இந்த தொழிலாளர்களுக்கெல்லாம் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு! முக்கிய பட்டியலை வெளியிட்டது பிரித்தானியா அரசு
இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படக்கூடிய 16 துறைகளின் பட்டியலை பிரித்தானியா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
பிரித்தானியா அரசு வெளியிட்ட பட்டியில் இடம்பெற்றுள்ள துறைகள்: எரிசக்தி, civil nuclear, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, உணவு உற்பத்தி மற்றும் வழங்கல், கழிவு, நீர், கால்நடை மருந்துகள், அத்தியாவசிய இரசாயனங்கள், அத்தியாவசிய போக்குவரத்து, மருந்துகள், மருத்துவ சாதனங்கள், மருத்துவ நுகர்வு பொருட்கள், அவசர சேவைகள், எல்லை கட்டுப்பாடு, அத்தியாவசிய பாதுகாப்பு வெளியீடுகள் மற்றும் உள்ளூர் அரசு.
இந்த 16 துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், கொரோனா பாதித்தவரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தால், தற்போது அதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட மற்றும் இரண்டாவது டோஸ் போட்டு 14 நாட்களான தொழிலாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
இந்த தொழிலாளர்கள் தினசரி மேற்கொள்ளும் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்த பிறகு வேலைக்குச் செல்லவும், தங்கள் வேலைகளைச் செய்யவும் கொரோனா தனிமைப்படுத்தலை விட்டு வெளியேறலாம், இல்லையெனில் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானால் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டும்.