14 நாட்களுக்கு முழு ஊரடங்கு! கர்நாடகா அரசு முக்கிய அறிவிப்பு
இந்தியாவின் கர்நாடாகா மாநிலத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த கர்நாடகா அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
நாளை இரவு 9 மணி முதல் கர்நாடகா மாநிலத்தில் அமுலுக்கு வரும் முழு ஊரடங்கு அடுத்த 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும்.
ஊரடங்கின் போது அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். 10 மணிக்கு மேல் அத்தியாவசிய கடைகளும் மூடப்படும் என அறிவித்துள்ளது.
கட்டுமான, உற்பத்தி மற்றும் வேளாண் துறைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
COVID curfew to be implemented in the state from tomorrow 9 pm for the next 14 days. Essential services allowed b/w 6-10 am. After 10 am shops will close. Only construction, manufacturing & agriculture sectors allowed. Public transport to remain shut: Karnataka CM
— ANI (@ANI) April 26, 2021
(File photo) pic.twitter.com/MSg6S83pDK
ஊரடங்கின் போது மாநிலத்தில் பொது போக்குவரத்து நிறுத்தப்படும் என கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.