பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! 16 மாணவர்கள் பலி.. மேலும் பலர் இறந்திருக்கலாம் என அச்சம்
இந்திய மாநிலம் இமாச்சலில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 மாணவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தின் நியோலி-ஷன்ஷேர் சாலையில் 40 மாணவர்களுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது. மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், மீட்புப்படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு உள்ளூர் மக்களின் உதவியுடன் மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
PC: ANI (Twitter)
இந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
PC: ANI (Twitter)
மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விபத்து நிகழ்ந்த குலு பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.
The bus accident in Kullu, Himachal Pradesh is heart-rending. In this tragic hour my thoughts are with the bereaved families. I hope those injured recover at the earliest. The local administration is providing all possible assistance to those affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 4, 2022