மான்செஸ்டரில் 14 வயது சிறுவன் கத்திக்குத்து: இரு சிறுவர்கள் கொலை வழக்கில் கைது
வடக்கு மான்செஸ்டரில் 14 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு சிறுவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் நியூ மோஸ்டன், நெவின் சாலையில் ஒரு கடுமையான தாக்குதல் நடந்ததாக கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், 14 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து காயங்களுடன் இருப்பதைக் கண்டனர்.
அவசர சேவைகள் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் பணியாளர்களின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் உயிரிழந்தான்.
குற்றவாளிகள் கைது
சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே சந்தேக நபர்களைக் காவல்துறை அடையாளம் கண்டது.
குற்றவாளிக்கு உதவியதாகக் கருதப்படும் 37 வயது பெண் ஒருவர் அருகிலிருந்த முகவரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சிறிது நேரத்திலேயே, 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
மேலும், குற்றவாளிக்கு உதவியதாகக் கருதப்படும் 14 வயது சிறுமி ஒருவர் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தற்போது காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |