கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 120 வயது பாட்டி எப்படி இருக்கிறார் தெரியுமா? யார் அவர்? வைரலாகும் புகைப்படம்
ஐம்மு காஷ்மீரில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பாட்டியின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
உலகின் பல நாடுகளில் இப்போது கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தீவிரமாக பரவி வருவதால், தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற தடுப்பூசி போடும் திட்டத்தை ஒவ்வொரு நாடும் கொண்டு வந்துள்ளது.
ஆனால், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்ற ஒரு தகவல் பரவி வருவதால், பலர் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ள பயப்படுகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இருக்கும் டோலிதேவி என்ற 120 வயது மூதாட்டி கடந்த 17-ஆம் திகதி கொரோனா தடுப்பூசியை தாமாக முன்வந்து போட்டு கொண்டார்.
இது இவர் வசிக்கும் கிராமத்தில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கேள்விப்பட்டு பலரும் தற்போது தடுப்பூசி போட ஆர்வம் காட்டுகின்றனர். இந்த தகவல் அறிந்த வடக்கு மண்டல லெப்டினட் கமாண்டர் ஜெனரல் ஜோஷி, டோலி தேவி வீட்டுக்கு சென்று மூதாட்டியை வாழ்த்தினார்.
இது மிக பாராட்டுக்குறியது என்றும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டு கொண்டது குறித்து டோலிதேவி நிருபர்களிடம் கூறுகையில் ஊசி போட்ட பின் எவ்வித தொந்தரவும் இல்லை. ஒரு காய்ச்சல் கூட வரவில்லை. நலமாகத்தான் உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.