தமிழகத்தை உலுக்கும் கொரோனா! ஒரே நாளில் 78 பேர் பலி... 14,000-ஐ நெருங்கியது பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,000-ஐ நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது, இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,395 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,776 ஆக அதிகரித்துள்ளது,சென்னையில் மட்டும் புதிதாக 3842 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி(ஏப்ரல் 23) ஒட்டுமொத்தமாக 10,51,487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளனர், அதில் 9,43,044 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர்.
13,776 patients test positive for #COVID19 in Tamil Nadu today (April 23). Here is the update. #Corona pic.twitter.com/UM3InxT0EM
— D Suresh Kumar (@dsureshkumar) April 23, 2021
வீட்டில் உட்பட மொத்தம் 95,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், கடந்த 24 மணிநேரத்தில் 8078 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.