தந்தையின் நிலையை பார்த்து மனமுடைந்த மாணவி.. எடுத்த விபரீத முடிவு!
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த தந்தையின் நிலையால், மனவேதனையடைந்த 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் செங்காடு பகுதியைச் சேர்ந்த தம்பதி ராமக்கண்ணன்-பிரியா. இவர்களது மகள் கிருத்திகா (17) 12ஆம் வகுப்பு படித்து வந்தார். ராமக்கண்ணன் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
ஆனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்த மாணவி, தந்தை உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வருவதை பார்த்து மனவேதனை அடைந்துள்ளார்.
இந்த நிலையில், மாணவி கிருத்திகா விபரீத முடிவை எடுத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டுள்ளார்.
(Representational)
அதனைத் தொடர்ந்து கிருத்திகாவை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதன் பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.