கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்ட 128 பேருக்கு சிறை!
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், கலவரம் செய்ததாக 128 பேருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், நூற்றுக்கணக்கான பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி வளாகத்தில் புகுந்த போராட்டக்காரர்கள் பேருந்துகளை தீ வைத்து எரித்தனர். மேலும் பள்ளிக்குள் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.
imaphsy
இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக 128 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் சிறுவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர்.
sunnewstamil