ஈரான் போரால் சுற்றுலாப்பயணிகளுக்கு சிக்கல்: 13,000 விமான சேவைகள் ரத்து
கோடை விடுமுறையின்போது மக்கள் சுற்றுலா செல்ல விரும்புவார்கள். ஆனால், இம்முறை ஈரான் போரால் அதற்கும் சிக்கல் உருவாகியுள்ளது.
ஆம், ஈரான் போரால் எரிபொருள் விலைகள் கணிசமாக அதிகரித்துவருவதால், உலகம் முழுவதிலுமாக சுமார் 13,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான சேவைகள் ரத்து
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து மட்டுமே 111 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த, பதிலுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதலைத் துவங்கியது ஈரான்.
உலகின் 20 சதவிகித எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட, எண்ணெய் விலை உயர்ந்தது.
எரிபொருள் விலை உயர்வால் பல்வேறு விமான நிறுவனங்கள் விமான சேவைகளை ரத்து செய்துவருகின்றன. குறிப்பாக, இஸ்தான்புல் மற்றும் மியூனிக் நகர்களிலிருந்து புறப்படும் விமானங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
Lufthansa நிறுவனம் மட்டுமே 20,000 குறுகிய தூர விமானங்களை ரத்து செய்துள்ளது.
என்றாலும், EasyJet மற்றும் Wizz Air விமான சேவைகள் கோடையில் முழுமையான அளவில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எந்த விமானத்திலாவது போதுமான அளவில் இருக்கைகள் நிரம்பவில்லை என்றால், அந்த விமானம் ரத்து செய்யப்படும் என பிரித்தானிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆக, ஈரான் போரால் உருவான எண்ணெய் விலை உயர்வு, மக்கள் சுற்றுலா செல்வதற்கும் இடைஞ்சலாக வந்து நிற்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |