டூப்ளிகேட் சரக்கு குடித்து 16 பேர் மரணம்! பெண்கள் உட்பட 5 பேர் கைது
இந்திய மாநிலம் பீகாரில் போலி மது அருந்திய 16 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகார் மாநிலம், மேற்கு சாம்பரான் மாவட்டத்தில் லவுரிய பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று ஒரே நாளில் (வெள்ளிக்கிழமை) 8 பேர் போலி மது அருந்திய காரணத்தினால் இறந்துள்ளனர்.
மேற்கு சாம்பரான் மாவட்டத்தில் லவுரிய பிளாக் பகுதியில் உள்ள Deurawa, Jogiya, மற்றும் Bagahi ஆகிய கிராமங்களில், கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளதாக பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் மோப்ப நாயை வரவழைத்து அப்பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[
]Bihar | Death toll rises to 16 in West Champaran hooch tragedy. Police detain 5 persons for questioning.
— ANI (@ANI) July 17, 2021
இதுதொடர்பாக அம்மாநில துணைமுதல்வர் ரெனு தேவி கூறுகையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உள்ளூர் மக்கள் இதுதொடர்பாக எந்த தகவலும் இதுவரை அளிக்கவில்லை. இருப்பினும் நாங்கள் நிலைமைய கண்காண்த்து வருகிறோனம் என்றார்.
அதேசமயம் அம்மாவட்ட ஆட்சியர் குந்தன் குமார் தெரிவிக்கையில், போலி மதுபானம் காரணமாக யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதனை மறைக்க வேண்டாம். உடனடியாக மருத்துவக்குழுவினருடன் தெரித்தால் அவர்கள் குணப்படுத்திவிடுவார்கள் என்றார்.
பீகாரில் ஏப்ரல் 2016 முதல் மதுபானங்களை விற்கவும் வாங்கவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Bihar | We have been told that around 8 people died mysteriously at a village (in West Champaran) in the past 2-3 days. Their family members & villagers have not mentioned alcohol consumption. FIR has been lodged and the probe is underway: DM Kundan Kumar pic.twitter.com/DbsRIlLujp
— ANI (@ANI) July 16, 2021