இதனால் மட்டும் பிரித்தானியாவில் 12,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டன! வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசிகள் போட்டதின் மூலம் இதுவரை கிட்டதட்ட 12,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என அரசாங்க அமைப்பான இங்கிலாந்து பொது சுகாதாரம் (PHE) மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள வயதானோர்களில் மூன்றில் இருவருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் கோடையில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது.
ஏப்ரல் மாதம் இறுதிவரை கொரோனா தடுப்பூசி திட்டம் மூலம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 11,700 மரணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என இங்கிலாந்து பொது சுகாதாரம் தெரிவித்துள்ளது.
இதே காலகட்டத்தில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 33,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது தவிர்க்கப்பட்டுள்ளது.
PHE புள்ளிவிவரங்கள் ஸ்காட்லாந்து, வேல்ஸ் அல்லது வடக்கு அயர்லாந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.