தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 14 பேர் பலி... புதிதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றை விட சற்று குறைந்து 1,344 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 14 பேர் பலியாகியுள்ளனர், இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 35,768 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி(அக்டோபர் 09) ஒட்டுமொத்தமாக 26,76,936 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளனர், அதில் 26,24,916 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர்.
வீட்டில் உட்பட மொத்தம் 16,252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், கடந்த 24 மணிநேரத்தில் 1,457 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 164 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது, அதேசமயம் ஒருவர் கூட பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1,344 patients test positive for #COVID19 in Tamil Nadu today (October 9). Here is the update. #Corona pic.twitter.com/li1motN6LR
— D Suresh Kumar (@dsureshkumar) October 9, 2021
தமிழகத்தில் நேற்று செப்டம்பர் 08ம் திகதி புதிதாக 1,359 பேருக்கு தொற்று உறுதியானது, 20 பேர் பலியாகினர்.
சென்னையில் நேற்று செப்டம்பர் 08ம் திகதி புதிதாக 169 பேருக்கு தொற்று உறுதியானது, 3 பேர் பலியாகினர்.