மின்னல் தாக்கி பலியான 9 வயது சிறுவன்; இறப்பதற்கு முன் செய்த நெகிழ்ச்சியூட்டும் செயல்கள்! கலங்கிய பிரித்தானிய மக்கள்
மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 9 சிறுவன், சில நாட்களுக்கு முன் பொலிஸை ஊக்குவிக்க இனிப்புகளை வழங்கிய புகைப்படங்கள் பிரித்தானிய மக்களை நெகிழவைத்துள்ளது.
லங்காஷயர், பிளாக்பூலில் உள்ள கால்பந்து மைதானத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்த ஜோர்டன் பேன்க்ஸ் (Jordan Banks) எனும் 9 வயது சிறுவன் கடந்த செவ்வாயன்று மின்னல் தாக்கி பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் பிரித்தானிய மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ட்விட்டர் பக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜோர்டனின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
தனது சிறு வயதிலேயே சமூக பொறுப்புகளுடன் இருந்துள்ளார். அவர் இந்த கொரோனா காலகட்டத்தில் பிளாக்பூல் பொலிஸாரை ஊக்குவிக்கும் வகையில் இனிப்புகளை பொலிஸாரின் காரில் வைத்துள்ளார்.
அவரது இந்த செயல் பொலிசாரை பெரிதும் கவர்ந்தது. மேலும், அவர் இனிப்புகளை கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிளாக்பூல் பொலிஸார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதேபோல், சில நாட்களுக்கு முன், தற்கொலை செய்துகொண்டு இறந்த தனது மாமா Reece Begg என்பவற்றின் 30-வது பிறந்தநாளின் நினைவாக, 10 நாட்களில் 30 மைல் தூரம் ஓடி, அதன்முலம் சேகரித்த 3000 பவுண்ட்ஸ் நிதியை மனநல காப்பகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
லிவர்பூல் ரசிகராக இருந்த ஜோர்டனின் நினைவாக பிளாக்பூல் டவர் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தது, அதே நேரத்தில் கால்பந்து வீரர்களும் கிளப்களும் அவருக்கு சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்தின.
லிவர்பூல் கால்பந்து கிளப் வெளியிட்ட அறிக்கையில் "லிவர்பூல் கால்பந்து கிளப்பில் உள்ள அனைவரின் எண்ணங்களும் ஜோர்டனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் உள்ளன. ஜோர்டன் பேங்க்ஸின் ஆத்மா சாந்தி அடையட்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.
மனம் உடைந்த ஜோர்டனின் குடும்பத்தினர் 'எங்கள் பிரகாசமான நட்சத்திரத்தை இழந்துவிட்டோம், நேற்றோடு எங்கள் உலகம் நின்றுவிட்டது. எங்கள் அழகான மகனின் சிரிப்பு, புன்னகை, தங்க நிற சுருள் முடி எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்.
அவர் வயதைத் தாண்டி ஞானமுள்ளவர், அக்கறையுள்ளவர், அக்கறையுள்ளவர், தாராளமானவர், மிகவும் அன்பானவர். எங்கள் அன்பு முடிவற்றது. குட்நைட் அழகான மகனே" என தங்கள் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜோர்டனின் சமூக பணியை தொடரும் விதமாக GoFundMe எனும் அமைப்பு, புதன்கிழமையன்று சுமார் 2500 நபர்களிடமிருந்து 45,500 பவுண்ட்ஸ் பணத்தை திரட்டியுள்ளனர். அதனை தொண்டு நிறுவங்களுக்கு தரவுள்ளனர்.
ஜோர்டன் பேங்க்ஸின் மறைவு பிரித்தானிய மக்களை ஏறும் துயரத்துக்கு ஆழ்த்தியுள்ளது.