் அதிகமாக பரவும் டெல்டா வைரஸாக உள்ளதால், இது இன்னும் அதிகமாக பரவலாம் என்ற அச்சம் உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 29,892-ஆக இருந்த இந்த டெல்டா கொரோனா வைரஸ், இப்போது 42,323-ஆக உயர்ந்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டும், 12 பேர் இந்த டெல்டா கொரோனா வைரஸால் இறந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளதால், மக்கள் சிலர் ஒரு வித அச்சத்தில் உள்ளனர்.
அதே சமயம் தடுப்பூசி தான் போட்டுக் கொண்டோமே நமக்கு என்ன என்று மிகவும் அசால்ட்டாக, அதாவது முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி பின்பற்றாமல், கைகளை அடிக்கடி கழுவாமல் இருந்தால், அவர்களுக்கும் இதே நிலை தான் என்று இணையவாசிகள் எச்சரித்து வருகின்றனர்.