13 வயது சிறுவனின் வெறிச்செயல்! 11 பாகங்களாக சிதறி கிடந்த இளைஞரின் சடலம்.. நடந்தது என்ன?
உத்தரபிரதேசத்தில் 13 வயது சிறுவன் தனது நண்பரை கொலை செய்து காட்டில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஹாமிர்பூர் மாவட்டத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 13 வயது சிறுவனுக்கும், அதே காலனியில் உள்ள சுப்பி என்ற இளைஞருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுப்பியிடமிருந்து இந்த சிறுவன் 60 ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை சிறுவனால் கொடுக்க முடியவில்லை.
இந்நிலையில் சுப்பி வாங்கிய கடனை திருப்பி கொடுக்குமாறு சிறுவனை தினமும் தொல்லை செய்துள்ளார்.
இதனால் கோவப்பட்ட 13 வயது சிறுவன் சுப்பியை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டிற்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்குள் சண்டை முற்றியதால் அந்த சிறுவன் சுப்பியை கொடூரமாக கொலை செய்து விட்டு அருகே இருந்த புதரில் தூக்கி வீசி விட்டு எதுவும் நடக்காதது போல வீட்டிற்கு சென்றுள்ளார்.
கடந்த புதன் கிழமை பொலிசாருக்கு இந்த கொலை குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் காட்டு விலங்குகளால் சிதைக்கப்பட்டு 11 பாகங்களாக கிடந்த சுப்பியின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்த 13 சிறுவனின் மீது பொலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.